திருமுறை 5

திருநாவுக்கரசர் (அப்பர்) இயற்றிய தேவாரம் (திருமுறை 5)
திருநாவுக்கரசர் திருவடிகளில் சமர்ப்பணம்
🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐💐🌹🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻
5.ஐந்தாம் திருமுறை
(1071 - 2085)

திருக்குறுந்தொகை (நாலடிவிருத்தம்)
01.கோயில்
02.கோயில்
03.திருநெல்வாயில் திருவரத்துறை
04.திருஅண்ணாமலை
05.திருஅண்ணாமலை
06.திருஆரூர்
07.திருஆரூர்
08.திருஅன்னியூர்
09.திருமறைக்காடு
10.திருமறைக்காடு
11.திருமீயச்சூர்
12.திருவீழிமிழலை
13.திருவீழிமிழலை
14.திருவிடைமருதூர்
15.திருவிடைமருதூர்
16.திருப்பேரெயில்
17.திருவெண்ணி
18.திருக்கடம்பந்துறை
19.திருக்கடம்பூர்
20.திருக்கடம்பூர்
21.திருஇன்னம்பர்
22.திருக்குடமூக்கு
23.திருநின்றியூர்
24.திருவொற்றியூர்
25.திருப்பாசூர்
26.திருவன்னியூர்
27.திருவையாறு
28.திருவையாறு
29.திருவாவடுதுறை
30.திருப்பராய்த்துறை
31.திருவானைக்கா
32.திருப்பூந்துருத்தி
33.திருச்சோற்றுத்துறை
34.திருநெய்த்தானம்
35.திருப்பழனம்
36.திருச்செம்பொன்பள்ளி
37.திருக்கடவூர் வீரட்டம்
38.திருக்கடவூர் மயானம்
39.திருமயிலாடுதுறை
40.திருக்கழிப்பாலை
41.திருப்பைஞ்ஞீலி
42.திருவேட்களம்
43.திருநல்லம்
44.திருஆமாத்தூர்
45.திருத்தோணிபுரம்
46.திருப்புகலூர்
47.திருவேகம்பம்
48.திருவேகம்பம்
49.திருவெண்காடு
50.திருவாய்மூர்
51.திருப்பாலைத்துறை
52.திருநாகேச்சரம்
53.திருஅதிகை வீரட்டம்
54.திருஅதிகை வீரட்டம்
55.திருநாரையூர்
56.திருக்கோளிலி
57.திருக்கோளிலி
58.திருப்பழையாறைவடதளி
59.திருமாற்பேறு
60.திருமாற்பேறு
61.திருஅரிசிற்கரைப்புத்தூர்
62.கடுவாய்க்கரைத் திருப்புத்தூர்
63.திருதென்குரங்காடுதுறை
64.திருக்கோழம்பம்
65.திருப்பூவனூர்
66.திருவலஞ்சுழி
67.திருவாஞ்சியம்
68.திருநள்ளாறு
69.திருக்கருவிலிக்கொட்டிட்டை
70.திருக்கொண்டீச்சரம்
71.திருவிசயமங்கை
72.திருநீலக்குடி
73.திருமங்கலக்குடி
74.திருஎறும்பியூர்
75.திருக்குரக்குக்கா
76.திருக்கானூர்
77.திருச்சேறை
78.திருக்கோடிகா
79.திருப்புள்ளிருக்குவேளூர்
80.திருஅன்பிலாலந்துறை
81.திருப்பாண்டிக்கொடுமுடி
82.திருவான்மியூர்
83.திருநாகைக்காரோணம்
84.திருக்காட்டுப்பள்ளி
85.திருச்சிராப்பள்ளி
86.திருவாட்போக்கி
87.திருமணஞ்சேரி
88.திருமருகல்
89.தனித் திருக்குறுந்தொகை
90.தனித் திருக்குறுந்தொகை
91.தனித் திருக்குறுந்தொகை
92.காலபாசத் திருக்குறுந்தொகை
93.மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை
94.தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை
95.இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை
96.மனத்தொகைத் திருக்குறுந்தொகை
97.சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை
98.உள்ளத் திருக்குறுந்தொகை
99.பாவநாசத் திருக்குறுந்தொகை
100.ஆதிபுராணத் திருக்குறுந்தொகை
    
     திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் 5. ஐந்தாம் திருமுறை 
    
     1. கோயில் - திருக்குறுந்தொகை
    
    #1071
    அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்
    பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை
    என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற
    இன்னம் பாலிக்குமோ இ பிறவியே
    
     மேல்
    
    #1072
    அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர்
    சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ
    கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன்
    பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே
    
     மேல்
    
    #1073
    அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
    எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர்
    சிரிச்சுற்று பல பேசப்படாமுனம்
    திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #1074
    அல்லல் என் செயும் அருவினை என் செயும்
    தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
    தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
    எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே
    
     மேல்
    
    #1075
    ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம்
    நான் நிலாவி இருப்பன் என் நாதனை
    தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
    வான் நிலாவி இருக்கவும் வைப்பரே
    
     மேல்
    
    #1076
    சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
    சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை
    சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ
    சிட்டர்-பால் அணுகான் செறு காலனே
    
     மேல்
    
    #1077
    ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
    திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார்
    விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
    அருத்தனார் அடியாரை அறிவரே
    
     மேல்
    
    #1078
    விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு
    எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா
    கண் நிறைந்த கடி பொழில் அம்பலத்
    துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே
    
     மேல்
    
    #1079
    வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம்
    வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன்
    தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
    ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே
    
     மேல்
    
    #1080
    நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
    தேடியும் திரிந்தும் காண வல்லாரோ
    மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
    ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே
    
     மேல்
    
    #1081
    மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
    சதுரன் சிற்றம்பலவன் திரு மலை
    அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற
    மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
     2. கோயில் - திருக்குறுந்தொகை
    
    #1082
    பனை கை மும்மத வேழம் உரித்தவன்
    நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன்
    அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை
    தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1083
    தீர்த்தனை சிவனை சிவலோகனை
    மூர்த்தியை முதல் ஆய ஒருவனை
    பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பல
    கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1084
    கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
    இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
    சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை
    எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1085
    மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
    நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என்
    ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற
    தாணுவை தமியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1086
    பித்தனை பெருங்காடு அரங்கா உடை
    முத்தனை முளை வெண் மதிசூடியை
    சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற
    அத்தனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1087
    நீதியை நிறைவை மறை நான்கு உடன்
    ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா
    சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து
    ஆதியை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1088
    மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
    செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள்
    ஐயனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1089
    முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள்
    தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
    எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை
    இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ
    
     மேல்
    
    #1090
    கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை
    வார் உலாம் முலை மங்கை மணாளனை
    தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
    ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1091
    ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம்
    வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
    தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை
    பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
     3. திருநெல்வாயில் திருவரத்துறை - திருக்குறுந்தொகை
    
    #1092
    கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட
    உடல் உளானை ஒப்பாரி இலாத எம்
    அடல் உளானை அரத்துறை மேவிய
    சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1093
    கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை
    விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
    அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய
    சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1094
    ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை
    வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா
    ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய
    ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1095
    பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா
    இரப்பு ஒப்பானை இள மதி சூடிய
    அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
    சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1096
    நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர்
    மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
    ஐ ஒப்பானை அரத்துறை மேவிய
    கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1097
    நிதி ஒப்பானை நிதியின் கிழவனை
    விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
    அதி ஒப்பானை அரத்துறை மேவிய
    கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1098
    புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே
    மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
    அனல் ஒப்பானை அரத்துறை மேவிய
    கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1099
    பொன் ஒப்பானை பொன்னில் சுடர் போல்வது ஓர்
    மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார்
    அன் ஒப்பானை அரத்துறை மேவிய
    தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1100
    காழியானை கன விடை ஊரும் மெய்
    வாழியானை வல்லோரும் என்ற இன்னவர்
    ஆழியான் பிரமற்கும் அரத்துறை
    ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
    #1101
    கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை
    மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய
    அலை ஒப்பானை அரத்துறை மேவிய
    நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே
    
     மேல்
    
     4. திருஅண்ணாமலை - திருக்குறுந்தொகை
    
    #1102
    வட்டனை மதிசூடியை வானவர்
    சிட்டனை திரு அண்ணாமலையனை
    இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும்
    அட்டனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1103
    வானனை மதி சூடிய மைந்தனை
    தேனனை திரு அண்ணாமலையனை
    ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
    ஆனனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1104
    மத்தனை மத யானை உரித்த எம்
    சிந்தனை திரு அண்ணாமலையனை
    முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த
    அத்தனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1105
    காற்றனை கலக்கும் வினை போய் அற
    தேற்றனை திரு அண்ணாமலையனை
    கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த
    ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1106
    மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
    தென்னனை திரு அண்ணாமலையனை
    என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த
    அன்னனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1107
    மன்றனை மதியாதவன் வேள்வி மேல்
    சென்றனை திரு அண்ணாமலையனை
    வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும்
    கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1108
    வீரனை விடம் உண்டனை விண்ணவர்
    தீரனை திரு அண்ணாமலையனை
    ஊரனை உணரார் புரம் மூன்று எய்த
    ஆரனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1109
    கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம்
    திருவினை திரு அண்ணாமலையனை
    உருவினை உணரார் புரம் மூன்று எய்த
    அருவினை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1110
    அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தை
    திருத்தனை திரு அண்ணாமலையனை
    கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த
    வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
    #1111
    அரக்கனை அலற விரல் ஊன்றிய
    திருத்தனை திரு அண்ணாமலையனை
    இரக்கமாய் என் உடல் உறு நோய்களை
    துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ
    
     மேல்
    
     5. திருஅண்ணாமலை - திருக்குறுந்தொகை
    
    #1112
    பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம்
    இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும்
    அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ
    கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே
    
     மேல்
    
    #1113
    பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர்
    சுற்றமா மிகு தொல்புகழாளொடும்
    அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
    நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே
    
     மேல்
    
    #1114
    பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம்
    ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர்
    அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
    நல்ல ஆயின நம்மை அடையுமே
    
     மேல்
    
    #1115
    பாடி சென்று பலிக்கு என்று நின்றவர்
    ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ
    ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
    ஓடி போகும் நம் மேலை வினைகளே
    
     மேல்
    
    #1116
    தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின்
    நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர்
    ஆடி பாடி அண்ணாமலை கைதொழ
    ஓடி போம் நமது உள்ள வினைகளே
    
     மேல்
    
    #1117
    கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி
    வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்
    அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய
    நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே
    
     மேல்
    
    #1118
    கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர்
    பாணி நட்டங்கள் ஆடும் பரமனார்
    ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ
    பேணி நின்ற பெருவினை போகுமே
    
     மேல்
    
    #1119
    கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர்
    பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்
    அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
    விண்டு போகும் நம் மேலை வினைகளே
    
     மேல்
    
    #1120
    முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின்
    அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை
    சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்
    கந்த மா மலர் சூடும் கருத்தனே
    
     மேல்
    
    #1121
    மறையினானொடு மாலவன் காண்கிலா
    நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன்
    உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
    பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே
    
     மேல்
    
     6. திருஆரூர் - திருக்குறுந்தொகை
    
    #1122
    எப்போதும் இறையும் மறவாது நீர்
    முப்போதும் பிரமன் தொழ நின்றவன்
    செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன்
    அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே
    
     மேல்
    
    #1123
    சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர்
    அடைகிலா அரவை அரை ஆர்த்தவர்
    படையின் நேர் தடம் கண் உமை பாகமா
    அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே
    
     மேல்
    
    #1124
    விண்ட வெண் தலையே கலன் ஆகவே
    கொண்டு அகம் பலி தேரும் குழகனார்
    துண்ட வெண் பிறை வைத்த இறையவர்
    அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே
    
     மேல்
    
    #1125
    விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி
    கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல்
    உடையும் சீரை உறைவது காட்டிடை
    அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே
    
     மேல்
    
    #1126
    துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
    வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி
    திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது
    அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே
    
     மேல்
    
    #1127
    பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா
    விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே
    சுண்ண நீறு மெய் பூசி சுடலையின்
    அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே
    
     மேல்
    
    #1128
    மட்டு வார்குழலாளொடு மால் விடை
    இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
    கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு
    அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே
    
     மேல்
    
    #1129
    தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல்
    ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்
    காய்ந்து காமனை நோக்கின கண்ணினார்
    ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே
    
     மேல்
    
    #1130
    உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு
    இண்டை செம் சடை வைத்த இயல்பினான்
    கொண்ட கோவண ஆடையன் கூர் எரி
    அண்டவாணர் அடையும் ஆரூரரே
    
     மேல்
    
    #1131
    மாலும் நான்முகனும் அறிகிற்கிலார்
    காலன் ஆய அவனை கடந்திட்டு
    சூலம் மான் மறி ஏந்திய கையினார்
    ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே
    
     மேல்
    
     7. திருஆரூர் - திருக்குறுந்தொகை
    
    #1132
    கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி
    பக்கமே பகுவாயன பூதங்கள்
    ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய்
    அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே
    
     மேல்
    
    #1133
    எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே
    பந்தம் வீடு அவை ஆய பராபரன்
    அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
    சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே
    
     மேல்
    
    #1134
    வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு
    இண்டை மாலை புனைந்தும் இராப்பகல்
    தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு
    அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே
    
     மேல்
    
    #1135
    துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய்
    என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று
    இன்பராய் நினைந்து என்றும் இடையறா
    அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே
    
     மேல்
    
    #1136
    முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம்
    அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர்
    முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை
    அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே
    
     மேல்
    
    #1137
    எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன்
    எம்மை யாரும் இது செய வல்லரே
    அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு
    அம்மை ஆர தந்தார் ஆரூர் ஐயரே
    
     மேல்
    
    #1138
    தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை
    செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை
    கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய்
    கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே
    
     மேல்
    
    #1139
    இவள் நமை பல பேச தொடங்கினாள்
    அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும்
    பவனி வீதிவிடங்கனை கண்டு இவள்
    தவனி ஆயின ஆறு என்தன் தையலே
    
     மேல்
    
    #1140
    நீரை செம் சடை வைத்த நிமலனார்
    கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா
    ஆரத்தர் உறையும் அணி ஆரூரை
    தூரத்தே தொழுவார் வினை தூளியே
    
     மேல்
    
    #1141
    உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான்
    வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன்
    அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம்
    வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே
    
     மேல்
    
    #1142
    விண்ட மா மலர் மேல் உறைவானொடும்
    கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா
    அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ
    பண்டை வல்வினை நில்லா பறையுமே
    
     மேல்
    
    #1143
    மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன்
    கை உலாவிய சூலத்தன் கண்நுதல்
    ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம்
    உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே
    
     மேல்
    
     8. திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை
    
    #1144
    பாறு அலைத்த படு வெண் தலையினன்
    நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை
    கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய
    ஆறு அலைத்த சடை அன்னியூரனே
    
     மேல்
    
    #1145
    பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய்
    இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர்
    கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன்
    அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே
    
     மேல்
    
    #1146
    பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை
    துரவை ஆக துடைப்பவர்-தம் இடம்
    குரவம் நாறும் குழல் உமை கூறராய்
    அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே
    
     மேல்
    
    #1147
    வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
    சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி
    நாதர் நீதியினால் அடியார்-தமக்கு
    ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே
    
     மேல்
    
    #1148
    எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம்
    இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார்
    துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு
    அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே
    
     மேல்
    
    #1149
    வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர்
    கந்த மா மலர் சூடும் கருத்தினர்
    சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர்
    அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே
    
     மேல்
    
    #1150
    ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
    வானை வானவர் தாங்கள் வணங்கவே
    தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா
    ஆனை ஈர் உரியார் அன்னியூரரே
    
     மேல்
    
    #1151
    காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி
    மேலை வானவர் வந்து விரும்பிய
    சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே
    ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே
    
     மேல்
    
    #1152
    எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்
    திரியும் மூஎயில் தீ எழ செற்றவர்
    கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
    அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே
    
     மேல்
    
    #1153
    வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும்
    அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற
    பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை
    அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே
    
     மேல்
    
     9. திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
    
    #1154
    ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம்
    மாதரார் வலம்கொள் மறைக்காடரை
    காதல்செய்து கருதப்படுமவர்
    பாதம் ஏத்த பறையும் நம் பாவமே
    
     மேல்
    
    #1155
    பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
    ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ
    ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை
    நோக்கி காண்பது நும் பணி செய்யிலே
    
     மேல்
    
    #1156
    புன்னை ஞாழல் புறணி அருகு எலாம்
    மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ
    அன்ன மென்நடையாளை ஒர்பாகமா
    சின்ன வேடம் உகப்பது செல்வமே
    
     மேல்
    
    #1157
    அட்ட மா மலர் சூடி அடும்பொடு
    வட்ட புன் சடை மா மறைக்காடரோ
    நட்டம் ஆடியும் நான்மறை பாடியும்
    இட்டம் ஆக இருக்கும் இடம் இதே
    
     மேல்
    
    #1158
    நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்
    மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ
    தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை
    பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே
    
     மேல்
    
    #1159
    துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார்
    வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ
    பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து
    அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே
    
     மேல்
    
    #1160
    திருவினார் செல்வம் மல்கு விழா அணி
    மருவினார் வலம்கொள் மறைக்காடரோ
    உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய்
    மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே
    
     மேல்
    
    #1161
    சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய்
    வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ
    கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே
    அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே
    
     மேல்
    
    #1162
    குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை
    இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும்
    மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்
    இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே
    
     மேல்
    
     10. திருமறைக்காடு - திருக்குறுந்தொகை
    
    #1163
    பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ
    மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
    கண்ணினால் உமை காண கதவினை
    திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே
    
     மேல்
    
    #1164
    ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ
    மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ
    ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும்
    நீண்ட மா கதவின் வலி நீக்குமே
    
     மேல்
    
    #1165
    அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ
    துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ
    பட்டம் கட்டிய சென்னி பரமரோ
    சட்ட இ கதவம் திறப்பிம்-மினே
    
     மேல்
    
    #1166
    அரிய நான்மறை ஓதிய நாவரோ
    பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ
    விரி கொள் கோவண ஆடை விருத்தரோ
    பெரிய வான் கதவம் பிரிவிக்கவே
    
     மேல்
    
    #1167
    மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ
    கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ
    விலை இல் மா மணி_வண்ண உருவரோ
    தொலைவு இலா கதவம் துணை நீக்குமே
    
     மேல்
    
    #1168
    பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
    ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ
    ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை
    நோக்கி காண கதவை திறவுமே
    
     மேல்
    
    #1169
    வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ
    அந்தமில்லி அணி மறைக்காடரோ
    எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட
    இந்த மா கதவம் பிணை நீக்குமே
    
     மேல்
    
    #1170
    ஆறு சூடும் அணி மறைக்காடரோ
    கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ
    ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த
    மாறு இலா கதவம் வலி நீக்குமே
    
     மேல்
    
    #1171
    சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ
    பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ
    அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ
    திண்ணமா கதவம் திறப்பிம்-மினே
    
     மேல்
    
    #1172
    விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே
    மண் உளார் வணங்கும் மறைக்காடரோ
    கண்ணினால் உமை காண கதவினை
    திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே
    
     மேல்
    
    #1173
    அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
    இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே
    சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ
    சரக்க இ கதவம் திறப்பிம்-மினே
    
     மேல்
    
     11. திருமீயச்சூர் - திருக்குறுந்தொகை
    
    #1174
    தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
    வேற்று கோயில் பல உள மீயச்சூர்
    கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு
    ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1175
    வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள்
    பந்தனை செய்து பாவிக்க நின்றவன்
    சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர்
    எம்தமை உடையார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1176
    பஞ்சமந்திரம் ஓதும் பரமனார்
    அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார்
    நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர்
    எம்தமை உடையார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1177
    நாறு மல்லிகை கூவிளம் செண்பகம்
    வேறுவேறு விரித்த சடையிடை
    ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர்
    ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1178
    வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே
    கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர்
    செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர்
    எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1179
    பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும்
    பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று
    மின்னும் மேகலையாளொடு மீயச்சூர்
    இன்ன நாள் அகலார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1180
    படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன்
    சடை கொள் வெள்ளத்தன் சாந்த வெண்நீற்றினன்
    விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர்
    இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1181
    ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர்
    வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும்
    கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர்
    ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1182
    வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர்
    பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே
    கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர்
    ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே
    
     மேல்
    
    #1183
    கடு_கண்டன் கயிலாய மலை-தனை
    எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற
    விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர்
    இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே
    
     மேல்
    
     12. திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
    
    #1184
    கரைந்து கைதொழுவாரையும் காதலன்
    வரைந்து வைது எழுவாரையும் வாடலன்
    நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும்
    விரைந்து போவது வீழிமிழலைக்கே
    
     மேல்
    
    #1185
    ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை
    நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார்
    நீற்று சந்தன வெள்ளை விரவலார்
    வேற்று கோலம் கொள் வீழிமிழலையே
    
     மேல்
    
    #1186
    புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான்
    வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான்
    நினைய நின்றவன் ஈசனையே எனா
    வினையிலார் தொழும் வீழிமிழலையே
    
     மேல்
    
    #1187
    மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர்
    கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர்
    பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர்
    வேடத்தார் தொழும் வீழிமிழலையே
    
     மேல்
    
    #1188
    எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
    உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே
    கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை
    விடுத்து போவது வீழிமிழலைக்கே
    
     மேல்
    
    #1189
    குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால்
    உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர்
    தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம்
    மிழலையான் அடி சார விண் ஆள்வரே
    
     மேல்
    
    #1190
    தீரன் தீத்திரளன் சடை தங்கிய
    நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை
    தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன்
    வீரன் வீழிமிழலை விகிர்தனே
    
     மேல்
    
    #1191
    எரியினார் இறையார் இடுகாட்டிடை
    நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர்
    பெரியனார் தம் பிறப்பொடு சாதலை
    விரியினார் தொழும் வீழிமிழலையே
    
     மேல்
    
    #1192
    நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி
    காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல்
    வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர்
    மீண்டும் போவது வீழிமிழலைக்கே
    
     மேல்
    
    #1193
    பாலை யாழொடு செவ்வழி பண் கொள
    மாலை வானவர் வந்து வழிபடும்
    ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி
    வேலையார் தொழும் வீழிமிழலையே
    
     மேல்
    
    #1194
    மழலை ஏற்று மணாளன் திருமலை
    சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற
    கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும்
    மிழலையான் அடி வாழ்க என விட்டதே
    
     மேல்
    
     13. திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை
    
    #1195
    என் பொனே இமையோர் தொழு பைம் கழல்
    நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன்
    செம்பொனே திரு வீழிமிழலையுள்
    அன்பனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1196
    கண்ணினால் களி கூர கையால் தொழுது
    எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை
    விண்உளார் தொழும் வீழிமிழலையுள்
    அண்ணலே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1197
    ஞாலமே விசும்பே நலம் தீமையே
    காலமே கருத்தே கருத்தால் தொழும்
    சீலமே திரு வீழிமிழலையுள்
    கோலமே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1198
    முத்தனே முதல்வா முகிழும் முளை
    ஒத்தனே ஒருவா உரு ஆகிய
    சித்தனே திரு வீழிமிழலையுள்
    அத்தனே அடியேனை குறிக்கோளே
    
     மேல்
    
    #1199
    கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம்
    ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற
    திருவனே திரு வீழிமிழலையுள்
    குருவனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1200
    காத்தனே பொழில் ஏழையும் காதலால்
    ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை
    சேர்ந்தனே திரு வீழிமிழலையுள்
    கூத்தனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1201
    நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
    ஓதி வானவரும் உணராதது ஓர்
    வேதியா விகிர்தா திரு வீழியுள்
    ஆதியே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1202
    பழகி நின் அடி சூடிய பாலனை
    கழகின் மேல் வைத்த காலனை சாடிய
    அழகனே அணி வீழிமிழலையுள்
    குழகனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1203
    அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு
    உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன்
    விண்ட வான் பொழில் வீழிமிழலையுள்
    கொண்டனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
    #1204
    ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம்
    வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய
    திருத்தனே திரு வீழிமிழலையுள்
    அருத்தனே அடியேனை குறிக்கொளே
    
     மேல்
    
     14. திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
    
    #1205
    பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள்
    வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும்
    ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
    பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே
    
     மேல்
    
    #1206
    மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர்
    முறையினால் முனிகள் வழிபாடுசெய்
    இறைவன் எம்பெருமான் இடைமருதினில்
    உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1207
    கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும்
    சென்று சேர திகழ் சடை வைத்தவன்
    என்றும் எந்தை பிரான் இடைமருதினை
    நன்று கைதொழுவார் வினை நாசமே
    
     மேல்
    
    #1208
    இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
    அம்மையே பிறவி துயர் நீத்திடும்
    எம்மை ஆளும் இடைமருதன் கழல்
    செம்மையே தொழுவார் வினை சிந்துமே
    
     மேல்
    
    #1209
    வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
    கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார்
    எண் திசைக்கும் இடைமருதா என
    விண்டுபோய் அறும் மேலை வினைகளே
    
     மேல்
    
    #1210
    ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்
    கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்
    ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு
    ஊறிஊறி உருகும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1211
    விண்உளாரும் விரும்பப்படுபவர்
    மண்உளாரும் மதிக்கப்படுவர்
    எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை
    நண்ணினாரை நண்ணா வினை நாசமே
    
     மேல்
    
    #1212
    வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார்
    கந்த மாலைகள் சூடும் கருத்தனார்
    எந்தை என் இடைமருதினில் ஈசனை
    சிந்தையால் நினைவார் வினை தேயுமே
    
     மேல்
    
    #1213
    வேதம் ஓதும் விரி சடை அண்ணலார்
    பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
    ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று
    பாதம் ஏத்த பறையும் நம் பாவமே
    
     மேல்
    
    #1214
    கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
    பனி மலர் குழல் பாவை நல்லாரினும்
    தனி முடி கவித்து ஆளும் அரசினும்
    இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே
    
     மேல்
    
    #1215
    முற்றிலா மதி சூடும் முதல்வனார்
    ஒற்றினார் மலையால் அரக்கன் முடி
    எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை
    பற்றினாரை பற்றா வினை பாவமே
    
     மேல்
    
     15. திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை
    
    #1216
    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
    மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம்
    இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில்
    உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1217
    மனத்துள் மாயனை மாசறு சோதியை
    புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை
    எனக்கு தாயை எம்மான் இடைமருதனை
    நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே
    
     மேல்
    
    #1218
    வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
    கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை
    எண் திசைக்கும் இடைமருதா என
    விண்டுபோய் அறும் மேலை வினைகளே
    
     மேல்
    
    #1219
    துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு
    அணையல் ஆவது எமக்கு அரிதே எனா
    இணை இலா இடைமாமருதில் எழு
    பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே
    
     மேல்
    
    #1220
    மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி
    விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி
    மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல்
    பண்ணை ஆயமும் தானும் பயிலுமே
    
     மேல்
    
    #1221
    மங்கை காண கொடார் மண மாலையை
    கங்கை காண கொடார் முடி கண்ணியை
    நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே
    எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே
    
     மேல்
    
     16. திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை
    
    #1222
    மறையும் ஓதுவர் மான் மறி கையினர்
    கறை கொள் கண்டம் உடைய கபாலியார்
    துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர்
    பிறையும் சூடுவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1223
    கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும்
    வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்
    தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும்
    பிணக்குவார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1224
    சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை
    விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி
    எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும்
    பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1225
    செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள்
    உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை
    அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை
    பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1226
    மற்றையார் அறியார் மழுவாளினார்
    பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை
    சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு
    பெற்றியார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1227
    திருக்கு வார் குழல் செல்வன சேவடி
    இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார்
    சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற
    பெருக்குவார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1228
    முன்னையார் மயில் ஊர்தி முருகவேள்
    தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன்
    என்னை ஆளும் இறையவன் எம்பிரான்
    பின்னையார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1229
    உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு
    இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல்
    அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
    பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1230
    நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா
    ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய
    வார் உலாம் வன மென்முலையாளொடும்
    பேர் உளார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1231
    பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்
    தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்
    மாணியாய் மண் அளந்தவன் நான்முகன்
    பேணியார் அவர் பேரெயிலாளரே
    
     மேல்
    
    #1232
    மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம்
    சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு
    பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
    பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே
    
     மேல்
    
     17. திருவெண்ணி - திருக்குறுந்தொகை
    
    #1233
    முத்தினை பவளத்தை முளைத்த எம்
    தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி
    பித்தனை கொலும் நஞ்சினை வானவர்
    நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1234
    வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர்
    கண்ணி தொத்த சடையர் கபாலியார்
    எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு
    அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே
    
     மேல்
    
    #1235
    காற்றினை கனலை கதிர் மா மணி
    நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும்
    கூற்றினை உதைத்திட்ட குணம் உடை
    வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1236
    நல்லனை திகழ் நான்மறைஓதியை
    சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர்
    கல்லனை கடி மா மதில் மூன்று எய்த
    வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1237
    சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை
    அடரும் சென்னியில் வைத்த அமுதனை
    படரும் செம் சடை பால் மதிசூடியை
    இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1238
    பூதநாதனை பூம் புகலூரனை
    தாது என தவழும் மதிசூடியை
    நாதனை நல்ல நான்மறைஓதியை
    வேதனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1239
    ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும்
    பொருத்திய புனிதன் புரி புன் சடை
    கருத்தனை கறை_கண்டனை கண்நுதல்
    நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1240
    சடையனை சரி கோவண ஆடை கொண்டு
    உடையனை உணர்வார் வினை தீர்த்திடும்
    படையனை மழுவாளொடு பாய்தரும்
    விடையனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1241
    பொருப்பனை புனலாளொடு புன் சடை
    அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான்
    பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள்
    விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே
    
     மேல்
    
    #1242
    சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன்
    கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான்
    காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம்
    வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே
    
     மேல்
    
    #1243
    இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார்
    மலையினால் அரக்கன் திறல் வாட்டினார்
    சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை
    தலையினால் தொழுவார் வினை தாவுமே
    
     மேல்
    
     18. திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
    
    #1244
    முற்றிலா முலையாள் இவளாகிலும்
    அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும்
    கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை
    பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே
    
     மேல்
    
    #1245
    தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும்
    முனகு தீர தொழுது எழு-மின்களோ
    கனக புன்சடையான் கடம்பந்துறை
    நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே
    
     மேல்
    
    #1246
    ஆரியம் தமிழோடு இசை ஆனவன்
    கூரிய குணத்தார் குறி நின்றவன்
    காரிகை உடையான் கடம்பந்துறை
    சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள்
    
     மேல்
    
    #1247
    பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
    வண்ண நல் மலரான் பல தேவரும்
    கண்ணனும் அறியான் கடம்பந்துறை
    நண்ண நம் வினை ஆயின நாசமே
    
     மேல்
    
    #1248
    மறை கொண்ட மனத்தானை மனத்துளே
    நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ
    கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை
    சிறைகொண்ட வினை தீர தொழு-மினே
    
     மேல்
    
    #1249
    நங்கை பாகம் வைத்த நறும் சோதியை
    பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ
    கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை
    அங்கம் ஓதி அரன் உறைகின்றதே
    
     மேல்
    
    #1250
    அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து
    புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்
    கரிய கண்டத்தினான் கடம்பந்துறை
    உரிய ஆறு நினை மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1251
    பூ மென் கோதை உமை ஒருபாகனை
    ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால்
    காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை
    நாமம் ஏத்த நம் தீவினை நாசமே
    
     மேல்
    
    #1252
    பார் அணங்கி வணங்கி பணி செய
    நாரணன் பிரமன் அறியாதது ஓர்
    காரணன் கடம்பந்துறை மேவிய
    ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே
    
     மேல்
    
    #1253
    நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட
    பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார்
    காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை
    மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே
    
     மேல்
    
     19. திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
    
    #1254
    தளரும் கோள் அரவத்தொடு தண் மதி
    வளரும் கோல வளர் சடையார்க்கு இடம்
    கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா
    களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1255
    வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும்
    சொல வலான் சுழலும் தடுமாற்றமும்
    அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை
    கல வலான் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1256
    பொய் தொழாது புலி உரியோன் பணி
    செய்து எழா எழுவார் பணி செய்து எழா
    வைது எழாது எழுவார் அவர் எள்க நீர்
    கைதொழா எழு-மின் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1257
    துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே
    பண்ணினால் முனம் பாடல் அது செய்தே
    எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக்
    கண்ணினான் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1258
    சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
    புனையும் பொன் நிற கொன்றை புரி சடை
    கனையும் பைங்கழலான் கரக்கோயிலை
    நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
    
     மேல்
    
    #1259
    குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்
    வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம்
    வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும்
    கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1260
    பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை
    மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்
    விண்ணினார்கள் வியக்கப்படுமவன்
    கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1261
    அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன்
    மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை
    கங்கையான் உறையும் கரக்கோயிலை
    தம் கையால் தொழுவார் வினை சாயுமே
    
     மேல்
    
    #1262
    நன் கடம்பனை பெற்றவள் பங்கினன்
    தென் கடம்பை திரு கரக்கோயிலான்
    தன் கடன் அடியேனையும் தாங்குதல்
    என் கடன் பணி செய்து கிடப்பதே
    
     மேல்
    
    #1263
    பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும்
    மணம் கமழ் மலர் தாமரையான் அவன்
    பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
    கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1264
    வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை
    அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார்
    திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை
    உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே
    
     மேல்
    
     20. திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை
    
    #1265
    ஒருவராய் இரு மூவரும் ஆயவன்
    குரு அது ஆய குழகன் உறைவிடம்
    பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ்
    கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1266
    வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர்
    கன்னியாளை கதிர் முடி வைத்தவன்
    பொன்னின் மல்கு புணர் முலையாளொடும்
    மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1267
    இல்ல கோலமும் இந்த இளமையும்
    அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே
    ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர்
    செல்வ கோயில் திரு கரக்கோயிலே
    
     மேல்
    
    #1268
    வேறு சிந்தை இலாதவர் தீவினை
    கூறு செய்த குழகன் உறைவிடம்
    ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும்
    ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1269
    திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர்
    மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம்
    பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும்
    தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1270
    மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
    எல்லை ஆன பிரானர் இருப்பிடம்
    கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை
    நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1271
    தளரும் வாள் அரவத்தொடு தண் மதி
    வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது
    கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா
    களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1272
    உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம்
    பெற்றார் ஆய பிரானார் உறைவிடம்
    முற்றார் மும்மதில் எய்த முதல்வனார்
    கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1273
    வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம்
    உள்ளம் ஆய பிரானார் உறைவிடம்
    பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான்
    கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
    #1274
    பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன்
    உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற
    இரக்கம் இன்றி இறை விரலால் தலை
    அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே
    
     மேல்
    
     21. திருஇன்னம்பர் - திருக்குறுந்தொகை
    
    #1275
    என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
    என்னிலும் இனியான் ஒருவன் உளன்
    என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு
    என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1276
    மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால்
    கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ
    தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி
    எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1277
    கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன்
    புனலும் கொன்றையும் சூடும் புரி சடை
    அனலும் சூலமும் மான் மறி கையினர்
    எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1278
    மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான்
    அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை
    குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே
    இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1279
    தென்னவன் எனை ஆளும் சிவன் அவன்
    மன்னவன் மதி அம் மறை ஓதியான்
    முன்னம் அன்னவன் சேரலன் பூழியான்
    இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1280
    விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில்
    அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை
    குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே
    இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1281
    சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர்
    கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள்
    படை கணால் பருகப்படுவான் நமக்கு
    இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1282
    தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று
    அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
    பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
    எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1283
    விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை
    புரியும் காமனை வேவ புருவமும்
    திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து
    எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
    #1284
    சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
    முனிவனாய் முடி பத்து உடையான்-தனை
    கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ
    இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே
    
     மேல்
    
     22. திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை
    
    #1285
    பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு
    ஆவணத்து உடையான் அடியார்களை
    தீ வண திருநீறு மெய் பூசி ஓர்
    கோவணத்து உடையான் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1286
    பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர்
    தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ
    வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று
    கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1287
    நங்கையாள் உமையாள் உறை நாதனார்
    அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை
    கங்கையாள் அவள் கன்னி எனப்படும்
    கொங்கையாள் உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1288
    ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
    ஏதானும் இனிது ஆகும் இயமுனை
    சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம்
    கோதாவிரி உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1289
    நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே
    வக்கரை உறைவானை வணங்கு நீ
    அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்
    கொக்கரை உடையான் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1290
    துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்
    பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய்
    மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம்
    குறவனார் உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1291
    தொண்டர் ஆக தொழுது பணி-மினோ
    பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்
    விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை
    கொண்டவன் உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1292
    காமியம் செய்து காலம் கழியாதே
    ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ
    சாமியோடு சரச்சுவதி அவள்
    கோமியும் உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1293
    சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய்
    பரமனை பல நாளும் பயிற்று-மின்
    பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
    குரவனார் உறையும் குடமூக்கிலே
    
     மேல்
    
    #1294
    அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை
    சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
    நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின்
    கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே
    
     மேல்
    
     23. திருநின்றியூர் - திருக்குறுந்தொகை
    
    #1295
    கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை
    படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர்
    நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்
    கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே
    
     மேல்
    
    #1296
    வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை
    நீதியே கொள-பாலது நின்றியூர்
    வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய்
    காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே
    
     மேல்
    
    #1297
    புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை
    சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர்
    நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர்
    பற்றினாரை பற்றா வினை பாவமே
    
     மேல்
    
    #1298
    பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
    மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம்
    நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர்
    உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1299
    சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள்
    இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ
    நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர்
    பனையின் ஈர் உரி போர்த்த பரமே
    
     மேல்
    
    #1300
    உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை
    நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர்
    உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில்
    திரைத்து பாடி திரிதரும் செல்வரே
    
     மேல்
    
    #1301
    கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு
    இன்றி ஏறலனால் இது என்-கொலோ
    நின்றியூர் பதி ஆக நிலாயவன்
    வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே
    
     மேல்
    
    #1302
    நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர்
    கொலை விலால் எயில் எய்த கொடியவன்
    நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர்
    உரையினால் தொழுவார் வினை ஓயுமே
    
     மேல்
    
    #1303
    அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்
    நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
    இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ
    குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே
    
     மேல்
    
    #1304
    எளியனா மொழியா இலங்கைக்கு இறை
    களியினால் கயிலாயம் எடுத்தவன்
    நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர்
    அளியினால் தொழுவார் வினை அல்குமே
    
     மேல்
    
     24. திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை
    
    #1305
    ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை
    ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே
    ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன்
    ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே
    
     மேல்
    
    #1306
    வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள்
    ஈட்டவே இருள் ஆடி இடு பிணக்
    காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர்
    ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே
    
     மேல்
    
    #1307
    கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின்
    ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி
    நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம்
    ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே
    
     மேல்
    
    #1308
    சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி
    பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர்
    மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய்
    ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே
    
     மேல்
    
    #1309
    புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு
    பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான்
    மற்றையாரொடு வானவரும் தொழ
    ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே
    
     மேல்
    
    #1310
    போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர்
    மாது தாழ் சடை வைத்த மணாளனார்
    ஓது வேதியனார் திரு ஒற்றியூர்
    பாதம் ஏத்த பறையும் நம் பாவமே
    
     மேல்
    
    #1311
    பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும்
    கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும்
    உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர்
    நிலவினான் அடியே அடை நெஞ்சமே
    
     மேல்
    
    #1312
    ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று
    ஒன்று போலும் உதைத்து களைந்தது
    ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று
    ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே
    
     மேல்
    
    #1313
    படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர்
    சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர்
    உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர்
    அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே
    
     மேல்
    
    #1314
    வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை
    வரையினால் வலி செற்றவர் வாழ்விடம்
    திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர்
    உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே
    
     மேல்
    
     25. திருப்பாசூர் - திருக்குறுந்தொகை
    
    #1315
    முந்தி மூஎயில் எய்த முதல்வனார்
    சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்
    அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர்
    பந்தி செம் சடை பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1316
    மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார்
    தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார்
    கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர்
    படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1317
    நாறு கொன்றையும் நாகமும் திங்களும்
    ஆறும் செம் சடை வைத்த அழகனார்
    காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர்
    பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1318
    வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல்
    ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார்
    நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை
    பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1319
    மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால்
    இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர்
    துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை
    பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1320
    பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம்
    எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர்
    சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர்
    பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1321
    கட்டிவிட்ட சடையர் கபாலியர்
    எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர்
    இட்டமா அறியேன் இவர் செய்வன
    பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1322
    வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்
    காதில் வெண் குழை வைத்த கபாலியார்
    நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர்
    பாதி வெண் பிறை பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1323
    சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர்
    ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார்
    தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர்
    பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1324
    மாலினோடு மறையவன்-தானுமாய்
    மேலும் கீழும் அளப்பரிது ஆயவர்
    ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக
    பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
    #1325
    திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால்
    எரிய எய்தனரேனும் இலங்கை_கோன்
    நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால்
    பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே
    
     மேல்
    
     26. திருவன்னியூர் - திருக்குறுந்தொகை
    
    #1326
    காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம்
    பாட மா நடம் ஆடும் பரமனார்
    வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ்
    மாட மா மதில் சூழ் வன்னியூரரே
    
     மேல்
    
    #1327
    செம் கண் நாகம் அரையது தீ திரள்
    அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர்
    கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர்
    மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே
    
     மேல்
    
    #1328
    ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர்
    தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம்
    தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு
    வானம் காட்டுவர் போல் வன்னியூரரே
    
     மேல்
    
    #1329
    இம்மை அம்மை என இரண்டும் இவை
    மெய்ம்மைதான் அறியாது விளம்புவர்
    மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை
    வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே
    
     மேல்
    
    #1330
    பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர்
    நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர்
    கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர்
    மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே
    
     மேல்
    
    #1331
    திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்
    துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி
    முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா
    வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே
    
     மேல்
    
    #1332
    குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி
    இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான்
    வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும்
    வணங்குவார் மனத்தார் வன்னியூரரே
    
     மேல்
    
    #1333
    இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
    முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான்
    அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
    வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே
    
     மேல்
    
    #1334
    நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா
    விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட
    இலங்கை_மன்னன் இருபது தோளினை
    மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே
    
     மேல்
    
     27. திருவையாறு - திருக்குறுந்தொகை
    
    #1335
    சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன்
    பொந்து வார் புலால் வெண் தலை கையினன்
    முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து
    அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே
    
     மேல்
    
    #1336
    பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி
    போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
    கோகம் மாலை குலாயது ஓர் கொன்றையும்
    ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே
    
     மேல்
    
    #1337
    நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே
    வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான்
    துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து
    அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே
    
     மேல்
    
    #1338
    நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில்
    அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார்
    பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர்
    அனைத்து வாய்தலுள் ஆரும் ஐயாறரே
    
     மேல்
    
    #1339
    பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர்
    அரிய பாடலர் ஆடலர் அன்றியும்
    கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம்
    அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே
    
     மேல்
    
    #1340
    புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர்
    மலரும் போதுகளால் பணிய சிலர்
    இலரும் போதும் இலாததும் அன்றியும்
    அலரும் போதும் அணியும் ஐயாறரே
    
     மேல்
    
    #1341
    பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற
    கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
    மங்கை மாலை மதியமும் கண்ணியும்
    அங்க மாலையும் சூடும் ஐயாறரே
    
     மேல்
    
    #1342
    முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம்
    பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள்
    மன் ஐ ஆறு மருவிய மாதவன்
    தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே
    
     மேல்
    
    #1343
    ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
    வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ
    நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள்
    தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே
    
     மேல்
    
    #1344
    அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன்
    அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று
    அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே
    அரக்கினான் அடியாலும் ஐயாறனே
    
     மேல்
    
     28. திருவையாறு - திருக்குறுந்தொகை
    
    #1345
    சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம்
    முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி
    சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர்
    அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1346
    மூல வண்ணத்தராய் முதல் ஆகிய
    கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர்
    நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு
    ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1347
    சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும்
    அந்தி போது அழகு ஆகிய வண்ணமும்
    பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும்
    அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1348
    இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
    சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
    மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
    அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1349
    இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல்
    குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும்
    மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும்
    அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1350
    இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும்
    தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
    கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி
    அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1351
    விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
    கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும்
    விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும்
    அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1352
    ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும்
    வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும்
    வாழி தீ உரு ஆகிய வண்ணமும்
    ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1353
    செய் தவன் திருநீறு அணி வண்ணமும்
    எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும்
    கைது காட்சி அரியது ஓர் வண்ணமும்
    ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
    #1354
    எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
    இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்
    கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும்
    அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே
    
     மேல்
    
     29. திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
    
    #1355
    நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை
    மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள்
    பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடு
    துறை கவாலியோடு ஆடிய சுண்ணமே
    
     மேல்
    
    #1356
    தவள மா மதி சாயல் ஓர் சந்திரன்
    பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை
    அளவு கண்டிலள் ஆவடுதண்துறை
    களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே
    
     மேல்
    
    #1357
    பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை
    ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள்
    ஆதி ஆவடுதண்துறை மேவிய
    சோதியே சுடரே என்று சொல்லுமே
    
     மேல்
    
    #1358
    கார் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்
    வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள்
    ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை
    தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே
    
     மேல்
    
    #1359
    கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன்
    பருகு பால் அமுதே எனும் பண்பினன்
    அருகு சென்று இவள் ஆவடுதண்துறை
    ஒருவன் என்னை உடைய கோ என்னுமே
    
     மேல்
    
    #1360
    குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும்
    தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான்
    அழகன் ஆவடுதண்துறையா என
    கழலும் கை வளை காரிகையாளுக்கே
    
     மேல்
    
    #1361
    பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை
    தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும்
    அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை
    மஞ்சனோடு இவள் ஆடிய மையலே
    
     மேல்
    
    #1362
    பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என்
    நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்
    அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை
    இறைவன் என்னை உடையவன் என்னுமே
    
     மேல்
    
    #1363
    வையம்தான் அளந்தானும் அயனுமாய்
    மெய்யை காணலுற்றார்க்கு அழல் ஆயினன்
    ஐயன் ஆவடுதண்துறையா என
    கையில் வெள் வளையும் கழல்கின்றதே
    
     மேல்
    
    #1364
    பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான்
    மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்
    அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை
    நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே
    
     மேல்
    
     30. திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை
    
    #1365
    கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை
    சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை
    பரப்பு நீர் வரு காவிரி தென் கரை
    திரு பராய்த்துறை மேவிய செல்வரே
    
     மேல்
    
    #1366
    மூடினார் களி யானையின் ஈர் உரி
    பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம்
    சேடனார் தென் பராய்த்துறை செல்வரை
    தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே
    
     மேல்
    
    #1367
    பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர்
    நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும்
    சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார்
    இட்டமாய் இருப்பாரை அறிவரே
    
     மேல்
    
    #1368
    முன்பு எலாம் சில மோழைமை பேசுவர்
    என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர்
    தென் பராய்த்துறை மேவிய செல்வனார்
    அன்பராய் இருப்பாரை அறிவரே
    
     மேல்
    
    #1369
    போது தாதொடு கொண்டு புனைந்து உடன்
    தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள்
    வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை
    சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #1370
    நல்ல நான்மறை ஓதிய நம்பனை
    பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை
    தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை
    வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே
    
     மேல்
    
    #1371
    நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை
    பருப்பதம் மத யானை உரித்தவன்
    திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல்
    பொருப்பு அராவி இழி புனல் போன்றதே
    
     மேல்
    
    #1372
    எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல்
    பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை
    சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல்
    விட்டு நம் வினை உள்ளன வீடுமே
    
     மேல்
    
    #1373
    நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை
    மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி
    திரு பராய்த்துறை மேவிய செல்வனார்
    விருப்பராய் இருப்பாரை அறிவரே
    
     மேல்
    
    #1374
    தொண்டு பாடியும் தூ மலர் தூவியும்
    இண்டை கட்டி இணை அடி ஏத்தியும்
    பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை
    கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே
    
     மேல்
    
    #1375
    அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை
    பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை
    இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின்
    பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே
    
     மேல்
    
     31. திருவானைக்கா - திருக்குறுந்தொகை
    
    #1376
    கோனை காவி குளிர்ந்த மனத்தராய்
    தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள்
    ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்
    ஊனை காவி உழிதர்வர் ஊமரே
    
     மேல்
    
    #1377
    திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து
    பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து
    உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே
    அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1378
    துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர்
    இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின்
    என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
    அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1379
    நாவால் நன்று நறு மலர் சேவடி
    ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை
    காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம்
    ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1380
    வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும்
    வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற
    நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம்
    அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1381
    நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே
    படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள்
    தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம்
    அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1382
    ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
    கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி
    தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று
    அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1383
    உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர்
    தெருளும் சிக்கென தீவினை சேராதே
    இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம்
    அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1384
    நேசம் ஆகி நினை மட நெஞ்சமே
    நாசம் ஆய குல நலம் சுற்றங்கள்
    பாசம் அற்று பராபர ஆனந்த
    ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
    #1385
    ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
    கீதம் கின்னரம் பாட கெழுவினான்
    பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர்
    ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே
    
     மேல்
    
     32. திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை
    
    #1386
    கொடி கொள் செல்வ விழா குணலை அறா
    கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார்
    பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்
    அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1387
    ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய்
    பார்த்தனோடு படை தொடுமாகிலும்
    பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்
    தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1388
    மாதினை மதித்தான் ஒருபாகமா
    காதலால் கரந்தான் சடை கங்கையை
    பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
    ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1389
    மூவனாய் முதலாய் இ உலகு எலாம்
    காவனாய் கடும் காலனை காய்ந்தவன்
    பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர்
    தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1390
    செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில்
    உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும்
    பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர்
    நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1391
    வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை
    கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான்
    புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்
    செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1392
    ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று
    பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும்
    பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர்
    திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1393
    அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர்
    கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான்
    பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்
    சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1394
    செதுகு அறா மனத்தார் புறம்கூறினும்
    கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும்
    பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
    அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
    #1395
    துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
    பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம்
    பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்
    படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே
    
     மேல்
    
     33. திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை
    
    #1396
    கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர்
    தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார்
    தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே
    வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1397
    முத்தி ஆக ஒரு தவம் செய்திலை
    அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை
    தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
    பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1398
    ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
    கட்டி நின்ற கழிந்து அவை போய் அற
    தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே
    பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1399
    ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும்
    நீதியான் என்றும் நின்மலனே என்றும்
    சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே
    வாதியாய் பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1400
    ஆட்டினாய் அடியேன் வினை ஆயின
    ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண்
    தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே
    நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1401
    பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
    பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
    தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
    தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1402
    ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்
    ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும்
    தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
    பூணியாய் பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1403
    பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என்
    புற்றில் ஆடு அரவே அது பூணில் என்
    சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
    பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1404
    அல்லியான் அரவு ஐந்தலை நாகஅணை
    பள்ளியான் அறியாத பரிசு எலாம்
    சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
    புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1405
    மிண்டரோடு விரவியும் வீறு இலா
    குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ
    தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே
    உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1406
    வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை
    ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான்
    சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
    தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே
    
     மேல்
    
     34. திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை
    
    #1407
    கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான்
    புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன்
    நெல்லியான் நிலையான நெய்த்தானனை
    சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே
    
     மேல்
    
    #1408
    இரவனை இடு வெண் தலை ஏந்தியை
    பரவனை படையார் மதில் மூன்றையும்
    நிரவனை நிலையான நெய்த்தானனை
    குரவனை தொழுவார் கொடிவாணரே
    
     மேல்
    
    #1409
    ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள்
    கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ
    தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை
    வானிடை தொழுவார் வலிவாணரே
    
     மேல்
    
    #1410
    விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ
    கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை
    உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை
    தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே
    
     மேல்
    
    #1411
    முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே
    சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான்
    நங்கையோடு நவின்ற நெய்த்தானனை
    தம் கையால் தொழுவார் தலைவாணரே
    
     மேல்
    
    #1412
    சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள்
    நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே
    சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை
    இட்டமாய் தொழுவார் இன்பவாணரே
    
     மேல்
    
    #1413
    கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர்
    கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ
    தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை
    உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே
    
     மேல்
    
    #1414
    உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை
    பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான்
    நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை
    சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே
    
     மேல்
    
    #1415
    மாலொடும் மறை ஓதிய நான்முகன்
    காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்
    சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை
    மாலொடும் தொழுவார் வினை வாடுமே
    
     மேல்
    
    #1416
    வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை
    நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார்
    புரிந்து கை நரம்போடு இசை பாடலும்
    பரிந்தனை பணிவார் வினை பாறுமே
    
     மேல்
    
     35. திருப்பழனம் - திருக்குறுந்தொகை
    
    #1417
    அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை
    உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும்
    பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
    திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே
    
     மேல்
    
    #1418
    வையம் வந்து வணங்கி வலம்கொளும்
    ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால்
    பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே
    
     மேல்
    
    #1419
    வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
    திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே
    பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான்
    எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே
    
     மேல்
    
    #1420
    மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட
    வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி
    பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான்
    தார் கொள் மாலை சடை கரந்திட்டதே
    
     மேல்
    
    #1421
    நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர்
    கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர்
    பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை
    மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே
    
     மேல்
    
    #1422
    மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர்
    சந்தம் ஆக திரு சடை சாத்துவான்
    பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான்
    எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே
    
     மேல்
    
    #1423
    மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள்
    பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள்
    பார்க்க நின்று பரவும் பழனத்தான்
    தாள்-கண் நின்று தலை வணங்கார்களே
    
     மேல்
    
    #1424
    ஏறினார் இமையோர்கள் பணி கண்டு
    தேறுவாரலர் தீவினையாளர்கள்
    பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
    கூறினான் உமையாளொடும் கூடவே
    
     மேல்
    
    #1425
    சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல்
    தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான்
    பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
    எற்றினான் மறக்கேன் எம்பிரானையே
    
     மேல்
    
    #1426
    பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை
    அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன்
    பங்கன் என்றும் பழனன் உமையொடும்
    தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே
    
     மேல்
    
     36. திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை
    
    #1427
    கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
    தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான்
    ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி
    தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே
    
     மேல்
    
    #1428
    என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
    அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி
    செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை
    நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே
    
     மேல்
    
    #1429
    வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
    கீறு கோவண ஐ துகில் ஆடையர்
    தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி
    ஆறு சூடிய அண்ணல் அவனையே
    
     மேல்
    
    #1430
    அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
    இருவராய் இடுவார் கடை தேடுவார்
    தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
    ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே
    
     மேல்
    
    #1431
    பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
    ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன்
    தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
    மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
    
     மேல்
    
    #1432
    சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி
    கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ
    திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார்
    குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே
    
     மேல்
    
    #1433
    கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர்
    மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர்
    செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி
    ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே
    
     மேல்
    
    #1434
    வெம் கண் நாகம் வெருவுற ஆர்த்தவர்
    பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர்
    செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார்
    அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே
    
     மேல்
    
    #1435
    நன்றி நாரணன் நான்முகன் என்று இவர்
    நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று
    சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான்
    நின்ற சூழலில் நீள் எரி ஆகியே
    
     மேல்
    
    #1436
    திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால்
    எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன்
    நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார்
    அரிய வானம் அவர் அருள்செய்வரே
    
     மேல்
    
     37. திருக்கடவூர் வீரட்டம் - திருக்குறுந்தொகை
    
    #1437
    மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை
    நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே
    கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால்
    கலை கையானை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1438
    வெள்ளி மால் வரை போல்வது ஓர் ஆனையார்
    உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார்
    கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார்
    கள்ள ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1439
    ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார்
    ஊனை வேவ உருக்கிய ஆனையார்
    வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே
    கான ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1440
    ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார்
    நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார்
    கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார்
    கான ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1441
    அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார்
    வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார்
    எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார்
    களித்த ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1442
    விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார்
    தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார்
    கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
    கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1443
    மண்உளாரை மயக்குறும் ஆனையார்
    எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார்
    விண்உளார் பலரும் அறி ஆனையார்
    கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1444
    சினக்கும் செம்பவள திரள் ஆனையார்
    மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார்
    அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார்
    கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1445
    வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார்
    நீதியால் நிலன் ஆகிய ஆனையார்
    ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார்
    காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1446
    நீண்ட மாலொடு நான்முகன்தானுமாய்
    காண்டும் என்று புக்கார்கள் இருவரும்
    ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார்
    காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
    #1447
    அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை
    எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார்
    கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார்
    கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே
    
     மேல்
    
     38. திருக்கடவூர் மயானம் - திருக்குறுந்தொகை
    
    #1448
    குழை கொள் காதினர் கோவண ஆடையர்
    உழையர்தாம் கடவூரின் மயானத்தார்
    பழைய தம் அடியார் செய்யும் பாவமும்
    பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1449
    உன்னி வானவர் ஓதிய சிந்தையில்
    கன்னல் தேன் கடவூரின் மயானத்தார்
    தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம்
    பின்னை என்னார் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1450
    சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர்
    ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர்
    காலகாலர் கடவூர் மயானத்தார்
    மாலை மார்பர் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1451
    இறைவனார் இமையோர் தொழு பைம் கழல்
    மறவனார் கடவூரின் மயானத்தார்
    அறவனார் அடியார்அடியார்-தங்கள்
    பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1452
    கத்து காளி கதம் தணிவித்தவர்
    மத்தர்தாம் கடவூரின் மயானத்தார்
    ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு
    பித்தர் காணும் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1453
    எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர்
    கரியர்தாம் கடவூரின் மயானத்தார்
    அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும்
    பெரியர் காணும் பெருமான் அடிகளே
    
     மேல்
    
    #1454
    அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
    கணங்கள் கடவூரின் மயானத்தார்
    வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும்
    பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே
    
     மேல்
    
    #1455
    அரவு கையினர் ஆதிபுராணனார்
    மரவு சேர் கடவூரின் மயானத்தார்
    பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர்
    பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே
    
     மேல்
    
     39. திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை
    
    #1456
    கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல் வளை
    உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர்
    வள்ளல் மா மயிலாடுதுறை உறை
    வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே
    
     மேல்
    
    #1457
    சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும்
    பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி
    வைத்த மா மயிலாடுதுறை அரன்
    கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே
    
     மேல்
    
    #1458
    அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
    கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
    வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
    தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே
    
     மேல்
    
    #1459
    வெம் சின கடும் காலன் விரைகிலான்
    அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்
    மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
    அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே
    
     மேல்
    
    #1460
    குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால்
    கறை நிலாவிய கண்டன் எண் தோளினன்
    மறைவலான் மயிலாடுதுறை உறை
    இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே
    
     மேல்
    
    #1461
    நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
    கலைகள் ஆய வல்லான் கயிலாய நல்
    மலையன் மா மயிலாடுதுறையன் நம்
    தலையின் மேலும் மனத்துளும் தங்கவே
    
     மேல்
    
    #1462
    நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை
    ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன்
    மாற்றினான் மயிலாடுதுறை என்று
    போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே
    
     மேல்
    
    #1463
    கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும்
    தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன்
    நீல மா மயில் ஆடு துறையனே
    நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே
    
     மேல்
    
    #1464
    பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி
    மணம் கொள சடை வைத்த மறையவன்
    வணங்கும் மா மயிலாடுதுறை அரன்
    அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே
    
     மேல்
    
    #1465
    நீள் நிலா அரவ சடை நேசனை
    பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்
    வாள் நிலா மயிலாடுதுறைதனை
    காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே
    
     மேல்
    
    #1466
    பருத்த தோளும் முடியும் பொடிபட
    இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும்
    வரத்தினான் மயிலாடுதுறை தொழும்
    கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே
    
     மேல்
    
     40. திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை
    
    #1467
    வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
    எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
    கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
    அண்ணலே அறிவான் இவள் தன்மையே
    
     மேல்
    
    #1468
    மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
    இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான்
    திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள்
    பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே
    
     மேல்
    
    #1469
    மழலைதான் வர சொல் தெரிகின்றிலள்
    குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ
    அழகனே கழிப்பாலை எம் அண்ணலே
    இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே
    
     மேல்
    
    #1470
    செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை
    மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும்
    கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம்
    ஐயனே அறிவான் இவள் தன்மையே
    
     மேல்
    
    #1471
    கருத்தனை கழிப்பாலையுள் மேவிய
    ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை
    அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
    ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே
    
     மேல்
    
    #1472
    கங்கையை சடை வைத்து மலைமகள்
    நங்கையை உடனே வைத்த நாதனார்
    திங்கள் சூடி திரு கழிப்பாலையான்
    இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே
    
     மேல்
    
    #1473
    ஐயனே அழகே அனல் ஏந்திய
    கையனே கறை சேர்தரு கண்டனே
    மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
    ஐயனே விதியே அருள் என்னுமே
    
     மேல்
    
    #1474
    பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை
    முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை
    அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம்
    சித்தனை சென்று சேருமா செப்புமே
    
     மேல்
    
    #1475
    பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை
    அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன்
    என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
    துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே
    
     மேல்
    
     41. திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை
    
    #1476
    உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர்
    படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
    சடையின் கங்கை தரித்த சதுரரை
    அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே
    
     மேல்
    
    #1477
    மத்த மா மலர் சூடிய மைந்தனார்
    சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால்
    பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம்
    அத்தனை தொழ வல்லவர் நல்லரே
    
     மேல்
    
    #1478
    விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை
    கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான்
    பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை
    தொழுது செல்பவர்-தம் வினை தூளியே
    
     மேல்
    
    #1479
    ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
    நின்ற சூழல் அறிவு அரியான் இடம்
    சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
    என்றும் மேவி இருந்த அடிகளே
    
     மேல்
    
    #1480
    வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
    தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர்
    தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
    யாழின் பாட்டை உகந்த அடிகளே
    
     மேல்
    
    #1481
    குண்டுபட்டு குறி அறியா சமண்
    மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான்
    கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
    அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே
    
     மேல்
    
    #1482
    வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி
    உரிப்பை மூடிய உத்தமனார் உறை
    திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
    இருப்பர் வானவரோடு இனிதாகவே
    
     மேல்
    
    #1483
    கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல்
    பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார்
    பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர்
    ஆடும் நாகம் அசைத்த அடிகளே
    
     மேல்
    
    #1484
    கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான்
    வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன்
    தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம்
    ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #1485
    தருக்கி சென்று தட வரை பற்றலும்
    நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே
    அரக்கன் பாட அருளும் எம்மான் இடம்
    இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே
    
     மேல்
    
     42. திருவேட்களம் - திருக்குறுந்தொகை
    
    #1486
    நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும்
    என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம்
    சென்று நீர் திரு வேட்களத்துள் உறை
    துன்று பொன்சடையானை தொழு-மினே
    
     மேல்
    
    #1487
    கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன்
    பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன்
    விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது
    இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே
    
     மேல்
    
    #1488
    வேட்களத்து உறை வேதியன் எம் இறை
    ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர்
    பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால்
    காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே
    
     மேல்
    
    #1489
    அல்லல் இல்லை அருவினைதான் இல்லை
    மல்கு வெண் பிறை சூடும் மணாளனார்
    செல்வனார் திரு வேட்களம் கைதொழ
    வல்லராகில் வழி அது காண்-மினே
    
     மேல்
    
    #1490
    துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி
    நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார்
    எம் பொனார் உறை வேட்களம் நல் நகர்
    இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே
    
     மேல்
    
    #1491
    கட்டப்பட்டு கவலையில் வீழாதே
    பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர்
    சிட்டனார் திரு வேட்களம் கைதொழ
    பட்ட வல்வினை ஆயன பாறுமே
    
     மேல்
    
    #1492
    வட்ட மென்முலையாள் உமை_பங்கனார்
    எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார்
    சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது
    இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1493
    நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும்
    இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ
    வட்ட வார்முலையாள் உமை_பங்கனார்
    சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே
    
     மேல்
    
    #1494
    வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண்
    சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
    சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே
    
     மேல்
    
    #1495
    சேடனார் உறையும் செழு மா மலை
    ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற
    வாட ஊன்றி மலர் அடி வாங்கிய
    வேடனார் உறை வேட்களம் சேர்-மினே
    
     மேல்
    
     43. திருநல்லம் - திருக்குறுந்தொகை
    
    #1496
    கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால்
    இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள்
    நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல்
    சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே
    
     மேல்
    
    #1497
    பொக்கம் பேசி பொழுது கழியாதே
    துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ
    தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன்
    நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே
    
     மேல்
    
    #1498
    பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால்
    பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள்
    அணுக வேண்டில் அரன் நெறி ஆவது
    நணுகும் நாதன் நகர் திரு நல்லமே
    
     மேல்
    
    #1499
    தமக்கு நல்லது தம் உயிர் போயினால்
    இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான்
    உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி
    நமக்கு நல்லது நல்லம் அடைவதே
    
     மேல்
    
    #1500
    உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம்
    நரை விடை உடையான் இடம் நல்லமே
    பரவு-மின் பணி-மின் பணிவாரொடே
    விரவு-மின் விரைவாரை விடு-மினே
    
     மேல்
    
    #1501
    அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும்
    வல்ல ஆறு சிவாயநம என்று
    நல்லம் மேவிய நாதன் அடி தொழ
    வெல்ல வந்த வினை பகை வீடுமே
    
     மேல்
    
    #1502
    மாதராரொடு மக்களும் சுற்றமும்
    பேதம் ஆகி பிரிவதன் முன்னமே
    நாதன் மேவிய நல்லம் நகர் தொழ
    போது-மின் எழு-மின் புகல் ஆகுமே
    
     மேல்
    
    #1503
    வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர்
    செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்
    சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ
    நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே
    
     மேல்
    
    #1504
    காலம் ஆன கழிவதன் முன்னமே
    ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின்
    மாலும் மா மலரானொடு மா மறை
    நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே
    
     மேல்
    
    #1505
    மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி
    ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி
    நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால்
    சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே
    
     மேல்
    
     44. திருஆமாத்தூர் - திருக்குறுந்தொகை
    
    #1506
    மா மாத்து ஆகிய மால் அயன் மால் கொடு
    தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி
    ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று
    ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே
    
     மேல்
    
    #1507
    சந்தியானை சமாதி செய்வார்-தங்கள்
    புந்தியானை புத்தேளிர் தொழப்படும்
    அந்தியானை ஆமாத்தூர் அழகனை
    சிந்தியாதவர் தீவினையாளரே
    
     மேல்
    
    #1508
    காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான்
    போம் ஆத்தை அறியாது புலம்புவேன்
    ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும்
    தேமா தீம் கனி போல தித்திக்குமே
    
     மேல்
    
    #1509
    பஞ்சபூத வலையில் படுவதற்கு
    அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை
    நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும்
    வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே
    
     மேல்
    
    #1510
    குரா மன்னும் குழலாள் ஒருகூறனார்
    அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர்
    இராமனும் வழிபாடுசெய் ஈசனை
    நிராமயன்-தனை நாளும் நினை-மினே
    
     மேல்
    
    #1511
    பித்தனை பெரும் தேவர் தொழப்படும்
    அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய
    முத்தினை அடியேன் உள் முயறலும்
    பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே
    
     மேல்
    
    #1512
    நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை
    கூற்றினான் குழல் கோல சடையில் ஓர்
    ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய
    ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே
    
     மேல்
    
    #1513
    பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு
    அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர்
    சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர்
    கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே
    
     மேல்
    
    #1514
    குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா
    மிண்டரோடு எனை வேறுபடுத்து உய
    கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து
    அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே
    
     மேல்
    
    #1515
    வானம் சாடும் மதி அரவத்தொடு
    தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை
    தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும்
    ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே
    
     மேல்
    
    #1516
    விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி
    அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர்
    இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம்
    இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே
    
     மேல்
    
     45. திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை
    
    #1517
    மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால்
    நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும்
    சோதி ஆர்தரு தோணிபுரவர்க்கு
    தாதி ஆவன் நான் என்னும் என் தையலே
    
     மேல்
    
    #1518
    நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம்
    மிக்க தையலை வெள் வளை கொள்வது
    தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு
    தக்கது அன்று தமது பெருமைக்கே
    
     மேல்
    
    #1519
    கெண்டை போல் நயனத்து இமவான்மகள்
    வண்டு வார் குழலாள் உடன் ஆகவே
    துண்ட வான் பிறை தோணிபுரவரை
    கண்டு காமுறுகின்றனள் கன்னியே
    
     மேல்
    
    #1520
    பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை
    மேலள் ஆவது கண்டனள் விண்ணுற
    சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு
    சால நல்லள் ஆகின்றனள் தையலே
    
     மேல்
    
    #1521
    பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ
    பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது
    சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
    அண்ணலாருக்கு சால அழகிதே
    
     மேல்
    
    #1522
    முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு
    அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி
    தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே
    நல்லை ஆயிடுகின்றனை நங்கையே
    
     மேல்
    
    #1523
    ஒன்றுதான் அறியார் உலகத்தவர்
    நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்
    துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம்
    கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே
    
     மேல்
    
    #1524
    உறவு பேய் கணம் உண்பது வெண் தலை
    உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி
    துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை
    இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே
    
     மேல்
    
    #1525
    மாக யானை மருப்பு ஏர் முலையினர்
    போக யானும் அவள் புக்கதே புக
    தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
    ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே
    
     மேல்
    
    #1526
    இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி
    கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை
    துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
    அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே
    
     மேல்
    
     46. திருப்புகலூர் - திருக்குறுந்தொகை
    
    #1527
    துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி
    பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ
    மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன்
    என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே
    
     மேல்
    
    #1528
    இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும்
    நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை
    புரைப்பு இலாத பொழில் புகலூரரை
    உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே
    
     மேல்
    
    #1529
    ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல்
    ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர்
    ஓ சொலாய் மகளே முறையோ என்று
    பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே
    
     மேல்
    
    #1530
    மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை
    தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை
    புன்னை காவல் பொழில் புகலூரனை
    என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே
    
     மேல்
    
    #1531
    விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
    எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும்
    கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில்
    புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே
    
     மேல்
    
    #1532
    அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு
    பண்டு நான்மறை ஓதிய பாடலன்
    தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர்
    புண்டரீகத்து உளார் புகலூரரே
    
     மேல்
    
    #1533
    தத்துவம் தலை கண்டு அறிவார் இலை
    தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்
    தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது
    தத்துவன்அலன் தண் புகலூரனே
    
     மேல்
    
    #1534
    பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர்
    கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர்
    வரும் கை யானை மத களிறு அஞ்சினை
    பொரும் கை யானை கண்டீர் புகலூரரே
    
     மேல்
    
    #1535
    பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல்
    தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா
    புன்னை தாது பொழில் புகலூரரை
    என் அத்தா என என் இடர் தீருமே
    
     மேல்
    
    #1536
    மத்தனாய் மதியாது மலை-தனை
    எத்தினான் திரள் தோள் முடி பத்து இற
    ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும்
    பொத்தினான் புகலூரை தொழு-மினே
    
     மேல்
    
     47. திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
    
    #1537
    பண்டு செய்த பழவினையின் பயன்
    கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே
    வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன்
    தொண்டனாய் திரியாய் துயர் தீரவே
    
     மேல்
    
    #1538
    நச்சி நாளும் நயந்து அடியார் தொழ
    இச்சையால் உமை நங்கை வழிபட
    கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில்
    கச்சி ஏகம்பமே கைதொழு-மினே
    
     மேல்
    
    #1539
    ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம்
    தான் உலாவிய தன்மையராகிலும்
    வான் உலாவிய பாணி பிறங்க வெம்
    கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே
    
     மேல்
    
    #1540
    இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர்
    தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர்
    இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன்
    நமை ஆளும் அவனை தொழு-மின்களே
    
     மேல்
    
    #1541
    மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும்
    பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன்
    கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ
    இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே
    
     மேல்
    
    #1542
    பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு
    அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள்
    சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம்
    இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே
    
     மேல்
    
    #1543
    மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து
    ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள்
    நோக்குவான் நமை நோய் வினை வாராமே
    காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே
    
     மேல்
    
    #1544
    பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை
    பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன்
    வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன்
    கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே
    
     மேல்
    
    #1545
    திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன்
    வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான்
    ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர்
    கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே
    
     மேல்
    
    #1546
    இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை
    வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின்
    பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள்
    அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே
    
     மேல்
    
    #1547
    இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
    விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும்
    கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும்
    நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே
    
     மேல்
    
     48. திருவேகம்பம் - திருக்குறுந்தொகை
    
    #1548
    பூமேலானும் பூமகள்_கேள்வனும்
    நாமே தேவர் எனாமை நடுக்குற
    தீ மேவும் உருவா திரு ஏகம்பா
    ஆமோ அல்லல்பட அடியோங்களே
    
     மேல்
    
    #1549
    அரும் திறல் அமரர் அயன் மாலொடு
    திருந்த நின்று வழிபட தேவியோடு
    இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம்
    பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே
    
     மேல்
    
    #1550
    கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன்
    மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான்
    உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம்
    முறைமையால் சென்று முந்தி தொழுதுமே
    
     மேல்
    
    #1551
    பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை
    நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்
    அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம்
    குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே
    
     மேல்
    
    #1552
    சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு
    அந்தியாய் அனலாய் புனல் வானமாய்
    புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம்
    எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே
    
     மேல்
    
    #1553
    சாக்கியத்தொடு மற்றும் சமண் படும்
    பாக்கியம் இலார் பாடு செலாது உற
    பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம்
    நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே
    
     மேல்
    
    #1554
    மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை
    ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை
    காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம்
    சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே
    
     மேல்
    
    #1555
    ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும்
    சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே
    நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார்
    கோல மா மலர் பாதமே கும்பிடே
    
     மேல்
    
    #1556
    பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள்
    மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய
    கையனை கச்சி ஏகம்பம் மேவிய
    ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே
    
     மேல்
    
    #1557
    அரக்கன் தன் வலி உன்னி கயிலையை
    நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து
    இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம்
    தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே
    
     மேல்
    
     49. திருவெண்காடு - திருக்குறுந்தொகை
    
    #1558
    பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு
    கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும்
    பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு
    வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1559
    கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார்
    ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார்
    வெள்ளியன் கரியன் பசு ஏறிய
    தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1560
    ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
    வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ
    தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்
    தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1561
    பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின்
    உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே
    பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம்
    திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1562
    பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன்
    உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள்
    கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்
    செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1563
    கூடினான் உமையாள் ஒருபாகமாய்
    வேடனாய் விசயற்கு அருள்செய்தவன்
    சேடனார் சிவனார் சிந்தை மேய வெண்
    காடனார் அடியே அடை நெஞ்சமே
    
     மேல்
    
    #1564
    தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
    புரித்த புன்சடையான் கயவர் புரம்
    எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம்
    விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1565
    பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
    சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே
    நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற
    அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1566
    ஏன வேடத்தினானும் பிரமனும்
    தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
    ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும்
    கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே
    
     மேல்
    
    #1567
    பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர்
    சேலை ஆடிய கண் உமை பங்கனார்
    வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
    மாலை ஆவது மாண்டவர் அங்கமே
    
     மேல்
    
    #1568
    இரா வணம் செய மா மதி பற்று அ ஐ
    யிராவணம் உடையான்-தனை உள்கு-மின்
    இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த
    இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே
    
     மேல்
    
     50. திருவாய்மூர் - திருக்குறுந்தொகை
    
    #1569
    எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு
    அங்கே வந்து அடையாளம் அருளினார்
    தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார்
    அங்கே வா என்று போனார் அது என்-கொலோ
    
     மேல்
    
    #1570
    மன்னு மா மறைக்காட்டு மணாளனார்
    உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு
    தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி
    என்னை வா என்று போனார் அது என்-கொலோ
    
     மேல்
    
    #1571
    தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன்
    அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார்
    உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன்
    வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே
    
     மேல்
    
    #1572
    கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன்
    ஒழிய போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன்
    வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம்
    சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ
    
     மேல்
    
    #1573
    ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று
    உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு
    தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர்
    கள்ளியார் அவர் போல கரந்ததே
    
     மேல்
    
    #1574
    யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில்
    ஆதே ஏயும் அளவு இல் பெருமையான்
    மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார்
    போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ
    
     மேல்
    
    #1575
    பாடி பெற்ற பரிசில் பழம் காசு
    வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல்
    தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா
    ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ
    
     மேல்
    
    #1576
    திறக்க பாடிய என்னினும் செந்தமிழ்
    உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார்
    மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர்
    பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே
    
     மேல்
    
    #1577
    தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும்
    நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன்
    எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா
    புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ
    
     மேல்
    
    #1578
    தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்
    மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை
    வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை
    தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே
    
     மேல்
    
     51. திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை
    
    #1579
    நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை
    கோல மா மதி கங்கையும் கூட்டினார்
    சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி
    பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1580
    கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
    தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர்
    திவள வானவர் போற்றி திசை தொழும்
    பவள மேனியர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1581
    மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும்
    பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ
    மன்னி நான்மறையோடு பல் கீதமும்
    பன்னினார் அவர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1582
    நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம்
    கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
    ஆடினார் அழகு ஆகிய நான்மறை
    பாடினார் அவர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1583
    சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
    பித்தர் நான்மறை வேதியர் பேணிய
    அத்தனே நமை ஆள்உடையாய் எனும்
    பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1584
    விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
    மண்ணினார் மறவாது சிவாய என்று
    எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
    பண்ணினார் அவர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1585
    குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை
    விரவினார் பண் கெழுமிய வீணையும்
    மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம்
    பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1586
    தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து
    அடரும்போது அரனாய் அருள்செய்பவர்
    கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல்
    படரும் செம் சடை பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1587
    மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை
    நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல்
    போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர்
    பாகம் தோய்ந்தவர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1588
    வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்
    அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
    செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர்
    பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே
    
     மேல்
    
    #1589
    உரத்தினால் அரக்கன் உயர் மா மலை
    நெருக்கினானை நெரித்து அவன் பாடலும்
    இரக்கமா அருள்செய்த பாலைத்துறை
    கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே
    
     மேல்
    
     52. திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை
    
    #1590
    நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்
    வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள்
    பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி
    செல்வர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1591
    நாவலம்பெருந்தீவினில் வாழ்பவர்
    மேவி வந்து வணங்கி வினையொடு
    பாவமாயின பற்று அறுவித்திடும்
    தேவர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1592
    ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்
    ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
    மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய
    நாதர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1593
    சந்திரன்னொடு சூரியர்தாம் உடன்
    வந்து சீர் வழிபாடுகள் செய்த பின்
    ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள்
    மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1594
    பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார்
    கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட
    தண்டமா விதாதாவின் தலை கொண்ட
    செண்டர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1595
    வம்பு பூம் குழல் மாது மறுக ஓர்
    கம்ப யானை உரித்த கரத்தினர்
    செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை
    நம்பர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1596
    மானை ஏந்திய கையினர் மை அறு
    ஞான சோதியர் ஆதியர் நாமம்தான்
    ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும்
    தேனர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1597
    கழல் கொள் காலினர் காலனை காய்ந்தவர்
    தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி
    அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய
    குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1598
    வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண்
    சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும்
    சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
    #1599
    தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே
    சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல்
    ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும்
    தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே
    
     மேல்
    
     53. திருஅதிகை வீரட்டம் - திருக்குறுந்தொகை
    
    #1600
    கோணல் மா மதி சூடி ஓர் கோவண
    நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை
    பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
    காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1601
    பண்ணினை பவள திரள் மா மணி
    அண்ணலை அமரர் தொழும் ஆதியை
    சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம்
    நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1602
    உற்றவர்-தம் உறு நோய் களைபவர்
    பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்
    சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
    கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1603
    முற்றா வெண் மதி சூடும் முதல்வனார்
    செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ
    வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம்
    கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1604
    பல்லாரும் பல தேவர் பணிபவர்
    நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்
    வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம்
    கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1605
    வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை
    கொண்டான் கோல மதியோடு அரவமும்
    விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
    கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1606
    அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம்
    திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை
    விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால்
    கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1607
    நீறு உடை தடம் தோள் உடை நின்மலன்
    ஆறு உடை புனல் பாய் கெடில கரை
    ஏறு உடை கொடியான் திரு வீரட்டம்
    கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1608
    செங்கண்மால் விடை ஏறிய செல்வனார்
    பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
    அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம்
    கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1609
    பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர்
    நாண் ஆக வரை வில்லிடை அம்பினால்
    பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம்
    காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1610
    வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம்
    திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை
    விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
    உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
    #1611
    உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே
    வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை
    சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
    புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே
    
     மேல்
    
     54. திருஅதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை
    
    #1612
    எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி
    மட்டு அலர் இடுவார் வினை மாயுமால்
    கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீ
    ரட்டனார் அடி சேருமவருக்கே
    
     மேல்
    
    #1613
    நீளமா நினைந்து எண் மலர் இட்டவர்
    கோள வல்வினையும் குறிவிப்பரால்
    வாளமா இழியும் கெடில கரை
    வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே
    
     மேல்
    
    #1614
    கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு
    உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்
    தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை
    வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே
    
     மேல்
    
    #1615
    பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
    வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்
    வீங்கு தண் புனல் பாய் கெடில கரை
    வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே
    
     மேல்
    
    #1616
    தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
    தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்
    மீன தண் புனல் பாய் கெடில கரை
    வேனல் ஆனை உரித்த வீரட்டரே
    
     மேல்
    
    #1617
    ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர்
    ஊழி தொல்வினை ஓட அகற்றுவார்
    பாழி தண் புனல் பாய் கெடில கரை
    வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே
    
     மேல்
    
    #1618
    உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட
    திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்
    வரைகள் வந்து இழியும் கெடில கரை
    விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே
    
     மேல்
    
    #1619
    ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால்
    காலை ஏத்த வினையை கழிப்பரால்
    ஆலி வந்து இழியும் கெடில கரை
    வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே
    
     மேல்
    
    #1620
    தாரித்து உள்ளி தட மலர் எட்டினால்
    பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்
    மூரி தெண் திரை பாய் கெடில கரை
    வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே
    
     மேல்
    
    #1621
    அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு
    அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து
    அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீ
    ரட்டனார் அடி சேருமவர்களே
    
     மேல்
    
     55. திருநாரையூர் - திருக்குறுந்தொகை
    
    #1622
    வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர்
    கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும்
    நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு
    ஆறு சூடலும் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1623
    புள்ளி கொண்ட புலி உரி ஆடையும்
    வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும்
    நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை
    அள்ளி உண்டலும் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1624
    வேடு தங்கிய வேடமும் வெண் தலை
    ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
    நாடு தங்கிய நாரையூரான் நடம்
    ஆடு பைம் கழல் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1625
    கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
    மிக்க வெண் தலை மாலை விரி சடை
    நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
    அக்கின் ஆரமும் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1626
    வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும்
    பொடி கொள் செம்பவளம் புரை மேனியும்
    நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர்
    அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1627
    சூலம் மல்கிய கையும் சுடரொடு
    பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
    ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
    ஆல நீழலும் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1628
    பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும்
    எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
    நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர்
    அண்ணலார் செய்கை அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1629
    என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை
    மின் புரிந்த சடை மேல் விளங்கவே
    நன் பகல் பலி தேரினும் நாரையூர்
    அன்பனுக்கு அது அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1630
    முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
    இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான்
    நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
    அரவும் பூணுதல் அம்ம அழகிதே
    
     மேல்
    
    #1631
    கடுக்கை அம் சடையன் கயிலை மலை
    எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும்
    நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல்
    அடுத்த தன்மையும் அம்ம அழகிதே
    
     மேல்
    
     56. திருக்கோளிலி - திருக்குறுந்தொகை
    
    #1632
    மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு
    தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன்
    கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி
    நக்கனை தொழ நம் வினை நாசமே
    
     மேல்
    
    #1633
    முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை
    வித்தினை விளைவு ஆய விகிர்தனை
    கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி
    அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே
    
     மேல்
    
    #1634
    வெண் திரை பரவை விடம் உண்டது ஓர்
    கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை
    கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய
    அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #1635
    பலவும் வல்வினை பாறும் பரிசினால்
    உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை
    குலவினான் குளிரும் பொழில் கோளிலி
    நிலவினான்-தனை நித்தல் நினை-மினே
    
     மேல்
    
    #1636
    அல்லல் ஆயின தீரும் அழகிய
    முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே
    கொல்லை யானை உரத்தவன் கோளிலி
    செல்வன் சேவடி சென்று தொழு-மினே
    
     மேல்
    
    #1637
    ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ
    பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல்
    கூவினான் குளிரும் பொழில் கோளிலி
    மேவினானை தொழ வினை வீடுமே
    
     மேல்
    
    #1638
    சீர்த்த நல் மனையாளும் சிறுவரும்
    ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால்
    கூத்தனார் உறையும் திரு கோளிலி
    ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே
    
     மேல்
    
    #1639
    மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள்
    காலம் வந்து கடை முடியா முனம்
    கோல வார் பொழில் கோளிலி மேவிய
    நீல_கண்டனை நின்று நினை-மினே
    
     மேல்
    
    #1640
    கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது
    தேடி நீர் திரியாதே சிவகதி
    கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை
    பாடு-மின் இரவோடு பகலுமே
    
     மேல்
    
    #1641
    மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை
    அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள்
    கொடுத்தவன் உறை கோளிலியே தொழ
    விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே
    
     மேல்
    
     57. திருக்கோளிலி - திருக்குறுந்தொகை
    
    #1642
    முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை
    இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
    செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி
    மன்னனே அடியேனை மறவலே
    
     மேல்
    
    #1643
    விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை
    மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை
    பண்உளார் பயிலும் திரு கோளிலி
    அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே
    
     மேல்
    
    #1644
    நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம்
    ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும்
    ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே
    கோளிலி அரன் பாதமே கூறுமே
    
     மேல்
    
    #1645
    விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில்
    பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி
    அழல் கையான் அமரும் திரு கோளிலி
    குழகனார் திரு பாதமே கூறுமே
    
     மேல்
    
    #1646
    மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை
    காலன் ஆகிய காலற்கும் காலனை
    கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி
    சூலபாணி-தன் பாதம் தொழு-மினே
    
     மேல்
    
    #1647
    காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண்
    நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை
    ஆற்றனை அமரும் திரு கோளிலி
    ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே
    
     மேல்
    
    #1648
    வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை
    ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை
    கோதி வண்டு அறையும் திரு கோளிலி
    வேத_நாயகன் பாதம் விரும்புமே
    
     மேல்
    
    #1649
    நீதியால் தொழுவார்கள் தலைவனை
    வாதை ஆன விடுக்கும் மணியினை
    கேதி வண்டு அறையும் திரு கோளிலி
    வேத_நாயகன் நித்தல் நினை-மினே
    
     மேல்
    
    #1650
    மாலும் நான்முகனாலும் அறிவு ஒணா
    பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை
    கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி
    நீல_கண்டனை நித்தல் நினை-மினே
    
     மேல்
    
    #1651
    அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை
    நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு
    இரக்கம் ஆகியவன் திரு கோளிலி
    அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே
    
     மேல்
    
     58. திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை
    
    #1652
    தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள்
    நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே
    அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி
    நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #1653
    மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை
    தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு
    ஆக்கினான் அணி ஆறை வடதளி
    நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே
    
     மேல்
    
    #1654
    குண்டரை குணமில்லரை கூறை இல்
    மிண்டரை துரந்த விமலன்-தனை
    அண்டரை பழையாறை வடதளி
    கண்டரை தொழுது உய்ந்தன கைகளே
    
     மேல்
    
    #1655
    முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை
    கடையரை கடிந்தார் கனல் வெண் மழு
    படையரை பழையாறை வடதளி
    உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1656
    ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும்
    கள்ளரை கடிந்த கருப்பூறலை
    அள்ளல் அம் புனல் ஆறை வடதளி
    வள்ளலை புகழ துயர் வாடுமே
    
     மேல்
    
    #1657
    நீதியை கெட நின்று அமணே உணும்
    சாதியை கெடுமா செய்த சங்கரன்
    ஆதியை பழையாறை வடதளி
    சோதியை தொழுவார் துயர் தீருமே
    
     மேல்
    
    #1658
    திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண்
    பிரட்டரை பிரித்த பெருமான்-தனை
    அருள் திறத்து அணி ஆறை வடதளி
    தெருட்டரை தொழ தீவினை தீருமே
    
     மேல்
    
    #1659
    ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண்
    வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை
    பாதனை பழையாறை வடதளி
    நாதனை தொழ நம் வினை நாசமே
    
     மேல்
    
    #1660
    வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா
    ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான்
    பாய் இரும் புனல் ஆறை வடதளி
    மேயவன் என வல்வினை வீடுமே
    
     மேல்
    
    #1661
    செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல்
    எருத்து இற விரலால் இறை ஊன்றிய
    அருத்தனை பழையாறை வடதளி
    திருத்தனை தொழுவார் வினை தேயுமே
    
     மேல்
    
     59. திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
    
    #1662
    பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல்
    வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும்
    கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு
    திரு மாற்பேறு தொழ வினை தேயுமே
    
     மேல்
    
    #1663
    ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு
    கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல்
    மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
    ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே
    
     மேல்
    
    #1664
    துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி
    அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த
    மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு
    பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
    #1665
    தீது அவை செய்து தீவினை வீழாதே
    காதல் செய்து கருத்தினில் நின்ற நல்
    மா தவர் பயில் மாற்பேறு கைதொழ
    போது-மின் வினை ஆயின போகுமே
    
     மேல்
    
    #1666
    வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன்
    வார் கொள் நல் முரசம் அறைய அறை
    வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழு
    வார்கள் மன்னுவர் பொன்_உலகத்திலே
    
     மேல்
    
    #1667
    பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை
    உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர்
    வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு
    கண்டு கைதொழ தீரும் கவலையே
    
     மேல்
    
    #1668
    மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து
    அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும்
    வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு
    தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே
    
     மேல்
    
    #1669
    முன்னவன் உலகுக்கு முழு மணி
    பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம்
    மன்னவன் திரு மாற்பேறு கைதொழும்
    அன்னவர் எமை ஆள்உடையார்களே
    
     மேல்
    
    #1670
    வேடனாய் விசயன்னொடும் எய்து வெம்
    காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல்
    மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு
    பாடுவார் பெறுவார் பரலோகமே
    
     மேல்
    
    #1671
    கருத்தனாய் கயிலாய மலை-தனை
    தருக்கினால் எடுத்தானை தகரவே
    வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு
    அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே
    
     மேல்
    
     60. திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
    
    #1672
    ஏதும் ஒன்றும் அறிவிலராயினும்
    ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு
    பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
    மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே
    
     மேல்
    
    #1673
    அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்
    நிச்சலும் நினையாய் வினை போய் அற
    கச்ச மா விடம் உண்ட கண்டா என
    வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே
    
     மேல்
    
    #1674
    சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
    கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
    பாத்திரம் சிவன் என்று பணிதிரேல்
    மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே
    
     மேல்
    
    #1675
    இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள்
    அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால்
    பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர்
    மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே
    
     மேல்
    
    #1676
    சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர்
    ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால்
    கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர்
    மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே
    
     மேல்
    
    #1677
    ஈட்டும் மா நிதி சால இழக்கினும்
    வீட்டும் காலன் விரைய அழைக்கினும்
    காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில்
    வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே
    
     மேல்
    
    #1678
    ஐயனே அரனே என்று அரற்றினால்
    உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர்
    செய்ய பாதம் இரண்டும் நினையவே
    வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே
    
     மேல்
    
    #1679
    உந்தி சென்று மலையை எடுத்தவன்
    சந்து தோளொடு தாள் இற ஊன்றினான்
    மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என
    அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே
    
     மேல்
    
     61. திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
    
    #1680
    முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை
    புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம்
    பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
    மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே
    
     மேல்
    
    #1681
    பிறை கணி சடை எம்பெருமான் என்று
    கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய்
    உற கணித்து உருகா மனத்தார்களை
    புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே
    
     மேல்
    
    #1682
    அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு
    புரிசை நம் திரு புத்தூர் புனிதனை
    பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம்
    துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே
    
     மேல்
    
    #1683
    வேதனை மிகு வீணையில் மேவிய
    கீதனை கிளரும் நறும் கொன்றை அம்
    போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை
    நாதனை நினைந்து என் மனம் நையுமே
    
     மேல்
    
    #1684
    அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல்
    விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய்
    திரு புத்தூரனை சிந்தைசெயச்செய
    கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே
    
     மேல்
    
    #1685
    பாம்பொடும் மதியும் படர் புன் சடை
    பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான்
    நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும்
    சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே
    
     மேல்
    
    #1686
    கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை
    அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர்
    பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு
    புனலும் சூடுவர் போலும் புத்தூரரே
    
     மேல்
    
    #1687
    காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர்
    ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு
    நீற்றினை அணிவர் நினைவாய் தமை
    போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே
    
     மேல்
    
    #1688
    முன்னும் முப்புரம் செற்றனராயினும்
    அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம்
    மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம்
    பொன்னும் ஒப்பர் புத்தூர் எம் புனிதரே
    
     மேல்
    
    #1689
    செருத்தனால் தன தேர் செல உய்த்திடும்
    கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல்
    பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல்
    பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே
    
     மேல்
    
     62. கடுவாய்க்கரைத் திருப்புத்தூர் - திருக்குறுந்தொகை
    
    #1690
    ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும்
    அருத்தனை அடியேன் மனத்துள் அமர்
    கருத்தனை கடுவாய் புனல் ஆடிய
    திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே
    
     மேல்
    
    #1691
    யாவரும் அறிதற்கு அரியான்-தனை
    மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை
    நாவின் நல் உரை ஆகிய நாதனை
    தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே
    
     மேல்
    
    #1692
    அன்பனை அடியார் இடர்நீக்கியை
    செம்பொனை திகழும் திருக்கச்சி ஏ
    கம்பனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
    நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே
    
     மேல்
    
    #1693
    மா தனத்தை மா தேவனை மாறு இலா
    கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை
    காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
    நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே
    
     மேல்
    
    #1694
    குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட்
    கொண்டு நல் திறம் காட்டிய கூத்தனை
    கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர்
    அண்டனை கண்டு அருவினை அற்றெனே
    
     மேல்
    
    #1695
    பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட
    மைந்தனை மணவாளனை மா மலர்
    கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
    எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே
    
     மேல்
    
    #1696
    உம்பரானை உருத்திரமூர்த்தியை
    அம்பரானை அமலனை ஆதியை
    கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
    எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே
    
     மேல்
    
    #1697
    மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள்
    நேசம் ஆகிய நித்த மணாளனை
    பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
    ஈசனே என இன்பம் அது ஆயிற்றே
    
     மேல்
    
    #1698
    இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு
    கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே
    கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட்
    படவே பெற்று நான் பாக்கியம் செய்தெனே
    
     மேல்
    
    #1699
    அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு
    இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை
    திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர்
    இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே
    
     மேல்
    
     63. திருதென்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை
    
    #1700
    இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்
    புரம் காவல் அழிய பொடி ஆக்கினான்
    தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை
    குரங்காடுதுறை கோல கபாலியே
    
     மேல்
    
    #1701
    முத்தினை மணியை பவளத்து ஒளிர்
    தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ்
    கொத்து அலர் குரங்காடுதுறை உறை
    அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே
    
     மேல்
    
    #1702
    குளிர் புனல் குரங்காடுதுறையனை
    தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி
    ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும்
    தெளிவினை தெளிய தெளிந்திட்டதே
    
     மேல்
    
    #1703
    மணவன் காண் மலையாள் நெடு மங்கல
    கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண்
    குணவன் காண் குரங்காடுதுறைதனில்
    அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே
    
     மேல்
    
    #1704
    ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்
    காலத்தான் உயிர் போக்கிய காலினன்
    நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி
    கோலத்தான் குரங்காடுதுறையனே
    
     மேல்
    
    #1705
    ஆட்டினான் முன் அமணரோடு என்தனை
    பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை
    வீட்டினான் வினை மெய் அடியாரொடும்
    கூட்டினான் குரங்காடுதுறையனே
    
     மேல்
    
    #1706
    மாத்தன்தான் மறையார் முறையால் மறை
    ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண்
    போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி
    கூத்தன்தான் குரங்காடுதுறையனே
    
     மேல்
    
    #1707
    நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்
    ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி
    பாடு-மின் பரமன் பயிலும் இடம்
    கூடு-மின் குரங்காடுதுறையையே
    
     மேல்
    
    #1708
    தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல்
    போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன்
    அன்று அ அந்தகனை அயில் சூலத்தால்
    கொன்றவன் குரங்காடுதுறையனே
    
     மேல்
    
    #1709
    நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம்
    உற்ற நல் மொழியால் அருள்செய்த நல்
    கொற்றவன் குரங்காடுதுறை தொழ
    பற்றும் தீவினை ஆயின பாறுமே
    
     மேல்
    
    #1710
    கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை
    எடுத்த தோள் தலை இற்று அலற விரல்
    அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள்
    கொடுத்தவன் குரங்காடுதுறையனே
    
     மேல்
    
     64. திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை
    
    #1711
    வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய்
    ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள்
    கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல்
    தாழும் பத்தர்கள் சால சதுரரே
    
     மேல்
    
    #1712
    கயிலை நல் மலை ஆளும் கபாலியை
    மயில் இயல் மலைமாதின் மணாளனை
    குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என்
    உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே
    
     மேல்
    
    #1713
    வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்
    தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால்
    தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில்
    கோழம்பா என கூடிய செல்வமே
    
     மேல்
    
    #1714
    பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள்
    கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு
    கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து
    ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே
    
     மேல்
    
    #1715
    தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர்
    பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன்
    குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்
    நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே
    
     மேல்
    
    #1716
    நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம்
    வேத நாவர் விடை கொடியார் வெற்பில்
    கோதை மாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட
    ஆதி பாதம் அடைய வல்லார்களே
    
     மேல்
    
    #1717
    முன்னை நான் செய்த பாவம் முதல் அற
    பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது
    அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர்
    பின்னல் வார்சடையானை பிதற்றியே
    
     மேல்
    
    #1718
    ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண்
    கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்
    கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி
    ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே
    
     மேல்
    
    #1719
    அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி
    பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை
    குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து
    உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே
    
     மேல்
    
    #1720
    சமர சூரபன்மாவை தடிந்த வேல்
    குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய
    அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள்
    அமரலோகம் அது ஆள்உடையார்களே
    
     மேல்
    
    #1721
    துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ்
    பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான்
    கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று
    இட்ட கீதம் இசைத்த அரக்கனே
    
     மேல்
    
     65. திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை
    
    #1722
    பூவனூர் புனிதன் திருநாமம்தான்
    நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்
    பாவம் ஆயின பாறி பறையவே
    தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே
    
     மேல்
    
    #1723
    என்னன் என் மனை எந்தை என் ஆருயிர்
    தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய
    பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன்
    இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே
    
     மேல்
    
    #1724
    குற்றம் கூடி குணம் பல கூடாதீர்
    மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம்
    புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர்
    கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே
    
     மேல்
    
    #1725
    ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான்
    தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான்
    மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை
    பூவனூர் புகுவார் வினை போகுமே
    
     மேல்
    
    #1726
    புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல்
    நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர்
    தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல்
    வல்லம் ஊர் என வல்வினை மாயுமே
    
     மேல்
    
    #1727
    அனுசயப்பட்டு அது இது என்னாதே
    கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி
    புனிதனை பூவனூரனை போற்றுவார்
    மனிதரில் தலையான மனிதரே
    
     மேல்
    
    #1728
    ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன்
    வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர்
    பாதி ஆனான் பரந்த பெரும் படை
    பூதநாதன் தென் பூவனூர் நாதனே
    
     மேல்
    
    #1729
    பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில்
    நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
    கோவலூர் குடவாயில் கொடுமுடி
    மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே
    
     மேல்
    
    #1730
    ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர்
    பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான்
    தேவதேவன் திரு நெறி ஆகிய
    பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே
    
     மேல்
    
    #1731
    நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
    வாரணன் குமரன் வணங்கும் கழல்
    பூரணன் திரு பூவனூர் மேவிய
    காரணன் எனை ஆள் உடை காளையே
    
     மேல்
    
    #1732
    மை கடுத்த நிறத்து அரக்கன் வரை
    புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி
    மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும்
    பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே
    
     மேல்
    
     66. திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை
    
    #1733
    ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்
    பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை
    மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை
    பாதம் ஏத்த பறையும் நம் பாவமே
    
     மேல்
    
    #1734
    கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம்
    எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன்
    மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை
    பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே
    
     மேல்
    
    #1735
    இளைய காலம் எம்மானை அடைகிலா
    துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல்
    வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை
    களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே
    
     மேல்
    
    #1736
    நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய்
    குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன்
    மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய
    இறைவனை இனி என்று-கொல் காண்பதே
    
     மேல்
    
    #1737
    விண்ட புரம் மூன்றும் எரி கொள
    திண் திறல் சிலையால் எரிசெய்தவன்
    வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி
    அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே
    
     மேல்
    
    #1738
    படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை
    அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான்
    மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி
    அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே
    
     மேல்
    
    #1739
    நாக்கொண்டு பரவும் அடியார் வினை
    போக்க வல்ல புரி சடை புண்ணியன்
    மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன்
    ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே
    
     மேல்
    
    #1740
    தேடுவார் பிரமன் திருமால் அவர்
    ஆடு பாதம் அவரும் அறிகிலார்
    மாட வீதி வலஞ்சுழி ஈசனை
    தேடுவான் உறுகின்றது என் சிந்தையே
    
     மேல்
    
    #1741
    கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை
    நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்
    வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய
    பண்பன் இ பொனை செய்த பரிச இதே
    
     மேல்
    
    #1742
    இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
    நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான்
    மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி
    வலம்கொள்வார் அடி என் தலை மேலவே
    
     மேல்
    
     67. திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை
    
    #1743
    படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
    உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்
    புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம்
    அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே
    
     மேல்
    
    #1744
    பறப்பையும் பசுவும் படுத்து பல
    திறக்கவும் உடையோர் திகழும் பதி
    கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு
    சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே
    
     மேல்
    
    #1745
    புற்றில் ஆடு அரவோடு புனல் மதி
    தெற்று செம் சடை தேவர் பிரான் பதி
    சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
    பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே
    
     மேல்
    
    #1746
    அங்கம் ஆறும் அரு மறை நான்குடன்
    தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
    செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம்
    தங்குவார் நம் அமரர்க்கு அமரரே
    
     மேல்
    
    #1747
    நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை
    ஆறு சூடும் அடிகள் உறை பதி
    மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம்
    தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே
    
     மேல்
    
    #1748
    அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு
    உற்ற நல் துணை ஆவான் உறை பதி
    தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம்
    கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே
    
     மேல்
    
    #1749
    அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்
    திருத்தும் சேவடியான் திகழும் நகர்
    ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம்
    அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே
    
     மேல்
    
     68. திருநள்ளாறு - திருக்குறுந்தொகை
    
    #1750
    உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள்
    தெள் ஆறா சிவசோதி திரளினை
    கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை
    நள்ளாறு என நம் வினை நாசமே
    
     மேல்
    
    #1751
    ஆரண பொருள் ஆம் அருளாளனார்
    வாரணத்து உரி போர்த்த மணாளனார்
    நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார்
    காரண கலை ஞான கடவுளே
    
     மேல்
    
    #1752
    மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில்
    சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன்
    பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
    நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே
    
     மேல்
    
    #1753
    மலியும் செம் சடை வாள் அரவம்மொடு
    பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார்
    நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம்
    வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே
    
     மேல்
    
    #1754
    உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன்
    இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன்
    நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன்
    மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே
    
     மேல்
    
    #1755
    செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார்
    நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார்
    வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு
    சக்கரம் அருள்செய்த சதுரரே
    
     மேல்
    
    #1756
    வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர்
    விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார்
    வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார்
    நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே
    
     மேல்
    
    #1757
    அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின
    சொல்லன் என்று சொல்லா மறை சோதியான்
    வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர்
    நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே
    
     மேல்
    
    #1758
    பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும்
    பூம் பணை பொலிகின்ற புராணனும்
    தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல்
    நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே
    
     மேல்
    
    #1759
    இலங்கை_மன்னன் இருபது தோள் இற
    மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர்
    நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும்
    வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே
    
     மேல்
    
     69. திருக்கருவிலிக்கொட்டிட்டை - திருக்குறுந்தொகை
    
    #1760
    மட்டு இட்ட குழலார் சுழலில் வலை
    பட்டிட்டும் மயங்கி பரியாது நீர்
    கட்டிட்ட வினை போக கருவிலி
    கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே
    
     மேல்
    
    #1761
    ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும்
    ஏல மா மலரோடு இலை கொண்டு நீர்
    காலனார் வருதல் முன் கருவிலி
    கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1762
    பங்கம் ஆயின பேச பறைந்து நீர்
    மங்குமா நினையாதே மலர் கொடு
    கங்கை சேர் சடையான்-தன் கருவிலி
    கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1763
    வாடி நீர் வருந்தாதே மனிதர்காள்
    வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண்
    காடனார் உறைகின்ற கருவிலி
    கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1764
    உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர்
    பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு
    கையினான் உறைகின்ற கருவிலி
    கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1765
    ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர்
    தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி
    காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி
    கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1766
    நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி
    பொல்லா ஆறு செய புரியாது நீர்
    கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி
    கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1767
    பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு
    உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர
    கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி
    குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1768
    நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும்
    எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏ
    கம்பனார் உறைகின்ற கருவிலி
    கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
    #1769
    பார்உளீர் இது கேண்-மின் பரு வரை
    பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன்
    கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி
    கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே
    
     மேல்
    
     70. திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை
    
    #1770
    கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால்
    மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே
    சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ
    கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே
    
     மேல்
    
    #1771
    சுற்றமும் துணை நல் மடவாளொடு
    பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர்
    குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார்
    பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே
    
     மேல்
    
    #1772
    மாடுதான் அது இல் எனின் மானுடர்
    பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால்
    கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை
    பாடு-மின் பரலோகத்து இருத்துமே
    
     மேல்
    
    #1773
    தந்தை தாயொடு தாரம் எனும் தளை
    பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய
    கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை
    சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே
    
     மேல்
    
    #1774
    கேளு-மின் இளமை அது கேடு வந்து
    ஈளையோடு இருமல் அது எய்தல் முன்
    கோள் அரா அணி கொண்டீச்சுரவனை
    நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே
    
     மேல்
    
    #1775
    வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
    துன்பமும் துயரும் எனும் சூழ் வினை
    கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை
    எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே
    
     மேல்
    
    #1776
    அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர்
    செல்லுமா நினையாதே கனை குரல்
    கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை
    வல்ல ஆறு தொழ வினை மாயுமே
    
     மேல்
    
    #1777
    நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி
    மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா
    கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து
    ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே
    
     மேல்
    
    #1778
    அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே
    எயிலாரும் பொடியாய் விழ எய்தவன்
    குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை
    பயில்வாரும் பெருமை பெறும் பாலரே
    
     மேல்
    
    #1779
    நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை
    மலையினால் அடர்த்து விறல் வாட்டினான்
    குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை
    தலையினால் வணங்க தவம் ஆகுமே
    
     மேல்
    
     71. திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
    
    #1780
    குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ
    வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே
    இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
    விசையமங்கையுள் வேதியன் காண்-மினே
    
     மேல்
    
    #1781
    ஆதிநாதன் அடல் விடை மேல் அமர்
    பூதநாதன் புலி அதள் ஆடையன்
    வேதநாதன் விசயமங்கை உளான்
    பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
    #1782
    கொள்ளிட கரை கோவந்தபுத்தூரில்
    வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை
    உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன்
    கிள்ளிட தலை அற்றது அயனுக்கே
    
     மேல்
    
    #1783
    திசையும் எங்கும் குலுங்க திரிபுரம்
    அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான்
    விசையமங்கை விருத்தன் புறத்து அடி
    விசையின் மங்கி விழுந்தனன் காலனே
    
     மேல்
    
    #1784
    பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
    கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள்
    விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான்
    உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே
    
     மேல்
    
    #1785
    கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை
    வில்லை ஏற்று உடையான் விசயமங்கை
    செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை
    எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே
    
     மேல்
    
    #1786
    கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு
    உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி
    வெண்பிறைக்கண்ணியான் விசயமங்கை
    நண்பனை தொழப்பெற்றது நன்மையே
    
     மேல்
    
    #1787
    பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து
    வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
    ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
    காண்டலே கருத்து ஆகி இருப்பனே
    
     மேல்
    
    #1788
    வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள்
    வெந்தநீற்றன் விசயமங்கை பிரான்
    சிந்தையால் நினைவார்களை சிக்கென
    பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே
    
     மேல்
    
    #1789
    இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
    விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
    வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும்
    நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே
    
     மேல்
    
     72. திருநீலக்குடி - திருக்குறுந்தொகை
    
    #1790
    வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர்
    செத்தபோது செறியார் பிரிவதே
    நித்தம் நீலக்குடி அரனை நினை
    சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே
    
     மேல்
    
    #1791
    செய்யமேனியன் தேனொடு பால் தயிர்
    நெய் அது ஆடிய நீலக்குடி அரன்
    மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம்
    கையில் ஆமலகக்கனி ஒக்குமே
    
     மேல்
    
    #1792
    ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு
    கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய
    நீற்றன் நீலக்குடி உடையான் அடி
    போற்றினார் இடர் போக்கும் புனிதனே
    
     மேல்
    
    #1793
    நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல்
    ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர்
    நீலன் நீலக்குடி உறை நின்மலன்
    காலனார் உயிர் போக்கிய காலனே
    
     மேல்
    
    #1794
    நேச நீலக்குடி அரனே எனா
    நீசராய் நெடு மால் செய்த மாயத்தால்
    ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய்
    நாசம் ஆனார் திரிபுரநாதரே
    
     மேல்
    
    #1795
    கொன்றைசூடியை குன்றமகளொடும்
    நின்ற நீலக்குடி அரனே எனீர்
    என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர்
    பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே
    
     மேல்
    
    #1796
    கல்லினோடு எனை பூட்டி அமண் கையர்
    ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
    நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
    நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே
    
     மேல்
    
    #1797
    அழகியோம் இளையோம் எனும் ஆசையால்
    ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே
    நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன்
    கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே
    
     மேல்
    
    #1798
    கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள்
    பற்றி பாம்புடன் வைத்த பராபரன்
    நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன்
    சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே
    
     மேல்
    
    #1799
    தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள்
    அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால்
    நெரித்து நீலக்குடி அரன் பின்னையும்
    இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே
    
     மேல்
    
     73. திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை
    
    #1800
    தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
    அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன்
    கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு
    மங்கலக்குடி மேய மணாளனே
    
     மேல்
    
    #1801
    காவிரியின் வட கரை காண்தகு
    மா விரியும் பொழில் மங்கலக்குடி
    தே அரியும் பிரமனும் தேட ஒணா
    தூ எரி சுடர் சோதியுள் சோதியே
    
     மேல்
    
    #1802
    மங்கலக்குடி ஈசனை மாகாளி
    வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர்
    சங்குசக்கரதாரி சதுமுகன்
    அங்கு ஆலயமா கொண்டு நின்றதே
    
     மேல்
    
    #1803
    மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி
    நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு
    அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை
    நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே
    
     மேல்
    
    #1804
    செல்வம் மல்கு திரு மங்கலக்குடி
    செல்வம் மல்கு சிவநியமத்தராய்
    செல்வம் மல்கு செழு மறையோர் தொழ
    செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே
    
     மேல்
    
    #1805
    மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
    பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர்
    உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
    துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே
    
     மேல்
    
    #1806
    மாதரார் மருவும் மங்கலக்குடி
    ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன்
    வேத_நாயகன் வேதியர்_நாயகன்
    பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே
    
     மேல்
    
    #1807
    வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி
    விண்ட தாதையை தாள் அற வீசிய
    சண்டநாயகனுக்கு அருள்செய்தவன்
    துண்ட மா மதி சூடிய சோதியே
    
     மேல்
    
    #1808
    கூசுவார் அலர் குண்டர் குணம் இலர்
    நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
    மாசர்-பால் மங்கலக்குடி மேவிய
    ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே
    
     மேல்
    
    #1809
    மங்கலக்குடியான் கயிலை மலை
    அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன்
    தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து
    அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே
    
     மேல்
    
     74. திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை
    
    #1810
    விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே
    கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன்
    இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை
    எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே
    
     மேல்
    
    #1811
    பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர்
    கறங்கு பூத கணம் உடை கண்நுதல்
    நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும்
    எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே
    
     மேல்
    
    #1812
    மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை
    புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல்
    பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும்
    எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே
    
     மேல்
    
    #1813
    நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை
    மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய்
    அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன்
    எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே
    
     மேல்
    
    #1814
    நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும்
    துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான்
    உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும்
    எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே
    
     மேல்
    
    #1815
    கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில்
    திறம்பி ஊர்வன மற்றும் பல உள
    குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை
    எறும்பியூர் அரன் செய்த இயற்கையே
    
     மேல்
    
    #1816
    மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும்
    திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே
    புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை
    எறும்பியூர் அரன் செய்த இயற்கையே
    
     மேல்
    
    #1817
    இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு
    துன்பமும் உடனே வைத்த சோதியான்
    அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு
    இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே
    
     மேல்
    
    #1818
    கண் நிறைந்த கன பவள திரள்
    விண் நிறைந்த விரி சுடர் சோதியான்
    உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன்
    எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே
    
     மேல்
    
    #1819
    நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும்
    நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட
    மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான்
    எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே
    
     மேல்
    
     75. திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை
    
    #1820
    மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர்
    சரக்கு காவி திரிந்து அயராது கால்
    பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை
    குரக்குக்கா அடைய கெடும் குற்றமே
    
     மேல்
    
    #1821
    கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
    கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா
    முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு
    இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே
    
     மேல்
    
    #1822
    கை அனைத்தும் கலந்து எழு காவிரி
    செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல்
    கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
    ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #1823
    மிக்கு அனைத்து திசையும் அருவிகள்
    புக்கு காவிரி போந்த புனல் கரை
    கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா
    நக்கனை நவில்வார் வினை நாசமே
    
     மேல்
    
    #1824
    விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
    இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட
    கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா
    இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே
    
     மேல்
    
    #1825
    மேலை வானவரோடு விரி கடல்
    மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா
    கோல மாளிகை கோயில் குரக்குக்கா
    பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
    #1826
    ஆல நீழல் அமர்ந்த அழகனார்
    காலனை உதைகொண்ட கருத்தனார்
    கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா
    பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே
    
     மேல்
    
    #1827
    செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார்
    அக்கு அரையர் எம் ஆதிபுராணனார்
    கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா
    நக்கனை தொழ நம் வினை நாசமே
    
     மேல்
    
    #1828
    உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர்
    கரிய கண்டன் கழல் அடி-தன்னையே
    குர வனம் செழும் கோயில் குரக்குக்கா
    இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே
    
     மேல்
    
    #1829
    இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி
    உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
    குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா
    வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே
    
     மேல்
    
     76. திருக்கானூர் - திருக்குறுந்தொகை
    
    #1830
    திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை
    உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம்
    கருவன் ஆகி முளைத்தவன் கானூரில்
    பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே
    
     மேல்
    
    #1831
    பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி
    உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள்
    கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை
    புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே
    
     மேல்
    
    #1832
    தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ
    மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்
    காயத்தே உளன் கானூர் முளையினை
    வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே
    
     மேல்
    
    #1833
    குறியில் நின்று உண்டு கூறை இலா சமண்
    நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன்
    அறியலுற்றிரேல் கானூர் முளை அவன்
    செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே
    
     மேல்
    
    #1834
    பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை
    மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்
    சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில்
    அத்தன் பாதம் அடைதல் கருமமே
    
     மேல்
    
    #1835
    கல்வி ஞான கலை பொருள் ஆயவன்
    செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை
    எல்லியும் பகலும் இசைவு ஆனவா
    சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே
    
     மேல்
    
    #1836
    நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும்
    காரும் மாருதம் கானூர் முளைத்தவன்
    சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை
    ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே
    
     மேல்
    
    #1837
    ஓமத்தோடு அயன் மால் அறியா வணம்
    வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள்
    காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்
    சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே
    
     மேல்
    
    #1838
    வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை
    உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்
    தன்னை வீழ தனி விரல் வைத்தவன்
    கன்னி மா மதில் கானூர் கருத்தனே
    
     மேல்
    
     77. திருச்சேறை - திருக்குறுந்தொகை
    
    #1839
    பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும்
    கூரிது ஆய அறிவு கைகூடிடும்
    சீரியார் பயில் சேறையுள் செந்நெறி
    நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே
    
     மேல்
    
    #1840
    என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே
    மின்னு வார் சடை வேத விழுப்பொருள்
    செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி
    மன்னு சோதி நம்பால் வந்து வைகவே
    
     மேல்
    
    #1841
    பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி
    இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும்
    சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல்
    மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே
    
     மேல்
    
    #1842
    மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர்
    ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள்
    சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய
    ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #1843
    எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன்
    துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன்
    திண் நன் சேறை திரு செந்நெறி உறை
    அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே
    
     மேல்
    
    #1844
    தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
    ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
    செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய
    அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
    
     மேல்
    
    #1845
    வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
    ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார்
    சித்தர் சேறை திரு செந்நெறி உறை
    அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே
    
     மேல்
    
    #1846
    குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ
    துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே
    இலங்கு சேறையில் செந்நெறி மேவிய
    அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
    
     மேல்
    
    #1847
    பழகினால் வரும் பண்டு உள சுற்றமும்
    விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா
    திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய
    அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே
    
     மேல்
    
    #1848
    பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான்
    வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான்
    திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு
    இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே
    
     மேல்
    
     78. திருக்கோடிகா - திருக்குறுந்தொகை
    
    #1849
    சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன்
    வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன்
    கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என
    எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே
    
     மேல்
    
    #1850
    வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால்
    ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும்
    கோடிகாவனை கூறிரேல் கூறினேன்
    பாடி காவலில் பட்டு கழிதிரே
    
     மேல்
    
    #1851
    முல்லை நல் முறுவல் உமை_பங்கனார்
    தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
    கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
    ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே
    
     மேல்
    
    #1852
    நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல்
    ஆமளம் சொலி அன்பு செயின்அலால்
    கோமளம் சடை கோடிகாவா என
    ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே
    
     மேல்
    
    #1853
    வீறுதான் பெறுவார் சிலராகிலும்
    நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல்
    கூறுவேன் கோடிகா உளாய் என்று மால்
    ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ
    
     மேல்
    
    #1854
    நாடி நாரணன் நான்முகன் வானவர்
    தேடி ஏசறவும் தெரியாதது ஓர்
    கோடிகாவனை கூறாத நாள் எலாம்
    பாடி காவலில் பட்டு கழியுமே
    
     மேல்
    
    #1855
    வரங்களால் வரையை எடுத்தான்-தனை
    அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர்
    குரங்கு சேர் பொழில் கோடிகாவா என
    இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே
    
     மேல்
    
     79. திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை
    
    #1856
    வெள் எருக்கு அரவம் விரவும் சடை
    புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல்
    உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்
    நள் இருப்பர் நரக குழியிலே
    
     மேல்
    
    #1857
    மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய்
    கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே
    போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர்
    சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே
    
     மேல்
    
    #1858
    அருமறையனை ஆணொடு பெண்ணனை
    கரு விடம் மிக உண்ட எம் கண்டனை
    புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர்
    உருகி நைபவர் உள்ளம் குளிருமே
    
     மேல்
    
    #1859
    தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா
    மின்உருவனை மேனி வெண்நீற்றனை
    பொன்உருவனை புள்ளிருக்குவேளூர்
    என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே
    
     மேல்
    
    #1860
    செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
    அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர்
    பொங்கு அரவனை புள்ளிருக்குவேளூர்
    மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே
    
     மேல்
    
    #1861
    குற்றமில்லியை கோல சிலையினால்
    செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை
    புற்று அரவனை புள்ளிருக்குவேளூர்
    பற்ற வல்லவர் பாவம் பறையுமே
    
     மேல்
    
    #1862
    கையினோடு கால் கட்டி உமர் எலாம்
    ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர்
    பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர்
    மை உலாவிய கண்டனை வாழ்த்துமே
    
     மேல்
    
    #1863
    உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று
    மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே
    புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
    வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே
    
     மேல்
    
    #1864
    அரக்கனார் தலை பத்தும் அழிதர
    நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய
    பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
    விருப்பினால் தொழுவார் வினை வீடுமே
    
     மேல்
    
     80. திருஅன்பிலாலந்துறை - திருக்குறுந்தொகை
    
    #1865
    வானம் சேர் மதி சூடிய மைந்தனை
    நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை
    ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை
    கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே
    
     மேல்
    
    #1866
    காரணத்தர் கருத்தர் கபாலியார்
    வாரணத்த உரி போர்த்த மணாளனார்
    ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை
    நாரணற்கு அரியா ஒரு நம்பியே
    
     மேல்
    
    #1867
    அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய
    என்பின் ஆனை உரித்து களைத்தவன்
    அன்பிலானை அம்மானை அள் ஊறிய
    அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே
    
     மேல்
    
    #1868
    சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை
    பங்கனார் அடி பாவியேன் நான் உய
    அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை
    செங்கணார் அடி சேரவும் வல்லனே
    
     மேல்
    
    #1869
    கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர்
    மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர்
    அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை
    நக்க உருவரும் நம்மை அறிவரே
    
     மேல்
    
    #1870
    வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை
    கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார்
    அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை
    உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே
    
     மேல்
    
    #1871
    பிறவி மாய பிணக்கில் அழுந்தினும்
    உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே
    அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
    மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே
    
     மேல்
    
    #1872
    நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
    பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
    அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
    வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே
    
     மேல்
    
    #1873
    பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய
    கையன்மார் உரை கேளாது எழு-மினோ
    ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
    மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே
    
     மேல்
    
    #1874
    இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று
    மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன்
    அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
    வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே
    
     மேல்
    
     81. திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை
    
    #1875
    சிட்டனை சிவனை செழும் சோதியை
    அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர்
    பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி
    நட்டனை தொழ நம் வினை நாசமே
    
     மேல்
    
    #1876
    பிரமன் மால் அறியாத பெருமையன்
    தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான்
    பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி
    கருமம் ஆக தொழு மட நெஞ்சமே
    
     மேல்
    
    #1877
    ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள்
    தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி
    ஈசனே எனும் இத்தனை அல்லது
    பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே
    
     மேல்
    
    #1878
    தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான்
    காண்டலும் எளியான் அடியார்கட்கு
    பாண்டிக்கொடுமுடி மேய பரமனை
    காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான்
    
     மேல்
    
    #1879
    நெருக்கி அம் முடி நின்று இசை வானவர்
    இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன்
    திரு கொடுமுடி என்றலும் தீவினை
    கரு கெடும் இது கைகண்ட யோகமே
    
     மேல்
    
     82. திருவான்மியூர் - திருக்குறுந்தொகை
    
    #1880
    விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர்
    அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள்
    பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும்
    வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1881
    பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர்
    மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து
    அருளுமா வல்ல ஆதியாய் என்றலும்
    மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1882
    மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து
    அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று
    எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல்
    வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1883
    உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால்
    கள்ளம் உள்ளவழி கசிவான்அலன்
    வெள்ளமும் அரவும் விரவும் சடை
    வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1884
    படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை
    வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை
    தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை
    மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1885
    நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
    பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று
    அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல்
    வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1886
    நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா
    குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர்
    சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர்
    வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1887
    ஆதியும் அரனாய் அயன் மாலுமாய்
    பாதி பெண்உரு ஆய பரமன் என்று
    ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர்
    வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1888
    ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும்
    காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி
    நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில்
    வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
    #1889
    பாரம் ஆக மலை எடுத்தான்-தனை
    சீரம் ஆக திரு விரல் ஊன்றினான்
    ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும்
    வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே
    
     மேல்
    
     83. திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை
    
    #1890
    பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்
    பூண தான் அரவு ஆமை பொறுத்தவன்
    காண தான் இனியான் கடல் நாகைக்கா
    ரோணத்தான் என நம் வினை ஓயுமே
    
     மேல்
    
    #1891
    வண்டு அலம்பிய வார் சடை ஈசனை
    விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை
    கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை
    கண்டலும் வினை ஆன கழலுமே
    
     மேல்
    
    #1892
    புனையும் மா மலர் கொண்டு புரி சடை
    நனையும் மா மலர் சூடிய நம்பனை
    கனையும் வார் கடல் நாகைக்காரோணனை
    நினையவே வினை ஆயின நீங்குமே
    
     மேல்
    
    #1893
    கொல்லை மால் விடை ஏறிய கோவினை
    எல்லி மா நடம் ஆடும் இறைவனை
    கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை
    சொல்லவே வினை ஆனவை சோருமே
    
     மேல்
    
    #1894
    மெய்யனை விடைஊர்தியை வெண் மழு
    கையனை கடல் நாகைக்காரோணனை
    மை அனுக்கிய கண்டனை வானவர்
    ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #1895
    அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை
    விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை
    கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை
    வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே
    
     மேல்
    
    #1896
    சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை
    இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை
    கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை
    மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே
    
     மேல்
    
    #1897
    அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து
    எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை
    கந்த வார் பொழில் நாகைக்காரோணனை
    சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே
    
     மேல்
    
    #1898
    கருவனை கடல் நாகைக்காரோணனை
    இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை
    ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த
    செருவனை தொழ தீவினை தீருமே
    
     மேல்
    
    #1899
    கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன்
    வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை
    அடர ஊன்றிய பாதம் அணைதர
    தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே
    
     மேல்
    
     84. திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை
    
    #1900
    மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
    கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது
    ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம்
    காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே
    
     மேல்
    
    #1901
    மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே
    நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர்
    கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே
    காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே
    
     மேல்
    
    #1902
    தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும்
    ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே
    கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி
    ஞானநாயகனை சென்று நண்ணுமே
    
     மேல்
    
    #1903
    அருத்தமும் மனையாளொடு மக்களும்
    பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும்
    கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி
    திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே
    
     மேல்
    
    #1904
    சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும்
    அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே
    கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி
    பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே
    
     மேல்
    
    #1905
    அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும்
    துடும்பல்செய் சடை தூ மணி சோதியான்
    கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி
    உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே
    
     மேல்
    
    #1906
    மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார்
    பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின்
    கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்
    ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே
    
     மேல்
    
    #1907
    வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர்
    சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள்
    காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை
    நீல_கண்டனை நித்தல் நினை-மினே
    
     மேல்
    
    #1908
    இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள்
    ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்
    அன்று வானவர்க்காக விடம் உண்ட
    கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே
    
     மேல்
    
    #1909
    எண் இலா அரக்கன் மலை ஏந்திட
    எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன்
    கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை
    நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே
    
     மேல்
    
     85. திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை
    
    #1910
    மட்டு வார்குழலாளொடு மால் விடை
    இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
    கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும்
    சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே
    
     மேல்
    
    #1911
    அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்
    அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள்
    பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார்
    அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே
    
     மேல்
    
    #1912
    அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு
    சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள்
    திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை
    நரிச்சு இராது நடக்கும் நடக்குமே
    
     மேல்
    
    #1913
    தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
    பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
    தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
    நாயனார் என நம் வினை நாசமே
    
     மேல்
    
     86. திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை
    
    #1914
    காலபாசம் பிடித்து எழு தூதுவர்
    பாலகர் விருத்தர் பழையார் எனார்
    ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார்
    சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே
    
     மேல்
    
    #1915
    விடுத்த தூதுவர் வந்து வினை குழி
    படுத்தபோது பயன் இலை பாவிகாள்
    அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை
    எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே
    
     மேல்
    
    #1916
    வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர்
    உந்தி ஓடி நரகத்து இடா முனம்
    அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார்
    சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே
    
     மேல்
    
    #1917
    கூற்றம் வந்து குமைத்திடும்போதினால்
    தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே
    ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால்
    ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே
    
     மேல்
    
    #1918
    மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர்
    வேறுவேறு படுப்பதன் முன்னமே
    ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு
    ஊறிஊறி உருகும் என் உள்ளமே
    
     மேல்
    
    #1919
    கானம் ஓடி கடிது எழு தூதுவர்
    தானமோடு தலை பிடியா முனம்
    ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார்
    ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே
    
     மேல்
    
    #1920
    பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர்
    கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே
    ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார்
    கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே
    
     மேல்
    
    #1921
    நாடி வந்து நமன் தமர் நல் இருள்
    கூடி வந்து குமைப்பதன் முன்னமே
    ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
    வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே
    
     மேல்
    
    #1922
    கட்டு அறுத்து கடிது எழு தூதுவர்
    பொட்ட நூக்கி புறப்படா முன்னமே
    அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு
    இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே
    
     மேல்
    
    #1923
    இரக்கம் முன் அறியாது எழு தூதுவர்
    பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே
    அரக்கனுக்கு அருள்செய்த வாட்போக்கியார்
    கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே
    
     மேல்
    
     87. திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை
    
    #1924
    பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர்
    நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும்
    சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம்
    வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே
    
     மேல்
    
    #1925
    துன்னு வார்குழலாள் உமையாளொடும்
    பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர்
    மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை
    உன்னுவார் வினை ஆயின ஓயுமே
    
     மேல்
    
    #1926
    புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார்
    தெற்றினார் புரம் தீ எழ செற்றவர்
    சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார்
    பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே
    
     மேல்
    
    #1927
    மத்தமும் மதியும் வளர் செம் சடை
    முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி
    சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம்
    வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே
    
     மேல்
    
    #1928
    துள்ளு மான் மறி தூ மழுவாளினர்
    வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர்
    அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
    வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே
    
     மேல்
    
    #1929
    நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல்
    ஊர் பரந்த உரகம் அணிபவர்
    சீர் பரந்த திரு மணஞ்சேரியார்
    ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே
    
     மேல்
    
    #1930
    சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார்
    விண்ணத்து அம் மதி சூடிய வேதியர்
    மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார்
    வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே
    
     மேல்
    
    #1931
    துன்ன ஆடையர் தூ மழுவாளினர்
    பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர்
    மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம்
    மன்னனார் கழலே தொழ வாய்க்குமே
    
     மேல்
    
    #1932
    சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
    புத்தர் சேர் அமண் கையர் புகழவே
    மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம்
    அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #1933
    கடுத்த மேனி அரக்கன் கயிலையை
    எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற
    படுத்தலும் மணஞ்சேரி அருள் என
    கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே
    
     மேல்
    
     88. திருமருகல் - திருக்குறுந்தொகை
    
    #1934
    பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம்
    திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம்
    பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம்
    மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
    
     மேல்
    
    #1935
    பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய்
    நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர்
    மாடம் சூழ் மருகல் பெருமான் திரு
    வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே
    
     மேல்
    
    #1936
    சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை
    அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக
    மனத்தினால் மருகல் பெருமான் திறம்
    நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே
    
     மேல்
    
    #1937
    ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி
    பாதுகாத்து பலபல கற்பித்து
    மாதுதான் மருகல் பெருமானுக்கு
    தூது சொல்ல விடத்தான் தொடங்குமே
    
     மேல்
    
    #1938
    இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று
    துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும்
    மன்னு தென் மருகல் பெருமான் திறம்
    உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே
    
     மேல்
    
    #1939
    சங்கு சோர கலையும் சரியவே
    மங்கைதான் மருகல் பெருமான் வரும்
    அங்கவீதி அருகு அணையாநிற்கும்
    நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே
    
     மேல்
    
    #1940
    காட்சி பெற்றிலளாகிலும் காதலே
    மீட்சி ஒன்று அறியாது மிகுவதே
    மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு
    தாட்சி சால உண்டாகும் என் தையலே
    
     மேல்
    
    #1941
    நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும்
    ஓடும் மாலினோடு ஒண் கொடி மாதராள்
    மாடம் நீள் மருகல் பெருமான் வரில்
    கூடு நீ என்று கூடல் இழைக்குமே
    
     மேல்
    
    #1942
    கந்த வார் குழல் கட்டிலள் காரிகை
    அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக
    வந்திடாய் மருகல் பெருமான் என்று
    சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே
    
     மேல்
    
    #1943
    ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று
    சோதி என்றலும் தொல் அருள் செய்திடும்
    ஆதியான் மருகல் பெருமான் திறம்
    ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே
    
     மேல்
    
     89. தனித் திருக்குறுந்தொகை
    
    #1944
    ஒன்று வெண்பிறைக்கண்ணி ஓர் கோவணம்
    ஒன்று கீள் உமையோடும் உடுத்தது
    ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே
    ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே
    
     மேல்
    
    #1945
    இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில்
    இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள்
    இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து
    இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே
    
     மேல்
    
    #1946
    மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில்
    மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன்
    மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன்
    மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே
    
     மேல்
    
    #1947
    நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல்
    நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம்
    நாலு வேதம் சரித்ததும் நல் நெறி
    நாலு போல் எம் அகத்து உறை நாதனே
    
     மேல்
    
    #1948
    அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை
    அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம்
    அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன்
    அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே
    
     மேல்
    
    #1949
    ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான்
    ஆறு சூடிய அண்ட முதல்வனார்
    ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள்
    ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே
    
     மேல்
    
    #1950
    ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல்
    ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு
    ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல்
    ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே
    
     மேல்
    
    #1951
    எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில்
    எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை
    எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே
    எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே
    
     மேல்
    
    #1952
    ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு
    ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே
    ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை
    ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே
    
     மேல்
    
    #1953
    பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல்
    பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை
    பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால்
    பத்தியான் இடம் கொண்டது பள்ளியே
    
     மேல்
    
     90. தனித் திருக்குறுந்தொகை
    
    #1954
    மாசு இல் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும்
    மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணை அடி நீழலே
    
     மேல்
    
    #1955
    நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சிவாயவே நான் அறி விச்சையும்
    நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
    நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே
    
     மேல்
    
    #1956
    ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே
    
     மேல்
    
    #1957
    நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர்
    சுடலை சேர்வது சொல் பிரமாணமே
    கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்
    உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே
    
     மேல்
    
    #1958
    பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார்
    நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
    ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
    காக்கைக்கே இரை ஆகி கழிவரே
    
     மேல்
    
    #1959
    குறிகளும் அடையாளமும் கோயிலும்
    நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும்
    அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
    பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே
    
     மேல்
    
    #1960
    வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
    தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
    சூழ்த்த மா மலர் தூவி துதியாதே
    வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே
    
     மேல்
    
    #1961
    எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான்
    தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு
    உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு
    இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே
    
     மேல்
    
    #1962
    நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
    புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன்
    பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு
    நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே
    
     மேல்
    
    #1963
    விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
    மறைய நின்றுளன் மா மணி சோதியான்
    உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால்
    முறுக வாங்கி கடைய முன் நிற்குமே
    
     மேல்
    
     91. தனித் திருக்குறுந்தொகை
    
    #1964
    ஏஇலானை என் இச்சை அகம்படி
    கோயிலானை குணப்பெருங்குன்றினை
    வாயிலானை மனோன்மணியை பெற்ற
    தாய்இலானை தழுவும் என் ஆவியே
    
     மேல்
    
    #1965
    முன்னை ஞான முதல் தனி வித்தினை
    பின்னை ஞான பிறங்கு சடையனை
    என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன்
    தன்னை ஞான தளை இட்டு வைப்பனே
    
     மேல்
    
    #1966
    ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
    ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்
    ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு
    ஞானத்தால் உனை நானும் தொழுவனே
    
     மேல்
    
    #1967
    புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே
    புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை
    புழுவினும் கடையேன் புனிதன் தமர்
    குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே
    
     மேல்
    
    #1968
    மலையே வந்து விழினும் மனிதர்காள்
    நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே
    தலைவன் ஆகிய ஈசன் தமர்களை
    கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே
    
     மேல்
    
    #1969
    கற்று கொள்வன வாய் உள நா உள
    இட்டு கொள்வன பூ உள நீர் உள
    கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம்
    எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே
    
     மேல்
    
    #1970
    மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன்
    கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே
    புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி
    இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே
    
     மேல்
    
    #1971
    என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்
    தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
    என்னை தன் அடியான் என்று அறிதலும்
    தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே
    
     மேல்
    
    #1972
    தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர்
    உள்ள தேறல் அமுத ஒளி வெளி
    கள்ளத்தேன் கடியேன் கவலை கடல்
    வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே
    
     மேல்
    
     92. காலபாசத் திருக்குறுந்தொகை
    
    #1973
    கண்டுகொள்ள அரியானை கனிவித்து
    பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
    கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை
    கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே
    
     மேல்
    
    #1974
    நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு
    கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு
    கொடுக்க கொள்க என உரைப்பார்களை
    இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே
    
     மேல்
    
    #1975
    கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான்
    சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார்
    ஆர்களாகினும் ஆக அவர்களை
    நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே
    
     மேல்
    
    #1976
    சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன்
    சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி
    ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய்
    போற்றி என்று உரைப்பார் புடை போகலே
    
     மேல்
    
    #1977
    இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர்
    பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர்
    நறவம் நாறிய நன் நறும் சாந்திலும்
    நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே
    
     மேல்
    
    #1978
    வாமதேவன் வள நகர் வைகலும்
    காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு
    தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும்
    ஏமமும் புனைவார் எதிர் செல்லலே
    
     மேல்
    
    #1979
    படையும் பாசமும் பற்றிய கையினீர்
    அடையன்-மின் நமது ஈசன் அடியரை
    விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம்
    புடை புகாது நீர் போற்றியே போ-மினே
    
     மேல்
    
    #1980
    விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும்
    நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே
    அச்சம் எய்தி அருகு அணையாது நீர்
    பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே
    
     மேல்
    
    #1981
    இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய
    மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
    மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம்
    தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே
    
     மேல்
    
    #1982
    மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி
    சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம்
    ஒற்றை ஏறு உடையான் அடியே அலால்
    பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே
    
     மேல்
    
    #1983
    அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால்
    நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும்
    சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர்
    சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே
    
     மேல்
    
     93. மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை
    
    #1984
    காசனை கனலை கதிர் மா மணி
    தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள்
    மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம்
    ஈசனை இனி நான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1985
    புந்திக்கு விளக்கு ஆய புராணனை
    சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை
    அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை
    வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே
    
     மேல்
    
    #1986
    ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன்
    ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன்
    ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு
    ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1987
    ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன்
    ஈசன் சேவடி எற்றப்பெறுதலால்
    ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி
    ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1988
    தேனை பாலினை திங்களை ஞாயிற்றை
    வான வெண் மதி சூடிய மைந்தனை
    வேனிலானை மெலிவு செய் தீ அழல்
    ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1989
    கன்னலை கரும்பு ஊறிய தேறலை
    மின்னனை மின் அனைய உருவனை
    பொன்னனை மணி குன்று பிறங்கிய
    என்னனை இனி யான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1990
    கரும்பினை கட்டியை கந்த மா மலர்
    சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை
    அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர்
    விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1991
    துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை
    நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை
    நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
    வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1992
    புதிய பூவினை புண்ணியநாதனை
    நிதியை நீதியை நித்தில குன்றினை
    கதியை கண்டம் கறுத்த கடவுளை
    மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே
    
     மேல்
    
    #1993
    கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை
    உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை
    பருகு பாலனை பால் மதிசூடியை
    மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே
    
     மேல்
    
     94. தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை
    
    #1994
    அண்டத்தானை அமரர் தொழப்படும்
    பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு
    முண்டத்தானை முற்றாத இளம் பிறை
    துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #1995
    முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக
    வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி
    ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள்
    தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #1996
    பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர்
    வண்ணத்தானை வகை உணர்வான்-தனை
    எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை
    சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #1997
    விடலையானை விரை கமழ் தேன் கொன்றை
    படலையானை பலி திரிவான் செலும்
    நடலையானை நரி பிரியாதது ஓர்
    சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #1998
    பரிதியானை பல்வேறு சமயங்கள்
    கருதியானை கண்டார் மனம் மேவிய
    பிரிதியானை பிறர் அறியாதது ஓர்
    சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #1999
    ஆதியானை அமரர் தொழப்படும்
    நீதியானை நியம நெறிகளை
    ஓதியானை உணர்தற்கு அரியது ஓர்
    சோதியானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #2000
    ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும்
    கோலத்தானை குணப்பெருங்குன்றினை
    மூலத்தானை முதல்வனை மூ இலை
    சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #2001
    ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும்
    வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற
    சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள்
    சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #2002
    நீற்றினானை நிகர் இல் வெண் கோவண
    கீற்றினானை கிளர் ஒளி செம் சடை
    ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர்
    தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #2003
    விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள்
    கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு
    பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம்
    சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
    #2004
    முற்றினானை இராவணன் நீள் முடி
    ஒற்றினானை ஒரு விரலால் உற
    பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை
    சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே
    
     மேல்
    
     95. இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை
    
    
    #2005
    புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்
    நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர்
    சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை
    மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2006
    அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர்
    திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர்
    உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை
    செலவு காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2007
    ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர்
    பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர்
    காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை
    ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2008
    நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர்
    பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர்
    ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை
    மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2009
    எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர்
    பெருக்க கோவணம் பீறி உடுத்திலர்
    தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை
    நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2010
    மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர்
    நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர்
    உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை
    நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2011
    கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர்
    அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர்
    சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய
    பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2012
    வெந்த நீறு விளங்க அணிந்திலர்
    கந்த மா மலர் இண்டை புனைந்திலர்
    எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை
    அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2013
    இள எழுந்த இரும் குவளை மலர்
    பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர்
    களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன்
    அளவு காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2014
    கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர்
    விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்
    அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை
    கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே
    
     மேல்
    
    #2015
    செங்கணானும் பிரமனும் தம்முளே
    எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார்
    இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
    பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே
    
     மேல்
    
     96. மனத்தொகைத் திருக்குறுந்தொகை
    
    #2016
    பொன் உள்ள திரள் புன் சடையின் புறம்
    மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை
    நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல்
    என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2017
    முக்கணும் உடையாய் முனிகள் பலர்
    தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு
    அக்கு அணும் அரையாய் அருளே அலாது
    எக்கணும் இலன் எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2018
    பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை
    முனியாய் நீ உலகம் முழுது ஆளினும்
    தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது
    இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2019
    மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு
    உறையும் ஆயினை கோள் அரவோடு ஒரு
    பிறையும் சூடினை என்பது அலால் பிறிது
    இறையும் சொல் இலை எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2020
    பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள்
    ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய
    கூத்தா நின் குரை ஆர் கழலே அலது
    ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2021
    பைம் மாலும் அரவா பரமா பசு
    மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும்
    அம் மால் அல்லது மற்று அடி நாயினேன்
    எம்மாலும் இலன் எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2022
    வெப்பத்தின் மன மாசு விளக்கிய
    செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை
    ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது
    எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2023
    திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும்
    நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என்
    புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி
    இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2024
    கைப்பற்றி திருமால் பிரமன் உனை
    எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள்
    அ பற்று அல்லது மற்று அடி நாயினேன்
    எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே
    
     மேல்
    
    #2025
    எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம்
    எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது
    எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார்
    எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே
    
     மேல்
    
     97. சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை
    
    #2026
    சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர்
    அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி
    முந்தி சூடிய முக்கண்ணினான் அடி
    வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே
    
     மேல்
    
    #2027
    அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர்
    உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர்
    கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம்
    வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே
    
     மேல்
    
    #2028
    ஆதி ஆயவன் ஆரும் இலாதவன்
    போது சேர் புனை நீள் முடி புண்ணியன்
    பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர்
    சோதியுள் சோதியாய் நின்ற சோதியே
    
     மேல்
    
    #2029
    இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர்
    பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர்
    கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர்
    அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே
    
     மேல்
    
    #2030
    ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண்
    நீறு பூசி நிலா மதி சூடிலும்
    வீறு இலாதன செய்யினும் விண்ணவர்
    ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே
    
     மேல்
    
    #2031
    உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா
    பச்சை வெண் தலை ஏந்தி பல இலம்
    பிச்சையே புகுமாகிலும் வானவர்
    அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே
    
     மேல்
    
    #2032
    ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர்
    பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா
    கார் உலாம் கண்டனே உன் கழல் அடி
    சேர்விலார்கட்கு தீயவை தீயவே
    
     மேல்
    
    #2033
    எந்தையே எம்பிரானே என உள்கி
    சிந்திப்பார் அவர் தீவினை திருமால்
    வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
    அந்தமா அளப்பார் அடைந்தார்களே
    
     மேல்
    
    #2034
    ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில்
    ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும்
    தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே
    வானநாடர் வணங்குவர் வைகலே
    
     மேல்
    
    #2035
    ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
    மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
    மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே
    
     மேல்
    
    #2036
    ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம்
    இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான்
    அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல்
    பரவுவார் அவர் பாவம் பறையுமே
    
     மேல்
    
    #2037
    ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும்
    நாதனே அருளாய் என்று நாள்-தொறும்
    காதல் செய்து கருதப்படுமவர்
    பாதம் ஏத்த பறையும் நம் பாவமே
    
     மேல்
    
    #2038
    கவ தன்மை அவரவர் ஆக்கையான்
    வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ
    மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு
    பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே
    
     மேல்
    
    #2039
    அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல்
    புக்கு பல் பலி தேரும் புராணனை
    நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ
    தொக்க வானவரால் தொழுவானையே
    
     மேல்
    
    #2040
    கங்கை தங்கிய செம் சடை மேல் இளம்
    திங்கள் சூடிய தீநிற_வண்ணனார்
    இங்கணார் எழில் வானம் வணங்கவே
    அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே
    
     மேல்
    
    #2041
    ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே
    நுகர நீ உனை கொண்டு உய போக்குறில்
    மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன்
    புகர் இல் சேவடியே புகல் ஆகுமே
    
     மேல்
    
    #2042
    சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ
    கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின்
    மரணம் எய்திய பின் நவை நீக்குவான்
    அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே
    
     மேல்
    
    #2043
    ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம்
    சிவன் என்பான் செழு மான் மறி கையினான்
    கவனம் செய்யும் கன விடைஊர்தியான்
    தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே
    
     மேல்
    
    #2044
    இடபம் எறியும் இல் பலி ஏற்பவர்
    அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை
    பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை
    கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே
    
     மேல்
    
    #2045
    இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும்
    புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன்
    அணைந்த அம் சடையான் அவன் பாதமே
    உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே
    
     மேல்
    
    #2046
    தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும்
    கருமம் தான் கரு மான் மறி கையினான்
    அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ
    சிரமம் சேர் அழல் தீவினையாளரே
    
     மேல்
    
    #2047
    நமச்சிவாய என்பார் உளரேல் அவர்
    தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால்
    அமைத்து கொண்டது ஓர் வாழ்க்கையனாகிலும்
    இமைத்து நிற்பது சால அரியதே
    
     மேல்
    
    #2048
    பல்பல் காலம் பயிற்றி பரமனை
    சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை
    வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ
    புல் பனி கெடும் ஆறு அது போலுமே
    
     மேல்
    
    #2049
    மணி செய் கண்டத்து மான் மறி கையினான்
    கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால்
    பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம்
    பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே
    
     மேல்
    
    #2050
    இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர்
    நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
    மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான்
    வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே
    
     மேல்
    
    #2051
    அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை
    பரவுவார் அவர் பாவம் பறைதற்கு
    குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல்
    கரவு இல் நான்முகனும் கரி அல்லரே
    
     மேல்
    
    #2052
    அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று
    உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான்
    தழலும் தாமரையானொடு தாவினான்
    கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே
    
     மேல்
    
    #2053
    இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார்
    வளமை போய் பிணியோடு வருதலால்
    உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான்
    கிளமையே கிளை ஆக நினைப்பனே
    
     மேல்
    
    #2054
    தன்னில் தன்னை அறியும் தலைமகன்
    தன்னில் தன்னை அறியில் தலைப்படும்
    தன்னில் தன்னை அறிவிலனாயிடில்
    தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே
    
     மேல்
    
    #2055
    இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று
    அலங்கலோடு உடனே செல ஊன்றிய
    நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும்
    வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே
    
     மேல்
    
     98. உள்ளத் திருக்குறுந்தொகை
    
    #2056
    நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை
    ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை
    தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர்
    ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2057
    பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும்
    தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை
    சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர்
    எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2058
    வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
    வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார்
    கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று
    உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2059
    அம்மானை அமுதின் அமுதே என்று
    தம்மானை தத்துவத்து அடியார் தொழும்
    செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
    எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2060
    கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய்
    ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர்
    பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம்
    ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2061
    முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார்
    தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர்
    வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே
    என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2062
    வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை
    கொன்றானை குணத்தாலே வணங்கிட
    நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
    ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2063
    மருவினை மட நெஞ்சம் மனம் புகும்
    குருவினை குணத்தாலே வணங்கிடும்
    திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற
    உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2064
    தேசனை திருமால் பிரமன் செயும்
    பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர்
    நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற
    ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
    #2065
    வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை
    அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை
    கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால்
    ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே
    
     மேல்
    
     99. பாவநாசத் திருக்குறுந்தொகை
    
    #2066
    பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்
    ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
    மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின்
    காவலாளன் கலந்து அருள்செய்யுமே
    
     மேல்
    
    #2067
    கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்
    கொங்கு தண் குமரி துறை ஆடில் என்
    ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என்
    எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே
    
     மேல்
    
    #2068
    பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என்
    இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என்
    எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என்
    இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே
    
     மேல்
    
    #2069
    வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என்
    நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என்
    ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என்
    ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே
    
     மேல்
    
    #2070
    காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்
    வேலை-தோறும் விதிவழி நிற்கில் என்
    ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என்
    ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே
    
     மேல்
    
    #2071
    கானம் நாடு கலந்து திரியில் என்
    ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என்
    ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என்
    ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே
    
     மேல்
    
    #2072
    கூட வேடத்தர் ஆகி குழுவில் என்
    வாடி ஊனை வருத்தி திரியில் என்
    ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை
    பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே
    
     மேல்
    
    #2073
    நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என்
    குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என்
    சென்று நீரில் குளித்து திரியில் என்
    என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே
    
     மேல்
    
    #2074
    கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை
    ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல்
    ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி
    மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே
    
     மேல்
    
    #2075
    மற்று நல் தவம் செய்து வருந்தில் என்
    பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற
    குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி
    பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே
    
     மேல்
    
     100. ஆதிபுராணத் திருக்குறுந்தொகை
    
    #2076
    வேத_நாயகன் வேதியர்_நாயகன்
    மாதின்_நாயகன் மாதவர்_நாயகன்
    ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன்
    பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே
    
     மேல்
    
    #2077
    செத்து செத்து பிறப்பதே தேவு என்று
    பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ
    அத்தன் என்று அரியோடு பிரமனும்
    துத்தியம்செய நின்ற நல் சோதியே
    
     மேல்
    
    #2078
    நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர்
    ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே
    
     மேல்
    
    #2079
    வாதுசெய்து மயங்கும் மனத்தராய்
    ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள்
    யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம்
    மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே
    
     மேல்
    
    #2080
    கூவல் ஆமை குரை கடல் ஆமையை
    கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல்
    பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால்
    தேவதேவன் சிவன் பெருந்தன்மையே
    
     மேல்
    
    #2081
    பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு
    ஈவனை இமையோர் முடி தன் அடி
    சாய்வனை சலவார்கள் தமக்கு உடல்
    சீவனை சிவனை சிந்தியார்களே
    
     மேல்
    
    #2082
    எரி பெருக்குவர் அ எரி ஈசனது
    உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர்
    அரி அயற்கு அரியானை அயர்த்து போய்
    நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே
    
     மேல்
    
    #2083
    அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
    அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ
    இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
    கருத்தினை நினையார் கல்மனவரே
    
     மேல்
    
    #2084
    தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்
    ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார்
    பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய
    மாயன் மாயத்து பட்ட மனத்தரே
    
     மேல்
    
    #2085
    அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள்
    பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை
    அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர்
    கருத்து இலா கயவ கணத்தோர்களே
    
     மேல்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *