திருஅருட்பா

வள்ளலார் இயற்றிய திருவருட்பா (திருமுறை 1-9)

திருஅருட்பிரகாச வள்ளலார்



ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே,
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே
கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த
இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம்
இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை
சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால்
ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே
திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை
நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது.
எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக
எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம்
அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள்
வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த
சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள
முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த
சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது
மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று
வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை
வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில்
புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும்
மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில்
பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த
உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில்
பாடுகிறார்கள், 

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே 

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத
மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல
திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல்,
கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து
அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை
எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி
மார்க்கமாகும். 

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும்
முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக்
கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு
மாவான். 

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு
அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன.
ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3
வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு
வருகின்றது.  

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே


ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா
உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். ஆதலால் நாமும் நன்முயற்சியுடன்
இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!
 

மேல்

1.முதல் திருமுறை


1. திருவடிப் புகழ்ச்சி
2. விண்ணப்பக் கலிவெண்பா
3. நெஞ்சறிவுறுத்தல்
4. சிவநேச வெண்பா
5. மகாதேவ மாலை
6. திரு அருண் முறையீடு
7. வடிவுடை மாணிக்க மாலை
8. இங்கித மாலை
 


@1 திருவடிப் புகழ்ச்சி

மேல்

#1 இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் எம் கோவே துன்று மல வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்.

மேல்

#2 பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம் பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய்ப் பரம ஏகாந்த நிலயம் பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம் பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம் பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம் 5 பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம் படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம் பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம் பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம் பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம் 10 பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம் பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம் பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம் பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம் 15 பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம் பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம் பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம் பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாசப் பிரகாசம் பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம் 20 பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம் பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம் பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம் பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம் 25 பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம் பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம் பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம் 30 பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம் பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம் தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம் சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலாச் சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷணத் தன்மை பலவாக நாடித் 35 தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி சாமகீதப் பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன் சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன் தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன் 40 தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன் தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசைச் சைலம் எனும் ஒரு வில்லவன் தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன் தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன் சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான் 45 சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன் சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன் தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம் தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம் தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம் 50 சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம் தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம் சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம் 55 தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம் தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர்ப் பூம்_பதம் சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம் தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம் தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம் 60 சர அசர அபரிமித விவித ஆன்மப் பகுதி தாங்கும் திருப் பூம்_பதம் தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம் தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம் சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம் மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம் 65 மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம் மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம் வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம் வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தரத் தூக்கும் பதம் வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம் 70 மறை துதிக்கும் பதம் மறைச் சிலம்பு ஒளிர் பதம் மறைப் பாதுகைச் செம்பதம் மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டாப் பதம் மறைப் பரி உகைக்கும் பதம் மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம் மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம் மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம் 75 மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம் மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம் மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம் மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம் மால் முடிப் பதம் நெடிய மால் உளப் பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம் 80 மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம் மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம் வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம் வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம் வான இந்திரர் ஆதி எண் திசைக் காவலர்கள் மா தவத் திறனாம் பதம் 85 மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம் மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம் மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் வண்மை பெறு நந்தி முதல் சிவ_கணத் தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம் 90 மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம் மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலைக் கீழ் அடர்க்கும் பதம் வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம் வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம் மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம் 95 மறக் கருணையும் தனி அறக் கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம் இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர்ப் பதம் எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம் ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம் ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டுப் பதம் 100 ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம் எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம் எடும் மேல் எனத் தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம் எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம் இன் தொண்டர் பசி அறக் கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம் 105 இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம் எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்கப் பதம் இறு வைகை அம் கரையின் மண் படப் பல் கால் எழுந்து விளையாடும் பதம் எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மைப் பதம் எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம் 110 என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம் என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதுமப் பதம் என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம் என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனகப் பதம் என் தவம் எனும் பதம் என் மெய் தவப் பயனாய் இயைந்த செம் சலசப் பதம் 115 என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம் என் செல்வமாம் பதம் என் மெய்ச் செல்வ வருவாய் எனும் தாமரைப் பொன்_பதம் என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம் என் தந்தை தாய் எனும் இணைப் பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம் என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வப் பதம் எனது குல_தெய்வப் பதம் 120 என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடாப் பொன்_பதம் என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம் எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலாத் துணையாம் பதம் எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம் எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம் 125 ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம் எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கிடும் நல் பதம் ஈறு_இலாப் பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே.

மேல்

@2. விண்ணப்பக் கலிவெண்பா

* காப்பு

மேல்

#0 அவ்வவ் இடை வந்து அகற்றி அருள்தரலால் எவ்வெவ் இடையூறும் எய்தல் இலம் தெவ்வர்-தமைக் கன்றும் மத_மா முகமும் கண் மூன்றும் கொண்டு இருந்தது ஒன்று அது நம் உள்ளம் உறைந்து * கலிவெண்பா

மேல்

#1 சொல்_பெறும் மெய்ஞ்ஞானச் சுயம் சோதியாம் தில்லைச் சிற்சபையில் வாழ் தலைமைத் தெய்வமே நல் சிவையாம் தாயின் உலகு அனைத்தும் தாங்கும் திருப்புலியூர்க் கோயில் அமர்ந்த குண_குன்றமே மாயம் மிகும் வாள்_களம் உற்றாங்கு விழி மாதர் மயல் அற்றவர் சூழ் 5 வேட்களம் உற்று ஓங்கும் விழு_பொருளே வாழ்க்கை மனை நல் வாயில் எங்கும் நவமணி_குன்று ஓங்கும் திரு நெல்வாயில் நின்று ஒளிரும் நீள் ஒளியே செல்வாய்த் தெழிப்பால் ஐ வேலைத் திரை ஒலி போல் ஆர்க்கும் கழிப்பாலை இன்பக் களிப்பே விழிப்பாலன் 10 கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதி தரும் நல்லூர்ப் பெருமணம் வாழ் நல் நிலையே சொல்லும் தயேந்திரர் உள்ளத் தடம் போல் இலங்கும் மயேந்திரப்பள்ளி இன்ப வாழ்வே கயேந்திரனைக் காயலுறாது அன்று வந்து காத்தோன் புகழ் முல்லை 15 வாயிலின் ஓங்கும் மணி_விளக்கே மேய பலிக்கா ஊர்-தோறும் பதம் சேப்பச் சென்று கலிக்காமூர் மேவும் கரும்பே வலிக் கால்_இல் பாய்க்கு ஆடுகின்ற ஒரு பச்சை முகில் பரவும் சாய்க்காடு மேவும் தடம் கடலே வாய்க்கு அமையச் 20 சொல்ல அல் நீச்சர் அங்கு தோய உம்பர் ஆம் பெருமைப் பல்லவனீச்சரத்து எம் பாவனமே நல்லவர்கள் கண் காட்டும் நெற்றிக் கடவுளே என்று தொழ வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே தண் காட்டிக் கார் காட்டித் தையலர்-தம் கண் காட்டிச் சோலைகள் சூழ் 25 சீர்காட்டுப்பள்ளிச் சிவ_கொழுந்தே பார் காட்டு உருகா ஊர் எல்லாம் ஒளி நயக்க ஓங்கும் குருகாவூர் வெள்ளடை எம் கோவே அருகாத கார் காழ் இல் நெஞ்சக் கவுணியர்க்குப் போதம் அருள் சீர்காழி ஞானத் திரவியமே ஓர் காழிப் 30 பாலற்கா அன்று பசும்பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவும் கொடையாளா கோலக் கா உள் இருக்கும் புள் இருக்கும் ஓதும் புகழ் வாய்ந்த புள்ளிருக்குவேளூர்ப் புரி சடையாய் கள் இருக்கும் காவின் மருவும் கனமும் திசை மணக்கும் 35 கோவில் மருவு கண்ணார் கோயிலாய் மாவின் இடை முடியின் தீம் கனி என்று எல்லில் முசுத் தாவும் கடைமுடியின் மேவும் கருத்தா கொடை முடியா நன்றி ஊர் என்று இந்த ஞாலம் எலாம் வாழ்த்துகின்ற நின்றியூர் மேவும் நிலைமையனே ஒன்றிக் 40 கருப் புன் கூர் உள்ளக் கயவர் நயவாத் திருப்புன்கூர் மேவும் சிவனே உருப் பொலிந்தே ஈடு ஊர் இலாது உயர்ந்த ஏதுவினால் ஓங்கு திரு நீடூர் இலங்கு நிழல் தருவே பீடு கொண்டு மன்னி ஊர் எல்லாம் வணங்க வளம் கொண்ட 45 அன்னியூர் மேவும் அதிபதியே மன்னர் சுக வாழ்வு இ குடிகள் அடி_மண் பூசலால் என்னும் வேழ்விக்குடி அமர்ந்த வித்தகனே சூழ்வுற்றோர் விண் எதிர்கொண்டு இந்திரன் போல் மேவி நெடுநாள் வாழப் பண் எதிர்கொள்பாடிப் பரம்பொருளே நண் உ 50 வணம் சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும் மணஞ்சேரி நீங்கா மகிழ்வே மணம் சேர்ந்து வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை வீரட்டம் மேவும் வியன் நிறைவே ஓர் அட்ட திக்கும் கதி நாட்டிச் சீர் கொள் திரு_தொண்டர் உளம் 55 ஒக்கும் கருப்பறியலூர் அரசே மிக்க திரு மா வளரும் செந்தாமரை வளரும் செய் குரக்குக் கா வளரும் இன்பக் கன சுகமே தாவு மயல் காழ் கொள் இரு மனத்துக் கார்_இருள் நீத்தோர் மருவும் வாழ்கொளிபுத்தூர் மணிச் சுடரே தாழ்வு அகற்ற 60 நண் இப் படிக்கு அரையர் நாள்-தோறும் வாழ்த்துகின்ற மண்ணிப்படிக்கரை வாழ் மங்கலமே விண்ணினிடை வாமாம் புலி ஊர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும் ஓமாம்புலியூர் வாழ் உத்தமமே நேம் ஆர்ந்த வான்_நாட்டும் உள்ளூர் மருவுகின்றோர் போற்று திருக் 65 கானாட்டு முள்ளூர்க் கலைக் கடலே மேல்_நாட்டும் தேரை ஊர்ச் செங்கதிர் போல் செம்மணிகள் நின்று இலங்கும் நாரையூர் மேவும் நடு நிலையே பாரில் உடம்பு ஊர் பவத்தை ஒழித்து அருளும் மேன்மைக் கடம்பூர் வாழ் என் இரண்டு கண்ணே தடம் பொழிலில் 70 கொந்து அணவும் கார்_குழலார் கோல மயில் போல் உலவும் பந்தணநல்லூர்ப் பசுபதியே கந்த மலர் அஞ்சன் ஊர் செய்த தவத்தால் அப் பெயர்கொண்ட கஞ்சனூர் வாழும் என்றன் கண்மணியே அஞ்சுகங்கள் நாடிக் கா உள்ளே நமச்சிவாயம் புகலும். 75 கோடிக்கா மேவும் குளிர் மதியே ஓடிக் கருமங்கல் அ குடியில் காண்டும் என ஓதும் திருமங்கலக்குடியில் தேனே தரும மனம் தாள்_மலரை மருவுவிப்போர் வாழும் பனந்தாளில் பால் உகந்த பாகே தினம் தாளில் 80 சூழ் திருவாய்ப் பாடி அங்கு சூழ்கினும் ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப_வாரிதியே ஏழ் புவிக்குள் வாய்ஞ்ஞல் ஊர் ஈதே மருவ என வானவர் சேர் சேய்ஞ்ஞலூர் இன்பச் செழும் கனியே வாஞ்சையுறும் சீவன் குடியுற இச் சீர் நகர் ஒன்றே எனும் சீர்த் 85 தேவன்குடி மகிழ்ந்த தெள் அமுதே ஓவு இல் மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் வியலூர் சிவானந்த வெற்பே அயல் ஆம்பல் மட்டை ஊர் வண்டு இனங்கள் வாய்ந்து விருந்து கொளும் கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன் 90 என் நம்பர் என் அம்பர் என்று அயன் மால் வாது கொள இன்னம்பர் மேவிநின்ற என் உறவே முன் நம்பு மாற்கும் புறம்பு இயலா வாய்மை அருள்செய்ய உளம் ஏற்கும் புறம்பியம் வாழ் என் உயிரே மால் கருவின்- கண் விசையம் அங்கைக் கனி போல் பெறத் தொண்டர் 95 எண் விசையமங்கையில் வாழ் என் குருவே மண் உலகில் வைகா ஊர் நம் பொருட்டான் வைகியது என்று அன்பர் தொழும் வைகாவூர் மேவிய என் வாழ்_முதலே உய்யும் வகைக் காத்தும் படைத்தும் கலைத்தும் நிற்போர் நாள்-தோறும் ஏத்தும் குரங்காட்டின் என் நட்பே மாத் தழைத்த 100 வண் பழம் நத்தின் குவி வெண் வாயில் தேன் வாக்கியிட உண் பழனத்து என்றன் உயிர்க்குயிரே பண்பு அகன்ற வெய் ஆற்றில் நின்றவரை மெய் ஆற்றின் ஏற்று திரு வையாற்றின் மேவிய என் ஆதரவே பொய் ஆற்றி மெய்த் தானம் நின்றோர் வெளித் தானம் மேவு திரு 105 நெய்த்தானத்துள் அமர்ந்த நித்தியமே மைத்த கரும் புலி ஊர்க் காளையொடும் கண்ணோட்டம் கொள்ளும் பெரும்புலியூர் வாழ் கருணைப் பேறே விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே துன்னுகின்ற 110 நாய்க்கும் கடையேன் நவை தீர நல் கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே தேய்க் களங்கு_இல் வான் ஊர் மதி போல் மணியால் குமுத_மலர் கானூர் உயர் தங்கக்கட்டியே நானூறு கோலம் துறை கொண்ட கோவை அருள் கோவை மகிழ் 115 ஆலந்துறையின் அணி முத்தே நீலம் கொள் தேம் துறையில் அன்னம் மகிழ் சேக்கை பல நிலவும் மாந்துறை வாழ் மாணிக்க மா மலையே ஏந்து அறிவாம் நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப் பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே நால்_திசையும் 120 தேனைக் கா உள் மலர்கள் தேம் கடல் என்று ஆக்குவிக்கும் ஆனைக்கா மேவி அமர் அற்புதமே மானைப் போல் மை ஞீல வாள் கண் மலராள் மருவு திருப் பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே எஞ்ஞான்றும் ஏச்சு இரா மங்கலத்தோடு இன்பம் தரும் பாச்சி 125 லாச்சிராமம் சேர் அருள் நிலையே நீச்சு அறியாது ஆங்கு ஓய் மலைப் பிறவி ஆர்கலிக்கு ஓர் வார் கலமாம் ஈங்கோய்மலை வாழ் இலஞ்சியமே ஓங்காது நாள் போக்கி நிற்கும் நவை_உடையார் நாட அரிதாம் வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே கோள் போக்கி 130 நில்லுங்கள் தம்ப நெறி போல் எனப் பூவை சொல்லும் கடம்பந்துறை நிறைவே மல்லலொடு வாழ் உம்பர் ஆய்த் துறை வான் மன்னவரும் மன்னவரும் சூழும் பராய்த்துறை வாழ் தோன்றலே கூழும் பல் நல் குடியும் ஓங்கி நலம் பெருகும் மேன்மை திருக் 135 கற்குடியில் சந்தான கற்பகமே சிற்சுகத்தார் பின் சநநம் இல்லாப் பெருமை தரும் உறையூர்ச் சற்சனர் சேர் மூக்கீச்சரத்து அணியே மல் செய் அரா_பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே இராப் பள்ளி 140 நின்று எழல் மெய் அன்று எனவே நேர்ந்து உலகு வாழ்த்துகின்ற நன்று எறும்பியூர் இலங்கு நல் நெறியே துன்று கயல்_கண்ணார் நெடும் களத்தைக் கட்டு அழித்த மெய்_தவர் சூழ் தண் ஆர் நெடுங்கள மெய்த் தாரகமே எண்ணார் தருக்கு ஆள் துப்பு அள்ளித் தகை கொண்டோர் சூழும் 145 திருக்காட்டுப்பள்ளியில் வாழ் தேவே மருக் காட்டும் நீலம் பொழிற்குள் நிறை தடங்கட்கு ஏர் காட்டும் ஆலம்பொழில் சிவயோகப் பயனே சீலம் நிறைவு ஆம் துருத்தி கொண்டு உள் அனல் எழுப்புவோர் புகழும் பூந்துருத்தி மேவு சிவ புண்ணியமே காந்த அருவத் 150 தண்டி ஊர் போற்றும் தகை காசிக்-கண் செய்து கண்டியூர் வாழும் களைகண்ணே கொண்டு இயல்பின் வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும் சோற்றுத்துறையுள் சுக வளமே ஆற்றல் இலாத் தீது இக் குடி என்று செப்பப்படார் மருவும் 155 வேதிக்குடி இன்ப_வெள்ளமே கோது இயலும் வன் குடித் திட்டை மருவார் மருவு திரு_ தென்குடித்திட்டைச் சிவ பதமே நன்கு உடைய உள்ளம் மங்கைமார் மேல் உறுத்தாதவர் புகழும் புள்ளமங்கை வாழ் பரம போகமே கள்ளம் இல் அஞ்சு_ 160 அக்கரப் பள்ளி-தனில் தாம் பயின்ற மைந்தர்கள் சூழ் சக்கரப்பள்ளி-தனில் தண் அளியே மிக்க அருகா ஊர் சூழ்ந்தே அழகுபெற ஓங்கும் கருகாவூர் இன்பக் கதியே முருகு ஆர்ந்த சோலைத் துறையில் சுகம் சிவ_நூல் வாசிக்கும் 165 பாலைத்துறையின் பரிமளமே சீலத்தர் சொல் ஊர் அடி அப்பர் தூய முடி மேல் வைத்த நல்லூர் அமர்ந்த நடு நாயகமே மல் ஆர்ந்த மா ஊர் இரவியின் பொன் வையம் அளவும் சிகரி ஆவூரில் உற்ற எங்கள் ஆண்தகையே ஓவாது 170 சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் சத்திமுற்றம் மேவும் சதாசிவமே பத்தி_உற்றோர் முள் தீச் சுரத்தின் முயலா வகை அருளும் பட்டீச்சரத்து எம் பராபரமே துட்ட மயல் தீங்கு விழையார்-தமை வான் சென்று அமரச்செய்விக்க 175 ஓங்கு பழையாறையில் என் உள் உவப்பே பாங்குபெற ஆர்ந்த வட_இலையான் அன்னத்தான் போற்றி நிதம் சார்ந்த வடதளி வாழ் தற்பரமே சேர்ந்த மலம் சுழிகின்ற மனத்தர்க்கு அரிதாம் வலஞ்சுழி வாழ் பொன்_மலையே நிலம் சுழியாது 180 ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்ப கோணத்தில் தெய்வக் குல_கொழுந்தே மாணுற்றோர் காழ்க் கோட்டம் நீங்கக் கருதும் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே வாழ்க் கோட்டத் தேர் ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் இன்றிக் 185 காரோணம் மட்டும் கமழ் மலரே சீர் ஓங்கும் யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திரு நாகீச்சுரம் ஓங்கும் நம் கனிவே ஓகை உளம் தேக்கும் வரகுணனாம் தென்னவன்-கண் சூழ் பழியைப் போக்கும் இடைமருதில் பூரணமே நீக்கம் இலா 190 நன்கு உரம் காணும் நடையோர் அடைகின்ற தென்குரங்காடுதுறைச் செம்மலே புன் குரம்பை ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க்கு உண்மை தரு நீலக்குடி இலங்கு நிட்களமே ஞாலத்து நீள் தக்கோர் நாளும் நினைந்து ஏத்திடும் வைகல் 195 மாடக்கோயிற்குள் மதுரமே பாடச் சீர் வல்ல தமிழ்ப் புலவர் மன்னி வணங்கு திரு நல்லம் மகிழ் இன்ப நவ வடிவே இல்ல மயல் ஆழம் பங்கு என்ன அறிந்தோர் செறிந்து ஏத்தும் கோழம்பம் வாழ் கருணைக் கொண்டலே வீழும் பொய் 200 தீரா வடு_உடையார் சேர்தற்கு அரும் தெய்வச் சீர் ஆவடுதுறை எம் செல்வமே பேராக் கருத் திருத்தி ஏத்தும் கருத்தர்க்கு அருள்செய் திருத்துருத்தி இன்பச் செழிப்பே வருத்து மயல் நாளும் எழுந்து ஊர் நவை அறுக்கும் அன்பர் உள்ளம் 205 நீளும் அழுந்தூர் நிறை தடமே வேள் இமையோர் வாயூரத் தேமா மலர் சொரிந்து வாழ்த்துகின்ற மாயூரத்து அன்பர் மனோரதமே தேயா வள நகர் என்று எவ்வுலகும் வாழ்த்தப்படும் சீர் விளநகர் வாழ் எங்கள் விருந்தே இளமைச் 210 செறியல் ஊர் கூந்தல் திரு_அனையார் ஆடும் பறியலூர் வாழ் மெய்ப் பரமே நெறி கொண்டே அன்பு அள்ளி ஓங்கும் அறிவு_உடையோர் வாழ்த்தும் செம் பொன்பள்ளி வாழ் ஞான போதமே இன்பு உள்ளித் தெள்ளியார் போற்றித் திகழும் திருநன்னிப் 215 பள்ளி ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய் ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் மேய வலம்புரத்து மேதகவே தூய கொடி அங்கு ஆடு கோபுரம் வான் ஆற்று ஆடுகின்ற தலைச் சங்காடு மேவும் சயம்புவே பொங்கும் இருள் 220 கூறு திரு ஆக்கு ஊர் கொடுப்பன போல் சூழ்ந்து மதில் வீறு திரு_ஆக்கூர் விளக்கமே மாறு அகற்றி நன்கு அடை ஊர் பற்பலவும் நன்றி மறவாது ஏத்தும் தென்கடையூர் ஆனந்தத் தேறலே வன்மை இலாச் சொல் கடவி மேலோர் துதித்தல் ஒழியாது ஓங்கும் 225 நல் கடவூர் வீரட்ட நாயகனே வற்கடத்தும் வாட்டக் குடி சற்றும் வாய்ப்பதே இல்லை எனும் வேட்டக்குடி மேவும் மேலவனே நாட்டமுற்ற வாக்கு தெளிச்சு ஏர் இ மா தவத்தர்க்கு இன்ப நலம் ஆக்கும் தெளிச்சேரி அங்கணனே நீக்கும் 230 கரும புரத்தில் கலவாது அருள்செய் தருமபுரம் செய் தவமே இருமையினும் எள் ஆற்றின் மேவாத ஏற்பு_உடையோர் சூழ்ந்து இறைஞ்சும் நள்ளாற்றின் மேவிய என் நல் துணையே தெள் ஆற்றின் நீள் தாறு கொண்டு அரம்பை நின்று கவின் காட்டும் 235 கோட்டாறு மேவும் குளிர் துறையே கூட்டாக் கரு வம்பர்-தம்மைக் கலவாத மேன்மைத் திரு_அம்பர் ஞானத் திரட்டே ஒருவந்தம் மா காளம் கொள்ள மதனைத் துரத்துகின்ற மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆளக் 240 காயச் சூர் விட்டுக் கதி சேர வேட்டவர் சூழ் மீயச்சூர் தண் என்னும் வெள் நெருப்பே மாயக் களம் கோயில் நெஞ்சக் கயவர் மருவா இளங்கோயில் ஞான இனிப்பே வளம் கோவை நாடும் திலத நயப் புலவர் நாள்-தோறும் 245 பாடும் திலதைப் பதி நிதியே ஆடு மயில் காம்பு உரம் கொள் தோளியர் போல் காவில் பயில்கின்ற பாம்புரம் கொள் உண்மைப் பரம்பொருளே ஆம் புவனம் துன்னும் பெரும் குடிகள் சூழ்ந்து வலம்செய்து உவகை மன்னும் சிறுகுடி ஆன்மார்த்தமே முன் அரசும் 250 காழி மிழலையரும் கண்டு தொழக் காசு அளித்த வீழிமிழலை விராட்டு உருவே ஊழி-தொறும் மன்னி ஊர் மால் விடையாய் வானவா என்று தொழ வன்னியூர் வாழு மணி_கண்டா இ நிமிடம் சிந்தும் கருவலியின் திண்மை என்று தேர்ந்தவர்கள் 255 முந்தும் கருவிலி வாழ் முக்கண்ணா மந்தணத்தைக் காணும் அரும் துறை இக் காமர் தலம் என்று எவரும் பேணு பெருந்துறையில் பெம்மானே ஏணுடன் கா ஈட்டும் பெரு நறை ஆறு என்ன வயல் ஓடி நாட்டும் பெருநறையூர் நம்பனே காட்டும் 260 பரிசில் கரைப்புற்றோர் பாங்கு பெற ஓங்கும் அரிசிற்கரை_புத்தூரானே தரிசனத்து எக் காலும் சிவபுரத்தைக் காதலித்தோர்-தங்கள் துதி ஏலும் சிவபுரத்தில் எம்மானே மாலும் கொள் வெப்பும் கலைய நல்லோர் மென் மதுரச் சொல்_மாலை 265 செப்பும் கலயநல்லூர்ச் சின்மயனே செப்பமுடன் ஓங்கும் திரு_தொண்டர் உள் குளிர நல் அருளால் தாங்கும் கருக்குடி வாழ் சங்கரனே ஆம் ககனம் தாம் சியத்தை வேங்கைத் தலையால் தடுக்கின்ற வாஞ்சியத்தின் மேவும் மறையோனே ஆஞ்சி இலாது 270 இ நிலத்தும் வான் ஆதி எந்நிலத்தும் ஓங்கும் பெரு நன்னிலத்து வாழ் ஞான நாடகனே மன்னும் மலர் வண்டு ஈ சுரம் பாடி வார் மது உண்டு உள் களிக்கும் கொண்டீச்சுரத்து அமர்ந்த கோமானே கண்டு ஈச நண்பன் ஐ ஊரன் புகழும் நம்ப என உம்பர் தொழத் 275 தண் பனையூர் மேவும் சடாதரனே பண்புடனே எற்குள் தியானம் கொண்டு இருக்க மகிழ்ந்து அளித்த விற்குடியின் வீரட்டம் மேயவனே சொல் கொடிய வன் புகலா நெஞ்சின் மருவும் ஒரு தகைமைத் தென் புகலூர் வாழ் மகாதேவனே இன்ப மறை 280 அர்த்தமா நீக்க அரிய ஆதாரம் ஆகி நின்ற வர்த்தமாநேச்சரத்து வாய்ந்தவனே மித்தையுற்ற காமனது ஈசம் கெடவே கண் பார்த்து அருள்செய்த ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் மயல் தூர் பறித்த மனத்தில் விளைந்த 285 பயற்றூர் திசை அம்பரனே இயற்றும் சீர் ஆச்சிரம் மேவும் செங்காட்டங்குடியின் அம் கணப தீச்சரம் வாழும் சந்த்ரசேகரனே ஏச்சு அகல விண் மருவினோனை விடம் நீக்க நல் அருள்செய் வண் மருகல் மாணிக்க வண்ணனே திண்மை கொண்ட 290 மாத் தமம் கை உள்ளம் மருவிப் பிரியாத சாத்தமங்கைக் கங்கைச் சடா_முடியோய் தூத் தகைய பாகைக் கார் என்னும் பணி_மொழியார் வாழ்த்து ஓவா நாகைக்காரோணம் நயந்தோனே ஓகை அற விக்கல் வருங்கால் விடாய் தீர்த்து உலகிடை நீ 295 சிக்கல் எனும் சிக்கல் திறலோனே மிக்க மினார் வாள் ஊர் தடம் கண் வயல் காட்டி ஓங்கும் கீழ் வேளூரில் செம் கண் விடையோனே நீள் உவகைப் பா ஊர் இசையின் பயன் சுவையின் பாங்கு உடைய தேவூர் வளர் தேவதேவனே பூவினிடை 300 இக் கூடல் மைந்த இனிக் கூடல் என்று பள்ளி முக்கூடல் மேவி அமர் முன்னவனே தக்க நெடும் தேர் ஊர் அணி வீதிச் சீர் ஊர் மணி மாட ஆரூரில் எங்கள் அரு_மருந்தே நீர் ஊர்ந்த கார் ஊர் பொழிலும் கனி ஈந்து இளைப்பு அகற்றும் 305 ஆரூர் அரனெறி வேளாண்மையே ஏர் ஆர்ந்த மண் மண்டலிகர் மருவும் ஆரூர்ப் பரவை யுள் மண்தளி எம் உடைமையே திண்மைக் களமர் மகிழக் கடைசியர் பாடும் விளமர் கொளும் எம் விருப்பே வளமை 310 எருக்கு அரவு ஈரம் சேர் எழில் வேணி கொண்டு திருக்கரவீரம் சேர் சிறப்பே உருக்க வரு வேள் ஊர் மா எல்லாம் மா ஏறும் சோலைப் பெருவேளூர் இன்பப் பெருக்கே கருமை மிலை ஆலம் காட்டும் மிடற்றாய் என்று ஏத்தும் 315 தலையாலங்காட்டுத் தகவே நிலை கொள் தட வாயில் வெண் மணிகள் சங்கங்கள் ஈனும் குடவாயில் அன்பர் குறிப்பே மடவாட்கு ஓர் கூறை உவந்து அளித்த கோவே என்று அன்பர் தொழச் சேறை உவந்து இருந்த சிற்பரமே வேறுபடாப் 320 பால் ஊர் நிலவில் பணிலங்கள் தண் கதிர் செய் நாலூரில் அன்பர் பெறும் நல் நயமே மேல் ஊரும் நோய்க் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடு வாய்க்கரையுள் மேவுகின்ற வண்மையே வாய்த்த பெரும் பூகம் தெங்கின் பிறங்க வளம் கொள்ளும் 325 இரும்பூளை மேவி இருந்தோய் விரும்பும் விரதப் பெரும் பாழி விண்ணவர்கள் ஏத்தும் அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் சரதத்தால் ஏதும் அவண் இவண் என்று எண்ணாதவர் இறைஞ்சி ஓதும் அவளிவள் நல்லூர்_உடையோய் கோது அகன்ற 330 நீட்டும் சுருதி நியமத்தோர்க்கு இன் அருளை நீட்டும் பரிதி நியமத்தோய் காட்டிய நம் தேவன் ஊர் என்று திசைமுகன் மால் வாழ்த்துகின்ற பூவனூர் மேவும் புகழ்_உடையோய் பூ_உலகாம் ஈங்கும் பாதாளம் முதல் எவ்வுலகும் எஞ்ஞான்றும் 335 தாங்கும் பாதாளேச்சரத்து அமர்ந்தோய் ஓங்கு புத்தி மான்கள் அரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும் வான் களரில் வாழும் மறை முடிபே மேன்மை தரும் முற்று ஏமம் வாய்ந்த முனிவர் தினம் பரவும் சிற்றேமம் வாய்ந்த செழும் கதிரே கற்றவர்கள் 340 எங்கும் உசாத்தானம் இரும் கழகம் மன்றம் முதல் தங்கும் உசாத்தானத் தனி முதலே பொங்கு பவ அல்லல் இடும் பாவு அநத்தம் அட்டு ஒளிசெய்கின்ற திரு மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே தொல்லைப் படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் 345 கடிக்குளத்து அன்பர் களிப்பே கடிக் குளத்தின் வண்டு அலைக்கத் தேன் அலரின் வார்ந்து ஓர் தடம் ஆக்கும் தண்டலைக்குள் நீள் நெறிச் சிந்தாமணியே கொண்டல் என மன் கோட்டு ஊர் சோலை வளர் கோட்டு ஊர் தண் பழன தென்கோட்டூர் தேவ சிகாமணியே தென் கூட்டிப் 350 போய் வண்டு உறை தடமும் பூம் பொழிலும் சூழ்ந்து அமரர் ஆய் வெண்துறை மாசு இலா மணியே தோய்வுண்ட கள்ளம் பூதாதி நிலை கண்டு உணர்வு கொண்டவர் சூழ் கொள்ளம்பூதூர் வான் குல மணியே வெள்ளிடை வான் வாம் பேர் எயில் சூழ்ந்த மாண்பால் திரு_நாமம் 355 ஆம் பேரெயில் ஒப்பு இலா மணியே தாம் பேரா வீட்டில் அன்பர் ஆனந்தம் மேவச்செயும் கொள்ளிக் காட்டில் அமர்ந்த என் கண் காட்சியே நீட்டும் ஒளி யாம் கூர் இலை வேலவன் ஆதியர் சூழத் தேங்கூரில் வாழ் தேவ சிங்கமே ஓங்கு மலை 360 வல்லிக்கு ஆதார மணிப் புய என்று அன்பர் தொழ நெல்லிக்கா வாழ் மெய் நியமமே எல் அல்-கண் சேட்டு இயத்தானே தெரிந்து சுரர் வந்து ஏத்தும் நாட்டியத்தான்குடி வாழ் நல் இனமே நாட்டும் ஒரு நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக் 365 காறாயில் மேலோர் கடைப்பிடியே வீறு ஆகும் இன்றாப் பூர்வம் தொட்டு இருந்தது இ ஊர் என்ன உயர் கன்றாப்பூர் பஞ்சாக்கரப் பொருளே துன்று ஆசை வெய்ய வலி வலத்தை வீட்டி அன்பர்க்கு இன் அருள்செய் துய்ய வலிவலத்துச் சொல் முடிபே நையும் மனம் 370 மைச் சினத்தை விட்டோர் மனத்தில் சுவை கொடுத்துக் கைச்சினத்தின் உள் கரையாக் கற்கண்டே நெல் சுமக்க ஆள் இலை என்று ஆரூரனார் துதிக்கத் தந்து அருளும் கோளிலியின் அன்பர் குலம் கொள் உவப்பே நீள் உலகம் காய் மூர்க்கரேனும் கருதில் கதி கொடுக்கும் 375 வாய்மூர்க்கு அமைந்த மறைக் கொழுந்தே நேயம் உணத் தேடு எலியை மூவுலகும் தேர்ந்து தொழச்செய்து அருளும் ஈடு இல் மறைக்காட்டில் என்றன் எய்ப்பு இல் வைப்பே நாடும் எனை நின் அகத்து யான் பள்ளி நேர்ந்தேன் என்று ஆட்கொண்ட தென் அகத்தியான்பள்ளிச் செம்பொன்னே தொல்_நெறியோர் 380 நாடிக் குழக நலம் அருள் என்று ஏத்துகின்ற கோடிக் குழகர் அருள் கோலமே நீடு உலகில் நாட்டும் புகழ் ஈழ நாட்டில் பவ இருளை வாட்டும் திருக்கோண மா மலையாய் வேட்டு உலகின் மூதீச்சரம் என்று முன்னோர் வணங்கு திருக் 385 கேதீச்சரத்தில் கிளர்கின்றோய் ஓதுகின்றோர்- பால் அவாய் நிற்கும் பரையோடு வாழ் மதுரை ஆலவாய்ச் சொக்கழகு ஆனந்தமே சீலர்-தமைக் காப்பன் ஊரு இல்லாக் கருணையால் என்று புகும் ஆப்பனூர் மேவு சதானந்தமே மாப் புலவர் 390 ஞான பரம் குன்றம் என நண்ணி மகிழ் கூர்ந்து ஏத்த வான பரங்குன்றில் இன்பானந்தமே வானவர்_கோன் தேம் ஏடகத்தனொடு சீதரனும் வாழ்த்தும் சீ ராம் ஏடகத்து அறிவானந்தமே பூ மீதில் நல் தவரும் கற்ற நவசித்தரும் வாழ்த்தி 395 உற்ற கொடுங்குன்றத்து எம் ஊதியமே முற்று கதி இத் தூரம் அன்றி இனித் தூரம் இல்லை எனப் புத்தூர் வரும் அடியார் பூரிப்பே சித்து ஆய்ந்து நாம் ஈசர் ஆகும் நலம் தரும் என்று உம்பர் தொழும் ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது 400 நீள் தானை சூழும் நில மன்னர் வாழ்த்து திரு வாடானை மேவு கருணாகரமே சேடான வானப் பேர்_ஆற்றை மதியை முடி சூடும் கானப்பேர் ஆனந்தக் காளையே மோனர் உளே பூ வணமும் பூ மணமும் போல அமர்ந்து திருப் 405 பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே தீ வணத்தில் கண் சுழியல் என்று கருணை அளித்து என் உளம் சேர் தண் சுழியல் வாழ் சீவ சாக்ஷியே பண் செழிப்பக் கற்றால் அங்கு உண்மைக் கதி தரும் என்று அற்றவர் சூழ் குற்றாலத்து அன்பர் குதுகலிப்பே பொன் தாம 410 நல் வேலி சூழ்ந்து நயன் பெறும் ஒண் செஞ்சாலி நெல்வேலி உண்மை நிலயமே வல் வேலை நஞ்சைக் களத்து வைத்த நாத எனத் தொண்டர் தொழ அஞ்சைக்களம் சேர் அருவுருவே நெஞ்சு அடக்கி ஆன்று நிறைந்தோர்க்கு அருள் அளிக்கும் புக்கொளியூர்த் 415 தோன்றும் அவிநாசிச் சுயம்புவே சான்றவர்கள்- தம் உருகு அன்பு ஊண் உள் தலம் போல வாழ்கின்ற எம் முருகன் பூண்டி இரு_நிதியே செம்மையுடன் அம் குன்றாது ஓங்கும் அணி கொள் கொடி மாடச் செங்குன்றூர் வாழும் சஞ்சீவியே தங்கு மன 420 வஞ்சம் ஆக்கு ஊடல் வரையாதவர் சூழும் வெஞ்சமாக்கூடல் விரி சுடரே துஞ்சல் எனும் இன்னல் அகற்ற இலங்கு பவானிக்கூடல் என்னும் நணாவினிடை இன் இசையே துன்னி அருள் வேண்டிக்கொடு முடியா மேன்மை பெறு மா தவர் சூழ் 425 பாண்டிக்கொடுமுடியில் பண் மயமே தீண்ட அரிய வெம் கருவூர் வஞ்ச வினை தீர்த்தவர் சூழ்ந்த நம் கருவூர்ச் செய்யுள் நவரசமே தங்கு அளற்றின் தீங்கு ஆர் பிற தெய்வத் தீ குழியில் வீழ்ந்தவரைத் தாங்கா அரத்துறையில் தாணுவே பூம் குழலார் 430 வீங்கு ஆனை மாடம் சேர் விண் என்று அகல் கடந்தைத் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே நீங்காது நீடு அலை ஆற்று ஊர் நிழல் மணி_குன்று ஓங்கு திரு_ கூடலை ஆற்றூர்க் குண நிதியே நாடிய வான் அம்புலி ஊர் சோலை அணி வயல்கள் ஓங்கு எருக்கத் 435 தம்புலியூர் வேத சமரசமே நம்பு விடை ஆங்கு உந்தினை ஊர்ந்து அருளாய் என்று அன்பர் தொழுது ஓங்கும் தினையூர் உமாபதியே தீங்கு உறும் ஒன் னார் புரத்தை வெண்_நகைத் தீயால் அழித்தாய் என்று தொழச் சோபுரத்தின் வாழ் ஞான தீவகமே வார் கெடிலச் 440 செல் நதி கையோங்கித் திலதவதியார் பரவும் மன் அதிகை வீரட்ட மா தவமே பன்ன அரிதாம் ஆவல் ஊர் எங்களுடை ஆரூரன் ஆர் ஊராம் நாவலூர் ஞானியர் உள் ஞாபகமே தேவு அகமாம் மன்றம் அமர்ந்த வளம் போல் திகழ்ந்த முது 445 குன்றம் அமர்ந்த அருள் கொள்கையே அன்று அகத்தின் நல் வெண்ணெய் உண்டு ஒளித்த நாரணன் வந்து ஏத்துகின்ற நெல்வெண்ணெய் மேவு சிவ நிட்டையே சொல் வண்ணம் நாவலர் போற்றி நலம் பெறவே ஓங்கு திருக் கோவலூர் வீரட்டம் கொள் பரிசே ஆவலர் மா 450 தேவா இறைவா சிவனே எனும் முழக்கம் ஓவா அறையணி நல்லூர் உயர்வே தாவாக் கடை ஆற்றின் அன்பர்-தமைக் கல் ஆற்றின் நீக்கும் இடையாற்றின் வாழ் நல் இயல்பே இடையாது சொல் ஊரன்-தன்னைத் தொழும்புகொளும் சீர் வெண்ணெய் 455 நல்லூர் அருள் துறையின் நல் பயனே மல் ஆர்ந்து மாசு உந்து உறையூர் மகிபன் முதல் மூவரும் சீர் பேசும் துறையூர்ப் பிறை_சூடீ நேசம் உறவு ஏற்றா வடு கூர் இதயத்தினார்க்கு என்றும் தோற்றா வடுகூர்ச் சுயம் சுடரே ஆற்ற மயல் 460 காணிக் குழி வீழ் கடையர்க்குக் காண்பு அரிய மாணிக்குழி வாழ் மகத்துவமே மாண் உற்ற பூப் பாதிரி கொன்றை புன்னை முதல் சூழ்ந்து இலங்கும் ஏர்ப் பாதிரிப்புலியூர் ஏந்தலே சீர்ப் பொலியப் பண்டு ஈச்சுரன் இப் பதியே விழைந்தது எனும் 465 முண்டீச்சுரத்தின் முழு_முதலே பெண்தகையார் ஏர்ப் பன் அம் காட்டு ஊர் என்று இரு நிலத்தோர் வாழ்த்துகின்ற சீர்ப் பனங்காட்டூர் மகிழ் நிக்ஷேபமே சூர்ப் புடைத்தது ஆம் மாத் தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருள் பிழம்பே யாம் ஏத்தும் 470 உண்ணாமுலையாள் உமையோடு மேவு திரு வண்ணாமலை வாழ் அருள் சுடரே கண் ஆர்ந்த நாகம் பராம் தொண்ட நாட்டில் உயர் காஞ்சி ஏகம்பம் மேவும் பேர்_இன்பமே ஆகும் தென் காற்று அளி வள் பூ மணத்தைக் காட்டும் பொழில் கச்சி 475 மேல்தளி வாழ் ஆனந்த வீட்டு உறவே நாற்ற மலர்ப் பூந் தண்டு அளி விரித்துப் புக்கு இசைக்கும் சீர் ஓண காந்தன்தளி அருள் ப்ரகாசமே சேர்ந்தவர்க்கே இங்கு ஆபதம் சற்றும் இல்லாத அனேக தங்காபதம் சேர் தயாநிதியே மங்காது 480 மெச்சி நெறிக்கு ஆர்வம் மேவிநின்றோர் சூழ்ந்த திரு_ கச்சி_நெறிக்காரைக்காட்டு இறையே முச்சகமும் ஆயும் குரங்கணில்_முட்டப் பெயர் கொண்டு ஓங்கு புகழ் ஏயும் தலம் வாழ் இயல் மொழியே தோயும் மன யோகு அறல் இலாத் தவத்தோர் உன்ன விளங்கு திரு_ 485 மாகறலில் அன்பர் அபிமானமே ஓகை இலா வீத் தூரமா ஓட மெய்த் தவர்கள் சூழ்ந்த திரு வோத்தூரில் வேதாந்த உண்மையே பூத் தவிசின் ஆர்த்தான் பனகத்தவன் இந்திரன் புகழ் வன் பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே பார்த்து உலகில் 490 இல்லம் எனச் சென்று இரவாதவர் வாழும் வல்லம் மகிழ் அன்பர் வசித்துவமே சொல் அரிக்குக் கால் பேறு கச்சியில் முக்கால் பேறு இவண் என்னும் மால்பேற்றின் அன்பர் மனோபலமே ஏற்பு உடை வாய் ஊறல் அடியார் உறத் தொழுது மேவு திரு 495 வூறல் அழியா உவகையே மாறுபடு தீதும் இலம் பயம் கோள் தீர் என்று அடியர் புகழ் ஓதும் இலம்பயம்கோட்டூர் நலமே தீது உடைய பொன் கோலம் ஆம் எயிற்குப் போர்_கோலம் கொண்ட திரு விற்கோலம் மேவு பர மேட்டிமையே சொல்_போரில் 500 ஓலம் காட்டும் பழையனூர் நீலி வாது அடக்கும் ஆலங்காட்டில் சூழ் அருள் மயமே ஞாலம் சேர் மாசு ஊர் அகற்றும் மதி_உடையோர் சூழ்ந்த திருப் பாசூரில் உண்மைப் பரத்துவமே தேசு_ஊரன் கண் பார்க்க வேண்டும் எனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த 505 வெண்பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே பண்பார்க்கு நள் இப் பதியே நலம் தரும் என்று அன்பர் புகும் கள்ளில்பதி நம் கடப்பாடே எள்ளலுறும் கோள் அத்தி நீக்கும் குணத்தோர்க்கு அருள்செய் திரு_ காளத்தி ஞானக் களஞ்சியமே ஆள் அத்தா 510 வெற்றி ஊர் என்ன வினையேன் வினை தவிர்த்த ஒற்றியூர் மேவிய என் உள் அன்பே தெற்றிகளில் பொங்கு மணிக் கால்கள் பொலம் செய் திருவொற்றி நகர் தங்கும் சிவபோக சாரமே புங்கவர்கள் சேர்ந்து வலம்கொள்ளுந் திருவொற்றியூர்க் கோயில் 515 சார்ந்து மகிழ் அமுத சாரமே தேர்ந்து உலகர் போற்றும் திருவொற்றிப் பூம் கோயிற்குள் பெரியோர் சாற்றும் புகழ் வேத சாரமே ஊற்றுறு மெய் அன்பு மிகும் தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில் இன்பம் மிகு ஞான இலக்கணமே துன்பம் அற 520 எல்லை வாயற்கு உள் மட்டும் ஏகில் வினை ஏகும் எனும் முல்லைவாயிற்கு உள் வைத்த முத்தி வித்தே மல்லல் பெறு வேல் காட்டர் ஏத்து திருவேற்காட்டில் மேவிய முன் நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் ஆர்த்தி பெற்ற மாது மயிலாய்ப் பூசித்து ஆர் மயிலைக் 525 கீர்த்திபெற்ற நல் வேத கீதமே கார்த் திரண்டு வாவுகின்ற சோலை வளர் வான்மியூர்த் தலத்தில் மேவுகின்ற ஞான விதரணமே தூவி மயில் ஆடும் பொழில் கச்சூர் ஆல_கோயிற்குள் அன்பர் நீடும் கன தூய நேயமே ஈடு_இல்லை 530 என்னும் திரு_தொண்டர் ஏத்தும் இடைச்சுரத்தின் மன்னும் சிவானந்த வண்ணமே நல் நெறியோர் துன்னு நெறிக்கு ஓர் துணையாம் தூய கழுக்குன்றினிடை முன்னும் அறிவு ஆனந்த மூர்த்தமே துன்னு பொழில் அம் மதுரத் தேன் பொழியும் அச்சிறுபாக்கத்து உலகர் 535 தம்மதம் நீக்கும் ஞான சம்மதமே எம்மதமும் சார்ந்தால் வினை நீக்கித் தாங்கு திருவக்கரையுள் நேர்ந்தார் உபநிடத நிச்சயமே தேர்ந்தவர்கள் தத்தமது மதியால் சாரும் அரசிலியூர் உத்தம மெய்ஞ்ஞான ஒழுக்கமே பத்தி_உள்ளோர் 540 எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து நண்ணும் சிவயோக நாட்டமே மண்ணகத்துள் கோ பலத்தில் காண்பு அரிய கோகரணம் கோயில்கொண்ட மா பலத்து மா பலமா மாபலமே தாபம் இலாப் பாகு இயல் சொல் மங்கையொடும் பாங்கு ஆர் பருப்பதத்தில் 545 யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் பாடி உற்ற நீல_பருப்பதத்தில் நல்லோர்கள் தேடி வைத்த தெய்வத் திலகமே நீடு பவம் தங்காத அனேகதங்காபதம் சேர்ந்த நம் காதலான நயப்பு உணர்வே சிங்காது 550 தண் நிறைந்து நின்றவர்-தாம் சார் திருக்கேதாரத்தில் பண் நிறைந்த கீதப் பனுவலே எண் நிறைந்த சான்றோர் வணங்கும் நொடித்தான்மலையில் வாழ்கின்ற தேன் தோய் அமுதச் செழும் சுவையே வான் தோய்ந்த இந்திரரும் நாரணரும் எண்_இல் பிரமர்களும் 555 வந்து இறைஞ்சும் வெள்ளி_மலையானே தந்திடும் நல் தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம் வாய்க்கும் கயிலை_மலையானே தூய்க் குமரன் தந்தையே என் அருமைத் தந்தையே தாயே என் சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே சந்தம் மிகும் 560 எண் தோள் உடையாய் எனை_உடையாய் மார்பகத்தில் வண்டு ஓலிடும் கொன்றை_மாலையாய் தொண்டர் விழி உண்ணற்கு எளியாய் உருத்திரன் மால் ஆதியர்-தம் கண்ணில் கனவினிலும் காண்பு அரியாய் மண்_உலகில் என்_போன்றவர்க்கும் இருள் நீக்கி இன்பு உதவும் 565 பொன் போன்ற மேனிப் புராதனனே மின் போன்ற செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கும் யாவருக்கும் அஞ்சு அடையா வண்ணம் அளிப்போனே விஞ்சு உலகில் எல்லார்க்கும் நல்லவனே எல்லாம் செய் வல்லவனே எல்லார்க்கும் ஒன்றாய் இருப்போனே தொல் ஊழி 570 ஆர்ந்த சராசரங்கள் எல்லாம் அடி நிழலில் சேர்ந்து ஒடுங்க மா நடனம் செய்வோனே சார்ந்து உலகில் எத் தேவர் மெய்த் தேவர் என்று உரைக்கப்பட்டவர்கள் அத் தேவர்க்கு எல்லாம் முன் ஆனோனே சத்து ஆன வெண்மை முதல் ஐவணமும் மேவி ஐந்து தேவர்களாய்த் 575 திண்மை பெறும் ஐந்தொழிலும் செய்வோனே மண் முதலாம் ஐந்தாய் இரு சுடராய் ஆன்மாவாய் நாதமுடன் விந்து ஆகி எங்கும் விரிந்தோனே அம் தண வெள் நீறு_உடையாய் ஆறு உடைய நீள் முடியாய் தேட அரிய வீறு_உடையாய் நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மாறுபட 580 எள்ளல் அடியேன் எனக்குள் ஒளியாமல் உள்ளபடியே உரைக்கின்றேன் விள்ளுறும் யான் வன் சொலுடன் அன்றி வள்ளல் உனது அன்பர்-தமக்கு இன் சொலுடன் பணிந்து ஒன்று ஈந்தது இலை புன் சொல் எனும் பொய் உரைக்க என்றால் புடை எழுவேன் அன்றி ஒரு 585 மெய் உரைக்க என்றும் விழைந்தது இலை வையகத்தில் பொல்லா விரதத்தைப் போற்றி உவந்து உண்பது அல்லால் கொல்லா விரதத்தைக் கொண்டது இலை அல்லாதார் வன்புகழைக் கேட்க மனம்கொண்டது அல்லாமல் நின் புகழைக் கேட்க நினைந்ததிலை வன்பு கொண்டே 590 இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன் பொன் அடிக்குத் தொண்டு புரிந்தது இலை பன்னுகின்ற செக்கு உற்ற எள் எனவே சிந்தை நசிந்தேன் அலது முக்குற்றம்-தன்னை முறித்தது இலை துக்கம் மிகு தா இல் வலம்கொண்டு சஞ்சரித்தேன் அல்லது நின் 595 கோவில் வலம்கொள்ளக் குறித்தது இலை பூ_உலகில் வன் நிதியோர் முன் கூப்பி வாழ்த்தினேன் அன்றி உன்றன் சன்னிதியில் கை கூப்பித் தாழ்ந்தது இலை புன் நெறி சேர் மிண்டரொடு கூடி வியந்தது அல்லால் ஐயா நின் தொண்டரொடும் கூடிச் சூழ்ந்தது இலை கண்டவரைக் 600 கன்றும் முகம் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பது அல்லால் என்றும் முகமலர்ச்சி ஏற்றது இலை நன்று பெறு நல் நெஞ்சர் உன் சீர் நவில அது கேட்டுக் கல்_நெஞ்சைச் சற்றும் கரைத்தது இலை பின் எஞ்சாப் பண் நீர்மை கொண்ட தமிழ்ப் பா_மாலையால் துதித்துக் 605 கண்ணீர் கொண்டு உன்-பால் கனிந்தது இலை தண்ணீர் போல் நெஞ்சம் உருகி நினைக்கும் அன்பர் போல் எனை நீ அஞ்சல் என நின் தாள் அடுத்தது இலை விஞ்சு உலகர் மெய் அடியன் என்று உரைக்க வித்தக நின் பொன் அடிக்குப் பொய் அடிமை வேடங்கள் பூண்டது உண்டு நைய மிகு 610 மையல் வினைக்கு உவந்த மாதர் புணர்ச்சி எனும் வெய்ய வினைக் குழியில் வீழ்ந்தது உண்டு துய்யர்-தமை என் ஒன்றும் இல்லாது இயல்பாகப் பின் ஒன்று முன் ஒன்றுமாக மொழிந்தது உண்டு மன்னுகின்ற மானம் செயாது மனம் நொந்து இரப்போர்க்குத் 615 தானம் செய்வாரைத் தடுத்தது உண்டு ஈனம் இலா வாரம் உரையாது வழக்கினிடை ஓர வாரம் உரைத்தே மலைந்தது உண்டு ஈரம் இலா நெஞ்சருடன் கூடி நேசம் செய்தும் அடியே தஞ்சம் எனத் தாழாது தாழ்ந்தது உண்டு எஞ்சல் இலாத் 620 தாய்_அனையாய் உன்றனது சந்நிதி நேர் வந்தும் ஒரு நேயமும் இல்லாது ஒதி போல் நின்றது உண்டு தீய வினை மாளாக் கொடிய மனச் செல்வர் வாயிலில் போய்க் கேளாச் சிவ_நிந்தை கேட்டது உண்டு மீளாத பொல்லாப் புலையரைப் போல் புண்ணியரை வன் மதத்தால் 625 சொல்லா வசை எல்லாம் சொன்னது உண்டு நல்லோரைப் போற்றாது பொய் உடம்பைப் போற்றிச் சிவ_பூசை ஆற்றாது சோற்றுக்கு அலைந்தது உண்டு தேற்றாமல் ஈ பத்தா என்று இங்கு இரப்போர்-தமைக் கண்டு கோபத்தால் நாய் போல் குரைத்தது உண்டு பாபத்தால் 630 சிந்தை ஒன்று வாக்கு ஒன்று செய்கை ஒன்றாய்ப் போகவிட்டே எந்தை நினை ஏத்தாது இருந்தது உண்டு புந்தி இந்த சொல்லைக் கல் என்று நல்லோர் சொன்ன புத்தி கேளாமல் எல்லை_கல் ஒத்தே இருந்தது உண்டு தொல்லை வினை ஆழ்த்து ஆமய உலகில் அற்ப மகிழ்ச்சியினால் 635 வாழ்த்தாமல் உன்னை மறந்தது உண்டு தாழ்த்தாமல் பூணா எலும்பு அணியாய்ப் பூண்டோய் நின் பொன் வடிவம் காணாது வீழ் நாள் கழித்தது உண்டு மாணாத காடு போல் ஞாலக் கடு நடையிலே இரு கால் மாடு போல் நின்று உழைத்து வாழ்ந்தது உண்டு நாடு அகன்ற 640 கள்ளி வாய் ஓங்கு பெரும் காமக் கடும் காட்டில் கொள்ளிவாய்ப்பேய் போல் குதித்தது உண்டு ஒள்ளியரால் எள்ளுண்ட மாயா இயல்புறு புன் கல்வி எலாம் கள் உண்ட பித்தனைப் போல் கற்றது உண்டு நள் உலகில் சீர் ஆசை எங்கும் சொல் சென்றிடவே வேண்டும் எனும் 645 பேர்_ஆசைப் பேய்-தான் பிடித்தது உண்டு தீரா என் சாதகமோ தீ_வினையின் சாதனையோ நான் அறியேன் பாதகம் என்றால் எனக்குப் பால்_சோறு தீது அகன்ற தூய்மை நன்றாம் என்கின்ற தொன்மையினார் வாய்க்கு இனிய வாய்மை என்றால் என்னுடைய வாய் குமட்டும் காய்மை தரும் 650 கற்கு நிகராம் கடும் சொல் அன்றி நல் மதுரச் சொற்கும் எனக்கும் வெகு தூரம் காண் பொற்பு மிக நண்ணி உனைப் போற்றுகின்ற நல்லோர்க்கு இனிய சிவ புண்ணியம் என்றால் எனக்குப் போராட்டம் அண்ணல் உனை நாள் உரையாது ஏத்துகின்ற நல்லோர் மேல் இல்லாத 655 கோள்_உரை என்றால் எனக்குக் கொண்டாட்டம் நீள நினை நேசிக்கும் நல்ல நெறியாம் சிவாகம நூல் வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு நீள் திக்கில் ஆனாலும் நேர்ந்து அறிவது அல்லது வீண் வேடிக்கை என்றால் விடுவதிலை நாடு அயலில் 660 வீறாம் உனது விழாச் செயினும் அவ்விடம்-தான் ஆறாயிரம் காதமாம் கண்டாய் மாறான போகம் என்றால் உள்ளம் மிகப் பூரிக்கும் அன்றி சிவ யோகம் என்றால் என்னுடைய உள் நடுங்கும் சோகமுடன் துள்ளல் ஒழிந்து என் நெஞ்சம் சோர்ந்து அழியும் காலத்தில் 665 கள்ளம் என்றால் உள்ளே களித்து எழும்பும் அள்ளல் நெறி செல் என்றால் அன்றிச் சிவசிவா என்று ஒரு கால் சொல் என்றால் என்றனக்குத் துக்கம் வரும் நல்ல நெறி வாம் பலன் கொண்டோர்கள் மறந்தும் பெறாக் கொடிய சோம்பல் என்பது என்னுடைய சொந்தம் காண் ஏம்பலுடன் 670 எற்றோ இரக்கம் என்பது என்றனைக் கண்டு அஞ்சி எனை உற்றோரையும் உடன் விட்டு ஓடும் காண் சற்றேனும் ஆக்கமே சேராது அறத் துரத்துகின்ற வெறும் தூக்கமே என்றனக்குச் சோபனம் காண் ஊக்கம் மிகும் ஏறு_உடையாய் நீறு அணியா ஈனர் மனை ஆயினும் வெண் 675 சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற வாழ்வு உரைக்கும் நல்ல மனத்தர்-தமை எஞ்ஞான்றும் தாழ்வு உரைத்தல் என்னுடைய சாதகம் காண் வேள்வி செயும் தொண்டர்-தமைத் துதியாத் துட்டரைப் போல் எப்பொழுதும் சண்டை என்பது என்றனக்குத் தாய்_தந்தை கொண்ட எழு 680 தாது ஆட ஓங்கித் தலை ஆட வஞ்சரொடு வாதாட என்றால் என் வாய் துடிக்கும் கோது ஆடச் சிந்தை திரிந்து உழலும் தீயரைப் போல் நல் தரும நிந்தை என்பது என் பழைய நேசம் காண் முந்த நினை எண் என்றால் அன்றி இடர் செய்திடும் கொடிய 685 பெண் என்றால் தூக்கம் பிடியாது பெண்கள் உடல் புல் என்றால் தேகம் புளகிக்கும் அன்றி விட்டு நில் என்றால் என் கண்ணில் நீர் அரும்பும் புல்லர் என்ற பேர்க்கும் விருப்பு எய்தாத பெண் பேய்கள் வெய்ய சிறு நீர்க் குழியே யான் குளிக்கும் நீர்ப் பொய்கை சீர்க்கரையின் 690 ஏறாப் பெண் மாதர் இடைக்குள் அளிந்து என்றும் ஆறாப் புண்ணுக்கே அடிமை நான் தேறாத வெம் சலம்செய் மாயா விகாரத்தினால் வரும் வீண் சஞ்சலம் எல்லாம் எனது சம்பந்தம் அஞ்செழுத்தை நேர்ந்தார்க்கு அருள் புரியும் நின் அடியர் தாமேயும் 695 சார்ந்தால் அது பெரிய சங்கட்டம் ஆர்ந்திடும் மான் காந்தும் விழிப் புலியைக் கண்டது போல் நல்ல குண சாந்தம் எனைக் கண்டால் தலை சாய்க்கும் ஆம் தகையோர் சேர மனத்தில் செறிவித்திடும் புருட தீரம் எனைக் கண்டால் சிரிக்கும் காண் கோரம்-அதைக் 700 காணில் உலகில் கருத்து_உடையோர் கொள்ளுகின்ற நாணம் எனைக் கண்டு நாணும் காண் ஏண் உலகில் ஞானம் கொளா எனது நாமம் உரைத்தாலும் அபி மானம் பயம்கொண்டு மாய்ந்துவிடும் ஆன உன்றன் கேண்மைக் குலத் தொண்டர் கீர்த்திபெறக் கொண்ட 705 ஆண்மைக்கு நான் என்றால் ஆகாது வாண்மை பெறும் ஐய நின் தாள் பூசிக்கும் அன்பர் உள்ளத்து அன்பிற்கும் பொய்யன் எனக்கும் பொருத்தம் இலை வையகத்தோர் இல் எனினும் சும்மா நீ ஈகின்றேன் என்று ஒரு சொல் சொல் எனினும் சொல்லத் துணிவுகொளேன் நல்லை எமக்கு 710 ஈ என்பார் அன்றி அன்னை என் பயத்தால் நின் சோற்றில் ஈ என்பதற்கும் இசையாள் காண் ஈ என்பார்க்கு எண்ணும் சிலர் மண் இடுவார் எனக்கு அந்த மண்ணும் கொடுக்க மனம்வாராது அண்ணுறும் என் இல்லை அடைந்தே இரப்பவருக்கு எப்போதும் 715 இல்லை என்பது என் வாய்க்கு இயல்பு காண் தொல் உலகை ஆண்டாலும் அன்றி அயலார் புன் கீரைமணிப் பூண்டாலும் என் கண் பொறுக்காது நீண்ட எழு தீபம் உறுவோர் திசையோர் மற்று யாவர்க்கும் கோபம்-அது நான் கொடுக்கில் உண்டு ஆபத்தில் 720 வீசம் கொடுத்து எட்டு வீசம் எனப் பிறரை மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் கைக் குடையவே எழுதிக் கட்டிவைத்த இ உலகப் பொய்_கதையே யான் படிக்கும் புத்தகங்கள் மெய்ப்படு நின் மந்திரத்தை உச்சரியா வாய்_உடையேன் என் போலத் 725 தந்திரத்தில் கைதேர்ந்தவர் இல்லை எந்தை இனி ஏது என்று உரைப்பேன் இரும் கடல் சூழ் வையகத்தில் சூது என்பது எல்லாம் என் சுற்றம் காண் ஓதுகின்ற நஞ்சம் எலாம் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத வஞ்சம் எலாம் என் கைவசம் கண்டாய் அஞ்ச வரும் 730 வீண் அவமாம் வஞ்ச வினைக்கு முதல் ஆகி நின்ற ஆணவமே என் காணி ஆட்சி-அதாம் மாண் நிறைந்த நல் அறிவே என்னை நெடுநாள் பகைத்தது அன்றி மற்றைப் புல்_அறிவே என் உள் பொருள் கண்டாய் சொல்லவொணா வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் 735 மூடருக்குள் யானே முதல்வன் காண் வீடு அடுத்த மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற பேதை என்பது என் உரிமைப் பேர் கண்டாய் பேதம் உற ஓதுவது என் பற்பலவாய் உற்ற தவத்தோர் நீத்த தீதுகள் எல்லாம் எனது செல்வம் காண் ஆதலினால் 740 பேயினை ஒத்து இ உலகில் பித்தாகி நின்ற இந்த நாயினை நீ ஆண்டிடுதல் நன்கு அன்றே ஆயினும் உன் மண்ணார் உயிர்களுக்கும் வானவர்க்கும் தான் இரங்கி உண்ணாக் கொடு விடமும் உண்டனையே எண்ணாமல் வேய்த் தவள வெற்பு எடுத்த வெய்ய அரக்கன்-தனக்கும் 745 வாய்த்த வரம் எல்லாம் வழங்கினையே சாய்த்த மன வீம்பு உடைய வன் முனிவர் வேள்வி செய்து விட்ட கொடும் பாம்பை எல்லாம் தோளில் பரித்தனையே நாம் பெரியர் எஞ்சேம் என்று ஆணவத்தால் ஏற்ற இருவரையும் அஞ்சேல் என்று ஆட்கொண்டு அருளினையே துஞ்சு பன்றித் 750 தோயாக் குருளைகளின் துன்பம் பொறாது அன்று தாயாய் முலை_பாலும் தந்தனையே வாய் இசைக்குப் பாண்டியன் முன் சொல்லி வந்த பாணன் பொருட்டு அடிமை வேண்டி விறகு எடுத்து விற்றனையே ஆண்டு ஒரு நாள் வாய் முடியாத் துன்பு கொண்ட வந்திக்கு ஓர் ஆளாகித் 755 தூய் முடி மேல் மண்ணும் சுமந்தனையே ஆய் துயரம் மா அகம் சேர் மாணிக்கவாசகருக்காய்க் குதிரைச் சேவகன் போல் வீதி-தனில் சென்றனையே மா விசயன் வில் அடிக்கு நெஞ்சம் விரும்பியது அல்லால் எறிந்த கல் அடிக்கும் உள்ளம் களித்தனையே மல்லல் உறும் 760 வில்வக் கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையைச் செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே சொல் அகலின் நீளுகின்ற நெய் அருந்த நேர் எலியை மூவுலகும் ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே கோள் அகல வாய்ச்சு அங்கு நூல் இழைத்த வாய்ச் சிலம்பி-தன்னை உயர் 765 கோச்செங்கண் சோழன் எனக் கூட்டினையே ஏச்சு அறும் நல் ஆறு அடுத்த வாகீசர்க்கு ஆம் பசியைக் கண்டு கட்டுச் சோறு எடுத்துப் பின்னே சுமந்தனையே கூறுகின்ற தொன்மை பெரும் சுந்தரர்க்குத் தோழன் என்று பெண் பரவை நல் மனைக்குத் தூது நடந்தனையே நன்மை பெற 770 இற்று என்ற இற்று என்னா எத்தனையோ பேர்கள் செய்த குற்றம் குணம் ஆகக் கொண்டனையே பற்று உலகில் அன்பு உடைய தாயர்கள் ஓர் ஆயிரம் பேர் ஆனாலும் அன்பு_உடையாய் நின்னைப் போல் ஆவாரோ இன்பமுடன் ஈண்ட வரும் தந்தையர்கள் எண்_இலரே ஆயினும் என் 775 ஆண்டவனே நின்னைப் போல் ஆவாரோ பூண் தகை கொள் ஏண் உடைய நின்னை அன்றி எந்தை பிரானே உன் ஆணை எனக்கு உற்ற_துணை யாரும் இல்லை நாணம் உளன் ஆனேன் பிழைகள் அனைத்தினையும் ஐயா நீ- தானே பொறுக்கத் தகும் கண்டாய் மேல் நோற்ற 780 மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னைக் கூற்றனுக்குக் காட்டிக்கொடுக்கற்க பால் தவள நந்து அ கடல் புவியில் நான் இன்னும் வன் பிறவிப் பந்தக் கடல் அழுந்தப்பண்ணற்க முந்தை நெறி நின்றே உன் பொன்_தாள் நினையாதார் பாழ் மனையில் 785 சென்றே உடல் ஓம்பச்செய்யற்க நன்றே நின்று ஓங்கு நெறியோர் உளத்து அமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செலுத்தற்க ஈங்கு அடங்கி வாழி எனத் தான் வழுத்தினும் என் சொற்கு அடங்கா ஏழை மனத்தால் இளைக்கின்றேன் வாழும் மரக் 790 கோடு ஏறும் பொல்லாக் குரங்கு எனவே பொய் உலகக் காடு ஏறும் நெஞ்சால் கலங்குகின்றேன் பாடு ஏறும் உள் அறியா மாயை எனும் உட்பகை ஆர்க் காமம் எனும் கள் அறியாது உண்டு கவல்கின்றேன் தெள் உறும் என் கண்_அனையாய் நின் தாள்_கமலங்களை வழுத்தா 795 மண்_அனையார்-பால் போய் மயங்குகின்றேன் திண்ணம் இலாக் காதரவாம் துன்பக் கவலைக் கடல் வீழ்ந்தே ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன் ஓது மறை ஆத்தர் எனும் உன் அடியார்-தமைக் கண்டு நாத்திகம் சொல்வார்க்கு நடுங்குகின்றேன் பாத்து உண்டே 800 உய்வது அறியா உளத்தினேன் உய்யும் வகை செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறி யுள் நிரம்பும் நின் கருணை உண்டோ இலையோ என்று எண்ணிஎண்ணி உள்ளம் இளைக்கின்றேன் மண்ணினிடைக் கொன் செய்கை கொண்ட கொடும் கூற்றன் குறுகில் அதற்கு 805 என் செய்வோம் என்று எண்ணி எய்க்கின்றேன் முன் செய் வினை யாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான் தாமரையின் நீர் போல் தயங்குகின்றேன் தாமம் முடி வள்ளல் அருள் கொடுக்க வந்திலனே இன்னும் என உள்ளம்-அது நீராய் உருகுகின்றேன் எள்ளலுறு 810 மாலை பாய்ந்து இன்னும் என்ன வந்திடுமோ என்று நெஞ்சம் ஆலை பாய்ந்து உள்ளம் அழிகின்றேன் ஞாலம் மிசைக் கோள் பார வாழ்க்கைக் கொடும் சிறையில் நின்று என்னை மீட்பார் இலாது விழிக்கின்றேன் மீட்பு ஆகும் ஆற்றில் ஒரு காலும் அடங்காச் சமுசாரச் 815 சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன் தோற்றும் மயல் பாகமுறு வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த் தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில் போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் வாய்ப்படும் ஓர் தேரையைப் போல் வாடுகின்றேன் மாய்ப்ப வரும் 820 மீன் போலும் மாதர் விழியால் வலைப்பட்ட மான் போலும் சோர்ந்து மடங்குகின்றேன் கான் போல வீற்றும் உலக விகாரப் பிரளயத்தில் தோற்றும் சுழியுள் சுழல்கின்றேன் ஆற்றவும் நான் இப் பாரில் உன் மேல் அன்பு இல் எனினும் அன்பன் என 825 ஒப்பாரியேனும் உடையேன் காண் தப்பு ஆய்ந்த மட்டு விடேன் உன் தாள் மறக்கினும் வெண் நீற்று நெறி விட்டுவிடேன் என்றனைக் கைவிட்டுவிடேல் துட்டன் என மாலும் திசைமுகனும் வானவரும் வந்து தடுத் தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல் சால் உலக 830 வாதனை கொண்டோன் என்று மற்று எவரானாலும் வந்து போதனைசெய்தாலும் எனைப் போக்கிவிடேல் நீ தயவு சூழ்ந்திடுக என்னையும் நின் தொண்டருடன் சேர்த்து அருள்க வாழ்ந்திடுக நின் தாள்_மலர்

மேல்

@3. நெஞ்சறிவுறுத்தல்

* காப்பு

மேல்

#-1 சீர் சான்ற முக்கண் சிவ_களிற்றைச் சேர்ந்திடில் ஆம் பேர் சான்ற இன்பம் பெரிது

மேல்

#0 ஆறுமுகத்தான் அருள் அடையின் ஆம் எல்லாப் பேறும் மிகத் தான் பெரிது * நெஞ்சறிவுறுத்தல் கலிவெண்பா

மேல்

#1 பொன் ஆர் மலை போல் பொலிவுற்று அசையாமல் எந்நாளும் வாழிய நீ என் நெஞ்சே பின் ஆன இப் பிறப்பினோடு இங்கு எழு பிறப்பும் அன்றி எனை எப் பிறப்பும் விட்டு அகலா என் நெஞ்சே செப்பமுடன் செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற 5 இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் உலகும் பரவும் ஒரு முதலாய் எங்கும் இலகும் சிவமாய் இறையாய் விலகும் உருவாய் உருவில் உருவாய் உருவுள் அருவாய் அருவில் அருவாய் உருஅருவாய் 10 நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச் சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் முத்தி அருள் ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய் நன்றாய் நவமாய் நடு நிலையாய் நின்று ஓங்கும் வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்கு பர 15 நாதமாய் நாதாந்த நாயகமாய் ஓதும் செறிவாய்த் திரமாய்ச் சிதாகாசமாய்ச் சொல் அறிவாய் அறிவுள்_அறிவாய் நெறி மேவு காலமாய்க் காலம் கடந்த கருத்தாய் நல் சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் ஞாலம் 20 பொருந்தா பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப் பெரும் தாரகம் சூழ்ந்த பேறாய்த் திருந்தாத போக்கும்_வரத்தும் இலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள் நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா ஆதியாய் ஆதி நடு அந்தமாய் ஆங்கு அகன்ற 25 சோதியாய்ச் சோதியாச் சொல் பயனாய் நீதியாய் ஆங்கார நீக்கும் அகார உகாரம்-அதாய் ஓங்காரமாய் அவற்றின் உட்பொருளாய்ப் பாங்கான சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச் சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் வித்தமாய் 30 அண்டமாய் அண்டத்து அணுவாய் அருள் அகண்டா கண்டமாய் ஆனந்தாகாரம்-அதாய் அண்டத்தின் அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மை-அதாய் எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் செப்பாலும் நெஞ்சாலும் காய நிலையாலும் அ நிலைக்குள் 35 அஞ்சாலுங் காண்டற்கு அரும் பதமாய் எஞ்சாப் பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின் தரமாய்ப் பரப்பிரமம்-தானாய் வரமாய ஒன்பான் வடிவாய் ஒளி எண்_குண_கடலாய் அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் இன்பாய் 40 அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும் சகமாய்ச் சகமாயை_தானாய் சகமாயை_ இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும் கொல்லாதார்க்கு இன்பம் கொடுப்பதாய் எல்லார்க்கும் நண்ணுவதாய் நண்ணாதாய் நல்_வினையாய் அல்_வினையாய் 45 எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் எண்ணுகின்ற வானாய் நிலனாய் வளியாய் அனலாய் நீர்_ தானாய் வழிபடும் நான்-தான்_தானாய் வான் ஆதி ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம் மன்றிடத்தில் என்றும் வதிவதாய் ஒன்றியதோர் 50 ஐந்நிறமாய் அ நிறத்தின் ஆம் ஒளியாய் அ ஒளிக்குள் எ நிறமும் வேண்டா இயல் நிறமாய் முந்நிறத்தில் பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய் நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் பூப்பது இன்றி வாளாது இருப்பதுவாய் வாதனாதீதமாய் 55 நீளாது நீண்ட நிலையினதாய் மீளாப் பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும் அரிதாய் அரிதில்_அரிதாய்த் துரிய வெளியாய்ப் பர_வெளியாய் மேவு பர விந்தின் ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் தெளி ஆதி 60 கற்பகமாய்க் காணும் சங்கற்ப விகற்பமாய் நிற்பதாகார நிருவிகற்பாய்ப் பொற்பு உடைய முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்_ஒளியாய்ப் பின்_ஒளியாய் எச்சுடரும் போதா இயல் சுடராய் அச்சில் நிறைவாய்க் குறைவாய் நிறைகுறைவு_இல்லாதாய் 65 மறைவாய் வெளியாய் மனுவாய் மறையாத சச்சிதானந்தம்-அதாய்த் தன்னிகர் ஒன்று இல்லாதாய் விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் மெச்சுகின்ற யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ போகமாய்ப் போகியாய்ப் போகம் அருள் ஏகமாய்க் 70 கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச் சகல கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் காட்சியாய்க் காண்பானாய்க் காணப்படு_பொருளாய்ச் சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வு அரிதாய் மாட்சி பெறச் செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால் 75 உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் மொய்கொள் அதுவாய் அவளாய் அவனாய் அவையும் கதுவாது நின்ற கணிப்பாய்க் கதுவாமல் ஐயம் திரிபோடு அறியாமை விட்டு அகற்றிப் பொய் என்பது ஒன்றும் பொருந்தாராய்ச் செய் என்ற 80 ஓர் வினையில் இன்பமும் மற்று ஓர் வினையில் துன்பமும் ஆம் சார்வினை விட்டு ஓங்கும் தகையினராய்ப் பார் வினையில் ஓர் பால் வெறுப்பும் மற்றை ஓர் பால் விருப்பும் உறும் சார்பால் மயங்காத் தகையினராய்ச் சார்பாய ஓர் இடத்தில் தண்மையும் மற்று ஓர் இடத்தில் வெம் சினமும் 85 பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் நீரிடத்தில் தண்மை நிகராது என்றும் சாந்தம் பழுத்து உயர்ந்த ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் வெண்மை இலா ஒன்றும் அறிவின் உதயாதி ஈறு அளவும் என்றும் இரண்டு என்பது இல்லவராய் மன்ற ஒளிர் 90 அ மூன்றின் உள்ளே அடுக்கி வரும் ஒன்று அகன்ற மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் தம் ஊன்றி வீடாது நின்றும் விரிந்தும் விகற்ப நடை நாடாது நான்கும் நசித்தவராய் ஊடாக எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும் 95 அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் எஞ்சாமல் ஈண்டு ஆண்டு அருளும் இறையோர்-தமை ஆறில் ஆண்டாண்டு கண்டு ஆறு அகன்றவராய் ஈண்டாது வாழியுற்ற வானோரும் வந்து தமக்கு இரண்டோடு ஏழ் இயற்ற ஏழும் இகந்தவராய் ஊழ் இயற்றக் 100 கட்டி நின்று உள் சோதி ஒன்று காணத் தொடங்குகின்றோர் எட்டுகின்ற எட்டின் மேல் எய்தினராய்க் கட்டுகின்ற தேன் தோய் கருணைச் சிவம் கலந்து தேக்குகின்ற சான்றோர்-தம் உள்ளம் தணவாதாய் மான்ற மலத் தாக்கு ஒழிந்து தத்துவத்தின் சார்பாம் தனு ஒழிந்து 105 வாக்கு ஒழிந்து மாணா மனம் ஒழிந்து ஏக்கம் உற வாய்க்கும் சுகம் ஒழிந்து மண் ஒழிந்து விண் ஒழிந்து சாய்க்கும் இரா_பகலும்-தான் ஒழிந்து நீக்கு ஒழிந்து நானும் ஒழியாது ஒழிந்து ஞானம் ஒழியாது ஒழிந்து தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை 110 நிற்கும் பிரம நிர்_அதிசயானந்தம்-அதாய் நிற்கும் பரம நிருத்தன் எவன் தற்பரமாய் நின்றான் எவன் அன்பர் நேய மனத்தே விரைந்து சென்றான் எவன் சர்வ தீர்த்தன் எவன் வன் தீமை இல்லான் எவன் யார்க்கும் ஈசன் எவன் யாவும் 115 வல்லான் எவன் அந்தி வண்ணன் எவன் கல் ஆலில் சுட்டு அகன்ற ஞான சுகாதீதம் காட்டி முற்றும் விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்து அருளித் திண் தங்குமாறு இருத்தும் சித்தன் எவன் பண் தங்கு 120 வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டம் எலாம் தேயாது கூட்டுவிக்கும் சித்தன் எவன் யாயாதும் வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்-தமைத் தீண்டாது தீண்டுகின்ற சித்தன் எவன் ஈண்டு ஓது பற்றுருவாய்ப் பற்றாப் பர அணுவின் உள் விளங்கும் 125 சிற்றுருவாய் உள் ஒளிக்கும் சித்தன் எவன் மற்று உருவின் வையாது வைத்து உலகை மா இந்திரசாலம் செய்யாது செய்விக்கும் சித்தன் எவன் நையாமல் அப்பிடை வைப்பாம் உலகில் ஆர்_உயிரை மாயை எனும் செப்பிடை வைத்து ஆட்டுகின்ற சித்தன் எவன் ஒப்புறவே 130 நில்லாத காற்றை நிலையாக் கடத்து அடைத்துச் செல்லாது வைக்கின்ற சித்தன் எவன் பொல்லாத வெம் பாம்பை மேல் அணிந்து ஓர் வெம் புற்றின் உள் இருந்தே செம் பாம்பை ஆட்டுகின்ற சித்தன் எவன் தம் பாங்கர் ஒண் கயிற்றான் ஒன்று இன்றி உள் நின்று உயிர்களை ஊழ்த் 135 திண் கயிற்றால் ஆட்டுகின்ற சித்தன் எவன் வண் கை உடைத் தான் அசைந்தால் மற்றைச் சகம் அசையும் என்று மறை தேன் அசையச் சொல்லுகின்ற சித்தன் எவன் ஊனம் இன்றிப் பேர்த்து உயிர்கள் எல்லாம் ஓர் பெண்_பிள்ளையின் வசமாய்ச் சேர்த்து வருவிக்கும் சித்தன் எவன் போர்த்து மிக 140 அல் விரவுங் காலை அகிலம் எலாம் தன் பதத்து ஓர் சில் விரலில் சேர்க்கின்ற சித்தன் எவன் பல் வகையாய்க் கை கலந்த வண்மைக் கருப்பாசயப் பையுள் செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை மெய் வைத்த வேர்வையினும் வீழ் நிலத்தும் அண்டத்தும் 145 செய்வித்து அங்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய்விக்கும் வித்து ஒன்றும் இன்றி விளைவித்து அருள் அளிக்கும் சித்து என்றும் வல்ல ஒரு சித்தன் எவன் சத்துடனே உற்பத்தியாய் உலகில் ஒன்பது வாய்ப் பாவைகள் செய் சிற்பத் தொழில் வல்ல சித்தன் எவன் பற்பலவாம் 150 கார் ஆழிகளைக் கரை இன்றி எல்லை இலாச் சேர் ஊழி நிற்கவைத்த சித்தன் எவன் பேராத நீர் மேல் நெருப்பை நிலையுற வைத்து எவ்வுலகும் சீர் மேவுறச் செய்யும் சித்தன் எவன் பார் ஆதி ஐந்திலைந்து நான்கு ஒரு மூன்று ஆம் இரண்டு ஒன்றாய் முறையே 155 சிந்தையுற நின்று அருளும் சித்தன் எவன் பந்தமுற ஆண்பெண்ணாய்ப் பெண்ஆணாய் அண்மை-தனை வானின் சேண் பண்ண வல்ல ஒரு சித்தன் எவன் மாண்பு அண்ணாப் பேடு ஆணாய்ப் பெண்ணாய்ப் பெண் ஆண் பெரும் பேடாய்ச் சேடாகச் செய்ய வல்ல சித்தன் எவன் சேடாய 160 வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய்த் திண்மை பெறச் செய்யும் சித்தன் எவன் ஒண்மை இலா ஓட்டினைச் செம்பொன்னாய் உயர் செம்பொன் ஓடாகச் சேட்டை அறச் செய்கின்ற சித்தன் எவன் காட்டில் உறு காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த் 165 தேம் சிவணச் செய்கின்ற சித்தன் எவன் வாஞ்சை உற நாரணன்_சேய் நான்முகனாய் நான்முகன்_சேய் நாரணனாய்ச் சீர் அணவச் செய்ய வல்ல சித்தன் எவன் பேர் அணவக் கொம்மை பெறும் கோடாகோடி அண்டம் எல்லாம் ஓர் செம் மயிர்க்காலுள் புகுத்தும் சித்தன் எவன் செம்மை இலா 170 வெம் புலியை வெண் பால் விளை பசுவாய் அப் பசுவைச் செம் புலியாச் செய்ய வல்ல சித்தன் எவன் அம்புலியை அம் கதிர் ஒண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற செங்கதிரைச் செய்ய வல்ல சித்தன் எவன் துங்கம் உறா ஓர் அணு ஓர் மா மலையாய் ஓர் மா மலை-அது ஓர் 175 சீர் அணுவாய்ச் செய்ய வல்ல சித்தன் எவன் வீரமுடன் முன் நகையா நின்றதொரு முப்புரத்தை அன்று ஒரு கால் சில் நகையால் தீ மடுத்த சித்தன் எவன் முன் அயன் மால் மற்று இருந்த வானவரும் வாய்ந்து அசைக்கா வண்ணம் ஒரு சில் துரும்பை நாட்டி நின்ற சித்தன் எவன் மற்றவர் போல் 180 அல்லா அயனும் அரியும் உருத்திரனும் செல்லா நெறி நின்ற சித்தன் எவன் ஒல்லாத கல்லில் சுவையாய்க் கனியில் சுவை_இலதாய்ச் செல்லப் பணிக்க வல்ல சித்தன் எவன் அல்லல் அறப் பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனாதீதன் எனச் 185 சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தன் எவன் மார்க்கங்கள் ஒன்று என்ற மேலவரை ஒன்று என்று உரைத்தவர்-பால் சென்று ஒன்றி நிற்கின்ற சித்தன் எவன் அன்று ஒருநாள் கல்_ஆனை தின்னக் கரும்பு அளித்துப் பாண்டியன் வீண் செல்லாது அளித்த மகா சித்தன் எவன் சொல்லாத 190 ஒன்றே இரண்டே மேல் ஒன்றிரண்டே என்பவற்றுள் சென்றே நடு நின்ற சித்தன் எவன் சென்று ஏறும் அத்திரத்தை மென் மலராய் அ மலரை அத்திரமாய்ச் சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தன் எவன் எத் தலத்தும் சங்கம்-அதே தாபரமாய்த் தாபரமே சங்கம்-அதாய்ச் 195 செம் கை இடாது ஆற்ற வல்ல சித்தன் எவன் தங்குகின்ற சத்து எல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச் சித்து எல்லாம்_வல்ல சிவ சித்தன் எவன் தத்து எல்லாம் நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன் உண்மை காட்டாது காட்டி நிற்கும் கள்வன் எவன் பாட்டோடு 200 வண்டு ஆலும் கொன்றை மலரோய் என மறைகள் கண்டாலும் காணாத கள்வன் எவன் தொண்டாக அள்ளு அஞ்சு எறியார்க்கே அன்றி அறிவார்க்குக் கள்ளம் செறியாத கள்வன் எவன் எள்ளல் அறக் கொண்ட எலாம் தன்-பால் கொடுக்கும்-அவர்-தம்மிடத்தில் 205 கண்ட எலாம் கொள்ளை கொளும் கள்வன் எவன் கொண்டு உளத்தில் தன்னை ஒளிக்கின்றோர்கள்-தம் உள் ஒளித்து உள்ள எலாம் கன்னமிடக் கைவந்த கள்வன் எவன் மன் உலகைச் சற்பனை செய்கின்ற திரோதானம் எனும் சத்தியினால் கற்பனை செய்தே மயக்கும் கள்வன் எவன் முற்படும் இத் 210 தொண்டு உலகில் உள்ள உயிர்-தோறும் ஒளித்து ஆற்றல் எலாம் கண்டு உலவுகின்றதொரு கள்வன் எவன் விண்டு அகலா மண் மயக்கும் பொன் மயக்கும் மாதர் மயக்கும் எனும் கண் மயக்கம் காட்டி நிற்கும் கள்வன் எவன் உள் மயக்கும் மாசு பறிக்கும் மதி_உடையோர்-தம்முடைய 215 காசு பறிக்கின்ற கள்வன் எவன் ஆசு அகன்ற பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல் கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது நான் என்று நிற்கில் நடுவே அ நான் நாணத் தான் என்று நிற்கும் சதுரன் எவன் மான் என்ற 220 மாயை-தனைக் காட்டி மறைப்பித்து அ மாயையில் தன் சாயை-தனைக் காட்டும் சதுரன் எவன் நேயமுடன் நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடு-தொறும் தான் மறையும் மேன்மைச் சதுரன் எவன் வான் மறையா முன்னை மறைக்கும் முடிப் பொருள் என்று ஆய்பவர்க்கும் 225 தன்னை மறைக்கும் சதுரன் எவன் உன்னுகின்றோர் சித்தத்தில் சுத்த சிதாகாசம் என்று ஒரு சித். சத்தத்தில் காட்டும் சதுரன் எவன் முத்தர் என யாவர் இருந்தார் அவர் காண வீற்றிருக்கும் தேவர் புகழ் தலைமைத் தேவன் எவன் யாவர்களும் 230 இ_வணத்தன் இ_இடத்தன் இ_இயலன் என்று அறியாச் செவ்வணத்தனாம் தலைமைத் தேவன் எவன் மெய்_வணத்தோர்- தாம் வாழ அண்ட சராசரங்கள்-தாம் வாழ நாம் வாழத் தன் உரையாம் நான்மறைகள்-தாம் வாழச் சார் உருவின் நல் அருளே சத்தியாய் மெய் அறிவின் 235 சீர் உருவே ஓர் உருவாம் தேவன் எவன் ஈர் உருவும் ஒன்று என்று உணர உணர்த்தி அடியர் உளம் சென்று அங்கு அமர்ந்து அருளும் தேவன் எவன் என்றென்றும் தன் சகசம் என்றே சமயம் சமரசமாம் சிற்சபையில் வாழ்கின்ற தேவன் எவன் பிற்படும் ஓர் 240 பொய் விட்டு மெய் நெறியைப் போற்றித் தற்போதத்தைக் கைவிட்டு உணர்வே கடைப்பிடித்து நெய் விட்ட தீப் போல் கனலும் செருக்கு அறவே செங்கமலப் பூப் போலும் தன் தாள் புணை பற்றிக் காப்பாய வெண் நீறு அணிந்து விதிர்விதிர்த்து மெய் பொடிப்பக் 245 கண்ணீர் அருவி கலந்து ஆடி உள் நீர்மை என்பு உருகி உள் உருகி இன்பு ஆர் உயிர் உருகி அன்பு உருகி அன்பு உருவம் ஆகிப் பின் வன்பு அகன்று புண்ணியா திங்கள் புரி சடையாய் பொன் இதழிக் கண்ணியா எங்கள் களைகண்ணே எண்ணியாங்கு 250 அன்பர்க்கு அருளும் அரசே அமுதே பேர்_ இன்பக் கடலே எமது உறவே மன் பெற்று மாற்று உரையாப் பொன்னே மணியே எம் கண்மணியே ஏற்று உவந்த மெய்ப்பொருளே என்று நிதம் போற்றிநின்றால் உள் ஊறி உள்ளத்து உணர்வு ஊறி அ உணர்வின் 255 அள் ஊறி அண்ணித்து அமுது ஊறித் தெள் ஊறும் வான் போல் பரவி மதி போல் குளிர்ந்து உயர் கோல் தேன் போல் மதுரிக்கும் தேவன் எவன் வான்_போனார் மாண் கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப் பொன் நாண் கொடுக்க நஞ்சு உவந்த நாதன் எவன் நாள்_மலர் பெய்து 260 ஆர்த்தியாய்த் தேவர் அரகர என்று ஏத்த அட்ட_ மூர்த்தியாய் நின்ற முதல்வன் எவன் சீர்த்தி பெற ஈண்டு அற்புத வடிவாய் எத் தேவரேனும் நின்று காண்டற்கு அரிதாம் கணேசன் எவன் வேண்டுற்றுப் பூமி எங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்பும் இட்ட 265 காமியங்கள் ஈயும் கணேசன் எவன் நாம் இயங்க ஏண வரும் இடையூறு எல்லாம் அகற்றி அருள் காண எமக்கு ஈயும் கணேசன் எவன் மாண வரும் முந்து அ மறையின் முழுப்பொருளை நான்முகற்குத் தந்த அருள்_கடலாம் சாமி எவன் தம் தமக்காம் 270 வாது அகற்றி உண்மை மரபு அளித்து வஞ்ச மலக் கோது அகற்றும் நெஞ்சக் குகேசன் எவன் தீது அகற்றித் தங்கும் உலகங்கள் சாயாமல் செம் சடை மேல் கங்கை-தனைச் சேர்த்த கடவுள் எவன் எங்கு உறினும் கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற 275 பாம்பு ஆபரணப் பரமன் எவன் கூம்பாது போற்று உரைத்து நிற்கும் புனிதன் மேல் வந்த கொடும் கூற்று உதைத்த செம் தாள் குழகன் எவன் ஆற்றலுறு வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்தி முதல் ஐயைந்து மூர்த்தி எனும் ஐயன் எவன் ஐயம் தீர் 280 வல்லார் சொல் வண்ணம் எந்த வண்ணம் அந்த வண்ணங்கள் எல்லாம் உடைய இதத்தன் எவன் எல்லார்க்கும் தாம் தலைவர் ஆகத் தம் தாள் தொழும் எத் தேவர்க்கும் ஆம் தலைமை ஈந்த பரமார்த்தன் எவன் போந்து உயிர்கள் எங்கெங்கு இருந்து மனத்து யாது விழைந்தாலும் 285 அங்கங்கு இருந்து அளிக்கும் அண்ணல் எவன் புங்கம் மிகும் அண்ணல் திரு_மலர்க் கை ஆழி பெறக் கண் இடந்த கண்ணற்கு அருளிய முக்கண்ணன் எவன் மண்ணிடத்தில் ஓயாது சூல் முதிர்ந்த ஓர் பெண்-தனக்காகத் தாய் ஆகி வந்த தயாளன் எவன் சேயாக 290 வேல் பிடித்த கண்ணப்பன் மேவும் எச்சில் வேண்டும் இதத் தால் பொசித்து நேர்ந்த தயாளன் எவன் பால் குடத்தைத் தான் தந்தை என்று எறிந்தோன் தாள் எறிந்த தண்டிக்குத் தான் தந்தை ஆன தயாளன் எவன் தான் கொண்டு சம்பு நறும் கனியின்-தன் விதையைத் தாள் பணிந்த 295 சம்பு முனிக்கு ஈயும் தயாளன் எவன் அம்புவியில் ஆண்டவன் என்று ஏத்தப் பொன்_அம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் செய்கின்ற தயாளன் எவன் காண் தகைய முத்துச் சிவிகையின் மேல் முன் காழி ஓங்கும் முழு முத்தைத் தனி வைத்த முத்தன் எவன் பத்தி பெறு 300 நா ஒன்று அரசர்க்கு நாம் தருவேம் நல்லூரில் வா என்று வாய்_மலர்ந்த வள்ளன் எவன் பூ ஒன்று நல் தொண்டர் சுந்தரரை நாம் தடுக்க வந்தமையால் வன் தொண்டன் நீ என்ற வள்ளல் எவன் நல் தொண்டின் காணிக்கையாகக் கருத்து அளித்தார்-தம் மொழியை 305 மாணிக்கம் என்று உரைத்த வள்ளல் எவன் தாள் நிற்கும் தன் அன்பர் தாம் வருந்தில் சற்றும் தரியாது மன் அன்பர் உள் அளிக்கும் வள்ளல் எவன் முன் அன்பில் சால்பு உடைய நல்லோர்க்குத் தண் அருள்தந்து ஆட்கொள ஓர் மால் விடை மேல் வந்து அருளும் வள்ளல் எவன் மால் முதலோர் 310 தாம் அலையா வண்ணம் தகை அருளி ஓங்கு வெள்ளி மா மலை வாழ்கின்ற அருள் வள்ளல் எவன் ஆம் அவனே நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாட அரிதாம் செம்மைக் கதி அருள் நம் தெய்வம் காண் எம்மையினும் நாடக் கிடைத்தல் நமக்கு அன்றி நான்முகற்கும் 315 தேடக் கிடையா நம் தெய்வம் காண் நீடச் சீர் நல் வந்தனை செய்யும் நம்_போல்வார்க்கு ஓர் ஞானச் செல்வம் தரும் நமது தெய்வம் காண் சொல் வந்த எண்மை பெறும் நாம் உலகில் என்றும் பிறந்து இறவாத் திண்மை அளித்து அருள் நம் தெய்வம் காண் வண்மையுற 320 முப்பாழ் கடந்த முழுப் பாழுக்கு அப்பாலைச் செப்பாது செப்புறும் நம் தேசிகன் காண் தப்பாது தீரா இடும்பைத் திரிபு என்பது யாதொன்றும் சேரா நெறி அருள் நம் தேசிகன் காண் ஆராது நித்தம் தெரியா நிலை மேவிய நமது 325 சித்தம் தெளிவிக்கும் தேசிகன் காண் வித்தர் என யாதொன்றும் தேராது இருந்த நமக்கு இ உலகம் தீது என்று அறிவித்த தேசிகன் காண் கோது இன்றி ஓசை பெறு கடல் சூழுற்ற உலகில் நம்மை ஆசையுடன் ஈன்ற அப்பன் காண் மாசு உறவே 330 வன்பாய் வளர்க்கின்ற மற்றையர் போல் அல்லாமல் அன்பாய் நமை வளர்க்கும் அப்பன் காண் இன்பு ஆக இப் பாரில் சேயார் இதயம் மலர்ந்து அம்மை அப்பா எனும் நங்கள் அப்பன் காண் செப்பாமல் எள்ளித் திரிந்தாலும் இந்தா என்று இன் அமுதம் 335 அள்ளிக் கொடுக்கும் நமது அப்பன் காண் உள்ளிக்கொண்டு இன்றே அருள்வாய் எனத் துதிக்கில் ஆங்கு நமக்கு அன்றே அருளும் நமது அப்பன் காண் நன்றே முன் காதரவு செய்து நலம் கற்பித்துப் பின் பெரிய ஆதரவு செய்யும் நங்கள் அப்பன் காண் கோதுறும் மா 340 வஞ்ச மலத்தால் வருந்தி வாடுகின்ற நம்-தமையே அஞ்சல்அஞ்சல் என்று அருளும் அப்பன் காண் துஞ்சல் எனும் நச்சென்ற வாதனையை நாளும் எண்ணி நாம் அஞ்சும் அச்சம் கெடுத்து ஆண்ட அப்பன் காண் நிச்சலும் இங் கே இரவும்_எல்லும் எளியேம் பிழைத்த பிழை 345 ஆயிரமும் தான் பொறுக்கும் அப்பன் காண் சேய் இரங்கா முன்னம் எடுத்து அணைத்து முத்தமிட்டுப் பால் அருத்தும் அன்னையினும் அன்பு உடைய அப்பன் காண் மன் உலகில் வன்மை அறப் பத்து மாதம் சுமந்து நமை நன்மை தரப் பெற்ற நற்றாய் காண் இம்மை-தனில் 350 அன்றொருநாள் நம் பசி கண்டு அந்தோ தரியாது நன்று இரவில் சோறு அளித்த நற்றாய் காண் என்றும் அருள் செம்மை இலாச் சிறிய தேவர்கள்-பால் சேர்க்காது நம்மை வளர்க்கின்ற நற்றாய் காண் சும்மை என மூளும் பெரும் குற்றம் முன்னி மேல்மேல் செயினும் 355 நாளும் பொறுத்து அருளும் நற்றாய் காண் மூளுகின்ற வன் நெறியில் சென்றாலும் வா என்று அழைத்து நமை நல் நெறியில் சேர்க்கின்ற நற்றாய் காண் செந்நெறியின் நாம் தேடா முன்னம் நமைத் தேடிப் பின்பு தனை நாம் தேடச்செய்கின்ற நற்றாய் காண் ஆம்-தோறும் 360 காலம் அறிந்தே கனிவோடு நல் அருள்_பால் ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய் காண் சால உறு வெம் பிணியும் வேதனையும் வேசறிக்கையும் துயரும் நம் பசியும் தீர்த்து அருளும் நற்றாய் காண் அம்புவியில் வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் 365 நல் நீரில் ஆட்டுகின்ற நற்றாய் காண் எந்நீரின் மேலாய் நமக்கு வியன் உலகில் அன்பு உடைய நாலாயிரம் தாயில் நற்றாய் காண் ஏலாது வாடி அழுதால் எம் வருத்தம் தரியாது நாடி எடுத்து அணைக்கும் நற்றாய் காண் நீடு உலகில் 370 தான் பாடக் கேட்டுத் தமியேன் களிக்கும் முன்னம் நான் பாடக் கேட்டு உவக்கும் நற்றாய் காண் வான் பாடும் ஞான மணம் செய் அருளாம் நங்கை-தனைத் தந்து நமக்கு ஆன மணம்செய்விக்கும் அம்மான் காண் தேனினொடும் இன் பால் அமுதாதி ஏக்கமுற இன் அருள் கொண்டு 375 அன்பால் விருந்து அளிக்கும் அம்மான் காண் வன் பாவ ஆழ் கடல் வீழ்ந்து உள்ளம் அழுந்தும் நமை எடுத்துச் சூழ் கரையில் ஏற்றும் துணைவன் காண் வீழ் குணத்தால் இன்பம் எனைத்தும் இது என்று அறியா நம் துன்பம் துடைக்கும் துணைவன் காண் வன் பவமாம் 380 தீ நெறியில் சென்று தியங்குகின்ற நம்-தமக்குத் தூ நெறியைக் காட்டும் துணைவன் காண் மா நிலத்தில் இன்று தொட்டது அன்றி இயற்கையாய் நம்-தமக்குத் தொன்றுதொட்டு வந்த அருள் சுற்றம் காண் தொன்றுதொட்டே ஆயும் உடற்கு அன்பு உடைத்தாம் ஆர்_உயிரில் தான் சிறந்த 385 நேயம் வைத்த நம்முடைய நேசன் காண் பேயர் என வாங்காது நாமே மறந்தாலும் நம்மை விட்டு நீங்காத நம்முடைய நேசன் காண் தீங்காக ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா என அருளை நீட்டுகின்ற நம்முடைய நேசன் காண் கூட்டு உலகில் 390 புல்லென்ற மாயையிடைப் போம்-தோறும் நம்மை இங்கு நில் என்று இருத்துகின்ற நேசன் காண் சில்லென்று என் உள் தூவும் தன்னை மறந்து உண்டாலும் மற்று அதற்கு நிட்டூரம் செய்யாத நேசன் காண் நட்டு ஊர்ந்து வஞ்சம்-அது நாம் எண்ணி வாழ்ந்தாலும் தான் சிறிதும் 395 நெஞ்சில் அது வையாத நேசன் காண் எஞ்சல் இலாப் பார் நின்ற நாம் கிடையாப் பண்டம் எது வேண்டிடினும் நேர் நின்று அளித்து வரும் நேசன் காண் ஆர்வமுடன் ஆர்ந்த நமக்கு இவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும் நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிகத் 400 தாபம் செய் குற்றம் தரினும் பொறுப்பது அன்றிக் கோபம்செயா நமது கோமான் காண் பாபம் அற விள்ளும் இறை நாம் அன்பு மேவல் அன்றி வேற்று அரசர் கொள்ளும் இறை வாங்கா நம் கோமான் காண் உள்ளமுற உண்டு அளிக்கும் ஊண் உடை பூண் ஊர் ஆதிகள் தானே 405 கொண்டு நமக்கு இங்கு அளிக்கும் கோமான் காண் மண்டலத்தில் ஒன்றாலும் நீங்காது உகங்கள் பலபலவாய்ச் சென்றாலும் செல்லா நம் செல்வம் காண் முன் தாவி நாடி வைக்கும் நல் அறிவோர் நாளும் தவம் புரிந்து தேடிவைத்த நம்முடைய செல்வம் காண் மாடு இருந்து 410 நாம் எத்தனை நாளும் நல்கிடினும் தான் உலவாச் சேமித்த வைப்பின் திரவியம் காண் பூமி-கண் ஈங்கு உறினும் வான் ஆதி யாங்கு உறினும் விட்டு அகலாது ஓங்கு அருளால் நம்மை உடையவன் காண் ஆங்கு அவன்றன் கங்கைச் சடை அழகும் காதல் மிகும் அச் சடை மேல் 415 திங்கள் கொழுந்தின் திரு_அழகும் திங்கள்-தன் மேல் சார்ந்து இலங்கும் கொன்றை மலர்த் தார் அழகும் அத் தார் மேல் ஆர்ந்து இலங்கும் வண்டின் அணி அழகும் தேர்ந்தவர்க்கும் நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரி 420 புண்டரத்தின் நல் அழகும் பொன் அருள்-தான் தன் எழிலைக் கண்டவர்-பால் ஊற்றுகின்ற கண் அழகும் தொண்டர்கள்-தம் நேசித்த நெஞ்ச மலர் நீடு மணம் முகந்த நாசித் திரு_குமிழின் நல் அழகும் தேசு உற்ற முல்லை முகையாம் முறுவல் அழகும் பவள 425 எல்லை வளர் செவ் இதழ் அழகும் நல்லவரைத் தே என்ற தீம் பாலில் தேன் கலந்தால் போல் இனிக்க வா என்று அருளும் மலர் வாய அழகும் பூ ஒன்றும் கோன் பரவும் சங்கக் குழை அழகும் அன்பர் மொழித் தேன் பரவும் வள்ளைச் செவி அழகும் நான் பரவி 430 வேட்டவையை நின்று ஆங்கு விண்ணப்பம் செய்ய அது கேட்டு அருளும் வார் செவியின் கேழ் அழகும் நாட்டில் உயர் சைவம் முதலாய்த் தழைக்க அருள் சுரக்கும் தெய்வ முகத்தின் திரு அழகும் தெய்வ முகத்து உள்ளம் குளிர உயிர் குளிர மெய் குளிரக் 435 கொள்ளும் கருணைக் குறிப்பு அழகும் உள் அறிவின் எள்ளாத மேன்மை உலகு எல்லாம் தழைப்ப ஒளிர் தெள் ஆர் அமுதச் சிரிப்பு அழகும் உள் ஓங்கும் சீல அருளின் திறத்துக்கு இலச்சினையாம் நீல மணி மிடற்றின் நீடு அழகும் மால் அகற்றி 440 வாழ்ந்து ஒளிரும் அன்பர் மனம் போலும் வெண் நீறு சூழ்ந்து ஒளிகொண்டு ஓங்கு திருத் தோள் அழகும் தாழ்ந்திலவாய்த் தான் ஓங்கும் அண்டம் எலாம் சத்தம் உறக் கூவும் ஒரு மான் ஓங்கும் செங்கை மலர் அழகும் ஊன் ஓங்கும் ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர் மழுவைக் 445 காணவைத்த செங்கமலக் கை அழகும் நாணமுற்றே ஏங்கும் பரிசு உடைய எம்_போல்வார் அச்சம் எலாம் வாங்கும் அபய மலர் அழகும் தீங்கு அடையாச் சீர் வரவும் எல்லாச் சிறப்பும் பெறவும் அருள் சார் வரத ஒண் கைத்தலத்து அழகும் பேர் அரவப் 450 பூண் இலங்க வெண் பொன் பொடி இலங்க என்பு அணித் தார் மாண் இலங்க மேவு திரு மார்பு அழகும் சேண்_நிலத்தர் மேல் உடுத்த ஆடை எலாம் வெஃக வியாக்கிரமத் தோல் உடுத்த ஒண் மருங்கில் துன் அழகும் பால் அடுத்த கேழ்க் கோலம் மேவு திருக் கீள் அழகும் அக் கீளின் 455 கீழ்க் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் ஒட்டி நின்ற மெய் அன்பர் உள்ளம் எலாம் சேர்த்துக் கட்டி நின்ற வீரக் கழல் அழகும் எட்டிரண்டும் சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று தித்திக்கும் சேவடியின் சீர் அழகும் சத்தித்து 460 மல் வைத்த மா மறையும் மால் அயனும் காண்பு அரிய செல்வத் திரு_அடியின் சீர் அழகும் சொல் வைத்த செம்மை மணி_மலையைச் சேர்ந்த மரகதம் போல் அம்மை ஒரு பால் வாழ்ந்து அருள் அழகும் அம்ம மிகச் சீர்த்தி நிகழ் செம்பவளச் செம் மேனியின் அழகும் 465 பார்த்திருந்தால் நம் உள் பசி போம் காண் தீர்த்தர் உளம் கொண்டு இருந்தான் பொன்_மேனிக் கோலம்-அதை நாம் தினமும் கண்டிருந்தால் அல்லல் எலாம் கட்டு அறும் காண் தொண்டு அடைந்து பாட்டால் அவன் புகழைப் பாடுகின்றோர் பக்கம் நின்று கேட்டால் வினைகள் விடை கேட்கும் காண் நீட்டாமல் 470 ஒன்னார் புரம் பொடித்த உத்தமனே என்று ஒரு கால் சொன்னால் உலகத் துயர் அறும் காண் எந்நாளும் பன்னும் உள்ளத்துள் ஆம் பரசிவமே என்று ஒரு கால் உன்னும் முன்னம் தீமை எலாம் ஓடிடும் காண் அன்னவன்-தன் ஆட்டு இயல் கால்_பூ மாட்டு அடை என்றால் அந்தோ முன் 475 நீட்டிய கால் பின் வாங்கி நிற்கின்றாய் ஊட்டும் அவன் மால் கடவுள் ஆம் ஓர் மகவு அலறக் கண்டு திரு_ பாற்கடலை ஈந்த அருள் பான்மை-தனை நூல் கடலின் மத்தியில் நீ கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப் புத்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முத்தி நெறி 480 மாணா அரக்கன் மலைக் கீழ் இருந்து ஏத்த வாழ்நாள் வழங்கியதோர் வண்மை-தனை நாள்நாளும் நண்ணி உரைத்தும் நயந்திலை நீ அன்பு கொளப் புண்ணியருக்கு ஈது ஒன்றும் போதாதோ புண்ணியராம் சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான் தெரிக்க 485 வந்து இரப்புச் சோறு அளித்த வண்மை-தனை முந்து அகத்தில் பேதம் அறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்பு அடையப் போதம்_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ போதவும் நெய் அங்கு ஓர் எலி-தான் அருந்த அகல் தூண்ட அதைச் செங்கோலன் ஆக்கிய அச் சீர்த்தி-தனை இங்கு ஓதச் 490 சந்ததம் நீ கேட்டும் அவன் தாள் நினையாய் அன்பு அடையப் புந்தி_உளோர்க்கு ஈது ஒன்றும் போதாதோ முந்த வரும் நல் துணை என்று ஏத்தும் அந்த நாவரசர்க்கு அன்று கடல் கல் துணை ஓர் தெப்பம் எனக் காட்டியதை இற்று என நீ மா உலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்பு அடையப் 495 பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல் கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை மண் சுமந்தான் என்று உரைக்கும் வாய்மை-தனைப் பண்பு_உடையோர் மாண உரைப்பக் கேட்டும் வாய்ந்து ஏத்தாய் மெய் அன்பு பூண என்றால் ஈது ஒன்றும் போதாதோ நீள் நரகத் 500 தீங்குறும் மா_பாதகத்தைத் தீர்த்து ஓர் மறையவனைப் பாங்கு அடையச்செய்த அருள் பண்பு-அதனை ஈங்கு உலகர் துங்கம் உற உரைத்தும் சூழ்கின்றிலை அன்பு பொங்க என்றால் ஈது ஒன்றும் போதாதோ தங்கிய இப் பார் அறியாத் தாய் ஆகிப் பன்றி_குருளைகட்கு 505 ஊர் அறிய நல் முலை_பால் ஊட்டியதைச் சீர் அறிவோர் சொல்லி நின்றார் கேட்டும் துதிக்கின்றிலை அன்பு புல்ல என்றால் ஈது ஒன்றும் போதாதோ நல்ல திருப் பாத_மலர் வருந்தப் பாணன்-தனக்கு ஆளாய்க் கோது இல் விறகு ஏற்று விலைகூறியதை நீதி_உளோர் 510 சாற்றி நின்றார் கேட்டும் அவன் தாள் நினையாய் மெய் அன்பில் போற்ற என்றால் ஈது ஒன்றும் போதாதோ போற்றுகின்ற ஆடும் கரியும் அணிலும் குரங்கும் அன்பு தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் நீடுகின்ற பாம்பும் சிவார்ச்சனை-தான் பண்ணியது என்றால் பூசை 515 ஓம்புவதற்கு யார்தாம் உவவாதார் சோம்புறும் நீ வன்பு என்பது எல்லாம் மறுத்து அவன் தாள் பூசிக்கும் அன்பு என்பது யாதோ அறியாயே அன்புடனே செம் சடை கொள் நம் பெருமான் சீர் கேட்டு இரை அருந்தாது அஞ்சு அடக்கி யோகம் அமர்ந்து உலகின் வஞ்சம் அற 520 நாரையே முத்தி இன்பம் நாடியது என்றால் மற்றை யாரையே நாடாதார் என்று உரைப்பேன் ஈரம்_இலாய் நீயோ சிறிதும் நினைந்திலை அ இன்பம் என்னை ஏயோ நின் தன்மை இருந்த விதம் ஓயாத அன்பு_உடையார் யாரினும் பேர்_அன்பு_உடையான் நம் பெருமான் 525 நின்-புடை யான் நித்தம் நிகழ்த்துகின்றேன் உன்-புடை ஓர் அன்பு அவன் மேல் கொண்டது அறியேன் புறச் சமயத்து இன்பு_உடையார் ஏனும் இணங்குவரே அன்புடனே தா என்றால் நல் அருள் இந்தா என்பான் நம் பெருமான் ஆ உன்-பால் ஓதி அலுக்கின்றேன் நீ வன்பால் 530 நின்றாய் அலது அவனை நேர்ந்து நினையாய் பித்தர் என்றாலும் என் சொற்கு இணங்குவரே குன்றாது பித்தா எனினும் பிறப்பு அறுப்பான் நம்_உடையான் அத்தோ உனக்கு ஈது அறைகின்றேன் சற்றேனும் கேள்வி_இலார் போல் அதனைக் கேளாய் கெடுகின்றாய் 535 வேள்வி_இலார் கூட்டம் விழைகின்றாய் வேள்வி என்ற வேலை வரும் கால் ஒளித்து மேவுகின்றாய் நின் தலைக்கு அங்கு ஓலை வரும் கால் இங்கு ஒளிப்பாயே மாலை உறும் இப் பார் வெறும் பூ இது நயவேல் என்று உனக்குச் செப்பா முனம் விரைந்து செல்கின்றாய் அப் பாழில் 540 செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் சொல்லாது போய் மயக்கம் தோய்கின்றாய் பொல்லாத அஞ்சு அருந்து என்றால் அமுதின் ஆர்கின்றாய் விட்டிடு என்றால் நஞ்சு அருந்து என்றால் போல் நலிகின்றாய் வஞ்சகத்தில் ஓடுகின்றாய் மீளாமல் உன் இச்சையின் வழியே 545 ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் நீடு உலகைச் சூழ்கின்றாய் வேறு ஒன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில் வீழ்கின்றாய் மேல் ஒன்றில் மீள்கின்றாய் தாழ்வு ஒன்றே ஈகின்றாய் வன் நெறியில் என்னை வலது அழிக்கப் போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி 550 ஒன்றை மறைக்கின்றாய் மற்றொன்றை நினைக்கின்றாய் என் நன்றை மறைக்கின்றாய் நலிகின்றாய் வென்றி பெறும் சேவில் பரமன் தாள் சேர் என்றால் மற்றொரு சார் மேவிப் பலவாய் விரிகின்றாய் பாவித்துக் குன்றும் உனக்கு அனந்தம் கோடி தெண்டனிட்டாலும் 555 ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் நன்று உருகாக் கல் என்பேன் உன்னைக் கரணம் கலந்து அறியாக் கல் என்றால் என் சொல் கடவாதே புல்ல நினை வல் இரும்பு என்பேன் அந்த வல் இரும்பேல் கூடத்தில் கொல்லன் குறிப்பை விட்டுக் கோணாதே அல்லல் எலாம் 560 கூட்டுகின்ற வன்மைக் குரங்கு என்பேன் அக் குரங்கேல் ஆட்டுகின்றோன் சொல் வழி விட்டு ஆடாதே நீட்டு உலகர் ஏசுகின்ற பேய் என்பேன் எப் பேயும் அஞ்செழுத்தைப் பேசுகின்றோர்-தம்மைப் பிடியாதே கூசுகிற்பக் கண்டோரைக் கவ்வுங் கடும் சுணங்கன் என்பன் அது 565 கொண்டோரைக் கண்டால் குலையாதே அண்டார்க்கும் பூவில் அடங்காப் புலி என்பேன் எப் புலியும் ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி வீறுகின்ற மும்மத மால் வெற்பு என்பேன் ஆங்கு அதுவும் ஏறுகின்றோன் சொல் வழி விட்டு ஏறாதே சீறுகின்ற 570 வெல் நடை சேர் மற்றை விலங்கு என்பேன் எவ்விலங்கும் மன்னவன் சேர் நாட்டில் வழங்காதே நின்னை இனி என் என்பேன் என் மொழியை ஏற்றனையேல் மாற்று உயர்ந்த பொன் என்பேன் என் வழியில் போந்திலையே கொன் உற நீ போம் வழியும் பொய் நீ புரிவதுவும் பொய் அதனால் 575 ஆம் விளைவும் பொய் நின் அறிவும் பொய் தோம் விளைக்கும் நின் உடலும் பொய் இங்கு நின் தவமும் பொய் நிலையா நின் நிலையும் பொய் அன்றி நீயும் பொய் என்னில் இவண் ஏதும் உணர்ந்திலையே இ மாய வாழ்க்கை எனும் வாதில் இழுத்து என்னை மயக்கினையே தீது உறும் நீ 580 வன் நேர் விடம் காணின் வன் பெயரின் முன்பு ஒரு கீற்று என்னே அறியாமல் இட்டு அழைத்தேன் கொன்னே நீ நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை ஆவது அறியாது அழுந்தினையே மேவும் அதில் உள் எரிய மேலாம் உணர்வும் கருக உடல் 585 நள் எரிய நட்பின் நலம் வெதும்ப விள்வது இன்றி வாடிப் பிலம் சென்று வான் சென்று ஒளித்தாலும் தேடிச் சுடும் கொடிய தீ கண்டாய் ஓடி அங்கு பேர்ந்தால் அலது பெரும் காம_தீ நின்னைச் சேர்ந்தாரையும் சுடும் செந்தீ கண்டாய் சார்ந்த ஆங்கு 590 சந்தீ என வருவார்-தம்மைச் சுடும் காமஞ் செந்தீயையும் சுடும் ஓர் தீ கண்டாய் வந்து ஈங்கு மண்ணில் தனைக் காணா வண்ணம் நினைத்தாலும் நண்ணித் தலைக்கு ஏறும் நஞ்சம் காண் எண்_அற்ற போர் உறும் உள் காமப் புது மயக்கம் நின்னுடைய 595 பேர்_அறிவைக் கொள்ளைகொளும் பித்தம் காண் சோர் அறிவில் கள் அடைக்கும் காமக் கடு மயக்கம் மெய் நெறிக்கு ஓர் முள்_அடைக்கும் பொல்லா முரண் கண்டாய் அள்ளல் உற ஏதம் எலாம் தன்னுள் இடும் காமம் பாதகத்தின் பேதம் எலாம் ஒன்றிப் பிறப்பிடம் காண் ஆதலினால் 600 வெம்_மால் மடந்தையரை மேவவொணாது ஆங்கு அவர்கள்- தம் ஆசை இன்னும் தவிர்ந்திலையே இ மாயம் மன்ற அணங்கினர் செவ் வாய் மடவார் பேதையர்கள் என்ற கொடும் சொல் பொருளை எண்ணிலையே தொன்று உலகில் பெண் என்று உரைப்பில் பிறப்பு ஏழும் ஆம் துயரம் 605 எண் என்ற நல்லோர் சொல் எண்ணிலையே பெண் இங்கு மா மாத்திரையின் வருத்தனம் என்று எண்ணினை அ நாமார்த்தம் ஆசை என நாடிலையே ஆம் ஆர்த்தம் மந்திரத்தும் பூசை மரபினும் மற்று எவ்விதமாம் தந்திரத்தும் சாயாச் சழக்கு அன்றோ மந்திரத்தில் 610 பேய் பிடித்தால் தீர்ந்திடும் இப் பெண்_பேய் விடாதே செந் நாய் பிடித்தால் போலும் என்று நாடிலையே ஆய்வு இல் உன்றன் ஏழமை என் என்பேன் இவர் மயக்கம் வல் நரகின் தோழைமை என்று அந்தோ துணிந்திலையே ஊழ் அமைந்த கார்_இருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர் சூழல் 615 பேர்_இருளில் செல்வதனைப் பேர்த்திலையே பார் இடையோர் எண் வாள் எனில் அஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார் கண் வாள் அறுப்பக் கனிந்தனையே மண் வாழும் ஓர் ஆனையைக் கண்டால் ஓடுகின்றாய் மாதர் முலை ஈர் ஆனையைக் கண்டு இசைந்தனையே சீரான 620 வெற்பு என்றால் ஏற விரைந்து அறியாய் மாதர் முலை வெற்பு என்றால் ஏற விரைந்தனையே பொற்பு ஒன்றும் சிங்கம் என்றால் வாடித் தியங்குகின்றாய் மாதர் இடைச் சிங்கம் எனில் காணத் திரும்பினையே இங்கு சிறு பாம்பு என்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதர் அல்குல் 625 பாம்பு என்றால் சற்றும் பயந்திலையே ஆம் பண்டைக் கீழ்க் கடலில் ஆடு என்றால் கேட்கிலை நீ மாதர் அல்குல் பாழ்க் கடலில் கேளாது பாய்ந்தனையே கீழ்க் கதுவும் கல் என்றால் பின்னிடுவாய் காரிகையார் கால் சிலம்பு கல்லென்றால் மேல் எழும்பக் கற்றனையே அல் அளகம் 630 மையோ கரு மென் மணலோ என்பாய் மாறி ஐயோ நரைப்பது அறிந்திலையோ பொய் ஓதி ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் வெண் பிறை அன்றே அதனை விண்டிலையே கண் புருவம் வில் என்றாய் வெண் மயிராய் மேவி உதிர்ந்திடும் கால் 635 சொல் என்றால் சொல்லத் துணியாயே வல் அம்பில் கண் குவளை என்றாய்க் கண்ணீர் உலர்ந்து மிக உள் குழியும் போதில் உரைப்பாயே கண் குலவு மெய்க் குமிழே நாசி என வெஃகினையால் வெண் மலத்தால் உய்க் குமிழுஞ் சீந்தல் உளதேயோ எய்த்தல் இலா 640 வள்ளை என்றாய் வார் காது வள்ளை-தனக்கு உள் புழையோடு உள்ளும் நரம்பின் புனைவும் உண்டேயோ வெள்ளை நகை முல்லை என்றாய் முல்லை முறித்து ஒரு கோல் கொண்டு நிதம் ஒல்லை அழுக்கு எடுப்பது உண்டேயோ நல்லதொரு கொவ்வை என இதழைக் கொள்கின்றாய் மேல் குழம்பும் 645 செவ்வை இரத்தம் எனத் தேர்ந்திலையே செவ்விய கண் ணாடி எனக் கவுட்கே ஆசைவைத்தாய் மேல் செழும் தோல் வாடியக்கால் என் உரைக்க மாட்டுவையே கூடியதோர் அந்த மதி முகம் என்று ஆடுகின்றாய் ஏழ் துளைகள் எந்த மதிக்கு உண்டு அதனை எண்ணிலையே நந்து எனவே 650 கண்டம் மட்டும் கூறினை அக் கண்டம் மட்டும் அன்றி உடல் கொண்ட மட்டும் மற்று அதன் மெய்க் கூறு அன்றோ விண்டு அவற்றைத் தோள் என்று உரைத்துத் துடிக்கின்றாய் அ வேய்க்கு மூள் ஒன்று வெள் எலும்பின் மூட்டு உண்டே நாள் ஒன்றும் செங்காந்தள் அங்கை எனச் செப்புகின்றாய் அ மலர்க்குப் 655 பொங்காப் பல விரலின் பூட்டு உண்டே மங்காத செவ்விளநீர் கொங்கை எனச் செப்பினை வல் ஊன் தடிப்பு இங்கு எ இளநீர்க்கு உண்டு அதனை எண்ணிலையே செவ்வை பெறும் செப்பு என்றனை முலையைச் சீசீ சிலந்தி அது துப்பு என்றவர்க்கு யாது சொல்லுதியே வப்பு இறுகச் 660 சூழ்ந்த முலை மொட்டு என்றே துள்ளுகின்றாய் கீழ்த் துவண்டு வீழ்ந்த முலைக்கு என்ன விளம்புதியே தாழ்ந்த அவை மண் கட்டும் பந்து எனவே வாழ்ந்தாய் முதிர்ந்து உடையாப் புண் கட்டி என்பவர் வாய்ப் பொத்துவையே திண் கட்டும் அம் நீர்க் குரும்பை அவை என்றாய் மேல் எழும்பும் 665 செந்நீர்ப் புடைப்பு என்பார் தேர்ந்திலையே அம் நீரார் கண்ணீர் தரும் பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக வெண் நீர் வரல் கண்டும் வெட்கிலையே தண் நீர்மைச் சாடி என்பாய் நீ அயலோர் தாதுக் கடத்து இடும் மேல் மூடி என்பார் மற்றவர் வாய் மூடுதியோ மேடு-அதனை 670 ஆல் இலையே என்பாய் அடர் குடரோடு ஈருளொடும் தோல் இலையே ஆல் இலைக்கு என் சொல்லுதியே நூல் இடை-தான் உண்டோ இலையோ என்று உள் புகழ்வாய் கை தொட்டுக் கண்டோர் பூட்டு உண்டு என்பார் கண்டிலையே விண்டு ஓங்கும் ஆழ் கடல் என்பாய் மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள் 675 பாழ்ங்கிணறு என்பார் அதனைப் பார்த்திலையே தாழ் கொடிஞ்சித் தேர் ஆழி என்பாய் அச் சீ_குழியை அன்று சிறு நீர் ஆழி என்பவர்க்கு என் நேருதியே ஆராப் புன் நீர் வழியை ஆசை நிலை என்றாய் வன் மலம்-தான் சோர் வழியை என் என்று சொல்லுதியே சார் முடை-தான் 680 ஆறாச் சிலை நீர் கான்_ஆறாய் ஒழுக்கிடவும் வீறாப் புண் என்று விடுத்திலையே ஊறு ஆக்கி மூலை எறும்புடன் ஈ மொய்ப்பது அஞ்சி மற்று அதன் மேல் சீலை இடக் கண்டும் தெரிந்திலையே மேலை உறு மே நரகம் என்றால் விதிர்ப்புறும் நீ மாதர் அல்குல் 685 கோ நரகம் என்றால் குலைந்திலையே ஊனம் இதைக் கண்டால் நமது ஆசை கைவிடுவார் என்று அதனைத் தண்டாது ஒளித்திடவும் சார்ந்தனையே அண்டாது போத விடாய் ஆகிப் புலம்புகின்றாய் மற்று அதன்-பால் மாதவிடாய் உண்டால் மதித்திலையே மாதர் அவர்- 690 தம் குறங்கை மெல் அரம்பைத் தண்டு என்றாய் தண்டு ஊன்றி வெம் குரங்கின் மேவும் கால் விள்ளுதியே நன்கு இலவாய் ஏய்ந்த முழந்தாளை வரால் என்றாய் புலால் சிறிதே வாய்ந்து வரால் தோற்கும் மதித்திலையே சேந்த அடி தண் தாமரை என்றாய் தன்மை விளர்ப்பு அடைந்தால் 695 வெண் தாமரை என்று மேவுதியோ வண்டு ஆரா மேல் நாட்டும் சண்பகமே மேனி என்றாய் தீ இடும் கால் தீ நாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ வான்_நாட்டும் மின் தேர் வடிவு என்றாய் மேல் நீ உரைத்தவுள் ஈது ஒன்றே ஒரு-புடையாய் ஒத்தது காண் ஒன்றாச் சொல் 700 வேள் வாகனம் என்றாய் வெய்ய நமன் விட்டிடும் தூ தாள் வாகனம் என்றால் ஆகாதோ வேள்_ஆனோன் காகளமாய் இன் குரலைக் கட்டுரைத்தாய் காலன் என்போன் காகளம் என்பார்க்கு என் கழறுதியே நாகு அளவும் சாயை மயில் என்றே தருக்குகின்றாய் சார் பிரம 705 சாயை அஃது என்பார்க்கு என் சாற்றுதியே சேய மலர் அன்ன நடை என்பாய் அஃது அன்று அருந்துகின்ற அன்ன நடை என்பார்க்கு என் ஆற்றுதியே அன்னவரை ஓர் ஓவியம் என்பாய் ஓவியமேல் ஆங்கு எழுபத் தீராயிரம் நாடி யாண்டு உடைத்தே பார் ஆர்ந்த 710 முன்னும் மலர்க் கொம்பு என்பாய் மூன்றொடு_அரை_கோடி எனத் துன்னும் உரோமத் துவாரம் உண்டே இன் அமுதால் செய்த வடிவு என்பாய் அச் செய்கை மெய்யேல் நீ அவர்கள் வைதிடினும் மற்று அதனை வையாயே பொய் தவிராய் ஒள்_இழையார்-தம் உரு ஓர் உண் கரும்பு என்றாய் சிறிது 715 கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் ஈடு_இல் பெயர் நல்லார் என நயந்தாய் நாய்ப் பெயர்-தான் கேடு இல் பெரும் சூரன் என்பர் கேட்டிலையோ நாடில் அவர் மெல்_இயலார் என்பாய் மிகு கருப்ப வேதனையை வல்_இயலார் யார் பொறுக்க வல்லார் காண் வில் இயல் பூண் 720 வேய்ந்தால் அவர் மேல் விழுகின்றாய் வெம் தீயில் பாய்ந்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே வேய்ந்தாங்கு சென்றால் அவர் பின்னர்ச் செல்கின்றாய் வெம் புலிப் பின் சென்றாலும் அங்கு ஓர் திறன் உண்டே சென்றாங்கு நின்றால் அவர் பின்னர் நிற்கின்றாய் கண் மூடி 725 நின்றாலும் அங்கு ஓர் நிலை உண்டே ஒன்றாது கண்டால் அவர் உடம்பைக் கட்டுகின்றாய் கல் அணைத்துக் கொண்டாலும் அங்கு ஓர் குணம் உண்டே பெண்டானார் வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத் தொண்டு செய்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே கை தாவி 730 மெய்த் தாவும் செம் தோல் மினுக்கால் மயங்கினை நீ செத்தாலும் அங்கு ஓர் சிறப்பு உளதே வைத்து ஆடும் மஞ்சள் மினுக்கால் மயங்கினை நீ மற்று ஒழிந்து துஞ்சுகினும் அங்கு ஓர் சுகம் உளதே வஞ்சியரைப் பார்த்து ஆடி_ஓடிப் படர்கின்றாய் வெம் நரகைப் 735 பார்த்தாலும் அங்கு ஓர் பலன் உண்டே சேர்த்தார் கைத் தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன் பூதம் தொட்டாலும் அங்கு ஓர் துணை உண்டே நட்டாலும் தெவ்வின் மடவாரைத் திளைக்கின்றாய் தீ விடத்தை வவ்வுகினும் அங்கு ஓர் மதி உண்டே செவ் இதழ்_நீர் 740 உண்டால் மகிழ்வாய் நீ ஒண் சிறுவர்-தம் சிறுநீர் உண்டாலும் அங்கு ஓர் உரன் உண்டே கண்டாகக் கவ்வுகின்றாய் அ இதழைக் கார் மதுகம் வேம்பு இவற்றைக் கவ்வுகினும் அங்கு ஓர் கதி உண்டே அ இளையர் மென்று ஈயும் மிச்சில் விழைகின்றாய் நீ வெறும் வாய் 745 மென்றாலும் அங்கு ஓர் விளைவு உண்டே முன்தானை பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்க அம்பு பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய்த் தீண்டிடில் உள் ஓங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள் முன் தீண்டிடினும் அங்கு ஓர் திறன் உண்டே வேண்டியவர் 750 வாய்க்கு இட யாதானும் ஒன்று வாங்குகின்றாய் மற்று அதை ஓர் நாய்க்கு இடினும் அங்கு ஓர் நலன் உண்டே தாக்கவர்க்காய்த் தேட்டாண்மை செய்வாய் அத் தேட்டாண்மையைத் தெருவில் போட்டாலும் அங்கு ஓர் புகழ் உண்டே வாள் தாரைக் கொண்டாருடன் உணவு கொள்கின்றாய் குக்கலுடன் 755 உண்டாலும் அங்கு ஓர் உறவு உண்டே மிண்டு ஆகும் இங்கு இவர் வாய்ப் பாகு இலையை ஏற்கின்றாய் புன் மலத்தை நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் ஏத்தா மனை காத்து இருக்கின்றாய் ஈமம்-அது காத்தாலும் அங்கு ஓர் கனம் உண்டே பூ_தாழ்வோர் 760 காட்டாக் குரல் கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக் கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி ஆழ்ந்தாருடன் வாழ ஆதரித்தாய் ஆழ்ங் கடலில் வீழ்ந்தாலும் அங்கு ஓர் விரகு உண்டே வீழ்ந்தாருள் வீட்டால் முலையும் எதிர்வீட்டால் முகமும் உறக் 765 காட்டாநின்றார் கண்டும் காய்ந்திலையே கூட்டு ஆட்குச் செய்கையிடும்படி தன் சீமான்-தனது பணப் பை கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே எய்யாமல் 770 ஈறு இகந்த இவ்வகையாய் இ மடவார் செய்கை எலாம் கூறுவனேல் அம்ம குடர் குழம்பும் கூறும் இவர் வாய் ஒரு பால் பேச மனம் ஒரு பால் செல்ல உடல் ஆய் ஒரு பால் செய்ய அழிவார் காண் ஆய இவர் நன்று அறியார் தீதே நயப்பார் சிவதலத்தில் 775 சென்று அறியார் பேய்க்கே சிறப்பு எடுப்பார் இன்று இவரை வஞ்சம் என்கோ வெவ் வினையாம் வல்லியம் என்கோ பவத்தின் புஞ்சம் என்கோ மா நரக பூமி என்கோ அஞ்சுறும் ஈர் வாள் என்கோ வாய்க்கு அடங்கா மாயம் என்கோ மண் முடிவு நாள் என்கோ வெய்ய நமன் என்கோ கோள் என்கோ 780 சாலம் என்கோ வான் இந்த்ரசாலம் என்கோ வீறு ஆல காலம் என்கோ நின் பொல்லா_காலம் என்கோ ஞாலம்-அதில் பெண் என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல் மண்_நின்றார் யார் நடுங்கமாட்டார் காண் பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார் பேய் ஒன்றோ தாம் பயந்த 785 சேயும் இரங்கும் அவர் தீமைக்கே ஆயும் செம் பொன்னால் துகிலால் புனையாவிடில் அவர் மெய் என் ஆகும் மற்று இதை நீ எண்ணிலையே இன்னாமைக் கொத்து என்ற அ மடவார் கூட்டம் எழுமைக்கும் வித்து என்று அறிந்தும் அதை விட்டிலையே தொத்து என்று 790 பாச வினைக்குள் படுத்துறும் அப் பாவையர் மேல் ஆசை உனக்கு எவ்வாறு அடைந்ததுவே நேசம்_இலாய் நின் ஆசை என் என்பேன் நெய் வீழ் நெருப்பு எனவே பொன்_ஆசை மேன்மேலும் பொங்கினையே பொன்_ஆசை வைத்து இழந்து வீணே வயிறு_எரிந்து மண்_உலகில் 795 எத்தனை பேர் நின் கண் எதிர்நின்றார் தத்துகின்ற பொன்_உடையார் துன்பப் புணரி ஒன்றே அல்லது மற்று என்_உடையார் கண்டு இங்கு இருந்தனையே பொன் இருந்தால் ஆற்றல் மிகு தாயும் அறியா வகையால் வைத்திட ஓர் ஏற்ற இடம் வேண்டும் அதற்கு என் செய்வாய் ஏற்ற இடம் 800 வாய்த்தாலும் அங்கு அதனை வைத்த இடம் காட்டாமல் ஏய்த்தால் சிவசிவ மற்று என் செய்வாய் ஏய்க்காது நின்றாலும் பின் அது-தான் நீடும் கரி ஆனது என்றால் அரகர மற்று என் செய்வாய் நன்றாக ஒன்று ஒரு சார் நில் என்றால் ஓடுகின்ற நீ அதனை 805 என்றும் புரப்பதனுக்கு என் செய்வாய் வென்றியொடு பேர்த்துப் புரட்டிப் பெரும் சினத்தால் மாற்றலர்கள் ஈர்த்துப் பறிக்கில் அதற்கு என் செய்வாய் பேர்த்து எடுக்கக் கை புகுத்தும் கால் உள் கருங்குளவி செங்குளவி எய் புகுத்தக் கொட்டிடின் மற்று என் செய்வாய் பொய் புகுத்தும் 810 பொன் காவல் பூதம்-அது போய் எடுக்கும் போது மறித்து என் காவல் என்றால் மற்று என் செய்வாய் பொன் காவல் வீறும் கால் ஆணவமாம் வெம் கூளி நின் தலை மேல் ஏறும் கால் மற்று அதனுக்கு என் செய்வாய் மாறும் சீர் உன் நேயம் வேண்டி உலோபம் எனும் குறும்பன் 815 இன்னே வருவன் அதற்கு என் செய்வாய் முன் ஏதும் இல்லா நமக்கு உண்டோ இல்லையோ என்னும் நலம் எல்லாம் அழியும் அதற்கு என் செய்வாய் நில்லாமல் ஆய்ந்தோர் சில நாளில் ஆயிரம் பேர் பக்கல் அது பாய்ந்து ஓடிப் போவது நீ பார்த்திலையே ஆய்ந்தோர் சொல் 820 கூத்தாட்டு அவை சேர் குழாம் விளிந்தால் போலும் என்ற சீர்த் தாள் குறள் மொழியும் தேர்ந்திலையே பேர்த்து ஓடும் நாள்_கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாள் அறியா ஆள்_கொல்லி என்பர் இதை ஆய்ந்திலையே கீழ்க் கொல்லைப் பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்று அதன் மேல் 825 இச்சை உனக்கு எவ்வாறு இருந்ததுவே இச்சை_இலார் இட்ட மலம் பட்ட இடம் எல்லாம் பொன்னாம் என்றால் இட்டம்-அதை விட்டற்கு இசைந்திலையே முட்டு அகற்றப் பொன் நடப்பது அன்றி அது போனகமே ஆதியவாய் என் அடுத்தது ஒன்றும் இஃது எண்ணிலையே இ நிலத்தில் 830 நீள் மயக்கம் பொன் முன் நிலையாய் உலகியலாம் வீண் மயக்கம் என்று அதனை விட்டிலையே நீள் வலயத்து இ செல்வம் இன்றி இயலாதேல் சிற்றுயிர்கள் எச்செல்வம் கொண்டு இங்கு இருந்தனவே வெச்சென்ற மண்_ஆசை கொண்டனை நீ மண் ஆளும் மன்னர் எலாம் 835 மண்ணால் அழிதல் மதித்திலையே எண்ணாது மண் கொண்டார் மாண்டார் தம் மாய்ந்த உடல் வைக்க அயல் மண் கொண்டார் தம் இருப்பில் வைத்திலரே திண் கொண்ட விண் ஏகும் கால் அங்கு வேண்டும் என ஈண்டு பிடி_ மண்ணேனும் கொண்டு ஏக வல்லாரோ மண் நேயம் 840 என்னது என்றான் முன் ஒருவன் என்னது என்றான் பின் ஒருவன் இன்னது நீ கேட்டு இங்கு இருந்திலையோ மன் உலகில் கண்காணியாய் நீயே காணி அல்லாய் நீ இருந்த மண் காணி என்று மதித்தனையே கண் காண மண் காணி வேண்டி வருந்துகின்றாய் நீ மேலை 845 விண் காணி வேண்டல் வியப்பு அன்றே எண் காண அந்தரத்தில் நின்றாய் நீ அந்தோ நினைவிட மண் அந்தரத்தில் நின்றது அறிந்திலையே தந்திரத்தில் மண் கொடுப்பேன் என்று உரைக்கில் வைவார் சிறுவர்களும் மண் கொடுக்கில் நீ-தான் மகிழ்ந்தனையே வண் கொடுக்கும் 850 வீடு என்றேன் மற்று அதை மண்_வீடு என்றே நீ நினைந்தாய் வீடு என்ற சொல் பொருளை விண்டிலையே நாடு ஒன்றும் மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடு அனைத்தும் கண்ணாரக் கட்டு அழிதல் கண்டிலையோ மண்ணான மேல்_வீடும் அங்கு உடைய வேந்தர்களும் மேல் வீட்டு அப் 855 பால் வீடும் பாழ் ஆதல் பார்த்திலையோ மேல்_வீட்டில் ஏறுவனே என்பாய் இயமன் கடா மிசை வந்து ஏறுவனேல் உன் ஆசை என் ஆமோ கூறிடும் இ மண் அளித்த வேதியனும் மண் விருப்பம்கொள்ளானேல் எண்ணம் உனக்கு எவ்வாறு இருந்ததுவே மண்_இடத்தில் 860 ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னில் உன்றன் ஏகாப் பெரும் காமம் என் சொல்கேன் போகாத பாபக் கடற்கு ஓர் படு_கடலாம் பாழ் வெகுளிக் கோப_கடலில் குளித்தனையே தாபம் உறச் செல்லா இடத்துச் சினம் தீது செல்_இடத்தும் 865 இல்லது எனில் தீயது என்றது எண்ணிலையே மல்லல் பெறத் தன்னைத் தான் காக்கில் சினம் காக்க என்றதனைப் பொன்னைப் போல் போற்றிப் புகழ்ந்திலையே துன்னி அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல என்னும் திகழ் வாய்மையும் நீ தெளியாய் இகழ்வாரை 870 எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோம் என்று இவ்வண்ணம் என்னை வெளி இட்டனையே தெவ் என்ன ஓரா வெகுளி_உடையான் தவம் அடையான் தீராய் என்பார் அதுவும் தேர்ந்திலையே பேரா நின் வெவ் வினைக்கு ஈடாக அரன் வெம்மை புரிவான் என்றால் 875 இ வெகுளி யார் மாட்டு இருத்துவதே செவ்வை_இலாய் ஏய்ந்தனை அன்பு ஓர் இடத்தில் இன்னாமை செய்தவரைக் காய்ந்தனை மற்று என்ன பலன் கண்டனையே வாய்ந்து அறிவோர் எல்லா நலமும் இஃதே என்று ஏத்துகின்ற கொல்லா நலம் சிறிதும் கொண்டிலையே பொல்லாத 880 வன்போடு இருக்கும் மதி_இலி நீ மன் உயிர்-கண் அன்போடு இரக்கம் அடைந்திலையே இன்பு ஓங்கு தூய்மை என்பது எல்லாம் துணையாய் அணைவது-தான் வாய்மை என்பது ஒன்றே மதித்திலையே தூய்மை_இலாய் மான் ஒரு கை ஏந்திநின்ற வள்ளல் அன்பர்-தங்களுளே 885 நான் ஒருவன் என்று நடித்தனையே ஆன மற்றைப் பாதகங்கள் எல்லாம் பழகிப்பழகி அதில் சாதகம் செய்வோரில் தலை_நின்றாய் பாதகத்தில் ஓயா விகார உணர்ச்சியினால் இ உலக மாயா விகாரம் மகிழ்ந்தனையே சாயாது 890 நீ இளமை மெய்யாய் நினைந்தாய் நினைப் பெற்ற தாய் இளமை எத்தனை நாள் தங்கியதே ஆ இளமை மெய் கொடுத்தது என்பாய் விருத்தர்கட்கு நின்_போல்வார் கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ மெய் கொடுத்த கூனொடும் கை_கோல் ஊன்றிக் குந்தி நடை தளர்ந்து 895 கால் நடுங்க நிற்பவரைக் கண்டிலையோ ஊன் ஒடுங்க ஐய நட என்றே அரும் புதல்வர் முன் செலப் பின் பைய நடப்பவரைப் பார்த்திலையோ வெய்ய நமன் நாடு அழைக்கச் சேனம் நரி நாய் அழைக்க நாறு சுடு காடு அழைக்க மூத்து நின்றார் கண்டிலையோ பீடு அடைந்த 900 மெய் உலர்ந்து நீரின் விழி உலர்ந்து வாய் உலர்ந்து கை உலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ மெய் உலர்ந்தும் சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ ஆகாத கண்டம் இது பொல்லாக் கடு நோய் எனும் குமர 905 கண்டம் இஃது என்பவரைக் கண்டிலையோ கொண்ட உடல் குட்டம் உறக் கை_கால் குறுக்கும் இது பொல்லாத குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை மாலையினும் காலையினும் மத்தியினும் குத்தும் இது சூலை என நோவாரைச் சூழ்ந்திலையோ சாலவும் இத் 910 தேகம்-அது நலியச் செய்யும் காண் உய்வு அரிதாம் மேகம் இஃது என்பாரை மேவிலையோ தாகமுறச் சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய கை_பிணியும் கால்_பிணியும் கண்_பிணியோடு எண்ண அரிய 915 மெய்_பிணியும் கொண்டவரை விண்டிலையோ எய்ப்பு உடைய முட்டு_ஊறும் கை_கால் முடம் கூன் முதலாய எட்டு ஊறும் கொண்டவரை எண்ணிலையோ தட்டு ஊறு இங்கு எண்_அற்றது உண்டேல் இளமை ஒரு பொருளாய் எண்ணப்படுமோ என்று எண்ணிலையோ எண்ணத்தில் 920 பொய் என்று அறவோர் புலம்புறவும் இ உடம்பை மெய் என்று பொய் மயக்கம் மேவினையே கை நின்று கூ கா என மடவார் கூடி அழல் கண்டும் நீ காதல் வைத்து நிகழ்ந்தனையே மா காதல் பெண்டு இருந்து மாழ்கப் பிணம் கொண்டுசெல்வாரைக் 925 கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே பண்டு இருந்த ஊரார் பிணத்தின் உடன் சென்று நாம் மீண்டும் நீராடல் சற்றும் நினைந்திலையே சீராக இன்று இருந்தார் நாளைக்கு இருப்பது பொய் என்று அறவோர் நன்று இருந்த வார்த்தையும் நீ நாடிலையே ஒன்றி 930 உறங்குவது போலும் என்ற ஒண் குறளின் வாய்மை மறம் கருதி அந்தோ மறந்தாய் கறங்கின் நெருநல் உளன் ஒருவன் என்னும் நெடும்_சொல் மருவும் குறள்_பா மறந்தாய் தெருவில் இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும் சொல் 935 மறந்தாய் மறந்தாய் மறந்தாய் இறந்தார் பறை ஓசை அண்டம் படீரென்று ஒலிக்க மறை ஓசை அன்றே மறந்தாய் இறையோன் புலன் ஐந்தும் என்று அருளும் பொன்மொழியை மாயா மலம் ஒன்றி அந்தோ மறந்தாய் நிலன் ஒன்றி 940 விக்குள் எழ நீர் விடு-மின் என அயலோர் நெக்குருகல் அந்தோ நினைந்திலையே மிக்கு அனலில் நெய்விடல் போல் உற்றவர் கண்ணீர்விட்டு அழ உயிர் பல் மெய் விடலும் கண்டனை நீ விண்டிலையே செய் வினையின் வாள் கழியச் செங்கதிரோன் வான் கழிய நம்முடைய 945 நாள் கழிதற்கு அந்தோ நடுங்கிலையே கோள் கழியும் நாழிகை ஓர் நாள் ஆக நாடினையே நாளை ஒரு நாழிகையாய் எண்ணி நலிந்திலையே நாழிகை முன் நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்து உயிர்-தான் சென்றார் எனக் கேட்டும் தேர்ந்திலையே பின்றாது 950 தொட்டார் உணவுடனே தும்மினார் அம்ம உயிர் விட்டார் எனக் கேட்டும் வெட்கிலையே தட்டாமல் உண்டார் படுத்தார் உறங்கினார் பேர்_உறக்கம் கொண்டார் எனக் கேட்டும் கூசிலையே வண் தாரார் நேற்று மணம் புரிந்தார் நீறு ஆனார் இன்று என்று 955 சாற்றுவது கேட்டும் தணந்திலையே வீற்றுறு தேர் ஊர்ந்தார் தெருவில் உலாப் போந்தார் வான்_உலகம் சேர்ந்தார் எனக் கேட்டும் தேர்ந்திலையே சேர்ந்து ஆங்கு என்னே இருந்தார் இருமினார் ஈண்டு இறந்தார் அன்னே எனக் கேட்டும் ஆய்ந்திலையே கொன்னே 960 மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக் கருவும் பிதிர்ந்து உதிரக் கண்டாய் கரு ஒன் றொடு திங்கள் ஐயைந்தில் ஒவ்வொன்றில் அந்தோ கெடுகின்றது என்றதுவும் கேட்டாய் படும் இ நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப் 965 பலன் அற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் பலனுற்றே கா என்று வீழ்ந்து அக் கணமே பிணமாகக் கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றிப் பாலன் என்றே அன்னை முலை_பால் அருந்தும் காலையிலே காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ மேல் உவந்து 970 பெற்றார் மகிழ்வு எய்தப் பேசி விளையாடும் கால் அற்று ஆவி போவது அறிந்திலையோ கற்று ஆயப் பள்ளி இடும் கால் அவனைப் பார நமன் வாயில் அள்ளி இடும் தீமை அறிந்திலையோ பள்ளி விடும் காளைப் பருவம்-அதில் கண்டார் இரங்கிட அ 975 ஆளைச் சமன் கொள்வது ஆய்ந்திலையோ வேளை மண மாப்பிள்ளை ஆகி மணம் முடிக்கும் அன்று அவனே சாப்பிள்ளை ஆதல் எண்ணிச் சார்ந்திலையே மேல் பிள்ளை மாடை ஏர்ப் பெண்டுடன் இல் வாழும் கால் பற்பலர்-தாம் பாடை மேல் சேர்தலினைப் பார்த்திலையோ வீடல் இஃது 980 இக் கணமோ மேல் வந்திடும் கணமோ அன்றி மற்றை எ கணமோ என்றார் நீ எண்ணிலையே தொக்குறு தோல் கூடு என்கோ இ உடம்பைக் கோள் வினை நீரோட்டில் விட்ட ஏடு என்கோ நீர் மேல் எழுத்து என்கோ காடு என்கோ பாழ் என்கோ ஒன்பது வாய்ப் பாவை என்கோ வன் பிறவி 985 ஏழ் என்கோ கன்மம்-அதற்கு ஈடு என்கோ தாழ் மண்ணின் பாண்டம் என்கோ வெம் சரக்குப்பை என்கோ பாழ் கரும காண்டம் என்கோ ஆணவத்தின் கட்டு என்கோ கோண்_தகையார் மெய் என்கோ மாய விளைவு என்கோ மின் என்கோ பொய் என்கோ மாயப் பொடி என்கோ மெய் என்ற 990 மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித்தனர் உலகர் அங்கு அவற்றை எண்ணாது அலைந்தனையே தங்கு உலகில் மற்று இதனை ஓம்பி வளர்க்க உழன்றனை நீ கற்றதனை எங்கே கவிழ்த்தனையே அற்றவரை இக் கட்டு அவிழ்த்து இங்கு எரி மூட்டு எனக் கேட்டும் 995 முக்கட்டும் தேட முயன்றனையே இக் கட்டு மண்பட்டு வெம் தீ மரம் பட்டிடக் கண்டும் வெண்பட்டு உடுக்க விரைந்தனையே பண்பட்ட ஐயா அரைநாண் அவிழும் எனக் கேட்டு நின்றும் மெய் ஆபரணத்தின் மேவினையே எய்யாமல் 1000 காதில் கடுக்கன் கழற்றும் எனக் கேட்டு நின்றும் ஏதில் பணியினிடத்து எய்தினையே தாதிற்குத் துற்கந்தமாகச் சுடும் கால் முகர்ந்திருந்தும் நற்கந்தத்தின்-பால் நடந்தனையே புற்கென்ற வன் சுவைத் தீ நாற்றம் மலமாய் வரல் கண்டும் 1005 இன் சுவைப் பால் எய்தி இருந்தனையே முன் சுவைத்துப் பாறு உண்ட காட்டில் பலர் வெந்திடக் கண்டும் சோறு உண்டு இருக்கத் துணிந்தனையே மாறுண்டு கூம்பு உலகம் பொய் என நான் கூவுகின்றேன் கேட்டும் மிகு சோம்பலுடன் தூக்கம் தொடர்ந்தனையே ஆம் பலன் ஓர் 1010 நல் வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத இல் வாழ்வை மெய் என்று இருந்தனையே சொல் ஆவி ஈன்றோன்-தனை நாளும் எண்ணாமல் இ உடம்பை ஈன்றோரை ஈன்றோர் என்று எண்ணினையே ஈன்றோர்கள் நொந்தால் உடன் நின்று நோவார் வினைப் பகை-தான் 1015 வந்தால் அது நீக்க வல்லாரோ வந்து ஆட லுற்ற சிறார் நம் அடையாது ஓட்டுகிற்பார் தென் திசை வாழ் மற்று அவன் வந்தால் தடுக்க வல்லாரோ சிற்றுணவை ஈங்கு என்றால் வாங்கி இடுவார் அருள் அமுதம் வாங்கு என்றால் வாங்கி இட வல்லாரோ தீங்கு அகற்றத் 1020 தூண்டா மனை ஆதிச் சுற்றம் எலாம் சுற்றியிட நீண்டாய் அவர் நல் நெறித் துணையோ மாண்டார் பின் கூடி அழத் துணையாய்க் கூடுவார் வல் நரகில் வாடி அழும் போது வருவாரோ நீடிய நீ இச் சீவர்-தன் துணையோ ஈங்கு இவர்கள் நின் துணையோ 1025 சீச்சீ இது என்ன திறம் கண்டாய் இச் சீவர் நின்னை வைத்து முன் சென்றால் நீ செய்வது என் அவர் முன் இ நிலத்தில் நீ சென்றால் என் செய்வர் நின் இயல்பின் எத்தனை தாய் எத்தனை பேர் எத்தனை ஊர் எத்தனை வாழ்வு எத்தனையோ தேகம் எடுத்தனையே அத்தனைக்கும் 1030 அவ்வவ் இடங்கள்-தொறும் அவ்வவரை ஆண்டாண்டு இங்கு எவ்வெவ் விதத்தால் இழந்தனையோ அவ்விதத்தில் ஒன்றேனும் நன்றாய் உணர்ந்து இருத்தியேல் இவரை இன்றே துறத்தற்கு இசையாயோ நின்றோரில் தாய் யார் மனை யார் தனயர் ஆர் தம்மவர் ஆர் 1035 நீ யார் இதனை நினைந்திலையே சேய் ஏகில் ஏங்குவரே என்றாய் இயமன் வரின் நின் உயிரை வாங்கி முடியிட்டு அகத்தில் வைப்பாரோ நீங்கி இவண் உன் தந்தை தன்-தனக்கு இங்கு ஓர் தந்தை நாடுவன் நீ என் தந்தை என்று உரைப்பது எவ்வாறே சென்று பின் நின்- 1040 தன் மனையாள் மற்றொருவன்-தன் மனையாள் ஆவள் எனில் என் மனையாள் என்பது நீ எவ்வணமே நன்மை பெறும் நட்பு அமைந்த நல் நெறி நீ நாடா வகை தடுக்கும் உட்பகைவர் என்று இவரை ஓர்ந்திலையே நட்பு_உடையாய் எம்மான் படைத்த உயிர் இத்தனைக்குள் சில் உயிர்-பால் 1045 இ மால் அடைந்தது நீ என் நினைந்தோ அ மாறு இல் எம் பந்தமே நினக்கு இங்கு இல்லை என்றால் மற்றையவர்- தம் பந்தம் எவ்வாறு தங்கியதே சம்பந்தர் அற்றவருக்கு அற்ற சிவனாம் எனும் அப் பொன்மொழியை மற்றை மொழி போன்று மறந்தனையே சிற்றுயிர்க்குக் 1050 கல் பனையில் காய்ப்பு உளதாய்க் காட்டும் பிரபஞ்சக் கற்பனையை மெய் என்று கண்டனையே பற்பலவாம் தூரியத்தில் தோன்று ஒலி போல் தோன்றிக் கெடும் மாயா காரியத்தை மெய் என நீ கண்டனையே சீர் இயற்றும் ஆடகத்தில் பித்தளையை ஆலித்திடும் கபட 1055 நாடகத்தை மெய் என்று நம்பினையே நீடு அகத்தில் காய வித்தையால் அக் கடவுள் இயற்றும் இந்த மாய வித்தை மெய் என நீ வாழ்ந்தனையே வாய் அவித்தை இப் படக மாயை இருள் தமமே என்னும் ஒரு முப்படகத்து உள்ளே முயங்கினையே ஒப்பு இறைவன் 1060 ஆன ஒளியில் பரையாம் ஆதபத்தினால் தோன்றும் கானலினை நீராய்க் களித்தனையே ஆன கிரி யா சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இப் பாசத்தின் உள்ளே படர்ந்தனையே நேசத்தின் பொய் ஒன்றுள் மெய்யில் புகும் பால_லீலை-தனை 1065 மெய் என்று வீணில் விரிந்தனையே பொய் என்றும் ஈட்டு நின்ற லீலாவினோதம் எனும் கதையைக் கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற காலத்தை வீணில் கழிக்கும்படி மேக சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே சாலத்தில் 1070 கண்மை அகன்று ஓங்கும் அந்தகாரத்தில் செம்மாப்புற்று உண்மை ஒன்றும் காணாது உழன்றனையே வண்மை_இலாய் இங்கு நினைப் பெரியோர் என் நினைப்பார் ஏமாப்பில் கங்குலினைப் பகலாய்க் கண்டனையே தங்குறும் இத் தேகாதி பொய் எனவே தேர்ந்தார் உரைக்கவும் நீ 1075 மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்குப் பூ முடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே மா முடிக்கும் வாழ்வு நிலை அன்று இமைப்பில் மாறுகின்றது என்று உரைத்தும் வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும் 1080 விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் உண்டு உறங்குகின்றோரை ஒத்தனையே தொண்டு உலகம் கான முயல்_கொம்பாய்க் கழிகின்றது என்கின்றேன் நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் வெள்ளத்தினால் முழுகிவிட்டது என்றால் சென்று கடை 1085 கொள்ளத் திரிபவர் போல் கூடினையே கொள்ள இங்கு கண்டன எல்லாம் நிலையாக் கைதவம் என்கின்றேன் நீ கொண்டு அவை முன் சேரக் குறிக்கின்றாய் உண்டு அழிக்க ஊழி வெள்ளம் வந்தது என்றால் உண்பதற்கும் ஆடுதற்கும் ஊழி நல் நீரோ என்பார் ஒத்தனையே ஏழ் இயற்றும் 1090 தத்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே பல் பகலும் உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய் கண்டனவே கண்டு களிக்கின்றாய் கொண்டனவே கொண்டு இயங்குகின்றாய் குறித்தனவே பின் குறித்துப் 1095 பண்டு அறியார் போலப் படர்கின்றாய் பண்டு அறிந்து சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்று இதனை நல்லோர்கள் கண்டால் நகையாரோ செல்லான காலம் போல் இங்கு நிகழ்_காலமும் காண்கின்றி எதிர்_ காலம் மற்றும் அத் திறமே காண்குவையேல் சாலவும் உன் 1100 போது செலா முன்னம் அனுபூதியை நீ நாடாமல் யாது பயன் எண்ணி இனைகின்றாய் தீது செயும் வீண் அவத்தை எல்லாம் விளைக்கும் திறல் மூல ஆணவத்தினாலே அழிந்தனையே ஆணவத்தில் நீ யார் என அறியாய் நின் எதிரில் நின்றவரை 1105 நீ யார் என வினவி நீண்டனையே ஓயாமல் ஊன் நின்ற ஒன்றின் உளவு அறியாய் அந்தோ நீ நான் என்று சொல்லி நலிந்தனையே நான் என்று சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்று ஒரு நீ அல்லல் உறும் காலத்து அறை கண்டாய் அல்ல எலாம் 1110 நீ இங்கே நான் அங்கே நிற்க நடுவே குதித்தால் நீ எங்கே நான் எங்கே நின்று அறி காண் நீ இங்கு ஒன்று எடுக்கச் சென்று மற்றை ஒன்று எடுக்கக் காண்கின்றேன் இன்று அடுத்த நீ எங்கு இருந்தனையே மன்று அடுத்த தாள் ஆதரித்தே நின்றன்னை மறந்து உய்யாது 1115 வாளா மதத்தின் மலிகின்றாய் கேளாய் இச் சார்பில் ஒன்று விட்டு ஒழிந்தால் சால மகிழ்கிற்பேன் நான் சோர்பு கொண்டு நீ தான் துயர்கின்றாய் சார்பு பெரும் தூ என்று நான் இவணம் சும்மா இருந்தாலும் வா என்று எனையும் வலிக்கின்றாய் ஓ உன்றன் 1120 சூழ்ச்சி அறியேன் நீ சுழல்கின்ற போது எல்லாம் சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் நீட்சியில் நீ கால் அசைத்தால் யானும் கடிதில் தலை அசைப்பேன் மால் அசைத்த நின் புணர்ப்பின் வாறு எதுவோ ஆலும் அண்டக் கூவத்தில் யான் ஓர் குடம் நீ கயிற்றோடும் 1125 ஏவல் கொளும் ஏழை என்கேனோ பாவத்தில் சுற்றுண்ட நீ கடலில் தோன்று சுழி ஆக அதில் எற்றுண்ட நான் திரணம் என்கேனோ பற்றிடும் நீ சங்கற்பமாம் சூறை-தான் ஆக நான் ஆடும் அங்கண் சருகு என்று அறைகேனோ பொங்குற்ற 1130 சேலை விராய் ஓர் தறியில் செல் குழை நீ பின்தொடரும் நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ துள் உறுப்பின் மண்_பகைஞன் சுற்று ஆழி ஆக அதின் உள் உறுப்பே நான் என்று உரைக்கேனோ எள்ளுறும் நீ பாழ் அலை வான் ஏகும் பருந்து ஆக அப் பருந்தின் 1135 நீழலை நான் என்று நினைகேனோ நீழல் உறா நின் வசம் நான் என்று உலகு நிந்தை மொழிகின்றது அலால் என் வசம் நீ என்பது இலை கண்டாய் என் வசம் நீ ஆனால் எளியேனுக்கு ஆகாப் பொருள் உளவோ வான்_நாடர் வந்து வணங்காரோ ஆனாமல் 1140 எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக் கண்_நுதலும் அங்கைக் கனி அன்றோ எண்ணுமிடத்து என் செய்வேன் ஓர் கணமும் என் சொல் வழி நில்லாமல் கொன் செய்வேன் என்று குதிக்கின்றாய் வன் செய்யும் சிந்தோடும் ஓர் வடவைத் தீயும் கரத்து அடைப்பர் 1145 அந்தோ உனை யார் அடக்குவரே வந்து ஓடும் கச்சோதம் என்னக் கதிரோன்-தனை எடுப்பர் அச்சோ உனை யார் அடக்குவரே வைச்சு ஓங்கு மூவுலகும் சேர்த்து ஒரு தம் முன்தானையின் முடிவர் ஆ உனையும் இங்கு ஆர் அடக்குவரே மேவு பல 1150 தேசம் என்றும் காலம் என்றும் திக்கு என்றும் பற்பலவாம் வாசம் என்றும் அவ்வவ் வழக்கு என்றும் மாசு உடைய போகம் என்றும் மற்றைப் புலன் என்றும் பொய் அகலா யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் வான் என்றும் முந்நீர் மலை என்றும் மண் என்றும் 1155 ஊன் என்றும் மற்றை உறவு என்றும் மேல் நின்ற சாதி என்றும் வாழ்வு என்றும் தாழ்வு என்றும் இ உலக நீதி என்றும் கன்ம_நெறி என்றும் ஓத அரிய அண்டம் என்றும் அண்டத்து அசைவும் அசைவும்_அலாப் பண்டம் என்றும் சொல்ப எலாம் பன்முகங்கள் கொண்டு இருந்த 1160 உன் நினைவின் உள்ளே உதித்திட்டு உலவி நிற்ப எ நினைவு கொண்டோ மற்று இ உலகர் எ நவையும் தந்தோன் எவனோ சதுமுகன் உண்டு என்பார்கள் அந்தோ நின் செய்கை அறியாரே அந்தோ நான் ஆம் என்றால் மற்று அதனை அல்ல என்பாய் அல்ல என்றால் 1165 ஆம் என்பாய் என்னை அலைக்கின்றாய் நாம் அன்பாய் என்றும் பிறந்து இறவா இன்பம் அடைதும் என்றால் நன்று என்று ஒருப்படுவாய் நண்ணும் கால் தொன்று எனவே செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமை எலாம் நல்கிற்பாய் என்னே நின் நட்புடைமை சொல்கிற்பில் 1170 ஆவதுவும் நின்னால் அழிவதுவும் நின்னால் என யான் நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு ஆண் அவலம் பெண் அவலம் ஆகும் பொருள் அவலம் ஊண் அவலம் உற்றாரோடு ஊர் அவலம் பூண் அவலம் ஊன் அவலம் அன்றியும் என் உற்ற_துணையாம் நீயும்- 1175 தான் அவலம் என்றால் என் சாற்றுவதே நான் இவணம் இன்பம் எது கண்டேம் மால் இச்சை எலாம் துன்பம் அதில் துன்பம் பிறப்பு என்றே சோர்கின்றேன் வன்பு உடைய இப் பிறவித் துன்பத்தினும் திதியில் துன்பம்-அது செப்ப அரிதாம் என்றே திகைக்கின்றேன் செப்பு இறப்பின் 1180 ஓயாத துன்பம் உரைக்க உடம்பு எல்லாம் வாயாகினும் போதமாட்டாதேல் ஏஏ நாம் செய்வது என்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம் நான் நைவது எல்லாம் கண்டு நடந்தனையே கைவரும் இ இல்லிக் குடம் உடைந்தால் யாது ஆம் என்று உன்னுடன் யான் 1185 சொல்லித் திரிந்தும் எனைச் சூழ்ந்திலையே வல் இயமன் நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களில் எ வேளையோ தூதுவிடில் அவர்கள் கேள் ஐயோ நல்லோம் எனினும் நடவார் நடவார் நாம் செல்லோம் எனினும் அது செல்லாதே வல்லீர் யாம் 1190 இன் சொலினோம் இன்று இங்கு இருந்து வருவோம் என யாம் என் சொலினும் அச் சொல் எலாம் ஏலாதே மன் சொல் உடைத் தாமரையோன் மால் முதலோர் தாம் அறையார் ஆயில் அன்று நாம் அறைவோம் என்றல் நடவாதே நாம் இவணம் அ நாள் வரும் முன்னர் ஆதி அருள் அடையும் 1195 நல் நாள் அடைதற்கு நாடுதும் காண் என்னா நின்று ஓதுகின்றேன் கேட்டும் உறார் போன்று உலகியலில் போதுகின்றாய் யாது புரிகிற்பேன் தீது நன்றோடு ஏற்ற அடி_நாள் உறவாம் என்னை விட்டுத் தாமதமாம் நேற்றை உறவோடு உறவு நேர்ந்தனையே சாற்றும் அந்த 1200 தாமதமே ஓர் அவித்தை தாமதமே ஆவரணம் தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று ஐயோ ஒரு நீ அதனோடு கூடினையால் பொய்யோ நாம் என்று புகன்றதுவே கையாமல் ஒன்னலர் போல் கூடுவாரோடு ஒரு நீ கூடும் கால் 1205 என்னை நினையாய் என் சொல் எண்ணுதியோ பன்னுறும் நின் தீது எல்லாம் நான் ஆதிசேடர் பலராய்ப் பிரமன் போது எல்லாம் சொல்லிடினும் போதாதே ஆதலினால் வைகின்றேன் வாழ்த்தாய் மதித்து ஒரு நீ செய்வது எல்லாம் செய்கின்றாய் ஈது ஓர் திறம் அன்றே உய்கிற்பான் 1210 வாடுகின்றேன் நின்னை மதித்து ஒரு நான் நீ மலத்தை நாடுகின்றாய் ஈது ஓர் நலம் அன்றே கூடுகின்ற ஈண்டு ஓர் அணுவாய் இருந்த நீ எண் திசை போல் நீண்டாய் இஃது ஓர் நெறி அன்றே வேண்டா நீ மற்றவர் போல் அன்றே மனனே நின் வண் புகழை 1215 முற்றும் இவண் ஆர்-தான் மொழிவாரே சுற்றி மனம் தான் அடங்கின் எல்லாச் சகமும் அடங்கும் ஒரு மா நடம் கொள் பாத_மலர் வாய்க்கும் வான் அடங்க எல்லா நலமும் இதனால் என மறைகள் எல்லாம் நின் சீரே எடுத்து இயம்பும் எல்லார்க்கும் 1220 மா கமம் கொண்டு உற்ற மனோலயமே வான் கதி என்று ஆகமங்கள் நின் சீர் அறைந்திடும் காண் ஆகும் இந்த நன்மை பெறும் மேன்மை நண்ணிய நீ நின்னுடைய தன்மை விடல் அந்தோ சதுர் அல இப் புன்மை எலாம் விட்டு ஒழித்து நான் மொழியும் மெய்ச் சுகத்தை நண்ணுதி நீ 1225 இட்டு இழைத்த அச் சுகம்-தான் யாது என்னில் கட்டு அழித்த வேடம் சுகம் என்றும் மெய் உணர்வை இன்றி நின்ற மூடம் சுகம் என்றும் முன் பலவாம் தோடம் செய் போகம் சுகம் என்றும் போகம் தரும் கரும யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் 1230 போதம் சுகம் என்றும் பொன்றல் சுகம் என்றும் விந்து நாதம் சுகம் என்றும் நாம் பொருள் என்று ஓதல் அஃது ஒன்றே சுகம் என்றும் உள் கண்டிருக்கும் அந்த நன்றே சுகம் என்றும் நாம் புறத்தில் சென்றே கண்டு ஆற்றல் சுகம் என்றும் அன்பு அறியாச் சூனியமே 1235 ஏற்ற சுகம் என்றும் இவ்வண்ணம் ஏற்றபடி வெல்லுகின்றோர் போன்று விரி நீர் உலகிடையே சொல்லுகின்றோர் சொல்லும் சுகம் அன்று சொல்லுகின்ற வான் ஆதி தத்துவங்கள் மாய்த்து ஆண்டு உறுகின்ற நான் ஆதி மூன்றில் ஒன்றும் நாடாமல் ஆனாமை 1240 எள்ளும் பகலும் இரவும் இலா ஓர் இடத்தில் உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் வள்ளல் என வாழும் பரசிவத்தின் வன்னி வெப்பம் போல முற்றும் சூழும் சுகமே சுகம் கண்டாய் சூழ்வு-அதனுக்கு எவ்வாறு இருந்தால் இயலும் எனில் அம்ம 1245 இவ்வாறு இருந்தால் இயலாதால் செவ் ஆற்றில் பற்று_அற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டும் அது பற்று அற்றால் அன்றிப் பலியாதால் பற்று அற்றல் வேதனையால் ஈங்கு விரியும் சகப் பழக்க வாதனை போய் நீங்கில் அன்றி வாராதால் வாதனையும் 1250 ஈனம் அந்தோ இ உலகம் என்று அருளை நாடுகின்ற ஞானம் வந்தால் அன்றி நலியாதால் ஞானம்-அது போகம் முற்றும் பொய் எனவே போதும் அனித்திய வி வேகம் உற்றால் அன்றி விளங்காதால் ஆக அஃது உண்ண வந்தால் போலும் இவண் உற்று விசாரித்திடும் ஓர் 1255 எண்ணம் வந்தால் அன்றி இசையாதால் எண்ணம்-அது பங்கம் அடைந்தார் அவையைப் பாராது சாதுக்கள் சங்கம் அடைந்தால் அன்றிச் சாராதால் இங்கு அதனால் வீழ் முகத்தர் ஆகி நிதம் வெண் நீறு அணிந்து அறியாப் பாழ் முகத்தோர்-தம் பால் படர்ந்து உறையேல் பாழ் முகத்தில் 1260 பேய் ஆட உள் அறியாப் பித்து ஆட நின்னுடனே வாயாடுவோர் பால் மருவி நில்லேல் நீ ஆடிப் பேதித்திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே வாதித்திடுவோர் பால் வாய்ந்து உறையேல் சாதித்துச் சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான 1265 தெய்வம் எங்கே என்பவரைச் சேர்ந்து உறையேல் உய்வது எங்கே தீராச் சிவ நிந்தை செய்து சிறுதேவர்களை நேராய்ப் பிதற்றுவர் பால் நேர்ந்து உறையேல் ஓராமல் எள்ளென்றும் தெய்வம் என்பது இல்லை இது தெளிந்து கொள் என்றும் துள்ளுகின்றோர் கூட்டம் உறேல் நள் ஒன்று 1270 நாம் என்றும் நம்மை அன்றி நண்ணும் பிரமம் இல்லை யாம் என்றும் சொல்பவர்-பால் ஆர்ந்து உறையேல் தாம் ஒன்ற எல்லா அறிவும் எமது அறிவே என்று உரைக்கும் பொல்லா வலக்காரர் பொய் உகவேல் புல் ஆக அற்பமே மற்ற எலாம் ஆயில் அழியாக் காய_ 1275 கற்பமே வத்து என்பார் கண் அடையேல் சிற்சிலவாம் சித்திகளே வத்து என்போர்ச் சேர்ந்து உறையேல் பல் மாயா சத்திகளே வத்து என்போர் சார்பு அடையேல் பொத்திய இச் சன்மமே தோற்றும் தரமாம் திரம் அளித்த கன்மமே வத்து என்போர் கண் உறையேல் கன்மம் மிகு 1280 மாகம் கதி என்பார் மாட்டு உறையேல் பல் போக யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் மண் என்பார் வான் என்பார் வாய் முச்சுடர் என்பார் பெண் என்பார் மற்று அவர்-தம் பேர் உரையேல் மண்ணின்-பால் மன் உரையாச் சில்லோர் மரம் தெய்வம் என்பார் மற்று 1285 என் உரையார் ஈண்டு அவர்-பால் எய்தியிடேல் மன் நலங்கள் பூத்தால் சிறுவர்களும் பூசா_பலம் என்பார் தேற்றார் சிவ_பூசைசெய்யாராய்ப் பூத் தாவி வீறுகின்ற பூசையில் என் வீண் என்று வீண் பாழ் வாய்க் கூறுகின்ற பேயர்கள்-பால் கூடி உறேல் மாறுகின்ற 1290 நீள் கோல வாழ்க்கை எலாம் நீத்திடுவான் பொன்_அறைக்குத் தாள்_கோல் இடுவாரைச் சார்ந்து உறையேல் நீள் கோல மெய்_ஒழுக்கத்தார் போல் வெளி நின்று அகத்து ஒழியாப் பொய்_ஒழுக்கத்தார்-பால் பொருந்தி உறேல் பொய் ஒழுக்கில் பொய் நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்-பால் 1295 அ நூல் விரும்பி அடைந்து அலையேல் கை நேர்ந்து கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி நாடாதவர் அவையை நண்ணியிடேல் கோடாது கொல்லா விரதம்-அது கொள்ளாரைக் காணில் ஒரு புல்லாக எண்ணிப் புறம்பு ஒழிக எல்லாமும் 1300 ஆக நவில்கின்றது என் நம் ஐயனுக்கு அன்பு_இல்லாரை நீ கனவிலேனும் நினையற்க ஏகன் அடிக்கு அன்பே வடிவாய் அருளே உயிராய்ப் பேர்_ இன்பே உணர்வாய் இசைந்தாரும் அன்பு ஆகிக் கண்டிகையே பூணின் கலவையே வெண் நீறாய்க் 1305 கொண்டு இகவாச் சார்பு குறித்தாரும் தொண்டுடனே வாய்_மலரால் மாலை வகுத்தலொடு நம் இறைக்குத் தூய் மலரால் மாலை தொடுப்பாரும் சார் மலரோன் ஏர் நந்தனப் பணி கண்டு இச்சையுற நம் இறைக்குச் சீர் நந்தனப் பணிகள் செய்வோரும் நார் நந்தாத் 1310 தீயின் மெழுகாச் சிந்தை சேர்ந்து உருகி நம் இறை வாழ் கோயில் மெழுகா நின்ற கொள்கையரும் மேயினரைத் தாயில் வளர்க்கும் தயவு உடைய நம் பெருமான் கோயில் விளக்கும் குணத்தோரும் தூய அருள் இன்புடனே தீபம் முதல் எல்லாச் சரியைகளும் 1315 அன்புடனே செய்து அங்கு அமர்வாரும் அன்புடனே அண்ணிய மேல் அன்பர்க்கு அமுது ஈதல் ஆதிசிவ புண்ணியமே நாளும் புரிவோரும் புண்ணியமாம் தேனே அமுதே சிவமே சிவமே எம்மானே என்று ஏத்தி மகிழ்வாரும் வானான 1320 மன்னே அருள்_கடலே மாணிக்கமே எங்கள் அன்னே என்று உன்னி அமர்வோரும் நல் நேயப் பண் நீர் மொழியால் பரிந்து ஏத்தி ஆனந்தக் கண்ணீர் கொண்டு உள்ளம் களிப்போரும் உள் நீரில் பண்டு கண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்_மேனி 1325 கண்டுகண்டு நாளும் களிப்போரும் தொண்டு அடையும் பொற்பு அதிகம் என்று எண்ணிப் போற்றி ஒரு மூவர்களின் சொல் பதிகம் கொண்டு துதிப்போரும் சொற்பனத்தும் மாசு அகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்ற திருவாசகத்தை வாயால் மலர்வோரும் வாசகத்தின் 1330 மன் இசைப்பால் மேலோர் வகுத்து ஏத்திநின்ற திரு இன் இசைப்பா ஆதி இசைப்போரும் மன் இசைப்பின் நல் வாழ்வு அருளுகின்ற நம் பெருமான் மான்மியங்கள் சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் சொல் வாய்ந்த தாதா என்று அன்புடனே சாமகீதங்கள் முதல் 1335 வேதாகமங்கள் விரிப்போரும் வேதாந்தம் சேர்ந்தோர்க்கு அருளும் சிவமே பொருள் என்று தேர்ந்தே சிவ_பூசைசெய்வோரும் ஆர்ந்து ஏத்தி நல் நெஞ்சே கோயில் என நம் பெருமான்-தன்னை வைத்து மன்னும் சிவ_நேயம் வாய்ந்தோரும் முன் அயன்-தன் 1340 அஞ்சு எழுத்து எல்லாம் கேட்கில் அஞ்செழுத்தாம் எம் பெருமான் அஞ்செழுத்தால் அர்ச்சித்து அமர்வோரும் அஞ்சு எனவே விஞ்சும் பொறியின் விடயம் எலாம் நம் பெருமான் செம் சுந்தரப் பதத்தில் சேர்த்தோரும் வஞ்சம் செய் பொய் வேதனை நீக்கும் புண்ணியன்-பால் தம் உயிரை 1345 நைவேதனம் ஆக்கும் நல்லோரும் செய் வேலை நீட நடத்தலொடு நிற்றல் முதல் நம் பெருமான் ஆடல் அடித் தியானம் ஆர்ந்தோரும் வாடல் அறத் தூய நனவில் சுழுத்தியொடு நம் பெருமான் நேயம் நிகழ்த்தும் நெறியோரும் மாயம் உறு 1350 மான்-அதுவாய் நின்ற வயம் நீக்கித் தான் அற்றுத் தான் அதுவாய் நிற்கும் தகையோரும் வானம்-அதில் வானம் கண்டு ஆடும் மயில் போன்று நம் பெருமான் தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு தாழ் சடையும் நீறும் சரி கோவணக் கீளும் 1355 வாழ் சிவமும் கொண்டு வதிவோரும் ஆழ் நிலைய வாரி அலை போன்ற சுத்த மாயையினால் ஆம் பூதகாரியங்கள் ஆதி எலாம் கண்டு ஒழித்து ஊர் இயங்கத் தஞ்சம் தரும் மலரோன் தத்துவமாம் பூதங்கள் அஞ்சும் பொறி அஞ்சும் அஞ்சு அறிவும் அஞ்சு எனும் ஓர் 1360 வாக்கு முதல் அஞ்சும் அற்று மாலோன்-தன் தத்துவமாம் ஊக்கும் கலை முதலாம் ஓர் ஏழும் நீக்கி அப்பால் மேவி விளங்கு சுத்த வித்தை முதல் நாதம் மட்டும் தாவி வயங்கு சுத்த தத்துவத்தில் மேவி அகன்று அப்பால் அருள் கண்டு அருளால் தமைத்தாம் கண்டு 1365 அப்பால் பரவெளி கண்டு அப்பாலுக்கப்பாலும் தீராச் சுயமாய்ச் சிதானந்தமாம் ஒளியைப் பாரா இருந்தபடி இருந்து பேராது கண்டது என்று ஒன்றும் கலவாது தாம் கலந்து கொண்ட சிவயோகியராம் கொற்றவரும் அண்ட அரிய 1370 சத்துவத்தில் சத்துவமே தம் உருவாய்க் கொண்டு பரதத்துவத்தின் நிற்கும் தகவோரும் அத்துவத்தில் தீதும் சுகமும் சிவன் செயல் என்று எண்ணி வந்த யாதும் சமமா இருப்போரும் கோதுபடக் கூறும் குறியும் குணமும் குலமும் அடி 1375 ஈறும் கடையும் இகந்தோரும் வீறுகின்ற சேந்தின் அடைந்த எலாம் சீரணிக்கச் சேர் சித்த சாந்தியுடனே சரிப்போரும் சாந்தி பெறத் தம்மை உறும் சித்து எவையும் தாம் உவத்தல் செய்யாமல் செம்மையுடன் வாழும் திறலோரும் எம்மையினும் 1380 ஆராமை ஓங்கும் அவா_கடல் நீர் மான் குளம்பின் நீராக நீந்தி நிலைத்தோரும் சேராது தம் பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச் செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் மண் பொருள் போய்த் தாயர் என மாதர்-தம்மை எண்ணிப் பாலர் பித்தர் 1385 பேயர் என நண்ணும் பெரியோரும் ஈ-அதனில் எய்ப் பரிசாம் ஓர் திரணம் எவ்வுலகும் செய்து அளிக்க மெய்ப் பரிசம் செய்ய வல்ல வித்தகரும் மெய்ப்படவே யாவும் அறிந்தும் அறியார் போன்று எப்பொழுதும் சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் ஓவல் இன்றி 1390 வைதிடினும் வாழ்க என வாழ்த்தி உபசாரம் செய்திடினும் தன்மை திறம்பாரும் மெய் வகையில் தேறா உலகம் சிவமயமாய்க் கண்டு எங்கும் ஏறாது இழியாது இருப்போரும் மாறாது மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பர 1395 மானந்தாதீதத்து அமர்ந்தோரும் தாம் நந்தாச் சாதுக்கள் ஆம் அவர்-தம் சங்க மகத்துவத்தைச் சாதுக்கள் அன்றி எவர்தாம் அறிவார் நீ துக்கம் நீங்கி அன்னோர் சங்கத்தில் நின்று மகிழ்ந்து ஏத்தி நிதம் ஆங்கு அவர் தாள் குற்றேவல் ஆய்ந்து இயற்றி ஓங்கு சிவ 1400 பஞ்சாட்சரத்தைப் பகர் அருளே நாவாக எஞ்சாப் பரிவுடனே எண்ணி அருள் செஞ்சோதித் தாது ஒன்று தும்பை முடித் தாணு அடி ஒன்றி மற்றை யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற பாழ் வாழ்வு நீங்கப் பதி வாழ்வில் எஞ்ஞான்றும் 1405 வாழ்வாய் என்னோடும் மகிழ்ந்து

மேல்

@4.சிவநேச வெண்பா

* காப்பு

மேல்

#-1 முன்னவனே யானை_முகத்தவனே முத்தி நலம் சொன்னவனே தூய மெய்ச் சுகத்தவனே என்னவனே சிற்பரனே ஐங்கரனே செம் சடை அம் சேகரனே தற்பரனே நின் தாள் சரண்

மேல்

#0 வீறு_உடையாய் வேல்_உடையாய் விண்_உடையாய் வெற்பு_உடையாய் நீறு_உடையாய் நேயர்கள்-தம் நெஞ்சு_உடையாய் கூறு முதல்வா ஓர் ஆறு முகவா முக்கண்ணன் புதல்வா நின் தாள் என் புகல் * சிவநேச வெண்பா

மேல்

#1 சீர் சான்ற வேதச் செழும் பொருளே சிற்சொருபப் பேர் சான்ற உண்மைப் பிரமமே நேர் சான்றோர் நாடும் பரசிவமே நாயேனுக்கு அன்பு நின்-பால் நீடும்படி நீ நிகழ்த்து

மேல்

#2 நினைப் பித்தா நித்தா நிமலா என நீ நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் நினைப்பின் மறப்பித்தால் யானும் மறப்பேன் எவையும் பிறப்பித்தாய் என்னால் என் பேசு

மேல்

#3 உருவாய் உருவில் உரு ஆகி ஓங்கி அருவாய் அருவில் அருவாய் ஒருவாமல் நின்றாயே நின்ற நினைக் காண்பது எவ்வாறோ என் தாயே என் தந்தையே

மேல்

#4 வெம் சஞ்சலமா விகாரம் எனும் பேய்க்கு நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் அஞ்சல் என எண் தோள் இறையே எனை அடிமைகொள்ள மனம் உண்டோ இலையோ உரை

மேல்

#5 அப்பால் உன் சித்தம் அறியேன் எனக்கு அம்மை அப்பா நின் தாள் அன்றி யார் கண்டாய் இப் பாரில் சாதி உருவாக்கும் தளை அவிழ்த்துத் தன்மயமாம் சோதி உருவாக்கும் துணை

மேல்

#6 பேர்_அறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல் யார் அறிவார் யானோ அறிகிற்பேன் சீர் கொள் வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள் ஒளி ஆகி நின்ற உனை

மேல்

#7 வந்தித் தேன் பிட்டு உகந்த வள்ளலே நின் அடி யான் சிந்தித்தேன் என்றல் சிரிப்பு அன்றோ பந்தத்தாம் சிந்து சிந்திப்பித்து எனது சிந்தையுள் நின் பொன் அருளே வந்து சிந்திப்பித்தல் மறந்து

மேல்

#8 தேன் என்ற இன் சொல் தெரிந்து நினைப் பாடுகின்றேன் நான் என்று உரைத்தல் நகை அன்றோ வான் நின்ற ஒண் பொருள் நீ உள்ளம் உவந்து அருளால் இன் சொல்லும் வண் பொருளும் ஈதல் மறந்து

மேல்

#9 அண்டங்களோ அவற்றின் அப்பாலோ இப்பாலோ பண்டங்களோ சிற்பரவெளியோ கண் தங்க வெம் பெரு மால் நீத்தவர்-தம் மெய் உளமோ தையலொடும் எம் பெருமான் நீ வாழ் இடம்

மேல்

#10 பூதம் எங்கே மற்றைப் புலன் எங்கே பல்_உயிரின் பேதம் எங்கே அண்டம் எனும் பேர் எங்கே நாதம் எங்கே மன் வடிவம் எங்கே மறை எங்கே வான் பொருள் நீ பொன் வடிவம் கொள்ளாத போது

மேல்

#11 பேர்_உருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின் சீர் உருவோ தேவர் திரு_உருவம் நேர் உருவில் சால்புறச் சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும் கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால்

மேல்

#12 இன்றோ பகலோ இரவோ வரும்_நாளில் என்றோ அறியேன் எளியேனே மன்று ஓங்கும் தாய்_அனையாய் நின் அருளாம் தண் அமுதம் உண்டு உவந்து நாய்_அனையேன் வாழ்கின்ற நாள்

மேல்

#13 மண்_ஆசை வெற்பே மறி கடலே பொன்_ஆசை பெண்_ஆசை ஒன்றே என் பேர்_ஆசை நண்ணு ஆசை விட்டார் புகழும் விடையாய் நான் பொய் ஆசைப் பட்டால் வருமே பதம்

மேல்

#14 தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகை சான்ற சிந்தையாய் என் அருமைத் தேசிகனாய் முந்தையாய் நீடு மறை முதலாய் நின்றாய் என்னே நெஞ்சம் வாடும் எனை ஆட்கொள்ளாவாறு

மேல்

#15 ஊட்டுகின்ற வல்_வினையாம் உள் கயிற்றால் உள் இருந்தே ஆட்டுகின்ற நீ-தான் அறிந்திலையோ வாட்டுகின்ற அஞ்சு_புல வேடர்க்கு அறிவைப் பறிகொடுத்தென் நெஞ்சு புலர்ந்து ஏங்கும் நிலை

மேல்

#16 ஆமோ அலவோ அறியேன் சிறியேன் நான் தாமோதரனும் சதுமுகனும் தாமே அடி ஆதரிக்கும் அரசே நின் ஏவல் அடியார் குற்றேவல் அடியன்

மேல்

#17 உன்னால் எனக்கு ஆவது உண்டு அது நீ கண்டதுவே என்னால் உனக்கு ஆவது ஏது உளது சொன்னால் யான் தந்து ஆர்வத்தோடும் தலைமேற்கொண்டு உய்கிற்பேன் எந்தாய் இங்கு ஒன்றும் அறியேன்

மேல்

#18 சென்று உரைப்பார் சொல்லில் சிறியான் பயம் அறியான் என்று உரைப்பார் ஆங்கு அது மற்று என்னளவே மன்றகத்தோய் அம் சேல் விழியாரை அந்தகன் என்பார் மொழியை அஞ்சேன் சிறிதும் அறிந்து

மேல்

#19 எந்தாய் நின் அன்பர்-தமக்கு இன் அமுதம் இட்டு ஏத்திச் சிந்தா நலம் ஒன்றும் செய்து அறியேன் நந்தாச் சுவர் உண்ட மண் போலும் சோறு உண்டேன் மண்ணில் எவர் உண்டு எனைப் போல் இயம்பு

மேல்

#20 உப்பு இருந்த ஓடோ ஓதியோ உலா_பிணமோ வெப்பு இருந்த காடோ வினைச் சுமையோ செப்ப அறியேன் கண்ணப்பருக்குக் கனி_அனையாய் நின் பணியாது உண்ணப் பருக்கும் உடம்பு

மேல்

#21 ஏலார் மனை-தொறும் போய் ஏற்று எலும்பும் தேய நெடும் காலாய்த் திரிந்து உழலும் கால் கண்டாய் மால் ஆகித் தொண்டே வலம்செய் கழல் தோன்றலே நின் கோயில் கண்டே வலம்செய்யாக் கால்

மேல்

#22 ஏசும் பிறர் மனையில் ஏங்க அவர் ஈயும் அரை_காசும் பெற விரிக்கும் கை கண்டாய் மாசு உந்த விண்டும் சிரம் குனிக்கும் வித்தகனே நின் தலத்தைக் கண்டும் சிரம் குவியாக் கை

மேல்

#23 வெம் கோடை ஆதபத்தின் வீழ் நீர் வறந்து உலர்ந்தும் அங்கு ஓடை ஆதல் வழக்கு அன்றோ எம் கோ நின் சீர் சிந்தாச் சேவடியின் சீர் கேட்டும் ஆனந்த நீர் சிந்தா வன்கண் நிலை

மேல்

#24 வாய் அன்றேல் வெம் மலம் செல் வாய் அன்றேல் மா நரக வாய் அன்றேல் வல் வெறி_நாய் வாய் என்பாம் தாய் என்றே ஊழ்_தாதா ஏத்தும் உடையாய் சிவ என்றே வாழ்த்தாதார் நாற்றப் பாழ் வாய்

மேல்

#25 வீட்டார் இறை நீ விடை மேல் வரும் பவனி காட்டாது அடைத்த கதவு அன்றோ நாட்டு ஆதி நல்லத்துள் ஐயா நதி_சடையாய் என்னும் சீர்ச் செல்லத் துளையாச் செவி

மேல்

#26 புல் அங்கண நீர்ப் புழை என்கோ புற்று என்கோ சொல்லும் பசு_மண் துளை என்கோ சொல்லும் சீர் வீயாத பிஞ்ஞகப் பேர் மெல்லினத்தின் நல் இசை-தான் தோயாத நாசித் துளை

மேல்

#27 தோற்றம் இலாக் கண்ணும் சுவை உணரா நாவும் நிகழ் நாற்றம் அறியாத நாசியும் ஓர் மாற்றமும் தான் கேளாச் செவியும் கொள் கீழ் முகமே நீற்று அணி-தான் மூளாது பாழ்த்த முகம்

மேல்

#28 மான்றாம் உலக வழக்கின்படி மதித்து மூன்றா வகிர்ந்தே முடை நாற ஊன்றா மல_கூடை ஏற்றுகினும் மாணாதே தென்-பால் தலக் கூடல் தாழாத் தலை

மேல்

#29 கல் என்கோ நீர் அடைக்கும் கல் என்கோ கான் கொள் கருங் கல் என்கோ காழ் வயிர கல் என்கோ சொல் என்கோ இன்றால் எனிலோ எடுத்தாள் எம் ஈன்றாள் நேர் நின் தாள் நினையாத நெஞ்சு

மேல்

#30 சொல்லுகின்ற உள் உயிரைச் சோர்வுற்றிடக் குளிர்ந்து கொல்லுகின்ற நஞ்சில் கொடிது அன்றோ ஒல்லும் மன்றத்து எம்மானின் தாள்_கமலம் எண்ணாது பாழ் வயிற்றில் சும்மா அடைக்கின்ற சோறு

மேல்

#31 சோர்பு அடைத்துச் சோறு என்றால் தொண்டை விக்கிக்கொண்டு நடு மார்பு அடைத்துச் சாவுகினும் மா நன்றே சீர் படைக்க எண்ணுவார் எண்ணும் இறைவா நின் தாள் ஏத்தாது உண்ணுவார் உண்ணும்-இடத்து

மேல்

#32 ஓகோ கொடிதே உறும் புலையர் இல்லினிடத் தே கோ வதைத்து உண் செயல் அன்றோ வாகோர்-தம் வாழ் மனையில் செல்லாது வள்ளல் நினை ஏத்தாதார் பாழ்_மனையில் சென்று உண்பது

மேல்

#33 வீயும் இடுகாட்டகத்துள் வேம் பிணத்தின் வெம் தசையைப் பேயும் உடன் உண்ண உண்ணும் பேறு அன்றோ தோயும் மயல் நீங்க அருள்செய்வோய் வெண் நீறு அணியார் தீ மனையில் ஆங்கு அவரோடு உண்ணும்-அது

மேல்

#34 கண் குழைந்து வாடும் கடு நரகின் பேர் உரைக்கில் ஒண் குழந்தையேனும் முலை உண்ணாதால் தண் குழைய பூண் தாது ஆர்க் கொன்றைப் புரி சடையோய் நின் புகழை வேண்டாதார் வீழ்ந்து விரைந்து

மேல்

#35 கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க எண்ணுதலே செய்யேன் மற்று எண்ணுவனேல் மண்_உலகில் ஆமிடத்து நின் அடியார்க்கு ஆசை உரைத்து இல்லை என்பார் போமிடத்தில் போவேன் புலர்ந்து

மேல்

#36 அங்கணனே நின் அடிக்கு ஓர் அன்பு_இலரைச் சார்ந்தோர்-தம் வங்கணமே வைப்பு-அதில் நான் வைத்தேனேல் அங்கணத்தில் நீர் போல் எனது நிலை கெடுக நின் பழி_சொற் றார் போல் அழிக தளர்ந்து

மேல்

#37 பூவை விட்டுப் புல் எடுப்பார் போல் உன் திரு_பாதத் தேவை விட்டு வெம் பிறவித் தேவர்களைக் கோவையிட்டுக் கூவுவார் மற்று அவரைக் கூடியிடேன் கூடுவனேல் ஓவுவார் ஆவல் உனை

மேல்

#38 யாதோ கனல் கண் யம_தூதர் காய்ச்சு கருந் தாதோ தழல் பிழம்போ தான் அறியேன் மீதோங்கு நாள்_தாது ஆர்க் கொன்றை நதி_சடையோய் அஞ்செழுத்தை நாட்டாதார் வாய்க்கு நலம்

மேல்

#39 என் நெஞ்சு ஓர் கோயில் எனக் கொண்டோய் நின் நினையார்- தன் நெஞ்சோ கல்லாம் அச் சாம்_பிணத்தார் வன் நெஞ்சில் சார்ந்தவர்க்கும் மற்று அவரைத் தான் நோக்கி வார்த்தை சொல நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு

மேல்

#40 வெள்_அமுதும் தேனும் வியன் கரும்பும் முக்கனியின் உள் அமுதும் தெள் அமுதும் ஒவ்வாதால் கள்ளம் இலா நின் அன்பர்-தம் புகழின் நீள் மதுரம்-தன்னை இனி என் என்பது ஐயா இயம்பு

மேல்

#41 பண்ணால் உன் சீரினைச் சம்பந்தர் சொல வெள் எலும்பு பெண் ஆனது என்பார் பெரிது அன்றே அண்ணா அச் சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில் தெய்வ வடிவாம் சாம்பர் சேர்ந்து

மேல்

#42 எம் கோவே யான் புகலி எம் பெருமான்-தன் மணத்தில் அங்கு ஓர் பொருள் சுமையாள் ஆனேனேல் இங்கே நின் தாள் வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலின் இ நாள் வருந்த வேண்டுகின்றேன் நான்

மேல்

#43 பூவுக்கு அரையரும் வான் புங்கவரும் போற்று திரு நாவுக்கரையர் எனும் நல் நாமம் மேவுற்ற தொண்டர்க்கு நீ கட்டுச்சோறு எடுத்தாய் என்று அறிந்தோ தொண்டர்க்குத் தொண்டன் என்பார் சொல்

மேல்

#44 எம் பர ஐயோ மண் இடந்து அலைந்தான் சுந்தரனார்- தம் பரவை வீட்டுத் தலைக்கடையாய் வம்பு அணையாய் வாயிற்படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே மாயப் பெயர் நீண்ட மால்

மேல்

#45 நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பது எங்கள் மண்ணில் பழைய வழக்கம் காண் பண்ணின் சொல் அம்மை ஆர் வாமத்தோய் ஆயினும் உன் காரைக்கால் அம்மையார் போல் நடந்தார் ஆர்

மேல்

#46 வேத முடிவோ விளங்கு ஆகம முடிவோ நாத முடிவோ நவில் கண்டாய் வாதம் உறு மாசகர்க்குள் நில்லா மணி சுடரே மாணிக்கவாசகர்க்கு நீ உரைத்த வாறு

மேல்

#47 ஆர் கொண்டார் சேய்க்கறியிட்டாரே சிறுத்தொண்டப் பேர் கொண்டார் ஆயிடில் எம் பெம்மானே ஓர் தொண்டே நாய்க்கும் கடைப்பட்ட நாங்கள் என்பேம் எங்கள் முடை வாய்க்கு இங்கு இஃது ஓர் வழக்கு

மேல்

#48 கோள் கொண்ட நஞ்சம் குடியேனோ கூர் கொண்ட வாள் கொண்டு வீசி மடியேனோ கீள் கொண்ட அம் கோவணத்து அழகா அம்பலவா நின் புகழை இங்கு ஓதி வாழ்த்தாத யான்

மேல்

#49 ஆயாக் கொடியேனுக்கு அன்பு_உடையாய் நீ அருள் இங்கு ஈயாக் குறையே இலை கண்டாய் மாயாற்கும் விள்ளாத் திரு_அடிக் கீழ் விண்ணப்பம் யான் செய்து கொள்ளாக் குறையே குறை

மேல்

#50 பெற்றிடு தாய் போல்வது நின் பெற்றி என்பேன் பிள்ளை-அது மற்று அழுதால் கேட்டும் வராது அங்கே சற்று இருக்கப் பெற்றாள் பொறுப்பள் பிரான் நீ பொறுக்கினும் நின் பொன்_தாள் பொறா எம் புலம்பு

மேல்

#51 பொன் போல் பொறுமை_உளார் புந்தி விடாய் நீ என்பார் என் போல் பொறுமை_உளார் யார் கண்டாய் புன் போக வல்லாம்படி சினம்கொண்டு ஆணவம் செய் இன்னாமை எல்லாம் பொறுக்கின்றேன் யான்

மேல்

#52 முன் மணத்தில் சுந்தரரை முன் வலுவில் கொண்டது போல் என் மணத்தில் நீ வந்திடாவிடினும் நின் கணத்தில் ஒன்றும் ஒரு கணம் வந்துற்று அழைக்கில் செய்தது அன்றி இன்றும் ஒரு மணம் செய்வேன்

மேல்

#53 செய் ஆர் அழலே நின் செம் மேனி என்னினும் என் அய்யா நின் கால் பிடித்தற்கு அஞ்சேன் காண் மெய்யா இஞ் ஞான்று கண்டு நான் மகிழ நம் தொண்டன் என்று எனையும் ஏன்றுகொண்டால் போதும் எனக்கு

மேல்

#54 என்-பாலோ என் பால் இராது ஓடுகின்ற மனத் தின்-பாலோ அ மனத்தைச் சேர் மாயை-தன்-பாலோ யார்-பால் பிழை உளதோ யான் அறியேன் என் அம்மை ஓர் பால் கொள நின்றோய் ஓது

மேல்

#55 நாணவத்தினேன்-தனையோ நாயேனை மூடிநின்ற ஆணவத்தையோ நான் அறியேனே வீண் அவத்தில் தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் பாங்கு_உடையாய் தண்டிப்பது

மேல்

#56 எச்சம் பெறும் உலகோர் எட்டிமரம் ஆனாலும் பச்சென்று இருக்கப் பகர்வார் காண் வெச்சென்ற நஞ்சு_அனையேன் குற்றம் எலாம் நாடாது நாத எனை அஞ்சல் நையேல் என்பாய் அமர்ந்து

மேல்

#57 கற்று அறியேன் நின் அடிச் சீர் கற்றார் கழகத்தில் உற்று அறியேன் உண்மை உணர்ந்து அறியேன் சிற்றறிவேன் வன் செய் வேல் நேர் விழியார் மையலினேன் மா தேவா என் செய்வேன் நின் அருள் இன்றேல்

மேல்

#58 மெய்-தான்_உடையோர் விரும்புகின்ற நின் அருள் என் செய்தால் வருமோ தெரியேனே பொய் தாவு நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக் கேட்க அஞ்சினேன் அன்பு இன்மையால்

மேல்

#59 மா தேவா ஓவா மருந்தே வா மா மணி இப் போதே வா என்றே புலம்புற்றேன் நீ தாவாயானால் உன் சித்தம் அறியேன் உடம்பு ஒழிந்துபோனால் என் செய்வேன் புகல்

மேல்

#60 கொன் செய்தாற்கு ஏற்றிடும் என் குற்றம் எலாம் ஐய எனை என் செய்தால் தீர்ந்திடுமோ யான் அறியேன் முன்_செய்தோய் நின்-பால் எனைக் கொடுத்தேன் நீ செய்க அன்றி இனி என்-பால் செயல் ஒன்று இலை

மேல்

#61 எண்ணில் எளியேன் தவிர எல்லா உயிர்களும் நின் தண் நிலகும் தாள் நீழல் சார்ந்திடும் காண் மண்ணில் வரும் தீங்கு என்ற எல்லாம் என் சிந்தை இசைந்து உற்றன மற்று ஆங்கு ஒன்றும் இல்லாமையால்

மேல்

#62 தாரம் விற்றும் சேய் விற்றும் தன்னை விற்றும் பொய்யாத வாரம் வைத்தான் முன் இங்கு ஓர் மன்னன் என்பர் நாரம் வைத்த வேணி_பிரான் அது-தான் மெய் ஆமேல் அன்று எனை நீ ஏணில் பிறப்பித்தது இல்

மேல்

#63 உள் ஒன்ற நின் அடிக்கு அன்புற்று அறியேன் என் உளத்தின் வெள்ளென்ற வன்மை விளங்காதோ நள் ஒன்ற அச்சம்_கொண்டேனை நினக்கு அன்பன் என்பர் வேழத்தின் எச்சம் கண்டால் போலவே

மேல்

#64 நீத்து ஆடும் செஞ்சடையாய் நீள் வேடம்கட்டி வஞ்சக் கூத்தாடுகின்றேனைக் கொண்டு சிலர் கூத்தா நின் பத்தன் என்பர் என்னோ பகல்வேடத்தார்க்கும் இங்கு வித்தம் இலா நாயேற்கும் வேறு

மேல்

#65 அன்பு_உடையார் இன் சொல் அமுது ஏறு நின் செவிக்கே இன்பு_உடையாய் என் பொய்யும் ஏற்கும்-கொல் துன்பு_உடையேன் பொய்_உடையேன் ஆயினும் நின் பொன் அருளை வேண்டும் ஒரு மெய்_உடையேன் என்கோ விரைந்து

மேல்

#66 என் ஆர்_உயிர்க்குயிராம் எம் பெருமான் நின் பதத்தை உன்னார் உயிர்க்கு உறுதி உண்டோ-தான் பொன்_ஆகத் தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்தவர்க்கும் மற்றை யார்க்கும் புகல் உன் அருள்

மேல்

#67 வெள்ளைப் பிறை அணிந்த வேணி_பிரானே நான் பிள்ளை_பிராயத்தில் பெற்றாளை எள்ளப் பொறுத்தாள் அத் தாயில் பொறுப்பு_உடையோய் நீ-தான் வெறுத்தால் இனி என் செய்வேன்

மேல்

#68 ஆயிரம் அன்றே நூறும் அன்றே ஈர்_ஐந்து அன்றே ஆயிரம் பேர் எந்தை எழுத்து ஐந்தே காண் நீ இரவும் எல்லும் நினைத்தி என ஏத்துகினும் எந்தாய் வீண் செல்லும் மனம் என் செய்கேன் செப்பு

மேல்

#69 வஞ்சம் தரும் காம வாழ்க்கையிடைச் சிக்கிய என் நெஞ்சம் திருத்தி நிலைத்திலையே எம் சங் கரனே மழுக் கொள் கரனே அரனே வரனே சிதம்பரனே வந்து

மேல்

#70 தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்து என்னை வாழ்விக்கும் நல்ல மருந்து என்கோ வீழ்விக்கும் ஈங்கான மாயை இகந்தோர்க்கு அருள்வோய் நின் பாங்கான செம்பொன்_பதம்

மேல்

#71 ஏசு_ஒலிக்கு மானிடனாய் ஏன் பிறந்தேன் தொண்டர்கள்-தம் தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே தூசொலிப்பான் கல்லாகத் தோன்றுவனேல் காள_கண்டா நாயேனுக்கு எல்லா நலமும் உளதே

மேல்

#72 குற்றம் பல செயினும் கோபம்செயாத அருள் சிற்றம்பலம் உறையும் சிற்பரனே வெற்று அம்பல் பொய் விட்டால் அன்றிப் புரந்து அருளேன் என்று எனை நீ கைவிட்டால் என் செய்கேன் காண்

மேல்

#73 தீ_குணத்தார் யாவரும் என் சீடர் எனில் என்னுடைய தீ_குணத்தின் எல்லை எவர் தேர்கிற்பார் ஊக்கம் மிகு நல்லோர்க்கு அளிக்கும் நதி_சடையோய் எற்கு அருளில் எல்லோர்க்கும் ஐயுறவாமே

மேல்

#74 இன்பம்_அடையான் தன்பு_உடையான் என்று ஏழையேன் தலை மேல் அன்பு_உடையாய் நீ அமைப்பித்தாய் இதற்கு வன்பு அடையாது எவ்வண்ணம் நின் நெஞ்சு இசைந்ததோ அந்நாளில் இவ்வண்ணம் என்று அறிகிலேன்

மேல்

#75 ஏய்ப் பிறப்பு ஒன்று இல்லாதோய் என் பிறப்பின் ஏழ்_மடங்கு ஓர் பேய்ப் பிறப்பே நல்ல பிறப்பு அந்தோ வாய்ப்பு உலகம் வஞ்சம் எனத் தேகம் மறைத்து அடி மண் வையாமல் அஞ்சி நின்னோடு ஆடும் அது

மேல்

#76 கோடும் பிறை_சடையோய் கோளும் குறும்பும் சாக் காடும் பிணி மூப்பும் காணார் காண் நீடு நினைக் கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திரு_அடியைக் கண்டார் வடிவு கண்டார்கள்

மேல்

#77 மால் எங்கே வேதன் உயர் வாழ்வு எங்கே இந்திரன் செங் கோல் எங்கே வானோர் குடி எங்கே கோலம் சேர் அண்டம் எங்கே அவ்வவ் அரும் பொருள் எங்கே நினது கண்டம் அங்கே நீலம் உறாக் கால்

மேல்

#78 எவ்வேளையோ வரும் கூற்று எம்-பால் என்று எண்ணுகின்ற அ வேளை-தோறும் அழுங்குற்றேன் செவ்வேளை மிக்கு அளித்தோய் நின் கழல் கால் வீரத்தை எண்ணு-தொறும் எக்களித்து வாழ்கின்றேன் யான்

மேல்

#79 துற்சங்கத்தோர் கணமும் தோயாது நின் அடியர் சற்சங்கத்து என்றனை நீ-தான் கூட்டி நல் சங்கக் காப்பான் புகழ் உன் கழல் புகழைக் கேட்பித்துக் காப்பாய் இஃது என் கருத்து

மேல்

#80 என் அமுதே முக்கண் இறையே நிறை ஞான இன் அமுதே நின் அடியை ஏத்துகின்றோர் பொன் அடிக்கே காதலுற்றுத் தொண்டு செயக் காதல்கொண்டேன் எற்கு அருள் நீ காதலுற்றுச் செய்தல் கடன்

மேல்

#81 ஆரா_அமுதே அருள்_கடலே நாயேன்-தன் பேராத வஞ்சப் பிழை நோக்கி யாரேனும் நின்_போல்வார் இல்லாதோய் நீயே புறம் பழித்தால் என்_போல்வார் என் சொல்லார் ஈங்கு

மேல்

#82 மெய்யாக நின்னைவிட வேறு ஓர் துணை_இல்லேன் ஐயா அது நீ அறிந்தது காண் பொய்யான தீது செய்வேன்-தன் பிழையைச் சித்தம் குறித்திடில் யான் யாது செய்வேன் அந்தோ இனி

மேல்

#83 திண்ணம் அறியாச் சிறியேன் உளத்து இருக்கும் எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் அண்ணல் உன்-பால் நித்தம் இரங்கா என் நெஞ்சு அமர்ந்ததாலோ நின் சித்தம் இரங்காச் செயல்

மேல்

#84 கொன் அஞ்சேன்-தன் பிழையைக் கூர்ந்து உற்று நான் நினைக்கில் என் நெஞ்சே என்னை எரிக்கும் காண் மன்னும் சீர் எந்தாய் நின் சித்தத்திற்கு ஏது ஆமோ நான் அறியேன் சிந்தாகுலன் என் செய்வேன்

மேல்

#85 நின் அன்பர்-தம்பால் நிறுத்துதியோ அன்றி எனைப் பொன் அன்பர்-தம்பால் புணர்த்துதியோ பொன் அன்பர் வைவமே என்னும் வறியேன் அறியேன் என் தெய்வமே நின்றன் செயல்

மேல்

#86 என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும யாதோ நின் சித்தம் அறியேன் அடியேற்கு எப் போதோ அருள்வாய் புகல்

மேல்

#87 எந்தாய் என் குற்றம் எலாம் எண்ணும் கால் உள் நடுங்கி நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத காள மகிழ் நின் களக் கருணை எண்ணு-தொறும் மீள மகிழ்கின்றேன் விரைந்து

மேல்

#88 எள்ளலே என்னினும் ஓர் ஏத்துதலாய்க் கொண்டு அருள் எம் வள்ளலே என்றனை நீ வாழ்வித்தால் தள்ளலே வேண்டும் என யாரே விளம்புவார் நின் அடியர் காண்டும் எனச் சூழ்வார் களித்து

மேல்

#89 வேணிக்கு அம்மே வைத்த வெற்பே விலை_இல்லா மாணிக்கமே கருணை மா கடலே மாணிக்கு முன் பொற்கிழி அளித்த முத்தே என் ஆர்_உயிர்க்கு நின் பொன் கழலே நிலை

மேல்

#90 முத்தேவர் போற்றும் முதல்_தேவ நின்னை அன்றி எ தேவர் சற்றே எடுத்துரை நீ பித்தேன் செய் குற்றம் எலாம் இங்கு ஓர் குணமாகக் கொண்டு என்னை அற்றம் இலாது ஆள்கின்றவர்

மேல்

#91 கங்கை_சடையாய் முக்கண்_உடையாய் கட்செவியாம் அம் கச்சு_உடையாய் அருள்_உடையாய் மங்கைக்கு ஒரு கூறு அளித்தாய் உனைத் தொழும் இ நாயேன் இரு கூறு அளித்தேன் இடர்க்கு

மேல்

#92 பேசத் தெரியேன் பிழை அறியேன் பேதுறினும் கூசத் தெரியேன் குணம் அறியேன் நேசத்தில் கொள்ளுவார் உன் அடிமைக் கூட்டத்தார் அல்லாதார் எள்ளுவார் கண்டாய் எனை

மேல்

#93 ஊணே உடையே என்று உள் கருதி வெட்கம்_இலேன் வீணே நல் நாளை விடுகின்றேன் காணேன் நின் செம் பாதமே என்றும் தீராப் பொருள் என்று நம்பாத நாய்_அடியேன் நான்

மேல்

#94 சிவமே சிவஞானச் செல்வமே அன்பர் நவமே தவமே நலமே நவமாம் வடிவுற்ற தேவே நின் மாக் கருணை அன்றோ படிவுற்ற என் உள் பயன்

மேல்

#95 கோளாக்கிக் கொள்ளுங் கொடியேனையும் நினக்கு ஓர் ஆளாக்கிக் கொள்ளற்கு அமைவாயேல் நீளாக்கும் செம் கேச வேணிச் சிவனே என் ஆணவத்திற்கு எங்கே இடம் காண் இயம்பு

மேல்

#96 திண்ணம் சற்று ஈந்திட நின் சித்தம் திரும்பாத வண்ணம் சற்றே தெரிய வந்தது காண் எண் நெஞ்சில் இத்தனையும் என் வினைகள் நீங்கில் இருக்க அண்டம் எத்தனையும் போதாமை என்று

மேல்

#97 இண்டை_சடையோய் எனக்கு அருள எண்ணுதியேல் தொண்டைப் பெறும் என் துயர் எல்லாம் சண்டைக்கு இங்கு உய்ஞ்சேம் என ஓடும் ஓட்டத்திற்கு என்னுடைய நெஞ்சே பிறகிடும் காண் நின்று

மேல்

#98 கண்ணால் இழுதைகள்-பால் காட்டிக்கொடுக்கில் எனை அண்ணா அருளுக்கு அழகு அன்றே உள் நாடு நின் அடியார் கூட்டத்தில் நீர் இவனைச் சேர்த்திடு-மின் என் அடியான் என்பாய் எடுத்து

மேல்

#99 கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான விண் அப்ப நின்றனக்கு ஓர் விண்ணப்பம் மண்ணில் சில் வானவரைப் போற்றும் மதத்தோர் பலர் உண்டு நான் அவரைச் சேராமல் நாட்டு

மேல்

#100 பொன் நின்று ஒளிரும் புரி_சடையோய் நின்னை அன்றிப் பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை அடித்தாலும் நீயே அணைத்தாலும் நீயே பிடித்தேன் உன் பொன்_பாதப் பேறு

மேல்

#101 துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினும் மற்றை நல் குணத்தில் உன் சீர் நயப்பேன் காண் சிற்குணத்தோய் கூற்று உதைத்த நின் பொன் குரை கழல் பூம்_தாள் அறிக வேற்று உரைத்தேன்_இல்லை விரித்து

மேல்

#102 இப் பாரில் என் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் என் அப்பா நின் தாட்கே அடைக்கலம் காண் இப் பாரில் நான் நினது தாள் நீழல் நண்ணும் மட்டும் நின் அடியர்- பால் நினது சீர் கேட்கப் பண்

மேல்

@5. மகாதேவ மாலை

* காப்பு

மேல்

#0 கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து உயிர்க்கு எல்லாம் களைகண் ஆகித் தெருள் நிறைந்த இன்ப நிலை வளர்க்கின்ற கண்_உடையோய் சிதையா ஞானப் பொருள் நிறைந்த மறை அமுதம் பொழிகின்ற மலர்_வாயோய் பொய்யனேன்-தன் மருள் நிறைந்த மனக் கருங்கல் பாறையும் உள் கசிந்து உருக்கும் வடிவத்தோயே

மேல்

#1 உலக நிலை முழுது ஆகி ஆங்காங்கு உள்ள உயிர் ஆகி உயிர்க்குயிராம் ஒளி-தான் ஆகிக் கலக நிலை அறியாத காட்சி ஆகிக் கதி ஆகி மெய்ஞ்ஞானக் கண்-அது ஆகி இலகு சிதாகாசம் அதாய்ப் பரமாகாச இயல்பு ஆகி இணை ஒன்றும் இல்லாது ஆகி அலகு_இல் அறிவானந்தம் ஆகிச் சச்சிதானந்த மயம் ஆகி அமர்ந்த தேவே

மேல்

#2 உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் கலகம் உறா உபசாந்த நிலை-அது ஆகிக் களங்கம்_அற்ற அருண் ஞானக் காட்சி ஆகி விலகல் உறா நிபிட ஆனந்தம் ஆகி மீ_தானத்து ஒளிர்கின்ற விளக்கம் ஆகி இலகு பராபரமாய்ச் சிற்பரமாய் அன்பர் இதய_மலர் மீது இருந்த இன்பத் தேவே

மேல்

#3 வித்து ஆகி முளை ஆகி விளைவு-அது ஆகி விளைவிக்கும் பொருள் ஆகி மேலும் ஆகிக் கொத்து ஆகிப் பயன் ஆகிக் கொள்வோன் ஆகிக் குறைவு ஆகி நிறைவு ஆகிக் குறைவு_இலாத சத்து ஆகிச் சித்து ஆகி இன்பம் ஆகிச் சதாநிலையாய் எவ்வுயிர்க்கும் சாட்சி ஆகி முத்து ஆகி மாணிக்கம் ஆகித் தெய்வ முழு வயிரத் தனி மணியாய் முளைத்த தேவே

மேல்

#4 வேதாந்த நிலை ஆகிச் சித்தாந்தத்தின் மெய் ஆகிச் சமரசத்தின் விவேகம் ஆகி நாதாந்த வெளி ஆகி முத்தாந்தத்தின் நடு ஆகி நவ நிலைக்கு நண்ணாது ஆகி மூதாண்ட கோடி எல்லாம் தாங்கிநின்ற முதல் ஆகி மனாதீத முத்தி ஆகி வாது ஆண்ட சமய நெறிக்கு அமையாது என்றும் மவுன வியோமத்தின் இடை வயங்கும் தேவே

மேல்

#5 தோன்று துவிதாத்துவிதமாய் விசிட்டாத்துவிதமாய்க் கேவலாத்துவிதம் ஆகிச் சான்ற சுத்தாத்துவிதமாய்ச் சுத்தம் தோய்ந்த சமரசாத்துவிதமுமாய்த் தன்னை அன்றி ஊன்று நிலை வேறு ஒன்றும் இலதாய் என்றும் உள்ளதாய் நிர்_அதிசய உணர்வாய் எல்லாம் ஈன்று அருளும் தாய் ஆகித் தந்தை ஆகி எழில் குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே

மேல்

#6 பரம் ஆகிச் சூக்குமமாய்த் தூலம் ஆகிப் பரமார்த்த நிலை ஆகிப் பதத்தின் மேலாம் சிரம் ஆகித் திரு_அருளாம் வெளியாய் ஆன்ம சிற்சத்தியாய்ப் பரையின் செம்மை ஆகித் திரம் ஆகித் தற்போத நிவிர்த்தி ஆகிச் சிவம் ஆகிச் சிவாநுபவச் செல்வம் ஆகி அரம் ஆகி ஆனந்த_போதம் ஆகி ஆனந்தாதீதம்-அதாய் அமர்ந்த தேவே

மேல்

#7 இந்தியமாய்க் கரணாதி அனைத்தும் ஆகி இயல் புருடனாய்க் கால பரமும் ஆகிப் பந்தம் அற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால் பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை ஆகி வந்த உபசாந்தம்-அதாய் மவுனம் ஆகி மகா மவுன_நிலை ஆகி வயங்கா நின்ற அந்தம்_இல் தொம்பதமாய்த் தற்பதமாய் ஒன்றும் அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே.

மேல்

#8 நின்மயமாய் என்மயமாய் ஒன்றும் காட்டா நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம் தன்மயமாய்த் தற்பரமாய் விமலம் ஆகித் தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகசம் ஆகிச் சின்மயமாய்ச் சிற்பரமாய் அசலம் ஆகிச் சிற்சொலிதமாய் அகண்ட சிவமாய் எங்கும் மன்மயமாய் வாசகாதீதம் ஆகி மனாதீதமாய் அமர்ந்த மவுனத் தேவே

மேல்

#9 அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் களவு_இறந்தும் கரணாதி இறந்தும் செய்யும் கடும் தவத்தும் காண்ப அரிதாம் கடவுள் ஆகி உளவு இறந்த எம்_போல்வார் உள்ளத்து உள்ளே ஊறுகின்ற தெள் அமுத ஊறல் ஆகிப் பிளவு இறந்து பிண்டாண்ட முழுதும் தானாய்ப் பிறங்குகின்ற பெரும் கருணைப் பெரிய தேவே

மேல்

#10 வாய் ஆகி வாய் இறந்த மவுனம் ஆகி மதம் ஆகி மதம் கடந்த வாய்மை ஆகிக் காய் ஆகிப் பழம் ஆகித் தருவாய் மற்றைக் கருவி கரணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற தாய் ஆகித் தந்தையாய்ப் பிள்ளை ஆகித் தான் ஆகி நான் ஆகிச் சகலம் ஆகி ஓயாத சத்தி எலாம் உடையது ஆகி ஒன்று ஆகிப் பல ஆகி ஓங்கும் தேவே

மேல்

#11 அண்டங்கள் பல ஆகி அவற்றின் மேலும் அளவு ஆகி அளவாத அதீதம் ஆகிப் பிண்டங்கள் அனந்த வகை ஆகிப் பிண்டம் பிறங்குகின்ற பொருள் ஆகிப் பேதம் தோற்றும் பண்டங்கள் பல ஆகி இவற்றைக் காக்கும் பதி ஆகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம் கொண்டு எங்கும் நிழல் பரப்பித் தழைந்து ஞானக் கொழும் கடவுள் தரு ஆகிக் குலவும் தேவே

மேல்

#12 பொன் ஆகி மணி ஆகிப் போகம் ஆகிப் புறம் ஆகி அகம் ஆகிப் புனிதம் ஆகி மன் ஆகி மலை ஆகிக் கடலும் ஆகி மதி ஆகி ரவி ஆகி மற்றும் ஆகி முன் ஆகிப் பின் ஆகி நடுவும் ஆகி முழுது ஆகி நாதமுற முழங்கி எங்கும் மின் ஆகிப் பரவி இன்ப_வெள்ளம் தேக்க வியன் கருணை பொழி முகிலாய் விளங்கும் தேவே

மேல்

#13 அரிது ஆகி அரியதினும் அரியது ஆகி அநாதியாய் ஆதியாய் அருள்_அது ஆகிப் பெரிது ஆகிப் பெரியதினும் பெரியது ஆகிப் பேதமாய் அபேதமாய்ப் பிறங்காநின்ற கரிது ஆகி வெளிது ஆகிக் கலைகள் ஆகிக் கலை கடந்த பொருள் ஆகிக் கரணாதீதத் தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மைச் செழும் கிரணச் சுடர் ஆகித் திகழும் தேவே

மேல்

#14 உரு ஆகி உருவினில் உள் உருவம் ஆகி உருவத்தில் உரு ஆகி உருவுள் ஒன்றாய் அரு ஆகி அருவினில் உள் அருவம் ஆகி அருவத்தில் அரு ஆகி அருவுள் ஒன்றாய்க் குரு ஆகிச் சத்துவ சிற்குணத்தது ஆகிக் குணரகிதப் பொருள் ஆகிக் குலவாநின்ற மரு ஆகி மலர் ஆகி வல்லி ஆகி மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்கும் தேவே

மேல்

#15 சகலமாய்க் கேவலமாய்ச் சுத்தம் ஆகிச் சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய் அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை ஆகி அவை அனைத்தும் அணுகாத அசலம் ஆகி இக உறாத் துணை ஆகித் தனியது ஆகி எண்_குணமாய் எண்_குணத்து எம் இறையாய் என்றும் உகல் இலாத் தண் அருள் கொண்டு உயிரை எல்லாம் ஊட்டி வளர்த்திடும் கருணை ஓவாத் தேவே

மேல்

#16 வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த வாசக வாச்சியம் கடந்த மவுனம் ஆகித் தேசு அகமாய் இருள் அகமாய் இரண்டும் காட்டாச் சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த பாசம் உறாப் பதி ஆகிப் பசுவும் ஆகிப் பாச நிலை ஆகி ஒன்றும் பகராது ஆகி நாசம் இலா வெளி ஆகி ஒளி-தான் ஆகி நாதாந்த முடிவில் நடம் நவிற்றும் தேவே

மேல்

#17 சகம் ஆகிச் சீவனாய் ஈசன் ஆகிச் சதுமுகனாய்த் திருமாலாய் அரன்-தான் ஆகி மகமாயை முதலாய்க் கூடத்தன் ஆகி வான் பிரமம் ஆகி அல்லா வழக்கும் ஆகி இகம் ஆகிப் பதம் ஆகிச் சமய கோடி எத்தனையும் ஆகி அவை எட்டா வான் கற் பகம் ஆகிப் பரம் ஆகிப் பரமம் ஆகிப் பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே

மேல்

#18 விதி ஆகி அரி ஆகிக் கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன நிதி ஆகும் சதாசிவனாய் விந்து ஆகி நிகழ் நாதமாய்ப் பரையாய் நிமலானந்தப் பதி ஆகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப் பக்கம் இரண்டாய் இரண்டும் பகராது ஆகிக் கதி ஆகி அளவு_இறந்த கதிகள் எல்லாம் கடந்துநின்று நிறைந்த பெரும் கருணைத் தேவே

மேல்

#19 மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி நான் ஆகி நான்_அல்லன் ஆகி நானே_நான் ஆகும் பதம் ஆகி நான்-தான் கண்ட தான் ஆகித் தான்_அல்லன் ஆகித் தானே தான் ஆகும் பதம் ஆகிச் சகச ஞான வான் ஆகி வான் நடுவில் வயங்குகின்ற மவுன_நிலை ஆகி எங்கும் வளரும் தேவே

மேல்

#20 மந்திரமாய்ப் பதம் ஆகி வன்னம் ஆகி வளர் கலையாய்த் தத்துவமாய்ப் புவனம் ஆகிச் சந்திரனாய் இந்திரனாய் இரவி ஆகித் தானவராய் வானவராய்த் தயங்காநின்ற தந்திரமாய் இவை ஒன்றும் அல்ல ஆகித் தான் ஆகித் தனது ஆகித் தான் நான் காட்டா அந்தரமாய் அப்பாலாய் அதற்கு அப்பாலாய் அப்பாலுக்கு அப்பாலாய் அமர்ந்த தேவே

மேல்

#21 மலை மேலும் கடல் மேலும் மலரின் மேலும் வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே நிலை மேலும் நெறி மேலும் நிறுத்துகின்ற நெடும் தவத்தோர் நிறை மேலும் நிகழ்த்தும் வேதக் கலை மேலும் எம்_போல்வார் உளத்தின் மேலும் கண் மேலும் தோள் மேலும் கருத்தின் மேலும் தலை மேலும் உயிர் மேலும் உணர்வின் மேலும் தகும் அன்பின் மேலும் வளர் தாள் மெய்த் தேவே

மேல்

#22 பொன்_குன்றே அகம் புறமும் பொலிந்து நின்ற பூரணமே ஆரணத்துள் பொருளே என்றும் கற்கின்றோர்க்கு இனிய சுவைக் கரும்பே தான கற்பகமே கற்பகத் தீம் கனியே வாய்மைச் சொல் குன்றா நாவகத்துள் மாறா இன்பம் தோற்றுகின்ற திரு_அருள் சீர்ச் சோதியே விண் நிற்கின்ற சுடரே அச் சுடருள் ஓங்கும் நீள் ஒளியே அ ஒளிக்குள் நிறைந்த தேவே

மேல்

#23 தேசு விரித்து இருள் அகற்றி என்றும் ஓங்கித் திகழ்கின்ற செழும் கதிரே செறிந்த வாழ்க்கை மாசு விரித்திடும் மனத்தில் பயிலாத் தெய்வ மணி_விளக்கே ஆனந்த வாழ்வே எங்கும் காசு விரித்திடும் ஒளி போல் கலந்துநின்ற காரணமே சாந்தம் எனக் கருதாநின்ற தூசு விரித்து உடுக்கின்றோர்-தம்மை நீங்காச் சுக மயமே அருள் கருணை துலங்கும் தேவே

மேல்

#24 கோவே எண்_குணக் குன்றே குன்றா ஞானக் கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோனக் காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வானத் தேவே அத் தேவுக்கும் தெளிய ஒண்ணாத் தெய்வமே வாடாமல் திகழ் சிற்போதப் பூவே அப் பூவில் உறு மணமே எங்கும் பூரணமாய் நிறைந்து அருளும் புனிதத் தேவே

மேல்

#25 வானே அ வான் உலவும் காற்றே காற்றின் வரு நெருப்பே நெருப்பு உறு நீர் வடிவே நீரில் தான் ஏயும் புவியே அப் புவியில் தங்கும் தாபரமே சங்கமமே சாற்றுகின்ற ஊனே நல் உயிரே உள் ஒளியே உள்ளத்து உணர்வே அ உணர்வு கலந்து ஊறுகின்ற தேனே முக்கனியே செங்கரும்பே பாகின் தீம் சுவையே சுவை அனைத்தும் திரண்ட தேவே

மேல்

#26 விண்ணே விண் உருவே விண் முதலே விண்ணுள் வெளியே அ வெளி விளங்கு வெளியே என்றன் கண்ணே கண்மணியே கண் ஒளியே கண்ணுள் கலந்துநின்ற கதிரே அக் கதிரின் வித்தே தண்ணே தண் மதியே அ மதியில் பூத்த தண் அமுதே தண் அமுத சாரமே சொல் பண்ணே பண் இசையே பண் மயமே பண்ணின் பயனே மெய்த் தவர் வாழ்த்திப் பரவும் தேவே

மேல்

#27 மாண் நேயத்தவர் உளத்தே மலர்ந்த செந்தாமரை மலரின் வயங்குகின்ற மணியே ஞானப் பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோனப் புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே ஆணே பெண் உருவமே அலியே ஒன்றும் அல்லாத பேர்_ஒளியே அனைத்தும் தாங்கும் தூணே சிற்சுகமே அச் சுகம் மேல் பொங்கும் சொரூபானந்தக் கடலே சோதித் தேவே

மேல்

#28 பூதமே அவை தோன்றிப் புகுந்து ஒடுங்கும் புகலிடமே இடம் புரிந்த பொருளே போற்றும் வேதமே வேதத்தின் விளைவே வேத வியன் முடிவே அ முடிவின் விளங்கும் கோவே நாதமே நாதாந்த நடமே அந்த நடத்தினை உள் நடத்துகின்ற நலமே ஞான போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே

மேல்

#29 ஞாலமே ஞாலம் எலாம் விளங்கவைத்த நாயகமே கற்பம் முதல் நவிலாநின்ற காலமே காலம் எலாம் கடந்த ஞானக் கதியே மெய்க் கதி அளிக்கும் கடவுளே சிற் கோலமே குணமே உள் குறியே கோலம் குணம் குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர் சீலமே மால் அறியா மனத்தில் கண்ட செம்பொருளே உம்பர் பதம் செழிக்கும் தேவே

மேல்

#30 தத்துவமே தத்துவாதீதமே சிற்சயம்புவே எங்கும் நிறை சாட்சியே மெய்ச் சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம் தந்து அருளும் பெரு வாழ்வாம் சாமியே எம் சித்த நிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும் தெவிட்டாத தெள் அமுதே தேனே என்றும் சுத்த நெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த சுகப் பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே

மேல்

#31 யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்குந் தூய போகமே போகத்தின் பொலிவே போகம் புரிந்து அருளும் புண்ணியமே புனித ஞான யாகமே யாகத்தின் விளைவே யாகத்து இறையே அ இறை புரியும் இன்பே அன்பர் மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே

மேல்

#32 காட்சியே காண்பதுவே ஞேயமே உள் கண்_உடையார் கண் நிறைந்த களிப்பே ஓங்கும் மாட்சியே உண்மை அறிவு இன்பம் என்ன வயங்குகின்ற வாழ்வே மா மவுனக் காணி ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த அறிவே மெய் அன்பே தெள் அமுதே நல்ல சூட்சியே சூட்சி எலாம் கடந்துநின்ற துரியமே துரிய முடிச் சோதித் தேவே

மேல்

#33 மறை முடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கள்-தம் மனத்தே நின்ற குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோனக் கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளைப் பிறை முடிக்கும் பெருமானே துளவ மாலைப் பெம்மானே செங்கமலப் பிரானே இந்த இறை முடிக்கும் மூவர்கட்கும் மேலாய் நின்ற இறையே இ உருவும் இன்றி இருந்த தேவே

மேல்

#34 கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச வாது அகன்ற ஞானியர்-தம் மதியில் ஊறும் வான் அமுதே ஆனந்த_மழையே மாயை வேது அகன்ற முத்தர்களை விழுங்கு ஞான வேழமே மெய் இன்ப விருந்தே நெஞ்சில் தீது அகன்ற மெய் அடியர்-தமக்கு வாய்த்த செல்வமே எல்லை_இலாச் சீர்மைத் தேவே

மேல்

#35 அருள் அருவி வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும் ஆனந்தத் தனி மலையே அமல வேதப் பொருள் அளவு நிறைந்து அவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்ற பரம்பொருளே புரணம் ஆகி இருள் அறு சிற்பிரகாச மயமாம் சுத்த ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே தெருள் அளவும் உளம் முழுதும் கலந்துகொண்டு தித்திக்கும் செழும் தேனே தேவ தேவே

மேல்

#36 அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர் உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணரச் சூழ்ந்த களவை எலாம் கடந்து அண்ட பிண்டம் எல்லாம் கடந்து நிறைவான சுகக் கடலே அன்பர் வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே

மேல்

#37 வன்பு கலந்து அறியாத மனத்தோர்-தங்கள் மனம் கலந்து மதி கலந்து வயங்காநின்ற என்பு கலந்து ஊன் கலந்து புலன்களோடும் இந்திரியம்-அவை கலந்து உள் இயங்குகின்ற அன்பு கலந்து அறிவு கலந்து உயிர் ஐம்பூதம் ஆன்மாவும் கலந்துகலந்து அண்ணித்து ஊறி இன்பு கலந்து அருள் கலந்து துளும்பிப் பொங்கி எழும் கருணைப் பெருக்கு ஆறே இன்பத் தேவே

மேல்

#38 தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீசத் தடம் பொழில் பூ மணம் வீசத் தென்றல் வீச எண் அமுதப் பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீசத் தண் பனி_நீர் எடுத்து வீசப் பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக் கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொளத் தரும் கருணைக் கடவுள் தேவே

மேல்

#39 சுழியாத அருள் கருணைப் பெருக்கே என்றும் தூண்டாத மணி_விளக்கின் சோதியே வான் ஒழியாது கதிர் பரப்பும் சுடரே அன்பர்க்கு ஓவாத இன்பு அருளும் ஒன்றே விண்ணோர் விழியாலும் மொழியாலும் மனத்தினாலும் விழைதரு மெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த வழியாலும் கண்டுகொளற்கு அரிதாய்ச் சுத்த மவுன வெளியூடு இருந்து வயங்கும் தேவே

மேல்

#40 சொல் ஒழியப் பொருள் ஒழியக் கரணம் எல்லாம் சோர்ந்து ஒழிய உணர்வு ஒழியத் துளங்காநின்ற அல் ஒழியப் பகல் ஒழிய நடுவே நின்ற ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே நெல் ஒழியப் பதர் கொள்வார் போல இன்ப நிறைவு ஒழியக் குறை கொள் மத நெறியோர் நெஞ்சக் கல் ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணைத் தேவே

மேல்

#41 அலை கடலும் புவி வரையும் அனல் கால் நீரும் அந்தரமும் மற்றை அகிலாண்டம் யாவும் நிலைகுலையா வண்ணம் அருள் வெளியினூடு நிரைநிரையா நிறுத்தி உயிர் நிகழும் வண்ணம் தலை குலையாத் தத்துவம் செய் திரோதை என்னும் தனி ஆணை நடத்தி அருள் தலத்தில் என்றும் மலைவு அற வீற்றிருந்து அருளும் அரசே முத்தி வழி_துணையே விழித் துணையுள் மணியாம் தேவே

மேல்

#42 வரம் பழுத்த நெறியே மெய் நெறியில் இன்ப வளம் பழுத்த பெரு வாழ்வே வானோர்-தங்கள் சிரம் பழுத்த பதப் பொருளே அறிவானந்தச் சிவம் பழுத்த அநுபவமே சிதாகாசத்தில் பரம் பழுத்த நடத்து அரசே கருணை என்னும் பழம் பழுத்த வான் தருவே பரம ஞானத் திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்துக் கனிந்த அருள் செல்வத் தேவே

மேல்

#43 அண்டம் எலாம் கண் ஆகக் கொளினும் காண்டற்கு அணுத்துணையும் கூடா என்று அனந்த வேதம் விண்டு அலறி ஓலமிட்டுப் புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே கண்ட வடிவாய் அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெரும் கருணைக் கடவுளே எம் சண்ட வினைத் தொடக்கு அறச் சின்மயத்தைக் காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே

மேல்

#44 பேதம் உறா மெய்ப் போத வடிவம் ஆகிப் பெரும் கருணை நிறம் பழுத்துச் சாந்தம் பொங்கிச் சீதம் மிகுந்து அருள் கனிந்துகனிந்து மாறாச் சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா ஆதரவோடு இயல் மவுனச் சுவை மேன்மேல் கொண்டு ஆனந்த ரசம் ஒழுக்கி அன்பால் என்றும் சேதம் உறாது அறிஞர் உளம் தித்தித்து ஓங்கும் செழும் புனிதக் கொழும் கனியே தேவ தேவே

மேல்

#45 உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க உளம் கனிய மெய் அன்பர் உள்ளத்தூடே கடல் அனைய பேர்_இன்பம் துளும்ப நாளும் கருணை மலர்த் தேன் பொழியும் கடவுள் காவே விடல் அரிய எம்_போல்வார் இதயம்-தோறும் வேதாந்த மருந்து அளிக்கும் விருந்தே வேதம் தொடல் அலரிய வெளி முழுதும் பரவி ஞானச் சோதி விரித்து ஒளிர்கின்ற சோதித் தேவே

மேல்

#46 கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு அரிய அறை விடுத்து நவ நிலைக்கு மேலே காணாமல் காண்கின்ற காட்சியே உள் அரிய நிலை ஒன்று இரண்டின் நடுவே சற்றும் அறியாமல் அறிகின்ற அறிவே என்றும் உரிய சதா நிலை நின்ற உணர்ச்சி மேலோர் உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே

மேல்

#47 சொல் போதற்கு அரும் பெரிய மறைகள் நாடித் தொடர்ந்துதொடர்ந்து அயர்ந்து இளைத்துத் துளங்கி ஏங்கிப் பின் போத விரைந்து அன்பர் உளத்தே சென்ற பெரும் கருணைப் பெரு வாழ்வே பெயராது என்றும் தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித் ததும்பி வழிந்து ஓங்கி எல்லாம் தானே ஆகிச் சிற்போதத்து அகம் புறமும் கோத்து நின்ற சிவானந்தப் பெருக்கே மெய்ச் செல்வத் தேவே

மேல்

#48 பொங்கு பல சமயம் எனும் நதிகள் எல்லாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்க நிழல் பரப்பி மயல் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூம் தடமே ஞானச் செங்குமுதம் மலர வரும் மதியே எல்லாம் செய்ய வல்ல கடவுளே தேவ தேவே

மேல்

#49 வான் காணா மறை காணா மலரோன் காணான் மால் காணான் உருத்திரனும் மதித்துக் காணான் நான் காணா இடத்து அதனைக் காண்பேம் என்று நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை மான் காணா உள கமலம் அலர்த்தாநின்ற வான் சுடரே ஆனந்த மயமே ஈன்ற ஆன் காணா இளம் கன்றாய் அலமந்து ஏங்கும் அன்பர்-தமைக் கலந்து கொளும் அமலத் தேவே

மேல்

#50 மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி மீது ஏறித் தெளிந்து இச்சை விடுதல் ஏறி அஞ்ஞானம் அற்றபடி ஏறி உண்மை அறிந்தபடி நிலை ஏறி அது நான் என்னும் கைஞ்ஞானம் கழன்று ஏறி மற்ற எல்லாம் கடந்து ஏறி மவுன இயல் கதியில் ஏறி எஞ்ஞானம் அறத் தெளிந்தோர் கண்டும் காணேம் என்கின்ற அநுபவமே இன்பத் தேவே

மேல்

#51 பற்று அறியா முத்தர்-தமை எல்லாம் வாழைப்பழம் போல விழுங்குகின்ற பரமே மாசு பெற்று அறியாப் பெரும் பதமே பதத்தைக் காட்டும் பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே உற்று அறியாது இன்னும்இன்னும் மறைகள் எல்லாம் ஓலமிட்டுத் தேட நின்ற ஒன்றே ஒன்றும் கற்று அறியாப் பேதையேன்-தனக்கும் இன்பம் கனிந்து அளித்த அருள்_கடலே கருணைத் தேவே

மேல்

#52 மெய் உணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த வெளி ஆக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும் பொய் உணர்ந்த எமை_போல்வார்-தமக்கும் இன்பம் புரிந்து அருளும் கருணை_வெள்ளப் பொற்பே அன்பர் கை உறைந்து வளர் நெல்லிக்கனியே உள்ளம் கரைந்துகரைந்து உருக அவர் கருத்தினூடே உய்யும் நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும் ஓங்குகின்ற சுயம் சுடரே உண்மைத் தேவே

மேல்

#53 ஒலி வடிவு நிறம் சுவைகள் நாற்றம் ஊற்றம் உறு தொழில்கள் பயன் பல வேறு உளவாய் எங்கும் மலி வகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும் மாட்டாதாய் எல்லாமும் வல்லது ஆகிச் சலி வகை இல்லாத முதல் பொருளே எல்லாம் தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண் பெண் அலி வகை அல்லாத வகை கடந்துநின்ற அருள் சிவமே சிவபோகத்து அமைந்த தேவே

மேல்

#54 பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண்டத்தின் வாராய பல பொருளும் கடலும் மண்ணும் மலை உளவும் கடல் உளவும் மணலும் வானும் ஊராத வான் மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை ஆராலும் அளப்ப அரிது என்று அனந்த வேதம் அறைந்து இளைக்க அதி தூரம் ஆகும் தேவே

மேல்

#55 கற்பங்கள் பல கோடி செல்லத் தீய கனலின் நடு ஊசியின் மேல் காலை ஊன்றிப் பொற்பு அற மெய் உணவு இன்றி உறக்கம் இன்றிப் புலர்ந்து எலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத் திருவாளர் உள் கலந்த தேவ தேவே

மேல்

#56 மட்டு அகன்ற நெடும் காலம் மனத்தால் வாக்கால் மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே கட்டு அகன்ற மெய் அறிவோர் கரணம் நீக்கிக் கலை அகற்றிக் கருவி எலாம் கழற்றி மாயை விட்டு அகன்று கரும மல போதம் யாவும் விடுத்து ஒழித்துச் சகச மல வீக்கம் நீக்கிச் சுட்டு அகன்று நிற்க அவர்-தம்மை முற்றும் சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத் தேவே

மேல்

#57 உரு நான்கும் அரு நான்கும் நடுவே நின்ற உரு_அருவம் ஒன்றும் இவை உடன் மேல் உற்ற ஒரு நான்கும் இவை கடந்த ஒன்றுமாய் அ ஒன்றின் நடுவாய் நடுவுள் ஒன்றாய் நின்றே இரு நான்கும் அமைந்தவரை நான்கினோடும் எண்_நான்கின் மேலிருத்தும் இறையே மாயைக் கரு நான்கும் பொருள் நான்கும் காட்டும் முக்கண் கடவுளே கடவுளர்கள் கருதும் தேவே

மேல்

#58 பாங்கு உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப் பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே

மேல்

#59 எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி பழுத்து அளிந்து மவுன நறும் சுவை மேல் பொங்கிப் பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக் கழுத்து அரிந்து கரும மலத் தலையை வீசும் கடும் தொழிலோர்-தமக்கே நல் கருணை காட்டி விழுத் துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே

மேல்

#60 உருத்திரர் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர் உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர் மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக் கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்களை வினவ மற்று அவையும் காணேம் என்று வருத்தமுற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே

மேல்

#61 பாயிரம் மா மறை அனந்தம்அனந்தம் இன்னும் பார்த்து அளந்து காண்டும் எனப் பல் கால் மேவி ஆயிரமாயிரம் முகங்களாலும் பல் நாள் அளந்தளந்து ஓர் அணுத்துணையும் அளவு காணா தே இரங்கி அழுது சிவசிவ என்று ஏங்கித் திரும்ப அருள் பர வெளி வாழ் சிவமே ஈன்ற தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்_போல்வாரைத் தண் அருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே

மேல்

#62 அந்தரம் இங்கு அறிவோம் மற்று அதனில் அண்டம் அடுக்கடுக்காய் அமைந்த உளவு அறிவோம் ஆங்கே உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம் சீவன் உற்ற நிலை அறிவோம் மற்று அனைத்தும் நாட்டும் எந்தை நினது அருள் விளையாட்டு அந்தோஅந்தோ எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று முந்து அனந்த மறைகள் எலாம் வழுத்த நின்ற முழு_முதலே அன்பர் குறை முடிக்கும் தேவே

மேல்

#63 தோன்று பர சாக்கிரமும் கண்டோம் அந்தச் சொப்பனமும் கண்டோம் மேல் சுழுத்தி கண்டோம் ஆன்ற பர துரிய நிலை கண்டோம் அப்பால் அது கண்டோம் அப்பால் ஆம் அதுவும் கண்டோம் ஏன்ற உபசாந்த நிலை கண்டோம் அப்பால் இருந்த நினைக் காண்கிலோம் என்னே என்று சான்ற உபநிடங்கள் எலாம் வழுத்த நின்ற தன்மயமே சின்மயமே சகசத். தேவே

மேல்

#64 பரிக்கிரக நிலை முழுதும் தொடர்ந்தோம் மேலைப் பரவிந்து நிலை அனைத்தும் பார்த்தோம் பாசம் எரிக்கும் இயல் பரநாத நிலை-கண் மெல்ல எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம் தெரிக்க அரிய வெளி மூன்றும் தெரிந்தோம் எங்கும் சிவமே நின் சின்மயம் ஓர்சிறிதும் தேறோம் தரிக்க அரிது என்று ஆகமங்கள் எல்லாம் போற்றத் தனி நின்ற பரம்பொருளே சாந்தத் தேவே

மேல்

#65 மணக்கும் மலர்த் தேன் உண்ட வண்டே போல வளர் பரமானந்தம் உண்டு மகிழ்ந்தோர் எல்லாம் இணக்கமுறக் கலந்துகலந்து அதீதம் ஆதற்கு இயற்கை நிலை யாது அது-தான் எம்மால் கூறும் கணக்கு_வழக்கு அனைத்தினையும் கடந்தது அந்தோ காண்ப அரிது இங்கு எவர்க்கும் எனக் கலைகள் எல்லாம் பிணக்கு அற நின்று ஓலமிடத் தனித்து நின்ற பெரும் பதமே மதாதீதப் பெரிய தேவே

மேல்

#66 பொது என்றும் பொதுவில் நடம் புரியாநின்ற பூரண சிற்சிவம் என்றும் போதானந்த மது என்றும் பிரமம் என்றும் பரமம் என்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அது-தான் என்றும் இது என்றும் சுட்டவொணாது அதனால் சும்மா இருப்பதுவே துணிவு எனக் கொண்டு இருக்கின்றோரை விது வென்ற தண் அளியால் கலந்துகொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே

மேல்

#67 அரு_மறை ஆகமங்கள் முதல் நடு ஈறு எல்லாம் அமைந்துஅமைந்து மற்று அவைக்கும் அப்பால் ஆகிக் கரு மறைந்த உயிர்கள்-தொறும் கலந்து மேவிக் கலவாமல் பல் நெறியும் கடந்து ஞானத் திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோனப் பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே

மேல்

#68 என் உயிர் நீ என் உயிர்க்கு ஓர் உயிரும் நீ என் இன் உயிர்க்குத் துணைவன் நீ என்னை ஈன்ற அன்னை நீ என்னுடைய அப்பன் நீ என் அரும் பொருள் நீ என் இதயத்து அன்பு நீ என் நல் நெறி நீ எனக்கு உரிய உறவு நீ என் நல் குரு நீ எனைக் கலந்த நட்பு நீ என் றன்னுடைய வாழ்வு நீ என்னைக் காக்கும் தலைவன் நீ கண் மூன்று தழைத்த தேவே

மேல்

#69 தான் ஆகித் தான் அல்லது ஒன்றும் இல்லாத் தன்மையனாய் எவ்வெவைக்கும் தலைவன் ஆகி வான் ஆகி வளி அனலாய் நீரும் ஆகி மலர் தலைய உலகு ஆகி மற்றும் ஆகித் தேன் ஆகித் தேனின் நறும் சுவையது ஆகித் தீம் சுவையின் பயன் ஆகித் தேடுகின்ற நான் ஆகி என் இறையாய் நின்றோய் நின்னை நாய்_அடியேன் எவ்வாறு நவிற்றும் ஆறே

மேல்

#70 ஆன் ஏறும் பெருமானே அரசே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அமுதே கொன்றைத் தேன் ஏறு மலர்ச் சடை எம் சிவனே தில்லைச் செழும் சுடரே ஆனந்தத் தெய்வமே என் ஊன் ஏறும் உயிர்க்குள் நிறை ஒளியே எல்லாம் உடையானே நின் அடிச் சீர் உன்னி அன்பர் வான் ஏறுகின்றார் நான் ஒருவன் பாவி மண் ஏறி மயக்கு ஏறி வருந்துற்றேனே

மேல்

#71 செம் சடை எம் பெருமானே சிறு_மான் ஏற்ற செழும் கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து மஞ்சு அடையும் மதில் தில்லை மணியே ஒற்றி வளர் மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை அஞ்சு அடைய வஞ்சியர் மால் அடைய வஞ்சம் அடைய நெடும் துயர் அடைய அகன்ற பாவி நெஞ்சு அடைய நினைதியோ நினைதியேல் மெய்ந்நெறி_உடையார் நெஞ்சு அமர்ந்த நீதன் அன்றே

மேல்

#72 அன்னையினும் பெரிது இனிய கருணை ஊட்டும் ஆர்_அமுதே என் உறவே அரசே இந்த மன் உலகில் அடியேனை என்னே துன்ப_வலையில் அகப்பட இயற்றி மறைந்தாய் அந்தோ பொன்னை மதித்திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய் உறவும் பொருந்தல் ஆற்றேன் என்னை உளம்கொள்ளுதியோ கொள்கிலாயோ என் செய்வேன் என் செய்வேன் என் செய்வேனே

மேல்

#73 படித்தேன் பொய் உலகியல் நூல் எந்தாய் நீயே படிப்பித்தாய் அன்றியும் அப் படிப்பில் இச்சை ஒடித்தேன் நான் ஒடித்தேனோ ஒடிப்பித்தாய் பின் உன் அடியே துணை என நான் உறுதியாகப் பிடித்தேன் மற்று அதுவும் நீ பிடிப்பித்தாய் இப் பேதையேன் நின் அருளைப் பெற்றோர் போல நடித்தேன் எம் பெருமான் ஈது ஒன்றும் நானே நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

மேல்

#74 மத்து ஏறி அலை தயிர் போல் வஞ்ச வாழ்க்கை மயல் ஏறி விருப்பு ஏறி மதத்தினோடு பித்து ஏறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேய் ஏறி நலிகின்ற பேதை ஆனேன் வித்து ஏறி விளைவு ஏறி மகிழ்கின்றோர் போல் மேல் ஏறி அன்பர் எலாம் விளங்குகின்றார் ஒத்து ஏறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இது தகுமோ உணர்கிலேனே

மேல்

#75 மதி அணிந்த முடிக் கனியே மணியே எல்லாம்_வல்ல அருள் குருவே நின் மலர்_தாள் வாழ்த்திக் கதி அணிந்தார் அன்பர் எலாம் அடியேன் ஒன்றும் கண்டு அறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ பொதி அணிந்து திரிந்து உழலும் ஏறு போலப் பொய் உலகில் பொய் சுமந்து புலம்பாநின்றேன் துதி அணிந்த நின் அருள் என்றனக்கும் உண்டோ இன்று எனில் இப் பாவியேன் சொல்வது என்னே

மேல்

#76 என் அரசே என் உயிரே என்னை ஈன்ற என் தாயே என் குருவே எளியேன் இங்கே தன் அரசே செலுத்தி எங்கும் உழலாநின்ற சஞ்சல நெஞ்சகத்தாலே தயங்கி அந்தோ மின் அரசே பெண் அமுதே என்று மாதர் வெய்ய சிறுநீர்க் குழி-கண் விழவே எண்ணிக் கொன் நரை சேர் கிழக் குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே

மேல்

#77 அல் விலங்கு செழும் சுடராய் அடியார் உள்ளத்து அமர்ந்து அருளும் சிவ குருவே அடியேன் இங்கே இல் விலங்கு மடந்தை என்றே எந்தாய் அந்த இருப்பு விலங்கினை ஒழித்தும் என்னே பின்னும் மல் விலங்கு பரத்தையர்-தம் ஆசை என்னும் வல் விலங்கு பூண்டு அந்தோ மயங்கி நின்றேன் புல்_விலங்கும் இது செய்யா ஓகோ இந்தப் புலை நாயேன் பிழை பொறுக்கில் புதிதே அன்றோ

மேல்

#78 வன் கொடுமை மலம் நீக்கி அடியார்-தம்மை வாழ்விக்கும் குருவே நின் மலர்_தாள் எண்ண முன் கொடு சென்றிடும் அடியேன்-தன்னை இந்த மூட மனம் இ உலக முயற்சி நாடிப் பின் கொடு சென்று அலைத்து இழுக்குது அந்தோ நாயேன் பேய் பிடித்த பித்தனைப் போல் பிதற்றாநின்றேன் என் கொடுமை என் பாவம் எந்தாய் எந்தாய் என் உரைப்பேன் எங்கு உறுவேன் என் செய்வேனே

மேல்

#79 உய்குவித்து மெய் அடியார்-தம்மை எல்லாம் உண்மை நிலை பெற அருளும்_உடையாய் இங்கே மை குவித்த நெடும் கண்ணார் மயக்கில் ஆழ்ந்து வருந்துகின்றேன் அல்லால் உன் மலர்_தாள் எண்ணிக் கை குவித்துக் கண்களில் நீர் பொழிந்து நான் ஓர் கணமேனும் கருதி நினைக் கலந்தது உண்டோ செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கிலாயோ திருவுளத்தை அறியேன் என் செய்குவேனே

மேல்

#80 அருள் வெளியில் ஆனந்த வடிவினால் நின்று ஆடுகின்ற பெரு வாழ்வே அரசே இந்த மருள்_வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ மதி கலங்கி மெய் நிலைக்கு ஓர் வழி காணாதே இருள் நெறியில் கோல் இழந்த குருட்டு_ஊமன் போல் எண்ணாது எல்லாம் எண்ணி ஏங்கிஏங்கி உருள் சகடக் கால் போலும் சுழலாநின்றேன் உய்யும் வகை அறியேன் இ ஒதியனேனே

மேல்

#81 கல் தவளை-தனக்கும் உணவு அளிக்கும் உன்றன் கருணை நிலை-தனை அறியேன் கடையேன் இங்கே எற்ற வளை எறும்பே போல் திரிந்து நாளும் இளைத்து நினது அருள் காணாது எந்தாய் அந்தோ பெற்றவளைக் காணாத பிள்ளை போலப் பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி இற்றவளைக் கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே

மேல்

#82 அடிமைசெயப் புகுந்திடும் எம்_போல்வார் குற்றம் ஆயிரமும் பொறுத்து அருளும் அரசே நாயேன் கொடுமை செயும் மனத்தாலே வருந்தி அந்தோ குரங்கின் கை மாலை எனக் குலையாநின்றேன் கடுமை செயப் பிறர் துணிந்தால் அடிமை-தன்னைக் கண்டிருத்தல் அழகு அன்றே கருணைக்கு எந்தாய் செடிமை உளப் பாதகனேன் என் செய்வேன் நின் திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின்றேனே

மேல்

#83 கூம்பாத மெய் நெறியோர் உளத்தே என்றும் குறையாத இன்பு அளிக்கும் குருவே ஆசைத் தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன் தையலார் மையல் எனும் சலதி ஆழ்ந்து ஓம்பாமல் உவர் நீர் உண்டு உயங்குகின்றேன் உன் அடியர் அக் கரை மேல் உவந்து நின்றே தீம் பாலும் சருக்கரையும் தேனும் நெய்யும் தேக்குகின்றார் இது தகுமோ தேவ தேவே

மேல்

#84 வெள்ளம் அணி சடைக் கனியே மூவர் ஆகி விரிந்து அருளும் ஒரு தனியே விழலனேனைக் கள்ள மன_குரங்கு ஆட்டும் ஆட்டம் எல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலையாலே உள்ளம் மெலிந்து உழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும் வகை எவ்வகை ஈது உன்னும்-தோறும் பொள்ளென மெய் வியர்க்க உளம் பதைக்கச் சோபம் பொங்கி வழிகின்றது நான் பொறுக்கிலேனே

மேல்

#85 எனை அறியாப் பருவத்தே ஆண்டுகொண்ட என் அரசே என் குருவே இறையே இன்று மனை அறியாப் பிழை கருதும் மகிழ்நன் போல மதி அறியேன் செய் பிழையை மனத்துள் கொண்டே தனை அறியா முகத்தவர் போல் இருந்தாய் எந்தாய் தடம் கருணைப் பெரும் கடற்குத் தகுமோ கண்டாய் அனை அறியாச் சிறு குழவி ஆகி இங்கே அடி நாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ

மேல்

#86 தீ_வினை நல்_வினை எனும் வன் கயிற்றால் இந்தச் சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன் ஏவினை நேர் கண் மடவார் மையல் பேயால் இடர் உழந்தும் சலிப்பு இன்றி என்னே இன்னும் நாவினை என்-பால் வருந்திக் கரண்டுகின்ற நாய்க்கும் நகை தோன்ற நின்று நயக்கின்றேன் நான் ஆவினை விட்டு எருது கறந்திடுவான் செல்லும் அறிவு_இலிக்கும் அறிவு_இலியேன் ஆன வாறே

மேல்

#87 எம் பெருமான் நின் விளையாட்டு என் சொல்கேன் நான் ஏதும் அறியாச் சிறியேன் எனை-தான் இங்கே செம்_புனலால் குழைத்த புலால் சுவர் சூழ் பொத்தைச் சிறு வீட்டில் இருட்டு அறையில் சிறைசெய்து அந்தோ கம்பமுறப் பசித் தழலுங் கொளுந்த அந்தக் கரணம் முதல் பொறி புலப் பேய் கவர்ந்து சூழ்ந்து வம்பு இயற்றக் காம் ஆதி அரட்டர் எல்லாம் மடி பிடித்து வருத்த என்றோ வளர்த்தாய் எந்தாய்

மேல்

#88 அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மா மணியே அரசே நாயேன் இம்பர் அத்தம் எனும் உலக நடையில் அந்தோ இடர் உழந்தேன் பல் நெறியில் எனை இழுத்தே பம்பரத்தின் ஆடு இயலைப் படுத்தும் இந்தப் பாவி மனம் எனக்கு வயப்படுவது_இல்லை கொம்பர் அற்ற இளம் கொடி போல் தளர்ந்தேன் என்னைக் குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்திடாயோ

மேல்

#89 கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் தண் உடைய மலர்_அடிக்கு ஓர்சிறிதும் அன்பு சார்ந்தேனோ செம்மரம் போல் தணிந்த நெஞ்சேன் பெண்ணுடைய மயலாலே சுழல்கின்றேன் என் பேதைமையை என் புகல்வேன் பேயனேனைப் புண் உடைய புழு விரும்பும் புள் என்கேனோ புலை விழைந்து நிலை வெறுத்தேன் புலையனேனே

மேல்

#90 பொன்_உடையார் இடம் புகவோ அவர்கட்கு ஏற்கப் பொய் மொழிகள் புகன்றிடவோ பொதி போல் இந்தக் கொன் உடையா உடல் பருக்கப் பசிக்குச் சோறு கொடுக்கவோ குளிர்க்கு ஆடை கொளவோ வஞ்ச மின்_இடையார் முடைச் சிறுநீர்க் குழி-கண் அந்தோ வீழ்ந்திடவோ தாழ்ந்து இளைத்து விழிக்கவோ-தான் என்_உடையாய் என்_உடையாய் என்னை இங்கே எடுத்து வளர்த்தனை அறியேன் என் சொல்வேனே

மேல்

#91 வரு கணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மல_கூடு என்று அறிஞர் எலாம் வருந்தக் கேட்டும் அருகு அணைத்துக்கொளப் பெண் பேய் எங்கே மேட்டுக்கு அடைத்திட வெண் சோறு எங்கே ஆடை எங்கே இரு கணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று திரிந்து இளைத்தேன் அல்லால் ஒரு கணத்தும் உனை நினைந்தது உண்டோ என்னை உடையானே எவ்வகை நான் உய்யும் ஆறே

மேல்

#92 பொன்_மலையோ சிறிது எனப் பேர்_ஆசை பொங்கிப் புவி நடையில் பற்பல கால் போந்துபோந்து நெல் மலையோ நிதி மலையோ என்று தேடி நிலைகுலைந்தது அன்றி உனை நினைந்து நேடி மன் மலையோ மா மணியோ மருந்தோ என்று வழுத்தியதே இல்லை இந்த வஞ்ச நெஞ்சம் கல் மலையோ இரும்போ செம்மரமோ பாறைக் கருங்கல்லோ பராய் முருட்டுக் கட்டையேயோ

மேல்

#93 தம்மை மறந்து அருள் அமுதம் உண்டு தேக்கும் தகை_உடையார் திரு_கூட்டம் சார்ந்து நாயேன் வெம்மை எலாம் தவிர்ந்து மனம் குளிரக் கேள்வி விருந்து அருந்தி மெய் அறிவாம் வீட்டில் என்றும் செம்மை எலாம் தரும் மௌன அணை மேல் கொண்டு செறி இரவு_பகல் ஒன்றும் தெரியா வண்ணம் இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த இன்ப நிலை அடைவேனோ ஏழையேனே

மேல்

#94 அடியனேன் பிழை அனைத்தும் பொறுத்து ஆட்கொண்ட அருள்_கடலே மன்று ஓங்கும் அரசே இ நாள் கொடியனேன் செய் பிழையைத் திருவுள்ளத்தே கொள்ளுதியோ கொண்டு குலம் குறிப்பது உண்டோ நெடியனே முதல் கடவுள் சமுகத்தோர்-தம் நெடும் பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை ஒடிய நேர் நின்ற பெரும் கருணை வள்ளல் என மறைகள் ஓதுவது இங்கு உனை-தான் அன்றே

மேல்

#95 கண் மயக்கம் பேர்_இருட்டுக் கங்குல் போதில் கருத்து அறியாச் சிறுவனை ஓர் கடும் கானத்தே உள் மயக்கம் கொள விடுத்தே ஒருவன் பின் போம் ஒரு தாய் போல் மாயை இருள் ஓங்கும் போதின் மண் மயக்கம்பெறும் விடயக் காட்டில் அந்தோ மதி_இலேன் மாழாந்து மயங்க நீ-தான் வண்மை உற்ற நியதியின் பின் என்னை விட்டே மறைந்தனையே பரமே நின் வண்மை என்னே

மேல்

#96 நற்றாயும் பிழை குறிக்கக் கண்டோம் இந்த நானிலத்தே மற்றவர் யார் நாடார் வீணே பற்றாயும் அவர்-தமை நாம் பற்றோம் பற்றில் பற்றாத பற்று_உடையார் பற்றி உள்ளே உற்று ஆயும் சிவபெருமான் கருணை ஒன்றே உறு பிழைகள் எத்துணையும் பொறுப்பது என்று உன் பொன்_தாளை விரும்பியது மன்றுள் ஆடும் பொருளே என் பிழை அனைத்தும் பொறுக்க அன்றே

மேல்

#97 எண்ணிய நம் எண்ணம் எலாம் முடிப்பான் மன்றுள் எம் பெருமான் என்று மகிழ்ந்து இறுமாந்து இங்கே நண்ணிய மற்றையர்-தம்மை உறாமை பேசி நன்கு மதியாது இருந்த நாயினேனைத் தண்ணிய நல் அருள்_கடலே மன்றில் இன்பத் தாண்டவம் செய்கின்ற பெருந்தகையே எங்கள் புண்ணியனே பிழை குறித்து விடுத்தியாயில் பொய்யனேன் எங்கு உற்று என் புரிவேன் அந்தோ

மேல்

#98 அன்பர் திருவுளம் கோயில் ஆகக் கொண்டே அற்புதச் சிற்சபை ஓங்கும் அரசே இங்கு வன்பரிடைச் சிறியேனை மயங்கவைத்து மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத் துன்ப வடிவு உடைப் பிறரில் பிரித்து மேலோர் துரிய வடிவினன் என்று சொன்ன எல்லாம் இன்ப வடிவு அடைந்து அன்றே எந்தாய் அந்தோ என்னளவு என் சொல்கேன் இ ஏழையேனே

மேல்

#99 புற்று ஓங்கும் அரவம் எல்லாம் பணியாக் கொண்டு பொன்_மேனி-தனில் அணிந்த பொருளே மாயை உற்று ஓங்கு வஞ்ச மனக் கள்வனேனை உளம்கொண்டு பணிகொள்வது உனக்கே ஒக்கும் மற்று ஓங்கும் அவர் எல்லாம் பெருமை வேண்டும் வன்_மனத்தர் எனை வேண்டார் வள்ளலே நான் கற்று ஓங்கும் அறிவு அறியேன் பலவாச் சொல்லும் கருத்து அறியேன் எனக்கு அருளக் கருதுவாயே

மேல்

#100 அருள் உடைய பரம்பொருளே மன்றில் ஆடும் ஆனந்தப் பெரு வாழ்வே அன்பு_உளோர்-தம் தெருள் உடைய உளம் முழுதும் கோயில்கொண்ட சிவமே மெய் அறிவு உருவாம் தெய்வமே இ மருள் உடைய மனப் பேதை நாயினேன் செய் வன்_பிழையைச் சிறிதேனும் மதித்தியாயில் இருள் உடைய பவக் கடல் விட்டு ஏறேன் என்னை ஏற்றுவதற்கு எண்ணுக என் இன்பத் தேவே

மேல்

@6. திருவருண் முறையீடு

மேல்

#1 துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன் இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ சனியாம் என் வல்_வினைப் போதனையோ என்-கொல் சாற்றுவதே

மேல்

#2 என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில் இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன் மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம் பொன்னே மின் நேர் சடைத் தன் நேர்_இலாப் பரிபூரணனே

மேல்

#3 தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இத் தாரணியில் கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள் துண்டு ஆர் மலர்ச் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே

மேல்

#4 பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண் ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால் பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிறச் செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே

மேல்

#5 விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்யத் திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின் நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர் இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே

மேல்

#6 விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை- கண்_உடையாய் நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய் பண்_உடையாய் திசைப் பட்டு_உடையாய் இடப் பாலில் அருள் பெண்_உடையாய் வந்திப் பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே

மேல்

#7 விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம் சடை_உடையாய் கொன்றைத் தார்_உடையாய் கரம் தாங்கு மழுப் படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால் நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே

மேல்

#8 கீள்_உடையாய் பிறைக் கீற்று_உடையாய் எம் கிளைத் தலை மேல் தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய் வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய் ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே

மேல்

#9 நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன் ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே

மேல்

#10 பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய் ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம் கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே

மேல்

#11 தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னைத் தெரிந்து அடுத்தோர் தான் சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளு என்றே நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே

மேல்

#12 வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார் என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர் நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு இன்றே அக் கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே

மேல்

#13 கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம் பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம் வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர் துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே

மேல்

#14 வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள் காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும் பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன் நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே

மேல்

#15 நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்று தானோ நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல் கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே

மேல்

#16 மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம் பொன் போலும் மேனி எம் புண்ணியனே எனைப் போற்றிப் பெற்ற தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே

மேல்

#17 அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன் நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால் துன்பால் இடரைப் பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே

மேல்

#18 என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம் பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனைப் போய் அடுத்தேன் துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன் முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே

மேல்

#19 பொன்_உடையார்-தமைப் போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும் பின்னிடையேன் அவர் முன் அடையேன் எனப் பேசி வந்தேன் மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே

மேல்

#20 சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம் போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே

மேல்

#21 அருள் அறியாச் சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார் மருள் அறியாப் பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன் தெருள் அறியாச் சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே

மேல்

#22 அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால் வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால் தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனைத் தாங்கிக்கொள்ளே

மேல்

#23 சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்சக் குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை எனக் கூறுகின்றேன் இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே

மேல்

#24 கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும் வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே

மேல்

#25 சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னைப் போல் படும் பாடு நல்லோர் சொலக் கேட்கும் பொழுது மனம் வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூங் கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே

மேல்

#26 வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர்த் தாளே வருந்த மணிக் கூடல் பாணன்-தனக்கு அடிமை ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும் நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே

மேல்

#27 அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப் பிச்சை எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்கச் சொல்_பூத் தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரிலே பிச்சைச் சோறு எடுத்துக் கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குணக் குன்றமே

மேல்

#28 நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்துக் கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள் பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே

மேல்

#29 தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம் வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_ நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே

மேல்

#30 நடும்பாட்டை நாவலன் வாய்த் திரு_பாட்டை நயந்திட்ட நீ குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ்ப் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான் படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே

மேல்

#31 ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப் போட்டாலும் வேறு இடம் கேளேன் என் நாணைப் புறம்விடுத்துக் கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே

மேல்

#32 சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அ நாள் வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப் பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப் பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே

மேல்

#33 நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இத் தன்மையினால் நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள் சேயே எனைப் புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே

மேல்

#34 தெருளும் பொருளும் நின் சீர் அருளே எனத் தேர்ந்த பின் யான் மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன் இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே

மேல்

#35 பெண்ணால் மயங்கும் எளியேனை ஆளப் பெரும் கருணை அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன் கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே

மேல்

#36 நெறி கொண்ட நின் அடித் தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னைக் குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடும் கலிப் பேய் முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முடக் கிழ நாய் வெறிகொண்டதேனும் விடத் துணியார் இ வியன் நிலத்தே

மேல்

#37 மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம் பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன விதியா இனிப் பட மாட்டேன் அருள்செய் விடையவனே

மேல்

#38 கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்குச் சும்மாச் சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்து அடுத்தேன் அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே

மேல்

#39 ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணிச் சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்கு கண்டாய் போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே

மேல்

#40 பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின் மறை முடித் தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன் குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே

மேல்

#41 நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும் திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல் விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள் இடம் கொண்ட தெய்வத் தனி முதலே எம் இறையவனே

மேல்

#42 விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர் மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன் குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருளக் குறித்திலையேல் பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே

மேல்

#43 சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்- பால் வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்கக் கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே

மேல்

#44 ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம் வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே

மேல்

#45 முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழுக் கருணை அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால் கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே

மேல்

#46 வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன் ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல் ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே

மேல்

#47 நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள் நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல் தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே

மேல்

#48 உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றித் தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிடச் சென்ற அந்தப் பருவத்திலே நல் அறிவு அளித்தே உனைப் பாடச்செய்தாய் அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே

மேல்

#49 மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்- தான் எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம் ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே

மேல்

#50 வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றிச் சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின் முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என் மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே

மேல்

#51 சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த கற்பகமே உனைச் சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம் அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே

மேல்

#52 வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள் பெரும் செல்வமே எம் சிவமே நினைத் தொழப்பெற்றும் இங்கே தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமைத் தளர் நடையால் அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே

மேல்

#53 கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்கத் திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னைத் தெரிந்து அடுத்தென் ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல் உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே

மேல்

#54 மருப் பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர் திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே

மேல்

#55 பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய் மாழையைப் போல் முன்னர்த் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள வாழையைத் தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே

மேல்

#56 கருத்து அறியாச் சிறியேன் படும் துன்பக் கலக்கம் எல்லாம் உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றித் திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும் எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே

மேல்

#57 வான் வேண்டிக் கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய் தான் வேண்டிக்கொண்ட அடிமைக்குக் கூழ் இடத் தாழ்ப்பது உண்டே

மேல்

#58 பை உரைத்து ஆடும் பணிப் புயத்தோய் தமைப் பாடுகின்றோர் உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான் மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே

மேல்

#59 மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என் உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம் அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன் கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே

மேல்

#60 எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால் முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம் வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன் உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே

மேல்

#61 பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம் நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னைத் தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார் என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே

மேல்

#62 வாய் மூடிக் கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம் பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையைச் சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழக் கண்டும் திகழ் முலையைத் தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே

மேல்

#63 கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக் கொள்ளித் தேள் வேண்டுமோ சுடத் தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர் வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய் ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே

மேல்

#64 விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வரப் படை இலையோ துயர் எல்லாம் துணிக்கப் பதம் கொள் அருள் கொடை இலையோ என் குறை தீர நல்கக் குலவும் என் தாய் புடை இலையோ என்றனக்காகப் பேச எம் புண்ணியனே

மேல்

#65 நறை உள தே மலர்க் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல் பிறை உளதே கங்கைப் பெண் உளதே பிறங்கும் கழுத்தில் கறை உளதே அருள் எங்கு உளதே இக் கடையவனேன் குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே

மேல்

#66 சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னைத் திகைப்பிக்கும் இ மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்துச் சுற்றும் இனத்தாலும் வாழ்க்கை இடும்பையினாலும் இளைக்கவைத்தாய் அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே

மேல்

#67 புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ்ச் சொல் அளவாநின்று இரப்போர் இரக்க நல் சொன்னங்களைக் கல் அளவாத் தருகின்றோர்-தம்பாலும் கருதிச் சென்றோர் நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே

மேல்

#68 பிறை சூழ்ந்த வேணி முடிக் கனியே எம் பெரும் செல்வமே கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும் குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்றக் குறித்து அருளே

மேல்

#69 கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையைப் போல் எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம் புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டிப் போல் உதிர்ந்தே

மேல்

#70 மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில் நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால் பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இப் பொய்யனை நீ கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே

மேல்

#71 அருள்_கடலே அக் கடல் அமுதே அ அமுதத்து உற்ற தெருள் சுவையே அச் சுவைப் பயனே மறைச் சென்னி நின்ற பொருள் பதமே அப் பதத்து அரசே நின் புகழ் நினையா இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே

மேல்

#72 அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின் கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின் துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ எனச் சூழ்ந்து அடைந்தேன் தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே

மேல்

#73 தேட்டக் கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை ஆட்டக் கண்டேன் அன்றி அக் குரங்கால் அவர் ஆடச் சற்றும் கேட்டுக் கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்சக் கிழக் குரங்கால் வேட்டுக் கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே

மேல்

#74 போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுதப் புணர் முலையைப் பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிகச் சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருளத் தொடங்குகவே

மேல்

#75 இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம் ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல் மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கயக் கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனைக் காத்து அருளே

மேல்

#76 படி பட்ட மாயையின்-பால் பட்ட சாலப் பரப்பில் பட்டே மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால் அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ பிடிபட்ட நேர் இடைப் பெண் பட்ட பாகப் பெருந்தகையே

மேல்

#77 உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடிச் சீர் தடை யாதும் இன்றிப் புகல்வது அல்லால் இச் சகத்திடை நான் நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால் அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே

மேல்

#78 தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையைத் தவிர் உனக்கு ஓர் பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய் எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணிச் சுடரே

மேல்

#79 பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ ஒறுத்தாலும் நன்று இனிக் கைவிட்டிடேல் என்னுடையவன் நீ வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே

மேல்

#80 சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால் மேல் வரும் நீ வரத் தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன் கால் வருமே இளம் கன்று அழத் தாய்ப்பசுக் காணின் மடிப் பால் வருமே முலைப் பால் வருமே பெற்ற பாவைக்குமே

மேல்

#81 வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின் பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம் துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம் என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே

மேல்

#82 நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில் சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல் கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே

மேல்

#83 கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும் துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும் பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே

மேல்

#84 விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணிப் பதி திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான் துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த பதிக்கும் பதி சித். பதி எம் பதி நம் பசுபதியே

மேல்

#85 எனை அடைந்து ஆழ்த்திய துன்பச் சுமையை இறக்கு எனவே நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய் வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம் மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே

மேல்

#86 வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே தினம் போய்வரும் இச் சிறியேன் சிறுமைச் செயல்-அது போய்ச் சினம் போய்க் கொடும் பகைக் காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா இனம் போய்க் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே

மேல்

#87 பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியாச் சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமலப் பொன்_தாள் அருள் புகழ்க் கற்று ஆய்ந்து பாடப் புரிந்து அருளே

மேல்

#88 அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம் பொன்_நாணைக் காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய் இ நாள் நையா வகை என் நாணைக் காத்து அருள் ஏழைக்கு நின் றன் ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே

மேல்

#89 பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இப் பாரிடை நல் சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அத் திரு_இலிகள் அவ சாதனங்களைக் கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ கவசாதனம் எனக் கைம்மான் உரியைக் களித்தவனே

மேல்

#90 நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே ஊன் செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர் வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றைத் தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே

மேல்

#91 உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்றுப் பெற்ற நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும் சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே

மேல்

#92 வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்கக் கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல் தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலைப் பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே

மேல்

#93 அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே இன்பு அரிதாம் இச் சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன் என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல் வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே

மேல்

#94 மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில் கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே மெய் கண்ட நான் மற்றைப் பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே

மேல்

#95 வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த காணிக்கு-தான் அரைக் காணி மட்டாயினும் காட்டு கண்டாய் பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே

மேல்

#96 மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள் இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மனக் குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் எனக் கூவிடும் என் முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே

மேல்

#97 முன்_மழை வேண்டும் பருவப் பயிர் வெயில் மூடிக் கெட்ட பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்தப் பெற்றியைப் போல் நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கியக் கால் பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே

மேல்

#98 நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ சூளாத முக்கண் மணியே விடேல் உனைச் சூழ்ந்த என்னை ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே

மேல்

#99 வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய் களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே

மேல்

#100 காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்கச் சென்றே சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர் தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும் சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே

மேல்

#101 அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம் சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே

மேல்

#102 பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம் என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே

மேல்

#103 நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம் வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்- தான் அடங்காது எங்கும் தான் அடங்காது எனத் தான் அறிந்தும் மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே

மேல்

#104 பாம்பு ஆயினும் உணப் பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால் வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக் கடாத் தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார் தேம் பாய் மலர்க் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே

மேல்

#105 நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடிச் செல்வோர் பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழைப் பழமும் கொள்ளத் தெருப் புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இச் சிறுநடையாம் இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே

மேல்

#106 எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண் விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன் வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே

மேல்

#107 கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கணப் பொழுதும் நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும் கொல்லாமல்_கொன்று எனைத் தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே

மேல்

#108 தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான் இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய் வெவ் வழி நீர்ப் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே

மேல்

#109 கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர் உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும் நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே

மேல்

#110 அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலறச் சும்மா அச் சேய் முகம் தாய் பார்த்து இருக்கத் துணிவள்-கொலோ இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண் எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே

மேல்

#111 ஓயாக் கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் தோயாக் கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லைச் சொல்லி வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவைத் தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே

மேல்

#112 மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான் கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார் சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே

மேல்

#113 ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலைத் தலை மேல் ஏறிட்ட கைகள் கண்டு ஆணவப் பேய்கள் இறங்கிடுமே

மேல்

#114 அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர் கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவைக் கண்டு எனும் கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இக் கடலிடத்தே

மேல்

#115 காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழு நீரே எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று சேரேல் இறுகச் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

மேல்

#116 வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும் புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய்ப் புலம்ப இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே

மேல்

#117 குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளைக் குரங்குக்கு இங்கே வருந்து ஆணவம் என்னும் மானிடப் பேய் ஒன்று மாத்திரமோ பெரும் தாமதம் என்று இராக்கதப் பேயும் பிடித்தது எந்தாய் திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே

மேல்

#118 பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல் கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியைத் திண் மணிக் கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே

மேல்

#119 அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர் கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்குக் கனிவு இரக்கம் இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழுத் தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே

மேல்

#120 ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தைத் தான் கொண்டு அருள் அளிக்கும் மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்குக் காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர் சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணைத் தடம் கடலே

மேல்

#121 கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும் பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால் புண் கொண்ட மேனிப் புறம் கண்டிலேன் அப் புறத்தைக் கண்டால் ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே

மேல்

#122 வேய்க்குப் பொரும் எழில் தோள் உடைத் தேவி விளங்கும் எங்கள் தாய்க்குக் கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த நாய்க்குக் கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர் வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே

மேல்

#123 காண்டத்தில் மேவும் உலகீர் இத் தேகம் கரும் பனை போல் நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும் பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான் ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே

மேல்

#124 வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில் மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர் ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்குக் காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே

மேல்

#125 மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா போகல் ஐயா எனப் பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே

மேல்

#126 ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார் பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார் சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே

மேல்

#127 பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன் திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள் விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன் கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே

மேல்

#128 மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண் காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக் கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள் பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே

மேல்

#129 என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என் சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு எனச் சுற்றும் நெஞ்சத் தின் மேல் பிழை அது புல் மேல் பனி எனச் செய்து ஒழிக்க நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே

மேல்

#130 மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான் பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம் கைவிட்டிடான் எனக் கைவிட்டிடேல் வந்து காத்து அருளே

மேல்

#131 நல் அமுதம் சிவை தான் தரக் கொண்டு நின் நல் செவிக்குச் சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள் சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே

மேல்

#132 சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின் பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக் கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே

மேல்

#133 சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும் கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே

மேல்

#134 திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

மேல்

#135 சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர் கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப் பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே

மேல்

#136 தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டு வரும் ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள் ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே

மேல்

#137 பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம் கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான் மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால் தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடைக் கனியே

மேல்

#138 கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_ மங்கை கொண்டாய் இடப் பாகத்திலே ஐய மற்றும் ஒரு நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர் சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே

மேல்

#139 வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன் தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய் கீள் கொண்ட கோவணப் பேர்_அழகா எனைக் கேதம் அற ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே

மேல்

#140 வீட்டுத் தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும் மாட்டுத் தலை பட்டி_மாட்டுத் தலை புன் வராகத் தலை ஆட்டுத் தலை வெறி_நாய்த் தலை பாம்பின் அடும் தலை கல் பூட்டுத் தலை வெம் புலைத் தலை நாற்றப் புழுத் தலையே

மேல்

#141 தெள் நீர்_முடியனைக் காணார்-தம் கண் இருள் சேர் குருட்டுக் கண் நீர் சொரிந்த கண் காசக் கண் புன் முலைக் கண் நகக் கண் புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமைக் கண் புன் கண் வன் கண் மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே

மேல்

#142 கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய்க் கதை ஒலியும் அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும் துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத் துண்ணுற வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே

மேல்

#143 மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய்த் தெரு மண் உண்ட வாய் பிணி கொண்ட வாய் விடப் பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய் துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய் குணி கொண்ட உப்பிலிக் கூழ் உண்ட வாய் எனக் கூறுபவே

மேல்

#144 சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம் சுகம் இலையே உணச் சோறு இலையே கட்டத் தூசு இலையே அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே

மேல்

#145 பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே செங்கரும்பே நறும் தேனே மதுரச் செழும் கனியே திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணிச் சிவ_கொழுந்தே எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே

மேல்

#146 வில்லைப் பொன்னாக் கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புறச் செங் கல்லைப் பொன் ஆக்கிக் கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார் புல்லைப் பொன்னாக் கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க வல்லைப் பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே

மேல்

#147 கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழிச் சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனைத் தாங்குதற்கு ஓர் வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே

மேல்

#148 வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின் ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர் உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல் தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே

மேல்

#149 எனைப் பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும் உனைப் பெற்ற உள்ளத்தவர் மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு- தனைப் பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பைப் பெற்றால் வினைப் பெற்ற வாழ்வின் மனைப் பெற்றம் போல மெலிவது இன்றே

மேல்

#150 நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல் குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அக் குறிப்பு எனவே பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடிக் கீழ் உறை மதியாக் கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே

மேல்

#151 துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர்ப் பொன் அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப் படி வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இப் பாவிக்கு மால் குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே

மேல்

#152 ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம் பெரு முடி மேல் உற வேண்ட வராது உனைப் பித்தன் என்ற மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர் திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே

மேல்

#153 வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர்ப் பொன் கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே

மேல்

#154 விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும் கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும் தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே

மேல்

#155 தண் மதியோ அதன் தண் அமுதோ எனச் சார்ந்து இருள் நீத்து உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி பெண் மதியோ அன்றிப் பேய் மதியோ என்ன பேசுவதே

மேல்

#156 பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக் கட்டுக்கும் பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என் மட்டுக்கும் வஞ்சகத் தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே

மேல்

#157 மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கிக் கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம் மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே

மேல்

#158 தவமே புரியும் பருவம் இலேன் பொய்ச் சக நடை-கண் அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் சிவமே முக்கண் உடைத் தேவே நின் சித்தம் தெரிந்திலனே

மேல்

#159 மட்டு உண்ட கொன்றைச் சடை அரசே அன்று வந்தி இட்ட பிட்டு உண்ட பிச்சைப் பெருந்தகையே கொடும் பெண் மயலால் கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இக் கல்_மனமாம் திட்டுண்ட பேய்த் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே

மேல்

#160 ஆட்டுக்குக் கால் எடுத்தாய் நினைப் பாடலர் ஆங்கு இயற்றும் பாட்டுக்குப் பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அப் பாட்டு எழுதும் ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடா மாட்டுக்கு வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே

மேல்

#161 ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும் துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதைச் சூழ்ந்து கற்றுச் செப்பு அற்ற வாய்க்குத் திரு உளதோ சிறிதேனும் உண்டேல் உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே

மேல்

#162 சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியைச் சேர்த்தி அந்த நால்வரும் செய் தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச் சற்றே கால் வரும் ஆயினும் இன்புருவாகிக் கனி மனம் அப் பால் வருமோ அதன்-பால் பெண்களை விட்டுப் பார்க்கினுமே

மேல்

#163 கார்முகமாகப் பொன் கல் வளைத்தோய் இக் கடையவனேன் சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்துத் துவளுகின்றேன் போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இப் பார் முகமாக என் ஓர் முகம் பார்க்கப் பரிந்திலதே

மேல்

#164 வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்- தான் வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய் மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினைப் போல வளர்ப்பவரே

மேல்

#165 அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுரச் சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது இல் கண்ட மெய்த் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம் கற்கண்டு எனினும் அக் கல் கண்ட காக்கை நிற்காது என்பரே

மேல்

#166 சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய் வெல்லுகின்றோர் இன்றிச் சும்மா அலையும் என் வேட நெஞ்சம் புல்லுகின்றோர்-தமைக் கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய் மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே

மேல்

#167 சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இத் தீனர்கட்கு இங்கு ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே பேரிடுவார் வம்புப் பேச்சிடுவார் இந்தப் பெற்றி கண்டும் போரிடுவார் நினைப் போற்றார் என்னே முக்கண் புண்ணியனே

மேல்

#168 சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான் மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண் பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே

மேல்

#169 இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக் கணையே கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும் புணையே திரு_அருள் பூரணமே மெய்ப் புலம் அளிக்கும் துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ளத் துணிந்து அருளே

மேல்

#170 நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல் புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல் கலை காட்டிக் கட்டு_மயிர்த் தலை காட்டிப் புன் கந்தை சுற்றி முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே

மேல்

#171 விட நாகப் பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என் உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு இடனாக மெய் நெறிக்கு ஈடாகச் செய்குவது இங்கு உனக்கே கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே

மேல்

#172 நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என் வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால் செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேரச் சற்றும் பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே

மேல்

#173 சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றிச் சூழ்ந்திடு வெம் தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரி தாபம் கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனைக் குறித்துக் கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்பக் கொதிப்பு அறுமே

மேல்

#174 எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றிச் சொல்லால் அவர் புகழ் சொல்லாது இவ்வண்ணம் துயர்வதற்கு என் கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே

மேல்

#175 பிறை ஆறு கொண்ட செவ் வேணிப் பிரான் பதப் பேறு அடைவான் மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும் நிறை ஆறு சூழும் துரும்பாய்ச் சுழலும் என் நெஞ்சின் உள்ள குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இக் குவலையத்தே

மேல்

#176 மால் அறியாதவன் அன்றே அத் தெய்வ வரதனும் நின் கால் அறியாதவன் என்றால் அக் காலை எக் காலை எமைப் போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய்ப் புண்ணியர்-தம் பால் அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே

மேல்

#177 ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குணக் குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே

மேல்

#178 தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்குத் தனித்த பெரு வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்பப் பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே

மேல்

#179 வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்குத் தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலில் தள்ளும் பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ளக் கருத்து எதுவே

மேல்

#180 மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம் சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில் கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே

மேல்

#181 மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால் மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர் கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என் கொய் கொடுத்து ஆழ் மன மானுக்குக் காலைக் கொடுத்து அருளே

மேல்

#182 உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இத் தடம் பார் சிறு நடைத் துன்பம் செய் வேதனை தாங்க அரிது என் கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனைக் காத்து அருளே

மேல்

#183 மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக் கண்ணாலும் பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின் பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே

மேல்

#184 வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும் தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே

மேல்

#185 ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி மேடு அறியாது நல் பாட்டைக் கற்றோர் அன்றி மேல் சுமந்த ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே

மேல்

#186 சூடுண்ட பூஞைக்குச் சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உணத் துணியாது ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே

மேல்

#187 கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்சக் குரங்கு ஆட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டு கல்லார் உரம் காட்டிக் கோல் ஒன்று உடன் நீட்டிக் காட்டி உரப்பி ஒரு மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே

மேல்

#188 களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற் றுளம் கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும் இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே

மேல்

#189 மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம் காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம் தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின் நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே

மேல்

#190 ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும் காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவைக் கலித்திடும் நீர் ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்பச் சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே

மேல்

#191 தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞானப் பால் உண்ட செம்மணியைச் சீர் ஓங்கு முத்துச் சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன் பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பைப் பிரமனுக்கும் ஏர் ஓங்கு காப்பைத் திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே

மேல்

#192 வேதனையா மதுசூதனையா என்று வேதனையால் போதல் நையாநின்று உனைக் கூவும் ஏழையைப் போதனை கேள் வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலரச் சோதனையாயினும் சோதனை யா சிற்சுகப் பொருளே

மேல்

#193 இன்பு அற்ற இச் சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும் என்பு அற்ற புன் புழுப் போல் தளர் ஏழை எனினும் இவன் அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே

மேல்

#194 களம் கொண்ட ஓர் மணிக் காட்சியும் முச்சுடர்க் கண் அருளும் வளம் கொண்ட தெய்வத் திரு_முக மாட்சியும் வாய்ந்த பரி மளம் கொண்ட கொன்றைச் சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே

மேல்

#195 காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும் தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர்ச் சேவடி-பால் சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இப் பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே

மேல்

#196 கொங்கு இட்ட கொன்றைச் சடையும் நின் ஓர் பசும் கோமளப் பெண் பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின் இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய்ச் சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே

மேல்

#197 வெம் பெரு மானுக்குக் கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்- தம் பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கைச் செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்யச் செய்யே

மேல்

#198 சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம் வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண் நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள் ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே

மேல்

#199 பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம் திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர் கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணா நிதியே சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே

மேல்

#200 என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே

மேல்

#201 கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும் வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச் செந் தேன் போல் இனிக்கும் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

மேல்

#202 வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய் பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல் தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினைத் தூய் மணியே

மேல்

#203 இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய் வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே

மேல்

#204 சிவசங்கரா சிவயோகா சிவகதிச் சீர் அளிக்கும் சிவசம்புவே சிவலோகா சிவாநந்தச் செல்வம் நல்கும் சிவசுந்தரா சிவபோகா சிவாகமச் செந்நெறி சொல் சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே

மேல்

#205 மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே துதி சித்து எலாம் வல்ல மெய்ச் சிவமே சிற்சுக சிவமே கதி நித்த சுத்தச் சிவமே விளங்கு முக்கண் சிவமே பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே

மேல்

#206 கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்தியக் கள்வர் ஐவர் கொடும் கரணத் துட்டர் நால்வர்கள் வன் மலக் கோளர் ஐவர் அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன் இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே

மேல்

#207 இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும் விடைக் கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார் கடைக் கொடி போலக் கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம் புடைக் கொடியால் அன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே

மேல்

#208 உருமத்திலே பட்ட புன் புழுப் போல் இ உலக நடைக் கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும் தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ மருமத்திலே பட்ட வாளியைப் போன்று வருத்துவதே

மேல்

#209 என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின் முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்- தன் இறைவா திதித்தான் இறைவா மெய்த் தபோதனர் உள் மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே

மேல்

#210 போற்றி என் ஆவித் துணையே என் அன்பில் புகும் சிவமே போற்றி என் வாழ்வின் பயனே என் இன்பப் புது நறவே போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே

மேல்

#211 கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடைக் கன்னியர் கண் நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன் நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல் பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே

மேல்

#212 நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும் வால் முகக் கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின் தேன் முகக் கொன்றை முடியும் செந்தாமரைச் சேவடியும் ஊன் முகக் கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே

மேல்

#213 இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர் கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே

மேல்

#214 ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் எண்ணுதலே தொழிலாகச் செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய் கண்_நுதலே கருணை)_கடலே என் கருத்து இதுவே

மேல்

#215 தளைக்கின்ற மாயக் குடும்பப் பெரும் துயர் தாங்கி அந்தோ இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால் வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே

மேல்

#216 மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற செஞ்சடையாய் நின் திரு_பெயராகச் சிறந்த எழுத்து அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே

மேல்

#217 இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன் மலங்கா நின் வெள்ளி மலைக் கீழ் இருந்து வருந்த நின் சீர் கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே

மேல்

#218 உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன் புடை என்று வெய்யல் உறும் புழுப் போன்று புழுங்குகின்றேன் விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே

மேல்

#219 அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே

மேல்

#220 நிலை அறியாத குடும்பத் துயர் என்னும் நீத்தத்திலே தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய் அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே

மேல்

#221 மெய் அகத்தே கணப் போதும் விடாது விரும்புகின்றோர் கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இப் பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே

மேல்

#222 முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர் தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார் இலைக் கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே

மேல்

#223 புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டுப் புறங்கடையில் திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவிச் சிறு பிழைப்பைச் சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம் எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே

மேல்

#224 மனக் கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே கனக் கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற தனக் கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம் நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே

மேல்

#225 மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்றுத் தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள் போகம் கலந்த திரு_நாள் மலை அற்புதப் பசும்_தேன் பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே

மேல்

#226 கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ் சேல் ஒன்று கண்ட_மணியான் வரைப் பசும் தேன் கலந்த பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே

மேல்

#227 புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர்ப் போகம் எட்டு மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே

மேல்

#228 கல் என்று வல் என்று மின்னார் புளகக் கன தனத்தைச் சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண் நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே

மேல்

#229 கள் ஆடிய கொன்றைச் செஞ்சடையோய் நல் கனக மன்றின் உள் ஆடிய மலர்ச் சேவடியோய் இ உலகியல்-கண் எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்துத் தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே

மேல்

#230 மருக் கா மலர்க் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால் இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே செருக்காது உருகிச் சிவாயநம எனத் தேர்ந்து அன்பினால் ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே

மேல்

#231 மதிக் கண்ணி வேணிப் பெருந்தகையே நின் மலர்_அடிக்குத் துதி_கண்ணி சூட்டும் மெய்த் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றிப் பதிக்கு அண்ணி நின்னைப் பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமாக் கதிக் கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே

மேல்

#232 இரை ஏற்று துன்பக் குடும்ப விகார இருள்_கடலில் புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனைப் பொருட்படுத்திக் கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தைக் கடி மருந்தே திரை ஏற்று செம் சடைத் தேவே அமரர் சிகாமணியே

மேல்

@7. வடிவுடை மாணிக்க மாலை * காப்பு

மேல்

#0 சீர் கொண்ட ஒற்றிப் பதி_உடையானிடம் சேர்ந்த மணி வார் கொண்ட கொங்கை வடிவாம்பிகை-தன் மலர்_அடிக்குத் தார் கொண்ட செந்தமிழ்ப் பா_மாலை சாத்தத் தமியனுக்கே ஏர்கொண்ட நல் அருள் ஈயும் குணாலய ஏரம்பனே. * வடிவுடை மாணிக்க மாலை

மேல்

#1 கடல் அமுதே செங்கரும்பே அருள் கற்பகக் கனியே உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே அடல் விடையார் ஒற்றியார் இடம் கொண்ட அரு_மருந்தே மடல் அவிழ் ஞான_மலரே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#2 அணியே அணி பெறும் ஒற்றித் தியாகர்-தம் அன்புறு சற் குணியே எம் வாழ்க்கைக் குல_தெய்வமே மலை_கோன் தவமே பணியேன் பிழை பொறுத்து ஆட்கொண்ட தெய்வப் பதி கொள் சிந்தா மணியே என் கண்ணுள் மணியே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#3 மான் நேர் விழி மலை மானே எம்மான் இடம் வாழ் மயிலே கான் ஏர் அளகப் பசும் குயிலே அருள் கண் கரும்பே தேனே திருவொற்றி மா நகர் வாழும் சிவ_சத்தியே வானே கருணை வடிவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#4 பொருளே அடியர் புகலிடமே ஒற்றிப் பூரணன் தண் அருளே எம் ஆர்_உயிர்க்காம் துணையே விண்ணவர் புகழும் தெருளே மெய்ஞ்ஞானத் தெளிவே மறை முடிச் செம்பொருளே மருள் ஏதம் நீக்கும் ஒளியே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#5 திருமாலும் நான்முகத் தேவும் முன்_நாள் மிகத் தேடி மனத்து அரு மால் உழக்க அனல் உரு ஆகி அமர்ந்து அருளும் பெருமான் எம்மான் ஒற்றிப் பெம்மான் கை மான் கொளும் பித்தன் மலை மருமான் இடம் கொள் பெண் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#6 உன் நேர் அருள் தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப் பொன்னே அப் பொன் அற்புத ஒளியே மலர்ப் பொன் வணங்கும் அன்னே எம் ஆர்_உயிர்க்கு ஓர் உயிரே ஒற்றி அம் பதி வாழ் மன்னேர் இடம் வளர் மின்னே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#7 கண்ணே அக் கண்ணின் மணியே மணியில் கலந்து ஒளிசெய் விண்ணே வியன் ஒற்றியூர் அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும் பெண்ணே மலை பெறும் பெண் மணியே தெய்வப் பெண் அமுதே மண் நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#8 மலையான் தவம் செய்து பெற்ற முத்தே ஒற்றி வாழ் கனகச் சிலையான் மணக்க மணக்கும் தெய்வீகத் திரு_மலரே அலையால் மலி கடல் பள்ளிகொண்டான் தொழும் ஆர்_அமுதே வலையான் அருமை மகளே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#9 காமம் படர் நெஞ்சு_உடையோர் கனவினும் காணப்படாச் சேமம் படர் செல்வப் பொன்னே மதுரச் செழும் கனியே தாமம் படர் ஒற்றியூர் வாழ் பவளத் தனி மலையின் வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#10 கோடா அருள் குண_குன்றே சிவத்தில் குறிப்பு_இலரை நாடாத ஆனந்த நட்பே மெய் அன்பர் நயக்கும் இன்பே பீடு ஆர் திருவொற்றிப் பெம்மான் இடம் செய் பெரும் தவமே வாடா மணி மலர்க் கொம்பே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#11 நாலே எனும் மறை அந்தங்கள் இன்னமும் நாடி எனைப் போலே வருந்த வெளி ஒளியாய் ஒற்றிப் புண்ணியர்-தம் பாலே இருந்த நினைத் தங்கையாகப் பகரப்பெற்ற மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#12 கங்கை_கொண்டோன் ஒற்றியூர் அண்ணல் வாமம் கலந்து அருள்செய் நங்கை எல்லா உலகும் தந்த நின்னை அ நாரணற்குத் தங்கை என்கோ அன்றித் தாயர் என்கோ சொல் தழைக்கும் மலை மங்கை அம் கோமள மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#13 சோலையிட்டு ஆர் வயல் ஊர் ஒற்றி வைத்துத் தன் தொண்டர் அன்பின் வேலையிட்டால் செயும் பித்தனை மெய்யிடை மேவு கரித் தோலையிட்டு ஆடும் தொழில்_உடையோனைத் துணிந்து முன்_நாள் மாலையிட்டாய் இஃது என்னே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#14 தனை ஆள்பவர் இன்றி நிற்கும் பரமன் தனி அருளாய் வினை ஆள் உயிர் மலம் நீக்கி மெய் வீட்டின் விடுத்திடும் நீ எனை ஆள் அருள் ஒற்றியூர் வாழ் அவன்றன்னிடத்தும் ஒரு மனையாள் என நின்றது என்னே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#15 பின் ஈன்ற பிள்ளையின் மேல் ஆர்வம் தாய்க்கு எனப் பேசுவர் நீ முன் ஈன்ற பிள்ளையின் மேல் ஆசை உள்ளவா மொய் அசுரர் கொன் ஈன்ற போர்க்கு இளம்பிள்ளையை ஏவக் கொடுத்தது என்னே மன் ஈன்ற ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#16 பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இச் செய்யாளும் வெண்ணிற_மெய்யாளும் எத் தவம் செய்தனரோ கையாளும் நின் அடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய் மை ஆளும் கண் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#17 இலை ஆற்றும் நீ மலர்_காலால் பணிக்கும் குற்றேவல் எலாம் தலையால் செயும் பெண்கள் பல்லோரில் பூ_மகள்-தன்னைத் தள்ளாய் நிலையால் பெரிய நின் தொண்டர்-தம் பக்கம் நிலாமையினால் மலையாற்கு அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#18 கலை_மகளோ நின் பணியை அன்போடும் கடைப்பிடித்தாள் அலை_மகளோ அன்பொடு பிடித்தாள் எற்கு அறைதி கண்டாய் தலை_மகளே அருள் தாயே செவ் வாய்க் கரும் தாழ் குழல் பொன் மலை_மகளே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#19 பொன்னோடு வாணி என்போர் இருவோரும் பொருள் நல் கல்வி- தன்னோடு அருளும் திறம் நின் குற்றேவலைத் தாங்கிநின்ற பின்னோ அலது அதன் முன்னோ தெளிந்திடப் பேசுக நீ மன்னோடு எழில் ஒற்றியூர் வாழ் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#20 கா மட்டு அலர் திருவொற்றி நின் நாயகன் கந்தை சுற்றி ஏம் அட்ட அரையொடு நிற்பது கண்டும் இரங்கலர் போல் நீ மட்டுமே பட்டு உடுக்கின்றனை உன்றன் நேயம் என்னோ மா மட்டு அலர் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#21 வீற்று ஆர் நின்றன் மணத்து அம்மியின் மேல் சிறு மெல் அனிச்சம் ஆற்றா நின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத்தார் எனின் மால் ஏற்றார் திருவொற்றியூரார் களக் கறுப்பு ஏற்றவரே மாற்றா இயல் கொள் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#22 பொருப்பு உறு நீலி என்பார் நின்னை மெய் அது போலும் ஒற்றி விருப்புறு நாயகன் பாம்பாபரணமும் வெண் தலையும் நெருப்பு உறு கையும் கனல் மேனியும் கண்டு நெஞ்சம் அஞ்சாய் மருப்பு உறு கொங்கை மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#23 அனம்_பொறுத்தான் புகழ் ஒற்றி நின் நாயகன் அம் குமிழித் தனம்_பொறுத்தாள் ஒரு மாற்றாளைத் தன் முடி-தன்னில் வைத்தே தினம் பொறுத்தான் அது கண்டும் சினம் இன்றிச் சேர்ந்த நின் போல் மனம் பொறுத்தார் எவர் கண்டாய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#24 ஓர் உருவாய் ஒற்றியூர் அமர்ந்தார் நின்னுடையவர் பெண் சீர் உரு ஆகும் நின் மாற்றாளை நீ தெளியாத் திறத்தில் நீர் உரு ஆக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே வாருரு வார் கொங்கை நங்காய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#25 சார்ந்தே நின்-பால் ஒற்றியூர் வாழும் நாயகர் தாம் மகிழ்வு கூர்ந்தே குலாவும் அக் கொள்கையைக் காணில் கொதிப்பள் என்று தேர்ந்தே அக் கங்கையைச் செம் சடை மேல் சிறைசெய்தனர் ஒண் வார்ந்தே குழை கொள் விழியாய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#26 நீயே எனது பிழை குறிப்பாய் எனில் நின் அடிமைப் பேயேன் செயும் வண்ணம் எவ்வண்ணமோ எனைப் பெற்று அளிக்கும் தாயே கருணைத் தடம் கடலே ஒற்றிச் சார் குமுத வாய் ஏர் சவுந்தர மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#27 முப்போதும் அன்பர்கள் வாழ்த்து ஒற்றியூர் எம் முதல்வர் மகிழ் ஒப்பு ஓத அரும் மலைப் பெண் அமுதே என்று வந்து நினை எப்போதும் சிந்தித்து இடர் நீங்கி வாழ எனக்கு அருள்வாய் மைப் போது அனைய கண் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#28 மீதலத்தோர்களுள் யார் வணங்காதவர் மேவு நடுப் பூதலத்தோர்களுள் யார் புகழாதவர் போற்றி நிதம் பாதலத்தோர்களுள் யார் பணியாதவர் பற்றி நின்றாள் மா தலத்து ஓங்கு ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#29 சேய்க் குற்றம் தாய் பொறுத்து ஏடா வருக எனச் செப்புவள் இ நாய்க் குற்றம் நீ பொறுத்து ஆளுதல் வேண்டும் நவில் மதியின் தேய்க் குற்றம் மாற்றும் திருவொற்றி_நாதர்-தம் தேவி அன்பர் வாய்க் குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#30 செங்கமலாசனன்_தேவி பொன்_நாணும் திரு முதலோர் சங்கம்-அதாம் மிடற்று ஓங்கு பொன்_நாணும் தலைகுனித்துத் துங்கமுறாது உளம் நாணத் திருவொற்றி_தோன்றல் புனை மங்கலநாண்_உடையாளே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#31 சேடு ஆர் இயல் மணம் வீசச் செயல் மணம் சேர்ந்து பொங்க ஏடு ஆர் பொழில் ஒற்றியூர் அண்ணல் நெஞ்சம் இருந்து உவக்க வீடா இருளும் முகிலும் பின்னிட்டு வெருவவைத்த வாடா_மலர்க் குழலாளே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#32 புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர் களக் கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆ தரம் நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞானத் தனிச் சுகம்-தான் வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#33 உன்னும் திருவொற்றியூர்_உடையார் நெஞ்சு உவப்ப எழில் துன்னும் உயிர்ப் பயிர் எல்லாம் தழைக்கச் சுகக் கருணை என்னும் திரு_அமுது ஓயாமல் ஊற்றி எமது உளத்தின் மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#34 வெள்ளம் குளிரும் சடை_முடியோன் ஒற்றி வித்தகன்-தன் உள்ளம் குளிர மெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர் இன் அமுதே அளிக்கும் செவ் வாய்க் குமுத வள்ளம் குளிர் முத்த மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#35 மா நந்தம் ஆர் வயல் காழிக் கவுணியர் மா மணிக்கு அன்று ஆநந்த இன் அமுது ஊற்றும் திரு_முலை ஆர்_அணங்கே கா நந்த ஓங்கும் எழில் ஒற்றியார் உள் களித்து இயலும் வானம் தரும் இடை மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#36 வான் தேட நான்கு மறை தேட மாலுடன் வாரிச_மே லான் தேட மற்றை அரும் தவர் தேட என் அன்பு இன்மையால் யான் தேட என் உளம் சேர் ஒற்றியூர் எம் இரு_நிதியே மான் தேடும் வாள் கண் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#37 முத்தேவர் விண்ணன் முதல் தேவர் சித்தர் முனிவர் மற்றை எத்தேவரும் நின் அடி நினைவார் நினைக்கின்றிலர் தாம் செத்தே பிறக்கும் சிறியர் அன்றோ ஒற்றித் தேவர் நல் தா மத் தேவர் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#38 திரு_நாள் நினைத் தொழும் நல் நாள் தொழாமல் செலுத்திய நாள் கரு நாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே ஒருநாளினும் நின்றனை மறவார் அன்பர் ஒற்றியில் வாழ் மரு நாள்_மலர்க் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#39 வாணாள் அடைவர் வறுமையுறார் நல் மனை மக்கள் பொன் பூண் ஆள் இடம் புகழ் போதம் பெறுவர் பின் புன்மை ஒன்றும் காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றிக் கண்_நுதல்-பால் மாண் ஆர்வம் உற்ற மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#40 சீர் அறிவாய்த் திருவொற்றிப் பரமசிவத்தை நினைப் போர் அறிவாய் அ அறிவாம் வெளிக்கு அப்புறத்து நின்றாய் யார் அறிவார் நின்னை நாயேன் அறிவது அழகு உடைத்தே வார் எறி பூண் முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#41 போற்றிடுவோர்-தம் பிழை ஆயிரமும் பொறுத்து அருள்செய் வீற்று ஒளிர் ஞான விளக்கே மரகத மென் கரும்பே ஏற்று ஒளிர் ஒற்றி_இடத்தார் இடத்தில் இலங்கும் உயர் மாற்று ஒளிரும் பசும்பொன்னே வடிவுடை_மாணிக்கமே

மேல்

#42 ஆசை_உள்ளார் அயன் மால் ஆதி தேவர்கள் யாரும் நின் தாள் பூசை உள்ளார் எனில் எங்கே உலகர் செய் பூசை கொள்வார் தேசை உள்ளார் ஒற்றியூர்_உடையார் இடம் சேர் மயிலே மாசை உள்ளார் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#43 அண்டாரை வென்று உலகு ஆண்டு மெய்ஞ்ஞானம் அடைந்து விண்ணில் பண் தாரை சூழ் மதி போல் இருப்போர்கள் நின் பத்தர் பதம் கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்_நுதல் சேர் வண் தாரை வேல் அன்ன மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#44 அடியார் தொழும் நின் அடிப் பொடி தான் சற்று அணியப்பெற்ற முடியால் அடிக்குப் பெருமை பெற்றார் அ முகுந்தன் சந்தக் கடி ஆர் மலர் அயன் முன்னோர் தென் ஒற்றிக் கடவுள் செம்பால் வடியாக் கருணைக் கடலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#45 ஓவாது அயன் முதலோர் முடி கோடி உறழ்ந்துபடில் ஆஆ அனிச்சம் பொறா மலர்ச் சிற்றடி ஆற்றும்-கொலோ காவாய் இமயப் பொன் பாவாய் அருள் ஒற்றிக் காமர் வல்லி வாவா எனும் அன்பர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#46 இட்டு ஆர் மறைக்கும் உபநிடதத்திற்கும் இன்னும் சற்றும் எட்டா நின் பொன்_அடிப் போது எளியேன் தலைக்கு எட்டும்-கொலோ கட்டு ஆர் சடை முடி ஒற்றி எம்மான் நெஞ்சகத்து அமர்ந்த மட்டு ஆர் குழல் மட மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#47 வெளியாய் வெளிக்குள் வெறுவெளியாய்ச் சிவமே நிறைந்த ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரை நினை ஒப்பவர் ஆர் எளியார்க்கு எளியர் திருவொற்றியார் மெய் இனிது பரி மளியாநின்று ஓங்கும் மருவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#48 விண் அம் காதல் அன்பர்-தம் அன்பிற்கும் நின் புலவிக்கும் அன்றி வணங்கா மதி முடி எங்கள் பிரான் ஒற்றி_வாணனும் நின் குணம் காதலித்து மெய்க்கூறு தந்தான் எனக் கூறுவர் உன் மணம் காதலித்தது அறியார் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#49 பன்னும் பல்வேறு அண்டம் எல்லாம் அ அண்டப் பரப்பினின்று துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#50 சினம்_கடந்தோர் உள்ளச் செந்தாமரையில் செழித்து மற்றை மனம் கடந்து ஓதும் அ வாக்கும் கடந்த மறை அன்னமே தினம் கடந்தோர் புகழ் ஒற்றி எம்மான் இடம் சேர் அமுதே வனம்_கடந்தோன் புகழ் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#51 வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர் முதல் எல்லாரும் நின் செயல் அல்லாது அணுவும் இயக்கிலரேல் இல்லாமையால் உழல் புல்லேன் செய் குற்றங்கள் ஏது கண்டாய் மல் ஆர் வயல் ஒற்றி நல்லாய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#52 எழுதா எழில் உயிர்ச் சித்திரமே இன் இசைப் பயனே தொழுது ஆடும் அன்பர்-தம் உள் களிப்பே சிற்சுக_கடலே செழு ஆர் மலர்ப் பொழில் ஒற்றி எம்மான்-தன் திரு_துணையே வழுவா மறையின் பொருளே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#53 தெருள் பால் உறும் ஐங்கை_செல்வர்க்கும் நல் இளம் சேய்க்கும் மகிழ்ந்து அருள்_பால் அளிக்கும் தனத் தனமே எம் அகம் கலந்த இருள் பால் அகற்றும் இரும் சுடரே ஒற்றி எந்தை உள்ளம் மருள் பால் பயிலும் மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#54 அயில் ஏந்தும் பிள்ளை நல் தாயே திருவொற்றி ஐயர் மலர்க் கயில் ஏந்து அரும்_பெறல் முத்தே இசையில் கனிந்த குரல் குயிலே குயின் மென் குழல் பிடியே மலை_கோன் பயந்த மயிலே மதி முக மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#55 செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான் மெய்யகம் ஓங்கு நல் அன்பே நின்-பால் அன்பு மேவுகின்றோர் கையகம் ஓங்கும் கனியே தனி மெய்க் கதி நெறியே வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#56 தரும் பேர் அருள் ஒற்றியூர்_உடையான் இடம் சார்ந்த பசுங் கரும்பே இனிய கற்கண்டே மதுரக் கனி நறவே இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே வரும் பேர் ஒளிச் செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#57 சேல் ஏர் விழி அருள் தேனே அடியர் உள் தித்திக்கும் செம் பாலே மதுரச் செம் பாகே சொல் வேதப் பனுவல் முடி மேலே விளங்கும் விளக்கே அருள் ஒற்றி வித்தகனார் மாலேகொளும் எழில் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#58 எம்-பால் அருள்வைத்து எழில் ஒற்றியூர் கொண்டிருக்கும் இறைச் செம் பால் கலந்த பைந்தேனே கதலிச் செழும் கனியே வெம் பாலை நெஞ்சர் உள் மேவா மலர்ப் பத மென் கொடியே வம்பால் அணி முலை மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#59 ஏமம் உய்ப்போர் எமக்கு என்றே இளைக்கில் எடுக்கவைத்த சேம வைப்பே அன்பர் தேடும் மெய்ஞ்ஞானத் திரவியமே தாமம் அமைக் கார் மலர்க் கூந்தல் பிடி மென் தனி நடையாய் வாம நல் சீர் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#60 மன் ஏர் மலையன்_மனையும் நல் காஞ்சனமாலையும் நீ அன்னே எனத் திருவாயால் அழைக்கப்பெற்றார் அவர்-தாம் முன்னே அரும் தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி வல் நேர் இளம் முலை மின்னே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#61 கணம் ஒன்றிலேனும் என் உள்ளக் கவலை_கடல் கடந்தே குணம் ஒன்று இலேன் எது செய்கேன் நின் உள்ளக் குறிப்பு அறியேன் பணம் ஒன்று பாம்பு அணி ஒற்றி எம்மானிடப் பாலில் தெய்வ மணம் ஒன்று பச்சைக் கொடியே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#62 கரு வேதனை அற என் நெஞ்சகத்தில் களிப்பொடு ஒற்றிக் குருவே எனும் நின் கணவனும் நீயும் குலவும் அந்தத் திருவே அருள் செந்திருவே முதல் பணி செய்யத் தந்த மருவே மருவு மலரே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#63 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்கு உன் அருள் பண்ணிய உள்ளம் கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் புண்ணிய மல்லிகைப் போதே எழில் ஒற்றிப் பூரணர் பால் மண்ணிய பச்சை மணியே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#64 தீது செய்தாலும் நின் அன்பர்கள்-தம் முன் செருக்கி நின்று வாதுசெய்தாலும் நின் தாள் மறந்தாலும் மதி_இலியேன் ஏது செய்தாலும் பொறுத்து அருள்வாய் ஒற்றியின்னிடைப் பூ_ மாது செய் தாழ் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#65 மருந்தில் நின்றான் ஒற்றியூர் வாழும் நின்றன் மகிழ்நன் முன்னும் திருந்தி நின்றார் புகழ் நின் முன்னும் நல் அருள் தேன் விழைந்தே விருந்தில் நின்றேன் சற்றும் உள் இரங்காத விதத்தைக் கண்டு வருந்தி நின்றேன் இது நன்றோ வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#66 என் போல் குணத்தில் இழிந்தவர் இல்லை எப்போதும் எங்கும் நின் போல் அருளில் சிறந்தவர் இல்லை இ நீர்மையினால் பொன் போலும் நின் அருள் அன்னே எனக்கும் புரிதி கண்டாய் மன் போல் உயர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#67 துன்பே மிகும் இ அடியேன் மனத்தில் நின் துய்ய அருள் இன்பே மிகுவது எந்நாளோ எழில் ஒற்றி எந்தை உயிர்க்கு அன்பே மெய்த் தொண்டர் அறிவே சிவ நெறிக்கு அன்பு_இலர்-பால் வன்பே மெய்ப் போத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#68 சற்றே எனினும் என் நெஞ்சத் துயரம் தவிரவும் நின் பொன் தே மலர்_பதம் போற்றவும் உள்ளம் புரிதி கண்டாய் சொல் தேர் அறிஞர் புகழ் ஒற்றி மேவும் துணைவர்-தம் செம் மல் தேர் புயத்து அணை மானே வடிவுடை மாணிக்கமே.

மேல்

#69 சந்தோடமாப் பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால் அந்தோ ஒரு தமியேன் மட்டும் வாடல் அருட்கு அழகோ நம் தோடம் நீக்கிய நங்காய் எனத் திரு நான்முகன் மால் வந்து ஓதும் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#70 அடியேன் மிசை எப் பிழை இருந்தாலும் அவை பொறுத்துச் செடி ஏதம் நீக்கி நல் சீர் அருள்வாய் திகழ் தெய்வ மறைக் கொடியே மரகதக் கொம்பே எழில் ஒற்றிக் கோமளமே வடி ஏர் அயில் விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#71 கண்ணப்பன் ஏத்தும் நல் காளத்தியார் மங்கலம் கொள் ஒற்றி நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நல் நறவே எண்ணப்படா எழில் ஓவியமே எமை ஏன்றுகொண்ட வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#72 கற்பே விகற்பம் கடியும் ஒன்றே எங்கள் கண் நிறைந்த பொற்பே மெய்த் தொண்டர்-தம் புண்ணியமே அருள் போத இன்பே சொல் பேர் அறிவுள் சுகப் பொருளே மெய்ச் சுயம் சுடரே மல் பேர் பெறும் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#73 மிகவே துயர்_கடல் வீழ்ந்தேனை நீ கைவிடுதல் அருள் தகவே எனக்கு நல் தாயே அகில சராசரமும் சுக வேலை மூழ்கத் திருவொற்றியூரிடம் துன்னிப் பெற்ற மகவே எனப் புரக்கின்றோய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#74 வேதங்களாய் ஒற்றி மேவும் சிவத்தின் விளைவு அருளாய்ப் பூதங்களாய்ப் பொறியாய்ப் புலனாகிப் புகல் கரண பேதங்களாய் உயிர் ஆகிய நின்னை இப் பேதை என் வாய் வாதங்களால் அறிவேனோ வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#75 மதியே மதி முக மானே அடியர் மனத்து வைத்த நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள் நிலையே கதியே கதி வழி காட்டும் கண்ணே ஒற்றிக் காவலர் பால் வதி ஏர் இள மட மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#76 ஆறாத் துயரத்து அழுந்துகின்றேனை இங்கு அஞ்சல் என்றே கூறாக் குறை என் குறையே இனி நின் குறிப்பு அறியேன் தேறாச் சிறியர்க்கு அரிதாம் திருவொற்றித் தேவர் மகிழ் மாறாக் கருணை_மழையே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#77 எற்றே நிலை ஒன்றும் இல்லாது உயங்கும் எனக்கு அருளச் சற்றே நின் உள்ளம் திரும்பிலை யான் செயத்தக்கது என்னே சொல் தேன் நிறை மறைக் கொம்பே மெய்ஞ்ஞானச் சுடர்க் கொழுந்தே மல் தேர் அணி ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#78 செவ் வேலை வென்ற கண் மின்னே நின் சித்தம் திரும்பி எனக்கு எவ்வேலை செய் என்றிடினும் அ வேலை இயற்றுவல் காண் தெவ் வேலை வற்றச்செய் அ வேலை ஈன்று ஒற்றித் தேவர் நெஞ்சை வவ்வு ஏல வார் குழல் மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#79 தாயே மிகவும் தயவு_உடையாள் எனச் சாற்றுவர் இச் சேயேன் படும் துயர் நீக்க என்னே உளம் செய்திலையே நாயேன் பிழை இனி நாடாது நல் அருள் நல்க வரு வாயே எம் ஒற்றி மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#80 நானே நினைக் கடியேன் என் பிழைகளை நாடிய நீ தானே எனை விடில் அந்தோ இனி எவர் தாங்குகின்றோர் தேனே நல் வேதத் தெளிவே கதிக்குச் செலு நெறியே வான் ஏர் பொழில் ஒற்றி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#81 கல்லாரிடத்தில் என் இல்லாமை சொல்லிக் கலங்கி இடா நல்லாண்மை உண்டு அருள் வல்லாண்மை உண்டு எனின் நல்குவையோ வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி_வாணரொடு மல் ஆர் பொழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#82 சுந்தர வாள் முகத் தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய் கந்தர வார் குழல் பூவாய் கருணைக் கடைக்கண் நங்காய் அந்தர நேர் இடைப் பாவாய் அருள் ஒற்றி அண்ணல் மகிழ் மந்தர நேர் கொங்கை மங்காய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#83 பத்தர்-தம் உள்ளத் திரு_கோயில் மேவும் பரம் பரையே சுத்த மெய்ஞ்ஞான ஒளிப் பிழம்பே சிற்சுகாநந்தமே நித்தம் நின் சீர் சொல எற்கு அருள்வாய் ஒற்றி நின் மலர் உன் மத்தர்-தம் வாம மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#84 பூவாய் மலர்க் குழல் பூவாய் மெய் அன்பர் புனைந்த தமிழ்ப் பாவாய் நிறைந்த பொன் பாவாய் செந்தேனில் பகர் மொழியாய் காவாய் என அயன் கா_ஆய்பவனும் கருதும் மலர் மா வாய் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#85 தாதா உணவு உடை தாதா எனப் புல்லர்-தம்மிடைப் போய் மா தாகம் உற்றவர் வன் நெஞ்சில் நின் அடி வைகும்-கொலோ காது ஆர் நெடும் கண் கரும்பே நல் ஒற்றிக் கருத்தர் நட வாதாரிடம் வளர் மாதே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#86 களம் திரும்பா இக் கடையேனை ஆளக் கருணைகொண்டு உன் உளம் திரும்பாமைக்கு என் செய்கேன் துயர்_கடலூடு அலைந்தேன் குளம் திரும்பா விழிக் கோமானொடும் தொண்டர் கூட்டமுற வளம் திரும்பா ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#87 ஆரணம் பூத்த அருள் கோமளக் கொடி அந்தரி பூந் தோரணம் பூத்த எழில் ஒற்றியூர் மகிழ் சுந்தரி சற் காரணம் பூத்த சிவை பார்ப்பதி நம் கவுரி என்னும் வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#88 திரு_வல்லி ஏத்தும் அபிடேக_வல்லி எம் சென்னியிடை வரு வல்லி கற்பக_வல்லி ஒண் பச்சை மணி_வல்லி எம் கரு வல்லி நீக்கும் கருணாம்பக_வல்லி கண்கொள் ஒற்றி மரு வல்லி என்று மறை தேர் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#89 உடை என்ன ஒண் புலித்தோல்_உடையார் கண்டு உவக்கும் இள நடை அன்னமே மலர்ப் பொன் முதலாம் பெண்கள் நாயகமே படை அன்ன நீள் விழி மின் நேர் இடைப் பொன் பசுங்கிளியே மடை மன்னும் நீர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#90 கற்பதும் கேட்பதும் எல்லாம் நின் அற்புதக் கஞ்ச_மலர்ப் பொன்_பதம் காணும் பொருட்டு என எண்ணுவர் புண்ணியரே சொல் பதமாய் அவைக்கு அப்புறமாய் நின்ற தூய்ச் சுடரே மல் பதம் சேர் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#91 நின்னால் எனக்கு உள எல்லா நலனும் நினை அடைந்த என்னால் உனக்கு உளது என்னை கண்டாய் எமை ஈன்றவளே முன் நால்வருக்கு அருள் ஒற்றி எம்மான் கண் முழு மணியே மன் நான்மறையின் முடிவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#92 நன்றே சிவநெறி நாடும் மெய்த் தொண்டர்க்கு நன்மை செய்து நின்றே நின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன் ஈது என்றே முடிகுவது இன்றே முடியில் இனிது கண்டாய் மன்று ஏர் எழில் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#93 அத்தனை ஒற்றிக்கு இறைவனை அம்பலத்து ஆடுகின்ற முத்தனைச் சேர்ந்த ஒண் முத்தே மதிய முக அமுதே இத்தனை என்று அளவு ஏலாத குற்றம் இழைத்திடும் இ மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#94 கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும் என் தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திரு_செவியில் ஏறாத வண்ணம் என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின் மாறாது அமர்ந்த மயிலே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#95 ஓயா இடர்கொண்டு உலைவேனுக்கு அன்பர்க்கு உதவுதல் போல் ஈயாவிடினும் ஓர் எள்ளளவேனும் இரங்கு கண்டாய் சாயா அருள்தரும் தாயே எழில் ஒற்றித் தற்பரையே மாயா நலம் அருள் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#96 பெரும் பேதையேன் சிறு வாழ்க்கைத் துயர் எனும் பேர் அலையில் துரும்பே என அலைகின்றேன் புணை நின் துணை பதமே கரும்பே கருணைக் கடலே அருள் முக்கனி நறவே வரும் பேர் அருள் ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#97 காதரவால் உள் கலங்கி நின்றேன் நின் கடைக்கண் அருள் ஆதரவால் மகிழ்கின்றேன் இனி உன் அடைக்கலமே சீதரன் ஏத்தும் திருவொற்றி_நாதர்-தம் தேவி எழில் மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#98 பொன்_உடையார் அன்றிப் போற்றும் நல் கல்விப் பொருள்_உடையார் என்_உடையார் என ஏசுகின்றார் இஃது என்னை அன்னே மின்_உடையாய் மின்னில் துன் இடையாய் ஒற்றி மேவும் முக்கண் மன்_உடையாய் என்னுடையாய் வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#99 பொய்விட்டிடாதவன் நெஞ்சகத்தேனைப் புலம்பும் வண்ணம் கைவிட்டிடாது இன்னும் காப்பாய் அது நின் கடன் கரும்பே மெய்விட்டிடார் உள் விளை இன்பமே ஒற்றி வித்தகமே மை விட்டிடா விழி மானே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#100 நேயானுகூல மனம்_உடையாய் இனி நீயும் என்றன் தாய் ஆகில் யான் உன் தனையனும் ஆகில் என்றன் உளத்தில் ஓயாது உறும் துயர் எல்லாம் தவிர்த்து அருள் ஒற்றியில் செவ் வாய் ஆர் அமுத வடிவே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

#101 வாழி நின் சேவடி போற்றி நின் பூம்_பத வாரிசங்கள் வாழி நின் தாள்_மலர் போற்றி நின் தண்_அளி வாழி நின் சீர் வாழி என் உள்ளத்தில் நீயும் நின் ஒற்றி மகிழ்நரும் நீ வாழி என் ஆர் உயிர் வாழ்வே வடிவுடை_மாணிக்கமே.

மேல்

@8. இங்கித மாலை காப்பு

மேல்

#0 ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கித் திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகிக் கரு மால் அகற்றும் கணபதியாம் கடவுள் அடியும் களித்து அவர் பின் வரும் மா கருணை_கடல் குமர வள்ளல் அடியும் வணங்குவாம். * இங்கித மாலை

மேல்

#1 திரு ஆர் கமலத் தடம் பணை சூழ் செல்வப் பெருஞ் சீர் ஒற்றியில் வாழ் மரு ஆர் கொன்றைச் சடை முடி கொள் வள்ளல் இவர்க்குப் பலி கொடு நான் ஒரு வாது அடைந்தேன் இனி நமக்கு இங்கு உதவ வரும்-தோறு உன் முலை மேல் இரு வார் இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#2 தண் ஆர் மலரை மதி நதியைத் தாங்குஞ் சடையார் இவர்-தமை நான் அண்ணால் ஒற்றி இருந்தவரே ஐயரே நீர் யார் என்றேன் நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று சொலி எண்ணாது அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#3 பிட்டின் நதி மண் சுமந்த ஒற்றிப் பிச்சைத் தேவர் இவர்-தமை நான் தட்டு இல் மலர்க் கை-இடத்து எது ஓதனத்தைப் பிடியும் என்று உரைத்தேன் மட்டு இன் ஒரு மூன்று உடன் ஏழு மத்தர் தலை ஈது என்று சொலி எட்டி முலையைப் பிடிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#4 மடையில் கயல் பாய் ஒற்றி நகர் வள்ளல் ஆகும் இவர்-தமை நான் அடையில் கனிவால் பணி என்றே அருளீர் உரி ஈர் உடை என்றேன் கடையில் படும் ஓர் பணி என்றே கருதி உரைத்தேம் என்று உரைத்து என் இடையில் கலையை உரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#5 மன்றல் மணக்கும் ஒற்றி நகர் வாணர் ஆகும் இவர்-தமை நான் நின்று அன்பொடும் கை ஏந்து அனத்தை ஏற்று ஓர் கலத்தில் கொளும் என்றேன் நன்று அன்பு_உடையாய் எண் கலத்தில் நாம் கொண்டிடுவேம் என்று சொலி என்றன் முலையைத் தொடுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#6 கோமாற்கு அருளும் திருவொற்றிக் கோயில்_உடையார் இவரை மத_ மா மாற்றிய நீர் ஏகல் அவி மகிழ்ந்து இன்று அடியேன் மனையினிடைத் தாம் மாற்றிடக் கொண்டு ஏகும் என்றேன் தா என்றார் தந்தால் என்னை ஏமாற்றினையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#7 அ மால் அயனும் காண்ப அரியீர்க்கு அமரும் பதி-தான் யாது என்றேன் இ மால்_உடையாய் ஒற்றுதற்கு ஓர் எச்சம்-அது கண்டு அறி என்றார் செம்மால் இஃது ஒன்று என் என்றேன் திருவே புரி மேல் சேர்கின்ற எம்மால் மற்றொன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#8 கண்கள் களிப்ப ஈண்டு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி அதாம் பண்கள் இயன்ற திருவாயால் பலி தா என்றார் கொடு வந்தேன் பெண்கள் தரல் ஈது அன்று என்றார் பேசு அப் பலி யாது என்றேன் நின் எண்-கண் பலித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#9 ஆரா மகிழ்வு தரும் ஒரு பேர்_அழகர் இவர் ஊர் ஒற்றி-அதாம் நேராய் விருந்து உண்டோ என்றார் நீர் தான் வேறு இங்கு இலை என்றேன் வார் ஆர் முலையாய் வாய் அமுதும் மலர்_கை அமுதும் மனை அமுதும் ஏராய் உளவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#10 அடுத்தார்க்கு அருளும் ஒற்றி நகர் ஐயர் இவர்-தாம் மிகத் தாகம் கடுத்தாம் என்றார் கடி தட நீர் கண்டீர் ஐ அம் கொளும் என்றேன் கொடுத்தாய் கண்டதிலை ஐயம்கொள்ளும் இடம் சூழ்ந்திடும் கலையை எடுத்தால் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#11 இந்து ஆர் இதழி இலங்கு சடை ஏந்தல் இவர் ஊர் ஒற்றி-அதாம் வந்தார் பெண்ணே அமுது என்றார் வரையின் சுதை இங்கு உண்டு என்றேன் அந்து ஆர் குழலாய் பசிக்கினும் பெண்_ஆசை விடுமோ அமுது இன்றேல் எம் தாரம் தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#12 தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி இவர் ஊர் ஒற்றி-அதாம் அன்னம் தருவீர் என்றார் நான் அழைத்தேன் நின்னை அன்னம் இட முன்னம் பசி போயிற்று என்றார் முன்-நின்று அகன்றேன் இ அன்னம் இன்னம் தருவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#13 மாறா அழகோடு இங்கு நிற்கும் வள்ளல் இவர் ஊர் ஒற்றி-அதாம் வீறாம் உணவு ஈ என்றார் நீர் மேவா உணவு இங்கு உண்டு என்றேன் கூறா மகிழ்வே கொடு என்றார் கொடுத்தால் இது-தான் அன்று என்றே ஏறா வழக்குத் தொடுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#14 வண்மை_உடையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் பலி என்றார் உண்மை அறிவீர் பலி எண்மை உணர்கிலீர் என் உழை என்றேன் பெண்மை சிறந்தாய் நின் மனையில் பேசும் பலிக்கு என்று அடைந்தது நாம் எண்மை உணர்ந்தே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#15 திருவை அளிக்கும் திருவொற்றித் தேவரீர்க்கு என் விழைவு என்றேன் வெருவல் உனது பெயரிடை ஓர் மெய் நீக்கிய நின் முகம் என்றார் தருவல் அதனை வெளிப்படையால் சாற்றும் என்றேன் சாற்றுவனேல் இரு வை மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#16 முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கிக் கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே இந்து முகத்தாய் எமக்கு ஒன்றே இரு_நான்கு உனக்குக் கந்தை உளது இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#17 துன்னல்_உடையார் இவர்-தமை நீர் துன்னும் பதி-தான் யாது என்றேன் நென்னல் இரவில் எமைத் தெளிவான் நின்ற நினது பெயர் என்றார் உன்னலுறுவீர் வெளிப்பட ஈது உரைப்பீர் என்றேன் உரைப்பேனேல் இன்னல் அடைவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#18 சிமைக் கொள் சூலத் திரு_மலர்_கைத் தேவர் நீர் எங்கு இருந்தது என்றேன் எமைக் கண்ட அளவின் மாதே நீ இருந்தது என யாம் இருந்தது என்றார் அமைக்கும் மொழி இங்கிதம் என்றேன் ஆம் உன் மொழி இங்கு இதம் அன்றோ இமைக்கும் இழையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#19 நடம் கொள் பதத்தீர் திருவொற்றி நங்கள் பெருமான் நீர் அன்றோ திடம் கொள் புகழ்க் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்காக் குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு இடங்கர் நடு நீக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#20 சங்கம் மருவும் ஒற்றி_உளீர் சடை மேல் இருந்தது என் என்றேன் மங்கை நினது முன் பருவம் மருவும் முதல் நீத்து இருந்தது என்றார் கங்கை இருந்ததே என்றேன் கமலை அனையாய் கழுக்கடையும் எம் கை இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#21 துதி சேர் ஒற்றி வளர் தரும_துரையே நீர் முன் ஆடல் உறும் பதி யாது என்றேன் நம் பெயர் முன் பகர் ஈர் எழுத்தைப் பறித்தது என்றார் நிதி சேர்ந்திடும் அ பெயர் யாது நிகழ்த்தும் என்றேன் நீ இட்டது எதுவோ அது காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#22 உடற்கு அச்சு உயிராம் ஒற்றி_உளீர் உமது திரு_பேர் யாது என்றேன் குடக்குச் சிவந்த பொழுதினை முன் கொண்ட வண்ணர் ஆம் என்றார் விடைக்குக் கருத்தா ஆம் நீர்-தாம் விளம்பல் மிகக் கற்றவர் என்றேன் இடக்குப் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#23 மணம் கேதகை வான் செயும் ஒற்றி வள்ளல் இவரை வல் விரைவு ஏன் பிணங்கேம் சிறிது நில்லும் என்றேன் பிணங்காவிடினும் நென்னல் என அணங்கே நினக்கு ஒன்றினில் பாதி அதில் ஓர் பாதியாகும் இதற்கு இணங்கேம் சிறிதும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#24 ஒற்றி நகரார் இவர்-தமை நீர் உவந்து ஏறுவது இங்கு யாது என்றேன் மற்று உன் பருவத்து ஒரு பங்கே மடவாய் என்றார் மறை விடை ஈது இற்று என்று அறிதற்கு அரிது என்றேன் எம்மை அறிவார் அன்றி அஃது எற்று என்று அறிவார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#25 கண்ணின் மணி போல் இங்கு நிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றி-அதாம் பண்ணின் மொழியாய் நின்-பால் ஓர் பறவைப் பெயர் வேண்டினம் படைத்தால் மண்ணின் மிசை ஓர் பறவை-அதாய் வாழ்வாய் என்றார் என் என்றேன் எண்ணி அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#26 சேடு ஆர் வளம் சூழ் ஒற்றி நகர் செல்வப் பெருமான் இவர்-தமை நான் ஓடு ஆர் கரத்தீர் எண் தோள்கள்_உடையீர் என் என்று உரைத்தேன் நீ கோடாகோடி முகம் நூறு கோடாகோடிக் களம் என்னே ஈடாய்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#27 துருமம் செழிக்கும் பொழில் ஒற்றித் தோன்றால் இங்கு நீர் வந்த கருமம் சொலும் என்றேன் இவண் யான் கடாதற்கு உன்-பால் எம் உடைமைத் தருமம் பெறக் கண்டாம் என்றார் தருவல் இருந்தால் என்றேன் இல் இரு மந்தரமோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#28 ஒரு கை முகத்தோர்க்கு ஐயர் எனும் ஒற்றித் தேவர் இவர்-தமை நான் வருகை உவந்தீர் என்றனை நீர் மருவி அணைதல் வேண்டும் என்றேன் தரு கையுடனே அகங்காரம்-தனை எம் அடியார்-தமை மயக்கை இரு கை வளை சிந்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#29 திருத்தம் மிகும் சீர் ஒற்றியில் வாழ் தேவரே இங்கு எது வேண்டி வருத்த மலர்_கால் உற நடந்து வந்தீர் என்றேன் மாதே நீ அருத்தம் தெளிந்தே நிருவாணம் ஆக உன்றன் அகத்து அருள்_கண் இருத்த அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#30 வளம் சேர் ஒற்றி மாணிக்க வண்ணர் ஆகும் இவர்-தமை நான் குளம் சேர்ந்து இருந்தது உமக்கு ஒரு கண் கோலச் சடையீர் அழகு இது என்றேன் களம் சேர் குளத்தின் எழில் முலை கண் காண ஓர் ஐந்து உனக்கு அழகு ஈது இளம் சேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#31 பலம் சேர் ஒற்றிப் பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் உலம் சேர் வெண் பொன்_மலை என்றார் உண்டோ நீண்ட மலை என்றேன் வலம் சேர் இடை த வருவித்த மலை காண் அதனில் மம் முதல் சென்று இலம் சேர்ந்ததுவும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#32 வயல் ஆர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் வாய் திறவார் செயல் ஆர் விரல்கள் முடக்கி அடி சேர்த்து ஈர் இதழ்கள் விரிவித்தார் மயல் ஆர் உளத்தோடு என் என்றேன் மறித்து ஓர் விரலால் என்னுடைய இயல் ஆர் வடிவில் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#33 பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய்ச் சீர் வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் ஓர் வாழ் அடியும் குழல் அணியும் ஒரு நல் விரலால் சுட்டியும் தம் ஏர் வாழ் ஒரு கை பார்க்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#34 பெரும் சீர் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌனம் பிடித்து இங்கே விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் வரும் சீர்_உடையீர் மணி வார்த்தை வகுக்க என்றேன் மார்பிடைக் காழ் இரும் சீர் மணியைக் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#35 வலம் தங்கிய சீர் ஒற்றி நகர் வள்ளல் இவர்-தாம் மௌனமொடு கலந்து அங்கு இருந்த அண்டசத்தைக் காட்டி மூன்று விரல் நீட்டி நலம் தங்கு உறப்பின் நடு முடக்கி நண்ணும் இந்த நகத்தொடு வாய் இலம் தம் கரத்தால் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#36 தேன் ஆர் பொழில் ஆர் ஒற்றியில் வாழ் தேவர் இவர் வாய் திறவாராய் மான் ஆர் கரத்தோர் நகம் தெரித்து வாளாநின்றார் நீள் ஆர்வம்- தான் ஆர் உளத்தோடு யாது என்றேன் தம் கைத்தலத்தில் தலையை அடி யேன் நாடுறவே காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#37 செச்சை அழகர் திருவொற்றித் தேவர் இவர் வாய் திறவாராய் மெச்சும் ஒரு கால் கரம் தொட்டு மீண்டும் மிடற்று அக் கரம் வைத்தார் பிச்சர் அடிகேள் வேண்டுவது பேசீர் என்றேன் தமைக் காட்டி இச்சை எனையும் குறிக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#38 மன்றார் நிலையார் திருவொற்றி_வாணர் இவர்-தாம் மௌனமொடு நின்றார் இரு கை ஒலி இசைத்தார் நிமிர்ந்தார் தவிசின் நிலை குறைத்தார் நன்று ஆர் அமுது சிறிது உமிழ்ந்தார் நடித்தார் யாவும் ஐயம் என்றேன் இன் தாமரைக் கை ஏந்துகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#39 வாரா_விருந்தாய் வள்ளல் இவர் வந்தார் மௌனமொடு நின்றார் நீர் ஆர் எங்கே இருப்பது என்றேன் நீண்ட சடையைக் குறிப்பித்தார் ஊரா வைத்தது எது என்றேன் ஒண் கை ஓடு என் இடத்தினில் வைத்து ஏர் ஆர் கரத்தால் சுட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#40 செங்கேழ் கங்கைச் சடையார் வாய் திறவாராக ஈண்டு அடைந்தார் எங்கே இருந்து எங்கு அணைந்தது காண் எங்கள் பெருமான் என்றேன் என் அங்கு ஏழ் அருகின் அகன்று போய் அங்கே இறைப் போது அமர்ந்து எழுந்தே இங்கே நடந்து வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#41 கொடையார் ஒற்றி_வாணர் இவர் கூறா மௌனர் ஆகி நின்றார் தொடை ஆர் இதழி மதிச் சடை என் துரையே விழைவு ஏது உமக்கு என்றேன் உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே இடையாக் கழுமுள் காட்டுகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#42 பொன்னைக் கொடுத்தும் புணர்வு அரிய புனிதர் இவர் ஊர் ஒற்றி-அதாம் முன்னைத் தவத்தால் யாம் காண முன்னே நின்றார் முகம் மலர்ந்து மின்னில் பொலியும் சடையீர் என் வேண்டும் என்றேன் உணச் செய்யாள் இல் நச்சினம் காண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#43 வயல் ஆர் சோலை எழில் ஒற்றி_வாணர் ஆகும் இவர்-தமை நான் செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் வியலாய்க் கொண்டது என் என்றேன் விளங்கும் பிநாகம் அவை மூன்றும் இயலால் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#44 பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் விழி என்றேன் இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று சொலி எதிர்நின்று உவந்து நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#45 இட்டம் களித்த ஒற்றி_உளீர் ஈண்டு இ வேளை எவன் என்றேன் சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொலும் என்றேன் பட்டு உண் மருங்குல் பாவாய் நீ பரித்தது அன்றே பார் என்றே எட்டும் களிப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#46 பாற்றக் கணத்தார் இவர் காட்டுப்பள்ளித் தலைவர் ஒற்றியின்-நின்று ஆற்றப் பசித்து வந்தாராம் அன்னம் இடு-மின் என்று உரைத்தேன் சோற்றுக்கு இளைத்தோம் ஆயினும் யாம் சொல்லுக்கு இளையேம் கீழ்ப் பள்ளி ஏற்றுக் கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#47 குருகு ஆர் ஒற்றி_வாணர் பலிகொள்ள வகை உண்டோ என்றேன் ஒரு கால் எடுத்து ஈண்டு உரை என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன் வரு காவிரிப் பொன்_அம்பலத்தே வந்தால் காட்டுகின்றாம் வீழ் இரு கால் உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#48 வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் அணிகின்ற மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுப்பது என ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#49 உயிருள் உறைவீர் திருவொற்றி_உடையீர் நீர் என் மேல் பிடித்த வயிரம்-அதனை விடும் என்றேன் வயிரி அல நீ மாதே யாம் செயிர்-அது அகற்று உன் முலை இடம் கொள் செல்வன் அல காண் தெளி என்றே இயல் கொள் முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#50 தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை எண் கார்முகம் மாப் பொன் என்றேன் இடையிட்டு அறிதல் அரிது என்றார் மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றே எண் காண் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#51 செய் காண் வளம் சூழ் ஒற்றி_உளீர் திருமால் முதன் முத்தேவர்கட்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் மேல் அணங்கே நீ ஏழ் அடைதி என்றார் மெய் காண் அது-தான் என் என்றேன் விளங்கும் சுட்டுப் பெயர் என்றே எய் காணுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#52 விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்க்_கை வண்டும் விழுந்தது என்றார் தொண்டர்க்கு அருள்வீர் மிக என்றேன் தோகாய் நாமே தொண்டன் என எண் தங்குறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#53 மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் எட்டாம் எழுத்தை எடுத்து அது நாம் இசைத்தேம் என்றார் எட்டாக உள் தாவுறும் அ எழுத்து அறிய உரைப்பீர் என்றேன் அந்தணர் ஊர்க்கு இட்டார் நாமம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#54 ஒற்றி நகரீர் மனவசி-தான் உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் பற்றி இறுதி தொடங்கி அது பயிலும் அவர்க்கே அருள்வது என்றார் மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உள்ள வன்மை எலாம் எற்றில் உணர்தி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#55 வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேன் ஓ இது-தான் சான்றோர் உமது மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றே ஏன்று ஓர் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#56 தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் ஈது நமக்குத் தெரிந்தது என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் ஓதும் அடியார் மனக் கங்குல் ஓட்டும் நாமே உணர் அன்றி ஏதும் இறை அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#57 ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார் எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இவை அதற்கு என்று எண் சொல் மணி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#58 ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டோ என்றேன் இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் எம் பேர் மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றே இருவும் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#59 பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டாம் எழுத்தார் என்றார் என் நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் உரைப்பாம் என்று ஏர் ஆய் உரைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#60 தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைக்க வாழ்வீர் தனி ஞான ஒளி நாவரசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றே எளியேற்கு உவப்பின் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#61 ஓம் ஊன்று_உளத்தீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத் தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே ஏம் ஊன்றுறவே நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#62 மன்னி விளங்கும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் என்னில் இது-தான் ஐயம் என்றேன் எமக்கும் தெரியும் எனத் திருவாய் இன் நல் அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#63 வளம் சேர் ஒற்றியீர் எனக்கு மாலை அணிவீரோ என்றேன் குளம் சேர் மொழிப் பெண் பாவாய் நின் கோல மனை-கண் நாம் மகிழ்வால் உளம் சேர்ந்து அடைந்த போதே நின் உளத்தில் அணிந்தேம் உணர் என்றே இளம் சீர் நகைசெய்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#64 வீற்று ஆர் ஒற்றி நகர் அமர்ந்தீர் விளங்கும் மலரே விளம்பும் நெடு மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் பார் என்றார் சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றே ஏற்று ஆதரவால் மொழிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#65 புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைத்தது என்றேன் வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பா உரைத்தும் என்றே இயல் பால் மொழி தந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#66 தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் மடவாய் உனது மொழிக்கு என்றே எண்ணம் கொள நின்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#67 உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே இகம் சேர் நயப்பால் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#68 ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச் சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம் யார் ஆர் மடவாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#69 வருத்தம் தவிரீர் ஒற்றி_உளீர் மனத்தில் அகாதம் உண்டு என்றேன் நிருத்தம் தொழும் நம் அடியவரை நினைக்கின்றோரைக் காணின் அது உருத் தன் பெயர் முன் எழுத்து இலக்கம் உற்றே மற்ற எல்லை அகன்று இருத்தல் அறியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#70 மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் செய்ய அதன் மேல் சிகரம் வைத்துச் செவ்வன் உரைத்தால் இரு வா என்று உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே எய் உன் உரையை என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#71 தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற வா என்று அருள்வீர் என்றேன் அ வாவின் பின்னர் வரும் எழுத்தை மேவு என்று அதனில் சேர்த்தது இங்கே மேவின் அன்றோ வா என்பேன் ஏ வென்றிடு கண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#72 என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைவான் நினைவீரேல் பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை ஆங்கு அதன் மேல் அல் மேல் குழலாய் சேய் அதன் மேல் அலவன் அதன் மேல் ஞாயிறு அஃ தின் மேல் ஒன்று இன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#73 வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நாமம் யாது என்றேன் மயலாய் இடும் இப் பெயர்ப் பின்னர் வந்த இளைய நாமம் என்றார் செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு இயல் ஆர் அயல் ஆர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#74 நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கல் என் என்றேன் கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன் வேல் ஆர் விழி மாப் புலித்தோலும் வேழத்தோலும் வல்லேம் என்று ஏலா அமுதம் உகுக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#75 முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அகன்றது என்றே இடியா நயத்தின் நகைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#76 ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உடையீர் யார்க்கும் உணர்வு அரியீர் என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்றேன் யான் துன்றும் விசும்பே காண் என்றார் சூதாம் உமது சொல் என்றேன் இன்று உன் முலை தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#77 வானார் வணங்கும் ஒற்றி_உளீர் மதி வாழ் சடையீர் மரபிடை நீர் தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் காண் ஆனால் ஒற்றி இரும் என்றேன் ஆண்டே இருந்து வந்தனம் சேய் ஈனாதவள் நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#78 பற்று முடித்தோர் புகழ் ஒற்றிப் பதியீர் நுமது பசுவின் இடை_ கற்று முடித்தது என் இரு கை_கன்று முழுதும் காண் என்றேன் மற்று முடித்த மாலையொடு உன் மருங்குல் கலையும் கற்று முடிந்து இற்று முடித்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#79 வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்து எனது மானம் கெடுத்தீர் என்று உரைத்தேன் மா நன்று இஃது உன் மான் அன்றே ஊனம் கலிக்கும் தவர் விட்டார் உலகம் அறியும் கேட்டு அறிந்தே ஈனம் தவிர்ப்பாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#80 ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால் ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்னை உவந்து இப்பொழுது என்றேன் ஊனம் தவிர்த்த மலர் வாயின் உள்ளே நகைசெய்து இஃது உரைக்கேம் ஈனம் புகன்றாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#81 கரு மை அளவும் பொழில் ஒற்றிக் கணத்தீர் முனிவர் கலக்கம் அறப் பெருமை நடத்தினீர் என்றேன் பிள்ளை நடத்தினான் என்றார் தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்-பால் இரு மை விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#82 ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே மயக்குகின்ற வசியர் மிக நீர் என்றேன் எம் மகன் காண் என்றார் வளர் காமப் பசிய தொடையுற்றேன் என்றேன் பட்டம் அவிழ்த்துக் காட்டுதியேல் இசையக் காண்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#83 கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணைவீர் மலையாள் உமது மனை என்றேன் மருவின் மலையாள்_அல்லள் என்றார் அலையாள் மற்றையவள் என்றேன் அறியின் அலையாள்_அல்லள் உனை இலை யாம் அணைவது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#84 சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை_இலோர் சூலம் படைத்தீர் என் என்றேன் தோன்றும் உலகு உய்ந்திட என்றார் ஆலம் களத்தீர் என்றேன் நீ ஆலம் வயிற்றாய் அன்றோ நல் ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#85 ஞாலம் நிகழும் புகழ் ஒற்றி நடத்தீர் நீர் தான் நாட்டமுறும் பாலர் அலவோ என்றேன் ஐம்பாலர் பாலைப் பருவத்தில் சால மயல்கொண்டிட வரும் ஓர் தனிமைப் பாலர் யாம் என்றே ஏல முறுவல் புரிகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#86 வண்மை தருவீர் ஒற்றி நகர் வாழ்வீர் என்னை மருவீர் என் உண்மை அறியீர் என்றேன் யாம் உணர்ந்தே அகல நின்றது என்றார் கண்மை_இலரோ நீர் என்றேன் களம் மை உடையேம் கண் மை உறல் எண்மை நீயே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#87 தவம் தங்கிய சீர் ஒற்றி நகர்-தனைப் போல் நினைத்து என் மனை அடைந்தீர் உவந்து என் மீதில் தேவர் திருவுள்ளம் திரும்பிற்றோ என்றேன் சிவம் தங்கிட நின் உள்ளம் எம் மேல் திரும்பிற்று அதனைத் தேர்ந்து அன்றே இவர்ந்து இங்கு அணைந்தாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#88 ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உம்முடைய பொன் ஆர் சடை மேல் வெள்ளெருக்கம் பூவை மிலைந்தீர் என் என்றேன் நின் ஆர் அளகத்து அணங்கே நீ நெட்டி மிலைந்தாய் இதில் அது கீழ் என்னார் உலகர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#89 கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் காதலர் நீர் தனி மான் ஏந்தியாம் என்றேன் தடம் கண் மடந்தாய் நின் முகமும் பனி மான் ஏந்தியாம் என்றார் பரை மான் மருவினீர் என்றேன் இனி மால்_மருவி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#90 சிறியேன் தவமோ எனைப் பெற்றார் செய்த தவமோ ஈண்டு அடைந்தீர் அறியேன் ஒற்றி அடிகேள் இங்கு அடைந்த வாறு என் நினைத்து என்றேன் பொறி நேர் உனது பொன் கலையைப் பூ ஆர் கலை ஆக்குற நினைத்தே எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#91 அளிக்கும் குணத்தீர் திருவொற்றி அழகரே நீர் அணி வேணி வெளிக்கொள் முடி மேல் அணிந்தது-தான் விளியா விளம்பத் திரம் என்றேன் விளிக்கும் இளம் பத்திரமும் முடி மேலே மிலைந்தாம் விளங்கு_இழை நீ எளிக் கொண்டு உரையேல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#92 வாசம் கமழும் மலர்ப் பூங்காவனம் சூழ் ஒற்றி மா நகரீர் நேசம் குறிப்பது என் என்றேன் நீயோ நாமோ உரை என்றார் தேசம் புகழ்வீர் யான் என்றேன் திகழ் தைத்திரி தித்திரியே யா மே சம் குறிப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#93 பேசும் கமலப் பெண் புகழும் பெண்மை உடைய பெண்கள் எலாம் கூசும்படி இப்படி ஒற்றிக் கோவே வந்தது என் என்றேன் மா சுந்தரி நீ இப்படிக்கு மயங்கும்படிக்கும் மாதர் உனை ஏசும்படிக்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#94 கொடி ஆல் எயில் சூழ் ஒற்றி இடம் கொண்டீர் அடிகள் குரு உருவாம் படி ஆல் அடியில் இருந்த மறைப் பண்பை உரைப்பீர் என்றேன் நின் மடி ஆல் அடியில் இருந்த மறை மாண்பை வகுத்தாய் எனில் அது நாம் இடியாது உரைப்பேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#95 என் நேர் உளத்தின் அமர்ந்தீர் நல் எழில் ஆர் ஒற்றியிடை இருந்தீர் என்னே அடிகள் பலி ஏற்றல் ஏழ்மை_உடையீர் போலும் என்றேன் இன்னே கடலினிடை நீ பத்து ஏழ்மை_உடையாய் போலும் என இன் நேயம் கொண்டு உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#96 நல்லார் மதிக்கும் ஒற்றி_உளீர் நண்ணும் உயிர்கள்-தொறும் நின்றீர் எல்லாம் அறிவீர் என்னுடைய இச்சை அறியீர் போலும் என்றேன் வல்லாய் அறிவின் மட்டு ஒன்று மன மட்டு ஒன்று வாய் மட்டு ஒன்று எல்லாம் அறிந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#97 மறி நீர்ச் சடையீர் சித்து எல்லாம்_வல்லீர் ஒற்றி மா நகரீர் பொறி சேர் உமது புகழ் பலவில் பொருந்தும் குணமே வேண்டும் என்றேன் குறி நேர் எமது வில் குணத்தின் குணத்தாய் அதனால் வேண்டுற்றாய் எறி வேல் விழியாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#98 ஊரூர் இருப்பீர் ஒற்றி வைத்தீர் ஊர்-தான் வேறு உண்டோ என்றேன் ஓர் ஊர் வழக்கிற்கு அரியை இறை உன்னி வினவும் ஊர் ஒன்றோ பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக ஏர் ஊர் அனந்தம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#99 விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் பழி அன்று அணங்கே அ வேய்க்குப் படு முத்து ஒரு வித்து அன்று அதனால் இழியும் பிறப்போ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#100 விண் ஆர் பொழில் சூழ் ஒற்றி_உளீர் விளங்கும் தாமம் மிகு வாசத் தண் ஆர் மலர் வேதனை ஒழிக்கத் தருதல் வேண்டும் எனக்கு என்றேன் பண் ஆர் மொழியாய் உபகாரம்பண்ணாப் பகைவரேனும் இதை எண்ணார் எண்ணார் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#101 செம்பால் மொழியார் முன்னர் எனைச் சேர்வீர் என்கோ திருவொற்றி அம்பு ஆர் சடையீர் உமது ஆடல் அறியேன் அருளல் வேண்டும் என்றேன் வம்பு ஆர் முலையாய் காட்டுகின்றாம் மன்னும் பொன் ஆர் அம்பலத்தே எம்-பால் வா என்று உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#102 மைக் கொள் மிடற்றீர் ஊர் ஒற்றி வைத்தீர் உண்டோ மனை என்றேன் கை-கண் நிறைந்த தனத்தினும் தன் கண்ணின் நிறைந்த கணவனையே துய்க்கும் மடவார் விழைவர் எனச் சொல்லும் வழக்கு ஈது அறிந்திலையோ எய்க்கும் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#103 ஆறு_முகத்தார்-தமை ஈன்ற ஐந்து_முகத்தார் இவர்-தமை நான் மாறு முகத்தார் போல் ஒற்றி வைத்தீர் பதியை என் என்றேன் நாறும் மலர்ப் பூங் குழல் நீயோ நாமோ வைத்தது உன் மொழி மன்று ஏறு மொழி அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#104 வள்ளல் மதியோர் புகழ் ஒற்றி வள்ளால் உமது மணிச் சடையின் வெள்ள_மகள் மேல் பிள்ளை மதி விளங்கல் அழகு ஈது என்றேன் நின் உள்ள-முகத்தும் பிள்ளை மதி ஒளி கொள் முகத்தும் பிள்ளை மதி எள்ளல்_உடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#105 உள்ளத்து அனையே போல் அன்பர் உவக்கும் திரு வாழ் ஒற்றி_உளீர் கள்ளத்தவர் போல் இவண் நிற்கும் கருமம் என் நீர் இன்று என்றேன் மெள்ளக் கரவுசெயவோ நாம் வேடம் எடுத்தோம் நின் சொல் நினை எள்ளப் புரிந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#106 அச்சை அடுக்கும் திருவொற்றியவர்க்கு ஓர் பிச்சை கொடும் என்றேன் விச்சை அடுக்கும்படி நம்-பால் மேவினோர்க்கு இ அகில நடைப் பிச்சை எடுப்பேம் அலது உன் போல் பிச்சை கொடுப்பேம் அல என்றே இச்சை எடுப்பாய் உரைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#107 அள்ளல் பழனத் திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி வெள்ளச் சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் கொள்ளக் கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் எள்ளத்தனை தா என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#108 விஞ்சும் நெறியீர் ஒற்றி_உளீர் வியந்தீர் வியப்பு என் இவண் என்றேன் கஞ்சம் இரண்டும் நமை அங்கே கண்டு குவிந்த விரிந்து இங்கே வஞ்ச இரு தாமரை முகையை மறைக்கின்றன நின்-பால் வியந்தாம் எஞ்சல் அற நாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#109 அளியார் ஒற்றி_உடையாருக்கு அன்னம் நிரம்ப விடும் என்றேன் அளி ஆர் குழலாய் பிடி அன்னம் அளித்தால் போதும் ஆங்கு அது நின் ஒளி ஆர் சிலம்பு சூழ் கமலத்து உளதால் கடகம் சூழ் கமலத்து எளியார்க்கு இடு நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#110 விச்சைப் பெருமான் எனும் ஒற்றி விடங்கப் பெருமான் நீர் முன்னம் பிச்சைப் பெருமான் இன்று மண_பிள்ளைப் பெருமான் ஆம் என்றேன் அச்சைப் பெறும் நீ அ மண_பெண் ஆகி இடையில் ஐயம் கொள் இச்சைப் பெரும் பெண் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#111 படை அம்புயத்தோன் புகழ் ஒற்றிப் பதியீர் அரவப் பணி சுமந்தீர் புடை அம் புயத்தில் என்றேன் செம்பொன்னே கொடை அம்புயத்தினும் நல் நடை அம்புயத்தும் சுமந்தனை நீ நானா அரவப் பணி மற்றும் இடை அம்புயத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#112 கூம்பா ஒற்றியூர்_உடையீர் கொடும் பாம்பு அணிந்தீர் என் என்றேன் ஓம்பாது உரைக்கில் பார்த்திடின் உள் உன்னில் விடம் ஏற்று உன் இடைக் கீழ்ப் பாம்பு ஆவதுவே கொடும் பாம்பு எம் பணிப் பாம்பு அது போல் பாம்பு அல என்று ஏம்பா நிற்ப இசைக்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#113 புயல் சூழ் ஒற்றி_உடையீர் என் புடை என் குறித்தோ போந்தது என்றேன் கயல் சூழ் விழியாய் தனத்தவரைக் காணல் இரப்போர் எதற்கு என்றார் மயல் சூழ் தனம் இங்கு இலை என்றேன் மறையாது எதிர் வைத்து இலை என்றல் இயல் சூழ் அறம் அன்று என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#114 நட வாழ்வு ஒற்றி_உடையீர் நீர் நாகம் அணிந்தது அழகு என்றேன் மடவாய் அது நீர்_நாகம் என மதியேல் அயன் மால் மனம் நடுங்க விட வாய் உமிழும் பட நாகம் வேண்டில் காண்டி என்றே என் இட வாய் அருகே வருகின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#115 கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் வீடு ஆர் பிரம குலம் தேவர் வேந்தர் குலம் நல் வினை வசியப் பாடு ஆர் குலம் ஓர் சக்கரத்தான் பள்ளிக் குலம் எல்லாம் உடையேம் ஏடு ஆர் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#116 நலமாம் ஒற்றி_உடையீர் நீர் நல்ல அழகர் ஆனாலும் குலம் ஏது உமக்கு மாலையிடக் கூடாது என்றேன் நின் குலம் போல் உலகு ஓதுறும் நம் குலம் ஒன்றோ ஓர் ஆயிரத்தெட்டு உயர் குலம் இங்கு இலகா நின்றது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#117 மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் புதல்வர்க்கு ஆனைப் பெரும் குலம் ஓர் புதல்வர்க்கு இசை அம்புலிக் குலமாம் எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் இது மற்றொருத்திக்கு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#118 தேமா பொழில் சூழ் ஒற்றி_உளீர் திகழும் தகர_கால் குலத்தைப் பூமான் நிலத்தில் விழைந்துற்றீர் புதுமை இஃதும் புகழ் என்றேன் ஆமா குலத்தில் அரைக் குலத்துள் அணைந்தே புறம் மற்று அரைக் குலம் கொண்டு ஏமாந்தனை நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#119 அனம் சூழ் ஒற்றிப் பதி_உடையீர் அகிலம் அறிய மன்றகத்தே மனம் சூழ் தகரக் கால் கொண்டீர் வனப்பாம் என்றேன் உலகு அறியத் தனம் சூழ் அகத்தே அணங்கே நீ தானும் தகரத் தலை கொண்டாய் இனம் சூழ் அழகாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#120 பங்கேருகப் பூம் பணை ஒற்றிப் பதியீர் நடு அம்பரம் என்னும் அங்கே ஆட்டுக் கால் எடுத்தீர் அழகு என்றேன் அ அம்பரம் மேல் இங்கே ஆட்டுத் தோல் எடுத்தாய் யாம் ஒன்று இரண்டு நீ என்றால் எங்கே நின் சொல் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#121 மாணப் புகழ் சேர் ஒற்றி_உளீர் மன்று ஆர் தகர வித்தை-தனைக் காணற்கு இனி நான் செயல் என்னே கருதி உரைத்தல் வேண்டும் என்றேன் வேள் நச்சுறும் மெல்_இயலே யாம் விளம்பும் மொழி அ வித்தை உனக்கு ஏணப் புகலும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#122 நல்லார் ஒற்றி_உடையீர் யான் நடக்கோ வெறும் பூ_அணை அணைய அல்லால் அவண் உம்முடன் வருகோ அணையாது அவலத் துயர் துய்க்கோ செல்லா என் சொல் நடவாதோ திரு_கூத்து எதுவோ என விடைகள் எல்லாம் நடவாது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#123 ஆட்டுத் தலைவர் நீர் ஒற்றி அழகீர் அதனால் சிறுவிதிக்கு ஓர் ஆட்டுத் தலை தந்தீர் என்றேன் அன்று ஆல் அறவோர் அறம் புகல ஆட்டுத் தலை முன் கொண்டதனால் அஃதே பின்னர் அளித்தாம் என்று ஈட்டு உத்தரம் ஈந்து அருள்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#124 ஒற்றிப் பெருமான் உமை விழைந்தார் ஊரில் வியப்பு ஒன்று உண்டு இரவில் கொற்றக் கமலம் விரிந்து ஒரு கீழ்க் குளத்தே குமுதம் குவிந்தது என்றேன் பொற்றைத் தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது எற்றைத் தினத்தும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#125 இடம் சேர் ஒற்றி_உடையீர் நீர் என்ன சாதியினர் என்றேன் தடம் சேர் முலையாய் நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி என்றார் விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் இடம் சேர் மொழி-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#126 உடையார் என்பார் உமை ஒற்றி_உடையீர் பணம்-தான் உடையீரோ நடையாய் ஏற்கின்றீர் என்றேன் நங்காய் நின் போல் ஒரு பணத்தைக் கடையார் எனக் கீழ் வைத்து அருமை காட்டேம் பணிகொள் பணம் கோடி இடையாது உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#127 என் ஆர்_உயிர்க்குப் பெரும் துணையாம் எங்கள் பெருமான் நீர் இருக்கும் நல் நாடு ஒற்றி அன்றோ-தான் நவில வேண்டும் என்று உரைத்தேன் முன் நாள் ஒற்றி எனினும் அது மொழிதல் அழகோ தாழ்தல் உயர்வு இ நானிலத்து உண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#128 பெரும் தாரணியோர் புகழ் ஒற்றிப் பெருமான் இவர்-தம் முகம் நோக்கி அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன் வருந்தாது இங்கே அருந்து அமுத மனையாளாக வாழ்வினொடும் இருந்தாய் அடைந்தேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#129 செம்மை வளம் சூழ் ஒற்றி_உளீர் திகழாக் கரித் தோல் உடுத்தீரே உம்மை விழைந்த மடவார்கள் உடுக்கக் கலை உண்டோ என்றேன் எம்மை அறியாய் ஒரு கலையோ இரண்டோ அனந்தம் கலை மெய்யில் இம்மை உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#130 கற்றைச் சடையீர் திருவொற்றிக் காவல்_உடையீர் ஈங்கு அடைந்தீர் இற்றைப் பகலே நன்று என்றேன் இற்றை இரவே நன்று எமக்குப் பொற்றைத் தனத்தாய் கை அமுதம் பொழியாது அலர் வாய்ப் புத்தமுதம் இற்றைக்கு அளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#131 கற்றீர் ஒற்றீர் முன்பு ஒரு வான் காட்டில் கவர்ந்து ஓர் நாட்டில் வளை விற்றீர் இன்று என் வளை கொண்டீர் விற்கத் துணிந்தீரோ என்றேன் மற்று ஈர் குழலாய் நீ எம் ஓர் மனையின் வளையைக் கவர்ந்து களத் தில் தீது அணிந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#132 உடுக்கும் புகழார் ஒற்றி_உளார் உடை தா என்றார் திகை எட்டும் உடுக்கும் பெரியீர் எது கண்டோ உரைத்தீர் என்றேன் திகை முழுதும் உடுக்கும் பெரியவரைச் சிறிய ஒரு முன்தானையால் மூடி எடுக்கும் திறம் கண்டு என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#133 கா வாய் ஒற்றிப் பதி_உடையீர் கல்_ஆனைக்குக் கரும்பு அன்று தேவாய் மதுரையிடத்து அளித்த சித்தர் அலவோ நீர் என்றேன் பாவாய் இரு கல் ஆனைக்குப் பரிவில் கரும்பு இங்கு இரண்டு ஒரு நீ ஈவாய் இது சித்து என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#134 ஊட்டும் திரு வாழ் ஒற்றி_உளீர் உயிரை உடலாம் செப்பிடை வைத்து ஆட்டும் திறத்தீர் நீர் என்றேன் அணங்கே இரு செப்பிடை ஆட்டும் தீட்டும் புகழ் அன்றியும் உலகைச் சிறிது ஓர் செப்பில் ஆட்டுகின்றாய் ஈட்டும் திறத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#135 கந்த வனம் சூழ் ஒற்றி_உளீர் கண் மூன்று_உடையீர் வியப்பு என்றேன் வந்த எமை-தான் பிரி போதும் மற்றையவரைக் காண் போதும் சந்தம் மிகும் கண் இரு_மூன்றும் தகு நான்கு_ஒன்றும் தான் அடைந்தாய் இந்த வியப்பு என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#136 ஆழி விடையீர் திருவொற்றி அமர்ந்தீர் இருவர்க்கு அகம் மகிழ்வான் வீழி-அதனில் படிக்காசு வேண்டி அளித்தீராம் என்றேன் வீழி-அதனில் படிக்கு ஆசு வேண்டாது அளித்தாய் அளவு ஒன்றை ஏழில் அகற்றி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#137 உற்ற இடத்தே பெரும் துணையாம் ஒற்றிப் பெருமான் உம் புகழைக் கற்ற இடத்தே முக்கனியும் கரும்பும் அமுதும் கயவாவோ மற்ற இடச் சீர் என் என்றேன் மற்றை உபயவிடமும் முதல் எற்ற விடமே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#138 யான் செய் தவத்தின் பெரும் பயனே என் ஆர்_அமுதே என் துணையே வான் செய் அரசே திருவொற்றி வள்ளால் வந்தது என் என்றேன் மான் செய் விழிப் பெண்ணே நீ ஆண் வடிவு ஆனது கேட்டு உள்ளம் வியந் தேன் கண்டிடவே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#139 கருணைக் கடலே என் இரண்டு கண்ணே முக்கண் கரும்பே செவ் வருணப் பொருப்பே வளர் ஒற்றி வள்ளல் மணியே மகிழ்ந்து அணையத் தருணப் பருவம் இஃது என்றேன் தவிர் அன்று எனக் காட்டியது உன்றன் இருள் நச்சு அளகம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#140 காவிக் களம் கொள் கனியே என் கண்ணுள் மணியே அணியே என் ஆவித் துணையே திருவொற்றி அரசே அடைந்தது என் என்றேன் பூவில் பொலியும் குழலாய் நீ பொன்னின் உயர்ந்தாய் எனக் கேட்டு உன் ஈவைக் கருதி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#141 கண்ணும் மனமும் களிக்கும் எழில் கண் மூன்று_உடையீர் கலை_உடையீர் நண்ணும் திரு வாழ் ஒற்றி_உளீர் நடம் செய் வல்லீர் நீர் என்றேன் வண்ணம் உடையாய் நின்றனைப் போல் மலர் வாய் நடம் செய் வல்லோமோ எண்ண வியப்பாம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#142 தாங்கும் விடை மேல் அழகீர் என்றன்னைக் கலந்தும் திருவொற்றி ஓங்கும் தளியில் ஒளித்தீர் நீர் ஒளிப்பில் வல்லராம் என்றேன் வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவிக் கலந்து மலர்த் தளியில் ஈங்கு இன்று ஒளித்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#143 அம்மை அடுத்த திரு_மேனி அழகீர் ஒற்றி அணி நகரீர் உம்மை அடுத்தோர் மிக வாட்டம் உறுதல் அழகோ என்று உரைத்தேன் நம்மை அடுத்தாய் நமை அடுத்தோர் நம் போல் உறுவர் அன்று எனில் ஏது எம்மை அடுத்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#144 உண் கள் மகிழ்வால் அளி மிழற்றும் ஒற்றி நகரீர் ஒரு மூன்று கண்கள்_உடையீர் என் காதல் கண்டும் இரங்கீர் என் என்றேன் பண் கொள் மொழியாய் நின் காதல் பல் நாள் சுவை செய் பழம் போலும் எண் கொண்டு இருந்தது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#145 வணம் கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம் சேர் ஒற்றி மா நகரீர் குணம் கேழ் மிடற்று ஓர் பால் இருளைக் கொண்டீர் கொள்கை என் என்றேன் அணங்கே ஒரு பால் அன்றி நின் போல் ஐம்பால் இருள் கொண்டிடச் சற்றும் இணங்கேம் இணங்கேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#146 கரும்பில் இனியீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் பெரும் பை அணியீர் திருவொற்றிப் பெரியீர் எது நும் பெயர் என்றேன் அரும்பு அண் முலையாய் பிறர் கேட்க அறைந்தால் அளிப்பீர் எனச் சூழ்வர் இரும்_பொன் இலையே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#147 நிலையைத் தவறார் தொழும் ஒற்றி நிமலப் பெருமான் நீர் முன்னம் மலையைச் சிலையாக் கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் வலையத்து அறியாச் சிறுவர்களும் மலையைச் சிலையாக் கொள்வர்கள் ஈது இலை அற்புதம்-தான் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#148 உதயச் சுடரே_அனையீர் நல் ஒற்றி_உடையீர் என்னுடைய இதயத்து அமர்ந்தீர் என்னே என் எண்ணம் அறியீரோ என்றேன் சுதையில் திகழ்வாய் அறிந்து அன்றோ துறந்து வெளிப்பட்டு எதிர் அடைந்தாம் இதை உற்று அறி நீ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#149 புரக்கும் குணத்தீர் திருவொற்றிப் புனிதரே நீர் போர்க் களிற்றை உரக்கும் கலக்கம் பெற உரித்தீர் உள்ளத்து இரக்கம் என் என்றேன் கரக்கும் இடையாய் நீ களிற்றின் கன்றைக் கலக்கம் புரிந்தனை நின் இரக்கம் இதுவோ என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#150 பதம் கூறு ஒற்றிப் பதியீர் நீர் பசுவில் ஏறும் பரிசு-அதுதான் விதம் கூறு அறத்தின் விதி-தானோ விலக்கோ விளம்பல் வேண்டும் என்றேன் நிதம் கூறிடும் நல் பசும் கன்றை நீயும் ஏறி இடுகின்றாய் இதம் கூறிடுக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#151 யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம் தாகம் உடையார் இவர்-தமக்குத் தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் போகம்_உடையாய் புறத் தண்ணீர் புரிந்து விரும்பாம் அகத் தண்ணீர் ஈக மகிழ்வின் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#152 வள நீர் ஒற்றி_வாணர் இவர் வந்தார் நின்றார் மாதே நாம் உள நீர்த் தாக மாற்றுறு நீர் உதவ வேண்டும் என்றார் நான் குள நீர் ஒன்றே உளது என்றேன் கொள்ளேம் இடை மேல் கொளும் இந்த இளநீர் தருக என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#153 மெய் நீர் ஒற்றி_வாணர் இவர் வெம்மை உள நீர் வேண்டும் என்றார் அ நீர் இலை நீர் தண்ணீர்-தான் அருந்தில் ஆகாதோ என்றேன் முந்நீர்_தனையை_அனையீர் இ முது நீர் உண்டு தலைக்கு ஏறிற்று இ நீர் காண்டி என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#154 சீலம் சேர்ந்த ஒற்றி_உளீர் சிறிதாம் பஞ்ச காலத்தும் கோலம் சார்ந்து பிச்சை கொளக் குறித்து வருவீர் என் என்றேன் காலம் போகும் வார்த்தை நிற்கும் கண்டாய் இது சொல் கடன் ஆமோ ஏலம் குழலாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#155 ஊற்று ஆர் சடையீர் ஒற்றி_உளீர் ஊரூர் இரக்கத் துணிவுற்றீர் நீற்றால் விளங்கும் திரு_மேனி நேர்ந்து இங்கு இளைத்தீர் நீர் என்றேன் சோற்றால் இளைத்தேம் அன்று உமது சொல்லால் இளைத்தேம் இன்று இனி நாம் ஏற்றால் இகழ்வே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#156 நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் தேரை விழுங்கும் பசு என்றேன் செறி நின் கலைக்குள் ஒன்று உளது காரை விழுங்கும் எமது பசுக் கன்றின் தேரை நீர்த் தேரை ஈர விழுங்கும் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#157 பொன் நேர் மணி மன்று உடையீர் நீர் புரிந்தது எது எம் புடை என்றேன் இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார் என் என்றேன் இயம்புதுமேல் மின்னே நினது நடைப் பகையாம் மிருகம் பறவை-தமைக் குறிக்கும் என்னே உரைப்பது என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#158 அடையார் புரம் செற்று அம்பலத்தே ஆடும் அழகீர் எண் பதிற்றுக் கடையாம் உடலின் தலை கொண்டீர் கரம் ஒன்றினில் அற்புதம் என்றேன் உடையாத் தலை மேல் தலையாக உன் கை ஈர்_ஐஞ்ஞூறு கொண்டது இடையா வளைக்கே என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#159 தேவர்க்கு அரிய ஆனந்தத் திரு_தாண்டவம் செய் பெருமான் நீர் மேவக் குகுகுகுகுகு அணி வேணி_உடையீராம் என்றேன் தாவக் குகுகுகுகுகுகுகுத் தாமே ஐந்தும் விளங்க அணி ஏவு_அல் குணத்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#160 கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் குறித்தீர் வருதற்கு அஞ்சுவல் யான் ஒன்றப் பெரும் கோள் என் மீதும் உரைப்பார் உண்டு என்று உணர்ந்து என்றேன் நன்று அப்படியேல் கோளிலியாம் நகரும் உடையேம் நங்காய் நீ இன்று அச்சுறல் என் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#161 புரியும் சடையீர் அமர்ந்திடும் ஊர் புலியூர் எனில் எம்_போல்வார்க்கும் உரியும் புலித்தோல்_உடையீர் போல் உறுதற்கு இயலுமோ என்றேன் திரியும் புலியூர் அன்று நின் போல் தெரிவையரைக் கண்டிடில் பயந்தே இரியும் புலியூர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#162 தெவ்_ஊர் பொடிக்கும் சிறு_நகை இ தேவர்-தமை நான் நீர் இருத்தல் எ ஊர் என்றேன் நகைத்து அணங்கே ஏழூர் நாலூர் என்றார் பின் அ ஊர்த் தொகையில் இருத்தல் அரிதாம் என்றேன் மற்று அதில் ஒவ்_ஊர் இ ஊர் எடுத்து ஆய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#163 மணம்கொள் இதழிச் சடையீர் நீர் வாழும் பதி யாது என்றேன் நின் குணம் கொள் மொழி கேட்டு ஓர் அளவு குறைந்த குயிலாம் பதி என்றார் அணங்கின் மறையூராம் என்றேன் அஃது அன்று அருள் ஓத்தூர் இஃது இணங்க உடையேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#164 ஆற்றுச் சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் சோற்றுத்துறை என்றார் நுமக்குச் சோற்றுக் கருப்பு ஏன் சொலும் என்றேன் தோற்றுத் திரிவேம் அன்று நின் போல் சொல்லும் கருப்பு என்று உலகு இயம்ப ஏற்றுத் திரியேம் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ.

மேல்

#165 ஓங்கும் சடையீர் நெல்வாயில் உடையேம் என்றீர் உடையீரேல் தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் ஏங்கும்படி நும் இடைச் சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் ஈங்கும் காண்டிர் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ. *

மேல்

2.இரண்டாம் திருமுறை


001. புண்ணிய விளக்கம்
002. அருள் நாம விளக்கம்
003. ஸ்ரீ சிவஷண்முகநாம ஸங்கீர்த்தன லகரி
004. நமச்சிவாய ஸங்கீர்த்தன லகரி
005. நற்றுணை விளக்கம்
006. திருஅருள் வழக்க விளக்கம்
007. சிவ புண்ணியத் தேற்றம்
008. முத்தி உபாயம்
009. அவலத் தழுங்கல்
010. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்
011. அபராதத் தாற்றாமை
012. அருளியல் வினாவல்
013. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
014. காட்சிப் பெருமிதம்
015. கொடைமடப் புகழ்ச்சி
016. திருஅருள் வேட்கை
017. அபராத விண்ணப்பம்
018. அறிவரும் பெருமை
019. அருள்விடை வேட்கை
020. எழுத்தறியும் பெருமான் மாலை
021. நெஞ்சொடு நேர்தல்
022. திருப்புகழ் விலாசம்
023. திருச்சாதனத் தெய்வத் திறம்
024. தியாக வண்ணப் பதிகம்
025. ஆடலமுதப் பத்து
026. திருஅடிச் சரண்புகல்
027. சிவானந்தப் பத்து
028. சந்நிதி முறையீடு
029. தவத்திறம் போற்றல்
030. நெஞ்சுறுத்த திரு நேரிசை
031. சிகாமணி மாலை
032. கலி முறையீடு
033. எதிர்கொள் பத்து
034. நெஞ்சொடு நேர்தல்
035. நெஞ்சறை கூவல்
036. நெஞ்சைத் தேற்றல்
037. நெஞ்சறிவுறூஉ
038. நெடுமொழி வஞ்சி
039. பற்றின் திறம் பகர்தல்
040. அடிமைத் திறத் தலைசல்
041. அவத் தொழிற் கலைசல்
042. நாள் அவத்து அலைசல்
043. அவல மதிக்கு அலைசல்
044. ஆனா வாழ்வின் அலைசல்
045. அருள் திறந்து அலைசல்
046. திரு விண்ணப்பம்
047. பிரசாத விண்ணப்பம்
048. வழிமொழி விண்ணப்பம்
049. சிறுமை விண்ணப்பம்
050. ஆற்றா விண்ணப்பம்
051. இரங்கல் விண்ணப்பம்
052. காதல் விண்ணப்பம்
053. பொருள் விண்ணப்பம்
054. கொடி விண்ணப்பம்
055. நாடக விண்ணப்பம்
056. திருவண்ண விண்ணப்பம்
057. மருட்கை விண்ணப்பம்
058. கொடைமட விண்ணப்பம்
059. சிறு விண்ணப்பம்
060. பெரு விண்ணப்பம்
061. திருக்காட்சிக் கிரங்கல்
062. திரு அருட் கிரங்கல்
063. எண்ணத் திரங்கல்
064. நெஞ்சு நிலைக் கிரங்கல்
065. தனிமைக் கிரங்கல்
066. கழிபகற் கிரங்கல்
067. அர்ப்பித் திரங்கல்
068. அச்சத் திரங்கல்
069. புறமொழிக் கிரங்கல்
070. கருணை பெறா திரங்கல்
071. திரு அருட் பதிகம் - திரு அண்ணாமலை
072. பிரசாதப் பதிகம்
073. பிரார்த்தனைப் பதிகம்
074. திருப்புகற் பதிகம்
075. சிந்தைத் திருப் பதிகம்
076. உய்கைத் திருப் பதிகம்
077. ஆனந்தப் பதிகம்
078. திரு வண்ணப் பதிகம்
079. போற்றித் திருப் பதிகம்
080. விண்ணப்பப் பதிகம் - திரு ஆரூர்
081. தரிசனப் பதிகம்
082. அபராத விண்ணப்பம்
083. கலி விண்ணப்பம்
084. கருணை விண்ணப்பம்
085. அடிமைப் பதிகம்
086. உள்ளப் பஞ்சகம்
087. சரணப் பதிகம்
088. நெஞ்சொடு நெகிழ்தல்
089. பொதுத் தனித் திருவெண்பா
090. திருக்குறிப்பு நாட்டம்
091. தனித் திருப் புலம்பல்
092. பரம ராசியம்
093. திருப்புகழ்ச்சி
094. தனித் திரு விருத்தம்
095. அறநிலை விளக்கம்
096. அருள்நிலை விளக்கம்
097. திருமருந் தருள் நிலை
098. திரு அருள் விலாசம்
099. சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
100. அம்மை திருப்பதிகம்
101. கலைமகளார் திருப் பதிகம்
102. நற்றாய் கவன்றது
103. சல்லாப லகரி
 
 

 

@1 புண்ணிய விளக்கம்

மேல்

#1 பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும் கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும் ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#2 கரு மால் அகற்றும் இறப்பு-அதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும் பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும் அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#3 வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும் ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#4 கோல மலர்த் தாள் துணை வழுத்தும் குலத் தொண்டு அடையக் கூட்டுவிக்கும் நீல மணி_கண்டப் பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும் ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#5 வஞ்சப் புலக் காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும் கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும் அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#6 கண் கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டி-தனை விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்குத் தோற்றுவிக்கும் அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#7 நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனைத் தூய விடை மேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும் ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#8 எண்ண இனிய இன் அமுதை இன்பக் கருணைப் பெரும்_கடலை உண்ண முடியாச் செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும் அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#9 சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண் அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#10 உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவைக் கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.

மேல்

#11 உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனைக் கற்ற மனத்தில் புகும் கருணைக் கனியை விடை மேல் காட்டுவிக்கும் அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய் செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே

மேல்

@2. அருள் நாம விளக்கம்

மேல்

#1 வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய்த் தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#2 தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால் தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால் இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம் பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார் உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#3 மின்னும் நுண் இடைப் பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பொன் உலாவிய பூ_உடையானும் புகழ் உலாவிய பூ_உடையானும் உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#4 பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே புலைய மங்கையர் புழு நெறி அளற்றில் என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய்த் தொண்டர்-தங்கள் நாச் சுவை பெற ஊறி ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#5 வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால் மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம் இரைக்கும் மாக் கடலிடை விழுந்து அயரேல் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ கனி-கொலோ எனக் கனிவுடன் உயர்ந்தோர் உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#6 வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய் மறலி வந்து உனை வா என அழைக்கில் ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து போது வைகிய நான்முகன் மகவான் புணரி வைகிய பூ_மகள் கொழுநன் ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#7 நண்ணும் மங்கையர் புழு மல_குழியில் நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய் எண்ணும் என் மொழி குரு மொழி ஆக எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய்ப் பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#8 பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால் பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய் எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து சந்தமாம் புகழ் அடியரில் கூடிச் சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#9 மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய் எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய் எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து தட்டு இலாத நல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

#10 நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய் நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய் இலவு காத்தனை என்னை நின் மதியோ எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த பத்தர் உள்ளகப் பதுமங்கள்-தோறும் உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம் ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.

மேல்

@3. ஸ்ரீ சிவஷண்முகநாம ஸங்கீர்த்தன லகரி

மேல்

#1 பழுது நேர்கின்ற வஞ்சகர் கடை வாய்ப் பற்றி நின்றதில் பயன் எது கண்டாய் பொழுது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகித் தொழுது சண்முக சிவசிவ என நம் தோன்றலார்-தமைத் துதித்தவர் திருமுன் பழுது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#2 சூது நேர்கின்ற முலைச்சியர் பொருட்டாச் சுற்றி நின்றதில் சுகம் எது கண்டாய் போது போகின்றது எழுதி என் நெஞ்சே பொழில் கொள் ஒற்றி அம் புரி-தனக்கு ஏகி ஓது சண்முக சிவசிவ எனவே உன்னி நெக்குவிட்டு உருகி நம் துயராம் ஆது சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#3 ஞாலம் செல்கின்ற வஞ்சகர் கடை வாய் நண்ணி நின்றதில் நலம் எது கண்டாய் காலம் செல்கின்றது எழுதி என் நெஞ்சே கருதும் ஒற்றி அம் கடி நகர்க்கு ஏகிக் கோலம் செய் அருள் சண்முக சிவ ஓம் குழகவோ எனக் கூவி நம் துயராம் ஆலம் சொல்லுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#4 மருட்டி வஞ்சகம் மதித்திடும் கொடியார் வாயல் காத்து இன்னும் வருந்தில் என் பயனோ இருட்டிப்போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித் தெருள் திறம் செயும் சண்முக சிவ ஓம் சிவ நமா எனச் செப்பி நம் துயராம் அரிட்டை ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#5 இல்லை என்பதே பொருள் எனக் கொண்டோர் ஈன வாயிலில் இடர்ப்படுகின்றாய் எல்லை செல்கின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகித் தொல்லை ஓம் சிவ சண்முக சிவ ஓம் தூய என்று அடி தொழுது நாம் உற்ற அல்லல் ஓதுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#6 கரவு நெஞ்சினர் கடைத்தலைக்கு உழன்றாய் கலங்கி இன்னும் நீ கலுழ்ந்திடில் கடிதே இரவு போந்திடும் எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகிப் பரவு சண்முக சிவசிவ சிவ ஓம் பர சுயம்பு சங்கர சம்பு நம ஓம் அர என்று ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#7 ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின்றாய் இனி இ சிறு பொழுதும் சாய்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே தகை கொள் ஒற்றி அம் தலத்தினுக்கு ஏகி வாய்ந்து சண்முக நம சிவ சிவ ஓம் வர சுயம்பு சங்கர சம்பு எனவே ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#8 ஈர்ந்த நெஞ்சினார் இடம்-தனில் இருந்தே இடர்கொண்டாய் இனி இச் சிறு பொழுதும் பேர்ந்து போகின்றது எழுதி என் நெஞ்சே பிறங்கும் ஒற்றி அம் பெரு நகர்க்கு ஏகி ஓர்ந்து சண்முக சரவணபவ ஓம் ஓம் சுயம்பு சங்கர சம்பு எனவே ஆர்ந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#9 கமைப்பின் ஈகிலா வஞ்சகர் கடையைக் காத்திருக்கலை கடுகி இப் பொழுதும் இமைப்பில் போகின்றது எழுதி என் நெஞ்சே எழில் கொள் ஒற்றியூர் எனும் தலத்து ஏகி எமைப் புரந்த சண்முக சிவசிவ ஓம் இறைவ சங்கர அரகர எனவே அமைப்பின் ஏத்துதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

#10 உறைந்து வஞ்சர்-பால் குறையிரந்து அவமே உழல்கின்றாய் இனி உரைக்கும் இப் பொழுதும் குறைந்துபோகின்றது எழுதி என் நெஞ்சே குலவும் ஒற்றி அம் கோ நகர்க்கு ஏகி நிறைந்த சண்முக குரு நம சிவ ஓம் நிமல சிற்பர அரகர எனவே அறைந்து போற்றுதும் ஐயுறல் என் மேல் ஆணை காண் அவர் அருள் பெறல் ஆமே.

மேல்

@4. நமச்சிவாய ஸங்கீர்த்தன லகரி

மேல்

#1 சொல் அவாவிய தொண்டர்-தம் மனத்தில் சுதந்தரம் கொடு தோன்றிய துணையைக் கல் அவாவிய ஏழையேன் நெஞ்சும் கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச் செல் அவாவிய பொழில் திருவொற்றித் தேனைத் தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#2 அட்ட_மூர்த்தம்-அது ஆகிய பொருளை அண்டர் ஆதியோர் அறிகிலாத் திறத்தை விட்ட வேட்கையர்க்கு அங்கையில் கனியை வேத மூலத்தை வித்தக விளைவை எட்ட அரும் பரமானந்த நிறைவை எங்கும் ஆகி நின்று இலங்கிய ஒளியை நட்டம் ஆடிய நடன நாயகத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#3 உம்பர் வான் துயர் ஒழித்து அருள் சிவத்தை உலகு எலாம் புகழ் உத்தமப் பொருளைத் தம்பமாய் அகிலாண்டமும் தாங்கும் சம்புவைச் சிவ தருமத்தின் பயனைப் பம்பு சீர் அருள் பொழிதரு முகிலைப் பரம ஞானத்தைப் பரம சிற்சுகத்தை நம்பினோர்களை வாழ்விக்கும் நலத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#4 மாலின் உச்சி மேல் வதிந்த மா மணியை வழுத்தும் நாவகம் மணக்கும் நல் மலரைப் பாலின் உள் இனித்து ஓங்கிய சுவையைப் பத்தர்-தம் உளம் பரிசிக்கும் பழத்தை ஆலின் ஓங்கிய ஆனந்த_கடலை அம்பலத்தில் ஆம் அமுதை வேதங்கள் நாலின் ஒற்றியூர் அமர்ந்திடும் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#5 உள் நிறைந்து எனை ஒளித்திடும் ஒளியை உண்ணஉண்ண மேல் உவட்டுறா நறவைக் கண் நிறைந்ததோர் காட்சியை யாவும் கடந்த மேலவர் கலந்திடும் உறவை எண் நிறைந்த மால் அயன் முதல் தேவர் யாரும் காண்கிலா இன்பத்தின் நிறைவை நண்ணி ஒற்றியூர் அமர்ந்து அருள் சிவத்தை நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#6 திக்கு மாறினும் எழு_கடல் புவி மேல் சென்று மாறினும் சேண் விளங்கு ஒளிகள் உக்கு மாறினும் பெயல் இன்றி உலகில் உணவு மாறினும் புவிகள் ஓர் ஏழும் மிக்கு மாறினும் அண்டங்கள் எல்லாம் விழுந்து மாறினும் வேதங்கள் உணரா நக்கன் எம் பிரான் அருள் திரு_பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#7 பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#8 உடை உடுத்திட இடை மறந்தாலும் உலகுளோர் பசிக்கு உண மறந்தாலும் படையெடுத்தவர் படை மறந்தாலும் பரவை தான் அலைப்பது மறந்தாலும் புடை அடுத்தவர் தமை மறந்தாலும் பொன்னை வைத்த அப் புதை மறந்தாலும் நடை அடுத்தவர் வழி மறந்தாலும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#9 வன்மை செய்திடும் வறுமை வந்தாலும் மகிழ்வுசெய் பெரு வாழ்வு வந்தாலும் புன்மை மங்கையர் புணர்ச்சி நேர்ந்தாலும் பொருந்தினாலும் நின்றாலும் சென்றாலும் தன்மை_இல்லவர் சார்பு இருந்தாலும் சான்ற மேலவர்-தமை அடைந்தாலும் நன்மை என்பன யாவையும் அளிக்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#10 இன்னும் பற்பல நாள் இருந்தாலும் இ கணம்-தனிலே இறந்தாலும் துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மா நரகத்து உழன்றாலும் என்ன மேலும் இங்கு எனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்று ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

@5. நற்றுணை விளக்கம்

மேல்

#1 எஞ்சவேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண்டு ஓய்ந்தனை என்னினும் இனி நீ அஞ்சவேண்டியது என்னை என் நெஞ்சே அஞ்சல் அஞ்சல் காண் அரு_மறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்-கண் அமுதா நஞ்சை வேண்டிய நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#2 காவின்_மன்னவன் எதிர்க்கினும் காமன் கணைகள் ஏவினும் காலனே வரினும் பூவின்_மன்னவன் சீறினும் திரு_மால் போர்க்கு நேரினும் பொருள் அல நெஞ்சே ஓவு இல் மா துயர் எற்றினுக்கு அடைந்தாய் ஒன்றும் அஞ்சல் நீ உளவு அறிந்திலையோ நாவின்_மன்னரைக் கரை-தனில் சேர்த்த நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#3 நீட்டமுற்றதோர் வஞ்சக மடவார் நெடும் கண் வேல் பட நிலையது கலங்கி வாட்டமுற்றனை ஆயினும் அஞ்சேல் வாழி நெஞ்சமே மலர்_கணை தொடுப்பான் கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனைக் கொளுவிய நுதல் தீ நாட்டமுற்றதோர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#4 எம்மை வாட்டும் இப் பசியினுக்கு எவர்-பால் ஏகுவோம் என எண்ணலை நெஞ்சே அம்ம ஒன்று நீ அறிந்திலை போலும் ஆல_கோயிலுள் அன்று சுந்தரர்க்காய் செம்மை மா மலர்ப் பதங்கள் நொந்திடவே சென்று சோறு இரந்து அளித்து அருள்செய்தோன் நம்மை ஆளுடை நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#5 ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என் செய்வோம் இனி அ வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே வாடுகின்றனை அஞ்சலை நெஞ்சே மார்க்கண்டேயர்-தம் மாண்பு அறிந்திலையோ நாடுகின்றவர் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#6 மலங்கும் மால் உடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என் நெஞ்சே கலங்குறேல் அருள் திரு_வெண் நீறு எனது கரத்து இருந்தது கண்டிலை போலும் விலங்குறாப் பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா நலம் கொள் செஞ்சடை_நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#7 மாலும் துஞ்சுவான் மலரவன் இறப்பான் மற்றை வானவர் முற்றிலும் அழிவார் ஏலும் நல் துணை யார் நமக்கு என்றே எண்ணிநிற்றியோ ஏழை நீ நெஞ்சே கோலும் ஆயிரம்கோடி அண்டங்கள் குலைய நீக்கியும் ஆக்கியும் அளிக்கும் நாலு மா மறைப் பரம்பொருள் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#8 கந்த வண்ணமாம் கமலன் மால் முதலோர் கண்டிலார் எனில் கைலை அம் பதியை எந்தவண்ணம் நாம் காண்குவது என்றே எண்ணிஎண்ணி நீ ஏங்கினை நெஞ்சே அந்த வண்ண வெள் ஆனை மேல் நம்பி அமர்ந்து சென்றதை அறிந்திலை போலும் நம்-தம் வண்ணமாம் நாதன்-தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#9 வீர மாந்தரும் முனிவரும் சுரரும் மேவுதற்கொணா வெள்ளியங்கிரியைச் சேர நாம் சென்று வணங்கும் வாறு எதுவோ செப்பு என்றே எனை நச்சிய நெஞ்சே ஊரனாருடன் சேரனார் துரங்கம் ஊர்ந்து சென்ற அ உளவு அறிந்திலையோ நாரம் ஆர் மதிச் சடையவன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

#10 தலங்கள்-தோறும் சென்று அ விடை அமர்ந்த தம்பிரான் திரு_தாளினை வணங்கி வலம்கொளும்படி என்னையும் கூட வா என்கின்றனை வாழி என் நெஞ்சே இலங்கள்-தோறும் சென்று இரந்திடும் அவனே என்னை உன்னையும் ஈர்க்குவன் அதற்கு நலம் கொளும் துணை யாது எனில் கேட்டி நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே.

மேல்

@6. திருஅருள் வழக்க விளக்கம்

மேல்

#1 தோடு_உடையார் புலித்தோல்_உடையார் கடல் தூங்கும் ஒரு மாடு_உடையார் மழு மான்_உடையார் பிரமன் தலையாம் ஓடு_உடையார் ஒற்றியூர்_உடையார் புகழ் ஓங்கிய வெண் காடு_உடையார் நெற்றிக்கண்_உடையார் எம் கடவுளரே.

மேல்

#2 வண்ணப் பல் மா மலர் மாற்றும்படிக்கு மகிழ்ந்து எமது திண்ணப்பர் சாத்தும் செருப்பு அடி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய் உண்ணப் பரிந்து நல் ஊன் தர உண்டு கண் ஒத்தக் கண்டே கண்ணப்ப நிற்க எனக் கை தொட்டார் எம் கடவுளரே.

மேல்

#3 செல் இடிக்கும் குரல் கார் மத வேழச் சின உரியார் வல் அடுக்கும் கொங்கை மாது_ஒரு_பாகர் வடப் பொன்_வெற்பாம் வில் எடுக்கும் கையர் சாக்கியர் அன்று விரைந்து எறிந்த கல்லடிக்கும் கதி காட்டினர் காண் எம் கடவுளரே.

மேல்

#4 ஏழியல் பண் பெற்று அமுதோடு அளாவி இலங்கு தமிழ்க் கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்டக் கிளர்ந்த நல் சீர் வீழியில் தம் பதிக்கே விடை கேட்க வெற்பாளுடனே காழியில் தன் உருக் காட்டினரால் எம் கடவுளரே.

மேல்

#5 நாட்டில் புகழ்பெற்ற நாவுக்கரசர் முன்_நாள் பதிகப் பாட்டிற்கு இரக்கம்_இல்லீர் எம்பிரான் எனப் பாட அன்றே ஆட்டிற்கு இசைந்த மலர் வாழ்த்தி வேதம் அமைத்த மறைக் காட்டில் கதவம் திறந்தனரால் எம் கடவுளரே.

மேல்

#6 பைச்சு ஊர் அரவப் பட நடத்தான் அயன் பற்பல நாள் எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையாப் பதம் ஏய்ந்து மண் மேல் வைச்சு ஊரன் வன் தொண்டன் சுந்தரன் என்னும் நம் வள்ளலுக்குக் கச்சூரில் சோறு இரந்து ஊட்டினரால் எம் கடவுளரே.

மேல்

#7 ஏணப் பரி செஞ்சடை முதலான எல்லாம் மறைத்துச் சேணப் பரிகள் நடத்திடுகின்ற நல் சேவகன் போல் மாணப் பரிபவம் நீக்கிய மாணிக்கவாசகர்க்காய்க் காணப் பரி மிசை வந்தனரால் எம் கடவுளரே.

மேல்

#8 எல்லாம் செய வல்ல சித்தரின் மேவி எழில் மதுரை வல்லாரின் வல்லவர் என்று அறியா முடி_மன்னன் முன்னே பல்லாயிர அண்டமும் பயம் எய்தப் பராக்கிரமித்துக் கல்லானை தின்னக் கரும்பு அளித்தார் எம் கடவுளரே.

மேல்

#9 மால் எடுத்து ஓங்கிய மால் அயன் ஆதிய வானவரும் ஆல் அடுத்து ஓங்கிய அந்தணனே என்று அடைந்து இரண்டு பால் எடுத்து ஏத்த நம் பார்ப்பதி காணப் பகர்செய் மன்றில் கால் எடுத்து ஆடும் கருத்தர் கண்டீர் எம் கடவுளரே.

மேல்

#10 மால் பதம் சென்ற பின் இந்திரர் நான்முகர் வாமனர் மான் மேல் பதம் கொண்ட உருத்திரர் விண்ணவர் மேல் மற்றுள்ளோ ரால் பதம் கொண்ட பல் ஆயிரம்கோடி அண்டங்கள் எல்லாம் கால் பதம் ஒன்றில் ஒடுக்கி நிற்கார் எம் கடவுளரே.

மேல்

@7 சிவ புண்ணியத் தேற்றம்

மேல்

#1 கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக அட உள் மாசு தீர்த்து அருள் திரு_நீற்றை அணியும் தொண்டரை அன்புடன் காண்க தடவும் இன் இசை வீணை கேட்டு அரக்கன்-தனக்கு வாளொடு நாள் கொடுத்தவனை நடவும் மால் விடை ஒற்றியூர் உடைய நாதன்-தன்னை நாம் நண்ணுதல் பொருட்டே

மேல்

#2 போற்றி நீறு இடாப் புலையரைக் கண்டால் போக போக நீர் புலம் இழந்து அவமே நீற்றின் மேனியர்-தங்களைக் கண்டால் நிற்க நிற்க அ நிமலரைக் காண்க சாற்றின் நல் நெறி ஈது காண் கண்காள் தமனியப் பெரும் தனு எடுத்து எயிலைக் காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பைக் கைலை ஆளனைக் காணுதல் பொருட்டே

மேல்

#3 தெய்வ நீறு இடாச் சிறியரைக் கண்டால் சீறு பாம்பு கண்டு என ஒளித்து ஏக சைவ நீறு இடும் தலைவரைக் கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க செய்பவன் செயலும் அவை உடனே செய்விப்பானுமாய்த் தில்லை அம்பலத்துள் உய்வதே தரக் கூத்து உகந்து ஆடும் ஒருவன் நம் உளம் உற்றிடல் பொருட்டே

மேல்

#4 தூய நீறு இடாப் பேயர்கள் ஒன்று சொல்லுவார் எனில் புல்லென அடைக்க தாய நீறு இடும் நேயர் ஒன்று உரைத்தால் தழுவியே அதை முழுவதும் கேட்க சேய நல் நெறி அணித்தது செவிகாள் சேரமானிடைத் திரு_முகம் கொடுத்து ஆய பாணற்குப் பொன் பெற அருளும் ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே

மேல்

#5 நல்ல நீறு இடா நாய்களின் தேகம் நாற்றம் நேர்ந்திடில் நண் உயிர்ப்பு அடக்க வல்ல நீறு இடும் வல்லவர் எழில் மெய் வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க சொல்ல அரும் பரிமளம் தரும் மூக்கே சொல்லும் வண்ணம் இத் தூய் நெறி ஒன்றாம் அல்லல் நீக்கி நல் அருள்_கடல் ஆடி ஐயர் சேவடி அடைகுதல் பொருட்டே.

மேல்

#6 அருள்செய் நீறு இடார் அமுது உனக்கு இடினும் அ மலத்தினை அருந்துதல் ஒழிக தெருள் கொள் நீறு இடும் செல்வர் கூழ் இடினும் சேர்ந்து வாழ்த்தி அத் திரு அமுது உண்க இருள் செய் துன்பம் நீத்து என்னுடை நாவே இன்ப நல் அமுது இனிது இருந்து அருந்தி மருள் செய் யானையின் தோல் உடுத்து என்னுள் வதியும் ஈசன்-பால் வாழுதல் பொருட்டே.

மேல்

#7 முத்தி நீறு இடார் முன்கையால் தொடினும் முள் உறுத்தல் போல் முனிவுடன் நடுங்க பத்தி நீறு இடும் பத்தர்கள் காலால் பாய்ந்து தைக்கினும் பரிந்து அதை மகிழ்க புத்தி ஈது காண் என்னுடை உடம்பே போற்றலார் புரம் பொடிபட நகைத்தோன் சத்தி வேல் கரத் தனயனை மகிழ்வோன்-தன்னை நாம் என்றும் சார்ந்திடல் பொருட்டே.

மேல்

#8 இனிய நீறு இடா ஈன நாய்ப் புலையர்க்கு எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக இனிய நீறு இடும் சிவன்_அடியவர்கள் எம்மைக் கேட்கினும் எடுத்து அவர்க்கு ஈக இனிய நல் நெறி ஈது காண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு இனிய மால் விடை ஏறிவந்து அருள்வோன் இடம் கொண்டு எம் உளே இசைகுதல் பொருட்டே.

மேல்

#9 நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக ஊடல் நீக்கும் வெண் நீறிடும் அவர்கள் உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க கூட நல் நெறி ஈது காண் கால்காள் குமரன் தந்தை எம் குடி முழுது ஆள்வோன் ஆட அம்பலத்து அமர்ந்தவன் அவன்றன் அருள்_கடல் படிந்து ஆடுதல் பொருட்டே.

மேல்

#10 நிலைகொள் நீறு இடாப் புலையரை மறந்தும் நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக கலை கொள் நீறு இடும் கருத்தரை நாளும் கருதி நின்று உளே கனிந்து நெக்குருக மலை கொள் வில்லினான் மால் விடை உடையான் மலர் அயன் தலை மன்னிய கரத்தான் அலை கொள் நஞ்சு அமுது ஆக்கிய மிடற்றான் அவனை நாம் மகிழ்ந்து அடைகுதல் பொருட்டே.

மேல்

@8. முத்தி உபாயம்

மேல்

#1 ஒற்றி ஊரனைப் பற்றி நெஞ்சமே நிற்றி நீ அருள் பெற்றி சேரவே.

மேல்

#2 சேர நெஞ்சமே தூரம் அன்று காண் வாரம் வைத்தியேல் சாரும் முத்தியே.

மேல்

#3 முத்தி வேண்டுமேல் பத்தி வேண்டுமால் சத்தியம் இது புத்தி நெஞ்சமே.

மேல்

#4 நெஞ்சமே இது வஞ்சமே அல பிஞ்சகன் பதம் தஞ்சம் என்பதே.

மேல்

#5 என்பது ஏற்றவன் அன்பு-அது ஏற்று நீ வன்பு மாற்றுதி இன்பம் ஊற்றவே.

மேல்

#6 ஊற்றம் உற்று வெண்_ நீற்றன் ஒற்றியூர் போற்ற நீங்குமால் ஆற்ற நோய்களே.

மேல்

#7 நோய்கள் கொண்டிடும் பேய்கள் பற்பலர் தூய்தன் ஒற்றியூர்க்கு ஏய்தல் இல்லையே.

மேல்

#8 இல்லை இல்லை காண் ஒல்லை ஒற்றியூர் எல்லை சேரவே அல்லல் என்பதே.

மேல்

@9. அவலத் தழுங்கல்

மேல்

#1 ஊதியம் பெறா ஒதியனேன் மதி போய் உழலும் பாவியேன் உண்மை ஒன்று அறியேன் வாது இயம்புறும் வஞ்சகருடனே வாய் இழுக்குற வன்மைகள் பேசி ஆதி எம்பெருமான் உனை மறந்தேன் அன்பு இலாத என் வன்பினை நினைக்கில் தீது இயம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#2 கல் இகந்தவன் நெஞ்சகக் கொடியேன் கயவர்-தங்களுள் கலந்து நாள்-தோறும் மல் இகந்த வாய் வாதமிட்டு உலறி வருந்துகின்ற துன்மார்க்கத்தை நினைக்கில் இல் இகந்த என் மீது எனக்கே-தான் இகலும் கோபமும் இருக்கின்றதானால் தில்லையாய் உன்றன் உளத்துக்கு என் ஆமோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#3 கைதவத்தர்-தம் களிப்பினில் களித்தே காலம் போக்கினேன் களைகண் மற்று அறியேன் செய் தவத்தர்-தம் திறம் சிறிது உணரேன் செய்வது என்னை நின் திரு_அருள் பெறவே எய் தவத் திரு_அருள் எனக்கு இரங்கி ஈயில் உண்டு மற்று இன்று எனில் இன்றே செய் தவத் திரு_மடந்தையர் நடனம் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#4 அழுத_பிள்ளைக்கே பால் உணவு அளிப்பாள் அன்னை என்பர்கள் அழ வலி இல்லாக் கொழுது நேர் சிறு குழவிக்கும் கொடுப்பாள் குற்றம் அன்று அது மற்று அவள் செயலே தொழுது நின் அடி துதிக்கின்றோர்க்கெனவே துட்டனேனுக்கும் சூழ்ந்து அருள் செயலாம் செழுது மாதவி மலர் திசை மணக்கத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#5 உள்ளியோ என அலறி நின்று ஏத்தி உருகி நெக்கிலா உளத்தன் யான் எனினும் வள்ளியோய் உனை மறக்கவும் மாட்டேன் மற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன் வெள்ளியோ எனப் பொன் மகிழ் சிறக்க விரைந்து மும்மதில் வில் வளைத்து எரித்தோய் தெள்ளியோர் புகழ்ந்து அரகர என்னத் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#6 விருப்பு_இலேன் திருமால் அயன் பதவி வேண்டிக்கொள்க என விளம்பினும் கொள்ளேன் மருப்பின் மா உரியாய் உன்றன் அடியார் மதிக்கும் வாழ்வையே மனம் கொடு நின்றேன் ஒருப்படாத இ என்னளவு இனி உன் உள்ளம் எப்படி அப்படி அறியேன் திரு_புயாசல மன்னர் மா தவத்தோர் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#7 நிலையிலா உலகியல் படும் மனத்தை நிறுத்திலேன் ஒரு நியமமும் அறியேன் விலையிலா மணியே உனை வாழ்த்தி வீட்டு நல் நெறிக் கூட்டு என விளம்பேன் அலையில் ஆர்ந்து எழும் துரும்பு என அலைந்தேன் அற்பனேன் திரு_அருள் அடைவேனே சிலையில் ஆர் அழல் கணை தொடுத்தவனே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#8 காயம் என்பது ஆகாயம் என்று அறியேன் கலங்கினேன் ஒரு களைகணும் இல்லேன் சேய நல் நெறி அணித்து எனக் காட்டும் தெய்வ நின் அருள் திறம் சிறிது அடையேன் தூய நின் அடியவருடன் கூடித் தொழும்புசெய்வதே சுகம் எனத் துணியேன் தீயனேன்-தனை ஆள்வது எவ்வாறோ திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#9 புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் என் இனிப் படும் வண்ணம் அஃது அறியேன் என் செய்கேன் எனை என் செயப் புகுகேன் மின்னினில் பொலி வேணி அம் பெருமான் வேறு அலேன் எனை விரும்பல் உன் கடனே தென் நனிப்படும் சோலை சூழ்ந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

#10 அடியனேன்_அலன் என்னினும் அடியேன் ஆக நின்றனன் அம்மை இம்மையினும் கடியனேன் பிழை யாவையும் பொறுக்கக் கடன் உனக்கு அலால் கண்டிலன் ஐயா பொடி கொள் மேனி எம் புண்ணிய முதலே புன்னை அம் சடைப் புங்கவர் ஏறே செடியர் தேடுறாத் திவ்விய ஒளியே திகழும் ஒற்றியூர்த் தியாக மா மணியே.

மேல்

@10. பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்

மேல்

#1 வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#2 வாய்_இலான் பெரு வழக்கு உரைப்பது போல் வள்ளல் உன் அடி_மலர்களுக்கு அன்பாம் தூய் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெற நினைவாய் கோயிலாக நல் அன்பர்-தம் உளத்தைக் கொண்டு அமர்ந்திடும் குணப் பெரும் குன்றே தேய் இலாத பல் வளம் செறிந்து ஓங்கித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#3 வித்தை இன்றியே விளைத்திடுபவன் போல் மெய்ய நின் இரு மென் மலர்ப் பதத்தில் பத்தி இன்றியே முத்தியை விழைந்தேன் பாவியேன் அருள் பண்புற நினைவாய் மித்தை இன்றியே விளங்கிய அடியார் விழைந்த யாவையும் தழைந்திட அருள்வோய் சித்தி வேண்டிய முனிவரர் பரவித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#4 கலம் இலாது வான் கடல் கடப்பவன் போல் கடவுள் நின் அடி_கமலங்கள் வழுத்தும் நலம் இலாது நின் அருள் பெற விழைந்த நாயினேன் செயும் நவை பொறுத்து அருள்வாய் மலம் இலாத நல் வழியிடை நடப்போர் மனத்துள் மேவிய மா மணிச் சுடரே சிலம் இலாஞ்சம் ஆதிய தருப் பொழில்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#5 போர்க்கும் வெள்ளத்தில் பொன் புதைப்பவன் போல் புலைய நெஞ்சிடைப் புனித நின் அடியைச் சேர்க்கும் வண்ணமே நினைக்கின்றேன் எனினும் சிறியனேனுக்கு உன் திரு_அருள் புரிவாய் கூர்க்கும் நெட்டு இலை வேல் படைக் கரம் கொள் குமரன் தந்தையே கொடிய தீ வினையைத் தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#6 ஓட உன்னியே உறங்குகின்றவன் போல் ஓங்கும் உத்தம உன் அருள்_கடலில் ஆட உன்னியே மங்கையர் மயலில் அழுந்துகின்ற எற்கு அருள் செய நினைவாய் நாட உன்னியே மால் அயன் ஏங்க நாயினேன் உளம் நண்ணிய பொருளே தேட உன்னிய மா தவ முனிவர் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#7 முதல் இலாமல் ஊதியம் பெற விழையும் மூடன் என்ன நின் மொய் கழல் பதம் ஏத் துதல் இலாது நின் அருள் பெற விழைந்தேன் துட்டனேன் அருள் சுகம் பெறுவேனோ நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே சிதல் இலா வளம் ஓங்கி எந்நாளும் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#8 கல்லை உந்தி வான் நதி கடப்பவர் போல் காமம் உந்திய நாம நெஞ்சகத்தால் எல்லை உந்திய பவ_கடல் கடப்பான் எண்ணுகின்றனன் எனக்கு அருள்வாயோ அல்லை உந்திய ஒண் சுடர்_குன்றே அகில கோடிகட்கு அருள் செயும் ஒன்றே தில்லை நின்று ஒளிர் மன்றிடை அமுதே திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#9 நெய்யினால் சுடு நெருப்பு அவிப்பவன் போல் நெடிய துன்பமாம் கொடியவை நிறைந்த பொய்யினால் பவம் போக்கிட நினைத்தேன் புல்லனேனுக்கு உன் நல் அருள் வருமோ கையினால் தொழும் அன்பர்-தம் உள்ள_கமலம் மேவிய விமல வித்தகனே செய்யினால் பொலிந்து ஓங்கி நல் வளங்கள் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

#10 நீர் சொரிந்து ஒளி விளக்கு எரிப்பவன் போல் நித்தம் நின்னிடை நேசம் வைத்திடுவான் பார் சொரிந்திடும் பவ நெறி முயன்றேன் பாவியேன்-தனைக் கூவி நின்று ஆள்வாய் கார் சொரிந்து எனக் கருணை ஈந்து அன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே தேர் சொரிந்த மா மணித் திரு_வீதித் திகழும் ஒற்றியூர்த் தியாக_நாயகனே.

மேல்

@11. அபராதத் தாற்றாமை

மேல்

#1 துச்சிலை விரும்பித் துயர்கொளும் கொடியேன் துட்டனேன் தூய்மை ஒன்று இல்லா எச்சிலை_அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் பச்சிலை இடுவார் பக்கமே மருவும் பரமனே எம் பசுபதியே அச்சிலை விரும்பும்அவர் உளத்து அமுதே ஐயனே ஒற்றியூர் அரைசே.

மேல்

#2 தூங்கினேன் சோம்பற்கு உறைவிடம் ஆனேன் தோகையர் மயக்கிடை அழுந்தி ஏங்கினேன் அவமே இருந்தனன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் வாங்கி மேருவினை வளைத்திடும் பவள மா மணி_குன்றமே மருந்தே ஓங்கி வான் அளவும் பொழில் செறி ஒற்றியூர் வரும் என்னுடை உயிரே.

மேல்

#3 கரப்பவர்க்கு எல்லாம் முற்படும் கொடிய கடையனேன் விடையமே உடையேன் இரப்பவர்க்கு அணுவும் ஈந்திலேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் திரப்படும் கருணைச் செல்வமே சிவமே தெய்வமே தெய்வநாயகமே உரப்படும் அன்பர் உள் ஒளி விளக்கே ஒற்றியூர் வாழும் என் உவப்பே.

மேல்

#4 இல்லை என்பதனுக்கு அஞ்சிடேன் நாய்க்கும் இணை_இலேன் இழிவினேன் துயர்க்கு ஓர் எல்லை மற்று அறியேன் ஒதியனேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே தில்லை வாழ் அரசே தெய்வ மா மணியே திருவொற்றியூர் வரும் தேவே.

மேல்

#5 மண்ணிலே மயங்கும் மனத்தினை மீட்டு உன் மலர்_அடி வழுத்திடச் சிறிதும் எண்ணிலேன் கொடிய ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் விண்ணிலே விளங்கும் ஒளியினுள் ஒளியே விடையில் வந்து அருள் விழி விருந்தே கண்ணிலே விளங்கும் அரும்_பெறல் மணியே காட்சியே ஒற்றி அம் கரும்பே.

மேல்

#6 முட்டியே மடவார் முலை-தலை உழக்கும் மூடனேன் முழு புலை முறியேன் எட்டியே அனையேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் ஒட்டியே அன்பர் உளத்து எழும் களிப்பே ஒளிக்குள் ஆம் சோதியே கரும்பின் கட்டியே தேனே சடை உடைக் கனியே காலமும் கடந்தவர் கருத்தே.

மேல்

#7 கருது என அடியார் காட்டியும் தேறாக் கல்_மன குரங்கு_அனேன் உதவா எருது என நின்றேன் பாவியேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் மருதிடை நின்ற மாணிக்க மணியே வன் பவம் தீர்ந்திடும் மருந்தே ஒருதிறம் உடையோர் உள்ளத்துள் ஒளியே ஒற்றியூர் மேவும் என் உறவே.

மேல்

#8 வைதிலேன் வணங்காது இகழ்பவர்-தம்மை வஞ்சனேன் நின் அடியவர்-பால் எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் கொய்து மா மலர் இட்டு அருச்சனை_புரிவோர் கோல நெஞ்சு ஒளிர் குண_குன்றே உய்திறம் உடையோர் பரவும் நல் ஒற்றியூர்-அகத்து அமர்ந்து அருள் ஒன்றே.

மேல்

#9 தெவ் வண மடவார் சீ_குழி விழுந்தேன் தீயனேன் பேயனேன் சிறியேன் எவ்வணம் உய்வேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் எவ்வணப் பொருப்பே என் இரு கண்ணே இடையிடாப் பசிய செம்பொன்னே செவ் வண மணியே திகழ் குண_கடலே திருவொற்றியூர்ச் செழும் தேனே.

மேல்

#10 வாதமே புரிவேன் கொடும் புலி_அனையேன் வஞ்சக மனத்தினேன் பொல்லா ஏதமே உடையேன் என் செய்வேன் என்னை என் செய்தால் தீருமோ அறியேன் போதமே ஐந்தாம் பூதமே ஒழியாப் புனிதமே புது மணப் பூவே பாதமே சரணம் சரணம் என்றன்னைப் பாதுகாத்து அளிப்பது உன் பரமே.

மேல்

@12. அருளியல் வினாவல்

மேல்

#1 தேன் என இனிக்கும் திரு_அருள்_கடலே தெள்ளிய அமுதமே சிவமே வான் என நிற்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே ஊன் என நின்ற உணர்வு_இலேன் எனினும் உன் திரு_கோயில் வந்து அடைந்தால் ஏன் எனக் கேளாது இருந்தனை ஐயா ஈது நின் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#2 பூங்கொடி இடையைப் புணர்ந்த செந்தேனே புத்தமுதே மறைப் பொருளே வாம் கொடி விடை கொள் அண்ணலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே தீங்கு ஒடியாத வினையனேன் எனினும் செல்வ நின் கோயில் வந்து அடைந்தால் ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ.

மேல்

#3 துப்பு நேர் இதழி மகிழ்ந்த கல்யாண சுந்தரா சுந்தரன் தூதா மை பொதி மிடற்றாய் வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே அப்பனே உன்னை விடுவனோ அடியேன் அறிவிலேன் எனினும் நின் கோயிற்கு எய்ப்புடன் வந்தால் வா என உரையாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#4 கங்கை அம் சடை கொண்டு ஓங்கு செங்கனியே கண்கள் மூன்று ஓங்கு செங்கரும்பே மங்கல் இல்லாத வண்மையே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே துங்க நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் எங்கு வந்தாய் நீ யார் எனவேனும் இயம்பிடாது இருப்பதும் இயல்போ.

மேல்

#5 நன்று வந்து அருளும் நம்பனே யார்க்கும் நல்லவனே திரு_தில்லை மன்று வந்து ஆடும் வள்ளலே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே துன்று நின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில் வந்து அடைந்தால் என்று வந்தாய் என்று ஒரு சொலும் சொல்லாது இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#6 பண்ணினுள் இசையே பாலினுள் சுவையே பத்தர்கட்கு அருள்செயும் பரமே மண்ணினுள் ஓங்கி வளம்பெறும் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே பெண்ணினும் பேதை மதியினேன் எனினும் பெரும நின் அருள் பெறலாம் என்று எண்ணி வந்து அடைந்தால் கேள்வி இல்லாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#7 முன்னிய மறையின் முடிவின் உட்பொருளே முக்கணா மூவர்க்கும் முதல்வா மன்னிய கருணை_வாரியே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே அன்னியன் அல்லேன் தொண்டனேன் உன்றன் அருள் பெரும் கோயில் வந்து அடைந்தால் என் இது சிவனே பகைவரைப் போல் பார்த்து இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#8 நல்லவர் பெறும் நல் செல்வமே மன்றுள் ஞான_நாடகம் புரி நலமே வல்லவர் மதிக்கும் தெய்வமே முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே புல்லவன் எனினும் அடியனேன் ஐயா பொய்யல உலகு அறிந்தது நீ இல்லை என்றாலும் விடுவனோ சும்மா இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#9 பொதுவில்-நின்று அருளும் முதல் தனிப் பொருளே புண்ணியம் விளைகின்ற புலமே மதுவின் நின்று ஓங்கும் பொழில் தரு முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே புதுமையன் அல்லேன் தொன்றுதொட்டு உனது பூங்குழற்கு அன்பு பூண்டவன் காண் எது நினைந்து அடைந்தாய் என்று கேளாமல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

#10 பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியாப் புண்ணியா கண் நுதல் கரும்பே மன்னனே மருந்தே வளர் திரு_முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே உன்னை நான் கனவினிடத்தும் விட்டு ஒழியேன் உன் திரு_அடித் துணை அறிய என்னை ஈன்றவனே முகம் அறியார் போல் இருப்பது உன் திரு_அருட்கு இயல்போ.

மேல்

@13. திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்

மேல்

#1 தாயின் மேவிய தற்பரமே முல்லை வாயில் மேவிய மா மணியே உன்றன் கோயில் மேவி நின் கோ மலர்த் தாள் தொழா தே இல் மேவி இருந்தனன் என்னையே.

மேல்

#2 தில்லை வாய்ந்த செழும் கனியே திரு முல்லைவாயில் முதல் சிவ_மூர்த்தியே தொல்லையேன் உன்றன் தூய் திரு_கோயிலின் எல்லை சேர இன்று எ தவம் செய்ததே.

மேல்

#3 வளம் கொளும் முல்லைவாயிலில் மேவிய குளம் கொளும் கண் குரு மணியே உனை உளம்கொளும்படி உன் திரு_கோயில் இக் களம் கொள் நெஞ்சினன் கண்டதும் கண்டதே.

மேல்

#4 மலைவு இலா முல்லைவாயிலில் மேவிய விலை_இலா மணியே விளக்கே சற்றும் குலைவு_இலாதவர் கூடும் நின் கோயிலில் தலை நிலாவத் தவம் என்-கொல் செய்ததே.

மேல்

#5 சீர் சிறக்கும் திரு_முல்லைவாயிலில் ஏர் சிறக்கும் இயல் மணியே கொன்றைத் தார் சிறக்கும் சடைக் கனியே உன்றன் ஊர் சிறக்க உறுவது எவ்வண்ணமே.

மேல்

#6 சேல் கொள் பொய்கைத் திரு_முல்லைவாயிலில் பால் கொள் வண்ணப் பரஞ்சுடரே விடை மேல் கொள் சங்கரனே விமலா உன்றன் கால் கொள் அன்பர் கலங்குதல் நன்றதோ.

மேல்

#7 வண்ண மா முல்லைவாயிலின் மேவிய அண்ணலே அமுதே அரைசே நுதல்_ கண்ணனே உனைக் காண வந்தோர்க்கு எல்லாம் நண்ண அரும் துயர் நல்குதல் நன்றதோ.

மேல்

#8 மண்ணின் ஓங்கி வளர் முல்லைவாயில் வாழ் கண் உள் மா மணியே கரும்பே உனை எண்ணும் அன்பர் இழிவடைந்தால் அது பண்ணும் நின் அருள் பாரிடை வாழ்கவே.

மேல்

#9 தீது_இலாத திரு_முல்லைவாயில் வாழ் கோது_இலாத குணப் பெரும் குன்றமே வாது இலாது உனை வாழ்த்த வந்தோர்-தமை ஏதிலார் என்று இருப்பதும் என்-கொலோ.

மேல்

#10 தேசு உலாவிய சீர் முல்லைவாயில் வாழ் மாசிலாமணியே மருந்தே சற்றும் கூசிடாமல் நின் கோயில் வந்து உன் புகழ் பேசிடாத பிழை பொறுத்து ஆள்வையே.

மேல்

@14. காட்சிப் பெருமிதம்

மேல்

#1 திரை படாத செழும் கடலே சற்றும் உரைபடாமல் ஒளிசெய் பொன்னே புகழ் வரைபடாது வளர் வல்லி கேச நீ தரை படாக் கந்தை சாத்தியது என்-கொலோ.

மேல்

#2 சிந்தை நின்ற சிவாநந்தச் செல்வமே எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே தந்தையே வலிதாயத் தலைவ நீ கந்தை சுற்றும் கணக்கு அது என்-கொலோ.

மேல்

#3 வேலை கொண்ட விடம் உண்ட கண்டனே மாலை கொண்ட வளர் வல்லி கேசனே பாலை கொண்ட பராபர நீ பழம் சேலை கொண்ட திறம் இது என்-கொலோ

மேல்

#4 பன்னுவார்க்கு அருளும் பரமேட்டியே மன்னும் மா மணியே வல்லி கேசனே உன்ன நீ இங்கு உடுத்திய கந்தையைத் துன்னுவார் இல்லையோ பரஞ்சோதியே

மேல்

#5 கடுத்த தும்பிய கண்ட அகண்டனே மடுத்த நல் புகழ் வாழ் வல்லி கேச நீ தொடுத்த கந்தையை நீக்கித் துணிந்து ஒன்றை உடுத்துவார் இலையோ இ உலகிலே.

மேல்

#6 ஆல் அடுத்த அரும் பொருளே திரு மால் அடுத்து மகிழ் வல்லி கேச நீ பால் உடுத்த பழம் கந்தையைவிடத் தோல் உடுப்பதுவே மிகத் தூய்மையே

மேல்

#7 துன்னும் மா மருந்தே சுடரே அருள் மன்னும் மாணிக்கமே வல்லி கேசரே துன்னு கந்தையைச் சுற்றி நிற்பீர் எனில் என்ன நீர் எமக்கு ஈயும் பரிசு அதே.

மேல்

#8 மாசு_இல் சோதி மணி_விளக்கே மறை வாசி மேவிவரும் வல்லி கேச நீர் தூசில் கந்தையைச் சுற்றி ஐயோ பர தேசி போல் இருந்தீர் என்-கொல் செய்வனே.

மேல்

#9 தேரும் நல் தவர் சிந்தை எனும் தலம் சாரும் நல் பொருளாம் வலிதாய நீர் பாரும் மற்று இ பழம் கந்தை சாத்தினீர் யாரும் அற்றவரோ சொலும் ஐயரே.

மேல்

#10 மெல்லிதாய விரை மலர்ப் பாதனே வல்லிதாயம் மருவிய நாதனே புல்லிதாய இக் கந்தையைப் போர்த்தினால் கல் இதாய நெஞ்சம் கரைகின்றதே.

மேல்

@15. கொடைமடப் புகழ்ச்சி

மேல்

#1 திரப்படும் திருமால் மயன் வாழ்த்தத் தியாகர் என்னும் ஓர் திரு_பெயர் அடைந்தீர் வரப்படும் திறத்தீர் உமை அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இரப்பவர்க்கு ஒன்றும் ஈகிலீர் ஆனால் யாதுக்கு ஐய நீர் இ பெயர் எடுத்தீர் உரப்படும் தவத்தோர் துதித்து ஓங்க ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#2 வெள்ளி மா மலை வீடு என உடையீர் விளங்கும் பொன்_மலை வில் எனக் கொண்டீர் வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் எள்ளி எண்ணெய் போல் எங்கணும் நின்றீர் ஏழையேன் குறை ஏன் அறியீரோ ஒள்ளியீர் உமை அன்றி ஒன்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#3 கள்ளம் அற்ற வாக்கரசும் புத்திரரும் களிக்கவே படிக்காசு அளித்து அருளும் வள்ளல் என்று உமை வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் எள்ள அரும் புகழ்த் தியாகர் என்று ஒரு பேர் ஏன் கொண்டீர் இரப்போர்க்கு இட அன்றோ உள்ளம் இங்கு அறிவீர் எனை ஆள்வீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#4 அண்மையாகும் சுந்தரர்க்கு அன்று கச்சூர் ஆல_கோயிலில் சோறு இரந்து அளித்த வண்மை கேட்டு இங்கு வந்து அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் திண்மை சேர் திருமால் விடை ஊர்வீர் தேவரீருக்குச் சிறுமையும் உண்டோ உண்மையான் உமை அன்றி மற்று அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#5 சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மைச் சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு வந்து அடைந்த எற்கு உண்டு இலை எனவே வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இந்த வண்ணம் நீர் இருந்திடுவீரேல் என் சொலார் உமை இ உலகத்தார் உந்தி_வந்தவனோடு அரி ஏத்த ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#6 கல்லையும் பசும்பொன் எனப் புரிந்த கருணை கேட்டு உமைக் காதலித்து இங்கு வல்லை வந்து நின்று ஏற்றிடில் சிறிதும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் இல்லை நீர் பிச்சையெடுக்கின்றீரேனும் இரக்கின்றோர்களும் இட்டு உண்பர் கண்டீர் ஒல்லை இங்கு எனது உளம் கொண்டது அறிவீர் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#7 துளிக்கும் கண்ணுடன் சோர்வுற நெஞ்சம் தோன்றலே உமைத் துணை என நம்பி வளிக்குள் பஞ்சு_அனையேன் அடைந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் அளிக்கும் தன்மையீர் வாழ்ந்து இவண் இருக்க அடியனேன் அலைகின்றதும் அழகோ ஒளிக்கும் தன்மை-தான் உமக்கும் உண்டேயோ ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#8 குற்றம் எத்தனை அத்தனை எல்லாம் குணம் எனக் கொளும் குண_கடல் என்றே மற்றும் நான் நம்பி ஈங்கு வந்து ஏற்றால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் கற்ற நல் தவர்க்கே அருள்வீரேல் கடையனேன் எந்தக் கடைத்தலைச் செல்கேன் உற்ற நல் துணை உமை அன்றி அறியேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#9 பொய்_இலார்க்கு முன் பொற்கிழி அளித்த புலவர் ஏறு எனப் புகழ்ந்திடக் கேட்டு மையல் கொண்டிடும் மனத்தொடும் வந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் ஐய நும் அடி அன்றி ஓர் துணையும் அறிந்திலேன் இஃது அறிந்து அருளீரேல் உய்யும் வண்ணம் எவ்வண்ணம் என் செய்கேன் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

#10 தாய்_இலார் என நெஞ்சகம் தளர்ந்தேன் தந்தை உம் திரு_சந்நிதி அடைந்தேன் வாய்_இலார் என இருக்கின்றீர் அல்லால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் கோயிலாக என் நெஞ்சகத்து அமர்ந்த குணத்தினீர் என்றன் குறை அறியீரோ ஓய் இலாது நல் தொண்டருக்கு அருள்வான் ஓங்கு சீர் ஒற்றியூர் உடையீரே.

மேல்

@16. திருஅருள் வேட்கை

மேல்

#1 மன் அமுதாம் உன் தாள் வழுத்துகின்ற நல்லோர்க்கே இன் அமுதம் ஓர்பொழுதும் இட்டு அறியேன் ஆயிடினும் முன் அமுதா உண்ட களம் முன்னிமுன்னி வாடுகின்றேன் என் அமுதே இன்னும் இரக்கம்-தான் தோன்றாதோ.

மேல்

#2 தோன்றாத் துணையாகும் சோதியே நின் அடிக்கே ஆன்று ஆர்த்த அன்போடு அகம் குழையேன் ஆயிடினும் ஊன் தார்த் தரித்ததனை உன்னிஉன்னி வாடுகின்றேன் தேன் தார்ச் சடையாய் உன் சித்தம் இரங்காதோ.

மேல்

#3 காது ஆர் சுடு விழியார் காம_வலைக்கு உள்ளாகி ஆதாரம் இன்றி அலைதந்தேன் ஆயிடினும் போது ஆர் நினது கழல் பொன்_அடியே போற்றுகின்றேன் நீதாவோ உன்னுடைய நெஞ்சம் இரங்காதோ.

மேல்

#4 இலை வேட்ட மாதர்-தமது ஈன நலமே விழைந்து கொலை வேட்டு உழலும் கொடியனேன் ஆயிடினும் நிலை வேட்ட நின் அருட்கே நின்றுநின்று வாடுகின்றேன் கலை வேட்ட வேணியனே கருணை சற்றும் கொண்டிலையே.

மேல்

#5 கொண்டல்_நிறத்தோனும் குணிக்க அரிய நின் அடிக்கே தொண்டு அறிந்து செய்யாத துட்டனேன் ஆயிடினும் எண் தக நின் பொன்_அருளை எண்ணிஎண்ணி வாடுகின்றேன் தண்டலை சூழ் ஒற்றி_உளாய் தயவு சற்றும் சார்ந்திலையே.

மேல்

#6 சாரா வறும் சார்பில் சார்ந்து அரைசே உன்னுடைய தார் ஆர் மலர்_அடியைத் தாழ்ந்து ஏத்தேன் ஆயிடினும் நேராய் நின் சந்நிதி-கண் நின்றுநின்று வாடுகின்றேன் ஓராயோ சற்றேனும் ஒற்றியூர் உத்தமனே.

மேல்

#7 ஊர் மதிக்க வீணில் உளறுகின்றதல்லது நின் சீர் மதிக்க நின் அடியைத் தேர்ந்து ஏத்தேன் ஆயிடினும் கார் மதிக்கும் நஞ்சம் உண்ட கண்ட நினைந்து உள்குகின்றேன் ஏர் மதிக்கும் ஒற்றியூர் எந்தை அளி எய்தாயோ.

மேல்

#8 தாய்க்கும் இனிது ஆகும் உன்றன் தாள்_மலரை ஏத்தாது நாய்க்கும் கடையாய் நலிகின்றேன் ஆயிடினும் வாய்க்கும் உன்றன் சந்நிதி-கண் வந்துவந்து வாடுகின்றேன் தூய்க் குமரன் தந்தாய் என் சோர்வு அறிந்து தீராயோ.

மேல்

#9 அறியாப் பருவத்து அடியேனை ஆட்கொண்ட நெறியாம் கருணை நினைந்து உருகேன் ஆயிடினும் குறியாப் பொருளே உன் கோயிலிடை வந்து நின்றும் பறியாப் பிணியேன் பரதவிப்பைப் பார்த்திலையே.

மேல்

#10 பார் நடையாம் கானில் பரிந்து உழல்வதல்லது நின் சீர் நடையாம் நல் நெறியில் சேர்ந்திலேன் ஆயிடினும் நேர் நடையாம் நின் கோயில் நின்றுநின்று வாடுகின்றேன் வார்_நடையார் காணா வளர் ஒற்றி மன் அமுதே.

மேல்

@17. அபராத விண்ணப்பம்

மேல்

#1 தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத்து எண்ணி நீ கோபம் மேவி இங்கு ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே மூவிரு முகம் சேர் முத்தினை அளித்த முழு சுவை முதிர்ந்த செங்கரும்பே சேவின் மேல் ஓங்கும் செழும் மணி_குன்றே திருவொற்றியூர் மகிழ் தேவே.

மேல்

#2 உய்ய ஒன்று அறியா ஒதியனேன் பிழையை உன் திருவுள்ளத்தில் கொண்டே வெய்யன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே செய்ய நெட்டிலை வேல் சேய்-தனை அளித்த தெய்வமே ஆநந்தத் திரட்டே மையல்_அற்றவர்-தம் மனத்து ஒளிர் விளக்கே வளம் பெறும் ஒற்றியூர் மணியே.

மேல்

#3 கழல் கொள் உன் அருமைத் திரு_அடி_மலரைக் கருதிடாப் பிழை-தனைக் குறித்தே விழலன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே அழல் அயில் கரத்து எம் ஐயனை ஈன்ற அப்பனே அயனும் மால் அறியாத் தழல் நிறப் பவள_குன்றமே ஒற்றித் தனி நகர் அமர்ந்து அருள் தகையே.

மேல்

#4 வாள்-தனக்கு உறழும் வடு_கணார்க்கு உருகும் வஞ்சனேன் பிழை-தனைக் குறித்தே வேடன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே நீடு அயில் படை சேர் கரத்தனை அளித்த நிருத்தனே நித்தனே நிமலா ஏடகத்து அமர்ந்த ஈசனே தில்லை எந்தையே ஒற்றியூர் இறையே.

மேல்

#5 நாணம் ஒன்று இல்லா நாயினேன் பிழையை நாடி நின் திருவுளத்து அடைத்தே வீணன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே காண நின்று அடியார்க்கு அருள்தரும் பொருளே கடி மதில் ஒற்றியூர்க்கு அரசே பூண் அயில் கரத்து ஓர் புத்தமுது எழுந்த புண்ணியப் புனித வாரிதியே.

மேல்

#6 அஞ்செழுத்து ஓதி உய்ந்திடாப் பிழையை ஐய நின் திருவுளத்து எண்ணி வெஞ்சன் என்று ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே கஞ்சன் மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்து இருத்திய அருள்_கடலே சஞ்சிதம் அறுக்கும் சண்முகன் உடையோன் தந்தையே ஒற்றி எம் தேவே

மேல்

#7 நம்பினேன் நின்றன் திரு_அடி_மலரை நாயினேன் பிழை-தனைக் குறியேல் வெம்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே தும்பி மா முகனை வேலனை ஈன்ற தோன்றலே வச்சிரத் தூணே அம்பிகாபதியே அண்ணலே முக்கண் அத்தனே ஒற்றியூர் அமுதே.

மேல்

#8 சூழ்ந்த வஞ்சகனேன் பிழை-தனைக் குறியேல் துன்ப_சாகரம்-தனில் அழுந்தி வீழ்ந்தனன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே வாழ்ந்த மா தவர்கள் மனத்து ஒளிர் ஒளியே வள்ளலே மழ விடையவனே போழ்ந்த வேல் படை கொள் புனிதனை அளித்த பூரணா ஒற்றியூர்ப் பொருளே.

மேல்

#9 துரும்பினேன் பிழையைத் திருவுளத்து அடையேல் துய்ய நின் அருள்_கடல் ஆட விரும்பினேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே கரும்பின் நேர் மொழியார் இருவரை மணக்கும் கனி-தனை அளித்த கற்பகமே இரும்பின் நேர் நெஞ்சர் எனினும் என்_போல்வார்க்கு இன் அருள்தரும் ஒற்றி இறையே

மேல்

#10 கட்டினேன் பாபக் கொடும் சுமை எடுப்பேன் கடும் பிழை கருதிடேல் நின்னை விட்டிலேன் ஐயோ கைவிடில் சிவனே வேறு நான் யாது செய்வேனே சுட்டு இலாப் பொருளே சுகப் பெரும் கடலே தூய்த் திருவொற்றியூர்த் துணையே தட்டு இலாக் குணத்தோர் புகழ்செயும் குகனைத் தந்து அருள்தரும் தயாநிதியே.

மேல்

@18. அறிவரும் பெருமை

மேல்

#1 நாயினும் கடையேன் என் செய்வேன் பிணியால் நலிகின்ற நலிவினை அறிந்தும் தாயினும் இனியாய் இன்னும் நீ வரவு தாழ்த்தனை என்-கொல் என்று அறியேன் மாயினும் அல்லால் வாழினும் நினது மலர்_அடி அன்றி ஒன்று ஏத்தேன் காயினும் என்னைக் கனியினும் நின்னைக் கனவினும் விட்டிடேன் காணே.

மேல்

#2 காண்பது கருதி மாலொடு மலர் வாழ் கடவுளர் இருவரும் தங்கள் மாண்பு அது மாறி வேறு உருவெடுத்தும் வள்ளல் நின் உரு அறிந்திலரே கோண் பதர் நெஞ்சக் கொடியனேன் எந்தக் கொள்கை கொண்டு அறிகுவது ஐயா பூண்பது பணியாய் பொதுவில் நின்று ஆடும் புனித நின் அருள் அலாது இன்றே.

மேல்

#3 இன்று வந்து எனை நீ அடிமைகொள்ளாயேல் எவ்வுலகத்தரும் தூற்ற நன்று நின்றன் மேல் பழி வரும் என் மேல் பழி இலை நவின்றனன் ஐயா அன்று வந்து ஒரு சேய்க்கு அருள் புரிந்து ஆண்ட அண்ணலே ஒற்றியூர் அரசே நின்று சிற்சபைக்குள் நடம்செயும் கருணா_நிலையமே நின்மலச் சுடரே.

மேல்

#4 சுடர் கொளும் மணிப் பூண் முலை மடவியர்-தம் தொடக்கினில் பட்டு உழன்று ஓயா இடர் கொளும் எனை நீ ஆட்கொளும் நாள்-தான் எந்த நாள் அந்த நாள் உரையாய் படர் கொளும் வானோர் அமுது உண நஞ்சைப் பரிந்து உண்ட கருணை அம்பரமே குடர் கொளும் சூலப் படை_உடையவனே கோதை ஓர் கூறு_உடையவனே.

மேல்

#5 உடைமை வைத்து எனக்கு இன்று அருள்செயாவிடினும் ஒப்பு_இலாய் நின் அடிக்கு எனையே அடைமைவைத்தேனும் நின் அருள் பொருள் இங்கு அளித்திடவேண்டும் இன்று எவைக்கும் கடைமையேன் வேறு ஓர் தேவரை அறியேன் கடவுள் நின் திரு_அடி அறிக படைமை சேர் கரத்து எம் பசுபதி நீயே என் உளம் பார்த்து நின்றாயே.

மேல்

#6 பார்த்து நிற்கின்றாய் யாவையும் எளியேன் பரதவித்து உறுகணால் நெஞ்சம் வேர்த்து நிற்கின்றேன் கண்டிலை-கொல்லோ விடம் உண்ட கண்டன் நீ அன்றோ ஆர்த்து நிற்கின்றார் ஐம்புல வேடர் அவர்க்கு இலக்கு ஆவனோ தமியேன் ஓர்த்து_நிற்கின்றார் பரவு நல் ஒற்றியூரில் வாழ் என் உறவினனே.

மேல்

#7 உறவனே உன்னை உள்கி நெஞ்சு அழலின் உறும் இழுது எனக் கசிந்து உருகா மறவனேன்-தன்னை ஆட்கொளாவிடில் யான் வருந்துவதன்றி என் செய்கேன் நிறவனே வெள்ளை நீறு அணிபவனே நெற்றி மேல் கண்ணுடையவனே அறவனே தில்லை அம்பலத்து ஆடும் அப்பனே ஒற்றியூர்க்கு அரைசே.

மேல்

#8 கரைபடா வஞ்சப் பவ_கடல் உழக்கும் கடையனேன் நின் திரு_அடிக்கு விரைபடா மலர் போல் இருந்து உழல்கின்றேன் வெற்றனேன் என் செய விரைகேன் திரைபடாக் கருணைச் செல்வ_வாரிதியே திருவொற்றியூர் வளர் தேனே உரைபடாப் பொன்னே புரைபடா மணியே உண்ணுதற்கு இனிய நல் அமுதே.

மேல்

#9 நல் அமுது_அனையார் நின் திரு_அடிக்கே நண்புவைத்து உருகுகின்றனரால் புல் அமுது_அனையேன் என் செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பது ஒன்று அறியேன் சொல் அமுது அனைய தோகை ஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக் கல் அமுது ஆக்கும் கடன் உனக்கு அன்றோ கடையனேன் கழறுவது என்னே.

மேல்

#10 என்னை நின்னவனாக் கொண்டு நின் கருணை என்னும் நல் நீரினால் ஆட்டி அன்னை அப்பனுமாய்ப் பரிவுகொண்டு ஆண்ட அண்ணலே நண்ண அரும் பொருளே உன்ன அரும் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும் என் உறவே நன்னர் செய்கின்றோய் என் செய்வேன் இதற்கு நன்கு கைம்மாறு நாயேனே.

மேல்

@19. அருள்விடை வேட்கை

மேல்

#1 போகம் கொண்ட புணர் முலை மாது ஒரு பாகம் கொண்ட படம்பக்கநாதரே மாகம் கொண்ட வளம் பொழில் ஒற்றியின் மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ.

மேல்

#2 தவள நீற்று மெய்ச் சாந்த வினோதரே பவள மேனிப் படம்பக்கநாதரே கவள வீற்றுக் கரி உரி போர்த்த நீர் இவளை ஒற்றிவிட்டு எங்ஙனம் சென்றிரோ.

மேல்

#3 சீலம் மேவித் திகழ் அனல் கண் ஒன்று பாலம் மேவும் படம்பக்கநாதரே ஞாலம் மேவும் நவையை அகற்ற முன் ஆலம் உண்டவர்_அல்லிர்-கொல் ஐயரே.

மேல்

#4 உடை கொள் கோவணத்து உற்ற அழகரே படை கொள் சூலப் படம்பக்கநாதரே கடை கொள் நஞ்சு உண்டு கண்டம் கறுத்த நீர் இடையில் ஒற்றி விட்டு எங்ஙனம் சென்றிரோ.

மேல்

#5 நிறைய வாழ் தொண்டர் நீடு உற வன் பவம் பறைய நின்ற படம்பக்கநாதரே உறைய மாணிக்கு உயிர் அளித்திட்ட நீர் குறை இலா ஒற்றிக் கோயில்-கண் உள்ளிரோ.

மேல்

#6 வணம் கொள் நாக மணித் தலை ஐந்து உடைப் பணம் கொள் செல்வப் படம்பக்கநாதரே கணம் கொள் காமனைக் காய்ந்து உயிர் ஈந்த நீர் வணங்குவார்க்கு என்-கொல் வாய் திறவாததே.

மேல்

#7 நாட நல் இசை நல்கிய மூவர்-தம் பாடல் கேட்கும் படம்பக்கநாதரே வாடல் என்று ஒரு மாணிக்கு அளித்த நீர் ஈடில் என்னளவு எங்கு ஒளித்திட்டிரோ.

மேல்

#8 சுலவு காற்று அனல் தூய மண் விண் புனல் பலவும் ஆகும் படம்பக்கநாதரே நிலவு தண் மதி நீள் முடி வைத்த நீர் குலவும் என்றன் குறை தவிர்க்கீர்-கொலோ.

மேல்

#9 அடியர் நெஞ்சத்து அருள்_பெரும்_சோதி ஓர் படிவம் ஆகும் படம்பக்கநாதரே நெடிய மாலுக்கு நேமி அளித்த நீர் மிடியனேன் அருள் மேவ விரும்பிரோ.

மேல்

#10 மதி கொள் அன்பர் மனம் எனும் திவ்வியப் பதி கொள் செல்வப் படம்பக்கநாதரே விதி கொள் துன்பத்தை வீட்டி அளித்த நீர் துதி கொள்வீர் என் துயரைத் துரத்துமே.

மேல்

@20. எழுத்தறியும் பெருமான் மாலை

மேல்

#1 சிந்தை மயங்கித் தியங்குகின்ற நாயேனை முந்தை வினை தொலைத்து உன் மொய் கழற்கு ஆளாக்காதே நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ எந்தை நீ ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#2 மத்தனை வன்_நெஞ்சகனை வஞ்சகனை வன் பிணி கொள் பித்தனை வீண் நாள் போக்கும் பேயேனை நாயேனை முத்து_அனையாய் உன்றன் முளரித் தாட்கு ஆளாக்க எத்தனை நாள் செல்லும் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#3 நல் நெறி சேர் அன்பர்-தமை நாடிடவும் நின் புகழின் செம் நெறியைச் சேர்ந்திடவும் செய்தாய் எனக்கு உனக்கு முன் அறியேன் பின் அறியேன் மூடனேன் கைம்மாறு இங்கு என் அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#4 மைப் படியும் கண்ணார் மயல் உழக்கச்செய்வாயோ கைப் படிய உன்றன் கழல் கருதச்செய்வாயோ இப்படி என்று அப்படி என்று என் அறிவேன் உன் சித்தம் எப்படியோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#5 நில்லா உடம்பை நிலை என்றே நேசிக்கும் பொல்லாத நெஞ்சப் புலையனேன் இ உலகில் சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் எல்லாம் அறிவாய் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#6 தீது அறிவேன் நன்கு அணுவும் செய்யேன் வீண் நாள் போக்கும் வாது அறிவேன் வஞ்சகனேன் வல்_வினையேன் வாய்மை_இலேன் சூது அறிவேன் மால் அயனும் சொல்ல அரிய நின் பெருமை யாது அறிவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#7 மாறாத வன் பிணியால் மாழாந்து நெஞ்சு அயர்ந்தே கூறாத துன்பக் கொடும்_கடற்குள் வீழ்ந்து அடியேன் ஆறாது அரற்றி அழுகின்றேன் நின் செவியில் ஏறாதோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#8 உள் நாடும் வல்_வினையால் ஓயாப் பிணி உழந்து புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே கண்ணாளா உன்றன் கருணை எனக்கு அளிக்க எண்ணாயோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#9 புன் செய்கை மாறாப் புலைய மட மங்கையர்-தம் வன் செய்கையாலே மயங்குகின்ற வஞ்சகனேன் கொன் செய்கை மாறாத கூற்றன் வருவானேல் என் செய்வேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#10 சங்கு_உடையான் தாமரையான் தாள் முடியும் காண்ப அரிதாம் கொங்கு உடைய கொன்றைக் குளிர்ச் சடையாய் கோதை ஒரு பங்கு_உடையாய் ஏழை முகம் பாராது தள்ளிவிட்டால் எங்கு அடைவேன் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#11 மன்றினிடை நடம்செய் மாணிக்க மா மலையே வென்றி மழுக் கை உடைய வித்தகனே என்றென்று கன்றின் அயர்ந்து அழும் என் கண்ணீர் துடைத்து அருள என்று வருவாய் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#12 மன் அளவில் சோதி மணி போல்வாய் மா தவத்தோர் தென் அளவும் வேணிச் சிவமே என ஒருகால் சொன்ன அளவில் சொன்னவர்-தம் துன்பு ஒழிப்பாய் என்பர் அது என்னளவில் காணேன் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#13 மின்_போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் தன்_போல்வாய் என் ஈன்ற தாய்_போல்வாய் சார்ந்து உரையாப் பொன்_போல்வாய் நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் என்_போல்வார் இல்லை எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#14 பூ மாந்தும் வண்டு என நின் பொன்_அருளைப் புண்ணியர்கள் தாம் மாந்தி நின் அடிக் கீழ்ச் சார்ந்து நின்றார் ஐயோ நான் காமாந்தகாரம் எனும் கள் உண்டு கண் மூடி ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#15 பன்ன அரும் இப் பார் நடையில் பாடு உழன்ற பாதகனேன் துன்னிய நின் பொன்_அடியைச் சூழாதேன் ஆயிடினும் புல் நிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்பு உனக்கே என் அருமைத் தாய் நீ எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#16 வீட்டுக்கு அடங்கா விளையாட்டு_பிள்ளை எனத் தேட்டுக்கு அடங்காத தீ மனத்தால் ஆம் துயரம் பாட்டுக்கு அடங்கா நின் பத்தர் அடிப் புகழ் போல் ஏட்டுக்கு அடங்காது எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#17 பன்னும் மனத்தால் பரிசு இழந்த பாதகனேன் துன்னும் மல வெம் கதிரோன் சூழ்கின்ற சோடையினால் நின் அருள் நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன் இன்னும் அறியாயோ எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#18 கல்லை நிகராம் கடை மனம் போம் கான் நெறியில் புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் ஒல்லை படுகின்ற ஒறு வேதனை-தனக்கு ஓர் எல்லை அறியேன் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#19 பொன்னை மதித்து ஐயா நின் பொன்_அடியைப் போற்றாத கல் நிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழை கண்டாய் என்னை விடாதே எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#20 மாசு உவரே என்னும் மல_கடலில் வீழ்ந்து உலகோர் ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல் கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்து அடியார் ஏசுவரே ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#21 ஊர் சொல்வேன் பேர் சொல்வேன் உத்தமனே நின் திரு_தாள் சீர் சொல்வேன் என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல் நேர் சொல்வாய் உன்றனக்கு நீதி ஈது அல்ல என்றே யார் சொல்வார் ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#22 நீக்கம் இலா மெய்_அடியர் நேசம் இலாப் பொய்_அடியேன் ஊக்கம் இலா நெஞ்சத்தின் ஓட்டு அகலச்செய்வாயேல் தூக்கம் இலா ஆனந்தத் தூக்கமன்றி மற்றும் இங்கு ஓர் ஏக்கம்_இலேன் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#23 போகின்ற வஞ்சகரைப் போக்கி உன்றன் பொன்_அடிக்கு ஆ ளாகின்ற மேலோர் அடி வழுத்தா நாயேற்குப் பாகின் தனிச் சுவையின் பாங்கு ஆகும் நின் அருளை ஈகின்றது என்றோ எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#24 ஊழை அகற்ற உளவு அறியாப் பொய்யன் இவன் பீழை மனம் நம்மைப் பெறாது அ மனம் கொடிய தாழை என எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன் ஏழை நான் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#25 மடுக்க முடியா மல_இருட்டில் சென்று மனம் கடுக்க முடியாப் புலனால் கட்டிச் சுமக்கவைத்த தொடுக்க முடியாத துன்பச் சுமையை இனி எடுக்க முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#26 முள் அளவு நெஞ்ச முழுப் புலைய மாதர்களாம் கள் அளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு உள்ளளவும் அன்பர்க்கு உதவும் உன் தாட்கு அன்பு ஒரு சிற் றெள் அளவும் உண்டோ எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#27 பண்ண முடியாப் பரிபவம் கொண்டு இ உலகில் நண்ண முடியா நலம் கருதி வாடுகின்றேன் உண்ண முடியா அமுதாம் உன்னை அன்றி எவ்வெவர்க்கும் எண்ண முடியாதே எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#28 வெம் கொளித் தேள் போன்ற வினையால் வெதும்பி மனம் அங்கு ஒளிக்காது உன்னை அழைத்து அழுது வாடுகின்றேன் இங்கு ஒளிக்கா நஞ்சம் உண்ட என் அருமை அப்பா நீ எங்கு ஒளித்தாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#29 பித்தளைக்கும் காமப் பெரும் பேய் மயக்கும் மயல் வித்து அனைத்தாம் ஆணவம் பொய் வீறும் அழுக்காறு சினம் கொத்து அனைத்தாம் வஞ்சம் கொலை முதலாம் பாவங்கள் இத்தனைக்கும் நான் காண் எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#30 ஒல்லையே நஞ்சு அனைத்தும் உண்ட தயாநிதி நீ அல்லையோ நின்று இங்கு அயர்வேன் முன்வந்து ஒரு சொல் சொல் ஐயோ ஒற்றியூர்த் தூய திரு_கோயிலுள் நீ இல்லையோ ஐயா எழுத்தறியும்_பெருமானே.

மேல்

#31 நினை_உடையாய் நீ அன்றி நேடில் எங்கும் இல்லாதாய் மனை_உடையார் மக்கள் எனும் வாழ்க்கையிடைப் பட்டு அவமே இனை_உடையான் என்று இங்கு எனை ஆள்வது உன் கடனே எனை_உடையாய் ஒற்றி எழுத்தறியும்_பெருமானே.

மேல்

@21. நெஞ்சொடு நேர்தல்

மேல்

#1 ஒக்க நெஞ்சமே ஒற்றியூர்ப் படம் பக்கநாதனைப் பணிந்து வாழ்த்தினால் மிக்க காமத்தின் வெம்மையால் வரும் துக்கம் யாவையும் தூர ஓடுமே.

மேல்

#2 ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டி நீ நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள் பாடும் எம் படம்பக்கநாதன் தாள் நாடு நாடிடில் நாடு நம்மதே.

மேல்

#3 நம்பு நெஞ்சமே நன்மை எய்து மால் அம்புயன் புகழ் அண்ணல் ஒற்றியூர்ப் பம்பு சீர்ப் படம்பக்கன் ஒன்னலார்-தம் புரம் சுடும் தம்பிரானையே.

மேல்

#4 தம்பலம் பெறும் தையலார் கணால் வெம்பலம் தரும் வெய்ய நெஞ்சமே அம்பலத்தினில் அமுதை ஒற்றியூர்ச் செம் பலத்தை நீ சிந்தைசெய்வையே.

மேல்

#5 செய்யும் வண்ணம் நீ தேறி நெஞ்சமே உய்யும் வண்ணமாம் ஒற்றியூர்க்கு உளே மெய்யும் வண்ண மாணிக்க வெற்பு அருள் பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.

மேல்

#6 வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர் ஆண்டு நின்று அருள் அரசின் பொன்_பதம் பூண்டுகொண்டு உளே போற்றி நிற்பையேல் யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே.

மேல்

#7 இல்லை உண்டு என எய்தி ஐயுறும் கல்லை ஒத்த என் கன்ம நெஞ்சமே ஒல்லை ஒற்றியூர் உற்று வாழ்தியேல் நல்லை நல்லை நீ நட்பின் மேலையே.

மேல்

#8 மேலை அந்தகன் வெய்ய தூதுவர் ஓலை காட்டும் முன் ஒற்றியூரில் வாழ் பாலை சேர் படம்பக்கநாதர்-தம் காலை நாடி நற்கதியின் நிற்பையே.

மேல்

#9 நிற்பது என்று நீ நீல நெஞ்சமே அற்ப மாதர்-தம் அவலம் நீங்கியே சிற்பரன் திரு_தில்லை அம்பலப் பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.

மேல்

#10 போற்றி ஒற்றியூர்ப் புண்ணியன் திரு_ நீற்றினான்-தனை நினைந்து நிற்பையேல் தோற்ற அரும் பரஞ்சோதி நல் அருள் ஊற்று எழும் கடல் ஒக்க நெஞ்சமே.

மேல்

@22. திருப்புகழ் விலாசம்

மேல்

#1 துங்க வெண்_பொடி அணிந்து நின் கோயில் தொழும்புசெய்து நின் துணை_பதம் ஏத்திச் செங்கண் மால் அயன் தேடியும் காணாச் செல்வ நின் அருள் சேர்குவது என்றோ எங்கள் உள் உவந்து ஊறிய அமுதே இன்பமே இமையான் மகட்கு அரசே திங்கள் தங்கிய சடை உடை மருந்தே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#2 கண்ணனோடு அயன் காண்ப அரும் சுடரே கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே எண்ணமே தகும் அன்பர்-தம் துணையே இலங்கும் திவ்விய எண்_குண_பொருப்பே அண்ணலே திரு_ஆலங்காட்டு உறையும் அம்மை அப்பனே அடியனேன்-தன்னைத் திண்ணமே அடித் தொழும்பனாய்ச் செய்வாய் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#3 விடம் கலந்து அருள் மிடறு_உடையவனே வேதன் மால் புகழ் விடை_உடையவனே கடம் கலந்த மா உரி_உடையவனே கந்தனைத் தரும் கனிவு_உடையவனே இடம் கலந்த பெண் கூறு_உடையவனே எழில் கொள் சாமத்தின் இசை_உடையவனே திடம் கலந்த கூர் மழு_உடையவனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#4 கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே காமன் வெந்திடக் கண்விழித்தவனே தஞ்சமானவர்க்கு அருள்செயும் பரனே சாமிக்கு ஓர் திரு_தந்தை ஆனவனே நஞ்சம் ஆர் மணி_கண்டனே எவைக்கும் நாதனே சிவஞானிகட்கு அரசே செஞ்சொல் மா மறை ஏத்துறும் பதனே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#5 ஏல வார் சூழலாள் இடத்தவனே என்னை ஆண்டவனே எனது அரசே கோலமாக மால் உருக்கொண்டும் காணாக் குரை கழல் பதக் கோமளக் கொழுந்தே ஞால மீதில் எம்_போல்பவர் பிழையை நாடிடாது அருள் நல் குண_குன்றே சீலம் மேவிய தவத்தினர் போற்றத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#6 ஆறு வாள் முகத்து அமுது எழும் கடலே அயனும் மாலும் நின்று அறிவு அரும் பொருளே ஏறு மீது வந்து ஏறும் எம் அரசே எந்தையே எமை ஏன்றுகொள் இறையே வீறு கொன்றை அம் சடை உடைக் கனியே வேதம் நாறிய மென் மலர்ப் பதனே தேறு நெஞ்சினர் நாள்-தொறும் வாழ்த்தத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#7 மாறு பூத்த என் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவது என்றோ ஏறு பூத்த என் இன் உயிர்க்கு உயிரே யாவும் ஆகி நின்று இலங்கிய பொருளே நீறுபூத்து ஒளி நிறைந்த வெண் நெருப்பே நித்தியானந்தர்க்கு உற்ற நல் உறவே சேறு பூத்த செந்தாமரை முத்தம் நிகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#8 மாலின் கண்_மலர் மலர் திரு_பதனே மயிலின் மேல் வரு மகவு_உடையவனே ஆலின் கீழ் அறம் அருள்_புரிந்தவனே அர என்போர்களை அடிமைகொள்பவனே காலில் கூற்று உதைத்து அருள்செயும் சிவனே கடவுளே நெற்றிக்கண்_உடையவனே சேலின் நீள் வயல் செறிந்து எழில் ஓங்கித் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#9 நாட்டும் முப்புரம் நகைத்து எரித்தவனே நண்ணி அம்பலம் நடம்செயும் பதனே வேட்டு வெண் தலைத் தார் புனைந்தவனே வேடன் எச்சிலை விரும்பி உண்டவனே கோட்டு மேருவைக் கோட்டிய புயனே குற்றமும் குணமாக் குறிப்பவனே தீட்டும் மெய்ப் புகழ்த் திசை பரந்து ஓங்கத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

#10 அம்பலத்துள் நின்று ஆட வல்லானே ஆன் இவர்ந்து வந்து அருள்_புரிபவனே சம்பு சங்கர சிவசிவ என்போர்-தங்கள் உள்ளகம் சார்ந்திருப்பவனே தும்பை வன்னியம் சடை_முடியவனே தூயனே பரஞ்சோதியே எங்கள் செம்பொனே செழும் பவள மா மலையே திகழும் ஒற்றியூர்ச் சிவபெருமானே.

மேல்

@23. திருச்சாதனத் தெய்வத் திறம்

மேல்

#1 உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ நடையாய உடல் முழுதும் நாவாய் நின்று நவில்கின்றேன் என் பாவி நாவைச் சற்றும் இடையாத கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#2 கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் பண்ணுதல் சேர் திரு_நீற்றுக் கோலம்-தன்னைப் பார்த்தேனும் அஞ்சுகிலேன் பயன் இலாமே நண்ணுதல் சேர் உடம்பு எல்லாம் நாவாய் நின்று நவில்கின்றேன் என் கொடிய நாவை அந்தோ எண்ணுதல் சேர் கொடும் தீயால் சுடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#3 வஞ்சம்_இலார் நெஞ்சகத்தே மருவும் முக்கண் மா மணியே உனை நினையேன் வாளா நாளைக் கஞ்ச மலர் முகத்தியர்க்கும் வாதில் தோன்றும் களிப்பினுக்கும் கழிக்கின்றேன் கடையனேனை நஞ்சம் உணக் கொடுத்து மடித்திடினும் வாளால் நசிப்புறவே துணித்திடினும் நலியத் தீயால் எஞ்சலுறச் சுடினும் அன்றி அந்தோ இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#4 அருள் பழுக்கும் கற்பகமே அரசே முக்கண் ஆர்_அமுதே நினைப் புகழேன் அந்தோ வஞ்ச மருள் பழுக்கும் நெஞ்சகத்தேன் வாளா நாளை வாதமிட்டுக் கழிக்கின்றேன் மதி_இலேனை வெருள் பழுக்கும் கடும் காட்டில் விடினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து ஏக விடினும் பொல்லா இருள் பழுக்கும் பிலம் சேர விடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#5 பெரும் கருணைக் கடலே என் குருவே முக்கண் பெருமானே நினைப் புகழேன் பேயேன் அந்தோ கருங்கல்_மன_குரங்கு ஆட்டி வாளா நாளைக் கழிக்கின்றேன் பயன் அறியாக் கடையனேனை ஒருங்கு உருள உடல் பதைப்ப உறும் குன்று ஏற்றி உருட்டுகினும் உயிர் நடுங்க உள்ளம் ஏங்க இரும் கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#6 தொழுகின்றோர் உளத்து அமர்ந்த சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே நின் பதத்தைத் துதியேன் வாதில் விழுகின்றேன் நல்லோர்கள் வெறுப்பப் பேசி வெறித்து உழலும் நாய்_அனையேன் விழலனேனை உழுகின்ற நுகப் படை கொண்டு உலையத் தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் எழுகின்ற கடலிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#7 விருப்பு ஆகும் மதி_சடையாய் விடையாய் என்றே மெய் அன்போடு உனைத் துதியேன் விரைந்து வஞ்சக் கருப் பாயும் விலங்கு எனவே வளர்ந்தே நாளைக் கழிக்கின்றேன் கரு நெஞ்சக் கள்வனேனைப் பொருப்பு ஆய யானையின் கால் இடினும் பொல்லாப் புழுத் தலையில் சோரி புறம் பொழிய நீண்ட இருப்பு ஆணி ஏற்றுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#8 அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் மிக்க ஒதி போல் பருத்தேன் கரும் கடாப் போல் வீண் கருமத்து உழல்கின்றேன் விழலனேனைச் செக்கிடை வைத்து உடல் குழம்பிச் சிதைய அந்தோ திருப்பிடினும் இருப்பறை முள் சேரச் சேர்த்து எக்கரிடை உருட்டுகினும் அன்றி இன்னும் என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#9 அன்புடன் நின் பதம் புகழாப் பாவி நாவை அறத் துணியேன் நின் அழகை அமர்ந்து காணாத் துன்புறு கண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் தொழாக் கையை வாள்-அதனால் துண்டம் ஆக்கேன் வன்பு அற நின்றனை வணங்காத் தலையை அந்தோ மடித்திலேன் ஒதியே போல் வளர்ந்தேன் என்னை இன்பு அறு வல் எரியிடை வீழ்த்திடினும் அன்றி என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

#10 தேவே நின் அடி நினையா வஞ்ச நெஞ்சைத் தீமூட்டிச் சிதைக்க அறியேன் செதுக்குகில்லேன் கோவே நின் அடியர்-தமைக் கூடாப் பொய்மைக் குடிகொண்டேன் புலை கொண்ட கொடியேன் அந்தோ நா ஏற நினைத் துதியேன் நலம் ஒன்று இல்லேன் நாய்க் கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணுகின்றோர்க்கு ஈவு ஏதும் அறியேன் இங்கு என்னை அந்தோ என் செயினும் போதாதே எந்தாய் எந்தாய்.

மேல்

@24. தியாக வண்ணப் பதிகம்

மேல்

#1 கார் ஆர் குழலாள் உமையோடு அயில் வேல் காளையொடும் தான் அமர்கின்ற ஏர் ஆர் கோலம் கண்டு களிப்பான் எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் நீர் ஆர் சடை மேல் பிறை ஒன்று உடையான் நிதி_கோன் தோழன் என நின்றான் பேர் ஆர் ஒற்றியூரான் தியாக_பெருமான் பிச்சை பெருமானே.

மேல்

#2 தண் ஆர் நீப_தாரானொடும் எம் தாயோடும் தான் அமர்கின்ற கண் ஆர் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் பண் ஆர் இன் சொல் பதிகம் கொண்டு படிக்காசு அளித்த பரமன் ஓர் பெண் ஆர் பாகன் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சை பெருமானே.

மேல்

#3 பத்தர்க்கு அருளும் பாவையொடும் வேல் பாலனொடும் தான் அமர்கின்ற நித்தக் கோலம் கண்டு களிப்பான் நினைக்கும் எமக்கு ஒன்று அருளானேல் சித்தப் பெருமான் தில்லைப் பெருமான் தெய்வப் பெருமான் சிவபெருமான் பித்தப் பெருமான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#4 மன்னும் கதிர் வேல் மகனாரோடும் மலையாளொடும் தான் வதிகின்ற துன்னும் கோலம் கண்டு களிப்பான் துதிக்கும் எமக்கு ஒன்று அருளானேல் மின்னும் சூல_படையான் விடையான் வெள்ளிமலை ஒன்று அது உடையான் பின்னும் சடையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#5 அணி வேல் படை கொள் மகனாரொடும் எம் அம்மையொடும் தான் அமர்கின்ற தணியாக் கோலம் கண்டு களிக்கத் தகையாது எமக்கு ஒன்று அருளானேல் மணி சேர் கண்டன் எண் தோள் உடையான் வட-பால் கனக_மலை வில்லான் பிணி போக்கிடுவான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#6 சூதம் எறி வேல் தோன்றலொடும் தன் துணைவியொடும் தான் அமர்கின்ற காதல் கோலம் கண்டு களிப்பான் கருதும் எமக்கு ஒன்று அருளானேல் ஈதல் வல்லான் எல்லாம் உடையான் இமையோர் அயன் மாற்கு இறை ஆனான் பேதம் இல்லான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#7 வெற்றிப் படை வேல் பிள்ளையோடும் வெற்பாளோடும் தான் அமர்கின்ற மற்று இக் கோலம் கண்டு களிப்பான் வருந்தும் எமக்கு ஒன்று அருளானேல் கற்றைச் சடையான் கண் மூன்று உடையான் கரியோன் அயனும் காணாதான் பெற்றத்து இவர்வான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#8 வரம் மன்றலினார் குழலாளொடும் வேல் மகனாரொடும் தான் அமர்கின்ற திரம் மன்றவும் நின்று எழில் கண்டிடுவான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் பரமன் தனி மால் விடை ஒன்று உடையான் பணியே பணியாப் பரிவுற்றான் பிரமன் தலையான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

#9 அறம் கொள் உமையோடு அயில் ஏந்திய எம் ஐயனொடும் தான் அமர்கின்ற திறம் கொள் கோலம் கண்டு களிப்பான் சிறக்க எமக்கு ஒன்று அருளானேல் மறம் கொள் எயில் மூன்று எரித்தான் கனக_மலையான் அடியார் மயல் தீர்ப்பான் பிறங்கும் சடையான் ஒற்றித் தியாக_பெருமாள் பிச்சைப் பெருமானே.

மேல்

#10 தேசு ஆர் அயில் வேல் மகனாரொடும் தன் தேவியொடும் தான் அமர் கோலம் ஈசா என நின்று ஏத்திக் காண எண்ணும் எமக்கு ஒன்று அருளானேல் காசு ஆர் அரவக் கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்றுப் பேசார்க்கு அருளான் ஒற்றித் தியாக_பெருமான் பிச்சைப் பெருமானே.

மேல்

@25. ஆடலமுதப் பத்து

மேல்

#1 சிந்தை நொந்துநொந்து அயர்கின்றேன் சிவனே செய்வது ஓர்ந்திலேன் தீ_குணம்_உடையேன் வந்து நின் அடிக்கு ஆட்செய என்றால் வஞ்ச நெஞ்சம் என் வசம் நின்றது இலையே எந்தை நின் அருள் உண்டு எனில் உய்வேன் இல்லை என்னில் நான் இல்லை உய்ந்திடலே அந்தி வான் நிறத்து ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#2 மாய நெஞ்சமோ நின் அடி வழுத்தா வண்ணம் என்றனை வலிக்கின்றது அதனால் தீயன் ஆயினேன் என் செய்வேன் சிவனே திரு_அருட்கு நான் சேயனும் ஆனேன் காய வாழ்க்கையில் காமம் உண்டு உள்ளம் கலங்குகின்றனன் களைகண் மற்று அறியேன் ஆய ஒற்றியூர் அண்ணலே தில்லை அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#3 உன்னை உன்னி நெக்குருகி நின்று ஏத்த உள்ளம் என் வசம் உற்றதின்றேனும் என்னை ஆளுதல் உன் கடன் அன்றேல் இரக்கம் என்பது உன்னிடத்து இலை அன்றோ முன்னை வல்_வினை முடித்திடில் சிவனே மூடனேனுக்கு முன் நிற்பது எவனோ அன்னை அப்பனே ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#4 என்ன நான் சொலி நிறுத்தினும் நில்லாது ஏகுகின்றது இ ஏழையேன் மனம்-தான் உன்னது இன்னருள் ஒருசிறிது உண்டேல் ஒடுக்கி நிற்பனால் உண்மை மற்று இன்றேல் இன்னது என்று அறியாமல் இருளில் இடர்கொள்வேன் அன்றி என் செய்வேன் சிவனே அன்னது உன் செயல் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#5 பாவி நெஞ்சம் என்-பால் இராது ஓடிப் பாவையார் மயல் படிந்து உழைப்பதனால் சேவியாத என் பிழை பொறுத்து ஆளும் செய்கை நின்னதே செப்பல் என் சிவனே காவி நேர் விழி மலை_மகள் காணக் கடலின் நஞ்சு உண்டு கண்ணன் ஆதியர்கள் ஆவி ஈந்து அருள் ஒற்றி எம் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#6 மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் தேட என் வசம் அன்றது சிவனே திரு_அருள்_கடல் திவலை ஒன்று உறுமேல் நாட நாடிய நலம் பெறும் அதனால் நானும் உய்குவேன் நல்கிடல் வேண்டும் ஆடல் ஒற்றியாய் பெரும்பற்றப்புலியூர் அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#7 கலங்குகின்ற என் கண் உனது அருள் ஓர் கடுகின் எல்லை-தான் கலந்திடுமானால் விலங்குகின்ற என் நெஞ்சம் நின்றிடுமால் வேறு நான் பெறும் வேட்கையும் இன்றால் மலங்குகின்றதை மாற்றுவன் உனது மலர்ப் பொன்_தாள் அலால் மற்று இலன் சிவனே அலங்குகின்ற சீர் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#8 மறைவது என்னையும் மறைப்பது பொல்லா வஞ்ச நெஞ்சன் என் வசப்படல் இலை காண் இறைவ நின் அருட்கு என் செய்வோம் எனவே எண்ணிஎண்ணி நான் ஏங்குகின்றனனால் உறைவது உன் அடி_மலர் அன்றி மற்றொன்று உணர்ந்திலேன் இஃது உண்மை நீ அறிதி அறைவது என்ன நான் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#9 ஒரு கணப்பொழுதேனும் நின் அடியை உள்கிடாது உளம் ஓடுகின்றதனால் திருகு அணப்பெறும் தீயனேன் செய்யும் திறம் அறிந்திலேன் செப்பல் என் சிவனே வரு கணத்து உடல் நிற்குமோ விழுமோ மாயுமோ என மயங்குவேன்-தன்னை அருகு அணைத்து அருள் ஒற்றியூர் இறையே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

#10 யாது நின் கருத்து அறிந்திலேன் மனமோ என் வசப்படாது இருத்தலை உரைத்தேன் தீது செய்யினும் பொறுத்து எனைச் சிவனே தீய வல்_வினைச் சேர்ந்திடா வண்ணம் பாதுகாப்பது உன் பரம் இன்றேல் பலவாய்ப் பகர்தல் என்ன காண் பழி வரும் உனக்கே ஆது காண்டி எம் ஒற்றியூர் அரசே அம்பலத்தில் நின்று ஆடல்செய் அமுதே.

மேல்

@26. திருஅடிச் சரண்புகல்

மேல்

#1 ஓடல் எங்கணும் நமக்கு என்ன குறை காண் உற்ற நல் துணை ஒன்றும் இல்லார் போல் வாடல் நெஞ்சமே வருதி என்னுடனே மகிழ்ந்து நாம் இருவரும் சென்று மகிழ்வாய்க் கூடல் நேர் திருவொற்றியூர் அகத்துக் கோயில் மேவி நம் குடி முழுது ஆளத் தாள் தலம் தரும் நமது அருள் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#2 ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு வாங்கி ஈகுவன் ஒன்றுக்கும் அஞ்சேல் மகிழ்ந்து நெஞ்சமே வருதி என்னுடனே ஓங்கி வாழ் ஒற்றியூரிடை அரவும் ஒளி கொள் திங்களும் கங்கையும் சடை மேல் தாங்கி வாழும் நம் தாணுவாம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#3 கயவர் இல்லிடைக் கலங்கலை நெஞ்சே காம ஐம்புலக் கள்வரை வீட்டி வயம் அளிக்குவன் காண்டி என் மொழியை மறுத்திடேல் இன்று வருதி என்னுடனே உயவு அளிக்கும் நல் ஒற்றியூர் அமர்ந்து அங்கு உற்று வாழ்த்திநின்று உன்னுகின்றவர்க்குத் தயவு அளிக்கும் நம் தனி முதல் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#4 சண்ட வெம் பவப் பிணியினால் தந்தை தாய் இலார் எனத் தயங்குகின்றாயே மண்டலத்து உழல் நெஞ்சமே சுகமா வாழ வேண்டிடில் வருதி என்னுடனே ஒண் தலத் திருவொற்றியூரிடத்தும் உன்னுகின்றவர் உள்ளகம் எனும் ஓர் தண் தலத்தினும் சார்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#5 விடம் கொள் கண்ணினார் அடி விழுந்து ஐயோ வெட்கினாய் இந்த விதி உனக்கு ஏனோ மடம் கொள் நெஞ்சமே நினக்கு இன்று நல்ல வாழ்வு வந்தது வருதி என்னுடனே இடம் கொள் பாரிடை நமக்கு இனி ஒப்பார் யார் கண்டாய் ஒன்றும் எண்ணலை கமலத் தடம் கொள் ஒற்றியூர் அமர்ந்த நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#6 பொருந்தி ஈனருள் புகுந்து வீண் காலம் போக்கி நின்றனை போனது போக வருந்தி இன்னும் இங்கு உழன்றிடேல் நெஞ்சே வாழ்க வாழ்க நீ வருதி என்னுடனே திருந்தி நின்ற நம் மூவர்-தம் பதிகச் செய்ய தீந்தமிழ்த் தேறல் உண்டு அருளைத் தரும் தென் ஒற்றியூர் வாழும் நம் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#7 நாட்டமுற்று எனை எழுமையும் பிரியா நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால் வாட்டமுற்று இவண் மயங்கினை ஐயோ வாழ வேண்டிடில் வருதி என்னுடனே கோட்டம் அற்று இரு மலர்_கரம் கூப்பிக் கும்பிடும் பெரும் குணத்தவர்-தமக்குத் தாள் தலம் தரும் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#8 உடுக்க வேண்டி முன் உடை இழந்தார் போல் உள்ள ஆகும் என்று உன்னிடாது இன்பம் மடுக்க வேண்டி முன் வாழ்வு இழந்தாயே வாழ வேண்டிடில் வருதி என்னுடனே அடுக்க வேண்டி நின்று அழுதழுது ஏத்தி அரும் தவத்தினர் அழிவுறாப் பவத்தைத் தடுக்க வேண்டி நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#9 மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து வாகை ஈகுவன் வருதி என்னுடனே வஞ்ச வாழ்க்கையின் மயங்கும் என் நெஞ்சே போகம் நீக்கி நல் புண்ணியம் புரிந்து போற்றி நாள்-தொறும் புகழ்ந்திடும் அவர்க்குச் சாகை நீத்து அருள் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

#10 பசியெடுக்கும் முன் அமுது சேகரிப்பார் பாரினோர்கள் அப் பண்பு அறிந்திலையோ வசி எடுக்கும் முன் பிறப்பதை மாற்றா மதி இல் நெஞ்சமே வருதி என்னுடனே நிசி எடுக்கும் நல் சங்கவை ஈன்ற நித்திலக் குவை நெறிப்பட ஓங்கிச் சசி எடுக்கும் நல் ஒற்றியூர்ச் செல்வத் தந்தையார் அடிச் சரண்புகலாமே.

மேல்

@27.சிவானந்தப் பத்து

மேல்

#1 இச்சை உண்டு எனக்கு உன் திரு_மலர்_தாள் எய்தும் வண்ணம் இங்கு என் செய வல்லேன் கொச்சை நெஞ்சம் என் குறிப்பில் நில்லாது குதிப்பில் நின்றது மதிப்பின் இ உலகில் பிச்சை உண்டு எனி பிச்சரில் சீறும் பேயர் உண்_மனை நாய் என உழைத்தேன் செச்சை மேனி எம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#2 ஐய நின்னுடை அன்பர்கள் எல்லாம் அழிவு இல் இன்பமுற்று அருகு இருக்கின்றார் வெய்ய நெஞ்சகப் பாவியேன் கொடிய வீணனேன் இங்கு வீழ் கதிக்கு இடமாய் வைய வாழ்க்கையின் மயங்குகின்றனன் மேல் வருவது ஓர்ந்திலன் வாழ்வு அடைவேனோ செய்ய வண்ணனே ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#3 மடி கொள் நெஞ்சினால் வள்ளல் உன் மலர்_தாள் மறந்து வஞ்சக வாழ்க்கையை மதித்தேன் துடி கொள் நேர் இடை மடவியர்க்கு உருகிச் சுழல்கின்றேன் அருள் சுகம் பெறுவேனோ வடி கொள் வேல் கரத்து அண்ணலை ஈன்ற வள்ளலே என வாழ்த்துகின்றவர்-தம் செடிகள் நீக்கிய ஒற்றி அம் பரனே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#4 இருக்கு அவாவுற உலகு எலாம் உய்ய எடுத்த சேவடிக்கு எள்ளளவேனும் உருக்கம் ஒன்று இலேன் ஒதியினில் பெரியேன் ஒண்மை எய்துதல் வெண்மை மற்று அன்றே தருக்க நின்ற என் தன்மையை நினைக்கில் தமியனேனுக்கே தலை நடுக்குறும் காண் திரு_கண் மூன்று உடை ஒற்றி எம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#5 எண்பெறா வினைக்கு ஏதுசெய் உடலை எடுத்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் நண்புறாப் பவம் இயற்றினன் அல்லால் நன்மை என்பது ஓர் நாளினும் அறியேன் வண் பெறா எனக்கு உன் திரு_அருளாம் வாழ்வு நேர்ந்திடும் வகை எந்த வகையோ திண் பெறாநிற்க அருள் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#6 பேதை நெஞ்சினேன் செய் பிழை எல்லாம் பேசினால் பெரும் பிணக்கினுக்கு இடமாம் தாதை நீ அவை எண்ணலை எளியேன்-தனக்கு நின் திருத் தண் அளி புரிவாய் கோதை நீக்கிய முனிவர்கள் காணக் கூத்து உகந்து அருள் குணப் பெரும் குன்றே தீதை நீக்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#7 வஞ்ச நெஞ்சர்-தம் சேர்க்கையைத் துறந்து வள்ளல் உன் திரு_மலர்_அடி ஏத்தி விஞ்சு நெஞ்சர்-தம் அடித் துணைக்கு ஏவல் விரும்பி நிற்கும் அப் பெரும் பயன் பெறவே தஞ்சம் என்று அருள் நின் திரு_கோயில் சார்ந்து நின்றனன் தருதல் மற்று இன்றோ செஞ்சொல் ஓங்கிய ஒற்றி எம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#8 புல்லனேன் புவி நடையிடை அலையும் புலைய நெஞ்சினால் பொருந்திடும் கொடிய அல்லல் என்பதற்கு எல்லை ஒன்று அறியேன் அருந்துகின்றனன் விருந்தினன் ஆகி ஒல்லை உன் திரு_கோயில் முன் அடுத்தேன் உத்தமா உன்றன் உள்ளம் இங்கு அறியேன் செல்லல் நீக்கிய ஒற்றி அம் பொருளே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#9 எளியனேன் பிழை இயற்றிய எல்லாம் எண்ணின் உட்படாவேனும் மற்று அவையை அளிய நல் அருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்று அல ஆதலின் ஈண்டே களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் கருணை ஈகுதல் கடன் உனக்கு ஐயா தெளிய ஓங்கிய ஒற்றி என் அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

#10 வெறிபிடிக்கினும் மகன்-தனைப் பெற்றோர் விடுத்திடார் அந்த வெறி-அது தீரும் நெறி பிடித்து நின்று ஆய்வர் என் அரசே நீயும் அப்படி நீசனேன்-தனக்குப் பொறி பிடித்த நல் போதகம் அருளிப் புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் செறி பிடித்த வான் பொழில் ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே.

மேல்

@28.சந்நிதி முறையீடு

மேல்

#1 ஒற்றி மேவிய உத்தமனே மணித் தெற்றி மேவிய தில்லை அப்பா விழி நெற்றி மேவிய நின்மலனே உனைப் பற்றி மேவிய நெஞ்சம் உன் பாலதே.

மேல்

#2 பாலின் நீற்றுப் பரஞ்சுடரே மலர்க் காலின் ஈற்றுக் கதி பெற ஏழையேன் மாலின் ஈற்று மயக்கு அறல் என்று கல் ஆலின் ஈற்றுப் பொருள் அருள் ஆதியே.

மேல்

#3 ஆதியே தில்லை அம்பலத்து ஆடல்செய் சோதியே திரு_தோணிபுரத்தனே ஓதியே தரும் ஒற்றி அப்பா இது நீதியே எனை நீ மருவாததே.

மேல்

#4 வாதம் ஓதிய வஞ்சரைக் காணில் ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீதமோ அன்றி நேரும் அநீதமோ ஓதம் ஓது ஒலி ஒற்றித் தலத்தனே.

மேல்

#5 தலத்தனே தில்லைச் சங்கரனே தலைக் கலத்தனே நெற்றிக்கண்ணுடையாளனே நலத்தனே ஒற்றி நாயகனே இந்த மலத்தனேனையும் வாழ்வித்தல் மாண்பு அதே.

மேல்

#6 மாண் கொள் அம்பல மாணிக்கமே விடம் ஊண் கொள் கண்டத்து எம் ஒற்றி அப்பா உன்றன் ஏண் கொள் சேவடி இன் புகழ் ஏத்திடாக் கோண் கொள் நெஞ்சக் கொடியனும் உய்வனே.

மேல்

#7 உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் எய்த நான் செய்யும் வண்ணம் தெரிந்திலன் செல்வமே பெய்யும் வண்ணப் பெரு முகிலே புரம் எய்யும் வண்ணம் எரித்து அருள் எந்தையே.

மேல்

#8 எந்தையே தில்லை எம் இறையே குகன் தந்தையே ஒற்றித் தண் அமுதே என்றன் முந்தை ஏழ் பவ மூட மயக்கு அறச் சிந்தை ஏதம் திருந்த அருள்வையே.

மேல்

#9 திருந்த நான்மறைத் தில்லைச் சிற்றம்பலத்து இருந்த ஞான இயல் ஒளியே ஒற்றிப் பொருந்த நின்று அருள் புண்ணியமே இங்கு வருந்த என்றனை வைத்தது அழகு-அதோ.

மேல்

#10 வைத்த நின் அருள் வாழிய வாழிய மெய்த்த தில்லையின் மேவிய இன்பமே உய்த்த நல் அருள் ஒற்றி அப்பா எனைப் பொய்த்த சிந்தை விட்டு உன்றனைப் போற்றவே.

மேல்

#11 போற்றவைத்தனை புண்ணியனே எனைச் சாற்றவைத்தனை நின் புகழ்த் தன்மையைத் தேற்றவைத்தனை நெஞ்சைத் தெளிந்து அன்பை ஊற்றவைத்தனை உன் ஒற்றி மேவியே.

மேல்

@29. தவத்திறம் போற்றல்

மேல்

#1 வில்வத்தொடும் பொன் கொன்றை அணி வேணிப் பெருமான் ஒற்றி நகர் செல்வப் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைக் கல் வைப்பு உடைய மனம் களிக்கக் கண்கள் களிக்கக் கண்டு நின்றேன் இல் வைப்பு_உடையேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#2 கூடும்படி முன் திருமாலும் கோலம் ஆகிப் புவி இடந்து தேடும் திரு_தாள் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி நாடும் புகழ் சேர் ஒற்றி நகர் நாடிப் புகுந்து கண்டேனால் ஈடும் அகன்றேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#3 ஆர்க்கும் கடல்-கண் அன்று எழுந்த ஆலகாலம் அத்தனையும் சேர்க்கும் களத்தான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைக் கார்-கண் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் பிறவி கண்டிலனே யார்க்கு என்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#4 உள்ளும் புறமும் நிறைந்து அடியார் உள்ளம் மதுரித்து ஊறுகின்ற தெள்ளும் அமுதாம் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_முகத்தைக் கள்ளம் தவிர்க்கும் ஒற்றியில் போய்க் கண்டேன் பசியைக் கண்டிலனே எள்ளல் இகந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#5 ஆவல்_உடையார் உள்_உடையார் அயன் மால் மகவான் ஆதியராம் தேவர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_வடிவைக் கா அம் பொழில் சூழ் ஒற்றியில் போய்க் கண்டேன் கண்ட காட்சி-தனை யாவர் பெறுவார் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#6 மறப்பை அகன்ற மனத்து உரவோர் வாழ்த்த அவர்க்கு வான் கதியின் சிறப்பை அளிக்கும் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_நடத்தைப் பிறப்பை அகற்றும் ஒற்றியில் போய்ப் பேர்_ஆனந்தம் பெறக் கண்டேன் இறப்பைத் தவிர்த்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#7 வில்லாம்படிப் பொன்_மேருவினை விரைய வாங்கும் வெற்றியினான் செல்லாம் கருணைச் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_கூத்தைக் கல்லாம் கொடிய மனம் கரையக் கண்டேன் பண்டு காணாத எல்லாம் கண்டேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#8 ஒல்லை எயில் மூன்று எரி கொளுவ உற்று நகைத்தோன் ஒற்றி_உளான் தில்லை நகரான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_பவனி கல்லை அளியும் கனி ஆக்கக் கண்டேன் கொண்ட களிப்பினுக்கு ஓர் எல்லை அறியேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#9 துன்னும் சோமசுந்தரனார் தூய மதுரை நகர் அளித்த தென்னர் பெருமான் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அழகைப் பன்னும் ஒற்றி நகர்-தன்னில் பார்த்தேன் வினை போம் வழி பார்த்த என்னை மறந்தேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

#10 முன்னம் காழி வள்ளலுக்கு முத்துச் சிவிகை குடையொடு பொன் சின்னம் அளித்தோன் சிவபெருமான் தியாக_பெருமான் திரு_அடியைக் கல் நின்று உருகா நெஞ்சு உருகக் கண்டேன் கண்ட காட்சி-தனை என்னென்று உரைப்பேன் அம்மா நான் என்ன தவம்-தான் செய்தேனோ.

மேல்

@30. நெஞ்சுறுத்த திரு நேரிசை

மேல்

#1 பொன் ஆர் விடை_கொடி எம் புண்ணியனைப் புங்கவனை ஒன்னார் புரம் எரித்த உத்தமனை மன்னாய அத்தனை நம் ஒற்றியூர் அப்பனை எல்லாம்_வல்ல சித்தனை நீ வாழ்த்துதி நெஞ்சே.

மேல்

#2 நெஞ்சே உலக நெறி நின்று நீ மயலால் அஞ்சேல் என் பின் வந்து அருள் கண்டாய் எஞ்சாத் தவ_கொழுந்தாம் சற்குணவர் தாழ்ந்து ஏத்தும் ஒற்றிச் சிவ_கொழுந்தை வாழ்த்துதும் நாம் சென்று

மேல்

#3 சென்றுசென்று நல்காத செல்வர் தலைவாயிலிலே நின்றுநின்று வாடுகின்ற நெஞ்சமே இன்று திரு ஒற்றியப்பன் தாள்_மலரை உன்னுதியேல் காதலித்து மற்று இசைப்பது எல்லாம் வரும்.

மேல்

#4 வரு_நாள் உயிர் வாழும் மாண்பு அறியோம் நெஞ்சே ஒருநாளும் நீ வேறு ஒன்று உன்னேல் திருநாளைப் போவான் தொழும் மன்றில் புண்ணியனை ஒற்றியில் தாய் ஆவான் திரு_அடி அல்லால்.

மேல்

#5 அல் ஆலம் உண்ட மிடற்று ஆர்_அமுதை அற்புதத்தைக் கல் ஆல நீழல் அமர் கற்பகத்தைச் சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை மெய்ப்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது.

மேல்

#6 கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் மருதா எழில் தில்லை மன்னா எருது ஏறும் என் அருமைத் தெய்வதமே என் அருமைச் சற்குருவே என் அருமை அப்பாவே என்று.

மேல்

#7 என்றும் உனக்கு ஆளாவேன் என் நெஞ்சே வன்_நெஞ்சர் ஒன்றும் இடம் சென்று அங்கு உழலாதே நன்று தரும் ஒற்றியப்பன் பொன்_அடியை உன்னுகின்றோர்-தம் பதத்தைப் பற்றி நிற்பையாகில் பரிந்து.

மேல்

#8 பரிந்து உனக்குச் சொல்கின்றேன் பாவங்கள் எல்லாம் எரிந்து விழ நாம் கதியில் ஏறத் தெரிந்து விடையானை ஒற்றியூர் வித்தகனை மாது ஓர் புடையானை நெஞ்சமே போற்று.

மேல்

#9 போற்றுதி என் நெஞ்சே புரம் நகையால் சுட்டவனை ஏற்று உகந்த பெம்மானை எம்மவனை நீற்று ஒளி சேர் அம்_வண்ணத்தானை அணி பொழில் சூழ் ஒற்றியூர்ச் செம்_வண்ணத்தானைத் தெரிந்து.

மேல்

#10 தெரிந்து நினக்கு அனந்தம் தெண்டன் இடுகின்றேன் விரிந்த நெஞ்சே ஒற்றியிடை மேவும் பரிந்த நெற்றிக் கண்ணானை மால் அயனும் காணப்படாதானை எண்ணாரை எண்ணாதே என்று.

மேல்

#11 என்று என்று அழுதாய் இலையே என் நெஞ்சமே ஒன்று என்று நின்ற உயர்வு_உடையான் நன்று என்ற செம்மைத் தொழும்பர் தொழும் சீர் ஒற்றியூர் அண்ணல் நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்.

மேல்

#12 நாள் ஆகும் முன் எனது நல் நெஞ்சே ஒற்றியப்பன் தாள் ஆகும் தாமரைப் பொன் தண் மலர்க்கே ஆளாகும் தீர்த்தர்-தமக்கு அடிமை_செய்தவர்-தம் சீர்ச் சமுகம் பார்த்து மகிழ்வாய் அதுவே பாங்கு.

மேல்

#13 பாங்கு_உடையார் மெய்யில் பலித்த திரு_நீறு அணியாத் தீங்கு_உடையார் தீ மனையில் செல்லாதே ஓங்கு_உடையாள் உற்று அமர்ந்த பாகத்து எம் ஒற்றியப்பன் பொன்_அருளைப் பெற்று அமர்தி நெஞ்சே பெரிது.

மேல்

#14 பெரியானை மாதர்ப் பிறை_கண்ணியானை அரியானை அங்கணனை ஆர்க்கும் கரி யானைத் தோலானைச் சீர் ஒற்றிச் சுண்ண வெண்_நீற்றானை மேலானை நெஞ்சே விரும்பு.

மேல்

#15 விரும்பித் திருமால் விலங்காய் நெடுநாள் அரும் பித்து அளைந்து உள் அயர்ந்தே திரும்பி விழி நீர் கொண்டும் காணாத நித்தன் ஒற்றியூரன் அடிச் சீர் கொண்டு நெஞ்சே திகழ்.

மேல்

#16 திகழ்கின்ற ஞானச் செழும் சுடரை வானோர் புகழ்கின்ற தெய்வத்தைப் போதம் நிகழ்கின்ற ஒற்றிக் கனியை உலகு உடைய நாயகத்தை வெற்றித் துணையை நெஞ்சே வேண்டு.

மேல்

#17 வேண்டாமை வேண்டுவது மேவாத் தவம்_உடையோர் தீண்டாமை யாது அது நீ தீண்டாதே ஈண்டாமை ஒன்றுவ போல் நெஞ்சே நீ ஒன்றி ஒற்றியூரன்-பால் சென்று தொழு கண்டாய் தினம்.

மேல்

#18 தினம்-தோறும் உள் உருகிச் சீர் பாடும் அன்பர் மனம்-தோறும் ஓங்கும் மணியை இனம்-தோறும் வேதம் மலர்கின்ற வியன் பொழில் சூழ் ஒற்றி நகர்ப் போத மலரை நெஞ்சே போற்று.

மேல்

#19 போற்றார் புரம் பொடித்த புண்ணியனை விண்ணவர்கள் ஆற்றாத நஞ்சம் உண்ட ஆண்தகையைக் கூற்று ஆவி கொள்ளும் கழல் கால் குரு மணியை ஒற்றி இடம் கொள்ளும் பொருளை நெஞ்சே கூறு.

மேல்

#20 கூறு உமையாட்கு ஈந்து அருளும் கோமானைச் செம் சடையில் ஆறு மலர்க் கொன்றை அணிவோனைத் தேறு மனம் உள்ளவர்கட்கு உள்ளபடி உள்ளவனை ஒற்றி அமர் நள்ளவனை நெஞ்சமே நாடு.

மேல்

#21 நாடும் சிவாய நம என்று நாடுகின்றோர் கூடும் தவ நெறியில் கூடியே நீடும் அன்பர் சித்த மனைத் தீபகமாம் சிற்பரனை ஒற்றியூர் உத்தமனை நெஞ்சமே ஓது.

மேல்

#22 ஓது நெறி ஒன்று உளது என் உள்ளமே ஓர்தி அது தீது நெறி சேராச் சிவ நெறியில் போது நெறி ஓதம் பிடிக்கும் வயல் ஒற்றியப்பன் தொண்டர் திருப் பாதம் பிடிக்கும் பயன்.

மேல்

#23 பயன் அறியாய் நெஞ்சே பவம் சார்தி மாலோடு அயன் அறியாச் சீர் உடைய அம்மான் நயன்_அறியார் உள்ளத்து அடையான் உயர் ஒற்றியூரவன் வாழ் உள்ளத்தவரை உறும்.

மேல்

#24 தவராயினும் தேவர்-தாமாயினும் மற்று எவராயினும் நமக்கு இங்கு என்னாம் கவராத நிந்தை அகன்றிட என் நெஞ்சமே ஒற்றியில் வாழ் எந்தை அடி வணங்காரேல்.

மேல்

#25 ஏலக் குழலார் இடைக் கீழ்ப் படும் கொடிய ஞாலக் கிடங்கரினை நம்பாதே நீல மணி_கண்டா என்று உவந்து வாழ்த்தி நெஞ்சே நாளும் பணி கண்டாய் அன்னோன் பதம்.

மேல்

#26 பதம் தருவான் செல்வப் பயன் தருவான் மன்னும் சதம் தருவான் யாவும் தருவான் இதம் தரும் என் நெஞ்சம் என்-கொல் வாடுகின்றாய் நின்மலா நின் அடியே தஞ்சம் என்றால் ஒற்றியப்பன்-தான்.

மேல்

@31. சிகாமணி மாலை

மேல்

#1 வல்_வினையேனை இ வாழ்க்கைக் கடல்-நின்றும் வள்ளல் உன்றன் நல் வினை வாழ்க்கைக் கரையேற்றி மெய் அருள் நல்கு கண்டாய் கொல் வினை யானை உரித்தோய் வயித்தியநாத குன்றாச் செல் வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே

மேல்

#2 பொய்யே புலம்பிப் புழு தலை நாயின் புறத்தில் உற்றேன் மெய்யே உரைக்கும் நின் அன்பர்-தம் சார்பை விரும்புகிலேன் பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கிப் பராமுகம் நீ செய்யேல் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#3 கல்லேன் மனக் கருங்கல்லேன் சிறிதும் கருத்து அறியாப் பொல்லேன் பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறை சிறிதும் இல்லேன் எனினும் நின்-பால் அன்றி மற்றை இடத்தில் சற்றும் செல்லேன் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#4 ஆர்ப்பார் கடல் நஞ்சு அமுது செய்தாய் நின் அடிக்கு அன்பு இன்றி வேர்ப்பார்-தமக்கும் விருந்து அளித்தாய் வெள்ளி வெற்பு எடுத்த கார்ப்பாளனுக்கும் கருணைசெய்தாய் கடையேன் துயரும் தீர்ப்பாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#5 நானே நினக்குப் பணி செயல் வேண்டும் நின் நாள்_மலர்த் தாள் தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே கோனே கரும்பின் சுவையே செம் பாலொடு கூட்டும் நறும் தேனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#6 மரு ஆர் குழலியர் மையல்_கடல் விழும் வஞ்ச நெஞ்சால் வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்கு கண்டாய் உருவாய் அருவும் ஒளியும் வெளியும் என்று ஓத நின்ற திரு ஆர் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#7 தவ நேயம் ஆகும் நின் தாள் நேயம் இன்றித் தட_முலையார் அவ நேயம் மேற்கொண்டு அலைகின்ற பேதைக்கு அருள் புரிவாய் நவ நேயம் ஆகி மன_வாக்கு இறந்த நடு ஒளியாம் சிவனே வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#8 ஐ_வாய்_அரவில் துயில்கின்ற மாலும் அயனும் தங்கள் கை வாய் புதைத்துப் பணிகேட்க மேவும் முக்கண் அரசே பொய் வாய் விடா இப் புலையேன் பிழையைப் பொறுத்து அருள் நீ செய்வாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#9 புல்வாயின் முன்னர்ப் புலிப் போத்து என என் முன் போந்து நின்ற கல் வாய் மனத்தரைக் கண்டு அஞ்சினேனைக் கடைக்கணிப்பாய் அல் வாய் மணி மிடற்று ஆர்_அமுதே அருள் ஆன்ற பெரும் செல்வா வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#10 ஆர்த்து ஆர் கடல் நஞ்சு அமுது செய்தாய் என்னை அன்பர்கள்-பால் சேர்த்தாய் என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திரு_அருள் கண் பார்த்தாய் பரம குரு ஆகி என் உள் பரிந்து அமர்ந்த தீர்த்தா வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#11 அற_தாயை ஓர் புடை கொண்டு ஓர் புடை மண் அளந்த முகில்_ நிறத்தாயை வைத்து உலகு எல்லாம் நடத்தும் நிருத்த அண்ட_ புறத்தாய் என் துன்பம் துடைத்து ஆண்டு மெய் அருள் போதம் தந்த திறத்தாய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#12 அலை ஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்-தம் நிலை ஓர்சிறிதும் அறியேன் எனக்கு உன் நிமல அருள் மலை ஓங்கு வாழ்க்கையும் வாய்க்கும்-கொலோ பொன்_மலை என்கின்ற சிலையோய் வயித்தியநாதா அமரர் சிகாமணியே

மேல்

#13 ஊன் கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும் பிணியால் நான் கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்தியநாத என்றே வான் கொண்ட நின் அருள் சீர் ஏத்துகின்ற வகை அறியேன் தேன் கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே

மேல்

#14 களி வேதனும் அந்தக் காலனும் என்னைக் கருத ஒட்டா ஒளிவே தரத் திருவுள்ளம் செய்வாய் அன்பர் உள்ளம் என்னும் தளி வேதனத்து உறும் தற்பரமே அருள் தண் அமுதத் தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே

மேல்

#15 மால் விடை மேல் கொண்டு வந்து எளியேனுடை வல்_வினைக்கு மேல் விடை ஈந்திட வேண்டும் கண்டாய் இதுவே சமயம் நீல் விடம் உண்ட மிடற்றாய் வயித்தியநாத நின்-பால் சேல் விடு வாள் கண் உமையொடும் தேவர் சிகாமணியே

மேல்

@32. கலி முறையீடு

மேல்

#1 பொய் விடுகின்றிலன் என்று எம் புண்ணியா கைவிடுகின்றியோ கடையனேன்-தனைப் பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ பெய் விடம் அனைய என் பிழை பொறுக்கவே.

மேல்

#2 பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டு பின் சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே.

மேல்

#3 செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப் புல்லலும் கொண்ட என் பொய்மை கண்டு நீ கொல்லலும் தகும் எனைக் கொன்றிடாது அருள் மல்லலும் தகும் சடா_மகுட வள்ளலே.

மேல்

#4 வள்ளலே நின் அடி_மலரை நண்ணிய உள்ளலேன் பொய்மையை உன்னி என்னை ஆட் கொள்ளலே இன்று எனில் கொடிய என்றனை எள்ளலே அன்றி மற்று என் செய்கிற்பனே.

மேல்

#5 செய்ய நன்று அறிகிலாச் சிறியனேன்-தனைப் பொய்யன் என்று எண்ணி நீ புறம்பொழிப்பையேல் வைய நின்று ஐயவோ மயங்கல் அன்றி யான் உய்ய நின்று உணர்குவது ஒன்றும் இல்லையே.

மேல்

#6 இல்லை என்பது இலா அருள்_வெள்ளமே தில்லை மன்றில் சிவ_பரஞ்சோதியே வல்லை யான் செயும் வஞ்சம் எலாம் பொறுத்து ஒல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே.

மேல்

#7 இல்லையே என்பது இங்கு இல்லை என்று அருள் நல்லையே நீ அருள் நயந்து நல்கினால் கல்லையே அனைய என் கன்ம நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம் விட்டு உவக்கும் உண்மையே

மேல்

#8 உண்மையே அறிகிலா ஒதியனேன் படும் எண்மையே கண்டும் உள் இரக்கம் வைத்திலை அண்மையே அம்பலத்து ஆடும் ஐய நீ வண்மையே அருள் பெரு வாரி அல்லையோ

மேல்

#9 அல்லல் அம் கடலிடை ஆழ்ந்த நாயினேன் சொல் அலங்கு அடல் விடைத் தோன்றல் நின் அருள் மல்லல் அம் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் கல் அலங்கு அடல் மனம் கனிதல் மெய்மையே.

மேல்

#10 மெய்மையே அறிகிலா வீணனேன் இவன் உய்மையே பெற உனை உன்னி ஏத்திடாக் கைமையே_அனையர்-தம் கடையில் செல்லவும் பொய்மையே உரைக்கவும் புணர்த்தது என்-கொலோ.

மேல்

#11 என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன் உடை விடையினோய் பொறுத்துக்கொண்டு நின் றன்னுடை அன்பர்-தம் சங்கம் சார்ந்து நான் நின்னுடைப் புகழ்-தனை நிகழ்த்தச் செய்கவே.

மேல்

#12 நிகழும் நின் திரு_அருள் நிலையைக் கொண்டவர் திகழும் நல் திரு_சபை-அதனுள் சேர்க்க முன் அகழும் மால் ஏனமாய் அளவும் செம் மலர்ப் புகழுமாறு அருளுக பொறுக்க பொய்மையே.

மேல்

@33. எதிர்கொள் பத்து

மேல்

#1 ஆனந்தக் கூத்தனை அம்பலத்தானை அற்புதத் தேனை எம் ஆதிப் பிரானைத் தேன் நந்து அக் கொன்றை அம் செஞ்சடையானைச் செங்கண் விடையனை எம் கண்மணியை மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை ஈனம் தக்காது எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#2 அடுத்தவர்க்கு எல்லாம் அருள்_புரிவானை அம்பலக் கூத்தனை எம் பெருமானைத் தடுத்து எமை ஆண்டுகொண்டு அன்பு அளித்தானைச் சங்கரன்-தன்னை என் தந்தையைத் தாயைக் கடுத் ததும்பும் மணி_கண்டத்தினானைக் கண்_நுதலானை எம் கண் அகலானை எடுத்து எனைத் துன்பம் விட்டு ஏறவைத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#3 மால் அயன் தேடியும் காணா மலையை வந்தனை செய்பவர் கண்ட மருந்தை ஆலம் அமுதின் அருந்தல் செய்தானை ஆதியை ஆதியோடு அந்தம்_இலானைக் காலன் வருந்தி விழ உதைத்தானைக் கருணை_கடலை என் கண்_அனையானை ஏல மணி குழலாள்_இடத்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#4 சுந்தரர்க்காக முன் தூது_சென்றானைத் தூயனை யாவரும் சொல்ல_அரியானைப் பந்தம் அறுக்கும் பராபரன்-தன்னைப் பத்தர் உளம்கொள் பரஞ்சுடரானை மந்தர வெற்பில் மகிழ்ந்து அமர்ந்தானை வானவர் எல்லாம் வணங்க நின்றானை எம்-தமை ஆண்டு நல் இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#5 அன்பர்கள் வேண்டும்-அவை அளிப்பானை அம்பலத்தே நடம் ஆடுகின்றானை வன்பர்கள் நெஞ்சில் மருவல்_இல்லானை வானவர்_கோனை எம் வாழ் முதலானைத் துன்பம் தவிர்த்துச் சுகம் கொடுப்பானைச் சோதியைச் சோதியுள் சோதியை நாளும் என் பணிகொண்டு எனை ஏன்றுகொண்டானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#6 கண்_நுதலானை என் கண் அமர்ந்தானைக் கருணாநிதியைக் கறை_மிடற்றானை ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை நண்ணுதல் யார்க்கும் அருமையினானை நாதனை எல்லார்க்கும் நல்லவன்-தன்னை எண்ணுதல் செய்து எனக்கு இன்பு அளித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#7 வெள் விடை மேல் வரும் வீறு_உடையானை வேத முடிவினில் வீற்றிருந்தானைக் கள் விரை ஆர் மலர்க் கொன்றையினானைக் கற்பகம்-தன்னை முக் கண் கொள் கரும்பை உள் வினை நீக்கி என் உள் அமர்ந்தானை உலகு_உடையானை என் உற்ற_துணையை எள் வினை ஒன்றும் இலாதவன்-தன்னை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#8 பெண் அமர் பாகனைப் பேர்_அருளோனைப் பெரியவர்க்கு எல்லாம் பெரியவன்-தன்னைக் கண் அமர் நெற்றிக் கடவுள் பிரானைக் கண்ணனை ஆண்ட முக்கண்ணனை எங்கள் பண் அமர் பாடல் பரிசு அளித்தானைப் பார் முதல் அண்டம் படைத்து அளிப்பானை எண் அமராத எழில்_உடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#9 வளம் கொளும் தில்லைப் பொன் மன்று_உடையானை வானவர் சென்னியின் மாணிக்கம்-தன்னைக் களங்கம்_இலாத கருத்து_உடையானைக் கற்பனை முற்றும் கடந்துநின்றானை உளம்கொளும் என்றன் உயிர்த் துணையானை உண்மையை எல்லாம் உடையவன்-தன்னை இளம்பிறை சூடிய செஞ்சடையானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

#10 குற்றம் எல்லாம் குணமாகக் கொள்வானைக் கூத்து_உடையானைப் பெண் கூறு_உடையானை மற்றவர் யார்க்கும் அரியவன்-தன்னை வந்திப்பவர்க்கு மிக எளியானைப் பெற்றம்-அது ஏறும் பெரிய பிரானைப் பிறை முடியோனைப் பெம்மானை எம்மானை எற்றி என் துன்பம் எலாம் ஒழித்தானை இன்றை இரவில் எதிர்ந்துகொள்வேனே

மேல்

@34. நெஞ்சொடு நேர்தல்

மேல்

#1 அணி கொள் கோவணக் கந்தையே நமக்கு இங்கு அடுத்த ஆடை என்று அறி மட நெஞ்சே கணி கொள் மா மணிக் கலன்கள் நம் கடவுள் கண்ணுள் மா மணிக் கண்டிகை கண்டாய் பிணி கொள் வன் பவம் நீக்கும் வெண் நீறே பெருமைச் சாந்தமாம் பிறங்கு ஒளி மன்றில் திணி கொள் சங்கர சிவசிவ என்று சென்று வாழ்த்தலே செய் தொழிலாமே.

மேல்

#2 செய்த நன்றி மேல் தீங்கு இழைப்பாரில் திருப்பும் என்றனைக் திருப்புகின்றனை நீ பெய்த பாலினைக் கமரிடைக் கவிழ்க்கும் பேதையாதலில் பிறழ்ந்தனை உனை நான் வைத போதினும் வாழ்த்து என நினைத்து மறுத்து நீக்கி அ வழி நடக்கின்றாய் கொய்த கோட்டினை நட்டனை வளர்ப்பாய் கொடிய நெஞ்சமே மடியகிற்றிலையே.

மேல்

#3 இலை எனாது அணுவளவும் ஒன்று ஈய எண்ணுகின்றிலை என் பெறுவாயோ கொலை இனாது என அறிந்திலை நெஞ்சே கொல்லுகின்ற அக் கூற்றினும் கொடியாய் தலையின் மாலை தாழ் சடை உடைப் பெருமான் தாள் நினைந்திலை ஊண் நினைந்து உலகில் புலையினார்கள்-பால் போதியோ வீணில் போகப்போக இப் போக்கினில் அழிந்தே.

மேல்

#4 அழிந்த வாழ்க்கையின் அவலம் இங்கு அனைத்தும் ஐயம் இன்றி நீ அறிந்தனை நெஞ்சே கழிந்த எச்சிலை விழைந்திடுவார் போல் கலந்து மீட்டு நீ கலங்குகின்றனையே மொழிந்த முன்னையோர் பெறும் சிவகதிக்கே முன் உறா வகை என் உறும் உன்னால் இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன் என் செய்வேன் உனை ஏன் அடுத்தேனே.

மேல்

#5 தேன் நெய் ஆடிய செம் சடைக் கனியைத் தேனை மெய் அருள் திருவினை அடியர் ஊனை நெக்கிட உருக்கிய ஒளியை உள்ளத்து ஓங்கிய உவப்பினை மூவர் கோனை ஆனந்தக் கொழும் கடல் அமுதைக் கோமளத்தினைக் குன்ற_வில்லியை எம் மானை அம்பல_வாணனை நினையாய் வஞ்ச நெஞ்சமே மாய்ந்திலை இனுமே.

மேல்

#6 இன்னும் எங்ஙனம் ஏகுகின்றனையோ ஏழை நெஞ்சமே இங்கும்அங்கும்-தான் முன்னை நாம் பிறந்து உழன்ற அத் துயரை முன்னில் என் குலை முறுக்குகின்றன காண் என்னை நீ எனக்கு உறு_துணை அந்தோ என் சொல் ஏற்றிலை எழில் கொளும் பொதுவில் மன்னு நம்முடை வள்ளலை நினனத்தால் மற்று நாம் பிறவா வகை வருமே.

மேல்

#7 பிறந்து முன்னர் இ உலகினாம் பெண்டு பிள்ளை ஆதிய பெரும் தொடக்கு உழந்தே இறந்து வீழ் கதியிடை விழுந்து உழன்றே இருந்த சேடத்தின் இத்தனை எல்லாம் மறந்து விட்டனை நெஞ்சமே நீ-தான் மதி_இலாய் அது மறந்திலன் எளியேன் துறந்து நாம் பெறும் சுகத்தினை அடையச் சொல்லும் வண்ணம் நீ தொடங்கிடில் நன்றே.

மேல்

#8 நன்று செய்வதற்கு உடன்படுவாயேல் நல்ல நெஞ்சமே வல்ல இவ்வண்ணம் இன்று செய்தி நீ நாளை என்பாயேல் இன்று இருந்தவர் நாளை நின்றிலரே ஒன்று கேள்-மதி சுகர் முதல் முனிவோர் உக்க அக்கணம் சிக்கெனத் துறந்தார் அன்று முன்னரே கடந்தனர் அன்றி அதற்கு முன்னரே அகன்றனர் அன்றே.

மேல்

#9 அன்றின் நேர்கிலை நம்முடைப் பெருமான் அஞ்செழுத்தையும் அடிக்கடி மறந்தாய் ஒன்றி மேல்_கதி உற வகை அந்தோ உணர்கிலாய் வயிற்று ஊண் பொருட்டு அயலோர் முன்றில் காத்தனை அவ்வளவேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் துன்றி நின்ற நல் தொண்டர்-தம் தொழும்பு தொடங்கு வானவர் தூய முன்றிலையே.

மேல்

#10 தூய நெஞ்சமே சுகம் பெற வேண்டில் சொல்லுவாம் அது சொல் அளவு அன்றால் காய மாயமாம் கான் செறிந்து உலவும் கள்வர் ஐவரைக் கைவிடுத்ததன் மேல் பாய ஆணவப் பகை கெட முருக்கிப் பகல் இரா இலாப் பாங்கரின் நின்றே ஆய ஆனந்தக் கூத்து உடைப் பரமா காய சோதி கண்டு அமருதல் அணியே.

மேல்

@35. நெஞ்சறை கூவல்

மேல்

#1 கண்கள் மூன்றினார் கறை_மணி_மிடற்றார் கங்கை நாயகர் மங்கை பங்கு உடையார் பண்கள் நீடிய பாடலார் மன்றில் பாத நீடிய பங்கயப் பதத்தார் ஒண் கண் மாதரார் நடம் பயில் ஒற்றியூர் அமர்ந்து வாழ்வுற்றவர்க்கே நம் மண் கொள் மாலை போம் வண்ணம் நல் தமிழ்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

மேல்

#2 கரிய மால் அன்று கரிய மா ஆகிக் கலங்க நின்ற பொன் கழல் புனை பதத்தார் பெரிய அண்டங்கள் யாவையும் படைத்தும் பித்தர் என்னும் அப் பேர்-தனை அகலார் உரிய சீர் கொளும் ஒற்றியூர் அமர்ந்தார் உம்பர் நாயகர்-தம் புயம் புனைய வரி அகன்ற நல் மலர் கொடு தெரிந்து மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

மேல்

#3 திருவின் நாயகன் கை_படை பெறுவான் திரு_கண் சாத்திய திரு_மலர்ப் பதத்தார் கருவின் நின்ற எம்_போல்பவர்-தம்மைக் காத்து அளிப்பதே கடன் எனக் கொண்டார் உருவின் நின்றவர் அரு என நின்று ஓர் ஒற்றியூரிடை உற்றனர் அவர்க்கு மருவின் நின்ற நல் மணம்கொளும் மலர்ப் பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

மேல்

#4 கரும் பை நாக அணைக் கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் துரும்பை நாட்டி ஓர் விஞ்சையன் போலத் தோன்றி நின்று அவர் துரிசு அறுத்திட்டோன் தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்துத் தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து வரும் பைஞ் சீர்த் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

மேல்

#5 வதனம் நான்கு உடை மலரவன் சிரத்தை வாங்கி ஓர் கையில் வைத்த நம் பெருமான் நிதன நெஞ்சகர்க்கு அருள்தரும் கருணாநிதியம் ஆகிய நின்மலப் பெருமான் சுதன மங்கையர் நடம்செயும் ஒற்றித் தூயனால் அவர் துணைத் திரு_தோட்கு மதன இன் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே.

மேல்

#6 கஞ்சன் அங்கு ஒரு விஞ்சனம் ஆகிக் காலில் போந்து முன் காண அரும் முடியார் அஞ்சனம் கொளும் நெடும்_கணாள் எங்கள் அம்மை காண நின்று ஆடிய பதத்தார் செஞ்சொல் மா தவர் புகழ் திருவொற்றித் தேவர் காண் அவர் திரு_முடிக் காட்ட மஞ்சனம் கொடுவருதும் என் மொழியை மறாது நீ உடன் வருதி என் மனனே.

மேல்

#7 சூழு மால் அயன் பெண்ணுருவெடுத்துத் தொழும்புசெய்திடத் தோன்றி நின்று அவனைப் போழும் வண்ணமே வடுகனுக்கு அருளும் பூத_நாதர் நல் பூரணானந்தர் தாழும்_தன்மையோர் உயர்வுறச்செய்யும் தகையர் ஒற்றியூர்த் தலத்தினர் அவர்-தாம் வாழும் கோயிற்குத் திரு_அலகிடுவோம் மகிழ்வு கொண்டு உடன் வருதி என் மனனே.

மேல்

#8 விதியும் மாலும் முன் வேறு உருவெடுத்து மேலும் கீழுமாய் விரும்புற நின்றோர் நதியும் கொன்றையும் நாகமும் பிறையும் நண்ணி ஓங்கிய புண்ணியச் சடையார் பதியும் நாமங்கள் அனந்தம் முற்று உடையார் பணை கொள் ஒற்றியூர்ப் பரமர் காண் அவர்-தாம் வதியும் கோயிற்குத் திரு_விளக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

மேல்

#9 குளம் கொள் கண்ணினார் குற்றமே செயினும் குணம் என்றே அதைக் கொண்டு அருள் புரிவோர் உளம்கொள் அன்பர்-தம் உள்ளகத்து இருப்போர் ஒற்றியூர் இடம் பற்றிய புனிதர் களம் கொள் கண்டர் எண்_தோளர் கங்காளர் கல்லை வில் எனக் கண்டவர் அவர்-தம் வளம் கொள் கோயிற்குத் திரு_மெழுக்கு இடுவோம் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

மேல்

#10 பணிகொள் மார்பினர் பாகு அன மொழியாள் பாகர் காலனைப் பாற்றிய பதத்தார் திணி கொள் வன் மத மலை உரி_போர்த்தோர் தேவர் நாயகர் திங்கள் அம் சடையார் அணி கொள் ஒற்றியூர் அமர்ந்திடும் தியாகர் அழகர் அங்கு அவர் அமைந்து வீற்றிருக்கும் மணி கொள் கோயிற்குத் திரு_பணி செய்தும் வாழ்க நீ உடன் வருதி என் மனனே.

மேல்

@36. நெஞ்சைத் தேற்றல்

மேல்

#1 சென்று வஞ்சர்-தம் புறங்கடை நின்று திகைக்க எண்ணும் என் திறன்_இலா நெஞ்சே ஒன்றும் அஞ்சலை என்னுடன் கூடி ஒற்றியூர்க்கு இன்று வருதியேல் அங்கு மன்றுள் மேவிய வள்ளலார் மகிழ்ந்து வாழ்கின்றார் அவர் மலர்_அடி வணங்கி நன்று வேண்டிய யாவையும் வாங்கி நல்குவேன் எனை நம்புதி மிகவே.

மேல்

#2 தீது வேண்டிய சிறியர்-தம் மனையில் சென்று நின்று நீ திகைத்திடல் நெஞ்சே யாது வேண்டுதி வருதி என்னுடனே யாணர் மேவிய ஒற்றியூர் அகத்து மாது வேண்டிய நடன நாயகனார் வள்ளலார் அங்கு வாழ்கின்றார் கண்டாய் ஈது வேண்டியது என்னும் முன் அளிப்பார் ஏற்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே.

மேல்

#3 இரக்கின்றோர்களுக்கு இல்லை என்னார்-பால் இரத்தல் ஈதலாம் எனல் உணர்ந்திலையோ கரக்கின்றோர்களைக் கனவினும் நினையேல் கருதி வந்தவர் கடியவர் எனினும் புரக்கின்றோர் மலர்ப் புரி சடை உடையார் பூத_நாயகர் பொன்_மலைச் சிலையார் உரக் குன்றோர் திருவொற்றியூர்க்கு ஏகி உன்னி ஏற்குதும் உறுதி என் நெஞ்சே.

மேல்

#4 கல்லின் நெஞ்சர்-பால் கலங்கல் என் நெஞ்சே கருதி வேண்டியது யாது அது கேண்மோ சொல்லின் ஓங்கிய சுந்தரப் பெருமான் சோலை சூழ் ஒற்றித் தொல் நகர்ப் பெருமான் அல்லின் ஓங்கிய கண்டத்து எம் பெருமான் அயனும் மாலும் நின்று அறிவரும் பெருமான் வல்லை ஈகுவான் ஈகுவது எல்லாம் வாங்கி ஈகுவேன் வருதி என்னுடனே.

மேல்

#5 இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே பலவு வாழை மாக் கனி கனிந்து இழியும் பணை கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி நிலவு வெண் மதிச் சடை உடை அழகர் நிறைய மேனியில் நிகழ்ந்த நீற்று அழகர் குலவுகின்றனர் வேண்டிய எல்லாம் கொடுப்பவர் வாங்கி நான் கொடுப்பன் உன்றனக்கே.

மேல்

#6 மன் உருத்திரர் வாழ்வை வேண்டினையோ மாலவன் பெறும் வாழ்வு வேண்டினையோ அன்ன ஊர்தி போல் ஆக வேண்டினையோ அமையும் இந்திரன் ஆக வேண்டினையோ என்ன வேண்டினும் தடை இலை நெஞ்சே இன்று வாங்கி நான் ஈகுவன் உனக்கே வன்னி அம் சடை எம்பிரான் ஒற்றி வளம் கொள் ஊரிடை வருதி என்னுடனே.

மேல்

#7 மறப்பு_இலாச் சிவயோகம் வேண்டுகினும் வழுத்த அரும் பெரு வாழ்வு வேண்டுகினும் இறப்பு_இலாது இன்னும் இருக்க வேண்டுகினும் யாது வேண்டினும் ஈகுவன் உனக்கே பிறப்பு_இலான் எங்கள் பரசிவ பெருமான் பித்தன் என்று நீ பெயர்ந்திடல் நெஞ்சே வறப்பு_இலான் அருள்_கடல் அவன் அமர்ந்து வாழும் ஒற்றியின் வருதி என்னுடனே.

மேல்

#8 காலம் செல்கின்றது அறிந்திலை போலும் காலன் வந்திடில் காரியம் இலை காண் நீலம் செல்கின்ற மிடற்றினார் கரத்தில் நிமிர்ந்த வெண் நெருப்பு ஏந்திய நிமலர் ஏலம் செல்கின்ற குழலி ஓர் புடையார் இருக்கும் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி ஞாலம் செல்கின்ற துயர் கெட வரங்கள் நல்குவார் அவை நல்குவன் உனக்கே.

மேல்

#9 சென்று நீ புகும் வழி எலாம் உன்னைத் தேட என் வசம் அல்ல என் நெஞ்சே இன்று அரைக் கணம் எங்கும் நேர்ந்து ஓடாது இயல்கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் வருதி அன்று வானவர் உயிர்பெற நஞ்சம் அருந்தி நின்ற எம் அண்ணலாரிடத்தே நின்று வேண்டிய யாவையும் உனக்கு நிகழ வாங்கி நான் ஈகுவன் அன்றே.

மேல்

#10 கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் அடுக்கும் வண்ணமே சொல்கின்றேன் எனை நீ அம்மை இம்மையும் அகன்றிடாமையினால் தடுக்கும் வண்ணமே செய்திடேல் ஒற்றித் தலத்தினுக்கு இன்று என்றன்னுடன் வருதி மடுக்கும் வண்ணமே வேண்டிய எல்லாம் வாங்கி ஈகுவன் வாழ்தி என் நெஞ்சே.

மேல்

@37. நெஞ்சறிவுறூஉ

மேல்

#1 என்னது அன்று காண் வாழ்க்கையுள் சார்ந்த இன்ப_துன்பங்கள் இரு_வினைப் பயனால் மன்னும் மும்மல மடம் செறி மனனே வாழ்தியோ இங்கு வல்_வினைக்கு இடமாய் உன்ன நல் அமுதாம் சிவபெருமான் உற்று வாழ்ந்திடும் ஒற்றியூர்க்கு இன்றே இன்னல் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#2 துன்ப வாழ்வினைச் சுகம் என மனனே சூழ்ந்து மாயையுள் ஆழ்ந்து நிற்கின்றாய் வன்பு-அதாகிய நீயும் என்னுடனே வருதியோ அன்றி நிற்றியோ அறியேன் ஒன்பதாகிய உரு உடைப் பெருமான் ஒருவன் வாழ்கின்ற ஒற்றியூர்க்கு இன்றே இன்ப வாழ்வு உறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#3 ஆட்டுகின்றதற்காக அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி_மலர் நினையாய் வாட்டுகின்றனை வல்_வினை மனனே வாழ்ந்து நீ சுகமாய் இரு கண்டாய் கூட்டுகின்ற நம் பரசிவன் மகிழ்வில் குலவும் ஒற்றியூர்க் கோயில் சூழ்ந்து இன்பம் ஈட்டுகின்றதற்கு ஏகின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#4 வஞ்ச வாழ்க்கையை விடுத்தனன் நீயே வாரிக்கொண்டு இங்கு வாழ்ந்திரு மனனே நஞ்சம் ஆயினும் உண்குவை நீ-தான் நானும் அங்கு அதை நயப்பது நன்றோ தஞ்சம் என்றவர்க்கு அருள்தரும் பெருமான் தங்கும் ஒற்றியூர்த் தலத்தினுக்கு இன்றே எஞ்சல் இன்றி நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#5 உண்மை ஓதினும் ஓர்ந்திலை மனனே உப்பிலிக்கு உவந்து உண்ணுகின்றவர் போல் வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே தண்மை மேவிய சடை உடைப் பெருமான் சார்ந்த ஒற்றி அம் தலத்தினுக்கு இன்றே எண்மை நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#6 நீடும் ஐம்பொறி நெறி நடந்து உலக நெறியில் கூடி நீ நினைப்பொடு மறப்பும் நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே ஆடும் அம்பல_கூத்தன் எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயத்து இன்றே ஈடு நீங்கிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#7 கூறும் ஓர் கணத்து எண்ணுறும் நினைவு கோடிகோடியாய்க் கொண்டு அதை மறந்து மாறு மாயையால் மயங்கிய மனனே வருதி அன்று எனில் நிற்றி இவ்வளவில் ஆறு மேவிய வேணி எம் பெருமான் அமர்ந்த ஒற்றியூர் ஆலயம் அதன்-பால் ஈறு_இல் இன்புறச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#8 யாது கண்டனை அதனிடத்தெல்லாம் அணைகின்றாய் அவமாக நிற்கு ஈந்த போது போக்கினையே இனி மனனே போதி போதி நீ போம்_வழி எல்லாம் கோது நீக்கி நல் அருள்தரும் பெருமான் குலவும் ஒற்றியூர்க் கோயிலுக்கு இன்றே ஏதம் ஓட நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#9 விச்சை வேண்டினை வினை உடை மனனே மேலை_நாள் பட்ட வேதனை அறியாய் துச்சை நீ படும் துயர் உனக்கு அல்லால் சொல் இறந்த நல் சுகம் பலித்திடுமோ பிச்சை எம்பெருமான் என நினையேல் பிறங்கும் ஒற்றி அம் பெருந்தகை அவன்-பால் இச்சைகொண்டு நான் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

#10 தூக்கம் உற்றிடும் சோம்பு உடை மனனே சொல்வது என்னை ஓர் சுகம் இது என்றே ஆக்கமுற்று நான் வாழ நீ நரகில் ஆழ நேர்ந்திடும் அன்று கண்டு அறி காண் நீக்கமுற்றிடா நின்மலன் அமர்ந்து நிகழும் ஒற்றியூர் நியமத்திற்கு இன்றே ஏக்கம் அற்றிடச் செல்கின்றேன் உனக்கும் இயம்பினேன் பழி இல்லை என் மீதே.

மேல்

@38 நெடுமொழி வஞ்சி

மேல்

#1 வார்க் கொள் மங்கையர் முலை மலைக்கு ஏற்றி மறித்தும் அங்கு அவர் மடுவினில் தள்ளப் பார்க்கின்றாய் எனைக் கெடுப்பதில் உனக்குப் பாவமே அலால் பலன் சிறிது உளதோ ஈர்க்கின்றாய் கடும் காமமாம் புலையா இன்று சென்று நான் ஏர்பெறும் ஒற்றி ஊர்க்குள் மேவிய சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#2 கொடிய மாதர்கள் இடையுறும் நரகக் குழியில் என்றனைக் கொண்டுசென்று அழுத்திக் கடிய வஞ்சனையால் எனைக் கலக்கம் கண்ட பாவியே காம_வேட்டுவனே இடிய நெஞ்சகம் இடர் உழந்து இருந்தேன் இன்னும் என்னை நீ ஏன் இழுக்கின்றாய் ஒடிவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#3 பேதை மாதர்-தம் மருங்கிடை ஆழ்ந்த பிலத்தில் என்றனைப் பிடித்து அழ வீழ்த்தி வாதையுற்றிடவைத்தனை ஐயோ மதி இல் காமமாம் வஞ்சக முறியா ஏதம் நீத்து அருள் அடியர்-தம் சார்வால் எழுகின்றேன் எனை இன்னும் நீ இழுக்கில் ஓதும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#4 கோவம் என்னும் ஓர் கொலைப் புலைத் தலைமைக் கொடியனே எனைக் கூடி நீ நின்ற பாவ வன்மையால் பகை அடுத்து உயிர் மேல் பரிவு இலாமலே பயன் இழந்தனன் காண் சாவ நீ இலதேல் எனை விடுக சலம்செய்வாய் எனில் சதுர்_மறை முழக்கம் ஓவு இல் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே

மேல்

#5 சார்ந்த லோபமாம் தயை_இலி ஏடா தாழ்ந்து இரப்பவர்-தமக்கு அணு-அதனுள் ஈர்ந்த ஒன்றினை ஈயவும் ஒட்டாய் இரக்கின்றோர் தரின் அது கொளற்கு இசைவாய் சோர்ந்திடாது நான் துய்ப்பவும் செய்யாய் சுகம் இலாத நீ தூர நில் இன்றேல் ஓர்ந்த ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#6 மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலாத் துயர் மூல இல் ஒழுக்கில் போகம் என்னும் ஓர் அளற்றிடை விழவும் போற்று மக்கள் பெண்டு அன்னை தந்தையராம் சோக_வாரியில் அழுந்தவும் இயற்றிச் சூழ்கின்றாய் எனைத் தொடர்ந்திடேல் தொடரில் ஓகை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#7 மதம் எனும் பெரு மத்தனே எனை நீ வருத்தல் ஓதினால் வாயினுக்கு அடங்கா சிதம் எனும் பரன் செயலினை அறியாய் தீங்கு செய்தனர் நன்மையாம் செய்தோம் இதம் அறிந்தனம் எமக்கு இனி ஒப்பார் யாவர் என்று எனை இழிச்சினை அடியார்க்கு உதவும் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#8 அமைவு அறிந்திடா ஆணவப் பயலே அகில கோடியும் ஆட்டுகின்றவன் காண் எமை நடத்துவோன் ஈது உணராமல் இன்று நாம் பரன் இணை அடி தொழுதோம் கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின்றோம் எனக் கருதிட மயக்கேல் உமையன் ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#9 கருமையாம் அகங்கார மர்க்கடவா கடையனே உனைக் கலந்ததனாலே அருமையாக நாம் பாடினோம் கல்வி அற அறிந்தனம் அருளையும் அடைந்தோம் இருமை இன்பமும் பெற்றனம் என்றே எனை மதித்து நான் இழிவடைந்தனன் காண் ஒருமை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

#10 வெண்மை சேர் அகங்காரமாம் வீணா விடுவிடு என்றனை வித்தகம் உணராய் தண்மை இன்று இதற்கு இது எனத் துணிந்து என்றனையும் சாய்ப்பது தகவு என நினைத்தாய் அண்மை நின்றிடேல் சேய்மை சென்று அழி நீ அன்றி நிற்றியேல் அரி முதல் ஏத்தும் உண்மை ஒற்றியூர்ச் சிவன் அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மை என்று உணரே.

மேல்

@39. பற்றின் திறம் பகர்தல்

மேல்

#1 வாள் நரை விடை ஊர் வரதனை ஒற்றி வாணனை மலி கடல் விடமாம் ஊணனை அடியேம் உளத்தனை எல்லாம் உடையனை உள்கி நின்று ஏத்தா வீணரை மடமை விழலரை மரட்ட வேடரை மூடரை நெஞ்சக் கோணரை முருட்டுக் குறும்பரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

மேல்

#2 மூவரை அளித்த முதல்வனை முக்கண் மூர்த்தியைத் தீர்த்தனைப் பெரிய தேவரைக் காத்த செல்வனை ஒற்றித் தியாகனை நினைந்து நின்று ஏத்தாப் பாவரை வரையாப் படிற்றரை வாதப் பதடரைச் சிதடரைப் பகை சேர் கோவரைக் கொடிய குணத்தரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

மேல்

#3 அண்டனை எண் தோள் அத்தனை ஒற்றி அப்பனை ஐயனை நீல கண்டனை அடியர் கருத்தனைப் பூத கணத்தனைக் கருதி நின்று ஏத்தா மிண்டரைப் பின்றா வெளிற்றரை வலிய வேற்றரைச் சீற்றரைப் பாபக் குண்டரை வஞ்சக் குடியரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

மேல்

#4 நாதனைப் பொதுவில் நடத்தனை எவர்க்கும் நல்லனை வல்லனைச் சாம கீதனை ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனைக் கிளர்ந்து நின்று ஏத்தாத் தீதரை நரகச் செக்கரை வஞ்சத்து இருட்டரை மருட்டரைத் தொலையாக் கோதரைக் கொலை செய் கோட்டரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

மேல்

#5 நம்பனை அழியா நலத்தனை எங்கள் நாதனை நீதனைக் கச்சிக் கம்பனை ஒற்றிக் கங்கை வேணியனைக் கருத்தனைக் கருதி நின்று ஏத்தா வம்பரை ஊத்தை வாயரைக் கபட மாயரைப் பேயரை எட்டிக் கொம்பரைப் பொல்லாக் கோளரைக் கண்டால் கூசுவ கூசுவ விழியே.

மேல்

#6 சடையனை எவர்க்கும் தலைவனைக் கொன்றை_தாரனைச் சராசர சடத்துள் உடையனை ஒற்றி_ஊரனை மூவர் உச்சனை உள்கி நின்று ஏத்தாக் கடையரைப் பழைய கயவரைப் புரட்டுக் கடியரைக் கடியரைக் கலக நடையரை உலக நசையரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

மேல்

#7 கஞ்சனைச் சிரம் கொய் கரத்தனை மூன்று_கண்ணனைக் கண்ணனைக் காத்த தஞ்சனை ஒற்றி_தலத்தனைச் சைவத் தலைவனைத் தாழ்ந்து நின்று ஏத்தா வஞ்சரைக் கடைய மடையரைக் காம_மனத்தரைச் சினத்தரை வலிய நஞ்சரை இழிந்த நரகரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

மேல்

#8 தாமனை மழு மான் தரித்த செங்கரனைத் தகையனைச் சங்கரன்-தன்னைச் சேமனை ஒற்றித் தியாகனைச் சிவனைத் தேவனைத் தேர்ந்து நின்று ஏத்தா ஊமரை நீண்ட ஒதியரைப் புதிய ஒட்டரைத் துட்டரைப் பகை கொள் நாமரை நரக_நாடரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

மேல்

#9 ஈசனைத் தாயில் இனியனை ஒற்றி இன்பனை அன்பனை அழியாத் தேசனைத் தலைமை தேவனை ஞானச் சிறப்பனைச் சேர்ந்து நின்று ஏத்தா நீசரை நாண்_இல் நெட்டரை நரக_நேயரைத் தீயரைத் தரும_ நாசரை ஒழியா நட்டரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

மேல்

#10 நித்தனைத் தூய நிமலனைப் புலியூர் நிருத்தனை ஒருத்தனை வாய்மைச் சுத்தனை ஒற்றித் தலம் வளர் ஞான சுகத்தனைச் சூழ்ந்து நின்று ஏத்தா மத்தரைச் சமண_வாதரைத் தேர_வறியரை முறியரை வைண_ நத்தரைச் சுணங்க நாவரைக் கண்டால் நடுங்குவ நடுங்குவ மனமே.

மேல்

@40. அடிமைத் திறத் தலைசல்

மேல்

#1 தேவர் அறியார் மால் அறியான் திசை மா முகத்தோன்-தான் அறியான் யாவர் அறியார் திருவொற்றி அப்பா அடியேன் யாது அறிவேன் மூவர் திரு_பாட்டினுக்கு இசைந்தே முதிர் தீம்பாலும் முக்கனியும் காவல் அமுதும் நறும் தேனும் கைப்ப இனிக்கும் நின் புகழே.

மேல்

#2 புகழே விரும்பிப் புலன் இழந்தேன் போந்து உன் பதத்தைப் போற்றுகிலேன் இகழேன் எனை நான் ஒற்றி அப்பா என்னை மதித்தேன் இருள் மனத்தேன் திகழ் ஏழ் உலகில் எனைப் போல் ஓர் சிறியர் அறியேன் தீவினையை அகழேன் எனினும் எனை ஆளாது அகற்றல் அருளுக்கு அழகு அன்றே.

மேல்

#3 அன்றும் அறியார் மா தவரும் அயனும் மாலும் நின் நிலையை இன்றும் அறியார் அன்றி அவர் என்றும் அறியார் என்னில் ஒரு நன்றும் அறியேன் நாய்_அடியேன் நான் எப்படி-தான் அறிவேனோ ஒன்றும் நெறி ஏது ஒற்றி அப்பா ஒப்பார் இல்லா உத்தமனே.

மேல்

#4 ஒப்பார் இல்லா ஒற்றி அப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்-தம் வெப்பு ஆர் குழியில் கண் மூடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் இப் பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு விப்பார் நமனார் என்பதை நான் நினையாது அறிவை விடுவித்தேனே.

மேல்

#5 விடுத்தேன் தவத்தோர் நெறி-தன்னை வியந்தேன் உலக வெம் நெறியை மடுத்தேன் துன்ப_வாரி-தனை வஞ்ச மனத்தர்-மாட்டு உறவை அடுத்தேன் ஒற்றி அப்பா உன் அடியை நினையேன் அலமந்தேன் படுத்தே நமன் செக்கிடும்போது படிறேன் யாது படுவேனோ.

மேல்

#6 படுவேன்_அல்லேன் நமன்_தமரால் பரிவேன்_அல்லேன் பரம நினை விடுவேன்_அல்லேன் என்னையும் நீ விடுவாய்_அல்லை இனிச் சிறிதும் கெடுவேன்_அல்லேன் சிறியார் சொல் கேட்பேன்_அல்லேன் தரும நெறி அடுவேன்_அல்லேன் திருவொற்றி அப்பா உன்றன் அருள் உண்டே

மேல்

#7 உண்டோ எனைப் போல் மதி_இழந்தோர் ஒற்றி அப்பா உன்னுடைய திண் தோள் இலங்கும் திரு_நீற்றைக் காண விரும்பேன் சேர்ந்து ஏத்தேன் எண் தோள் உடையாய் என்று இரங்கேன் இறையும் திரும்பேன் இ அறிவைக் கொண்டே உனை நான் கூடுவன் நின் குறிப்பு ஏதொன்றும் அறியேனே.

மேல்

#8 அறியேன் உன்றன் புகழ்ப் பெருமை அண்ணா ஒற்றி அப்பா நான் சிறியேன் எனினும் நினை அன்றித் தெறியேன் மற்றோர் தேவர்-தமை வெறியேன் பிழையைக் குறித்து எனைக் கைவிட்டால் என் செய்வேன் அடியேன் நெறியே தருதல் நின் கடன் காண் நின்னைப் பணிதல் என் கடனே.

மேல்

#9 கடனே அடியர்-தமைக் காத்தல் என்றால் கடையேன் அடியன் அன்றோ உடல் நேர் பிணியும் ஒழித்திலை என் உள்ளத் துயரும் தவிர்த்திலையே விடன் நேர் கண்டத்து இன் அமுதே வேத முடியில் விளங்கு ஒளியே அடன் ஏர் விடையாய் திருவொற்றி அப்பா உனை நான் அயர்ந்திலனே.

மேல்

#10 இலனே மற்று ஓர் துணை சிறிதும் என்னே காமம் எனும் கடலில் மலனேன் வருந்தக் கண்டு இருத்தல் மணியே அருளின் மரபு அன்றே அலனே அயலான் அடியேன் நான் ஐயா ஒற்றி அப்பா நல் நலன் நேர் தில்லை அம்பலத்தில் நடிக்கும் பதமே நாடினேன்.

மேல்

#11 நாடி அலுத்தேன் என்னளவோ நம்பா மன்றுள் நன்கு நடம் ஆடி மகிழும் திருவொற்றி அப்பா உன்றன் அருள்_புகழைக் கோடி அளவில் ஒரு கூறும் குணித்தார் இன்றி ஆங்காங்கும் தேடி அளந்தும் தெளிந்திலரே திருமால் முதலாம் தேவர்களே.

மேல்

@41. அவத் தொழிற் கலைசல்

மேல்

#1 அணங்கு_அனார் களபத் தன மலைக்கு இவரும் அறிவிலேன் என்பு காத்து உழலும் சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் கணங்கள் நேர் காட்டில் எரி உகந்து ஆடும் கடவுளே கடவுளர்க்கு இறையே உணங்கு வெண் தலைத் தார் புனை திருப் புயனே ஒற்றியூர் உத்தம தேவே.

மேல்

#2 தேவரே அயனே திரு நெடுமாலே சித்தரே முனிவரே முதலா யாவரே எனினும் ஐய நின் தன்மை அறிந்திலர் யான் உனை அறிதல் தா_இல் வான் சுடரைக் கண்ணிலி அறியும் தன்மை அன்றோ பெரும் தவத்தோர் ஓவு_இல் மா தவம் செய்து ஓங்கு சீர் ஒற்றியூர் அமர்ந்து அருள்செயும் ஒன்றே.

மேல்

#3 ஒன்று நின் தன்மை அறிந்தில மறைகள் உள்ளம் நொந்து இளைக்கின்றது இன்னும் நன்று நின் தன்மை நான் அறிந்து ஏத்தல் நாய் அரசாளல் போல் அன்றோ சென்று நின்று அடியர் உள்ளகத்து ஊறும் தெள்ளிய அமுதத்தின் திரட்டே மன்றுள் நின்று ஆடும் மாணிக்க_மலையே வளம் கொளும் ஒற்றியூர் மணியே.

மேல்

#4 மணித் தலை நாகம் அனைய வெம் கொடியார் வஞ்சக விழியினால் மயங்கிப் பிணித் தலைக்கொண்டு வருந்தி நின்று உழலும் பேதையேற்கு உன் அருள் உளதோ கணித்தலை அறியாப் பேர் ஒளி_குன்றே கண்கள் மூன்று உடைய என் கண்ணே அணித் தலை அடியர்க்கு அருள் திருவொற்றி அப்பனே செப்ப அரும் பொருளே.

மேல்

#5 ஒப்பு_இலாய் உனது திரு_அருள் பெறுவான் உன்னி நைகின்றனன் மனமோ வெப்பில் ஆழ்ந்து எனது மொழிவழி அடையா வேதனைக்கு இடம்கொடுத்து உழன்ற இப் பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும் துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர்த் துணையே.

மேல்

#6 துணை_இலேன் நினது திரு_அடி அல்லால் துட்டனேன் எனினும் என்றன்னை இணை_இலாய் உனது தொண்டர்-தம் தொண்டன் எனச் செயல் நின் அருள் இயல்பே அணை_இலாது அன்பர் உள்ளகத்து ஓங்கும் ஆனந்த_வெள்ளமே அரசே பணையில் வாளைகள் பாய் ஒற்றி அம் பதியில் பரிந்து அமர்ந்து அருள்செயும் பரமே.

மேல்

#7 பரிந்துநின்று உலக வாழ்க்கையில் உழலும் பரிசு ஒழிந்து என் மலக் கங்குல் இரிந்திட நினது திரு_அருள் புரியாது இருத்தியேல் என் செய்வேன் எளியேன் எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே விரிந்த பூம் பொழில் சூழ் ஒற்றி அம் பதியில் மேவிய வித்தக வாழ்வே.

மேல்

#8 வாழ்வது நின்றன் அடியரோடன்றி மற்றும் ஓர் வெற்றருள் வாழேன் தாழ்வது நினது தாட்கு அலால் மற்றைத் தாட்கு எலாம் சரண் எனத் தாழேன் சூழ்வது நினது திருத்தளி அல்லால் சூழ்கிலேன் தொண்டனேன்-தன்னை ஆள்வது கருதின் அன்றி என் செய்கேன் ஐயனே ஒற்றியூர் அரசே.

மேல்

#9 ஐயனே மாலும் அயனும் நின்று அறியா அப்பனே ஒற்றியூர் அரசே மெய்யனே நினது திரு_அருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப் பொய்யனேன் தன்மைக்கு அடாதது கருதிப் பொன்_அருள் செயாதிருப்பாயோ கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்து அருள்செய்வது உன் கடனே.

மேல்

#10 செய்வது உன் கடன் காண் சிவபெருமானே திருவொற்றியூர் வரும் தேனே உய்வது என் கடன் காண் அன்றி ஒன்று இல்லை உலகு எலாம் உடைய நாயகனே நைவது என் நெஞ்சம் என் செய்கேன் நினது நல் அருள் பெறாவிடில் என்னை வைவது உன் அடியர் அன்றி இ உலக வாழ்க்கையில் வரும் பொலா அணங்கே.

மேல்

@42. நாள் அவத்து அலைசல்

மேல்

#1 இன்று_இருந்தவரை நாளை இ உலகில் இருந்திடக் கண்டிலேம் ஆஆ என்று இரும் தவத்தோர் அரற்றுகின்றனரால் ஏழையேன் உண்டு உடுத்து அவமே சென்று இருந்து உறங்கி விழிப்பதே அல்லால் செய்வன செய்கிலேன் அந்தோ மன்று இருந்து ஓங்கும் மணிச் சுடர் ஒளியே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#2 தாவியே இயமன் தமர் வரும் அ நாள் சம்பு நின் திரு_அருள் அடையாப் பாவியேன் செய்வது என் என நெஞ்சம் பதைபதைத்து உருகுகின்றனன் காண் கூவியே எனக்கு உன் அருள்தரின் அல்லால் கொடியனேன் உய் வகை அறியேன் வாவி ஏர்பெறப் பூஞ் சோலை சூழ்ந்து ஓங்கி வளம்பெறும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#3 நீரின் மேல் எழுதும் எழுத்தினும் விரைந்து நிலைபடா உடம்பினை ஓம்பிப் பாரின் மேல் அலையும் பாவியேன்-தனக்குப் பரிந்து அருள்பாலியாய் என்னில் காரின் மேல் வரல் போல் கடா மிசை வரும் அக் காலன் வந்திடில் எது செய்வேன் வாரின் மேல் வளரும் திரு_முலை மலையாள்_மணாளனே ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#4 கரும் கணம் சூழக் கசியும் இ உடலம் கருதும் இக்கணம் இருந்தது-தான் வரும் கணம் ஏதாய் முடியுமோ ஐயோ வஞ்சனேன் என் செய வல்லேன் பெரும் கணம் சூழ வடவனத்து ஆடும் பித்தனே உத்தம தவத்தோர் மருங்கு அணவுற நின்று அரகர எனும் சொல் வான் புகும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#5 கன்னியர் அளகக் காட்டிடை உழன்ற கல்_மன குரங்கினேன்-தனை நீ அன்னியன் என்றே கழித்திடில் உனக்கு இங்கு ஆர் சொல வல்லவர் ஐயா என் இயல் அறியேன் நமன்_தமர் வரும் நாள் என் செய்வேன் என் செய்வேன் அந்தோ மன்னிய வன்னி மலர்ச் சடை மருந்தே வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#6 பசிக்கு உணவு உழன்று உன் பாத_தாமரையைப் பாடுதல் ஒழிந்து நீர்ப் பொறி போல் நசிக்கும் இ உடலை நம்பினேன் என்னை நமன்_தமர் வருத்தில் என் செய்கேன் விசிக்கும் நல் அரவக் கச்சினோய் நினது மெய் அருள் அலது ஒன்றும் விரும்பேன் வசிக்கும் நல் தவத்தோர்க்கு அருள்செய ஓங்கி வளம் பெறும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#7 கான்ற சோறு அருந்தும் சுணங்கனின் பல நாள் கண்ட புன் சுகத்தையே விரும்பும் நான்ற நெஞ்சகனேன் நமன்_தமர் வரும் நாள் நாணுவது அன்றி என் செய்கேன் சான்றவர் மதிக்கும் நின் திரு_அருள்-தான் சார்ந்திடில் தருக்குவன் ஐயா மான் தனிக் கரத்து எம் வள்ளலே என்னை வாழ்விக்கும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#8 மடிக்குறும் நீர் மேல் எழுத்தினுக்கு இடவே மை வடித்து எடுக்குநர் போல நொடிக்குளே மறையும் உடம்பினை வளர்க்க நொந்தனன் நொந்ததும் அல்லால் படிக்குளே மனத்தால் பரிவுறுகின்றேன் பாவியேன்-தனக்கு அருள் புரியாய் வடிக்குறும் தமிழ் கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#9 அங்கையில் புண் போல் உலக வாழ்வு அனைத்தும் அழிதரக் கண்டு நெஞ்சு அயர்ந்தே பங்கமுற்று அலைவதன்றி நின் கமல_பாதத்தைப் பற்றிலேன் அந்தோ இங்கு எனை நிகரும் ஏழை யார் எனக்குள் இன் அருள் எவ்வணம் அருள்வாய் மங்கை ஓர் புடை கொள் வள்ளலே அழியா வளம் கொளும் ஒற்றியூர் வாழ்வே.

மேல்

#10 கணத்தினில் உலகம் அழிதரக் கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் குணத்தினில் கொடியேன்-தனக்கு நின் அருள்-தான் கூடுவது எவ்வணம் அறியேன் பணத்தினில் பொலியும் பாம்பு அரை ஆர்த்த பரமனே பிரமன் மால் அறியா வணத்தினால் நின்ற மாணிக்கச் சுடரே வள்ளலே ஒற்றியூர் வாழ்வே.

மேல்

@43. அவல மதிக்கு அலைசல்

மேல்

#1 மண்ணை மனத்துப் பாவியன் யான் மடவாருள்ளே வதிந்து அளிந்த புண்ணை மதித்துப் புகுகின்றேன் போதம் இழந்தேன் புண்ணியனே எண்ண இனிய நின் புகழை ஏத்தேன் ஒதி போல் இருக்கின்றேன் தண் நல் அமுதே நீ என்னைத் தடுத்து இங்கு ஆளத் தக்கதுவே.

மேல்

#2 தக்கது அறியேன் வெறியேன் நான் சண்ட மடவார்-தம் முலை தோய் துக்கம்-அதனைச் சுகம் என்றே துணிந்தேன் என்னைத் தொழும்பன் எனில் மிக்க அடியார் என் சொல்லார் விண்ணோர் மண்ணோர் என் புகலார் செக்கர் நிறத்துப் பொன்_மேனித் திரு_நீற்று ஒளி சேர் செங்கரும்பே.

மேல்

#3 கரும்பே ஒற்றியூர் அமர்ந்த கனியே உன்றன் கழல் அடியை விரும்பேன் அடியார் அடி_தொண்டில் மேவேன் பொல்லா விடம் அனைய பெரும் பேய் மாதர் பிணக் குழியில் பேதை மனம் போந்திடச் சூறைத் துரும்பே என்னச் சுழல்கின்றேன் துணை ஒன்று அறியேன் துனியேனே.

மேல்

#4 துனியே பிறத்தற்கு ஏது எனும் துட்ட மடவார் உள் ததும்பும் பனி ஏய் மலம் சூழ் முடை நாற்றப் பாழும் குழிக்கே வீழ்ந்து இளைத்தேன் இனி ஏதுறுமோ என் செய்கேன் எளியேன்-தனை நீ ஏன்றுகொளாய் கனியே கருணை_கடலே என் கண்ணே ஒற்றிக் காவலனே.

மேல்

#5 வலமே உடையார் நின் கருணை வாய்ந்து வாழ்ந்தார் வஞ்சகனேன் மலமே உடையேன் ஆதலினால் மாதர் எனும் பேய் வாக்கும் உவர்ச் சலமே ஒழுக்குப் பொத்தரிடைச் சாய்ந்து தளர்ந்தேன் சார்பு அறியேன் நலமே ஒற்றி நாடு_உடையாய் நாயேன் உய்யும் நாள் என்றோ.

மேல்

#6 நாளை வருவது அறியேன் நான் நஞ்சம் அனைய நங்கையர்-தம் ஆளை அழுத்தும் நீர்க் குழியில் அழுந்தி அழுந்தி எழுந்து அலைந்தேன் கோளை அகற்றி நின் அடிக்கே கூடும் வண்ணம் குறிப்பாயோ வேளை எரித்த மெய்ஞ்ஞான விளக்கே முத்தி வித்தகமே.

மேல்

#7 முத்தி முதலே முக்கண் உடை மூரிக் கரும்பே நின் பதத்தில் பத்தி முதலே இல்லாதேன் பரம சுகத்தில் படிவேனோ எத்தி அழைக்கும் கரும்_கண்ணார் இடைக்குள் பிளந்த வெடிப்பு-அதனில் தத்தி விழுந்தேன் எழுவேனேல் தள்ளா நின்றது என் மனமே.

மேல்

#8 மனமே முன்னர் வழிகாட்டப் பின்னே சென்று மங்கையர்-தம் தனமே என்னும் மலை ஏறிப் பார்த்தேன் இருண்ட சலதி ஒன்று முனமே தோன்ற மதி_மயங்கி விழுந்தேன் எழுவான் முயலுகின்றேன் இனமே என்னை நீ அன்றி எடுப்பார் இல்லை என் அரசே.

மேல்

#9 என்னைக் கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்- தன்னைக் கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம் பொன்னைக் கொடுத்தும் பெற அரிய பொருளே உன்னைப் போற்றுகிலேன் இன்னல் கொடுத்த பவம்_உடையேன் எற்றுக்கு இவண் நிற்கின்றேனே.

மேல்

#10 எற்றுக்கு அடியர் நின்றது நின் இணைத் தாள்_மலரை ஏத்த அன்றோ மற்று இக் கொடியேன் அஃது இன்றி மடவார் இடை வாய் மணிப் பாம்பின் புற்றுக்கு உழன்றேன் என்னே என் புந்தி எவர்க்குப் புகல்வேனே கற்றுத் தெளிந்தோர் புகழ் ஒற்றி-கண் ஆர்ந்து ஓங்கும் கற்பகமே.

மேல்

#11 ஓங்கும் பொருளே திருவொற்றியூர் வாழ் அரசே உனைத் துதியேன் தீங்கும் புழுவும் சிலை நீரும் சீழும் வழும்பும் சேர்ந்து அலைக்கத் தூங்கும் மடவார் புலை நாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன் வாங்கும் பவம் தீர்த்து அருள்வது நின் கடன் காண் இந்த மண்ணிடத்தே.

மேல்

@44. ஆனா வாழ்வின் அலைசல்

மேல்

#1 துள்ளி வாய் மடுக்கும் காளையர் ஆட்டத் துடுக்கினை ஒடுக்குறும் காமக் கொள்ளிவாய்ப் பேய்கள் எனும் மடவியர்-தம் கூட்டத்துள் நாட்டம்வைத்து உழன்றேன் உள்ளி வாய் மடுத்து உள் உருகி ஆனந்த உததி போல் கண்கள் நீர் உகுப்பார் அள்ளி வாய் மடுக்கும் அமுதே எங்கள் அண்ணலே ஒற்றியூர் அரசே.

மேல்

#2 ஒற்றியூர் அமரும் ஒளி கெழு மணியே உன் அடி உள்கி நின்று ஏத்தேன் முற்றி ஊர் மலினக் குழி இருள் மடவார் முலை எனும் மலம் நிறைக் குவையைச் சுற்றி ஊர்_நாயின் சுழன்றனன் வறிதே சுகம் எனச் சூழ்ந்து அழி உடலைப் பற்றி ஊர் நகைக்கத் திரிதருகின்றேன் பாவியேன் உய்_திறம் அரிதே.

மேல்

#3 அரியது நினது திரு_அருள் ஒன்றே அ அருள் அடைதலே எவைக்கும் பெரியதோர் பேறு என்று உணர்ந்திலேன் முருட்டுப் பேய்களை ஆயிரம் கூட்டிச் சரி எனச் சொலினும் போதுறா மடமைத் தையலார் மையலில் அழுந்திப் பிரியமுற்று அலைந்தேன் ஏழை நான் ஒற்றிப் பெரும நின் அருள் எனக்கு உண்டே.

மேல்

#4 பெரும நின் அருளே அன்றி இ உலகில் பேதையர் புழு மலப் பிலமாம் கரும வாழ்வு எனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன் தரும_வாரிதியே தடம் பணை ஒற்றித் தலத்து அமர் தனி முதல் பொருளே துரும வான் அமுதே அடியனேன்-தன்னைச் சோதியாது அருள்வது உன் பரமே.

மேல்

#5 அருள்வது உன் இயற்கை உலகு எலாம் அறியும் ஐயவோ நான் அதை அறிந்தும் மருள்வது என் இயற்கை என் செய்வேன் இதனை மனம்கொளாது அருள் அருளாயேல் தெருள்வது ஒன்று இன்றி மங்கையர் கொங்கைத் திடர் மலைச் சிகரத்தில் ஏறி உருள்வதும் அல்குல் படு_குழி விழுந்து அங்கு உலைவதும் அன்றி ஒன்று உண்டோ .

மேல்

#6 உண்டு நஞ்சு அமரர் உயிர்பெறக் காத்த ஒற்றியூர் அண்ணலே நின்னைக் கண்டு நெஞ்சு உருகிக் கண்கள் நீர் சோரக் கைகுவித்து இணை அடி இறைஞ்சேன் வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கிக் குண்டு நீர் ஞாலத்திடை அலைகின்றேன் கொடியனேன் அடியனேன் அன்றே.

மேல்

#7 அன்று நீ அடிமைச் சாதனம் காட்டி ஆண்ட ஆரூரனார் உன்னைச் சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கிச் சென்ற நின் கருணையைக் கருதி ஒன்று-தோறு உள்ளம் உருகுகின்றனன் காண் ஒற்றியூர் அண்ணலே உலகத்து என்றும் மால் உழந்தேன் எனினும் நின் அடியேன் என்றனைக் கைவிடேல் இனியே.

மேல்

#8 இனிய நின் திரு_தாள் இணை மலர் ஏத்தேன் இளம் முலை மங்கையர்க்கு உள்ளம் கனிய அக் கொடியார்க்கு ஏவல்செய்து உழன்றேன் கடையனேன் விடய வாழ்வு உடையேன் துனிய இ உடல்-கண் உயிர் பிரிந்திடுங்கால் துணை நினை அன்றி ஒன்று அறியேன் தனிய மெய்ப் போத வேத_நாயகனே தடம் பொழில் ஒற்றியூர் இறையே

மேல்

#9 இறையும் நின் திரு_தாள்_கமலங்கள் ஏத்தேன் எழில்பெற உடம்பினை ஓம்பிக் குறையும் வெண் மதி போல் காலங்கள் ஒழித்துக் கோதையர் குறும் குழி அளற்றில் பொறையும் நல் நிறையும் நீத்து உழன்று அலைந்தேன் பொய்யனேன்-தனக்கு வெண் சோதி நிறையும் வெள் நீற்றுக் கோலனே ஒற்றி நிமலனே அருளுதல் நெறியே.

மேல்

#10 நெறி_இலேன் கொடிய மங்கையர் மையல் நெறியிலே நின்றனன் எனினும் பொறி_இலேன் பிழையைப் பொறுப்பது உன் கடனே பொறுப்பதும் அன்றி இ உலக வெறியிலே இன்னும் மயங்கிடாது உன்றன் விரை மலர் அடித் துணை ஏத்தும் அறிவுளே அருள்வாய் ஒற்றியூர் அரசே அன்றினார் துள் அறுத்தவனே.

மேல்

@45. அருள் திறந்து அலைசல்

மேல்

#1 நறை மணக்கும் கொன்றை நதிச் சடில நாயகனே கறை மணக்கும் திரு நீல_கண்டப் பெருமானே உறை மணக்கும் பூம் பொழில் சூர் ஒற்றி அப்பா உன்னுடைய மறை மணக்கும் திரு_அடியை வாய் நிரம்ப வாழ்த்தேனோ.

மேல்

#2 அலை வளைக்கும் பாற்கடலான் அம்புயத்தான் வாழ்த்தி நிதம் தலை வளைக்கும் செங்கமலத் தாள்_உடையாய் ஆள்_உடையாய் உலை வளைக்கா முத்தலை வேல் ஒற்றி அப்பா உன்னுடைய மலை வளைக்கும் கை_மலரின் வண்மை-தனை வாழ்த்தேனோ.

மேல்

#3 ஆறு அடுத்துச் சென்ற எங்கள் அப்பருக்கா அன்று கட்டுச் சோறு எடுத்துச் சென்ற துணையே சுயம் சுடரே ஊறு_எடுத்தோர் காண அரிய ஒற்றி அப்பா உன்னுடைய நீறு அடுத்த எண் தோள் நிலைமை-தனைப் பாரேனோ.

மேல்

#4 சைவத் தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் மெய் வைத்த உள்ளம் விரவிநின்ற வித்தகனே உய் வைத்த உத்தமனே ஒற்றி அப்பா உன்னுடைய தெய்வப் புகழ் என் செவி நிறையக் கேளேனோ.

மேல்

#5 பாடுகின்றோர் பாடப் பரிசளிக்கும் புண்ணியனே தேடுகின்றோர் தேட நிற்கும் தியாக_பெருமானே ஊடுகின்றோர் இல்லாத ஒற்றியப்பா அம்பலத்துள் ஆடுகின்ற சேவடி கண்டு அல்லல் எலாம் தீரேனோ.

மேல்

#6 பூண் நாகம் ஆடப் பொது நடிக்கும் புண்ணியனே சேண் நாகம் வாங்கும் சிவனே கடல் விடத்தை ஊணாக உள் உவந்த ஒற்றி அப்பா மால் அயனும் காணாத நின் உருவைக் கண்டு களியேனோ.

மேல்

#7 கொள்ளுவார் கொள்ளும் குல மணியே மால் அயனும் துள்ளுவார் துள் அடக்கும் தோன்றலே சூழ்ந்து நிறம் உள்ளுவார் உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய தெள்ளு வார் பூம் கழற்கு என் சிந்தைவைத்து நில்லேனோ.

மேல்

#8 செவ்வண்ண மேனித் திரு_நீற்றுப் பேர்_அழகா எவ்வண்ணம் நின் வண்ணம் என்று அறிதற்கு ஒண்ணாதாய் உவ்வண்ணன் ஏத்துகின்ற ஒற்றி அப்பா உன் வடிவம் இவ்வண்ணம் என்று என் இதயத்து எழுதேனோ.

மேல்

#9 மன்று_உடையாய் மால் அயனும் மற்றும் உள வானவரும் குன்று_உடையாய் என்னக் குறை தவிர்த்த கோமானே ஒன்று_உடையாய் ஊர் விடையாய் ஒற்றி அப்பா என்னுடைய வன் துடையாய் என்று உன் மலர்_அடியைப் போற்றேனோ.

மேல்

#10 குற்றம் செயினும் குணமாக் கொண்டு அருளும் நல் தவர்-தம் உள்ளம் நடு நின்ற நம்பரனே உற்றவர்-தம் நல் துணைவா ஒற்றி அப்பா என் கருத்து முற்றிட நின் சந்நிதியின் முன் நின்று வாழ்த்தேனோ.

மேல்

#11 வஞ்ச மடவார் மயக்கும் மயக்கு ஒழிய நஞ்சம் அணி கண்டத்து நாதனே என்றென்று உஞ்சவர்கள் வாழ்த்துகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய கஞ்ச மலர்_அடிக்கே காதலுற்றுப் போற்றேனோ.

மேல்

#12 இன்னல் உலக இருள் நடையில் நாள்-தோறும் துன்ன வரும் நெஞ்சத் துடுக்கு அழிய நல்லோர்கள் உன்னலுறும் தெள் அமுதே ஒற்றி அப்பா என் வாய் உன் றன் அடைவே பாடித் தழும்பேறக் காணேனோ.

மேல்

#13 பெண்மணியே என்று உலகில் பேதையரைப் பேசாது என் கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே ஒண் மணியே தேனே என்று ஒற்றி அப்பா உன்றனை நான் பண் மணம் செய் பாட்டில் பரவித் துதியேனோ.

மேல்

#14 மானம்_இலார் நின் தாள் வழுத்தாத வன்_மனத்தார் ஈனர் அவர்-பால் போய் இளைத்தேன் இளைப்பாற ஊனம்_இலார் போற்றுகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய ஞான அடியின் நிழல் நண்ணி மகிழேனோ.

மேல்

#15 கல்லார்க்கு இதம் கூறிக் கற்பு அழிந்து நில்லாமல் எல்லார்க்கும் நல்லவனே என் அரசே நல் தருமம் ஒல்லார் புரம் எரித்த ஒற்றி அப்பா உன் அடிக்கே சொல்லால் மலர் தொடுத்துச் சூழ்ந்து அணிந்து வாழேனோ.

மேல்

#16 கற்பவற்றைக் கல்லாக் கடையரிடம் சென்று அவர் முன் அற்ப அற்றை_கூலிக்கு அலையும் அலைப்பு ஒழிய உற்பவத்தை நீக்குகின்ற ஒற்றி அப்பா உன்னுடைய நல் பதத்தை ஏத்தி அருள் நல் நலம்-தான் நண்ணேனோ.

மேல்

#17 தந்தை தாய் மக்கள் மனை தாரம் எனும் சங்கடத்தில் சிந்தை-தான் சென்று தியங்கி மயங்காமே உந்தை என்போர் இல்லாத ஒற்றி அப்பா உன் அடிக் கீழ் முந்தையோர் போன்று முயங்கி மகிழேனோ.

மேல்

#18 பொய் ஒன்றே அன்றிப் புறம்பு ஒன்றும் பேசாத வை ஒன்றும் தீ நாற்ற வாயார்க்கும் மேலானேன் உய் என்று அருள் ஈயும் ஒற்றி அப்பா உன்னுடைய மெய் ஒன்று நீற்றின் விளக்கம் அது பாரேனோ.

மேல்

#19 தூக்கமும் முன் தூங்கிய பின் சோறு இலையே என்னும் அந்த ஏக்கமுமே அன்றி மற்று ஓர் ஏக்கம் இலா ஏழையனேன் ஊக்கம்_உளோர் போற்றுகின்ற ஒற்றி அப்பா நின் அடிக் கீழ் நீக்கம்_இலா ஆனந்த நித்திரை-தான் கொள்ளேனோ.

மேல்

#20 வாது புரிந்து ஈன மடவார் மதித்திடுவான் போது நிதம் போக்கிப் புலம்பும் புலை நாயேன் ஓதும் மறையோர் குலவும் ஒற்றி அப்பா ஊரனுக்காத் தூதுசென்ற நின் தாள் துணைப் புகழைப் பாடேனோ.

மேல்

#21 பொன்_ஆசையோடும் புலைச்சியர்-தம் பேர்_ஆசை மன்_ஆசை மன்னுகின்ற மண்_ஆசைப் பற்று அறுத்தே உன் ஆசை கொண்டே என் ஒற்றி அப்பா நான் மகிழ்ந்து உன் மின் ஆரும் பொன்_மேனி வெண் நீற்றைப் பாரேனோ.

மேல்

#22 கள் உண்ட நாய் போல் கடும் காம வெள்ளம் உண்டு துள்ளுண்ட நெஞ்சத் துடுக்கு அடக்கி அன்பர்கள்-தம் உள் உண்ட தெள் அமுதே ஒற்றி அப்பா உன்றனை நான் வெள்ளுண்ட நந்தி விடை மீதில் காணேனோ.

மேல்

#23 பேராத காமப் பிணி கொண்ட நெஞ்சகனேன் வாராத ஆனந்த வாழ்வு வந்து வாழ்ந்திடவே ஓராதார்க்கு எட்டாத ஒற்றி அப்பா உன்னுடைய நீர் ஆர் சடை மேல் நிலவொளியைக் காணேனோ.

மேல்

#24 வன் நெஞ்சப் பேதை மடவார்க்கு அழிந்து அலையும் கல்_நெஞ்சப் பாவியன் யான் காதலித்து நெக்குருகி உன் நெஞ்சத்து உள் உறையும் ஒற்றி அப்பா உன்னுடைய வெல் நஞ்சு அணி மிடற்றை மிக்கு வந்து வாழ்த்தேனோ.

மேல்

#25 புண்ணியம் ஓர்போதும் புரிந்து அறியாப் பொய்யவனேன் எண்ணியதோர் எண்ணம் இடர் இன்றி முற்றியிட உள் நிலவு நல் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய தண் நிலவு தாமரைப் பொன்_தாள் முடியில் கொள்ளேனோ.

மேல்

#26 நன்று இது என்று ஓர்ந்தும் அதை நாடாது நல் நெறியைக் கொன்று இது நன்று என்னக் குறிக்கும் கொடியவன் யான் ஒன்றும் மனத்து உள் ஒளியே ஒற்றி அப்பா உன்னுடைய வென்றி மழுப் படையின் மேன்மை-தனைப் பாடேனோ.

மேல்

#27 மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் புண் கிடந்த நெஞ்சப் புலையேன் புழுக்கம் அற ஒண் கிடந்த முத் தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் கண் கிடந்த சேவடியின் காட்சி-தனைக் காணேனோ.

மேல்

#28 கூட்டு விக்குள் மேல் எழவே கூற்றுவன் வந்து ஆவி-தனை வாட்டுவிக்கும் காலம் வரும் முன்னே எவ்வுயிர்க்கும் ஊட்டுவிக்கும் தாயாகும் ஒற்றி அப்பா நீ உலகை ஆட்டுவிக்கும் அம்பலத்து உன் ஆட்டம்-அதைப் பாரேனோ.

மேல்

#29 மின் ஒப்பாம் வாழ்வை வியந்து இடருள் வீழ்ந்து அலைந்தேன் பொன் ஒப்பாய் தெய்வ மணப் பூ ஒப்பாய் என்னினுமே உன் ஒப்பார் இல்லாத ஒற்றி அப்பா உன்னுடைய தன் ஒப்பாம் வேணியின் மேல் சார் பிறையைப் பாரேனோ.

மேல்

#30 சீலம் அற நிற்கும் சிறியார் உறவிடை நல் காலம் அறப் பேசிக் கழிக்கின்றேன் வானவர்-தம் ஓலம் அற நஞ்சு அருந்தும் ஒற்றி அப்பா உன்னுடைய நீல மணி மிடற்றின் நேர்மை-தனைப் பாரேனோ.

மேல்

#31 சீர் புகழும் மால் புகழும் தேவர் அயன்-தன் புகழும் யார் புகழும் வேண்டேன் அடியேன் அடி நாயேன் ஊர் புகழும் நல் வளம் கொள் ஒற்றி அப்பா உன் இதழித் தார் புகழும் நல் தொழும்பு சார்ந்து உன்-பால் நண்ணேனோ.

மேல்

#32 ஆதவன்-தன் பல் இறுத்த ஐயற்கு அருள் புரிந்த நாத அரனே என்று நாத் தழும்புகொண்டு ஏத்தி ஓத வளம் மிக்க எழில் ஒற்றி அப்பா மண்ணிடந்தும் மாதவன் முன் காணா மலர்_அடி-கண் வைகேனோ.

மேல்

#33 கல்லைப் புறம்கண்ட காய் மனத்துக் கைதவனேன் தொல்லைப் பழ_வினையின் தோய்வு அகன்று வாய்ந்திடவே ஒல்லைத் திரு_அருள் கொண்டு ஒற்றி அப்பா உன்னுடைய தில்லைப் பொதுவின் திரு_நடனம் காணேனோ.

மேல்

#34 கடையவனேன் கல்_மனத்தேன் கைதவனேன் வஞ்ச நடையவனேன் நாணிலியேன் நாய்க்கு_இணையேன் துன்பு ஒழிய உடையவனே உலகு ஏத்தும் ஒற்றி அப்பா நின்-பால் வந்து அடைய நின்று மெய் குளிர்ந்தே ஆனந்தம் கூடேனோ.

மேல்

#35 வாதை மயல் காட்டும் மடவார் மல_குழியில் பேதை என வீழ்ந்தே பிணி உழத்தே பேய்_அடியேன் ஓதை கடற்கரை வாய் ஒற்றி அப்பா வாழ்த்துகின்றோர் தீதை அகற்றும் உன்றன் சீர் அருளைச் சேரேனோ.

மேல்

#36 பொய்யர்க்கு உதவுகின்ற புன்மையினேன் வன்மை செயும் வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் உய்யற்கு அருள்செய்யும் ஒற்றி அப்பா உன் அடி சேர் மெய்யர்க்கு அடிமைசெய்து உன் மென் மலர்_தாள் நண்ணேனோ.

மேல்

@46. திரு விண்ணப்பம்

மேல்

#1 சழக்கு இருந்தது என்னிடத்தில் ஆயினும் நீர் தந்தை ஆதலின் சார்ந்த நல் நெறியில் பழக்கிவைப்பது தேவரீர்க்கு உரிய பண்பு அன்றோ எனைப் பரிந்திலீரானால் வழக்கு இருப்பது இங்கு உமக்கும் என்றனக்கும் வகுத்துக் கூறுதல் மரபு மற்று அன்றால் புழைக்கை மா உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#2 அழுது நெஞ்சு அயர்ந்து உமை நினைக்கின்றேன் ஐய நீர் அறியாததும் அன்றே கழுது துன்றிய காட்டகத்து ஆடும் கதி_இலீர் எனக் கழறினன் அல்லால் பழுது பேசினது ஒன்று இலை ஒற்றிப் பதியில் வாழ் படம்பக்க நாயகரே பொழுது போகின்றது என் செய்கேன் எனை நீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#3 முன்னை மா தவ முயற்சி ஒன்று இல்லா மூடனேன்-தனை முன் வரவழைத்துப் பின்னை ஒன்றும் வாய்ப் பேச்சிலீரானால் பித்தர் என்று உமைப் பேசிடலாமே என்னை நான் பழித்திடுகின்றதல்லால் இகழ்கிலேன் உமை எழில் ஒற்றி உடையீர் புன்னை அம் சடையீர் எனை_உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#4 வன்மை பேசிய வன் தொண்டர் பொருட்டாய் வழக்குப் பேசிய வள்ளல் நீர் அன்றோ இன்மையாளர் போல் வலிய வந்திடினும் ஏழையாம் இவன் என்று ஒழித்திட்டால் தன்மை அன்று அது தருமமும் அன்றால் தமியனேன் இன்னும் சாற்றுவது என்னே பொன்மை அம் சடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#5 உறங்குகின்றதும் விழிப்பதும் மகிழ்வாய் உண்ணுகின்றதும் உடுப்பதும் மயக்குள் இறங்குகின்றதும் ஏறுகின்றதுமாய் எய்க்கின்றேன் மனம் என்னினும் அடியேன் அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் புறம் கொள் காட்டகத்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம் வழி எதுவோ.

மேல்

#6 கரும்பின் கட்டியும் கனியையும் கொடுத்தால் கயவராயினும் கசக்கும் என்று உரையார் அரும்பின் கட்டிள முலை உமை மகிழும் ஐய நீர் உமது அருள் எனக்கு அளிக்க இரும்பின் கட்டி நேர் நெஞ்சினேன் எனினும் ஏற்று வாங்கிடாது இருந்தது உண்டேயோ பொரும்பின் கட்டு உரியீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#7 விருப்பு நின்றதும் பத_மலர் மிசை அ விருப்பை மாற்றுதல் விரகு மற்று அன்றால் கருப்பு நேரினும் வள்ளியோர் கொடுக்கும் கடமை நீங்குறார் உடமையின்றேனும் நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் பொருப்பு வில்_உடையீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#8 கொடிய நஞ்சு அமுது ஆக்கிய உமக்கு இக் கொடியனேனை ஆட்கொள்ளுதல் அரிதோ அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் நெடிய மால் அயன் காண்கிலரேனும் நின்று காண்குவல் என்று உளம் துணிந்தேன் பொடிய நீறு அணிவீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#9 வினையினால் உடல் எடுத்தனனேனும் மேலை_நாள் உமை விரும்பிய அடியேன் எனை இன்னான் என அறிந்திலிரோ நீர் எழுமைச் செய்கையும் இற்று என அறிவீர் மனையினால் வரும் துயர் கெட உமது மரபு வேண்டியே வந்து நிற்கின்றேன் புனையினால் அமர்ந்தீர் ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

#10 பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அப் பிழை சிறிது அன்றோ மழை புரிந்திடும் வண் கையை மாற்ற மதிக்கின்றோர் எவர் மற்று இலை அது போல் உழை புரிந்து அருள்வீர் எனில் தடுப்பார் உம்பர் இம்பரில் ஒருவரும் இலை காண் புழை புரிந்த கை உலவு ஒற்றி உடையீர் பொய்யன் என்னில் யான் போம்_வழி எதுவோ.

மேல்

@47. பிரசாத விண்ணப்பம்

மேல்

#1 பசை இலாக் கருங்கல் பாறை நேர் மனத்துப் பதகனேன் படிற்று உரு அகனேன் வசை_இலார்க்கு அருளும் மாணிக்க மணியே வள்ளலே நினைத் தொழல் மறந்து நசை இலா மலம் உண்டு ஓடுறும் கொடிய நாய் என உணவு கொண்டு உற்றேன் தசை எலாம் நடுங்க ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#2 அன்னை போன்று அடியர்க்கு அருத்தியில் அருத்தும் அப்ப நின் அடியினை காணாது என்னையோ மலம் உண்டு உழன்றிடும் பன்றி என்ன உண்டு உற்றனன் அதனால் புன்னை அம் சடை எம் புண்ணிய ஒளியே பூத_நாயக என்றன் உடலம் தன்னை நீ அமர்ந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#3 கண்ணினால் உனது கழல் பதம் காணும் கருத்தினை மறந்து பாழ் வயிற்றை மண்ணினால் நிறைத்தல் என உணவு அருந்தி மலம் பெற வந்தனன் அதனால் எண்ணினால் அடங்கா எண்_குண_குன்றே இறைவனே நீ அமர்ந்து அருளும் தண்ணினால் ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#4 நின் முனம் நீல_கண்டம் என்று ஓதும் நெறி மறந்து உணவுகொண்டு அந்தோ பொன் முனம் நின்ற இரும்பு என நின்றேன் புலையனேன் ஆதலால் இன்று மின் முனம் இலங்கும் வேணி அம் கனியே விரி கடல் தானை சூழ் உலகம் தன் முனம் இலங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#5 குழிக்கு மண் அடைக்கும் கொள்கை போல் பாழும் கும்பியை ஓம்பினன் அல்லால் செழிக்கும் உன் திருமுன் நீல_கண்டம்-தான் செப்புதல் மறந்தனன் அதனால் விழிக்குள் நின்று இலங்கும் விளங்கு ஒளி மணியே மென் கரும்பு ஈன்ற வெண் முத்தம் தழிக்கொளும் வயல் சூழ் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#6 கமரிடை மல நீர் கவிழ்த்தல் போல் வயிற்றுக் கடன்கழித்திட்டனன் அல்லால் அமரிடைப் புரம் மூன்று எரித்து அருள் புரிந்த ஐயனே நினைத் தொழல் மறந்தேன் சமரிடை மனத்தேன் ஆதலால் முனிவர் சங்கர சிவசிவ என்றே தமரிடை ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#7 அரு_மருந்து_அனையாய் நின் திருமுன் போந்து அரகர எனத் தொழல் மறந்தே இருளுறும் மனத்தேன் மலத்தினும் இழிந்த இயல்புற உண்டனன் அதனால் கரு மருந்து அனைய அஞ்செழுத்து ஓதும் கருத்தர் போல் திருத்தம்-அது ஆகத் தருமம் நின்று ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#8 கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே உண்ணுதற்கு இசைந்தே உண்டு பின் ஒதி போல் உன் முனம் நின்றனன் அதனால் நண்ணுதல் பொருட்டு ஓர் நான்முகன் மாயோன் நாடிட அடியர்-தம் உள்ளத்து அண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#9 கற்றவர்க்கு இனிதாம் கதி அருள் நீல_கண்டம் என்று உன் திருமுன்னர் சொற்றிடல் மறந்தேன் சோற்றினை ஊத்தைத் துருத்தியில் அடைத்தனன் அதனால் செற்றம் அற்று உயர்ந்தோர் சிவசிவ சிவ மாதேவ ஓம் அரகர எனும் சொல் சற்றும் விட்டு அகலா ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

#10 முறைப்படி நினது முன்பு நின்று ஏத்தி முன்னிய பின்னர் உண்ணாமல் சிறை படி_வயிற்றில் பொறைப்பட ஒதி போல் சென்று நின் முன்னர் உற்றதனால் கறைப்பட ஓங்கும் கண்டனே எவர்க்கும் கருத்தனே ஒருத்தனே மிகு சீர் தறை படர்ந்து ஓங்கும் ஒற்றியில் உன்னால் தண்டிக்கப்பட்டனன் அன்றே.

மேல்

@48. வழிமொழி விண்ணப்பம்

மேல்

#1 நீலனேன் கொடும் பொய்_அலது உரையா நீசன் என்பது என் நெஞ்சு அறிந்தது காண் சால ஆயினும் நின் கழல் அடிக்கே சரண்புகுந்திடில் தள்ளுதல் வழக்கோ ஆலம் உண்ட நின் தன்மை மாறுவதேல் அகில கோடியும் அழிந்திடும் அன்றே சீலம் மேவிய ஒற்றி அம் பரனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#2 கண்ணுள் மா மணியே அருள் கரும்பே கற்ற நெஞ்சகம் கனிந்திடும் கனியே எண்ணுள் உட்படா இன்பமே என்றென்று எந்தை நின்றனை ஏத்திலன் எனினும் மண்ணுள் மற்று யான் வழிவழி அடியேன் மாயம் அன்று இது உன் மனம் அறிந்ததுவே திண்ணம் ஈந்து அருள் ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#3 நல்லன்_அல்லன் நான் ஆயினும் சிறியேன் நான் அறிந்ததோ நாடு அறிந்தது காண் சொல்ல வாய் இலை ஆயினும் எனை நீ தொழும்புகொண்டிடில் துய்யனும் ஆவேன் வல்ல உன் கருத்து அறிந்திலேன் மனமே மயங்குகின்றது யான் வாடுகின்றனன் காண் செல்லல் நீக்கிய ஒற்றியூர் அரசே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#4 இரக்கம் என்பது என்னிடத்து இலை என நீ இகழ்தியேல் அஃது இயல்பு மற்று அடியேன் பரக்க நின் அருட்கு இரக்கமே அடைந்தேன் பார்த்திலாய்-கொலோ பார்த்தனை எனில் நீ கரப்பது உன்றனக்கு அழகு அன்று கண்டாய் காள_கண்டனே கங்கை_நாயகனே திரக் கண்_நெற்றியாய் ஒற்றியாய்த் தில்லைத் திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#5 யாது நான் பிழைசெய்யினும் பொறுப்பான் எந்தை எம் இறை என்று வந்து அடைந்தேன் தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் போது போகின்றதன்றி என் மாயப் புணர்ச்சி யாதொன்றும் போகின்றதிலை காண் சீத வார் பொழில் ஒற்றி அம் பரனே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#6 தாய்க்கும் தந்தைக்கும் நிகரும் நின் இரு தாள் சார்ந்த மேலவர்-தமைத் தொழுது ஏத்தா நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை நாடி நல் அருள் நல்கிடாதிருந்தால் ஏய்க்கும் மால் நிறக் காலன் வந்திடும் போது என்-கொலாம் இந்த எண்ணம் என் மனத்தைத் தீய்க்குது என் செய்வேன் ஒற்றி அம் சிவனே தில்லை அம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#7 ஆட்டுகின்ற நீ அறிந்திலை போலும் ஐவர் பக்கம் நான் ஆடுகின்றதனைக் காட்டுகின்ற வான் கடலிடை எழுந்த காளம் உண்ட அக் கருணையை உலகில் நாட்டுகின்றனையாயில் இக் கொடிய நாய்க்கும் உன் அருள் நல்கிடவேண்டும் தீட்டுகின்ற நல் புகழ் ஒற்றி அரசே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#8 உய்ய ஒன்று இலேன் பொய்யன் என்பதனை ஒளித்திலேன் இந்த ஒதியனுக்கு அருள் நீ செய்யவேண்டுவது இன்று எனில் சிவனே செய்வது என்னை நான் திகைப்பதை அன்றி மையல் நெஞ்சினேன் ஆயினும் உன்னை மறந்திலேன் இது வஞ்சமும் அன்றே செய்ய மேனி எம் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#9 வாடுகின்றனன் என்றனை இன்னும் வருந்தவைக்கினும் மறந்திடேன் உன்னைப் பாடுகின்றனன் பாவியேன் என்னைப் பாதுகாப்பது உன் பரம் அது கண்டாய் தேடுகின்ற மால் நான்முகன் முதலாம் தேவர் யாவரும் தெரிவ அரும் பொருளே சேடு நின்ற நல் ஒற்றியூர் வாழ்வே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

#10 சிறியர் செய் பிழை பெரியவர் பொறுக்கும் சீலம் என்பது உன் திரு_மொழி அன்றே வறியனேன் பிழை யாவையும் உனது மனத்தில் கொள்ளுதல் வழக்கு அல இனி நீ இறையும் தாழ்க்கலை அடியனேன்-தன்னை ஏன்றுகொண்டு அருள் ஈந்திடல் வேண்டும் செறிய ஓங்கிய ஒற்றி அம் பரமே திரு_சிற்றம்பலம் திகழ் ஒளி விளக்கே.

மேல்

@49. சிறுமை விண்ணப்பம்

மேல்

#1 இன்று நின்றவர் நாளை நின்றிலரே என் செய்வோம் இதற்கு என்று உளம் பதைத்துச் சென்று நின்று சோர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் நன்று நின் துணை நாடக மலர்_தாள் நண்ண என்று நீ நயந்து அருள்வாயோ பொன்றல் இன்றிய எழில் ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#2 மறுமை இம்மையும் வளம்பெற வேண்டேன் மருவும் நின் அருள் வாழ்வுற அடையாச் சிறுமை எண்ணியே திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் வறுமையாளனேன் வாட்டம் நீ அறியா வண்ணம் உண்டு-கொல் மாணிக்க_மலையே பொறுமையாளனே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#3 உய்ய வல்லனேல் உன் திரு அருளாம் உடைமை வேண்டும் அ உடைமையைத் தேடல் செய்ய வல்லனோ அல்ல காண் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் பொய் இது அல்ல எம் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#4 வெல்லுகின்றனர் வினைப் புல வேடர் மெலிகின்றேன் இங்கு வீணினில் காலம் செல்லுகின்றன ஐயவோ சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் சொல்லுகின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரம்_இல்லார் போல் புல்லுகின்ற சீர் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#5 ஏறுகின்றிலேன் இழிகிலேன் நடு நின்று எய்க்கின்றேன் பவம் என்னும் அக் குழியில் தேறுகின்றிலேன் சிக்கெனச் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் கூறுகின்றது என் கடவுள் நீ அறியாக் கொள்கை ஒன்று இலை குன்ற_வில்லோனே பூறுவம் கொளும் ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#6 கந்தமும் மலரும் என நின்றாய் கண்டுகொண்டிலேன் காம வாழ்வு-அதனால் சிந்தை நொந்து அயர்கின்றனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் எந்த நல் வழியால் உனை அடைவேன் யாதும் தேர்ந்திலேன் போதுபோவது காண் புந்தி இன்பமே ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#7 அல்லல் என்னை விட்டு அகன்றிட ஒற்றி அடுத்து நிற்கவோ அன்றி நல் புலியூர்த் தில்லை மேவவோ அறிந்திலேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் ஒல்லை இங்கு வா என்று அருள் புரியாது ஒழிதியேல் உனை உறுவது எவ்வணமோ புல்லர் மேவிடா ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#8 ஞால வாழ்க்கையை நம்பி நின்று உழலும் நாய்களுக்கெலாம் நாய்_அரசு ஆனேன் சீலம் ஒன்று இலேன் திகைக்கின்றேன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் ஏல நின் அருள் ஈதியேல் உய்வேன் இல்லையேல் எனக்கு இல்லை உய் திறமே போல என்று உரையா ஒற்றி அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#9 சுத்த நெஞ்சருள் சேர்க்கினும் அலது சோம்பல் நெஞ்சருள் சேர்க்கினும் நினது சித்தம் என்னளவு அன்றது சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் நித்தம் நின் அடி அன்றி ஒன்று ஏத்தேன் நித்தனே அது நீ அறியாயோ புத்த அரும் தமிழ் ஒற்றியூர் அரசே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#10 தத்து மத்திடைத் தயிர் என வினையால் தளர்ந்து மூப்பினில் தண்டு கொண்டு உழன்றே செத்து மீளவும் பிறப்பு எனில் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் தொத்து வேண்டும் நின் திரு_அடிக்கு எனையே துட்டன் என்றியேல் துணை பிறிது அறியேன் புத்தை நீக்கிய ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

#11 பரிந்திலேன் அருள் பாங்குறும் பொருட்டாய்ப் பந்தபாசத்தைப் பறித்திடும் வழியைத் தெரிந்திலேன் திகைப்புண்டனன் சிவனே செய்வது என்னை நான் சிறியருள் சிறியேன் விரிந்த நெஞ்சமும் குவிந்தில இன்னும் வெய்ய மாயையில் கையறவு அடைந்தே புரிந்து சார்கின்றது ஒற்றி அம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில் நின்றவனே.

மேல்

@50. ஆற்றா விண்ணப்பம்

மேல்

#1 அன்னையில் பெரிதும் இனிய என் அரசே அம்பலத்து ஆடல்செய் அமுதே பொன்னை ஒத்து ஒளிரும் புரி சடைக் கனியே போதமே ஒற்றி எம் பொருளே உன்னை விட்டு அயலார் உறவுகொண்டு அடையேன் உண்மை என் உள்ளம் நீ அறிவாய் என்னை விட்டிடில் நான் என் செய்வேன் ஒதி போல் இருக்கின்ற இ எளியேனே.

மேல்

#2 எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் என் செய்வேன் என் செய்வேன் பொல்லாக் களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் கருணைசெய்திலை அருள் கரும்பே அளியனே திரு_சிற்றம்பலத்து ஒளியே அரு_மருந்தே வடவனத்துத் தனியனே ஒற்றித் தலத்து அமர் மணியே தயை_இலி போல் இருந்தனையே.

மேல்

#3 இருந்தனை எனது நெஞ்சினுள் எந்தாய் என் துயர் அறிந்திலை போலும் முருந்து அனை முறுவல் மங்கையர் மலை நேர் முலை-தலை உருண்டனனேனும் மருந்து_அனையாய் உன் திரு_அடி_மலரை மறந்திலேன் வழுத்துகின்றனன் காண் வருந்தனையேல் என்று உரைத்திலை ஐயா வஞ்சகம் உனக்கும் உண்டேயோ.

மேல்

#4 உண்ட நஞ்சு இன்னும் கண்டம் விட்டு அகலாது உறைந்தது நாள்-தொறும் அடியேன் கண்டனன் கருணை_கடல் எனும் குறிப்பைக் கண்டுகண்டு உளம்-அது நெகவே விண்டனன் என்னைக் கைவிடில் சிவனே விடத்தினும் கொடியன் நான் அன்றோ அண்டர்கட்கு அரசே அம்பலத்து அமுதே அலைகின்றேன் அறிந்திருந்தனையே.

மேல்

#5 தனையர் செய் பிழையைத் தந்தையர் குறித்துத் தள்ளுதல் வழக்கு அல என்பார் வினையனேன் பிழையை வினை_இலி நீ-தான் விவகரித்து எண்ணுதல் அழகோ உனை அலாது இறந்தும் பிறந்தும் இ உலகில் உழன்றிடும் தேவரை மதியேன் எனை அலாது உனக்கு இங்கு ஆள் இலையோ உண்டு என்னினும் ஏன்றுகொண்டு அருளே.

மேல்

#6 ஏன்றுகொண்டு அருளவேண்டும் இ எளியேன் இருக்கினும் இறக்கினும் பொதுவுள் ஊன்றுகொண்டு அருளும் நின் அடியல்லால் உரைக்கும் மால் அயன் முதல் தேவர் நான்றுகொண்டிடுவரேனும் மற்று அவர் மேல் நா எழாது உண்மை ஈது இதற்குச் சான்று கொண்டு அருள நினைத்தியேல் என்னுள் சார்ந்த நின் சரண் இரண்டு அன்றே.

மேல்

#7 சரண வாரிசம் என் தலை மிசை இன்னும் தரித்திலை தாழ்த்தனை அடியேன் கரண வாதனையும் கந்த வாதனையும் கலங்கிடக் கபம் இழுத்து உந்தும் மரண வாதனைக்கு என் செய்குவம் என்றே வருந்துகின்றனன் மனம் மாழாந்து அரணம் மூன்று எரிய நகைத்த எம் இறையே அடியனை ஆள்வது உன் கடனே.

மேல்

#8 கடம் பொழி ஓங்கல் உரி உடை உடுக்கும் கடவுளே கடவுளர் கோவே மடம் பொழி மனத்தேன் மலம் செறிந்து ஊறும் வாயில் ஓர் ஒன்பதில் வரும் இ உடம்பு ஒழிந்திடுமேல் மீண்டுமீண்டு எந்த உடம்பு கொண்டு உழல்வனோ என்று நடம் பொழி பதத்தாய் நடுங்குகின்றனன் காண் நான் செயும் வகை எது நவிலே.

மேல்

#9 வகை எது தெரிந்தேன் ஏழையேன் உய்வான் வள்ளலே வலிந்து எனை ஆளும் தகை-அது இன்றேல் என் செய்வேன் உலகர் சழக்கு உடைத் தமியன் நீ நின்ற திகை எது என்றால் சொல அறியாது திகைத்திடும் சிறியனேன்-தன்னைப் பகை-அது கருதாது ஆள்வது உன் பரம் காண் பவள மா நிறத்த கற்பகமே.

மேல்

#10 கற்பன அறிந்து கற்கிலேன் சழக்குக் கல்வி கற்று உழன்றனன் கருணை சொற்பனம் அதிலும் காண்கிலேன் பொல்லாச் சூகரம் என மலம் துய்த்தேன் விற்பனன் எனவே நிற்பது விழைந்தேன் வீணனேன் விரகு இலா வெறியேன் அற்பனேன்-தன்னை ஆண்ட நின் அருளை ஆய்ந்திடில் அன்னையின் பெரிதே.

மேல்

@51. இரங்கல் விண்ணப்பம்

மேல்

#1 பற்று நோக்கிய பாவியேன்-தனக்குப் பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#2 கொடிய நெஞ்சினேன் கோபமே அடைந்தேன் கோடிகோடியாம் குணப் பழுது_உடையேன் கடிய வஞ்சகக் கள்வனேன்-தனக்கு உன் கருணை ஈந்திடாது இருந்திடில் கடையேன் அடியன் ஆகுவது எவ்வணம் என்றே ஐய ஐய நான் அலறிடுகின்றேன் ஒடிய மும்மலம் ஒருங்கு_அறுத்தவர் சேர் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#3 காமம் என்பதோர் உருக் கொடு இ உலகில் கலங்குகின்ற இக் கடையனேன்-தனக்குச் சேமம் என்பதாம் நின் அருள் கிடையாச் சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் ஊமன் ஆகுவதன்றி என் செய்வேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#4 மண்ணில் நின்றவர் வாழ்வதும் கணத்தில் வருந்தி மாய்வதும் மற்று இவை எல்லாம் கண்ணில் நேர் நிதம் கண்டும் இ வாழ்வில் காதல் நீங்கிலாக் கல்_மனக் கொடியேன் எண்ணிநின்ற ஓர் எண்ணமும் முடியாது என் செய்கேன் வரும் இரு_வினைக் கயிற்றால் உள் நிரம்ப நின்று ஆட்டுகின்றனை நீ ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#5 வெருட்சியே தரும் மல_இரா இன்னும் விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம் மருட்சி மேவியது என் செய்கேன் உன்-பால் வருவதற்கு ஒரு வழியும் இங்கு அறியேன் தெருட்சியே தரும் நின் அருள் ஒளி-தான் சேரில் உய்குவேன் சேர்ந்திலதானால் உருட்சி ஆழி ஒத்து உழல்வது மெய் காண் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#6 யாதும் உன் செயலாம் என அறிந்தும் ஐய வையம் மேல் அவர் இவர் ஒழியாத் தீது செய்தனர் நன்மை செய்தனர் நாம் தெரிந்து செய்வதே திறம் என நினைத்துக் கோது செய் மல_கோட்டையைக் காவல் கொண்டு வாழ்கிறேன் கண்டிட இனி நீ ஓது செய்வது ஒன்று என் உயிர்_துணையே ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#7 பந்தம் மட்டின் ஆம் பாவி நெஞ்சகத்தால் பவப் பெரும் கடல் படிந்து உழன்று அயர்ந்தேன் இந்தமட்டில் நான் உழன்றதே அமையும் ஏற வேண்டும் உன் எண்ணம் ஏது அறியேன் அந்தமட்டினில் இருத்தியோ அன்றி அடிமை வேண்டி நின் அருள் பெரும் புணையை உந்த மட்டினால் தருதியோ உரையாய் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#8 ஞானம் என்பதின் உறு_பொருள் அறியேன் ஞானி அல்லன் நான் ஆயினும் கடையேன் ஆன போதிலும் எனக்கு நின் அருள் ஓர் அணுவில் பாதியே ஆயினும் அடைந்தால் வானம் மேவிய அமரரும் அயனும் மாலும் என் முனம் வலி_இலர் அன்றே ஊனம் நீக்கி நல் அருள்தரும் பொருளே ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#9 அளிய நெஞ்சம் ஓர் அறிவுரு ஆகும் அன்பர்-தம் புடை அணுகிய அருள் போல் எளிய நெஞ்சினேற்கு எய்திடாதேனும் எள்ளில் பாதி மட்டு ஈந்து அருள்வாயேல் களிய மா மயல் காடு அற எறிந்து ஆங்கார வேரினைக் களைந்து மெய்ப் போத ஒளிய வித்தினால் போகமும் விளைப்பேன் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

#10 நாக_நாட்டதின் நலம்பெற வேண்டேன் நரகில் ஏகு என நவிலினும் அமைவேன் ஆகம் நாட்டிடை விடுக எனில் விடுவேன் அல்லல் ஆம் பவம் அடை எனில் அடைவேன் தாகம் நாட்டிய மயல் அற அருள் நீர் தருதல் இல் எனச் சாற்றிடில் தரியேன் ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே.

மேல்

@52.காதல் விண்ணப்பம்

மேல்

#1 வஞ்சக வினைக்கு ஓர் கொள்கலம் அனைய மனத்தினேன் அனைத்தினும் கொடியேன் தஞ்சம் என்று அடைந்தே நின் திரு_கோயில் சந்நிதி முன்னர் நிற்கின்றேன் எஞ்சலில் அடங்காப் பாவி என்று எனை நீ இகழ்ந்திடில் என் செய்வேன் சிவனே கஞ்சன் மால் புகழும் ஒற்றி அம் கரும்பே கதி தரும் கருணை அம் கடலே.

மேல்

#2 நிற்பது போன்று நிலைபடா உடலை நேசம் வைத்து ஓம்புறும் பொருட்டாய்ப் பொற்பு-அது தவிரும் புலையர்-தம் மனை வாய்ப் புந்தி நொந்து அயர்ந்து அழுது இளைத்தேன் சொல் பதம் கடந்த நின் திரு_அடிக்குத் தொண்டுசெய் நாளும் ஒன்று உளதோ கற்பது கற்றோர் புகழ் திருவொற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே.

மேல்

#3 முன்னை வல்_வினையால் வஞ்சக மடவார் முழுப் புலைக் குழி விழுந்து இளைத்தேன் என்னையோ கொடியேன் நின் திரு_அருள்-தான் எய்திலனேல் உயிர்க்கு உறுதிப் பின்னை எவ்வணம்-தான் எய்துவது அறியேன் பேதையில்பேதை நான் அன்றோ கன்னலே தேனே ஒற்றி எம் அமுதே கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#4 மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால் மனம் தளர்ந்து அழுங்கி நாள்-தோறும் எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர் இல்லிடை மல்லிடுகின்றேன் விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் உனது மெல் அடிக்கு அடிமைசெய்வேனோ கண்ணினுள் மணியே ஒற்றி அம் கனியே கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#5 அளவு_இலா உலகத்து அனந்த கோடிகளாம் ஆர்_உயிர்த் தொகைக்குளும் எனைப் போல் இளகிலா வஞ்ச நெஞ்சகப் பாவி ஏழைகள் உண்டு-கொல் இலை காண் தளர்வு இலாது உனது திரு_அடி எனும் பொற்றாமரைக்கு அணியன் ஆகுவனோ களவு_இலார்க்கு இனிய ஒற்றி எம் மருந்தே கனம் தரும் கருணை அம் கடலே.

மேல்

#6 ஞானம் என்பதில் ஓர் அணுத்துணையேனும் நண்ணிலேன் புண்ணியம் அறியேன் ஈனம் என்பதனுக்கு இறை எனல் ஆனேன் எவ்வணம் உய்குவது அறியேன் வான_நாடவரும் பெறற்கு அரும் நினது மலர்_அடித் தொழும்புசெய்வேனோ கான வேட்டு உருவாம் ஒருவனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#7 ஞால வாழ்வு அனைத்தும் கானல்_நீர் எனவே நன்கு அறிந்து உன் திரு_அருளாம் சீல வாழ்வு அடையும் செல்வம் இப் பொல்லாச் சிறியனும் பெறுகுவதேயோ நீல மா மிடற்றுப் பவள மா மலையே நின்மல ஆனந்த நிலையே காலன் நாண் அவிழ்க்கும் காலனே ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#8 மாலொடு நான்கு_வதனனும் காணா மலர்_அடிக்கு அடிமைசெய்து இனிப்பாம் பாலொடு கலந்த தேன் என உன் சீர் பாடும் நாள் எந்த நாள் அறியேன் வேலொடு மயிலும் கொண்டிடும் சுடரை விளைவித்த வித்தக விளக்கே காலொடு பூதம் ஐந்துமாம் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#9 சற்றும் நல் குணம்-தான் சார்ந்திடாக் கொடியார்-தம் தலைவாயிலுள் குரைக்கும் வெற்று நாய்-தனக்கும் வேறு நாயாக மெலிகின்றேன் ஐம்புலச் சேட்டை அற்று நின்றவர்க்கும் அரிய நின் திரு_தாட்கு அடிமைசெய்து ஒழுகுவனேயோ கற்று முற்று_உணர்ந்தோர்க்கு அருள்தரும் ஒற்றிக் கடவுளே கருணை அம் கடலே.

மேல்

#10 மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்து உலகு உயிர்-தொறும் ஒளித்த இறைவ நின் திரு_தாட்கு அன்பு இலாக் கொடியன் என்னினும் ஏழையேன்-தனக்கு நிறைதரும் நினது திரு_அருள் அளிக்க நினைத்தலே நின் கடன் கண்டாய் கறை மணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணை அம் கடலே.

மேல்

@53. பொருள் விண்ணப்பம்

மேல்

#1 உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம் ஒன்று கோடியாய்ச் சென்றுசென்று உலைந்தே கலக மாயையில் கவிழ்க்கின்றது எளியேன் கலுழ்கின்றேன் செயக்கடவது ஒன்று அறியேன் இலகும் அன்பர்-தம் எய்ப்பினில் வைப்பே இன்ப_வெள்ளமே என்னுடை உயிரே திலகமே திரு ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#2 எண்ணிலா நினைப்புற்றதின் வழியே இன்ப_துன்பங்கள் எய்தி என் நெஞ்சம் கண் இலாக் குரங்கு என உழன்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் பெண் நிலாவிய பாகத்து எம் அமுதே பிரமன் ஆதியர் பேச அரும் திறனே தெள் நிலா முடி ஒற்றி அம் கனியே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#3 ஊண் உறக்கமே பொருள் என நினைத்த ஒதியனேன் மனம் ஒன்றியது இன்றாய்க் காணுறக் கரும் காமம் சான்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் மாணுறக் களம் கறுத்த செம் மணியே வள்ளலே எனை வாழ்விக்கும் மருந்தே சேணுறத் தரும் ஒற்றி நாயகமே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#4 யாது சொல்லினும் கேட்பது_இன்று அந்தோ யான் செய்தேன் எனது என்னும் இ இருளில் காதுகின்றது என் வஞ்சக நெஞ்சம் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் ஓது மா மறை உபநிடதத்தின் உச்சி மேவிய வச்சிர மணியே தீது நீக்கிய ஒற்றி அம் தேனே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#5 சொல்லும் சொல்லளவு அன்று காண் நெஞ்சத் துடுக்கு அனைத்தும் இங்கு ஒடுக்குவது எவனோ கல்லும் பிற்படும் இரும்பினும் பெரிதால் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அல்லும்_எல்லும் நின்று அகம் குழைந்து ஏத்தும் அன்பருள் ஊறும் ஆனந்தப் பெருக்கே செல் உலாம் பொழில் ஒற்றி அம் கரும்பே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#6 இம்மை இன்பமே வீடு எனக் கருதி ஈனர் இல்லிடை இடர் மிக உழந்தே கைம்மை நெஞ்சம் என்றனை வலிப்பது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் மும்மையாகிய தேவர்-தம் தேவே முக்கண் மூர்த்தியே முத்தியின் முதலே செம்மை மேனி எம் ஒற்றியூர் அரசே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#7 நின் அடி-கண் ஓர் கணப்பொழுதேனும் நிற்பது இன்றியே நீச மங்கையர்-தம் கல் நவில் தனம் விழைந்தது மனம் காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அன்ன ஊர்தியும் மாலும் நின்று அலற அடியர்-தங்கள் உள் அமர்ந்து அருள் அமுதே தென் இசைப் பொழில் ஒற்றி எம் வாழ்வே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#8 புலைய மங்கையர் புணர் முலைக் குவட்டில் போந்து உருண்டு எனைப் புலன் வழிப் படுத்திக் கலைய நின்றது இக் கல் உறழ் மனம்-தான் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் விலையிலா உயர் மாணிக்க மணியே வேத உச்சியில் விளங்கு ஒளி விளக்கே சிலை விலாக் கொளும் ஒற்றி எம் மருந்தே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#9 தந்தை தாய் மனை மக்கள் என்று உலகச் சழக்கிலே இடர் உழக்கும் என் மனம்-தான் கந்த வாதனை இயற்றுகின்றது காண் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் எந்தையே எனை எழுமையும் தொடர்ந்த இன்ப_வெள்ளமே என் உயிர்க்குயிரே சிந்தை ஓங்கிய ஒற்றி எம் தேவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

#10 கொடிய வஞ்சக நெஞ்சகம் எனும் ஓர் குரங்கிற்கு என் உறு குறை பல உரைத்தும் கடியது ஆதலின் கசிந்திலது இனி இக் கடையனேன் செயக்கடவது ஒன்று அறியேன் அடியனேன் பிழை உளத்திடை நினையேல் அருளல் வேண்டும் என் ஆர்_உயிர்த் துணையே செடிகள் நீக்கிய ஒற்றி எம் உறவே செல்வமே பரசிவ பரம்பொருளே.

மேல்

@54. கொடி விண்ணப்பம்

மேல்

#1 மாலை ஒன்று தோள் சுந்தரப் பெருமான் மணத்தில் சென்று அவண் வழக்கிட்டது எனவே ஓலை ஒன்று நீர் காட்டுதல் வேண்டாம் உவந்து தொண்டன் என்று உரைப்பிரேல் என்னை வேலை ஒன்று அல மிகப் பல எனினும் வெறுப்பு இலாது உளம் வியந்து செய்குவன் காண் சோலை ஒன்று சீர் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#2 பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் பேதம் இன்றி அம்பலம்-தனில் தூக்கும் பெருமைச் சேவடி பிடிக்கவும் தளரேன் ஏதம் எண்ணிடாது என்னையும் தொழும்பன் என்று கொள்விரேல் எனக்கு அது சாலும் சூத ஒண் பொழில் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#3 உப்பு இடாத கூழ் இடுகினும் உண்பேன் உவந்து இ வேலையை உணர்ந்து செய் என நீர் செப்பிடா முனம் தலையினால் நடந்து செய்ய வல்லன் யான் செய்யும் அப் பணிகள் தப்பிடாது அதில் தப்பு இருந்து என்னைத் தண்டிப்பீர் எனில் சலித்து உளம் வெருவேன் துப்பு இடா எனக்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#4 கூலி என்பது ஓர் அணுத்துணையேனும் குறித்திலேன் அது கொடுக்கினும் கொள்ளேன் மாலினோடு அயன் முதலியர்க்கு ஏவல் மறந்தும் செய்திடேன் மன் உயிர்ப் பயிர்க்கே ஆலி அன்னதாம் தேவரீர் கடைக்கண் அருளை வேண்டினேன் அடிமைகொள்கிற்பீர் சூலி ஓர் புடை மகிழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே

மேல்

#5 தேர்ந்து தேடினும் தேவர் போல் தலைமைத் தேவர் இல்லை அத் தெளிவுகொண்டு அடியேன் ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திடப் பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் ஓர்ந்து இங்கு என்றனைத் தொழும்புகொள்ளீரேல் உய்கிலேன் இஃது உம் பதம் காண்க சோர்ந்திடார் புகழ் ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#6 புதியன் என்று எனைப் போக்குதிரோ நீர் பூருவத்தினும் பொன்_அடிக்கு அடிமைப் பதியவைத்தனன் ஆயினும் அந்தப் பழம் கணக்கினைப் பார்ப்பதில் என்னே முதியன்_அல்லன் யான் எப் பணிவிடையும் முயன்று செய்குவேன் மூர்க்கனும் அல்லேன் துதி-அது ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#7 ஒழுக்கம்_இல்லவன் ஓர் இடத்து அடிமைக்கு உதவுவான்-கொல் என்று உன்னுகிற்பீரேல் புழுக்க நெஞ்சினேன் உம்முடைச் சமுகம் போந்து நிற்பனேல் புண்ணியக் கனிகள் பழுக்க நின்றிடும் குண_தரு ஆவேன் பார்த்த பேரும் அப் பரிசினர் ஆவர் தொழுக்கன் என்னை ஆள்வீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#8 பிச்சை ஏற்று உணும் பித்தர் என்று உம்மைப் பேசுகின்றவர் பேச்சினைக் கேட்டும் இச்சை நிற்கின்றது உம் அடிக்கு ஏவல் இயற்றுவான் அந்த இச்சையை முடிப்பீர் செச்சை மேனியீர் திருவுளம் அறியேன் சிறியனேன் மிகத் தியங்குகின்றனன் காண் துச்சை நீக்கினோர்க்கு அருள் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#9 ஆலம் உண்ட நீர் இன்னும் அ வானோர்க்கு அமுது வேண்டி மால் அக் கடல் கடைய ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் சாலம் செய்வது தகை அன்று தருமத் தனிப் பொன்_குன்று_அனீர் சராசரம் நடத்தும் சூல_பாணியீர் திருவொற்றி நகரீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#10 முத்தி நேர்கிலாத் தேவர்கள்-தமை நான் முந்துறேன் அவர் முற்பட வரினும் சுத்தியாகிய சொல் உடை அணுக்கத் தொண்டர்-தம்முடன் சூழ்த்திடீரெனினும் புத்தி சேர் புறத் தொண்டர்-தம்முடனே பொருந்தவைக்கினும் போதும் மற்று அதுவே துத்தி ஆர் பணியீர் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

#11 என்ன நான் அடியேன் பல பல கால் இயம்பி நிற்பது இங்கு எம்பெருமானீர் இன்னும் என்னை ஓர் தொண்டன் என்று உளத்தில் ஏன்றுகொள்ளிரேல் இரும் கடல் புவியோர் பன்ன என் உயிர் நும் பொருட்டாகப் பாற்றி நும் மிசைப் பழிசுமத்துவல் காண் துன்னு மா தவர் புகழ் ஒற்றி_உடையீர் தூய மால் விடைத் துவசத்தினீரே.

மேல்

@55. நாடக விண்ணப்பம்

மேல்

#1 மடுக்கும் நீர் உடைப் பாழ்ங்கிணறு-அதனுள் வழுக்கி வீழ்ந்தவன் வருந்துறா வண்ணம் எடுக்கின்றோர் என இடையில் கைவிடுதல் இரக்கம்_உள்ளவர்க்கு இயல்பு அன்று கண்டீர் தடுக்கிலாது எனைச் சஞ்சல வாழ்வில் தாழ்த்துகின்றது தருமம் அன்று உமக்கு நடுக்கு_இலார் தொழும் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#2 வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் உண்மை ஓதினேன் வஞ்சக வாழ்க்கை உவரி வீழ்வனேல் உறுதி மற்று அறியேன் கண்மை_உள்ளவர் பாழ்ங்குழி வீழக் கண்டு இருப்பது கற்றவர்க்கு அழகோ நண்மை ஒற்றியீர் திரு_சிற்றம்பலத்துள் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#3 குற்றமே பல இயற்றினும் எனை நீர் கொடியன் என்பது குறிப்பு அல உமது பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றைப் பூசுகின்றனன் புனித நும் அடி-கண் உற்றதோர் சிறிது அன்பும் இவ்வகையால் உறுதி ஈவது இங்கு உமக்கு ஒரு கடன் காண் நல் தவத்தர் வாழ் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#4 உள்ளது ஓதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகுளோர் இந்த உறுதி கொண்டு அடியேன் கள்ளம் ஓதிலேன் நும் அடி அறியக் காம வேட்கையில் கடலினும் பெரியேன் வள்ளலே உமது அருள் பெறச் சிறிது வைத்த சிந்தையேன் மயக்கு அற அருள்வீர் நள்ளல்_உற்றவர் வாழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#5 அரந்தையோடு ஒரு வழிச்செல்வோன்-தனை ஓர் ஆற்று வெள்ளம் ஈர்த்து அலைத்திட அவனும் பரந்த நீரிடை நின்று அழுவானேல் பகைவர் ஆயினும் பார்த்திருப்பாரோ கரந்தை அம் சடை அண்ணல் நீர் அடியேன் கலங்கக் கண்டு இருக்கின்றது கடனோ நரந்தம் ஆர் பொழில் ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#6 பிறவிக் கண்_இலான் கைக்கொளும் கோலைப் பிடுங்கி வீசுதல் பெரியவர்க்கு அறமோ மறவிக் கையறை மனத்தினேன் உம் மேல் வைக்கும் அன்பை நீர் மாற்றுதல் அழகோ உற இக் கொள்கையை உள்ளிரேல் இதனை ஓதிக்கொள் இடம் ஒன்று இலை கண்டீர் நற இக்கு ஓங்கிய ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#7 வலிய வந்திடு விருந்தினை ஒழிக்கார் வண்கை உள்ளவர் மற்று அது போலக் கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை மலிய உண்டிட வருகின்றேன் வரும் முன் மாற்றுகிற்பிரேல் வள்ளல் நீர் அன்றோ நலியல் நீக்கிடும் ஒற்றி அம் பதியீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#8 பொய்யன் ஆகிலும் போக்கிடம் அறியாப் புலையன் ஆண்டவன் புகழ் உரைப்பானேல் உய்ய வைப்பன் ஈது உண்மை இ உலகில் ஒதியனேன் புகல் ஓர் இடம் அறியேன் ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ நையல் அற்றிட அருள் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#9 தந்தை ஆயவர் தனையரைக் கெடுக்கச் சமைவர் என்பது சற்றும் இன்று உலகில் எந்தை நீர் எனை வஞ்சக வாழ்வில் இருத்துவீர் எனில் யார்க்கு இது புகல்வேன் பந்தம் மேலிட என் பரிதாபம் பார்ப்பிரோ அருள் பங்கய விழியீர் நந்த ஒண் பணை ஒற்றியூர்_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#10 கல்வி வேண்டிய மகன்-தனைப் பெற்றோர் கடுத்தல் ஓர் சிறு கதையிலும் இலை காண் செல்வம் வேண்டிலேன் திரு_அருள் விழைந்தேன் சிறியனேனை நீர் தியக்குதல் அழகோ பல் விதங்களால் பணி செயும் உரிமைப் பாங்கு நல்கும் அப் பரம் உமக்கு அன்றே நல்_விதத்தினர் புகழ் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

#11 மண்ணில் அல்லவன் நல்லவரிடத்து ஓர் வணக்கம் இன்மையன் வணங்குவன் ஆனால் எண்ணி நம் புடை இரு என உரைப்பர் ஏன் வணங்கினை என்று உரைப்பாரோ கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் நண்ணி மாதவன் தொழும் ஒற்றி_உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின்றீரே.

மேல்

@56. திருவண்ண விண்ணப்பம்

மேல்

#1 கண்ணப்பா என்று அருளும் காளத்தி அப்பா முன் வண்ணப் பால் வேண்டும் மதலையைப் பால்_வாரிதியை உண் அப்பா என்று உரைத்த ஒற்றி அப்பா வந்து அருள எண் அப்பா என்று அழும் இ ஏழை முகம் பாராயோ.

மேல்

#2 மஞ்சு படும் செம் சடில வள்ளலே உள்ளுகின்றோர் உஞ்சுபடும் வண்ணம் அருள் ஒற்றியூர் உத்தமனே நஞ்சு படும் கண்டம் உடை நம் பரனே வன் துயரால் பஞ்சு படும் பாடு படும் பாவி முகம் பாராயோ.

மேல்

#3 கண் ஆர் அமுதே கரும்பே என் கண்ணே என் அண்ணா உன் பொன் அருள்-தான் ஆர்ந்திடுமோ அல்லது என்றும் நண்ணாதோ யாது நணுகுமோ என்று உருகி எண்ணாதும் எண்ணும் இந்த ஏழை முகம் பாராயோ.

மேல்

#4 நாடிய சீர் ஒற்றி நகர்_உடையாய் நின் கோயில் நீடிய நல் சந்நிதியில் நின்றுநின்று மால் அயனும் தேடி அறி ஒண்ணாத் திரு_உருவைக் கண்டு உருகிப் பாடி அழுது ஏங்கும் இந்தப் பாவி முகம் பாராயோ.

மேல்

#5 வாங்கி மலை வில் ஆக்கும் மன்னவனே என் அரசே ஓங்கி வளம் தழுவும் ஒற்றியூர் உத்தமனே தூங்கிய துன்பச் சுமை சுமக்க மாட்டாது ஏங்கி அழுகின்ற இந்த ஏழை முகம் பாராயோ.

மேல்

#6 தொண்டர்க்கு அருளும் துணையே இணை_இல் விடம் உண்டு அச்சுதற்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே சண்டப் பவ நோயால் தாய் இலாப் பிள்ளை எனப் பண்டைத் துயர்கொளும் இப் பாவி முகம் பாராயோ.

மேல்

#7 உள் திகழ்ந்த மேலவனே ஒற்றியூர் உத்தமனே மட்டு இலங்கும் உன்றன் மலர்_அடியைப் போற்றாது தட்டு இலங்கு நெஞ்சத்தால் சஞ்சலித்து உன் சந்நிதி-கண் எட்டி நின்று பார்க்கும் இந்த ஏழை முகம் பாராயோ.

மேல்

#8 நச்சை மிடற்று அணிந்த நாயகனே ஓர் பாகம் பச்சை நிறம் கொண்ட பவளத் தனி மலையே மிச்சை தவிர்க்கும் ஒற்றி வித்தகனே நின் அருட்கே இச்சை கொடு வாடும் இந்த ஏழை முகம் பாராயோ.

மேல்

#9 மால் அயர்ந்தும் காணா மலர்_அடியாய் வஞ்ச வினைக் கால் அயர்ந்து வாட அருள் கண்_உடையாய் விண்_உடையாய் சேல் அயர்ந்த கண்ணார் தியக்கத்தினால் உன் அருள் பால் அயர்ந்து வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

மேல்

#10 சொந்தமுற எண்ணித் தொழுகின்ற மெய் அடியர் சந்தமுறும் நெஞ்சத் தலத்து அமர்ந்த தத்துவனே நந்தவனம் சூழ் ஒற்றி நாயகனே வாழ்க்கை எனும் பந்தம்-அதில் வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

மேல்

#11 தில்லையிடை மேவும் எங்கள் செல்வப் பெரு வாழ்வே ஒல்லை அடியார்க்கு அருளும் ஒற்றியூர் உத்தமனே அல்லை நிகர்க்கும் அளகத்தார் ஆசை-தனக்கு எல்லை அறியாத இந்த ஏழை முகம் பாராயோ.

மேல்

#12 விதி இழந்த வெண் தலை கொள் வித்தகனே வேதியனே மதி_இழந்தோர்க்கு ஏலா வளர் ஒற்றி வானவனே நிதி_இழந்தோர் போல் அயர்ந்து நின்னுடைய வாழ்க்கைப் பதி விரும்பி வாடும் இந்தப் பாவி முகம் பாராயோ.

மேல்

@57. மருட்கை விண்ணப்பம்

மேல்

#1 யாது செய்குவன் போது போகின்றது அண்ணலே உமது அன்பருக்கு அடியேன் கோது செய்யினும் பொறுத்து அருள் புரியும் கொள்கையீர் எனைக் குறுகிய குறும்பர் வாதுசெய்கின்றார் மனம் தளர்கின்றேன் வலி_இலேன் செயும் வகை ஒன்றும் அறியேன் மாதர் செய் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#2 எனக்கு நீர் இங்கு ஓர் ஆண்டை அல்லீரோ என்னை வஞ்சகர் யாவரும் கூடிக் கனக்கும் வன் பவக் கடலிடை வீழ்த்தக் கண்டு இருத்தலோ கடன் உமக்கு எளியேன்- தனக்கு மற்றொரு சார்பு இருந்திடுமேல் தயவு செய்திடத் தக்கது அன்று இலை காண் மனக்கு நல்லவர் வாழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#3 எஞ்சல் இல்லதோர் காமமாம் கடல் ஆழ்ந்து இளைக்கின்றேன் இனி என் செய்வன் அடியேன் தஞ்சம் என்று உமது இணை மலர்_அடிக்கே சரண்புகுந்தனன் தயவு செய்யீரேல் வஞ்ச வாழ்க்கையாம் திமிங்கிலம் எனும் மீன் வாரிக்கொண்டு எனை வாய் மடுத்திடும் காண் மஞ்சு அளாவிய பொழில் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#4 என் பிறப்பினை யார்க்கு எடுத்துரைப்பேன் என் செய்வேன் எனை என் செய நினைக்கேன் முன்_பிறப்பிடை இருந்த சேடத்தால் மூட வாழ்க்கையாம் காடகத்து அடைந்தே அன்பு இறந்த வெம் காம வேட்டுவனால் அலைப்புண்டேன் உமது அருள் பெற விழைந்தேன் வன்பு_இறந்தவர் புகழ் ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#5 காமம் என்னும் ஓர் காவலில் உழன்றே கலுழ்கின்றேன் ஒரு களைகணும் அறியேன் சேம நல் அருள் பதம் பெறும் தொண்டர் சேர்ந்த நாட்டகம் சேர்வுற விழைந்தேன் ஏமம் உற்றிடும் எனை விடுவிப்பார் இல்லை என் செய்வன் யாரினும் சிறியேன் வாம மாதராள் மருவு ஒற்றி_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#6 இன்பம் என்பது விழைந்து இடர் உழந்தேன் என்னை ஒத்த ஓர் ஏழை இங்கு அறியேன் துன்பம் என்பது பெரும் சுமையாகச் சுமக்கின்றேன் அருள் துணை சிறிது இல்லேன் அன்பர் உள்ளகத்து அமர்ந்திடும் தேவர் அடிக் குற்றேவலுக்கு ஆட்படுவேனோ வன்பர் நாடுறா ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#7 ஊழ்வினைப்படி எப்படி அறியேன் உஞற்றுகின்றனன் உமது அருள் பெறவே தாழ்வினைத் தரும் காமமோ எனைக் கீழ்த் தள்ளுகின்றதே உள்ளுகின்றது காண் பாழ் வினைக் கொளும் பாவியேன் செய்யும் பாங்கு அறிந்திலேன் ஏங்குகின்றனனால் வாழ்வினைத் தரும் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#8 இறப்பு_இலார் தொழும் தேவரீர் பதத்தை எவ்வம் நீக்கியே எவ்விதத்தானும் மறப்பு இலாது உளம் நினைத்திடில் காமம் வழிமறித்து அதை மயக்குகின்றது காண் குறிப்பு இலாது என்னால் கூடிய_மட்டும் குறைத்தும் அங்கு அது குறைகிலது அந்தோ வறிப்பு இலா வயல் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#9 சஞ்சிதம் தரும் காமம் என்றிடும் ஓர் சலதி வீழ்ந்து அதில் தலைமயக்குற்றே அஞ்சிஅஞ்சி நான் அலைகின்றேன் என்னை அஞ்சல் என்பவர் யாரையும் அறியேன் துஞ்சினால் பின்பு சுகம் பலித்திடுமோ துணை_இலார்க்கு ஒரு துணை என இருப்பீர் மஞ்சின் நீள் பொழில் ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி_அனையீரே.

மேல்

#10 அல்ல ஓதியர் இடைப்படும் கமருக்கு ஆசைவைத்த என் அறிவின்மை அளவைச் சொல்லவோ முடியாது எனை ஆளத் துணிவு கொள்விரோ தூயரை ஆளல் அல்லவோ உமது இயற்கை ஆயினும் நல் அருள்_கணீர் எனை ஆளலும் தகும் காண் மல்லல் ஓங்கிய ஒற்றியூர்_உடையீர் வண்_கையீர் என் கண்மணி அனையீரே.

மேல்

@58. கொடைமட விண்ணப்பம்

மேல்

#1 நின் போன்ற தெய்வம் ஒன்று இன்று என வேதம் நிகழ்த்தவும் நின் பொன் போன்ற ஞானப் புது மலர்த் தாள் துணைப் போற்றுகிலேன் என் போன்ற ஏழையர் யாண்டு உளர் அம்பலத்தே நடம்செய் மின் போன்ற வேணியனே ஒற்றி மேவிய வேதியனே.

மேல்

#2 வேதியனே வெள்ளி வெற்பிடை மேவிய வித்தகனே நீதியனே மன்றில் நிட்கள ஆனந்த நிர்த்தமிடும் ஆதியனே எமை ஆண்டவனே மலையாள் மகிழும் பாதியனே எம் பராபரனே முக்கண் பண்ணவனே.

மேல்

#3 பண்ணவனே பசு பாசத்தை நீக்கும் பரம்பரனே மண்ணவனேனை மகிழ்ந்தவனே மலம் மாற்றுகின்ற விண்ணவனே வெள் விடையவனே வெற்றி மேவும் நெற்றிக் கண்ணவனே எனைக் காத்தவனே ஒற்றிக் காவலனே.

மேல்

#4 காவலனே அன்று மாணிக்குப் பொற்கிழிக் கட்டு அவிழ்த்த பாவலனே தொழும் பாணன் பரிசுறப் பாட்டு அளித்த நாவலனே தில்லை நாயகனே கடல் நஞ்சை உண்ட மா_வலனே முக்கண் வானவனே ஒற்றி மன்னவனே.

மேல்

#5 மன்னவனே கொன்றை மாலையனே திருமால் அயற்கு முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான் சொன்னவனே சிவனே ஒற்றி மேவிய தூயவனே என்னவனே ஐயம் ஏற்பவனே எனை ஈன்றவனே.

மேல்

#6 ஈன்றவனே அன்பர் இன் உயிர்க்கு இன்புறும் இன் அமுதம் போன்றவனே சிவ ஞானிகள் உள்ளுறும் புண்ணியனே ஆன்றவனே எமது உள்ளும் புறம்பும் அறிந்து நின்ற சான்றவனே சிவனே ஒற்றி மேவிய சங்கரனே.

மேல்

#7 சங்கரனே அரனே பரனே நல் சராசரனே கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே செங்கரன் நேர் வணனே ஒற்றி மேவிய சின்மயனே.

மேல்

#8 சின்மயனே அனல் செங்கையில் ஏந்திய சேவகனே நன்மையனே மறை நான்முகன் மாலுக்கு நாட அரிதாம் தன்மையனே சிவசங்கரனே எம் சதாசிவனே பொன்_மயனே முப்புராந்தகனே ஒற்றிப் புண்ணியனே.

மேல்

#9 புண்ணியனே எமைப் போல்வார்க்கும் இன்பப் பொருள் அளிக்கும் திண்ணியனே நல் சிவஞான நெஞ்சில் தெளிந்த அருள் அண்ணியனே கங்கை ஆறு அமர் வேணியில் ஆர்ந்த மதிக் கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே.

மேல்

#10 கண்டவனே சற்றும் நெஞ்சு உருகாக் கொடும் கள்வர்-தமை விண்டவனே கடல் வேம்படி பொங்கும் விடம் அனைத்தும் உண்டவனே மற்றும் ஒப்பு ஒன்று இலாத உயர்வு-தனைக் கொண்டவனே ஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே.

மேல்

@59. சிறு விண்ணப்பம்

மேல்

#1 பண்ணால் உன் அருள்_புகழைப் பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகைப் பார்த்துப்பார்த்துக் கண்ணார உளம் குளிரக் களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#2 எப்பாலும் நின் அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின் பதத்தை ஏழையேன் நான் வெப்பாய மடவியர்-தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண் கெட்ட விலங்கே போல இப் பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கண் உடை இறைவா என்றன் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் துணைவா வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#3 இன்பு_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் சீர் இசைக்கின்றார் நான் ஒருவன் ஏழை இங்கே வன்பு_உடையார்-தமைக் கூடி அவமே நச்சு மா மரம் போல் நிற்கின்றேன் வஞ்ச வாழ்க்கைத் துன்பு_உடையார் அனைவர்க்கும் தலைமை பூண்டேன் தூய்மை என்பது அறிந்திலேன் சூழ்ந்தோர்க்கு எல்லாம் அன்பு_உடையாய் எனை_உடையாய் விடையாய் வீணே அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#4 விஞ்சு_உடையாய் நின் அன்பர் எல்லாம் நின் சீர் மெய்_புளகம் எழத் துதித்து விளங்குகின்றார் நஞ்சு_உடையார் வஞ்சகர்-தம் சார்பில் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நண்ணி மூட நெஞ்சு_உடையார்-தமக்கு எல்லாம் தலைமைபூண்டு நிற்கின்றேன் கருணை முக நிமலக் கஞ்சம் அஞ்சு_உடையாய் ஆறு உடைய சடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#5 பொய்யாத நின் அடியார் எல்லாம் நல்ல புண்ணியமே செய்து நினைப் போற்றுகின்றார் நையாநின்று உலைகின்ற மனத்தால் இங்கே நான் ஒருவன் பெரும் பாவி நாயேன் தீமை செய்யாநின்று உழைக்கின்றேன் சிறிதும் நின்னைச் சிந்தியேன் வந்திக்கும் திறமும் நாடேன் ஐயா என் அப்பா என் அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#6 தெருள்_உடையார் நின் அன்பர் எல்லாம் நின் தாள் சிந்தையில் வைத்து ஆனந்தம் தேக்குகின்றார் மருள்_உடையேன் நான் ஒருவன் பாவி வஞ்ச மனத்தாலே இளைத்திளைத்து மயங்குகின்றேன் இருள்_உடையேன் ஏர்பூட்டும் பகடு போல் இங்கு இல் உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம்_வல்ல அருள்_உடையாய் ஆள்_உடையாய் உடையாய் வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#7 வாரம்_உளார் நின் அடியார் எல்லாம் நின்னை வாழ்த்துகின்றார் தலை குளிர வணங்குகின்றார் தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்சச் செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் ஆர்_அமுதே முக்கண் உடை அரசே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#8 வண்மை பெறு நின் அன்பர் எல்லாம் நின்னை வந்தனைசெய்து ஆனந்த வயத்தே நின்றார் பெண்மை உறும் மனத்தாலே திகைத்தேன் நின் சீர் பேசுகிலேன் கூசுகிலேன் பேதை நான் ஓர் ஒண்மை இலேன் ஒழுக்கம் இலேன் நன்மை என்பது ஒன்றும் இலேன் ஒதியே போல் உற்றேன் மிக்க அண்மையில் வந்து அருள்_புரிவோய் என்னே வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#9 உம்பர்-தமக்கு அரிதாம் உன் பதத்தை அன்றி ஒன்றும் அறியார் உன்னை உற்றோர் எல்லாம் இம்பர் வினை உடையேன் நான் ஒருவன் பாவி எள்துணையும் நினைந்து அறியேன் என்றும் எங்கும் வம்பு அவிழ் பூங் குழல் மடவார் மையல் ஒன்றே மனம் உடையேன் உழைத்து இளைத்த மாடு போல்வேன் அம்பலத்து எம் அரசே இ வாழ்க்கைத் துன்பில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#10 கொலை அறியாக் குணத்தோர் நின் அன்பர் எல்லாம் குணமே செய்து உன் அருள்-தான் கூடுகின்றார் புலை அறிவேன் நான் ஒருவன் பிழையே செய்து புலம் கெட்ட விலங்கே போல் கலங்குகின்றேன் நிலை அறியேன் நெறி ஒன்றும் அறியேன் எங்கும் நினை அன்றித் துணை ஒன்றும் அறியேன் சற்றும் அலை அறியா அருள்_கடல் நீ ஆள்க வீணில் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

@60. பெரு விண்ணப்பம்

மேல்

#1 இருள் ஆர் மனத்தேன் இழுக்கு உடையேன் எளியேன் நின்னை ஏத்தாத மருள் ஆர் நெஞ்சப் புலையரிடம் வாய்ந்து வருந்தி மாழ்கின்றேன் அருள் ஆர் அமுதப் பெருக்கே என் அரசே அது நீ அறிந்து அன்றோ தெருள் ஆர் அன்பர் திரு_சபையில் சேர்க்காது அலைக்கும் திறம் அந்தோ.

மேல்

#2 உண்மை அறியேன் எனினும் எனை_உடையாய் உனையே ஒவ்வொருகால் எண்மை உடையேன் நினைக்கின்றேன் என்னே உன்னை ஏத்தாத வெண்மை உடையார் சார்பாக விட்டாய் அந்தோ வினையேனை வண்மை உடையாய் என் செய்கேன் மற்று ஓர் துணை இங்கு அறியேனே.

மேல்

#3 எளியேன் இழைத்த பெரும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு இன்பு அளித்தாய் களியேன்-தனை நீ இனி அந்தோ கைவிட்டிடில் என் கடவேனே ஒளியே முக்கண் செழும் கரும்மே ஒன்றே அன்பர் உறவே நல் அளியே பரம_வெளியே என் ஐயா அரசே ஆர்_அமுதே.

மேல்

#4 காம_கடலில் படிந்து அஞராம் கடலில் விழுந்தேன் கரை காணேன் ஏமக் கொடும் கூற்று எனும் மகரம் யாது செயுமோ என் செய்கேன் நாமக் கவலை ஒழித்து உன் தாள் நண்ணும்அவர்-பால் நண்ணுவித்தே தாமக் கடிப் பூம் சடையாய் உன்றன் சீர் பாடத் தருவாயே.

மேல்

#5 எண்ணாது எளியேன் செயும் பிழைகள் எல்லாம் பொறுத்து இங்கு எனை ஆள்வது அண்ணா நினது கடன் கண்டாய் அடியேன் பல கால் அறைவது என்னே கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் வண்ணா வெள்ளை மால் விடையாய் மன்று ஆடிய மா மணி_சுடரே.

மேல்

#6 பாலே அமுதே பழமே செம் பாகே எனும் நின் பதப் புகழை மாலே அயனே இந்திரனே மற்றைத் தேவரே மறைகள் நாலே அறியாது எனில் சிறியேன் நானோ அறிவேன் நாயக என் மேலே அருள்கூர்ந்து எனை நின் தாள் மேவுவோர்-பால் சேர்த்து அருளே.

மேல்

#7 கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதிச் சடையோய் பெண் ஆர் இடத்தோய் யாவர்கட்கும் பெரியோய் கரியோன் பிரமனொடும் அண்ணா என நின்று ஏத்து எடுப்ப அமர்ந்தோய் நின்றன் அடி_மலரை எண்ணாது உழல்வோர் சார்பாக இருக்கத் தரியேன் எளியேனே.

மேல்

#8 பொய் ஓர் அணியா அணிந்து உழலும் புலையேன் எனினும் புகலிடம்-தான் ஐயோ நினது பதம் அன்றி அறியேன் இது நீ அறியாயோ கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே மெய்யோர் விரும்பும் அரு_மருந்தே வேத முடிவின் விழு_பொருளே.

மேல்

#9 இன்னே எளியேன் பொய்_உடையேன் எனினும் அடியன் அலவோ நான் என்னே நின்னைத் துதியாதார் இடத்தில் என்னை இருத்தினையே அன்னே என்றன் அப்பா என் ஐயா என்றன் அரசே செம் பொன்னே முக்கண் பொருளே நின் புணர்ப்பை அறியேன் புலையேனே.

மேல்

#10 வஞ்ச மடவார் மயல் ஒரு பால் மணியே நின்னை வழுத்தாத நஞ்சம்_அனையார் சார்பு ஒரு பால் நலியும் வாழ்க்கைத் துயர் ஒரு பால் விஞ்சும் நினது திரு_அருளை மேவாது உழலும் மிடி ஒரு பால் எஞ்சல் இலவாய் அலைக்கின்றது என் செய்கேன் இ எளியேனே.

மேல்

@61. திருக்காட்சிக் கிரங்கல்

மேல்

#1 மண் ஏயும் வாழ்க்கையிடை மாழாந்து வன் பிணியால் புண் ஏயும் நெஞ்சம் புழுங்குகின்ற பொய்யவனேன் பண் ஏயும் இன்பப் பரஞ்சுடரே என் இரண்டு கண்ணே உன் பொன்_முகத்தைக் காணக் கிடைத்திலனே.

மேல்

#2 மருள் ஆர்ந்த வல்_வினையால் வன் பிணியால் வன் துயரால் இருள் ஆர்ந்த நெஞ்சால் இடியுண்ட ஏழையனேன் தெருள் ஆர்ந்த மெய்ஞ்ஞானச் செல்வச் சிவமே நின் அருள் ஆர்ந்த முக்கண் அழகு-தனைக் கண்டிலனே.

மேல்

#3 வல் ஆர் முலையார் மயல் உழந்த வஞ்சகனேன் பொல்லார் புரம் எரித்த புண்ணியனே பொய் மறுத்த நல்லார் தொழும் தில்லை நாயகனே நன்று அளித்த அல் ஆர் களத்தின் அழகு-தனைக் கண்டிலனே.

மேல்

#4 நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் தாயானவனே என் தந்தையே அன்பர்-தமைச் சேயாய் வளர்க்கும் சிவனே சிவனே எம் தூயா நின் பொன் தோளின் சுந்தரத்தைக் கண்டிலனே.

மேல்

#5 வல் நேர் முலையார் மயல் உழந்த வன்_மனத்தேன் அன்னே என் அப்பா என் ஐயா என் ஆர்_அமுதே மன்னே மணியே மலையாள் மகிழ் உனது பொன் நேர் இதழிப் புயம் காணப்பெற்றிலனே.

மேல்

#6 நண்ணும் வினையால் நலிகின்ற நாய்_அடியேன் எண்ணும் சுகாதீத இன்பமே அன்பு_உடையோர் கண்ணும் கருத்தும் களிக்க வரும் கற்பகமே பெண் ஒரு-பால் வாழும் உருப் பெற்றி-தனைக் கண்டிலனே.

மேல்

#7 தெவ் வண்ண மாயையிடைச் செம்மாந்த சிற்றடியேன் இவ்வண்ணம் என்று அறிதற்கு எட்டாத வான் பொருளே அவ்வண்ணமான அரசே அமுதே நின் செவ் வண்ண மேனித் திறம் காணப்பெற்றிலனே.

மேல்

#8 அல் வைத்த நெஞ்சால் அழுங்குகின்ற நாய்_அடியேன் சொல் வைத்த உண்மைத் துணையே இணைத் தோள் மேல் வில்வத் தொடை அணிந்த வித்தகனே நின்னுடைய செல்வத் திரு_அடியின் சீர் காணப்பெற்றிலனே.

மேல்

#9 பொத்து ஏர் மயலால் புழுங்குகின்ற பொய்_அடியேன் கொத்து ஏர் செழும் கொன்றைக் குன்றமே கோவாத முத்தே எவர்க்கும் முழு_முதலே முத்திக்கு வித்தே நின் பொன்_அடிக் கீழ் மேவி நிற்க கண்டிலனே.

மேல்

#10 நீதி_இலார் வாயிலிடை நின்று அலைந்த நெஞ்சகனேன் சோதி எலாம் சூழ்ந்த பரஞ்சோதியே செம் சடை மேல் பாதி நிலா ஓங்கும் பரமே நீ ஒற்றி நகர் வீதி உலா வந்த எழில் மெய் குளிரக் கண்டிலனே.

மேல்

@62. திரு அருட் கிரங்கல்

மேல்

#1 ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில் என் அப்பா உன் பொன் அடிக்கே அன்பு_இலேன் ஆனாலும் தப்பாது அகம் மெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற இப் பாதகத்தேற்கு இரங்கினால் ஆகாதோ.

மேல்

#2 எஞ்சா இடரால் இரும் பிணியால் ஏங்கி மனம் பஞ்சாக நொந்து பரதவிக்கும் நாயேனைச் செஞ்சாலி ஓங்கும் திருவொற்றி அப்பா நீ அஞ்சாதே என்று உன் அருள்கொடுத்தால் ஆகாதோ.

மேல்

#3 பற்றும் செழும் தமிழால் பாடுகின்றோர் செய்த பெரும் குற்றம் குணமாகக் கொள்ளும் குண_கடலே மல் தங்கும் எண் தோள் மலையே மரகதமே பெற்றிங்கு அடியேன் பிணி கெடுத்தால் ஆகாதோ.

மேல்

#4 எந்தையே என்பவர்-தம் இன் அமுதே என் உரிமைத் தந்தையே தாயே தமரே என் சற்குருவே சிந்தையே ஓங்கும் திருவொற்றி ஐயா என் நிந்தையே நீங்க நிழல் அளித்தால் ஆகாதோ.

மேல்

#5 உள்ளும் திரு_தொண்டர் உள்ளத்து எழும் களிப்பே கொள்ளும் சிவானந்தக் கூத்தா உன் சேவடியை நள்ளும் புகழ் உடைய நல்லோர்கள் எல்லாரும் எள்ளும் புலையேன் இழிவு ஒழித்தால் ஆகாதோ.

மேல்

#6 கோதை ஓர் கூறு உடைய குன்றமே மன்று அமர்ந்த தாதையே ஒற்றித் தலத்து அமர்ந்த சங்கரனே தீதையே நாள்-தோறும் செய்து அலைந்து வாடும் இந்தப் பேதையேன் செய்த பிழை பொறுத்தால் ஆகாதோ.

மேல்

#7 முத்திக்கு வித்தே முழு மணியே முத்தர் உளம் தித்திக்கும் தேனே சிவமே செழும் சுடரே சத்திக்கும் நாதத் தலம் கடந்த தத்துவனே எத்திக்கும் இல்லேன் இளைப்பு ஒழித்தால் ஆகாதோ.

மேல்

#8 வஞ்சம்_இலார் உள்ளம் மருவுகின்ற வான் சுடரே கஞ்சம்_உளான் போற்றும் கருணைப் பெரும் கடலே நஞ்சு அமுதாக் கொண்டு அருளும் நல்லவனே நின் அலது ஓர் தஞ்சம்_இலேன் துன்பச் சழக்கு ஒழித்தால் ஆகாதோ.

மேல்

#9 சேய் பிழையைத் தாய் அறிந்தும் சீறாள் பொறுப்பாள் இ நாய் பிழையை நீ பொறுக்க ஞாயமும் உண்டு ஐயாவே தேய்_மதி போல் நெஞ்சம் தியக்கமுறச் சஞ்சலத்தால் வாய் அலறி வாடும் எனை வா என்றால் ஆகாதோ.

மேல்

#10 கண்ணுள் மணி போல் கருதுகின்ற நல்லோரை எண்ணும் கணமும் விடுத்து ஏகாத இன் அமுதே உண்ணும் உணவுக்கும் உடைக்கும் முயன்று ஓடுகின்ற மண்_உலகத்து என்றன் மயக்கு அறுத்தால் ஆகாதோ.

மேல்

@63. எண்ணத் திரங்கல்

மேல்

#1 எளியேன் நின் திருமுன்பே என் உரைக்கேன் பொல்லாத களியேன் கொடும் காமக் கல்_மனத்தேன் நன்மை இலா வெளியேன் வெறியேன்-தன் மெய்ப் பிணியை ஒற்றியில் வாழ் அளியோய் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#2 முன்னே செய் வெம் வினை-தான் மூண்டதுவோ அல்லது நான் இன்னே பிழை-தான் இயற்றியது உண்டோ அறியேன் பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#3 இப் பாரிடை உனையே ஏத்துகின்ற நாயேனை வெப்பு ஆர் உளத்தினர் போல் வெம்மை செயும் வெம் பிணியை எப்பாலவர்க்கும் இறைவனாம் என் அருமை அப்பா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#4 ஓவா மயல் செய் உலக நடைக்குள் துயரம் மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயைச் சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ ஆஆ நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#5 பொய்யாம் மல இருட்டுப் பொத்தரிடை வீழ்ந்து உழலும் கையாம் நெறியேன் கலங்க வந்த வெம் பிணியை மை ஆர் மிடற்று எம் மருந்தே மணியே என் ஐயா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#6 இ மா நிலத்தில் இடர் உழத்தல் போதாதே விம்மா அழுங்க என்றன் மெய் உடற்றும் வெம் பிணியைச் செம் மான் மழுக் கரம் கொள் செல்வச் சிவமே என் அம்மான் நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#7 புரை சேரும் நெஞ்சப் புலையனேன் வன் காமத் தரை சேரும் துன்பத் தடம் கடலேன் வெம் பிணியை விரை சேரும் கொன்றை விரி சடையாய் விண்ணவர்-தம் அரைசே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#8 இத் தாரணியில் எளியோரைக் கண்டு மிக வித்தாரம் பேசும் வெறியேன்-தன் மெய்ப் பிணியைக் கொத்து ஆர் குழலி ஒரு கூறு உடைய கோவே என் அத்தா நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#9 மறி ஏர் விழியார் மயக்கினிடை மாழாந்த சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயைச் செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் அறிவே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

#10 துன்பே சுமையாச் சுமக்கின்ற நாயேனை வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் அன்பே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே.

மேல்

@64. நெஞ்சு நிலைக் கிரங்கல்

மேல்

#1 ஆளாக நின் பொன்_அடிக்கு அன்புசெய்திட ஐய நெடு நாளாக இச்சை உண்டு என்னை செய்கேன் கொடு நங்கையர்-தம் மாளா மயல் சண்டமாருதத்தால் மன_வாசி என் சொல் கேளாது அலைகின்றதால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே.

மேல்

#2 ஒளியாய் ஒளிக்குள் ஒளிர் ஒளியே ஒற்றி உத்தம நீ அளியாவிடில் இதற்கு என்னை செய்கேன் அணங்கு_அன்னவர்-தம் களியால் களித்துத் தலைதெரியாது கயன்று உலவா வளியாய்ச் சுழன்று இவண் மாயா மனம் எனை வாதிப்பதே.

மேல்

#3 மாயா மனம் எவ்வகை உரைத்தாலும் மடந்தையர்-பால் ஓயாது செல்கின்றது என்னை செய்கேன் தமை உற்றது ஒரு நாயாகினும் கைவிடார் உலகோர் உனை நான் அடுத்தேன் நீயாகிலும் சற்று இரங்கு கண்டாய் ஒற்றி நின்மலனே.

மேல்

#4 மலம் சான்ற மங்கையர் கொங்கையிலே நசை வாய்த்து மனம் சலம் சான்றதால் இதற்கு என்னை செய்கேன் நின் சரண் அன்றியே வலம் சான்ற நல் துணை மற்று அறியேன் ஒற்றி வானவனே நலம் சான்ற ஞானத் தனி முதலே தெய்வ நாயகனே.

மேல்

#5 நாயினும் கீழ்ப்பட்ட என் நெஞ்சம் நன்கு அற்ற நங்கையர்-பால் ஏயினும் செல்கின்றது என்னை செய்கேன் உனை ஏத்தியிடேன் ஆயினும் இங்கு எனை ஆட்கொளல் வேண்டும் ஐயா உவந்த தாயினும் நல்லவனே ஒற்றி மேவும் தயாநிதியே.

மேல்

#6 நிதியே நின் பொன்_அடி ஏத்தாது நெஞ்சம் நிறை மயலாம் சதியே புரிகின்றது என்னை செய்கேன் உனைத் தாழலர்-தம் விதியே எனக்கும் விதித்தது அன்றோ அ விதியும் இள_ மதி ஏர் சடை அண்ணலே ஒற்றியூர் ஒளி மாணிக்கமே.

மேல்

#7 மாணாத என் நெஞ்சம் வல் நஞ்சு அனைய மடந்தையர்-பால் நாணாது செல்கின்றது என்னை செய்கேன் சிவ ஞானியர்-தம் கோணாத உள்ளத் திரு_கோயில் மேவிக் குலவும் ஒற்றி_ வாணா என் கண்ணினுள் மா மணியே என்றன் வாழ் முதலே.

மேல்

#8 வாழாத நெஞ்சம் எனை அலைத்து ஓடி மடந்தையர்-பால் வீழாத நாள் இல்லை என்னை செய்கேன் உன் விரை மலர்_தாள் தாழாத குற்றம் பொறுத்து அடியேன்-தனைத் தாங்கிக்கொள்வாய் சூழாதவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்_குன்றமே.

மேல்

#9 குன்று ஏர் முலைச்சியர் வன் மல ஊத்தைக் குழியில் மனம் சென்றே விழுகின்றது என்னை செய்கேன் எம் சிவ_கொழுந்தே நன்றே சதானந்த நாயகமே மறை நான்கினுக்கும் ஒன்றே உயர் ஒளியே ஒற்றியூர் எம் உயிர்_துணையே

மேல்

#10 துணையாம் உன் பொன்_அடி ஏத்தா மனம்-அது தோகையர் கண்_ கணையால் இளைக்கின்றது என்னை செய்கேன் என்றன் கண் இரண்டின் இணையாம் பரஞ்சுடரே அழியா நலமே இன்பமே பணை ஆர் திருவொற்றியூர் அரசே எம் பரம்பொருளே.

மேல்

#11 பொருளே நின் பொன்_அடி உன்னாது என் வன் மனம் பூவையர்-தம் இருளே புரிகின்றது என்னை செய்கேன் அடியேன் மயங்கும் மருளே தவிர்ந்து உனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திட நீ அருளே அருள்_கடலே ஒற்றி மா நகர் ஆள்பவனே.

மேல்

@65. தனிமைக் கிரங்கல்

மேல்

#1 ஆக்கல் ஆதிய ஐந்தொழில் நடத்த அயன் முன் ஆகிய ஐவரை அளித்து நீக்கம் இன்றி எவ்விடத்தினும் நிறைந்த நித்த நீ எனும் நிச்சயம் அதனைத் தாக்க எண்ணியே தாமதப் பாவி தலைப்பட்டான் அவன்றனை அகற்றுதற்கே ஊக்கம் உற்ற நின் திரு_அருள் வேண்டும் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#2 கணத்தில் என்னை விட்டு ஏகுகின்றவன் போல் காட்டுகின்றனன் மீட்டும் வந்து அடுத்துப் பணத்தும் மண்ணினும் பாவையரிடத்தும் பரவ நெஞ்சினை விரவுகின்றனன் காண் குணத்தினில் கொடும் தாமதன் எனும் இக் கொடிய வஞ்சகன் ஒடிய மெய்ப் போதம் உணர்த்துவார் இலை என் செய்கேன் எளியேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#3 இமைக்கும் அவ்வளவேனும் நெஞ்சு ஒடுங்கி இருக்கக் கண்டிலேன் இழிவு கொள் மலத்தின் சுமைக்கு நொந்துநொந்து ஐயவோ நாளும் துயர்கின்றேன் அயர்கின்ற என் துயரைக் குமைக்கும் வண்ணம் நின் திரு_அருள் இன்னும் கூடப் பெற்றிலேன் கூறுவது என்னே உமைக்கு நல் வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#4 சென்ற நாளில் ஓர் இறைப் பொழுதேனும் சிந்தை ஓர் வகை தெளிந்ததன்று அது போய் நின்ற நாளினும் நிற்கின் என்றன் ஆர்_உயிர்க்கு ஒரு பெரும் துணையாம் எந்தையே எனை எழுமையும் காத்த உன்றனால் இன்னும் உவகை கொள்கின்றேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#5 கோடி நாவினும் கூறிட அடங்காக் கொடிய மாயையின் நெடிய வாழ்க்கையினை நாடி நெஞ்சகம் நலிகின்றேன் உனை ஓர் நாளும் எண்ணிலேன் நன்கு அடைவேனே வாடினேன் பிழை மனம்கொளல் அழியா வாழ்வை ஏழையேன் வசம்செயல் வேண்டும் ஊடினாலும் மெய் அடியரை இகவா ஒற்றி மேவிய உத்தமப் பொருளே.

மேல்

#6 அன்பு-அது என்பதைக் கனவினும் காணேன் ஆடுகின்றனன் அன்பரைப் போல வன் பவத்தையும் மாய்த்திட நினைத்தேன் வஞ்ச நெஞ்சினை வசப்படுக்கில்லேன் துன்ப வாழ்க்கையில் சுழல்கின்றேன் நின்னைத் தொழுது வாழ்த்தி நல் சுகம் பெறுவேனே ஒன்பது ஆகிய உரு உடைப் பெரியோய் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#7 முன்னை நான் செய்த வல்_வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத்து உலகில் என்னை நான் கண்டது அந்த நாள் தொடங்கி இந்த நாள் மட்டும் இருள் என்பது அல்லால் பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப் பேச என் உளம் கூசுகின்றது காண் உன்னை நம்பினேன் நின் குறிப்பு உணரேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#8 கண்_இலான் சுடர் காணிய விழைந்த கருத்தை ஒத்த என் கருத்தினை முடிப்பத் தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் எப்படி தெரிந்திலன் எளியேன் பண் நிலாவிய பாடல் அம் தொடை நின் பாத_பங்கயம் பதிவுறப் புனைவோர் உள் நிலாவிய ஆனந்தப் பெருக்கே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#9 உண்மை நின் அருள் சுகம் பிற எல்லாம் உண்மை அன்று என உணர்த்தியும் எனது பெண்மை நெஞ்சகம் வெண்மைகொண்டு உலகப் பித்திலே இன்னும் தொத்துகின்றது காண் வண்மை ஒன்று இலேன் எண்மையின் அந்தோ வருந்துகின்றனன் வாழ்வு அடைவேனோ ஒண்மை அம்பலத்து ஒளிசெயும் சுடரே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

#10 நையுமாறு எனைக் காமம் ஆதிகள் தாம் நணுகி வஞ்சகம் நாட்டுகின்றது நான் செய்யும் ஆறு இதற்கு அறிந்திலன் எந்தாய் திகைக்கின்றேன் அருள் திறம் பெறுவேனே வையுமாறு இலா வண்_கையர் உளத்தின் மன்னி வாழ்கின்ற மா மணி_குன்றே உய்யுமாறு அருள் அம்பலத்து அமுதே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே.

மேல்

@66. கழிபகற் கிரங்கல்

மேல்

#1 ஆண்டது உண்டு நீ என்றனை அடியேன் ஆக்கை ஒன்றுமே அசை மடல் பனை போல் நீண்டது உண்டு மற்று உன் அடிக்கு அன்பே நீண்டது இல்லை வல் நெறி செலும் ஒழுக்கம் பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#2 ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் பாழையே பலன் தருவது என்று எண்ணிப் பாவியேன் பெரும் படர் உழக்கின்றேன் மாழை ஏர் திரு_மேனி எம் பெருமான் மனம் இரங்கி என் வல்_வினை கெட வந்து ஏழையேற்கு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#3 ஈன்று கொண்ட என் தந்தையும் தாயும் யாவும் நீ என எண்ணிய நாயேன் மான்று கொண்ட இ வஞ்சக வாழ்வின் மயக்கினால் மிக வன்மைகள் செய்தேன் சான்று கொண்டு அது கண்டனையேனும் தமியனேன் மிசைத் தயவுகொண்டு என்னை ஏன்றுகொண்டு அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#4 அம்மை அப்பன் என் ஆர்_உயிர்த் துணைவன் அரசன் தேசிகன் அன்பு உடைத் தேவன் இம்மையில் பயன் அம்மையில் பயன் மற்று யாவும் நீ என எண்ணிநிற்கின்றேன் செம்மையில் பெறும் அன்பர் உள்ளகம் சேர் செல்வமே எனைச் சேர்த்து அருளாயேல் எம்மையில் பெறுவேன் சிறு நாயேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#5 தாயர் ஆதியர் சலிப்புறுகிற்பார் தமரும் என்றனைத் தழுவுதல் ஒழிவார் நேயர் ஆதியர் நேயம் விட்டு அகல்வார் நின்னை நம்பி என் நெஞ்சு உவக்கின்றேன் தீயர் ஆதியில் தீயன் என்று எனை நின் திருவுளத்திடைச் சேர்த்திடாது ஒழித்தால் ஏயர் கோனுக்கு அன்று அருளும் எம் பெருமான் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#6 முன்னை நான் செய்த வல்_வினைச் சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் அன்னை போலும் என் ஆர்_உயிர்த் துணையாம் அப்ப நின் அருள் அம்பியை நம்பி தன்னை நேர் சிவஞானம் என் கரையைச் சார்குவேம் எனும் தருக்குடன் உழன்றேன் இன்னும் நின் அருள் ஈந்திலை அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#7 உண்ணுகின்றதும் உறங்குகின்றதும் மேல் உடுத்துகின்றதும் உலவுகின்றதும் மால் நண்ணுகின்றதும் நங்கையர் வாழ்க்கை நாடுகின்றதும் நவை உடைத் தொழில்கள் பண்ணுகின்றதும் ஆன பின் உடலைப் பாடை மேல் உறப் படுத்துகின்றதும் என்று எண்ணுகின்ற-தோறு உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#8 கல்லை வெல்லவும் வல்ல என் மனம்-தான் கடவுள் நின் அடி_கமலங்கள் நினைத்தல் இல்லை நல்லை நின் அருள் எனக்கு அதனால் இல்லை இல்லை நீ இரக்கம்_இல்லாதான் அல்லை இல்லையால் அருள்தராது இருத்தல் அடியனேன் அளவாயின் இங்கு இடர்க்கே எல்லை இல்லை என்று உளம் பதைக்கின்றேன் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#9 பொங்கு மாயையின் புணர்ப்பினுக்கு உள்ளம் போக்கி நின்றதும் புலப் பகைவர்களால் இங்கு மால் அரி_ஏற்றின் முன் கரி போல் ஏங்குகின்றதும் இடர்ப் பெரும் கடலில் தங்கும் ஆசை அம் கராப் பிடித்து ஈர்க்கத் தவிப்பில் நின்றதும் தமியனேன்-தனையும் எங்கும் ஆகி நின்றாய் அறிந்திலையோ என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

#10 அரக்கன் அல்லன் யான் அரக்கனே எனினும் அரக்கனுக்கும் முன் அருள் அளித்தனையே புரக்க என்னை நின் அருள் கடன் என்றே போற்றுகின்றனன் புலையரில் புலையேன் உரக்க இங்கு இழைத்திடும் பிழை எல்லாம் உன்னல் ஐய நீ உன்னி என்னளவில் இரக்கம் நின் திரு உளத்து இலையானால் என் செய்கேன் நரகிடை இடும் போதே.

மேல்

@67. அர்ப்பித் திரங்கல்

மேல்

#1 தம்பிரான் தயவு இருக்க இங்கு எனக்கு ஓர் தாழ்வு உண்டோ எனத் தருக்கொடும் இருந்தேன் எம் பிரான் நினக்கு ஏழையேன் அளவில் இரக்கம் ஒன்று இலை என்னென்பது இன்னும் நம் பிரான் என நம்பி நிற்கின்றேன் நம்பும் என்றனை வெம்பிடச் செயினும் செம் பிரான் அருள் அளிக்கினும் உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#2 துட்ட நெஞ்சக வஞ்சகக் கொடியேன் சொல்வது என்னை என் தொல் வினை வசத்தால் இட்ட நல் வழி அல் வழி எனவே எண்ணும் இ வழி இரண்டிடை எனை நீ விட்டது எவ்வழி அவ்வழி அகன்றே வேறும் ஓர் வழி மேவிடப்படுமோ சிட்டர் உள்ளுறும் சிவபெருமான் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#3 ஊட்டுகின்றனை உண்ணுகின்றனன் மேல் உறக்குகின்றனை உறங்குகின்றனன் பின் காட்டுகின்றனை காணுகின்றனன் நீ களிப்பிக்கின்றனை களிப்புறுகின்றேன் ஆட்டுகின்றனை ஆடுகின்றனன் இ அகில கோடியும் அவ்வகையானால் தீட்டும் அன்பருக்கு அன்ப நின்றனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#4 கண்_இலான் சுடர் காண உன்னுதல் போல் கருத்து_இலேனும் நின் கருணையை விழைந்தேன் எண்_இலா இடையூறு அடுத்ததனால் இளைக்கின்றேன் எனை ஏன்றுகொள்வதற்கு என் உள் நிலாவிய உயிர்க்குயிர்_அனையாய் உன்னை ஒத்தது ஓர் முன்னவர் இலை காண் தெள் நிலா முடிச் சிவ_பரம்பொருள் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#5 மெச்சுகின்றவர் வேண்டிய எல்லாம் விழி இமைக்கும் முன் மேவல் கண்டு உனை நான் நச்சுகின்றனன் நச்சினும் கொடியேன் நன்மை எய்தவோ வன்மையுற்றிடவோ இச்சை நன்று அறிவாய் அருள்செய்யாது இருக்கின்றாய் உனக்கு யான் செய்தது என்னே செச்சை மேனி எம் சிவ_பரஞ்சுடர் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#6 நாடும் தாயினும் நல்லவன் நமது நாதன் என்று உனை நாடும் அப்பொழுதே வாடு நெஞ்சம் தளிர்க்கின்றேன் மற்றை வைகல் போது எலாம் வாடுகின்றனன் காண் பாடும் தொண்டர்கள் இடர்ப்படில் தரியாப் பண்பு என் மட்டும் நின்-பால் இலை போலும் தேடும் பத்தர்-தம் உளத்து அமர்வோய் நின் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#7 மருள் அளித்து எனை மயக்கி இ உலகில் வருத்துகின்றனை மற்று எனக்கு உன்றன் அருள் அளிக்கிலை ஆயினும் நினக்கே அடிமை ஆக்கிலை ஆயினும் வேற்றுப் பொருள் அளிக்கிலை ஆயினும் ஒரு நின் பொன்_முகத்தை ஓர் போது கண்டிடவே தெருள் அளித்திடில் போதும் இங்கு உனது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#8 மாறுகின்றனன் நெஞ்சகம் அஞ்சி வள்ளல் இத்துணை வந்திலன் இனிமேல் கூறுகின்றது என் என்று அயர்கின்றேன் குலவித் தேற்றும் அக் கொள்கையர் இன்றி ஏறுகின்றனன் இரக்கம்_உள்ளவன் நம் இறைவன் இன்று அருள் ஈகுவன் என்றே தேறுகின்றனன் என் செய்கேன் நினது சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#9 தாயினும் பெரும் தயவு_உடையவன் நம் தலைவன் என்று நான் தருக்கொடும் திரிந்தேன் நாயினும் கடையேன் படும் இடரை நாளும் கண்டனை நல் அருள்செய்யாய் ஆயினும் திரு_முகம் கண்டு மகிழும் அன்பர்-தம் பணி ஆற்றி மற்று உடலம் தேயினும் மிக நன்று எனக்கு அருள் உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

#10 வானும் வையமும் அளிக்கினும் உன்-பால் மனம்வைத்து ஓங்குவர் வள்ளல் நின் அடியார் நானும் அவ்வகை உலகியல் ஒழுக்கில் நாடி நின் அருள் நலம் பெற விழைதல் கூனும் ஓர் முடக் கண்_இலி வானில் குலவும் ஒண் சுடர் குறித்திடல் போலும் தேனும் கைக்கும் நின் அருள் உண்டேல் உண்டு உன் சித்தம் அன்றி யான் செய்வது ஒன்று இலையே.

மேல்

@68. அச்சத் திரங்கல்

மேல்

#1 துறையிடும் கங்கைச் செழும் சடைக் கனியே சுயம்பிரகாசமே அமுதில் கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணைக் கடவுளே கண் நுதல் கரும்பே குறையிடும் குணத்தால் கொடியனேன் எனினும் கொடும் துயரால் அலைந்து ஐயா முறையிடுகின்றேன் அருள்தராது என்னை மூடன் என்று இகழ்வது முறையோ.

மேல்

#2 இகழ்ந்திடேல் எளியேன்-தன்னை நீ அன்றி ஏன்றுகொள்பவர் இலை அந்தோ அகழ்ந்து எனது உளத்தைச் சூறைகொண்டு அலைக்கும் அஞர் எலாம் அறுத்து அருள் புரிவாய் புகழ்ந்திடும் தொண்டர் உளத்தினும் வெள்ளிப் பொருப்பினும் பொதுவினும் நிறைந்து திகழ்ந்து அருள் பழுக்கும் தெய்வதத் தருவே செல்வமே சிவ_பரம் பொருளே.

மேல்

#3 பொருள் எலாம் புணர்க்கும் புண்ணியப் பொருளே புத்தமுதே குண_பொருப்பே இருள் எலாம் அறுக்கும் பேர்_ஒளிப் பிழம்பே இன்பமே என் பெரும் துணையே அருள் எலாம் திரண்ட ஒரு சிவ_மூர்த்தி அண்ணலே நின் அடிக்கு அபயம் மருள் எலாம் கொண்ட மனத்தினேன் துன்ப மயக்கு எலாம் மாற்றி ஆண்டு அருளே.

மேல்

#4 ஆண்ட நின் கருணை_கடலிடை ஒரு சிற்றணுத்துணைத் திவலையே எனினும் ஈண்ட என்றன் மேல் தெறித்தியேல் உய்வேன் இல்லையேல் என் செய்கேன் எளியேன் நீண்டவன் அயன் மற்று ஏனை வானவர்கள் நினைப்ப அரும் நிலைமையை அன்பர் வேண்டினும் வேண்டாவிடினும் ஆங்கு அளிக்கும் விமலனே விடை_பெருமானே.

மேல்

#5 பெருமையில் பிறங்கும் பெரிய நற்குணத்தோர் பெற்றதோர் பெரும் தனிப் பொருளே அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்த நல் செல்வமே அமுதே இருமையில் பயனும் நின் திரு_அருளே என்று நின் அடைக்கலம் ஆனேன் கருமையில் பொலியும் விடம் நிகர் துன்ப_களை களைந்து எனை விளைத்து அருளே.

மேல்

#6 விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் இளைத்தனன் அந்தோ ஏழைமை அதனால் என் செய்கேன் என் பிழை பொறுத்துத் தளைத்தவன் துயர் நீத்து ஆள வல்லவர் நின்றனை அன்றி அறிந்திலன் தமியேன் கிளைத்த வான் கங்கை நதிச் சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே.

மேல்

#7 சிற்பர சிவனே தேவர்-தம் தலைமைத் தேவனே தில்லை அம்பலத்தே தற்பர நடம்செய் தாணுவே அகில சராசர காரணப் பொருளே அற்பர்-தம்மிடம் செல் பற்பல துயரால் அலைதருகின்றனன் எளியேன் கற்பகம் அனைய நின் திரு_அருள்_கடலில் களிப்புடன் ஆடுவது என்றோ.

மேல்

#8 என்று நின் அருள்_நீர் உண்டு வந்திடும் நாள் என்று நின் உருவு கண்டிடும் நாள் என்று நின் அடியர்க்கு ஏவல்செய்திடும் நாள் என்று எனது அகத் துயர் அறும் நாள் மன்றுள் நின்று ஆடும் பரஞ்சுடர்_குன்றே வானவர் கனவினும் தோன்றாது ஒன்றுறும் ஒன்றே அருள்மயமான உத்தம வித்தக மணியே.

மேல்

#9 வித்தகம் அறியேன் வினையினேன் துன்ப விரி கடல் ஆழ்ந்தனன் அந்தோ அத்தகவேனை எடுப்பவர் நின்னை அன்றி எங்கணும் இலை ஐயா மத்தகக் கரியின் உரி புனை பவள வண்ணனே விண்ணவர் அரசே புத்து அக நிறைவின் அடியவர் வேண்டும் பொருள் எலாம் புரிந்து அருள்பவனே.

மேல்

#10 அருள்பவன் நின்னை அல்லதை இங்கும் அங்கும் மற்று எங்கும் இன்று அது போல் மருள்பவன் என்னையல்லதை மண்ணும் வானமும் தேடினும் இன்றே இருள் பவம் உடையேன் என் செய்கேன் நின் தாள் இணை துணை என நினைந்து உற்றேன் மருள் பவத்தொடும் என் துயர் அறுத்து ஆள்வாய் வாழிய அருள் பெரும் துறையே.

மேல்

@69. புறமொழிக் கிரங்கல்

மேல்

#1 கேள் அனம்-தான் ஒரு போது உண்டனை மனக் கேதம் அற நீள் அனம் தேடு முடியான் எது நினக்கு ஈந்தது என்றே வேள் அனம் போல் நடை மின்னாரும் மைந்தரும் வேடிக்கையாய் ஏளனம் செய்குவர் நீ அருளாவிடில் என் அப்பனே

மேல்

#2 அப்பா நின் பொன் அருள் என் மேல் தயை செய்து அளித்திலையேல் துப்பானவும் ஒரு போது துவ்வாது சுழன்றனையே இப் பாரில் ஈசன் திரு_அருள் நீ பெற்றது எங்ஙனமோ செப்பாய் என அரிப்பார் சிரிப்பார் இச் செகத்தவரே

மேல்

#3 தீது செய்தேற்கு அருள்செய்வான் நின் சித்தம் திரும்பிலையேல் தாது செய் தேகத்து உணா ஒரு போது தவிர்ந்த நினக்கு ஏது செய்தான் சிவன் என்றே உலகர் இழிவு உரைத்தால் யாது செய்வேன் தெய்வமே எளியேன் உயிர்க்கு இன் அமுதே

மேல்

#4 தெரியாமையால் சிறியேன் செய் குற்றத்தை நின் சித்தம்-அதில் பிரியாமை வைத்து அருள்செய்திலையேல் எனைப் பெற்றவளும் பெரிய ஆசை கொண்ட பிள்ளாய் அரன் என் தரப்பெற்றது என்றே பரியாசை செய்குவளால் அயலார் என் பகருவதே

மேல்

#5 எண்ணாமல் நாய்_அடியேன் செய்த குற்றங்கள் யாவும் எண்ணி அண்ணா நின் சித்தம் இரங்காய் எனில் இங்கு அயலவர்-தாம் பெண் ஆர் இடத்தவன் பேர்_அருள் சற்றும் பெறாத நினக்கு ஒண்ணாது இ வண்மை விரதம் என்றால் என் உரைப்பதுவே

மேல்

#6 பொய்யான வஞ்சகனேன் பிழை யாவும் பொறுத்து உன் அருள் செய்யாய் எனில் எது செய்குவன் யான் இச் செகதலத்தோர் எய்யா விரதத்தில் யாது பெற்றாய் என்று இகழ்வர் கண்டாய் அய்யா என் இன் அமுதே அரசே எனது ஆண்டவனே

மேல்

#7 உன் உள்ளம் கொண்டேற்கு அருளாய் எனில் இ உலகர் பொய்யாம் என் உள்ளம் கொண்ட களவு அறியாதுநின்று ஏட இங்கே நின் உள்ளம் கொள் விரதப் பயன் யாது நிகழ்த்து எனவே முன் உள்ளம் கொண்டு மொழிவர் கண்டாய் எம் முதலவனே

மேல்

#8 முந்து ஓகை கொண்டு நின் தண் அருள்_வாரியின் மூழ்குதற்கு இங்கு அந்தோ என் துன்பம் துடைத்து அருளாய் எனில் ஆங்கு உலகர் வந்து ஓ சிவ_விரதா எது பெற்றனை வாய்திற என்று இந்து ஓர்தரு சடையாய் விடையாய் என்னை ஏசுவரே

மேல்

#9 ஆசும் படி இல் அகங்காரமும் உடையான் என்று எண்ணிப் பேசும் படியில் எனக்கு அருளாய் எனில் பேர்_உலகோர் ஏசும்படி வரும் பொய் வேடன் என்று அதை எண்ணிஎண்ணிக் கூசும்படி வருமே என் செய்கேன் என் குல_தெய்வமே

மேல்

#10 ஐ தட்டிடும் நெஞ்சகத்தேன் பிழைகளை ஆய்ந்து வெறும் பொய் தட்டு இகல் உடையேற்கு உன் கருணை புரிந்திலையேல் வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே கைதட்டி வெண் நகைசெய்வர் கண்டாய் அருள் கற்பகமே

மேல்

@70. கருணை பெறா திரங்கல்

மேல்

#1 நன்றி ஒன்றிய நின் அடியவர்க்கே நானும் இங்கு ஒரு நாய்_அடியவன் காண் குன்றின் ஒன்றிய இடர் மிக உடையேன் குற்றம் நீக்கும் நல் குணம்_இலேன் எனினும் என்றின் ஒன்றிய சிவ_பரஞ்சுடரே இன்ப_வாரியே என் உயிர்த் துணையே ஒன்றின் ஒன்றிய உத்தமப் பொருளே உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#2 தீது செய்தனன் செய்கின்றேன் செய்வேன் தீயனேன் கொடும் தீ_குண இயல்பே ஏது செய்தனனேனும் என்றன்னை ஏன்றுகொள்வது எம் இறைவ நின் இயல்பே ஈது செய்தனை என்னை விட்டு உலகில் இடர்கொண்டு ஏங்கு என இயம்பிடில் அடியேன் ஓது செய்வது ஒன்று என் உயிர்த் துணையே உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#3 சென்ற நாளினும் செல்கின்ற நாளில் சிறியனேன் மிகத் தியங்குறுகின்றேன் மன்ற நான் இவண் இவ்வகை ஆனால் வள்ளலே நினை வழுத்தும் ஆறு எதுவோ என்றனால் இனி ஆவது ஒன்று இலை உன் எண்ணம் எப்படி அப்படி இசைக உன்றனால் களித்து உவகைகொள்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#4 மையல் வாழ்க்கையில் நாள்-தொறும் அடியேன் வருந்தி நெஞ்சகம் மாழ்குவது எல்லாம் ஐய ஐயவோ கண்டிடாதவர் போல் அடம்பிடிப்பது உன் அருளினுக்கு அழகோ செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடைத் தென் முகம் நோக்கி உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#5 மண்ணகச் சிறு வாழ்க்கையின் பொருட்டால் வருந்தி மற்று அதன் வன்மைகள் எல்லாம் எண்ணஎண்ண என் நெஞ்சகம் பதைப்புற்று ஏங்கிஏங்கி நான் இளைப்புறுகின்றேன் அண்ணல் நின் திரு_அருள் துணை அடைந்தால் அமைந்து வாழ்குவன் அடை வகை அறியேன் உண்ண நல் அமுது அனைய எம் பெருமான் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#6 அன்னை அப்பனும் நீ என மகிழ்ந்தே அகம் குளிர்ந்து நான் ஆதரித்திருந்தேன் என்னை இப்படி இடர் கொள விடுத்தால் என் செய்கேன் இதை யாரொடு புகல்கேன் பொன்னை ஒத்த நின் அடி துணை மலரைப் போற்றுவார்க்கு நீ புரிகுவது இதுவோ உன்னை எப்படி ஆயினும் மறவேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#7 நீலம் இட்ட கண் மடவியர் மயக்கால் நெஞ்சம் ஓர் வழி நான் ஒரு வழியாய் ஞாலம் இட்ட இ வாழ்க்கையில் அடியேன் நடுங்கி உள்ளகம் நலியும் என் தன்மை ஆலம் இட்டு அருள் களத்த நீ அறிந்தும் அருள் அளித்திலை ஆக மற்று இதனை ஓலமிட்டு அழுது அரற்றி எங்கு உரைப்பேன் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#8 கொடிய பாவியேன் படும் பரிதாபம் குறித்துக் கண்டும் என் குறை அகற்றாது நெடிய காலமும் தாழ்த்தனை நினது நெஞ்சும் வஞ்சகம் நேர்ந்தது உண்டேயோ அடியர்-தம் துயர் கண்டிடில் தரியார் ஐயர் என்பர் என் அளவு அஃது இலையோ ஒடிய மா துயர் நீக்கிடாய் என்னில் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#9 என்னென்று ஏழையேன் நாணம் விட்டு உரைப்பேன் இறைவ நின்றனை இறைப் பொழுதேனும் உன் என்றால் எனது உரை மறுத்து எதிராய் உலக மாயையில் திலகம் என்று உரைக்கும் மின் என்று ஆல் இடை மடவியர் மயக்கில் வீழ்ந்து என் நெஞ்சகம் ஆழ்ந்துவிட்டதனால் உன் அன்பு என்பது என்னிடத்து இலையேனும் உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

#10 அடியனேன் மிசை ஆண்டவ நினக்கு ஓர் அன்பு இருந்தது என்று அகங்கரித்திருந்தேன் கொடியனேன் படும் இடர் முழுது அறிந்தும் கூலியாளனைப் போல் எனை நினைத்தே நெடிய இத்துணைப் போதும் ஓர்சிறிதும் நெஞ்சு இரங்கிலை சஞ்சலத்து அறிவும் ஒடிய நின்றனன் என் செய்கேன் சிவனே உனை அலால் எனை_உடையவர் எவரே.

மேல்

@71. திரு அருட் பதிகம் - திரு அண்ணாமலை

மேல்

#1 வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே

மேல்

#2 அன்பர்-தம் மனத்தே இன்பமுற்று அவைகள் அளித்து அவர் களித்திடப் புரியும் பொன் பொலி மேனிக் கருணை அம் கடலே பொய்யனேன் பொய்மை கண்டு இன்னும் துன்பமுற்று அலையச் செய்திடேல் அருணைத் தொல் நகரிடத்து உனது எழில் கண்டு என்பு உளம் உருகத் துதித்திடல் வேண்டும் இ வரம் எனக்கு இவண் அருளே

மேல்

#3 பூத்திடும் அவனும் காத்திடுபவனும் புள் விலங்கு உருக் கொடு நேடி ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்று நல்லோர்கள் சாற்றிடும் அது கேட்டு உவந்தனன் நினது சந்நிதி உற எனக்கு அருளே

மேல்

#4 அருள் பழுத்து ஓங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமல நித்தியமே தெருள் பழுத்து ஓங்கும் சித்தர்-தம் உரிமைச் செல்வமே அருணை அம் தேவே இருள் பழுத்து ஓங்கும் நெஞ்சினேன் எனினும் என் பிழை பொறுத்து நின் கோயில் பொருள் பழுத்து ஓங்கும் சந்நிதி முன்னர்ப் போந்து உனைப் போற்றுமாறு அருளே

மேல்

#5 மறையும் அ மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர் மேல் இறையும் மா தவனும் இறையும் இன்னவன் என்று எய்திடா இறைவனே அடியேன் பொறையும் நல் நிறையும் அறிவும் நல் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும் அறையும் நல் புகழ் சேர் அருணையை விழைந்தேன் அங்கு எனை அடைகுவித்து அருளே

மேல்

#6 தேடுவார் தேடும் செல்வமே சிவமே திரு அருணாபுரித் தேவே ஏடு வார் இதழிக் கண்ணி எம் கோவே எந்தையே எம் பெருமானே பாடுவார்க்கு அளிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய் எலாம் பொறுத்து நாடுவார் புகழும் நின் திரு_கோயில் நண்ணுமா எனக்கு இவண் அருளே

மேல்

#7 உலகு உயிர்-தொறும் நின்று ஊட்டுவித்து ஆட்டும் ஒருவனே உத்தமனே நின் இலகு முக்கண்ணும் காள கண்டமும் மெய் இலங்கு வெண் நீற்று அணி எழிலும் திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இடப் பாலும் கண்டு அடியேன் கலக ஐம்புலன் செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே

மேல்

#8 அருள் பெரும் கடலே ஆனந்த நறவே அடி நடு அந்தமும் கடந்த தெருள் பெரு மலையே திரு_அணாமலையில் திகழ் சுயம் சோதியே சிவனே மருள் பெரும் கடலின் மயங்குகின்றேன் என் மயக்கு எலாம் ஒழிந்து வன் பிறவி இருள் பெரும் கடல் விட்டு ஏற நின் கோயிற்கு எளியனேன் வர வரம் அருளே

மேல்

#9 கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைய கடவுளே கமலன் மால் அறியா அருணை எம் கோவே பரசிவானந்த அமுதமே அற்புத நிலையே இருள் நிலம் புகுதாது எனை எடுத்தாண்ட இன்பமே அன்பர்-தம் அன்பே பொருள் நலம் பெற நின் சந்நிதிக்கு எளியேன் போந்து உனைப் போற்றும்வாறு அருளே

மேல்

#10 ஏது செய்திடினும் பொறுத்து அருள் புரியும் என் உயிர்க்கு ஒரு பெரும் துணையே தீது செய் மனத்தார்-தம்முடன் சேராச் செயல் எனக்கு அளித்த என் தேவே வாதுசெய் புலனால் வருந்தல்செய்கின்றேன் வருந்துறா வண்ணம் எற்கு அருளித் தாது_செய்பவன் ஏத்து அருணை அம் கோயில் சந்நிதிக்கு யான் வர அருளே

மேல்

@72. பிரசாதப் பதிகம்

மேல்

#1 சரதத்தால் அன்பர் சார்ந்திடும் நின் திரு விரதத்தால் அன்றி வேறு ஒன்றில் தீருமோ பரதத் தாண்டவனே பரிதிப்புரி வரதத்து ஆண்டவனே இ வருத்தமே.

மேல்

#2 வேதனேனும் விலக்குதற்பாலனோ தீதனேன் துயர் தீர்க்கும் வயித்திய நாதனே உன்றன் நல் அருள் இல்லையேல் நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே.

மேல்

#3 அருந்தினால் அன்பு அகம் குளிர் ஆனந்த விருந்தினால் மகிழ்வித்து அருள் அண்ணலே வருந்தி நாட வரும் பிணி நின் அருள் மருந்தினால் அன்றி மற்றொன்றில் தீருமோ.

மேல்

#4 மாலும் நான்கு_வதனனும் மா மறை நாலும் நாட அரும் நம் பரனே எவ ராலும் நீக்க அரிது இ வருத்தம் நின் ஏலும் நல் அருள் இன்று எனில் சற்றுமே.

மேல்

#5 தேவராயினும் தேவர் வணங்கும் ஓர் மூவராயினும் முக்கண நின் அருள் மேவுறாது விலக்கிடற்பாலரோ ஓவுறாத உடல் பிணி-தன்னையே.

மேல்

#6 வைய நாயக வானவர் நாயக தையல் நாயகி சார்ந்திடும் நாயக உய்ய நின் அருள் ஒன்றுவது இல்லையேல் வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே.

மேல்

#7 கல்லை வில்லில் கணித்து அருள்செய்ததோர் எல்லை இன்றி எழும் இன்ப_வெள்ளமே இல்லை இல்லை நின் இன் அருள் இல்லையேல் தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே.

மேல்

#8 நீதி மா தவர் நெஞ்சிடை நின்று ஒளிர் சோதியே முத்தொழில் உடை மூவர்க்கும் ஆதியே நின் அருள் ஒன்றும் இல்லையேல் வாதியாநிற்கும் வன் பிணி யாவுமே.

மேல்

#9 பத்தர் நித்தம் பயில் பரிதிப்புரி உத்தமப் பொருளே உன் அருள்-தனைப் பெத்தம் அற்றிடப் பெற்றவர்க்கு அல்லது நித்தம் உற்ற நெடும் பிணி நீங்குமோ.

மேல்

#10 சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய தெய்வ தற்பரனே சிவனே இங்கு உய்வதற்கு உன் அருள் ஒன்றும் இல்லையேல் நைவதற்கு நணுகுவ நோய்களே.

மேல்

@73. பிரார்த்தனைப் பதிகம்

மேல்

#1 அப்பு ஆர் மலர்ச் சடை ஆர்_அமுதே என் அருள்_துணையே துப்பு ஆர் பவள மணி_குன்றமே சிற்சுகக் கடலே வெப்பு ஆர்தரு துயரால் மெலிகின்றனன் வெற்று அடியேன் இப் பார்-தனில் என்னை அப்பா அஞ்சேல் என ஏன்றுகொள்ளே.

மேல்

#2 ஏன்றுகொள்வான் நமது இன் உயிர் போல் முக்கண் எந்தை என்றே சான்றுகொள்வாய் நினை நம்பி நின்றேன் இத் தமி அடியேன் மான்றுகொள்வான் வரும் துன்பங்கள் நீக்க மதித்திலையேல் ஞான்றுகொள்வேன் அன்றி யாது செய்வேன் இந்த நானிலத்தே.

மேல்

#3 நிலத்தே சிறுவர் செய் குற்றங்கள் யாவும் நினைத்து அறவோர் சலத்தே உளத்தை விடார் என்பர் ஆதலின் தாதை என்றே குலத் தேவர் போற்றும் குண_குன்றமே எம் குல_தெய்வமே புலத்தே இழிதகையேன் பிழை யாவும் பொறுத்து அருளே.

மேல்

#4 அருள் ஆர் அமுதப் பெரும் கடலே தில்லை அம்பலத்தில் பொருள் ஆர் நடம் புரி புண்ணியனே நினைப் போற்றுகிலேன் இருள் ஆர் மனத்தின் இடர் உழந்தேன் இனி யாது செய்கேன் மருள் ஆர் மல_குடில் மாய்ந்திடில் உன் அருள் வாய்ப்பதற்கே.

மேல்

#5 வாயார நின் பொன்_மலர்_தாள் துணையே வழுத்துகிலேன் ஓயா இடர் உழந்து உள் நலிகின்றனன் ஓ கெடுவேன் பேயாய்ப் பிறந்திலன் பேயும் ஒவ்வேன் புலைப் பேறு உவக்கும் நாயாய்ப் பிறந்திலன் நாய்க்கும் கடைப்பட்ட நான் இங்ஙனே.

மேல்

#6 நான் செய்த குற்றங்கள் எல்லாம் பொறுத்து நின் நல் அருள் நீ தான் செய்தனை எனில் ஐயா முக்கண் பெரும் சாமி அவற்கு ஏன் செய்தனை என நின் தடுப்பார் இலை என் அரசே வான் செய்த நன்றியை யார் தடுத்தார் இந்த வையக்தே.

மேல்

#7 வையகத்தே இடர் மாக் கடல் மூழ்கி வருந்துகின்ற பொய்யகத்தேனைப் புரந்து அருளாமல் புறம்பொழித்தால் நையகத்தேன் எது செய்வேன் அந்தோ உள் நலிகுவன் காண் மெய்யகத்தே நின்று ஒளிர்தரும் ஞான விரி சுடரே.

மேல்

#8 விரி துயரால் தடுமாறுகின்றேன் இந்த வெவ்வினையேன் பெரிது உயராநின்ற நல்லோர் அடையும் நின் பேர்_அருள்-தான் அரிது கண்டாய் அடைவேன் எனல் ஆயினும் ஐய மணிப் புரி துவர் வார் சடையாய் நீ உவப்பில் புரியில் உண்டே.

மேல்

#9 உண்டோ என் போல் துயரால் அலைகின்றவர் உத்தம நீ கண்டு ஓர்சிறிதும் இரங்குகிலாய் இக் கடையவனேன் பண்டு ஓர் துணை அறியேன் நின்னை அன்றி நின் பற்றி நின்றேன் எண் தோள் மணி மிடற்று எந்தாய் கருணை இரும்_கடலே.

மேல்

#10 கடலே அனைய துயர் மிகையால் உள் கலங்கும் என்னை விடலே அருள் அன்று எடுத்து ஆளல் வேண்டும் என் விண்ணப்பம் ஈது அடல் ஏறு உவந்த அருள்_கடலே அணி அம்பலத்துள் உடலே மருவும் உயிர் போல் நிறை ஒற்றியூர் அப்பனே.

மேல்

@74. திருப்புகற் பதிகம்

மேல்

#1 வேகம் உறும் நெஞ்ச மெலிவும் எளியேன்-தன் தேக மெலிவும் தெரிந்தும் இரங்காயேல் மாக நதியும் மதியும் வளர் சடை எம் ஏக இனி மற்று எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#2 கள்ள மனத்துக் கடையோர்-பால் நாணுறும் என் உள்ள மெலிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் எள்ளின் அளவும் இரங்கி அருளாயேல் எள்ளும் உலகில் எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#3 பொன்னை வளர்ப்பாரைப் போற்றாமல் எம் பெருமான் உன்னை மதித்து உன்னுறும் என் உள்ளம் அறிந்திருந்தும் அன்னையினும் சால அருள்வோய் அருளாயேல் என்னை முகம் பார்த்து எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#4 துன் உடைய வியாக்கிரமத் தோல்_உடையான் தான் இருக்கப் பொன்_உடையார் பக்கம் புகுவானேன் என்று இருப்பேன் தன்னுடைய துன்பம் தவிர்த்து இங்கு அருளாயேல் என்_உடையாய் மற்று இங்கு எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#5 வன்கண்ணர்-தம்மை மதியாது உன் பொன் அடியின்- தன்கண் அடியேன்-தன் சஞ்சல வன் நெஞ்சகத்தின் புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல் என் கண்_அனையாய் எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#6 தோன்றுவதும் மாய்வதும் ஆம் சூழ்ச்சி இடைப்பட்டு அலைந்து மான்றுகொளும் தேவர் மரபை மதியாமே சான்றுகொளும் நின்னைச் சரணடைந்தேன் நாயேனை ஏன்றுகொளாய் என்னில் எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#7 தீது முற்றும் நாளும் செயினும் பொறுத்து அருளும் சாது முற்றும் சூழ்ந்த தயாநிதி நீ என்று அடைந்தேன் கோது முற்றும் தீரக் குறியாயேல் நன்மை என்பது ஏதும் அற்ற பாவிக்கு எவர்-தான் இரங்குவரே

மேல்

#8 துன்றிய மா_பாதகத்தோன் சூழ் வினையை ஓர் கணத்தில் அன்று தவிர்த்து ஆண்ட அருள்_கடல் நீ என்று அடுத்தேன் கன்றுறும் என் கண் கலக்கம் கண்டும் இரங்காயேல் என்றும் உளாய் மற்று இங்கு எவர்-தான் இரங்குவரே

மேல்

#9 கோடாமே பன்றி தரும் குட்டிகட்குத் தாய் ஆகி வாடா முலை கொடுத்த வள்ளல் என நான் அடுத்தேன் வாடா என்று உன் அருளில் வாழ்வான் அருள் இலையேல் ஈடு ஆரும் இல்லாய் எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

#10 கல்லா நடையேன் கருணை_இலேன் ஆனாலும் நல்லார் புகழும் நமச்சிவாயப் பெயரே அல்லாது பற்று ஒன்று அறியேன் அருளாயேல் எல்லாம் உடையாய் எனக்கு ஆர் இரங்குவரே

மேல்

@75. சிந்தைத் திருப் பதிகம்

மேல்

#1 விடை ஆர்க்கும் கொடி உடைய வித்தக என்று உன் அடியின் இடை ஆர்த்து நின்று அழும் இ ஏழை முகம் பாராமே நடை ஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க்கு ஈயாத உடையார்க்கோ என்னை_உடையாய் உதவுவதே

மேல்

#2 கற்றே அறியாக் கடைப் புலையேன் ஆனாலும் உற்றே நின்றன்னை நினைந்து ஓதுகின்றேன் அல்லாமே மற்று ஏதும் தேறேன் என் வன் துயர் தீர்ந்து உள் குளிரச் சற்றே இரங்கித் தயவு செய்தால் ஆகாதோ

மேல்

#3 கல்லாரொடும் திரிந்து என் கண்ணே நின் தாள் வழுத்தும் நல்லார்-தமைக் காண நாணுகின்றேன் ஆனாலும் வல்லாய் நின்றன்னை அன்றி மற்று ஒன்று அறியேன் நான் எல்லாம் அறிவாய்க்கு இதனை இயம்பல் என்னே

மேல்

#4 கள்ள நெறி கொள்ளும் கடை நாயேன் என்னினும் நின் வள்ளல் மலர்_தாளே வழுத்துகின்றேன் என்னுடைய உள்ள மெலிவோடு உடல் மெலிவும் கண்டும் அந்தோ எள்ளளவும் எந்தாய் இரங்காது இருந்தனையே

மேல்

#5 சீர் துணையார் தேடும் சிவனே நின்றன்னை அன்றி ஓர் துணையும் இல்லேன் நின் ஒண் பொன்_பதம் அறிய கார் துணையா நாடும் கலாபி என நாடுகின்றேன் ஆர் துணை என்று ஐயா அகல இருந்தனையே

மேல்

#6 பேய்_அனையாரோடும் பிழை புரிந்தேன் ஆனாலும் நாய்_அனையேன் நின்னுடைய நாமம் நவிற்றுகின்றேன் தீ அனைய துன்பில் திகைக்கின்றேன் கண்டிருந்தும் தாய்_அனையாய் சற்றும் தயவு புரிந்திலையே

மேல்

#7 வெள்ளம் மருவும் விரி சடையாய் என்னுடைய உள்ள விரிவும் உடல் மெலிவும் கண்டிருந்தும் தள்ள அரிய நின் அருள் ஓர் சற்றும் புரியாமே கள்ள வினைக்கு என் உளத்தைக் கைகாட்டி நின்றனையே

மேல்

#8 என் உரிமைத் தாய்க்கும் இனியாய் நின் ஐந்தெழுத்தை உன்னு நிலைக்கு என்னை உரித்தாக்க வேண்டுதியேல் மன் உலகில் பொன்_உடையார் வாயில்-தனைக் காத்து அயர்ந்தேன்- தன்னுடைய எண்ணம்-தனை முடிக்க வேண்டுவதே

மேல்

#9 குற்றம் எலாம் நல்ல குணமாகக் கொண்டு அருளும் உற்ற_துணை நீயே மற்று ஓர் துணையும் இல்லை என்றே நல் தலைமையாம் உனது நாமம் நவில்கின்றேன் கற்றவனே என்றனை நீ கைவிடில் என் செய்வேனே

மேல்

#10 அறியாப் பருவத்து அறிவுறுத்தி ஆட்கொண்ட நெறியானே நின் ஆணை நின் ஆணை நின் ஆணை பொறி ஆர் நின் நாமம் புகலுவதே அன்றி மற்றை வெறியார் வன் நாமம் ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேனே

மேல்

@76. உய்கைத் திருப் பதிகம்

மேல்

#1 திருவும் சீரும் சிறப்பும் திறலும் சற் குருவும் கல்வியும் குற்றம் இல் கேள்வியும் பொரு இல் அன்னையும் போக்கு அறு தந்தையும் தரும வெள் விடைச் சாமி நின் நாமமே

மேல்

#2 பொய்யனேன் பிழை யாவும் பொறுத்து அருள் செய்ய வேண்டும் நின் செம்பொன்_பதம் அலால் அய்யனே முக்கணா இ அடியனேற்கு உய்ய வேறு புகல் இலை உண்மையே

மேல்

#3 கள்ள நெஞ்சகனேனும் கடையனேன் வள்ளல் நின் மலர் வார் கழல் பாதமே உள்ளுவேன் மற்றை ஓர் தெய்வ நேயமும் கொள்ளலேன் என் குறிப்பு அறிந்து ஆள்கவே

மேல்

#4 வஞ்ச மாதர் மயக்கம் கனவினும் எஞ்சுறாது இதற்கு என் செய்குவேன் என்றன் நெஞ்சம் அ மயல் நீங்கிட வந்து எனைத் தஞ்சம் என்று உன் சரண் தந்து காக்கவே

மேல்

#5 பற்று நெஞ்சகப் பாதகனேன் செயும் குற்றம் யாவும் குணம் எனக் கொண்டு அருள் உற்ற எள்துணையேனும் உதவுவாய் கற்ற நல் தவர் ஏத்தும் முக்கண்ணனே

மேல்

#6 மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும் பதியும் ஈந்து எம் பசுபதி மெய் நெறிக் கதியின் வைப்பது நின் கடன் வன் கடல் வதியும் நஞ்சம் அணி மணி_கண்டனே

மேல்

#7 நீடு வாழ்க்கை நெறி வரு துன்பினால் வாடும் என்னை வருந்தல் என்று உன் பதம் பாடும் வண்ணம் நல் பாங்கு அருள்வாய் மன்றுள் ஆடும் முக்கண் அருள் பெரு வெள்ளமே

மேல்

#8 சிந்தை நொந்து இ சிறிய அடியனேன் எந்தை என்று உனை எண்ணிநிற்கின்றனன் இந்து சேகரனே உன்றன் இன் அருள் தந்து காப்பது உன்றன் கடன் ஆகுமே

மேல்

#9 உன்னை நாடும் என் உள்ளம் பிறரிடைப் பொன்னை நாடும் புதுமை இது என்-கொலோ மின்னை நாடும் நல் வேணிப் பிரான் இங்கே என்னை நாடி எனக்கு அருள்செய்கவே

மேல்

#10 இழை பொறுத்த முலையவர்க்கு ஏற்ற என் பிழை பொறுப்பது உன் பேர்_அருட்கே தகும் மழை பொறுக்கும் வடிவு_உடையோன் புகழ் தழை பொறுக்கும் சடை முடித் தந்தையே

மேல்

#11 மூடனேன் பிழை முற்றும் பொறுத்து உனைப் பாடவே அருள் பாங்கு எனக்கு ஈதியேல் நாட வேறு மனையிடை நண்ணி நான் வாட வேண்டுவது என்னை எம் வள்ளலே

மேல்

#12 மின் ஒப்பு ஆகி விளங்கும் விரி சடை என் அப்பா எனக்கு இன் அருள் ஈந்து நின் பொன் ஒப்பாம் துணைப் பூம் பதம் போற்றியே உன்னப் பாங்கின் உயர் நெறி உய்க்கவே

மேல்

@77. ஆனந்தப் பதிகம்

மேல்

#1 குடிகொள் மலம் சூழ் நவ வாயில் கூட்டைக் காத்துக் குணம்_இலியாய்ப் படிகொள் நடையில் பரதவிக்கும் பாவியேனைப் பரிந்து அருளிப் பொடி கொள் வெள்ளைப் பூச்சு அணிந்த பொன்னே உன்னைப் போற்றி ஒற்றிக் கடி கொள் நகர்க்கு வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#2 சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரை காணாது அழுந்தி ஈதல் இரக்கம் எள்ளளவும் இல்லாது அலையும் என்றனை நீ ஓதல் அறிவித்து உணர்வு அறிவித்து ஒற்றியூர்ச் சென்று உனைப் பாடக் காதல் அறிவித்து ஆண்டதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#3 அற்ப அளவும் நிச்சயிக்கலாகா உடம்பை அருமைசெய்து நிற்பதலது உன் பொன்_அடியை நினையாக் கொடிய நீலன் எனைச் சற்ப அணியாய் நின்றன் ஒற்றித் தலத்தைச் சார்ந்து நின் புகழைக் கற்ப அருள்செய்தனை அதற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#4 உண்டு வறிய ஒதி போல உடம்பை வளர்த்து ஊன் ஊதியமே கொண்டு காக்கைக்கு இரையாகக் கொடுக்க நினைக்கும் கொடியன் எனை விண்டு அறியா நின் புகழை விரும்பி ஒற்றியூரில் நினைக் கண்டு வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#5 நாய்க்கும் எனக்கும் ஒப்பாரி நாடி அதற்கு விருந்திடுவான் வாய்க்கும் ஒதி போல் பொய் உடலை வளர்க்க நினைக்கும் வஞ்சன் எனை ஆய்க்கும் இனிய அப்பா உன் ஒற்றியூரை அடைந்து இருளைக் காய்க்கும் வண்ணம் செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#6 குருதி நிறைந்த குறும் குடத்தைக் கொண்டோன் வழியில் சென்று இடவாய் எருதின் மனத்தேன் சுமந்து நலம் இழந்து திரியும் எய்ப்பு ஒழிய வருதி எனவே வழி அருளி ஒற்றியூர்க்கு வந்து உன்னைக் கருதி வணங்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#7 பாவம் எனும் ஓர் பெரும் சரக்குப் பையை எடுத்துப் பண்பு அறியாக் கோவம் எனும் ஓர் குரங்கு ஆட்டும் கொடியேன்-தன்னைப் பொருட்படுத்தித் தேவர் அமுதே சிவனே நின் திரு_தாள் ஏத்த ஒற்றி எனும் காவல் நகரம் வரச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#8 பொள்ளல் குடத்தின் புலால் உடம்பைப் போற்றி வளர்த்துப் புலன் இழந்தே துள்ளற்கு எழுந்த மனத்துடனே துள்ளி அலைந்த துட்டன் எனை உள்ளற்கு அறிவு தந்து உன்றன் ஒற்றியூர்க்கு வந்து வினைக் கள்ளப் பகை நீக்கிடச்செய்தாய் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#9 கூட்டும் எலும்பால் தசை-அதனால் கோலும் பொல்லாக் கூரை-தனை நாட்டும் பரம வீடு எனவே நண்ணி மகிழ்ந்த நாயேனை ஊட்டும் தாய் போல் உவந்து உன்றன் ஒற்றியூர் வந்துற நினைவு காட்டும் கருணைசெய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#10 ஊணத்து உயர்ந்த பழு_மரம் போல் ஒதி போல் துன்பைத் தாங்குகின்ற தூணத் தலம் போல் சோரி மிகும் தோலை வளர்த்த சுணங்கன் எனை மாணப் பரிவால் அருள் சிந்தாமணியே உன்றன் ஒற்றி நகர் காணப் பணித்த அருளினுக்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

#11 புண்ணும் வழும்பும் புலால் நீரும் புழுவும் பொதிந்த பொதி போல நண்ணும் கொடிய நடை_மனையை நான் என்று உளறும் நாயேனை உண்ணும் அமுதே நீ அமர்ந்த ஒற்றியூர் கண்டு என் மனமும் கண்ணும் களிக்கச்செய்ததற்கு ஓர் கைம்மாறு அறியேன் கடையேனே.

மேல்

@78 திரு வண்ணப் பதிகம்

மேல்

#1 திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் மரு வண்ண மணி குவளை மலர் வண்ண மிடறும் மலை_மகள் வண்ண மருவும் இடமும் மன் வண்ண மிகு துணைப் பொன் வண்ண அடி_மலரும் மாணிக்க வண்ண வடிவும் இரு வண்ணமாம் என் மனது ஒரு வண்ணம் ஆகியே இடையறாது எண்ணும் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் இவ்வண்ணம் என்று இவண் இயம்பல் உன் கருணை வண்ணம் கரு வண்ணம் அற உளம் பெரு வண்ணம் உற நின்று கடல்_வண்ணன் எண்ணும் அமுதே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே.

மேல்

#2 எண்ணுறு விருப்பு ஆதி வல் விலங்கினம் எலாம் இடைவிடாது உழல ஒளி ஓர் எள்ளளவும் இன்றி அஞ்ஞான இருள் மூடிட இருண்டு உயிர் மருண்டு மாழ்க நண்ணும் மன மாயையாம் காட்டைக் கடந்து நின் ஞான அருள் நாட்டை அடையும் நாள் எந்த நாள் அந்த நாள் இந்த நாள் என்று நாயினேற்கு அருள்செய் கண்டாய் விண் உறு சுடர்க்கு எலாம் சுடர் அளித்து ஒரு பெருவெளிக்குள் வளர்கின்ற சுடரே வித்து ஒன்றும் இன்றியே விளைவு எலாம் தருகின்ற விஞ்ஞான மழை செய் முகிலே கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே.

மேல்

#3 பூத நெறி ஆதி வரு நாத நெறி வரையுமாப் புகலும் மூவுலகு நீத்துப் புரையுற்ற மூடம் எனும் இருள் நிலம் அகன்று மேல் போய் அருள் ஒளித் துணையினால் வேத நெறி புகல் சகல கேவலம் இலாத பரவெளி கண்டுகொண்டு கண்ட விளைவு இன்றி நான் இன்றி வெளி இன்றி வெளியாய் விளங்கும் நாள் என்று அருளுவாய் வாத நெறி நடவாத போத நெறியாளர் நிறை_மதி நெறி உலாவும் மதியே மணி மிடற்று அரசே எம் வாழ்வின் முதலே அரு_மருந்தே பெரும் தெய்வமே காத நெறி மணம் வீசு கனி தரு பொழில் குலவு கடி மதில் தில்லை நகர் வாழ் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#4 கூர் கொண்ட வாள் கொண்டு கொலைகொண்ட வேட்டுவக் குடிகொண்ட சேரி நடுவில் குவை கொண்ட ஒரு செல்வன் அருமை கொண்டு ஈன்றிடு குலம் கொண்ட சிறுவன் ஒருவன் நேர் கொண்டு சென்றவர்கள் கை கொண்டு உறக் கண்கள் நீர் கொண்டு வாடல் எனவே நிலைகொண்ட நீ அருள்_கலை கொண்டு அளித்த யான் நெறி கொண்ட குறி தவறியே போர்கொண்ட பொறி முதல் புலை கொண்ட தத்துவப் புரை கொண்ட மறவர் குடியாம் பொய் கொண்ட மெய் என்னும் மை கொண்ட சேரியில் போந்துநின்றவர் அலைக்கக் கார் கொண்ட இடி ஒலிக் கண் கொண்ட பார்ப்பில் கலங்கினேன் அருள் புரிகுவாய் கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#5 படமெடுத்து ஆடும் ஒரு பாம்பாக என் மனம் பாம்பாட்டியாக மாயைப் பார்த்துக் களித்து உதவு பரிசு உடையர் விடயம் படர்ந்த பிரபஞ்சமாகத் திடம் மடுத்து உறு பாம்பின் ஆட்டம்-அது கண்டு அஞ்சு சிறுவன் யானாக நின்றேன் தீரத் துரந்து அந்த அச்சம் தவிர்த்திடு திறத்தன் நீ ஆகல் வேண்டும் விடம் மடுத்து அணி கொண்ட மணி_கண்டனே விமல விஞ்ஞானமாம் அகண்ட வீடு அளித்து அருள் கருணை_வெற்பனே அற்புத விராட்டு உருவ வேதார்த்தனே கடம் மடுத்திடு களிற்று உரி கொண்டு அணிந்த மெய்க் கடவுளே சடை கொள் அரசே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#6 எழு வகைப் பிறவிகளுள் எப் பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக வழு வகைத் துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே கழி வகைப் பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#7 பற்றுவது பந்தம் அப் பற்று அறுதல் வீடு இஃது பரம வேதார்த்தம் எனவே பண்பு_உளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி மனம் விடய நடையே எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும் ஏறுவதும் வீண் எண்ணுவதும் நண்ணுவதும் இப் புவன போகங்கள் யாவினும் சென்றுசென்றே சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவு இல்லாது சுழல்கின்றது என் செய்குவேன் தூய நின் திரு_அருளின் அன்றி இ ஏழை அச் சுழல் மனம் அடக்க வருமோ கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#8 எளியனேன் சிறியன் யான் செய் பிழைகள் சிறியவோ எழு கடலினும் பெரியவே என் செய்கேன் என் செய்கேன் இனியாயினும் செயாது எந்தை நினை ஏத்த என்றால் வளியின் வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின்றேன் அடியனேன் மனம் எனது வசமாக நினது வசம் நானாக வந்து அறிவு தந்து அருளுவாய் ஒளியின் ஒளியே நாத வெளியின் வெளியே விடய உருவின் உருவே உருவினாம் உயிரின் உயிரே உயர் கொள் உணர்வின் உணர்வே உணர்வின் உறவின் உறவே எம் இறையே களியின் நிறைவே அளி கொள் கருணை நிதியே மணி கொள் கண்ட எண் தோள் கடவுளே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#9 சந்ததம் எனக்கு மகிழ் தந்தை நீ உண்டு நின்றன்னிடத்து ஏமவல்லி தாய் உண்டு நின் அடியர் என்னும் நல் தமர் உண்டு சாந்தம் எனும் நேயர் உண்டு புந்தி கொள் நிராசையாம் மனைவி உண்டு அறிவு எனும் புதல்வன் உண்டு இரவு_பகலும் போன இடம் உண்டு அருள் பொருளும் உண்டு ஆனந்த போக போக்கியமும் உண்டு வந்தனைசெய் நீறு எனும் கவசம் உண்டு அக்க மா மணியும் உண்டு அஞ்செழுத்தாம் மந்திரப் படை உண்டு சிவகதி எனும் பெரிய வாழ்வு உண்டு தாழ்வும் உண்டோ கந்தம் மிகு கொன்றையொடு கங்கை வளர் செம் சடைக் கடவுளே கருணை_மலையே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#10 நான்முகனும் மாலும் அடி முடியும் அறிவு அரிய பரநாதம் மிசை ஓங்கு மலையே ஞானமயமான ஒரு வான நடு ஆனந்த நடனம் இடுகின்ற ஒளியே மான் முகம் விடாது உழலும் எனையும் உயர் நெறி மருவவைத்து அவண் வளர்த்த பதியே மறை முடிவில் நிறை பரப்பிரமமே ஆகமம் மதிக்கும் முடிவுற்ற சிவமே ஊன் முகச் செயல் விடுத்து உள் முகப் பார்வையின் உறும் தவர் பெறும் செல்வமே ஒழியாத உவகையே அழியாத இன்பமே ஒன்றிரண்டு அற்ற நிலையே கான் முகக் கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

@79. போற்றித் திருப் பதிகம்

மேல்

#1 அருள்தரல் வேண்டும் போற்றி என் அரசே அடியனேன் மனத்தகத்து எழுந்த இருள் கெடல் வேண்டும் போற்றி எம் தாயே ஏழையேன் நின்றனைப் பாடும் தெருள் உறல் வேண்டும் போற்றி என் அறிவே சிந்தை நைந்து உலகிடை மயங்கும் மருள் அறல் வேண்டும் போற்றி என் குருவே மதி நதி வளர் சடை மணியே

மேல்

#2 மணி மிடற்று அமுதே போற்றி என்றன்னை வாழ்விக்க வேண்டுவல் போற்றி அணி மதி முடியோய் போற்றி இ ஏழைக்கு அருள் அமுது அருளுக போற்றி பணி அணி புயத்தோய் போற்றி நின் சீரே பாடுதல் வேண்டும் நான் போற்றி தணிவு இல் பேர்_ஒளியே போற்றி என்றன்னைத் தாங்குக போற்றி நின் பதமே

மேல்

#3 நின் பதம் பாடல் வேண்டும் நான் போற்றி நீறு பூத்து ஒளிர் குளிர் நெருப்பே நின் புகழ் கேட்டல் வேண்டும் நான் போற்றி நெற்றி அம் கண் கொளும் நிறைவே நின் வசம் ஆதல் வேண்டும் நான் போற்றி நெடிய மால் புகழ் தனி நிலையே நின் பணி புரிதல் வேண்டும் நான் போற்றி நெடும் சடை முடித் தயா நிதியே

மேல்

#4 நிதி தரு நிறைவே போற்றி என் உயிர்க்கு ஓர் நெறி தரு நிமலமே போற்றி மதி முடிக் கனியே போற்றி என்றன்னை வாழ்வித்த வள்ளலே போற்றி விதி முதற்கு இறையே போற்றி மெய்ஞ்ஞான வியன் நெறி விளக்கமே போற்றி பதி பசுபதியே போற்றி நின் பாதம் பாட எற்கு அருளுக போற்றி

மேல்

#5 போற்றி என் உயிர்க்கு ஓர் இன்பமே அன்பர் புரி தவக் காட்சியே போற்றி போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி போற்றி என் பெரிதாம் செல்வமே கருணைப் பூரண வெள்ளமே போற்றி போற்றி என் வாழ்வுக்கு ஒரு பெரு முதலே போற்றி நின் சேவடிப் போதே

மேல்

#6 போத ஆனந்த போகமே என்னைப் புறம்பு இட நினைத்திடேல் போற்றி சீத வான் பிறை சேர் செஞ்சடையாய் என் சிறுமை தீர்த்து அருளுக போற்றி பேதம் ஒன்று இல்லா அருள்_கடலே என் பிழை எலாம் பொறுத்து அருள் போற்றி வேத மெய்ப்பொருளே போற்றி நின் அல்லால் வேறு எனக்கு இலை அருள் போற்றி

மேல்

#7 போற்றுவார் உள்ளம் புகுந்து ஒளிர் ஒளியே போற்றி நின் பூம் பதம் போற்றி ஆற்று வார் சடை என் அப்பனே போற்றி அமல நின் அடி_மலர் போற்றி ஏற்றுவார் கொடி கொள் எந்தையே போற்றி இறைவ நின் இரும் கழல் போற்றி சாற்றுமாறு அரிய பெருமையே போற்றி தலைவ நின் தாள் துணை போற்றி

மேல்

#8 துணை முலை மடந்தை எம் பெருமாட்டி துணைவ நின் துணை அடி போற்றி புணை என இடரின் கடலின்-நின்று ஏற்றும் புனித நின் பொன் அடி போற்றி இணை_இல் பேர்_இன்ப அமுது அருள் கருணை இறைவ நின் இணை அடி போற்றி கணை எனக் கண்ணன்-தனைக் கொளும் ஒரு முக்கண்ண நின் கழல் அடி போற்றி

மேல்

#9 அடியனேன் பிழைகள் பொறுத்து அருள் போற்றி அயல் எனை விட்டிடேல் போற்றி கொடியனேற்கு இன்பம் தந்து அருள் போற்றி குணப் பெரும் குன்றமே போற்றி நெடிய என் துன்பம் துடைத்து அருள் போற்றி நினை அலால் பிறிது_இலேன் போற்றி படி மிசைப் பிறர்-பால் செலுத்திடேல் எங்கள் பரம நின் அடைக்கலம் நானே

மேல்

#10 நான் செயும் பிழைகள் பலவும் நீ பொறுத்து நலம் தரல் வேண்டுவன் போற்றி ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி ஊன் செய் நாவால் உன் ஐந்தெழுத்து எளியேன் ஓத நீ உவந்து அருள் போற்றி மான் செயும் நெடும் கண் மலை_மகள் இடம் கொள் வள்ளலே போற்றி நின் அருளே

மேல்

@80. விண்ணப்பப் பதிகம் - திரு ஆரூர்

மேல்

#1 தண் ஆர் மதி போல் சீதள வெண் தரளக் கவிகைத் தனி நிழல் கீழ்க் கண் ஆர் செல்வச் செருக்கினர்-தம் களிப்பில் சிறிய கடை நாயேன் பெண் ஆர் பாகப் பெருந்தகை-தன் பெரிய கருணைக்கு உரியம் என்றே எண்ணாநின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே

மேல்

#2 இரங்காது இருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்த மன_ குரங்கால் அலைப்புண்டு அலைகின்ற கொடிய பாவி இவன் என்றே உரம் காதலித்தோர் சிரிப்பார் நான் உலகத் துயரம் நடிக்கின்ற அரங்காக் கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே

மேல்

#3 மணி ஆர் கண்டத்து எண் தோள் செவ் வண்ணப் பவள மா மலையே அணியால் விளங்கும் திருவாரூர் ஆரா_அமுதே அடிச் சிறியேன் தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் திணி ஆர் முருட்டுக் கடை மனத்தேன் செய்வது ஒன்றும் தெரியேனே

மேல்

#4 தெரியத் தெரியும் தெரிவு_உடையார் சிவாநுபவத்தில் சிறக்கின்றார் பிரியப் பிரியும் பெரும் பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன் துரியப் பொருளே அணி ஆரூர்ச் சோதி மணி நீ தூய அருள் புரியப் பெறுவேன் எனில் அவர் போல் யானும் சுகத்தில் பொலிவேனே

மேல்

#5 பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதானந்தக் கடல் ஆடி மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணி நீ வழங்காயேல் மெலிவேன் துன்ப_கடல் மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல் நலிவேன் அந்தோ அந்தோ நின் நல்ல கருணைக்கு அழகு அன்றே

மேல்

#6 கருணை_கடலே திருவாரூர்க் கடவுள் சுடரே நின்னுடைய அருணக் கமல மலர்_அடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல் வருணக் கொலை மா_பாதகனாம் மறையோன்-தனக்கு மகிழ்ந்து அன்று தருணக் கருணை அளித்த புகழ் என்னாம் இ நாள் சாற்றுகவே

மேல்

#7 இ நாள் அடியேன் பிழைத்த பிழை எண்ணி இரங்காய் எனில் அந்தோ அ நாள் அடிமைகொண்டனையே பிழை யாது ஒன்றும் அறிந்திலையோ பொன் ஆர் கருணை_கடல் இன்று புதிதோ பிறர்-பால் போயிற்றோ என் நாயகனே திருவாரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே

மேல்

#8 உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒரு நாளேனும் ஒழிந்திடவும் வெள்ளக் கருணை இறையேனும் மேவி இடவும் பெற்று அறியேன் கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத் தள்ளத் தகுமோ திருவாரூர் எந்தாய் எந்தாய் தமியேனே

மேல்

#9 எந்தாய் ஒரு நாள் அருள் வடிவின் எளியேன் கண்டு களிப்பு அடைய வந்தாய் அந்தோ கடை நாயேன் மறந்து விடுத்தேன் மதி கெட்டேன் செந்தாமரைத் தாள் இணை அன்றே சிக்கென்று இறுகப் பிடித்தேனேல் இந்து ஆர் சடையாய் திருவாரூர் இறைவா துயர் அற்று இருப்பேனே

மேல்

#10 இருப்பு மனத்துக் கடை நாயேன் என் செய்வேன் நின் திரு_அருளாம் பொருப்பில் அமர்ந்தார் அடியர் எலாம் அந்தோ உலகப் புலை ஒழுக்காம் திருப்பில் சுழன்று நான் ஒருவன் திகைக்கின்றேன் ஓர் துணை காணேன் விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண் ஆர் வியன் அமுதே

மேல்

@81. தரிசனப் பதிகம்

மேல்

#1 திரு ஆர் பொன்_அம்பல நடுவே தெள் ஆர் அமுதத் திரள் அனைய உரு ஆர் அறிவானந்த நடம் உடையார் அடியார்க்கு உவகை நிலை தருவார் அவர்-தம் திரு_முகத்தே ததும்பும் இள வெண்_நகை கண்டேன் இரு_வாதனை அற்று அந்தோ நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ.

மேல்

#2 பொன்_நாயகனும் புரந்தரனும் பூ_வாழ்பவனும் புகழ்ந்து ஏத்த மின் ஆர் பொன்_அம்பல நடுவே விளங்கும் கருணை விழி வழங்கும் அன்னார் அறிவானந்த நடம் ஆடும் கழல் கண்டு அகம் குளிர்ந்தேன் என் நாயகனார் அவர் கழலை இன்னும் ஒரு கால் காண்பேனோ.

மேல்

#3 தாயின் பெரிய கருணையினார் தலை மாலையினார் தாழ் சடையார் வாயிற்கு இனிய புகழ் உடைய வள்ளல் அவர்-தம் திரு_அழகைக் கோயிற்கு அருகே சென்று மனம் குளிரக் கண்டேன் பிரிவுற்றேன் ஈயில் சிறியேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ.

மேல்

#4 புன்கண் அகற்றும் மெய் அடியார் போற்றும் பொன்_அம்பல நடுவே வன்கண் அறியார் திரு_நடம்செய் வரதர் அமுதத் திரு_முகத்தை முன்-கண் உலகில் சிறியேன் செய் முழு மா தவத்தால் கண்டேன் நான் என் கண்_அனையார் அவர் முகத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#5 அன்புற்று அடியார் தொழுது ஏத்த அணி ஆர் மணிப் பொன்_அம்பலத்தே வன்புற்று அழியாப் பெரும் கருணை_மலையார் தலை ஆர் மாலையினார் மன் புற்று அரவு ஆர் கச்சு இடையின் வயங்க நடம்செய்வது கண்டேன் இன்புற்று அடியேன் அவர் நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#6 இ மா நிலத்தில் சிவபதம் ஈது என்னும் பொன்_அம்பல நடுவே அ மால் அறியா அடிகள் அடி அசைய நடம்செய்வது கண்டேன் எம்மால் அறியப்படுவது அல என்னென்று உரைப்பேன் ஏழையன் யான் எம்மான் அவர்-தம் திரு_நடத்தை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#7 சிறியேன் தவமோ எனை ஈன்றாள் செய்த தவமோ யான் அறியேன் மறி ஏர் கரத்தார் அம்பலத்தே வாழும் சிவனார்-தமைக் கண்டேன் பிறியேன் எனினும் பிரிந்தேன் நான் பேயேன் அந்தப் பிரிவினைக் கீழ் எறியேன் அந்தோ அவர்-தம்மை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#8 அருளே வடிவாய் அம்பலத்தே ஆடும் பெருமான் அடிகள்-தமைத் தெருளே வடிவாம் அடியவர் போல் சிறியேன் கண்டேன் சீருற்றேன் மருளே வடிவேன் ஆதலினால் மறந்தே பிரிந்தே மதி கெட்டேன் இருள் ஏர் மனத்தேன் அவர்-தமை நான் இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#9 அன்னோ திரு_அம்பலத்தே எம் ஐயர் உருக் கண்டேன் அது-தான் பொன்னோ பவளப் பொருப்பு அதுவோ புது மாணிக்க மணித் திரளோ மின்னோ விளக்கோ விரி சுடரோ மேலை ஒளியோ என் உரைப்பேன் என்னோ அவர்-தம் திரு_உருவை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

#10 பொன் என்று உரைக்கும் அம்பலத்தே புனிதனார்-தம் அழகு இயலை உன் என்று உரைப்பேன் என்னே என் உள்ளம் சிறிதும் உணர்ந்தது இலை மின் என்று உரைக்கும் படி மூன்று விளக்கும் மழுங்கும் எனில் அடியேன் என்னென்று உரைப்பேன் அவர் அழகை இன்னும் ஒரு கால் காண்பேனோ

மேல்

@82. அபராத விண்ணப்பம்

மேல்

#1 உலகம் பரவும் பொருளே என் உறவே என்றன் உயிர்க்குயிரே இலகு அம்பரத்தே பரம்பரமாய் இன்ப நடம் செய் எம் இறையே கலகம் பரவும் மனத்தேனைக் கைவிட்டிட நீ கருதுதியோ திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே

மேல்

#2 அன்று ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவு அளித்தாய் இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ குன்று ஓர் அனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் எந்தாய் நன்றோ கருணைப் பெரும் கடலே ஆளாய் இந்த நாயினையே

மேல்

#3 நாய்க்கும் கடையேன் பிழை அனைத்தும் நாடில் தவத்தால் நல்கிய நல் தாய்க்கும் கோபம் உறும் என்னில் யாரே என்-பால் சலியாதார் வாய்க்கும் கருணை_கடல் உடையாய் உன்-பால் அடுத்தேன் வலிந்து எளிய பேய்க்கும் தயவு புரிகின்றோய் ஆள வேண்டும் பேதையையே

மேல்

#4 பேதைப் பருவத்து எனை வலியப் பிடித்து ஆட்கொண்ட பெருமானே போதைக் கழிப்பான் வீண் புரியும் புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல் வாதைப்படும் என் உயிரை உன்றன் மலர்_தாள் முன்னர் மடிவித்தே ஓதைக் கடல் சூழ் உலகத்தே பழி சூழ்விப்பேன் உரைத்தேனே

மேல்

#5 உரைத்தார் சிலர் சில் நாள் கழிய உறுவேம் என்ன உரைத்தவரே நரைத்தார் இறந்தார் அவர்-தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே விரைத் தாள்_மலரைப் பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன் திரைத் தாழ் கடலின் பெரும் பிழையே செய்தேன் என்ன செய்வேனே

மேல்

#6 செய்வேன் தீமை நலம் ஒன்றும் தெரியேன் தெரிந்து தெளிந்தோரை வைவேன் அன்றி வாழ்த்தேன் என் வண்ணம் இந்த வண்ணம் எனில் உய்வேன் என்பது எவ்வாறு என் உடையாய் உய்வேன் உய்வித்தால் நைவேன் அலது இங்கு என் செய்வேன் அந்தோ எண்ணி நலிவேனே

மேல்

#7 எண்ணி நலிவேன் நின் பாதம் எ நாள் அடைவோம் என என்-பால் நண்ணி நலிவைத் தவிராயேல் என் செய்திடுவேன் நாயகனே கண்ணி நலியப் படும் பறவைக் கால் போல் மனக் கால் கட்டுண்ணப் பண்ணி நலம் சேர் திரு_கூட்டம் புகுத எனினும் பரிந்து அருளே

மேல்

#8 பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர் பதப் பணியே புரியும் இனத்தாரொடும் கூடிப் புனிதனாக வேண்டும் எனத் திரியும் அடிமைச் சிறியேனுக்கு இரங்காது இருந்தால் சில் நாள் பின் எரியும் கொடு வாய் நரகத்துக்கு என் செய்வேன் என் செய்வேனே

மேல்

#9 என் செய்திடுவேன் புலை நாயேன் இயற்றும் பிழைகள் எல்லாம் நின் பொன் செய் மலர்_தாள் துணை அந்தோ பொறுத்துக் கருணை புரியாதேல் புன்செய் விளவிப் பயன்_இலியாய்ப் புறத்தில் கிடத்தி என அடியார் வன் செய் உரையில் சிரிப்பார் மற்று அது கண்டு எங்ஙன் வாழ்வேனே

மேல்

#10 வாழா மனத்தின் வழி சென்று வாளா நாளைக் கழிக்கின்ற பாழாம் உலகச் சிறு நடையில் பாவியேனைப் பதிவித்தாய் ஊழாம் எனில் எம் பெருமானே இன்னும் வினையால் ஒதி_அனையேன் ஏழாம் நரகுக்கு ஆளாவேன் அல்லால் புகல் என் எளியேற்கே

மேல்

#11 எளியேன் கருணைத் திரு_நடம் செய் இணைத் தாள்_மலர் கண்டு இதயம் எலாம் களியேன் கருங்கல் பாறை எனக் கிடக்கின்றேன் இக் கடையேனை அளியே பெருக ஆளுதியோ ஆள்கிலாயோ யாது ஒன்றும் தெளியேன் அந்தோ அந்தோ என் செய்வேன் விலங்கில் சிறியேனே

மேல்

#12 சிறியேன் பிழையைத் திருவுளத்தே தேர்ந்து இங்கு என்னைச் சீறுதியோ எறியேம் எனக் கொண்டு இரங்குதியோ இவ்வாறு அவ்வாறு என ஒன்றும் அறியேன் அவல_கடல் அழுந்தி அந்தோ அழுங்கி அயர்கின்றேன் பிறியேன் என்னைப் பிரிக்கினும் பின் துணையும் காணேன் பெருமானே

மேல்

#13 காணேன் நினது திரு_அருளைக் கண்டார்-தமது கழல் தலை மேல் பூணேன் உலகச் சிறு நடையில் போந்து பொய்யே புகன்று அந்தோ வீணே சுழன்று மெலிகின்றேன் என்னே இன்னல் மிகச் சுமக்கும் தூணே என இங்கு எனை விதித்தாய் எந்தாய் யாது சூழ்வேனே

மேல்

#14 சூழ்வேன் நினது கருணை நடம் சூழும் பெரியார்-தமைச் சூழ்ந்து வாழ்வேன் எளியேன் குறிப்பு இந்த வண்ணம் எனது மன_குரங்கோ தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன் அவல_கடலில் சலியாமே வீழ்வேன் என்றால் எம் பெருமான் இதற்கு என் செய்கேன் வினையேனே

மேல்

#15 வினையே பெருக்கிக் கடை நாயேன் விடயச் செருக்கால் மிக நீண்ட பனையே என நின்று உலர்கின்றேன் பாவியேனுக்கு அருளுதியோ நினையே நினையாப் பிழை கருதி நெகிழவிடவே நினைதியோ அனையே அனையாய் திரு_குறிப்பை அறியேன் ஈது என்று அடியேனே

மேல்

#16 அடியேன் முடுகிச் செயும் பிழைகள் அனந்தம் அவற்றை அந்தோ இக் கொடியேன் நினைக்கும்-தொறும் உள்ளம் குமைந்து நடுங்கிக் குலைகின்றேன் செடியேன் மனமோ வினையோ நின் செயலோ செய்கை தெரியேன் வெண் பொடியே திகழும் வடிவு_உடையாய் யாது புரிவேன் புலையேனே

மேல்

#17 புலையே புரியும் மனம் போன போக்கே அல்லால் புண்ணிய நல் நிலையே அறியேன் சிறியேனுக்கு அருளல் அழகோ நிறைந்த குண_ மலையே மணியே மருந்தே என் வாழ்வே எல்லாம்_வல்லோனே கலையே கருதும் கழல்_உடையாய் அருளாமையும் நின் கடன் அன்றே

மேல்

#18 கடம் தாழ் கயம் போல் செருக்கி மயல்_கடலில் அழுந்திக் கடு வினையேன் மடம் தாழ் மனத்தோடு உலைகின்றேன் கரை கண்டு ஏறும் வகை அறியேன் தொடர்ந்தார் எடுப்பார் எனை எடுக்கும் துணை நின் மலர்_தாள் துணை கண்டாய் அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய் ஆணை ஆணை அடியேனே

மேல்

#19 அடியார் இன்பம் அடைகின்றார் அடியேன் ஒருவன் அயர்கின்றேன் படியார் பலரும் பல பேசிச் சிரியாநின்றார் பரந்து இரவும் விடியாநின்றது என் புரிவேன் இன்னும் கருணை விளைத்திலையே கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குண_குன்றே

மேல்

#20 குன்றா நிலை நின்று அருள் அடைந்தார் அன்பர் எல்லாம் கொடியேன் நான் நன்றாம் நெறி சென்று அறியாதே மனம் செல் வழியே நடக்கின்றேன் பொன்றா மணியே அவர்க்கு அருளி என்னை விடுத்தல் புகழ் அன்றே என்றால் எனக்கே நகை தோன்றும் எந்தாய் உளத்துக்கு என் ஆமே

மேல்

#21 என் ஆர்_உயிருக்கு உயிர்_அனையாய் என்னைப் பொருளாய் எண்ணி மகிழ்ந்து அ நாள் அடிமைகொண்டு அளித்தாய் யார்க்கோ வந்த விருந்து எனவே இ நாள் இரங்காது இருக்கின்றாய் எங்கே புகுவேன் என் புரிவேன் நின்னால் அன்றிப் பிறர்-தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே

மேல்

#22 நின்-பால் அடைந்தார் அன்பாலே அடியார் எல்லாம் நெடு வினையேன் வன்பால் மன_பேய்-தன்பாலே வருந்திச் சுழன்று மயர்கின்றேன் தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா முன் பால் அமுத_கடல் அளித்த முதல்வா என்னை முன்னுதியே

மேல்

@83. கலி விண்ணப்பம்

மேல்

#1 செறியாத நெஞ்சக வஞ்சகனேன் இச் சிறு தலத்தே அறியாது அறிந்தவன் போல் சில செய்திடல் ஐய நின் தாள் குறியா தரித்தல் அலது ஆணை மற்று இல்லை எம் கொற்றவனே முறியாது அருள்செய்தியோ தெரியேன் எந்தை முன்னியதே

மேல்

#2 தீது ஒன்றுமே கண்டு அறிந்தது அல்லால் பலன் சேர நலம் யாது ஒன்றும் நான் கண்டு அறியேன் அறிந்தவன் என்ன இங்கே போது ஒன்று போக்குகின்றேன் பிழை யாவும் பொறுத்து அருள்வாய் மாது ஒன்று பாகத் துணை அன்றி நல் துணை மற்று இலையே

மேல்

#3 எல்லாம் தெரிந்த இறைவா நின் தண் அருள் எய்துகிலாப் பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்து அருள்வாய் கல்லா மனக் கடையாலே கடைவைத்துக் கண்டது துன்பு அல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பம் ஆவதுவே

மேல்

#4 மண்ணுடையாரிடை வாளா மனம் செல வைத்தது அலால் எண்ணுடையாரிடை எய்தி நின் தாள்_மலர் ஏத்துகிலேன் புண்ணுடையாரின் புலம்புகின்றேனைப் பொறுத்து அருள் முக் கண்_உடையாய் கழல் கால்_உடையாய் மணி_கண்டத்தனே

மேல்

#5 தாழாத துன்பச் சமுத்திரத்தே இத் தனி அடியேன் வீழாத வண்ணம் கருணைசெய்வாய் என்னை வேண்டி அ நாள் ஊழாம் வினை தவிர்த்து ஆண்டனையே என்_உடையவனே வாழா வகை எனை இ நாள் விடுத்தல் வழக்கு அலவே

மேல்

#6 ஊன் செய்த வெம் புலைக் கூட்டின் பொருட்டு இங்கு உனை மறந்து நான் செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன் ஏன் செய்தனை எனக் கேளாது மேலும் இரங்குகின்றாய் வான் செய்த நாத நின் தண் அருள் வண்ணம் என் வாழ்த்துவனே

மேல்

#7 ஆயாது நான் செயும் குற்றங்களைக் கண்டு அறியில் பெற்ற தாய் ஆயினும் பொறுப்பாள்_அல ஆங்கு அவை சற்று அலவே ஓயாது செய்யும்-தொறும் பொறுத்து ஆளும் உனை எளியேன் வாயால் உரைக்கவும் மாட்டேன் அந்தோ என்ன வன்மை இதே

மேல்

#8 ஒன்றும் தெரிந்திட மாட்டாப் பருவத்து உணர்வு தந்தாய் இன்றும் தருதற்கு இறைவா நின் உள்ளம் இயைதி-கொலோ கன்றும் கருத்தொடு மாழ்குகின்றேன் உன் கழல் அடிக்கே துன்றும் கருத்து அறியேன் சிறியேன் என் துணிவு அதுவே

மேல்

#9 ஆஆ என எனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட தேவா என் குற்றம் திருவுளத்து எண்ணில் என் செய்திடுவேன் வாவா என அழைப்பார் பிறர் இல்லை மறந்தும் என்றன் நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே

மேல்

#10 பள்ளத்திலே செலும் நீர் போல் என் உள்ளம் பரப்பது அலால் எள்ளத்திலே சிறிது ஆயினும் நான் செல்வது இல்லை எந்தாய் கள்ளத்திலே சொல்லுகின்றேன்_அல நின் கழல் இணை என் உள்ளத்திலே நின்ற ஆங்கு அவை காண்க உடையவனே

மேல்

@84 கருணை விண்ணப்பம்

மேல்

#1 நல்லார்க்கு எல்லாம் நல்லவன் நீ ஒருவன் யாண்டும் நாய்_அடியேன் பொல்லார்க்கு எல்லாம் பொல்லவன் நான் ஒருவன் இந்தப் புணர்ப்பதனால் எல்லாம் உடையாய் நினக்கு எதிர் என்று எண்ணேல் உறவு என்று எண்ணுக ஈது அல்லால் வழக்கு என் இருமைக்கும் பொதுமை அன்றோ அருளிடமே.

மேல்

#2 இடமே பொருளே ஏவலே என்றென்று எண்ணி இடர்ப்படும் ஓர் மடமே உடையேன்-தனக்கு அருள் நீ வழங்கல் அழகோ ஆநந்த நடமே உடையோய் நினை அன்றி வேற்றுத் தெய்வம் நயவேற்குத் திடமே அருள்-தான் வழங்காது தீர்த்தல் அழகோ தெரிப்பாயே.

மேல்

#3 தெரித்தாலன்றிச் சிறிதேனும் தெரிவு ஒன்று இல்லாச் சிறியேனைப் பிரித்தாய் கூடும் வகையறியும் பெற்றி என்னே பிறை முடி மேல் தரித்தாய் அடியேன் பிழை பொறுக்கத் தகும் காண் துன்பம் தமியேனை அரித்தால் கண்டு இங்கு இரங்காமை அந்தோ அருளுக்கு அழகேயோ.

மேல்

#4 அருள் ஓர்சிறிதும் உதவுகிலாய் அதனைப் பெறுதற்கு அடியேன்-பால் தெருள் ஓர்சிறிதும் இலையே என் செய்கேன் எங்கள் சிவனேயோ மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ பொருளோர் இடத்தே மிடிகொண்டோர் புகுதல் இன்று புதிது அன்றே.

மேல்

#5 புதியேன் அல்லேன் நின் அடிமைப் பொருத்தம் இல்லேன்_அல்லேன் யான் மதியேன் வேற்றுத் தேவர்-தமை வந்து அங்கு அவர்-தாம் எதிர்ப்படினும் துதியேன் நின்னை விடுவேனோ தொண்டனேனை விடல் அழகோ நதி ஏர் சடையோய் இன் அருள் நீ நல்கல் வேண்டும் நாயேற்கே.

மேல்

#6 நாயேன் துன்ப_கடல் வீழ்ந்து நலிதல் அழகோ நல்லோர்க்கு இங்கு ஈயேன் ஒன்றும் இல்லேன் நான் என் செய்கேனோ என்னுடைய தாயே_அனையாய் சிறிது என் மேல் தயவு புரிந்தால் ஆகாதோ சேயேன்-தன்னை விடுப்பாயோ விடுத்தால் உலகம் சிரியாதோ.

மேல்

#7 சிரிப்பார் நின் பேர் அருள்_பெற்றோர் சிவனே சிவனே சிவனேயோ விரிப்பார் பழிச்சொல் அன்றி எனை விட்டால் வெள்ளை_விடையோனே தரிப்பாய் இவனை அருளிடத்தே என்று நின்று தகும் வண்ணம் தெரிப்பார் நினக்கும் எவர் கண்டாய் தேவர் தேடற்கு அரியானே.

மேல்

#8 அரிய பெருமான் எளியோமை ஆளும் பெருமான் யாவர்கட்கும் பெரிய பெருமாள் சிவபெருமான் பித்த_பெருமான் என்று உன்னை உரிய பெரு மா தவர் பழிச்சல் உண்மை எனில் என் உடையானே கரிய பெரு மால் உடையற்கும் அருளல் உன்றன் கடன் அன்றே.

மேல்

#9 அன்றும் சிறியேன் அறிவு அறியேன் அது நீ அறிந்தும் அருள்செய்தாய் இன்றும் சிறியேன் அறிவு அறியேன் இது நீ அறிந்தும் அருளாயேல் என்றும் ஒரு தன்மையன் எங்கள் இறைவன் என மா மறைகள் எலாம் தொன்று மொழிந்த தூ_மொழி-தான் சூது மொழியோ சொல்லாயே.

மேல்

#10 சொல்லற்கு அரிய பெரிய பரஞ்சுடரே முக்கண் சுடர்க் கொழுந்தே மல்லல் கரு மால் அயன் முதலோர் வழுத்தும் பெரும் சீர் மணி_குன்றே புல்லற்கு அரிதாம் எளியேன்-தன் பிழைகள் யாவும் பொறுத்து இந்த அல்லல்_கடல்-நின்று எனை எடுத்தே அருள்வாய் உன்றன் அருள் நலமே.

மேல்

@85. அடிமைப் பதிகம்

மேல்

#1 ஆள்வினையால் பயனுறுவார் அசதியாட அந்தோ இப் புலை நாயேன் அன்பால் நின்-பால் வேள்வி செயும் பெரும் தவர்க்கே வேள்வி செய்ய வேண்டும் இதற்கு எம்பெருமான் கருணைசெய்யும் நாள் விளைவில் சில் நாளே இது-தான் உண்மை நம்பும் என நவின்று உனையே நம்பிநின்றேன் கேள்வி இலாத் துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே

மேல்

#2 கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலாக் குணத்தவர்-பால் கிட்டுகின்றோய் ஏட்டில் ஆயிரம்கோடி எனினும் சற்றும் எழுத முடியாக் குறை கொண்டு இளைக்கின்றேன் நான் சேட்டியாவிடினும் எனைச் சேட்டித் தீர்க்கும் சிறு மனத்தால் செய் பிழையைத் தேர்தியாயில் நாட்டில் ஆர் காக்க வல்லார் என்னை எந்தாய் நாள் கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டும்

மேல்

#3 வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் தூண்டாத மணி_விளக்கே பொதுவில் ஆடும் சுடர்க் கொழுந்தே என் உயிர்க்குத் துணையே என்னை ஆண்டு ஆறு_மூன்று ஆண்டில் ஆண்டுகொண்ட அருள்_கடலே என் உள்ளத்து அமர்ந்த தேவே ஈண்டு ஆவ எனச் சிறிய அடியேன் உள்ளத்து எண்ணம் அறிந்து அருளாயேல் என் செய்கேனே

மேல்

#4 என்னை அறியாப் பருவத்து ஆண்டுகொண்ட என் குருவே எனக்கு உரிய இன்பமே என் றன்னை இன்று விடத் துணிந்தாய் போலும் அந்தோ தகுமோ நின் பெரும் கருணைத் தகவுக்கு எந்தாய் உன்னை அலாது ஒருவர்-தம்பால் செல்லேன் என்னை_உடையானே என் உள்ளத்துள்ளே நின்று முன்னை வினைப் பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய் முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவது என்னே

மேல்

#5 என் நாணை அறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திடத் துணிந்தாய் என்னே எந்தாய் நின் ஆணை நின்னை அலாது ஒன்றும் வேண்டேன் நீ இதனை அறிந்திலையோ நினைப்பிக்கின்ற மன்னா என் ஆர்_உயிர்க்கு வாழ்வே என் கண்மணியே என் குருவே என் மருந்தே இன்னும் உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன் என் உள்ளம் அறிந்து உதவுதியோ உணர்கிலேனே

மேல்

#6 உள்ளம் அறிந்து உதவுவன் நம்_உடையான் எல்லாம் உடையான் மற்று ஒரு குறை இங்கு உண்டோ என்னக் கள்ள மனத்தேன் அந்தோ களித்திருந்தேன் கைவிடுவார் போல் இருந்தாய் கருணை_குன்றே எள்ளலுறப்படுவேன் இங்கு ஏது செய்வேன் எங்கு எழுகேன் யார்க்கு உரைப்பேன் இன்னும் உன்றன் வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மனத் துயர் போம் வகை அருள மதித்திடாயே

மேல்

#7 வகை அறியேன் சிறியேன் சன்மார்க்கம் மேவும் மாண்பு உடைய பெரும் தவத்தோர் மகிழ வாழும் தகை அறியேன் நலம் ஒன்றும் அறியேன் பொய்ம்மை-தான் அறிவேன் நல்லோரைச் சலம்செய்கின்ற மிகை அறிவேன் தீங்கு என்ப எல்லாம் இங்கே மிக அறிவேன் எனினும் எனை விடுதியாயில் பகை அறிவேன் நின் மீதில் பழிவைத்து இந்தப் பாவி உயிர்விடத் துணிவேன் பகர்ந்திட்டேனே

மேல்

#8 இட்ட வகை வாழ்கின்றேன் எந்தாய் நானே எண்ணுகிலேன் எண்ணுவித்தால் என் செய்வேன் நின் மட்டு அலர் சேவடி ஆணை நினைத்த வண்ணம் வாழ்விக்க வேண்டும் இந்த வண்ணம் அல்லால் துட்டன் என விடத் துணிதியாயில் அந்தோ சூறையுறு துரும்பு எனவும் சுழன்று வானில் விட்ட சிலை எனப் பவத்தில் விழுவேன் அன்றி வேறு எது செய்வேன் இந்த விழலனேனே

மேல்

#9 விழற்கு இறைத்து மெலிகின்ற வீணனேன் இ வியன் உலகில் விளைத்திட்ட மிகைகள் எல்லாம் அழற்கு இறைத்த பஞ்சு எனவே ஆக்கி நீயே ஆட்கொண்டால் தடுப்பவர் இங்கு ஆரே ஐயா கழற்கு அடிமை என உலகம் அறிய ஒன்றும் கருத அறியாச் சிறு பருவத்து என்னை ஆண்டு நிழல் கருணை அளித்தாயே இ நாள் நீ கை நெகிழவிட்டால் என் செய்வேன் நிலை_இலேனே

மேல்

#10 நிலை அறியேன் நிலை அறிந்து பெற்ற நல்லோர் நெறி அறியேன் எனினும் உன்றன் நேசம் அன்றி இலை அறியேன் மற்றவரைக் கனவிலேனும் எள்துணை ஓர் துணை எனவும் எண்ணுறேன் நல் கலை அறியேன் கருத்தில் இருந்து அறிவித்தாய் நான் கண்டு அறிந்தேன் எனினும் அவை காட்ட வேண்டும் அலை அறியா அருள்_கடலே அமுதே தேனே அம்பலத்து என் குருவே நான் அடிமை ஆளே

மேல்

@86. உள்ளப் பஞ்சகம்

மேல்

#1 நீர் ஆர் சடையது நீள் மால் விடையது நேர் கொள் கொன்றைத் தார் ஆர் முடியது சீர் ஆர் அடியது தாழ்வு அகற்றும் பேர் ஆயிரத்தது பேரா வரத்தது பேர்_உலகம் ஓரா வளத்தது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

மேல்

#2 மட்டுப்படாதது மா மறையாலும் மலப் பகையால் கட்டுப்படாதது மால் ஆதியர்-தம் கருத்தினுக்கும் தட்டுப்படாதது பார் முதல் பூதத் தடைகளினால் ஒட்டுப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

மேல்

#3 பேதப்படாதது பற்பல கற்பங்கள் பேர்ந்திடினும் சேதப்படாதது நன்று இது தீது இது எனச் செய்கைகளால் ஏதப்படாதது உள் எட்டப்படாதது இங்கு யாவர்கட்கும் ஓதப்படாதது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

மேல்

#4 தண் ஆர் அளியது விண் நேர் ஒளியது சாற்று மறைப் பண் ஆர் முடிவது பெண்ணார் வடிவது பண்பு உயர் தீக் கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள ஒண்ணா நிலையது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

மேல்

#5 பிறவா நெறியது பேசா நிலையது பேசில் என்றும் இறவா உருவது உள் ஏற்றால் வருவது இருள் அகன்றோர் மறவாது உடையது மாது ஓர் புடையது வாழ்த்துகின்றோர் உறவாய் இருப்பது ஒன்று உண்டே முக்கண்ணொடு என் உள்ளகத்தே.

மேல்

@87. சரணப் பதிகம்

மேல்

#1 மதி வார் சடை மா மணியே அருள் வள்ளலே நல் நிதியே திரு அம்பலத்து ஆடல்செய் நித்தனே நின் துதியேன் எனினும் உனை அன்றித் துணை_இலேன் என் பதியே எனது எண்ணம் பலிக்கும்படிக்கு அருளே

மேல்

#2 படி மேல் அடியேன் உனை அன்றி ஓர் பற்று_இலேன் என் முடி மேல் அடி வைத்து அருள்செய்திட முன்னு கண்டாய் கொடி மேல் விடை நாட்டிய எண்_குண_குன்றமே பொடி மேல் விளங்குந் திரு_மேனி எம் புண்ணியனே

மேல்

#3 புண்ணாம் மனம் சஞ்சலித்து உள்ளம் புலர்ந்து நின்றேன் அண்ணா எனை ஆட்கொள வேண்டும் அகற்றுவாயேல் கண் ஆர் களைகண் பிறிது ஒன்று இலை கள்ளனேனை எண்ணா வினை என் செயுமோ இதற்கு என் செய்வேனே

மேல்

#4 செய்வேன் அவம் அன்றித் தவம் ஒன்றும் செய்து அறியேன் நைவேன் பிழை யாவும் பொறுத்து அருள் நல்குவாயேல் உய்வேன் அலது உய் வகை இன்று மன்று ஓங்குகின்றாய் வைவேன் துதிப்பேன் உனை என்றும் மறந்திலேனே

மேல்

#5 மறவாது உனை வாழ்த்தும் மெய் அன்பரை மா நிலத்தே இறவா வகை ஆட்கொண்டு அருளிய ஈசனே மெய் உறவு ஆகிய நின் பதம் அன்றி ஒன்று ஓர்கிலேன் நான் பிறவா நெறி தந்து அருள் என்பது என் பேசிடாயே

மேல்

#6 என்னே இனும் நின் அருள் எய்திலன் ஏழையேனை முன்னே வலிந்து ஆட்கொண்டது இன்று முனிந்ததேயோ பொன் ஏர் அணி அம்பலத்து ஆடிய புண்ணியா என் அன்னே அரசே அமுதே அருள் ஆண்டவனே

மேல்

#7 ஆண்டாய் எனை ஏழ் பிறப்பும் உனை அன்றி ஒன்றும் தீண்டாது எனது உள்ளம் என்றால் என் சிறுமை தீர்க்க வேண்டாது அயலார் எனக் காண்பது என் மெய்யனே பொன்_ ஆண்டான் திரு எய்த நஞ்சைக் களம் நாட்டினோயே

மேல்

#8 நாட்டார் நகைசெய்வர் என்றோ அருள் நல்கிலாய் நீ வீட்டார் நினை என் நினைப்பார் எனை மேவிலாயேல் தாள் தாமரை அன்றித் துணை ஒன்றும் சார்ந்திலேன் என் மாட்டாமை அறிந்து அருள்வாய் மணி மன்று_உளானே

மேல்

#9 மன்று ஆடிய மா மணியே தனி வானவா ஓர் மின் தாழ் சடை வேதியனே நினை வேண்டுகின்றேன் பொன்றாத மெய் அன்பருக்கு அன்பு உளம் பூண்டு நின்று நன்றாய் இரவும்_பகலும் உனை நாடுமாறே

மேல்

#10 மாறா மன மாயையினால் மதி மாழ்கி மாழ்கி ஏறாமல் இறங்குகின்றேன் இதற்கு என் செய்வேன் தேறா உளத்தேன்-தனை ஏறிடச்செய்தி கண்டாய் பேறா மணி அம்பலம் மேவிய பெற்றியானே

மேல்

#11 ஆன் ஏறி வந்து அன்பரை ஆட்கொளும் ஐயனே எம் மானே மணி மன்றில் நடம் புரி வள்ளலே செம் தேனே அமுதே முதல் ஆகிய தெய்வமே நீ- தானே எனை ஆண்டு அருள்வாய் நின் சரண் சரணே

மேல்

@88. நெஞ்சொடு நெகிழ்தல்

மேல்

#1 சீர் தருவார் புகழ்ப் பேர் தருவார் அருள் தேன் தருவார் ஊர் தருவார் மதியும் தருவார் கதியும் தருவார் ஏர் தருவார் தரு ஆர் ஒற்றியூர் எம் இறைவர் அன்றி யார் தருவார் நெஞ்சமே இங்கும் அங்கும் இயம்புகவே.

மேல்

#2 வாடக் கற்றாய் இஃது என்னை நெஞ்சே இசை வாய்ந்த சிந்து பாடக் கற்றாய்_இலை பொய் வேடம் கட்டிப் படி மிசைக் கூத்து ஆடக் கற்றாய்_இலை அந்தோ பொருள் உனக்கு ஆர் தருவார் நீடக் கற்றார் புகழ் ஒற்றி எம்மானை நினை இனியே.

மேல்

#3 சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

மேல்

#4 நேரா அழுக்குத் துணியாகில் உன்றனை நேரில் கண்டும் பாராதவர் என நிற்பார் உடுத்தது பட்டு எனிலோ வாராதிருப்பது என் வாரும் என்பார் இந்த வஞ்சகர்-பால் சேராது நல் நெஞ்சமே ஒற்றியூரனைச் சேர் விரைந்தே.

மேல்

#5 பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார் நல் பொருள் பயனாம் மெய் விரிப்பார்க்கு இரு கை விரிப்பார் பெட்டி மேவு பணப் பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி மை விரிப்பாய் மனமே என்-கொலோ நின் மதியின்மையே.

மேல்

#6 வாழைக் கனி உணமாட்டாது வானின் வளர்ந்து உயர்ந்த தாழைக் கனி உணத் தாவுகின்றோரில் சயிலம் பெற்ற மாழைக் கனி திகழ் வாமத்து எம்மான் தொண்டர்-மாட்டு அகன்றே ஏழைக் கல் நிகர் உளத்தினர்-பால் சென்றது என்னை நெஞ்சே.

மேல்

#7 காய் ஆர் சரிகைக் கலிங்கம் உண்டேல் இக் கலிங்கம் கண்டால் நீ யார் நின் பேர் எது நின் ஊர் எது நின் நிலை எது நின் தாயார் நின் தந்தை எவன் குலம் ஏது என்பர் சாற்றும் அ வல் வாயார் இடம் செலல் நெஞ்சே விடைதர வல்லை அன்றே.

மேல்

#8 துட்ட வஞ்சக நெஞ்சகமே ஒன்று சொல்லக் கேள் கடல் சூழ் உலகத்திலே இட்டம் என்-கொல் இறையளவேனும் ஓர் இன்பம் இல்லை இடைக்கிடை இன்னலால் நட்டம் மிக்குறல் கண்டுகண்டு ஏங்கினை நாணுகின்றிலை நாய்க்கும் கடையை நீ பட்ட வன்மைகள் எண்ணில் எனக்கு உடல் பதைக்கும் உள்ளம் பகீல் என ஏங்குமே.

மேல்

#9 பெரிய பொருள் எவைக்கும் முதல் பெரும் பொருளாம் அரும் பொருளைப் பேசற்கொண்ணாத் துரிய நிலை அநுபவத்தைச் சுகமயமாய் எங்கும் உள்ள தொன்மை-தன்னை அரிய பரம்பரமான சிதம்பரத்தே நடம் புரியும் அமுதை அந்தோ உரிய பரகதி அடைதற்கு உன்னினையேல் மனனே நீ உய்குவாயே.

மேல்

#10 சொல் நிலைக்கும் பொருள் நிலைக்கும் தூரியதாய் ஆனந்தச் சுடராய் அன்பர் தன் நிலைக்கும் செல் நிலைக்கும் அண்மையதாய் அருள் பழுக்கும் தருவாய் என்றும் முன் நிலைக்கும் நில் நிலைக்கும் காண்ப அரிதாய் மூவாத முதலாய்ச் சுத்த நல் நிலைக்கும் நிலையாய பசுபதியை மனனே நீ நவின்றிடாயே.

மேல்

#11 மண் முகத்தில் பல் விடய வாதனையால் மனனே நீ வருந்தி அந்தோ புண் முகத்தில் சுவை விரும்பும் எறும்பு என வாளா நாளைப் போக்குகின்றாய் சண் முகத்து எம்பெருமானை ஐங்கரனை நடராஜத் தம்பிரானை உள் முகத்தில் கருதி அநுபவமயமாய் இருக்கிலை நின் உணர்ச்சி என்னே.

மேல்

#12 மால் எடுத்துக்கொண்டு கரு மால் ஆகித் திரிந்தும் உளம் மாலாய்ப் பின்னும் வால் எடுத்துக்கொண்டு நடந்து அணி விடையாய்ச் சுமக்கின்றான் மனனே நீ அக் கால் எடுத்துக்கொண்டு சுமந்திட விரும்புகிலை அந்தோ கருதும் வேதம் நால் எடுத்துக்கொண்டு முடி சுமப்பதையும் அறிகிலை நின் நலம்-தான் என்னே.

மேல்

#13 உலகம் ஏத்திநின்று ஓங்க ஓங்கிய ஒளி கொள் மன்றிடை அளி கொள் மா நடம் இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை கலகமே கனிந்தாய் என்னை காண் நின் கடைக் கருத்தே.

மேல்

@89. பொதுத் தனித் திருவெண்பா

மேல்

#1 வந்திக்கும் மெய் அடியார் மால் அற்ற ஓர் மனத்தில் சந்திக்கும் எங்கள் சயம்புவே பந்திக்கும் வன் மலக் கட்டு எல்லாம் வலி கெட்டு அற நினது நின்மலக் கண் தண் அருள்-தான் நேர்

மேல்

#2 சங்கரா முக்கண் சயம்புவே தாழ் சடை மேல் பொங்கு அராத் திங்கள் பொலிந்தோனே வெம் கரா வாய்-நின்று பிள்ளை வரப் பாடும் வன் தொண்டர்க் காய் நின்று சந்து உரைத்தது ஆர்

மேல்

#3 நீலக் களம் கொண்ட நீடு ஒளியே நீள் கங்கை கோலச் சடைக்கு அணிந்த கோமளமே ஞாலத்தில் அந்தோ சிறியேன் அருள் இன்றி வாடுவது சந்தோடமோ நின்றனக்கு

மேல்

#4 நான் சிறியேன் என்னினும் இ நானிலத்தில் நான் செய் பிழை- தான் சிறிதோ அன்று உலகில் தான் பெரிதே மான்_கரத்தோய் அங்ஙனமேனும் உன் அருள் பெருமைக்கு இ பெருமை எங்ஙனம் என்று உள்ளம் எழும்

மேல்

#5 ஆவித் துணையே என் ஆர்_அமுதே நின் வடிவைப் பாவித்து உள் நையேன் இப் பாவியேன் சேவித்து வாழ்த்தேன் நின் பொன் அடியில் வந்து என் தலை குனித்துத் தாழ்த்தேன் என் செய்தேன் தவம்

மேல்

#6 உன்னை நினைந்து இங்கே உலாவுகின்றேன் அன்றி எந்தாய் பின்னை நினைப்பு ஒன்றும் பெற்றிலேன் என்னை விடாதே நின் பொன் அடியை மேவார் சேர் துன்பம் கொடாதே எனை ஏன்றுகொள்

மேல்

#7 என் அரசே நின் அடிக் கீழ் என் இடரை நீக்கு என நான் சொன்னது அலால் தாயுடனும் சொன்னேனோ இன்னும் இந்தத் துன்பச் சுமையைச் சுமக்க முடியாது என்னால் அன்பர்க்கு அருள்வோய் அருள்

மேல்

#8 அன்னே என் அப்பா என் ஆர்_உயிர்க்கு ஓர் ஆதரவே என்னே நின் உள்ளம் இரங்கிலையே பொன்னே உடையாரிடை என் உளம் நொந்து வாடிக் கடையேன் படும் துயரைக் கண்டு

மேல்

#9 பகுதி தகுதி விகுதி எனும் பாட்டில் இகலில் இடையை இரட்டித் தகவின் அருச்சித்தால் முன்னாம் அது கடையாம் கண்டீர் திரு_சிற்சபையானைத் தேர்ந்து

மேல்

#10 தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம் தாதா தா என்று உலகில்-தான் அலைந்தோம் போதாதா நந்தா மணியே நமச்சிவாயப் பொருளே எந்தாய் எனப் புகழவே

மேல்

#11 பொய் கண்டாய் காமப் புது மயக்கில் போய் உழலக் கைகண்டாய் என்ன பலன் கண்டாயே மெய் கண்ட பொன்னே_அனையார்-பால் போய் வணங்கக் கற்றிலையோ என்னே நின் தன்மை மனமே

மேல்

#12 இ வழியில் செல்லாதே என்_உடையான்-தன் அடி சேர் அ வழியில் செல் என்று அடிக்கடிக்குச் செவ் வழியில் சொன்னாலும் கேட்கிலை நீ துட்ட மனமே உனக்கு இங்கு என்னால் உறவு ஏது இனி

மேல்

#13 கால்வாங்கிய உள் கதவம் கொளும் அகத்தின் பால் வாங்கிய கால் பரம்பரனே மால் வாங்கு அரி தாரம் ஊண் ஆதியாம் மயல்கொண்ட ஏழைப் பெரிது ஆர ஓர் மொழியைப் பேசு

மேல்

@90. திருக்குறிப்பு நாட்டம்

மேல்

#1 ஆற்றுக்கே பிறைக் கீற்றுக்கே சடை ஆக்கிச் சேவடி தூக்கி ஆர்_உயிர்ப் பேற்றுக்கே நடிப்பாய் மணி மன்றில் பெருந்தகையே சோற்றுக்கே இதம் சொல்லிப் பேதையர் சூழல்வாய்த் துயர் சூழ்ந்து மேல் திசைக் காற்றுக்கே கறங்காய்ச் சுழன்றேனைக் கருதுதியோ

மேல்

#2 ஞாலத்தார்-தமைப் போலத் தாம் இங்கு நண்ணுவார் நின்னை எண்ணுவார் மிகு சீலத்தார் சிவமே எவையும் எனத் தேர்ந்தனரால் சாலத்தான் கொடும் சாலத்தால் அத்தைத் தாவி நான் பெரும் பாவி ஆயினன் ஏலத்து ஆர் குழலாள் இடத்தாய் எனை எண்ணுதியோ

மேல்

#3 அண்ணலே நின்னை எண்ணலேன் என்னை ஆண்டுகொண்டனை மீண்டும் விண்டனன் நண்ணலே அறியேன் கடையேன் சிறு நாய்_அனையேன் பெண்_அலேன் இயல் ஆண்_அலேன் அலிப் பேயனேன் கொடும் பேதையேன் பிழை கண்ணலே புரியாது இனும் மீட்கக் கருதுதியோ

மேல்

#4 வல்லி ஆனந்தவல்லி சேர் மணவாளனே அருளாளனே மலை வில்லியாய் நகைத்தே புரம் வீழ்த்த விடையவனே புல்லி யான் புலைப் போகம் வேட்டு நின் பொன் அடித் துணைப் போகம் போக்கினேன் இல்லி ஆர் கடம் போல் இருந்தேன் எனை எண்ணுதியோ

மேல்

@91. தனித் திருப் புலம்பல்

மேல்

#1 திங்கள் விளங்கும் சடைத் தருவைத் தீம் பால் சுவையைச் செந்தேனைச் செங்கை மருவும் செழும் கனியைச் சீர் ஆர் முக்கண் செங்கரும்பை மங்கை மலையாள் மணந்த பெரு வாழ்வைப் பவள மலை-தன்னை எங்கள் பெருமான்-தனை அந்தோ என்னே எண்ணாது இருந்தேனே

மேல்

#2 அன்பர் இதய_மலர்க் கோயில் அமர்ந்த பரமானந்தத்தைத் துன்பம் அகலச் சுகம் அளிக்கும் தூய துணையைச் சுயஞ்சுடரை வன்பரிடத்தின் மருவாத மணியை மணி ஆர் மிடற்றானை இன்ப நிறைவை இறையோனை என்னே எண்ணாது இருந்தேனே

மேல்

#3 ஒருமைப் பயனை ஒருமை நெறி உணர்ந்தார் உணர்வின் உள்ளுணர்வைப் பெருமைக் கதியைப் பசுபதியைப் பெரியோர் எவர்க்கும் பெரியோனை அருமைக் களத்தில் கருமை அணி அம்மான்-தன்னை எம்மானை இருமைப் பயனுந் தருவானை என்னே எண்ணாது இருந்தேனே

மேல்

#4 கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியைக் கண்_நுதலை மறையோன் நெடுமாற்கு அரிய சிவ_மலையை அலை இல் வாரிதியைப் பொறையோர் உள்ளம் புகுந்து ஒளிரும் புனித ஒளியைப் பூரணனாம் இறையோன்-தன்னை அந்தோ நான் என்னே எண்ணாது இருந்தேனே

மேல்

@92. பரம ராசியம்

மேல்

#1 விதி எலாம் விலக்கு என விலக்கிடுவேன் விலக்கு எலாம் கொண்டு விதி என விதிப்பேன் நிதி எலாம் பெற நினைத்து எழுகின்றேன் நிலம் எலாம் கொளும் நினைப்பு உறுகின்றேன் எதி எலாம் வெறுத்திட்ட சிற்றூழை இன்பு எலாம் கொள எண்ணிநின்று அயர்வேன் பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசியப் பரம்பரப் பொருளே

மேல்

#2 செடியனேன் கடும் தீமையே புரிவேன் தெளிவு_இலேன் மனச் செறிவு என்பது அறியேன் கொடியனேன் கொடும் கொலை பயில் இனத்தேன் கோளனேன் நெடு நீள வஞ்சகனேன் அடியனேன் பிழை அனைத்தையும் பொறுத்து உன் அன்பர்-தங்களோடு இன்புற அருள்வாய் படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசியப் பரம்பரப் பொருளே

மேல்

@93. திருப்புகழ்ச்சி

மேல்

#1 திருவுளம் தெரியேன் திகைப்புறுகின்றேன் சிறியரில் சிறியனேன் வஞ்சக் கரு உளக் கடையேன் பாவியேன் கொடிய கல்_மன குரங்கு_அனேன் அந்தோ வெருவுறுகின்றேன் அஞ்சல் என்று இன்னே விரும்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் மருவும் மா கருணைப் பெரும் கடல் அமுதே வள்ளலே என் பெரு வாழ்வே

மேல்

#2 தாயும் தந்தையும் தெய்வமும் குருவும் தாங்குகின்றது ஓர் தலைவனும் பொருளும் ஆயும் இன்பமும் அன்பும் மெய் அறிவும் அனைத்தும் நீ என ஆதரித்து இருந்தேன் ஏயும் என்னளவு இரக்கம் ஒன்று இலையேல் என் செய்வேன் இதை யார்க்கு எடுத்துரைப்பேன் சேயும் நின் அருள் நசையுறும் கண்டாய் தில்லை மன்றிடைத் திகழ் ஒளி விளக்கே

மேல்

#3 அருள் பழுத்து ஓங்கும் கற்பகத் தருவே அருள் மருந்து ஒளிர் குண_குன்றே அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே அருள் ஒளி வீசும் அரும்_பெறல் மணியே அருள் சுவை கனிந்த செம்பாகே அருள் மணம் வீசும் ஒரு தனி மலரே அருள் மயமாம் பரசிவமே

மேல்

@94. தனித் திரு விருத்தம்

மேல்

#1 நீர் பூத்த வேணியும் ஆனந்தம் பூத்து நிறை_மதியின் சீர் பூத்து அமுத இளநகை பூத்த திரு_முகமும் பார் பூத்த பச்சைப் பசும் கொடி பூத்த செம்பாகமும் ஓர் கார் பூத்த கண்டமும் கண் பூத்த காலும் என் கண் விருந்தே

மேல்

#2 வீழாக ஞான்ற செவ் வேணிப் பிரான் என் வினை இரண்டும் கீழாக நான் அதன் மேலாக நெஞ்சக் கிலேசம் எல்லாம் பாழாக இன்பம் பயிராக வாய்க்கில் அப்பால் பிறவி ஏழாக அன்றி மற்று எட்டாக இங்கு என்னை என் செயுமே

மேல்

#3 ஆயிரம் கார் முகில் நீர் விழி_நீர் தர ஐய நின்-பால் சேய் இரங்கார் எனக்கு என்றே நின் பொன்_பதம் சிந்திக்கின்றேன் நீ இரங்காய் எனில் என் செய்குவேன் இ நிலத்தில் பெற்ற தாய் இரங்காள் என்பது உண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே

மேல்

#4 செம்பவளத் தனிக் குன்றே அருளானந்தச் செழும் கனியே முக்கண் உடைத் தேவே மூவா அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே என் ஆர்_உயிர்க்கு ஓர் அரணம் ஆகும் சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க வம்பு அவிழ் மென் குழல் ஒரு பால் விளங்க ஓங்கும் மழ விடை மேல் வரும் காட்சி வழங்குவாயே

மேல்

#5 நீடுகின்ற மா மறையும் நெடுமாலும் திசைமுகனும் நிமல வாழ்க்கை நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும் தேட அருள் நாட்டம் கொண்டு பாடுகின்ற மெய் அடியர் உளம் விரும்பி ஆநந்தப் படிவம் ஆகி ஆடுகின்ற மா மணியை ஆர்_அமுதை நினைந்துநினைந்து அன்புசெய்வாம்

மேல்

#6 மறை முடி விளக்கே போற்றி மாணிக்க_மலையே போற்றி கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி பிறை முடிச் சடை கொண்டு ஓங்கும் பேர்_அருள் குன்றே போற்றி சிறை தவிர்த்து எனை ஆட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி

மேல்

#7 செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன் உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேல் உறும்-கொல் என்று உலைந்தேன் மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுகேன் புலையனேன் புகல் அறியேனே

மேல்

#8 நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்து அழுகேனோ நிமலானந்தக் கதியை இகழ்ந்து இருள் விழைந்த விதியை நினைந்து அழுகேனோ கண் போல் வாய்ந்த பதியை உனைப் பாடாத பாட்டை நினைந்து அழுகேனோ படிற்று நெஞ்சச் சதியை நினைந்து அழுகேனோ யாது குறித்து அழுகேன் இத் தமியனேனே

மேல்

#9 தாய் தடை என்றேன் பின்னர்த் தாரமே தடை என்றேன் நான் சேய் தடை என்றேன் இந்தச் சிறு தடை எல்லாம் தீர்ந்தும் தோய் தடைச் சிறியேன் இன்னும் துறந்திலேன் எனைத் தடுக்க ஏய் தடை யாதோ எந்தாய் என் செய்கேன் என் செய்கேனே

மேல்

#10 எண்_கடந்த உயிர்கள்-தொறும் ஒளியாய் மேவி இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே நின்றன் விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின் அருளை விழைந்திலேன் நான் பெண் கடந்த மயல் எனும் ஓர் முருட்டுப் பேயால் பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன் கண் கடந்த குருட்டு ஊமர் கதை போல் நின் சீர் கண்டு உரைப்பல் என்கேனோ கடையனேனே

மேல்

#11 மின்னைப் போல் இடை மெல்லியலார் என்றே விடத்தைப் போல் வரும் வெம் மனப் பேய்களைப் பொன்னைப் போல் மிகப் போற்றி இடை நடுப் புழையிலே விரல் போதப் புகுத்தி ஈ- தன்னைப் போல் முடை நாற்றச் சலத்தையே சந்தனச் சலம்-தான் எனக் கொள்கின்றேன் என்னைப் போல்வது நாய்க் குலம்-தன்னிலும் இல்லை அல்லது எவற்றினும் இல்லையே

மேல்

#12 கள் உருகும் மலர் மணம் போல் கலந்து எங்கும் நிறைந்தோய் நின் கருணைக்கு அந்தோ முள் உருகும் வலிய பராய் முருடு உருகும் உருகாத முறை சேர் கல்லும் வள் உருகும் மலை உருகும் மண் உருகும் மரம் உருகும் மதி_இலேன்-தன் உள் உருகும் வகை இலை என் செய்கேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே

மேல்

#13 மன் உயிர்க்குத் தாய் தந்தை குரு தெய்வம் உறவு முதல் மற்றும் நீயே பின் உயிர்க்கு ஓர் துணை வேறு பிறிது இலை என்று யான் அறிந்த பின் பொய்யான மின் உடற்குத் தாய் தந்தை ஆதியரை மதித்தேனோ விரும்பினேனோ என் உயிர்க்குத் துணைவா நின் ஆணை ஒன்றும் அறியேன் நான் இரங்கிடாயே

மேல்

#14 மாற்று அரிய பசும்பொன்னே மணியே என் கண்ணே கண்மணியே யார்க்கும் தோற்று அரிய சுயஞ்சுடரே ஆனந்தச் செழும் தேனே சோதியே நீ போற்று அரிய சிறியேனைப் புறம் விடினும் வேற்றவர்-பால் போகேன் வேதம் தேற்று அரிய திரு_அடி-கண் பழி விளைப்பேன் நின் ஆணைச் சிறியனேனே

மேல்

#15 உள்_உணர்வோர் உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள் அமுதே உடையாய் வஞ்ச நள் உணர்வேன் சிறிதேனும் நலம் அறியேன் வெறித்து உழலும் நாயின் பொல்லேன் வெள்_உணர்வேன் எனினும் என்னை விடுதியோ விடுதியேல் வேறு என் செய்கேன் தள்_உணர்வோன் எனினும் மகன்-தனை ஈன்றோர் புறம்பாகத் தள்ளார் அன்றே

மேல்

#16 கலை பயின்று நெறி ஒழுகும் கருத்து உடையேன்_அலன் நின்னைக் கனவிலேனும் மலை பயின்ற பெரும் குணத்து எம் வள்ளலே எனத் துதியேன் வஞ்சம் இல்லா நிலை பயின்ற நல்லோர்-தம் நேசம் இலேன் கைதவமே நினைப்பேன் அந்தோ உலை பயின்ற அரக்கு என நெஞ்சு உருகேன் நான் ஏன் பிறந்தேன் ஒதியனேனே

மேல்

#17 இரும் புன்னை மலர்_சடையாய் இ உலகில் சிலர் தங்கட்கென்று வாய்த்த அரும் பின்னை_மார்பகத்தோன் அயன் ஆதி சிறுதெய்வ மரபு என்று ஓதும் கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடாது இருக்கின்றார் கடையனேற்கே தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனைத் தழுவிலேனே

மேல்

#18 கஞ்ச மலர்த் தவிசு இருந்த நான்முகனும் நெடுமாலும் கருதிப் போற்ற அஞ்ச நடை அம்மை கண்டு களிக்கப் பொன்_அம்பலத்தில் ஆடுகின்ற எஞ்சல் இலாப் பரம் பொருளே என் குருவே ஏழையினேன் இடத்து நீயும் வஞ்சம் நினைத்தனை ஆயில் என் செய்வேன் என் செய்வேன் மதி_இலேனே

மேல்

#19 வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ் விடம் சேர் பாம்புக்கும் பால் உணவு ஈகின்றனர் இப் படி மிசை யான் வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல் எனை நீ தேம் புக்கும் வார் சடைத் தேவே கருணைச் சிவ_கொழுந்தே

மேல்

#20 அட முடியாது பல் ஆற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம் பட முடியாது என்னை செய்கேன் என்றன் முகம் பார்த்து இரங்காய் திட முடியால் அயன் மால் வணங்கும் துணைச் சேவடியாய் தட முடியாய் செம் சடை_முடியாய் நம் தயாநிதியே

மேல்

#21 பொல்லா வாழ்க்கைத் துயரம் எனும் புணரிப் பெருக்கில் வீழ்ந்து அழுந்திப் பல்லார் நகைக்கப் பாவி படும் பாட்டை முழுதும் பார்த்திருந்தும் கல் ஆல் அமர்ந்தீர் என் இரண்டு கண்கள்_அனையீர் கறை_மிடற்றீர் எல்லாம் உடையீர் மால் விடையீர் என்னே இரங்கி அருளீரே

மேல்

#22 பொன்னை உடையார் மிகும் கல்விப் பொருளை உடையார் இவர் முன்னே இன்னல் எனும் ஓர் கடல் வீழ்ந்து இ ஏழை படும் பாடு அறிந்திருந்தும் மின்னை நிகரும் சடை_முடியீர் விடம் கொள் மிடற்றீர் வினை தவிர்ப்பீர் என்னை_உடையீர் வெள் விடையீர் என்னே இரங்கி அருளீரே

மேல்

#23 ஆயும் வஞ்சக நெஞ்சன் இ அடியனேன் ஐயா நீயும் வஞ்சக நெஞ்சன் என்றால் இந்த நிலத்தே ஏயும் இங்கு இதற்கு என் செய்வேன் என் செய்வேன் எவைக்கும் தாயும் தந்தையும் ஆகி உள் நிற்கின்றோய் சாற்றாய்

மேல்

#24 நானும் பொய்யன் நின் அடியனேன் தண் அருள் நிதி நீ- தானும் பொய்யன் என்றால் இதற்கு என் செய்வேன் தலைவா தேனும் பாலும் தீம் கட்டியும் ஆகி நின் தெளிந்தோர் ஊனும் உள்ளமும் உயிரும் அண்ணிக்கின்ற உரவோய்

மேல்

#25 நேசனும் நீ சுற்றமும் நீ நேர் நின்று அளித்துவரும் ஈசனும் நீ ஈன்று ஆளும் எந்தையும் நீ என்றே நின் தேசுறு சீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை ஆசு அகலும் வண்ணம் அருள் புரிந்தால் ஆகாதோ

மேல்

#26 ஆற்றால் விளங்கும் சடையோய் இ ஏழை அடியனும் பல் ஆற்றால் வருந்தும் வருத்தம் எல்லாம் முற்று அறிந்தும் இன்னம் ஆற்றாது இருத்தல் நின் பேர்_அருள் ஆற்றுக்கு அழகு-கொலோ ஆற்றாமை மேற்கொண்டு அழுதால் எவர் எனை ஆற்றுவரே

மேல்

#27 படியே அளந்த மாலவனும் பழைய மறை சொல் பண்ணவனும் முடி ஈறு அறியா முதல்_பொருளே மொழியும் ஒற்றி நகர்க்கு இறையே அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல் படி மீது அடியேற்கு உறு பிணி போம்படி நீ கடைக்கண் பார்த்து அருளே.

மேல்

#28 அருள் ஆர்_அமுதே அரசே நின் அடியேன் கொடியேன் முறையேயோ இருள் சேர் மனனோடு இடர் உழந்தேன் எந்தாய் இது-தான் முறையேயோ மருள் சேர் மடவார் மயலாலே மாழ்கின்றேன் நான் முறையேயோ தெருள் ஓர்சிறிதும் அறியாதே திகையாநின்றேன் முறையேயோ

மேல்

#29 ஒழியாக் கவலை உறுகின்றேன் உடையாய் முறையோ முறையேயோ அழியாக் கருணை_கடலே என் அரசே முறையோ முறையேயோ பொழியாப் புயலே_அனையார்-பால் புகுவித்தனையே முறையேயோ இழியாத் திரிதந்து உழல்கின்றேன் இறைவா முறையோ முறையேயோ

மேல்

#30 மதி ஒளிர் கங்கைச் சடைப் பெரும் கருணை வள்ளலே தெள்ளிய அமுதே நிதி ஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர் நிலைத்த வான் செல்வமும் மண்ணில் பதி ஒளிர் வாழ்க்கை மணி முடி அரசர் படைத்திடும் செல்வமும் வேண்டேன் கதி ஒளிர் நினது திரு_அருள் செல்வக் களிப்பையே கருதுகின்றனனே

மேல்

#31 மன்று ஆடும் மா மணியே நின் பொன் பாத_மலர்த் துணையே துணையாக வாழ்கின்றோர்க்கு ஒன்றாலும் குறைவு இல்லை ஏழையேன் யான் ஒன்றும்_இலேன் இ உலகில் உழலாநின்றேன் இன்றாக நாள் கழியில் என்னே செய்கேன் இணை முலையார் மையலினால் இளைத்துநின்றேன் என்றாலும் சிறிது எளியேற்கு இரங்கல் வேண்டும் எழில் ஆரும் ஒற்றியூர் இன்ப வாழ்வே.

மேல்

#32 வெள்ளம் கொண்டு ஓங்கும் விரி சடையாய் மிகு மேட்டில்-நின்றும் பள்ளம் கொண்டு ஓங்கும் புனல் போல் நின் தண் அருள் பண்பு நல்லோர் உள்ளம் கொண்டு ஓங்கும் அவமே பருத்த ஒதி_அனையேன் கள்ளம் கொண்டு ஓங்கும் மனத்து உறுமோ உறில் காண்குவனே

மேல்

#33 ஐயா முக்கண் கொண்ட ஆர்_அமுதே அருள் ஆர் பவள மெய்யா மெய்ஞ்ஞான விளக்கே கருணை விளங்கவைத்த மை ஆர் மிடற்று மணியே அன்று என்னை மகிழ்ந்தது அந்தோ பொய்யா என் செய்வல் அருளாய் எனில் எங்குப் போதுவனே

மேல்

#34 நாராயணன் திசை நான்முகன் ஆதியர் நண்ணி நின்று பாராயணம் செயப்பட்ட நின் சேவடிப் பங்கயம் மேல் சீராயணம் பெறப் பாடும் திறம் ஓர்சிறிதும் இலேன் ஆராய் அணங்குற நின்றேன் பொன் மன்றத்து அமர்ந்தவனே

மேல்

#35 பேய் கொண்ட நெஞ்சகப் பாழால் வரும் என் பெரும் துயரை வாய் கொண்டு அனந்தர் அனந்தர்க்கும் சொல்லவராது எனில் இ நாய் கொண்டு உரைக்க வருமோ என் செய்குவன் நச்சு மரக் காய் கொண்டு வாழைக் கனியைக் கைவிட்ட கடையவனே

மேல்

#36 வன் மான் அம் கரத்து ஏந்தும் மா மணியே மணி_கண்ட மணியே அன்பர் நல் மானம் காத்து அருளும் அருள்_கடலே ஆனந்த நடம் செய் வாழ்வே பொன் மான் அம்பினைப் பொருந்தும் அம்பினை வைத்து ஆண்டு அருளும் பொருளே நீ இங்கு என் மானம் காத்து அருள வேண்டுதியோ வேண்டாயேல் என் செய்வேனே

மேல்

#37 வைவம் என்று எழுகின்றவர்-தமக்கும் நல் வாழ்வு செய்வம் என்று எழுகின்ற மெய்த் திரு_அருள் செயலும் சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமைத் தெய்வம் என்பதும் என்னளவு இல்லை என் செய்வேன்

மேல்

#38 ஐயரே உமது அடியன் நான் ஆகில் அடிகள் நீர் எனது ஆண்டவர் ஆகில் பொய்யனேன் உளத்து அவலமும் பயமும் புன்கணும் தவிர்த்து அருளுதல் வேண்டும் தையல் ஓர் புறம் நின்று உளம் களிப்பச் சச்சிதானந்தத் தனி நடம் புரியும் மெய்யரே மிகு துய்யரே தரும விடையரே என்றன் விழி அமர்ந்தவரே

மேல்

#39 எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே

மேல்

#40 பொன் அளிக்கும் நல் புத்தியும் தந்து நின் றன் அருள் துணைத் தாள்_மலர்த் தியானமே மன்ன வைத்திட வேண்டும் எம் வள்ளலே என்னை நான் பல கால் இங்கு இயம்பலே

மேல்

#41 தாயும் தந்தையும் சற்குரு_நாதனும் ஆயும் தெய்வமும் நீ என்று அறிந்தனன் பாயும் மால் விடை ஏறும் பரமனே நீயும் கைவிட என்னை நினைத்தியோ

மேல்

#42 ஒழியா மயல்கொண்டு உழல்வேன் அவமே அழியா வகையே அருள்வாய் அருள்வாய் பொழியா மறையின் முதலே நுதல் ஏய் விழியாய் விழியாய் வினை தூள்படவே

மேல்

#43 உலகு எலாம் நிறைந்து ஓங்கு பேர்_அருள் உருவம் ஆகி எவ்வுயிரும் உய்ந்திட இலகு வான் ஒளியாம் மணி மன்றிடை என்றும் நின்றே அலகு_இல் ஆனந்த நாடகம் செய்யும் அம் பொன் சேவடிக்கு அபயம் என்னையும் திலக நீ விழைவாய் நடராச சிகாமணியே

மேல்

#44 என் இரு கண்காள் உமது பெரும் தவம் எப் புவனத்தில் யார்-தான் செய்வர் முன் இருவர் காணாமல் அலைந்தனரால் இனும் காண முயலாநின்றார் நல் நிருபர் தொழுது ஏத்தும் அம்பலத்தே ஓர் இடத்து ஓர் நாள் ஆதித்தர் பன்னிருவர் ஒளி மாற்றும் பர ஒளியைப் பார்த்து உயர்ந்தீர் பண்பினீரே

மேல்

#45 சேண் நாடர் முனிவர் உயர் திசைமுகன் மால் உருத்திரன் அத் திரளோர் சற்றும் காணாத காட்சியை நான் கண்டேன் சிற்றம்பலத்தின்-கண்ணே பல் நாள் ஆணாகப் பிறந்து அடியேன் அரும் தவம் என் புரிந்தேனோ அறிகிலேன் முன் பேணாத பிறப்பு எல்லாம் பிறப்பு அல இப் பிறப்பே என் பிறப்பாம் அந்தோ

மேல்

#46 இருள் அற ஓங்கும் பொதுவிலே நடம் செய் எம் குருநாதன் எம் பெருமான் அருள் எனும் வடிவம் காட்டி ஒண் முகத்தே அழகுறும் புன்னகை காட்டித் தெருளுற அருமைத் திரு_கையால் தடவித் திரு_மணி வாய்_மலர்ந்து அருகில் பொருளுற இருந்து ஓர் வாக்கு அளித்து என் உள் புகுந்தனன் புதுமை ஈது அந்தோ

மேல்

#47 பொன் என்கோ மணி என்கோ புனித ஒளித் திரள் என்கோ பொற்பின் ஓங்கும் மின் என்கோ விளக்கு என்கோ விரி சுடர்க்கு ஓர் சுடர் என்கோ வினையனேன் யான் என் என்கோ என் என்கோ எம் பெருமான் திரு_மேனி இருந்த வண்ணம் முன் என் கோது அறு தவத்தால் கண்டு களித்திடப்பெற்றேன் முக்கண் மூர்த்தி

மேல்

#48 வஞ்சகர்க்கு எல்லாம் முதலாய் அறக் கடையாய் மறத் தொழிலே வலிக்கும் பாவி நெஞ்சகத் துன்மார்க்கனை மா_பாதகனைக் கொடியேனை நீசனேனை அஞ்சல் எனக் கருணை புரிந்து ஆண்டுகொண்ட அருள்_கடலை அமுதைத் தெய்வக் கஞ்ச மலரவன் நெடுமாற்கு அரும் பொருளைப் பொதுவினில் யான் கண்டு உய்ந்தேனே

மேல்

#49 நாதா பொன்_அம்பலத்தே அறிவானந்த நாடகம் செய் பாதா துரும்பினும் பற்றாத என்னைப் பணிகொண்டு எல்லாம் ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்ன நீதா நினை மறந்து என் நினைக்கேன் இந்த நீள் நிலத்தே

மேல்

#50 கந்த நாள்_மலர்க் கழல் இணை உளத்து உறக் கருதுகின்றவர்க்கு எல்லாம் பந்த நாண் வலை அவிழ்த்து அருள் சிதம்பரை பரம் பரையுடன் ஆடும் அந்த நாள் மகிழ்வு அடைபவர் உளர் சிலர் அவர் எவர் எனில் இங்கே இந்த நாள் முறை திறம் பலராய் உயிர்க்கு இதம் செயும் அவர் அன்றே

மேல்

@95. அறநிலை விளக்கம்

மேல்

#1 மருவு ஆணைப் பெண் ஆக்கி ஒரு கணத்தில் கண் விழித்து வயங்கும் அப் பெண் உரு ஆணை உரு ஆக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவனேனும் கரு வாள் நையுற இரங்காது உயிர் உடம்பைக் கடிந்து உண்ணும் கருத்தனேல் எம் குரு ஆணை எமது சிவ_கொழுந்து ஆணை ஞானி எனக் கூறவொணாதே

மேல்

@96. அருள்நிலை விளக்கம்

மேல்

#1 மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளீர் நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே

மேல்

@97. திருமருந் தருள் நிலை

மேல்

#1 பனக_அணைத் திரு நெடுமால் அயன் போற்றப் புலவர் எலாம் பரவ ஓங்கும் கனக மணி அம்பலத்தே பெரிய மருந்து ஒன்று இருக்கக் கண்டேன் கண்டேன் அனக நடத்தது சச்சிதானந்த வடிவு அது பேர்_அருள் வாய்ந்துள்ளது என் அகம் அமர்ந்திருப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா

மேல்

#2 திரு நெடுமால் அயன் தேடத் துரிய நடு ஒளித்தது எனத் தெளிந்தோர் சொல்லும் ஒரு கருணை மருந்து திரு அம்பலத்தே இருந்திடக் கண்டு உவந்தேன் அந்தோ அருவுருவம் கடந்தது பேர்_ஆனந்த வடிவு அது நல் அருள் வாய்ந்துள்ளது இருமையும் நன்கு அளிப்பது எல்லாம்_வல்லது பேர் நடராசன் என்பது அம்மா

மேல்

@98. திரு அருள் விலாசம்

மேல்

#1 ஆண்டவன் நீ ஆகில் உனக்கு அடியனும் நான் ஆகில் அருள்_உடையாய் இன்று இரவில் அருள் இறையாய் வந்து நீண்டவனே முதலியரும் தீண்ட அரிதாம் பொருளின் நிலை காட்டி அடி முடியின் நெறி முழுதும் காட்டி வீண் தவனே காலையில் நீ விழித்தவுடன் எழுந்து விதி முடித்துப் புரிதி இது விளங்கும் எனப் புகல்வாய் தாண்டவனே அருள் பொதுவில் தனி முதலே கருணைத் தடம் கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே

மேல்

#2 திரு_நெறி மெய்த் தமிழ்_மறையாம் திருக்கடைக்காப்பு-அதனால் திருவுளம் காட்டிய நாளில் தெரிந்திலன் இச் சிறியேன் பெரு நெறி என் உளத்து இருந்து காட்டிய நாள் அறிந்தேன் பிழைபடாத் தெய்வ மறை இது எனப் பின்பு உணர்ந்தேன் ஒரு நெறியில் எனது கரத்து உவந்து அளித்த நாளில் உணராத உளவை எலாம் ஒருங்கு உணர்ந்து தெளிந்தேன் தெருள் நெறி தந்து அருளும் மறைச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி மகிழ் திரு_நட தெள் அமுதே

மேல்

@99. சிவ சிதம்பர சங்கீர்த்தனம்

மேல்

#1 உலகமும் சராசரமும் நின்றுநின்று உலவுகின்ற பேர்_உலகம் என்பதும் கலகம் இன்றி எங்கணும் நிறைந்த சிற்கனம் விளங்கு சிற்ககனம் என்பதும் இலக ஒன்று இரண்டு எனல் அகன்றதோர் இணை_இல் இன்பமாம் இதயம் என்பதும் திலகம் என்ற நம் குரு சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

மேல்

#2 வரம் உறும் சுதந்தர சுகம் தரும் மனம் அடங்கு சிற்கன நடம் தரும் உரமுறும் பதம் பெற வழங்கு பேர்_ஒளி நடம் தரும் வெளி இடம் தரும் பரம் உறும் குணம் குறி கடந்த சிற்பரமம் ஆகியே பரவும் மா மறைச் சிரம் உறும் பரம் பர சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

மேல்

#3 நித்தியம் பராபரம் நிராதரம் நிர்க்குணம் சதா நிலயம் நிட்களம் சத்தியம் கனாகனம் மிகுந்ததோர் தற்பரம் சிவம் சமரசத்துவம் வித்தியம் சுகோதய நிகேதனம் விமலம் என்று நால்_வேதமும் தொழும் சித்து இயங்கு சிற்கன சிதம்பரம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

மேல்

#4 அருள் அளித்து மெய் அன்பர்-தம்மை உள்ளங்கை நெல்லி போல் ஆக்குகின்றதும் பொருள் அளித்து நான்மறையின் அந்தமே புகலுகின்றதோர் புகழ் அளிப்பதும் வெருள் அளித்திடா விமல ஞானவான் வெளியிலே வெளி விரவி நிற்பதாம் தெருள் அளிப்பதும் இருள் கெடுப்பதும் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

மேல்

#5 பெத்தமும் சதா முத்தியும் பெரும் பேதம் ஆயதோர் போத வாதமும் சுத்தமும் தெறா வித்தமும் தரும் சொரூப இன்பமே துய்க்கும் வாழ்க்கையும் நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற் சித்தமும் செலாப் பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம்

மேல்

@100. அம்மை திருப்பதிகம்

மேல்

#1 உலகின் உயிர் வகை உவகையுற இனிய அருள் அமுதம் உதவும் ஆனந்த சிவையே உவமை சொல அரிய ஒரு பெரிய சிவ நெறி-தனை உணர்த்து பேர்_இன்ப நிதியே இலகு பர அபர நிலை இசையும் அவரவர் பருவம் இயலுற உளம்கொள் பரையே இருமை நெறி ஒருமையுற அருமை பெறு பெருமை-தனை ஈந்து எனை அளித்த அறிவே கலகமுறு சகச மல இருள் அகல வெளியான காட்சியே கருணை நிறைவே கட கரட விமல கய முக அமுதும் அறு முகக் கந அமுதும் உதவு கடலே அலகு இல் வளம் நிறையும் ஒரு தில்லை அம் பதி மேவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#2 கற்பவை எலாம் கற்று உள் உணர்பவை எலாம் மனக் கரிசு அற உணர்ந்து கேட்டுக் காண்பவை எலாம் கண்டு செய்பவை எலாம் செய்து கரு நெறி அகன்ற பெரியோர் பொற்பவை எலாம் சென்று புகல்பவை எலாம் கொண்டு புரிபவை எலாம் புரிந்து உன் புகழவை எலாம் புகழ்ந்து உறுமவை எலாம் உறும் போது அவை எலாம் அருளுவாய் நிற்பவை எலாம் நிற்ப அசைபவை எலாம் அசைய நிறைபவை எலாம் செய் நிலையே நினைபவை எலாம் நெகிழ நெறி அவை எலாம் ஓங்கும் நித்தியானந்த வடிவே அற்பு உடைய அடியர் புகழ் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#3 இக் கணம் இருந்த இ மெய் என்ற பொய்_கூரை இனி வரு கணப் போதிலே இடியாது இருக்குமோ இடியுமோ என் செய்கோம் என் செய்கோம் இடியும் எனில் யாம் தெக்கணம் நடக்க வரும் அக் கணம் பொல்லாத தீக் கணம் இருப்பது என்றே சிந்தை நைந்து அயராத வண்ணம் நல் அருள்தந்த திகழ் பரம சிவ_சத்தியே எக் கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே அக் கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#4 பொய்யாத மொழியும் மயல் செய்யாத செயலும் வீண்போகாத நாளும் விடயம் புரியாத மனமும் உள் பிரியாத சாந்தமும் புந்தி தளராத நிலையும் எய்யாத வாழ்வும் வேறு எண்ணாத நிறைவும் நினை என்றும் மறவாத நெறியும் இறவாத தகவும் மேல் பிறவாத கதியும் இ ஏழையேற்கு அருள்செய் கண்டாய் கொய்யாது குவியாது குமையாது மணம் வீசு கோமளத் தெய்வ மலரே கோவாத முத்தமே குறையாத மதியமே கோடாத மணி_விளக்கே ஐ ஆனனம் கொண்ட தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#5 பவமான எழு கடல் கடந்து மேல் கதியான பதி நிலை அணைந்து வாழப் பகலான சகலமுடன் இரவான கேவலப் பகையும் தடாதபடி ஓர் தவமான கலனில் அருள் மீகாமனால் அலது தமியேன் நடத்த வருமோ தானா நடக்குமோ என் செய்கேன் நின் திருச் சரணமே சரணம் அருள்வாய் உவமானம் அற்ற பர சிவமான சுத்த வெளி உறவான முத்தர் உறவே உருவான அருவான ஒருவான ஞானமே உயிரான ஒளியின் உணர்வே அவமானம் நீக்கி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#6 சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்துத் துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் காரிட்டு இதற்கு முன் யார் இட்ட சாபமோ கண்டிலேன் அம்மம்ம ஓர் கணமேனும் நில்லாது பொல்லாது புவியில் கறங்கு எனச் சுழல்கின்றதே தார் இட்ட நீ அருள் சீர் இட்டிடாய் எனில் தாழ் பிறவி-தன்னில் அது தான் தன்னை வீழ்த்துவது அன்றி என்னையும் வீழ்த்தும் இத் தமியனேன் என் செய்குவேன் ஆர் இட்ட சடையாளர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#7 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனைத் தமது வசமாக உளவு கண்டு மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலைச் சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#8 வெவ் வினைக்கு ஈடான காயம் இது மாயம் என வேத முதல் ஆகமம் எலாம் மிகு பறை அறைந்தும் இது வெயில் மஞ்சள் நிறம் எனும் விவேகர் சொல் கேட்டு அறிந்தும் கவ்வை பெறு கடல் உலகில் வைர_மலை ஒத்தவர் கணத்திடை இறத்தல் பல கால் கண்ணுறக் கண்டும் இப் புலை உடலின் மானம் ஓர் கடுகளவும் விடுவது அறியேன் எவ்வம் உறு சிறியனேன் ஏழை மதி என்ன மதி இன்ன மதி என்று உணர்கிலேன் இந்த மதி கொண்டு நான் எந்த வகை அழியாத இன்ப நிலை கண்டு மகிழ்வேன் அவ்வியம் அகற்றி அருள் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#9 ஒளி மருவும் உனது திரு_அருள் அணுத்துணையேனும் உற்றிடில் சிறு துரும்பும் உலகம் படைத்தல் முதல் முத்தொழில் இயற்றும் என உயர் மறைகள் ஓர் அனந்தம் தெளிவுற முழக்க அது கேட்டு நின் திரு_அடித் தியானம் இல்லாமல் அவமே சிறுதெய்வ நெறி செல்லும் மானிடப் பேய்கள்-பால் சேராமை எற்கு அருளுவாய் களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே அளி நறை கொள் இதழி வனை தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

#10 நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுறக் கொண்டு நின் அடிப் பூசைசெய்து வீறு அணிந்து என்றும் ஒரு தன்மை பெறு சிவஞான வித்தகர் பதம் பரவும் ஓர் மெய்ச் செல்வ வாழ்க்கையில் விருப்பம் உடையேன் இது விரைந்து அருள வேண்டும் அமுதே பேறு அணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவு அரிய பெருமையை அணிந்த அமுதே பிரச மலர் மகள் கலை சொல் மகள் விசய மகள் முதல் பெண்கள் சிரம் மேவும் மணியே ஆறு அணிந்திடு சடையர் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே

மேல்

@101. கலைமகளார் திருப் பதிகம்

மேல்

#1 தவள மலர்க் கமலம் மிசை வீற்றிருக்கும் அம் மனையைச் சாந்தம் பூத்த குவளை மலர்க் கண்ணாளைப் பெண் ஆளும் பெண் அமுதைக் கோது இலாத பவள இதழ்ப் பசும் கொடியை நான்முகனார் நா ஓங்கும் பாவை-தன்னைக் கவள மத கயக் கொம்பின் முலையாளைக் கலை மாதைக் கருதுவோமே

மேல்

#2 சங்கம் வளர்ந்திட வளர்ந்த தமிழ்_கொடியைச் சரச்சுவதி-தன்னை அன்பர் துங்கம் உறக் கலை பயிற்றி உணர்வு அளிக்கும் கலை ஞானத் தோகை-தன்னைத் திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னைத் தங்க மலை முலையாளைக் கலையாளைத் தொழுது புகழ் சாற்றுகிற்பாம்

மேல்

#3 கலை பயின்ற உளத்து இனிக்கும் கரும்பினை முக்கனியை அருள்_கடலை ஓங்கும் நிலை பயின்ற முனிவரரும் தொழுது ஏத்த நான்முகனார் நீண்ட நாவின் தலை பயின்ற மறை பயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச் சிலை பயின்ற நுதலாளைக் கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே

மேல்

@102. நற்றாய் கவன்றது

மேல்

#1 திரு_அருள் புனிதை மகிழ நின்று ஆடும் தில்லை மன்று அழகனே என்பாள் மரு அருள்_கடலே மாணிக்க_மலையே மதிச் சடை வள்ளலே என்பாள் இருவருக்கு அரிய ஒருவனே எனக்கு இங்கு யார் துணை நின் அலாது என்பாள் வெருவி உள் குழைவாள் விழி கணீர் துளிப்பாள் வெய்து உயிர்ப்பாள் என்றன் மின்னே

மேல்

#2 ஓடுவாள் தில்லைத் திரு_சிற்றம்பலம் என்று உருகுவாள் உணர்வு_இலள் ஆகித் தேடுவாள் திகைப்பாள் தியங்குவாள் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் பாடுவாள் பதைப்பாள் பதறுவாள் நான் பெண் பாவி காண் பாவி காண் என்பாள் வாடுவாள் மயங்கி வருந்துவாள் இருந்து வல்_வினையேன் பெற்ற மகளே

மேல்

#3 உலகு எலாம் தழைப்பப் பொதுவினில் ஓங்கும் ஒரு தனித் தெய்வம் என்கின்றாள் இலகு பேர்_இன்ப_வாரி என்கின்றாள் என் உயிர்க்கு இறைவன் என்கின்றாள் அலகு_இலாக் கருணை அமுதன் என்கின்றாள் அன்பர்கட்கு அன்பன் என்கின்றாள் திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற்று அழுங்குகின்றாளே

மேல்

#4 திரு எலாம் அளிக்கும் தெய்வம் என்கின்றாள் திரு_சிற்றம்பலவன் என்கின்றாள் உரு எலாம் உடைய ஒருவன் என்கின்றாள் உச்சி மேல் கரங்குவிக்கின்றாள் கரு எலாம் கடந்து ஆங்கு அவன் திரு_மேனி காண்பது எ நாள்-கொல் என்கின்றாள் மரு எலாம் மயங்கும் மலர்க் குழல்_முடியாள் வருந்துகின்றாள் என்றன் மகளே

மேல்

#5 மின் இணைச் சடில விடங்கன் என்கின்றாள் விடைக் கொடி விமலன் என்கின்றாள் பொன் இணை மலர்_தாள் புனிதன் என்கின்றாள் பொதுவிலே நடிப்பன் என்கின்றாள் என் இணை விழிகள் அவன் திரு அழகை என்று-கொல் காண்பது என்கின்றாள் துன் இணை முலைகள் விம்முற இடை போல் துவள்கின்றாள் பசிய பொன்_தொடியே

மேல்

#6 கரும் களிற்று உரி போர்த்து அம்பலத்து ஆடும் கருணை எம் கடவுள் என்கின்றாள் பெரும் களி துளும்ப வடவனத்து ஓங்கும் பித்தரில் பித்தன் என்கின்றாள் ஒருங்கு அளி மிழற்றும் குழலினார் என் போல் உறுவரோ அவனை என்கின்றாள் தரும் களி உண்டாள் போல்கின்றாள் நாணும் தவிர்க்கின்றாள் என் அரும் தவளே

மேல்

#7 மன்றிடை நடிக்கும் மணாளனை அல்லால் மதிப்பனோ பிறரை என்கின்றாள் வன் துயர் நீக்கும் அவன் திரு_வடிவை மறப்பனோ கணமும் என்கின்றாள் ஒன்றும்_இல்லவன் என்று உரைக்கினும் எல்லாம் உடையவன் ஆகும் என்கின்றாள் பொன்றுதல் பிறழ்தல் இனி உறேன் என்றே பொன்_தொடி பொங்குகின்றாளே

மேல்

#8 திருத் தகு தில்லைத் திரு_சிற்றம்பலத்தே தெய்வம் ஒன்று உண்டு எமக்கு என்பாள் பெருத்த குங்குமப் பொன் கலச வாள் முலையார் பேசுக பலபல என்பாள் மருத் தகு குழலாள் மனம் மொழி உடலம் மற்றவும் அவன் கழற்கு என்பாள் குருத் தகு குவளைக் கண்ணின் நீர் கொழிப்பாள் குதுகுலிப்பாள் பசும்_கொடியே

மேல்

#9 அம்பலத்து ஆடும் அழகனைக் காணாது அருந்தவும் பொருந்துமோ என்பாள் கம்பம் உற்றிடுவாள் கண்கள் நீர் உகுப்பாள் கை குவிப்பாள் உளம் கனிவாள் வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலைப் பரிகிலீர் என்பாள் உம்பரன் தவம் செய்திடு-மினீர் என்பாள் உயங்குவாள் மயங்குவாள் உணர்வே

மேல்

@103. சல்லாப லகரி

மேல்

#1 சுந்தர நீறு அணி சுந்தரர் நடனத் தொழில்_வல்லார் வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதே நீ மந்தணம் இது கேள் அம் தனம் இல நம் வாழ்வு எல்லாம் அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே

மேல்

#2 நம் பலமாம் என நல் மனை புக்கார் நடராஜர் எம் பலம் ஆவீர் எம் பெருமான் நீரே என்றேன் வம்பு அல மடவாய் எம்முடை இன்ப வாழ்வு எல்லாம் அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே *

மேல்

3.மூன்றாம் திருமுறை


01. திரு உலாப் பேறு
02. நாரையும் கிளியும் நாட்டுறு தூது
03. இரங்கன் மாலை
04. திரு உலா வியப்பு
05. சல்லாப வியன்மொழி
06. இன்பக் கிளவி
07. இன்பப் புகழ்ச்சி
08. திரு உலாத் திறம்
09. வியப்பு மொழி
10. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
11. குறி ஆராய்ச்சி
12. காட்சி அற்புதம்
13. ஆற்றாக் காதலின் இரங்கல்
14. திருக்கோலச் சிறப்பு
15. சோதிடம் நாடல்
16. திருஅருட் பெருமிதம்
17. காதற் சிறப்புக் கதுவா மாண்பு
18. ஆற்றா விரகம்
19. காதல் மாட்சி
 
       
      
       

@1. திரு உலாப் பேறு

மேல்

#1 சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி-தனை ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன் காண் வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#2 சீர்த் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப் பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண் தார்த் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண் ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#3 சீதப் புனல் சூழ் வயல் ஒற்றித் தியாக_பெருமான் திரு மாட வீதிப் பவனி வரக் கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன் போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன் ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#4 தென் ஆர் சோலைத் திருவொற்றித் தியாக_பெருமான் பவனி வரப் பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன் மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#5 சீல_குணத்தோர் புகழ் ஒற்றித் தியாக_பெருமான் பவனி இரா_ காலத்து அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ ஏலக் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#6 சேயை அருளும் திருவொற்றித் தியாக_பெருமான் வீதி-தனில் தூய பவனி வரக் கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமைக் காணேன் தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன் ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#7 திங்கள் உலவும் பொழில் ஒற்றித் தியாக_பெருமான் திரு_வீதி அங்கண் களிக்கப் பவனி வந்தான் அது போய்க் கண்டேன் தாயர் எலாம் தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#8 தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரக் கூசாது ஓடிக் கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள் வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்காப் பெண் எனவே ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#9 தேடார்க்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரத் தோடு ஆர் பணைத் தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி வாடாக் காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

#10 திருமாற்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப் பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால் பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்கப் போதுகிலேன் இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

மேல்

@2. நாரையும் கிளியும் நாட்டுறு தூது

மேல்

#1 கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காணக் கிடையாக் கழல்_உடையார் நண்ணும் ஒற்றி நகரார்க்கு நாராய் சென்று நவிற்றாயோ அண்ணல் உமது பவனி கண்ட அன்று முதலாய் இன்றளவும் உண்ணும் உணவோடு உறக்கமும் நீத்து உற்றாள் என்று இ ஒரு மொழியே.

மேல்

#2 மன்னும் கருணை வழி விழியார் மதுர மொழியார் ஒற்றி நகர்த் துன்னும் அவர்-தம் திருமுன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ மின்னும் தேவர் திரு_முடி மேல் விளங்கும் சடையைக் கண்டவள் தன் பின்னும் சடையை அவிழ்த்து ஒன்றும் பேசாள் எம்மைப் பிரிந்து என்றே.

மேல்

#3 வடிக்குந் தமிழ்த் தீம் தேன் என்ன வசனம் புகல்வார் ஒற்றி-தனில் நடிக்கும் தியாகர் திருமுன் போய் நாராய் நின்று நவிற்றாயோ பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே.

மேல்

#4 மாய_மொழியார்க்கு அறிவரியார் வண்கை_உடையார் மறை மணக்கும் தூய_மொழியார் ஒற்றியில் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ நேய_மொழியாள் பந்து ஆடாள் நில்லாள் வாச_நீராடாள் ஏய_மொழியாள் பால் அனமும் ஏலாள் உம்மை எண்ணி என்றே.

மேல்

#5 ஒல்லார் புரம் மூன்று எரிசெய்தார் ஒற்றி அமர்ந்தார் எல்லார்க்கும் நல்லார் வல்லார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியே அல் ஆர் குழலாள் கண்ணீராம் ஆற்றில் அலைந்தாள் அணங்கு_அனையார் பல்லார் சூழ்ந்து பழி தூற்றப் படுத்தாள் விடுத்தாள் பாயல் என்றே.

மேல்

#6 ஓவா நிலையார் பொன்_சிலையார் ஒற்றி நகரார் உண்மை சொலும் தூ வாய்_மொழியார் அவர் முன் போய்ச் சுகங்காள் நின்று சொல்லீரோ பூ ஆர் முடியாள் பூ முடியாள் போவாள் வருவாள் பொருந்துகிலாள் ஆஆ என்பாள் மகளிரொடும் ஆடாள் தேடாள் அனம் என்றே.

மேல்

#7 வட்ட மதி போல் அழகு ஒழுகும் வதன விடங்கர் ஒற்றி-தனில் நட்ட நவில்வார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றாயோ கட்ட அவிழ்ந்த குழல் முடியாள் கடுகி விழுந்த கலை புனையாள் முட்ட விலங்கு முலையினையும் மூடாள் மதனை முனிந்து என்றே.

மேல்

#8 வேலை விடத்தை மிடற்று அணிந்த வெண் நீற்று அழகர் விண்ணளவும் சோலை மருவும் ஒற்றியில் போய்ச் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ மாலை மனத்தாள் கற்பகப்பூ மாலை தரினும் வாங்குகிலாள் காலை அறியாள் பகல் அறியாள் கங்குல் அறியாள் கனிந்து என்றே.

மேல்

#9 மாண் காத் தளிர்க்கும் ஒற்றியினார் வான மகளிர் மங்கலப் பொன் நாண் காத்து அளித்தார் அவர் முன் போய் நாராய் நின்று நவிற்றுதியோ பூண் காத்து அளியாள் புலம்பிநின்றாள் புரண்டாள் அயன் மால் ஆதியராம் சேண் காத்து அளிப்போர் தேற்றுகினும் தேறாள் மனது திறன் என்றே.

மேல்

#10 தேசு பூத்த வடிவழகர் திரு வாழ் ஒற்றித் தேவர் புலித் தூசு பூத்த கீள்_உடையார் சுகங்காள் அவர் முன் சொல்லீரோ மாசு பூத்த மணி போல வருந்தாநின்றாள் மங்கையர் வாய் ஏசு பூத்த அலர்க் கொடியாய் இளைத்தாள் உம்மை எண்ணி என்றே.

மேல்

@3. இரங்கன் மாலை

மேல்

#1 நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார் மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன் குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#2 தகை சேர் ஒற்றித் தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் பகை சேர் மதன் பூச் சூடல் அன்றிப் பத_பூச் சூடப் பார்த்து அறியேன் குகை சேர் இருள் பூங் குழலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#3 தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும் சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன் கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#4 அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_ கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணையப் பார்த்து அறியேன் கொண்டல் மணக்குங் கோதாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#5 பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றிப் பதி_உடையார் வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால் ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#6 துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர் கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால் பிடி சேர் நடை நேர் பெண்களைப் போல் பின்னை யாதும் பெற்று அறியேன் கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#7 ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம் பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகை தெரிந்து வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#8 வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர்க் கை மழுவினொடு மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#9 தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றித் தேவர் எனை வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன் குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#10 மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனைத் தென்னோடு ஒக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்து அறியார் என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன் கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#11 உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார் தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும் கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#12 உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்கப் பெற்றேன் காண் குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#13 ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர் பீடு ஆர் மாலையிட்டது அன்றிப் பின் ஓர் சுகமும் பெற்று அறியேன் வாடாக் காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#14 கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும் வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால் மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன் கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#15 ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது கால நிரம்ப அவர் புயத்தைக் கட்டி அணைந்தது இல்லையடி கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#16 நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும் எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால் உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார் கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#17 போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள் யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார் ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#18 இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர் மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#19 உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார் மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்துக் கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர் கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#20 எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார் வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார் கருதி அவர்-தம் கட்டளையைக் கடந்து நடந்தேன்_அல்லவடி குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#21 மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால் வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண் ஆ என்று அலறிக் கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#22 நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம் காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில் கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி கோட்டு மணிப் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#23 வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பது அல்லால் சிற்ப மணி மேடையில் என்னைச் சேர்ந்தார் என்பது இல்லையடி கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#24 என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனைச் சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன் அல்லால் இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#25 கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றிக் காவலனார் இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது திரும்பி ஒருகால் வந்து என்னைச் சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#26 தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தர் அவர் மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட போது கண்ட திரு_முகத்தைப் போற்றி மறித்தும் கண்டு அறியேன் கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#27 வென்றிக் கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால் சென்று இக் குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#28 தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண் கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதைக் கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#29 வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர்க் கா வனம் சூழ் ஒற்றியினார் ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன் தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனைக் கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#30 நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார் வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல் நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனைத் தமது குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

#31 ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர் வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து சோர்ந்தேன் பதைத்துத் துயர்_கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன் கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

மேல்

@4 திரு உலா வியப்பு

மேல்

#1 வெள்ளச் சடையார் விடையார் செவ்வேலார் நூலார் மேலார்-தம் உள்ளத்து உறைவார் நிறைவார் நல் ஒற்றித் தியாக_பெருமானர் வள்ளல் குணத்தார் திரு_பவனி வந்தார் என்றார் அ மொழியை விள்ளற்குள்ளே மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

மேல்

#2 அம் தார் அணியும் செஞ்சடையார் அடையார் புரம் மூன்று அவை அனலின் உந்தாநின்ற வெண்_நகையார் ஒற்றித் தியாகர் பவனி இங்கு வந்தார் என்றார் அந்தோ நான் மகிழ்ந்து காண வரும் முன்னம் மந்தாகினி போல் மனம் என்னை வஞ்சித்து அவர் முன் சென்றதுவே.

மேல்

#3 பொன் நேர் சடையார் கீள்_உடையார் பூவை-தனை ஓர் புடை_உடையார் தென் ஏர் பொழில் சூழ் ஒற்றியூர்த் திகழுந் தியாகர் திரு_பவனி இன்னே வந்தார் என்றார் நான் எழுந்தேன் நான் அங்கு எழுவதற்கு முன்னே மனம் என்றனை விடுத்து முந்தி அவர் முன் சென்றதுவே.

மேல்

#4 காண இனியார் என் இரண்டு கண்கள்_அனையார் கடல் விடத்தை ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றித் தியாக_பெருமானார் மாண வீதி வருகின்றார் என்றார் காண வருமுன் நான் நாண எனை விட்டு என் மனம்-தான் நயந்து அங்கு அவர் முன் சென்றதுவே.

மேல்

#5 செழும் தெண் கடல் தெள் அமுது_அனையார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் கொழும் தண் பொழில் சூழ் ஒற்றியினார் கோலப் பவனி என்றார் நான் எழுந்து இங்கு அவிழ்ந்த கலை புனைந்து அங்கு ஏகும் முன்னர் எனை விடுத்தே அழுந்து நெஞ்சம் விழுந்து கூத்தாடி அவர் முன் சென்றதுவே.

மேல்

#6 சால மாலும் மேலும் இடந்தாலும் அறியாத் தழல்_உருவார் சேலும் புனலும் சூழ் ஒற்றித் திகழும் தியாக_பெருமானார் பாலும் தேனும் கலந்தது எனப் பவனி வந்தார் என்றனர் யான் மேலுங் கேட்கும் முன்னம் மனம் விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

மேல்

#7 பின் தாழ்_சடையார் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார் மன்று ஆர் நடத்தார் ஒற்றி-தனில் வந்தார் பவனி என்றார் நான் நன்றாத் துகிலைத் திருத்தும் முனம் நலம் சேர் கொன்றை நளிர்ப் பூவின் மென் தார் வாங்க மனம் என்னை விட்டு அங்கு அவர் முன் சென்றதுவே.

மேல்

#8 கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் பெண் ஆர் பாகர் தியாகர் எனப் பேசும் அருமைப் பெருமானார் தண் ஆர் பொழில் சூழ் ஒற்றி-தனில் சார்ந்தார் பவனி என்றனர் நான் நண்ணா முன்னம் என் மனம்-தான் நாடி அவர் முன் சென்றதுவே.

மேல்

#9 ஈமப் புறங்காட்டு எரி ஆடும் எழிலார் தில்லை இனிது அமர்வார் சேமப் புலவர் தொழும் ஒற்றித் திகழுந் தியாக_பெருமானார் வாமப் பாவையொடும் பவனி வந்தார் என்றார் அது காண்பான் காமப் பறவை போல் என் மனம் கடுகி அவர் முன் சென்றதுவே.

மேல்

#10 சூல_படையார் பூதங்கள் சுற்றும் படையார் துதிப்பவர்-தம் சீலப் பதியார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார் நீலக் களத்தார் திரு_பவனி நேர்ந்தார் என்றார் அது காண்பான் சாலப் பசித்தார் போல் மனம்-தான் தாவி அவர் முன் சென்றதுவே.

மேல்

@5. சல்லாப வியன்மொழி

மேல்

#1 காது நடந்த கண் மடவாள் கடி மா மனைக்குக் கால் வருந்தத் தூது நடந்த பெரியவர் சிற்சுகத்தார் ஒற்றித் தொல் நகரார் வாது நடந்தான் செய்கின்றோர் மாது நடந்து வா என்றார் போது நடந்தது என்றேன் எப்போது நடந்தது என்றாரே.

மேல்

#2 கச்சை இடுவார் பட வரவைக் கண் மூன்று உடையார் வாமத்தில் பச்சை இடுவார் ஒற்றி_உள்ளார் பரிந்து என் மனையில் பலிக்கு உற்றார் இச்சையிடுவார் உண்டி என்றார் உண்டேன் என்றேன் எனக்கு இன்று பிச்சை இடுவாய் என்றார் நான் பிச்சை அடுவேன் என்றேனே.

மேல்

#3 கருதற்கு அரியார் கரியார் முன் காணக் கிடையாக் கழல்_அடியார் மருதத்து_உறைவார் திருவொற்றி_வாணர் இன்று என் மனைக்கு உற்றார் தருதற்கு என்-பால் இன்று வந்தீர் என்றேன் அது நீ-தான் என்றார் வருதற்கு உரியீர் வாரும் என்றேன் வந்தேன் என்று மறைந்தாரே.

மேல்

#4 கல்லை வளைக்கும் பெருமானார் கழி சூழ் ஒற்றிக் கடி நகரார் எல்லை வளைக்கும் தில்லை_உள்ளார் என்றன் மனைக்குப் பலிக்கு உற்றார் அல்லை வளைக்கும் குழல் அன்னம் அன்பின் உதவாவிடில் லோபம் இல்லை வளைக்கும் என்றார் நான் இல் ஐ வளைக்கும் என்றேனே.

மேல்

#5 வெற்றி இருந்த மழு_படையார் விடையார் மேரு வில்_உடையார் பெற்றி இருந்த மனத்தர்-தம் உள் பிறங்கும் தியாக_பெருமானார் சுற்றி இருந்த பெண்கள் எல்லாஞ் சொல்லி நகைக்க அருகு அணைந்தார் ஒற்றி இரும் என்று உரைத்தேன் நான் ஒற்றி இருந்தேன் என்றாரே.

மேல்

#6 விண் தங்கு அமரர் துயர் தவிர்க்கும் வேல் கை மகனை விரும்பி நின்றோர் வண்டு அங்கு இசைக்கும் பொழில் ஒற்றி வதிவார் என்றன் மனை அடைந்தார் தண்டு அங்கு அழற்கு நிகரானீர் தண்டம் கழற்கு என்றேன் மொழியால் கண்டு அங்கு அறுத்தாய் என்றார் நீர் கண்டம் கறுத்தீர் என்றேனே.

மேல்

#7 விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் சொற்கு அண்டாத புகழ் ஒற்றித் தூயர் இன்று என் மனை புகுந்தார் நின் கண்டார்கள் மயல் அடைவார் என்றார் நீர்-தாம் நிகழ்த்திய சொல் கற்கண்டாம் என்று உரைத்தேன் நான் கல் கண்டாம் என்று உரைத்தாரே.

மேல்

#8 விடை ஆர் கொடி மேல் உயர்த்தருளும் வேத கீதப் பெருமானார் உடையார் ஒற்றியூர் அமர்ந்தார் உவந்து என் மனையில் இன்று அடைந்தார் இடையா வையம் என்றார் நான் இடை-தான் ஐயம் என்றேனால் கடையார் அளியார் என்றார் கண் கடையார் அளியார் என்றேனே.

மேல்

#9 நாடு ஒன்றிய சீர்த் திருவொற்றி நகரத்து அமர்ந்த நாயகனார் ஈடு ஒன்று இல்லார் என் மனை உற்றிருந்தார் பூ உண்டு எழில் கொண்ட மாடு ஒன்று எங்கே என்றேன் உன் மனத்தில் என்றார் மகிழ்ந்து அமர் வெண் காடுஒன்று உடையீர் என்றேன் செங்காடு ஒன்று உடையேன் என்றாரே.

மேல்

#10 சொல்லால் இயன்ற தொடை புனைவார் தூயார் ஒற்றித் தொல் நகரார் அல்லால் இயன்ற மனத்தார்-பால் அணுகார் என்றன் மனை புகுந்தார் வல்லால் இயன்ற முலை என்றார் வல்லார் நீர் என்றேன் உன் சொல் கல்லால் இயன்றது என்றார் முன் கல் ஆல் இயன்றது என்றேனே.

மேல்

@6. இன்பக் கிளவி

மேல்

#1 தில்லை வளத்தார் அம்பலத்தார் திருவேட்களத்தார் செவ் வணத்தார் கல்லை வளைத்தார் என்றன் மனக் கல்லைக் குழைத்தார் கங்கணத்தால் எல்லை வளைத்தார் தியாகர்-தமை எழில் ஆர் ஒற்றி எனும் நகரில் ஒல்லை வளைத்துக் கண்டேன் நான் ஒன்றும் உரையாது இருந்தாரே.

மேல்

#2 இருந்தார் திருவாரூரகத்தில் எண்ணாக் கொடியார் இதயத்தில் பொருந்தார் கொன்றைப் பொலன் பூந் தார் புனைந்தார் தம்மைப் புகழ்ந்தார்-கண் விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார் தரும் தார் காம மருந்து ஆர் இத் தரணி இடத்தே தருவாரே.

மேல்

#3 தருவார் தரு ஆர் செல்வம் முதல் தரு ஆர் ஒற்றித் தலம் அமர்வார் மருவார்-தமது மனம் மருவார் மரு ஆர் கொன்றை மலர் புனைவார் திரு ஆர் புயனும் மலரோனும் தேடும் தியாக_பெருமானார் வருவார் வருவார் என நின்று வழி பார்த்திருந்தேன் வந்திலரே.

மேல்

#4 வந்தார்_அல்லர் மாதே நீ வருந்தேல் என்று மார்பு இலங்கும் தம் தார் அல்லல் தவிர்ந்து ஓங்கத் தந்தார் அல்லர் தயை_உடையார் சந்து ஆர் சோலை வளர் ஒற்றித் தலத்தார் தியாக_பெருமானார் பந்து ஆர் முலையார்க்கு அவர் கொடுக்கும் பரிசு ஏதொன்றும் பார்த்திலமே.

மேல்

#5 இலமே செறித்தார் தாயர் இனி என் செய்குவது என்று இருந்தேற்கு நலமே தருவார் போல் வந்து என் நலமே கொண்டு நழுவினர் காண் உலமே அனைய திரு_தோளார் ஒற்றித் தியாக_பெருமானார் வலமே வலம் என் அவலம் அவலம் மாதே இனி என் வழுத்துவதே.

மேல்

#6 வழுத்தார் புரத்தை எரித்தார் நல் வலத்தார் நடன மலர்_அடியார் செழு தார் மார்பர் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார் கழுத்து ஆர் விடத்தார் தமது அழகைக் கண்டு கனிந்து பெரும் காமம் பழுத்தார்-தம்மைக் கலந்திட நல் பதத்தார் என்றும் பார்த்திலரே.

மேல்

#7 பாராது இருந்தார் தமது முகம் பார்த்து வருந்தும் பாவை-தனைச் சேராது இருந்தார் திருவொற்றித் திகழுந் தியாக_பெருமானார் வாராது இருந்தார் இன்னும் இவள் வருத்தங் கேட்டும் மாலை-தனைத் தாராது இருந்தார் சல_மகளைத் தாழ்ந்த சடையில் தரித்தாரே.

மேல்

#8 சடையில் தரித்தார் ஒருத்தி-தனைத் தழுவி மகிழ் மற்றொரு பெண்ணைப் புடையில் தரித்தார் மகளே நீ போனால் எங்கே தரிப்பாரோ கடையில் தரித்த விடம்-அதனைக் களத்தில் தரித்தார் கரித் தோலை இடையில் தரித்தார் ஒற்றியூர் இருந்தார் இருந்தார் என் உளத்தே.

மேல்

#9 உளத்தே இருந்தார் திருவொற்றியூரில் இருந்தார் உவர் விடத்தைக் களத்தே வதிந்தார் அவர் என்றன் கண்ணுள் வதிந்தார் கடல் அமுதாம் இளத் தே மொழியாய் ஆதலினால் இமையேன் இமைத்தல் இயல்பு அன்றே வளத்தே மனத்தும் புகுகின்றார் வருந்தேன் சற்றும் வருந்தேனே.

மேல்

#10 வருந்தேன் மகளிர் எனை ஒவ்வார் வளம் சேர் ஒற்றி மன்னவனார் தரும் தேன் அமுதம் உண்டு என்றும் சலிய வாழ்வில் தருக்கி மகிழ்ந்து இருந்தேன் மணாளர் எனைப் பிரியார் என்றும் புணர்ச்சிக்கு ஏது இதாம் மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே.

மேல்

@7. இன்பப் புகழ்ச்சி

மேல்

#1 மாடு ஒன்று உடையார் உணவு இன்றி மண் உண்டது காண் மலரோன்-தன் ஓடு ஒன்று உடையார் ஒற்றி வைத்தார் ஊரை மகிழ்வோடு உவந்து ஆலங் காடு ஒன்று உடையார் கண்டம் மட்டும் கறுத்தார் பூத கணத்தோடும் ஈடு ஒன்று உடையார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.

மேல்

#2 பித்தர் எனும் பேர் பிறங்க நின்றார் பேயோடு ஆடிப் பவுரி கொண்டார் பத்தர்-தமக்குப் பணி_செய்வார் பணியே பணியாப் பரிவுற்றார் சித்தர் திரு வாழ் ஒற்றியினார் தியாகர் என்று உன் கலை கவர்ந்த எத்தர் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#3 கடுத் தாழ் களத்தார் கரித் தோலார் கண்ணால் மதனைக் கரிசெய்தார் உடுத்தார் முன் ஓர் மண்_ஓட்டை ஒளித்தே தொண்டனொடும் வழக்குத் தொடுத்தார் பாம்பும் புலியும் மெச்சித் துதிக்க ஒருகால் அம்பலத்தில் எடுத்தார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே.

மேல்

#4 உரப் பார் மிசை இல்_பூச் சூட ஒட்டார் சடை மேல் ஒரு பெண்ணைக் கரப்பார் மலர் தூவிய மதனைக் கண்ணால் சுட்டார் கல் எறிந்தோன் வரப்பார் மிசை-கண் வாழ்ந்திருக்கவைத்தார் பலிக்கு மனை-தொறும் போய் இரப்பார் அன்றோ மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#5 கருதும் அவரை வெளிக்கு இழுப்பார் காணாது எல்லாம் காட்டி நிற்பார் மருதில் உறைவார் ஒற்றி-தனில் வதிவார் புரத்தை மலை_வில்லால் பொருது முடிப்பார் போல் நகைப்பார் பூ உண்டு உறங்கும் புது வெள்ளை எருதில் வருவார் மகளே நீ ஏதுக் கவரை விழைந்தனையே

மேல்

#6 ஆக்கம்_இல்லார் வறுமை_இலார் அருவம்_இல்லார் உருவம்_இலார் தூக்கம்_இல்லார் சுகம்_இல்லார் துன்பம்_இல்லார் தோன்றும் மல வீக்கம்_இல்லார் குடும்பம்-அது விருத்தியாகவேண்டும் எனும் ஏக்கம்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#7 ஊரும்_இல்லார் ஒற்றி வைத்தார் உறவு ஒன்று_இல்லார் பகை_இல்லார் பேரும்_இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சு_இல்லார் நேரும்_இல்லார் தாய் தந்தை நேயர்-தம்மோடு உடன்பிறந்தோர் யாரும்_இல்லார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#8 தங்கும் மருப்பார் கண்மணியைத் தரிப்பார் என்பின் தார் புனைவார் துங்கும் அருள் கார் முகில்_அனையார் சொல்லும் நமது சொல் கேட்டே இங்கும் இருப்பார் அங்கு இருப்பார் எல்லாம் இயல்பில் தாம் உணர்ந்தே எங்கும் இருப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#9 துத்திப் படத்தார் சடைத் தலையார் தொலையாப் பலி தேர் தொன்மையினார் முத்திக்கு_உடையார் மண் எடுப்பார் மொத்துண்டு உழல்வார் மொய் கழற்காம் புத்திக்கு உரிய பத்தர்கள்-தம் பொருளை உடலை யாவையுமே எத்திப் பறிப்பார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

#10 மாறித் திரிவார் மனம் அடையார் வணங்கும் அடியார் மனம்-தோறும் வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகு விலை கூறித் திரிவார் குதிரையின் மேல் கொள்வார் பசுவில் கோல்_வளையோடு ஏறித் திரிவார் மகளே நீ ஏதுக்கு அவரை விழைந்தனையே

மேல்

@8. திரு உலாத் திறம்

மேல்

#1 தேன் ஆர் கமலத் தடம் சூழும் திரு வாழ் ஒற்றித் தியாகர் அவர் வானார் அமரர் முனிவர் தொழ மண்ணோர் வணங்க வரும் பவனி தான் ஆர்வம்கொண்டு அகம் மலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டு அலது கான் ஆர் அலங்கல் பெண்ணே நான் கண்கள் உறக்கம்கொள்ளேனே.

மேல்

#2 திருமால் வணங்கும் ஒற்றி நகர் செழிக்கும் செல்வத் தியாகர் அவர் கரு மால் அகற்றுந் தொண்டர் குழாம் கண்டு களிக்க வரும் பவனி மரு மாண்பு உடைய மனம் மகிழ்ந்து மலர்க் கை கூப்பிக் கண்டு அலது பெரு மான் வடுக் கண் பெண்ணே நான் பெற்றாளோடும் பேசேனே.

மேல்

#3 சேல் ஆர் தடம் சூழ் ஒற்றி நகர் சேரும் செல்வத் தியாகர் அவர் ஆல் ஆர் களம் மேல் விளங்கும் முகம் அழகு ததும்ப வரும் பவனி நால் ஆரணஞ் சூழ் வீதியிடை நாடிப் புகுந்து கண்டு அலது பால் ஆர் குதலைப் பெண்ணே நான் பாயில் படுக்கை பொருந்தேனே.

மேல்

#4 செல் வந்து உறழும் பொழில் ஒற்றித் தெய்வத் தலம் கொள் தியாகர் அவர் வில்வம் திகழும் செஞ்சடை மின் விழுங்கி விளங்க வரும் பவனி சொல் வந்து ஓங்கக் கண்டு நின்று தொழுது துதித்த பின் அலது அல் வந்த அளகப் பெண்ணே நான் அவிழ்ந்த குழலும் முடியேனே.

மேல்

#5 சே ஆர் கொடியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர் பூ ஆர் கொன்றைப் புயங்கள் மனம் புணரப்புணர வரும் பவனி ஓவாக் களிப்போடு அகம் குளிர உடலம் குளிரக் கண்டு அலது பா ஆர் குதலைப் பெண்ணே நான் பரிந்து நீரும் பருகேனே.

மேல்

#6 சிற்றம்பலத்தார் ஒற்றி நகர் திகழுஞ் செல்வத் தியாகர் அவர் உற்று அங்கு உவந்தோர் வினைகள் எலாம் ஓட நாடி வரும் பவனி சுற்றுங் கண்கள் களிகூரத் தொழுது கண்ட பின் அலது முற்றுங் கனி வாய்ப் பெண்ணே நான் முடிக்கு ஓர் மலரும் முடியேனே.

மேல்

#7 சிந்தைக்கு இனியார் ஒற்றி நகர் திகழும் செல்வத் தியாகர் அவர் சந்தத் தடம் தோள் கண்டவர்கள்-தம்மை விழுங்க வரும் பவனி முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டு அலது கந்தக் குழல் வாய்ப் பெண்ணே நான் கண்ணீர் ஒழியக் காணேனே.

மேல்

#8 தென்னஞ்சோலை வளர் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர் பின்னும் சடை மேல் பிறை விளங்கிப் பிறங்காநிற்க வரும் பவனி மன்னும் கரங்கள் தலை குவித்து வணங்கி வாழ்த்திக் கண்டு அலது துன்னும் துவர் வாய்ப் பெண்ணே நான் சோறு எள்ளளவும் உண்ணேனே.

மேல்

#9 சிந்தாகுலம் தீர்த்து அருள் ஒற்றியூர் வாழ் செல்வத் தியாகர் அவர் வந்தார் கண்டார் அவர் மனத்தை வாங்கிப் போக வரும் பவனி நந்தா மகிழ்வு தலைசிறப்ப நாடி ஓடிக் கண்டு அலது பந்து ஆர் மலர்க் கைப் பெண்ணே நான் பாடல் ஆடல் பயிலேனே.

மேல்

#10 செக்கர்ச் சடையார் ஒற்றி நகர்ச் சேரும் செல்வத் தியாகர் அவர் மிக்க அற்புத வாள் முகத்தில் நகை விளங்க விரும்பி வரும் பவனி மக்கள்_பிறவி எடுத்த பயன் வசிக்க வணங்கிக் கண்டு அலது நக்கற்கு இயைந்த பெண்ணே நான் ஞாலத்து எவையும் நயவேனே.

மேல்

@9. வியப்பு மொழி

மேல்

#1 மாதர் மணியே மகளே நீ வாய்த்த தவம்-தான் யாது அறியேன் வேதர் அனந்தர் மால் அனந்தர் மேவி வணங்கக் காண்ப அரியார் நாதர் நடன நாயகனார் நல்லோர் உளத்துள் நண்ணுகின்றோர் கோதர் அறியாத் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#2 திருவில் தோன்றும் மகளே நீ செய்த தவம்-தான் யார் அறிவார் மருவில் தோன்றும் கொன்றை அம் தார் மார்பர் ஒற்றி மா நகரார் கருவில் தோன்றும் எங்கள் உயிர் காக்க நினைத்த கருணையினார் குருவில் தோன்றும் தியாகர்-தமைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#3 என் ஆர்_உயிர் போல் மகளே நீ என்ன தவம்-தான் இயற்றினையோ பொன் ஆர் புயனும் மலரோனும் போற்றி வணங்கும் பொன்_பதத்தார் தென் ஆர் ஒற்றித் திரு_நகரார் தியாகர் எனும் ஓர் திரு_பெயரார் கொன் ஆர் சூலப் படையவரைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#4 சேலை நிகர் கண் மகளே நீ செய்த தவம்-தான் செப்ப அரிதால் மாலை அயனை வானவரை வருத்தும்படிக்கு மதித்து எழுந்த வேலை விடத்தை மிடற்று அணிந்தார் வீட்டு நெறியாம் அரசியல் செங் கோலை அளித்தார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#5 தேன் நேர் குதலை மகளே நீ செய்த தவம்-தான் எத் தவமோ மான் ஏர் கரத்தார் மழ விடை மேல் வருவார் மரு ஆர் கொன்றையினார் பால் நேர் நீற்றர் பசுபதியார் பவள வண்ணர் பல் சடை மேல் கோல் நேர் பிறையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#6 வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ கல்லார் உள்ளம் கலவாதார் காமன் எரியக் கண் விழித்தார் வில்லார் விசையற்கு அருள் புரிந்தார் விளங்கும் ஒற்றி மேவி நின்றார் கொல்லா நெறியார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#7 அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ வெம் சொல் புகலார் வஞ்சர்-தமை மேவார் பூ ஆர் கொன்றையினார் கஞ்சற்கு அரியார் திருவொற்றிக் காவல் உடையார் இன் மொழியால் கொஞ்சத் தருவார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#8 பூ வாய் வாள் கண் மகளே நீ புரிந்த தவம்-தான் எத் தவமோ சே வாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார் கா வாய்ந்து ஓங்கும் திருவொற்றிக் காவல் உடையார் எவ்வெவர்க்கும் கோவாய் நின்றார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#9 மலை நேர் முலையாய் மகளே நீ மதிக்கும் தவம் ஏது ஆற்றினையோ தலை நேர் அலங்கல் தாழ்_சடையார் சாதி அறியாச் சங்கரனார் இலை நேர் தலை மூன்று ஒளிர் படையார் எல்லாம் உடையார் எருக்கின் மலர்க் குலை நேர் சடையார் அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

#10 மயிலின் இயல் சேர் மகளே நீ மகிழ்ந்து புரிந்தது எத் தவமோ வெயிலின் இயல் சேர் மேனியினார் வெண் நீறு உடையார் வெள் விடையார் பயில் இன்_மொழியாள் பாங்கு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார் குயிலின் குலவி அவர்-தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே.

மேல்

@10. புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்

மேல்

#1 உள்ளார் புறத்தார் ஒற்றி எனும் ஊரார் ஒப்பு என்று ஒன்றும் இலார் வள்ளால் என்று மறை துதிக்க வருவார் இன்னும் வந்திலரே எள்ளாது இருந்த பெண்கள் எலாம் இகழாநின்றார் இனிய மொழித் தெள் ஆர் அமுதே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#2 மால் ஏறு உடைத்தாம் கொடி_உடையார் வளம் சேர் ஒற்றி மா நகரார் பால் ஏறு அணி நீற்று அழகர் அவர் பாவியேனைப் பரிந்திலரே கோல் ஏறுண்ட மதன் கரும்பைக் குனித்தான் அம்பும் கோத்தனன் காண் சேல் ஏறு உண்கண் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#3 பொய்யர் உளத்துப் புகுந்து அறியார் போதனொடு மால் காண்ப அரிதாம் ஐயர் திரு வாழ் ஒற்றி நகர் அமர்ந்தார் இன்னும் அணைந்திலரே வைய மடவார் நகைக்கின்றார் மாரன் கணையால் திகைக்கின்றேன் செய்ய முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#4 நந்திப் பரியார் திருவொற்றி_நாதர் அயன் மால் நாடுகினும் சந்திப்பு அரியார் என் அருமைத் தலைவர் இன்னும் சார்ந்திலரே அந்திப் பொழுதோ வந்தது இனி அந்தோ மதியம் அனல் சொரியும் சிந்திப்பு உடையேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#5 என் ஆர்_உயிர்க்கு ஓர் துணை ஆனார் என் ஆண்டவனார் என்னுடையார் பொன் ஆர் ஒற்றி நகர் அமர்ந்தார் புணர்வான் இன்னும் போந்திலரே ஒன்னார் எனவே தாயும் எனை ஒறுத்தாள் நானும் உயிர் பொறுத்தேன் தென் ஆர் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#6 மாணி உயிர் காத்து அந்தகனை மறுத்தார் ஒற்றி மா நகரார் காணி_உடையார் உலகு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே பேணி வாழாப் பெண் எனவே பெண்கள் எல்லாம் பேசுகின்றார் சேண்-நின்று இழிந்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#7 வன் சொல் புகலார் ஓர் உயிரும் வருந்த நினையார் மனம் மகிழ இன் சொல் புகல்வார் ஒற்றி_உளார் என் நாயகனார் வந்திலரே புன் சொல் செவிகள் புகத் துயரம் பொறுத்து முடியேன் புலம்பிநின்றேன் தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#8 எட்டிக் கனியும் மாங்கனி போல் இனிக்க உரைக்கும் இன் சொலினார் தட்டில் பொருந்தார் ஒற்றியில் வாழ் தலைவர் இன்னும் சார்ந்திலரே மட்டில் பொலியும் மலர்_கணை செல் வழியே பழி செல் வழி அன்றோ தெட்டில் பொலியும் விழியாய் நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#9 காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் சோலை மலர்ந்த ஒற்றியினார் சோகம் தீர்க்க வந்திலரே மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ சேலை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#10 உலகம்_உடையார் என்னுடைய உள்ளம்_உடையார் ஒற்றியினார் அலகு இல் புகழார் என் தலைவர் அந்தோ இன்னும் அணைந்திலரே கலகம் உடையார் மாதர் எலாம் கல்_நெஞ்சு உடையார் தூதர் எலாம் திலக முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#11 மாலும் அறியான் அயன் அறியான் மறையும் அறியா வானவர் எக் காலும் அறியார் ஒற்றி நிற்கும் கள்வர் அவரைக் கண்டிலனே கோலும் மகளிர் அலர் ஒன்றோ கோடாகோடி என்பது அல்லால் சேல் உண் விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#12 உந்து மருத்தோடு ஐம்பூதம் ஆனார் ஒற்றியூர் அமர்ந்தார் இந்தும் இருத்தும் சடைத்_தலையார் என்-பால் இன்னும் எய்திலரே சந்துபொறுத்துவார் அறியேன் தமியளாகத் தளர்கின்றேன் சிந்து உற்பவத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#13 ஆடல் அழகர் அம்பலத்தார் ஐயாறு_உடையார் அன்பர்களோ(டு) ஊடல் அறியார் ஒற்றியினார் உவகை ஓங்க உற்றிலரே வாடல் எனவே எனைத் தேற்றுவாரை அறியேன் வாய்ந்தவரைத் தேடல் அறியேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#14 தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் தூது நடந்த சுந்தரனார் அழுது வணங்கும் அவர்க்கு மிக அருள் ஒற்றியினார் அணைந்திலரே பொழுது வணங்கும் இருள் மாலைப் பொழுது முடுகிப் புகுந்தது காண் செழுமை விழியாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#15 பாவம் அறுப்பார் பழி அறுப்பார் பவமும் அறுப்பார் அவம் அறுப்பார் கோவம் அறுப்பார் ஒற்றியில் என் கொழுநர் இன்னும் கூடிலரே தூவ மதன் ஐங்கணை மாதர் தூறு தூவத் துயர்கின்றேன் தேவ மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#16 உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் ஒற்றி நகரார் பற்று_இலரைச் செயிர்க்குள் அழுத்தார் மணி_கண்டத் தேவர் இன்னும் சேர்ந்திலரே வெயிற்கு மெலிந்த செந்தளிர் போல் வேள் அம்பு-அதனால் மெலிகின்றேன் செயற்கை மடவாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#17 ஊனம் அடையார் ஒற்றியினார் உரைப்பார் உள்ளத்து உறைகின்றோர் கானம்_உடையார் நாடு_உடையார் கனிவாய் இன்னும் கலந்திலரே மானம்_உடையார் எம் உறவோர் வாழாமைக்கே வருந்துகின்றார் தீனம் அடையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#18 மலையை வளைத்தார் மால் விடை மேல் வந்தார் வந்து என் வளையினொடு கலையை வளைத்தார் ஒற்றியில் என் கணவர் என்னைக் கலந்திலரே சிலையை வளைத்தான் மதன் அம்பு தெரிந்தான் விடுக்கச் சினைக்கின்றான் திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#19 பிரமன் தலையில் பலிகொள்ளும் பித்தர் அருமைப் பெருமானார் உரம் மன்னிய சீர் ஒற்றி நகர் உள்ளார் இன்னும் உற்றிலரே அரம் மன்னிய வேல் படை அன்றோ அம்மா அயலார் அலர்_மொழி-தான் திரம் மன்னுகிலேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#20 பவள நிறத்தார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பரசிவனார் தவள நிற நீற்று அணி அழகர் தமியேன்-தன்னைச் சார்ந்திலரே துவளும் இடை தான் இற முலைகள் துள்ளாநின்றது என்னளவோ திவளும் இழையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#21 வண்டு ஆர் கொன்றை வளர் சடையார் மதிக்க எழுந்த வல் விடத்தை உண்டார் ஒற்றியூர் அமர்ந்தார் உடையார் என்-பால் உற்றிலரே கண்டார் கண்டபடி பேசக் கலங்கிப் புலம்பல் அல்லாது செண்டு ஆர் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#22 உணவை இழந்தும் தேவர் எலாம் உணரா ஒருவர் ஒற்றியில் என் கணவர் அடியேன் கண் அகலாக் கள்வர் இன்னும் கலந்திலரே குணவர் எனினும் தாய் முதலோர் கூறாது எல்லாம் கூறுகின்றார் திணி கொள் முலையாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#23 வாக்குக்கு அடங்காப் புகழ்_உடையார் வல்லார் ஒற்றி மா நகரார் நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே ஊக்கம் மிகும் ஆர்கலி ஒலி என் உயிர் மேல் மாறேற்று உரப்பு ஒலி காண் தேக்கம் குழலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#24 தரையில் கீறிச் சலந்தரனைச் சாய்த்தார் அந்தச் சக்கரம் மால் வரையற்கு அளித்தார் திருவொற்றி_வாணர் இன்னும் வந்திலரே கரையில் புணர்ந்த நாரைகளைக் கண்டேன் கண்டவுடன் காதல் திரையில் புணர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#25 பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்_ஒளியாய் உற்ற சிவனார் திருவொற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே எற்றென்று உரைப்பேன் செவிலி அவள் ஏறா_மட்டும் ஏறுகின்றாள் செற்றம் ஒழியாள் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#26 போகம்_உடையார் பெரும்பற்றப்புலியூர் உடையார் போத சிவ யோகம் உடையார் வளர் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே சோகம் உடையேன் சிறிதேனும் துயிலோ அணையா குயில் ஒழியா தேகம் அயர்ந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#27 தாமப் புயனார் சங்கரனார் தாயில் இனியார் தற்பரனார் ஓமப் புகை வான் உறும் ஒற்றியூர் வாழ்வு உடையார் உற்றிலரே காம_பயலோ கணை எடுத்தான் கண்ட மகளீர் பழி தொடுத்தார் சேமக் குயிலே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#28 ஆரூர் உடையார் அம்பலத்தார் ஆலங்காட்டார் அரசிலியார் ஊரூர் புகழும் திருவொற்றியூரார் இன்னும் உற்றிலரே வார் ஊர் முலைகள் இடை வருத்த மனம் நொந்து அயர்வதன்றி இனிச் சீர் ஊர் அணங்கே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#29 காலம் கடந்தார் மால் அயன்-தன் கருத்தும் கடந்தார் கதி கடந்தார் ஞாலம் கடந்த திருவொற்றி நாதர் இன்னும் நண்ணிலரே சாலங் கடந்த மனம் துணையாய்த் தனியே நின்று வருந்தல் அல்லால் சீலங் கடந்தேன் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

#30 சங்கக் குழையார் சடை_முடியார் சதுரர் மறையின் தலை நடிப்பார் செங்கண் பணியார் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலரே மங்கைப் பருவம் மணம் இல்லா மலர் போல் ஒழிய வாடுகின்றேன் திங்கள் முகத்தாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே.

மேல்

@11. குறி ஆராய்ச்சி

மேல்

#1 நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார் அந்தி நிறத்தார் திருவொற்றி அமர்ந்தார் என்னை அணைவாரோ புந்தி இலள் என்று அணையாரோ யாதுந் தெரியேன் புலம்புகின்றேன் சிந்தை மகிழக் குற மடவாய் தெரிந்தோர் குறி-தான் செப்புவையே.

மேல்

#2 தரும விடையார் சங்கரனார் தகை சேர் ஒற்றித் தனி நகரார் ஒருமை அளிப்பார் தியாகர் எனை_உடையார் இன்று வருவாரோ மருவ நாளை வருவாரோ வாராது என்னை மறப்பாரோ கருமம் அறிந்த குற மடவாய் கணித்து ஓர் குறி-தான் கண்டு உரையே.

மேல்

#3 ஆழி விடையார் அருள்_உடையார் அளவிட்டு அறியா அழகு_உடையார் ஊழி வரினும் அழியாத ஒற்றித் தலம் வாழ் உத்தமனார் வாழி என்-பால் வருவாரோ வறியேன் வருந்த வாராரோ தோழி அனைய குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

மேல்

#4 அணியார் அடியார்க்கு அயன் முதலாம் அமரர்க்கு எல்லாம் அரியர் என்பாம் பணியார் ஒற்றிப் பதி_உடையார் பரிந்து என் முகம்-தான் பார்ப்பாரோ தணியாக் காதல் தவிர்ப்பாரோ சார்ந்து வரவு தாழ்ப்பாரோ குணியா எழில் சேர் குற மடவாய் குறி-தான் ஒன்றும் கூறுவையே.

மேல்

#5 பொன் ஆர் புயத்துப் போர் விடையார் புல்லர் மனத்துள் போகாதார் ஒன்னார் புரம் தீ உற நகைத்தார் ஒற்றி எனும் ஓர் ஊர் அமர்ந்தார் என் நாயகனார் எனை மருவல் இன்றோ நாளையோ அறியேன் மின் ஆர் மருங்குல் குற மடவாய் விரைந்து ஓர் குறி நீ விளம்புவையே.

மேல்

#6 பாலில் தெளிந்த திரு_நீற்றர் பாவ_நாசர் பண்டரங்கர் ஆலில் தெளிய நால்வர்களுக்கு அருளும் தெருளர் ஒற்றியினார் மாலில் தெளியா நெஞ்சகத்தேன் மருவிக் கலக்க வருவாரோ சேலில் தெளி கண் குறப் பாவாய் தெரிந்து ஓர் குறி நீ செப்புகவே.

மேல்

#7 நிருத்தம் பயின்றார் நித்தியனார் நேச மனத்தர் நீல_கண்டர் ஒருத்தர் திரு வாழ் ஒற்றியினார் உம்பர் அறியா என் கணவர் பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாராது அணைவாரோ வருத்தந் தவிரக் குறப் பாவாய் மகிழ்ந்து ஓர் குறி-தான் வழுத்துவையே.

மேல்

#8 கமலன் திருமால் ஆதியர்கள் கனவினிடத்தும் காண்ப அரியார் விமலர் திரு வாழ் ஒற்றியிடை மேவும் பெருமை வித்தகனார் அமலர் அவர்-தாம் என் மனைக்கு இன்று அணைகுவாரோ அணையாரோ தமலம் அகன்ற குறப் பாவாய் தனித்து ஓர் குறி-தான் சாற்றுவையே.

மேல்

#9 வன்னி இதழி மலர்_சடையார் வன்னி என ஓர் வடிவு_உடையார் உன்னி உருகும் அவர்க்கு எளியார் ஒற்றி நகர் வாழ் உத்தமனார் கன்னி அழித்தார்-தமை நானும் கலப்பேன்-கொல்லோ கலவேனோ துன்னி மலை வாழ் குற மடவாய் துணிந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

மேல்

#10 கற்றைச் சடை மேல் கங்கை-தனைக் கலந்தார் கொன்றைக் கண்ணியினார் பொற்றைப் பெரு வில் படை_உடையார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார் இற்றைக்கு அடியேன் பள்ளியறைக்கு எய்துவாரோ எய்தாரோ சுற்றும் கரும் கண் குற மடவாய் சூழ்ந்து ஓர் குறி நீ சொல்லுவையே.

மேல்

#11 அரவக் கழலார் கரும் களத்தார் அஞ்சைக்களத்தார் அரி பிரமர் பரவப்படுவார் திருவொற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர் இரவு வரும் முன் வருவாரோ என்னை அணைதற்கு இசைவாரோ குரவம் மணக்கும் குற மடவாய் குறி நீ ஒன்று கூறுவையே.

மேல்

@12. காட்சி அற்புதம்

மேல்

#1 பூணா அணி பூண் புயம்_உடையார் பொன்_அம்பலத்தார் பொங்கு விடம் ஊணா உவந்தார் திருவொற்றியூர் வாழ்வு_உடையார் உண்மை சொலி நீண் ஆல் இருந்தார் அவர் இங்கே நின்றார் மீட்டும் நின்றிடவே காணாது அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#2 ஓட்டில் இரந்து உண்டு ஒற்றியிடை உற்றார் உலகத்து உயிரை எலாம் ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் அருகே எளியளாம் எனவே ஏட்டில் அடங்காக் கையறவால் இருந்தேன் இருந்த என் முன் உருக் காட்டி மறைத்தார் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#3 ஈதல் ஒழியா வண்_கையினார் எல்லாம்_வல்ல சித்தர் அவர் ஓதல் ஒழியா ஒற்றியில் என் உள்ளம் உவக்க உலகம் எலாம் ஆதல் ஒழியா எழில் உருக்கொண்டு அடைந்தார் கண்டேன் உடன் காணேன் காதல் ஒழியாது என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#4 தொண்டு புரிவோர்-தங்களுக்கு ஓர் துணைவர் ஆவார் சூழ்ந்து வரி வண்டு புரியும் கொன்றை மலர் மாலை அழகர் வல் விடத்தை உண்டு புரியும் கருணையினார் ஒற்றியூரர் ஒண் பதத்தைக் கண்டும் காணேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#5 அடியர் வருந்த உடன் வருந்தும் ஆண்டை அவர்-தாம் அன்று அயனும் நெடிய மாலும் காணாத நிமல உருவோடு என் எதிரே வடியல் அறியா அருள் காட்டி மறைத்தார் மருண்டேன் மங்கை நல்லார் கடிய அயர்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#6 கொற்றம்_உடையார் திருவொற்றிக் கோயில்_உடையார் என் எதிரே பொற்றை மணித் தோள் புயம் காட்டிப் போனார் என்னைப் புலம்பவைத்துக் குற்றம் அறியேன் மன நடுக்கம் கொண்டேன் உடலம் குழைகின்றேன் கல் திண் முலையாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#7 ஆல நிழல் கீழ் அன்று அமர்ந்தார் ஆதி நடு ஈறு ஆகி நின்றார் நீல மிடற்றார் திருவொற்றி நியமத்து எதிரே நீற்று உருவக் கோலம் நிகழக் கண்டேன் பின் குறிக்கக் காணேன் கூட்டுவிக்கும் காலம் அறியேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#8 சலம் காதலிக்கும் தாழ்_சடையார் தாமே தமக்குத் தாதையனார் நிலம் காதலிக்கும் திருவொற்றி நியமத்து எதிரே நின்றனர் காண் விலங்காது அவரைத் தரிசித்தேன் மீட்டும் காணேன் மெய்மறந்தேன் கலங்காநின்றேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#9 நிரந்து ஆர் கங்கை நீள்_சடையார் நெற்றி விழியார் நித்தியனார் சிரம் தார் ஆகப் புயத்து அணிவார் திரு வாழ் ஒற்றி_தியாகர் அவர் பரந்து ஆர் கோயிற்கு எதிர்நிற்கப் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன் முன் கரந்தார் கலுழ்ந்தேன் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

#10 அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டி நின்றார் தளித் தார் சோலை ஒற்றியிடைத் தமது வடிவம் காட்டி உடன் ஒளித்தார் நானும் மனம் மயங்கி உழலாநின்றேன் ஒண் தொடிக் கைக் களித் தார் குழலாய் என்னடி நான் கனவோ நனவோ கண்டதுவே.

மேல்

@13. ஆற்றாக் காதலின் இரங்கல்

மேல்

#1 மந்தாகினி வான் மதி மத்தம் மருவும் சடையார் மாசு_அடையார் நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் உந்தா ஒலிக்கும் ஓதம் மலி ஒற்றியூரில் உற்று எனக்குத் தந்தார் மையல் என்னோ என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#2 பூ மேல் அவனும் மால் அவனும் போற்றி வழுத்தும் பூங்கழலார் சே மேல் வருவார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் திரு_புயத்தைத் தேம் மேல் அலங்கல் முலை அழுந்தச் சேர்ந்தால் அன்றிச் சித்தசன் கைத்து ஆம் மேல் அழல் பூத் தாழாது என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#3 கருணைக்கு ஒரு நேர் இல்லாதார் கல்லைக் கரைக்கும் கழல்_அடியார் அருணைப்பதியார் ஆமாத்தூர் அமர்ந்தார் திருவாவடுதுறையார் இருள் நச்சிய மா மணி_கண்டர் எழில் ஆர் ஒற்றி இறைவர் இந்தத் தருணத்து இன்னும் சேர்ந்திலர் என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#4 ஆரா_அமுதாய் அன்பு_உடையோர் அகத்துள் இனிக்கும் அற்புதனார் தீரா வினையும் தீர்த்து அருளும் தெய்வ மருந்தார் சிற்சபையார் பாரார் புகழும் திருவொற்றிப் பரமர் தமது தோள் அணையத் தாரார் இன்னும் என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#5 துதி செய் அடியர்-தம் பசிக்குச் சோறும் இரப்பார் துய்யர் ஒரு நதி செய் சடையார் திருவொற்றி நண்ணும் எனது நாயகனார் மதி செய் துயரும் மதன் வலியும் மாற்ற இன்னும் வந்திலரே சதிசெய்தனரோ என்னடி என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#6 எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திரு வாழ் ஒற்றியினார் அம் கள் அணி பூ தார்ப் புயத்தில் அணைத்தார்_அல்லர் எனை மடவார்- தங்கள் அலரோ தாழாது என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#7 காவி மணந்த கரும் களத்தார் கருத்தர் எனது கண்_அனையார் ஆவி_அனையார் தாய்_அனையார் அணி சேர் ஒற்றி ஆண்தகையார் பூவின் அலங்கல் புயத்தில் எனைப் புல்லார் அந்திப் பொழுதில் மதி தாவி வருமே என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.

மேல்

#8 மலம் சாதிக்கும் மக்கள்-தமை மருவார் மருவார் மதில் அழித்தார் வலம் சாதிக்கும் பாரிடத்தார் மாலும் அறியா மலர்_பதத்தார் நிலம் சாதிக்கும் ஒற்றியினார் நினையார் என்னை அணையாமல் சலம் சாதித்தார் என்னடி என் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#9 நாக அணியார் நக்கர் எனும் நாமம்_உடையார் நாரணன் ஓர் பாகம்_உடையார் மலை_மகள் ஓர் பாங்கர்_உடையார் பசுபதியார் யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே.

மேல்

#10 தீர்ந்தார் தலையே கலனாகச் செறித்து நடிக்கும் திரு_கூத்தர் தேர்ந்தார்-தம்மைப் பித்து அடையச்செய்வார் ஒற்றித் தியாகர் அவர் சேர்ந்தார்_அல்லர் இன்னும் எனைத் தேடி வரும் அத் தீ மதியம் சார்ந்தால் அது-தான் என் செயுமோ சகியே இனி நான் சகியேனே.

மேல்

#11 ஆயும் படிவத்து அந்தணனாய் ஆரூரன்-தன் அணி முடி மேல் தோயும் கமலத் திரு_அடிகள் சூட்டும் அதிகைத் தொல் நகரார் ஏயும் பெருமை ஒற்றி_உளார் இன்னும் அணையார் எனை அளித்த தாயும் தமரும் நொடிக்கின்றார் சகியே இனி நான் சகியேனே.

மேல்

@14. திருக்கோலச் சிறப்பு

மேல்

#1 பொன் என்று ஒளிரும் புரி சடையார் புனை நூல் இடையார் புடை_உடையார் மன் என்று உலகம் புகழ் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் மின் என்று இலங்கு மாதர் எலாம் வேட்கை அடைய விளங்கி நின்றது இன்னென்று அறியேன் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#2 அள்ளிக் கொடுக்கும் கருணையினார் அணி சேர் ஒற்றி ஆலயத்தார் வள்ளிக்கு உவந்தோன்-தனை ஈன்ற வள்ளல் பவனி வரக் கண்டேன் துள்ளிக் குதித்து என் மனம் அவரைச் சூழ்ந்தது இன்னும் வந்தது_இலை எள்ளிக் கணியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#3 அனத்துப் படிவம் கொண்டு அயனும் அளவா முடியார் வடியாத வனத்துச் சடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் மனத்துக்கு அடங்காதாகில் அதை வாய் கொண்டு உரைக்க வசமாமோ இனத்துக்கு உவப்பாம் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#4 கொழுதி அளி தேன் உழுது உண்ணும் கொன்றைச் சடையார் கூடல் உடை வழுதி மருகர் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் பழுது இல் அவனாம் திருமாலும் படைக்குங் கமல_பண்ணவனும் எழுதி முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#5 புன்னை இதழிப் பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் மன்னும் விடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் உன்னும் உடலம் குளிர்ந்து ஓங்க உவகை பெருக உற்று நின்ற என்னை விழுங்கும் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#6 சொல்லுள் நிறைந்த பொருள் ஆனார் துய்யர் உளத்தே துன்னி நின்றார் மல்லல் வயல் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டதெனில் எல்லை_இல்லா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#7 நீர்க்கும் மதிக்கும் நிலையாக நீண்ட சடையார் நின்று நறா ஆர்க்கும் பொழில் சூழ் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் பார்க்கும் அரிக்கும் பங்கயற்கும் பல் மா தவர்க்கும் பண்ணவர்க்கும் யார்க்கும் அடங்கா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#8 கலக அமணக் கைதவரைக் கழுவில் ஏற்றுங் கழுமலத்தோன் வல கை குவித்துப் பாடும் ஒற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் உலக நிகழ்வைக் காணேன் என் உள்ளம் ஒன்றே அறியுமடி இலகும் அவர்-தம் திரு_அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#9 கண்ணன் அறியாக் கழல்_பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள் அருள் வண்ணம் உடையார் திருவொற்றி_வாணர் பவனி வரக் கண்டேன் நண்ண இமையார் என இமையா நாட்டம் அடைந்து நின்றனடி எண்ண முடியா அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

#10 மாழை மணித் தோள் எட்டு_உடையார் மழு மான் ஏந்தும் மலர்_கரத்தார் வாழை வளம் சூழ் ஒற்றியூர்_வாணர் பவனி வரக் கண்டேன் யாழை மலைக்கும் மொழி மடவார் யாரும் மயங்கிக் கலை அவிழ்ந்தார் ஏழையேன் நான் அவர் அழகை என்னென்று உரைப்பது ஏந்திழையே

மேல்

@15. சோதிடம் நாடல்

மேல்

#1 பொன் அம் சிலையால் புரம் எறித்தார் பொழில் சூழ் ஒற்றிப் புண்ணியனார் முன் நஞ்சு அருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர் அவர் இன்னம் சில நாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ உன்னம் சிறந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#2 பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெற அறியார் புற்றின் அரவார் கச்சை உடைப் புனிதர் என்னைப் புணரும் இடம் தெற்றி மணிக் கால் விளங்கு தில்லைச் சிற்றம்பலமோ அன்றி இந்த ஒற்றி நகரோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#3 அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார் தெளித்து நதியைச் சடை இருத்தும் தேவர் திரு வாழ் ஒற்றி_உளார் களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ ஒளித்து ஒன்று உரையீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#4 எண் தோள் இலங்கும் நீற்று_அணியர் யார்க்கும் இறைவர் எனை_உடையார் வண்டு ஓலிடும் பூ கொன்றை அணி மாலை மார்பர் வஞ்சம்_இலார் தண் தோய் பொழில் சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மண_பொருத்தம் உண்டோ இலையோ சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#5 தவர்-தாம் வணங்கும் தாள்_உடையார் தாய் போல் அடியர்-தமைப் புரப்பார் பவர்-தாம் அறியாப் பண்பு_உடையார் பணை சூழ் ஒற்றிப் பதி அமர்ந்தார் அவர்-தாம் மீண்டு உற்று அணைவாரோ அன்றி நான் போய் அணைவேனோ உவர்-தாம் அகற்றும் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#6 பைத்த அரவப் பணி அணிவார் பணை சூழ் ஒற்றிப் பதி மகிழ்வார் மைத்த மிடற்றார் அவர்-தமக்கு மாலையிடவே நான் உளத்தில் வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியாது அழிந்திடுமோ உய்த்த மதியால் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#7 தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண் அளியார் மிக்க வளம் சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்-தன் துக்கம் அகலச் சுகம் அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோ-தான் ஒக்க அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#8 வெண்மை நீற்றர் வெள்_ஏற்றர் வேத கீதர் மெய் உவப்பார் வண்மை_உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனம் மகிழ்ந்து வண்மை அகலாது அருள்_கடல் நீராடுவேனோ ஆடேனோ உண்மை அறிந்தீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே

மேல்

#9 ஆர்த்து மலி நீர் வயல் ஒற்றி அமர்ந்தார் மதியோடு அரவை முடிச் சேர்த்து நடிப்பார் அவர்-தமை நான் தேடி வலியச் சென்றிடினும் பார்த்தும் பாராது இருப்பாரோ பரிந்து வா என்று உரைப்பாரோ ஓர்த்து மதிப்பீர் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.

மேல்

#10 அள்ள மிகும் பேர் அழகு_உடையார் ஆனை உரியார் அரிக்கு அரியார் வெள்ளம் மிகும் பொன் வேணியினார் வியன் சேர் ஒற்றி விகிர்தர் அவர் கள்ளமுடனே புணர்வாரோ காதலுடனே கலப்பாரோ உள்ளம் அறியேன் சோதிடம் பார்த்து உரைப்பீர் புரி_நூல் உத்தமரே.

மேல்

@16. திருஅருட் பெருமிதம்

மேல்

#1 விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்_நகையால் அடையார் புரங்கள் எரித்து அழித்தார் அவரே இந்த அகிலம் எலாம்_ உடையார் என்று நினைத்தனை ஊர் ஒற்றி அவர்க்கு என்று உணர்ந்திலையோ இடையா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#2 கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் திரு வாழ் ஒற்றித் தேவர் எனும் செல்வர் அவரே செல்வம்-அதில் பெரு வாழ்வு_உடையார் என நினைத்தாய் பிச்சை எடுத்தது அறிந்திலையோ இருவா மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#3 மட்டுக்கு அடங்கா வண் கையினார் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் பட்டுத் துகிலே திசைகள் எலாம் படர்ந்தது என்னப் பரிந்தனையோ கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ இட்டுப் புணர்ந்து இங்கு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#4 நடம் கொள் கமலச் சேவடியார் நலம் சேர் ஒற்றி_நாதர் அவர் தடம் கொள் மார்பின் மணிப் பணியைத் தரிப்பார் நமக்கு என்று எண்ணினையால் படம் கொள் பாம்பே பாம்பு என்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ இடம் கொள் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#5 திரு_கண் நுதலால் திரு_மகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர் அவர் எருக்க மலரே சூடுவர் நீ எழில் மல்லிகை என்று எண்ணினையால் உருக்கும் நெருப்பே அவர் உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ இருக்க மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#6 மேலை வினையைத் தவிர்த்து அருளும் விடையார் ஒற்றி விகிர்தர் அவர் மாலை கொடுப்பார் உணங்கு தலை மாலை அது-தான் வாங்குவையே ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே ஏல மயல்கொண்டு என் பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#7 மாகம் பயிலும் பொழில் பணை கொள் வளம் சேர் ஒற்றி_வாணர் அவர் யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள் காண் ஏக மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#8 விண் பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடம் தரினும் உண்பார் இன்னும் உனக்கு அது-தான் உடன்பாடு ஆமோ உளம் உருகித் தண்பார் என்பார்-தமை எல்லாம் சார்வார் அது உன் சம்மதமோ எண்பார் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#9 நீடி வளம் கொள் ஒற்றியில் வாழ் நிமலர் உலகத்து உயிர்-தோறும் ஓடி ஒளிப்பார் அவர் நீயும் ஒக்க ஓட உன் வசமோ நாடி நடிப்பார் நீயும் உடன் நடித்தால் உலகர் நகையாரோ ஈடு_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

#10 உள்ளி உருகும் அவர்க்கு அருளும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்க்கு வெள்ளி மலையும் பொன்_மலையும் வீடு என்று உரைப்பார் ஆனாலும் கள்ளி நெருங்கிப் புறம் கொள் சுடுகாடே இடம் காண் கண்டு அறி நீ எள்_இல் மயல்கொண்டு எது பெறுவாய் ஏழை அடி நீ என் மகளே.

மேல்

@17. காதற் சிறப்புக் கதுவா மாண்பு

மேல்

#1 உலகம்_உடையார் தம் ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் அலகு_இல் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும் திலகம் அனையார் புறம் காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் கலக விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#2 பெருமை_உடையார் மனை-தொறும் போய்ப் பிச்சையெடுத்தார் ஆனாலும் அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும் ஒருமை_உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் கருமை விழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#3 எல்லாம்_உடையார் மண் கூலிக்கு எடுத்துப் பிழைத்தார் ஆனாலும் கொல்லா நலத்தார் யானையின் தோல் கொன்று தரித்தார் ஆனாலும் வல்லார் விசையன் வில் அடியால் வடுப்பட்டு உவந்தார் ஆனாலும் கல்லாம் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#4 என்னை உடையார் ஒரு வேடன் எச்சில் உவந்தார் என்றாலும் அன்னை_அனையார் ஒரு மகனை அறுக்க உரைத்தார் என்றாலும் துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும் கன்னி இது கேள் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#5 என்றும் இறவார் மிடற்றில் விடம் இருக்க அமைத்தார் என்றாலும் ஒன்று நிலையார் நிலையில்லாது ஓடி உழல்வார் என்றாலும் நன்று புரிவார் தருமன் உயிர் நலிய உதைத்தார் என்றாலும் கன்று உண் கரத்தாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#6 என் கண்_அனையார் மலை_மகளை இச்சித்து அணைந்தார் ஆனாலும் வன்கண் அடையார் தீக் கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும் கன்னல்_மொழியாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#7 வாழ்வை அளிப்பார் மாடு ஏறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் தாழ்வை மறுப்பார் பூத கணத் தானை உடையார் என்றாலும் ஊழ்வை அறுப்பார் பேய்க் கூட்டத்து ஒக்க நடிப்பார் என்றாலும் காழ் கொள் முலையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#8 விமலை இடத்தார் இன்ப_துன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் அமலம்_உடையார் தீ வண்ணராம் என்று உரைப்பார் ஆனாலும் நம் மலம் அறுப்பார் பித்தர் எனும் நாமம்_உடையார் ஆனாலும் கமலை_அனையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#9 மான் கொள் கரத்தார் தலை மாலை மார்பில் அணிந்தார் என்றாலும் ஆன் கொள் விடங்கர் சுடலை எரி அடலை விழைந்தார் என்றாலும் வான் கொள் சடையார் வழுத்தும் மது மத்தர் ஆனார் என்றாலும் கான் கொள் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#10 போர் மால் விடையார் உலகம் எலாம் போக்கும் தொழிலர் ஆனாலும் ஆர் வாழ் சடையார் தமை அடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் தார் வாழ் புயத்தார் மா விரதர் தவ ஞானியரே ஆனாலும் கார் வாழ் குழலாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#11 கோதே மருவார் மால் அயனும் குறியா நெறியார் என்றாலும் சாதே மகிழ்வார் அடியாரைத் தம் போல் நினைப்பார் என்றாலும் மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் காது ஏர் குழையாய் நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

#12 உடையார் உலகில் காசு என்பார்க்கு ஒன்றும் உதவார் ஆனாலும் அடையார்க்கு அரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் படை ஆர் கரத்தர் பழிக்கு அஞ்சாப் பாசுபதரே ஆனாலும் கடையா அமுதே நான் அவர் மேல் காதல் ஒழியேன் கனவினுமே.

மேல்

@18. ஆற்றா விரகம்

மேல்

#1 ஓணம்_உடையான் தொழுது ஏத்தும் ஒற்றி நகர் வாழ் உத்தமர்-பால் மாண வலியச் சென்று என்னை மருவி அணைவீர் என்றே நான் நாணம் விடுத்து நவின்றாலும் நாம் ஆர் நீ யார் என்பாரேல் ஏண விழியாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#2 காதம் மணக்கும் கடி மலர்ப் பூங்கா ஆர் ஒற்றிக் கண்_நுதலார் போதம் மணக்கும் புனிதர் அவர் பொன் அம் புயத்தைப் புணரேனேல் சீதம் மணக்கும் குழலாய் என் சிந்தை மயங்கித் தியங்குமடி ஏதம் மணக்கும் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#3 பண் ஆர் மொழியார் உருக் காட்டும் பணை சூழ் ஒற்றிப் பதியினர் என் கண்ணார் மணி போன்று என் உயிரில் கலந்து வாழும் கள்வர் அவர் நண்ணார் இன்னும் திரு_அனையாய் நான் சென்றிடினும் நலம் அருள எண்ணார் ஆயின் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#4 ஊர் என்று உடையீர் ஒற்றி-தனை உலகம்_உடையீர் என்னை அணை வீர் என்று அவர் முன் பலர் அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும் சேர் என்று உரைத்தால் அன்றி அவர் சிரித்துத் திருவாய்_மலர்ந்து எனை நீ யார் என்று உரைத்தால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#5 சோமன் நிலவும் தூய்ச் சடையார் சொல்லில் கலந்த சுவையானார் சேமம் நிலவும் திருவொற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர் நான் தாமம் அருள்வீர் என்கினும் இத் தருணத்து இசையாது என்பாரேல் ஏம முலையாய் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#6 வில்லை மலையாய்க் கைக் கொண்டார் விடம் சூழ் கண்டர் விரி பொழில் சூழ் தில்லை நகரார் ஒற்றி உளார் சேர்ந்தார் அல்லர் நான் அவர் பால் ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் இல்லை எனிலோ என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#7 திருந்து ஆல் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம்பலத்தில் திரு_நடம்செய் மருந்தார் ஒற்றி_வாணர் இன்னும் வந்தார்_அல்லர் நான் போய் என் அரும் தாழ்வு அகல அருள்வீர் என்றாலும் ஒன்றும் அறியார் போல் இருந்தால் அம்மா என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#8 அசையாது அமர்ந்தும் அண்டம் எலாம் அசையப் புலியூர் அம்பலத்தே நசையா நடிக்கும் நாதர் ஒற்றி_நாட்டார் இன்னும் நண்ணிலர் நான் இசையால் சென்று இங்கு என்னை அணைவீர் என்று உரைப்பேன் எனில் அதற்கும் இசையார் ஆகில் என் செய்கேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#9 மால் காதலிக்கும் மலர்_அடியார் மாசற்று இலங்கும் மணி_அனையார் சேல் காதலிக்கும் வயல் வளம் சூழ் திரு வாழ் ஒற்றித் தேவர் அவர்- பால் காதலித்துச் சென்றாலும் பாவி அடி நீ யான் அணைதற்கு ஏற்காய் என்றால் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

#10 மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர்-தமை வருத்தும் ஊழை அழிப்பார் திருவொற்றி ஊரார் இன்னும் உற்றிலர் என் பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ.

மேல்

@19. காதல் மாட்சி

மேல்

#1 திடன் நான்மறையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனை மடன் நாம் அகன்று காண வந்தால் மலர்க் கை வளைகளினைக் கவர்ந்து படன் நாக அணியர் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் உடனா ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#2 தக்க வளம் சேர் ஒற்றியில் வாழ் தம்பிரானார் பவனி-தனைத் துக்கம் அகன்று காண வந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே பக்கம் மருவும் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் ஒக்க ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#3 தாயாய் அளிக்கும் திருவொற்றி_தலத்தார் தமது பவனி-தனை மாயா நலத்தில் காண வந்தால் மருவும் நமது மனம் கவர்ந்து பாயா விரைவில் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் ஓயாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#4 நிலவு ஆர் சடையார் திருவொற்றி நிருத்தர் பவனி-தனைக் காண நல ஆதரவின் வந்து நின்றால் நங்காய் எனது நாண் கவர்ந்து பல ஆதரவால் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் உலவாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#5 நாடார் வளம் கொள் ஒற்றி நகர் நாதர் பவனி-தனைக் காண நீடு ஆசையினால் வந்துவந்து நின்றால் நமது நிறை கவர்ந்து பாடு ஆர்வலராம் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் ஓடாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#6 அழியா வளத்தார் திருவொற்றி ஐயர் பவனி-தனைக் காண இழியா மகிழ்வினொடும் வந்தால் என்னே பெண்ணே எழில் கவர்ந்து பழியா எழிலின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் ஒழியாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#7 திரை ஆர் ஓதை ஒற்றியில் வாழ் தியாகர் அவர்-தம் பவனி-தனைக் கரையா மகிழ்வில் காண வந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு பரை ஆதரிக்க நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் உரையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#8 கடுக் காதலித்தார் திருவொற்றி_காளை அவர்-தம் பவனி-தனை விடுக்கா மகிழ்வில் காண வந்தால் விரியும் நமது வினை கவர்ந்து படுக்கா மதிப்பின் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் உடுக்காது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#9 தில்லை_உடையார் திருவொற்றித் தியாகர் அவர்-தம் பவனி-தனைக் கல்லை உருக்கிக் காண வந்தால் கரணம் நமது கரந்து இரவி பல்லை இறுத்தார் நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் ஒல்லை ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே.

மேல்

#10 மடை ஆர் வாளை வயல் ஒற்றி வள்ளல் பவனி-தனைக் காண அடையா மகிழ்வினொடும் வந்தால் அம்மா நமது விடயம் எலாம் படையால் கவர்ந்து நமைத் திரும்பிப்பாராது ஓடுகின்றார் நாம் உடையாது ஓடினாலும் அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. *

மேல்

4.நான்காம் திருமுறை


1. அன்பு மாலை
2. அருட்பிரகாச மாலை
3. பிரசாத மாலை
4. ஆனந்த மாலை
5. பக்தி மாலை
6. சௌந்தர மாலை
7. அதிசய மாலை
8. அபராத மன்னிப்பு மாலை
9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
10. ஆளுடைய அரசுகள் அருண்மாலை
11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை
12. ஆளுடைய அடிகள் அருண்மாலை
 
    
    
    

@1 அன்பு மாலை

#1 அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்தக் களிப்பே மெய்க் கதியே வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன் பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே.

மேல்

#2 நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே குற்றம் எலாம் குணமாகக் கொள்வது நின் குணமே.

மேல்

#3 ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய் ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும் மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும் விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே.

மேல்

#4 சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன் செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன் உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய் இத் தமன் நேயச் சலனம் இனிப் பொறுக்க மாட்டேன் இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய் சுத்த மன் நேயத்தவர்க்கும் எனைப் போலும் அவர்க்கும் துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே.

மேல்

#5 துப்பு ஆடு திரு_மேனிச் சோதி மணிச் சுடரே துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே இப் பாடுபட எனக்கு முடியாது துரையே இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய் தப்பாடுவேன் எனினும் என்னை விடத் துணியேல் தனி மன்றுள் நடம் புரியுந் தாள்_மலர் எந்தாயே.

மேல்

#6 கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே விடையவனே சடையவனே வேத முடிப் பொருளே பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன் என்னை விடத் துணியேல் நின் இன் அருள்தந்து அருளே.

மேல்

#7 திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன் செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன் கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன் பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே.

மேல்

#8 குன்றாத குண_குன்றே கோவாத மணியே குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே பொன்றாத பொருளே மெய்ப் புண்ணியத்தின் பயனே பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன் ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே.

மேல்

#9 பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும் காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன் மாணாத குணக் கொடியேன் இதை நினைக்கும்-தோறும் மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய் ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே.

மேல்

#10 அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு அறியாச் சிறியேனை அறிவு அறியச்செய்தே இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டிச் சந்தோட சித்தர்கள்-தம் தனிச் சூதும் காட்டி சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி வந்து ஓடு நிகர் மனம் போய்க் கரைந்த இடம் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே.

மேல்

#11 அன்பர் உளக் கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே முன் பருவம் பின் பருவம் கண்டு அருளிச் செய்யும் முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே.

மேல்

#12 பால் காட்டும் ஒளி வண்ணப் படிக மணி_மலையே பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே சேல் காட்டும் விழிக் கடையால் திரு_அருளைக் காட்டும் சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனைக் காட்டிக் கால் காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்குக் கைம்மாறு ஒன்று இலனே.

மேல்

#13 என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும் அன்னை எனப் பரிந்து அருளி அப்போதைக்கப்போது அப்பன் எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே.

மேல்

#14 பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியாச் சிறிய பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே நல் அறிவு சிறிது அளித்துப் புல்_அறிவு போக்கி நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில் நிறுத்தினை இச் சிறியேனை நின் அருள் என் என்பேன் கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார் குற்றம் எலாம் குணமாகக் கொண்ட குண_குன்றே.

மேல்

#15 சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமாக் கொண்டு கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழப் புரிந்து பண்டை வினை அகற்றி மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்குப் பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே.

மேல்

#16 சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணாத் தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால் கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே.

மேல்

#17 ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்துத் தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து தேறிய நீர் போல் எனது சித்தம் மிகத் தேறித் தெளிந்திடவும் செய்தனை இச் செய்கை எவர் செய்வார் ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே.

மேல்

#18 தரு நிதியக் குரு இயற்றச் சஞ்சலிக்கும் மனத்தால் தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து இரு_நிதியத் திரு_மகளிர் இருவர் எனை வணங்கி இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்துப் பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும் பெற்றி அளித்தனை இந்தப் பேதமையேன்-தனக்கே ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே.

மேல்

#19 அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில் செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும் திரு_நடம் கண்டு அன்பு உருவாய்ச் சித்த சுத்தன் ஆகி எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழிய என்று எனக்கு அருளிச் செய்தாய் துஞ்சு ஆதி அந்தம் இலாச் சுத்த நடத்து அரசே துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே.

மேல்

#20 நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய் தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய் சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே வான் கேட்கும் புகழ்த் தில்லை மன்றில் நடம் புரிவாய் மணி மிடற்றுப் பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே.

மேல்

#21 ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய் ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர் மதிக்கின்ற பொருளே வெண் மதி முடிச் செங்கனியே ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும் ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளிச் செய்தாய் நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும் நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே.

மேல்

#22 ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்குக் காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்குக் கைம்மாறு ஒன்று அறியேன் பூரண நின் அடித் தொண்டு புரிகின்ற சிறியேன் போற்றி சிவ போற்றி எனப் போற்றி மகிழ்கின்றேன் நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே.

மேல்

#23 இறைவ நினது அருளாலே எனைக் கண்டுகொண்டேன் எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும் உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும் மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே குறைவது_இலாக் குளிர் மதியே சிவகாமவல்லிக் கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே.

மேல்

#24 சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகிப் பொதுவில் தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்குப் புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியாப் புனித நிலை-தனில் இருக்கப் புரிந்த பரம் பொருளே பத்தி அறியாச் சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்துப் பரம சுக மயம் ஆக்கிப் படிற்று உளத்தைப் போக்கித் தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கித் தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே.

மேல்

#25 ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித் தீது செறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துத் திரு_அருள் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம் போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே.

மேல்

#26 முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன் முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும் பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்பப் பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப் பேர்_ஒளியே தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே.

மேல்

#27 ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்கக் தெரியாது அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன் மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனைப் பாடி விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ பொய்_அறிவில் புலை மனத்துக் கொடியேன் முன்_பிறப்பில் புரிந்த தவம் யாதது அனைப் புகன்று அருள வேண்டும் துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூபப் பொருளே.

மேல்

#28 அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான் மருள் நிறைந்த மனக் கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணைக் கடலே இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே.

மேல்

#29 மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே தற்பரமே சிற்பரமே தத்துவப் பேர்_ஒளியே அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே.

மேல்

#30 பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும் போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய்ப் பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே எனைக் காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே.

மேல்

#31 செவ் வண்ணத் திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே அ வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடம் செய் ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல் எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும் என்னுடைய நாயகனே இது தருணம் காணே.

@2. அருட்பிரகாச மாலை

மேல்

#1 உலகம் எலாம் உதிக்கின்ற ஒளி நிலை மெய் இன்பமுறுகின்ற வெளி நிலை என்று உபய நிலை ஆகி இலகிய நின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில் எளியேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கலகம் இலாத் தெருக் கதவம் காப்பு அவிழ்க்கப் புரிந்து களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் அலகு_இல் அருள்_கடலாம் உன் பெருமையை என் என்பேன் ஆனந்தவல்லி மகிழ் அருள் நட நாயகனே.

மேல்

#2 ஒளி வண்ணம் வெளி வண்ணம் என்று அனந்த வேத உச்சி எலாம் மெச்சுகின்ற உச்ச மலர்_அடிகள் அளி வண்ணம் வருந்தியிட நடந்து அருளி அடியேன் அடைந்த இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து களி வண்ணம் எனை அழைத்து என் கையில் வண்ணம் அளித்த கருணை வண்ணம்-தனை வியந்து கருதும் வண்ணம் அறியேன் தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே.

மேல்

#3 திருமாலும் உரு மாறிச் சிரஞ்சீவி ஆகித் தேடியும் கண்டு அறியாத சேவடிகள் வருந்த வரும் மாலை மண் உறுத்தப் பெயர்த்து நடந்து அருளி வஞ்சகனேன் இருக்கும் இடம் வலிந்து இரவில் தேடித் தெரு மாலைக் கதவு-தனைத் திறப்பித்து நின்று செவ் வண்ணத்திடைப் பசந்த திரு_மேனி காட்டிக் குரு மாலைப் பெரு வண்ணக் கொழுந்து ஒன்று கொடுத்தாய் குரு மணி நின் திரு_அருளைக் குறித்து மகிழ்ந்தனனே.

மேல்

#4 அன்று ஒரு நாள் இரவிடை வந்து அணிக் கதவம் திறப்பித்து அருள் மலர்ச் சேவடி வாயிற்படிப் புறத்தும் அகத்தும் மன்ற வைத்துக்கொண்டு என்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கு இதனை வாங்கிக்கொள் என்ன ஒன்று சிறியேன் மறுப்ப மறித்தும் வலிந்து எனது ஒரு கை-தனில் கொடுத்து இங்கே உறைதி என்று மறைந்தாய் இன்று அது-தான் அனுபவத்துக்கு இசைந்தது நாய்_அடியேன் என்ன தவம் புரிந்தேனோ இனித் துயர் ஒன்று இலனே.

மேல்

#5 இரவில் அடி வருந்த நடந்து எழில் கதவம் திறப்பித்து எனை அழைத்து மகனே நீ இ உலகில் சிறிதும் கரவிடை நெஞ்சு அயர்ந்து இளைத்துக் கலங்காதே இதனைக் களிப்பொடு வாங்கு என எனது கை-தனிலே கொடுத்து உரவிடை இங்கு உறைக மகிழ்ந்து எனத் திருவாய்_மலர்ந்த உன்னுடைய பெரும் கருணைக்கு ஒப்பு இலை என் புகல்வேன் அரவு இடையில் அசைந்து ஆட அம்பலத்தின் நடுவே ஆனந்தத் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே.

மேல்

#6 இயங்காத இரவிடை அன்று ஒரு நாள் வந்து எளியேன் இருக்கும் இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்துக் கயங்காத மலர்_அடிகள் கவின் வாயிற்படியின் கடைப் புறத்தும் அகத்தும் வைத்துக் களித்து எனை அங்கு அழைத்து மயங்காதே இங்கு இதனை வாங்கிக்கொண்டு உலகில் மகனே நீ விளையாடி வாழ்க என உரைத்தாய் புயங்கா நின் அருள் அருமை அறியாது திரிந்தேன் பொய் அடியேன் அறிந்து இன்று பூரித்தேன் உளமே.

மேல்

#7 ஒரு நாள் அன்று இரவில் அடி வருந்த நடந்து அடியேன் உற்ற இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்து மரு நாள மலர்_அடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்துவைத்து மகிழ்ந்து எனை அழைத்து வாங்கு இதனை என்று தரும் நாளில் யான் மறுப்ப மறித்தும் வலிந்து எனது தடம் கை-தனில் கொடுத்து இங்கே சார்க என உரைத்தாய் வரும் நாளில் அதன் அருமை அறிந்து மகிழ்கின்றேன் மணி மன்றுள் நடம் புரியும் மாணிக்க மணியே.

மேல்

#8 நெடுமாலும் பன்றி என நெடும் காலம் விரைந்து நேடியும் கண்டு அறியாது நீடிய பூம் பதங்கள் தொடு மாலை என வரு பூ_மகள் முடியில் சூட்டித் தொல்_வினையேன் இருக்கும் இடம்-தனைத் தேடித் தொடர்ந்து கடும் மாலை நடு_இரவில் கதவு திறப்பித்துக் கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்துக் கொடும் மாலை விடுத்து மகிழ் எனத் திருவாய்_மலர்ந்தாய் குண_குன்றே இ நாள் நின் கொடையை அறிந்தனனே.

மேல்

#9 மறை முடிக்கு மணி ஆகி வயங்கிய சேவடிகள் மண் மீது பட நடந்து வந்து அருளி அடியேன் குறை முடிக்கும்படிக் கதவம் திறப்பித்து நின்று கூவி எனை அழைத்து ஒன்று கொடுத்து அருளிச் செய்தாய் கறை முடிக்கும் களத்து அரசே கருணை நெடும் கடலே கண் ஓங்கும் ஒளியே சிற்கன வெளிக்குள் வெளியே பிறை முடிக்கும் சடைக் கடவுள் பெரும் தருவே குருவே பெரிய மன்றுள் நடம் புரியும் பெரிய பரம் பொருளே.

மேல்

#10 அன்று அகத்தே அடி வருந்த நடந்து என்னை அழைத்து இங்கு அஞ்சாதே மகனே என்று அளித்தனை ஒன்று அதனைத் துன்றகத்துச் சிறியேன் நான் அறியாது வறிதே சுழன்றது கண்டு இரங்கி மிகத் துணிந்து மகிழ்விப்பான் இன்று அகத்தே புகுந்து அருளி எனக்கு அதனைத் தெரிவித்து இன்புறச்செய்து அருளிய நின் இரக்கம் எவர்க்கு உளதோ மன்றகத்து நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே வல்லவர் எல்லாம் வணங்கும் நல்ல பரம் பொருளே.

மேல்

#11 அன்பர் மன_கோயிலிலே அமர்ந்து அருளி விளங்கும் அரும் பொருளாம் உனது மலர்_அடி வருந்த நடந்து வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த மனைக் கதவு திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்துத் துன்பம் எலாம் நீங்குக இங்கு இது-தனை வாங்குக நீ தொழும்பன் என்ற என்னுடைய துரையே நின் அருளை என் பகர்வேன் என் வியப்பேன் எங்ஙனம் நான் மறப்பேன் என் உயிருக்கு உயிர் ஆகி இலங்கிய சற்குருவே.

மேல்

#12 ஞால நிலை அடி வருந்த நடந்து அருளி அடியேன் நண்ணும் இடம்-தனில் கதவம் நன்று திறப்பித்துக் கால நிலை கருதி மனம் கலங்குகின்ற மகனே கலங்காதே என்று எனது கையில் ஒன்று கொடுத்துச் சீல நிலை உற வாழ்க எனத் திருவாய்_மலர்ந்த சிவபெருமான் நின் பெருமைத் திரு_அருள் என் என்பேன் ஆல நிலை மணி கண்டத்து அரும் பெரும் சீர் ஒளியே அம்பலத்தில் திரு_நடம் செய்து ஆட்டுகின்ற அரசே.

மேல்

#13 இருள் நிறைந்த இரவில் அடி வருந்த நடந்து அடியேன் இருக்கும் இடம்-தனைத் தேடிக் கதவு திறப்பித்து மருள் நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே என்று என்னை வரவழைத்துப் புகன்று தெருள் நிறைந்தது ஒன்று எனது செங்கை-தனில் கொடுத்துத் திகழ்ந்துநின்ற பரம் பொருள் நின் திரு_அருள் என் என்பேன் அருள் நிறைந்த மெய்ப்பொருளே அடி முடி ஒன்று இல்லா ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே.

மேல்

#14 கல் மயமும் கனிவிக்கும் திரு_அடிகள் வருந்தக் கடைப் புலையேன் இருக்கும் இடம்-தனைத் தேடி நடந்து தொல் மயமாம் இரவினிடைக் கதவு திறப்பித்துத் துணிந்து அழைத்து என் கை-தனிலே தூய ஒன்றை அளித்து வன் மயம் இல்லா மனத்தால் வாழ்க என உரைத்த மா மணி நின் திரு_அருளின் வண்மையை என் என்பேன் தன்மயமே சின்மயப் பொன்_அம்பலத்தே இன்பத் தனி நடம் செய்து அருளுகின்ற தத்துவப் பேர்_ஒளியே.

மேல்

#15 பிரணவத்தின் அடி முடியின் நடுவினும் நின்று ஓங்கும் பெரும் கருணைத் திரு_அடிகள் பெயர்ந்து வருந்திடவே கரணமுற்று நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடிக் கதவு திறப்பித்து அருளிக் கடையேனை அழைத்துச் சரணமுற்று வருந்திய என் மகனே இங்கு இதனைத் தாங்குக என்று ஒன்று எனது தடம் கை-தனில் கொடுத்து மரணம் அற்று வாழ்க எனத் திரு_வார்த்தை அளித்தாய் மன்று_உடையாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே.

மேல்

#16 ஓங்காரத்து உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் உபய வடிவு ஆகிய நின் அபய பதம் வருந்த ஈங்கு ஆர நடந்து இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு என்னை வலிந்து அழைத்துப் பாங்காரும் வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்துப் பண்பொடு வாழ்ந்திடுக எனப் பணித்த பரம் பொருளே ஆங்கார வண்ணம் அகன்றதை அறிந்து மகிழ்ந்தே அனுபவிக்கின்றேன் பொதுவில் ஆடுகின்ற அரசே.

மேல்

#17 அரி பிரமாதியர் எல்லாம் அறிந்து அணுக ஒண்ணா அரும் பெரும் சீர் அடி_மலர்கள் அன்று ஒரு நாள் வருந்தக் கரி இரவில் நடந்து அருளி யான் இருக்கும் இடத்தே கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுத்து உரிமையொடு வாழ்க என உரைத்ததுவும் அன்றி உவந்து இன்றை இரவினும் வந்து உணர்த்தினை என் மீது பிரியம் உனக்கு இருந்த வண்ணம் என் புகல்வேன் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிழை பொறுத்த குருவே.

மேல்

#18 காரணன் என்று உரைக்கின்ற நாரணனும் அயனும் கனவிடத்தும் காண்ப அரிய கழல் அடிகள் வருந்த ஊர் அணவி நடந்து எளியேன் உறையும் இடம் தேடி உவந்து எனது கை-தனிலே ஒன்று கொடுத்து இங்கே ஏர் அணவி உறைக மகிழ்ந்து என உரைத்தாய் நின் சீர் யாது அறிந்து புகன்றேன் முன் யாது தவம் புரிந்தேன் பார் அணவி அன்பர் எலாம் பரிந்து புகழ்ந்து ஏத்தப் பணி அணிந்து மணி மன்றுள் அணி நடம் செய் பதியே.

மேல்

#19 துரிய வெளி-தனில் பரம நாத அணை நடுவே சுயம் சுடரில் துலங்குகின்ற துணை அடிகள் வருந்தப் பிரியமொடு நடந்து எளியேன் இருக்கும் இடம் தேடிப் பெரும் கதவம் திறப்பித்துப் பேயன் எனை அழைத்து உரிய பொருள் ஒன்று எனது கையில் அளித்து இங்கே உறைக மகிழ்ந்து என உரைத்த உத்தம நின் அருளைப் பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள் என்றே பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேனே.

மேல்

#20 நீள் ஆதிமூலம் என நின்றவனும் நெடுநாள் நேடியும் கண்டு அறியாத நின் அடிகள் வருந்த ஆளா நான் இருக்கும் இடம்-அது தேடி நடந்தே அணிக் கதவம் திறப்பித்து உள் அன்பொடு எனை அழைத்து வாளா நீ மயங்காதே மகனே இங்கு இதனை வாங்கிக்கொள் என்று எனது மலர் கை-தனில் கொடுத்தாய் கேளாய் என் உயிர்த் துணையாய்க் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடிப் பொருளே.

மேல்

#21 சத்த உருவாம் மறைப் பொன் சிலம்பு அணிந்து அம்பலத்தே தனி நடம் செய்து அருளும் அடி_தாமரைகள் வருந்த சித்த உரு ஆகி இங்கே எனைத் தேடி நடந்து தெருக் கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்து மத்த உருவாம் மனத்தால் மயக்கமுறேல் மகனே மகிழ்ந்து உறைக எனத் திருவாய்_மலர்ந்த குண_மலையே சுத்த உருவாய்ச் சுத்த அரு ஆகி அழியாச் சுத்த அரு_உரு ஆன சுத்த பரம் பொருளே.

மேல்

#22 பல கோடி மறைகள் எலாம் உலகு ஓடி மயங்கப் பர நாத முடி நடிக்கும் பாத_மலர் வருந்தச் சில கோடி நடந்து எளியேன் இருக்கும் இடத்து அணைந்து தெருக் கதவம் திறப்பித்து என் செங்கையில் ஒன்று அளித்தே அல கோடி வருந்தேல் இங்கு அமர்க எனத் திருவாய்_அலர்ந்த அருள் குருவே பொன்_அம்பலத்து எம் அரசே விலகு ஓடி எனத் துயர்கள் ஒன்றொடொன்று புகன்று விரைந்து ஓடச்செய்தனை இ விளைவு அறியேன் வியப்பே.

மேல்

#23 செய் வகை ஒன்று அறியாது திகைப்பினொடே இருந்தேன் திடுக்கென இங்கு எழுந்திருப்பத் தெருக் கதவம் திறப்பித்து உய் வகை ஒன்று எனது கரத்து உவந்து அளித்து மகனே உய்க மகிழ்ந்து இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று மெய் வகையில் புகன்ற பின்னும் அஞ்சியிருந்தேனை மீட்டும் இன்றை இரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த்தாய் ஐவகையாய் நின்று மன்றில் ஆடுகின்ற அரசே அற்புதத் தாள்_மலர் வருத்தம் அடைந்தன என் பொருட்டே.

மேல்

#24 உள் இரவி மதியாய் நின்று உலகம் எலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம் வருந்த நள்ளிரவின் மிக நடந்து நான் இருக்கும் இடத்தே நடைக் கதவம் திறப்பித்து நடைக் கடையில் அழைத்து எள் இரவு நினைந்து மயக்கு எய்தியிடேல் மகனே என்று என் கை-தனில் ஒன்றை ஈந்து மகிழ்வித்தாய் அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே.

மேல்

#25 விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய்த் துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் மெல் அடிகள் வருந்தத் துளங்கு சிறியேன் இருக்கும் இடம் தேடி நடந்து தொடர்க் கதவம் திறப்பித்துத் தொழும்பன் எனை அழைத்துக் களங்கம்_இலா ஒன்று எனது கை-தனிலே கொடுத்துக் களித்து உறைக எனத் திரு_வாக்கு அளித்த அருள்_கடலே குளம் கொள் விழிப் பெருந்தகையே மணி மன்றில் நடம் செய் குரு மணியே அன்பர் மன_கோயிலில் வாழ் குருவே.

மேல்

#26 வேத முடி மேல் சுடராய் ஆகமத்தின் முடி மேல் விளங்கும் ஒளி ஆகிய நின் மெல் அடிகள் வருந்தப் பூத முடி மேல் நடந்து நான் இருக்கும் இடத்தே போந்து இரவில் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து நாத முடி மேல் விளங்குந் திரு_மேனி காட்டி நல் பொருள் என் கை-தனிலே நல்கிய நின் பெருமை ஓத முடியாது எனில் என் புகல்வேன் அம்பலத்தே உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே.

மேல்

#27 தங்கு சராசரம் முழுதும் அளித்து அருளி நடத்தும் தாள்_மலர்கள் மிக வருந்தத் தனித்து நடந்து ஒரு நாள் கங்குலில் யான் இருக்கும் மனைக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்று கொடுத்த உன்றன் கருணையை என் என்பேன் இங்கு சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே என் உயிருக்கு இன்பு அருளும் பொருளே திங்கள் அணி சடைப் பவளச் செழும் சோதி மலையே சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே.

மேல்

#28 மாமாயை அசைந்திடச் சிற்றம்பலத்தே நடித்தும் வருந்தாத மலர்_அடிகள் வருந்த நடந்து அருளி ஆமாறு அன்று இரவினிடை அணிக் கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து இனி நீ அஞ்சேல் என்று உவந்து தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறு நெய்யும் தேனும் ஒக்கக் கலந்தது எனத் திரு_வார்த்தை அளித்தாய் கோமான் நின் அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம் பொருளே.

மேல்

#29 படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையாப் பாத_மலர் வருந்த நடைப் புலையேன் பொருட்டாக நடந்து இரவில் கதவம் நன்கு திறப்பித்து ஒன்று நல்கியதும் அன்றி இடைப்படு நாளினும் வந்து என் இதய மயக்கு எல்லாம் இரிந்திடச்செய்தனை உன்றன் இன் அருள் என் என்பேன் தடைப்படுமாறு இல்லாத பேர்_இன்பப் பெருக்கே தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

மேல்

#30 முன்னை மறை முடி மணியாம் அடி_மலர்கள் வருந்த முழுதிரவில் நடந்து எளியேன் முயங்கும் இடத்து அடைந்து அன்னையினும் பரிந்து அருளி அணிக் கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் மின்னை நிகர் செம் சடை மேல் மதியம் அசைந்து ஆட வியன் பொதுவில் திரு_நடம் செய் விமல பரம் பொருளே.

மேல்

#31 மீதானத்து அருள் ஒளியாய் விளங்கிய நின் அடிகள் மிக வருந்த நடந்து இரவில் வினையேன்-தன் பொருட்டாச் சீதானக் கதவு-தனைத் திறப்பித்துச் சிறியேன் செங்கையில் ஒன்று அளித்து இனி நீ சிறிதும் அஞ்சேல் இங்கு மாதானத்தவர் சூழ வாழ்க என உரைத்தாய் மா மணி நின் திரு_அருளின் வண்மை எவர்க்கு உளதே ஓதானத்தவர்-தமக்கும் உணர்வு அரிதாம் பொருளே ஓங்கிய சிற்றம்பலத்தே ஒளி நடம் செய் பதியே.

மேல்

#32 வேதாந்த சித்தாந்தம் என்னும் அந்தம் இரண்டும் விளங்க அமர்ந்து அருளிய நின் மெல் அடிகள் வருந்த நாதாந்த வெளி-தனிலே நடந்து அருளும் அது போல் நடந்து அருளிக் கடை நாயேன் நண்ணும் இடத்து அடைந்து போதாந்தம் மிசை விளக்கும் திரு_மேனி காட்டிப் புலையேன் கையிடத்து ஒன்று பொருந்தவைத்த பொருளே சூதாந்தம் அனைத்தினுக்கும் அப்பாற்பட்டு இருந்த துரிய வெளிக்கே விளங்கும் பெரிய அருள்_குருவே.

மேல்

#33 ஒருமையிலே இருமை என உருக் காட்டிப் பொதுவில் ஒளி நடம் செய்து அருளுகின்ற உபய பதம் வருந்த அருமையிலே நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்தே அணிக் கதவம் திறப்பித்து என் அங்கையில் ஒன்று அளித்துப் பெருமையிலே பிறங்குக நீ எனத் திருவாய்_மலர்ந்த பெரும் கருணை_கடலே நின் பெற்றியை என் என்பேன் கருமையிலே நெடும் காலம் கலந்து கலக்குற்ற கலக்கம் எலாம் தவிர்த்து எம்மைக் காத்து அருளும் பதியே.

மேல்

#34 விந்து நிலை நாத நிலை இரு நிலைக்கும் அரசாய் விளங்கிய நின் சேவடிகள் மிக வருந்த நடந்து வந்து நிலைபெறச் சிறியேன் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகனே என்று அழைத்து இந்து நிலை முடி முதலாம் திரு_உருவம் காட்டி என் கையில் ஒன்று அளித்து இன்பம் எய்துக என்று உரைத்தாய் முந்து நிலைச் சிறியேன் செய் தவம் அறியேன் பொதுவில் முத்தர் மனம் தித்திக்க நிருத்தமிடும் பொருளே.

மேல்

#35 நவ நிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய் நண்ணிய நின் பொன் அடிகள் நடந்து வருந்திடவே அவ நிலைக்கும் கடைப் புலையேன் இருக்கும் இடத்து இரவில் அணைந்து அருளிக் கதவு திறந்து அடியேனை அழைத்தே சிவ நிலைக்கும்படி எனது செங்கையில் ஒன்று அளித்துச் சித்தம் மகிழ்ந்து உறைக எனத் திரு_பவளம் திறந்தாய் பவ நிலைக்கும் கடை நாயேன் பயின்ற தவம் அறியேன் பரம்பர மா மன்றில் நடம் பயின்ற பசுபதியே.

மேல்

#36 புண்ணியர்-தம் மன_கோயில் புகுந்து அமர்ந்து விளங்கும் பொன்_மலர்ச் சேவடி வருத்தம் பொருந்த நடந்து எளியேன் நண்ணிய ஓர் இடத்து அடைந்து கதவு திறப்பித்து நல் பொருள் ஒன்று என் கை-தனில் நல்கிய நின் பெருமை எண்ணிய போது எல்லாம் என் மனம் உருக்கும் என்றால் எம் பெருமான் நின் அருளை என் என யான் புகல்வேன் தண்ணிய வெண் மதி அணிந்த செம் சடை நின்று ஆடத் தனித்த மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

மேல்

#37 மூவருக்கும் எட்டாது மூத்த திரு அடிகள் முழுதிரவில் வருந்தியிட முயங்கி நடந்து அருளி யாவருக்கும் இழிந்தேன் இங்கு இருக்கும் இடத்து அடைந்தே எழில் கதவம் திறப்பித்து உள் எனை அழைத்து மகனே தேவருக்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே சித்தம் மகிழ்ந்து அளித்தனை நின் திரு_அருள் என் என்பேன் பூ வருக்கும் பொழில் தில்லை அம்பலத்தே நடனம் புரிந்து உயிருக்கு இன்பு அருளும் பூரண வான் பொருளே.

மேல்

#38 கற்றவர்-தம் கருத்தினில் முக்கனிரசம் போல் இனிக்கும் கழல் அடிகள் வருந்தியிடக் கடிது நடந்து இரவில் மற்றவர் காணாது எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மனைக் கதவு திறப்பித்து வலிந்து எனை அங்கு அழைத்து நல் தவர்க்கும் அரிது இதனை வாங்கு என என் கரத்தே நல்கிய நின் பெரும் கருணை நட்பினை என் என்பேன் அற்றவர்க்கும் பற்றவர்க்கும் பொதுவினிலே நடம் செய் அருள் குருவே சச்சிதானந்த பரம் பொருளே.

மேல்

#39 கருணை வடிவாய் அடியார் உள்ளகத்தே அமர்ந்த கழல் அடிகள் வருந்தியிடக் கங்குலிலே நடந்து மருள் நிறையும் சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகிழ்ந்து அழைத்து மகனே பொருள் நிறையும் இதனை இங்கே வாங்கு என என் கரத்தே பொருந்த அளித்து அருளிய நின் பொன் அருள் என் என்பேன் அருள் நிறையும் பெரும் கடலே அம்பலத்தில் பரமானந்த உரு ஆகி நடம் ஆடுகின்ற அரசே.

மேல்

#40 அருள் உருவாய் ஐந்தொழிலும் நடத்துகின்ற அடிகள் அசைந்து வருந்திட இரவில் யான் இருக்கும் இடத்தே தெருள் உருவில் நடந்து தெருக் கதவு திறப்பித்துச் சிறியேனை அழைத்து எனது செங்கையில் ஒன்று அளித்து மருள் உருவின் மற்றவர் போல் மயங்கேல் என் மகனே மகிழ்ந்து திரு_அருள் வழியே வாழ்க என உரைத்தாய் இருள் உருவின் மனக் கொடியேன் யாது தவம் புரிந்தேன் எல்லாம்_வல்லவன் ஆகி இருந்த பசுபதியே.

மேல்

#41 முழுதும் உணர்ந்தவர் முடி மேல் முடிக்கு மணி ஆகி முப்பொருளும் ஆகிய நின் ஒப்பில் அடி_மலர்கள் கழுதும் உணர்வு அரிய நடுக் கங்குலிலே வருந்தக் கடிது நடந்து அடி நாயேன் கருதும் இடத்து அடைந்து பழுதுபடா வண்ணம் எனைப் பரிந்து அழைத்து மகனே பணிந்து இதனை வாங்கு என என் பாணியுறக் கொடுத்துத் தொழுது எனைப் பாடுக என்று சொன்ன பசுபதி நின் தூய அருள் பெருமையை என் சொல்லி வியக்கேனே.

மேல்

#42 மால் நினைத்த அளவு எல்லாம் கடந்து அப்பால் வயங்கும் மலர்_அடிகள் வருந்தியிட மகிழ்ந்து நடந்து அருளிப் பால் நினைத்த சிறியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து பணைக் கதவம் திறப்பித்துப் பரிந்து அழைத்து மகனே நீ நினைத்த வண்ணம் எலாம் கைகூடும் இது ஓர் நின்மலம் என்று என் கை-தனில் நேர்ந்து அளித்தாய் நினக்கு நான் நினைத்த நன்றி ஒன்றும் இலையே நின் அருளை நாய்_அடியேன் என் புகல்வேன் நடராஜ மணியே.

மேல்

#43 சூரிய சந்திரர் எல்லாம் தோன்றாமை விளங்கும் சுயம் சோதியாகும் அடித் துணை வருந்த நடந்து கூரிய மெய் அறிவு என்பது ஒருசிறிதும் குறியாக் கொடியேன் நான் இருக்கும் இடம் குறித்து இரவில் நடந்து காரியம் உண்டு எனக் கூவிக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்றை அளித்தனை உன் கருணையை என் என்பேன் ஆரியர்-தம் அளவு கடந்து அப்பாலும் கடந்த ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே.

மேல்

#44 தற்போதம் தோன்றாத தலம்-தனிலே தோன்றும் தாள்_மலர்கள் வருந்தியிடத் தனித்து நடந்து அருளி எல் போது அங்கு அகன்று இரவில் யான் இருக்கும் இடம் போந்து எழில் கதவம் திறப்பித்து இ எளியேனை அழைத்துப் பொன் போத வண்ணம் ஒன்று என் கை-தனிலே அளித்துப் புலை ஒழிந்த நிலை-தனிலே பொருந்துக என்று உரைத்தாய் சிற்போத மயமான திரு_மணி மன்றிடத்தே சிவ மயமாம் அனுபோகத் திரு_நடம் செய் அரசே.

மேல்

#45 கற்பனைகள் எல்லாம் போய்க் கரைந்த தலம்-தனிலே கரையாது நிறைந்த திருக் கழல் அடிகள் வருந்த வெற்பு அனையும் இன்றி ஒரு தனியாக நடந்து விரைந்து இரவில் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து அற்பனை ஓர் பொருளாக அழைத்து அருளி அடியேன் அங்கையில் ஒன்று அளித்தனை நின் அருளினை என் புகல்வேன் நல் பனவர் துதிக்க மணி மன்றகத்தே இன்ப நடம் புரியும் பெரும் கருணை_நாயக மா மணியே.

மேல்

#46 ஒன்று ஆகி இரண்டு ஆகி ஒன்று_இரண்டின் நடுவே உற்ற அனுபவ மயமாய் ஒளிர் அடிகள் வருந்த அன்று ஆர நடந்து இரவில் யான் உறையும் இடத்தே அடைந்து கதவம் திறப்பித்து அன்பொடு எனை அழைத்து நன்று ஆர எனது கரத்து ஒன்று அருளி இங்கே நண்ணி நீ எண்ணியவா நடத்துக என்று உரைத்தாய் இன்று ஆர வந்து அதனை உணர்த்தினை நின் அருளை என் புகல்வேன் மணி மன்றில் இலங்கிய சற்குருவே.

மேல்

#47 எங்கும் விளங்குவது ஆகி இன்ப மயம் ஆகி என் உணர்வுக்கு உணர்வு தரும் இணை அடிகள் வருந்த பொங்கும் இரவிடை நடந்து நான் உறையும் இடத்தே போந்து மணிக் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து தங்கும் அடியேனை அழைத்து அங்கையில் ஒன்று அளித்தே தயவினொடு வாழ்க எனத் தனித் திருவாய்_மலர்ந்தாய் இங்கு நினது அருள் பெருமை என் உரைப்பேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என்னுடை நாயகனே.

மேல்

#48 சித்து எவையும் வியத்தியுறும் சுத்த சிவ சித்தாய்ச் சித்தம்-அதில் தித்திக்கும் திரு_அடிகள் வருந்த மத்த இரவிடை நடந்து வந்து அருளி அடியேன் வாழும் மனைத் தெருக் கதவு திறப்பித்து அங்கு அடைந்து அத் தகவின் எனை அழைத்து என் அங்கையில் ஒன்று அளித்தாய் அன்னையினும் அன்பு_உடையாய் நின் அருள் என் என்பேன் முத்தர் குழுக் காண மன்றில் இன்ப நடம் புரியும் முக்கண் உடை ஆனந்தச் செக்கர் மணி_மலையே.

மேல்

#49 சகலமொடு கேவலமும் தாக்காத இடத்தே தற்பரமாய் விளங்குகின்ற தாள்_மலர்கள் வருந்தப் பகல் ஒழிய நடு_இரவில் நடந்து அருளி அடியேன் பரியும் இடத்து அடைந்து மணிக் கதவு திறப்பித்துப் புகல் உறுக வருக என அழைத்து எனது கரத்தே பொருந்த ஒன்று கொடுத்தனை நின் பொன் அருள் என் என்பேன் உகல் ஒழியப் பெரும் தவர்கள் உற்று மகிழ்ந்து ஏத்த உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

மேல்

#50 உள் உருகும் தருணத்தே ஒளி காட்டி விளங்கும் உயர் மலர்ச் சேவடி வருந்த உவந்து நடந்து அருளிக் கள்ள மனத்தேன் இருக்கும் இடம் தேடி அடைந்து கதவு திறப்பித்து அருளிக் களித்து எனை அங்கு அழைத்து நள் உலகில் உனக்கு இது நாம் நல்கினம் நீ மகிழ்ந்து நாளும் உயிர்க்கு இதம் புரிந்து நடத்தி என உரைத்தாய் தெள்ளும் அமுதாய் அன்பர் சித்தம் எலாம் இனிக்கும் செழும் கனியே மணி மன்றில் திரு_நட நாயகனே.

மேல்

#51 தன் உருவம் காட்டாத மல இரவு விடியும் தருணத்தே உதயம்செய் தாள்_மலர்கள் வருந்தப் பொன் உருவத் திரு_மேனி கொண்டு நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து தன் உருவம் போன்றது ஒன்று அங்கு எனை அழைத்து என் கரத்தே தந்து அருளி மகிழ்ந்து இங்கே தங்குக என்று உரைத்தாய் என் உருவம் எனக்கு உணர்த்தி அருளிய நின் பெருமை என் உரைப்பேன் மணி மன்றில் இன்ப நடத்து அரசே.

மேல்

#52 அண்ட வகை பிண்ட வகை அனைத்தும் உதித்து ஒடுங்கும் அணி மலர்ச் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளிக் கண்டவரும் காணாத நடு_இரவு-தனில் யான் கருதும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து தொண்டன் என எனையும் அழைத்து என் கையில் ஒன்று அளித்தாய் துரையே நின் அருள் பெருமைத் தொன்மையை என் என்பேன் உண்டவர்கள் உணும்-தோறும் உவட்டாத அமுதே உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

மேல்

#53 அறிவு_உடையார் உள்ளகப் போது அலருகின்ற தருணத்து அருள் மணத்தேன் ஆகி உற்ற அடி_இணைகள் வருந்தப் பிறிவு_உடையேன் இருக்கும் இடம் தேடி நடந்து அடைந்து பெரும் கதவம் திறப்பித்துப் பேயன் எனை அழைத்துச் செறிவு_உடையாய் இது வாங்கு என்று உதவவும் நான் மறுப்பத் திரும்பவும் என் கை-தனிலே சேர அளித்தனையே பொறி வறியேன் அளவினில் உன் கருணையை என் என்பேன் பொன் பொதுவில் நடம் புரியும் பூரண வான் பொருளே.

மேல்

#54 விடையம் ஒன்றும் காணாத வெளி நடுவே ஒளியாய் விளங்குகின்ற சேவடிகள் மிக வருந்த நடந்து கடையனையும் குறிக்கொண்டு கருதும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து எனது கையில் ஒன்று கொடுக்க இடையின் அது நான் மறுப்ப மறுக்கேல் என் மகனே என்று பின்னும் கொடுத்தாய் நின் இன் அருள் என் என்பேன் உடைய பரம் பொருளே என் உயிர்த் துணையே பொதுவில் உய்யும் வகை அருள் நடனம் செய்யும் ஒளி மணியே.

மேல்

#55 நான் தனிக்கும் தருணத்தே தோன்றுகின்ற துணையாய் நான் தனியா இடத்து எனக்குத் தோன்றாத துணையாய் ஏன்று அருளும் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி யான் உறையும் இடத்து அடைந்து கதவு திறப்பித்து ஆன்ற எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய்க்கு அறிவு_இலியேன் செய்யும் வகை அறியேன் நின் கருணை ஈன்றவட்கும் இல்லை என நன்கு அறிந்தேன் பொதுவில் இன்ப நடம் புரிகின்ற என் உயிர்_நாயகனே.

மேல்

#56 அருள் விளங்கும் உள்ளகத்தே அது அதுவாய் விளங்கும் அணி மலர்ச் சேவடி வருத்தம் அடைய நடந்து அருளிப் பொருள் விளங்கா நடு_இரவில் நான் உறையும் இடத்தே போந்து தெருக் காப்பு அவிழ்க்கப் புரிந்து எனை அங்கு அழைத்துத் தெருள் விளங்கும் ஒரு பொருள் என் செங்கை-தனில் அளித்தாய் சிவபெருமான் பெரும் கருணைத் திறத்தினை என் என்பேன் மருள் விளங்கி உணர்ச்சியுறத் திரு_மணி மன்றிடத்தே மன் உயிர்க்கு இன்பு அருள வயங்கு நடத்து அரசே.

மேல்

#57 பருவமுறு தருணத்தே சர்க்கரையும் தேனும் பாலும் நெய்யும் அளிந்த நறும் பழரசமும் போல மருவும் உளம் உயிர் உணர்வோடு எல்லாம் தித்திக்க வயங்கும் அடி_இணைகள் மிக வருந்த நடந்து அருளித் தெரு அடைந்து நான் இருக்கும் மனைக் காப்புத் திறக்கச்செய்து அருளிப் பொருள் ஒன்று என் செங்கை-தனில் அளித்தாய் திரு_மணி மன்றிடை நடிக்கும் பெருமான் நின் கருணைத் திறத்தினை இச் சிறியேன் நான் செப்புதல் எங்ஙனமே.

மேல்

#58 என் அறிவை உண்டு அருளி என்னுடனே கூடி என் இன்பம் எனக்கு அருளி என்னையும் தான் ஆக்கித் தன் அறிவாய் விளங்குகின்ற பொன் அடிகள் வருந்தத் தனி நடந்து தெருக் கதவம் தாள் திறப்பித்து அருளி முன்னறிவில் எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்த முன்னவ நின் இன் அருளை என் என யான் மொழிவேன் மன் அறிவுக்கு அறிவாம் பொன்_அம்பலத்தே இன்ப வடிவு ஆகி நடிக்கின்ற மா கருணை_மலையே.

மேல்

#59 பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணைப் பாத_மலர் வருந்த வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெருக் கதவு-தனைக் காப்பு அவிழ்க்கப் புரிந்து திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே.

மேல்

#60 சொல் நிறைந்த பொருளும் அதன் இலக்கியமும் ஆகித் துரிய நடு இருந்த அடித் துணை வருந்த நடந்து கொன் நிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம் கொழும் காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து என் நிறைந்த ஒரு பொருள் என் கையில் அளித்து அருளி என் மகனே வாழ்க என எழில் திருவாய்_மலர்ந்தாய் தன் நிறைந்த நின் கருணைத் தன்மையை என் புகல்வேன் தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

மேல்

#61 முத்தி ஒன்று வியத்தி ஒன்று காண்-மின் என்று ஆகமத்தின் முடிகள் முடித்து உரைக்கின்ற அடிகள் மிக வருந்தப் பத்தி ஒன்றும் இல்லாத கடைப் புலையேன் பொருட்டாப் படிற்று உளத்தேன் இருக்கும் இடம்-தனைத் தேடி நடந்து சித்தி ஒன்று திரு_மேனி காட்டி மனைக் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் செங்கையிலே மகிழ்ந்து சத்தி ஒன்று கொடுத்தாய் நின் தண் அருள் என் என்பேன் தனி மன்றுள் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

மேல்

#62 எனக்கு நன்மை தீமை என்பது இரண்டும் ஒத்த இடத்தே இரண்டும் ஒத்துத் தோன்றுகின்ற எழில் பதங்கள் வருந்தத் தனக்கு நல்ல வண்ணம் ஒன்று தாங்கி நடந்து அருளித் தனித்து இரவில் கடைப் புலையேன் தங்கும் இடத்து அடைந்து கனக்கும் மனைத் தெருக் கதவம் காப்பு அவிழ்க்கப் புரிந்து களிப்பொடு எனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து உனக்கு இனிய வண்ணம் இது என்று உரைத்து அருளிச் சென்றாய் உடையவ நின் அருள் பெருமை உரைக்க முடியாதே.

மேல்

#63 இம்மையினோடு அம்மையினும் எய்துகின்ற இன்பம் எனைத்தொன்றும் வேண்டாத இயற்கை வரும் தருணம் எம்மையினும் நிறை சொருப சுத்த சுகாரம்பம் இயல் சொருப சுத்த சுக அனுபவம் என்று இரண்டாய்ச் செம்மையிலே விளங்குகின்ற திரு_அடிகள் வருந்தச் சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் உம்மையிலே யான் செய் தவம் யாது எனவும் அறியேன் உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம் பொருளே.

மேல்

#64 அன்பு அளிப்பது ஒன்று பின்னர் இன்பு அளிப்பது ஒன்று என்று அறிஞர் எலாம் மதிக்கின்ற அடி_மலர்கள் வருந்த என்பு அளித்த உடல்கள்-தொறும் உயிர்க்குயிராய் இருக்கும் எம் பெருமான் நடந்து அருளிக் கதவு திறப்பித்துத் துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனைக் கூவி அழைத்துத் தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே.

மேல்

#65 மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் யோக மலர்த் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து போக மனைப் பெரும் கதவம் திறப்பித்து உள் புகுந்து புலையேனை அழைத்து ஒன்று பொருந்த என் கை கொடுத்தாய் நாகமணிப் பணி மிளிர அம்பலத்தே நடம் செய் நாயக நின் பெரும் கருணை நவிற்ற முடியாதே.

மேல்

#66 காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்க் காட்டுகின்ற ஒளி-தனக்குக் காட்டுவிக்கும் ஒளியாய் பூணுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் பொருந்தும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து கோணுகின்ற மனத்தாலே நாணுவது ஏன் மகனே குறைவு அற வாழ்க என மகிழ்ந்து கொடுத்தனை ஒன்று எனக்கு மாணுகின்ற நின் அருளின் பெருமையை என் என்பேன் மணி மன்றில் ஆனந்த மா நடம் செய் அரசே.

மேல்

#67 ஆறாறு தத்துவத்தின் சொரூப முதல் அனைத்தும் அறிவிக்கும் ஒன்று அவற்றின் அப்பாலே இருந்த வீறாய தற்சொருப முதல் அனைத்தும் அறிவில் விளக்குவிக்கும் ஒன்று என்று விளைவு_அறிந்தோர் விளம்பும் பேறு ஆய திரு_அடிகள் வருந்த நடந்து இரவில் பேய் அடியேன் இருக்கும் இடத்து அடைந்து என்னை அழைத்துச் சோறு ஆய பொருள் ஒன்று என் கரத்து அளித்தாய் பொதுவில் சோதி நினது அருள் பெருமை ஓதி முடியாதே.

மேல்

#68 கருவிகளை நம்முடனே கலந்து உளத்தே இயக்கிக் காட்டுவது ஒன்று அக் கருவி கரணங்கள் அனைத்தும் ஒருவி அப்பாற்படுத்தி நமை ஒரு தனியாக்குவது ஒன்று பயம் எனப் பெரியர் சொலும் அபய பதம் வருந்தத் துருவி அடியேன் இருக்கும் இடத்து இரவில் அடைந்து துணிந்து எனது கையில் ஒன்று சோதியுறக் கொடுத்து வெருவியிடேல் இன்று முதல் மிக மகிழ்க என்றாய் வித்தக நின் திரு_அருளை வியக்க முடியாதே.

மேல்

#69 ஆதியிலே கலப்பு ஒழிய ஆன்ம சுத்தி அளித்து ஆங்கு அது அது ஆக்குவது ஒன்றாம் அது அதுவாய் ஆக்கும் சோதியிலே தான் ஆகிச் சூழ்வது ஒன்றாம் என்று சூழ்ச்சி அறிந்தோர் புகலும் துணை அடிகள் வருந்த வீதியிலே நடந்து அடியேன் இருக்கும் இடம் தேடி விரும்பி அடைந்து எனைக் கூவி விளைவு ஒன்று கொடுத்தாய் பாதியிலே ஒன்றான பசுபதி நின் கருணைப் பண்பை அறிந்தேன் ஒழியா நண்பை அடைந்தேனே.

மேல்

#70 இருட்டு ஆய மலச் சிறையில் இருக்கும் நமை எல்லாம் எடுப்பது ஒன்றாம் இன்ப நிலை கொடுப்பது ஒன்றாம் எனவே பொருள்_தாயர் போற்றுகின்ற பொன் அடிகள் வருந்தப் பொறை இரவில் யான் இருக்கும் இடம் தேடிப் புகுந்து மருட்டு ஆயத்து_இருந்தேனைக் கூவி வரவழைத்து வண்ணம் ஒன்று என் கை-தனிலே மகிழ்ந்து அளித்தாய் நின்றன் அருள் தாயப் பெருமை-தனை என் உரைப்பேன் பொதுவில் ஆனந்தத் திரு_நடம் செய்து அருளுகின்ற அரசே.

மேல்

#71 உன்மனியின் உள்ளகத்தே ஒளிருவது ஒன்று ஆகி உற்ற அதன் வெளிப் புறத்தே ஓங்குவது ஒன்று ஆகிச் சின்மயமாய் விளங்குகின்ற திரு_அடிகள் வருந்தச் சிறு நாயேன் பொருட்டாகத் தெருவில் நடந்து அருளிப் பொன் மயமாம் திரு_மேனி விளங்க என்-பால் அடைந்து பொருள் ஒன்று என் கை-தனிலே பொருந்த அளித்தனையே நின்மலனே நின் அருளை என் புகல்வேன் பொதுவில் நிறைந்த இன்ப வடிவு ஆகி நிருத்தம் இடும் பதியே.

மேல்

#72 ஐவர்களுக்கு ஐந்தொழிலும் அளித்திடுவது ஒன்றாம் அத் தொழில் காரணம் புரிந்து களித்திடுவது ஒன்றாம் தெய்வ நெறி என்று அறிஞர் புகழ்ந்து புகழ்ந்து ஏத்தும் திரு_அடிகள் மிக வருந்தத் தெருவினிடை நடந்து கைவர யான் இருக்கும் மனைக் கதவு திறப்பித்துக் களித்து எனை அங்கு அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்தாய் சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே.

மேல்

#73 அருள் உதிக்கும் தருணத்தே அமுத வடிவு ஆகி ஆனந்த மயம் ஆகி அமர்ந்த திரு_அடிகள் இருள் உதிக்கும் இரவினிடை வருந்த நடந்து அருளி யான் இருக்கும் மனைக் கதவம் திறப்பித்து அங்கு அடைந்து மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே தெருள் உதிக்கும் மணி மன்றில் திரு_நடம் செய் அரசே சிவபெருமான் நின் கருணைத் திறத்தை வியக்கேனே.

மேல்

#74 நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகித் தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே.

மேல்

#75 யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் ஏகாந்தத்து இருந்து உணரும் இணை அடிகள் வருந்த என் பொருட்டாய் யான் இருக்கும் இடம் தேடி நடந்து வாகாம் தச்சு அணிக் கதவம் திறப்பித்து அங்கு என்னை வரவழைத்து என் கை-தனிலே மகிழ்ந்து ஒன்று கொடுத்தாய் மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்தப் பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே.

மேல்

#76 மகம் மதிக்கும் மறையும் மறையால் மதிக்கும் அயனும் மகிழ்ந்து அயனால் மதிக்கும் நெடுமாலும் நெடுமாலால் மிக மதிக்கும் உருத்திரனும் உருத்திரனால் மதிக்கும் மேலவனும் அவன் மதிக்க விளங்கு சதாசிவனும் தக மதிக்கும்-தோறும் அவரவர் உளத்தின் மேலும் தலை மேலும் மறைந்து உறையும் தாள்_மலர்கள் வருந்த அகம் மதிக்க நடந்து என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் அம்பலத்தில் ஆடுகின்றாய் அருள் பெருமை வியப்பே.

மேல்

#77 இரு_வினை ஒப்பு ஆகி மல பரிபாகம் பொருந்தல் எ தருணம் அ தருணத்து இயல் ஞான ஒளியாம் உருவினையுற்று உள்ளகத்தும் பிரணவமே வடிவாய் உற்று வெளிப் புறத்தும் எழுந்து உணர்த்தி உரைத்து அருளும் திரு_அடிகள் மிக வருந்த நடந்து எளியேன் பொருட்டாத் தெருக் கதவம் திறப்பித்துச் சிறியேனை அழைத்துக் குரு வடிவம் காட்டி ஒன்று கொடுத்தாய் என் கரத்தே குண_குன்றே நின் அருட்கு என் குற்றம் எலாம் குணமே.

மேல்

#78 தம் அடியார் வருந்தில் அது சகியாது அக் கணத்தே சார்ந்து வருத்தங்கள் எலாம் தயவினொடு தவிர்த்தே எம் அடியார் என்று கொளும் இணை அடிகள் வருந்த இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கம் மடியாக் கதவு பெரும் காப்பு அவிழப் புரிந்து கடையேனை அழைத்து எனது கையில் ஒன்று கொடுத்து நம் அடியான் என்று எனையும் திருவுளத்தே அடைத்தாய் நடம் புரியும் நாயக நின் நல் கருணை வியப்பே.

மேல்

#79 உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே செம் பருக்கைக்_கல் உறுத்தத் தெருவில் நடந்து இரவில் தெருக் கதவம் திறப்பித்துச் சிறியேனை அழைத்து வம்பருக்குப் பெறல் அரிதாம் ஒரு பொருள் என் கரத்தே மகிழ்ந்து அளித்துத் துயர் தீர்ந்து வாழ்க என உரைத்தாய் இம்பருக்கோ அம்பருக்கும் இது வியப்பாம் எங்கள் இறைவ நினது அருள் பெருமை இசைப்பது எவன் அணிந்தே.

மேல்

#80 உருவம் ஒரு நான்கு ஆகி அருவமும் அ அளவாய் உரு அரு ஒன்று ஆகி இவை ஒன்பானும் கடந்து துருவ முடியாப் பரம துரிய நடு இருந்த சொருப அனுபவ மயமாம் துணை அடிகள் வருந்தத் தெருவம் மிசை நடந்து சிறு செம் பரல்_கல் உறுத்தச் சிறியேன்-பால் அடைந்து எனது செங்கையில் ஒன்று அளித்தாய் மருவ இனியாய் மன்றில் நடம் புரிவாய் கருணை மா கடலே நின் பெருமை வழுத்த முடியாதே.

மேல்

#81 பக்குவத்தால் உயர் வாழைப் பழம் கனிந்தால் போலும் பரம் கருணையால் கனிந்த பத்தர் சித்தம்-தனிலே பொக்கம் இல் அப் பழம்-தனிலே தெள் அமுதம் கலந்தால் போல் கலந்து தித்திக்கும் பொன் அடிகள் வருந்த மிக்க இருள் இரவினிடை நடந்து எளியேன் இருக்கும் வியன் மனையில் அடைந்து கதவம் திறக்கப் புரிந்து ஒக்க எனை அழைத்து ஒன்று கொடுத்து இங்கே இரு என்று உரைத்தனை எம் பெருமான் நின் உயர் கருணை வியப்பே.

மேல்

#82 உளவு_அறிந்தோர்-தமக்கு எல்லாம் உபநிடதப் பொருளாய் உளவு_அறியார்க்கு இக_பரமும் உறுவிக்கும் பொருளாய் அளவு அறிந்த அறிவாலே அறிந்திட நின்று ஆடும் அடி_மலர்கள் வருந்தியிட நடந்து இரவில் அடைந்து களவு_அறிந்தேன்-தனைக் கூவிக் கதவு திறப்பித்துக் கையில் ஒன்று கொடுத்தாய் நின் கருணையை என் என்பேன் விளவு_எறிந்தோன் அயன் முதலோர் பணிந்து ஏத்தப் பொதுவில் விளங்கு நடம் புரிகின்ற துளங்கு ஒளி மா மணியே.

மேல்

#83 எவ்வுலகும் எவ்வுயிரும் எச் செயலும் தோன்றி இயங்கும் இடம் ஆகி எல்லாம் முயங்கும் இடம் ஆகித் தெவ் உலகும் நண்பு உலகும் சமனாகக் கண்ட சித்தர்கள்-தம் சித்தத்தே தித்திக்கும் பதங்கள் இ உலகில் வருந்த நடந்து என் பொருட்டால் இரவில் எழில் கதவம் திறப்பித்து அங்கு என் கையில் ஒன்று அளித்தாய் அ உலக முதல் உலகம் அனைத்தும் மகிழ்ந்து ஏத்த அம்பலத்தே நடம் புரியும் செம்பவள_குன்றே.

மேல்

#84 மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே ஊனினொடும் உயிர் உணர்வும் கலந்து கலப்புறுமாறு உறுவித்துப் பின் கரும ஒப்பு வரும் தருணம் தேனினொடு கலந்த அமுது என ருசிக்க இருந்த திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன்-பால் அடைந்து வானினொடு விளங்கு பொருள் ஒன்று எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே.

மேல்

#85 பசுபாச பந்தம் அறும் பாங்கு-தனைக் காட்டிப் பரம் ஆகி உள் இருந்து பற்று அறவும் புரிந்தே அசமானம் ஆன சிவானந்த அனுபவமும் அடைவித்து அ அனுபவம் தாம் ஆகிய சேவடிகள் வசு மீது வருந்தியிட நடந்து அடியேன் இருக்கும் மனையை அடைந்து அணிக் கதவம் திறப்பித்து நின்று விசுவாசமுற எனை அங்கு அழைத்து ஒன்று கொடுத்தாய் விடையவ நின் அருள் பெருமை என் புகல்வேன் வியந்தே.

மேல்

#86 ஆதியுமாய் அந்தமுமாய் நடு ஆகி ஆதி அந்த நடு இல்லாத மந்தண வான் பொருளாய்ச் சோதியுமாய்ச் சோதி எலாம் தோன்று பரம் ஆகித் துரியமுமாய் விளங்குகின்ற துணை அடிகள் வருந்த பாதி_இரவிடை நடந்து நான் இருக்கும் இடத்தே படர்ந்து தெருக் கதவம் காப்பு அவிழ்த்திடவும் புரிந்து ஓதியில் அங்கு எனை அழைத்து என் கரத்து ஒன்று கொடுத்தாய் உடையவ நின் அருள் பெருமை என் உரைப்பேன் உவந்தே.

மேல்

#87 பாடுகின்ற மறைகள் எலாம் ஒருபுறம் சூழ்ந்து ஆடப் பத்தரொடு முத்தர் எலாம் பார்த்து ஆடப் பொதுவில் ஆடுகின்ற திரு_அடிகள் வருந்த நடந்து அடியேன் அடையும் இடத்து அடைந்து இரவில் காப்பு அவிழ்க்கப் புரிந்து நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் வாடுகின்ற வாட்டம் எலாம் தவிர்ந்து மகிழ்கின்றேன் மன்னவ நின் பொன் அருளை என் என வாழ்த்துவனே.

மேல்

#88 எ மதத்தில் எவரெவர்க்கும் இயைந்த அனுபவமாய் எல்லாமாய் அல்லவுமாய் இருந்தபடி இருந்தே அ மதப் பொன்_அம்பலத்தில் ஆனந்த நடம் செய் அரும் பெரும் சேவடி இணைகள் அசைந்து மிக வருந்த இ மதத்தில் என் பொருட்டாய் இரவில் நடந்து அருளி எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து என் கரத்தே சம்மதத்தால் ஒன்று அளித்த தயவினை என் புகல்வேன் தம்மை அறிந்தவர் அறிவின் மன்னும் ஒளி மணியே.

மேல்

#89 பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் வேத வெளி அபர விந்து வெளி அபர நாத வெளி ஏக வெளி பரம வெளி ஞான வெளி மா நாத வெளி சுத்த வெறுவெளி வெட்டவெளியா நவில்கின்ற வெளிகள் எலாம் நடிக்கும் அடி வருந்த ஏத எளியேன் பொருட்டா நடந்து என்-பால் அடைந்தே என் கையின் ஒன்று அளித்தனை நின் இரக்கம் எவர்க்கு உளதே.

மேல்

#90 வானதுவாய்ப் பசு மலம் போய்த் தனித்து நிற்கும் தருணம் வயங்கு பரானந்த சுகம் வளைந்துகொள்ளும் தருணம் தான் அதுவாய் அது தானாய்ச் சகசமுறும் தருணம் தடை அற்ற அனுபவமாம் தன்மை அடி வருந்த மானதுவாய் நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து மணிக் கதவம் திறப்பித்து மகிழ்ந்து எனை அங்கு அழைத்து ஆனதொரு பொருள் அளித்தாய் நின் அருள் என் என்பேன் அம்பலத்தே நடம் புரியும் எம் பெரும் சோதியனே.

மேல்

#91 புன் தலை என் தலை என நான் அறியாமல் ஒருநாள் பொருத்திய போதினில் சிவந்து பொருந்திய பொன் அடிகள் இன்று அலைவின் மிகச் சிவந்து வருந்த நடந்து எளியேன் இருக்கும் இடத்து அடைந்து கதவம் திறக்கப் புரிந்து மன்றலின் அங்கு எனை அழைத்து என் கையில் ஒன்று கொடுத்தாய் மன்னவ நின் பெரும் கருணை வண்மையை என் என்பேன் பொன்றல் இலாச் சித்தர் முத்தர் போற்ற மணி மன்றில் புயங்க நடம் புரிகின்ற வயங்கு ஒளி மா மணியே.

மேல்

#92 தஞ்சமுறும் உயிர்க்கு உணர்வாய் இன்பமுமாய் நிறைந்த தம் பெருமை தாம் அறியாத் தன்மையவாய் ஒருநாள் வஞ்சகனேன் புன் தலையில் வைத்திடவும் சிவந்து வருந்திய சேவடி பின்னும் வருந்த நடந்து அருளி எஞ்சல் இலா இரவினிடை யான் இருக்கும் இடம் சேர்ந்து எழில் கதவம் திறப்பித்து அங்கு எனை அழைத்து ஒன்று அளித்தாய் விஞ்சு பரானந்த நடம் வியன் பொதுவில் புரியும் மேலவ நின் அருள் பெருமை விளம்பல் எவன் வியந்தே.

மேல்

#93 எழுத்தினொடு பதம் ஆகி மந்திரமாய்ப் புவனம் எல்லாமாய்த் தத்துவமாய் இயம்பு கலை ஆகி வழுத்தும் இவைக்கு உள் ஆகிப் புறம் ஆகி நடத்தும் வழி ஆகி நடத்துவிக்கும் மன் இறையும் ஆகி அழுத்துறும் இங்கு இவை எல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற்கு அப்பாலும் ஆன பதம் வருந்த இழைத்து நடந்து இரவில் என்-பால் அடைந்து ஒன்று கொடுத்தாய் எம் பெருமான் நின் பெருமை என் உரைப்பேன் வியந்தே.

மேல்

#94 மாவின் மணப் போர் விடை மேல் நந்தி விடை மேலும் வயங்கி அன்பர் குறை தவிர்த்து வாழ்வு அளிப்பது அன்றிப் பூவின் மணம் போல் உயிருக்குயிர் ஆகி நிறைந்து போகம் அளித்து அருள்கின்ற பொன் அடிகள் வருந்தத் தாவி நடந்து இரவின் மனைக் கதவு திறப்பித்தே தயவுடன் அங்கு எனை அழைத்துத் தக்கது ஒன்று கொடுத்தாய் நாவின் மணந்துறப் புலவர் வியந்து ஏத்தும் பொதுவில் நடம் புரியும் நாயக நின் நல் கருணை இதுவே.

மேல்

#95 மணப் போது வீற்றிருந்தான் மாலவன் மற்றவரும் மன அழுக்காறு உறச் சிறியேன் வருந்திய நாள் அந்தோ கணப் போதும் தரியாமல் கருணை அடி வருந்தக் கங்குலிலே நடந்து என்னைக் கருதி ஒன்று கொடுத்தாய் உணப் போது போக்கினன் முன் உளவு அறியாமையினால் உளவு அறிந்தேன் இ நாள் என் உள்ளம் மகிழ்வுற்றேன் தணப்பு ஓதும் மறைகள் எலாம் தனித்தனி நின்று ஏத்தத் தனி மன்றில் ஆனந்தத் தாண்டவம் செய் அரசே.

மேல்

#96 நடுங்க மலக்கண் குறுகி நெடும் கமலக் கண் விளங்கும் நல்ல திரு_அடி வருந்த வல் இரவில் நடந்து தொடும் கதவம் திறப்பித்துத் துணிந்து எனை அங்கு அழைத்துத் துயரம் எலாம் விடுக இது தொடுக எனக் கொடுத்தாய் கொடும் குணத்தேன் அளவினில் என் குற்றம் எலாம் குணமாக் கொண்ட குண_குன்றே நின் குறிப்பினை என் புகல்வேன் இடும் கடுக என்று உணர்த்தி ஏற்றுகின்ற அறிவோர் ஏத்த மணிப் பொதுவில் அருள் கூத்து உடைய பொருளே.

மேல்

#97 வெய்ய பவக் கோடையிலே மிக இளைத்து மெலிந்த மெய் அடியர்-தமக்கு எல்லாம் விரும்பு குளிர் சோலைத் துய்ய நிழலாய் அமுதாய் மெலிவு அனைத்தும் தவிர்க்கும் துணை அடிகள் மிக வருந்தத் துணிந்து நடந்து அடியேன் உய்ய நடு_இரவினில் யான் இருக்கும் இடத்து அடைந்தே உயர் கதவம் திறப்பித்து அங்கு உவந்து அழைத்து ஒன்று அளித்தாய் வையகமும் வானகமும் வாழ மணிப் பொதுவில் மா நடம் செய் அரசே நின் வண்மை எவர்க்கு உளதே.

மேல்

#98 சிறியவனேன் சிறுமை எலாம் திருவுளம்கொள்ளாது என் சென்னி மிசை அமர்ந்து அருளும் திரு_அடிகள் வருந்தச் செறி இரவில் நடந்து அணைந்து நான் இருக்கும் இடத்தே தெருக் கதவம் திறப்பித்துச் சிறப்பின் எனை அழைத்துப் பிறிவிலது இங்கு இது-தனை நீ பெறுக எனப் பரிந்து பேசி ஒன்று கொடுத்தாய் நின் பெருமையை என் என்பேன் பொறியின் அறவோர் துதிக்கப் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

மேல்

#99 அடிநாளில் அடியேனை அறிவு குறிக்கொள்ளாது ஆட்கொண்டு என் சென்னி மிசை அமர்ந்த பதம் வருந்தப் படி நாளில் நடந்து இரவில் அடைந்து அருளித் தெருவில் படர் கதவம் திறப்பித்துப் பரிந்து எனை அங்கு அழைத்துப் பிடி நாளும் மகிழ்ந்து உனது மனம்கொண்டபடியே பேர்_அறம் செய்து உறுக எனப் பேசி ஒன்று கொடுத்தாய் பொடி நாளும் அணிந்து மணிப் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

மேல்

#100 உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறியச் சிறியேன் உணர்வில் இருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கித் திலகம் எனத் திகழ்ந்து எனது சென்னி மிசை அமர்ந்த திரு_அடிகள் வருந்த நடை செய்து அருளி அடியேன் இலகு மனைக் கதவு இரவில் திறப்பித்து அங்கு என்னை இனிது அழைத்து ஒன்று அளித்து மகிழ்ந்து இன்னும் நெடும் காலம் புலவர் தொழ வாழ்க என்றாய் பொதுவில் நடம் புரியும் பொருளே நின் அருளே மெய்ப்பொருள் எனத் தேர்ந்தனனே.

@3. பிரசாத மாலை

மேல்

#1 திரு உருக்கொண்டு எழுந்தருளிச் சிறியேன் முன் அடைந்து திரு_நீற்றுப் பை அவிழ்த்துச் செம் சுடர்ப் பூ அளிக்கத் தரு உருக்கொண்டு எதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே திரு_நீறும் தருக எனக் கேட்ப மரு உருக்கொண்டு அன்று அளித்தாம் திரு_நீறு இன்று உனக்கு மகிழ்ந்து அளித்தாம் இவை என்று வாய்_மலர்ந்து நின்றாய் குரு உருக்கொண்டு அம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே என்னை முன்_நாள் ஆட்கொண்ட குண_குன்றே.

மேல்

#2 என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளித் தன் வடிவத் திரு_நீற்றுத் தனிப் பை அவிழ்த்து எனக்குத் தகு சுடர்ப் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கிக் களித்து மின் வடிவப் பெருந்தகையே திரு_நீறும் தருதல் வேண்டும் என முன்னர் அது விரும்பி அளித்தனம் நாம் உன் வடிவில் காண்டி என உரைத்து அருளி நின்றாய் ஒளி நடம் செய் அம்பலத்தே வெளி நடம் செய் அரசே.

மேல்

#3 அழகு நிறைந்து இலக ஒரு திரு_மேனி தரித்தே அடியேன் முன் எழுந்தருளி அருள் நகை கொண்டு அடியார் கழக நடு எனை இருத்தி அவர்க்கு எல்லாம் நீறு களித்து அருளி என்னளவில் கருணை முகம் மலர்ந்து குழகு இயல் செம் சுடர்ப் பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் கொடுத்து அருளி நின்றனை நின் குறிப்பு அறியேன் குருவே மழ களிற்றின் உரி விளங்க மணிப் பொதுவில் சோதி மய வடிவோடு இன்ப நடம் வாய்ந்து இயற்றும் பதியே.

மேல்

#4 விலை_கடந்த மணி என ஓர் திரு_மேனி தரித்து வினையேன் முன் எழுந்தருளி மெய் அடியர் விரும்பக் கலை கடந்த பொருட்கு எல்லாம் கரை_கடந்து நாதக் கதி கடந்த பெரும் கருணைக் கடைக்கண் மலர்ந்து அருளி அலை கடந்த கடல் மலர்ந்த மணச் செழும் பூ அடியேன் அங்கை-தனில் அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் மலை கடந்த நெடும் தோளில் இதழி அசைந்து ஆட மன்றில் நடம் புரிகின்ற வள்ளல் அருள் குருவே.

மேல்

#5 உலர்ந்த மரம் தழைக்கும் ஒரு திரு_உருவம் தாங்கி உணர்வு_இலியேன் முன்னர் உவந்து உறு கருணை துளும்ப மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்றுப் பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் அலர்ந்த திரு_நீறு அளித்துப் பின்னர் என்றன் கரத்தில் அருள் மணப் பூ அளித்தனை நின் அருள் குறிப்பு ஏது அறியேன் கலந்தவரைக் கலந்து மணிக் கனக மன்றில் நடம் செய் கருணை நெடு கடலே என் கண் அமர்ந்த ஒளியே.

மேல்

#6 பிழை அலது ஒன்று அறியாத சிறியேன் முன் புரிந்த பெரும் தவமோ திரு_அருளின் பெருமை இதோ அறியேன் மழை என நின்று இலகு திரு_மணி மிடற்றில் படிக வடம் திகழ நடந்து குரு வடிவு-அது கொண்டு அடைந்து விழைவினொடு என் எதிர்நின்று திரு_நீற்றுக் கோயில் விரித்து அருளி அருள் மணப் பூ விளக்கம் ஒன்று கொடுத்தாய் குழை அசையச் சடை அசையக் குலவு பொன்_அம்பலத்தே கூத்து இயற்றி என்னை முன் ஆட்கொண்ட சிவ_கொழுந்தே.

மேல்

#7 முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த முழு மணி போன்று ஒரு வடிவு என் முன் கொடு வந்து அருளி எத் தேவர்-தமக்கு மிக அரிய எனும் மணப் பூ என் கரத்தே கொடுத்தனை நின் எண்ணம் இது என்று அறியேன் சித்தே என்பவரும் ஒரு சத்தே என்பவரும் தேறிய பின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில் அத் தேவர் வழுத்த இன்ப உரு ஆகி நடம் செய் ஆர்_அமுதே என் உயிருக்கு ஆன பெரும் துணையே.

மேல்

#8 தெள் அமுதம் அனைய ஒரு திரு_உருவம் தாங்கிச் சிறியேன் முன் எழுந்தருளிச் செழு மணப் பூ அளித்தாய் உள் அமுதம் ஆகிய நின் திரு_குறிப்பு ஏது உணரேன் உடையவளை உடையவனே உலகு உணரா ஒளியே கள்ளம் இலா அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய்க் கலந்துநின்ற பெரும் கருணை_கடலே என் கண்ணே கொள்ளு-தொறும் கரணம் எலாம் கரைந்து கனிந்து இனிக்கும் கொழும் கனியே கோல்_தேனே பொது விளங்கும் குருவே.

மேல்

#9 கண் விருப்பம்கொளக் கரணம் கனிந்துகனிந்து உருகக் கருணை வடிவு எடுத்து அருளிக் கடையேன் முன் கலந்து மண் விருப்பம்கொளும் மணப் பூ மகிழ்ந்து எனக்குக் கொடுத்து வாழ்க என நின்றனை நின் மனக் குறிப்பு ஏது அறியேன் பெண் விருப்பம் தவிர்க்கும் ஒரு சிவகாமவல்லிப் பெண் விருப்பம் பெற இருவர் பெரியர் உளம் களிப்பப் பண் விருப்பம் தரும் மறைகள் பலபல நின்று ஏத்தப் பரம சிதம்பர நடனம் பயின்ற பசுபதியே.

மேல்

#10 உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்று எடுத்து மெய் அன்பர் உவக்க எழுந்தருளி முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லாச் சிறியேன் முகம் நோக்கிச் செழும் மணப் பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் துன்னுதற்கு இங்கு அரிதாம் நின் திருவுள்ளக் குறிப்பைத் துணிந்து அறியேன் என்னினும் ஓர் துணிவின் உவக்கின்றேன் பொன் நுதற்குத் திலகம் எனும் சிவகாமவல்லிப் பூவை ஒரு புறம் களிப்பப் பொது நடம் செய் பொருளே.

@4. ஆனந்த மாலை

மேல்

#1 திரு வருடும் திரு_அடிப் பொன் சிலம்பு அசைய நடந்து என் சிந்தையிலே புகுந்து நின்-பால் சேர்ந்து கலந்து இருந்தாள் தெருமரல் அற்று உயர்ந்த மறைச் சிரத்து அமர்ந்த புனிதை சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பப் பொரு அரும் மெய் அன்பு_உடையார் இருவரும் கண்டு உவந்து போற்ற மணிப் பொதுவில் நடம் புரிகின்ற துரையே பருவரல் அற்று அடிச் சிறியேன் பெரு வரம் பெற்று உனையே பாடுகின்றேன் பெரிய அருள் பருவம் அடைந்தனனே.

மேல்

#2 சண்பை மறை_கொழுந்து மகிழ்தர அமுதம் கொடுத்தாள் தயவு_உடையாள் எனை_உடையாள் சர்வசத்தி_உடையாள் செண்பகப் பொன்_மேனியினாள் செய்ய மலர்_பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பப் பண் பகர் பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய் பரம்பர நின் திரு_அருளைப் பாடுகின்றேன் மகிழ்ந்து எண் பகர் குற்றங்கள் எலாம் குணமாகக் கொள்ளும் எம் துரை என்று எண்ணுகின்ற எண்ணம் அதனாலே.

மேல்

#3 அருள் உடைய நாயகி என் அம்மை அடியார் மேல் அன்பு_உடையாள் அமுது_அனையாள் அற்புதப் பெண் அரசி தெருள் உடைய சிந்தையிலே தித்திக்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப மருள் உடைய மாயை எலாம் தேய மணி மன்றின் மா நடம் செய் துரையே நின் மன் அருளின் திறத்தை இருள் உடைய மனச் சிறியேன் பாடுகின்றேன் பருவம் எய்தினன் என்று அறிஞர் எலாம் எண்ணி மதித்திடவே.

மேல்

#4 மாசு_உடையேன் பிழை அனைத்தும் பொறுத்து வரம் அளித்தாள் மங்கையர்கள் நாயகி நான்மறை அணிந்த பதத்தாள் தேசு_உடையாள் ஆனந்தத் தெள் அமுத வடிவாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக் காசு உடைய பவக் கோடைக்கு ஒரு நிழலாம் பொதுவில் கன நடம் செய் துரையே நின் கருணையையே கருதி ஆசு_உடையேன் பாடுகின்றேன் துயரம் எலாம் தவிர்ந்தேன் அன்பர் பெறும் இன்ப நிலை அனுபவிக்கின்றேனே.

மேல்

#5 பொய்யாத வரம் எனக்குப் புரிந்த பரம் பரை வான் பூதம் முதல் கருவி எலாம் பூட்டுவிக்கும் திறத்தாள் செய்யாளும் கலையவளும் உருத்திரையும் வணங்கும் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக் கையாத இன்ப நடம் கனக மணிப் பொதுவில் களித்து இயற்றும் துரையே நின் கருணையை நான் கருதி நையாத வண்ணம் எலாம் பாடுகின்றேன் பருவம் நண்ணிய புண்ணியர் எல்லாம் நயந்து மகிழ்ந்திடவே.

மேல்

#6 அறம் கனிந்த அருள்_கொடி என் அம்மை அமுது அளித்தாள் அகிலாண்டவல்லி சிவானந்தி சௌந்தரி சீர்த் திறம் கலந்த நாத மணிச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப மறம் கனிந்தார் மயக்கம் எலாம் தெளிய மணிப் பொதுவில் மா நடம் செய் துரையே நின் வண்மை-தனை அடியேன் புறம் கவியப் பாடுகின்றேன் அகம் கவியப் பாடும் புண்ணியர் எல்லாம் இவன் ஓர் புதியன் எனக் கொளவே.

மேல்

#7 உள் அமுதம் ஊற்றுவிக்கும் உத்தமி என் அம்மை ஓங்கார பீடம் மிசைப் பாங்காக இருந்தாள் தெள் அமுத வடிவு_உடையாள் செல்வம் நல்கும் பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்பக் கள்ளம் மறுத்து அருள் விளக்கும் வள்ளல் மணிப் பொதுவில் கால் நிறுத்திக் கால் எடுத்துக் களித்து ஆடும் துரையே எள்ளல் அறப் பாடுகின்றேன் நின் அருளை அருளால் இப் பாட்டில் பிழை குறித்தல் எங்ஙனம் இங்ஙனமே.

மேல்

#8 பார் பூத்த பசும்_கொடி பொன் பாவையர்கள் அரசி பரம் பரை சிற்பரை பராபரை நிமலை ஆதி சீர் பூத்த தெய்வ மறைச் சிலம்பு அணிந்த பதத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப ஏர் பூத்த மணி மன்றில் இன்ப நடம் புரியும் என் அருமைத் துரையே நின் இன் அருளை நினைந்து கார் பூத்த கனை மழை போல் கண்களில் நீர் சொரிந்து கனிந்து மிகப் பாடுகின்ற களிப்பை அடைந்தனனே.

மேல்

#9 பூரணி சிற்போதை சிவ_போகி சிவயோகி பூவையர்கள் நாயகி ஐம்பூதமும் தான் ஆனாள் தேர் அணியும் நெடு வீதித் தில்லை நகர் உடையாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப ஏர் அணியும் மணி மன்றில் இன்ப வடிவு ஆகி இன்ப நடம் புரிகின்ற எம்முடைய துரையே தாரணியில் உனைப் பாடும் தரத்தை அடைந்தனன் என் தன்மை எலாம் நன்மை எனச் சம்மதித்தவாறே.

மேல்

#10 தன் ஒளியில் உலகம் எலாம் தாங்குகின்ற விமலை தற்பரை அம் பரை மா சிதம்பரை சிற்சத்தி சின்ன வயதினில் என்னை ஆள நினக்கு இசைத்தாள் சிவகாமவல்லி பெரும் தேவி உளம் களிப்ப மன்னிய பொன் மணிப் பொதுவில் இன்ப நடம் புரிந்து வயங்குகின்ற துரையே நின் மா கருணைத் திறத்தை உன்னி உவந்து உணர்ந்து உருகிப் பாடுகின்றேன் எங்கள் உடையானே நின் அருளின் அடையாளம் இதுவே.

@5. பக்தி மாலை

மேல்

#1 அருள்_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து மருள்_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் தெருள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே இருள் உடைய சிலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#2 அன்பு_உடையாய் அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து வன்பு_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் இன்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் விளங்குகின்றதாயினும் என் வெய்ய மனம் உருகா என்பு உடைய உடலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#3 ஆள்_உடையாய் சிறியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து வாள்_உடையேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் நீள் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் நிகழ்கின்றதாயினும் என் நெஞ்சம் உருகிலதே ஏள் உடைய மலையும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#4 ஆர்_அமுதே அடியேன் நான் அருள் அருமை அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து வாரம் உற எனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மகிழ்ந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் சீர் உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தெரிகின்றதாயினும் என் சிந்தை உருகிலதே ஈரம் இலா மரமும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#5 அற்புத நின் அருள் அருமை அறியேன் நான் சிறிதும் அறியாதே மறுத்த பிழை ஆயிரமும் பொறுத்து வற்புறுவேன்-தனை அழைத்துத் திரும்பவும் என் கரத்தே வலிந்து அளித்த பெரும் கருணை வண்ணம் என்றன் மனமும் கற்பு உடைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றது என்னினும் என் கல்_மனமோ உருகா இற்புடைய இரும்பும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#6 ஆண்டவ நின் அருள் அருமை அறியாதே திரிந்தேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து வேண்டி எனை அருகு அழைத்துத் திரும்பவும் என் கரத்தே மிக அளித்த அருள் வண்ணம் வினை_உடையேன் மனமும் காண் தகைய கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருகக் காணேன் ஈண்டு உருகாக் கரடும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#7 அரசே நின் திரு_அருளின் அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து விரவும் அன்பில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் உரவு மலர்க் கண்களும் விட்டு அகலாதே இன்னும் ஒளிர்கின்றதாயினும் என் உள்ளம் உருகிலதே இரவு_நிறத்தவரும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#8 ஐயா நின் அருள் பெருமை அருமை ஒன்றும் அறியேன் அறியாதே மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து மெய்யா அன்று எனை அழைத்து வலியவும் என் கரத்தே வியந்து அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் கையாது கண்களும் விட்டு அகலாதே இன்னும் காண்கின்றதாயினும் என் கருத்து உருகக் காணேன் எய்யா வன் பரலும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#9 அப்பா நின் திரு_அருள் பேர்_அமுது அருமை அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து இப் பாரில் எனை அழைத்து வலியவும் என் கரத்தே இனிது அளித்த பெரும் கருணை இன்பம் என்றன் மனமும் துப்பாய கண்களும் விட்டு அகலாதே இன்னும் தோன்றுகின்றதாயினும் இத் துட்ட நெஞ்சம் உருகா எப் பாவி நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

மேல்

#10 அம்மான் நின் அருள் சத்தி அருமை ஒன்றும் அறியேன் அன்று இரவில் மறுத்த பிழை அத்தனையும் பொறுத்து வெம் மாயை அகற்றி எனை அருகு அழைத்து என் கரத்தே மிக அளித்த பெரும் கருணை விளக்கம் என்றன் மனமும் மை மாழை விழிகளும் விட்டு அகலாதே இன்னும் வதிகின்றதாயினும் என் வஞ்ச நெஞ்சம் உருகா எ மாய நெஞ்சும் இதற்கு உருகல் அரிது அலவே இனித்த நடம் புரிந்து மன்றில் தனித்த சிவ_கொழுந்தே.

@6. சௌந்தர மாலை

மேல்

#1 சேல் ஓடும் இணைந்த விழிச் செல்வி பெரும் தேவி சிவகாமவல்லியொடு சிவ போக வடிவாய் மேலோடு கீழ் நடுவும் கடந்து ஓங்கு வெளியில் விளங்கிய நின் திரு_உருவை உளம்கொளும் போது எல்லாம் பாலோடு பழம் பிழிந்து தேன் கலந்து பாகும் பசு நெய்யும் கூட்டி உண்டபடி இருப்பது என்றால் மாலோடு காண்கின்ற கண்களுக்கு அங்கு இருந்த வண்ணம் இந்த வண்ணம் என எண்ணவும் ஒண்ணாதே.

மேல்

#2 இன்பு அருளும் பெரும் தாய் என் இதயத்தே இருந்தாள் இறைவியொடும் அம்பலத்தே இலங்கிய நின் வடிவை வன்புறு கல்_மனக் கொடியேன் நினைக்குமிடத்து எல்லாம் மனம் கரைந்து சுக மயமாய் வயங்கும் எனில் அந்தோ அன்பு_உடையார் நின்றுநின்று கண்டுகொண்ட காலம் ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம் ஈங்கு எவர்கள் புகல்வார் துன்புறுதல் இல்லாத சுத்த நிலை உடையார் தொழுகின்ற-தோறும் மகிழ்ந்து எழுகின்ற துரையே.

மேல்

#3 சிவயோக சந்தி தரும் தேவி உலகு_உடையாள் சிவகாமவல்லியொடும் செம்பொன் மணிப் பொதுவில் நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய்க் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்துத் தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே.

மேல்

#4 சித்தி எலாம் அளித்த சிவ_சத்தி எனை_உடையாள் சிவகாமவல்லியொடு சிவ ஞானப் பொதுவில் முத்தி எலாம் தர விளங்கும் முன்னவ நின் வடிவை மூட மனச் சிறியேன் நான் நாட வரும் பொழுது புத்தி எலாம் ஒன்றாகிப் புத்தமுதம் உண்டாற்போலும் இருப்பது அதற்கு மேலும் இருப்பதுவேல் பத்தி எலாம் உடையவர்கள் காணும் இடத்து இருக்கும்படி தான் எப்படியோ இப்படி என்பது அரிதே.

மேல்

#5 தெய்வம் எலாம் வணங்குகின்ற தேவி எனை அளித்தாள் சிவகாமவல்லியொடு திரு மலி அம்பலத்தே சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவைக் கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் ஐவகை இந்தியம் கடந்தார் கண்டவிடத்து இருந்த அனுபவத்தின் வண்ணம்-அதை யார் புகல வல்லார் உய் வகை அ நாள் உரைத்தது அன்றியும் இ நாளில் உந்திரவில் வந்து உணர்வு தந்த சிவ குருவே.

மேல்

#6 தேன் மொழிப் பெண் அரசி அருள் செல்வம் எனக்கு அளித்தாள் சிவகாமவல்லியொடு செம்பொன் மணிப் பொதுவில் வான் மொழிய நின்று இலங்கு நின் வடிவைச் சிறியேன் மனம்கொண்ட காலத்தே வாய்த்த அனுபவத்தை நான் மொழிய முடியாதேல் அன்பர் கண்ட காலம் நண்ணிய மெய் வண்ணம்-அதை எண்ணி எவர் புகல்வார் நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே.

மேல்

#7 சிற்றிடை எம் பெருமாட்டி தேவர் தொழும் பதத்தாள் சிவகாமவல்லியொடு சிறந்த மணிப் பொதுவில் உற்றிடை நின்று இலங்குகின்ற நின் வடிவைக் கொடியேன் உன்னு-தொறும் உளம் இளகித் தளதள என்று உருகி மற்று இடையில் வலியாமல் ஆடுகின்றது என்றால் வழி_அடியர் விழிகளினால் மகிழ்ந்து கண்ட காலம் பற்று இடையாது ஆங்கு அவர்கட்கு இருந்த வண்ணம்-தனை யார் பகர்வாரே பகர்வாரேல் பகவன் நிகர்வாரே

மேல்

#8 ஆர்_அமுதம் அனையவள் என் அம்மை அபிராமி ஆனந்தவல்லியொடும் அம்பலத்தே விளங்கும் பேர்_அமுத மயமாம் உன் திரு_வடிவைக் குறித்துப் பேசுகின்ற போது மணம் வீசுகின்றது ஒன்றோ சீர் அமுதம் ஆகி எல்லாம் தித்திப்பது அன்பு ஓர்சிறிதும் இலாக் கடைப் புலையேன் திறத்துக்கு இங்கு என்றால் ஊர் அமுதப் பேர் அன்பர் பேசுமிடத்து அவர்-பால் உற்ற வண்ணம் இற்றிது என்ன உன்ன முடியாதே.

மேல்

#9 பொன்_பதத்தாள் என்னளவில் பொன்_ஆசை தவிர்த்தாள் பூரணி ஆனந்த சிவ போக வல்லியோடு சொல் பதமும் கடந்த மன்றில் விளங்கிய நின் வடிவைத் தூய்மை_இலேன் நான் எண்ணும்-தோறும் மனம் இளகிச் சிற்பதத்தில் பர ஞான மயம் ஆகும் என்றால் தெளிவு_உடையார் காண்கின்ற திறத்தில் அவர்க்கு இருக்கும் நல் பதம் எத்தன்மையதோ உரைப்ப அரிது மிகவும் நாத முடி-தனில் புரியும் ஞான நடத்து அரசே.

மேல்

#10 என் பிழை யாவையும் பொறுத்தாள் என்னை முன்னே அளித்தாள் இறைவி சிவகாமவல்லி என் அம்மையுடனே இன்ப வடிவாய்ப் பொதுவில் இலங்கிய நின் வண்ணம் இற்று என நான் நினைத்திடும் கால் எற்று எனவும் மொழிவேன் அன்பு உருவாய் அது_அதுவாய் அளிந்த பழம் ஆகி அப் பழச்சாறு ஆகி அதன் அரும் சுவையும் ஆகி என்பு உருக மன ஞான மயமாகும் என்றால் எற்றோ மெய் அன்பு_உடையார் இயைந்து கண்ட இடத்தே.

மேல்

#11 கரும்பு_அனையாள் என் இரண்டு கண்களிலே இருந்தாள் கற்பகப் பொன் வல்லி சிவகாமவல்லியுடனே விரும்பு மணிப் பொதுவினிலே விளங்கிய நின் வடிவை வினை_உடையேன் நினைக்கின்ற வேளையில் என் புகல்வேன் இரும்பு அனைய மனம் நெகிழ்ந்துநெகிழ்ந்து உருகி ஒரு பேர்_இன்ப மயம் ஆகும் எனில் அன்பர் கண்ட காலம் அரும்பி மலர்ந்திட்ட சிவானந்த அனுபவத்தை யார் அறிவார் நீ அறிவாய் அம்பலத்து எம் அரசே.

மேல்

#12 காம சத்தியுடன் களிக்கும் காலையிலே அடியேன் கன ஞான சத்தியையும் கலந்துகொளப் புரிந்தாள் வாம சத்தி சிவகாமவல்லியொடும் பொதுவில் வயங்கிய நின் திரு_அடியை மனம்கொளும் போது எல்லாம் ஆமசத்தன் எனும் எனக்கே ஆனந்த_வெள்ளம் அது ததும்பிப் பொங்கி வழிந்து ஆடும் எனில் அந்தோ ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத்து இருந்த இன்ப அனுபவப் பெருமை யாவர் புகல்வாரே.

@7. அதிசய மாலை

மேல்

#1 அக்கோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அயன் முதலோர் நெடும் காலம் மயல் முதல் நீத்து இருந்து மிக்கு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் இருளால் மிக மருண்டு மதி_இலியாய் வினை விரிய விரித்து இக் கோலத்துடன் இருந்தேன் அன்பு அறியேன் சிறியேன் எனைக் கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும் தக்கோன் என்று உலகு இசைப்பத் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#2 அச்சோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரி முதலோர் நெடும் காலம் புரி முதல் நீத்து இருந்து நச்சு ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் நாள் கழித்துக் கோள் கொழிக்கும் நடை நாயில் கடையேன் எச்சு ஓடும் இழிவினுக்கு ஒன்று இல்லேன் நான் பொல்லேன் எனைக் கருதி யான் இருக்கும் இடத்தில் எழுந்தருளித் தம் சோதி வணப் பொருள் ஒன்று எனக்கு அளித்துக் களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#3 அத்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அந்தணர் எல்லாரும் மறை மந்தணமே புகன்று ஒத்து ஓலமிடவும் அவர்க்கு ஒருசிறிதும் அருளான் ஒதி_அனையேன் விதி அறியேன் ஒருங்கேன் வன் குரங்கேன் இத் தோடம் மிக உடையேன் கடை நாய்க்கும் கடையேன் எனைக் கருதி யான் இருக்கும் இடம் தேடி நடந்து சத்தோடமுற எனக்கும் சித்தி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#4 அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறிவு_உடையார் ஐம்புலனும் செறிவு_உடையார் ஆகி வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல் மருளால் மனம் சென்ற வழி எல்லாம் தினம் சென்ற மதியேன் எந்தோ என்று உலகு இயம்ப விழி வழியே உழல்வேன் எனைக் கருதி எளியேன் நான் இருக்கும் இடத்து அடைந்து சந்தோடமுற எனக்கும் தன் வணம் ஒன்று அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#5 அப்பா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரும் தவர்கள் விரும்பி மிக வருந்தி உளம் முயன்று இப் பாரில் இருந்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இ உலக நடை விழைந்து வெவ் வினையே புரிந்து எப்பாலும் இழிந்து மனத்து இச்சை புரிகின்றேன் எனைக் கருதி யான் இருக்கும் இடம் தேடி அடைந்து தப்பாத ஒளி வண்ணம் தந்து என்னை அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#6 அம்மா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அன்பர் எலாம் முயன்றுமுயன்று இன்பு அடைவான் வருந்தி எம்மான் என்று ஏத்திடவும் அவர்க்கு அருளான் மருளால் இது நன்மை இது தீமை என்று நினையாமே மை மாலில் களி சிறந்து வல்_வினையே புரியும் வஞ்சகனேன்-தனைக் கருதி வந்து மகிழ்ந்து எனக்கும் தம்மானம் உற வியந்து சம்மானம் அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#7 ஆஆ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அடியர் எலாம் நினைந்துநினைந்து அவிழ்ந்து அகம் நெக்குருகி ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கு அருளான் மாயை உலக விடயானந்தம் உவந்துஉவந்து முயன்று தீவு ஆய நரகினிடை விழக்கடவேன் எனை-தான் சிவாயநம எனப் புகலும் தெளிவு_உடையன் ஆக்கிச் சாவாத வரம் கொடுத்துத் தனக்கு அடிமை பணித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#8 அண்ணா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அறம் கரைந்த நாவினர்கள் அகம் கரைந்துகரைந்து கண் ஆர நீர் பெருக்கி வருந்தவும் அங்கு அருளான் கடை நாயில் கடையேன் மெய்க் கதியை ஒருசிறிதும் எண்ணாத கொடும் பாவிப் புலை மனத்துச் சிறியேன் எனைக் கருதி வலியவும் நான் இருக்கும் இடத்து அடைந்து தண் ஆர் வெண் மதி அமுதம் உணவு ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#9 ஐயா ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருமை அறிந்து அருள் விரும்பி உரிமை பல இயற்றிப் பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள் இருக்கப் புலை மனத்துச் சிறியேன் ஓர் புல்லு நிகர் இல்லேன் செய்யாத சிறு தொழிலே செய்து உழலும் கடையேன் செருக்கு_உடையேன் எனைத் தனது திருவுளத்தில் அடைத்தே சைய ஆதி அந்தம் நடுக் காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#10 அன்னோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அருள் அருமை அறிந்தவர்கள் அருள் அமுதம் விரும்பி என்னோ இங்கு அருளாமை என்று கவன்று இருப்ப யாதும் ஒரு நன்றி_இலேன் தீது நெறி நடப்பேன் முன்னோ பின்னும் அறியா மூட மனப் புலையேன் முழுக் கொடியேன் எனைக் கருதி முன்னர் எழுந்தருளித் தன்னோடும் இணைந்த வண்ணம் ஒன்று எனக்குக் கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#11 ஐயோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன் அரு வினைகள் அணுகாமல் அற நெறியே நடந்து மெய் ஓதும் அறிஞர் எலாம் விரும்பி இருந்திடவும் வெய்ய வினை_கடல் குளித்து விழற்கு இறைத்துக் களித்துப் பொய் ஓதிப் புலை பெருக்கி நிலை சுருக்கி உழலும் புரை மனத்தேன் எனைக் கருதிப் புகுந்து அருளிக் கருணைச் சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#12 எற்றே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இச்சை எலாம் விடுத்து வனத்திடத்தும் மலையிடத்தும் உற்றே மெய்த் தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப உலக விடயங்களையே விலகவிட மாட்டேன் கற்று ஏதும் அறியகிலேன் கடையரினும் கடையேன் கருணை இலாக் கல்_மனத்துக் கள்வன் எனைக் கருதிச் சற்றேயும் அன்று மிகப் பெரிது எனக்கு இங்கு அளித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#13 என்னே ஈது அதிசயம் ஈது அதிசயம் என் இசைப்பேன் இரவு_பகல் அறியாமல் இருந்த இடத்து இருந்து முன்னே மெய்த் தவம் புரிந்தார் இன்னேயும் இருப்ப மூடர்களில் தலைநின்ற வேட மனக் கொடியேன் பொன் நேயம் மிகப் புரிந்த புலைக் கடையேன் இழிந்த புழுவினும் இங்கு இழிந்திழிந்து புகுந்த எனைக் கருதித் தன் நேயம் உற எனக்கும் ஒன்று அளித்துக் களித்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

மேல்

#14 ஓகோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் உரைப்பேன் உள்ளபடி உள்ள ஒன்றை உள்ளமுற விரும்பிப் பாகோ முப்பழரசமோ என ருசிக்கப் பாடிப் பத்தி செய்வார் இருக்கவும் ஓர் பத்தியும் இல்லாதே கோகோ என்று உலகு உரைப்பத் திரிகின்ற கொடியேன் குற்றம் அன்றிக் குணம் அறியாப் பெத்தன் எனைக் கருதித் தாகோதரம் குளிர்ந்த தன்மை ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே.

@8. அபராத மன்னிப்பு மாலை

மேல்

#1 செய் வகை நன்கு அறியாதே திரு_அருளோடு ஊடிச் சில புகன்றேன் அறிவு அறியாச் சிறியரினும் சிறியேன் பொய்_வகையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியனே மதி அணிந்த புரி சடையாய் விடையாய் மெய்_வகையோர் விழித்திருப்ப விரும்பி எனை அன்றே மிக வலிந்து ஆட்கொண்டு அருளி வினை தவிர்த்த விமலா ஐ வகைய கடவுளரும் அந்தணரும் பரவ ஆனந்தத் திரு_நடம் செய் அம்பலத்து எம் அரசே.

மேல்

#2 நிலை நாடி அறியாதே நின் அருளோடு ஊடி நீர்மை_அல புகன்றேன் நல் நெறி ஒழுகாக் கடையேன் புலை நாயேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூத கணம் சூழ நடம் புரிகின்ற புனிதா கலை நாடு மதி அணிந்த கன பவளச் சடையாய் கருத்து அறியாக் காலையிலே கருணை அளித்தவனே தலை ஞான முனிவர்கள்-தம் தலை மீது விளங்கும் தாள்_உடையாய் ஆள் உடைய சற்குரு என் அரசே.

மேல்

#3 கலைக் கடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடிக் கரிசு புகன்றேன் கவலை_கடல் புணை என்று உணரேன் புலைக் கடையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போற்றி சிவ போற்றி சிவ போற்றி சிவ போற்றி தலைக்கடைவாய் அன்று இரவில் தாள்_மலர் ஒன்று அமர்த்தித் தனிப் பொருள் என் கையில் அளித்த தயவு உடைய பெருமான் கொலைக் கடையார்க்கு எய்த அரிய குண_மலையே பொதுவில் கூத்தாடிக்கொண்டு உலகைக் காத்து ஆளும் குருவே

மேல்

#4 நின் புகழ் நன்கு அறியாதே நின் அருளோடு ஊடி நெறி_அலவே புகன்றேன் நல் நிலை விரும்பி நில்லேன் புன் புலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூரண சிற்சிவனே மெய்ப்பொருள் அருளும் புனிதா என் புடை அ நாள் இரவில் எழுந்தருளி அளித்த என் குருவே என் இரு கண் இலங்கிய நல் மணியே அன்பு_உடையார் இன்பு அடையும் அழகிய அம்பலத்தே ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.

மேல்

#5 துலைக்கொடி நன்கு அறியாதே துணை அருளோடு ஊடித் துரிசு புகன்றேன் கருணைப் பரிசு புகன்று அறியேன் புலைக் கொடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பொங்கு திரைக் கங்கை மதி தங்கிய செம் சடையாய் மலை_கொடி என் அம்மை அருள் மாது சிவகாமவல்லி மறைவல்லி துதி சொல்லி நின்று காணக் கலை_கொடி நன்கு உணர் முனிவர் கண்டு புகழ்ந்து ஏத்தக் கனகசபை-தனில் நடிக்கும் காரண சற்குருவே.

மேல்

#6 பழுத்தலை நன்கு உணராதே பதி அருளோடு ஊடிப் பழுது புகன்றேன் கருணைப் பாங்கு அறியாப் படிறேன் புழு_தலையேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புண்ணியர்-தம் உள்ளகத்தே நண்ணிய மெய்ப்பொருளே கழுத்து அலை நஞ்சு அணிந்து அருளும் கருணை நெடும் கடலே கால்_மலர் என் தலை மீது-தான் மலர அளித்தாய் விழுத் தலைவர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மெய்ம்மை அறிவு இன்பு உருவாய் விளங்கிய சற்குருவே.

மேல்

#7 கையடை நன்கு அறியாதே கன அருளோடு ஊடிக் காசு புகன்றேன் கருணைத் தேசு அறியாக் கடையேன் பொய் அடியேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் புத்தமுதே சுத்த சுக பூரண சிற்சிவமே ஐயடிகள் காடவர்கோன் அகம் மகிழ்ந்து போற்றும் அம்பலத்தே அருள் நடம் செய் செம்பவள மலையே மெய் அடியர் உள்ளகத்தில் விளங்குகின்ற விளக்கே வேத முடி மீது இருந்த மேதகு சற்குருவே.

மேல்

#8 திறப்பட நன்கு உணராதே திரு_அருளோடு ஊடித் தீமை புகன்றேன் கருணைத் திறம் சிறிதும் தெளியேன் புறப் படிறேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதம் முதல் நாதம் வரைப் புணருவித்த புனிதா உறப்படும் மெய் உணர்வு_உடையார் உள்ளகத்தே விளங்கும் உண்மை அறிவானந்த உரு உடைய குருவே சிறப்பு அடை மா தவர் போற்றச் செம்பொன் மணிப் பொதுவில் திரு_தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திரு_நட நாயகனே.

மேல்

#9 தேர்ந்து உணர்ந்து தெளியாதே திரு_அருளோடு ஊடிச் சில புகன்றேன் திரு_கருணைத் திறம் சிறிதும் தெரியேன் போந்தகனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் போதாந்த மிசை விளங்கு நாதாந்த விளக்கே ஊர்ந்த பணக் கங்கணமே முதல் பணிகள் ஒளிர உயர் பொதுவில் நடிக்கின்ற செயல் உடைய பெருமான் சார்ந்தவரை எவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவு உடைய பெரும் தலைமைத் தனி முதல் எந்தாயே.

மேல்

#10 ஒல்லும் வகை அறியாதே உன் அருளோடு ஊடி ஊறு புகன்றேன் துயரம் ஆறும் வகை உணரேன் புல்லியனேன் புகன்ற பிழை பொறுத்து அருளல் வேண்டும் பூதி அணிந்து ஒளிர்கின்ற பொன்_மேனிப் பெருமான் சொல்லியலும் பொருளியலும் கடந்த பரநாதத் துரிய வெளிப் பொருளான பெரிய நிலைப் பதியே மெல் இயல் நல் சிவகாமவல்லி கண்டு மகிழ விரியும் மறை ஏத்த நடம் புரியும் அருள் இறையே.

@9. ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

மேல்

#1 உலகியல் உணர்வோர் அணுத்துணையேனும் உற்றிலாச் சிறிய ஓர் பருவத்து இலகிய எனக்கு உள் இருந்து அருள் நெறியில் ஏற்றவும் தரம் இலாமையினான் விலகுறும் காலத்து அடிக்கடி ஏறவிடுத்துப் பின் விலகுறாது அளித்தாய் திலக நல் காழி ஞானசம்பந்தத் தெள் அமுதாம் சிவ குருவே

மேல்

#2 உயிர் அனுபவம் உற்றிடில் அதனிடத்தே ஓங்கு அருள் அனுபவம் உறும் அச் செயிர் இல் நல் அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் உறும் என்றாய் பயிலும் மூ ஆண்டில் சிவை தரு ஞான_பால் மகிழ்ந்து உண்டு மெய் நெறியாம் பயிர் தழைந்துற வைத்து அருளிய ஞானபந்தன் என்று ஓங்கு சற்குருவே.

மேல்

#3 தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப் பரநாதமாம் தலத்தே ஒத்த தன்மயமாம் நின்னை நீ இன்றி உற்றிடல் உயிர் அனுபவம் என்று இ துணை வெளியின் என்னை என்னிடத்தே இருந்தவாறு அளித்தனை அன்றோ சித்த நல் காழி ஞானசம்பந்தச் செல்வமே எனது சற்குருவே.

மேல்

#4 தனிப் பரநாத வெளியின் மேல் நினது தன்மயம் தன்மயம் ஆக்கிப் பனிப்பு இலாது என்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத்து உள் புறம் ஆகி இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்ததே அருள் அனுபவம் என்று எனக்கு அருள் புரிந்தாய் ஞானசம்பந்தன் என்னும் என் சற்குரு மணியே.

மேல்

#5 உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளி மேல் உள்ளதாய் முற்றும் உள்ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தனதாய் நவிற்ற அரும் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக்கு அப்பால் வெறுவெளி சிவ அனுபவம் என்று உள்ளுற அளித்த ஞானசம்பந்த உத்தம சுத்த சற்குருவே.

மேல்

#6 பொத்திய மூல மலப் பிணி தவிர்க்கும் பொருள் அருள் அனுபவம் அதற்குப் பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப் பற்று அறப் பற்றுதி இதுவே சத்தியம் என என்றனக்கு அருள் புரிந்த தனிப் பெருங் கருணை என் புகல்வேன் முத்து இயல் சிவிகை இவர்ந்து அருள் நெறியின் முதல் அரசு இயற்றிய துரையே.

மேல்

#7 அடி எனல் எதுவோ முடி எனல் எதுவோ அருள் சிவம்-அதற்கு எனப் பல கால் படியுற வருந்தி இருந்த என் வருத்தம் பார்த்து அருளால் எழுந்தருளி மிடி அற எனை-தான் கடைக்கணித்து உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய் வடிவு இலாக் கருணை_வாரியே மூன்று வயதினில் அருள் பெற்ற மணியே.

மேல்

#8 செவ் வகை ஒருகால் படும் மதி அளவே செறி பொறி மனம் அதன் முடிவில் எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணியபடி எலாம் எய்தும் இவ்வகை ஒன்றே வருத்தம் இல் வகை என்று எனக்கு அருள் புரிந்த சற்குருவே தெவ் வகை அமண இருள் அற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே.

மேல்

#9 முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று உளம் மயக்குறும் கால் அன்புறு நிலையால் திரு_நெறித் தமிழ் கொண்டு ஐயம் நீத்து அருளிய அரசே என்பு பெண் உருவோடு இன் உயிர்-அது கொண்டு எழுந்திடப் புரிந்து உலகு எல்லாம் இன்புறப் புரிந்த மறைத் தனிக் கொழுந்தே என் உயிர்க்குயிர் எனும் குருவே.

மேல்

#10 வரு பகல் கற்பம் பல முயன்றாலும் வரல் அரும் திறன் எலாம் எனக்கே ஒரு பகல் பொழுதில் உற அளித்தனை நின் உறு பெரும் கருணை என் உரைப்பேன் பெருமணநல்லூர்த் திருமணம் காணப் பெற்றவர்-தமை எலாம் ஞான உரு அடைந்து ஓங்கக் கருணைசெய்து அளித்த உயர் தனிக் கவுணிய மணியே.

மேல்

#11 சீர் ஆர் சண்பைக் கவுணியர்-தம் தெய்வ மரபில் திகழ் விளக்கே தெவிட்டாது உளத்தில் தித்திக்கும் தேனே அழியாச் செல்வமே கார் ஆர் மிடற்றுப் பவள மலைக் கண்ணின் முளைத்த கற்பகமே கரும்பே கனியே என் இரண்டு கண்ணே கண்ணில் கருமணியே ஏர் ஆர் பருவம் மூன்றில் உமை இனிய முலை_பால் எடுத்து ஊட்டும் இன்பக் குதலை_மொழிக் குருந்தே என் ஆர்_உயிருக்கு ஒரு துணையே பேர் ஆர் ஞானசம்பந்தப் பெருமானே நின் திரு_புகழைப் பேசுகின்றோர் மேன்மேலும் பெரும் செல்வத்தில் பிறங்குவரே

@10 ஆளுடைய அரசுகள் அருண்மாலை

மேல்

#1 திருத் தகு சீர் அதிகை அருள் தலத்தின் ஓங்கும் சிவ_கொழுந்தின் அருள் பெருமைத் திறத்தால் வாய்மை உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகிச் சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்றுப் பொருத்தமுற உழவாரப்படை கைக் கொண்ட புண்ணியனே நண்ணிய சீர்ப் புனிதனே என் கருத்து அமர்ந்த கலை மதியே கருணை ஞான_கடலே நின் கழல் கருதக் கருதுவாயே.

மேல்

#2 வாய்மை இலாச் சமணாதர் பல கால் செய்த வஞ்சம் எலாம் திரு_அருள் பேர் வலத்தால் நீந்தித் தூய்மை பெறும் சிவ நெறியே விளங்க ஓங்கும் சோதி மணி_விளக்கே என் துணையே எம்மைச் சேய்மை விடாது அணிமையிடத்து ஆள வந்த செல்வமே எல்லை_இலாச் சிறப்பு வாய்ந்து உள் ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே.

மேல்

#3 தேவர் எலாம் தொழும் தலைமைத் தேவர் பாதத் திரு_மலரை முடிக்கு அணிந்து திகழ்ந்து நின்ற நாவரசே நான்முகனும் விரும்பும் ஞான நாயகனே நல்லவர்க்கு நண்பனே எம் பாவம் எலாம் அகற்றி அருள் பான்மை நல்கும் பண்பு உடைய பெருமானே பணிந்து நின்-பால் மேவ விருப்புறும் அடியர்க்கு அன்புசெய்ய வேண்டினேன் அவ்வகை நீ விதித்திடாயே.

மேல்

#4 விதி விலக்கு ஈது என்று அறியும் விளைவு ஒன்று இல்லா வினையினேன் எனினும் என்னை விரும்பி என்னுள் மதி விளக்கை ஏற்றி அருள் மனையின் ஞான வாழ்வு அடையச்செயல் வேண்டும் வள்ளலே நல் பதி மலர்_தாள் நிழல் அடைந்த தவத்தோர்க்கு எல்லாம் பதியே சொல்லரசு எனும் பேர் படைத்த தேவே கதி தரு கற்பகமே முக்கனியே ஞான_கடலே என் கருத்தே என் கண்_உளானே.

மேல்

#5 கண் உளே விளங்குகின்ற மணியே சைவக் கனியே நாவரசே செங்கரும்பே வேதப் பண் உளே விளைந்த அருள் பயனே உண்மைப் பதி ஓங்கு நிதியே நின் பாதம் அன்றி விண் உளே அடைகின்ற போகம் ஒன்றும் விரும்பேன் என்றனை ஆள வேண்டும் கண்டாய் ஒண் உளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே சித்தம் மகிழ்ந்து உதவுவோனே.

மேல்

#6 ஓங்காரத் தனி மொழியின் பயனைச் சற்றும் ஓர்கிலேன் சிறியேன் இ உலக வாழ்வில் ஆங்காரப் பெரு மத மால் யானை போல அகம்பாவமயன் ஆகி அலைகின்றேன் உன் பாங்கு ஆய மெய் அடியர்-தம்மைச் சற்றும் பரிந்திலேன் அருள் அடையும் பரிசு ஒன்று உண்டோ தீங்கு ஆய செயல் அனைத்தும் உடையேன் என்ன செய்வேன் சொல்லரசே என் செய்குவேனே.

மேல்

#7 செய் வகை ஒன்று அறியாத சிறியேன் இந்தச் சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ பொய் வகையே புரிகின்றேன் புண்ணியா நின் பொன் அடியைப் போற்றிலேன் புனிதனே நான் உய் வகை எவ்வகை யாது செய்வேன் நீயே உறு_துணை என்று இருக்கின்றேன் உணர்வு_இலேனை மெய் வகையில் செலுத்த நினைத்திடுதியோ சொல்_வேந்தே என் உயிர்_துணையாய் விளங்கும் கோவே.

மேல்

#8 விளங்கும் மணி_விளக்கு என நால்_வேதத்து உச்சி மேவிய மெய்ப்பொருளை உள்ளே விரும்பி வைத்துக் களங்கு அறு மெய் அன்பர் எல்லாம் களிப்ப அன்று ஓர் கல் துணையால் கடல் கடந்து கரையில் போந்து துளங்கு பெரும் சிவ நெறியைச் சார்ந்த ஞானத் துணையே நம் துரையே நல் சுகமே என்றும் வளம் கெழும் ஆகம நெறியை வளர்க்க வந்த வள்ளலே நின் அருளை வழங்குவாயே.

மேல்

#9 அருள் வழங்கும் திலகவதி அம்மையார் பின் அவதரித்த மணியே சொல்லரசே ஞானத் தெருள் வழங்கும் சிவ நெறியை விளக்க வந்த செழும் சுடர் மா மணி_விளக்கே சிறியனேனை இருள் வழங்கும் உலகியல் நின்று எடுத்து ஞான இன் அருள்தந்து ஆண்டு அருள்வாய் இன்றேல் அந்தோ மருள் வழங்கும் பவ நெறியில் சுழல்வேன் உய்யும் வகை அறியேன் நின் அருட்கு மரபு அன்று ஈதே.

மேல்

#10 தேர்ந்த உளத்திடை மிகவும் தித்தித்து ஊறும் செழும் தேனே சொல்லரசாம் தேவே மெய்ம்மை சார்ந்து திகழ் அப்பூதி அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே எம் தந்தையே உள் கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவக் கொழுந்தே துன்பம் தீர்ந்த பெரு நெறி துணையே ஒப்பு_இலாத செல்வமே அப்பன் எனத் திகழ்கின்றோனே.

@11. ஆளுடைய நம்பிகள் அருண்மாலை

மேல்

#1 மதி அணி செம் சடைக் கனியை மன்றுள் நடம் புரி மருந்தைத் துதி அணி செம் சுவைப் பொருளில் சொல்_மாலை தொடுத்து அருளி விதி அணி மா மறை நெறியும் மெய் நிலை ஆகம நெறியும் வதி அணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.

மேல்

#2 நீற்றில் இட்ட நிலையாப் புன்_நெறி_உடையார்-தமைக் கூடிச் சேற்றில் இட்ட கம்பம் எனத் தியங்குற்றேன்-தனை ஆளாய் ஏற்றில் இட்ட திரு_அடியை எண்ணி அரும் பொன்னை எலாம் ஆற்றில் இட்டுக் குளத்து எடுத்த அருள் தலைமைப் பெருந்தகையே.

மேல்

#3 இலைக் குள நீர் அழைத்து அதனில் இடங்கர் உற அழைத்து அதன் வாய்த் தலைக் குதலை மதலை உயிர் தழைப்ப அழைத்து அருளிய நின் கலைக்கும் வட_கலையின் முதல் கலைக்கும் உறு கணக்கு உயர் பொன் மலைக்கும் அணு நிலைக்கும் உறா வன்தொண்டப் பெருந்தகையே.

மேல்

#4 வேதம் முதல் கலைகள் எலாம் விரைந்துவிரைந்து அனந்தம் முறை ஓத அவைக்கு அணுத்துணையும் உணர்வு அரிதாம் எம் பெருமான் பாத_மலர் நினது திரு_பணி முடி மேல் படப் புரிந்த மா தவம் யாது உரைத்து அருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.

மேல்

#5 ஏழ்_இசையாய் இசைப் பயனாய் இன் அமுதாய் என்னுடைய தோழனுமாய் என்று முன் நீ சொன்ன பெரும் சொல் பொருளை ஆழ நினைத்திடில் அடியேன் அரும் கரணம் கரைந்துகரைந்து ஊழ் இயல் இன்புறுவது காண் உயர் கருணைப் பெருந்தகையே.

மேல்

#6 வான் காண இந்திரனும் மாலையனும் மா தவரும் தான் காண இறை அருளால் தனித் தவள யானையின் மேல் கோன் காண எழுந்தருளிக் குலவிய நின் கோலம்-அதை நான் காணப்பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.

மேல்

#7 தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டைத் தினம்-தோறும் நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் தான் படிக்கும் அனுபவம் காண் தனிக் கருணைப் பெருந்தகையே.

மேல்

#8 இன்பு ஆட்டுத் தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம் பெருமான் உன் பாட்டுக்கு உவப்புறல் போல் ஊர் பாட்டுக்கு உவந்திலர் என்று என்பாட்டுக்கு இசைப்பினும் என் இடும் பாட்டுக் கரணம் எலாம் அன்பு ஆட்டுக்கு இசைவது காண் அருள் பாட்டுப் பெருந்தகையே.

மேல்

#9 பரம்பரமாம் துரியம் எனும் பதத்து இருந்த பரம்பொருளை உரம் பெறத் தோழமைகொண்ட உன் பெருமை-தனை மதித்து வரம் பெற நல் தெய்வம் எலாம் வந்திக்கும் என்றால் என் தரம் பெற என் புகல்வேன் நான் தனித் தலைமைப் பெருந்தகையே.

மேல்

#10 பேர் ஊரும் பரவை மனப் பிணக்கு அற எம் பெருமானை ஊரூரும் பல புகல ஓர் இரவில் தூதன் எனத் தேர் ஊரும் திருவாரூர்த் தெருவு-தொறும் நடப்பித்தாய் ஆரூர நின் பெருமை அயன் மாலும் அளப்ப அரிதே.

@12. ஆளுடைய அடிகள் அருண்மாலை

மேல்

#1 தேசு அகத்தில் இனிக்கின்ற தெள் அமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மா தவனே மாசு அகன்ற நீ திருவாய்_மலர்ந்த தமிழ் மா மறையின் ஆசு அகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளுதியே.

மேல்

#2 கரு வெளிக்கு உள் புறன் ஆகிக் கரணம் எலாம் கடந்துநின்ற பெருவெளிக்கு நெடும் காலம் பித்தாகித் திரிகின்றோர் குரு வெளிக்கே நின்று உழலக் கோது அற நீ கலந்த தனி உரு வெளிக்கே மறை புகழும் உயர் வாதவூர் மணியே.

மேல்

#3 மன் புருவ நடு முதலா மனம் புதைத்து நெடும் காலம் என்பு உருவாய்த் தவம் செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்பு உருவம் பெற்றதன் பின் அருள் உருவம் அடைந்து பின்னர் இன்பு உருவம் ஆயினை நீ எழில் வாதவூர் இறையே.

மேல்

#4 உரு அண்டப் பெரு மறை என்று உலகம் எலாம் புகழ்கின்ற திருஅண்டப்பகுதி எனும் திரு அகவல் வாய்_மலர்ந்த குரு என்று எ பெரும் தவரும் கூறுகின்ற கோவே நீ இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கு இயம்புதியே.

மேல்

#5 தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய் ஆடுகின்ற சேவடிக் கீழ் ஆடுகின்ற ஆர்_அமுதே நாடுகின்ற வாதவூர் நாயகனே நாய்_அடியேன் வாடுகின்ற வாட்டம் எலாம் வந்து ஒருக்கால் மாற்றுதியே.

மேல்

#6 சேமம் மிகும் திருவாதவூர்த் தேவு என்று உலகு புகழ் மா மணியே நீ உரைத்த வாசகத்தை எண்ணு-தொறும் காமம் மிகு காதலன்-தன் கலவி-தனைக் கருதுகின்ற ஏமமுறு கற்பு_உடையாள் இன்பினும் இன்பு எய்துவதே.

மேல்

#7 வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழும் கனித் தீம் சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.

மேல்

#8 வரு மொழி செய் மாணிக்கவாசக நின் வாசகத்தில் ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்துத் தரு மொழியாம் என்னில் இனிச் சாதகம் ஏன் சஞ்சலம் ஏன் குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன் கூறுதியே

மேல்

#9 பெண் சுமந்த பாகப் பெருமான் ஒரு மா மேல் எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகை நதி மண் சுமந்து நின்றதும் ஓர் மாறன் பிரம்படியால் புண் சுமந்து கொண்டதும் நின் பொருட்டு அன்றோ புண்ணியனே.

மேல்

#10 வாட்டம் இலா மாணிக்கவாசக நின் வாசத்தைக் கேட்ட பொழுது அங்கு இருந்த கீழ்ப் பறவைச் சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னில் இங்கு நான் அடைதல் வியப்பு அன்றே *

மேல்

5.ஐந்தாம் திருமுறை


1. சித்தி விநாயகர் பதிகம்
2. வல்லபை கணேசர் பிரசாத மாலை
3. கணேசத் திருஅருள் மாலை
4. தனித் திரு மாலை
5. பிரார்த்தனை மாலை
6. எண்ணப் பத்து
7. செழுஞ் சுடர் மாலை
8. குறை இரந்த பத்து
9. ஜீவசாட்சி மாலை
10. ஆற்றா முறை
11. இரந்த விண்ணப்பம்
12. கருணை மாலை
13. மருண்மாலை விண்ணப்பம்
14. பொறுக்காப் பத்து
15. வேட்கை விண்ணப்பம்
16. ஆறெழுத் துண்மை
17. போக் குரையீடு
18. பணித்திறம் வேட்டல்
19. நெஞ்சோடு புலத்தல்
20. புன்மை நினைந் திரங்கல்
21. திருவடி சூட விழைதல்
22. ஆற்றா விரகம்
23. ஏழைமையின் இரங்கல்
24. பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
25. காணாப் பத்து
26. பணித்திறஞ் சாலாமை
27. குறை நேர்ந்த பத்து
28. முறையிட்ட பத்து
29. நெஞ்சவலங் கூறல்
30. ஆற்றாப் புலம்பல்
31. திரு அருள் விழைதல்
32. புண்ணிய நீற்று மான்மியம்
33. உறுதி உணர்த்தல்
34. எண்ணத் தேங்கல்
35. கையடை முட்டற் கிரங்கல்
36. பொது
37. நாள் அவம்படாமை வேண்டல்
38. அன்பிற் பேதுறல்
39. கூடல் விழைதல்
40. தரிசனை வேட்கை
41. நாள் எண்ணி வருந்தல்
42. ஏத்தாப் பிறவி இழிவு
43. பவனிச் செருக்கு
44. திருவருள் விலாசப் பத்து
45. திருவருட் பேற்று விழைவு
46. செல்வச் சீர்த்தி மாலை
47. செவி அறிவுறுத்தல்
48. தேவ ஆசிரியர்
49. இங்கிதப் பத்து
50. போற்றித் திரு விருத்தம்
51. தனித் திருத் தொடை
52. தனிப் பாசுரங்கள்
53. சண்முகர் கொம்மி
54. சண்முகர் காலைப்பாட்டு
55. தெய்வ மணிமாலை
56. கந்தர் சரணப் பத்து
    
    
     

@1. சித்தி விநாயகர் பதிகம்

மேல்

#1 அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான் அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு அஞ்சு_அரையான் கண்கள் அவை

மேல்

#2 வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன் நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர் வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால் இனம் காத்து அருளாய் எனை

மேல்

#3 உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும் இலகு செம் மேனிக் காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும் திலக வாள் நுதலார் சித்திபுத்திகளைச் சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#4 உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவிக் கழல் இணை நினைந்து நின் கருணை வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும் விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#5 நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம் பேதமும் கடந்த மௌனராச்சியத்தைப் பேதையேன் பிடிப்பது எந்நாளோ ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#6 சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும் பொய்ச் சிதாபாசக் கற்பனை இவற்றைப் போக்கி ஆங்கு அ வடிவு ஆகி அச் சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல் மெய்ச் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#7 ஒன்று அல இரண்டும் அல இரண்டொன்றோடு உரு அல அரு அல உவட்ட நன்று அல நன்றல்லாது அல விந்து நாதமும் அல இவை அனைத்தும் பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#8 சத். அசத். இயல் மற்று அறிந்து மெய்ப் போதத் தத்துவ நிலை பெற விழைவோர் சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமலச் சேவடி தொழ எனக்கு அருள்வாய் சுத்த சற்குணத் தெள் அமுது எழு கடலே சுக பரிபூரணப் பொருளே வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#9 மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#10 கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி ஓவு அற மயங்கி உழலும் இச் சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#11 கானல்_நீர் விழைந்த மான் என உலகக் கட்டினை நட்டு உழன்று அலையும் ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர்ப் பிரணவ ஒளியே வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

மேல்

#12 பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனிப் பேறே அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே

@2. வல்லபை கணேசர் பிரசாத மாலை

மேல்

#1 திரு நெடுமால் அன்று ஆலிடை நினது சேவடித் துணை மலர்த் துகளான் பெரு நெடு மேனி-தனில் படப் பாம்பின் பேர்_உரு அகன்றமை மறவேன் கரு நெடும் கடலைக் கடத்து நல் துணையே கண்கள் மூன்று உடைய செங்கரும்பே வரு நெடு மருப்பு ஒன்று இலகு வாரணமே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#2 நளின மா மலர் வாழ் நான்முகத்து ஒருவன் நண்ணி நின் துணை அடி வழுத்திக் களி நலன் உடன் இ அளி நலன் உறு பேர்_ஆனந்தக் கடலே அரு_மருந்தே அருள் அமுதே வளி நிறை உலகுக்கு ஒரு பெரும் துணையே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#3 சீர் உருத்திரமூர்த்திகட்கு முத்தொழிலும் செய்து அருள் இறைமை தந்து அருளில் பேர் உருத்திரம் கொண்டிடச் செயும் நினது பெருமையை நாள்-தொறும் மறவேன் ஆர் உருத்திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மை எற்கு அருளிய அரசே வார் உருத்திடு பூண் மணி முகக் கொங்கை வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#4 விண்ணவர் புகழும் மெய்கண்டநாதன் வித்தகக் கபிலன் ஆதியர்க்கே கண் அருள்செயும் நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன் தண் அருள்_கடலே அருள் சிவபோக சாரமே சராசர நிறைவே வண்ண மா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#5 நாரையூர் நம்பி அமுது கொண்டு ஊட்ட நல் திருவாய்_மலர்ந்து அருளிச் சீரை மேவுறச்செய்து அளித்திடும் நினது திரு_அருள் நாள்-தொறும் மறவேன் தேரை ஊர் வாழ்வும் திரம் அல எனும் நல் திடம் எனக்கு அருளிய வாழ்வே வாரை ஊர் முலையாள் மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#6 கும்ப மா முனியின் கரக நீர் கவிழ்த்துக் குளிர் மலர் நந்தனம் காத்துச் செம்பொன்_நாட்டு இறைவற்கு அருளிய நினது திரு_அருள் பெருமையை மறவேன் நம்பனார்க்கு இனிய அருள் மகப் பேறே நல் குணத்தோர் பெரு வாழ்வே வம்பு அறா மலர்த் தார் மழை முகில் கூந்தல் வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#7 அயன் தவத்து ஈன்ற சித்திபுத்திகளாம் அம்மையர் இருவரை மணந்தே இயன்ற அண்டங்கள் வாழ்வுறச் செயும் நின் எழில் மணக்கோலத்தை மறவேன் பயன் தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத்து எழு பரம்பரமே வயன் தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#8 முன் அரும் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிது வீடு அடைய இன் அருள் புரியும் நின் அருள் பெருமை இரவினும் பகலினும் மறவேன் என் அரும் பொருளே என் உயிர்க்குயிரே என் அரசே என துறவே மன் அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#9 துதி பெறும் காசி நகரிடத்து அனந்தம் தூய நல் உருவு கொண்டு ஆங்கண் விதி பெறும் மனைகள்-தொறும் விருந்தினனாய் மேவிய கருணையை மறவேன் நதி பெறும் சடிலப் பவள நல் குன்றே நான்மறை நாட அரு நலமே மதி பெறும் உளத்தில் பதி பெறும் சிவமே வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#10 தடக்கை மா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப் புயங்களும் கை இடக்கை அங்குசமும் பாசமும் பதமும் இறைப் பொழுதேனும் யான் மறவேன் விடக் களம் உடைய வித்தகப் பெருமான் மிக மகிழ்ந்திட அருள் பேறே மட கொடி நங்கை மங்கை நாயகி எம் வல்லபைக் கணேச மா மணியே

மேல்

#11 பெருவயல் ஆறுமுகன் நகல் அமர்ந்து உன் பெருமைகள் பேசிடத் தினமும் திரு வளர் மேன்மைத் திறம் உறச் சூழும் திரு_அருள் பெருமையை மறவேன் மரு வளர் தெய்வக் கற்பக மலரே மனம் மொழி கடந்த வான் பொருளே வரு மலை வல்லிக்கு ஒரு முதல் பேறே வல்லபைக் கணேச மா மணியே

@3. கணேசத் திருஅருள் மாலை

மேல்

#1 திருவும் கல்வியும் சீரும் சிறப்பும் உன் திரு_அடிப் புகழ் பாடும் திறமும் நல் உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வு உறா உணர்வும் தந்து எனது உள்ளத்து அமர்ந்தவா குருவும் தெய்வமும் ஆகி அன்பாளர்-தம் குறை தவிர்க்கும் குணப் பெரும் குன்றமே வெருவும் சிந்தை விலகக் கஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#2 சீத நாள்_மலர்ச் செல்வனும் மா மலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப் பாதம் நாள்-தொறும் பற்று அறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்து அருள் பாலிப்பாய் நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும் மெய்ஞ்ஞான நாடக நாயக நான்கு எனும் வேதம் நாடிய மெய்ப்பொருளே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#3 என்னை வேண்டி எனக்கு அருள்செய்தியேல் இன்னல் நீங்கும் நல் இன்பமும் ஓங்கும் நின் றன்னை வேண்டிச் சரண்புகுந்தேன் என்னைத் தாங்கிக்கொள்ளும் சரண் பிறிது இல்லை காண் அன்னை வேண்டி அழும் மகப் போல்கின்றேன் அறிகிலேன் நின் திருவுளம் ஐயனே மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#4 நீண்ட மால் அரவு ஆகிக் கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு ஆண்டவா நின் அடைக்கலம் ஆயினேன் அடியனேன் பிழை ஆயிரமும் பொறுத்து ஈண்டு அவாவின்படி கொடுத்து எனை நீ ஏன்றுகொள்வதற்கு எண்ணுதி யாவரும் வேண்டு வாழ்வு தரும் பெரும் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#5 தஞ்சம் என்று உனைச் சார்ந்தனன் எந்தை நீ-தானும் இந்தச் சகத்தவர் போலவே வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்ற மனத்து உறை அண்ணலே பஞ்ச_பாதகம் தீர்த்தனை என்று நின் பாத_பங்கயம் பற்றினன் பாவியேன் விஞ்ச நல் அருள் வேண்டித் தருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#6 கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐய நான் கள்ளம் இன்றிக் கழறுகின்றேன் எனது உள்ளம் நின் திருவுள்ளம் அறியுமே ஓதுகின்றது என் போது கழித்திடேல் வள்ள மா மலர்ப் பாதப் பெரும் புகழ் வாழ்த்தி நாத் தழும்பு ஏற வழங்குவாய் வெள்ள வேணிப் பெருந்தகையே அருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#7 மண்ணில் ஆசை மயக்கு அற வேண்டிய மா தவர்க்கும் மதிப்ப அரியாய் உனை எண்ணிலாச் சிறியேனையும் முன் நின்றே ஏன்றுகொண்டனை இன்று விடுத்தியோ உள் நிலாவிய நின் திருவுள்ளமும் உவகையோடு உவர்ப்பும் கொள ஒண்ணுமோ வெண்ணிலா முடிப் புண்ணிய_மூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#8 ஆணிலே அன்றி ஆர்_உயிர்ப் பெண்ணிலே அலியிலே இ அடியனைப் போலவே காணிலேன் ஒரு பாவியை இப் பெருங் கள்ள நெஞ்சக் கடையனை மாயையாம் ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என் செய்கேன் இனி இ உலகத்திலே வீணிலே உழைப்பேன் அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#9 வாளிலே விழி மங்கையர் கொங்கையாம் மலையிலே முகம் மாயத்திலே அவர் தோளிலே இடைச் சூழலிலே உந்திச் சுழியிலே நிதம் சுற்றும் என் நெஞ்சம் நின் தாளிலே நின் தனித்த புகழிலே தங்கும் வண்ணம் தர உளம் செய்தியோ வேளிலே அழகான செவ்வேளின் முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

மேல்

#10 நாவினால் உனை நாள்-தொறும் பாடுவார் நாடுவார்-தமை நண்ணிப் புகழவும் ஓவு இலாது உனைப் பாடவும் துன்பு எலாம் ஓடவும் மகிழ் ஓங்கவும் செய்குவாய் காவி நேர் களத்தான் மகிழ் ஐங்கரக் கடவுளே நல் கருங்குழி என்னும் ஊர் மேவி அன்பர்க்கு அருள் கணநாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே

@4. தனித் திருமாலை

மேல்

#1 திங்கள் அம் கொழுந்து வேய்ந்த செம் சடைக் கொழுந்தே போற்றி மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்ந நின் மலர்_தாள் போற்றி ஐங்கர நால் வாய் முக்கண் அருள் சிவ_களிறே போற்றி கங்கையை மகிழும் செல்வக் கணேச நின் கழல்கள் போற்றி

மேல்

#2 உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவு என்கோ கலகம் பெறும் ஐம்புலன் வென்று உயரும் கதி என்கோ திலகம் பெறு நெய் என நின்று இலகும் சிவம் என்கோ இலகு ஐங்கர அம்பர நின்றனை என் என்கேனே

மேல்

#3 அடியார் உள்ளம் தித்தித்து ஊறும் அமுது என்கோ கடியார் கொன்றைச் செஞ்சடையானைக் கன்று என்கோ பொடி ஆர் மேனிப் புண்ணியர் புகழும் பொருள் என்கோ அடிகேள் சித்தி விநாயக என் என்று அறைகேனே

மேல்

#4 கமல மலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரிசு அகல அருள்செய் பசுபதியாம் நிமல நிறை_மதியின் ஒளிர் நிர்_அதிசய பரம சுக நிலையை அருள் புரியும் அதிபதியாம் விமல பிரணவ வடிவ விகட தட கட கரட விபுல கய முக சுகுண பதியாம் அமல பரசிவ ஒளியின் உதய சய விசய சய அபய எனும் எமது கணபதியே

மேல்

#5 அம்பு ஒன்று செம் சடை அப்பரைப் போல் தன் அடியர்-தம் துக் கம் பொன்றும் வண்ணம் கருணைசெய்து ஆளும் கருது-மினோ வம்பு ஒன்று பூம் குழல் வல்லபையோடு வயங்கிய வெண் கொம்பு ஒன்று கொண்டு எமை ஆட்கொண்டு அருளிய குஞ்சரமே ** திருத் தணிகைத் திருப் பதிகங்கள்

@5. பிரார்த்தனை மாலை

மேல்

#1 சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பம் தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும் நல் கோழிக்கொடியும் அருள் கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே

மேல்

#2 கண் மூன்று உறு செங்கரும்பின் முத்தே பதம் கண்டிடுவான் மண் மூன்று உலகும் வழுத்தும் பவளமணிக் குன்றமே திண் மூன்று_நான்கு புயம் கொண்டு ஒளிர் வச்சிர மணியே வண் மூன்றலர் மலை வாழ் மயில் ஏறிய மாணிக்கமே.

மேல்

#3 மாணித்த ஞான மருந்தே என் கண்ணின் உள் மா மணியே ஆணி_பொன்னே எனது ஆர்_உயிரே தணிகாசலனே தாண் நிற்கிலேன் நினைத் தாழாத வஞ்சர்-தமது இடம் போய்ப் பேணித் திரிந்தனன் அந்தோ என் செய்வன் இப் பேதையனே.

மேல்

#4 அன்னே எனைத் தந்த அப்பா என்று ஏங்கி அலறுகின்றேன் என்னே இ ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல் எந்தாய் பொன்னே சுகுணப் பொருப்பே தணிகைப் பொருப்பு அமர்த்த மன்னே கலப மயில் மேல் அழகிய மா மணியே.

மேல்

#5 மணியே தினைப்புன_வல்லியை வேண்டி வளர் மறை வான் கணியே என நின்ற கண்ணே என் உள்ளக் களி நறவே பணியேன் எனினும் எனை வலிந்து ஆண்டு உன் பதம் தரவே நணியே தணிகைக்கு வா என ஓர் மொழி நல்குவையே.

மேல்

#6 நல்காத ஈனர்-தம்பால் சென்று இரந்து நவைப்படுதல் மல்காத வண்ணம் அருள்செய் கண்டாய் மயில்_வாகனனே பல் காதல் நீக்கிய நல்லோர்க்கு அருளும் பரஞ்சுடரே அல்காத வண்மைத் தணிகாசலத்தில் அமர்ந்தவனே.

மேல்

#7 அமராவதி இறைக்கு ஆர்_உயிர் ஈந்த அருள்_குன்றமே சமராபுரிக்கு அரசே தணிகாசலத் தற்பரனே குமரா பரம குருவே குகா எனக் கூவிநிற்பேன் எமராஜன் வந்திடும் கால் ஐயனே எனை ஏன்றுகொள்ளே.

மேல்

#8 கொள் உண்ட வஞ்சர்-தம் கூட்டுண்டு வாழ்க்கையில் குட்டுண்டு மேல் துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் கள் உண்ட நாய்க்கு உன் கருணை உண்டோ நல் கடல் அமுதத் தெள் உண்ட தேவர் புகழ் தணிகாசலச் சிற்பரனே.

மேல்

#9 சில் பகல் மேவும் இத் தேகத்தை ஓம்பித் திரு_அனையார் தற்பகமே விழைந்து ஆழ்ந்தேன் தணிகை-தனில் அமர்ந்த கற்பகமே நின் கழல் கருதேன் இக் கடைப்படும் என் பொற்பகம் மேவிய நின் அருள் என் என்று போற்றுவதே.

மேல்

#10 போற்றேன்எனினும் பொறுத்திடல் வேண்டும் புவிநடையாம் சேற்றே விழுந்து தியங்குகின்றேனைச் சிறிதும் இனி ஆற்றேன் எனது அரசே அமுதே என் அருள்_செல்வமே மேல் தேன் பெருகு பொழில் தணிகாசல வேலவனே.

மேல்

#11 வேல் கொண்ட கையும் விறல் கொண்ட தோளும் விளங்கு மயில் மேல் கொண்ட வீறும் மலர் முகம் ஆறும் விரை கமலக் கால் கொண்ட வீரக் கழலும் கண்டாலன்றிக் காமன் எய்யும் கோல் கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே.

மேல்

#12 குருவே அயன் அரி ஆதியர் போற்றக் குறை தவிர்ப்பான் வரு வேல் பிடித்து மகிழ் வள்ளலே குண மா மலையே தருவே தணிகைத் தயாநிதியே துன்பச் சாகரமாம் கரு வேரறுத்து இக் கடையனைக் காக்கக் கடன் உனக்கே.

மேல்

#13 உனக்கே விழைவுகொண்டு ஓலமிட்டு ஓங்கி உலறுகின்றேன் எனக்கே அருள் இத் தமியேன் பிழை உளத்து எண்ணியிடேல் புனக் கேழ்மணி வல்லியைப் புணர்ந்து ஆண்டருள் புண்ணியனே மனக் கேதம் மாற்றும் தணிகாசலத்து அமர் வானவனே.

மேல்

#14 வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச் சுடரே நான் ஓர் எளியன் என் துன்பு அறுத்து ஆள் என நண்ணிநின்றேன் ஏனோ நின் நெஞ்சம் இரங்காத வண்ணம் இரும் கணி பூ தேன் ஓடு அருவி பயிலும் தணிகைச் சிவகுருவே.

மேல்

#15 கையாத துன்ப_கடல் மூழ்கி நெஞ்சம் கலங்கி என்றன் ஐயா நின் பொன்_அடிக்கு ஓலமிட்டேன் என்னை ஆண்டுகொளாய் மை ஆர் தடம் கண் மலை_மகள் கண்டு மகிழ் செல்வமே. செய்யார் தணிகை மலை அரசே அயில் செங்கையனே.

மேல்

#16 செங்கை அம் காந்தள் அனைய மின்னார்-தம் திறத்து உழன்றே வெம் கயம் உண்ட விளவு ஆயினேன் விறல் வேலினை ஓர் அங்கையில் ஏந்திய ஐயா குறவர் அரிதில் பெற்ற மங்கை மகிழும் தணிகேசனே அருள் வந்து எனக்கே.

மேல்

#17 கேளாது போல் இருக்கின்றனை ஏழை இக் கீழ்நடையில் வாளா இடர்கொண்டு அலறிடும் ஓலத்தை மா மருந்தே தோளா மணிச் சுடரே தணிகாசல தூய் பொருளே நாளாயின் என் செய்குவேன் இறப்பாய நவை வருமே.

மேல்

#18 நவையே தரு வஞ்ச நெஞ்சகம் மாயவும் நான் உன் அன்பர் அவையே அணுகவும் ஆனந்த_வாரியில் ஆடிடவும் சுவையே அமுது அன்ன நின் திரு_நாமம் துதிக்கவும் ஆம் இவையே என் எண்ணம் தணிகாசலத்துள் இருப்பவனே.

மேல்

#19 இருப்பாய மாய மனத்தால் வருந்தி இளைத்துநின்றேன் பொருப்பாய கன்மப் புது வாழ்வில் ஆழ்ந்தது போதும் இன்றே கருப் பாழ்செயும் உன் சுழல் அடிக்கே இக் கடையவனைத் திருப்பாய் எனில் என் செய்கேன் தணிகாசலத் தெள் அமுதே.

மேல்

#20 தெள் அகத்து ஓங்கிய செஞ்சுடரே சிவ தேசிகனே கள் அகத்தே மலர்க் கா ஆர் தணிகை எம் கண்மணியே எள் அகத்தே உழன்றென் நின்று அலைத்து எழுந்து இங்கும்அங்கும் துள் அகத்தேன் சிரம் சேரும்-கொலோ நின் துணை அடியே.

மேல்

#21 அடியேன் எனச் சொல்வதல்லாமல் தாள் அடைந்தாரைக் கண்டே துடியேன் அருணகிரி பாடும் நின் அருள் தோய் புகழைப் படியேன் பதைத்து உருகேன் பணியேன் மனப் பந்தம் எலாம் கடியேன் தணிகையைக் காணேன் என் செய்வேன் எம் காதலனே.

மேல்

#22 தலனே அடியர் தனி மனமாம் புகழ் சார் தணிகா சலனே அயன் அரி ஆதியர் வாழ்ந்திடத் தாங்கு அயில் வேல் வலனே நின் பொன் அருள்_வாரியின் மூழ்க மனோலயம் வாய்ந் திலனேல் சனன மரணம் என்னும் கடற்கு என் செய்வனே.

மேல்

#23 என் செய்கை என் செய்கை எந்தாய் நின் பொன் அடிக்கே அலங்கல் வன் செய்கை நீங்க மகிழ்ந்து அணியேன் துதி வாய் உரைக்க மென் செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத் தன் செய்கை என்பது அற்றே தணிகாசலம் சார்ந்திலனே.

மேல்

#24 சாரும் தணிகையில் சார்ந்தோய் நின் தாமரைத் தாள் துணையைச் சேரும் தொழும்பர் திரு_பதம் அன்றி இச் சிற்றடியேன் ஊரும் தனமும் உறவும் புகழும் உரை மடவார் வாரும் தணி முலைப் போகமும் வேண்டிலன் மண் விண்ணிலே.

மேல்

#25 மண் நீர் அனல் வளி வான் ஆகி நின்று அருள் வத்து என்றே தெண் நீர்மையால் புகழ் மால் அயனே முதல் தேவர்கள்-தம் கண்ணீர் துடைத்து அருள் கற்பகமே உனைக் கண்டுகொண்டேன் தண் நீர் பொழில்-கண் மதி வந்து உலாவும் தணிகையிலே.

மேல்

#26 தணியாத துன்பத் தடம் கடல் நீங்க நின்றன் மலர்த் தாள் பணியாத பாவிக்கு அருளும் உண்டோ பசு பாசம் அற்றோர்க்கு அணியாக நின்ற அருள்_செல்வமே தணிகாசலனே அணி ஆதவன் முதலாம் அட்ட_மூர்த்தம் அடைந்தவனே.

மேல்

#27 அடையாத வஞ்சகர்-பால் சென்று இரந்து இங்கு அலைந்தலைந்தே கடையான நாய்க்குள் கருணை உண்டோ தணிகைக்குள் நின்றே உடையாத நல் நெஞ்சர்க்கு உண்மையைக் காண்பிக்கும் உத்தமனே படையாத தேவர் சிறை மீட்டு அளித்து அருள் பண்ணவனே.

மேல்

#28 பண்ணவனே நின் பத_மலர் ஏத்தும் பயன்_உடையோர் கண்ணவனே தணிகாசலனே அயில்_கையவனே விண்ணவர் ஏத்திய மேலவனே மயல் மேவு மனம் புண்ணவனேனையும் சேர்ந்தாய் என்னே உன்றன் பொன் அருளே.

மேல்

#29 பொன் ஆர் புயத்தனும் பூ_உடையோனும் புகழ் மணியே என் ஆவியின் துணையே தணிகாசலத்தே அமர்ந்த மன்னா நின் பொன் அடி வாழ்த்தாது வீணில் வருந்துறுவேன் இன்னா இயற்றும் இயமன் வந்தால் அவற்கு என் சொல்வனே.

மேல்

#30 சொல் ஆர் மலர் புனை அன்பகத்தோர்க்கு அருள் சொல்லும் எல்லாம் வல்லாய் என்று ஏத்த அறிந்தேன் இனி என்றன் வல்_வினைகள் எல்லாம் விடைகொண்டு இரியும் என்-மேல் இயமன் சினமும் செல்லாது காண் ஐயனே தணிகாசலச் சீர் அரைசே.

@6. எண்ணப் பத்து

மேல்

#1 அணி கொள் வேல் உடை அண்ணலே நின் திரு_அடிகளை அன்போடும் பணிகிலேன் அகம் உருகி நின்று ஆடிலேன் பாடிலேன் மனமாயைத் தணிகிலேன் திரு_தணிகையை நினைகிலேன் சாமி நின் வழிபோகத் துணிகிலேன் இருந்து என் செய்தேன் பாவியேன் துன்பமும் எஞ்சேனே.

மேல்

#2 சேல் பிடித்தவன் தந்தை ஆதியர் தொழும் தெய்வமே சிவப் பேறே மால்பிடித்தவர் அறியொணாத் தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே வேல் பிடித்து அருள் வள்ளலே யான் சதுர்_வேதமும் காணா நின் கால் பிடிக்கவும் கருணை நீ செய்யவும் கண்டு கண் களிப்பேனோ.

மேல்

#3 களித்து நின் திரு_கழல் இணை ஏழையேன் காண்பனோ அலது அன்பை ஒளித்து வன் துயர் உழப்பனோ இன்னது என்று உணர்ந்திலேன் அருள் போதம் தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே தேவர்கள் பணி தேவே தளிர்த்த தண் பொழில் தணிகையில் வளர் சிவ தாருவே மயிலோனே.

மேல்

#4 மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திரு_வரவினுக்கு எதிர்பார்க்கும் செயலினேன் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன் என் செய்கேன் அயிலின் மா முதல் தடிந்திடும் ஐயனே ஆறு மா முகத் தேவே கயிலை நேர் திரு_தணிகை அம் பதி-தனில் கந்தன் என்று இருப்போனே.

மேல்

#5 இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழை-தனை எண்ணுறேல் இனி வஞ்சக் கருப் புகா-வணம் காத்து அருள் ஐயனே கருணை அம் கடலே என் விருப்புள் ஊறி நின்று ஓங்கிய அமுதமே வேல் உடை எம்மானே தருப் புகா இனன் விலகுறும் தணிகை வாழ் சாந்த சற்குண_குன்றே.

மேல்

#6 குன்று நேர் பிணித் துயரினால் வருந்தி நின் குரை கழல் கருதாத துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகத் துயர் அறுத்து அருள்செய்வான் இன்று மா மயில் மீதினில் ஏறி இ ஏழை முன் வருவாயேல் நன்று நன்று அதற்கு என் சொல்வார் தணிகை வாழ் நாத நின் அடியாரே.

மேல்

#7 யாரையும் துணைகொண்டிலேன் நின் அடி_இணை துணை அல்லால் நின் பேரை உன்னி வாழ்ந்திடும்படி செய்வையோ பேதுறச்செய்வாயோ பாரையும் உயிர்ப் பரப்பையும் படைத்து அருள் பகவனே உலகு ஏத்தும் சீரை உற்றிடும் தணிகை அம் கடவுள் நின் திருவுளம் அறியேனே.

மேல்

#8 உளம்கொள் வஞ்சக நெஞ்சர்-தம்மிடம் இடர் உழந்து அகம் உலைவுற்றேன் வளம்கொள் நின் பத_மலர்களை நாள்-தொறும் வாழ்த்திலேன் என் செய்கேன் குளம்கொள் கண்ணனும் கண்ணனும் பிரமனும் குறிக்க அரும் பெரு வாழ்வே தளம்கொள் பொய்கை சூழ் தணிகை அம் பதியில் வாழ் தனிப்பெரும் புகழ்த் தேவே.

மேல்

#9 தேவர் நாயகன் ஆகியே என் மனச் சிலை-தனில் அமர்ந்தோனே மூவர் நாயகன் என மறை வாழ்த்திடும் முத்தியின் வித்தே இங் கே வராயினும் நின் திரு_தணிகை சென்று இறைஞ்சிடில் அவரே என் பாவ நாசம் செய்து என்றனை ஆட்கொள்ளும் பரஞ்சுடர் கண்டாயே.

மேல்

#10 கண்டு அனேக வானவர் தொழும் நின் திரு_கழல் இணை-தனக்கு ஆசை கொண்டு அனேகமாய்த் தெண்டனிட்டு ஆனந்தக் கூத்தினை உகந்து ஆடித் தொண்டனேனும் நின் அடியரில் செறிவனோ துயர் உழந்து அலைவேனோ அண்டனே திரு_தணிகை வாழ் அண்ணலே அணி கொள் வேல் கரத்தோனே

@7. செழுஞ் சுடர் மாலை

மேல்

#1 ஊணே உடையே பொருளே என்று உருகி மனது தடுமாறி வீணே துயரத்து அழுந்துகின்றேன் வேறு ஓர் துணை நின் அடி அன்றிக் காணேன் அமுதே பெரும் கருணைக் கடலே கனியே கரும்பே நல் சேண் நேர் தணிகை மலை மருந்தே தேனே ஞானச் செழும் சுடரே

மேல்

#2 பாரும் விசும்பும் அறிய எனைப் பயந்த தாயும் தந்தையும் நீ ஓரும்போது இங்கு எனில் எளியேன் ஓயாத் துயருற்றிடல் நன்றோ யாரும் காண உனை வாதுக்கு இழுப்பேன் அன்றி என் செய்கேன் சேரும் தணிகை மலை மருந்தே தேனே ஞானச் செழும் சுடரே.

மேல்

#3 கஞ்சன் துதிக்கும் பொருளே என் கண்ணே நின்னைக் கருதாத வஞ்சர் கொடிய முகம் பார்க்கமாட்டேன் இனி என் வருத்தம் அறுத்து அஞ்சல் என வந்து அருளாயேல் ஆற்றேன் கண்டாய் அடியேனே செஞ்சந்தனம் சேர் தணிகை மலைத் தேனே ஞானச் செழும் சுடரே.

மேல்

#4 மின் நேர் உலக நடையதனால் மேவும் துயருக்கு ஆளாகிக் கல் நேர் மனத்தேன் நினை மறந்து என் கண்டேன் கண்டாய் கற்பகமே பொன்னே கடவுள் மா மணியே போதப் பொருளே பூரணமே தென் நேர் தணிகை மலை அரசே தேவே ஞானச் செழும் சுடரே

மேல்

#5 வளைத்தே வருத்தும் பெரும் துயரால் வாடிச் சவலை மகவு ஆகி இளைத்தேன் தேற்றும் துணை காணேன் என் செய்து உய்கேன் எம் தாயே விளைத் தேன் ஒழுகும் மலர்த் தருவே விண்ணே விழிக்கு விருந்தே சீர் திளைத்தோர் பரவும் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

மேல்

#6 அடுத்தே வருத்தும் துயர்_கடலில் அறியாது அந்தோ விழுந்திட்டேன் எடுத்தே விடுவார்-தமைக் காணேன் எந்தாய் எளியேன் என் செய்கேன் கடு தேர் கண்டத்து எம்மான்-தன் கண்ணே தருமக் கடலே என் செடி தீர் தணிகை மலை பொருளே தேனே ஞானச் செழும் சுடரே.

மேல்

#7 உண்டால் குறையும் எனப் பசிக்கும் உலுத்தர் அசுத்த முகத்தை எதிர் கண்டால் நடுங்கி ஒதுங்காது கடைகாத்து இரந்து கழிக்கின்றேன் கொண்டார் அடியர் நின் அருளை யானோ ஒருவன் குறைபட்டேன் திண் தார் அணி வேல் தணிகை மலைத் தேவே ஞானச் செழும் சுடரே.

மேல்

#8 வேட்டேன் நினது திரு_அருளை வினையேன் இனி இத் துயர் பொறுக்க_ மாட்டேன் மணியே அன்னே என் மன்னே வாழ்க்கை-மாட்டு மனம் நாட்டேன் அயன் மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ சேண் தேன் அலரும் பொழில் தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

மேல்

#9 கல்லா நாயேன் எனினும் எனைக் காக்கும் தாய் நீ என்று உலகம் எல்லாம் அறியும் ஆதலினால் எந்தாய் அருளாது இருத்தி எனில் பொல்லாப் பழி வந்து அடையும் உனக்கு அரசே இனி யான் புகல்வது என்னே செல் ஆர் பொழில் சூழ் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

மேல்

#10 அன்னே அப்பா என நின் தாட்கு ஆர்வம் கூர்ந்து இங்கு அலைகின்றேன் என்னே சற்றும் இரங்கிலை நீ என் நெஞ்சோ நின் நல் நெஞ்சம் மன்னே ஒளி கொள் மாணிக்க மணியே குண பொன்_மலையே நல் தென் நேர் பொழில் சூழ் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே

மேல்

#11 நடை ஏய் துயரால் மெலிந்து நினை நாடாது உழலும் நான் நாயில் கடையேன் எனினும் காத்தல் என்றன் கண்ணே நினது கடன்-அன்றோ தடையேன் வருவாய் வந்து உன் அருள்தருவாய் இதுவே சமயம் காண் செடி தீர்த்து அருளும் திரு_தணிகைத் தேவே ஞானச் செழும் சுடரே.

@8. குறை இரந்த பத்து

மேல்

#1 சீர் பூத்த அருள்_கடலே கரும்பே தேனே செம் பாகே எனது குலத் தெய்வமே நல் கூர் பூத்த வேல் மலர்க் கை அரசே சாந்த குணக் குன்றே தணிகை மலைக் கோவே ஞானப் பேர் பூத்த நின் புகழைக் கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கிப் பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே.

மேல்

#2 தீராத துயர்_கடலில் அழுந்தி நாளும் தியங்கி அழுது ஏங்கும் இந்தச் சேய்க்கு நீ கண் பாராத செயல் என்னே எந்தாய் எந்தாய் பாவி என விட்டனையோ பல் நாளாக ஏராய அருள்தருவாய் என்றே ஏமாந்திருந்தேனே என் செய்கேன் யாரும் இல்லேன் சீர் ஆரும் தணிகை வரை அமுதே ஆதி தெய்வமே நின் கருத்தைத் தெளிந்திலேனே.

மேல்

#3 தெளிக்கும் மறைப்பொருளே என் அன்பே என்றன் செல்வமே திரு_தணிகைத் தேவே அன்பர் களிக்கும் மறைக் கருத்தே மெய்ஞ்ஞான நீதிக் கடவுளே நின் அருளைக் காணேன் இன்னும் சுளிக்கும் மிடித் துயரும் யமன் கயிறும் ஈனத் தொடர்பும் மலத்து அடர்பும் மனச் சோர்வும் அந்தோ அளிக்கும் எனை என் செயுமோ அறியேன் நின்றன் அடித் துணையே உறு_துணை மற்று அன்றி உண்டோ .

மேல்

#4 உண்டாய உலகு உயிர்கள் தம்மைக் காக்க ஒளித்திருந்து அ உயிர் வினைகள் ஒருங்கே நாளும் கண்டாயே இ ஏழை கலங்கும் தன்மை காணாயோ பன்னிரண்டு கண்கள் கொண்டோய் தண்டாத நின் அருட்குத் தகுமோ விட்டால் தருமமோ தணிகை வரைத் தலத்தின் வாழ்வே விண்டு ஆதி தேவர் தொழும் முதலே முத்தி வித்தே சொல் பதம் கடந்த வேல்_கையானே.

மேல்

#5 கையாத அன்பு_உடையார் அங்கை மேவும் கனியே என் உயிரே என் கண்ணே என்றும் பொய்யாத பூரணமே தணிகை ஞானப் பொருளே நின் பொன் அருள் இப் போது யான் பெற்றால் உய்யாத குறை உண்டே துயர் சொல்லாமல் ஓடுமே யமன் பாசம் ஓய்ந்துபோம் என் ஐயா நின் அடியரொடு வாழ்குவேன் இங்கு ஆர் உனை அல்லால் எனக்கு இன்று அருள்செய்வாயே.

மேல்

#6 வாய்க்கும் உனது அருள் என்றே அந்தோ நாளும் வழிபார்த்து இங்கு இளைக்கின்றேன் வருத்தும் பொல்லா நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து ஏய்க்குமவன் வரில் அவனுக்கு யாது சொல்வேன் என் செய்கேன் துணை அறியா ஏழையேனே தூய்க் குமர குருவே தென் தணிகை மேவும் சோதியே இரங்காயோ தொழும்பாளர்க்கே.

மேல்

#7 ஆளாயோ துயர் அளக்கர் வீழ்ந்து மாழ்கி ஐயாவோ எனும் முறையை அந்தோ சற்றும் கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்குக் கிடையாதாகில் நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ தோளா ஓர் மணியே தென் தணிகை மேவும் சுடரே என் அறிவே சிற்சுகம் கொள் வாழ்வே.

மேல்

#8 வாழ்வே நல் பொருளே நல் மருந்தே ஞான வாரிதியே தணிகை மலை வள்ளலே யான் பாழ் வேலை எனும் கொடிய துயருள் மாழ்கிப் பதைத்து ஐயா முறையோ நின் பதத்துக்கென்றே தாழ்வேன் ஈது அறிந்திலையே நாயேன் மட்டும் தயவு இலையோ நான் பாவி-தானோ பார்க்குள் ஆழ்வேன் என்று அயல் விட்டால் நீதியேயோ அச்சோ இங்கு என் செய்கேன் அண்ணால் அண்ணால்

மேல்

#9 அண்ணாவே நின் அடியை அன்றி வேறு ஓர் ஆதரவு இங்கு அறியேன் நெஞ்சு அழிந்து துன்பால் புண்ணாவேன் தன்னை இன்னும் வஞ்சர்-பால் போய்ப் புலந்து முகவாட்டமுடன் புலம்பிநிற்கப் பண்ணாதே யாவன் இவன் பாவிக்குள்ளும் படு_பாவி என்று என்னைப் பரிந்து தள்ள எண்ணாதே யான் மிகவும் ஏழை கண்டாய் இசைக்க அரிய தணிகையில் வீற்றிருக்கும் கோவே.

மேல்

#10 கோவே நல் தணிகை வரை அமர்ந்த ஞான குல மணியே குகனே சற்குருவே யார்க்கும் தேவே என் விண்ணப்பம் ஒன்று கேண்மோ சிந்தை-தனில் நினைக்க அருள்செய்வாய் நாளும் பூ வேயும் அயன் திருமால் புலவர் முற்றும் போற்றும் எழில் புரந்தரன் எப் புவியும் ஓங்கச் சே ஏறும் பெருமான் இங்கு இவர்கள் வாழ்த்தல் செய்து உவக்கும் நின் இரண்டு திரு_தாள் சீரே.

@9. ஜீவசாட்சி மாலை

மேல்

#1 பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இப் பாவி பார்க்கில் கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#2 பண்டு மனது உவந்து குணம் சிறிதும் இல்லாப் பாவியேன்-தனை ஆண்டாய் பரிவால் இன்று கொண்டு குலம் பேசுதல் போல் எளியேன் குற்றம் குறித்துவிடில் என் செய்கேன் கொடியனேனைக் கண்டு திரு_தொண்டர் நகைசெய்வார் எந்தாய் கைவிடேல் உன் ஆணை காண் முக்காலும் தண் துளவன் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#3 புன் புலைய வஞ்சகர்-பால் சென்று வீணே புகழ்ந்து மனம் அயர்ந்து உறுகண் பொருந்திப் பொய்யாம் வன் புலைய வயிறு ஓம்பிப் பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ இன் புலைய உயிர் கொள்வான் வரில் என்-பால் அ இயமனுக்கு இங்கு என் சொல்கேன் என் செய்கேனே தன் புகழ் காண் அரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#4 பெரும் களப முலை மடவார் என்னும் பொல்லாப் பேய்க் கோட்பட்டு ஆடுகின்ற பித்தனேனுக்கு இரும் புலவர்க்கு அரிய திரு_அருள் ஈவாயேல் என் சொலார் அடியர் அதற்கு எந்தாய் எந்தாய் கரும்பின் இழிந்து ஒழுகும் அருள் சுவையே முக்கண் கனி கனிந்த தேனே என் கண்ணே ஞானம் தரும் புனிதர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#5 கல் அளவாம் நெஞ்சம் என வஞ்ச மாதர் கண்_மாயம் எனும் கயிற்றால் கட்டுவித்துச் சொல் அளவாத் துன்பம் எனும் கடலில் வீழ்த்தச் சோர்கின்றேன் அந்தோ நல் துணை ஒன்று இல்லேன் மல் அளவாய்ப் பவம் மாய்க்கும் மருந்தாம் உன்றன் மலர்_பாதப் புணை தந்தால் மயங்கேன் எந்தாய் சல்லம் உலாத்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே

மேல்

#6 அன்னை முதலாம் பந்தத்து அழுங்கி நாளும் அலைந்து வயிறு ஓம்பி மனம் அயர்ந்து நாயேன் முன்னை வினையால் படும் பாடு எல்லாம் சொல்லி முடியேன் செய் பிழை கருதி முனியேல் ஐயா பொன்னை நிகர் அருள்_குன்றே ஒன்றே முக்கண் பூ மணமே நறவே நல் புலவர் போற்றத் தன்னை நிகர் தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#7 பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருகக் கிட்டாது உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்கப் பாவி அழல் உணர்ந்திலாயோ என் அருமை அப்பா என் ஐயா என்றன் இன் உயிர்க்குத் தலைவா இங்கு எவர்க்கும் தேவா தன் இயல் சீர் வளர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#8 கோவே நின் பதம் துதியா வஞ்ச நெஞ்சக் கொடியோர்-பால் மனவருத்தம் கொண்டு ஆழ்கின்றேன் சாவேனும் அல்லன் நின் பொன் அருளைக் காணேன் தமியேனை உய்யும் வண்ணம் தருவது என்றோ சே ஏறும் சிவபெருமான் அரிதின் ஈன்ற செல்வமே அருள் ஞானத் தேனே அன்பர் தா ஏதம் தெறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#9 ஓயாது வரும் மிடியால் வஞ்சர்-பால் சென்று உளம் கலங்கி நாணி இரந்து உழன்று எந்நாளும் மாயாத துயரடைந்து வருந்தித் தெய்வ மருந்தாய நின் அடியை மறந்திட்டேனே தாய் ஆகித் தந்தையாய்த் தமராய் ஞான சற்குருவாய்த் தேவாகித் தழைத்த ஒன்றே சாயாத புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#10 மின் ஆளும் இடை மடவார் அல்குலாய வெம் குழியில் வீழ்ந்து ஆழ்ந்து மெலிந்தேனல்லால் எந்நாளும் உனைப் போற்றி அறியேன் என்னே ஏழை மதி கொண்டேன் இங்கு என் செய்கேனே அன்னாய் என அப்பா என்று அரற்றும் அன்பர்க்கு ஆர்_அமுதே அருள்_கடலே அமரர் கோவே தன்னார்வத்து அமர் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#11 வன் சொலினார் இடை அடைந்து மாழ்கும் இந்த மா_பாவியேன் குறையை வகுத்து நாளும் என் சொலினும் இரங்காமல் அந்தோ வாளாவிருக்கின்றாய் என்னே நின் இரக்கம் எந்தாய் இன் சொல் அடியவர் மகிழும் இன்பமே உள் இருள் அகற்றும் செழும் சுடரே எவர்க்கும் கோவே தன் சொல் வளர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#12 மீளாத வன் துயர்கொண்டு ஈனர்-தம்மால் மெலிந்து நினை அழைத்து அலறி விம்மாநின்றேன் கேளாத கேள்வி எலாம் கேட்பிப்பாய் நீ கேட்கிலையோ என்னளவில் கேள்வி இன்றோ மாளாத தொண்டர் அக இருளை நீக்கும் மதியே சிற்சுக ஞான_மழை பெய் விண்ணே தாளாளர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#13 மண்ணினால் மங்கையரால் பொருளால் அந்தோ வருந்தி மனம் மயங்கி மிக வாடி நின்றேன் புண்ணியா நின் அருளை இன்னும் காணேன் பொறுத்து முடியேன் துயரம் புகல்வது என்னே எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் தண்ணினால் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#14 வஞ்சகராம் கானினிடை அடைந்தே நெஞ்சம் வருந்தி உறுகண் வெயிலால் மாழாந்து அந்தோ தஞ்சம் என்பார் இன்றி ஒரு பாவி நானே தனித்து அருள் நீர்த் தாகமுற்றேன் தயை செய்வாயோ செஞ்சொல் மறை முடி விளக்கே உண்மை ஞானத் தேறலே முத்தொழில் செய் தேவர் தேவே சஞ்சலம் நீத்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#15 வாழாத வண்ணம் எனைக் கெடுக்கும் பொல்லா வஞ்சக நெஞ்சால் உலகில் மாழாந்து அந்தோ பாழான மடந்தையர்-பால் சிந்தைவைக்கும் பாவியேன் முகம் பார்க்கப்படுவதேயோ ஏழாய வன் பவத்தை நீக்கும் ஞான இன்பமே என் அரசே இறையே சற்றும் தாழாத புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#16 உளம் தளர விழி சுருக்கும் வஞ்சர்-பால் சென்று உத்தம நின் அடியை மறந்து ஓயா வெய்யில் இளம் தளிர் போல் நலிந்து இரந்து இங்கு உழலும் இந்த ஏழை முகம் பார்த்து இரங்காய் என்னே என்னே வளம் தரு சற்குண_மலையே முக்கண் சோதி மணியினிருந்து ஒளிர் ஒளியே மயில்_ஊர்_மன்னே தளம் தரும் பூம் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#17 கல்லாத வஞ்சகர்-பால் சென்று வீண் நாள் கழித்துநிற்கும் கடையன் இவன் கருணை இல்லாப் பொல்லாத பாவி என எண்ணி என்னைப் புறம்போக்கில் ஐயா யான் புரிவது என்னே எல்லாம் செய் வல்லவனே தேவர் யார்க்கும் இறைவனே மயில் ஏறும் எம்பிரானே சல்லாப வளத் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#18 கல் நேய நெஞ்சகர்-மாட்டு அணுகி ஐயோ கரைந்து உருகி எந்தாய் நின் கருணை காணாது என்னே என்று ஏங்கி அழும் பாவியேனுக்கு இருக்க இடம் இலையோ நின் இதயம் கல்லோ பொன்னே என் உயிர்க்குயிராய்ப் பொருந்து ஞான பூரணமே புண்ணியமே புனித வைப்பே தன் நேர் இல் தென் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#19 பாவ வினைக்கு ஓர் இடமாம் மடவார்-தங்கள் பாழ் குழி-கண் வீழ மனம் பற்றி அந்தோ மா வல்_வினையுடன் மெலிந்து இங்கு உழல்கின்றேன் நின் மலர்_அடியைப் பேற்றேன் என் மதி-தான் என்னே தேவர் தொழும் பொருளே என் குலத்துக்கு எல்லாம் தெய்வமே அடியர் உளம் செழிக்கும் தேனே தாவகன்றோர் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#20 கன்னியர்-தம் மார்பு இடம்கொண்டு அலைக்கும் புன் சீழ்க் கட்டிகளைக் கருதி மனம் கலங்கி வீணே அன்னியனாய் அலைகின்றேன் மயக்கம் நீக்கி அடிமைகொளல் ஆகாதோ அருள் பொன்_குன்றே சென்னி மிசைக் கங்கை வைத்தோன் அரிதில் பெற்ற செல்வமே என்பு உருக்கும் தேனே எங்கும் தன் இயல் கொண்டு உறும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#21 உள்ள மன_குரங்கு ஆட்டித் திரியும் என்றன் உளவு அறிந்தோ ஐயா நீ உன்னைப் போற்றார் கள்ள மன_குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்து முடிகில்லேன் கண்டாய் தெள் அமுதப் பெரும் கடலே தேனே ஞானத் தெளிவே என் தெய்வமே தேவர் கோவே தள்ள அரிய புகழ்த் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#22 வந்து ஆள்வாய் ஐயாவோ வஞ்சர்-தம்பால் வருந்துகின்றேன் என்று அலறும் மாற்றம் கேட்டும் எந்தாய் நீ இரங்காமல் இருக்கின்றாயால் என் மனம் போல் நின் மனமும் இருந்ததேயோ கந்தா என்று உரைப்பவர்-தம் கருத்துள் ஊறும் கனி ரசமே கரும்பே கற்கண்டே நல் சீர் தந்து ஆளும் திரு_தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#23 ஊர் ஆதி இகழ் மாயக் கயிற்றால் கட்டுண்டு ஓய்ந்து அலறி மனம் குழைந்து இங்கு உழலுகின்றேன் பார் ஆதி அண்டம் எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்திலாயோ சீர் ஆதி பகவன் அருள் செல்வமே என் சிந்தை மலர்ந்திட ஊறும் தேனே இன்பம் சார் ஆதி மலைத் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#24 வா என்பார் இன்றி உனது அன்பர் என்னை வஞ்சகன் என்றே மறுத்து வன்கணா நீ போ என்பாராகில் எங்குப் போவேன் அந்தோ பொய்யனேன் துணை இன்றிப் புலம்புவேனே கோ என்பார்க்கு அருள் தரும_குன்றே ஒன்றே குணம் குறி அற்றிட அருளும் குருவே வாழ்க்கைத் தா என்பார் புகழ் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#25 மாயை நெறியாம் உலக வாழ்க்கை-தன்னில் வருந்தி நினை அழைத்து அலறி மாழ்காநின்றேன் தாயை அறியாது வரும் சூல் உண்டோ என் சாமி நீ அறியாயோ தயை இல்லாயோ பேயை நிகர் பாவி என நினைந்துவிட்டால் பேதையேன் என் செய்கேன் பெரும் சீர்_குன்றே சாயை கடல் செறி தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#26 மின்னை நிகர்ந்து அழி வாழ்க்கைத் துயரால் நெஞ்சம் மெலிந்து நினது அருள் பருக வேட்டுநின்றேன் என்னை இவன் பெரும் பாவி என்றே தள்ளில் என் செய்கேன் தான் பெறும் சேய் இயற்றும் குற்றம் அன்னை பொறுத்திடல் நீதி அல்லவோ என் ஐயாவே நீ பொறுக்கல் ஆகாதோ-தான் தன்னை நிகர்தரும் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#27 முந்தை வினையால் நினது வழியில் செல்லா மூடனேன்-தனை அன்பர் முனிந்து பெற்ற தந்தை வழி நில்லாத பாவி என்றே தள்ளிவிடில் தலைசாய்த்துத் தயங்குவேனே எந்தை நினது அருள் சற்றே அளித்தால் வேறு ஓர் எண்ணம் இலேன் ஏகாந்தத்து இருந்து வாழ்வேன் சந்தன வான் பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#28 பல் நக நொந்து உறு வஞ்ச உலகில் நின்று பரதவித்து உன் அருட்கு எதிர்போய்ப் பார்க்கின்றேன் நின் பொன் அருளைப் புணர்ந்து மனம் மகிழ்ந்து வாழப் புண்ணியனே நாயேற்குப் பொருத்தம் இன்றோ பின்னை ஒரு துணை அறியேன் தனியே விட்டால் பெரும நினக்கு அழகேயோ பேதையாம் என்- தன்னை அளித்து அருள் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

@10. ஆற்றா முறை

மேல்

#1 விண் அறாது வாழ் வேந்தன் ஆதியர் வேண்டி ஏங்கவும் விட்டு என் நெஞ்சகக் கண் அறாது நீ கலந்துநிற்பதைக் கள்ள நாயினேன் கண்டுகொண்டிலேன் எண் அறாத் துயர்_கடலுள் மூழ்கியே இயங்கி மாழ்குவேன் யாது செய்குவேன் தண் அறாப் பொழில் குலவும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே

மேல்

#2 வாள் கண் ஏழையர் மயலில் பட்டு அகம் மயங்கி மால் அயன் வழுத்தும் நின் திரு_ தாள்-கண் நேயம் அற்று உலக வாழ்க்கையில் சஞ்சரித்து உழல் வஞ்சனேனிடம் ஆள்-கணே சுழல் அந்தகன் வரில் அஞ்சுவேன்அலால் யாது செய்குவேன் நாள்-கண் நேர் மலர்ப் பொழில் கொள் போரி வாழ் நாயகா திரு_தணிகை நாதனே.

மேல்

#3 எண்ணில் புன் தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே கண்ணின் உள்_மணியாய நின்றனைக் கருதிடாது உழல் கபடனேற்கு அருள் நண்ணி வந்து இவன் ஏழையாம் என நல்கி ஆண்டிடல் நியாயமே சொலாய் தண் இரும் பொழில் சூழும் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#4 கூவி ஏழையர் குறைகள் தீர ஆட்கொள்ளும் வள்ளலே குறுகும் வாழ்க்கையில் பாவியேன் படும் பாடு அனைத்தையும் பார்த்திருந்தும் நீ பரிந்து வந்திலாய் சேவியேன் எனில் தள்ளல் நீதியோ திரு_அருட்கு ஒரு சிந்து அல்லையோ தாவி ஏர் வளைப் பயில் செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#5 சந்தை நேர் நடை-தன்னில் ஏங்குவேன் சாமி நின் திரு_தாளுக்கு அன்பு இலேன் எந்தை நீ மகிழ்ந்து என்னை ஆள்வையேல் என்னை அன்பர்கள் என் சொல்வார்களோ நிந்தை ஏற்பினும் கருணைசெய்திடல் நித்த நின் அருள் நீதி ஆகுமால் தந்தை தாய் என வந்து சீர் தரும் தலைவனே திரு_தணிகை நாதனே.

மேல்

#6 செல்லும் வாழ்க்கையில் தியங்கவிட்டு நின் செய்ய தாள் துதி செய்திடாது உழல் கல்லும் வெந்நிடக் கண்டு மிண்டு செய் கள்ள நெஞ்சினேன் கவலை தீர்ப்பையோ சொல்லும் இன்ப வான் சோதியே அருள் தோற்றமே சுக சொருப வள்ளலே சல்லியம் கெட அருள்செய் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#7 ஏது செய்குவனேனும் என்றனை ஈன்ற நீ பொறுத்திடுதல் அல்லதை ஈது செய்தவன் என்று இ ஏழையை எந்தவண்ணம் நீ எண்ணி நீக்குவாய் வாதுசெய்வன் இப்போது வள்ளலே வறியனேன் என மதித்து நின்றிடேல் தாது செய் மலர்ப் பொழில் கொள் போரி வாழ் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#8 பேயும் அஞ்சுறும் பேதையார்களைப் பேணும் இப் பெரும் பேயனேற்கு ஒரு தாயும் அப்பனும் தமரும் நட்புமாய்த் தண் அருள்_கடல் தந்த வள்ளலே நீயும் நானும் ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ சாயும் வன் பவம்-தன்னை நீக்கிடும் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#9 பொய்யர்-தம் மனம் புகுதல் இன்று எனப் புனித நூல் எலாம் புகழ்வதாதலால் ஐய நின் திரு_அருட்கு இரப்ப இங்கு அஞ்சி நின்று என் இ விஞ்சு வஞ்சனேன் மெய்யர் உள்ளுளே விளங்கும் சோதியே வித்து_இலாத வான் விளைந்த இன்பமே தையலார் இருவோரும் மேவு தோள் சாமியே திரு_தணிகை நாதனே.

மேல்

#10 மாலின் வாழ்க்கையின் மயங்கி நின் பதம் மறந்து உழன்றிடும் வஞ்ச நெஞ்சினேன் பாலின் நீர் என நின் அடி-கணே பற்றி வாழ்ந்திடப் பண்ணுவாய்-கொலோ சேலின் வாள்_கணார் தீய மாயையில் தியங்கி நின்றிடச் செய்குவாய்-கொலோ சால நின் உளம்-தான் எவ்வண்ணமோ சாற்றிடாய் திரு_தணிகை நாதனே.

@11. இரந்த விண்ணப்பம்

மேல்

#1 நாளை ஏகியே வணங்குதும் எனத் தினம் நாளையே கழிக்கின்றோம் ஊளை நெஞ்சமே என்னையோ என்னையோ உயர் திரு_தணிகேசன் தாளை உன்னியே வாழ்ந்திலம் உயிர் உடல் தணந்திடல்-தனை இந்த வேளை என்று அறிவுற்றிலம் என் செய்வோம் விளம்ப அரும் விடையோமே.

மேல்

#2 விடைய வாழ்க்கையை விரும்பினன் நின் திரு விரை மலர்_பதம் போற்றேன் கடைய நாயினேன் எவ்வணம் நின் திரு_கருணை பெற்று உய்வேனே விடையில் ஏறிய சிவ_பரஞ்சுடர் உளே விளங்கிய ஒளி_குன்றே தடை இலாத பேர் ஆனந்த_வெள்ளமே தணிகை எம்பெருமானே.

மேல்

#3 பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெரும் துயர் உழக்கின்றேன் ஒருமை ஈயும் நின் திரு_பதம் இறைஞ்சிலேன் உய்வது எப்படியேயோ அருமையாம் தவத்து அம்மையும் அப்பனும் அளித்திடும் பெரு வாழ்வே தரும வள்ளலே குணப் பெரும் குன்றமே தணிகை மா மலையானே.

மேல்

#4 மலையும் வேல்_கணார் மையலில் அழுந்தியே வள்ளல் நின் பதம் போற்றாது அலையும் இப் பெரும் குறையினை ஐயகோ யாவரோடு உரைசெய்கேன் நிலைகொள் ஆனந்த நிருத்தனுக்கு ஒரு பொருள் நிகழ்த்திய பெரு வாழ்வே தலைமை மேவிய சற்குருநாதனே தணிகை அம் பதியானே.

மேல்

#5 பதியும் அப்பனும் அன்னையும் குருவும் நல் பயன்தரு பொருளாய கதியும் நின் திரு_கழல் அடியல்லது கண்டிலன் எளியேனே விதியும் மாலும் நின்று ஏத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே வதியும் சின்மய வடிவமே தணிகை மா மலை அமர்ந்திடு வாழ்வே.

மேல்

#6 வாழும் நின் திரு_தொண்டர்கள் திரு_பதம் வழுத்திடாது உலகத்தே தாழும் வஞ்சர்-பால் தாழும் என் தன்மை என் தன்மை வன் பிறப்பாய ஏழும் என்னதே ஆகியது ஐயனே எவர் எனைப் பொருகின்றோர் ஊழும் நீக்குறும் தணிகை எம் அண்ணலே உயர் திரு_அருள் தேனே.

மேல்

#7 தேனும் தெள்ளிய அமுதமும் கைக்கும் நின் திரு_அருள் தேன் உண்டே யானும் நீயுமாய்க் கலந்து உறவாடும் நாள் எந்த நாள் அறியேனே வானும் பூமியும் வழுத்திடும் தணிகை மா மலை அமர்ந்திடு தேவே கோனும் தற்பர குருவுமாய் விளங்கிய குமார சற்குண_குன்றே.

மேல்

#8 குன்று பொய் உடல் வாழ்வினை மெய் எனக் குறித்து இவண் அலைகின்றேன் இன்று நின் திரு_அருள் அடைந்து உய்வனோ இல்லை இ உலகத்தே என்றும் இப்படிப் பிறந்து இறந்து உழல்வனோ யாதும் இங்கு அறிகில்லேன் நன்று நின் திரு_சித்தம் என் பாக்கியம் நல் தணிகையில் தேவே.

மேல்

#9 தேவரும் தவ முனிவரும் சித்தரும் சிவன் அரி அயன் ஆகும் மூவரும் பணி முதல்வ நின் அடியில் என் முடி உற வைப்பாயேல் ஏவரும் எனக்கு எதிர் இலை முத்தி_வீடு என்னுடையது கண்டாய் தா அரும் பொழில் தணிகை அம் கடவுளே சரவணபவ கோவே.

மேல்

#10 வேயை வென்ற தோள் பாவையர் படு_குழி விழுந்து அலைந்திடும் இந்த நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாத நின் செயல்-அன்றே தாயை அப்பனைத் தமரினை விட்டு உனைச் சார்ந்தவர்க்கு அருள்கின்றோய் மாயை நீக்கு நல் அருள் புரி தணிகைய வந்து அருள் இ நாளே.

@12. கருணை மாலை

மேல்

#1 சங்கபாணியைச் சதுமுகத்தனைச் செங்கண் ஆயிரத் தேவர்_நாதனை மங்கலம் பெற வைத்த வள்ளலே தங்கு அருள் திரு_தணிகை ஐயனே.

மேல்

#2 ஐயனே நினை அன்றி எங்கணும் பொய்யனேற்கு ஒரு புகல் இலாமையால் வெய்யனேன் என வெறுத்து விட்டிடேல் மெய்யனே திரு_தணிகை வேலனே.

மேல்

#3 வேலன் மாதவன் வேதன் ஏத்திடும் மேலன் மா மயில்_மேலன் அன்பர் உள் சால நின்றவன் தணிகை நாயகன் வால நல் பதம் வைப்பென் நெஞ்சமே.

மேல்

#4 நெஞ்சமே இஃது என்னை நின் மதி வஞ்ச வாழ்வினில் மயங்குகின்றனை தஞ்சம் என்று அருள் தணிகை சார்த்தியேல் கஞ்ச மா மலர்க் கழல் கிடைக்குமே.

மேல்

#5 கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன் படைக்குள் பட்டிடும் பான்மை எய்திடேன் தடைக்குள் பட்டிடாத் தணிகையான் பதத்து அடைக்கலம் புகுந்து அருள் செழிப்பனே.

மேல்

#6 செழிக்கும் சீர் திரு_தணிகைத் தேவ நின் கொழிக்கும் நல் அருள் கொள்ளை கொள்ளவே தழிக்கொண்டு அன்பரைச் சார்ந்திலேன் இவண் பழிக்குள் ஆகும் என் பான்மை என்னையோ.

மேல்

#7 என்னை என்னை ஈது என்றன் மா தவம் முன்னை நல் நெறி முயன்றிலேனை நின் பொன்னை அன்ன தாள் போற்றவைத்தனை அன்னை என்னும் நல் தணிகை அண்ணலே.

மேல்

#8 அண்ணிலேன் நினை ஐய நின் அடி எண்ணிலேன் இதற்கு யாது செய்குவேன் புண்ணினேன் பிழை பொறுத்துக் கோடியால் தண்ணின் நீள் பொழில் தணிகை அப்பனே.

மேல்

#9 அப்பன் என்னுடை அன்னை தேசிகன் செப்பன் என் குல_தெய்வம் ஆனவன் துப்பன் என் உயிர்த் துணைவன் யாதும் ஓர் தப்பு இல் அன்பர் சேர் தணிகை வள்ளலே.

மேல்

#10 வள்ளல் உன் அடி வணங்கிப் போற்ற என் உள்ளம் என் வசத்து உற்றதில்லையால் எள்ளல் ஐயவோ ஏழை என் செய்கேன் தள்ள அரும் பொழில் தணிகை வெற்பனே.

மேல்

#11 வெற்பனே திரு_தணிகை வேலனே பொற்பனே திரு_போரி நாதனே கற்பம் மேல் பல காலம் செல்லுமால் அற்பனேன் துயர்க்கு அளவு சாற்றவே.

மேல்

#12 சாறு சேர் திரு_தணிகை எந்தை நின் ஆறு மா முகத்து அழகை மொண்டுகொண்டு ஊறு இல் கண்களால் உண்ண எண்ணினேன் ஈறு இல் என்னுடை எண்ணம் முற்றுமோ.

மேல்

#13 முற்றுமோ மனம் முன்னி நின் பதம் பற்றுமோ வினைப் பகுதி என்பவை வற்றுமோ சுக வாழ்வு வாய்க்குமோ சற்றும் ஓர்கிலேன் தணிகை அத்தனே.

மேல்

#14 அத்தனே தணிகாசலத்து அருள் வித்தனே மயில் மேற்கொள் வேலனே பித்தனேன் பெரும் பிழை பொறுத்திடில் சுத்த அன்பர்கள் சொல்வர் ஏதமே.

மேல்

#15 ஏதிலார் என எண்ணிக் கைவிடில் நீதியோ எனை நிலைக்கவைத்தவா சாதி வான் பொழில் தணிகை நாதனே ஈதி நின் அருள் என்னும் பிச்சையே.

மேல்

#16 பிச்சை ஏற்றவன் பிள்ளை நீ எனில் இச்சை ஏற்றவர்க்கு யாது செய்குவாய் பச்சை மா மயில் பரம_நாதனே கச்சி நேர் தணிகைக் கடம்பனே.

மேல்

#17 கடப்ப மா மலர்க் கண்ணி மார்பனே தடப் பெரும் பொழில் தணிகை தேவனே இடப்படாச் சிறியேனை அன்பர்கள் தொடப்படாது எனில் சொல்வது என்-கொலோ.

மேல்

#18 என் சொல்கேன் இதை எண்ணில் அற்புதம் வன் சொலேன் பிழை மதித்திடாது வந்து இன் சொலால் இவண் இருத்தி என்றனன் தன் சொல் செப்ப அரும் தணிகை தேவனே.

மேல்

#19 தேவ நேசனே சிறக்கும் ஈசனே பாவ_நாசனே பரம தேசனே சாவகாசனே தணிகை_வாசனே கோவ பாசனே குறிக்கொள் என்னையே.

மேல்

#20 குறிக்கொள் அன்பரைக் கூடுறாத இ வெறிக் கொள் நாயினை வேண்டி ஐய நீ முறிக்கொள்வாய்-கொலோ முனிகொள்வாய்-கொலோ நெறிக் கொள்வோர் புகழ் தணிகை நித்தனே.

மேல்

#21 தணிகை மேவிய சாமியே நினை எணி கைவிட்டிடேல் என்று தோத்திரம் அணிகை நின் அடிக்கு அயர்ந்து நின்று வீண் கணிகை போல் எனைக் கலக்கிற்று உள்ளமே.

மேல்

#22 உள்ளம் நெக்குவிட்டு உருகும் அன்பர்-தம் நள் அகத்தினில் நடிக்கும் சோதியே தள்ள அரும் திறல் தணிகை ஆனந்த வெள்ளமே மனம் விள்ளச்செய்வையே.

மேல்

#23 செய்வது அன்று அவன் சிறியன் என்றனை வைவர் அன்பர்கள் என்னில் மத்தனேன் உய்வது எவ்வணம் உரைசெய் அத்தனே சைவ_நாதனே தணிகை மன்னனே.

மேல்

#24 மன்னும் நின் அருள் வாய்ப்பது இன்றியே இன்னும் இத் துயர் ஏய்க்கில் என் செய்கேன் பொன்னின் அம் புயன் போற்றும் பாதனே தன்னில் நின்றிடும் தணிகை_மேலனே.

மேல்

#25 மேலை வானவர் வேண்டும் நின் திரு_ காலை என் சிரம் களிக்கவைப்பையோ சாலை ஓங்கிய தணிகை_வெற்பனே வேலை ஏந்து கை விமல நாதனே.

மேல்

#26 வேத மா முடி விளங்கும் நின் திரு_ பாதம் ஏத்திடாப் பாவியேன்-தனக்கு ஈதல் இன்று போ என்னில் என் செய்கேன் சாதல் போக்கும் நல் தணிகை நேயனே.

மேல்

#27 நேயம் நின் புடை நின்றிடாத என் மாய நெஞ்சினுள் வந்து இருப்பையோ பேயனேன் பெரும் பிழை பொறுத்திடத் தாய நின் கடன் தணிகை_வாணனே.

மேல்

#28 வாள் நுதல் பெருமாட்டிமாரொடு காணுதற்கு உனைக் காதல்கொண்டனன் ஏணுதற்கு எனது எண்ணம் முற்றுமோ மாணுதல் புகழ்த் தணிகை_வண்ணனே.

மேல்

#29 வண்ணனே அருள் வழங்கும் பன்னிரு கண்ணனே அயில் கரம் கொள் ஐயனே தண்ணல் நேர் திரு_தணிகை வேலனே திண்ணம் ஈது அருள்செய்யும் காலமே.

மேல்

#30 கால் குறித்த என் கருத்து முற்றியே சால் வளத் திரு_தணிகை சார்வன் என் மால் பகைப் பிணி மாறி ஓடவே மேல் குறிப்பனால் வெற்றிச் சங்கமே.

@13. மருண்மாலை விண்ணப்பம்

மேல்

#1 சொல்லும் பொருளுமாய் நிறைந்த சுகமே அன்பர் துதி துணையே புல்லும் புகழ் சேர் நல் தணிகைப் பொருப்பின் மருந்தே பூரணமே அல்லும்_பகலும் நின் நாமம் அந்தோ நினைந்து உன் ஆளாகேன் கல்லும் பொருவா வன் மனத்தால் கலங்காநின்றேன் கடையேனே.

மேல்

#2 கடையேன் வஞ்ச நெஞ்சகத்தால் கலுழ்கின்றேன் நின் திரு_கருணை அடையேன் அவமே திரிகின்றேன் அந்தோ சிறிதும் அறிவு_இல்லேன் விடை ஏறு ஈசன் புயம் படும் உன் விரை தாள்_கமலம் பெறுவேனோ கொடை ஏர் அருளைத் தரு முகிலே கோவே தணிகைக் குல_மணியே.

மேல்

#3 மணியே அடியேன் கண்மணியே மருந்தே அன்பர் மகிழ்ந்து அணியும் அணியே தணிகை அரசே தெள் அமுதே என்றன் ஆர்_உயிரே பிணி ஏய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன் தணியேன் தாகம் நின் அருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே.

மேல்

#4 தாழ்வேன் வஞ்ச நெஞ்சகர்-பால் சார்வேன் தனக்குள் அருள்தந்தால் வாழ்வேன் இலையேல் என் செய்கேன் வருத்தம் பொறுக்க_மாட்டேனே ஏழ் வேதனையும் கடந்தவர்-தம் இன்பப் பெருக்கே என் உயிரே போழ் வேல் கரம் கொள் புண்ணியனே புகழ் சேர் தணிகைப் பொருப்பு அரசே.

மேல்

#5 அரைசே அடியர்க்கு அருள் குகனே அண்ணா தணிகை ஐயாவே விரை சேர் கடம்ப மலர்ப் புயனே வேலாயுதக் கை மேலோனே புரை சேர் மனத்தால் வருந்தி உன்றன் பூம் பொன்_பதத்தைப் புகழ்கில்லேன் தரை சேர் வாழ்வில் தயங்குகின்றேன் அந்தோ நின்று தனியேனே.

மேல்

#6 தனியே துயரில் வருந்தி மனம் சாம்பி வாழ்க்கைத் தளைப் பட்டு இங்கு இனி ஏது உறுமோ என் செய்கேன் என்றே நின்றேற்கு இரங்காயோ கனியே பாகே கரும்பே என் கண்ணே தணிகைக் கற்பகமே துனி ஏய் பிறவி-தனை அகற்றும் துணையே சோதிச் சுக_குன்றே.

மேல்

#7 குன்றே மகிழ்ந்த குண_குன்றே கோவே தணிகைக் குருபரனே நன்றே தெய்வநாயகமே நவிலற்கு அரிய நல் உறவே என்றே வருவாய் அருள்தருவாய் என்றே புலம்பி ஏங்குற்றேன் இன்றே காணப்பெறில் எந்தாய் இறவேன் பிறவேன் இருப்பேனே.

மேல்

#8 இருப்பேன் துயர் வாழ்வினில் எனினும் எந்தாய் நினது பதம் காணும் விருப்பேன் அயன் மால் முதலோரை வேண்டேன் அருளவேண்டாயோ திரு_பேர் ஒளியே அருள்_கடலே தெள் ஆர்_அமுதே திரு_தணிகைப் பொருப்பே மகிழ்ந்த புண்ணியமே புனித ஞான போதகமே.

மேல்

#9 போதாநந்த அருள்_கனியே புகலற்கு அரிய பொருளே என் நாதா தணிகை மலை_அரசே நல்லோர் புகழும் நாயகனே ஓதாது அவமே வரும் துயரால் உழன்றே பிணியில் உலைகின்றேன் ஏதாம் உனது இன் அருள் ஈயாதிருந்தால் அந்தோ எளியேற்கே.

மேல்

#10 எளியேன் நினது திரு_அருளுக்கு எதிர்நோக்குற்றே இரங்குகின்ற களியேன் எனை நீ கைவிட்டால் கருணைக்கு இயல்போ கற்பகமே அளியே தணிகை அருள்_சுடரே அடியர் உறவே அருள் ஞானத் துளியே அமையும் எனக்கு எந்தாய் வா என்று ஒரு சொல் சொல்லாயே.

@14. பொறுக்காப் பத்து

மேல்

#1 மெய்யர் உள்ளகத்தின் விளங்கும் நின் பதமாம் விரை மலர்த் துணை-தமை விரும்பாப் பொய்யர்-தம் இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஐயரும் இடப்பால் அம்மையும் வருந்தி அளித்திடும் தெள்ளிய அமுதே தையலர் மயக்கற்றவர்க்கு அருள் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#2 நன்மைய எல்லாம் அளித்திடும் உனது நளின மா மலர்_அடி வழுத்தாப் புன்மையர்-இடத்து இ அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் சின்மயப் பொருள் நின் தொண்டர்-பால் நாயேன் சேர்ந்திடத் திரு_அருள் புரியாய் தன் மயக்கற்றோர்க்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#3 மருள்_இலாதவர்கள் வழுத்தும் நின் அடியை மனம் உற நினைந்து அகத்து அன்பாம் பொருள் இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் அருள் எலாம் திரண்ட ஆனந்த உருவே அன்பர்-பால் இருந்திட அருளாய் தரள வான் மழை பெய்திடும் திரு_பொழில் சூழ் தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#4 நிலை அருள் நினது மலர்_அடிக்கு அன்பு நிகழ்ந்திட நாள்-தொறும் நினையாப் புலையர்-தம்மிடம் இப் புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் மலை_அரசு அளித்த மரகதக் கொம்பர் வருந்தி ஈன்றெடுத்த மா மணியே தலை அரசு அளிக்க இந்திரன் புகழும் தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#5 வல் இருள் பவம் தீர் மருந்து எனும் நினது மலர்_அடி மனமுற வழுத்தாப் புல்லர்-தம்மிடம் இப் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஒல்லையின் எனை மீட்டு உன் அடியவர்-பால் உற்று வாழ்ந்திடச்செயின் உய்வேன் சல்லமற்றவர்கட்கு அருள்தரும் பொருளே தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#6 கற்பு_இலார் எனினும் நினைந்திடில் அருள் நின் கருணை அம் கழல் அடிக்கு அன்பாம் பொற்பு_இலாதவர்-பால் ஏழையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் அற்பு_இலேன் எனினும் என் பிழை பொறுத்து உன் அடியர்-பால் சேத்திடில் உய்வேன் தற்பராபரமே சற்குண_மலையே தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#7 பத்திகொண்டவர் உள் பரவிய ஒளியாம் பரஞ்சுடர் நின் அடி பணியும் புத்தி கொள்ளலர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் நித்திய அடியர்-தம்முடன் கூட்ட நினைந்திடில் உய்குவன் அரசே சத்தி செங்கரத்தில் தரித்திடும் அமுதே தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#8 நீற்று அணி விளங்கும் அவர்க்கு அருள் புரியும் நின் அடி_கமலங்கள் நினைந்தே போற்றிடாதவர்-பால் பொய்யனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் ஆற்றல் கொள் நின் பொன் அடியருக்கடியனா செயில் உய்குவன் அமுதே சாற்றிடும் பெருமைக்கு அளவு_இலாது ஓங்கும் தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#9 பரிந்திடும் மனத்தோர்க்கு அருள்செயும் நினது பாத_தாமரைகளுக்கு அன்பு புரிந்திடாதவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் தெரிந்திடும் அன்பர் இடமுறில் உய்வேன் திருவுளம் அறிகிலன் தேனே சரிந்திடும் கருத்தோர்க்கு அரிய நல் புகழ் கொள் தணிகை வாழ் சரவணபவனே.

மேல்

#10 எண்ணுறுமவர்கட்கு அருளும் நின் அடியை ஏத்திடாது அழிதரும் செல்வப் புண்ணுறுமவர்-பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் கண் உறு மணியாம் நின் அடியவர்-பால் கலந்திடில் உய்குவன் கரும்பே தண்ணுறும் கருணைத் தனிப் பெரும் கடலே தணிகை வாழ் சரவணபவனே.

@15. வேட்கை விண்ணப்பம்

மேல்

#1 மன்னே என்றன் உயிர்க்குயிரே மணியே தணிகை மலை மருந்தே அன்னே என்னை ஆட்கொண்ட அரசே தணிகை ஐயாவே பொன்னே ஞானப் பொங்கு ஒளியே புனித அருளே பூரணமே என்னே எளியேன் துயர் உழத்தல் எண்ணி இரங்காது இருப்பதுவே.

மேல்

#2 இரங்காநின்று இங்கு அலைதரும் இ எளியேன் கனவினிடத்தேனும் அரங்கா அரவின் நடித்தோனும் அயனும் காண்டற்கு அரிதாய உரம் காமுறும் மா மயில் மேல் நின் உருவம் தரிசித்து உவப்படையும் வரம் காதலித்தேன் தணிகை மலை வாழ்வே இன்று வருவாயோ.

மேல்

#3 வருவாய் என்று நாள்-தோறும் வழிபார்த்து இரங்கி மனம் தளர்ந்தேன் கரு வாய்பவன் என்று எனைத் தள்ளக் கருதுவாயோ அன்றி அருள் உருவாய் வந்து தருவாயே தணிகாசலத்துள் உற்று அமர்ந்த ஒருவா உன்றன் திருவுளத்தை உணரேன் என் செய்து உய்கேனே.

மேல்

#4 உய்யும் பொருட்டு உன் திரு_புகழை உரையேன் அந்தோ உரைக்கு அடங்காப் பொய்யும் களவும் அழுக்காறும் பொருளாக் கொண்டேன் புலையேனை எய்யும்படி வந்து அடர்ந்து இயமன் இழுத்துப் பறிக்கில் என்னே யான் செய்யும் வகை ஒன்று அறியேனே தென் பால் தணிகைச் செஞ்சுடரே.

மேல்

#5 செஞ்சொல் சுவையே மெய்ஞ்ஞானச் செல்வப் பெருக்கே தெள் அமுதே விஞ்சைப் புலவர் புகழ் தணிகை விளக்கே துளக்கு இல் வேலோனே வெம் சொல் புகழும் வஞ்சகர்-பால் மேவி நின் தாள்_மலர் மறந்தே பஞ்சில் தமியேன் படும் பாட்டைப் பார்த்தும் அருள்_கண் பார்த்திலையே.

மேல்

#6 பார்க்கின்றிலையே பன்னிரு கண் படைத்தும் எளியேன் பாடு அனைத்தும் தீர்க்கின்றிலையே என்னே யான் செய்வேன் சிறியேன் சீமானே போர்க் குன்றொடு சூர் புயக் குன்றும் பொடிசெய் வேல் கைப் புண்ணியனே சீர்க் குன்று எனும் நல் வளத் தணிகைத் தேவே மயில்_ஊர்_சேவகனே.

மேல்

#7 சேவல்_கொடி கொள் குண_குன்றே சிந்தாமணியே யாவர்கட்கும் காவல் பதியே தணிகை வளர் கரும்பே கனியே கற்பகமே மூவர்க்கு இறையே வேய் ஈன்ற முத்தன் அளித்த முத்தே நல் தேவர்க்கு அருள் நின் சேவடிக்கே விழைந்தேன் யாதும் தெரியேனே.

மேல்

#8 தெரியேன் உனது திரு_புகழைத் தேவே உன்றன் சேவடிக்கே பரியேன் பணியேன் கூத்தாடேன் பாடேன் புகழைப் பரவசமாய்த் தரியேன் தணிகை-தனைக் காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே உரியேன் அந்தோ எது கொண்டு இங்கு உய்கேன் யாது செய்கேனே.

மேல்

#9 செய்வது உனது திரு_அடிக்காம் திறனே சிந்தை நின்-பாலே வைவது உன்னை நினையாத வஞ்சகரையே வழுத்தி நிதம் உய்வது உனது திரு_நாமம் ஒன்றைப் பிடித்தே மற்றொன்றால் எய்வது அறியேன் திரு_தணிகை எந்தாய் எந்தாய் எளியேனே.

மேல்

#10 எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பு ஒன்று இல்லேன் அது சிறிதும் ஒளியேன் எந்தாய் என் உள்ளத்து ஒளித்தே எவையும் உணர்கின்றாய் வளியே முதலாய் நின்று அருளும் மணியே தணிகை வாழ் மன்னே.

@16. ஆறெழுத் துண்மை

மேல்

#1 பெருமை நிதியே மால் விடை கொள் பெம்மான் வருந்திப் பெறும் பேறே அருமை மணியே தணிகை மலை அமுதே உன்றன் ஆறெழுத்தை ஒருமை மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் இருமை வளனும் எய்தும் இடர் என்பது ஒன்றும் எய்தாதே.

மேல்

#2 எய்தற்கு அரிய அருள் சுடரே எல்லாம்_வல்ல இறையோனே செய்தற்கு அரிய வளத் தணிகைத் தேவே உன்றன் ஆறெழுத்தை உய்தல் பொருட்டு இங்கு உச்சரித்தே உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் வைதற்கு இல்லாப் புகழ்ச்சி வரும் வன்கண் ஒன்றும் வாராதே.

மேல்

#3 வாரா இருந்த அடியவர்-தம் மனத்தில் ஒளிரும் மா மணியே ஆரா_அமுதே தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை ஓரா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் ஏர் ஆர் செல்வப் பெருக்கு இகவா இடும்பை ஒன்றும் இகந்திடுமே.

மேல்

#4 இகவா அடியர் மனத்து ஊறும் இன்பச் சுவையே எம்மானே அகவா மயில் ஊர் திரு_தணிகை அரசே உன்றன் ஆறெழுத்தை உகவா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் சுக வாழ்வு இன்பம் அது துன்னும் துன்பம் ஒன்றும் துன்னாதே.

மேல்

#5 துன்னும் மறையின் முடிவில் ஒளிர் தூய விளக்கே சுகப் பெருக்கே அன்னை அனையாய் தணிகை மலை அண்ணா உன்றன் ஆறெழுத்தை உன்னி மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் சென்னி அணியாய் அடி சேரும் தீமை ஒன்றும் சேராதே.

மேல்

#6 சேரும் முக்கண் கனி கனிந்த தேனே ஞானச் செழு மணியே யாரும் புகழும் தணிகை எமது அன்பே உன்றன் ஆறெழுத்தை ஓரும் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் பாரும் விசும்பும் பதம் சாரும் பழங்கண் ஒன்றும் சாராதே.

மேல்

#7 சார்ந்த அடியார்க்கு அருள் அளிக்கும் தரும_கடலே தற்பரமே வார்ந்த பொழில் சூழ் திரு_தணிகை மணியே உன்றன் ஆறெழுத்தை ஓர்ந்து மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் ஆர்ந்த ஞானம் உறும் அழியா அலக்கண் ஒன்றும் அழிந்திடுமே.

மேல்

#8 அழியாப் பொருளே என் உயிரே அயில் செங்கரம் கொள் ஐயாவே கழியாப் புகழ் சேர் தணிகை அமர் கந்தா உன்றன் ஆறெழுத்தை ஒழியா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் பழியா இன்பம் அது பதியும் பனிமை ஒன்றும் பதியாதே.

மேல்

#9 பதியே எங்கும் நிறைந்து அருளும் பரம சுகமே பரம் சுடரே கதியே அளிக்கும் தணிகை அமர் கடம்பா உன்றன் ஆறெழுத்தை உதி ஏர் மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் துதி ஏர் நினது பதம் தோன்றும் துன்பம் ஒன்றும் தோன்றாதே.

மேல்

#10 தோன்றா ஞானச் சின்மயமே தூய சுகமே சுயம் சுடரே ஆன்றார் புகழும் தணிகை மலை அரசே உன்றன் ஆறெழுத்தை ஊன்றா மனத்தின் உச்சரித்து இங்கு உயர்ந்த திரு_வெண் நீறு இட்டால் ஈன்றாள் நிகரும் அருள் அடையும் இடுக்கண் ஒன்றும் அடையாதே.

@17. போக் குரையீடு

மேல்

#1 கற்கிலேன் உனது அருள் பெயராம் குக கந்த என்பவை நாளும் நிற்கிலேன் உனது ஆகம நெறி-தனில் நீசனேன் உய்வேனோ சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே அற்கில் ஏர்தரும் தணிகை ஆர்_அமுதமே ஆனந்த அருள்_குன்றே.

மேல்

#2 பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலாப் பிழை நோக்கித் தேவரீர் மனது இரக்கமுற்றே அருள்செய்திடாது இருப்பீரேல் காவலாகிய கடும் பிணித் துயரம் இக் கடையனேன்-தனக்கு இன்னும் யாவது ஆகுமோ என் செய்கோ என் செய்கோ இயலும் வேல்_கரத்தீரே.

மேல்

#3 சேவியாத என் பிழைகளை என்னுளே சிறிது அறிதரும்போதோ பாவியேன் மனம் பகீலென வெதும்பி உள் பதைத்திடக் காண்கின்றேன் ஆவியே அருள் அமுதமே நின் திரு_அருள்-தனக்கு என்னாமோ பூவில்_நாயகன் போற்றிடும் தணிகை அம் பொருப்பு அமர்ந்திடு வாழ்வே.

மேல்

#4 துன்பினால் அகம் வெதும்பி நைந்து அயர்ந்து நின் துணை அடி_மலர் ஏத்தும் அன்பு இலாத இப் பாவியேன் செய் பிழை அனைத்தையும் பொறுப்பாயேல் வன்பு இலாத நின் அடியவர்-தம் திரு_மனத்தினுக்கு என் ஆமோ இன்பினால் சுரர் போற்றிடும் தணிகை வாழ் இறைவனே எம்மானே.

மேல்

#5 என் செய்கேன் இனும் திரு_அருள் காண்கிலேன் எடுக்க அரும் துயருண்டேன் கன் செய் பேய்_மனக் கடையனேன் என்னினும் காப்பது உன் கடன் அன்றோ பொன் செய் குன்றமே பூரண ஞானமே புராதனப் பொருள் வைப்பே மன்செய் மாணிக்க விளக்கமே தணிகை வாழ் வள்ளலே மயிலோனே.

மேல்

#6 மண்ணில் நண்ணிய வஞ்சகர்-பால் கொடு வயிற்றினால் அலைப்பட்டேன் கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திருக் கடைக்கண் நோக்கு அருள் நோக்கி எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் புண்ணில் நண்ணிய வேல் எனத் துயருறில் புலையன் என் செய்கேனே.

மேல்

#7 மலங்கி வஞ்சகர்-மாட்டு இரந்து ஐயகோ வருந்தி நெஞ்சு அயர்வுற்றே கலங்கி நின் திரு_கருணையை விழையும் என்-கண் அருள்செய்யாயோ இலங்கி எங்கணும் நிறைந்து அருள் இன்பமே எந்தையே எம் தாயே நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே.

மேல்

#8 சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் தெய்வமே நினை அன்றி ஓர் துணை இலேன் திரு_அருள் அறியாதோ வைவதே கொளும் வஞ்சகர்-தம்மிடை வருந்தி நெஞ்சு அழிகின்றேன் செய்வது ஓர்கிலேன் கைவிடில் என் செய்கேன் தெளிவு இலாச் சிறியேனே.

மேல்

#9 வாழ்வில் ஆம் சிறு களிப்பினால் உன்றனை மறந்து இறுமாக்கின்றேன் தாழ்விலே சிறிது எண்ணி நொந்து அயர்வன் என் தன்மை நன்று அருளாளா கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுறக் கிடைத்த அருள் பெரு வாழ்வே வேழ்வி ஓங்கிய தணிகை மா மலை-தனில் விளங்கி வீற்றிருப்போனே.

மேல்

#10 என்றும் மாதர் மேல் இச்சைவைத்து உன்றனை எண்ணுவேன் துயருற்றால் கன்று நெஞ்சு அகக் கள்வனேன் அன்பினைக் கருத்திடை எணில் சால நன்று நன்று எனக்கு எவ்வணம் பொன் அருள் நல்குவை அறிகில்லேன் துன்று மா தவர் போற்றிடும் தணிகை வாழ் சோதியே சுக வாழ்வே.

@18. பணித்திறம் வேட்டல்

மேல்

#1 நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ கண்டு வாரி உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பாத் தொண்டு பண்ணேனோ நின் புகழைப் பாடேனோ வாயாரப் பாவியேனே.

மேல்

#2 பாவியேன் படும் துயருக்கு இரங்கி அருள் தணிகையில் என்-பால் வா என்று கூவி நீ ஆட்கொள ஓர் கனவேனும் காணேனோ குண பொன்_குன்றே ஆவியே அறிவே என் அன்பே என் அரசே நின் அடியைச் சற்றும் சேவியேன் எனினும் எனைக் கைவிடேல் அன்பர் பழி செப்புவாரே.

மேல்

#3 வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று பாரேனோ நின் அழகைப் பார்த்து உலக வாழ்க்கை-தனில் படும் இச் சோபம் தீரேனோ நின் அடியைச் சேவித்து ஆனந்த_வெள்ளம் திளைத்து ஆடேனோ சாரேனோ நின் அடியர் சமுகம் அதைச் சார்ந்தவர் தாள் தலைக்கொள்ளேனோ.

மேல்

#4 கொள்ளேனோ நீ அமர்ந்த தணிகை மலைக்கு உற எண்ணம் கோவே வந்தே அள்ளேனோ நின் அருளை அள்ளி உண்டே ஆனந்தத்து அழுந்தி ஆடித் துள்ளேனோ நின் தாளைத் துதியேனோ துதித்து உலகத் தொடர்பை எல்லாம் தள்ளேனோ நின் அடி கீழ்ச் சாரேனோ துணை இல்லாத் தனியனேனே.

மேல்

#5 தனியே இங்கு உழல்கின்ற பாவியேன் திரு_தணிகாசலம் வாழ் ஞானக் கனியே நின் சேவடியைக் கண்ணாரக் கண்டு மனம் களிப்புறேனோ துனியே செய் வாழ்வில் அலைந்து என் எண்ணம் முடியாது சுழல்வேனாகில் இனி ஏது செய்வேன் மற்று ஒரு துணையும் காணேன் இ ஏழையேனே.

மேல்

#6 இ வேளை அருள் தணிகை அமர்ந்து அருளும் தேவை எனது இரு கண்ணாய செவ்வேளை மனம் களிப்பச் சென்று புகழ்ந்து ஆனந்தத் தெளி தேன் உண்டே எவ்வேளையும் பரவி ஏத்தேனோ அவன் பணிகள் இயற்றிடேனோ தெவ்வேளை அடர்க்க வகை தெரியாமல் உழல்தரும் இச் சிறியனேனே.

மேல்

#7 சிறியேன் இப்போது ஏகித் திரு_தணிகை மலை அமர்ந்த தேவின் பாதம் குறியேனோ ஆனந்தக் கூத்தாடி அன்பர்கள்-தம் குழாத்துள் சென்றே அறியேனோ பொருள் நிலையை அறிந்து எனது என்பதை விடுத்து இ அகில மாயை முறியேனோ உடல் புளகம் மூடேனோ நல் நெறியை முன்னி இன்றே.

மேல்

#8 முன்னேனோ திரு_தணிகை அடைந்திட நின் சந்நிதியின் முன்னே நின்று மன்னேனோ அடியருடன் வாழேனோ நின் அடியை வாழ்த்திடேனோ உன்னேனோ நல் நிலையை உலகத்தோர் எல்லீரும் உங்கே வாரும் என்னேனோ நின் பெயரை யார் கூறினாலும் அவர்க்கு இதம் கூறேனோ.

மேல்

#9 கூறேனோ திரு_தணிகைக்கு உற்று உன் அடிப் புகழ்-அதனைக் கூறி நெஞ்சம் தேறேனோ நின் அடியர் திரு_சமுகம் சேரேனோ தீராத் துன்பம் ஆறேனோ நின் அடியன் ஆகேனோ பவ_கடல் விட்டு அகன்றே அப்பால் ஏறேனோ அருள்_கடலில் இழியேனோ ஒழியாத இன்பம் ஆர்ந்தே.

மேல்

#10 தேடேனோ என் நாதன் எங்கு உற்றான் என ஓடித் தேடிச் சென்றே நாடேனோ தணிகை-தனில் நாயகனே நின் அழகை நாடிநாடிக் கூடேனோ அடியருடன் கோவே எம் குகனே எம் குருவே என்று பாடேனோ ஆனந்தப் பரவசமுற்று உன் கமலப் பதம் நண்ணேனோ.

@19. நெஞ்சோடு புலத்தல்

மேல்

#1 வாவா என்ன அருள் தணிகை மருந்தை என் கண் மா மணியைப் பூ வாய் நறவை மறந்து அவ_நாள் போக்கின்றதுவும் போதாமல் மூவா முதலின் அருட்கு ஏலா மூட நினைவும் இன்று எண்ணி ஆவா நெஞ்சே எனைக் கெடுத்தாய் அந்தோ நீ-தான் ஆவாயோ.

மேல்

#2 வாயாத் துரிசு அற்றிடும் புலவோர் வழுத்தும் தணிகை மலை அமுதைக் காயாக் கனியை மறந்து அவ_நாள் கழிக்கின்றதுவும் போதாமல் ஈயாக் கொடியர்-தமக்கன்றி ஏலா நினைவும் இன்று எண்ணி மாயா என்றன் வாழ்வு அழித்தாய் மனமே நீ-தான் வாழ்வாயோ.

மேல்

#3 வாழும்படி நல் அருள் புரியும் மருவும் தணிகை மலைத் தேனைச் சூழும் கலப மயில் அரசைத் துதியாப் பவமும் போதாமல் வீழும் கொடியர்-தமக்கன்றி மேவா நினைவும் மேவி இன்று தாழும்படி என்றனை அலைத்தாய் சவலை மனம் நீ சாகாயோ.

மேல்

#4 காயோம் என நின்றவர்க்கு இனிய கனியாம் தணிகைக் கற்பகத்தைப் போய் ஓர் கணமும் போற்றுகிலாய் புன்மை புரிந்தாய் புலம் கெட்டாய் பேயோ எங்கும் திரிந்து ஓடிப் பேணா என்பைப் பேணுகின்ற நாயோ மனமே நீ உனை நான் நம்பி வாளா நலிந்தேனே.

மேல்

#5 தேனும் கடமும் திகழ் தணிகைத் தேவை நினையாய் தீ நரகம் மானும் நடையில் உழல்கின்றாய் மனமே உன்றன் வஞ்சகத்தால் நானும் இழந்தேன் பெரு வாழ்வை நாய் போல் அலைந்து இங்கு அவமே நீ தானும் இழந்தாய் என்னே உன் தன்மை இழிவாம் தன்மையதே.

மேல்

#6 தன்னால் உலகை நடத்தும் அருள்_சாமி தணிகை சாராமல் பொன்னால் மண்ணால் பூவையரால் புலம்பி வருந்தும் புல் நெஞ்சே உன்னால் என்றன் உயர்வு இழந்தேன் உற்றார் இழந்தேன் உன் செயலைச் சொன்னால் நகைப்பர் எனைவிட்டும் தொலையாய் இங்கு நிலையாயே.

மேல்

#7 நிலைக்கும் தணிகை என் அரசை நீயும் நினையாய் நினைப்பதையும் கலைக்கும் தொழில்கொண்டு எனைக் கலக்கம் கண்டாய் பலன் என் கண்டாயே முலைக்கும் கலைக்கும் விழைந்து அவமே முயங்கும் மூட முழு நெஞ்சே அலைக்கும் கொடிய விடம் நீ என்று அறிந்தேன் முன்னர் அறிந்திலனே.

மேல்

#8 இலதை நினைப்பாய் பித்தர்கள் போல் ஏங்காநிற்பாய் தணிகையில் என் குல_தெய்வமுமாய்க் கோவாய் சற்குருவாய் நின்ற குகன் அருளே நலது என்று அறியாய் யான் செய்த நன்றி மறந்தாய் நாணாது என் வலதை அழித்தாய் வலதொடு நீ வாழ்வாய்-கொல்லோ வல் நெஞ்சே.

மேல்

#9 நெஞ்சே உகந்த துணை எனக்கு நீ என்று அறிந்தே நேசித்தேன் மஞ்சு ஏர் தணிகை மலை அமுதை வாரிக்கொளும்போது என்னுள்ளே நஞ்சே கலந்தாய் உன் உறவு நன்றே இனி உன் நட்பு அகன்றால் உய்ஞ்சேன் இலையேல் வன் நரகத்து_உள்ளேன் கொள்ளேன் ஒன்றையுமே.

மேல்

#10 கொள்ளும் பொழில் சூழ் தணிகை மலைக் கோவை நினையாது எனை நரகில் தள்ளும்படிக்கோ தலைப்பட்டாய் சகத்தின் மடவார்-தம் மயலாம் கள் உண்டு அந்தோ வெறிகொண்டாய் கலைத்தாய் என்னைக் கடந்தோர்கள் எள்ளும்படி வந்து அலைக்கின்றாய் எனக்கென்று எங்கே இருந்தாயோ.

மேல்

#11 இருந்தாய் இங்கு கண்டவிடத்து ஏகாநின்றாய் அவ்விடத்தும் பொருந்தாய் மீண்டும் புகுவாய் பின் போவாய் வருவாய் புகழ்த் தணிகை மருந்தாய் நின்ற குகன் அடியை வழுத்தாய் எனையும் வலிக்கின்றாய் திருந்தாய் நெஞ்சே நின் செயலைச் செப்ப எனக்குத் திடுக்கிடுமே.

@20. புன்மை நினைந் திரங்கல்

மேல்

#1 மஞ்சள் பூச்சின் மினுக்கில் இளைஞர்கள் மயங்கவே செயும் வாள் விழி மாதர்-பால் கெஞ்சிக் கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்துக் கிடந்தனன் ஆயினேன் மஞ்சுற்று ஓங்கும் பொழில் தணிகாசல வள்ளல் என் வினை மாற்றுதல் நீதியே தஞ்சத்தால் வந்து அடைந்திடும் அன்பர்கள்-தம்மைக் காக்கும் தனி அருள்_குன்றமே.

மேல்

#2 முலையைக் காட்டி மயக்கி என் ஆர்_உயிர் முற்றும் வாங்குறும் முண்டைகள் நல் மதி குலையக் காட்டும் கலவிக்கு இசைந்து நின் கோலம் காணக் குறிப்பு_இலன் ஆயினேன் நிலையைக் காட்டும் நல் ஆனந்த_வெள்ளமே நேச நெஞ்சகம் நின்று ஒளிர் தீபமே கலையைக் காட்டும் மதி தவழ் நல் தணிகாசலத்து அமர்ந்து ஓங்கு அதிகாரனே.

மேல்

#3 வஞ்சமே குடிகொண்டு விளங்கிய மங்கையர்க்கு மயல் உழந்தே அவர் நஞ்சம் மேவு நயனத்தில் சிக்கிய நாயினேன் உனை நாடுவது என்று காண் கஞ்சம் மேவும் அயன் புகழ் சோதியே கடப்ப மா மலர்க் கந்த சுகந்தனே தஞ்சமே என வந்தவர்-தம்மை ஆள் தணிகை மா மலைச் சற்குரு நாதனே.

மேல்

#4 பாவம் ஓர் உரு ஆகிய பாவையர் பன்னு கண்_வலைப் பட்டு மயங்கியே கோவை வாய் இதழ்க்கு இச்சையதாகி நின் குரை கழற்கு அன்புகொண்டிலன் ஆயினேன் மேவுவார் வினை நீக்கி அளித்திடும் வேலனே தணிகாசல மேலனே தேவர் தேட அரும் சீர் அருள்_செல்வனே தெய்வயானை திரு_மணவாளனே.

மேல்

#5 கரத்தைக் காட்டியே கண்களை நீட்டியே கடையனேன் உயிர் வாட்டிய கன்னியர் உரத்தைக் காட்டி மயக்க மயங்கினேன் உன்றன் பாத உபயத்தைப் போற்றிலேன் புரத்தைக் காட்டு நகையின் எரித்ததோர் புண்ணியற்குப் புகல் குருநாதனே வரத்தைக் காட்டும் மலைத் தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ.

மேல்

#6 காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் பாசம் நீக்கிடும் அன்பர்கள் போல் எனைப் பாதுகாக்கும் பரம் உனக்கு ஐயனே தேசம் யாவும் புகழ் தணிகாசலச் செல்வமே அருள் சிற்சுக_வாரியே.

மேல்

#7 ஐயம் ஏற்றுத் திரிபவராயினும் ஆசையாம் பொருள் ஈந்திட வல்லரேல் குய்யம் காட்டும் மடந்தையர் வாய்ப்பட்டு உன் கோல மா மலர்ப் பாதம் குறித்திலேன் மை உலாம் பொழில் சூழும் தணிகை வாழ் வள்ளலே வள்ளி_நாயகனே புவிச் சை அறும் பர ஞானிகள் போற்றிடும் சாமியே எனைக் காப்பது உன் தன்மையே.

மேல்

#8 கண்ணைக் காட்டி இரு முலை காட்டி மோகத்தைக் காட்டி அகத்தைக் கொண்டே அழி மண்ணைக் காட்டிடும் மாய வனிதைமார் மாலைப் போக்கி நின் காலைப் பணிவனோ பண்ணைக் காட்டி உருகும் அடியர்-தம் பத்திக் காட்டி முத்திப் பொருள் ஈது என விண்ணைக் காட்டும் திரு_தணிகாசல வேலனே உமையாள் அருள் பாலனே.

மேல்

#9 படியின் மாக்களை வீழ்த்தும் படு_குழி பாவம் யாவும் பழகுறும் பாழ் குழி குடிகொள் நாற்றக் குழி சிறுநீர் தரும் கொடிய ஊற்றுக் குழி புழுக் கொள் குழி கடி மல_குழி ஆகும் கருக் குழிக் கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன் ஒடிவு இல் சீர் தணிகாசல நின் புகழ் ஓதிலேன் எனக்கு உண்டு-கொல் உண்மையே.

மேல்

#10 கச்சுக் கட்டி மணம் கட்டிக் காமுகர் கண்ணைக் கட்டி மனம் கட்டி வஞ்சகம் வச்சுக் கட்டிய வன் கழல் கட்டியும் மண்ணின் கட்டியும் மானும் முலைக் கட்டிக்கு இச்சைக் கட்டி இடும்பை எனும் சுமை ஏறக்கட்டிய எற்கு அருள்வாய்-கொலோ பிச்சைக் கட்டிய பித்தன் புதல்வனே பெருமை கட்டும் பெரும் தணிகேசனே.

@21. திருவடி சூட விழைதல்

மேல்

#1 தேன் ஆர் அலங்கல் குழல் மடவார் திறத்தின் மயங்காத் திறல் அடைதற்கு ஆனார் கொடி என் பெருமான்-தன் அருள் கண்மணியே அற்புதமே கான் ஆர் பொழில் சூழ் திரு_தணிகைக் கரும்பே கருணைப் பெரும் கடலே வானார் அமுதே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#2 தாழும் கொடிய மடவியர்-தம் சழக்கால் உழலாத் தகை அடைந்தே ஆழும் பரமானந்த வெள்ளத்து அழுந்திக் களிக்கும்படி வாய்ப்ப ஊழ் உந்திய சீர் அன்பர் மனத்து ஒளிரும் சுடரே உயர் தணிகை வாழும் பொருளே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#3 மின் உண் மருங்குல் பேதையர்-தம் வெளிற்று மயக்குள் மேவாமே உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனைப் புகழ்வான் பின்னும் சடை எம் பெருமாற்கு ஓர் பேறே தணிகைப் பிறங்கலின் மேல் மன்னும் சுடரே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#4 ஆறாத் துயரம் தரும் கொடியார்க்கு ஆளாய் உழன்று இங்கு அலையாதே கூறாப் பெருமை நின் அடியார் கூட்டத்துடன் போய்க் குலாவும் வண்ணம் தேறாப் பொருளாம் சிவத்து ஒழுகும் தேனே தணிகைத் திரு_மலை வாழ் மாறாச் சுகமே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#5 விரதம் அழிக்கும் கொடியார்-தம் விழியால் மெலியாது உனைப் புகழும் சரதர் அவையில் சென்று நின் சீர்-தனையே வழுத்தும் தகை அடைவான் பரதம் மயில் மேல் செயும் தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம் வாழ் வரதன் மகனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே

மேல்

#6 வெயில் மேல் கீடம் என மடவார் வெய்ய மயல்-கண் வீழாமே. அயில் மேல் கரம் கொள் நினைப் புகழும் அடியார் சபையின் அடையும் வகைக் குயில் மேல் குலவும் திரு_தணிகைக் குணப் பொன்_குன்றே கொள் கலப மயில் மேல் மணியே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#7 தனமும் கடந்தே நாரியர் மால்-தனையும் கடந்தே தவம் அழிக்கும் சினமும் கடந்தே நினைச் சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே வளமும் கடமும் திகழ் தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு மனமும் கடந்தோய் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#8 கல்லாக் கொடிய மடவார்-தம் காமக் குழி-கண் வீழாமே நல்லார்க்கு எல்லாம் நல்லவ நின் நாமம் துதிக்கும் நலம் பெறவே சொல்லால் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை-தனைத் துதிக்க வல்லார்க்கு அருளும் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#9 கள்ளக் கயல் கண் மடவார்-தம் காமத்து உழலாது உனை நினைக்கும் உள்ளத்தவர்-பால் சேர்ந்து மகிழ்ந்து உண்மை உணர்ந்து அங்கு உற்றிடுவான் அள்ளல் பழனத் திரு_தணிகை அரசே ஞான அமுது அளிக்கும் வள்ளல் பெருமான் நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பாயே.

மேல்

#10 பாகைப் பொருவும் மொழி_உடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல் ஓகைப் பெறும் நின் திரு_தொண்டருடன் சேர்ந்து உண்மை உணர்ந்திடுவான் தோகைப் பரி மேல் வரும் தெய்வ சூளாமணியே திரு_தணிகை வாகைப் புயனே நின் திரு_தாள் அடியேன் முடி மேல் வைப்பபாயே.

@22. ஆற்றா விரகம்

மேல்

#1 தணிகை மலையைச் சாரேனோ சாமி அழகைப் பாரேனோ பிணி கையறையைப் பேரேனோ பேரா அன்பு கூரேனோ அணி செய் அருள் நீர் ஆரேனோ ஆறாத் தாகம் தீரேனோ பணி செய் தொழும்பில் சேரேனோ பார் மீது இரங்கும் நீரேனே.

மேல்

#2 எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக்கு இரங்கும் விருப்பாரோ அளியேன் பேர் நெஞ்சு இருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ தெளியேன் யான் என் செய்கேனே தென்-பால் தணிகைப் பொருப்பாரே.

மேல்

#3 செய் கொள் தணிகை நாடேனோ செவ்வேள் புகழைப் பாடேனோ கைகள் கூப்பி ஆடேனோ கருணைக் கடலில் நீடேனோ மெய் கொள் புளகம் மூடேனோ மெய் அன்பர்கள்-பால் கூடேனோ பொய் கொள் உலகோடு ஊடேனோ புவி மீது இரு_கால்_மாடேனே.

மேல்

#4 வந்து என் எதிரில் நில்லாரோ மகிழ ஒரு சொல் சொல்லாரோ முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீரப் புல்லாரோ கந்தன் எனும் பேர் அல்லாரோ கருணை நெஞ்சம் கல்லாரோ சந்தத் தணிகை இல்லாரோ சகத்தில் எல்லாம்_வல்லாரே.

மேல்

#5 நாட்டும் தணிகை நண்ணேனோ நாதன் புகழை எண்ணேனோ கூட்டும் தொழும்பு பண்ணேனோ குறையா அருள் நீர் உண்ணேனோ சூட்டும் மயக்கை மண்ணேனோ தொழும்பர் இடத்தை அண்ணேனோ காட்டும் அவர் தாள் கண்ணோனோ கழியா வாழ்க்கைப் புண்ணேனே.

மேல்

#6 காமப் பயலைத் தடுப்பாரோ கடப்ப மலர்த் தார் கொடுப்பாரோ ஏமத்தனத்தைக் கடுப்பாரோ என் மேல் அன்பை விடுப்பாரோ மா மற்றொரு வீடு அடுப்பாரோ மனத்தில் கோபம் தொடுப்பாரோ தாமத் தாழ்வைக் கெடுப்பாரோ தணிகை-தனில் வேல் எடுப்பாரே.

மேல்

#7 காவி மலை-கண் வதியேனோ கண்ணுள் மணியைத் துதியேனோ பாவி மயலை மிதியேனோ பரமானந்தத்து உதியேனோ ஓவு இல் அருளைப் பதியேனோ உயர்ந்த தொழும்பில் கதியேனோ தா இல் சுகத்தை மதியேனோ சற்றும் பயன் இல் ஒதியேனே.

மேல்

#8 வருந்தும் தனி முன் மன்னாரோ வருத்தம் உனக்கு ஏன் என்னாரோ இருந்து என் இடத்தே துன்னாரோ இணை_தாள் ஈய உன்னாரோ பொருந்து இங்கு அயலார் அன்னாரோ பொருள் ஈது என்று பன்னாரோ செருந்தி மலரும் திரு_தணிகைத் தேவர் எவர்க்கும் முன்னாரே.

மேல்

#9 தணிகாசலம் போய்த் தழையேனோ சாமி திரு_தாள் விழையேனோ பணி காதலித்துப் பிழையேனோ பாடி மனது குழையேனோ திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே.

மேல்

#10 மன்னும் குவளை ஈயாரோ மதவேள் மதத்தைக் காயாரோ இன்னும் கோபம் ஓயாரோ என் தாய்-தனக்குத் தாயாரோ துன்னும் இரக்கம் தோயாரோ துகளேன் துயரை ஆயாரோ பன்னும் வளங்கள் செறிந்து ஓங்கும் பணை கொள் தணிகைத் தூயாரே.

@23. ஏழைமையின் இரங்கல்

மேல்

#1 தேனே உளம்கொள் தெளிவே அகண்ட சிதம் மேவி நின்ற சிவமே கோனே கனிந்த சிவ போத ஞான குருவே விளங்கு குகனே தானே தனக்கு நிகராய் விளங்கு தணிகாசலத்து எம் அரசே நான் ஏழை இங்கு மனம் நொந்துநொந்து நலிகின்ற செய்கை நலமோ.

மேல்

#2 நலம் மேவு தொண்டர் அயன் ஆதி தேவர் நவை ஏக நல்கு தணிகா சலம் மேவி உன்றன் இரு தாள் புகழ்ந்து தரிசிப்பது என்று புகலாய் நிலம் மேவுகின்ற சிவயோகர் உள்ளம் நிகழ்கின்ற ஞான நிறைவே வலம் மேவு வேல் கை ஒளிர் சேர் கலாப மயில் ஏறி நின்ற மணியே.

மேல்

#3 மணியே கலாப மலை மேல் அமர்ந்த மதியே நினைச் சொல்_மலரால் அணியேன் நல் அன்பும் அமையேன் மனத்தில் அடியார் அடி-கண் மகிழ்வாய்ப் பணியேன் நினைந்து பதையேன் இருந்து பருகேன் உவந்தபடியே எணியே நினைக்கில் அவமாம் இ ஏழை எது பற்றி உய்வது அரசே.

மேல்

#4 உய் வண்ணம் இன்றி உலகாதரத்தில் உழல்கின்ற மாய மடவார் பொய் வண்ணம் ஒன்றின் மனம் மாழ்கி அண்மை புரிதந்து நின்ற புலையேன் மெய் வண்ணம் ஒன்று தணிகாசலத்து மிளிர்கின்ற தேவ விறல் வேல் கை_வண்ண உன்றன் அருள் வண்ணம் ஆன கழல் வண்ணம் நண்ணல் உளதோ.

மேல்

#5 நண்ணாத வஞ்சர் இடம் நாடி நெஞ்சம் நனி நொந்து நைந்து நவையாம் புண்ணாகி நின்ற எளியேனை அஞ்சல் புரியாது நம் பொன்_அடியை எண்ணாத பாவி இவன் என்று தள்ளின் என் செய்வது உய்வது அறியேன் தண் ஆர் பொழில்-கண் மதி வந்து உலாவு தணிகாசலத்து இறைவனே.

மேல்

#6 இறையேனும் உன்றன் அடி எண்ணி அங்கி இழுது என்ன நெஞ்சம் இளகேன் மறை ஓதும் உன்றன் அருள் பெற்ற தொண்டர் வழிபட்டு அலங்கல் அணியேன் குறையோடும் இங்கு மயல்கொண்டு நின்ற கொடியேனை ஆளல் உளதோ நிறையோர் வணங்கு தணிகாசலத்தில் நிலைபெற்று இருக்கும் அவனே.

மேல்

#7 அவம் நாள் கழிக்க அறிவேன் அலாது உன் அடி பேணி நிற்க அறியேன் தவம் நாடும் அன்பரோடு சேர வந்து தணிகாசலத்தை அடையேன் எவன் நான் எனக்கும் அவண் நீ இருக்கும் இடம் ஈயில் உன்றன் அடியார் இவன் ஆர் இவன்றன் இயல்பு என்ன என்னில் எவன் என்று உரைப்பை எனையே.

மேல்

#8 எனை யான் அறிந்து உன் அடி சேர உன்னை இறையேனும் நெஞ்சின் இதமாய் நினையேன் அயர்ந்து நிலையற்ற தேகம் நிசம் என்று உழன்று துயர்வேன்- தனையே நின் அன்பன் என ஓதில் யாவர் தகும் என்று உரைப்பர் அரசே வனை ஏர்கொளும் செய் தணிகாசலத்து மகிழ்வோடு அமர்ந்த அமுதே.

மேல்

#9 முதுவோர் வணங்கு தணிகாசலத்து முதலே இ ஏழை முறியேன் மதுவால் மயங்கும் அளி போல் மயங்கி மதியாது நின்ற பிழையால் விது ஆகி அன்பர் உளம் மேவும் நீ கைவிடில் ஏழை எங்கு மெலிவேன் இது நீதி அல்ல என உன்றனக்கும் எவர் சொல்ல வல்லர் அரசே.

@24.பணித்திறஞ் சாலாப் பாடிழிவு

மேல்

#1 அடுத்திலேன் நின் அடியர் அவைக்குள் சற்றும் அன்பு இலேன் நின் தொழும்பன் ஆகேன் வஞ்சம் தடுத்திலேன் தணிகை-தனில் சென்று நின்னைத் தரிசனம்செய்தே மதுரத் தமிழ்ச் சொல் மாலை தொடுத்திலேன் அழுது நினது அருளை வேண்டித் தொழுதுதொழுது ஆனந்தத் தூய் நீர் ஆடேன் எடுத்திலேன் நல்லன் எனும் பெயரை அந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#2 திரப்படுவேன் மையல் புரி மாய வாழ்வில் தியங்குவேன் சிறிதேனும் தெளிவு ஒன்று இல்லேன் மரப்படுவேன் சிதடருடன் திரிவேன் வீணே மங்கையர்-தம் கண்கள் எனும் வலைக்குள் வீழ்வேன் கரப்பவர்க்கு முற்படுவேன் கருணை இல்லேன் கண் அனையாய் நின் தணிகைமலையைக் காணேன் இரப்பவர்க்கு ஓர் அணுவளவும் ஈயேன் பேயேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#3 செய்திலேன் நின் தொண்டர் அடிக் குற்றேவல் திரு_தணிகை மலையை வலஞ்செய்து கண்ணீர்ப் பெய்திலேன் புலன் ஐந்தும் ஒடுக்கி வீதல் பிறத்தல் எனும் கடல் நீந்தேன் பெண்கள்-தம்மை வைதிலேன் மலர் கொய்யேன் மாலை சூட்டேன் மணியே நின் திரு_புகழை வழுத்தேன் நின்-பால் எய்திலேன் இ உடல் கொண்டு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#4 சீர்கொண்டார் புகழ் தணிகை மலையில் சேரேன் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே நின் பேர்கொண்டார்-தமை வணங்கி மகிழேன் பித்தேன் பெற்றதே அமையும் எனப் பிறங்கேன் மாதர் வார்கொண்டார் முலை மலை வீழ்ந்து உருள்வேன் நாளும் வஞ்சமே செய்திடுவேன் மதி ஒன்று இல்லேன் ஏர்கொண்டார் இகழ்ந்திட இங்கு ஏழையேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#5 காமாந்தகாரியாய் மாதர் அல்குல் கடல் வீழ்ந்தேன் மதி தாழ்ந்தேன் கவலை சூழ்ந்தேன் நாமாந்தகனை உதைத்த நாதன் ஈன்ற நாயக மா மணியே நல் நலமே உன்றன் பூ மா தண் சேவடியைப் போற்றேன் ஓங்கும் பொழில் கொள் தணிகாசலத்தைப் புகழ்ந்து பாடேன் ஏமாந்த பாவியேன் அந்தோ அந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#6 நன்று அறியேன் தீங்கு அனைத்தும் பறியேன் பொல்லா நங்கையர்-தம் கண் மாய நவையைச் சற்றும் வென்று அறியேன் கொன்று அறிவார்-தம்மைக் கூடும் வேடனேன் திரு_தணிகை வெற்பின் நின்-பால் சென்று அறியேன் இலை என்பது அறிவேன் ஒன்றும் செய்து அறியேன் சிவ_தருமம் செய்வோர் நல்லோர் என்று அறியேன் வெறியேன் இங்கு அந்தோஅந்தோ ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#7 அல் ஆர்க்கும் குழலார் மேல் ஆசைவைப்பேன் ஐயா நின் திரு_தாள் மேல் அன்புவையேன் செல் ஆர்க்கும் பொழில் தணிகை எங்கே என்று தேடிடேன் நின் புகழைச் சிந்தைசெய்யேன் கல்லார்க்கும் கடு மனத்தேன் வன்கணேன் புன்கண்ணினேன் உதவாத கையேன் பொய்யேன் எல்லார்க்கும் பொல்லாத பாவியேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#8 அரும்பாய நகை மடவார்க்கு ஆளாய் வாளா அலைக்கின்றேன் அறிவு என்பது அறியேன் நின்-பால் திரும்பாத பாதகனேன் திரு ஒன்று இல்லேன் திரு_தணிகை மலைக்கு ஏகச் சிந்தைசெய்யேன் கரும்பாய வெறுத்து வேம்பு அருந்தும் பொல்லாக் காக்கை ஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா இரும்பாய வன் நெஞ்சக் கள்வனேன் யான் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

மேல்

#9 அம்பு ஆதல் நெடும்_கண்ணார்க்கு இச்சைகொள்வேன் அகம் மலர முகம் மலர்வோடு அருள்செய் உன்றன் செம் பாத_மலர் ஏத்தேன் இலவு காத்தேன் திரு_தணிகையே நமது செல்வம் என்றே நம்பாத கொடியேன் நல்லோரைக் கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயின் பொல்லேன் எம் பாதகத்தை எடுத்து யார்க்குச் சொல்வேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே

மேல்

#10 பண்ணேன் நின் புகழ் சொல்வோர்-தமக்குப் பூசை பாடேன் நின் திரு_சீரைப் பரமன் ஈன்ற கண்ணே நின் தணிகை-தனைக் கண்டு போற்றேன் கைகுவியேன் மெய் குளிரேன் கண்ணீர் பாயேன் உண்ணேன் நல் ஆனந்த அமுதை அன்பர் உடன் ஆகேன் ஏகாந்தத்து உற ஓர் எண்ணம் எண்ணேன் வன் துயர் மண்ணேன் மனம் செம் புண்ணேன் ஏன் பிறந்தேன் புவிச் சுமையா இருக்கின்றேனே.

@25.காணாப் பத்து

மேல்

#1 வரம் கொள் அடியர் மன_மலரில் மகிழ்வுற்று அமர்ந்த மா மணியே திரம் கொள் தணிகை மலை வாழும் செல்வப் பெருக்கே சிற்பரமே தரம் கொள் உலக மயல் அகலத் தாழ்ந்து உள் உருக அழுதழுது கரம் கொள் சிரத்தோடு யான் உன்னைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#2 வல்லி ஒருபால் வானவர்-தம் மகள் ஆண்டு ஒருபால் வர மயில் மேல் எல்லின் இலங்கு நெட்டு இலை வேல் ஏந்தி வரும் என் இறையவனே சொல்லி அடங்காத் துயர் இயற்றும் துகள் சேர் சனனப் பெரு வேரைக் கல்லி எறிந்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே

மேல்

#3 உருத்து உள் இகலும் சூர்_முதலை ஒழித்து வானத்து ஒண்_பதியைத் திருத்தும் அரைசே தென் தணிகைத் தெய்வ மணியே சிவஞானம் அருத்தும் நினது திரு_அருள் கொண்டு ஆடிப் பாடி அன்பு-அதனால் கருத்துள் உருகி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#4 போதல் இருத்தல் என நினையா புனிதர் சனனப் போரோடு சாதல் அகற்றும் திரு_தணிகைச் சைவக் கனியே தற்பரமே ஓதல் அறியா வஞ்சகர்-பால் உழன்றே மாதர்க்கு உள் உருகும் காதல் அகற்றி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#5 வீட்டைப் பெறுவோர் உள் அகத்து விளங்கும் விளக்கே விண்ணோர்-தம் நாட்டை நலம்செய் திரு_தணிகை நகத்தில் அமர்ந்த நாயகமே கேட்டைத் தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் காட்டைக் கடந்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#6 மட்டித்து அளறுபடக் கடலை மலைக்கும் கொடிய மா உருவைச் சட்டித்து அருளும் தணிகையில் எம் தாயே தமரே சற்குருவே எட்டிக்கனியாம் இ உலகத்து இடர் விட்டு அகல நின் பதத்தைக் கட்டித் தழுவி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#7 இலக்கம் அறியா இரு_வினையால் இ மானிடம் ஒன்று எடுத்து அடியேன் விலக்கம் அடையா வஞ்சகர்-பால் வீண் நாள் போக்கி மேவி மனத்து அலக்கண் இயற்றும் பொய் வாழ்வில் அலைந்தேன் தணிகை அரசே அக் கலக்கம் அகன்று நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#8 விரை வாய் கடப்பம் தார் அணிந்து விளங்கும் புயனே வேலோனே தரை வாய் தவத்தால் தணிகை அமர் தரும_கடலே தனி அடியேன் திரை வாய் சனனக் கடல் படிந்தே தியங்கி அலைந்தேன் சிவஞானக் கரை வாய் ஏறி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#9 பள்ள உலகப் படு_குழியில் பரிந்து அங்கு உழலாது ஆனந்த வெள்ளத்து அழுந்தும் அன்பர் விழி விருந்தே தணிகை வெற்பு அரசே உள்ளம் அகல அங்குமிங்கும் ஓடி அலையும் வஞ்ச நெஞ்சக் கள்ளம் அகற்றி நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

மேல்

#10 அடலை அணிந்து ஓர் புறங்காட்டில் ஆடும் பெருமான் அளித்து அருளும் விடலை என மூவரும் புகழும் வேலோய் தணிகை மேலோயே நடலை உலக நடை அளற்றை நண்ணாது ஓங்கும் ஆனந்தக் கடலை அடுத்து நின் உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே.

@26.பணித்திறஞ் சாலாமை

மேல்

#1 வஞ்சகப் பேதையர் மயக்கில் ஆழ்ந்து உழல் நெஞ்சகப் பாவியேன் நினைந்திலேன் ஐயோ வெம் சகப் போரினை விட்டுளோர் புகழ் தஞ்சகத் தணிகை வாழ் தருமவானையே.

மேல்

#2 வான் நிகர் கூந்தலார் வன்கணால் மிக மால் நிகழ் பேதையேன் மதித்திலேன் ஐயோ தான் இரும் புகழ் கொளும் தணிகை மேல் அருள் தேன் இருந்து ஒழுகிய செங்கரும்பையே.

மேல்

#3 கரும் கடு நிகர் நெடும் கண்ணினார் மயல் ஒருங்குறு மனத்தினேன் உன்னிலேன் ஐயோ தரும் புகழ் மிகுந்திடும் தணிகை மா மலை மருங்கு அமர்ந்து அன்பர் உள் மன்னும் வாழ்வையே.

மேல்

#4 வை வளர் வாள்_கணார் மயக்கில் வீழ்ந்து அறாப் பொய் வளர் நெஞ்சினேன் போற்றிலேன் ஐயோ மெய் வளர் அன்பர்கள் மேவி ஏத்துறும் செய் வளர் தணிகையில் செழிக்கும் தேனையே.

மேல்

#5 செழிப்படும் மங்கையர் தீய மாயையில் பழிப்படும் நெஞ்சினேன் பரவிலேன் ஐயோ வழிப்படும் அன்பர்கள் வறுமை நீக்கியே பொழிற்படும் தணிகையில் பொதிந்த பொன்னையே.

மேல்

#6 பொதிதரும் மங்கையர் புளகக் கொங்கை மேல் வதிதரும் நெஞ்சினேன் மதித்திலேன் ஐயோ மதி தரும் அன்பர்-தம் மனத்தில் எண்ணிய கதி தரும் தணிகை வாழ் கற்பகத்தையே.

@27. குறை நேர்ந்த பத்து

மேல்

#1 வான் பிறந்தார் புகழ் தணிகை மலையைக் கண்டு வள்ளலே நின் புகழை மகிழ்ந்து கூறேன் தேன் பிறந்த மலர்க் குழலார்க்கு ஆளா வாளா திரிகின்றேன் புரிகின்றேன் தீமை நாளும் ஊன் பிறந்த உடல் ஓம்பி அவமே வாழ்நாள் ஒழிக்கின்றேன் பழிக்கு ஆளாய் உற்றேன் அந்தோ ஏன் பிறந்தேன் ஏன் பிறந்தேன் பாவியேன் யான் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

மேல்

#2 மெய்யாவோ நல் தணிகை மலையைச் சார்ந்து மேன்மையுறும் நின் புகழை விரும்பி ஏத்தேன் உய்யாவோ வல் நெறியேன் பயன்படாத ஓதி அனையேன் எட்டி-தனை ஒத்தேன் அன்பர் பொய்யா ஓடு என மடவார் போகம் வேட்டேன் புலையனேன் சற்றேனும் புனிதம் இல்லேன் ஐயாவோ நாணாமல் பாவியேன் யான் யார்க்கு எடுத்து என் குறை-தன்னை அறைகுவேனே.

மேல்

#3 வாள் செல்லா நெடும்_கண்ணார் மயலில் வீழ்ந்து மனம்போனவழி சென்று வருந்தாநின்றேன் சேண் செல் ஆர் வரைத் தணிகைத் தேவ தேவே சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே-தான் நாள் செல்லாநின்றது இனி என் செய்கேனோ நாயினேன் பிழை-தன்னை நாடி நின்-பால் கோள் சொல்லாநிற்பர் எனில் என் ஆமோ என் குறையை எடுத்து எவர்க்கு எளியேன் கூறுகேனே.

மேல்

#4 பொல்லாத மங்கையர்-தம் மயற்கு உள்ளாகும் புலைய மனத்தால் வாடிப் புலம்புகின்றேன் கல்லாத பாவி என்று கைவிட்டாயோ கருணை உரு ஆகிய செங்கரும்பே மேரு வில்லான்-தன் செல்வமே தணிகை மேவும் மெய்ஞ்ஞான ஒளியே இ வினையேன் துன்பம் எல்லாம் நீ அறிவாயே அறிந்தும் வாராதிருந்தால் என் குறையை எவர்க்கு இயம்புகேனே.

மேல்

#5 முன் அறியேன் பின் அறியேன் மாதர்-பால் என் மூட மனம் இழுத்து ஓடப் பின் சென்று எய்த்தேன் புல் நெறியேன் பொய்யரொடும் பயின்றேன் நின்றன் புனித அருள்_கடல் ஆடேன் புளகம் மூடேன் பொன்_அரையன் தொழும் சடிலப் புனிதன் ஈன்ற புண்ணியமே தணிகை வளர் போத வாழ்வே என் அரைசே என் அமுதே நின்-பால் அன்றி எவர்க்கு எடுத்து என் குறை-தன்னை இயம்புகேனே.

மேல்

#6 விடு_மாட்டில் திரிந்து மட மாதரார்-தம் வெய்ய நீர்க் குழி வீழ்ந்து மீளா நெஞ்சத் தடுமாற்றத்தொடும் புலைய உடலை ஓம்பிச் சார்ந்தவர்க்கு ஓர் அணுவளவும் தான் ஈயாது படு_காட்டில் பலன் உதவாப் பனை போல் நின்றேன் பாவியேன் உடல் சுமையைப் பலரும் கூடி இடுகாட்டில் வைக்குங்கால் என் செய்வேனோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

மேல்

#7 மின்னை நேர் இடை மடவார் மயல் செய்கின்ற வெம் குழியில் வீழ்ந்து அழுந்தி வெறுத்தேன் போலப் பின்னையே எழுந்தெழுந்து மீட்டும் மீட்டும் பேய் போல வீழ்ந்து ஆடி மயற்குள் மூழ்கிப் பொன்னையே ஒத்த உனது அருளை வேண்டிப் போற்றாது வீணே நாள் போக்குகின்ற என்னையே யான் சிரிப்பேனாகில் அந்தோ என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

மேல்

#8 முலை ஒருபால் முகம் ஒருபால் காட்டும் பொல்லா மூட மடவார்கள்-தமை முயங்கி நின்றேன் இலை ஒருபால் அனம் ஒருபால் மலம் சேர்த்து உண்ணும் ஏழை மதியேன் தணிகை ஏந்தலே பொன் மலை ஒருபால் வாங்கிய செவ் வண்ண மேனி வள்ளல் தரு மருந்தே நின் மலர்_தாள் ஏத்தேன் புலை உருவா வஞ்சக நெஞ்சு உடையேன் என்றன் புன்மை-தனை எவர்க்கு எடுத்துப் புகலுவேனே.

மேல்

#9 வேய் பால் மென் தோள் மடவார் மறைக்கும் மாய வெம் புழுச் சேர் வெடிப்பினிடை வீழ்ந்து நின்றேன் தாய்_பாலை உண்ணாது நாய்_பால் உண்ணும் தகையனேன் திரு_தணிகை-தன்னைச் சார்ந்து ஆய்_பாலை_ஒருமருங்கான் ஈன்ற செல்வத்து ஆர்_அமுதே நின் அருளை அடையேன் கண்டாய் ஏய் பாலை நடும் கருங்கல் போல் நின்று எய்த்தேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

மேல்

#10 வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடைக் கிருமி என வாளா வீழ்ந்தேன் கஞ்ச மலர் மனையானும் மாலும் தேடக் காணாத செங்கனியில் கனிந்த தேனே தஞ்சம் என்போர்க்கு அருள் புரியும் வள்ளலே நல் தணிகை அரைசே உனது தாளைப் போற்றேன் எஞ்சல் இலா வினைச் சேம இடமாய் உற்றேன் என் குறையை எவர்க்கு எடுத்து இங்கு இயம்புகேனே.

@28. முறையிட்ட பத்து

மேல்

#1 பொன்னைப் பொருளா நினைப்போர்-பால் போந்து மிடியால் இரந்து அலுத்தேன் நின்னைப் பொருள் என்று உணராத நீசன் இனி ஓர் நிலை காணேன் மின்னைப் பொருவும் சடைப் பவள வெற்பில் விளைந்த வியன் கரும்பே முன்னை_பொருளே தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#2 மக்கள்_பிறவி எடுத்தும் உனை வழுந்தாக் கொடிய மரம் அனையேன் துக்க_கடலில் வீழ்ந்து மனம் சோர்கின்றேன் ஓர் துணை காணேன் செக்கர்ப் பொருவு வடி வேல் கைத் தேவே தெவிட்டாத் தெள் அமுதே முக்கண் கரும்பின் முழு முத்தே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#3 அன்பின் உனது திரு_அடிக்கே ஆளாய்த் தொண்டு ஒன்று ஆற்றாதே துன்பின் உடையோர்-பால் அணுகிச் சோர்ந்தேன் இனி ஓர் துணை காணேன் என்பில் மலிந்த மாலை புனை எம்மான் தந்த பெம்மானே முன்பின் நடுவாய் முளைத்தோனே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#4 அருகா மலத்தில் அலைந்து இரக்கம் அறியா வஞ்ச நெஞ்சகர்-பால் உருகா வருந்தி உழன்று அலைந்தேன் உன் தாள் அன்றித் துணை காணேன் பெருகு ஆதரவில் சிவன் பெறும் நல் பேறே தணிகைப் பெரு வாழ்வே முருகா முகம் மூவிரண்டு உடையாய் முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#5 பொன் நின்று ஒளிரும் மார்பன் அயன் போற்றும் உன் தாள் புகழ் மறந்தே கல் நின்று அணங்கும் மனத்தார்-பால் கனிந்தேன் இனி ஓர் துணை காணேன் மின் நின்று இலங்கு சடைக் கனியுள் விளைந்த நறவே மெய் அடியார் முன் நின்று அருளும் தணிகையனே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#6 வெதிர் உள்ளவரின் மொழி கேளா வீணரிடம் போய் மிக மெலிந்தே அதிரும் கழல் சேவடி மறந்தேன் அந்தோ இனி ஓர் துணை காணேன் எதிரும் குயில் மேல் தவழ் தணிகை இறையே முக்கண் இயல் கனியின் முதிரும் சுவையே முதல்_பொருளே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#7 ஈனத்து இவறும் மனக் கொடியோரிடம் போய் மெலிந்து நாள்-தோறும் ஞானத் திரு_தாள் துணை சிறிதும் நாடேன் இனி ஓர் துணை காணேன் தானத் தறுகண் மலை உரியின் சட்டை புனைந்தோன் தரும் பேறே மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#8 தேவே என நின் போற்றாத சிறியரிடம் போய்த் தியங்கி என்றன் கோவே நின்றன் திரு_தாளைக் குறிக்க மறந்தேன் துணை காணேன் மா வேழத்தின் உரி புனைந்த வள்ளற்கு இனிய மகப்பேறே மூ_வேதனையை அறுத்து அருள்வோய் முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#9 வேதா நந்தனொடு போற்றி மேவப்படும் நின் பதம் மறந்தே ஈ தானம் தந்திடுவீர் என்று ஈனரிடம் போய் இரந்து அலைந்தேன் போதானந்தப் பரசிவத்தில் போந்த பொருளே பூரணமே மூது ஆநந்த வாரிதியே முறையோ முறையோ முறையேயோ.

மேல்

#10 வடியாக் கருணை_வாரிதியாம் வள்ளல் உன் தாள்_மலர் மறந்தே கொடியாரிடம் போய்க் குறையிரந்தேன் கொடியேன் இனி ஓர் துணை காணேன் அடியார்க்கு எளிய முக்கண் உடை அம்மான் அளித்த அரு_மருந்தே முடியா முதன்மைப் பெரும் பொருளே முறையோ முறையோ முறையேயோ.

@29. நெஞ்சவலங் கூறல்

மேல்

#1 இழுதை நெஞ்சினேன் என் செய்வான் பிறந்தேன் ஏழை மார் முலைக்கே விழைந்து உழன்றேன் பழுதை பாம்பு என மயங்கினன் கொடியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் அழுது கண்கள் நீர் ஆர்ந்திடும் அடியர் அகத்துள் ஊறிய ஆனந்த அமுதே தொழுது மால் புகழ் தணிகை என் அரசே தோன்றலே பரஞ்சுடர் தரும் ஒளியே.

மேல்

#2 வஞ்ச நெஞ்சினேன் வல் விலங்கு அனையேன் மங்கைமார் முலை மலை-தனில் உருள்வேன் பஞ்ச_பாதகம் ஓர் உரு எடுத்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் கஞ்சன் மால் புகழ் கருணை அம் கடலே கண்கள் மூன்று உடைக் கரும்பு ஒளிர் முத்தே அஞ்சல் அஞ்சல் என்று அன்பரைக் காக்கும் அண்ணலே தணிகாசலத்து அரசே

மேல்

#3 மையல் நெஞ்சினேன் மதி இலேன் கொடிய வாள்_கணார் முலை மலைக்கு உபசரித்தேன் பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் மெய்யர் உள்ளகம் விளங்கு ஒளி விளக்கே மேலையோர்களும் விளம்ப அரும் பொருளே செய்ய மேனி என் சிவபிரான் அளித்த செல்வமே திரு_தணிகை அம் தேவே.

மேல்

#4 மதி இல் நெஞ்சினேன் ஒதியினை அனையேன் மாதர் கண் எனும் வலையிடைப் பட்டேன் பதி இல் ஏழையேன் படிற்று வஞ்சகனேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் பொதியில் ஆடிய சிவபிரான் அளித்த புண்ணியா அருள் போதக நாதா துதி இராமனுக்கு அருள்செயும் தணிகைத் தூயனே பசும் தோகை_வாகனனே.

மேல்

#5 துட்ட நெஞ்சினேன் எட்டியை அனையேன் துயர் செய் மாதர்கள் சூழலுள் தினமும் பட்ட வஞ்சனேன் என் செய உதித்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் நட்டம் ஆடிய நாயகன் அளித்த நல்ல மாணிக்க நாயக மணியே மட்டு அறாப் பொழில் சூழ் திரு_தணிகை வள்ளலே மயில்_வாகன தேவே

மேல்

#6 காயும் நெஞ்சினேன் பேயினை அனையேன் கடி கொள் கோதையர் கண்_வலைப் பட்டேன் பாயும் வெம் புலி நிகர்த்த வெம் சினத்தேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் தாயும் தந்தையும் சாமியும் எனது சார்பும் ஆகிய தணிகை அம் குகனே ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்து ஆடும் ஐயர் தந்து அருள் ஆனந்தப் பேறே.

மேல்

#7 தீங்கு நெஞ்சினேன் வேங்கையை அனையேன் தீய மாதர்-தம் திறத்து உழல்கின்றேன் பாங்கிலாரொடும் பழகிய வெறியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் தேங்கு கங்கையைச் செஞ்சடை இருத்தும் சிவபிரான் செல்வத் திரு_அருள் பேறே ஓங்கு நல் தணிகாசலத்து அமர்ந்த உண்மையே எனக்கு உற்றிடும் துணையே.

மேல்

#8 கள்ள நெஞ்சினேன் நஞ்சினை அனையேன் கடிய மாதர்-தம் கருக் குழி எனும் ஓர் பள்ளம் ஆழ்ந்திடு புலையனேன் கொலையேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் வெள்ள வார் சடை வித்தகப் பெருமான் வேண்ட நல் பொருள் விரித்து உரைத்தோனே புள் அலம்பு தண் வாவி சூழ் தணிகைப் பொருப்பு அமர்ந்திடும் புனித பூரணனே.

மேல்

#9 மத்த நெஞ்சினேன் பித்தரில் திரிவேன் மாதர் கண்களின் மயங்கி நின்று அலைந்தேன் பத்தி என்பது ஓர் அணுவும் உற்றில்லேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் பித்த நாயகன் அருள் திரு_பேறே பிரமன் மாலுக்கும் பேச அரும் பொருளே தத்தை பாடுறும் பொழில் செறி தணிகாசலத்தின் மேவிய தற்பர ஒளியே.

மேல்

#10 அழுக்கு நெஞ்சினேன் பொய் அலது அறியேன் அணங்கனார் மயல் ஆழத்தில் விழுந்தேன் பழுக்கும் மூடருள் சேர்ந்திடும் கொடியேன் பாவியேன் எந்தப் பரிசு கொண்டு அடைவேன் மழு கை ஏந்திய மாசிலா மணிக்குள் மன்னி ஓங்கிய வளர் ஒளிப் பிழம்பே வழுக்கு இலார் புகழ் தணிகை என் அரசே வள்ளலே என்னை வாழ்விக்கும் பொருளே.

@30. ஆற்றாப் புலம்பல்

மேல்

#1 அண்ணாவோ என் அருமை ஐயாவோ பன்னிரண்டு கண்ணாவோ வேல் பிடித்த கையாவோ செம் பவள வண்ணாவோ நல் தணிகை மன்னாவோ என்றென்றே எண்ணாவோ துன்பத்து இரும் கடற்குள் மன்னினனே

மேல்

#2 மன்ன பார் போற்று மணியே நின் பொன்_அருளைத் துன்னப்பாராது சுழன்றேன் அருணைகிரி- தன் அப்பா நல் தணிகை-தன்னில் அமர்ந்து அருளும் என் அப்பா இன்னும் இந்த ஏழைக்கு இரங்காயோ

மேல்

#3 காய்நின்ற நெஞ்சக் கடையேன் திரு_தணிகை வாய் நின்று உனது புகழ் வாய் பாடக் கைகுவித்துத் தூய் நின்றே தாளைத் தொழுது ஆடித் துன்பம் எலாம் போய் நின்று அடைவேனோ புண்ணிய நின் பொன்_அருளே

மேல்

#4 பொன் பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இ உலகில் வன் பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே என்பு இணைத் தார் வள்ளற்கு இனிமை பெறும் மணியே அன்பு இணைத்தோர் போற்றும் அருள் தணிகை மன்னவனே.

மேல்

#5 வன் நோயும் வஞ்சகர்-தம் வன் சார்பும் வன் துயரும் என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ அன்னோ முறை போகி ஐயா முறையேயோ மன்னோ முறை தணிகை வாழ்வே முறையேயோ.

@31. திரு அருள் விழைதல்.

மேல்

#1 தாணு ஈன்று அருள் செல்வமே தணிகையில் சாமியே நினை ஏத்திக் காணுவேன்_இலை அருள் இவண் புன்மையில் காலங்கள் கழிக்கின்றேன் மாணும் அன்பர்கள் என் சொலார் ஐய நீ வந்து எனக்கு அருள்வாயேல் நாணுவேனலன் நடுங்கலன் ஒடுங்கலன் நாயினும் கடையேனே.

மேல்

#2 கடைப்பட்டு ஏங்கும் இ நாயினுக்கு அருள்தரக் கடவுள் நீ வருவாயேல் மடைப்பட்டு ஓங்கிய அன்பகத் தொண்டர்கள் வந்து உனைத் தடுப்பாரேல் தடைப்பட்டாய் எனில் என் செய்வேன் என் செய்வேன் தளர்வது தவிரேனே அடைப்பட்டு ஓங்கிய வயல் திரு_தணிகை அம் பதி அமர்ந்திடு தேவே.

மேல்

#3 தேவரே முதல் உலகங்கள் யாவையும் சிருட்டி ஆதிய செய்யும் மூவரே எதிர்வருகினும் மதித்திடேன் முருக நின் பெயர் சொல்வோர் யாவரேனும் என் குடி முழுது ஆண்டு எனை அளித்தவர் அவரே காண் தாவ நாடொணாத் தணிகை அம் பதியில் வாழ் சண்முகப் பெருமானே.

@32. புண்ணிய நீற்று மான்மியம்

மேல்

#1 திவசங்கள்-தொறும் கொண்டிடு தீமைப் பிணி தீரும் பவ சங்கடம் அறும் இ இக_பரமும் புகழ் பரவும் கவசங்கள் எனச் சூழ்ந்துறு கண்ணேறது தவிரும் சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே.

மேல்

#2 மால் ஏந்திய சூழலார் தரு மயல் போம் இடர் அயல் போம் கோல் ஏந்திய அரசாட்சியும் கூடும் புகழ் நீடும் மேல் ஏந்திய வான்_நாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ் வேல் ஏந்திய முருகா என வெண் நீறு அணிந்திடிலே.

மேல்

#3 தவம் உண்மையொடு உறும் வஞ்சகர்-தம் சார்வது தவிரும் நவம் அண்மிய அடியாரிடம் நல்கும் திறன் மல்கும் பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம் சிவ சண்முக எனவே அருள் திரு_நீறு அணிந்திடிலே.

மேல்

#4 துயில் ஏறிய சோர்வும் கெடும் துயரம் கெடும் நடுவன் கையில் ஏறிய பாசம் துணி கண்டே முறித்திடுமால் குயில் ஏறிய பொழில் சூழ் திரு_குன்று ஏறி நடக்கும் மயில் ஏறிய மணியே என வளர் நீறு அணிந்திடிலே.

மேல்

#5 தேறாப் பெரு மனமானது தேறும் துயர் மாறும் மாறாப் பிணி மாயும் திரு_மருவும் கரு ஒருவும் வீறாப்பொடு வரு சூர் முடி வேறாக்கிட வரும் ஓர் ஆறாக்கரப் பொருளே என அருள் நீறு அணிந்திடிலே.

மேல்

#6 அமராவதி இறையோடு நல் அயனும் திருமாலும் தமர் ஆகுவர் சிவஞானமும் தழைக்கும் கதி சாரும் எமராஜனை வெல்லும் திறல் எய்தும் புகழ் எய்தும் குமரா சிவகுருவே எனக் குளிர் நீறு அணிந்திடிலே.

மேல்

#7 மேலாகிய உலகத்தவர் மேவித் தொழும் வண்ணம் மாலாகிய இருள் நீங்கி நல் வாழ்வைப் பெறுவார் காண் சீலா சிவலீலா பரதேவா உமையவள்-தன் பாலா கதிர்வேலா எனப் பதி நீறு அணிந்திடிலே.

மேல்

#8 அகம் மாறிய நெறி சார்குவர் அறிவாம் உரு அடைவார் மிக மாறிய பொறியின் வழி மேவா நலம் மிகுவார் சகம் மாறினும் உயர் வான் நிலை தாம் மாறினும் அழியார் முகம் ஆறு உடை முதல்வா என முதிர் நீறு அணிந்திடிலே.

மேல்

#9 சிந்தாமணி நிதி ஐ_தரு செழிக்கும் புவனமும் ஓர் நந்தா எழில் உருவும் பெரு நலனும் கதி நலனும் இந்தா எனத் தருவார் தமை இரந்தார்களுக்கு எல்லாம் கந்தா சிவன் மைந்தா எனக் கன நீறு அணிந்திடிலே.

மேல்

#10 எண்ணார் புரம் எரித்தார் அருள் எய்தும் திரு நெடுமால் நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும் பண்ணார் மொழி மலையாள் அருள் பாலா பனிரண்டு கண்ணா எமது அண்ணா எனக் கன நீறு அணிந்திடிலே.

@33. உறுதி உணர்த்தல்

மேல்

#1 மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் நெஞ்சே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ எஞ்சேல் இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் அஞ்சேல் இது சத்தியமாம் என் சொல்லை அறிந்துகொண்டே.

மேல்

#2 அறியாத நம் பிணி ஆதியை நீக்கும் அருள் மருந்தின் நெறியாம் தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ எறியாது இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் குறியாது இருக்கலை என் ஆணை என்றன் குண நெஞ்சமே.

மேல்

#3 என்றே பிணிகள் ஒழியும் என்றே துயர் எய்தியிடேல் நின்றே தணிகையன் ஆறெழுத்து உண்டு வெண் நீறு உண்டு நீ இன்றே இரவும்_பகலும் துதிசெய்திடுதி கண்டாய் நன்றே எக்காலமும் வாழிய நல் நெஞ்சமே.

@34. எண்ணத் தேங்கல்

மேல்

#1 போது_கொண்டவனும் மாலும் நின்று ஏத்தும் புண்ணிய நின் திரு_அடிக்கே யாது கொண்டு அடைகேன் யாது மேல் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன் தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ சிறியோன் ஏது இவன் செயல் ஒன்று இலை எனக் கருதி ஈவையோ தணிகை வாழ் இறையே.

மேல்

#2 வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் ஆழ்வனோ எளியேன் அல்லது இ உலகில் அறம் செயாக் கொடியர்-பால் சென்றே தாழ்வனோ தாழ்ந்த பணி புரிந்து அவமே சஞ்சரித்து உழன்று வெம் நரகில் வீழ்வனோ இஃதென்று அறிகிலேன் தணிகை வெற்பினுள் ஒளிர் அருள் விளக்கே.

@35. கையடை முட்டற் கிரங்கல்

மேல்

#1 கார் பூத்த கண்டத்தொடு மேவு முக்கண் கனி கனிந்து சீர் பூத்து ஒழுகு செந்தேனே தணிகையில் தெள் அமுதே பேர் பூத்த ஒற்றியில் நின் முன்னர் ஏற்றிடப் பேதையனேன் ஏர் பூத்த ஒண் பளிதம் காண்கிலன் அதற்கு என் செய்வனே.

மேல்

#2 கரு மருந்தாய மணி_கண்ட நாயகன் கண்மணியாம் அரு_மருந்தே தணிகாசலம் மேவும் என் ஆர்_உயிரே திரு மருங்கு ஆர் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னராய் ஒருமருங்கு ஏற்ற என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே.

மேல்

#3 பால் எடுத்து ஏத்தும் நல் பாம்பொடு வேங்கையும் பார்த்திட ஓர் கால் எடுத்து அம்பலத்து ஆடும் பிரான் திருக் கண்மணியே வேல் எடுத்தோய் தென் தணிகாசலத்து அமர் வித்தக நின்- பால் எடுத்து ஏற்றக் கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே.

மேல்

#4 கண்ணப்பன் என்னும் திரு_பெயரால் உலகம் புகழும் திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டனிட்ட விண்ணப்பம் ஒன்று இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து எண்ணப்படும் நின் திரு_அருள் ஈக இ ஏழையற்கே.

@36. பொது

மேல்

#1 எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை இருந்து அருள் என் அப்பா உன் பொன்_அடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி மிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர்-பால் செலும் வெம் துயர் நீத்து இ பாரில் நின் அடியார்க்கு ஏவல்செய்ய எனக்கு அருளே.

மேல்

#2 எய்யாது அருள் தணிகாசலம் மேவிய என் அருமை ஐயா நினது திரு_அடி ஏத்தி அன்றோ அயனும் செய்யாள் மருவும் புயன் உடைத் தேவனும் சேணவனும் நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.

மேல்

#3 வாள் ஆரும் கண்ணியர் மாயையை நீக்கி மலி கரணக் கோள் ஆகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞானக் குறி கொடு நின் தாளாகும் நீழல் அது சார்ந்து நிற்கத் தகுந்த திரு_ நாள் ஆகும் நாள் எந்த நாள் அறியேன் தணிகாசலனே.

மேல்

#4 ஊன் பார்க்கும் இ உடல் பொய்மையைத் தேர்தல் ஒழிந்து அவமே மான் பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே தேன் பார்க்கும் சோலைத் தணிகாசலத்து உன் திரு_அழகை நான் பார்க்கும் நாள் எந்த நாள் மயில் ஏறிய நாயகனே.

மேல்

#5 என்னே குறை நமக்கு ஏழை நெஞ்சே மயில் ஏறி வரும் மன்னே என நெடுமாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும் தன் நேர் தணிகைத் தட மலை வாழும் நல் தந்தை அருள் பொன் ஏர் திரு_அடிப் போது கண்டாய் நம் புகலிடமே.

மேல்

#6 பேதை நெஞ்சே என்றன் பின் போந்திடுதி இப் பேய் உலக வாதை அஞ்சேல் பொறி-வாய் கலங்கேல் இறையும் மயங்கேல் போதை எஞ்சேல் தணிகாசலம் போய் அப் பொருப்பு அமர்ந்த தாதை அம் சேவடிக் கீழ்க் குடியாகத் தயங்குவமே.

@37. நாள் அவம்படாமை வேண்டல்

மேல்

#1 குன்றம் ஒத்து இலங்கு பணை முலை நெடும் கண் கோதையர்-பால் விரைந்து ஓடிச் சென்ற இப் புலையேன் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ என் தனி உயிரே என்னுடைப் பொருளே என் உளத்து இனிது எழும் இன்பே மன்றல் அம் பொழில் சூழ் தணிகை அம் பொருப்பில் வந்து அமர்ந்து அருள்செயும் மணியே.

மேல்

#2 மணிக் குழை அடர்த்து மதர்த்த வேல்_கண்ணார் வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து கணிக்க அரும் துயர்கொள் மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்க நாள் உளதோ குணிக்க அரும் பொருளே குணப் பெரும் குன்றே குறி குணம் கடந்ததோர் நெறியே எணி கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே தணிகை எம் இறையே.

மேல்

#3 இறைக்கு உளே உலகம் அடங்கலும் மருட்டும் இலை நெடு வேல்_கணார் அளகச் சிறைக்கு உளே வருந்தும் மனத்தினை மீட்டு உன் திரு_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ மறைக்கு உளே மறைந்து அ மறைக்கு அரிதாய வள்ளலே உள்ளகப் பொருளே அறைக்கு உளே மடவார்க்கு அன நடை பயிற்றும் அணி திருத் தணிகை வாழ் அரைசே.

மேல்

#4 அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் புரை மதித்து உழலும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ பரை மதித்து இடம் சேர் பராபரற்கு அருமைப் பாலனே வேல் உடையவனே விரை மதித்து ஓங்கும் மலர்ப் பொழில் தணிகை வெற்பினில் ஒளிரும் மெய் விளக்கே.

மேல்

#5 விளக்கு உறழ் அணிப் பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இள முலை மடவார் களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டு உன் கழல் அடிக்கு ஆக்கும் நாள் உளதோ அளக்க அரும் கருணை_வாரியே ஞான அமுதமே ஆனந்தப் பெருக்கே கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே.

மேல்

#6 கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து இளைக்கும் வன் கொடிய மனத்தினை மீட்டு உன் இணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ விளைக்கும் ஆனந்த வியன் தனி வித்தே மெய் அடியவர் உள விருப்பே திளைக்கும் மா தவத்தோர்க்கு அருள்செயும் தணிகைத் தெய்வமே அருள் செழும் தேனே.

மேல்

#7 தேன் வழி மலர்ப் பூ குழல் துடி இடை வேல் திறல் விழி மாதரார் புணர்ப்பாம் கான் வழி நடக்கும் மனத்தினை மீட்டு உன் கழல் வழி நடத்தும் நாள் உளதோ மான் வழி வரும் என் அம்மையை வேண்டி வண் புனத்து அடைந்திட்ட மணியே வான் வழி அடைக்கும் சிகரி சூழ் தணிகை மா மலை அமர்ந்து அருள் மருந்தே

மேல்

#8 மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் பொருந்து என வலிக்கும் மனத்தினை மீட்டு உன் பொன்_அடிக்கு ஆக்கும் நாள் உளதோ அருந்திடாது அருந்த அடியருள் ஓங்கும் ஆனந்தத் தேறலே அமுதே இருந்து அரு முனிவர் புகழ்செயும் தணிகை இனிது அமர்ந்து அருளிய இன்பமே.

மேல்

#9 இன்பமற்று உறுகண் விளை விழி நிலமாம் ஏந்திழையவர் புழுக் குழியில் துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் துணை அடிக்கு ஆக்கும் நாள் உளதோ அன்பர் முற்று உணர அருள்செயும் தேவே அரி அயன் பணி பெரியவனே வன்பு-அதை அகற்றி மன்பதைக்கு அருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.

மேல்

#10 வாழும் இ உலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர்-தம்பால் தாழும் என் கொடிய மனத்தினை மீட்டு உன் தாள்_மலர்க்கு ஆக்கும் நாள் உளதோ சூழும் நெஞ்சு இருளைப் போழும் மெய் ஒளியே தோற்றம் ஈறு அற்ற சிற்சுகமே ஊழும் உற்பவம் ஓர் ஏழும் விட்டு அகல உதவு சீர் அருள் பெரும் குன்றே.

@38. அன்பிற் பேதுறல்

மேல்

#1 மூடர்கள்-தமக்குள் முற்படும் கொடிய முறியனேன்-தனக்கு நின் அடியாம் ஏடு அவிழ் கமலத் திரு_நறவு அருந்த என்று-கொல் அருள் புரிந்திடுவாய் ஆடு அரவு அணிந்தே அம்பலத்து ஆடும் ஐயருக்கு ஒரு தவப் பேறே கோடு அணி தருக்கள் குலவும் நல் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே

மேல்

#2 கற்றவர் புகழ் நின் திரு_அடி_மலரைக் கடையனேன் முடி மிசை அமர்த்தி உற்ற இ உலக மயக்கு அற மெய்மை உணர்த்தும் நாள் எந்த நாள் அறியேன் நல் தவர் உணரும் பரசிவத்து எழுந்த நல் அருள் சோதியே நவை தீர் கொற்ற வேல் உகந்த குமரனே தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#3 ஞால வாழ்வு எனும் புன் மலம் மிசைந்து உழலும் நாயினும் கடைய இ நாய்க்கு உன் சீல வாழ்வு அளிக்கும் திரு_அடிக் கமலத் தேன் தரு நாளும் ஒன்று உண்டோ ஆலவாய் உகந்த ஒரு சிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே கோல வானவர்கள் புகழ் திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#4 பவம் எனும் கடற்குள் வீழ்ந்து உழன்று ஏங்கும் பாவியேன்-தன் முகம் பார்த்து இங்கு எவையும் நாடாமல் என் அடி நிழல் கீழ் இருந்திடு என்று உரைப்பது எந்நாளோ சிவம் எனும் தரும_கடல் அகத்து எழுந்த தெள்ளிய அமுதமே தேனே குவி முலை வல்லி_கொடியொடும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#5 முலை முகம் காட்டி மயக்கிடும் கொடியார் முன்பு உழன்று ஏங்கும் இ எளியேன் நிலை முகம் காட்டும் நின் திரு_பாத நீழல் வந்து அடையும் நாள் என்றோ மலை முகம் குழைய வளைத்திடும் தெய்வ மணி மகிழ் கண்ணினுள் மணியே கொலை முகம் செல்லார்க்கு அருள்தரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே,

மேல்

#6 வரு பயன் அறியாது உழன்றிடும் ஏழை மதியினேன் உய்ந்திடும் வண்ணம் ஒருவ அரும் நினது திரு_அடிப் புகழை உன்னும் நாள் எந்த நாள் அறியேன் அரு உரு ஆகும் சிவபிரான் அளித்த அரும்_பெறல் செல்வமே அமுதே குரு உரு ஆகி அருள்தரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#7 அழிதரும் உலக வாழ்வினை மெய் என்று அலைந்திடும் பாவியேன் இயற்றும் பழி தரும் பிழையை எண்ணுறேல் இன்று பாதுகாத்து அளிப்பது உன் பரமே மொழி தரும் முக்கண் செங்கரும்பு ஈன்ற முத்தமே முக்தியின் முதலே கொழிதரும் அருவி பொழிதரும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#8 நின் நிலை அறியா வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்- தன் நிலை அறிந்தும் ஐயகோ இன்னும் தயை இலாது இருந்தனை என்னே பொன் நிலைப் பொதுவில் நடம்செயும் பவளப் பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே கொல் நிலை வேல் கைக் கொளும் திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#9 பாடி நின் திரு_சீர் புகழ்ந்திடாக் கொடிய பதகர்-பால் நாள்-தொறும் சென்றே வாடி நின்று ஏங்கும் ஏழையேன் நெஞ்ச வாட்டம் இங்கு அறிந்திலை என்னே ஆடி நீறாடி அருள்செயும் பரமன் அகம் மகிழ் அரும்_பெறல் மருந்தே கோடு இலங்கு உயர் வான் அணி திரு_தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

மேல்

#10 வன்பொடு செருக்கும் வஞ்சர்-பால் அலையா வண்ணம் இன்று அருள்செயாய் என்னில் துன்பொடு மெலிவேன் நின் திரு_மலர்_தாள் துணை அன்றித் துணை ஒன்றும் காணேன் அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகம் மகிழ்ந்து அணைக்கும் ஆர்_அமுதே கொன் பெறும் இலை வேல் கரத்தொடும் தணிகைக் குன்று அமர்ந்திடு குண_குன்றே.

@39. கூடல் விழைதல்

மேல்

#1 சகம் ஆறு உடையார் அடையா நெறியார் சடையார் விடையார் தனியானார் உகம் ஆர் உடையார் உமை ஓர் புடையார் உதவும் உரிமைத் திரு_மகனார் முகம் ஆறு உடையார் முகம் மாறுடையார் எனவே எனது முன் வந்தார் அகம் ஆர் உடையேன் பதி யாது என்றேன் அலைவாய் என்றார் அஃது என்னே.

மேல்

#2 விது வாழ் சடையார் விடை மேல் வருவார் விதி மால் அறியா விமலனார் மது வாழ் குழலாள் புடை வாழ் உடையார் மகனார் குகனார் மயில் ஊர்வார் முது வாழ்வு அடையாது அவமே அலைவேன் முன் வந்திட யான் அறியாதே புது வாழ்வு உடையார் எனவே மதி போய் நின்றேன் அந்தோ பொல்லேனே.

மேல்

#3 காயோடு உடனாய் கனல் கை ஏந்திக் காடே இடமாக் கணங்கொண்ட பேயோடு ஆடிப் பலி தேர்தரும் ஓர் பித்தப் பெருமான் திரு_மகனார் தாயோடு உறழும் தணிகாசலனார் தகை சேர் மயிலார் தனி வேலார் வேயோடு உறழ் தோள் பாவையர் முன் என் வெள் வளை கொண்டார் வினவாமே.

மேல்

#4 பொன் ஆர் புயனார் புகழும் புகழார் புலியின் அதளார் புயம் நாலார் தென் ஆர் சடையார் கொடி மேல் விடையார் சிவனார் அருமைத் திரு_மகனார் என் நாயகனார் என் உயிர் போல்வார் எழில் மா மயிலார் இமையோர்கள்- தம் நாயகனார் தணிகாசலனார் தனி வந்து இவண் மால் தந்தாரே.

மேல்

#5 கல் ஆல் அடியார் கல்லடியுண்டார் கண்டார் உலகங்களை வேதம் செல்லா நெறியார் செல் உறும் முடியார் சிவனார் அருமைத் திரு_மகனார் எல்லாம் உடையார் தணிகாசலனார் என் நாயகனார் இயல் வேலார் நல்லாரிடை என் வெள் வளை கொடு பின் நண்ணார் மயில் மேல் நடந்தாரே.

மேல்

#6 கார் ஊர் சடையார் கனல் ஆர் மழுவார் கலவார் புரம் மூன்று எரிசெய்தார் ஆரூர் உடையார் பலி தேர்ந்திடும் எம் அரனார் அருமைத் திரு_மகனார் போரூர் உறைவார் தணிகாசலனார் புதியார் என என் முனம் வந்தார் ஏர் ஊர் எமது ஊரினில் வா என்றார் எளியேன் ஏமாந்து இருந்தேனே.

மேல்

#7 கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் பெண் ஆர் புயனார் அயன் மாற்கு அரியார் பெரியார் கைலைப் பெருமானார் தண் ஆர் சடையார் தரும் மா மகனார் தணிகாசலனார் தனி வேலார் எண்ணார் எளியாள் இவள் என்று எனை யான் என் செய்கேனோ இடர்கொண்டே.

மேல்

#8 மழு ஆர்தரு கைப் பெருமான் மகனார் மயில்_வாகனனார் அயில் வேலார் தழுவார் வினையைத் தணியார் அணி ஆர் தணிகாசலனார்-தம் பாதம் தொழுவார் அழுவார் விழுவார் எழுவார் துதியாநிற்பார் அவர் நிற்கப் புழு ஆர் உடல் ஓம்பிடும் என் முனர் வந்து அருள்தந்து அருளிப் போனாரே.

மேல்

#9 நிருத்தம் பயின்றார் கடல் நஞ்சு அயின்றார் நினைவார்-தங்கள் நெறிக்கு ஏற்க அருத்தம் பகர்வார் அருமைப் புதல்வர் அறு மா முகனார் அயில் வேலார் திருத்தம் பெறுவார் புகழும் தணிகைத் திரு மா மலையார் ஒரு மாதின் வருத்தம் பாரார் வளையும் தாரார் வாரார் அவர்-தம் மனம் என்னே.

மேல்

#10 பிரமன் தலையில் பலிகொண்டு எருதில் பெயரும் பிச்சைப் பெருமானார் திர மன்றினிலே நடனம்_புரிவார் சிவனார் மகனார் திறல் வேலார் தர மன்றலை வான் பொழில் சார் எழில் சேர் தணிகாசலனார் தமியேன் முன் வர மன்றவும் மால்கொள நின்றனனால் மடவார் அலரால் மனம் நொந்தே.

@40. தரிசனை வேட்கை

மேல்

#1 வேல் கொளும் கமலக் கையனை எனை ஆள் மெய்யனை ஐயனை உலக மால் கொளும் மனத்தர் அறி அரும் மருந்தை மாணிக்க மணியினை மயில் மேல் கால்கொளும் குகனை எந்தையை எனது கருத்தனை அயன் அரி அறியாச் சால்கொளும் கடவுள் தனி அருள் மகனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#2 கண்ணனை அயனை விண்ணவர்_கோனைக் காக்கவைத்திட்ட வேல்_கரனைப் பண்ணனை அடியர் பாடலுக்கு அருளும் பதியினை மதிகொள் தண் அருளாம் வண்ணனை எல்லா வண்ணமும் உடைய வரதன் ஈன்றெடுத்து அருள் மகனைத் தண்ணனை எனது கண்ணனை அவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#3 என்னுடை உயிரை யான் பெறும் பேற்றை என்னுடைப் பொருளினை எளியேன் மன்னுடைக் குருவின் வடிவினை என் கண்மணியினை அணியினை வரத்தை மின் உடைப் பவள வெற்பினில் உதித்த மிளிர் அருள் தருவினை அடியேன் தன்னுடைத் தேவைத் தந்தையைத் தாயைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#4 பரங்கிரி அமரும் கற்பகத் தருவைப் பராபரம் சுடரினை எளியேற்கு இரங்கிவந்து அருளும் ஏரகத்து இறையை எண்ணுதற்கு அரிய பேர் இன்பை உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றைத் தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#5 அரும்_பெறல் மணியை அமுதினை அன்பர் அன்பினுக்கு எளிவரும் அரசை விரும்பும் மா தவத்தோர் உள்ளகத்து ஒளிரும் விளக்கினை அளக்க அரும் பொருளைக் கரும்பினை என்னுள் கனிந்திடும் கனியை முனிந்திடாது அருள் அருள்_கடலைத் தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#6 மாரனை_எரித்தோன் மகிழ்தரு மகனை வாகை அம் புயத்தனை வடி வேல் தீரனை அழியாச் சீரனை ஞானச் செல்வனை வல்_வினை நெஞ்சச் சூரனைத் தடிந்த வீரனை அழியாச் சுகத்தனைத் தேன் துளி கடப்பம் தாரனைக் குகன் என் பேர் உடையவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#7 வேதனைச் சிறைக்குள் வேதனைபடச் செய் விமலனை அமலனை அற்பர் போதனைக்கு அடங்காப் போதனை ஐந்தாம் பூதனை மா தவர் புகழும் பாதனை உமையாள்_பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனைத் தாதனை உயிர்க்குள் உயிர்_அனையவனைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#8 குழகனை அழியாக் குமரனை அட்ட_குணத்தனைக் குறித்திடல் அறிதாம் அழகனைச் செந்தில் அப்பனை மலை-தோறு ஆடல் வாழ் அண்ணலைத் தேவர்_ கழகனைத் தண்டை_காலனைப் பிணிக்கு ஓர் காலனை வேலனை மனதில் சழகு_இலார்க்கு அருளும் சாமிநாதனைத் தென் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#9 முத்தனை முத்திக்கு ஒரு தனி வித்தை முதல்வனை முருகனை முக்கண் பித்தனை அத்தன் எனக் கொளும் செல்வப் பிள்ளையைப் பெரியவர் உளம் சேர் சுத்தனைப் பத்தி வலைப்படும் அவனைத் துரியனைத் துரியமும் கடந்த சத்தனை நித்த நின்மலச் சுடரைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

மேல்

#10 வள் அயில் கரம் கொள் வள்ளலை இரவில் வள்ளிநாயகி-தனைக் கவர்ந்த கள்ளனை அடியர் உள்ளகத்தவனைக் கருத்தனைக் கருதும் ஆனந்த வெள்ளம் நின்றாட அருள் குரு பரனை விருப்புறு பொருப்பனை வினையைத் தள்ள வந்து அருள்செய்திடும் தயாநிதியைத் தணிகையில் கண்டு இறைஞ்சுவனே.

@41. நாள் எண்ணி வருந்தல்

மேல்

#1 இன்னும் எத்தனை நாள் செலும் ஏழையேன் இடர்_கடல் விடுத்து ஏற மின்னும் வேல் படை மிளிர்தரும் கைத்தல வித்தகப் பெருமானே துன்னும் நல் தணிகாசலத்து அமர்ந்து அருள் தோன்றலே மயில் ஏறி மன்னும் உத்தம வள்ளலே நின் திரு_மனக் கருத்து அறியேனே.

மேல்

#2 ஈறு_இலாத நின் அருள் பெற எனக்கு இனும் எத்தனை நாள் செல்லும் மாறிலாதவர் மனத்து ஒளிர் சோதியே மயில் மிசை வரும் வாழ்வே தூறு இலா வளச் சோலை சூழ் தணிகை வாழ் சுத்த சின்மயத் தேவே ஊறு இலாப் பெரு நிலைய ஆனந்தமே ஒப்பு_இலான் அருள் பேறே.

மேல்

#3 கூழை மா முகில் அனையவர் முலை-தலைக் குளித்து உழன்று அலைகின்ற ஏழை நெஞ்சினேன் எத்தனை நாள் செல்லும் இடர்_கடல் விடுத்து ஏற மாழை மேனியன் வழுத்து மாணிக்கமே வாழ்த்துவாரவர் பொல்லா ஊழை நீக்கி நல் அருள்தரும் தெய்வமே உத்தமச் சுக வாழ்வே.

மேல்

#4 ஐய இன்னும் நான் எத்தனை நாள் செலும் அல்லல் விட்டு அருள் மேவத் துய்ய நல் நெறி மன்னிய அடியர்-தம் துயர் தவிர்த்து அருள்வோனே வெய்ய நெஞ்சினர் எட்டொணா மெய்யனே வேல் கொளும் கரத்தோனே செய்ய மேனி எம் சிவபிரான் பெற்ற நல் செல்வனே திறலோனே.

மேல்

#5 பாவியேன் இன்னும் எத்தனை நாள் செலும் பருவரல் விடுத்து உய்யக் கூவியே அன்பர்க்கு அருள்தரும் வள்ளலே குணப் பெரும் குன்றே என் ஆவியே எனை ஆள் குரு வடிவமே ஆனந்தப் பெரு வாழ்வே வாவி ஏர்தரும் தணிகை மா மலை மிசை மன்னிய அருள் தேனே.

மேல்

#6 எளியனேன் இன்னும் எத்தனை நாள் செலும் இடர்_கடல் விடுத்து ஏற ஒளி அனேகமாய்த் திரண்டிடும் சிற்பர உருவமே உரு இல்லா வெளியதாகிய வத்துவே முத்தியின் மெய்ப் பயன் தரு வித்தே அளியதாகிய நெஞ்சினார்க்கு அருள்தரும் ஆறு மா முகத் தேவே.

மேல்

#7 தொண்டனேன் இன்னும் எத்தனை நாள் செலும் துயர்_கடல் விடுத்து ஏற அண்டனே அண்டர்க்கு அருள்தரும் பரசிவன் அருளிய பெரு வாழ்வே கண்டு அனேகர் வந்தனைசெய அசுரனைக் களைந்து அருள் களைகண்ணே விண்-தன் நேர் புகும் சிகரி சூழ் தணிகையில் விளங்கிய வேலோனே.

மேல்

#8 வீணனேன் இன்னும் எத்தனை நாள் செல்லும் வெம் துயர்_கடல் நீத்தக் காண வானவர்க்கு அரும் பெரும் தலைவனே கருணை அம் கண்ணானே தூண நேர் புயச் சுந்தர வடிவனே துளக்கிலார்க்கு அருள் ஈயும் ஏணனே எனை ஏன்றுகொள் தேசிக இறைவனே இயலோனே.

மேல்

#9 கடையனேன் இன்னும் எத்தனை நாள் செலும் கடும் துயர்_கடல் நீந்த விடையின் ஏறிய சிவபிரான் பெற்று அருள் வியன் திரு_மகப்பேறே உடைய நாயகிக்கு ஒரு பெரும் செல்வமே உலகம் எலாம் அளிப்போனே அடைய நின்றவர்க்கு அருள்செயும் தணிகை வாழ் ஆனந்தத் தெளி தேனே.

மேல்

#10 பேயனேன் இன்னும் எத்தனை நாள் செலும் பெரும் துயர்_கடல் நீந்த மாயனே முதல் வானவர்-தமக்கு அருள் மணி மிடற்று இறையோர்க்குச் சேயனே அகம் தெளிந்தவர்க்கு இனியனே செல்வனே எனைக் காக்கும் தாயனே என்றன் சற்குரு நாதனே தணிகை மா மலையானே.

@42. ஏத்தாப் பிறவி இழிவு

மேல்

#1 கல்லை ஒத்த என் நெஞ்சினை உருக்கேன் கடவுள் நின் அடி கண்டிட விழையேன் அல்லை ஒத்த கோதையர்க்கு உளம் குழைவேன் அன்பிலாரொடும் அமர்ந்து அவம் உழல்வேன் தில்லை_அப்பன் என்று உலகு எடுத்து ஏத்தும் சிவபிரான் தரும் செல்வ நின் தணிகை எல்லை உற்று உனை ஏத்திநின்று ஆடேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#2 மையல் நெஞ்சினேன் மதி சிறிது இல்லேன் மாதரார் முலை மலை இவர்ந்து உருள்வேன் ஐய நின் திரு_அடித் துணை மறவா அன்பர்-தங்களை அடுத்து உளம் மகிழேன் உய்ய நின் திரு_தணிகையை அடையேன் உடைய_நாயகன் உதவிய பேறே எய்ய இ வெறும் வாழ்க்கையில் உழல்வேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#3 புலைய மாதர்-தம் போகத்தை விழைந்தேன் புன்மை யாவைக்கும் புகலிடம் ஆனேன் நிலையமாம் திரு_தணிகையை அடையேன் நிருத்தன் ஈன்று அருள் நின்மலக் கொழுந்தே விலை_இலாத நின் திரு_அருள் விழையேன் வீணர்-தங்களை விரும்பிநின்று அலைந்தேன் இலை எனாது அணுவளவும் ஒன்று ஈயேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#4 மருட்டு மங்கையர் புழு குழி ஆழ்ந்து வருந்தி நாள்-தொறும் மனம் இளைக்கின்றேன் தெருட்டும் நின் திரு_தணிகையை அடையேன் சிவபிரான் பெற்ற செல்வமே நினது அருள் திறத்தினை நினைந்து நெக்குருகி அழுது கண்கள் நீர் ஆர்ந்திட நில்லேன் இருட்டு வாழ்க்கையில் இடறி வீழ்கின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#5 நச்சிலே பழகிய கரும் கண்ணார் நலத்தை வேட்டு நல் புலத்தினை இழந்தேன் பிச்சிலே மிக மயங்கிய மனத்தேன் பேதையேன் கொடும் பேயனேன் பொய்யேன் சச்சிலே சிவன் அளித்திடும் மணியே தங்கமே உன்றன் தணிகையை விழையேன் எச்சிலே விழைந்து இடருறுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#6 மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் புன்னை அம் சடை முன்னவன் அளித்த பொன்னை அன்ன நின் பூ கழல் புகழேன் அன்னை என்ன நல் அருள்தரும் தணிகை அடைந்து நின்று நெஞ்சகம் மகிழ்ந்து ஆடேன் என்னை என்னை இங்கு என் செயல் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#7 பட்டி_மாடு எனத் திரிதரும் மடவார் பாழ் குழிக்குள் வீழ்ந்து ஆழ்ந்து இளைக்கின்றேன் தட்டிலார் புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும் ஓர்தரு ஒளிர் கனியே ஒட்டிலேன் நினை உளத்திடை நினையேன் உதவுறாது நச்சுறு மரம் ஆனேன் எட்டி என் முனம் இனிப்புறும் அந்தோ என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#8 ஓங்கி நீண்ட வாள் உறழ் கரும் கண்ணார் உவர்ப்புக் கேணியில் உழைத்து அகம் இளைத்தேன் வீங்கி நீண்டதோர் ஒதி என நின்றேன் விழலுக்கே இறைத்து அலைந்தனன் வீணே தாங்கினேன் உடல் சுமை-தனைச் சிவனார் தனய நின் திரு_தணிகையை அடையேன் ஏங்கினேன் சுழற்படு துரும்பு எனவே என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#9 பண் அளாவிய மொழியினால் மயக்கும் படிற்று மங்கையர்-பால் விழைவுற்றேன் தண் அளாவிய சோலை சூழ் தணிகைத் தடத்து அளாவிய தரும நல் தேவே பெண் அளாவிய புடை உடைப் பெருமான் பெற்ற செல்வமே அற்றவர்க்கு அமுதே எண்ணளாவிய வஞ்சக நெஞ்சோடு என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

மேல்

#10 கான் அறா அளகத்தியர் அளக்கர் காமத்து ஆழ்ந்து அகம் கலங்குற நின்றேன் வானம் மேவுறும் பொழில் திரு_தணிகை மலையை நாடி நின் மலர்_பதம் புகழேன் ஞான_நாயகி ஒருபுடை அமர்ந்த நம்பனார்க்கு ஒரு நல் தவப் பேறே ஈனன் ஆகி இங்கு இடர்ப்படுகின்றேன் என் செய்வான் பிறந்தேன் எளியேனே.

@43. பவனிச் செருக்கு

மேல்

#1 பூ உண்ட வெள் விடை ஏறிய புனிதன் தரு மகனார் பா உண்டதொர் அமுது அன்னவர் பசு மா மயில் மேல் வந்து ஆ உண்டனர் எனது இன் நலம் அறியார் என இருந்தால் நா உண்டு அவர் திருமுன்பு இது நலம் அன்று உமக்கு எனவே.

மேல்

#2 ஒன்றார் புரம் எரிசெய்தவர் ஒற்றித் திரு_நகரார் மன்றார் நடம் உடையார் தரு மகனார் பசு மயில் மேல் நின்றார் அது கண்டேன் கலை நில்லாது கழன்றது என்று ஆரொடு சொல்வேன் எனை யானே மறந்தேனே.

மேல்

#3 வார் ஆர் முலை உமையாள் திரு_மணவாளர்-தம் மகனார் ஆரா_அமுது அனையார் உயிர்_அனையார் அயில் அவனார் நேரார் பணி மயிலின் மிசை நின்றார் அது கண்டேன் நீர் ஆர் விழி இமை நீங்கின நிறை நீங்கியது அன்றே.

மேல்

#4 ஒன்றோடிரண்டு எனும் கண்ணினர் உதவும் திரு_மகனார் என்றோடு இகல் எழில் ஆர் மயில் ஏறி அங்கு உற்றார் நன்று ஓடினன் மகிழ்கூர்ந்து அவர் நகை மா முகம் கண்டேன் கன்று ஓடின பசு வாடின கலை ஊடின அன்றே.

மேல்

#5 மலை வாங்கு வில் அரனார் திரு_மகனார் பசு மயிலின் நிலை தாங்குற நின்றார் அவர் நிற்கும் நிலை கண்டேன் அலை தேங்கின குழல் தூங்கின அகம் ஏங்கின அரை மேல் கலை நீங்கின முலை வீங்கின களி ஓங்கின அன்றே.

மேல்

#6 மான் கண்ட கையுடையார் தரு மகனார்-தமை மயில் மேல் நான் கண்டனன் அவர் கண்டனர் நகை கொண்டனம் உடனே மீன் கண்டு அன விழியார் அது பழியாக விளைத்தார் ஏன் கண்டனை என்றாள் அனை என் என்று உரைக்கேனே.

மேல்

#7 செங்கண் விடை-தனில் ஏறிய சிவனார் திரு_மகனார் எம் கண்மணி அனையார் மயிலின் மீது வந்திட்டார் அங்கண் மிக மகிழ்வோடு சென்று அவர் நின்றது கண்டேன் இங்கண் வளை இழந்தேன் மயல் உழந்தேன் கலை எனவே.

மேல்

#8 தண் தேன் பொழி இதழி பொலி சடையார் தரு மகனார் பண் தேன் புரி தொடையார்-தமைப் பசு மா மயில் மீதில் கண்டேன் வளை காணேன் கலை காணேன் மிகு காமம் கொண்டேன் துயில் விண்டேன் ஒன்றும் கூறேன் வருமாறே.

மேல்

#9 மா வீழ்ந்திடு விடையார் திரு_மகனார் பசு மயில் மேல் நீ வீழ்ந்திட நின்றார் அது கண்டேன் என்றன் நெஞ்சே பூ வீழ்ந்தது வண்டே மதி போய் வீழ்ந்தது வண்டே நா வீழ்ந்ததும் அலரே கழை நாண் வீழ்ந்தது மலரே.

மேல்

#10 வெற்றார் புரம்_எரித்தார் தரும் மேலார் மயில் மேலே உற்றார் அவர் எழில் மா முகத்துள்ளே நகை கண்டேன் பொன் தார் புயம் கண்டேன் துயர் விண்டேன் எனைப் போல மற்றார் பெறுவாரோ இனி வாழ்வேன் மனம் மகிழ்ந்தே.

@44. திருவருள் விலாசப் பத்து

மேல்

#1 ஆறு முகப் பெரும் கருணை_கடலே தெய்வயானை மகிழ் மணி_குன்றே அரசே முக்கண் பேறு முகப் பெரும் சுடர்க்குள் சுடரே செவ் வேல் பிடித்து அருளும் பெருந்தகையே பிரம ஞானம் வீறு முகப் பெரும்_குணத்தோர் இதயத்து ஓங்கும் விளக்கமே ஆனந்த_வெள்ளமே முன் தேறு முகப் பெரிய அருள் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

மேல்

#2 கண்ணி மதி புனைந்த சடைக் கனியே முக்கண் கரும்பே என் கண்ணே மெய்க் கருணை வாழ்வே புண்ணிய நல் நிலையுடையோர் உளத்தில் வாய்க்கும் புத்தமுதே ஆனந்த போகமே உள் எண்ணிய மெய்த் தவர்க்கு எல்லாம் எளிதில் ஈந்த என் அரசே ஆறு முகத்து இறையாம் வித்தே திண்ணிய என் மனம் உருக்கிக் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

மேல்

#3 நின் இரு தாள் துணை பிடித்தே வாழ்கின்றேன் நான் நின்னை அலால் பின்னை ஒரு நேயம் காணேன் என்னை இனித் திருவுளத்தில் நினைதியோ நான் ஏழையினும் ஏழை கண்டாய் எந்தாய் எந்தாய் பொன்னை அன்றி விரும்பாத புல்லர்-தம்மால் போகல் ஒழிந்து உன் பதமே போற்றும் வண்ணம் சின்னம் அளித்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

மேல்

#4 கல்வி எலாம் கற்பித்தாய் நின்-பால் நேயம் காணவைத்தாய் இ உலகம் கானல் என்றே ஒல்லும் வகை அறிவித்தாய் உள்ளே நின்று என் உடையானே நின் அருளும் உதவுகின்றாய் இல்லை எனப் பிறர்-பால் சென்று இரவா வண்ணம் ஏற்றம் அளித்தாய் இரக்கம் என்னே என்னே செல்வ அருள் குருவாகி நாயினேனைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

மேல்

#5 எந்தை பிரான் என் இறைவன் இருக்க இங்கே என்ன குறை நமக்கு என்றே இறுமாப்புற்றே மந்த உலகினில் பிறரை ஒருகாசுக்கும் மதியாமல் நின் அடியே மதிக்கின்றேன் யான் இந்த அடியேனிடத்து உன் திருவுளம்-தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழையேனால் சிந்தை மகிழ்ந்து அருள் குருவாய் என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவ.

மேல்

#6 மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் கூறாத புலை வாய்மை உடையார்-தம்மைக் கூடாத வண்ணம் அருள் குருவாய் வந்து தேறாத நிலை எல்லாம் தேற்றி ஓங்கும் சிவஞானச் சிறப்பு அடைந்து திகைப்பு நீங்கிச் சீறாத வாழ்விடை நான் வாழ என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

மேல்

#7 கற்று அறிந்த மெய் உணர்ச்சி_உடையோர் உள்ளக் கமலத்தே ஓங்கு பெரும் கடவுளே நின் பொன் தகை மா மலர்_அடிச் சீர் வழுத்துகின்ற புண்ணியர்-தம் குழுவில் எனைப் புகுத்தி என்றும் உற்றவருள் சிந்தனை தந்து இன்பம் மேவி உடையாய் உன் அடியவன் என்று ஓங்கும் வண்ணம் சிற்றறிவை அகற்றி அருள் குருவாய் என்னைச் சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

மேல்

#8 ஞாலம் எலாம் படைத்தவனைப் படைத்த முக்கண் நாயகனே வடி வேல் கை நாதனே நான் கோலம் எலாம் கொடியேன் நற்குணம் ஒன்று இல்லேன் குற்றமே விழைந்தேன் இ கோது_உளேனைச் சாலம் எலாம் செயும் மடவார் மயக்கின் நீக்கிச் சன்மார்க்கம் அடைய அருள்தருவாய் ஞானச் சீலம் எலாம் உடைய அருள் குருவாய் வந்து சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

மேல்

#9 கற்பனையே எனும் உலகச் சழக்கில் அந்தோ கால் ஊன்றி மயங்குகின்ற கடையேனேனைச் சொற்பனம் இ உலகியற்கை என்று நெஞ்சம் துணிவுகொளச் செய்வித்து உன் துணைப் பொன்_தாளை அற்பகலும் நினைந்து கனிந்து உருகி ஞான ஆனந்த போகம் உற அருளல் வேண்டும் சிற்பரசற்குருவாய் வந்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

மேல்

#10 பன்னிரு கண் மலர் மலர்ந்த கடலே ஞானப் பரஞ்சுடரே ஆறு முகம் படைத்த கோவே என் இரு கண்மணியே எம் தாயே என்னை ஈன்றானே என் அரசே என்றன் வாழ்வே மின் இருவர் புடை விளங்க மயில் மீது ஏறி விரும்பும் அடியார் காண மேவும் தேவே சென்னியில் நின் அடி_மலர் வைத்து என்னை முன்னே சிறு_காலை ஆட்கொண்ட தேவ தேவே.

@45. திருவருட் பேற்று விழைவு

மேல்

#1 உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக் கலகம் தரு சூர்க் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர்த் திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வப் புதல்வா திறல்-அதனால் இலகும் கலப மயில் பரி மேல் ஏறும் பரிசு என் இயம்புகவே.

மேல்

#2 புகு வானவர்-தம் இடர் முழுதும் போக்கும் கதிர் வேல் புண்ணியனே மிகு வான் முதலாம் பூதம் எலாம் விதித்தே நடத்தும் விளைவு அனைத்தும் தகு வான் பொருளாம் உனது அருளே என்றால் அடியேன்-தனை இங்கே நகுவான் வருவித்து இருள் நெறிக்கே நடத்தல் அழகோ நவிலாயே.

மேல்

#3 அழகா அமலா அருளாளா அறிவா அறிவார் அகம் மேவும் குழகா குமரா எனை ஆண்ட கோவே நின் சீர் குறியாரைப் பழகா வண்ணம் எனக்கு அருளிப் பரனே நின்னைப் பணிகின்றோர்க்கு அழகு ஆதரவாம் பணி_புரிவார் அடியார்க்கு அடிமை ஆக்குகவே.

மேல்

#4 ஆக்கும் தொழிலால் களித்தானை அடக்கும் தொழிலால் அடக்கிப் பின் காக்கும் தொழிலால் அருள் புரிந்த கருணை_கடலே கடைநோக்கால் நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் போக்கும் தொழில் என்-பால் உண்டாம் இதற்கு என் புரிவேன் புண்ணியனே.

மேல்

#5 புரிவேன் விரதம் தவம் தானம் புரியாது ஒழிவேன் புண்ணியமே பரிவேன் பாவம் பரிவேன் இ பரிசால் ஒன்றும் பயன் காணேன் திரிவேன் நினது புகழ் பாடிச் சிறியேன் இதனைத் தீர்வேனேல் எரிவேன் எரிவாய்_நரகத்தே இருப்பேன் இளைப்பேன் விளைப்பேனே.

மேல்

#6 விளைப்பேன் பவமே அடிச் சிறியேன் வினையால் விளையும் வினைப் போகம் திளைப்பேன் எனினும் கதிர் வடி வேல் தேவே என்னும் திரு_மொழியால் இளைப்பேன் அலன் இங்கு இயம்புகிற்பேன் எனக்கு என் குறையுண்டு எமதூதன் வளைப்பேன் என வந்திடில் அவனை மடிப்பேன் கருணை வலத்தாலே.

மேல்

#7 வலத்தால் வடி வேல் கரத்து ஏந்தும் மணியே நின்னை வழுத்துகின்ற நலத்தால் உயர்ந்த பெரும் தவர்-பால் நண்ணும் பரிசு நல்கினையேல் தலத்தால் உயர்ந்த வானவரும் தமியேற்கு இணையோ சடமான மலத்தால் வருந்தாப் பெரு வாழ்வால் மகிழ்வேன் இன்பம் வளர்வேனே.

மேல்

#8 இன்பப் பெருக்கே அருள்_கடலே இறையே அழியா இரும் பொருளே அன்பர்க்கு அருளும் பெரும் கருணை அரசே உணர்வால் ஆம் பயனே வன்பர்க்கு அரிதாம் பரஞ்சோதி வடி வேல் மணியே அணியே என் துன்பத்து இடரைப் பொடியாக்கிச் சுகம் தந்து அருளத் துணியாயே.

மேல்

#9 சுகமே அடியர் உளத்து ஓங்கும் சுடரே அழியாத் துணையே என் அகமே புகுந்த அருள் தேவே அரு மா மணியே ஆர்_அமுதே இகமே பரத்தும் உனக்கு இன்றி எத்தேவருக்கும் எமக்கு அருள முகம் ஏது இலை எம் பெருமானே நினக்கு உண்டு ஆறு முக_மலரே.

மேல்

#10 ஆறு முகமும் திணி தோள் ஈர்_ஆறும் கருணை அடித் துணையும் வீறு மயிலும் தனிக் கடவுள் வேலும் துணை உண்டு எமக்கு இங்கே சீறும் பிணியும் கொடும் கோளும் தீய வினையும் செறியாவே நாறும் பகட்டான் அதிகாரம் நடவாது உலகம் பரவுறுமே.

@46. செல்வச் சீர்த்தி மாலை

மேல்

#1 அடியார்க்கு எளியர் எனும் முக்கண் ஐயர்-தமக்கும் உலகு ஈன்ற அம்மை-தனக்கும் திரு வாய் முத்து அளித்துக் களிக்கும் அரு_மருந்தே கடியார் கடப்ப மலர் மலர்ந்த கருணைப் பொருப்பே கற்பகமே கண்ணுள் மணியே அன்பர் மனக் கமலம் விரிக்கும் கதிர் ஒளியே படியார் வளி வான் தீ முதல் ஐம் பகுதியாய பரம்பொருளே பகர்தற்கு அரிய மெய்ஞ்ஞானப் பாகே அசுரப் படை முழுதும் தடிவாய் என்னச் சுரர் வேண்டத் தடிந்த வேல் கைத் தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#2 காயாது அளியக் கனிந்து அன்பால் கல்லால் அடி நின்று அருள் ஒழுகும் கனியுள் சுவையே அடியர் மனக் கவலை அகற்றும் கற்பகமே ஓயாது உயிர்க்குள் ஒளித்து எவையும் உணர்த்தி அருளும் ஒன்றே என் உள்ளக் களிப்பே ஐம்பொறியும் ஒடுக்கும் பெரியோர்க்கு ஓர் உறவே தேயாக் கருணைப் பாற்கடலே தெளியா அசுரப் போர்_கடலே தெய்வப் பதியே முதல் கதியே திருச்செந்தூரில் திகழ் மதியே தாயாய் என்னைக் காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#3 நாணும் அயன் மால் இந்திரன் பொன்_நாட்டுப் புலவர் மணம் வேட்ட நங்கைமார்கள் மங்கலப் பொன்_நாண் காத்து அளித்த நாயகமே சேணும் புவியும் பாதலமும் தித்தித்து ஒழுகும் செந்தேனே செஞ்சொல் சுவையே பொருள் சுவையே சிவன் கைப் பொருளே செங்கழுநீர்ப் பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியாப் புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமைத் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#4 முன்னைப் பொருட்கு முதல் பொருளே முடியாது ஓங்கும் முது_மறையே முக்கண் கரும்பு ஈன்றெடுத்த முழு முத்தே முதிர்ந்த முக்கனியே பொன்னைப் புயம்_கொண்டவன் போற்றும் பொன்னே புனித பூரணமே போத மணக்கும் புது மலரே புலவர் எவரும் புகும் பதியே மின்னைப் பொருவும் உலக மயல் வெறுத்தோர் உள்ள விளக்கு ஒளியே மேலும் கீழும் நடுவும் என விளங்கி நிறைந்த மெய்த் தேவே தன்னைப் பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#5 பித்தப் பெருமான் சிவபெருமான் பெரிய பெருமான்-தனக்கு அருமைப் பிள்ளைப் பெருமான் எனப் புலவர் பேசிக் களிக்கும் பெரு வாழ்வே மத்தப் பெரு மால் நீக்கும் ஒரு மருந்தே எல்லாம்_வல்லோனே வஞ்சச் சமண வல் இருளை மாய்க்கும் ஞான மணி_சுடரே அத்தக் கமலத்து அயில் படை கொள் அரசே மூவர்க்கு அருள்செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அ முத்தொழிலும் தருவோனே சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#6 ஏதம் அகற்றும் என் அரசே என் ஆர்_உயிரே என் அறிவே என் கண் ஒளியே என் பொருளே என் சற்குருவே என் தாயே காதம் மணக்கும் மலர் கடப்பம் கண்ணிப் புயனே காங்கெயனே கருணை_கடலே பன்னிரு கண் கரும்பே இருவர் காதலனே சீத மதியை முடித்த சடைச் சிவனார் செல்வத் திரு_மகனே திருமாலுடன் நான்முகன் மகவான் தேடிப் பணியும் சீமானே சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#7 வன்பில் பொதிந்த மனத்தினர்-பால் வருந்தி உழல்வேனல்லால் உன் மலர்_தாள் நினையேன் என்னே இ மதி_இலேனும் உய்வேனோ அன்பிற்கு இரங்கி விடம்_உண்டோன் அருமை மகனே ஆர்_அமுதே அகிலம் படைத்தோன் காத்தோன் நின்று அழித்தோன் ஏத்த அளித்தோனே துன்பிற்கு இடனாம் வன் பிறப்பைத் தொலைக்கும் துணையே சுகோதயமே தோகை மயில் மேல் தோன்று பெரும் சுடரே இடரால் சோர்வுற்றே தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலைத் தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#8 மாலும் அயனும் உருத்திரனும் வானத்தவரும் மானிடரும் மாவும் புள்ளும் ஊர்வனவும் மலையும் கடலும் மற்றவையும் ஆலும் கதியும் சத கோடி அண்டப் பரப்பும் தானாக அன்று ஓர் வடிவம் மேருவில் கொண்டு அருளும் தூய அற்புதமே வேலும் மயிலும் கொண்டு உருவாய் விளையாட்டு இயற்றும் வித்தகமே வேதப் பொருளே மதிச் சடை சேர் விமலன்-தனக்கு ஓர் மெய்ப்பொருளே சாலும் சுகுணத் திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#9 ஏதம் நிறுத்தும் இ உலகத்து இயல்பின் வாழ்க்கை-இடத்து எளியேன் எண்ணி அடங்காப் பெரும் துயர்கொண்டு எந்தாய் அந்தோ இளைக்கின்றேன் வேதம் நிறுத்தும் நின் கமல மென் தாள் துணையே துணை அல்லால் வேறொன்று அறியேன் அஃது அறிந்து இ வினையேற்கு அருள வேண்டாவோ போதம் நிறுத்தும் சற்குருவே புனித ஞானத்து அறிவுருவே பொய்யர் அறியாப் பரவெளியே புரம் மூன்று எரித்தோன் தரும் ஒளியே சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

மேல்

#10 முருகா என நின்று ஏத்தாத மூடரிடம் போய் மதி மயங்கி முன்னும் மடவார் முலை முகட்டின் முயங்கி அலைந்தே நினை மறந்தேன் உருகா வஞ்ச மனத்தேனை உருத்து ஈர்த்து இயமன் ஒரு பாசத்து உடலும் நடுங்க விசிக்கில் அவர்க்கு உரைப்பது அறியேன் உத்தமனே பருகாது உள்ளத்து இனித்திருக்கும் பாலே தேனே பகர் அருள் செம் பாகே தோகை மயில் நடத்தும் பரமே யாவும் படைத்தோனே தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே.

@47. செவி அறிவுறுத்தல்

மேல்

#1 உலகியல் கடும் சுரத்து உழன்று நாள்-தொறும் அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே இலகு சிற்பர குக என்று நீறு இடில் கலகம்_இல் இன்பமாம் கதி கிடைக்குமே.

மேல்

#2 மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே இருளுறு துயர்_கடல் இழியும் நெஞ்சமே தெருளுறு நீற்றினைச் சிவ என்று உட்கொளில் அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே.

மேல்

#3 வல்_வினைப் பகுதியால் மயங்கி வஞ்சர்-தம் கொல் வினைக் குழியிடைக் குதிக்கும் நெஞ்சமே இல் வினைச் சண்முக என்று நீறு இடில் நல் வினை பழுக்கும் ஓர் நாடு வாய்க்குமே.

மேல்

#4 கடும் புலைக் கருத்தர்-தம் கருத்தின் வண்ணமே விடும் புனல் எனத் துயர் விளைக்கும் நெஞ்சமே இடும் புகழ்ச் சண்முக என்று நீறு இடில் நடுங்கும் அச்சம் நினை நண்ணற்கு என்றுமே.

மேல்

#5 அன்பு இலா வஞ்சர்-தம் அவலச் சூழலில் என்பு இலாப் புழு என இரங்கு நெஞ்சமே இன்பு அறாச் சண்முக என்று நீறு இடில் துன்புறாத் தணிக் கதிச் சூழல் வாய்க்குமே.

மேல்

#6 செறிவு இலா வஞ்சகச் செல்வர் வாயிலில் அறிவு இலாது உழலும் என் அவல நெஞ்சமே எறிவு இலாச் சண்முக என்று நீறு இடில் மறிவு இலாச் சிவகதி வாயில் வாய்க்குமே.

மேல்

#7 மறிதரு கண்ணினார் மயக்கத்து ஆழ்ந்து வீண் வெறியொடு மலைந்து இடர் விளைக்கும் நெஞ்சமே நெறி சிவ சண்முக என்று நீறு இடில் முறிகொளீஇ நின்ற உன் மூடம் தீருமே.

மேல்

#8 காயமாம் கானலைக் கருதி நாள்-தொறும் மாயமாம் கானிடை வருந்தும் நெஞ்சமே நேயமாம் சண்முக என்று நீறு இடில் தோயமாம் பெரும் பிணித் துன்பம் நீங்குமே.

மேல்

#9 சதிசெயும் மங்கையர்-தமது கண்_வலை மதிகெட அழுந்தியே வணங்கும் நெஞ்சமே நிதி சிவ சண்முக என்று நீறு இடில் வதிதரும் உலகில் உன் வருத்தம் தீருமே.

மேல்

#10 பசை அறு வஞ்சகர்-பால் சென்று ஏங்கியே வசைபெற நாள்-தொறும் வருந்து நெஞ்சமே இசை சிவ சண்முக என்று நீறு இடில் திசைபெற மதிப்பர் உன் சிறுமை நீங்குமே.

@48. தேவ ஆசிரியர்

மேல்

#1 யாரையும் கடு விழியினால் மயக்குறும் ஏந்திழையவர் வெம் நீர்த் தாரை-தன்னையும் விரும்பி வீழ்ந்து ஆழ்ந்த என்றனக்கு அருள் உண்டேயோ காரை முட்டி அப்புறம் செலும் செஞ்சுடர்க் கதிரவன் இவர் ஆழித் தேரை எட்டுறும் பொழில் செறி தணிகையில் தேவர்கள் தொழும் தேவே.

மேல்

#2 மறிக்கும் வேல்_கணார் மல_குழி ஆழ்ந்து உழல் வன் தசை அறும் என்பைக் கறிக்கும் நாயினும் கடை நாய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ குறிக்கும் வேய் மணிகளைக் கதிர் இரத வான் குதிரையைப் புடைத்து எங்கும் தெறிக்கும் நல் வளம் செறி திரு_தணிகையில் தேவர்கள் தொழும் தேவே.

மேல்

#3 பிரியம் மேய வன் மடந்தையர்-தங்களைப் பிடித்து அலைத்திடு வஞ்சக் கரிய பேயினும் பெரிய பேய்க்கு உன் திரு_கருணையும் உண்டேயோ அரிய மால் அயன் இந்திரன் முதலினோர் அமர் உலகு அறிந்து அப்பால் தெரிய ஓங்கிய சிகரி சூழ் தணிகையில் தேவர்கள் தொழும் தேவே

@49 இங்கிதப் பத்து

மேல்

#1 சீர் வளர் குவளைத் தார் வளர் புயனார் சிவனார்-தம் பேர் வளர் மகனார் கார் வளர் தணிகைப் பெருமானார் ஏர் வளர் மயில் மேல் ஊர் வளர் நியமத்திடை வந்தால் வார் வளர் முலையார் ஆர் வளர்கில்லார் மயல் அம்மா

மேல்

#2 மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி வந்தார் அந்தோ கண்டனன் அங்கை வளை காணேன் சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் தம் தார் என்-பால் தந்தார் என்னைத் தந்தாரே

மேல்

#3 நதியும் மதியும் பொதியும் சடையார் நவில் மாலும் விதியும் துதி ஐம்_முகனார் மகனார் மிகு சீரும் நிதியும் பதியும் கதியும் தருவார் நெடு_வேலார் வதியும் மயில் மேல் வருவார் மலரே வரும் ஆறே

மேல்

#4 சந்து ஆர் வரையுள் சிந்தாமணி நேர் தணிகேசர் மந்தா நிலம் மேவும் தார் மறுகில் மயில் ஏறி வந்தார் நிலவு ஓர் செந்தாமரையின் மலர் வாச கொந்து ஆர் குழல் என் நிலையும் கலையும் கொண்டாரே

மேல்

#5 தந்தே நயமாம் மா தவர் புகழும் தணிகேசர் சந்து ஏன் ஒழிவாய் அம் தேன் மொழியாய் தனி இன்று வந்தேன் இனிமேல் வாரேன் என்றார் மனம் மாழ்கி நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே

மேல்

#6 தண் தணி காந்தள் ஓர் சண்பக மலரின் தளர்வு எய்தத் தெண்டு அணி நீலம் ஓர் செங்குவளையினில் திகழ்வேன்-பால் வள் தணிகேசரும் வந்து அருள்வாரோ வாராரோ தொண்டணிவீர் ஒரு சோதிடமேனும் சொல்லீரே

மேல்

#7 கா மலர் நறவுக்கே மலர் மூவிரு_காலே நீ தே மலர் தணிகைத் தேவர் மருங்கில் சேர்வாயேல் ஆ_மலர்_உடையாட்கு என் பெயர் பலவாம் அவையுள்ளே ஓம் மலர் அடிகேள் ஒன்றினை ஒன்று என்று உரையாயே

மேல்

#8 தேடும் கிளி நீ நின்னை விளம்பித் திரு_அன்னார் ஆடும் தணிகையில் என் உயிர்_அன்னார் அருகே போய்க் கூடும் தனம் மிசை என் பெயர் வைத்து அ கோதைக்கே ஈடும் கெட இன்று என்னையும் ஈந்து அருள் என்பாயே

மேல்

#9 பொன்னை இருத்தும் பொன்_மலர் எகினப் புள்ளே நீ அன்னை இகழ்ந்தே அங்கு அலர் செய்வாள் அனுராகம்- தன்னை அளிக்குந் தண் தணிகேசர்-தம்பால் போய் என்னை இகழ்ந்தாள் என் செயல் கொண்டாள் என்பாயே

மேல்

#10 வதியும் தணிகையில் வாழ்வுறும் என் கண்மணி_அன்னார் மதி உந்து அழல் கெட மா மயில் மீது இவண் வருவாரேல் திதியும் புவி புகல் நின் பெயர் நெறியைத் தெரிவிப்பான் நதி உந்து உணவு உதவுவன் அம் கொடி நீ நடவாயே

மேல்

#11 மன்று ஏர் தணிகையில் நின்றீர் கதி தர வந்தீரோ என்றேன் நசைதரும் இன் தேன் மொழியாய் யான் உன்-பால் இன்றே சுரர்_உலகு எய்திட வந்தேன் என்றார் காண் குன்று ஏர் முலையாய் என்னடி அவர் சொல் குறிதானே

மேல்

#12 சேதன நந்தார் சென்று வணங்கும் திறல்_வேலார் தாது அன வண்ணத்து உள் ஒளிர்கின்ற தணிகேசர் மா தனம் முந்தா வந்து என வந்தே வாதா தா ஆதனம் என்றார் என்னடி அம்மா அவர் சூதே

@50. போற்றித் திரு விருத்தம்

மேல்

#1 கங்கை அம் சடை சேர் முக்கண் கரும்பு அருள் மணியே போற்றி அங்கை அம் கனியே போற்றி அருள் பெரும் கடலே போற்றி பங்கையன் முதலோர் போற்றும் பரம்பரஞ்சுடரே போற்றி சங்கை தீர்த்து அருளும் தெய்வச் சரவணபவனே போற்றி.

மேல்

#2 பனிப்பு அற அருளும் முக்கண் பரஞ்சுடர் ஒளியே போற்றி இனிப்புறு கருணை வான் தேன் எனக்கு அருள் புரிந்தாய் போற்றி துனிப் பெரும் பவம் தீர்த்து என்னைச் சுகம் பெறவைத்தோய் போற்றி தனிப்பெரும் தவமே போற்றி சண்முகத்து அரசே போற்றி.

மேல்

#3 மணப் புது மலரே தெய்வ வான் சுவைக் கனியே போற்றி தணப்பு அற அடியர்க்கு இன்பம் தரும் ஒரு தருவே போற்றி கணப் பெரும் தலைவர் ஏத்தும் கழல் பதத்து அரசே போற்றி குணப் பெரும் குன்றே போற்றி குமர சற்குருவே போற்றி.

மேல்

#4 தவம் பெறு முனிவர் உள்ளத் தாமரை அமர்ந்தோய் போற்றி பவம் பெறும் சிறியேன்-தன்னைப் பாதுகாத்து அளித்தோய் போற்றி நவம் பெறு நிலைக்கும் மேலாம் நண்ணிய நலமே போற்றி சிவம் பெறும் பயனே போற்றி செங்கதிர் வேலோய் போற்றி.

மேல்

#5 மூ வடிவாகி நின்ற முழு_முதல் பரமே போற்றி மா அடி அமர்ந்த முக்கண் மலை தரு மணியே போற்றி சேவடி வழுத்தும் தொண்டர் சிறுமை தீர்த்து அருள்வோய் போற்றி தூ வடி வேல் கைக் கொண்ட சுந்தர வடிவே போற்றி

மேல்

#6 விண்ணுறு சுடரே என் உள் விளங்கிய விளக்கே போற்றி கண்ணுறு மணியே என்னைக் கலந்த நல் களிப்பே போற்றி பண்ணுறு பயனே என்னைப் பணிவித்த மணியே போற்றி எண்ணுறும் அடியார்-தங்கட்கு இனிய தெள் அமுதே போற்றி.

மேல்

#7 மறை எலாம் பரவ நின்ற மாணிக்க_மலையே போற்றி சிறை எலாம் தவிர்ந்து வானோர் திருவுறச்செய்தோய் போற்றி குறை எலாம் அறுத்தே இன்பம் கொடுத்த என் குருவே போற்றி துறை எலாம் விளங்கு ஞானச் சோதியே போற்றி போற்றி.

மேல்

#8 தாருகப் பதகன்-தன்னைத் தடிந்து அருள்செய்தோய் போற்றி வேர் உகச் சூர மாவை வீட்டிய வேலோய் போற்றி ஆருகச் சமயக் காட்டை அழித்த வெம் கனலே போற்றி போர் உகத் தகரை ஊர்ந்த புண்ணிய_மூர்த்தி போற்றி.

மேல்

#9 சிங்க மா முகனைக் கொன்ற திறல் உடைச் சிம்புள் போற்றி துங்க வாரணத்தோன் கொண்ட துயர் தவிர்த்து அளித்தோய் போற்றி செங்கண் மால் மருக போற்றி சிவபிரான் செல்வ போற்றி எங்கள் ஆர்_அமுதே போற்றி யாவர்க்கும் இறைவ போற்றி

மேல்

#10 முத்தியின் முதல்வ போற்றி மூவிரு முகத்த போற்றி சத்தி வேல் கரத்த போற்றி சங்கரி_புதல்வ போற்றி சித்தி தந்து அருளும் தேவர் சிகாமணி போற்றி போற்றி பத்தியின் விளைந்த இன்பப் பரம்பர போற்றி போற்றி.

மேல்

#11 தெருள் உடையோர்க்கு வாய்த்த சிவானந்தத் தேனே போற்றி பொருள் உடை மறையோர் உள்ளம் புகுந்த புண்ணியமே போற்றி மருள் உடை மனத்தினேனை வாழ்வித்த வாழ்வே போற்றி அருள் உடை அரசே எங்கள் அறு முகத்து அமுதே போற்றி.

மேல்

#12 பொய்யனேன் பிழைகள் எல்லாம் பொறுத்திடல் வேண்டும் போற்றி கையனேன்-தன்னை இன்னும் காத்திடல் வேண்டும் போற்றி மெய்யனே மெய்யர் உள்ளம் மேவிய விளைவே போற்றி ஐயனே அப்பனே எம் அரசனே போற்றி போற்றி

மேல்

#13 முருக நின் பாதம் போற்றி முளரி அம் கண்ணற்கு அன்பாம் மருக நின் கழல்கள் போற்றி வானவர் முதல்வ போற்றி பெருகு அருள்_வாரி போற்றி பெரும் குணப் பொருப்பே போற்றி தருக நின் கருணை போற்றி சாமி நின் அடிகள் போற்றி.

மேல்

#14 கோது இலாக் குணத்தோய் போற்றி குகேச நின் பாதம் போற்றி தீது இலாச் சிந்தை மேவும் சிவ_பரஞ்சோதி போற்றி போதில் நான்முகனும் காணாப் பூரண வடிவ போற்றி ஆதி நின் தாள்கள் போற்றி அநாதி நின் அடிகள் போற்றி.

மேல்

#15 வேதமும் கலைகள் யாவும் விளம்பிய புலவ போற்றி நாதமும் கடந்துநின்ற நாத நின் கருணை போற்றி போதமும் பொருளும் ஆகும் புனித நின் பாதம் போற்றி ஆதரம் ஆகி என் உள் அமர்ந்த என் அரசே போற்றி

@51 தனித் திருத் தொடை

மேல்

#1 என் இரு கண்ணின் மேவும் இலங்கு ஒளி மணியே போற்றி பன்னிரு படை கொண்டு ஓங்கும் பன்னிரு_கரத்தோய் போற்றி மின் இரு நங்கைமாருள் மேவிய மணாள போற்றி நின் இரு பாதம் போற்றி நீள் வடி_வேல போற்றி

மேல்

#2 மதி வளர் சடை முடி மணி தரு சுரர் முடி மணி என்கோ பதி வளர் சரவணபவ நவ சிவகுரு பதி என்கோ துதி வளர் துணை அடி தொழும் அடியவர் பெறு துணை என்கோ நிதி வளர் பரசுக நிலை பெறும் நெறி தரு நினை யானே

மேல்

#3 முருகா சரணம் சரணம் என்று உன் பதம் முன்னி உள்ளம் உருகாத நாய்_அனையேற்கு நின் தண் அருள் உண்டு-கொலோ அருகாத பாற்கடல் மீதே அனந்தல் அமர்ந்தவன்-தன் மருகா முக்கண்ணவன் மைந்தா எழில் மயில்_வாகனனே

மேல்

#4 உலகம் பரவும் ஒரு முதல்வா தெய்வத் திலகம் திகழிடத்துத் தேவே இலகு திருப் புள்ளிருக்கு வேளூர்ப் புனிதா அடியேன்-தன் உள் இருக்கும் துன்பை ஒழி

மேல்

#5 செக்கச்சிவந்தே திகழ் ஒருபால் பச்சையதாய் அக்கண் பரிதிபுரத்து ஆர்ந்து ஓங்கும் முக்கண் குழைக் கரும்பு ஈன் முத்துக்குமார மணியே என் பிழைக்கு இரங்கி ஆளுதியோ பேசு

மேல்

#6 திருமாலைப் பணிகொண்டு திகிரி கொண்ட தாருகனைச் செறித்து வாகைப் பெரு மாலை அணி திணி தோள் பெருமானே ஒரு மான்-தன் பெண் மேல் காமர் வரு மாலை உடையவர் போல் மண_மாலை புனைந்த முழு மணியே முக்கண்_ குரு மாலைப் பொருள் உரைத்த குமார_குருவே பரம_குருவே போற்றி

மேல்

#7 தோடு ஏந்து கடப்ப மலர்த் தொடையொடு செங்குவளை மலர்த் தொடையும் வேய்ந்து பாடு ஏந்தும் அறிஞர் தமிழ்ப் பாவொடு நாய்_அடியேன் சொல் பாவும் ஏற்றுப் பீடு ஏந்தும் இரு மடவார் பெட்பொடும் ஆங்கு அவர்கள் முலைப் பெரிய யானைக் கோடு ஏந்தும் அணி நெடும் தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி

மேல்

#8 நீர் வேய்ந்த சடை முடித்துத் தோல் உடுத்து நீறு அணிந்து நிலவும் கொன்றைத் தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டிப் பேர் வேய்ந்த மணி மன்றில் ஆடுகின்ற பெரும் பித்தப் பெருமான் ஈன்ற கூர் வேய்ந்த வேல் அணி தோள் குமார_குருவே பரம_குருவே போற்றி

மேல்

#9 பெண் குணத்தில் கடைப்படும் ஓர் பேய்க் குணம் கொள் நாயேன்-தன் பிழைகள் எல்லாம் எண்_குணப் பொன்_குன்றே நின் திருவுளத்தில் சிறிதேனும் எண்ணல் கண்டாய் பண் குணத்தில் சிறந்திடும் நின் பத்தர்-தமைப் புரப்பது போல் பாவியேனை வண் குணத்தில் புரத்தியிலையேனும் எனைக் கைவிடேல் வடி_வேலோனே

மேல்

#10 சத்தி வேல் கரத்த நின் சரணம் போற்றி மெய்ப் பத்தியோடு அருச்சனை பயிலும் பண்பினால் முத்தி சார்குவர் என மொழிதல் கேட்டு நல் புத்தியோடு உன் பதம் புகழ்வர் புண்ணியர்

மேல்

#11 தேனே அமுதே சிவமே தவமே தெளிவே எம் கோனே குருவே குலமே குணமே குகனேயோ வானே வளியே அனலே புனலே மலையே என் ஊனே உயிரே உணர்வே எனது உள் உறைவோனே

மேல்

#12 ஆறு முகம் கொண்ட ஐயா என் துன்பம் அனைத்தும் இன்னும் ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால் வீறு முகம் கொண்ட கை வேலின் வீரம் விளங்க என்னைச் சீறு முகம் கொண்ட அ துன்பம் ஓடச் செலுத்துகவே

மேல்

#13 பண் கொண்ட சண்முகத்து ஐயா அருள் மிகும் பன்னிரண்டு கண் கொண்ட நீ சற்றும் கண்டிலையோ என் கவலை வெள்ளம் திண் கொண்ட எட்டுத் திசை கொண்டு நீள் சத்த_தீவும் கொண்டு மண் கொண்டு விண் கொண்டு பாதாளம் கொண்டு வளர்கின்றதே

மேல்

#14 வன்_குலம் சேர் கடல் மா முதல் வேரற மாட்டி வண்மை நல் குலம் சேர் விண்_நகர் அளித்தோய் அன்று நண்ணி என்னை நின் குலம் சேர்த்தனை இன்று விடேல் உளம் நேர்ந்துகொண்டு பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இ பெரு நிலத்தே

@52 தனிப் பாசுரங்கள்

மேல்

#1 திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே

மேல்

#2 கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என் ஊழுக்கு அழுவேனோ ஓயாத் துயர்ப் பிறவி ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம்

மேல்

#3 சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையைத் தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே

மேல்

#4 கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்துக் கவ்வும் பொல்லா வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி மறி பிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனம் மறுகி வருந்தத் தங்கள் குறி பிடித்துக் காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே

மேல்

#5 தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம் ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதாத் ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் திதிதி தரும் தணிகைத் தே

மேல்

#6 நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை இற்குருவின் நாட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் சற்குரு என் சாமிநாதன்

@53. சண்முகர் கொம்மி

மேல்

#1 குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி

மேல்

#2 மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமை இலாத புகழாண்டி அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி

மேல்

#3 பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் பாவிகள்-தம்மை அடையாண்டி என் இரு கண்கள் அனையாண்டி அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி

மேல்

#4 வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த வேடர்-தனை எலாம் வென்றாண்டி தீங்கு செய் சூரனைக் கொன்றாண்டி அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி.

மேல்

#5 சீர் திகழ் தோகை மயில் மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் திறம் போலே கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.

மேல்

#6 ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ ஆறு புயம் திகழ் அற்புதமும் வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு மேனியும் பாருங்கள் வெள் வளைகாள்.

மேல்

#7 ஆனந்தமான அமுதனடி பர மானந்த நாட்டுக்கு அரசனடி தான் அந்தம் இல்லாச் சதுரனடி சிவ சண்முகன் நம் குரு சாமியடி.

மேல்

#8 வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_ வேத முடி திகழ் பாதனடி நாத வடிவு கொள் நீதனடி பர நாதம் கடந்த நலத்தனடி.

மேல்

#9 தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர தத்துவம் அன்றித் துடங்காண்டி சத்துவ ஞான வடிவாண்டி சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி.

மேல்

#10 சச்சிதானந்த உருவாண்டி பர தற்பர போகம் தருவாண்டி உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த உத்தம தேவனைப் பாடுங்கடி.

மேல்

#11 அற்புத மான அழகனடி துதி அன்பர்க்கு அருள்செய் குழகனடி சிற்பர யோகத் திறத்தனடி அந்தச் சேவகன் கீர்த்தியைப் பாடுங்கடி

மேல்

#12 சைவந் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்தப் பேர் கொண்டு அழைத்தாண்டி பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்தப் புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி.

மேல்

#13 வாசி நடத்தித் தருவாண்டி ஒரு வாசியில் இங்கே வருவாண்டி ஆசு இல் கருணை உருவாண்டி அவன் அற்புதத் தாள்_மலர் ஏத்துங்கடி.

மேல்

#14 இரா_பகல் இல்லா இடத்தாண்டி அன்பர் இன்ப உளம்கொள் நடத்தாண்டி அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த அண்ணலைப் பாடி அடியுங்கடி.

மேல்

#15 ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த ஒன்று இரண்டு ஆகா அளவாண்டி மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.

@54.சண்முகர் காலைப்பாட்டு

மேல்

#1 வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே வள்ளி மணாளரே வாரும் புள்ளி மயிலோரே வாரும்

மேல்

#2 சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று சண்முகநாதரே வாரும் உண்மை வினோதரே வாரும்

மேல்

#3 பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் மின் ஆர் முந்நூலரே வாரும்

மேல்

#4 காகம் கரைந்தது காலையும் ஆயிற்று கண் நுதல் சேயரே வாரும் ஒள் நுதல் நேயரே வாரும்

மேல்

#5 செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர் செங்கல்வராயரே வாரும் எம் குருநாதரே வாரும்

மேல்

#6 அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் ஆறு முகத்தோரே வாரும் மாறு இல் அகத்தோரே வாரும்

மேல்

#7 சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் சூரசங்காரரே வாரும் வீர சிங்காரரே வாரும்

மேல்

#8 வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் வேலாயுதத்தோரே வாரும் காலாயுதத்தோரே வாரும்

மேல்

#9 சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் தேவர்கள் தேவரே வாரும் மூவர் முதல்வரே வாரும்

மேல்

#10 பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் பன்னிரு_தோளரே வாரும் பொன்_மலர்_தாளரே வாரும்

மேல்

#11 மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது மா மயில் வீரரே வாரும் தீமை இல் தீரரே வாரும்

மேல்

#12 தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் சுப்பிரமணியரே வாரும் வைப்பின் அணியரே வாரும்

@55. தெய்வ மணிமாலை

மேல்

#1 திரு ஓங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள் திறல் ஓங்கு செல்வம் ஓங்கச் செறிவு ஓங்க அறிவு ஓங்கி நிறைவான இன்பம் திகழ்ந்து ஓங்க அருள்கொடுத்து மரு ஓங்கு செங்கமல மலர் ஓங்கு வணம் ஓங்க வளர் கருணை மயம் ஓங்கி ஓர் வரம் ஓங்கு தெள் அமுத வயம் ஓங்கி ஆனந்த வடிவாகி ஓங்கி ஞான உரு ஓங்கும் உணர்வின் நிறை ஒளி ஓங்கி ஓங்கும் மயில் ஊர்ந்து ஓங்கி எவ்வுயிர்க்கும் உறவு ஓங்கும் நின் பதம் என் உளம் ஓங்கி வளம் ஓங்க உய்கின்ற நாள் எந்தநாள் தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#2 பரம் ஏது வினை செயும் பயன் ஏது பதி ஏது பசு ஏது பாசம் ஏது பத்தி ஏது அடைகின்ற முத்தி ஏது அருள் ஏது பாவ புண்யங்கள் ஏது வரம் ஏது தவம் ஏது விரதம் ஏது ஒன்றும் இலை மனம் விரும்பு உணவு உண்டு நல் வத்திரம் அணிந்து மட மாதர்-தமை நாடி நறு மலர் சூடி விளையாடி மேல் கரம் மேவவிட்டு முலை தொட்டு வாழ்ந்து அவரொடு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம் இதே கைகண்ட பலன் எனும் கயவரைக் கூடாது அருள் தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#3 துடி என்னும் இடை அனம் பிடி என்னும் நடை முகில் துணை எனும் பிணையல் அளகம் சூது என்னும் முலை செழும் தாது என்னும் அலை புனல் சுழி என்ன மொழி செய் உந்தி வடி என்னும் விழி நிறையும் மதி என்னும் வதனம் என மங்கையர்-தம் அங்கம் உற்றே மனம் என்னும் ஒரு பாவி மயல் என்னும் அது மேவி மாள்க நான் வாழ்க இந்தப் படி என்னும் ஆசையைக் கடி என்ன என் சொல் இப்படி என்ன அறியாது நின் படி என்ன என் மொழிப்படி இன்ன வித்தை நீ படி என்னும் என் செய்குவேன் தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#4 வள்ளல் உனை உள்ளபடி வாழ்த்துகின்றோர்-தமை மதித்திடுவதன்றி மற்றை வானவரை மதி என்னில் நான் அவரை ஒரு கனவின்-மாட்டினும் மறந்தும் மதியேன் கள்ளம் அறும் உள்ளம் உறும் நின் பதம் அலால் வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண் எதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடு என வெறுத்துநிற்பேன் எள்ளளவும் இ மொழியில் ஏசுமொழி அன்று உண்மை என்னை ஆண்டு அருள் புரிகுவாய் என் தந்தையே எனது தாயே என் இன்பமே என்றன் அறிவே என் அன்பே தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#5 பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அறச் சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் மதி பாசம் அற்றதின் அடங்கிடும் அடங்கவே மலைவு_இல் மெய்ஞ்ஞானமயமாய் வரவு_போக்கு அற்ற நிலை கூடும் என எனது உளே வந்து உணர்வு தந்த குருவே துதி வாய்மை பெறு சாந்த பதம் மேவு மதியமே துரிசு_அறு சுயஞ்சோதியே தோகை வாகன மீது இலங்க வரு தோன்றலே சொல்ல அரிய நல்ல துணையே ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#6 காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்று இயம்பு பாதகனுமாம் இ எழுவரும் இவர்க்கு உற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய் சேமம் மிகு மா மறையின் ஓம் எனும் அருள்_பதத் திறன் அருளி மலயமுனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய்ஞ்ஞான சிவ தேசிக சிகா ரத்னமே தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முக சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#7 நிலையுறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு நிகழ் சாந்தமாம் புதல்வனும் நெறி பெறும் உதாரகுணம் என்னும் நற்பொருளும் மருள் நீக்கும் அறிவாம் துணைவனும் மலைவு_அறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு மனம் என்னும் நல் ஏவலும் வரு சகல கேவலம் இலாத இடமும் பெற்று வாழ்கின்ற வாழ்வு அருளுவாய் அலை இலாச் சிவஞான வாரியே ஆனந்த அமுதமே குமுத மலர் வாய் அணிகொள் பொன் கொடி பசும் கொடி இருபுறம் படர்ந்து அழகுபெற வரு பொன்_மலையே தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#8 ஒருமையுடன் நினது திரு_மலர்_அடி நினைக்கின்ற உத்தமர்-தம் உறவு வேண்டும் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெரு நெறி பிடித்து ஒழுகவேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#9 ஈ என்று நான் ஒருவர் இடம் நின்று கேளாத இயல்பும் என்னிடம் ஒருவர் ஈ திடு என்ற போது அவர்க்கு இலை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் இறையாம் நீ என்றும் எனை விடா நிலையும் நான் என்றும் உள நினை விடா நெறியும் அயலார் நிதி ஒன்றும் நயவாத மனமும் மெய்ந்நிலை நின்று நெகிழாத திடமும் உலகில் சீ என்று பேய் என்று நாய் என்று பிறர்-தமைத் தீங்கு சொல்லாத தெளிவும் திரம் ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்து நின் திரு_அடிக்கு ஆளாக்குவாய் தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#10 கரையில் வீண்கதை எலாம் உதிர் கருங்காக்கை போல் கதறுவார் கள் உண்ட தீக் கந்தம் நாறிட ஊத்தை காதம் நாறிட உறு கடும் பொய் இரு காதம் நாற வரையில் வாய் கொடு தர்க்கவாதம் இடுவார் சிவ மணம் கமழ் மலர்ப் பொன் வாய்க்கு மவுனம் இடுவார் இவரை மூடர் என ஓதுறு வழக்கு நல் வழக்கு எனினும் நான் உரையிலவர்-தமை உறாது உனது புகழ் பேசும்அவரோடு உறவு பெற அருளுவாய் உயர் தெய்வயானையொடு குறவர் மட_மானும் உள் உவப்புறு குண_குன்றமே தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#11 நாம் பிரமம் நமை அன்றி ஆம் பிரமம் வேறு இல்லை நன்மை தீமைகளும் இல்லை நவில்கின்றவாகி ஆம்தரம் இரண்டினும் ஒன்ற நடு நின்றது என்று வீண் நாள் போம் பிரம நீதி கேட்போர் பிரமையாகவே போதிப்பர் சாதிப்பர் தாம் புன்மை நெறி கைவிடார் தம் பிரமம் வினை ஒன்று போந்திடில் போகவிடுவார் சாம் பிரமமாம்இவர்கள் தாம் பிரமம் எனும் அறிவு தாம்பு பாம்பு எனும் அறிவு காண் சத்துவ அகண்ட பரிபூரண உபகார உபசாந்த சிவ சிற்பிரம நீ தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#12 பார் கொண்ட நடையில் வன் பசிகொண்டு வந்து இரப்பார் முகம் பார்த்து இரங்கும் பண்பும் நின் திரு_அடிக்கு அன்பும் நிறை ஆயுளும் பதியும் நல் நிதியும் உணர்வும் சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய்ப் புகழும் நோய்த் தீமை ஒருசற்றும் அணுகாத் திறமும் மெய்த் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் கூர் கொண்ட நெட்டு இலைக் கதிர் வேலும் மயிலும் ஒரு கோழி அம் கொடியும் விண்ணோர் கோமான்-தன் மகளும் ஒரு மா மான்-தன் மகளும் மால் கொண்ட நின் கோலம் மறவேன் தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#13 வன் பெரு நெருப்பினைப் புன் புழுப் பற்றுமோ வானை ஒரு மான் தாவுமோ வலி உள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய மலையை ஓர் ஈச் சிறகினால் துன்புற அசைக்குமோ வச்சிரத் தூண் ஒரு துரும்பினால் துண்டம் ஆமோ சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை தோயுமோ இல்லை அது போல் அன்பு உடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் அடி_மலர் முடிக்கு அணிந்தோர்க்கு அவலம் உறுமோ காமம் வெகுளி உறுமோ மனத் தற்பமும் விகற்பம் உறுமோ தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#14 கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக் கதித்த பித்தளையின் இடையும் மானலில் கண்டு உளம் மயங்கல் போல் கற்பனையை மாயையில் கண்டு வீணே மனை என்றும் மகவு என்றும் உறவு என்றும் நிதி என்றும் வாழ்வு என்றும் மானம் என்றும் ஊனலின் உடம்பு என்றும் உயிர் என்றும் உளம் என்றும் உள் என்றும் வெளி என்றும் வான்_ உலகு என்றும் அளவுறு விகாரம் உற நின்ற எனை உண்மை அறிவித்த குருவே தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே

மேல்

#15 கற்று ஒளி கொள் உணர்வினோர் வேண்டாத இ பெருங் கன்ம உடலில் பருவம் நேர் கண்டு அழியும் இளமைதான் பகல்வேடமோ புரைக் கடல்நீர்-கொலோ கபடமோ உற்று ஒளியின் வெயில் இட்ட மஞ்சளோ வான் இட்ட ஒரு விலோ நீர்க்குமிழியோ உலை அனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ ஒன்றும் அறியேன் இதனை நான் பற்றுறுதியாக் கொண்டு வனிதையர் கண்_வலையினில் பட்டு மதிகெட்டு உழன்றே பாவமே பயில்கின்றதல்லாது நின் அடிப் பற்றணுவும் முற்று அறிகிலேன் சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#16 சடம் ஆகி இன்பம் தராது ஆகி மிகு பெருஞ் சஞ்சலாகாரம் ஆகிச் சற்று ஆகி வெளி மயல் பற்று ஆகி ஓடும் இத் தன்மை பெறு செல்வம் அந்தோ விடம் ஆகி ஒரு கபட நடம் ஆகி யாற்றிடை விரைந்து செலும் வெள்ளம் ஆகி வேலை அலை ஆகி ஆங்கார வலை ஆகி முதிர்வேனில் உறு மேகம் ஆகிக் கடமாய சகடமுறு கால் ஆகி நீடு வாய்க்கால் ஓடும் நீர் ஆகியே கற்பு இலா மகளிர் போல் பொற்பு இலாது உழலும் இது கருதாத வகை அருளுவாய் தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#17 உப்புற்ற பாண்டம் என ஒன்பது துவாரத்துள் உற்ற அசும்பு ஒழுகும் உடலை உயர்கின்ற வானிடை எறிந்த கல் என்றும் மலை உற்று இழியும் அருவி என்றும் வெப்புற்ற காற்றிடை விளக்கு என்றும் மேகம் உறு மின் என்றும் வீசு காற்றின் மேற்பட்ட பஞ்சு என்றும் மஞ்சு என்றும் வினை தந்த வெறும் மாய வேடம் என்றும் கப்புற்ற பறவைக் குடம்பை என்றும் பொய்த்த கனவு என்றும் நீரில் எழுதும் கைஎழுத்து என்றும் உள் கண்டுகொண்டு அதில் ஆசை கைவிடேன் என் செய்குவேன் தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#18 எந்தை நினை வாழ்த்தாத பேயர் வாய் கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறு வாய் எங்கள் பெருமான் உனை வணங்காத மூடர் தலை இகழ் விறகு எடுக்கும் தலை கந்தம் மிகு நின் மேனி காணாத கயவர் கண் கல நீர் சொரிந்த அழு கண் கடவுள் நின் புகழ்-தனைக் கேளாத வீணர் செவி கைத்து இழவு கேட்கும் செவி பந்தம் அற நினை எணாப் பாவிகள்-தம் நெஞ்சம் பகீர் என நடுங்கும் நெஞ்சம் பரம நின் திருமுன்னர் குவியாத வஞ்சர் கை பலி ஏற்க நீள் கொடுங் கை சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#19 ஐய நின் சீர் பேசு செல்வர் வாய் நல்ல தெள் அழுது உண்டு உவந்த திருவாய் அப்ப நின் திரு_அடி வணங்கினோர் தலைமுடி அணிந்து ஓங்கி வாழுந் தலை மெய்ய நின் திரு_மேனி கண்ட புண்ணியர் கண்கள் மிக்க ஒளி மேவு கண்கள் வேல நின் புகழ் கேட்ட வித்தகர் திரு_செவி விழா சுபம் கேட்கும் செவி துய்ய நின் பதம் எண்ணும் மேலோர்கள் நெஞ்சம் மெய்ச் சுக ரூபமான நெஞ்சம் தோன்றல் உன் திருமுன் குவித்த பெரியோர் கைகள் சுவர்ன்னம் இடுகின்ற கைகள் சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#20 உழலுற்ற உழவு முதல் உறு தொழில் இயற்றி மலம் ஒத்த பல பொருள் ஈட்டி வீண் உறு வயிறு நிறைய வெண் சோறு அடைத்து இ உடலை ஒதி போல் வளர்த்து நாளும் விழலுற்ற வாழ்க்கையை விரும்பினேன் ஐய இ வெய்ய உடல் பொய் என்கிலேன் வெளி மயக்கோ மாய விட மயக்கோ எனது விதி மயக்கோ அறிகிலேன் கழலுற்ற நின் துணைக் கால்_மலர் வணங்கி நின் கருணையை விழைந்துகொண்டு எம் களைகணே ஈர்_ஆறு கண் கொண்ட என்றன் இரு கண்ணே எனப் புகழ்கிலேன் தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#21 வானம் எங்கே அமுத பானம் எங்கே அமரர் வாழ்க்கை அபிமானம் எங்கே மாட்சி எங்கே அவர்கள் சூழ்ச்சி எங்கே தேவ மன்னன் அரசாட்சி எங்கே ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே ஈனம் அங்கே செய்த தாருகனை ஆயிர இலக்கம் உறு சிங்கமுகனை எண்ணரிய திறல் பெற்ற சூரனை மறக் கருணை ஈந்து பணிகொண்டிலை எனில் தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#22 மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடி சீர் மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை வீழ்ந்து சுழல்வான் சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடைச் செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் இனமான மாச்சரிய வெம் குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ என் சொல் கேளான் எனது கைப்படான் மற்று இதற்கு ஏழையேன் என் செய்குவேன் தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#23 வாய்கொண்டு உரைத்தல் அரிது என் செய்கேன் என் செய்கேன் வள்ளல் உன் சேவடி-கண் மன்னாது பொன்_ஆசை மண்_ஆசை பெண்_ஆசை வாய்ந்து உழலும் எனது மனது பேய்கொண்டு கள் உண்டு கோலினால் மொத்துண்டு பித்துண்ட வன் குரங்கோ பேசுறு குலாலனால் சுழல்கின்ற திகிரியோ பேதை விளையாடு பந்தோ காய்கொண்டு பாய்கின்ற வெவ் விலங்கோ பெருங் காற்றினால் சுழல் கறங்கோ கால வடிவோ இந்திரஜால வடிவோ எனது கர்ம வடிவோ அறிகிலேன் தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#24 கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன் கனிவுகொண்டு உனது திரு_அடியை ஒரு கனவினும் கருதிலேன் நல்லன் அல்லேன் குற்றமே செய்வது என் குணமாகும் அ பெரும் குற்றம் எல்லாம் குணம் எனக் கொள்ளுவது நின் அருள் குணம் ஆகும் என்னில் என் குறை தவிர்த்து அருள் புரிகுவாய் பெற்றம் மேல் வரும் ஒரு பெருந்தகையின் அருள் உருப் பெற்று எழுந்து ஓங்கு சுடரே பிரணவாகார சின்மய விமல சொருபமே பேதம்_இல் பரப்பிரமமே தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#25 பாய்ப்பட்ட புலி அன்ன நாய்ப்பட்ட கயவர்-தம் பாழ்பட்ட மனையில் நெடுநாள் பண்பட்ட கழுநீரும் விண்பட்ட இன் அமுது பட்ட பாடு ஆகுமன்றிப் போய்ப்பட்ட புல்லும் மணி பூ பட்ட பாடும் நல் பூண் பட்ட பாடு தவிடும் புன்பட்ட உமியும் உயர் பொன் பட்ட பாடு அவர்கள் போகம் ஒரு போகம் ஆமோ ஆய்ப்பட்ட மறைமுடிச் சேய்ப்பட்ட நின் அடிக்கு ஆட்பட்ட பெருவாழ்விலே அருள் பட்ட நெறியும் மெய்ப்பொருள் பட்ட நிலையும் உற அமர் போகமே போகமாம் தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#26 சேவல் அம் கொடி கொண்ட நினை அன்றி வேறு சிறுதேவரைச் சிந்தைசெய்வோர் செங்கனியை விட்டு வேப்பங்கனியை உண்ணும் ஒரு சிறு கருங்காக்கை நிகர்வார் நா அலங்காரம் அற வேறு புகழ் பேசி நின் நல் புகழ் வழுத்தாதபேர் நாய்_பால் விரும்பி ஆன் தூய்ப் பாலை நயவாத நவையுடைப் பேயர் ஆவார் நீ வலந்தர நினது குற்றேவல் புரியாது நின்று மற்றேவல்_புரிவோர் நெல்லுக்கு இறைக்காது புல்லுக்கு இறைக்கின்ற நெடிய வெறு வீணர் ஆவார் தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#27 பிரமன் இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ பெய் சிறையில் இன்னும் ஒரு கால் பின்பட்டு நிற்குமோ முன் பட்ட குட்டில் பெறும் துயர் மறந்துவிடுமோ இரவு நிறம் உடை இயமன் இனி எனைக் கனவினும் இறப்பிக்க எண்ணமுறுமோ எண்ணுறான் உதையுண்டு சிதையுண்ட தன் உடல் இருந்த வடு எண்ணுறானோ கரவு பெறு வினை வந்து நலியுமோ அதனை ஒரு காசுக்கும் மதியேன் எலாம் கற்றவர்கள் பற்றும் நின் திரு_அருளை யானும் கலந்திடப் பெற்றுநின்றேன் தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#28 நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பதத் தியானம் உண்டாயில் அரசே தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#29 உளம் எனது வசம் நின்றது இல்லை என் தொல்லை வினை ஒல்லை விட்டிடவும் இல்லை உன் பதத்து அன்பு இல்லை என்றனக்கு உற்ற_துணை உனை அன்றி வேறும் இல்லை இளையன் அவனுக்கு அருள வேண்டும் என்று உன்-பால் இசைக்கின்ற பேரும் இல்லை ஏழை அவனுக்கு அருள்வது ஏன் என்று உன் எதிர்நின்று இயம்புகின்றோரும் இல்லை வளம் மருவும் உனது திரு_அருள் குறைவது இல்லை மேல் மற்றொரு வழக்கும் இல்லை வந்து இரப்போர்களுக்கு இலை என்பது இல்லை நீ வன்_மனத்தவனும் அல்லை தளர்வு இலாச் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#30 எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான மூர்த்தியே முடிவு_இலாத முருகனே நெடிய மால் மருகனே சிவபிரான் முத்தாடும் அருமை மகனே பத்திக்கு வந்து அருள் பரிந்து அருளும் நின் அடிப் பற்று அருளி என்னை இந்தப் படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப் பண்ணாமல் ஆண்டருளுவாய் சத்திக்கும் நீர்ச் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#31 நான் கொண்ட விரதம் நின் அடியலால் பிறர்-தம்மை நாடாமை ஆகும் இந்த நல் விரதமாம் கனியை இன்மை எனும் ஒரு துட்ட நாய் வந்து கவ்வி அந்தோ தான் கொண்டுபோவது இனி என் செய்வேன் என் செய்வேன் தளராமை என்னும் ஒரு கைத் தடி கொண்டு அடிக்கவோ வலி_இலேன் சிறியனேன்-தன் முகம் பார்த்து அருளுவாய் வான் கொண்ட தெள் அமுத வாரியே மிகு கருணை_மழையே மழைக் கொண்டலே வள்ளலே என் இரு கண்மணியே என் இன்பமே மயில் ஏறு மாணிக்கமே தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

@56 கந்தர் சரணப் பத்து

மேல்

#1 அருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க்கு அரியாய் சரணம் சரணம் மயில்_வாகனனே சரணம் சரணம் கருணாலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#2 பண் நேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் விண் ஏர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் உள் நேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#3 முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் வடி வேல் அரசே சரணம் சரணம் மயில் ஊர் மணியே சரணம் சரணம் அடியார்க்கு எளியாய் சரணம் சரணம் அரியாய் பெரியாய் சரணம் சரணம் கடியாக் கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#4 பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் தேவே தெளிவே சரணம் சரணம் சிவ சண்முகனே சரணம் சரணம் கா ஏர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#5 நடவும் தனி மா மயிலோய் சரணம் நல்லார் புகழும் வல்லோய் சரணம் திடமும் திருவும் தருவோய் சரணம் தேவர்க்கு அரியாய் சரணம் சரணம் தட வண் புயனே சரணம் சரணம் தனி மா முதலே சரணம் சரணம் கடவுள் மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#6 கோலக் குறமான் கணவா சரணம் குல மா மணியே சரணம் சரணம் சீலத்தவருக்கு அருள்வோய் சரணம் சிவனார் புதல்வா சரணம் சரணம் ஞாலத் துயர் தீர் நலனே சரணம் நடு ஆகிய நல் ஒளியே சரணம் காலன் தெறுவோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#7 நம் கட்கு இனியாய் சரணம் சரணம் நந்தா உயர் சம்பந்தா சரணம் திங்கள்_சடையான் மகனே சரணம் சிவை தந்தருளும் புதல்வா சரணம் துங்கச் சுகம் நன்று அருள்வோய் சரணம் சுரர் வாழ்த்திடும் நம் துரையே சரணம் கங்கைக்கு ஒரு மா மதலாய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#8 ஒளியுள் ஒளியே சரணம் சரணம் ஒன்றே பலவே சரணம் சரணம் தெளியும் தெருளே சரணம் சரணம் சிவமே தவமே சரணம் சரணம் அளியும் கனியே சரணம் சரணம் அமுதே அறிவே சரணம் சரணம் களி ஒன்று அருள்வோய் சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#9 மன்னே எனை ஆள் வரதா சரணம் மதியே அடியேன் வாழ்வே சரணம் பொன்னே புனிதா சரணம் சரணம் புகழ்வார் இதயம் புகுவாய் சரணம் அன்னே வடி வேல் அரசே சரணம் அறு மா முகனே சரணம் சரணம் கல் நேர் புயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்

மேல்

#10 வேதப் பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் போதத் திறனே சரணம் சரணம் புனை மா மயிலோய் சரணம் சரணம் நாதத்து ஒலியே சரணம் சரணம் நவை_இல்லவனே சரணம் சரணம் காதுக்கு இனிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் *

மேல்

6.ஆறாம் திருமுறை


001. பரசிவ வணக்கம்
002. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை
003. ஆற்றாமை
004. பிறப்பவம் பொறாது பேதுறல்
005. மாயை வலிக் கழுங்கல்
006. முறையீடு
007. அடியார் பேறு
008. ஆன்ம விசாரத் தழுங்கல்
009. அவா அறுத்தல்
010. தற்சுதந்தரம் இன்மை
011. அத்துவித ஆனந்த அநுபவ இடையீடு
012. பிள்ளைச் சிறு விண்ணப்பம்
013. பிள்ளைப் பெரு விண்ணப்பம்
014. மாயையின் விளக்கம்
015. அபயத் திறன்
016. ஆற்ற மாட்டாமை
017. வாதனைக் கழிவு
018. அபயம் இடுதல்
019. பிரிவாற்றாமை
020. இறை பொறுப் பியம்பல்
021. கைம்மாறின்மை
022. தலைமகளின் முன்ன முடிபு
023. வேட்கைக் கொத்து
024. தனித் திரு அலங்கல்
025. நடராசபதி மாலை
026. சற்குருமணி மாலை
027. தற்போத இழப்பு
028. திருமுன் விண்ணப்பம்
029. இனித்த வாழ் வருள் எனல்
030. திருவருள் விழைதல்
031. திரு அருட் புகழ்ச்சி
032. சிற்சபை விளக்கம்
033. திரு அருட் பேறு
034. உண்மை கூறல்
035. பிரியேன் என்றல்
036. சிவ தரிசனம்
037. அநுபோக நிலயம்
038. சிவயோக நிலை
039. பெற்ற பேற்றினை வியத்தல்
040. அழிவுறா அருள் வடிவப் பேறு
041. பேரருள் வாய்மையை வியத்தல்
042. பொதுநடம் புரிகின்ற பொருள்
043. ஆனந் தானுபவம்
044. பரசிவ நிலை
045. பேராநந்தப் பெரு நிலை
046. திருவடி நிலை
047. காட்சிக் களிப்பு
048. கண்கொளாக் காட்சி
049. இறை திருக் காட்சி
050. உளம் புகுந்த திறம் வியத்தல்
051. வரம்பில் வியப்பு
052. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
053. ஆண்டருளிய அருமையை வியத்தல்
054. இறைவனை ஏத்தும் இன்பம்
055. பாமாலை ஏற்றல்
056. உத்தர ஞான சிதம்பர மாலை
057. செய் பணி வினவல்
058. ஆன்ம தரிசனம்
059. வேண்டுவன இவை இவை என விண்ணப்பித்தல்
060. அருள் விளக்க மாலை
061. தாய் கூறல்
062. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்
063. தலைவி வருந்தல்
064. தனித் திருத் தொடை
065. அருட்பெருஞ்ஜோதி அகவல்
066. இறை இன்பக் குழைவு
067. அருட் பெருஞ் சோதி அட்டகம்
068. பெறாப் பேறு
069. சிவானந்தத் தழுந்தல்
070. திரு அருட் பெருமை
071. அச்சோப் பத்து
072. அநுபவ நிலை
073. அருட் பெருஞ் சோதி அடைவு
074. அடிமைப் பேறு
075. உலப்பில் இன்பம்
076. மெய் இன்பப் பேறு
077. சிவ புண்ணியப் பேறு
078. சிவானந்தப் பற்று
079. இறை எளிமையை வியத்தல்
080. திரு நடப் புகழ்ச்சி - திரு ஆரூர்
081. திரு அருட் பேறு
082. அருட் கொடைப் புகழ்ச்சி
083. திரு அருட் கொடை
084. அநுபவ சித்தி
085. பொன் வடிவப் பேறு
086. தத்துவ வெற்றி
087. பேறடைவு
088. அடைக்கலம் புகுதல்
089. இறை வர வியம்பல்
090. திருப்பள்ளி எழுச்சி
091. இன்பத் திறன்
092. உற்ற துரைத்தல்
093. சுத்த சிவ நிலை
094. உலகப் பேறு
095. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்
096. உலகர்க்கு உய்வகை கூறல்
097. புனிதகுலம் பெறுமாறு புகலல்
098. மரணம் இலாப் பெரு வாழ்வு
099. பரன் அளிக்கும் தேகம் சுடுவ தபராதம் எனல்
100. சுத்த சிவ சன்மார்க்க உலகின் ஒருமை நிலை
101. திருவடிப் பெருமை
102. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
103. நற்றாய் செவிலிக்குக் கூறல்
104. தோழிக் குரிமை கிளத்தல்
105. தலைவி கூறல்
106. அனுபவ மாலை
107. சிற் சத்தி துதி
108. தனித் திரு மாலை
 
      
     
     

@1 பரசிவ வணக்கம்

மேல்

#1 திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச் சிவ ஞான நிலை விளங்கச் சிவானுபவம் விளங்கத் தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணிப் பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே

@2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

மேல்

#1 அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால் பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும் இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும் சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

மேல்

#2 வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய் அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய்த் திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

மேல்

#3 சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி நேர் ஆதி விளக்கம்-அதாய்ப் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும் பேர்_ஆசை விளக்கம்-அதாய்ச் சுத்த விளக்கம்-அதாய்ப் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்ச் சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

மேல்

#4 இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகித் தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்தியப் பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல் நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிர்_அதிசய இன்பம் ஞான சித்திப் பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய்த் திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

மேல்

#5 எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய்ச் சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய்த் துரிய வெளி கடந்த வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

மேல்

#6 அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய் மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்த் துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய்த் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய் உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#7 அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக் கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம் ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#8 பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூதப் பகுதி முதல் பகர் நாதப் பகுதி வரையான ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய் நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய் ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#9 இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம் பரவு மற்றைப் பொருள்கள் உயிர்த் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அப் புறத்தும் விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளிப் பேர்_ஒளியாய் உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#10 ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்தப் பேர்_ஆனந்தத்தோடு ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#11 வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல் புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#12 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர் செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார் வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய் உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

மேல்

#13 ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார் அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார் என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும் ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

@3. ஆற்றாமை

மேல்

#1 எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன் புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#2 கற்ற மேலவர்-தம் உறவினைக் கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன் உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன் செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன் குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#3 கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கல்_மன குரங்கு_அனேன் கடையேன் நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன் நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#4 நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன் புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண் போது போக்குறுவேன் நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன் குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#5 செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்பச் செல்லினால் அரிப்புண்ட சிறியேன் அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன் படி முடிவு அழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்சக் கொடி முடிந்திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#6 அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அறக் கடையவரினும் கடையேன் இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறிச் சழக்கையே சிலுகுக் குரங்கு எனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#7 வாட்டமே உடையார்-தங்களைக் காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன் கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை ஆட்டமே புரிந்தேன் அறத் தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும் கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#8 கலைத் தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன் விலைத் தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப் புலைத் தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக் கொலைத் தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#9 பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன் எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன் மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு எனத் திரிந்து உழல்கின்றேன் குணம் இலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

மேல்

#10 கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

@4. பிறப்பவம் பொறாது பேதுறல்

மேல்

#1 குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றிக் குணங்களிலும் கொடியேன் மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்துப் பெரும் பாவி வஞ்ச நெஞ்சப் புலையேன் நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன் நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே.

மேல்

#2 விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிகப் பெரிதும் சிறியேன் அளக்க அறியாத் துயர்க் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிகத் துரும்பேன் கிளக்க அறியாக் கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் களக்கு அறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே.

மேல்

#3 அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்துத் துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன் குறியாத கொடும் பாவச் சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன் செறியாத மனக் கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன் எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே.

மேல்

#4 இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன் அனித்த நெறியிடைத் தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அறக் கடையர்-தமக்கு எல்லாம் அறக் கடையன் ஆனேன் பனித்த மன_குரங்காட்டிப் பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன் தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனிக் கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே.

மேல்

#5 ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலாப் புலையேன் சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன் மாறுகின்ற குணப் பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன் வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய்க் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே.

மேல்

#6 அரசர் எலாம் மதித்திடப் பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிகக் கிளைத்தேன் அருள் அறியாக் கடையேன் புரசமரம் போல் பருத்தேன் எட்டி எனத் தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன் பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் பசை அறியாக் கருங்கல்_மனப் பாவிகளில் சிறந்தேன் விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே.

மேல்

#7 பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன் மருள் அறியாத் திருவாளர் உளம் கயக்கத் திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன் வெருள் அறியாக் கொடு மனத்தேன் விழற்கு இறைத்துக் களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன் தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே.

மேல்

#8 தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமைப் போல நடித்துத் தருக்குகின்றேன் உணர்ச்சி இலாச் சடம் போல இருந்தேன் பவம் புரிவேன் கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மனப் பாறை சுமந்து உழல்வேன் அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன் நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே.

மேல்

#9 இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன் பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டுத் தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன் நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடுஞ் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன் கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே.

மேல்

#10 காட்டுகின்ற உவர்க் கடல் போல் கலைகளிலும் செல்வக் களிப்பினிலும் சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன் நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவாப் படும் கிணறு போல்வேன் ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன் கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே.

@5. மாயை வலிக் கழுங்கல்

மேல்

#1 தாவும் மான் எனக் குதித்துக்கொண்டு ஓடித் தையலார் முலை_தடம் படும் கடையேன் கூவு காக்கைக்குச் சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன் ஓவுறாது உழல் ஈ எனப் பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன் சாவுறா வகைக்கு என் செயக் கடவேன் தந்தையே எனைத் தாங்கிக்கொண்டு அருளே.

மேல்

#2 போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத் தேகம் ஆதியைப் பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன் காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன் ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

மேல்

#3 விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்றுக் குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் வழியைத் தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன் பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன் பரமனே எனைப் பரிந்துகொண்டு அருளே.

மேல்

#4 மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் சிதத்திலே உறற்கு என் செயக் கடவேன் தெய்வமே எனைச் சேர்த்துக்கொண்டு அருளே.

மேல்

#5 கொடிய வெம் புலிக் குணத்தினேன் உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவப் பொழுதையே கழிப்பேன் விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன் அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

மேல்

#6 தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால் வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு எனப் பறந்தேன் ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

மேல்

#7 வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் பருத்த ஊனொடு மலம் உணத் திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன் கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்குப் பொருத்தன் ஆவதற்கு என் செயக் கடவேன் புண்ணியா எனைப் புரிந்துகொண்டு அருளே.

மேல்

#8 துருக்கலோ கொடும் கருங்கலோ வயிரச் சூழ் கலோ எனக் காழ்கொளும் மனத்தேன் தருக்கல் ஆணவக் கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் எனப் பந்தமுற்று அலைவேன் திருக்கு எலாம் பெறு வெருக்கு எனப் புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான் உருக்கல் ஆகுதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

மேல்

#9 கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் மானம் மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் ஞானம் மேவுதற்கு என் செயக் கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே.

மேல்

#10 இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் எனத் திரிந்தேன் பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன் அருளை மேவுதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

@6. முறையீடு

மேல்

#1 மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன் திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#2 அகங்காரக் கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமரக் கனி போல இச்சை கனிந்து உழல்வேன் மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ இகம் காணத் திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#3 கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன் நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காமப் பெரும் கடலை நீந்தும் வகை அறியேன் சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசைச் சேர்க்க அறிவேனோ இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#4 தேகம் உறு பூத நிலைத் திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன் யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடைக் கிடந்தே உழைப்பாரில் கடையேன் ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#5 வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன் நாதாந்தத் திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன் போதாந்தத் திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#6 கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன் கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம் மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#7 சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன் ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியாக் கடல் போல் ஆனந்தப் பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன் நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணிப் பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#8 சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன் ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ந் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன் மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#9 தத்துவம் என் வசமாகத் தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன் அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன் சுத்த சிவ சன்மார்க்கத் திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

மேல்

#10 வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன் திரை அறு தண் கடல் அறியேன் அக் கடலைக் கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன் உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

@7. அடியார் பேறு

மேல்

#1 அடியார் வருத்தம்-தனைக் கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் வடியாக் கருணைப் பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம் நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ கடியாக் கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே.

மேல்

#2 பை ஆர் பாம்பு கொடியது எனப் பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன் நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே.

மேல்

#3 பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான் ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே.

மேல்

#4 மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையாக் கல் என்று பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில் கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே இருள் நாடிய இச் சிறியேனுக்கு இன்னும் இரங்காது இருந்தாயே.

மேல்

#5 முன்னும் கொடுமை பல புரிந்து முடுகிப் பின்னும் கொடுமை செய உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ.

மேல்

#6 அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல் செம் கேழ் இதழிச் சடைக் கனியே சிவமே அடிமைச் சிறு நாயேன் எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே.

மேல்

#7 அளியே அன்பர் அன்பே நல் அமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும் தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையாத் திருவுளம்-தான் எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.

மேல்

#8 தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத் தெளிந்து வாது நினைக்கும் மனக் கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில் சூது நினைப்பாய் எனில் யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன் ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே.

மேல்

#9 பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றிக் கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

மேல்

#10 வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினைத் துயர்கள் பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளம்-தான் நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

மேல்

#11 கல்லும் கனியத் திரு_நோக்கம் புரியும் கருணைக் கடலே நான் அல்லும்_பகலுந் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன் கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்புத் தேவர் மனம் போலச் சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

மேல்

#12 படி மேல் ஆசை பல வைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்து சுகக் கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன் அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே.

மேல்

#13 நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும் ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல் மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்கத் துணிவேனே.

மேல்

#14 நயத்தால் உனது திரு_அருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இ உடம்பைச் சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே.

மேல்

#15 இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார் வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன் அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடிப் பாடி அடுத்த வினைத் துன்பம் முடுகிச் சுடச்சுடவும் சோறு உண்டு இருக்கத் துணிந்தேனே.

மேல்

#16 எ நாள் கருணைத் தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன் செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.

மேல்

#17 எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ அந்த வகையை நான் அறியேன் அறிவிப்பாரும் எனக்கு இல்லை இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன் பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மைப் பரம் பொருளே.

மேல்

#18 அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில் கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இத் தாழ்வு அகற்றி எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.

மேல்

#19 எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள் எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல் வல்லாய் என்னைப் புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே.

மேல்

#20 கூடும் கருணைத் திரு_குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும் பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லைப் பர வெளியில் ஆடும் செல்வத் திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே.

@8. ஆன்ம விசாரத் தழுங்கல்

மேல்

#1 போகமே விழைந்தேன் புலை மனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன் ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியாக் காகமே எனப் போய்ப் பிறர்-தமை வருத்திக் களித்த பாதகத் தொழில் கடையேன் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே.

மேல்

#2 பூப்பினும் பல கால் மடந்தையர்-தமைப் போய்ப் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார் பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் ஆப்பினும் வலியேன் அறத் தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் கூப்பினும் கூப்பாக் கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே.

மேல்

#3 விழுத் தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்துக் கொழுத்து அலை மனத்துப் புழுத் தலைப் புலையேன் கொக்கு_அனேன் செக்கினைப் பல கால் இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#4 புலை விலைக் கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில் தலை_விலை பிடித்துக் கடை_விலை படித்த தயவு இலாச் சழக்கனேன் சழக்கர் உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன் இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#5 கொட்டிலை அடையாப் பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும் அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே.

மேல்

#6 நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில் போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில் ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன் ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#7 அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில் குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர்க் குழியிலே குளித்த வெம் கொடியேன் வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயைக் களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#8 தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன் கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உணக் கருதிய கருத்தேன் பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும் எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#9 வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டைச் சட்டியே எனினும் பிறர் கொளத் தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய் எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே.

மேல்

#10 உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும் கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் எனப் பேர் எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே.

@9. அவா அறுத்தல்

மேல்

#1 தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே சீலம் ஆர் பூசைக் கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே ஞாலம் மேலவர்க்குக் காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே காலை ஆதிய முப்போதினும் சோற்றுக் கடன் முடித்து இருந்தனன் எந்தாய்.

மேல்

#2 சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#3 விருப்பு_இலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளைக் கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன் நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடாத் தயிரிலே நெகிழ்ந்த பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#4 உறியிலே தயிரைத் திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ குறியிலே அமைத்த உணவு எலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்த பேர்_ஆசை வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.

மேல்

#5 கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண் நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில் ஆரையே எனக்கு நிகர் எனப் புகல்வேன் அய்யகோ அடிச் சிறு நாயேன் பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய்.

மேல்

#6 பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின் தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திடத் துணியேன் வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#7 உடம்பு ஒரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால் கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன் திடம் பெறும் மற்றைச் சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#8 மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவாச் சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன் இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன் குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#9 தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் கொண்டுபோய் வயிற்றுக் குழி எலாம் நிரம்பக் கொட்டினேன் குணம் இலாக் கொடியேன் வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன் பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#10 வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள் உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே துறுத்தலே எனக்குத் தொழில் எனத் துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியைப் பொறுத்தலே அறியேன் மலப் புலைக் கூட்டைப் பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#11 பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள் உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன் கருப் பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத் துருப் பிடி இருப்புத் துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#12 அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே தடிக் கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்துத் தவம் புரிந்தான் என நடித்தேன் பொடிக் கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய்.

மேல்

#13 உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே தொண்டு_உறாதவர் கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால் கண்டிலேன் என்னைக் காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

@10. தற்சுதந்தரம் இன்மை

மேல்

#1 இப் பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும் துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனைச் சோதிப்பாயோ அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே.

மேல்

#2 என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய்ப் போதமே என் அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே.

மேல்

#3 பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர் தடி எடுக்கக் காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இத் தரத்தேன் இங்கே முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த அடி எடுக்க முடியாதே அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#4 பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக் கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#5 உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய் தடுப்பவனும் தடை தீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#6 சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#7 இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனித் தலைமை இறைவா உன்றன் நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும் தசைத்திடு புன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள் சுதந்தரத்தால் இங்கே அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#8 கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணையாலே பல்லாரும் அதிசயிக்கப் பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய் எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால் அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#9 கரை சேரப் புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயைத் திரை சேரப் புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன் அரைசே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

மேல்

#10 இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத் துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன் அன்பே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

@11. அத்துவித ஆனந்த அநுபவ இடையீடு

மேல்

#1 திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ அருத் தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே.

மேல்

#2 கரணம் எலாம் கரைந்த தனிக் கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே.

மேல்

#3 நாதாந்தத் திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ போதாந்தத் திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அறச் சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே.

மேல்

#4 சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ பதம் பெறத் தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது எனப் பாடி மகிழ்வேனோ நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ மதம் பரவு மலைச் செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே.

மேல்

#5 களக்கம் அறப் பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்தது ஒரு காய்-தான் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ கொளக் கருதும் மல மாயைக் குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும் துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே.

மேல்

#6 திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள் கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ தருப் பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே.

மேல்

#7 ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான் கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ ஊன் அந்தம் அறக் கொளும் போது இனிக்க ரசம் தருமோ உணக் கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே.

மேல்

#8 தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனிக் கரணப் பூவை காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம் பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே.

மேல்

#9 தீட்டு மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்தச் செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன் காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம் மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ ஈட்டு திரு_அடிச் சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே.

மேல்

#10 ஞான மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன் ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ ஈனம் உறும் அகங்காரப் புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கதப் பேய் எனைப் பிடித்துக்கொளுமோ ஆன மலத் தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே.

@12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

மேல்

#1 தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.

மேல்

#2 பெற்ற தம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே.

மேல்

#3 வெம் மதிக் கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச் சம்மதிக்கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே இ மதிச் சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன் செம் மதிக் கருணைத் திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

மேல்

#4 பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால் செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.

மேல்

#5 அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே இப் புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே எப் பணி இட்டாய் அப் பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.

மேல்

#6 முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும் பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே.

மேல்

#7 இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன் தன் உளப் புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனைப் பன்னுவது என்னே இதில் அருவருப்புப் பால் உணும் காலையே உளதால் மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே.

மேல்

#8 அறிவு இலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பைப் பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே செறிவு இலாக் கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன் எறிவு இலாச் சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய்.

மேல்

#9 இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்கச் சிறியேன் நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின் றன் சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே.

மேல்

#10 செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல் எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவது என்னே.

மேல்

#11 பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அப் பணங்களைப் பல கால் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளைக் கண்டனன் இனிச் சொல்வது என்னே.

மேல்

#12 கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன் தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும் இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே.

மேல்

#13 இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும் எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன் அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே.

மேல்

#14 சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும் புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன் பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும் உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.

மேல்

#15 இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான் பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே.

மேல்

#16 சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடித் தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும் நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடித் தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்.

மேல்

#17 உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது ஒருமையுற்று அழியாப் பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி இரு நிலத்து ஓங்கிக் களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே திரு_மணிப் பொதுவில் அன்பு_உடையவராச் செய்யவும் இச்சை காண் எந்தாய்.

மேல்

#18 எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும் அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும் செவ்வையுற்று உனது திரு_பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய்.

மேல்

#19 உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில் இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர் விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடி நின்று உனையே அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய்.

மேல்

#20 திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில் உரு வளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவாறு இயல்பெறப் புதுக்கி மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும் கரு வளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சை காண் எந்தாய்.

மேல்

#21 தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும் துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய்.

மேல்

#22 கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளைத் தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும் ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய்.

மேல்

#23 மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன் எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம் நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.

மேல்

#24 இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள் சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.

@13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

மேல்

#1 தனிப் பெரும் சோதித் தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே கனிப் பெரும் கருணைக் கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம் இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே இனிச் சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர்ப் பொன் அடி ஆணை.

மேல்

#2 திரிபு இலாப் பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர் பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

மேல்

#3 தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லாத் தலைவனே திரு_சிற்றம்பலத்தே வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

மேல்

#4 என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா என் உளத்து இனிக்கும் தீம் சுவைக் கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே.

மேல்

#5 கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பலக் கனியே வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர் தெருள் நிறை உளத்தே திகழ் தனித் தலைமைத் தெய்வமே திரு_அருள் சிவமே தருணம் என் ஒருமைத் தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே.

மேல்

#6 என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே.

மேல்

#7 இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில் அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே.

மேல்

#8 மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்குக் கொடுத்து உளே விளங்கு சற்குருவே பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம் தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே.

மேல்

#9 விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில் தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர் கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக் கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

மேல்

#10 சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர் வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பைப் பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ.

மேல்

#11 பரைத் தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே தரைத் தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள் உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ.

மேல்

#12 அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ.

மேல்

#13 உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய் விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர் ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக் கொண்ட போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ.

மேல்

#14 காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை-தனிலே மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர் ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம் பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கிப் பதைத்தது உன் உளம் அறியாதோ.

மேல்

#15 நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே ஏதம் நேர்ந்திடக் கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும் ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும் தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ.

மேல்

#16 கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னைப் பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர் மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அப் பிரிவை உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

மேல்

#17 என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே நன்று நாடிய நல்லோர் உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவு இலை அளவு இலை அறிவாய் இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய்.

மேல்

#18 நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம் உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே துலைபுரிந்து ஓடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீ அறிந்ததுவே.

மேல்

#19 ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம் காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய் ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

மேல்

#20 மறை முடி வயங்கும் ஒரு தனித் தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர் உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அறச் செய்தனர் எனவே தறையுறச் சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

மேல்

#21 தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய் வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன் காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய்.

மேல்

#22 எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில் பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

மேல்

#23 பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும் சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்கச் சொல்கின்றவோ எனச் சூழ்ந்தே மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய் வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப் போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய்.

மேல்

#24 காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன் தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன் வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில் ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

மேல்

#25 வேறு பல் விடம் செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்ய நாய்க் குழுவின் சீறிய குரலோடு அழு_குரல் கேட்டுத் தியங்கினேன் மற்றை வெம் சகுனக் கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார் ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

மேல்

#26 நிறமுறு விழிக் கீழ்ப் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும் உறவு தோல் தடித்துத் துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ பிறர் துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன் நறுவிய துகிலில் கறையுறக் கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய்.

மேல்

#27 மங்கையர் எனைத் தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல் தங்கிய பிறர்-தம் துயர்-தனைக் காண்டல் ஆகும் அத் துயருறத் தரியேம் பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்.

மேல்

#28 வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ நலிந்திடு பிறர்-தம் துயர்-தனைக் கண்டே நடுங்குறவரும் எனப் பயந்தே மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய்.

மேல்

#29 களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்ட காலத்தும் நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர் அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.

மேல்

#30 இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இச் சுகத்தால் இனி யாது துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கிச் சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன் அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால் வன்புறச் செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய்.

மேல்

#31 உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள் பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப் பேர்_உணவு உண்டனன் சில நாள் உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன் மற்று இவை அல்லால் சுக உணாக் கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய்.

மேல்

#32 தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும் அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில் விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே.

மேல்

#33 அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன் சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம் வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம் தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எக் காலம் என்று எழுந்தேன்.

மேல்

#34 உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில் இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

மேல்

#35 பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய் நகல் உறச் சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

மேல்

#36 தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில் சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம் வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம் மிகப் புகுந்து அடித்துப் பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ.

மேல்

#37 ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய் வெடித்த வெம் சினம் என் உளம் உறக் கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய்.

மேல்

#38 கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ சாபமே அனைய தடை மதம் வருமோ தாமதப் பாவி வந்திடுமோ பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய்.

மேல்

#39 காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம் நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய் சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளைச் செறிந்தவர்-தங்களைக் கண்டே ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும்.

மேல்

#40 கருத்து வேறு ஆகிக் கோயிலில் புகுந்து உன் காட்சியைக் கண்ட போது எல்லாம் வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய் நிருத்தனே நின்னைத் துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கிப் பருத்த என் உடம்பைப் பார்த்திடாது அஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறிவாய்.

மேல்

#41 புன் புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும் என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய் வன் புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல் என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்.

மேல்

#42 இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலைத் தருக்கம்செய்திடவே வந்தவர்-தம்மைக் கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய் சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தைத் தமியனேன் மீளவும் கண்டே நொந்ததும் உலகப் படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய்.

மேல்

#43 முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றித் தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன் குனித்த மற்று அவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பு_இலேன் மற்று இது குறித்தே பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய்.

மேல்

#44 பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில் ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே.

மேல்

#45 அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த பொருளினை வாங்கிப் போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய் மருளும் அப் பொருளைச் சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால் இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும்.

மேல்

#46 பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால் மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் எனக் கருதி வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய் ஒருவும் அப் பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.

மேல்

#47 தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன் பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.

மேல்

#48 சகப் புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் எனப் பயந்தே நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும் பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே மிகப் பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே.

மேல்

#49 உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன் ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன் கரு உளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம் திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே.

மேல்

#50 பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும் எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும் நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும் கண்ணுறக் கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

மேல்

#51 நயந்த பொன் சரிகைத் துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது பயந்த அப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கைத் துகில் வீசி அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய்.

மேல்

#52 கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன் மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன் வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும் பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயம் மிகப் படைப்பேன்.

மேல்

#53 வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும் சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பல விசை அறிந்தும் பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும் கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்.

மேல்

#54 எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம் தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் களியரைக் கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய் அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார்.

மேல்

#55 இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடிக் கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம் விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய் உரவிலே ஒருவர் திடுக்கென வரக் கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால்.

மேல்

#56 உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால் கரத்தினால் உரத்துக் கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில் புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப் பிறர் புகன்ற சொல் புகுந்தே தரத்தில் என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே.

மேல்

#57 மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம் கண்ணில் நீர் விடக் கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன் நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது எண்ணி யாது உற்றதோ எனக் கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய்.

மேல்

#58 தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.

மேல்

#59 என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய் அன்பு_உடையவரைக் கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே.

மேல்

#60 காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன் ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன் கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன் வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன்.

மேல்

#61 பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர் முதிர்ந்த தீம் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன்.

மேல்

#62 வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன் ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமைக் கண்டே இளைத்தேன்.

மேல்

#63 நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன் கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்.

மேல்

#64 துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத் தொடங்கிய போது எலாம் பயந்தேன் கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம் எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்.

மேல்

#65 நடு நிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும் கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக் கேடரைப் பொய் அலால் கிளத்தாப் படு நிலையவரைப் பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

மேல்

#66 ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனித் தலைவனே என்னைத் தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்-பால் நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம் தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

மேல்

#67 காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன் பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன் நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குறக் களித்துக் கால் கீழே நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

மேல்

#68 தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ கலை நெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப் புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது எனக் கண்டு இரங்காது கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே.

மேல்

#69 இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி நை வணம் இற்றைப் பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும் செவ்வணத் தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.

மேல்

#70 தரைத் தலத்து எனை நீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக் கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான் இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால் உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ .

மேல்

#71 கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.

மேல்

#72 இன்னவாறு அடியேன் அச்சமும் துயரும் எய்திநின்று இளைத்தனன் அந்தோ துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான் உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ.

மேல்

#73 எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக் கொள்ளவே அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன் உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய்.

மேல்

#74 என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன் றன் சுதந்தரமே அடுத்த இத் தருணம் தமியனேன்-தனைப் பல துயரும் வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும் இன் சுவைக் கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே.

மேல்

#75 அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன் செறிவு இலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில் பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னைக் குறியுறக் கொண்டே குலம் குறிப்பது நின் குணப் பெரும் குன்றினுக்கு அழகோ.

மேல்

#76 ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே மெய்யுறத் துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம் துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே.

மேல்

#77 தேர்வு இலாச் சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின் சார்வு கொண்டு எல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன் பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன் ஓர்வு இலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே.

மேல்

#78 பொறித்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும் செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமைத் தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும் நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ எனப் பெற்றே குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறிக் குதித்தது என் கூறுக நீயே.

மேல்

#79 பரிந்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில் புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும் விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே.

மேல்

#80 மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும் வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ.

மேல்

#81 ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம் காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும் தாரணியிடை இத் துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ.

மேல்

#82 பார் முதல் நாதப் பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும் ஓர் முதல் ஆகித் திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கிச் சீர் பெற விளங்க நடத்தி மெய்ப் பொதுவில் சிறந்த மெய்த் தந்தை நீ இருக்க வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ.

மேல்

#83 ஆர்ந்த வேதாந்தப் பதி முதல் யோகாந்தப் பதி வரையும் அப்பாலும் தேர்ந்து அருள் ஆணைத் திரு_நெறிச் செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே சார்ந்த பேர்_இன்பத் தனி அரசு இயற்றும் தந்தையே தனிப் பெருந் தலைவா பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ.

மேல்

#84 சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞானத் திரு_சபை-தன்னிலே திகழும் சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனி அருள் செங்கோல் சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ.

மேல்

#85 சாற்று பேர்_அண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித் தோற்று மா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்பப் பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ.

மேல்

#86 சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம் பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால் நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல் பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ.

மேல்

#87 எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலாத் தனி நெடும் செங்கோல் நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால் அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.

மேல்

#88 கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிடப் பொதுவில் மலைவு இலாச் சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமைத் தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ.

மேல்

#89 ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான சோதியே வடிவாய்த் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனிச் செங்கோல் நீதியே நடத்தும் தனிப் பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.

மேல்

#90 அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெருஞ் சோதியே அடியார் பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனித் தலைமைச் சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே சுத்தனே நினது தனையன் நான் மயங்கித் துயர்ந்து உளம் வாடுதல் அழகோ.

மேல்

#91 உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனித் தந்தையே நின்-பால் குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அக் குற்றம் இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும் மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ.

மேல்

#92 குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ.

மேல்

#93 மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கித் தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய்.

மேல்

#94 கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம் மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய் தெருள் நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே.

மேல்

#95 கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால் இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம் அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

மேல்

#96 இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று எனப் பல கால் விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன் துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும்.

மேல்

#97 வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும் வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும் உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம் ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை.

மேல்

#98 தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும் மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும்.

மேல்

#99 ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடயக் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப் போது அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய்.

மேல்

#100 என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில் மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம் பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே.

மேல்

#101 உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும் சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும் மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்குச் சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

மேல்

#102 தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காமச் சிந்தையர் ஆகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும் எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன்.

மேல்

#103 அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன்.

மேல்

#104 வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே கள் அருந்துதல் சூதாடுதல் காமக் கடை-தொறும் மயங்குதல் பொய்யே விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

மேல்

#105 மலைவு இலாத் திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர் குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடிக் கொடிய தீ_நெறியிலே மக்கள் புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன்.

மேல்

#106 தனிப் பெரும் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும் இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும் பனிப்புற ஓடிப் பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்றத் தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

மேல்

#107 தன்னை நேர் இல்லாத் தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன் என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு எனக் கொள்கின்றேன் அல்லால் பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன்.

மேல்

#108 போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா ஏற்ற ஆபரணம் தா எனக் கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன் தேற்றுவாய் நின்னைக் கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

மேல்

#109 குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரைப் பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும் எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

மேல்

#110 இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர்த் தந்தையே இந்தச் சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய்ப் புறம் காட்டி அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில் முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன்.

மேல்

#111 தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள் வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே என் மனக் கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய்த் துணையே நின் மனம் வெறுப்பப் பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன்.

மேல்

#112 ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை வைப்பில் வேறு ஒருவர் வைதிடக் கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன் தப்பு இலாய் நினை வேறு உரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

மேல்

#113 இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே சித்தம் வேறு ஆகித் திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும் அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத்து ஆடும் சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

மேல்

#114 பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன் நை வகை தவிரத் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது கைவகைப்படல் எக் கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்கச் செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன்.

மேல்

#115 அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான் உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான் என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும் மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

மேல்

#116 பொய்படாப் பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே தெய்வமே என நான் நின்னையே கருதித் திரு_பணி புரிந்து இருக்கின்றேன் மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

மேல்

#117 தன் நிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன் மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

மேல்

#118 திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழிப் பொருளும் உரு வளர் திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய் மொழிப் பொருளும் கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழிப் பொருளும் மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

மேல்

#119 உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இப் பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.

மேல்

#120 ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித் தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தைத் தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை வாய்ந்து உளே கருதி மலை எனப் பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம் தோய்ந்து நின்று ஆடிச் சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.

மேல்

#121 வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின் ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடித் துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான் கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும்.

மேல்

#122 கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள் உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடிப் பார்த்து ஓடிப் பார்த்து இரவும் எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும்.

மேல்

#123 கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம் மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும் பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம் தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

மேல்

#124 இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம் தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனிப் பெருந் தந்தை அமையும் நம் உயிர்க்குத் துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம் சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

மேல்

#125 அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல் நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும் படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அறப் பார்த்து இருக்கின்றேன் செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய்.

மேல்

#126 பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம் உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும் என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே.

மேல்

#127 இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம் பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின் மது வளர் மலர்ப் பொன்_பதத் துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய்.

மேல்

#128 என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய் உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே.

மேல்

#129 பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயைப் பற்றொடு வினையும் ஆணவமும் கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும் வியத்திடத் தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும் உயத் தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

மேல்

#130 ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும் வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன் வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

மேல்

#131 பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இப் பகை எலாம் பற்று அறத் தவிர்த்தே நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம் வியந்திடத் தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே வயம் தரக் கருதித் தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.

மேல்

#132 என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும் மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.

மேல்

#133 பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அறத் தவிர்த்து அருள் இனி நான் தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ புரிக் கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை வரிக் கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.

@14. மாயையின் விளக்கம்

மேல்

#1 திடுக்கு அற எனை-தான் வளர்த்திடப் பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால் மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனைப் பார்த்திலை அந்தோ தடுக்க அரும் கருணைத் தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ.

மேல்

#2 தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள் கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ உளம் தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ.

மேல்

#3 தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள் ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும் ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ.

மேல்

#4 அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள் நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும் தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

மேல்

#5 வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான் ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் தொட்டிலும் ஆட்டிடுகின்றாள் ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய்.

மேல்

#6 வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள் மலத்திலே உழைத்துக் கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ.

மேல்

#7 தும்மினேன் வெதும்பித் தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுறக் கேட்டிருக்கின்றாள் செம்மியே மடவார் கொம்மியே பாடிச் சிரித்திருக்கின்றனர் அந்தோ இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே.

மேல்

#8 துரு இலா வயிரத் தொட்டிலே தங்கத் தொட்டிலே பல இருந்திடவும் திரு இலாப் பொத்தைத் தொட்டிலில் செவிலி சிறியனைக் கிடத்தினள் எந்தாய் பிரிவு இலாத் தனிமைத் தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ கரு_இலாய் நீ இத் தருணம் வந்து இதனைக் கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

மேல்

#9 காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம் பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் பயம் புரிவித்தனள் பல கால் தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையாத் திரு_மதி என நினைந்து அறியாள் சாய்ந்த இச் செவிலி கையிலே என்னைத் தந்தது சாலும் எந்தாயே.

மேல்

#10 ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய்த் தலத்தில் உறப்புரிந்து எனைப் பிரியாமல் வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே.

@15. அபயத் திறன்

மேல்

#1 ஆடக மணிப் பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில் நாடகக் கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#2 வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன் இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#3 புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம் சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன் கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும் நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#4 புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன் உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#5 புண்ணிலே புகுந்த கோல் எனத் துயரம் புகுந்து எனைக் கலக்கிய போதும் கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும் நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#6 ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னைத் தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனிப் பெரும் தெய்வமும் தவமும் வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும் நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#7 வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும் தேட்டமும் நீயே கொண்டு நின் கருணைத் தேகமும் உருவும் மெய்ச் சிவமும் ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான நாட்டமும் கொடுத்துக் காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#8 வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார் உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன் செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#9 ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன் மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன் தீய கான் விலங்கைத் தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#10 அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குணப் பெரும் குன்றமே குருவே செற்றமும் விருப்பும் தீர்த்த மெய்த் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#11 படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும் திடம் புரி நின் பொன் அடித் துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன் நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#12 படித்தனன் உலகப் படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களைப் பார்த்து நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப் பெரியரில் பெரியர் போல் பேசி நடித்தனன் எனினும் நின் அடித் துணையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#13 பஞ்சு நேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன புஞ்செயே_அனையேன் புழுத் தலைப் புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#14 கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன் மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#15 ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#16 காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும் ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#17 துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன் தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடித் தழுவினேன் தட முலை விழைந்தேன் இனித்த சொல் புகன்றேன் என்பினைக் கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன் நனித் தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#18 தார்த் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரைப் பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பாதகப் பூனை போல் இருந்தேன் பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன் நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#19 பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் எனப் பிடித்தனன் மடவார்க்கு உண்மையே புகல்வான் போன்று அவர்-தமைத் தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன் தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன் நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#20 வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன் இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விடக் கொடியருக்கு ஈந்தேன் நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#21 கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல் பட்டமே காட்டிப் பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன் இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#22 காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக் காட்டிடாது அம்பு எலாம் அடங்கும் தூணியே எனச் சார்ந்திருந்தனன் சோற்றுச் சுகத்தினால் சோம்பினேன் உதவா ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#23 அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன் கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன் நடுத் தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#24 எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய்க் களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன் துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போலச் சுவை பெறச் சுவைத்த நாக்கு உடையேன் நளிர் எனச் சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#25 கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன் மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர் நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#26 ஈ எனப் பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிகத் தழைத்தேன் பேய் எனச் சுழன்றேன் பித்தனே என வாய்ப் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன் காய் எனக் காய்த்தேன் கடை என நடந்தேன் கல் எனக் கிடந்தனன் குரைக்கும் நாய் எனத் திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#27 ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நாத் தழும்புறவே வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு எனத் திரிகின்ற படிறேன் நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

மேல்

#28 கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன் சுவை எலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன் இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால் நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே.

@16. ஆற்ற மாட்டாமை

மேல்

#1 இப் பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#2 புரை சேர் துயரப் புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம் கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலைக் குடிப்பித்திடல் வேண்டும் உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே அரைசே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#3 கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே தண் ஆர் மதியே கதிர் பரப்பித் தழைத்த சுடரே தனிக் கனலே எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி அண்ணா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#4 பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்குச் செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவாத் தெள் அமுதே ஐயா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#5 இத் தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே அத்தா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#6 எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற அம்மே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#7 செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்து தெளிந்து இப் பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழிப் பாட்டு ஒப்பாச் சிறியேன் புன் மொழிப் பாட்டு எல்லாம் உவந்த உடையானே அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#8 துப்பு ஆர் கனகப் பொதுவில் நடத் தொழிலால் உலகத் துயர் ஒழிக்கும் வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#9 ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும் துப்பு ஆர் வண்ணச் சுடரே மெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய் வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன் அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

மேல்

#10 வெப்பு ஆர் உள்ளக் கலக்கம் எலாம் இற்றைப் பொழுதே விலக்கி ஒழித்து இப் பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

@17. வாதனைக் கழிவு

மேல்

#1 பொழுது விடிந்தது இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே அழுது விழிகள் நீர் துளும்பக் கூவிக்கூவி அயர்கின்றேன் பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும் உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே.

மேல்

#2 உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன் தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில் கடையாய்த் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணைக் கருத்தினுக்கே.

மேல்

#3 கருணைக் கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இத் தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான் அருணச் சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல் தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே.

மேல்

#4 திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே வகைப் பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்குத் தகைப் பாரிடை இத் தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம் நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே.

மேல்

#5 நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை ஈயில் கருணைப் பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர் சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே.

மேல்

#6 தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே புரிந்து அ மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே விரிந்த மனத்துச் சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ.

மேல்

#7 வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றிக் கீழோரும் ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல் தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே.

மேல்

#8 அருளே வடிவாம் அரசே நீ அருளாவிடில் இ அடியேனுக்கு இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின் பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும் தெருளேயுற எத் தலைவருக்கும் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

மேல்

#9 திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு புகழ்ந்தார்-தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே இகழ்ந்தேன்-தனைக் கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

மேல்

#10 எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய் வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என் சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திரு_பொதுவில் நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே.

மேல்

#11 நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள் வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே கயந்த மனத்தேன் எனினும் மிகக் கலங்கி நரகக் கடும் கடையில் பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே.

மேல்

#12 பார்த்தார் இரங்கச் சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர் தீர்த்தாய் அ நாள் அது தொடங்கித் தெய்வம் துணை என்று இருக்கின்றேன் சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர்ப் பாவி ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே.

மேல்

#13 தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில் நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே.

மேல்

#14 ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும் பேயேன் எனினும் வலிந்து என்னைப் பெற்ற கருணைப் பெருமானே நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான் காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே.

மேல்

#15 கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும் தெருள் நாடு ஒளியே வெளியே மெய்ச் சிவமே சித்த சிகாமணியே இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்கத் தரியேன் இது தருணம் தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே.

மேல்

#16 வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம் தருவாய் தருணம் இதுவே மெய்த் தலைவா ஞான சபாபதியே உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய் இரு வாய் அல நின் திரு_அடிப் பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே.

மேல்

#17 தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என் ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ தானே மகிழ்ந்து தந்தாய் இத் தருணம் கைம்மாறு அறியேனே.

மேல்

#18 அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதிக் குறியே குணமே பெற என்னைக் குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க நெறியே விளங்க எனைக் கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும் பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே.

மேல்

#19 சுகமே நிரம்பப் பெரும் கருணைத் தொட்டில் இடத்தே எனை அமர்த்தி அகமே விளங்கத் திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி முகமே மலர்த்திச் சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல் சகம் மேல் இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.

மேல்

#20 தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனித் தலைமை எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில் சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால் வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே.

@18. அபயம் இடுதல்

மேல்

#1 உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம் தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன் குருவாய் முனமே மனமே இடமாக் குடிகொண்டவனே அபயம் அபயம்.

மேல்

#2 என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம் மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே அன்னே அப்பா ஐயா அரசே அன்பே அறிவே அமுதே அழியாப் பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம்.

மேல்

#3 கருணாநிதியே அபயம் அபயம் கனகாகரனே அபயம் அபயம் அருள் நாடு அகனே அபயம் அபயம் அழகா அமலா அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம் தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம்.

மேல்

#4 மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம் இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம் வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம் அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம்.

மேல்

#5 இனி ஓர் இறையும் தரியேன் அபயம் இது நின் அருளே அறியும் அபயம் கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம் தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம் துனியே அற வந்து அருள்வாய் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

மேல்

#6 அடியார் இதயாம்புயனே அபயம் அரசே அமுதே அபயம் அபயம் முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம் கடியேன் அலன் நான் அபயம் அபயம் கருணாகரனே அபயம் அபயம் தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம்.

மேல்

#7 மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம் உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம் பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம் நலவா அடியேன் அலவா அபயம் நட நாயகனே அபயம் அபயம்.

மேல்

#8 கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம் முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம் படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம் அடியேன் இனி ஓர் இறையும் தரியேன் அரசே அருள்வாய் அபயம் அபயம்.

மேல்

#9 இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம் விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம் உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம் சுடர் மா மணியே அபயம் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

மேல்

#10 குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம் பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம் சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம் சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம்.

@19. பிரிவாற்றாமை

மேல்

#1 போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன் ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான் சாக_மாட்டேன் உனைப் பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே.

மேல்

#2 செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள் சொல்ல_மாட்டேன் இனிக் கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரைக் கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே

மேல்

#3 வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர் சிறிதும் பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.

மேல்

#4 கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுள் கலந்து ஒளிரும் தருணச் சுடரே எனை ஈன்ற தாயே என்னைத் தந்தோனே வருணப் படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல் பொருள் மெய்ப் பதியே இனித் துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே.

மேல்

#5 திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவாச் சுயம் சோதி வண்ணம் பழுத்த தனிப் பழமே மன்றில் விளங்கு மணிச் சுடரே தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன் எண்ணம் பழுத்தது இனிச் சிறியேன் இறையும் தரியேன் தரியேனே.

மேல்

#6 நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள் ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என் பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்தப் பழமே மேல் வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே.

மேல்

#7 வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டிப் பரவும் நினது மலர்ப் பாதம் தலை மேல் சூட்டி எனைப் பணி செய்திடவும் பணித்தனை நான் சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன் ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இச் சீர் கிடைத்தது எவ்வாறே.

மேல்

#8 பொய் விட்டு அகலாப் புலைக் கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின் கை விட்டு அகலாப் பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய் மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே.

மேல்

#9 சாமத்து இரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கம் தடுத்து மயல் காம_கடலைக் கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய் நாமத் தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன் ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே.

மேல்

#10 பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருள் சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே.

@20. இறை பொறுப் பியம்பல்

மேல்

#1 தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திடச் சிறிது நின்னுடனே ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே.

மேல்

#2 மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே திடம் புரிந்து அருளிக் காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.

மேல்

#3 நீக்கிய மனம் பின் அடுத்து எனைக் கலக்கி நின்றதே அன்றி நின்அளவில் நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிப் பொறுக்கலேன் சிறிதும் தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னைத் தெளிவித்தல் நின் கடன் சிவனே.

மேல்

#4 ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில் ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும் தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்துத் துலக்குதல் நின் கடன் துணையே.

மேல்

#5 மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன் நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே.

மேல்

#6 வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன் திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னைத் தெளிவித்துக் காப்பது உன் கடனே.

மேல்

#7 ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன் வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன் பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் பரிந்து அருள் புரிவது உன் கடனே.

மேல்

#8 உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன் கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன் தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே.

மேல்

#9 எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித் துயர் ஆற்றேன் இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய்.

மேல்

#10 அகம் புறம் மற்றை அகப்புறம் புறத்தே அடுத்திடும் புறப்புறம் நான்கில் இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனிச் சிறிதும்-தான் இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே.

@21. கைம்மாறின்மை

மேல்

#1 இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும் மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய் பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே.

மேல்

#2 போது-தான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத் தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே.

மேல்

#3 சிற்றறிவு_உடையன் ஆகித் தினம்-தொறும் திரிந்து நான் செய் குற்றமும் குணமாக் கொண்ட குணப் பெரும் குன்றே என்னைப் பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னைக் கற்று அறிவு_இல்லேன் எந்தக் கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ.

மேல்

#4 மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய் ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர் மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ.

மேல்

#5 பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன் தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ.

மேல்

#6 துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாகக் கொண்டாய் அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ.

மேல்

#7 வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய் திரை கடந்து அண்ட பிண்டத் திசை எலாம் கடந்தே அப்பால் கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம் உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே.

மேல்

#8 நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான் நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே.

மேல்

#9 வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன் முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம் என் செயல் ஆகக் காணேன் எனைக் கலந்து ஒன்றாய் நின்றோய் நின் செயல் ஆகக் கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே.

மேல்

#10 இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி உரிமையால் யானும் நீயும் ஒன்று எனக் கலந்துகொண்ட ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே.

@22. தலைமகளின் முன்ன முடிபு

மேல்

#1 வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய்ப் பொதுவில் நடிப்போய் கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே முக் கண் ஓங்கு கரும்பே மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன் செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே

மேல்

#2 மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய் தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணாத் துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன் வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே

மேல்

#3 முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்துக் கனிந்து அருளல் வேண்டும் என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே

மேல்

#4 சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான் இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே

மேல்

#5 ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால் வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனைக் கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய் நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்துக் கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே

மேல்

#6 என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன் அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய் மன்னு மணிப் பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மனக் கலக்கம் தவிர்த்தே

மேல்

#7 எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே மணம் குறித்துக் கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே கணம் குறித்துச் சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல் குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே

மேல்

#8 மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனைச் சினம் பிடியாத் தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன் இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே

மேல்

#9 நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவத் தோழி நங்கையர் என் வசத்தே மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன் தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று எனத் தேவர் செப்பியதும் உளதே

மேல்

#10 குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும் சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன் பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன் இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே

@23. வேட்கைக் கொத்து

மேல்

#1 விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன் பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும் பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன் கண் படைத்தும் குழியில் விழக் கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

மேல்

#2 சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன் வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான் ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள் காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

மேல்

#3 என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன் தன்னை அறியாப் பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான் பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

மேல்

#4 தெருள் அமுதத் தனி யோகர் சிந்தையிலும் ஞானச் செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் அருள் அமுதம் அளிப்பன் என்றே அன்று மணம் புணர்ந்தான் அளித்து அறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன் மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில் இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ

மேல்

#5 சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணைச் செல்வ நடராஜன் என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார் இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம் கல் மயமோ அன்று சுவைக் கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

மேல்

#6 எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன் பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன் வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும் வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் எனப் பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ

மேல்

#7 பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன் கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வரக் காணேன் செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள் நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ

மேல்

#8 கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன் தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனைத் தனித்துத் தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான் பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசாப் பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான் உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ

மேல்

#9 ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன் பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலைப் பரிந்து அணிந்தான் தெரிந்த தனிப் பருவம்-இதில் பரியான் தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழியச் சம்மதமும் வருமோ கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ

மேல்

#10 தனித்த பரநாத முடித் தலத்தின் மிசைத் தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன் இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை அனித்தம் இலா இச் சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ

@24 தனித் திரு அலங்கல்

**1. திருச்சிற்றம்பலத் தீங்கனி நுகர்தல்

மேல்

#1 கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய்த் தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே.

மேல்

#2 சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையைக் கணத்தே வெறுவியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும் நறு நெயும் கலந்த சுவைப் பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே.

மேல்

#3 புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையைக் கணத்தே மெல்லியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன் வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள் சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய்த் துணையே. **2 மாயையின் முடிவு

மேல்

#4 அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞானப் பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன் மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே.

மேல்

#5 மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில் தாள் நவ நடம் செய்கின்ற தனிப் பெருந் தலைவனே என் கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே.

மேல்

#6 தற்பரம் பொருளே வேதத் தலை நின்ற ஒளியே மோனச் சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே. **3. நடராஜ அலங்காரம்

மேல்

#7 இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர் இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன் இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே

மேல்

#8 இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர் இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன் இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனைக் கண்டே இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி

மேல்

#9 ஆடும் கருணைத் திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன் பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார் நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய் ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி **4. சாவுறாப் பேறு பெற்று மகிழ்தல்

மேல்

#10 சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள் முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே தெற்றென அருள்_பெரும்_சோதிச் செல்வமும் மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.

மேல்

#11 என்ற சொல் செவிமடுத்து இறையும் அஞ்சிடேல் இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம் நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.

மேல்

#12 மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என் ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர் பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய்த் தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே. **5. பேரிடர் நீக்கம்

மேல்

#13 முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ அந்த நாள் தொடங்கி மகிழ்ந்து இருக்கின்றேன் அப்பனே அய்யனே அரசே இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திடப் புரிந்தாய் எந்த நாள் புரிந்தேன் இப் பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய்த் தவமே.

மேல்

#14 வாய்க் குறும்பு உரைத்துத் திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உறச் சூட்டினை அந்தோ தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவைத் தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனிப் பெருந் தயவே.

மேல்

#15 பேர்_இடர் தவிர்த்துப் பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ யார் என உரைப்பேன் என் எனப் புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ. **6. ஞானப் பொருள் விழைவு

மேல்

#16 மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என் றன் அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும் முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத பொன் அப்பா ஞானப் பொருள் அப்பா தந்து அருளே.

மேல்

#17 ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான் சோதியே எனைச் சோதியேல் சோதியேல் இனியே. **7. கேட்பார் இலை என்று கீழ்மேல தாக்கியதை வியத்தல்.

மேல்

#18 ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத் தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள் வாங்குக என்று என்-பால் வலியக் கொடுத்து அமுதும் பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே.

மேல்

#19 நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப ஆட்பாரில் அன்பு ஓர் அணுத்துணையும் இல்லேற்கே நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே. **8. அடிகளார் பாடுதலும் ஆண்டவர் திருத்தலும்

மேல்

#20 தேன் பாடல் அன்பு_உடையார் செயப் பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக் கான் பாடிச் சிவகாமவல்லி மகிழ்கின்ற திருக் கணவா நல்ல வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

மேல்

#21 ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன் ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம் பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய். **9. வையக வாழ்விற்கு வருந்தல்

மேல்

#22 வெட்டை மாட்டி விடாப் பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டிச் சென்றே தொழுக் கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டிப் பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்தக் கட்டை-தான் எட்டை மாட்டி உயிர்விடக் கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே

மேல்

#23 புண்ணைக் கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும் பெண்ணைக் கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயைக் கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண் மண்ணைக் கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் கண்ணைக் கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழக் கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே **10. இறை திருவுள்ளம் காயோ பழமோ எனக் கவல்தல்

மேல்

#24 அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார் இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல் எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் செம் கேழ் வேணித் திங்கள் அணிந்து அருள் சிவனேயோ.

மேல்

#25 ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின் சேயோடு உறழும் பேர்_அருள் வண்ணத் திருவுள்ளம் காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன் தீயோடு உறழும் திரு_அருள் வடிவச் சிவனேயோ. **11. கைம்மாறு இலாத கருணை

மேல்

#26 சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும் திரு_நடம் புரியும் திரு_நடராஜ எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம் மாற்றை அறிந்திலன் போற்றி நின் அருளே.

மேல்

#27 நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன் யாதில் பெரியேன் தீதில் பெரியேன் என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே **12. பெருந்தாய் மருள் தவிர்த்தது கருதி மகிழ்தல்

மேல்

#28 திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்பக் குருவே ஆதித் தனித் தாயே குலவும் பரையாம் பெரும் தாயே மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே

மேல்

#29 அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய்ப் பொருளே தெருளே மாற்று அறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இ அடியேன் மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே **13. பதமலர் கண் டுவத்தல்

மேல்

#30 அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது செம் பதத்தே மலர் விளங்கக் கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய்ச் செல்வம் அடைந்தேனே.

மேல்

#31 அடி விளங்கக் கனகசபைத் தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே துடி விளங்கக் கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருபப் பொருளே பொடி விளங்கத் திரு_மேனிப் புண்ணியனே ஞான_போனகரைச் சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா படி விளங்கச் சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு எனப் பெற்றேனே. **14. இறைவன் இயலை அருள் ஒன்றே அறியும் எனல்

மேல்

#32 செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும் இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே.

மேல்

#33 உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பதத் தலைவ நின் இயலைப் புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொளக் கொடுத்த குரு எனக் கூறல் என் குறிப்பே. **15. இறை திரு அருட்பா இன்புலகம் எய்துவிக்கும் எனல்

மேல்

#34 ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம் கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும் வார்த்தை ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே பாடி அவன் திரு_பாட்டைப் படி கண்டாய் இன்பு உலகப் படி கண்டாயே. **16. தித்திப்பூறு திகழ்வித்தான் எனல்

மேல்

#35 அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய் துப்பு ஊறு வண்ணச் செழும் சுடரே தனிச் சோதியனே வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே உப்பு ஊறு வாய்க்குத் தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே. **17. கலக்கம் அற்றுப் பாடும் நாள் எந்நாள் என இரங்கல்

மேல்

#36 கலக்கம் அற்று நான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள் எந்நாள் இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண் துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய்ச் சோதியே சுக வாழ்வே அலக்கண் அற்றிடத் திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே. **18. இறைவன் பிஞ்சுண்ட வாய்க்குப் பழம் அளித்தான் எனல்

மேல்

#37 நஞ்சு உண்டு உயிர்களைக் காத்தவனே நட நாயகனே பஞ்சு உண்ட சிற்றடிப் பாவை_பங்கா நம் பராபரனே மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா பிஞ்சு உண்ட வாய்க்குப் பழம் அளித்து ஆண்ட பெரியவனே. **19. தெய்வத் தாயிடம் தஞ்சம்

மேல்

#38 அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன் இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன் உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா திரம் காணாப் பிள்ளை எனத் தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வத் தாயே **20. அம்மையிடம் அடைக்கலம்

மேல்

#39 தனத்தால் இயன்ற தனிச் சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டுக் களித்த துரைப் பெண்ணே மனத்தான் விளங்கும் சிவகாமவல்லிக் கனியே மாலொடும் ஓர் அனத்தான் புகழும் அம்மே இ அடியேன் உனக்கே அடைக்கலமே **21. தலைவன் அன்பற்றான் எனத் தலைவி வருந்தல்

மேல்

#40 நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செயத் தக்கது ஏது என்பாள் செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள் வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள் வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே. **22. தலைவன் அன்பின்திறம் என் எனத் தலைவி மருளல்

மேல்

#41 பூ ஆர் கொன்றைச் செஞ்சடையாளர் புகழாளர் ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி தே ஆர் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே. **23. ஏதும் அறியேன் எனால்

மேல்

#42 மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு தந்திரம் அறியேன் எந்தத் தகவு கொண்டு அடைவேன் எந்தாய் இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப் பொன் மன்றில் வேணிச் சந்திரன் ஆட இன்பத் தனி நடம் புரியும் தேவே. **24. இருளாயின தவிர்த்தருள் எனல்

மேல்

#43 அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என் பொருளாய் அகத்தும் புறத்தும் என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பே மெய்த் தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம்பலத்தே நடிக்கின்றோய் இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே. **25. இறைவழிபா டன்றிச் சித்திநிலை எய்தா தெனல்

மேல்

#44 மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்குப் பணிக்கின்றேன் நீ விதிக்கு அளவாச் சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே. **26. உயிரிரக்கம் அளித்துத் திருவடி தந்தான் எனல்

மேல்

#45 கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன் பொருள் நயப்புறக் கண்டுகண்டு உளம் மகிழ் போதே. **27. தொண்டர் அடிப்பெருமை சொலற்கரியது எனல்

மேல்

#46 வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம் கண்டவரைக் கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால் பண் தகு நின் திரு_தொண்டர் அடிப் பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே. **28. அருள் அடைய விழைதல்

மேல்

#47 அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே இனிது அருள்வாய் இது தருணம் அமுது அருளாய் இது தருணம் மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம். . **29. அன்று ஆட்கொண்ட இறைவன் இன்று தள்ளிவைத்தல் தகுமோ எனல்

மேல்

#48 பண்டு நின் திருப் பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரைப் போல் தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல் குண்டு நீர்க் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன் கொண்டு பின் குலம் பேசுவரோ எனைக் குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே. **30. இரக்கம் அற்றவரின் இழிபொருள் அழியுமாறு

மேல்

#49 மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின் விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார் இழவுக்கும் இடர்க் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே. **31. இறை திருவடி எய்தும் உளவறியாமை உரைத்தல்

மேல்

#50 மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில் யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன் போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னைப் பொருந்துகின்ற சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாதத் துணை துணையே. . **32. ஆண்டவனுக்கு அபயம்

மேல்

#51 கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடைக் கனியே தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்குத் துணையே என் இரு கண்ணுள் மணியே அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே. **33. ஆனந்த நடங் காணும் பேரவா உரைக்க ஒணா தெனல்

மேல்

#52 அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றிச் சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன் மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர் செயல் அறியேன் எனக்கு அருளத் திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே. **34. சன்மார்க்கப் பொதுநெறி இற்றெனல்

மேல்

#53 சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணிச் சேர்ந்து பெற்ற தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக் காய் போல் பிறர்-தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே. **35. கள்அருந்தும் இழிவினுக்கு இரங்கல்

மேல்

#54 மதிப் பாலை அருள் பாலை ஆனந்தப் பாலை உண்ண மறந்தார் சில்லோர் விதிப் பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்பக் கொதிப் பாலை உணர்வு அழிக்கும் குடிப் பாலை மடிப் பாலைக் குடிப்பார் அந்தோ துதிப் பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணித் தேவைத் துதியார் அன்றே. **36. திருவடிக் காட்சி கிடைக்கும் தருணம் இங்கிது எனல்

மேல்

#55 ஒன்றும் முன் எண்-பால் எண்ணிடக் கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனைக் கண்டவன் நடிக்கும் மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய் நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே. **37. சித்தி நிலைகள் தெரித்தருள் எனல்

மேல்

#56 கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில் தருணச் சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே பொருள் மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே தெருள் மெய்க் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே. **38. உரு நிலைத்த வாழ்வுற வேண்டுதல்

மேல்

#57 திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய் இரு நிலத்தவர் இன்புறத் திரு_அருள் இயல் வடிவொடு மன்றில் குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி. **39. அம்மை அருள்தர அமயம் இது எனல்

மேல்

#58 தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னைத் தாங்கிக்கொண்ட குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனைக் கூடி இன்ப உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம் திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே **40. இறைவனே எல்லாம் எனல்

மேல்

#59 மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில் சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே. **41. உளங் கலந்தருள் எனல்

மேல்

#60 கண் எலாம் நிரம்பப் பேர்_ஒளி காட்டிக் கருணை மா மழை பொழி முகிலே விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள் எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்துப் புண் எலாம் தவிர்த்துப் பொருள் எலாம் கொடுத்துப் புகுந்து எனது உளம் கலந்து அருளே. **42. வறியர் உறுபசிக்கு வருந்தல்

மேல்

#61 உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால் வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும் எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக் குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய். **43. இறைவன் என்பிலே கலந்தான் எனல்

மேல்

#62 அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால் துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறியச் சொல்லினேன் சொல்லிய நானே இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என் என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே. **44. இனிப்பின் அருமை இயம்பல்

மேல்

#63 சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கைச் சிறியவர் சிந்தை மாத்திரமோ பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக் கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே. **45. தனிக் கடவுள் ஒருவரே உளர் எனல்

மேல்

#64 உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும் ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும் எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே. **46. அருட்சோதி அடைய விரைதல்

மேல்

#65 குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமாக் கொள்ளல் உனக்கு இயல்பே சிற்றம்பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாது உளது தெற்றென்று அடியேன் சிந்தை-தனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே இற்றைப் பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே. **47. கொலை புலையின் கொடும்பாடு கூறல்

மேல்

#66 கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க எனக் கழறிக் களிக்காநின்ற சுடுகாட்டுப் பிணங்காள் இச் சுகம் அனைத்தும் கணச் சுகமே சொல்லக் கேள்-மின் முடுகாட்டுக் கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர் இடுகாட்டுப் பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே. **48. உலகியல் நிகழ்ச்சிகளின் இழிவுரைத்தல்

மேல்

#67 உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர் துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றிப் போய் அலைகின்றீர் பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள் பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே. **49. சத்திய வார்த்தை

மேல்

#68 சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில் தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்தத் தனி நடம் புரிகின்றான் எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனித் துயர் அடையேனே. **50. எந்தை என்னுள் உற்றான் எனல்

மேல்

#69 சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மனக் கல் கரையச் செய்தே களிப்பித்தான் கற்க இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான் இனி யான் மயங்கேன் இருந்து. **51. சிற்றம்பலவனைத் துதித்து ஆடுவன் எனல்

மேல்

#70 அப் பனை இப் பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன் சொல் அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள் அப்பனை ஆழி கடத்திக் கரை விட்டு அளித்த சடை_ அப்பனைச் சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே. . **52. திறம் இன்மை தெரித்தல்

மேல்

#71 தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள் ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களைத் தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும் விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே **53. மறைமொழிப் பேறு

மேல்

#72 ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில் ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈ ரைந்து உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈ ரைந்து இடலாம் ஓர் இரண்டோடு ஆய்ந்து **54. இறை எண்ணத்தின் விளைவு சர்வ சித்தி எனல்

மேல்

#73 அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி தெருள் பெரும் சீர் சொலத் திகழ்வ சித்தியே

@25. நடராசபதி மாலை

மேல்

#1 அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம் பொருள் நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்கப் புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகித் தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றித் திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே சுருள் நிலைக் குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#2 என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவிப் புலன் இசையிலே என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும் தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#3 உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே காணாத பொருள் எனக் கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#4 மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே துய் தழை பரப்பித் தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#5 எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல் ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகிக் கலந்து ஓங்குகின்ற பொருளே தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய்க் கோடை-வாய்ச் சேர்ந்து அனுபவித்த சுகமே சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மனத் திரு_மாளிகைத் தீபமே துண்ணுறாச் சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#6 அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ந் நிலையும் ஆன பொருளே தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியாத் தலத்தில் உறவைத்த அரசே சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும் ஒன்றான சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#7 நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே உற்ற நீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறாக் கருணை_மழை பொழி மேகமே கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#8 ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல் ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே துள்ளிய மனப் பேயை உள்ளுற அடக்கி மெய்ச் சுகம் எனக்கு ஈந்த துணையே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#9 அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசிக் குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#10 வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனித் திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு எனச் செப்பிடாத் தெள் அமுதமே தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#11 என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதபத் திரளிலே ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என் அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#12 அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#13 அண்ட ஒருமைப் பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரியப் பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில் கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்து நிறைகின்ற ஒளியே கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணாக் குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#14 கரை இலாக் கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே வரை இலா வெள்ளப் பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#15 உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள் பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய்ச் சிதம்பரமுமாய்ப் பண்புறு சிதம்பரப் பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய்த் தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே சித்து எலாம் செய் எனத் திரு_வாக்கு அளித்து எனைத் தேற்றி அருள்செய்த குருவே மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#16 எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி அவ்வையின் அனாதியே பாசம் இலதாய்ச் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகிக் கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய்க் காட்சியே கருணை நிறைவே கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

மேல்

#17 நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய்க் கொடி நாட்டியே மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னிப் படைத்தல் முதலாம் முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

மேல்

#18 ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடிப் பெருமையே உன்ன முடியா அவற்றின் ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன் உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய்த் தந்தையே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#19 வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே கரவு நெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம் விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

மேல்

#20 பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலாப் பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும் சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்பத் திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே.

மேல்

#21 உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல் ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய்ப் பரமமே பரம ஞான வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#22 ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என் மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே.

மேல்

#23 பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழிப் பணிகள் கேட்பப் பொய்படாச் சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெறச் சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#24 வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

மேல்

#25 என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று எண்ணி இரு கண்ணில் நீர் காட்டிக் கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள் மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே

மேல்

#26 துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச் சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில் வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும் மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம் ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே இன்புறத் திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே

மேல்

#27 பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும் போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம் ஏர் உற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே

மேல்

#28 சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம் மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனைத் தேற்றி அருள்செய்த சிவமே சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே

மேல்

#29 நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என் ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள் ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே.

மேல்

#30 அந்நாளில் அம்பலத் திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும் எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

மேல்

#31 காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்குக் கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புதக் காட்சியே கனக_மலையே தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித் தலைவனே நின் பெருமையைச் சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற-தோறும் அந்தோ வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

மேல்

#32 எய்ப்பு அற எனக்குக் கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே மெய்ப் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

மேல்

#33 துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்துத் தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய் வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறித் துன்பம் அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும் இச் சுக வண்ணம் என் புகலுவேன் துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

மேல்

#34 ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே தூங்கி விழு சிறியனைத் தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

@26. சற்குருமணி மாலை

மேல்

#1 மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குணப் பெரும் குன்றே வேற்று அறியாத சிற்றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#2 கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#3 என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்தப் பொருத்திய தயவு உடைப் புண்ணியப் பொருளே தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#4 காய் மனக் கடையனைக் காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே தேய் மதிச் சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே ஆய் மதிப் பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே தாய் மதிப்பு அரியதோர் தயவு உடைச் சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#5 உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#6 ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே பேறு இந்த நெறி எனக் காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய்த் தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#7 சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் எனத் தயவு செய்து உரைத்தே போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே தா காதல் எனத் தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#8 தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் எனத் தனித்து உரைத்து எனக்கே எத் துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால் சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#9 இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலைச் சுடரே பொது நடமிடுகின்ற புண்ணியப் பொருளே புரை அறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#10 என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய் முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம் இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#11 காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரியக் கரு இது பலவாய் ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எப் பொருள் நிலைகளுமே தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#12 பல் நெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால் செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#13 அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலாப் பரிசையும் அறிவாய் செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#14 நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ தண்ணிய அமுது உணத் தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#15 அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய் தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#16 வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடிச் சுடரே நாதத்தின் முடி நடு நடமிடும் ஒளியே நவை அறும் உளத்திடை நண்ணிய நலமே ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர்த் துணையே தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#17 சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளித் தலத்து எழும் சுடரே வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#18 அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#19 நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்தப் புத்தமுது உவப்பே என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#20 ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய்ப் பதியே சோதியும் சோதியின் முதலும் தான் ஆகிச் சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#21 கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பகக் கனியே அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசைப் பதித்த மெய்ப் பதியே தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#22 பவ நெறி செலுமவர் கனவினும் அறியாப் பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே நவ நெறி கடந்ததோர் ஞான மெய்ச் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#23 அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே பிரியாமல் என் உளம் கலந்த மெய்க் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#24 கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே எருதாகத் திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே தரு தானம் உணவு எனச் சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

மேல்

#25 ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய்ப் பரமே ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புறப் புரிகின்ற இயல்பு உடை இறையே சாகாத வரம் தந்து இங்கு எனைக் காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

@27. தற்போத இழப்பு

மேல்

#1 அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச் செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#2 கள் இருந்த மலர் இதழிச் சடைக் கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார் உள் இருந்த எனைத் தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன் வள் இருந்த குணக் கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#3 இகத்து இருந்த வண்ணம் எலாம் மிகத் திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால் சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே அகத்து இருந்த எனைப் புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன் மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#4 கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடைத் தலை-வாய் ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப் பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#5 நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில் ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#6 நதி கலந்த சடை அசையத் திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள் கதி கலந்துகொளச் சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிடக் கண்டு இன்னும் பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்கப் பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#7 மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே நஞ்சு அனைய கொடியேன் கண்டிடப் புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன் அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#8 அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில் புரி புழுவில் இழிந்தேனைப் பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இப் புதுமை பிறர் அறியாது உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால் வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#9 விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினைக் கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளிக் கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்துக் கருணை செயப்பெற்றனம் இக் கருணை நம்மை இன்னும் நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#10 அடி பிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவைக் காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணைக் கொடி பிடித்த குரு மணியைக் கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் எனக் கொண்டு அகத்தே இருந்தேன் படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே மடி பிடித்துப் பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

@

28. திருமுன் விண்ணப்பம்

மேல்

#1 மாழை மா மணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற வாழை வான் பழச் சுவை எனப் பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய் ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும் கோழை மானிடப் பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே.

மேல்

#2 பொன்னின் மா மணிப் பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி மன்னு வாழையின் பழச் சுவை எனப் பத்தர் மனத்து உளே தித்திப்போய் சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் இன்ன என் உடைத் தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே.

மேல்

#3 விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும் துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடாச் சுக உடல் கொளுமாறே.

மேல்

#4 ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ணப் பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தாத் தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும் ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே.

மேல்

#5 இலங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம் துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடித் துணை துணை என்னாமல் கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே.

மேல்

#6 சிறந்த பொன் அணித் திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும் பிறந்த இ உடல் இம்மையே அழிவுறாப் பெரு நலம் பெறுமாறே.

மேல்

#7 விளங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற விரை மலர்த் திரு_தாளை உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலாப் பெருந்தன்மை களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும் துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறாத் தொல் உடல் உறுமாறே.

மேல்

#8 வாய்ந்த பொன் அணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம் ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல் சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே.

மேல்

#9 மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும் காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே..

மேல்

#10 தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர்த் திரட்கு இன்பம் காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும் வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே.

@29. இனித்த வாழ் வருள் எனல்

மேல்

#1 உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்தி புரத்தவா பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணாத் தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே.

மேல்

#2 முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா பின்னவ அதிபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே.

மேல்

#3 விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும் கொடையவா ஓவாக் கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என் உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே.

மேல்

#4 வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞான நோக்கு அளித்த நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற்கு அரிதாம் பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே.

மேல்

#5 உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம் புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_ குணம் திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் தணந்த சன்மார்க்கத் தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே.

மேல்

#6 தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே.

மேல்

#7 மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய் பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதிப் பரிசு தந்திடுதும் என்று உளத்தே நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம் சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே.

மேல்

#8 மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும் ஆவியும் தனது மயம் பெறக் கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும் மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே.

மேல்

#9 பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே தங்கும் ஓர் சோதித் தனிப் பெரும் கருணைத் தரம் திகழ் சத்தியத் தலைவா துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கச் சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே.

மேல்

#10 இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பதப் பாகொடு தேனும் கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்கத் தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே.

@30. திருவருள் விழைதல்

மேல்

#1 செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன் உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன் மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன் பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே.

மேல்

#2 அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடிப் பணி புரியேன் அச்சமும் அவலமும்_உடையேன் செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல் எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன் பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே.

மேல்

#3 உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே பின் கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன் முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே.

மேல்

#4 தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான் எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன் திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே.

மேல்

#5 தான் எனைப் புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே தேன் உறக் கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே ஆன் எனக் கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில் நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே.

மேல்

#6 ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனைக் கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும் ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே.

மேல்

#7 இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன் தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ.

மேல்

#8 தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும் சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய் நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ.

மேல்

#9 அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத்து அரசே குழகனே இன்பக் கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்கக் கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான் பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ.

மேல்

#10 பழம் பிழி மதுரப் பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும் கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ளக் கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன் சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ.

மேல்

#11 தாயும் என் ஒருமைத் தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும் தூய நின் பாதத் துணை எனப் பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும் மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனைப் பிடித்திடல் வழக்கோ நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே.

மேல்

#12 சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விடத் தொடங்குவன் நான் நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே ஆதியே நடுவே அந்தமே ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே.

மேல்

#13 இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே அல்லை உண்டு எழுந்த தனிப் பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல் நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே.

மேல்

#14 அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின் உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய் வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே.

மேல்

#15 போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழுத் தலைப் புலையர்கள் புணர்க்கும் சூது எலாம் கேட்கும்-தொறும் உனைப் பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கித் தாது எலாம் கலங்கத் தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த வாது எலாம் தவிர்த்துச் சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே.

மேல்

#16 விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான் கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கிக் கரை எலாம் கடந்தது கண்டாய் வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா திரைந்த என் உடம்பைத் திரு_உடம்பு ஆக்கித் திகழ்வித்த சித்தனே சிவனே.

மேல்

#17 சிவம் திகழ் கருணைத் திரு_நெறிச் சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும் நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம் துவந்துவம் தவிர்த்துச் சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும் தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே.

மேல்

#18 தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத் தனி நெறி உலகு எலாம் தழைப்பக் கருணையும் சிவமே பொருள் எனக் கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்பப் பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப் புண்ணியம் பொற்புற வயங்க அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#19 என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும் மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர்ப் பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் பூவையர் புணர்ந்திடப் போந்தார் சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே.

மேல்

#20 வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே.

@31. திரு அருட் புகழ்ச்சி

மேல்

#1 திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதித் திரு_உருக் காட்டாயோ உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ கருக் கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ செருக் கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#2 மணிக் கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியாப் பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ கணிக்க அறியாப் பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிடச் செய்யாயோ தணிக்க அறியாக் காதல் மிகப் பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனித் தலைமைப் பதியே திணிக் கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#3 உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவைக் கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கித் ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கிக் கரை_கடந்து போனது இனித் தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#4 உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன் தென் புடை ஓர் முகம் நோக்கித் திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#5 இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என் புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன் பிறந்து இறந்து போய்க் கதியைப் பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம் திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#6 பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே பை உடைப் பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#7 கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல் ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உறப் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#8 வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும் ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#9 கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என்றனக்கே உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே சிலை நிகர் வன் மனம்_கரைத்துத் திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

மேல்

#10 திருத் தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டித் திரு_அமுதம் ஊட்டிக் கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும் உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகிக் கால வரை உரைப்ப எலாம் கடந்தே திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

@32. சிற்சபை விளக்கம்

மேல்

#1 சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம் வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே

மேல்

#2 எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும் தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#3 சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுகப் பெரும் பதி நின் வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன் தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#4 ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#5 கருணை ஒன்று இலாக் கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் அருணன் என்று எனை அகற்றிடுவாயேல் ஐயவோ துணை அறிந்திலன் இதுவே தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனி பெரும் பதியே.

மேல்

#6 கரண வாதனையால் மிக மயங்கிக் கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன் மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#7 தூய நெஞ்சினேன் அன்று நின் கருணைச் சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால் தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#8 சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_ வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் கரத்தை நேர் உளக் கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன் தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#9 பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

மேல்

#10 கயவு செய் மத கரி எனச் செருக்கும் கருத்தினேன் மனக் கரிசினால் அடைந்த மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

@33. திரு அருட் பேறு

மேல்

#1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அப் பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறை மணி மாடக் கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அக் கோயிலிலே கோபுர வாயிலிலே செடிகள் இலாத் திரு_கதவம் திறப்பித்துக் காட்டித் திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே.

மேல்

#2 பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும் எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே.

மேல்

#3 கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும் மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

மேல்

#4 பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர் இரு நிலத்தே பசித்தவர்க்குப் பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது எனக் கொண்டீர் திரிவு அகத்தே நான் வருந்தப் பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே.

மேல்

#5 பொய் கொடுத்த மன மாயைச் சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்து இருக்கக் கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனிக் கீழ் விழைந்து இறங்கேன் என்றும் மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

மேல்

#6 மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்தப் பிடித்தேன் முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே என் போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே பொன் போலே முயல்கின்ற மெய்த் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே.

மேல்

#7 எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும் மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில் விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ.

மேல்

#8 கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்தத் தனித்த திரு_வரவின் நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றிக் கனவிடையாயினுமே.

மேல்

#9 அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான் கன்று எனச் சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மனக் கலக்கம் பொன்றிடப் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்புப் பொருந்தி விளங்கிட நீ இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே.

மேல்

#10 இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனித் தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான் மது விழும் ஓர் ஈப் போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய் குதுகலமே இது தொடங்கிக் குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே.

@34. உண்மை கூறல்

மேல்

#1 தனிப் பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞானப் பதி சிதம்பரரே இனிச் சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால் அனிச்சய உலகினைப் பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#2 பெறுவது நுமை அன்றிப் பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றிப் பிறிது ஒன்றும் பேசேன் உறுவது நும் அருள் அன்றிப் பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றிப் பிறிது ஒன்றும் உன்னேன் மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்துக் கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#3 கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர் விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#4 தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனிப் பெரும் தலைவரே சபை நடத்தவரே தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உளக் கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர் அடுத்து இனிப் பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#5 காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர் நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால் ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#6 என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர் இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#7 திருந்தும் என் உள்ளத் திரு_கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன் இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உருக் காட்டி வருந்தலை என்று எனைத் தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#8 கரைக் கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்குக் கரைக்கு அணம் செய்யீர் உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவிப் பல உதவி செய்கின்றீர் வரைக் கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#9 மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால் அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

மேல்

#10 கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன் நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளிப் பொன் பொது நாடகம் புரிவீர் செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனைச் சேர்ந்திடல் வேண்டும் அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

@35. பிரியேன் என்றல்

மேல்

#1 அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே இப் பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும் துப்பு ஆகித் துணை ஆகித் துலங்கிய மெய்த் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே.

மேல்

#2 ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க_மாட்டேன் கோணை நிலத்தவர் பேசக் கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உறக் கொண்டிடவும்_மாட்டேன் ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன் மாணை மணிப் பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே.

மேல்

#3 பட முடியாது இனித் துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என் உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய் வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே.

மேல்

#4 வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த ஏழை படும் பாடு உனக்கும் திருவுளச் சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ மாழை மணிப் பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ கோழை உலகு உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியைக் கொடுத்து அருள் இப்பொழுதே.

மேல்

#5 செய் வகை என் எனத் திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனைத் தெளிவித்தாய் நீயே பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன் எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன் ஐவகை இ உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் அருள் சோதிப் பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே.

மேல்

#6 முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உருக் காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன் இன்னும் வரக் காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய் என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்குப் பெரும் துணையே என் உயிர்_நாயகனே.

மேல்

#7 உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே இன்னும் மிகக் களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே.

மேல்

#8 நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே.

மேல்

#9 தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ கருவிடத்தே எனைக் காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான் வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே.

மேல்

#10 பெரியன் அருள்_பெரும்_சோதிப் பெரும் கருணைப் பெருமான் பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த அரிய பெரும் பேர்_ஆசைக் கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே உரிய அருள் அமுது அளித்தே நினைத் துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே.

மேல்

#11 கவலை எலாம் தவிர்ந்து மிகக் களிப்பினொடு நினையே கை குவித்துக் கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே சவலை மனச் சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய்த் தானே தான் ஆகி இன்பத் தனி நடம் செய் இணைத் தாள் தவல் அரும் சீர்ச் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆடத் தருணம் இது-தானே குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமாக் கொண்டவனே.

@36. சிவ தரிசனம்

மேல்

#1 திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியே உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே.

மேல்

#2 சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும் அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம் வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே.

மேல்

#3 துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபைச் சித்த சிகாமணியே பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன் கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

மேல்

#4 மறப்பு அறியாப் பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே இறப்பு அறியாத் திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்கப் பிறப்பு அறியாப் பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே.

மேல்

#5 முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என் தன் உழைப் பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர் பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே.

மேல்

#6 விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே மொழித் திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்து அருளே.

மேல்

#7 மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ தேன் ஒருவா மொழிச்சியரைத் திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே.

மேல்

#8 பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

மேல்

#9 கட்டு அவிழ்ந்த கமலம் எனக் கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான் சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல் விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம் தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே.

மேல்

#10 காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர்ப் பொன் மதில் காட்சி கண்குளிரக் கண்டேன் கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன் சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல் பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே.

மேல்

#11 சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த இத் தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம் சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே.

@37. அநுபோக நிலயம்

மேல்

#1 இனிப் பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கிப் பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ தனிப்படு ஞான வெளியிலே இன்பத் தனி நடம் புரி தனித் தலைவா கனிப் பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

மேல்

#2 பிரிந்து இனிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் பேசினும் நெய் விடும் தீப் போல் எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய் புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர்த் துணைவா கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

மேல்

#3 மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங் கோலையே நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனிச் சகிப்பு அறியேன் காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

மேல்

#4 பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன் விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குறக் காட்டிய விமலா கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

மேல்

#5 தனித் துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன் கனித் துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

மேல்

#6 துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன் பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

மேல்

#7 ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த் துணைவா வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

மேல்

#8 எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான் பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

மேல்

#9 மலப் பகை தவிர்க்கும் தனிப் பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான் புலப்படத் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

மேல்

#10 களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீம் சுவைக் கனியே வெளிப் புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனிப் பிரிவு ஆற்றேன் புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

@38. சிவயோக நிலை

மேல்

#1 மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய நவ நேயம் ஆக்கும் நடராசனே எம் சிவனே கதவைத் திற.

மேல்

#2 இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே கோவே எனது குருவே எனை ஆண்ட தேவே கதவைத் திற.

மேல்

#3 சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க நாகாதிபர் சூழ் நடராசா ஏகா பவனே பரனே பராபரனே எங்கள் சிவனே கதவைத் திற.

மேல்

#4 அருள் ஓங்கு தண் அமுதம் அன்பால் அருந்தி மருள் நீங்கி நான் களித்து வாழப் பொருளாம் தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள் சிவனே கதவைத் திற.

மேல்

#5 வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனாத் திறப் பாவலர் போற்றும் சிற்றம்பலவா சிறப்பா கதவைத் திற.

மேல்

#6 எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல் நல்லார் அமுதம்-அது நான் அருந்த நல்லார்க்கு நல் வாழ்வு அளிக்கும் நடராயா மன்று ஓங்கு செல்வா கதவைத் திற.

மேல்

#7 ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம் வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா தேவா கதவைத் திற.

மேல்

#8 ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான உருவே உணர்வே ஒளியே வெளியே திருவே கதவைத் திற.

மேல்

#9 திரையோதசத்தே திகழ்கின்ற என்றே வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓது வானே எம் மானே பெம்மானே மணி மன்றில் தேனே கதவைத் திற.

மேல்

#10 சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம் மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான தேகா கதவைத் திற.

@39. பெற்ற பேற்றினை வியத்தல்

மேல்

#1 சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனித் தந்தையே நின்-பால் சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திடத் தாழ்க்கில் யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் போரிட முடியாது இனித் துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே.

மேல்

#2 போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன் தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனைத் திருவுளத்து அடைத்திடுவாயேல் ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர்த் தந்தை நீ அலையோ.

மேல்

#3 தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன் சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

மேல்

#4 யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல் ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே.

மேல்

#5 அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல் உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்தப் பாடு எலாம் நீ அறியாயோ.

மேல்

#6 அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை எறிந்திடாது இந்தத் தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம் சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே.

மேல்

#7 களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம் தளிர்த்திடச் சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடாச் சித்திகள் எல்லாம் அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே.

மேல்

#8 என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்பப் பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே தன் நிகர் இல்லாத் தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே.

மேல்

#9 சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம் தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என் ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ.

மேல்

#10 சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம் இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புறக் கலந்தனம் அழியாப் பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதிப் பரிசு பெற்றிடுக பொன்_சபையும் சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே.

@40. அழிவுறா அருள் வடிவப் பேறு

மேல்

#1 சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன் தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே பவம் கனிந்த இ வடிவமே அழிவுறாப் பதி வடிவு ஆமாறே.

மேல்

#2 விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான் விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே.

மேல்

#3 விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர்த் துணையே நான் அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய்ச் சுக வடிவு ஆமாறே.

மேல்

#4 ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின் பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே.

மேல்

#5 இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என் புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே.

மேல்

#6 சிறந்த பேர்_ஒளித் திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே துறந்த பேர்_உளத்து அருள் பெருஞ் சோதியே சுகப் பெரு நிலையே நான் மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறாப் பெருமை பெற்றிடுமாறே.

மேல்

#7 வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறாத் தனி வடிவு ஆமாறே.

மேல்

#8 தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான் நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

மேல்

#9 தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே கடை இலாப் பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான் இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே புடையின் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

மேல்

#10 கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய்ப் பெரும் பொருளே நான் ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறாச் சிவ வடிவு ஆமாறே.

@41. பேரருள் வாய்மையை வியத்தல்

மேல்

#1 நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார் கழலோய் இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம் ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே.

மேல்

#2 தன் சோதி என் உயிர்ச் சத்திய சோதி தனித் தலைமைச் சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே.

மேல்

#3 திரை கண்ட மாயைக் கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும் கரை கண்டு அடைந்தனன் அக் கரை மேல் சர்க்கரை கலந்த உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.

மேல்

#4 மனக் கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை- தனக்கே விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம் எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா இனக் கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே.

மேல்

#5 வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தைச் சேதித்து என் உள்ளம் திரு_கோயிலாக் கொண்டு சித்தி எலாம் போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும் சாதித்து அருளிய நின் அருட்கு யான் செயத் தக்கது என்னே.

மேல்

#6 செத்தார் எழுக எனச் சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே இத் தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய் எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே.

மேல்

#7 ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே.

மேல்

#8 என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம் தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியைத் தந்து உலகுக்கு அன்னே என விளையாடுக என்று அழியாத செழும் பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே.

மேல்

#9 அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான் எச் சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம் மெய்ச் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை இச் சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே.

மேல்

#10 வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும் வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர்ப் பதங்கள் வாழி மெய்ச் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி மாண்பு கொண்டு வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே.

@42 பொதுநடம் புரிகின்ற பொருள்

மேல்

#1 அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம் தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்தியச் சிவமே இருள் பெரு நிலத்தைக் கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லாப் பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#2 சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன் கத்து எலாம் தவிர்த்துக் கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே புத்து எலாம் நீக்கிப் பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#3 கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கிக் கற்பங்கள் கணக்கில கடப்ப நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#4 தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்தியக் கனலே ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#5 அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே சொல் புனை மாயைக் கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும் சிற்பரம் சுடரே தற்பர ஞானச் செல்வமே சித்து எலாம் புரியும் பொன் புலம் அளித்த நல் புலக் கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#6 தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் பெறல் அரிது ஆகிய பேறே புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#7 மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் நால் வகைப் பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயகக் கருணை நல் தாயே போல் உயிர்க்குயிராய்ப் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#8 அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே மலப் பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே உலப்பு அறு கருணைச் செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே புலப் பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#9 பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#10 வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுதத் தெள் கடலே அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#11 தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமயப் புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்து அமைந்த புண்ணியர் நண்ணிய புகலே வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே பொன்மை சார் கனகப் பொதுவொடு ஞானப் பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#12 மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே தாவிய முதலும் கடையும் மேல் காட்டாச் சத்தியத் தனி நடு நிலையே மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே

மேல்

#13 வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும் போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால் பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#14 அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே பொடி அணி கனகப் பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#15 என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னைப் பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#16 சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது புத்தியின் தெளிவே புத்தமுது அளித்துப் பொது நடம் புரிகின்ற பொருளே

மேல்

#17 சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவச் சிவமே மதத் தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே சதத் திரு_நெறியே தனி நெறித் துணையே சாமியே தந்தையே தாயே புதப் பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#18 கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே புலை தவிர்த்து எனையும் பொருள் எனக் கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#19 மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலாக் களிப்பே ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புதக் காட்சியே எனது பொய்ம்மையே பொறுத்துப் புகல் அளித்து அருளிப் பொது நடம் புரிகின்ற பொருளே.

மேல்

#20 காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புதச் சுடரே நாரண தலமே நாரண வலமே நாரணாகாரத்தின் ஞாங்கர்ப் பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே.

@43. ஆனந் தானுபவம்

மேல்

#1 கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம் வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_ வாணா நினக்கு அடிமை வாய்த்து.

மேல்

#2 காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசைச் சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும் ஏகா நினக்கு அடிமை ஏற்று.

மேல்

#3 மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம் யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை நாய்க்குத் தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம் தாய்க்குத் தனி இயற்கை தான்.

மேல்

#4 கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வப் பிள்ளை என எற்குப் பெயரிட்டாய் தெள் அமுதம் தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய் எந்தாய் கருணை இது.

மேல்

#5 கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம் உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன் அழியாத் திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும் அழியாச் சிற்றம்பலத்தே யான்.

மேல்

#6 பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப் புளகம் போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை நாடுகின்றேன் சிற்சபையை நான்.

மேல்

#7 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_ சிற்றம்பலத்தே திரு_நடம் செய்கின்றான் என் குற்றம் பல பொறுத்துக்கொண்டு.

மேல்

#8 கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும் கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில் வான் மயத்தான் என்னை மகிழ்ந்து.

மேல்

#9 கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம் உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்- தனை உவந்து கொண்டான்-தனை.

மேல்

#10 தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம் மேதையாம் இன்ப விளைவுமாம் ஓது குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள் மணவாளன் பாத_மலர்.

மேல்

#11 திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞானக் குருவாம் எனைக் காக்கும் கோவாம் பரு வரையின் தேப் பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ் மாப்பிள்ளை பாத_மலர்.

மேல்

#12 என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின் தன் அறிவாம் உண்மைத் தனி நிலையாம் மன்னு கொடிச் சேலை இட்டான் வாழச் சிவகாமசுந்தரியை மாலையிட்டான் பாத_மலர்.

@44. பரசிவ நிலை

மேல்

#1 அருள் சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம் தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#2 எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம் நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம் கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம் செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#3 தாய் ஆகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம் வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம் காயாது கனி ஆகிக் கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம் சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#4 என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம் அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம் செல் நிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#5 எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம் நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகித் தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம் பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம் திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#6 இச்சை எலாம் எனக்கு அளித்தே எனைக் கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம் எச் சமயத் தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம் பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம் செச்சை மலர் என விளங்கும் திரு_மேனித் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#7 சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம் மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம் ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம் தேகாதி உலகம் எலாம் செயப் பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#8 தூண்டாத மணி_விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம் மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம் ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதித் தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம் தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#9 எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம் ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம் செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

மேல்

#10 சத்தியமாம் தனித் தெய்வம் தடை அறியாத் தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்கத் தான் ஓங்கும் தெய்வம் நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம் பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லாப் பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம் சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்தத் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

@45. பேராநந்தப் பெரு நிலை

மேல்

#1 அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர்த் துணையே துணிவுறு சித்தாந்தப் பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#2 திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர்ப் பெரும் துணையே ஒரு தனித் தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#3 துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே கதி தரு துரியத் தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#4 சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#5 உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#6 மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே ஆலுறும் உபசாந்தப் பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#7 இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுறத் திகழ்கின்ற சிவமே மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#8 அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னைப் புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#9 வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

மேல்

#10 தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

@46. திருவடி நிலை

மேல்

#1 உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறைச் சார்பில் விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே.

மேல்

#2 தடையுறாப் பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் இடை உறாத் திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின் கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே.

மேல்

#3 அடர் மலத் தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான் படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள் சுடர் மணிப் பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடிப் பாதுகைப் புறத்தே இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே.

மேல்

#4 இகத்து உழல் பகுதித் தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம் மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடிப் பாதுகைப் புறத்தும் புகத் தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல் செகத் தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே.

மேல்

#5 பொன் வணப் பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல் மன் வணச் சோதித் தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல் என் வணச் சோதிக் கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல் தன் வணம் மணக்கும் ஒளி மலராகத் தழுவினன் திரு_அடி நிலையே.

மேல்

#6 மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல் அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின் கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே.

மேல்

#7 தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதித் தொல்லையின் எல்லையும் அவற்றின் வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்குத் தகையுறு முதலா அணங்கு அடையாகத் தயங்க மற்று அதுஅது கருவிச் சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே.

மேல்

#8 மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம் நின்ற அ நிலையின் உருச் சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர் சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே.

மேல்

#9 பேசும் ஓங்காரம் ஈறு-அதாப் பேசாப் பெரிய ஓங்காரமே முதலா ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்றத் தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே.

மேல்

#10 பரை தரு சுத்த நிலை முதல் அதீதப் பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல் உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உருக் கொண்டு பொன் பொதுவில் திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே.

@47. காட்சிக் களிப்பு

மேல்

#1 அறிந்தானை அறிவறிவுக்கு அறிவானானை அருள்_பெரும்_சோதியினானை அடியேன் அன்பில் செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார்-தம்மைப் பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானைப் பிறவி-தன்னை எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#2 பாலானைத் தேனானைப் பழத்தினானைப் பலன் உறு செங்கரும்பானைப் பாய்ந்து வேகாக் காலானைக் கலை சாகாத் தலையினானைக் கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#3 உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொள்ளானை என் பாட்டைக் குறிக்கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார்-தம்மைத் தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#4 உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்குத் திரு_கோயில் வழிக்க பாடம் திறவானை என்னளவில் திறந்து காட்டிச் சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை இறவானைப் பிறவானை இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#5 அகத்தானைப் புறத்தானை அணுவானானை அணுவினுக்குள் அணுவானை அதனுள்ளானை மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற சகத்தானை அண்டம் எலாம் தானானானைத் தனி அருளாம் பெரும் கருணைத் தாயானானை இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#6 செய்யானைக் கரியானைப் பசுமையானைத் திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை மெய்யானைப் பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்குக் கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#7 மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு விருந்தானை உறவானை நண்பினானை மேலானைக் கீழானை மேல் கீழ் என்னப் பொருந்தானை என் உயிரில் பொருந்தினானைப் பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும் இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#8 ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் தோன்றானைத் தூயர் உளே தோன்றினானைச் சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#9 தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம் ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#10 நன்றானை மன்றகத்தே நடிக்கின்றானை நாடாமை நாடல் இவை நடுவே ஓங்கி நின்றானைப் பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம் ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@48. கண்கொளாக் காட்சி

மேல்

#1 அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானைச் சிறு நெறிகள் அடையாது என்னைத் தடுத்தானைப் பெரு நெறிக்குத் தடை தீர்த்தானைத் தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால் கொடுத்தானைக் குற்றம் எலாம் குணமாக் கொள்ளும் குணத்தானைச் சமய மதக் குழி-நின்று என்னை எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#2 விரித்தானைக் கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்குத் தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானைச் சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம் தரித்தானைத் தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனைத் தடுத்த தடைகள் எல்லாம் எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#3 நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானைத் துன்பம் எலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#4 சோற்றானைச் சோற்றில் உறும் சுகத்தினானைத் துளக்கம் இலாப் பாரானை நீரானானைக் காற்றானை வெளியானைக் கனலானானைக் கருணை நெடும் கடலானைக் களங்கர் காணத் தோற்றானை நான் காணத் தோற்றினானைச் சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம் ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#5 சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறியச் செம்பொன்_தாளில் ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம் பார்த்தானைப் பாராரைப் பாராதானைப் பார்ப்பு அறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#6 முளையானைச் சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானைக் களையானைக் களங்கம் எலாம் களைவித்து என்னைக் காத்தானை என் பிழையைக் கருதிக் கோபம் விளையானைச் சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும் இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#7 புயலானை மழையானை அதிர்ப்பினானைப் போற்றிய மின்_ஒளியானைப் புனித ஞானச் செயலானைச் செயல் எல்லாம் திகழ்வித்தானைத் திரு_சிற்றம்பலத்தானைத் தெளியார் உள்ளே அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி இயலானை எழிலானைப் பொழிலானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#8 தாயானைத் தந்தை_எனக்கு_ஆயினானைச் சற்குருவும்_ஆனானைத் தமியேன் உள்ளே மேயானைக் கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி ஏயானைத் துரிய நடு_இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#9 தழைத்தானைத் தன்னை ஒப்பார்_இல்லாதானைத் தானே தான்_ஆனானைத் தமியனேனைக் குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானைக் குறை கொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால் இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#10 உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்பக் கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானைக் கொல்லாமை குறித்திடாரை அடையானைத் திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின் னிடையானை என் ஆசை எல்லாம் தந்த எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@49. இறை திருக் காட்சி

மேல்

#1 அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப் பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளைத் தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தைக் கண்டுகொண்டேனே.

மேல்

#2 துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ளத் துரிசு எலாம் தொலைத்த மெய்ச் சுகத்தை என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன் என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையைக் கண்டுகொண்டேனே.

மேல்

#3 சிதத்திலே ஊறித் தெளிந்த தெள் அமுதைச் சித்து எலாம் வல்ல மெய்ச் சிவத்தைப் பதத்திலே பழுத்த தனிப் பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வை எம் பதியை மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#4 உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பைப் புணர்ந்து எனைக் கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணியப் பயனைக் கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குணப் பெருங் குன்றை மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலைக் கண்டுகொண்டேனே.

மேல்

#5 புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம் சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியைச் சோதியாது என்னை மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#6 பண்ணிய தவமும் பலமும் மெய்ப் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை நண்ணி என் உளத்தைத் தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும் தண்ணிய விளக்கைத் தன் நிகர் இல்லாத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

மேல்

#7 பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையைப் பெரிய தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியைத் தயாநிதி-தன்னை வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும் உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#8 ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பைச் சோதியை எனது துணையை என் சுகத்தைச் சுத்த சன்மார்க்கத்தின் துணிபை நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#9 என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியைப் பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவைக் கொன் செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டுகொண்டேனே.

மேல்

#10 புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவைக் கல் நிகர் மனத்தைக் கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளைத் தனது சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுறப் புனைந்த மெய்த் துணையைத் தன் நிகர் இல்லாத் தலைவனை எனது தந்தையைக் கண்டுகொண்டேனே.

மேல்

#11 ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியைப் பாங்கனில் என்னைப் பரிந்துகொண்டு எல்லாப் பரிசும் இங்கு அளித்த தற்பரத்தைத் தாங்கும் ஓர் நீதித் தனிப் பெருங் கருணைத் தலைவனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#12 துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியைப் பாவியேன் உளத்தை இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை வன்பு இலாக் கருணை மா நிதி எனும் என் வள்ளலைக் கண்டுகொண்டேனே.

மேல்

#13 நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியைச் சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#14 கரும்பில் இன் சாற்றைக் கனிந்த முக்கனியைக் கருது கோல்_தேன் நறும் சுவையை அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த பெரும் தனிப் பதியைப் பெரும் சுகக் களிப்பைப் பேசுதற்கு அரும் பெரும் பேற்றை விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினைக் கண்டுகொண்டேனே.

மேல்

#15 களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்துக் களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை உளம்கொளும் தேனை உணவு உணத் தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியைக் குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே.

மேல்

#16 சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் சிதம்பர நடம் புரி சிவத்தைப் பதம் தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் பதி சிவ பதத்தைத் தற்பதத்தை இதம் தரும் உண்மைப் பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளைச் சதம் தரும் சச்சிதானந்த நிறைவைச் சாமியைக் கண்டுகொண்டேனே.

மேல்

#17 ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தைக் காரண வரத்தைக் காரிய தரத்தைக் காரிய_காரணக் கருவைத் தாரண நிலையைத் தத்துவ பதியைச் சத்திய நித்திய தலத்தைப் பூரண சுகத்தைப் பூரண சிவமாம் பொருளினைக் கண்டுகொண்டேனே.

மேல்

#18 சுத்த வேதாந்த பிரம ராசியத்தைச் சுத்த சித்தாந்த ராசியத்தைத் தத்துவாதீதத் தனிப் பெரும் பொருளைச் சமரச சத்தியப் பொருளைச் சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்தத் தெளிவை வித்த மா வெளியைச் சுத்த சிற்சபையின் மெய்மையைக் கண்டுகொண்டேனே.

மேல்

#19 சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியைத் தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய்ச் சார்வைச் சத்துவ நித்த சற்குருவை அமைய என் மனத்தைத் திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை நிமல நிற்குணத்தைச் சிற்குணாகார நீதியைக் கண்டுகொண்டேனே.

மேல்

#20 அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலகக் களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியைக் கருணை அம் கடலை உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியைக் குள-வயின் நிறைந்த குரு சிவ பதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

மேல்

#21 சார் கலாந்தாதிச் சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியைச் சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய்த் துலங்கிய ஜோதியைச் சோதிப் பார் பெறாப் பதத்தைப் பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய்ப் பதியைச் சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமைத் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

மேல்

#22 அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும் அறிந்திடப்படாத மெய் அறிவைப் படி முதல் அண்டப் பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய்ப் பதியைக் கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணைக் கொடி வளர் இடத்துப் பெரும் தயாநிதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

மேல்

#23 பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அறத் தவிர்த்து அருள் பரிசும் நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரைப் புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியைப் பொற்பு உறக் கண்டுகொண்டேனே.

மேல்

#24 கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரைக் ககனத்தைக் காற்றினை அமுதை நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை அலை அறு கருணைத் தனிப் பெருங் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே.

மேல்

#25 மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை வெம்மையைத் தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவைச் செம்மையை எல்லாச் சித்தியும் என்-பால் சேர்ந்திடப் புரி அருள் திறத்தை அம்மையைக் கருணை அப்பனை என் பேர்_அன்பனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#26 கருத்தனை எனது கண்_அனையவனைக் கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின் அருத்தனை வரனை அபயனைத் திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும் நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனைக் கண்டுகொண்டேனே.

மேல்

#27 வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்தக் கூத்தனை அரசைச் சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபைத் தனித் தலைவனைத் தவனைச் சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

மேல்

#28 உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும் உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியைக் கண்டுகொண்டேனே.

மேல்

#29 புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதனை எல்லா நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு மலைவு அறத் தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனைத் தலைவனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

மேல்

#30 பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த கனி_அனையவனை அருள்_பெரும்_சோதிக் கடவுளைக் கண்ணினுள் மணியைப் புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞானப் பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளைத் தனியனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

@50. உளம் புகுந்த திறம் வியத்தல்

மேல்

#1 வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும் நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே.

மேல்

#2 படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்திப் பல் மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனத்தே அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்தக் குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே.

மேல்

#3 உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய் வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம் கொள்ளைகொளக் கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

மேல்

#4 தடை அறியாத் தகையினதாய்த் தன் நிகர் இல்லதுவாய்த் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு விடை அறியாத் தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த நடை அறியாத் திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய் கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

மேல்

#5 இறையளவும் துரிசு இலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய் மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெறச் செய்தனையே குறைவு_இலது இப் பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

மேல்

#6 உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய் மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளித் திரு அனைத்தும் கொடுத்தாய் குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

மேல்

#7 மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய் வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞானக் குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

மேல்

#8 சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய் பரம்பரமாய்ப் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய்ப் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே குரங்கு மனச் சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

மேல்

#9 பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகிப் பழுத்த பெரியவரும் உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள் பெற்று அறியப் பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

மேல்

#10 கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகிப் பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில் மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

@51. வரம்பில் வியப்பு

மேல்

#1 பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில் இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும் தன் பொதுச் சமுகத்து ஐவர்கள் இயற்றத் தனி அரசு இயற்றும் ஓர் தலைவன் அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே.

மேல்

#2 மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி இன்புறச் சிறிதே கடைக்கணித்து அருளி இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன் அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே.

மேல்

#3 தன் நிகர் இல்லாத் தலைவ என்று அரற்றித் தனித்தனி மறைகள் ஆகமங்கள் உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனிப் பெரும் பதி உவந்தே புல் நிகர் இல்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய் என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

மேல்

#4 பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன் மால் வகை மனத்தேன் உளக் குடில் புகுந்தான் வள்ளலைத் தடுப்பவர் யாரே.

மேல்

#5 வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டாப் பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியாப் பராபர உணர்ச்சியும் பற்றா உரம் பெற உணர்வார் யார் எனப் பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன் கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

மேல்

#6 படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில் கிடைத்திடக் கீழ் மேல் நடு எனக் காட்டாக் கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் அடைத்த காரணமாய்க் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன் கடைத் தனிச் சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

மேல்

#7 அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின் பிளவில் ஓர் கோடிக் கூற்றில் ஒன்று ஆகப் பேச நின்று ஓங்கிய பெரியோன் களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பிக் கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம் வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலைத் தடுப்பவர் யாரே.

மேல்

#8 உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடாப் பெரும் கொடைத் தலைவன் கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்துக் கருத்து எலாம் இனிது தந்து அருளித் தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையைத் தடுப்பவர் யாரே.

மேல்

#9 அறிந்தன அறிந்தாங்கு அறிந்தறிந்து அறியாது ஐயகோ ஐயகோ அறிவின் மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும் முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனிப் பெரும் தலைவன் செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே.

மேல்

#10 கரு முதல் கருவாய்க் கருவினுள் கருவாய்க் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய்க் குரு முதல் குருவாய்க் குரு எலாம் கிடைத்த கொள்கையாய்க் கொள்கையோடு அளவா அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன் மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையைத் தடுப்பவர் யாரே.

@52. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

மேல்

#1 அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத் தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியை மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியைக் கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#2 திருத் தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலாத் திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனைச் சிவனை நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது கருத்தனைச் சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#3 பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியைப் பசுபதியைக் கனக_சபாபதியை உமாபதியைத் தேட்டம் மிகும் பெரும் பதியைச் சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனிப் பதியைத் திகழ் தெய்வப் பதியை ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#4 மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியைத் துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியைச் சுயம் சோதித் திரு_மணியைச் சுத்த சிவ மணியை விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியைக் கதித்த சுக மய மணியைச் சித்த சிகாமணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#5 மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னைத் தேற்றம் மிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னைக் காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ணப் பொன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#6 ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை வேய் தரு தத்துவப் பொருளைத் தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும் தோய்தரல் இல்லாத தனிச் சுயம் சோதிப் பொருளைச் சுத்த சிவ மயமான சுகாதீதப் பொருளைக் காய்தரல் இல்லாது என்னைக் காத்த அருள் பொருளைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#7 திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும் அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும் பொருத்தும் மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர்-தம் கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#8 கோணாத நிலையினராய்க் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலைக் குகை முதலாம் இடத்தில் ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடித் தூணாக அசைதல் இன்றித் தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும் காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#9 நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும் ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும் வேட்டாசைப் பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

மேல்

#10 மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத் தருணம்-அது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப் பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக் கருணை அருள்_பெரும்_சோதிக் கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.

@53. ஆண்டருளிய அருமையை வியத்தல்

மேல்

#1 அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ இம்பர் இப் பிறப்பே மெய்ப் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#2 அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனித் துணை என்கோ இம்மையே அழியாத் திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#3 எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனிப் பெரும் தலைவனே என்கோ இப் பிறப்பு-அதிலே மெய்ப் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#4 அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ இச் சகத்து அழியாப் பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#5 அத்தம் நேர் கிடைத்த சுவைக் கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பலச் சிவம் என்கோ மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ இத் தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#6 மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பதச் சுவை அனுபவம் என்கோ சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பலத் தந்தை என்கோ இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#7 அன்பிலே பழுத்த தனிப் பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர்த் துணைப் பதி என்கோ வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ என் புரி அழியாப் பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#8 தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ அடைவு உறு வயிரக் கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ உடைய மாணிக்கப் பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#9 மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகமப் பொருள் என்கோ குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குணப் பெரும் குன்றமே என்கோ பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ இறை முடிப் பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

மேல்

#10 என் உளம் பிரியாப் பேர்_ஒளி என்கோ என் உயிர்த் தந்தையே என்கோ என் உயிர்த் தாயே இன்பமே என்கோ என் உயிர்த் தலைவனே என்கோ என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே.

@54. இறைவனை ஏத்தும் இன்பம்

மேல்

#1 கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே.

மேல்

#2 ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர் வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குறக் கிடைத்த ஓர் வயிரப் பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்கக் கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே.

மேல்

#3 துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே.

மேல்

#4 கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனிப் பெரியனே என்கோ திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே.

மேல்

#5 தாயனே எனது தாதையே ஒருமைத் தலைவனே தலைவனே என்கோ பேயனேன் பிழையைப் பொறுத்து அருள் புரிந்த பெருந்தகைப் பெரும் பதி என்கோ சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

மேல்

#6 அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்தத் தனி மலர் என்கோ கரும்பிலே எடுத்த சுவைத் திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம் இரும்பிலே பழுத்துப் பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

மேல்

#7 தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ மோகம் வந்து அடுத்த போது கைப் பிடித்த முக நகைக் கணவனே என்கோ போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே.

மேல்

#8 தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ ஒத்து வந்து எனைத் தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே.

மேல்

#9 யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ சாகலைத் தவிர்த்து என்றன்னை வாழ்விக்கச் சார்ந்த சற்குரு மணி என்கோ மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

மேல்

#10 இரவு இலாது இயம்பும் பகல் இலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ கரவு இலாது எனக்குப் பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே.

@55. பாமாலை ஏற்றல்

மேல்

#1 நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளித் தான் புனைந்தான் ஞான சபைத் தலைவன் தேன் புனைந்த சொல்லாள் சிவகாமசுந்தரியைத் தோள் புணர்ந்த நல்லான்-தன் தாட்கே நயந்து.

மேல்

#2 சொல்லுகின்ற என் சிறு வாய்ச் சொல்_மாலை அத்தனையும் வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவ காம சவுந்தரிக்குக் கண்_அனையான் ஞான சபைச் சேம நடராஜன் தெரிந்து.

மேல்

#3 ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம் வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதார விந்தம் எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த எந்தை நடராஜன் இசைந்து.

மேல்

#4 இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார் ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து.

மேல்

#5 என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என் றன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் முன் பாட்டுக் காலையிலே வந்து கருணை அளித்தே தருமச் சாலையிலே வா என்றான் தான்.

மேல்

#6 என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையைப் பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல் நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய் வல்லான் திரு_கருணை வாய்ப்பு.

மேல்

#7 முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம் அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம் பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்துத் தாரா வரங்கள் எலாம் தந்து.

மேல்

#8 பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல் வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது எல்லாம் திரு_அருள் சீரே.

மேல்

#9 பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம் தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன் இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து.

மேல்

#10 நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும் ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய் புண்ணியம் இ வானில் புவியின் மிகப் பெரிதால் எண்ணிய எல்லாம் புரிகின்றேன்.

மேல்

#11 எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த தெள் அமுதோ அம்பலவன் சீர்.

மேல்

#12 ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும் தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம் கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ.

@56. உத்தர ஞான சிதம்பர மாலை

மேல்

#1 அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன் மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழப் புரிந்தது என்றும் தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#2 இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில் திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#3 உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும் கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த் திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#4 பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல் தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே உவமேயமானது ஒளி ஓங்குகின்றது ஒளிரும் சுத்த சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#5 ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒரு மித்தாரை வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடு வித்தாரைக் காப்பது சித்தாடுகின்றது மேதினி மேல் செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#6 எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது இத் தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும் செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#7 குரு நெறிக்கே என்னைக் கூட்டிக் கொடுத்தது கூற அரிதாம் பெரு நெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது பேய் உலகக் கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#8 கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார் சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும் செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#9 காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம் வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால் கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#10 சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார் நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே.

மேல்

#11 ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன் தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே.

@57. செய் பணி வினவல்

மேல்

#1 அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனைத் தெருளே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன் பொருளே இனி நின்றனைப் பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.

மேல்

#2 ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் உரு ஆர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே.

மேல்

#3 அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிகப் புகட்டிச் சிவமே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன் நவமே அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

மேல்

#4 பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்துச் செல்வா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே வல் வாதனை செய் மனச் செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன் நல் வாழ்வு அளித்தாய் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

மேல்

#5 ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனைத் தேவா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன் நாவால் அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

மேல்

#6 இளிவே தவிர்த்துச் சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளித் தெளிவே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன் தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

மேல்

#7 மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்திச் சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன் திறப் பேர்_உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.

மேல்

#8 ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகித் தேனே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன் தான் நேர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

மேல்

#9 ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றிச் சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன் தீரா உலகில் அடிச் சிறியேன் செய்யும் பணியைத் தெரித்து அருளே.

மேல்

#10 மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே தெய்வப் பதியே சிவமே நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன் பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியைப் புகன்று அருளே.

@58. ஆன்ம தரிசனம்

மேல்

#1 திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான் உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே தெரு எலாம் அறியக் கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன் அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

மேல்

#2 நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம் எனைத் தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும் தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் எனப் புரிந்தேன் அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

மேல்

#3 களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பித் துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத் தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன் ஒளித் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

மேல்

#4 உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால் கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல் கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

மேல்

#5 களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன் உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன் கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

மேல்

#6 திலக வாள் நுதலார்-தமைக் கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயைக் கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே எனத் துயர்ந்து இருந்தேன் அலகு_இலாத் திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

மேல்

#7 சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன் ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

மேல்

#8 பித்து எலாம் உடைய உலகர்-தம் கலகப் பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமைச் சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் எனத் துயர்ந்து இருந்தேன் ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

மேல்

#9 ஒன்று எனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும் என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன் உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

மேல்

#10 கள்ள வாதனையைக் களைந்து அருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன் ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே

@59. வேண்டுவன இவை இவை என விண்ணப்பித்தல்

மேல்

#1 அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

மேல்

#2 ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும் பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும் நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனைப் பிரியாது உறுதலும் வேண்டுவனே.

மேல்

#3 அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும் கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும் பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்தப் பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும் உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனைப் பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே.

மேல்

#4 அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் களித்தல் வேண்டும் செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும் ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே.

மேல்

#5 அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும் வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும் புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும் உரை சேர் மெய்த் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

மேல்

#6 அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும் துடி சேர் எவ்வுலகமும் எத் தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும் படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும் ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

மேல்

#7 அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும் இ மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும் எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும் தம் மானத் திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.

மேல்

#8 அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும் எச் சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும் இச் சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும் உச்ச ஆதி அந்தம் இலாத் திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே.

மேல்

#9 அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும் செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்தப் பொது சிறத்தல் வேண்டும் எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும் பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனைப் பாடி ஆடுதல் வேண்டுவனே.

மேல்

#10 அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும் இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும் பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.

மேல்

#11 அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும் எமன் ஆதித் தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும் கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவைக் களித்து ஏத்தல் வேண்டும் விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே.

@60. அருள் விளக்க மாலை

மேல்

#1 அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதிச் சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே மருள் கடிந்த மா மணியே மாற்று அறியாப் பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே.

மேல்

#2 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#3 இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னைத் தாங்கிய நல் துணையே அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே.

மேல்

#4 ஒசித்த கொடி_அனையேற்குக் கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்றுத் திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய்ச் சிவமே கசித்த மனத்து அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே.

மேல்

#5 மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே சின_முகத்தார்-தமைக் கண்டு திகைத்த பொழுது அவரைச் சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே இனம் எனப் பேர்_அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே.

மேல்

#6 கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே துங்கமுறத் திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

மேல்

#7 கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகித் திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய்ச் சத்தே வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே.

மேல்

#8 கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே துதிக்கும் அன்பர் தொழப் பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

மேல்

#9 அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும் கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க விண் தகு பேர்_அருள் சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணைக் கொடி நாட்டி அருளாம் தண் தகும் ஓர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே.

மேல்

#10 நல்லார் சொல் யோகாந்தப் பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்தப் பதிகள் பல கோடி வல்லார் சொல் கலாந்த நிலைப் பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்தப் பதிகள் பல கோடி இல் ஆர்ந்த வேதாந்தப் பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள் பல கோடி எல்லாம் பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே.

மேல்

#11 நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள் ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்கச் சூட்டிய பொன் முடி இலங்கச் சமரச மெய்ஞ்ஞானச் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நிலையில் அமர்ந்தே நீட்டிய பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே.

மேல்

#12 தன் பெருமை தான் அறியாத் தன்மையனே எனது தனித் தலைவா என் உயிர்க்குள் இனித்த தனிச் சுவையே நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார் அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே.

மேல்

#13 உண்ண உண்ணத் தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும் தண்ணிய வண்ணம் பரவப் பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுதத் திரளே புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

மேல்

#14 நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே.

மேல்

#15 கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில் பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

மேல்

#16 கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே தடுத்திட வல்லவர் இல்லாத் தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

மேல்

#17 தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#18 மலைவு அறியாப் பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணிப் பொருப்பே மரகதப் பேர் வரையே விலை_அறியா உயர் ஆணிப் பெரு முத்துத் திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே கொலை அறியாக் குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனிக் கோவே மெய் அறிவால் நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடிப் பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே.

மேல்

#19 கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்கப் பழுத்த தனிப் பழமே மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாமப் பெண் களிக்கப் பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ்ச் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே.

மேல்

#20 உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனிப் பொருளே மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே.

மேல்

#21 நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

மேல்

#22 எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே தட்டு அறியாத் திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

மேல்

#23 சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித் தனித்த திரு_அமுது அளித்த தனித் தலைமைப் பொருளே ஆதி நடுக் கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே சோதி மயமாய் விளங்கித் தனிப் பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே

மேல்

#24 அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய்த் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனிப் பதியே பொடிக் கனகத் திரு_மேனித் திரு மணம் கற்பூரப் பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே அடிக் கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#25 அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத் துறை யாவும் பிண்ட வகைத் துறை முழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#26 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே.

மேல்

#27 பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே.

மேல்

#28 ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடுக் கீழ் கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய்க் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனிக் கனலே செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பித் திகழ்கின்ற சுடரே வெம் பூதத் தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

மேல்

#29 வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடுப் பால் ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாகக் கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதிச் சுடரே போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

மேல்

#30 பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கித் தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளிச் செங்கோல் நடத்தித் தழைக்கின்ற ஒளியே மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

மேல்

#31 மாமாயைப் பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிடக் கதிர் செய் தனித்த பெரும் சுடரே தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#32 சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாகத் துலங்கும் ஒளி அளித்தே நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுறச் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே சத்திய ஞானானந்தச் சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

மேல்

#33 சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடுக் கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பிச் சூழ்கின்ற சுடரே போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

மேல்

#34 நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்கக் கதிர் பரப்பிக் குலவு பெரும் சுடரே பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

மேல்

#35 மன்னுகின்ற அபர சத்திப் பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம் பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கிப் பதிந்து அருளும் ஒளியே துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பித் துலங்குகின்ற சுடரே உன்னும் அன்பர் உளம் களிக்கத் திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#36 விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கிக் களங்கம்_இலாப் பர வெளியில் அந்தம் முதல் நடுத் தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்கச் சுடர் பரப்பி ஓங்கு தனிச் சுடரே வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே.

மேல்

#37 தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகிப் பரவிய பேர்_ஒளியே விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே புரிந்த தவப் பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

மேல்

#38 வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்கச் சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனிச் சுடரே வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே.

மேல்

#39 கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே.

மேல்

#40 காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் கையும் மெய்யும் பரிசிக்கச் சுக பரிசத்ததுவாய்ச் சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தம் செய்குவதாய்த் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய் மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#41 திரை இலதாய் அழிவு இலதாய்த் தோல் இலதாய்ச் சிறிதும் சினைப்பு இலதாய்ப் பனிப்பு இலதாய்ச் செறிந்திடு கோது இலதாய் விரை இலதாய்ப் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய்ப் பரை வெளிக்கப் பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்கக் கிடைத்த தனிப் பழமே உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணிப் பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#42 கார்ப்பு இலதாய்த் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய்ச் சிறிதும் கசப்பு இலதாய்ப் புளிப்பு இலதாய்க் காய்ப்பு இலதாய்ப் பிறவில் சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அத் தீமை ஒன்றும் இலதாய்ப் பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய்த் தவப் பயனால் கிடைத்த தனிப் பழமே ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#43 தெற்றியிலே நான் பசித்துப் படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே ஒற்றியில் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடிப் பற்று ஆகப் பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணிப் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே.

மேல்

#44 தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லைத் தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

மேல்

#45 ஓங்கிய ஓர் துணை இன்றிப் பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடைச் சிறியேன் தூங்கி மிகப் புரண்டு விழத் தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த் துணையே தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவப் பயனாம் பொருளே ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளிப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#46 தனிச் சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனைத் தன் வருத்தம் எனக் கொண்டு தரியாது அக் கணத்தே பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து அணைத்த குருவே இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர்க் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

மேல்

#47 ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளிச் சிறுமை எலாம் தீர்த்த தனிச் சிவமே கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

மேல்

#48 இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனைத் தேடி வந்தே பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியைப் போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#49 நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னைச் செல்வம் உற வளர்த்தே ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞானத் திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#50 நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய்க் கிளை எனும் பேர்_ஒளியே படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க எனக் குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனிப் பதியே கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

மேல்

#51 நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால் தான் நிலைக்கவைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித் தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#52 மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினைத் தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்தப் பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே ஏர்த் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே.

மேல்

#53 இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கித் தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றைத் தடை ஆக்கி உலகு அறியத் தடை தீர்த்த குருவே எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே.

மேல்

#54 கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#55 எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே.

மேல்

#56 சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே கூ கா என்று எனைக் கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே மா காதல் உடையார்கள் வழுத்த மணிப் பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

மேல்

#57 சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகித் தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய் நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனிப் பொருளே சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலைத் தலை நின்ற சிவமே புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

மேல்

#58 நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகித் தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது எனத் தோற்றித் தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்துத் தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#59 திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனைத் தெளிவித்து மணி மாடத் திரு_தவிசில் ஏற்றி நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே வசை அறியாப் பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருளப் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

மேல்

#60 என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெரும் சுடரே மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

மேல்

#61 மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டிப் பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்துப் பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனிப் பேர்_ஒளியே மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

மேல்

#62 நன்மை எலாம் தீமை எனக் குரைத்து ஓடித் திரியும் நாய்க் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும் புன்மை எலாம் பெருமை எனப் பொறுத்து அருளிப் புலையேன் பொய் உரை மெய் உரையாகப் புரிந்து மகிழ்ந்து அருளித் தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுறப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#63 விழு_குலத்தார் அருவருக்கும் புழுக் குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனிப் பேர் ஒளியே எழுக் குலத்தில் புரிந்த மனக் கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

மேல்

#64 கலைக்கொடி கண்டு அறியாத புலைக் குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி மலைக்கு உயர் மாத் தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே புலைக் கொடியார் ஒருசிறிதும் புலப்படக் கண்டு அறியாப் பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

மேல்

#65 மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும் பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்கப் பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

மேல்

#66 என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தித் தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்துத் தானும் உடன் இருந்து அருளிக் கலந்த பெருந்தகையே அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய்ச் சிவமே பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழிப் பூம் கண்ணியும் ஏற்று அருளே.

மேல்

#67 தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகித் தாழ்ந்து ஏவல் இயற்ற முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும் என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடிப் பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#68 பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும் விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்துப் போற்ற உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளைத் தன்னுள் அடக்கும் வெளியாய்க் கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

மேல்

#69 வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளிக் காத்து அளித்த துரையே ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#70 கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே நிலை விழைவார்-தமைக் காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே புலை அறியாப் பெரும் தவர்கள் போற்ற மணிப் பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

மேல்

#71 உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே மயர்ப்பு அறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

மேல்

#72 வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில் அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செயத் துணியேல் என்றே இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே துன்பு அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

மேல்

#73 கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது படியில் அதைப் பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக எனப் பரிந்து உரைத்த குருவே நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#74 தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே மயல் அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

மேல்

#75 அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்க எனச் செப்பிய சற்குருவே பொருள்_உடைய பெரும் கருணைப் பூரண மெய்ச் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணிப் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

மேல்

#76 வெம் மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது பெம்மான் என்று அடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#77 ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து நீள் நவமாம் தத்துவப் பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#78 பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே மீன் மறுத்துச் சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#79 மெய்ச் சுகமும் உயிர்ச் சுகமும் மிகும் கரணச் சுகமும் விளங்கு பதச் சுகமும் அதன் மேல் வீட்டுச் சுகமும் எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே பொய்ச் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே.

மேல்

#80 அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள் கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக் கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே.

மேல்

#81 சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள் இத் திசை அத் திசையாக இசைக்கும் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர்த் திரள்கள் அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்ச் சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

மேல்

#82 பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றைப் புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச் செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரைச் செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே நெறி வழங்கப் பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே.

மேல்

#83 உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடிப் பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய்ச் சிறிய பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும் பதியே நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகித் தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான் எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#84 கொள்ளை வினைக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக் கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும் கள்ளம் உறும் அக் கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

மேல்

#85 நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே.

மேல்

#86 எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு எனக் கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்குச் செப்பிய சற்குருவே அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே ஒவ்விடச் சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#87 இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார் மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#88 தோன்றிய வேதாகமத்தைச் சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டு அறியேல் ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தைப் பொய் எனக் கண்டு உணர்வாய் ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனிச் சிவமே ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

மேல்

#89 நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மதத் தலைவர் எல்லாம் வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளைக் கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால் தான் மிகக் கண்டு அறிக எனச் சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

மேல்

#90 தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும் எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான் தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

மேல்

#91 ஐயமுறேல் என் மகனே இப் பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி வையம் மிசைத் தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனிப் பதியே உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

மேல்

#92 காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

மேல்

#93 சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்தத் தேம் பாகின் பதமே சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனிப் பொருளே நல் பதம் என் முடி சூட்டிக் கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே பல் பதத்துத் தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே.

மேல்

#94 ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப் பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம் சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம் நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே.

மேல்

#95 கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனிப் பொருளே என் வாழ்வே என் மருந்தே பிணக்கு அறியாப் பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

மேல்

#96 அடிச் சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து கடிக் கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்பக் கதிர் முடியும் சூட்டி எனைக் களித்து ஆண்ட பதியே வடித்த மறை முடி வயங்கும் மா மணிப் பொன் சுடரே மனம் வாக்குக் கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

மேல்

#97 எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே மெய்த் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாடப் புரிந்து சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில் சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

மேல்

#98 இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திரு_அமுதும் அளித்த பெரும் பதியே திருந்து மறை முடிப் பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோகப் பொருளே பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

மேல்

#99 குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமாக் கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தித் தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகித் தழைத்து ஓங்கப் புரிந்தே அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#100 தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனைத் தான் வலிந்து ஆட்கொண்டு அருளித் தடை முழுதும் தவிர்த்தே மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிடப் புரிந்து நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி அலர் தலைப் பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

@61. தாய் கூறல்

மேல்

#1 காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள் ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள் பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள் மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#2 மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள் உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள் கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள் வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#3 அஞ்சல் என்று எனை இத் தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள் பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள் செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள் வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#4 பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப் புணர்ந்திட விரும்பினேன் என்றாள் காமி என்று எனை நீ கைவிடேல் காமக் கருத்து எனக்கு இல்லை காண் என்றாள் சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள் மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#5 அடுத்து நான் உன்னைக் கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள் தடுத்திட முடியாது இனிச் சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள் தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள் மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#6 தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளைத் தருக நல் தருணம் ஈது என்றாள் கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள் நடுத் தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள் வடுத் தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#7 பொன் செய் நின் வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள் என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள் கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#8 மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள் நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள் மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள் வலிந்து எனைக் கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#9 ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள் நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள் குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயரக் குழியிலே இருந்திடேன் என்றாள் மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

மேல்

#10 ஆடிய பாதத்து அழகன் என்றனைத் தான் அன்பினால் கூடினன் என்றாள் கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்குக் கூடுதல் கூடுமோ என்றாள் பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பிப் பரிசு எலாம் புரிந்தனன் என்றாள் வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

@62. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

மேல்

#1 அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

மேல்

#2 அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டுப் போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள் எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

மேல்

#3 பனம் பழமே எனினும் இந்தப் பசி தவிர்த்தால் போதும் பாரும் எனப் பகர்கின்ற பாவையர் போல் பகராள் இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள் தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

மேல்

#4 புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார் கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும் நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

மேல்

#5 தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார் எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே.

மேல்

#6 அன்னையைக் கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல் மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

மேல்

#7 கரவு அறியா அம்பலத்து என் கணவரைக் கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள் இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள் வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மனக் கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும் விரவும் ஒரு கணமும் இனித் தாழ்க்கில் உயிர் தரியாள் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

மேல்

#8 ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது பேர்_ஆசைப் பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில் நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே.

மேல்

#9 என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகித் தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள் அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள் மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

மேல்

#10 அம்பலத்தே நடம் புரியும் எனது தனித் தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால் தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க எம்பலத்தே மலர் அணையைப் புனைக எனப் பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கித் திகழ் பெரிய துரையே.

@63. தலைவி வருந்தல்

மேல்

#1 பருவம் இலாக் குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன் சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள் நிருவ மடப் பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

மேல்

#2 அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனித் தாயும் மலர்ந்து முகம் பாராள் நிம்ப மரக் கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

மேல்

#3 கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பெண் அடங்காள் எனத் தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள் மண் அடங்காப் பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே.

மேல்

#4 எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

மேல்

#5 இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ எச் சமயத் தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் நச்சு மரக் கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்புப் புகன்றாள் அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே.

மேல்

#6 வஞ்சம் இலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள் நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

மேல்

#7 அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள் நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

மேல்

#8 பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி இதுவரையும் வரக் காணேன் தடை செய்தார் எவரோ எனப் புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் புது முகம் கொண்டு எனது தனித் தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள் மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே.

மேல்

#9 கண் கலந்த கள்வர் என்னைக் கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன் விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள் பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே.

மேல்

#10 மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி ஈடு அறியாச் சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் ஏடு அவிழ் பூம் குழல் கோதைத் தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள் நாடு அறியப் பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

மேல்

#11 கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள் சொல்_பூவைத் தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

மேல்

#12 மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ இன்னும் அவர் வதன இளநகை காணச் செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் மின்னும் இடைப் பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிகப் பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்துப் போனாள் அன்ன நடைப் பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

மேல்

#13 கள்_உண்டாள் எனப் புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள் துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

மேல்

#14 காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி ஏர் இகவாத் திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் கார் இகவாக் குழல் சோரக் கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே நேர் இகவாப் பெண்கள் மொழிப் போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

மேல்

#15 கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள் பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ளப் பிரியம் அறிந்திலனே.

மேல்

#16 கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி எல் பூத நிலை அவர்-தம் திரு_அடித் தாமரைக் கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன் வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள் வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே.

மேல்

#17 மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் புனை முகம் ஓர் கரி முகமாய்ப் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி பனை உலர்ந்த ஓலை எனப் பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே.

மேல்

#18 தாழ் குழலீர் எனைச் சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரைக் காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் கூழ் கொதிப்பது எனக் கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள் சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

மேல்

#19 தனித் தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடிச் சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள் கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

மேல்

#20 அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள் விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே.

மேல்

#21 மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள் மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே.

மேல்

#22 பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவைப் பார்ப்பதற்குத் தரம்_இல்லீர் என்ற அதனாலோ எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடிக் கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள் துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

மேல்

#23 மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ இன்று ஆவி_அன்னவர்க்குத் தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள் ஒன்றாத மனப் பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

மேல்

#24 கூடிய என் கணவர் எனைக் கூடாமல் கலைக்கக் கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள் தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

@64 தனித் திருத் தொடை

**1 தமக்கெனப் பாடொன் றிலாதார்க்கு அருட்சோதி அளித்தருள் எனல்

மேல்

#1 அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டுப் பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும் உன்பாடு நான் உரைத்தேன் நீ இனிச் சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா.

மேல்

#2 முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம் இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய் அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்துக் காத்தல் உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா.

மேல்

#3 உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ என் நாணைக் காத்து அருளி இத் தினமே அருள் சோதி ஈதல் வேண்டும் அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே.

மேல்

#4 தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டிப் பின்னே வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும் தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே.

மேல்

#5 இயங்கு ஆளி புலி கரடி எனப் பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில் சயம் காளிக் கோயிலைக் கண்டு அஞ்சி மனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப் பயங்காளி_பயல் போலப் பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே.

மேல்

#6 சிறு செயலைச் செயும் உலகச் சிறு நடையோர் பல புகலத் தினம்-தோறும்-தான் உறு செயலை அறியா இச் சிறு_பயலைப் பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய் தெறு செயலைத் தவிர்த்து எல்லாச் சித்தியும் பெற்றிட அழியாத் தேகன் ஆகப் பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலைப் புரிக எனைப் பெற்ற தேவே. **2. பொதுவளர் இறைவன் தம்மைத் தாங்கிக்கொள வேண்டும் எனல்

மேல்

#7 ஆதி அப்பா நம் அனாதி அப்பா நங்கள் அம்மை ஒரு பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனு பூதி அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய் சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

மேல்

#8 அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_ கண்ட அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும் ஒண் தவப் பாவையைக் கொண்ட அப்பா சடை ஓங்கு பிறைத் துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

மேல்

#9 வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர் சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடைத் துன்று கொன்றை மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்கச் சாலை அப்பா எனைத் தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே.

மேல்

#10 மெச்சி அப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என் உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்றுப் பெற்ற அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னைக் கண்டுகொள்ளே.

மேல்

#11 எக் கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ செக்கரை வென்ற பொன் என்கோ படிகத் திரள்-அது என்கோ திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே.

மேல்

#12 ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம் திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக் கட்டி என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே. **3. அருட் பெருஞ் சோதி அபயம்

மேல்

#13 அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_ சோதி அபயம் சிற்சோதி அபயம் பொன் சோதி அபயம் துணை.

மேல்

#14 துணைவா அபயம் துயர் அகல என்-பால் அணைவா அபயம் அபயம் பணை வாய் வடலா அபயம் வரதா அபயம் நட நாயகா அபயம் நான்.

மேல்

#15 நான் ஆகித் தானாய் நடித்து அருள்கின்றாய் அபயம் தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு மெய்யா அபயம் விமலா அபயம் என்றன் ஐயா அபயம் அபயம்.

மேல்

#16 அபயம் பதியே அபயம் பரமே அபயம் சிவமே அபயம் உபய பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல் விதத்தில் கருணை விளை.

மேல்

#17 கருணாநிதியே அபயம் கனிந்த அருள் நாடகனே அபயம் மருள் நாடும் உள்ளக் கவலை ஒழிப்பாய் என் வன் மனத்துப் பொள்ளல் பிழைகள் பொறுத்து. **4. அம்பலத் தரசிடம் அபயம் இடுதல்

மேல்

#18 பொருள் பெரும் தனி மெய்ப் போகமே என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்கச் செல்வமே நான் பெற்ற சிறப்பே மருள் பெரும் கடலைக் கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

மேல்

#19 பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த தெருள் பெருவெளி மட்டு அளவு இலாக் காலம் தேடியும் காண்கிலாச் சிவமே மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

மேல்

#20 பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே மருள் பெரு இருளைத் தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம். **5.(1) இறை இயல் போற்றல்

மேல்

#21 போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம் போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம் போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே.

மேல்

#22 போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம் போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே. **5.(2) ஐம்பெரு முதல்களை அறியப்பெற்றேன் எனல்

மேல்

#23 போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என் ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான் காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காணக் காட்டிய கருத்த போற்றி வன் கூற்று தைத்து நீத்து அழிவு இலா உருக் கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே. **6(1). திருவடி அவனிபொருந்திய புதுமை புகலல்

மேல்

#24 கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமைக் கடவுளே என் இரு கண்ணே நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன் சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே. **6(2). மனித்த உடம் பழியா ஆறு

மேல்

#25 உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான் தானே எனக்குத் தனித்து.

மேல்

#26 தனித் துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண்டு என்றன் மனித்த உடம்பு அழியாவாறே கனித் துணையாம் இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி- தன்னையும் தந்து உள் கலந்தான் தான். **7. தான் நான் ஆன தன்மையை வியத்தல்

மேல்

#27 வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில் தான் ஆடுவான் ஆகிச் சன்மார்க்கர் உள் இனிக்கும் தேன் ஆகித் தெள் அமுதாய்த் தித்திக்கும் தேவே நீ யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ.

மேல்

#28 ஞானாகரச் சுடரே ஞான மணி_விளக்கே ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்தத் தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ. **8. நான் வேண்டுமோ பழிதான் வேண்டுமோ எனல்

மேல்

#29 வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுதத் தேன் வேண்டினேன் இத் தருணத்து அருள்செய்க செய்திலையேல் ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன் நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே. **9. இறைவனுக்கு ஈய எதுவும் இன் றெனல்

மேல்

#30 என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ. **10. இறைவன் கேட்பதன்முன் கொடுக்க வல்லான் எனல்

மேல்

#31 கோது கொடுத்த மனச் சிறியேன் குற்றம் குணமாக் கொண்டே இப் போது கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம் தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே. **11. அருட்சோதி அடைதல் சத்தியம் எனல்

மேல்

#32 வரும் முன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே குரு முன் பொய் உரை கூறலேன் இனி இக் குவலையத்திடைக் கவலையைத் தரியேன் திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே. . **12. ஐவகைத் தொழிலும் அடைவித்த வியப்பு

மேல்

#33 ஐ வகைத் தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள் செய் வகை தெரிவித்து என்னைச் சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும் பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே. **13. கண்டனன் சாமியை எனல்

மேல்

#34 பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர் தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான் நண்ணிய புண்ணியம் என் உரைக்கேன் இந்த நானிலத்தே. **14. கருணைமன்றிலே கண்ட அமுதவாரி

மேல்

#35 வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியைக் கண்டனம் மனமே அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம் கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே. **15. அருட் பெரு வெளியின் ஆனந்தம்

மேல்

#36 விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே கண் எலாம் களிக்கக் காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில் எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே. **16.அன்றே உடைய மணவாளனை இன்று விடேன் எனல்

மேல்

#37 கன்று உடைய பசுப் போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காணக் காட்டும் என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா. **17. புழுக்குரம்பை பொன்றாத வாழ் வெய்தும் எனல்

மேல்

#38 பொத்திய மலப் பிணிப் புழுக் குரம்பை-தான் சித்து இயல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால் நித்தியம் ஆகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே. **18. சன்மார்க்க நன்னெறியின் சாவுறா இன்பம்

மேல்

#39 ஓவுறாத் துயர் செயும் உடம்பு-தான் என்றும் சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம் மாவுறாச் சுத்த சன்மார்க்க நல் நெறி மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே. **19. அருட்சோதி உதயம் கிடைத்தது எனல்

மேல்

#40 கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் எனச் சண்டை இட்ட கலக வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே. **20. இறைவனது எளிமையை வியத்தல்

மேல்

#41 அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என் வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே என்-புடை எனைத் தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே. **21. இறைவன் அருட்செயல் அடைவித்த பெருமிதம்

மேல்

#42 கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே. **22. சித்திநிலை சேர்தல் சத்தியம் எனல்

மேல்

#43 உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான் வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம் இத் தருணம் சத்தியமே என்று. **23. எண்ணியாங்கு இயங்குதலின் இறும்பூது

மேல்

#44 என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன் முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய் நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும் பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய். **24. அடுத்தவர்தம் சோர்ந்த முகம் பார்க்கத் துணியேன் எனல்

மேல்

#45 ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம் சோர்ந்த முகம் பார்க்க இனித் துணியேன் நின் அருள் ஆணை நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும் ஓர்ந்து செவி புகத் துணியேன் உன் ஆணை உன் ஆணை. . **25. சுத்த சிவம் ஒன்றே எனல்

மேல்

#46 சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர் என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த் தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே. **26. சித்திகள் சேர்ந்த எனல்

மேல்

#47 அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே. **27. என்னால் ஓர் துரும்பும் அசையா தெனல்

மேல்

#48 என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும் நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என் றன்னால் ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும் பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே. **28. அருட்சோதி தனிஅரசு ஓங்கும் தருணம் இது எனல்

மேல்

#49 இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனிச் சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதித் தனி அரசே ஆங்காங்கும் ஓங்க விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும் பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே. **29. எவ்வுலகும் இன்படையும் தருணமிது எனல்

மேல்

#50 உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம் அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம் மிடைய அற்புதப் பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாடத் தடை-அது அற்ற நல் தருணம் இத் தருணமாத் தழைக்க இத் தனியேற்கே. **30. தலைவர் வரவுணர்ந்து இருங்களிப் பெய்தல்

மேல்

#51 நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனித் தலைவர் ஞான சபாபதியார் வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான் ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே. **31. உலகியல் புன்மைக் கிரங்கல்

மேல்

#52 உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர் கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர் குழக் கறியே பழக் கறியே கூட்டு வர்க்கக் கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே. **32. உடம்பெடுத்த கணக் கறியீர் என வருந்தல்

மேல்

#53 இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவைப் பெரு வயிற்றுப் பிலத்தில் இட அறிவீர் மணக் கறியே பிணக் கறியே வறுப்பே பேர்ப் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே. **33. பரசிவம் அன்புரு எனல்

மேல்

#54 அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே.

@65 அருட்பெருஞ்ஜோதி அகவல்

மேல்

#1 அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ் அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி ஆகம முடி மேல் ஆரண முடி மேல் 5 ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி இக நிலைப் பொருளாய்ப் பர நிலைப் பொருளாய் அகம் அறப் பொருந்திய அருள்_பெரும்_ஜோதி ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய் ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி 10 உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என் 15 அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 20 ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர் 25 அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி திரு நிலைத் தனி வெளி சிவ வெளி எனும் ஓர் அருள் வெளிப் பதி வளர் அருள்_பெரும்_ஜோதி சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும் அத்தகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி 30 சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும் அத்துவிதச் சபை அருள்_பெரும்_ஜோதி தூய கலாந்த சுகம் தரு வெளி எனும் ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் 35 ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும் அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி பெரிய நாதாந்தப் பெரு நிலை வெளி எனும் அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி 40 சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும் அத் தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி சுத்த சித்தாந்த சுகப் பெருவெளி எனும் அத் தனிச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி தகர மெய்ஞ்ஞானத் தனிப் பெருவெளி எனும் 45 அகர நிலைப் பதி அருள்_பெரும்_ஜோதி தத்துவாதீதத் தனிப் பொருள் வெளி எனும் அத் திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி சச்சிதானந்தத் தனிப் பர வெளி எனும் அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி 50 சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி காரண காரியம் காட்டிடு வெளி எனும் ஆரணச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும் 55 ஆகமச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம் ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி 60 சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய் அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள் அச் சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி துரியமும் கடந்த சுக பூரணம் தரும் 65 அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்து அருள் அவ்வகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம் அயர்ப்பு இலாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி 70 சாக்கிராதீதத் தனி வெளியாய் நிறை வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும் அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய் 75 அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம் ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி 80 மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம் அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம் ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி வாரமும் அழியா வரமும் தரும் திரு 85 ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி இழியாப் பெரு நலம் எல்லாம் அளித்து அருள் அழியாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி 90 எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள் புரி ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி 95 அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர் அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச் சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி 100 வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி நாடகத் திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர் ஆடகப் பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர் 105 அற்புதச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு அன்புறத் தரு சபை அருள்_பெரும்_ஜோதி 110 எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி சாதியும் மதமும் சமயமும் காணா 115 ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி 120 பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின் அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து 125 அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி படி அடி வான் முடி பற்றினும் தோற்றா அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி 130 பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும் அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும் அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும் 135 அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல் அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும் அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி 140 எப் பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர் அப் பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து 145 அத் திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும் அத் தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி 150 பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி காட்சியும் காணாக் காட்சியும் அது தரும் ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று 155 அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி 160 எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என 165 அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில் ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி 170 சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும் அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி உபரச வேதியின் உபயமும் பரமும் 175 அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி மந்தணம் இது என மறு இலா மதியால் அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி எம் புயக் கனி என எண்ணுவார் இதய அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி 180 செடி அறுத்தே திட தேகமும் போகமும் அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி பொதுவது சிறப்பது புதியது பழயது என்று 185 அதுஅதுவாய்த் திகழ் அருள்_பெரும்_ஜோதி சேதனப் பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி ஓம் மயத் திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு ஆமயத் தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி 190 எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி எத் தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு அத் தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு 195 அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி பார் உயப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என் ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி 200 எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம் அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள் ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே 205 ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு அத் திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி சாவா நிலை இது தந்தனம் உனக்கே ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி 210 சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல் அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி தேசு உறத் திகழ்தரு திரு_நெறிப் பொருள் இயல் 215 ஆசு அறத் தெரித்த அருள்_பெரும்_ஜோதி காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின் ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி 220 எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள் அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல் ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி எண் தர முடியாது இலங்கிய பற்பல 225 அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர் ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி 230 மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று 235 ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும் அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி மூ வகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி 240 கரும சித்திகளின் கலை பல கோடியும் அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி யோக சித்திகள் வகை உறு பல கோடியும் ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும் 245 ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி முத்தி என்பது நிலை முன் உறு சாதனம் அத் தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி 250 சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் அத் திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம் ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம் 255 அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி இப்படி கண்டனை இனி உறு படி எலாம் அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி 260 படி முடி கடந்தனை பார் இது பார் என அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி சோதியுள் சோதியின் சொருபமே அந்தம் ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி 265 அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என் அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 270 கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே 275 அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி 280 ஆர் இயல் அகம் புறம் அகப்புறம் புறப்புறம் ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம் 285 அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி 290 பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் 295 ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி நவை இலா உளத்தில் நாடிய நாடிய அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி 300 கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி நன்று அறிவு அறியா நாயினேன்-தனையும் அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் 305 ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி 310 ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி தாபத் துயரம் தவிர்த்து உலகு உறும் எலா ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே 315 அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி உருவமும் அருவமும் உபயமும் ஆகிய அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி 320 தெருள் நிலை இது எனத் தெருட்டி என் உளத்து இருந்து அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை 325 அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள் அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி 330 விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே 335 அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய் அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய் அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி 340 காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி காற்றுறு காற்றாய்க் கால் நிலைக் காற்றாய் ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய் 345 அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி அனலுறும் அனலாய் அனல் நிலை அனலாய் அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய் அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி 350 புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய் அனை எனப் பெருகும் அருள்_பெரும்_ஜோதி புவியினுள் புவியாய்ப் புவி நடுப் புவியாய் அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி புவியுறு புவியாய்ப் புவி நிலைப் புவியாய் 355 அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி வளி நிலைச் சத்தியின் வளர் நிலை அளவி அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 360 நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி புவி நிலைச் சுத்தமாம் பொன் பதி அளவி 365 அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 370 மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம் அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் பற்பல வகை கரு நில இயல் 375 அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன் அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 380 மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள் அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணுருச் சத்திகள் மண் கலைச் சத்திகள் 385 அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள் அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மண் கணச் சத்திகள் வகை பலபலவும் அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி 390 மண் நிலைச் சத்தர்கள் வகை பலபலவும் அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு 395 அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும் அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 400 மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன் பல அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும் ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல 405 ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரிடைப் பூ இயல் நிகழுறு திற இயல் ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை ஆருறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 410 நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல் 415 ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல் ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீரிடைச் சத்திகள் நிகழ் வகை பலபல ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி 420 நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல 425 ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும் ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 430 தீயினில் சூட்டு இயல் சேர்தரச் செலவு இயல் ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவாய் ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடைப் பூ எலாம் திகழுறு திறம் எலாம் 435 ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில் ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 440 தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடைப் பெரும் திறல் சித்திகள் பலபல 445 ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி 450 தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன் ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம் 455 ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல் ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி தீ இயல் பலபல செறித்து அதில் பலவும் ஆயுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி 460 காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல் ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடைப் பூ இயல் கருதுறு திற இயல் ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல 465 ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 470 காற்றினில் இடை நடு கடை நடு அகப் புறம் ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடைச் சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல 475 ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடை உயிர் பல கதி பல கலை பல ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி 480 காற்றிடை நால் நிலைக் கருவிகள் அனைத்தையும் ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம் 485 ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காற்றினில் காலம் கருதுறு வகை எலாம் ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 490 காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும் ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல் அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம் 495 அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும் அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடைக் கரு நிலை விரி நிலை அரு நிலை அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி 500 வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள் அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல 505 அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல் அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 510 வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும் அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல் அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை 515 அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அகப் புற நடுக் கடை அணைவால் புறம் முதல் அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி அகப் புற நடு முதல் அணைவால் புறக் கடை அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி 520 கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல் அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி தணி அகம் நடுவொடு தலை அணைந்து அகக் கடை அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அக நடு புறக் கடை அணைந்து அகப்புறம் முதல் 525 அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அக நடு புறத் தலை அணைந்து அகப்புறக் கடை அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி அக நடு அதனால் அகப்புற நடுவை அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 530 அகப்புற நடுவால் அணி புற நடுவை அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி புற நடு அதனால் புறப்புற நடுவை அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி புகல அரும் அகண்ட பூரண நடுவால் 535 அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி புறப்புறக் கடை முதல் புணர்ப்பால் புறப்புறம் அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும் அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 540 அகப்புறக் கடை முதல் அணைவால் அக் கணம் அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அகக் கடை முதல் புணர்ப்பு-அதனால் அகக் கணம் அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் 545 ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும் ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 550 புனல் மேல் புவியும் புவி மேல் புடைப்பும் அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி 555 அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில் அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி கலை வெளி-அதனைக் கலப்பு_அறு சுத்த அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி 560 சுத்த நல் வெளியைத் துரிசு_அறு பர வெளி அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி பர வெளி-அதனைப் பரம்பர வெளியில் அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பரம்பர வெளியைப் பராபர வெளியில் 565 அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பராபர வெளியைப் பகர் பெருவெளியில் அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பெருவெளி அதனைப் பெரும் சுக வெளியில் அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 570 குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில் அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி காலமே முதலிய கருவிகள் கலை வெளி 575 ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள் அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி 580 ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர் ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை 585 ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி 590 தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை 595 ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி நாதமாம் பிரமமும் நாத அண்டங்களை ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி 600 பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும் அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை 605 அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 610 களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் 615 அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி கடலிடைப் பல் வளம் கணித்து அதில் பல் உயிர் அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி மலையிடைப் பல் வளம் வகுத்து அதில் பல் உயிர் அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 620 ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம் அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் 625 ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி கோடியில் அனந்த கோடி பல் கோடி ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய் அத் தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி 630 விளைவு இயல் அனைத்தும் வித்திடை அடங்க அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி வித்தும் பதமும் விளை உபகரிப்பும் அத் திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி வித்திடை முளையும் முளையிடை விளைவும் 635 அத் தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும் அத் திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும் அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 640 முளை-அதின் முளையும் முளையினுள் முளையும் அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும் 645 அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி 650 உறவினில் உறவும் உறவினில் பகையும் அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பகையினில் பகையும் பகையினில் உறவும் அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும் 655 ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி துணையும் நிமித்தமும் துலங்கு-அதின் அதுவும் அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி உரு-அதின் உருவும் உருவினுள் உருவும் அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 660 அருவினுள் அருவும் அரு-அதில் அருவும் அருள் இயல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர் அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும் 665 அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி 670 பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் 675 அன்மை அற்று அமைத்த அருள்_பெரும்_ஜோதி அடியினுள் அடியும் அடியிடை அடியும் அடியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி நடுவினுள் நடுவும் நடு-அதில் நடுவும் அடர்வுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 680 முடியினுள் முடியும் முடியினில் முடியும் அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி அகப்பூ அக உறுப்பு ஆக்க அதற்கு அவை அகத்தே வகுத்த அருள்_பெரும்_ஜோதி புறப்பூ புறத்தில் புனையுரு ஆக்கிட 685 அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி அகப்புறப்பூ அகப்புற உறுப்பு இயற்றிட அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி 690 பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி ஊர்வன பறப்பன உறுவன நடப்பன ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர்த் திரள் பல 695 அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி அறிவு ஒரு வகை முதல் ஐ வகை அறு வகை அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி 700 சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல அத் தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் 705 அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும் அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி 710 பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும் அண்டுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும் அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல் 715 அனைத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும் ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி 720 பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை ஆய்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி முட்டை-வாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை 725 அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும் அலம்பெறக் காத்தருள் அருள்_பெரும்_ஜோதி வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை ஆர்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 730 உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை அடலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை அசைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் 735 அயர்வு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை ஆடுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி முச்சுடர் ஆதியால் எச் சக உயிரையும் அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 740 வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர் ஆன் அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி எண் இயல் சத்தியால் எல்லா உலகினும் 745 அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர் அண்டுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 750 அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை அகப்படக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும் 755 ஆலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி 760 கலை அறிவு அளித்துக் களிப்பினில் உயிர் எலாம் அலைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும் அடைவுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை 765 அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி எத் தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு அத் தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி 770 எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி ஏங்காது உயிர்த் திரள் எங்கெங்கு இருந்தன ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி சொல்லுறும் அசுத்தத் தொல் உயிர்க்கு அவ்வகை 775 அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின் அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின் ஆய்ந்துறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி 780 எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும் அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி பிண்டத் துரிசையும் பேர்_உயிர்த் துரிசையும் 785 அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும் அயிர் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும் அயர்வு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 790 காமப் புடைப்பு உயிர்-கண் தொடரா வகை ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு 795 அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும் அடர்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 800 நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில் ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும் ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில் 805 ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில் ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும் அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி 810 சுத்த மா நிலையில் சூழுறு விரிவை அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி கரைவின் மாமாயைக் கரும் பெரும் திரையால் அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி பேர் உறு நீலப் பெரும் திரை-அதனால் 815 ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி பச்சைத் திரையால் பர வெளி-அதனை அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி செம்மைத் திரையால் சித்து உறு வெளியை அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 820 பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி வெண்மைத் திரையால் மெய்ப் பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி கலப்புத் திரையால் கருது அனுபவங்களை 825 அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் அத் திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 830 திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே அரைசு உறக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி தோற்ற மாமாயைத் தொடர்பு அறுத்து அருளின் ஆற்றலைக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி சுத்த மாமாயைத் தொடர்பு அறுத்து அருளை 835 அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை அடைவுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி 840 சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே 845 அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க்கு இன்பம் அடையுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம் அத்துறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி 850 சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம் அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை அடைப்புறப் படைக்கும் அருள்_பெரும்_ஜோதி காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை 855 ஆக்குறக் காக்கும் அருள்_பெரும்_ஜோதி அடக்கும் தலைவர்கள் அளவு_இலர்-தம்மையும் அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி 860 தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் 865 அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல் அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி 870 செத்தவர் எழுக எனச் செப்பியாங்கு எழுப்பிட அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒன்று அது இரண்டு அது ஒன்றின் இரண்டு அது 875 ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே ஒன்று அல இரண்டு அல ஒன்றின் இரண்டு அல ஒன்றினுள் ஒன்று அல ஒன்று எனும் ஒன்றே ஒன்றினில் ஒன்று உள ஒன்றினில் ஒன்று இல ஒன்றுற ஒன்றிய ஒன்று எனும் ஒன்றே 880 களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே மூவிரு நிலையின் முடி நடு முடி மேல் ஓ அற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி 885 வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே நவ நிலை மிசையே நடுவுறு நடுவே சிவ மயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே ஏகாதச நிலை யாது அதின் நடுவே ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே 890 திரையோதச நிலை சிவ வெளி நடுவே வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில் பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப்பொருளே எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே 895 எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய் அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே தான் ஒரு தானாய்த் தானே தானாய் ஊன் உயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே 900 அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய் உயலுற விளங்கும் ஒரு தனிப் பொருளே அருவினுள் அருவாய் அரு அரு அருவாய் 905 உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே அலகு_இலாச் சித்தாய் அது நிலை அதுவாய் உலகு எலாம் விளங்கும் ஒரு தனிப் பொருளே பொருளினுள் பொருளாய்ப் பொருள்-அது பொருளாய் ஒருமையின் விளங்கும் ஒரு தனிப் பொருளே 910 ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு கோடியும் விளங்கக் குலவும் மெய்ப்பொருளே கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும் ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும் 915 பிறிவு அற விளக்கும் பெரும் தனிப் பொருளே வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க உற்று அருளாடல் செய் ஒரு தனிப் பொருளே 920 பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே 925 பரம் சுக பரமே பரம் சிவ_பரமே பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே தரம் கொள் பொன் பரமே தனிப் பெரும் பரமே வரம் பராபரமே வணம் பராபரமே பரம் பராபரமே பதம் பராபரமே 930 சத்திய பதமே சத்துவ பதமே நித்திய பதமே நிற்குண பதமே தத்துவ பதமே தற்பத பதமே சித்துறு பதமே சிற்சுக பதமே தம்பரம் பதமே தனிச் சுகம் பதமே 935 அம்பரம் பதமே அருள் பரம் பதமே தந்திர பதமே சந்திர பதமே மந்திர பதமே மந்தண பதமே நவம் தரு பதமே நடம் தரு பதமே சிவம் தரு பதமே சிவசிவ பதமே 940 பிரம மெய்க் கதியே பிரம மெய்ப் பதியே பிரம நிற்குணமே பிரம சிற்குணமே பிரமமே பிரமப் பெரு நிலை மிசை உறும் பரமமே பரம பதம் தரும் சிவமே அவனோடு அவளாய் அதுவாய் அலவாய் 945 நவமா நிலை மிசை நண்ணிய சிவமே எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும் செம்பொருள் ஆகிய சிவமே சிவமே ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு திரு நிலை மேவிய சிவமே சிவமே 950 மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு தெய்வப் பதியாம் சிவமே சிவமே புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டிச் சிரம் உற நாட்டிய சிவமே சிவமே கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச் 955 செல்வமும் அளித்த சிவமே சிவமே அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய் தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம் சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே 960 எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே ஆரே என்னினும் இரங்குகின்றார்க்குச் சீரே அளிக்கும் சிதம்பர சிவமே பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள் 965 செம் நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே கொல்லா நெறியே குரு அருள் நெறி எனப் பல் கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிர் எலாம் விடுக எனச் செப்பிய சிவமே 970 பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல உயிர்த் திரள் ஒன்று என உரைத்த மெய்ச் சிவமே உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தினாம் 975 உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச் சிவமே அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்க என்று அருளிய சிவமே 980 அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம் இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே அருள் பெறில் துரும்பு ஓர் ஐந்தொழில் புரியும் தெருள் இது எனவே செப்பிய சிவமே அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் 985 மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம் மருள் சுகம் பிற என வகுத்த மெய்ச் சிவமே அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே 990 அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய் பொருள் தனிச் சித்து எனப் புகன்ற மெய்ச் சிவமே அருள் அறியார் தமை அறியார் எம்மையும் பொருள் அறியார் எனப் புகன்ற மெய்ச் சிவமே அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை 995 பொருள் நிலை காண்க எனப் புகன்ற மெய்ச் சிவமே அருள் வடிவு-அதுவே அழியாத் தனி வடிவு அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே அருளே நம் இயல் அருளே நம் உரு அருளே நம் வடிவாம் என்ற சிவமே 1000 அருளே நம் அடி அருளே நம் முடி அருளே நம் நடுவாம் என்ற சிவமே அருளே நம் அறிவு அருளே நம் மனம் அருளே நம் குணமாம் என்ற சிவமே அருளே நம் பதி அருளே நம் பதம் 1005 அருளே நம் இடமாம் என்ற சிவமே அருளே நம் துணை அருளே நம் தொழில் அருளே நம் விருப்பாம் என்ற சிவமே அருளே நம் பொருள் அருளே நம் ஒளி அருளே நாம் அறிவாய் என்ற சிவமே 1010 அருளே நம் குலம் அருளே நம் இனம் அருளே நாம் அறிவாய் என்ற சிவமே அருளே நம் சுகம் அருளே நம் பெயர் அருளே நாம் அறிவாய் என்ற சிவமே அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை 1015 அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை அருள் அரசு இயற்றுக என்று அருளிய சிவமே உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே 1020 நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனைத் தகவொடு காக்கும் தனிச் சிவ பதியே சுத்த சன்மார்க்கச் சுக நிலை-தனில் எனைச் சத்தியன் ஆக்கிய தனிச் சிவ பதியே ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என் 1025 கைவரப் புரிந்த கதி சிவ பதியே துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே சித்தமும் வாக்கும் செல்லாப் பெரு நிலை ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே 1030 கையறவு அனைத்தும் கடிந்து எனைத் தேற்றி வையம் மேல் வைத்த மா சிவ பதியே இன்புறச் சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை 1035 மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே பரமுடன் அபரம் பகர் நிலை இவை எனத் திறமுற அருளிய திரு_அருள் குருவே 1040 மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின் திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும் குணமுறத் தெரித்து உள் குலவு சற்குருவே பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம் 1045 மதியுறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே பிரம ரகசியம் பேசி என் உளத்தே தரமுற விளங்கும் சாந்த சற்குருவே பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே 1050 சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே நவ நிலை காட்டிய ஞான சற்குருவே சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும் அத்தகை தெரித்த அருள் சிவ குருவே அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே 1055 பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே 1060 செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து 1065 ஏகாக் கரப் பொருள் ஈந்த சற்குருவே சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும் மெய்த் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம் வல்லான் என எனை வைத்த சற்குருவே 1070 சீர் உற அருளாம் தேசு உற அழியாப் பேர் உற என்னைப் பெற்ற நல் தாயே பொருந்திய அருள் பெரும் போகமே உறுக எனப் பெரும் தயவால் எனைப் பெற்ற நல் தாயே ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான் 1075 ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால் வசித்து அமுது அருள் புரி வாய்மை நல் தாயே தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே 1080 அருள் அமுதே முதல் ஐ வகை அமுதமும் தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும் உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே நண்புறும் எண் வகை நவ வகை அமுதமும் 1085 பண்புற எனக்கு அருள் பண்பு உடைத் தாயே மற்று உள அமுத வகை எலாம் எனக்கே உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடைத் தாயே 1090 துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடைத் தாயே சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே சத்தியை அளித்த தயவு உடைத் தாயே சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல் 1095 வைத்து அமுது அளித்த மரபு உடைத் தாயே சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய் சித்தியை அளித்த தெய்வ நல் தாயே தன் நிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே 1100 வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடைத் தாயே எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும் கண் எனக் காக்கும் கருணை நல் தாயே இன் அருள் அமுது அளித்து இறவாத் திறல் புரிந்து 1105 என்னை வளர்த்திடும் இன்பு உடைத் தாயே என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம் தன்ன என்று ஆக்கிய தயவு உடைத் தாயே தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத் தரியாது அணைத்த தயவு உடைத் தாயே 1110 சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும் கனவினும் பிரியாக் கருணை நல் தாயே தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும் ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப 1115 இன்பு எலாம் அளித்த என் தனித் தந்தையே எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த எல்லாம்_வல்ல சித்து என் தனித் தந்தையே நாயில் கடையேன் நலம் பெறக் காட்டிய தாயில் பெரிதும் தயவு உடைத் தந்தையே 1120 அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த தன் நிகர் இல்லாத் தனிப் பெரும் தந்தையே அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருள் ஜோதி 1125 சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே இணை_இலாக் களிப்புற்று இருந்திட எனக்கே துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில் சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே 1130 எட்டிரண்டு அறிவித்து எனைத் தனி ஏற்றிப் பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதிச் செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் 1135 என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில் என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே 1140 தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும் 1145 என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே 1150 சதுரப் பேர்_அருள் தனிப் பெரும் தலைவன் என்று எதிர் அற்று ஓங்கிய என் உடைத் தந்தையே மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே இன வாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெரு நிலை 1155 அணைந்திட எனக்கே அருளிய தந்தையே துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும் பெரிய வாழ்வு அளித்த பெரும் தனித் தந்தையே ஈறு_இலாப் பதங்கள் யாவையும் கடந்த பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே 1160 எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம் அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய தனிப் பெரும் தலைமைத் தந்தையே தந்தையே பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனைச் 1165 சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே தளர்ந்த அத் தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள் கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த் துணையே துறை இது வழி இது துணிவு இது நீ செயும் முறை இது எனவே மொழிந்த மெய்த் துணையே 1170 எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை கங்குலும் பகலும் மெய்க் காவல் செய் துணையே வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர்த் துணையே இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது 1175 அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த் துணையே அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என் உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே 1180 நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 1185 குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே குணம் குறி முதலிய குறித்திடாது எனையே அணங்கு அறக் கலந்த அன்பு உடை நட்பே பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல் கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நல் நட்பே 1190 சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நல் நட்பே களைப்பு அறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே தன்னைத் தழுவுறு தரம் சிறிது அறியா 1195 என்னைத் தழுவிய என் உயிர் உறவே மனக் குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும் எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது என் உறவு ஆகிய என் உயிர் உறவே 1200 என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய் என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்தே அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும் இனைத்து என அறியா என் தனிச் சத்தே பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும் 1205 இது எனற்கு அரிதாம் என் தனிச் சத்தே ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும் ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே 1210 துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான் என்றிட நிறைந்த என் தனிச் சத்தே என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய் 1215 என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே 1220 படி நிலை பலவாய்ப் பத நிலை பலவாய் இடிவு அற விளங்கிடும் என் தனிச் சித்தே மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய் 1225 இயலுற விளக்கிடும் என் தனிச் சித்தே அறிவவை பலவாய் அறிவன பலவாய் எறிவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே நினைவவை பலவாய் நினைவன பலவாய் இனைவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே 1230 காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே செய் வினை பலவாய்ச் செய்வன பலவாய் எய்வு அற விளக்கிடும் என் தனிச் சித்தே அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் 1235 எண்தர விளக்கும் என் தனிச் சித்தே எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய் என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே 1240 இது அது என்னா இயல் உடை அதுவாய் எதிர் அற நிறைந்த என் தனி இன்பே ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து மேல் ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே அறிவுக்கு அறிவினில் அது அதுஅதுவாய் 1245 எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை இடையிடை ஓங்கிய என் தனி இன்பே இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும் எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே 1250 முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும் எல்லா இன்புமாம் என் தனி இன்பே கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின் 1255 விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும் குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி மணம்கொளப் பதம் செய் வகையுற இயற்றிய உணவு எனப் பல கால் உரைக்கினும் நிகரா வணம் உறும் இன்ப மயமே அதுவாய்க் 1260 கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய் நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும் உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன் எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து 1265 எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகிச் சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும் மா காதலும் சிவ வல்லப சத்தியும் செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும் மயக்கு அறத் தரும் திறல் வண்மையது ஆகிப் 1270 பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி ஆரண முடியுடன் ஆகம முடியும் கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே சத்திய அமுதே தனித் திரு_அமுதே 1275 நித்திய அமுதே நிறை சிவ அமுதே சச்சிதானந்தத் தனி முதல் அமுதே மெய்ச் சிதாகாச விளைவு அருள் அமுதே ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே தான் அந்தம் இல்லாத் தத்துவ அமுதே 1280 நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே கைபடாப் பெரும் சீர்க் கடவுள் வான் அமுதே அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் 1285 உகந்த நான் கிடத்தும் ஓங்கிய அமுதே பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே தனி முதல் ஆய சிதம்பர அமுதே உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே அலகு_இலாப் பெரும் திறல் அற்புத அமுதே 1290 அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்று உள பண்டமும் காட்டிய பரம்பர மணியே பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள பண்டமும் காட்டிய பராபர மணியே நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற 1295 அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும் கண்பெற நடத்தும் ககன மா மணியே பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும் சார்புற நடத்தும் சர ஒளி மணியே 1300 அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும் விராவி உள் விளங்கும் வித்தக மணியே மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் 1305 தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே தாழ்வு எலாம் தவிர்த்துச் சகம் மிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே 1310 வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து நான் பெற அளித்த நாத மந்திரமே கற்பம் பலபல கழியினும் அழியாப் பொற்பு உற அளித்த புனித மந்திரமே அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் 1315 வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே 1320 உடல் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருள் சிவ மருந்தே சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம் தித்திக்கும் ஞானத் திரு_அருள் மருந்தே இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் 1325 சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே மரணப் பெரும் பிணி வாரா வகை மிகு கரணப் பெரும் திறல் காட்டிய மருந்தே நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும் உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே 1330 என்றே என்னினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே மலப் பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர் நலத் தகை அது என நாட்டிய மருந்தே சிற்சபை நடுவே திரு_நடம் புரியும் 1335 அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே இடையுறப்படாத இயற்கை விளக்கமாய்த் தடை ஒன்றும் இல்லாத் தகவு உடையதுவாய் மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய் ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய்க் 1340 காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய் ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய் கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச் செய் தவப் பயனாம் திரு_அருள் வலத்தால் உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே 1345 வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே புடம் படாத் தரமும் விடம் படாத் திறமும் வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய் இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே 1350 எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடைப் பொன்னே தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் எனக் கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை 1355 அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப் போகேம் என எனைப் பொருந்திய பொன்னே எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப் பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே 1360 விண் இயல் தலைவரும் வியந்திட எனக்குப் புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே நால் வகை நெறியினும் நாட்டுக எனவே பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே எழு வகை நெறியினும் இயற்றுக எனவே 1365 முழு வகை காட்டி முயங்கிய பொன்னே எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனைப் புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே 1370 இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல் திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை 1375 அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே கற்பனை கடந்த கருணை மா நிதியே நல் குண நிதியே சற்குண_நிதியே நிர்க்குண நிதியே சிற்குண நிதியே 1380 பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே மதி உற விளங்கும் மரகத மலையே வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே 1385 துரிய மேல் வெளியில் சோதி மா மலையே புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர் அற்புதக் கடலே அமுதத் தண் கடலே இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே 1390 பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம் நன்று உற விளங்கிய நந்தனக் காவே சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர் 1395 ஊற்று நீர் நிரம்ப உடைய பூந் தடமே கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே களைப்பு அறக் கிடைத்த கருணை நல் நீரே இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே 1400 தென்னை-வாய்க் கிடைத்த செவ்விளநீரே தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே வேர் விளை பலவின் மென் சுவைச் சுளையே கட்டு மாம்பழமே கதலி வான் பழமே 1405 இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே புனித வான் தருவில் புதுமையாம் பலமே கனி எலாம் கூட்டிக் கலந்த தீம் சுவையே இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே பதம் தரு வெல்லப் பாகினின் சுவையே 1410 சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே நவை இலாது எனக்கு நண்ணிய நறவே 1415 சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே பதம் பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே 1420 இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும் உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே யாழ் உறும் இசையே இனிய இன் இசையே ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே 1425 அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே நாத நல் வரைப்பின் நண்ணிய பாட்டே வேத கீதத்தில் விளை திரு_பாட்டே நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே 1430 நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே எம் பலம் ஆகிய அம்பலப் பாட்டே என் மன_கண்ணே என் அருள்_கண்ணே என் இரு கண்ணே என் கணுள் மணியே என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே 1435 என் பெரும் திறலே என் பெரும் செயலே என் பெரும் தவமே என் தவப் பலனே என் பெரும் சுகமே என் பெரும் பேறே என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே 1440 என் பெரு நலமே என் பெரும் குலமே என் பெரு வலமே என் பெரும் புலமே என் பெரு வரமே என் பெரும் தரமே என் பெரு நெறியே என் பெரு நிலையே என் பெரும் குணமே என் பெரும் கருத்தே 1445 என் பெரும் தயவே என் பெரும் கதியே என் பெரும் பதியே என் உயிர் இயலே என் பெரு நிறைவே என் தனி அறிவே தோல் எலாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும் மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட 1450 என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட மென்பு உடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம் உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம் 1455 உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத் தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட 1460 வாய் துடித்து அலறிட வளர் செவித் துளைகளில் கூ இசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக் கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட 1465 இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச் சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப் பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிடத் 1470 தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட 1475 என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே என் உளத்து எழுந்த என் உடை அன்பே தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே 1480 என் உளே அரும்பி என் உளே மலர்ந்து என் உளே விரிந்த என் உடை அன்பே என் உளே விளங்கி என் உளே பழுத்து என் உளே கனிந்த என் உடை அன்பே தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே 1485 என் உளே நிறைந்த என் தனி அன்பே துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய் என் உளம் கலந்த என் தனி அன்பே 1490 தன் வசம் ஆகித் ததும்பி மேல் பொங்கி என் வசம் கடந்த என் உடை அன்பே தன் உளே பொங்கிய தண் அமுது உணவே என் உளே பொங்கிய என் தனி அன்பே அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர் 1495 இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே துன்புறு தத்துவத் துரிசு எலாம் நீக்கி நல் இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும் இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே 1500 இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே தேற்றிய வேதத் திரு_முடி விளங்கிட 1505 ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே 1510 தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே புண்ணியம் பலித்த பூரண மதியே உய் தர அமுதம் உதவி என் உளத்தே செய் தவம் பலித்த திரு வளர் மதியே பதி எலாம் தழைக்கப் பரம் பெறும் அமுத 1515 நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே பால் எனத் தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும் மேல் வெளி விளங்க விளங்கிய மதியே உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட வயங்கிய கருணை_மழை பொழி மழையே 1520 என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப மன்னிய கருணை_மழை பொழி மழையே உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி வளம் கொளக் கருணை_மழை பொழி மழையே நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே 1525 மலர்ந்திடக் கருணை_மழை பொழி மழையே தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல் வாய்மையால் கருணை_மழை பொழி மழையே வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில் செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே 1530 திரை எலாம் தவிர்த்துச் செவ்வி உற்று ஆங்கே வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே அலகு_இலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே 1535 என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய்ச் சுடரே உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே 1540 நலம் கொளப் புரிந்திடு ஞான யாகத்திடை வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க் கனலே வேதமும் ஆகம விரிவும் பரம்பர நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள் 1545 நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலே வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே 1550 வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி பரம சித்தாந்தப் பதி பரம் சுடரே சமரச சத்தியச் சபையில் நடம் புரி சமரச சத்தியத் தற்சுயம் சுடரே சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே 1555 அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர் ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி 1560 என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கிச் சிறுநெறி செல்லாத் திறன் அளித்து அழியாது 1565 உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்திச் சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும் அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால் இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் 1570 ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம் சீர் உறச் செய்து உயிர்த் திறம் பெற அழியா அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர் 1575 அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி உலகு உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி 1580 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே 1585 சத்திய நிலை-தனைத் தயவினில் தந்தனை போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க 1590 சுத்த சன்மார்க்கச் சுக நிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர் ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி 1595 அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி தனிப் பெரும் கருணை தனிப் பெரும் கருணை அருள்_பெரும்_ஜோதி

@66. இறை இன்பக் குழைவு

மேல்

#1 கருணை ததும்பிப் பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத வருண முதலா அவை கடந்த வரைப்பாய் விளங்கும் மணி மன்றில் வயங்கு சுடரே எல்லாம் செய் வல்ல குருவே என் உளத்தே தருண நடம் செய் அரசே என் தாயே என்னைத் தந்தாயே தனித்த தலைமைப் பதியே இத் தருணம் வாய்த்த தருணம் அதே.

மேல்

#2 கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணைத் தேவே உலகத் திரள் எல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.

மேல்

#3 தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுது அளித்த தாயே எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே ஊனே விளங்க ஊனம் இலா ஒளி பெற்று எல்லா உலகமும் என் உடைமையாக் கொண்டு அருள் நிலை மேல் உற்றேன் உன்றன் அருளாலே வானே மதிக்கச் சாகாத வரனாய் எல்லாம்_வல்ல சித்தே வயங்க உனை உள் கலந்துகொண்டேன் வகுக்குந் தொழிலே முதல் ஐந்தும் நானே புரிகின்றேன் புரிதல் நானோ நீயோ நான் அறியேன் நான் நீ என்னும் பேதம் இலா நடம் செய் கருணை_நாயகனே.

மேல்

#4 கலை சார் முடிபு கடந்து உணர்வு கடந்து நிறைவாய்க் கரிசு இலதாய்க் கருணை மயமாய் விளங்கு சிதாகாய நடுவில் இயற்கை உண்மைத் தலை சார் வடிவில் இன்ப நடம் புரியும் பெருமைத் தனி முதலே சாகா_கல்வி பயிற்றி என் உள் சார்ந்து விளங்கும் சற்குருவே புலை சார் மனத்துச் சிறியேன்-தன் குற்றம் அனைத்தும் பொறுத்து அருளிப் பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தந்து அருள் சோதி நிலை சார் இறைமை அளித்தனை நான் பொதுவில் ஞான நீதி எனும் நிருத்தம் புரிகின்றேன் புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

மேல்

#5 கருத்தில் கருதிக்கொண்ட எலாம் கணத்தில் புரிய எனக்கே மெய்க் காட்சி ஞான_கண் கொடுத்த கண்ணே விடயக் கானகத்தே எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழ நிலை மேல் ஏற்றி நீயும் நானும் ஒன்றாய் இருக்கப் புரிந்தாய் எந்தாயே இருத்திக் கருத்தில் உன் தயவை எண்ணும்-தோறும் அந்தோ என் இதயம் உருகித் தளதள என்று இளகிஇளகித் தண்ணீராய் அருத்திப் பெரு நீர் ஆற்றொடு சேர்ந்து அன்புப் பெருக்கில் கலந்தது நான் அது என்று ஒன்றும் தோற்றாதே அச்சோ அச்சோ அச்சோவே.

மேல்

#6 ஏதும் தெரியாது அகங்கரித்து இங்கு இருந்த சிறியேன்-தனை வலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம்_வல்ல சித்து எனவே ஓதும் பொருளைக் கொடுத்து என்றும் உலவா இன்பப் பெரு நிலையில் ஓங்கி உற வைத்தனையே என்னுடைய ஒருமைப் பெருமானே ஈது உன் கருணைக்கு இயல்போ நீ என்-பால் வைத்த பெரும் கருணை இ நாள் புதிதே அ நாளில் இலையே இதனை எண்ணிய நான் தாதும் உணர்வும் உயிரும் உள்ளத் தடமும் பிறவாம் தத்துவமும் தாமே குழைந்து தழைந்து அமுத சார மயம் ஆகின்றேனே.

மேல்

#7 ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்துக் கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே சாவா_வரமும் சித்தி எலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க சங்க மதிப்பும் பெற்றேன் என் சதுர்-தான் பெரிது என் சரித்திரத்தை ஆஆ நினைக்கில் அதிசயம் என் அப்பா அரசே அமுதே என் ஆவிக்கு இனிய துணையே என் அன்பே அறிவே அருள் சோதித் தேவா இது நின் செயலே இச் செயலை நினைக்கும்-தொறும் எனது சிந்தை கனிந்துகனிந்து உருகித் தெள் ஆர்_அமுதம் ஆனதுவே.

மேல்

#8 இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் பரவும் அமுத உணவு ஆயிற்று அந்தோ பலர்-பால் பகல் இரவும் படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் விரவிக் களித்து நாத் தடிக்க விளம்பி விரித்த பாட்டு எல்லாம் வேதாகமத்தின் முடி மீது விளங்கும் திரு_பாட்டு ஆயினவே கரவு ஒன்று அறியாப் பெரும் கருணைக் கடவுள் இது நின் தயவு இதனைக் கருதும்-தொறும் என் கருத்து அலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே.

மேல்

#9 ஊற்றை உடம்பில் இருட்டு அறை-வாய் உறங்கி விழித்துக் கதை பேசி உண்டு இங்கு உடுத்துக் கருத்து இழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றைப் பகல் அந்தோ நெடும் காலமும் மெய்த் தவ யோக ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியாத் திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதிப் பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான் நின் பெருமை இதுவேல் இதன் இயலை யாரே துணிந்து பேசுவரே.

மேல்

#10 புரை சேர் வினையும் கொடும் மாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு புகலும் பிறவாம் தடைகள் எலாம் போக்கி ஞானப் பொருள் விளங்கும் வரை சேர்த்து அருளிச் சித்தி எலாம் வழங்கிச் சாகா_வரம் கொடுத்து வலிந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் பரை சேர் வெளியில் பதியாய் அப்பால் மேல் வெளியில் விளங்கு சித்த பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த அரைசே அமுதம் எனக்கு அளித்த அம்மே உண்மை அறிவு அளித்த அப்பா பெரிய அருள் சோதி அப்பா வாழி நின் அருளே.

@67. அருட் பெருஞ் சோதி அட்டகம்

மேல்

#1 அருள் பெருவெளியில் அருள் பெரு உலகத்து அருள் பெரும் தலத்து மேல் நிலையில் அருள் பெரும் பீடத்து அருள் பெரு வடிவில் அருள் பெரும் திருவிலே அமர்ந்த அருள் பெரும் பதியே அருள் பெரு நிதியே அருள் பெரும் சித்தி என் அமுதே அருள் பெரும் களிப்பே அருள் பெரும் சுகமே அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#2 குலவு பேர் அண்டப் பகுதி ஓர் அனந்த கோடி கோடிகளும் ஆங்காங்கே நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் நிகழ்ந்த பற்பல பொருள் திரளும் விலகுறாது அகத்தும் புறத்தும் மேல் இடத்தும் மெய் அறிவானந்தம் விளங்க அலகுறாது ஒழியாது அதுஅதில் விளங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#3 கண் முதல் பொறியால் மனம் முதல் கரணக் கருவினால் பகுதியின் கருவால் எண் முதல் புருட தரத்தினால் பரத்தால் இசைக்கும் ஓர் பரம்பர உணர்வால் விண் முதல் பரையால் பராபர அறிவால் விளங்குவது அரிது என உணர்ந்தோர் அண் முதல் தடித்துப் படித்திட ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#4 நசைத்த மேல் நிலை ஈது என உணர்ந்து ஆங்கே நண்ணியும் கண்ணுறாது அந்தோ திசைத்த மா மறைகள் உயங்கின மயங்கித் திரும்பின எனில் அதன் இயலை இசைத்தல் எங்ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடுவேம் என நாவை அசைத்திடற்கு அரிது என்று உணர்ந்துளோர் வழுத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#5 சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ புத்தமுது அனைய சமரசத்ததுவோ பொருள் இயல் அறிந்திலம் எனவே அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத்து ஏத்தும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#6 ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ தேகமோ பொதுவோ சிறப்பு-அதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆண்-அதோ அதுவோ யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் ஆகமோடு உரைத்து வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#7 தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவாதீத மேல் நிலையில் சித்து இயல் முழுதும் தெரிந்தனம் அவை மேல் சிவ நிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்த அ நிலை-கண் யாமும் எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்துபோயினம் என்று அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி என் அரசே.

மேல்

#8 எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இது அது என உரைப்ப அரிதாய்த் தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவத்தைத் தந்து எனைத் தன்மயம் ஆக்கிப் பொங்கும் ஆனந்த போக போக்கியனாய்ப் புத்தமுது அருத்தி என் உளத்தே அங்கையில் கனி போன்று அமர்ந்து அருள் புரிந்த அருள்_பெரும்_சோதி என் அரசே.

@68. பெறாப் பேறு.

மேல்

#1 ஆ வா என்று எனை ஆட்கொண்டு அருளிய தெள் அமுதே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே சாவாத வரம் எனக்குத் தந்த பெருந்தகையே தயாநிதியே சிற்சபையில் தனித்த பெரும் பதியே ஓவாது என் உள்ளகத்தே ஊற்று எழும் பேர்_அன்பே உள்ளபடி என் அறிவில் உள்ள பெரும் சுகமே நீவா என் மொழிகள் எலாம் நிலைத்த பயன் பெறவே நித்திரை தீர்ந்தேன் இரவு நீங்கி விடிந்ததுவே.

மேல்

#2 ஆராலும் அறிந்துகொளற்கு அரிய பெரும் பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே காராலும் கனலாலும் காற்றாலும் ககனக் கலையாலும் கதிராலும் கடலாலும் கடல் சூழ் பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்படுதல் இலாத் தனி வடிவம் எனக்கு அளித்த பதியே சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான சித்திபுரத்து அமுதே என் நித்திரை தீர்ந்ததுவே.

மேல்

#3 ஆதி அந்தம் தோற்றாத அரும் பெரும் சோதியனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே ஓதி எந்த வகையாலும் உணர்ந்துகொளற்கு அரிதாய் உள்ளபடி இயற்கையிலே உள்ள ஒரு பொருளே ஊதியம் தந்து எனை ஆட்கொண்டு உள்ளிடத்தும் புறத்தும் ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச் சாதி இந்த மதம் எனும் வாய்ச் சழக்கை எலாம் தவிர்த்த சத்தியனே உண்கின்றேன் சத்தியத் தெள் அமுதே.

மேல்

#4 அச்சம் எலாம் தவிர்த்து அருளி இச்சை எலாம் அளித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே துச்ச உலகு ஆசாரத் துடுக்கு அனைத்தும் தவிர்த்தே சுத்த நெறி வழங்குவித்த சித்த சிகாமணியே உச்ச நிலை நடு விளங்கும் ஒரு தலைமைப் பதியே உலகம் எலாம் எடுத்திடினும் உலவாத நிதியே இச் சமயம் எழுந்து அருளி இறவாத வரமும் எல்லாம் செய் வல்ல சித்தின் இயற்கையும் தந்தனையே.

மேல்

#5 அன்பு உடைய என் அறிவே அருள் உடைய பொருளே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே துன்பு உடைய உலகர் எலாம் சுகம்_உடையார் ஆகத் துன்மார்க்கம் தவிர்த்து அருளிச் சன்மார்க்கம் வழங்க இன்பு உடைய பேர்_அருள் இங்கு எனைப் பொருள்செய்து அளித்த என் அமுதே என் உறவே எனக்கு இனிய துணையே என் புடை நீ இருக்கின்றாய் உன் புடை நான் மகிழ்ந்தே இருக்கின்றேன் இ ஒருமை யார் பெறுவார் ஈண்டே.

மேல்

#6 அடுக்கிய பேர் அண்டம் எலாம் அணுக்கள் என விரித்த அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே நடுக்கிய என் அச்சம் எலாம் தவிர்த்து அருளி அழியா ஞான அமுது அளித்து உலகில் நாட்டிய பேர்_அறிவே இடுக்கிய கைப்பிள்ளை என இருந்த சிறியேனுக்கு எல்லாம் செய் வல்ல சித்தி ஈந்த பெருந்தகையே முடுக்கிய அஞ்ஞானாந்தகாரம் எலாம் தவிர்த்து முத்தர் உளத்தே முளைத்த சுத்த பரம் சுடரே.

மேல்

#7 ஆங்காரம் தவிர்ந்தவர் உள் ஓங்கா நின்றவனே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே ஓங்கார நிலை காட்டி அதன் மேல் உற்று ஒளிரும் ஒரு நிலையும் காட்டி அப்பால் உயர்ந்த தனி நிலையில் பாங்காக ஏற்றி எந்தப் பதத் தலைவராலும் படைக்கவொணாச் சித்தியை நான் படைக்கவைத்த பதியே தூங்காது பெரும் சுகமே சுகித்திட இ உலகைச் சுத்த சன்மார்க்கம்-தனிலே வைத்து அருள்க விரைந்தே.

மேல்

#8 ஆடக_பொன்_சபை நடுவே நாடகம் செய்து அருளும் அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே ஏடகத்தே எழுதாத மறைகள் எலாம் களித்தே என் உளத்தே எழுதுவித்த என் உரிமைப் பதியே பாடகக் கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன் பெற நல் அருள் அளித்த பரம்பரனே மாயைக் காடகத்தை வளம் செறிந்த நாடகமாப் புரிந்த கருணையனே சிற்சபையில் கனிந்த நறும் கனியே.

மேல்

#9 அடி யாது என்று அறிந்துகொளற்கு அரும் பெரிய நிலையே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே முடியாது என்று அறிந்திடற்கு முடியாது என்று உணர்ந்தோர் மொழிந்திடவே முடியாது முடிந்த தனி முடிபே கடியாத பெரும் கருணைக் கருத்தே என் கருத்தில் கனிந்துகனிந்து இனிக்கின்ற கனியே என் களிப்பே மடியாத வடிவு எனக்கு வழங்கிய நல் வரமே மணி மன்றில் நடம் புரியும் வாழ்க்கை இயல் பொருளே.

மேல்

#10 அனந்தம் மறை ஆகமங்கள் அளப்ப அரிய சிவமே அம்மே என் அப்பா என் ஐயா என் அரசே மனம் தரு வாதனை தவிர்த்து ஓர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற குருவே என் வாட்டம் எலாம் தவிர்த்தே இனம் தழுவி என் உளத்தே இருந்து உயிரில் கலந்து என் எண்ணம் எலாம் களித்து அளித்த என் உரிமைப் பதியே சினம் தவிர்ந்து எவ்வுலகமும் ஓர் சன்மார்க்கம் அடைந்தே சிறப்புறவைத்து அருள்கின்ற சித்த சிகாமணியே.

@69. சிவானந்தத் தழுந்தல்

மேல்

#1 காரண காரியக் கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்துகொண்டு என்னை நாரணர் நான்முகர் போற்ற மேல் ஏற்றி நாதாந்த_நாட்டுக்கு ஓர் நாயகன் ஆக்கிப் பூரணமாம் இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமுதாம் அருள் போனகம் தந்தே ஆரண வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#2 தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே போகம் எல்லாம் என்றன் போகம்-அது ஆக்கிப் போதாந்த_நாட்டைப் புரக்க மேல் ஏற்றி ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பு அளித்து என்னை ஆகம வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#3 தான் அந்தம் இல்லாத தன்மையைக் காட்டும் சாகாத கல்வியைத் தந்து எனக்கு உள்ளே தேன் நந்தத் தெள் அமுது ஊற்றிப் பெருக்கித் தித்தித்துச் சித்தம் சிவமயம் ஆக்கி வான் அந்தம் ஆதியும் கண்டுகொண்டு அழியா வாழ்க்கையில் இன்புற்றுச் சுத்த வேதாந்த ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#4 சிற்சபை இன்பத் திரு_நடம் காட்டித் தெள் அமுது ஊட்டி என் சிந்தையைத் தேற்றிப் பொன்_சபை-தன்னில் பொருத்தி எல்லாம் செய் பூரண சித்தி மெய்ப் போகமும் தந்தே தற்பரமாம் ஓர் சதானந்த_நாட்டில் சத்தியன் ஆக்கி ஓர் சுத்த சித்தாந்த அற்புத வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#5 தத்துவம் எல்லாம் என்றன் வசம் ஆக்கிச் சாகா_வரத்தையும் தந்து எனைத் தேற்றி ஒத்து வந்து உள்ளே கலந்துகொண்டு எல்லா உலகமும் போற்ற உயர் நிலை ஏற்றிச் சித்தி எலாம் செயச்செய்வித்துச் சத்தும் சித்தும் வெளிப்படச் சுத்த நாதாந்த அத் திரு_வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#6 இத்தனை என்று நின்று எண்ணிடல் ஒண்ணா என் பிழை யாவையும் அன்பினில் கொண்டே சத்தியமாம் சிவ சித்தியை என்-பால் தந்து எனை யாவரும் வந்தனை செயவே நித்தியன் ஆக்கி மெய்ச் சுத்த சன்மார்க்க நீதியை ஓதி ஓர் சுத்த போதாந்த அத் தனி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#7 மருந்து இது மணி இது மந்திரம் இது செய் வகை இது துறை இது வழி இது எனவே இருந்து எனுள் அறிவித்துத் தெள் அமுது அளித்தே என்னையும் தன்னையும் ஏகம்-அது ஆக்கிப் பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்திப் புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#8 பதி சாரவைத்து முன் பசு நிலை காட்டிப் பாச விமோசனப் பக்குவன் ஆக்கி நிதி சார நான் இந்த நீள் உலகத்தே நினைத்தனநினைத்தன நேருறப் புரிந்து திதி சேர மன் உயிர்க்கு இன்பம் செய்கின்ற சித்தி எலாம் தந்து சுத்த கலாந்த அதிகார வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#9 இருளான மலம் அறுத்து இக_பரம் கண்டே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம் வழி துறை தெரியாமல் மண்மூடிப் போகத் தெருளான சுத்த சன்மார்க்கம்-அது ஒன்றே சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் அருளான வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

மேல்

#10 இருள் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை இரு வாய்ப்புப் புன்செயில் எரு ஆக்கிப் போட்டு மருள் சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கு எலாம் குழிக் கொட்டி மண்மூடிப் போட்டுத் தெருள் சாரும் சுத்த சன்மார்க்க நல் நீதி சிறந்து விளங்க ஓர் சிற்சபை காட்டும் அருள் சோதி வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே.

@70. திரு அருட் பெருமை

மேல்

#1 அன்பனே அப்பா அம்மையே அரசே அருள்_பெரும்_சோதியே அடியேன் துன்பு எலாம் தொலைத்த துணைவனே ஞான சுகத்திலே தோற்றிய சுகமே இன்பனே எல்லாம்_வல்ல சித்து ஆகி என் உளே இலங்கிய பொருளே வன்பனேன் பிழைகள் பொறுத்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#2 பெருகும் மா கருணைப் பெரும் கடல் இன்பப் பெருக்கமே என் பெரும் பேறே உருகும் ஓர் உள்ளத்து உவட்டுறாது இனிக்கும் உண்மை வான் அமுதமே என்-பால் கருகும் நெஞ்சு-அதனைத் தளிர்த்திடப் புரிந்த கருணை அம் கடவுளே விரைந்து வருக என்று உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#3 எந்தை என் குருவே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணினுள் மணியே இந்து உறும் அமுதே என் உயிர்த் துணையே இணை_இலா என் உடை அன்பே சொந்த நல் உறவே அம்பலத்து அரசே சோதியே சோதியே விரைந்து வந்து அருள் என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#4 கோ என எனது குரு என ஞான குணம் என ஒளிர் சிவ_கொழுந்தே பூ என அதிலே மணம் என வணத்தின் பொலிவு என வயங்கிய பொற்பே தேவு எனத் தேவ தேவு என ஒருமைச் சிவம் என விளங்கிய பதியே வா என உரைத்தேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#5 உள்ளமே இடம்கொண்டு என்னை ஆட்கொண்ட ஒருவனே உலகு எலாம் அறியத் தெள் அமுது அளித்து இங்கு உன்னை வாழ்விப்பேம் சித்தம் அஞ்சேல் என்ற சிவமே கள்ளமே தவிர்த்த கருணை மா நிதியே கடவுளே கனக அம்பலத்து என் வள்ளலே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#6 நல்லவா அளித்த நல்லவா எனையும் நயந்தவா நாயினேன் நவின்ற சொல்லவா எனக்குத் துணையவா ஞான சுகத்தவா சோதி அம்பலவா அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம் வல்லவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#7 திண்மையே முதல் ஐங்குணக் கரு ஆய செல்வமே நல் வழி காட்டும் கண்மையே கண்மை கலந்த என் கண்ணே கண்ணுற இயைந்த நல் கருத்தே உண்மையே எல்லாம் உடைய ஓர் தலைமை ஒரு தனித் தெய்வமே உலவா வண்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#8 காய்மையே தவிர்த்துக் கருணையே கனிந்த கற்பகத் தனிப் பெரும் தருவே தூய்மையே விளக்கித் துணைமையே அளித்த சோதியே தூய்மை_இல்லவர்க்குச் சேய்மையே எல்லாம் செய வல்ல ஞான சித்தியே சுத்த சன்மார்க்க வாய்மையே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#9 என் அவா அனைத்தும் ஈந்தவா என்னை ஈன்றவா என்னவா வேதம் சொன்னவா கருணைத் தூயவா பெரியர் துதியவா அம்பலத்து அமுதம் அன்னவா அறிவால் அறி அரி அறிவா ஆனந்த நாடகம் புரியும் மன்னவா என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

மேல்

#10 விரதம் ஆதிகளும் தவிர்த்து மெய்ஞ்ஞான விளக்கினால் என் உளம் விளக்கி இரதம் ஆதிய நல் தெள் அமுது அளித்து இங்கு என் கருத்து அனைத்தையும் புரிந்தே சரதமா நிலையில் சித்து எலாம் வல்ல சத்தியைத் தயவினால் தருக வரதனே என்றேன் வந்து அருள் சோதி வழங்கினை வாழி நின் மாண்பே.

@71. அச்சோப் பத்து

மேல்

#1 கருத்தனை என் கண்மணியைக் கண்_நுதலைப் பெரும் கருணை_கடலை வேதத் திருத்தனை என் சிவ பதியைத் தீம் கனியைத் தெள் அமுதத் தெளிவை வானில் ஒருத்தனை என் உயிர்த் துணையை உயிர்க்குயிரை உயிர்க்கு உணர்வை உணர்த்து அனாதி அருத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#2 மெய்யனை என் துயர் தவிர்த்த விமலனை என் இதயத்தே விளங்குகின்ற துய்யனை மெய்த் துணைவனை வான் துரிய நிலைத் தலைவனைச் சிற்சுகம் தந்தானைச் செய்யனை வெண்_நிறத்தனை என் சிவ பதியை ஒன்றான தெய்வம்-தன்னை அய்யனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#3 எப்பொருளும் எவ்வுயிரும் எவ்வுலகும் விளங்க விளக்கிடுவான்-தன்னைச் செப்ப அரிய பெரிய ஒரு சிவ_பதியைச் சிவகதியைச் சிவ_போகத்தைத் துப்புரவு பெற எனக்கே அருள் அமுதம் துணிந்து அளித்த துணையை என்றன் அப்பனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#4 பிறிவு எனைத்தும் தோற்றாது என் உளம் கலந்த பெருந்தகை எம் பெருமான்-தன்னைச் செறிவு அனைத்தும் என் மனத்துக்கு அளித்து எனக்குப் பெரும் களிப்புச் செய்தான்-தன்னை முறிவு எனைத்தும் இன்றி அருள் அமுது உணவு கொடுத்து எனக்கு முன்_நின்றானை அறிவனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#5 பொன் புனை உள் ஒளிக்கு_ஒளியைப் பூரணமாம் பெரும் பொருளைப் புனிதம்-தன்னை என் பிழையைப் பொறுத்து எனையும் ஏன்றுகொண்ட பெரும் கருணை இயற்கை-தன்னை இன்பினை என் இதயத்தே இருந்து அருளும் பெரு வாழ்வை என் உள் ஓங்கும் அன்பினைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#6 இத்தனை என்றிட முடியாச் சத்தி எலாம் உடையானை எல்லாம்_வல்ல சித்தனை என் சிவ பதியைத் தெய்வம் எலாம் விரித்து அடக்கும் தெய்வம்-தன்னை எத்தனையும் என் பிழைகள் பொறுத்த தனிப் பெரும் தாயை என்னை ஈன்ற அத்தனைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#7 எம்மையும் என்றனை பிரியாது என் உளமே இடம்கொண்ட இறைவன்-தன்னை இம்மையில் என்றனக்கு அழியாத் திரு_வடிவம் தந்தானை எல்லாம்_வல்ல செம்மை தரு சித்தனை என் சிவ பதியைத் தெள் அமுதத் திரளை என்றன் அம்மையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#8 என்னையும் என் பொருளையும் என் ஆவியையும் தான் கொண்டு இங்கு என்-பால் அன்பால் தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும் களித்து அளித்த தலைவன்-தன்னை முன்னையும் பின்னையும் எனக்கே முழுத் துணையாய் இருந்த முழு_முதல்வன்-தன்னை அன்னையைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#9 எண்ணலை வேறு இரங்கலை நின் எண்ணம் எலாம் தருகின்றோம் இன்னே என்று என் கண் நிரம்ப ஒளி காட்டிக் கருத்தில் அமர்ந்து இருக்கின்ற கருத்தன்-தன்னைப் புண்ணியனை உளத்து ஊறும் புத்தமுதை மெய் இன்பப் பொருளை என்றன் அண்ணலைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

மேல்

#10 சாதியை நீள் சமயத்தை மதத்தை எலாம் விடுவித்து என்றன்னை ஞான நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்தினானைப் பாதியை ஒன்று_ஆனவனைப் பரம்பரனைப் பராபரனைப் பதி அனாதி ஆதியைச் சிற்றம்பலத்து என் அருள்_பெரும்_சோதியைப் பெற்றேன் அச்சோ அச்சோ.

@72. அநுபவ நிலை

மேல்

#1 நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் தேன் செய்த தெள் அமுது உண்டேன் கண்டேன் மெய்த் திரு_நிலையே.

மேல்

#2 நான் செய்த புண்ணியம் என் உரைப்பேன் பொது நண்ணியதோர் வான் செய்த மெய்ப்பொருள் என் கையில் பெற்று மெய் வாழ்வு அடைந்தேன் கோன் செய்த பற்பல கோடி அண்டங்களும் கூறு அவற்றில் தான் செய்த பிண்டப் பகுதியும் நான் செயத் தந்தனனே.

மேல்

#3 திரு நிலை பெற்றனன் அம்பலத்தான் அருள் தெள் அமுது உண்டு உரு நிலை பெற்றனன் ஒன்றே சிவம் என ஓங்குகின்ற பெரு நிலை பெற்றனன் சுத்த சன்மார்க்கம் பிடித்து நின்றேன் இரு நிலை முந்நிலை எல்லா நிலையும் எனக்கு உளவே.

மேல்

#4 எத்தனை நான் குற்றம் செய்தும் பொறுத்தனை என்னை நின்-பால் வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான் சொன்ன வார்த்தைகள் இங்கு அத்தனையும் சம்மதித்து அருள்செய்தனை அம்பலத்தே முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே.

மேல்

#5 இனியே இறையும் சகிப்பு அறியேன் எனக்கு இன்பம் நல்கும் கனியே என்றன் இரு கண்ணே முக்கண் கொண்ட கற்பகமே தனியே என் அன்பு உடைத் தாயே சிற்றம்பலம் சார் தந்தையே முனியேல் அருள்க அருள்க மெய்ஞ்ஞானம் முழுதையுமே.

மேல்

#6 புத்தி அஞ்சேல் சற்றும் என் நெஞ்சமே சிற்பொதுத் தந்தையார் நித்தியம் சேர்ந்த நெறியில் செலுத்தினர் நீ இனி நல் முத்தியும் ஞான மெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியமே.

மேல்

#7 கூடிய நாள் இது-தான் தருணம் எனைக் கூடி உள்ளே வாடிய வாட்டம் எல்லாம் தவிர்த்தே சுக வாழ்வு அளிப்பாய் நீடியதேல் இனிச் சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் ஆடிய பாதம் அறியச் சொன்னேன் எனது ஆண்டவனே.

மேல்

#8 ஆக்கிய நாள் இது-தான் தருணம் அருள் ஆர்_அமுதம் தேக்கி மெய் இன்புறச்செய்து அருள்செய்து அருள்செய்து அருள் நீ நீக்கினையேல் இனிச் சற்றும் பொறேன் உயிர் நீத்திடுவேன் தூக்கிய பாதம் அறியச் சொன்னேன் அருள் சோதியனே.

@73. அருட் பெருஞ் சோதி அடைவு

மேல்

#1 அருள்_பெரும்_சோதி என் ஆர்_உயிரில் கலந்து ஆடுகின்ற அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்து அறிவாய் விளங்கும் அருள்_பெரும்_சோதித் தெள் ஆர்_அமுது ஆகி உள் அண்ணிக்கின்ற அருள்_பெரும்_சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே.

மேல்

#2 ஆர்கின்ற தெள் அமுதின் சுவை என் என்று அறைவன் அந்தோ சார்கின்ற சிற்றம்பலப் பெரும் சீரினைச் சாற்று-தொறும் சேர்கின்ற நாவுடன் உள்ளமும் ஆவியும் தித்தித்தலே நேர்கின்றதால் என் அருள்_பெரும்_சோதி நிறைந்து உளத்தே.

மேல்

#3 உளத்தே பெரும் களிப்புற்று அடியேன் மிக உண்ணுகின்றேன் வளத்தே அருள்_பெரும்_சோதியினால் ஒளி வாய்ந்து எனது குளத்தே நிறைந்து அணையும் கடந்து ஓங்கிக் குலவு பரி மளத்தே மிகுந்து வயங்கும் அமுதம் மனம் மகிழ்ந்தே.

மேல்

#4 மனம் மகிழ்ந்தேன் மன மாயையை நீக்கினன் மா நிலத்தே சினமொடும் காமமும் தீர்ந்தேன் எலாம் வல்ல சித்தும் பெற்றேன் இனம் மிகும் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி எய்திநின்றேன் கனம் மிகும் மன்றில் அருள்_பெரும்_சோதியைக் கண்டுகொண்டே.

மேல்

#5 கண்டேன் அருள்_பெரும்_சோதியைக் கண்களில் கண்டு களி கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக்கொண்டு இக் குவலயத்தே தொண்டே திரு_அம்பலம் தனக்கு ஆக்கிச் சுக அமுதம் உண்டேன் உயிர் தழைத்து ஓங்குகின்றேன் உள் உவப்புறவே.

மேல்

#6 உறவே எனது இன் உயிரே என் உள்ளத்தில் உற்று இனிக்கும் நறவே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு நடத்து அரசே இறவேன் எனத் துணிவு எய்திடச்செய்தனை என்னை இனி மறவேல் அடிச் சிறியேன் ஒரு போது மறக்கினுமே.

மேல்

#7 மறப்பேன்_அலேன் உன்னை ஓர் கணமேனும் மறக்கில் அன்றே இறப்பேன் இது சத்தியம் சத்தியம் சத்தியம் இசைத்தேன் பிறப்பே தவிர்த்து எனை ஆட்கொண்டு அமுதம் பெரிது அளித்த சிறப்பே அருள்_பெரும்_சோதி மன்று ஓங்கு செழும் சுடரே.

மேல்

#8 சுடரே அருள்_பெரும்_சோதியனே பெண் சுகத்தை மிக்க விடரே எனினும் விடுவர் எந்தாய் நினை விட்டு அயல் ஒன்று அடரேன் அரை_கணமும் பிரிந்து ஆற்றலன் ஆணை கண்டாய் இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலமும் இங்கு ஈந்தவனே.

மேல்

#9 தவ நேயமும் சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம் சிவ நேயமும் தந்து என் உள்ளம் தெளியத் தெளித்தனையே நவ நேய மன்றில் அருள்_பெரும்_சோதியை நாடிநின்ற இவனே அவன் எனக் கொள்வார் உன் அன்பர் இரு நிலத்தே.

மேல்

#10 நிலத்தே புழுத்த புழுவும்_அலேன் புன் நிலத்து இழிந்த மலத்தே புழுத்த புழு_அனையேனை அ வான் துதிக்கும் குலத்தே தலைமை கொடுத்து என் உளத்தில் குலவுகின்றாய் தலத்தே அருள்_பெரும்_சோதி அப்பா என் தயாநிதியே.

மேல்

#11 நிதியே என் உள்ள நிறைவே பொதுவில் நிறைந்த சிவ பதியே அருள்_பெரும்_சோதியனே அம்பலம் விளங்கும் கதியே என் கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட மதியே அமுத மழையே நின் பேர்_அருள் வாழியவே.

மேல்

#12 வாழி என்றே எனை மால் அயன் ஆதியர் வந்து அருள் பேர்_ ஆழி என்றே துதித்து ஏத்தப் புரிந்தனை அற்புதம் நீ டூழி அன்றே என்றும் சாகா_வரமும் உவந்து அளித்தாய் வாழி மன்று ஓங்கும் அருள்_பெரும்_சோதி நின் மன் அருளே.

மேல்

#13 மன்னிய நின் அருள் ஆர்_அமுதம் தந்து வாழ்வித்து நான் உன்னிய உன்னிய எல்லாம் உதவி என் உள்ளத்திலே தன் இயல் ஆகிக் கலந்து இத் தருணம் தயவு செய்தாய் துன்னிய நின் அருள் வாழ்க அருள்_பெரும்_சோதியனே.

@74. அடிமைப் பேறு

மேல்

#1 அருள் அளித்தான் அன்பு அளித்தான் அம்பலத்தான் உண்மைப் பொருள் அளித்தான் என் உள் புணர்ந்தான் தெருள் அளித்தான் எச் சோதனையும் இயற்றாமல் ஆண்டுகொண்டான் அச்சோ எனக்கு அவன் போல் ஆர்.

மேல்

#2 ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உணர்த்துகின்ற காரணமும் காரியமும் காட்டுவித்தான் பூரணன் சிற் றம்பலத்தான் என் ஆசை அப்பன் எலாம் வல்ல செம் பலத்தை என் உளத்தே சேர்த்து.

மேல்

#3 சேர்த்தான் பதம் என் சிரத்தே திரு_அருள் கண் பார்த்தான் என் எண்ணம் எலாம் பாலித்தான் தீர்த்தான் என் துன்பம் எலாம் தூக்கம் எலாம் சூழாது நீக்கிவிட்டான் இன்பம் எலாம் தந்தான் இசைந்து.

மேல்

#4 இசைந்தான் என் உள்ளத்து இருந்தான் எனையும் நசைந்தான் என் பாட்டை நயந்தான் அசைந்தாடு மாயை மனம் அடக்கிவைத்தான் அருள் எனும் என் தாயை மகிழ் அம்பலவன் தான்.

மேல்

#5 தானே அருள் ஆனான் தானே பொருள் ஆனான் தானே எல்லாம்_வல்ல தான் ஆனான் தானே தான் நான் ஆனான் என்னுடைய நாயகன் ஆனான் ஞான வான் ஆனான் அம்பலத்து எம்மான்.

மேல்

#6 மான் முதலா உள்ள வழக்கு எல்லாம் தீர்த்து அருளித் தான் முதலாய் என் உளமே சார்ந்து அமர்ந்தான் தேன் முதலாத் தித்திக்கும் பண்டம் எலாம் சேர்த்தாங்கு என் சிந்தை-தனில் தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.

மேல்

#7 தேர்ந்தேன் தெளிந்தேன் சிவமே பொருள் என உள் ஓர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் சார்ந்தேன் சிற் றம்பலத்தில் எல்லாம்_வல்லானை அவன் அருளால் எம் பலத்து எல்லாம்_வலன் ஆனேன்.

மேல்

#8 ஆனேன் அவனா அவன் அருளால் ஆங்காங்கு நானே களித்து நடிக்கின்றேன் தானே என் தந்தை என்-பால் வைத்த தயவை நினைக்கும்-தோறும் சிந்தை வியக்கின்றேன் தெரிந்து.

மேல்

#9 தெரிந்தேன் அருளால் சிவம் ஒன்றே என்று புரிந்தேன் சிவம் பலிக்கும் பூசை விரிந்த மனச் சேட்டை எலாம் தீர்த்துவிட்டேன் சித்து எல்லாம்_வல்ல அருள் நாட்டை எலாம் கைக்கொண்டேன் நான்.

மேல்

#10 நான் செய்த நல் தவம்-தான் யாதோ நவிற்ற அரிது வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் தான் செய்து தம் பலம் என்றே மதிக்கத் தான் வந்து என் உள் கலந்தான் அம்பலவன் தன் அருளினால்.

@75. உலப்பில் இன்பம்

மேல்

#1 கருணாநிதியே அடியேன் இரு கண்_உளானே தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே பொருள் நாடிய சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா மெய்த் தருணா இது-தான் தருணம் எனைத் தாங்கிக்கொள்ளே.

மேல்

#2 கூ கா எனக் கூடி எடாது இக் கொடியனேற்கே சாகா_வரம் தந்த தயாநிதித் தந்தையே நின் மா காதலன் ஆகினன் நான் இங்கு வாழ்கின்றேன் என் யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே.

மேல்

#3 எந்தாய் உனைக் கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே சிந்தா நலமும் பலமும் பெற்றுத் தேக்குகின்றேன் அம் தாமரையான் நெடுமாலவன் ஆதி வானோர் வந்தார் எனை வாழ்த்துகின்றார் இங்கு வாழ்க என்றே.

மேல்

#4 வாழ்வேன் அருள் ஆர் அமுது உண்டு இங்கு வாழ்கின்றேன் நான் ஏழ் வேதனையும் தவிர்ந்தேன் உனையே அடைந்தேன் சூழ்வேன் திரு_சிற்றம்பலத்தைத் துதித்து வாழ்த்தித் தாழ்வேன் அலது யார்க்கும் இனிச் சற்றும் தாழ்ந்திடேனே.

மேல்

#5 தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே நின் கேழ் ஆர் மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன் நான் ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன் ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே.

மேல்

#6 கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற சூடாமணியே மணியுள் ஒளிர் சோதியே என் பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் என்னும் வாடா_மலர் என் முடி சூட்டினை வாழி நீயே.

மேல்

#7 எல்லாம் செய வல்லவனே எனை ஈன்ற தாயின் நல்லாய் சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே கொல்லா நெறி காட்டி என்றன்னைக் குறிப்பில்கொண்டு என் பொல்லாமை பொறுத்தனை வாழ்க நின் பொன்_பதமே.

மேல்

#8 பரமான சிதம்பர ஞான சபாபதியே வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே என் தரமானது சற்றும் குறித்திலை சாமி நின்னை உரமான உள் அன்பர்கள் ஏசுவர் உண்மை ஈதே.

மேல்

#9 தாயே எனைத் தந்த தயாநிதித் தந்தையே இ நாயேன் பிழை யாவையும் கொண்டனை நன்மை என்றே காயே கனியாகக் கருதும் கருத்தனே நின் சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே.

மேல்

#10 பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய் மெய்யே திரு_அம்பலத்து ஆடல் செய் வித்தகனே எய்யேன் இனி வெம் மலக் கூட்டில் இருந்து என் உள்ளம் நையேன் சுத்த நல் உடம்பு எய்தினன் நானிலத்தே.

@76. மெய் இன்பப் பேறு

மேல்

#1 சத்தியம் சத்தியம் அருள்_பெரும்_சோதித் தந்தையரே எனைத் தாங்குகின்றீரே உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் இத்தகை உலகிடை அவைக்கும் என்றனக்கும் ஏதும் சுதந்தரம் இல்லை இங்கு இனி நீர் எத்தகையாயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#2 ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே நாணை விட்டு உரைக்கின்றவாறு இது கண்டீர் நாயகரே உமை நான் விட_மாட்டேன் கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் ஏணை-நின்று எடுத்த கைப்பிள்ளை நான் அன்றோ எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#3 அகத்து ஒன்று புறத்து ஒன்று நினைத்தது இங்கு இல்லை அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே நீர் சகத்து என்றும் எங்கணும் சாட்சியாய் நின்றீர் தனிப் பெரும் தேவரீர் திரு_சமுகத்தே உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் இகத்து அன்றிப் பரத்தினும் எனக்கு ஓர் பற்று இலை காண் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#4 தப்படி எடுத்துக்கொண்டு உலகவர் போலே சாற்றிட_மாட்டேன் நான் சத்தியம் சொன்னேன் செப்படிவித்தை செய் சித்தர் என்று ஓதும் தேவரீர் வல்லபத் திரு_சமுகத்தே இப்படி வான் முதல் எங்கணும் அறிய என் உடல் ஆதியை ஈந்தனன் உமக்கே எப்படி ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#5 தருணத்துக்கு ஏற்றவா சொல்லிப் பின் மாற்றும் தப்பு உரை ஈது அன்று சத்தியம் சொன்னேன் கருணைப் பெருக்கினில் கலந்து எனது உள்ளே கனவினும் நனவினும் களிப்பு அருள்கின்றீர் வருணப் பொதுவிலும் மா சமுகத்து என் வண் பொருள் ஆதியை நண்பொடு கொடுத்தேன் இருள் நச்சு அறுத்து அமுதம் தர வல்லீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#6 வாய்மட்டில் சொல்கின்ற வார்த்தை அன்று இது என் மனம் ஒத்துச் சொல்லிய வாய்மை முக்காலும் தாய்மட்டில் அன்றி என் தந்தையும் குருவும் சாமியும் ஆகிய தனிப் பெருந்தகையீர் ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் ஏய்மட்டில் எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#7 தித்திக்கப் பேசிக் கசப்பு உள்ளே காட்டும் திருட்டுப் பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் எத் திக்கும் அறிய என் உடல் பொருள் ஆவி என்பவை மூன்றும் உள் அன்பொடு கொடுத்தேன் சித்திக்கும் மூலத்தைத் தெளிவித்து என் உள்ளே திரு_நடம் செய்கின்ற தேவரீர் தாமே இத் திக்கில் எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#8 புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகிப் புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள் காணச் சத்தியம் சத்தியம் சத்தியம் சொன்னேன் தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே என் மார்க்கத்து எப்படியேனும் செய்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#9 இச்சை வேறு இல்லை இங்கு என் கருத்து எல்லாம் என் உள் அமர்ந்து அறிந்தே இருக்கின்றீர் விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் எச் செயல் ஆயினும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#10 மன் செய்து கொண்ட சன்மார்க்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காணப் பொருந்திக் கொடுத்தேன் என் செய்துகொண்டாலும் செய்துகொள்கிற்பீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

மேல்

#11 தெய்வங்கள் பலபல சிந்தை_செய்வாரும் சேர் கதி பலபல செப்புகின்றாரும் பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும் பொய்ச் சமயாதியை மெச்சுகின்றாரும் மெய் வந்த திரு_அருள் விளக்கம் ஒன்று_இல்லார் மேல் விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார் எய்வந்த துன்பு ஒழித்தவர்க்கு அறிவு அருள்வீர் எனைப் பள்ளிஎழுப்பி மெய் இன்பம் தந்தீரே.

@77. சிவ புண்ணியப் பேறு

மேல்

#1 மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த வாழ்விலே வரவிலே மலம் சார் தோலிலே ஆசைவைத்து வீண் பொழுது தொலைக்கின்றார் தொலைக்க நான் உனது காலிலே ஆசைவைத்தனன் நீயும் கனவினும் நனவினும் எனை நின் பாலிலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#2 மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக் கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார் கழிக்க நான் உன் பூம் பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் பரிந்து எனை அழிவு இலா நல்ல பதத்திலே வைத்தாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#3 குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்து வீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கி ஏமாந்து நிற்கின்றார் நிற்க நான் உவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்து நீ என் உளம் எனும் அம் பலத்திலே நின்றாய் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#4 கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த கொழுநரும் மகளிரும் நாண நீட என் உளத்தே கலந்துகொண்டு என்றும் நீங்கிடாது இருந்து நீ என்னோடு ஆடவும் எல்லாம்_வல்ல சித்தியைப் பெற்று அறிவு உரு ஆகி நான் உனையே பாடவும் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#5 உயத் திடம் அறியாது இறந்தவர்-தமை இ உலகிலே உயிர்பெற்று மீட்டும் நயத்தொடு வருவித்திடும் ஒரு ஞான நாட்டமும் கற்ப கோடியினும் வயத்தொடு சாகா_வரமும் என்றனக்கே வழங்கிடப் பெற்றனன் மரண பயத்தை விட்டு ஒழித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#6 நாடல் செய்கின்றேன் அருள்_பெரும்_சோதி நாதனை என் உளே கண்டு கூடல் செய்கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவி இன்பு உருவாய் ஆடல் செய்கின்றேன் சித்து எலாம் வல்லான் அம்பலம்-தன்னையே குறித்துப் பாடல் செய்கின்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#7 துதி பெறும் அயனோடு அரி அரன் முதலோர் சூழ்ந்துசூழ்ந்து இளைத்து ஒரு தங்கள் விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமைப் பதி பதம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#8 புரிசை வான் உலகில் பூ_உலகு எல்லாம் புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே கரிசு எலாம் தவிர்ந்து களிப்பு எலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் துரிசு எலாம் தவிர்க்கும் சுத்த சன்மார்க்கம் துலங்கவும் திரு_அருள் சோதிப் பரிசு எலாம் பெற்றேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#9 வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்ய ஓர் பரம நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நல் மணி மன்றிலே நடிக்கும் பாதமே பிடித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

மேல்

#10 கட்டமும் கழன்றேன் கவலை விட்டு ஒழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய்ப் பிள்ளை என்று ஒரு பேர்ப் பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே.

@78. சிவானந்தப் பற்று

மேல்

#1 வேதமும் வேதத்தின் அந்தமும் போற்ற விளங்கிய நின் பாதமும் மா முடியும் கண்டுகொள்ளும்படி எனக்கே போதமும் போதத்து அருள் அமுதும் தந்த புண்ணியனே நாதமும் நாத முடியும் கடந்த நடத்தவனே.

மேல்

#2 வண்ணப் பொன்_அம்பல வாழ்வே என் கண்ணினுள் மா மணியே சுண்ணப் பொன் நீற்று ஒளி ஓங்கிய சோதிச் சுகப் பொருளே எண்ணப் பயின்ற என் எண்ணம் எலாம் முன்னர் ஈக இது என் விண்ணப்பம் ஏற்று வருவாய் என்-பால் விரைந்தே விரைந்தே.

மேல்

#3 சிற்சபை அப்பனைக் கண்டுகொண்டேன் அருள் தெள் அமுதம் சற்சபை உள்ளம் தழைக்க உண்டேன் உண்மை தான் அறிந்த நல் சபைச் சித்திகள் எல்லாம் என் கை வசம் நண்ணப்பெற்றேன் பொன்_சபை ஓங்கப் புரிந்து ஆடுதற்குப் புகுந்தனனே.

மேல்

#4 வரை_அற்ற சீர்ப் பெரு வாழ்வு தந்து என் மனம் மன்னி என்றும் புரை_அற்ற மெய் நிலை ஏற்றி மெய்ஞ்ஞானப் பொதுவினிடைத் திரை_அற்ற காட்சி அளித்து இன் அமுதத் தெளிவு அருளி நரை அற்று மூப்பு அற்று இறப்பு அற்று இருக்கவும் நல்கியதே

மேல்

#5 தாய் ஆகி என் உயிர்த் தந்தையும் ஆகி என் சற்குருவாய்த் தேயாப் பெரும் பதம் ஆகி என் சத்தியத் தெய்வமுமாய் வாயாரப் பாடும் நல் வாக்கு அளித்து என் உளம் மன்னுகின்ற தூயா திரு_நடராயா சிற்றம்பலச் சோதியனே.

மேல்

#6 ஆதியும் அந்தமும் இல்லாத் தனிச் சுடர் ஆகி இன்ப நீதியும் நீர்மையும் ஓங்கப் பொதுவில் நிருத்தம் இடும் சோதியும் வேதியும் நான் அறிந்தேன் இச் செகதலத்தில் சாதியும் பேதச் சமயமும் நீங்கித் தனித்தனனே.

மேல்

#7 தன் நேர் இலாத தலைவா சிற்றம்பலம்-தன்னில் என்னை இன்னே அடைகுவித்து இன்பு அருள்வாய் இதுவே தருணம் அன்னே எனைப் பெற்ற அப்பா என்று உன்னை அடிக்கடிக்கே சொன்னேன் முன் சொல்லுகின்றேன் பிற ஏதும் துணிந்திலனே.

மேல்

#8 தேகாதி மூன்றும் உன்-பால் கொடுத்தேன் நின் திரு_அடிக்கே மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் நாகாதிபரும் வியந்திட என் எதிர் நண்ணி என்றும் சாகா_வரம் தந்து சன்மார்க்க நீதியும் சாற்றுகவே.

மேல்

#9 கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம் பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப் பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே.

மேல்

#10 தீமைகள் யாவும் தொலைத்துவிட்டேன் இத் தினம் தொடங்கிச் சேம நல் இன்பச் செயலே விளங்க மெய்ச் சித்தி எலாம் காமமுற்று என்னைக் கலந்துகொண்டு ஆடக் கருணை நடத் தாமன் என் உள்ளமும் சாரவும் பெற்றனன் சத்தியமே.

@79. இறை எளிமையை வியத்தல்

மேல்

#1 பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பதத் துணையே பிடித்தேன் விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் நட_மாட்டேன் என் உளத்தே நான் சாக_மாட்டேன் நல்ல திரு_அருளாலே நான் தான் ஆனேனே.

மேல்

#2 சாகாத கல்வியிலே தலைகாட்டிக் கொடுத்தீர் தடை அறியாக் கால் காட்டித் தரம் பெறவும் அளித்தீர் மா காதல் உடையவனா மனம் கனிவித்து அழியா வான் அமுதும் மெய்ஞ்ஞான மருந்தும் உணப் புரிந்தீர் போகாத புனலாலே சுத்த உடம்பினராம் புண்ணியரும் நண்ண அரிய பொது நிலையும் தந்தீர் நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

மேல்

#3 வேதாந்த நிலையும் அதன் அந்தத்தே விளங்கும் மெய் நிலையும் காட்டுவித்தீர் விளங்கிய சித்தாந்தப் போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகாரப் பரிசும் எனக்கு அளித்தீர் நாதாந்தத் தனிச் செங்கோல் நான் செலுத்தக் கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

மேல்

#4 ஆர் நீ என்று எதிர்_வினவில் விடைகொடுக்கத் தெரியா அறிவு_இலியேன் பொருட்டாக அன்று வந்து என்றனக்கே ஏர் நீடும் பெரும் பொருள் ஒன்று ஈந்து மகிழ்ந்து ஆண்டீர் இன்றும் வலிந்து எளியேன்-பால் எய்தி ஒளி ஓங்கப் பார் நீடத் திரு_அருளாம் பெரும் சோதி அளித்தீர் பகரும் எலாம் வல்ல சித்திப் பண்புறவும் செய்தீர் நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே.

மேல்

#5 பாயிரமாம் மறைகள் எலாம் பாடுகின்ற பாட்டு உன் பாட்டே என்று அறிந்துகொண்டேன் பரம்பொருள் உன் பெருமை ஆயிரமாயிரம் கோடி நா_உடையோர் எனினும் அணுத்துணையும் புகல் அரிதேல் அந்தோ இச் சிறியேன் வாய் இரங்கா வகை புகலத் துணிந்தேன் என்னுடைய மனத்து ஆசை ஒரு கடலோ எழு கடலில் பெரிதே சேய் இரங்கா முனம் எடுத்தே அணைத்திடும் தாய்_அனையாய் திரு_சிற்றம்பலம் விளங்கும் சிவ ஞான குருவே.

மேல்

#6 ஊன் உரைக்கும் உயிர் அளவும் உலகு அளவும் அறியேன் உன் அளவை அறிவேனோ என் அளவை அறிந்தோய் வான் உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்து உரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ கோன் உரைக்கும் குறி குணங்கள் கடந்த பெருவெளி மேல் கூடாதே கூடி நின்ற கோவே நின் இயலை நான் உரைக்க நான் ஆரோ நான் ஆரோ நவில்வேன் நான் எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே.

மேல்

#7 கண்_உடையீர் பெரும் கருணை_கடல்_உடையீர் எனது கணக்கு அறிந்தீர் வழக்கு அறிந்தீர் களித்து வந்து அன்று உரைத்தீர் எண்_உடையார் எழுத்து_உடையார் எல்லாரும் போற்ற என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி வாமப் பெண் உடைய மனம் களிக்கப் பேர்_உலகம் களிக்கப் பெத்தரும் முத்தரும் மகிழப் பத்தர் எலாம் பரவ விண் உடைய அருள் ஜோதி விளையாடல் புரிய வேண்டும் என்றேன் என்பதன் முன் விரைந்து இசைந்தீர் அதற்கே.

மேல்

#8 பொது நடம் செய் மலர்_அடி என் தலை மேலே அமைத்தீர் புத்தமுதம் அளித்தீர் என் புன்மை எலாம் பொறுத்தீர் சது_மறை ஆகமங்கள் எலாம் சாற்ற அரிய பெரிய தனித் தலைமைத் தந்தையரே சாகாத வரமும் எது நினைத்தேன் நினைத்தாங்கே அது புரியும் திறமும் இன்ப அனுபவ நிலையும் எனக்கு அருளுவதற்கே இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே.

மேல்

#9 கரும்பின் மிக இனிக்கின்ற கருணை அமுது அளித்தீர் கண்_அனையீர் கனகசபை கருதிய சிற்சபை முன் துரும்பின் மிகச் சிறியேன் நான் அன்று நின்று துயர்ந்தேன் துயரேல் என்று எல்லையிட்டீர் துரையே அ எல்லை விரும்புற ஆயிற்று இது-தான் தருணம் இந்தத் தருணம் விரைந்து அருள வேண்டும் என விளம்பிநின்றேன் அடியேன் பெரும் பிழைகள் அனைத்தினையும் பொறுத்து அருளி இ நாள் பெரிது அளித்தீர் அருள் பெருமை பெற்றவளில் பெரிதே.

மேல்

#10 அ நாளில் அடிச் சிறியேன் அம்பல வாயிலிலே அருளை நினைந்து ஒருபுறத்தே அயர்ந்து அழுது நின்றேன் முன்_நாளில் யான் புரிந்த பெரும் தவத்தால் எனக்கு முகம் மலர்ந்து மொழிந்த அருள் மொழியை நினைந்து அந்தச் செம் நாளை எதிர்பார்த்தே பல் நாளும் களித்தேன் சிந்தை மலர்ந்து இருந்தேன் அச் செல்வம் மிகு திரு_நாள் இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே.

@80. திரு நடப் புகழ்ச்சி

மேல்

#1 பதியே எம் பரனே எம் பரம்பரனே எமது பராபரனே ஆனந்தப் பதம் தரும் மெய்ஞ்ஞான நிதியே மெய் நிறைவே மெய் நிலையே மெய் இன்ப நிருத்தம் இடும் தனித் தலைமை நிபுண மணி_விளக்கே கதியே என் கண்ணே என் கண்மணியே எனது கருத்தே என் கருத்தில் உற்ற கனிவே செங்கனியே துதியே என் துரையே என் தோழா என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#2 ஆரணமே ஆகமமே ஆரண ஆகமத்தின் அரும் பொருளே அரும் பொருளின் அனுபவமே அறிவே காரணமே காரியமே காரண_காரியங்கள் கடந்த பெரும் பதியே என் கருத்து அமர்ந்த நிதியே பூரணமே புண்ணியமே பொது விளங்கும் அரசே புத்தமுதே சத்தியமே பொன்னே செம்பொருளே தோரணமே விளங்கு சித்திபுரத்தினும் என் உளத்தும் சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#3 இணை ஏதும் இன்றி நின்ற இறையவனே மறை சொல் ஏகமுமாய் அனேகமுமாய் இலங்கு பரம்பரனே அணை ஏதும் இன்றி நிறை பெரும் புனலே அதன் மேல் அனலே என் அப்பா என் அவத்தை எலாம் கடத்தும் புணையே மெய்ப்பொருளே மெய்ப் புகழே மெய்ப் புகலே பொதுவே உள்ளதுவே தற்போதம்_இலார்க்கு உதவும் துணையே சத்துவமே தத்துவமே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#4 எருதின் உழைத்திருந்தேனுக்கு இரங்கி அடிச் சிறியேன் இருந்த இடம்-தனைத் தேடி இணைப் பரி மான் ஈர்க்கும் ஒரு திரு_தேர் ஊர்ந்து என்னை உடையவளோடு அடைந்தே உள்_வாயில் தாழ் பிடித்துப் பயத்தொடு நின்றேனே வருதி எனத் திரு_கரங்கள் அசைத்து அழைத்த பதியே மணியே என் மருந்தே என் வாழ்வே என் வரமே சுருதி முடி அடிக்கு அணிந்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#5 அக வடிவை ஒரு கணத்தே அனக வடிவு ஆக்கி அருள் அமுதம் உவந்து அளித்தே அடிக்கடி என் உளத்தே முக வடிவம்-தனைக் காட்டி களித்து வியந்திடவே முடிபு அனைத்தும் உணர்த்தி ஒரு முன்னிலை இல்லாதே சக வடிவில் தான் ஆகி நான் ஆகி நானும் தானும் ஒரு வடிவு ஆகித் தனித்து ஓங்கப் புரிந்தே சுக வடிவம்-தனை அளித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#6 உடுத்த துகில் அவிழ்த்து விரித்து ஒரு தரையில் தனித்தே உன்னாதும் உன்னி உளத்துறு கலக்கத்தோடே படுத்து அயர்ந்த சிறியேன்-தன் அருகு அணைந்து மகனே பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து திரு_கரத்தால் அடுத்து அணைத்துக்கொண்டு எடுத்துப் போய்ப் பிறிது ஓர் இடத்தே அமர்த்தி நகைத்து அருளிய என் ஆண்டவனே அரசே தொடுத்து அணி என் மொழி_மாலை அணிந்துகொண்டு என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#7 ஆற்றாத அடிச் சிறியேற்கு ஆற்றல் மிகக் கொடுத்தே அம்மையுமாய் அப்பனுமாய் ஆதரித்து அன்புடனே போற்றாத குற்றம் எலாம் பொறுத்து அருளி எனை இப் பூதலத்தார் வானகத்தார் போற்றி மதித்திடவே ஏற்றாத உயர் நிலை மேல் ஏற்றி எல்லாம்_வல்ல இறைமையும் தந்து அருளிய என் இறையவனே எனக்கே தோற்றாத தோற்றுவித்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#8 படிப்பு அடக்கிக் கேள்வி எலாம் பற்று அற விட்டு அடக்கிப் பார்த்திடலும் அடக்கி உறும் பரிசம் எலாம் அடக்கித் தடிப்புறும் ஊண் சுவை அடக்கிக் கந்தம் எலாம் அடக்கிச் சாதி மதம் சமயம் எனும் சழக்கையும் விட்டு அடக்கி மடிப்பு அடக்கி நின்றாலும் நில்லேன் நான் எனவே வனக் குரங்கும் வியப்ப என்றன் மன_குரங்கு குதித்த துடிப்பு அடக்கி ஆட்கொண்ட துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#9 பணிந்து அறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் படித்து அறியேன் கேட்டு அறியேன் பத்தியில் பூ மாலை அணிந்து அறியேன் மனம் உருகக் கண்களின் நீர் பெருக அழுது அறியேன் தொழுது அறியேன் அகங்காரம் சிறிதும் தணிந்து அறியேன் தயவு அறியேன் சத்திய வாசகமும் தான் அறியேன் உழுந்து அடித்த தடி-அது போல் இருந்தேன் துணிந்து எனக்கும் கருணைசெய்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

மேல்

#10 தாங்காதே பசி பெருக்கிக் கடை நாய் போல் உலம்பித் தவம் விடுத்தே அவம் தொடுத்தே தனித்து உண்டும் வயிறு வீங்காதேல் எழுந்திருக்கேன் வீங்கி வெடித்திடல் போல் விம்மும் எனில் எழுந்து உடனே வெறும் தடி போல் விழுந்தே வாங்காது தூங்கியதோர் வழக்கம் உடையேனை வலிந்து அடிமைகொண்டு அருளி மறப்பு ஒழித்து எந்நாளும் தூங்காதே விழிக்கவைத்த துரையே என் உளத்தே சுத்த நடம் புரிகின்ற சித்த சிகாமணியே.

@81. திரு அருட் பேறு

மேல்

#1 சீர் விளங்கு சுத்தத் திரு_மேனி தான் தரித்துப் பார் விளங்க நான் படுத்த பாயலிலே தார் விளங்க வந்தாய் எனைத் தூக்கி மற்றொரு சார் வைத்தனையே எந்தாய் நின் உள்ளம் அறியேன்.

மேல்

#2 பயத்தோடு ஒரு பால் படுத்திருந்தேன் என்-பால் நயத்தோடு அணைந்தே நகைத்து வயத்தாலே தூக்கி எடுத்து எனை மேல் சூழலிலே வைத்தனை நான் பாக்கியவான் ஆனேன் பதிந்து.

மேல்

#3 என்னே நின் தண் அருளை என் என்பேன் இ உலகில் முன்னே தவம்-தான் முயன்றேனோ கொன்னே படுத்து அயர்ந்தேன் நான் படுத்த பாய் அருகுற்று என்னை எடுத்து ஒரு மேல் ஏற்றி வைத்தாயே.

மேல்

#4 சிந்தாகுலத்தொடு நான் தெய்வமே என்று நினைந்து அந்தோ படுத்து உள் அயர்வுற்றேன் எந்தாய் எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை எடுத்தாய் தயவை வியவேன்.

மேல்

#5 உன்னுகின்ற-தோறும் எனது உள்ளம் உருகுகின்றது என் உரைப்பேன் என் உரைப்பேன் எந்தாயே துன்னி நின்று தூக்கம் தவிர்த்து என்னைத் தூக்கி எடுத்து அன்பொடு மேல் ஆக்கமுற வைத்தாய் அது.

மேல்

#6 நான் படுத்த பாய் அருகில் நண்ணி எனைத் தூக்கி ஊன் படுத்த தேகம் ஒளி விளங்கத் தான் பதித்த மேலிடத்தே வைத்தனை நான் வெம்மை எலாம் தீர்ந்தேன் நின் கால்-இடத்தே வாழ்கின்றேன் காண்.

மேல்

#7 புண்ணியம்-தான் யாது புரிந்தேனோ நான் அறியேன் பண்ணிய துன்போடே படுத்திருந்தேன் நண்ணி எனைத் தூக்கி எடுத்து எனது துன்பம் எலாம் தீர்த்து அருளி ஆக்கியிடு என்றே அருள்தந்தாய்.

மேல்

#8 அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கு ஒரு சார் பஞ்சின் உழந்தே படுத்து அயர்ந்தேன் விஞ்சி அங்கு வந்தாய் எனைத் தூக்கி மற்றொரு சார் வைத்து அமுது தந்தாய் என் நான் செய் தவம்.

மேல்

#9 நானே தவம் புரிந்தேன் நானே களிப்பு அடைந்தேன் தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே ஒளி விளங்கப் பெற்றேன் உடையான் எனை தான் அளி விளங்கத் தூக்கி அணைத்தான்.

மேல்

#10 வாழி எனைத் தூக்கிவைத்த கரதலங்கள் வாழி எலாம் வல்ல மணி மன்றம் வாழி நடம் வாழி அருள் சோதி வாழி நடராயன் வாழி சிவ ஞான வழி.

@82. அருட் கொடைப் புகழ்ச்சி

மேல்

#1 கடையேன் புரிந்த குற்றம் எலாம் கருதாது என் உள் கலந்துகொண்டு தடையே முழுதும் தவிர்த்து அருளித் தனித்த ஞான அமுது அளித்துப் புடையே இருத்தி அருள் சித்திப் பூவை-தனையும் புணர்த்தி அருள் கொடையே கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#2 கடுத்த மனத்தை அடக்கி ஒரு கணமும் இருக்க மாட்டாதே படுத்த சிறியேன் குற்றம் எலாம் பொறுத்து என் அறிவைப் பல நாளும் தடுத்த தடையைத் தவிர்த்து என்றும் சாகா நலம் செய் தனி அமுதம் கொடுத்த குருவே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#3 மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து எழிலுறு நல் உருவும் பொருள் ஒன்று எனத் தெளிந்த உணர்வும் என்றும் உலவாத திருவும் பரம சித்தி எனும் சிறப்பும் இயற்கைச் சிவம் எனும் ஓர் குருவும் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#4 சேட்டித்து உலகச் சிறுநடையில் பல் கால் புகுந்து திரிந்து மயல் நீட்டித்து அலைந்த மனத்தை ஒரு நிமிடத்து அடக்கிச் சன்மார்க்கக் கோட்டிக்கு இயன்ற குணங்கள் எலாம் கூடப் புரிந்து மெய் நிலையைக் காட்டிக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#5 தோலைக் கருதித் தினம்-தோறும் சுழன்றுசுழன்று மயங்கும் அந்த வேலைக்கு இசைந்த மனத்தை முற்றும் அடக்கி ஞான மெய் நெறியில் கோலைத் தொலைத்துக் கண் விளக்கம் கொடுத்து மேலும் வேகாத_காலைக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#6 பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே தெட்டிற்கடுத்த பொய் ஒழுக்கச் செயலே என்று திரிந்து உலகில் ஒட்டிக் குதித்துச் சிறு விளையாட்டு உஞற்றி ஓடும் மன_குரங்கைக் கட்டிக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#7 மதியைக் கெடுத்து மரணம் எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும் ஓர் விதியைக் குறித்த சமய நெறி மேவாது என்னைத் தடுத்து அருளாம் பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன் பெற்றிட என் உள் கலந்து ஓர் கதியைக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#8 தருண நிதியே என் ஒருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வே நல் அருண ஒளியே எனச் சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன் வந்தே கருணை கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#9 பொன் பங்கயத்தின் புது நறவும் சுத்த சலமும் புகல்கின்ற வெற்பு அந்தரமா மதி மதுவும் விளங்கு பசுவின் தீம் பாலும் நல் பஞ்சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவை தீர்க்கும் கற்பம் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#10 புலையைத் தவிர்த்து என் குற்றம் எலாம் பொறுத்து ஞான பூரணமா நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தம் இடும் மலையைக் காட்டி அதன் அடியில் வயங்க இருத்திச் சாகாத கலையைக் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#11 அருள் நாடு அறியா மன_குரங்கை அடக்கத் தெரியாது அதனொடு சேர்ந்து இருள் நாடு அனைத்தும் சுழன்றுசுழன்று இளைத்துக் களைத்தேன் எனக்கு அந்தோ தெருள் நாடு உலகில் மரணமுறாத் திறம் தந்து அழியாத் திரு அளித்த கருணாநிதியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#12 மண்ணுள் மயங்கிச் சுழன்று ஓடும் மனத்தை அடக்கத் தெரியாதே பெண்ணுள் மயலைப் பெரும் கடல் போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை விண்ணுள் மணி போன்று அருள் சோதி விளைவித்து ஆண்ட என்னுடைய கண்ணுள் மணியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#13 புலந்த மனத்தை அடக்கி ஒரு போது நினைக்க மாட்டாதே அலந்த சிறியேன் பிழை பொறுத்தே அருள் ஆர்_அமுதம் அளித்து இங்கே உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்து என் உயிரின் உளே கலந்த பதியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#14 தனியே கிடந்து மனம் கலங்கித் தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை இனி ஏதுறுமோ என் செய்வேன் எந்தாய் எனது பிழை குறித்து முனியேல் என நான் மொழிவதற்கு முன்னே கருணை அமுது அளித்த கனியே கரும்பே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#15 பெண்ணே பொருளே எனச் சுழன்ற பேதை மனத்தால் பெரிது உழன்று புண்ணே எனும் இப் புலை உடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத் தண் ஏர் மதியின் அமுது அளித்துச் சாகா_வரம் தந்து ஆட்கொண்ட கண்ணே மணியே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#16 பொருத்திக் கொடுத்த புலை உடம்பில் புகுந்தேன் புணைத்தற்கு இணங்காத எருத்தில் திரிந்தேன் செய் பிழையை எண்ணாது அந்தோ எனை முற்றும் திருத்திப் புனித அமுது அளித்துச் சித்தி நிலை மேல் சேர்வித்து என் கருத்தில் கலந்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#17 பெண்ணுக்கு இசைந்தே பல முகத்தில் பேய் போல் சுழன்ற பேதை மனத்து எண்ணுக்கு இசைந்து துயர்_கடல் ஆழ்ந்திருந்தேன்-தன்னை எடுத்து அருளி விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து மேலும் என்றன் கண்ணுக்கு இசைந்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#18 மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கு ஓர் சூழ்ச்சி அறியாது உழன்றேனைச் சூழ்ச்சி அறிவித்து அருள் அரசின் ஆட்சி அடைவித்து அருள் சோதி அமுதம் அளித்தே ஆனந்தக் காட்சி கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#19 பொய்யில் கிடைத்த மனம்போனபோக்கில் சுழன்றே பொய் உலகில் வெய்யில் கிடைத்த புழுப் போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் கையில் கிடைத்தோய் நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

மேல்

#20 போதல் ஒழியா மன_குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கிக் கருணை நோக்கு அளித்துச் சாதல் எனும் ஓர் சங்கடத்தைத் தவிர்த்து என் உயிரில் தான் கலந்த காதல் அரசே நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேனே.

@83. திரு அருட் கொடை

மேல்

#1 சிருட்டி முதல் ஐந்தொழில் நான் செய்ய எனக்கு அருள் புரிந்தாய் பொருள் திகழ் நின் பெரும் கருணைப் புனித அமுது உவந்து அளித்தாய் தெருள் திகழ் நின் அடியவர்-தம் திரு_சபையின் நடு இருத்தித் தெருட்டி எனை வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#2 படைத்தல் முதல் ஐந்தொழில் செய் பணி எனக்கே பணித்திட்டாய் உடைத் தனிப் பேர்_அருள் சோதி ஓங்கிய தெள் அமுது அளித்தாய் கொடைத் தனிப் போகம் கொடுத்தாய் நின் அடியர் குழு நடுவே திடத்து அமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#3 அயன் முதலோர் ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்திட்டாய் உயர்வுறு பேர்_அருள் சோதித் திரு_அமுதம் உவந்து அளித்தாய் மயர்வு அறு நின் அடியவர்-தம் சபை நடுவே வைத்து அருளிச் செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#4 ஐவர் செயும் தொழில் எனக்கே அளித்தாய் நின் அருள் அமுது என் கைவரச்செய்து உண்ணுவித்தாய் கங்கணம் என் கரத்து அணிந்தாய் சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளித் தெய்வம் என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#5 முத்தொழிலோ ஐந்தொழிலும் முன்னி மகிழ்ந்து எனக்கு அளித்தாய் புத்தமுதம் உண்ணுவித்து ஓர் பொன் அணி என் கரத்து அணிந்தாய் சித்தர் எனும் நின் அடியார் திரு_சபையில் நடு இருத்திச் சித்து உருவின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#6 ஐந்தொழில் நான் செயப் பணித்தாய் அருள் அமுதம் உணவு அளித்தாய் வெம் தொழில் தீர்ந்து ஓங்கிய நின் மெய் அடியார் சபை நடுவே எந்தை உனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்து அருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#7 நான்முகன் நாரணன் முதலாம் ஐவர் தொழில் நயந்து அளித்தாய் மேன்மை பெறும் அருள் சோதித் திரு_அமுதும் வியந்து அளித்தாய் பான்மையுறு நின் அடியார் சபை நடுவே பதித்து அருளித் தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#8 நாய் எனவே திரிந்தேனை வலிந்து அழைத்து நான்முகன் மால் தூய பெரும் தேவர் செயும் தொழில் புரி என்று அமுது அளித்தாய் நாயக நின் அடியர் சபை நடு இருக்கவைத்து அருளிச் சேய் எனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#9 புல் வழங்கு புழு-அதனில் சிறியேனைப் புணர்ந்து அருளிச் சொல் வழங்கு தொழில் ஐந்தும் துணிந்து கொடுத்து அமுது அளித்தாய் கல்வி பெறு நின் அடியர் கழக நடு வைத்து என்னைச் செல்வமொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

மேல்

#10 தெரு மனை-தோறு அலைந்தேனை அலையாமே சேர்த்து அருளி அருள் ஒளியால் ஐந்தொழிலும் செயப் பணித்தே அமுது அளித்து மருவிய நின் மெய் அடியார் சபை நடுவே வைத்து அழியாத் திரு அளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

@84. அநுபவ சித்தி

மேல்

#1 அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆர்_அமுதே இப் பாரில் என்றன்னை நீயே வருவித்து இசைவுடனே தப்பாத தந்திரம் மந்திரம் யாவையும் தந்து உலகில் வெப்பானது தவிர்த்து ஐந்தொழில் செய்ய விதித்தனையே.

மேல்

#2 விதித்தனை என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே பதித்தனை என் உள் பதிந்தனை சிற்றம்பல நடமும் உதித்து ஒளிர் பொன்_அம்பல நடமும் ஒருங்கே எனக்கே கதித்து அழியாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.

மேல்

#3 காட்டினை ஞான அமுது அளித்தாய் நல் கனகசபை ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து நீட்டினை என்றும் அழியா_வரம் தந்து நின் சபையில் கூட்டினை நான் முனம் செய் தவம் யாது அது கூறுகவே.

மேல்

#4 கூறு உகந்தாய் சிவகாமக்கொடியைக் கொடியில் வெள்ளை ஏறு உகந்தாய் என்னை ஈன்று உகந்தாய் மெய் இலங்கு திரு_ நீறு உகந்தாய் உலகு எல்லாம் தழைக்க நிமிர் சடை மேல் ஆறு உகந்தாய் மன்றில் ஆட்டு உகந்தாய் என்னை ஆண்டவனே.

மேல்

#5 ஆண்டவனே திரு_அம்பலத்தே அருளால் இயற்றும் தாண்டவனே எனைத் தந்தவனே முற்றும் தந்தவனே நீண்டவனே உயிர்க்கு எல்லாம் பொதுவினில் நின்றவனே வேண்ட அனேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவனே.

மேல்

#6 மேலவனே திரு_அம்பலத்து ஆடல் விளக்கும் மலர்க் காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே மாலவன் ஏத்தும் சிவகாமசுந்தரவல்லியை ஓர் பாலவனே எனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.

மேல்

#7 வாட்டம் எல்லாம் தவிர்ந்தேன் அருள் பேர்_ஒளி வாய்க்கப்பெற்றேன் கூட்டம் எல்லாம் புகழ் அம்பல_வாணரைக் கூடப்பெற்றேன் தேட்டம் எல்லாம்_வல்ல சித்தி பெற்றேன் இச் செகதலத்தே ஆட்டம் எல்லாம் விளையாடுகின்றேன் எனக்கு ஆர் சரியே.

மேல்

#8 நான் செய்த புண்ணியம் யார் செய்தனர் இந்த நானிலத்தே வான் செய்த தேவரும் காணாத காட்சி மகிழ்ந்து கண்டேன் ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வும் ஒளி மயமாக் கோன் செயவே பெற்றுக்கொண்டேன் உண்டேன் அருள் கோன் அமுதே.

மேல்

#9 எனை யான் மதித்துப் புகல்கின்றது அன்று இஃது எந்தை பிரான்- தனை யான் மதித்து இங்குப் பெற்ற நல் வாழ்வு அது சாற்றுகின்றேன் வினையால் மெலிந்த மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்துத் தனை யான் புணர்ந்திடச் சாகா_வரத்தையும் தந்தனனே.

மேல்

#10 சிற்றம்பலத்தைத் தெரிந்துகொண்டேன் எம் சிவன் அருளால் குற்றம் பலவும் தவிர்ந்து நின்றேன் எண்_குணக் குன்றிலே வெற்று அம்பல் செய்தவர் எல்லாம் விரைந்துவிரைந்து வந்தே நல் தம்பலம் தருவாய் என்கின்றார் இந்த நானிலத்தே.

மேல்

#11 ஒன்று கண்டேன் திரு_அம்பலத்தே ஒளி ஓங்குகின்ற நன்று கண்டேன் உலகு எல்லாம் தழைக்க நடம் புரிதல் இன்று கண்டேன் என்றும் சாகா_வரத்தை எனக்கு அருள மன்று கண்டார்க்கு இந்த வாழ்வு உளது என்று மகிழ்ந்தனனே.

@85. பொன் வடிவப் பேறு

மேல்

#1 அருள்_பெரும்_சோதி அபயம் அபயம் பொருள் பெரும் சோதிப் புணை தந்து இருள் பெரும் கார் அள்ளல்_கடல் கடத்தி அக்கரை மேல் ஆனந்தம் கொள்ளற்கு அபயம் கொடு.

மேல்

#2 ஆர்_அமுதம் தந்து என்னுள் அச்சம் எலாம் தீர்த்து அருளிச் சீர் அமுத வண்ணத் திரு_அடி கண்டு ஆர்வம் மிகப் பாடி உடம்பு உயிரும் பத்தி வடிவு ஆகிக் கூத் தாடிக் களிக்க அருள்.

மேல்

#3 இடர் தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த சுடர் கலந்த ஞான்றே சுகமும் முடுகி உற்றது இன்னே களித்திடுதும் என் நெஞ்சே அம்பலவன் பொன் நேர் பதத்தைப் புகழ்.

மேல்

#4 ஈனம் எலாம் தீர்ந்தனவே இன்பம் எலாம் எய்தினவே ஊனம் எலாம் கைவிட்டு ஒழிந்தனவே ஞானம் உளோர் போற்றும் சிற்றம்பலத்தும் பொன்_அம்பலத்து நடம் போற்றும்படிப் பெற்ற போது.

மேல்

#5 உள்ளக் கவலை எலாம் ஓடி ஒழிந்தனவே வள்ளல் பெரும் சோதி வாய்த்தனவே கள்ளக் கருத்து ஒழிய ஞானக் கருத்து இயைந்து நாதன் பொருத்தமுற்று என் உள் அமர்ந்த போது.

மேல்

#6 ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுது எனக்கு நல்கியதே வானப் பொருள் பெரும் சோதிப் பொதுவில் விளங்கும் அருள்_பெரும்_சோதி அது.

மேல்

#7 எல்லாம் செய வல்லான் எந்தை அருள் அம்பலவன் நல்லான் எனக்கு மிக நன்கு அளித்தான் எல்லாரும் கண்டு வியக்கின்றார் கருணைத் திரு_அமுதம் உண்டு வியக்கின்றேன் உவந்து.

மேல்

#8 ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டு நிற்கத் தேசு ஆர் ஒளியால் சிறியேனை வாசாம கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருள் அமுதம் ஈசன் அத்தன் அம்பலவனே.

மேல்

#9 ஐயன் எனக்கு ஈந்த அதிசயத்தை என் புகல்வேன் பொய் அடியேன் குற்றம் பொறுத்து அருளி வையத்து அழியாமல் ஓங்கும் அருள் வடிவம் நான் ஓர் மொழி ஆடுதற்கு முனம்.

மேல்

#10 ஒப்பு உயர்வு ஒன்று இல்லா ஒருவன் அருள் சோதி அப்பன் எலாம் வல்ல திரு_அம்பலத்தான் இப் புவியில் வந்தான் இரவி வருதற்கு முன் கருணை தந்தான் என் உள் கலந்தான் தான்.

மேல்

#11 ஓத உலவா ஒரு தோழன் தொண்டர்_உளன் சாதல் ஒழித்து என்னைத் தான் ஆக்கிப் பூதலத்தில் ஐந்தொழில் செய் என்றே அருள் சோதிக் கோல் அளித்தான் வெம் தொழில் போய் நீங்க விரைந்து.

மேல்

#12 ஔவியம் தீர் உள்ளத்து அறிஞர் எலாம் கண்டு உவக்கச் செவ்விய சன்மார்க்கம் சிறந்து ஓங்க ஒவ்வி விரைந்து வந்து என் உள் கலந்து மெய்யே மெய் ஆக நிரந்து ஒன்றாய் நின்றான் நிலத்து.

மேல்

#13 சோதிப் பிழம்பே சுக வடிவே மெய்ஞ்ஞான நீதிப் பொதுவே நிறை நிதியே சோதிக் கடவுளே மாயை இரு_கன்மம் இருள் எல்லாம் விட உளே நின்று விளங்கு.

மேல்

#14 துன்பம் எலாம் தீர்ந்த சுகம் எல்லாம் கைதந்த அன்பர் எலாம் போற்ற அருள் நடம் செய் இன்பன் அருள் பெரும் சிற்சோதி திரு_அம்பலத்தான் வேதப் பொருள் பெரும் சித்து என் உள் புகுந்து.

மேல்

#15 தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என்றனக்கே ஆக்கம் என ஓங்கும் பொன்_அம்பலத்தான் ஏக்கம் எலாம் நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம் தாங்கினேன் சத்தியமாத்தான்.

மேல்

#16 துன்பம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் என்றனக்கே அன்பு அகத்தில் வாழும் சிற்றம்பலத்தான் இன்பு உருவம் தாங்கினேன் சாகாத் தனி வடிவம் பெற்று ஒளியால் ஓங்கினேன் உண்மை உரை.

@86. தத்துவ வெற்றி

மேல்

#1 திரு வளர் பேர்_அருள்_உடையான் சிற்சபையான் எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்தன் எல்லாம் உடையான் உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி ஒருவன் உண்டே அவன்-தான் பெருமையினால் எனை ஈன்றான் நான் ஒருவன்-தானே பிள்ளை அவன் பிள்ளை எனப் பெரியர் எலாம் அறிவார் இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ ஈங்கும் அது துள்ளல் எலாம் ஏதும் நடவாதே.

மேல்

#2 மனம் எனும் ஓர் பேய்க் குரங்கு மடை_பயலே நீ-தான் மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய் இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய் இருந்திடு நீ என் சொல் வழி ஏற்றிலை ஆனாலோ தினையளவு உன் அதிகாரம் செல்ல ஒட்டேன் உலகம் சிரிக்க உனை அடக்கிடுவேன் திரு_அருளால் கணத்தே நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய் ஞான சபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.

மேல்

#3 பல் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச_பயலே பதையாதே சிதையாதே பார்க்கும் இடம் எல்லாம் கொன்முகம் கொண்டு அடிக்கடி போய்க் குதியாதே எனது குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது என் முனம் ஓர் புல்_முனை மேல் இருந்த பனித் துளி நீ இம்மெனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ பின்_முன் என நினையேல் காண் சிற்சபையில் நடிக்கும் பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.

மேல்

#4 விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டு_பயலே விரிந்துவிரிந்து அலையாதே மெலியாதே விடயம் புரிந்த நெறி புரிந்து அவமே போகாதே பொறி வாய்ப் புரையாதே விரையாதே புகுந்து மயங்காதே தெரிந்து தெளிந்து ஒருநிலையில் சித்திரம் போல் இரு நீ சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய் பரிந்து எனை நீ யார் என்று பார்த்தாய் சிற்சபை வாழ் பதி-தனக்கே அருள் பட்டம் பலித்த பிள்ளை நானே.

மேல்

#5 பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டு_பயலே பல் பொறியாம் படுக்காளிப் பயல்களொடும் கூடிச் சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடித் தியங்காதே ஒரு வார்த்தை திரு_வார்த்தை என்றே ஆய்வுறக் கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனை-தான் அடியொடு வேரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை பேய் மதியா நீ எனை-தான் அறியாயோ எல்லாம் பெற்றவன்-தன் செல்வாக்குப் பெற்ற பிள்ளை நானே.

மேல்

#6 மயங்கு புத்தி எனும் உலக வழக்காளி_பயலே வழி துறை ஈது என்று அறியாய் வகை சிறிதும் அறியாய் உயங்கி விசாரித்திடவே ஓடுகின்றாய் உணரும் உளவு அறியாய் வீண் உழைப்பு இங்கு உழைப்பதில் என் பயனோ வயங்கு மனம் அடங்கியவாறு அடங்குக நீ இலையேல் மடித்திடுவேன் கணத்தில் உனை வாய்மை இது கண்டாய் இயங்க என்னை அறியாயோ யார் என எண்ணினையோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே.

மேல்

#7 கலை அறியாச் சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் நிலை அறியாய் ஒன்றை ஒன்றா நிச்சயித்து இ உலகை நெறி மயங்க மயக்குகின்றாய் நீயோ இங்கு உறுவாய் அலை அறியாக் கடல் போலே அசைவு அற நின்றிடு நீ அசைவாயேல் அக்கணத்தே அடக்கிடுவேன் உனை-தான் அலைவு அறிவாய் என்றனை நீ அறியாயோ நான்-தான் ஆண்டவன்-தன் தாண்டவம் கண்டு அமர்ந்த பிள்ளை காணே.

மேல்

#8 அகங்காரம் எனும் பொல்லா அடவாதி_பயலே அடுக்கடுக்காய் எடுக்கின்றாய் அடுத்து முடுக்கின்றாய் செகம் காணத் தலை_காலும் தெரியாமல் அலைந்து திரிகின்றாய் நின் செபம்-தான் சிறிதும் நடவாது இகம் காண அடங்குக நீ அடங்காயேல் கணத்தே இருந்த இடம் தெரியாதே எரிந்திடச்செய்திடுவேன் சுகம் காண என்றனை நீ அறியாயோ நான்-தான் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்ற பிள்ளை காணே.

மேல்

#9 மான் எனும் ஓர் சகச்சாலச் சிறுக்கி இது கேள் உன் வஞ்சகக் கூத்து எல்லாம் ஓர் மூட்டை எனக் கட்டி ஈனமுற நின் தலை மேல் ஏற்றெடுத்துக்கொண்டு உன் ஏவல் புரி பெண்களொடே இவ்விடம் விட்டு ஏகிக் கான் அடைந்து கருத்து அடங்கிப் பிழைத்திடு நீ இலையேல் கணத்தில் உனை மாய்ப்பேன் உன் கணத்தினொடும் கண்டாய் ஏன் எனை நீ அறியாயோ சிற்சபையில் நடம் செய் இறைவன் அருள்_பெரும்_ஜோதிக்கு இனிய பிள்ளை நானே.

மேல்

#10 மாயை எனும் படு திருட்டுச் சிறுக்கி இது கேள் உன் மாயை எலாம் சுமைசுமையா வரிந்து கட்டிக்கொண்டு உன் சாயை எனும் பெண் இனத்தார் தலை மேலும் உனது தலை மேலும் சுமந்துகொண்டு ஓர் சந்து வழி பார்த்தே பேய் எனக் காட்டிடை ஓடிப் பிழைத்திடு நீ இலையேல் பேசும் முன்னே மாய்த்திடுவேன் பின்னும் முன்னும் பாரேன் ஆய் எனை நீ அறியாயோ எல்லாம் செய் வல்லார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை நானே.

மேல்

#11 மாமாயை எனும் பெரிய வஞ்சக நீ இது கேள் வரைந்த உன்றன் பரிசனப் பெண் வகை_தொகைகள் உடனே போமாறு உன் செயல் அனைத்தும் பூரணமாக் கொண்டுபோன வழி தெரியாதே போய் பிழை நீ இலையேல் சாமாறு உன்றனை இன்றே சாய்த்திடுவேன் இது-தான் சத்தியம் என்று எண்ணுதி என்றன்னை அறியாயோ ஆமாறு சிற்சபையில் அருள் நடனம் புரிவார் அருள் அமுது உண்டு அருள் நிலை மேல் அமர்ந்த பிள்ளை காணே.

மேல்

#12 கன்மம் எனும் பெரும் சிலுகுக் கடும் கலக_பயலே கங்கு_கரை காணாத கடல் போலே வினைகள் நன்மையொடு தீமை எனப் பல விகற்பம் காட்டி நடத்தினை நின் நடத்தை எலாம் சிறிதும் நடவாது என் முன் இருந்தனை எனில் நீ அழிந்திடுவாய் அதனால் இக்கணத்தே நின் இனத்தோடு ஏகுக நீ இலையேல் இன்மையுற மாய்த்திடுவேன் என்னை அறியாயோ எல்லாம் செய் வல்லவனுக்கு இனிய பிள்ளை நானே.

மேல்

#13 எத்துணையும் காட்டாத ஆணவம் என்றிடும் ஓர் இருட்டு அறைக்கு ஓர் அதிகாரக் குருட்டு முட_பயலே இத்தனை நாள் பிடித்தது உனைக் கண்டு துரத்திடவே இன்னும் அரை_கணம் தரியேன் இக்கணத்தே நினது பொத்திய சுற்றத்துடனே போய்விடுதி இலையேல் பூரண மெய் அருள் ஒளியால் பொன்றுவிப்பேன் நினையே சத்தியம் சொன்னேன் எனை நீ அறியாயோ ஞான சபைத் தலைவன் தரு தலைமைத் தனிப் பிள்ளை நானே.

மேல்

#14 பெருமாயை என்னும் ஒரு பெண்_பிள்ளை நீ-தான் பெற்ற உடம்பு இது சாகாச் சுத்த உடம்பு ஆக்கி ஒரு ஞானத் திரு_அமுது உண்டு ஓங்குகின்றேன் இனி நின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன் அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே.

மேல்

#15 பேசு திரோதாயி எனும் பெண் மடவாய் இது கேள் பின்_முன் அறியாது எனை நீ என் முன் மறைக்காதே வேசு அற மா மல இரவு முழுதும் விடிந்தது காண் வீசும் அருள்_பெரும்_ஜோதி விளங்குகின்றது அறி நீ ஏசுறு நின் செயல் அனைத்தும் என்னளவில் நடவாது இதை அறிந்து விரைந்து எனைவிட்டு ஏகுக இக்கணத்தே மாசு அறும் என் சரிதம் ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம்_வல்ல ஒரு சித்தருக்கே நல்ல பிள்ளை நானே.

மேல்

#16 தூக்கம் எனும் கடை_பயலே சோம்பேறி இது கேள் துணிந்து உனது சுற்றமொடு சொல்லும் அரை_கணத்தே தாக்கு பெரும் காட்டகத்தே ஏகுக நீ இருந்தால் தப்பாது உன் தலை போகும் சத்தியம் ஈது அறிவாய் ஏக்கம் எலாம் தவிர்த்துவிட்டேன் ஆக்கம் எலாம் பெற்றேன் இன்பமுறுகின்றேன் நீ என்னை அடையாதே போக்கில் விரைந்து ஓடுக நீ பொன்_சபை சிற்சபை வாழ் பூரணர்க்கு இங்கு அன்பான பொருளன் என அறிந்தே.

மேல்

#17 பயம் எனும் ஓர் கொடும் பாவி_பயலே நீ இது கேள் பற்று அற என்றனை விடுத்துப் பனிக் கடல் வீழ்ந்து ஒளிப்பாய் தயவின் உரைத்தேன் இன்னும் இருத்தி எனில் உனது தன் தலைக்குத் தீம்பு வரும் தலை மட்டோ நினது செயலுறும் உள் உடம்பு அழியும் சுற்றம் எலாம் இறக்கும் தீர்ந்தது இனி இல்லை என்றே திரு_வார்த்தை பிறக்கும் அயலிடை நேர்ந்து ஓடுக நீ என்னை அறியாயோ அம்பலத்து என் அப்பன் அருள் நம்பு பிள்ளை நானே.

மேல்

#18 கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோகக் கடை_பயலே குறும்பு மத_பயலே தாப உலோப_பயலே மாற்சரிய_பயலே தயவுடன் இங்கு இசைக்கின்றேன் தாழ்ந்து இருக்காதீர் காண் தீபம் எலாம் கடந்து இருள் சேர் நிலம் சாரப் போவீர் சிறிது பொழுது இருந்தாலும் திண்ணம் இங்கே அழிவீர் சாபமுறா முன்னம் அறிந்து ஓடு-மினோ என்னை-தான் அறியீர் தனித் தலைவன் தலை_பிள்ளை நானே.

மேல்

#19 பசி எனும் ஓர் பெரும்_பாவி_பயலே துன்பு எனும் ஓர் படு_பாவி_பயலே ஆபத்து எனும் பொய்_பயலே வசி அவத்தைக் கடை_பயலே தடை_பயலே இடராம் வன்_பயலே நீவீர் எலாம் என் புடை நில்லாதீர் நசிய உமக்கு உளம் உளதோ இக்கணத்தே நீவீர் நடந்து விரைந்து ஓடு-மினோ நாடு அறியா வனத்தே கசியும் மனத்து எனை அறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள் மகிழ்ந்து அளித்த தனிக் கதிர்_பிள்ளை நானே.

மேல்

#20 மரணம் எனும் பெரும் திருட்டு மா_பாவி_பயலே வையகமும் வானகமும் மற்றகமும் கடந்தே பரணமுறு பேர்_இருட்டுப் பெரு நிலமும் தாண்டிப் பசை அற நீ ஒழிந்திடுக இங்கு இருந்தாய் எனிலோ இரணமுற உனை முழுதும் மடித்திடுவேன் இது-தான் என்_உடையான் அருள் ஆணை என் குரு மேல் ஆணை அரணுறும் என்றனை விடுத்தே ஓடுக நீ நான்-தான் அருள்_பெரும்_ஜோதிப் பதியை அடைந்த பிள்ளை காணே.

@87. பேறடைவு

மேல்

#1 மணம் புரி கடிகை இரண்டரை எனும் ஓர் வரை உளது ஆதலால் மகனே எணம் புரிந்து உழலேல் சவுளம் ஆதிய செய்து எழிலுறு மங்கலம் புனைந்தே குணம் புரிந்து எமது மகன் எனும் குறிப்பைக் கோலத்தால் காட்டுக எனவே வணம் புரி மணி மா மன்றில் என் தந்தை வாய்_மலர்ந்து அருளினர் மகிழ்ந்தே.

மேல்

#2 எம் பொருள் எனும் என் அன்பு உடை மகனே இரண்டரைக் கடிகையில் உனக்கே அம்புவி வானம் அறிய மெய் அருளாம் அனங்கனை தனை மணம் புரிவித்து உம்பரும் வியப்ப உயர் நிலை தருதும் உண்மை ஈது ஆதலால் உலகில் வெம்புறு துயர் தீர்ந்து அணிந்துகொள் என்றார் மெய்ப் பொது நடத்து இறையவரே.

மேல்

#3 அன்பு உடை மகனே மெய் அருள் திருவை அண்டர்கள் வியப்புற நினக்கே இன்பு உடை உரிமை மணம் புரிவிப்பாம் இரண்டரைக் கடிகையில் விரைந்தே துன்பு உடையவைகள் முழுவதும் தவிர்ந்தே தூய்மை சேர் நல் மணக் கோலம் பொன் புடை விளங்கப் புனைந்துகொள் என்றார் பொது நடம் புரிகின்றார் தாமே.

மேல்

#4 ஈது கேள் மகனே மெய் அருள் திருவை இரண்டரைக் கடிகையில் நினக்கே ஊதியம் பெறவே மணம் புரிவிப்பாம் உண்மை ஈது ஆதலால் இனி வீண் போது போக்காமல் மங்கலக் கோலம் புனைந்து உளம் மகிழ்க நீ என்றார் தீது தீர்த்து என்னை இளந்தையில் தானே தெருட்டிய சிற்சபையவரே.

மேல்

#5 விரைந்து கேள் மகனே உலகு எலாம் களிக்க மெய் அருள் திருவினை நினக்கே வரைந்து நல் மணம் செய்து ஒரு பெரு நிலையில் வைத்து வாழ்விக்கின்றோம் அதனால் இரைந்து உளம் கவலேல் இரண்டரைக் கடிகை எல்லையுள் எழில் மணக் கோலம் நிரைந்துறப் புனைதி என்று வாய்_மலர்ந்தார் நிருத்தம் செய் ஒருத்தர் உள் உவந்தே.

மேல்

#6 களிப்பொடு மகனே அருள் ஒளித் திருவைக் கடிகை ஓர் இரண்டரை அதனில் ஒளிப்பு இலாது உலகம் முழுவதும் அறிய உனக்கு நல் மணம் புரிவிப்பாம் அளிப்புறு மகிழ்வால் மங்கலக் கோலம் அணி பெறப் புனைக நீ விரைந்தே வெளிப்பட உரைத்தாம் என்றனர் மன்றில் விளங்கு மெய்ப்பொருள் இறையவரே.

மேல்

#7 கலங்கிடேல் மகனே அருள் ஒளித் திருவைக் களிப்பொடு மணம் புரிவிப்பாம் விலங்கிடேல் வீணில் போது போக்காமல் விரைந்து நல் மங்கலக் கோலம் நலம் கொளப் புனைந்து மகிழ்க இ உலகர் நவிலும் அ உலகவர் பிறரும் இலங்க நின் மணமே ஏத்துவர் என்றார் இயலுறு சிற்சபையவரே.

மேல்

#8 ஐயுறேல் இது நம் ஆணை நம் மகனே அருள் ஒளித் திருவை நின்றனக்கே மெய்யுறு மகிழ்வால் மணம் புரிவிப்பாம் விரைந்து இரண்டரைக் கடிகையிலே கையறவு அனைத்தும் தவிர்ந்து நீ மிகவும் களிப்பொடு மங்கலக் கோலம் வையமும் வானும் புகழ்ந்திடப் புனைக என்றனர் மன்று இறையவரே.

மேல்

#9 தூங்கலை மகனே எழுக நீ விரைந்தே தூய நீர் ஆடுக துணிந்தே பாங்குற ஓங்கு மங்கலக் கோலம் பண்பொடு புனைந்துகொள் கடிகை ஈங்கு இரண்டரையில் அருள் ஒளித் திருவை எழிலுற மணம் புரிவிப்பாம் ஏங்கலை இது நம் ஆணை காண் என்றார் இயல் மணி மன்று இறையவரே.

மேல்

#10 மயங்கிடேல் மகனே அருள் ஒளித் திருவை மணம் புரிவிக்கின்றாம் இதுவே வயங்கு நல் தருணக் காலை காண் நீ நல் மங்கலக் கோலமே விளங்க இயம் கொளப் புனைதி இரண்டரைக் கடிகை எல்லையுள் என்று வாய்_மலர்ந்தார் சயம் கொள எனக்கே தண் அமுது அளித்த தந்தையார் சிற்சபையவரே.

@88. அடைக்கலம் புகுதல்

மேல்

#1 எண்ணாநின்றேன் எண்ணம் எலாம் எய்த அருள்செய்கின்ற தனித் தண் ஆர் அமுதே சிற்சபையில் தனித்த தலைமைப் பெரு வாழ்வே கண் ஆர் ஒளியே ஒளி எல்லாம் கலந்த வெளியே கருதுறும் என் அண்ணா ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

மேல்

#2 திரை சேர் மறைப்பைத் தீர்த்து எனக்கே தெரியா எல்லாம் தெரிவித்துப் பரை சேர் ஞானப் பெருவெளியில் பழுத்த கொழுத்த பழம் தந்தே கரை சேர் இன்பக் காட்சி எலாம் காட்டிக் கொடுத்தே எனை ஆண்ட அரைசே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

மேல்

#3 தேனே அமுதே சிற்சபையில் சிவமே தவமே செய்கின்றோர் ஊனே புகுந்த ஒளியே மெய் உணர்வே என்றன் உயிர்க்குயிராம் வானே என்னைத் தான் ஆக்குவானே கோனே எல்லாம்_வல் லானே ஐயா அம்மா என் அப்பா யான் உன் அடைக்கலமே.

மேல்

#4 கடையேன் உள்ளக் கவலை எலாம் கழற்றிக் கருணை அமுது அளித்து என் புடையே அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் விளங்கும் புண்ணியனே தடையே தவிர்க்கும் கனகசபைத் தலைவா ஞான சபாபதியே அடையேன் உலகை உனை அடைந்தேன் அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#5 இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச் சகத்து_உள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என வைத்து என்னுடைய அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#6 நீண்ட மறைகள் ஆகமங்கள் நெடுநாள் முயன்று வருந்திநின்று வேண்ட அவைகட்கு ஒருசிறிதும் விளங்கக் காட்டாது என் மொழியைப் பூண்ட அடியை என் தலை மேல் பொருந்தப் பொருத்தி என்றன்னை ஆண்ட கருணைப் பெரும் கடலே அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#7 பாடும் சிறியேன் பாட்டு அனைத்தும் பலிக்கக் கருணை பாலித்துக் கோடு மனப் பேய்க் குரங்காட்டம் குலைத்தே சீற்றக் கூற்று ஒழித்து நீடும் உலகில் அழியாத நிலை மேல் எனை வைத்து என் உளத்தே ஆடும் கருணைப் பெரு வாழ்வே அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#8 கட்டுக்கடங்கா மனப் பரியைக் கட்டும் இடத்தே கட்டுவித்து என் மட்டுக்கு அடங்கா ஆங்கார மத_மா அடங்க அடக்குவித்தே எட்டுக்கு இசைந்த இரண்டும் எனக்கு இசைவித்து எல்லா இன் அமுதும் அட்டுக் கொடுத்தே அருத்துகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#9 புல்லும் களபப் புணர் முலையார் புணர்ப்பும் பொருளும் பூமியும் என் தொல்லும் உலகப் பேர்_ஆசை உவரி கடத்தி எனது மனக் கல்லும் கனியக் கரைவித்துக் கருணை அமுதம் களித்து அளித்தே அல்லும்_பகலும் எனது உளத்தே அமர்ந்தோய் யான் உன் அடைக்கலமே.

மேல்

#10 பிச்சம் கவரி நிழற்றி அசைத்திட மால் யானைப் பிடரியின் மேல் நிச்சம் பவனி வருகின்ற நிபுணர் எல்லாம் தொழுது ஏத்த எச்சம் புரிவோர் போற்ற எனை ஏற்றா நிலை மேல் ஏற்றுவித்து என் அச்சம் தவிர்த்தே ஆண்டுகொண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

மேல்

#11 இருளைக் கெடுத்து என் எண்ணம் எலாம் இனிது முடிய நிரம்புவித்து மருளைத் தொலைத்து மெய்ஞ்ஞான வாழ்வை அடையும் வகை புரிந்து தெருளைத் தெளிவித்து எல்லாம் செய் சித்தி நிலையைச் சேர்வித்தே அருளைக் கொடுத்து என்றனை ஆண்டோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

@89. இறை வர வியம்பல்

மேல்

#1 அப்பன் வரு தருணம் இதே ஐயம் இலை கண்டாய் அஞ்சாதே அஞ்சாதே அகிலம் மிசை உள்ளார்க்கு எய்ப்பு அறவே சத்தியம் என்று உரைத்திடு நின் உரைக்கு ஓர் எள்ளளவும் பழுது வராது என் இறைவன் ஆணை இப் புவியோ வானகமும் வானகத்தின் புறத்தும் எவ்வுயிரும் எவ்வெவரும் ஏத்தி மகிழ்ந்திடவே செப்பமுறு திரு_அருள் பேர்_ஒளி வடிவாய்க் களித்தே செத்தாரை எழுப்புதல் நாம் திண்ணம் உணர் மனனே.

மேல்

#2 இறைவன் வரு தருணம் இதே இரண்டு_இலை அஞ்சலை நீ எள்ளளவும் ஐயமுறேல் எவ்வுலகும் களிப்ப நிறை மொழி கொண்டு அறைக இது பழுது வராது இறையும் நீ வேறு நினைத்து அயரேல் நெஞ்சே நான் புகன்ற முறை மொழி என்னுடையவன் தான் மொழிந்த மொழி எனக்கு ஓர் மொழி இலை என் உடல் ஆவி முதல் அனைத்தும் தானே பொறையுறக் கொண்டு அருள் ஜோதி தன் வடிவம் உயிரும் பொருளும் அணித்து எனைத் தானாப் புணர்த்தியது காணே

மேல்

#3 என் இறைவன் வரு தருணம் இது கண்டாய் இதற்கு ஓர் எள்துணையும் ஐயம் இலை என்னுள் இருந்து எனக்கே தன் அருள் தெள் அமுது அளிக்கும் தலைவன் மொழி இது-தான் சத்தியம் சத்தியம் நெஞ்சே சற்றும் மயக்கு அடையேல் மன் உலகத்து உயிர்கள் எலாம் களித்து வியந்திடவே வகுத்து உரைத்துத் தெரிந்திடுக வரு நாள் உன் வசத்தால் உன்னி உரைத்திட முடியாது ஆதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே.

மேல்

#4 எல்லாம் செய் வல்ல தனிப் பெரும் தலைமைச் சித்தன் என மறை ஆகமம் புகலும் என் இறைவன் மகிழ்ந்தே நல்லார்கள் வியக்க எனக்கு இசைத்தபடி இங்கே நான் உனக்கு மொழிகின்றேன் நன்று அறிவாய் மனனே பல்லாரும் களிப்பு அடையப் பகல் இரவும் தோற்றாப் பண்பின் அருள்_பெரும்_ஜோதி நண்பினொடு நமக்கே எல்லா நன்மைகளும் உற வரு தருணம் இதுவே இ உலகம் உணர்ந்திட நீ இசைத்திடுக விரைந்தே.

மேல்

#5 கரு_நாள்கள் அத்தனையும் கழிந்தன நீ சிறிதும் கலக்கமுறேல் இது தொடங்கிக் கருணை நடப் பெருமான் தரு நாள் இ உலகம் எலாம் களிப்பு அடைய நமது சார்பின் அருள்_பெரும்_ஜோதி தழைத்து மிக விளங்கும் திரு_நாள்கள் ஆம் இதற்கு ஓர் ஐயம் இலை இது-தான் திண்ணம் இதை உலகு அறியத் தெரித்திடுக மனனே வரும் நாளில் உரைத்திடலாம் என நினைத்து மயங்கேல் வரும் நாளில் இன்ப மயம் ஆகி நிறைவாயே.

மேல்

#6 உள்ளபடி உரைக்கின்றேன் சத்தியமாம் உரை ஈது உணர்ந்திடுக மனனே நீ உலகம் எலாம் அறிய வள்ளல் வரு தருணம் இது தருணம் இதே என்று வகுத்து உரைத்துத் தெரித்திடுக மயக்கம் அணுத்துணையும் கொள்ளலை என் குருநாதன் அருள் ஜோதிப் பெருமான் குறிப்பு இது என் குறிப்பு எனவும் குறியாதே கண்டாய் நள் உலகில் இனி நாளைக்கு உரைத்தும் எனத் தாழ்க்கேல் நாளை தொட்டு நமக்கு ஒழியா ஞான நடக் களிப்பே.

மேல்

#7 மாயை வினை ஆணவமா மலங்கள் எலாம் தவிர்த்து வாழ்வு அளிக்கும் பெரும் கருணை வள்ளல் வரு தருணம் மேயது இதுவாம் இதற்கு ஓர் ஐயம் இலை இங்கே விரைந்து உலகம் அறிந்திடவே விளம்புக நீ மனனே நாயகன்-தன் குறிப்பு இது என் குறிப்பு என நீ நினையேல் நாளைக்கே விரித்து உரைப்பேம் என மதித்துத் தாழ்க்கேல் தூய திரு அருள் ஜோதித் திரு_நடம் காண்கின்ற தூய திரு_நாள் வரு நாள் தொடங்கி ஒழியாவே.

மேல்

#8 மாற்று உரைக்க முடியாத திரு_மேனிப் பெருமான் வரு தருணம் இது கண்டாய் மனனே நீ மயங்கேல் நேற்று உரைத்தேன்_இலை உனக்கு இங்கு இவ்வாறு என் இறைவன் நிகழ்த்துக இன்று என்றபடி நிகழ்த்துகின்றேன் இது-தான் கூற்று உதைத்த திரு_அடி மேல் ஆணை இது கடவுள் குறிப்பு எனக் கொண்டு உலகம் எலாம் குதுகலிக்க விரைந்தே சாற்றிடுதி வரு நாளில் உரைத்தும் எனத் தாழ்க்கேல் தனித் தலைவன் அருள் நடம் செய் சாறு ஒழியா இனியே.

மேல்

#9 ஏதும் அறியாச் சிறிய பயல்களினும் சிறியேன் இப் பெரிய வார்த்தை-தனக்கு யான் ஆர் என் இறைவன் ஓதுக நீ என்றபடி ஓதுகின்றேன் மனனே உள்ளபடி சத்தியம் ஈது உணர்ந்திடுக நமது தீது முழுதும் தவிர்த்தே சித்தி எலாம் அளிக்கத் திரு_அருளாம் பெரும் ஜோதி அப்பன் வரு தருணம் ஈது இதுவே என்று உலகம் அறிய விரைந்து உரைப்பாய் எல்லாரும் களிப்பு அடைந்து உள் இசைந்து ஏத்தியிடவே.

மேல்

#10 தனித் தலைவன் எல்லாம் செய் வல்ல சித்தன் ஞான சபைத் தலைவன் என் உளத்தே தனித்து இருந்து உள் உணர்த்தக் கனித்த உளத்தொடும் உணர்ந்தே உணர்த்துகின்றேன் இதை ஓர் கதை என நீ நினையேல் மெய்க் கருத்துரை என்று அறிக இனித்த அருள்_பெரும்_சோதி ஆணை எல்லாம் உடைய இறைவன் வரு தருணம் இது சத்தியமாம் இதனைப் பனித்த உலகவர் அறிந்தே உய்யும் வகை இன்னே பகர்ந்திடுக நாளை அருள் பரம சுகச் சாறே.

@90. திருப்பள்ளி எழுச்சி

மேல்

#1 பொழுது விடிந்தது என் உள்ள மென் கமலம் பூத்தது பொன் ஒளி பொங்கியது எங்கும் தொழுது நிற்கின்றனன் செய் பணி எல்லாம் சொல்லுதல் வேண்டும் என் வல்ல சற்குருவே முழுதும் ஆனான் என ஆகம வேத முறைகள் எலாம் மொழிகின்ற முன்னவனே எழுதுதல் அரிய சீர் அருள்_பெரும்_சோதி என் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#2 துற்குண மாயை போய்த் தொலைந்தது ஞானம் தோன்றிடப் பொன் ஒளி தோற்றிய கதிர்-தான் சிற்குண வரை மிசை உதயம்செய்தது மா சித்திகள் அடிப் பணி செய்திடச் சூழ்ந்த நல்_குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம்பண்ணி நிற்கின்றார் எற்கு உணவு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அம்மையே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#3 நிலம் தெளிந்தது கணம் மழுங்கின சுவண நீடு ஒளி தோன்றிற்றுக் கோடு ஒலிக்கின்ற அலர்ந்தது தாமரை ஆணவ இருள் போய் அழிந்தது கழிந்தது மாயை மால் இரவு புலர்ந்தது தொண்டரோடு அண்டரும் கூடிப் போற்றியோ சிவசிவ போற்றி என்கின்றார் இலங்கு உரு அளித்த என் அருள்_பெரும்_சோதி என் குருவே பள்ளி எழுந்தருளாயே.

மேல்

#4 கல்லாய மனங்களும் கரையப் பொன் ஒளி-தான் கண்டது கங்குலும் விண்டது தொண்டர் பல்லாரும் எய்தினர் பாடிநின்று ஆடிப் பரவுகின்றார் அன்பு விரவுகின்றாராய் நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே எல்லாம் செய் வல்ல என் அருள்_பெரும்_சோதி என் தெய்வமே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#5 புன் மாலை இரவு எலாம் புலர்ந்தது ஞானப் பொருப்பின் மேல் பொன் கதிர் பொலிந்தது புலவோர் சொல்_மாலை தொடுத்தனர் துதித்து நிற்கின்றார் சுத்த சன்மார்க்க சங்கத்தவர் எல்லாம் மன் மாலை மாலையா வந்து சூழ்கின்றார் வானவர் நெருங்கினர் வாழி என்கின்றார் என் மாலை அணிந்த என் அருள்_பெரும்_சோதி என் பதியே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#6 ஒருமையின் உலகு எலாம் ஓங்குக எனவே ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் பெருமை கொள் சமரச சுத்த சன்மார்க்கப் பெரும் புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் அருமையும் எளிமையும் ஆகி அன்று ஆகி அம்பலத்தே சித்தி ஆடல் செய் பதியே இருமையும் அளித்த என் அருள்_பெரும்_சோதி என் அரசே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#7 சினைப் பள்ளித்தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் சிவசிவ போற்றி என்று உவகை கொள்கின்றார் நினைப்பு அள்ளி உண்ணத் தெள் ஆர்_அமுது அளிக்கும் நேரம் இ நேரம் என்று ஆரியர் புகன்றார் முனைப் பள்ளி பயிற்றாது என்றனைக் கல்வி பயிற்றி முழுது உணர்வித்து உடல் பழுது எலாம் தவிர்த்தே எனைப் பள்ளி எழுப்பிய அருள்_பெரும்_சோதி என் அப்பனே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#8 மதம்_பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான் கதம்_பிடித்தவர் எல்லாம் கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார் பதம் பிடித்தவர் எல்லாம் அம்பலப் பாட்டே பாடினர் ஆடினர் பரவி நிற்கின்றார் இதம் பிடித்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் அய்யனே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#9 மருளொடு மாயை போய்த் தொலைந்தது மதங்கள் வாய் மூடிக்கொண்டன மலர்ந்தது கமலம் அருள் ஒளி விளங்கியதொரு திரு_சபையும் அலங்கரிக்கின்றனர் துலங்கி வீற்றிருக்கத் தெருளொடு பொருளும் மேன்மேல் எனக்கு அளித்துச் சித்து எலாம் செய்திடத் திரு_அருள் புரிந்தே இருள் அறுத்து எனை ஆண்ட அருள்_பெரும்_சோதி என் வள்ளலே பள்ளி எழுந்தருள்வாயே.

மேல்

#10 அலங்கரிக்கின்றோம் ஓர் திரு_சபை அதிலே அமர்ந்து அருள் சோதி கொண்டு அடிச் சிறியோமை வலம் பெறும் இறவாத வாழ்வில் வைத்திடவே வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் விலங்கியது இருள் எலாம் விடிந்தது பொழுது விரைந்து எமக்கு அருளுதல் வேண்டும் இத் தருணம் இலங்கு நல் தருணம் எம் அருள்_பெரும்_சோதி எம் தந்தையே பள்ளி எழுந்தருள்வாயே.

@91. இன்பத் திறன்

மேல்

#1 உலகு புகழ் திரு_அமுதம் திரு_சிற்றம்பலத்தே உடையவர் இன்று உதவினர் நான் உண்டு குறை தீர்ந்தேன் இலகு சிவபோக வடிவு ஆகி மகிழ்கின்றேன் இளைப்பு அறியேன் தவிப்பு அறியேன் இடர் செய் பசி அறியேன் விலகல் இலாத் திரு_அனையீர் நீவிர் எலாம் பொசித்தே விரைந்து வம்-மின் அம்பலத்தே விளங்கு திரு_கூத்தின் அலகு_அறியாத் திறம் பாடி ஆடுதும் நாம் இதுவே அருள் அடையும் நெறி என வேதாகமம் ஆர்ப்பனவே.

மேல்

#2 மா தவத்தால் நான் பெற்ற வான் அமுதே எனது வாழ்வே என் கண் அமர்ந்த மணியே என் மகிழ்வே போது அவத்தால் கழித்தேனை வலிந்து கலந்து ஆண்ட பொன்னே பொன்_அம்பலத்தே புனித நடத்து அரசே தீது அவத்தைப் பிறப்பு இதுவே சிவம் ஆகும் பிறப்பாச் செய்வித்து என் அவத்தை எலாம் தீர்த்த பெரும் பொருளே பூதலத்தே அடிச் சிறியேன் நினது திரு_அடிக்கே புகழ்_மாலை சூட்டுகின்றேன் புனைந்து கலந்து அருளே.

மேல்

#3 அளந்திடு வேதாகமத்தின் அடியும் நடு முடியும் அப்புறமும் அப்பாலும் அதன் மேலும் விளங்கி வளர்ந்திடு சிற்றம்பலத்தே வயங்கிய பேர்_ஒளியே மாற்று அறியாப் பொன்னே என் மன்னே கண்மணியே தளர்ந்த எனை அக்கணத்தே தளர்வு ஒழித்து ஆனந்தம் தந்த பெருந்தகையே என் தனித்த தனித் துணைவா உளம் தரு சம்மதமான பணி இட்டாய் எனக்கே உன் பணியே பணி அல்லால் என் பணி வேறு இலையே.

மேல்

#4 நாடு கலந்து ஆள்கின்றோர் எல்லாரும் வியப்ப நண்ணி எனை மாலையிட்ட நாயகனே நாட்டில் ஈடு கரைந்திடற்கு அரிதாம் திரு_சிற்றம்பலத்தே இன்ப நடம் புரிகின்ற இறையவனே எனை நீ பாடுக என்னோடு கலந்து ஆடுக என்று எனக்கே பணி இட்டாய் நான் செய் பெரும் பாக்கியம் என்று உவந்தேன் கோடு தவறாது உனை நான் பாடுதற்கு இங்கு ஏற்ற குணப் பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்து அருளே.

மேல்

#5 நண்பு_உடையாய் என்னுடைய நாயகனே எனது நல் உறவே சிற்சபையில் நடம் புரியும் தலைவா எண்பு உடையா மறை முடிக்கும் எட்டா நின் புகழை யாது அறிவேன் பாடுக என்று எனக்கு ஏவல் இட்டாய் பண்பு உடை நின் மெய் அன்பர் பாடிய பேர்_அன்பில் பழுத்த பழம் பாட்டில் ஒரு பாட்டும் அறியேனே தண்பு உடை நல் மொழித் திரளும் சுவைப் பொருளும் அவைக்கே தக்க இயல் இலக்கியமும் தந்து அருள்வாய் எனக்கே.

மேல்

#6 பணிந்து அடங்கும் மனத்தவர்-பால் பரிந்து அமரும் பதியே பாடுகின்றோர் உள்ளகத்தே கூடுகின்ற குருவே கணிந்த மறை பல கோடி ஆகமம் பல் கோடி கடவுள் நினது அருள் புகழைக் கணிப்பதற்குப் பல கால் துணிந்துதுணிந்து எழுந்தெழுந்து தொடர்ந்துதொடர்ந்து அடிகள் சுமந்துசுமந்து இளைத்திளைத்துச் சொல்லிய அல்லன என்று அணிந்த மொழி மாற்றி வலி தணிந்த என்றால் அந்தோ அடியேன் நின் புகழ் உரைக்கல் ஆவதுவோ அறிந்தே.

மேல்

#7 விதிப்பவர்கள் பல கோடி திதிப்பவர் பல் கோடி மேலவர்கள் ஒரு கோடி விரைந்துவிரைந்து உனையே மதிப்பவர்கள் ஆகி அவர் மதியாலே பல கால் மதித்துமதித்து அவர் மதி பெண்_மதி ஆகி அலந்தே துதிப்பதுவே நலம் எனக் கொண்டு இற்றை வரை ஏற்ற சொல் பொருள்கள் காணாதே சுழல்கின்றார் என்றால் குதிப்பு ஒழியா மனச் சிறிய குரங்கொடு உழல்கின்றேன் குறித்து உரைப்பேன் என்ன உளம் கூசுகின்றது அரசே.

மேல்

#8 ஒளி ஆகி உள் ஒளியாய் உள் ஒளிக்குள் ஒளியாய் ஒளி ஒளியின் ஒளியாய் அ ஒளிக்குளும் ஓர் ஒளியாய் வெளி ஆகி வெளி வெளியாய் வெளியிடை மேல் வெளியாய் மேல்_வெளி மேல் பெருவெளியாய்ப் பெருவெளிக்கு ஓர் வெளியாய் அளி ஆகி அது ஆகி அதுவும் அல்லாது ஆகி அப்பாலாய் அப்பாலும் அல்லதுவாய் நிறைவாம் தளி ஆகி எல்லாமாய் விளங்குகின்ற ஞான சபைத் தலைவா நின் இயலைச் சாற்றுவது எவ்வணமே.

மேல்

#9 வாக்கு ஒழிந்து மனம் ஒழிந்து மதி ஒழிந்து மதியின் வாதனையும் ஒழிந்து அறிவாய் வயங்கிநின்ற இடத்தும் போக்கு ஒழிந்தும் வரவு ஒழிந்தும் பூரணமாய் அதுவும் போன பொழுது உள்ளபடி புகலுவது எப்படியோ நீக்கு ஒழிந்த நிறைவே மெய் நிலையே என்னுடைய நேயமே ஆனந்த நிருத்தம் இடும் பதியே ஏக்கு_ஒழிந்தார் உளத்து இருக்கும் இறையே என் குருவே எல்லாமாய் அல்லதுமாய் இலங்கிய மெய்ப்பொருளே.

மேல்

#10 என் இயலே யான் அறியேன் இ உலகின் இயல் ஓர் எள்ளளவும் தான் அறியேன் எல்லாமும் உடையோய் நின் இயலை அறிவேனோ அறிந்தவனே போல நிகழ்த்துகின்றேன் பிள்ளை என நிலைப் பெயர் பெற்றிருந்தேன் தன் இயலாம் தனி ஞான சபைத் தலைமைப் பதியே சத்தியனே நித்தியனே தயாநிதியே உலகம் பின் இயல் மானிடப் பிள்ளை பேச்சினும் ஓர் பறவைப் பிறப்பின் உறும் கிளி_பிள்ளைப் பேச்சு உவக்கின்றதுவே.

@92. உற்ற துரைத்தல்

மேல்

#1 துனி நாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம் பலிக்கும் கனி நாள் இதுவே என்று அறிந்தேன் கருத்து மலர்ந்தேன் களிப்புற்றேன் தனி நாயகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே இனி நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே.

மேல்

#2 அருளும் பொருளும் யான் பெறவே அடுத்த தருணம் இது என்றே தெருளும்படி நின் அருள் உணர்த்தத் தெரிந்தேன் துன்பத் திகைப்பு ஒழிந்தேன் மருளும் மனம்-தான் என்னுடைய வசத்தே நின்று வயங்கியதால் இருளும் தொலைந்தது இனிச் சிறிதும் இளைக்க_மாட்டேன் எனக்கு அருளே.

மேல்

#3 அருளே உணர்த்த அறிந்துகொண்டேன் அடுத்த தருணம் இது என்றே இருளே தொலைந்தது இடர் அனைத்தும் எனை விட்டு அகன்றே ஒழிந்தனவால் தெருளே சிற்றம்பலத்து ஆடும் சிவமே எல்லாம் செய்ய வல்ல பொருளே இனி நான் வீண் போது போக்க_மாட்டேன் கண்டாயே.

மேல்

#4 கண்டே களிக்கும் பின்பாட்டுக் காலை இது என்று அருள் உணர்த்தக் கொண்டே அறிந்துகொண்டேன் நல் குறிகள் பலவும் கூடுகின்ற தொண்டே புரிவார்க்கு அருளும் அருள் சோதிக் கருணைப் பெருமானே உண்டேன் அமுதம் உண்கின்றேன் உண்பேன் துன்பை ஒழித்தேனே.

மேல்

#5 ஒழித்தேன் அவலம் அச்சம் எலாம் ஓடத் துறந்தேன் உறுகண் எலாம் கழித்தேன் மரணக் களைப்பு அற்றேன் களித்தேன் பிறவி_கடல் கடந்தேன் பழித்தேன் சிற்றம்பலம் என்னாப் பாட்டை மறந்தேன் பரம்பரத்தே விழித்தேன் கருத்தின்படி எல்லாம் விளையாடுதற்கு விரைந்தேனே.

மேல்

#6 விரைந்துவிரைந்து படி கடந்தேன் மேல் பால் அமுதம் வியந்து உண்டேன் கரைந்துகரைந்து மனம் உருகக் கண்ணீர் பெருகக் கருத்து அலர்ந்தே வரைந்து ஞான மணம் பொங்க மணி மன்று அரசைக் கண்டுகொண்டேன் திரைந்து நெகிழ்ந்த தோல் உடம்பும் செழும் பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே.

மேல்

#7 தேனே கன்னல் செழும் பாகே என்ன மிகவும் தித்தித்து என் ஊனே புகுந்து என் உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்த ஒரு பொருளை வானே நிறைந்த பெரும் கருணை வாழ்வை மணி மன்று_உடையானை நானே பாடிக் களிக்கின்றேன் நாட்டார் வாழ்த்த நானிலத்தே.

மேல்

#8 நிலத்தே அடைந்த இடர் அனைத்தும் நிமிடத்து ஒழித்தே நிலை பெற்றேன் வலத்தே அழியா_வரம் பெற்றேன் மணி மன்று ஏத்தும் வாழ்வு அடைந்தேன் குலத்தே சமயக் குழியிடத்தே விழுந்து இ உலகம் குமையாதே நலத்தே சுத்த சன்மார்க்கம் நாட்டாநின்றேன் நாட்டகத்தே.

மேல்

#9 அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

மேல்

#10 பெற்றேன் என்றும் இறவாமை பேதம் தவிர்ந்தே இறைவன் எனை உற்றே கலந்தான் நான் அவனை உற்றே கலந்தேன் ஒன்று ஆனேம் எற்றே அடியேன் செய்த தவம் யாரே புரிந்தார் இன் அமுதம் துற்றே உலகீர் நீவிர் எலாம் வாழ்க வாழ்க துனி அற்றே.

@93. சுத்த சிவ நிலை

மேல்

#1 கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் பண்ணில் கலந்தான் என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து.

மேல்

#2 எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் எல்லாம் செய வல்லான் எம் பெருமான் எல்லாமாய் நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் ஒன்று ஆகி நின்றான் உவந்து.

மேல்

#3 எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான் பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் உண்ணுகின்றேன் தெள் அமுதம் உள்ளம் தெளியத் தருகின்றான் வள்ளல் நடராயன் மகிழ்ந்து.

மேல்

#4 சித்தி எலாம் தந்தே திரு_அம்பலத்து ஆடும் நித்தியன் என் உள்ளே நிறைகின்றான் சத்தியம் ஈது அந்தோ உலகீர் அறியீரோ நீவிர் எலாம் சந்தோடமாய் இரு-மின் சார்ந்து.

மேல்

#5 அய்யா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே எய்யேன் மகனே என்று எய்துகின்றான் ஐயோ என் அப்பன் பெரும் கருணை யார்க்கு உண்டு உலகத்தீர் செப்பமுடன் போற்று-மினோ சேர்ந்து.

மேல்

#6 அப்பா என்று ஓர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே அப்பா மகனே என்று ஆர்கின்றான் துப்பு ஆர் சடையான் சிற்றம்பலத்தான் தானே தான் ஆனான் உடையான் உளத்தே உவந்து.

மேல்

#7 தானே வந்து என் உளத்தே சார்ந்து கலந்துகொண்டான் தானே எனக்குத் தருகின்றான் தானே நான் ஆகப் புரிந்தான் என் அப்பன் பெரும் கருணை மேகத்திற்கு உண்டோ விளம்பு.

மேல்

#8 பாலும் கொடுத்தான் பதி திறக்கும் ஓர் திறவுக் கோலும் கொடுத்தான் குணம் கொடுத்தான் காலும் தலையும் அறியும் தரமும் கொடுத்தான் நிலையும் கொடுத்தான் நிறைந்து.

மேல்

#9 வெவ் வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே செவ்வை அறிவு இன்பம் சிறந்தனவே எவ்வயினும் ஆனான் சிற்றம்பலத்தே ஆடுகின்றான் தண் அருளாம் தேன் நான் உண்டு ஓங்கியது தேர்ந்து.

மேல்

#10 வஞ்ச வினை எல்லாம் மடிந்தன வன் மாயை இருள் அஞ்சி எனை விட்டே அகன்றனவால் எஞ்சல் இலா இன்பம் எலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால் துன்பம் எலாம் போன தொலைந்து.

மேல்

#11 அம்மை திரோதை அகன்றாள் எனை விரும்பி அம்மை அருள் சத்தி அடைந்தனளே இம்மையிலே மாமாயை நீங்கினள் பொன் வண்ண வடிவுற்றது என்றும் சாமாறு இலை எனக்கு-தான்.

மேல்

#12 நானே தவம் புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன் தானே வந்து என்னைத் தடுத்தாண்டான் ஊனே புகுந்தான் என் உள்ளம் புகுந்தான் உயிரில் புகுந்தான் கருணை புரிந்து.

மேல்

#13 ஒன்றே சிவம் என்று உணர்ந்தேன் உணர்ந்தாங்கு நின்றே மெய்ஞ்ஞான நிலை பெற்றேன் நன்றே மெய்ச் சித்தி எலாம் பெற்றேன் திரு_அம்பலத்து ஆடி பத்தி எலாம் பெற்ற பலன்.

மேல்

#14 தூக்கம் கெடுத்தான் சுகம் கொடுத்தான் என் உளத்தே ஏக்கம் தவிர்த்தான் இருள் அறுத்தான் ஆக்கம் மிகத் தந்தான் எனை ஈன்ற தந்தையே என்று அழைக்க வந்தான் என் அப்பன் மகிழ்ந்து.

மேல்

#15 வாட்டம் எலாம் தீர்த்தான் மகிழ்வு அளித்தான் மெய்ஞ்ஞான நாட்டம் எலாம் தந்தான் நலம் கொடுத்தான் ஆட்டம் எலாம் ஆடுக நீ என்றான் தன் ஆனந்த வார் கழலைப் பாடுக நீ என்றான் பரன்.

மேல்

#16 தான் நான் எனும் பேதம்-தன்னைத் தவிர்த்தான் நான் ஆனான் சிற்றம்பலவன் அந்தோ நான் வான்_நாடர் செய்தற்கு அரிய தவம் செய்தேன் மகிழ்கின்றேன் எய்தற்கு அரிய சுகம் ஏய்ந்து.

மேல்

#17 சுத்த வடிவும் சுக வடிவாம் ஓங்கார நித்த வடிவும் நிறைந்து ஓங்கு சித்து எனும் ஓர் ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும் தான விளையாட்டு இயற்றத்தான்.

மேல்

#18 நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி நான் உரைக்கும் வார்த்தை அன்று நாட்டீர் நான் ஏன் உரைப்பேன் நான் ஆர் எனக்கு என ஓர் ஞான உணர்வு ஏது சிவம் ஊன் நாடி நில்லா உழி.

மேல்

#19 ஆரணமும் ஆகமமும் ஆங்காங்கு உரைக்கின்ற காரணமும் காரியமும் காட்டுவித்தான் தாரணியில் கண்டேன் களிக்கின்றேன் கங்குல் பகல் அற்ற இடத்து உண்டேன் அமுதம் உவந்து.

மேல்

#20 துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என் மார்க்கம் நல் மார்க்கம் என்றே வான்_நாட்டார் புகழ்கின்றார் மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து.

மேல்

#21 பல் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே சொல் மார்க்கத்து எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் கொல்லா நெறி அருளைக் கொண்டு.

மேல்

#22 சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் ஓதுகின்ற பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தவே பிறர்-தம் வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

மேல்

#23 சிந்தாகுலம் தவிர்த்துச் சிற்றம்பலப் பெருமான் வந்தான் எனைத் தான் வலிந்து அழைத்தே ஐந்தொழிலும் நீயே செய் என்று எனக்கே நேர்ந்து அளித்தான் என்னுடைய தாயே_அனையான் தனித்து.

மேல்

#24 கூ கா என அடுத்தோர் கூடி அழாத வண்ணம் சாகா_வரம் எனக்கே தந்திட்டான் ஏகா அ னேகா என மறைகள் ஏத்தும் சிற்றம்பலத்தான் மா காதலனாம் மகிழ்ந்து.

மேல்

#25 நாடுகின்றது எம் பெருமான் நாட்டம் அதே நான் உலகில் ஆடுகின்றது எந்தை அருள் ஆட்டம் அதே பாடுகின்ற பாட்டு எல்லாம் அம்பலவன் பாத_மலர்ப் பாட்டே நீட்டு எல்லாம் ஆங்கு அவன்றன் நீட்டு.

மேல்

#26 சத்தியம் செய்கின்றேன் சகத்தீர் அறி-மின்கள் சித்தி எலாம் வல்ல சிவம் ஒன்றே நித்தியம் என்று எண்ணும் எண்ணத்தாலே நம் எண்ணம் எலாம் கைகூடும் நண்ணும் இன்பத் தேன் என்று நான்.

மேல்

#27 நானே தவம் புரிந்தேன் நம் பெருமான் நல் அருளால் நானே அருள் சித்தி_நாடு அடைந்தேன் நானே அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன் இழியாமல் ஆடுகின்றேன் இங்கு.

மேல்

#28 எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண இ உலகில் எந்தை எனக்கு அளித்தான் எவ்வுயிரும் சன்மார்க்க சங்கம்-தனை அடையச் செய்வித்தே என் மார்க்கம் காண்பேன் இனி.

மேல்

#29 சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் சிற்றம்பலவன் திரு_அருள் சீர் வண்ணம் என்றே உற்று இங்கு அறிந்தேன் உவந்து.

மேல்

#30 வேதாகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாகச் சொன்ன அலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.

மேல்

#31 சாகாத கல்வித் தரம் அறிதல் வேண்டும் என்றும் வேகாத_கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத் தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை நிலை அடைதல் வேண்டும் நிலத்து.

மேல்

#32 பொய் உரை என்று எண்ணுதிரேல் போ-மின் புறக்கடையில் மெய் உரை என்று எண்ணுதிரேல் மேவு-மினோ ஐயன் அருள் சித்தி எலாம் வல்ல திரு_கூத்து உலவாமல் இத் தினம் தொட்டு ஆடுகிற்பான் இங்கு.

மேல்

#33 வான் வந்த தேவர்களும் மால் அயனும் மற்றவரும் தான் வந்து சூழ்ந்தார் தலைக்கடையில் தேன் வந்த மங்கை சிவகாமவல்லியொடும் எம் பெருமான் இங்கு நடம் செய்வான் இனி.

மேல்

#34 சத்தி எலாம் கொண்ட தனித் தந்தை நடராயன் சித்தி எலாம் வல்லான் திருவாளன் நித்தியன் தான் ஊழி பல சென்றாலும் ஓவாமல் இவ்விடத்தே வாழி நடம் செய்வான் மகிழ்ந்து.

மேல்

#35 இன்று தொடங்கி இங்கே எம் பெருமான் எந்நாளும் நன்று துலங்க நடம் புரிவான் என்றும் என் சொல் சத்தியம் என்று எண்ணிச் சகத்தீர் அடை-மின்கள் நித்தியம் பெற்று உய்யலாம் நீர்.

மேல்

#36 என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் தன் உடலும் தன் பொருளும் தன் உயிரும் என்னிடத்தே தந்தான் அருள் சிற்சபையப்பா என்று அழைத்தேன் வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.

மேல்

#37 செத்தாரை எல்லாம் திரும்ப எழுப்புதல் இங்கு எத்தால் முடியும் எனில் எம்மவரே சித்தாம் அருள்_பெரும்_சோதி அதனால் முடியும் தெருள் பெரும் சத்தியம் ஈதே.

மேல்

#38 இ உலகில் செத்தாரை எல்லாம் எழுக எனில் எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் செவ் உலகில் சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம் உற்றவரை உற்றவர்கள் உற்று.

மேல்

#39 யான் புரிதல் வேண்டும்-கொல் இ உலகில் செத்தாரை ஊன் புரிந்து மீள உயிர்ப்பித்தல் வான் புரிந்த அம்பலத்தான் நல் அருளால் அந்தோ நான் மேல் போர்த்த கம்பலத்தால் ஆகும் களித்து.

மேல்

#40 என்னே உலகில் இறந்தார் எழுதல் மிக அன்னே அதிசயம் என்று ஆடுகின்றார் இன்னே திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு உருவம் பலத்தே என்று உன்.

மேல்

#41 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் வாடாதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு என் மார்க்கமும் ஒன்று ஆமே.

மேல்

#42 மார்க்கம் எலாம் ஒன்று ஆகும் மா நிலத்தீர் வாய்மை இது தூக்கம் எலாம் நீக்கித் துணிந்து உளத்தே ஏக்கம் விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடு-மின் சத்தியம் நீர் நல் மார்க்கம் சேர்வீர் இ நாள்.

மேல்

#43 இ நாளே கண்டீர் இறந்தார் எழுகின்ற நல் நாள் என் வார்த்தைகளை நம்பு-மினோ இ நாள் அருள்_பெரும்_சோதி அடைகின்ற நாள் மெய் அருள் பெருஞ் சத்தியம் ஈதாம்.

மேல்

#44 ஏமாந்திருக்கும் எமரங்காள் இ உலகில் சாமாந்தர் ஆகாத் தரம் பெறவே காமாந்த காரத்தை விட்டுக் கருது-மினோ இ தருணம் நீர் அத்தைச் சேர்வீர் நிஜம்.

மேல்

#45 வீணே பராக்கில் விடாதீர் உமது உளத்தை நாணே உடைய நமரங்காள் ஊணாகத் தெள் அமுதம் இன்று எனக்குச் சேர்த்து அளித்தான் சித்தாட உள்ளிய நாள் ஈது அறி-மின் உற்று.

மேல்

#46 போற்றி உரைக்கின்றேன் பொய் என்று இகழாதீர் நால் திசை-கண் வாழும் நமரங்காள் ஆற்றல் அருள் அப்பன் வருகின்றான் அருள் விளையாட்டு ஆடுதற்கு என்று இ புவியில் இத் தருணம் இங்கு.

மேல்

#47 ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற நாள் எதுவோ என்று நலியாதீர் நீள நினையாதீர் சத்தியம் நான் நேர்ந்து உரைத்தேன் இ நாள் அனையான் வருகின்றான் ஆய்ந்து.

@94. உலகப் பேறு

மேல்

#1 இன்பால் உலகங்கள் யாவும் விளங்கின துன்பால் இறந்தவர் துன்பு அற்றுத் தோன்றினர் அன்பால் அடியவர் ஆடினர் பாடினர் என்-பால் அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

மேல்

#2 பாம்பு எலாம் ஓடின பறவை உள் சார்ந்தன தீம் பலா வாழை மாத் தென்னை சிறந்தன ஆம் பலன் மென்மேலும் ஆயின என் உளத்து ஓம்பல் என் அருள்_பெரும்_சோதியார் ஓங்கவே.

மேல்

#3 மலம் கழிந்து உலகவர் வானவர் ஆயினர் வலம் பெறு சுத்த சன்மார்க்கம் சிறந்தது பலம் பெறு மனிதர்கள் பண்பு_உளர் ஆயினர் நலம் பெறும் அருள்_பெரும்_சோதியார் நண்ணவே.

மேல்

#4 முன் உள மார்க்கங்கள் யாவும் முடிந்தன மன் உள சுத்த சன்மார்க்கம் சிறந்தது பன்னு உளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின என் உளத்து அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

மேல்

#5 இடம் பெற்ற உயிர் எலாம் விடம் அற்று வாழ்ந்தன மடம் பெற்ற மனிதர்கள் மதி பெற்று வாழ்கின்றார் திடம் பெற்றே எழுகின்றார் செத்தவர் தினம்தினம் நடம் பெற்ற அருள்_பெரும்_சோதியார் நண்ணவே.

மேல்

#6 அண்டமும் அகிலமும் அருள் அரசாட்சியைக் கொண்டன ஓங்கின குறை எலாம் தீர்ந்தன பண்டங்கள் பலித்தன பரிந்து எனது உள்ளத்தில் எண் தகும் அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

மேல்

#7 குணங்கள் சிறந்தன குற்றங்கள் அற்றன மணங்கள் விளங்கின வாழ்வுகள் ஓங்கின பிணங்கள் எலாம் உயிர்பெற்று எழுந்து ஓங்கின இணங்க அருள்_பெரும்_சோதியார் எய்தவே.

மேல்

#8 பத்தர்கள் பாடினர் பணிந்து நின்று ஆடினர் முத்தர்கள் மெய்ப்பொருள் முன்னி மகிழ்ந்தனர் சித்தர்கள் ஆனந்தத் தெள் அமுது உண்டனர் சுத்த அருள்_பெரும்_சோதியார் தோன்றவே.

மேல்

#9 ஏழ்_உலகு அவத்தை விட்டு ஏறினன் மேல் நிலை ஊழிதோறூழியும் உயிர் தழைத்து ஓங்கினன் ஆழியான் அயன் முதல் அதிசயித்திட எனுள் வாழி அருள்_பெரும்_சோதியார் மன்னவே.

மேல்

#10 இருள் பெரு மலம் முழுதும் தவிர்ந்து இற்றது மருள் பெரும் கன்மமும் மாயையும் நீங்கின தெருள் பெரும் சித்திகள் சேர்ந்தன என் உளத்து அருள்_பெரும்_சோதி என் அன்பில் கலந்ததே.

@95. அன்புருவமான சிவம் ஒன்றே உளதெனல்

மேல்

#1 அருள் பெரும் தனிச் சோதி அம்பலத்திலே நடிக்கும் பொருள் பெரும் திரு_நடம் அது போற்றுவீர் புலவீர் மருள் பெரும் பகை நீக்கி மெய் வாழ்வு பெற்றிடலாம் தெருள் பெரும் பதத்து ஆணை ஈது அறி-மினோ தெளிந்தே.

மேல்

#2 வாரம் செய்த பொன் மன்றிலே நடிக்கும் பொன் அடிக்கே ஆரம் செய்து அணிந்தவர்க்கு முன் அரி அயன் முதலோர் வீரம் செல்கிலாது அறி-மினோ வேதம் மேல் ஆணை ஓரம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் உலகீர்.

மேல்

#3 ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்து ஆடும் சோதி-தன்னையே நினை-மின்கள் சுகம் பெற விழைவீர் நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செலும் வீதி.

மேல்

#4 நாதம் சொல்கின்ற திரு_சிற்றம்பலத்திலே நடிக்கும் பாதம் சொல்கின்ற பத்தரே நித்தர் என்று அறி-மின் வேதம் சொல்கின்ற பரிசு இது மெய்ம்மை யான் பக்க வாதம் சொல்கிலேன் நடு நின்று சொல்கின்றேன் மதித்தே.

மேல்

#5 துரிய மேல் பர வெளியிலே சுக நடம் புரியும் பெரியதோர் அருள் சோதியைப் பெறுதலே எவைக்கும் அரிய பேறு மற்றவை எலாம் எளியவே அறி-மின் உரிய இ மொழி மறை மொழி சத்தியம் உலகீர்.

மேல்

#6 ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும் பாகமாம் பரவெளி நடம் பரவுவீர் உலகீர் மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும் யோக மாந்தர்க்குக் காலம் உண்டாகவே உரைத்தேன்.

மேல்

#7 வான_நாடரும் நாட அரும் மன்றிலே வயங்கும் ஞான நாடகக் காட்சியே நாம் பெறல் வேண்டும் ஊன நாடகக் காட்சியால் காலத்தை ஒழிக்கும் ஈன நாடகப் பெரியர்காள் வம்-மினோ ஈண்டே.

மேல்

#8 சமயம் ஓர் பல கோடியும் சமயங்கள்-தோறும் அமையும் தெய்வங்கள் அனந்தமும் ஞான சன்மார்க்கத்து எமையும் உம்மையும் உடையதோர் அம்பலத்து இறையும் அமைய ஆங்கு அதில் நடம் புரி பதமும் என்று அறி-மின்

மேல்

#9 ஆறு கோடியாம் சமயங்கள் அகத்தினும் அவை மேல் வீறு சேர்ந்த சித்தாந்த வேதாந்த நாதாந்தம் தேறும் மற்றைய அந்தத்தும் சிவம் ஒன்றே அன்றி வேறு கண்டிலேன் கண்டிரேல் பெரியர்காள் விளம்பீர்.

மேல்

#10 கலை இருந்ததோர் திரு_சிற்றம்பலத்திலே கருணை நிலை இருந்தது நினைத்தவை யாவையும் பெறலாம் மலை இருந்து என இருப்பிரேல் வம்-மினோ அன்றிக் கொலை விரும்புவீர் எனில் புறத்து ஏகு-மின் குலைந்தே.

மேல்

#11 கதி இருக்கின்ற திரு_சிற்றம்பலத்திலே கருணை நிதி இருக்கின்றது ஆதலால் நீவீர்கள் எல்லாம் பதிய இங்ஙனே வம்-மினோ கொலை பயில்வீரேல் விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே.

மேல்

#12 அருள் விளங்கிய திரு_சிற்றம்பலத்திலே அழியாப் பொருள் விளங்குதல் காண்-மினோ காண்-மினோ புவியீர் மருள் உளம்கொளும் வாதனை தவிர்ந்து அருள் வலத்தால் தெருள் விளங்குவீர் ஞான சன்மார்க்கமே தெளி-மின்.

@96. உலகர்க்கு உய்வகை கூறல்

மேல்

#1 கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர் கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர் பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில் பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் கொட்டோடே முழக்கோடே கோலம் காண்கின்றீர் குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர் எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#2 ஆறாமல் அவியாமல் அடைந்த கோபத்தீர் அடர்வுற உலகிடை அஞ்சாது திரிவீர் மாறாமல் மனம்சென்றவழி சென்று திகைப்பீர் வழி துறை காண்கிலீர் பழிபடும்படிக்கே நாறாத மலர் போலும் வாழ்கின்றீர் மூப்பு நரை திரை மரணத்துக்கு என் செயக் கடவீர் ஏறாமல் வீணிலே இறங்குகின்றீரே எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#3 ஆயாமையாலே நீர் ஆதி அனாதி ஆகிய சோதியை அறிந்துகொள்கில்லீர் மாயாமை பிறவாமை வழி ஒன்றும் உணரீர் மறவாமை நினையாமை வகை சிறிது அறியீர் காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர் கண் மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு ஈயாமை ஒன்றையே இன் துணை என்பீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#4 சாமாந்தர் ஆகாத் தரம் சிறிது உணரீர் தத்துவ ஞானத்தை இற்று எனத் தெரியீர் மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் காமாந்தகாரத்தில் கண் மூடித் திரிவீர் கற்பன கற்கிலீர் கருத்தனைக் கருதாது ஏமாந்து தூங்குகின்றீர் விழிக்கின்றீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#5 அச்சையும் உடம்பையும் அறி வகை அறியீர் அம்மையும் அப்பனும் ஆர் எனத் தெரியீர் பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப் பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் பிச்சையிட்டு உண்ணவும் பின்படுகின்றீர் பின்படு தீமையின் முன்படுகின்றீர் இச்சையில் கண் மூடி எச் சுகம் கண்டீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#6 வட்டி மேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர் வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர் பெட்டி மேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப் பெட்டியை நிரப்பிக்கொண்டு ஒட்டி உள் இருந்தீர் பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#7 வன் சொல்லின் அல்லது வாய்திறப்பு அறியீர் வாய்மையும் தூய்மையும் காய்மையில் வளர்ந்தீர் முன் சொல்லும் ஆறு ஒன்று பின் சொல்வது ஒன்றாய் மூட்டுகின்றீர் வினை மூட்டையைக் கட்டி மன் சொல்லும் மார்க்கத்தை மறந்து துன்மார்க்க வழி நடக்கின்றீர் அ மரணத் தீர்ப்புக்கே என் சொல்ல இருக்கின்றீர் பின் சொல்வது அறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#8 துன்மார்க்க நடையிடைத் தூங்குகின்றீரே தூக்கத்தை விடுகின்ற துணை ஒன்றும் கருதீர் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திட விழையீர் சாவையும் பிறப்பையும் தவிர்ந்திட விரும்பீர் பல் மார்க்கம் செல்கின்ற படிற்று உளம் அடக்கீர் பசித்தவர்-தம் முகம் பார்த்து உணவு அளியீர் என் மார்க்கம் எச் சுகம் யாது நும் வாழ்க்கை எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#9 பொய் கட்டிக்கொண்டு நீர் வாழ்கின்றீர் இங்கே புலை கட்டிக்கொண்ட இப் பொய் உடல் வீழ்ந்தால் செய் கட்டி வாழ்கின்ற செருக்கு அற்று நரகில் சிறு புழு ஆகித் திகைத்திடல் அறியீர் கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டே கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் எய் கட்டி இடை மொய்க்கும் ஈயினும் சிறியீர் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

மேல்

#10 பண்ணாத தீமைகள் பண்ணுகின்றீரே பகராத வன் மொழி பகருகின்றீரே நண்ணாத தீ இனம் நண்ணுகின்றீரே நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே கண்ணார நீர் விட்டுக் கருத அறியீரே எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம் எத் துணை கொள்கின்றீர் பித்து உலகீரே.

@97. புனிதகுலம் பெறுமாறு புகலல்

மேல்

#1 சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர்-தாமே வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

மேல்

#2 காடு வெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டுக் கரும்பை விட்டுக் கடு விரைத்துக் களிக்கின்ற உலகீர் கூடு விட்டுப் போயின பின் எது புரிவீர் எங்கே குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்து அறியீர் இங்கே பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர் பட்டது எலாம் போதும் இது பரமர் வரு தருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர் எண்மை உரைத்தேன்_அலன் நான் உண்மை உரைத்தேனே.

மேல்

#3 ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணைபோட அறியீர் அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர் கூற்று வரும் கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ கூற்று உதைத்த சேவடியைப் போற்ற விரும்பீரே வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர் வீண் உலகக் கொடு வழக்கை விட்டுவிட்டு வம்-மின் சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் சிற்சத்தியைச் சார்வதற்கே.

மேல்

#4 பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர் கை_விளக்குப் பிடித்து ஒரு பாழ்ங்கிணற்றில் விழுகின்ற களியர் எனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் ஐ விளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால் அடி_வயிற்றை முறுக்காதோ கொடிய முயற்று உலகீர் மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே.

மேல்

#5 எய் வகை சார் மதங்களிலே பொய் வகைச் சாத்திரங்கள் எடுத்துரைத்தே எமது தெய்வம் எமது தெய்வம் என்று கை வகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்று என்று அறியீர் கரி பிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர் ஐ வகைய பூத உடம்பு அழிந்திடில் என் புரிவீர் அழி உடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர் உய் வகை என் தனித் தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.

மேல்

#6 உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர் உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர் மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர் இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்ப_துன்பம் அடுத்தே எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே நடம் புரி என் தனித் தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்ணு-மினோ புண்ணியம் சார்வீரே.

மேல்

#7 நரை மரணம் மூப்பு அறியா நல்ல உடம்பினரே நல் குலத்தார் என அறியீர் நானிலத்தீர் நீவிர் வரையில் உயர் குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர் புரையுறு நும் குலங்கள் எலாம் புழுக் குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே உரை பெறும் என் தனித் தந்தை வருகின்ற தருணம் உற்றது இவண் உற்றிடுவீர் உண்மை உரைத்தேனே.

மேல்

#8 கனம்_உடையேம் கட்டு_உடையேம் என்று நினைத்து இங்கே களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர் சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரைச் சிறிதும் நினையீரோ தினகரன் போல் சாகாத தேகம்_உடையவரே திரு_உடையார் என அறிந்தே சேர்ந்திடு-மின் ஈண்டே மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே வழங்குதற்கு என் தனித் தந்தை வரு தருணம் இதுவே

மேல்

#9 வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் மை அகத்தே உறு மரண வாதனையைத் தவிர்த்த வாழ்க்கை-அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடு-மின் எனது மெய்ப்பொருளாம் தனித் தந்தை இத் தருணம்-தனிலே செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம்-தனிலே சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே.

மேல்

#10 கரணம் மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும் கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர் மரண பயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ மயங்காதீர் உயங்காதீர் வந்திடு-மின் ஈண்டே திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும் சித்திபுரம் என ஓங்கும் உத்தர சிற்சபையில் சரணம் எனக்கு அளித்து எனையும் தான் ஆக்க எனது தனித் தந்தை வருகின்ற தருணம் இது தானே.

@98. மரணம் இலாப் பெரு வாழ்வு

மேல்

#1 நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே.

மேல்

#2 புகும் தருணம் இது கண்டீர் நம்மவரே நான்-தான் புகல்கின்றேன் என் மொழி ஓர் பொய் மொழி என்னாதீர் உகும் தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும் உடைமைகளும் உலகியலும் உற்ற_துணை அன்றே மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோல்_தேனே மெய்ப் பயனே கைப்பொருளே விலை_அறியா மணியே தகுந்த தனிப் பெரும் பதியே தயாநிதியே கதியே சத்தியமே என்று உரை-மின் பத்தியொடு பணிந்தே.

மேல்

#3 பணிந்துபணிந்து அணிந்தணிந்து பாடு-மினோ உலகீர் பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே துரிய முடி அனுபவமே சுத்த சித்தாந்தம்-அதாய்த் தணிந்த நிலைப் பெரும் சுகமே சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கை உண்மைத் தனிப் பதியே என்று கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டுகொளல் ஆமே.

மேல்

#4 கண்டது எலாம் அனித்தியமே கேட்டது எலாம் பழுதே கற்றது எலாம் பொய்யே நீர் களித்தது எலாம் வீணே உண்டது எலாம் மலமே உட்கொண்டது எலாம் குறையே உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடை-மின் இறவாத வரம் பெறலாம் இன்பமுறலாமே.

மேல்

#5 இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம் எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் அன்பு_உடையீர் வம்-மின் இங்கே சமரச சன்மார்க்கம் அடைந்திடு-மின் அக வடிவு இங்கு அனக வடிவு ஆகிப் பொன் புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான பூரணமே ஆரணத்தின் பொருள் முடி மேல் பொருளே வன்பு_உடையார் பெறற்கு அரிதாம் மணியே சிற்சபையின் மா மருந்தே என்று உரை-மின் தீமை எலாம் தவிர்ந்தே.

மேல்

#6 தீமை எலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டு அருளிச் சிறியேனுக்கு அருள் அமுதத் தெளிவு அளித்த திறத்தை ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருள்_பெரும்_சோதியை ஓர் ஓம் மய வான் வடிவு_உடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளைப் பெரும் கருணை உடைய பெரும் பதியை நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்ல ஒரு தருணம் இது வல்லை வம்-மின் நீரே.

மேல்

#7 நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவு அலனோ நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடு மொழி சொல்வேனோ சார்பு உறவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றித் தனித்த பெரும் சுகம் அளித்த தனித்த பெரும் பதி-தான் சீர் பெறவே திரு_பொதுவில் திரு_மேனி தரித்துச் சித்தாடல் புரிகின்ற திரு_நாள்கள் அடுத்த ஓர்பு உறவே இது நல்ல தருணம் இங்கே வம்-மின் உலகியலீர் உன்னியவாறு உற்றிடுவீர் விரைந்தே.

மேல்

#8 விரைந்துவிரைந்து அடைந்திடு-மின் மேதினியீர் இங்கே மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர் திரைந்துதிரைந்து உளுத்தவரும் இளமை அடைந்திடவும் செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய வரைந்துவரைந்து எல்லாம் செய் வல்ல சித்தன்-தானே வருகின்ற தருணம் இது வரம் பெறலாம் நீவீர் கரைந்துகரைந்து உளம் உருகிக் கண்களின் நீர் பெருகிக் கருணை நடக் கடவுளை உள் கருது-மினோ களித்தே.

மேல்

#9 களித்து உலகில் அளவு இகந்த காலம் உலகு எல்லாம் களிப்பு அடைய அருள் சோதிக் கடவுள் வரு தருணம் தெளித்திடும் எத் தருணம் அதோ என்னாதீர் இதுவே செத்தவரை எழுப்புகின்ற திகழ் தருணம் உலகீர் ஒளித்து உரைக்கின்றேன்_அலன் நான் வாய்ப்பறை ஆர்க்கின்றேன் ஒருசிறிதும் அச்சம் உறேன் உள்ளபடி உணர்ந்தேன் அளித்திடு சிற்றம்பலத்து என் அப்பன் அருள் பெறவே ஆசை உண்டேல் வம்-மின் இங்கே நேசம்_உடையீரே.

மேல்

#10 ஆசை உண்டேல் வம்-மின் இங்கே அருள் சோதிப் பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன் ஏசு அற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான் தேசு உடைய பொதுவில் அருள் சித்தி நடம் புரியத் திருவுளம்கொண்டு எழுந்தருளும் திரு_நாள் இங்கு இதுவே மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே.

மேல்

#11 அடைந்திடு-மின் உலகீர் இங்கு இது தருணம் கண்டீர் அருள் சோதிப் பெரும் பதி என் அப்பன் வரு தருணம் கடைந்த தனித் திரு_அமுதம் களித்து அருத்தி எனக்கே காணாத காட்சி எலாம் காட்டுகின்ற தருணம் இடைந்து ஒருசார் அலையாதீர் சுகம் எனைப் போல் பெறுவீர் யான் வேறு நீர் வேறு என்று எண்ணுகிலேன் உரைத்தேன் உடைந்த சமயக் குழி நின்று எழுந்து உணர்-மின் அழியா ஒரு நெறியாம் சன்மார்க்கத் திரு_நெறி பெற்று உவந்தே.

மேல்

#12 திரு_நெறி ஒன்றே அது-தான் சமரச சன்மார்க்கச் சிவ நெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடு-மின் ஈண்டு வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல் பெரு நெறியில் சித்தாடத் திருவுளம்கொண்டு அருளிப் பெரும் கருணை வடிவினொடு வரு தருணம் இதுவே கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர் கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே.

மேல்

#13 உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடை-மின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறிவழியாதீர் எண்மையினான் என நினையீர் எல்லாம் செய் வல்லான் என் உள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்-மின் நீவிர் தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் சார்ந்து விரைந்து ஏறு-மினோ சத்திய வாழ்வு அளிக்கக் கண்மை தரும் ஒரு பெரும் சீர்க் கடவுள் எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம் இது தானே.

மேல்

#14 தானே தான் ஆகி எலாம் தான் ஆகி அலனாய்த் தனிப் பதியாய் விளங்கிடும் என் தந்தையை என் தாயை வானே அ வான் கருவே வான் கருவின் முதலே வள்ளால் என்று அன்பர் எலாம் உள்ளாநின்று அவனைத் தேனே செம்பாகே என்று இனித்திடும் தெள் அமுதைச் சிற்சபையில் பெரு வாழ்வைச் சிந்தைசெய்-மின் உலகீர் ஊனேயும் உடல் அழியாது ஊழி-தொறும் ஓங்கும் உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே.

மேல்

#15 சத்திய வேதாந்தம் எலாம் சித்தாந்தம் எல்லாம் தனித்தனி மேல் உணர்ந்துணர்ந்தும் தனை உணர்தற்கு அரிதாய் நித்திய சிற்சபை நடுவே நிறைந்து நடம் புரியும் நித்த பரிபூரணனைச் சித்த சிகாமணியை அத்தகையோர் பெரும் பதியை அரு_மருந்தை அடியேன் ஆவியை என் ஆவியிலே அமர்ந்த தயாநிதியைச் சித்தி எலாம் எனக்கு அளித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்து-மினோ நிந்தை எலாம் தவிர்ந்தே.

மேல்

#16 நிந்தை_இலார் நெஞ்சகத்தே நிறைந்த பெருந்தகையை நிலை அனைத்தும் காட்டி அருள் நிலை அளித்த குருவை எந்தையை என் தனித் தாயை என் இரு கண்மணியை என் உயிரை என் உணர்வை என் அறிவுள் அறிவை சிந்தையிலே தனித்து இனிக்கும் தெள் அமுதை அனைத்தும் செய்ய வல்ல தனித் தலைமைச் சிவபதியை உலகீர் முந்தை மல இருட்டு ஒழிய முன்னு-மினோ கரண முடுக்கு ஒழித்துக் கடை மரண நடுக்கு ஒழித்து முயன்றே.

மேல்

#17 முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலைபெறவும் எம் இறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர் துயின்று உணர்ந்தே எழுந்தவர் போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந்திடும் நீர் பயின்று அறிய விரைந்து வம்-மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.

மேல்

#18 சுகம் அறியீர் துன்பம் ஒன்றே துணிந்து அறிந்தீர் உலகீர் சூது அறிந்தீர் வாது அறிந்தீர் தூய்மை அறிந்திலிரே இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ அகம் அறிந்தீர் அனகம் அறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம் அடைந்திடு-மின் ஈண்டே முகம்_அறியார் போல் இருந்தீர் என்னை அறியீரோ முத்தர் எலாம் போற்றும் அருள் சித்தர் மகன் நானே.

மேல்

#19 நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்-தன் வார்த்தை நம்பு-மினோ நமரங்காள் நல் தருணம் இதுவே வான் உரைத்த மணி மன்றில் நடம் புரி எம் பெருமான் வரவு எதிர்கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்து அடைந்து என்னுடன் எழு-மின் சித்தி பெறல் ஆகும் ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யான் அடையும் சுகத்தினை நீர் தான் அடைதல் குறித்தே.

மேல்

#20 குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்-மின் இங்கே வம்-மின் கோணும் மன_குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர் பொறித்த மதம் சமயம் எலாம் பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறி-மின் செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடு-மின் சித்தி எலாம் இத் தினமே சத்தியம் சேர்ந்திடுமே.

மேல்

#21 சேர்ந்திடவே ஒருப்படு-மின் சமரச சன்மார்க்கத் திரு_நெறியே பெரு நெறியாம் சித்தி எலாம் பெறலாம் ஓர்ந்திடு-மின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர் உலகம் எலாம் கண்டிடும் ஓர் உளவை அறிந்திலிரே வார்ந்த கடல் உலகு அறிய மரணம் உண்டே அந்தோ மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம்மதியா சார்ந்திடும் அ மரணம்-அதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடு சிற்சபை நடத்தைத் தரிசனம் செய்வீரே.

மேல்

#22 செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில் திரு_நடம் செய் பெரும் கருணைத் திறத்தான் அங்கு அவனை மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம் மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனை-தான் வைதாலும் வைதிடு-மின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன் மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன் பொய்-தான் ஓர்சிறிது எனினும் புகலேன் சத்தியமே புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே.

மேல்

#23 பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே மருட்டு உலகீர் இருட்டு உலகில் மடிவது அழகு_அலவே மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ வம்-மின் இங்கே பொருள் திறம் சேர் சுத்த சிவ சன்மார்க்க நிலையில் பொருந்து-மின் சிற்சபை அமுதம் அருந்து-மின் அன்புடனே அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே.

மேல்

#24 மற்று அறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால் மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை எற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் இல்லை கண்டீர் சத்தியம் ஈது என் மொழி கொண்டு உலகீர் பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்று-மினோ எற்றும் இறவீரே.

மேல்

#25 இறந்தவரை எடுத்திடும் போது அரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெரு வரம் நீர் ஏன் அடைய மாட்டீர் மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம் சேராமல் தவிர்த்திடும் காண் தெரிந்து வம்-மின் இங்கே பிறந்த பிறப்பு இதில் தானே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் பேர்_இன்பம் உற்றிடலாம் விரைந்தே.

மேல்

#26 உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன் அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக் காண்கின்றீர் கரணம் எலாம் கலங்க வரும் மரணமும் சம்மதமோ சற்றும் இதைச் சம்மதியாது என் மனம்-தான் உமது-தன் மனம்-தான் கல்_மனமோ வன் மனமோ அறியேன் இற்று இதனைத் தடுத்திடலாம் என்னொடும் சேர்ந்திடு-மின் என் மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம்-தானே.

மேல்

#27 சன்மார்க்கப் பெரும் குணத்தார் தம்பதியை என்னைத் தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை நல் மார்க்கத்து எனை நடத்திச் சன்மார்க்க சங்க நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப் புன் மார்க்கர்க்கு அறிவ அரிதாம் புண்ணியனை ஞான பூரண மெய்ப்பொருள் ஆகிப் பொருந்திய மா மருந்தை அன்மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடம் செய் அருள்_பெரும்_சோதியை உலகீர் தெருள் கொளச் சார்வீரே.

மேல்

#28 சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்து அருளும் உத்தம சற்குருவை நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தான் ஆகி ஏர் உறவே விளங்குகின்ற இயற்கை உண்மை-தன்னை எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடு-மின் உள்ளம் எலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே.

@99. பரன் அளிக்கும் தேகம் சுடுவ தபராதம் எனல்

மேல்

#1 ஆய் உரைத்த அருள் ஜோதி வருகின்ற தருணம் இதே அறி-மின் என்றே வாய் உரைத்த வார்த்தை என்றன் வார்த்தைகள் என்கின்றார் இ மனிதர் அந்தோ தாய் உரைத்த திரு_பொதுவில் நடம் புரிந்து என் உளம் கலந்த தலைவா இங்கே நீ உரைத்த திரு_வார்த்தை என அறியார் இவர் அறிவின் நிகழ்ச்சி என்னே.

மேல்

#2 இறந்தவர்கள் பலரும் இங்கே எழுகின்ற தருணம் இதே என்று வாய்மை அறம் தழைய உரைக்கின்ற வார்த்தைகள் என் வார்த்தைகள் என்று அறைகின்றாரால் மறந்த சிறியேன் உரைக்க வல்லேனோ எல்லாம் செய் வல்லோய் உன்றன் சிறந்த திரு_வார்த்தை எனத் தெரிந்திலர் இ மனிதர் மதித் திறமை என்னே.

மேல்

#3 சோற்று ஆசையொடு காமச் சேற்று ஆசைப்படுவாரைத் துணிந்து கொல்லக் கூற்று ஆசைப்படும் என நான் கூறுகின்றது உண்மையினில் கொண்டு நீவீர் நேற்று ஆசைப்பட்டவருக்கு இன்று அருள்வார் போலும் அன்றி நினைத்த ஆங்கே பேற்று ஆசைக்கு அருள் புரியும் ஞான சபாபதிப் புகழைப் பேசுவீரே.

மேல்

#4 தொண்டாளப் பணம் தேடும் துறை ஆள உலகு ஆளச் சூழ்ந்த காமப் பெண்டாளத் திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரைப் பிடிக்க நாளைச் சண்டாளக் கூற்று வரில் என் புகல்வீர் ஞானசபைத் தலைவன் உம்மைக் கொண்டு ஆளக் கருது-மினோ ஆண்ட பின்னர் இ உலகில் குலாவுவீரே.

மேல்

#5 பிறந்தவரை நீராட்டிப் பெருக வளர்த்திடுகின்றீர் பேயரே நீர் இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ இரவில் தூங்கி மறந்தவரைத் தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன சிறந்த வரை எனப் புகழச் செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின்றீரே.

மேல்

#6 அணங்கு எழு பேர்_ஓசையொடும் பறை ஓசை பொங்கக் கோர அணி கொண்டு அந்தோ பிணம் கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச் சாகும் பிணங்களே நீர் கணம் கழுகு உண்டாலும் ஒரு பயன் உண்டே என்ன பயன் கண்டீர் சுட்டே எணம் கெழு சாம்பலைக் கண்டீர் அது புன்செய் எருவுக்கும் இயலாது அன்றே.

மேல்

#7 குணம் புதைக்க உயிர் அடக்கம் கொண்டது சுட்டால் அது-தான் கொலையாம் என்றே வணம் புதைக்க வேண்டும் என வாய் தடிக்கச் சொல்கின்றேன் வார்த்தை கேட்டும் பிணம் புதைக்கச் சம்மதியீர் பணம் புதைக்கச் சம்மதிக்கும் பேயரே நீர் எணம் புதைக்கத் துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே.

மேல்

#8 கட்டாலும் கனத்தாலும் களிக்கின்ற பேய் உலகீர் கலை சோர்ந்தாரைப் பொட்டாலும் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர் சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மைத் தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே.

மேல்

#9 பரன் அளிக்கும் தேகம் இது சுடுவது அபராதம் எனப் பகர்கின்றேன் நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி உரன் அளிக்க எழுகின்ற திரு_நாள் வந்து அடுத்தன ஈது உணர்ந்து நல்லோர் வரன் அளிக்கப் புதைத்த நிலை காணீரோ கண் கெட்ட மாட்டினீரே.

மேல்

#10 புலைத் தொழிலே புரிகின்றீர் புண்ணியத்தைக் கரும் கடலில் போக விட்டீர் கொலைத் தொழிலில் கொடியீர் நீர் செத்தாரைச் சுடுகின்ற கொடுமை நோக்கிக் கலைத் தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அக் கலக்கம் எலாம் கடவுள் நீக்கித் தலைத் தொழில் செய் சன்மார்க்கம் தலையெடுக்கப் புரிகுவது இத் தருணம் தானே.

@100. சுத்த சிவ சன்மார்க்க உலகின் ஒருமை நிலை

மேல்

#1 சித்திபுரத்தே தினம்-தோறும் சீர் கொள் அருள் சத்தி விழா நீடித் தழைத்து ஓங்க எத்திசையில் உள்ளவரும் வந்தே உவகை உறுக மதத் துள்ளல் ஒழிக தொலைந்து.

மேல்

#2 ஒன்றே சிவம் என்று உணர்ந்து இ உலகம் எலாம் நன்றே ஒருமையுற்று நண்ணியே மன்றே நடம் புரியும் பாத நளின மலர்க்கு உள்ளம் இடம் புரிக வாழ்க இசைந்து.

மேல்

#3 சிற்சபையும் பொன்_சபையும் சித்தி விளக்கத்தால் நல் சகம் மேல் நீடூழி நண்ணிடுக சற்சபையோர் போற்றி வரம் பெற்று வகை பூரிக்க வாழ்ந்திடுக நால் திசையும் வாழ்க நயந்து.

மேல்

#4 அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற விச்சை அரசே விளங்கிடுக நச்சு அரவம் ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக நீதிக் கொடி விளங்க நீண்டு.

மேல்

#5 கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக அருள் நயந்த நல் மார்க்கர் ஆள்க தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து.

மேல்

#6 புல்_ஒழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய் ஒழிக நல்_ஒழுக்கம் ஒன்றே நலம் பெறுக இல் ஒழுக்கில் செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்து மனம் ஒத்தாராய் வாழ்க உவந்து.

மேல்

#7 செத்தார் எழுக சிவமே பொருள் என்றே இத் தாரணியில் இருந்து ஒளிர்க சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவு அறியாத் துன்மார்க்கம் போக தொலைந்து.

மேல்

#8 செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்து வரச் சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே சுத்த சிவ சன்மார்க்க சங்கத் தலைவனே நின் போற்றும் என் மார்க்கம் நின் மார்க்கமே.

மேல்

#9 நல்லாரும் என்னை நயந்தாரும் நன்மை சொல வல்லாரும் என்னை வளர்த்தாரும் எல்லாரும் நீ என்று இருக்கின்றேன் நின்மலனே நீ பெற்ற சேய் என்று இருக்கின்றேன் சேர்ந்து.

மேல்

#10 ஆட எடுத்தான் என்று அறைகின்றீர் என் தலை மேல் சூட எடுத்தான் என்று சொல்கின்றேன் நாடு அறிய இ வழக்கை யார்-பால் இசைத்து அறுத்துக் கொள்கிற்பாம் கவ்வை அற்ற அம்பலத்தான் கால்.

மேல்

#11 நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் சாவா_வரம் எனைப் போல் சார்ந்தவரும் தேவா நின் பேர்_அருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில் யார் உளர் நீ சற்றே அறை.

@101. திருவடிப் பெருமை

மேல்

#1 திருவாளர் கனகசபைத் திரு_நடம் செய்து அருள்வார் தேவர் சிகாமணி எனக்குத் திரு_மாலை கொடுத்தார் உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த் துணைவர் அவர்-தம் பெரு வாய்மைத் திறம் சிறிதும் பேச முடியாதே பேசுவது ஆர் மறைகள் எலாம் கூசுகின்ற என்றால் துருவாமல் இங்கு எனக்குக் கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி.

மேல்

#2 அருளாளர் பொன் பொதுவில் அற்புத நாடகம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் சிறியேன் தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த சீராளர் அவர் பெருமைத் திறத்தை எவர் புகல்வார் மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவே என்னடி என் மன_வாக்கின் அளவோ இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பேன் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி.

மேல்

#3 செம்பவளத் திரு_மலையோ மாணிக்க விளக்கோ செழும் சோதித் தனிப் பிழம்போ செவ் வண்ணத் திரளோ அம் பதுமத் திரு விளங்கும் அகலத்தான் பிரமன் அரன் முதலோர் ஐவர்களும் அப்பால் நின்றோரும் எம் பரம் என்று எம் பெருமான் புற வண்ணம் எதுவோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் கனகசபை நாதர் அவர் பெருமை சாற்றுவது என் தோழி.

மேல்

#4 தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர்-தாமோ சிறந்த முனித் தலைவர்களோ செம்பொருள் கண்டோரோ மூவர்களோ அறுவர்களோ முதல் சத்தி அவளோ முன்னிய நம் பெரும் கணவர்-தம் இயலை உணர்ந்தோர் யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து சொல்ல அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் ஆவலொடும் அன்பர் தொழக் கனகசபை நடிப்பார் அவர் பெருமை எவ்விதத்தும் அவர் அறிவார் தோழி.

மேல்

#5 பதி_உடையார் கனக_சபாபதி எனும் பேர் உடையார் பணம் பரித்த வரையர் என்னை மணம் புரிந்த கணவர் விதி_உடையார் ஏத்த நின்ற துதி_உடையார் ஞான விளக்கு அனைய மெய்_உடையார் வெய்ய வினை அறுத்த மதி_உடையார் தமக்கு அருளும் வண்கை பெரிது உடையார் மங்கை சிவகாமவல்லி மணவாளர் முடி மேல் நதி_உடையார் அவர் பெருமை மறைக்கும் எட்டாது என்றால் நான் உரைக்க மாட்டுவனோ நவிலாய் என் தோழி.

மேல்

#6 வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் பொடித் திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி.

மேல்

#7 திரு_சிற்றம்பலத்து இன்பத் திரு_உருக் கொண்டு அருளாம் திரு_நடம் செய்து அருளுகின்ற திரு_அடிகள் இரண்டும் அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகி உருச்சிக்கும் பரநாதத் தலம் கடந்து அப்பால் சித்துருவு கடந்து இருக்கும் என உணர்ந்தோர் சொல்வாரேல் பெருச் சித்து எல்லாம்_வல்ல நடராஜப் பெருமான் பெருமையை யாம் பேசுவது என் பேசாய் என் தோழி.

மேல்

#8 நாத வரை சென்று மறை ஓர் அனந்தம் கோடி நாடி இளைத்து இருந்தன ஆகமங்கள் பரநாத போத வரை போந்து பல முகம் கொண்டு தேடிப் புணர்ப்பு அறியாது இருந்தன என்று அறிஞர் புகல்வாரேல் பாத வரை வெண் நீறு படிந்து இலங்கச் சோதிப் படிவம் எடுத்து அம்பலத்தே பரத நடம் புரியும் போது அவரைக் காண்பது அலால் அவர் பெருமை என்னால் புகல வசம் ஆமோ நீ புகலாய் என் தோழி.

மேல்

#9 பரை இருந்த வெளி முழுதும் பரவி அப்பால் பரையின் பரம் ஆகி அப் பரத்தில் பரம்பரமாய் விளங்கித் திரை கடந்த திரு_வெளியில் ஆனந்தாதீதத் திரு_நடம் செய்யாது செயும் திரு_அடிகள் என்றே புரை கடந்தோர் புகல்கின்றார் கேட்கின்றோம் என்றால் புண்ணியர் என் தனித் தலைவர் புனித நடராஜர் வரை கடந்த திரு_தோள் மேல் திரு_நீற்றர் அவர்-தம் வாய்மை சொல வல்லேனோ அல்லேன் காண் தோழி.

மேல்

#10 ஏய்ப்பு அந்தி வண்ணர் என்றும் படிக வண்ணர் என்றும் இணையில் ஒளி உருவர் என்றும் இயல் அருவர் என்றும் வாய்ப்பந்தல் இடுதல் அன்றி உண்மை சொல வல்லார் மண்ணிடத்தும் விண்ணிடத்தும் மற்றிடத்தும் இலையே காய்ப்பு அந்த மரம் என்று கண்டு சொல்வது அன்றிக் காய்த்த வண்ணம் பூத்த வண்ணம் கண்டுகொள மாட்டாத் தாய்ப் பந்த உணர்வு_உடையேன் யானோ சிற்சபையில் தனி முதல்வர் திரு_வண்ணம் சாற்ற வல்லேன் தோழி.

மேல்

#11 கலைக் கடலைக் கடந்த முனிக் கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது அலைக் கடலில் துரும்பு ஆகி அலைகின்றார் மன்றுள் ஆடுகின்றார் என்பது அலால் அவர் வண்ணம் அதுவும் நிலைக்கு உரிய திரு_சபையின் வண்ணமும் அச் சபை-கண் நிருத்தத்தின் வண்ணமும் இ நீர்மையன என்றே மலைக்கு நிறை கண்டாலும் காணவொணாது அம்ம வாய்ப்பதர்கள் தூற்றுவதில் வரும் பயன் என் தோழி.

மேல்

#12 சித_மலரோ சுகம் மலரும் பரிமளிக்க ஓங்கும் திரு_சிற்றம்பலம் நடுவே திரு_நடனம் புரியும் பத_மலரோ பத_மலரில் பாதுகையோ அவையில் படிந்த திரு_பொடியோ அப் பொடி படிந்த படியோ இதம் மலரும் அப் படி மேல் இருந்தவரோ அவர் பேர் இசைத்தவரும் கேட்டவரும் இலங்கு முத்தர் என்றால் நிதம் மலரும் நடராஜப் பெருமான் என் கணவர் நிலை உரைக்க வல்லார் ஆர் நிகழ்த்தாய் என் தோழி.

மேல்

#13 சுத்தமுற்ற ஐம்பூத வெளி கரண வெளி மேல் துலங்கு வெளி துரிய வெளி சுக வெளியே முதலாம் இத்தகைய வெளிகளுள்ளே எவ்வெளியோ நடனம் இயற்று வெளி என்கின்றார் என்றால் அ வெளியில் நித்த பரிபூரணமாய் ஆனந்த மயமாய் நிருத்தம் இடும் எம் பெருமான் நிபுண நடராயர் சித்து உருவாம் திரு_அடியின் உண்மை வண்ணம் அறிந்து செப்புவது ஆர் என் வசமோ செப்பாய் என் தோழி.

மேல்

#14 காற்று உருவோ கனல் உருவோ கடவுள் உரு என்பார் காற்று உருவும் கனல் உருவும் கண்டு உரைப்பீர் என்றால் வேற்று உருவே புகல்வர் அதை வேறு ஒன்றால் மறுத்தால் விழித்துவிழித்து எம்_போல்வார் மிகவும் மருள்கின்றார் தோற்றும் அந்தத் தத்துவமும் தோற்றாத் தத்துவமும் துரிசாக அவை கடந்த சுக சொருபம் ஆகி மாற்ற மனம் உணர்வு செல்லாத் தலத்து ஆடும் பெருமான் வடிவு உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி.

மேல்

#15 நாதம் மட்டும் சென்றனம் மேல் செல்ல வழி அறியேம் நவின்ற பர விந்து மட்டும் நாடினம் மேல் அறியேம் ஏதம் இலாப் பரநாத எல்லை மட்டும் சென்றேம் இனிச் செல்ல வழி காணேம் இலங்கு பெருவெளிக்கே ஆதரவில் சென்றனம் மேல் செல்ல வழி தெரியேம் அம்மம்ம என்று மறை ஆகமங்கள் எல்லாம் ஓத நின்ற திரு_நடனப் பெருமானார் வடிவின் உண்மை சொல வல்லவர் ஆர் உரையாய் என் தோழி.

மேல்

#16 தோன்று சத்தி பல கோடி அளவு சொல ஒண்ணாத் தோற்று சத்தி பல கோடித் தொகை உரைக்க முடியா சான்று உலகம் தோற்றுவிக்கும் சத்தி பல கோடி-தனை விளம்பல் ஆகா அச் சத்திகளைக் கூட்டி ஏன்ற வகை விடுக்கின்ற சத்தி பல கோடி இத்தனைக்கும் அதிகாரி என் கணவர் என்றால் ஆன்ற மணி மன்றில் இன்ப வடிவு ஆகி நடிக்கும் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி.

மேல்

#17 தோற்றம் ஒன்றே வடிவு ஒன்று வண்ணம் ஒன்று விளங்கும் சோதி ஒன்று மற்று அதனில் துலங்கும் இயல் ஒன்று ஆற்ற அதில் பரமாய அணு ஒன்று பகுதி அது ஒன்று பகுதிக்குள் அமைந்த கரு ஒன்று ஏற்றம் மிக்க அக் கருவுள் சத்தி ஒன்று சத்திக்கு இறை ஒன்றாம் இத்தனைக்கும் என் கணவர் அல்லால் ஆற்ற மற்று ஓர் அதிகாரி இல்லையடி மன்றில் ஆடும் அவர் பெரும் தகைமை யார் உரைப்பார் தோழி.

மேல்

#18 ஒருமை பெறு தோற்றம் ஒன்று தத்துவம் பல் வேறு ஒன்றின் இயல் ஒன்றிடத்தே உற்றில இங்கு இவற்றை இருமையினும் மும்மை முதல் எழுமையினும் கூட்டி இலங்கிய சிற்சத்தி நடு இரண்டு ஒன்று என்னாத பெருமை பெற்று விளங்க அதின் நடு அருள் நின்று இலங்கப் பெரிய அருள் நடு நின்று துரிய நடம் புரியும் அருமை எவர் கண்டுகொள்வர் அவர் பெருமை அவரே அறியாரே என்னடி நீ அறைந்த வண்ணம் தோழி.

மேல்

#19 படைத்த படைப்பு ஒன்று அதிலே பரம் அதில் காரணமாம் பகுதி அதில் பகுக்கின்ற பணிகள் பலபலவாம் புடைத்த அவை புகுந்து உலவும் புரம் ஒன்று அப் புரத்தில் பூபதி ஒன்று அவர்க்கு உணர்த்தும் பூரண சித்து ஒன்று மிடைத்த இவை எல்லாம் சிற்றம்பலத்தே நடிக்கும் மென் பதத்து ஓர் சிற்றிடத்து விளங்கி நிலைபெறவே அடைத்து மற்று இங்கு இவைக்கு எல்லாம் அப்புறத்தே நிற்பார் அவர் பெருமை எவர் அறிவார் அறியாய் நீ தோழி.

மேல்

#20 சிருட்டி ஒன்று சிற்றணுவில் சிறிது அதனில் சிறிது சினைத்த கரணக் கரு அச் சினைக் கருவில் சிறிது வெருட்டிய மான் அ மானில் சிறிது மதி மதியின் மிகச் சிறிது காட்டுகின்ற வியன் சுடர் ஒன்று அதனில் தெருட்டுகின்ற சத்தி மிகச் சிறிது அதனில் கோடித் திறத்தினில் ஓர்சிறிது ஆகும் திரு_சிற்றம்பலத்தே அருள் திறத்தின் நடிக்கின்ற என்னுடைய தலைவர் அருள் பெருமை எவர் உரைப்பார் அறியாய் என் தோழி.

மேல்

#21 நான்முகர்கள் மிகப் பெரியர் ஆங்கு அவரில் பெரியர் நாரணர்கள் மற்று அவரின் நாடின் மிகப் பெரியர் வான் முகத்த உருத்திரர்கள் மற்று அவரில் பெரியர் மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்று அவரில் பெரியர் மீன் முகத்த விந்து அதனில் பெரிது அதனில் நாதம் மிகப் பெரிது பரை அதனில் மிகப் பெரியள் அவளின் ஆன்முகத்தில் பரம்பரம்-தான் பெரிது அதனில் பெரிதாய் ஆடுகின்ற சேவடியார் அறிவார் காண் தோழி.

மேல்

#22 மண் அனந்தம் கோடி அளவு உடையது நீர் அதனில் வயங்கிய நூற்றொரு கோடி மேல் அதிகம் வன்னி எண்ணிய ஆயிரம் அயுதம் கோடியின் மேல் இலக்கம் எண்பத்துநான்கு அதின் மேல் அதிகம் வளியொடு வான் விண் அளவும் மூலம் உயிர் மாமாயை குடிலை விந்து அளவு சொல முடியாது இந்த வகை எல்லாம் அண்ணல் அடிச் சிறு நகத்தில் சிற்றகத்தாம் என்றால் அவர் பெருமை எவர் உரைப்பார் அறியாய் நீ தோழி.

மேல்

#23 மண் ஆதி ஐம்பூத வகை இரண்டின் ஒன்று வடிவு வண்ணம் இயற்கை ஒரு வால் அணுச் சத்து இயலாய்க் கண் என்னும் உணர்ச்சி சொலாக் காட்சியவாய்க் நிற்பக் கருதும் அவைக்கு உள் புறம் கீழ் மேல் பக்கம் நடுவில் நண்ணி ஒரு மூன்று ஐந்து நாலொடு மூன்று எட்டாய் நவம் ஆகி மூலத்தின் நவின்ற சத்திக்கு எல்லாம் அண்ணுறும் ஓர் ஆதார சத்தி கொடுத்து ஆடும் அடிப் பெருமை யார் அறிவார் அவர் அறிவார் தோழி.

மேல்

#24 மண் பூத முதல் சத்தி வால் அணுவில் அணுவாய் மதித்த அதன் உள் ஒளியாய் அ ஒளிக்குள் ஒளியாய் எண் பூதத்து அ ஒளிக்குள் இலங்கு வெளியாய் அ இயல் வெளிக்குள் ஒரு வெளியாய் இருந்த வெளி நடுவே பண் பூத நடம் புரியும் பதப் பெருமை எவரும் பகுத்து உணர முடியாதேல் பத_மலர் என் தலை மேல் நண்பு ஊற வைத்து அருளும் நடராஜப் பெருமான் நல்ல செயல் வல்லபம் ஆர் சொல்லுவர் காண் தோழி.

மேல்

#25 வண் கலப்பில் சந்தி செயும் சத்தியுளே ஒருமை வயங்கு ஒளி மா சத்தி அதனுள் ஒரு காரணமாம் விண் கரண சத்தி அதனுள் தலைமையாக விளங்கு குருச் சத்தி அதின் மெய்ம்மை வடிவான எண்_குணமா சத்தி இந்தச் சத்தி-தனக்கு உள்ளே இறை ஆகி அதுஅதுவாய் இலங்கி நடம் புரியும் தண் கருணைத் திரு_அடியின் பெருமை அறிவ அரிதேல் சாமி திரு_மேனியின் சீர் சாற்றுவது என் தோழி.

மேல்

#26 பெரிய எனப் புகல்கின்ற பூத வகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை உரிய பெரும் பகுதியும் அப் பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் துரிய நடம் புரிகின்ற சோதி மலர்_தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் அரிய பெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருள் பெருமை என் அளவோ அறியாய் என் தோழி.

மேல்

#27 பொன் வண்ணப் பூத முதல் தன்மை உண்மை அகத்தே பொன் புறமாக் கரு விளக்கம் பொருந்த வெண்மை செம்மை தன் வண்ணப் பசுமையொடு கருமை கலப்பு ஆகும் தன்மையினில் தன்மையதாய்த் தனித்து அதற்கு ஓர் முதலாய் மன் வண்ணத்து ஒளி உருவம் உயிர்ப்பினொடு தோன்ற வால் அணுக் கூட்டங்களை அவ்வகை நிறுவி நடத்தும் மின் வண்ணத் திரு_சபையில் ஆடுகின்ற பதத்தின் மெய் வண்ணம் புகலுவது ஆர் விளம்பாய் என் தோழி.

மேல்

#28 பொற்பு உடைய ஐங்கருவுக்கு ஆதார கரணம் புகன்ற அறு கோடி அவைக்கு ஆறு இலக்கம் அவற்றுக்கு அற்புறும் ஓர் அறுபதினாயிரம் அவற்றுக்கு அடை ஆறாயிரம் ஆங்கு அவற்றுக்கு ஓர் அறுநூறு இங்கு இவைக்கே வில் பொலியும் அறுபது மற்று இவைக்கு ஆறு இங்கு இந்த வியன் கரண சத்திகளை விரித்து விளக்குவதாய்ச் சிற்பரமாய் மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெருமை எவர் செப்புவர் காண் தோழி.

மேல்

#29 ஏற்றமுறும் ஐங்கருவுக்கு இயல் பகுதிக் கரணம் எழு கோடி ஈங்கு இவற்றுக்கு ஏழ் இலக்கம் இவைக்கே தோற்றமுறும் எழுபதினாயிரம் இவற்றுக்கு எழுமை துன்னிய நூறு இவற்றினுக்குச் சொல்லும் எழுபது-தான் ஆற்றலுறும் இவை-தமக்கு ஓர் ஏழாம் இக் கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றி நிலை பொருத்திச் சாற்ற அரிய வடிவு வண்ணம் சுவைப் பயன் உண்டாக்கும் சாமி திரு_அடிப் பெருமை சாற்றுவது ஆர் தோழி.

மேல்

#30 விளங்கிய ஐங்கருச் சத்தி ஓர் அனந்தம் கருவில் விளைகின்ற சத்திகள் ஓர் அனந்தம் விளைவு எல்லாம் வளம் பெறவே தருகின்ற சத்திகள் ஓர் அனந்தம் மாண்பு அடையத் தருவிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் உளம்கொள நின்று அதிட்டிக்கும் சத்திகள் ஓர் அனந்தம் ஓங்கிய இச் சத்திகளைத் தனித்தனியே இயக்கித் தளம்கொள ஈண்டு அவ்வவற்றிற்கு உள் புறம் நின்று ஒளிரும் சாமி திரு_அடிப் பெருமை சாற்றுவது ஆர் தோழி.

மேல்

#31 காணுகின்ற ஐங்கருவின் வித்தின் இயல் பலவும் கருதுறும் அங்குரத்தின் இயல் பற்பலவும் அடியின் மாணுகின்ற இயல்கள் பல பலப்பலவும் நடுவில் மன்னும் இயல் பலபலவும் பலப்பலவும் முடியின் பூணும் இயல் அனந்த வகை புரிந்த பலபலவும் பொருந்துவதாய் அவ்வவற்றின் புணர்க்கையும் தான் ஆகி ஏணுகின்ற அவைகளுக்குள் பற்றாமல் நடிக்கும் எழில் கருணைப் பதப் பெருமை இயம்புவது ஆர் தோழி.

மேல்

#32 மண் முதலாம் தத்துவத்தின் தன்மை பல கோடி வயங்கு சத்திக் கூட்டத்தால் வந்தன ஓர் அனந்தம் பண்ணுறும் அத் தன்மையுளே திண்மை ஒரு கோடி பலித்த சத்திக் கூட்டத்தால் பணித்தன ஓர் அனந்தம் எண்ணுறும் இத் திண்மைகளும் இவற்றினது விகற்பம் எல்லாமும் தனித்தனி நின்று இலங்க நிலை புரிந்தே விண் என்னும்படி அவற்றில் கலந்து கலவாது விளையாடும் அடிப் பெருமை விளம்புவது ஆர் தோழி.

மேல்

#33 விண்ணிடத்தே முதல் முப்பூ விரிய அதில் ஒரு பூ விரிய அதின் மற்றொரு பூ விரிந்திட இ ஐம்பூக் கண்ணிடத்தே பிறிதொரு பூ கண்மலர அதிலே கட்டு அவிழ வேறு ஒரு பூ விட்ட எழு பூவும் பெண்ணிடத்தே நான்கு ஆகி ஆணிடத்தே மூன்றாய்ப் பிரிவு இலவாய்ப் பிரிவு உளவாய்ப் பிறங்கி உடல் கரணம் நண்ணிடத் தேர்ந்து இயற்றி அதின் நடு நின்று விளங்கும் நல்ல திரு_அடிப் பெருமை சொல்லுவது ஆர் தோழி.

மேல்

#34 வண் பூவில் வடிவு பல வண்ணங்கள் பல மேல் மதிக்கும் இயல் பல ஒளியின் வாய்மை பல ஒளிக்குள் நண்பு ஊறும் சத்தி பல சத்திகளுள் வயங்கும் நாதங்கள் பல நாத நடுவணை ஓர் கலையில் பண்பாய நடங்கள் பல பல பெயர்ப்பும் காட்டும் பதிகள் பல இவைக்கு எல்லாம் பதி ஆகிப் பொதுவில் கண் பாய இவற்றினொடு கலந்து கலவாமல் காணுகின்ற திரு_அடிச் சீர் கழறுவது ஆர் தோழி.

மேல்

#35 ஓங்கிய ஐம்பூ இவைக்குள் ஒன்றின் ஒன்று திண்மை உற்றன மற்று அதுஅதுவும் பற்றுவன பற்றத் தாங்கிய மா சத்திகளின் பெரும் கூட்டம் கலையாத் தன்மை புரிந்து ஆங்காங்குத் தனித்தனி நின்று இலங்கித் தேங்கிய போது அவை கலையச் செய்கை பல புரிந்து திகழ் ஒளியாய் அருள் வெளியாய்த் திறவில் ஒளி வெளியில் பாங்குற நேர் விளங்குகின்ற திரு_அடியின் பெருமை பகுத்து உரைக்க வல்லவர் ஆர் பகராய் என் தோழி.

மேல்

#36 விரிந்திடும் ஐங்கருவினிலே விடய சத்தி அனந்த வித முகம் கொண்டு இலக அவை விகித விகற்பு ஆகிப் பிரிந்திடு மான் இலக்கணங்கள் பல கோடி பிரியாப் பெரும் சத்தி இலக்கணங்கள் பற்பல கோடிகளாய்த் தெரிந்திடு நால் நிலைக்குள்ளே இருந்து வெளிப்படவும் செய்கை பல புரிகின்ற திறல் உடைத்தார் அகம் மேல் எரிந்திடு தீ நடு வெளி-கண் இருந்த திரு_அடியின் எல்லையை யார் சொல்ல வல்லார் இயம்பாய் என் தோழி.

மேல்

#37 தோன்றிய ஐங்கருவினிலே சொல்ல அரும் ஓர் இயற்கைத் துலங்கும் அதில் பல கோடிக் குலம்கொள் குருத் துவிகள் ஆன்று விளங்கிடும் அவற்றின் அசலை பல கோடி அமைந்திடும் மற்று அவைகளுளே அமலைகள் ஓர் அனந்தம் ஏன்று நிறைந்திடும் அவற்றில் கணிப்பதனுக்கு அரிதாய் இலங்கு பிரகாசிகள் தாம் இருந்தன மற்று இவற்றில் ஊன்றிய தாரக சத்தி ஓங்கும் அதின் நடுவே உற்ற திரு_அடிப் பெருமை உரைப்பவர் ஆர் தோழி.

மேல்

#38 உறைந்திடும் ஐங்கருவினிலே உருவ சத்தி விகற்பம் உன்னுதற்கும் உணர்வதற்கும் ஒண்ணா எண்_இலவே நிறைந்த அவை தனித்தனியே நிகழ்ந்து இலங்க அவைக்குள் நேர்மை ஒண்மை உறுவித்து அ நேர்மை ஒண்மை அகத்தே குறைந்திலவாம் பல வேறு குணங்கள் உறப் புரிந்து குணங்களுளே குறிகள் பல கூட்டுவித்து ஆங்கு அமர்ந்தே மறைந்த மணம் வெளிப்படுத்தும் மலர்_அடியின் பெருமை வகுத்து உரைக்க வல்லவர் ஆர் வழுத்தாய் என் தோழி.

மேல்

#39 சூழ்ந்திடும் ஐங்கருவினிலே சொருப சத்தி பேதம் சொல்லினொடு மனம் கடந்த எல்லை இலாதனவே தாழ்ந்திலவாய் அவை அவையும் தனித்தனி நின்று இலங்கத் தகும் அவைக்குள் நவ விளக்கம் தரித்து அந்த விளக்கம் வாழ்ந்திட ஓர் சத்தி நிலை வயங்கியுறப் புரிந்து மதிக்கும் அந்தச் சத்தி-தனில் மன்னு சத்தர் ஆகி ஆழ்ந்திடும் ஓர் பரம்பரத்தை அசைத்து நின்று நடிக்கும் அடிப் பெருமை உரைப்பவர் ஆர் அறியாய் என் தோழி.

மேல்

#40 பசு நிறத்த ஐங்கருவில் பகர்ந்த சுவைத் தன்மை பற்பல கோடிகளாம் அ உற்பவ சத்திகளில் வசு நிறத்த விவித நவ சத்தி பல கோடி வயங்கும் அவைக்குள் ஆதி வயங்குவள் அ ஆதி தச நிறத்தவாக அதில் தனித்தனி ஓங்காரி சார்ந்திடுவள் அவள் அகத்தே தனிப் பரை சார்ந்திடுவள் திசை நிறத்தப் பரை நடுவில் திரு_நடனம் புரியும் திரு_அடியின் பெரு வடிவைச் செப்புவது ஆர் தோழி.

மேல்

#41 பூத்த சுடர்ப் பூ அகத்தே புறத்தே சூழ் இடத்தே பூத்து மிகக் காய்த்து மதி அமுது ஒழுகப் பழுத்து மாத் தகைய பெரும் ஜோதி மணி மன்றுள் விளங்கும் வண்ணம் ஒருசிறிது அறிய மாட்டாமல் மறைகள் ஏத்துவதும் ஏறுவதும் இறங்குவதும் ஆகி இருக்கின்ற என்று உணர்ந்தோர் இயம்பிடில் இச் சிறியேன் தோத்திரம் செய்து அம்மை கண்டு மகிழ்ந்திட அ மன்றில் துலங்கும் அடிப் பெருமையை என் சொல்லுவது தோழி.

மேல்

#42 வளம் பெறு விண் அணுக்குள் ஒரு மதி இரவி அழலாய் வயங்கிய தாரகையாய் இவ்வகை அனைத்தும் தோற்றும் தளம் பெறு சிற்சொலித பராசத்தி மயம் ஆகித் தனித்த சத்திமான் ஆகித் தத்துவம் எல்லாம் போய் உளம் புகுத மணி மன்றில் திரு_நடம் செய்து அருளும் ஒரு தலைவன் சேவடிச் சீர் உரைப்பவர் எவ்வுலகில் அளந்து அறிதும் என மறைகள் அரற்றும் எனில் சிறிய அடிச்சி உரைத்திடப்படுமோ அறியாய் என் தோழி.

மேல்

#43 பரவிய ஐங்கருவினிலே பருவ சத்தி வயத்தே பரை அதிட்டித்திட நாத விந்து மயக்கத்தே விரவிய தத்துவ அணுக்கள் ஒன்றொடொன்றாய் ஒன்றி விளங்க அவற்று அடி நடு ஈறு இவற்றினில் மூவிதமாய் உர இயலுற்று உயிர் இயக்கி அறிவை அறிவித்தே ஓங்கு திரு_அம்பலத்தில் ஒளி நடனம் புரியும் தர இயலிற்று இது என யார் தெரிந்து உரைப்பார் சிறிய தமியள் உரைத்திடும் தரமோ சாற்றாய் என் தோழி.

மேல்

#44 சோதி மலை ஒரு தலையில் சோதி வடிவு ஆகிச் சூழ்ந்த மற்றோர் தலை ஞான சொரூப மயம் ஆகி ஓதிய வேறு ஒரு தலையில் உபய வண்ணம் ஆகி உரைத்திடும் ஐங்கரு வகைக்கு ஓர் முப்பொருளும் உதவி ஆதி நடு அந்தம் இலா ஆனந்த உருவாய் அம்பலத்தே ஆடுகின்ற அடி_இணையின் பெருமை வேதியனும் திருமாலும் உருத்திரரும் அறியார் விளைவு அறியேன் அறிவேனோ விளம்பாய் என் தோழி.

மேல்

#45 பூ ஒன்றே முப் பூ ஐம் பூ எழு பூ நவமாம் பூ இருபத்தைம் பூவாய்ப் பூத்து மலர்ந்திடவும் நா ஒன்று மணம் வேறு வணம் வேறுவேறா நண்ணி விளங்குறவும் அதின் நல் பயன் மாத்திரையில் மேவு ஒன்றா இருப்ப அதின் நடு நின்று ஞான வியன் நடனம் புரிகின்ற விரை மலர்ச் சேவடியின் பா ஒன்று பெரும் தகைமை உரைப்பவர் ஆர் சிறியேன் பகர்ந்திட வல்லுநள் அல்லேன் பாராய் என் தோழி.

@102. தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்

மேல்

#1 அன்னப் பார்ப்பால் அழகாம் நிலையூடே அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் துன்னப் பார்த்து என் உயிர்_தோழியும் நானும் சூதாடுகின்ற அச் சூழலில் வந்தே உன்னைப் பார்த்து உன் உள்ளே என்னைப் பாராதே ஊரைப் பார்த்து ஓடி உழல்கின்ற பெண்ணே என்னைப் பார் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#2 அது பாவக முகத்து ஆனந்த நாட்டில் அம்பலம் செய்து நின்று ஆடும் அழகர் விது பாவக முகத் தோழியும் நானும் மெய்ப் பாவனை செய்யும் வேளையில் வந்து பொது பாவனை செய்யப் போகாதோ பெண்ணே பொய்ப் பாவனை செய்து கைப்பானேன் ஐயோ இது பாவம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#3 அறம் காதல் செய்தேனை ஆண்டுகொண்டு இங்கே அருள்_பெரும்_சோதியாய் ஆடும் அழகர் உறங்காத வண்ணம் சிற்றம்பலம் பாடி உதிக்கின்ற ஒண்மையில் துதிக்கின்ற போது புறம் காதல் செய்வார் போல் செய்யாதே பெண்ணே பொன் கம்பம் ஏறினை சொர்க்கம் அங்கு அப்பால் இறங்காதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#4 அ நாள் வந்து என்றனை ஆண்டு அருள்செய்த அய்யர் அமுதர் என் அன்பர் அழகர் நல் நாள் கழிக்கின்ற நங்கையரோடு நான் அம்பலம் பாடி நண்ணுறும் போது பின்_நாள் என்று எண்ணிப் பிதற்றாதே பெண்ணே பேர்_அருள் சோதிப் பெரு மணம் செய் நாள் இ நாளே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#5 தப்பு ஓதுவார் உளம் சார்ந்திட உன்னார் சத்தியர் உத்தமர் நித்த மணாளர் ஒப்பு ஓத ஒண்ணாத மெய்ப் போத மன்றின் உண்மையைப் பாடி நான் அண்மையில் நின்றேன் அப்போது என்று எண்ணி அயர்ந்திடேல் பெண்ணே அன்பு உடை நின்னை யாம் இன்புறக் கூடல் இப்போதே என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#6 மெய்க் குலம் போற்ற விளங்கு மணாளர் வித்தகர் அம்பலம் மேவும் அழகர் இக் குல மாதரும் யானும் என் நாதர் இன் அருள் ஆடல்கள் பன்னுறும் போது பொய்க் குலம் பேசிப் புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் எக் குலம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#7 வெம் மத நெஞ்சிடை மேவுற உன்னார் வெம் பலம் மாற்றும் என் அம்பல_வாணர் சம்மத மா மடவார்களும் நானும் தத்துவம் பேசிக்கொண்டு ஒத்துறும் போது இ மதம் பேசி இறங்காதே பெண்ணே ஏக சிவோகத்தை எய்தினை நீ-தான் எ மதம் என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#8 பாரொடு விண்ணும் படைத்த பண்பாளர் பற்று அம்பலத்தார் சொல் சிற்றம்பலத்தார் வார் இடு கொங்கையர் மங்கையரோடே மன்றகம் பாடி மகிழ்கின்ற போது ஏர் உடம்பு ஒன்று என எண்ணேல் நீ பெண்ணே எம் உடம்பு உன்னை இணைந்து இங்கு எமக்கே ஈர் உடம்பு என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#9 மறப்பு அற்ற நெஞ்சிடை வாழ்கின்ற வள்ளல் மலப் பற்று அறுத்தவர் வாழ்த்தும் மணாளர் சிறப்புற்ற மங்கையர்-தம்மொடு நான்-தான் சிற்றம்பலம் பாடிச் செல்கின்ற போது புறப் பற்று அகற்றத் தொடங்காதே பெண்ணே புலை அகப் பற்றை அறுத்தாய் நினக்கே இறப்பு அற்றது என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

மேல்

#10 ஆறு எனும் அந்தங்கள் ஆகி அன்று ஆகும் அம்பலத்து ஆடல் செய் ஆனந்த சித்தர் தேறு அறிவு ஆகிச் சிவானுபவத்தே சின்மயமாய் நான் திளைக்கின்ற போது மாறு அகல் வாழ்வினில் வாழ்கின்ற பெண்ணே வல்லவள் நீயே இ மா நிலை மேலே ஏறினை என்கின்றார் என்னடி அம்மா என் கை பிடிக்கின்றார் என்னடி அம்மா.

@103. நற்றாய் செவிலிக்குக் கூறல்

மேல்

#1 உணர்ந்தவர்-தமக்கும் உணர்வு அரியான் என் உள்ளகத்து அமர்ந்தனன் என்றாள் அணிந்தனன் எனக்கே அருள் மண_மாலை அதிசயம் அதிசயம் என்றாள் துணிந்து நான் தனித்த போது வந்து என் கை தொட்டனன் பிடித்தனன் என்றாள் புணர்ந்தனன் கலந்தான் என்று உளே களித்துப் பொங்கினாள் நான் பெற்ற பொன்னே.

மேல்

#2 தனிப் பெரும் பதியே என் பதி ஆகத் தவம் எது புரிந்ததோ என்றாள் அனித்தம் நீத்து எனை-தான் அன்பினால் அணைத்தான் அதிசயம் அதிசயம் என்றாள் இனித் துயர் சிறிதும் அடைந்திடேன் என்றாள் எனக்கு இணை யார்-கொலோ என்றாள் சனிப் பிறப்பு அறுத்தேன் என்று உளே களிப்புத் ததும்பினாள் நான் பெற்ற தனியே.

மேல்

#3 புண்ணிய பதியைப் புணர்ந்தனன் நான் செய் புண்ணியம் புகல் அரிது என்றாள் தண்ணிய மதியின் அமுது எனக்கு அளித்த தயவை நான் மறப்பனோ என்றாள் எண்ணிய அனைத்தும் ஈந்து அருள்கின்றான் என்னையோ என்னையோ என்றாள் அண்ணிய பேர்_ஆனந்தமே வடிவம் ஆயினாள் நான் பெற்ற அணங்கே.

மேல்

#4 சத்திய ஞான சபாபதி எனக்கே தனிப் பதி ஆயினான் என்றாள் நித்திய வாழ்வு பெற்று நான் இன்ப நிலை-தனில் நிறைந்தனன் என்றாள் பித்து இயல் உலகீர் காண்-மினோ சித்திப் பேறு எலாம் என் வசத்து என்றாள் எத்திசையீரும் ஒத்து இவண் வருக என்றனள் எனது மெல்_இயலே.

மேல்

#5 திரு_மணிப் பொதுவில் ஒரு பெரும் பதி என் சிந்தையில் கலந்தனன் என்றாள் பெருமையில் சிறந்தேன் என் பெரும் தவத்தைப் பேசுதல் அரிதரிது என்றாள் இருமையும் என் போல் ஒருமையில் பெற்றார் யாண்டு உளர் யாண்டு உளர் என்றாள் மரு மலர் முகத்தே இள_நகை துளும்ப வயங்கினாள் நான் பெற்ற மகளே.

மேல்

#6 வள்ளலைப் புணர்ந்தேன் அம்மவோ இது-தான் மாலையோ காலையோ என்றாள் எள்ளலைத் தவிர்ந்தேன் உலகு எலாம் எனக்கே ஏவல்செய்கின்றன என்றாள் தெள் அமுது அருந்தி அழிவு இலா உடம்பும் சித்தியும் பெற்றனன் என்றாள் துள்ளிய மடவீர் காண்-மினோ என்றாள் சோர்வு_இலாள் நான் பெற்ற சுதையே.

மேல்

#7 கனக மா மன்றில் நடம் புரி பதங்கள் கண்டனன் கண்டனன் என்றாள் அனக சிற்சபையில் ஒரு பெரும் பதி என் அன்பிலே கலந்தனன் என்றாள் தினகர சோமாக்கினி எலாம் எனக்கே செயல் செயத் தந்தனன் என்றாள் தன கரத்து எனை-தான் தழுவினான் என்றாள் தவத்தினால் பெற்ற நம் தனியே.

மேல்

#8 கொடிப் பெரு மணிப் பொன் கோயில் என் உளமாக் கொண்டு வந்து அமர்ந்தனன் என்றாள் கடிப் புது மலர்ப் பூங் கண்ணி வேய்ந்து எனை-தான் கடி_மணம் புரிந்தனன் என்றாள் ஒடிப்பு அற எல்லாம்_வல்லதோர் சித்தாம் ஒளி எனக்கு அளித்தனன் என்றாள் இடிப்பொடு நொடித்தீர் காண்-மினோ என்றாள் என் தவத்து இயன்ற மெல்_இயலே.

மேல்

#9 வாழி மா மணி மன்று இறைவனே எனக்கு மாலை வந்து அணிந்தனன் என்றாள் ஊழிதோறூழி உலவினும் அழியா உடம்பு எனக்கு அளித்தனன் என்றாள் ஆழி சூழ் உலகோடு அண்டங்கள் அனைத்தும் அளிக்க என்று அருளினான் என்றாள் ஏழ் இயல் மாடம் மிசையுற வைத்தான் என்றனள் எனது மெல்_இயலே.

மேல்

#10 ஏலு நல் மணி மா மன்று அருள் சோதி என் உளத்து அமர்ந்தனன் என்றாள் பாலும் இன் சுவையும் போன்று எனது ஆவி பற்றினன் கலந்தனன் என்றாள் சாலும் எவ்வுலகும் தழைக்க என்றனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் மேலும் எக்காலும் அழிவு_இலேன் என்றாள் மிகு களிப்புற்றனள் வியந்தே.

@104. தோழிக் குரிமை கிளத்தல்

மேல்

#1 நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடிய மந்திரங்கள் சில கூடி உரையிடவே வியந்து மற்றைத் தேவர் எலாம் வரவும் அவர் நேயம் விரும்பாதே இருப்பது என் நீ என்கின்றாய் தோழி வயம் தரும் இந்திரர் பிரமர் நாரணர் காரணர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

மேல்

#2 நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நங்கை நினைக் கண்டிடவே நாடி மற்றைத் தலைவர் வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி வயம் தரு பார் முதல் நாத வரை உள நாட்டவர்க்கும் மற்றவரை நடத்துகின்ற மா நாட்டார்-தமக்கும் பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

மேல்

#3 நயந்த நட நாயகர் உன் நாயகரே எனினும் நாடும் மற்றைத் தலைவர்-தமைக் கண்ட பொழுது எனினும் வியந்து அவர்க்கு ஓர் நல் உரையும் சொல்லாதே தருக்கி வீதியிலே நடப்பது என் நீ என்கின்றாய் தோழி வயம் தரும் இ அண்ட பகிரண்டம் மட்டோ நாத வரையோ அப்பாலும் உள மா நாட்டார்-தமக்கும் பயந்த குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே பதி நடம் செய் அடிப் பணிக்கே பதித்த குடி அறியே.

மேல்

#4 கடும்_குணத்தோர் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்குக் கணவர் எனினும் பிறரைக் கண்ட பொழுது எனினும் நடும் குணத்தால் நின்று சில நல் வார்த்தை பகராய் நங்காய் ஈது என் என நீ நவில்கின்றாய் தோழி ஒடுங்கு பல தத்துவர்க்கும் தத்துவரை நடத்தும் உபய நிலைத் தலைவருக்கும் அவர் தலைவர்களுக்கும் நடுங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே நடம் செய் அடிப் பணிக்கு என்றே நாட்டிய நல் குடியே.

மேல்

#5 மடம் கலந்தார் பெறற்கு அரிய நடத்து அரசே நினக்கு மணவாளர் எனினும் உன்-பால் வார்த்தை மகிழ்ந்து உரைக்க இடம் கலந்த மூர்த்திகள் தாம் வந்தால் அங்கு அவர்-பால் எண்ணம் இலாது இருக்கின்றாய் என்-கொல் என்றாய் தோழி மடங்கு சமயத் தலைவர் மதத் தலைவர் இவர்க்கும் வயங்கும் இவர்க்கு உபகரிக்கும் மாத் தலைவர்களுக்கும் அடங்கு குடி அல்லடி நான் திரு_சிற்றம்பலத்தே ஆடல் அடிப் பணிக்கு என்றே அமைத்த குடி அறியே.

மேல்

#6 அறம் குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இ மொழி கேள் உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல் உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும் மறம் குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால் மதத் தலைமை பதத் தலைமை வாய்த்தனர் அங்கு அவர்-பால் இறங்கல்_இலேன் பேசுதலால் என் பயனோ நடம் செய் இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே.

மேல்

#7 சிவ மயமே வேறு இலை எல்லாம் என நீ-தானே தே_மொழியாய் பற்பல கால் செப்பியிடக் கேட்டேன் தவ_மயத்தார் பல சமயத் தலைவர் மதத் தலைவர் தத்துவர் தத்துவத் தலைவர் அவர் தலைவர் தலைவர் இவர் அவர் என்று அயல் வேறு பிரித்து அவர்-பால் வார்த்தை இயம்புவது என் என்றாய் ஈது என்-கொல் என்றாய் தோழி நவ மயம் நீ உணர்ந்து அறியாய் ஆதலில் இவ்வண்ணம் நவின்றனை நின் ஐயம் அற நான் புகல்வேன் கேளே.

மேல்

#8 ஒளி ஒன்றே அண்ட பகிரண்டம் எலாம் விளங்கி ஓங்குகின்றது அன்றி அண்ட பகிரண்டங்களிலும் வெளி நின்ற சராசரத்தும் அகத்தினொடு புறத்தும் விளம்பும் அகப்புறத்தினொடு புறப்புறத்தும் நிறைந்தே உளி நின்ற இருள் நீக்கி இலங்குகின்ற தன்மை உலகு அறியும் நீ அறியாது அன்று கண்டாய் தோழி தளி நின்ற ஒளி மயமே வேறு இலை எல்லாமும் தான் என வேதாகமங்கள் சாற்றுதல் சத்தியமே.

மேல்

#9 ஏற்றிடு வேதாகமங்கள் ஒளி மயமே எல்லாம் என்ற மொழி-தனை நினைத்தே இரவில் இருட்டு அறையில் சாற்றிடு மண்_பாத்திரத்தை மர_வட்டில்களைக் கல்_சட்டிகளை வேறு பல சார்ந்த கருவிகளைத் தேற்றம் மிகு தண்ணீரைச் சீவர்கள் பற்பலரைச் செப்பிய அ இருட்டு அறையில் தனித்தனி சேர்த்தாலும் ஊற்றம் உறும் இருள் நீங்கி ஒளி காண்பது உளதோ உளதேல் நீ உரைத்த மொழி உளது ஆகும் தோழி.

மேல்

#10 பரம்-அதனோடு உலகு உயிர்கள் கற்பனையே எல்லாம் பகர் சிவமே என உணர்ந்தோம் ஆதலினால் நாமே பிரமம் எனப் பிறர்க்கு உரைத்துப் பொங்கி வழிந்து ஆங்கே பேசுகின்ற பெரியவர்-தம் பெரிய மதம் பிடியேல் உரம் மிகு பேர்_உலகு உயிர்கள் பரம் இவை காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன இல்லனவே தரம் மிகு பேர்_அருள் ஒளியால் சிவ மயமே எல்லாம் தாம் எனவே உணர்வது சன்மார்க்க நெறி பிடியே.

மேல்

#11 பிரமம் என்றும் சிவம் என்றும் பேசுகின்ற நிலை-தான் பெரு நிலையே இ நிலையில் பேதம் உண்டோ எனவே தரம் அறிய வினவுகின்றாய் தோழி இது கேள் நீ சமரச சன்மார்க்க நிலை சார்தி எனில் அறிவாய் திரமுறவாயினும் எல்லாம் ஆகி அல்லாது ஆகும் திரு_அருளாம் வெளி விளங்க விளங்கு தனிப் பொருளாம் சிரம் உறும் ஓர் பொது உண்மைச் சிவம் பிரம முடியே திகழ் மறை ஆகமம் புகலும் திறன் இது கண்டு அறியே.

மேல்

#12 இலங்குகின்ற பொது உண்மை இருந்த நிலை புகல் என்று இயம்புகின்றாய் மடவாய் கேள் யான் அறியும் தரமோ துலங்கும் அதை உரைத்திடவும் கேட்டிடவும் படுமோ சொல் அளவோ பொருள் அளவோ துன்னும் அறிவு அளவோ விலங்குகின்ற தத்துவங்கள் அத்தனையும் கடந்த மேல் நிலை என்று அந்தம் எலாம் விளம்புகின்றது அன்றி வலம்கொளும் அ மேல் நிலையின் உண்மை எது என்றால் மவுனம்சாதிப்பது அன்றி வாய் திறப்பது இலையே.

மேல்

#13 வாய் திறவா மவுனம் அதே ஆகும் எனில் தோழி மவுன சத்தி வெளி ஏழும் பரத்த பரத்து ஒழியும் தூய பராபரம் அதுவே என்றால் அங்கு அது-தான் துலங்கு நடு வெளி-தனிலே கலந்து கரைவது காண் மேய நடு வெளி என்றால் தற்பரமாம் வெளியில் விரவியிடும் தற்பரமாம் வெளி என்றால் அதுவும் ஆய பெருவெளி-தனிலே அடங்கும் இது மட்டே அளப்பது ஒருவாறு அதன் மேல் அளப்பது அரிது அரிதே.

மேல்

#14 கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேர்_அளவை கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடும் காலம் மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திடக் கண்டாரே அன்றி ஒருவாறேனும் அளவு கண்டார்_இலையே துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன் சொன்ன வெளி வரையேனும் துணிந்து அளக்கப்படுமோ.

@105. தலைவி கூறல்

மேல்

#1 தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார் எம் தேகம்-அதில் புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்து இறையவர் காலையிலே வந்தே இங்கு அமர்ந்து அருள்வர் ஆதலினால் விரைந்தே மாளிகையை அலங்கரித்து வைத்திடுதி இதற்குச் சந்தேகம் இல்லை என்றன் தனித் தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#2 நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி என்பாட்டுக்கு இருந்தேனை வலிந்து கலந்து அணைந்தே இன்பமுறத் தனி மாலையிட்ட நடத்து இறைவர் முன் பாட்டுக் காலையிலே வருகுவர் மாளிகையை முழுதும் அலங்கரித்திடுக ஐயுறவோடு ஒரு நீ தன்பாட்டுக்கு இருந்து உளறேல் ஐயர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#3 முன் பாட்டுக் காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக பின்பாட்டுக் காலையிலே நினைத்த எலாம் முடியும் பிசகு இலை இ மொழி சிறிதும் பிசகு இலை இ உலகில் துன் பாட்டுச் சிற்றினத்தார் சிறுமொழி கேட்டு உள்ளம் துளங்கேல் நம் மாளிகையைச் சூழ அலங்கரிப்பாய் தன் பாட்டுத் திரு_பொதுவில் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#4 உள் உண்ட உண்மை எலாம் நான் அறிவேன் என்னை உடைய பெருந்தகை அறிவார் உலகிடத்தே மாயைக் கள் உண்ட சிற்றினத்தார் யாது அறிவார் எனது கணவர் திரு_வரவு இந்தக் காலையிலாம் கண்டாய் நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்கு புனைந்து அலங்கரிப்பாய் நான் மொழிந்த மொழியைத் தள்ளுண்டு இங்கு ஐயமுறேல் நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#5 என்னுடைய தனிக் கணவர் அருள் ஜோதி உண்மை யான் அறிவேன் உலகவர்கள் எங்ஙனம் கண்டு அறிவார் உன்னல் அற உண்ணுதற்கும் உறங்குதற்கும் அறிவார் உலம்புதல் கேட்டு ஐயமுறேல் ஓங்கிய மாளிகையைத் துன்னுறும் மங்கலம் விளங்க அலங்கரிப்பாய் இங்கே தூங்குதலால் என்ன பலன் சோர்வு அடையேல் பொதுவில் தன்னுடைய நடம் புரியும் தலைவர் திரு ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே

மேல்

#6 என்னை மண_மாலையிட்டார் என் உயிரில் கலந்தார் எல்லாம் செய் வல்ல சித்தர் எனக்கு அறிவித்ததனை இன்ன உலகினர் அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புக நம் தலைவர் வரு தருணம் மன்னிய காலையில் ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கி ஐயம் அடையேல் தன் நிகர் தான் ஆம் பொதுவில் நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#7 கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்கக் கூடாக் கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனித் தலைவர் அளைய எனக்கு உணர்த்தியதை யான் அறிவேன் உலகர் அறிவாரோ அவர் உரை கொண்டு ஐயமுறேல் இங்கே இளைவு அடையேன் மாளிகையை மங்கலங்கள் நிரம்ப இனிது புனைந்து அலங்கரிப்பாய் காலை இது கண்டாய் தளர்வு அறச் சிற்றம்பலத்தே நடம் புரிவார் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#8 ஆர் அறிவார் எல்லாம் செய் வல்லவர் என் உள்ளே அறிவித்த உண்மையை மால் அயன் முதலோர் அறியார் பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் நேர் உற நீ விரைந்துவிரைந்து அணிபெற மாளிகையை நீட அலங்கரிப்பாய் உள் நேயமொடு களித்தே தாரகம் இங்கு எனக்கான நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#9 ஐயர் எனக்கு உள் இருந்து இங்கு அறிவித்த வரத்தை யார் அறிவார் நான் அறிவேன் அவர் அறிவார் அல்லால் பொய் உலகர் அறிவாரோ புல்_அறிவால் பலவே புகல்கின்றார் அது கேட்டுப் புந்தி மயக்கு அடையேல் மெய்யர் எனை ஆளுடையார் வருகின்ற தருணம் மேவியது மாளிகையை அலங்கரிப்பாய் விரைந்தே தையல் ஒரு பால் உடைய நடத்து இறைவர் ஆணை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

மேல்

#10 உடையவர் என் உளத்து இருந்தே உணர்வித்த வரத்தை உலகவர்கள் அறியார்கள் ஆதலினால் பலவே இடை புகல்கின்றார் அது கேட்டு ஐயமுறேல் இங்கே இரவு விடிந்தது காலை எய்தியதால் இனியே அடைவுற நம் தனித் தலைவர் தடை அற வந்து அருள்வர் அணிபெற மாளிகையை விரைந்து அலங்கரித்து மகிழ்க சடை அசையப் பொது நடம் செய் இறைவர் திரு வார்த்தை சத்தியம் சத்தியம் மாதே சத்தியம் சத்தியமே.

@106. அனுபவ மாலை

மேல்

#1 அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்துகொண்டேன் அன்பொடும் என் ஆர்_உயிர்க்கும் அணிந்தேன் எம் பரத்தே மணக்கும் அந்த மலர் மணத்தைத் தோழி என் உரைப்பேன் உரைக்க என்றால் என்னளவு அன்று அதுவே வம்பு இசைத்தேன் அன்றடி நீ என் அருகே இருந்து உன் மணி நாசி அடைப்பதனைத் திறந்து முகந்து அறி காண் நம்புறு பார் முதல் நாத வரை உள நாட்டவரும் நன்கு முகந்தனர் வியந்தார் நல் மணம் ஈது எனவே.

மேல்

#2 கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவே கண்டு உளம் மகிழ்வேன் கனவு ஒன்றோ நனவும் எண் அடங்காப் பெரும் ஜோதி என் இறைவர் எனையே இணைந்து இரவு_பகல் காணாது இன்புறச்செய்கின்றார் மண் உறங்கும் மலை உறங்கும் வளை கடலும் உறங்கும் மற்று உள எல்லாம் உறங்கும் மா நிலத்தே நமது பெண் உறங்காள் எனத் தாயர் பேசி மகிழ்கின்றார் பெண்கள் எலாம் கூசுகின்றார் பெரும் தவம் செய்கிலரே.

மேல்

#3 எல்லாம் செய் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் எவ்வுலகில் யார் எனக்கு இங்கு ஈடு உரை நீ தோழீ நல்லாய் மீக்கோள்_உடையார் இந்திரர் மா முனிவர் நான்முகர் நாரணர் எல்லாம் வான்முகராய் நின்றே பல்லாரில் இவள் புரிந்த பெரும் தவத்தை நம்மால் பகர்வ அரிது என்கின்றார் சிற்பதியில் நடம் புரியும் வல்லானை மணந்திடவும் பெற்றனள் இங்கு இவளே வல்லாள் என்று உரைக்கின்றார் நல்லார்கள் பலரே.

மேல்

#4 இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் யான் செய் தவம் யார் செய்தார் இது கேள் என் தோழி எச்சமயத் தேவரையும் சிற்றுரும்பு என்றேனும் எண்ணுவனோ புண்ணியரை எண்ணும் மனத்தாலே பிச்சி என நினைத்தாலும் நினையடி நீ அவரைப் பிரிவேனோ பிரிவு என்று பேசுகினும் தரியேன் விச்சை நடம் கண்டேன் நான் நடம் கண்டால் பேயும் விடத் துணியாது என்பர்கள் என் விளைவு உரைப்பது என்னே.

மேல்

#5 வஞ்சம் இலாத் தலைவருக்கே மாலை மகிழ்ந்து அணிந்தேன் மறைகளுடன் ஆகமங்கள் வகுத்துவகுத்து உரைக்கும் எஞ்சலுறா வாழ்வு அனைத்தும் என்னுடைய வாழ்வே எற்றோ நான் புரிந்த தவம் சற்றே நீ உரையாய் அஞ்சும் முகம் காட்டிய என் தாயர் எலாம் எனக்கே ஆறும் முகம் காட்டி மிக வீறு படைக்கின்றார் பஞ்சு அடிப் பாவையர் எல்லாம் விஞ்சு அடி-பால் இருந்தே பரவுகின்றார் தோழி என்றன் உறவு மிக விழைந்தே.

மேல்

#6 அன்னம் உண அழைக்கின்றாய் தோழி இங்கே நான்-தான் அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடி_மலர்த் தேன் உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும் ஒரு தலைமைப் பெரும் தலைவருடைய அருள் புகழாம் இன் அமுதில் என் உடை அன்பு என்னும் நறும் கனியின் இரதமும் என் தனிக் கணவர் உருக் காட்சி எனும் ஓர் கன்னல் உளே தனித்து எடுத்த தேம் பாகும் கலந்தே களித்து உண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.

மேல்

#7 பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகையே ஒரு கோடிப் பொன் பெறும் என்று உரைப்பார் இதுவரையோ பல கோடி என்னினும் ஓர் அளவோ எண்_இறந்த அண்ட வகை எத்தனை கோடிகளும் சது_மறை சொல் அண்ட வகை தனித்தனியே நடத்தும் சத்தர்களும் சத்திகளும் சற்றேனும் பெறுமோ துதி பெறும் அத் திருவாளர் புன்னகையை நினைக்கும்-தோறும் மனம் ஊறுகின்ற சுக அமுதம் பெறுமே.

மேல்

#8 கண் கலந்த கணவர் எனைக் கை கலந்த தருணம் கண்டு அறியேன் என்னையும் என் கரணங்கள்-தனையும் எண் கலந்த போகம் எலாம் சிவபோகம்-தனில் ஓர் இறை அளவு என்று உரைக்கின்ற மறை அளவு இன்று அறிந்தேன் விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினைத் துயர் தீர்ந்து அடைந்த சுகம் நினைத்திடும்-தோறு எல்லாம் உண் கலந்த ஆனந்தப் பெரும் போகம் அப்போது உற்றது என எனை விழுங்கக் கற்றது காண் தோழி.

மேல்

#9 மாடம் மிசை ஓங்கு நிலா_மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு_அருள் அமுதம் மகிழ்ந்தே ஏடு அவிழ் பூம் குழலாய் நான் உண்டதொரு தருணம் என்னை அறிந்திலன் உலகம்-தன்னையும் நான் அறியேன் தேட அரிய நறும் பாலும் தேம் பாகும் நெய்யும் தேனும் ஒக்கக் கலந்தது எனச் செப்பினும் சாலாதே ஈடு அறியாச் சுவை புகல என்னாலே முடியாது என்னடியோ அ அமுதம் பொன் அடி-தான் நிகரே.

மேல்

#10 கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு_மேனியிலே கலந்த மணம் அது-தான் இல் பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறை வடிவத்து உளதே பொன் பூவும் நறு மணமும் கண்டு அறியார் உலகர் புண்ணியனார் திரு_வடிவில் நண்ணியவாறு அதுவே நல் பூதி அணிந்த திரு_வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே.

மேல்

#11 மன்னு திரு_சபை நடுவே வயங்கு நடம் புரியும் மணவாளர் திரு_மேனி வண்ணம் கண்டு உவந்தேன் என்னடி இத் திரு_மேனி இருந்த வண்ணம் தோழி என் புகல்வேன் மதி இரவி இலங்கும் அங்கியுடனே மின்னும் ஒன்றாய்க் கூடியவை எண் கடந்த கோடி விளங்கும் வண்ணம் என்று உரைக்கோ உரைக்கினும் சாலாதே அன்ன வண்ணம் மறை முடிவும் அறைவு அரிதே அந்த அரும் பெரும் சோதியின் வண்ணம் யார் உரைப்பர் அந்தோ.

மேல்

#12 கள் உண்டாள் எனப் புகன்றார் கனகசபை நடுவே கண்டது உண்டு சிற்சபையில் உண்டதும் உண்டடி நான் எள்ளுண்ட பல விடயத்து இறங்கும் கள் அன்றே என்றும் இறவா நிலையில் இருத்தும் கள் உலகர் உள் உண்ட போது மயக்குற்றிடும் கள் அலவே உள்ள மயக்கு அனைத்தினையும் ஒழித்திடும் கள் மடவாய் அள்ளுண்ட பிறரும் எனை அடுத்தடுத்துக் கண்டால் அறிவு தரும் அவர்க்கும் இங்கே யான் உண்ட கள்ளே.

மேல்

#13 காரிகை நீ என்னுடனே காண வருவாயோ கனகசபை நடு நின்ற கணவர் வடிவழகை ஏர் இகவா திரு_வடிவை எண்ண முடியாதேல் இயம்ப முடிந்திடுமோ நாம் எழுத முடிந்திடுமோ பேர் இகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம் பின்னது முன் முன்னது பின் பின்_முன்னா மயங்கிப் பார் இகவாது இன்றளவும் மிக எழுதிஎழுதிப் பார்க்கின்ற முடிவு ஒன்றும் பார்த்தது இலை அம்மா.

மேல்

#14 கண்ணாறு படும் என நான் அஞ்சுகின்றேன் பல கால் கணவர் திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில் எண்ணா என் ஆசை வெள்ளம் என் சொல் வழி கேளாது எனை ஈர்த்துக்கொண்டு சபைக்கு ஏகுகின்றது அந்தோ பெண்_ஆசை பெரிது என்பர் விண் ஆளும் அவர்க்கும் பெண்_ஆசை பெரிது அல காண் ஆண்_ஆசை பெரிதே உள் நாடிப் பற்பல கால் கண்ணாறு கழிக்கல் உறுகின்றேன் தோழி நின்னால் பெறுகின்றபடியே.

மேல்

#15 கற்பூரம் கொணர்ந்திடுக தனித் தோழி எனது கணவர் வரு தருணம் இது கண்ணாறு கழிப்பாம் எல் பூத நிலை அவர்-தம் திரு_அடித் தாமரைக் கீழ் இருப்பதடி கீழ் இருப்பது என்று நினையேல் காண் பல் பூத நிலை கடந்து நாத நிலைக்கு அப்பால் பரநாத நிலை-அதன் மேல் விளங்குகின்றது அறி நீ இல் பூவை அ அடிக்குக் கண்ணாறு கழித்தால் எவ்வுலகத்து எவ்வுயிர்க்கும் இனிது நலம் தருமே.

மேல்

#16 மனை அணைந்து மலர்_அணை மேல் எனை அணைந்த போது மணவாளர் வடிவு என்றும் எனது வடிவு என்றும் தனை நினைந்து பிரித்து அறிந்தது இல்லையடி எனை-தான் சற்றும் அறியேன் எனில் யான் மற்று அறிவது என்னே தினை அளவாயினும் விகற்ப உணர்ச்சி என்பது இலையே திருவாளர் கலந்தபடி செப்புவது எப்படியோ உனை அணைந்தால் இவ்வாறு நான் கேட்பேன் அப்போது உன் அறிவும் என் அறிவும் ஓர் அறிவாம் காணே.

மேல்

#17 தாழ் குழலாய் எனைச் சற்றே தனிக்க விட்டால் ஞானசபைத் தலைவர் வருகின்ற தருணம் இது நான்-தான் வாழ்வு அடை பொன் மண்டபத்தே பளிக்கறையினூடே மலர்_அணையை அலங்கரித்து வைத்திடுதல் வேண்டும் சூழுற நான் அலங்கரிப்பேன் என்கின்றாய் தோழி துரைக்கு மனம் இல்லை அது துணிந்து அறிந்தேன் பல கால் ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் அடைந்த சுகம் இங்கு இதை விட நான் செய் பணி வேறு எ பணி நீ இயம்பே.

மேல்

#18 தனித் தலைவர் வருகின்ற தருணம் இது தோழி தனிக்க எனை விடு நீயும் தனித்து ஒரு பால் இருத்தி இனித்த சுவைத் திரள் கலந்த திரு_வார்த்தை நீயும் இன்புறக் கேட்டு உளம் களிப்பாய் இது சாலும் நினக்கே மனித்தர்களோ வானவரோ மலர் அயனோ மாலோ மற்றையரோ என் புகல்வேன் மகேசுரர் ஆதியரும் தனித்த ஒரு திரு_வார்த்தை கேட்பதற்கே கோடித் தவம் செய்து நிற்கின்றார் நவம் செய்த நிலத்தே.

மேல்

#19 மணவாளர் வருகின்ற தருணம் இது மடவாய் மாளிகையின் வாயல் எலாம் வளம் பெற நீ புனைக குணவாளர் அணையும் மலர்_அணை அகத்தை நானே குலவு மணி_விளக்கத்தால் அலங்கரிக்கப் புகுவேன் தணவாத சுகம் தரும் என் தனிக் கணவர் வரிலோ சற்றும் மயல் வாதனைகள் உற்றிடுதல் ஆகா அணவாத மனத்தவரைப் புறப் பணிக்கே விடுக அன்பு_உடையார்களுக்கு இடுக அகப் பணி செய்திடவே.

மேல்

#20 அரும் பொன்_அனையார் எனது கணவர் வரு தருணம் ஆய்_இழை ஈது ஆதலினால் வாயல் முகப்பு எல்லாம் விரும்புறு தோரணம் கொடிகள் பழுத்த குலை வாழை விரைக் கமுகு தெங்கிளநீர் எனைப் பலவும் புனைக கரும்பு நெல்லின் முளை நிறை நீர்க் குடம் இணைந்த கயலும் கண்ணாடி கவரி முதல் உள் நாடி இடுக இரும்பொடு கல் ஒத்த மனங்களும் கனிய உருக்கும் இறைவர் திரு_வரவு எதிர்கொண்டு ஏத்துவதற்கு இனிதே.

மேல்

#21 பதி வரும் ஓர் தருணம் இது தருணம் இது தோழி பராக்கு அடையேல் மணி மாடப் பக்கம் எலாம் புனைக அதிக நலம் பெறு பளிக்கு மணி மேடை நடுவே அணையை அலங்கரித்திட நான் புகுகின்றேன் விரைந்தே கதி தருவார் நல் வரவு சத்தியம் சத்தியம் நீ களிப்பினொடு மணி_விளக்கால் கதிர் பரவ நிரைத்தே புதிய நவமணி குயின்ற ஆசனங்கள் இடுக புண்ணியனார் நல் வரவை எண்ணிஎண்ணி இனிதே.

மேல்

#22 மன்று ஆடும் கணவர் திரு_வரவை நினைக்கின்றேன் மகிழ்ந்து நினைத்திடும்-தோறும் மனம் கனிவுற்று உருகி நன்று ஆவின் பால் திரளின் நறு நெய்யும் தேனும் நல் கருப்பஞ்சாறு எடுத்த சர்க்கரையும் கூட்டி இன்று ஆர உண்டது என இனித்தினித்துப் பொங்கி எழுந்து எனையும் விழுங்குகின்றது என்றால் என் தோழி இன்று ஆவி_அன்னவரைக் கண்டு கொளும் தருணம் என் சரிதம் எப்படியோ என் புகல்வேன் அந்தோ.

மேல்

#23 கூடிய என் தனிக் கணவர் நல் வரத்தை நானே குறிக்கின்ற-தோறும் ஒளி எறிக்கின்ற மனம்-தான் நீடிய பொன்_மலை முடி மேல் வாழ்வு அடைந்த தேவர் நீள் முடி மேல் இருக்கின்றது என்று உரைக்கோ அன்றி ஆடிய பொன்_சபை நடுவே சிற்சபையின் நடுவே ஆடுகின்ற அடி நிழல் கீழ் இருக்கின்றது என்கோ ஏடு அவிழ் பூம் குழலாய் என் இறைவரைக் கண்ணுற்றால் என் மனத்தின் சரிதம் அதை யார் புகல்வார் அந்தோ.

மேல்

#24 அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே.

மேல்

#25 என் இரு கண்மணி_அனையார் என் உயிர்_நாயகனார் என் உயிருக்கு அமுது_ஆனார் எல்லாம் செய் வல்லார் பொன் அணி பொன்_சபையாளர் சிற்சபையார் என்னைப் புறம் புணர்ந்தார் அகம் புணர்ந்தார் புறத்தகத்தும் புணர்ந்தார் அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ மன்னுறும் என் தனித் தாயும் தந்தையும் அங்கு அவரே மக்கள் பொருள் மிக்க திரு_ஒக்கலும் அங்கு அவரே.

மேல்

#26 தந்தை என்றாய் மகன் என்றாய் மணவாளன் என்றாய் தகுமோ இங்கு இது என்ன வினவுதியோ மடவாய் சிந்தைசெய்து காணடி நீ சிற்சபையில் நடிக்கும் திருவாளர் எனைப் புணர்ந்த திரு_கணவர் அவர்-தம் அந்தம் நடு முதல் இல்லா அரும் பெரும் சோதி அதே அண்ட சராசரங்கள் எலாம் கண்டது வேறு இலையே எந்த வகை பொய் புகல்வேன் மற்றையர் போல் அம்மா வீறும் அவர் திரு_மேனி நானும் என அறியே.

மேல்

#27 எல்லாமும் செய வல்ல தனித் தலைவர் பொதுவில் இருந்து நடம் புரிகின்ற அரும் பெரும் சோதியினார் நல்லாய் நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணி எனை மணம் புரிந்தார் புண்ணியனார் அதனால் இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெரும் செல்வம் என் புகல்வேன் அம்மா செல்லாத அண்டம் மட்டோ அப்புறத்து அப்பாலும் சிவ ஞானப் பெரும் செல்வம் சிறப்பது கண்டு அறியே.

மேல்

#28 வான் கண்ட பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து வருந்துகின்றார் அந்தோ நான் கண்ட காட்சி அவர் கண்டிலரே உலகில் நான் ஒரு பெண் செய்த தவம் எ தவமோ அறியேன் கோன் கண்ட குடிக்கு ஒன்றும் குறைவு இலையேல் அண்ட கோடி எலாம் தனிப் பெரும் செங்கோல் நடத்தும் இறைவர் தான் கண்ட குடி ஆனேன் குறைகள் எலாம் தவிர்ந்தேன் தனித் தவள மாடம் மிசை இனித்து இருக்கின்றேனே.

மேல்

#29 என் கணவர் பெரும் தன்மை ஆறு அந்த நிலைக்கே எட்டி நின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி பொன் கணவர் கலை மடந்தை-தன் கணவர் முதலோர் புனைந்து உரைக்கும் கதை போல நினைந்து உரைக்கப்படுமோ புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர் போல் புகல் மறையும் ஆகமமும் புலம்புகின்றது அம்மா உன் கணவர் திறம் புகல் என்று உரைக்கின்றாய் நீ-தான் உத்தமனார் அருள் சோதி பெற்றிட முன் விரும்பே.

மேல்

#30 ஈங்கு சிலர் உண்ணுக என்று என்னை அழைக்கின்றார் என் தோழி நான் இவர்கட்கு என் புகல்வேன் அம்மா ஓங்கு நிலா_மண்டபத்தே என் கணவருடனே உவட்டாத தெள் அமுதம் உண்டு பசி தீர்ந்தேன் தேன்குழல் இங்கு இனி எனக்குப் பசி வரில் அப்போது செப்புகின்றேன் இப்போது சிலுகிழைத்தல் வேண்டா ஏங்கல் அற நீ அவர்க்குத் தெளிவிப்பாய் மற்றை இருந்தவரும் விருந்தவரும் இனிது புசித்திடற்கே.

மேல்

#31 ஐயர் எனை ஆளுடையார் அரும் பெரும் சோதியினார் அம்பலத்தே நடம் புரியும் ஆனந்த வடிவர் மெய்யர் எனை மணம் புரிந்த தனிக் கணவர் துரிய வெளியில் நிலா_மண்டபத்தே மேவி அமுது அளித்து என் கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தை என்னால் கண்டு உரைக்கப்படுமோ வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பு அரிதாம் அதுவே.

மேல்

#32 தன் வடிவம் தான் ஆகும் திரு_சிற்றம்பலத்தே தனி நடம் செய் பெரும் தலைவர் பொன்_சபை எம் கணவர் பொன் வடிவம் இருந்த வண்ணம் நினைத்திடும் போது எல்லாம் புகல அரும் பேர்_ஆனந்த போக வெள்ளம் ததும்பி என் வடிவில் பொங்குகின்றது அம்மா என் உள்ளம் இருந்த படி என் புகல்வேன் என்னளவு அன்று அது-தான் முன் வடிவம் கரைந்து இனிய சர்க்கரையும் தேனும் முக்கனியும் கூட்டி உண்ட பக்கமும் சாலாதே.

மேல்

#33 இ உலகில் எனை_போல்வார் ஓர் அனந்தம் கோடி என்னில் உயர்ந்து இருக்கின்றார் எத்தனையோ கோடி அ உலகில் சிறந்துநின்றார் அளவு_இறந்த கோடி அத்தனை பேர்களும் அந்தோ நித்தம் வருந்திடவும் எவ்வுலகும் உணர்வ அரிய திரு_சிற்றம்பலத்தே இனிது அமர்ந்த தலைவர் இங்கே என்னை மணம் புரிந்தார் நவ்வி விழி மட மாதே கீழ் மேல் என்பது-தான் நாதர் திரு_அருள் சோதி நாடுவது ஒன்று இலையே.

மேல்

#34 திருவாளர் பொன்_சபையில் திரு_நடம் செய்து அருள்வார் சிற்சபையார் என்றனக்குத் திரு_மாலை கொடுத்தார் உருவாளர் அரு ஆகி ஒளி ஆகி வெளியாய் ஓங்குகின்றார் என்னுடைய உயிர்த் துணைவர் அவர்-தம் பெரு வாய்மைத் திரு_அருளே பெரு வாழ்வு என்று உணர்ந்தோர் பேசிய மெய் வாசகத்தின் பெருமையை இன்று உணர்ந்தேன் துருவாத எனக்கு இங்கே அருள் நினைக்கும்-தோறும் சொல்லளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி.

மேல்

#35 அருளாளர் பொன் பொதுவில் ஆனந்த நடம் செய் ஆனந்த வண்ணர் எனை ஆளுடையார் நான்-தான் தெருளாத பருவத்தே தெருட்டி மணம் புரிந்த திருவாளர் அவர் பெருமைத் திறத்தை எவர் புகல்வார் மருளாத ஆகமங்கள் மா மறைகள் எல்லாம் மருண்டனவேல் என்னடி நம் மன_வாக்கின் அளவோ இருளாமை என்று உறுமோ அன்று சிறிது உரைப்பாம் என்னவும் நாண் ஈர்ப்பது இதற்கு என் புரிவேன் தோழி.

மேல்

#36 செம்பவளத் திரு_மலையோ மாணிக்க விளக்கோ தெய்வ மரகதத் திரளோ செழும் நீலப் பொருப்போ பம்பு மணி ஒளியோ நல் பசும்பொன்னின் சுடரோ படிக வண்ணப் பெரும் காட்சி-தானோ என்று உணர்ந்தே எம் பரம் அன்று எம் பெருமான் புற வண்ணம் யாதோ என்பாரேல் அக வண்ணம் யார் உரைக்க வல்லார் தம் பரம் என்று என்னை அன்று மணம் புரிந்தார் ஞான சபைத் தலைவர் அவர் வண்ணம் சாற்றுவது என் தோழி.

மேல்

#37 தேவர்களோ முனிவர்களோ சிறந்த முத்தர்-தாமோ தேர்ந்த சிவயோகிகளோ செம்பொருள் கண்டோரோ மூவர்களோ ஐவர்களோ முதல் பரையோ பரமோ முன்னிய என் தனித் தலைவர்-தம் இயலை உணர்ந்தார் யாவர்களும் அல்ல என்றால் யான் உணர்ந்து மொழிதற்கு அமையுமோ ஒருசிறிதும் அமையாது கண்டாய் ஆவலொடும் அன்பர் தொழச் சிற்சபையில் நடிப்பார் அவர் பெருமை அவர் அறிவர் அவரும் அறிந்திலரே.

மேல்

#38 திரு_சிற்றம்பலத்து இன்பத் திரு_உருக் கொண்டு இன்பத் திரு_நடம் செய்து அருள்கின்ற திரு_அடிக்கே தொழும்பாய் அருச்சிக்கும் பேர்_அன்பர் அறிவின்-கண் அறிவாய் அ அறிவில் விளைந்த சிவானந்த அமுது ஆகிப் பரிச்சிக்கும் அ அமுதின் நிறைந்த சுவை ஆகிப் பயன் ஆகிப் பயத்தின் அனுபவம் ஆகி நிறைந்தே உருச்சிக்கும் என மறைகள் ஆகமங்கள் எல்லாம் ஓதுகின்ற எனில் அவர்-தம் ஒளி உரைப்பது எவரே.

மேல்

#39 வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற உள் பிழிந்து எடுத்த கரும்பு இரதம் கலந்தே தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பர அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் பொடித் திரு_மேனியர் அவரைப் புணர வல்லேன் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழீ.

மேல்

#40 கன்னி எனை மணந்த பதி கனி தரு சிற்சபைக்கே கலந்த தனிப் பதி வயங்கு கனக_சபாபதி வான் பன்னியருக்கு அருள் புரிந்த பதி உலகம் எல்லாம் படைத்த பதி காத்து அருளும் பசுபதி எவ்வுயிர்க்கும் அன்னியம் அல்லாது அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் அருள் செங்கோல் செலுத்துகின்ற அதிபதியாம் அதனால் என் இயல் போல் பிறர் இயலை எண்ணியிடேல் பிறரோ என் பதி-பால் அன்பு-அது_இலார் அன்பு உளரேல் எண்ணே.

மேல்

#41 என் இயல் போல் பிறர் இயலை எண்ணேல் என்று உரைத்தேன் இறுமாப்பால் உரைத்தனன் என்று எண்ணியிடேல் மடவாய் பன்னிய நான் என் பதியின் பற்று அலது வேறு ஓர் பற்று அறியேன் உற்றவரும் மற்றவரும் பொருளும் உன்னிய என் உயிரும் எனது உடலும் எனது உணர்வும் உயிர் உணர்வால் அடை சுகமும் திரு_சிற்றம்பலத்தே மன்னியது ஆதலில் நான் பெண்_மகளும் அலேன் வரும் ஆண்_மகனும் அலேன் அலியும் அலேன் இது குறித்து என்று அறியே.

மேல்

#42 பார் முதலாப் பரநாதப் பதி கடந்து அப்பாலும் பாங்கு உடைய தனிச் செங்கோல் ஓங்க நடக்கின்ற சீர் தெரிந்தார் ஏத்து-தொறும் ஏத்துதற்கோ எனது திருவாளர் அருள்கின்றது அன்று மனம் கனிந்தே ஆர்தரு பேர்_அன்பு ஒன்றே குறித்து அருளுகின்றார் ஆதலினால் அவரிடத்தே அன்பு_உடையார் எல்லாம் ஓர்தரும் என் உறவினராம் ஆணை இது நீயும் உறவானது அவர் அன்பு மறவாமை குறித்தே.

மேல்

#43 நாதாந்த வரையும் எங்கள் நாயகனார் செங்கோல் நடக்கின்றது என்கின்றார் நாதாந்தம் மட்டோ போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்தப் பதியும் புகல்கின்றார் புகலும் வேதாந்த வெளியும் மிகு சித்தாந்த வெளியும் விளங்கும் இவற்று அப்பாலும் அதன் மேல் அப்பாலும் வாதாந்தத்து-அதன் மேலும் அதன் மேல் அப்பாலும் மன்று ஆடி அருள் செங்கோல் சென்று ஆடல் அறியே.

மேல்

#44 புண்ணியனார் என் உளத்தே புகுந்து அமர்ந்த தலைவர் பொது விளங்க நடிக்கின்ற திரு_கூத்தின் திறத்தை எண்ணிய நான் எண்ணு-தொறும் உண்டு பசி தீர்ந்தே இருக்கின்றேன் அடிக்கடி நீ என்னை அழைக்கின்றாய் பண்ணுறும் என் தனிக் கணவர் கூத்து ஆடும் சபையைப் பார்த்தாலும் பசி போமே பார்த்திடல் அன்றியுமே அண்ணுறும் அத் திரு_சபையை நினைக்கினும் வேசாறல் ஆறுமடி ஊறுமடி ஆனந்த அமுதே.

மேல்

#45 கூசுகின்றது என்னடி நான் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடிக் கணவருக்கே மாலையிட்டாய் எனவே ஏசுகின்றார் ஆரடியோ அண்ட பகிரண்டத்து இருக்கின்ற சத்தர்களும் சத்திகளும் பிறரும் பேசுகின்ற வார்த்தை எலாம் வள்ளல் அருள் கூத்தின் பெருமை அலால் வேறு ஒன்றும் பேசுகின்றது இலையே வீசுகின்ற பெரும் சோதித் திரு_கூத்தின் திறமே வேதமுடன் ஆகமங்கள் விளம்புகின்றது அன்றே.

மேல்

#46 குலம்_அறியார் புலம்_அறியார் அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி ஐயருக்கே மாலையிட்டாய் எனவே புலம்_அறியார் போல் நீயும் புகலுதியோ தோழி புலபுல என்று அளப்பது எலாம் போகவிட்டு இங்கு இது கேள் அலகு_அறியாத் திரு_கூத்து என் கணவர் புரியாரேல் அயன் அரியோடு அரன் முதலாம் ஐவர்களும் பிறரும் விலக அறியா உயிர் பலவும் நீயும் இங்கே நின்று மினுக்குவதும் குலுக்குவதும் வெளுத்துவிடும் காணே.

மேல்

#47 கொடி_இடைப் பெண் பேதாய் நீ அம்பலத்தே நடிக்கும் கூத்தாடி என்று எனது கொழுநர்-தமைக் குறித்தாய் படி இடத்தே வான் இடத்தே பாதலத்தே அண்ட பகிரண்ட கோடியிலே பதி விளக்கம் எல்லாம் அடி_மலர் கொண்டு ஐயர் செய்யும் திரு_கூத்தின் விளக்கம் ஆகும் இது சத்தியம் என்று அரு_மறை ஆகமங்கள் கெடியுறவே பறையடித்துத் திரிகின்ற அவற்றைக் கேட்டு அறிந்துகொள்வாய் நின் வாட்டம் எலாம் தவிர்ந்தே.

மேல்

#48 இன்ப வடிவம் தருதற்கு இறைவர் வருகின்றார் எல்லாம் செய் வல்ல சித்தர் இங்கு வருகின்றார் அன்பர் உளத்தே இனிக்கும் அமுதர் வருகின்றார் அம்பலத்தே நடம் புரியும் ஐயர் வருகின்றார் என்பு உருப் பொன் உரு ஆக்க எண்ணி வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா துன்பம் அறத் திரு_சின்ன ஒலி அதனை நீயும் சுகம் பெறவே கேளடி என் தோழி எனைச் சூழ்ந்தே.

மேல்

#49 துரிய பதம் கடந்த பெரும் சோதி வருகின்றார் சுக வடிவம் தர உயிர்க்குத் துணைவர் வருகின்றார் பெரிய பிரமாதியர்க்கும் அரியர் வருகின்றார் பித்தர் என மறை புகலும் சித்தர் வருகின்றார் இரிவு அகல் சிற்சபை நடம் செய் இறைவர் வருகின்றார் என்று திரு_நாத ஒலி இசைக்கின்றது அம்மா உரிமை பெறும் என் தோழி நீயும் இங்கே சின்ன ஒலி கேட்டுக் களித்திடுவாய் உள வாட்டம் அறவே.

மேல்

#50 ஈசர் எனது உயிர்த் தலைவர் வருகின்றார் நீவிர் எல்லீரும் புறத்து இரு-மின் என்கின்றேன் நீ-தான் ஏசு அறவே அகத்து இருந்தால் என் எனக் கேட்கின்றாய் என் கணவர் வரில் அவர்-தாம் இருந்து அருளும் முன்னே ஆசை வெட்கம் அறியாது நான் அவரைத் தழுவி அணைத்து மகிழ்வேன் அது கண்டு அதிசயித்து நொடிப்பார் கூசு அறியாள் இவள் என்றே பேசுவர் அங்கு அதனால் கூறியது அல்லது வேறு குறித்தது இலை தோழீ.

மேல்

#51 அரசு வருகின்றது என்றே அறைகின்றேன் நீ-தான் ஐயமுறேல் உற்றுக் கேள் அசையாது தோழி முரசு சங்கு வீணை முதல் நாத ஒலி மிகவும் முழங்குவது திரு_மேனி வழங்கு தெய்வ மணம்-தான் விரச எங்கும் வீசுவது நாசி உயிர்த்து அறிக வீதி எலாம் அருள் சோதி விளங்குவது காண்க பரசி எதிர்கொள்ளுதும் நாம் கற்பூர விளக்குப் பரிந்து எடுத்து என்னுடன் வருக தெரிந்து அடுத்து மகிழ்ந்தே.

மேல்

#52 தாழ்_குழல் நீ ஆண்_மகன் போல் நாணம் அச்சம் விடுத்தே சபைக்கு ஏறுகின்றாய் என்று உரைக்கின்றாய் தோழி வாழ் வகை என் கணவர்-தமைப் புறத்து அணைந்தாள் ஒருத்தி மால் எனும் பேர் உடையாள் ஓர் வளை ஆழிப் படையாள் ஆழ் கடலில் துயில்கின்றாள் மா மணி மண்டபத்தே ஆள்கின்றாள் ஆண்_மகனாய் அறிந்திலையோ அவரைக் கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ.

மேல்

#53 துடி ஏறும் இடை உனக்கு வந்த இறுமாப்பு என் சொல் என்றாய் அரி பிரமர் சுரர் முனிவர் முதலோர் பொடி ஏறு வடிவு_உடையார் என் கணவர் சபையின் பொன் படிக் கீழ் நிற்பது பெற்று அப் பரிசு நினைந்தே இடி ஏறு போன்று இறுமாந்து இருக்கின்றாரடி நான் எல்லாரும் அதிசயிக்க ஈண்டு திரு_சபையின் படி ஏறித் தலைவர் திரு_அடி ஊறும் அமுதம் பருகுகின்றேன் இறுமாக்கும் பரிசு உரைப்பது என்னே.

மேல்

#54 ஈற்று அறியேன் இருந்திருந்து இங்கு அதிசயிப்பது என் நீ என்கின்றாய் நீ எனை விட்டு ஏகு-தொறும் நான்-தான் காற்று அறியாத் தீபம் போல் இருந்திடும் அத் தருணம் கண்ட பரிசு என் புகல்வேன் அண்ட பகிரண்டம் தோற்று அறியாப் பெரும் சோதி மலை பரநாதத்தே தோன்றியது ஆங்கு அதன் நடுவே தோன்றியது ஒன்று அது-தான் மாற்று அறியாப் பொன் ஒளியோ அ ஒளிக்குள் ஆடும் வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே.

மேல்

#55 நடம் புரிவார் திரு_மேனி வண்ணம் அதை நான் போய் நன்கு அறிந்து வந்து உனக்கு நவில்வேன் என்கின்றாய் இடம் வலம் இங்கு அறியாயே நீயோ என் கணவர் எழில் வண்ணம் தெரிந்து உரைப்பாய் இசை மறை ஆகமங்கள் திடம்பட நாம் தெரிதும் எனச் சென்று தனித்தனியே திரு_வண்ணம் கண்ட அளவே சிவசிவ என்று ஆங்கே கடம் பெறு கள் உண்ட என மயங்குகின்றவாறு கண்டிலை நீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ.

மேல்

#56 பொய் பிடித்தார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ப் பொது நடம் கண்டு உளம் களிக்கும் போது மணவாளர் மெய் பிடித்தாய் வாழிய நீ சமரச சன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளங்குக என்று எனது கை பிடித்தார் நானும் அவர் கால் பிடித்துக்கொண்டேன் களித்திடுக இனி உனை நாம் கைவிடோம் என்றும் மை பிடித்த விழி உலகர் எல்லாரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே.

மேல்

#57 பொருத்தம்_இலார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ப் பொது நடம் கண்டு உவந்து நிற்கும் போது தனித் தலைவர் திருத்தமுற அருகு அணைந்து கை பிடித்தார் நானும் தெய்வ மலர்_அடி பிடித்துக்கொண்டேன் சிக்கெனவே வருத்தமுறேல் இனிச் சிறிதும் மயங்கேல் காண் அழியா வாழ்வு வந்தது உன்றனக்கே ஏழ் உலகும் மதிக்கக் கருத்து அலர்ந்து வாழிய என்று ஆழி அளித்து எனது கையினில் பொன் கங்கணமும் கட்டினர் காண் தோழி.

மேல்

#58 தமை_அறியார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய்ச் சபை நடம் கண்டு உளம் களிக்கும் தருணத்தே தலைவர் இமை அறியா விழி_உடையார் எல்லாரும் காண இளநகை மங்கள முகத்தே தளதள என்று ஒளிர எமை அறிந்தாய் என்று எனது கை பிடித்தார் நானும் என்னை மறந்து என் இறைவர் கால் பிடித்துக்கொண்டேன் சுமை அறியாப் பேர்_அறிவே வடிவு ஆகி அழியா சுகம் பெற்று வாழ்க என்றார் கண்டாய் என் தோழி.

மேல்

#59 ஐயமுற்றார் எல்லாரும் புறத்து இருக்க நான் போய் அம்பலத்தே திரு_நடம் கண்டு அகம் களிக்கும் போது மை அகத்தே பொருந்தாத வள்ளல் அருகு அணைத்து என் மடி பிடித்தார் நானும் அவர் அடி பிடித்துக்கொண்டேன் மெய் அகத்தே நம்மை வைத்து விழித்திருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக என்று எனது கை அகத்தே ஒரு பசும்பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்_அனையார் கண்டாய் என் தோழி.

மேல்

#60 காமாலை_கண்ணர் பலர் பூ_மாலை விழைந்தார் கணம்_கொண்ட_கண்ணர் பலர் மணம்கொள்ளத் திரிந்தார் கோமாலை மனச் செருக்கால் மயங்கி உடம்பு எல்லாம் குறி_கொண்ட_கண்ணர் பலர் வெறி கொண்டு இங்கு அலைந்தார் ஆ மாலை_அவர் எல்லாம் கண்டு உளம் நாணுறவே அரும் பெரும் சோதியர் என்னை விரும்பி மணம் புரிந்தார் தே_மாலை அணி குழலாய் நான் செய்த தவம்-தான் தேவர்களோ மூவர்களும் செய்திலர் கண்டு அறியே.

மேல்

#61 காமாலை_கண்ணர் என்றும் கண_கண்ணர் என்றும் கருது பல குறி_கொண்ட_கண்ணர் என்றும் புகன்றேன் ஆ மாலும் அ அயனும் இந்திரனும் இவர்கள் அன்றி மற்றைத் தேவர்களும் அசை அணுக்கள் ஆன தா மாலைச் சிறு மாயா சத்திகளாம் இவர்கள்-தாமோ மாமாயை வரு சத்திகள் ஓங்காரத் தே மாலைச் சத்திகளும் விழித்திருக்க எனக்கே திரு_மாலை அணிந்தார் சிற்சபை_உடையார் தோழி.

மேல்

#62 மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உருப் புனைந்தே ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடிப் பெருமை யார் உரைப்பார் தோழி.

மேல்

#63 உருத்திரர்கள் ஒரு கோடி நாரணர் பல் கோடி உறு பிரமர் பல கோடி இந்திரர் பல் கோடி பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும் பேசில் அனந்தம் கோடி ஆங்காங்கே கூடித் திருத்தமுறு திரு_சபையின் படிப் புறத்தே நின்று தியங்குகின்றார் நடம் காணும் சிந்தையராய் அந்தோ வருத்தம் ஒன்றும் காணாதே நான் ஒருத்தி ஏறி மா நடம் காண்கின்றேன் என் மா தவம்-தான் பெரிதே.

மேல்

#64 பார் உலகாதிபர் புவனாதிபர் அண்டாதிபர்கள் பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர் ஏர் உலவாத் திரு_படிக் கீழ் நின்று விழித்திருக்க எனை மேலே ஏற்றினர் நான் போற்றி அங்கு நின்றேன் சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்தத் திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்தப் பேர் உலவா நடம் கண்டேன் திரு_அமுதம் உணவும் பெற்றேன் நான் செய்த தவம் பேர்_உலகில் பெரிதே.

மேல்

#65 என் புகல்வேன் தோழி நான் பின்னர் கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் அன்புறு சித்தாந்த நடம் வேதாந்த நடமும் ஆதி நடு அந்தம் இலாச் சோதி மன்றில் கண்டேன் இன்ப மயமாய் ஒன்றாய் இரண்டாய் ஒன்று இரண்டும் இல்லதுவாய் எல்லாம் செய் வல்லதுவாய் விளங்கித் தன் பரமாம் பரம் கடந்த சமரசப் பேர் அந்தத் தனி நடமும் கண்ணுற்றேன் தனித்த சுகப் பொதுவே.

மேல்

#66 தூங்குக நீ என்கின்றாய் தூங்குவனோ எனது துரை வரும் ஓர் தருணம் இதில் தூக்கமும்-தான் வருமோ ஈங்கு இனி நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் என்னுடைய தூக்கம் எலாம் நின்னுடையது ஆக்கி ஏங்கல் அறப் புறத்தே போய்த் தூங்குக நீ தோழி என் இரு கண்மணி_அனையார் எனை அணைந்த உடனே ஓங்குறவே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை எழுப்புகின்றேன் உவந்தே.

மேல்

#67 ஐயமுறேல் காலையில் யாம் வருகின்றோம் இது நம் ஆணை என்றார் அவர் ஆணை அருள் ஆணை கண்டாய் வெய்யர் உளத்தே புகுதப் போனது இருள் இரவு விடிந்தது நல் சுடர் உதயம் மேவுகின்ற தருணம் தையல் இனி நான் தனிக்க வேண்டுவது ஆதலினால் சற்றே அப்புறத்து இரு நீ தலைவர் வந்த உடனே உய்ய இங்கே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

மேல்

#68 மன்று_உடையார் என் கணவர் என் உயிர்_நாயகனார் வாய்_மலர்ந்த மணி வார்த்தை மலை இலக்காம் தோழி துன்றிய பேர்_இருள் எல்லாம் தொலைந்தது பல் மாயைத் துகள் ஒளி மாமாயை மதி ஒளியொடு போயினவால் இன்று அருளாம் பெரும் சோதி உதயமுற்றது அதனால் இனிச் சிறிது புறத்து இரு நீ இறைவர் வந்த உடனே ஒன்று_உடையேன் நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

மேல்

#69 வைகறை ஈது அருள் உதயம் தோன்றுகின்றது எனது வள்ளல் வரு தருணம் இனி வார்த்தை ஒன்றானாலும் சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய்த் தத்துவப் பெண் குழுவில் பொய் கரையாது உள்ளபடி புகழ் பேசி இரு நீ புத்தமுதம் அளித்த அருள் சித்தர் வந்த உடனே உய்கரை-வாய் நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

மேல்

#70 காலையிலே வருகுவர் என் கணவர் என்றே நினக்குக் கழறினன் நான் என்னல் அது காதில் உற்றது இலையோ வேலை_இலாதவள் போலே வம்பளக்கின்றாய் நீ விடிந்தது நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் சோலையிலே மலர் கொய்து தொடுத்து வந்தே புறத்தில் சூழ்ந்து இருப்பாய் தோழி என்றன் துணைவர் வந்த உடனே ஓலையுறாது யான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

மேல்

#71 விடிந்தது பேர்_ஆணவமாம் கார்_இருள் நீங்கியது வெய்ய வினைத் திரள் எல்லாம் வெந்தது காண் மாயை ஒடிந்தது மாமாயை ஒழிந்தது திரை தீர்ந்தது பேர்_ஒளி உதயம்செய்தது இனித் தலைவர் வரு தருணம் திடம் பெற நான் தனித்து இருக்க வேண்டுவது ஆதலினால் தே_மொழி நீ புறத்து இரு மா தேவர் வந்த உடனே உடம்பு உறவே நான் அவரைக் கலந்து அவரும் நானும் ஒன்று ஆன பின்னர் உனை அழைக்கின்றேன் உவந்தே.

மேல்

#72 மாலையிலே உலகியலார் மகிழ்நரொடு கலத்தல் வழக்கம் அது கண்டனம் நீ மணவாளருடனே காலையிலே கலப்பதற்கு இங்கு எனைப் புறம் போ என்றாய் கண்டிலன் ஈது அதிசயம் என்று உரையேல் என் தோழி ஓலையிலே பொறித்ததை நீ உன் உளத்தே கருதி உழல்கின்றாய் ஆதலில் இ உளவு அறியாய் தருமச் சாலையிலே சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சற்று இருந்தாய் எனில் இதனை உற்று உணர்வாய் காணே.

மேல்

#73 இரவகத்தே கணவரொடு கலக்கின்றார் உலகர் இயல்_அறியார் உயல்_அறியார் மயல் ஒன்றே அறிவார் கரவகத்தே கள் உண்டு மயங்கி நிற்கும் தருணம் கனி கொடுத்தால் உண்டு சுவை கண்டு களிப்பாரோ துரவகத்தே விழுந்தார் போன்று இவர் கூடும் கலப்பில் சுகம் ஒன்றும் இல்லையடி துன்பம் அதே கண்டார் உரவு அகத்தே என் கணவர் காலையில் என்னுடனே உறு கலப்பால் உறு சுகம்-தான் உரைப்ப அரிதாம் தோழி.

மேல்

#74 என்னுடைய தனித் தோழி இது கேள் நீ மயங்கேல் எல்லாம் செய் வல்லவர் என் இன் உயிர்_நாயகனார் தன்னுடைய திரு_தோளை நான் தழுவும் தருணம் தனித்த சிவ_சாக்கிரம் என்று இனித்த நிலை கண்டாய் பன்னும் இந்த நிலை பர_சாக்கிரமாக உணரேல் பகர் பர_சாக்கிரம் அடங்கும் பதி ஆகும் புணர்ந்து மன்னு நிலை மற்று இரண்டும் கடந்த குரு துரிய மா நிலை என்று உணர்க ஒளிர் மேல் நிலையில் இருந்தே.

மேல்

#75 நான் புகலும் மொழி இது கேள் என்னுடைய தோழி நாயகனார் தனி உருவம் நான் தழுவும் தருணம் வான் புகழும் சுத்த சிவ_சாக்கிரம் என்று உணர்ந்தோர் வழுத்தும் நிலை ஆகும் உருச் சுவை கலந்தே அதுவாய்த் தேன் கலந்த சுவையொடு நல் மணி கலந்த ஒளியாய்த் திரிபு இன்றி இயற்கை இன்பச் சிவம் கலந்த நிலையே தான் புகல் மற்றைய மூன்றும் கடந்து அப்பால் இருந்த சாக்கிராதீதம் எனத் தனித்து உணர்ந்து கொள்ளே.

மேல்

#76 இ உலகோர் இரவகத்தே புணர்கின்றார் அதனை எங்ஙனம் நான் இசைப்பதுவோ என்னினும் மற்று இது கேள் எவ்வம் உறும் இருள் பொழுதில் இருட்டு அறையில் அறிவோர் எள்ளளவும் காணாதே கள் அளவின்று அருந்திக் கவ்வை பெறக் கண்களையும் கட்டி மறைத்து அம்மா கலக்கின்றார் கணச் சுகமும் கண்டு அறியார் கண்டாய் செவ்வையுறக் காலையில் என் கணவரொடு நான்-தான் சேர் தருணச் சுகம் புகல யார் தருணத்தவரே.

மேல்

#77 பொன் பறியாப் புகல்வார் போல் மறைப்பது என்னை மடவாய் பூவையர் காலையில் புணர நாணுவர் காண் என்றாய் அன்பு அறியாப் பெண்களுக்கே நின் உரை சம்மதமாம் ஆசை வெட்கம் அறியாது என்று அறிந்திலையோ தோழி இன்பு அறியாய் ஆதலினால் இங்ஙனம் நீ இசைத்தாய் இறைவர் திரு_வடிவு அது கண்டிட்ட தருணம்-தான் துன்பு அறியாக் காலை என்றும் மாலை என்றும் ஒன்றும் தோன்றாது சுகம் ஒன்றே தோன்றுவது என்று அறியே.

மேல்

#78 அருள்_உடையார் எனை_உடையார் அம்பலத்தே நடிக்கும் அழகர் எலாம் வல்லவர் தாம் அணைந்து அருளும் காலம் இருள் உடைய இரவகத்தே எய்தாது கண்டாய் எதனால் என்று எண்ணுதியேல் இயம்புவன் கேள் மடவாய் தெருள் உடை என் தனித் தலைவர் திரு_மேனிச் சோதி செப்புறு பார் முதல் நாத பரியந்தம் கடந்தே அருள் உறும் ஓர் பரநாத வெளி கடந்து அப்பாலும் அப்பாலும் விளங்குமடி அகம் புறத்தும் நிறைந்தே.

மேல்

#79 அம்மா நான் சொல்_மாலை தொடுக்கின்றேன் நீ-தான் ஆர்க்கு அணிய என்கின்றாய் அறியாயோ தோழி இ மாலை அம்பலத்தே எம்மானுக்கு அன்றி யார்க்கு அணிவேன் இதை அணிவார் யாண்டை உளார் புகல் நீ செம்மாப்பில் உரைத்தனை இச் சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் பல் மாலைத் தத்துவத்தால் அன்று இரும்பு ஒன்றாலே படைத்தது உனைப் பழக்கத்தால் பொறுத்தனன் என்று அறியே.

மேல்

#80 நாடுகின்ற பல கோடி அண்ட பகிரண்ட நாட்டார்கள் யாவரும் அ நாட்டு ஆண்மை வேண்டி நீடுகின்ற தேவர் என்றும் மூர்த்திகள் தாம் என்றும் நித்தியர்கள் என்றும் அங்கே நிலைத்தது எலாம் மன்றில் ஆடுகின்ற திரு_அடிக்கே தங்கள்தங்கள் தரத்துக்கான வகை சொல்_மாலை அணிந்ததனால் அன்றோ பாடுகின்ற என்னுடைய பாட்டு எல்லாம் பொன்_அம்பலப் பாட்டே திரு_சிற்றம்பலப் பாட்டே தோழி.

மேல்

#81 தொடுக்கின்றேன் மாலை இது மணி மன்றில் நடிக்கும் துரை அவர்க்கே அவருடைய தூக்கிய கால்_மலர்க்கே அடுக்கின்றோர்க்கு அருள் அளிக்கும் ஊன்றிய சேவடிக்கே அ அடிகள் அணிந்த திரு அலங்காரக் கழற்கே கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்-தாம் குறித்து இதனை வாங்குவரோ அணி தரம் தாம் உளரோ எடுக்கின்றேன் கையில் மழுச் சிற்சபை பொன்_சபை வாழ் இறைவர் அலால் என் மாலைக்கு இறைவர் இலை எனவே.

மேல்

#82 நான் தொடுக்கும் மாலை இது பூ_மாலை எனவே நாட்டார்கள் முடி மேலே நாட்டார்கள் கண்டாய் வான் தொடுக்கும் மறை தொடுக்கும் ஆகமங்கள் தொடுக்கும் மற்றவையை அணிவார்கள் மதத்து உரிமையாலே தான் தொடுத்த மாலை எலாம் பரத்தையர் தோள் மாலை தனித்திடும் என் மாலை அருள் சபை நடுவே நடிக்கும் ஊன்று எடுத்த மலர்கள் அன்றி வேறு குறியாதே ஓங்குவது ஆதலில் அவைக்கே உரித்து ஆகும் தோழி.

மேல்

#83 வான் கொடுத்த மணி மன்றில் திரு_நடனம் புரியும் வள்ளல் எலாம் வல்லவர் நல் மலர் எடுத்து என் உளத்தே தான் கொடுக்க நான் வாங்கித் தொடுக்கின்றேன் இதனைத் தலைவர் பிறர் அணிகுவரோ அணி தரம் தாம் உளரோ தேன் கொடுத்த சுவை போலே தித்தித்து என் உளத்தே திரு_கூத்துக் காட்டுகின்ற திரு_அடிக்கே உரித்தாம் யான் கொடுக்கும் பரிசு இந்த மாலை மட்டோ தோழி என் ஆவி உடல் பொருளும் கொடுத்தனன் உள் இசைந்தே.

மேல்

#84 என் மாலை மாத்திரமோ யார் மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பது எனில் அவை-தாம் நல் மாலை ஆகும் அந்தச் சொல்_மாலை-தனக்கே நான் அடிமை தந்தனன் பல் வந்தனம் செய்கின்றேன் புன் மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா பொய் புகுந்தால் போல் செவியில் புகும்-தோறும் தனித்தே வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே.

மேல்

#85 உரிய பெரும் தனித் தலைவர் ஓங்கு சடாந்தத்தின் உள் புறத்தும் அப்புறத்தும் ஒரு செங்கோல் செலுத்தும் துரியர் துரியம் கடந்த சுக சொருபர் பொதுவில் சுத்த நடம் புரிகின்ற சித்தர் அடிக் கழலே பெரிய பதத் தலைவர் எலாம் நிற்கும் நிலை இது ஓர் பெண் உரை என்று எள்ளுதியோ கொள்ளுதியோ தோழி அரிய பெரும் பொருள் மறைகள் ஆகமங்கள் உரைக்கும் ஆணையும் இங்கு ஈது இதற்கு ஓர் ஐயம் இலை அறியே.

மேல்

#86 மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட ஆடுகின்றோர் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செயும் மா நடம் காண்குவரோ சதம் எனவே இருக்கின்றார் படுவது அறிந்திலரே சாகாத கல்வி கற்கும் தரம் இவர்க்கும் உளதோ பதம் அறியா இந்த மதவாதிகளோ சிற்றம்பல நடம் கண்டு உய்ந்தேனைச் சில புகன்றார் என்றாய் சுதை மொழி நீ அன்று சொன்ன வார்த்தை அன்றோ இன்று தோத்திரம் செய்து ஆங்காங்கே தொழுகின்றார் காணே.

மேல்

#87 எவ்வுலகில் எவ்வெவர்க்கும் அரும் பெரும் சோதியரே இறைவர் என்பது அறியாதே இ மதவாதிகள்-தாம் கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதை போலே கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார் நவ்வி விழியாய் இவரோ சில புகன்றார் என்றாய் ஞான நடம் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன் செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம்-தனிலே சேர்ந்தேன் அத் தீ மொழியும் தே மொழி ஆயினவே.

மேல்

#88 பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே.

மேல்

#89 சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்குச் சேர்ந்த புறச் சமயப் பேர் பொருந்துவதோ என்றாய் பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப் பெயர் ஒவ்வாதோ அச் சமயத் தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞானத் திரு_கூத்துக் கண்ட அளவே தெளியும் இது தோழி.

மேல்

#90 எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல் உண்மை அறிவு இன்ப வடிவு ஆகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப் பொருள் அப் பொருள் என்றே இசைப்பது என்னே பொதுவில் இறைவர் செயும் நிர்_அதிசய இன்ப நடம்-தனை நீ பைப்பறவே காணுதியேல் அத் தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே.

மேல்

#91 காணாத காட்சி எலாம் காண்கின்றேன் பொதுவில் கருணை நடம் புரிகின்ற கணவரை உள் கலந்தேன் கோணாத மேல் நிலை மேல் இன்ப அனுபவத்தில் குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு அனைத்தும் தவிர்ந்தேன் நாணாளும் திரு_பொதுவில் நடம் பாடிப்பாடி நயக்கின்றேன் நல் தவரும் வியக்கின்றபடியே மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி.

மேல்

#92 சாதி சமயங்களிலே வீதி பல வகுத்த சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று எனவே ஆதியில் என் உளத்து இருந்தே அறிவித்தபடியே அன்பால் இன்று உண்மை நிலை அறிவிக்க அறிந்தேன் ஓதி உணர்ந்தோர் புகழும் சமரச சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காணப்பெற்றேன் மெய்ப்பொருளாம் சோதி நடத்து அரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்த சிவ நிறைவை உள்ளே பெற்று மகிழ்ந்தேனே.

மேல்

#93 சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால் ஒன்றொன்றா அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன் அரிய சிவ சித்தாந்த வேதாந்த முதலாம் ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும் பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம் பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி.

மேல்

#94 நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தார் ஆகி நல்ல திரு_அமுது அளித்தே அல்லல் பசி தவிர்த்தே ஊன் பதித்த என்னுடைய உளத்தே தம்முடைய உபய பதம் பதித்து அருளி அபயம் எனக்கு அளித்தார் வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனைப் புணர்ந்த புறப் புணர்ச்சித் தருணம் தான் பதித்த பொன் வடிவம்-தனை அடைந்து களித்தேன் சாற்றும் அகப் புணர்ச்சியின் ஆம் ஏற்றம் உரைப்பதுவே.

மேல்

#95 துருவு பர_சாக்கிரத்தைக் கண்டுகொண்டேன் பரம சொப்பனம் கண்டேன் பரம_சுழுத்தியும் கண்டு உணர்ந்தேன் குரு பிரம_சாக்கிரத்தைக் கண்டேன் பின் பிரமம் குலவிய சொப்பனம் கண்டேன் சிவ_சுழுத்தி கண்டேன் குரு துரியம் காண்கின்றேன் சமரச சன்மார்க்கம் கூடினேன் பொதுவில் அருள் கூத்து ஆடும் கணவர் மருவிடப்பெற்றவர் வடிவம் நான் ஆனேன் களித்து வாழ்கின்றேன் எதிர் அற்ற வாழ்க்கையில் என் தோழி.

மேல்

#96 தனிப்படும் ஓர் சுத்த சிவ_சாக்கிர நல் நிலையில் தனித்து இருந்தேன் சுத்த சிவ சொப்பனத்தே சார்ந்தேன் கனிப்படு மெய்ச் சுத்த சிவ_சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்த சிவ துரிய நிலை அதுவாய்ச் செனிப்பு இலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த சிவ துரியாதீதத்தே சிவ மயமாய் நிறைந்தேன் இனிப்புறு சிற்சபை இறையைப் பெற்ற பரிசு-அதனால் இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன் தோழி.

மேல்

#97 அருள் சோதித் தலைவர் எனக்கு அன்பு உடைய கணவர் அழகிய பொன்_மேனியை நான் தழுவிநின்ற தருணம் இருள் சாதித் தத்துவங்கள் எல்லாம் போயினவால் எங்கணும் பேர்_ஒளி மயமாய் இருந்தன ஆங்கு அவர்-தாம் மருள் சாதி நீக்கி எனைப் புணர்ந்த ஒரு தருணம் மன்னு சிவானந்த மயம் ஆகி நிறைவுற்றேன் தெருள் சார்பில் இருந்து ஓங்கு சமரச சன்மார்க்கத் திரு_சபை-கண் உற்றேன் என் திரு_கணவருடனே.

மேல்

#98 புறப் புணர்ச்சி என் கணவர் புரிந்த தருணம்-தான் புத்தமுதம் நான் உண்டு பூரித்த தருணம் சிறப்பு உணர்ச்சி மயம் ஆகி அகப் புணர்ச்சி அவர்-தாம் செய்த தருணச் சுகத்தைச் செப்புவது எப்படியோ பிறப்பு உணர்ச்சி விடயம் இலை சுத்த சிவானந்தப் பெரும் போகப் பெரும் சுகம்-தான் பெருகி எங்கும் நிறைந்தே மறப்பு உணர்ச்சி இல்லாதே நான் அதுவாய் அது என் மயமாய்ச் சின்மயமாய்த் தன்மயமான நிலையே.

மேல்

#99 தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனித் தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார் வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் ஆயினும் என்னளவின் மிக எளியர் என என்னை அகம் புணர்ந்தார் புறம் புணர்ந்தார் புறப் புணர்ச்சித் தருணம் தூய ஒளி பெற்று அழியாது ஓங்கு வடிவு ஆனேன் சுக மயமாம் அகப் புணர்ச்சி சொல்லுவது எப்படியோ.

மேல்

#100 அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே ஆடல் செயும் திரு_அடிக்கே பாடல் செயப் பணித்தார் செறியாத மனச் சிறியேன் செய்த பிழை எல்லாம் திரு_விளையாட்டு எனக் கொண்டே திரு_மாலை அணிந்தார் பிறியாமல் என் உயிரில் கலந்துகலந்து இனிக்கும் பெரும் தலைவர் நடராயர் எனைப் புணர்ந்தார் அருளாம் அறிவாளர் புறப் புணர்ச்சி எனை அழியாது ஓங்க அருளியது ஈண்டு அகப் புணர்ச்சி அளவு உரைக்கலாமே.

@107. சிற் சத்தி துதி

மேல்

#1 சோதிக் கொடியே ஆனந்த சொருபக் கொடியே சோதி உருப் பாதிக் கொடியே சோதி வலப் பாகக் கொடியே எனை ஈன்ற ஆதிக் கொடியே உலகு கட்டி ஆளும் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.

மேல்

#2 பொருள் நல் கொடியே மாற்று உயர்ந்த பொன் அம் கொடியே போதாந்த வருணக் கொடியே எல்லாஞ் செய் வல்லார் இடம் சேர் மணிக் கொடியே தருணக் கொடியே என்றன்னைக் தாங்கி ஓங்கும் தனிக் கொடியே கருணைக் கொடியே ஞான சிவகாமக் கொடியே அருளுகவே.

மேல்

#3 நீட்டுக் கொடியே சன்மார்க்க நீதிக் கொடியே சிவ கீதப் பாட்டுக் கொடியே இறைவர் வலப் பாகக் கொடியே பரநாத நாட்டுக் கொடியே எனை ஈன்ற ஞானக் கொடியே என் உறவாம் கூட்டுக் கொடியே சிவகாமக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#4 மாலக் கொடியேன் குற்றம் எலாம் மன்னித்து அருளி மரணம் எனும் சாலக் கொடியை ஒடித்து எனக்குள் சார்ந்து விளங்கும் தவக் கொடியே காலக் கருவைக் கடந்து ஒளிர் வான் கருவும் கடந்து வயங்குகின்ற கோலக் கொடியே சிவ ஞானக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#5 நாடாக் கொடிய மனம் அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப் பாடாப் பிழையைப் பொறுத்து எனக்கும் பதம் ஈந்து ஆண்ட பதிக் கொடியே தேடாக் கரும சித்தி எலாம் திகழத் தயவால் தெரிவித்த கோடாக் கொடியே சிவ தருமக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#6 மணம்கொள் கொடிப் பூ முதல் நான்கு வகைப் பூ வடிவுள் வயங்குகின்ற வணம் கொள் கொடியே ஐம்பூவும் மலிய மலர்ந்த வான் கொடியே கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத குணம் கொள் கொடியே சிவபோகக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#7 புலம் கொள் கொடிய மனம்போனபோக்கில் போகாது எனை மீட்டு நலம் கொள் கருணைச் சன்மார்க்க நாட்டில் விடுத்த நல் கொடியே வலம்கொள் ஞான சித்தி எலாம் வயங்க விளங்கும் மணி மன்றில் குலம் கொள் கொடியே மெய்ஞ்ஞானக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#8 வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன்-தன்னை விழாத வகை மறிக்கும் ஒரு பேர்_அறிவு அளித்த வள்ளல் கொடியே மனக் கொடியைச் செறிக்கும் பெரியர் உளத்து ஓங்கும் தெய்வக் கொடியே சிவ ஞானம் குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#9 கடுத்த விடர் வன் பயம் கவலை எல்லாம் தவிர்த்துக் கருத்துள்ளே அடுத்த கொடியே அருள அமுதம் அளித்து என்றனை மெய் அருள் கரத்தால் எடுத்த கொடியே சித்தி எலாம் இந்தா மகனே என்று எனக்கே கொடுத்த கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

மேல்

#10 ஏட்டைத் தவிர்த்து என் எண்ணம் எலாம் எய்த ஒளி தந்து யான் வனைந்த பாட்டைப் புனைந்து பரிசு அளித்த பரம ஞானப் பதிக் கொடியே தேட்டைத் தனிப் பேர்_அருள் செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்கக் கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற்கு அருளுகவே.

@108. தனித் திரு மாலை

**1. இறை அருள் இருந்தவாறு இற்றெனல் *(1) இறவாத இயற்கை பெற்றமை இயம்பல்

மேல்

#1 முன்_நாள் செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும் என்-பால் இ நாள் அடைந்து இன்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவாறு எந்நாளும் இ உடம்பே இறவாத இயற்கை பெற்றேன் என் ஆசை அப்பனைக் கண்டுகொண்டேன் என் இதயத்திலே. *(2). இறைவன் அளித்த அருளார் அமுது

மேல்

#2 தாழைப்பழம் பிழி பாலொடு சர்க்கரைச் சாறு அளிந்த வாழைப்பழம் பசு நெய் நறும் தேனும் மருவச்செய்து மாழைப் பலாச்சுளை மாம்பழம் ஆதி வடித்து அளவி ஏழைக்கு அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே. *(3) அருளார் அமுதப் பேறு

மேல்

#3 தென் பால் முகம் கொண்ட தேவே செந்தேனில் சிறந்த பசு வின் பால் கலந்து அளி முக்கனிச் சாறும் எடுத்து அளவி அன்பால் மகிழ்ந்து மகனே வருக என்று அழைத்து அருளி என்-பால் அளித்தனையே அருள் ஆர்_அமுது என்று ஒன்றையே. **2. படிப்பித்தவாறு படிப்பேன் எனல் *(1) வேதாகம விளைவு பெற்றது

மேல்

#4 காட்டைக் கடந்தேன் நாட்டை அடைந்தேன் கவலை தவிர்ந்தேன் உவகை மிகுந்தேன் வீட்டைப் புகுந்தேன் தேட்டு அமுது உண்டேன் வேதாகமத்தின் விளைவு எலாம் பெற்றேன் ஆட்டைப் புரிந்தே அம்பலத்து ஓங்கும் ஐயர் திரு_அடிக்கு ஆனந்தமாகப் பாட்டைப் படித்தேன் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே. *(2). ஓதா துணர்ந்தது.

மேல்

#5 அம்பலம் சேர்ந்தேன் எம் பலம் ஆர்ந்தேன் அப்பனைக் கண்டேன் செப்பம் உட்கொண்டேன் உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதாது உணர்ந்தேன் மீதானம் உற்றேன் நம்பிடில் அணைக்கும் எம் பெருமானை நாயகன்-தன்னைத் தாய்-அவன்றன்னைப் பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே. *(3). தெள்ளத் தெளிந்த வெள்ளம் உண்டது

மேல்

#6 கள்ளத்தை அற்ற உள்ளத்தைப் பெற்றேன் கன்றிக் கனிந்தே மன்றில் புகுந்தேன் தெள்ளத் தெளிந்த வெள்ளத்தை உண்டேன் செய் வகை கற்றேன் உய் வகை உற்றேன் அள்ளக் குறையா வள்ளல் பொருளை அம்பலச் சோதியை எம் பெரு வாழ்வை பள்ளிக்குள் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்தவாறே. **3. உயிர்த்திரளின் ஒருமைப் பெருநிலை *(1). எவ்வுயிர்க்கும் இரங்கி உபகரிக்கின்றவர்க்கு ஏவல் செய்வேன் எனல்

மேல்

#7 எவ்வுயிரும் பொது எனக் கண்டு இரங்கி உபகரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்-தம் செயல் அனைத்தும் திரு_அருளின் செயல் எனவே தெரிந்தேன் இங்கே கவ்வை_இலாத் திரு_நெறி அத் திருவாளர்-தமக்கு ஏவல் களிப்பால் செய்ய ஒவ்வியது என் கருத்து அவர் சீர் ஓதிட என் வாய் மிகவும் ஊர்வதாலோ. *(2). எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணுபவர்க் கேவல் புரிவேன் எனல்

மேல்

#8 எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்-தான் சுத்த சித்து உருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த வித்தகர்-தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ. *(3). எவ்வுயிரும் தம் உயிர்போல் காண்பவர் வாய்ச்சொல்லே வேதாகமம் எனல்

மேல்

#9 கருணை ஒன்றே வடிவாகி எவ்வுயிரும் தம் உயிர் போல் கண்டு ஞானத் தெருள் நெறியில் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நீதி செலுத்தாநின்ற பொருள் நெறி சற்குண சாந்தப் புண்ணியர்-தம் திருவாயால் புகன்ற வார்த்தை அருள் நெறி வேதாகமத்தின் அடி முடி சொல் வார்த்தைகள் என்று அறைவராலோ. **4. இறையின் பெருங் கருணை வண்ணம் இருந்தவாறு *(1) இறைவன் தமக்கருள்புரிந்த வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை என் எனல்

மேல்

#10 எல்லார்க்கும் கடை ஆகி இருந்தேனுக்கு அருள் புரிந்தே எல்லார்க்கும் துணை ஆகி இருக்கவைத்தாய் எம் பெருமான் எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்றாய் இவ்வண்ணம் எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே. *(2) தம் செயல் எலாம் தம்பிரான் செயல் எனல்

மேல்

#11 என்னுடைய விண்ணப்பம் இது கேட்க எம் பெருமான் நின்னுடைய பெரும் கருணை நிதி உடையேன் ஆதலினால் பொன்_உடையான் அயன் முதலாம் புங்கவரை வியவேன் என் றன்னுடைய செயல் எல்லாம் தம்பிரான் செயல் அன்றே. **5. உண்மை இன்பம் *(1) உலகுக்கு உண்மை இன்பம் செய்தும் எனல்

மேல்

#12 உன்னை விட_மாட்டேன் நான் உன் ஆணை எம் பெருமான் என்னை விட மாட்டாய் இருவருமாய் மன்னி என்றும் வண்மை எலாம் வல்ல வாய்மை அருளால் உலகுக்கு உண்மை இன்பம் செய்தும் உவந்து. *(2). அடியேன் அன்னியன் அல்லேன் எனல்

மேல்

#13 இதுவே தருணம் எனை அணைதற்கு இங்கே பொதுவே நடிக்கும் புனிதா விது வேய்ந்த சென்னியனே சுத்த சிவனே உனக்கு அடியேன் அன்னியனே_அல்லேன் அறிந்து. . **6. இறை அருள் வண்ண வியப்பு *(1). மாளாத ஆக்கை பெற்ற பேற்றினை வியத்தல்

மேல்

#14 ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடு இருந்து குலாவுகின்றேன் பாடுகின்றேன் எந்தை பிரான் பதப் புகழை அன்பினொடும் பாடிப்பாடி நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணம் எலாம் நிரம்பினேனே. *(2). இறை உரைக்கும் தம் உரைக்கும் உள்ளஒருமை உரைத்தல்.

மேல்

#15 என் உரைக்கேன் என் உரைக்கேன் இந்த அதிசயம்-தன்னை எம்_அனோர்காள் பொன் உரைக்கும் மணி மன்றில் திரு_நடனம் புரிகின்ற புனிதன் என்னுள் மின் உரைக்கும்படி கலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மையான தன் உரைக்கும் என் உரைக்கும் சமரசம் செய்து அருள்கின்றான் சகத்தின் மீதே. **7. ஒளிஉருவும் மெய் வாழ்வும் *(1). இறைவன் ஆன் மகிழ் கன்றின் இரங்குகிறான் எனல்

மேல்

#16 யான் முனம் புரிந்த பெரும் தவம் யாதோ என் சொல்வேன் என் சொல்வேன் அந்தோ ஊன் மனம் உருக என்றனைத் தேற்றி ஒளி உருக் காட்டிய தலைவா ஏன் மனம் இரங்காய் இன்று நீ என்றேன் என்ற சொல் ஒலி அடங்குதன் முன் ஆன் மகிழ் கன்றின் அணைத்து எனை எடுத்தாய் அருள்_பெரும்_சோதி என் அரசே. *(2). தனிப்பழம் தமக்கே தந்தைதான் தந்தான் எனல்.

மேல்

#17 பனிப்பு அறுத்து எல்லாம்_வல்ல சித்து ஆக்கிப் பரம்பரம் தருகின்றது என்று ஓர் தனிப் பழம் எனக்கே தந்தை தான் தந்தான் தமியனேன் உண்டனன் அதன்றன் இனிப்பை நான் என் என்று இயம்புவேன் அந்தோ என் உயிர் இனித்தது என் கரணம் சனிப்பு அற இனித்த தத்துவம் எல்லாம் தனித்தனி இனித்தன தழைத்தே. **8. சுத்த சன்மார்க்கம் *(1). உலகெலாம் சன்மார்க்க மயம் ஆகும் எனல்

மேல்

#18 கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்துகொண்டே பண் கொண்ட பாடலில் பாடிப் படித்துப் பரவுகின்றார் விண் கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்றது எண்கொண்ட மற்றை மத மார்க்கம் யாவும் இறந்தனவே. *(2). செத்தார் எழுந்தனர்

மேல்

#19 செத்தார் எழுந்தனர் சுத்த சன்மார்க்கம் சிறந்தது நான் ஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்று அடைந்தே சித்தாடுகின்றனன் சாகா_வரமும் சிறக்கப்பெற்றேன் இத் தாரணியில் எனக்கு இணை யார் என்று இயம்புவனே. **9.வீடுபேறு *(1). தாம் அடைந்த பெரும் பயன்களைப் பன்னுதல்

மேல்

#20 தூக்கமும் துயரும் அச்சமும் இடரும் தொலைந்தன தொலைந்தன எனை விட்டு ஏக்கமும் வினையும் மாயையும் இருளும் இரிந்தன ஒழிந்தன முழுதும் ஆக்கமும் அருளும் அறிவும் மெய் அன்பும் அழிவுறா உடம்பும் மெய் இன்ப ஊக்கமும் எனையே உற்றன உலகீர் உண்மை இ வாசகம் உணர்-மின். *(2). உலகரைச் சுத்த சன்மார்க்க வீதியில் நிறுவுவல் எனல்

மேல்

#21 ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என் உளத்தே நீதியில் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினேன் உலகீர் சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்தியச் சுத்த சன்மார்க்க வீதியில் உமை-தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்-மினோ விரைந்தே. **10. முறஒயீடும் தேற்றமும் *(1). தனித்த அருட்பெருஞ் சோதி தந்தருள்க எனல்

மேல்

#22 தரு வகை இத் தருணம் நல்ல தருணம் இதில் எனக்கே தனித்த அருள்_பெரும்_சோதி தந்து அருள்க இது-தான் ஒரு வகை ஈது இலை எனில் வேறு ஒரு வகை என்னுடைய உடல் உயிரை ஒழித்திடுக உவப்பினொடே இந்த இரு வகையும் சம்மதமே திரு_அடி சாட்சி-அதாய் இயம்பினன் என் இதயம் உன்றன் இதயம் அறிந்ததுவே அரு வகையோ உரு வகையும் ஆகி என் உள் அமர்ந்தாய் அம்மே என் அப்பா என் அய்யா என் அரசே. *(2). செத்தவர்கள் எதிர்வந்து நிற்பர் எனல்

மேல்

#23 வினைத் தடை தீர்த்து எனை ஆண்ட மெய்யன் மணிப் பொதுவில் மெய்ஞ்ஞான நடம் புரிந்து விளங்குகின்ற விமலன் எனைத் தனி வைத்து அருள் ஒளி ஈந்து என் உள் இருக்கின்றான் எல்லாம் செய் வல்ல சித்தன் இச்சை அருள் சோதி தினைத்தனை பெற்றவரேனும் சாலும் முன்னே உலகில் செத்தவர்கள் எல்லாரும் திரும்ப வருக என்று நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய் எனது நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே. **11. இடர் இலா இன்பம் *(1). சனி தொலைந்தது எனல்.

மேல்

#24 சனி தொலைந்தது தடை தவிர்ந்தது தயை மிகுந்தது சலமொடே துனி தொலைந்தது சுமை தவிர்ந்தது சுபம் மிகுந்தது சுகமொடே கனி எதிர்ந்தது களை தவிர்ந்தது களி மிகுந்தது கனிவொடே புனித மன்று இறை நடம் மலிந்தது புகழ் உயர்ந்தது புவியிலே. *(2). நரை திரை அற்ற தெனல்

மேல்

#25 உரையும் உற்றது ஒளியும் உற்றது உணர்வும் உற்றது உண்மையே பரையும் உற்றது பதியும் உற்றது பதமும் உற்றது பற்றியே புரையும் அற்றது குறையும் அற்றது புலையும் அற்றது புன்மை சேர் திரையும் அற்றது நரையும் அற்றது திரையும் அற்று விழுந்ததே. **12. இறைவன் அமபலத்தரசையும் அளித்தான் எனல்

மேல்

#26 ஆணை ஆணை நீ அஞ்சலை அஞ்சலை அருள் ஒளி தருகின்றாம் கோணை மா நிலத்தவர் எலாம் நின்னையே குறிக்கொள்வர் நினக்கே எம் ஆணை அம்பலத்து அரசையும் அளித்தனம் வாழ்க நீ மகனே என்று ஏணை பெற்றிட எனக்கு அருள் புரிந்த நின் இணை மலர்_பதம் போற்றி. **13. எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின எனல்.

மேல்

#27 எல்லா உலகமும் என் வசம் ஆயின எல்லா உயிர்களும் என் உயிர் ஆயின எல்லா ஞானமும் என் ஞானம் ஆயின எல்லா வித்தையும் என் வித்தை ஆயின எல்லா போகமும் என் போகம் ஆயின எல்லா இன்பமும் என் இன்பம் ஆயின எல்லாம்_வல்ல சிற்றம்பலத்து என் அப்பர் எல்லாம் நல்கி என் உள்ளத்து உள்ளாரே. **14. நானானான் தானானான் எனல்

மேல்

#28 நான் ஆனான் தான் ஆனான் நானும் தானும் ஆனான் தேன் ஆனான் தெள் அமுதாய்த் தித்தித்து நிற்கின்றான் வான் ஆனான் ஞான மணி மன்றில் ஆடுகின்றான் கோன் ஆனான் என் உள் குலாவுகின்ற கோமானே. **15. களிப்புறுகின்றேன் எனல்

மேல்

#29 கலக்கம் நீங்கினேன் களிப்புறுகின்றேன் கனக அம்பலம் கனிந்த செங்கனியே துலக்கம் உற்ற சிற்றம்பலத்து அமுதே தூய சோதியே சுகப் பெரு வாழ்வே விலக்கல் இல்லதோர் தனி முதல் அரசே வேத ஆகமம் விளம்பு மெய்ப்பொருளே அலக்கண் அற்ற மெய் அன்பர்-தம் உளத்தே அமர்ந்ததோர் சச்சிதானந்த சிவமே. **16. உயிர்க்கின்பம் புரிந்து வயங்கல் வேண்டும் எனல்

மேல்

#30 அழியா நிலை யாது அது மேவி நின் அன்பினோடும் ஒழியாது உனைப் பாடிநின்று ஆடி உலகினூடே வழியாம் உயிர்க்கு இன்பம் புரிந்து வயங்கல் வேண்டும் இழியாது அருள்வாய் பொது மேவிய எந்தை நீயே. . **17. இறைவன் நாய்க்கும் ஓர் தவிசிட்டான் எனல்

மேல்

#31 நாய்க்கும் ஓர் தவிசு இட்டுப் பொன் மா முடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் வாய்க்குவந்தபடி பல பேசவே மதி_இலேனையும் மன் அருள் சத்தியாம் தாய்க்குக் காட்டி நல் தண் அமுது ஊட்டி ஓர் தவள மாடப் பொன் மண்டபத்து ஏற்றியே சேய்க்கு நேர என் கையில் பொன் கங்கணம் திகழக் கட்டினை என்னை நின் செய்கையே. **18. திருச்சிற்றம்பலம் நண்ணிய பொருளே தமக்கு எல்லாம் எனல்

மேல்

#32 படித்த என் படிப்பும் கேள்வியும் இவற்றின் பயன்-அதாம் உணர்ச்சியும் அடியேன் பிடித்த நல் நிலையும் உயிரும் மெய் இன்பும் பெருமையும் சிறப்பும் நான் உண்ணும் வடித்த தெள் அமுதும் வயங்கும் மெய் வாழ்வும் வாழ்க்கை நல் முதலும் மன்றகத்தே நடித்த பொன் அடியும் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய பொருளும் என்று அறிந்தேன். **19. அருட்பெரும் சோதிச் செங்கோல் கொடுத்த அற்புதம் அறைதல்

மேல்

#33 அருள்_பெரும்_சோதி என் அம்மையினோடு அறிவு ஆனந்தமாம் அருள்_பெரும்_சோதி என் அப்பன் என் உள்ளத்து அமர்ந்து அன்பினால் அருள்_பெரும்_சோதித் தெள் ஆர்_அமுதம் தந்து அழிவற்றதோர் அருள்_பெரும்_சோதிச் செங்கோலும் கொடுத்தனன் அற்புதமே. **20. திரு உளம் யாதென வினவல்

மேல்

#34 போதோ விடிந்தது அருள் அரசே என் பொருட்டு வந்து என் தாது ஓர் எழுமையும் நன்மையுற்று ஓங்கத் தருவது-தான் மா தோடம் நீக்கும் கனிரசமோ வந்த வான் கனியின் கோதோ அறிந்திலன் யாதோ திருவுளம் கூறுகவே. . **21. இறைவன் கருணைக்கு எல்லை காணுமாறு இலை எனல்

மேல்

#35 தரம் பிறர் அறியாத் தலைவ ஓர் முக்கண் தனி முதல் பேர்_அருள் சோதிப் பரம்பர ஞான சிதம்பர நடம் செய் பராபர நிராமய நிமல உரம் பெறும் அயன் மால் முதல் பெரும் தேவர் உளத்து அதிசயித்திட எனக்கே வரம் தருகின்றாய் வள்ளல் நின் கருணை மா கடற்கு எல்லை கண்டிலனே. **22. மாயையும் வினையும் மடிந்தன எனல்

மேல்

#36 இன்பிலே வயங்கும் சிவ_பரம்பொருளே என் உயிர்க்கு அமுதமே என்றன் அன்பிலே பழுத்த தனிப் பெரும் பழமே அருள் நடம் புரியும் என் அரசே வன்பிலே விளைந்த மாயையும் வினையும் மடிந்தன விடிந்ததால் இரவும் துன்பு_இலேன் இனி நான் அருள்_பெரும்_சோதிச் சூழலில் துலங்குகின்றேனே. **23. ஏழைகள்தம் அரும்பசிக்கு மருந்தளிக்க இயலாது வருந்தல்

மேல்

#37 கரும்பு அசைக்கும் மொழிச் சிறியார் கல்_மனத்தில் பயின்றுபயின்று இரும்பு அசைக்கும் மனம் பெற்றேன் யானோ இ ஏழைகள்-தம் அரும் பசிக்கு மருந்து அளிப்பேன் அந்தோ இங்கு என்னாலே துரும்பு அசைக்க முடியாதே சோதி நடப் பெருமானே. **24.எல்லாக் குறையும் தவிர்ந்தேன் எனல்

மேல்

#38 எல்லாக் குறையும் தவிர்ந்தேன் உன் இன் அருள் எய்தினன் நான் வல்லாரின் வல்லவன் ஆனேன் கருணை மருந்து அருந்தி நல்லார் எவர்க்கும் உபகரிப்பான் இங்கு நண்ணுகின்றேன் கொல்லா விரதத்தில் என்னைக் குறிக்கொண்ட கோலத்தனே. **25. மெய்ஞ்ஞான உருவடைந்த துரைத்தல்

மேல்

#39 கண்டேன் சிற்றம்பலத்து ஆனந்த நாடகம் கண்டு களி கொண்டேன் எல்லாம்_வல்ல சித்தனைக் கூடிக் குலவி அமுது உண்டேன் மெய்ஞ்ஞான உரு அடைந்தேன் பொய் உலகு ஒழுக்கம் விண்டேன் சமரச சன்மார்க்கம் பெற்ற வியப்பு இதுவே. **26. இறைவன் எஞ்ஞான்றும் அழியாத மெய் அளித்ததை வியத்தல்

மேல்

#40 காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனைச் சார்வீரே. **27 தந்தை தன்மையே தனையன்தன் தன்மை எனல்

மேல்

#41 தந்தை தன்மையே தனையன்-தன் தன்மை என்று சாற்றுதல் சத்தியம் கண்டீர் எந்தை எம் பிரான் ஐந்தொழில் புரியும் இறைவன் மன்று உளே இயல் நடம் புரிவான் மைந்தன் என்று எனை ஆண்டவன் எல்லாம்_வல்ல நாயகன் நல்ல சீர்_உடையான் அந்தணாளன் மெய் அறிவு_உடையவன் என் அப்பன் தன்மை என் தன்மை என்று அறி-மின். **28. சித்தெலாம் வல்ல தொன்று அறிந்த தறைதல்

மேல்

#42 உயிர் எலாம் ஒரு நீ திரு_நடம் புரியும் ஒரு திரு_பொது என அறிந்தேன் செயிர் எலாம் தவிர்ந்தேன் திரு எலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன் மயிர் எலாம் புளகித்து உளம் எலாம் கனிந்து மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப் பயிர் எலாம் தழைக்கப் பதி எலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே. **29. வாய்த்த வாய்ப்பினை வியத்தல்

மேல்

#43 அரும் தவர் காண்டற்கு அரும் பெரும் கருணை அருள்_பெரும்_சோதி என் உளத்தே இருந்தனன் அம்மா நான் செய்த தவம்-தான் என்னையோ என்னையோ என்றாள் திருந்து தெள் அமுது உண்டு அழிவு எலாம் தவிர்த்த திரு_உரு அடைந்தனன் ஞான மருந்து மா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின் என்றாளே. **30. அருட் பொதுவில் நடம் போற்றுமாறு புகலல்

மேல்

#44 வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும் போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் தீது பேசினீர் என்றிடாது உமைத் திருவுளம் கொளும் காண்-மினோ சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன் சுற்றம் என்பது பற்றியே. **31. இருவரும் ஒன்றாகி இருக்கின்றோம் எனல்

மேல்

#45 தன்னைவிடத் தலைமை ஒரு தகவினும் இங்கு இயலாத் தனித் தலைமைப் பெரும் பதியே தருண தயாநிதியே பொன் அடி என் சிரத்து இருக்கப் புரிந்த பரம் பொருளே புத்தமுதம் எனக்கு அளித்த புண்ணியனே நீ-தான் என்னை விட மாட்டாய் நான் உன்னை விட_மாட்டேன் இருவரும் ஒன்று ஆகி இங்கே இருக்கின்றோம் இது-தான் நின் அருளே அறிந்தது எனில் செயும் செய்கை அனைத்தும் நின் செயலோ என் செயலோ நிகழ்த்திடுக நீயே. **32. பேரானந்த நித்திரை செய்கின்றேன் எனல்

மேல்

#46 பிச்சு உலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன் இச்சை எலாம் எய்த இசைந்து அருளிச் செய்தனையே அச்சம் எலாம் தீர்ந்தேன் அருள் அமுதம் உண்கின்றேன் நிச்சலும் பேர்_ஆனந்த நித்திரை செய்கின்றேனே. **33. ஊங்கார இரண் டுருவும் ஒன்றானோம் எனல்.

மேல்

#47 ஓங்கார அணை மீது நான் இருந்த தருணம் உவந்து எனது மணவாளர் சிவந்த வடிவு அகன்றே ஈங்கு ஆரப் பளிக்கு வடிவெடுத்து எதிரே நின்றார் இருந்து அருள்க என எழுந்தேன் எழுந்திருப்பது என் நீ ஆங்காரம் ஒழி என்றார் ஒழிந்திருந்தேன் அப்போது அவர் நானோ நான் அவரோ அறிந்திலன் முன் குறிப்பை ஊங்கு ஆர இரண்டு உருவும் ஒன்று ஆனோம் அங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே. **34. கோன் செய்த விச்சை குணிக்கல் ஆகா தெனல்

மேல்

#48 நான் செய்த புண்ணியம் என் உரைக்கேன் பொது நண்ணியதோர் வான் செய்த மா மணி என் கையில் பெற்று நல் வாழ்வு அடைந்தேன் ஊன் செய்த தேகம் ஒளி வடிவு ஆக நின்று ஓங்குகின்றேன் கோன் செய்த விச்சை குணிக்க வல்லார் எவர் கூறு-மினே. **35. வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும் வார்த்தம் தம் வாய் விளம்பா தெனல்

மேல்

#49 சொல்லுகின்றேன் பற்பல நான் சொல்லுகின்ற எல்லாம் துரிசு அலவே சூது அலவே தூய்மை உடையனவே வெல்லுகின்ற வார்த்தை அன்றி வெறும்_வார்த்தை என் வாய் விளம்பாது என் ஐயர் நின்று விளம்புகின்றபடியால் செல்லுகின்றபடியே நீ காண்பாய் இத் தினத்தே தே_மொழி அப்போது எனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய் ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றேன் அடி நான் உண்மை இது உண்மை இது உண்மை இது-தானே. **36. ஐயன் அருள் வருகின்ற தருணம் இது எனல்.

மேல்

#50 ஐயன் அருள் வருகின்ற தருணம் இது கண்டீர் ஐயம் இலை ஐயம் இலை ஐயன் அடி ஆணை மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற்சபையில் விளங்குகின்ற சித்தன் எலாம் வல்ல ஒரு விமலன் துய்யன் அருள்_பெரும்_சோதி துரிய நட நாதன் சுக அமுதன் என்னுடைய துரை அமர்ந்து இங்கு இருக்க வையம் மிசைத் திரு_கோயில் அலங்கரி-மின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. **37. தம் தந்தை வருகின்ற தருணம் இது எனல்.

மேல்

#51 தனித் தலைமைப் பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே **38. இத் தினமே அருட்சோதி எய்துகின்ற தினம் எனல்

மேல்

#52 சத்தியவான் வார்த்தை இது தான் உரைத்தேன் கண்டாய் சந்தேகம் இலை இதனில் சந்தோடமுறுவாய் இத் தினமே அருள் சோதி எய்துகின்ற தினமாம் இனி வரும் அத் தினங்கள் எலாம் இன்பமுறு தினங்கள் சுத்த சிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும் தூய்மையுறும் நீ உரைத்த சொல் அனைத்தும் பலிக்கும் செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந்து இருப்பார் திரு_அருள் செங்கோல் எங்கும் செல்லுகின்றதாமே. **39. இன்று வந்து இறைவர் தாம் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் எனல்.

மேல்

#53 என் சாமி எனது துரை என் உயிர்_நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார் பின் சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது பேர்_உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார் தன் சாதி உடைய பெரும் தவத்தாலே நான்-தான் சாற்றுகின்றேன் அறிந்து இது-தான் சத்தியம் சத்தியமே மின் சாரும் இடை மடவாய் என் மொழி நின்றனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே. *

மேல்

7.கீர்த்தனைப் பகுதி


01. நாமாவளிகள்
02. பாங்கிமார் கண்ணி
03. வெண்ணிலாக் கண்ணி
04. முறையீட்டுக் கண்ணி
05. திருவடிக் கண்ணி
06. பேரன்புக் கண்ணி
07. சிலதா ஸம்வாதம்
08. வினா உத்தரம்
09. நடேசர் கொம்மி
10. சண்முகர் கொம்மி
11. பந்தாடல்
12. திரு உந்தியார்
13. உபதேச வினா
14. நெஞ்சொடு நேர்தல்
15. மங்களம்
16. சண்முகர் வருகை
17. அம்பலவாணர் வருகை
18. அம்பலவாணர் ஆட வருகை
19. அம்பலவாணர் அணைய வருகை
20. நல்ல மருந்து
21. ஞான மருந்து
22. சிவசிவ ஜோதி
23. ஜோதியுள் ஜோதி
24. ஆடிய பாதம்
25. அருள் அற்புதம்
26. ஆணிப்பொன் அம்பலம்
27. அருட் காட்சி
28. ஆனந்தப் பரிவு
29. மெய்யருள் வியப்பு
30. வளர்பதி விளக்கம்
31. ஞானோபதேசம்
32. ஆரமுதப் பேறு
33. இன்னந் தயவு
34. அபயம் அபயம்
35. அஞ்சாதே நெஞ்சே
36. தெண்டனிட்டேன்
37. வருவார் அழைத்துவாடி
38. என்ன புண்ணியம்
39. இவர்க்கும் எனக்கும்
40. இது நல்ல தருணம்
41. இராக ஆலாபனத் திருப்பாடல்கள்
 
    
    
    

@1 நாமாவளிகள்

#1 சிவசிவ கஜ முக கண நாதா சிவ கண வந்தித குண நீதா.

மேல்

#2 சிவசிவ சிவசிவ தத்துவ போதா சிவகுரு பரசிவ சண் முக நாதா

மேல்

#3 அம்பலத்து அரசே அரு_மருந்தே ஆனந்தத் தேனே அருள் விருந்தே.

மேல்

#4 பொது நடத்து அரசே புண்ணியனே புலவர் எலாம் புகழ் கண்ணியனே.

மேல்

#5 சிவசிவ சிவசிவ சின்மய தேஜா சிவ சுந்தர குஞ்சித நடராஜா

மேல்

#6 மலை தரு மகளே மட மயிலே மதி முக அமுதே இளம் குயிலே.

மேல்

#7 ஆனந்தக் கொடியே இளம்_பிடியே அற்புதத் தேனே மலை மானே.

மேல்

#8 படன விவேக பரம்பர வேதா நடன சபேச சிதம்பர நாதா.

மேல்

#9 அரி பிரமாதியர் தேடிய நாதா அரகர சிவசிவ ஆடிய பாதா.

மேல்

#10 அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா.

மேல்

#11 அம்பர விம்ப சிதம்பர நாதா அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா.

மேல்

#12 தந்திர மந்திர யந்திர பாதா சங்கர சங்கர சங்கர நாதா.

மேல்

#13 கருணாநிதியே சபாபதியே கதி மா நிதியே பசுபதியே.

மேல்

#14 சபாபதி பாதம் தபோப்ரசாதம் தயாநிதி போதம் சதோதய வேதம்.

மேல்

#15 கனக சிதம்பர கங்கர புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர.

மேல்

#16 சகல கலாண்ட சராசர காரண சகுண சிவாண்ட பராபர பூரண.

மேல்

#17 சிதம் பிரகாசா பரம் பிரகாசா சிதம்பரேசா சுயம் பிரகாசா.

மேல்

#18 ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரஞ் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

மேல்

#19 அருள் பிரகாசம் பரப் பிரகாசம் அகப் பிரகாசம் சிவப் பிரகாசம்.

மேல்

#20 நடப் பிரகாசம் தவப் பிரகாசம் நவப் பிரகாசம் சிவப் பிரகாசம்.

மேல்

#21 போகம் சுக போகம் சிவ போகம் அது நித்தியம் ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம்.

மேல்

#22 இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே.

மேல்

#23 என் உயிர் உடம்பொடு சித்தம்-அதே இனிப்பது நடராஜ புத்தமுதே.

மேல்

#24 நல மங்கலம் உறும் அம்பல நடனம் அது நடனம் பல நன்கு அருள் சிவ சங்கர படனம் அது படனம்.

மேல்

#25 ஐயர் திரு_சபை ஆடகமே ஆடுதல் ஆனந்த நாடகமே.

மேல்

#26 கனகாகரபுரஹர சிரகரதர கருணாகர பரசுரவர ஹரஹர.

மேல்

#27 கனக_சபாபதி பசுபதி நவபதி அனக உமாபதி அதிபதி சிவபதி.

மேல்

#28 உத்தர ஞான சிதம்பரமே சித்தி எலாம் தரும் அம்பரமே.

மேல்

#29 கருணாம்பர வரகர சிவபவபவ அருணாம்பரதர ஹரஹர சிவசிவ.

மேல்

#30 அம்பலவா சிவ மா தேவா வம்பு அல வா இங்கு வாவாவா.

மேல்

#31 நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே நல்ல எலாம் செய வல்லவனே.

மேல்

#32 ஆனந்த நாடகம் கண்டோமே பர மானந்த போனகம் கொண்டோமே.

மேல்

#33 வேதாந்த பராம்பர சவுதய நாதாந்த நடாம்பர ஜயஜய.

மேல்

#34 ஏகாந்த சர்வேச சமோதம யோகாந்த நடேச நமோநம.

மேல்

#35 ஆதாம்பர ஆடக அதிசய பாதாம்புஜ நாடக ஜயஜய.

மேல்

#36 போதாந்த புரேச சிவாகம நாதாந்த நடேச நமோநம.

மேல்

#37 சகள உபகள நிட்கள நாதா உகள சததள மங்கள பாதா.

மேல்

#38 சந்ததமும் சிவ சங்கர பஜனம் சங்கிதம் என்பது சற்சன வசனம்.

மேல்

#39 சங்கர சிவசிவ மா தேவா எங்களை ஆட்கொள வாவாவா.

மேல்

#40 அரகர சிவசிவ மா தேவா அருள் அமுதம் தர வாவாவா.

மேல்

#41 சத பரி சத உப சத மத வித பவ சிதபரி கதபத சிவசிவ சிவசிவ.

மேல்

#42 அரகர வர சுப கரகர பவபவ சிரபுர சுரபர சிவசிவ சிவசிவ.

மேல்

#43 ஜால கோல கனகாம்பர சாயக காலகால வனகாம்பர நாயக.

மேல்

#44 நடன சிகாமணி நவ மணியே திடன் அக மா மணி சிவ மணியே.

மேல்

#45 நடமிடும் அம்பல நல் மணியே புடமிடு செம்பு அல பொன் மணியே.

மேல்

#46 உவட்டாது சித்திக்கும் உள் அமுதே தெவிட்டாது தித்திக்கும் தெள் அமுதே.

மேல்

#47 நடராஜ வள்ளலை நாடுதலே நம் தொழிலாம் விளையாடுதலே.

மேல்

#48 அருள் பொது நடமிடு தாண்டவனே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவனே.

மேல்

#49 நடு நாடி நடு நாடி நடமாடு பதியே நடராஜ நடராஜ நடராஜ நிதியே.

மேல்

#50 நடுநாடியொடு கூடி நடமாடும் உருவே நடராஜ நடராஜ நடராஜ குருவே.

மேல்

#51 நடு நாடி இடை நாடி நடமாடும் நலமே நடராஜ நடராஜ நடராஜ பலமே.

மேல்

#52 ஆயவாய நேய ஞேய மாய ஞாயவாதியே தூயவாய காய தேய தோய மேய ஜோதியே.

மேல்

#53 ஆதவாத வேத கீத வாதவாத வாதியே சூத வாத பாத நாத சூத ஜாத ஜோதியே.

மேல்

#54 அங்க சங்க மங்கை பங்க ஆதி ஆதி ஆதியே துங்க புங்க அங்க லிங்க ஜோதி ஜோதி ஜோதியே.

மேல்

#55 அத்த முத்த அத்தமுத்த ஆதி ஆதி ஆதியே சுத்த சித்த சப்த நிர்த்த ஜோதி ஜோதி ஜோதியே.

மேல்

#56 அஞ்சல் அஞ்சல் என்று வந்து என் நெஞ்சு அமர்ந்த குழகனே வஞ்ச நஞ்சம் உண்ட கண்ட மன்றுள் நின்ற அழகனே.

மேல்

#57 தொண்டர் கண்டுகண்டு மொண்டுகொண்டு உள் உண்ட இன்பனே அண்டர் அண்டம் உண்ட விண்டு தொண்டு மண்டும் அன்பனே.

மேல்

#58 கந்த தொந்த பந்த சிந்து சிந்த வந்த காலமே எந்தஎந்த சந்தம் முந்தும் அந்த வந்த கோலமே.

மேல்

#59 என்றும் என்றின் ஒன்று மன்றுள் நன்று நின்ற ஈசனே ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்றும் ஒன்று அது என்ற தேசனே.

மேல்

#60 எட்ட எட்டி ஒட்ட ஒட்டும் இட்டது இட்ட கீர்த்தியே அட்ட வட்டம் நட்டம் இட்ட சிட்ட வட்ட மூர்த்தியே.

மேல்

#61 சேர் இகார சார வார சீர் அகார ஊரனே ஓர் உகார தேர தீர வார வார தூரனே.

மேல்

#62 வெய்ய நொய்ய நைய நைய மெய் புகன்ற துய்யனே ஐயர் ஐய நையும் வையம் உய்ய நின்ற ஐயனே.

மேல்

#63 பாச நாச பாப நாச பாத தேச ஈசனே வாச வாச தாசர் நேச வாசகா சபேசனே.

மேல்

#64 வர கேசாந்த மகோதய காரிய பர பாசாந்த சுகோதய சூரிய.

மேல்

#65 பளித தீபக சோபித பாதா லளித ரூபக ஸ்தாபித நாதா.

மேல்

#66 அனிர்த கோப கருணாம்பக நாதா அமிர்த ரூப தருணாம்புஜ பாதா.

மேல்

#67 உபல சிரதல சுப கண வங்கண சுபல கரதல கண பண கங்கண.

மேல்

#68 அம்போருக பத அரகர கங்கர சம்போ சிவசிவ சிவசிவ சங்கர.

மேல்

#69 நடராஜ மாணிக்கம் ஒன்று அதுவே நண்ணுதல் ஆணி_பொன் மன்றதுவே.

மேல்

#70 நடராஜ பலம் அது நம் பலமே நடமாடுவது திரு_அம்பலமே.

மேல்

#71 அபய வரத கரதல புரி காரண உபய பரத பத பர பரிபூரண.

மேல்

#72 அகர உகர சுபகர வர சினகர தகர வகர நவ புர சிர தினகர.

மேல்

#73 வகர சிகர தினகர சசிகர புர மகர அகர வர புர ஹர ஹரஹர.

மேல்

#74 உரிய துரிய பெரிய வெளியில் ஒளியில் ஒளி செய் நடனனே பிரிய அரிய பிரியம் உடைய பெரியர் இதய படனனே.

மேல்

#75 அகில புவன உயிர்கள் தழைய அபயம் உதவும் அமலனே அயனும் அரியும் அரனும் மகிழ அருளும் நடன விமலனே.

மேல்

#76 அகர உகர மகர வகர அமுத சிகர சரணமே அபர சபர அமன சமன அமல நிமல சரணமே. தகர ககன நடன கடன சகள அகள சரணமே சகுண நிகுண சகம நிகம சகித விகித சரணமே.

மேல்

#77 அனக வனஜ அமித அமிர்த அகல அகில சரணமே அதுல அனத அசுத அசல அநில அனல சரணமே. தனக கனக சபைய அபய சரத வரத சரணமே சதுர சதர சகச சரித தருண சரண சரணமே.

மேல்

#78 உளமும் உணர்வும் உயிரும் ஒளிர ஒளிரும் ஒருவ சரணமே உருவின் உருவும் உருவுள் உருவும் உடைய தலைவ சரணமே. இளகும் இதய_கமலம் அதனை இறைகொள் இறைவ சரணமே இருமை ஒருமை நலமும் அருளும் இனிய சமுக சரணமே.

மேல்

#79 அடியும் நடுவும் முடியும் அறிய அரிய பெரிய சரணமே அடியர் இதய வெளியில் நடனம்-அது செய் அதிப சரணமே. ஒடிவு_இல் கருணை அமுதம் உதவும் உபல வடிவ சரணமே உலக முழுதும் உறைய நிறையும் உபய சரண சரணமே.

மேல்

#80 அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணமே அவசமுறு மெய் அடியர் இதயம் அமரும் அமல சரணமே. எறிவில் உலகில் உயிரை உடலில் இணைசெய் இறைவ சரணமே எனையும் ஒருவன் என உள் உணரும் எனது தலைவ சரணமே.

மேல்

#81 நினையும் நினைவு கனிய இனிய நிறைவு தருக சரணமே நினையும் எனையும் ஒருமை புரியும் நெறியில் நிறுவு சரணமே. வனையும் மதுர அமுத உணவு மலிய உதவு சரணமே மருவு சபையில் நடன வரத வருக வருக சரணமே.

மேல்

#82 சபா சிவா மஹா சிவா சகா சிவா சிகா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா சதா சிவா.

மேல்

#83 வா சிவா சதா சிவா மஹா சிவா தயா சிவா வா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா சிவா.

மேல்

#84 நினைக்கில் நெஞ்சம் இனிக்கும் என்ற நிருத்த மன்றில் ஒருத்தனே நினைக்கும் அன்பர் நிலைக்க நின்று பொருத்துகின்ற கருத்தனே.

மேல்

#85 மயங்கி நெஞ்சு கலங்கி நின்று மலங்கினேனை ஆண்டவா வயங்கி நின்று துலங்கும் மன்றில் இலங்கு ஞான தாண்டவா.

மேல்

#86 களங்க வாத களம் கொள் சூதர் உளம்கொளாத பாதனே களங்கு_இலாத உளம்கொள்வார் உள் விளங்கு ஞான நாதனே.

மேல்

#87 தடுத்த மலத்தைக் கெடுத்து நலத்தைக் கொடுத்த கருணைத் தந்தையே தனித்த நிலத்தில் இனித்த குலத்தில் குனித்த அடி கொள் எந்தையே.

மேல்

#88 எச்ச நீட்டி விச்சை காட்டி இச்சையூட்டும் இன்பனே அச்சம் ஓட்டி அச்சு நாட்டி வைச்சு உள் ஆட்டும் அன்பனே.

மேல்

#89 பொது நிலை அருள்வது பொதுவினில் நிறைவது பொது நலம் உடையது பொது நடமிடுவது அது பரம் அது பதி அது பொருள் அது சிவம் அரஅர அரஅர அரஅர அரஅர.

மேல்

#90 நவ நிலை தருவது நவ வடிவு உறுவது நவ வெளி நடுவது நவநவ நவம் அது சிவம் எனும் அது பதம் அது கதி அது பொருள் சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ.

மேல்

#91 நான் சொன்ன பாடலும் கேட்டாரே ஞான சிதம்பர நாட்டாரே.

மேல்

#92 பலத்தில் தன் அம்பலத்தில் பொன்_அம்பலத்தில் துன்னும் நலத்தனே பலத்தில் பன்னும் பரத்தில் துன்னும் பரத்தில் மன்னும் குலத்தனே.

மேல்

#93 நீ என் அப்பன் அல்லவா நினக்கும் இன்னம் சொல்லவா தாயின் மிக்க நல்லவா சர்வ சித்தி வல்லவா.

மேல்

#94 ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.

மேல்

#95 சூது மன்னும் இந்தையே சூடல் என்ன விந்தையே கோது விண்ட சிந்தையே கோயில்கொண்ட தந்தையே.

மேல்

#96 அன்பு முந்து சிந்தையே அம்பலம் கொள் விந்தையே இன்பம் என்பன் எந்தையே எந்தை தந்தை தந்தையே.

மேல்

#97 ஞான சித்திபுரத்தனே நாத சத்தி பரத்தனே வானம் ஒத்த தரத்தனே வாத வித்தை வரத்தனே.

மேல்

#98 இனித் துயர் பட_மாட்டேன் விட்டேனே என் குரு மேல் ஆணையிட்டேனே.

மேல்

#99 இனிப் பாடு பட_மாட்டேன் விட்டேனே என் அப்பன் மேல் ஆணை இட்டேனே.

மேல்

#100 சன்மார்க்கம் நல் மார்க்கம் நல் மார்க்கம் சக மார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம்.

மேல்

#101 நடராஜர் பாட்டே நறும் பாட்டு ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும்_பாட்டு.

மேல்

#102 சிதம்பரப் பாட்டே திரு_பாட்டு ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெரு_பாட்டு.

மேல்

#103 அம்பலப் பாட்டே அருள் பாட்டு அல்லாத பாட்டு எல்லாம் மருள் பாட்டு.

மேல்

#104 நாத பரம்பரனே பர நாத சிதம்பரனே நாத திகம்பரனே தச நாத சுதந்தரனே.

மேல்

#105 ஞான நடத்தவனே பர ஞானி இடத்தவனே ஞான வரத்தவனே சிவஞான புரத்தவனே.

மேல்

#106 ஞான சபாபதியே மறை நாடு சதாகதியே தீன தயாநிதியே பர தேவி உமாபதியே.

மேல்

#107 நகப் பெரும் சோதி சுகப் பெரும் சோதி நவப் பெரும் சோதி சிவப் பெரும் சோதி அகப் பெரும் சோதி நடப் பெரும் சோதி அருள்_பெரும்_சோதி அருள்_பெரும்_சோதி.

மேல்

#108 உமைக்கு ஒரு பாதி கொடுத்து அருள் நீதி உவப்புறு வேதி நவப் பெருவாதி அமைத்திடு பூதி அகத்து இடும் ஆதி அருள் சிவ ஜோதி அருள் சிவ ஜோதி.

மேல்

#109 தம் குறு வம்பு மங்க நிரம்பு சங்கம் இயம்பும் நம் கொழு_கொம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு சங்கர சம்பு.

மேல்

#110 சந்தம் இயன்று அந்தணர் நன்று சந்ததம் நின்று வந்தனம் என்று சந்தி செய் மன்று மந்திரம் ஒன்று சங்கர சம்பு சங்கர சம்பு.

மேல்

#111 பசியாத அமுதே பகையாத பதியே பகராத நிலையே பறையாத சுகமே நசியாத பொருளே நலியாத உறவே நடராஜ மணியே நடராஜ மணியே.

மேல்

#112 புரையாத மணியே புகலாத நிலையே புகையாத கனலே புதையாத பொருளே நரையாத வரமே நடியாத நடமே நடராஜ நிதியே நடராஜ நிதியே.

மேல்

#113 சிவ ஞான நிலையே சிவயோக நிறைவே சிவ போக உருவே சிவ மான உணர்வே நவ நீத மதியே நவ நாத கதியே நடராஜ பதியே நடராஜ பதியே.

மேல்

#114 தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே நவ வார நடமே சுவகார புடமே நடராஜ பரமே நடராஜ பரமே.

மேல்

#115 துதி வேத உறவே சுக போத நறவே துனி தீரும் இடமே தனி ஞான நடமே நதி ஆர நிதியே அதிகார பதியே நடராஜ குருவே நடராஜ குருவே.

மேல்

#116 வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே நயமான உரையே நடுவான வரையே நடராஜ துரையே நடராஜ துரையே.

மேல்

#117 பர நடம் சிவ_சிதம்பர நடமே பதி நடம் சிவ சபாபதி நடமே திரு_நடனம் பர குரு நடமே சிவ நடம் அம்பர நவ நடமே.

மேல்

#118 அகர சபாபதி சிகர சபாபதி அனக சபாபதி கனக_சபாபதி மகர சபாபதி உகர சபாபதி வரத சபாபதி சரத சபாபதி.

மேல்

#119 அமல சபாபதி அபய சபாபதி அமுத சபாபதி அகில சபாபதி நிமல சபாபதி நிபுண சபாபதி நிலய சபாபதி நிபிட சபாபதி.

மேல்

#120 நீடிய வேதம் தேடிய பாதம் நேடிய கீதம் பாடிய பாதம் ஆடிய போதம் கூடிய பாதம் ஆடிய பாதம் ஆடிய பாதம்.

மேல்

#121 சாக்கிய வேதம் தேக்கிய பாதம் தாக்கிய ஏதம் போக்கிய பாதம் சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் தூக்கிய பாதம் தூக்கிய பாதம்.

மேல்

#122 ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்.

மேல்

#123 சஞ்சிதம் வீடும் நெஞ்சு இத பாதம் தம் சிதம் ஆகும் சஞ்சித பாதம் கொஞ்சு இதம் மேவும் ரஞ்சித பாதம் குஞ்சித பாதம் குஞ்சித பாதம்.

மேல்

#124 எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் எண்ணியவாறே நண்ணிய பேறே புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் புண்ணியவானே புண்ணியவானே.

மேல்

#125 தொத்திய சீரே பொத்திய பேரே துத்திய பாவே பத்திய நாவே சத்தியம் நானே நித்தியன் ஆனேன் சத்தியவானே சத்தியவானே.

மேல்

#126 எம் புலப் பகையே எம் புலத்து உறவே எம் குலத் தவமே எம் குலச் சிவமே அம்பினில் கனலே அந்தணர்க்கு இறையே அம்பலத்து அரசே அம்பலத்து அரசே.

மேல்

#127 இன்பு உடைப் பொருளே இன் சுவைக் கனியே எண்_குணச் சுடரே இந்து அகத்து ஒளியே அன்பு உடைக் குருவே அம்புயற்கு இறையே அம்பலத்து அமுதே அம்பலத்து அமுதே.

மேல்

#128 பதியுறு பொருளே பொருளுறு பயனே பயனுறு நிறைவே நிறைவுறு வெளியே மதியுறும் அமுதே அமுதுறு சுவையே மறை முடி மணியே மறை முடி மணியே.

மேல்

#129 அருளுறு வெளியே வெளியுறு பொருளே அதுவுறு மதுவே மதுவுறு சுவையே மருள் அறு தெருளே தெருளுறும் ஒளியே மறை முடி மணியே மறை முடி மணியே.

மேல்

#130 தரு வளர் நிழலே நிழல் வளர் சுகமே தடம் வளர் புனலே புனல் வளர் நலனே திரு வளர் உருவே உரு வளர் உயிரே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#131 உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே ஒளியுறு வெளியே வெளியுறு வெளியே செயிர் அறு பதியே சிவ நிறை நிதியே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#132 கலை நிறை மதியே மதி நிறை அமுதே கதி நிறை கதிரே கதிர் நிறை சுடரே சிலை நிறை நிலையே நிலை நிறை சிவமே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#133 மிக உயர் நெறியே நெறி உயர் விளைவே விளைவு உயர் சுகமே சுகம் உயர் பதமே திகழ் உயர் உயர்வே உயர் உயர் உயர்வே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#134 இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#135 புரை அறு புகழே புகழ்பெறு பொருளே பொருளது முடிபே முடிவுறு புணர்வே திரை அறு கடலே கடல் எழு சுதையே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#136 நிகழ் நவ நிலையே நிலை உயர் நிலையே நிறை அருள் நிதியே நிதி தரு பதியே திகழ் சிவ பதமே சிவ பத சுகமே திரு_நட மணியே திரு_நட மணியே.

மேல்

#137 புத்தம் தரும் போதா வித்தம் தரும் தாதா நித்தம் தரும் பாதா சித்தம் திரும்பாதா.

மேல்

#138 அம்பல_வாணனை நாடினனே அவன் அடியாரொடும் கூடினனே. தம்பதமாம் புகழ் பாடினனே தந்தன என்று கூத்தாடினனே.

மேல்

#139 நாதாந்த நாட்டுக்கு நாயகரே நடராஜரே சபாநாயகரே.

மேல்

#140 நான் சொல்லும் இது கேளீர் சத்தியமே நடராஜ எனில் வரும் நித்தியமே.

மேல்

#141 நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே நல் வரம் ஈயும் தயாநிதியே.

மேல்

#142 நடராஜர்-தம் நடம் நல் நடமே நடம் புரிகின்றதும் என்னிடமே.

மேல்

#143 சிவகாமவல்லிக்கு மாப்பிள்ளையே திருவாளன் நான் அவன் சீர்ப் பிள்ளையே.

மேல்

#144 சிவகாமவல்லியைச் சேர்ந்தவனே சித்து எல்லாம் செய்திடத் தேர்ந்தவனே.

மேல்

#145 இறவா_வரம் தரு நல் சபையே என மறை புகழ்வது சிற்சபையே.

மேல்

#146 என் இரு கண்ணுள் இருந்தவனே இறவாது அருளும் மருந்தவனே.

மேல்

#147 நனம் தலை வீதி நடந்திடு சாதி நலம் கொளும் ஆதி நடம் புரி நீதி தினம் கலை ஓதி சிவம் தரும் ஓதி சிதம்பர ஜோதி சிதம்பர ஜோதி.

மேல்

#148 அஞ்சோடு அஞ்சு அவை ஏலாதே அங்கோடு இங்கு எனல் ஆகாதே அந்தோ வெம் துயர் சேராதே அஞ்சோகம் சுகம் ஓவாதே தம் சோபம் கொலை சாராதே சந்தோடம் சிவமாம் ஈதே சம்போ சங்கர மா தேவா சம்போ சங்கர மா தேவா.

மேல்

#149 அம்பலத்து ஒரு நடம் உரு நடமே அரு நடம் ஒரு நடம் திரு_நடமே எம் பலத்து ஒரு நடம் பெரு நடமே இதன் பரத்திடு நடம் குரு நடமே.

மேல்

#150 ஓத அடங்காது மடங்காது தொடங்காது ஓகை ஒடுங்காது தடுங்காது நடுங்காது சூதம் அலங்காது விலங்காது கலங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி.

மேல்

#151 ஏதம் முயங்காது கயங்காது மயங்காது ஏறி இறங்காது உறங்காது கறங்காது சூதம் இணங்காது பிணங்காது வணங்காது ஜோதி பரஞ்ஜோதி சுயம் ஜோதி பெரும் ஜோதி.

மேல்

#152 வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி ஏம ஜோதி வியோம ஜோதி ஏறு ஜோதி வீறு ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி ஏக ஜோதி.

மேல்

#153 கலகம் தரும் அவலம் பன கதி நம் பல நிதமும் கனகம் தரு மணி மன்றுறு கதி தந்து அருள் உடல் அம் சல சந்திரன் என நின்றவர் தழுவும் பத சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம்.

மேல்

#154 எனது என்பதும் நினது என்பதும் இது என்று உணர் தருணம் இனம் ஒன்று அது பிறிது அன்று என இசைகின்றது பரமம் தனது என்பது மனது என்பது ஜகம் என்றனை சரணம் சரணம் பதி சரணம் சிவ சரணம் குரு சரணம்.

மேல்

#155 பதம் நம்புறுபவர் இங்கு உறு பவ சங்கடம் அற நின்றிடு பரமம் பொது நடம் என்றனது உளம் நம்புற அருள் அம்பர சித குஞ்சித பத ரஞ்சித சிவ சுந்தர சிவ மந்திர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர.

மேல்

#156 அம்பல_வாணர்-தம் அடியவரே அருள் அரசாள் மணி முடியவரே.

மேல்

#157 கையறவு இலாது நடுக் கண் புருவப் பூட்டு கண்டு களிகொண்டு திறந்து உண்டு நடு நாட்டு ஐயர் மிக உய்யும் வகை அப்பர் விளையாட்டு ஆடுவது என்றே மறைகள் பாடுவது பாட்டு.

மேல்

#158 அருள்_பெரும்_சோதியைக் கண்டேனே ஆனந்தத் தெள் அமுது உண்டேனே. இருள் பெரும் மாயையை விண்டேனே எல்லாம் செய் சித்தியைக் கொண்டேனே.

மேல்

#159 கைவிட மாட்டான் என்று ஊதூது சங்கே கனகசபையான் என்று ஊதூது சங்கே பொய் விடச்செய்தான் என்று ஊதூது சங்கே பூசை பலித்தது என்று ஊதூது சங்கே.

மேல்

#160 பொன் அடி தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_அம்பலத்தான் என்று ஊதூது சங்கே இன்னல் அறுத்தான் என்று ஊதூது சங்கே என் உள் அமர்ந்தான் என்று ஊதூது சங்கே.

மேல்

#161 தூக்கம் தொலைத்தான் என்று ஊதூது சங்கே துன்பம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே ஏக்கம் கெடுத்தான் என்று ஊதூது சங்கே ஏம சபையான் என்று ஊதூது சங்கே.

மேல்

#162 அச்சம் தவிர்த்தான் என்று ஊதூது சங்கே அம்பல_வாணன் என்று ஊதூது சங்கே இச்சை அளித்தான் என்று ஊதூது சங்கே இன்பம் கொடுத்தான் என்று ஊதூது சங்கே.

மேல்

#163 என் உயிர் காத்தான் என்று ஊதூது சங்கே இன்பம் பலித்தது என்று ஊதூது சங்கே பொன் உருத் தந்தான் என்று ஊதூது சங்கே பொன்_சபை அப்பன் என்று ஊதூது சங்கே.

மேல்

#164 சிவம் ஆக்கிக் கொண்டான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே நான் அவன் ஆனேன் என்று ஊதூது சங்கே.

மேல்

#165 தெள் அமுது ஆனான் என்று ஊதூது சங்கே சிற்சபை அப்பன் என்று ஊதூது சங்கே உள்ளம் உவந்தான் என்று ஊதூது சங்கே உள்ளது உரைத்தான் என்று ஊதூது சங்கே.

மேல்

#166 நாத முடியான் என்று ஊதூது சங்கே ஞானசபையான் என்று ஊதூது சங்கே பாதம் அளித்தான் என்று ஊதூது சங்கே பலித்தது பூசை என்று ஊதூது சங்கே.

மேல்

#167 என் அறிவு ஆனான் என்று ஊதூது சங்கே எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே செம் நிலை தந்தான் என்று ஊதூது சங்கே சிற்சபையப்பன் என்று ஊதூது சங்கே.

மேல்

#168 இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே திறமே அளித்தான் என்று ஊதூது சங்கே சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே.

மேல்

#169 கரவு தவிர்ந்தது என்று ஊதூது சங்கே கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே இரவு விடிந்தது என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்தது என்று ஊதூது சங்கே.

மேல்

#170 எல்லாம் செய் வல்லான் என்று ஊதூது சங்கே எல்லார்க்கும் நல்லான் என்று ஊதூது சங்கே எல்லாம் உடையான் என்று ஊதூது சங்கே எல்லாமும் ஆனான் என்று ஊதூது சங்கே.

மேல்

#171 கருணாநிதியர் என்று ஊதூது சங்கே கடவுள் அவனே என்று ஊதூது சங்கே அருள் நாடகத்தான் என்று ஊதூது சங்கே அம்பலச் சோதி என்று ஊதூது சங்கே.

மேல்

#172 தன்_நிகர்_இல்லான் என்று ஊதூது சங்கே தலைவன் அவனே என்று ஊதூது சங்கே பொன் இயல் வண்ணன் என்று ஊதூது சங்கே பொது நடம் செய்வான் என்று ஊதூது சங்கே.

மேல்

#173 ஆனந்த நாதன் என்று ஊதூது சங்கே அருள் உடை அப்பன் என்று ஊதூது சங்கே தான் அந்தம் இல்லான் என்று ஊதூது சங்கே தத்துவச் சோதி என்று ஊதூது சங்கே.

மேல்

#174 பொய் விட்டு அகன்றேன் என்று ஊதூது சங்கே புண்ணியன் ஆனேன் என்று ஊதூது சங்கே மெய் தொட்டு நின்றேன் என்று ஊதூது சங்கே மேல் வெளி கண்டேன் என்று ஊதூது சங்கே.

மேல்

#175 சிற்சபையும் பொன்_சபையும் சொந்தம் எனது ஆச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு இல் சமய வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறப்புத் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

மேல்

#176 ஐயர் அருள் சோதி அரசாட்சி எனது ஆச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவது என் பேச்சு எய் உலக வாழ்வில் எனக்கு என்னை இனி ஏச்சு என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

மேல்

#177 ஈசன் அருளால் கடலில் ஏற்றது ஒரு ஓடம் ஏறிக் கரை ஏறினேன் இருந்தது ஒரு மாடம் தேசுறும் அ மாட நடுத் தெய்வ மணி பீடம் தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம்.

மேல்

#178 மேரு மலை உச்சியில் விளங்கு கம்ப நீட்சி மேவும் அதன் மேல் உலகில் வீறும் அரசாட்சி சேரும் அதில் கண்ட பல காட்சிகள் கண் காட்சி செப்பல் அரிதாம் இதற்கு என் அப்பன் அருள் சாட்சி.

மேல்

#179 துரிய மலை மேல் உளது ஓர் சோதி வள நாடு தோன்றும் அதில் ஐயர் நடம் செய்யும் மணி வீடு தெரியும் அது கண்டவர்கள் காணில் உயிரோடு செத்தவர் எழுவார் என்று கைத்தாளம் போடு.

மேல்

#180 சொல்லால் அளப்ப அரிய சோதி வரை மீது தூய துரியப் பதியில் நேய மறை ஓது எல்லாம் செய் வல்ல சித்தர்-தம்மை உறும் போது இறந்தார் எழுவார் என்று புறம் தாரை ஊது.

மேல்

#181 சிற்பொதுவும் பொற்பொதுவும் நான் அறியலாச்சு சித்தர்களும் முத்தர்களும் பேசுவது என் பேச்சு இல் பகரும் இ உலகில் என்னை இனி ஏச்சு என் பிறவித் துன்பம் எலாம் இன்றோடே போச்சு.

மேல்

#182 வலது சொன்ன பேர்களுக்கு வந்தது வாய்த் தாழ்வு மற்றவரைச் சேர்ந்தவர்க்கும் வந்த தலை_தாழ்வு வலது புஜம் ஆட நம்-பால் வந்தது அருள் வாழ்வு மற்று நமைச் சூழ்ந்தவர்க்கும் வந்தது நல் வாழ்வு.

மேல்

#183 அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம் அன்பொடு துதித்தவருக்கு ஆனது சொல்லாட்டம் வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம் வந்த தலையாட்டம் இன்றி வந்தது பல் ஆட்டம்.

மேல்

#184 நாத்திகம் சொல்கின்றவர்-தம் நாக்கு முடை நாக்கு நாக்கு ருசி கொள்ளுவதும் நாறிய பிண்ணாக்கு சீர்த்தி பெறும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு செல்வாக்கு நல் வாக்கு தேவர் திரு_வாக்கு.

மேல்

#185 எந்தாய் என்றிடில் இந்தா நம் பதம் என்று ஈயும் பர மன்று ஆடும் பத என்றோடு இந்தனம் நன்றாம் அங்கண எம் கோ மங்கள எஞ்சா நெஞ்சக சந்தேகம் கெட நந்தா மந்திர சந்தோடம் பெற வந்தாள் அந்தண சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

மேல்

#186 நஞ்சோ என்றிடு நம் கோபம் கெட நன்றே தந்தனை நந்தா மந்தண நம்பா நெஞ்சில் நிரம்பா நம் பர நம்பா நம் பதி அம் பாதம் பதி தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர சம்போ சங்கர.

மேல்

#187 சந்திர தர சிர சுந்தர சுர வர தந்திர நவ பத மந்திர புர நட சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ சங்கர சிவசிவ.

மேல்

#188 வேத சிகாமணியே போத சுகோதயமே மேதகு மா பொருளே ஓத அரும் ஓர் நிலையே நாத பராபரமே சூத பராவமுதே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#189 ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#190 தூய சதா கதியே நேய சதா சிவமே சோம சிகாமணியே வாம உமாபதியே ஞாய பராகரமே காய புராதரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#191 ஆரண ஞாபகமே பூரண சோபனமே ஆதி அனாதியனே வேதி அனாதியனே நாரணன் ஆதரமே காரணமே பரமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#192 ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே நாக நடோதயமே நாத புரோதயமே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#193 ஆடக நீடு ஒளியே நேடக நாடு அளியே ஆதி புராதனனே வேதி பராபரனே நாடக நாயகனே நான் அவன் ஆனவனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#194 ஆரியனே சிவனே ஆரணனே பவனே ஆலயனே அரனே ஆதரனே சுரனே நாரியனே வரனே நாடியனே பரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#195 ஆதர வேதியனே ஆடக ஜோதியனே ஆரணி பாதியனே ஆதர வாதியனே நாத விபூதியனே நாம் அவன் ஆதியனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#196 தேவ கலாநிதியே ஜீவ தயாநிதியே தீன சகாநிதியே சேகர மா நிதியே நா வலரோர் பதியே நாரி உமாபதியே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#197 ஆடிய நாடகனே ஆல் அமர் ஆதியனே ஆகம மேலவனே ஆரண நாலவனே நாடிய காரணனே நீடிய பூரணனே ஞான சபாபதியே ஞான சபாபதியே.

மேல்

#198 விரை சேர் சடையாய் விடையாய் உடையாய் விகிர்தா விபவா விமலா அமலா வெம் சேர் பஞ்சு ஆர் நஞ்சு ஆர் கண்டா விம்ப சிதம்பரனே. அரைசே குருவே அமுதே சிவமே அணியே மணியே அருளே பொருளே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே.

மேல்

#199 உருவே உயிரே உணர்வே உறவே உரையே பொருளே ஒளியே வெளியே ஒன்றே என்றே நன்றே தந்தாய் உம்பரின் அம்பரனே. அருவே திருவே அறிவே செறிவே அதுவே இதுவே அடியே முடியே அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம் பதியே.

மேல்

#200 வான சிற்கன மந்திர தந்திர வாத சிற்குண மந்தண அந்தண வார சற்சன வந்தித சிந்தித வாம அற்புத மங்கலை மங்கள ஞான சிற்சுக சங்கர கங்கர ஞாய சற்குண வங்கண அங்கண நாத சிற்பர அம்பர நம்பர நாத தற்பர விம்ப சிதம்பர.

மேல்

#201 பார தத்துவ பஞ்சக ரஞ்சக பாத சத்துவ சங்கஜ பங்கஜ பால நித்திய அம்பக நம்பக பாச புத்தக பண்டித கண்டித நார வித்தக சங்கித இங்கித நாடகத்தவ நம் பதி நம் கதி நாத சிற்பர நம்பர அம்பர நாத தற்பர விம்ப சிதம்பர.

மேல்

#202 நாத பால சுலோசன வர்த்தன ஜாத ஜால விமோசன நிர்த்தன.

மேல்

#203 சிற்சபை அப்பனை உற்றனனே சித்தி எலாம் செயப்பெற்றனனே.

மேல்

#204 பரம மந்த்ர சகளாகன கரணா படன தந்த்ர நிகமாகம சரணா.

மேல்

#205 அனந்த கோடி குணகர கர ஜொலிதா அகண்ட வேத சிரகர தர பலிதா.

மேல்

#206 பரிபூரண ஞான சிதம்பர பதி காரண நாத பரம்பர.

மேல்

#207 சிவ ஞான பதாடக நாடக சிவ போத பரோகள கூடக.

மேல்

#208 சகல லோக பரகாரக வாரக சபள யோக சர பூரக தாரக.

மேல்

#209 சத்வ போதக தாரண தன்மய சத்ய வேதக பூரண சின்மய.

மேல்

#210 கருணாநிதியே குண நிதியே கதி மா நிதியே கலா நிதியே. தருணாபதியே சிவபதியே தனி மா பதியே சபாபதியே.

மேல்

#211 அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி செம் பலன் அளித்தார் என்று சின்னம் பிடி சித்தி நிலை பெற்றது என்று சின்னம் பிடி.

மேல்

#212 சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி பொன்_சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி.

மேல்

#213 ஞான சித்திபுரம் என்று சின்னம் பிடி நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி ஆன சித்தி செய்வோம் என்று சின்னம் பிடி அருள் சோதி பெற்றோம் என்று சின்னம் பிடி.

மேல்

#214 கொடி கட்டிக்கொண்டோம் என்று சின்னம் பிடி கூத்தாடுகின்றோம் என்று சின்னம் பிடி அடி முடியைக் கண்டோம் என்று சின்னம் பிடி அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி.

மேல்

#215 அப்பர் வருகின்றார் என்று சின்னம் பிடி அற்புதம் செய்வதற்கு என்று சின்னம் பிடி செப்ப நிலை பெற்றது என்று சின்னம் பிடி சித்திபுரம் இடம் என்று சின்னம் பிடி.

மேல்

#216 தானே நான் ஆனேன் என்று சின்னம் பிடி சத்தியம் சத்தியம் என்று சின்னம் பிடி ஊனே புகுந்தது என்று சின்னம் பிடி ஒளி வண்ணம் ஆனது என்று சின்னம் பிடி.

மேல்

#217 வேகாத_கால் உணர்ந்து சின்னம் பிடி வேகாத நடுத் தெரிந்து சின்னம் பிடி சாகாத தலை அறிந்து சின்னம் பிடி சாகாத கல்வி கற்றுச் சின்னம் பிடி.

மேல்

#218 மீதான நிலை ஏறிச் சின்னம் பிடி வெட்டவெளி நடு நின்று சின்னம் பிடி வேதாகமம் கடந்து சின்னம் பிடி வேதாந்தச் சித்தாந்த சின்னம் பிடி.

மேல்

#219 பல் மார்க்கமும் கடந்து சின்னம் பிடி பன்னிரண்டின் மீது நின்று சின்னம் பிடி சன்மார்க்கம் மார்க்கம் என்று சின்னம் பிடி சத்தியம் செய்கின்றோம் என்று சின்னம் பிடி.

மேல்

#220 சித்தாடுகின்றார் என்று சின்னம் பிடி செத்தார் எழுவார் என்று சின்னம் பிடி இத் தாரணியில் என்று சின்னம் பிடி இதுவே தருணம் என்று சின்னம் பிடி.

மேல்

#221 அருள் சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு மருள் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு மரணம் தவிர்ந்தேன் என்று அறையப்பா முரசு. ** கண்ணிகள்

@2. பாங்கிமார் கண்ணி

மேல்

#1 அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே அவர் ஆட்டம் கண்டு நாட்டம் கொண்டேன் பாங்கிமாரே #2 ஆடுகின்ற சேவடி மேல் பாங்கிமாரே மிக ஆசை கொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே

மேல்

#3 இன்ப வடிவாய்ச் சபையில் பாங்கிமாரே நட மிட்டவர் மேல் இட்டம்வைத்தேன் பாங்கிமாரே

மேல்

#4 ஈன உடற்கு இச்சைவையேன் பாங்கிமாரே நட னேசர்-தமை எய்தும் வண்ணம் பாங்கிமாரே

மேல்

#5 உத்தமர் பொன்_அம்பலத்தே பாங்கிமாரே இன்ப உரு ஆகி ஓங்குகின்றார் பாங்கிமாரே

மேல்

#6 ஊன உலகைக் கருதேன் பாங்கிமாரே மன்றில் உத்தமருக்கு உறவு ஆவேன் பாங்கிமாரே

மேல்

#7 கற்பனை எல்லாம் கடந்தார் பாங்கிமாரே என்றன் கற்பனைக்கு உட்படுவாரோ பாங்கிமாரே

மேல்

#8 கண்டிலர் நான் படும் பாடு பாங்கிமாரே மூன்று கண்_உடையார் என்பார் ஐயோ பாங்கிமாரே

மேல்

#9 கல்_மனம் எல்லாம் கரைப்பார் பாங்கிமாரே மனம் கரையார் என்னளவிலே பாங்கிமாரே

மேல்

#10 கள்ளம் ஒன்றும் அறியேன் நான் பாங்கிமாரே என்னைக் கைவிடவும் துணிவாரோ பாங்கிமாரே

மேல்

#11 கற்பழித்துக் கலந்தாரே பாங்கிமாரே இன்று கைநழுவவிடுவாரோ பாங்கிமாரே

மேல்

#12 கண்டவர் எல்லாம் பழிக்கப் பாங்கிமாரே என்றன் கன்னியழித்தே ஒளித்தார் பாங்கிமாரே

மேல்

#13 காமனைக் கண்ணால் எரித்தார் பாங்கிமாரே என்றன் காதலைக் கண்டு அறிவாரோ பாங்கிமாரே

மேல்

#14 காவலை எல்லாம் கடந்து பாங்கிமாரே என்னைக் கைகலந்த கள்ளர் அவர் பாங்கிமாரே

மேல்

#15 காண விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே கொண்டு காட்டுவாரை அறிந்திலேன் பாங்கிமாரே

மேல்

#16 கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே

மேல்

#17 கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் கேட்பதன் முன் சேட்படுத்தார் பாங்கிமாரே

மேல்

#18 கிள்ளையைத் தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது கேட்டுவரக் காணேனையோ பாங்கிமாரே

மேல்

#19 கீத வகை பாடிநின்றார் பாங்கிமாரே அது கேட்டு மதி மயங்கினேன் பாங்கிமாரே

மேல்

#20 கீழ்மை குறியாமல் என்னைப் பாங்கிமாரே மனக் கேண்மை குறித்தாரே அன்று பாங்கிமாரே

மேல்

#21 கீடம்_அனையேன் எனையும் பாங்கிமாரே அடிக் கே அடிமைகொண்டார் அன்று பாங்கிமாரே

மேல்

#22 குற்றம் எல்லாம் குணமாகப் பாங்கிமாரே கொள்ளும் கொற்றவர் என் கொழுநர் காண் பாங்கிமாரே

மேல்

#23 குற்றம் ஒன்றும் செய்து அறியேன் பாங்கிமாரே என்னைக் கொண்டு குலம் பேசுவாரோ பாங்கிமாரே

மேல்

#24 குஞ்சிதப் பொன் பாதம் கண்டால் பாங்கிமாரே உள்ள குறை எல்லாம் தீரும் கண்டீர் பாங்கிமாரே

மேல்

#25 கூற்று உதைத்த பாதம் கண்டீர் பாங்கிமாரே நங்கள் குடிக்கு எல்லாம் குல_தெய்வம் பாங்கிமாரே

மேல்

#26 கூற அரிய பதம் கண்டு பாங்கிமாரே களி கொண்டு நிற்க விழைந்தேன் நான் பாங்கிமாரே

மேல்

#27 கூடல் விழைந்தேன் அவரைப் பாங்கிமாரே அது கூடும் வண்ணம் கூட்டிடுவீர் பாங்கிமாரே

@3. வெண்ணிலாக் கண்ணி

மேல்

#1 தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே

மேல்

#2 நாத முடி மேல் இருந்த வெண்ணிலாவே அங்கே நானும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

மேல்

#3 சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே நானும் தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

மேல்

#4 இரா_பகல் இல்லா இடத்தே வெண்ணிலாவே நானும் இருக்க எண்ணி வாடுகின்றேன் வெண்ணிலாவே

மேல்

#5 தேசு நிறமாய் நிறைந்த வெண்ணிலாவே நானும் சிவமயம்-அதாய் விழைந்தேன் வெண்ணிலாவே

மேல்

#6 போத நடு ஊடு இருந்த வெண்ணிலாவே மலப் போதம் அற வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

மேல்

#7 ஆரும் அறியாமல் இங்கே வெண்ணிலாவே அரு ளாளர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே

மேல்

#8 அந்தரங்க சேவை செய்ய வெண்ணிலாவே எங்கள் ஐயர் வருவாரோ சொல்லாய் வெண்ணிலாவே

மேல்

#9 வேத முடி மேல் இருந்த வெண்ணிலாவே மல வேதை உள ஏது சொல்லாய் வெண்ணிலாவே

மேல்

#10 குண்டலி-பால் நின்று இலங்கும் வெண்ணிலாவே அந்தக் குண்டலிப் பால் வேண்டுகின்றேன் வெண்ணிலாவே

மேல்

#11 ஆதி அந்தம் என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த ஆதி அந்தம் ஆவது என்ன வெண்ணிலாவே

மேல்

#12 வித்து இலாமலே விளைந்த வெண்ணிலாவே நீ-தான் விளைந்த வண்ணம் ஏது சொல்லாய் வெண்ணிலாவே

மேல்

#13 முப்பொருளும் ஒன்று அது என்பார் வெண்ணிலாவே அந்த மூன்றும் ஒன்றாய் முடிந்தது என்ன வெண்ணிலாவே

மேல்

#14 நான் அதுவாய் நிற்கும் வண்ணம் வெண்ணிலாவே ஒரு ஞான நெறி சொல்லு கண்டாய் வெண்ணிலாவே

மேல்

#15 ஞான மயமாய் விளங்கும் வெண்ணிலாவே என்னை நான் அறியச் சொல்லு கண்டாய் வெண்ணிலாவே

மேல்

#16 வாசி வாசி என்று உரைத்தார் வெண்ணிலாவே அந்த வாசி என்ன பேசு கண்டாய் வெண்ணிலாவே

மேல்

#17 ஐந்தலைப் பாம்பு ஆட்டுகின்றார் வெண்ணிலாவே அவர் அம்பலத்தில் நின்றது என்ன வெண்ணிலாவே

மேல்

#18 ஓர் எழுத்தில் ஐந்து உண்டு என்பார் வெண்ணிலாவே அது ஊமை எழுத்து ஆவது என்ன வெண்ணிலாவே

மேல்

#19 அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் ஆடுகின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே

மேல்

#20 அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே அவர் ஆடும் வகை எப்படியோ வெண்ணிலாவே

மேல்

#21 அணுவில் அணுவாய் இருந்தார் வெண்ணிலாவே எங்கும் ஆகி நின்ற வண்ணம் என்ன வெண்ணிலாவே

மேல்

#22 அண்ட பகிரண்டம் எல்லாம் வெண்ணிலாவே ஐயர் ஆட்டம் என்று சொல்வது என்ன வெண்ணிலாவே

மேல்

#23 ஆம்பரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலாவே என்னை ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலாவே

@4. முறையீட்டுக் கண்ணி

மேல்

#1 பற்று நினைத்து எழும் இப் பாவி மனத் தீமை எலாம் உற்று நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#2 எள் ஏதம் நின்னிடத்தே எண்ணுகின்ற-தோறும் அதை உள்ளே நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#3 துன்னுகின்ற தீமை நின்-பால் சூழ்ந்து உரைக்கும்-தோறும் அதை உன்னுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#4 எள்ளுகின்ற தீமை நின்-பால் எண்ணுகின்ற-தோறும் அதை உள்ளுகின்ற போதில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#5 மிக்க நிலை நிற்க விரும்பேன் பிழைகள் எலாம் ஒக்க நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#6 கோகோ எனும் கொடியேன் கூறிய குற்றங்கள் எலாம் ஓஓ நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#7 பித்து மனக் கொடியேன் பேசியவன் சொல்லை எலாம் ஒத்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#8 தேர்ந்து தெளியாச் சிறியவனேன் தீமை எலாம் ஓர்ந்து நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#9 நிறுத்தி அறியேன் நிகழ்த்தியவன் சொல்லை உறுத்தி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#10 தோன்றி விரியும் மனத் துட்டனேன் வன்_பிழையை ஊன்றி நினைக்கில் எனக்கு ஊடுருவிப் போகுதடா

மேல்

#11 எண்ணி நினைப்பது இன்றி நினை எள்ளி உரைத்ததனை உண்ணி நினைக்கும்-தோறும் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#12 கடையவனேன் வைத கடும் சொல் நினைக்கும்-தோறும் உடையவனே என்னுடைய உள்ளம் உருகுதடா

மேல்

#13 பித்தன் எனத் தீமை பிதற்றியது எண்ணும்-தோறும் உத்தமனே என்னுடைய உள்ளம் உருகுதடா

மேல்

#14 மன்று_உடையாய் நின் அருளை வைத கொடும் சொல் பொருளில் ஒன்றை நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#15 வெருவாமல் ஐயோ விளம்பிய சொல் எல்லாம் ஒருவா நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#16 புலைக் கொடியேன் புன் சொல் புகன்றது எண்ணும்-தோறும் உலை-கண் மெழுகாக என்றன் உள்ளம் உருகுதடா

மேல்

#17 ஈடு இல் பெரும் தாயில் இனியாய் நின் தண் அருள்-பால் ஊடிய சொல் உன்னில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#18 புரைத்த மன வஞ்சப் புலையேன் திரு_அருளை உரைத்த பிழை எண்ணில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#19 நாடி நினையா நவை_உடையேன் புன் சொல் எலாம் ஓடி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#20 வெப்பு இல் கருணை விளக்கு_அனையாய் என் பிழையை ஒப்பி நினைக்கில் எனக்கு உள்ளம் உருகுதடா

மேல்

#21 அஞ்சல் என்றாய் நின்-பால் அடாத மொழி பேசியதை அஞ்சி நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#22 மெய் ஓர்சிறிதும் இலேன் வீண் மொழியால் ஊடியதை ஐயோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#23 இத் தாரணிக்குள் எங்கும் இல்லாத தீமை செய்தேன் அத்தா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#24 பொய்யால் விரிந்த புலை மனத்தேன் செய் பிழையை ஐயா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#25 இப் பாவி நெஞ்சால் இழுக்கு உரைத்தேன் ஆங்கு அதனை அப்பா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#26 எண்ணாக் கொடுமை எலாம் எண்ணி உரைத்தேன் அதனை அண்ணா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#27 வெம் மால் மனத்து வினையேன் புகன்றது எலாம் அம்மா நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#28 எச் சோடும் இல்லாது இழிந்தேன் பிழைகள் எலாம் அச்சோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#29 வந்து ஓடி நை மனத்து வஞ்சகனேன் வஞ்சம் எலாம் அந்தோ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#30 ஓவாக் கொடியேன் உரைத்த பிழைகள் எலாம் ஆஆ நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#31 கரை சேர ஒண்ணாக் கடையேன் பிழையை அரைசே நினைக்கில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#32 மருள்_உடையேன் வஞ்ச மனத் தீமை எல்லாம் அருள்_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#33 ஈண்டவனேன் வன் சொல் இயம்பியதை என்னுடைய ஆண்டவனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#34 வற்புதனேன் வஞ்ச மனப் பிழையை மன்று ஆடும் அற்புதனே எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#35 துன்பு_உடையேன் புன் மொழிகள் தூற்றியதை எவ்வுயிர்க்கும் அன்பு_உடையாய் எண்ணில் எனக்கு அஞ்சும் கலங்குதடா

மேல்

#36 கொதிக்கின்ற வன் மொழியால் கூறியதை ஐயோ மதிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#37 சினம்கொண்ட போது எல்லாம் செப்பிய வன் சொல்லை மனம்கொள்ளும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#38 செய்த நன்றி எண்ணாச் சிறியவனேன் நின் அருளை வைத்து எண்ணும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#39 பொய்த்த மனத்தேன் புகன்ற கொடும் சொற்கள் எலாம் வைத்து நினைக்கும்-தோறும் வாளிட்டு அறுக்குதடா

மேல்

#40 பொங்குகின்ற தீமை புகன்றது எலால் எண்ணிஎண்ணி மங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#41 ஊடுகின்ற சொல்லால் உரைத்ததனை எண்ணிஎண்ணி வாடுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#42 உயங்குகின்றேன் வன் சொல் உரைத்ததனை எண்ணி மயங்குகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#43 சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும் வல்_வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#44 மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் மால் வினையேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#45 விஞ்சகத்தால் அந்தோ விளம்பியதை எண்ணு-தொறும் வஞ்சகத்தேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#46 விலங்குகின்ற நெஞ்ச விளைவை எண்ணும்-தோறும் மலங்குகின்றேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#47 தூய்மை இலா வன் மொழியால் சொன்ன எலாம் எண்ணு-தொறும் வாய்மை_இலேன் உள்ளகத்தே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#48 கலிக்கின்ற வஞ்சகக் கருத்தைக் கருதி வலிக்கின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#49 நீட்டுகின்ற வஞ்ச நெடும்சொல் எலாம் நெஞ்சகத்தே மாட்டுகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#50 பொருந்துகின்ற வஞ்சப் புதுமை எண்ணி ஐயோ வருந்துகின்ற-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#51 வெருவிக்கும் வஞ்ச வெறும் சொல் எலாம் நெஞ்சில் வருவிக்கும்-தோறும் உள்ளே வாளிட்டு அறுக்குதடா

மேல்

#52 ஊடும் போது உன்னை உரைத்த எலாம் நாய்_அடியேன் நாடும் போது எல்லாம் என் நாடி நடுங்குதடா

மேல்

#53 வாய்க் கடையா வன் சொல் வழங்கிய என் வன் மனத்தை நாய்க் கடையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#54 கன்றி உரைத்த கடும் சொல் கடுவை எலாம் நன்றி_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#55 புன்மையினால் வன் சொல் புகன்ற புலைத் தன்மை எலாம் நன்மை_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#56 ஊன் எண்ணும் வஞ்ச உளத்தால் உரைத்த எலாம் நான் எண்ணும்-தோறும் என்றன் நாடி நடுங்குதடா

மேல்

#57 வஞ்சனையால் அஞ்சாது வன் சொல் புகன்ற எலாம் நஞ்சு_அனையேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#58 கோண நெடு நெஞ்சக் குரங்கால் குதித்த எலாம் நாணம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#59 ஊனம் இலா நின்னை உரைத்த கொடும் சொல்லை எலாம் ஞானம்_இலேன் எண்ணு-தொறும் நாடி நடுங்குதடா

மேல்

#60 எற்றே மதி_இலியேன் எண்ணாது உரைத்ததனைச் சற்றே நினைத்திடினும் தாது கலங்குதடா

மேல்

#61 இனி ஏது செய்வேன் இகழ்ந்து உரைத்த சொல்லைத் தனியே நினைத்திடினும் தாது கலங்குதடா

மேல்

#62 நாய்_அனையேன் எண்ணாமல் நலங்கியவன் சொல்லை எலாம் தாய்_அனையாய் எண்ணு-தொறும் தாது கலங்குதடா

மேல்

#63 நிற்கு உருகா வஞ்ச நினைவால் நினைத்த எலாம் சற்குருவே எண்ணு-தொறும் தாது கலங்குதடா

மேல்

#64 வெம் நரகில் வீழும் விளைவால் விளம்பியதை என் அரசே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா

மேல்

#65 நன்கு அறியேன் வாளா நவின்ற நவை அனைத்தும் என் குருவே எண்ணு-தொறும் என்னை விழுங்குதடா

மேல்

#66 ஆவது அறியாது அடியேன் இகழ்ந்த கொடும் பாவம் நினைக்கில் பகீரென்று அலைக்குதடா

மேல்

#67 வந்திப்பு அறியேன் வழங்கியவன் சொல்லை எலாம் சிந்திக்கில் உள்ளே திடுக்கிட்டு அழுங்குதடா

மேல்

#68 குற்றம் நினைத்த கொடும் சொல் எலாம் என் உளத்தே பற்ற நினைக்கில் பயமாய் இருக்குதடா

மேல்

#69 எள்ளுகின்ற தீமை எடுத்துரைத்தேன் ஆங்கு அதனை விள்ளுகின்ற-தோறும் உள்ளம் வெந்து வெதும்புதடா

@5. திருவடிக் கண்ணி

மேல்

#1 மின்_இடையாள் காண விளங்கும் மன்றில் ஆடுகின்றாய் என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா

மேல்

#2 வன்ன அமுதே இன்பம் மலிய மன்றில் ஆடுகின்றாய் என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா

மேல்

#3 நண்ணிய மெய் அன்பர் நயக்க மன்றில் ஆடுகின்றாய் புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா

மேல்

#4 அன்பர் இன்பம் கொள்ள நடம் அம்பலத்தே ஆடுகின்றாய் இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா

மேல்

#5 நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் மால் அறியா உன்றன் மலர்ப் பாதம் நோவாதா

மேல்

#6 எள்ளல் அற அம்பலத்தே இன்ப நடம் ஆடுகின்றாய் வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா

மேல்

#7 சைவம் நிலைத்துத் தழைத்து ஓங்க ஆடுகின்றாய் தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா

மேல்

#8 எல்லாரும் இன்புற்றிருக்க நடம் ஆடுகின்றாய் வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா

மேல்

#9 அவமே கழிந்து இன்பம் அன்பர் கொள ஆடுகின்றாய் சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா

மேல்

#10 தற்பரமாம் மன்றில் தனி நடனம் ஆடுகின்றாய் சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா

மேல்

#11 வில்வ வேர் மாலை மிளிர்ந்து அசைய ஆடுகின்றாய் செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா

@6. பேரன்புக் கண்ணி

மேல்

#1 கற்றது என்றும் சாகாத கல்வி என்று கண்டுகொண்டு உன் அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே

மேல்

#2 ஈடணைகள் நீக்கி நமக்கு இன்பு அளிக்கும் என்று மன்றில் ஆடும் திரு_அடிக்கே ஆசைவைத்தேன் ஐயாவே

மேல்

#3 நான் அந்தம் எய்தா நலம் பெறவே எண்ணி மன்றில் ஆனந்த நாடகத்துக்கு அன்பு வைத்தேன் ஐயாவே

மேல்

#4 வாடல் அறச் சாகா_வரம் கொடுக்கும் என்று மன்றில் ஆடல் அடிப் பொன்_மலர்க்கே அன்பு வைத்தேன் ஐயாவே

மேல்

#5 பொற்பு உறவே பொன்றாப் பொருள் அளிக்கும் என்று மன்றில் அற்புதப் பொன் சேவடிக்கே அன்பு வைத்தேன் ஐயாவே

மேல்

#6 ஈனம் மறுத்து என்றும் இறவாமை நல்கும் என்றே ஞான மணி மன்றிடத்தே நண்பு வைத்தேன் ஐயாவே

மேல்

#7 ஓர் துணை நின் பொன் அடி என்று உன்னுகின்றேன் உன்னை அன்றி ஆர் துணையும் வேண்டேன் என் அன்பு உடைய ஐயாவே

மேல்

#8 பூசைசெய்து பெற்ற உன்றன் பொன் அடி மேல் அன்றி அயல் ஆசை ஒன்றும் இல்லை எனக்கு அன்பு உடைய ஐயாவே

மேல்

#9 இச்சை நின் மேல் அன்றி எனக்கு எள்ளளவும் வேறும் ஒன்றில் இச்சை இலை நின் ஆணை என் அருமை ஐயாவே

மேல்

#10 எப்படி நின் உள்ளம் இருக்கின்றது என்னளவில் அப்படி நீ செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே

மேல்

#11 எவ்வண்ணம் நின் கருத்து இங்கு என்னளவில் எண்ணியதோ அவ்வண்ணம் செய்க எனக்கு அன்பு உடைய ஐயாவே

மேல்

#12 தேசுறு நின் தண் அருளாம் தெள் அமுதம் கொள்ள உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே

மேல்

#13 மாசு அறு நின் பொன் அருளாம் மா மணி பெற்று ஆட உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே

மேல்

#14 நாசம் இலா நின் அருளாம் ஞான மருந்து உண்ண உள்ளே ஆசை பொங்குகின்றது எனக்கு அன்பு உடைய ஐயாவே ** ஆடற் பாடல்கள்

@7. சிலதா ஸம்வாதம்

மேல்

#1 தண் மதி ஒண் முகப் பெண்மணியே உன்னைத் தான் கொண்ட நாயகர் ஆரேடி அண்மையில் பொன் அணி அம்பலத்து ஆடல் செய் ஐயர் அமுதர் அழகரடி

மேல்

#2 செங்கயல் கண் மட மங்கை நல்லாய் உன்றன் செங்கை பிடித்தவர் ஆரேடி அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் ஆனந்தத் தாண்டவ ராஜனடி

மேல்

#3 கன்னல் சுவை மொழி மின்_இடையாய் உன்னைக் கன்னியழித்தவர் ஆரேடி உன்னற்கு அரிய பொன்_அம்பலத்து ஆடல் செய் உத்தமர் ஆனந்த சித்தரடி

மேல்

#4 தீமை இலாத பெண் மா மயிலே உன்னைச் சேர்ந்து கலந்தவர் ஆரேடி தாமம் முடிக்கு அணிந்து அம்பலத்தே இன்பத் தாண்டவம் செய்யும் சதுரரடி

மேல்

#5 அன்ன நடைப் பெண்கள் ஆர்_அமுதே உன்னை அன்பில் புணர்ந்தவர் ஆரேடி துன்னல் உடையினர் அம்பலத்தே நின்ற தூய திரு_நடராயரடி

மேல்

#6 கார் அளகப் பெண் சிகாமணியே உன்றன் கற்பை அழித்தவர் ஆரேடி பேர்_அளவைக் கடந்து அம்பலத்தே நின்ற பித்தர் பரானந்த நித்தரடி

@8. வினா உத்தரம்

மேல்

#1 ஆகமமும் ஆரணமும் அரும் பொருள் என்று ஒருங்குரைத்த ஏக உரு ஆகி நின்றார் இவர் ஆர் சொல் தோழி மாக நதி முடிக்கு அணிந்து மணி மன்றுள் அனவரத நாக மணி மிளிர நடம் நவில்வார் காண் பெண்ணே

மேல்

#2 அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் திரு_நட இன்பம் என்று அறியாயோ மகளே

மேல்

#3 அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு அனுபவமாகின்றது என்னடி தாயே செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திரு_அருள் உருவம் என்று அறியாயோ மகளே

@9. நடேசர் கொம்மி

மேல்

#1 * பல்லவி கொம்மி அடிப் பெண்கள் கொம்மி அடி இரு கொங்கை குலுங்கவே கொம்மி அடி

மேல்

#2 * அநுபல்லவி நம்மை ஆளும் பொன்_அம்பல_வாணனை நாடிக் கொம்மி அடியுங்கடி பதம் பாடிக் கொம்மி அடியுங்கடி * சரணங்கள்

மேல்

#3 காமம் அகற்றிய தூயன் அடி சிவ காம சவுந்தரி நேயனடி மா மறை ஓது செவ் வாயனடி மணி மன்று எனும் ஞான ஆகாயனடி

மேல்

#4 ஆனந்தத் தாண்டவ ராஜனடி நமை ஆட்கொண்டு அருளிய தேஜனடி வான் அந்த மா மலை மங்கை மகிழ் வடி வாளனடி மணவாளனடி

மேல்

#5 கல்லைக் கனிவிக்கும் சுத்தனடி முடி கங்கைக்கு அருளிய கர்த்தனடி தில்லைச் சிதம்பர சித்தனடி தேவ சிங்கமடி உயர் தங்கமடி

மேல்

#6 பெண் ஒரு பால் வைத்த மத்தனடி சிறு பிள்ளைக் கறி கொண்ட பித்தனடி நண்ணி நமக்கு அருள் அத்தனடி மிக நல்லனடி எல்லாம்_வல்லனடி

மேல்

#7 அம்பலத்து ஆடல் செய் ஐயனடி அன்பர் அன்புக்கு எளிதரும் மெய்யனடி தும்பை முடிக்கு அணி தூயனடி சுயஞ் சோதியடி பரஞ்சோதியடி

@10. சண்முகர் கொம்மி

மேல்

#1 குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்தக் கோமாட்டி எச்சில் விழைந்தாண்டி துறவர் வணங்கும் புகழாண்டி அவன் தோற்றத்தைப் பாடி அடியுங்கடி

மேல்

#2 மா மயில் ஏறி வருவாண்டி அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண்டி தீமை இலாத புகழாண்டி அவன் சீர்த்தியைப் பாடி அடியுங்கடி

மேல்

#3 பன்னிரு தோள்கள் உடையாண்டி கொடும் பாவிகள்-தம்மை அடையாண்டி என் இரு கண்கள் அனையாண்டி அவன் ஏற்றத்தைப் பாடி அடியுங்கடி

மேல்

#4 வேங்கை மரம் ஆகி நின்றாண்டி வந்த வேடர்-தனை எலாம் வென்றாண்டி தீங்கு செய் சூரனைக் கொன்றாண்டி அந்தத் தீரனைப் பாடி அடியுங்கடி.

மேல்

#5 சீர் திகழ் தோகை மயில் மேலே இளஞ் செஞ்சுடர் தோன்றும் திறம் போலே கூர் வடி வேல் கொண்டு நம் பெருமான் வரும் கோலத்தைப் பாருங்கள் கோதையர்காள்.

மேல்

#6 ஆறு முகங்களில் புன்சிரிப்பும் இரண்டு_ஆறு புயம் திகழ் அற்புதமும் வீறு பரஞ்சுடர் வண்ணமும் ஓர் திரு மேனியும் பாருங்கள் வெள் வளைகாள்.

மேல்

#7 ஆனந்தமான அமுதனடி பரமானந்த நாட்டுக்கு அரசனடி தான் அந்தம் இல்லாச் சதுரனடி சிவ சண்முகன் நம் குரு சாமியடி.

மேல்

#8 வேத முடி சொல்லும் நாதனடி சதுர்_வேத முடி திகழ் பாதனடி நாத வடிவு கொள் நீதனடி பரநாதம் கடந்த நலத்தனடி.

மேல்

#9 தத்துவத்து உள்ளே அடங்காண்டி பர தத்துவம் அன்றித் துடங்காண்டி சத்துவ ஞான வடிவாண்டி சிவ சண்முக நாதனைப் பாடுங்கடி.

மேல்

#10 சச்சிதானந்த உருவாண்டி பர தற்பர போகம் தருவாண்டி உச்சி தாழ் அன்பர்க்கு உறவாண்டி அந்த உத்தம தேவனைப் பாடுங்கடி.

மேல்

#11 அற்புத மான அழகனடி துதி அன்பர்க்கு அருள்செய் குழகனடி சிற்பர யோகத் திறத்தனடி அந்தச் சேவகன் கீர்த்தியைப் பாடுங்கடி

மேல்

#12 சைவந் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்தப் பேர் கொண்டு அழைத்தாண்டி பொய் வந்த உள்ளத்தில் போகாண்டி அந்தப் புண்ணியன் பொன்_அடி போற்றுங்கடி.

மேல்

#13 வாசி நடத்தித் தருவாண்டி ஒரு வாசியில் இங்கே வருவாண்டி ஆசு இல் கருணை உருவாண்டி அவன் அற்புதத் தாள்_மலர் ஏத்துங்கடி.

மேல்

#14 இரா_பகல் இல்லா இடத்தாண்டி அன்பர் இன்ப உளம்கொள் நடத்தாண்டி அராப்பளி ஈந்த திடத்தாண்டி அந்த அண்ணலைப் பாடி அடியுங்கடி.

மேல்

#15 ஒன்று இரண்டு ஆன உளவாண்டி அந்த ஒன்று இரண்டு ஆகா அளவாண்டி மின் திரண்டு அன்ன வடிவாண்டி அந்த மேலவன் சீர்த்தியைப் பாடுங்கடி.

@11. பந்தாடல்

மேல்

#1 * பல்லவி ஆடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்து ஆடேடி பந்து * சரணங்கள்

மேல்

#2 வாழி என் தோழி என் வார்த்தை கேள் என்றும் மரணம் இல்லா வரம் நான் பெற்றுக்கொண்டேன் சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய்த் திசை நோக்கினேன் சீர்த் திகழ் சித்தி ஊழிதோறூழி நின்று ஆடுவன் நீயும் உன்னுதியேல் இங்கே மன்னருள் ஆணை ஆழி கரத்து அணிந்து ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#3 இசையாமல் போனவர் எல்லாரும் நாண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு நசையாதே என் உடை நண்பு-அது வேண்டில் நல் மார்க்கமாம் சுத்த சன்மார்க்கம்-தன்னில் அசையாமல் நின்று அங்கே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#4 இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண இறவாப் பெரு வரம் யான் பெற்றுக்கொண்டேன் தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டுச் சேர்ந்தது தோழி துன்பாலே அசைந்தது நீக்கி என்னோடே சுத்த சன்மார்க்கத்தில் ஒத்தவள் ஆகி அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#5 சது_மறை ஆகம சாத்திரம் எல்லாம் சந்தைப் படிப்பு நம் சொந்தப் படிப்போ விது நெறி சுத்த சன்மார்க்கத்தில் சாகா வித்தையைக் கற்றனன் உத்தரம் எனும் ஓர் பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் அது இது என்னாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#6 தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாம் உளம் நாண நான் சாதலைத் தவிர்த்தே எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் என் தோழி வாழி நீ என்னொடு கூடி துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்கச் சோதி என்று ஓதிய வீதியை விட்டே அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#7 வெம் கேத மரணத்தை விடுவித்து விட்டேன் விச்சை எலாம் கற்று என் இச்சையின் வண்ணம் எங்கேயும் ஆடுதற்கு எய்தினேன் தோழி என் மொழி சத்தியம் என்னோடும் கூடி இங்கே களிப்பது நன்று இந்த உலகோ ஏதக் குழியில் இழுக்கும் அதனால் அங்கே பாராதே நீ ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#8 சிவமே பொருள் என்று அறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் உவமேயம் இல்லாத ஒரு நிலை-தன்னில் ஒன்று இரண்டு என்னாத உண்மையில் நின்றேன் தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி அவமே போகாது என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#9 துஞ்சாத நிலை ஒன்று சுத்த சன்மார்க்கச் சூழலில் உண்டு அது சொல்லளவு அன்றே எஞ்சாத அருளாலே யான் பெற்றுக்கொண்டேன் இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் விஞ்சாத அறிவாலே தோழி நீ இங்கே வேது செய் மரணத்துக்கு எது செய்வோம் என்றே அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#10 ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி காரமும் மிகு புளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும் ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#11 துதி செயும் முத்தரும் சித்தரும் காணச் சுத்த சன்மார்க்கத்தில் உத்தம ஞானப் பதி செயும் சித்திகள் பற்பலவாகப் பாரிடை வானிடைப் பற்பல காலம் விதி செயப்பெற்றனன் இன்று தொட்டு என்றும் மெய் அருள் சோதியால் விளைவிப்பன் நீ அ அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.

மேல்

#12 பூவாமலே நிதம் காய்த்த இடத்தும் பூ ஆர் மலர் கொண்டு பந்து ஆடாநின்றேன் சாவா_வரம் தந்து வாழ்வாயோ பந்தே சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே.

@12. திரு உந்தியார்

மேல்

#1 இரவு விடிந்தது இணை அடி வாய்த்த பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற பால் அமுது உண்டேன் என்று உந்தீபற.

மேல்

#2 பொழுது விடிந்தது பொன்_பதம் வாய்த்த தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற தூயவன் ஆனேன் என்று உந்தீபற.

மேல்

#3 தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன் ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற இன் அமுது உண்டேன் என்று உந்தீபற.

மேல்

#4 துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது இன்பம் கிடைத்தது என்று உந்தீபற எண்ணம் பலித்தது என்று உந்தீபற.

மேல்

#5 ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற சிற்சபை கண்டேன் என்று உந்தீபற.

மேல்

#6 திரை அற்றுவிட்டது செஞ்சுடர் தோன்றிற்று பரை ஒளி ஓங்கிற்று என்று உந்தீபற பலித்தது பூசை என்று உந்தீபற.

மேல்

#7 உள் இருள் நீங்கிற்று என் உள் ஒளி ஓங்கிற்றுத் தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற தித்திக்க உண்டேன் என்று உந்தீபற.

மேல்

#8 எந்தையைக் கண்டேன் இடர் எலாம் நீங்கினேன் சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற.

மேல்

#9 தந்தையைக் கண்டேன் நான் சாகா_வரம் பெற்றேன் சிந்தை களித்தேன் என்று உந்தீபற சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற.

மேல்

#10 முத்தியைப் பெற்றேன் அ முத்தியினால் ஞான சித்தியை உற்றேன் என்று உந்தீபற சித்தனும் ஆனேன் என்று உந்தீபற.

@13. உபதேச வினா

மேல்

#1 வேதாந்த நிலையொடு சித்தாந்த நிலையும் மேவும் பொது நடம் நான் காணல் வேண்டும் நாதாந்தத் திரு_வீதி நடப்பாயோ தோழி நடவாமல் என் மொழி கடப்பாயோ தோழி.

மேல்

#2 தொம்பத உருவொடு தத்பத வெளியில் தோன்று அசிபத நடம் நான் காணல் வேண்டும் எம் பதம் ஆகி இசைவாயோ தோழி இசையாமல் வீணிலே அசைவாயோ தோழி.

மேல்

#3 சின்மய வெளியிடைத் தன்மயம் ஆகித் திகழும் பொது நடம் நான் காணல் வேண்டும் என் மயம் ஆகி இருப்பாயோ தோழி இச்சை மயமாய் இருப்பாயோ தோழி.

மேல்

#4 நவ நிலை மேல் பர நாதத் தலத்தே ஞானத் திரு_நடம் நான் காணல் வேண்டும் மவுனத் திரு_வீதி வருவாயோ தோழி வாராமல் வீண் பழி தருவாயோ தோழி.

மேல்

#5 ஆறாறுக்கு அப்புறம் ஆகும் பொதுவில் அது அதுவா நடம் நான் காணல் வேண்டும் ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி ஏறி இழிந்து இங்கு இறப்பாயோ தோழி.

மேல்

#6 வகார வெளியில் சிகார உருவாய் மகாரத் திரு_நடம் நான் காணல் வேண்டும் விகார உலகை வெறுப்பாயோ தோழி வேறு ஆகி என் சொல் மறுப்பாயோ தோழி.

மேல்

#7 நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு நடுவாம் பொது நடம் நான் காணல் வேண்டும் சூதாம் தற்போதத்தைச் சுடுவாயோ தோழி துட்ட நெறியில் கெடுவாயோ தோழி.

மேல்

#8 அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு_நடம் நான் காணல் வேண்டும் செறிவில் அறிவு ஆகிச் செல்வாயோ தோழி செல்லாமல் மெய்ந் நெறி வெல்வாயோ தோழி.

மேல்

#9 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு_நடம் நான் காணல் வேண்டும் நின்னை விட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.

மேல்

#10 துரியத்திற்கு அப்பாலும் தோன்றும் பொதுவில் ஜோதித் திரு_நடம் நான் காணல் வேண்டும் கரியைக் கண்டாங்கு அது காண்பாயோ தோழி காணாது போய்ப் பழி பூண்பாயோ தோழி.

மேல்

#11 தத்துவத்து உள் புறம் தான் ஆம் பொதுவில் சத்தாம் திரு_நடம் நான் காணல் வேண்டும் கொத்து அறு வித்தைக் குறிப்பாயோ தோழி குறியாது உலகில் வெறிப்பாயோ தோழி

@14. நெஞ்சொடு நேர்தல்

மேல்

#1 அடங்கும் நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே தொடங்கும் நாள் நல்லது அன்றோ நெஞ்சே தொடங்கும் நாள் நல்லது அன்றோ.

மேல்

#2 வல்லவாறு எல்லாமும் வல்லானைக் காணற்கே நல்ல நாள் எண்ணிய நாள் நெஞ்சே நல்ல நாள் எண்ணிய நாள்.

மேல்

#3 காலம் கடந்த கடவுளைக் காணற்குக் காலம் கருதுவது ஏன் நெஞ்சே காலம் கருதுவது ஏன்.

மேல்

#4 ஆலம் அமுது ஆக்கும் அண்ணலைக் காணற்குக் காலம் கருதுவது ஏன் நெஞ்சே காலம் கருதுவது ஏன்.

மேல்

#5 தடை யாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே தடை யாதும் இல்லை கண்டாய் நெஞ்சே தடை யாதும் இல்லை கண்டாய்.

மேல்

#6 கையுள் அமுதத்தை வாயுள் அமுது ஆக்கப் பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே பையுள் உனக்கு என்னையோ.

மேல்

#7 என் உயிர்_நாதனை யான் கண்டு அணைதற்கே உன்னுவது என்னை கண்டாய் நெஞ்சே உன்னுவது என்னை கண்டாய்.

மேல்

#8 நான் பெற்ற செல்வத்தை நான் பற்றிக் கொள்ளற்கே ஏன் பற்றுவாய் என்பது ஆர் நெஞ்சே ஏன் பற்றுவாய் என்பது ஆர்.

மேல்

#9 தத்துவாதீதத் தலைவனைக் காணற்குத் தத்துவம் உன்னுவது ஏன் நெஞ்சே தத்துவம் உன்னுவது ஏன்.

மேல்

#10 ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச் சற்றும் விக்கல் வராது கண்டாய் நெஞ்சே விக்கல் வராது கண்டாய்.

@15.மங்களம்

மேல்

#1 புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம்

மேல்

#2 போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற நீதராம் சண்முகநாதற்கு மங்களம்

மேல்

#3 பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை ஈசர் எமது நடராஜற்கு மங்களம்

மேல்

#4 பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற வாமி எனும் சிவகாமிக்கு மங்களம்

மேல்

#5 புங்கம் மிகும் செல்வம் துங்கம் உறத் தரும் செங்கமலத் திரு_மங்கைக்கு மங்களம்

மேல்

#6 பூண் இலங்கும் தன வாணி பரம்பர வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம்

மேல்

#7 புண்ணியர் ஆகிய கண்ணியராய்த் தவம் பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் ** வருகைப் பாடல்கள்

@16. சண்முகர் வருகை

மேல்

#1 வாரும் வாரும் தெய்வ வடி வேல் முருகரே வள்ளி மணாளரே வாரும் புள்ளி மயிலோரே வாரும்

மேல்

#2 சங்கம் ஒலித்தது தாழ் கடல் விம்மிற்று சண்முகநாதரே வாரும் உண்மை வினோதரே வாரும்

மேல்

#3 பொழுது விடிந்தது பொன் கோழி கூவிற்று பொன்னான வேலரே வாரும் மின் ஆர் முந்நூலரே வாரும்

மேல்

#4 காகம் கரைந்தது காலையும் ஆயிற்று கண் நுதல் சேயரே வாரும் ஒள் நுதல் நேயரே வாரும்

மேல்

#5 செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர் செங்கல்வராயரே வாரும் எம் குருநாதரே வாரும்

மேல்

#6 அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர் ஆறு முகத்தோரே வாரும் மாறு இல் அகத்தோரே வாரும்

மேல்

#7 சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர் சூரசங்காரரே வாரும் வீர சிங்காரரே வாரும்

மேல்

#8 வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர் வேலாயுதத்தோரே வாரும் காலாயுதத்தோரே வாரும்

மேல்

#9 சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர் தேவர்கள் தேவரே வாரும் மூவர் முதல்வரே வாரும்

மேல்

#10 பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர் பன்னிரு_தோளரே வாரும் பொன்_மலர்_தாளரே வாரும்

மேல்

#11 மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது மா மயில் வீரரே வாரும் தீமை இல் தீரரே வாரும்

மேல்

#12 தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர் சுப்பிரமணியரே வாரும் வைப்பின் அணியரே வாரும்

@17. அம்பலவாணர் வருகை

மேல்

#1 * பல்லவி வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர் மணி மன்ற_வாணரே வாரீர். * சரணங்கள்

மேல்

#2 அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே திரு அம்பல_வாணரே வாரீர் அன்பு_உடையாளரே வாரீர்.

மேல்

#3 அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளிய அந்தணரே இங்கு வாரீர் அம்பலத்து ஐயரே வாரீர்.

மேல்

#4 அன்பு_உருவானவர் இன்புற உள்ளே அறிவு_உருவாயினீர் வாரீர் அருள்_பெரும்_ஜோதியீர் வாரீர்.

மேல்

#5 அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் அரும் பெருஞ் சித்தரே வாரீர் அற்புதரே இங்கு வாரீர்.

மேல்

#6 அம்மையுமாய் எனக்கு அப்பனும் ஆகி என் அன்பனும் ஆயினீர் வாரீர் அங்கணரே இங்கு வாரீர்.

மேல்

#7 அல்லல் அறுத்து என் அறிவை விளக்கிய அம்பல_வாணரே வாரீர் செம்பொருள் ஆயினீர் வாரீர்.

மேல்

#8 அப்பு அணி பொன் முடி அப்பன் என்று ஏத்தும் மெய் அன்பருக்கு அன்பரே வாரீர் இன்பம் தர இங்கு வாரீர்.

மேல்

#9 அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் அடிக் கமலத்தீரே வாரீர் நடிக்க வல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#10 அண்டர்க்கு அரும் பதம் தொண்டர்க்கு எளிதில் அளித்திட வல்லீரே வாரீர் களித்து என்னை ஆண்டீரே வாரீர்.

மேல்

#11 அம்பரமான சிதம்பர நாடகம் ஆட வல்லீர் இங்கு வாரீர் பாடல் உவந்தீரே வாரீர்.

மேல்

#12 ஆதி அனாதி என்று ஆரணம் போற்றும் அரும் பெரும் ஜோதியீர் வாரீர் ஆனந்த நாடரே வாரீர்.

மேல்

#13 ஆகம வேதம் அனேக முகம் கொண்டு அருச்சிக்கும் பாதரே வாரீர் ஆர்_உயிர்_நாதரே வாரீர்.

மேல்

#14 ஆசு அறும் அந்தங்கள் ஆறும் புகன்ற நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர்

மேல்

#15 ஆல நிழல்-கண் அமர்ந்து அறம் சொன்ன நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர்.

மேல்

#16 ஆர்_அமுது ஆகி என் ஆவியைக் காக்கின்ற ஆனந்தரே இங்கு வாரீர் ஆடல் வல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#17 ஆதரவாய் என் அறிவைத் தெளிவித்து அமுதம் அளித்தீரே வாரீர் ஆடிய பாதரே வாரீர்.

மேல்

#18 ஆதார மீதானத்து அப்பாலும் காண்டற்கு அரும் பெரும் ஜோதியீர் வாரீர் கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர்.

மேல்

#19 ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதியரே இங்கு வாரீர் வேதியரே இங்கு வாரீர்.

மேல்

#20 ஆடல்கொண்டீர் திரு_அம்பலத்தே என்றன் பாடல்கொண்டீர் இங்கு வாரீர் கூட வல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#21 ஆக்கம் கொடுத்து என்றன் தூக்கம் தடுத்த என் ஆண்டவரே இங்கு வாரீர் தாண்டவரே இங்கு வாரீர்.

மேல்

#22 ஆபத்தை நீக்கி ஓர் தீபத்தை ஏற்றி என் ஆணவம் போக்கினீர் வாரீர் காண வந்தேன் இங்கு வாரீர்.

மேல்

#23 இது தருணம் தருணம் தருணம் என் இறையவரே இங்கு வாரீர் இடர் தவிர்த்து ஆட்கொண்டீர் வாரீர்.

மேல்

#24 இச்சையின் வண்ணம் எனக்கு அருள்செய்ய இது தருணம் இங்கு வாரீர் இன் அமுது ஆயினீர் வாரீர்.

மேல்

#25 இன்பம் கொடுத்தே என் துன்பம் கெடுத்து உள் இருக்கின்ற நாதரே வாரீர் இருக்கின் பொருள் ஆனீர் வாரீர்.

மேல்

#26 இரவும்_பகலும் இதயத்தில் ஊறி இனிக்கும் அமுதரே வாரீர் இனித் தரியேன் இங்கு வாரீர்.

மேல்

#27 இன்னும் தாழ்த்து அங்கே இருப்பது அழகு அன்று இது தருணம் இங்கு வாரீர் இருமையும் ஆயினீர் வாரீர்.

மேல்

#28 இடர் தவிர்த்து இன்பம் எனக்கு அளித்து ஆளற்கு இது தருணம் இங்கு வாரீர் இனியவரே இங்கு வாரீர்

மேல்

#29 இறையும் பொறுப்பு அரிது என் உயிர்_நாதரே இத் தருணம் இங்கு வாரீர் இத நடம் செய்கின்றீர் வாரீர்.

மேல்

#30 இம்மையிலே எனக்கு அம்மையின் இன்பம் இது என்று அளித்தீரே வாரீர் இதயத்து இருந்தீரே வாரீர்.

மேல்

#31 இங்கு_அங்கு என்னாமலே எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்தீரே வாரீர் இந்து எழில் வண்ணரே வாரீர்.

மேல்

#32 இணை ஒன்றும் இல்லா இணை அடி என் தலை ஏறவைத்தீர் இங்கு வாரீர் இறுதி_இலீர் இங்கு வாரீர்.

மேல்

#33 ஈன்றாளும் எந்தையும் என் குருவும் எனக்கு இன்பமும் ஆயினீர் வாரீர் அன்பருக்கு அன்பரே வாரீர்.

மேல்

#34 ஈனம் அறுத்து மெய்ஞ்ஞான விளக்கு என் இதயத்தில் ஏற்றினீர் வாரீர் உதயச் சுடரினீர் வாரீர்.

மேல்

#35 ஈடு அறியாத மெய்_வீடு தந்து அன்பரை இன்புறச்செய்கின்றீர் வாரீர் வன்பர்க்கு அரியீரே வாரீர்.

மேல்

#36 ஈது இயல் என்று நின்று ஓதிய வேதத்திற்கு எட்டாது இருந்தீரே வாரீர் நட்டார்க்கு எளியீரே வாரீர்.

மேல்

#37 ஈசர் எனும் பல தேசர்கள் போற்றும் ந டேசரே நீர் இங்கு வாரீர் நேசரே நீர் இங்கு வாரீர்.

மேல்

#38 ஈசர் பலிக்கு உழல் நேசர் என்று அன்பர்கள் ஏச நின்றீர் இங்கு வாரீர் நாசம்_இல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#39 ஈறு அறியா மறையோன் என்று அறிஞர் இயம்ப நின்றீர் இங்கு வாரீர் வயம் தருவீர் இங்கு வாரீர்.

மேல்

#40 ஈதல் கண்டே மிகக் காதல்கொண்டேன் எனக்கு ஈதல் செய்வீர் இங்கு வாரீர் ஓத அரியீர் இங்கு வாரீர்.

மேல்

#41 ஈடணை அற்ற நெஞ்சூடு அணைவுற்று மற்று ஈடு_அணையீர் இங்கு வாரீர் ஆட வல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#42 ஈண்டு அறிவு ஓங்கிடத் தூண்டு அறிவு ஆகி உள் ஈண்டுகின்றீர் இங்கு வாரீர் ஆண்டவரே இங்கு வாரீர்.

மேல்

#43 உள்ளதே உள்ளது விள்ளது என்று எனக்கு உள்ளது உரைசெய்தீர் வாரீர் வள்ளல் விரைந்து இங்கு வாரீர்.

மேல்

#44 உருவாய் அருவாய் உரு_அருவாய் அவை ஒன்றும்_அல்லீர் இங்கு வாரீர் என்றும் நல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#45 உறவும் பகையும் உடைய நடையில் உறவும் எண்ணேன் இங்கு வாரீர் பிறவும் நண்ணேன் இங்கு வாரீர்.

மேல்

#46 உள்ளக் கருத்தை நான் வள்ளற்கு உரைப்பது என் உள்ளத்து இருந்தீரே வாரீர் விள்ளற்கு அரியீரே வாரீர்.

மேல்

#47 உய்ய வல்லார்க்கு அருள்செய்ய வல்லீர் நானும் உய்ய வல்லேன் இங்கு வாரீர் செய்ய வல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#48 உடையவர் ஆர் இக் கடையவனேனுக்கு உடையவரே இங்கு வாரீர் சடையவரே இங்கு வாரீர்.

மேல்

#49 உறங்கி இறங்கும் உலகவர் போல நான் உறங்க_மாட்டேன் இங்கு வாரீர் இறங்க_மாட்டேன் இங்கு வாரீர்.

மேல்

#50 உண்டு உடுத்து இன்னும் உழல_மாட்டேன் அமுது உண்டி விரும்பினேன் வாரீர் உண்டி தர இங்கு வாரீர்.

மேல்

#51 உன்னு-தோறு உன்னு-தோறு உள்ளே இனிக்கின்ற உத்தமரே இங்கு வாரீர் உற்ற_துணை ஆனீர் வாரீர்.

மேல்

#52 உம் ஆணை உம் ஆணை உம்மை அல்லால் எனக்கு உற்றவர் மற்று இலை வாரீர் உற்று அறிந்தீர் இங்கு வாரீர்.

மேல்

#53 ஊன நடம் தவிர்த்து ஆன நடம் காட்டு மோன நடேசரே வாரீர் ஞான நடேசரே வாரீர்.

மேல்

#54 ஊரும்_இல்லீர் ஒரு பேரும்_இல்லீர் அறி வோரும் இல்லீர் இங்கு வாரீர் யாரும் இல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#55 ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற வீறு_உடையீர் இங்கு வாரீர் நீறு_உடையீர் இங்கு வாரீர்.

மேல்

#56 ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் ஏன்றுகொள்வீர் இங்கு வாரீர் ஆன்றவரே இங்கு வாரீர்.

மேல்

#57 ஊற்றை உடம்பு இது மாற்று உயர் பொன் என ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் தேற்றம் அருள்செய்வீர் வாரீர்.

மேல்

#58 ஊடல்_இல்லீர் எனைக் கூடல் வல்லீர் என்னுள் பாடல் சொல்வீர் இங்கு வாரீர் ஆடல் நல்லீர் இங்கு வாரீர்.

மேல்

#59 ஊக்கம் கொடுத்து என்றன் ஏக்கம் கெடுத்து அருள் ஆக்கம் அடுத்தீரே வாரீர் தூக்கம் தவிர்த்தீரே வாரீர்.

மேல்

#60 ஊமை எழுத்தினுள் ஆமை எழுத்து உண்டு என்று ஓமை அறிவித்தீர் வாரீர் சேமஞ் செறிவித்தீர் வாரீர்.

மேல்

#61 ஊகம்_இலேன் பெற்ற தேகம் அழியாத யோகம் கொடுத்தீரே வாரீர் போகம் கொடுத்தீரே வாரீர்.

மேல்

#62 ஊதியம் தந்த நல் வேதியரே உண்மை ஓதிய நாதரே வாரீர் ஆதி அனாதியீர் வாரீர்.

மேல்

#63 என் குறை தீர்த்து என் உள் நன்கு உறைவீர் இனி என் குறை என் முன்னீர் வாரீர் தன் குறை இல்லீரே வாரீர்.

மேல்

#64 என் உயிர் ஆகி என்றன் உயிர்க்கு உள்ளே ஓர் இன் உயிர் ஆயினீர் வாரீர் என் உயிர்_நாதரே வாரீர்.

மேல்

#65 என்-கண் அருள்செய்து என் புன்கண் விலக்கிய என் கண்_அனையீரே வாரீர் மின் கண்_நுதலீரே வாரீர்.

மேல்

#66 எல்லா உயிர்களும் நல்லார் எனத் தொழும் எல்லாம்_வல்லீர் இங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர்.

மேல்

#67 எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல் எட்டும்படி செய்தீர் வாரீர் எட்டு_உருவாயினீர் வாரீர்

மேல்

#68 என்று கண்டாய் இது நன்று கொண்டு ஆளுக என்று தந்தீர் இங்கு வாரீர் அன்று வந்தீர் இன்று வாரீர்.

மேல்

#69 எச் சமயங்களும் பொய்ச் சமயம் என்றீர் இச் சமயம் இங்கு வாரீர் மெய்ச் சமயம் தந்தீர் வாரீர்.

மேல்

#70 என்-பால் களிப்பொடும் அன்பால் ஒன்று ஈந்து இதை இன்பால் பெறுக என்றீர் வாரீர் தென்-பால் முகம் கொண்டீர் வாரீர்.

மேல்

#71 எச்ச உரை அன்று என் இச்சை எல்லாம் உமது இச்சை கண்டீர் இங்கு வாரீர் அச்சம் தவிர்த்தீரே வாரீர்.

மேல்

#72 எண்ணம் எல்லாம் உமது எண்ணம் அல்லால் வேறு ஓர் எண்ணம் எனக்கு இல்லை வாரீர் வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்.

மேல்

#73 ஏராய நான்முகர் நாராயணர் மற்றும் பாராயணம் செய்வீர் வாரீர் ஊர் ஆயம் ஆயினீர் வாரீர்.

மேல்

#74 ஏமம் மிகும் திரு வாம சுகம் தரும் ஏம சபேசரே வாரீர் சோம சிகாமணி வாரீர்.

மேல்

#75 ஏதம் இலாப் பர நாத முடிப் பொருள் ஏது அது சொல்லுவீர் வாரீர் ஈதல் உடையீரே வாரீர்.

மேல்

#76 ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் ஏக வெளி நின்றீர் வாரீர் ஏகர் அனேகரே வாரீர்.

மேல்

#77 ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் ஏறவைத்தீர் இங்கு வாரீர் தேறவைத்தீர் இங்கு வாரீர்.

மேல்

#78 ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என் ஏகாந்தம் சொல்லினீர் வாரீர் தேகாந்தம் இல்லீரே வாரீர்.

மேல்

#79 ஏகாத கல்வி-தான் சாகாத கல்வி என் றே காதலால் சொன்னீர் வாரீர் வேகாத_காலினீர் வாரீர்.

மேல்

#80 ஏடு ஆயிரம் என்னை கோடா மொழி ஒன்றே ஏடா என்றீர் இங்கு வாரீர் ஈடு_ஆவார் இல்லீரே வாரீர்.

மேல்

#81 ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் ஈசான மேல் என்றீர் வாரீர் ஆசு ஆதி இல்லீரே வாரீர்.

மேல்

#82 ஏன் என்பார் வேறு இலை நான் அன்பால் கூவுகின் றேன் என்-பால் ஏன் என்பீர் வாரீர் ஆனின் பால் ஆடுவீர் வாரீர்.

மேல்

#83 ஐந்து மலங்களும் வெந்து விழ எழுத்து ஐந்தும் செயும் என்றீர் வாரீர் இந்து சிகாமணி வாரீர்.

மேல்

#84 ஐயமுற்றேனை இ வையம் கரி ஆக ஐயம் தவிர்த்தீரே வாரீர் மெய் அம்பலத்தீரே வாரீர்.

மேல்

#85 ஐயர் நடம் புரி மெய்யர் என்றே உணர்ந்து ஐயர் தொழ நின்றீர் வாரீர் துய்யர் உளம் நின்றீர் வாரீர்.

மேல்

#86 ஐவணங் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று ஐவணர் ஏத்துவீர் வாரீர் பொய் வணம் போக்குவீர் வாரீர்.

மேல்

#87 ஒன்றே சிவம் அதை ஒன்று சன்மார்க்கமும் ஒன்றே என்றீர் இங்கு வாரீர் நன்றே நின்றீர் இங்கு வாரீர்.

மேல்

#88 ஒப்பார்_இல்லீர் உமக்கு இப் பாரில் பிள்ளை நான் ஒப்பாரி அல்ல காண் வாரீர் முப்பாழ் கடந்தீரே வாரீர்

மேல்

#89 ஒத்த இடம்-தன்னில் நித்திரை செய் என்றீர் ஒத்த இடம் காட்ட வாரீர் சித்த சிகாமணி வாரீர்.

மேல்

#90 ஒட்டு மற்று இல்லை நான் விட்டுப் பிரிகலேன் ஒட்டுவைத்தேனும் மேல் வாரீர் எட்டு_குணத்தீரே வாரீர்.

மேல்

#91 ஒருமை நிலையில் இருமையும் தந்த ஒருமையினீர் இங்கு வாரீர் பெருமையினீர் இங்கு வாரீர்.

மேல்

#92 ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் உண்மை சொன்னேன் இங்கு வாரீர் பெண்மை இடம் கொண்டீர் வாரீர்.

மேல்

#93 ஓங்கார நாடகம் பாங்காகச் செய்கின்ற ஓங்கார நாடரே வாரீர் ஆங்காரம் நீக்கினீர் வாரீர்.

மேல்

#94 ஓங்கும் பிண்டாண்டங்கள் தாங்கும் பெருவெளி ஓங்கு நடேசரே வாரீர் பாங்கு செய்வீர் இங்கு வாரீர்.

மேல்

#95 ஓசையின் உள்ளே ஓர் ஆசை உதிக்க மெல் ஓசை செய்வித்தீரே வாரீர் பாசம் அறுத்தீரே வாரீர்.

மேல்

#96 ஓராது உலகினைப் பாராது இரு நினக்கு ஓரா வகை என்றீர் வாரீர் பேரா நிலை தந்தீர் வாரீர்.

மேல்

#97 ஓடாது மாயையை நாடாது நல் நெறி ஊடாது இரு என்றீர் வாரீர் வாடாது இரு என்றீர் வாரீர்.

மேல்

#98 ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்து அருள் ஓலக்கம் காட்டினீர் வாரீர் காலக் கணக்கு_இல்லீர் வாரீர்.

மேல்

#99 ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய் யூடு அத்தைக் காட்டினீர் வாரீர் வேடத்தைப் பூட்டினீர் வாரீர்.

மேல்

#100 ஓமத்திலே நடு_சாமத்திலே எனை ஓமத்தன் ஆக்கினீர் வாரீர் சாம் அத்தம் நீக்கினீர் வாரீர்.

மேல்

#101 ஓம் என்பதற்கு முன் ஆம் என்று உரைத்து உடன் ஊம் என்று காட்டினீர் வாரீர் நாம் என்று நாட்டினீர் வாரீர்.

மேல்

#102 ஔவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே செவ்வியன் ஆக்கினீர் வாரீர் ஒவ்வி ஒன்று ஆக்கினீர் வாரீர்.

மேல்

#103 கண்_அனையீர் உம்மைக் காண என் ஆசை கடல் பொங்குகின்றது வாரீர் உடல் தங்குகின்றது வாரீர்.

மேல்

#104 கண்டு அணைந்தால் அன்றிக் காதல் அடங்காது என் கண்மணியீர் இங்கு வாரீர் உள்_மணியீர் இங்கு வாரீர்.

மேல்

#105 கட்டிக்கொண்டு உம்மைக் கலந்துகொளல் வேண்டும் காரணரே இங்கு வாரீர் பூரணரே இங்கு வாரீர்.

@18. அம்பலவாணர் ஆட வருகை

மேல்

#1 * பல்லவி ஆட வாரீர் என்னோடு ஆட வாரீர் அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆட வாரீர். * சரணங்கள்

மேல்

#2 தன்மை பிறர்க்கு அறிவரியீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர் வன்மை மனத்தவர்க்கு அரியீர் ஆட வாரீர் வஞ்சம் இலா நெஞ்சகத்தீர் ஆட வாரீர் தொன்மை மறை முடி அமர்ந்தீர் ஆட வாரீர் துரிய பதம் கடந்தவரே ஆட வாரீர் இன்மை தவிர்த்து எனை மணந்தீர் ஆட வாரீர். என்னுடைய நாயகரே ஆட வாரீர்

மேல்

#3 திருவாளர் போற்ற என்னோடு ஆட வாரீர் திரு_அனையார் வாழ்த்த இங்கே ஆட வாரீர் பெரு வாய்மைப் பெருந்தகையீர் ஆட வாரீர் பேர்_ஆசை பொங்குகின்றேன் ஆட வாரீர் உரு ஆகி ஓங்குகின்றீர் ஆட வாரீர் உத்தமரே இது தருணம் ஆட வாரீர் இருவாணர் ஏத்த நின்றீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#4 வேற்று முகம் பாரேன் என்னோடு ஆட வாரீர் வெட்கம் எல்லாம் விட்டுவிட்டேன் ஆட வாரீர் மாற்றுதற்கு எண்ணாதிர் என்னோடு ஆட வாரீர் மாற்றில் உயிர் மாய்ப்பேன் கண்டீர் ஆட வாரீர் கூற்று உதைத்த சேவடியீர் ஆட வாரீர் கொண்டு குலம் குறியாதீர் ஆட வாரீர் ஏற்ற தனித் தருணம் ஈதே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#5 இல்லாமை நீக்கி நின்றீர் ஆட வாரீர் என்னை மண_மாலையிட்டீர் ஆட வாரீர் கொல்லாமை நெறி என்றீர் ஆட வாரீர் குற்றம் எலாம் குணம் கொண்டீர் ஆட வாரீர் நல்லார் சொல் நல்லவரே ஆட வாரீர் நல் தாயில் இனியவரே ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#6 ஆசை கொண்டேன் ஆட என்னோடு ஆட வாரீர் ஆசை வெட்கம் அறியாதால் ஆட வாரீர் ஓசை கொண்டது எங்கும் இங்கே ஆட வாரீர் உம் ஆணை உம்மை விடேன் ஆட வாரீர் காசு பணத்து ஆசை_இலேன் ஆட வாரீர் கைபிடித்தால் போதும் என்னோடு ஆட வாரீர் ஏசறல் நீத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#7 சன்மார்க்க நெறி வைத்தீர் ஆட வாரீர் சாகாத வரம் தந்தீர் ஆட வாரீர் கல் மார்க்க மனம் கரைத்தீர் ஆட வாரீர் கண் இசைந்த கணவரே நீர் ஆட வாரீர் சொல் மார்க்கப் பொருள் ஆனீர் ஆட வாரீர் சுத்த அருள் சோதியரே ஆட வாரீர் என் மார்க்கம் உளத்து உகந்தீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#8 அண்டம் எலாம் கண்டவரே ஆட வாரீர் அகண்ட பரிபூரணரே ஆட வாரீர் பண்டம் எலாம் படைத்தவரே ஆட வாரீர் பற்றொடு வீடு இல்லவரே ஆட வாரீர் கொண்டு எனை வந்து ஆண்டவரே ஆட வாரீர் கூத்தாட வல்லவரே ஆட வாரீர் எண் தகு பொன்_சபை_உடையீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#9 பேதம் நினையாது விரைந்து ஆட வாரீர் பின்பாட்டுக் காலை இதே ஆட வாரீர் ஓத உலவாதவரே ஆட வாரீர் உள் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் சாதல் அறுத்து எனை ஆண்டீர் ஆட வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் ஆட வாரீர் ஏதம்_மறுத்தவர்க்கு இனியீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#10 கள்ளம் ஒன்றும் அறியேன் நான் ஆட வாரீர் கை கலந்து கொண்டீர் என்னோடு ஆட வாரீர் உள்ளபடி உரைக்கின்றேன் ஆட வாரீர் உம் ஆசை பொங்குகின்றது ஆட வாரீர் தள்ள_அரியேன் என்னோடு இங்கே ஆட வாரீர் தாழ்க்கில் இறையும் தரியேன் ஆட வாரீர் எள்ளல் அறுத்து ஆண்டுகொண்டீர் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#11 நச்சுகின்றேன் நிச்சல் இங்கே ஆட வாரீர் நாணம் அச்சம் விட்டேன் என்னோடு ஆட வாரீர் விச்சை எலாம் தந்து களித்து ஆட வாரீர் வியந்து உரைத்த தருணம் இதே ஆட வாரீர் எச் சுகமும் ஆகி நின்றீர் ஆட வாரீர் எல்லாம் செய் வல்லவரே ஆட வாரீர். இச்சை மயமாய் இருந்தேன் ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

மேல்

#12 என் உயிருக்குயிர் ஆனீர் ஆட வாரீர் என் அறிவுக்கு அறிவு ஆனீர் ஆட வாரீர் என்னுடை என்பில் கலந்தீர் ஆட வாரீர் என்னுடை உள்ளத்து இருந்தீர் ஆட வாரீர் என் உரிமைத் தாய்_அனையீர் ஆட வாரீர் எனது தனித் தந்தையரே ஆட வாரீர் என் ஒருமைச் சற்குருவே ஆட வாரீர் என்னுடைய நாயகரே ஆட வாரீர்.

@19. அம்பலவாணர் அணைய வருகை

மேல்

#1 * பல்லவி அணைய வாரீர் என்னை அணைய வாரீர் அணி வளர் சிற்றம்பலத்தீர் அணைய வாரீர். * சரணங்கள்

மேல்

#2 இயற்கை உண்மை வடிவினரே அணைய வாரீர் எல்லாம் செய் வல்லவரே அணைய வாரீர் இயற்கை விளக்கத்தவரே அணைய வாரீர் எல்லார்க்கும் நல்லவரே அணைய வாரீர் இயற்கை இன்பம் ஆனவரே அணைய வாரீர் இறைமை எலாம் உடையவரே அணைய வாரீர் இயற்கை நிறைவு ஆனவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#3 உலகம் எல்லாம் உடையவரே அணைய வாரீர் உண்மை உரைக்கின்றவரே அணைய வாரீர் கலகம் மறுத்து ஆண்டவரே அணைய வாரீர் கண் அனைய காதலரே அணைய வாரீர் அலக் அறியாப் பெருமையரே அணைய வாரீர் அற்புதப் பொன் சோதியரே அணைய வாரீர் இலகு சபாபதியவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#4 பொதுவில் நடிக்கின்றவரே அணைய வாரீர் பொற்பு உடைய புண்ணியரே அணைய வாரீர் மதுவில் இனிக்கின்றவரே அணைய வாரீர் மன்னிய என் மன்னவரே அணைய வாரீர் விதுவின் அமுது ஆனவரே அணைய வாரீர் மெய்யு உரைத்த வித்தகரே அணைய வாரீர் இது தருணம் இறையவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#5 வினை மாலை நீத்தவரே அணைய வாரீர் வேத முடிப் பொருளவரே அணைய வாரீர் அனை மாலைக் காத்தவரே அணைய வாரீர் அருள்_பெரும்_சோதிப் பதியீர் அணைய வாரீர் புனை மாலை வேய்ந்தவரே அணைய வாரீர் பொதுவில் நிறை பூரணரே அணைய வாரீர் எனை மாலையிட்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#6 சிறுவயதில் எனை விழைந்தீர் அணைய வாரீர் சித்த சிகாமணியே நீர் அணைய வாரீர் உறு வயது இங்கு இது தருணம் அணைய வாரீர் உண்மை சொன்ன உத்தமரே அணைய வாரீர் பொறுமை மிக உடையவரே அணைய வாரீர் பொய்யாத வாசகரே அணைய வாரீர் இறுதி தவிர்த்து ஆண்டவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#7 சாதி மதம் தவிர்த்தவரே அணைய வாரீர் தனித் தலைமைப் பெரும் பதியீர் அணைய வாரீர் ஆதி அந்தம் இல்லவரே அணைய வாரீர் ஆரணங்கள் போற்ற நின்றீர் அணைய வாரீர் ஓதி உணர்வ அரியவரே அணைய வாரீர் உள்ளபடி உரைத்தவரே அணைய வாரீர் ஈது இசைந்த தருணம் இங்கே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#8 அன்பாட்டை விழைந்தவரே அணைய வாரீர் அருள் சோதி வடிவினரே அணைய வாரீர் துன்பாட்டை ஒழித்தவரே அணைய வாரீர் துரிய நிறை பெரியவரே அணைய வாரீர் பின்பாட்டுக் காலை இதே அணைய வாரீர் பிச்சு ஏற்றுகின்றவரே அணைய வாரீர் என் பாட்டை ஏற்றவரே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#9 அரை_கணமும் தரியேன் நான் அணைய வாரீர் ஆணை உம் மேல் ஆணை என்னை அணைய வாரீர் புரைக் கணம் கண்டு அறியேன் நான் அணைய வாரீர் பொன்_மேனிப் புண்ணியரே அணைய வாரீர் வரைக் கணம் செய்வித்தவரே அணைய வாரீர் மன்றில் நடிக்கின்றவரே அணைய வாரீர் இரைக்கு அணவு தருணம் இதே அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#10 கருணை நடம் செய்பவரே அணைய வாரீர் கண்மணியில் கலந்தவரே அணைய வாரீர் அருள் நிறை சிற்சபையவரே அணைய வாரீர் அன்பர் குறை தீர்த்தவரே அணைய வாரீர் தருணம் இது விரைந்து என்னை அணைய வாரீர் சத்தியரே நித்தியரே அணைய வாரீர் இருள் நிறைந்தார்க்கு அறிவரியீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#11 சேர உம் மேல் ஆசைகொண்டேன் அணைய வாரீர் திருவுளமே அறிந்தது எல்லாம் அணைய வாரீர் ஆர் எனக்கு இங்கு உம்மை அல்லால் அணைய வாரீர் அயல் அறியேன் ஆணை உம் மேல் அணைய வாரீர் ஈர்_அகத்தேன் அல்ல இங்கே அணைய வாரீர் என் ஆசை பொங்குகின்றத் அணைய வாரீர் ஏர் அகத்தே அமர்ந்து அருள்வீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர்.

மேல்

#12 கலந்துகொள வேண்டுகின்றேன் அணைய வாரீர் காதல் பொங்குகின்றது என்னை அணைய வாரீர் புலந்து அறியேன் விரைகின்றேன் அணைய வாரீர் புணர்வதற்குத் தருணம் இதே அணைய வாரீர் அலந்தவிடத்து அருள்கின்றீர் அணைய வாரீர் அரை_கணமும் இனித் தரியேன் அணைய வாரீர் இலந்தை நறும் கனி_அனையீர் அணைய வாரீர் என்னுடைய நாயகரே அணைய வாரீர். ** ஆனந்தக் களிப்புகள்

@20. நல்ல மருந்து

மேல்

#1 * பல்லவி நல்ல மருந்து இ மருந்து சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து * சரணங்கள்

மேல்

#2 அருள் வடிவான மருந்து நம்முள் அற்புதமாக அமர்ந்த மருந்து இருள் அற ஓங்கும் மருந்து அன்பர்க்கு இன்பு உருவாக இருந்த மருந்து

மேல்

#3 சஞ்சலம் தீர்க்கும் மருந்து எங்கும் தானே தான் ஆகித் தழைக்கும் மருந்து அஞ்சல் என்று ஆளும் மருந்து சச்சி தானந்தமாக அமர்ந்த மருந்து

மேல்

#4 வித்தகமான மருந்து சதுர்_ வேத முடிவில் விளங்கும் மருந்து தத்துவாதீத மருந்து என்னைத் தானாக்கிக்கொண்ட தயாள மருந்து

மேல்

#5 பிறப்பை ஒழிக்கும் மருந்து யார்க்கும் பேசப்படாத பெரிய மருந்து இறப்பைத் தவிர்க்கும் மருந்து என்னுள் என்றும் மதுரித்து இனிக்கும் மருந்து

மேல்

#6 நான் அதுவாகும் மருந்து பர ஞான வெளியில் நடிக்கும் மருந்து மோந வடிவாம் மருந்து சீவன் முத்தர் உளத்தே முடிக்கும் மருந்து

மேல்

#7 புத்தமுது ஆகும் மருந்து பார்த்த போதே பிணிகளைப் போக்கும் மருந்து பத்தர் அருந்தும் மருந்து அநு பானமும் தானாம் பரம மருந்து

மேல்

#8 மால் அயன் தேடும் மருந்து முன்னம் மார்க்கண்டரைக் காக்க வந்த மருந்து காலனைச் சாய்த்த மருந்து தேவர் காணும் கனவினும் காணா மருந்து

மேல்

#9 தற்பரயோக மருந்து உப சாந்தர் உளத்திடைச் சார்ந்த மருந்து சிற்பரயோக மருந்து உயர் தேவர் எல்லாம் தொழும் தெய்வ மருந்து

மேல்

#10 அம்பலத்து ஆடும் மருந்து பர மாநந்த வெள்ளத்து அழுத்தும் மருந்து எம் பலம் ஆகும் மருந்து வேளூர் என்னும் தலத்தில் இருக்கும் மருந்து

மேல்

#11 சேதப்படாத மருந்து உண்டால் தேன் போல் இனிக்கும் தெவிட்டா மருந்து பேதப்படாத மருந்து மலை_ பெண் இடம்கொண்ட பெரிய மருந்து

மேல்

#12 ஆர்க்கும் அரிதாம் மருந்து தானே ஆதி அநாதியும் ஆன மருந்து சேர்க்கும் புநித மருந்து தன்னைத் தேடுவோர்-தங்களை நாடு மருந்து

மேல்

#13 புண்ணியர்க்கான மருந்து பரி பூரணமாகப் பொருந்து மருந்து எண்ணிய இன்ப மருந்து எமது எண்ணம் எல்லாம் முடித்திட்ட மருந்து

மேல்

#14 பால் வண்ணம் ஆகும் மருந்து அதில் பச்சை நிறமும் படர்ந்த மருந்து நூல் வண்ணம் நாடும் மருந்து உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து

மேல்

#15 பார்க்கப் பசி போம் மருந்து தன்னைப் பாராதவர்களைச் சேரா மருந்து கூர்க்கத் தெரிந்த மருந்து அநு கூல மருந்து என்று கொண்ட மருந்து

மேல்

#16 கோது இலாது ஓங்கும் மருந்து அன்பர் கொள்ளைகொண்டு உண்ணக் குலாவும் மருந்து மாது ஒரு பாக மருந்து என்னை வாழ்வித்த என் கண்மணியாம் மருந்து

மேல்

#17 ஏக உருவாம் மருந்து மிக்க ஏழைகளுக்கும் இரங்கும் மருந்து சோகம் தவிர்க்கும் மருந்து பரஞ் சோதி என்று அன்பர் துதிக்கும் மருந்து

மேல்

#18 கோமளம் கூடும் மருந்து நலம் கொடுக்கத் துசம் கட்டிக்கொண்ட மருந்து நாம் அளவாத மருந்து நம்மை நாம் அறியும்படி நண்ணும் மருந்து

மேல்

#19 செல்வம் தழைக்கும் மருந்து என்றும் தீரா வினை எலாம் தீர்த்த மருந்து நல் வந்தனை கொள் மருந்து பர நாதாந்த வீட்டினுள் நண்ணும் மருந்து

மேல்

#20 வாய் பிடியாத மருந்து மத வாதமும் பித்தமும் மாய்க்கும் மருந்து நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து

மேல்

#21 பெண்_ஆசை தீர்க்கும் மருந்து பொருள் பேர்_ஆசை எல்லாம் பிளக்கும் மருந்து மண்_ஆசை தீர்க்கும் மருந்து எல்லாம் வல்ல மருந்து என்று வாழ்த்தும் மருந்து

மேல்

#22 என்றும் கெடாத மருந்து வரும் எல்லாப் பிணிக்கும் இதுவே மருந்து துன்றும் சிவோக மருந்து நம்மைச் சூழ்ந்து இருமைக்கும் துணையாம் மருந்து

மேல்

#23 கண் ஒளி காட்டும் மருந்து அம்மை கண்டு கலந்து களிக்கும் மருந்து விண் ஒளி ஆகும் மருந்து பர_ வீடு தரும் கங்கை வேணி மருந்து

மேல்

#24 காயாம்பூ வண்ண மருந்து ஒரு கஞ்ச மலர் மிசைக் காணும் மருந்து தாயாம் கருணை மருந்து சித். சதாசிவம் ஆன மெய்ஞ்ஞான மருந்து

மேல்

#25 அளவைக் கடந்த மருந்து யார்க்கும் அருமை அருமை அருமை மருந்து உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் ஒப்பு உயர்வு இல்லாது உயர்ந்த மருந்து

மேல்

#26 தன்மயம் ஆகும் மருந்து சிவ சாதனர் நெஞ்சில் தழைக்கும் மருந்து சின்மய ஜோதி மருந்து அட்ட_ சித்தியும் முத்தியும் சேர்க்கும் மருந்து

மேல்

#27 மறந்தால் ஒளிக்கும் மருந்து தன்னை மறவாதவர் உள் வழங்கும் மருந்து இறந்தால் எழுப்பும் மருந்து எனக்கு என்றும் துணையாய் இருக்கும் மருந்து

மேல்

#28 கரும்பில் இனிக்கும் மருந்து கடும் கண்டகர்க்கு எல்லாம் கசக்கும் மருந்து இரும்பைக் குழைக்கும் மருந்து பேர்_ இன்ப வெள்ளத்தே இழுக்கும் மருந்து

மேல்

#29 அணி மணி கண்ட மருந்து அருள் ஆநந்த சுத்த அகண்ட மருந்து பிணி தவிர் இன்ப மருந்து யார்க்கும் பேசா மருந்து என்று பேசும் மருந்து

மேல்

#30 மூவர்க்கு அரிய மருந்து செல்வ முத்துக் குமாரனை ஈன்ற மருந்து நாவிற்கு இனிய மருந்து தையல் நாயகி கண்டு தழுவும் மருந்து

@21. ஞான மருந்து

மேல்

#1 * பல்லவி ஞான மருந்து இ மருந்து சுகம் நல்கிய சிற்சபாநாத மருந்து. * சரணங்கள்

மேல்

#2 அருள்_பெரும்_சோதி மருந்து என்னை ஐந்தொழில் செய்தற்கு அளித்த மருந்து பொருள் பெரும் போக மருந்து என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து.

மேல்

#3 எல்லாம் செய் வல்ல மருந்து என்னுள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து சொல்லால் அளவா மருந்து சுயம் ஜோதி அருள்_பெரும்_ஜோதி மருந்து.

மேல்

#4 காணாது காட்டும் மருந்து என்றன் கையில் பொன் கங்கணம் கட்டும் மருந்து ஆண் ஆகிப் பெண் ஆம் மருந்து அது ஆகி மணி மன்றில் ஆடும் மருந்து.

மேல்

#5 சுத்த சன்மார்க்க மருந்து அருள் சோதி மலையில் துலங்கும் மருந்து சித்து உரு ஆன மருந்து என்னைச் சித்து எலாம் செய்யச்செய்வித்த மருந்து.

மேல்

#6 அன்பர்க்கு எளிய மருந்து மற்றை ஐவர்க்கும் காண்டற்கு அரிய மருந்து என் பற்றில் ஓங்கும் மருந்து என்னை இன்ப நிலையில் இருத்தும் மருந்து.

மேல்

#7 நாதாந்த நாட்டு மருந்து பர ஞான வெளியில் நடிக்கும் மருந்து போதாந்தர்க்கு எய்தும் மருந்து என்னுள் பொன் அடி காட்டிப் புணர்ந்த மருந்து.

மேல்

#8 ஆதி அனாதி மருந்து திரு அம்பலத்தே நடம் ஆடும் மருந்து ஜோதி மயமாம் மருந்து என்னைச் சோதியாது ஆண்ட துரிய மருந்து.

மேல்

#9 ஆறு அந்தத்து ஓங்கும் மருந்து அதற்கு அப்பாலுக்கப்பாலும் ஆன மருந்து ஊறந்தம் இல்லா மருந்து எனக் குள்ளே கலந்த உறவா மருந்து.

மேல்

#10 என் உயிர்க்கு அன்பாம் மருந்து கலந்து என் உயிர்க்கு உள்ளே இருந்த மருந்து என் உயிர் காக்கும் மருந்து என்றும் என் உயிர் ஆகிய இன்ப மருந்து.

மேல்

#11 என் அறிவு உட்கொள் மருந்து என்றும் என் அறிவு ஆகி இலங்கும் மருந்து என் அறிவு இன்ப மருந்து என்னுள் என் அறிவுக்கு அறிவு என்னும் மருந்து

மேல்

#12 என் குரு ஆன மருந்து என்றும் என் தெய்வம் ஆகி இருக்கும் மருந்து என் அன்னை என்னும் மருந்து என்றும் என் தந்தை ஆகிய இன்ப மருந்து.

மேல்

#13 என் பெரு வாழ்வாம் மருந்து என்றும் என் செல்வம் ஆகி இருக்கும் மருந்து என் உயிர் நட்பாம் மருந்து எனக்கு எட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து.

மேல்

#14 என் இறை ஆன மருந்து மகிழ்ந்து எனக்குத் தன் பொன்_மேனி ஈந்த மருந்து தன் அறிவு ஆகும் மருந்து என்னைத் தந்த மருந்து என்றன் சொந்த மருந்து.

மேல்

#15 உள்ளத்தின் உள்ளாம் மருந்து என்றன் உயிருக்கு அனாதி உறவாம் மருந்து தெள்ளத் தெளிக்கும் மருந்து என்னைச் சிவம் ஆக்கிக்கொண்ட சிவாய மருந்து.

மேல்

#16 மெய்ப்பொருள் என்னும் மருந்து எல்லா வேதாகமத்தும் விளங்கும் மருந்து கைப்பொருள் ஆன மருந்து மூன்று கண் கொண்ட என் இரு கண்ணுள் மருந்து.

மேல்

#17 மதியில் விளைந்த மருந்து யார்க்கும் மதிக்கப்படாத பொன் வண்ண மருந்து கதி தரும் இன்ப மருந்து அருள் கண்ணால் என்றன்னைக் கலந்த மருந்து.

மேல்

#18 கற்பூர ஜோதி மருந்து பசும் கற்பூர நல் மணம் காட்டும் மருந்து பொன் பூவின் ஓங்கும் மருந்து என் தற் போதம் தவிர்த்த சிற்போத மருந்து.

மேல்

#19 மேலை வெளியாம் மருந்து நான் வேண்டும்-தோறு எல்லாம் விளையும் மருந்து சாலை விளக்கு மருந்து சுத்த சமரச சன்மார்க்க சங்க மருந்து.

மேல்

#20 என்னைத் தான் ஆக்கும் மருந்து இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பும் மருந்து துன்னும் மெய்ச் சோதி மருந்து அருள் சோதியால் என்னைத் துலக்கும் மருந்து.

மேல்

#21 பொய்யர்க்கு அரிதாம் மருந்து என்னைப் புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து கையில் கிடைத்த மருந்து சிவ காமக்கொடியைக் கலந்த மருந்து.

மேல்

#22 ஆணவம் தீர்க்கும் மருந்து பர மானந்தத் தாண்டவம் ஆடும் மருந்து மாணவ வண்ண மருந்து என்னை வலிய அழைத்து வளர்க்கும் மருந்து.

மேல்

#23 வான் நடுவான மருந்து என்னை மா மணி மேடை மேல் வைத்த மருந்து ஊனம் தவிர்த்த மருந்து கலந்து உள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து.

மேல்

#24 மலை இலக்கான மருந்து என்றன் மறைப்பைத் தவிர்த்த மெய் வாழ்க்கை மருந்து கலை நலம் காட்டும் மருந்து எங்கும் கண் ஆகிக் காணும் கனத்த மருந்து.

மேல்

#25 அற்புத ஜோதி மருந்து எல்லாம் ஆகி அன்று ஆகி அமர்ந்த மருந்து தற்பதம் தந்த மருந்து எங்கும் தானே தான் ஆகித் தனித்த மருந்து.

மேல்

#26 தன்னை அளித்த மருந்து என்றும் சாகாத நல் வரம் தந்த மருந்து பொன் அடி ஈந்த மருந்து அருள் போனகம் தந்த புனித மருந்து.

மேல்

#27 கண்ணுக்கு இனிய மருந்து என்றன் கைப்பொருளாம் தங்கக்கட்டி மருந்து எண்ணுக்கு அடங்கா மருந்து என்னை ஏதக் குழிவிட்டு எடுத்த மருந்து.

மேல்

#28 சுட்டப் படாத மருந்து என்றன் தூக்கமும் சோர்வும் தொலைத்த மருந்து எட்டுதற்கு ஒண்ணா மருந்து நான் எட்டிப் பிடிக்க இசைந்த மருந்து.

மேல்

#29 உன்னற்கு அரிதாம் மருந்து எனக்கு உள்ளும் புறத்தும் உலாவும் மருந்து தன்னந்தனித்த மருந்து சுத்தச் சாக்கிராதீதச் சபேச மருந்து.

மேல்

#30 ஒன்றில் ஒன்று ஆன மருந்து அந்த ஒன்றில் இரண்டு ஆகி ஓங்கும் மருந்து அன்றி மூன்று ஆன மருந்து நான்கு ஆகி ஐந்து ஆகி அமர்ந்த மருந்து.

மேல்

#31 வெளிக்குள் வெளியாம் மருந்து எல்லா வெளியும் கடந்து விளங்கும் மருந்து ஒளிக்குள் ஒளியாம் மருந்து எல்லா ஒளியும் தான் ஆகிய உண்மை மருந்து.

மேல்

#32 ஆறாறுக்கு அப்பால் மருந்து அதற்கு அப்புறத்து ஈர்_ஆறுக்கு அப்பால் மருந்து ஈறு ஆதி இல்லா மருந்து என்னை எல்லாம் செயச்செய்த இன்ப மருந்து.

மேல்

#33 ஆரணத்து ஓங்கும் மருந்து அருள் ஆகமம் ஆகி அண்ணிக்கும் மருந்து காரணம் காட்டும் மருந்து எல்லாம் கண்ட மருந்து என்னுள் கொண்ட மருந்து.

மேல்

#34 மலம் ஐந்து நீக்கும் மருந்து புவி வான் அண்டம் எல்லாம் வளர்க்கும் மருந்து நலம் மிக்கு அருளும் மருந்து தானே நான் ஆகித் தான் ஆளும் நாட்டு மருந்து.

@22. சிவசிவ ஜோதி

மேல்

#1 * பல்லவி சிவசிவ சிவசிவ ஜோதி சிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ஜோதி சிவசிவ சிவசிவ ஜோதி. * சரணங்கள்

மேல்

#2 சிற்பரமாம் பரஞ்ஜோதி அருள் சித்து எல்லாம்_வல்ல சிதம்பர ஜோதி தற்பர தத்துவ ஜோதி என்னைத் தான் ஆக்கிக் கொண்ட தயாநிதி ஜோதி.

மேல்

#3 சித்து உருவாம் சுயம் ஜோதி எல்லாம் செய்திட வல்ல சிதம்பர ஜோதி அத்துவிதானந்த ஜோதி என்னை ஆட்கொண்டு அருளும் சிற்றம்பல ஜோதி.

மேல்

#4 சின்மயமாம் பெரும் ஜோதி அருள் செல்வம் அளிக்கும் சிதம்பர ஜோதி தன்மயமாய் நிறை ஜோதி என்னைத் தந்த மெய் ஜோதி சதானந்த ஜோதி.

மேல்

#5 ஆதி ஈறு இல்லா முன் ஜோதி அரன் ஆதியர்-தம்மை அளித்த பின் ஜோதி ஓதி உணர்வ அரும் ஜோதி எல்லா உயிர்களின் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி.

மேல்

#6 மன்னிய பொன் வண்ண ஜோதி சுக வண்ணத்ததாம் பெரு மாணிக்க ஜோதி துன்னிய வச்சிர ஜோதி முத்து ஜோதி மரகத ஜோதியுள் ஜோதி.

மேல்

#7 பார் முதல் ஐந்துமாம் ஜோதி ஐந்தில் பக்கம் மேல் கீழ் நடுப் பற்றிய ஜோதி ஓர் ஐம்பொறியுரு ஜோதி பொறிக்கு உள்ளும் புறத்தும் ஒளிர்கின்ற ஜோதி.

மேல்

#8 ஐம்புலமும் தான் ஆம் ஜோதி புலத்து அகத்தும் புறத்தும் மலர்ந்து ஒளிர் ஜோதி பொய் மயல் போக்கும் உள் ஜோதி மற்றைப் பொறி புலன் உள்ளும் புறத்துமாம் ஜோதி.

மேல்

#9 மனம் ஆதி எல்லாம் ஆம் ஜோதி அவை வாழ அகம் புறம் வாழ்கின்ற ஜோதி இனமான உள் அக ஜோதி சற்றும் ஏறாது இறங்காது இயக்கும் ஓர் ஜோதி.

மேல்

#10 முக்குணமும் மூன்று ஆம் ஜோதி அவை முன்பின் இயங்க முடுக்கிய ஜோதி எக் குணத்து உள்ளுமாம் ஜோதி குணம் எல்லாம் கடந்தே இலங்கிய ஜோதி.

மேல்

#11 பகுதி மூன்று ஆகிய ஜோதி மூலப் பகுதிகள் மூன்றும் படைத்து அருள் ஜோதி பகுதி பல ஆக்கும் ஜோதி சற்றும் விகுதி ஒன்று இன்றி விளக்கிய ஜோதி.

மேல்

#12 கால முதல் காட்டும் ஜோதி கால காரணத்து அப்பால் கடந்து ஒளிர் ஜோதி கோலம் பல ஆகும் ஜோதி ஒன்றும் குறிக்கப்படாச் சிற்குணப் பெரும் சோதி.

மேல்

#13 தத்துவம் எல்லாம் ஆம் ஜோதி அந்தத் தத்துவம் எல்லாம் தருவிக்கும் ஜோதி அத்துவிதப் பெரும் ஜோதி எல்லாம் அருளில் விளங்க அமர்த்திய ஜோதி.

மேல்

#14 சத்தர்கள் எல்லாம் ஆம் ஜோதி அவர் சத்திகள் எல்லாம் தழைப்பிக்கும் ஜோதி முத்தர் அனுபவ ஜோதி பர முத்தியாம் ஜோதி மெய்ச் சித்தியாம் ஜோதி.

மேல்

#15 ஆறு அந்தத்தே நிறை ஜோதி அவைக்கு அப்புறத்து அப்பாலும் ஆகிய ஜோதி வீறும் பெருவெளி ஜோதி மேலும் வெட்டவெளியில் விளங்கிய ஜோதி.

மேல்

#16 பேர்_அருள் ஜோதியுள் ஜோதி அண்ட பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஜோதி வாரம் முற்று ஓங்கிய ஜோதி மனம் வாக்குக்கு எட்டாததோர் மா மணி ஜோதி.

மேல்

#17 ஒன்றான பூரண ஜோதி அன்பில் ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஜோதி என்றா ஒளிர்கின்ற ஜோதி என்னுள் என்றும் விளங்கிய என் உயிர் ஜோதி.

மேல்

#18 மெய்யே மெய் ஆகிய ஜோதி சுத்த வேதாந்த வீட்டில் விளங்கிய ஜோதி துய்ய சிவானந்த ஜோதி குரு துரியத் தலத்தே துலங்கிய ஜோதி.

மேல்

#19 சிவ மயமாம் சுத்த ஜோதி சுத்த சித்தாந்த வீட்டில் சிறந்து ஒளிர் ஜோதி உவமை இல்லாப் பெரும் ஜோதி எனது உள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஜோதி.

மேல்

#20 என்னைத் தான் ஆக்கிய ஜோதி இங்கே இறந்தாரை எல்லாம் எழுப்பும் ஓர் ஜோதி அன்னைக்கும் மிக்கு அருள் ஜோதி என்னை ஆண்டு அமுதம் தந்த ஆனந்த ஜோதி.

மேல்

#21 சித்தம் சிவம் ஆக்கும் ஜோதி நான் செய்த தவத்தால் தெரிந்த உள் ஜோதி புத்தமுது ஆகிய ஜோதி சுக பூரணமாய் ஒளிர் காரண ஜோதி.

மேல்

#22 தம்பத்தில் ஏற்றிய ஜோதி அப்பால் சார் மணி மேடை மேல் தான் வைத்த ஜோதி விம்பப் பெருவெளி ஜோதி அங்கே வீதியும் வீடும் விளக்கிய ஜோதி.

மேல்

#23 சுக மயம் ஆகிய ஜோதி எல்லா ஜோதியும் ஆன சொரூப உள் ஜோதி அகமிதம் தீர்த்து அருள் ஜோதி சச்சி தானந்த ஜோதி சதானந்த ஜோதி.

மேல்

#24 நித்த பரானந்த ஜோதி சுத்த நிர்_அதிசயானந்த நித்திய ஜோதி அத்துவிதானந்த ஜோதி எல்லா ஆனந்த வண்ணமும் ஆகிய ஜோதி.

மேல்

#25 பொய்யாத புண்ணிய ஜோதி எல்லாப் பொருளும் விளங்கப் புணர்த்திய ஜோதி நையாது அருள்செய்த ஜோதி ஒரு நானும் தானும் ஒன்றாய் நண்ணிய ஜோதி.

மேல்

#26 கண்ணில் கலந்து அருள் ஜோதி உள- கண் உயிர்-கண் அருள்-கண்ணும் ஆம் ஜோதி எண்ணில்படாப் பெரும் சோதி நான் எண்ணிய வண்ணம் இயற்றிய ஜோதி.

மேல்

#27 விந்து ஒளி நடு ஜோதி பர விந்து ஒளிக்குள் விளங்கிய ஜோதி நம் துயர் தீர்த்து அருள் ஜோதி பர நாதாந்த நாட்டுக்கு நாயக ஜோதி.

மேல்

#28 தான் அன்றி ஒன்று இலா ஜோதி என்னைத் தன்மயம் ஆக்கிய சத்திய ஜோதி நான் இன்று கண்டதோர் ஜோதி தானே நான் ஆகி வாழ்ந்திட நல்கிய ஜோதி.

மேல்

#29 தன் நிகர் இல்லதோர் ஜோதி சுத்த சன்மார்க்க சங்கம் தழுவிய ஜோதி என்னுள் நிறைந்த மெய் ஜோதி என்னை ஈன்று ஐந்தொழில் செய் என்று ஏவிய ஜோதி.

மேல்

#30 அச்சம் தவிர்த்த மெய் ஜோதி என்னை ஆட்கொண்டு அருளிய அம்பல ஜோதி இச்சை எலாம் தந்த ஜோதி உயிர்க்கு இங்கும் அங்கு என்னாமல் எங்கும் ஆம் ஜோதி.

மேல்

#31 காலையில் நான் கண்ட ஜோதி எல்லாக் காட்சியும் நான் காணக் காட்டிய ஜோதி ஞாலமும் வானும் ஆம் ஜோதி என்னுள் நான் ஆகித் தான் ஆகி நண்ணிய ஜோதி.

மேல்

#32 ஏகாந்தம் ஆகிய ஜோதி என்னுள் என்றும் பிரியாது இருக்கின்ற ஜோதி சாகாத வரம் தந்த ஜோதி என்னைத் தான் ஆக்கிக்கொண்டதோர் சத்திய ஜோதி.

மேல்

#33 சுத்த சிவ மய ஜோதி என்னை ஜோதி மணி முடி சூட்டிய ஜோதி சத்தியம் ஆம் பெரும் ஜோதி நானே தான் ஆகி ஆளத் தயவு செய் ஜோதி.

@23. ஜோதியுள் ஜோதி

மேல்

#1 * பல்லவி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி சுத்த ஜோதி சிவ ஜோதி ஜோதியுள் ஜோதி ஜோதியுள் ஜோதியுள் ஜோதி. * சரணங்கள்

மேல்

#2 சிவமே பொருள் என்று தேற்றி என்னைச் சிவ வெளிக்கு ஏறும் சிகரத்தில் ஏற்றிச் சிவம் ஆக்கிக்கொண்டது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#3 வித்து எல்லாம் ஒன்று என்று நாட்டி அதில் விளைவு பலபல வேறு என்று காட்டிச் சித்து எல்லாம் தந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#4 சொல் வந்த அந்தங்கள் ஆறும் ஒரு சொல்லாலே ஆம் என்று அச் சொல்லாலே வீறும் செல்வம் கொடுத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#5 தம் கோல் அளவு எனக்கு ஓதிச் சுத்த சமரச சத்திய சன்மார்க்க நீதிச் செங்கோல் அளித்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#6 ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே தீபத்தை வைத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#7 மெய் ஒன்று சன்மார்க்கமே-தான் என்றும் விளங்கப் படைப்பு ஆதி மெய்த் தொழில் நீ-தான் செய் என்று தந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#8 என்-பால் வருபவர்க்கு இன்றே அருள் ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே தென்-பால் இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#9 துரியத் தலம் மூன்றின் மேலே சுத்த துரியப் பதியில் அது அதனாலே தெரியத் தெரிவது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#10 பரை தூக்கிக் காட்டிய காலே ஆதி_ பரை இவர்க்கு அப்பால் அப்பால் என்று மேலே திரை தூக்கிக் காட்டுதல் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#11 தற்பரமே வடிவு ஆகி அது தன்னைக் கடந்து தனி உரு ஆகிச் சிற்பரத்து உள்ளது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#12 நவ வெளி நால் வகை ஆதி ஒரு நடு வெளிக்கு உள்ளே நடத்திய நீதிச் சிவ வெளியாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#13 மேரு வெற்பு உச்சியின்-பாலே நின்று விளங்கும் ஓர் தம்பத்தின் மேலுக்கு மேலே சேரும் ஓர் மேடை மேல் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#14 ஆரண வீதிக் கடையும் சுத்த ஆகம வீதிகள் அந்தக் கடையும் சேர நடுக் கடை பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#15 பாடல் மறைகள் ஓர் கோடி அருள் பாத உருவ சொரூபங்கள் பாடி தேட இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#16 நீடு சிவாகமம் கோடி அருள் நேருறப் பாடியும் ஆடியும் ஓடித் தேட இருந்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#17 பத்தி நெறியில் செழித்தே அன்பில் பாடும் மெய் அன்பர் பதியில் பழுத்தே தித்தித்து இருப்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#18 பித்தாடும் மாயைக்கு மேலே சுத்தப் பிரம வெளியினில் பேர்_அருளாலே சித்தாடுகின்றது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#19 தரு நெறி எல்லாம் உள்வாங்கும் சுத்த சன்மார்க்கம் என்று ஓர் தனிப் பேர்கொண்டு ஓங்கும் திரு_நெறிக்கே சென்று பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#20 எம் பொருள் எம் பொருள் என்றே சொல்லும் எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே செம்பொருள் என்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#21 சைவம் முதலாக நாட்டும் பல சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் தெய்வம் இது வந்து பாரீர் திரு_சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#22 எள்ளல்_இல் வான் முதல் மண்ணும் அமுது எல்லாம் இதில் ஓர் இறையளவு என்னும் தெள் அமுதாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#23 எத்தாலும் ஆகாதே அம்மா என்றே எல்லா உலகும் இயம்புதல் சும்மா செத்தாரை மீட்பது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#24 பிறந்துபிறந்து உழன்றேனை என்றும் பிறவாது இறவாப் பெருமை தந்து ஊனைச் சிறந்து ஒளிர்வித்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#25 வருவித்த வண்ணமும் நானே இந்த மா நிலத்தே செயும் வண்ணமும் தானே தெரிவித்து அருளிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#26 பாரிடம் வானிடம் மற்றும் இடம் பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் சேர் இடமாம் இது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#27 உய் பிள்ளை பற்பலர் ஆவல் கொண்டே உலகத்து இருப்ப இங்கு என்னைத் தன் ஏவல் செய் பிள்ளை ஆக்கிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#28 உருவும் உணர்வும் செய்நன்றி அறி உளமும் எனக்கே உதவியத் அன்றித் திருவும் கொடுத்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#29 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் நான் எண்ணியவாறே இனிது தந்து என்னைத் திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

மேல்

#30 பேர்_உலகு எல்லாம் மதிக்கத் தன் பிள்ளை என்று என்னைப் பெயரிட்டு அழைத்தே சீர் உறச் செய்தது பாரீர் திரு_ சிற்றம்பலத்தே திரு_நட ஜோதி.

@24. ஆடிய பாதம்

மேல்

#1 *பல்லவி ஆடிய பாதம் மன்று ஆடிய பாதம் ஆடிய பாதம் நின்று ஆடிய பாதம். * சரணங்கள்

மேல்

#2 பாடிய வேதங்கள் தேடிய பாதம் பத்தி செய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம் நாடிய மாதவர் நேடிய பாதம் நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்

மேல்

#3 தீராத வல்_வினை தீர்க்கின்ற பாதம் தெய்வங்கள் எல்லாம் தெரிசிக்கும் பாதம் வாரா_வரவு ஆகி வந்த பொன் பாதம் வஞ்ச மனத்தில் வசியாத பாதம்.

மேல்

#4 ஆரா_அமுது ஆகி அண்ணிக்கும் பாதம் அன்பர் உளத்தே அமர்ந்து அருள் பாதம் நாராயணன் விழி நண்ணிய பாதம் நான் புனை பாடல் நயந்த பொன் பாதம்.

மேல்

#5 நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் நாத முடிவில் நடிக்கின்ற பாதம் வல்லவர் சொல் எல்லாம்_வல்ல பொன் பாதம் மந்திர யந்திர தந்திர பாதம்.

மேல்

#6 எச் சமயத்தும் இலங்கிய பாதம் எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் ஆம் பாதம் அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம் ஆனந்த நாட்டுக்கு அதிபதி பாதம்

மேல்

#7 தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் தெள் அமுதாய் உளம் தித்திக்கும் பாதம் மூவரும் காணா முழு_முதல் பாதம் முப்பாழுக்கு அப்பால் முளைத்த பொன் பாதம்.

மேல்

#8 துரிய வெளிக்கே உரிய பொன் பாதம் சுக மயம் ஆகிய சுந்தரப் பாதம் பெரிய பொருள் என்று பேசும் பொன் பாதம் பேறு எல்லாம் தந்த பெரும் புகழ்ப் பாதம்.

மேல்

#9 சாகா_வரம் தந்த தாரகப் பாதம் சச்சிதானந்த சதோதய பாதம் தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்.

மேல்

#10 ஓங்கார பீடத்து ஒளிர்கின்ற பாதம் ஒன்றாய் இரண்டு ஆகி ஓங்கிய பாதம் தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்.

மேல்

#11 ஐவண்ணமும் கொண்ட அற்புதப் பாதம் அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம் கை வண்ண நெல்லிக் கனி ஆகும் பாதம் கண்ணும் கருத்தும் கலந்த பொன் பாதம்.

மேல்

#12 ஆர்_உயிர்க்கு ஆதாரம் ஆகிய பாதம் அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம் சார் உயிர்க்கு இன்பம் தருகின்ற பாதம் சத்திய ஞான தயாநிதி பாதம்.

மேல்

#13 தாங்கி எனைப் பெற்ற தாய் ஆகும் பாதம் தந்தையும் ஆகித் தயவு செய் பாதம் ஓங்கி என் உள்ளே உறைகின்ற பாதம் உண்மை விளங்க உரைத்த பொன் பாதம்.

மேல்

#14 எண்ணியவாறே எனக்கு அருள் பாதம் இறவா நிலையில் இருத்திய பாதம் புண்ணியர் கையுள் பொருள் ஆகும் பாதம் பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்.

மேல்

#15 ஆறு அந்தத்துள்ளும் அமர்ந்த பொன் பாதம் ஆதி அனாதியும் ஆகிய பாதம் மாறு அந்தம் இல்லா என் வாழ் முதல் பாதம் மண் முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்.

மேல்

#16 அருள்_பெரும்_ஜோதி அதாகிய பாதம் அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் பொருள் பெரும் போகம் புணர்த்திய பாதம் பொன் வண்ணம் ஆகிய புண்ணிய பாதம்.

மேல்

#17 நாரணன் ஆதியர் நாட அரும் பாதம் நான் தவத்தால் பெற்ற நல் துணைப் பாதம் ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் ஆசை_விட்டார்க்கே அணிமை ஆம் பாதம்.

@25. அருள் அற்புதம்

மேல்

#1 * பல்லவி அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே * சரணங்கள்

மேல்

#2 சிற்பதம் பொன்_பதம் சீரே சிறந்தது சித்தாடுகின்ற திரு_நாள் பிறந்தது கல் பத நெஞ்சக் கரிசு துறந்தது கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது

மேல்

#3 செத்தார் எழுகின்ற திரு_நாள் அடுத்தது சிவ நெறி ஒன்றே எங்கும் தலையெடுத்தது இத் தாரணி முதல் வானும் உடுத்தது இறவா_வரம்-தான் எனக்குக் கொடுத்தது

மேல்

#4 ஆனந்த நாடகம் ஆடுதல் சார்ந்தது அடுத்த தருணம் இதுவாக நேர்ந்தது ஈன அந்த மாயை இருள் வினை சோர்ந்தது என் அருள் சோதி என் உள்ளத்தில் ஆர்ந்தது

மேல்

#5 சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்கொண்டனன் நித்திய ஞான நிறை அமுது உண்டனன் நிந்தை உலகியல் சந்தையை விண்டனன்

மேல்

#6 வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர் தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர் சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்

மேல்

#7 புறம் கூறினார் எல்லாம் புல் எனப் போயினர் பொன் படிக் கீழ்ப்புறம் மீளவும் மேயினர் மறம் கூறினோம் என் செய்வோம் என்று கூயினர் வாழிய என்று சொல் வாயினர் ஆயினர்

மேல்

#8 வெவ் வினைக் காடு எலாம் வேரொடு வெந்தது வெய்ய மாமாயை விரிவு அற்று நொந்தது செவ்விய ஞானம் சிறப்புற வந்தது சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது

மேல்

#9 சாதி சமயச் சழக்கு எலாம் அற்றது சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது மேதியில் சாகாத வித்தையைக் கற்றது மெய் அருள் சோதி என் உள்ளத்தில் உற்றது

@26. ஆணிப்பொன் அம்பலம்

மேல்

#1 * பல்லவி ஆணி_பொன்_அம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி அம்மா அற்புதக் காட்சியடி * சரணங்கள்

மேல்

#2 ஜோதி மலை ஒன்று தோன்றிற்று அதில் ஒரு வீதி உண்டாச்சுதடி அம்மா வீதி உண்டாச்சுதடி.

மேல்

#3 வீதியில் சென்றேன் அ வீதி நடு ஒரு மேடை இருந்ததடி அம்மா மேடை இருந்ததடி.

மேல்

#4 மேடை மேல் ஏறினேன் மேடை மேல் அங்கு ஒரு கூடம் இருந்ததடி அம்மா கூடம் இருந்ததடி.

மேல்

#5 கூடத்தை நாட அக் கூடம் மேல் ஏழ் நிலை மாடம் இருந்ததடி அம்மா மாடம் இருந்ததடி.

மேல்

#6 ஏழ் நிலைக்குள்ளும் இருந்த அதிசயம் என் என்று சொல்வனடி அம்மா என் என் என்று சொல்வனடி.

மேல்

#7 ஓர் நிலை-தன்னில் ஒளிர் முத்து வெண் மணி சீர் நீலம் ஆச்சுதடி அம்மா சீர் நீலம் ஆச்சுதடி.

மேல்

#8 பாரோர் நிலையில் கருநீலம் செய்ய பவளமதாச்சுதடி அம்மா பவளமதாச்சுதடி.

மேல்

#9 மற்றோர் நிலையில் மரகதப் பச்சை செம் மாணிக்கம் ஆச்சுதடி அம்மா மாணிக்கம் ஆச்சுதடி.

மேல்

#10 பின் ஓர் நிலையில் பெரு முத்து வச்சிரப் பேர் மணி ஆச்சுதடி அம்மா பேர் மணி ஆச்சுதடி.

மேல்

#11 வேறு ஓர் நிலையில் மிகும் பவளத் திரள் வெண் மணி ஆச்சுதடி அம்மா வெண் மணி ஆச்சுதடி.

மேல்

#12 புகலோர் நிலையில் பொருந்திய பல் மணி பொன் மணி ஆச்சுதடி அம்மா பொன் மணி ஆச்சுதடி.

மேல்

#13 பதியோர் நிலையில் பகர் மணி எல்லாம் படிகமதாச்சுதடி அம்மா படிகமதாச்சுதடி.

மேல்

#14 ஏழ் நிலை மேலே இருந்ததோர் தம்பம் இசைந்த பொன் தம்பமடி அம்மா இசைந்த பொன் தம்பமடி.

மேல்

#15 பொன் தம்பம் கண்டு ஏறும் போது நான் கண்ட புதுமை என் சொல்வனடி அம்மா புதுமை என் சொல்வனடி.

மேல்

#16 ஏறும் போது அங்கே எதிர்ந்த வகை சொல என்னளவு அல்லவடி அம்மா என்னளவு அல்லவடி.

மேல்

#17 ஆங்காங்கே சத்திகள் ஆயிரமாயிரம் ஆக வந்தார்களடி அம்மா ஆக வந்தார்களடி.

மேல்

#18 வந்து மயக்க மயங்காமல் நான் அருள் வல்லபம் பெற்றனடி அம்மா வல்லபம் பெற்றனடி.

மேல்

#19 வல்லபத்தால் அந்த மா தம்பத்து ஏறி மணி முடி கண்டேனடி அம்மா மணி முடி கண்டேனடி.

மேல்

#20 மணி முடி மேல் ஓர் கொடு முடி நின்றது மற்றது கண்டேனடி அம்மா மற்றது கண்டேனடி.

மேல்

#21 கொடு முடி மேல் ஆயிரத்தெட்டு மாற்றுப் பொன் கோயில் இருந்ததடி அம்மா கோயில் இருந்ததடி.

மேல்

#22 கோயிலைக் கண்டு அங்கே கோபுர வாயிலில் கூசாது சென்றனடி அம்மா கூசாது சென்றனடி.

மேல்

#23 கோபுர வாயிலுள் சத்திகள் சத்தர்கள் கோடி பல் கோடியடி அம்மா கோடி பல் கோடியடி.

மேல்

#24 ஆங்கு அவர் வண்ணம் வெள் வண்ணம் செவ் வண்ணம் முன் ஐ வண்ணம் ஆகுமடி அம்மா ஐ வண்ணம் ஆகுமடி.

மேல்

#25 அங்கு அவர் எல்லாம் இங்கு ஆர் இவர் என்னவும் அப்பாலே சென்றனடி அம்மா அப்பாலே சென்றனடி.

மேல்

#26 அப்பாலே சென்றேன் அங்கு ஓர் திரு_வாயிலில் ஐவர் இருந்தாரடி அம்மா ஐவர் இருந்தாரடி.

மேல்

#27 மற்றவர் நின்று வழி காட்ட மேல் ஓர் மணி வாயில் உற்றேனடி அம்மா மணி வாயில் உற்றேனடி.

மேல்

#28 எண்ணும் அ வாயிலில் பெண்ணோடு ஆணாக இருவர் இருந்தாரடி அம்மா இருவர் இருந்தாரடி.

மேல்

#29 அங்கு அவர் காட்ட அணுக்கத் திரு_வாயில் அன்பொடு கண்டேனடி அம்மா அன்பொடு கண்டேனடி.

மேல்

#30 அத் திரு_வாயிலில் ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாளடி அம்மா அம்மை இருந்தாளடி.

மேல்

#31 அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி அம்மா அமுதமும் உண்டேனடி.

மேல்

#32 தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி அம்மா சந்நிதி கண்டேனடி.

மேல்

#33 சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு அது சாமி அறிவாரடி அம்மா சாமி அறிவாரடி.

@27. அருட் காட்சி

மேல்

#1 வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுதடி அக்கச்சி மயில் குயில் ஆச்சுதடி.

மேல்

#2 துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்று ஆடும் வள்ளலைக் கண்டேனடி அக்கச்சி வள்ளலைக் கண்டேனடி.

மேல்

#3 சாதி சமயச் சழக்கை விட்டேன் அருள் சோதியைக் கண்டேனடி அக்கச்சி சோதியைக் கண்டேனடி.

மேல்

#4 பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்று ஆடும் ஐயரைக் கண்டேனடி அக்கச்சி ஐயரைக் கண்டேனடி.

@28. ஆனந்தப் பரிவு

மேல்

#1 நான் அந்தம் அடையாது எந்நாளினும் உள்ளவன் ஆகி நடிக்கும் வண்ணம் ஆனந்த நடம் புரிவான் ஆனந்த அமுது அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#2 சாதி மதம் சமய முதல் சங்கற்ப விகற்பம் எலாம் தவிர்ந்து போக ஆதி நடம் புரிகின்றான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#3 துரிய பதம் அடைந்த பெரும் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற்கு அரிய பதம் எனக்கு அளித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ.

மேல்

#4 மருள் பெரும் சோதனை எனது மட்டும் இலா வணம் கருணை வைத்தே மன்றில் அருள்_பெரும்_சோதிப் பெருமான் அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#5 துன்பம் எலாம் ஒருகணத்தில் தொலைத்து அருளி எந்நாளும் சுகத்தில் ஓங்க அன்பு_உடையான் அம்பலத்தான் அருள் சோதி எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#6 பந்தம் எலாம் தவிர்த்து அருளிப் பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற அந்தம் எலாம் கடந்திடச்செய்து அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#7 பேராலும் அறிவாலும் பெரியர் எனச் சிறப்பாகப் பேச நின்றோர் ஆராலும் பெறல் அரியது யாது அதனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#8 தினைத்தனையும் அறிவு அறியாச் சிறியன் என நினையாமல் சித்தியான அனைத்தும் என்றன் வசம் ஆக்கி அருள் அமுதம் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ.

மேல்

#9 பொதுவாகிப் பொதுவில் நடம் புரிகின்ற பேர்_இன்பப் பொருள்-தான் யாதோ அது நானாய் நான் அதுவாய் அத்துவிதம் ஆகின்றேன் அந்தோ அந்தோ.

மேல்

#10 மருள் வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலும் மாய்வு இலாத அருள் வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற்று ஆடுகின்றேன் அந்தோ அந்தோ

மேல்

#11 எக் கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு அக்கரை சேர்த்து அருள் எனும் ஓர் சர்க்கரையும் எனக்கு அளித்தான் அந்தோ அந்தோ

@29. மெய்யருள் வியப்பு

மேல்

#1 * பல்லவி எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு எய்தும் பொருத்தமோ. * சரணங்கள்

மேல்

#2 தனக்கு நிகர் இங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்று அதே தாவிப் போகப்போக நூலின் தரத்தில் நின்றதே கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கித் தூக்கிவைத்தாய் நிலை பொருந்தவே.

மேல்

#3 இங்கு ஓர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போகப்போக நூலின் இழை போல் நுணுகவே அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே அதன் மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கியே.

மேல்

#4 இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே விரவில் தனித்து அங்கு என்னை ஒரு கல் மேட்டில் ஏற்றியே விண்ணில் உயர்ந்த மாடத்து இருக்க விதித்தாய் போற்றியே.

மேல்

#5 மேலைப் பால் சிவகங்கை என்னும் ஓர் தீர்த்தம்-தன்னையே மேவிப் படியில் தவறி நீரில் விழுந்த என்னையே ஏலத் துகிலும் உடம்பும் நனையாது எடுத்ததே ஒன்றோ எடுத்து என் கரத்தில் பொன் பூண் அணிந்த இறைவன் நீ அன்றோ.

மேல்

#6 என்னது உடலும் உயிரும் பொருளும் நின்னது அல்லவோ எந்தாய் இதனைப் பெறுக என நான் இன்று சொல்லவோ சின்ன வயதில் என்னை ஆண்ட திறத்தை நினைக்குதே சிந்தை நினைக்கக் கண்ணீர் பெருக்கி உடம்பை நனைக்குதே.

மேல்

#7 அப்பா நின்னை அன்றி எங்கும் அணைப்பார் இல்லையே அந்தோ நின்னை அன்றி எங்கும் அருள்வார் இல்லையே எப்பாலவர்க்கும் நின்னை அன்றி இறைமை இல்லையே எனக்கும் நின் மேல் அன்றி உலகில் இச்சை இல்லையே.

மேல்

#8 அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்குதே அணைப்போம் என்னும் உண்மையால் என் ஆவி தங்குதே விரை சேர் பாதம் பிடிக்க என் கை விரைந்து நீளுதே மேவிப் பிடித்துக்கொள்ளும்-தோறும் உவகை ஆளுதே.

மேல்

#9 தனி என் மேல் நீ வைத்த தயவு தாய்க்கும் இல்லையே தகும் ஐந்தொழிலும் வேண்டும்-தோறும் தருதல் வல்லையே வினவும் எனக்கு என் உயிரைப் பார்க்க மிகவும் நல்லையே மிகவும் நான் செய் குற்றம் குறித்து விடுவாய் அல்லையே.

மேல்

#10 என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகுதே என்னை விழுங்கி எங்கும் இன்ப_வெள்ளம் பெருகுதே உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்குதே உன்னோடு என்னை வேறு என்று எண்ணில் மிகவும் பனிக்குதே.

மேல்

#11 உன் பேர்_அருளை நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே உண்டு பசி தீர்ந்தால் போல் காதல் மிகவும் தடிக்குதே அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற்றே அன்போர் அணுவும் இல்லா எனக்கு இங்கு அருளல் ஆயிற்றே.

மேல்

#12 நினைக்க நினைக்கத் தித்திப்பு எனது நினைவில் கொடுக்குதே நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்ல நெஞ்சம் நடுக்குதே எனைத் துன்பு ஒழித்து ஆட்கொண்ட நின்னை அன்னை என்பனோ எந்தாய் அன்பு_இலேன் நின் அடிக்கு முன்னை அன்பனோ.

மேல்

#13 உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என் உடம்பில் வாழுமோ உன்-பால் அன்றிப் பிறர்-பால் என்றன் உள்ளம் சூழுமோ என்னைக் கொடுக்க வாங்கிக்கொண்டது என்ன கருதியோ எந்தாய் நின்னைக் கொடுக்க என்-பால் இன்று வருதியோ.

மேல்

#14 நெடுநாள் முயன்றும் காண்டற்கு அரிய நிலையைக் காட்டியே நிறைந்து என் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டியே நடு நாடிய நின் அருளுக்கு என் மேல் என்ன நாட்டமோ நாய்க்குத் தவிசு இட்டனை நின்றனக்கு இங்கு இது ஓர் ஆட்டமோ.

மேல்

#15 நாகாதிபனும் அயனும் மாலும் நறுமுறு என்னவே ஞான அமுதம் அளித்தாய் நானும் உண்டு துன்னவே சாகாக் கலையை எனக்குப் பயிற்றித் தந்த தயவையே சாற்றற்கு அரிது நினக்கு என் கொடுப்பது ஏதும் வியவையே.

மேல்

#16 யாது கருதி என்னை ஆண்டது ஐய ஐயவோ யான் உன் அடிப் பொன் துணைகட்கு வந்து தொழும்புசெய்யவோ ஓது கடவுள் கூட்டம் அனைத்தும் அடிமை அல்லவோ உடையாய் அவர்க்குள் எனையும் ஒருவன் என்று சொல்லவோ.

மேல்

#17 தலையும் காலும் திரித்து நோக்கித் தருக்கினேனையே தாங்கித் தெரித்த தயவை நினைக்கில் உருக்குது ஊனையே புலையும் கொலையும் தவிர்ந்த நெறியில் புனிதர் மதிக்கவே புகுவித்தாயை என் வாய் துடிப்பது ஏத்தித் துதிக்கவே.

மேல்

#18 தாயே எனக்குத் தயவு புரிந்த தருணத் தந்தையே தனியே நின்னை நினைக்கக் கிளர்வது எனது சிந்தையே நாயேன் எண்ணம் அனைத்தும் முடித்துக்கொடுத்த பண்பனே நான் செய் தவத்தால் எனக்குக் கிடைத்த நல்ல நண்பனே.

மேல்

#19 ஏறா நிலையில் விரைந்துவிரைந்து இங்கு என்னை ஏற்றியே இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே மாறாக் கருணை என் மேல் வைக்க வந்தது என்னையோ மதி_இலேன் நின் அருட்குச் செய்த தவம்-தான் முன்னையோ.

மேல்

#20 இடமும் வலமும் இது என்று அறியாது இருந்த என்னையே எல்லாம் அறிவித்து அருள்செய் கருணை என்னை என்னையே நடமும் நடம் செய் இடமும் எனக்கு நன்று காட்டியே நாயினேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

மேல்

#21 விதுவும் கதிரும் இது என்று அறியும் விளக்கம் இன்றியே விழித்து மயங்கினேன்-பால் பெரிய கருணை ஒன்றியே அதுவும் அதுவும் இது என்று எனக்குள் அறியக் காட்டியே அடியனேனை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

மேல்

#22 இருளும் ஒளியும் வந்த வகையை எண்ணி எண்ணியே இரவும்_பகலும் மயங்கினேனை இனிது நண்ணியே அருளும் பொருளும் கொடுத்து மயக்கம் நீக்கிக் காட்டியே அன்பால் என்னை வளர்க்கின்றாய் நல் அமுதம் ஊட்டியே.

மேல்

#23 அண்டத்து அகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லுதே அவனே எல்லாம்_வல்லான் என்று மறைகள் சொல்லுதே பிண்டத்து அகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதியே பேயேன் அளவில் விளங்குகின்றது என்ன நீதியே.

மேல்

#24 கருணாநிதி நின்றன்னைக் காணக் கண்கள் துடிக்குதே காண்போம் என்று நினைக்கும்-தோறும் உடம்பு பொடிக்குதே அருள் நாடகம் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே.

மேல்

#25 அருள் ஆர் சோதி என்னுள் விளங்க அளித்த காலத்தே அடியேன் குறைகள் யாவும் தவிர்ந்தது இந்த ஞாலத்தே பொருளாய் எனையும் நினைக்க வந்த புதுமை என்னையோ பொன் என்று ஐய மதிப்பது உதவாத் துரும்பு-தன்னையோ.

மேல்

#26 எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருக்கும் தன்மையே இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மையே தனக்கு உள்ளது தன் தலைவர்க்கு உளது என்று அறிஞர் சொல்வதே சரி என்று எண்ணி எனது மனது களித்து வெல்வதே.

மேல்

#27 கருணைப் பொதுவில் பெரிய சோதித் தருவில் கனித்ததே கனித்த பெரிய தனித்த கனி என் கருத்துள் இனித்ததே தருணத்து உண்டு மகிழ்வுற்றேன் அ மகிழ்ச்சி சொல்லவே தனித்துக் கரைந்த எனது கருத்தின் தரத்தது அல்லவே.

மேல்

#28 என் ஆர்_உயிர்க்குத் துணைவ நின்னை நான் துதிக்கவே என்ன தவம் செய்தேன் முன் உலகுளோர் மதிக்கவே பொன் ஆர் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரியதே புலையனேனுக்கு அளித்த கருணை மிகவும் பெரியதே.

மேல்

#29 என் கண்மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காணவே என்ன தவம் செய்தேன் முன் அயனும் அரியும் நாணவே புன்கண் ஒழித்துத் தெள் ஆர் அமுதம் புகட்டி என்னையே பொருளாய் எண்ணி வளர்க்கின்றாய் நீ எனக்கு ஓர் அன்னையே.

மேல்

#30 அறிவு_இலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்தது அன்றியே அமுதும் அளித்தாய் யார் செய்வார்கள் இந்த நன்றியே செறிவு இலாத பொறியும் மனமும் செறிந்து நிற்கவே செய்தாய் மேலும் தெரித்தாய் சாகா_கல்வி கற்கவே.

மேல்

#31 ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே யோகப் பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே திரு_நாள் நிலையும் தீர்த்த நிலையும் தெய்வ நிலையுமே சிறியேன் அறியக் காட்டித் தெரித்தாய் வேதக் கலையுமே.

மேல்

#32 அண்டப் பரப்பின் திறங்கள் அனைத்தும் அறிய வேண்டியே ஆசைப்பட்டது அறிந்து தெரித்தாய் அறிவைத் தூண்டியே பிண்டத்து உயிர்கள் பொருத்தும் வகையும் பிண்டம்-தன்னையே பிரியும் வகையும் பிரியா வகையும் தெரித்தாய் பின்னையே.

மேல்

#33 வேதாகமங்கள் புகன்ற விரிவை ஒன்றொன்றாகவே விளங்க விரைந்து தெரித்தாய் பயிலும் ஆசை போகவே பூதாதிகளைப் பொருத்தும் பகுதிப் பொருத்தம் முற்றுமே பொய்மை நீக்கிக் காணக் காட்டித் தெரித்தாய் மற்றுமே.

மேல்

#34 வள்ளால் உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே வஞ்ச வினைகள் எனை விட்டு ஓடித் தலை வணக்குதே எள்ளாது உனது புகழைக் கேட்கச் செவி நயக்குதே எந்தாய் தயவை எண்ணும்-தோறும் உளம் வியக்குதே.

மேல்

#35 இறைவா நின்னைக் கனவிலேனும் யான் மறப்பனோ எந்தாய் உலகத்தவர்கள் போல் நான் இனி இறப்பனோ மறை வாசகமும் பொருளும் பயனும் மதிக்கும் மதியிலே வாய்க்கக் கருணை புரிந்து வைத்தாய் உயர்ந்த பதியிலே.

மேல்

#36 தலைவா எனக்குக் கருணை அமுதம் தர இ தலத்திலே தவம் செய்தேன் அத் தவமும் உன்றன் அருள் வலத்திலே அலை வாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே.

மேல்

#37 உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன்_மலை-அது என்னவே தடை யாது இனி உள் மூல மலத்தின் தடையும் போயிற்றே சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமம்-அது ஆயிற்றே.

மேல்

#38 மயங்கும்-தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கியே மகிழ்விக்கின்றாய் ஒரு கால் ஊன்றி ஒரு கால் தூக்கியே உயங்கும் மலங்கள் ஐந்தும் பசை அற்று ஒழிந்து வெந்ததே உன் பேர்_அருள் பொன் சோதி வாய்க்கும் தருணம் வந்ததே.

மேல்

#39 எனக்கும் நின்னைப் போல நுதல் கண் ஈந்து மதனையே எரிப்பித்தாய் பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனையே சினக்கும் கூற்றை உதைப்பித்து ஒழித்துச் சிதைவு மாற்றியே தேவர் கற்பம் பலவும் காணச்செய்தாய் போற்றியே.

மேல்

#40 கள்ளம் அறியேன் நின்னால் கண்ட காட்சி ஒன்றுமே கருத்தில் உளது வேறு ஓர் விடயம் காணேன் என்றுமே உள்ளது உரைக்கின்றேன் நின் அடி மேல் ஆணை முன்னையே உள்ளே விளங்கிக் காண்கின்றாய்க்கு இங்கு ஒளிப்பது என்னையே.

மேல்

#41 என்னை அடிமைகொண்டாய் நானும் நினக்கு நல்லனோ எல்லாம்_வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்லனோ முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டியே மூவர்க்கு அரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டியே.

மேல்

#42 சோதி மலையில் கண்டேன் நின்னைக் கண் களிக்கவே துய்த்தேன் அமுதம் அகத்தும் புறத்தும் பரிமளிக்கவே ஓதி உணர்தற்கு அரிய பெரிய உணர்வை நண்ணியே ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் நின் அருளை எண்ணியே.

மேல்

#43 ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றிலே ஏற்றிக் களிக்கவைத்தாய் அதன் மேல் இலங்கு குன்றிலே வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசுமே மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப் பொன் காசுமே.

மேல்

#44 இந்த உலகில் உள்ளார் பலரும் மிகவும் நன்மையே என்-பால் செய்யவைத்தாய் இது நின் அருளின் தன்மையே அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே.

மேல்

#45 அழியாக் கருணை அமுத வடிவின் ஓங்கும் சோதியே அரசே எனக்குள் விளங்கும் ஆதியாம் அனாதியே ஒழியாத் துயரை ஒழித்த பெரிய கருணையாளனே ஒன்றாய் ஒன்றில் உபயம் ஆகி ஒளிரும் தாளனே.

மேல்

#46 பாலும் தேனும் கலந்தது என்ன என்னுள் இனிக்கவே பரம ஞான அமுதம் அளிக்கின்றாய் தனிக்கவே ஏலும் உயிர்கள் எல்லாம் நினக்குப் பொதுவது என்பரே இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே.

மேல்

#47 ஐயா நான் செய் பிழைகள் ஏழு கடலில் பெரியதே அனைத்தும் பொறுத்த தயவு பிறருக்கு அரியது அரியதே மெய்யா நீ செய் உதவி ஒரு கைம்மாறு வேண்டுமே வேண்டாது என்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டுமே.

மேல்

#48 பூத வெளியின் நடமும் பகுதி வெளியின் ஆட்டமும் போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் நாத வெளியில் குனிப்பும் பரம நாத நடமுமே நன்று காட்டிக் கொடுத்தாய் என்றும் நலியாத் திடமுமே.

மேல்

#49 எட்டும் இரண்டும் இது என்று எனக்குச் சுட்டிக்காட்டியே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக்கூட்டியே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடர் உள் ஏற்றியே தூண்டாது என்றும் விளங்கவைத்தாய் உண்மை சாற்றியே.

மேல்

#50 அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவன் ஆகியே அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகியே பொருளாய் எனையும் உளம்கொண்டு அளித்த புனித நாதனே போற்று நாத முடிவில் நடம் செய் கமல பாதனே.

மேல்

#51 உருவும் அருவும் உபய நிலையும் உடைய நித்தனே உயிருள் நிறைந்த தலைவ எல்லாம்_வல்ல சித்தனே மருவும் துரிய வரையுள் நிறைந்து வயங்கும் பரமமே மன்றில் பரமானந்த நடம் செய்கின்ற பிரமமே.

மேல்

#52 அன்னே என்னை ஆண்ட தலைவ அடியன் உள்ளமே அமர்ந்த துணைவ எனக்குக் கிடைத்த அமுத வெள்ளமே பொன்னே பொன்னில் பொலிந்து நிறைந்த புனித வானமே புனித வானத்துள்ளே விளங்கும் புரண ஞானமே.

மேல்

#53 சமயத் தெய்வம் பலவும் சிறிய துரும்பு-அது என்னவே சாற்றப் புகினும் சாலார் அருளின் பெருமை உன்னவே அமையும் அண்டப் பகுதி பலவும் அணுவின் பொடியிலே அனந்தத்து ஒன்று என்று உரைத்தும் சாலா நின் பொன் அடியிலே.

மேல்

#54 அப்பா நின்னை அடைந்த என்னை ஒப்பார் யாவரே ஆறாறு அகன்ற நிலையை அடைந்தான் என்பர் தேவரே இப் பார் ஆதி பூதம் அடங்கும் காலும் நின்னையே ஏத்திக் களித்து வாழ்வேன் இதற்கும் ஐயம் என்னையே.

மேல்

#55 என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டியே இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டியே முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னையே முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னையே.

மேல்

#56 எண்ணும்-தோறும் எண்ணும்-தோறும் என்னுள் இனிக்குதே இறைவ நின்னைப் பாட நாவில் அமுதம் சனிக்குதே கண்ணும் கருத்தும் நின்-பால் அன்றிப் பிறர்-பால் செல்லுமோ கண்டேன் உன்னை இனிமேல் என்னை மாயை வெல்லுமோ.

மேல்

#57 விந்தோநாத வெளியும் கடந்து மேலும் நீளுதே மேலை வெளியும் கடந்து உன் அடியர் ஆணை ஆளுதே அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லையே அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லையே.

மேல்

#58 இறுகப் பிடித்துக் கொண்டேன் பதத்தை இனி நான் விடுவனோ எந்தாய் பாதம் பிடித்த கையால் வேறு தொடுவனோ குறுகப் பயந்து கூற்றும் ஓடிக் குலைந்து போயிற்றே கோவே உன்றன் அருள் சிற்சோதி என்னது ஆயிற்றே.

மேல்

#59 காய்க்கும் பருவம்-தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே நாய்க்குத் தவிசு இட்டு ஒரு பொன் முடியும் நன்று சூட்டியே நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே.

மேல்

#60 கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன் சொல்_மாலையே புனைந்து என் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின் பொன் காலையே.

மேல்

#61 சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே தனித்து உன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின் பொன் பாதமே உலக விடயக் காட்டில் செல்லாது எனது போதமே.

மேல்

#62 அருளும் பொருளும் பெற்றேன் அடியன் ஆகி நானுமே அஞ்சேன் மாயை வினைகட்கு ஒரு சிற்றளவதேனுமே இருளும் நிறத்துக் கூற்றைத் துரத்தி அருள் சிற்சோதியே என்றன் அகத்தும் புறத்தும் விளங்குகின்ற தாதியே.

மேல்

#63 காம_கடலைக் கடந்து வெகுளி_கடலை நீந்தினேன் கடிய மயக்க_கடலைத் தாண்டி அடியை ஏந்தினேன் சேமப் பொதுவில் நடம் கண்டு எனது சிறுமை நீங்கினேன் சிற்றம்பலத்து நடம் கண்டு உவந்து மிகவும் ஓங்கினேன்.

மேல்

#64 தாங்கல் விடுதல் இரண்டும் எனக்குச் சமம்-அது ஆயிற்றே சகத்தில் வழங்கும் மாயை வழக்குத் தவிர்ந்து போயிற்றே ஏங்கல் சலித்தல் இரண்டும் இன்றி இளைப்பு நீங்கினேன் எந்தாய் கருணை அமுது உண்டு இன்பப் பொருப்பில் ஓங்கினேன்.

மேல்

#65 உறவு பகை என்று இரண்டும் எனக்கு இங்கு ஒன்று-அது ஆயிற்றே ஒன்று என்று இரண்டு என்று உளறும் பேதம் ஓடிப் போயிற்றே மறவு நினைவு என்று என்னை வலித்த வலிப்பு நீங்கினேன் மன்றில் பரமானந்த நடம் கண்டு இன்பம் ஓங்கினேன்.

மேல்

#66 உன்னைக் கண்டுகொண்டேன் கண்டவுடன் இங்கு என்னையே உலகம் எல்லாம் கண்டுகொண்ட உவப்பு இது என் ஐயே என்னைக் கண்டுகொண்ட காலத்து இறைவ நின்னையே யாரும் கண்டுகொண்டார் இல்லை ஆங்கு அது என் ஐயே.

மேல்

#67 மலத்தில் புழுத்த புழுவும் நிகர மாட்டா நாயினேன் வள்ளல் கருணை அமுது உண்டு இன்ப நாட்டான் ஆயினேன் குலத்தில் குறியில் குணத்தில் பெருமைகொள்ளா நாயினேன் கோது_இல் அமுது உண்டு எல்லா நலமும் உள்ளான் ஆயினேன்.

மேல்

#68 கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயினேன் கருணை அமுது உண்டு இன்ப நாட்டுக்கு உடையன் ஆயினேன் விடயக் காட்டில் ஓடித் திரிந்த வெள்ளை நாயினேன் விடையாய் நினக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயினேன்.

மேல்

#69 அயனும் மாலும் தேடித்தேடி அலந்து போயினார் அந்தோ இவன் முன் செய்த தவம் யாது என்பர் ஆயினார் மயனும் கருத மாட்டாத் தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே.

மேல்

#70 வல்லாய் உனது கருணை அமுது என் வாய்க்கு வந்ததே மலமும் மாயைக் குலமும் வினையும் முழுதும் வெந்ததே எல்லா நலமும் ஆன அதனை உண்டு வந்ததே இறவாது என்றும் ஓங்கும் வடிவம் எனக்கு வந்ததே.

மேல்

#71 சிற்றம்பலத்தில் நடம் கண்டவர் கால் பொடி கொள் புல்-அதே சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய்ய வல்லதே பற்று அம்பலத்தில் வைத்தார்-தம்மைப் பணியும் பத்தரே பரம பதத்தர் என்று பகர்வர் பரம முத்தரே.

மேல்

#72 சிருட்டி முதல் ஓர் ஐந்து_தொழிலும் செய் என்று என்னையே செல்வப் பிள்ளை ஆக்கி வளர்க்கின்றாய் இது என் ஐயே தெருட்டித் திரு_பொன்_பதத்தைக் காட்டி அமுதம் ஊட்டியே திகழ நடு வைத்தாய் சன்மார்க்க சங்கம் கூட்டியே.

மேல்

#73 அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கியே அடிகள் ஆக்கிக்கொண்டாய் என்னை அவலம் நீக்கியே படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே.

மேல்

#74 அண்ணா எனையும் பொருள் என்று எண்ணி இரவும்_பகலுமே அகத்தும் புறத்தும் திரிகின்றாய் இ உலகு என் புகலுமே தண் ஆர் அமுதம் மிகவும் எனக்குத் தந்தது அன்றியே தனியே இன்னும் தருகின்றாய் என் அறிவின் ஒன்றியே.

மேல்

#75 வேதாகமத்தின் அடியும் நடுவும் முடியும் மற்றுமே வெட்டவெளி-அது ஆகி விளங்கக் கண்டேன் முற்றுமே நாதா சிறிய நாய்க்கும் கடையேன் முற்றும் கண்டதே நானோ கண்டேன் எந்தாய் கருணை நாட்டம் கண்டதே.

மேல்

#76 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கு அரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தனித்து அப்பால் ஓர் தவள மாடத்து இருந்து தேறினேன்.

மேல்

#77 கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே கனி-அது ஆக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத்து எல்லையே உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்று ஓங்கும் தலத்திலே உன்-பால் இருக்கவைத்தாய் என்னை உவந்து வலத்திலே.

மேல்

#78 அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையுமே எறிந்து அப் பாடு முழுதும் பெரிய இன்பம் ஆயிற்றே எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்தம் ஆயிற்றே.

மேல்

#79 பனிரண்டு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே படியில் பட்ட பாட்டை நினைக்கில் மலையும் கரையுமே துனியாது அந்தப் பாடு முழுதும் சுகம்-அது ஆயிற்றே துரையே நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே.

மேல்

#80 ஈர்_ஆறு ஆண்டு தொடங்கி இற்றைப் பகலின் வரையுமே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையுமே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்பம் ஆயிற்றே இறைவா நின் மெய் அருள் இங்கு எனக்குச் சொந்தம் ஆயிற்றே.

மேல்

#81 பாட்டால் உனது பதத்தை நாடிப் பாடும் வாயரே பதியே இந்த உலகில் எனக்கு மிகவும் நேயரே நாட்டார் எனினும் நின்னை உளத்து நாட்டார் ஆயிலோ நயவேன் சிறிதும் நயத்தல் கயக்கும் எட்டிக்காயிலோ.

மேல்

#82 சின்ன வயது தொடங்கி என்னைக் காக்கும் தெய்வமே சிறியேன் மயங்கும்-தோறும் மயக்கம் தீர்க்கும் தெய்வமே என்னை அவத்தைக் கடல்-நின்று இங்ஙன் எடுத்த தெய்வமே எல்லா நலமும் தரும் இன் அமுதம் கொடுத்த தெய்வமே.

மேல்

#83 அச்சம் தீர்த்து இங்கு என்னை ஆட்கொண்டு அருளும் அமுதனே அடியேன் பிழைகள் அனைத்தும் பொறுத்து உள் அமர்ந்த அமுதனே இச்சை யாவும் முடித்துக் கொடுத்து உள் இலங்கும் குரவனே என்றும் இறவாக் கல்வி அடியேற்கு ஈய்ந்த குரவனே.

மேல்

#84 உள்ளும் புறத்தும் கருணை அமுதம் ஊட்டும் அன்னையே ஓதாது உணர உணரும் உணர்வை உதவும் அன்னையே தெள்ளும் கருணைச் செங்கோல் செலுத்தச்செய்த அப்பனே செல்வப் பிள்ளை ஆக்கி என் உள் சேர்ந்த அப்பனே.

மேல்

#85 இரவும்_பகலும் என்னைக் காத்து உள் இருக்கும் இறைவனே எல்லா உலகும் புகழ எனை மேல் ஏற்றும் இறைவனே கரவு நினையாது எனக்கு மெய்ம்மை காட்டும் துணைவனே களித்து என்றனையும் சன்மார்க்கத்தில் நாட்டும் துணைவனே.

மேல்

#86 சற்றும் வருந்தப் பாராது என்னைத் தாங்கும் நேயனே தான் நான் என்று பிரித்தற்கு அரிய தரத்து நேயனே முற்றும் தனதை எனக்குக் கொடுத்து முயங்கும் நேயனே முன்னே நான் செய் தவத்தில் எனக்குள் முளைத்த நேயனே.

மேல்

#87 நேயா நின்னை நினைக்கநினைக்க நெஞ்சம் களிக்குதே நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர் துளிக்குதே ஓயாது உனது பெருமை நினைக்க உவகை நீடுதே உரைப்பார் எவர் என்று உலகில் பலரை ஓடித் தேடுதே.

மேல்

#88 பொன்னே நின்னை உன்ன உடம்பு புளகம் மூடுதே பொதுவைக் காண உள்ளே ஆசை பொங்கி ஆடுதே என்னே பிறர்-தம் வரவு நோக்கக் கண்கள் வெதும்புதே எந்தாய் வரவை நினைக்கக் களிப்புப் பொங்கித் ததும்புதே.

மேல்

#89 மணியே நின்னைப் பொதுவில் கண்ட மனிதர் தேவரே மனிதர் கண்ணில் பட்ட புல்லும் மரமும் தேவரே அணியே நின்னைப் பாடும் அடியர் தாமோ மூவரே அவரைக் கண்டார் அவரைக் கண்டார் அவர்கள் மூவரே.

மேல்

#90 வாழ்வே நினது நடம் கண்டவரைச் சுத்தர் என்பனோ மலங்கள் மூன்றும் தவிர்த்த சுத்த முத்தர் என்பனோ ஏழ் வேதனையும் நீக்கி வாழும் நித்தர் என்பனோ எல்லாம் செய்ய வல்ல ஞான சித்தர் என்பனோ.

மேல்

#91 சிவமே நின்னைப் பொதுவில் கண்ட செல்வர் தம்மையே தேவர் கண்டுகொண்டு வணங்குகின்றார் இம்மையே தவமே புரிந்து நின்னை உணர்ந்த சாந்த சித்தரே தகும் ஐந்தொழிலும் தாமே இயற்ற வாய்ந்த சித்தரே.

மேல்

#92 ஐவராலும் நின்னை அறிதற்கு அருமை அருமையே ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமையே பொய் வராத வாய் கொண்டு உன்னைப் போற்றும் அன்பரே பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்பரே.

மேல்

#93 என்னைக் காட்டி என்னுள் இலங்கும் நின்னைக் காட்டியே இறங்கா நிலையில் ஏற்றி ஞான அமுதம் ஊட்டியே பொன்னைக் காட்டிப் பொன்னே நினது புகழைப் பாடியே புந்தி களிக்கவைத்தாய் அழியாது என்னை நாடியே.

மேல்

#94 அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே அறிந்தேன் அங்கைக் கனி போல் அவற்றில் உள்ள செய்தியே பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே பேசிப்பேசி வியக்கின்றேன் இப் பிறவி-தன்னையே.

மேல்

#95 சிற்றம்பலத்தின் நடனம் காட்டிச் சிவத்தைக் காட்டியே சிறப்பாய் எல்லாம்_வல்ல சித்தித் திறத்தைக் காட்டியே குற்றம் பலவும் தீர்த்து என்றனக்கு ஓர் முடியும் சூட்டியே கோவே நீயும் என்னுள் கலந்துகொண்டாய் நாட்டியே.

மேல்

#96 சுத்த நிலையின் நடு நின்று எங்கும் தோன்றும் சோதியே துரிய வெளியைக் கடந்து அப்பாலும் துலங்கும் சோதியே சித்தர் உளத்தில் சுடர்செய்து ஓங்கும் தெய்வச் சோதியே சிற்றம்பலத்தில் நடம் செய்து எனக்குள் சிறந்த சோதியே.

மேல்

#97 அன்றே என்னை அடியன் ஆக்கி ஆண்ட சோதியே அதன் பின் பிள்ளை ஆக்கி அருள் இங்கு அளித்த சோதியே நன்றே மீட்டும் நேயன் ஆக்கி நயந்த சோதியே நானும் நீயும் ஒன்று என்று உரைத்து நல்கு சோதியே.

மேல்

#98 நீயே வலிந்து இங்கு என்னை ஆண்ட நீதிச் சோதியே நின்னைப் பாட என்னை வளர்க்கும் நிமலச் சோதியே தாயே என வந்து என்னைக் காத்த தருமச் சோதியே தன்மை பிறரால் அறிதற்கு அரிய தலைமைச் சோதியே.

மேல்

#99 சாகா_கல்வி எனக்குப் பயிற்றித் தந்த சோதியே தன் நேர் முடி ஒன்று எனது முடியில் தரித்த சோதியே ஏகாக்கரப் பொன் பீடத்து என்னை ஏற்று சோதியே எல்லாம்_வல்ல சித்தி ஆட்சி ஈய்ந்த சோதியே.

மேல்

#100 சோதி எவையும் விளங்க விளங்கும் சோதி வாழியே துரிய வெளியின் நடு நின்று ஓங்கும் சோதி வாழியே சூது இலா மெய்ச் சிற்றம்பலத்துச் சோதி வெல்கவே துலங்கப் பொன்_அம்பலத்தில் ஆடும் சோதி வெல்கவே.

மேல்

#101 சுத்த சிவ சன்மார்க்க நீதிச் சோதி போற்றியே சுக வாழ்வு அளித்த சிற்றம்பலத்துச் சோதி போற்றியே சுத்த சுடர்ப் பொன்_சபையில் ஆடும் சோதி போற்றியே சோதி முழுதும் விளங்க விளங்கும் சோதி போற்றியே ** பண்கள்

@30. வளர்பதி விளக்கம்

மேல்

#1 உரை வளர் கலையே கலை வளர் உரையே உரை கலை வளர்தரு பொருளே விரை வளர் மலரே மலர் வளர் விரையே விரை மலர் வளர்தரு நறவே கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே பரை வளர் ஒளியே ஒளி வளர் பரையே பரை ஒளி வளர் சிவ பதியே.

மேல்

#2 ஒளி வளர் உயிரே உயிர் வளர் ஒளியே ஒளி உயிர் வளர்தரும் உணர்வே வெளி வளர் நிறைவே நிறை வளர் வெளியே வெளி நிறை வளர்தரு விளைவே வளி வளர் அசைவே அசை வளர் வளியே வளி அசை வளர்தரு செயலே அளி வளர் அனலே அனல் வளர் அளியே அளி அனல் வளர் சிவ பதியே.

மேல்

#3 அடி வளர் இயலே இயல் வளர் அடியே அடி இயல் வளர்தரு கதியே முடி வளர் பொருளே பொருள் வளர் முடியே முடி பொருள் வளர் சுக நிதியே படி வளர் விதையே விதை வளர் படியே படி விதை வளர் பல நிகழ்வே தடி வளர் முகிலே முகில் வளர் தடியே தடி முகில் வளர் சிவ பதியே.

மேல்

#4 சிரம் வளர் முதலே முதல் வளர் சிரமே சிரம் முதல் வளர்தரு செறிவே தரம் வளர் நிலையே நிலை வளர் தரமே தரம் நிலை வளர்தரு தகவே வரம் வளர் நிறையே நிறை வளர் வரமே வரம் நிறை வளர்தரு வயமே பரம் வளர் பதமே பதம் வளர் பரமே பர பதம் வளர் சிவ பதியே.

மேல்

#5 திரு வளர் வளமே வளம் வளர் திருவே திரு வளம் வளர்தரு திகழ்வே உரு வளர் வடிவே வடி வளர் உருவே உரு வடி வளர்தரு முறைவே கரு வளர் அருவே அரு வளர் கருவே கரு அரு வளர் நவ கதியே குரு வளர் நெறியே நெறி வளர் குருவே குரு நெறி வளர் சிவ பதியே.

மேல்

#6 நிறை வளர் முறையே முறை வளர் நிறையே நிறை முறை வளர் பெரு நெறியே பொறை வளர் புவியே புவி வளர் பொறையே புவி பொறை வளர்தரு புனலே துறை வளர் கடலே கடல் வளர் துறையே துறை கடல் வளர்தரு சுதையே மறை வளர் பொருளே பொருள் வளர் மறையே மறை பொருள் வளர் சிவ பதியே.

மேல்

#7 தவம் வளர் தயையே தயை வளர் தவமே தவம் நிறை தயை வளர் சதுரே நவம் வளர் புரமே புரம் வளர் நவமே நவ புரம் வளர்தரும் இறையே துவம் வளர் குணமே குணம் வளர் துவமே துவ குணம் வளர்தரு திகழ்வே சிவம் வளர் பதமே பதம் வளர் சிவமே சிவ பதம் வளர் சிவ பதியே.

மேல்

#8 நடம் வளர் நலமே நலம் வளர் நடமே நடம் நலம் வளர்தரும் ஒளியே இடம் வளர் வலமே வலம் வளர் இடமே இடம் வலம் வளர்தரும் இசைவே திடம் வளர் உளமே உளம் வளர் திடமே திட உளம் வளர்தரு திருவே கடம் வளர் உயிரே உயிர் வளர் கடமே கடம் உயிர் வளர் சிவ பதியே.

மேல்

#9 அது வளர் அணுவே அணு வளர் அதுவே அது அணு வளர்தரும் உறவே விது வளர் ஒளியே ஒளி வளர் விதுவே விது ஒளி வளர்தரு செயலே மது வளர் சுவையே சுவை வளர் மதுவே மது உறு சுவை வளர் இயலே பொது வளர் வெளியே வெளி வளர் பொதுவே பொது வெளி வளர் சிவ பதியே.

மேல்

#10 நிதி வளர் நிலமே நிலம் வளர் நிதியே நிதி நிலம் வளர்தரு நிறைவே மதி வளர் நலமே நலம் வளர் மதியே மதி நலம் வளர்தரு பரமே கதி வளர் நிலையே நிலை வளர் கதியே கதி நிலை வளர்தரு பொருளே பதி வளர் பதமே பதம் வளர் பதியே பதி பதம் வளர் சிவ பதியே.

@31. ஞானோபதேசம்

மேல்

#1 கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே விண்ணே விண் நிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே தண் ஏர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே உள் நேர் உள் ஒளியே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#2 வளியே வெண் நெருப்பே குளிர் மா மதியே கனலே வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேல் நிலையே அளியே அற்புதமே அமுதே அறிவே அரசே ஒளியே உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#3 அன்பே என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே என்பே உள் உருகக் கலந்து என்னுள் இருந்தவனே இன்பே என் அறிவே பரமே சிவமே எனவே உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#4 தனையா என்று அழைத்தே அருள் சத்தி அளித்தவனே அனையாய் அப்பனுமாய் எனக்கு ஆரியன் ஆனவனே இனையாது என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே உனை யான் ஏத்துகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#5 துப்பு ஆர் செம் சுடரே அருள் சோதி சுகக் கடலே அப்பா என் அரசே திரு_அம்பலத்து ஆர்_அமுதே இப் பாரில் பசிக்கே தந்த இன் சுவை நல் உணவே ஒப்பாய் ஒப்ப அரியாய் எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#6 என்றே என்றுள் உறும் சுடரே எனை ஈன்றவனே நன்றே நண்பு எனக்கே மிக நல்கிய நாயகனே மன்று ஏர் மா மணியே சுக வாழ்க்கையின் மெய்ப்பொருளே ஒன்றே என் துணையே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#7 திருவே தெள் அமுதே அருள் சித்த சிகாமணியே கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே மருவே மா மலரே மலர் வாழ்கின்ற வானவனாம் உருவே என் குருவே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#8 தடை யாவும் தவிர்த்தே எனைத் தாங்கிக்கொண்டு ஆண்டவனே அடையா அன்பு_இலர்-பால் எனக்கு அன்பொடு தந்த பெரும் கொடையாய் குற்றம் எலாம் குணம் கொண்ட குண_குன்றமே உடையாய் உத்தமனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#9 பெண்ணாய் ஆண் உருவாய் எனைப் பெற்ற பெருந்தகையே அண்ணா என் அரசே திரு_அம்பலத்து ஆடுகின்றோய் எண்ணா நாய்_அடியேன் களித்திட்ட உணவை எலாம் உண்ணாது உண்டவனே எனக்கு உண்மை உரைத்து அருளே.

மேல்

#10 நந்நாலும் கடந்தே ஒளிர் ஞான சபாபதியே பொன் ஆரும் சபையாய் அருள் பூரண புண்ணியனே என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை எனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்து அருளே.

@32. ஆரமுதப் பேறு

மேல்

#1 விரை சேர் பொன்_மலரே அதில் மேவிய செந்தேனே கரை சேர் முக்கனியே கனியில் சுவையின் பயனே பரை சேர் உள் ஒளியே பெரும்பற்று அம்பலம் நடம் செய் அரைசே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#2 விண் ஆர் செம் சுடரே சுடர் மேவிய உள் ஒளியே தண் ஆர் வெண் மதியே அதில் தங்கிய தண் அமுதே கண் ஆர் மெய்க் கனலே சிவகாமப் பெண் காதலனே அண்ணா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே

மேல்

#3 துப்பு ஆர் செம் சடையாய் அருள் சோதிச் சுகக் கடலே செப்பா மேல் நிலைக்கே சிறியேனைச் செலுத்தியவா எப்பாலும் புகழும் பொது இன்ப நடம் புரியும் அப்பா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே

மேல்

#4 மெய்யா மெய் அருளே என்று மேவிய மெய்ப்பொருளே கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே செய்யாய் வெண்_நிறத்தாய் திரு_சிற்றம்பலம் நடம் செய் ஐயா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#5 பொறி வேறு இன்றி நினை நிதம் போற்றும் புனிதருளே குறி வேறு இன்றி நின்ற பெரும் சோதிக் கொழும் சுடரே செறி வேதங்கள் எலாம் உரைசெய்ய நிறைந்திடும் பேர்_ அறிவே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#6 முத்தா முத்தர் உளே ஒளிர்கின்ற முழு_முதலே சித்தா சித்தி எலாம் தர வல்ல செழும் சுடரே பித்தா பித்தன் எனை வலிந்து ஆண்ட பெருந்தகையே அத்தா தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#7 தன் நேர் இல்லவனே எனைத் தந்த தயாநிதியே மன்னே மன்றிடத்தே நடம் செய்யும் என் வாழ் முதலே பொன்னே என் உயிரே உயிருள் நிறை பூரணமே அன்னே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#8 ஒளியே அ ஒளியின் நடு உள் ஒளிக்குள் ஒளியே வெளியே எவ்வெளியும் அடங்கின்ற வெறுவெளியே தளியே அம்பலத்தே நடம் செய்யும் தயாநிதியே அளியே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#9 மருள் ஏய் நெஞ்சகனேன் மன வாட்டம் எலாம் தவிர்த்தே தெருளே ஓர் வடிவாய் உறச் செய்த செழும் சுடரே பொருளே சிற்சபை வாழ்வுறுகின்ற என் புண்ணியனே அருளே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#10 முன்பே என்றனையே வலிந்து ஆட்கொண்ட முன்னவனே இன்பே என் உயிரே எனை ஈன்ற இறையவனே பொன் பேர் அம்பலவா சிவ போகம் செய் சிற்சபை வாழ் அன்பே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#11 பவனே வெம் பவ நோய்-தனைத் தீர்க்கும் பரஞ்சுடரே சிவனே செம்பொருளே திரு_சிற்றம்பலம் நடிப்பாய் தவ நேயம் பெறுவார்-தமைத் தாங்கி அருள் செய வல் லவனே தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே..

மேல்

#12 தேனாய்த் தீம் பழமாய்ச் சுவை சேர் கரும்பாய் அமுதம்- தானாய் அன்பர் உளே இனிக்கின்ற தனிப் பொருளே வானாய்க் கால் அனலாய்ப் புனலாய் அதில் வாழ் புவியாய் ஆனாய் தந்தனையே அருள் ஆர்-அமுதம்-தனையே.

மேல்

#13 பொடி ஏற்கும் புயனே அருள் பொன்_அம்பலத்து அரசே செடியேற்கு அன்று அளித்தாய் திரு_சிற்றம்பலச் சுடரே கடியேற்கு அன்னை எனும் சிவகாமக் கொடை_உடையாய் அடியேற்கு இன்று அளித்தாய் அருள் ஆர்-அமுதம்-தனையே. ** கீர்த்தனங்கள்

@33. இன்னந் தயவு

மேல்

#1 * பல்லவி இன்னம் தயவு வரவிலையா உனக்கு என் மீதில் என்ன வர்மம் சொலையா * சரணங்கள்

மேல்

#2 அன்னம்பாலிக்கும் தில்லைப் பொன்_அம்பலத்தில் ஆடும் அரசே அரசே அரசே என்று அலறவும்

மேல்

#3 சின்னஞ்சிறு வயதில் என்னை அடிமைகொண்ட சிவமே சிவமே சிவமே என்று அலறவும்

மேல்

#4 முன்னம் பிழை பொறுத்தாய் இன்னம் பொறாதுவிட்டால் முறையோ முறையோ முறையோ என்று அலறவும்

மேல்

#5 தன்னை அறியா என்னை இன்னலுறச் செய்தாயே தகுமோ தகுமோ தகுமோ என்று அலறவும்

மேல்

#6 பண்டு மகிழ்ந்து எனை ஆட்கொண்டு கருணைசெய்த பரமே பரமே பரமே என்று அலறவும்

மேல்

#7 கொண்டு குலம் பேசுவார் உண்டோ உலகில் எங்கள் குருவே குருவே குருவே என்று அலறவும்

@34. அபயம் அபயம்

மேல்

#1 * பல்லவி அபயம் அபயம் அபயம். * சரணங்கள்

மேல்

#2 உபயம்-அதாய் என் உறவாய்ச் சிதம்பரச் சபையில் நடம் செயும் சாமி பதத்திற்கே

மேல்

#3 எம் பலத்தால் எம்மை ஏன்றுகொளத் தில்லை அம்பலத்து ஆடும் எம் ஐயர் பதத்திற்கே

மேல்

#4 தவ சிதம்பரம் ஆகித் தன்மயமாய்ச் செயும் சிவ_சிதம்பர மகாதேவர் பதத்திற்கே

மேல்

#5 ஒன்றும் பதத்திற்கு உயர் பொருள் ஆகியே என்றும் என் உள்ளத்து இனிக்கும் பதத்திற்கே

மேல்

#6 வான் அந்தமாம் தில்லை மன்றிடை என்றும் நின்று ஆனந்த_தாண்டவம் ஆடும் பதத்திற்கே

மேல்

#7 நாராயணனொடு நான்முகன் ஆதியர் பாராயணம் செயும் பதும பதத்திற்கே

மேல்

#8 அன்பர் செயும் பிழை ஆயிரமும் பொறுத்து இன்பம் அளிக்குநம் ஈசர் பதத்திற்கே

மேல்

#9 குற்றம் செயினும் குணமாகக் கொண்டு நம் அற்றம் தவிர்க்கு நம் அப்பர் பதத்திற்கே

மேல்

#10 செம்பொருள் ஆகிச் சிதம்பரத்தே என்றும் நம் பொருள் ஆன நடேசர் பதத்திற்கே

மேல்

#11 வெச்சென்ற மாயை வினை ஆதியால் வந்த அச்சம் தவிர்க்கும் நம் ஐயர் பதத்திற்கே

மேல்

#12 எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கும் நம் புண்ணியனார் தெய்வப் பொன் அடிப் போதுக்கே

மேல்

#13 மன் அம்பரத்தே வடிவில் வடிவு ஆகிப் பொன்_அம்பலத்து ஆடும் பொன் அடிப் போதுக்கே

மேல்

#14 நாத முடியில் நடம் புரிந்து அன்பர்க்குப் போதம் அளிக்கின்ற பொன் அடிப் போதுக்கே

மேல்

#15 உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான சச்சிதானந்தத் தனி நடப் போதுக்கே

மேல்

#16 சித்தமும் உள்ளமும் தித்தித்து இனிக்கின்ற புத்தமுது ஆகிய பொன் அடிப் போதுக்கே

@35. அஞ்சாதே நெஞ்சே

* பல்லவி

மேல்

#1 அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே அஞ்சாதே நெஞ்சே அஞ்சாதே.

மேல்

#2 வஞ்சம்_இலார் நாம் வருந்திடில் அப்போதே அஞ்சல் என்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#3 துய்யர் அருள்_பெரும்_ஜோதியார் நம்முடை அய்யர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#4 மண்ணில் நமை அண்ட வள்ளலார் நம்முடை அண்ணல் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#5 இப் புவியில் நம்மை ஏன்றுகொண்டு ஆண்ட நம் அப்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#6 சித்தர் எலாம் வல்ல தேவர் நமை ஆண்ட அத்தர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#7 சோதி அருள் பெருஞ் சோதியார் நம்முடை ஆதி இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#8 தாண்டவனார் என்னைத் தான் தடுத்து ஆட்கொண்ட ஆண்டவனார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#9 வன்பர் மனத்தை மதியாதவர் நமது அன்பர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#10 தெருள்_உடையார் எலாஞ் செய்ய வல்லார் திரு அருள்_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#11 நம்மை ஆட்கொள்ள நடம் புரிவார் நமது அம்மையினோடு இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#12 தன்னை ஒப்பார் சிற்சபை நடம் செய்கின்றார் அன்னை ஒப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#13 பாடுகின்றார்க்கு அருள் பண்பினர் ஞானக் கூத் தாடுகின்றார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#14 காதரிப்பார்கட்குக் காட்டிக்கொடார் நம்மை ஆதரிப்பார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#15 நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார் நம்மை ஆள வல்லார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#16 இன்பு_உடையார் நம் இதயத்து அமர்ந்த பேர்_ அன்பு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#17 உபய பதத்தை நம் உச்சி மேல் சூட்டிய அபயர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#18 வேண்டு கொண்டார் என்னை மேல் நிலைக்கு ஏற்றியே ஆண்டுகொண்டார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#19 எச்சம் பெறேல் மகனே என்று என்னுள் உற்ற அச்சம் தவிர்த்தவர் அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#20 நமுதன் முதல் பல நன்மையுமாம் ஞான அமுதர் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#21 செடிகள் தவிர்த்து அருள் செல்வம் அளிக்கின்ற அடிகள் இதோ திரு_அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#22 விரசு உலகு எல்லாம் விரித்து ஐந்தொழில் தரும் அரசு_உடையார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

மேல்

#23 செறிவு_உடையார் உளத்தே நடம் செய்கின்ற அறிவு_உருவார் இதோ அம்பலத்து இருக்கின்றார்

@36. தெண்டனிட்டேன்

மேல்

#1 * பல்லவி தெண்டனிட்டேன் என்று சொல்லடி சுவாமிக்கு நான் தெண்டனிட்டேன் என்று சொல்லடி.

மேல்

#2 * அநுபல்லவி தண்டலை விளங்கும் தில்லைத் தலத்தில் பொன்_அம்பலத்தே கண்டவர் மயங்க வேடம்கட்டி ஆடுகின்றவர்க்கு * சரணங்கள்

மேல்

#3 கற்பூர வாசம் வீசும் பொற்பாம் திரு_முகத்தே கனிந்த புன்னகை ஆடக் கருணைக் கடைக்கண் ஆட அற்பு ஆர் பொன்_அம்பலத்தே ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டே என்னை ஆட்டம் கண்டாருக்கு

மேல்

#4 இழிந்தாலும் நம்மை இங்கே ஏற்றுவார் என்று அடைந்தால் ஏற்றுவார் போலே பின்னும் இழியவைப்பாருக்குப் பழம்-தான் நழுவி மெல்லப் பாலில் விழுந்தது என்னப் பசப்பிப்பசப்பி அன்பர் பண்டம் பறிப்பவர்க்கு

மேல்

#5 சுட்ட திரு_நீறு பூசித் தொந்தோம் என்று ஆடுவார்க்குத் தோன்று தலை மாலை அணி தோள் விளங்க வருவார்க்குப் பிட்டுக்கு ஆசைப்பட்டு மாறன் பிரம்படி பட்டவர்க்குப் பிள்ளைக்கறிக்கு ஆசை கொண்ட கள்ளத் தவ வேடருக்கு

மேல்

#6 வாழ்ந்தாரை மேன்மேலும் வாழச்செய்பவருக்கு மாசு பறித்தவர் கையில் காசு பறிக்கின்றவர்க்குத் தாழ்ந்தாரை அடிக்கடி தாழக் காண்பவருக்குத் தான் ஆகி நான் ஆகித் தனியே நின்றவருக்கு

மேல்

#7 ஆதி அந்தம் நடு இல்லா ஆனந்த நாடருக்கு அண்டர் உயிர் காத்த மணி_கண்ட சசி_கண்டருக்குச் சோதி மயமாய் விளங்கும் தூய வடிவாளருக்குத் தொண்டர் குடி கெடுக்கவே துஜம்கட்டிக்கொண்டவர்க்கு

மேல்

#8 பாட்டுக்கு ஆசைப்பட்டு முன்னம் பரவை-தன் வாயிலில் போய்ப் பண்பு உரைத்துத் தூதன் என்றே பட்டம்கட்டிக்கொண்டவர்க்கு வீட்டுக்கு ஆசைப்படுவாரை வீட்டை விட்டுத் துரத்தியே வேட்டாண்டியாய் உலகில் ஓட்டாண்டி ஆக்குவார்க்கு

மேல்

#9 தாய் வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்க்குச் சாதி குலம் அறியாது தாண்டவம் செய்கின்றவர்க்கு ஏய தொழில் அருளும் என் பிராண_நாயகர்க்கு ஏமாந்தவரை எல்லாம் ஏமாத்தும் ஈசருக்கு

@37. வருவார் அழைத்துவாடி

மேல்

#1 * பல்லவி வருவார் அழைத்துவாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே.

மேல்

#2 * அநுபல்லவி திரு ஆர் பொன்_அம்பலத்தே செழிக்கும் குஞ்சிதபாதர் சிவ_சிதம்பர போதர் தெய்வச் சபாநாதர் * சரணங்கள்

மேல்

#3 சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மது உண்டு தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரி கொண்டு இந்த வெளியில் நடமிடத் துணிந்தீரே அங்கே இதைவிடப் பெருவெளி இருக்குது என்றால் இங்கே

மேல்

#4 இடுக்கு இலாமல் இருக்க இடம் உண்டு நடம் செய்ய இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டு ஐய ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டுகொள்வீர் என்னால் உண்மை இது வஞ்சம் அல்ல உம் மேல் ஆணை என்று சொன்னால்

மேல்

#5 மெல் இயல் சிவகாமவல்லியுடன் களித்து விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து எல்லை_இல் இன்பம் தரவும் நல்ல சமயம்-தான் இது இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்ற போது

@38. என்ன புண்ணியம்

மேல்

#1 * பல்லவி என்ன புண்ணியம் செய்தேனோ அம்மா நான் என்ன புண்ணியம் செய்தேனோ.

மேல்

#2 * அநுபல்லவி மன்னர் நாதர் அம்பலவர் வந்தார் வந்தார் என்று திரு_ சின்ன நாதம் என் இரண்டு செவிகளின் உள் சொல்கின்றதே. * சரணங்கள்

மேல்

#3 பொருள் நான்முகனும் மாலும் தெருள் நான்மறையும் நாளும் போற்றும் சிற்றம்பலத்தே ஏற்றும் மணி_விளக்காய் அருள் நாடகம் புரியும் கருணாநிதியர் உன்னை ஆள வந்தார் வந்தார் என்று எக்காள நாதம் சொல்கின்றதே.

மேல்

#4 பாடிய நல்லோர்-தமக்கே நாடியது எல்லாம் அளிப்பார் பத்தி_வலையுள் படுவார் சத்தியர் நித்தியர் மன்றில் ஆடிய பொன் பாதர் வேதம் தேடிய சிற்போதர் உன்னை அணைய வந்தார் வந்தார் என்றே இணை_இல் நாதம் சொல்கின்றதே.

மேல்

#5 எம் தரம் உள் கொண்ட ஞான சுந்தரர் என் மணவாளர் எல்லாம் செய் வல்ல சித்தர் நல்லோர் உளத்து அமர்ந்தார் மந்திர மா மன்றில் இன்பம் தந்த நடராஜர் உன்னை மருவ வந்தார் வந்தார் என்று தெருவில் நாதம் சொல்கின்றதே.

மேல்

#6 ஓதி எந்தவிதத்தாலும் வேதியனும் தேர்வு_அரியார் ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் ஆதி அந்தம் காண்ப அரிய ஜோதி சுயம் ஜோதி உன்னோடு ஆட வந்தார் வந்தார் என்றே நாடி நாதம் சொல்கின்றதே.

மேல்

#7 அற்புதப் பேர்_அழகாளர் சொல் பதம் கடந்துநின்றார் அன்பர் எலாம் தொழ மன்றில் இன்ப நடம் புரிகின்றார் சிற்பரர் எல்லாமும் வல்ல தற்பரர் விரைந்து இங்கு உன்னைச் சேர வந்தார் வந்தார் என்று ஓங்கார நாதம் சொல்கின்றதே.

மேல்

#8 ஆரணர் நாரணர் எல்லாம் பூரணர் என்று ஏத்துகின்ற ஐயர் திரு_அம்பலவர் மெய்யர் எல்லாம்_வல்ல சித்தர் காரணமும் காரியமும் தாரணி நீயாக உன்னைக் காண வந்தார் வந்தார் என்றே வேணு நாதம் சொல்கின்றதே.

மேல்

#9 பாகு ஆர் மொழியாள் சிவமாகாமவல்லி நாளும் பார்த்து ஆட மணி மன்றில் கூத்தாடுகின்ற சித்தர் வாகா உனக்கே என்றும் சாகா_வரம் கொடுக்க வலிய வந்தார் வந்தார் என்றே வலிய நாதம் சொல்கின்றதே.

@39. இவர்க்கும் எனக்கும்

மேல்

#1 * பல்லவி இவர்க்கும் எனக்கும் பெரு வழக்கு இருக்கின்றது அது என்றும் தீரா வழக்குக் காணடி.

மேல்

#2 * அநுபல்லவி எவர்க்கும் பெரியவர் பொன்_அம்பலத்தே நடம் இட்டார் எனக்கு மாலையிட்டார் இதோ வந்தார். * சரணங்கள்

மேல்

#3 அன்று இதோ வருகின்றேன் என்று போனவர் அங்கே யார் செய்த தடையாலோ இருந்தார் என் கையில் சங்கை இன்று தம் கையில் கொண்டே வந்து நிற்கின்றார் இங்கே இந்தக் கதவை மூடு இவர் போவது இனி எங்கே.

மேல்

#4 அவரவர் உலகத்தே அறிந்து அலர் தூற்றப்பட்டேன் அன்று போனவர் இன்று வந்து நிற்கின்றார் கெட்டேன் இவர் சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் இந்தக் கதவை மூடு இனி எங்கும் போக ஒட்டேன்.

மேல்

#5 சின்ன வயதில் என்னைச் சேர்ந்தார் புன்னகையோடு சென்றார் தயவால் இன்று வந்தார் இவர்க்கு ஆர் ஈடு என்னை விட்டு இனி இவர் எப்படிப் போவார் ஓடு இந்தக் கதவை மூடு இரட்டைத் தாள்கோலைப் போடு.

@40. இது நல்ல தருணம்

மேல்

#1 * பல்லவி இது நல்ல தருணம் அருள்செய்ய இது நல்ல தருணம்.

மேல்

#2 * அநுபல்லவி பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும் பொய் ஏதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். * சரணங்கள்

மேல்

#3 மதித்த சமய மத வழக்கு எல்லாம் மாய்ந்தது வருணாச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது கொதித்த லோகாசாரக் கொதிப்பு எல்லாம் ஒழிந்தது கொலையும் களவும் மற்றைப் புலையும் அழிந்தது.

மேல்

#4 குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று குதித்த மன முருட்டுக் குரங்கு முடங்கிற்று வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது விந்தை செய் கொடு மாயைச் சந்தையும் கலைந்தது.

மேல்

#5 கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று கொடிய ஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று தாபமும் சோபமும் தான்தானே சென்றது தத்துவம் எல்லாம் என்றன் வசம் நின்றது.

மேல்

#6 கரையா எனது மனக் கல்லும் கரைந்தது கலந்துகொளற்கு என் கருத்தும் விரைந்தது புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று பொய்படாக் காதல் ததும்பி மேல் பொங்கிற்று.

@41.இராக ஆலாபனத் திருப்பாடல்கள்

**1. அருள்மொழி வியப்பு

மேல்

#1 உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே 5

மேல்

உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலைச் சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய்ப் போத நெறியே அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே ஐம்பூதம் ஆதி நீ அல்லை அத் தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே 10

மேல்

அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே 15

மேல்

அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் எனச் சொல் பதியே இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே 20

மேல்

என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே 25

மேல்

காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் கை குவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய்ப் போதம் உண்டு கனி மதுரம் ஒழுகு செம் பதிகச் செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணியக் கதி உலகு அறிந்து உய்யவே 30 கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமைக் காப்பது உன் கடன் என்றுமே

மேல்

#2 தேன் படிக்கும் அமுதாம் உன் திரு_பாட்டைத் தினம்-தோறும் நான் படிக்கும் போது என்னை நான் அறியேன் நா ஒன்றோ ஊன் படிக்கும் உளம் படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் தான் படிக்கும் அனுபவம் காண் தனிக் கருணைப் பெருந்தகையே.

மேல்

#3 வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடும் கால் நல் கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழும் கனித் தீம் சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே. **2. திருவடித் தியானம்

மேல்

#4 எழு வகைப் பிறவிகளுள் எப் பிறவி எய்துகினும் எய்துக பிறப்பில் இனி நான் எய்தாமை எய்துகினும் எய்திடுக இருமையினும் இன்பம் எய்தினும் எய்துக வழு வகைத் துன்பமே வந்திடினும் வருக மிகு வாழ்வு வந்திடினும் வருக வறுமை வருகினும் வருக மதி வரினும் வருக அவமதி வரினும் வருக உயர்வோடு இழி வகைத்து உலகின் மற்று எது வரினும் வருக அலது எது போகினும் போக நின் இணை அடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் அரசே கழி வகைப் பவ ரோகம் நீக்கும் நல் அருள் எனும் கதி மருந்து உதவு நிதியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே

மேல்

#5 பெற்ற தாய்-தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் நல் தவத்தவர் உள் இருந்து ஓங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே.

மேல்

#6 காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே. **3. தியான வைபவம்

மேல்

#7 நீர் உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற நிலன் உண்டு பலனும் உண்டு நிதி உண்டு துதி உண்டு மதி உண்டு கதிகொண்ட நெறி உண்டு நிலையும் உண்டு ஊர் உண்டு பேர் உண்டு மணி உண்டு பணி உண்டு உடை உண்டு கொடையும் உண்டு உண்டுண்டு மகிழவே உணவு உண்டு சாந்தமுறும் உளம் உண்டு வளமும் உண்டு தேர் உண்டு கரி உண்டு பரி உண்டு மற்று உள்ள செல்வங்கள் யாவும் உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பு அணியும் நின் பதத் தியானம் உண்டாயில் அரசே தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முகத் துய்ய மணி உண்முகச் சைவ மணி சண்முகத் தெய்வ மணியே.

மேல்

#8 இளவேனில் மாலையாய்க் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய்த் தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால் போல் தழைத்திடும் நிலாக் காலமாய்த் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசைப் பாடல் இடமாய் களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய்க் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடிக் கழல் நிழல் சுகம் நிகருமே வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே **4. அன்புருவம்

மேல்

#9 அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே.

மேல்

#10 தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீசத் தடம் பொழில் பூ மணம் வீசத் தென்றல் வீச எண் அமுதப் பளிக்கு நிலாமுற்றத்தே இன் இசை வீசத் தண் பனி_நீர் எடுத்து வீசப் பெண் அமுதம்_அனையவர் விண் அமுதம் ஊட்டப் பெறுகின்ற சுகம் அனைத்தும் பிற்பட்டு ஓடக் கண் அமுதத்து உடம்பு உயிர் மற்று அனைத்தும் இன்பம் கலந்துகொளத் தரும் கருணைக் கடவுள் தேவே

மேல்

#11 பாங்கு உள நாம் தெரிதும் எனத் துணிந்து கோடிப் பழ மறைகள் தனித்தனியே பாடிப்பாடி ஈங்கு உளது என்று ஆங்கு உளது என்று ஓடிஓடி இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந்து எட்டும்-தோறும் வாங்கு பர வெளி முழுதும் நீண்டுநீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே எங்கும் தேங்கு பரமானந்த வெள்ளமே சச்சிதானந்த அருள் சிவமே தேவ தேவே **5. முறையீடு

மேல்

#12 பண் ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் பாத_மலர் அழகினை இப் பாவி பார்க்கில் கண்ணேறுபடும் என்றோ கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ விண் ஏறும் அரி முதலோர்க்கு அரிய ஞான விளக்கே என் கண்ணே மெய்வீட்டின் வித்தே தண் ஏறு பொழில் தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்து அருளும் சகச வாழ்வே.

மேல்

#13 நண்ணேனோ மகிழ்வினொடும் திரு_தணிகை மலை-அதனை நண்ணி என்றன் கண்ணே நீ அமர்ந்த எழில் கண் குளிரக் காணேனோ கண்டு வாரி உண்ணேனோ ஆனந்தக் கண்ணீர் கொண்டு ஆடி உனக்கு உகப்பாத் தொண்டுபண்ணேனோ நின் புகழைப் பாடேனோ வாயாரப் பாவியேனே.

மேல்

#14 பண்ணால் உன் அருள்_புகழைப் பாடுகின்றார் பணிகின்றார் நின் அழகைப் பார்த்துப்பார்த்துக் கண்ணார உளம் குளிரக் களித்து ஆனந்த_கண்ணீர் கொண்டு ஆடுகின்றார் கருணை வாழ்வை எண்ணாநின்று உனை எந்தாய் எந்தாய் எந்தாய் என்கின்றார் நின் அன்பர் எல்லாம் என்றன் அண்ணா நான் ஒரு பாவி வஞ்ச நெஞ்சத்தால் அலைகின்றேன் என் செய்கேன் அந்தோ அந்தோ.

மேல்

#15 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய வாதனை எனும் கள்வர்-தாம் வந்து மன அடிமையை எழுப்பி அவனைத் தமது வசமாக உளவு கண்டு மேய மதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது மெய் நிலைச் சாளிகை எலாம் வேறு உற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளைகொள மிக நடுக்குற்று நினையே

மேல்

#16 நேயம் உற ஓவாது கூவுகின்றேன் சற்றும் நின் செவிக்கு ஏறவிலையோ நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் நிறைவும் இலையோ என் செய்கேன் ஆய மறை முடி நின்ற தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே **6.நிரஹங்கர நிலை

மேல்

#17 தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால் பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.

மேல்

#18 பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன் ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன் கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன் தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

மேல்

#19 திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ அருத் தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே.

மேல்

#20 அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச் செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன் இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

மேல்

#21 அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள் இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும் எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

மேல்

#22 நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும் வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன் பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே. **7. இன்ப வடிவம்

மேல்

#23 கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#24 தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே.

மேல்

#25 பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே. **8.ஆனந்தாநுபவம்

மேல்

#26 நான் கண்ட போது சுயம் சோதி மயம் ஆகி நான் பிடித்த போது மதி நளின வண்ணம் ஆகித் தேன் கொண்ட பால் என நான் சிந்திக்கும்-தோறும் தித்திப்பது ஆகி என்றன் சென்னி மிசை மகிழ்ந்து தான் கொண்டு வைத்த அ நாள் சில்லென்று என் உடம்பும் தக உயிரும் குளிர்வித்த தாள்_மலர்கள் வருந்த வான் கொண்டு நடந்து இங்கு வந்து எனக்கும் அளித்தாய் மன்றில் நடத்து அரசே நின் மா கருணை வியப்பே.

மேல்

#27 உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொள்ளானை என் பாட்டைக் குறிக்கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார்-தம்மைத் தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

மேல்

#28 கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன் அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன் உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே.

மேல்

#29 காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்குக் கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புதக் காட்சியே கனக_மலையே தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித் தலைவனே நின் பெருமையைச் சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற-தோறும் அந்தோ

மேல்

#30 வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என் மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன் தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே. **9. நடராஜ ஸ்வரூபம்

மேல்

#31 அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி ஆயிரமாயிரம் கோடி அணி விளக்கு ஏற்றிடுக தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திரு_மேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும் இருள் ஏது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமா ஏற்றுதலாம் கண்டாய் மருளேல் அங்கு அவர் மேனி விளக்கம்-அது எண்_கடந்த மதி கதிர் செம் கனல் கூடிற்று என்னினும் சாலாதே.

மேல்

#32 வெடித்து அளிந்த முக்கனியின் வடித்த ரசம்-தனிலே விரும்புற நின்று ஓங்கிய செங்கரும்பு இரதம் கலந்து தடித்த செழும் பால் பெய்து கோல்_தேன் விட்டு அதனைத் தனித்த பரா அமுதத்தில் தான் கலந்து உண்டால் போல் இடித்திடித்து என் உளம் முழுதும் தித்திக்கும் வார்த்தை இனிது உரைத்து மணம் புரிந்த என் உயிர்_நாயகர் வான் பொடித் திரு_மேனியர் நடனம் புரிகின்றார் அவர்-தம் புகழ் உரைக்க வல்லேனோ அல்லேன் காண் தோழி.

மேல்

#33 மாதே கேள் அம்பலத்தே திரு_நடம் செய் பாத_மலர் அணிந்த பாதுகையின் புறத்து எழுந்த அணுக்கள் மா தேவர் உருத்திரர்கள் ஒரு கோடி கோடி வளை பிடித்த நாரணர்கள் ஒரு கோடி கோடி போது ஏயும் நான்முகர்கள் ஒரு கோடி கோடி புரந்தரர்கள் பல கோடி ஆக உருப் புனைந்தே ஆதேயர் ஆகி இங்கே தொழில் புரிவார் என்றால் ஐயர் திரு_அடிப் பெருமை யார் உரைப்பார் தோழி.

மேல்

#34 பெருகிய பேர்_அருள்_உடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் திரு_பேர் புகல் என்கின்றாய் அருகர் புத்தர் ஆதி என்பேன் அயன் என்பேன் நாராயணன் என்பேன் அரன் என்பேன் ஆதிசிவன் என்பேன் பருகு சதாசிவம் என்பேன் சத்திசிவம் என்பேன் பரமம் என்பேன் பிரமம் என்பேன் பரப்பிரமம் என்பேன் துருவு சுத்தப் பிரமம் என்பேன் துரிய நிறைவு என்பேன் சுத்த சிவம் என்பன் இவை சித்து விளையாட்டே.

மேல்

#35 சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார்-தமக்குச் சேர்ந்த புறச் சமயப் பேர் பொருந்துவதோ என்றாய் பின் சமயத்தார் பெயரும் அவர் பெயரே கண்டாய் பித்தர் என்றே பெயர் படைத்தார்க்கு எப் பெயர் ஒவ்வாதோ அச் சமயத் தேவர் மட்டோ நின் பெயர் என் பெயரும் அவர் பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர் பெயரே சிற்சபையில் என் கணவர் செய்யும் ஒரு ஞானத் திரு_கூத்துக் கண்ட அளவே தெளியும் இது தோழி. **10. சன்மார்க்க சித்திப்பேறு

மேல்

#36 தனித் தலைமைப் பெரும் பதி என் தந்தை வருகின்ற தருணம் இது சத்தியம் காண் சகதலத்தீர் கேண்-மின் இனித்த நறும் கனி போன்றே என் உளம் தித்திக்க இன் அமுதம் அளித்து என்னை ஏழ் உலகும் போற்ற மனித்த உடம்பு இதை அழியா வாய்மை உடம்பு ஆக்கி மன்னிய சித்து எல்லாம் செய் வல்லபமும் கொடுத்தே கனித்த சிவானந்தம் எனும் பெரும் போகம்-தனிலே களித்திடவைத்திடுகின்ற காலையும் இங்கு இதுவே

மேல்

#37 காற்றாலே புவியாலே ககனம்-அதனாலே கனலாலே புனலாலே கதிர் ஆதியாலே கூற்றாலே பிணியாலே கொலை_கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருள்_பெரும்_ஜோதி இறைவனைச் சார்வீரே.

மேல்

#38 சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகு அலவே நீதியிலே சன்மார்க்க நிலை-தனிலே நிறுத்த நிருத்தம் இடும் தனித் தலைவர் ஒருத்தர் அவர்-தாமே வீதியிலே அருள் சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.

மேல்

#39 கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே என்னுடைய ஒருமைப் பெருமானே தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்-தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெரும் கருணைத் தேவே உலகத் திரள் எல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இது என்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.

மேல்

#40 நினைந்துநினைந்து உணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணீர்-அதனால் உடம்பு நனைந்துநனைந்து அருள் அமுதே நல் நிதியே ஞான நடத்து அரசே என் உரிமை நாயகனே என்று வனைந்துவனைந்து ஏத்துதும் நாம் வம்-மின் உலகியலீர் மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொன்_சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே. *

மேல்

8.தனிப் பாசுரப் பகுதி


01.குடும்ப கோஷம் - காப்பு
02.1.குருதரிசனப் படலம்
03.2.முயற்சிப் படலம்
04.1.மூத்த பிள்ளையார் திருப் பாசுரங்கள்
05.(2).தெய்வத் தனித் திரு மாலை
06.(3).மங்களம்
07.(1).கந்தர் திருப் பதிகம் - சிங்கபுரி
08.(2).திருப்பள்ளித் தாமம் தாங்கல்
09.(3).முருகவேள் தனித் திருத் தொடை
10.(1).அருண்மொழி மாலை
11.(2).இன்ப மாலை
12.(3).பழமலையார் திருப் பதிகம்
13.(4).ஆநந்த நடனம்
14.(5).ஞான சிதம்பர வெண்பா
15.(6).வைத்தியநாதர் பதிகம்
16.(7).சிவபெருமான் தனித் திருஅலங்கல்
17.(1).திவ்வியநாம சங்கீர்த்தனம்
18.(2).இராமநாமப் பதிகம்
19.(3).வீரராகவர் போற்றித் திருப்பஞ்சகம்
20.(1).பெரியநாயகியார் ஸ்தோத்திரம்
21.(2).இரேணுகை தோத்திரம்
22.(3).இலட்சுமி ஸ்தோத்திரம்
23.(4).சரஸ்வதி ஸ்தோத்திரம்
24.(1).சமரச சாநுப வாநுக்கிரக அருட்குரு ஸ்தோத்திரம்
25.(2).ஞானசிகாமணி திருச்சீர் அஷ்டகம்
26.(3).திருஞானசம்பந்தர் ஸ்தோத்திரம்
27.(1).குருட்டு மாணாக்கர் புல்லொழுக்கம்
28.(2).குருட்டு ஆசிரியர் புல்லொழுக்கம்
29.(1).நிஷ்டானுபூதி உரை
30.(2).சிதம்பர புராணப் பதிவு
31.(3).தேவநாதபிள்ளை ஸ்தோத்திரங்கள்
32.(4).முத்துசாமி முதலியார் ஸ்தோத்திரங்கள்
33.(5).வேதநாயகம் பிள்ளை நீதிநூல்
 
     
    
     

@1.குடும்ப கோஷம் - காப்பு

மேல்

#1 பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம்.

மேல்

#2 ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனைப் பாலவளைப் பூதச் சேனை முகத் தலைவனைச் சண்டேசுரனைக் கவுணிய கோத்திர நம் கோவைச் சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்டத் தேவை வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம்.

மேல்

#3 தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இக் குடும்பத்தின் செய்கை சொல்லப் பெறும் கையாம் வகை ஒன்றும் தெரியாமே சொலப் புகுந்த பேதையேனைக் குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ.

மேல்

#4 சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இக் குடும்பத்தின் திறம் பாடற்கே ஓர் பாட்டிற்கு ஒரு கோடிப் பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றிப் பார் பாட்டில் சிறுதெய்வப் பேர்களை முன்னிலை வைத்துப் பாடேன் இந்த நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ. ** அவையடக்கம்

மேல்

#5 மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும் நான் எனில் நானே நாணம்_இலேனை நகுகின்றேன் ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான் தான் எனில் அடியேன் அவை சொல் அடக்கம் சதுர் அன்றே

@2.1.குருதரிசனப் படலம்

மேல்

#1 நீர் வளம் நில வளம் நிறைந்த பொற்பு அது கார் வளர் பொழில் புடை கவின்ற காட்சிய தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது சீர் வளர் தலங்களுள் திலகம் என்பது.

மேல்

#2 திரு வளர் புயத்தனும் திசைமுகத்தனும் தரு வளர் மகத்தனும் சார்ந்து நாள்-தொறும் மரு வளர் மலர் கொடு வழிபட்டு எண்ணிய உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது.

மேல்

#3 அற்றம்_இல் சண்பையர் ஆதி மூவரும் சொல் தமிழ்ப் பதிகங்கள்-தோறும் சேர்வது நல் தவர் புகழ்வது நாயினேனுக்கும் கற்றவர் உறவினைக் காட்டி நின்றது.

மேல்

#4 தவ நெறி தழைத்து மெய்ச் சாந்தம் பூத்து வன் பவ நெறி காய்த்து அருள் பழம் பழுத்திடும் நவ நெறி தரும் பர நவிற்றும் சைவமாம் சிவ நெறி தரும் தருச் சிறந்த சீர் அது.

மேல்

#5 சோலையும் தடங்களும் துரிசு_இலா அறச் சாலையும் மடங்களும் சத்திரங்களும் பாலையும் பழத்தையும் பருகல் ஒத்த சொல்_ மாலையும் தொடுப்பவர் வாழ்வும் உள்ளது.

மேல்

#6 அந்தணர் அறு_தொழில் ஆற்றும் சால்பு அது மந்தணம் மறை முடி வழுத்தும் மாண்பு அது சுந்தர நீற்றணி துலங்கும் அன்பர்கள் வந்து வந்தனைசெய்து வசிக்கும் பேறு அது.

மேல்

#7 பூ எலாம் புது மணம் பொலியும் ஒண் தளிர்க் கா எலாம் சிவ மணம் கமழுகின்றது தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய் நா எலாம் புகழ்வது நன்மை சான்றது.

மேல்

#8 சாலியும் போலிய தழை கொள் கன்னலின் வேலியும் முக்கனி விளைவும் தாழைகள் கோலிய பொங்கரும் குறைவு இலாதது பாலியின் வடகரைப் படியின் மேலது.

மேல்

#9 எண் திசை புகழ நின்று இலங்குகின்றது அண்டர்கள் முடிவினும் அழிவு_இலாதது தொண்ட மண்டல வடல் தூய கீழ்த் திசை கண்டல் சூழ் கடற்கரை காண உள்ளது.

மேல்

#10 திரு_மகள் கலை_மகள் சிறந்த ஞானமாம் குருமகள் மூவரும் கூடி வாழ்வது தெருமரல் அகற்றும் எம் சிவபிரான் மலை ஒரு மகள் உடன் உறை ஒற்றி மாண் பதி.

மேல்

#11 அப் பெரும் பதியிடை அயன் முன் ஆகிய முப்பெரும் தலைவரும் முடி வணங்கிட ஒப்ப அரும் சிவபிரான் உருவு கொண்டு அருள் செப்ப அரும் கோயிலைச் சேர்ந்த சூழலில்.

மேல்

#12 கிள்ளைகள் ஆகமம் கிளக்கக் கேட்டதற்கு உள்ளுணர் பூவைகள் உரை விரித்திடத் தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம் கொள்ளைகொண்டு அயல் நடம் குயிற்ற உள்ளது.

மேல்

#13 சைவ யாகங்களும் சாற்றும் மற்றைய தெய்வ யாகங்களும் செய்ய ஓங்கிய மை விடாப் புகையொடு மழையும் கூடினும் மெய் விடார் உளம் என விளங்குகின்றது.

மேல்

#14 கண்டவர் உளம் எலாம் கட்டுகின்றது தண் தமிழ்க் கவிதை போல் சாந்தம் மிக்கது விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது எண் தரும் தவம் அரசு இருக்கும் சீர் அது.

மேல்

#15 வந்தியார் அமுதையும் வாங்கி உண்டு அருள் அந்தியார் வண்ணர்-தம் அருளில் நின்றது நந்தி ஆச்சிரமமாம் நாமம் பெற்றது நிந்தியா நெறியதோர் நிலை உண்டாயிடை.

மேல்

#16 வேதமும் ஆகம விரிவும் மற்றை நூல் போதமும் மன்னுறப் போதிப்போர்களும் வாதமும் விதண்டமும் மருவுறா வகைப் பேதமும் அபேதமும் பேசுவோர்களும்.

மேல்

#17 பவம் எலாம் தவிர்த்து அருள் பதம் அளிப்பது தவம் அலாது இலை எனச் சார்ந்துளோர்களும் அவம் எலாம் அகன்ற பின் அனுபவிப்பது சிவம் அலாது இலை எனச் சேர்ந்துளோர்களும்

மேல்

#18 ஞான யோகத்தினை நண்ணினோர்களும் மோனமே பொருள் என முன்னினோர்களும் வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில் ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும்.

மேல்

#19 மறந்திலர் உலகர் இ வஞ்ச வாழ்க்கையைத் துறந்திலர் என் எனச் சொல்கின்றோர்களும் இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர் வறந்திலர் தவர் என வகுக்கின்றோர்களும்.

மேல்

#20 தென்சொலும் வடசொலும் தெரிந்துளோர்களும் இன் சொலும் வாய்மையும் இசைக்கின்றோர்களும் வன் சொலும் மடமையும் மறமும் வஞ்சமும் புன் சொலும் உடையர்-பால் பொருந்துறார்களும்.

மேல்

#21 கரு நெறித் தமிழ் எலாம் கையகன்று மெய்த் திரு_நெறித் தமிழ் மறை தேர்ந்துளோர்களும் அரு நெறித் தனி எழுத்து ஐந்தின் உட்பொருள் குரு நெறித் தகவுறக் குறிக்கின்றோர்களும்.

மேல்

#22 இரவொடு பகல் இலாது இருக்கின்றோர்களும் வரவொடு போக்கு_இலா வழி நின்றோர்களும் கரவொடு மாயையைக் கடிந்த சீலரும் உரவொடு மெய்ந்நிலை ஓங்குவோர்களும்

மேல்

#23 பொறி வழி மனம் செலாப் புனித சித்தரும் அறி வழி அ வழி அகன்றுளோர்களும் செறி வழி யா வகைச் சிறந்த முத்தரும் குறி வழி திறம்புறாக் கொள்கையோர்களும்.

மேல்

#24 மால் வகை முழுவதும் நீக்கி மன் அருள் நூல் வகை ஞானத்தின் நுவலுகின்றதோர் நால் வகை நிலைகளின் நண்ணுவோர்களும் ஏல் வகை இணை_அடி ஏத்திச் சூழ்ந்திட.

மேல்

#25 தெள்ளிய அமுத வெண் திங்களோ நறை துள்ளிய நறு மணம் சூழ்ந்து அலர்ந்திடும் ஒள்ளிய கமலமோ என்ன ஓங்கிய வள்ளிய திரு_முக மண்டலத்திலே.

மேல்

#26 கடை வரை நிறைபெறும் கருணை வெள்ளம் மேல் மடை திறந்து ஒழுகி வான் வழிந்து பார் எலாம் தடைபடாத் தண் அளி ததும்பி ஆனந்தக் கொடை தரும் விழி மலர் குலவி வாழ்ந்திட.

மேல்

#27 சிறை தெறும் சிவ சிவ சிவ என்று அன்பொடு மறைமொழி சிறக்கும் வாய் மலரும் விண்ணக நிறை அமுது ஒழுகி வெண் நிலவு அலர்ந்து அருள் இறை பெறும் புன்னகை எழிலும் ஓங்கிட.

மேல்

#28 வேத புத்தகம் திகழ் மென் கையும் திருப் பாத_பங்கயங்களும் பரவும் நீற்று ஒளி போத உத்தூளனம் பொலிந்த மேனியும் ஓது கல் மரங்களும் உருகத் தோன்றிட.

மேல்

#29 அரும் சிவ ஞானமும் அமல இன்பமும் திருந்த ஓர் உருக்கொடு சேர்ந்தது என்னவே தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன் இருந்தனன் இருந்தவாறு இருந்த நாளினே.

மேல்

#30 ஒரு நாளில் ஒரு மகன் ஓர் பதினாறு ஆண்டு அகவை நலம்_உடையான் ஒற்றித் திரு_நாளில் எம் பெருமான் தியாகேசன் திரு_பவனிச் சேவைசெய்து மருநாள் அ மலர்த் தடம் சூழ்ந்து எழில் பெறும் அ ஆச்சிரம வனத்துள் போந்து கருநாளின் கரிசு அறுக்கும் குருநாதன் இருக்கை எதிர் கண்டான்-மன்னோ.

மேல்

#31 கண்டவன் அக் குருநாதன் கடைக்கணிக்கப்பெற்றதனால் கடத்தில் சற்றே திண் தகு தேறு இடச் சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்றத் தண்டம் எனக் கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பிப் பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால்.

மேல்

#32 கருணை நெடும் கடல் என்கோ கல்_ஆலின் அடி அமர்ந்த கடவுள் என்கோ அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுகக் குரு என்கோ அமுதம் என்கோ மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய்த் தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே

மேல்

#33 என்றானைக் கருணையொடும் சிவகுரு அங்கு எதிர்நோக்கி இளையோய் உன்றன் நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம் குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் பொன்றாத நிலை அருள்வோய் கேட்டு அருள்க என வணங்கிப் புகல்வான்-மாதோ

மேல்

#34 கற்றவர் சூழ் இத் தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னைப் பெற்றவன் பேர் வினைச்சி எனைப் பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும் சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயராச் சொல்வராலோ.

மேல்

#35 குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிகக் குடித்து நாக்குத் தடிப்பேறிற்று ஆதலினால் படிப்பு ஏறிற்றிலை அடியேன்-தனக்குக் கல்விப் பிடிப்பு ஏறிச் சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுதப் பெரிதும் கற்ற நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே.

மேல்

#36 தந்தை உணர்ந்து இவன் மிக நாத் தடிப்பேறினான் உடம்பும் தடித்தான் மற்றைப் புந்தியிலும் கார் இருப்புப் பொருப்பு உலக்கைக் கொழுந்து ஆனான் போதம் சாரா மந்தன் எனப் பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடிப் பந்தம் அனைப் பண்டம் எலாம் கடை உழன்று சுமந்துவரப் பணித்தான் எந்தாய்

மேல்

#37 அண்ணுறும் என் தந்தை_தாய்க்கு அடியனேன் கடைப்பிள்ளை ஆனது ஒன்றோ கண்ணுறு நல் கல்வியினும் கடைப்பிள்ளை ஆனேன் பின் கருதும் வாழ்க்கை நண்ணுறு பல் பண்டம் எலாம் கொள்வதினும் கடைப்பிள்ளை நானே ஆனேன் உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே.

மேல்

#38 பெரும் செல்வப் பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையாப் பிறந்த நாள் தொட்டு இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய் அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லாக் குறை ஒன்றே அடைந்திட்டேன் அ அரும் செல்வத்து ஆசை உளேன் பேடி மணம் நாடி மனம் வருந்தல் போன்றே.

மேல்

#39 இன்ன வகை உழல்கின்றேன் இத் தலத்தில் திரு_நாள் என்று இசைக்கக் கேட்டு இங்கு என் அனைய சிறுவர்களோடு எய்தினேன் திரு_பவனி இனிது கண்டேன் பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த தன் அனைய தவப் பயனால் தேவே நின் திரு_சமுகம் தரிசித்தேனே.

மேல்

#40 ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல் பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுகப் பெருமையாலே மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்விக் காதலுறு சிறியேனைக் காத்து அருள வேண்டும் எனக் கழறினானே.

மேல்

#41 அன்னவன் சொல் மொழி கேட்டுச் சிவகுரு அங்கு இளநிலா அரும்ப உள்ளே புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன் மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இத் தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருளச் சஞ்சலன் கை தொழுது சொல்வான்.

மேல்

#42 வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே ஆர்ப்பு உலவாச் சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண் போர்ப் புலியைப் பார்த்துவரப் போன கதையாய் முடியும் பொருளாய் என்னைச் சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியாச் சிறியனேனே.

மேல்

#43 கண் பார் என்று அயர்ந்து பணிந்து அழுது இரு கண் நீர் சொரியக் கலங்கினானை நண்பு ஆர் மெய்க் குருநாதன் நோக்கி இவண் இருந்திட நீ நயப்பாய் அப்பா பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான்.

மேல்

#44 உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடிக் கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே நீராடிக் கடிது போகிக் கொச்சியிலே செபம் முடித்துக் கொங்கணத்திலே புசித்துக்கொள் என்றாலும் மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே.

மேல்

#45 புல் அமுதே நல் அமுது புரைக் குடிலே புனை மாடம் புடைக்கும் பாறைக் கல் அணையே மெல் அணை நாள் கழிந்த பழம் கந்தையே கலை என்றாலும் அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி ஒல்லும் மனோதிட அணை கொண்டு அருள் போர்வை போர்த்து நலம் உடுக்கின்-மாதோ.

மேல்

#46 சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பிப் பொங்கித் தெய்வ நீடு அருள் கருணை நிறைந்து வழிந்து அழகு ஒழுகிச் செம்பொன் கஞ்சப் பொய்கை வாய் மலர்ந்த செழும் போது அனைய நின் முகத்தின் பொலிவு நோக்கும் செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே.

மேல்

#47 எவ்வகை நின் திருவுளப் பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய் அவ்வகை நின்றிடச் சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால் செவ்வகையில் குருநாதன் திரு_அடிக் கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ.

மேல்

#48 தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம் அருளுறு மெய்ச் சிவகுருவின் அடி வணங்கிச் சிறியோமை அடர்ந்த பாச மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த இருளுறும் ஓர் சிறுவனையும் காத்து அருள வேண்டும் என இரந்தார் ஐயன்.

மேல்

#49 மற்று அவனை எழுக எனக் கருணைபுரிந்து அமல முகம் மலர்ந்து நோக்கிப் புற்று அரவம் அரைக்கசைத்த ஒற்றி நகர்ப் பெருமானைப் போது மூன்றும் நற்றகை அன்புடன் தரிசித்து அவன் கோயில் பணியாற்றி நாளும் நம்-பால் கற்றவர்-தம் சொல்வழியில் கலை பயின்று நெறி நிற்கக் கடவாய் என்று.

மேல்

#50 தனி மலர் வாய்_மலர்ந்து அருளிப் பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கிப் புனித நெறியீர் இவனைப் புதியன் எனக் கருதாமல் புரிந்து நாளும் கனிவுற ஈண்டு இவன் அகத்தில் கல்லாமை எனும் இருளைக் கடியும் வண்ணம் இனிய கலை விளக்கிடுவீர் என்றான் சஞ்சலன் அது கேட்டு இன்பம் எய்தா.

மேல்

#51 அடியனேன் உய்ந்தனன் நின் அருள் நோக்கம் பெறற்கு ஏதுவாய தூய நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கித் தூசு ஒடுக்கி முறையால் பேசும் படியின் வாய்ப் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே.

மேல்

#52 வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகிப் போத மனச் செறிவு உடைய மாணாக்கர் சஞ்சலனைப் புரிந்து நோக்கி மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல் போது கலை பயின்று மற்றைப் போது எலாம் சிவ பணியே புரிதி என்றார்.

மேல்

#53 என்ற அருள் சிதம்பர மா முனிவர் அவன்றனை அருகே இருத்தி அன்பால் ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில் சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள மன்ற அவன் பருவம் அறிந்து அதற்கு இயைந்த கலை பயிற்றி மகிழ்வித்தாரால்.

@3.2.முயற்சிப் படலம்

மேல்

#1 அவ்வண்ணம் சஞ்சலன்-தான் புரிந்து இயற்றும் முயற்சி எலாம் அளவிட்டு ஓதச் செவ்வண்ணம் பழுத்த ஒற்றிச் சிவ_கொழுந்தின் திரு_அருளைச் சேர்ந்தோர்க்கு அன்றி இவ்வண்ணம் எனப் பகர்தல் பிறர்க்கு அரிதே ஆயினும் அ இறைவன் தாளை வெவ்வண்ணச் சிறியேன் உள் அமர்த்தி ஒருசிறிது அறிய விளம்புவேனால்.

மேல்

#2 மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்துப் பூவோர் வேலையிலே முயலுறக் கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி காலையிலே எழுந்து ஏகிக் கங்கையிலே மிக்கது எனக் கருதி மேலோர் ஓலையிலே பொறித்த நந்தி ஓடையிலே தெய்வ நல் நீர் ஓடி ஆடி.

மேல்

#3 வெண்ணிலவு ததும்பு திரு வெண்_நீறு ஐந்தெழுத்து ஓதி மிகவும் பூசி உள் நிலவு சிவகுருவின் அடித் துணையும் திருவொற்றி உவந்து மேவும் கள் நிலவு நுதல் கரும்பின் கழல் பதமும் அன்பினொடு கருதிச் சென்றே எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ.

மேல்

#4 முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய நல் நெறியே நடக்க அருள் போதம் எனும் செங்கோலை நடத்தாநின்ற மன்னவனே சிவகுருவாம் வள்ளலே நின் துணைப் பொன் மலர்_தாள் போற்றி.

மேல்

#5 அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று இருந்த திசை எது என்றால் இது எனச் சுட்டவும் தெரியாது இருந்த என்னைத் திருந்த அருள் கடை நோக்கம் செய்து அளித்த பெரும் கருணைச் செல்வமே நல் மருந்து அமுதம் அனைய அருள் சிவகுருவே போற்றி என வழுத்திப் பின்னர்.

மேல்

#6 ஆங்கு விடைகொண்டு குரு அருள் நோக்கால் சிவயோகம் ஆதி நண்ணி ஓங்கு திரு_கூட்டத்தைத் தனித்தனி நின்று இறைஞ்சி எனை உவக்கும் வண்ணம் தீங்கு அகற்றும் சிவகுருவின் திருவுளத்தை நாயேன் மேல் திருப்பி இன்பம் வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி.

மேல்

#7 குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்திப் பின்னர்ப் பொரு எல்லை அகன்று ஓங்கும் அன்பினொடும் அவண் நின்று போந்து அ ஒற்றித் திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ.

மேல்

#8 தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிகத் தொழுது ஏத்தத் துலங்கும் திங்கள் கொழுந்து அசையச் சடை அசையக் கூத்தாடிக்கொண்டே எம் கோமான் நாளும் எழுந்தருளும் பெரும் செல்வத் திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்குப் பின்னர்.

மேல்

#9 உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம் அளந்த திரு_கோபுரம் கண்டு அஞ்சலிசெய்து இறைஞ்சி முகில் ஆதி சூடி இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ.

மேல்

#10 உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடைக் கொடியை உவந்து நோக்கிக் கள் புனலில் குளித்து இரண்டு கை குளிரத் தொழுது இறைஞ்சிக் கருணைசெய்யும் ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ.

மேல்

#11 அம்பு ஒடித்துப் பகை துரக்கும் கயமுகனைக் கருணையினால் ஆளும் வண்ணம் கொம்பு ஒடித்து வீசி அவன் கோள் ஒடித்துக் கோல் ஒடித்துக் கோது_இல் விண்ணோர் வம்பு ஒடித்து வாழ்வித்த ஆனைமுக_பெருமானை வணங்கித் தன் தே கம் பொடித்துக் கைகுவித்துக் கருத்து உருகிக் கண்களில் நீர் காண நின்றே.

மேல்

#12 தடை உடைக்கும் தனி முதலே தண் அமுதே எங்கள் பெருந்தகையே ஓங்கி மடை உடைக்கும் பெரும் கருணை மத_மலையே ஆனந்த_மலையே உள்ளத்து இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயைக் கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி எனக் கனிந்து-மன்னோ.

மேல்

#13 திறம் பழுத்த அருணந்திதேவர் அடி வணங்கி அருள் சிவத்தின் செய்ய நிறம் பழுத்த மலர்_அடியை மால் முதலோர் அழுக்காறு நிரம்ப மேற்கொண்டு அறம் பழுத்த விடை உருவத்து அண்ணலே எனப் பரவி அனுக்ஞை பெற்று மறம் பழுத்தார்க்கு அரிய திரு_விமானத்தை அனந்த முறை வலம்செய்து ஏத்தி.

மேல்

#14 வன் நிதியை மருவாத மா தவரும் மால் அயனும் வணங்கிப் போற்றும் சந்நிதியைச் சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்பப் பல் கால் நல் நிதி பெற்றிடப் பணிந்து கரம் குவித்துப் படம்பக்கநாதன் என்னும் செம் நிதியில் பரஞ்சுடரைப் பொன் நிதி கண்டவன் போல் கண் செழிக்கக் கண்டு.

மேல்

#15 உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்தக் கடல் முழுதும் கண்கள் எழக் கர சரணம் கம்பம் எழக் கருத்தினோடு மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாசத் திடல் முழுதும் அகன்று அன்பே வடிவாக நின்று துதிசெய்வான்-மாதோ.

மேல்

#16 உடையானே எவ்வுயிர்க்கும் ஒரு முதலே இளம்பிறை கொண்டு ஓங்கும் கங்கைச் சடையானே அன்பர் உளத் தாமரையில் அமர்ந்த பெருந்தகையே வெள்ளை விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை அடையானே திருவொற்றி ஆலயத்து எம் அரசே நின் அடிகள் போற்றி.

மேல்

#17 கலை_மகளும் திரு_மகளும் கழுத்து அணிந்த மங்கலநாண் கழற்றா வண்ணம் அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ மலை_மகளை ஒரு புறம் வைத்து அலை_மகளை முடியிட்ட மணியே மேருச் சிலை வளைத்துப் புரம் எரித்த சிறு_நகை எம் பெருமான் நின் திரு_தாள் போற்றி.

மேல்

#18 மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும் குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குணப் பொன்_குன்றே பொறையாளர் வழுத்தும் ஒற்றிப் பூங்கோயில் பெருமானே போற்றி போற்றி.

மேல்

#19 எனப் பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தித் தூக்கும் வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர்ப் பொன்_தாளும் மனப் பருவ மலர் மலரக் கண் குளிரக் கண்டு மிக வணங்கிப் பல் கால் இனப் பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே.

மேல்

#20 காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை ஆரணத்துள் பொருள் ஆகி அனைத்துமாய் யாதொன்றும் அல்லாது ஆகிப் பூரண சின்மய வெளியில் சச்சிதாநந்த நடம்புரியும் தேவே ஏரணவு நடராயப் பெருமானே எம்மானே என்று வாழ்த்தி.

மேல்

#21 சடை ஆடச் சடை மீதில் சலமகளும் இளமதியும் ததும்பக் கொன்றைத் தொடை ஆடக் கருணை விழிக் கடை துளும்பப் புன்னகை உள் துலங்க வெள்ளைக் கொடை ஆட இமய மட_கொடி ஆடத் தனி நெடு வேல் குழந்தை மேவி இடை ஆடப் பவனிவரும் எம் பெருமான் தியாகன் எதிர் இறைஞ்சி நின்று.

மேல்

#22 இருந்தே என் உளத்து இலங்கும் செழும் சுடரே ஓவாத இன்பமேயா வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள் பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி.

மேல்

#23 என்று துதித்து அருள் வடிவில் கல்_ஆலின் அடி அமர்ந்த இறைவன் முன் நின்று ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை இன்று மகிழ்ந்து ஆட்கொண்ட சிவகுருவே சற்குருவே என்று வாழ்த்தி.

மேல்

#24 மயில் ஏறும் பெருமான் முன் இறைஞ்சி மலர்க் கரம் கூப்பி வணங்கி நின்றே அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர் கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீலக் குயில் ஏறு மொழிக் கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி.

மேல்

#25 ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும் ஆடுகின்ற பருவத்தே அடியேன் உள் அமர்ந்து அருளி அன்பால் நின்னை நாடுகின்ற வகை சிறிதே அளித்து ஈண்டு குரு ஆகி நலம் தந்து உள்கிப் பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி எனப் பரவி-மன்னோ

மேல்

#26 பல் முறை நாத் தழும்பேறத் துதித்து நெடும் கடல் முழுதும் பருகிக் கந்நாள் நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன் சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி.

மேல்

#27 மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கித் தேன் மலர்ப் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன் வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாளச் சூலத்து ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி.

மேல்

#28 நிலையாய் நின்று உயர்ந்தவர்கட்கு அருள்புரியும் பரம்பரையை நிமலை-தன்னைத் தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேருச் சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்தத் தேனே மானே மலையான்-தன் ஒரு மகளே வடிவு உடைய இளங்குயிலே மயிலே போற்றி.

மேல்

#29 வான் வளர்த்த மலர்_கொடியே மலை வளர்த்த மடப் பிடியே மணியே வாசக் கான் வளர்த்த மலர்க் கோதைக் கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை மான் வளர்த்துச் சடையில் இளமதி வளர்த்த ஒரு கிழவன் மகிழ வாய்த்த தேன் வளர்த்த மொழிக் குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி.

மேல்

#30 போற்றி எனப் புகழ்ந்து சண்பைப் புனித மறைக் குல_மணியைப் போந்து போற்றி நால் திசையும் புகழ்கின்ற நாவரசைப் பணிந்து சிவஞானம் தேறித் தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனைத் தொழுது மாயை மாற்றிய நம் மாணிக்கவாசகப் பொன் மலை அடியை வணங்கி-மாதோ.

மேல்

#31 தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரைத் தொழுது போற்றி விண்டு முதல் நெருங்கு திரு_வாயலிடை அன்பினொடு மேவி ஆங்குத் தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை கொண்டு நடம் கொண்டு நெறி கொண்டு மகிழ் கொண்டு மனம் குளிர்ந்தான் பின்னர்.

மேல்

#32 கரு அலகிட்டு அருள்புரியும் கண்_உடையான் விமானத்தின் கனகச் சூழல் மரு அலகின் மணித் திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம் திரு அலகிட்டு அணி சாந்தத் திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண் ஒரு அலகில் திரணமொடு புல் ஆதிகளைக் களைந்து ஆங்கு வந்து-மாதோ.

மேல்

#33 புறத்து அணுகித் திரு_மதிலின் புறத்தினும் நல் திரு_குளத்தின் புறத்தும் ஞானத் திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின் உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்திப் பாசம் அறத் தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து.

மேல்

#34 கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய திரு முடிக்கும் செங்கமலத் திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கித் தூ நீர் உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ

மேல்

#35 தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதிக் கோங்கு வழை மயிலை நறு மல்லிகை ஒண் தளவ மலர்க் குரவம் தும்பைப் பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து ஓங்குற மெய்ப் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே.

மேல்

#36 பொன் மாலை அனைய கொன்றைப் பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்குச் சாத்து திரு இண்டை மாலை கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ.

மேல்

#37 மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சிப் பூசனைசெய் வேலை-தன்னில் ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடிப் பாடி ஆண்டு அமரும் பரிவாரத்தேவர் முதல் அனைவரையும் அன்பால் ஏத்தி வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண்.

மேல்

#38 சீரேனம் அறியாத திரு_அடியும் குரு அடியும் சிந்தித்து ஏகி யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும் போர் ஏர் நெற்சோறேனும் புதுக் கஞ்சியேனும் அன்றிப் புளித்த காடி நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி.

மேல்

#39 அம் குருவின் தகை தெரிக்கும் ஆச்சிரமத்திடை அணுகி அன்பினோடும் தம் குருவின் அடி முடி மண்ணுற வணங்கி இரு கரமும் தலை மேல் கூப்பி எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால் இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால்.

மேல்

#40 எனத் தொழுது நின்றானைக் கருணையொடும் கடைக்கணித்தே இறைவன் கோயில் கனத்த பணிபுரிந்தனை நின் இளைத்த உடல் ஆங்கு அதனைக் காட்டுகின்ற தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்திச் சினத் தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கிச் சிந்தித்து ஏத்தி.

மேல்

#41 அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து மிக்கு ஊட்டும் அன்னையினும் மிகப் பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம் கைக்கூட்டக் காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ.

மேல்

#42 வாய்பூசிக் கைபூசி வந்து சிவகுருவின் அடி வணங்கி நின்றான் தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனைப் பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கிப் பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன் பாய் பூசித்து இறைவன் அடி வணங்குகின்ற நல்லோரைப் பணிந்து வாழ்த்தி.

மேல்

#43 அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும் இன்புறக் கண்_நுதலான்-தன் திரு_கோயில் பணிபுரிந்து ஈண்டு இருக்கும் நல்லோர் துன்பு அறச் சொல் வழி எந்த வழி அந்த வழி நடந்து துகள்_இல் கல்வி பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க எனக் குரவன் புகன்றான்-மன்னோ.

மேல்

#44 அம் மொழியாம் செம்மணியை அடி முடியின் அணிந்து மனம் மலர்ந்து நாயேன் இ மொழி ஆர்_அமுது அருந்த என்ன அரும் தவம் முன்னர் இயற்றினேனோ செம்மொழி ஆரணம் பரவும் சிவகுருவே எனத் துதித்துச் சினம்கொண்டு ஓதும் வெம் மொழி ஒன்று இல்லாத திரு_கூட்டத்தவர்களொடும் மேவினானால்.

மேல்

#45 கொற்றவர் புகழும் அ கூட்டம்-தன்னில் வாழ் முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர் உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்து அவன் கற்றிடற்கு ஏற்ற நல் கலைகள் தேற்றவே.

மேல்

#46 உளம்கொண்டு அங்கு அவன்றனை உழை இருத்தி ஓர் வளம் கெழு கன்னலின் மட்டும் இன் சுவை அளந்து அறிந்து ஊட்டும் நல் அன்னை போல் மனக் களங்கு அறப் பருவ நேர் கலை பயிற்றிட.

மேல்

#47 பயின்றனன் சஞ்சலன் பரிந்து தெள் அமுது அயின்றனன் ஆம் என அகம் களித்தனன் வியந்தனன் ஆங்கு அவர் விடுக்க மீண்டும் நல் வயம்தரு கோயிலின் மருங்கு நண்ணினான்.

மேல்

#48 அன்புடன் புனித நீராடி நீறு அணிந்து இன்புடன் கண்டிகை எடுத்துப் பூண்டு தன் துன்பு அறக் குரு பதம் துதித்துக் கோபுரம் முன்புறப் பணிந்து மாமுகனைப் போற்றியே.

மேல்

#49 அந்தி ஆர் வண்ணனை அந்திப் பூசனை சந்தியாநின்ற அ சமயத்து எய்தி உள் புந்தியால் நினைந்து உடல் புளகம் போர்த்திட வந்தியாநின்று அடி வணங்கி ஏத்தியே.

மேல்

#50 பாங்கு அமர் சிவ_பரம்பரையை வாழ்த்திக் கை ஓங்கு அயில் பிள்ளையை உவந்து போற்றி நின் றாங்கு அமர் மற்று உள அமல மூர்த்திகள் பூங்கழல் வணங்கி ஓர் புறத்து இருந்தரோ.

மேல்

#51 வரு நெறி மூலமாம் மந்திரத்தினை மருவிய அக்க மா மணி வடம் கொடு இருமைகொள் ஆயிரத்தெட்டின் எல்லையாம் உருவுறச் செபம் முடித்து உளத்தின் உன்னியே.

மேல்

#52 எழுந்து வீழ்ந்து இறைஞ்சி நின்று ஏத்தி அன்பினில் அழுந்து நெஞ்சகத்தொடு அமலமாம் சிவ_ கொழுந்து அமர் தளி வலம்கொண்டு கண்ணடி உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே.

மேல்

#53 மால் அயற்கு அரிய நம் வள்ளலார் வளர் ஆலயத்து இரவிடை ஆற்றத் தக்கன ஏல நெய்த் திரு_விளக்கு ஏறப் பார்த்திடும் மூல மெய்த் திரு_பணி முதல ஆற்றியே.

மேல்

#54 விடை கொடு புறத்து உறீஇ விமலன் அன்பர்கட்கு அடைவுறப் பணிகள் செய்து அகம் குளிர்ந்து வான் தடை பொழில் ஆச்சிரமத்தில் சார்ந்து அவண் இடை மகிழ் குரு அடி இறைஞ்சி ஏத்தியே.

மேல்

#55 எண்ணுறு தவர் அடிக்கு ஏவல் ஆற்றியும் கண்ணுறு பாடம் உள் கருதியும் அவை நண்ணுறக் கேட்டும் சொல் நயங்கள் நாடியும் பண்ணுறு பொருள் நலம் பாங்கின் ஓர்ந்துமே.

மேல்

#56 காமமும் வெகுளியும் கடும் சொல் ஆதிய நாமமும் கனவினும் நண்ணல் இன்றியே சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய தாமமும் மணியும் போல் தாங்கி ஓங்கியும்.

மேல்

#57 கண்வளர்ந்திடுதல் ஐங்கடிகை மற்றைய திண் வளர் பொழுது எலாம் தேசிகப்பிரான் பண் வளர் திரு_அடிப் பணியும் எம்பிரான் ஒண் வளர் பணிகளும் உஞற்றி வைகினான்.

மேல்

#58 மாசு_அறு தவர்கள் உள் மகிழ்ந்து நோக்கவும் தேசிகன் திருவுளம் திரும்பித் தேக்கவும் ஆசு_அறு கலை பயின்று அமர்ந்துளான் இவன் ஏசு_அற இவ்வணம் இயற்றும் நாளினே. ** தனிப் பாசுரங்கள்

@4.1.மூத்த பிள்ளையார் திருப் பாசுரங்கள்

** (1) காப்பு

மேல்

#1 ஐங்கரன் அடி_மலர் இங்கு உற நினைதி நின் பொங்குறு துயர் அறும் மங்கல் இன் மனனனே

மேல்

#2 திருமால் அறியாச் சேவடியால் என் கருமால் அறுக்கும் கணபதி சரணம்

@5.(2).தெய்வத் தனித் திரு மாலை

மேல்

#1 துதி பெறு கணபதி இணை அடி_மலரும் பதி தரு சரவணபவன் மலர்_அடியும் கதி தரு பரசிவன் இயல் அணி கழலும் மதியுற மனன் இடை மருவுதும் மிகவே

மேல்

#2 அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும் பொருள் உறு சண்முகப் புனிதன் தாள்களும் தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும் மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம்

மேல்

#3 அற்புதக் கணபதி அமல போற்றியே தற்பர சண்முக சாமி போற்றியே சிற்பர சிவ மகாதேவ போற்றியே பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே

மேல்

#4 மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி தா தங்க மலர்க் கொன்றைச் சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி சீதம் கொள் மலர்க் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி

மேல்

#5 கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணஞ் சரணம் தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம் சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம் உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம்

மேல்

#6 திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவம் உணர்ந்த இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவாக் குரு மா மலர்ப் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே

@6.(3).மங்களம்

மேல்

#1 புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ் எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம்

மேல்

#2 போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற நீதராம் சண்முகநாதற்கு மங்களம்

மேல்

#3 பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை ஈசர் எமது நடராஜற்கு மங்களம்

மேல்

#4 பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற வாமி எனும் சிவகாமிக்கு மங்களம்

மேல்

#5 புங்கம் மிகும் செல்வம் துங்கம் உறத் தரும் செங்கமலத் திரு_மங்கைக்கு மங்களம்

மேல்

#6 பூண் இலங்கும் தன வாணி பரம்பர வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம்

மேல்

#7 புண்ணியர் ஆகிய கண்ணியராய்த் தவம் பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம் **. 2. முருகவேள் திருப் பாசுரங்கள்

@7.(1).கந்தர் திருப் பதிகம் - சிங்கபுரி

மேல்

#1 பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல் நன்மை மிகு செந்தமிழ்ப் பா நாம் உரைக்கச் சின்மயத்தின் மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள் பொய் அகலப் போற்றுவம் இப்போது

மேல்

#2 சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும் ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும் தேர் ஆரும் நெடு வீதிச் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#3 உம்பர் துயர் கயிலை அரற்கு ஓதிடவே அப்பொழுதே உவந்து நாதன் தம் பொவு இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய் திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#4 பொல்லாத சூர்க் கிளையைத் தடிந்து அமரர் படும் துயரப் புன்மை நீக்கும் வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய் செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#5 பண்டுறு சங்கப் புலவர் அரும் சிறையைத் தவிர்த்து அருளும் பகவனே என் புண் தரு இ நோய் தணிக்கப் புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய்த் தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#6 தாவாத வசியர் குலப் பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டகத் தாள் முறையில் தாழ்ந்து தேவாதி_தேவன் எனப் பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க தீ வாய் இப் பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#7 வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள் தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இப் பிணியைத் தணிப்பாய் வாசத் தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#8 மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள் ஒட்டாதார் வலி அடக்கி அன்பர் துதி ஏற்று அருளும் ஒருவ காவாய் தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#9 முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும் புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#10 விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும் கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியைக் காதலோடு மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என் திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

மேல்

#11 மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின் ஆசு இல் தவப் பேறு அளிக்க வள்ளிமலை-தனைச் சார்ந்தே அங்குக் கூடி நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய் தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

@8(2).திருப்பள்ளித் தாமம் தாங்கல்

மேல்

#1 வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல் தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்குத் தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே

மேல்

#2 தொல்லைக் குடும்பத் துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம் அல்லல் அகற்றிப் பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி செல்லத் தணிகைத் திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே

மேல்

#3 அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும்_பகலும் அதின் நினைவாய்க் கவலைப்படுவதன்றி சிவ_கனியைச் சேரக் கருதுகிலேன் திவலை ஒழிக்கும் திரு_தணிகைத் திருமால் மருகன் திரு_தாட்குக் குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே

@9.(3).முருகவேள் தனித் திருத் தொடை

மேல்

#1 திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே உலகம் எலாம் உடையோனே வானவனே

மேல்

#2 கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என் ஊழுக்கு அழுவேனோ ஓயாத் துயர்ப் பிறவி ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன் பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம்

மேல்

#3 சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையைத் தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண் கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே

மேல்

#4 கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்துக் கவ்வும் பொல்லா வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி மறி பிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனம் மறுகி வருந்தத் தங்கள் குறி பிடித்துக் காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே

மேல்

#5 தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம் ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதாத் ததிதி என மயிலில் தான் ஆடி நாளும் திதிதி தரும் தணிகைத் தே

மேல்

#6 ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள் தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டாத் தொய்யில் அழிக்கும் துணை முலையாள் உள்ளகத்தாம் மையல் அழிக்கும் மருந்து

மேல்

#7 ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான் ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும் தோற்றும் தணிகையன் பொன் தோள்

மேல்

#8 நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின் என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ் சற்குரு என் சாமிநாதன். ** 3.சிவபெருமான் திருப் பாசுரங்கள்

@10.(1).அருண்மொழி மாலை

மேல்

#1 பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன் இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான் எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார் அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#2 மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன் ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன் வரு காவிரிப் பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார் அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#3 விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன் சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொல்லும் என்றேன் பட்டு உண் மருங்கே நீ குழந்தைப் பருவம்-அதனின் முடித்தது என்றார் அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#4 வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும் மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார் சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார் ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#5 உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம் செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார் அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#6 தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார் மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார் அண் கார்க் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#7 அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும் இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார் துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன் அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#8 விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில் வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார் தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார் அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#9 மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன் எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன் உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார் அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#10 ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன் பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார் மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும் அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#11 வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன் ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான் சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றார் ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#12 தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன் ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன் ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார் ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#13 ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர் வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார் எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார் அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#14 ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன் இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர் மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார் அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#15 பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம் ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என் நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார் ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#16 தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன் களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார் அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#17 ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன் தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத் தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#18 மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான் முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார் என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார் அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#19 வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன் குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன் உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார் அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#20 வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார் சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார் ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#21 புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார் வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன் வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார் அயப் பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#22 தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன் திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார் வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்குக் காட்டு என்றார் அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#23 உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன் முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார் சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார் அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#24 ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச் சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம் ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#25 வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன் நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரைக் கண்டு அது தன் திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார் அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#26 மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன் துய்ய அதன் மேல் தலைவைத்துச் சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார் உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார் ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#27 தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார் ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய் ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#28 வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் இயலாய் இட்ட நாமம் அதற்கு இளைய நாமமே என்றார் செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#29 என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல் பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார் மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார் அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#30 நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன் கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன் வேல் ஆர் விழி மாத் தோலோடு வியாளத் தோலும் உண்டு என்றார் ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

மேல்

#31 முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன் கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார் அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

@11.(2).இன்ப மாலை

மேல்

#1 ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான் என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன் துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன் குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே.

மேல்

#2 கான் ஆர் சடையீர் என் இரு கைக் கன்றும் பசுப் போல் கற்றது என்றேன் மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான் ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் நான் ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே.

மேல்

#3 வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என் மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர் ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால் ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே.

மேல்

#4 இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர் பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார் தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார் கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே.

மேல்

#5 ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே உருக்குகின்ற வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காமப் பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார் நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே.

மேல்

#6 கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர் மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார் அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார் நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே.

மேல்

#7 சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை மிகும் சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார் ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார் சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே.

மேல்

#8 ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும் பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார் மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார் கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே.

மேல்

#9 வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர் உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார் கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார் தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே.

மேல்

#10 ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார் பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார் சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே.

மேல்

#11 கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் கடி நகரீர் தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார் துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என் பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே.

@12.(3).பழமலையார் திருப் பதிகம்

மேல்

#1 திருமால் கமலத் திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தைக் கரு மால் அகற்றும் தனி மருந்தைக் கனகசபையில் கலந்த ஒன்றை அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கைக் குரு மா மலையைப் பழமலையில் குலவி ஓங்கக் கண்டேனே

மேல்

#2 வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதைத் தேனை அளிந்த பழச் சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை ஞான_மலையைப் பழமலை மேல் நண்ணி விளங்கக் கண்டேனே

மேல்

#3 தவள நிறத்துத் திரு_நீறு தாங்கும் மணித் தோள் தாணுவை நம் குவளை விழித் தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியைக் கவள மத_மா கரி உரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப் பவள மலையைப் பழமலையில் பரவி ஏத்திக் கண்டேனே

மேல்

#4 இளைத்த இடத்தில் உதவி அன்பர் இடத்தே இருந்த ஏம வைப்பை வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியைத் திளைத்த யோகர் உளத்து ஓங்கித் திகழும் துரியாதீதம் மட்டும் கிளைத்த மலையைப் பழமலையில் கிளர்ந்து வயங்கக் கண்டேனே

மேல்

#5 மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியைப் பசுபதியை அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல் கிடந்த பச்சைப் பெரு மலைக்குக் கேடு இல் அருள்தந்து அகம் புறமும் கடந்த மலையைப் பழமலை மேல் கண்கள் களிக்கக் கண்டேனே

மேல்

#6 துனியும் பிறவித் தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு இனியும் பருக்கும் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும் பனி உந்து இமயமலைப் பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக் கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே

மேல்

#7 கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுதத் தருணச் சுவையை அச் சுவையில் சார்ந்த பயனைத் தனிச் சுகத்தை வருணப் பவளப் பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால் பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்கக் கண்டேனே

மேல்

#8 என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனைப் பொன் ஆர் வேணிக் கொழும் கனியைப் புனிதர் உளத்தில் புகும் களிப்பைக் கல் நார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத் தெளிவைப் பல் நாகப் பூண் அணி மலையைப் பழையமலையில் கண்டேனே

மேல்

#9 நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என் அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தைச் சொல்ல முடியாத் தனிச் சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற வல்ல மலையைப் பழமலையில் வயங்கி ஓங்கக் கண்டேனே

மேல்

#10 ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்தப் பெரும் கடலை ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தைப் பாதி ஆகி ஒன்று ஆகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச் சோதி மலையைப் பழமலையில் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே

@13.(4).ஆநந்த நடனம்

மேல்

#1 பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#2 ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#3 தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆடக் கவின் செய்யும் மதி வேணி ஆட செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில் மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#4 பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார் போகமே பெரிது எனக் கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியைச் செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன் சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ மெய்யான நிலை பெறக் கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின் மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும் ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#5 போது ஆரும் நான்முகப் புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால் போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியைக் காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள் மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன் ஆதாரமான அம்போருகத்தைக் காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#6 பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_ பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை கண்ணார நெல்லி அம் கனி எனக் காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில் கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய் தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும் தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என் அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#7 பவமான எழு வகைப் பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும் பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு எனப் படராது மறை அனைத்தும் உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும் உளவான வழி ஈது எனக் காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல் தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம் தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே அவமான கருணைப் பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#8 சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர் சம்புவாம் என்னும் மறை ஆகமத் துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே இன்ப மயமாய் இனிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய அந்தணர்கள் பல கோடி முகமனாடப் பிறங்கு அருள் முக விலாசத்துடன் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#9 நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம் நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம் வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திருத் துணை மலர்த் தாட்கு உரியனாய்த் துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய் ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

மேல்

#10 மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின் மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினைத் தரும் வள்ளலாய் மாறா மிகத் திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞானச் செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாக வெம் பணிகொண்ட கடவுளாய்க் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய்ப் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய் அணி கொண்ட சுத்த அனுபூதியாய்ச் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

@14.(5).ஞான சிதம்பர வெண்பா

மேல்

#1 அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால் தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே ஆ வகை ஐந்தாய்ப் பதம் ஆறு ஆர்ந்து.

மேல்

#2 நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர் போர்க்கு இசைந்தது என்று அறியாப் புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தில்லை மணி மன்று ஒன்றுவானை மகிழ்ந்து.

மேல்

#3 ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர் ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு என்றே எனக்கு நினக்கும்.

மேல்

#4 கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்குக் கைத் தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல் காணாயேல் உண்மைக் கதி நிலையைக் கைக் கணியாக் காணாயே நெஞ்சே களித்து.

மேல்

#5 கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று எல்லோமும் இங்கே இருக்கின்றோம் சொல்லோம் அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும் பொதுவாய் நடிக்கின்ற போது.

மேல்

#6 அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு அதில் ஏழையைப் புர மெய் அன்பால் அதிலே நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம் பலம் மேவக் காட்டும் பரிசு.

மேல்

#7 நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன் அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ பார்த்தாய் இப் பாட்டின் பரிசு.

மேல்

#8 நடிப்பார் வதி தில்லை நல் கோபுரத்தின் அடிப் பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப் பாய நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும் இன்று எவ்விடத்து என்னில் இப் பாட்டில்.

மேல்

#9 பூமி பொருந்து புரத்தே நமது சிவ காமி-தனை வேட்டுக் கலந்து அமர்ந்தான் நேமி அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்தக் கூத்தில் களித்தான் அவன்-தான் களித்து.

@15.(6).வைத்தியநாதர் பதிகம்

மேல்

#1 ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல் ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம் பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவைப் பழம் எறிந்தே உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம் வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#2 உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய் உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்பத் தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றித் தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்துக் கையில் கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#3 உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி ஓதுகின்றார்-தமைக் கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால் கம்பர் வாய் இவர் வாய்க் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய்க் கத்தல் இவர் வாய்க் கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர் இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர் இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#4 கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியாச் செய்யலாம் கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம் மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம் இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே எங்கள் குல_தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண் வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#5 படி அளவு சாம்பலைப் பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணைப் பழமோ எனக் கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் செடி அளவு ஊத்தை வாய்ப் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திடக் காட்டி நகை-தான் செய்து வளையாப் பெரும் செம்மரத் துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம் மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#6 பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம் பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில் பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்பப் பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார் கண் கொண்ட குருடரே என்று வாய்ப் பல் எலாங் காட்டிச் சிரித்து நீண்ட கழுமரக் கட்டை போல் நிற்பார்கள் ஐய இக் கயவர் வாய் மதம் முழுதுமே மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#7 திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியாச் சுகம் சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால் இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம் இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுகப் பிடித்து அணைக்கப் பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அப் பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#8 பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம் பித்தன் வாய்ப் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால் ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர்த் தொடை ஆதியா வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார் வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#9 ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால் இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#10 கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமைக் காண்பதே அருமை அருமை கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் எனக் கருணையால் அவர் வலிய வந்து இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய்த் தொழுது தங்கட்கு இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம் பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும் போன்றிடார் இவர்களைக் கூரை போய்ப் பாழாம் புறச் சுவர் எனப் புகலலாம் வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#11 மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவக் கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலாக் கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார் ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும் ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய் மை ஓர் அணுத்துணையும் மேவுறாத் தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

மேல்

#12 இளவேனில் மாலையாய்க் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய் ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய்த் தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால் போல் தழைத்திடும் நிலாக் காலமாய்த் தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசைப் பாடல் இடமாய் களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய்க் களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடிக் கழல் நிழல் சுகம் நிகருமே வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல் மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

@16.(7).சிவபெருமான் தனித் திருஅலங்கல்

மேல்

#1 மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன் கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிகப் பலவாம் எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி

மேல்

#2 சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

மேல்

#3 வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய்க் கொள்ளியால் என் மூட்டைத் தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும் தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர் பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே.

மேல்

#4 மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_ கோன் முடி மேலும் போய்க் குலாவுமே வான் முடி நீர் ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர்த் தியாகரை நாம் சார்ந்து வலம்செய் கால்கள் தாம்.

மேல்

#5 சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலாச் சுகமாம் வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர் மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன் சேறு வேண்டிய கயப் பணைக் கடல் சார் திகழும் ஒற்றியூர்ச் சிவ_பரஞ்சுடரே.

மேல்

#6 ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான் ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண் பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி எனப் புகழும் மலை-தனை ஓர் பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவது என் உலகே

மேல்

#7 சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கித் தனித்த மலை சபையில் தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான் ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புதப் பொன்_மலை நல் பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவது என் உலகே

மேல்

#8 ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலாப் பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற ஒன்றிரண்டு தாறு புடை ஓங்கும் பழமலையார் மின் திரண்டு நின்ற சடை மேல்

மேல்

#9 திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச் சிவஞான நிலை விளங்கச் சிவாநுபவம் விளங்கத் தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம் மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே

மேல்

#10 இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம் அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளாப் பிள்ளைகளைப் பெற்ற தோஷம் விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே

மேல்

#11 சச்சிதாநந்த சிற்சபையில் நாடகம் பச்சிதாம் திரு_உருப் பாவை நோக்கிட மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே

மேல்

#12 உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய் இருத்தல் இன்றி அக் குணங்களை என்றும் ஆண்டருளும் கருத்தன் ஆகையில் குணேசன் அக் குணவிகாரத்தில் பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன்

மேல்

#13 களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன் வளம் கொளத் தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால் விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன்

மேல்

#14 வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம் ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர்

மேல்

#15 உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன் சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடித் தலத்தும் நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் எனத் தெளிவீர்

மேல்

#16 உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான் எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான் விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறைச் சடை வித்தக வள்ளலே

மேல்

#17 நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன் ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே.

மேல்

#18 பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன் அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே

மேல்

#19 சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே.

மேல்

#20 இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன் மாமாமாமாமாமா மாமாமாமாமாமா மாமாமாமாமாமாமா

மேல்

#21 தத்தா தனத் தத்தைத்தா என்று அரங்கன் தனி நடிப் பா தத்தா தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பா தம் தா தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பா தத்து ஆதனத்தத்தைத் தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே **. திருமால் திருப் பாசுரங்கள்

@17(1).திவ்வியநாம சங்கீர்த்தனம்

மேல்

#1 காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள் சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம் நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே.

@18.(2).இராமநாமப் பதிகம்

மேல்

#1 திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத் தரு_மகனைக் காத்து அருளக் கரத்தே வென்றித் தனு எடுத்த ஒரு முதலே தருமப் பேறே இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் மரு மலர்ப் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே.

மேல்

#2 கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர் தலைக் கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மைத் தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள நிலைக் கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே.

மேல்

#3 மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன் விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன் புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக் கண்ணாளா சுடர்க் கமலக் கண்ணா என்னைக் கைவிடில் என் செய்வேனே கடையனேனே.

மேல்

#4 தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றிச் சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடயக் காட்டில் இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே.

மேல்

#5 வான் வண்ணக் கரு முகிலே மழையே நீல மணி வண்ணக் கொழும் சுடரே மருந்தே வானத் தேன் வண்ணச் செழும் சுவையே ராம நாமத் தெய்வமே நின் புகழைத் தெளிந்தே ஓதா ஊன் வண்ணப் புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ கான் வண்ணக் குடும்பத்திற்கு இலக்கா என்னைக் காட்டினையே என்னே நின் கருணை ஈதோ.

மேல்

#6 பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலகப் புணர்ப்பை வேண்டி என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான் பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே.

மேல்

#7 அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய மறம் பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மைத் திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே.

மேல்

#8 கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னைப் புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே.

மேல்

#9 மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம் ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப் புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே.

மேல்

#10 கூறுவதோர் குணம் இல்லாக் கொடிதாம் செல்வக் குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம் ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன் ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னைச் சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறியனேனே.

@19.(3).வீரராகவர் போற்றித் திருப்பஞ்சகம்

மேல்

#1 தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி வண்ண மா மணியே போற்றி மணி வண்ணத் தேவா போற்றி அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி.

மேல்

#2 பாண்டவர் தூதனாகப் பலித்து அருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

மேல்

#3 மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி.

மேல்

#4 இளம் கொடி-தனைக் கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே களங்கம்_இல் விபீடணர்க்குக் கன அரசு அளித்தாய் போற்றி துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

மேல்

#5 அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கைப் புனிதா போற்றி வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி. **. 5.அம்மை திருப் பாசுரங்கள்

@20(1) பெரியநாயகியார் ஸ்தோத்திரம்

மேல்

#1 உரிய நாயகி ஓங்கு அதிகைப் பதித் துரிய நாயகி தூய வீரட்டற்கே பிரிய நாயகி பேர்_அருள் நாயகி பெரியநாயகி பெற்றியைப் பேசுவாம்

மேல்

#2 உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வத் திருவே கலைக் குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே அரிய பெரியநாயகிப் பெண் அரசே என்னை ஆண்டு அருளே

மேல்

#3 தன் நேர் அறியாப் பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச் சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித் தாயே மின்னே மின் ஏர் இடைப் பிடியே விளங்கும் இதய_மலர் அனமே வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இள மயிலே பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே அரிய பெரியநாயகிப் பெண் அரசே என்னை ஆண்டு அருளே

@21.(2) இரேணுகை தோத்திரம்

மேல்

#1 சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும் பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய் ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

மேல்

#2 உவந்து ஒரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும் நவம் தரு மதியம் நிவந்த பூங் கொடியே நலம் தரு நசை மணிக் கோவை இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு ச்

மேல்

#3 விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழத் திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும் வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

மேல்

#4 புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய் நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய் விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய் எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

மேல்

#5 மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல் சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய் அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய் இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

@22.(3).இலட்சுமி ஸ்தோத்திரம்

** திருக் கண்ணமங்கை

மேல்

#1 உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என் வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கைத் தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே

@

23.(4).சரஸ்வதி ஸ்தோத்திரம்

மேல்

#1 அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல் பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய வாக்கு இறைவி நின் தாள்_மலர்ச் சரணம் போந்தேனைக் காக்கக் கடன் உனக்கே காண். ** திருஞானசம்பந்தர் திருப் பாசுரங்கள்

@24.(1).சமரச சாநுப வாநுக்கிரக அருட்குரு ஸ்தோத்திரம்

மேல்

#1 உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே 5

மேல்

உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலைச் சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய்ப் போத நெறியே அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே ஐம்பூதம் ஆதி நீ அல்லை அத் தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே 10

மேல்

அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே 15

மேல்

அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் எனச் சொல் பதியே இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே 20

மேல்

என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே 25

மேல்

காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய்ப் போதம் உண்டு கனி மதுரம் ஒழுகு செம் பதிகச் செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில் கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணியக் கதி உலகு அறிந்து உய்யவே 30 கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம் கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமைக் காப்பது உன் கடன் என்றுமே

@25.(2).ஞானசிகாமணி திருச்சீர் அஷ்டகம்

மேல்

#1 அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும் அறியா அருமைத் திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச் சுடரே பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்தப் பெரு விருந்தே பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

மேல்

#2 நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண் அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுரச் செழும் கனியே தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

மேல்

#3 அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல் இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண் என்று என் உணர்வைத் தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே நான்-தான் என்னல் அறத் திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே திசையும் புவியும் புகழ் ஓத்தூர்ச் சீர் கொள் மதுரச் செழும் பாகே தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

மேல்

#4 கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன் கருணை ஒன்றே கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக் கருத்தை மண் மூன்று அறக் கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம்

@26.(3).திருஞானசம்பந்தர் ஸ்தோத்திரம்

மேல்

#1 திருத் தகு சீர்த் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு கருத்தர் நமது ஏகம்பக் கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின் உருத் தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன் கருத்து அறியேன் எனினும் உனைக் கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே ** 7. குருட்டாட்டம்

@27.(1).குருட்டு மாணாக்கர் புல்லொழுக்கம்

மேல்

#1 திங்கள் அணி சடை மவுலிச் சிவனே இக் கலி மகிமைத் திறத்தில் இங்கே எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ தங்கள் உபநயன விதிச் சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால் உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே.

மேல்

#2 இ வகை இங்கு ஆபாச உபநயனம் அல்லாமல் எள்ளில் பாதிச் செவ்வகையும் பருவம் அதில் இச் சடங்கின் விதி ஒன்றும் செய்யக் காணேன் உவ்வகையோர் நரைத் தலைக்கு விளக்கெண்ணெய் கிடைத்த பரிசு ஒத்து மேவும் அவ்வகையோர்-தமைச் சிவனே எவ்வகையோர் எனக் கலியின் அறைவது அன்றே.

மேல்

#3 பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால் வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தித் தேய்த்து இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே கரும் கள மா மணியே இக் கலிகால மகிமை என்னால் கழறற்பாற்றோ.

மேல்

#4 இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில் வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட நிந்தை என்பது எங்கே நாம் இங்கே வந்து அகப்பட்டோம் நிலையல் தம் ஓர் இந்திரவில்லாய்ச் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே.

மேல்

#5 சந்தியாவந்தனை யாம் ஏழரைநாள்சனி ஒன்றும் தானே போதும் சிந்தியாப் பெரும் சுமை வெம் தீயினிடைச் சமிதை கொடு செய்யும் செய்கை புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர் வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே.

மேல்

#6 காகம் போல் நான்கு மறை என்னும் பேர் அவதியை நாம் கதறும் வெப்பம் மேகம் போல் நெய் குடித்தும் போகாதே என் செய்வோம் ஓவாது ஒத்த தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர் மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே.

மேல்

#7 முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை இத்தனையும் அழகுசெய்யும் தாம்பூல தாரணமும் இல்லை அந்தோ எத்தனை நாள் இவை எல்லாம் இல்லாமல் இருப்பது நாம் என்பார் சில்லோர் சித்து அனையர் உளம் அமர்ந்த சிவ_கொழுந்தே இது கலியின் சீர்மை தானே.

மேல்

#8 முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திரக் கோல் விழைகின்றோர்-பால் கருக்கு அணி கண்டத்தோய் இக் கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ.

மேல்

#9 இந்த மட்டும் போதும் இனி இல்_ஒழுக்கம் சொல்லும் என இசைக்கின்றோரும் வந்த மட்டும் சொல்வம் அன்றி வாராது நிறுத்தும் என வகுக்கின்றோரும் எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் சிந்தை மட்டாம் சிவ_கொழுந்தே இக் கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே.

மேல்

#10 இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும் சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக எனச் சொல்கின்றோரும் நல் அறத்தில் நல் அறம் ஒன்று எமக்கு உரையும் சுளுவில் என நவில்கின்றோரும் செல் அறத்தில் சிவ_கொழுந்தே இக் கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே.

மேல்

#11 குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அக் குருவானோன்-தான் மருவினிய நற்சொல் மொழிந்திடினும் வளையாத பனைமரம் போல் நிற்பார் கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி உரு அதனின் மிகச் சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே.

மேல்

#12 சீர்க் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்புத் தோன்ற வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றிப் பார்க்கு உரிய மறை ஓதுகின்றோர் போல் மெணமெணப் பழிச்சொல் ஓதி ஊர்க்குருவி போல் கிளைப்பர் மாணிகள் இக் கலிகாலத்து உவப்பாம் அன்றே.

மேல்

#13 அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இக் குருவுக்கு அடங்கி முன்னே நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம் கற்பதுவும் போலாம் இக் கட்டை எலாம் விட்டு மெள்ளக் கடப்போம் என்பார் பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே.

மேல்

#14 எவ்வாறு இப் பிரமசரியாம் சனியை இழப்போம் என்று இரங்கிநிற்பார் இவ்வாறு நிகழ்கின்ற மாணி சிலர் நல்லோர் காண் இவ்வாறு அன்றி ஒவ்வாத கொடும் சொல்லால் குருவை எதிர்க்கின்றோரும் உண்டே பல்லோர் செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இத் திறம்-தான் என்னே.

@28.(2).குருட்டு ஆசிரியர் புல்லொழுக்கம்

மேல்

#1 பொய்-அதனை உரைப்பர்கள் இப் பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண் ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றிச் செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிகச் சிறியர் நின்று வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே.

மேல்

#2 எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம் செய்கின்றான் குரு இடித்துச் சிரிக்கின்றான் சீடன் மிகத் தீய சொல்லால் வைகின்றான் குரு அவனை வலிக்கின்றான் சீடன் நடுவழியில் நின்று பெய்கின்றான் குரு ஓடிப் பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே.

மேல்

#3 வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டித் துன்பு அடைவார் குருத் தாம் போய்ச் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்துக் கையால் முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே.

மேல்

#4 இருந்து உறங்கும் ஆசிரியர் இயல் கண்டே படுத்து உறங்கியிடுவார் சீடர் கருத் தடம் கண் பெண் முலை மேல் கண்வைப்பர் ஆசிரியர் கண்டு சீடர் இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள் வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே.

மேல்

#5 சூதினையே கொண்டு மறை சொல்லுவிப்பர் ஆசிரியர் சூழ்ந்தாரோடு வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு காதினையே கொண்ட மணிக் கடுக்கன் இட்ட முகம் அன்றிக் கருணை அன்புப் போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே. ** 3.சாற்றுக் கவிகள்

@29.(1).நிஷ்டானுபூதி உரை

மேல்

#1 நலம்கொள் சிவயோக மணம் நால் திசையும் மணக்கும் ஞான மணம் கந்திக்கும் மோன மணம் நாறும் விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும் தலம்கொளும் மெய் அத்துவிதத் திருமணமும் பரவும் தனி முத்துக்கிருட்டினப் பேர் தங்கிய நம் பிரமம் வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே.

@30.(2).சிதம்பர புராணப் பதிவு

* காப்பு

மேல்

#1 சிதம்பர புராணம் இதம்பெறத் திருத்திய சிதம்பர முனிவன் பதம் பரவியது.

மேல்

#2 செம்மலர்ச் செம்மலும் திருத்தகு நிறத்தனும் அ மலர்_கரத்திற்கு அம் மலர்_கடவுளும் படைத்திடல் முன்னாப் பயனுறு பெரும் தொழில் நடைத் திறம் மூன்றும் நடாஅய்ப் பிறங்கிய தத்தம் தலைமையில் தாழ்வு இன்றி ஓங்குபு 5 சித்தம் திறமுறத் திரு_அருள் சார்த்திச் சின்மய வடிவில் சிதாகாயத்திடைத் தன் மய இன்பத் தனி நடம்புரியும் காரண எண்_குணா கார அகண்ட பூரண பராபர புனித சிற்பர 10 சிவ நிலை இஃது எனத் தெளிவித்து அழியா நவ நிலை ஞாங்கர் நண்ணிய அனுபவத் தனிச் சிவஞானம்-தன்னை மூ ஆண்டில் பனிப்பு அறச் சிவை முலை_பாலொடும் அளாஅய் ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப 15 வாட்டம்_இல் அமுத வாய் மலர் மலர்ந்து தோடு உடை என மறைச் சொல் அமுது அளித்து நாடு உடைத் தாதையை நயப்பித்து அருளிப் பற்பல சைவப்பதி-தொறும் அணுகிச் சொல் பல பதிகச் சுருதிகள் புனைந்து 20 பொன் திரு_தாளமும் புது மணிச் சிவிகையும் கொற்றவர் புகழ் மணிக் குடையும் சின்னமும் சுந்தரக் காளமும் சந்த நல் தாரையும் சிந்தரும் வெண் மணிப் பந்தரும் காசும் பரம்பரன் அளிக்கப் பண்புடன் பெற்றோன் 25 வரம் பெறு மழவன் மகள் பிணி சவட்டி மருகல்_இல் வசியன் வல் விடம் தீர்த்து வரும் நெறி பற்பல மகத்துவம் புரியாக் கூடலில் தென்னன் கூனும் குற்றமும் வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும் 30 எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்_பனை அளியுறு பெண்_பனையாகக் காட்டி ஒண் மயிலையில் என்பினை மங்கையாக்கி உள் அயர்வு அறு திருமணத்து அடைந்தவர்-தமக்கு எலாம் பெறல் அரும் சோதிப் பேர்_உரு அளித்து இ 35 வையமும் வானமும் மறையும் சைவமும் உய்ய ஓங்கிய ஒரு பெரும் குரவன் ஞானசம்பந்த நாயகன் அருளால் ஈன சம்பந்தம் எல்லாம் ஒழித்தோன் நரை வரும் என்று எணி நல் அறிவாளர் 40 இரைவுறு குழவியிடத்தே துறந்தார் என்னும் நாலடிக்கு இலக்கியம் ஆனவன் மன்னும் மா தவர் எலாம் வழுத்தும் அரும் தவன் எல்லா உயிர்க்கும் இதம் செயல் அன்றிப் பொல்லாமை ஒன்றும் புணராப் புண்ணியன் 45 வாய்மையும் மாண்பும் வயம் பெறு மனனும் தூய்மையும் தெளிவும் சுற்றமாக் கொண்டோன் கனவினும் உலகைக் கருதாக் கருத்தினன் நனவினில் சுழுத்தி நண்ணிய திறத்தோன் முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன் 50 எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன் சிவம் அலாது ஒன்றும் சிந்தைவைத்து அறியான் பவம் இலா நெறியே பற்றிய நிலையினன் காமம் வெகுளி மயக்கு எனும் கரிசினை நாமம் கெட உள் நலிவித்த வித்தகன் 55 துறவரில் துறவன் சுத்த மெய்ஞ்ஞானி அறவரின் அறவன் அன்பரின் அன்பன் திகழ் சிவயோகி ஜீவன் முக்தன் புகழ் இகழ் ஒன்றும் பொருந்தாப் புனிதன் சிவநூல் முழுதும் தெளிந்த சத்துவன் 60 பவநூல் மறந்தும் பாராத் திறலோன் என்_போன்றவர்க்கும் இன் அருள் புரிவோன் தன்_போன்றவர் இலாச் சாந்த வேந்தன் சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_ தெய்வமாம் மதுரைச் சிதம்பர தேவன் 65 புண்ணிய சிதம்பர புராணம்-தன்னை நுண்ணிய அறிவால் நோக்குபு திருத்தம் ஏர்பெற இயற்றி யாவரும் பயின்று உயப் பாருறும் அச்சில் பதிப்பித்து அருளிய உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும் 70 பதம் அருள் அவன் அருள் பதம் இறைஞ்சுதுமே.

மேல்

#3 உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான் அலகுறா மடல்-கண் எழுதுறா எழுத்தின் அமைவித்த அருள் பெரும் கடலே இலகு சீர்க் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்தத் திலக சற்குருவின் அருள் பெறும் பொருளே சிதம்பர மா தபோநிதியே.

மேல்

#4 சிதம்பர வரலாறு உலகு எலாம் உணரத் திருத்தி எம்_போன்றவர்-தமக்கும் இதம் பெறும் அழியாப் பதம் பெற அளித்த இன்பமே என் தனி அன்பே கதம் பெறு மதங்கள் அதம் பெறப் புரிந்த கவுணியற்கு இனிய உள் களிப்பே சிதம் பெறு ஞானாமுதம் தரும் மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

மேல்

#5 சத். இறை உயிர்-தான் சத். அசத். ஆகும் தடை மலம் அசத். இவற்றிடை நீ இத் திறை அபர நோக்கலை பர நோக்கு எய்துதி இறை நிறை உறைவாய் புத்தி ஈது என என் புத்தியைத் திருத்தும் போத சின்மய ஒளி மணியே சித்தி எண் வகையும் பெறத் தரு மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

மேல்

#6 மறை நெறிப் பொதுவும் ஆகமச் சிறப்பும் வகுப்பது சிவத்தொடு மருவிக் குறை நிறைவு அகலக் கூடுதல் இதனைக் குறிப்பு அறக் குறி எனக் குறிக்கக் கறை மிடற்று ஒளித்துச் சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே சிறை மலம் அகற்றி அருள்தரு மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

மேல்

#7 ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று எனக் குறித்தலும் ஒழித்தே நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே தென் திசைக் கணி கொண்டு ஓங்கிய மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

@31.(3).தேவநாதபிள்ளை ஸ்தோத்திரங்கள்

மேல்

#1 இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகாக் கல்லும் விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல் பெரும் புகழான் தேவநாதன் பரனைக் குறித்து அன்பு பிறங்கப் பாடும் கரும்பு இயைந்த சுவைப் பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடிக் காணுவீரே.

@32.(4).முத்துசாமி முதலியார் ஸ்தோத்திரங்கள்

மேல்

#1 ஒரு வகைப் பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க இரு வகைப் பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும் புகழ் சிவாத் துவித சித்தாந்த மெய்ச் சரணர் எண் புல்க நாளும் திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதைச் செப்பு முத்துச்சுவாமிக் கவிக் குரிசில் சீர் செழிக-மாதோ.

@33.(5).வேதநாயகம் பிள்ளை நீதிநூல்

மேல்

#1 வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள் உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக துளங்கிடும் அ ஊர் உறை அத் தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள் விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே. *

மேல்

9.திருமுகப் பகுதி


1. எல்லா முடையானுக்கு விண்ணப்பம்
2. ஞான பந்த நிலை
3. அநுபவ சித்தாந்தம்
4. குடும்ப கோரம்
5. திருமுகக் குறிப்பு
      
    

** 1. திருமுகம்

@1.எல்லா முடையானுக்கு விண்ணப்பம்

மேல்

#1 அகண்ட மெய்ஞ்ஞான அற்புத அமல பரம்பர அனாதி பகவ பராபர புண்ணிய சைவ போத பூரண சச்சிதாநந்த சாக்ஷாகார நித்திய நிரஞ்சன நிமல நிராமய 5 எண்_குண விநோத இன்ப சுபாவ சுத்த நிட்கள சுயம்பிரகாச சிவக்கியான சித்தி சித்தோபதேச பதி பசு பாசப் பண்பு உரை தேசிக விபூதி ருத்திராக்க பூடண வடிவ 10 சர்வ வல்லப சாந்த சித்த தயாநிதி என வளர் சாமியவர்கள் ஸ்ரீதிவ்வியோபய செந்தாமரையாம் திரு_அடிக்கு அடியேன் திரு_சிற்றம்பலம் காசு_அறு காவிரி கங்கை ஆதிய 15 வாச நீரால் மஞ்சனம் ஆட்டி மல்லிகை முல்லை மா மலர்க் கொன்றை மயிலை முதல் பூ_மாலை சாத்தி தூய வாசத் தூப தீப நைவேத்திய முதல் நண் உபசாரம் 20 கூடுற இயற்றிக் கூவிள பத்திரம் ஆயிரம் அவையால் அருச்சனைசெய்து உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்பப் பாடி ஆடிப் படி மிசை வீழ்ந்து அன்புறும் அங்கம் ஐந்தொடும் எட்டொடும் 25 இன்புறத் தெண்டனிட்ட விண்ணப்பம் திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று ஒரு பெயர் நிறீஇ ஓங்கிய தணிகைக் குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் நன்று இடையா வகை நவின் மணி வார்த்தை 30 கார் நிகர் வண்கையும் கல்விப் பெருக்கும் பார் நிகர் பொறையும் பண்பும் பான்மையும் சீரும் சிறப்பும் திறனும் செல்வமும் யாரும் புகழ் தரும் இயல்பு நல் அறிவும் எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் 35 தம்-பால் சார்பும் தணப்புறாத் தன்மையன் தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண ஈனம்_இல் அவற்றின் எல்லை மேல் ஒன்றின் நான்கில் ஓர் பாகம் நண்ணிய தானம் தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம் 40 கண் களிப்புறவும் காது இசை பெறவும் ஒண் களிப்பொடு மனம் உவந்து வந்து உருகவும் தருபவன் புரசைச் சபாபதி எனும் பெயர் மருவிய கலை_வலோன் மகிழ்வொடும் கேட்க எம்மிடை ஒருவன் எளிமையில் சிறந்தோன் 45 செம்மையில் போந்து என் சிறுமனைக் கிழத்தி எந்தாய் நுந்தமை ஈன்ற நற்றாயின் நந்தா அருள் திரு_நாமம் கொண்டனள் ஆங்கு அவள்-தன்னை அப் பெயரால் அழைத்(து) ஈங்கு எவ்வேலையும் இடுதற்கு அஞ்சினேன் 50 ஈது அலது உமக்கும் ஓர் இழிவு உண்டு இதனால் ஆதலின் அப் பெயர் அகற்றுதற்கு ஆயிரம் பொன் வேண்டும் என்றனன் பொன் வடிவு அல்லது பொன் வேறு இலையால் பொன்_உடையவன் எம் மாதுலன் ஆதலின் வலிவு_இல் கைக்கடன் 55 வாதுறக் கேட்டலும் வாங்கலும் ஈனம் தரம் பெறும் உமது தந்தையோ எனில் அவர் இரந்து உழல்கின்றதை யாவரும் அறிவர் நின்மலர் ஆகிய நீரோ என்றால் நெல் மலி உலகில் நின் கண் காண 60 ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ சங்கடம் அது நின்றனக்குந் தெரியும் எங்கணும் நின் போல் எமக்கு அன்பினர் இலை அதனால் நின்-பால் அவனை அனுப்பினம் 65 இதமே அன்றி அகிதம் இசையா நெடும் பொற்பு_உடையோய் நீயும் எம் போல் குடும்ப பாரம் கொண்டனை ஆதலின் ஆயிரம் என்றதில் அரைப் பங்கேனும் காயகம் அறியோய் கால் பங்கேனும் 70 இல்லை என்னாமல் எம் முகம் நோக்கி நல்லை நீ அவற்கு நல்குவிப்பாயே.

@2.ஞான பந்த நிலை

மேல்

#1 திரு வளர் மார்பனும் திசைமுகத்தவனும் உரு வளர் தேவரும் உணர்ந்திடப்படாத சச்சிதானந்த சாக்ஷாத்கார சொச்ச நித்திய சுயம்பிரகாச நிர்க்குண நிச்சல நிமல நிராமய 5 சிற்குண தற்பர சிற்பர சின்மய அகள அற்புத அனந்தானந்த சகள மத்திய சத்திய சத்துவ அகண்ட பூரண அருளானந்த மகண்ட விண்டல வாணர்கள் வந்தித 10 தத்துவ சொரூப தத்துவாதீத தத்துவ காரண தத்துவரகித விச்சுவ சொரூப விச்சுவ காரண விச்சுவ ரகித விச்சுவாதீத பிரணவ சொரூப பிரணவ காரண 15 பிரணவ ரகித பிரணவாதீத பஞ்சாக்கரப் பொருள் பாங்குறு வடிவ எஞ்சாக் கருணை எனும் திரு_உருவ நாத வடிவ நாத நாதாந்த வேத வடிவ வேத வேதாந்த 20 உள் அமர் ஒளிய ஒளியினுள் ஒளிய கள்ளம்_இல் அன்பர் கண் அமர் வெளிய பெரியதில் பெரிய பெரும் குண_கடல அரியதில் அரிய அனாதி போதக ஆகம வடிவ ஆகம முடிவ 25 ஆகம நிலய ஆகம காரண சைவ சித்தாந்த ஸ்தாபகம் செய்த தெய்வ மகத்துவ சிறப்புறு நெறிய ஞான காரண ஞான மெய்ச் சொருப ஞான நாடக ஞானசம்பந்த 30 தேவ தேவ சிவசிவசிவ என யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி நாட்டிடை மதுரா நகர்த் திரு_மடாலயத்து ஈட்டிய அருளால் எழில் அருள் வடிவம் கொண்டு எமை அடிமைகொண்டு அருள்புரிந்த 35 தண் தமிழ் மறைமொழி தரும் தனி முதலே மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழத் தே ஆண்ட ஞானத் தெள் அமுது அருந்திய மணியே என் கண்மணியே சைவ மணியே தெய்வ மணியே அணியே 40 முத்துச் சிவிகையின் முளைத்து எழும் இளங்கதிர் ஒத்துத் தனி அமர்ந்து அருளிய ஒளியே சைவம் தழைக்கச் சமண் கழுவேறத் தெய்வ நீறு அளித்த திரு_அருள் குன்றே பிழைத்தலில் என்பைப் பெண்_உரு ஆக 45 அழைத்து அருள்புரிந்த அற்புத அமுதே சரியை ஆதிய சாதுர்ப் பாதமும் தெரிய நல்லோர்க்குத் தெரித்து அருள் தெளிவே பாலொடு கலந்த பழம் போல் இனிக்க நூலொடு மெய்ம்மொழி நுவன்று அருள் பதியே 50 தவமே தவத்தில் சார்தரும் பயனே நவமே சாந்த நகை முக மதியே செவ்விய கரும்பே தேனே கனியின் திவ்விய சுவையே தெவிட்டா மருந்தே அஞ்செழுத்து உண்மையை அறிந்திட அடியேன் 55 நெஞ்சு அழுத்துற அருள் நீள் தயாநிதியே என் ஒரு தாயே என்னை ஈன்றோனே என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே என்னுடை அறிவே என் உளத்து அன்பே என் உயிர் கதியே என்னுடைக் குருவே 60 அடியேன் புரியும் ஆயிரம் பிழையும் படியால் பொறுத்துப் பாங்கு அருள் பரமே எல்லாம் வல்ல இறையே அடைந்தவர் பொல்லாங்கு எல்லாம் பொறுத்து அருள் பொறையே முற்றும் உணர்ந்த முதலே உலகப் 65 பற்றை அகன்ற நல்_பண்பினர் உறவே ஆன சம்பந்த நல் ஆறு முகத் திரு_ ஞானசம்பந்த ஞான தேசிகனே போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம் போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால் 70 குற்றமும் குணமாக் கொண்டு அருள்புரியும் பெற்றி நின் கருணைப் பெரும்_பெயல் அதற்கு அட்டமாக அனந்தந் தெண்டன் இட்டமா அடியேன் இட்ட விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்றுத் திருவுளத்து எளியேன் 75 உருச் செவி அறியா உறு பிழை பொறுத்திட வேண்டும் நின் அருள் வேண்டும் நின் கருணை வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் என் என உரைக்கேன் என் என உரைக்கேன் பொன் அன நினது பூம்_பதம் தரிசித்து 80 அன்பர்கள் எல்லாம் அவ்விடை வாழ நல் பயன் அறியா நாயேன் ஒருவனும் நல் நிதி அனைய நின் சந்நிதி-அதனில் மன்னும் நின் கருணை வடிவக் காட்சியைத் தரிசித்து இன்பத் தனிக் கடல் ஆடப் 85 பிரியத்துடனே பெற்றிலாது அந்தோ தகவு_இலேன் நெடுநாள் தனித்துச் சேய்மையில் புருடனைப் பிரிந்த பூவையைப் போல வாழ்வில் குறைந்து மனம் தளர்வு எய்தித் தாழ்வுறு நாணம் தலைக்கொள நின்றேன் 90 ஆதலால் சுவாமிகள் அருளில் புரிந்த தீது_இலாத் திரு_முகத் தெய்வம்-தன்னை தரிசித்து உள்ளம் தழைத்து வணங்கிப் பரிசித்து அன்பொடு பரவிப் போற்றி வணங்கிவணங்கி வாசித்து உடம்பும் 95 உயிரும் தழைக்க உவந்து ஆனந்தக் கூத்து இதுவரையில் குயிற்றிநிற்கின்றேன் என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த புல் நெறி நினைத்துப் போந்த நாணமும் அச்சமும் என்னை அடிக்கடி தகைக்க 100 நச்சிய இத்தனை நாளும் விண்ணப் பத்திரம் செய்து பரவத் தாழ்த்தேன் குத்திர மனத்துக் கொடியேன் செய் பிழை மலையினும் கடலினும் மண்ணினும் பெரிதே நிலையினும் அறியா நெடும் பிழை எந்தாய் 105 என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் பொன் செய்தால் அன்ன நின் பொன் மலர்_அடியை இரவும் பகலும் இடைவிடாது உன்னிப் பரவும் பரிசே பரிசு என அருளே.

@3.அநுபவ சித்தாந்தம்

மேல்

#1 அணி வளரும் உயர் நெறி கொள் கலைகள் நிறை மதி மகிழ்வை அடையும் ஒளி உடைய சடையோய் அருள் ஒழுக அமுது ஒழுக அழகு ஒழுக இளநிலவின் அளி ஒழுக ஒளிர் முகத்தோய் அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் அடியர் வினை அகல ஒரு பரம சுக நிலை அருளும்-அது கருது திருவுளத்தோய் அநக சுப விபவ சுக சரிதரக சிரகம் அந அதுல அதுலித பதத்தோய் 5 அகில சர அசர அபரிமித மித அணுவும் அணு அணுவும் இவை என உரைத்தோய் அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் அகள மன ரமண அபிநிகட அபிநிபிட தட அநதிசய சுகம் அளித்தோய் அணு பக்ஷம் இது சம்பு பக்ஷம் இது காண்க என்று அன்புடன் உரைத்த பெரியோய் அதிக்கிராந்தத்து இயல்பு திக்கிராந்தத்து இயல்பின் அமைதி இஃது என்ற அறவோய் 10 அதிகார போக இலயங்கள் இரு வகை இயல் அறிந்திட உணர்த்தும் உணர்வோய் அருவம் இஃது உருவம் இஃது அருவுருவம் இஃது என அறைந்து அறிவுறுத்தும் அறிவோய் அபேத சம்வேதந சுயம் சத்தி இயல் எலாம் அலைவு அற விரித்த புகழோய் அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் அத்துவா நெறி ஆறும் ஒத்து வான் நெறி ஆறு அடைந்திடுக என்ற பரிசோய் 15 அவுத்திரியின் உத்தரம் உனக்கு இசைவுறுத்துதும் அமர்ந்திடுக என்ற இனியோய் பணி வளரும் நிபுண கண பண கரண பரண வண பரத யுக சரண புரண பரம்பர சிதம்பர திகம்பர நிரந்தர பரம் தர விளங்கு பரம பகட படதட விகட கரட கட கரி உரி கொள் பகவ அரகர என்னவே பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே 20 பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே பயன்தரு வயிந்துவத்துவம் திகழ் சிவம் புகல் பதம் தெளிய அருள்செய் இறையே பத சிகர வகர நெறி அகர நகர மகர உபய அபய நிலை சொல்_மலையே பவம் தெறு நவம் தருகுவம் பரிபவம் பொடிபடும்படி எனும் புனிதமே பதி உதவு பதி-தனது பரிசும் அஃது அடையும் ஒரு பசு இயலும் அருள்செய் பொருளே 25 பந்த நிலை அந்த நிலை இந்த நிலை என்று பரபந்த மொழி தந்த மணியே படியும் இடர் வடியும் இருள் விடியும் மணிமொழி மறைகள் படியும் என நொடி மருந்தே பஞ்ச_மல கஞ்சுகமும் எஞ்சும் வகை பஞ்சம் இலை பஞ்சமகம் என்ற நிதியே பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே 30 பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே பல் நிலையும் முன்னிலையும் நின் நிலையும் என் நிலை படிந்துவிடுக என்ற நன்றே திணி வளரும் அறிவு கொடு தொடர்வு அரிது பெரிது பரசிவம் அது எனும் செல்வமே சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே 35 சிவம் மேவு சமயம் அது தவம் மேவு சமயம் இது சித்தம் என ஓது முதலே சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் எனச் சொல் நிறைவே சிவ மான்மியம் புகாக் காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே சிவன் அடி வணங்காத தலை சிதலை அவன் விழாத் தெரிசியாக் கண்கள் புண்கள் சிவனை நினையாச் சிந்தை நிந்தையாம் இது நமது சித்தாந்தம் என்ற திருவே 40 திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் சேர்வுறவிடேல் என்ற ஒரு மரக்கறியும் அச் சிவபிரான் விடயமாகத் திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் செப்புக எனக் கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே சீர் ஐந்தெழுத்தினால் இலகு நகரின்-கண் ஓர் திரு_ஐந்தெழுத்தின் ஓங்கும் 45 தேசிகத் தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கிச் செறி பவக் கோடை அற அருள்_மழை பொழிந்து ஒளி சிறந்து ஓங்கு சீர்க் கொண்டலே செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினைத் தலிதம்செயேன் மங்குலம் கொண்டு நகபதம்-தன்னில் பருத்து வினையைத் 50 தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விர'¡க முதல் சாற்று சும்மாடு மட்டும் தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் தகும் முறைக் கடை மூன்றினும் சுவசியுற்றிலேன் சதுர்_இலேன் பஞ்சம் நயவேன் சட்டியில் இரண்டின் ஒன்று ஏய்ந்திலேன் ஒன்று போற்றான் உழைத்து உழலுகின்றேன் தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் 55 சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் சகச நியமம் பெறுவர் நின் அடியர் அடிமையும் சகச நியமம் பெற்றுளேன் தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் 60 சார் புலக் கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புறச் செய்குவேனே.

மேல்

#2 பண்டு குலம் பேசப் பரிந்ததில்லை ஈண்டு என்னைக் கொண்டு குலம் பேசக் குறிப்பானோ தொண்டுசெய நீண்டவர் ஆயப் பெருமான் நீக்கும் திருத்துறைசைத் தாண்டவராயப் பெருமான்-தான்.

@4.குடும்ப கோரம்

மேல்

#1 திரு வளர் கமலக் குரு மலர் தவிசினன் முதல் பெரும் தேவர் மூவரும் பணியப் பொதுவிடைத் திரு_நடம் புரியும் நம் பெருமான் அடி_மலர்க்கு அன்புசெய் அன்பர்கட்கு அன்பன் சீர் விளை தூய்மை நீர் விளையாடிச் 5 சொல் தரு வாய்மைப் பொன் துகில் உடுத்துக் கரிசில் வெண்_நீற்றுக் கவசம் தரித்துத் தத்துவ சிற்பர சற்குண அகண்ட அற்புத சிற்குண அங்க லிங்கேசனை அகத்தும் புறத்தும் அருச்சனை புரிந்து 10 சிவம் தரு சுகம் எனும் திரு_அமுது உண்டு சீலம் எனும் தாம்பூலம் தரித்தே அளவு_இல் இன்பம் அனுபவிக்கின்றவன் மூதறிவாளன் முத்துசாமி என்று இயற்பெயர் உடைய இத் திருவாளனுக்கு 15 இராமலிங்கம் எழுதி விடுத்த மயலுறு சோபன வாசகம் ஆவது ஐய நின் புடை இப் பொய்யனேன் போதர தடை பல உள அவை சாற்றிட என்றால் ஆயிரம்கோடி நா ஆயினும் முடியா 20 இருந்து மற்றவை எண்ணிட என்றால் உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா எழுத என்றாலும் ஏட்டுக்கு அடங்கா என்னினும் சிறிதே எழுதத் துணிந்தனன்

** (புருஷன்)

என் எனில் யான் ஓர் ஏழை என்பதும் 25 தெளிவு_இலாச் சிறியரில் சிறியனேன் என்பதும் இன்பு உடை அறிவே இல்லை என்பதும் அன்பு_உடையாய் நீ அறியாதது அன்றே

** (அவன் முதன் மனைவி)

செம்பொடு களிம்பு செறிந்தது போன்று ஓர் ஆணவக் கிழத்தி அநாதியில் இறுகப் 30 பிரமராக்ஷசி போல் பிடித்துக்கொண்டனள் சிவ_பூரணத்தைச் சிறிதும் காட்டாள் ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள் எவ்விடத்து இருளும் என் அகச் சுவர் எனக் கன இருள் வடிவம் காட்டும் கொடியாள் 35 இரவு இது பகல் இது இன்பு இது துன்பு இது ஒளி வெளி இது என ஒன்றும் தெரிக்காள் இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ

** (அவள் பெற்ற பிள்ளை)

முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை 40 ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்றனால் பானுவின் ஒளியைப் படர் இருள் மூடல் போல் என் அக_கண்ணையும் என் புற_கண்ணையும் அங்கையால் மூடி அலக்கழிப்பான் எனைத் தன்னை இன்னான் எனத் தானும் காட்டான் 45 என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான் ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான் தாயினும் கொடியன் ஆயினும் என்றன் விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன் இவன்றன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன 50 மதிப்பவர் ஆர் எனை வையகம் மகிழ்ந்தே வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம் மருளுறு சிறுவன் வளர் நாள் தொடுத்தே உறவு அகன்றார் யான் அறிவு அகன்றிட்டேன்

** (அவனுடைய இரண்டாம் மணவினைக் கர்த்தா)

செப்புறும் தெய்வச் செயல் என்கேனோ 55 இரு தொடக்குகள் இயலாது என்றே தொடக்குப் பற்பல அடுக்கடுக்கு ஆயின ஆரோ பசுபதி அவன் வடிவு அழலாம் அம் கண் மூன்றாம் அருள் சத்திமானாம் மண்ணும் விண்ணும் மால் அயனோரால் 60 நேடியும் காணா நீள் பத முடியனாம் எழு மலை எழு கடல் எழு புவி எழு கார் ஆன எவையும் அளித்து நோக்குவனாம் ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம் உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம் 65 ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம் உரை கொண்டு ஓதரும் உயர் வேதாகமம் உற்ற கலைகள் உயரிய நிலைகள் அண்ட பிண்டம் அவற்றின் துறைகள் சாரும் இறைகள் சராசரங்கள் 70 வளமுறு வர்ணாசிரம வகைகள் வகுக்குறு வகுப்பினும் வதி வாழ்க்கையனாம் சதிர் மா மாயை சத்திகள் கோடி மன்னிய அரங்கிடை வதி பெற்றியனாம் அவன்-தான் யாரோ அறியேன் யானே 75 அறிதர வேண்டும் அப் பருவத்தே மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே சிறு கருங்காக்கைக் குறுகுறும் கழுத்தில் கனம்பெறு பனங்காய் கட்டியவாறு எனக் கட்டிப் புண்ணியம்கட்டிக்கொண்டனன் 80

** (அவன் இரண்டாம் மனைவி)

விடுத்து எனைப் புண்ணியன் விலகலும் அவள்-தான் விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு கொள்ளிவாய்_பேய்கள் ஓர் கோடி நின்றே தடித்த குழவியைப் பிடித்தது போல மற்றவள் என்னை மணந்து கொண்டனள் 85 பெண் நடை அனைத்தும் பெருங்கதை ஆகும் அடுத்தவர் என்னை அந்தோ கொடிய அரும் தளை ஏன் என அறைந்து எனை அகன்றனர் அகம் எலாம் பகீரென அனந்த உருவாய் அவ்வவ் உருகொண்டு அணைத்துக் கெடுப்பள் 90 காற்றினை ஒருசிறு கரகத்து அடைப்பள் கடல் ஏழினையும் கடுகிடை முகப்பள் வகைவகையாய் உடல் வனைந்து வகுப்பள் வையகம் முற்றும் வாயில் மடுப்பள் பகலிடை நள்ளிருள் இருக்கப்பண்ணுவள் 95 இருளில் பானுவை எவர்க்கும் காட்டுவள் அண்டம் எல்லாம் அணுவில் செறிப்பள் அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள் பொய்யை மெய்யாப் பொருந்தி மகிழ்வள் பொருந்தும் மெய்யைப் பொய்யாச் செய்வள் 100 அடர் வஞ்சகக் கழங்காடல் பிரியாள் காணாப் பல் நிலை கலையுடன் காட்டுவள் இருளை இரிக்கும் இந்து ரவிகளைப் படைத்து இங்கு இயற்றுவள் பற்பல ஜாலம் பிரமனை வலக்கைப் பிடிக்குள் அடக்குவள் 105 இடக்கையில் மால் பதி ஏந்தித் தரிப்பள் தலையிடை உருத்திரன் தன் பதி தெரிப்பள் குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே அண்டம் எல்லாம் கொண்டையில் முடிப்பள் ஜெகம் எலாம் கலைக்குள் சேர்த்துக் கட்டுவள் 110 உடம்பிடை உரோமம் ஒவ்வொன்றிடையே புவனம் ஒன்றாகப் பொருந்தச் சமைப்பள் எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள் இக் கொடும் பாவி என் மனையானது பிடாரியைப் பெண்டாய்ப் பெற்றது போலும் 115 அனுகூலச் சொலை அகத்திடை மதியாள் அடி_மடி பிடிப்பள் அரிய வம்பு இசைப்பள் உறங்கவிடாள் அவள் உறங்கு பாய் சுருட்டாள் மடிமாங்காய் இடும் கொடுமைக்கு இளையாள் சாகவும் விடாள் அவள் சார் பழி தளராள் 120 தவத்தில் இசையாள் பவத்தின் நசையால் மருள்_பேய் என்ன மதித்திட வாட்டிப் படைத்து என் மானம் பறக்கச்செய்வள் மானம் அகற்றியும் மனை விட்டு ஏகாள் இரவும் பகலும் எனை இழுத்து அணைப்பள் 125 இவளால் படும் இடர் இம்மட்டு_இலவே புகலப்படுமோ புகலின் இரு செவி பொருந்து உளம் கைத்திடும் போதும்போதும் மல்லாந்து உமிழின் மார்பின் மேல் எனச் சொல்லுவர் அதனால் சொல்வது மரபு அல 130

** (அவள் பெற்ற பிள்ளைகள்)

** (மூத்த பிள்ளை)

கொடும் தவம் புரிந்து ஒரு குரங்கு பெற்றால் போல் மலைக்கப்பெற்றிட மனம் எனும் இளைஞன் உலக்கைக் கொழுந்து என ஒருவன் பிறந்தனன் வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும் விதிவிலக்கு அறியா மிகச் சிறியன் ஆயினும் 135 விண் மண் நடுங்க வினைகள் இயற்றிக் காம_குழியில் கடுகிப் படு_குழி விழும் மதக் களிறு என விழுந்து திகைப்பன் பதியை இழந்த பாவையின் செயல் போல் கோப வெம் கனலில் குதித்து வெதும்புவன் 140 நிதி கவர் கள்வர் நேரும் சிறை என உலோபச் சிறையில் உழன்று வாழ்வன் வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை முழுகிக் கடலில் முளைத்திடல் போல மோக_கடலில் மூழ்கி மயங்குவன் 145 மது குடித்து ஏங்கி மயக்குறுவார் போல் மதத்தால் வீறி மதங்களில் வியப்பன் பட்டினியிருக்கும் வெட்டுணி போல மச்சரம் கொண்டு மகிழ்கூர்ந்து அலைவன் காசில் ஆசை கலங்குறா வேசை 150 எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம் அரிய தெய்வம் என்று ஆடுவன் பாடுவன் அணிகள் அணிவன் அடியும் பணிவன் எலும்பைச் சுரண்டும் எரி_நாய் போலச் சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன் 155 கணத்தில் உலகு எலாம் கண்டே இமைப்பில் உற்ற இடத்தில் உறுவன் அம்மா சேய்மை எல்லாம் செல்லற்கு இளையான் பித்து ஓங்கிய உன்மத்தனாய்த் திரிவான் சொல்_வழி நில்லான் நல்_வழி செல்லான் 160 சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன் வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான் மலக்கி ஈன்ற மாதினும் பாவி கள்_அது குடித்துத் துள்ளுவான் போல மதத்தால் பொங்கி வழிந்து துள்ளுவன் 165 முத்தம்தரல் போல் மூக்கைக் கடிப்பன் மறை சொல்வான் போல் வளர் செவி கிள்ளுவன் சற்றும் இரங்கான் தனித் துயில் கொள்ளான் கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை கூவி அதட்டினும் கோபம்கொள்வான் 170 இங்கும் உள்ளான் அங்கும் உள்ளான் படைக்கு முன்னே பங்கு கொள்வான் மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும் வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை ஒலித்திடல் போல உரத்திக் கத்துவன் 175 என்னைத் தாதை என்று எண்ணான் சொல்லும் வாய்மை எல்லாம் வண் புனல் ஓவியம் ஆகக் கொள்வான் அவன் பரிசு உரைக்கேன் பிறந்த இப் பாவி இறந்தான்_இலையே சென்ற_நாள் எலாம் இச் சிறுவனால் அன்றோ 180 வரு சுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன் திறந்து இவன் செயலைத் தினைத்துணை விடாது செப்பின் கற்கள் சிதைந்து கசியும் கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும் கடவுளர் இவன் செயல் காணுவாரேல் 185 இமையாக் கண்களை இமைத்திடுவாரால்

** (இரண்டாவது பிள்ளை)

காசிபன் மனைவி முன் கடும் தவம்புரிந்து பை உடைப் பாம்பைப் பயந்தது போன்று புத்தி என்னும் புத்திரன்-தன்னை ஈன்றனள் அவனோ எளியரில் எளியன் 190 வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன் தாயொடும் பழகான் தமையனோடு அணையான் தறுகணாளரில் குறுகி உறவாடான் பாவம் என்னில் பதறி அயர்வான் பாடுபடற்குக் கூடான் உலகர் 195 கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன் பாழ் நிகர் புந்தியர்-பாலில் பொருந்தான் எப்பாடும் படான் எவரையும் கூடான் கபடரைக் காணில் காதம் போவான் கங்குலும் பகலும் கருது விவகாரத் 200 தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள் சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும் அடங்குவன் வறிதே அமைதல் இல்லான் இவனை மடியில் இருத்தித் திடமொழி செப்பிடச் சோர்வு செறிவது எனக்கே 205 இவன்-பால் செய்வது ஏதும் அறியேன்

** (மூன்றாவது பிள்ளை)

செறிதரு கோள் உள சே_இழையாள் பினும் நையப் புணர்ந்து நாள்பட வருந்தி நாடிநாடி நாயை ஈன்றது போல் உணர்வு_இலி என்றே உலகர் ஓதும் 210 சித்தம் என்னும் சிறிய குழவியைப் பயந்து கரத்தில் பதற எடுத்தனள் கரைதரு விண் நீர்க் கடி தடம் ஆகக் கதிர் விடும் உடுக்கள் கறங்கு மீன் ஆக மதியைத் தாமரை மலராய் மதித்து அதில் 215 மூழ்கப் பிடிக்க முன்னம் கொய்திட எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும் நேராது இளைத்தே நிலைகள் பற்பல வான் கண்டவன் போல் வாயால் கொஞ்சுவன் எனையும் கூவுவன் இவன் இடர் பலவே 220 இடர் பல இயற்றி இழுக்கும் கொடியன்

** (இளைய பிள்ளை)

இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில் தாருகன் என்னும் தறுகண் களிற்றைத் தந்த மாயைக்குத் தனி மூத்தவளாய் அகங்காரம் எனும் அடங்காக் காளை 225 அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக் கடைமுறை பெற்றுக் களித்தனள் அவன் செயல் கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை 230 இளையவன் காளை எனும் இலக்கியமாய் முன் உள மூவரை முடுகி ஈர்த்தே எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன் எல்லா ஆற்றலும் என்-பால் உளது எனத் தருக்குவன் இவன்றன் சங்கடம் பலவே 235 தன்னைத்தானே தகைமையில் மதிப்பன் தரணியில் பெரியார்-தாம் இலை என்பான் மாதின் வயிற்றில் வந்தவன் எனாது தானே பிறந்த தன்மை போல் பேசுவன் விடியும் அளவும் வீண் வாதிடுவன் 240 வாயால் வண்மை வகை பல புரிவன் ஓது அவன் பெருமை ஈது அவன் இயல்பே சொல்லினும் கேளாத் துரியோதனன் என வானவர்-தமக்கும் வணங்காமுடியன் முன்_வினை யாவும் முற்றும் திரண்டே 245 உருக்கொடு இங்கு இயம்பொணா ஊறுகள் இயற்றுவன் பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன் இன்னும் இவன் செயும் இடர் பலவற்றை எவர்-பால் சொல்லி என் துயர் ஆற்றுவேன்

** (அவனது மூன்றாம் மணவினைக் கர்த்தாவும் மூன்றாம் மனைவியும்)

பாதகி துன்பம் பவ_கடல் ஏழும் 250 மக்கள் துன்பம் மலை ஓர் எட்டும் நீளல் போதாது என நெஞ்சில் நினைத்தோ அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம் தொல்லை மரபில் தொழில் பல கற்ற உலவுறு காமிய ஒண்_தொடி என்னும் 255 கபட வஞ்சகியாம் களத்தினைக் கொணர்ந்து பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டித் தான் மணந்தது போதாது இங்கு என்று பின் மாற்று காலுக்கு மறு கால் ஆக மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல் 260 கண்_இணையாள் நெடும் கடல் சூழ் உலகில் நிறைந்து உள யாரையும் நெருங்குவள் கணத்தில் இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா ஒருத்தியே இரண்டு அம் குருகொடு அவ்வவற்றில் 265 பலவாய்ப் பலவுளும் பற்பலவாய் உரு பொருத்தமுறவே புரிவள் அவ்வவற்றில் பல கால் புணர்ந்து பயன் வலி போக்கி ஓர் உருக் கரும்பும் ஓர் உருக் காஞ்சியும் ஓர் உரு அமுதமும் உண்ண அளிப்பாள் 270 விட்டு இவை எல்லாம் பட்டினியாக்குவள் ஓர் உரு வடிவால் உயர் பஞ்சணை மேல் அகம் மகிழ் சுரதம் அளித்துக் களிப்பள் ஓர் உருத் தன்னால் உறு நிலப் பாய் மேல் என்பு நோவ இழுத்தே அணைவள் 275 இங்ஙனம் பற்பல ஏழைக் குறும்புகள் இயற்றி எவருமே ஏக்கம்கொளவே இவள் முன் நம் செபம் என்றும் சாயா அரகர என்றே அரற்றி மெலிவேன்

** (அவள் பெற்ற மூவர்)

இவ்வாறு என்னை இழைத்திடும் கொடியாள் 280 முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே வயிறு கிழிய வந்த சிறார்கள் மூவர்-தமையும் அ மூவரும் அறியார் வெல வரும் இவரால் மேலொடு கீழ் நடு ஆய உலகும் அ உலகு உயிரும் 285 பற்பல நெறியில் பாடுபட்டார் எனில் எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ இவர்கள்-தம் இயல்பை எண்ணவும் பயமாம் பார் எலாம் தாமாய்ப் பரவும் இவர்-தாம் ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர் 290 இயற்றுவர் கீழ்_மேல் எங்குமாக உவகை ஊட்டுவர் உறு செவி மூடத் திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே ஆற்றுறும் ஆற்றலை ஆற்றல் அரிதாம் இவ்வுலகு-அதனில் என் கண் காண 295 ஆய்_இழையாளை ஆய்ந்து மணந்த நாளில் தொடங்கி இ நாள் பரியந்தம் மனம் சலித்திடவே வலிய விலங்கினைத் தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன் வீண் சஞ்சலம் என விளம்பும் துகளை 300 முடி மூழ்க வாரி முடித்திட்டேனால் ஈட்டிய பொருளால் இல்_பசு ஈந்தே எருமை-தன்னை அருமையாய் அடைந்தனோ ஆற்ற முடியாது அலைவேன் எனவும் குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை 305 விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்துத் துணைக் கரம் சலித்தே துயருற்றேனோ காற்றினும் விரைந்தே காரான் பாலைக் கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன் கல நீர்-தன்னைக் கண்ணில் சிந்திக் 310 கழறிக் குழறிக் கனி உடல் களைக்கச் சிலை நேர் நுதலில் சிறு வியர்வு அரும்ப அரும் தொழில் செய்து இங்கு அடைந்த பொருளைச் சிவ புண்ணியத்தில் செலவில் கலவாது பெண்_சிலுகுக்குப் பெரிதும் ஒத்தேன் 315 பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர் இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆர் எனக் கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன் கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம் தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது 320 இவரூடு ஆட என்னால் முடியுமோ அவளுக்கு இவள்-தான் அறிய வந்தாள் எனும் மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள் இவர்களில் ஒருவரும் இசைய வந்தார்_அலர் இச்சை வழியே இணங்கி வலிவில் 325 மணம்-அது கொண்டு வாழ்ந்து வருகையில் சண்டன் மிண்டன் தலைவர் என்ன புவி மிசைப் பாதகர் போந்து இங்கு உதித்தனர் இவரால் நேர்ந்த எண்_இலாத் துயரைப் பொறுப்பது அரிதாம் வெறுப்பது விதியே 330 பாவம் இன்னும் பற்பல உளவே

** (இக் குடும்பம் குடியிருக்கக் கொண்ட வீடு)

குடும்பத்துடனே குடித்தனம்செய்யக் குடிக்கூலிக்குக் கொண்ட மனையில் கண்ட காட்சிகள் கன விரோதங்கள் இராமாயணத்தும் பாரதத்தும் இலை 335 இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது மலமும் சலமும் மாறா ஒழுக்கது சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர் 340 ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது அகலல் அணுகல் புகலல் இகலல் அணிகள் துணிகள் அணிவது ஆய சால வித்தைகள் சதுரில் கொண்டது கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல 345 பகர் இ மனையால் படும் பாடு அதிகம்

** (அவ்வீட்டுத் தலைவரும் குடிக்கூலி நிர்ப்பந்தமும்)

இ மனை_தலைவராய் எழுந்த மூவர் தறுகண் கடையர் தயவே_இல்லார் பணி சிரம் முதலாய்ப் பாதம் வரையில் வாது செய்திடும் வண் காலவாதி 350 பெருகுறு கள்ளினும் பெரிது உறு மயக்கம் பேதைமை காட்டும் பெரும் தீப் பித்தன் கொடு விடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம் கொள்ளாது இடர்செய் குளிர்ந்த கொள்ளி இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார் 355 எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார் பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி அன்றைக்கு அன்றே நின்று வாங்குவர் தெரியாது ஒருநாள் செலுத்தாவிட்டால் உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி 360 உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி அரு நோய் பற்பல அடிக்கடி செய்வர் இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும் பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து வெதும்பும் என்னில் விளம்புவது என்னே 365

** (குடும்பத்தலைவனின் வெளி விவகாரம்)

சினம் மிகும் இவர்-தம் செய்கைகள் கனவிலும் நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் மற்போர் கருதி வந்தவர் போல ஓதும் வேதாந்தம் உரைப்பர் சில பேர் வாள்_போரினுக்கு வந்தவர் போல 370 வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சில பேர் தண்டாயுத_போர் தாங்குவார் போல இதிகாசத்தை இசைப்பவர் சில பேர் உலக்கை_போரை உற்றார் போல இலக்கண நூலை இயம்புவர் சில பேர் 375 கற்போர் விளைக்கக் காட்டுவார் போலச் சமய நூல்களைச் சாற்றுவர் சில பேர் விவகாரங்கள் விளம்புவர் சில பேர் மடிபிடி_போர்க்கு வாய்ந்தவர் போல மத தூஷணைகள் வழங்குவர் சில பேர் 380 கள்_குடியர் வந்து கலக்குதல் போலக் காம நூலைக் கழறுவர் சில பேர் விழற்கு நீரை விடுவார் போல வீண்_கதை பேச விழைவார் சில பேர் இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப 385 குரல் கம்மிடவும் குறு நா உலரவும் அழலை எழவும் அவரவர்-தம்பால் சமயோசிதமாய்ச் சந்ததம் பேசி இயன்ற மட்டில் ஈடுதந்து அயர்வேன்

** (அவனது உள் விவகாரம்)

பின்னர் மனையின் பின்புறத்து ஏகிக் 390 கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக் கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச் சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து நல் நீர் ஆடி நறு மலர் கொய்து 395 தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப் பாவையை வைத்துப் பாடி ஆடும் சிறாரைப் போலச் செய் பணியாற்றி மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல் வெண்_நீறு-அதனை விளங்கப் பூசிப் 400 புகழ் ருத்ராக்கப் பூனை என்ன உற்ற செப வடம் உருட்டிஉருட்டிக் குரண்டகம் போன்று குறித்த யோகம் செய்த பின்னர் சிறிது நேரம் அருத்தியில் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி 405 ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து குடிக்கூலிக் கடன் குறை_அறத் தீர்த்துப் பகல்வேடத்தால் பலரை விரட்டி

** (அவன் பரத்தையோ டயர்தல்)

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதும் சரியாய்ப் போகின்றதுவே. 410

@5.2. திருமுகக் குறிப்பு

** (1).திருநெறி வேட்கை

மேல்

#1 வான் ஏர் அமரர் வருந்திக் கடைந்த மருந்து உவந்து தானே ஒரு சிறு நாய்க்குக் கிடைத்த தகவு என எம் மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே.

மேல்

#2 வருந்துக் கனவினும் சோறு_அறியானை மணத்தி ... விருந்துக்கு அழைப்பது போலே நின் பொன்_பத ... மருந்துக்கு மெய் சொல வாராத என்றனை ... தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ ...

மேல்

#3 மின் நேர் சடை முடித் தாண்டவராய வியன் தவ நின்று அல் நேர் அடைதற்கு எளிதாக நான் பெற்றுந் தாழ்த்துகின்றேன் பொன்னே கொடுத்தும் எனும் நாலடியின் பொருட்கு இலக்காய் என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே.

மேல்

#4 வாய் மட்டுமோ மனம் மட்டோ என் ஆர்_உயிர் போய் மட்டு உறு-மின் சுவைமயம் ஆக்கும் நின் பொன்_மலர் ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை நாய் மட்டுமோ தந்தை_தாய் மட்டுமாம் சைவ

மேல்

#5

** (2).உலகியல்

சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

மேல்

#6

** (3).அன்புநெறி

படிப்பது நன்று எனத் தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளிப் பரமன் அன்பே தடிப்பது நன்று எனத் தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில் துடிப்பது_இலாத் தூய மனச் சுந்தரப் பேர்_உடையாய் என் தோழ கேள் நீ அடிப்பதும் அச் சிறுவர்களை அடிப்பதும் நன்று_அல என் மேல் ஆணைஆணை

மேல்

#7

** (4).இறைவன்

திரு ஓங்கு பொன்_சபையும் சிற்சபையும் நம் பெருமான் செய்யாநின்ற உரு ஓங்கும் ஆனந்தத் தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் தரு ஓங்கு தில்லை நகர்க்கு ஓரிரு பானாள் வரைக்கு உட்சார்கின்றேன் நம் இருவோங்கள் குறையும் இறைக்கு உரைத்து அகற்றிக்கொளலாம் நீ இளையேல் ஐயா

மேல்

#8

** (5).தீவிர நட்பு

பண்பு அனேகமும் திரண்டு உருவாகி எம் பாக்கியம் போல் வந்த நண்பனே நினைப் பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம் புண் பல் நேர்ந்த போது உண்டவாம் கண்டு நின் புல்லி நின்னுடன் இங்கே உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே.

மேல்

#9

** (6).பரிவு

திரு வளரும் திறத்தாய் என் கண்_அனையாய் நீ அனுப்பச் சிறியேன்-தன்பால் வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் உரு வளரும் மணி முடியாய்ச் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் பொருவு அரும் ஓர் முத்தமிட்டேன் பூசித்தேன் வாசித்தேன் புளகுற்றேனே.

மேல்

#10

** (7).அருமருந்து

இறை_அருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு ஊருவில் கட்டி உடனே உடையும் அது குறித்து ஐய நீ அஞ்சலை அஞ்சலை இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் 5 செய்து வைத்தனன் அத் திரு_நீறு எடுத்து எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் கொவ்வைச் சாறும் கோள் வெடியுப்பும் கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக பூசுக உடைந்த பின் பூரம் பூசுக 10 பாசுறு முருங்கைப்பட்டைச் சாற்றினில்

மேல்

#11

** (8).அருள்நிலை விளக்கம்

மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும் பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே செய் விளக்கும் புகழ் உடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளீர் நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே

மேல்

#12

** (9).கனிவு

திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் கருமை_இலாக் கருணை முகம் காண்பதற்கு விழைந்து அங்கே கலந்தது இங்கே அருமை_இலாப் பெருமையிலே இருக்கின்றேம் இது கடவுள் ஆணை என்றே.

** (9)

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *