திருப்புகழ்

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் (பாடல்கள் 1 - 1334)
திருப்புகழ்
1.முதல் தொகுதி
(1 - 350)

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301 302 303 304 305 306 307 308 309 310 311 312 313 314 315 316 317 318 319 320 321 322 323 324 325 326 327 328 329 330 331 332 333 334 335 336 337 338 339 340 341 342 343 344 345 346 347 348 349 350
2.இரண்டாம் தொகுதி
(351 - 700)

351 352 353 354 355 356 357 358 359 360 361 362 363 364 365 366 367 368 369 370 371 372 373 374 375 376 377 378 379 380 381 382 383 384 385 386 387 388 389 390 391 392 393 394 395 396 397 398 399 400 401 402 403 404 405 406 407 408 409 410 411 412 413 414 415 416 417 418 419 420 421 422 423 424 425 426 427 428 429 430 431 432 433 434 435 436 437 438 439 440 441 442 443 444 445 446 447 448 449 450 451 452 453 454 455 456 457 458 459 460 461 462 463 464 465 466 467 468 469 470 471 472 473 474 475 476 477 478 479 480 481 482 483 484 485 486 487 488 489 490 491 492 493 494 495 496 497 498 499 500 501 502 503 504 505 506 507 508 509 510 511 512 513 514 515 516 517 518 519 520 521 522 523 524 525 526 527 528 529 530 531 532 533 534 535 536 537 538 539 540 541 542 543 544 545 546 547 548 549 550 551 552 553 554 555 556 557 558 559 560 561 562 563 564 565 566 567 568 569 570 571 572 573 574 575 576 577 578 579 580 581 582 583 584 585 586 587 588 589 590 591 592 593 594 595 596 597 598 599 600 601 602 603 604 605 606 607 608 609 610 611 612 613 614 615 616 617 618 619 620 621 622 623 624 625 626 627 628 629 630 631 632 633 634 635 636 637 638 639 640 641 642 643 644 645 646 647 648 649 650 651 652 653 654 655 656 657 658 659 660 661 662 663 664 665 666 667 668 669 670 671 672 673 674 675 676 677 678 679 680 681 682 683 684 685 686 687 688 689 690 691 692 693 694 695 696 697 698 699 700
3.மூன்றாம் தொகுதி
(701 - 1000)

701 702 703 704 705 706 707 708 709 710 711 712 713 714 715 716 717 718 719 720 721 722 723 724 725 726 727 728 729 730 731 732 733 734 735 736 737 738 739 740 741 742 743 744 745 746 747 748 749 750 751 752 753 754 755 756 757 758 759 760 761 762 763 764 765 766 767 768 769 770 771 772 773 774 775 776 777 778 779 780 781 782 783 784 785 786 787 788 789 790 791 792 793 794 795 796 797 798 799 800 801 802 803 804 805 806 807 808 809 810 811 812 813 814 815 816 817 818 819 820 821 822 823 824 825 826 827 828 829 830 831 832 833 834 835 836 837 838 839 840 841 842 843 844 845 846 847 848 849 850 851 852 853 854 855 856 857 858 859 860 861 862 863 864 865 866 867 868 869 870 871 872 873 874 875 876 877 878 879 880 881 882 883 884 885 886 887 888 889 890 891 892 893 894 895 896 897 898 899 900 951 952 953 954 955 956 957 958 959 960 961 962 963 964 965 966 967 968 969 970 971 972 973 974 975 976 977 978 979 980 981 982 983 984 985 986 987 988 989 990 991 992 993 994 995 996 997 998 999 1000
4.நான்காம் தொகுதி
(1001 - 1334)

1001 1002 1003 1004 1005 1006 1007 1008 1009 1010 1011 1012 1013 1014 1015 1016 1017 1018 1019 1020 1021 1022 1023 1024 1025 1026 1027 1028 1029 1030 1031 1032 1033 1034 1035 1036 1037 1038 1039 1040 1041 1042 1043 1044 1045 1046 1047 1048 1049 1050 1051 1052 1053 5104 1055 1056 1057 1058 1059 1060 1061 1062 1063 1064 1065 1066 1067 1068 1069 1070 1071 1072 1073 1074 1075 1076 1077 1078 1079 1080 1081 1082 1083 1084 1085 1086 1087 1088 1089 1090 1091 1092 1093 1094 1095 1096 1097 1098 1099 1100 1101 1102 1103 1104 1105 1106 1107 1108 1109 1110 1111 1112 1113 1114 1115 1116 1117 1118 1119 1120 1121 1122 1123 1124 1125 1126 1127 1128 1129 1130 1131 1132 1133 1134 1135 1136 1137 1138 1139 1140 1141 1142 1143 1144 1145 1146 1147 1148 1149 1150 1151 1152 1153 1154 1155 1156 1157 1158 1159 1160 1161 1162 1163 1164 1165 1166 1167 1168 1169 1170 1171 1172 1173 1174 1175 1176 1177 1178 1179 1180 1181 1182 1183 1184 1185 1186 1187 1188 1189 1190 1191 1192 1193 1194 1195 1196 1197 1198 1199 1200 1201 1202 1203 1204 1205 1206 1207 1208 1209 1210 1211 1212 1213 1214 1215 1216 1217 1218 1219 1220 1221 1222 1223 1224 1225 1226 1227 1228 1229 1230 1231 1232 1233 1234 1235 1236 1237 1238 1239 1240 1241 1242 1243 1244 1245 1246 1247 1248 1249 1250 1251 1252 1253 1254 1255 1256 1257 1258 1259 1260 1261 1262 1263 1264 1265 1266 1267 1268 1269 1270 1271 1272 1273 1274 1275 1276 1277 1278 1279 1280 1281 1282 1283 1284 1285 1286 1287 1288 1289 1290 1291 1292 1293 1294 1295 1296 1297 1298 1299 1300 1301 1302 1303 1304 1305 1306 1307 1308 1309 1310 1311 1312 1313 1314 1315 1316 1317 1318 1319 1320 1321 1322 1323 1324 1325 1326 1327 1328 1329 1330 1331 1332 1333 1334
 

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1 - 350) 


#1
கைத்தல நிறை கனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரி முகன் அடி பேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் என வினை கடிது ஏகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் மல் பொரு திரள் புய மத யானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர் கொடு பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரி செய்த அ சிவன் உறை ரதம் அச்சு அது பொடி செய்த அதி தீரா
அ துயர் அது கொடு சுப்பிரமணி படும் அ புனம் அதனிடை இபம் ஆகி
அ குறமகளுடன் அ சிறு முருகனை அ கணம் மணம் அருள் பெருமாளே

மேல்

#2
பக்கரை விசித்திர மணி பொன் கலணை இட்ட நடை பட்சி எனும் உக்ர துரகமும் நீப
பக்குவ மலர் தொடையும் அ குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடி வேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும்
செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள் கை மறவேனே
இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு
எச்சில் பயறு அப்ப வகை பச்சரிசி பிட்டு வெள்ளரி பழம் இடி பல் வகை தனி மூலம்
மிக்க அடிசில் கடலை பட்சணம் என கொள் ஒரு விக்கிந சமர்த்தன் என்னும் அருள் ஆழி
வெற்ப குடில சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக மருப்பு உடைய பெருமாளே

மேல்

#3
உம்பர் தரு தேநு மணி கசிவாகி ஒண் கடலில் தேனமுதத்து உணர்வூறி
இன்ப ரசத்தே பருகி பலகாலும் என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பிதனக்காக வனத்து அணைவோனே தந்தை வலத்தால் அருள் கை கனியோனே
அன்பர்தமக்கான நிலை பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுக பெருமாளே

மேல்

#4
நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும் நிகழ் பால் தேன்
நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகரில் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொடு அட்ட கரத்து ஒரு மகர சலநிதி வைத்த துதி கர
வளரும் கரி முக ஒற்றை மருப்பனை வலமாக
மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு வளர் கை குழை பிடி தொப்பணம் குட்டொடு
வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே
தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம் மொய்த்து உதிர புனல்
திரளும் உறு சதை பித்த நிண குடல் செறி மூளை
செரும உதர நிரப்பு செரு குடல் நிரைய அரவ நிறைத்த களத்து இடை
திமித திமிதிமி மத்தள இடக்கைகள் செகசேசே
எனவே துகுதுகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிம் என தவில் எழும் ஓசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட இரண பயிரவி சுற்று நடித்திட
எதிரு நிசிசரரை பெலியிட்டு அருள் பெருமாளே

மேல்

#5
விடம் அடைசு வேலை அமரர் படை சூலம் விசையன் விடு பாணம் எனவே தான்
விழியும் அதி பார விதமும் உடை மாதர் வினையின் விளைவு ஏதும் அறியாதே
கடி உலவு பாயல் பகல் இரவு எனாது கலவிதனில் மூழ்கி வறிதாய
கயவன் அறிவு ஈனன் இவனும் உயர் நீடு கழல் இணைகள் சேர அருள்வாயே
இடையர் சிறு பாலை திருடிக்கொடு போக இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பிளை நாத கணபதி எனு நாமம் முறை கூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட அறிவு அருளும் முகவோனே

மேல்

#6
முத்தை தரு பத்தி திரு நகை அத்திக்கு இறை சத்தி சரவண முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின் முற்பட்டது கற்பித்து இருவரும் முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு பட்டப்பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய பச்சை புயல் மெச்ச தகு பொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே
தித்தித்தெய ஒத்த பரிபுர நிர்த்த பதம் வைத்து பயிரவி திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர் தொக்குத்தொகு தொக்கு தொகுதொகு சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை குக்குக்குகு குக்கு குகுகுகு குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை வெட்டி பலி இட்டு குலகிரி குத்துப்பட ஒத்து பொர வல பெருமாளே

மேல்

#7
அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்கு உள அரசிலை தடவியும் இரு தோளுற்று
அணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டை மென்று பல் இடு குறிகளும் இட
அடி களம்தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டு
உருக்கும் அங்கியில் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறு பலம்
உற கையில் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து
உரு கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியில் முழுகி மெய் உணர்வு அற
உழைத்திடும் கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழு வகை முநி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ குக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில் வேள் என்று
இலக்கணங்களும் இயல் இசைகளும் மிக விரிக்கும் அம் பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புய மிசை புனைவோனே
செருக்கும் அம்பல மிசை தனில் அசைவுற நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திரு குருந்தடி அருள்பெற அருளிய குரு நாதர்
திரு குழந்தையும் என அவர் வழிபடு குருக்களின் திறம் என வரு பெரியவ
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#8
உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர் கொடு உன் அடி இணை
உற பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள் மாறா
உளத்து உள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் மலை போலே
கனைத்து எழும் பகடு அது பிடர் மிசை வரும் கறுத்த வெம் சின மறலி தன் உழையினர்
கதித்து அடர்ந்து எறி கயிறு அடு கதை கொடு பொரு போதே
கலக்குறும் செயல் ஒழிவு அற அழிவுறு கருத்து நைந்து அலமுறும் பொழுது அளவை கொள்
கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே
வினை தலம்தனில் அலகைகள் குதி கொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்புரி வேலா
மிகுத்த பண் பயில் குயில் மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புய வரை உடையோனே
தினம் தினம் சதுர்மறை முநி முறை கொடு புனல் சொரிந்து அலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர் தொழ மகிழ்வோனே
தென தெனந்தன என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ்
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#9
கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று
கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி
கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து
கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி
அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை
அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி
அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது
அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ
இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்
எரியது என்றும் ருத்ரன் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ
அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற
அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே
அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

மேல்

#10
கறுக்கும் அஞ்சன விழி இணை அயில் கொடு நெருக்கி நெஞ்சு அற எறி தரு பொழுது ஒரு
கனிக்குள் இன் சுவை அமுது உகும் ஒரு சிறு நகையாலே
கள கொழும் கலி வலை கொடு விசிறியெ மனைக்கு எழுந்திரும் என மனம் உருக ஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடு போகி
நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்த அகம் தனில் இணை முலை எதிர் பொர
நகத்து அழுந்திட அமுது இதழ் பருகியும் மிடறூடே
நடித்து எழும் குரல் குமுகுமுகுமு என இசைத்து நன்கொடு மனம் அது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயர் அற அருள்வாயே
நிறைத்த தெண் திரை மொகுமொகுமொகு என உரத்த கஞ்சுகி முடி நெறுநெறுநெறு என
நிறைத்த அண்ட முகடு கிடுகிடு என வரை போலும்
நிவத்த திண் கழல் நிசிசரர் உரமொடு சிர கொடும் குவை மலை புர தர இரு
நிண குழம்பொடு குருதிகள் சொரிதர அடு தீரா
திறல் கரும் குழல் உமையவள் அருள் உறு புழைக்கை தண் கட கய முக மிக உள
சிவ கொழுந்து அன கணபதியுடன் வரும் இளையோனே
சினத்தொடும் சமன் உதை பட நிறுவிய பரற்கு உளம் அன்புறு புதல்வ நன் மணி உகு
திருப்பரங்கிரிதனில் உறை சரவண பெருமாளே

மேல்

#11
கனகம் திரள்கின்ற பெரும் கிரிதனில் வந்து தகன்தகன் என்றிடு
கதிர் மிஞ்சிய செண்டை எறிந்திடு கதியோனே
கடம் மிஞ்சி அநந்த விதம் புணர் கவளம்தனை உண்டு வளர்ந்திடு
கரியின் துணை என்று பிறந்திடு முருகோனே
பனகம் துயில்கின்ற திறம் புனை கடல் முன்பு கடைந்த பரம்பரர்
படரும் புயல் என்றவர் அன்பு கொள் மருகோனே
பல துன்பம் உழன்று கலங்கிய சிறியன் புலையன் கொலையன் புரி
பவம் இன்று கழிந்திட வந்து அருள்புரிவாயே
அனகன் பெயர் நின்று உருளும் திரிபுரமும் திரி வென்றிட இன்புடன்
அழல் உந்த நகும் திறல் கொண்டவர் புதல்வோனே
அடல் வந்து முழங்கி இடும் பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டு என
அதிர்கின்றிட அண்டம் நெரிந்திட வரு சூரர்
மனமும் தழல் சென்றிட அன்று அவர் உடலும் குடலும் கிழி கொண்டிட
மயில் வென்தனில் வந்து அருளும் கன பெரியோனே
மதியும் கதிரும் தடவும்படி உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளம் ஒன்றும் பரங்கிரி வந்து அருள் பெருமாளே

மேல்

#12
காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து இருள்
கால் தரவும் இந்து விசும்பில் இலங்கும் பொழுது ஒரு கோடி
காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும் கணையாழியுடன் கடகம் துலங்கும்படி
காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே
வாதுபுரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன
மார்பில் அழுந்த அணைந்திடும் துன்பம் அது உழலாதே
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு
வாழ நிதம் புனையும் பதம் தந்து உனது அருள்தாராய்
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம் சிவ சங்கரன் கொண்டிட மொழிவோனே
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவம் மடந்தை புரந்திரன் தந்து அருள்
பூவை கரும் குற மின் கலம் தங்கு பனிரு தோளா
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல
சேர் நிருதன் குலம் அஞ்ச முன் சென்றிடு திறலோனே
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி
தேவர் பணிந்து எழு தென்பரங்குன்று உறை பெருமாளே

மேல்

#13
சந்ததம் பந்த தொடராலே சஞ்சலம் துஞ்சி திரியாதே
கந்தன் என்று என்று உற்று உனை நாளும் கண்டு கொண்டு அன்பு உற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கில் சிவை பாலா
செந்தில் அம் கண்டி கதிர் வேலா தென்பரங்குன்றில் பெருமாளே

மேல்

#14
சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு
தழல் கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய
தட அம் சுனை துன்றி எழுந்திட திறமாவே
இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட
இரு கண்கள் துயின்றிடல் இன்றியும் அயர்வாகி
இவண் நெஞ்சு பதன்பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன்
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ
திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன் எண் திசை
திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல்
செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள் மருகோனே
மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின்குமின் என்றிட
வளம் ஒன்றிய செந்திலில் வந்து அருள் முருகோனே
மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்து அருள் பெருமாளே

மேல்

#15
தட கை பங்கயம் கொடைக்கு கொண்டல் தண் தமிழ்க்கு தஞ்சம் என்று உலகோரை
தவித்து சென்று இரந்து உளத்தில் புண்படும் தளர்ச்சி பம்பரம்தனை ஊசல்
கடத்தை துன்ப மண் சடத்தை துஞ்சிடும் கலத்தை பஞ்ச இந்த்ரிய வாழ்வை
கணத்தில் சென்று இடம் திருத்தி தண்டை அம் கழற்கு தொண்டு கொண்டு அருள்வாயே
படைக்க பங்கயன் துடைக்க சங்கரன் புரக்க கஞ்சை மன் பணியாக
பணித்து தம் பயம் தணித்து சந்ததம் பரத்தை கொண்டிடும் தனி வேலா
குடக்கு தென்பரம்பொருப்பில் தங்கும் அம் குலத்தில் கங்கை தன் சிறியோனே
குற பொன் கொம்பை முன் புனத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே

மேல்

#16
பதித்த செம் சந்த பொன் குட நித்தம் பருத்து உயர்ந்து அண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்த செப்பு அவை ஒக்கும் தன பாரம்
பட புயங்கம் பல் கக்கு கடு பண் செருக்கு வண்டு அம்பு அப்பில் கயல் ஒக்கும்
பருத்த கண் கொண்டைக்கு ஒக்கும் இருட்டு என்று இளைஞோர்கள்
துதித்து முன் கும்பிட்டு உற்றது உரைத்து அன்பு உவக்க நெஞ்சு அஞ்ச சிற்றிடைசுற்றும்
துகில் களைந்து இன்பம் துர்க்கம் அளிக்கும் கொடியார் பால்
துவக்குணும் பங்க பித்தன் அவத்தன் புவிக்குள் என் சிந்தை புத்தி மயக்கம்
துறக்க நின் தண்டை பத்மம் எனக்கு என்று அருள்வாயே
குதித்து வெண் சங்கத்தை சுறவு எற்றும் கடல் கரந்து அஞ்சி புக்க அரக்கன்
குடல் சரிந்து எஞ்ச குத்தி விதிர்க்கும் கதிர் வேலா
குல கரும்பின் சொல் தத்தை இப பெண்தனக்கு வஞ்சம் சொல் பொச்சை இடை
குங்குகுக்குகும் குங்கு குக்குகு குக்கும் குகுகூகூ
திதித்திதி திந்தி தித்தி என கொம்பு அதிர்த்து வெண் சண்ட கட்கம் விதிர்த்தும்
திரள் குவித்து அங்கண் பொட்டு எழ வெட்டும் கொலை வேடர்
தினை புனம் சென்று இச்சித்த பெணை கண்டு உரு கரந்து அங்கு கிட்டி அணைந்து ஒண்
திருப்பரங்குன்றில் புக்கு உள் இருக்கும் பெருமாளே

மேல்

#17
பொருப்பு உறும் கொங்கையர் பொருள் கவர்ந்து ஒன்றிய பிணக்கிடும் சண்டிகள் வஞ்ச மாதர்
புயல் குழன்ற அம் கமழ் அறல் குலம் தங்கு அவிர் முருக்கு வண் செம் துவர் தந்து போகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செம் கயல் அற சிவந்த அம் கையில் அன்பு மேவும்
அவர்க்கு உழன்று அங்கமும் அற தளர்ந்து என் பயன் அருள் பதம் பங்கயம் அன்புறாதோ
மிருத்து அணும் பங்கயன் அலர் கணன் சங்கரர் விதித்து என்றும் கும்பிடு கந்த வேளே
மிகுத்திடும் வன் சமணரை பெரும் திண் கழு மிசைக்கு இடும் செந்தமிழ் அங்க வாயா
பெருக்கு தண் சண்பக வனம் திடம் கொங்கொடு திறல் செழும் சந்து அகில் துன்றி நீடும்
தினை புனம் பைம் கொடி தனத்துடன் சென்று அணை திருப்பரங்குன்று உறை தம்பிரானே

மேல்

#18
மன்றல் அம் கொந்து மிசை தெந்தன தெந்தனென வண்டு இனம் கண்டு தொடர் குழல் மாதர்
மண்டிடும் தொண்டை அமுது உண்டு கொண்டு அன்பு மிக வம்பிடும் கும்ப கன தன மார்பில்
ஒன்று அம்பு ஒன்று விழி கன்ற அங்கம் குழைய உந்தி என்கின்ற மடு விழுவேனை
உன் சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும் ஒண் கடம்பும் புனையும் அடி சேராய்
பன்றி அம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள் பண்டை என்பு அங்கம் அணிபவர் சேயே
பஞ்சரம் கொஞ்சு கிளி வந்துவந்து ஐந்து கர பண்டிதன் தம்பி எனும் வயலூரா
சென்று முன் குன்றவர்கள் தந்த பெண் கொண்டு வளர் செண்பகம் பைம்பொன் மலர் செறி சோலை
திங்களும் செம் கதிரும் மங்குலும் தங்கும் உயர் தென்பரங்குன்றில் உறை பெருமாளே

மேல்

#19
வடத்தை மிஞ்சிய புளகித வன முலைதனை திறந்து எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல நகைத்து நண்பொடு வரும் இரும் என உரை
வழுத்தி அங்கு அவரோடு சருவியும் உடல் தொடுபோதே
விடத்தை வென்றிடு படை விழி கொடும் உளம் மருட்டி வண் பொருள் கவர் பொழுதினில் மயல்
விருப்பு எனும்படி மடி மிசையினில் விழு தொழில் தானே
விளைத்திடும் பல கணிகையர் தமது பொய் மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரை பதம்தனில் அருள்பெற நினைகுவது உளதோ தான்
குடத்தை வென்றிடு கிரி என எழில் தளதளத்த கொங்கைகள் மணி வடம் அணி சிறு
குற கரும்பின் மெய் துவள் புயன் என வரு வடி வேலா
குரை கரும் கடல் திரு அணை என முனம் அடைத்து இலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும் பட ஒரு கணை விடும் அரி மருகோனே
திடத்து எதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட அயில் கொடும் படை விடு சரவணபவ
திற குகன் குருபரன் என் வரும் ஒரு முருகோனே
செழித்த தண்டலைதொறும் இலகிய குட வளை குலம் தரு தரளமும் மிகும் உயர்
திருப்பரங்கிரி வள நகர் மருவிய பெருமாளே

மேல்

#20
வரை தடம் கொங்கையாலும் வளை படும் செம் கையாலும் மதர்த்திடும் கெண்டையாலும் அனைவோரும்
வடுப்படும் தொண்டையாலும் விரைத்திடும் கொண்டையாலும் மருட்டிடும் சிந்தை மாதர் வசமாகி
எரி படும் பஞ்சு போல மிக கெடும் தொண்டனேனும் இனல்படும் தொந்த வாரி கரி ஏற
இசைத்திடும் சந்த பேடம் ஒலித்திடும் தண்டை சூழும் இணை பதம் புண்டரீகம் அருள்வாயே
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன் இள க்ரவுஞ்சன் தன்னோடு துளக்க எழுந்து அண்ட கோளம் அளவாக
துரத்தி அன்று இந்த்ரலோகம் அழித்தவன் பொன்று மாறு சுடப்ப அரும் சண்ட வேலை விடுவோனே
செருக்கு எழுந்து உம்பர் சேனை துளக்க வென்று அண்டம் ஊடு தெழித்திடும் சங்கபாணி மருகோனே
தினை புனம் சென்று உலாவு குறத்தியின் இன்பம் பராவு திருப்பரங்குன்றம் மேவு பெருமாளே

மேல்

#21
அம் கை மென் குழல் ஆய்வார் போலே சந்தி நின்று அயலோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர் பின்பு கண்டு அறியோம் நாம் ஈதே
அன்றும் இன்றும் ஓர் போதோ போகா துயில் வாரா
எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார் பண்டு தந்தது போதாதோ மேல்
இன்று தந்து உறவோ தான் ஈது ஏன் இது போதாது
இங்கு நின்றது என் வீடே வாரீர் என்று இணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே
மங்குல் இன்புறு வானாய் வானூடு அன்று அரும்பிய காலாய் நீள் கால்
மண்டுறும் புகை நீறா வீறா எரி தீயாய்
வந்து இரைந்து எழு நீராய் நீர் சூழ் அம்பரம் புனை பாராய் பார் ஏழ்
மண்டலம் புகழ் நீயாய் நானாய் மலரோனாய்
உங்கள் சங்கரர்தாமாய் நாம் ஆர் அண்ட பந்திகள்தாமாய் வானாய்
ஒன்றினும் கடை தோயா மாயோன் மருகோனே
ஒண் தடம் பொழில் நீடு ஊர் கோடு ஊர் செந்தில் அம் பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சு அறி தேனே வானோர் பெருமாளே

மேல்

#22
அந்தகன் வரும் தினம் பிறகிட சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
அன்பு உருகும் சங்கதம் தவிர முக்குணம் மாள
அந்தி பகல் என்ற இரண்டையும் ஒழித்து இந்திரிய சஞ்சலம் களையறுத்து
அம்புய பதங்களின் பெருமையை கவி பாடி
செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுற கந்தனை அறிந்தறிந்து அறிவினில்
சென்று செருகும் தடம் தெளிதர தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரை ஒழித்து என் செயல் அழிந்தழிந்து அழிய மெய்
சிந்தை வர என்று நின் தெரிசனை படுவேனோ
கொந்து அவிழ் சரண்சரண்சரண் என கும்பிடு புரந்தரன் பதி பெற
குஞ்சரி குயம் புயம் பெற அரக்கர் உரு மாள
குன்று இடிய அம் பொனின் திரு வரை கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
குண்டலம் அசைந்து இளம் குழைகள் ப்ரபை வீச
தந்தன தனந்தனம் தனஎன செம் சிறு சதங்கை கொஞ்சிட மணி
தண்டைகள் கலின்கலின் கலின் என திருவான
சங்கரி மனம் குழைந்து உருக முத்தம் தர வரும் செழும் தளர் நடை
சந்ததி சகம் தொழும் சரவண பெருமாளே

மேல்

#23
அமுத உததி விடம் உமிழும் செம் கண் திங்கள் பகவின் ஒளிர் வெளிறு எயிறு துஞ்சல் குஞ்சி
தலையும் உடையவன் அரவ தண்ட சண்ட சமன் ஓலை
அது வருகும் அளவில் உயிர் அங்கிட்டு இங்கு பறை திமிலை திமிர்தம் மிகு தம்பட்டம் பல்
கரைய உறவினர் அலற உந்தி சந்தி தெருவூடே
எமது பொருள் எனும் மருளை இன்றி குன்றி பிள அளவு தினை அளவு பங்கிட்டு உண்கைக்கு
இளைய முது வசை தவிர இன்றைக்கு அன்றைக்கு என நாடாது
இடுக கடிது எனும் உணர்வு பொன்றி கொண்டிட்டு டுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு
என அகலும் நெறி கருதி வெஞ்சத்து அஞ்சி பகிராதோ
குமுத பதி வகிர் அமுது சிந்தச்சிந்த சரண பரிபுர சுருதி கொஞ்சக்கொஞ்ச
குடில சடை பவுரி கொடு தொங்க பங்கில் கொடியாட
குல தடினி அசைய இசை பொங்கப்பொங்க கழல் அதிர டெகுடெகுட டெங்கட் டெங்க
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத்தொங்க தொகுதீதோ
திமிதம் என முழவு ஒலி முழங்க செம் கை தமருகம் அது சதியொடு அன்பர்க்கு இன்ப
திறம் உதவும் பரத குரு வந்திக்கும் சற்குருநாதா
திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க
திமிர சல நிதி தழுவு செந்தில் கந்த பெருமாளே

மேல்

#24
அம்பு ஒத்த விழி தந்த கலகத்து அஞ்சி கமல கணையாலே
அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்தி பொழுதில் பிறையாலே
எம் பொன் கொடி மன் துன்ப கனல் அற்று இன்ப கலவி துயர் ஆனாள்
என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்ப புலி உற்றிடலாமோ
கொம்பு கரி பட்டு அஞ்ச பதும கொங்கை குறவிக்கு இனியோனே
கொன்றை சடையற்கு ஒன்றை தெரிய கொஞ்சி தமிழை பகர்வோனே
செம்பொன் சிகர பைம்பொன் கிரியை சிந்த கறுவி பொரும் வேலா
செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திரு செந்தில் குமர பெருமாளே

மேல்

#25
அருண மணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபி நவ விசால பூரண அம் பொன் கும்ப தனம் மோதி
அளி குலவு மாதர் லீலையில் முழுகி அபிஷேகம் ஈது என
அறவும் உறவு ஆடி நீடிய அங்கை கொங்கைக்கு இதமாகி
இருள் நிறை அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில்
இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா நீள்
இரவு பகல் மோகனாகியே படியில் மடியாமல் யானும் உன்
இணை அடிகள் பாடி வாழா என் நெஞ்சில் செம் சொல் தருவாயே
தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய
சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர்
தரு முருக மேக சாயலார் தமர மகர ஆழி சூழ் புவிதனை
முழுதும் வாரியே அமுது உண்டிட்டு அண்டர்க்கு அருள்கூரும்
செரு முதலி மேவும் மா வலி அதி மத போல மா மலை
தெளிவினுடன் மூலமே என முந்த சிந்தித்து அருள் மாயன்
திரு மருக சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய
ஜெய சரவணா மனோகர செந்தில் கந்த பெருமாளே

மேல்

#26
அவனி பெறும் தோட்டு அம் பொன் குழை அடர் அம்பால் புண்பட்டு
அரிவையர்தம்பால் கொங்கைக்கு இடையே சென்று
அணைதரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று
அழி தரு திண்டாட்டம் சற்று ஒழியாதே
பவம் அற நெஞ்சால் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை
பத உகளம் போற்றும் கொற்றமும் நாளும்
பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் சங்கை
படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ
தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச
தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி
தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை
தழல் எழ வென்றார்க்கு அன்று அற்புதமாக
சிவ வடிவும் காட்டும் சற்குருபர தென்பால் சங்க
திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும்
தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே

மேல்

#27
அளக பாரம் அலைந்து குலைந்திட வதனம் வேர்வு துலங்கி நலங்கிட
அவச மோகம் விளைந்து தளைந்திட அணை மீதே
அருண வாய் நகை சிந்திய சம்ப்ரம அடர் நகா நுதி பங்க விதம் செய்து
அதர பானம் அருந்தி மருங்கு இற முலை மேல் வீழ்ந்து
உளமும் வேறுபடும்படி ஒன்றிடு மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
ஒழியுமாறு தெளிந்து உளம் அன்பொடு சிவயோகத்து
உருகு ஞான பரம்பர தந்திர அறிவினோர் கருது அம் கொள் சிலம்பு அணி
உபய சீதள பங்கய மென் கழல் தருவாயே
இளகிடா வளர் சந்தன குங்கும களப பூரண கொங்கை நலம் புனை
இரதி வேள் பணி தந்தையும் அந்தண மறையோனும்
இனிது உறாது எதிர் இந்திரன் அண்டரும் ஹரஹரா சிவசங்கர சங்கர
என மிகா வரு நஞ்சினை உண்டவர் அருள் பாலா
வளர் நிசாசுரர் தங்கள் சிரம் பொடிபட விரோதம் இடும் குல சம்ப்ரமன்
மகர வாரி கடைந்த நெடும் புயல் மருகோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

மேல்

#28
அறிவு அழிய மயல் பெருக உரையும் அற விழி சுழல அனல் அவிய மலம் ஒழுக அகலாதே
அனையும் மனை அருகில் உற வெருவி அழ உறவும் அழ அழலின் நிகர் மறலி எனை அழையாதே
செறியும் இருவினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனை நிகர் பொதிய வரை முநிவன் அகம் மகிழ இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே
நெறி தவறி அலரி மதி நடுவன் மக பதி முளரி நிருதி நிதி பதி கரிய வன மாலி
நிலவு மறையவன் இவர்கள் அலைய அரசுரிமை புரி நிருதன் உரம் அற அயிலை விடுவோனே
மறி பரசு கரம் இலகு பரமன் உமை இரு விழியும் மகிழ மடி மிசை வளரும் இளையோனே
மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை பெருமாளே

மேல்

#29
அனிச்சம் கார் முகம் வீசிட மாசறு துவள் பஞ்சான தடாகம் விடா மட
அனத்தின் தூவி குலாவிய சீறடி மட மானார்
அருக்கன் போல ஒளி வீசிய மா மரகத பைம் பூண் அணி வார் முலை மேல் முகம்
அழுத்தும் பாவியை ஆவி இடேறிட நெறி பாரா
வினை சண்டாளனை வீணனை நீள் நிதிதனை கண்டு ஆணவமான நிர்மூடனை
விடக்கு அன்பாய் நுகர் பாழனை ஓர் மொழி பகராதே
விகற்பம் கூறிடு மோக விகாரனை அறத்தின்பால் ஒழுகாத மூதேவியை
விளித்து உன் பாதுகை நீ தர நான் அருள்பெறுவேனோ
முனை சங்கு ஓலிடு நீல மகா உததி அடைத்து அஞ்சாத இராவணன் நீள் பல
முடிக்கு அன்று ஓர் கணை ஏவும் இராகவன் மருகோனே
முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே
தினை செம் கானக வேடுவர் ஆனவர் திகைத்து அந்தோ எனவே கணி ஆகிய
திறல் கந்தா வளி நாயகி காமுறும் எழில் வேலா
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில் நிறக்கும் சூல் வளை பால் மணி வீசிய
திருச்செந்தூர் வரு சேவகனே சுரர் பெருமாளே

மேல்

#30
அனைவரும் மருண்டு அருண்டு கடிது என வெகுண்டு இயம்ப அமர அடி பின்தொடர்ந்து பிண நாறும்
அழுகு பிணி கொண்டு விண்டு புழு உடல் எலும்பு அலம்பும் அவல உடலம் சுமந்து தடுமாறி
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்து அருந்தி மன வழி திரிந்து மங்கும் வசை தீர
மறை சதுர் விதம் தெரிந்து வகை சிறு சதங்கை கொஞ்சு மலர் அடி வணங்க என்று பெறுவேனோ
தினை மிசை சுகம் கடிந்த புன மயில் இளம் குரும்பை திகழ் இரு தனம் புணர்ந்த திரு மார்பா
ஜெக முழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரி வலம் வந்த செம்பொன் மயில் வீரா
இனிய கனி மந்தி சிந்து மலை கிழவ செந்தில் வந்த இறைவ குக கந்த என்றும் இளையோனே
எழு கடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமயவரை அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#31
இயல் இசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர் கருணைபுரியும் இன்ப கடல் மூழ்கி
உனை எனது உளம் அறியும் அன்பை தருவாயே
மயில் தகர் கல் இடையர் அந்த தினை காவல்
வனச குறமகளை வந்தித்து அணைவோனே
கயிலை மலை அனைய செந்தில் பதி வாழ்வே
கரி முகவன் இளைய கந்த பெருமாளே

மேல்

#32
இரு குழை எறிந்த கெண்டைகள் ஒரு குமிழ் அடர்ந்து வந்திட இணை சிலை நெரிந்து எழுந்திட அணை மீதே
இருள் அளக பந்தி வஞ்சியில் இரு கலை உடன் குலைந்திட இதழ் அமுது அருந்து சிங்கியின் மனம் மாய
முருகொடு கலந்த சந்தன அளறுபடு குங்குமம் கமழ் முலை முகடு கொண்டு எழும்தொறும் முருகு ஆர
முழு மதி புரந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு முகடியும் நலம் பிறந்திட அருள்வாயே
எரி விடம் நிமிர்ந்த குஞ்சியினில் நிலவொடும் எழுந்த கங்கையும் இதழியொடு அணிந்த சங்கரர் களி கூறும்
இம வரை தரும் கரும் குயில் மரகத நிறம் தரும் கிளி எனது உயிர் எனும் த்ரியம்பகி பெருவாழ்வே
அரை வடம் அலம்பு கிண்கிணி பரிபுரம் நெருங்கு தண்டைகள் அணி மணி சதங்கை கொஞ்சிட மயில் மேலே
அகம் மகிழ்வு கொண்டு சந்ததம் வரு குமர முன்றிலின் புறம் அலை பொருத செந்தில் தங்கிய பெருமாளே

மேல்

#33
இருள் விரி குழலை விரித்து தூற்றவும் இறுகிய துகிலை நெகிழ்த்து காட்டவும்
இரு கடை விழியும் முறுக்கி பார்க்கவும் மைந்தரோடே
இலை பிளவு அதனை நடித்து கேட்கவும் மறுமொழி பலவும் இசைத்து சாற்றவும்
இடையிடை சிறிது நகைத்து காட்டவும் எங்கள் வீடே
வருக என ஒரு சொல் உரைத்து பூட்டவும் விரி மலர் அமளி அணைத்து சேர்க்கவும்
வரு பொருள் அளவில் உருக்கி தேற்றவும் நிந்தையாலே
வனை மனை புகுதில் அடித்து போக்கவும் ஒரு தலை மருவு புணர்ச்சி தூர்த்தர்கள்
வசை விட நினது பதத்தை போற்றுவது எந்த நாளோ
குரு மணி வயிரம் இழித்து கோட்டிய கழை மட உருவு வெளுத்து தோற்றிய
குளிறு இசை அருவி கொழித்து தூற்றிய மண்டு நீர் ஊர்
குழி படு கலுழி வயிற்றை தூர்த்து எழு திடர் மணல் இறுகு துருத்தி கா பொதி
குளிர் நிழல் அருவி கலக்கி பூ புனை வண்டல் ஆடா
முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய
முகிழ் முலை இளைய குறத்திக்கு ஆட்படு செந்தில் வாழ்வே
முளை இள மதியை எடுத்து சாத்திய சடை முடி இறைவர் தமக்கு சாத்திர
முறை அருள் முருக தவத்தை காப்பவர் தம்பிரானே

மேல்

#34
உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என இருண்ட நீல மிக
ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போலாய்
உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு பீளைகளும்
முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலாலாய்
மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின்
வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய்
வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலைதனை உணர்ந்து தாளில் உறு
வழி அடிமை அன்புகூரும் அது சிந்தியேனோ
இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான்முகனும்
எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல்
இரு விழி துயின்ற நாரணனும் உமை மருவு சந்த்ரசேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும் நின்று தாழும்
முதல்வ சுக மைந்த பீடிகையில் அகில சக அண்டநாயகிதன்
முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே
முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி
முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே

மேல்

#35
உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் மதியாதே
உரைக்கும் வீரிகள் கோள் அரவாம் என உடற்றும் தாதியர் காசளவே மனம்
உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் புரிவேனோ
அருக்கன் போல் ஒளி வீசிய மா முடி அணைத்தும் தான் அழகாய் நலமே தர
அருள் கண் பார்வையினால் அடியார்தமை மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண வடிப்பம் தான் எனவே எனை நாள்தொறும்
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிது ஆள்வாய்
இருக்கும் காரணம் மீறிய வேதமும் இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி
இலக்கம் தான் எனவே தொழவே மகிழ் விருப்பம் கூர் தரும் ஆதியுமாய் உலகு
இறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள் பாலா
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர் துதிக்கும் தாள் உடை நாயகன் ஆகிய
செக செம் சோதியும் ஆகிய மாதவன் மருகோனே
செழிக்கும் சாலியும் மேகம் அளாவிய கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே

மேல்

#36
ஏவினை நேர் விழி மாதரை மேவிய ஏதனை மூடனை நெறி பேணா
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு ஏழையை மோழையை அகலா நீள்
மா வினை மூடிய நோய் பிணியாளனை வாய்மை இலாதனை இகழாதே
மா மணி நூபுர சீதள தாள் தனி வாழ்வுற ஈவதும் ஒரு நாளே
நாவலர் பாடிய நூல் இசையால் வரு நாரதனார் புகல் குற மாதை
நாடியே கானிடை கூடிய சேவக நாயக மா மயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை தேன் மொழியாள் தரு சிறியோனே
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ் சீரலை வாய் வரு பெருமாளே

மேல்

#37
ஓராது ஒன்றை பாராது அந்தத்தோடே வந்திட்டு உயிர் சோர
ஊடா நன்று அற்றார் போல் நின்று எட்டா மால் தந்திட்டு உழல் மாதர்
கூரா அன்பில் சோரா நின்று அக்கு ஓயா நின்று உள் குலையாதே
கோடு ஆர் செம்பொன் தோளா நின் சொல் கோடாது என் கைக்கு அருள்தாராய்
தோரா வென்றி போரா மன்றல் தோளா குன்றை தொளை ஆடீ
சூதாய் எண் திக்கு ஏயா வஞ்ச சூர் மா அஞ்ச பொரும் வேலா
சீர் ஆர் கொன்றை தார் மார்பு ஒன்ற சே ஏறு எந்தைக்கு இனியோனே
தேனே அன்பர்க்கே ஆம் இன் சொல் சேயே செந்தில் பெருமாளே

மேல்

#38
கட்டழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி பிணம் கொண்டதின் சிலர்கள்
கட்டணம் எடுத்து சுமந்தும் பெரும் பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி
விட்டு வரும் இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ
பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப முனை
பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய
தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி
சற்சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே

மேல்

#39
கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து கங்குல் பகல் என்று நின்று விதியாலே
பண்டை வினை கொண்டு உழன்று வெந்து விழுகின்றல் கண்டு பங்கய பதங்கள் தந்து புகழ் ஓதும்
பண்புடைய சிந்தை அன்பர்தங்களில் உடன் கலந்து பண்பு பெற அஞ்சல்அஞ்சல் என வாராய்
வண்டு படுகின்ற தொங்கல் கொண்டு உற நெருங்கி இண்டு வம்பினை அடைந்து சந்தின் மிக மூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென் குற மடந்தை செம் கை வந்து அழகுடன் கலந்த மணி மார்பா
திண் திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு செம் சமர் புனைந்து துங்க மயில் மீதே
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து செந்தில் நகர் வந்து அமர்ந்த பெருமாளே

மேல்

#40
கமல மாதுடன் இந்திரையும் சரி சொலவொணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் இரு போது ஏய்
களவு நூல் தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்த சுகம் தரு
கரிய ஓதியில் இந்து முகம்தனில் மருளாதே
அமலம் ஆகிய சிந்தை அடைந்து அகல் தொலைவு இலாத அறம் பொருள் இன்பமும்
அடைய ஓதி உணர்ந்து தணந்த பின் அருள் தானே
அறியும் ஆறு பெறும்படி அன்பினின் இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய அடி தாராய்
குமரி காளி பயங்கரி சங்கரி கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி வெகு வித ஆகம சுந்தரி தந்து அருள்
குமர மூஷிகம் உந்திய ஐங்கர கண ராயன்
மம விநாயகன் நஞ்சு உமிழ் கஞ்சுகி அணி கஜானன விம்பன் ஒர் அம்புலி
மவுலியான் உறு சிந்தை உகந்து அருள் இளையோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடை விடாது நெருங்கிய மங்கல
மகிமை மா நகர் செந்திலில் வந்து உறை பெருமாளே

மேல்

#41
கரி கொம்பம் தனி தங்கம் குடத்து இன்பம் தனத்தின்கண்
கறுப்பும் தன் சிவப்பும் செம் பொறி தோள் சேர்
கணைக்கும் பண்டு உழைக்கும் பங்கு அளிக்கும் பண்பு ஒழிக்கும்
கண் கழுத்தும் சங்கு ஒளிக்கும் பொன் குழை ஆட
சர குஞ்சம் புடைக்கும் பொன் துகில் தந்தம் தரிக்கும் தன்
சடத்தும் பண் பிலுக்கும் சம்பள மாதர்
சலித்தும் பின் சிரித்தும் கொண்டு அழைத்தும் சண் பசப்பும் பெண்
தன துன்பம் தவிப்புண்டு இங்கு உழல்வேனோ
சுரர் சங்கம் துதித்து அந்த அஞ்சு எழுத்து இன்பம் களித்து உண் பண்
சுகம் துய்ந்து இன்பு அலர் சிந்த அங்கு அசுராரை
துவைத்தும் பந்து அடித்தும் சங்கு ஒலித்தும் குன்று இடித்தும் பண்
சுகித்தும் கண் களிப்பு கொண்டிடும் வேலா
சிர பண்பும் கர பண்பும் கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவ பண்பும் தவ பண்பும் தருவோனே
தினை தொந்தம் குற பெண் பண் சசி பெண் கொங்கையில் துஞ்சும்
செழிக்கும் செந்திலில் தங்கும் பெருமாளே

மேல்

#42
கருப்பம் தங்கு இரத்தம் பொங்கு அரைப்புண் கொண்டு உருக்கும் பெண்களை
கண்டு அங்கு அவர் பின் சென்று அவரோடே
கலப்பு உண்டும் சிலுப்பு உண்டும் துவக்கு உண்டும் பிணக்கு உண்டும்
கலப்பு உண்டும் சலிப்பு உண்டும் தடுமாறி
செரு தண்டம் தரித்து அண்டம் புக தண்டு அந்தகற்கு என்றும்
திகைத்து அம் செகத்து அஞ்சும் கொடு மாயும்
தியக்கம் கண்டு உய கொண்டு என் பிறப்பு பங்கம் சிறை பங்கம்
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே
அருக்கன் சஞ்சரிக்கும் தெண் திரைக்கண் சென்று அரக்கன் பண்பு
அனைத்தும் பொன்றிட கன்றும் கதிர் வேலா
அணி சங்கம் கொழிக்கும் தண்டு அலை பண்பு எண் திசைக்கும் கொந்தளிக்கும்
செந்திலில் தங்கும் குமரேசா
புரக்கும் சங்கரிக்கும் சங்கரர்க்கும் சங்கரர்க்கு இன்பம்
புதுக்கும் கங்கையட்கும் சுதன் ஆனாய்
புன குன்றம் திளைக்கும் செந்தினை பைம்பொன் குற கொம்பின்
புற தண் கொங்கையில் துஞ்சும் பெருமாளே

மேல்

#43
களபம் ஒழுகிய புளகித முலையினர் கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர் எவரோடும்
கலகம் இடு கயல் எறி குழை விரகியர் பொருள் இல் இளைஞரை வழி கொடு மொழி கொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் நகை ஆடி
பிளவுபெறில் அதில் அளவுஅளவு ஒழுகியர் நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு குழைவோடே
பிணமும் அணைபவர் வெறி தரு புனல் உணும் அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை உடையவர் உறவினை விட அருள்புரிவாயே
அளையில் உறை புலி பெறும் மகவு அயில்தரு பசுவின் நிரை முலை அமுது உண நிரை மகள்
வசவனொடு புலி முலை உண மலையுடன் உருகா நீள்
அடவிதனில் உள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளி உயிர் பறவைகள் நிலம் வர விரல் சேர் ஏழ்
தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பலபல தொனி தரு கரு முகில்
சுருதி உடையவன் நெடியவன் மனம் மகிழ் மருகோனே
துணைவ குண தர சரவணபவ நம முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலை எறி திரு நகர் உறை தரு பெருமாளே

மேல்

#44
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்து அலைந்து விஞ்சும் கண்கள் சிவந்து அயர்ந்து களிகூர
கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும் கறங்கும் பெண்களும் பிறந்து விலை கூறி
பொனின் குடங்கள் அஞ்சு மென் தனங்களும் புயங்களும் பொருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாக
புணர்ந்து உடன் புலர்ந்து பின்பு கலந்து அகம் குழைந்து அவம் புரிந்து சந்ததம் திரிந்து படுவேனோ
அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண் திறந்து இருண்ட கண்டர் தந்த அயில் வேலா
அடர்ந்துஅடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெம் சமம்புரிந்த அன்பர் இன்ப நண்ப உரவோனே
சினங்கள் கொண்டு இலங்கை மன் சிரங்கள் சிந்த வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப மருகோனே
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து செந்தில் வந்த கந்த எங்கள் பெருமாளே

மேல்

#45
கன்றில் உறு மானை வென்ற விழியாலே கஞ்ச முகை மேவும் முலையாலே
கங்குல் செறி கேச மங்குல் குலையாமை கந்த மலர் சூடும் அதனாலே
நன்று பொருள் தீர வென்று விலை பேசி நம்பவிடு மாதருடன் ஆடி
நஞ்சு புசி தேரை அங்கம் அதுவாக நைந்து விடுவேனை அருள் பாராய்
குன்றிமணி போல்வ செம் கண் வரி போகி கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி அன்று அசுரர் சேனை கொன்ற குமரேச குருநாதா
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ
மந்தி நடமாடும் செந்தி நகர் மேவு மைந்த அமரேசர் பெருமாளே

மேல்

#46
காலனார் வெம் கொடும் தூதர் பாசம்கொடு என் காலில் ஆர்தந்து உடன் கொடு போக
காதல் ஆர் மைந்தரும் தாயராரும் சுடும் கானமே பின் தொடர்ந்து அலறா முன்
சூலம் வாள் தண்டு செம் சேவல் கோதண்டமும் சூடு தோளும் தடம் திரு மார்பும்
தூய தாள் தண்டையும் காண ஆர்வம் செயும் தோகை மேல் கொண்டு முன் வரவேணும்
ஆலகாலம் பரன் பாலதாக அஞ்சிடும் தேவர் வாழ அன்று உகந்து அமுது ஈயும்
ஆரவாரம் செயும் வேலை மேல் கண் வளர்ந்த ஆதி மாயன் தன் நல் மருகோனே
சாலி சேர் சங்கினம் வாவி சூழ் பங்கயம் சாரல் ஆர் செந்தில் அம் பதி வாழ்வே
தாவு சூர் அஞ்சி முன் சாய வேகம்பெறும் தாரை வேல் உந்திடும் பெருமாளே

மேல்

#47
குகரம் மேவு மெய் துறவினின் மறவா கும்பிட்டு உந்தி தடம் மூழ்கி
குமுத வாயில் முற்று அமுதினை நுகரா கொண்ட கொண்டை குழலாரோடு
அகரு தூளி கர்ப்புர தன இரு கோட்டு அன்புற்று இன்ப கடலூடே
அமிழுவேனை மெத்தென ஒரு கரை சேர்த்து அம் பொன் தண்டை கழல் தாராய்
ககன கோளகைக்கு அண இரும் அளவா கங்கை துங்க புனலாடும்
கமலவதனற்கு அளவிட முடியா கம்பர்க்கு ஒன்றை புகல்வோனே
சிகர கோபுரத்தினும் மதிளினும் மேல் செம்பொன் கம்ப தளம் மீதும்
தெருவிலேயும் நித்தலம் எறி அலை வாய் செந்தில் கந்த பெருமாளே

மேல்

#48
குடர் நிணம் என்பு சலம் மலம் அண்டு குருதி நரம்பு சீ ஊன் பொதி தோல்
குலவு குரம்பை முருடு சுமந்து குனகி மகிழ்ந்து நாயேன் தளரா
அடர் மதன் அம்பை அனைய கரும் கண் அரிவையர் தங்கள் தோள் தோய்ந்து அயரா
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய்
தடவு இயல் செந்தில் இறையவ நண்பு தரு குற மங்கை வாழ்வு ஆம் புயனே
சரவண கந்த முருக கடம்ப தனி மயில் கொண்டு பார் சூழ்ந்தவனே
சுடர் படர் குன்று தொளை பட அண்டர் தொழ ஒரு செம் கை வேல் வாங்கியவா
துரித பதங்க இரத ப்ரசண்ட சொரி கடல் நின்ற சூர அந்தகனே

மேல்

#49
குழைக்கும் சந்தன செம் குங்குமத்தின் சந்த நல் குன்றம்
குலுக்கும் பைங்கொடிக்கு என்று இங்கு இயலாலே
குழைக்கும் குண் குமிழ்க்கும் சென்று உரைக்கும் செம் கயல் கண் கொண்டு
அழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
உழைக்கும் சங்கட துன்பன் சுக பண்டம் சுகித்து உண்டுஉண்டு
உடல் பிண்டம் பருத்து இன்று இங்கு உழலாதே
உதிக்கும் செம் கதிர் சிந்தும் ப்ரபைக்கு ஒன்றும் சிவக்கும் தண்டை
உயர்க்கும் கிண்கிணி செம் பஞ்சு அடி சேராய்
தழைக்கும் கொன்றையை செம்பொன் சடைக்கு அண்ட அங்கியை தங்கும்
தரத்த செம் புயத்து ஒன்றும் பெருமானார்
தனி பங்கின் புறத்தில் செம் பரத்தின் பங்கயத்தில் சஞ்சரிக்கும்
சங்கரிக்கு என்றும் பெருவாழ்வே
கழைக்கும் குஞ்சர கொம்பும் கலை கொம்பும் கதித்து என்றும்
கயல் கண் பண்பு அளிக்கும் புய வேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும் கடல் சங்கம் கொழிக்கும் செந்திலில்
கொண்டு அன்பினில் தங்கும் பெருமாளே

மேல்

#50
கொங்கைகள் குலுங்க வளை செம் கையில் விளங்க இருள் கொண்டலை அடைந்த குழல் வண்டு பாட
கொஞ்சிய வன அம் குயில்கள் பஞ்ச நல் வனம் கிளிகள் கொஞ்சியது எனும் குரல்கள் கெந்து பாயும்
வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் விஞ்சையர்கள் தங்கள் மயல் கொண்டு மேலாய்
வெம் பிணி உழன்ற பவ சிந்தனை நினைந்து உனது மின் சரண பைங்கழலொடு அண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்பு வளை தந்தன தனந்த என வந்த சூரர்
சங்கை கெட மண்டி திகை எங்கிலும் மடிந்து விழ தண் கடல் கொளுந்த நகை கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி தங்களின் மகிழ்ந்து உருகும் எங்கள் கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம் பெணொடு சம்பு புகழ் செந்தில் மகிழ் தம்பிரானே

மேல்

#51
கொங்கை பணையில் செம்பொன் செறிவில் கொண்டல் குழலில் கொடிதான
கொன் தை கணை ஒப்ப அந்த கயலில் கொஞ்சு கிளி உற்று உறவான
சங்க தொனியில் சென்று இல் கடையில் சந்திப்பவரை சருவாதே
சந்த படி உற்று என்றன் தலையில் சந்தம் பதம் வைத்து அருள்வாயே
அங்கு அ படை விட்டு அன்றை படுகைக்கு அந்தி கடலில் கடிது ஓடா
அந்த பொழிலில் சந்து தலையுற்று அஞ்ச பொருதுற்று ஒழியாதே
செம் கை கதிருற்று ஒன்றி அ கடலில் சென்று உற்றவர் தற்பொருள் ஆனாய்
சிந்தை கனிவை தந்து அ பொழிலில் செந்தில் குமர பெருமாளே

மேல்

#52
கொடி அனைய இடை துவள அங்கமும் பொங்க அம் குமுத அமுது இதழ் பருகி இன்புறும் சங்கையன்
குலவி இணை முகில் அளகமும் சரிந்து அன்பினின் பண்பு உலாவ
கொடிய விரல் நக நுதியில் புண்படும் சஞ்சலன் குனகி அவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டு உளம்
குரல் அழிய அவசமுறு குங்குணன் கொங்கு அவிழ்ந்து ஒன்று பாய் மேல்
விடம் அனைய விழி மகளிர் கொங்கை இன்புறும் வினையன் இயல் பரவும் உயிர் வெந்து அழிந்து அங்கமும்
இதம் ஒழிய அறிவில் நெறி பண்பில் அண்டும் சகன் செஞ்சி நீடும்
வெகு கனக ஒளி குலவும் அந்த மன் செந்தில் என்று அவிழ உளம் உருகி வரும் அன்பிலன் தந்து இலன்
விரவும் இரு சிறு கமல பங்கயம் தந்து உகந்து அன்புறாதோ
படம் இலகும் அரவின் உடல் அங்கமும் பங்கிடந்து உதறும் ஒரு கலபி மிசை வந்து எழுந்து அண்டர்தம்
படை அசுரர் அனைவர் உடல் சந்துசந்து உங்கு அதம் சிந்தும் வேலா
படியவரும் இமையவரும் நின்று இறைஞ்சும் எண் குணன் பழைய இறை உருவம் இலி அன்பர் பங்கன் பெரும்
பருவரல் செய் புரம் எரிய விண்டிடும் செம் கணன் கங்கை மான் வாழ்
சடிலம் மிசை அழகு புனை கொன்றையும் பண்பு உறும் தருண மதியின் குறை செய் துண்டமும் செம் கை ஒண்
சகல புவனமும் ஒழி கதம் அங்கு உற அங்கியும் பொங்கி நீடும்
சடம் மருவு விடை அரவர் துங்க அம் பங்கில் நின்று உலகு தரு கவுரி உமை கொங்கை தந்து அன்புறும்
தமிழ் விரக உயர் பரம சங்கரன் கும்பிடும் தம்பிரானே

மேல்

#53
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு
கொங்கையில் நீராவி மேல் வளர் செங்கழுநீர் மாலை சூடிய கொண்டையில் ஆதாரம் சோபையில் மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம எம்பெருமானே நமோ நம ஒண் தொடி மோகா நமோ நம என நாளும்
உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள்புரிவாயே
பம்பரமே போல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே அடியேன்தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#54
கொலை மத கரி அன ம்ருமகத தன கிரி கும்ப தன மானார்
குமுத அமுத இதழ் பருகி உருகி மயல் கொண்டு உற்றிடு நாயேன்
நிலை அழி கவலைகள் கெட உனது அருள் விழி நின்று உற்றிடவே தான்
நின திருவடி மலர் இணை மனதினில் உற நின் பற்று அடைவேனோ
சிலை என வடமலை உடையவர் அருளிய செம் சொல் சிறு பாலா
திரை கடலிடை வரும் அசுரனை வதை செய்த செந்தில் பதி வேலா
விலை நிகர் நுதல் இப மயில் குறமகளும் விரும்பி புணர்வோனே
விருது அணி மரகத மயில் வரு குமர விடங்க பெருமாளே

மேல்

#55
சங்கு போல் மென் கழுத்து அந்த வாய் தந்த பல் சந்த மோக இன்ப முத்து என வானில்
தங்கு கார் பைம் குழல் கொங்கை நீள் தண் பொருப்பு என்று தாழ்வு ஒன்று அறுத்து உலகோரை
துங்க வேள் செம் கை பொன் கொண்டல் நீ என்று சொல் கொண்டு தாய் நின்று உரைத்து உழலாதே
துன்ப நோய் சிந்த நல் கந்த வேள் என்று உனை தொண்டினால் ஒன்று உரைக்க அருள்வாயே
வெம் கண் வ்யாளம் கொதித்து எங்கும் வேம் என்று எடுத்து உண்டு மேல் அண்டருக்கு அமுதாக
விண்ட நாதன் திரு கொண்டல் பாகன் செருக்கு உண்டு பேர் அம்பலத்தினில் ஆடி
செம் கண் மால் பங்கய கயல் கண் பெறாது அந்தரத்தின்கண் ஆடும் திறல் கதிர் ஆழி
திங்கள் வாழும் சடை தம்பிரான் அன்புற செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே

மேல்

#56
சங்கை தான் ஒன்று தான் இன்றியே நெஞ்சிலே சஞ்சலாரம்ப மாயன்
சந்தொடே குங்கும அலங்க்ருத ஆடம்பர சம்ப்ரமாநந்த மாயன்
மங்கைமார் கொங்கை சேர் அங்க மோகங்களால் வம்பிலே துன்புறாமே
வண் குகா நின் சொரூபம் ப்ரகாசம் கொடே வந்து நீ அன்பில் ஆள்வாய்
கங்கை சூடும் பிரான் மைந்தனே அந்தனே கந்தனே விஞ்சை ஊரா
கம்பியாது இந்த்ரலோகங்கள் கா என்ற வா ஆகண்டலேசன் சொல் வீரா
செம் கை வேல் வென்றி வேல் கொண்டு சூர் பொன்றவே சென்று மோதும் ப்ரதாபா
செம் கண் மால் பங்கஜானன் தொழு ஆநந்த வேள் செந்தில் வாழ் தம்பிரானே

மேல்

#57
சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள்
சத்திதனை மாவின் வடுவை காவிதனை மீறு
தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு
உதத்து உகளும் வாளை அடும் மை பாவு விழி மாதர்
மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான
வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே
வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக
வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே
சித்ர வடி வேல் பனிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார
திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது
சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார
சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள்
முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார
முச்சகர் பராவு சரணக்கார இனிதான
முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார
முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே

மேல்

#58
சந்தன சவாது நிறை கற்பூர குங்கும படீர விரை கத்தூரி
தண் புழுகு அளாவு களப சீத வெகு வாச
சண்பக கலாரம் வகுள தாம வம்பு துகில் ஆர வயிர கோவை
தங்கிய கடோர தர வித்தார பரிதான
மந்தரம் அது ஆன தன மிக்கு ஆசை கொண்டு பொருள் தேடும் அதி நிட்டூர
வஞ்சக விசார இதய பூவை அனையார்கள்
வந்தியிடும் மாய விரக பார்வை அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை
வந்து அடிமை ஆள இனி எப்போது நினைவாயே
இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார சம்ப்ரம மயூர துரகக்கார
என்றும் அகலாத இளமைக்கார குற மாதின்
இன்ப அநுபோக சரசக்கார வந்த அசுரேசர் கலகக்கார
எங்கள் உமை சேய் என அருமைக்கார மிகு பாவின்
செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார குன்று எறியும் வேலின் வலிமைக்கார
செம் சொல் அடியார்கள் எளிமைக்கார எழில் மேவும்
திங்கள் முடி நாதர் சமயக்கார மந்த்ர உபதேச மகிமைக்கார
செந்தில் நகர் வாழும் அருமை தேவர் பெருமாளே

மேல்

#59
சேம கோமள பாத தாமரை சேர்தற்கு ஓதும் அனந்த வேத
அதீதத்தே அவிரோதத்தே குண சீலத்தே மிக அன்பு உறாதே
காம க்ரோத உலோப பூத விகாரத்தே அழிகின்ற மாயா
காயத்தே பசு பாசத்தே சிலர் காமுற்று ஏயும் அது என்கொலோ தான்
நேமி சூரொடு மேரு தூள் எழ நீள காள புயங்க கால
நீல க்ரீப கலாப தேர் விடு நீப சேவக செந்தில் வாழ்வே
ஓம தீ வழுவார்கட்கு ஊர் சிவலோகத்தே தரு மங்கை பாலா
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே

மேல்

#60
தகர நறை பூண்ட விந்தை குழலியர்கள் தேய்ந்த இன்ப தளரும் இடை ஏந்து தங்க தன மானார்
தமை மனதில் வாஞ்சை பொங்க கலவியொடு சேர்ந்து மந்த்ர சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும்
புகல் அரியதாம் த்ரி சங்க தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சி புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து உழல் மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கள் புகழ் பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு வந்தித்திடுவேனோ
தகுடதகு தாந்த தந்த திகுடதிகு தீந்த மிந்தி தகுகணக தாங்க ணங்க தனதான
தனனதன தாந்த னந்தத்தென நடனம் ஆர்ந்த துங்க தனி மயிலை ஊர்ந்த சந்த திரு மார்பா
திசை அசுரர் மாண்டு அழுந்த திறல் அயிலை வாங்கு செம் கை சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா
திகழ் வயிரம் ஏந்து கொங்கை குற வனிதை காத்த சந்த்ர சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே

மேல்

#61
தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் தண் தார் மஞ்சு குழல் மானார்
தம்பால் அன்பால் நெஞ்சே கொண்டே சம்பாவம் சொல் அடி நாயேன்
மண் தோயம் தீ மென் கால் விண் தோய் வண் காயம் பொய் குடில் வேறாய்
வன் கானம் போய் அண்டா முன்பே வந்தே நின் பொன் கழல் தாராய்
கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் வென்றி குமரேசா
கொங்கு ஆர் வண்டார் பண்பாடும் சீர் குன்றா மன்றல் கிரியோனே
கண்டு ஆகும் பால் உண்டாய் அண்டர் கண்டா கந்த புய வேளே
கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கந்தா செந்தில் பெருமாளே

மேல்

#62
தண்டை அணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும் தண் சிலம்புடன் கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந்து இன் பவுரிகொண்டு நல் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செம் கையும் சிந்து வேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்தன் முன் சந்தியாவோ
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெம் களம் கொண்டபோது
பொன் கிரி என சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூர
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே
கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்ப முநி கும்பிடும் தம்பிரானே

மேல்

#63
தந்த பசிதனை அறிந்து முலை அமுது தந்து முதுகு தடவிய தாயார்
தம்பி பணிவிடை செய் தொண்டர் பிரியம் உள தங்கை மருகர் உயிரே எனவே சார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடன் உதவும் அந்த வரிசை மொழி பகர் கேடா
வந்து தலை நவிர் அவிழ்ந்து தரை புக மயங்க ஒரு மகிடம் மிசை ஏறி
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் என வலிய மயில் மேல் நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய வருவாயே
சிந்தை மகிழ மலை மங்கை நகில் இணைகள் சிந்து பயம் அயிலும் மயில் வீரா
திங்கள் அரவு நதி துன்று சடிலர் அருள் செந்தி நகரில் உறை பெருமாளே

மேல்

#64
தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி மதன் ஏ வில்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு தமிழ் தென்றலினுடனே நின்று
எரிக்கும் பிறை என புண்படும் என புன் கவி சில பாடி
இருக்கும் சிலர் திரு செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே
அரிக்கும் சதுர்மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான
அடி செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் புரி தவ பார
கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே
கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே

மேல்

#65
துன்பம் கொண்டு அங்கம் மெலிந்து அற நொந்து அன்பும் பண்பும் மறந்து ஒளி
துஞ்சும் பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே
இன்பம் தந்து உம்பர் தொழும் பத கஞ்சம் தம் தஞ்சம் எனும்படி
என்றென்றும் தொண்டு செயும்படி அருள்வாயே
நின் பங்கு ஒன்றும் குற மின் சரணம் கண்டு தஞ்சம் எனும்படி
நின்று அன்பின் தன்படி கும்பிடும் இளையோனே
பைம்பொன் சிந்தின் துறை தங்கிய குன்று எங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்து அருள் பெருமாளே

மேல்

#66
தெருப்புறத்து துவக்கியாய் முலைக்கு வட்டை குலுக்கியாய் சிரித்து உருக்கி தருக்கியே பண்டை கூளம் என வாழ்
சிறுக்கி இரட்சைக்கு இதக்கியாய் மனத்தை வைத்து கனத்த பேர் தியக்கமுற்று தவிக்கவே கண்டு பேசி உடனே
இருப்பு அகத்து தளத்து மேல் விளக்கு எடுத்து படுத்து மேல் இருத்தி வைத்து பசப்பியே கொண்டு காசு தணியாது
இதுக்கு அதுக்கு கடப்படாம் என கை கக்க கழற்றியே இளைக்க விட்டு துரத்துவார்தங்கள் சேர்வை தவிராய்
பொருப்பை ஒக்க பணைத்தது ஓர் இரட்டி பத்து புயத்தினால் பொறுத்த பத்து சிரத்தினால் மண்டு கோபமுடனே
பொர பொருப்பில் கதித்த போர் அரக்கர் பட்டு பதைக்கவே புடைத்து முட்ட துணித்த மால் அன்புகூரு மருகா
வரப்பை எட்டி குதித்து மேல் இடத்தில் வட்ட தளத்திலே மதர்த்த முத்தை குவட்டியே நின்று சேல் இனம் வாழ்
வயல்புறத்து புவிக்குள் நீள் திருத்தணிக்குள் சிறப்பில் வாழ் வயத்த நித்த துவத்தனே செந்தில் மேவு குகனே

மேல்

#67
தொடர் இயமன் போல் துங்க படையை வளைந்து ஓட்டும்
துட்டரை இளகும் தோள் கொங்கைக்கு இடு மாய
துகில் விழவும் சேர்த்து அங்கத்து உளை விரகும் சூழ்த்து அண்டி
துயர் விளையும் சூட்டு இன்பத்தொடு பாயற்கு
இடை கொடு சென்று ஈட்டும் பொன் பணியரை மென்று ஏற்றம் கற்றனை
இன்று ஓட்டென்று அற்கிடு மாதர்க்கு
இனிமையில் ஒன்றாய் சென்று உட்படும் மனம் உன் தாட்கு அன்புற்று
இயல் இசை கொண்டு ஏத்து என்று உள் தருவாயே
நெடிது தவம் கூர்க்கும் சத்புருடரும் நைந்து ஏக்கம் பெற்று அயருற
நின்று ஆர்த்து தங்கள் கணை ஏவும்
நிகரில் மதன் தேர் குன்று அற்று எரியில் விழுந்து ஏர் பொன்ற சிறிது
நினைந்து ஆட்டம் கற்றிடுவார் முன்
திடமுறு அன்பால் சிந்தைக்கு அறிவிடமும் சேர்த்து உம்பர்க்கு
இடர் களையும் போர் செம் கை திறல் வேலா
தின வரி வண்டு ஆர்த்து இன்புற்று இசை கொடு வந்து ஏத்தி இஞ்சி
திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே

மேல்

#68
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகையாடி
தொண்டு கிழவன் இவன் ஆர் என இருமல் கிண்கிண் என முன் உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு செவியாகி
வந்த பிணியும் அதிலே மிடையும் ஒரு பண்டிதனுமே உறு வேதனையும் இள
மைந்தர் உடைமை கடன் ஏது என முடுகி துயர் மேவி
மங்கை அழுது விழவே யம படர்கள் நின்று சருவ மலமே ஒழுக உயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின் மிசை வர வேணும்
எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக அபிராம
இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வரு மாயன்
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடு அழிய அடு தீர
திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத
செந்தில் நகரில் இனிதே மருவி வளர் பெருமாளே

மேல்

#69
தோலோடு மூடிய கூரையை நம்பி பாவையர் தோதக லீலை நிரம்பி
சூழ் பொருள் தேடிட ஓடி வருந்தி புதிதான
தூதொடு நான்மணிமாலை ப்ரபந்த கோவை உலா மடல் கூறி அழுந்தி
தோம் உறு காளையர் வாசல் புக்கு அலமாரும்
காலனை வீணனை நீதி கொடும் பொய் கோளனை மானம் இலா வழி நெஞ்ச
காதக லோப வ்ருதாவனை நிந்தை புலையேனை
காரண காரிய லோக ப்ரபஞ்ச சோகம் எலாம் அற வாழ்வுற நம்பி
காசு அற வாரி மெய் ஞான தவம் சற்று அருளாதோ
பால் அனம் மீது மன் நான்முக செம்பொன் பாலனை மோது அபராதன பண்டு அ
பாரிய மாருதி தோள் மிசை கொண்டு உற்று அமராடி
பாவி இராவணனார் தலை சிந்தி சீரிய வீடணர் வாழ்வுற மன்றல்
பாவையர் தோள் புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே
சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம் என முந்தி
தே மொழி பாளித கோமள இன்ப கிரி தோய்வாய்
சேலொடு வாளை வரால்கள் கிளம்பி தாறு கொள் பூகம் அளாவிய இன்ப
சீரலைவாய்நகர் மேவிய கந்த பெருமாளே

மேல்

#70
நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதனூடே
நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன்
நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீ கலந்து உளாகு ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே
காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம்ஓலம் என்னும் ஆதி
காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர் காளகண்டரோடு வேதம் மொழிவோனே
ஆலம் ஒன்று வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே
ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே

மேல்

#71
நிதிக்கு பிங்கலன் பதத்துக்கு இந்திரன் நிறத்தில் கந்தன் என்று இனைவோரை
நிலத்தில் தன் பெரும் பசிக்கு தஞ்சம் என்று அரற்றி துன்ப நெஞ்சினில் நாளும்
புது சொல் சங்கம் ஒன்று இசைத்து சங்கடம் புகட்டி கொண்டு உடம்பு அழி மாயும்
புலத்தில் சஞ்சலம் குலைந்திட்டு உன் பதம் புணர்க்கைக்கு அன்பு தந்து அருள்வாயே
மதித்து திண் புரம் சிரித்து கொன்றிடும் மறத்தில் தந்தை மன்றினில் ஆடி
மழு கை கொண்ட சங்கரர்க்கு சென்று வண் தமிழ் சொல் சந்தம் ஒன்று அருள்வோனே
குதித்து குன்று இடம் தலைத்து செம்பொனும் கொழித்து கொண்ட செந்திலின் வாழ்வே
குற பொன் கொம்பை முன் புலத்தில் செம் கரம் குவித்து கும்பிடும் பெருமாளே

மேல்

#72
நிலையா பொருளை உடலா கருதி நெடுநாள் பொழுதும் அவமே போய்
நிறை போய் செவிடு குருடாய் பிணிகள் நிறைவாய் பொறிகள் தடுமாறி
மல நீர் சயனம் மிசையா பெருகி மடிவேற்கு உரிய நெறியாக
மறை போற்ற அரிய ஒழியாய் பரவு மலர் தாள் கமலம் அருள்வாயே
கொலை காட்டு அவுணர் கெட மா சலதி குளமாய் சுவற முது சூதம்
குறி போய் பிளவுபட மேல் கதுவு கொதி வேல் படையை விடுவோனே
அலையாய் கரையின் மகிழ் சீர் குமர அழியா புநித வடிவாகும்
அரனார்க்கு அதித பொருள் காட்டு அதிப அடியார்க்கு எளிய பெருமாளே

மேல்

#73
நிறுக்கும் சூது அன மெய் தன முண்டைகள் கருப்பன் சாறொடு அரைத்து உள உண்டைகள்
நிழல்கண் காண உணக்கி மணம் பல தடவா மேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின் புறம் ஒளித்து அன்பாக அளித்த பின் இங்கு எனை
நினைக்கின்றீர் இலை மெச்சல் இதம் சொலி என ஓதி
உற கண்டு ஆசை வலைக்குள் அழுந்திட விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே
உலப்பில் ஆறு எனும் அக்கரமும் கமழ் கடப்பம் தாரும் முக ப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தில் நினைந்திட அருள்வாயே
கறுக்கும் தூய மிடற்றனரும் சிலை எடுக்கும் தோளன் நிறத்து அமர் எண் கரி
கடக்கும் தானவனை கொல் அரும் புயன் மருகோனே
கன தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை
களர் செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே
சிறு கண் கூர் மத அத்தி சயிந்தவம் நடக்கும் தேர் அனிக படை கொண்டு அமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை உருவானோன்
செருக்கும் சூர் அகலத்தை இடந்து உயிர் குடிக்கும் கூரிய சத்தி அமர்ந்து அருள்
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய பெருமாளே

மேல்

#74
பங்கம் மேவும் பிறப்பு அந்தகாரம்தனில் பந்தபாசம்தனில் தடுமாறி
பஞ்சபாணம் பட புண்படா வஞ்சக பண்பு இலா ஆடம்பர பொதுமாதர்
தங்கள் ஆலிங்கன கொங்கை ஆகம் பட சங்கை மால் கொண்டு இளைத்து அயராதே
தண்டை சூழ் கிண்கிணி புண்டரீகம்தனை தந்து நீ அன்பு வைத்து அருள்வாயே
அம் கை வேல் கொண்டு அரக்கன் ப்ரதாபம் கெடுத்து அண்ட வேதண்டம் உட்படவே தான்
அஞ்சவே திண் திறல் கொண்டல் ஆகண்டலற்கு அண்டலோகம் கொடுத்து அருள்வோனே
திங்கள் ஆர் கொன்றை மத்தம் துழாய் துன்று பொன் செம் சடா பஞ்சத்து உறு தோகை
சிந்தையே தென் திசை தென்றல் வீசும் பொழில் செந்தில் வாழ் செந்தமிழ் பெருமாளே

மேல்

#75
பஞ்சபாதகம் உறு பிறை எயிறு எரி குஞ்சி கூர் விட மதர் விழி பிலவக
பங்க வாள் முகம் முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்தபாசமும் மருவிய கர தலம் மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில் ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
அண்ட கோளகை வெடிபட இடிபட எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
மஞ்சு போல் வளர் அளகமும் இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் நிலவு என
வந்த தூய வெண் முறுவலும் இரு குழை அளவோடும்
மன்றல் வாரிச நயனமும் அழகிய குன்ற வாழ்நர்தம் மடமகள் தட முலை
மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா
செம் சொல் மா திசை வட திசை குட திசை விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து
திங்கள் வேணியர் பல தளி தொழுது உயர் மக மேரு
செண்டு மோதினர் அரசருள் அதிபதி தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே

மேல்

#76
படர் புவியின் மீது மீறி வஞ்சகர்கள் வியனில் உரை பானுவாய் வியந்து உரை
பழுது இல் பெரு சீல நூல்களும் தெரி சங்க பாடல்
பனுவல் கதை காவ்யமாம் எண்எண் கலை திருவளுவ தேவர் வாய்மை என்கிற
பழமொழியை ஓதியே உணர்ந்து பல் சந்த மாலை
மடல் பரணி கோவை ஆர் கலம்பகம் முதல் உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகைவகையில் ஆசு சேர் பெரும் கவி சண்ட வாயு
மதுரகவி ராஜன் நான் என் வெண் குடை விருது கொடி தாள மேள தண்டிகை
வரிசையொடு உலாவு மால் அகந்தை தவிர்ந்திடாதோ
அடல் பொருத பூசலே விளைந்திட எதிர் பொரவொணாமல் ஏக சங்கர
அரஹர சிவா மஹா தேவ என்று உனி அன்று சேவித்து
அவனி வெகு காலமாய் வணங்கி உள் உருகி வெகு பாச கோச சம்ப்ரம
அதி பெல கடோர மா சலந்த்ரன் நொந்து வீழ
உடல் தடியும் ஆழி தா என அம் புய மலர்கள் தச நூறு தாள் இடும் பகல்
ஒரு மலர் இல்லாது கோ அணிந்திடு செம் கண் மாலுக்கு
உதவிய மகேசர் பால இந்திரன் மகளை மணம் மேவி வீறு செந்திலில்
உரிய அடியேனை ஆள வந்து அருள் தம்பிரானே

மேல்

#77
பதும இரு சரண் கும்பிட்டு இன்ப கலவி நலம் மிகுந்து துங்க கொங்கை
பகடு புளகிதம் துன்ற கன்றி கயல் போலும்
பரிய கரிய கண் செம்பொன் கம்பி குழைகள் பொர மருண்டின் சொல் கொஞ்சி
பதற விதமுறும் கந்தும் கொந்து குழல் சாய
புதுமை நுதி பங்கத்து அங்கத்து இனிது வரைய வெண் சந்தத்து இந்து
புருவ வெயர்வுடன் பொங்க கங்கை சடைதாரி
பொடி செய்து அருள் மதன் தந்த்ர பந்திக்கு அறிவை இழவிடும் பண்பு துன்ப
பொருளின் மகளிர் தம் அன்பு பண்பை தவிரோனே
திதிதி ததததம் திந்திம் தந்தட் டிடிடி டடடடண் டிண்டிட் டண்ட
தெனன தனதனம் தெந்த தந்த தெனனானா
திகுர்தி தகிர்ததிம் திந்தி திந்தி திரிரிரதர என என்று என்று ஒப்பு இன்றி
திமிலை பறை அறைந்து எண் திக்கு அண்ட சுவர் சோர
சதியில் வரு பெரு சங்க தொங்கல் புய அசுரர் வெகுண்டு அஞ்சி குஞ்சி
தலை கொடு அடி பணிந்து எங்கட்கு உன் கண் க்ருபை தா என்
சமர குமர கஞ்சம் சுற்றும் செய்ப்பதியில் முருக முன் பொங்கி தங்கி
சலதி அலை பொரும் செந்தில் கந்த பெருமாளே

மேல்

#78
பரிமள களப சுகந்த சந்த தனம் மானார் படை யம படை என அந்திக்கும் கண் கடையாலே
வரி அளி நிரை முரல் கொங்கு கங்குல் குழலாலே மறுகிடும் மருளனை இன்புற்று அன்புற்று அருள்வாயே
அரி திரு மருக கடம்ப தொங்கல் திரு மார்பா அலை குமுகுமு என வெம்ப கண்டித்து எறி வேலா
திரிபுரம் தகனரும் வந்திக்கும் சற்குருநாதா ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்த பெருமாளே

மேல்

#79
பரு தந்தத்தினை தந்து இட்டு இருக்கும் கச்சு அடர்த்து உந்தி
பருக்கும் பொன் ப்ரபை குன்ற தனம் மானார்
பரிக்கும் துற்சரக்கு ஒன்ற திளைத்து அங்கு உற்பல பண்பை
பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும்
துரை செம் கண் கடைக்கு ஒன்றி பெருத்த அன்புற்று இளைத்து அங்கு
துணிக்கும் புத்தியை சங்கித்து அறியேனை
துணை செம்பொன் பதத்து இன்புற்று எனக்கு என்று அ பொருள் தங்க
தொடுக்கும் சொல் தமிழ் தந்து இப்படி ஆள்வாய்
தரு தங்கு அ பொலத்து அண்டத்தினை கொண்டு அ சுரர்க்கு அஞ்ச
தட துன்பத்தினை தந்திட்டு எதிர் சூரன்
சமர்க்கு எஞ்சி படி துஞ்ச கதிர் துங்கத்து அயில் கொண்டு அ
தலத்து உம்பர் பதிக்கு அன்புற்று அருள்வோனே
திரு கஞ்சத்தனை கண்டித்து உற கம் குட்டி விட்டும் சத்சிவற்கு
அன்று அ பொருள் கொஞ்சி பகர்வோனே
செய துங்க கொடை துங்க திரு தங்கி தரிக்கும் பொன்
திருச்செந்தில் பதி கந்த பெருமாளே

மேல்

#80
பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை ஓதி மோகுலம் போல் சம்போகமொடு
பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல
பாகு பால் குடம் போல் இரண்டான குவடு ஆட நீள் வடம் சேர அலங்கார குழல்
பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் அந்த மீதே
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை
வாரும் வீடு என்று ஓதி இதம் பாயல் மிசை அன்பு உளார் போல்
வாச பாசகம் சூது பந்தாட இழி வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் சந்தம் ஆமோ
தீத தோதகம் தீததிம் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போல ஒண் பேரி முரசங்கள் வீற
சேடன் மேருவும் சூரனும் தாருகனும் வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர்
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் அங்கி வேலா
தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம் ஆறும் வாகுவும் கூர சந்தான சுக
தாரி மார்பு அலங்காரி என் பாவை எங்கள் மாதை
தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள் ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை தம்பிரானே

மேல்

#81
புகர புங்க பகர குன்றில் புயலில் தங்கி பொலிவோனும்
பொருவில் தஞ்ச சுருதி சங்க பொருளை பண்பில் புகர்வோனும்
திகிரி செம் கண் செவியில் துஞ்ச அ திகிரி செம் கை திருமாலும்
திரிய பொங்கி திரை அற்று உண்டிட்டு தெளிதற்கு ஒன்றை தரவேணும்
தகர தந்த சிகரத்து ஒன்றி தட நல் கஞ்சத்து உறைவோனே
தருண கொங்கை குறவிக்கு இன்பத்தை அளித்து அன்புற்று அருள்வோனே
பகர பைம்பொன் சிகர குன்றை படியில் சிந்த தொடும் வேலா
பவள துங்க புரிசை செந்தில் பதியில் கந்த பெருமாளே

மேல்

#82
பூரண வார கும்ப சீத படீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று
போது அவமே இழந்துபோனது மானம் என்பது அறியாத
பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்சபாதகனாய் அறம் செய்யாதபடி ஓடி இறந்து
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து மயல் தீர
காரண காரியங்கள் ஆனது எல்லாம் ஒழிந்து யான் எனும் மேதை விண்டு பாவகமாய் இருந்து
கால் உடல் ஆடி அங்கி நாசியின் மீது இரண்டு விழி பாய
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே
ஆரணசார மந்திர வேதம் எல்லாம் விளங்க ஆதிரையானை நின்று தாழ்வன் எனா வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞானம் மிஞ்சு முரவோனே
ஆர்கலி ஊடு எழுந்து மா வடிவாகி நின்ற சூரனை மாள வென்று வான் உலகு ஆளும்
அண்டரானவர் கூர் அரந்தை தீர முனாள் மகிழ்ந்த முருகேசா
வாரணம் மூலம் என்ற போதினில் ஆழி கொண்டு வாவியின் மாடு இடங்கர் பாழ் படவே எறிந்த
மா முகில் போல் இருண்ட மேனியனாம் முகுந்தன் மருகோனே
வாலுகம் மீது வண்டல் ஓடிய காலில் வந்து சூல் நிறைவான சங்கு மா மணி ஈன உந்து
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#83
பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறையுற்று பொதுமாதர்
ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே
புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டுற பற்றும் புலத்து கண் செழிக்க செந்தமிழ் பாடும்
புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே
தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே
சலிப்புற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன்
சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே
சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே

மேல்

#84
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற உடல் தீயில்
மண்டி எரிய விண்டு புனலில் வஞ்சம் ஒழிய விழ ஆவி
வெம் கண் மறலி தன் கை மருவ வெம்பி இடறும் ஒரு பாச
விஞ்சை விளையும் அன்று உன் அடிமை வென்றி அடிகள் தொழ வாராய்
சிங்கம் உழுவை தங்கும் அடவி சென்று மற மின்னுடன் வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழும் செந்தில் உறையும் முருகோனே
எங்கும் இலகும் திங்கள் கமலம் என்று புகலும் முக மாதர்
இன்பம் விளைய அன்பில் அணையும் என்றும் இளைய பெருமாளே

மேல்

#85
மஞ்சு எனும் குழலும் பிறை அம் புருவங்கள் என் சிலையும் கணை அம் கயல்
வண்டு புண்டரிகங்களையும் பழி சிந்து பார்வை
மண்டலம் சுழலும் செவி அம் குழை தங்க வெண் தரளம் பதியும் பல்லும்
மண் தலம் திகழும் கமுகு அம் சிறு கண்ட மாதர்
கம் சுகம் குரலும் கழை அம்புய கொங்கை செம் கிரியும் பவளம் பொறி
கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும்
கஞ்சம் மண்டும் உள் நின்று ரசம் புகு கண் படர்ந்த இட ரம்பை எனும் தொடை
கண் கை அம் சரணம் செயல் வஞ்சரை நம்புவேனோ
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்கு தாரை
சம்புவின் குமரன் புலவன் பொரு கந்தன் என்றிடு துந்துமியும்
துவசங்கள் அங்கு ஒளிரும் குடையும் திசை விஞ்சவே கண்டு
அஞ்ச வஞ்ச சுரன் திரளும் குவடு அன்று அடங்கலும் வெந்து பொரிந்திட
அண்டர் இந்திரனும் சரணம் புக வென்ற வேளே
அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு
அன்புடன் அண்டரும் தொழும் செந்திலில் இன்புறு தம்பிரானே

மேல்

#86
மனத்தின் பங்கு என தங்கு ஐம்புலத்து என்றன் குணத்து அஞ்சு இந்த்ரிய
தம்பத்தனை சிந்தும்படி காலன்
மலர் செம் கண் கனல் பொங்கும் திறத்தின் தண்டு எடுத்து அண்டம்
கிழித்தின்று இங்கு உற தங்கும் பலவோரும்
எனக்கு என்று இங்கு உனக்கு என்று அங்கு இனத்தின் கண் கணக்கு என்றுஎன்று
இளைத்து அன்பும் கெடுத்து அங்கு அழிவா முன்
இசைக்கும் செந்தமிழ் கொண்டு அங்கு இரக்கும் புன் தொழில் பங்கம்
கெட துன்பம் கழித்து இன்பம் தருவாயே
கனைக்கும் தண் கடல் சங்கம் கரத்தின் கண் தரித்து எங்கும்
கலக்கம் சிந்திட கண் துஞ்சிடும் மாலும்
கதித்த ஒண் பங்கயத்தன் பண்பு அனைத்தும் குன்றிட சந்தம்
களிக்கும் சம்புவுக்கும் செம் பொருள் ஈவாய்
தினை குன்றம்தனில் தங்கும் சிறு பெண் குங்கும கும்பம்
திரு செம்பொன் புயத்து என்றும் புனைவோனே
செழிக்கும் குண்டு அகழ் சங்கம் கொழிக்கும் சந்தனத்தின் பைம்
பொழில் தண் செந்திலில் தங்கும் பெருமாளே

மேல்

#87
மனை கனகம் மைந்தர் தமது அழகு பெண்டிர் வலிமை குல நின்ற நிலை ஊர் பேர்
வளர் இளமை தஞ்சம் முனை புனை வளங்கள் வரிசை தமர் என்று வரும் மாய
கனவு நிலை இன்பம் அதனை எனது என்று கருதி விழி இன்ப மடவார்தம்
கலவி மயல் கொண்டு பல உடல் புணர்ந்து கருவில் விழுகின்றது இயல்போ தான்
நினையும் நினது அன்பர் பழ வினைகள் களைந்து நெடு வரை பிளந்த கதிர் வேலா
நிலம் முதல் விளங்கு நலம் மருவு செந்தில் நிலை பெற இருந்த முருகோனே
புனை மலர் புனைந்த புன மற மடந்தை புளக இரு கொங்கை புணர் மார்பா
பொருது உடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள் பொடிபட நடந்த பெருமாளே

மேல்

#88
மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில் மூடு சீலை திறந்த மழுங்கிகள்
வாசல்தோறும் நடந்து சிணுங்கிகள் பழையோர் மேல்
வால நேச நினைந்து அழும் வம்பிகள் ஆசை நோய் கொள் மருந்து இடும் சண்டிகள்
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும்
நேயமே கவி கொண்டு சொல் மிண்டிகள் காசு இலாதவர் தங்களை அன்பு அற
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார்
நீலி நாடகமும் பயில் மண்டைகள் பாளை ஊறு கள் உண்டிடு தொண்டிகள்
நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ
பாயு மா மத தந்தி முகம் பெறும் ஆதி பாரதம் என்ற பெரும் கதை
பார மேரு வில் அன்று வரைந்தவன் இளையோனே
பாவையாள் குற மங்கை செழும் தன பாரம் மீதில் அணைந்து முயங்கிய
பாகமாகிய சந்தன குங்கும மணி மார்பா
சீயமாய் உருவம் கொடு வந்த சுரேசன் மார்பை இடந்து பசும் குடர்
சேர வாரி அணிந்த நெடும் புயன் மருகோனே
தேன் உலாவு கடம்பம் அணிந்த கிரீட சேகர சங்கரர் தந்து அருள்
தேவ நாயக செந்தில் உகந்து அருள் பெருமாளே

மேல்

#89
மான் போல் கண் பார்வை பெற்றிடு மூஞ்சால் பண்பாடு மக்களை
வாய்ந்தால் பொன் கோடு செப்பு எனும் முலை மாதர்
வாங்கா திண்டாடு சித்திர நீங்கா சங்கேத முக்கிய
வாஞ்சால் செம் சாறு மெய்த்திடு மொழியாலே
ஏன் கால் பங்கு ஆக நற்புறு பூ கால் கொங்கு ஆரும் மெத்தையில்
ஏய்ந்தால் பொன் சாரு பொன் பணம் முதல் நீ தா
ஈந்தாற்கு அன்றோ ரமிப்பு என ஆன் பால் தேன் போல செப்பிடும்
ஈண்டா சம்போக மட்டிகள் உறவாமோ
கான் பால் சந்து ஆடு பொன் கிரி தூம்பால் பைம் தோளி கண் கடை
காண்பால் துஞ்சாமல் நத்திடும் அசுரேசன்
காம் பேய் பந்தாட விக்ரம வான் தோய் கெம்பீர வில் கணை
காண் தேர் கொண்டு ஏவும் அச்சுதன் மருகோனே
தீம் பாற்கும் பாகு சர்க்கரை காம்பால் செம் தேறல் ஒத்து உரை
தீந்தார் கங்காளி பெற்று அருள் புதல்வோனே
தீண் பார்க்கு உன் போதம் முற்றுற மாண்டார் கொண்டு ஓதும் முக்கிய
தேன் போல் செந்தூரில் மொய்த்து அருள் பெருமாளே

மேல்

#90
முகில் ஆம் எனும் அளகம் காட்டி மதி போல் உயர் நுதலும் காட்டி
முகிழாகிய நகையும் காட்டி அமுது ஊறு
மொழி ஆகிய மதுரம் காட்டி விழி ஆகிய கணையும் காட்டி
முகம் ஆகிய கமலம் காட்டி மலை போலே
வகையாம் இள முலையும் காட்டி இடை ஆகிய கொடியும் காட்டி
வளமான கை வளையும் காட்டி இதமான
மணி சேர் கடிதடமும் காட்டி மிகவே தொழில் அதிகம் காட்டும்
மட மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
நகையால் மதன் உருவ தீத்த சிவனார் அருள் சுதனே என்று ஆர்க்கு
நலனே அருள் அமர் செந்தூர்க்குள் உறைவோனே
நவ மா மணி வடமும் பூத்த தன மாது எனும் இபம் மின் சேர்க்கை
நழுவா வகை பிரியம் காட்டும் முருகோனே
அகம் மேவிய நிருதன் போர்க்கு வரவே சமர்புரியும் தோற்றம்
அறியாமலும் அபயம் காட்டி முறை கூறி
அயிராவதம் முதுகின் தோற்றி அடையாம் என இனிது அன்பு ஏத்தும்
அமரேசனை முழுதும் காத்த பெருமாளே

மேல்

#91
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி சந்தமொடு நீடு பாடிப்பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித்தேடி உழலாதே
முந்தை வினையே வராமல் போக மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே
திந்திதிமி தோதி தீதி தீதி தந்ததன தான தான தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடம் ஆடும்
செம் சிறிய கால் விசால தோகை துங்க அநுகூல பார்வை தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே
அம் தண் மறை வேள்வி காவல்கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார
அண்டர் உபகார சேவல்கார முடி மேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார குன்று உருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான
சிந்துர மின் மேவு போகக்கார விந்தை குற மாது வேளைக்கார
செம் சொல் அடியார்கள் வாரக்கார எதிரான
செம் சமரை மாயும் மாயக்கார துங்க ரண சூர சூறைக்கார
செந்தில் நகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே

மேல்

#92
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு முறுவலும் சிவந்த கனி வாயும்
முருகு அவிழ்ந்து உதிர்ந்த மலர்களும் சரிந்த முகிலும் இன்ப சிங்கி விழி வேலும்
சிலை முகம் கலந்த திலதமும் குளிர்ந்த திரு முகம் ததும்பு குறு வேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின் சுழன்று செயல் அழிந்து உழன்று திரிவேனோ
மலை முகம் சுமந்த புலவர் செம் சொல் கொண்டு வழி திறந்த செம் கை வடி வேலா
வளர் புனம் பயின்ற குற மடந்தை கொங்கை மணி வடம் புதைந்த புய வேளே
அலை முகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம் அலறி வந்து கஞ்ச மலர் மீதே
அளி கலந்து இரங்க இசையுடன் துயின்ற அரிய செந்தில் வந்த பெருமாளே

மேல்

#93
மூப்புற்று செவி கேட்பு அற்று பெருமூச்சு உற்று செயல் தடுமாறி
மூர்க்க சொல் குரல் காட்டி கக்கிட மூக்குக்கு உள் சளி இளையோடும்
கோப்பு கட்டி இனா பிச்சு எற்றிடு கூட்டில் புக்கு உயிர் அலையா முன்
கூற்ற தத்துவம் நீக்கி பொன் கழல் கூட்டி சற்று அருள்புரிவாயே
காப்பு பொன் கிரி கோட்டி பற்று அலர் காப்பை கட்டவர் குருநாதா
காட்டுக்குள் குறவாட்டிக்கு பல காப்பு குத்திரம் மொழிவோனே
வாய்ப்புற்ற தமிழ் மார்க்க திண் பொருள் வாய்க்கு சித்திர முருகோனே
வார்த்தை சிற்பர தீர்த்த சுற்று அலை வாய்க்குள் பொற்பு அமர் பெருமாளே

மேல்

#94
மூளும் வினை சேர மேல் கொண்டிடா ஐந்து பூத வெகுவாய மாயங்கள் தான் நெஞ்சில்
மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார
மோக நினைவான போகம் செய்வேன் அண்டர் தேட அரிதாய ஞேயங்களாய் நின்ற
மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி
நாளும் அதி வேக கால் கொண்டு தீ மண்ட வாசி அனலூடு போய் ஒன்றி வானின்கண்
நாமம் மதி மீதில் ஊறும் கலா இன்ப அமுதூறல்
நாடி அதன் மீது போய் நின்ற ஆனந்த மேலை வெளி ஏறி நீ அன்றி நான் அன்றி
நாடியினும் வேறு தான் இன்றி வாழ்கின்றது ஒரு நாளே
காள் விடம் ஊணி மாதங்கி வேதம் சொல் பேதை நெடு நீலி பாதங்களால் வந்த
காலன் விழ மோதும் சாமுண்டி பார் அம்பொடு அனல் வாயு
காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை
காளி நடமாடி நாள் அன்பர் தாம் வந்து தொழு மாது
வாளம் முழுது ஆளும் ஓர் தண் துழாய் தங்கு சோதி மணி மார்ப மாலின் பினாள் இன் சொல்
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை இளையோனே
மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று
வாழும் மயில் வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே

மேல்

#95
வஞ்சம் கொண்டும் திட ராவணனும் பந்து என் திண் பரி தேர் கரி
மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை
வந்து அம்பும் பொங்கியதாக எதிர்ந்து தன் சம்பிரதாயமும்
வம்பும் தும்பும் பல பேசியும் எதிரே கை
மிஞ்சி என்றும் சண்டை செய் போது குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு
குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி
மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு
மின் சந்தும் சிந்த நிசாசரர் வகை சேரவும்
சண்டன் தென் திசை நாடி விழுந்து அங்கும் சென்று எம தூதர்கள்
உந்துஉந்துஉந்து என்றிடவே தசை நிணம் மூளை
உண்டு கண்டு சில கூளிகள் டிண் டிண் டெண் என்று குதி போடவும்
உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே
தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள்
தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே
சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க மகா புநிதம்
தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே

மேல்

#96
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும்
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர
அஞ்ச கலைபடு பஞ்சு இ புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவி
அண்டி பயமுற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும்
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தந்து அழகிய திரு மார்பா
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே
செம்பொன் குல வடகுன்றை கடலிடை சிந்த பொர வல பெருமாளே

மேல்

#97
வந்துவந்து முன் தவழ்ந்து வெம் சுகம் தயங்க நின்று மொஞ்சிமொஞ்சி என்று அழும் குழந்தையோடு
மண்டலம் குலுங்க அண்டர் விண் தலம் பிளந்து எழுந்த செம்பொன் மண்டபங்களும் பயின்ற வீடு
கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம்
கொங்கு அடம்பு கொங்கு பொங்கு பைம் கடம்பு தண்டை கொஞ்ச செம் சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்
சந்து அடர்ந்து எழுந்து அரும்பு மந்தரம் செழும் கரும்பு கந்த ரம்பை செண் பதம் கொள் செந்தில் வாழ்வே
தண் கடம் கடந்து சென்று பண்கள் தங்க அடர்ந்த இன் சொல் திண் புனம் புகுந்து கண்டு இறைஞ்சு கோவே
அந்தகன் கலங்க வந்து கந்தரம் கலந்த சிந்துரம் சிறந்து வந்து அலம் புரிந்த மார்பா
அம் புனம் புகுந்த நண்பர் சம்பு நல் புரந்தரன் தரம் பல் உம்பர் கும்பர் நம்பு தம்பிரானே

மேல்

#98
வரி ஆர் கரும் கண் மட மாதர் மகவு ஆசை தொந்தம் அதுவாகி
இரு போது நைந்து மெலியாதே இரு தாளின் அன்பு தருவாயே
பரிபாலனம் செய்து அருள்வோனே பரமேசுரன்தன் அருள் பாலா
அரிகேசவன்தன் மருகோனே அலைவாய் அமர்ந்த பெருமாளே

மேல்

#99
விதி போலும் உந்து அ விழியாலும் இந்து நுதலாலும் ஒன்றி இளைஞோர்தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து விறல் வேறு சிந்தை வினையாலே
இதமாகி இன்ப மது போத உண்டு இனிது ஆளும் என்று மொழி மாதர்
இருள் ஆய துன்ப மருள் மாயை வந்து எனை ஈர்வது என்றும் ஒழியாதோ
மதி சூடி அண்டர் பதி வாழ மண்டி வரும் ஆலம் உண்டு விடை ஏறி
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில் வரு தேவ சம்பு தரு பாலா
அதி மாயம் ஒன்றி வரு சூரர் பொன்ற அயில் வேல் கொடு அன்று பொரும் வீரா
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#100
விந்து அதின் ஊறி வந்தது காயம் வெந்தது கோடி இனிமேலோ
விண்டு விடாமல் உன் பதம் மேவு விஞ்சையர் போல அடியேனும்
வந்து விநாச முன் கலி தீர வண் சிவஞான வடிவாகி
வன் பதம் ஏறி என் களை ஆற வந்து அருள் பாத மலர் தாராய்
எந்தன் உள்ளே ஏக செம் சுடராகி என் கணில் ஆடு தழல் வேணி
எந்தையர் தேடும் அன்பர் சகாயர் எங்கள் சுவாமி அருள் பாலா
சுந்தர ஞான மென் குற மாது தன் திரு மார்பில் அணைவோனே
சுந்தரமான செந்திலில் மேவு கந்த சுரேசர் பெருமாளே

மேல்

#101
விறல் மாரன் ஐந்து மலர் வாளி சிந்த மிக வானில் இந்து வெயில் காய
மித வாடை வந்து தழல் போல ஒன்ற விலைமாதர் தம்தம் வசை கூற
குற வாணர் குன்றில் உறை பேதை கொண்ட கொடிதான துன்பம் மயல் தீர
குளிர் மாலையின்கண் அணி மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ
மறி மான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா
மலை மாவும் சிந்த அலை வேலை அஞ்ச வடி வேல் எறிந்த அதி தீரா
அறிவால் அறிந்து உன் இரு தாளில் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து அலைவாய் உகந்த பெருமாளே

மேல்

#102
வெம் காளம் பாணம் சேல் கண் பால் மென் பாகு அம் சொல் குயில் மாலை
மென் கேசம் தான் என்றே கொண்டார் மென் தோள் ஒன்ற பொருள் தேடி
வங்காளம் சோனம் சீனம் போய் வன்பே துன்பப்படலாமோ
மைந்து ஆரும் தோள் மைந்தா அந்தா வந்தே இந்த பொழுது ஆள்வாய்
கொங்கு ஆர் பைம் தேன் உண்டே வண்டு ஆர் குன்றாள் கொங்கைக்கு இனியோனே
குன்றோடும் சூழ் அம்பு ஏழும் சூரும் போய் மங்க பொரு கோபா
கங்காளம் சேர் மொய்ம்பு ஆர் அன்பார் கன்றே உம்பர்க்கு ஒரு குருநாதா
கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்தில் பெருமாளே

மேல்

#103
வெம் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோ நெடு இன்ப சாகரமோ வடு வகிரோ முன்
வெந்து போன புராதன சம்பராரி புராரியை வென்ற சாயகமோ கருவிளையோ கண்
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மா மத சங்க மாதர் பயோதரம் அதில் மூழ்கு
சங்கை ஓவ இரு கூதள கந்த மாலிகை தோய் தரு தண்டை சேர் கழல் ஈவதும் ஒரு நாளே
பஞ்சபாதக தாருக தண்டன் நீறு எழ வானவர் பண்டு போல அமராவதி குடியேற
பங்கயாசனர் கேசவர் அஞ்சலே என மால் வரை பங்க நீறு எழ வேல் விடும் இளையோனே
செம் சடை அடவி மீமிசை கங்கை மாதவி தாதகி திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வே
செண்பக அடவி நீடிய துங்க மா மதிள் சூழ் தரு செந்தில் மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#104
அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவிலி வித்தார தனம் அவிகார
அகில் கமழ் கத்தூரி தனி அணை மிசை கை காசுக்கு
அளவு அருள்பவர் நட்பே கொட்பு உறும் ஒரு போதன்
பகல் இரவில் போதில் பணி பணி அற விட்டார் எட்டிய
பரம மய சோதி சிவமயமா நின்
பழநிதனில் போய் உற்பவ வினை விள கள் சேர் வெட்சி குரவு
பயில் நல் தாள் பற்றுவது ஒரு நாளே
புகலி வனப்பு ஏற புகல் மதுரை மன் வெப்பு ஆற திகழ்
பொடி கொடு புல் பாய் சுற்றிகள் கழுவேற
பொருத சமர்த்தா குத்திர துரக முக கோதைக்கு இடை
புலவரில் நக்கீரர்க்கு உதவிய வேளே
இகல் படு நெட்டு ஊர் பொட்டு எழ இள நகை இட்டே சுட்டு அருள்
எழு புவி துய்த்தார் மைத்துனர் மதலாய் வென்று
இடர் அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்க ஆரத்தினை
எழுதி வனத்தே எற்றிய பெருமாளே

மேல்

#105
அணிபட்டு அணுகி திணிபட்ட மனத்தவர் விட்ட விழி கணையாலும்
அரி சுற்று கழை தவர் பெற்ற வளத்தவன் விட்ட மலர் கணையாலும்
பிணிபட்டு உணர்வு அற்று அவமுற்று இயமன் பெறும் அ குணமுற்று உயிர் மாளும்
பிறவி கடல் விட்டு உயர் நற்கதியை பெறுதற்கு அருளை தரவேணும்
கணி நல் சொருபத்தை எடுத்து மலை கனியை கணியுற்றிடுவோனே
கமலத்து அயனை ப்ரணவத்து உரையை கருதி சிறை வைத்திடுவோனே
பணி அப்பு அணி அ பரமர் பரவ பரிவுற்று ஒரு சொல் பகர்வோனே
பவள தவள கனக புரிசை பழநி குமர பெருமாளே

மேல்

#106
அதலம் விதலம் முதல் அந்த தலங்கள் என அவனி என அமரர் அண்டத்து அகண்டம் என
அகில சலதி என எண் திக்கு உள் விண்டு என அங்கி பாநு
அமுத கதிர்கள் என அந்தித்த மந்த்ரம் என அறையும் மறை என அரும் தத்துவங்கள் என
அணுவில் அணு என நிறைந்திட்டு நின்றது ஒரு சம்ப்ரதாயம்
உதயம் எழ இருள் விடிந்து அக்கணம்தனில் இருதய கமலம் முகிழம் கட்டு அவிழ்ந்து
உணர்வில் உணரும் அநுபவம் மனம் பெற்றிடும்படியை வந்து நீ முன்
உதவ இயலின் இயல் செம் சொல் ப்ரபந்தம் என மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமை உனை அன்றி ப்ரபஞ்சம் அதை நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக என்று தாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக அகில நிசிசரர் நடுங்க கொடும் கழுகு
பரிய குடர் பழு எலும்பை பிடுங்க ரண துங்க காளி
பவுரி இட நரி புலம்ப பருந்து இறகு கவரி இட இகலை வென்று சிகண்டிதனில்
பழநி மலையின் மிசை வந்து உற்ற இந்திரர்கள் தம்பிரானே

மேல்

#107
அபகார நிந்தைபட்டு உழலாதே அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திர பொருளாலே உனை நான் நினைந்து அருள்பெறுவேனோ
இபமா முகன்தனக்கு இளையோனே இமவான் மடந்தை உத்தமி பாலா
ஜெபமாலை தந்த சற்குருநாதா திருவாவினன்குடி பெருமாளே

மேல்

#108
அரிசன வாடை சேர்வை குளித்து பலவித கோல சேலை உடுத்திட்டு
அலர் குழல் ஓதி கோதி முடித்து சுருளோட
அமர் பொரு காதுக்கு ஓலை திருத்தி திரு நுதல் நீவி பாளித பொட்டு இட்டு
அகல் புழுகு ஆர சேறு தனத்து இட்டு அலர் வேளின்
சுரத விநோத பார்வை மை இட்டு தருண கலார தோடை தரித்து
தொழிலிடு தோளுக்கு ஏற வரித்திட்டு இளைஞோர்மார்
துறவினர் சோரச்சோர நகைத்து பொருள் கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
துயர் அறவே பொன் பாதம் எனக்கு தருவாயே
கிரி அலை வாரி சூரர் இரத்த புணரியில் மூழ்கி கூளி களிக்க
கிரண வை வேல் புத்தேளிர் பிழைக்க தொடுவோனே
கெருவித கோல பார தனத்த குறமகள் பாத சேகர சொர்க்க
கிளி தெய்வயானைக்கே புய வெற்பை தருவோனே
பரிமள நீப தாரொடு வெட்சி தொடை புனை சேவல் கேதன துத்தி
பணி அகல் பீட தோகை மயில் பொன் பரியானே
பனி மலர் ஓடை சேல் உகளித்து ககனம் அளாவி போய் வரும் வெற்றி
பழநியில் வாழ் பொன் கோமள சத்தி பெருமாளே

மேல்

#109
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
அடுத்த பேர்களும் இதமுறு மகவொடு வளநாடும்
தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை
பராவியும் வழிபடு தொழிலது தருவாயே
எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமகள் இரு பாதம்
பரித்த சேகர மகபதி தர வரு தெய்வயானை
பதி கொள் ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே

மேல்

#110
அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகு பெறவே நடந்து இளைஞோனாய்
அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதிவிதமதாய் வளர்ந்து பதினாறாய்
சிவ கலைகள் ஆகமங்கள் மிகவு மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய்
மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த மக தேவர்
மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலைமகள் குமார துங்க வடி வேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த கழல் வீரா
பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#111
அறம் இலா நிலை கற்று கொடிய வேல் விழி விட்டு உள அறிவு தான் அற வைத்து விலை பேசி
அமளி மீதினில் வைத்து பவள வாய் அமுதத்தை அதிகமா உதவி கை வளையாலே
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள் உலையிலே மெழுகு ஒத்த மடவாரோடு
உருகியே வரு பெற்றி மதன நாடக பித்து ஒழியுமாறு ஒரு முத்தி தரவேணும்
மறவர் மாது ஒரு ரத்ந விமல கோகநகத்தி மயில் ஆனாள் புணர் செச்சை மணி மார்பா
மருள் நிசாசரன் வெற்பில் உருகி வீழ்வுற மிக்க மயிலில் ஏறிய உக்ர வடி வேலா
பறைகள் பேணிய ருத்ரி கரிய கார் அளகத்தி பரமர் பால் உறை சத்தி எமதாயி
பழைய பார்வதி கொற்றி பெரிய நாயகி பெற்ற பழநி மா மலை உற்ற பெருமாளே

மேல்

#112
ஆதாளிகள் புரி கோலாகல விழியாலே அமுது எனு மொழியாலே
ஆழ் சீர் இள நகையாலே துடி இடையாலே மண மலி குழலாலே
சூது ஆர் இள முலையாலே அழகிய தோடு ஆர் இரு குழை அதனாலே
சோரா மயல் தரு மானார் உறவு இடர் சூழா வகை அருள்புரிவாயே
போது ஆர் இரு கழல் சூழாது அது தொழில் பூணாது எதிர் உற மதியாதே
போர் ஆடிய அதி சூரா பொறுபொறு போகாதே என அடு திறலோனே
வேதா உடனொடு மால் ஆனவன் அறியாதார் அருளிய குமரேசா
வீராபுரி கோவே பழநியுள் வேலா இமையவர் பெருமாளே

மேல்

#113
ஆலகாலம் என கொலை முற்றிய வேல் அதாம் என மிக்க விழி கடையாலும்
மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை
ஆர ஆணை மெயிட்டு மறித்து விகார மோகம் எழுப்பி அதற்கு உறவான
பேரை அகப்படுவித்து அதிவிதமாக
சால மாலை அளித்து அவர் கைப்பொருள் மாளவே சிலுகிட்டு மருட்டியெ
சாதிபேதம் அற தழுவி திரி மட மாதர்
தாக போகம் ஒழித்து உனக்கு அடியான் என் வேள்வி முக தவம் உற்று இரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட அருள்வாயே
வால மா மதி மத்தம் எருக்கு அறுகு ஆறு பூளை தரித்த சடை திரு
ஆலவாயன் அளித்தருள் அற்புத முருகோனே
மாய மானொடு அரக்கரை வெற்றிகொள் வாலி மார்பு தொளைத்திட வில் கொடு
வாளி ஏவிய மல் புயன் அச்சுதன் மருகோனே
நாலு வேத நவிற்று முறை பயில் வீணை நாதன் உரைத்த வனத்திடை
நாடி ஓடி குறத்திதனை கொடு வருவோனே
நாளிகேரம் வருக்கை பழுத்து உதிர் சோலை சூழ் பழநி பதியில் திரு
ஞான பூரண சத்தி தரித்து அருள் பெருமாளே

மேல்

#114
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி
ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும் அடியார்கள் பதமே துணை அது என்று நாளும்
ஏறு மயில்வாகன குகா சரவணா எனது ஈச என் மானம் உனது என்றும் ஓதும்
ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ
நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி நீல மயில்வாக உமை தந்த வேளே
நீசர்கள்தமோடு எனது தீ வினை எலாம் மடிய நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா
சீறி வரும் மாறு அவுணன் ஆவி உணும் ஆனை முக தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம்
சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம தேவர் வரதா முருக தம்பிரானே

மேல்

#115
இ தாரணிக்குள் மனு வித்தாய் முளைத்து அழுது கேவி கிடந்து மடி மீதில் தவழ்ந்து அடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெரு தலையில் ஓடி திரிந்து நவ கோடி ப்ரபந்த கலை
இ சீர் பயிற்ற வயது எட்டோடு எட்டு வர வால குணங்கள் பயில் கோல பெதும்பையர்கள் உடன் உறவாகி
இக்கு ஆர் சரத்து மதனுக்கு இளைத்து வெகுவாக கலம்ப வகை பாடி புகழ்ந்து பல
திக்கோடு திக்கு வரை மட்டு ஓடி மிக்க பொருள் தேடி சுகந்த அணை மீதில் துயின்று சுகம்
இட்டு ஆதரத்து உருகி வட்டார் முலைக்குள் இடை மூழ்கி கிடந்து மயலாகி துளைந்து சில பிணி அது மூடி
சத்தான புத்தி அது கெட்டே கிடக்க நமன் ஓடி தொடர்ந்து கயிறு ஆடி கொளும் பொழுது
பெற்றோர்கள் சுற்றி அழ உற்றார்கள் மெத்த அழ ஊருக்கு அடங்கல் இலர் காலற்கு அடங்க உயிர்
தக்காது இவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியில் ஓலை பழம் படியினால் இறந்தது என எடும் என ஓடி
சட்டா நவ பறைகள் கொட்டா வரி சுடலை ஏகி சடம் பெரிது வேக புடம் சமைய
இட்டே அனற்குள் எரி பட்டான் என தழுவி நீரில் படிந்து விடு பாசத்து அகன்று உனது
சத்போதக பதுமம் உற்றே தமிழ் கவிதை பேசி பணிந்து உருகு நேசத்தை இன்று தர இனி வரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாத தனந்ததன தான தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாத தசெந்திகுத தீத தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோத கணங்கணக கூகு கிணங்கிணென ஒரு மயில் ஏறி
திண் தேர் ரதத்து அசுரர் பட்டே விழ பொருது வேலை தொளைந்து வரை ஏழை பிளந்து வரு
சித்தா பரத்து அமரர் கத்தா குறத்தி முலை மீதில் புணர்ந்து சுக லீலை கதம்பம் அணி
சுத்தா உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாத குழுந்தை என ஓடி கடம்ப மலர் அணி திரு மார்பா
மத்தா மத களிறு பின் தான் உதித்த குகனே ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு
முட்டாள் அரக்கன் தலை இற்றே விழ கணைகளே தொட்ட கொண்டல் உருவு ஆகி சுமந்து அதிகம்
மட்டு ஆர் மலர் கமலம் உற்ற சன திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய மருமகன் ஆகி
வற்றா மது கருணை உற்றே மறை கலைகள் ஓதி தெரிந்து தமிழ் சோதித்து அலங்கல் அணி
அத்தா பரத்தை அறிவித்து ஆவி சுற்றும் ஒளி ஆகி ப்ரபந்தம் அணி வேல் தொட்டு அமைந்த புயவர்க்கா
மரு புழுகு முட்டா திரு பழநி வாழ்வுக்கு உகந்து அடியவர் ஆவிக்குள் நின்று உலவி வரு பெருமாளே

மேல்

#116
இரவி என வடவை என ஆலால விடம் அது என உருவு கொடு ககனம் மிசை மீது ஏகி மதியும் வர
இரதிபதி கணைகள் ஒரு நாலு ஏவ விருது குயில் அது கூவ
எழு கடலின் முரசின் இசை வேய் ஓசை விடையின் மணி இசை குருகி இரு செவியில் நாராசம் உறுவது என
இகல் புரிய மதன குரு ஓராத அனையர் கொடு வசை பேச
அரஹர என வநிதை படு பாடு ஓத அரிதரிது அமுதம் மயில் அது கருதி ஆரோடும் இகல் புரிவள்
அவசமுறஅவசமுற ஆர் ஓமல் தரவும் மிக மெலிவு ஆனாள்
அகுதி இவள் தலையில் விதி ஆனாலும் விலக அரிது அடிமைகொள உனது பரம் ஆறாத ஒரு தனிமை
அவளை அணை தர இனிதின் ஓகார பரியின் மிசை வருவாயே
நிரை பரவி வர வரையுள் ஓர் சீத மருதினொடு பொரு சகடு உதை அது செய்து ஆ மாய மழை சொரிதல்
நிலை குலைய மலை குடையதாவே கொள் கரகமலன் மருகோனே
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை அருள் பாலா
பரவை கிரி அசுரர் திரள் மா சேனை தவிடுபொடிபட அமரர் துயர் அகல வேல் ஏவி அமர் பொருத
பதும கரதல முருக நால் வேதகரர் அணிக மயில் வீரா
பளித ம்ருகமத களப சேறு ஆர வளரு முலை வநிதை குறமகள் மகிழும் லீலா விதுர மதுர
பநுவல் தரு பழனி வரு கோலாகல அமரர் பெருமாளே

மேல்

#117
இரு கனக மா மேருவோ களப துங்க கடி கடின பாடீர வார் அமுத கும்பம்
இணை சொல் இளநீரோ கராசல இரண்டு குவடேயோ
இலகு மலரே வாளியாகிய அநங்கன் அணி மகுடமோ தான் எனா மிக வளர்ந்த
இள முலை மினார் மோக மாயையில் விழுந்து தணியாமல்
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே ஆகவே எதிர் புகழ்ந்து
பெரிய தமிழே பாடி நாள்தொறும் இரந்து நிலை காணா
பிணியின் அகமே ஆன பாழ் உடலை நம்பி உயிரை அவமாய் நாடியே பவம் நிரம்பு
பிறவிதனிலே போக மீளவும் உழன்று திரிவேனோ
கருணை உமை மா தேவி காரணி அநந்த சயன களிகூர் அரி சோதரி புர அந்த
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை அருள் பாலா
கருடனுடன் வீறு ஆன கேதனம் விளங்கு மதிலினொடு மா மாட மேடைகள் துலங்கு
கலிசை வரு காவேரி சேவகனொடு அன்புபுரிவேனே
பரவை இடையே பாதகாசூரர் விழுந்து கதறி இடவே பாதசாதனன் உள் நெஞ்சு
பலிதம் எனவே ஏக மயிலில் வந்த குமரேசா
பல மலர்களே தூவி ஆரணம் நவின்று பரவி இமையோர் சூழ நாள்தொறும் இசைந்து
பழநி மலை மீது ஓர் பராபரன் இறைஞ்சு பெருமாளே

மேல்

#118
இரு செப்பு என வெற்பு என வட்டமும் ஒத்து இளகி புளகித்திடும் மாதர்
இடையை சுமையை பெறுதற்கு உறவுற்று இறுக குறுகி குழல் சோர
தரு மெய் சுவையுற்று இதழை பருகி தழுவி கடி சுற்று அணை மீதே
சருவிச்சருவி குனகி தனகி தவம் அற்று உழல கடவேனோ
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரிய திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி பெற்று எதிருற்ற அசுர கிளையை பொருவோனே
பரிவுற்று அரனுக்கு அருள் நல் பொருளை பயனுற்று அறிய பகர்வோனே
பவன புவன செறிவுற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே

மேல்

#119
இலகிய களப சுகந்த வாடையின் ம்ருகமதம் அதனை மகிழ்ந்து பூசியே
இலை சுருள் பிளவை அருந்தியே அதை இதமாக
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில் இடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவதும் எந்த நாள் அது பகர்வாயே
சிலை தரு குறவர் மடந்தை நாயகி தினை வனம் அதனில் உகந்த நாயகி
திரள் தனம் அதனில் அணைந்த நாயக சிவலோகா
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ அயில் அயில் அதனை உகந்த நாயக
குருபர பழநியில் என்றும் மேவிய பெருமாளே

மேல்

#120
இலகு கனி மிஞ்சு மொழி இரவு துஞ்சும் இரு விழி என் நெஞ்சு முகம் மீதே
இசை முரல் சுரும்பும் இள முலை அரும்பும் இலகிய கரும்பும் மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து நெகிழும் உயிர் நொந்து மத வேளால்
நிலை அழியு நெஞ்சில் அவர் குடிபுகுந்த நினைவொடும் இறந்துபடலாமோ
புலவினை அளைந்து படு மணி கலந்து புது மலர் அணிந்த கதிர் வேலா
புழுகு எழ மணந்த குறமகள் குரும்பை பொர முகை உடைந்த தொடை மார்பா
பல நிறம் இடைந்த விழு சிறை அலர்ந்த பரு மயில் அடைந்த குக வீரா
பணை பணி சிறந்த தரள மணி சிந்து பழநி மலை வந்த பெருமாளே

மேல்

#121
உயிர்க்கூடு விடுமளவும் உமை கூடி மருவு தொழில் ஒருக்காலும் நெகிழ்வது இல்லை எனவே சூள்
உரைத்தே முன் மருவினவரை வெறுத்து ஏம திரவியம் அது உடைத்தாய் பின் வருகும் அவர் எதிரே போய்
பயில் பேசி இரவுபகல் அவர்க்கான பதமை பல பட பேசி உறு பொருள் கொள் விலைமாதர்
பட பார வலைபடுதல் தவிர்த்து ஆள மணி பொருவு பதத்து ஆன மயிலின் மிசை வரவேணும்
தயிர் சோரன் எனும் அ உரை வசை கோவ வனிதையர்கள் தரத்து ஆடல்புரியும் அரி மருகோனே
தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே
செயில் சேல் விண் உடுவினொடு பொர போய் விம்மு அமர் பொருது செயித்து ஓடி வரு பழநி அமர்வோனே
தினை காவல் புரியவல குற பாவை முலை தழுவ திரு தோள அமரர் பணி பெருமாளே

மேல்

#122
உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர்
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய்
சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே சரவணபவா முகுந்தன் மருகோனே
பல கலை சிவாகமங்கள் பயில்வோனே பழநி மலை வாழ வந்த பெருமாளே

மேல்

#123
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே
உனது பழநி மலை எனும் ஊரை சேவித்து அறியேனே
பெரு புவியில் உயர்வு அரிய வாழ்வை தீர குறியேனே
பிறவி அற நினைகுவன் என் ஆசை பாடை தவிரேனோ
துரிதம் இடு நிருதர் புர சூறைக்கார பெருமாளே
தொழுது வழிபடும் அடியர் காவல்கார பெருமாளே
விருது கவி விதரண விநோதக்கார பெருமாளே
விறல் மறவர் சிறுமி திரு வேளைக்கார பெருமாளே

மேல்

#124
ஒருவரை ஒருவர் தேறி அறிகிலர் மத விசாரர் ஒரு குண வழி உறாத பொறியாளர்
உடலது சதம் என நாடி களவு பொய் கொலைகள் ஆடி உற நமன் நரகில் வீழ்வர் அது போய் பின்
வரும் ஒரு வடிவம் மேவி இருவினை கடலுள் ஆடி மறைவர் இன அனைய கோலம் அது ஆக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு வடிவுற அருளி பாதம் அருள்வாயே
திரிபுரம் எரிய வேழ சிலை மதன் எரிய மூரல் திரு விழி அருள் மெய் ஞான குருநாதா
திரு சரஸ்வதி மயேசுவரி இவர் தலைவர் ஓத திரு நடனம் அருளு நாதன் அருள் பாலா
சுரர் பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி துகள் எழ மெய்ஞ்ஞான அயிலோனே
சுக குறமகள் மணாளன் என மறை பலவும் ஓதி தொழ முது பழநி மேவு பெருமாளே

மேல்

#125
ஓடியோடி அழைத்துவர சில சேடிமார்கள் பசப்ப அதற்கு முன்
ஓதி கோதி முடித்து அ இலை சுருள் அது கோதி
நீடு வாச நிறைந்த அகில் புழுகு ஓட மீது திமிர்ந்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவு ஆமோ
நாடி வாயும் வயல் தலையில் புனல் ஓடை மீதில் நிலத்த திவட்கையில்
நாத கீத மலர் துளி பெற்று அளி இசை பாடும்
கோடு உலாவிய முத்து நிரைத்த வைகாவூர் நாடு அதனில் பழநி பதி
கோதிலாத குறத்தி அணைத்து அருள் பெருமாளே

மேல்

#126
கடலை சிறை வைத்து மலர் பொழிலில் ப்ரமரத்தை உடல் பொறி இட்டு மடு
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணா
கருதி சருவி கயலை கயம் உள்படுவித்து உழையை கவனத்து அடைசி
கணையை கடைவித்து வடுத்தனை உப்பினில் மேவி
அடலை செயல் சத்தியை அக்கினியில் புகுவித்து யம ப்ரபுவை துகைவித்து
அரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம்
அலற பணி ரத்ந மணி குழையை சிலுகிட்டு மை இட்டு ஒளி விட்டு மருட்டுதலுற்ற
பொறிச்சியர்கள் கடையில் படுவேனோ
சடிலத்தவன் இட்ட சிட்ட குலத்து ஒரு செட்டியிடத்தில் உதித்து அருள் வித்தகர்
உத்ர ஜன்ம பெயர் செப்பிட இட பரிவாலே
சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்குமரர்க்கும் அநுக்ரக மெய் பலகை
சது பத்து நவ புலவர்க்கும் விபத்து இல் ஞான
படலத்து உறு லக்கண லக்ய தமிழ் த்ரயம் அத்தில் அக பொருள் வ்ருத்தியினை
பழுதற்று உணர்வித்து அருள்வித்த சற்குருநாதா
பவள கொடி சுற்றிய பொன் கமுகின் தலையில் குலையில் பல முத்து உதிர் செய்
பழநி பதி வெற்பினில் நில் குமர பெருமாளே

மேல்

#127
கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத
கரட தடம் முமத நளின சிறு நயன கரிணி முகவரது துணைவோனே
வடவரையின் முகடு அதிர ஒரு நொடியில் வலம் வரு மரகத மயில் வீரா
மக பதி தரு சுதை குற மினொடு இருவரும் மருவு சரச வித மணவாளா
அடல் அசுரர் குலம் முழுதும் மடிய உயர் அமரர் சிறைய விட எழில் மீறும்
அருண கிரண ஒளி ஒளிரும் அயிலை விடு அரகர சரவணபவ லோலா
படல உடு பதியை இதழி அணி சடில பசு பதி வர நதி அழகான
பழ நிமலை அருள்செய் மழலை மொழி மதலை பழநி மலையில் வரு பெருமாளே

மேல்

#128
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண கன தன வெற்பு மேல் மிகு மயலான
கவலை மனத்தன் ஆகிலும் உனது ப்ரசித்தமாகிய கன தனம் ஒத்த மேனியும் முகம் ஆறும்
அதி பல வஜ்ர வாகுவும் அயில் நுனை வெற்றி வேல் அதும் அரவு பிடித்த தோகையும் உலகு ஏழும்
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும் அபி நவ பத்ம பாதமும் மறவேனே
இரவி குலத்து இராஜத மருவி எதிர்த்து வீழ் கடு ரணமுக சுத்த வீரிய குணமான
இளையவனுக்கு நீள் முடி அரசு அது பெற்று வாழ்வுற இதமொடு அளித்த ராகவன் மருகோனே
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை பரிவொடு நிற்கும் ஈசுர சுரலோக
பரிமள கற்பக அடவி அரி அளி சுற்று பூ உதிர் பழநி மலைக்குள் மேவிய பெருமாளே

மேல்

#129
கரிய பெரிய எருமை கடவு கடிய கொடிய திரிசூலன்
கறுவி இறுகு கயிறொடு உயிர்கள் கழிய முடுகி எழு காலம்
திரியும் நரியும் எரியும் உரிமை தெரிய விரவி அணுகாதே
செறிவும் அறிவும் உறவும் அனைய திகழும் அடிகள் தரவேணும்
பரிய வரையின் அரிவை மருவு பரமர் அருளும் முருகோனே
பழனம் உழவர் கொழுவில் எழுது பழைய பழநி அமர்வோனே
அரியும் அயனும் வெருவ உருவ அரிய கிரியை எறிவோனே
அயிலும் மயிலும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#130
கரிய மேகமதோ இரு குழல் அரிய பூரண மா மதியோ முகம்
கணைகொலோ அயில் வேல் அதுவோ விழி இதழ் பாகோ
கமுகு தான் நிகரோ வளையோ களம் அரிய மா மலரோ துளிரோ கரம்
கனக மேரு அதுவோ குடமோ முலை மொழி தேனோ
கருணை மால் துயில் ஆல் இலையோ வயிறு இடை அது ஈர் ஒரு நூல் அதுவோ என
கனக மா மயில் போல் மடவாருடன் மிக நாடி
கசடனாய் வயதாய் ஒரு நூறு செல்வதனின் மேல் எனது ஆவியை நீ இரு
கமல மீதினிலே வரவே அருள்புரிவாயே
திரிபுராதிகள் நீறு எழவே மிக மதனையே விழியால் விழவே செயும்
சிவ சொரூப மகேசுரன் நீடிய தனயோனே
சினமதாய் வரு சூரர்கள் வேர் அற அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவுமே வடி வேல் விடும் முருகோனே
பரிவு சேர் கமலாலய சீ தனம் மருவுவார் திரு மால் அரி நாரணர்
பழைய மாயவர் மாதவனார் திரு மருகோனே
பனகமாம் அணி தேவி க்ருபாகரி குமரனே பதி நாலு உலகோர் புகழ்
பழநி மா மலை மீதினிலே உறை பெருமாளே

மேல்

#131
கரி இணை கோடு என தனம் அசைத்து ஆடி நல் கயல் விழி பார்வையில் பொருள் பேசி
கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணையூடே
செருமி வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர்
செயல் இழுக்காமல் இ கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்து அருள்வாயே
திரிபுர கோல வெற்பு அழல் கொள சீர் நகை சிறிது அருள் தே அருள் புதல்வோனே
திரை கடல் கோ என குவடுகள் தூள்பட திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா
பரிமள பாகலின் கனிகளை பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும்
பழநியில் சீருற புகழ் குற பாவையை பரிவுற சேர் மணம் பெருமாளே

மேல்

#132
கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி
கலை சுருள் ஒன்றும் மிடைபடுகின்ற கடி விடம் உண்டு பல நாளும்
விரகுறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே
விரை கமழ் தொங்கல் மருவிய துங்க வித பதம் என்று பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச
முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடி வேலா
பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வெற்றி மயில் வீரா
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே

மேல்

#133
கருப்பு விலில் மரு பகழி தொடுத்து மதன் விடுத்து அனைய கடைக்கணொடு சிரித்து அணுகு
கருத்தினால் விரகு செய் மட மாதர்
கத களிறு திடுக்கமுற மதர்த்து மிக எதிர்த்து மலை கனத்த இரு தனத்தின் மிசை
கலக்கும் மோகனம் அதில் மருளாதே
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர நினைத்து அருளி உனை புகழும் எனை புவியில்
ஒருத்தனாம் வகை திரு அருளாலே
உருத்திரனும் விருத்தி பெற அனுக்கிரகி என குறுகி உரைக்கும் அ மறை அடுத்து பொருள்
உணர்த்தும் நாள் அடிமையும் உடையேனோ
பருப்பதமும் உரு பெரிய அரக்கர்களும் இரைக்கும் எழு படி கடலும் அலைக்க வல
பருத்த தோகையில் வரு முருகோனே
பதித்த மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த பல பணி பனிரு புய சயில
பரக்கவே இயல் தெரி வயலூரா
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிக பகைமை செயித்து அருளும் இசை பிரிய
திருத்த மாதவர் புகழ் குருநாதா
சிலை குறவர் இலை குடிலில் புகை கள முகில் புடை செல் திரு பழநி மலைக்குள் உறை
திருக்கை வேல் அழகிய பெருமாளே

மேல்

#134
கருவின் உருவாகி வந்து வயது அளவிலே வளர்ந்து கலைகள் பலவே தெரிந்து மதனாலே
கரிய குழல் மாதர் தங்கள் அடி சுவடு மார் புதைந்து கவலை பெரிதாகி நொந்து மிக வாடி
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று அறு சமய நீதி ஒன்றும் அறியாமல்
அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ
உரக படம் மேல் வளர்ந்த பெரிய பெருமாள் அரங்கர் உலகு அளவு மால் மகிழ்ந்த மருகோனே
உபய குல தீப துங்க விருது கவி ராஜ சிங்க உறை புகலியூரில் அன்று வருவோனே
பரவை மனை மீதில் அன்று ஒரு பொழுது தூது சென்ற பரமன் அருளால் வளர்ந்த குமரேசா
பகை அசுரர் சேனை கொன்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே

மேல்

#135
கலக வாள் விழி வேலோ சேலோ மதுர வாய் மொழி தேனோ பாலோ
கரிய வார் குழல் காரோ கானோ வாய் துவரோ
களமும் நீள் கமுகோ தோள் வேயோ உதரமானது மால் ஏர் பாயோ
களப வார் முலை மேரோ கோடோ இடைதானும்
இழையதோ மலர் வேதாவானோன் எழுதினான் இலையோ வாய் பேசீர்
இது என மோனம் மினாரே பாரீர் என மாதர்
இரு கண் மாயையிலே மூழ்காதே உனது காவிய நூல் ஆராய்வேன்
இடர் படாது அருள் வாழ்வே நீயே தரவேணும்
அலைவு இலாது உயர் வானோர் ஆனோர் நிலைமையே குறி வேலா சீலா
அடியவர்பால் அருள் ஈவாய் நீப ஆர் மணி மார்பா
அழகு உலாவு விசாகா வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா தாழ்வார்
அயல் உலாவிய சீலா கோலாகல வீரா
வலபை கேள்வர் பின் ஆனாய் கான் ஆர் குறவர் மாது மணாளா நாள் ஆர்
வனச மேல் வரு தேவா மூவா மயில் வாழ்வே
மதுர ஞான வினோதா நாதா பழநி மேவு குமாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் பெருமாளே

மேல்

#136
கலக கயல் விழி போர் செய வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் கோபிகள்
கனிய கனியவும் மொழி பேசிய விலைமாதர்
கலவி தொழில் நலமே இனிது ஆம் என மனம் இப்படியே தினம் உழலா வகை
கருணைப்படி எனை ஆளவுமே அருள்தரவேணும்
இலவு கிளை எனும் வாய் வளி நாயகி குழைய தழுவிய மேன்மையினால் உயர்
இசை பெற்று அருளிய காமுகனாகிய வடிவோனே
இதம் மிக்க அரு மறை வேதியர் ஆனவர் புகல தயவுடனே அருள் மேன்மைகள்
இசைய தரும் அநுகூல வசீகர முதல்வோனே
நிலவை சடை மிசையே புனை காரணர் செவியில் பிரணவம் ஓதிய தேசிக
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய சுடர் வேலா
நிமல குருபர ஆறிரு பார்வையும் அருளை தர அடியார்தமை நாள்தொறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ்கூர்தரும் உரியோனே
பலவின் கனி பணை மீறிய மா மர முருகின் கனியுடனே நெடு வாளைகள்
பரவி தனி உதிர் சோலைகள் மேவிய வகையாலே
பழனத்து உழவர்கள் ஏரிடவே விளை கழனி புரவிகள் போதவும் மீறிய
பழநி சிவகிரி மீதினிலே வளர் பெருமாளே

மேல்

#137
கலவியில் இச்சித்து இரங்கி நின்று இரு கன தனம் விற்க சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்ப பரிந்து நண்பொடும் இன்பம் ஊறி
கனி இதழ் உற்றுஉற்று அருந்தி அங்கு உறும் அவசம் மிகுத்து பொருந்தி இன்புறும்
கலகம் விளைத்து கலந்து மண்டு அணை அங்கம் மீதே
குலவிய நல் கைத்தலம் கொண்டு அங்கு அணை கொடி இடை மெத்த துவண்டு தண் புயல்
குழல் அளகம் கட்டு அவிழ்ந்து பண்டையில் அங்கம் வேறாய்
குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர முக தல முத்து பொலிந்து இலங்கிட
கொடிய மயல் செய் பெரும் தடம்தனில் மங்கலாமோ
இலகிய சித்ர புனம் தனிந்து உறை குறமகள் கச்சு கிடந்த கொங்கை மின்
இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் கந்த வேளே
எழு கடல் வற்ற பெரும் கொடும் கிரி இடி பட மிக்க ப்ரசண்டம் விண்டுறும்
இகலர் பதைக்க தடிந்து இலங்கிய செம் கை வேலா
பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி பயில் தரு வெற்பு தரும் செழும் கொடி
பணை முலை மெத்த பொதிந்து பண்புறுகின்ற பாலை
பல திசை மெச்ச தெரிந்த செந்தமிழ் பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் பெருமாளே

மேல்

#138
கலை கொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய கபிலர் பகர் அகணாதர் உலகாயர்
கலகம் இடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு கலகல என மிக்க நூல்கள் அதனாலே
சிலுகி எதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி தெரிவரிய சித்தியான உபதேசம்
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே
கொலையுற எதிர்த்த கோர இப முக அரக்கனோடு குரகத முகத்தர் சீய முக வீரர்
குறை உடல் எடுத்து வீசி அலகையொடு பத்ரகாளி குலவியிட வெற்றி வேலை விடுவோனே
பலம் மிகு புனத்து உலாவு குற வநிதை சித்ர பார பரிமள தனத்தில் மேவு மணி மார்பா
படை பொருது மிக்க யூகம் மழை முகிலை ஒட்டி ஏறு பழநி மலை உற்ற தேவர் பெருமாளே

மேல்

#139
களப முலையை திறந்து தளவ நகையை கொணர்ந்து கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ
கரிய குழலை பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடு குலங்கள் என வீழ
முழு மதி என சிறந்த நகை முகம் மினுக்கி இன்ப முறுகு இதழ் சிவப்ப நின்று விலைகூறி
முதல் உளது கை புகுந்து அழகு துகிலை திறந்து முடுகும் அவருக்கு இரங்கி மெலிவேனோ
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து இனிய பொருளை பகர்ந்த குருநாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மரு கடம்ப எனது தலையில் பதங்கள் அருள்வோனே
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
குடிலொடு மிக செறிந்த இதண் உள புனத்து இருந்த குறவர் மகளை புணர்ந்த பெருமாளே

மேல்

#140
கறுத்த குழல் அணி மலர் அணி பொங்க பதித்த சிலை நுதல் அணி திலதம் பொன்
கணைக்கு நிகர் கழல் எழு கஞ்ச விழி சிரம் ஆன
கழுத்தில் உறு மணி வளை குழை மின்ன குவட்டு முலை அசை பட இடை அண்மைக்கு அமைந்த
கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல
சிறுத்த களம் மிகு மதம் ஒழுகு இன் சொல் குயில்கள் என மட மயில் எகினங்கள்
திருக்கு நடை பழகிகள் களபம் கச்சு உடை மாதர்
திகைத்த தனமொடு பொருள் பறி ஒண் கண் குவட்டி அவர் வலை அழல் உறு பங்கத்து
இடக்குதலை புலை அவர் வழி இன்பை தவிர்வேனோ
பறித்த விழி தலை மழு உழை செம் கை செழித்த சிவ பரன் இதழி நல் தும்பை
படித்த மதி அறல் அரவு அணி சம்பு குருநாதா
பருத்த அசுரர்கள் உடன் மலை துஞ்ச கொதித்த அலை கடல் எரிபட செம்பொன்
படை கை மணி அயில் விடு நடனம் கொள் கதிர் வேலா
தெறித்து விழி அர உடல் நிமிர அம் பொன் குவட்டு ஒள் திகை கிரி பொடி பட சண்ட
சிறப்பு மயில் மிசை பவுரிகொளும் பொன் திரு பாதா
சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை
சிலைக்குள் அணை குக சிவ மலை கந்த பெருமாளே

மேல்

#141
கனக கும்பம் இரண்டும் நேர் மலை என நெருங்கு குரும்பை மா மணி
கதிர் சிறந்த வடம் குலாவிய முந்து சூதம்
கடையில் நின்று பரந்து நாள்தொறும் இளகி விஞ்சி எழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே விலை இடும் மடந்தையர்தங்கள் தோதகம்
அதில் மருண்டு துவண்டு அ ஆசையில் நைந்து பாயல்
அவசம் மன் கொளும் இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே ஒழிதரும்
பதம் கதி எம்பிரான் அருள்தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென உந்து தாளம்
தமர சஞ்சலி சஞ்சலா என முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கிண் ஆரமும் முந்த ஓதும்
பணி பதம் கயம் எண் திசாமுக கரி அடங்கலும் அண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக என்று தோகை
பவுரி கொண்டிட மண்டியே வரும் நிசிசரன் கிளை கொன்ற வேலவ
பழநி அம் கிரியின்கண் மேவிய தம்பிரானே

மேல்

#142
கனத்து இறுகி பெருத்து இளகி பணைத்து மணத்து இதத்து முக
கறுப்பு மிகுத்து அடர்த்து நிகர் தலம் மேராய்
கவட்டையும் மெத்து அடக்கி மதர்த்து அற கெருவித்து இதத்திடு நல்
கலை சவுளி தலை குலவி களிகூரும்
தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து அனற்கு உள் மெழுக்கு என புவியில்
தவித்து இழிசொல் பவ கடல் உற்ற அயர்வாலே
சலித்த வெறி துடக்கு மனத்து இடக்கன் என சிரிக்க மயல்
சலத்தின் வசைக்கு இணக்கமுற கடவேனோ
புனத்தின் மலை குறத்தி உயர் திருக்கு தன குடத்தின் நறை
புயத்தவ நல் கருத்தை உடை குக வீரா
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற அறல் சடிலத்த அ சிவனில்
புலச்சிதனக்கு இதத்தை மிகுத்திடு நாதா
சினத்து எதிர் துட்ட அரக்கர்தமை திகைத்து விழ கண பொழுதில்
சிதைத்திடு நல் கதிர் கை படைத்து உடையோனே
செருக்கொடு நல் தவ கமலத்து அயற்கும் அரிக்கும் அருள் புரிசை
திரு பழநி கிரி குமர பெருமாளே

மேல்

#143
கனமாய் எழுந்து வெற்பு எனவே உயர்ந்து கற்புர மாரணம் துளுத்திடு மானார்
கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து பொருளே இழந்து விட்டு அயர்வாயே
மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து மட்டு அறவே உலந்து சுக்கு அது போலே
வசமே அழிந்து உக்கிடு நோய் துறந்து வைப்பு எனவே நினைந்து உனை புகழ்வேனோ
புன வேடர் தந்த பொன் குற மாது இன்புற புணர் காதல் கொண்ட அ கிழவோனே
புனல் ஏழும் மங்க வெற்பொடு சூர் சிரங்கள் பொட்டு எழ வேல் எறிந்த உக்கிர வீரா
தின மேவு குங்குமம் புய வாச கிண்கிணி சிறு கீத செம் பதத்து அருளாளா
சிவலோக சங்கரிக்கு இறை பால பைம் கயம் திருவாவினன்குடி பெருமாளே

மேல்

#144
கார் அணிந்த வரை பார் அடர்ந்து வினை காதல் நெஞ்சு அயர தடுமாறி
கால் நரம்பு உதிர தோல் வழும்புறு பொய் காயம் ஒன்று பொறுத்து அடியேனும்
தார் இணங்கு குழல் கூர் அணிந்த விழி சாபம் ஒன்று நுதல் கொடியார்தம்
தாள் பணிந்து அவர் பொன் தோள் விரும்பி மிக தாழ்வு அடைந்து உலைய தகுமோதான்
சூரன் அங்கம் விழ தேவர் நின்று தொழ தோயமும் சுவற பொரும் வேலா
தூய்மை கொண்ட குற தோகை நின்ற புனம் சூழ் பெரும் கிரியில் திரிவோனே
ஆரணன் கருட கேதனன் தொழ முற்று ஆலம் உண்டவருக்கு உரியோனே
ஆலையும் பழன சோலையும் புடை சுற்று ஆவினன்குடி பெருமாளே

மேல்

#145
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு எலும்பு அணி சரி தசை ஈரல் குடல் நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொடு இவை பல கசுமாலம்
குடின் புகுதும் அவர் அவர் கடு கொடுமையர் இடும்பர் ஒரு வழி இணை இலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறி இலர் மிருகணை விறல் ஆன
சரம்பர் உறவனை நரகனை துரகனை இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு மயில் ஏறி
தழைந்த சிவ சுடர்தனை என் மனதினில் அழுந்த உரை செய வரு முக நகை ஒளி
தழைந்த நயனமும் இரு மலர் சரணமும் மறவேனே
இரும்பை வகுளமொடு இயை பல முகில் பொழில் உறைந்த குயில் அளி ஒலி பரவிட மயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் வள நாடா
இருண்ட குவடு இடி பொடிபட வெகு முகடு எரிந்து மகரம் ஒள் திசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடு இப பரி யமபுரம் விடும் வேளே
சிரம் பொன் அயனொடு முனிவர்கள் அமரர்கள் அரம்பை மகளிரொடு அரகர சிவசிவ
செயம்பு என நடமிடு பதம் அழகியர் குருநாதா
செழும் பவள ஒளி நகை முக மதி நகு சிறந்த குறமகள் இணை முலை புதை பட
செயம் கொடு அணை குக சிவ மலை மருவிய பெருமாளே

மேல்

#146
குருதி மலசலம் ஒழுகு நர குடல் அரிய புழு அது நெளியும் உடல் மத
குருபி நிண சதை விளையும் உளை சளி உடலூடே
குடிகள் என பல குடிகை கொடு வலி கொடு குமர வலி தலை வயிறு வலி என
கொடுமை என பிணி கலகம் இடும் இதை அடல் பேணி
மருவி மதனன் உள் கரிய புளகிதம் மணி அசல பல கவடி மலர் புனை
மதன கலை கொடு குவடு மலைதனில் மயல் ஆகா
மனது துயர் அற வினைகள் சிதறிட மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற எனது தலை பதம் அருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதி பெற நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரி கடல் எரிய உருவிய கதிர் வேலா
நிறைய மலர் மொழி அமரர் முநிவரும் நிருப குருபர குமர சரண் என
நெடிய முகில் உடல் கிழிய வரு பரி மயிலோனே
பருதி மதி கனல் விழிய சிவனிடம் மருவு ஒரு மலை அரையர் திருமகள்
படிவம் முகில் என அரியின் இளையவள் அருள் பாலா
பரம கணபதி அயலின் மத கரி வடிவு கொடு வர விரவு குறமகள்
அபயம் என அணை பழநி மருவிய பெருமாளே

மேல்

#147
குழல் அடவி முகில் பொழில் வீர வில் நுதல் குமுத அதரம் முறுவல் ஆரம்
குழை மகரம் வளை மொழி குயில் அமுது குய முளரி முகை கிரி சூது
விழி கயல் அயில் பகழி வருணி கருவிளை குவளை விடம் என நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொலி வெறிது உளம் விதனம் உறலாமோ
கழல் பணிய வினை கழல் பணியை அணி கழல் பணிய அருள் மயில் வீரா
கமலை திரு மருக மலை நிருதர் உக மலை தொளை செய்த கதிர் வேலா
பழநி மலை வரு பழ நிமலை தரு பழநி மலை முருக விசாகா
பரவு பரவை கொல் பரவை வண அரி பரவும் இமையவர் பெருமாளே

மேல்

#148
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள் செயவே களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற
இளநீர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும் இடையும் அசைய மயில் போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி சொல் அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி அருள் பாலா
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும் உடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு பெருமாளே

மேல்

#149
குறித்த மணி பணி துகிலை திருத்தி உடுத்து இருள் குழலை குலைத்து முடித்து இலை சுருளை பிளவோடே
குதட்டிய துப்பு உதட்டை மடித்து அயில் பயிலிட்டு அழைத்து மருள் கொடுத்து உணர்வை கெடுத்து நக குறியாலே
பொறித்த தனத்து அணைத்து மன செருக்கினர் கைப்பொருள் கவர புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடு மாதர்
புலம் தலையில் செலுத்து மன ப்ரமத்தை அற ப்ரசித்தமுற புரித்து அருளி திரு கழலை தருவாயே
பறித்த தலை திருட்டு அமண குருக்கள் அசட்டு உருக்கள் இடை பழுக்கள் உக கழுக்கள் புக திருநீறு
பரப்பிய த திருப்பதி புக்கு அனல் புனலில் கனத்த சொலை பதித்து எழுதி புகட்ட திறல் கவி ராசா
செறித்த சடை சசி தரி அ தகப்பன் மதித்து உகப்பன் என சிறக்க எழுத்து அருள் கருணை பெருவாழ்வே
திகழ் படு செய்ப்பதிக்குள் எனை தடுத்து அடிமைப்படுத்த அருள் திரு பழநி கிரி குமர பெருமாளே

மேல்

#150
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்படி வளர் முலையினில் ம்ருகமதம் மெழுகியர்
இந்தும் சந்த தங்கும் தண் செம் கமலமும் என ஒளிர் தரு முக வநிதையர்
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம் சமரசம் உற ஒரு தொழில் வினைபுரிபவர் விரகாலும்
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும் குடி என வளர் தரு கொடியவர் கடியவர்
எங்கெங்கு எம் பங்கு என்றுஎன்று என்றும் தனது உரிமை அது என நலமுடன் அணைபவர்
கொஞ்சம் தங்கு இன்பம் தந்து எந்தன் பொருள் உளது எவைகளும் நயமொடு கவர்பவர் மயலாலும்
என்றென்றும் கன்றும் துன்பம் கொண்டு உனது இரு மலர் அடி பரவிட மனதினில்
நன்று என்றும் கொண்டு என்றும் சென்றும் தொழும் மகிமையின் நிலை உணர்வில் நின் அருள்பெற
இன்பும் பண்பும் தெம்பும் சம்பந்தமும் மிக அருள்பெற விடை தரு விதம் முனம் அருள்வாயே
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன் விடும் அதிசய வினை உறும் அலகையை
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம் செயும் அரி ஒரு முறை இரணிய வலன் உயிர்
நுங்கும் சிங்கம் வங்கம்தன்கண் துயில்பவன் எகினனை உதவிய கரு முகில் மருகோனே
ஒன்று என்ற என்றும் துன்றும் குன்றும் தொளை பட மத கரி முகன் உடல் நெரி பட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடி என விழும் எழு படிகளும் அதிர்பட
ஒண் சங்கம் சம்சம் சம்சம் என்று ஒலி செய மகபதி துதி செய அசுரரை அடுவோனே
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும்
தொம்தம் தொம்தம் தொம்தம் என்று ஒலிபட நடமிடு பரன் அருள் அறுமுக
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும் விரை படு குரவு அலர் அலர்தரும் எழில் புனை புய வீரா
அன்று என்று ஒன்றும் கொண்டு அன்பு இன்று அங்கு அடியவர்தமை இகழ் சமணர்கள் கழுவினில்
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்படி ஒரு தொகுதியின் நுரை நதி எதிர்பட
அன்பின் பண்பு எங்கும் கண்டு என்பின் அரிவையை எதிர்வர விடு கவி புகல் தரு திறலோனே
அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர்தனில் விஜயவன் இரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும் கய நிறை வளமுறு சிவகிரி மருவிய பெருமாளே

மேல்

#151
கொந்து தரு குழல் இருளோ புயலோ விந்தை தரு நுதல் சிலையோ பிறையோ
கொஞ்சி பயில் மொழி அமுதோ கனியோ விழி வேலோ
கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ
கொங்குற்று உயர் அல்குல் அரவோ ரதமோ எனும் மாதர்
திந்தி திமிதிமி திமிதா திமிதோ தந்தி திரிகிட கிடதா எனவே
சிந்து இப்படி பயில் நடமாடிய பாவிகள்பால்
சிந்தை தயவுகள் புரிவேன் உனையே வந்தித்து அருள்தரும் இரு சேவடியே
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே துண்டித்திடும் ஒரு கதிர் வேல் உடையாய்
வென்றிக்கு ஒரு மலை என வாழ் மலையே தவ வாழ்வே
விஞ்சைக்கு உடையவர் தொழவே வருவாய் கஞ்சத்து அயனுடன் அமரேசனுமே
விந்தை பணிவிடை புரி போது அவர் மேல் அருள்கூர்வாய்
தொந்தி கணபதி மகிழ் சோதரனே செம் கண் கரு முகில் மருகா குகனே
சொந்த குறமகள் கணவா திறல் சேர் கதிர்காமா
சொம்பில் பல வனம் முதிர் சோலைகள் சூழ் இஞ்சி திரு மதில் புடை சூழ் அருள் சேர்
துங்க பழநியில் முருகா இமையோர் பெருமாளே

மேல்

#152
கோல குங்கும கற்பூரம் எட்டு ஒன்று ஆன சந்தனம் வித்துருமத்தின்
கோவை செண்பக தட்ப மகிழ் செங்கழுநீரின்
கோதை சங்கிலி உற்ற கழுத்தும் பூஷணம் பல ஒப்பனை மெச்சும்
கூறு கொண்ட பணை தனம் விற்கும் பொதுமாதர்
பாலுடன் கனி சர்க்கரை சுத்த தேன் எனும்படி மெத்த ருசிக்கும்
பாதகம் பகர் சொற்களில் இட்டம் பயிலாமே
பாத பங்கயம் உற்றிட உள் கொண்டு ஓதுகின்ற திருப்புகழ் நித்தம்
பாடும் அன்பு அது செய்ப்பதியில் தந்தவன் நீயே
தாலம் முன்பு படைத்த ப்ரபு சந்தேகம் இன்றி மதிக்க அதிர்க்கும்
சாகரம் சுவற கிரி எட்டும் தலை சாய
சாடு குன்று அது பொட்டு எழ மற்றும் சூரனும் பொடி பட்டிட யுத்தம்
சாதகம் செய் திரு கை விதிர்க்கும் தனி வேலா
ஆலம் உண்ட கழுத்தினில் அக்கும் தேவர் என்பு நிரைத்து எரியில் சென்று
ஆடுகின்ற தகப்பன் உகக்கும் குருநாதா
ஆடகம் புனை பொன் குடம் வைக்கும் கோபுரங்களின் உச்சி உடு தங்கும்
ஆவினன்குடி வெற்பினில் நிற்கும் பெருமாளே

மேல்

#153
கோல மதி வதனம் வேர்வு தர அளக பாரம் நெகிழ விழி வேல்கள் சுழல நுவல்
கோவை இதழ் வெளிற வாய்மை பதறி இள முகையான
கோகனக உபய மேரு முலை அசைய நூலின் இடை துவள வீறு பறவை வகை
கூற இனிய களம் ஓலம் இட வளைகள் கரம் மீதே
காலின் அணி கனக நூபுரம் ஒலிகள் ஓலமிட அதிக போகம் அது மருவு
காலை வெகு சரச லீலை அளவு செயும் மடமானார்
காதல் புரியும் அநுபோக நதியின் இடை வீழுகினும் அடிமை மோசம் அற உனது
காமர் கழல் இணைகள் ஆனது ஒரு சிறிதும் மறவேனே
ஞால முழுதும் அமரோர்கள் புரியும் இகலாக வரும் அவுணர் சேர உததி இடை
நாசமுற அமர் செய் வீரதர குமர முருகோனே
நாடி ஒரு குற மின் மேவு தினை செய் புன மீதில் இயல் அகல் கல் நீழல் இடை நிலவி
நாணம் வர விரகம் ஓதும் ஒரு சதுர புரி வேலா
மேலை அமரர் தொழும் ஆனை முகர் அரனை ஓடி வலம் வரு முன் மோது திரை மகர
வேலை உலகை வலமாக வரு துரக மயில் வீரா
வீறு கலிசை வரு சேவகனது இதயம் மேவும் முதல்வ வயல் வாவி புடை மருவு
வீரை வரு பழநி ஞான மலையில் வளர் பெருமாளே

மேல்

#154
சகடத்தில் குழை இட்டு எற்றி குழலுக்கு சரம் வைத்து எற்றி
புளகித்து குவளை கண் பொன் கணை ஒத்திட்டு உழல சுத்தி
தரள பல் பவளத்து ஒட்ட களப அப்பி ஒட்டுதல் இட்ட அத்தி குவடான
தன துத்தி படிகம் பொற்பு இட்டு அசைய பெள் பசளை துப்பு
கொடி ஒத்திட்டு இடையில் பட்டை தகையில் தொட்டு உகள பச்சை
சரணத்துக்கு இயல சுற்றி சுழல் இட்டு கடனை பற்றி கொளு மாதர்
சுகமுற்று கவலைப்பட்டு பொருள் கெட்டு கடை கெட்டு சொல்
குளறிட்டு தடி தொட்டு எற்றி பிணி உற்று கசதிப்பட்டு
சுக துக்கத்து இடர் கெட்டு உற்று தளர்பட்டு கிடைபட்டு உப்பி கிடை நாளில்
சுழலர் சக்கிரியை சுற்றிட்டு இறுக கட்டி உயிரை பற்றி
கொள் உக பற்பலரை கட்டி கரம் வைத்து தலையில் குத்தி
சுடு கட்டை சுடலை கட்டைக்கு இரை இட்டு பொடி பட்டு உட்கு இ சடம் ஆமோ
திகுடத்தி குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்கு தொகுதொக்கு தொகுத தொக்கு
செகணக்க செகண செக்கு தகுடத்த தகுட தட்டுட்டு இடி பேரி
திமிலை கைத்துடி தட்டு எக்கை பகடு இட்டு பறை ஒத்த கண்
திகை எட்டு கடல் வற்றி தி தர உக்க கிரி எட்டு தைத்தியருக்கு
சிரம் இற்று உட்க சுரர் பொன் பூ சொரிய கை தொட்டிடும் வேலா
பகலை பல் சொரிய தக்கன் பதி புக்கு அட்டு அழல் இட்டு திண்
புரம் மட்கி கழை வில் புட்ப சரனை சுட்டு அயனை கொத்தி
பவுரிக்கொள் பரமர்க்கு சற்குரு ஒத்து பொருளை கற்பித்து அருள்வோனே
பவள பொன் கிரி துத்தி பொன் தன கொச்சை கிளி சொல் பற்றி
பரிவுற்று கமல புட்பத்து இதழ் பற்றி புணர் சித்ர பொன்
படிகத்து பவள பச்சை பத முத்து பழநி சொக்க பெருமாளே

மேல்

#155
சிந்துர கூர மருப்பு செம் சரி செம் கை குலாவ நடித்து தென்புற
செண்பக மாலை முடித்து பண்புள தெருவூடே
சிந்துகள் பாடி முழக்கி செங்கயல் அம்புகள் போல விழித்து
சிங்கியில் செம் பவள ஆடை துலக்கி பொன் பறி விலை மாதர்
வந்தவர் ஆர் என அழைத்து கொங்கையை அன்புற மூடி நெகிழ்த்தி கண் பட
மஞ்சள் நீர் ஆடி மினுக்கி பஞ்சணைதனில் ஏறி
மந்திர மோகம் எழுப்பி கெஞ்சிட முன் தலை வாயில் அடைத்து சிங்கி கொள்
மங்கையர் ஆசை விலக்கி பொன் பதம் அருள்வாயே
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள்
எண்படு சூரை அழித்து கொண்டு அருள் ஒரு பேடி
இன்கன தேரை நடத்தி செம் குரு மண்டல நாடும் அளித்து பஞ்சவர்
இன்புறு தோழமை உடை கத்தன் திரு மருகோனே
சந்திர சூரியர் திக்கு எட்டும் புகழ் அந்தமில் வாழ்வு அது பெற்று தங்கிய
சங்கரனார் செவி புக்க பண்பு அருள் குருநாதா
சம்ப்ரம் ஆன குறத்திக்கு இன்புறு கொங்கையில் மேவு சமர்த்த சுந்தர
தண் தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய பெருமாளே

மேல்

#156
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாத
சிவகாமசுந்தரி தன் வர பால கந்த நின செயலே விரும்பி உளம் நினையாமல்
அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும்
அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே
நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே
நவலோகமும் கை தொழ நிச தேவ அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே
தெவயானை அம் குற மின் மணவாள சம்ப்ரமுறு திறல் வீர மிஞ்சு கதிர் வடி வேலா
திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே

மேல்

#157
சிறுபறையும் முரசு துடி சத்த கண பறையும் மொகுமொகு என அதிர உடன் எட்டி பிடித்து முடி
சிறு கயிறு நெடிது கொடு கட்டிட்டு இழுக்க இனி அணுகாதே
சில தமர்கள் உறவு கிளை கத்தி பிதற்றி எடு சுடலைதனில் இடு கனலை இட்டு கொளுத்து புனல்
திரை கடலில் முழுகு என உரைக்கப்படி குடிலை ஒழியாதே
மறை முறையின் இறுதி நிலை முத்திக்கு இசைத்தபடி உடல் உயிர்கள் கரண வெளி பட்டு குண த்ரயம்
வழிபடவும் நினது அடிமை இச்சப்படுத்துவது ஒரு நாளே
வரு துரக மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒரு பதுடன் இரு புயமும் மட்டு தொடைக்கு இசைய
மனம் மகிழ இனிய மொழி செப்பி சிவத்த பதம் அருள்வாயே
நறை இதழி அறுகு பல புட்ப திரட்களொடு சிறுபிறையும் அரவும் எழில் அப்பு திரு தலையில்
நளினமுற அணி சடையர் மெச்சி ப்ரியப்படவும் மயில் ஏறி
நவ நதிகள் குமுகுமு என வெற்பு திரள் சுழல அகில முதல் எழு புவனம் மெத்த திடுக்கிடவும்
நவ மணிகள் உரகன் உடல் கக்க துரத்தி வரும் முருகோனே
குறவர் முனை கெட மனது வெட்கப்பட குடிலில் மலையில் எழு தினை இதணில் வைத்து சிறுக்கி இரு
குவி முலையும் அணி இடையும் மெச்சி புணர்ச்சி செயு மணவாளா
குறு முனிவன் இரு பொழுதும் அர்ச்சித்து முத்தி பெற அறிவு நெறி தவ நிலைகள் செப்பு தமிழ்க்கு இனிய
குரு குமர பழநி வளர் வெற்புத்தனில் திகழும் பெருமாளே

மேல்

#158
சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா
ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார்பால்
ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும்
ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்புபுரிவாயே
மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே
வாரியுற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம்
வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க
வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே

மேல்

#159
சீறல் அசடன் வினைகாரன் முறைமையிலி தீமைபுரி கபடி பவ நோயே
தேடு பரிசி கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி எவரோடும்
கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவிலி உன் அடி பேணா
கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே
மாறுபடும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே
மாக முகுடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே
வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே
வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே

மேல்

#160
சுருதி முடி மோனம் சொல் சித்பரம ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர
சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே
துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம்அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக
சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே
கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே
கலகம் இடவே பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் மாயம் செனித்த குகையே உறுதி
கருது அசுழம் ஆம் இந்த மட்டைதனை ஆள உனது அருள்தாராய்
ஒரு நியமமே விண்ட சட்சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி உயிர்
உடல் உணர்வு அதுவாய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே
உத தரிசமாம் இன்ப புது அமிர்த போக சுகம் உதவும் அமல ஆனந்த சத்தி கர மேவு உணர் அ
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குருநாதா
பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன
பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே
பணியும் அடியார் சிந்தை மெய்ப்பொருள் அது ஆக நவில் சரவணபவா ஒன்றும் வல் கரமும் ஆகி வளர்
பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே

மேல்

#161
சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே
சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும் இங்கு உன் அடியார் போல்
அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே
பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து பரி தக அழையா முன் வந்து பரிவாலே
பரவிய விபீஷணன் பொன் மகுட முடி சூட நின்று படைஞரொடு இராவணன் தன் உறவோடே
எரி புகுத மாறு இல் அண்டர் குடி புகுத மாறுகொண்ட ரகுபதி இராமசந்த்ரன் மருகோனே
இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த இமையவள் தனால் மகிழ்ந்த பெருமாளே

மேல்

#162
ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத நாடு அண்டி நமசிவாய வரை ஏறி
நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய நாதங்களோடு குலாவி விளையாடி
ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல் ஓம் அங்கி உருவமாகி இருவோரும்
ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகின் ஏறி லோகங்கள் வலம் அது ஆட அருள்தாராய்
தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடு அந்த மயிலில் ஏறு முருகோனே
காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை காண் எங்கள் பழநி மேவு பெருமாளே

மேல்

#163
தகர நறு மலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழி வலை பட விதி
தலையில் எழுதியும் மனைவி இல் உறவிடு அதனாலே
தனயர் அனை தமர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகை என நினைவுறு
தவனம் சலதியில் முழுகியெ இடர்படு துயர் தீர
அகர முதல் உள பொருளினை அருளிட இரு கை குவி செய்து உள் உருகிட உருகியே
அரகர என வலன் இடமுற எழில் உனது இரு பாதம்
அருள அருளுடன் மருள் அற இருள் அற கிரண அயிர் கொடு குருகு அணி கொடி ஒடு
அழகு பெற மரகத மயில் மிசை வர இசைவாயே
சிகர குடையில் நிரை வர இசை தெரி சதுரன் விதுரன் இல் வருபவன் அளை அது
திருடி அடிபடு சிறியவன் நெடியவன் மதுசூதன்
திகிரி வளை கதை வசி தநு உடையவன் எழிலி வடிவினன் அரவு பொன் முடி மிசை
திமித திமிதிமி என நடமிடும் அரி மருகோனே
பகர புகர் முக மத கரி உழை தரு வனிதை வெருவ முன் வர அருள்புரி குக
பரம குரு பர இமகிரி தரு மயில் புதல்வோனே
பலவின் முது பழம் விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் கமுகு அடர் பொழில் திகழ்
பழநி மலை வரும் புரவல அமரர்கள் பெருமாளே

மேல்

#164
தகைமை தனியில் பகை கற்று உறு கை தநு முட்ட வளைப்பவனாலே
தரள திரளில் புரள கரளம் தமர திமிர கடலாலே
உகை முத்தம் மிகுத்தது என பகல் புக்கு ஒளி மட்கு மிகை பொழுதாலே
உரை அற்று உணர்வு அற்று உயிர் எய்த்த கொடிக்கு உன நல் பிணையல் தரவேணும்
திகை பத்தும் உக கமலத்தனை முன் சிறை இட்ட பகை திறல் வீரா
திகழ் கற்பகம் மிட்ட வன கனக திருவுக்கு உருகி குழை மார்பா
பகல கிரண பரண சடில பரமற்கு ஒரு சொல் பகர்வோனே
பவன புவன செறிவற்று உயர் மெய் பழநி குமர பெருமாளே

மேல்

#165
தமரும் அமரும் மனையும் இனிய தனமும் அரசும் அயலாக
தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய எறியாதே
கமல விமல மரகத மணி கனக மருவும் இரு பாதம்
கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம குலவு பழநி மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும் அழிய அமர் செய்து அருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#166
தலைவலி மருத்தீடு காமாலை சோகை சுரம் விழிவலி வறட்சூலை காயாசுவாசம் வெகுசலம்
மிகு விஷ பாகம் மாயா விகார பிணி அணுகாதே
தலம் மிசை அதற்கான பேரோடு கூறி இது பரிகரி என காது கேளாது போலும் அவர்
சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொலீர் எனவும் விதியாதே
உலைவு அற விருப்பாக நீள் காவின் வாச மலர் வகைவகை எடுத்தே தோடா மாலிக ஆபரணம்
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் இரு பாதம்
உளம் அது தரித்தே வினாவோடு பாடி அருள் வழிபட எனக்கே தயாவோடு தாள் உதவ
உரகம் அது எடுத்து ஆடு மேகார மீதின் மிசை வரவேணும்
அலை கடல் அடைத்தே மகா கோர ராவணனை மணி முடி துணித்து ஆவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தே கொள் மாயோனை மாமன் என்னும் மருகோனே
அறுகினை முடித்தோனை ஆதாரம் ஆனவனை மழு உழை பிடித்தோனை மாகாளி நாணம் முனம்
அவைதனில் நடித்தோனை மா தாதையே எனவும் வருவோனே
பல கலை படித்து ஓது பாவாணர் நாவில் உறை இரு சரண வித்தார வேலாயுதா உயர் செய்
பரண் மிசை குற பாவை தோள் மேவும் மோகமுறு மணவாளா
பதும வயலில் பூகம் மீதே வரால்கள் துயில் வரு புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ வளர்
பழனி வரு கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே

மேல்

#167
திடமிலி சற்குணமிலி நல் திறமிலி அற்புதமான
செயமிலி மெய் தவமிலி நல் செபமிலி சொர்க்கமும் மீதே
இடமிலி கை கொடையிலி சொற்கு இயல்பிலி நல் தமிழ் பாட
இரு பதம் உற்று இருவினை அற்று இயல் கதியை பெறவேணும்
கெடு மதி உற்றிடும் அசுர கிளை மடிய பொரும் வேலா
கிரண குறை பிறை அறுகு அக்கு இதழ் மலர் கொக்கு இறகோடே
படர் சடையில் புனை நடன பரமர்தமக்கு ஒரு பாலா
பல வயலில் தரள நிறை பழனி மலை பெருமாளே

மேல்

#168
திமிர உததி அனைய நரக செனனம் அதனில் விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும் அறிவு நிறையும் வரவே நின்
அருள் அது அருளி எனையும் மனதோடு அடிமை கொளவும் வர வேணும்
சமர முக வெல் அசுரர்தமது தலைகள் உருள மிகவே நீள்
சலதி அலற நெடிய பதலை தகர அயிலை விடுவோனே
வெம் அரவணையில் இனிது துயிலும் விழிகள் நளினன் மருகோனே
மிடறு கரியர் குமர பழநி விரவு அமரர் பெருமாளே

மேல்

#169
தோகை மயிலே கமல மானே உலாசம் மிகு காம துரையான மத வேள் பூவையே இனிமை
தோயும் அநுபோக சுக லீலாவிநோதம் முழுது உணர் தேனே
சூது அனைய சீதள இளநீர் ஆன பார முலை மீது அணைய வாரும் இதழ் தாரீர் என் ஆணை மொழி
சோர்வது இலை யான் அடிமை ஆவேன் உம் ஆணை மிக மயலானேன்
ஆகம் உறவே நகம்அதாலே விடாத அடையாளம் இட வாரும் எனவே மாதர்களுடன்
ஆசை சொலியே உழலும் மா பாதன் நீதியிலி உனை ஓதேன்
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் நீறு நுதல் மீது இடல் இலா மூடன் ஏதுமிலி
ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள் தருவாயே
மாகம் முகடோடு அகில பாதாள மேருவுடனே சுழல வாரி அதுவே தாழியா அமரர்
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் அமுது கடை நாளில்
வாரும் எனவே ஒருவர் நோகாமல் ஆல விடம் ஈசர் பெறுமாறு உதவியே தேவர் யாவர்களும்
வாழ அமுதே பகிரும் மா மாயனார் அரி இனிய மருகோனே
மேக நிகரான கொடைமான் நாயகாதிபதி வாரி கலி மாருத கரோ பாரி மா மதன
வேள் கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும்
வீர அதி சூரர் கிளை வேர் மாளவே பொருத தீர குமரா குவளை சேர் ஓடை சூழ் கழனி
வீரைநகர் வாழ் பழநி வேலாயுதா அமரர் பெருமாளே

மேல்

#170
நாத விந்து கலை ஆதி நமோ நம வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஞான பண்டித ஸாமி நமோ நம வெகு கோடி
நாம சம்பு குமாரா நமோ நம போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பர சூரர்
சேத தண்ட விநோதா நமோ நம கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம கிரி ராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர் பாத சேவையும் மறவாத
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை சோழ மண்டலம் மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு அவரோடே முன் நாளினில்
ஆடல் வெம் பரி மீது ஏறி மா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர் கொங்குவை காவூர் நல் நாடு அதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#171
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா
நெளிய முது தண்டு சத்ர சாமர நிபிடம் இட வந்து கைக்கு மோதிர
நெடுகி அதி குண்டல ப்ரதாபம் உடையோராய்
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து இருக்குமோ எனில்
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி
முறியும் அவர் தங்கள் வித்தை தான் இது முடியவு உனை நின்று பத்தியால் மிக
மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே
திகுதிகு என மண்ட விட்ட தீ ஒரு செழியன் உடல் சென்று பற்றி ஆருகர்
திசையின் மண் வந்துவிட்டபோதினும் அமையாது
சிறிய கர பங்கயத்து நீறு ஒரு தினை அளவு சென்று பட்டபோதினில்
தெளிய இனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள்
வகைதனை அகன்றி இருக்கும் மூடனை மல ரூபம்
வரவர மனம் திகைத்த பாவியை வழி அடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே

மேல்

#172
நெற்றி வெயர் துளி துளிக்கவே இரு குத்து முலை குடம் அசைத்து வீதியில்
நிற்பவர் மை படர் விழி கலாபியர் மொழியாலே
நித்த மயக்கிகள் மணத்த பூ மலர் மெத்தையில் வைத்து அதி விதத்திலே உடல்
நெட்டு வர தொழில் கொடுத்து மேவியும் உறவாடி
உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும் மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும்
உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் உறவாமோ
உச்சித மெய்ப்புற அனை தயாவுடன் மெய்ப்படு பத்தியின் இணக்கமே பெற
உள் குளிர் புத்தியை எனக்கு நீ தர வருவாயே
கற்ற தமிழ் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற்கொடி களிக்கவே பொரு
கற்பனை நெல் பல அளித்த காரணண் அருள் பாலா
கற்பக நகர் களிறு அளித்த மாது அணை பொன் புய மை புயல் நிறத்த வானவர்கட்கு
இறை உட்கிட அருள் க்ருபாகர மருகோனே
நல் தவர் அர்ச்சனை இட தயாபர வஸ்து என புவியிடத்திலே வளர்
நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு மருகோனே
நட்டுவர் மத்தள முழக்கமாம் என மை குலம் மெத்தவும் முழக்கமே தரு
நல் பழநி பதி செழிக்க மேவிய பெருமாளே

மேல்

#173
பகர்தற்கு அரிதான செந்தமிழ் இசையில் சில பாடல் அன்பொடு
பயில பல காவியங்களை உணராதே
பவளத்தினை வீழியின் கனிஅதனை பொரு வாய் மடந்தையர்
பசலை தனமே பெறும்படி விரகாலே
சகர கடல் சூழும் அம் புவி மிசை இப்படியே திரிந்து உழல்
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியா முன்
தகதித்திமி தாகி ணங்கிண என உற்று எழு தோகை அம் பரிதனில்
அற்புதமாக வந்து அருள்புரிவாயே
நுகர் வித்தகமாகும் என்று உமை மொழியில் பொழி பாலை உண்டிடு
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் இளையோனே
நுதி வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திடு
நொடியில் பரிவாக வந்தவன் மருகோனே
அகர பொருள் ஆதி ஒன்றிடு முதல் அக்கரமானது இன் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு குருநாதா
அமரர்க்கு இறையே வணங்கிய பழநி திருவாவினன்குடிஅதனில்
குடியாய் இருந்து அருள் பெருமாளே

மேல்

#174
பஞ்சபாதகன் பாவி முழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி
பண் கொளாதவன் பாவ கடல் ஊடு நுழை பவுஷாசை
பங்கன் மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ பெண்டிர் வீடு பொன் தேடி நொடி மீதில் மறை
பஞ்ச மா மலம் பாசமொடு கூடி வெகு சதிகாரர்
அஞ்சு பூதம் உண்ட அ கடியகாரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அலாமல் அருள்
அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை
அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ரசேகரன் பாவை விளையாடு படிக
அந்த நாடுடன் கூடி விளையாட அருள்புரிவாயே
வஞ்ச மா சுரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு
வண் கையா கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே
மங்கை மோக சிங்கார ரகுராமரிட தங்கை சூலி அம் காளி எமை ஈண புகழ்
மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா
கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச
கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே
கொண்டல் சூழு அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர்
கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே

மேல்

#175
பாரியான கொடை கொண்டலே திரு வாழ் விசால தொடை திண் புயா எழு
பாரும் ஏறு புகழ் கொண்ட நாயக அபிராம
பாவலோர்கள் கிளைக்கு என்றும் வாழ்வு அருள் சீல ஞால விளக்கு இன்ப சீவக
பாதசாதன உத்துங்க மானத என ஓதி
சீரதாக எடுத்து ஒன்று மா கவி பாடினாலும் இரக்கம் செயாது உரை
சீறுவார் கடையில் சென்று தாம் அயர்வுற வீணே
சேய பா வகையை கொண்டு போய் அறியாமலே கமரில் சிந்துவார் சிலர்
சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ
ஆரு நீர்மை மடுக்கண் கரா நெடு வாயில் நேர் பட உற்று அன்று மூலமே என
ஆரவார மத தந்தி தான் உய்ய அருள் மாயன்
ஆதி நாராணன் நல் சங்க பாணியன் ஓதுவார்கள் உள்ளத்து அன்பன் மாதவன்
ஆன நான்முகன் நல் தந்தை சீதரன் மருகோனே
வீர சேவக உத்தண்டம் தேவ குமார ஆறிரு பொன் செம் கை நாயக
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே
வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் நல் சிந்தை மேவிய
வீரை வாழ் பழநி துங்க வானவர் பெருமாளே

மேல்

#176
புடவிக்கு அணி துகில் என வளர் அந்த கடல் எட்டையும் அற குடி முநி எண் கண்
புநித சத தள நிலை கொள் சயம்பு சதுர்வேதன்
புரம் எட்டு எரி எழ விழி கனல் சிந்தி கடினத்தொடு சில சிறு நகை கொண்ட அற்புத
கர்த்தர் அரகர பர சிவன் இந்த தனி மூவர்
இட சித்தமும் நிறை தெளிவுறவும் பொன் செவியுள் பிரணவ ரகசியம் அன்புற்றிட
உற்பன மொழி உரை செய் குழந்தை குருநாதா
எதிருற்ற அசுரர்கள் படை கொடு சண்டைக்கு இடம் வைத்திட அவர் குலம் முழுதும் பட்டிட
உக்கிரமொடு வெகுளிகள் பொங்க கிரி யாவும்
பொடிபட்டு உதிரவும் விரிவுறும் அண்ட சுவர் விட்டு அதிரவும் முகடு கிழிந்து அப்புறம்
அ பர வெளி கிடு கிடு எனும் சத்தமும் ஆக
பொருது கையில் உள அயில் நிணம் உண்க குருதி புனல் எழு கடலினும் மிஞ்ச
புரவி கன மயில் நட விடும் விந்தை குமரேசா
படியில் பெருமித தக உயர் செம்பொன் கிரியை தனி வலம் வர அரன் அந்த
பலனை கரி முகன் வசம் அருளும் பொற்புஅதனாலே
பரன் வெட்கிட உளம் மிகவும் வெகுண்டு அ கனியை தர விலை என அருள் செந்தில்
பழநி சிவகிரிதனில் உறை கந்த பெருமாளே

மேல்

#177
புடை செப்பு என முத்து அணி கச்சு அற உள் பொருமி கலசத்து இணையாய
புளக களப கெருவ தன மெய் புணர தலையிட்டு அமரே செய்
அடைவில் தினம் உற்று அவசப்படும் எற்கு அறிவில் பதடிக்கு அவமான
அசடற்கு உயர் ஒப்பது இல் நல் க்ருபை உற்று அடிமைக்கு ஒரு சொல் புகல்வாயே
குடம் ஒத்த கட கரட கலுழி குணம் மெய் களிறுக்கு இளையோனே
குடி புக்கிட மீட்டு அசுர படையை குறுகி தகர பொரும் வேலா
படலை செறி நல் கதலி குலையில் பழம் முற்றி ஒழுக புனல் சேர் நீள்
பழன கரையில் கழை முத்து உகு நல் பழநி குமர பெருமாளே

மேல்

#178
பெரியதோர் கரி இரு கொம்பு போலவெ வடிவம் ஆர் புளகித கும்ப மா முலை
பெருகியே ஒளி செறி தங்க ஆரமும் அணியான
பிறையதோ எனு நுதல் துங்க மீறு வை அயில் அதோ என்னும் இரு கண்கள் ஆரவெ
பிறகு எலாம் விழு குழல் கங்குல் ஆரவெ வரும் மானார்
உரியது ஓர் பொருள் கொடு வந்த பேர்களை மனையிலே வினவியே கொண்டு போகிய
உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் மயலாலே
உருகியே உடல் அற வெம்பி வாடியெ வினையிலே மறுகியே நொந்த பாதகன்
உனது தாள் தொழுதிட இன்ப ஞானம் அது அருள்வாயே
அரியதோர் அமரர்கள் அண்டம் ஏறவெ கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவெ
அடல் அதோடு அமர்புரிகின்ற கூரிய வடி வேலா
அரகரா என மிக அன்பர் சூழவெ கடியது ஓர் மயில் மிசை அன்றை ஏறியெ
அவனி ஓர் நொடி வருகின்ற காரண முருகோனே
பரியது ஓர் கயிறு அனை கொண்டு வீசவெ உறி அது தோய் தயிர்தனை உண்டு நாடியெ
பசியதோ கெட அருள் கொண்ட மாயவன் மருகோனே
பரம மா நதி புடை கொண்டு அணாவவெ வனச மா மலரினில் வண்டு உலாவவெ
பழநி மா மலைதனில் என்றும் மேவிய பெருமாளே

மேல்

#179
போதகம் தரு கோவே நமோ நம நீதி தங்கிய தேவா நமோ நம
பூதலம்தனை ஆள்வாய் நமோ நம பணி யாவும்
பூணுகின்ற பிரானே நமோ நம வேடர்தம் கொடி மாலா நமோ நம
போதவன் புகழ் ஸாமி நமோ நம அரிதான
வேத மந்திர ரூபா நமோ நம ஞான பண்டித நாதா நமோ நம
வீர கண்டை கொள் தாளா நமோ நம அழகான
மேனி தங்கிய வேளே நமோ நம வான பைம் தொடி வாழ்வே நமோ நம
வீறு கொண்ட விசாகா நமோ நம அருள்தாராய்
பாதகம் செறி சூராதி மாளவெ கூர்மை கொண்ட அயிலாலே பொராடியெ
பார அண்டர்கள் வான் நாடு சேர்தர அருள்வோனே
பாதி சந்திரனே சூடும் வேணியர் சூல சங்கரனார் கீத நாயகர்
பார திண் புயமே சேரு சோதியர் கயிலாயர்
ஆதி சங்கரனார் பாக மாது உமை கோல அம்பிகை மாதா மநோமணி
ஆயி சுந்தரி தாயான நாரணி அபிராமி
ஆவல் கொண்டு வீறாலே சீராடவெ கோமளம் பல சூழ் கோயில் மீறிய
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#180
மந்தரம் அது எனவே சிறந்த கும்ப முலைதனிலே புனைந்த
மஞ்சள் மணம் அதுவே துலங்க வகை பேசி
மன்று கமழ் தெரு வீதி வந்து நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து தொழில் கூறி
எந்த அளவும் இனிதாக நம்பு தந்து பொருள்தனையே பிடுங்கி
இன்பம் அருள் விலைமாதர்தங்கள் மனை தேடி
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி
என்தனையும் இனிது ஆள இன்று வரவேணும்
விந்தை எனும் உமை மாது தந்த கந்த குரு பர தேவ வங்கம் என்ற
வரைதனில் மேவும் எந்தை புதல்வோனே
மிஞ்சும் அழகினிலே சிறந்த மங்கை குற மட மாது கொங்கை
மென் கிரியில் இதமாய் அணைந்த முருகோனே
சிந்தை மகிழ் புலவோர்கள் வந்து வந்தனை செய் சரண அரவிந்த
செந்தமிழில் உனையே வணங்கு குருநாதர்
தென்றல் வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த
தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே

மேல்

#181
மரு மலரினன் துரந்து விட வினை அருந்த அந்தி மதியோடு பிறந்து முன்பு எய் வதையாலே
வகைதனை மறந்து எழுந்து முலைதனை அருந்தி அந்த மதலை என வந்து குன்றின் வடிவாகி
இரு மயல் கொடு துவண்டு பொதுவையர் அகம் புகுந்து இரவு பகல் கொண்டு ஒடுங்கி அசடாகும்
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்து இணை அடி வணங்க என்று பெறுவேனோ
திருவொடு பெயர்ந்து இருண்ட வன மிசை நடந்து இலங்கை திகழ் எரி இடும் குரங்கை நெகிழாத
திடம் உள முகுந்தர் கஞ்சன் வர விடும் எல் வஞ்சகங்கள் செறிவுடன் அறிந்து வென்ற பொறியாளர்
பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற பரம பத நண்பர் அன்பின் மருகோனே
பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே

மேல்

#182
மனக்கவலை ஏதும் இன்றி உனக்கு அடிமையே புரிந்து வகைக்கும் மநு நூல் விதங்கள் தவறாதே
வகை படி மனோரதங்கள் தொகை படியினால் இலங்கி மயக்கம் அற வேதமும் கொள் பொருள் நாடி
வினைக்கு உரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து மிகுத்த பொருள் ஆகமங்கள் முறையாலே
வெகுட்சிதனையே துரந்து களிப்பினுடனே நடந்து மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்
மனத்தில் வருவோனே என்று உன் அடைக்கலம் அதாக வந்து மலர் பதம் அதே பணிந்த முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி மருட்டி வரு சூரை வென்ற முனை வேலா
தினை புனம் முனே நடந்து குறக்கொடியையே மணந்து செகத்தை முழுது ஆள வந்த பெரியோனே
செழித்த வளமே சிறந்த மலர் பொழில்களே நிறைந்த திரு பழநி வாழ வந்த பெருமாளே

மேல்

#183
மலர் அணி கொண்டை சொருக்கிலே அவள் சொலும் மொழி இன்ப செருக்கிலே கொடுமையும்
இடர் நெஞ்ச திருக்கிலே முக மதியாலே
மருவு நிதம்ப தடத்திலே நிறை பரிமள கொங்கை குடத்திலே மிக
வலியவும் வந்து ஒத்து இடத்திலே விழி வலையாலே
நிலவு எறி அங்க குலுக்கிலே எழில் வளை புனை செம் கை கிலுக்கிலே கன
நிதி பறி அந்த பிலுக்கிலே செயும் ஒயிலாலே
நிதம் இயலும் துர் குணத்திலே பரவசமுடன் அன்புற்று இணக்கிலே ஒரு
நிமிஷம் இணங்கி கணத்திலே வெகு மதி கேடாய்
அலைய நினைந்து உற்பநத்திலே அநுதினம் மிகு என் சொப்பனத்திலே வர
அறிவும் அழிந்து அற்பனத்திலே நிதம் உலைவேனோ
அசடனை வஞ்ச சமர்த்தனாகிய கசடனை உன் சில் கடைக்கண் நாடிய
மலர் கொடு நின் பொன் பதத்தையே தொழ அருள்தாராய்
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும் அடிமை சொலும் சொல் தமிழ் பனீரொடு
பரிமள மிஞ்ச கடப்ப மாலையும் அணிவோனே
பதியினில் மங்கை கதித்த மா மலையொடு சில குன்றில் தரித்து வாழ் உயர்
பழநியில் அன்புற்று இருக்கும் வானவர் பெருமாளே

மேல்

#184
முகில் அளகத்தில் கமழ்ந்த வண் பரிமள அலர் துற்ற கலந்து இடம் தரு
முகிழ் நுதி தைத்து துயர்ந்த மங்கையர் அங்கம் மீதே
முகம் வியர்வுற்று பரந்து செங்கயல் விழி இணை செக்கச்சிவந்து குங்கும
ம்ருக்மத மத்த தனங்களின் மிசை எங்கும் மேவி
உக உயிர் ஒத்து புயங்கள் இன்புற உறவினையுற்று திரண்டு கொங்கு அளவுறும்
அணையுற்று திரங்கும் மஞ்சமில் ஒன்றி மேவி
ஒளி திகழ் பத்ம கரங்களின் புறம் உறு வளை ஒக்க கலின் கலென் என்கவும்
உயர் மயலுற்று இரங்கும் அன்பு அது ஒழிந்திடாதோ
செக முழுது ஒக்க பயந்த சங்கரி அடியவர் சித்தத்து உறைந்த சம்ப்ரம
சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை சுமங்கை நீடு
திகழ்வன பச்சை பசங்கி அம்பண கரதலி கச்சுற்று இலங்கு கொங்கையள்
திரு அருள் நல் பொன் பரந்திடும் பரை அண்டம் மீதே
பகல் இரவு அற்றிட்டு உயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அலர்
பரிவுற ஒக்க செய்யும் பரம்ப்ரமி அன்புகூரும்
பதிவ்ரதை மிக்க சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த பெண் தரு
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே

மேல்

#185
முகை முளரி ப்ரபை வீசும் எழில் கனக மலை போலும் முதிர்வு இல் இள தன பார மடவார் தோள்
முழுகி அமிழ் அநுபோக விழலன் என உலகோர்கள் மொழியும் அது மதியாமல் தலைகீழ் வீழ்ந்து
அகம் மகிழ விதமான நகை அமுதம் என ஊறல் அசடர் அகம் எழ ஆகி மிகவே உண்டு
அழியும் ஒரு தமியேனும் மொழியும் உனது இரு தாளின் அமுது பருகிட ஞானம் அருளாயோ
மகரம் எறி திரை மோது பகர கடல் தட வாரி மறுகு புனல் கெட வேலை விடுவோனே
வரிசை அவுண் மக சேனை உக முடிய மயில் ஏறி வரு பனிரு கர தீர முருகோனே
பகர் அரியர் எனலாகும் உமை கொழுநர் உளம் மேவும் பரம குரு என நாடும் இளையோனே
பணிலம் மணி வெயில் வீசும் அணி சிகர மதி சூடு பழநி மலைதனில் மேவும் பெருமாளே

மேல்

#186
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து முதிய கயல்கள் கயத்தினிடை ஓடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவும் மயக்கி வரும் மாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி விடு மாயம்
மனதை உடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ உனது பதத்தை அருள்வாயே
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை உடைய சமர்த்தன் மருகோனே
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து வருவோனே
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள் அழகு மயிலை நடத்தும் பெருமாளே

மேல்

#187
முத்து குச்சு இட்டு குப்பி முடித்து சுக்கை பின் சுற்றி முன் பக்கத்தில் பொற்புற்றிட நுதல் மீதே
முக்ய பச்சை பொட்டு இட்டு அணி ரத்ந சுட்டி பொன் பட்டு இவை முச்சட்டை சித்ர கட்டழகு எழில் ஆட
தித்திக்க சொல் சொல் துப்பு இதழ் நச்சு கண் கற்பு சொக்கியர் செப்புக்கு ஒக்க கச்சு பெறு தன மேரு
திட்டத்தை பற்றிய பற்பல லச்சைக்கு உட்பட்டு தொட்டு உயிர் சிக்கி சொக்கி கெட்டு இப்படி உழல்வேனோ
மெத்த துக்கத்தை தித்தி இனி சித்தத்தில் பத்தத்தோடு மெச்சி சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
வித்தைக்கு கர்த்ரு தற்பர முக்கண் சித்தர்க்கு புத்திர விச்சித்ர செச்சை கத்திகை புனைவோனே
நித்ய கற்பத்தில் சித்தர்கள் எட்டு திக்குக்குள் பட்டவர் நிஷ்டைக்கு அற்புற்ற பத்தர்கள் அமரோரும்
நெட்டுக்குள் புட்பத்தை கொடு முற்றத்துற்று அர்ச்சிக்க பழநிக்குள் பட்டத்துக்குற்று உறை பெருமாளே

மேல்

#188
மூலம் கிளர் ஓர் உருவாய் நடு நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை
மூள் பிங்கலை நாடியொடு ஆடிய முதல் வேர்கள்
மூணும் பிரகாசம்அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை
மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி
பாலம் கிளர் ஆறு சிகாரமொடு ஆரும் சுடர் ஆடு பராபர
பாதம் பெற ஞான சதாசிவம் அதின் மேவி
பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே
பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே
சூலம் கலை மான் மழு ஓர் துடி தேவன் தலையோடும் அரா விரி
தோடு குழை சேர் பரனார் தரும் முருகோனே
சூரன் கரம் மார் சிலை வாள் அணி தோளும் தலை தூள்படவே அவர்
சூளும் கெட வேல் விடு சேவக மயில் வீரா
காலின் கழல் ஓசையும் நூபுரம் வார் வெண்டைய ஓசையும் உக
காலங்களின் ஓசை அதாக நடம் இடுவோனே
கானம் கலை மான் மகளார்தமை நாணம் கெடவே அணை வேள் பிரகாசம்
பழனா புரி மேவிய பெருமாளே

மேல்

#189
மூல மந்திரம் ஓதல் இங்கு இலை ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்
மோகம் உண்டு அதி தாகம் உண்டு அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத
கோலமும் குண ஈன துன்பர்கள் வார்மையும் பலவாகி வெந்து எழு
கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி
கூடி கொண்டு உழல்வேனை அன்போடு ஞான நெஞ்சினர்பால் இணங்கிடு
கூர்மை தந்து இனி ஆள வந்து அருள்புரிவாயே
பீலி வெந்து உயர் ஆலி வெந்து அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை
பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு
பேணி அங்கு எதிர் ஆறு சென்றிட மாறனும் பிணி தீர வஞ்சகர்
பீறு வெம் கழுவேற வென்றிடு முருகோனே
ஆலம் உண்டவர் சோதி அம் கணர் பாகம் ஒன்றிய வாலை அந்தரி
ஆதி அந்தமும் ஆன சங்கரி குமரேசா
ஆரணம் பயில் ஞான புங்கவ சேவல் அம் கொடி ஆன பைங்கர
ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே

மேல்

#190
முருகு செறி குழல் அவிழ முலை புளகம் எழ நிலவு முறுவல் தர விரகம் எழ அநுராகம்
முதிர வசம் அற இதரி எழு கை வளை கலகல என முக நிலவு குறு வெயர்வு துளி வீச
அரு மதுர மொழி பதற இதழ் அமுது பருகி மிக அகம் மகிழ இரு கயல்கள் குழை ஏற
அமளி படும் அமளி மலர் அணையின் மிசை துயிலுகினும் அலர் கமல மலர் அடியை மறவேனே
நிருதனோடு வரு பரியும் அடு கரியும் ரத நிரையும் நெறுநெறு என முறிய விடும் வடி வேலா
நிகழ் அகள சகள குரு நிருப குரு பர குமர நெடிய நெடு ககன முகடு உறைவோனே
வரும் அருவி நவ மணிகள் மலர் கமுகின் மிசை சிதற மதுவின் நிரை பெருகு வளி மலை மீதே
வளர் குறவர் சிறுமி இரு வளர் தனமும் இரு புயமும் மருவி மகிழ் பழநி வரு பெருமாளே

மேல்

#191
முருகு செறி குழல் முகில் என நகில் நறு முளரி முகை என இயல் என மயில் என
முறுவல் தளவு என நடை மட வனம் என இரு பார்வை
முளரி மடல் என இடை துடி என அதரம் இலவு என அடி இணை மலர் என
மொழியும் அமுது என முகம் எழில் மதி என மட மாதர்
உருவம் இனையன என வரும் உருவக உரை செய்து அவர் தரு கலவியினில் அவிய
உலையின் மெழுகு என உருகிய கசடனை ஒழியாமல்
உவகை தரு கலை பல உணர் பிறவியில் உவரிதனில் உறும் அவலனை அசடனை
உனது பரிபுர கழல் இணை பெற அருள்புரிவாயே
அரவம் மலி கடல் விடம் அமுதுடன் எழ அரி அயனும் நரை இபன் முதல் அனைவரும்
அபயம் மிக என அதை அயில் இமையவன் அருள் பாலா
அமர் செய் நிசிசரர் உடல் அவை துணிபட அவனி இடிபட அலை கடல் பொடிபட
அமரர் சிறைபட அடல் அயில் நொடியினில் விடுவோனே
பரவும் புனம் மிசை உறை தரு குறமகள் பணை கொள் அணி முலை முழுகு பனிரு புய
பணில சரவணைதனில் முளரியில் வரு முருகோனே
பரம குருபர எனும் உரை பரசொடு பரவி அடியவர் துதி செய மதி தவழ்
பழநி மலைதனில் இனிது உறை அமரர்கள் பெருமாளே

மேல்

#192
வசனம் மிக ஏற்றி மறவாதே மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே இகபர செளக்யம் அருள்வாயே
பசு பதி சிவாக்யம் உணர்வோனே பழநி மலை வீற்று அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#193
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள் வந்தவர்தங்களை வாதை கண்டவர்
வங்கணமும் தெரியாமல் அன்புகள் பல பேசி
மஞ்சம் இருந்து அநுராக விந்தைகள் தந்த கடம்பிகள் ஊறல் உண்டிடு
மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே
சஞ்சலமும் தரு மோக லண்டிகள் இன் சொல் புரிந்து உருகாத தொண்டிகள்
சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே
தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர் கொஞ்சி நடம் பயில் வேசை முண்டைகள்
தந்த சுகம்தனையே உகந்து உடல் மெலிவேனோ
கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி மங்கையர்
கண் சிவந்திடவே கலந்த அரு முறையாலே
கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு விளங்கிய நாளில் அன்போடு
கண் குளிரும் திருமால் மகிழ்ந்து அருள் மருகோனே
குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் இன்பம் மிகுந்திடவே அணைந்து அருள்
குன்று என வந்து அருள் நீபம் முந்திய மணி மார்பா
கொந்து அவிழும் தடமே நிரம்பிய பண்பு தரும் திருவாவினன்குடி
குன்றுகள் எங்கினுமே வளர்ந்து அருள் பெருமாளே

மேல்

#194
வரதா மணி நீ என ஓரில் வருகாது எது தான் அதில் வாராது
இரதாதிகளால் நவ லோகம் இடவே கரியாம் இதில் ஏது
சரதா மறை ஓது அயன் மாலும் சகலாகம நூல் அறியாத
பர தேவதையாள் தரு சேயே பழனாபுரி வாழ் பெருமாளே

மேல்

#195
வனிதை உடல் காய நின்று உதிரம் அதிலே உருண்டு வயிறில் நெடுநாள் அலைந்து புவி மீதே
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து வயது பதினாறு சென்று வடிவாகி
கனக முலை மாதர்தங்கள் வழியில் மிகவே உழன்று கனிவு அதுடனே அணைந்து பொருள் தேடி
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய்
புனம் அதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த புதல்வி இதழூறல் உண்ட புலவோனே
பொரும் மதனை நீறு கண்ட அரிய சிவனார் உகந்த புதிய மயில் ஏறு கந்த வடி வேலா
பனகம் அணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி பரம கலியாணி தந்த பெருவாழ்வே
பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று பழநி மலை மீதில் நின்ற பெருமாளே

மேல்

#196
வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் சீதம் பல் சனி சூலை மகோதரம்
மாசு அங்கண் பெரு மூல வியாதிகள் குளிர் காசம்
மாறும் கக்கலொடே சில நோய் பிணியோடு தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும்
சுற்றினில் வாழ் சதிகாரர்கள் வெகு மோகர்
சூழ்து உன் சித்ர கபாயை மு ஆசை கொடு ஏதும் சற்று உணராமலே மாயை செய்
சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி
தூசின் பொன் சரமோடு குலாவு உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை
தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள்தாராய்
தீதம் தித்திமி தீதக தோதிமி டுடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெம் செக்கெண தோதக தீகுட என பேரி
சேடன் சொக்கிட வேலை கடாகம் எலாம் அஞ்சுற்றிடவே அசுரார் கிரி
தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா
வேதன் பொன் சிரம் மீது கடாவி நல் ஈசன் சற்குருவாய் அவர் காதினில்
மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே
வேஷம் கட்டி பின் ஏகி மகா வளி மாலின் பித்து உறவாகி விணோர் பணி
வீரம் கொட்ட பழனாபுரி மேவிய பெருமாளே

மேல்

#197
வாரணம்தனை நேரான மா முலை மீது அணிந்திடு பூண் ஆரம் ஆர் ஒளி
வால சந்திரன் நேர் ஆக மா முகம் எழில் கூர
வார் அணங்கிடு சேல் ஆன நீள் விழி ஓலை தங்கிய வார் காது வாவிட
வான இன் சுதை மேலான வாய் இதழ் அமுது ஊற
தோரணம் செறி தார் வாழை ஏய் தொடை மீதில் நின்று இடை நூல் போல் உலாவியெ
தோகை என்றிட வாகாக ஊர் அன நடை மானார்
தோதகம்தனை மா மாயையே வடிவாக நின்றது எனா ஆய ஓர்வது
தோணிடும்படி நாயேன் உள் நீ அருள்தருவாயே
காரணம்தனை ஓரா நிசாசரர் தாம் அடங்கலும் ஈறாக வானவர்
காவல் இந்திர நாடு ஆளவே அயில் விடும் வீரா
கார் விடம்தனை ஊணாக வானவர் வாழ் தரும்படி மேல் நாளிலே மிசை
காள கண்ட மகா தேவனார் தரு முருகோனே
ஆரணன்தனை வாதாடி ஓர் உரை ஓதுக என்று என வாராது எனா அவன்
ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும் வேலா
ஆதவன் கதிர் ஓவாது உலாவிய கோபுரம் கிளர் மா மாது மேவிய
ஆவினன்குடியோனே சுராதிபர் பெருமாளே

மேல்

#198
விதம் இசைந்து இனிதா மலர் மாலைகள் குழல் அணிந்து அநுராகமுமே சொலி
விதரணம் சொலி வீறுகளே சொலி அழகாக
விரி குரும்பைகள் ஆம் என வீறிய கனக சம்ப்ரம மேரு அது ஆம் அதி
விரகம் ஓங்கிய மா முலையால் எதிர் அமர் நாடி
இதம் இசைந்து அனமாம் எனவே இன நடை நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சிதம் மால் கொள்ளும் மாதர்கள் வலையாலே
எனது சிந்தையும் வாடி விடா வகை அருள்புரிந்து அழகாகிய தாமரை
இரு பதங்களினால் எனை ஆள்வதும் ஒரு நாளோ
மதம் இசைந்து எதிரே பொரு சூரனை உடல் இரண்டு குறாய் விழவே சின
வடிவு தங்கிய வேலினை ஏவிய அதி தீரா
மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே
பதம் மிசைந்து எழு லோகமுமே வலம் நொடியில் வந்திடு மா மயில் மீது ஒரு
பவனி வந்த க்ருபாகர சேவக விறல் வீரா
பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு அருள் காசியின் மீறிய
பழநி அம் கிரி மீதினில் மேவிய பெருமாளே

மேல்

#199
விரை மருவு மலர் அணிந்த கரிய புரி குழல் சரிந்து விழ வதன மதி விளங்க அதி மோக
விழி புரள முலை குலுங்க மொழி குழற அணை புகுந்து விரக மயல்புரியும் இன்ப மடவார்பால்
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவு அழிய உருகும் அந்த இருள் அகல உனது தண்டை அணி பாதம்
எனது தலை மிசை அணிந்து அழுதழுது அருள் விரும்பி இனிய புகழ்தனை விளம்ப அருள்தாராய்
அரவில் விழி துயில் முகுந்தன் அலர் கமல மலர் மடந்தை அழகினொடு தழுவு கொண்டல் மருகோனே
அடல் அசுரர் உடல் பிளந்து நிணம்அதனில் முழுகி அண்ட அமரர் சிறை விடு ப்ரசண்ட வடி வேலா
பரவை வரு விடம் அருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர் சடையர் விடையர் அன்பர் உள மேவும்
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த பழநி மலைதனில் அமர்ந்த பெருமாளே

மேல்

#200
வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட
வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
வீறு கொண்டு உடனே வருந்தியுமே உலைந்து அவமே திரிந்து உளமே
கவன்று அறிவு கலங்கிட வெகு தூரம்
போய் அலைந்து உழலாகி நொந்து பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
பூதலம்தனிலே மயங்கிய மதி போக
போது கங்கையின் நீர் சொரிந்து இரு பாத பங்கயமே வணங்கியெ
பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர்
சேனையும் செல மாள வென்றவன் மருகோனே
தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ
தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி
ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச ஓர் போதகம்தனையே உகந்து அருள்
ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே

மேல்

#201
அவா மருவு இனா வசுதை காணும் மடவார் எனும் அவார் கனலில் வாழ்வு என்று உணராதே
அரா நுகர வாதையுறு தேரை கதி நாடும் அறிவு ஆகி உளம் மால் கொண்டு அதனாலே
சிவாய எனு நாமம் ஒருகாலு நினையாத திமிராகரனை வா என்று அருள்வாயே
திரோத மலம் மாறும் அடியார்கள் அரு மாதவர் தியானம் உறு பாதம் தருவாயே
உவாவு இனிய கானுவில் நிலாவு மயில் வாகனம் உலாசமுடன் ஏறும் கழலோனே
உலா உதயபாநு சத கோடி உருவான ஒளி வாகும் அயில் வேல் அம் கையிலோனே
துவாதச புயாசல ஷடாநந வரா சிவ சுதா எயினர் மான் அன்பு உடையோனே
சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#202
ஆனனம் உகந்து தோளொடு தோள் இணை கலந்து பால் அன ஆரமுது கண்டு தேன் என இதழூறல்
ஆதரவில் உண்டு வேல் விழி பூசல் இட நன்று காண் என ஆனை உரம் எங்கும் மோதிட அபிராம
மான் அனைய மங்கைமார் மடு நாபியில் விழுந்து கீடம் இல் மாயும் மநு இன்ப ஆசை அது அறவே உன்
வாரிஜ பதங்கள் நாய் அடியேன் முடி புனைந்து போதக வாசகம் வழங்கி ஆள்வதும் ஒரு நாளே
ஈன அதி பஞ்சபாதக தானவர் ப்ரசண்ட சேனைகள் ஈடு அழிய வென்று வானவர் குல சேனை
ஏவல் கொளும் இந்த்ரலோக வசீகர அலங்க்ருத ஆகர ராசதம் அறிந்த கோமள வடிவோனே
சோனை சொரி குன்ற வேடுவர் பேதை பயில்கின்ற ஆறு இரு தோளுடைய கந்தனே வயலியில் வாழ்வே
சூளிகை உயர்ந்த கோபுர மாளிகை பொன் இஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று உலாவிய பெருமாளே

மேல்

#203
ஆனாத பிருதிவி பாச நிகளமும் மா மாய இருளும் அற்று ஏகி பவம் என
ஆகாச பரம சிற்சோதி பரையை அடைந்து உளாமே
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம்
அகளம் எப்போதும் உதயம் அநந்த மோகம்
வான் ஆதி சகல விஸ்தார விபவரம் லோகாதி முடிவும் மெய் போத மலர் அயன்
மால் ஈசன் எனும் அவற்கு ஏது விபுலம் அசங்கையால் நீள்
மாளாத தன் நிசம் உற்றாயது அரிய நிராதாரம் உலைவு இல் சற்சோதி நிருபமும்
மாறாத சுக வெள்ள தாணு உடன் இனிது என்று சேர்வேன்
நானாவித கருவி சேனை வகைவகை சூழ் போது பிரபல சூரர் கொடு நெடு
நாவாய் செல் கடல் அடைத்து ஏறி நிலைமை இலங்கை சாய
நாலாறு மணி முடி பாவிதனை அடு சீராமன் மருக மை காவில் பரிமள
நா வீசு வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா
கான் ஆளும் எயினர் தன் சாதி குற மானோடு மகிழ் கருத்தாகி மருள் தரு
காதாடும் உனது கண் பாணம் எனதுடை நெஞ்சு பாய்தல்
காணாது மமதை விட்டு ஆவி உய அருள் பாராய் என உரை வெகு ப்ரீதி இளையவ
காவேரி வட கரை சாமிமலை உறை தம்பிரானே

மேல்

#204
இராவின் இருள் போலும் பராவு குழலாலும் இராம சரமாகும் விழியாலும்
இராக மொழியாலும் பொறாத முலையாலும் இராத இடையாலும் இளைஞோர் நெஞ்சு
அராவி இரு போதும் பராவி விழவே வந்து அடாத விலை கூறும் மடவார் அன்பு
அடாமல் அடியேனும் சுவாமி அடி தேடும் அநாதி மொழி ஞானம் தருவாயே
குராவின் நிழல் மேவும் குமாரன் என நாளும் குலாவி இனி ஓது அன்பினர் வாழ்வே
குணாலம் இடு சூரன் பணா முடிகள்தோறும் குடாவி இட வேல் அங்கு எறிவோனே
துராலும் மிகு தீ முன்பு இராத வகை போலும் தொடாமல் வினை ஓடும்படி நூறும்
சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#205
இருவினை புனைந்து ஞான விழி முனை திறந்து நோயின் இருவினை இடைந்து போக மலம் மூட
இருள் அற விளங்கி ஆறு முகமொடு கலந்து பேதம் இலை என இரண்டு பேரும் அழகான
பரிமள சுகந்த வீத மயம் என மகிழ்ந்து தேவர் பணிய விண் மடந்தை பாத மலர் தூவ
பரிவு கொடு அநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பரு மயிலுடன் குலாவி வரவேணும்
அரி அயன் அறிந்திடாத அடி இணை சிவந்த பாதம் அடி என விளங்கி ஆடு நடராஜன்
அழல் உறும் இரும்பின் மேனி மகிழ் மரகதம் பெண் ஆகம் அயில் அணி சிவன் புராரி அருள் சேயே
மருவலர்கள் திண் பணார முடி உடல் நடுங்க ஆவி மறலி உண வென்ற வேலை உடையோனே
வளை குலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமிமலை மிசை விளங்கு தேவர் பெருமாளே

மேல்

#206
எந்த திகையினும் மலையினும் உவரியின் எந்த படியினும் முகடினும் உள பல
எந்த சடலமும் உயிர் இயை பிறவியில் உழலாதே
இந்த சடம் உடன் உயிர் நிலை பெற நளினம் பொன் கழல் இணைகளில் மரு மலர் கொடு
என் சித்தமும் மனமும் உருகி நல் சுருதியின் முறையோடே
சந்தித்து அரஹர சிவசிவ சரண் என கும்பிட்டு இணை அடியவை என தலை மிசை
தங்க புளகிதம் எழ இரு விழி புனல் குதி பாய
சம்பை கொடி இடை விபுதையின் அழகு முன் நந்த திரு நடமிடும் சரண் அழகுற
சந்த சபைதனில் எனது உளம் உருகவும் வருவாயே
தொந்த திகுகுட தகுகுட டிமிடிமி தந்த தனதன டுடுடுடு டமடம
துங்க திசை மலையும் வரியும் மறுக சலரி பேரி
துன்ற சிலை மணி கலகல கலின் என சிந்த சுரர் மலர அயன் மறை புகழ் தர
துன்பற்ற அவுணர்கள் நமன் உலகு உற விடும் அயில் வேலா
கந்த சடை முடி கனல் வடிவு அடல் அணி எந்தைக்கு உயிர் எனும் மலை மகள் மரகத
கந்த பரிமள தன கிரி உமை அருள் இளையோனே
கஞ்ச பதம் இவர் திருமகள் குலமகள் அம் பொன் கொடி இடை புணர் அரி மருக நல்
கந்த பொழில் திகழ் குருமலை மருவிய பெருமாளே

மேல்

#207
ஒருவரையும் ஒருவர் அறியாமலும் திரிந்து இருவினையின் இடர் கலியொடு ஆடி நொந்துநொந்து
உலையில் இடு மெழுகு அது என வாடி முன் செய் வஞ்சனையாலே
ஒளி பெறவே எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி விண் பறிந்து
ஒளிரும் மினல் உரு அது என ஓடி அங்கம் வெந்திடுவேனை
கருதி ஒரு பரம பொருள் ஈது என்று என் செவி இணையில் அருளி உருவாகி வந்த என்
கருவினையொடு அரு மலமும் நீறு கண்டு தண் தரு மா மென்
கருணை பொழி கமல முகம் ஆறும் இந்துளம் தொடை மகுட முடியும் ஒளிர் நூபுரம் சரண்
கலகலென மயிலின் மிசை ஏறி வந்து உகந்து எனை ஆள்வாய்
திரிபுரமும் மதன் உடலு நீறு கண்டவன் தருணம் மழ விடையன் நடராஜன் எங்கணும்
திகழ் அருணகிரி சொருபன் ஆதி அந்தம் அங்கு அறியாத
சிவயநம நமசிவய காரணன் சுரந்த அமுதம் அதை அருளி எமை ஆளும் எந்தை தன்
திரு உருவின் மகிழ் எனது தாய் பயந்திடும் புதல்வோனே
குருகு கொடி உடன் மயிலில் ஏறி மந்தரம் புவன கிரி சுழல மறை ஆயிரங்களும்
குமர குரு என வலிய சேடன் அஞ்ச வந்திடுவோனே
குறமகள் இடை துவள பாத செம் சிலம்பு ஒலிய ஒரு சசி மகளொடே கலந்து திண்
குருமலையின் மருவு குருநாத உம்பர்தம் பெருமாளே

மேல்

#208
கடாவினிடை வீரம் கெடாமல் இனிது ஏறும் கடாவின் நிகர் ஆகும் சமனாரும்
கடாவி விடு தூதன் கெடாத வழி போலும் கனாவில் விளையாடும் கதை போலும்
இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் இங்கு இராமல் உயிர் கோலி இங்கு இதமாகும்
இது ஆம் என இரு போதும் சதா இன் மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய்
விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரம் உறு சூரன் பகார உயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே
தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசம் அது தானை ஐம்புலனோடும்
சுபானமுறு ஞானம் தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே

மேல்

#209
கடி மா மலர்க்குள் இன்பம் உள வேரி கக்கு நண்பு தரு மா கடப்பு அமைந்த தொடை மாலை
கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த கருணாகர ப்ரசண்ட கதிர் வேலா
வடிவு ஆர் குறத்தி தன் பொன் அடி மீது நித்தமும் தண் முடியானது உற்று உகந்து பணிவோனே
வள வாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து மலர் வாயில் இலக்கணங்கள் இயல்பு ஓதி
அடி மோனை சொற்கு இணங்க உலகாம் உவப்ப என்று உன் அருளால் அளிக்க உகந்த பெரியோனே
அடியேனும் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் உன் தண் அருளே தழைத்து உகந்து வரவேணும்
செடி நேர் உடல் குடம்பைதனின் மேவி உற்றிடு இந்தப்படி தான் அலக்கண் இங்கண் உறலாமோ
திற மாதவர் கனிந்து உன் இரு பாத பத்மம் உய்ந்த திருவேரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#210
கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு மோது கடல் அளவு கண்டு மாய அருளாலே
கண பண புயங்க ராஜன் முடி அளவு கண்டு தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய்
இதம்இதம் என்று நாளு மருக அருகிருந்து கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே
இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் வாசலில் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ
மதுகர மிடைந்து வேரி தரு நறவம் உண்டு பூக மலர் வள நிறைந்த பாளை மலரூடே
வகைவகை எழுந்த சாம அதி மறை வியந்து பாட மதி நிழல் இடும் சுவாமி மலை வாழ்வே
அதிர வரு சண்ட வாயு என வரு கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும் இளையோனே
அடைவொடு உலகங்கள் யாவும் உதவி நிலை கண்ட பாவை அருள் புதல்வ அண்ட ராஜர் பெருமாளே

மேல்

#211
கறை படும் உடம்பு இராது என கருதுதல் ஒழிந்து வாயுவை கரும வசனங்களால் மறித்து அனல் ஊதி
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள
குறைவற நிறைந்த மோன நிர்க்குணம் அது பொருந்தி வீடு உற குருமலை விளங்கும் ஞான சற்குருநாதா
குமர சரண் என்று கூதள புது மலர் சொரிந்து கோமள பத யுகளம் புண்டரீகம் உற்று உணர்வேனோ
சிறை தளை விளங்கும் பேர் முடி புயல் உடன் அடங்கவே பிழைத்து இமையவர்கள் தங்கள் ஊர் புக சமர் ஆடி
திமிர மிகு சிந்து வாய்விட சிகரிகளும் வெந்து நீர் எழ திகிரி கொள் அநந்தம் சூடிகை திருமாலும்
பிறை மவுலி மைந்த கோ என பிரமனை முனிந்து காவல் இட்டு ஒரு நொடியில் மண்டு சூரனை பொருது ஏறி
பெருகு மத கும்ப லாளிதம் கரி என ப்ரண்ட வாரண பிடிதனை மணந்த சேவக பெருமாளே

மேல்

#212
காமியத்து அழுந்தி இளையாதே காலர் கை படிந்து மடியாதே
ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி ஓவியத்தில் அந்தம் அருள்வாயே
தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா சூரனை கடிந்த கதிர் வேலா
ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா ஏரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#213
குமர குருபர முருக குகனே குற சிறுமி கணவ சரவண நிருதர் கலகா பிறை சடையர்
குரு என நல் உரை உதவு மயிலா என தினமும் உருகாதே
குயில் மொழி நல் மடவியர்கள் விழியால் உருக்குபவர் தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர்
நகைகொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் அனைவோரும்
தமது வசமுற வசிய முகமே மினுக்கியர்கள் முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்
தனமிலியர் மனம் முறிய நழுவா உழப்பியர் கண் வலையாலே
சதி செய்து அவரவர் மகிழ அணை மீது உருக்கியர்கள் வசம் ஒழுகி அவர் அடிமை என மாதர் இட்ட
தொழில்தனில் உழலும் அசடனை உன் அடியே வழுத்த அருள்தருவாயே
சமரமொடும் அசுரர் படை களம் மீது எதிர்த்த பொழுது ஒரு நொடியில் அவர்கள் படை கெட வேல் எடுத்து
அவனிதனில் நிருதர் சிரம் உருள ரண தூள்படுத்திவிடு செரு மீதே
தவனமொடும் அலகை நடமிட வீர பத்திரர்கள் அதிர நிணமொடு குருதி குடி காளி கொக்கரிசெய்
தசை உணவுதனில் மகிழவிடு பேய் நிரை திரள்கள் பல கோடி
திமிதமிட நரி கொடிகள் கழுகு ஆட ரத்த வெறி வயிரவர்கள் சுழல ஒரு தனி ஆயுதத்தை விடு
திமிர திநகர அமரரர் பதி வாழ்வு பெற்று உலவு முருகோனே
திரு மருவு புயன் அயனொடு அயிராவத குரிசில் அடி பரவு பழநி மலை கதிர்காமம் உற்று வளர்
சிவ சமய அறுமுகவ திருவேரகத்தில் உறை பெருமாளே

மேல்

#214
குமர குருபர முருக சரவண குக சண்முக கரி பிறகான
குழக சிவ சுத சிவய நம என குரவன் அருள் குரு மணியே என்று
அமுத இமையவர் திமிர்தம் இடு கடல் அது என அநுதினம் உனை ஓதும்
அமலை அடியவர் கொடிய வினை கொடும் அபயம் இடு குரல் அறியாயோ
திமிர எழு கடல் உலகம் முறிபட திசைகள் பொடிபட வரு சூரர்
சிகர முடி உடல் புவியில் விழ உயிர் திறை கொடு அமர் பொரும் மயில் வீரா
நமனை உயிர் கொளும் அழலின் இணை கழல் நதி கொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி அமர் தரு நவிலு மறை புகழ் பெருமாளே

மேல்

#215
கோமள வெற்பினை ஒத்த தனத்தியர் காமனை ஒப்பவர் சித்தம் உருக்கிகள்
கோவை இதழ் கனி நித்தமும் விற்பவர் மயில் காடை
கோகில நல் புறவத்தொடு குக்குட ஆரணிய புள் வகை குரல் கற்று இகல்
கோல விழி கடை இட்டு மருட்டிகள் விரகாலே
தூம மலர் பளி மெத்தை படுப்பவர் யாரையும் ஏத்தி மனைக்குள் அழைப்பவர்
சோலை வன கிளி ஒத்த மொழிச்சியர் நெறி கூடா
தூசு நெகிழ்த்து அரை சுற்றி உடுப்பவர் காசு பறிக்க மறித்த முயக்கிகள்
தோதக வித்தை படித்து நடிப்பவர் உறவாமோ
மா மரம் ஒத்து வரிக்குள் நெருக்கிய சூரனை வெட்டி நிண குடலை கொடி
வாரண மெச்ச அளித்த அயில் குக கதிர்காம
மா மலையில் பழநி பதியில் தனி மா கிரியில் தணிகை கிரியில் பர
மா கிரியில் திரை சுற்றி வளைத்திடும் அலைவாயில்
ஏம வெயில் பல வெற்பினில் பதினாலு உலகத்தினில் உற்று உறு பத்தர்கள்
ஏது நினைத்தது மெத்த அளித்து அருள் இளையோனே
ஏரக வெற்பு எனும் அற்புத மிக்க சுவாமி மால பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் பெருமாளே

மேல்

#216
சரண கமலாலயத்தை அரை நிமிஷ நேரம் மட்டில் தவம் முறை தியானம் வைக்க அறியாத
சட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த தமியன் மிடியால் மயக்கமுறுவேனோ
கருணை புரியாது இருப்பது என குறை இ வேளை செப்பு கயிலை மலை நாதர் பெற்ற குமரோனே
கடக புய மீது இரத்ந மணி அணி பொன் மாலை செச்சை கமழு மணம் ஆர் கடப்பம் அணிவோனே
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு
தகைமை சிவஞான முத்தி பர கதியு நீ கொடுத்து உதவிபுரிய வேணும் நெய்த்த வடி வேலா
அருண தள பாத பத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ் தான் அளித்த மயில் வீரா
அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீது உதித்த அழக திருவேரகத்தின் முருகோனே

மேல்

#217
சுத்திய நரப்புடன் எலுப்பு உறு தசை குடலொடு அப்பு நிணம் சளி வலிப்புடன் இரத்தகுகை
சுக்கிலம் விளை புழுவொடு அக்கையும் அழுக்கும் மயிர் சங்கு மூளை
துக்கம் விளைவித்த பிணை அல் கறை முனை பெருகு குட்டமொடு விப்புருதி புற்று எழுதல் முட்டுவலி
துச்சி பிளவை பொருமல் பித்தமொடு உறக்கம் மிக அங்கமூடே
எத்தனை நினைப்பையும் விளைப்பையும் மயக்கமுறல் எத்தனை சலிப்பொடு கலிப்பையும் மிடல் பெருமை
எத்தனை கசத்தையும் மலத்தையும் அடைத்த குடில் பஞ்சபூதம்
எத்தனை குலுக்கையும் மினுக்கையும் மனக்கவலை எத்தனை கவட்டையும் நடக்கையும் உயிர் குழுமல்
எத்தனை பிறப்பையும் இறப்பையும் எடுத்து உலகில் மங்குவேனோ
தத்தனத னத்தனத னத்தன என திமிலை ஒத்த முரச துடி இடக்கை முழவு பறைகள்
சத்தம் அறைய தொகுதி ஒத்த செனித்த ரத்த வெள்ள மண்டி ஓட
சக்கிரி நெளிப்ப அவுண பிணம் மிதப்ப அமரர் கைத்தலம் விரித்து அரஹர சிவ பிழைத்தோம் என
சக்கிரி கிரி சுவர்கள் அக்கணமே பக்கு விட வென்ற வேலா
சித்தம் அதில் எத்தனை செகத்தலம் விதத்து உடன் அழித்து கமலத்தனை மணி குடுமி பற்றி மலர்
சித்திர கர தலம் வலிப்ப பல குட்டி நடனம் கொள் வேளே
செட்டி வடிவை கொடு தினை புனம் அதில் சிறு குற பெண் அமளிக்குள் மகிழ் செட்டி குரு வெற்பில் உறை
சிற்பரமருக்கு ஒரு குருக்கள் என முத்தர் புகழ் தம்பிரானே

மேல்

#218
செக மாயை உற்று என் அக வாழ்வில் வைத்த திரு மாது கெர்ப்பம் உடல் ஊறி
தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த பொருளாகி
மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில் மலை நேர் புயத்தில் உறவாடி
மடி மீது அடுத்து விளையாடி நித்தம் மணி வாயில் முத்தி தரவேணும்
முக மாயம் இட்ட குற மாதினுக்கு முலை மேல் அணைக்க வரும் நீதா
முது மா மறைக்குள் ஒரு மா பொருட்கு உள் மொழியே உரைத்த குருநாதா
தகையாது எனக்கு உன் அடி காண வைத்த தனி ஏரகத்தின் முருகோனே
தரு காவிரிக்கு வட பாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே

மேல்

#219
சேலும் அயிலும் தரித்த வாளை அடரும் கடைக்கண் மாதரை வசம் படைத்த வசமாகி
சீலம் மறையும் பணத்தில் ஆசை இலை என்று அவத்தை காலமும் உடன் கிடக்கும் அவர் போலே
காலும் மயிரும் பிடித்து மேவும் சிலுகும் பிணக்கு நாளும் மிக நின்று அலைத்த விதம் ஆய
காம கலகம் பிணித்த தோதகம் எனும் துவக்கிலே அடிமையும் கலக்கம் உறலாமோ
ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம்
யாவும் அலை கொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்றும் ஏரகம் அமர்ந்த பச்சை மயில் வீரா
சோலை மடல் கொண்டு சக்ர மால் வரை அரிந்த வஜ்ர பாணியர் தொழும் திரு கை வடி வேலா
சூர் முதிர் க்ரவுஞ்ச வெற்பும் வேலை நிலமும் பகைத்த சூரன் உடலும் துணித்த பெருமாளே

மேல்

#220
தருவர் இவர் ஆகும் என்று பொருள் ஆசையினால் நாடி வண்டுதனை விடு சொல் தூது தண்ட முதலான
சரச கவி மாலை சிந்து கலி துறைகள் ஏசல் இன்ப தரு முதல் அதான செம் சொல் வகை பாடி
மருவுகையும் ஓதி நொந்து அடிகள் முடியே தெரிந்து வரினும் இவர் வீதம் எங்களிடம் ஆக
வரும் அதுவோ போதும் என்று ஒரு பணம் உதாசினம் சொல் மடையரிடமே நடந்து மனம் வேறாய்
உருகி மிகவாக வெந்து கவிதை சொலியே திரிந்து உழல்வதுமே தவிர்ந்து விடவே நல்
உபய பத மால் விளங்கி இகபரமுமே ஏவ இன்பம் உதவி எனை ஆள அன்பு தருவாயே
குருகினொடு நாரை அன்றில் இரைகள் அது நாடி தங்கள் குதி கொள் இள வாளை கண்டு பயமாக
குரை கடல்களே அதிர்ந்து வருவது எனவே விளங்கு குருமலையின் மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#221
தெருவினில் நடவா மடவார் திரண்டு ஒறுக்கும் வசையாலே
தினகரன் என வேலையிலே சிவந்து உதிக்கும் மதியாலே
பொரு சிலை வளையா இளையா மதன் தொடுக்கும் கணையாலே
புளகித முலையாள் அலையா மனம் சலித்தும் விடலாமோ
ஒரு மலை இரு கூறு எழவே உரம் புகுத்தும் வடி வேலா
ஒளி வளர் திருவேரகமே உகந்து நிற்கும் முருகோனே
அரு மறை தமிழ் நூல் அடைவே தெரிந்து உரைக்கும் புலவோனே
அரி அரி பிரமாதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே

மேல்

#222
நாசர் தம் கடை அதனில் விரவி நான் மெத்த நொந்து தடுமாறி
ஞானமும் கெட அடைய விழுவி ஆழத்து அழுந்தி மெலியாதே
மா சகம் தொழும் உனது புகழின் ஓர் சொல் பகர்ந்து சுகம் மேவி
மா மணம் கமழும் இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ
வாசகம் புகல ஒரு பரமர் தாம் மெச்சுகின்ற குருநாதா
வாசவன் தரு திருவை ஒரு தெய்வானைக்கு இரங்கும் மணவாளா
கீசகம் சுரர் தருவும் மகிழும் மா அத்தி சந்து புடை சூழும்
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#223
நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து நாலாறுநாலு பற்று வகையான
நாலு ஆரும் ஆகமத்தின் நூல் ஆய ஞான முத்தி நாள்தோறும் நான் உரைத்த நெறியாக
நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க நேராக வாழ்வதற்கு உன் அருள்கூர
நீடு ஆர் ஷட் ஆதாரத்தின் மீதே பராபரத்தை நீ காண் எனா அனை சொல் அருள்வாயே
சே ஏறும் ஈசர் சுற்ற மா ஞான போத புத்தி சீராகவே உரைத்த குருநாதா
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு தீரா குகா குறத்தி மணவாளா
காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த கா ஆர் சுவாமி வெற்பின் முருகோனே
கார் போலும் மேனி பெற்ற மா காளி வாலை சத்தி காமாரி வாமி பெற்ற பெருமாளே

மேல்

#224
நிலவினிலே இருந்து வகை மலரே தெரிந்து நிறை குழல் மீது அணிந்து குழை தாவும்
நிகர் அறு வேல் இனங்கள் வரிதர வாசகங்கள் நினைவு அறவே மொழிந்து மதன் நூலின்
கலப மனோகரங்கள் அளவு அறவே புரிந்து கனி இதழே அருந்தி அநுராக
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய்
உலகம் ஒர் ஏழும் அண்டர் உலகமும் ஈசர் தங்கும் உயர் கயிலாயமும் பொன் வரை தானும்
உயிரொடு பூதம் ஐந்தும் ஒரு முதலாகி நின்ற உமை அருளால் வளர்ந்த குமரேசா
குலை படு சூரன் அங்கம் அழிபட வேல் எறிந்த குமர கடோர வெம் கண் மயில் வாழ்வே
கொடு முடியாய் வளர்ந்து புயல் நிலை போல் உயர்ந்த குருமலை மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#225
நிறைமதி முகம் எனும் ஒளியாலே நெறி விழி கணை எனு நிகராலே
உறவு கொள் மடவர்கள் உறவு ஆமோ உன திருவடி இனி அருள்வாயே
மறை பயில் அரி திரு மருகோனே மருவலர் அசுரர்கள் குல காலா
குறமகள்தனை மணம் அருள்வோனே குருமலை மருவிய பெருமாளே

மேல்

#226
பரவ அரிதாகிய வரை என நீடிய பணை முலை மீதினில் உருவான
பணிகள் உலாவிட இழை இடை சாய் தரு பயிலிகள் வாள் விழி அயிலாலே
நிர வரியோடு இயல் குழல்களின் நாள்மலர் நிரை தரும் மூரலின் நகை மீது
நிலவு இயல் சேர் முகம் அதில் உயர் மா மயல் நிலை எழவே அலைவது ஆமோ
அரவு அணையார் குழை பர சிவ ஆரண அரன் இடம் பாகமது உறை சோதி
அமை உமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதர் அருள் புதல்வோனே
குரவு அணி பூஷ சரவண தேசிக குக கருணாநிதி அமரேசா
குறமகள் ஆனை மின் மருவிய பூரண குருகிரி மேவிய பெருமாளே

மேல்

#227
பல காதல் பெற்றிடவும் ஒரு நாழிகைக்குள் ஒரு பலனே பெற பரவு கயவாலே
பல பேரை மெச்சி வரு தொழிலே செலுத்தி உடல் பதறாமல் வெட்கம் அறு வகை கூறி
விலகாத லச்சை தணி மலையாம் முலைச்சியர்கள் வினையே மிகுத்தவர்கள் தொழிலாலே
விடமே கொடுத்து வெகு பொருளே பறித்து அருளும் விலை மாதர் பொய் கலவி இனிதாமோ
மலையே எடுத்து அருளும் ஒரு வாள் அரக்கன் உடல் வட மேரு என தரையில் விழவேதான்
வகையா விடுத்த கணை உடையான் மகிழ்ச்சி பெறு மருக கடப்ப மலர் அணி மார்பா
சில காவிய துறைகள் உணர்வே படித்த தமிழ் செவியார வைத்து அருளும் முருகோனே
சிவனார் தமக்கு உரிய உபதேச வித்தை அருள் திருவேரகத்தில் வரும் பெருமாளே

மேல்

#228
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனி மொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறை மீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே
சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமிமலைதனில் உறைவோனே
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே

மேல்

#229
மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து மதுர நாண் இட்டு நெறி சேர்வார்
மலையவே வளைத்த சிலையினூடு ஒளித்த வலிய சாயக கண் மட மாதர்
இகழ வாசமுற்ற தலை எலாம் வெளுத்து இளமை போய் ஒளித்து விடுமாறு
இடைவிடாது எடுத்த பிறவி வேரறுத்து உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே
அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட அதிரவே நடத்தும் மயில் வீரா
அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே
மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க விழை சுவாமி வெற்பில் உறைவோனே
விரைய ஞான வித்தை அருள்செய் தாதை கற்க வினவ ஓதுவித்த பெருமாளே

மேல்

#230
மருவே செறித்த குழலார் மயக்கி மதனாகமத்தின் விரகாலே
மயலே எழுப்பி இதழே அருத்த மலை போல் முலைக்குள் உறவாகி
பெரு காதலுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்சம் மறவாதே
பிழையே பொறுத்து உன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே
குருவாய் அரற்கும் உபதேசம் வைத்த குகனே குறத்தி மணவாளா
குளிர் கா மிகுத்த வளர் பூகம் மெத்து குட காவிரிக்கு வடபாலார்
திருமால்தனக்கு மருகா உமைக்கு ஓர் சிறுவா கரிக்கும் இளையோனே
திருவேரகத்தில் உறைவாய் அரக்கர் சிரமே துணித்த பெருமாளே

மேல்

#231
முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உளம் மயங்கி முளரி வேரி முகை அடர்ந்த முலை மீதே
முழுகு காதல்தனை மறந்து பரம ஞான ஒளி சிறந்து முகம் ஒரு ஆறு மிக விரும்பி அயராதே
அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி
அவசமாகி உருகு தொண்டருடன் அதாகி விளையும் அன்பின் அடிமையாகும் முறைமை ஒன்றை அருள்வாயே
தறுகண் வீரர் தலை அரிந்து பொருத சூரன் உடல் பிளந்து தமர வேலை சுவற வென்ற வடி வேலா
தரளம் ஊரல் உமை மடந்தை முலையில் ஆர அமுதம் உண்டு தரணி ஏழும் வலம்வரும் திண் மயில் வீரா
மறு இலாத தினை விளைந்த புனம் விடாமல் இதண் இருந்து வலிய காவல் புனை அணங்கின் மணவாளா
மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை அமர்ந்த பெருமாளே

மேல்

#232
வாதமொடு சூலை கண்டமாலை குலை நோவு சந்து மா வலி வியாதி குன்மமொடு காசம்
வாயுவுடனே பரந்த தாமரைகள் பீனசம் பின் மாதர் தரு பூஷணங்கள் என ஆகும்
பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து பாயலை விடாது மங்க இவையால் நின்
பாத மலரானதின் கண் நேயம் அறவே மறந்து பாவ மதுபானம் உண்டு வெறி மூடி
ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று ஈனம் மிகு சாதியின் கண் அதிலே நான்
ஈடு அழிதல் ஆனதின் பின் மூடன் என ஓது முன்பு உன் ஈர அருள்கூர வந்து எனை ஆள்வாய்
சூதம் மகிழ் பாலை கொன்றை தாது வளர் சோலை துன்றி சூழும் மதில் தாவி மஞ்சின் அளவாக
தோரண நல் மாடம் எங்கும் நீடு கொடியே தழைந்த சுவாமிமலை வாழ வந்த பெருமாளே

மேல்

#233
வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய் துயர்ந்து வயதாகி
வாலையில் திரிந்து கோல மை கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி
ஆரம் மிக்க பொன்களால் அமைந்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான
ஆடகம் ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ
சூரனை துரந்து வேரற பிளந்து சூழ் சுரர்க்கண் அன்புசெயும் வீரா
சூகரத்தொடு அம்பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே
ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே
மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#234
வார் குழலை சொருகி கரு வில் குழை காதோடு இணைத்து அசைய கதிர் பல் கொடு
வாய் இதழ் பொற்க மலர் குமிழ் ஒத்து உளதுண்ட க்ரீவ
வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இளநீர் சுரர் பொன் குடம் ஒத்த இணை
மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர்
கார் உறும் வித்து இடையில் கதலி தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு
கால் மறைய துவள செறி பொன் கலை ஒண் குலாவ
கார் குயிலை குரலை கொடு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர்
காமன் உகப்ப அமளி சுழல் குத்திரர் சந்தம் ஆமோ
சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிண குடலை கழு
சூழ நரி கெருட கொடி பற்பல சங்கமாக
சூழ் கிரியை கை தடித்து மலை திகை யானை உழற்றி நடுக்கி மத பொறி
சோர நகைத்து அயிலை கொடு விட்டு அருள் செம் கை வேலா
ஏர் அணி நல் குழலை ககன சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத
வேட அமுத சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே
ஏரக வெற்பு என்னும் அற்புத மிக்க சுவாமிமலை பதி நிற்கும் இலக்ஷண
ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே

மேல்

#235
வார் குழல் விரித்து தூக்கி வேல் விழி சுழற்றி பார்த்து வா என நகைத்து தோட்டு குழை ஆட
வாசகம் உரைத்து சூத்ர பாவை என உறுப்பை காட்டி வாசனை முலை கச்சு ஆட்டி அழகாக
சீர் கலை நெகிழ்த்து போர்த்து நூல் இடை நெளித்து காட்டி தீது எய நடித்து பாட்டு குயில் போல
சேருற அழைத்து பார்த்து சார்வுற மருத்து இட்டு ஆட்டி சீர் பொருள் பறி பொய் கூத்தர் உறவு ஆமோ
சூரர்கள் பதைக்க தேர்க்கள் ஆனைகள் அழித்து தாக்கி சூர் கிரி கொளுத்தி கூற்று உர் இடும் வேலா
தூ மொழி நகைத்து கூற்றை மாளிட உதைத்து கோத்த தோல் உடை என் அப்பர்க்கு ஏற்றி திரிவோனே
ஏர் அணி சடைச்சி பால் சொல் ஆரணி சிறக்க போற்று மேர் எழில் நிறத்து கூர்த்த மகவோனே
ஏடு அணி குழைச்சி தூர்த்த ஆடகி குறத்திக்கு ஏற்ற ஏரக பொருப்பில் பூத்த பெருமாளே

மேல்

#236
விடமும் வடி வேலும் மதன சரங்களும் வடுவு நிகரான மகர நெடும் குழை
விரவி உடன் மீளும் விழிகளும் மென் புழுகு அது தோயும்
ம்ருகமத படீர பரிமள குங்குமம் அணியும் இளநீரும் வட குல குன்றமும்
வெருவுவன பார புளகித தனங்களும் வெகு காம
நடன பத நூபுரமும் முகில் கெஞ்சிட மலர் சொருகு கேச பரமும் இலங்கிய
நளின மலர் சோதி மதி முக விம்பமும் அன நேராம்
நடை நளிர் மாதர் நிலவு தொழும் தனு முழுதும் அபிராம அரி வய கிண்கிண் என
நகையும் உள மாதர் கலவியில் நைந்து உருகிடலாமோ
வடிவுடைய மானும் இகல் கரனும் திகழ் எழு வகை மரா மரமும் நிகர் ஒன்றும் இல்
வலிய திறல் வாலி உரமும் நெடும் கடல் அவை ஏழும்
மற நிருதர் சேனை முழுதும் இலங்கை மன் வகை இரவு போலும் அணியும் அலங்க்ருத
மணி மவுலியான ஒரு பதும் விஞ்சு இருபது தோளும்
அடை வலமும் மாள விடு சர அம்பு உடை தசரத குமார ரகு குல புங்கவன்
அருள் புனை முராரி மருக விளங்கிய மயில் ஏறி
அடையலர்கள் மாள ஒரு நிமிடம்தனில் உலகை வலமாக நொடியினில் வந்து உயர்
அழகிய சுவாமிமலையில் அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#237
விரித்த பைம் குழல் ஒளிர் மலர் அளி தன தனத்த னந்தன தனதன என ஒலி
விரிப்ப வண் கயல் விழி உறை குழையொடும் அலை பாய
மிகுத்த வண் சிலை நுதல் மிசை திலதமொடு அசைத்த பொன் குழை அழகு எழ முக ஒளி
வெயில் பரந்திட நகை இதழ் முருகு அலர் வரி போத
தரித்த தந்திரி மறி புயம் மிசை பல பணிக்கு இலங்கிய பரிமள குவடு இணை
தன கொழும் துகள் ததைபட கொடி இடை படு சேலை
தரித்து சுந்தரம் என அடர் பரிபுர பத சிலம்போடு நடமிடு கணிகையர்
சழக்கர் விஞ்சையர் மயல்களில் முழுகுவது ஒழியாதோ
உரித்த வெம் கயம் மறியோடு புலி கலை தரித்த சங்கரர் மதி நதி சடையினர்
ஒருத்தி பங்கினர் அவர் பணி குருபர முருகோனே
உவட்டி வந்திடும் அவுணரொடு எழு கடல் குவட்டையும் பொடி பட சதம் முடிவுற
உழைத்த இந்திரர் பிரமனும் மகிழ்வுற விடும் வேலா
வரி தரம் துளவு அணி திரு மருவிய உரத்த பங்கயர் மரகதம் அழகிய
வணத்தர் அம்பரம் உற விடு கணையினர் மருகோனே
வனத்தில் வந்து ஒரு பழையவன் என ஒரு குறத்தி மென் புயம் மருவிய கிளிதனை
மயக்கி மந்திர குருமலைதனில் அமர் பெருமாளே

மேல்

#238
விழியால் மருட்டி நின்று முலை தூசு அகற்றி மண்டு விரகானலத்து அழுந்த நகை ஆடி
விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாடலுக்கு இசைந்து சில நாள் மேல்
மொழியாத சொற்கள் வந்து சிலுகாகிவிட்ட தொந்த முழு மாயையில் பிணங்கள் வசமாகி
முடியாது பொன் சதங்கை தரு கீத வெட்சி துன்று முதிராத நல் பதங்கள் தருவாயே
பொழி கார் முகிற்கு இணைந்த யம ராஜன் உட்க அன்று பொரு தாள் எடுத்த தந்தை மகிழ்வோனே
புருகூதன் உள் குளிர்ந்த கனகாபுரி ப்ரசண்ட புனிதா ம்ருக கரும்பு புணர் மார்பா
செழு வாரிசத்தில் ஒன்றும் முது வேதன் வெட்க அன்று திரு வாய்மை செப்பி நின்ற முருகோனே
திரளா மணி குலங்கள் அருணோதயத்தை வென்ற திருவேரகத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#239
அமைவுற்று அடைய பசியுற்றவருக்கு அமுதை பகிர்தற்கு இசையாதே
அடைய பொருள் கை இளமைக்கு என வைத்து அருள் தப்பி மதத்து அயராதே
தமர் சுற்றி அழ பறை கொட்டி இட சமன் நெட்டு உயிரை கொடுபோகும்
சரிரத்தினை நிற்கும் என கருதி தளர்வுற்று ஒழிய கடவேனோ
இமயத்து மயிற்கு ஒரு பக்கம் அளித்து அவருக்கு இசைய புகல்வோனே
இரணத்தினில் எற்றுவரை கழுகுக்கு இரையிட்டிடும் விக்ரம வேலா
சமய சிலுகிட்டவரை தவறி தவம் உற்ற அவருள் புக நாடும்
சடு பத்ம முக குக புக்கு கன தணியில் குமர பெருமாளே

மேல்

#240
அரகர சிவன் அரி அயன் இவர் பரவி முன் அறுமுக சரவணபவ என்று
அநுதின மொழி தர அசுரர்கள் கெட அயில் அனல் என எழ விடும் அதி வீரா
பரிபுர கமலம் அது அடி இணை அடியவர் உளம் அதில் உற அருள் முருகேசா
பகவதி வரைமகள் உமை தர வரு குக பரமனது இரு செவி களிகூர
உரை செயும் ஒரு மொழி பிரணவ முடிவதை உரை தரு குருபர உயர்வாய
உலக மன் அலகில உயிர்களும் இமையவர் அவர்களும் உறுவர முநிவோரும்
பரவி முன் அநுதினம் மனம் மகிழ்வுற அணி பணி திகழ் தணிகையில் உறைவோனே
பகர் தரு குறமகள் தரு அமை வநிதையும் இருபுடை உற வரு பெருமாளே

மேல்

#241
அருக்கி மெத்தென சிரித்து உருக்கி இட்டு உள கருத்து அழித்து அற கறுத்த கண் பயிலாலே
அழைத்து அகப்படுத்தி ஒட்டற பொருள் பறிப்பவர்க்கு அடுத்த அபத்தமுற்று வித்தகர் போல
தரிக்கும் வித்தரிக்கும் மிக்க தத்துவ ப்ரசித்தி எத்தலத்து மற்று இலை பிறர்க்கு என ஞானம்
சமைத்து உரைத்து இமைப்பினில் சடக்கென படுத்து எழ சறுக்கும் இ பிறப்பு பெற்றிடலாமோ
பொருக்கு எழ கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்புற பொருப்பினில் பெருக்க உற்றிடு மாயம்
புடைத்து இடித்து அடல் கரத்து உற பிடித்த கற்பக புரிக்கு இரக்கம் வைத்த பொன் கதிர் வேலா
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த மை குறத்தியை தினை புன கிரி தலத்திடை தோயும்
சிவத்த குக்குட கொடி செருக்க உற்பல சுனை சிறப்புடை திருத்தணி பெருமாளே

மேல்

#242
இருப்பு அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் என ஓதும்
இசை தமிழ் நட தமிழ் என துறை விருப்புடன் இலக்கண இலக்கிய கவி நாலும்
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உறுக்கிடு சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ
கருப்பு வில் வளைத்து அணி மலர் கணை தொடுத்து இயல் களிப்புடன் ஒளித்து எய்த மத வேளை
கருத்தினில் நினைத்து அவன் நெருப்பு எழ நுதல் படு கனல் கணில் எரித்தவர் கயிலாய
பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் தரு சேயே
புயல் பொழில் வயல் பதி நயப்படு திருத்தணி பொருப்பினில் விருப்புறு பெருமாளே

மேல்

#243
இருமல் உரோகம் முயலகன் வாதம் எரி குண நாசி விடமே நீரிழிவு
விடாத தலைவலி சோகை எழு களம் மாலை இவையோடே
பெரு வயிறு ஈளை எரி குலை சூலை பெரு வலி வேறும் உள நோய்கள்
பிறவிகள்தோறும் எனை நலியாதபடி உன தாள்கள் அருள்வாயே
வரும் ஓரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசை பாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட வடி சுடர் வேலை விடுவோனே
தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா
சலம் இடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவும் பெருமாளே

மேல்

#244
உடலினூடு போய் மீளும் உயிரினூடு மாயாத உணர்வினூடு வானூடு முது தீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான
சுடரினூடு நால் வேத முடியினூடும் ஊடாடு துரிய ஆகுலாதீத சிவ ரூபம்
தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே
மடல் அறாத வாரீச அடவி சாடி மாறான வரி வரால் குவால் சாய அமராடி
மதகு தாவி மீதோடி உழவர் ஆல அடாது ஓடி மடையை மோதி ஆறூடு தடமாக
கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு மலர் வாவி
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#245
உடையவர்கள் ஏவர் எவர்கள் என நாடி உள மகிழ ஆசுகவி பாடி
உமது புகழ் மேரு கிரி அளவும் ஆனது என உரமுமான மொழி பேசி
நடை பழகி மீள வறியவர்கள் நாளை நடவும் என வாடி முகம் வேறாய்
நலியும் முனமே உன் அருண ஒளி வீசு நளின இரு பாதம் அருள்வாயே
விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார
சடை இறைவர் காண உமை மகிழ ஞான தளர் நடை இடா முன் வருவோனே
தவ மலரும் நீல மலர் சுனை அநாதி தணி மலை உலாவு பெருமாளே

மேல்

#246
உய்ய ஞானத்து நெறி கை விடாது எப்பொழுதும் உள்ள வேத துறை கொடு உணர்வு ஓதி
உள்ள மோகத்து இருளை விள்ள மோக பொருளை உள்ள மோகத்து அருளி உறவாகி
வையம் ஏழுக்கு நிலை செய்யும் நீதி பழைய வல்லம் மீது உற்பல சயில மேவும்
வள்ளியா நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி கிள்ளி வீசி உற்று மலர் பணிவேனோ
பை அராவை புனையும் ஐயர் பாக தலைவி துய்ய வேணி பகிரதி குமாரா
பைய மால் பற்றி வளர் சையம் மேல் வைக்கும் முது நெய்யனே சுற்றிய குறவர் கோவே
செய்யுமால் வெற்பு உருவ வெய்ய வேல் சுற்றி விடு கைய மால் வைத்த திரு மருகோனே
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே

மேல்

#247
எத்தனை கலாதி சித்து அங்கு எத்தனை வியாதி பித்த அங்கு எத்தனை சராசரத்தில் செடமான
எத்தனை விடா வெருட்டு அங்கு எத்தனை வல் ஆண்மை பற்று அங்கு எத்தனைகொல் ஊனை நித்தம் பசியாறல்
பித்து அனையன் நான் அகட்டு உண்டு இப்படி கெடாமல் முத்தம் பெற்றிட நின சனத்தின் செயலான
பெற்றியும் ஒராது நிற்கும் தத்த குரு தாரம் நிற்கும் பெத்தமும் ஒராது நிற்கும் கழல் தாராய்
தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தத்தனத னாத னத்தம் தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தம் தத்தனத னானன் உர்த்தும் சத பேரி
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர் திக்குகள் ஓர் நாலிரட்டில் கிரி சூழ
செ கண் அரிமா கனைக்கும் சி தணிகை வாழ் சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் பெருமாளே

மேல்

#248
எலுப்பு நாடிகள் அப்பொடு இரத்தமொடு அழுக்கு மூளைகள் மச்சொடு கொள் புழு
இருக்கும் வீடு அதில் எத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக அர்ச்சுதர் அ பதி உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டி அலட்டுறு சமுசாரம்
கெலிப்பர் மால் வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையும் மித்திர குத்திரர் கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்று திரி களவு அரிப்பர் சூடகர் எத்தனை வெம் பிணி
கெலிக்கும் வீடு அதை நத்தி எடுத்து இவண் உழல்வேனோ
ஒலி பல் பேரிகை உக்ர அமர்க்களம் எதிர்த்த சூரரை வெட்டி இருள் கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்திட விடும் வேலா
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து மாபலியை சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடு கடல் விட்டவன் மருகோனே
வலிக்க வேதனை குட்டி நடித்து ஒரு செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதை பரப்ரமருக்கு அருள் குருநாதா
வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு குறத்தியாரை மயக்கி அணைத்து உள
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே

மேல்

#249
எனக்கு என யாவும் படைத்திட நாளும் இளைப்பொடு காலம்தனில் ஓயா
எடுத்திடு காயம்தனை கொடு மாயும் இலச்சை இலாது என் பவம் ஆற
உனை பல நாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார் தங்கு உளி மேவி
உணர்த்திய போதம்தனை பிரியாது ஒண் பொல சரண் நானும் தொழுவேனோ
வினை திறமோடு அன்று எதிர்த்திடும் வீரன் விழ கொடு வேள் கொன்றவன் நீயே
விளப்பு என மேல் என்று இடக்கு அயனாரும் விருப்புற வேதம் புகல்வோனே
சினத்தொடு சூரன்தனை கொடு வேலின் சிரத்தினை மாறும் முருகோனே
தினை புன மேவும் குறக்கொடியோடும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#250
எனை அடைந்த குட்ட வினை மிகுந்த பித்தம் எரி வழங்கும் வெப்பு வலி பேசா
இகலி நின்று அலைக்கும் முயலகன் குலைப்பொடு இருமல் என்று உரைக்கும் இவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள்தமை நினைந்து சுத்த மதி மயங்கி விட்டு மடியாதே
மருவி இன்று எனக்கு மரகதம் சிறக்கும் மயிலில் வந்து முத்தி தரவேணும்
நினை வணங்கு பத்தர் அனைவரும் தழைக்க நெறியில் நின்ற வெற்றி முனை வேலா
நிலைபெறும் திருத்தணியில் விளங்கு சித்ர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே
தினை விளங்கலுற்ற புன இளம் குறத்தி செயல் அறிந்து அணைக்கும் மணி மார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே

மேல்

#251
ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன் அவத்தினிலே
இறத்தல்கொலோ எனக்கு நீ தந்தை தாய் என்றே
இருக்கவும் நான் இப்படியே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில் படவோ நகைத்து அவர் கண்கள் காண
பாதம் வைத்திடு ஐயா தேரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா தகப்பன் முன் மைந்தன் ஓடி
பால் மொழி குரல் ஓலமிட்டிடில் யார் எடுப்பது எனா வெறுத்து அழ
பார் விடுப்பார்களோ எனக்கு இது சிந்தியாதோ
ஓதமுற்று எழு பால் கொதித்தது போல எட்டு திகை நீச முட்டரை
ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள் கோவே
ஓதம் மொய் சடை ஆட உற்று அமர் மான் மழு கரம் ஆட பொன் கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்த வாழ்வே
மா தினை புன மீது இருக்கு மை வாள் விழி குற மாதினை திரு
மார்பு அணைத்த மயூர அற்புத கந்த வேளே
மாரன் வெற்றி கொள் பூ முடி குழலார் வியப்புற நீடு மெய் தவர்
வாழ் திருத்தணி மா மலை பதி தம்பிரா¡னே

மேல்

#252
ஓலை இட்ட குழைச்சிகள் சித்திர ரூபம் ஒத்த நிறத்திகள் வில் கணையோடு
இணைத்த விழிச்சிகள் சர்க்கரை அமுதோடே
ஊறி ஒத்த மொழிச்சிகள் புட்குரலோடு வைத்து மிழற்றும் இடற்றிகள்
ஓசை பெற்ற துடிக்கொள் இடைச்சிகள் மணம் வீசும்
மாலை இட்ட கழுத்திகள் முத்து அணி வார் அழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தை அழித்திடு மட மாதர்
மார்பு அசைத்து மருட்டி இருட்டு அறை வா என பொருள் பற்றி முயக்கிடு
மாதருக்கு வருத்தம் இருப்பது தணியாதோ
வேலை வற்றிட நல் கணை தொட்டு அலை மீது அடைத்து தனி படை விட்டு உற
வீறு அரக்கன் முடித்தலை பத்தையும் மலை போலே
மீது அறுத்து நிலத்தில் அடித்து மெய் வேத லக்ஷுமியை சிறை விட்டு அருள்
வீர அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகை கொடி சித்திர
நீல ரத்தின மிக்க அற கிளி புதல்வோனே
நீறு அது இட்டு நினைப்பவர் புத்தியில் நேச மெத்த அளித்து அருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்பு உறை பெருமாளே

மேல்

#253
கச்சு அணி இள முலை முத்து அணி பல வகை கை சரி சொலி வர மயல் கூறி
கைப்பொருள் கவர்தரு மை பயில் விழியினர் கண் செவி நிகர் அல்குல் மட மாதர்
இச்சையில் உருகிய கச்சையன் அறிவிலி எச்சம் இல் ஒரு பொருள் அறியேனுக்கு
இ புவி மிசை கமழ் பொன் பத மலர் இணை இப்பொழுது அணுக உன் அருள்தாராய்
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை நச்சியே திருடிய குறையால் வீழ்
குற்கிரவினியொடு நல் திற வகை அறி கொற்றவ உவண மிசை வரு கேசன்
அ சுதை நிறை கடல் நச்சு அரவணை துயில் அச்சுதன் மகிழ் திரு மருகோனே
அப்பு அணி சடை அரன் மெச்சிய தணிமலை அப்பனே அழகிய பெருமாளே

மேல்

#254
கடல் செகத்து அடக்கி மற்று அடுத்தவர்க்கு இடுக்கணை கடைக்கணில் கொடுத்து அழைத்து இயல் காம
கலை கதற்று உரைத்து புட்குரல்கள் விட்டு உளத்தினை கரைத்து உடுத்த பட்டு அவிழ்த்து அணை மீதே
சடக்கென புக தனத்து அணைத்து இதழ் கொடுத்து முத்தமிட்டு இருள் குழல் பிணித்து உகிர் ஏகை
சளப்பட புதைத்து அடித்து இலை குண கடித்தட தலத்தில் வைப்பவர்க்கு இதப்படுவேனோ
இடக்கு அடக்கு மெய்ப்பொருள் திருப்புகழ்க்கு உயிர்ப்பு அளித்து எழில் தினை கிரி புறத்து உறை வேலா
இகல் செருக்கு அரக்கரை தகர்த்து ஒலித்து உரத்த பச்சிறைச்சியை பசித்து இரைக்கு இசை கூவும்
பெடை திரட்கு அளித்த குக்குட கொடி கரத்த பொய் பிதற்றல் அற படுத்து சற்குருவாய் முன்
பிறப்பிலிக்கு உணர்த்து சித்த உற்ற நெல் பெரு குவை பெருக்கு மெய் திருத்தணி பெருமாளே

மேல்

#255
கரி குழல் விரித்தும் புற கயல் விழித்தும் கரி குவடு இணைக்கும் தன பார
கரத்து இடு வளை சங்கிலி சரம் ஒலித்தும் கலை துகில் மினுக்யும் பணிவோரை
தரித்து உளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம் தவிர்த்து உனது சித்தம் களிகூர
தவ கடல் குளித்து இங்கு உனக்கு அடிமையுற்று உன் தலத்தினில் இருக்கும்படி பாராய்
புரத்தையும் எரித்து அம் கயத்தையும் உரித்து ஒண் பொடி பணி என் அப்பன் குருநாதா
புய பணி கடப்பம் தொடை சிகரம் உற்று இன் புகழ்ச்சி அமுத திண் புலவோனே
திரள் பரி கரிக்கும் பொடிப்பட அவுணர்க்கும் தெறிப்புற விடுக்கும் கதிர் வேலா
சிறப்பொடு குற பெண் களிக்கும் விசய தென் திருத்தணி இருக்கும் பெருமாளே

மேல்

#256
கலை மடவார்தம் சிலை அதனாலும் கன வளையாலும் கரை மேலே
கருகிய காளம் பெருகிய தோயம் கருது அலையாலும் சிலை ஆலும்
கொலை தரு காமன் பல கணையாலும் கொடி இடையாள் நின்று அழியாதே
குரவு அணி நீடும் புயம் அணி நீபம் குளிர் தொடை நீ தந்து அருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா
தினை வன மானும் கந வன மானும் செறிவுடன் மேவும் திரு மார்பா
தலமகள் மீது எண் புலவர் உலாவும் தணிகையில் வாழ் செம் கதிர் வேலா
தனியவர் கூரும் தனி கெட நாளும் தனி மயில் ஏறும் பெருமாளே

மேல்

#257
கவடுற்ற சித்தர் சட்சமய ப்ரமத்தர் நல் கடவுள் ப்ரதிஷ்டை பற்பலவாக
கருதி பெயர் குறித்து உரு வர்க்கம் இட்டு இடர் கருவில் புக பகுத்து உழல்வானேன்
சவடிக்கு இலச்சினைக்கு இரு கை சரிக்கும் மிக்க சரப்பளிக்கு என பொருள் தேடி
சகலத்தும் ஒற்றைப்பட்டு அயல்பட்டு நிற்கு நின் சரண ப்ரசித்தி சற்று உணராரோ
குவடு எட்டும் அட்டு நெட்டு வரி கணத்தினை குமுற கலக்கி விக்ரம சூரன்
குடலை புயத்தில் இட்டு உடலை தறித்து உருத்தி உதிரத்தினில் குளித்து எழும் வேலா
சுவடு உற்ற அற்புத கவலை புனத்தினில் துவலை சிமிழ்த்து நிற்பவள் நாண
தொழுது எத்து முத்த பொன் புரிசை செரும் தணி சுருதி தமிழ் கவி பெருமாளே

மேல்

#258
கனத்த அற பணைத்த பொன் கழை புய தன கிரி கனத்தை ஒத்து மொய்த்த மை குழலார்தம்
கறுத்த மை கணில் கருத்து வைத்து ஒருத்த நின் கழல் பதத்து அடுத்திடற்கு அறியாதே
இன பிணி கணத்தினுக்கு இருப்பு என துருத்தி ஒத்து இசைத்து அசைத்து சுக்கிலம் தசை தோலால்
எடுத்த பொய் கடத்தினை பொறுக்கு இ பிறப்பு அறுத்து எனக்கு நித்த முத்தியை தரவேணும்
பனை கர சினத்து இபத்தனை துரத்து அரக்கனை பயத்தினில் பயப்பட பொரும் வேலா
பருப்பத செருக்கு அற துகைக்கும் முள் பதத்தினை படைத்த குக்குட கொடி குமரேசா
தினை புன பருப்பதத்தினில் குடி குறத்தியை செருக்குற திரு புயத்து அணைவோனே
திரு புர புறத்து இயல் திரு தகு து நித்தில திரு திசை திருத்தணி பெருமாளே

மேல்

#259
கனைத்து அதிர்க்கும் இ பொங்கு கார் கடல் ஒன்றினாலே
கறுத்து அற சிவத்து அங்கி வாய்த்து எழு திங்களாலே
தனி கருப்பு வில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ
தினை புனத்தினை பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணி பதி குன்றின் மேல் திகழ் கந்த வேளே
பனை கர கயத்து அண்டர் போற்றிய மங்கை பாலா
படைத்து அளித்து அழிக்கும் த்ரிமூர்த்திகள் தம்பிரானே

மேல்

#260
கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள்
கெடு வியாதிகள் அடைவுடை உடலினர் விரகாலே
க்ருபையினாரொடு மணம் மிசை நழுவிகள் முழுது நாறிகள் இத மொழி வசனிகள்
கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள் பொருளாலே
பரிவு இலா மயல் கொடு சமர்புரிபவர் அதிகமா ஒரு பொருள் தருபவரொடு
பழைய பேர் என இதமுற அணைபவர் விழியாலே
பகழி போல் விடு வினை கவர் திருடிகள்தமை எணா வகை அறு கதி பெறும் வகை
பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே
அரி அராதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட உடன் முடுகியே
அசுரர் தூள்பட அயில் தொடும் அறுமுக இளையோனே
அரிய கானகம் உறை குறமகளிட கணவனாகிய அறிவு உள விதரண
அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே
தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர்
தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிதுற
தணிகை மா மலை மணி முடி அழகியல் பெருமாளே

மேல்

#261
கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை
கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள்தமை செறிதலுற்று அறிவு ஏதும்
அறிதல் அற்று அயர்தலுற்று அவிழ்தல் அற்று அருகலுற்று அறவு நெக்கு அழி கரு கடலூடே
அமிழ்தல் அற்று எழுதலுற்று உணர் நலத்து உயர்தலுற்று அடி இணைக்கு அணுகிட பெறுவேனோ
பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனைபேரும்
பொடிபட சிவ மண பொடி பரப்பிய திரு புகலியில் கவுணிய புலவோனே
தறி வளைத்துற நகை பொறி எழ புரம் எரித்தவர் திரு புதல்வ நல் சுனை மேவும்
தனி மண குவளை நித்தமும் மலர் தரு திரு தணியினில் சரவண பெருமாளே

மேல்

#262
குயில் ஒன்று மொழி குயில் நின்று அலைய கொலை இன்ப மலர் கணையாலே
குளிரும் தவள குல சந்த்ர ஒளி கொடி கொங்கையின் முத்து அனலாலே
புயல் வந்து எறி அ கடல் நின்று அலற பொரும் மங்கையர் உக்க அலராலே
புயம் ஒன்ற மிக தளர்கின்ற தனி புயம் வந்து அணைய கிடையாதோ
சயிலம் குலைய தடமும் தகர சமன் நின்று அலைய பொரும் வீரா
தரு மங்கை வன குற மங்கையர் மெய் தனம் ஒன்றும் அணி திரு மார்பா
பயிலும் ககன பிறை தண் பொழிலில் பணியும் தணிகை பதி வாழ்வே
பரமன் பணிய பொருள் அன்று அருளி பகர் செங்கழநி பெருமாளே

மேல்

#263
குருவி என பல கழுகு நரி திரள் அரிய வனத்து இடை மிருகம் என புழு
குறவை என கரி மரமும் என திரி உறவு ஆகா
குமரி கலி துறை முழுகி மன துயர் கொடுமை என பிணி கலகமிட திரி
குலையன் என புலை கலியன் என பலர் நகையாமல்
மருவு புயத்திடை பணிகள் அண பல கரி பரி சுற்றிட கலைகள் தரித்து ஒரு
மதனசரக்கு என கனக பலக்குடன் அது தேடேன்
வரிய பதத்தினின் அருவி இருப்பிடம் அமையும் எனக்கு இடம் உனது பத சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கு இனி அருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி என குகு என வெகு தாளம்
வெருவ முகிழ்த்து இசை உரகன் முடி தலை நெறுநெறு என திசை அதிர அடைத்திட
மிகுதி கெட பொரு அசுரர் தெறித்திட விடும் வேலா
அரிய திரிப்புரம் எரிய விழித்தவன் அயனை முடி தலை உரியும் மழு கையன்
அகிலம் அனைத்தையும் உயிரும் அளித்தவன் அருள் சேயே
அமணர் உடல் கெட வசியில் அழுத்தி விண் அமரர் கொடுத்திடும் அரிவை குறத்தியொடு
அழகு திருத்தணி மலையில் நடித்து அருள் பெருமாளே

மேல்

#264
குலைத்து மயிர் கலைத்து வளை கழுத்து மணி தன புரள குவித்த விழி கயல் சுழல பிறை போல
குனித்த நுதல் புரட்டி நகைத்து உருக்கி மயல் கொளுத்தி இணை குழை செவியில் தழைப்ப பொறி தன பாரம்
பொலித்து மத தரித்த கரி குவட்டு முலை பளப்பள என புனைத்த துகில் பிடித்த இடை பொதுமாதர்
புயத்தில் வளை பிலுக்கில் நடை குலுக்கில் அற பசப்பி மயல் புகட்டி தவத்து அழிப்பவருக்கு உறவாமோ
தல தநுவை குனித்து ஒரு முப்புரத்தை விழ கொளுத்தி மழு தரித்து புலி கரி துகிலை பரமாக
தரித்து தவ சுரர்கள் முதல் பிழைக்க மிடற்று அடக்கு விட சடை கடவுள் சிறக்க பொருள் பகர்வோனே
சிலுத்த அசுரர் கெலித்து மிக கொளுத்தி மறை துதிக்க அதில் செழிக்க அருள் கொடுத்த மணி கதிர் வேலா
தினை புனமில் குறத்தி மகள் தனத்தின் மயல் குளித்து மகிழ் திருத்தணியில் தரித்த புகழ் பெருமாளே

மேல்

#265
குவளை கணை தொட்ட அவனுக்கு முடி குடை இட்ட குறை பிறையாலே
குறுகுற்ற அலர் தெரிவைக்கு மொழி குயிலுக்கும் இனி தளராதே
இவளை துவள கலவிக்கு நயத்து இறுக தழுவி புயம் மீதே
இணையற்ற அழகில் புனைய கருணைக்கு இனிமை தொடையை தரவேணும்
கவள கரட கரி எட்டு அலற கனக கிரியை பொரும் வேலா
கருதி செயலை புயனுக்கு உருகி கலவிக்கு அணய அத்து எழு மார்பா
பவள தரள திரள குவை வெற்பு அவை ஒப்பு வயல் புறம் மீதே
பணில திரள் மொய்த்த திருத்தணிகை பதியில் குமர பெருமாளே

மேல்

#266
கூந்தல் அவிழ்த்து முடித்து மினுக்கிகள் பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
கோம்பு படைத்த மொழி சொல் பரத்தையர் புயம் மீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள் வாஞ்சையுற தழுவி சிலுகு இட்டவர்
கூன் பிறை ஒத்த நக குறி வைப்பவர் பல நாளும்
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர் ஆம் துணை அற்ற அழுகை குரல் இட்டவர்
ஈங்கிசை உற்ற அவல குண மட்டைகள் பொருள் தீரில்
ஏங்கி இடக்கடையில் தளி வைப்பவர் பாங்கு அகல கருணை கழல் பெற்றிட
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே
காந்தள் மலர் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து குரக்கு அரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் மருகோனே
காங்கிசை மிக்க மற கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான் கனி முற்கு இயல் கற்பக மை கரி இளையோனே
தேம் தினை வித்தினர் உற்றிட வெற்று இலை வேங்கை மரத்து எழிலை கொடு நிற்பவ
தேன் சொலியை புணர புனம் உற்று உறைகுவை வானம்
தீண்டு கழை திரள் உற்றது துற்றிடு வேங்கைதனில் குவளை சுனை சுற்று அலர்
சேர்ந்த திருத்தணிகை பதி வெற்பு உறை பெருமாளே

மேல்

#267
கூர் வேல் பழித்த விழியாலே மருட்டி முலை கோடால் அழைத்து மலர் அணை மீதே
கோபா இதழ் பருக மார்போடு அணைத்து கணை கோல் போல் சுழற்றி இடை உடை நாண
கார் போல் குழல் சரியவே வாய் அதட்டி இரு காதோலை இற்று விழ விளையாடும்
காமா மயக்கியர்களூடே களித்து நம கான் ஊர் உறை கலக கடல் போல
வீராணம் வெற்றி முரசோடே தவில் திமிலை வேதாகமத்து ஒலிகள் கடல் போல
வீறாய் முழக்க வரு சூரார் இறக்க விடும் வேலா திருத்தணியில் உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திரு செவியில் மா போதகத்தை அருள் குருநாதா
மாலோன் அளித்த வளியார் மால் களிப்ப வெகு மாலோடு அணைத்து மகிழ் பெருமாளே

மேல்

#268
கொந்து ஆர் குரா அடியினும் அடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறி பல
கொண்ட வேத நல் முடியினும் மருவிய குருநாதா
கொங்கில் ஏர் தரு பழநியில் அறுமுக செந்தில் காவல தணிகையில் இணையிலி
கொந்து கா என மொழி தர வரு சமய விரோத
தந்திரவாதிகள் பெற அரியது பிறர் சந்தியாதது தனது என வரும் ஒரு
சம்ப்ரதாயமும் இது என உரை செய்து விரை நீப
சஞ்சரீ கரகரம் முரல் தமனிய கிண்கிணீ முக இத பத உக மலர்
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே
சிந்துவாரமும் இதழியும் இள நவ சந்த்ரரேகையும் அரவமும் மணி தரு
செம் சடாதரர் திரு மகவு என வரு முருகோனே
செண்பக அடவியினும் இதணினும் உயர் சந்தன அடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும் வளை அணி புது வேயும்
இந்து வாள் முக வனசமும் ம்ருகமத குங்குமாசல உகளமும் மதுரித
இந்தளம் அம்ருத வசனமும் முறுவலும் அபிராம
இந்த்ரகோபமும் மரகத வடிவமும் இந்த்ரசாபமும் இரு குழையொடு பொரும்
இந்த்ரநீலமும் மடல் இடை எழுதிய பெருமாளே

மேல்

#269
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய்
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம் தகுத்தகு தகுத்தம் தன பேரி
தடுட்டுடு டுடுட்டுண்டு என துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர்
சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா
தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே

மேல்

#270
சின திலம் தினை சிறு மணல் அளவு உடர் செறித்தது எத்தனை சிலை கடலினில் உயிர்
செனித்தது எத்தனை திரள் கயல் என பல அது போதா
செமித்தது எத்தனை மலை சுனை உலகு இடை செழித்தது எத்தனை சிறு தனம் மயல் கொடு
செடத்தில் எத்தனை நமன் உயிர் பறி கொள்வது அளவு ஏதோ
மனத்தில் எத்தனை நினை கவடுகள் குடி கெடுத்தது எத்தனை மிருகமது என உயிர்
வதைத்தது எத்தனை அளவு இலை விதி கரம் ஒழியாமல்
வகுத்தது எத்தனை மசகனை முருடனை மடை குலத்தனை மதி அழி விரகனை
மலர் பதத்தினில் உருகவும் இனி அருள்புரிவாயே
தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதீதோ
தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித்த மத்தள தமருக விருது ஒலி கடல் போல
சினத்து அமர் களம் செரு திகழ் குருதி அதி இமிழ்த்திட கரி அசுரர்கள் பரி சிலை
தெறித்திட கழு நரி தின நிணம் மிசை பொரும் வேலா
செழிக்கும் உத்தம சிவ சரணர்கள் தவ முநி கணத்தவர் மது மலர் கொடு பணி
திருத்தணி பதி மருவிய குறமகள் பெருமாளே

மேல்

#271
சொரியு முகிலை பதும நிதியை சுரபி தருவை சமமாக
சொலியும் மனம் எள்தனையும் நெகிழ்வு இல் சுமடர் அருகுற்று இயல் வாணர்
தெரியும் அருமை பழைய மொழியை திருடி நெருடி கவி பாடி
திரியு மருள் விட்டு உனது குவளை சிகரி பகர பெறுவேனோ
கரிய புருவ சிலையும் வளைய கடையில் விடம் மெத்திய நீல
கடிய கணை பட்டு உருவ வெருவி கலைகள் பல பட்டன கானிற்கு
உரிய குமரிக்கு அபயம் என நெக்கு உபய சரணத்தினில் வீழா
உழையின் மகளை தழுவ மயலுற்று உருகும் முருக பெருமாளே

மேல்

#272
தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு
சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு தவ மூழ்கும்
தாற்பர்யம் அற்று உழல் பாவியை நா வலர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
சாற்று தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி
போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை மா மருள்
பூத்த மல த்ரய பூரியை நேரிய புலையேனை
போக்கி விட கடனோ அடியாரோடு போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது
போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள்புரிவாயே
மூக்கு அறை மட்டை மகா பல காரணி சூர்ப்பநகை படு மூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி
மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை
மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொடு முகிலே போய்
மா கன சித்திர கோபுர நீள் படை வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற
மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த மலர் கழுநீர் தரு நீள் சுனை
வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே

மேல்

#273
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் வறட்டு மோடியில் நித்த நடிப்பவர்
சிறக்க மேனி உலுக்கி மடக்கு கண் வலையாலே
திகைத்து உள் ஆவி கரைத்து மனத்தினில் இதத்தை ஓட விடுத்து மயக்கிடு
சிமிட்டு காம விதத்திலும் உட்பட அலைவேனோ
தரித்து நீறு பிதற்றிடு பித்தனும் இதத்து மா குடிலை பொருள் சொற்றிடு
சமர்த்த பால என புகழ் பெற்றிடு முருகோனே
சமப்ரவீண மதித்திடு புத்தியில் இரக்கமாய் வரு தற்பர சிற்பர
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா
வெருட்டு சூரனை வெட்டி ரண பெலி களத்திலே கழுதுக்கு இரை இட்டு இடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட
விதித்த வீர சமர்க்கள ரத்தமும் இரற்றி ஓட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல் செருகிட்டு உயிர் மொக்கிய மறவோனே
பெருக்கமோடு சரித்திடு மச்சமும் உளத்தின் மா மகிழ் பெற்றிட வற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும் ஒர் கழுநீரின்
பிணித்த போது வெடித்து ரச துளி கொடுக்கும் ஓடை மிகு திருத்தணி
பிறக்க மேவுற அ தலம் உற்று உறை பெருமாளே

மேல்

#274
துப்பு பார் அப்பு ஆடல் தீ மொய் கால் சொல் பா வெளி முக்குண மோகம்
துற்று ஆய பீறல் தோல் இட்டே சுற்றா மதன பிணி தோயும்
இ பாவ காயத்து ஆசைப்பாடு எற்றே உலகில் பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா எட்டா அருளை தரவேணும்
தப்பாமல் பாடி சேவிப்பார் தத்தாம் வினையை களைவோனே
தற்கு ஆழி சூர் செற்றாய் மெய் போதத்தாய் தணிகை தனி வேலா
அ பாகை பாலை போல் சொல் காவல் பாவை தனத்து அணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா அப்பா குமர பெருமாளே

மேல்

#275
தொக்கு அறா குடில் அசுத்தம் ஏற்ற சுக துக்கம் மால் கடம் மும்மல மாயை
துற்ற கால் பதலை சொல்படா குதலை துப்பு இலா பல சமய நூலை
கைக்கொளா கதறுகை கொளா ஆக்கை அவல புலால் தசை குருதியாலே
கட்டு கூட்டு அருவருப்பு வேட்டு உழல சட்ட வாக்கு அழிவது ஒரு நாளே
அக்கு அரா பொடியின் மெய்க்கு இடா குரவர் அர்ச்சியா தொழும் முநிவனாய்
அப்ப போர் பன்னிரு வெற்ப பூ தணியல் வெற்ப பார்ப்பதி நதி குமாரா
இக்கண் நோக்குறில் நிருத்த நோக்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே

மேல்

#276
தொட துளக்கிகள் அபகட நினைவிகள் குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதை சிறுக்கிகள் குசலிகள் இசலிகள் முழு மோச
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழு புரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலை முலை இன வலை புகுதாமல்
அடைத்தவர்க்கு இயல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறம் என வர உடன்
அழைத்து சக்கிர கிரி வளை படி கொடு விளையாடி
அவத்தை தத்துவம் அழிபட இருளறை விலக்குவித்து ஒரு சுடர் ஒளி பரவ நல
அருள் புகட்டி உன் அடி இணை அருளுவது ஒரு நாளே
படைத்து அனைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபி ஒர்
பரத்தின் உச்சியில் நட நவில் உமை அருள் இளையோனே
பகைத்த அரக்கர்கள் யமன் உலகு உற அமர் தொடுத்த சக்கிர வளை கரம் அழகியர்
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் மருகோனே
திடுக்கிட கடல் அசுரர்கள் முறிபட கொளு திசை கிரி பொடிபட சுடர் அயில்
திருத்தி விட்டு ஒரு நொடியினில் வலம்வரு மயில் வீரா
தினை புனத்து இரு தன கிரி குமரி நல் குறத்தி முத்தோடு சசி மகளோடு புகழ்
திருத்தணி பதி மலை மிசை நிலைபெறு பெருமாளே

மேல்

#277
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமானது என பல பேசி அதனூடே
நெடுநாளும் உழைப்பு உளதாகி பெரியோர்களிடை கரவாகி நினைவால் நின் அடி தொழில் பேணி துதியாமல்
தலையான உடல் பிணி ஊறி பவ நோயின் அலை பல வேகி சலமான பயித்தியமாகி தடுமாறி
தவியாமல் பிறப்பையும் நாடி அது வேரை அறுத்து உனை ஓதி தலம் மீதில் பிழைத்திடவே நின் அருள்தாராய்
கலியாண சுபுத்திரன் ஆக குற மாதுதனக்கு விநோத கவின் ஆரு புயத்தில் உலாவி விளையாடி
களிகூரும் உனை துணை தேடும் அடியேனை சுகப்படவே கடன் ஆகும் இது கனம் ஆகும் முருகோனே
பலகாலும் உனை தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி படி மீது துதித்துடன் வாழ அருள் வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகம் என பரிவு ஏறு பவ ரோக வயித்திய நாத பெருமாளே

மேல்

#278
நினைத்தது எத்தனையில் தவறாமல் நிலைத்த புத்திதனை பிரியாமல்
கனத்த தத்துவம் உற்று அழியாமல் கதித்த நித்திய சித்த அருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே மதித்த முத்தமிழில் பெரியோனே
செனித்த புத்திரரில் சிறியோனே திருத்தணி பதியில் பெருமாளே

மேல்

#279
பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல் பேணி
பழைய வேதமும் புதிய நூல்களும் பல புராணமும் சில ஓதி
அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து அறிவிலேன் அழிந்திடலாமோ
சகல லோகமும் புகல நாள்தொறும் சறுகு இலாத செங்கழுநீரும்
தளவு நீபமும் புனையும் மார்ப தென் தணிகை மேவு செம் கதிர் வேலா
சிகர பூதரம் தகர நான்முகன் சிறுகு வாசவன் சிறை மீள
திமிர சாகரம் கதற மா மரம் சிதற வேல் விடும் பெருமாளே

மேல்

#280
பருத்த பல் சிரத்தினை குரு திறல் கரத்தினை பரித்த அ பதத்தினை பரிவோடே
படைத்த பொய் குடத்தினை பழிப்பு அவத்து இடத்தினை பசி குடல் கடத்தினை பயம் மேவும்
பெருத்த பித்த உருத்தனை கிருத்திம துருத்தியை பிணித்த முக்குறத்தொடு ஐம்புலனாலும்
பிணித்த இ பிணி பையை பொறுத்து அமிழ் பிறப்பு அற குறி கருத்து எனக்கு அளித்து அருள்வாயே
கருத்தில் உற்று உரைத்த பத்தரை தொறுத்து இருக்கரை கழித்த மெய் பதத்தில் வைத்திடு வீரா
கதித்த நல் தினை புன கதித்த நல் குறத்தியை கதித்த நல் திரு புயத்து அணைவோனே
செரு தெறுத்து எதிர்த்த முப்புரத்து அரக்கரை சிரித்து எரித்த நித்தர் பொன் குமரேசா
சிறப்புற பிரித்து அறம் திற தமிழ்க்கு உயர் திசை சிறப்பு உடை திருத்தணி பெருமாளே

மேல்

#281
பழமை செப்பி அழைத்து இதமித்துடன் முறை மசக்கி அணைத்து நக குறி
பட அழுத்தி முகத்தை முகத்துற உறவாடி
பதறி எச்சிலை இட்டு மருத்து இடு விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பல விதத்திலும் அற்பர் என சொல்லும் மட மாதர்
அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனை பழியுற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது என பெரு வெட்ட வெளிப்படும்
அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே
குழி விழி பெரு நெட்டு அலகை திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு
குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன்
குருதி கக்கி அதிர்த்து விழ பொரு நிசிசர படை பொட்டு எழ விக்ரம
குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா
தழை உடுத்த குறத்தி பத துணை வருடி வட்ட முக திலத குறி
தடவி வெற்றி கதித்த முலை குவடு அதன் மீதே
தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணி மலை சிகரத்திடை உற்று அருள் பெருமாளே

மேல்

#282
புருவ நெறித்து குறு வெயர்வுற்று புளகித வட்ட தன மானார்
பொரு விழியில் பட்டவரோடு கட்டி புரளும் அசட்டு புலையேனை
கரு விழி உற்று குரு மொழி அற்று கதிதனை விட்டிடு தீய
கயவனை வெற்றி புகழ் திகழ் பத்ம கழல்கள் துதிக்க கருதாதோ
செரு அசுர பொய் குலம் அது கெட்டு திரை கடல் உட்க பொரும் வேலா
தினை வனம் உற்று குறவர் மட பைம் கொடி தன வெற்பை புணர் மார்பா
பெருகிய நித்த சிறுபறை கொட்டி பெரிகை முழக்க புவி மீதே
பிரபலம் உள் சுத்த தணி மலை உற்று பிரியம் மிகு சொக்க பெருமாளே

மேல்

#283
பூசல் இட்டு சரத்தை நேர் கழித்து பெருத்த போர் விடத்தை கெடுத்து வடி கூர் வாள்
போல முட்டி குழைக்குள் ஓடி வெட்டி தொளைத்து போக மிக்க பரிக்கும் விழியார் மேல்
ஆசை வைத்து கலக்க மோகமுற்று துயர்க்குள் ஆகி மெத்த களைத்து உள் அழியாமே
ஆரணத்து கண் நத்து நாள்மலர் பொன் பதத்தை யான் வழுத்தி சுகிக்க அருள்வாயே
வாசமுற்று தழைத்த தாள் இணை பத்தர் அத்த மாதர்கள் கண் சிறைக்குள் அழியாமே
வாழ்வுற புக்கி ரத்ன ரேகை ஒக்க சிறக்கும் மா மயில் பொன் கழுத்தில் வரும் வீரா
வீசும் முத்து தெறிக்க ஓலை புக்குற்று இருக்கும் வீறு உடை பொன் குறத்தி கணவோனே
வேல் எடுத்து கரத்தில் நீல வெற்பில் தழைத்த வேள் என சொல் கருத்தர் பெருமாளே

மேல்

#284
பெருக்க உபாயம் கருத்து உடையோர் தம் ப்ரபு தன பாரங்களிலே
சம்ப்ரமத்துடன் நாளும் ப்ரமித்து இருள் கூரும் ப்ரிய கடல் ஊடும் தணியாத
கரு கடலூடும் கதற்றும் அநேகம் கலை கடலூடும் சுழலாதே
கடப்பு அலர் சேர் கிண்கிணி ப்ரபை வீசும் கழல் புணை நீ தந்து அருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளும் சதுர்த்தச லோகங்களும் வாழ
சமுத்திரம் ஏழும் குல கிரி ஏழும் சளப்பட மாவும் தனி வீழ
திரு கையில் வேல் ஒன்று எடுத்து அமர் ஆடும் செருக்கு மயூரம்தனில் வாழ்வே
சிறப்பொடு ஞான தமிழ் த்ரயம் நீடும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#285
பொரியப்பொரிய பொலி முத்து வட துகளில் புதை அ தனம் மீதே
புரளப்புரள கறுவி தறுகண் பொரு வில் சுறவை கொடி வேள் தோள்
தெரி வைக்கு அரிவை பரவைக்கு உருகி செயல் அற்றனள் கற்பு அழியாதே
செறிவுற்று அணையில் துயிலுற்று அருமை தெரிவைக்கு உணர்வை தரவேணும்
சொரி கற்பக நல் பதியை தொழு கை சுரருக்கு உரிமை புரிவோனே
சுடர் பொன் கயிலை கடவுட்கு இசைய சுருதி பொருளை பகர்வோனே
தரி கெட்டு அசுர படை கெட்டு ஒழிய தனி நெட்டு அயிலை தொடும் வீரா
தவள பணில தரள பழன தணிகை குமர பெருமாளே

மேல்

#286
பொரு வி கந்தொடு அடர் செரு இக்கன் தொடும் இ புதுமை புண்டரிக கணையாலே
புளக கொங்கை இடத்து இளக கொங்கை அனல் பொழிய தென்றல் துரக்குதலாலே
தெரிவில் பெண்கள் மிக கறுவி சண்டையிட திரிய திங்கள் உதிப்பதனாலே
செயல் அற்று இங்கு அணையில் துயில் அற்று அஞ்சி அயர்த்து தெரிவைக்கு உன் குரவை தரவேணும்
அருவி குன்று அடைய பரவி செந்தினை வித்த அருமை குன்றவருக்கு எளியோனே
அசுரர்க்கு அங்கு அயல் பட்டு அமரர்க்கு அண்டம் அளித்து அயில் கை கொண்ட திறல் குமரேசா
தரு வைக்கும் பதியில் திருவை சென்று அணுகி தழுவி கொண்ட புய திரு மார்பா
தரள சங்கு வயல் திரளில் தங்கு திரு தணிகை செங்கழுநி பெருமாளே

மேல்

#287
பொன் குடம் ஒத்த குயத்தை அசைப்பவர் கை பொருள் புக்கிடவே தான்
புட்குரல் விச்சை பிதற்றும் மொழிச்சியர் பொட்டு அணி நெற்றியர் ஆனோர்
அற்ப இடை கலை சுற்றி நெகிழ்ப்பவர் அற்பர் அ மட்டைகள் பால் சென்று
அ கண் வலைக்குள் அகப்படு புத்தியை அற்றிட வைத்து அருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளி ஒத்து இடக்கை முழக்கு ஒலி ஆல
கொக்கு இறகு அக்கு அர மத்தம் அணிக்கு அருள் குத்தம் தணி குமரேசா
சர்க்கரை முப்பழம் ஒத்த மொழிச்சி குறத்தி தன கிரி மேலே
தைக்கும் மனத்த சமர்த்த அரக்கர் தலை குலை கொத்திய வேளே

மேல்

#288
பொன் பதத்தினை துதித்து நல் பதத்தில் உற்ற பத்தர் பொற்பு உரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தக பிதற்றை விட்டு வித்து அகத்து உனை துதிக்க புத்தியில் கலக்கம் அற்று நினையாதே
முற்பட தலத்து உதித்து பின் படைத்த அகிர்த்தியம் முற்றி முன் கடை தவித்து நித்தம் உழல்வேனை
முட்ட இ கடை பிறப்பினுள் கிடப்பதை தவிர்த்து முத்தி சற்று எனக்கு அளிப்பது ஒரு நாளே
வெற்பு அளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்று அளித்த வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில் வீரா
வித்தை தத்வ முத்தமிழ் சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும் மெய் திருத்தணி பொருப்பில் உறைவோனே
கற்பக புன குறத்தி கச்சு அடர்த்த சித்ரம் முற்ற கற்புர திரு தனத்தில் அணைவோனே
கைத்து அரக்கர் கொத்து உக சினத்து வஜ்ரனுக்கு அமைத்த கைத்து ஒழித்து அறித்து விட்ட பெருமாளே

மேல்

#289
மரு குலம் மேவும் குழல் கனி வாய் வெண் மதி பிளவு ஆகும் நுதலார்தம்
மயக்கினிலே நண்புறப்படுவேன் உன் மலர் கழல் பாடும் திற நாடா
தருக்கன் உதார துணுக்கிலி லோபன் சமத்து அறியா அன்பிலி மூகன்
தலத்தினிலே வந்து உற பணியாதன் தனக்கு இனியார்தம் சபை தாராய்
குருக்குல ராஜன்தனக்கு ஒரு தூதன் குறள் பெல மாயன் நவ நீதம்
குறித்து அயில் நேயன் திரு பயில் மார்பன் குண த்ரய நாதன் மருகோனே
திரு குள நாளும் பல திசை மூசும் சிறப்பு அது உறா எண் திசையோடும்
திரை கடல் சூழும் புவிக்கு உயிராகும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#290
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர் மதி முகத்தியர் அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர் மனது உருக்கிகள் அணை மீதே
கலை நெகிழ்த்தியே உறவு அணைத்திடு கலவியில் துவள் பிணி தீரா
கசடனை குண அசடனை புகல் கதியில் வைப்பதும் ஒரு நாளே
குல கிரி குலம் உருவ விட்டவர் குலவு சித்திர முனை வேலா
குறவர் பெற்றிடு சிறுமியை புணர் குமர சற்குண மயில் வீரா
தலம்அதில் புகல் அமரர் உற்ற இடர்தனை அகற்றிய அருளாளா
தரு நிரைத்து எழு பொழில் மிகுத்திடு தணி மலைக்கு உயர் பெருமாளே

மேல்

#291
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள் விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் விதமாக
முழித்து மயல் கொளும் அறிவிலி நெறியிலி புழு குடலை பொருள் என மிக எணியவர்
முயக்கம் அடுத்து உழிதரும் அடியவன் இடர் ஒழிவாக
மிகுத்த அழகை பெறும் அறுமுக சரவண புயத்து இளகி கமழ் நறை மலர் தொடை மிக
விசை கொடுமை பெறு மரகத கலபியும் வடி வேலும்
வெளிப்பட எனக்கு இனி இரவோடு பகல் அற திரு பதிய புகழ் அமுது இயல் கவி சொலி
விதி தன் எழுத்து இனைதர வரும் ஒரு பொருள் அருளாயோ
புகைத்த அழலை கொடு திரிபுரம் எரிபட நகைத்தவருக்கு இடம் உறைபவள் வலைமகள்
பொருப்பில் இம கிரி பதி பெறும் இமையவள் அபிராமி
பொதுவுற்று திமித்திமி நடமிடு பகிரதி எழுத்து அறி ருத்திரி பகவதி கவுரி கை
பொருள் பயனுக்கு உரை அடுகிய சமைபவள் அமுதாக
செகத்தை அகடு இட்டிடு நெடியவர் கடையவள் அறத்தை வளர்த்திடு பர சிவை குலவதி
திற தமிழை தரு பழையவள் அருளிய சிறியோனே
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில் அயில் கொடு பொருது இமையவர் பணி
திருத்தணி பொன் பதிதனில் மயில் நடவிய பெருமாளே

மேல்

#292
முகிலும் இரவியும் முழு கதிர் தரளமும் முடுகு சிலை கொடு கணை விடு மதனனும்
முடிய ஒரு பொருள் உதவிய புதல்வனும் என நாடி
முதிய கனன் என தெய்வ தரு நிகர் என முதலை மடுவினில் அதவிய புயல் என
முகமும் அறு முகமும் உடையவன் இவன் என வறியோரை
சகல பதவியும் உடையவர் இவர் என தனிய தநு வல விஜயவன் இவன் என
தபனன் வலம் வரு கிரிதனை நிகர் என இசை பாடி
சயில பகலவர் இடைதொறு நடை செய்யும் இரவு தவிரவே இரு பதம் அடையவே
சவித அடியவர் தவம் அதில் வர அருள்புரிவாயே
அகில புவனமும் அடைவினில் உதவிய இமய கிரி மயில் குல வரை தநு என
அதிகை வரு புர நொடியினில் எரி செய்த அபிராமி
அமரும் இடன் அனல் எனும் ஒரு வடிவுடை அவன் இல் உரையவன் முது தமிழ் உடையவன்
அரியோடு அயன் உலகு அரியவன் நவில் சிவன் வாழ்வே
திகிரி நிசிசரர் தடம் முடி பொடி பட திரைகள் எறி கடல் சுவறிட களம் மிசை
திரடு குறடுகள் புரள் வெகு குருதிகள் பெருகி ஆறா
சிகர கிரி நெரிபட படை பொருது அருள் திமிர தினகர குருபர இள மயில்
சிவணி வரும் ஒரு தணிகையில் நிலை திகழ் பெருமாளே

மேல்

#293
முடித்த குழலினர் வடித்த மொழியினர் முகத்தில் இலகிய விழியாலும்
முலை கிரிகள் மிசை அசைத்த துகிலினும் இளைத்த இடையினும் மயலாகி
படுத்த அணைதனில் அணைத்த அவரோடு படிக்குள் அநுதினம் உழலாதே
பருத்த மயில் மிசை நினைத்த பொழுது உன பதத்து மலர் இணை அருள்வாயே
துடித்து தசமுகன் முடி தலைகள் விழ தொடுத்த சரம் விடு ரகுராமன்
துகைத்து உலகை ஒரு அடிக்கு அளவிடு துலக்க அரி திரு மருகோனே
தடத்துள் உறை கயல் வயற்குள் எதிர்ப்படு தழைத்த கதலிகள் அவை சாய
தருக்கும் எழிலுறு திரு தணிகையினில் தழைத்த சரவண பெருமாளே

மேல்

#294
முத்து தெறிக்க வளர் இக்கு சிலை கை மதன் முட்ட தொடுத்த மலராலே
முத்த திரு சலதி முற்ற உதி தீ என முற்பட்டு எறிக்கு நிலவாலே
எ தத்தையர்க்கும் மிதம் மிக்கு பெருக்க மணி இ பொன் கொடிச்சி தளராதே
எ திக்கும் உற்ற புகழ் வெற்றி திருத்தணியில் இற்றை தினத்தில் வரவேணும்
மெத்த சினத்து வட திக்கு குல சிகர வெற்பை தொளைத்த கதிர் வேலா
மெச்சி குறத்தி தனம் இச்சித்து அணைத்து உருகி மிக்கு பணைத்த மணி மார்பா
மத்த ப்ரமத்தர் அணி மத்த சடை பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணிந்த பெருமாளே

மேல்

#295
முலை புளகம் எழ அம் கை மருவு வளை கொஞ்ச முகில் அளகம் அகில் பொங்க அமுதான
மொழி பதறவு அருமந்த விழி குவிய மதி கொண்ட முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே
கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர்
கலவி கரை அழி இன்ப அலையில் அலை படுகின்ற கவலை கெட நினது அன்பு பெறுவேனோ
அலை எறியும் எழில் சண்ட உததி வயிறு அழல் மண்ட அதிர வெடிபட அண்டம் இமையோர்கள்
அபயம் என நடு நின்ற அசுரர் அடி உண்டு அவர்கள் முனை கெட நின்று பொரும் வேலா
தலை மதிய நதி தும்பை இள அறுகு கமழ் கொன்றை சடை முடியில் அணிகின்ற பெருமானார்
தரு குமர விட ஐந்து தலை அரவு தொழுகின்ற தணி மலையில் உறைகின்ற பெருமாளே

மேல்

#296
மொகுமொகு என நறை கொள் மலர் வற்கத்தில் அற்புடைய முளரி மயில் அனையவர்கள் நெய்த்து கறுத்து மழை
முகில் அனைய குழல் சரிய ஒக்க கனத்து வளர் அதி பார
முலை புளகம் எழ வளைகள் சத்திக்க முத்த மணி முறுவல் இள நிலவு தர மெத்த தவித்த சில
மொழி பதற இடை துவள வட்ட சிலை புருவ இணை கோட
அகில் மிருக மத சலிலம் விட்டு பணித்த மலர் அமளிபட ஒளி விரவு ரத்ந ப்ரபை குழையொடு
அமர் பொருத நெடி விழி செக்கச்சிவக்க அமர மத நீதி
அடல் வடிவு நலம் இதனில் மட்க செருக்கி உளம் உருக நரை பெருக உடல் ஒக்க பழுத்து விழும்
அளவில் ஒரு பரம வெளியில் புக்கு இருக்க எனை நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி எனவே நீள்
சதி முழவு பலவும் இரு பக்கத்து இசைப்ப முது சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர்
தணிகை மலைதனில் மயிலில் நிர்த்தத்தனில் நிற்க வல பெருமாளே

மேல்

#297
வங்கம் பெறுகிட கடல் எங்கும் பொரு திரை வந்து உந்தி அதிரும் அதனாலே
வஞ்சம் பெறு திட நெஞ்சன் தழலுற அஞ்சு அம்பு அதும் விடு மதனாலே
பங்கம்படும் எனது அங்கம்தனில் உதி பண்பு ஒன்றிய ஒரு கொடியான
பஞ்சு ஒன்றிய மயில் நெஞ்சு ஒன்றியெ அழல் பொன்றும் தனிமையை நினையாயோ
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே
தெந்தெம் தெனதென என்று அண்டுற அளி நின்றும் திகழ்வோடு மயில் ஆட
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள் என்றும் புகழ் பெற மலர் ஈனும்
பொன் தென் தணிகையில் நின்று அங்கு எழு புவி என்றும் செய வல பெருமாளே

மேல்

#298
வட்ட வாள் தன மனைச்சி பால் குதலை மக்கள் தாய் கிழவி பதி நாடு
வைத்த தோட்டம் மனை அத்தம் ஈட்டு பொருள் மற்ற கூட்டம் அறிவு அயலாக
முட்ட ஓட்டி மிக எட்டும் மோட்டு எருமை முட்டர் பூட்டி எனை அழையா முன்
முத்தி வீடு அணுக முத்தர் ஆக்க சுருதி குராக்குள் ஒளிர் இரு கழல் தாராய்
பட்ட நால் பெரும் மருப்பினால் கர இபத்தின் வாள் பிடியின் மணவாளா
பச்சை வேய் பணவை கொச்சை வேட்டுவர் பதிச்சி தோள் புணர் தணியில் வேளே
எட்டு நால் கர ஒருத்தல் மா திகிரி எட்டும் மாக்குலைய எறி வேலா
எத்திடார்க்கு அரிய முத்த பா தமிழ் கொண்டு எத்தினார்க்கு எளிய பெருமாளே

மேல்

#299
வரி கலையின் நிகரான விழி கடையில் இளைஞோரை மயக்கிவிடும் மடவார்கள் மயலாலே
மதி குளறி உள காசும் அவர்க்கு உதவி மிடியாகி வயிற்றில் எரி மிக மூள அதனாலே
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி ஒருத்தர்தமை மிக நாடி அவரோடே
உணக்கை இடு படுபாவி எனக்கு உனது கழல் பாட உயர்ச்சி பெறு குண சீலம் அருள்வாயே
விரித்து அருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை மிகுத்த பலமுடன் ஓத மகிழ்வோனே
வெடித்து அமணர் கழுவேற ஒருத்தி கணவனும் மீள விளைத்தது ஒரு தமிழ் பாடு புலவோனே
செருக்கி இடு பொரு சூரர் குலத்தை அடி அற மோது திரு கையினில் வடி வேலை உடையோனே
திரு உலவும் ஒரு நீல மலர் சுனையில் அழகான திரு தணிகை மலை மேவு பெருமாளே

மேல்

#300
வாருற்று எழும் பூண் முலை வஞ்சியர் காருற்று எழும் நீள் குழல் மஞ்சியர்
வால குயில் போல் மொழி கொஞ்சியர் தெரு மீதே
மாணுற்று எதிர் மோகன விஞ்சையர் சேலுற்று எழு நேர் விழி விஞ்சியர்
வாக குழையாம் அபரஞ்சியர் மயலாலே
சீருற்று எழும் ஞானமுடன் கல்வி நேர் அற்றவர் மால் கொண்டு மயங்கியே
சேருற்று அறிவானது அழிந்து உயிர் இழவா முன்
சேவல் கொடியோடு சிகண்டியின் மீதுற்று அறிஞோர் புகழ் பொங்கிய
தேசு கதிர் கோடி எனும் பதம் அருள்வாயே
போருற்றிடு சூரர் சிரங்களை வீரத்தொடு பாரில் அரிந்து எழு
பூத கொடி சோரி அருந்திட விடும் வேலா
பூக குலையே விழ மென் கயல் தாவ குலை வாழைகளும் செறி
போக செநெலே உதிரும் செய்கள் அவை கோடி
சாரல் கிரிதோறும் எழும் பொழில் தூர தொழுவார் வினை சிந்திடு
தாதுற்று எழு கோபுர மண்டபம் அவை சூழ
தார் மெத்திய தோரண மென் தெரு தேர் சுற்றிய வார் பதி அண்டர்கள்
தாம் மெச்சிய நீள் தணி அம் பதி பெருமாளே

மேல்

#301
வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர் ஆகும் விழி மாதர்
மிக பல மானம்தனில் புகுதா வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி
கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கரு குழிதோறும் கவிழாதே
கலை புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும் கலை தாராய்
புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியை புணர் வாகம் புய வேளே
பொருப்பு இரு கூறும்பட கடல்தானும் பொருக்க எழ வானும் புகை மூள
சினத்தொடு சூரன் கன திணி மார்பம் திறக்க அமர் ஆடும் திறல் வேலா
திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும் பெருமாளே

மேல்

#302
வெற்றி செய உற்ற கழை வில் குதை வளைத்து மதன் விட்ட கணை பட்ட விசையாலே
வெட்ட வெளியில் தெருவில் வட்ட பணையில் கனல் விரித்து ஒளி பரப்பும் மதியாலே
பற்றி வசை கற்ற பல தத்தையர் தமக்கும் இசை பட்ட திகிரிக்கும் அழியாதே
பத்தியை எனக்கு அருளி முத்தியை அளித்து வளர் பச்சை மயில் உற்று வரவேணும்
நெற்றி விழி பட்டு எரிய நட்டமிடும் உத்தமர் நினைக்கும் மனம் ஒத்த கழல் வீரா
நெய் கமல மொக்கு முலை மெய் குறவி இச்சையுற நித்தம் இறுக தழுவும் மார்பா
எற்றிய திரு சலதி சுற்றிய திருத்தணியில் எப்பொழுது நிற்கும் முருகோனே
எட்டு அசலம் எட்ட நிலம் முட்ட முடி நெட்ட சுரர் இட்ட சிறை விட்ட பெருமாளே

மேல்

#303
அதிரும் கழல் பணிந்து உன் அடியேன் உன் அபயம் புகுவது என்று நிலை காண
இதயம்தனில் இருந்து க்ருபை ஆகி இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிர் அங்கு ஒருவர் இன்றி நடமாடும் இறைவன் தனது பங்கில் உமை பாலா
பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே

மேல்

#304
எழு திகழ் புவனம் நொடி அளவுதனில் இயல் பெற மயிலில் வருவோனே
இமையவர் பரவி அடி தொழ அவுணர் மடிவுற விடுவது ஒரு வேலா
வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழிபட மொழியும் முருகேசா
மலர் அடி பணியும் மடமகள் பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான்
முழுகிய புனலில் இன மணி தரளம் முறுகிடு பவனம் மிக வாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியும் முது மலை அழக குருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில் படிபவர் இதயம் உறு கோவே
பரு வரை துணிய ஒரு கணை தெரிவ பல மலை உடைய பெருமாளே

மேல்

#305
தறையில் மானுடர் ஆசையினால் மடல் எழுது மால் அருள் மாதர்கள் தோதக
சரசர் மா மலர் ஓதியினால் இரு கொங்கையாலும்
தளர் மின் நேர் இடையால் உடையால் நடை அழகினால் மொழியால் விழியால் மருள்
சவலை நாய் அடியேன் மிக வாடி மயங்கலாமோ
பறவையான மெய் ஞானிகள் மோனிகள் அணுக ஒணா வகை நீடும் இராசிய
பவன பூரக ஏகிகமாகிய விந்து நாதம்
பகரொணாதது சேரவொணாதது நினையொணாதது ஆன தயாபர
பதியது ஆன சமாதி மனோலயம் வந்து தாராய்
சிறை விடாத நிசாசரர் சேனைகள் மடிய நீல கலாபம் அது ஏறிய
திறல் விநோத சமேள தயாபர அம்புராசி
திரைகள் போல் அலை மோதிய சீதள குடக காவிரி நீள் அலை சூடிய
திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும்
மறவர் நாயக ஆதி விநாயகர் இளைய நாயக காவிரி நாயக
வடிவின் நாயக ஆனைதன் நாயக எங்கள் மானின்
மகிழு நாயக தேவர்கள் நாயக கவுரி நாயகனார் குரு நாயக
வடிவதாம் மலை யாவு மேவிய தம்பிரானே

மேல்

#306
வஞ்சக லோப மூடர்தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின்
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்
செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
பண்பறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்றுதோறாடல் மேவு பெருமாளே

மேல்

#307
அலை கடல் நிகர் ஆகிய விழி கொடு வலை வீசிகள் அபகடம் மக பாவிகள் விரகாலே
அதி வித மதரா அதம் அநித மொழி பல கூறிகள் அசடர் ஒடு உறவாடிகள் அநியாய
கலை பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள் கருதிடு கொடியாருடன் இனிதாக
கன தன முலை மேல் விழு கபடனை நிரு மூடனை கழல் இணை பெற அருள்வாயே
அலை புனல் தலை சூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா
அசுரர்கள் குடியே கெட அமரர்கள் பதியே பெற அதிரிடும் வடி வேல் விடும் அதி சூரா
தலைய அயன் அறியா ஒரு சிவ குரு பரனே என தரணியில் அடியார் கண நினைவாகா
சகலமும் முதலாகிய அறுபதி நிலை மேவிய தட மயில்தனில் ஏறிய பெருமாளே

மேல்

#308
ஈனம் மிகுத்துள பிறவி அணுகாதே
யானும் உனக்கு அடிமை என வகையாக
ஞான அருள்தனை அருளி வினை தீர
நாணம் அகற்றிய கருணைபுரிவாயே
தான தவத்தினின் மிகுதி பெறுவோனே
சாரதி உத்தமி துணைவ முருகோனே
ஆன திருப்பதிகம் அருள் இளையோனே
ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே

மேல்

#309
அதி மதம் கக்க அப்பக்கம் உக குஞ்சரி தனம் தைக்க சிக்கென நெக்கு அங்கு
அணை தரும் செச்சை புயன் அத்தன் குற வாணர்
அடவி அம் தத்தைக்கு எய்த்து உருகி சென்று அடி படிந்திட்ட பட்டு மயல் கொண்டு
அயர்பவன் சத்தி கைத்தலம் நித்தன் குமரேசன்
துதி செயும் சுத்த பத்தியர் துக்கம் களைபவன் பச்சைப்பக்ஷி நடத்தும்
துணைவன் என்று அர்ச்சித்து இச்சை தணித்து உன் புகழ்பாடி
சுருதியின் கொத்து பத்தியும் முற்றும் துரியமும் தப்பி தத்வம் அனைத்தும்
தொலையும் அந்தத்துக்கு அப்புறம் நிற்கும்படி பாராய்
கதி பொருந்த கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு சக்ரம் எடுக்கும்
கடவுளும் பத்ம தச்சனும் உட்கும்படி மோதி
கதிரவன் பல் குற்றி குயிலை திண் சிறகு அரிந்து எட்டு திக்கர் வகுக்கும்
கடகமும் தட்டுப்பட்டு ஒழிய கொன்ற அபிராமி
பதிவ்ரதம் பற்ற பெற்ற மகம் பெண் பரிவு ஒழிந்து அக்கிக்கு உட்படு தக்கன்
பரிபவம்பட்டு கெட்டு ஒழிய தன் செவி போய் அ
பனவி பங்கப்பட்டு அப்படி வெட்கும்படி முனிந்து அற்றை கொற்றம் விளைக்கும்
பரமர் வந்திக்க கக்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#310
கனக தம்பத்தை செச்சையை மெச்சும் கடக சங்கத்து பொன் புய வெற்பன்
கடலுள் வஞ்சித்து புக்கது ஒர் கொக்கும் பொடியாக
கறுவு செம் சத்தி பத்ம கரத்தன் குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும்
கவி மொழிந்து அத்தை கற்று அற உற்றும் புவியோர் போய்
குனகியும் கைக்கு கற்பகம் ஒப்பென்று அனகன் என்று இச்சைப்பட்டது அளிக்கும்
குமணன் என்று ஒப்பிட்டு இத்தனை பட்டு இங்கு இரவு ஆன
குருடு கொண்டு அத்த சத்தம் அனைத்தும் திருடியும் சொற்கு தக்க தொடுத்தும்
குலவியும் கத்தப்பட்ட கலக்கம் தெளியாதோ
சனகன் அன்புற்று பெற்ற மட பெண் தனி பெரும் கற்பு சக்ரம் நடத்தும்
தகை இலங்கை சுற்றத்தை முழுதும் சுடவே வெம்
சமர சண்ட கொற்றத்தவ அரக்கன் கதிர் விடும் பத்து கொத்து முடிக்கும்
தனி ஒர் அம்பை தொட்டு சுரர் விக்னம் களைவோனும்
தினகரன் சொர்க்கத்துக்கு இறை சுக்ரன் சசிதரன் திக்கு கத்தர் அகத்யன்
திசை முகன் செப்பப்பட்ட வசிட்டன் திரள் வேதம்
செகதலம் சுத்த பத்தியர் சித்தம் செயல் ஒழிந்து அற்று பெற்றவர் மற்றும்
சிவனும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#311
செடி உடம்பு அத்தி தெற்றி இரத்தம் செறி நரம்பு இட்டு கட்டிய சட்டம்
சிறை திரண்டு ஒக்க தொக்க வினை பந்த விகாரம்
திமிர துங்க தத்து திரை எற்றும் செனன பங்கத்து துக்க கடல் கண்
திரு குரும்பை பட்டு சுழல் தெப்பம் கரண ஆதி
குடி புகும் பொக்க புக்கில் இறப்பின் குடிலம் வெந்து ஒக்க கொட்டில் மலத்தின்
குகை சுமந்து எட்டு திக்கிலும் முற்றும் தடுமாறும்
குவலயம் கற்று கத்தி இளைக்கும் சமய சங்கத்தை தப்பி இருக்கும்
குணம் அடைந்து உட்பட்டு ஒக்க இருக்கும்படி பாராய்
படி தரும் கற்பு கற்பக முக்கண் கொடி பசும் சித்ரக்கு தரம் முத்தம்
பணி நிதம்பத்து சத்தி உகக்கும் குமரேசா
பரவசம் கெட்டு எட்டு அக்கரம் நித்தம் பரவும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
பரமர் வந்திக்க தக்க பதத்தன் குருநாதா
தொடி இடும் பத்ம கைக்கும் இடைக்கும் சுருள்படும் பத்திப்பட்ட குழற்கும்
துகிர் கடைந்து ஒப்பித்திட்ட இதழ்க்கும் குற மானின்
சுடர் படும் கச்சு கட்டு முலைக்கும் துவளும் நெஞ்சத்த சுத்த இருக்கும்
சுரரும் வந்திக்க கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#312
கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டு அன்று அசுரர் தண்டத்தை செற்று அ இதழ் பங்கயனை
முன் குட்டி கைத்தளை இட்டும் உம்பரை ஆளும்
கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும் பெரிய தும்பிக்கை கற்பக முன் தம்
கர தலம் பற்று பெற்ற ஒருத்தன் ஜக தாதை
புன இளம் தத்தைக்கு இச்சை உரைக்கும் புரவலன் பத்தர்க்கு துணைநிற்கும்
புதியவன் செச்சை புட்பம் மணக்கும் பல பார
புயன் எனும் சொல் கற்று பிற கற்கும் பசை ஒழிந்து அத்தத்து இக்கு என நிற்கும்
பொருள்தொறும் பொத்தப்பட்டது ஒர் அத்தம் பெறுவேனோ
அனல் விடும் செ கண் திக்கு கயம் எட்டும் பொர அரிந்திட்ட எட்டில் பகுதி கொம்பு
அணி தரும் சித்ரத்து ஒற்றை உரத்தன் திடமாக
அடியொடும் பற்றி பொன் கயிலை குன்றது பிடுங்க புக்க பொழுது அ குன்று
அணி புயம் பத்துப்பத்து நெருப்பு உண்டவன் நீடும்
தனது ஒர் அங்குட்டத்து எள் பல் அடுக்கும் சரி அலன் கொற்றத்து அரக்கன்
தசமுகன் கைக்கு கட்கம் அளிக்கும் பெரியோனும்
தலைவியும் பக்கத்து ஒக்க இருக்கும் சயிலமும் தெற்கு சற்குரு வெற்பும்
தணியலும் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#313
தெரியல் அம் செச்சை கொத்து முடிக்கும் பரி திக்அந்தத்தை சுற்ற நடத்தும்
சிறை விடும் சொர்க்கத்து சுரரை கங்கையில் வாழும்
சிறுவன் என்று இச்சை பட்டு பஜிக்கும்படி பெரும் பத்தி சித்ர கவித்வம்
சிறிதும் இன்றி சித்த பரிசுத்தம் பிறவாதே
பரிகரம் சுத்தத்தக்க ப்ரபுத்வம் பதறி அங்கு அட்டப்பட்டனர் தத்வம்
பலவையும் கற்று தர்க்க மதத்து வம்பு அழியாதே
பர பதம் பற்றப்பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றி பற்று அற நிற்கும்
பர வ்ரதம் பற்ற பெற்றிலன் துயர் போமோ
சரியுடன் துத்தி பத்தி முடி செம் பண தரம் கைக்கு கட்டிய நெட்டன்
தனி சிவன் பக்கத்து அற்புதை பற்பம் திரிசூலம்
தரி கரும்பு ஒக்க தக்க மொழி சுந்தரி அரும்பி கப்பித்த தனத்து அந்தரி
சுரும்பு இக்கு பத்ரை எவர்க்கும் தெரியாத
பெரிய பண் தத்தை சத்திய பித்தன் பிரீதி உடன் கற்பு பச்சை எறிக்கும்
ப்ரபையள் தண்டில் கை பத்ம மட பெண் கொடி வாழ்வே
பிரமர் அண்டத்தை தொட்டது ஓர் வெற்பும் பிளவிடும் சத்தி கைத்தல நித்தம்
பெருமிதம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#314
புன மடந்தைக்கு தக்க புயத்தன் குமரன் என்று எத்தி பத்தர் துதிக்கும்
பொருளை நெஞ்சத்து கற்பனை முற்றும் பிறிதேதும்
புகலும் எண்பத்தெட்டு எட்டு இயல் தத்வம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
பொதுவை என்று ஒக்க தக்கது ஓர் அத்தம்தனை நாளும்
சினமுடன் தர்க்கித்து சிலுக்கிக்கொண்டு அறுவரும் கைக்குத்து இட்டு ஒருவர்க்கும்
தெரி அரும் சத்யத்தை தெரிசித்து உன் செயல் பாடி
திசைதொறும் கற்பிக்கைக்கு இனி அற்பம் திரு உள்ளம் பற்றி செச்சை மணக்கும்
சிறு சதங்கை பொன் பத்மம் எனக்கு என்று அருள்வாயே
கன பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு இக்கு சர்க்கரை முக்கண்
கடலை கண்டு அப்பி பிட்டொடு மொக்கும் திரு வாயன்
கவள துங்க கை கற்பக முக்கண் திகழு நம் கொற்றத்து ஒற்றை மருப்பன்
கரி முகன் சித்ர பொன் புகர் வெற்பன்தனை ஈனும்
பனவி ஒன்று எட்டு சக்ர தல பெண் கவுரி செம்பொன் பட்டு தரி அ பெண்
பழய அண்டத்தை பெற்ற மட பெண் பணிவாரை
பவ தரங்கத்தை தப்ப நிறுத்தும் பவதி கம்பர்க்கு புக்கவள் பக்கம்
பயில் வரம் பெற்று கச்சியில் நிற்கும் பெருமாளே

மேல்

#315
கறை இலங்கும் உக்ர சத்தி தரிக்கும் சரவணன் சித்தத்துக்குள் ஒளிக்கும்
கரவடன் கொற்ற குக்கடவத்தன் தனி வீர
கழல் இடும் பத்ம கண் செவி வெற்பன் பழநி மன் கச்சி கொற்றவன் மற்றும்
கடக வஞ்சிக்கு கர்த்தன் என செந்தமிழ் பாடி
குறை இல் அன்புற்று குற்றம் அறுக்கும் பொறைகள் நந்த அற்ப புத்தியை விட்டு என்
குணம் அடங்க கெட்டு குணம் மற்று ஒன்று இலதான
குணம் அடைந்து எப்பற்றுக்களும் அற்றும் குறியொடும் சுத்த பத்தர் இருக்கும்
குரு பதம் சித்திக்கைக்கு அருள் சற்றும் கிடையாதோ
பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம்
பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி
பிறவு நின்று ஒக்க தொக்கு மணக்கும் சரணி அம் பத்ம கை கொடி முக்கண்
பெறு கரும்பு அ தக்கது அருள் நல் பங்கய வாவி
திறை கொளும் சித்ர குத்து முலை கொம்பு அறியும் அம் தத்தை கைக்கு அகம் மொய்க்கும்
த்ரிபுரை செம்பட்டு கட்டு நுசுப்பின் திரு ஆன
தெரிவை அம் துர்க்கி சத்தி எவர்க்கும் தெரி அரும் சுத்த பச்சை நிற பெண்
சிறுவ தொண்டர்க்கு சித்தி அளிக்கும் பெருமாளே

மேல்

#316
செறி தரும் செப்பத்து உற்பல வெற்பும் பிறிதும் அங்கு அத்தைக்கு உற்ற இருப்பும்
சிகரி துண்டிக்க கற்ற தனி சுடர் வேலும்
திரள் புயம் கொத்துப்பட்ட அனைத்தும் தெளிய நெஞ்சம் துப்புற்று மயக்கம்
திகழ் ப்ரபஞ்சத்தை புற்பதம் ஒக்கும்படி நாடும்
அறிவு அறிந்து அத்தற்கு அற்றது செப்பும் கடவுளன் பத்தர்க்கு அச்சம் அறுத்து அன்பு
அருள்பவன் பொற்பு கச்சியுள் நிற்கும் பெருமான் என்று
அவிழும் அன்புற்று கற்று மனத்தின் செயல் ஒழிந்து எட்டப்பட்டதனை சென்று
அடைதரும் பக்வத்தை தமியெற்கு என்று அருள்வாயே
குறியவன் செப்பப்பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலைகுலைந்து உட்க சத்யம் மிழற்றும் சிறு பாலன்
குதலையின் சொற்கு தர்க்கம் உரைக்கும் கனகன் அங்கத்தில் குத்தி நிணம் செம்
குடர் பிடுங்கி திக்குற்ற முகம் சிங்க முராரி
பொறி விடும் துத்தி கண் செவியின் கண் துயில் கொளும் சக்ர கை கிரி சுத்தம்
புயல் எனும் பொற்பு பெற்ற நிறத்தன் ஜக தாதை
புனித சங்கத்து கைத்தலம் நிர்த்தன் பழைய சந்தத்தை பெற்ற மட பெண்
புகலும் கொண்டற்கு சித்தி அளிக்கும் பெருமாளே

மேல்

#317
அரி அயன் புட்பிக்க குழுமிக்கொண்டு அமரர் வந்திக்க தட்டு உருவ சென்று
அவுணர் அங்கத்தை குத்தி முறித்து அங்கு ஒரு கோடி
அலகை நின்று ஒத்தி தித்தி அறுத்தும் பல இயம் கொட்ட சக்கடி கற்று
அந்தரியுடன் பற்றி குச்சரி மெச்சும்படி பாடி
பரி முகம் கக்க செ கண் விழித்தும் பவுரி கொண்டு எட்டு திக்கை உடைத்தும்
படு களம் புக்கு தொக்கு நடிக்கும்படி மோதி
படை பொரும் சத்தி பத்ம நினைத்தும் சரவணன் கச்சி பொற்பன் என பின்
பரவியும் சித்தத்துக்கு வர தொண்டு அடைவேனோ
பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒக்க ஒழிந்து கைக்கிளை துத்தம் குரல் ஆதி
பிரிவில் கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் சிற்ப சித்ரம் உருக்கும்
பிரதி அண்டத்தை பெற்று அருள் சிற்று உந்தியும் நீல
கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் திலகமும் செம்பொன் பட்டமும் முத்தின்
கன வடம் கட்டப்பட்ட கழுத்தும் திரு ஆன
கருணையும் சுத்த பச்சை வனப்பும் கருதும் அன்பர்க்கு சித்தி அளிக்கும்
கவுரி அம்பைக்கு புத்ர எவர்க்கும் பெருமாளே

மேல்

#318
கனி தரும் கொக்கு கட்செவி வெற்பும் பழனியும் தெற்கு சற்குரு வெற்பும்
கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும்
கனவிலும் செப்ப தப்பும் எனை சங்கட உடம்புக்கு தக்க அனைத்தும்
களவு கொண்டிட்டு கற்பனையில் கண் சுழல்வேனை
புனிதன் அம்பைக்கு கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா எப்பொழுதும்
வந்திக்கைக்கு அற்ற எனை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும்
பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோதான்
அனனியம் பெற்று அற்றுஅற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த
அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை
அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு
அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல மேரு
தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசிப்பின்
தருணி சங்குற்று தத்து திரை கம்பையினூடே
தவம் முயன்று அ பொற்ற படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டு எட்டும் வளர்க்கும்
தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே

மேல்

#319
தசை துறுந்து ஒக்கு கட்டு அளை சட்டம் சரிய வெண் கொக்கு ஒக்க நரைத்து அம்
தலை உடம்பு எய்த்து எற்பு தளை நெக்கி இந்த்ரியம் மாறி
தடி கொடும் திக்கு தப்ப நடக்கும் தளர்வுறும் சுத்த பித்த விருத்தன்
தகைபெறும் பல் கொத்துக்கள் அனைத்தும் கழலா நின்று
அசலரும் செச்செ செச்செ என சந்ததிகளும் சிச்சி சிச்சி என தங்கு
அரிவையும் துத்துத்துத்து என கண்டு உமியா மற்றவரும்
நிந்திக்கத்தக்க பிறப்பு இங்கு அலம்அலம் செச்சை சித்ர மணி தண்டை
அரவிந்தத்தில் புக்கு அடைதற்கு என்று அருள்வாயே
குசை முடிந்து ஒக்க பக்கரை இட்டு எண் திசையினும் தத்த புத்தியை நத்தும்
குரகதம் கட்டி கிட்டி நடத்தும் கதிர் நேமி
குல ரதம் புக்கு ஒற்றை கணை இட்டு எண் திரிபுரம் சுட்டு கொட்டை பரப்பும்
குரிசில் வந்திக்க கச்சியில் நிற்கும் கதிர் வேலா
திசைமுகன் தட்டுப்பட்டு எழ வற்கும் சிகரியும் குத்துப்பட்டு விழ தெண்
திரை அலங்கத்து புக்கு உலவி சென்று எதிர் ஏறி
சிரம் அதுங்க பொன் கண் திகை இட்டு அன்று அவுணர் நெஞ்சில் குத்தி கறை கட்கம்
சிதறி நின்று எட்டி பொட்டு எழ வெட்டும் பெருமாளே

மேல்

#320
புரை படும் செற்ற குற்ற மனத்தன் தவம் இலன் சுத்த சத்ய அசத்யன்
புகல் இலன் சுற்ற செத்தையுள் நிற்கும் துரிசாளன்
பொறை இலன் கொத்து தத்வ விகற்பம் சகலமும் பற்றி பற்று அற நிற்கும்
பொருளுடன் பற்று சற்றும் இல் வெற்றன் கொடியேன் நின்
கரை அறும் சித்ர சொல் புகழ் கற்கும் கலை இலன் கட்டை புத்தியன் மட்டன்
கதி இலன் செச்சை பொன் புய வெற்பும் கதிர் வேலும்
கதிரையும் சக்ர பொற்றையும் மற்றும் பதிகளும் பொற்பு கச்சியும் முற்றும்
கனவிலும் சித்தத்தில் கருதி கொண்டு அடைவேனோ
குரை தரும் சுற்றும் சத்த சமுத்ரம் கதறி வெந்து உட்க கண் புர துட்டன்
குலம் அடங்க கெட்டு ஒழிய சென்று ஒரு நேமி
குவடு ஒதுங்க சொர்க்கத்தர் இடுக்கம் கெட நடுங்க திக்கில் கிரி வர்க்கம்
குலிச அதுங்க கை கொற்றவன் நத்தம் குடி ஏற
தரை விசும்பை சிட்டித்த இருக்கன் சதுர் முகன் சிட்சை பட்டு ஒழிய சந்ததமும்
வந்திக்க பெற்றவர் தத்தம் பகை ஓட
தகைய தண்டை பொன் சித்ர விசித்ர தரு சதங்கை கொத்து ஒத்து முழக்கும்
சரண கஞ்சத்தில் பொன் கழல் கட்டும் பெருமாளே

மேல்

#321
சல மலம் விட்ட தடம் பெரும் குடில் சகல வினை கொத்து இருந்திடும்படி
சதிர உறுப்பு சமைந்து வந்த ஒரு தந்தை தாயும்
தர வரு பொய்க்குள் கிடந்த கந்தலில் உறையும் உயிர்ப்பை சமன் துரந்து ஒரு
தனியில் இழுக்கப்படும் தரங்கமும் வந்திடா முன்
பல உருவத்தை பொருந்தி அன்று உயர் படியு நெளிக்க படர்ந்த வன் கண
பட மயில் புக்கு துரந்து கொண்டு இகல் வென்றி வேலா
பரிமள மிக்க சிவந்த நின் கழல் பழுது அற நல் சொல் தெரிந்து அன்பொடு
பகர்வது இனி சற்று உகந்து தந்திட வந்திடாயோ
சிலையும் என பொன் சிலம்பை முன் கொடு சிவமயம் அற்று திடம் குலைந்தவர்
திரிபுரம் அத்தை சுடும் தினம் தரி திண் கையாளி
திருமகள் கச்சு பொருந்திடும் தன தெரிவை இரக்கத்துடன் பிறந்தவள்
திசைகளில் ஒக்க படர்ந்து இடம் பொருகின்ற ஞான
கலைகள் அணை கொத்து அடர்ந்து வம்பு அலர் நதி கொள் அகத்தில் பயந்து கம்பர் மெய்
கருக இடத்தில் கலந்து இருந்தவள் கஞ்ச பாதம்
கருணை மிகுத்து கசிந்த உளம் கொடு கருதும் அவர்க்கு பதங்கள் தந்து அருள்
கவுரி திரு கொட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே

மேல்

#322
தலை வலையத்து தரம் பெறும் பல புலவர் மதிக்க சிகண்டி குன்று எறிதரும்
அயில் செச்சை புயம் கயம் குற வஞ்சியோடு
தமனிய முத்து சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச்சிவந்த பங்கய
சரணமும் வைத்து பெரும் ப்ரபந்தம் விளம்பு காள
புலவன் என தத்துவம் தரம் தெரி தலைவன் என தக்க அறம் செய்யும் குண
புருஷன் என பொன் பதம் தரும் சனனம் பெறாதோ
பொறையன் என பொய் ப்ரபஞ்சம் அஞ்சிய துறவன் என திக்கு இயம்புகின்ற அது
புதுமை அல சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ
குல சயிலத்து பிறந்த பெண் கொடி உலகு அடையப்பெற்ற உந்தி அந்தணி
குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்ற பேதை
குண தரி சக்ர ப்ரசண்ட சங்கரி கண பண ரத்ந புயங்க கங்கணி
குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி
கலப விசித்ர சிகண்டி சுந்தரி கடிய விடத்தை பொதிந்த கந்தரி
கருணை விழி கற்பகம் திகம்பரி எங்கள் ஆயி
கருதிய பத்தர்க்கு இரங்கும் அம்பிகை சுருதி துதிக்கப்படும் த்ரி அம்பகி
கவுரி திரு கோட்டு அமர்ந்த இந்திரர் தம்பிரானே

மேல்

#323
இதத்து பற்று இதழ் துப்பு அற்று இருள் பொக்க கருத்து இட்ட தியக்கத்தில் தியக்குற்று சுழலாதே
எலுப்பு சுக்கிலம் கத்தம் தடி தொக்கு கடத்தை பெற்று எடுத்து பற்று அடுத்த தற்பத்து உழலாதே
சுத தத்த சதத்து அத்தம் பதத்தர்க்கு உற்றவற்றை சொல் துவக்கில் பட்டு அவத்தைப்பட்டு அயராதே
துணை செப்பத்து அலர் கொத்து உற்பலம் செச்சை தொடை பத்தி கடப்பம் பொன் கழல் செப்பி தொழுவேனோ
கொதித்து குத்திர கொக்கை சதித்து பற்றி கைக்குள் பொன் குலத்தை குத்திரத்தை குத்திய வேலா
குற தத்தைக்கு அறத்து அத்திக்கு முத்த அத்தத்து அம் ஒக்கு இக்கு குலத்துக்கு குக்குட கொற்ற கொடியோனே
கதம் சுத்த சுதை சித்ரம் களிற்று கொற்றவற்கு கற்பக சொர்க்கப்புர பொற்பை புரிவோனே
கடுக்கை கண் செவி கற்றை சடை பக்க கொடி கற்பு கடல் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#324
எனக்கு சற்று உனக்கு சற்று என கத்து அத்தவர்க்கு இச்சை பொருள் பொன் தட்டு இடு இக்கை கு குடில் மாயம்
என கட்டைக்கு இடைப்பட்டிட்டு அனல் சுட்டிட்டு அடக்கைக்கு பிறக்கைக்கு தலத்தில் புக்கு இடியா முன்
தினைக்குள் சித்திர கொச்சை குற தத்தை தனத்தை பொன் பெற செச்சை புயத்து ஒப்பித்து அணிவோனே
செருக்கி சற்று உறுக்கி சொல் பிரட்ட துட்டரை தப்பி திரள் தப்பி கழல் செப்ப திறல் தாராய்
பனை கை கொக்கனை தட்டுப்பட குத்தி பட சற்ப பணம் துட்க கடல் துட்க பொரும் வேலா
பரப்பு அற்று சுருக்கு அற்று பதைப்பு அற்று திகைப்பு அற்று பலிப்ப பத்தருக்கு ஒப்பித்து அருள் வாழ்வே
கனிக்கு திக்கு அனைத்து சுற்றிட பச்சை கன பக்ஷிக்கு இடை புக்கு களிப்புக்கு திரிவோனே
கலிக்கு ஒப்பு இல் சலிப்பு அற்று கதிக்கு ஒத்திட்ட எழில் சத்தி கடல் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#325
இறைச்சி பற்று இரத்தத்து இட்டு இசைக்கு ஒக்க பரப்பப்பட்டு எலுப்பு கட்டளை சுற்றி சுவர் கோலி
எடுத்து செப்பு என கட்டி புதுக்கு புத்து அகத்தில் புக்கு எனக்கு சற்று உனக்கு சற்று எனும் ஆசை
சிறைக்கு ஒத்து இ பிறப்பில் பட்டு உறக்கம் சொப்பனத்துற்று திகைக்கப்பட்டு அவத்தைப்பட்டு உழலாது உன்
திரு பத்ம திறத்தை பற்றுகைக்கு சித்திரத்தை சொல் திதம் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ
பிறை செக்கர் புரைக்கு ஒத்து சடை பச்சை கொடிக்கு இச்சை பிறக்குற்ற திரு பக்க சிவநாதர்
பெருகு அப்பு தட கை கற்பக தொப்பை கணத்துக்கு பிரச்சித்த கொடி குக்ட கொடியோனே
பறை கொட்டி களைச்சுற்ற குறள் செ கண் கணத்திற்கு பலிக்கு பச்சுடல் குத்தி பகிர் வேலா
பணம் பத்தி கண துத்தி படக்கை கச்சபத்து இச்சைப்படு கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#326
கடத்தை பற்று என பற்றி கருத்துற்று களித்திட்டு கயல் கண் பொற்பு இணை சித்ர தன மாதர்
கலைக்குள் பட்டு அற கத்தி சலித்து கட்டளை சொல் பொய் திரைக்குள் பட்டு அற செத்திட்டு உயிர் போனால்
எடுத்து கொட்டு இட கட்டை பட தெட்ட தணல் தட்ட கொளுத்தி சுற்று அவர் பற்று அற்று அவர் போ முன்
இணக்கி பத்திமை செச்சை பதத்தை பற்றுகைக்கு சொல் தமிழ் கொற்ற புகழ் செப்பி திரிவேனோ
அடைத்திட்டு புடைத்து பொன் பத சொர்க்கத்தனை சுற்றிட்டு அலைப்பு பற்று என சொற்றிட்ட அறு சூரை
அடித்து செற்று இடித்து பொட்டு எழ பொர்ப்புப்பட குத்திட்டு அலைத்து சுற்று அலை தெற்று கடல் மாய
புடைத்திட்டு படிக்குள் செற்று அட புக்கு கத துக்க கயில் கொக்கை பட குத்தி பொருவோனே
புனத்தில் பொன் குறத்திக்கு புணர்க்கு ஒத்த பசப்பு எத்தி புணர் கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#327
கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின்கண் பொருள் பட்டு பயில் காலம்
கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி
பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் பொய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்
பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய்
பொருப்பு கர்ப்புர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே
புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொன் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே
செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா
திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#328
கறுக்க பல் துவர்ப்பிட்டு சிரித்து சற்று உறுக்கி கண் பிறக்கிட்டுப்பட கண் பித்தி இளைஞோர்தம்
கழுத்தை சிக்கென கட்டி செப்பு தனம் பட குத்திட்டு உருக்கி கற்பு அழிக்க பொற்பு எழு காதல்
புறப்பட்டு களிக்க கற்புரத்தை பிட்டு அரக்கி பொன் பணி கட்டில் புறத்துற்று புணர் மாதர்
பொருத்தத்தை தவிர்த்து சற்று இரக்ஷித்து புரப்ப பொன் பதத்தை பெற்று இருக்கைக்கு பெறுவேனோ
திறல் கொக்கை பட குத்தி செருக்கி கொக்கரித்து சக்கரிக்கு புத்திரற்கு உற்று தளை பூண
சினத்து பொன் பொருப்பை பொட்டு எழுத்தி திக்கரித்து புத்இரத்தத்தில் சிரித்து உற்று பல பேய்கள்
பறிக்க பச்சிறைச்சிக்கண் கறி குப்பை சிர சிக்கு பரப்பு ஒய் கட்டற புக்கு பொருதோனே
பணி செச்சை தொடை சித்ர புயத்து உக்ர படை சத்தி படை கச்சி பதி சொக்க பெருமாளே

மேல்

#329
அற்றைக்கு இரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றி தவியாத பற்றை பெறுவேனோ
வெற்றி கதிர் வேலா வெற்பை தொளை சீலா
கற்று உற்று உணர் போதா கச்சி பெருமாளே

மேல்

#330
முட்டுப்பட்டு கதிதோறும் முற்ற சுற்றி பல நாளும்
தட்டுப்பட்டு சுழல்வேனை சற்று பற்ற கருதாதோ
வட்ட புட்ப தல மீதே வைக்கத்தக்க திரு பாதா
கட்டத்து அற்றத்து அருள்வோனே கச்சி சொக்க பெருமாளே

மேல்

#331
அற்றைக்கற்றைக்கு ஒப்பித்தொப்பித்து அத்தத்தத்தம் தருவோர் தாள்
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம் திக்கு தொக்கு குடில் பேணி
செற்றை புன் சொல் கற்றுக்கற்று செத்துச்செத்து பிறவாதே
செப்பச்செப்ப பச்சைப்பச்சை செச்சை செச்சை கழல் தாராய்
துற்று பின் புக்கு உற்ற கொக்கை துட்க திட்க பொரும் வேலா
சுத்த பத்தி சித்ர சொர்க்க சொர்க்க தத்தைக்கு இனியோனே
கற்றை பொற்றை பற்றி குத்தி கத்தக்கத்த களைவோனே
கற்பு சத்தி பொற்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே

மேல்

#332
சுத்த சித்தத்து தொல் பத்தர்க்கு சுத்த பட்டு இட்டம் உறாதே
தொக்க பொக்கம் சில் கட்சிக்கு சொல் குற்றத்துக்கு உறை நாடி
பித்தத்தை பற்றி தை தற்று உற்று ஒத்து கித்தி பிணி மாதர்
பெட்டில் கட்டு தட்டுப்பட்டு பின்பட்டு இட்டு தளர்வேனோ
அ தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்து பலம் ஈவாய்
அர்ச்சித்து பொன் செக்க கொச்சை தத்திக்கு செச்சை தொடை சூழ்வாய்
கத்து அத்தி தத்து அத்தில் கொக்கை கைத்த சத்தி படை ஏவும்
கற்பு சத்தி பொன்பு சத்தி கச்சி சொக்க பெருமாளே

மேல்

#333
கொக்குக்கு ஒக்க தலையில் பற்று சிக்கத்து அளக கொத்துற்று உக்கு பிணி உற்றவனாகி
குக்கி கக்கி கடையில் பல் தத்துற்று கழல கொத்தை சொல் கற்று உலகில் பல பாஷை
திக்கித்திக்கி குளறி செப்பி தப்பி கெடு பொய் செற்றை சட்டை குடிலை சுமை பேணும்
சிக்கு அற்று உட்கு கருணை சுத்த சித்தி தமிழை திட்டத்துக்கு புகல பெறுவேனோ
அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டி கிட்டி இட்டு எதிரிட்ட அத்ரத்து எற்றி கடுக பொரு சூரன்
அச்சு கெட்டு படை விட்டு அச்சப்பட்டு கடலுள் புக்குப்பட்டு துருமத்து அடைவாக
தக்கு திக்கு தறுகண் தொக்கு தொக்கு உற்றது கண் கை கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி
சத்தி குத்தி துடியில் சத்திக்க கை சமர் செய் சத்தி கச்சி குமர பெருமாளே

மேல்

#334
தத்தித்தத்தி சட்டப்பட்டு சத்தப்படு மை கடலாலே
சர்ப்ப தத்தில் பட்டு கெட்டு தட்டுப்படும் அ பிறையாலே
சித்தத்துக்கு பித்துற்று உச்ச சித்ர கொடி உற்று அழியாதே
செப்ப கொற்ற சிற்ப பத்தி செச்சை தொடையை தரவேணும்
கொத்து திக்கு பத்துள் புக்கு குத்தி கிரியை பொரும் வேலா
கொச்சை பொச்சை பொற்பில் பச்சை கொச்சை குறவிக்கு இனியோனே
சுத்தப்பத்த அத்தர்க்கு சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா
சொர்க்கத்துக்கு ஒப்புற்ற கச்சி சொக்கப்பதியில் பெருமாளே

மேல்

#335
பொக்கு பை கத்தம் தொக்கு குத்து பொய்த்து எத்து தத்து குடில் பேணி
பொச்சை பிச்சு அற்ப கொச்சை சொல் கற்று பொன் சித்ர கச்சு கிரியார் தோய்
துக்க துக்கத்தில் சிக்குப்பட்டிட்டு துக்கித்து கெய்த்து சுழலாதே
சுத்தர் சித்தத்து பத்தி பத்தர்க்கு ஒத்து சற்று அர்ச்சிக்க பெறுவேனோ
திக்குத்திக்கு அற்று பை தத்து அத்திக்கு செல் பத்திர கொக்கை பொரும் வேலா
செப்ப அ சொர்க்கத்து செம்பொன் தத்தைக்கு செச்சை கொத்து ஒப்பித்து அணிவோனே
கக்கு அக்கை தக்க அக்கங்கட்கு அக்கு அக்கி கண் கத்த அத்தர் பெரியோனே
கற்றை பொற்று ஏத்த பெற்ற பொன் சிற்ப கச்சிக்குள் சொக்க பெருமாளே

மேல்

#336
அயில் அப்பு கயல் அப்புத்தலை மெச்சு உற்பல நச்சு கண் உரத்த ஐ கன வெற்பு தன மேகம்
அளக கொத்து என ஒப்பி புளுகி சொல் பல கற்பித்து இளகி கற்பு உள நெக்கு தடுமாறி
துயல் விட்டு செயல் விட்டு துயருற்று உக்கு அயர்வுற்று தொடியர்க்கு இப்படி எய்த்து சுழலாதே
சுருதி பொன் பொருள் செக்கர்க்கு குரவு இட்டு தமர் பற்றி தொழு செச்சை கழல் பற்றி பணிவேனோ
புயல் அத்தை குயில் தத்தை கிளை புக்கு தொளை பச்சை புன முத்தை புணர் சித்ர புய வீரா
புரவி கொட்பு இரத அற்றத்து இருள் திக்கி படி மட்க புகல் பொன் குக்குட வெற்றி கொடியோனே
கயில் அச்சு தர தத்து சயிலத்து உத்தரம் நிற்க கரணி சித்தர் உள் கச்சி பதியோனே
கடலில் கொக்கு அடல் கெட்டு கரம் உட்க தரம் உட்க பொரு சத்தி கர சொக்க பெருமாளே

மேல்

#337
கச்சிட்ட அணி முலை தைச்சிட்டு உருவிய மச்ச கொடி மதன் மலராலும்
கச்சை கலை மதி நச்சு கடலிடை அச்சப்பட எழும் அதனாலும்
பிச்சுற்று இவள் உளம் எய்ச்சு தளர்வது சொச்ச தரம் அல இனிதான
பிச்சி புது மலர் வைச்சு சொருகிய செச்சை தொடை அது தரவேணும்
பச்சை திரு உமை இச்சித்து அருளிய கச்சி பதிதனில் உறைவோனே
பற்றி பணிபவர் குற்ற பகை கெட உற்று பொர வல கதிர் வேலா
இச்சித்து அழகிய கொச்சை குறமகள் மெச்சி தழுவிய திரு மார்பா
எட்டு குல கிரி முட்ட பொடிபட வெட்டி துணி செய்த பெருமாளே

மேல்

#338
கமல அரு சோகாம்பரம் முடி நடு ஏய் பூம் கணை கலக அமர் வாய் தோய்ந்து அமளியின் மீதே
களை அற மீது ஊர்ந்து எழ மதன விடாய் போம்படி கன இய வார் ஏந்தின இளநீர் தோய்ந்து
எமது உயிர் நீலாஞ்சன மதர் விழியால் வாங்கிய இவளுடன் மால் கூர்ந்திடும் அநுபோகம்
இனி விட வேதாந்த பரம சுக வீடு ஆம் பொருள் இதம் இய பாதாம் புயம் அருள்வாயே
அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பரம் அ துல அன நீலாம்பரம் அறியாத
அ நகர நாளாங்கிதர் தமை உமையாள் சேர்ந்து அருள் அறம் உறு சீ காஞ்சியில் உறைவோனே
விமல கிராதாங்கனை தன கிரி தோய் காங்கெய வெடிபடு தேவேந்திர நகர் வாழ
விரி கடல் தீ மூண்டிட நிசிசரர் வேர் மாண்டிட வினை அற வேல் வாங்கிய பெருமாளே

மேல்

#339
கருமமான பிறப்பு அற ஒரு கதி காணாது எய்த்து தடுமாறும்
கலக காரண துற்குண சமயிகள் நானாவர்க்க கலை நூலின்
வரும் அநேக விகற்ப விபரித மனோபாவத்துக்கு அரிதாய
மவுன பூரித சத்திய வடிவினை மாயாமற்கு புகல்வாயே
தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்கு புகலாகி
சமர பூமியில் விக்ரம வளை கொடு நாளோர் பத்தெட்டினில் ஆளும்
குரு மகீதலம் உட்பட உளமது கோடாமல் க்ஷத்ரியர் மாள
குலவு தேர் கடவு அச்சுதன் மருக குமாரா கச்சி பெருமாளே

மேல்

#340
கலகல என பொன் சேந்த நூபுர பரிபுரம் ஒத்தி தாம் தனாம் என
கர மலர் அச்சில் தாம்தோம் ஆடிய பொறியார் பைம்
கடி தடம் உற்று காந்தள் ஆம் என இடை பிடி பட்டு சேர்ந்த ஆல் இலை
கன தன பொற்பிட்டு ஓங்கு மார்பொடு வடம் ஆட
சலசல சச்ச சேம் கை பூண் வளை பரிமள பச்சை சேர்ந்து உலாவிய
சலச முகத்து சார்ந்த வாள் விழி சுழல் ஆட
தரள நகைப்பித்து ஆம்பல் ஆரி இதழ் குல முகில் ஒத்திட்டு ஆய்ந்த ஓதியர்
சரசம் உரைத்து சேர்ந்த தூவையர் உறவு ஆமோ
திலத முக பொன் காந்தி மாது உமை எனை அருள் வைத்திட்டு ஆண்ட நாயகி
சிவன் உருவத்தில் சேர்ந்த பார்வதி சிவகாமி
திரிபுவனத்தை காண்ட நாடகி குமரி சுகத்தை பூண்ட காரணி
சிவை சுடர் சத்தி சாம்பவீ அமை அருள் பாலா
அலகை இரத்தத்து ஓங்கி மூழ்கிட நரி கழுகு உப்பி சீர்ந்து வாய் இட
அசுரர் குலத்தை காய்ந்த வேல் கரம் உடையோனே
அமரர் மகட்கு போந்த மால் கொளும் விபுத குறத்திக்கு ஆண்டவா தின
அழகு சிறக்க காஞ்சி மேவிய பெருமாளே

மேல்

#341
கொத்து ஆர் பல் கால் அற்று ஏக பாழ் குப்பாயத்தில் செயல் மாறி
கொக்காகி கூனி கோல் தொட்டே கொட்டாவி குப்புற வாசி
தித்தா நின்றார் செத்தார் கெட்டேன் அஆ உஉ எனவே கேள்
செற்றே சுட்டே விட்டு ஏறி போம் அ பேது துக்கம் அறாதோ
நித்தா வித்தார தோகைக்கே நிற்பாய் கச்சி குமரேசா
நிட்டூர சூர் கெட்டு ஓட போர் நெட்டு ஓதத்தில் பொருதோனே
முத்து ஆர தோளில் கோடல் பூ முட்டாது இட்டத்து அணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#342
கோவை சுத்த துப்பு அதரத்து கொடியார்தம் கோல கச்சு கட்டிய முத்த தனம் மேவி
பாவத்துக்கு தக்கவை பற்றி திரியாதே பாட பத்தி சித்தம் எனக்கு தரவேணும்
மாவை குத்தி கைத்து அற எற்றி பொரும் வேலா மாணிக்க சொர்க்கத்து ஒரு தத்தைக்கு இனியோனே
சேவல் பொன் கை கொற்றவ கச்சி பதியோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#343
சீசி முப்புர காடு நீறு எழ சாடி நித்திரை கோசம் வேர் அற
சீவன் முத்தியில் கூடவே களித்து அநுபூதி
சேர அற்புத கோலமாம் என சூரிய புவிக்கு ஏறி ஆடுக
சீலம் வைத்து அருள் தேறியே இருக்க அறியாமல்
பாசம் விட்டு விட்டு ஓடி போனது போதும் இப்படிக்கு ஆகிலேன் இனி
பாழ் வழிக்கு அடைக்காமலே பிடித்து அடியேனை
பார் அடைக்கல கோலமாம் என தாபரித்து நித்தாரம் ஈது என
பாத பத்ம நல் போதையே தரித்து அருள்வாயே
தேசு இல் துட்ட நிட்டூர கோது உடை சூரை வெட்டி எட்டி ஆசை ஏழ் புவி
தேவர் முத்தர்கட்கு ஏதமே தவிர்த்து அருள்வோனே
சீர் படைத்த அழல் சூலம் மான் மழு பாணி வித்துரு பாதன் ஓர் புற
சீர் திகழ் புகழ் பாவை ஈன பொன் குருநாதா
காசி முத்தமிழ் கூடல் ஏழ் மலை கோவல் அத்தியின் கானம் நான்மறைக்காடு
பொன் கிரி காழி ஆரூர் பொன் புலி வேளூர்
காள அத்தி அப்பால் சிராமலை தேசம் முற்றும் முப்பூசை மேவி நல்
காம கச்சியில் சால மேவும் பொன் பெருமாளே

மேல்

#344
நச்சு அரவம் என்று நச்சு அரவம் என்று நச்சு உமிழ் களங்க மதியாலும்
நத்தோடு முழங்கு கனத்தோடு முழங்கு ந திரை வழங்கு கடலாலும்
இச்சை உணர்வின்றி இச்சை என வந்த இ சிறுமி நொந்து மெலியாதே
எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும்
பச்சை மயில் கொண்டு பச்சை மற மங்கை பச்சை மலை எங்கும் உறைவோனே
பத்தியுடன் நின்று பத்தி செய்யும் அன்பர் பத்திரம் அணிந்த கழலோனே
கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு கச்சியில் அமர்ந்த கதிர் வேலா
கற்பக வனம் கொள் கற்பு அகம் விசும்பர் கை தளை களைந்த பெருமாளே

மேல்

#345
படிறு ஒழுக்கமும் மட மனத்து உள்ளபடி பரித்து உடன் நொடி பேசும்
பகடிகட்கு உளம் மகிழ மெய்ப்பொருள் பல கொடுத்து அற உயிர் வாடா
மிடி என பெரு வடவை சுட்டிட விதனம் உற்றிட மிக வாழும்
விரகு கெட்டு அரு நரகு விட்டு இருவினை அற பதம் அருள்வாயே
கொடி இடை குற வடிவியை புணர் குமர கச்சியில் அமர்வோனே
குரவு செச்சை வெண் முளரி புத்து அலர் குவளை முற்று அணி திரு மார்பா
பொடி படப்பட நெடிய வில் கொடு புரம் எரித்தவர் குருநாதா
பொரு திரை கடல் நிருதரை படை பொருது உழக்கிய பெருமாளே

மேல்

#346
மகுட கொப்பு ஆட காதினில் நுதலில் பொட்டு ஊர கோதிய மயிரில் சுற்று ஓலை பூவோடு வண்டு பாட
வகை முத்து சோர சேர் நகை இதழில் சொல் சாதிப்பார் இயல் மதன சொல் பாடு கோகில ரம்பை மாதர்
பகடி சொல் கூறி போர் மயல் முக இச்சை பேசி சீர் இடை பவள பட்டாடை தோள் இரு கொங்கை மேலா
பண மெத்த பேசி தூது இடும் இதய சுத்த ஈன சோலிகள் பலர் எச்சிற்கு ஆசைக்காரிகள் சந்தம் ஆமோ
தகுடத்த தான தானன திகுடத்தி தீதி தோதிமி தடுடுட்டுட் டாட பேரிகை சங்கு வீணை
தடம் இட்டு பாவக்கார் கிரி பொடிபட்டுப்போக சூரர்கள் தலை இற்று இட்டு ஆட போர்புரிகின்ற வேலா
திகிரி பொன் பாணி பாலனை மறை கல் புத்தேள் அ பூமனை சினமுற்று சேடில் சாடிய கந்த வேளே
தினையுற்று காவல்காரியை மணமுற்று தேவ பூவோடு திகழ் கச்சி தேவ கோன் மகிழ் தம்பிரானே

மேல்

#347
மக்கட்கு கூற அரிதானது கற்று எட்டத்தான் முடியாதது மற்று ஒப்புக்கு இயாதும் ஒவ்வாதது மனதாலே
மட்டிட்டு தேட ஒணாதது தத்வத்தில் கோவை படாதது மத்த பொன் போது பகீரதி மதி சூடும்
முக்கண் பொற்பாளர் உசாவிய அர்த்தக்கு போதகம் ஆனது முத்திக்கு காரணம் ஆனது பெறலாகா
முட்டர்க்கு எட்டாதது நான்மறை எட்ட இல் தெட்டாது எனவே வரும் முற்பட்டு அப்பாலையில் ஆவது புரிவாயே
செ கண் சக்ராயுத மாதுலன் மெச்ச புல் போது படாவிய திக்கு பொன் பூதரமே முதல் வெகு ரூபம்
சிட்டித்து பூத பசாசுகள் கை கொட்டிட்டு ஆட மகோததி செற்று உக்ர சூரனை மார்பகம் முது சோரி
கக்க கை தாமரை வேல் விடு செக்கர் கர்ப்பூர புயாசல கச்சுற்ற பார பயோதர முலையாள் முன்
கற்பு தப்பாது உலகு ஏழையும் ஒக்க பெற்றாள் விளையாடிய கச்சி கச்சாலையில் மேவிய பெருமாளே

மேல்

#348
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற மொழியாலும்
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற நுதலாலும்
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச நடையாலும் அங்கை வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி விடலாமோ
மயில் ஏறி அன்று நொடிப்போதில் அண்டம் வலமாக வந்த குமரேசா
மறி தாவு செம் கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த முருகேசா
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த மதி சூழ
நறை வீசு கும்ப குடம் மேவு கம்பை நகர் மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#349
முத்து ரத்ந சூத்ரம் ஒத்த சித்ர மார்க்கர் முன் செமத்து மூர்க்கர் வெகு பாவர்
முத்து உதிர்த்த வார்த்தை ஒத்த பத்ரம் வாள் கண் முச்சர் மெத்த சூட்சர் நகையாலே
எத்தர் குத்திர அர்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்டம் உற்ற கூட்டர் விலைமாதர்
எக்கர் துக்கர் வாழ்க்கை உற்ற சித்த நோய் புண் இப்படிக்கு மார்க்கம் உழல்வேனோ
தித்தி மித்தி மீத்தனத்த நத்தம் மூட்டு சிற்று உடுக்கை சேட்டை தவில் பேரி
திக்கு மக்கள் ஆக்கை துக்க வெற்பு மீக்கொள் செம் கடற்குள் ஆழ்த்து விடும் வேலா
கல் புரத்தை வீட்டி நட்டமிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் குருநாதா
கல் குறிச்சி வாழ் பெண் ஒக்க வெற்றி வேல் கொள் கச்சி நத்தி நாள் கொள் பெருமாளே

மேல்

#350
வம்பு அறா சில கன்னம் இடும் சமயத்து கத்து திரையாளர்
வன் கலா திரள்தன்னை அகன்று மனத்தில் பற்று அற்று அருளாலே
தம் பராக்கு அற நின்னை உணர்ந்து உருகி பொன் பத்ம கழல் சேர்வார்
தம் குழாத்தினில் என்னையும் அன்போடு வைக்க சற்று கருதாதோ
வெம் பராக்ரமம் மின் அயில் கொண்டு ஒரு வெற்பு பொட்டு பட மா சூரர்
வென்ற பார்த்திப பன்னிரு திண் புய வெட்சி சித்ர திரு மார்பா
கம்பராய் பணி மன்னும் புயம் பெறுகைக்கு கற்பு தவறாதே
கம்பை ஆற்றினில் அன்னை தவம்புரி கச்சி சொக்க பெருமாளே

மேல்

  

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (351 - 700) 

 

#351
வாய்ந்து அப்பிடை நீடு குலாவிய நீந்தி பதுமாதியை மீதினில்
ஊர்ந்து உற்பல ஓடையில் நீடிய உகள் சேலை
வார்ந்து பகழீ எதிர் ஆகி மை கூர்ந்து பரியா வரி சேர் அவை
சேர்ந்து குழையோடு ஊசல் ஆடிய விழியாலே
சாய்ந்து பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்த்து பணினார் இரு தாளினில்
வீழ்ந்து இ படி மீதினிலே சிறிது அறிவாலே
சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்து படி வீணிலே உயிர்
மாய்ந்து இப்படி போகினும் ஓர் மொழி மறவேனே
சார்ந்த பெரு நீர் வெள்ளமாகவெ பாய்ந்த அப்பொழுது ஆரும் இல்லாமலெ
காந்த பெரு நாதனும் ஆகிய மதராலே
தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி
சேஞ்செக்கண சேகெண சேகெண என தாளம்
காந்த பதம் மாறி உலாவு உயர் ஆந்தன் குருநாதனும் ஆகியெ
போந்த பெருமான முருகா ஒரு பெரியோனே
காந்தக்கலும் ஊசியுமே என ஆய்ந்து தமிழ் ஓதிய சீர் பெறும்
காஞ்சி பதி மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#352
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத
அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி
சிறிது கூட்டி கொணர்ந்து தெரு உலாத்தி திரிந்து தெரிவைமார்க்கு சொரிந்து அவமே யான்
திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றி பரிந்து தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே
இறைவர் மாற்று அற்ற செம்பொன் வடிவம் ஏற்று பிரிந்து இடபம் மேல் கச்சி வந்த உமையாள்தன்
இருளை நீக்க தவம் செய்து அருள நோக்கி குழைந்த இறைவர் கேட்க தகும் சொல் உடையோனே
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய் புக்கு நின்று குருவி ஓட்டி திரிந்த தவ மானை
குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி புணர்ந்த குமர கோட்டத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#353
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும் இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம் புயல் நேர் குழலை குலைக்கவும் நகரேகை
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும் மந்தர மா முலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் இளைஞோர்கள்
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும் வம்பு உரை கூறி வளைத்து இணைக்கவும்
மன்றிடை ஆடி மருள் கொடுக்கவும் எவரேனும்
நிந்தை செயாது பொருள் பறிக்கவும் இங்கு வலார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள்
குன்றைய ரூபக கற்பக பிளை இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷர பிரபந்த சடானன துஷ்ட நிக்ரக
தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம சம்பு தாடகம் அடுத்த தக்ஷிண
சுந்தரமாறன் மதில் புறத்து உறை பெருமாளே

மேல்

#354
அம்புலி நீரை சூடிய செம் சடை மீதில் தாவிய ஐந்தலை நாக பூஷணர் அருள் பாலா
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும் அங்கையினால் நின் பூசையும் அணியாமல்
வம்பு அணி பார பூண் முலை வஞ்சியர் மாய சாயலில் வண்டு உழல் ஓதி தாழலில் இரு காதில்
மண்டிய நீல பார்வையில் வெண் துகில் ஆடை சேர்வையில் மங்கி எய் ஏழை பாவியென் அழிவேனோ
கொம்பு அனை நீல கோமளை அம்புய மாலை பூஷணி குண்டலி ஆல போசனி அபிராமி
கொஞ்சிய வான சானவி சங்கரி வேத பார்வதி குன்று அது வார் பொன் காரிகை அருள் பாலா
செம் பவளம் ஆய கூர் இதழ் மின் குற மானை பூண் முலை திண் புயம் ஆர பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாண பாவலர் சங்கீத யாழை பாடிய தென் திருவானைக்கா உறை பெருமாளே

மேல்

#355
அனித்தமான ஊன் நாளும் இருப்பதாகவே நாசி அடைத்து வாயு ஓடாத வகை சாதித்து
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார சிரத்தை ஆகி யான் வேறு என் உடல் வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய்
தொனித்த நாத வேய் ஊது சகஸ்ர நாம கோபால சுதற்கு நேச மாறாத மருகோனே
சுவர்க்க லோக மீகாமன் சமஸ்த லோக பூ பால தொடுத்த நீப வேல் வீர வயலூரா
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க மேவு காவேரி மக ப்ரவாக பானீயம் அலை மோதும்
மணத்த சோலை சூழ் காவை அனைத்து லோகம் ஆள்வாரும் மதித்த சாமியே தேவர் பெருமாளே

மேல்

#356
ஆரம் அணி வாரை பீறி அற மேலிட்டு ஆடவர்கள் வாட துறவோரை
ஆசை மடலூர் வித்து ஆளும் அதி பார பாளித படீர தன மானார்
கார் அளகம் நீழல் காது அளவும் ஓடி காதும் அபிராம கயல் போல
காலன் உடல் போட தேடி வரு நாளில் காலை மறவாமல் புகல்வேனோ
பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாச சாமள கலாப பரி ஏறிட்டு
பாய் மதக போல தான் ஒடி கலா முன் பாடி வரும் ஏழை சிறியோனே
சூரர் புர சூறைக்கார அசுரர் காவல்கார இள ஏனல் புனம் மேவும்
தோகை திரு வேளைக்கார தமிழ் வேத சோதி வளர் காவை பெருமாளே

மேல்

#357
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன் ஆகம கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் தெருவூடே
ஆர வட்ட முலைக்கு விலை பணம் ஆயிர கலம் ஒட்டி அளப்பினும்
ஆசை அ பொருள் ஒக்க நடிப்பவர் உடன் மாலாய்
மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையும் ஆய் எடுத்த குலைப்பொடு பித்தமும்
மேல் கொள தலை இட்ட விதிப்படி அதனாலே
மேதினிக்குள் அபத்தன் என பல பாடு பட்டு புழு கொள் மல குகை
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் அருள்தாராய்
பீலி மிக்க மயில் துரகத்தினில் ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல்
பீறலுற்ற அ யுத்த களத்திடை மடியாத
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை பேரை உக்ர கள பலி இட்டு உயர்
பேய் கை கொட்டி நடிப்ப மணி கழுகுடன் ஆட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள் வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை அருள்வோனே
ஏழிசை தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில் பயில் உத்தம
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே

மேல்

#358
உரை காரிகைப்பால் எனக்கே முதல் பேர் உனக்கோ மடல் கோவை ஒன்று பாட
உழப்பாது இப கோடு எழுத்தாணியை தேடி எடு உனை பாரில் ஒப்பார்கள் கண்டிலன் யான்
குரைக்கு ஆன வித்யா கவி பூபருக்கே குடி காண் முடிப்போடு கொண்டு வா பொன்
குல பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய் என கூறி இடர்ப்பாடின் மங்குவேனோ
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ் கூடலில் போய் அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு
அறத்தாய் என பேர் படைத்தாய் புனல் சேல் அற பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே
திரை காவிரிக்கே கரை கானகத்தே சிவ த்யானம் உற்றோர் சிலந்தி நூல் செய்
திரு காவணத்தே இருப்பார் அருள்கூர் திரு சாலக சோதி தம்பிரானே

மேல்

#359
ஓல மறைகள் அறைகின்ற ஒன்று அது மேலை வெளியில் ஒளிரும் பரம் சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்
ஓத அரிய துரியம் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது சிவஞானம்
சால உடைய தவர் கண்டு கொண்டது மூல நிறைவு குறைவு இன்றி நின்றது
சாதி குலமும் இலது அன்றி அன்பர் சொன வியோமம்
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த மெய் வீடு பரம சுக சிந்து இந்த்ரிய
தாப சபலம் அற வந்து நின் கழல் பெறுவேனோ
வால குமர குக கந்த குன்று எறி வேல மயில என வந்து கும்பிடு
வான விபுதர் பதி இந்த்ரன் வெம் துயர் களைவோனே
வாச களப வர துங்க மங்கல வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரண ரங்க புங்கவ வயலூரா
ஞாலம் முதல்வி இமயம் பயந்த மின் நீலி கவுரி பரை மங்கை குண்டலி
நாளும் இனிய கனி எங்கள் அம்பிகை த்ரி புராயி
நாத வடிவி அகிலம் பரந்தவள் ஆலின் உதரம் உள பைம் கரும்பு வெண்
நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே

மேல்

#360
கரு முகில் திரளாக கூடிய இருள் என மருள் ஏறி தேறிய
கடி கமழ் அளக ஆயக்காரிகள் புவி மீதே
கனவிய விலை ஓலை காதிகள் முழு மதி வதனம் நேர் அ பாவைகள்
களவிய முழு மோசக்காரிகள் மயலாலே
பர நெறி உணரா அ காமுகர் உயிர் பலி கொளும் மோகக்காரிகள்
பகழியை விழியாக தேடிகள் முகம் மாய
பகடிகள் பொருள் ஆசைப்பாடிகள் உருவிய தன பார கோடுகள்
பட உளம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவாயே
மரகத வித நேர் முத்து ஆர் நகை குறமகள் அதி பார பூண் முலை
மருவிய மணவாள கோலமும் உடையோனே
வளை தரு பெரு ஞாலத்து ஆழ் கடல் முறை இட நடுவாக போய் இரு
வரை தொளைபட வேல் விட்டு ஏவிய அதி தீரா
அரவணைதனில் ஏறி சீருடன் விழி துயல் திருமால் சக்ராயுதன்
அடி இணை முடி தேடி காணவும் அரிதாய
அலை புனல் சடையார் மெச்சு ஆண்மையும் உடையது ஒர் மயில் வாசி சேவக
அழகிய திருவானைக்கா உறை பெருமாளே

மேல்

#361
காவி பூவை ஏவை இகல்வன நீலத்து ஆலகால நிகர்வன காதி போக மோகம் அருள்வன இரு தோடார்
காதில் காதி மோதி உழல் கண மாயத்தார்கள் தேக பரிசன காம க்ரோத லோப மதம் இவை சிதையாத
பாவிக்கு ஆயு வாயு வலம் வர லாலிப்பார்கள் போத கரும உபாயத்தான ஞான நெறிதனை இனிமேல் அன்பா
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ
கூவி கோழி வாழி என மயில் ஆலித்து ஆலகாலம் என உயர் கூளி சேனை வான மிசைதனில் விளையாட
கோர தீர சூரனுடை வினை பாற சீறல் ஏனபதிதனை கோல காலமாக அமர் செய்த வடி வேலா
ஆவி சேல்கள் பூகம் மடல் இள பாளை தாறு கூறுபட உயர் ஆலை சோலை மேலை வயலியில் உறைவோனே
ஆசை தோகைமார்கள் இசை உடன் ஆடி பாடி நாடி வரு திருவானைக்காவில் மேவி அருளிய பெருமாளே

மேல்

#362
குருதி புலால் என்பு தோல் நரம்புகள் கிருமிகள் மால் அம் பிசீதம் மண்டிய
குடர் நிணம் ரோமங்கள் மூளை என்பன பொதி காய
குடிலிடை ஓர் ஐந்து வேடர் ஐம்புல அடவியில் ஓடும் துர் ஆசை வஞ்சகர்
கொடியவர் மா பஞ்ச பாதகம் செய அதனாலே
சுருதி புராணங்கள் ஆகமம் பகர் சரியை க்ரியை அண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் முயலாதே
சுமடம் அதாய் வம்பு மால் கொளும் தீய திமிரரொடே பந்தமாய் வருந்திய
துரிசு அற ஆநந்த வீடு கண்டிட அருள்வாயே
ஒரு தனி வேல் கொண்டு நீள் க்ரவுஞ்சமும் நிருதரும் மாவும் கலோல சிந்துவும்
உடைபட மோதும் குமார பங்கய கர வீரா
உயர் தவர் மா உம்பரான அண்டர்கள் அடி தொழுதே மன் பராவு தொண்டர்கள்
உளம் அதில் நாளும் குலாவி இன்புற உறைவோனே
கருதிய ஆறு அங்க வேள்வி அந்தணர் அரிகரி கோவிந்த கேசவன் என்று இரு
கழல் தொழு சீரங்க ராசன் அன்புறு மருகோனே
கமலனும் ஆகண்டல ஆதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய
கரிவனம் வாழ் சம்பு நாதர் தந்து அருள் பெருமாளே

மேல்

#363
நாடி தேடி தொழுவார்பால் நான் நத்து ஆக திரிவேனோ
மாட கூடல் பதி ஞான வாழ்வை சேர தருவாயே
பாடல் காதல் புரிவோனே பாலை தேன் ஒத்த அருள்வோனே
ஆடல் தோகைக்கு இனியோனே ஆனைக்காவல் பெருமாளே

மேல்

#364
நிறைந்த துப்பு இதழ் தேன் ஊறல் நேர் என மறம் தரித்த கண் ஆலால நேர் என
நெடும் சுருட்டு குழல் ஜீமூத நேர் என நெஞ்சின் மேலே
நெருங்கு பொன் தனம் மா மேரு நேர் என மருங்கு நிட்கள ஆகாசம் நேர் என
நிதம்பம் முக்கணர் பூண் ஆரம் நேர் என நைந்து சீவன்
குறைந்து இதம்பட வாய் பாடி ஆதரம் அழிந்து அணைத்து அணை மேல் வீழும் மால் கொடு
குமண்டை இட்டு உடை சோரா விடாயில் அமைந்து நாபி
குடை திளைப்புறும் மா மாயா வாழ்வு அருள் மடந்தையர்க்கு ஒரு கோமாளம் ஆகிய
குரங்கை ஒத்து உழல்வேனோ மனோலயம் என்று சேர்வேன்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது ஏது சொல்
மனம் களித்திடல் ஆமோ துரோகிதம் முன்பு வாலி
வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த அதி சரம் ஓகோ கெடாது இனி
வரும்படிக்கு உரையாய் பார் பல ஆகவம் என்று பேசி
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து அதின் மேல் ஏறி ராவணன்
அரண் குலைத்து எதிர் போராடு நாரணன் மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன்
நலம் கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே

மேல்

#365
பரிமளம் மிக உள சாந்து மா மத முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு முகில் போல
பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய
பணிவிடைகளில் இறுமாந்த கூளனை நெறி பேணா
விரகனை அசடனை வீம்பு பேசிய விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போம் கபாடனை மலம் மறா
வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவி முன் அருள்செய்து பாங்கின் ஆள்வதும் ஒரு நாளே
கருதலர் திரிபுரம் மாண்டு நீறு எழ மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் உறை பேதை
களி மயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி அருள் பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவணன் இடி என அலறி முன் ஏங்கி வாய்விட
முடி பல திருகிய நீண்ட மாயவன் மருகோனே
முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல் இடை இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக
முது பழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் பெருமாளே

மேல்

#366
வேலை போல் விழி இட்டு மருட்டிகள் காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் முலை யானை
மேல் இட்டே பொரவிட்ட பொறிச்சிகள் மார்பை தோளை அசைத்து நடப்பிகள்
வேளுக்கு ஆண்மை செலுத்து சமர்த்திகள் களிகூரும்
சோலை கோகிலம் ஒத்த மொழிச்சிகள் காசற்றாரை இதத்தில் ஒழிச்சிகள்
தோலை பூசி மினுக்கி உருக்கிகள் எவரேனும்
தோய பாயல் அழைக்கும் அவத்திகள் மேக போகம் முயக்கி மயக்கிகள்
சூறைக்காரிகள் துக்க வலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகி குண திக்கினில் ஆதித்யாய என பகர் தர்ப்பணம்
காயத்ரீ செபம் அர்ச்சனையை செய்யும் முநிவோர்கள்
கானத்து ஆசிரமத்தினில் உத்தம வேள்வி சாலை அளித்தல் பொருட்டு எதிர்
காத தாடகையை கொல் கிருபை கடல் மருகோனே
ஆலை சாறு கொதித்து வயல் தலை பாயச சாலி தழைத்து இரதித்த அமுதாக
தேவர்கள் மெச்சிய செய்ப்பதி உறை வேலா
ஆழி தேர் மறுகில் பயில் மெய் திருநீறு இட்டான் மதிள் சுற்றிய பொன்
திருவானைக்காவினில் அப்பர் பிரியப்படு பெருமாளே

மேல்

#367
குமர குருபர குணதர நிசிசர திமிர தினகர சரவணபவ கிரி
குமரி சுத பகிரதி சுத சுர பதி குல மானும்
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய முருக சரண் என உருகுதல் சிறிதும் இல்
கொடிய வினையனை அவலனை அசடனை அதி மோக
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்கள் அளவினொடு பொருள் அளவளவு அருளிய
கலவி அளறிடை துவளுறும் வெளிறனை இனிதாள
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை சுருதி புடை தர வரும் இரு பரிபுர
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே
தமர மிகு திரை எறி வளை கடல் குடல் மறுகி அலைபட விட நதி உமிழ்வன
சமுக முக கண பண பணி பதி நெடு வடமாக
சகல உலகமு நிலைபெற நிறுவிய கனக கிரி திரி தர வெகு கர மலர்
தளர இனியதொர் அமுதினை ஒரு தனி கடையா நின்று
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில் அகில புவனமும் அளவிடு குறியவன்
அளவு நெடியவன் அளவிட அரியவன் மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமளே

மேல்

#368
அருவம் இடை என வருபவர் துவர் இதழ் அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் அதி பார
அசகம் முலை புளகிதம் எழ அமளியில் அமளி பட அநவரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம் உலகோரை
தருவை நிகரிடு புலமையும் அலம்அலம் உருவும் இளமையும் அலம்அலம் விபரித
சமைய கலைகளும் அலம்அலம் அலமரும் வினை வாழ்வும்
சலிய லிபி என சனனம் அலம்அலம் இனி உன் அடியாரொடு ஒரு வழிபட இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் அருள்வாயே
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும் முடி தமனிய தநு உடன்
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்
உறுதிபடு சுர ரத மிசை அடி இட நெறுநெறு என முறிதலும் நிலை பெறு தவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற ஒரு கோடி
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என வெடிபடுவன புகைவன
திகுதிகு என எரிவன அனல் நகையொடு முனிவார்தம்
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணயில் எழு நிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய பெருமாளே

மேல்

#369
கருணை சிறிதும் இல் பறி தலை நிசிசரர் பிசித அசன மறவர் இவர் முதலிய
கலக விபரித வெகு பர சமயிகள் பலர் கூடி
கலகல என நெறி கெட முறை முறை முறை கதறி வதறிய குதறிய கலை கொடு
கருத அரியதை விழி புனல் வர மொழி குழறா அன்பு
உருகி உனது அருள் பரவுகை வரில் விரகு ஒழியில் உலகியல் பிணை விடில் உரை செயல்
உணர்வு கெடில் உயிர் புணர் இருவினை அளறு அது போக
உதறில் எனது எனும் மலம் அறில் அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது ஒரு
உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு நாளே
தருண சத தள பரிமள பரிபுர சரணி தமனிய தநு தரி திரிபுர
தகனி கவுரி பவதி பகவதி பயிரவி சூலி
சடில தரி அநுபவை உமை திரிபுரை சகல புவனமும் உதவிய பதிவ்ருதை
சமய முதல்வி தனய பகிரத சுத சத கோடி
அருண ரவியினும் அழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர
அருணை நகர் உறை சரவண குரவு அணி புய வேளே
அடவி சரர் குல மரகத வனிதையும் அமரர் குமரியும் அனவரதமும் மருகு
அழகு பெற நிலை பெற வரம் அருளிய பெருமாளே

மேல்

#370
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இரு தன கிரி அசை தர இடை
துவள மனிதரும் அமரரும் முநிவரும் உடன் ஓடி
தொடர வன மணி மகரம் இலகு குழை அடருவன விட மிளிர்வன ரதி பதி
சுருதி மொழிவன கயல் விழி புரள் தர நடுவாக
வகிரு மதி புரை தநு நுதல் பனிவர வனச பத யுக பரிபுரம் ஒலி பட
மறுகுதோறும் உலவி இனிய கலவியை விலை கூறும்
வரைவில் அரிவையர் தரு சுக சலதியில் அலையும் எனது உயிர் அநுதினம் நெறி தரு
மவுன சிவசுக சலதியில் முழுகுவது ஒரு நாளே
முகிலும் மதியமும் ரவி எழு புரவியு நெடிய குலை மிடறு இடற முது ககன
முகடு கிழிபட வளர்வன கமுகு இன மிசை வாளை
முடுகு கயலுகள் வயல்களும் முருகு அவிழ் தடமும் முளரியும் அகழியும் மதில்களும்
முழுதும் உடையது ஓர் அருணையில் உறைதரும் இளையோனே
அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும்
அபரிமித மத கரிகளும் அரிகளும் உடனே கொண்ட
அருவி இழிதரும் அரு வரைதனில் ஒரு சவர வனிதையை முநி தரு புனிதையை
அவசமுடன் மலர் அடி தொழுது உருகிய பெருமாளே

மேல்

#371
மகரம் எறி கடல் விழியினும் மொழியினும் மதுப முரல் குழல் வகையினும் நகையினும்
வளமையினும் முக நிலவினும் இலவினும் நிறம் மூசும்
மதுர இதழினும் இடையினும் நடையினும் மகளிர் முகுளித முலையினும் நிலையினும்
வனச பரிபுர மலரினும் உலரினும் அவர் நாமம்
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும் முருகி நெறி முறை தவறினும் அவரோடு
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் அநுராக
பரவை படியினும் வசம் அழியினும் முதல் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
பரம ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே
ககன சுரபதி வழிபட எழு கிரி கடக கிரியோடு மிதி பட வட குல
கனக கன குவடு அடியோடு முறிபட முது சூதம்
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருப கிரி மயில் வாழ்வே
தகன கரதல சிவ சுத கணபதி சகச சரவண பரிமள சத தள
சயன வனசரர் கதி பெற முனி பெறு புன மானின்
தரள முகபட நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே

மேல்

#372
முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என முதிய மதி அது முகம் என நுதல் இணை
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி என மூவா
முளரிதனின் முகளித மலர் முலை என முறுவல்தனை இரு குழைதனை மொழிதனை
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என மொழி கூறி
பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு பதியிலவர் வடிவுளது அழகு என ஒரு
பழுதும் அற அவர் பரிவுற இதம் அது பகராதே
பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் உகை பட விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு
பவனிதனை அநுதின நினை என அருள் பகர்வாயே
புகல அரியது பொருள் இது என ஒரு புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் புடைசூழ
புரமும் எரி எழு நகை அது புரிபவர் புனலும் வளர் மதி புனை சடையினர் அவர்
புடவி வழிபட புதைபொருள் விரகொடு புகல்வோனே
அகில கலைகளும் அற நெறி முறைமையும் அகில மொழி தரு புலவரும் உலகு இனி
அறிஞர் தவம் முயல்பவர்களும் இயல் இசை அதனாலே
அறுவர் முலை உணும் அறுமுகன் இவன் என அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ
அருணை நகர்தனில் அழகுடன் மருவிய பெருமாளே

மேல்

#373
முருகு செறி குழல் சொருகிய விரகிகள் முலைகள் அளவிடு முகபட பகடிகள்
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் முழு நீல
முழுகு புழுகு அகில் குழை வடி அழகியர் முதிர வளர் கனி அது கவர் இதழியர்
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் அநுராகம்
மருவி அமளியில் நலம் இடு கலவியர் மனது திரவியம் அளவு அளவு அளவியர்
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் வழியே நான்
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன் அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும் இரு பெரு சரணமும் மறவேனே
கருதி இருபது கர முடி ஒரு பது கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
கடிய விய நகர் புக வரு கன பதி கனல் மூழ்க
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு
களரிதனில் ஒரு கணை விடும் அடல் அரி மருகோனே
சருவும் அவுணர்கள் தளமோடு பெரு வலி அகல நிலைபெறு சயிலமும் இடி செய்து
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை மயில் வீரா
தருண மணி அவை பலப்பல செருகிய தலையள் துகில் இடை அழகிய குறமகள்
தனது தனம் அது பரிவொடு தழுவிய பெருமாளே

மேல்

#374
விடமும் அமுதமும் மிளிர்வன இணை விழி வனசம் அல தழல் முழுகிய சரம் என
விரை செய் ம்ருகமத அளகமும் முகில் அல ஒரு ஞான
விழியின் வழி கெட இருள்வது ஒர் இருள் என மொழியும் அமுது அல உயிர் கவர் வலை என
விழையும் இள நகை தளவு அல களவு என வியன் நாபி
தடமும் மடு அல படு குழி என இடை துடியும் அல மதன் உரு என வன முலை
சயிலம் அல கொலை யமன் என முலை மிசை புரள் கோவை
தரளம் மணி அல யமன் விடு கயிறு என மகளிர் மகளிரும் அல பல வினை கொடு
சமையும் உரு என உணர்வொடு புணர்வது ஒரு நாளே
அடவி வனிதையர் தனது இரு பரிபுர சரண மலர் அடி மலர் கொடு வழி பட
அசலம் மிசை விளை புனம் அதில் இனிது உறை தனி மானும்
அமரர் அரிவையும் இரு புடையினும் வர முகரம் முக படம் கவள தவள கர
அசலம் மிசை வரும் அபிநவ கலவியும் விளையாடும்
கடக புளகித புய கிரி சமுக விகட கடக கச ரத துரகத நிசிசரர்
கடக பயிரவ கயிரவ மலர்களும் எரி தீயும்
கருக ஒளி விடு தனுபர கவுதம புநித முநி தொழ அருணையில் அறம் வளர்
கருணை உமை தரு சரவண சுரபதி பெருமாளே

மேல்

#375
கம அரி மலர் குழல் சரிய புளகித கனக தன கிரி அசைய பொரு விழி
கணைகள் என நுதல் புரள துகில் அதை நெகிழ் மாதர்
கரிய மணி புரள அரிய கதிர் ஒளி பரவ இணை குழை அசைய நகை கதிர்
கனக வளை கல நடைகள் பழகிகள் மயில் போல
திமிரு மத புழுகு ஒழுக தெரிவினில் அலைய விலை முலை தெரிய மயல் கொடு
திலத மணி முக அழகு சுழலிகள் இதழூறல்
திரையில் அமுது என கழைகள் பல சுளை எனவும் அவர் தழுவும் அசடனை
திருகு புலை கொலை கலிகள் சிதறிட அருள்தாராய்
குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என தாளம்
குரைசெய் முரசமொடு அரிய விருது ஒலி டமட டமடம டமட டம என
குமுற திமிலை சலரி கினரி முதல் இவை பாட
அமரர் முநிவரும் அயனும் அனைவரும் மதுகை மலர் கொடு தொழுது பதமுற
அசுரர் பரி கரி இரதமும் உடைபட விடும் வேலா
அகில புவனமொடு அடைய ஒளி பெற அழகு சரண் மயில் புறம் அது அருளி ஒர்
அருணகிரி குறமகளை மருவிய பெருமாளே

மேல்

#376
கயல் விழித்தேன் எனை செயல் அழித்தாய் என கணவ கெட்டேன் என பெறு மாது
கருது புத்ரா என புதல்வர் அப்பா என கதறிட பாடையில் தலை மீதே
பயில் குலத்தார் அழ பழைய நட்பார் அழ பறைகள் கொட்டா வர சமனாரும்
பரிய கை பாசம் விட்டு எறியும் அப்போது எனை பரிகரித்து ஆவியை தரவேணும்
அயில் அற சேவல் கைக்கு இனிது உர தோகையுள் அருணையில் கோபுரத்து உறைவோனே
அமரர் அத்தா சிறு குமரி முத்தா சிவத்து அரிய சொல் பாவலர்க்கு எளியோனே
புயல் இளைப்பாறு பொன் சயிலம் மொய் சாரலில் புன மற பாவையை புணர்வோனே
பொடிபட பூதரத்தொடு கடல் சூரனை பொரு முழு சேவக பெருமாளே

மேல்

#377
கறுவி மிக்கு ஆவியை கலகும் அ காலன் ஒத்து இலகு கண் சேல் களிப்புடன் நாட
கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள் களவினில் காசினுக்கு உறவால் உற்று
உறு மலர் பாயலில் துயர் விளைத்து ஊடலுற்று உயர் பொருட்கு ஓதி உட்படு மாதர்
ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர் புணை இணை தாள்தனை தொழுவேனோ
மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மை செறி திரு கோலம் உற்று அணைவானும்
மறைகள் புக்கார் என குவடு நெட்டாழி வற்றிட அடல் சூரனை பொரும் வேலா
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனை பாடல் உற்று அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே

மேல்

#378
பரிய கை பாசம் விட்டு எறியும் அ காலனுள் பயன் உயிர் போய் அகப்பட மோகம்
படியில் உற்றார் என பலர்கள் பற்றா அடல் படர் எரி கூடு விட்டு அலை நீரில்
பிரியும் இ பாதக பிறவி உற்றே மிக பிணிகளுக்கே இளைத்து உழல் நாயேன்
பிழை பொறுத்தாய் என பழுது அறுத்து தாள் என பிரியம் உற்று ஓதிட பெறுவேனோ
கரிய மெய் கோலம் உற்ற அரியின் நல் தாமரைக்கு அமைவ பற்று ஆசை அ கழலோர் முன்
கலை வகுத்து ஓதி வெற்பு அது தொளைத்தோன் இயல் கடவுள் செ சேவல் கை கொடியோன் என்று
அரிய நல் பாடலை தெரியும் உற்றோர் கிளைக்கு அருணையில் கோபுரத்து உறைவோனே
அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசையுற்று அயரும் அ சேவக பெருமாளே

மேல்

#379
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட தழல் அமளி மீது எறிக்கு நிலவாலே
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த தறுகண் மத வேள் தொடுத்த கணையாலே
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும் மருவும் எனது ஆவி சற்றும் அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு சித்ர மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி கலவி தொலையா மறத்தி மணவாளா
கடு உடை அரா நிரைத்த சடில முடி மீது வைத்த கடிய மலர் ஆதரித்த கழல் வீரா
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி அருணைநகர் கோபுரத்தில் உறைவோனே
அசுரர் குலம் வேரறுத்து வட அனலை மீது எழுப்பி அமரர் சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#380
முழுகி வடவா முகத்தில் எழு கனலிலே பிறக்கும் முழு மதி நிலாவினுக்கும் வசையாலும்
மொழியும் மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும் முதிய மத ராஜனுக்கும் அழியாதே
புழுகு திகழ் நீபம் அதில் அழகிய குரா நிரைத்த புதுமையினில் ஆறிரட்டி புயம் மீதே
புணரும் வகை தான் நினைத்து உணரும் வகை நீல சித்ர பொரும் மயிலில் ஏறி நித்தம் வரவேணும்
எழும் மகர வாவி சுற்றும் பொழில் அருணை மா நகர்க்குள் எழுத அரிய கோபுரத்தில் உறைவோனே
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த இள முலை விடாத சித்ர மணி மார்பா
செழு மகுட நாகம் மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த சிவனை முதல் ஓதுவித்த குருநாதா
திசைமுகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற சிறை அடைய மீள விட்ட பெருமாளே

மேல்

#381
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும் மதுர மொழி யாழ் இசைக்கும் இருநாலு
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும் மடி அருவ வேள் கணைக்கும் அற வாடி
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதலுற்ற மயல் தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர நிலவு மயில் ஏறியுற்று வரவேணும்
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து மவுலி அற வாளி தொட்ட அரி ராமன்
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க மவுன மறை ஓதுவித்த குருநாதா
இடை அரி உலாவும் உக்ர அருணகிரி மா நகர்க்குள் இனிய குண கோபுரத்தில் உறைவோனே
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட பெருமாளே

மேல்

#382
ஆல விழி நீலத்தால் அதர பானத்தால் அளக பார கொண்டலாலே
ஆர நகையால் வில் போர் நுதலினால் வித்தார நடையால் நல் கொங்கையாலே
சால மயலாகி கால திரிசூலத்தால் இறுகு பாச துன்ப மூழ்கி
தாழ்வில் உயிர் வீழ்பட்டு ஊழ் வினை விடாமல் சாவதன் முன் ஏவல் கொண்டிடாயோ
சேலை தரு கானில் கோல மற மானை தோளில் உறவாக கொண்ட வாழ்வே
சோதி முருகா நித்தா பழய ஞான சோணகிரி வீதி கந்த வேளே
பாலக கலாப கோமள மயூர பாக உமைபாகத்தன் குமாரா
பாத மலர் மீதில் போத மலர் தூவி பாடுமவர் தோழ தம்பிரானே

மேல்

#383
பேதக விரோத தோதக விநோத பேதையர் குலாவை கண்டு மாலின்
பேதைமையுறா மற்று ஏதம் அகலாமல் பேத உடல் பேணி தென்படாதே
சாதக விகார சாதல் அவை போக தாழ்வில் உயிராக சிந்தையால் உன்
தாரை வடி வேலை சேவல்தனை ஏனல் சாரல் மற மானை சிந்தியேனோ
போதக மயூர போதக போது அக அகடு ஆ மன் போது அருணை வீதி கந்த வேளே
போதக கலாப கோதை முது வானில் போன சிறை மீள சென்ற வேலா
பாதக பதாதி சூரன் முதல் வீழ பார் உலகு வாழ கண்ட கோவே
பாத மலர் மீதில் போது மலர் தூவி பாடும் அவர் தம்பிரானே

மேல்

#384
அமுதமே ஊறு சொல் ஆகிய தோகையர் பொருள் உளார் உரை என் ஆணை உன் ஆணை என்
அருகு வீடு இது தான் அதில் வாரும் என உரை கூறும்
அசடு மாதர் குவாது சொல் கேடிகள் தெருவின் மீது குலாவி உலாவிகள்
அவர்கள் மாயை படாமல் கெடாமல் நினது அருள்தாராய்
குமரி காளி வராகி மகேசுரி கவுரி மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளு ரூப முராரி சகோதரி உலக தாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரி தன் நாயகி மலை குமாரி கபாலி நல் நாரணி
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி திகிரி மேவு கையாளி செயாள் ஒரு
சகல வேதமும் ஆயின தாய் உமை அருள் பாலா
திமிதம் ஆடு சுராரி நிசாசரர் முடிகள்தோறும் கடாவி இடு ஏய் ஒரு
சில பசாசு குணாலி நிணம் உண விடும் வேலா
திரு உலாவு சொணேசர அணாமலை முகில் உலாவு விமான நவோ நிலை
சிகர மீது குலாவி உலாவிய பெருமாளே

மேல்

#385
உருகும் மா மெழுகாகவுமே மயல் பெருகும் ஆசை உளாகிய பேர் வரில்
உரிய மேடையில் வார் குழல் நீவிய ஒளி மானார்
உடை கொள் மேகலையால் முலை மூடியும் நெகிழ நாடிய தோதகம் ஆடியும்
உவமை மா மயில் போல் நிற மேனியர் உரையாடும்
கரவு அது ஆம் மன மாதர்கள் நீள் வலை கலக வாரியில் வீழ் அடியேன் நெறி
கருதொணா அதி பாதகன் நேசமது அறியாத
கசட மூடனை ஆளவுமே அருள் கருணை வாரிதியே இரு நாயகி
கணவனே உன தாளிணை மா மலர் தருவாயே
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ ஆயுதபாணி நல்
துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர் ஆடிடு
சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம்வருவோனே
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக மேனியனே அரன்
அணையு நாயகி பாலகனே நிறை கலையோனே
அணி பொன் மேரு உயர் கோபுரம் மா மதில் அதிரும் ஆரணம் வாரண வீதியுள்
அருணை மா நகர் மேவி உலாவிய பெருமாளே

மேல்

#386
கரி உரி அரவம் அணிந்த மேனியர் கலை மதி சலமு நிறைந்த வேணியர்
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் கஞ்ச மாதின்
கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர் கயிலை அமர்ந்த காரணர்
கதிர் விரி மணி பொன் நிறைந்த தோளினர் கண்ட காள
விரிவு என உனது உள் உகந்த வேல் என மிக இரு குழையும் அடர்ந்து வேளினை
அனையவர் உயிரை விழுங்கி மேலும் வெகுண்டு நாடும்
வினை விழி மகளிர் தனங்கள் மார்புற வித மிகு கலவி பொருந்தி மேனியும்
எழில் கெட நினைவும் அழிந்து மாய்வது ஒழிந்திடாதோ
எரி சொரி விழியும் இரண்டு வாள் எயிறு இரு பிறை சயிலம் இரண்டு தோள் முகில்
என வரும் அசுரர் சிரங்கள் மேரு இடிந்து வீழ்வது
என விழ முதுகு பிளந்து காளிகள் இடு பலி எனவு நடந்து தாள் தொழ
எதிர் பொருது உதிரம் உகந்த வேகம் உகைந்த வேலா
அரி கரி உழுவை அடர்ந்த வாள் மலை அருணையில் அறவும் உயர்ந்த கோபுரம்
அதில் உறை குமர அநந்த வேத மொழிந்து வாழும்
அறு முக வடிவை ஒழிந்து வேடர்கள் அடவியில் அரிவை குயங்கள் தோய் புய
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#387
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட வட தமனிய கிரி கம்பமாய் நட
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன்
கயிறு என அமரர் அநந்த கோடியும் முறைமுறை அமுது கடைந்த நாள் ஒரு
கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் உறுகிட அண்ட கோளகை
வெடிபட எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவருறு பஞ்ச பாதக
விழி வலை மகளிரொடு அன்புகூர்வது ஒழிந்திடாதோ
முனை பெற வளைய அணைந்த மோகர நிசிசரர் கடகம் முறிந்து தூள் எழ
முகில் என உருவம் இருண்ட தாருகன் அஞ்ச மீன
முழுகிய திமிர தரங்க சாகர முறையிட இமையவர் தங்கள் ஊர் புக
முது கிரி உருவம் முனிந்த சேவக செம்பொன் மேரு
அனையன கனவித சண்ட கோபுர அருணையில் உறையும் அருந்து உணா முலை
அபிநவ வனிதை தரும் குமார நெருங்கு மால் கொண்டு
அடவியில் வடிவு கரந்து போய் ஒரு குறமகள் பிறகு திரிந்த காமுக
அரி அர பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#388
இரவியும் மதியும் தெரிவுற எழும் அம் புவிதனில் இனம் ஒன்றிடு மாதும்
எழில் புதல்வரும் நின்று அழுது உளம் உருகும் இடர் கொடு நடலம் பல கூற
கருகிய உருவம் கொடு கனல் விழி கொண்டு உயிரினை நமனும் கருதா முன்
கலை கொடு பல துன்பமும் அகலிட நின் கழல் இணை கருதும்படி பாராய்
திரு மருவிய திண் புயன் அயன் விரி எண் திசை கிடுகிட வந்திடு சூரன்
திணை புயம் அது சிந்திட அலை கடல் அஞ்சிட வலியொடு கன்றிடும் வேலா
அரு மறையவர் அந்தரம் உறைபவர் அன்பு உடையவர் உய அன்று அறம் மேவும்
அரிவையும் ஒரு பங்கு இடமுடையவர் தங்கு அருணையில் உறையும் பெருமாளே

மேல்

#389
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம் பிணி கொடு விழி வெம் கனல் போல
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி இன்று என விதி வழி வந்திடுபோதில்
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர் உறவினர் கண் புனல் பாயும்
கலகமும் வரு முன் குல வினை களையும் கழல் தொழும் இயல் தந்து அருள்வாயே
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும் பட அரவணை கண் துயில் மால் அம்
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம் பயம் அற விடம் உண்டு எருது ஏறி
அரவொடு மதியம் பொதி சடை மிசை கங்கையும் உற அனல் அம் கையில் மேவ
அரிவையும் ஒரு பங்கு இடை உடையார் தங்கு அருணையில் மருவும் பெருமாளே

மேல்

#390
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு திங்களாலே
இருவினை மகளிர் மருவிய தெருவில் எரி என வரு சிறு தென்றலாலே
தட நடு உடைய கடி படு கொடிய சரம் விடு தறுகண் அநங்கனாலே
சரி வளை கழல மயல் கொளும் அரிவை தனி மலர் அணையில் நலங்கலாமோ
வட குல சயில நெடு உடல் அசுரர் மணி முடி சிதற எறிந்த வேலா
மறமகள் அமுத புளகித களப வளர் இள முலையை மணந்த மார்பா
அடல் அணி விகடம் மரகத மயிலில் அழகுடன் அருணையில் நின்ற கோவே
அரு மறை விததி முறைமுறை பகரும் அரி அர பிரமர்கள் தம்பிரானே

மேல்

#391
கெஜ நடை மடவார் வசம் அதில் உருகா கிலெசம் அது உறு பாழ் வினையாலே
கெதி பெற நினையா துதிதனை அறியா கெடு சுகம் அதில் ஆழ் மதியாலே
தசை அது மருவி வசை உடல் உடனே தரணியில் மிகவே உலைவேனோ
சத தள மலர் வார் புணை நின கழலார் தரு நிழல் புகவே தருவாயே
திசை முகவனை நீள் சிறையுற விடுவாய் திரு நெடு கரு மால் மருகோனே
திரிபுர தகனார் இடம் அதில் மகிழ்வார் திரிபுரை அருள் சீர் முருகோனே
நிசிசரர் உறை மா கிரி இரு பிளவா நிறை அயில் முடுகா விடுவோனே
நிலம் மிசை புகழ் ஆர் தலம் எனும் அருணா நெடு மதில் வட சார் பெருமாளே

மேல்

#392
அருக்கார் நலத்தை திரிப்பார் மனத்துக்கு அடுத்த ஆசை பற்றி தளராதே
அடல் காலனுக்கு கடை கால் மிதித்திட்டு அற பேதகப்பட்டு அழியாதே
கருக்காரர் நட்பை பெருக்கா சரித்து கலி சாகரத்தில் பிறவாதே
கருத்தால் எனக்கு திரு தாள் அளித்து கலை போதகத்தை புகல்வாயே
ஒருக்கால் நினைந்திட்டு இருக்கால் மிகுத்திட்டு உரைப்பார்கள் சித்தத்து உறைவோனே
உர தோள் இடத்தில் குற தேனை வைத்திட்டு ஒளித்து ஓடும் வெற்றி குமரேசா
செருக்கால் தருக்கி சுர சூர் நெருக்கு அ செரு சூர் மரிக்க பொரும் வேலா
திற பூதலத்தில் திரள் சோண வெற்பில் திரு கோபுரத்தில் பெருமாளே

மேல்

#393
அரு மா மதனை பிரியாத சரம் கயல் ஆர் நயன கொடியார்தம்
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து அணையா வலி கெட்டு உடல் தாழ
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று இளையா உளம் உக்கு உயிர் சோர
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு இரு பாதம் எனக்கு அருள்வாயே
ஒரு மால் வரையை சிறு தூள் படவிட்டு உரமோடு எறி பொன் கதிர் வேலா
உறை மான் அடவி குற மா மகளுக்கு உருகா ஆறிரு பொன் புய வீரா
திருமால் கமல பிரமா விழியில் தெரியா அரனுக்கு அரியோனே
செழு நீர் வயல் சூழ் அருணாபுரியில் திரு வீதியினில் பெருமாளே

மேல்

#394
அழுதும் ஆவா என தொழுதும் ஊடூடு நெக்கு அவசமாய் ஆதார கடல் ஊடுற்று
அமைவில் கோலாகல சமய மா பாதகர்க்கு அறியொணா மோன முத்திரை நாடி
பிழைபடா ஞான மெய்ப்பொருள் பெறாதே வினை பெரிய ஆதேச புற்பதம் மாய
பிறவி வாராகரம் சுழியிலே போய் விழ பெறுவதோ நான் இனி புகல்வாயே
பழைய பாகீரதி படுகை மேல் வாழ்வு என படியும் ஆறு ஆயின தன சாரம்
பருகுமாறு ஆனன சிறுவ சோணாசல பரம மாயூர வித்தக வேளே
பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல் பொடி படா ஓட முத்து எறி மீன
புணரி கோகோ என சுருதி கோகோ என பொருத வேலாயுத பெருமாளே

மேல்

#395
ஆனை வரி கோடு இளநிர் பார முலை சார் அசை பட்டு ஆடை மறைத்து ஆடும் மலர் குழலார்கள்
ஆர வட தோடு அலைய பேசி நகைத்து ஆசை பொருட்டு ஆரையும் மெத்தாக மயக்கிடும் மோகர்
சோனை மழை பாரம் விழி தோகை மயில் சாதியர் கை தூது விடுத்தே பொருளை பறி மாதர்
தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற்கு ஆயனை உள் சோதி ஒளி பாதம் அளித்து அருள்வாயே
தானதன தீதிமிலை பேரிகை கொட்டா சம் மலை சாய கடல் சூரை வதைத்திடுவோனே
தாள இயல் சோதி நிற காலின் எழ கோலி எடு தாபரம் வைத்து ஆடுபவர்க்கு ஒரு சேயே
தேன் இரச கோவை இதழ் பூவை குற பாவை தனத்தே உருகி சேரும் அணி கதிர் வேலா
சீர் அருணை கோபுரம் உற்று ஆன புன தோகையும் மெய் தேவமகட்கு ஓர் கருணை பெருமாளே

மேல்

#396
இடருக்கு இடர் ஆகிய கொடுமை கணை மேல் வரும் இறுதி சிறு கால் வரும் அதனாலே
இயலை தரு கானகம் முயலை தரு மேனியில் எரியை தரு மா மதி நிலவாலே
தொடர கொடு வாதையில் அடைய கரை மேல் அலை தொலைய தனி வீசிய கடலாலே
துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர் துவள தகுமோ துயர் தொலையாதோ
வட பொன் குல மேருவின் முடுகி பொரு சூரனை மடிய சுட ஏவிய வடி வேலா
மறவ குலமாம் ஒரு குற மெய் திரு மா மகள் மகிழ் புன மேவிய மயில் வீரா
அடர படர் கேதகம் மடலின் தழை சேர் வயல் அருணை திரு வீதியில் உறைவோனே
அவனி திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி அமரர்க்கு அரசாகிய பெருமாளே

மேல்

#397
இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே இள வாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே
சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே
குமரா முருகா சடிலத்தன் குருநாதா குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா
அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே அருணாபுரி வீதியில் நிற்கும் பெருமாளே

மேல்

#398
இரத சுரத முலைகளும் மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல் விளங்க
இசலிஇசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உள மகிழ்சியினோடே
இருவர் உடலும் ஒருவராய் நயக்க முகம் மேல் அழுந்த
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழ பரிவாலே
புருவ நிமிர இரு கண் வாள் நிமைக்க உபசாரம் மிஞ்ச
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி அதி சுக கலையாலே
புளகம் முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
மனமும் மனமும் உருகியே ஆதரிக்க உயிர் போல் உகந்து
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலைமாதர் சிங்கி விட அருள்புரிவாயே
பரவு மகர முகரமும் மேவலுற்ற சகரால் விளைந்த
தமரம் திமிரம் பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து சிவனிடத்து அமர் சேயே
பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்குடியினில்
பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும் அண்டர்
புதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையை புனைவோனே
அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
அடையும் இடரை முடுகியே நூற துட்ட கொலைகாரர் என்ற
அசுரர் படையை அடையவும் வேரறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு உடையோனே
அருண கிரண கருணைய பூரண சரணம் மேல் எழுந்த
இருண கரணம் முரணுறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுக பெருமாளே

மேல்

#399
இரவு பகல் பல காலும் இயல் இசை தமிழ் கூறி
திரம் அதனை தெளிவு ஆக திரு அருளை தருவாயே
பரம கருணை பெருவாழ்வே பர சிவ தத்துவ ஞானா
அரன் அருள் சற்புதல்வோனே அருணகிரி பெருமாளே

மேல்

#400
இருவர் மயலோ அமளி விதமோ என் என செயலோ அணுகாத
இருடி அயன் மால் அமரர் அடியார் இடையும் ஒலி தான் இவை கேளாது
ஒருவன் அடியேன் அலறும் மொழி தான் ஒருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பத தூள் புவன கிரி தான் உனது கிருபாகரம் ஏதோ
பரம குருவாய் அணுவில் அசைவாய் பவன முதல் ஆகிய பூத
படையும் உடையாய் சகல வடிவாய் பழைய வடிவாகிய வேலா
அரியும் அயனோடு அபயம் எனவே அயிலை இருள் மேல் விடுவோனே
அடிமை கொடு நோய் பொடிகள் படவே அருணகிரி வாழ் பெருமாளே

மேல்

#401
இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி
இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொடு அளி பாட
கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்
கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொடு அருள்வாயே
திரிபுரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி
சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண
அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா
அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே

மேல்

#402
இருவினை ஊண் பசும் பை கரு விளை கூன் குடம்பை இடர் அடை பாழ் பொதும்பு அகித வாரி
இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம் இரவிடை தூங்குகின்ற பிண நோவுக்கு
உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு உயிர் குடிபோம் குரம்பை அழியாது என்று
உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து உன் உபய பதாம் புயங்கள் அடைவேனோ
அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள் அமரர் குழாம் குவிந்து தொழ வாழும்
அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட அபிநவ சார்ங்க கண்டன் மருகோனே
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த வரை சாடும்
கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த கர குலிசேந்த்ரர் தங்கள் பெருமாளே

மேல்

#403
இருள் அளகம் அவிழ மதி போத முத்து அரும்ப இலகு கயல் புரள இரு பார பொன் தனங்கள்
இளக இடை துவள வளை பூசல் இட்டு இரங்க எவராலும்
எழுத அரிய கலை நெகிழ ஆசை மெத்த உந்தி இனிய சுழி மடுவினிடை மூழ்கி நட்பொடு அந்த
இதழ் அமுது பருகி உயிர் தேகம் ஒத்திருந்து முனிவு ஆறி
முருகு கமழ் மலர் அமளி மீதினில் புகுந்து முக வனச மலர் குவிய மோகமுற்று அழிந்து
மொழி பதற வசம் அழிய ஆசையில் கவிழ்ந்து விடுபோதும்
முழுதும் உணர உடைய முது மாதவத்து உயர்ந்த பழுது இல் மறை பயிலுவ எனா தரித்து நின்று
முநிவர் சுரர் தொழுது உருகு பாத பத்மம் என்றும் மறவேனே
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து
உலகு அறிய இவன் அடிமை யாம் என கொணர்ந்து சபையூடே
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு அவன் அது வலியவே கிழிக்க நின்று
உதறி முறை இடு பழைய வேத வித்தர் தந்த சிறியோனே
அரிய உடு பதி கடவி ஆடக சிலம்பொடு அழகு வடம் மணி முடி வியாளம் இட்டு அழுந்த
அமரர் ஒடு பலர் முடுகி ஆழியை கடைந்து அமுதாக
அருளும் அரி திரு மருக வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து உகந்த
அருணகிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#404
இறுகு மணி முலை மருவு தரளமும் எரியும் உமிழ் மதி நிலவாலே
இரவி எனது உயிர் கவர வரு குழல் இசையில் உறு கடல் அலையாலே
தறுகண் ரதி பதி மதனன் விடு கொடு சரமில் எளியெனும் அழியாதே
தருணம் மணி பொழில் அருணை நகர் உறை சயிலம் மிசையினில் வரவேணும்
முறுகு திரிபுரம் முறுகு கனல் எழ முருவல் உடையவர் குருநாதா
முடிய கொடு முடி அசுரர் பொடிபட முடுகு மரகத மயில் வீரா
குறவர் மடமகள் அமுத கனதன குவடு படும் ஒரு திரு மார்பா
கொடிய சுடர் இலைதனையும் எழு கடல் குறுக விட வல பெருமாளே

மேல்

#405
உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி உடு பதியை முட்டி அமுதூறல்
உருகி வரவிட்ட பரம சுகம் உற்று உனது அடியை நத்தி நினையாமல்
சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு திகழ் முகவர் முத்து நகையாலே
சிலுகு வலை இட்ட மயல் கவலைப்பட்டு திருடன் என வெட்கி அலைவேனோ
கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட கனக மயில் விட்ட கதிர் வேலா
கருதலரின் முட்டி கருகி வரு துட்ட கதம் அமணர் உற்ற குல காலா
அலை கடல் உடுத்த தலம்அதனில் வெற்றி அருணை வளர் வெற்பில் உறைவோனே
அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு அரசு நிலை இட்ட பெருமாளே

மேல்

#406
கடல் பரவும் தரங்கம் மீது எழு திங்களாலே கருதி மிக மடந்தைமார் சொல் வதந்தியாலே
வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ
இடம் உமையை மணந்த நாதர் இறைஞ்சும் வீரா எழு கிரிகள் பிளந்து வீழ எறிந்த வேலா
அடல் அசுரர் கலங்கி ஓட முனிந்த கோவே அரி பிரம புரந்தர் ஆதியர் தம்பிரானே

மேல்

#407
கமல முக பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல் கயல் என பொன் சுழலும் விழி குழல் கார் போல்
கதிர் தரள ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன் கர கமலத்து உகிர் விரலின் கிளி சேரும்
குமரி திதலை தனம் மலைக்கு இசலி இணை கலசம் என குவி முலை சற்று அசைய மணி கலன் ஆட
கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் என குனகி பொருள் பறிபவருக்கு உறவாமோ
திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதி திமிதிம் என டிமிடிமிடிட் டிகுர்திமிதி ஒலி தாளம்
செககண செக்கண கதற திடுதிடு என கொடு முடி எண் திகை சிலை பட்டு உவரி பட சிலை கோடி
துமிலம் உடற்று அசுரர் முடி பொடிபட ரத்தம் உள் பெருக தொகு தசை தொட்டு அலகை உண தொடும் வேலா
துவனி தினை புனம் மருவி குறமகளை களவு மயல் சுகமொடு அணைத்த அருணகிரி பெருமாளே

மேல்

#408
கமல மொட்டை கட்டு அழித்து குமிழியை நிலை குலைத்து பொன் கடத்தை தமனிய
கலச வர்க்கத்தை தகர்த்து குலை அற இளநீரை
கறுவி வட்டை பின் துரத்தி பொருது அபசயம் விளைத்து செப்பு அடித்து குலவிய
கரி மருப்பை புக்கு ஒடித்து திறல் மதன் அபிஷேகம்
அமலர் நெற்றிக்கண் தழற்குள் பொடி செய்து அதிக சக்ர புள் பறக்க கொடுமையில்
அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு இரு தாளம்
அறைதல் கற்பித்து பொருப்பை பரவிய சிறகு அறுப்பித்து அதிர்த்து புடைபடும்
அபிநவ சித்ர தனத்து திருடிகள் உறவு ஆமோ
தமரம் மிக்கு திக்கு அதிர்க்க பல பறை தொகுதொ குக்கு தொத்தொ குக்கு தொகுதொகு
தரிகி டத்த தத்த ரிக்க தரிகிட என ஓதி
சவடு உற பக்க பழு ஒத்தி புகை எழ விழிகள் உள் செக்கச்சிவத்து குறளிகள்
தசைகள் பட்சித்து களித்து கழுதொடு கழுகு ஆட
அமலையுற்று கொக்கரித்து படுகள அசுர ரத்தத்தில் குளித்து திமி என
அடி நடித்திட்டு இட்டு இடித்து பொருதிடு மயிலோனே
அழகு மிக்க சித்ர பச்சை புரவியில் உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற்குருபர
அருணையில் சித்தித்து எனக்கு தெளிவு அருள் பெருமாளே

மேல்

#409
கரி முக கட களிறு அதிக கற்பக மத கஜ முகத்து அவுணனை கடி யானை
கடலை எள் பயறு நல் கதலியின் கனி பல கனி வயிற்றினில் அடக்கிய வேழம்
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினின் மிகுத்த அமர்புரி கணபதிக்கு இளையோனே
அயில் எடுத்து அசுரர் வெற்பு அலைவுற பொருது வெற்றியை மிகுத்த அறுமுக குமரேசா
நரி மிகு கிளைகளை பரி என கடிவளம் கையில் பிடித்து எதிர் நடத்திடும் ஈசன்
நடனம் இ படியிடத்து இனும் இசை தரையினில் கரி உரித்து அணிபவர்க்கு ஒரு சேயே
துரி பெற சரி பொழில் கன வயல் அழகு உள துரிய மெய் தரளம் மொய்த்திட வீறி
சுரர் துதித்திட மிகுத்து இயல் தழைத்து அருணையில் சுடர் அயில் சரவண பெருமாளே

மேல்

#410
கரு நிறம் சிறந்து அகல்வன புகல்வன மதன தந்திரம் கடியன கொடியன
கனக குண்டலம் பொருவன வருவன பரி தாவும்
கடலுடன் படர்ந்து அடர்வன தொடர்வன விளையும் நஞ்சு அளைந்து ஒளிர்வன பிளிர்வன
கணையை நின்று நின்று எதிர்வன முதிர்வன இளையோர் முன்
செருவை மூண்டு அகம் சிறுவன உறுவன களவு வஞ்சகம் சுழல்வன உழல்வன
தெனன தெந்தனம் தெனதென தெனதென என நாதம்
தெரி சுரும்பை வென்றிடுவன அடுவன மருள் செய் கண்கள் கொண்டு அணைவர் தம் உயிர் அது
திருகுகின்ற மங்கையர் வசம் அழிதலை ஒழிவேனோ
மருவு தண்டை கிண்கிணி பரிபுரம் இவை கலகலன் கலின்கலின் என இரு சரண்
மலர்கள் நொந்துநொந்து அடி இட வடிவமும் மிக வேறாய்
வலிய சிங்கமும் கரடியும் உழுவையும் உறை செழும் புனம் தினை விளை இதண் மிசை
மறவர் தங்கள் பெண் கொடிதனை ஒரு திரு உளம் நாடி
அருகு சென்று அடைந்து அவள் சிறு பதயுக சத தளம் பணிந்து அதி வித கலவியுள்
அற மருண்டு நெஞ்சு அவளுடன் மகிழ்வுடன் அணைவோனே
அமரர் சங்கமும் குடி புக நொடியினில் நிருதர் சங்கமும் பொடிபட அமர் செய்து
அருணை வந்து தென் திசைதனில் உறை தரு பெருமாளே

மேல்

#411
காணாத தூர நீள் நாதம் வாரி காது ஆரவாரம் அதன் பினாலே
கால் ஆளும் வேளும் ஆலால நாதர் காலால் நிலாவும் முனிந்து பூ மேல்
நாண் ஆன தோகை நூலாடை சோர நாடோர்களே ஏச அழிந்து தானே
நானா அபவாதம் மேலாக ஆக நாள்தோறும் வாடி மயங்கலாமோ
சோணாசலேச பூண் ஆரம் நீடு தோள் ஆறும்ஆறும் விளங்கு நாதா
தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே
சேண் நாடர் லோகம் வாழ் மாது யானை தீராத காதல் சிறந்த மார்பா
தேவாதி கூடு மூவாதி மூவர் தேவாதி தேவர்கள் தம்பிரானே

மேல்

#412
கார் ஆடு அ குழல் ஆல் ஆலக்கணை கண்கள் சுழன்றிடவே முகங்களில்
நாலா பச்சிலையாலே மெல் புசி மஞ்சள் கலந்து அணி வாளி கொந்தள
காது ஆட கலன் மேல் ஆட குடி இன்ப ரசம் குடம் ஆர் பளிங்கு ஒளி கொங்கை மாதர்
காசு ஆசை செயலாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில்
போலே நல் தெரு ஊடாடி துயல் தொங்கல் நெகிழ்ந்து இடையே துவண்டிட
கால் தாவி சதியோடே சித்திரம் என்ப நடம்புரிவாருடன் செயல் மிஞ்சலாகி
சீராடி சில நாள் போய் மெய் திரை வந்து கலந்து உயிர் ஓட அங்கமோடு
ஊடாடி பல நோயோடு தடி கொண்டு குரங்கு எனவே நடந்து சொல்
சீ ஓடி கிடை பாயோடு உக்கி அடங்கி அழிந்து உயிரோடு உளைஞ்சு ஒளியும் கண் மாறி
சேராமல் பொறி கேளாமல் செவி துன்பமொடு இன்பமுமே மறந்து பின்
ஊரார் சுற்றமும் மாது ஓர் மக்களும் மண்டியும் அண்டையுடே குவிந்து இது
சீசீ சிச்சிசி போகா நல் சனியன் கட என்றிடவே கிடந்து உடல் மங்குவேனோ
மாரோன் முப்புரம் நீறாய் உற்றிட அங்கி உமிழ்ந்திடுவோர் இபம் புலி தோல்
சீயத்தொடெ ஏகாசர் சடை கங்கை இளம் பிறை ஆர் அணிந்தவர்
மாடு ஏறி கடல் ஆலாலத்தையும் உண்டவர் எந்தை சிவாநுபங்கு உறை என்றன் மாதா
மாலோனுக்கு இளையாள் மா பத்தினி அம்பிகை சங்கரி மோக சுந்தரி
வேதாம கலை ரூபாள் முக்கணி நிரம்பிய கொங்கையினாள் பயந்தருள்
மா ஞான குமரா தோகை பரியின் பத வண் குருவே என அம் சுரர் தொண்டு பாட
சூரார் மக்கிட மா மேரு உக்கிட அம் கடல் எண் கிரியோடு இபம் கொடு
தீபு ஏழ் அற்றிட பாதாளத்து உறை நஞ்சு அரவின் பணம் ஆயிரம் கெட
சூழ் வாள கிரி தூளாகி பொடி விண் கண் நிறைந்திடவே நடம்புரிகின்ற வேலா
சோர்வு வேத தலை மேல் ஆடி சுக பங்கய செம் கரமோடு அகம் பெற
வாகான குற மாதோடு அற்புத மங்குல் அணங்குடனே மகிழ்ந்து நல்
தூண் ஓடி சுடர் ஆகாசத்தை அணைந்து விளங்கு அருணாசலம் திகழ் தம்பிரானே

மேல்

#413
காரும் மருவும் பெருகும் சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
கால் அடர வம்பு அமளி மேல் அடர வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே
ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே
ஊடி இரு கொங்கை மிசை கூடி வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே
ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர் ஆதி பரவும்படி நினைந்த குருநாதா
ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே
மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே

மேல்

#414
கீத விநோதம் மெச்சு குரலாலே கீறும் மை ஆர் முடித்த குழலாலே
நீதி இலாது அழித்தும் உழலாதே நீ மயில் ஏறி உற்று வரவேணும்
சூது அமர் சூர் உட்க பொரு சூரா சோண கிரியில் உற்ற குமரேசா
ஆதியர் காது ஒரு சொல் அருள்வோனே ஆனை முகார் கனிட்ட பெருமாளே

மேல்

#415
குரவ நறும் அளக குழல் கோதி காட்டியெ குலவும் இரு கயல்கள் விழி மோதி தாக்கியெ
குமுத மலர் ஒளி பவள வாயை காட்டியெ குழையாத
குணம் உறுக இனிது பயில் கூறி காட்டியெ குலைய இரு கலை நெகிழ வீசி காட்டியெ
குடவியிடும் அரிவைர்கள் ஆசை பாட்டிலெ கொடியேன் யான்
பொருள் இளமை கலை மனமும் ஏக போக்கிய புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என
பொறி வழியில் அறிவு அழிய பூத சேட்டைகள் பெருகாதே
புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என
புகழ் அடிமைதனை உனது பார்வை காத்திட நினையாதோ
அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்தாக்கமும் மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ
அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய அறிவோனே
அழகு செறி குழலியர்கள் வான தாட்டியர் தரும் அமுது சரவணையில் வாவி தேக்கியெ
அறு சிறுவர் ஒரு உடலமாகி தோற்றிய இளையோனே
சுரர் உலவ அசுரர்கள் மாள தூள்பட துயவும் உடல் அயிலை விடும் மா உக்ராக்ரம
சுவறி எழு கடலும் முறையாக கூப்பிட முனிவோனே
துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில் துணை மலரின் அணுகி தினை காவல் காத்தனை
சுரிய குழல் குறமகளை வேளை காத்து அணை பெருமாளே

மேல்

#416
குழவியுமாய் மோகம் மோகித குமரனுமாய் வீடு காதலி குலவனுமாய் நாடு காடொடு தடுமாறி
குனி கொடு கூன் நீடு மா கிடு கிழவனுமாய் ஆவி போய்விட விறகுடனே தூளியாவதும் அறியா தாய்
பழய சடாதார மேல் நிகழ் கழி உடல் காணா நிராதர பரிவிலி வான் நாலை நாள்தொறு மடை மாறி
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ
எழு கடல் தீமூள மேருவும் இடிபட வேதாவும் வேதமும் இரவியும் வாய் பாறி ஓடிட முது சேடன்
இருள் அறு பாதாளலோகமும் இமையமும் நீறாக வாள் கிரி இரு பிளவாய் வீழ மாதிர மலை சாய
அழகிய மா பாகசாதனன் அமரரும் ஊர் பூத மாறு செய் அவுணர் தம் மா சேனை தூள் எழ விளையாடி
அமரினை மேவாத சூரரை அமர்செயும் வேலாயுதா உயர் அருணையில் வாழ்வாக மேவிய பெருமாளே

மேல்

#417
கேதகைய பூ முடித்த மாதர் தம் மயாலில் உற்று கேவலம் அதான அற்ப நினைவாலே
கேள்வி அது இலாதிருக்கும் ஊழ் வினையினால் மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி எலாம் உழற்றும் அடியேனை
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில் மீதில் உற்று வருவாயே
நீதி நெறியே அழித்த தாருகனை வேரறுத்து நீடு புகழ் தேவர் இல்கள் குடியேற
நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே
சோதி அனலா உதித்த சோணகிரி மா மலைக்குள் சோபை வட கோபுரத்தில் உறைவோனே
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே

மேல்

#418
கோடு ஆன மடவார்கள் முலை மீதே கூர் வேலை இணையான விழியூடே
ஊடாடி அவரோடும் உழலாதே ஊராக திகழ் பாதம் அருள்வாயே
நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே
சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே

மேல்

#419
கோடு செறி மத்தகத்தை வீசு பலை தத்த ஒத்தி கூறு செய்து அழித்து உரித்து நடை மாணார்
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்திவிட்ட கோப நுதல் அ தரத்தர் குருநாதா
நீடு கனக தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு நீறு எழ மிதித்த நித்த மனதாலே
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்தம் மெத்த நீல மயில் தத்த விட்டு வரவேணும்
ஆடல் அணி பொன் சிலை கை வேடுவர் புன குறத்தி ஆரம் அது மெத்து சித்ர முலை மீதே
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி ஆறிரு திரு புயத்தில் அணை வீரா
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடுற நினைத்த பத்தி சீருற உள தெரித்த சிவ வேளே
தேறு அருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே

மேல்

#420
சிலை நுதல் வைத்து சிறந்த குங்கும திலதமும் இட்டு குளிர்ந்த பங்கய
திரு முக வட்டத்து அமர்ந்த மென் குமிழ்தனில் ஏறி
செழு மணி ரத்நத்து இலங்கு பைம் குழைதனை முனிவுற்று சிவந்து நஞ்சு அணி
செயலினை ஒத்து தயங்கு வஞ்சக விழி சீறி
புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர் பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி
புரி வளை கைக்குள் கலின்கல் என்றிட அநுராகம்
புகழ் நல் மெத்த புரிந்து கொங்கையில் உருகி அணைத்து பெரும் ப்ரியம் கொடு
புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் மறவேனே
கலை மதி வைத்து புனைந்து செம் சடை மலைமகள் பக்கத்து அமர்ந்து இருந்திட
கணகண கட்கட் கணின்கண் என்றிட நடம் ஆடும்
கருணையன் உற்ற த்ரியம்பகன் தரு முருக புனத்தில் திரிந்த மென் கொடி
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் புய வீரா
அலை கடல் புக்கு பொரும் பெரும் படை அவுணரை வெட்டி களைந்து வென்று உயர்
அமரர் தொழ பொன் சதங்கை கொஞ்சிட வருவோனே
அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்தனை ஒழிவித்து ப்ரியங்கள் தந்திடும்
அருணகிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#421
சிவ மாதுடனே அநுபோகமதாய் சிவஞான அமுதே பசி ஆறி
திகழ்வோடு இருவோரும் ஒரு ரூபமதாய் திசை லோகம் எலாம் அனுபோகி
இவனே என மால் அயனோடு அமரோர் இளையோன் எனவே மறை ஓத
இறையோன் இடமாய் விளையாடுகவே இயல் வேலுடன் மா அருள்வாயே
தவ லோகம் எலாம் முறையோ எனவே தழல் வேல் கொடுபோய் அசுராரை
தலை தூள்பட ஏழ் கடல் தூள்பட மாதவம் வாழ்வுறவே விடுவோனே
கவர் பூ வடிவாள் குற மாதுடன் மால் கடனாம் எனவே அணை மார்பா
கடையேன் மிடி தூள் பட நோய் விடவே கனல் மால் வரை சேர் பெருமாளே

மேல்

#422
சின முடுவல் நரி கழுகுடன் பருந்தின் கணம் கொடி கெருடன் அலகை புழு உண்டு கண்டு இன்புறும்
செடம் அளறு மல சலமொடு என்பு துன்றும் கலம் துன்பம் மேவும்
செனன வலை மரண வலை ரண்டும் முன் பின் தொடர்ந்து அணுகும் உடல் அநெக வடிவு இங்கு அடைந்து அம்பரம்
சிறு மணலை அளவிடினும் அங்கு உயர்ந்து இங்கு உலந்து ஒன்றும் நாயேன்
கனக புவி நிழல் மருவி அன்புறும் தொண்டர் பங்கு குறுக இனி அருள் கிருபை வந்து தந்து என்றும் உன்
கடன் எனது உடலும் உயிரும் உன் பரம் தொண்டு கொண்டு அன்பரோடே
கலவி நலம் மருவி வடிவம் சிறந்து உன் பதம் புணர் கரணம் மயில் புறமொடு இன்பு கொண்டு அண்டரும்
கனக மலர் பொழிய உனது அன்பு உகந்து இன்று முன் சிந்தியாதோ
தனனதன தனனதன தந்தனம் தந்தனம் தகுகுகுகு குகுகுகுகு டங்குடம் குந்தடம்
தவில் முரசு பறை திமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த அண்டர் பேரி
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண் டிமிடிமிட டகுர்திகுகு சங்கு வெண் கொம்பு திண்
கடையுகமொடு ஒலிய கடல் அஞ்ச வஞ்சன் குலம் சிந்தி மாள
சினம் முடுகி அயில் அருளி உம்பர் அந்த அம்பரம் திசை உரகர் புவி உளது மந்தரம் பங்கயன்
செகம் முழுது மகிழ அரி அம்புயன் தொண்டு கொண்டு அஞ்சல் பாட
திரு முறுவல் அருளி எனது எந்தையின் பங்குறும் கவுரி மனம் உருக ஒரு கங்கை கண்டு அன்புறும்
திரு அருணகிரி மருவு சங்கரன் கும்பிடும் தம்பிரானே

மேல்

#423
சுக்கில சுரோணிதத்தில் உற்ற நளினத்தில் அப்பு என ரத்தம் முற்றி சுக
சுக்கில குளிகை ஒத்து கெர்ப்ப குகை வந்து கோல
தொப்பை இட்ட வயிறில் பெருத்து மிக வட்டமிட்டு உடல் வெப்பமுற்று மதி
சொல் பத்தின் மறி அக்ஷரத்தினுடை விஞ்சையாலே
கக்க நல் புவியில் உற்று அரற்றி முலையை கொடுக்க அமுர்தை புசித்து வளர்கைக்கு
அசத்தியொடு உழைத்து தத்து நடை அந்தம் மேவி
கற்று வெற்று அறிவு பெற்று தொக்கை மயில் ஒத்த மக்கள் மயலில் குளித்து நெறி
கட்டி இப்படி பிறப்பில் உற்று உடலம் மங்குவேனோ
தெற்கு அரக்கர் பவிஷை குலைத்து விடணற்கு நத்து அரசு அளித்து முத்தி கொடு
சித்திர திரு உரத்த சக்கிரி தன் மருகோனே
செ கரத்தின் மலை முப்புரத்தில் எரி இட்ட சத்தி சிவன் உற்று நத்த மிகு
சித்து அனைத்தையும் விழித்த சத்தி உமை தந்த பாலா
தர்க்கம் இட்ட அசுரரை கெலித்து மலை உக்க எழு கடல் கொளுத்தி அட்ட திசை
தட்ட முட்டை அடைய கொடி புகையில் மண்டும் வேலா
தத்தை வித்ரும நிறத்தி முத்து அணி குறத்தி கற்பக வனத்தி சித்தம் அவை
தக்கு நத்த அருணைக்கிரிக்குள் மகிழ் தம்பிரானே

மேல்

#424
செம் சொல் பண் பெற்றிடு குட மா முலை கும்ப தந்தி குவடு என வாலிய
தெந்த பந்தி தரளம் அதாம் என இடர் ஆவி
சிந்தி கந்தித்து இடு களையாம் உனது அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவது
திண் துப்பும் தித்திடு கனி தான் உன் இதழாமோ
மஞ்சு ஒக்கும் கொத்த அளகம் எனா மிடை கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள
வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய
வந்தித்து இந்த படி மடவாரொடு கொஞ்சி கெஞ்சி தினம் அவர் தாள் தொழு
மந்த புந்தி கசடன் எந்நாள் உனது அடி சேர்வேன்
நஞ்சை கண்டத்து இடுபவர் ஆரொடு திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர்
நம்பர் செம்பொன் பெயர் அசுரேசனை உகிராலே
நந்த கொந்தி சொரி குடல் சோர் வர நந்தி கம்பத்து எழு நர கேசரி
நஞ்ச குண்டைக்கு ஒரு வழி ஏது என மிக நாடி
வெஞ்ச சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி
விந்தை செம் கை பொலி சுத வேடுவர் புனம் மீதே
வெண்டி தங்கி திரி கிழவா அதி துங்க துங்க கிரி அருணாபுரி
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய பெருமாளே

மேல்

#425
செயசெய அருணாத்திரி சிவய நம செயசெய அருணாத்திரி மசிவயந
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா
செயசெய அருணாத்திரி யநமசிவ செயசெய அருணாத்திரி வயநமசி
செயசெய அருணாத்திரி சிவய நமஸ்த்து என மாறி
செயசெய அருணாத்திரிதனின் விழி வைத்து அரகர சரணாத்திரி என உருகி
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை
சிவசிவ சரணாத்திரி செயசெய என சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதை குடியேனோ
செயசெய சரணாத்திரி என முநிவர் கணம் இது வினை காத்திடும் என மருவ
செட முடி மலை போற்று அவுணர்கள் அவிய சுடும் வேலா
திரு முடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடி தலை தெரியாப்படி நிண அருண
சிவ சுடர் சிகி நாட்டவன் இரு செவியில் புகல்வோனே
செயசெய சரணாத்திரி எனும் அடியெற்கு இருவினை பொடியாக்கிய சுடர் வெளியில்
திரு நடம் இது பார்த்திடும் என மகிழ் பொன் குருநாதா
திகழ் கிளி மொழி பால் சுவை இதழ் அமுத குறமகள் முலை மேல் புது மணம் மருவி
சிவகிரி அருணாத்திரி தலம் மகிழ் பொன் பெருமாளே

மேல்

#426
தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் உள கதம் கடமா மேல்
தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
தமர் அழ மைந்தரும் சோகமுற்று இரங்க மரண பக்குவம் ஆ நாள்
கமல முகங்களும் கோமளத்து இலங்கு நகையு நெடும் கணும் காதினில் உற்று உலங்கு
கனக குதம்பையும் தோடும் வஜ்ர அங்கதமும் அடர் சுடர் வேலும்
கடிது உலகு எங்கணும் தாடி இட்டு வந்த மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து வரம் எனக்கு அருள்கூர்வாய்
இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் இயல் நிமிர்ந்திடுவோனே
இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம் உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த அயில் உடை கதிர் வேலா
அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு கழுவில் உதைந்துதைந்து ஏறவிட்டு நின்ற
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே
அமரர் வணங்கு கந்தா குறத்தி கொங்கைதனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல்
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுக பெருமாளே

மேல்

#427
தமிழ் ஓதிய குயிலோ மயில் ஆண்டலையாம் புறவம்
கிளி காடை இன் அணில் ஏர் அளியாம் குரல் வாய்ந்த அதி செம்
தகு மா மிடறு ஒலியார் இதழாம் சுளை தேன் கனியின் சுவை சேரும்
தன பாரமும் மலையாம் என ஓங்கிட மா பொறி சிந்திட
வேல் விழி நுதலோ சிலை வாள் பிறை மாந்துளிரின்
சரிர ஆர் குழல் இருளோ நகை ஓங்கிய வான் கதிரின் சுடர் பாய
குமிழ் நாசியின் முகமோ மதியாம் குளிர் சேம் கமலம்
சரி தோடு இணை செவி ஆடு ஊசலாம் களம் பூம் கமுகம்
கொடி நூல் இடை உடையார் அனமாம் ப்ரியர் மாண் புரி மின் கொடி மாதர்
குணமோடு அமளியில் ஆடினும் ஓங்கிய பூம் கமலம்
சரணூபுர குரல் ஓசையும் ஏந்திடு மா அண்டலையின்
கொடியோடு எழுத அரிதாம் வடிவு ஓங்கிய பாங்கையும் மன் தகையேனே
திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொம்
தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொம்
திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகம் என்று இயல் பேரி
திசை மூடுக கடல் ஏழ் பொடியாம்படி ஓங்கிய வெம்
கரி தேர் பரி அசுரார்கள் மாண்டிட நீண்ட அரவின்
சிர மீள் பட குவடு ஓதுகள் வான் பெற வாங்கிய வண் கதிர் வேலா
கமழ் மா இதழ் சடையார் அடியேன் துயர் தீர்ந்திட வெண்
தழல் மா பொடி அருள்வோர் அடல் மான் துடி தாங்கிய வண்
கரர் மாடு அருள் உமையாள் எமை ஈன்றவள் ஈன்ற மென் குரவோனே
கடையேன் இருவினை நோய் மல மாண்டிட தீண்டிய ஒண்
சுக மோகினி வளி நாயகி பாங்கன் எனாம் பகர் மின்
கலை நூல் உடை முருகா அழல் ஓங்கிய ஓங்கலின் வண் பெருமாளே

மேல்

#428
தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே
கனகம் இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை
அருளொடு கைப்பற்றி வந்தும் அருணகிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார்தம்
மதலை புனத்தில் புகுந்து நர வடிவுற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே

மேல்

#429
திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ரூபிகள் துர்ச்சன பொட்டிகள்
செகத்து நீலிகள் கெட்ட பரத்தைகள் மிக நாணார்
சிலைக்கு நேர் புருவ பெரு நெற்றிகள் எடுப்பு மார்பிகள் எச்சில் உதட்டிகள்
சிரித்து மாநுடர் சித்தம் உருக்கிகள் விழியாலே
வெருட்டி மேல் விழு பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்ட முகத்தினை
மினுக்கி ஓலைகள் பித்தளையில் பணி மிக நீறால்
விளக்கியே குழை இட்ட புரட்டிகள் தமக்கு மால் கொடு நிற்கும் மருள்தனை
விடுத்து தான் ஒருமித்து இரு பொன் கழல் பணிவேனோ
தரித்த தோகண தக்கண செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு
தகுத்த தீதிகு தக்குகு திக்குகு என தாளம்
தட கை தாளமும் இட்டு இயல் மத்தளம் இடக்கை தாளமும் ஒக்க நடித்து ஒளி
தரித்த கூளிகள் தத்திமி தித்தென கண பூதம்
அருக்கனார் ஒளியில் ப்ரபை உற்றிடும் இரத்த மா முடியைக்கொடு உக கழல்
அட கையாடி நிணத்தை எடுத்து உண அறிவே தான்
அரக்கர் சேனைகள் பட்டு விழ செறி திரு கை வேல்தனை விட்டு அருளி பொரும்
அருள் குகா அருணை பதியுற்று அருள் பெருமாளே

மேல்

#430
தேது என வாசமுற்ற கீத விநோதம் மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே
சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே
போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே
போகம் எலா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் மயில் வீரா
வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா
மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே
மேருவை நீறு எழுப்பி நான்முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே

மேல்

#431
தோதக பெரும் பயோதரத்து இயங்கும் தோகையர்க்கு நெஞ்சம் அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று சூழ் பிணி கணங்கள் அணுகாதே
பாதக சமன் தன் மேதியில் புகுந்து பாசம் விட்டு எறிந்து பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த பாடல் மிக்க செம் சொல் தரவேணும்
வேதம் மிக்க விந்து நாதம் மெய் கடம்ப வீரபத்ர கந்த முருகோனே
மேருவை பிளந்து சூரனை கடிந்து வேலையில் தொளைந்த கதிர் வேலா
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே
கோலமுற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#432
பாண மலர் அது தைக்கும் படியாலே பாவி இள மதி கக்கும் கனலாலே
நாணம் அழிய உரைக்கும் குயிலாலே நானும் மயலில் இளைக்கும் தரமோ தான்
சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா தேவர் மகுடம் அணைக்கும் கழல் வீரா
காண அருணையில் நிற்கும் கதிர் வேலா காலன் முதுகை விரிக்கும் பெருமாளே

மேல்

#433
பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய் வாய் சொல் கொடியார் தாம்
பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று இடை பீறும்
தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாச குடில் மாசு
தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக்கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா நாதா சோதி கிரியோனே
ஞானாசார வான் ஆள் கோனே நானா வேத பொருளோனே
வேலா பாலா சீல ஆகாரா வேளே வேட கொடி கோவே
வீர ஆதாரா ஆறு ஆதாரா வீரா வீர பெருமாளே

மேல்

#434
புணர் முலை மடந்தை மாதர் வலையினில் உழன்று அநேக பொறி உடல் இறந்து போனது அளவேது உன்
புகழ் மறை அறிந்து கூறும் இனி எனது அகம் பொன் ஆவி பொருள் என நினைந்து நாயென் இடர் தீர
மனம் உணர் மடந்தைமாரொடு திரு முகங்கள் ஆறு மணி கிரியிடம் கொள் பாநு வெயில் ஆசை
வரி பரவ அனந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து போத மயில் மிசை மகிழ்ந்து நாடி வரவேணும்
பண முலை அரம்பைமார்கள் குயில் கிளி இனங்கள் போல பரிவு கொண்டு உகந்து வேதம் அது கூற
பறை முரசு அநந்த பேரி முறைமுறை ததும்ப நீசர் படை கடல் இறந்து போக விடும் வேலா
அணி சுக நரம்பு வீணை குயில் புற இனங்கள் போல அமளியில் களங்கள் ஓசை வளர் மாது
அரி மகள் மணம் கொண்டு ஏகி எனது இடர் எரிந்து போக அருணையில் விலங்கல் மேவு பெருமாளே

மேல்

#435
புலையனான மா வீணன் வினையில் ஏகு மா பாதன் பொறை இலாத கோபீகன் முழு மூடன்
புகழ் இலாத தாம்பீகன் அறிவு இலாத காபோதி பொதிகள் ஓடிப்போய் வீழும் அதி சூதன்
நிலை இலாத கோமாளி கொடை இலாத ஊதாரி நெறி இலாத ஏமாளி குல பாதன்
நினது தாளை நாள்தோறும் மனதில் ஆசை வீடாமல் நினையுமாறு நீ மேவி அருள்வாயே
சிலையில் வாளி தான் ஏவி எதிரி ராவணார் தோள்கள் சிதையுமாறு போராடி ஒரு சீதை
சிறை இலாமலே கூடி புவனி மீதிலே வீறு திறமியான மா மாயன் மருகோனே
அலைய மேரு மா சூரர் பொடியதாக வேல் ஏவி அமர் அது ஆடியே தோகை மயில் ஏறி
அதிக தேவரே சூழ உலக மீதிலே கூறும் அருணை மீதிலே மேவு பெருமாளே

மேல்

#436
போக கற்ப கடவுள் பூருகத்தை புயலை பாரியை பொன் குவை உச்சி பொழுதில் ஈயும்
போது உடை புத்திரரை போல ஒப்பிட்டு உலகத்தோரை மெச்சி பிரிய பட்டு மிடி போக
தியாக மெத்த தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம் உள்பட்ட திருட்டு கவிகள் பாடி
தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு அவர்கள் சேல் வலைப்பட்டு அடிமைப்பட்டு விடலாமோ
ஆகம பத்தரும் மற்று ஆரண சுத்தரும் உற்று ஆதரிக்கைக்கு அருணை துப்பு மதில் சூழும்
ஆடக சித்ர மணி கோபுரத்து உத்தர திக்காக வெற்றி கலப கற்கி அமர்வோனே
தோகையை பெற்ற இட பாகர் ஒற்றை பகழி தூணி முட்ட சுவற திக்கில் எழு பார
சோதி வெற்பு எட்டும் உதிர்த்து தூளிதப்பட்டு அமிழ சூரனை பட்டு உருவ தொட்ட பெருமாளே

மேல்

#437
மானை விடத்தை தடத்தினில் கயல் மீனை நிரப்பி குனித்து விட்டு அணை
வாளியை வட்ட சமுத்திரத்தினை வடி வேலை
வாளை வனத்து உற்பலத்தினை செல மீனை விழிக்கு ஒப்பென பிடித்தவர்
மாய வலைப்பட்டு இலை துடக்கு உழல் மணம் நாறும்
ஊன இடத்தை சடக்கு என கொழு ஊறும் உபத்தம் கரு தடத்தினை
ஊது பிணத்தை குண த்ரயத்தோடு தடுமாறும்
ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை உபாதையை ஒப்பித்து உனி பவத்து அற
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இ ப்ரமை தெளியாதோ
சானகி கற்பு தனை சுட தன் அசோக வனத்தில் சிறை படுத்திய
தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் மாள
சாலை மரத்து புறத்து ஒளித்து அடல் வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு
தாரைதனை சுக்ரிவற்கு அளித்தவன் மருகோனே
சோனை மிகுத்து திரள் புனத்தினில் ஆனை மதத்து கிடக்கும் அற்புத
சோணகிரி சுத்தர் பெற்ற கொற்றவ மணி நீப
தோள் கொண்டு சக்ர பொருப்பினை பொடியாக நெருக்கி செரு களத்து எதிர்
சூரனை வெட்டி துணித்து அடக்கிய பெருமாளே

மேல்

#438
முக துலக்கிகள் ஆசார ஈனிகள் விலை சிறுக்கிகள் நேரா அசடிகள்
முழு சமர்த்திகள் காமா விரகிகள் முந்து சூது
மொழி பரத்தைகள் காசு ஆசையில் முலை பலர்க்கும் விற்பவர் நானா அநுபவம்
முயற்று பொட்டிகள் மோகாவலம் உறுகின்ற மூடர்
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள் திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள்
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை சிந்தை மாய
திரள் பொறிச்சிகள் மா பாவிகள் அபகடத்து சட்டைகள் மூதேவிகளொடு
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி என்று சேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு திகுத்தி குத்திகு தீதோ என ஒரு
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் தொண்டர் பேணும்
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம் வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழவுற்ற
நித்த பிரானே அருணையில் நின்ற கோவே
அமர் களத்து ஒரு சூரேசனை விழ முறித்து உழக்கிய அ வானேர் குடி புக
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் தம்பிரானே

மேல்

#439
மேகம் ஒத்த குழலார் சிலை புருவ வாளி ஒத்த விழியார் முக கமல
மீது பொட்டு இடு அழகார் களத்தினில் வடம் ஆட
மேரு ஒத்த முலையார் பளப்பளென மார்பு துத்தி புயவார் வளை கடகம்
வீறிட துவளு நூலோடு ஒத்த இடை உடை மாதர்
தோகை பக்ஷி நடையார் பதத்தில் இடு நூபுர குரல்கள் பாட அக துகில்கள்
சோர நல் தெருவூடே நடித்து முலை விலை கூறி
சூதக சரசமோடெ எத்தி வருவோரை நத்தி விழியால் மருட்டி மயல்
தூள் மருத்து இடு உயிரே பறிப்பவர்கள் உறவாமோ
சேகண செகண தோதிமி திகுட டாடு டுட்டமட டீகு தத்தொகுர்தி
தீத கத்திமிததோ உடுக்கை மணி முரசு ஓதை
தேசம் உட்க அர ஆயிர சிரமும் மூளி பட்டு மக மேரு உக்க அவுணர்
தீவு கெட்டு முறையோ என கதற விடும் வேலா
ஆகமத்தி பல காரணத்தி எனை ஈண சத்தி அரி ஆசனத்தி சிவன்
ஆகம் உற்ற சிவகாமி பத்தினியின் முருகோனே
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக சித்ர வளி
ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ் பெருமாளே

மேல்

#440
மொழிய நிறம் கறுத்து மகர இனம் கலக்கி முடிய வளைந்து அரற்று கடலாலும்
முதிர இடம் பரப்பி வடவை முகம் தழற்குள் முழுகி எழுந்து இருக்கும் நிலவாலும்
மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே
மரகத துங்க வெற்றி விகட நடம் கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும்
அழகிய மென் குறத்தி புளகித சந்தனத்தின் அமுத தனம் படைத்த திரு மார்பா
அமரர் புரம் தனக்கும் அழகிய செந்திலுக்கும் அருணை வளம் பதிக்கும் இறையோனே
எழு புவனம் பிழைக்க அசுரர் சிரம் தெறிக்க எழு சயிலம் தொளைத்த சுடர் வேலா
இரவிகள் அந்தரத்தர் அரி அர பங்கயத்தர் இவர்கள் பயம் தவிர்த்த பெருமாளே

மேல்

#441
வலி வாத பித்தமொடு களம் மாலை விப்புருதி வறள் சூலை குட்டமொடு குளிர் தாகம்
மலி நீர் இழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு களை வரு நீர் அடைப்பினுடன் வெகு கோடி
சிலை நோய் அடைத்த உடல் புவி மீது எடுத்து உழல்கை தெளியா எனக்கும் இனி முடியாதே
சிவம் ஆர் திரு புகழை எனு நாவினில் புகழ சிவஞான சித்திதனை அருள்வாயே
தொலையாத பத்தி உள திருமால் களிக்க ஒரு சுடர் வீசு சக்ரம் அதை அருள் ஞான
துவர் வேணியப்பன் மிகு சிவகாமி கர்த்தன் மிகு சுக வாரி சித்தன் அருள் முருகோனே
அலை சூரன் வெற்பும் அரி முகன் ஆனை வத்திரனொடு அசுரார் இறக்க விடும் அழல் வேலா
அமுத ஆசனத்தி குற மடவாள் கரி பெணொடும் அருணாசலத்தில் உறை பெருமாளே

மேல்

#442
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி கொடு வா போ என உரையாடும்
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ம்ருகமத கோலாகல முலை தோய
அடையவும் ஆசா பரவசமுறு கோமாளியை அவனியும் ஆகாசமும் வசை பேசும்
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே
வட குல கோபாலர்தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர் தோள் தோய் தரும் அபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல மகிப சதா காலமும் இளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற உலகு உய வார் ஆர்கலி வறிது ஆக
உயரிய மா நாகமு நிருதரும் நீறாய் விழ ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே

மேல்

#443
விதி அதாகவே பருவ மாதரார் விரகிலே மனம் தடுமாறி
விவரமானது ஓர் அறிவு மாறியே வினையிலே அலைந்திடு மூடன்
முதிய மா தமிழ் இசை அதாகவே மொழி செய்தே நினைந்திடுமாறு
முறைமையாக நின் அடிகள் மேவவே முனிவு தீர வந்து அருள்வாயே
சதி அதாகிய அசுரர் மா முடி தரணி மீது உகும் சமர் ஆடி
சகல லோகமும் வலம் அதாகியே தழையவே வரும் குமரேசா
அதிக வானவர் கவரி வீசவே அரிய கோபுரம்தனில் மேவி
அருணை மீதிலே மயிலில் ஏறிய அழகதாய் வரும் பெருமாளே

மேல்

#444
விந்து புளகித இன்புற்று உருகிட சிந்தி கருவினில் உண்ப அ சிறு துளி
விரித்த கமல மேல் தரித்து உள் ஒரு சுழி இரத்த குளிகையோடு உதித்து வளர் மதி
விள் துற்று அருள் பதி கண்டுற்று அருள் கொடு மிண்டி செயல் இனி ரம்பி துருவோடு
மெழுக்கில் உரு என வலித்து எழு மதி கழித்து வயிர் குடம் உகுப்ப ஒரு பதில்
விஞ்சை செயல் கொடு கஞ்ச சல வழி வந்து புவி மிசை பண்டை செயல் கொடு
விழுப்பொடு உடல் தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுது அழுது உகுப்ப அனைவரும் அருள்கூர
மென் பற்று உருகி முகந்திட்டு அனை முலை உண்டி தர கொடு உண்கி சொலி வளர்
வளத்தொடு அளை மல சலத்தொடு உழைகிடை துடித்து தவழ் நடை வளர்த்தி என தகு
வெண்டை பரிபுர தண்டை சர வடமும் கட்டி இயல் முடி படி பண்பித்து இயல் கொடு
விதித்த முறைப்படி படித்து மயல் கொள தெருக்களினில் வரு வியப்ப இள முலை
விந்தை கயல் விழி கொண்டல் குழல் மதி துண்டம் கர வளை கொஞ்ச குயில் மொழி
விடுப்ப துதை கலை நெகிழ்த்தி மயில் என நடித்தவர்கள் மயல் பிடித்து அவர் வரு வழியே போய்
சந்தித்து உறவோடு பஞ்சிட்டு அணை மிசை கொஞ்சி பலப்பல விஞ்சை சரசமொடு
அணைத்து மலர் இதழ் கடித்து இரு கரம் அடர்த்த குவி முலை அழுத்தி உரம் மிடர்
சங்கு தொனியோடு பொங்க குழல் மலர் சிந்தி கொடி இடை தங்கி சுழலிட
சர தொடிகள் வெயில் எறிப்ப மதி நுதல் வியர்ப்ப பரிபுரம் ஒலிப்ப எழு மத
சம்பத்து இது செயல் இன்பத்து இருள் கொடு வம்பில் பொருள்கள் வழங்கிற்று இது பினை
சலித்து வெகு துயர் இளைப்பொடு உடல் பிணி பிடித்திடு அனைவரும் நகைப்ப கரு மயிர் நரை மேவி
தன் கை தடி கொடு குந்தி கவி என உந்திக்கு அசனம் மறந்திட்டு உளம் மிக
சலித்து உடல் சலம் மிகுத்து மதி செவி விழிப்பும் மறைபட கிடத்தி மனையவள்
சம்பத்து உறை முறை அண்டை கொளுகையில் சண்ட கரு நமன் அண்டி கொளு கயிறு
எடுத்து விசை கொடு பிடித்து உயிர்தனை பதைப்ப தனி வழி அடித்து கொடு செல
சந்தித்து அவரவர் பங்குக்கு அழுது இரங்க பிணம் எடும் என்று இட்ட அறை பறை
தடிப்ப சுடலையில் இறக்க விறகொடு கொளுத்தி ஒரு பிடி பொடிக்கும் இலை எனும் உடல் ஆமோ
திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி திந்தி திமிதிமி
திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி
என்ப துடிகள் தவுண்டை கிடுபிடி பம்பை சலிகைகள் சங்க பறை வளை
திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகர் என உடுக்கை முரசொடு
செம்பொன் குட முழவும் தப்புடன் மணி பொங்க சுரர் மலர் சிந்த பதம் மிசை
செழித்த மறை சிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகை மனி முழக்க அசுரர்கள் களம் மீதே
சிந்த குருதிகள் அண்ட சுவர் அகம் ரம்ப கிரியோடு பொங்கி பெருகியெ
சிவப்ப அதில் கரி மதர்த்த புரவிகள் சிரத்தொடு இரதமும் மிதப்ப நிணமொடு
செம்புள் கழுகுகள் உண்ப தலைகள் ததும்ப கருடன் நடம் கொட்டிட கொடி
மறைப்ப நரிகள் மிகுப்ப குறளிகள் நடிக்க இருள் மலை கொளுத்தி அலை கடல்
செம்பொன் பவளமும் அடங்கி கமர் விட வெந்திட்டு இக மலை விண்டு துகள் பட
சிமக்கும் உரகனும் முழக்கி விட படம் அடைத்த சத முடி நடுக்கி அலை பட விடும் வேலா
தொந்த தொகுகுட என்ப கழல் ஒலி பொங்க பரிபுரம் செம்பொன் பதம் அணி
சுழற்றி நடமிடு நிருத்தர் அயன் முடி கரத்தர் அரி கரி உரித்த கடவுள் மெய்
தொண்டர்க்கு அருள்பவர் வெந்த துகள் அணி கங்கை பணி மதி கொன்றை சடையினர்
தொடுத்த மதன் உரு பொடித்த விழியினர் மிகுத்த புரம் அதை எரித்த நகையினர்
தும்பை தொடையினர் கண்ட கறையினர் தொந்தி கடவுளை தந்திட்டவர் இட
சுகத்தி மழு உழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய முருகோனே
துண்ட சசி நுதல் சம்பை கொடி இடை ரம்பைக்கு அரசி எனும் உம்பல் தரு மகள்
சுகிப்ப மண அறை களிக்க அணை அறு முகத்தோடு அற மயல் செழித்த திரு புய
செம்பொன் கர கமலம் பத்திரு தலம் அம் பொன் சசி எழ சந்த பல படை
செறித்த கதிர் முடி கடப்ப மலர் தொடை சிறப்போடு ஒரு குடில் மருத்து வன மகள்
தொந்த புணர் செயல் கண்டுற்று அடியென் இடைஞ்சல் பொடிபட முன் புற்று அருள் அயில்
தொடுத்தும் இள நகை பரப்பி மயில் மிசை நடித்து அழல் கிரி பதிக்குள் மருவிய பெருமாளே

மேல்

#445
வீறு புழுகான பனிநீர்கள் மலம் தோயல் விடு மேரு கிரியான கொடு தன பார
மீது புரள் ஆபரண சோதி விதமான நகை மேகம் அனு காடு கடல் இருள் மேவி
நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள நாணம் அழிவார்கள் உடன் உறவாடி
நாடி அதுவே கதி எனா சுழலும் மோடனை நின் ஞான சிவமான பதம் அருள்வாயே
கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய கோல மயிலான பதம் அருள்வாயே
கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்கூரும் சிவகாமி உமை அருள் பாலா
ஆறு முகமான நதி பாலா குற மாது தனம் ஆர விளையாடி மணம் அருள்வோனே
ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் பெருமாளே

மேல்

#446
சரக்கு ஏறி இத்த பதி வாழ் தொந்த பரி காயத்தில் பரிவோடு ஐந்து
திக்காரர் புக்கு உலை மேவு இந்த செயல் மேவி
சலித்தே மெத்த சமுசாரம் பொன் சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப
தழைத்தே மெச்ச தயவோடு இந்த குடி பேணி
குரக்கோணத்தில் கழு நாய் உண்ப குழிக்கே வைத்து சவமாய் நந்து இ
குடிற்கே நத்தி பழுதாய் மங்கப்படுவேனை
குறித்தே முத்திக்கு மறா இன்ப தடத்தே பற்றி சக மாயம் பொய்
குல கால் வற்ற சிவஞானம் பொன் கழல் தாராய்
புர காடு அற்று பொடியாய் மங்க கழை சாபத்து ஐ சடலான் உங்க
புகை தீ பற்ற அ புகலோர் அன்புற்று அருள்வோனே
புடைத்தே எட்டு திசையோர் அஞ்ச தனி கோலத்து புகு சூர் மங்க
புகழ் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து அருள்வோனே
திரு கானத்தில் பரிவோடு அந்த குற கோலத்து செயலாள் அஞ்ச
திகழ் சீர் அத்திக்கு அழல் வா என்ப புணர்வோனே
சிவ பேறுக்கு கடையேன் வந்து உள்புக சீர் வைத்து கொளு ஞானம் பொன்
திருக்காளத்தி பதி வாழ் கந்த பெருமாளே

மேல்

#447
சிரத்தானத்தில் பணியாதே செகத்தோர் பற்றை குறியாதே
வருத்தா மற்று ஒப்பிலதான மலர் தாள் வைத்து எத்தனை ஆள்வாய்
நிருத்தா கர்த்தத்துவ நேசா நினைத்தார் சித்தத்து உறைவோனே
திரு தாள் முத்தர்க்கு அருள்வோனே திருக்காளத்தி பெருமாளே

மேல்

#448
பங்கயனார் பெற்றிடும் சராசர அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
பஞ்சவர் கூடி திரண்டது ஓர் நர உருவாயே
பந்தமது ஆகி பிணிந்த ஆசையில் இங்கிதமாக திரிந்து மாதர்கள்
பண்பு ஒழி சூதை கடந்திடாது உழல் படிறு ஆயே
சங்கடன் ஆகி தளர்ந்து நோய் வினை வந்து உடல் மூடி கலங்கிடா மதி
தந்து அடியேனை புரந்திடாய் உனது அருளாலே
சங்கரர் வாமத்து இருந்த நூபுர சுந்தரி ஆதி தரும் சுதா பத
தண்டையனே குக்குட பதாகையின் முருகோனே
திங்கள் உலாவ பணிந்த வேணியர் பொங்கு அரவு ஆட புனைந்த மார்பினர்
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் நெடிது ஆழ்வார்
சிந்துவிலே உற்று எழுந்த காள விடம் கள மீதில் சிறந்த சோதியர்
திண் புய மீதில் தவழ்ந்து வீறிய குருநாதா
சிங்கமதாக திரிந்து மால் கெருவம் பொடியாக பறந்து சீறிய
சிம்புளதாக சிறந்து அகா என வரு கோ முன்
செம் கதிரோனை கடிந்த தீ வினை துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய
தென் கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் பெருமாளே

மேல்

#449
கனக சபை மேவும் எனது குருநாத கருணை முருகேச பெருமாள் காண்
கனக நிற வேதன் அபயம் இட மோது கர கமலம் சோதி பெருமாள் காண்
வினவும் அடியாரை மருவி விளையாடும் விரகு ரச மோக பெருமாள் காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதி பெருமாள் காண்
சனகி மணவாளன் மருகன் என வேத சதம் மகிழ் குமார பெருமாள் காண்
சரண சிவகாமி இரண குல காரி தரு முருக நாம பெருமாள் காண்
இனிது வனம் மேவும் அமிர்த குற மாதொடு இயல் பரவு காதல் பெருமாள் காண்
இணையில் இப தோகை மதியின் மகளோடும் இயல் புலியுர் வாழ் பொன் பெருமாளே

மேல்

#450
கை தருண சோதி அத்தி முக வேத கற்பக சகோத்ர பெருமாள் காண்
கற்பு சிவகாமி நித்ய கலியாணி கத்தர் குருநாத பெருமாள் காண்
வித்து ருப ராமருக்கு மருகான வெற்றி அயில் பாணி பெருமாள் காண்
வெற்பு உள கடாகம் உட்கு திர வீசு வெற்றி மயில்வாக பெருமாள் காண்
சித்ர முகம் ஆறும் முத்து மணி மார்பு திக்கினின் இலாத பெருமாள் காண்
தித்திமிதி தீதென் ஒத்தி விளையாடு சித்ர குமார பெருமாள் காண்
சுத்த விர சூரர் பட்டு விழ வேலை தொட்ட கவி ராஜ பெருமாள் காண்
துப்பு வளியோடும் அ புலியுர் மேவு சுத்த சிவஞான பெருமாளே

மேல்

#451
இருவினையின் மதி மயங்கி திரியாதே எழு நரகிலும் உழலு நெஞ்சு உற்று அலையாதே
பரம குரு அருள் நினைந்திட்டு உணர்வாலே பரவு தரிசனையை என்று எற்கு அருள்வாயே
தெரி தமிழை உதவு சங்க புலவோனே சிவன் அருள் முருக செம்பொன் கழலோனே
கருணை நெறி புரியும் அன்பர்க்கு எளியோனே கனக சபை மருவு கந்த பெருமாளே

மேல்

#452
குகனெ குருபரனே என நெஞ்சில் புகழ அருள் கொடு நாவினில் இன்ப
குமுளி சிவ அமுது ஊறுக உந்தி பசியாறி
கொடிய இருவினை மூலமும் வஞ்ச கலிகள் பிணி இவை வேரொடு சிந்தி
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி களிகூர
பகலும் இரவும் இலா வெளி இன்பு குறுகி இணை இலி நாடக செம்பொன்
பரம கதி இதுவாம் என சிந்தித்து அழகாக
பவளம் அன திரு மேனியுடன் பொன் சரண அடியவரார் மன அம் பொன்
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் கழல் தாராய்
தகுட தகுதகு தாதக தந்த திகுட திகுதிகு தீதக தொந்த
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் இயல் தாளம்
தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க தடி
அழனம் உக மாருதம் சண்ட சமர் ஏறி
ககனம் மறை பட ஆடிய செம் புள் பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறிபட நாகமும் அஞ்ச தொடும் வேலா
கயிலை மலைதனில் ஆடிய தந்தைக்கு உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
கனக சபைதனில் மேவிய கந்த பெருமாளே

மேல்

#453
வண்டை ஒத்து கயல் கண் சுழற்று புருவம் சிலைக்கு தொடு அம்பை ஒத்து தொடை
வண்டு சுற்று குழல் கொண்டல் ஒத்து கமுகு என்ப க்ரீவம்
மந்தரத்தை கட பொங்கு இபத்து பணை கொம்பை ஒத்து தனம் முந்து குப்ப தெரு
வந்து எத்தி பொரு மங்கையர் கைப்பொருள் அன்பினாலே
கொண்டு அழைத்து தழுவும் கை தட்டில் பொருள் கொண்டு தெட்டி சரசம் புகழ்க்கு குனகும்
குழற்கு இப்படி நொந்து கெட்டு குடில் மங்குறாமல்
கொண்டு சத்தி கடல் உண்டு உகுப்ப துன் நின் அன்பருக்கு செயல் தொண்டுபட்டு கமழ்
குங்குமத்தில் சரணம் பிடித்து கரை என்று சேர்வேன்
அண்டம் மிட்டி குட டிண்டிமிட் டிக்கு குடந்த கொட்ட தகு டிங்கு தொக்க தமடம்
சகட்டை குண கொம்பு இடக்கைக்கு இடல் என்ப தாளம்
அண்டம் எட்டு திசை உம்பல் சர்ப்ப திரள் கொண்டல் பட்டு கிரியும் பொடித்து புலன்
அஞ்சு அவித்து திரள் அண்டம் முட்ட துகள் வந்த சூரர்
கண்டம் அற்று குடல் என்பு நெக்கு தசனம் கடித்து குடிலம் சிவப்ப செநிர்
கண் தெறிக்க தலை பந்து அடித்து கையில் இலங்கு வேலால்
கண் களிக்க ககனம் துளுக்க புகழ் இந்திரற்கு பதம் வந்து அளித்து கனக
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை தம்பிரானே

மேல்

#454
கங்குலின் குழல் கார் முகம் சசி மஞ்சளின் புயத்தார் சரம் பெறு
கண்கள் கொந்தள காது கொஞ்சுக செம்பொன் ஆரம்
கந்தரம் தரித்து ஆடு கொங்கைகள் உம்பலின் குவட்டு ஆம் எனும் கிரி
கந்தமும் சிறு தேமலும் பட சம்பை போல
அங்கு அமைந்து இடை பாளிதம் கொடு குந்தியின் குறை கால் மறைந்திட
அண் சிலம்பு ஒலி பாடகம் சரி கொஞ்ச மேவும்
அஞ்சுகம் குயில் பூவையின் குரல் அம் கை பொன் பறிக்கார பெண்களொடு
அண்டி மண்டையர்க்கு ஊழியம் செய்வது என்று போமோ
சங்கு பொன் தவில் காளமும் துரியங்கள் துந்துமி காடு அதிர்ந்திட
சந்த செந்தமிழ் பாணர் கொஞ்சிட அண்ட கோசம்
சந்திரன் பதத்தோர் வணங்கிட இந்திரன் குலத்தார் பொழிந்திட
தந்திரம் புயத்தார் புகழ்ந்திட வந்த சூரை
செம் கையும் சிரத்தோடு பங்கு எழ அந்தகன் புரத்து ஏற வஞ்சகர்
செம் சரம் தொடுத்தே நடம்புரி கந்த வேளே
திங்கள் ஒண் முக காமர் கொண்ட வன் கொங்கை மென் குற பாவையும் கொடு
செம்பொன் அம்பலத்தே சிறந்து அருள் தம்பிரானே

மேல்

#455
கொந்தளம் புழுகு கெந்த வண் பனிர் ரம்ப சம்ப்ரம் அணிந்த மந்தர
கொங்கை வெண் கரி கொம்பு இணங்கிய மட மாதர்
கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி
கொஞ்சு பைம் கிளி அன்பு எனும் குயில் மயில் போலே
வந்து பஞ்சணை இன்பமும் கொடு கொங்கையும் புயமும் தழும்புற
மஞ்சு ஒண் கலையும் குலைந்து அவ மயல் மேலாய்
வஞ்சினங்கள் திரண்டு கண் செவியும் சுகங்கள் திரும்பி முன் செய்த
வஞ்சினங்களுடன் கிடந்து உடல் அழிவேனோ
தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி
சங்கு வெண்கல கெம்பு துந்துமி பல பேரி
சஞ்சலஞ்சல கொஞ்சு கிண்கிணி தங்கு டுண்டுடு டுண்டுடன் பல
சந்திர அம்பறை பொங்கு வஞ்சகர் களம் மீதே
சிந்த வெண் கழுகு ஒங்கு பொங்கு எழு செம்புள் அம் கருடன் பருந்துகள்
செம் களம் திகை எங்கும் அண்டிட விடும் வேலா
திங்கள் இந்திரன் உம்பர் அந்தரரும் புகழ்ந்து உருகும் அம்பரன் சபை
செம்பொன் அம்பலம் கொள் அன்பர்கள் பெருமாளே

மேல்

#456
மந்தரம் என் குவடு ஆர் தனங்களில் ஆரம் அழுந்திடவே மணம் பெறு
சந்தன குங்கும சேறுடன் பனி நீர்கள் கலந்திடுவார் முகம் சசி
மஞ்சு உறையும் குழலார் சரம் கயல் வாள் விழி செங்கழுநீர் ததும்பிய கொந்தள ஓலை
வண் சுழலும் செவியார் நுடங்கு இடை வாட நடம்புரிவார் மருந்திடு
விஞ்சையர் கொஞ்சிடுவார் இளம் குயில் மோகன வஞ்சியர் போல் அகம் பெற
வந்தவர் எந்த உர் நீர் அறிந்தவர் போல இருந்ததே எனா மயங்கிட இன் சொல் கூறி
சுந்தர வங்கணமாய் நெருங்கி நிர் வாரும் எனும்படி ஆல அகம் கொடு
பண் சரசம் கொளவேணும் என்று அவர் சேம வளம் துறு தேன் அருந்திட
துன்று பொன் அங்கையின் மீது கண்டு அவரோடு விழைந்துமே கூடி இன்புறு மங்கையோரால்
துன்பம் முடங்கு அழி நோய் சிரங்கொடு சீ புழுவும் சலம் ஓடு இறங்கிய
புண் குடவன் கடியோடு இளம் சனி சூலை மிகுந்திடவே பறந்து உடல்
துஞ்சிய மன் பதியே புகும் துயர் ஆழி விடும்படி சீர் பதம் பெறு விஞ்சை தாராய்
அந்தர துந்துமியோடு உடன் கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சையர்
இந்திர சந்திரர் சூரியன் கவிவாணர் தவம் புலியோர் பதஞ்சலி
அம்புயன் அம் திருமாலொடு இந்திரை வாணி அணங்கு அவளோடு அரும் தவர் தங்கள் மாதர்
அம்பர ரம்பையரோடு உடன் திகழ் மா உரகன் புவியோர்கள் மங்கையர்
அம் புவி மங்கையரோடு அருந்ததி மாதர் புகழ்ந்திடவே நடம்புரி
அம் புய செம் பதர் மாடு அகம் சிவகாம சவுந்தரியாள் பயந்து அருள் கந்த வேளே
திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி
தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தனனா எனும் பறை
செம் தவில் சங்குடனே முழங்க அசுரார்கள் சிரம் பொடியாய் விடும் செயல் கண்ட வேலா
செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில்
வந்து வணங்கி நிணே முகம் பெறு தாள் அழக அம் கையில் வேலுடன் புவி
செம்பொன் அம்பலம் மேல் பிரகார ச மந்திர மீது அமர்ந்த பெருமாளே

மேல்

#457
வந்துவந்து வித்து ஊறி என் தன் உடல் வெந்துவெந்து விட்டு ஓட நொந்து உயிரும்
வஞ்சினங்களில் காடு கொண்ட வடிவங்களாலே
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள
வந்து சிந்துரத்து ஏறி அண்டரோடு தொண்டர் சூழ
எந்தன் வஞ்சனை காடு சிந்தி விழ சந்தர் அண்டு இசை தேவ ரம்பையர்
கனிந்து பந்தடித்து ஆடல் கொண்டுவர மந்தி மேவும்
எண் கடம்பு அணி தோளும் அம் பொன் முடி சுந்தரம் திரு பாத பங்கயமும்
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய்
அந்தரம் திகைத்து ஓட விஞ்சையர்கள் சிந்தை மந்திரத்து ஓட கெந்தருவர்
அம்புயன் சலித்து ஓட எண் திசையை உண்ட மாயோன்
அஞ்சி உன் பத சேவை தந்திடு என வந்த வெம் சினர் காடு எரிந்து விழ
அங்கியின் குண கோலை உந்தி விடு செம் கை வேலா
சிந்துரம் பணை கோடு கொங்கை குற மங்கை இன்புற தோள் அணைந்து உருக
சிந்துரம்தனை சீர் மணம் புணர் நல் கந்த வேளே
சிந்தி முன் புரக்காடு மங்க நகை கொண்ட செம் தழல் கோலர் அண்டர் புகழ்
செம்பொன் அம்பலத்து ஆடும் அம்பலவர் தம்பிரானே

மேல்

#458
கதித்து பொங்கு அலுக்கு ஒத்து பணைத்து கொம்பு என தெற்றி கவித்து செம்பொனை துற்று குழலார் பின்
கழுத்தை பண்புற கட்டி சிரித்து தொங்கலை பற்றி கலைத்து செம் குணத்தில் பித்து இடு மாதர்
பதித்து தம் தனத்து ஒக்க பிணித்து பண்புற கட்டி பசப்பி பொன் தர பற்றி பொருள் மாள
பறித்து பின் துரத்து சொல் கபட்டு பெண்களுக்கு இச்சை பலித்து பின் கசுத்திப்பட்டு உழல்வேனோ
கதித்து கொண்டு எதிர்த்து பின் கொதித்து சங்கரித்து பல் கடித்து சென்று உழக்கி துக்க அசுரோரை
கழித்து பண்டு அமர்க்கு செம் பதத்தை தந்து அருளி கைக்கு அணி குச்சம் தரத்து ஐ சுத்த ஒளிர் வேலா
சிதைத்திட்டு அம்புரத்தை சொல் கயத்தை சென்று உரித்து தன் சின தக்கன் சிரத்தை தள் சிவனார்தம்
செவிக்கு செம் பொருள் கற்க புகட்டி செம் பரத்தில் செய் திருச்சிற்றம்பல சொக்க பெருமாளே

மேல்

#459
சிரித்து சங்கு ஒளியாம் மினலாம் என உருக்கி கொங்கையினால் உற மேல் விழு
செணத்தில் சம்பளமே பறிகாரிகள் சில பேரை
சிமிட்டி கண்களினால் உறவே மயல் புகட்டி செம் துகிலால் வெளியாய் இடை
திருத்தி பண் குழல் ஏய் முகில் ஓவிய மயில் போலே
அருக்கி பண்புறவே கலையால் முலை மறைத்து செம் துவர் வாய் அமுதூறல்கள்
அளித்து பொன் குயிலாம் எனவே குரல் மிடறு ஓதை
அசைத்து கொந்தள ஓலைகள் ஆர் பணி மினுக்கி சந்தன வாசனை சேறுடன்
அமைத்து பஞ்சணை மீது அணை மாதர்கள் உறவாமோ
இரைத்து பண்டு அமராவதி வானவர் ஒளித்து கந்த சுவாமி பராபரம்
எனப்பட்டு எண்கிரி ஏழ் கடல் தூள்பட அசுரார்கள்
இறக்க சிங்கம தேர் பரி யானையொடு உறுப்பில் செம் கழுகு ஒரிகள் கூளியொடு
இரத்த சங்கமது ஆடிட வேல் விடு மயில் வீரா
சிரித்திட்டு அம் புரமே மதனார் உடல் எரித்து கண்ட கபாலியர்பால் உறை
திகழ் பொன் சுந்தரியாள் சிவகாமி நல்கிய சேயே
திரு சித்தம் தனிலே குற மான் அதை இருத்தி கண் களிகூர் திகழ் ஆடக
திருச்சிற்றம்பலம் மேவி உலாவிய பெருமாளே

மேல்

#460
தத்தை என்று ஒப்பிடும் தோகை நட்டம் கொளுவர் பத்திரம் கண் கயல் காரி ஒப்பும் குழல்கள்
சச்சை அம் கெச்சையும் தாள ஒத்தும் பதுமை என்ப நீல
சக்கரம் பொன் குடம் பால் இருக்கும் தனமொடு ஒற்றி நல் சித்திரம் போல எத்தும் பறியர்
ச களம் சக்கடம் சாதி துக்க கொலையர் சங்க மாதர்
சுத்திடும் பித்திடும் சூது கற்கும் சதியர் முன் பணம் கை கொடு உந்து ஆரும் இட்டம் கொளுவர்
சொக்கி இடும்பு கடன் சேருமட்டும் தனகும் விஞ்சையோர் பால்
தொக்கிடும் கக்கலும் சூலை பக்கம் பிளவை விக்கலும் துக்கமும் சீத பித்தங்கள் கொடு
துப்பு அடங்கி படும் சோரனுக்கும் பதவி எந்த நாளோ
குத்திரம் கற்ற சண்டாளர் சத்த அம் குவடு பொட்டு எழுந்திட்டு நின்று ஆட எட்டு அம் திகையர்
கொற்றமும் கட்டியம் பாட நிர்த்தம் பவுரி கொண்ட வேலா
கொற்றர் பங்குற்ற சிந்தாமணி செம் குமரி பத்தர் அன்புற்ற எம் தாய் எழில் கொஞ்சு கிளி
கொட் புரம் தொக்க வெந்து ஆடவிட்டு அங்கி விழி மங்கை பாலா
சித்திரம் பொன் குறம் பாவை பக்கம் புணர செட்டி என்று எத்தி வந்து ஆடி நிர்த்தங்கள் புரி
சில் சிதம் பொன் புயம் சேர முற்றும் புணரும் எங்கள் கோவே
சிற்பரன் தற்பரன் சீர் திகழ் தென் புலியுர் ருத்திரன் பத்திர அம் சூல கர்த்தன் சபையில்
தித்தி என்று ஒத்தி நின்று ஆடு சிற்றம்பலவர் தம்பிரானே

மேல்

#461
தனத்தில் குங்குமத்தை சந்தனத்தை கொண்டு அணைத்தும் சங்கிலி கொத்தும் பிலுக்கு பொன்தனில்
கொத்தும் தரித்து சுந்தரத்தில் பண்பு அழித்து கண் சுழற்றி சண்பக புட்பம் குழல் மேவி
தரத்தை கொண்டு அசைத்து பொன் தகை பட்டு தரித்து பின் சிரித்து கொண்டு அழைத்து கொந்தளத்தை
தண் குலுக்கி சங்கு அலம்பு தன் கரத்து கொண்டு அணைத்து சம்ப்ரமித்து கொண்டு உறவாடி
புனித்த பஞ்சு அணை கண் திண் படுத்து சந்தன பொட்டும் குலைத்து பின் புயத்தை கொண்டு
அணைத்து பின் சுகித்திட்டு இன்பு கட்டி பொன் சர கொத்தும் சிதைப்ப பொன் தர பற்றும் பொதுமாதர்
புணர் பித்தும் பிடித்து பொன் கொடுத்து பின் பிதிர் சித்தன் திணி கட்டும் சிதைத்து கண்
சிறுப்ப புண்பிடித்து அ புண் புடைத்து கண் பழுத்து கண்டவர்க்கு கண் புதைப்ப சென்று உழல்வேனோ
சினத்து கண் சிவப்ப சங்கு ஒலிப்ப திண் கவட்டு செம் குவட்டை சென்று இடித்து செண்
தரை துக்கம் பிடிக்க பண் சிரத்தை பந்தடித்து கொண்டு இறைத்து தெண் கடல் திட்டும் கொளை போக
செழித்து பொன் சுரர் சுற்றம் களித்து கொண்டு அளி புட்பம் சிறக்க பண் சிரத்தில் கொண்டு
இறைத்து செம் பதத்தில் கண் திளைப்ப தந்து தலை தழ்த்து அம் புகழ் செப்பும் சயத்து திண் புய வேளே
பனித்து உட்க அங்கசற்கு கண் பரப்பி தன் சினத்தில் திண் புரத்தை கண்டு எரித்து பண்
கயத்தை பண்டு உரி துப்பன் பகை தக்கன் தவத்தை சென்று அழித்து கொன்ற அடல் பித்தன் தரு வாழ்வே
படை துப்பு ஒன்றுடை திட்பன்தனை குட்டும் படுத்தி பண் கடி புட்பம் கலை சுற்றும்
பதத்த பண்புற சிற்றம்பலத்தின்கண் களித்த பைம் புனத்தில் செம் குறத்தி பெண் பெருமாளே

மேல்

#462
திருடிகள் இணக்கி சம்பளம் பறி நடுவிகள் மயக்கி சங்கம் உண்கிகள்
சிதடிகள் முலை கச்சு உம்பல் கண்டிகள் சதிகாரர்
செவிடிகள் மதப்பட்டு உங்கு குண்டிகள் அசடிகள் பிணக்கிட்டும் புறம்பிகள்
செழுமிகள் அழைத்து இச்சம் கொளும் செயர் வெகு மோக
குருடிகள் நகைத்து இட்டம் புலம்பு கள் உதடிகள் கணக்கிட்டும் பிணங்கிகள்
குசலிகள் மருத்து இட்டும் கொடும் குணர் விழியாலே
கொளுவிகள் மினுக்கு சங்கு இரங்கிகள் நடனமும் நடித்திட்டு ஒங்கு சண்டிகள்
குணம் அதில் முழு சுத்த அசங்க்ய சங்கிகள் உறவு ஆமோ
இருடியர் இனத்து உற்று உம் பதம் கொளும் மறையவன் நில தொக்கும் சுகம் பெறும்
இமையவர் இன கட்டும் குலைந்திட வரு சூரர்
இபமொடு வெதித்த சிங்கமும் பல இரதமொடு எத திக்கும் பிளந்திட
இவுளி இரதத்துற்று அங்கம் மங்கிட விடும் வேலா
அரி கரி உரித்திட்டு அங்கசன் புரம் எரிதர நகைத்து பங்கயன் சிர
அளவோடு அறுத்து பண்டு அணிந்தவர் அருள் கோவே
அமரர் தம் மகட்கு இட்டம் புரிந்து நல் குறவர் தம் மகள் பக்கம் சிறந்து உற
அழகிய திருச்சிற்றம்பலம் புகு பெருமாளே

மேல்

#463
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம் கணை
கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம் கனி
கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும்
தந்த அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப பைம் கழை
தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன் ஆரம்
தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை கொண்டு விண்டவர்
தம் கடம் படியும் கவண் தீய சிந்தையாமோ
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு மங்குலி
மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும்
வந்த ரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு மங்கைபங்கினன்
வண்டர் லங்கை உளன் சரம் பொடி கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன் புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும்
உம்பலின் கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே

மேல்

#464
தியங்கும் சஞ்சலம் துன்பம் கடம் தொந்தம் செறிந்து ஐந்து இந்த்ரியம்
பந்தம் தரும் துன்பம் படும் ஏழை
திதம் பண்பு ஒன்று இலன் பண்டன் தலன் குண்டன் சலன் கண்டன்
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக
புயங்கம் திங்களின் துண்டம் குருந்தின் கொந்து அயன்தன் கம்
பொருந்தும் கம் கலந்த செம் சடை சூடி
புகழ்ந்தும் கண்டு உகந்தும் கும்பிடும் செம்பொன் சிலம்பு என்றும்
புலம்பும் பங்கயம் தந்து என் குறை தீராய்
இயம்பும் சம்புகம் துன்றும் சுணங்கன் செம் பருந்து அங்கங்கு
இணங்கும் செம் தடம் கண்டும் களிகூர
இடும்பை கண் சிரம் கண்டம் பதம் தம்தம் கரம் சந்து ஒன்று
எலும்பு சிந்திடும் பங்கம் செயும் வேலா
தயங்கும் பைம் சுரும்பு எங்கும் தனந்தந்தம் தனந்தந்தம்
தடம் தண் பங்கயம் கொஞ்சும் சிறு கூரா
தவம் கொண்டும் செபம் கொண்டும் சிவம் கொண்டும் ப்ரயம் கொண்டும்
தலம் துன்று அம்பலம் தங்கும் பெருமாளே

மேல்

#465
பருவம் பணைத்து இரண்டு கரி கொம்பு என திரண்டு பவளம் பதித்த செம்பொன் நிற மார்பில்
படரும் கனத்த கொங்கை மினல் கொந்தளித்து சிந்த பல விஞ்சையை புலம்பி அழகான
புருவம் சுழற்றி இந்த்ரதநு வந்து உதித்தது என்று புளகம் செலுத்து இரண்டு கயல் மேவும்
பொறிகள் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடி கொண்டு அழிக்கும் வஞ்சர் உறவாமோ
உருவம் தரித்து உகந்து கரமும் பிடித்து உவந்து உறவும் பிடித்த அணங்கை வனம் மீதே
ஒளிர் கொம்பினை சவுந்தரிய உம்பலை கொணர்ந்து ஒளிர் வஞ்சியை புணர்ந்த மணி மார்பா
செரு வெம் களத்தில் வந்த அவுணன் தெறிந்து மங்க சிவம் அஞ்செழுத்தை முந்த விடுவோனே
தினமும் களித்து செம்பொன் உலகம் துதித்து இறைஞ்சு திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#466
மத வெம் கரிக்கு இரண்டு வலு கொம்பு என திரண்டு வளரும் தனத்து அணிந்த மணி ஆரம்
வளை செம் கையில் சிறந்த ஒளி கண்டு நீத்து இலங்குவரரும் திகைத்து இரங்க வரும் மான் ஆனார்
வித இங்கித ப்ரியங்கள் நகை கொஞ்சுதல் குணங்கள் மிகை கண்டு உற கலங்கி மருளாதே
விடு சங்கை அற்று உணர்ந்து வலம் வந்து உன்னை புகழ்ந்து மிக விஞ்சு பொன் பதங்கள் தருவாயே
நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய
நகம் அங்கையில் பிடுங்கும் அசுரன் சிரத்தொடு அங்கம் நவ துங்க ரத்நம் உந்து திரள் தோளும்
சிதையும்படிக்கு ஒர் அம்புதனை முன் தொடுத்த கொண்டல் திறல் செம் கண் அச்சுதன்தன் மருகோனே
தினமும் கருத்து உணர்ந்து சுரர் வந்து உற பணிந்த திரு அம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#467
முக சந்திர புருவம் சிலை விழியும் கயல் நீல முகில் அம் குழல் ஒளிர் தொங்கலோடு இசை வண்டுகள் பாட
மொழியும் கிளி இதழ் பங்கயம் நகை சங்கு ஒளி காதில் குழை ஆட
முழவ அம் கர சமுகம் பரிமள குங்கும வாச முலை இன்ப ரச குடம் குவடு இணை கொண்டு நல் மார்பில்
முரணும் சிறு பவள தரள வடம் தொடை ஆட கொடி போல
துகிரின் கொடி ஒடியும்படி நடனம் தொடை வாழை மறையும்படி துயல் சுந்தர சுக மங்கையரோடு
துதை பஞ்சணை மிசை அங்கசன் ரதியின் இன்பம் அதாகி செயல் மேவி
தொடை சிந்திட மொழி கொஞ்சிட அளகம் சுழல் ஆட விழி துஞ்சிட இடை தொய்ஞ்சிட மயல் கொண்டு அணைகீனும்
சுக சந்திர முகமும் பத அழகும் தமியேனுக்கு அருள்வாயே
அகர அம் திரு உயிர் பண்புற அரி என்பதும் ஆகி உறையும் சுடர் ஒளி என் கணில் வளரும் சிவகாமி
அமுதம் பொழி பரை அந்தரி உமை பங்க அரனாருக்கு ஒரு சேயே
அசுரன் சிரம் இரதம் பரி சிலையும் கெட கோடு சரமும் பல படையும் பொடி கடலும் கிரி சாய
அமர் கொண்டு அயில் விடு செம் கர ஒளி செம் கதிர் போல திகழ்வோனே
மகரம் கொடி நிலவின் குடை மதனன் திரு தாதை மருகன் என்று அணி விருதும் பல முரசம் கலை ஓத
மறையன் தலை உடையும்படி நடனம் கொளு மாழை கதிர் வேலா
வடிவு இந்திரன் மகள் சுந்தர மணமும் கொடு மோக சரசம் குறமகள் பங்கொடு வளர் தென் புலியூரில்
மகிழும் புகழ் திரு அம்பலம் மருவும் குமரேச பெருமாளே

மேல்

#468
சந்திர ஓலை குலாவ கொங்கைகள் மந்தரம் ஆல நல் நீர் ததும்ப நல்
சண்பக மாலை குலாவு இளம் குழல் மஞ்சு போல
தண் கயல் வாளி கணார் இளம் பிறை விண் புருவார் இதழ் கோவையின் கனி
தன் செயலார் நகை சோதியின் கதிர் சங்கு மேவும்
கந்தரர் தேமலும் மார் பரம்ப நல் சந்தன சேறு உடன் ஆர் கவின்பெறு
கஞ்சுகமாம் மிடறு ஓதை கொஞ்சிய ரம்பையாரை
கண் களிகூர வெகு ஆசை கொண்டு அவர் பஞ்சணை மீது குலாவினும் திரு
கண்கள் இராறும் இராறு திண் புயமும் கொள்வேனே
இந்திரலோகமும் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட
எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா
இந்திரை கேள்வர் பிதா மகன் கதிர் இந்து சடாதரன் வாசவன் தொழுது
இன்புறவே மனுநூல் விளம்பிய கந்த வேளே
சிந்துரம் மால் குவடு ஆர் தனம் சிறு பெண்கள் சிகாமணி மோக வஞ்சியர்
செந்தினை வாழ் வளி நாயக ஒண் குக அன்பர் ஓது
செந்தமிழ் ஞான தடாகம் என் சிவ கங்கை அளாவும் மகா சிதம்பர
திண் சபை மேவும் மனா சவுந்தர தம்பிரானே

மேல்

#469
காய மாய வீடு மீறிய கூடு நந்து புற்புதம்தனில் குரம்பை கொண்டு நாளும்
காசில் ஆசை தேடி வாழ்வினை நாடி இந்த்ரிய ப்ரமம் தடித்து அலைந்து சிந்தை வேறாய்
வேயில் ஆய தோள மா மடவார்கள் பங்கயத்து கொங்கை உற்று இணங்கி நொந்திடாதே
வேத கீத போத மோன ஞான நந்த முற்றிடு இன்ப முத்தி ஒன்று தந்திடாயோ
மாய வீர தீர சூரர்கள் பாற நின்ற விக்ரமம் கொள் வெற்பு இடந்த செம் கை வேலா
வாகை வேடர் பேதை காதல வேழ மங்கையை புணர்ந்த வெற்ப கந்த செந்தில் வேளே
ஆயும் வேத கீதம் ஏழிசை பாட அஞ்செழுத்து தழங்க முட்ட நின்று துன்று சோதீ
ஆதி நாதர் ஆடு நாடகசாலை அம்பல சிதம்பரத்து அமர்ந்த தம்பிரானே

மேல்

#470
அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை
அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சு பூதம்
அடைசிய சவடனை மோடாதி மோடனை அழிகரு வழி வரு வீணாதி வீணனை
அழுகலை அவிசலை ஆறு ஆன ஊணனை அன்பு இலாத
கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகு வித மூதேவி மூடிய
கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பி வீழும்
களியனை அறிவுரை பேணாத மாநுட கசனியை அசனியை மா பாதனாகிய
கதியிலிதனை நாயேனை ஆளுவது எந்த நாளோ
மவுலியில் அழகிய பாதாள லோகனும் மரகத முழுகிய காகோத ராஜனும்
மநு நெறி உடன் வளர் சோணாடர் கோனுடன் உம்பர் சேரும்
மகபதி புகழ் புலியூர் வாழு நாயகர் மட மயில் மகிழ்வுற வான் நாடர் கோ என
மலைமகள் உமை தரு வாழ்வே மனோகர மன்றுள் ஆடும்
சிவசிவ ஹரஹர தேவா நமோ நம தெரிசன பரகதி ஆனாய் நமோ நம
திசையினும் இசையினும் வாழ்வே நமோ நம செம் சொல் சேரும்
திரு தரு கலவி மணாளா நமோ நம திரிபுரம் எரி செய்த கோவே நமோ நம
ஜெயஜெய ஹரஹர தேவா சுர அதிபர் தம்பிரானே

மேல்

#471
கட்டி முண்டக அரபாலி அங்கிதனை முட்டி அண்டமொடு தாவி விந்து ஒலி
கத்த மந்திர அவதான வெண் புரவி மிசை ஏறி
கற்பக அம் தெருவில் வீதி கொண்டு சுடர் பட்டிமண்டபம் உடாடி இந்துவொடு
கட்டி விந்து பிசகாமல் வெண் பொடி கொடு அசையாமல்
சுட்டு வெம் புரம் நிறு ஆக விஞ்சை கொடு தத்துவங்கள் விழ சாடி எண் குணவர்
சொர்க்கம் வந்து கையுள் ஆக எந்தை பதமுற மேவி
துக்கம் வெந்து விழ ஞானம் உண்டு குடில் வச்சிரங்கள் என மேனி தங்கமுற
சுத்த அகம் புகுத வேத விந்தையொடு புகழ்வேனோ
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் எட்டு இரண்டும் இது ஆம் இலிங்கம் என
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல்
எட்டு இரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே
செட்டி என்று சிவகாமிதன் பதியில் கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே
செட்டி என்று வனம் ஏவி இன்பரச சத்தியின் செயல் இனாளை அன்புருக
தெட்டி வந்து புலியூரில் மன்று வளர் பெருமாளே

மேல்

#472
நஞ்சினை போலும் மன வஞ்சக கோளர்களை நம்புதல் தீது என நினைந்து நாயேன்
நண்பு உக பாதம் அதில் அன்புற தேடி உனை நங்கள் அப்பா சரணம் என்று கூறல்
உன் செவிக்கு ஏறலைகொல் பெண்கள் மெல் பார்வையைகொல் உன் சொலை தாழ்வு செய்து மிஞ்சுவார் ஆர்
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய்
கஞ்சனை தாவி முடி முன்பு குட்டு ஏய மிகு கண் களிப்பாக விடு செம் கையோனே
கண் கயல் பாவை குற மங்கை பொன் தோள் தழுவு கஞ்சுக பான்மை புனை பொன் செய் தோளாய்
அஞ்ச வெற்பு ஏழு கடல் மங்க நிட்டூரர் குலம் அந்தரத்து ஏற விடு கந்த வேளே
அண்டம் முன் பார் புகழும் எந்தை பொற்பு ஊர் புலிசை அம்பலத்து ஆடும் அவர் தம்பிரானே

மேல்

#473
செம் கலச முலையார்பால் சிந்தை பல தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்புருக அருள்வாயே
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே

மேல்

#474
கரிய மேகம் எனும் குழலார் பிறை சிலை கொள் வாகு எனும் புருவார் விழி
கயல்கள் வாளி எனும் செயலார் மதி துண்ட மாதர்
கமுக க்ரீவர் புயம் கழையார் தன மலைகளா இணையும் குவடார் கர
கமல வாழை மனும் தொடையார் சர சுங்க மாடை
வரிய பாளிதம் உந்து உடையார் இடை துடிகள் நூலியலும் கவின் ஆர் அல்குல்
மணம் உலாவிய ரம்பையினார் பொருள் சங்க மாதர்
மயில்கள் போல நடம்புரிவார் இயல் குணம் இலாத வியன் செயலார் வலை
மசகி நாயென் அழிந்திடவோ உனது அன்பு தாராய்
சரி இலாத சயம்பவியார் முகில் அளக பார பொனின் சடையாள் சிவை
சருவ லோக சவுந்தரியாள் அருள் கந்த வேளே
சத பணா மகுடம் பொடியாய்விட அவுணர் சேனை மடிந்திடவே ஒரு
தழல் கொள் வேலை எறிந்திடு சேவக செம்பொன் வாகா
அரிய மேனி இலங்கை இராவணன் முடிகள் வீழ சரம் தொடு மாயவன்
அகிலம் ஈரேழும் உண்டவன் மா மருக அண்டர் ஓதும்
அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி
அருள் கொடு ஆடி சிதம்பர மேவிய தம்பிரானே

மேல்

#475
கூந்தல் ஆழ விரிந்து சரிந்திட காந்து மாலை குலைந்து பளிங்கிட
கூர்ந்த வாள் விழி கெண்டை கலங்கிட கொங்கைதானும்
கூண்கள் ஆம் என பொங்க நலம் பெறு காந்தள் மேனி மருங்கு துவண்டிட
கூர்ந்த ஆடை குலைந்து புரண்டு இரசங்கள் பாய
சாந்து வேர்வின் அழிந்து மணம் தப ஓங்கு அவாவில் கலந்து முகம் கொடு
தான் பலா சுளையின் சுவை கண்டு இதழ் உண்டு மோகம்
தாம் புறா மயிலின் குரல் கொஞ்சிட வாஞ்சை மாதருடன் புளகம் கொடு
சார்ந்து நாய் என அழிந்து விழுந்து உடல் மங்குவேனோ
தீந்த தோதக தந்தன திந்திமி ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் பொங்கு சூரை
சேண் சுலா மகுடம் பொடிதம் பட ஓங்கு அ ஏழ் கடலும் சுவற அம் கையில்
சேந்த வேலது கொண்டு நடம் பயில் கந்த வேளே
மா தண் ஆரு வனம் குயில் கொஞ்சிட தேங்கு வாழை கரும்புகள் விஞ்சிடு
வான் குலாவி சிதம்பரம் வந்து அமர் செங்கை வேலா
மாண் ப்ரகாச தனம் கிரி சுந்தரம் ஏய்ந்த நாயகி சம்பை மருங்கு பொன்
வார்ந்த ரூபி குற பெண் வணங்கிய பெருமாளே

மேல்

#476
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி
முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே
முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ
தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணில் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய சித்ர வண்ணவல்லி அலர் சூடும்
பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல் வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா
பச்சைவன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே

மேல்

#477
இருள் காட்டு செவ்வி ததி காட்டி வில்லி நுதல் காட்டி வெல்லும் இரு பாண
இயல் காட்டு கொல் குவளை காட்டி முல்லை நகை காட்டு அல்லி இடை மாதர்
மருள் காட்டி நல்குரவு காட்டும் இல்ல இடுகாட்டின் எல்லை நடவாத
வழி காட்டி நல்ல அறிவு காட்டி மெல்ல வினை வாட்டி அல்லல் செயல் ஆமோ
தெருள் காட்டு தொல்லை மறை காட்டு மல்லல் மொழி காட்டு தில்லை இளையோனே
தினை காட்டு கொல்லை வழி காட்ட வல்ல குறவாட்டி புல்லும் மணி மார்பா
அருள் காட்டு கல்வி நெறி காட்டு செல்வ அடல் காட்டு வல்ல அசுரர் கோபா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#478
முல்லை மலர் போலும் முத்தாய் உதிர்ந்தான நகை வள்ளை கொடி போலும் நல் காது இலங்கு ஆடு குழை
முல்லை மலர் மாலை சுற்று ஆடும் கொந்து ஆரும் குழல் அலை போது அம்
மொள்கு சிலை வாள் நுதல் பார்வை அம்பான கயல் கிள்ளை குரலார் இதழ் பூ எனும் போது முகம்
முன்னல் கமுகார் களம் தோய் சுணங்காய முலை மலை யானை
வல்ல குவடு ஆலிலை போலும் சந்தான வயிறு உள்ள துகில் நூல் இடை காம பண்டார அல்குல்
வழ்ழை தொடையார் மலர் கால் அணிந்து ஆடும் பரிபுர ஓசை
மல்லி சலியாட பட்டு ஆடை கொண்டாட மயல் தள்ளு நடையோடு சற்றே மொழிந்து ஆசை கொடு
வல்லவர்கள் போல பொன் சூறை கொண்டார்கள் மயல் உறலாமோ
அல்லல் வினை போக அசத்து ஆதி விண்டு ஓட நய உள்ளம் உறவாக வைத்து ஆளும் எம் தாதை மகிழ்
அள் அமைய ஞான வித்து ஓதும் கந்தா குமர முருகோனே
அன்ன நடையாள் குற பாவை பந்து ஆடு விரல் என்னுடைய தாய் வெண் முத்தார் கடம்பு ஆடு குழல்
அன்னை வலி சேர் தன கோடு இரண்டு ஆன வள்ளி மணவாளா
செல்லும் உக ஏழ் கடல் பாழி விண்டோடி அதிர வல்ல அசுரர் சேனை பட்டு மடிந்து குருதி
செல்ல திசையோடு விட்டு ஆடு சிங்கார முக வடி வேலா
தெள்ளு தமிழ் பாடியிட்டு ஆசை கொண்டாட சசி வல்லியோடு கூடி திக்கோர் கொண்டாட இயல்
தில்லை நகர் கோபுரத்தே மகிழ்ந்தே குலவு பெருமாளே

மேல்

#479
அட பக்கம் பிடித்து தோளொடு தோள் பொர வளைத்து செம் கரத்தில் சீரொடு பாவொடு
அணுக்கி செம் துணுக்கில் கோ இதழூறல்கள் அது கோதி
அணி பொன் பங்கயத்து பூண் முலை மேகலை நெகிழ்த்து பஞ்சரித்து தா பணமே என
அருட்டி கண்சிமிட்டி பேசிய மாதர்கள் உறவோடே
படி சித்தம் களித்து தான் மிக மாயைகள் படித்து பண் பயிற்று இ காதல்கள் மேல் கொள
பசப்பி பின் பிணக்கை கூறிய வீணிகள் அவ மாய
பரத்தை குண்டு உணர்த்து தோதக பேதைகள் பழிக்குள் சஞ்சரித்து போடு இடு மூடனை
பரத்துற்று அண் பதத்து போதகம் ஈது என அருள்தாராய்
தட கை தண்டு எடுத்து சூரரை வீரரை நொறுக்கி பொன்றவிட்டு தூள் எழ நீறு எழ
தகர்த்து பந்து அடித்து சூடிய தோரண கலை வீரா
தகட்டு பொன் சுவட்டு பூ அணை மேடையில் சமைப்பித்து அங்கு ஒருத்தி கோது இல மா மயில்
தனி பொற்பை புனத்தில் கோகில மா வளி மணவாளா
திடத்தில் திண் பொருப்பை தோள் கொடு சாடிய அரக்க திண் குலத்தை சூறை கொள் வீரிய
திரு பொன் பங்கயத்து கேசவர் மாயவர் அறியாமல்
திமித்த திந்திமித்தத்தோ என ஆடிய சமர்த்தர் பொன் புவிக்குள் தேவர்கள் நாயக
திருச்சிற்றம்பலத்துள் கோபுரம் மேவிய பெருமாளே

மேல்

#480
அக்கு பீளை மூளா இளை மூளையொடு புக்கு காய் பனி நீர் மயிர் தோல் குடில
பூச்சி புழுவோடு அடை ஆர் தசையுற மேவி
அத்தி பால் பல நாடி குழாய் அள் வழுப்பு சார் வலமே விளை ஊளை கொள்
அச்சு தோல் குடிலாம் அதிலே பொறி விரகாளர்
சுக்கத்து ஆழ் கடலே சுகமாம் என புக்கிட்டு ஆசை பெணாசை மணாசைகள்
தொக்கு தீவினை ஊழ்வினை காலமொடு அதனாலே
துக்கத்தே பரவாமல் சதாசிவ முத்திக்கே சுகமாக பராபர
சொர்க்க பூமியில் ஏறிடவே பதம் அருள்வாயே
தக்க தோகிட தாகிட தீகிட செக்க சேகண தாகண தோகண
தத்த தானன டீகுட டாடுடு என தாளம்
தத்தி சூரர் குழாமொடு தேர் பரி கெட்டு கேவலமாய் கடல் மூழ்கிட
சத்திக்கே இரையாம் எனவே விடு கதிர் வேலா
திக்க தோகண தாவெனவே பொரு சொச்ச தாதையர் தாம் எனவே திரு
செக்கர் பாதம் அதே பதியா சுதி அவை பாட
செம்பொன் பீலி உலா மயில் மா மிசை பக்கத்தே குற மாதொடு சீர் பெறு
தெற்கு கோபுர வாசலில் மேவிய பெருமாளே

மேல்

#481
ஆரத்தோடு அணி மார்பு இணை யானைகள் போருக்கு ஆம் என மா முலையே கொடு
ஆய தூசினை மேவிய நூல் இடை மட மாதர்
ஆலை கோதினில் ஈரம் இலா மன நேசத்தோடு உறவானவர் போலுவர்
ஆருக்கே பொருளாம் எனவே நினைவு அதனாலே
காருக்கே நிகராகிய ஓதிய மாழை தோடு அணி காதொடு மோதிய
கால தூதர் கை வேல் எனு நீள் விழி வலையாலே
காதல் சாகர மூழ்கிய காமுகர் மேலிட்டே எறி கீலிகள் நீலிகள்
காமத்தோடு உறவாகை இலா அருள்புரிவாயே
சூரர்க்கே ஒரு கோள் அரியாம் என நீல தோகை மயூரம் அதே ஏறிய
தூளிக்கே கடல் தூர நிசாசுரர் களம் மீதே
சோரிக்கே வெகு ரூபமதா அடு தான தானன தானன தானன
சூழிட்டே பல சோகுகள் ஆடவெ பொரும் வேலா
வீரத்தால் வல ராவணனார் முடி போக தான் ஒரு வாளியை ஏவிய
மேகத்தே நிகராகிய மேனியன் மருகோனே
வேதத்தோன் முதலாகிய தேவர்கள் பூசித்தே தொழ வாழ் புலியூரினில்
மேலை கோபுர வாசலில் மேவிய பெருமாளே

மேல்

#482
காதை காதி மோதி கேள்வி அற்ற காம பூசல் இட்டு மதியாதே
கார் ஒத்து ஏய் நிறத்த ஓதி காவனத்தின் நீழற்கே தருக்கி விளையாடி
சேதித்தே கருத்தை நேருற்றே பெருத்த சேல் ஒத்தே வருத்தும் விழி மானார்
தேமல் பார வெற்பில் மூழ்கி தாபம் மிக்க தீமைக்கு ஆவி தப்ப நெறி தாராய்
மாதை காதலித்து வேட கானகத்து வாச தாள் சிவப்ப வருவோனே
வாரிக்கே ஒளித்த மாய சூரை வெட்டி மாள போர் தொலைத்த வடி வேலா
வீதி தேர் நடத்து தூள் அத்தால் அருக்கன் வீர தேர் மறைத்த புலியூர் வாழ்
மேலை கோபுரத்து மேவி கேள்வி மிக்க வேதத்தோர் துதித்த பெருமாளே

மேல்

#483
கொள்ளை ஆசைக்காரிகள் பாதக வல்ல மாயக்காரிகள் சூறைகள்
கொள்ளும் ஆயக்காரிகள் வீணிகள் விழியாலே
கொல்லும் லீலைக்காரிகள் யாரையும் வெல்லும் மோகக்காரிகள் சூது சொல்
கொவ்வை வாய் நிட்டூரிகள் மேல் விழும் அவர் போலே
உள்ள நோ வைத்தே உறவாடியர் அல்லை நேர் ஒப்பாம் மன தோஷிகள்
உள் விரோதக்காரிகள் மாயையில் உழல் நாயேன்
உய்யவே பொன் தோள்களும் ஆறு இரு கையும் நீப தார் முகம் ஆறும் முன்
உள்ள ஞான போதமும் நீ தா வருவாயே
கள்ள மாய தாருகன் மா முடி துள்ள நீல தோகையின் மீது ஒரு
கையில் வேல் தொட்டு ஏவிய சேவக முருகோனே
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூப தேவ கானிடை
கௌவை தீர போகும் இராகவன் மருகோனே
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் தான் ஒரு வானுறு
செல்வி மார்பில் பூஷணமாய் அணை மணவாளா
தெள்ளும் ஏனல் சூழ் புனம் மேவிய வள்ளி வேளைக்கார மனோகர
தில்லை மேலை கோபுரம் மேவிய பெருமாளே

மேல்

#484
தாது மா மலர் முடியாலே பதறாத நூபுர அடியாலே கர
தாளமாகிய நொடியாலே மடி பிடியாலே
சாடை பேசிய வகையாலே மிகு வாடை பூசிய நகையாலே பல
தாறுமாறு சொல் மிகையாலே அன நடையாலே
மோதி மீறிய முலையாலே முலை மீதில் ஏறிய கலையாலே வெகு
மோடி நாணய விலையாலே மயல் தரு மானார்
மோக வாரிதிதனிலே நாள்தொறு மூழ்குவேன் உனது அடியார் ஆகிய
மோன ஞானிகளுடனே சேரவும் அருள்வாயே
காதலாய் அருள்புரிவாய் நான்மறை மூலமே என உடனே மா கரி
காண நேர் வரு திருமால் நாரணன் மருகோனே
காதல் மாதவர் வலமே சூழ் சபை நாதனார் தமது இடமே வாழ் சிவ
காம நாயகி தரு பாலா புலிசையில் வாழ்வே
வேத நூல் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை மூவாயிரம்
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே

மேல்

#485
எலுப்பு தோல் மயிர் நாடி குழாம் மிடை இறுக்கு சீ புழுவோடு அடை மூளைகள்
இரத்த சாகர நீர் மலம் மேவிய கும்பி ஓடை
இளைப்பு சோகைகள் வாதம் விலாவலி உளைப்பு சூலையொடே வலுவாகிய
இரைப்பு கேவல மூலவியாதியொடு அண்டவாதம்
குலைப்பு காய் கனல் நீரிழிவு ஈளையொடு அளைப்பு காது அடை கூனல் விசூசிகை
குருட்டு கால் முடம் ஊமை உள் ஊடு அறு கண்டமாலை
குடி புக்கு ஊனம் இதே சதமாம் என எடுத்து பாழ் வினையால் உழல் நாயேன் உன்
இடத்து தாள் பெற ஞான சதாசிவ அன்பு தாராய்
கெலிக்க போர் பொரு சூரர் குழாம் உமிழ் இரத்த சேறு எழ தேர் பரி யாளிகள்
கெடுத்திட்டே கடல் சூர் கிரி தூள்பட கண்ட வேலா
கிளர் பொன் தோளி சராசரம் மேவி எய் அசைத்து பூசைகொள் ஆயி பராபரி
கிழ பொன் காளை மேல் ஏறு எம் நாயகி பங்கின் மேவும்
வலித்து தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்து போது உடல் கீழ் விழவே செய்து
மகிழ் பொன் பாத சிவாய நமோ அர சம்பு பாலா
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து சீர் புலியூர் பரமாகிய
வடக்கு கோபுர வாசலில் மேவிய தம்பிரானே

மேல்

#486
நீல மா முகில் போலும் வார் குழலார்கள் மாலை குலாவ வேல் கணை
நீள வாள் விழி பார்வை காது இரு குழை ஆட
நீடு மார்பு இணை ஆட ஓடிய கோடு போல் இணை ஆட நூல் இடை
நேச பாளித சோலை மா மயில் என ஏகி
காலில் நூபுர ஓசை கோ என ஆடி மால் கொடு நாணியே வியர்
காயமோடு அணு பாகு பால் மொழி விலைமாதர்
காதலாய் அவரோடு பாழ் வினை மூழ்கி ஏழ் நரகு ஆழும் மூடனை
காரீர் பாரும் ஐயா சிவா பதம் அருள்வாயே
கோல மா மயில் ஏறி வார் குழை ஆட வேல் கொடு வீர வார் கழல்
கோடிகோடி இடி ஓசை போல் மிக மேரு தூளாய்
கோடு கோ என ஆழி பாடுகள் தீவு தாடு அசுரார் குழாமொடு
கூளமாக விணோர்கள் வாழ்வுற விடும் வேலா
நாலு வேதம் ஊடாடு வேதனை ஈண கேசவனார் சகோதரி
நாதர் பாகம் விடாள் சிகா மணி உமை பாலா
ஞான பூமியதான பேர் புலியூரில் வாழ் தெய்வ யானை மானொடு
நாலு கோபுர வாசல் மேவிய பெருமாளே

மேல்

#487
வாதம் பித்தமோடு சூலை விப்புருதி ஏறு கல் படுவன் ஈளை பொக்கு இருமல்
மாலை புற்று எழுதல் ஊசல் பற்சனியொடு அந்தி மாலை
மாசு அடை குருடு காது அடைப்பு செவிடு ஊமை கெட்ட வலி மூலம் முற்று தரு
மாலையுற்ற தொணூறு ஆறு தத்துவர்கள் உண்ட காயம்
வேத வித்து பரிகோலமுற்று விளையாடுவித்த கடல் ஓடம் மொய்த்த பல
வேடமிட்டு பொருள் ஆசை பற்றி உழல் சிங்கியாலே
வீடு கட்டி மயல் ஆசை பட்டு விழ ஓசை கெட்டு மடியாமல் முத்தி பெற
வீடு அளித்து மயில் ஆடு சுத்த வெளி சிந்தியாதோ
ஓத அத்தி முகிலோடு சர்ப்ப முடி நீறு பட்டு அலற சூர வெற்பு அவுணரோடு
பட்டு விழ வேலை விட்ட புகழ் அங்கி வேலா
ஓம் நமச்சிவய சாமி சுத்த அடியார்களுக்கும் உபகாரி பச்சை உமை
ஓர் புறத்து அருள் சிகாமணி கடவுள் தந்த சேயே
ஆதி கற்பக விநாயகற்கு பிறகான பொன் சரவணா பர பிரமன்
ஆதி உற்ற பொருள் ஓதுவித்தமை அறிந்த கோவே
ஆசை பெற்ற குற மாதை நித்த வனம் மேவி சுத்த மணம் ஆடி நல் புலியுர்
ஆடக படிக கோபுரத்தின் மகிழ் தம்பிரானே

மேல்

#488
சுரும்பு உற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில் கூவ துரந்துற்ற குளிர் வாடை அதனாலும்
துலங்குற்ற மரு வாளி விரைந்து உற்ற படி ஆல தொடர்ந்து உற்று வரு மாதர் வசையாலும்
அரும்புற்ற மலர் மேவு செழும் கொற்ற அணையாலும் அடைந்திட்ட விடை மேவு மணியாலும்
அழிந்துற்ற மட மானை அறிந்து அற்றம் அது பேணி அசைந்துற்ற மது மாலை தர வேணும்
கரும் கொற்ற மத வேழம் முனிந்துற்ற கலை மேவி கரந்து உள்ள மட மானின் உடனே சார்
கரும்பு உற்ற வயல் சூழ பெரும்பற்ற புலியூரில் களம் பற்றி நடமாடும் அரன் வாழ்வே
இருந்து உற்று மலர் பேணி இடும் பத்தர் துயர் தீர இதம் பெற்ற மயில் ஏறி வரு கோவே
இனம் துற்ற வரு சூரன் உருண்டிட்டு விழ வேல் கொடு எறிந்திட்டு விளையாடு பெருமாளே

மேல்

#489
இணங்கி தண்பொடு பால் மொழி பேசிகள் மணந்திட்டு சுகமாய் விளையாடிகள்
இளம் சொல் செப்பிகள் சாதனை வீணிகள் கடிது ஆகும்
இடும்பை பற்றிய தாம் என மேயினர் பெரும் சொல் பித்தளை தானும் வையாதவர்
இரும்பில் பற்றிய கூர் விழி மாதர்கள் எவரேனும்
பணம் சுற்றி கொளு உபாய உதாரிகள் மணம் கட்டு குழல் வாசனை வீசிகள்
பலம் செப்பி தர மீள அழையாதவர் அவரோடே
பதம் துய்த்து கொடு தீமைய மா நரகு அடைந்திட்டு சவமாகி விடாது உன
பதம் பற்றி புகழானது கூறிட அருள்வாயே
வணங்க சித்தம் இலாத இராவணன் சிரம் பத்து கெட வாளி கடாவியெ
மலங்க பொக்கரை ஈடு அழி மாதவன் மருகோனே
மதம் பட்டு பெரு சூரபன்மாதியர் குலம் கொட்டத்து இகல் கூறிய மோடரை
வளைந்திட்டு களம் மீதினிலே கொல விடும் வேலா
பிணம் பற்றி கழுகோடு பல் கூளிகள் பிடுங்கி கொத்திடவே அமர் ஆடியே
பிளந்திட்டு பல மா மயில் ஏறிய முருகோனே
பிரிந்திட்டு பரிவாகிய ஞானிகள் சிலம்பு அத்த கழல் சேரவே நாடிடு
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#490
விடுங்கைக்கு ஒத்த கடா உடையான் இடம் அடங்கி கை சிறையான அநேகமும்
விழுங்கப்பட்டு அறவே அறல் ஓதியர் விழியாலே
விரும்பத்தக்கன போகமும் மோகமும் விளம்பத்தக்கன ஞானமும் மானமும்
வெறும் சுத்த சலமாய் வெளியாய் உயிர்விடும் நாளில்
இடும் கட்டைக்கு இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு தமர் ஆனவர் கோ என
இடம் கட்டி சுடுகாடு புகா முனம் மனதாலே
இறந்திட்டு பெறவே கதியாயினும் இருந்திட்டு பெறவே மதியாயினும்
இரண்டில் தக்கது ஒர் ஊதியம் நீ தர இசைவாயே
கொடுங்கை பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய
குரங்கை செற்று மகா உததி தூள் எழ நிருதேசன்
குலம் கண்பட்ட நிசாசரர் கோ என இலங்கைக்குள் தழலோன் எழ நீடிய
குமண்டை குத்திர ராவணனார் முடி அடியோடே
பிடுங்க தொட்ட சராதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா மருகா இயல்
ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என விருது ஊதும்
ப்ரசண்ட சொல் சிவ வேத சிகாமணி ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ
பெரும்பற்ற புலியூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#491
கொந்தள ஓலைகள் ஆட பண் சங்கு ஒளி போல் நகை வீசி தண்
கொங்கைகள் மார்பினில் ஆட கொண்டை என் மேகம்
கொங்கு எழு தோள் வளை ஆட கண் செங்கயல் வாளிகள் போல பண்
கொஞ்சிய கோகிலமாக பொன் பறிகாரர்
தந்திரமாம் என ஏகி பொன் தொங்கலொடு ஆரமும் ஆட செம்
தம்பல வாயொடு பேசிக்கொண்டு உறவாடி
சம்பளம் ஈது என ஓதி பின் பஞ்சணை மேல் மயல் ஆடு அச்சம்
சங்கை இல் மூளியர்பால் வைக்கும் செயல் தீராய்
அந்தகன் ஆருயிர் போக பொன் திண் புரமோடு எரி பாய பண்டு
அங்கசனார் உடல் வேக கண்டு அழல் மேவி
அண்டர்களோடு அடல் ஆர் தக்கன் சந்திர சூரியர் வீழ சென்று
அம்பல மீதினில் ஆடு அத்தன் குருநாதா
சிந்துரமோடு அரி தேர் வர்க்கம் பொங்கமொடு ஏழ் கடல் சூர் பத்மன்
சிந்திட வேல் விடு வாகை திண் புய வேளே
செம் குற மாது மினாளை கண்டு இங்கிதமாய் உறவாடி பண்
செந்தமிழ் மால் புலியூர் நத்தும் பெருமாளே

மேல்

#492
நகையால் எத்திகள் வாயில் தம்பலமோடு எத்திகள் நாண் அற்று இன்
நயனால் எத்திகள் நாறல் புண் தொடை மாதர்
நடையால் எத்திகள் ஆர கொங்கையினால் எத்திகள் மோகத்தின்
நவிலால் எத்திகள் தோகை பைம் குழல் மேக
சிகையால் எத்திகள் ஆசை சங்கடியால் எத்திகள் பாடி பண்
திறனால் எத்திகள் பார திண் தெருவூடே
சிலர் கூடி கொடு ஆடி கொண்டு உழல்வாருக்கு உழல் நாயெற்கு உன்
செயலால் அற்புத ஞானத்தின் கழல் தாராய்
பகையார் உட்கிட வேலை கொண்டு உவர் ஆழி கிரி நாகத்தின்
படமோடு இற்றிட சூரை சங்கரி சூரா
பண நாகத்திடை சேர் முத்தின் சிவகாமிக்கு ஒரு பாகத்தன்
பரிவால் சத்து உபதேசிக்கும் குரவோனே
சுக ஞான கடல் மூழ்க தந்து அடியேனுக்கு அருள் பாலிக்கும்
சுடர் பாத குகனே முத்தின் கழல் வீரா
சுக ரேசம் தன பார செம் குற மாதை களவால் நித்தம்
சுகம் மூழ்கி புலியூர் நத்தும் பெருமாளே

மேல்

#493
எழு கடல் மணலை அளவிடில் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்
இனி உனது அபயம் எனது உயிர் உடலும் இனி உடல் விடுக முடியாது
கழுகொடு நரியும் எரி புவி மறலி கமலனும் மிகவும் அயர்வானார்
கடன் உனது அபயம் அடிமை உன் அடிமை கடுகி உன் அடிகள் தருவாயே
விழு திகழ் அழகி மரகத வடிவி விமலி முன் அருளும் முருகோனே
விரி தலம் எரிய குலகிரி நெரிய விசை பெறு மயிலில் வருவோனே
எழு கடல் குமுற அவுணர்கள் உயிரை இரை கொளும் அயிலை உடையோனே
இமையவர் முநிவர் பரவிய புலியுரினில் நடம் மருவு பெருமாளே

மேல்

#494
தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறி கொடு போகும்
சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி
அறு வகை சமயம் முறைமுறை சருவி அலைபடு தலை முச்சி இனை ஆகும்
அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே
நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே
நதி மதி இதழி பணி அணி கடவுள் நடமிடு புலியூர் குமரேசா
கறுவிய நிருதர் எறி திரை பரவு கடலிடை பொடியா பொருதோனே
கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே

மேல்

#495
இரச பாகு ஒத்த மொழி அமுர்த மாணிக்க நகை இணையிலா சத்தி விழியார் பசும்பொன் நீரர்
எழிலி நேர் ஒத்த இருள் அளக பார செயல்கள் எழுதொணாத பிறையினார் அரும் புருவர்
எழுது தோடிட்ட செவி பவள நீல கொடிகள் இகலி ஆட படிகமோடு அடும் பொன் உரு திங்கள் மேவும்
இலவு தாவித்த இதழ் குமிழை நேர் ஒத்த எழில் இலகு நாசி கமுகு மால சங்கின் ஒளி
இணை சொல் க்ரீவ தரள இன ஒள் தால பனையின் இயல் கலா புத்தகமொடு ஏர் சிறந்த அடி
இணையில் ஆனை குவடு என் ஒளி நிலா துத்தி படர் இகலி ஆர தொடையும் ஆரும் இன்ப ரச தங்க மார்பில்
வரிகள் தாபித்த முலை இசைய ஆலின் தளிரின் வயிறு நாபி கமலம் ஆம் எனும் சுழிய
மடு உரோம கொடி என் அளிகள் சூழ்வுற்ற நிரை மருவு நூல் ஒத்த இடை ஆர சம்பை அல்குல்
மணம் எலாம் உற்ற நறை கமல போதும் தொடை என் வளமை ஆர்பு கதலி சேரு செம்பொன் உடை ரம்பை மாதர்
மயல் அதால் இற்று அடியென் அவர்கள்பால் உற்று வெகு மதன பாணத்தினுடன் மேவி மஞ்ச மிசை
வதனம் வேர்வுற்று அவிர முலைகள் பூரிக்க மிடர் மயில் புறா தத்தை குயில் போல் இலங்கு அமளி
வசனமாய் பொத்தி இடை துவள மோகத்து உள் அமிழ் வசம் எலாம் விட்டும் அற வேறு சிந்தனையை தந்து ஆள்வாய்
முரசு பேரி திமிலை துடிகள் பூரி தவில்கள் முருடு காள பறைகள் தாரை கொம்பு வளை
முகடு பேர்வு உற்ற ஒலி இடிகள் போல் ஒத்த மறை முதுவர் பாடி குமுறவே இறந்த அசுரர்
முடிகளோடு எற்றி அரி இரதம் யானை பிணமொடு இவுளி வேலை குருதி நீர் மிதந்து திசை எங்கும் ஓட
முடுகி வேல் விட்டு வட குவடு வாய் விட்டு அமரர் முநிவர் ஆடி புகழ வேத விஞ்சையர்கள்
முழுவு வீணை கினரி அமுர்த கீத தொனிகள் முறையதாக பறைய ஓதி ரம்பையர்கள்
முலைகள் பாரிக்க உடன் நடனம் ஆடிற்று வர முடி பதாகை பொலியவே நடம் குலவு கந்த வேளே
அரசு மா கற்பகமொடு அகில் பலா இர்ப்பை மகிழ் அழகு வேய் அத்தி கமுகோடு அரம்பையுடன்
அளவி மேகத்தில் ஒளிர் வனமொடு ஆட குயில்கள் அளிகள் தோகை கிளிகள் கோ என பெரிய
அமுர்த வாவி கழனி வயலில் வாளை கயல்கள் அடையும் ஏர் அ கனக நாடெனும் புலியுர் சந்த வேலா
அழகு மோக குமரி விபுதை ஏனல் புனவி அளி குலாவுற்ற குழல் சேர் படம்பு தொடை
அரசி வேத சொருபி கமல பாத கரவி அரிய வேட சிறுமியாள் அணைந்த புகழ்
அருண ரூப பதமொடு இவுளி தோகை செயல் கொடு அணை தெய்வானை தனமுமே மகிழ்ந்து புணர் தம்பிரானே

மேல்

#496
இருளும் ஓர் கதிர் அணுகவொணாத பொன் இடமது ஏறியே என் இரு நோயும்
எரியவே மலம் ஒழியவே சுடர் இலகு மூலக ஒளி மேவி
அருவி பாய இன் அமுதம் ஊற உன் அருள் எலாம் எனது அளவாக
அருளியே சிவ மகிழவே பெற அருளியே இணை அடி தாராய்
பரம தேசிகர் குரு இலாதவர் பரமவை வான் மதி தவழ் வேணி
பவள மேனியர் எனது தாதையர் பரம ராசியர் அருள் பாலா
மருவி நாயெனை அடிமையாம் என மகிழ் மெய் ஞானமும் அருள்வோனே
மறை குலாவிய புலியுர் வாழ் குறமகள் மேல் ஆசை கொள் பெருமாளே

மேல்

#497
காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் காடுகள் புக்கும் தடுமாறி
காய்கனி துய்த்தும் காயம் ஒறுத்தும் காசினி முற்றும் திரியாதே
சீவன் ஒடுக்கம் பூத ஒடுக்கம் தேற உதிக்கும் பர ஞான
தீப விளக்கம் காண எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட உக்ரம் தரு வீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சும் கதிர் வேலா
தூவிகள் நிற்கும் சாலி வளைக்கும் சோலை சிறக்கும் புலியூரா
சூரர் மிக கொண்டாட நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே

மேல்

#498
கோதிக்கோதி கூந்தலிலே மலர் பாவித்து ஆகம் சாந்து அணிவார் முலை
கோடு தானை தேன் துவர் வாய் மொழி குயில் போல
கூவிக்கூவி காண்டு இசை போலவே நாணிக்கூனி பாய்ந்திடுவார் சிலர்
கூடி தேறி சூழ்ந்திடுவார் பொருள் வருமோ என்று
ஓதி தோளில் பூம் துகிலால் முலை மூடி சூதில் தூங்கம் இலார் தெரு
ஓடி தேடி சோம்பிடுவார் சில விலைமாதர்
ஓரு சேர சேர்ந்திடுவார் கலி சூளைக்கார சாங்கமிலார் சிலவோரை
சாக தீம்பிடுவார் செயல் உறவாமோ
வேதத்தோனை காந்தள் கையால் தலை மேல் குட்டு ஆடி பாந்தள் சதா முடி
வீரிட்டு ஆட காய்ந்து அசுரர்கள் மெல் விடும் வேலா
வேளை சீறி தூங்கலொடே வயமாவை தோலை சேர்ந்து அணிவார் இட
மீது உற்றாள் பொன் சாம்பவி மாது உமை தரு சேயே
நாதத்து ஓசை காண் துணையே சுடர் மூலத்தோனை தூண்டிடவே உயிர்
நாடி காலில் சேர்ந்திடவே அருள் சுர மானை
ஞான பால் முத்தேன் சுருபாள் வளி மாதை கானில் சேர்ந்து அணைவாய் சிவ
ஞான பூமி தேன் புலியூர் மகிழ் பெருமாளே

மேல்

#499
சக சம்ப குடை சூழ் சிவிகை மெல் மத இன்பத்துடனே பல பணி
தனிதம் பட்டு உடையோடு இகல் முரசு ஒலி வீணை
தவளம் தப்பு உடனே கிடுகிடு நடை தம்பட்டம் இடோல் பல ஒலி
சதளம் பொன் தடிகாரரும் இவை புடை சூழ
வெகு கும்பத்துடனே பல படை கரகம் சுற்றிடவே வர இசை
வெகு சம்பத்துடனே அழகுடன் நிதம் மேவும்
விருமம் சித்திரமாம் இது நொடி மறையும் பொய் பவுஷோடு உழல்வது
விட உம்பர்க்கு அரிதாம் இணை அடி தருவாயே
திகுதந்தி திகுதோ திகுதிகு திகுதந்தி திகுதோ திகுதிகு
திகுர்தஞ்செ செகசே செககண என பேரி
திமிர்தம் கல் குவடோடு எழு கடல் ஒலி கொண்டு அற்று உருவோடு அலறிட
திரள் சண்டத்து அவுணோர் பொடிபட விடும் வேலா
அகரம் பச்சுருவோடு ஒளி உறை படிகம் பொன் செயலாள் அரன் அரி
அயன் அண்டர்க்கும் அரியாள் உமை அருள் முருகோனே
அமுர்தம் பொன் குவடோடு இணை முலை மதி துண்டம் புகழ் மான் மகளோடும்
அருள் செம்பொன் புலியூர் மருவிய பெருமாளே

மேல்

#500
சகுடம் உந்தும் கடல் அடைந்து உங்கு உள மகிழ்ந்து தோய் சங்கம்
கமுகு அடைந்து அண்ட அமுது கண்டம் தரள கந்தம் தேர் கஞ்சம்
சரம் எனும் கண் குமிழ துண்டம் புரு எனும் செம் சாபம் பொன் திகழ் மாதர்
சலச கெந்தம் புழுகு உடன் சண்பக மணம் கொண்டு ஏய் இரண்டு அம்
தன கனம் பொன் கிரி வணங்கும் பொறி படும் செம் பேர் வந்து அண்
சலன சம்பை ஒன்று இடை பணங்கின் கடி தடம் கொண்டார் அம் பொன் தொடர் பார்வை
புகலல் கண்டு அம் சரி கரம் பொன் சரண பந்தம் தோதிந்தம்
புரமுடன் கிண்கிணி சிலம்பும் பொலி அலம்பும் தாள் ரங்கம்
புணர்வு அணைந்து அண்டுவரொடும் தொண்டு இடர் கிடந்துண்டு ஏர் கொஞ்சும் கடை நாயேன்
புகழ் அடைந்து உன் கழல் பணிந்து ஒண் பொடி அணிந்து அங்கு ஆநந்தம்
புனல் படிந்துண்டு அவசம் மிஞ்சும் தவசர் சந்தம் போலும் திண்
புவனி கண்டு இன்று அடி வணங்கும் செயல் கொள அம் செம் சீர் செம்பொன் கழல் தாராய்
திகுடதிந்திம் தகுடதந்தம் திகுடதிந்திம் தோதிந்தம்
டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண்
டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டு என்றே சங்கம் பல பேரி
செக கணம் சம் சலிகை பஞ்சம் பறை முழங்கும் போர் அண்டம்
சிலை இடிந்தும் கடல் வடிந்தும் பொடி பறந்து உண்டோர் சங்கம்
சிரம் உடைந்து அண்டு அவுணர் அங்கம் பிணம் அலைந்து அன்று ஆடும் செம் கதிர் வேலா
அகில அண்டம் சுழல எங்கும் பவுரி கொண்டு அங்கு ஆடும் கொன்
புகழ் விளங்கும் கவுரி பங்கன் குரு எனும் சிங்காரம் கொண்டு
அறு முகம் பொன் சதி துலங்கும் திரு பதம் கந்தா என்று என்று அமரோர்பால்
அலர் பொழிந்து அம் கரம் முகிழ்ந்து ஒண் சரணம் உளம் கொண்டு ஓத அந்தம்
புனை குற பெண் சிறுமி அங்கம் புணர் செயம் கொண்டே அம் பொன்
அமை விளங்கும் புலிசரம் பொன் திரு நடம் கொண்டார் கந்த அம் பெருமாளே

மேல்

#501
சாந்துடனே புழுகு தோய்ந்து அழகு ஆர் குழலை மோந்து பயோதரம் அது அணையாக
சாய்ந்து ப்ரதாபமுடன் வாழ்ந்து அநுராக சுக காந்தமொடு ஊசி என மடவார்பால்
கூர்ந்த க்ருபா மனது போந்து உன தாள் குறுகி ஓர்ந்து உணரா உணர்வில் அடி நாயேன்
கூம்பி அவிழ் கோகநக பூம் பத கோது இல் இணை பூண்டு உறவாடு தினம் உளதோ தான்
பாந்தளின் மீது இனிதின் ஓங்கு கணே துயில்கொள் நீண்டிடும் மாலொடு அயன் அறியாது
பாம்பு உருவான முநி வாம் புலியான பதன் ஏய்ந்து எதிர் காண நடமிடும் பாதா
பூந்து உணர் பாதி மதி வேய்ந்த சடா மகுடமாம் கனகாபுரியில் அமர் வாழ்வே
பூ கமுகு ஆர்வு செறியும் கநகா புரிசை சூழ் புலியூரில் உறை பெருமாளே

மேல்

#502
சுடர் அனைய திரு மேனியுடை அழகு முது ஞான சொருப கிரீடம் மேவும் முகம் ஆறும்
சுரர் தெரியல் அளி பாட மழலை கதி நறை பாய துகிர் இதழின் மொழி வேத மணம் வீச
அடர் பவள ஒளி பாய அரிய பரிபுரம் ஆட அயில் கரமொடு எழில் தோகை மயில் ஏறி
அடியன் இருவினை நீறுபட அமரர் இது புரை அதிசயம் என அருள் பாட வரவேணும்
விடை பரவி அயன் மாலொடு அமரர் முநி கணம் ஓட மிடறு அடைய விடம் வாரி அருள் நாதன்
மினல் அனைய இடை மாது இடம் மருவு குருநாதன் மிக மகிழ அநுபூதி அருள்வோனே
இடர் கலிகள் பிணி ஓட எனையும் அருள் குற மாதின் இணை இளநீர் முலை மார்பில் அணை மார்பா
இனிய முது புலி பாதன் உடன் அரவு சதகோடி இருடியர்கள் புகழ் ஞான பெருமாளே

மேல்

#503
தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்
சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல
தை சரசமோடு உறவெ ஆடி அகமே கொடுபொய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என
தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி
வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற
வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர
மச்ச விழி பூசலிட வாய் புலி உலாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம்
வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ
சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற்பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா
சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ
சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடமிடுவோனே
துத்தி தன பார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வளி நாயகியை
சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா
சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா உறையும் ஆறுமுக
சுப்ரமணியா புலியுர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே

மேல்

#504
துத்தி பொன் தனம் மேருவாம் என ஒத்து இப திரள் வாகுவாய் அவிர்
துப்பு முத்தோடு மார்பின் ஆடிட மயில் போலே
சுக்கை மை குழல் ஆட நூல் இடை பட்டுவிட்டு அவிர் காமனார் அல்குல்
சுற்றுவித்து உறு வாழை சேர் தொடை விலைமாதர்
தத்தை புட்குரல் ஓசை நூபுரம் ஒத்த நட்டமொடு ஆடி மார் முலை
சற்று அசைத்து குலாவும் வேசியர் அவரோடே
தர்க்கம் இட்டு உறவாடி ஈளை நோய் கக்கல் விக்கல் கொள் ஊளை நாய் என
சிச்சி சிச்சி என நால்வர் கூறிட உழல்வேனோ
தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி
திக்கு முக்கிட மூரி பேரிகை தவில் போட
சித்ர வித்தையர் ஆட வானவர் பொன் பு இட்டு இடு சேசேசே என
செக்குவிட்டு அசுரோர்கள் தூள்பட விடும் வேலா
செத்திட அ சமனார் கடா பட அற்று தைத்த சுவாமியார் இட
சித்திர சிவகாமியார் அருள் முருகோனே
தெற்கு அரக்கர்கள் தீவு நீறு இட விட்ட அச்சுதர் ஈன மானோடு
சித்திர புலியூரில் மேவிய பெருமாளே

மேல்

#505
நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின்
நாதா திருச்சபையின் ஏறாது சித்தம் என நாலாவகைக்கும் உனது அருள்பேசி
வாடா மலர் பதவி தாதா என குழறி வாய்பாறி நிற்கும் எனை அருள்கூர
வாராய் மனக்கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும்
சூடாமணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா
தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர் அணிவோனே
ஏடு ஆர் குழல் சுருபி ஞானாதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா
ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே

மேல்

#506
நாலு சதுரத்த பஞ்சறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே
நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில்
கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழுக்கு சங்கு ஒலி விந்து நாதம்
கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன்
ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம்பொன் வாசி
ஆணவ மயக்கமும் கலி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே
வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா
வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே

மேல்

#507
நீல குழலார் முத்து அணி வாய் சர்க்கரையார் தை பிறை நீள் சசியார் பொட்டு அணி நுதல் மாதர்
நீல கயலார் பத்திர வேல் ஒப்பிடுவார் நல் கணி நேமித்து எழுதா சித்திர வடிவார் தோள்
ஆலை கழையார் துத்திகொள் ஆர குவடார் கட்டளையாக தமியேன் நித்தமும் உழல்வேனோ
ஆசை பதம் மேல் புத்தி மெய் ஞானத்துடனே பத்திரமாக கொளவே முத்தியை அருள்வாயே
மாலை குழலாள் அற்புத வேத சொருபாள் அக்கினி மார்பில் பிரகாச கிரி தன பார
வாச குயிலாள் நல் சிவ காம செயலாள் பத்தினி மாணிக்க மினாள் நிஷ்கள உமை பாதர்
சூல கையினார் அக்கினி மேனி பரனாருக்கு ஒரு சோதி பொருள் கேள்விக்கு இடு முருகோனே
சோதி பிரகாச செயலாள் முத்தமிழ் மானை புணர் சோதி புலியூர் நத்திய பெருமாளே

மேல்

#508
பனி போல துளி சல வாயுள் கரு பதின் மாதத்து இடை தலைகீழாய்
படி மேவிட்டு உடல் தவழ்வார் தத்து அடி பயில்வார் உத்தியில் சில நாள் போய்
தன மாதர் குழி வீழ்வார் தத்துவர் சதிகார சமன் வரு நாளில்
தறியார் இல் சடம் விடுவார் இப்படி தளர் மாய துயர் ஒழியாதோ
வினை மாய கிரி பொடியாக கடல் விகடார் உக்கிட விடும் வேலா
விதியோனை சது முடி நால் பொட்டு எழ மிகவே குட்டிய குருநாதா
நினைவோர் சித்தமொடு அகலாமல் புகு நிழலாள் பத்தினி மணவாளா
நிதியாம் இ புவி புலியூருக்கு ஒரு நிறைவே பத்தர்கள் பெருமாளே

மேல்

#509
மகரமொடு உறு குழை ஓலை காட்டியும் மழை தவழ் வனை குழல் மாலை காட்டியும்
வரவர வர இதழூறல் ஊட்டியும் வலை வீசும்
மகர விழி மகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி ஒழுகும் உபாய வாழ்க்கையில்
வளமையில் இளமையில் மாடை வேட்கையில் மறுகாதே
இகலிய பிரம கபால பாத்திரம் எழில் பட இடு திருநீறு சேர் திறம்
இதழியை அழகிய வேணி ஆர்த்ததும் விருதாக
எழில்பட மழுவுடன் மானும் ஏற்றது மிசைபட இசை தரு ஆதி தோற்றமும்
இவையிவை என உபதேசம் ஏற்றுவது ஒரு நாளே
ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொடு தலை பறி அமணர் சமூகம் மாற்றிய
தவ முனி சகம் உளர் பாடு பாட்டு என மறை பாடி
தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா எனா சில சப்தமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்
அகுகுகு குகு என ஆளி வாய் பல அலகைகள் அடைவுடன் ஆடும் ஆட்டமும்
அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே
அரி துயில் சயன வியாள மூர்த்தனும் மணி திகழ் மிகு புலியூர் வியாக்ரனும்
அரிது என முறைமுறை ஆடல் காட்டிய பெருமாளே

மேல்

#510
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சு இறைச்ச பாத்திரம் அநுபோகம்
மட்க விட்ட சேக்கை உள் புழுத்த வாழ்க்கை மண் குல பதார்த்தம் இடி பாறை
எய்ச்சு இளைச்ச பேய்க்கும் மெய்ச்சு இளைச்ச நாய்க்கும் மெய்ச்சு இளைச்ச ஈக்கும் இரையாகும்
இ கடத்தை நீக்கி அ கடத்துள் ஆக்கி இப்படிக்கு மோக்ஷம் அருள்வாயே
பொய் சினத்தை மாற்றி மெய் சினத்தை ஏற்றி பொன் பதத்துள் ஆக்கு புலியூரா
பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு புத்தி மெத்த காட்டு புன வேடன்
பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் வீக்கு பை சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பத்தருக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#511
மதிய மண் குணம் அஞ்சு நால் முகம் நகர முன் கலை கங்கை நால் குண
மகர முன் சிகர அங்கி மூணிடை தங்கு கோண
மதனம் முன் தரி சண்டமாருதம் இரு குணம் பொறில் அஞ்சு எல் ஓர் தெரு
வகரம் மிஞ்சி அகன் படா கம் ஒர் ஒன்று சேரும்
கதிர் அடங்கிய அண்ட கோளகை யகர நின்றிடும் இரண்டு கால் மிசை
ககனம் மின் சுழி இரண்டு கால் பரி கந்து பாயும்
கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்
கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன்
அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து பேரிகை
டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம்
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோடு இத விதம் பெறு சிந்து பாடிட
அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு
உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை
உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ
உறு சினம் கொடு எதிர்த்த சேவக மழை புகுந்தவர் அண்டம் வாழ்வுற
உரகனும் புலி கண்ட ஊர் மகிழ் தம்பிரானே

மேல்

#512
மருவு கடல் முகில் அனைய குழல் மதி வதன நுதல் சிலை பிறை அது எணும் விழி
மச்ச பொன் கணை முக்கு பொன் குமிழ் ஒப்ப கத்தரி ஒத்திட்ட செவி
குமுத மலர் இதழ் அமுத மொழி நிரை தரளம் எனும் நகை மிடறு கமுகு என
வைத்து பொன் புய பச்சை தட்டையொடு ஒப்பிட்டு கமல கை பொன் உகிர்
வகைய விரலொடு கிளிகள் முக நகம் எனவும் இகலிய குவடும் இணை என
வட்ட துத்தி முகிழ்ப்ப சக்கிரம் வைத்து பொன் குடம் ஒத்திட்டு திகழ் முலை மேவும்
வடமும் நிரைநிரை தரளம் பவளமொடு அசைய பழு மர இலை வயிறு மயிர்
அற்பத்துக்கு இணை பொன் தொப்புளும் அப்புக்குள் சுழி ஒத்து பொன் கொடி
மதனன் உரு துடி இடையும் மினல் என அரிய கட தடம் அமிர்த கழை ரசம்
மட்டு பொன் கமலத்தில் சக்கிரி துத்தி பைக்கு ஒருமித்து பட்டு உடை
மருவு தொடை இணை கதலி பரடு கொள் கணையும் முழவு என கமடம் எழுதிய
வட்ட புத்தகம் ஒத்து பொன் சரணத்தில் பின் புறம் மெத்து தத்தைகள் மயில் போலே
தெருவில் முலை விலை உரை செய்து அவரவர் மயல் கொண்டு அணைவர மருள் செய் தொழில் கொடு
தெட்டி பற்பல சொக்கு இட்டு பொருள் பற்றி கட்டில் அணைக்க ஒப்பி புணர்
திலதம் அழிபட விழிகள் சுழலிட மலர்கள் அணை குழல் இடை கொள் துகில் பட
தித்தி துப்பு இதழ் வைத்து கை கொடு கட்டி குத்து முலைக்குள் கை பட
திரையில் அமுது என கழையில் ரசம் என பலவில் சுளை என உருக உயர் மயல்
சிக்கு பட்டு உடல் கெட்டு சித்தமும் வெட்கி துக்கமுற்று கொக்கு என நரை மேவி
செவியோடு ஒளிர் விழி மறைய மல சலம் ஒழுக பல உரை குழற தடி கொடு
தெத்தி பித்தமும் முற்றி தன் செயல் அற்று சிச்சி என துக்கப்பட
சிலர்கள் முது உடல் வினவு பொழுதினில் உவரி நிறம் உடை நமனும் உயிர் கொள
செப்பு அற்று பிணம் ஒப்பித்து பெயரிட்டு பொன் பறை கொட்ட செப்பிடு
செனனம் இது என அழுது முகம் மிசை அறைய அணைபவர் எடு என சுடலையில்
சில் திக்கு இரையிட்டிட்டு இப்படி நித்த துக்கம் எடுத்திட்டு சடம் உழல்வேனோ
குருவின் உரு என அருள்செய் துறையினில் குதிரை கொள வரு நிறை தவசி தலை
கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம் எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும்
முதல்வர் இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு புயர்
கொட்டத்து புரர் கெட்டு பொட்டு எழ விட்ட திக்கு அணை நக்கர்க்கு அற்புத
குமரன் என விருது ஒலியும் முரசொடு வளையும் எழு கடல் அதிர முழவொடு
கொட்ட துட்டரை வெட்டி தண் கடல் ஒப்ப திக்கும் மடுத்து தத்திட அமர் மேவி
குருகு கொடி சிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட உடுகள் உதிரிட
கொத்தி சக்கிரி பற்ற பொன் பரி எட்டு திக்கும் எடுத்திட்டு குரல்
குமர குருபர குமர குருபர குமர குருபர என ஒது அமரர்கள்
கொட்ப புட்பம் இறைத்து பொன் சரணத்தில் கை சிரம் வைத்து குப்பிட
குலவு நரி சிறை கழுகு கொடி பல கருடன் நடமிட குருதி பருகிட
கொற்ற பத்திரம் இட்டு பொன் ககனத்தை சித்தம் ரக்ஷித்து கொளும் மயில் வீரா
சிரமொடு இரணியன் உடல் கிழிய ஒரு பொழுதில் உகிர் கொடு அரி என் நடமிடு
சிற்பர் திண் பதம் வைத்து சக்கிரவர்த்திக்கு சிறை இட்டு சுக்கிரன்
அரிய விழி கெட இரு பதமும் உலகு அடைய நெடியவர் திருவும் அழகியர்
தெற்கு திக்கில் அரக்கர்க்கு சினமுற்று பொன் தசர்தற்கு புத்திர
செயமும் மன வலி சிலை கை கொடு கரம் இருபது உடை கிரி சிரம் ஒர் பதும் விழ
திக்கு எட்டை ககனத்தர்க்கு கொடு பச்சை பொன் புயலுக்கு சித்திர மருகோனே
திலத மதி முக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர் பத
சித்தர்க்கு குறி வைத்திட்ட தனம் முத்து பொன் கிரி ஒத்த சித்திர
சிவை கொள் திரு சரசுவதி வெகு வித சொருபி முதுவிய கிழவி இயல் கொடு
செட்டிக்கு சுகமுற்ற தத்துவ சித்தில் சில் பதம் வைத்த கற்புறு
திரையில் அமுது என மொழி செய் கவுரியின் அரிய மகன் என புகழ் புலி நகரில்
செப்பு பொன் தனம் உற்று பொன் குற தத்தைக்கு புளகித்திட்டு ஒப்பிய பெருமாளே

மேல்

#513
மனமே உனக்கு உறுதி புகல்வேன் எனக்கு அருகில் வருவாய் உரைத்த மொழி தவறாதே
மயில்வாகன கடவுள் அடியார்தமக்கு அரசு மனமாயை அற்ற சுக மதி பாலன்
நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு மல நிலை வேரறுக்க வல பிரகாசன்
நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம நிழலாளியை தொழுது வருவாயே
இனம் ஓது ஒருத்தி ருபி நலம் ஏர் மறைக்கு அரிய இளையோள் ஒர் ஒப்புமிலி நிருவாணி
எனை ஈணெடுத்த புகழ் கலியாணி பக்கம் உறை இதழ் வேணி அப்பனுடை குருநாதா
முனவோர் துதித்து மலர் மழை போல் இறைத்துவர முது சூரரை தலை கொள் முருகோனே
மொழி பாகு முத்து நகை மயிலாள்தனக்கு உருகு முருகா தமிழ் புலியுர் பெருமாளே

மேல்

#514
முத்த மோகன தத்தையினார் குரல் ஒத்த வாய் இத சர்க்கரையார் நகை
முத்து வார் அணி பொன் குவடு ஆர் முலை விலைமாதர்
மொக்கை போக செகுத்திடுவார் பொருள் பற்றி வேறும் அழைத்திடுவார் சிலர்
மு சலீலிகை சொக்கிடுவார் இடர் கலி சூழ
சித்தில் ஆட அழைத்திடுவார் கவடுற்ற மாதர் வலை புகு நாயெனை
சித்தி ஞானம் வெளிப்படவே சுடர் மடம் மீதே
சித்து எலாம் ஒருமித்து உனது ஆறு இனம் வைத்து நாயென் அருள்பெறவே பொருள்
செப்பி ஆறுமுக பரிவோடு உணர்வு அருள்வாயே
தத்த னானத னத்தன தான் எனு உடுக்கை பேரி முழக்கிடவே கடல்
சத்த தீவு தயித்தியர் மாளிட விடும் வேலா
சத்தி லோக பர பரமேசுர நிர்த்தம் ஆடு கழல் கருணாகர
தற்பரா பர நித்தன ஒர்பால் உறை உமை பாலா
துத்தி மார் முலை முத்து அணி மோகன பொன் ப்ரகாசம் உள குற மான் மகள்
துப்பு வாய் இதழ் வைத்து அணை சோதி பொன் மணி மார்பா
சுட்டி நீல இரத்தின மா மயில் உற்று மேவிய அருள் புலியூர் வளர்
சுத்தனே சசி பெற்ற பெண் நாயகி பெருமாளே

மேல்

#515
பரம குரு நாத கருணை உபதேச பரவி தரு ஞான பெருமாள் காண்
பகலிரவு இலாத ஒளி வெளியில் மேன்மை பகரும் அதிகார பெருமாள் காண்
திரு வளரும் நீதி தின மனொகராதி செக பதியை ஆள் அ பெருமாள் காண்
செக தலமும் வானும் மருவு ஐ அவை பூத தெரிசனை சிவாய பெருமாள் காண்
ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் உமைதன் மணவாள பெருமாள் காண்
உக முடிவு காலம் இறுதிகள் இலாத உறுதி அநுபூதி பெருமாள் காண்
கருவுதனில் ஊறும் அரு வினைகள் மாய கலவி புகுதா மெய் பெருமாள் காண்
கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் செக சோதி பெருமாளே

மேல்

#516
வஞ்சமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணர் ஆரவாரமும் அருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள் வந்தியா ஆசையே தரு விலைமாதர்
பஞ்சமாபாவமே தரு கொங்கை மேல் நேசமாய் வெகு பஞ்சியே பேசி நாள்தொறும் மெலியாதே
பந்தியாய் வானுளோர் தொழ நின்ற சீரே குலாவிய பண்பு சேர் பாத தாமரை அருள்வாயே
அஞ்சவே சூரன் ஆனவன் உய்ஞ்சு போகாமலே அயில் அன்று தான் ஏவி வானவர் சிறை மீள
அன்பினோடே மனோரதம் மிஞ்ச மேலான வாழ்வு அருள் அண்டர் கோவே பராபர முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவு சதங்கைதான் ஆட ஆடிய கொன்றையான் நாளுமே மகிழ் புதல்வோனே
கொந்து சேர் சோலை மேவிய குன்று சூழ்வாகவே வரு குன்றுதோறாடல் மேவிய பெருமாளே

மேல்

#517
திரு நிலம் மருவி காலின் இரு வழி அடை பட்டு ஓடி சிவ வழி உடனுற்று ஏக பர மீதே
சிவ சுடர் அதனை பாவை மணம் என மருவி கோல திரிபுரம் எரிய தீயில் நகை மேவி
இருவினை பொரிய கோல திருவருள் உருவத்து ஏகி இருள் கதிர் இலி பொன் பூமி தவசூடே
இருவரும் உருகி காய நிலை என மருவி தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே
பரிபுர கழல் எட்டு ஆசை செவிடுகள்பட முத்தேவர் பழ மறை பணிய சூலம் மழு மானும்
பரிவொடு சுழல சேடன் முடி நெறுநெறு என கோவு பரியினை மலர் விட்டு ஆடி அடியோர்கள்
அரஹர உருகி சேசெ என திரு நடன கோலம் அருள்செயும் உமையின் பாகர் அருள் பாலா
அலர் அணி குழல் பொன் பாவை திரு மகள் அமளி போரொடு அடியவர் கயிலைக்கு ஆன பெருமாளே

மேல்

#518
தேன் உந்து முக்கனிகள் பால் செம் கருப்பு இளநீர் சீரும் பழித்த சிவம் அருள் ஊற
தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ சீவன் சிவ சொருபம் என தேறி
நான் என்பது அற்று உயிரோடு ஊன் என்பது அற்று வெளி நாதம் பர பிரம ஒளி மீதே
ஞானம் சுரப்ப மகிழ் ஆனந்த சித்தியோடே நாளும் களிக்க பதம் அருள்வாயே
வானம் தழைக்க அடியேனும் செழிக்க அயன் மாலும் பிழைக்க அலை விடம் ஆள
வாரும் கரத்தனை எமை ஆளும் தகப்பன் மழு மானின் கரத்தன் அருள் முருகோனே
தானம் தனத்ததனனா வண்டு சுற்றி மதுதான் உண் கடப்ப மலர் அணி மார்பா
தானம் குறித்து எமை ஆளும் திரு கயிலை சாலும் குறத்தி மகிழ் பெருமாளே

மேல்

#519
நகைத்து உருக்கி விழித்து மிரட்டி நடித்து விதத்தில் அதி மோகம்
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி நலத்தில் அணைத்து மொழியாலும்
திகைத்த வரத்தில் அடுத்த பொருள் கை திரட்டி எடுத்து வரவே செய்
திருட்டு முலை பெண் மருட்டு வலைக்குள் தெவிட்டு கலைக்குள் விழுவேனோ
பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து படர்ச்சி கறுத்த மயில் ஏறி
பணைத்த கரத்த குணத்த மணத்த பதத்த கனத்த தன மாதை
மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து வெளுத்த பொருப்பில் உறை நாதா
விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க ம்ருகத்தை எடுத்தொர் பெருமாளே

மேல்

#520
பனியின் விந்து துளி போலவே கருவின் உறு அளவில் அங்கு ஒரு சூசமாய் மிளகு துவர்
பனை தெனம் கனி போலவே பல கனியின் வயிறு ஆகி
பருவமும் தலைகீழதாய் நழுவி நிலம் மருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள
பதுமையின் போலவே வளி கயிறின் உடன் ஆடி
மன விதம் தெரியாமலே மலசலமொடு உடல் நகர்ந்து அழுது ஆறியே அனை முலையின்
மயமயின்று ஒரு பாலனாய் இகம் உடைய செயல் மேவி
வடிவம் முன் செய்த தீமையால் ஏயும் உனையும் அற மறந்து அகம் மீது போய் தினதினமும்
மனம் அழிந்து உடல் நாறினேன் இனி உனது கழல் தாராய்
தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு
தகுத குந்ததி தாகுதோ என முழவு வளை பேரி
தவில் கணம் பறை காளமோடு இமிலை தொனி இனம் முழங்க எழு வேலை போல் அதிர பொரு
சமர் முகங்களின் மேவியே விருது சொலும் அவுணோர்கள்
சினம் அழிந்திட தேர்கள் தோல் அரி பரிகள் குருதி எண் திசை மூடவே அலகை நரி
சிறை இனம் களிகூரவே நகை அருளி விடும் வேலா
சிவன் மகிழ்ந்து அருள் ஆனைமுகன் மருவி மனம் மகிழ்ந்து அருள்கூர ஓர் கயிலை மகிழ்
திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே

மேல்

#521
புமிஅதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல
அமிர்த கவி தொடை பாட அடிமை தனக்கு அருள்வாயே
சமரில் எதிர்த்த சுர் மாள தனி அயில் விட்டு அருள்வோனே
நமசிவய பொருளானே ரசதகிரி பெருமாளே

மேல்

#522
முகத்தை பிலுக்கி மெத்த மினுக்கி தொடைத்து ரத்ந முலை கச்சு அவிழ்த்து அசைத்து முசியாதே
முழுக்க கழப்பி எத்தி மழுப்பி பொருள் பறித்து மொழிக்குள் படுத்தி அழைத்து அமளி மீதே
நகைத்திட்டு அழுத்தி முத்தம் அளித்து களித்து மெத்த நயத்தில் கழுத்து இறுக்கி அணைவார்பால்
நடுக்குற்று அவர்க்கு மெத்த மனத்தை பெருக்க வைத்து நயத்து தியக்கி நித்தம் அழிவேனோ
செகக்க செகக்க செக்க தரிக்க தரிக்க தக்க திமித்தி திமித்தி தித்தி என ஆடும்
செகத்துக்கு ஒருத்தர் புத்ர நினைத்து துதித்த பத்த ஜெனத்துக்கு இனித்த சித்தி அருள்வோனே
மிகைத்து திடத்தொடு உற்று அசைத்து பொறுத்த அரக்கன் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய
மிசைக்கு உற்று அடுத்து மற்ற பொருப்பை பொடித்து இடித்து மதித்து துகைத்து விட்ட பெருமாளே

மேல்

#523
ஒரு பதும் இருபதும் அறுபதும் உடன் ஆறும் உணர்வுற இரு பதம் உளம் நாடி
உருகிட முழு மதி தழல் என ஒளி திகழ் வெளியொடு ஒளி பெற விரவாதே
தெருவினில் மரம் என எவரொடும் உரை செய்து திரி தொழில் அவம் அது புரியாதே
திருமகள் மருவிய திரள் புய அறுமுக தெரிசனை பெற அருள்புரிவாயே
பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள் பயறொடு சில வகை பணியாரம்
பருகிடு பெரு வயிறு உடையவர் பழ மொழி எழுதிய கணபதி இளையோனே
பெரு மலை உருவிட அடியவர் உருகிட பிணி கெட அருள்தரு குமரேசா
பிடியொடு களிறுகள் நடை இட கலை திரள் பிணை அமர் திருமலை பெருமாளே

மேல்

#524
கறுத்த தலை வெளிறு மிகுந்து மதர்த்த இணை விழிகள் குழிந்து
கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய்
கழுத்து அடியும் அடைய வளைந்து கனத்த நெடு முதுகு குனிந்து
கதுப்புறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர
உறக்கம் வரும் அளவில் எலும்பு குலுக்கி விடு இருமல் தொடங்கி
உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய்
உரைத்த நடை தளரும் உடம்பு பழுத்திடு முன் மிகவும் விரும்பி
உனக்கு அடிமைப்படும் அவர் தொண்டுபுரிவேனோ
சிறுத்த செலு அதனுள் இருந்து பெருத்த திரை உததி கரந்து
செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால் ஏ
செறித்து அ வளைகடலில் வரம்பு புதுக்கி இளையவனொடு அறிந்து
செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி
மற புரிசை வளையும் இலங்கை அரக்கன் ஒரு பது முடி சிந்த
வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே
மலர் கமல வடிவு உள செம் கை அயில் குமர குகை வழி வந்த
மலை சிகர வடமலை நின்ற பெருமாளே

மேல்

#525
சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர
சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி
தமிழினில் உருகிய அடியவரிடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற
தரு பிணி துள வரம் எமது உயிர் சுகமுற அருள்வாயே
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொளும் இளையவ
கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற
கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே
திரிபுரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர்
சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய வடி வேலா
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ
திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெருவாழ்வே
அரவணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவெ வரும் அதிசயம் உடையவ
அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே
அதல விதலம் முதல் கிடுகிடுகிடு என வரும் மயில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவுற
அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே

மேல்

#526
நெச்சு பிச்சி புட்ப தட்ப கச்சிக்க சுற்று அறல் மேவி நெறித்து எறித்து இருட்டை வெருட்டிய
நிரை தரு மரு மலர் செருகிடு பரிமள நிறை உறை மதுகர நெடிது ஆடி
நிச்சிக்கு அச்சப்பட்டு சிக்கற்று ஒப்புக்கொப்புக்கு உயர்வாகி நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்து மை
நிகர் என அகருவும் உகு புகை தொகு மிகு நிகழ் புழுகு ஒழுகிய குழல் மேலும்
வச்ர பச்சை பொட்டு இட்ட பொட்டுக்குள் செக்கர் ப்ரபை போல வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கு மன்மத
சிலை அது என மக பதி தனு என மதி திலதமும் வதி நுதன் மேலும்
மச்ச செச்சை சித்ர சத்ர பொன் பக்கத்து இச்சையனாகி மனத்தில் நினைத்தும் அணைத்த துணை பத
மலர் அலது இலை நிலை என மொழி தழிய மெய் வழி படல் ஒழிவனை அருள்வாயே
நச்சு து சொப்பிச்சு குட்டத்து தக்கு அட்டத்து அசி காண நடத்தி விடத்தை உடைத்த படத்தினில்
நட நவில் கடலிடை அடு படை தொடு முகில் நகை முக திரு உறை மணி மார்பன்
நத்தத்தை சக்ரத்தை பத்மத்தை கை பற்றி பொரும் மாயன் நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற
நசி தரு நிசிசரர் குடல் இடல் செய்த நர கரி ஒரு திரு மருகோனே
கச்சு தச்சு பொன் கட்டிட்டு பட்டுக்குள் பட்ட அமுதாலும் கருப்பி ரசத்தும் உரு செய்து வைச்சிடு
கன தன பரிமளம் முழுகு பனிரு புய கனக திவிய மணி அணி மார்பா
கை சத்திக்கு கெற்சித்து ஒக்க பட்சிக்க கொட்டு அசுராதி கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
கறுவிய சிறியவ கடவைகள் புடை படு கட வடமலை உறை பெருமாளே

மேல்

#527
கோங்கு இளநீர் இளக வீங்கு பயோதரமும் வாங்கிய வேல் விழியும் இருள் கூரும்
கூந்தலும் நீள் வளை கொள் காந்தளும் நூல் இடையும் மாந்தளிர் போல் வடிவும் மிக நாடி
பூங்கொடியார் கலவி நீங்க அரிதாகி மிகு தீங்குடனே உழலும் உயிர் வாழ்வு
பூண்டு அடியேன் எறியில் மாண்டு இஙனே நரகில் வீழ்ந்து அலையாமல் அருள்புரிவாயே
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மா முநியும் வேங்கையுமாய் மற மினுடன் வாழ்வாய்
பாண்டவர் தேர் கடவும் நீண்ட பிரான் மருக பாண்டியன் நீறு அணிய மொழிவோனே
வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர் வேங்கட மா மலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவும் பெருமாளே

மேல்

#528
சாந்தம் இல் மோக எரி காந்தி அவா அனிலம் மூண்டு அவியாத சமய விரோத
சாம் கலை வாரிதியை நீந்தவொணாது உலகர் தாம் துணையாவர் என மடவார் மேல்
ஏந்து இள வார் முளரி சாந்து அணி மார்பினொடு தோய்ந்து உருகா அறிவு தடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன் வசம் யான் தனி போய் விடுவது இயல்போ தான்
காந்தளில் ஆன கர மான் தரு கான மயில் காந்த விசாக சரவண வேளே
காண்தகு தேவர் பதி ஆண்டவனே சுருதி ஆள் தகையே இபம் மின் மணவாளா
வேந்த குமார குக சேந்த மயூர வட வேங்கட மா மலையில் உறைவோனே
வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது வேண்ட வெறாது உதவு பெருமாளே

மேல்

#529
வரி சேர்ந்திடு சேல் கயலோ எனும் உழை வார்ந்திடு வேலையும் நீலமும்
வடு வாங்கிடு வாள் விழி மாதர்கள் வலையாலே
வளர் கோங்கு இள மா முகை ஆகிய தன வாஞ்சையிலே முகம் மாயையில் வள
மாந்தளிர் போல் நிறமாகிய வடிவாலே
இருள் போன்றிடு வார் குழல் நீழலில் மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற
இனிதாம் கனி வாயமுது ஊறல்கள் பருகாமே
எனது ஆம் தனது ஆனவை போய் அற மலமாம் கடு மோக விகாரமும்
இவை நீங்கிடவே இரு தாள் இணை அருள்வாயே
கரி வாம் பரி தேர் திரள் சேனையும் உடன் ஆம் துரியோதனனாதிகள்
களம் மாண்டிடவே ஒரு பாரதம் அதில் ஏகி
கன பாண்டவர் தேர்தனிலே எழு பரி தூண்டிய சாரதி ஆகிய
கதிர் ஓங்கிய நேமியனாம் அரி ரகுராமன்
திரை நீண்டு இரை வாரியும் வாலியும் நெடிது ஓங்கு மரா மரம் ஏழொடு
தெசமாம் சிர ராவணனார் முடி பொடியாக
சிலை வாங்கிய நாரணனார் மருமகனாம் குகனே பொழில் சூழ் தரு
திருவேங்கட மா மலை மேவிய பெருமாளே

மேல்

#530
அல்லி விழியாலும் முல்லை நகையாலும் அல்லல்பட ஆசை கடல் ஈயும்
அள்ள இனிதாகி நள்ளிரவு போலும் உள்ள வினையார் அ தனமாரும்
இல்லும் இளையோரும் மெல்ல அயலாக வல் எருமை மாய சமனாரும்
எள்ளி எனது ஆவி கொள்ளை கொளு நாளில் உய்ய ஒரு நீ பொன் கழல் தாராய்
தொல்லை மறை தேடி இல்லை எனு நாதர் சொல்லும் உபதேச குருநாதா
துள்ளி விளையாடும் புள்ளி உழை நாண எள்ளி வனம் மீது உற்று உறைவோனே
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ வல்லை வடி வேலை தொடுவோனே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#531
ஐயும் உறு நோயும் மையலும் அவாவின் ஐவரும் உபாய பல நூலின்
அள்ளல் கடவாது துள்ளி அதில் மாயும் உள்ளமும் இல் வாழ்வை கருது ஆசை
பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே
புல் அறிவு பேசி அல்லல்படுவேனை நல் இரு தாளில் புணர்வாயே
மெய்ய பொழில் நீடு தையலை மு நாலு செய்ய புய மீது உற்று அணைவோனே
வெள்ளை இபம் ஏறு வள்ளல் கிளை வாழ வெள்ளம் முது மாவை பொருதோனே
வையம் முழுது ஆளும் ஐய மயில் வீர வல்ல முருகா முத்தமிழ் வேளே
வள்ளி படர் சாரல் வள்ளி மலை மேவு வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#532
கை ஒத்து வாழும் இந்த மெய் ஒத்த வாழ்வு இகந்து பொய் ஒத்த வாழ்வு கண்டு மயலாகி
கல்லுக்கு நேரும் வஞ்ச உள்ளத்தர் மேல் விழுந்து கள்ள பயோதரங்கள் உடன் மேவி
உய்யப்படாமல் நின்று கையர்க்கு உபாயம் ஒன்று பொய்யர்க்கு மேய அயர்ந்து உள் உடை நாயேன்
உள்ளம் பேறாக நின்று தொய்யப்படாமல் என்றும் உள்ளத்தின் மாய்வது ஒன்றை மொழியாயோ
ஐயப்படாத ஐந்து பொய் அற்ற சோலை தங்கு தெய்வ தெய்வானை கொங்கை புணர்வோனே
அல்லை பொறா முழங்கு சொல் உக்ர வேல் ஒன்று வெல்ல பதாகை கொண்ட திறல் வேலா
வையத்தை ஓடி ஐந்து கையற்கு வீசு தந்தை மெய் ஒத்த நீதி கண்ட பெரியோனே
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே

மேல்

#533
முல்லைக்கு மாரன் அம் கை வில்லுக்கும் மாதர்தங்கள் பல்லுக்கும் வாடி இன்பம் முயலா நீள்
முள்ளுற்ற கால் மடிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து பள்ளத்தில் வீழ்வது அன்றி ஒரு ஞான
எல்லைக்கும் ஆரணங்கள் சொல்லி தொழா வணங்கும் எல்லைக்கும் வாவி நின்றன் அருள் நாமம்
எள்ளற்கு மால் அயர்ந்து உள்ளத்தில் ஆவ என்று முள்ள பெறார் இணங்கை ஒழிவேனோ
அல்லைக்கு அ ஆனை தந்த வல்லிக்கு மார்பு இலங்க அல்லி கொள் மார்பு அலங்கல் புனைவோனே
அள்ளல் படாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி மெள்ள சரோருகங்கள் பயில் நாதா
வல்லை குமார கந்த தில்லை புராரி மைந்த மல்லு போரு ஆறிரண்டு புய வீரா
வள்ளி குழாம் அடர்ந்த வள்ளி கல் மீது சென்று வள்ளிக்கு வேடை கொண்ட பெருமாளே

மேல்

#534
கள்ள குவால் பை தொள்ளை புலால் பை துள் இக்கனார்க்கு அயவு கோப
கள் வைத்த தோல் பை பொள்ளுற்ற கால் பை கொள்ளை துரால் பை பசு பாச
அள்ளல் பை மால் பை ஞெள்ளல் பை சீ பை வெள்ளிட்ட அசா பிசிதம் ஈரல்
அள்ள சுவாக்கள் சள்ளிட்டு இழா பல் கொள்ளப்படு யாக்கை தவிர்வேனோ
தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்தி மாற்கும் வெள் உத்தி மாற்கும் மருகோனே
சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள் அத்த மார்க்கம் வருவோனே
வள்ளி சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#535
வெல்லி குவீக்கும் முல்லை கை வீக்கு வில் இக்கு அதா கருதும் வேளால்
வில் அற்ற அவா கொள் சொல் அற்று உகா பொய் இல்லத்து உறா கவலை மேவு
பல் அத்தி வாய்க்க அல்லல்படு ஆக்கை நல்லில் பொறா சமயம் ஆறின்
பல் அத்த மார்க்க வல் அர்க்கர் மூர்க்கர் கல்வி கலாத்து அலையலாமோ
அல்லை கொல் வார்த்தை சொல்லிக்கு இதம் ஒத்து சொல் குக்குடம் ஆர்த்த இளையோனே
அல்லுக்கும் ஆற்றின் எல்லுக்கும் மேல் புல்கு எல்லை படா கருணை வேளே
வல் ஐக்கும் ஏற்றர் தில்லைக்கும் ஏற்றர் வல்லிக்கும் ஏற்றர் அருள்வோனே
வள்ளி குழாத்து வள்ளி கல் காத்த வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#536
ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை கள்ள புலால் கிருமி வீடு
கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு கள் வைத்த தோல் பை சுமவாதே
யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள் உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி
ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில் உள்ள அத்தை நோக்க அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளின நள் வெள்ளை பிராட்டி இறை காணா
விட தர குடில சடில மிசை வெகு முக வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே
வகுளமும் முகுளித வழைகளும் மலி புன வள்ளி குலா திகிரி வாழும்
வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

மேல்

#537
அல் அசல அடைந்த வில் அடல் அநங்கன் அல்லி மலர் அம்புதனை ஏவ
அள்ளி எரி சிந்த பிள்ளை மதி தென்றல் ஐயம் உது கிண்ட அணையூடே
சொல்லும் அரவிந்த வல்லி தனி நின்று தொல்லை வினை என்று முனியாதே
துய்ய வரி வண்டு செய்ய அமுது உண்டு துள்ளிய கடம்பு தரவேணும்
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட புலவோனே
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற ஒன்றை அருள்வோனே
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில் வீரா
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே

மேல்

#538
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே
இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி
இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ
வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா
வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா
அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#539
சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம் சலம் என்பு திண் பொருந்திடு மாயம்
சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி
விரைவில் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர் கொண்டு அலைந்து அழியா முன்
வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே
அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல் அண்டர் கண்டு அமர் அஞ்ச மண்டி வந்திடு சூரன்
அகலம் பிளந்து அணைந்து அகிலம் பரந்து இரங்கிட அன்று உடன்று கொன்றிடும் வேலா
மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை ஒன்ற மந்தி சந்துடன் ஆடும்
வரையின்கண் வந்து வண் குற மங்கை பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே

மேல்

#540
வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து முகந்து கொண்டு அடி
வருடி நிதம்பம் அளைந்து தெந்தென அளி காடை
மயில் குயில் அன்றில் எனும் புளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி
உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள் வரைந்து குங்கும
உபய தனங்கள் ததும்ப அன்புடன் அணையா மஞ்சு
உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட
உணர்வு அழி இன்பம் மறந்து நின்தனை நினைவேனோ
விரவி நெருங்கு குரங்கி இனம் கொடு மொகுமொகு எனும் கடலும் கடந்து உறு
விசை கொடு இலங்கை புகுந்து அரும் தவர் களிகூர
வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி ஜெயஜெய என்று விடும் கொடும் கணை
விறல் நிருதன் தலை சிந்தினன் திரு மருகோனே
அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண் பொடியும் பரந்திட
அரகர சங்கர என்று வென்று அருள் புகழ் வேலா
அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய சந்த வண் கரை
அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள் பெருமாளே

மேல்

#541
அகத்தினை கொண்டு இ புவி மேல் சில தினத்து மற்று ஒன்று அறியாது பின்
அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே
அசுத்த மை கண் கொட்புறு பாவையர் நகைத்து உரைக்கும் பொய் கடல் மூழ்கியெ
அலக்கணில் சென்று தடுமாறியே சில நாள் போய்
இகத்தை மெய் கொண்டு இ புவி பாலர் பொன் மயக்கில் உற்று அம் பற்றை விடாது உடலில்
இளைப்பு இரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே
எம கயிற்றில் சிக்கி நிலா முன் உன் மலர் பதத்தின் பத்தி விடா மனது
இருக்கு நல் தொண்டர்க்கு இணையாக உன் அருள்தாராய்
புகழ் சிலை கந்தர்ப்பனுமே பொடிபட சிரித்து அண் முப்புரம் நீறு செய்
புகை கனல் கண் பெற்றவர் காதலி அருள் பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்தும் முற்றும் செற்றிடவே பகை
புகட்டி வைக்கும் சக்கிரபாணிதன் மருகோனே
திகழ் கடப்பம் புட்பமது ஆர் புயம் மறைத்து உரு கொண்ட அற்புதமாகிய
தினை புனத்து இன்புற்று உறை பாவையை அணை சீலா
செகத்தில உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்றுற்ற அழகே செறி
திருக்கழுக்குன்றத்தினில் மேவிய பெருமாளே

மேல்

#542
எழு கு நிறை நாபி அரி பிரமர் சோதி இலகும் அரன் மூவர் முதலானோர்
இறைவி எனும் ஆதி பரை முலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனி வாயா
புழுகு ஒழுகு காழி கவுணியரில் ஞான புநிதன் என ஏடு தமிழாலே
புனலில் எதிர் ஏற சமணர் கழுவேற பொருத கவி வீர குருநாதா
மழு உழை கபால தமரகம் த்ரிசூல மணி கர விநோதர் அருள் பாலா
மலர் அயனை நீடு சிறை செய்தவன் வேலை வளமை பெறவே செய் முருகோனே
கழுகு தொழு வேதகிரி சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறை தமிழ்கள் ஓது கதலி வனம் மேவும் பெருமாளே

மேல்

#543
ஓலமிட்ட சுரும்பு தனாதனா எனவே சிரத்தில் விழும் கை பளீர்பளீர் என
ஓசை பெற்ற சிலம்பு கலீர்கலீர் என விரக லீலை
ஓர் மிடற்றில் எழும் புள் குகூகுகூ என வேர்வை மெத்த எழுந்து சலாசலா என
ரோம குச்சு நிறைந்து சிலீர்சிலீர் என அமுத மாரன்
ஆலயத்துள் இருந்து குபீர்குபீர் எனவே குதிக்க உடம்பு விரீர்விரீர் என
ஆர முத்தம் அணிந்து அளாவளா என மருவு மாதர்
ஆசையில் கை கலந்து சுமாசுமா பவ சாகரத்தில் அழுந்தி எழா எழாது உளம்
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என வகை வராதோ
மாலை இட்ட சிரங்கள் செவேல்செவேல் என வேல் எழுச்சி தரும் பல் வெளேல்வெளேல் என
வாகை பெற்ற புயங்கள் கறேல்கறேல் என எதிர் கொள் சூரன்
மார்பும் ஒக்க நெரிந்து கரீல்கரீல் என பேய் குதிக்க நிணங்கள் குழூகுழூ என
வாய் புதைத்து விழுந்து ஐயோஐயோ என உதிரம் ஆறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல்சுறீல் என மாலை வெற்பும் இடிந்து திடீல்திடீல் என
மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயாஐயா என இசைகள் கூற
வேல் எடுத்து நடந்த திவாகராசல வேடுவ பெண் மணந்த புயாசலா தமிழ்
வேத வெற்பில் அமர்ந்த க்ருபாகரா சிவ குமர வேளே

மேல்

#544
வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம
வேடுவச்சி பாத பத்மம் மீது செச்சை முடி தோய
ஆதரித்து வேளை புக்க ஆறு இரட்டி புய நேய
ஆதரத்தோடு ஆதரிக்க ஆன புத்தி புகல்வாயே
காதும் உக்ர வீர பத்ரகாளி வெட்க மகுடம்
ஆகாசம் முட்ட வீசி விட்ட காலர் பத்தி இமையோரை
ஓதுவித்த நாதர் கற்க ஓதுவித்த முநி நாண
ஓர் எழுத்தில் ஆறு எழுத்தை ஓதுவித்த பெருமாளே

மேல்

#545
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே நிறைந்த குழலாலும்
நீடும் அதி ரேக இன்பமாகிய சலாப சந்த்ரன் நேர் தரு முக அரவிந்தம் அதனாலும்
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை வலை வீசு கெண்டை விழியாலும்
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி மயல் நானும் உழன்று திரிவேனோ
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும் முராரி விண்டு திரு மார்பன்
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப அரி நாரசிங்கன் மருகோனே
பீலி மயில் மீது உறைந்து சூரர்தமையே செயம் கொள் பேர் பெரிய வேல் கொள் செம் கை முருகோனே
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#546
கொலை கொண்ட போர் விழி கோலோ வாளோ விடம் மிஞ்சு பாதக வேலோ சேலோ
குறை கொண்டு உலாவிய மீனோ மானோ எனும் மானார்
குயில் தங்கு மா மொழியாலே நேரே இழை தங்கு நூல் இடையாலே மீது ஊர்
குளிர் கொங்கை மேருவினாலே நானாவிதமாகி
உலை கொண்ட மா மெழுகாயே மோகாய் அலை அம்புராசியின் ஊடே மூழ்கா
உடல் பஞ்ச பாதகமாய் ஆய் நோயால் அழிவேனோ
உறு தண்டம் பாசமொடு ஆரா வாரா எனை அண்டியே நமனார் தூது ஆனோர்
உயிர் கொண்டு போய்விடு நாள் நீ மீ தாள் அருள்வாயே
அலை கொண்ட வாரிதி கோகோகோகோ என நின்று வாய் விடவே நீள் மா சூர்
அணி அம் சராசனம் வேறாய் நீறாயிடவே தான்
அவிர்கின்ற சோதிய வார் ஆர் நீள் சீர் அனல் அம் கை வேல் விடும் வீரா தீரா
அருமந்த ரூபக ஏகா வேறு ஓர் வடிவாகி
மலை கொண்ட வேடுவர் கான் ஊடே போய் குற மங்கையாளுடனே மால் ஆயே
மயல் கொண்டு உலா அவள் தாள் மீதே வீழ் குமரேசா
மதி மிஞ்சு போதக வேலா ஆளா மகிழ் சம்புவே தொழு பாதா நாதா
மயிலம் தண் மா மலை வாழ்வே வானோர் பெருமாளே

மேல்

#547
அம் கை நீட்டி அழைத்து பாரிய கொங்கை காட்டி மறைத்து சீரிய
அன்பு போல் பொய் நடித்து காசு அளவு உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு தோதக இன்ப சாஸ்த்திரம் உரைத்து கோகிலம்
அன்றில் போல் குரலிட்டு கூரிய நகரேகை
பங்கம் ஆக்கி அலைத்து தாடனை கொண்டு வேட்கை எழுப்பி காமுகர்
பண்பில் வாய்க்க மயக்கி கூடுதல் இயல்பாக
பண்டு இராப்பகல் சுற்று சூளைகள் தங்கள் மேல் ப்ரமை விட்டு பார்வதி
பங்கர் போற்றிய பத்ம தாள் தொழ அருள்வாயே
எங்குமாய் குறைவு அற்று சேதன அங்கமாய் பரிசுத்தத்தோர் பெறும்
இன்பமாய் புகழ் முப்பத்து ஆறினின் முடி வேறாய்
இந்த்ரகோட்டி மயக்கத்தால் மிக மந்த்ர மூர்த்தம் எடுத்து தாமதம்
இன்றி வாழ்த்திய சொர்க்க காவல வயலூரா
செங்கை வேல் கொடு துட்ட சூரனை வென்று தோல் பறை கொட்ட கூளிகள்
தின்று கூத்து நடிக்க தோகையில் வரும் வீரா
செம்பொன் ஆர் திகழ் சித்ர கோபுரம் மஞ்சு இராப்பகல் மெத்த சூழ்தரு
தென் சிராப்பளி வெற்பின் தேவர்கள் பெருமாளே

மேல்

#548
அந்தோ மனமே நமது யாக்கையை நம்பாதே இதம் அகிதம் சூத்திரம்
அம்போருகன் ஆடிய பூட்டு இது இனிமேல் நாம்
அஞ்சாது அமையா கிரி யாக்கையை பஞ்சாடிய வேலவனார்க்கு இயல்
அங்கு ஆகுவம் வா இனிது யாக்கையை ஒழியாமல்
வந்தோம் இதுவே கதி ஆட்சியும் இந்தா மயில்வாகனர் சீட்டு இது
வந்து ஆளுவம் நாம் என வீக்கிய சிவ நீறும்
வந்தே வெகுவா நமை ஆட்கொளு வந்தார் மதம் ஏது இனி மேற்கொள
மைந்தா குமரா எனும் ஆர்ப்பு உய மறவாதே
திந்தோதிமி தீதத மா துடி தந்தாதன னாதன தாத்தன
செம் பூரிகை பேரிகை ஆர்த்து எழ மறை ஓத
செம் காடு எனவே வரும் மூர்க்கரை சங்கார சிகாமணி வேல் கொடு
செண்டாடி மகா மயில் மேல் கொளு முருகோனே
இந்தோடு இதழ் நாகம் மகா கடல் கங்காளம் மின் ஆர் சடை சூட்டிய
என் தாதை சதா சிவ கோத்திரன் அருள் பாலா
எண் கூடு அருளால் நௌவி நோக்கியை நல் பூ மணம் மேவி சிராப்பளி
என்பார் மனம் மேதினில் நோக்கிய பெருமாளே

மேல்

#549
அரிவையர் நெஞ்சு உருகா புணர் தரு விரகங்களினால் பெரிது
அவசம் விளைந்து விடாய்த்து அடர் முலை மேல் வீழ்ந்து
அகிலொடு சந்தன சேற்றினில் முழுகி எழுந்து எதிர் கூப்பு கை
அடியில் நகம் பிறை போல் பட விளையாடி
பரிமளம் விஞ்சிய பூ குழல் சரிய மருங்கு உடை போய் சில
பறவைகளின் குரலாய் கயல் விழி சோர
பனி முகமும் குறு வேர்ப்பு எழ இதழ் அமுது உண்டு இரவாய்
பகல் பகடியிடும்படி தூர்த்தனை விடலாமோ
சரியை உடன் க்ரியை போற்றிய பரமபதம் பெறுவார்க்கு அருள்
தரு கணன் ரங்கபுரம் உச்சிதன் மருகோனே
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை ஆட்கொளல்
சகம் அறியும்படி காட்டிய குருநாதா
திரிபுவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்கும் சிராப்பளி மலை மீதே
தெரிய இருந்த பராக்ரம உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு
திலதம் எனும்படி தோற்றிய பெருமாளே

மேல்

#550
அழுதழுது ஆசார நேசமும் உடையவர் போலே பொய் சூழ்வுறும்
அசடிகள் மால் ஆன காமுகர் பொன் கொடா நாள்
அவருடன் வாய் பேசிடாமையும் முனிதலும் மாறாத தோஷிகள்
அறுதி இல் காசு ஆசை வேசைகள் நஞ்சு தோயும்
விழிகளினால் மாட வீதியில் முலைகளை ஓராமல் ஆரோடும்
விலை இடு மா மாய ரூபிகள் பண்பு இலாத
விரகிகள் வேதாளமோ என முறையிடு கோமாள மூளிகள்
வினை செயலாலே என் ஆவியும் உயங்கலாமோ
வழியினில் வாழ் ஞான போதக பரம சுவாமீ வரோதய
வயலியில் வேலாயுத வரை எங்கும் ஆனாய்
மதுரையில் மீது ஆலவாயினில் எதிர் அமணர் ஓரோர் எணாயிரர்
மறி கழு மீது ஏற நீறு பரந்து உலாவ
செழியனும் ஆளாக வாது செய் கவி மத சீகாழி மா முனி
சிவசிவ மா தேவ கா என வந்து பாடும்
திரு உடையாய் தீது இலாதவர் உமை ஒரு பாலான மேனியர்
சிரகிரி வாழ்வான தேவர்கள் தம்பிரானே

மேல்

#551
இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார்
இணை அடி கும்பிட்டு அணி அல்குல் பம்பித்து இதழ் அமுது உந்து உய்த்து அணி ஆரம்
களப சுகந்த புளகித இன்ப கன தன கும்பத்திடை மூழ்கும்
கலவியை நிந்தித்து இலகிய நின் பொன் கழல் தொழும் அன்பை தருவாயே
தளர் அறும் அன்பர்க்கு உளம் எனும் மன்றில் சதுமறை சந்தத்தொடு பாட
தரிகிட தந்த திரிகிட திந்தி தகுர்தி எனும் கொட்டுடன் ஆடி
தெளிவுற வந்துற்று ஒளிர் சிவன் அன்பில் சிறுவ அலங்கல் திரு மார்பா
செழு மறை அம் சொல் பரிபுர சண்ட திரிசிர குன்ற பெருமாளே

மேல்

#552
பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம் திரமாக
பயில முலை குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண ஆசை
அகம் மகிழ் துட்டன் பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குணவீனன்
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே
சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பத திண் சுரலோக
தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ அணைக்கும் திரு மார்பா
செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் திகுதிகு என பொங்கிய ஓசை
திமிலை தவில் துந்துமிகள் முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே

மேல்

#553
ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு செம் கை உறவாடி
ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு இரண்டும் உரையாரை
மருவ மிக அன்பு பெருக உளது என்று மன நினையும் இந்த மருள் தீர
வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள் அருளாயோ
அரவம் எதிர் கண்டு நடுநடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட மயில் வீரா
அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ விளங்கு வயலூரா
திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசைமுகன் மகிழ்ந்த பெருமானார்
திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரிசிர கிரி வந்த பெருமாளே

மேல்

#554
குமுத வாய் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே அழகான
குழைகள் தாக்கிய விழிகளால் களிகூரா வீறாது ஈரா மாலா அவரோடே
உமது தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் எனவே நின்று
உடை தொடா பணம் இடை பொறா தனமூடே வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ
தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே தோகையில் ஏறி
சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா நீ வா இளையோனே
திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை பாலா
திரிசிராப்பள்ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#555
குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர்
குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை
குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அனம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி
குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக
பவள ரேகை படைத்த அதரம் குறியுற வியாள படத்தை அணைந்து கை
பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின்
படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி
படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ
தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி
சிலை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை
த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே

மேல்

#556
சத்தி பாணீ நமோ நம முத்தி ஞானீ நமோ நம தத்வ ஆதி நமோ நம விந்து நாத
சத்து ரூபா நமோ நம ரத்ந தீபா நமோ நம தற்ப்ரதாபா நமோ நம என்று பாடும்
பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கை மேல் வீழ்
பட்டிமாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய்
அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா
அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அக்ஷ மாலாதரா குற மங்கை கோவே
சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா
சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே

மேல்

#557
பகல் இரவினில் தடுமாறா பதி குரு என தெளி போத
ரகசியம் உரைத்த அநுபூதி ரத நிலைதனை தருவாயே
இகபரம் அதற்கு இறையோனே இயல் இசையின் முத்தமிழோனே
சக சிர கிரி பதி வேளே சரவண பவ பெருமாளே

மேல்

#558
புவனத்து ஒரு பொன் துடி சிற்று உதர கருவில் பவம் உற்று விதி படியில்
புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி
புரி அட்டகம் இட்டு அது கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற
புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனலூடே
தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை
தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்
சலனப்பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய
தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய்
பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில்
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர்
பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்துதனில்
பரவப்படு செய்ப்பதியில் பரம குருநாதா
சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக்கணன் நக்கன் மழு கரன் உக்ர ரண
த்ரிபுரத்தை எரித்து அருள் சிற்குணன் நிற்குணன் ஆதி
செக வித்தன் நிச பொருள் சிற்பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட
த்ரிசிர புர வெற்பு உறை சற்குமர பெருமாளே

மேல்

#559
பொருளின் மேல் பிரிய காமாகாரிகள் பரிவு போல் புணர் கிரீடா பீடிகள்
புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்
புலையர் மாட்டும் அறாதே கூடிகள் நெஞ்ச மாயம்
கருதவொணா பல கோடா கோடிகள் விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்
கலவி சாத்திர நூலே ஓதிகள் தங்கள் ஆசை
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள் அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்
கருணை நோக்கம் இலா மா பாவிகள் இன்பம் ஆமோ
குரு கடாக்ஷ கலா வேதாகம பரம வாக்கிய ஞானாசாரிய குறைவு தீர்த்து அருள் ஸ்வாமி கார்முக வன்பரான
கொடிய வேட்டுவர் கோகோகோ என மடிய நீட்டிய கூர் வேலாயுத குருகு க்ஷேத்ர புர ஈசா வாசுகி அஞ்ச மாறும்
செரு பராக்ரம கேகே வாகன சரவணோற்பவ மாலா லாளித திரள் புயாத்திரி ஈராறு ஆகிய கந்த வேளே
சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர சேண் நாடு ஆக்ருத திரிசிராப்பளி வாழ்வே தேவர்கள் தம்பிரானே

மேல்

#560
பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய்
புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர
இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணைதரு பங்க அநுராக
திரிதல் ஒழிந்து மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ
மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல்
மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே
தெருளுறும் அன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் முதல் நாளில்
தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே

மேல்

#561
வாசித்து காணொணாதது பூசித்து கூடொணாதது வாய் விட்டு பேசொணாதது நெஞ்சினாலே
மாசர்க்கு தோணொணாதது நேசர்க்கு பேரொணாதது மாயைக்கு சூழொணாதது விந்து நாத
ஓசைக்கு தூரமானது மாகத்துக்கு ஈறு அதானது லோகத்துக்கு ஆதியானது கண்டு நாயேன்
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ
ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல் ஆகி பொன் பாதமே பணி கந்த வேளே
ஆலித்து சேல்கள் பாய் வயலூர் அத்தில் காளமோடு அடர் ஆரத்தை பூண் மயூர துரங்க வீரா
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா
நாகத்து சாகை போய் உயர் மேகத்தை சேர் சிரா மலை நாதர்க்கு சாமியே சுரர் தம்பிரானே

மேல்

#562
வெருட்டி ஆட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்து அணாப்பிகள் படிறிகள் சடுதியில்
விருப்பம் ஆக்கிகள் திரவியம் இலர் ஆனால்
வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் தூர்த்திகள் ம்ருகமத பரிமள
விசித்ர மேற்படு முலையினும் நிலையினும் எவரோடும்
மருட்டி வேட்கை சொல் மொழியினும் விழியினும் அவிழ்த்த பூ கமழ் குழலினும் நிழலினும்
மதிக்கொணா தளர் இடையினும் நடையினும் அவமே யான்
மயக்கமாய் பொருள் வரும் வகை க்ருஷிபணும் தடத்து மோக்ஷமது அருளிய பல மலர்
மணத்த வார் கழல் கனவிலும் நனவிலும் மறவேனே
இருட்டு இலா சுர உலகினில் இலகிய சகஸ்ர நேத்திரம் உடையவன் மிடி அற
இரக்ஷை வாய்த்து அருள் முருக பனிரு கர குக வீரா
இலக்ஷுமீ சுர பசுபதி குருபர சமஸ்த ராச்சிய ந்ருப புகழ் வயம் இயல்
இலக்கர் ஏய் படை முகடு எழு கக பதி களிகூர
திருட்டு ராக்ஷதர் பொடிபட வெடிபட எடுத்த வேல் கொடு கடுகிய முடுகிய
செருக்கு வேட்டுவர் திறையிட முறையிட மயில் ஏறும்
செரு பராக்ரம நிதி சரவணபவ சிவத்த பாற்கரன் இமகரன் வலம் வரு
திருச்சிராப்பளி மலை மிசை நிலை பெறு பெருமாளே

மேல்

#563
குடத்தை தகர்த்து களிற்றை துரத்தி குவட்டை செறுத்து கக சால
குலத்தை குமைத்து பகட்டி செருக்கி குரு தத்துவ தவர் சோர
புடைத்து பணைத்து பெருக்க கதித்து புறப்பட்ட கச்சு தன மாதர்
புணர்ச்சி சமுத்ர திளைப்பு அற்று இருக்க புரித்து பதத்தை தருவாயே
கடத்து புனத்து குறத்திக்கு மெத்த கருத்து இச்சையுற்று பரிவாக
கனக்க ப்ரியப்பட்டு அகப்பட்டு மை கண் கடைப்பட்டு நிற்கைக்கு உரியோனே
தடத்து உற்பவித்து சுவர்க்க தலத்தை தழைப்பித்த கொற்ற தனி வேலா
தமிழ்க்கு கவிக்கு புகழ் செய் பதிக்கு தரு கற்குடிக்கு பெருமாளே

மேல்

#564
நெறித்து பொருப்புக்கு ஒத்த முலைக்கு தனத்தை கொட்டி நிறைத்து சுகித்து சிக்கி வெகு நாளாய்
நினைத்து கொடு அ துக்கத்தை அவத்தைக்கு அடுக்கைப்பெற்று நிசத்தில் சுழுத்தி பட்ட அடியேனை
இறுக்கி பிடித்து கட்டி உதைத்து துடிக்க பற்றி இழுத்து துவைத்து சுற்றி யம தூதர்
எனக்கு கணக்கு கட்டு விரித்து தொகைக்கு உட்பட்ட இலக்க படிக்கு தக்கபடியே தான்
முறுக்கி திருப்பி சுட்டு மலத்தில் புகட்டி திட்டி முழுக்க கலக்கப்பட்டு அலையாமல்
மொழிக்கு தரத்துக்கு உற்ற தமிழ்க்கு சரித்து சித்தி முகத்தில் களிப்பு பெற்று மயில் ஏறி
உறுக்கி சினத்து சத்தி அயிற்கு தரத்தை கைக்குள் உதிக்க பணித்து பக்கல் வருவாயே
உனை சொல் துதிக்க தக்க கருத்தை கொடுப்பை சித்தி உடை கற்குடிக்குள் பத்தர் பெருமாளே

மேல்

#565
கயலை சருவி பிணை ஒத்த அலர் பொன் கமலத்து இயல் மை கணினாலே
கடி மொய் புயலை கருதி கறுவி கதிர் விட்டு எழு மை குழலாலே
நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே
நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ
புயல் உற்ற இயல் மை கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும்
பொருதிட்டு அமரர்க்குறு துக்கமும் விட்டு ஒழிய புகழ் பெற்றிடுவோனே
செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே
சிவதை பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய் குமர பெருமாளே

மேல்

#566
சுற்ற கபடோடு பல சூது வினையான பல கற்ற களவோடு பழிகாரர் கொலைகாரர் சலி
சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி
துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல்
சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே
சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில் தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர்
சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி
தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல்
தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு தித்திமித என தாளம்
திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன் ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல
திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே
எத்திசையும் நாடி யமனார் நிணமொடு ஆட பெல மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர்
எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடி வேலா
எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவைதனை சித்தம் அலை காமுக குகா நமசிவாயனொடு
ரத்நகிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே

மேல்

#567
பத்தியால் யான் உனை பலகாலும் பற்றியே மா திரு புகழ் பாடி
முத்தன் ஆமாறு எனை பெருவாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே
உத்தமா தான சற்குணர் நேயா ஒப்பிலா மா மணி கிரி வாசா
வித்தகா ஞான சத்திநி பாதா வெற்றி வேலாயுத பெருமாளே

மேல்

#568
சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித
தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும்
சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி
சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும்
ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள்
ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும்
ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞ்ஞானாபிராம தாப வடிவமும்
ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும்
ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர்
ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம்
ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த
லீலா விசார தீர வரதர குருநாதா
கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவு செய்
கோபாலராய நேயம் உள திரு மருகோனே
கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலிமலை உறை பெருமாளே

மேல்

#569
பாதாளம் ஆதி லோக நிகிலமும் ஆதாரமான மேரு என வளர்
பாடீர பாரமான முலையினை விலை கூறி
பாலோடு பாகு தேன் என இனிய சொலாலே அநேக மோகம் இடுபவர்
பாதாதிகேசமாக வகைவகை கவி பாடும்
வேதாளன் ஞான கீனன் விதரண நா தான் இலாத பாவியன் அநிஜவன்
வீண் நாள் படாத போத தவமிலி பசு பாச
வியாபார மூடன் யானும் உனது இரு சீர் பாத தூளியாகி நரகு இடை
வீழாமலே சுவாமி திருவருள்புரிவாயே
தூதாளரோடு காலன் வெருவிட வேதா முராரி ஓட அடு படை
சோரா வலாரி சேனை பொடி பட மறை வேள்வி
சோமாசிமார் சிவாயநம என மா மாய வீர கோரமுடன் இகல்
சூர் மாள வேலை ஏவும் வயலியில் இளையோனே
கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்
கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை
கூர் ஆரல் தேரு நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி வயல் பயில்
கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே

மேல்

#570
இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர் யாவரும் இராவுபகல் அடியேனை
இராகமும் விநோதமும் உலோபமும் உடன் மோகமும் இலான் இவனும் மா புருஷன் என ஏய
சலாபம் அமல ஆகர சசீதர விதாரண சதாசிவ மயேசுர சகல லோக
சராசர வியாபக பராபர மநோலய சமாதி அநுபூதி பெற நினைவாயே
நிலா விரி நிலா மதி நிலாத அநில அசன நியாய பரிபால அர நதி சூடி
நிசாசர குல அதிபதி ராவண புய அரிட நிர ஆமய சரோருக அரன் அருள் பாலா
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இதம் ஆகவம் வியாதர்கள் விநோத மகள் மணவாளா
விராவு வயல் ஆர் புரி சிராமலை பிரான்மலை விராலிமலை மீதில் உறை பெருமாளே

மேல்

#571
நிராமய புராதன பராபர வராம்ருத நிராகுல சிராதிக ப்ரபை ஆகி
நிராச சிவ ராஜ தவ ராஜர்கள் பராவிய நிராயுத புராரி அச்சுதன் வேதா
சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூப இவர் ஆதியை குறியாமே
துரால் புகழ் பராதின கரா உள பராமுக துரோகரை தரை ஆசையுற்று அடைவேனோ
இராகவ இராமன் முன் இராவண இரா வண இராவண இராஜன் உட்குடன் மாய் வென்ற
இராகன் மலர் ஆள் நிஜ புராணர் குமரா கலை இராஜ சொல வாரணர்க்கு இளையோனே
விராகவ சுராதிப பொராது தவிராது அடு விராயண பராயண செரு ஊரா
விராவிய குரா அகில் பராரை முதிரா வளர் விராலிமலை ராஜத பெருமாளே

மேல்

#572
இதம் உறு விரை புனல் முழுகிய அகில் மணம் உதவிய புகையினில் அளவி வகைவகை
கொத்து அலர்களின் தொடையல் வைத்து வளர் கொண்டல் என
அறல் என இசை அளி என நள்ளிருள் என நிறம் அது கருகி நெடுகி நெறிவு பட
நெய்த்து முசுவின் திரிகை ஒத்த சுருள் குந்தளமும்
இலகிய பிறை என எயினர் சிலை என விலகிய திலத நுதலும் மதி முகமும்
உற்பலமும் வண்டு வடு வில் கணை யமன் படரு முனை வாளும்
இடர் படுகவு நடுவனும் வல் அடல் பொரு கடுவதும் என நெடிது அடுவ கொடியன
இக்கு சிலை கொண்ட மதன் மெய் தவ நிறைந்த விழி
தளவன முறுவலும் அமுத குமுதமும் விளை நறவு இனிய மொழியும் இனையது என
ஒப்பறு நகங்கள் விரல் துப்பு என உறைந்து கமுகு
இடி ஒடி பட வினை செயும் வில் மத கலை நெடிய கவுடி இசை முரலும் சுரி முக
நத்து அனைய கண்டமும் வெண்முத்து விளை விண்டு அனைய எழில் தோளும்
விதரண மன விதனம் அதை அருள்வன சத தள மறை முகிழ் அதனை நிகர்வன
புத்த அமிர்து கந்த குடம் வெற்பு என நிரம்புவன
இம சலம் ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபை மிகு தருண புளகித
சித்ர வர மங்கல விசித்ர இரு துங்க கன
விகலித மிருதுள ம்ருதுள நவ மணி முகபட விகடின தனமும் உயர் வட
பத்திரம் இருந்த அகடில் ஒத்த சுழி உந்தி உள மதியாத
விபரிதம் உடை இடை இளைஞர் களை பட அபகடம் அது புரி அரவ சுடிகைய
ரத்ன பணம் என்ப அழகுற்ற அரையும் புதிய
நுணிய தளிர் என உலவிய பரிபுர அணி நடன பதமும் உடைய வடிவினர்
பொன் கலவி இன்பம் அதி துக்கம் எனல் அன்றி அவர்
விரகினில் எனது உறு மனம் அது உருகிய பிரமையும் அற உனது அருள் கை வர உயர்
பத்தி வழியும் பரம முத்தி நெறியும் தெரிவது ஒரு நாளே
தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக
தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி எனவேதான்
தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத சலிகை தவில் முரசு கரடிகை
மத்தளி தவண்டை அறவை தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகு என அலற விருதுகள் திகுதிகு திகு என அலகை குறளிகள்
விக்கிட நிணம் பருக பக்கி உவணம் கழுகு
சதிர் பெற அதிர் தர உததி சுவறிட எதிர் பொரு நிருதர்கள் குருதி பெருகிட
அப்புவில் மிதந்து எழுபது அற்புத கவந்தம் எழ வெகு கோடி
மத கஜ துரக ரதம் உடைய புவி அதல முதல் முடிய இடிய நெடியது ஒர்
மிக்கு ஒலி முழங்க இருள் அக்கணம் விடிந்து விட
இரவியும் மதியும் நிலைமை பெற அடி பரவிய அமரர்கள் தலைமை பெற இயல்
அ திறல் அணங்கு செய சத்தி விடு கந்த திரு
வயலியில் அடிமைய குடிமையின் இனல் அற மயலொடு மலம் அற அரிய பெரிய
திருப்புகழ் விளம்பு என் முன் அற்புதம் எழுந்தருள் குக விராலி
மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி விதரண முருக சரவண
உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட மய
நிருப விமல சுக சொருப பரசிவ குருபர வெளி முகடு உருவ உயர் தரு
சக்ர கிரியும் குலைய விக்ரம நடம்புரியும்
மரகத கலபம் எரி விடு மயில் மிசை மருவியெ அருமைய இளமை உருவொடு
சொர்க்க தலமும் புலவர் வர்க்கமும் விளங்க வரு பெருமாளே

மேல்

#573
உரு ஏறவே ஜெபித்து ஒரு கோடி ஓமம் சித்தி உடனாக ஆகமத்து உகந்து பேணி
உணர்வு ஆசை யாரிடத்தும் மருவாது ஓர் எழுத்தை ஒழியாது ஊதை விட்டு இருந்து நாளும்
தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர் தருவார்கள் ஞான வித்தை தஞ்சம் ஆமோ
தழலாடி வீதி வட்டம் ஒளி போத ஞான சித்தி தருமாகில் ஆகும் அத்தை கண்டு இலேனே
குரு நாடி இராசரிக்கர் துரியோதனாதி வர்க்க குடி மாய விட்டு குந்தி பாலர்
குலையாமல் நீதி கட்டி எழு பாரை ஆள விட்ட குறளாக ஊறு இல் நெட்டை கொண்ட ஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர மலை மேல் உலாவு சித்த அம் கை வேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு வளை கூனை ஓதி நிமிர்த்த தம்பிரானே

மேல்

#574
எதிரெதிர் கண்டு ஓடி ஆட்கள் களவு அது அறிந்து ஆசை பூட்டி இடறி விழும் பாழி காட்டும் மட மாதர்
இறைவை கொளும் கூவல் மூத்த கறை ஒழுகும் தாரை பார்க்கில் இளமை கொடும் காதல் ஆற்றில் நிலையாத
அதி விகடம் பீழல் ஆற்ற அழுகிவிடும் பீறல் ஊத்தை அடையும் இடம் சீலை தீற்று கரு வாயில்
அருவி சலம் பாயும் ஓட்டை அடைவு கெடும் தூரை பாழ்த்த அளறில் அழுந்தாமல் ஆட்கொண்டு அருள்வாயே
விதுரன் நெடும் துரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பாதி ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரும் மாள
விரவு ஜெயன் காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும் பாக தீர்த்தன் மருகோனே
மதி அணையும் சோலை ஆர்த்தும் அதி வள சந்தான கோட்டின் வழி அருளி இன் பேறு காட்டிய விராலி
மலை மருவும் பாதி ஏற்றி கடி கமழ் சந்தான கோட்டில் வழி அருளின் பேறு காட்டும் பெருமாளே

மேல்

#575
ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பதோர் விதமான லிபிகளும் வெகு ரூப
அண்டராதி சராசரமும் உயர் புண்டரீகனும் மேக நிறவனும் அந்தி போல் உரு வானு நிலவொடு வெயில் காலும்
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம்
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ
வந்த தானவர் சேனை கெடி புக இந்த்ரலோகம் விபூதர் குடி புக மண்டு பூத பசாசு பசி கெட மயிடாரி
வன்கண் வீரி பிடாரி ஹரஹர சங்கரா என மேரு கிரி தலை மண்டு தூள் எழ வேலை உருவிய வயலூரா
வெந்த நீறு அணி வேணி இருடிகள் பந்த பாச விகார பரவச வென்றியான சமாதி முறுகு கல் முழை கூடும்
விண்டு மேல் மயிலாட இனிய கள் உண்டு கார் அளி பாட இதழி பொன் விஞ்ச வீசு விராலி மலை உறை பெருமாளே

மேல்

#576
கரதலமும் குறி கொண்ட கண்டமும் விரவி எழுந்து சுருண்டு வண்டு அடர்
கனவிய கொண்டை குலைந்து அலைந்திட அதி பார
களப சுகந்த மிகுந்த கொங்கைகள் இளக முயங்கி மயங்கி அன்புசெய்
கனி இதழ் உண்டு துவண்டு பஞ்சணை மிசை வீழா
இரதம் அருந்தி உறும் கரும் கயல் பொருது சிவந்து குவிந்திடும்படி
இதவிய உந்தி எனும் தடம்தனில் உற மூழ்கி
இனியது ஒரு இன்பம் விளைந்து அளைந்து பொய் வனிதையர் தங்கள் மருங்கி
இணங்கிய இளமை கிழம் படும் முன் பதம் பெற உணர்வேனோ
பரத சிலம்பு புலம்பும் அம் பத வரி முக எண்கினுடன் குரங்கு அணி
பணிவிடை சென்று முயன்ற குன்று அணி இடையே போய்
பகடி இலங்கை கலங்க அம் பொனின் மகுட சிரம் தசமும் துணிந்து எழு
படியும் நடுங்க விழும் பனம் பழம் எனவாகும்
மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய
வயலியில் அம்பு அவிழ் சண்பகம் பெரிய விராலி
மலையில் விளங்கிய கந்த என்று உனை மகிழ்வொடு வந்தி செய் மைந்தன் என்று எனை
வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டு அருள் பெருமாளே

மேல்

#577
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி
பரதம் ஆடி கான் ஆடி பர வயோதிகாதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ
சுருதி ஆடி தாதாவி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுரதினோடு சூர் மாள உலகு ஏழும்
திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட
செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே

மேல்

#578
காமாத்திரமாகி இளைஞர்கள் வாழி நாள் கொடு போகி அழகிய
காது ஆட்டிய பார இரு குழை அளவோடி
கார் போல் தவழ் ஓதி நிழல்தனில் ஆர் வாள் கடை ஈடு கனம் கொடு
கால் ஆற்றும் வை வேலின் முனை கடை யம தூதர்
ஏமாப்பு அற மோக இயல் செய்து நீலோற்பல ஆசு இல் மலருடன்
நேர் ஆட்டம் விநோதமிடும் விழி மடவார்பால்
ஏகா பழி பூணும் மருள் அற நீ தோற்றி முனாளும் அடிமையை
ஈடேற்றுதலால் உன் வலிமையை மறவேனே
சீமாட்டியும் ஆய திரிபுரை காலாக்கினி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுர திரிபுவன ஈசை
சீ கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என வெகு
சீராட்டொடு பேண வட திசை கயிலாச
கோமாற்கு உபதேச உபநிட வேதார்த்த மெய்ஞ்ஞான நெறி அருள்
கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே
கோடா சிவ பூஜை பவுருஷ மாறா கொடை நாளும் மருவிய
கோனாட்டு விராலி மலை உறை பெருமாளே

மேல்

#579
கொடாதவனையே புகழ்ந்து குபேரன் எனவே மொழிந்து குலாவி அவமே திரிந்து புவி மீதே
எடாத சுமையே சுமந்து எணாத கலியால் மெலிந்து எலா வறுமை தீர அன்று உன் அருள் பேணேன்
சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்
கெடாத தவமே மறைந்து கிலேசம் அதுவே மிகுந்து கிலாத உடல் ஆவி நொந்து மடியா முன்
தொடாய் மறலியே நீ என்ற சொலாகி அது நா வரும்கொல் சொல் ஏழு உலகம் ஈனும் அம்பை அருள் பாலா
நடாத சுழி மூல விந்து நள் ஆவி விளை ஞான நம்ப நபோ மணி சமான துங்க வடி வேலா
படாத குளிர் சோலை அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து பசேல் எனவுமே தழைந்து தினமே தான்
விடாது மழை மாரி சிந்த அநேக மலர் வாவி பொங்கு விராலி மலை மீது கந்த பெருமாளே

மேல்

#580
மாயா சொரூப முழு சமத்திகள் ஓயா உபாய மன பசப்பிகள்
வாழ்நாளை ஈரும் விழி கடைச்சிகள் முநிவோரும்
மால் ஆகி வாட நகைத்து உருக்கிகள் ஏகாசம் மீது தனம் திறப்பிகள்
வாரீர் இரீர் என் முழு புரட்டிகள் வெகு மோகம்
ஆயாத ஆசை எழுப்பு மெத்திகள் ஈயாதபோதில் அற பிணக்கிகள்
ஆவேச நீர் உண் மத பொறிச்சிகள் பழி பாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள் கோமாளமான குறி கழுத்திகள்
ஆசார ஈன விலை தனத்தியர் உறவாமோ
காயாத பால் நெய் தயிர் குடத்தினை ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது உரலோடே
கார் போலு மேனிதனை பிணித்து ஒரு போர் போல் அசோதை பிடித்து அடித்திட
காதோடு தாது கையில் பிடித்து அழுது இனிது ஊது
வேயால் அநேக வித பசு திரள் சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்
வீறான மாமன் என படைத்து அருள் வயலூரா
வீணாள் கொடாத படை செருக்கினில் சூர் மாள வேலை விடுக்கும் அற்புத
வேலா விராலி மலை தலத்து உறை பெருமாளே

மேல்

#581
மால் ஆசை கோபம் ஓயாது எந்நாளும் மாயா விகார வழியே செல்
மா பாவி காளி தான் ஏனு நாத மாதா பிதாவும் இனி நீயே
நாலு ஆன வேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இல்லை வீணே
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே
பாலா கலாரம் ஆமோத லேப பாடீர வாக அணி மீதே
பாதாள பூமி ஆதாரம் மீன பானீயம் மேலை வயலூரா
வேலா விராலி வாழ்வே சமூக வேதாள பூத பதி சேயே
வீரா கடோர சூராரியே செவ்வேளே சுரேசர் பெருமாளே

மேல்

#582
மேகம் எனும் குழல் சாய்த்து இரு கோகனம் கொடு கோத்து அணை
மேல் விழுகின்ற பராக்கினில் உடை சோர
மேகலையும் தனி போய் தனியே கரணங்களும் ஆய் கயல்
வேல் விழியும் குவியா குரல் மயில் காடை
கோகிலம் என்று எழ போய் கனி வாய் அமுது உண்டு உருகா களிகூர
உடன் பிரியா கலவியில் மூழ்கி
கூடி முயங்கி விடாய்த்து இரு தனங்களின் மேல் துயில்கூரினும்
அம்புய தாள் இணை மறவேனே
மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
மூ உலகும் தொழுது ஏத்திட உறைவோனே
மூ திசை முன்பு ஒரு கால் அட மேருவை அம்பினில் வீழ்த்திய
மோகன சங்கரி வாழ்த்திட மதியாமல்
ஆகம் மடிந்திட வேல் கொடு சூரனை வென்று அடல் போய் தணியாமையின்
வென்ற அவனால் பிறகிடு தேவர்
ஆதி இளந்தலை காத்து அரசாள அவன் சிறை மீட்டு அவன்
ஆள் உலகம் குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#583
மோதி இறுகி வட மேரு என வளரும் மோக முலை அசைய வந்து காயம்
மோசம் இடும் அவர்கள் மாயைதனில் முழுகி மூடம் என் அறிவு கொண்டதாலே
காதி வரும் இயம தூதர் கயிறு கொடு காலில் இறுக எனை வந்து இழாதே
காவல் என விரைய ஓடி உனது அடிமை காண வருவது இனி எந்த நாளோ
ஆதி மறையவனும் மாலும் உயர் சுடலை ஆடும் அரனும் இவர் ஒன்று அதான
ஆயி அமலை திரிசூலி குமரி மகமாயி கவுரி உமை தந்த வாழ்வே
சோதி நிலவு கதிர் வீசும் மதியின் மிசை தோய வளர் கிரியின் உந்தி நீடு
சோலை செறி உள்ள விராலி நகரில் வளர் தோகை மயில் உலவு தம்பிரானே

மேல்

#584
சரவண ஜாதா நமோ நம கருணைய தீதா நமோ நம சத தள பாதா நமோ நம அபிராம
தருண கதீரா நமோ நம நிருப அமர் வீரா நமோ நம சம தள ஊரா நமோ நம ஜகதீச
பரம சொரூபா நமோ நம சுரர் பதி பூபா நமோ நம பரிமள நீபா நமோ நம உமை காளி
பகவதி பாலா நமோ நம இகபர மூலா நமோ நம பவுருஷ சீலா நமோ நம அருள்தாராய்
இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூள் ஏற வானவர் எவர்களும் ஈடேற ஏழ் கடல் முறையோ என்று
இடர் பட மா மேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் இகல் கெட மா வேக நீடு அயில் விடுவோனே
மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும் வசு எனும் ஆகார ஈசனும் அடி பேண
மயில் உறை வாழ்வே விநாயக மலை உறை வேலா மகீதர வனசரர் ஆதாரமாகிய பெருமாளே

மேல்

#585
அன்பாக வந்து உன் தாள் பணிந்து ஐம்பூதம் ஒன்ற நினையாமல்
அன்பால் மிகுந்து நஞ்சு ஆரு கண்கள் அம்போருகங்கள் முலைதானும்
கொந்தே மிகுந்து வண்டாடி நின்று கொண்டாடுகின்ற குழலாரை
கொண்டே நினைந்து மன் பேது மண்டி குன்றா மலைந்து அலைவேனோ
மன்று ஆடி தந்த மைந்தா மிகுந்த வம்பு ஆர் கடம்பை அணிவோனே
வந்தே பணிந்து நின்றார் பவங்கள் வம்பே தொலைந்த வடி வேலா
சென்றே இடங்கள் கந்தா எனும் போ செம் சேவல் கொண்டு வரவேணும்
செம் சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#586
பந்து ஆடி அம் கை நொந்தார் பரிந்து பைம் தார் புனைந்த குழல் மீதே
பண்பு ஆர் சுரும்பு பண் பாடுகின்ற பங்கேருகம் கொள் முகம் மீதே
மந்தார மன்றல் சந்து ஆரம் ஒன்றி வன் பாதகம் செய் தனம் மீதே
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய்
கந்தா அரன்தன் மைந்தா விளங்கு கன்று ஆ முகுந்தன் மருகோனே
கன்றா விலங்கல் ஒன்று ஆறு கண்ட கண்டா அரம்பை மணவாளா
செம் தாது அடர்ந்த கொந்து ஆர் கடம்பு திண் தோள் நிரம்ப அணிவோனே
திண் கோடரங்கள் எண்கோடு உறங்கு செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#587
வண்டார் மதங்கள் உண்டே மயங்கி வந்து ஊரு கொண்டல் அதனோடும்
வண் காமன் அம்பு தன் கால் மடங்க வன் போர் மலைத்த விழி வேலும்
கொண்டே வளைந்து கண்டார் தியங்க நின்றார் குரும்பை முலை மேவி
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய்
பண்டு ஆழி சங்கு கொண்டு ஆழி தங்கு பண்போன் உகந்த மருகோனே
பண் சார நைந்து நண்பு ஓதும் அன்பர் பங்காகி நின்ற குமரேசா
செண்டு ஆடி அண்டர் கொண்டாட மன்றில் நின்று ஆடி சிந்தை மகிழ் வாழ்வே
செம் சாலி மிஞ்சி மஞ்சு ஆடுகின்ற செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#588
கரை அற உருகுதல் தரு கயல் விழியினர் கண்டு ஆன செம் சொல் மட மாதர்
கலவியில் முழுகிய நெறியினில் அறிவு கலங்கா மயங்கும் வினையேனும்
உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும் உன் பாத கஞ்ச மலர் மீதே
உரவொடு புனைதர நினைதரும் அடியரொடு ஒன்றாக என்று பெறுவேனோ
வரை இரு துணிபட வளைபடு சுரர் குடி வந்து ஏற இந்த்ரபுரி வாழ
மத வித கஜ ரத துரக பததியின் வன் சேனை மங்க முது மீன
திரை மலி சல நிதி முறை இட நிசிசரர் திண்டாட வென்ற கதிர் வேலா
ஜெகதல மிடி கெட விளைவன வயல் அணி செங்கோடு அமர்ந்த பெருமாளே

மேல்

#589
இடம் பார்த்து இடம் பார்த்து இதம் கேட்டு இரந்து ஏற்று இணங்கா பசி பொங்கி அனல் மூழ்கி
இறும் காற்கு இறுங்கார்க்கு இரும்பு ஆர்க்கு நெஞ்சார்க்கு இரங்கார்க்கு இயல் தண் தமிழ் நூலின்
உடம் பாட்டுடன் பாட்டு இயம்பா தயங்கா துளங்கா திட புன் கவி பாடி
ஒதுங்கா பொதுங்கா பதுங்கா புகன்று ஏத்துறும் பால் குணக்கு அன்புறலாமோ
கடம் தோல் கடம் தோற்ற அறிந்தாட்கு அரும் தாள்கள் அணைந்தாட்கு அணி திண் புயம் ஈவாய்
கரும்போர்க்கு அரும் போர் குளம் காட்டி கண்டு ஏத்து செங்கோட்டில் நிற்கும் கதிர் வேலா
அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்கு அமைந்தோர்க்கு அவிழ்ந்தோர்க்கு உணற்கு ஒன்று இலதாகி
அலைந்தோர்க்கு குலைந்தோர்க்கு இனைந்தோர்க்கு அலந்தோர்க்கு அறிந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே

மேல்

#590
கலக்கும் கோது அற வடிக்கும் சீரிய கருப்பஞ்சாறு எனு மொழியாலே
கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள் கடைக்கண் பார்வையில் அழியாதே
விலக்கும் போதகம் எனக்கு என்றே பெற விருப்பம் சாலவும் உடையேன் நான்
வினை கொண்டே மன நினைக்கும் தீமையை விடற்கு அஞ்சேல் என அருள்வாயே
அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை அறுக்கும் கூரிய வடி வேலா
அழைத்து உன் சீரிய கழல் செந்தாமரை அடுக்கும் போதகம் உடையோராம்
சிலர்க்கு அன்றே கதி பலிக்கும் தேசிக திரு செம் கோபுர வயலூரா
திதிக்கும் பார்வயின் மதிப்பு உண்டாகிய திரு செங்கோடு உறை பெருமாளே

மேல்

#591
துஞ்சு கோட்டி சுழல் கண் காட்டி கொங்கை நோக்க பலர்க்கும் காட்டி
கொண்டு அணாப்பி துலக்கம் சீர்த்து திரிமானார்
தொண்டை வாய் பொன் கருப்பஞ்சாற்றை தந்து சேர்த்து கலக்கும் தூர்த்த
துன்ப வாழ்க்கை தொழில் பண்டு ஆட்டத்து உழலாதே
கஞ்சம் வாய்த்திட்ட அவர்க்கும் கூட்டி கன்று மேய்த்திட்ட அவர்க்கும் கூற்றை
கன்ற மாய்த்திட்ட அவர்க்கும் தோற்ற கிடையா நீ
கண்டு வேட்டு பொருள் கொண்டாட்டத்து இன்ப வாக்யத்து எனக்கும் கேட்க
தந்து காத்து திரு கண் சாத்த பெறுவேனோ
வஞ்சமாய் புக்கு ஒளிக்கும் சூல் கை துன்று சூர் பொட்டு எழ சென்று ஓட்டி
பண்டு வாள்குள் களிக்கும் தோள் கொத்து உடையோனே
வண்டு பாட்டுற்று இசைக்கும் தோட்ட தண் குரா பொன்பு உர கும்பு ஏற்றி
தொண்டர் கூட்டத்து இருக்கும் தோற்றத்து இளையோனே
கொஞ்சு வார்த்தை கிளி தண் சேல் கண் குன்ற வேட்டிச்சியை கண் காட்டி
கொண்டு வேட்டு புனம் பைம் காட்டில் புணர்வோனே
கொங்கு உலாத்தி தழைக்கும் கா பொன் கொண்டல் ஆர்த்து சிறக்கும் காட்சி
கொங்கு நாட்டு திரு செங்கோட்டு பெருமாளே

மேல்

#592
நீல மஞ்சான குழல் மாலை வண்டோடு கதி நீடு பந்தாடு விழியார் பளிங்கான நகை
நீல பொன் சாப நுதல் ஆசையின் தோடு அசையு நீள் முகம் தாமரையினார் மொழிந்து ஆர மொழி
நேர் சுகம் போல கமுகான கந்தாரர் புய நேர் சுணங்கு ஆவி கிளை ஏர் சிறந்தார் மலை இரண்டு போல
நீள் இபம் கோடு இளநீர் தேன் இருந்த ஆர முலை நீடு அலங்கார சரம் ஓடு அடைந்தார் மருவி
நீள் மணம் சாறு பொழி அ வளம் போது இவையில் நீல வண்டு ஏவிய நல் காமன் அங்காரம் நிறை
நேச சந்தான அல்குல் காம பண்டார அமுதை நேரு சம்போகர் இடை நூல் ஒளிர்ந்து ஆசை உயிர் சம்பையார் அம்சாலு
பொன் தோகை அமை பாளிதம் சூழ் சரண தாள் சிலம்பு ஓலம் இடவே நடந்து ஆன நடை
சாதி சந்தான எகின மார்பர் அம் தோகை என தான் எழும் கோல விலைமாதர் இன்பு ஆர் கலவி
தாவு கொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி தான் அடைந்து ஆழும் அடியேன் இடம் சாலும் வினை அஞ்சி ஓட
தார் கடம்பு ஆடு கழல் பாத செந்தாமரைகள் தாழ் பெரும் பாதை வழியே படிந்தே வருகு
தாபம் விண்டே அமுத வாரி உண்டே பசிகள் தாபமும் தீர துகிர் போல் நிறம் காழ் கொள் உரு
சாரவும் சோதி முருகா எனும் காதல் கொடு தான் இருந்து ஓத இரு ஓர் அகம் பேறு உறுக விஞ்சை தாராய்
சூலி எம் தாய் கவுரி மோக சங்காரி குழை தோடு கொண்டு ஆடு சிவகாம சுந்தாரி நல
தூள் அணைந்து ஆளி நிருவாணி அம் காளி கலை தோகை செந்தாமரையின் மாது நின்றே துதி செய்
தூய அம்பா கழை கொள் தோளி பங்காள க்ருபை தோய் பரன் சேய் எனவுமே பெரும் பார் புகழும் விந்தையோனே
சூர சம்கார சுரர் லோக பங்கா அறுவர் தோகை மைந்தா குமர வேள் கடம்பு ஆர தொடை
தோள கண்டா பரம தேசி கந்தா அமரர் தோகை பங்கா எனவே வேதாகமம் சூழ் சுருதி
தோதகம் பாட மலை ஏழு துண்டாய் எழுவர் சோரி கொண்டு ஆறு வர வேல் எறிந்தே நடனமும் கொள் வேலா
மாலியன் பாற ஒரு ஆடகன் சாக மிகு வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும்
ஆழியும் கோர வலி இராவணன் பாற விடும் ஆசுகன் கோல முகிலோனும் உகந்து ஓதி இடையர்
மாதுடன் கூடி விளையாடு சம்போக திரு மார்பகன் காண முடியோன் அணங்கான மதி ஒன்றும் ஆனை
மார்புடன் கோடு தன பாரமும் சேர இடை வார் துவண்டு ஆட முகமோடு உகந்து ஈர ரச
வாய் இதம் கோதி மணி நூபுரம் பாட மண ஆசை கொண்டாடும் மயிலாளி துங்கா குறவி
மாது பங்கா மறை குலாவு செம் கோடை நகர் வாழ வந்தாய் கரிய மால் அயன் தேவர் புகழ் தம்பிரானே

மேல்

#593
பொன்றலை பொய்க்கும் பிறப்பை தும்பு அறுத்திட்டு இன்று நிற்க புந்தியில் சற்றும் குறிக்கைக்கு அறியாமே
பொங்கி முக்கி சங்கை பற்றி சிங்கி ஒத்த சங்கடத்து புண் படைத்து கஞ்ச மை கண் கொடியார் மேல்
துன்றும் இச்சை பண்டனுக்கு பண்பு அளித்து சம்ப்ரமித்து தும்பி பட்சிக்கும் பிரச செய்ப்பதி மீதே
தொண்டு பட்டு தெண்டனிட்டு கண்டு பற்ற தண்டை வர்க்க துங்க ரத்த பங்கயத்தை தருவாயே
குன்று எடுத்து பந்தடித்து கண் சிவத்து சங்கரித்து கொண்டல் ஒத்திட்டு இந்திரனுக்கு இ சுரலோகா
கொம்பு குத்தி சம்பு அழுத்தி திண் தலத்தில் தண்டு வெற்பை கொண்டு அமுக்கி சண்டை இட்டு பொரும் வேழம்
சென்று உரித்து சுந்தரிக்கு அச்சம் தவிர்த்து கண் சுகித்து சிந்தையுள் பற்று இன்றி நித்த களிகூரும்
செண்பகத்து சம்புவுக்கு தொம் பதத்து பண்பு உரைத்து செங்குவட்டில் தங்கு சொக்க பெருமாளே

மேல்

#594
மந்த கடைக்கண் காட்டுவர் கந்த குழல் பின் காட்டுவர் மஞ்சள் பிணி பொன் காட்டுவர் அநுராக
வஞ்சத்து இரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர் வண் பல் திருப்பும் காட்டுவர் தன பார
சந்த பொருப்பும் காட்டுவர் உந்தி சுழிப்பும் காட்டுவர் சங்க கழுத்தும் காட்டுவர் விரகாலே
சண்டை பிணக்கும் காட்டுவர் பண்டு இட்ட ஒடுக்கம் காட்டுவர் தங்கட்கு இரக்கம் காட்டுவது ஒழிவேனோ
பந்தித்து எருக்கம் தோட்டினை இந்து சடை கண் சூட்டு உமை பங்கில் தகப்பன் தாள் தொழு குருநாதா
பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கு எதிர்க்கும் கூட்டலர் பங்கப்பட சென்று ஓட்டிய வயலூரா
கொந்தில் புனத்தின் பாட்டு இயல் அந்த குற பெண்டு ஆட்டொடு கும்பிட்டிட கொண்டாட்டமொடு அணைவோனே
குன்றில் கடப்பம் தோட்டு அலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய கொங்கில் திரு செங்கோட்டு உறை பெருமாளே

மேல்

#595
மெய் சார்வு அற்றே பொய் சார்வு உற்றே நிச்சார் துற்ப பவ வேலை
விட்டு ஏறி போக ஒட்டாமல் தேம் மட்டே அ தத்தையர் மேலே
பிச்சாய் உச்சாகி போர் எய்த்தார் பத்தார் வில் பொன் கழல் பேணி
பிற்பால் பட்டே நல் பால் பெற்றார் முன் பாலை கற்பகமே தான்
செ சாலி சாலத்து ஏறி சேல் உற்று ஆணித்து பொழில் ஏறும்
செ கோடை கோடுக்கே நிற்பாய் நித்தா செக்கர் கதிர் ஏனல்
மு சாலி சாலி தாள் வெற்பாள் முத்து ஆர் வெட்சி புய வேளே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#596
வருத்தம் காண நாடிய குணத்து அன்பான மாதரும் மயக்கம் பூண மோதிய துரம் ஈதே
மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய மரிக்கும் பேர்களோடு உறவு அணியாதே
பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய பிறப்பும் தீரவே உனது இரு தாளே
பெற தந்து ஆளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள் பெலத்தின் கூர்மையானது மொழிவாயே
இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல் கொடு எதிர்த்தும் சூரர் மாளவே பொரும் வேலா
இசைக்கும் தாள மேளமே தனத்தம் தான தானன என திண் கூளி கோடிகள் புடை சூழ
திருத்த அன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ் செழித்து அன்பாக வீறிய பெருவாழ்வே
திரள் சங்கு ஓடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ் தரு திரு செங்கோடு மேவிய பெருமாளே

மேல்

#597
ஆலகால பட பை மடப்பியர் ஈர வாள் அற எற்றும் விழிச்சியர் யாவராயினும் நத்தி அழைப்பவர் தெருவூடே
ஆடிஆடி நடப்பது ஓர் பிச்சியர் பேசி ஆசை கொடுத்து மருட்டிகள் ஆசை வீசி அணைக்கும் முலைச்சியர் பலரூடே
மாலை ஓதி விரித்து முடிப்பவர் சேலை தாழ நெகிழ்த்து அரை சுற்றிகள் வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் உறவாலே
மாயையூடு விழுத்தி அழுத்திகள் காம போக வினைக்குள் உனை பணி வாழ்வு இலாமல் மல சனனத்தினில் உழல்வேனோ
மேலை வானொர் உரை தசரற்கு ஒரு பாலனாகி உதித்து ஒர் முநிக்கு ஒரு வேள்வி காவல் நடத்தி அ கற்கு உரு அடியாலே
மேவியே மிதிலை சிலை செற்று மின் மாது தோள் தழுவி பதி புக்கிட வேறு தாய் அடவிக்குள் விடுத்த பின்னவனோடே
ஞால மாதொடு புக்கு அ வனத்தினில் வாழும் வாலி பட கணை தொட்டவன் நாடி ராவணனை செகுவித்தவன் மருகோனே
ஞானதேசிக சற்குரு உத்தம வேலவா நெருவை பதி வித்தக நாக மா மலை சொல்பெற நிற்பது ஒர் பெருமாளே

மேல்

#598
காலன் இடத்து அணுகாதே காசினியில் பிறவாதே
சீல அகத்திய ஞான தேன் அமுதை தருவாயே
மால் அயனுக்கு அரியோனே மாதவரை பிரியானே
நாலுமறை பொருளானே நாக கிரி பெருமாளே

மேல்

#599
தாமா தாமாலாபா லோகாதாரா தார தரணி ஈசா
தானாசாரோ பாவா பாவோ நாசா பாசத்து அபராத
யாமா யாமா தேசாரூடு ஆராயா ஆபத்து எனது ஆவி
ஆமா காவாய் தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ
காமா காமாதீனா நீள நாக வாய் காள கிரியாய்
கங்காளா லீலா பாலா நீபா காமாமோத கன மானின்
தேம் ஆர் தே மா காமீ பாகீ தேசா தேசத்தவர் ஓதும்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#600
அ துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து வளர் செய் புளகித பூதரத்து
இரு கமல கரத்து இதயம் உருகி அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து
மலர் கனி அலைத்து வரும் இடை தலத்து உரக சிகரி பகராதே
அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ
தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால்
துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை தழுவிய பனிரு தோளா
தத்து உததி துரகதத்து மிகு திதிசர் தத்து மலை அவுணர் குல நாகம்
தத்த மிசை மரகத தமனிய மயில் தத்தவிடும் அமரர் பெருமாளே

மேல்

#601
அத்த வேட்கை பற்றி நோக்க அ தத்தைமார்க்கு தமராய் அன்பு
அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற இயவோடும்
சித்தம் மீட்டு பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி திணிது ஆய
சித்ர வாக்கு பெற்று வாழ்த்தி செச்சை சாத்த பெறுவேனோ
கொத்து நூற்றுப்பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
குக்குட அத்த சர்ப்ப கோத்ர பொற்ப வேல் கை குமரேசா
தத்வம் நாற்பத்தெட்டு நாற்பத்தெட்டும் ஏற்று திடம் மேவும்
தர்க்க சாத்ர தக்க மார்க்க சத்ய வாக்ய பெருமாளே

மேல்

#602
பத்தர் கண ப்ரிய நிர்த்த நடித்திடு பட்சி நடத்திய குக பூர்வ
பச்சிம தட்சிண உத்தர திக்கு உள பத்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்த திருப்புகழை சிறிது அடியேனும்
செப்பு என வைத்து உலகில் பரவ தெரிசித்த அநுக்ரகம் மறவேனே
கத்திய தத்தை களைத்து விழ திரி கல் கவண் இட்டு எறி தினை காவல்
கற்ற குறத்தி நிறத்த கழுத்து அடி கட்டி அணைத்த பன்னிரு தோளா
சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த தகப்பன் மெச்சிட மறைநூலின்
தத்துவ தற்பரம் முற்றும் உணர்த்திய சர்ப்பகிரி சுரர் பெருமாளே

மேல்

#603
புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும்
புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெருவாழ்வு
நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான்
நித்த நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே
தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே
கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே
கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே

மேல்

#604
பொன் சித்ர பச்சை பட்டு கச்சு இட்டு கட்டி பத்ம புட்பத்துக்கு ஒப்ப கற்பித்து இளைஞோர்கள்
புள் பட்டு செப்பத்து பல் கொத்த பொன் தித்த திட்ப பொற்பில் பெற்று உக்ர சக்ர தனம் மானார்
கல் சித்த சுத்த பொய் பித்து அத்தில் புக்கு இட்டப்பட்டு கை குத்திட்டு இட்டு சுற்றித்திரியாமல்
கற்று உற்று சித்திக்கைக்கு சித்திப்ப பக்ஷத்தில் சொல் கற்பித்து ஒப்பித்து கொற்ற கழல் தாராய்
குற்சித்து கொட்டு கொட்டு துக்க அச்சத்துக்கு குக்குக்கு குக்குக்கு குக்கு குக்கு என மாறா
குட்சிக்கு பக்ஷிக்கைக்கு கக்ஷத்தில் பட்சத்து அத்த கொட்டி சுட்டி கொக்ரி குக்குட தாரி
சத்சித்து தொல் புத்தி பட்ச அத்தர்க்கு ஒப்பித்து அட்சத்து சத்தத்தை சத்தி கொச்சை பதி வாழ்வே
தக்ஷச பற்று கெர்ப்பத்தில் செல் பற்றை செற்றிட்ட உச்ச சற்ப பொற்றைக்குள் சொக்க பெருமாளே

மேல்

#605
கொடிய மறலியும் அவனது கடகமும் மடிய ஒரு தினம் இரு பதம் வழிபடு
குதலை அடியவன் நினது அருள் கொடு பொரும் அமர் காண
குறவர் மகள் புணர் புய கிரி சமுகமும் அறு முகமும் வெகு நயனமும் ரவி உமிழ்
கொடியும் அகிலமும் வெளிப்பட இரு திசை இருநாலும்
படியு நெடியன எழு புணரியும் முது திகிரி திகிரியும் வருக என வரு தகு
பவுரி வரும் ஒரு மரகத துரகத மிசை ஏறி
பழய அடியவர் உடன் இமையவர் கணம் இரு புடையும் மிகு தமிழ் கொடு மறை கொடு
பரவ வரும் அதில் அருணையில் ஒரு விசை வரவேணும்
சடிலதர விடதர பணிதர தர பரசுதர சசிதர சுசிதர வித
தமருக மிருகதர வனிதர சிரதர பார
தரணிதர தநுதர வெகு முக குல தடினிதர சிவ சுத குணதர பணி
சயில விதரண தரு புர சசி தரு மயில் வாழ்வே
நெடிய உடல் உரு இருள் எழ நிலவு எழ எயிறு சுழல் விழி தழல் எழ எழுகிரி
நெரிய அதிர் குரல் புகை எழ இடி எழ நெடு வானும்
நிலனும் வெருவர வரு நிசிசரர் தளம் நிகில சகலமும் மடிய ஒர் படை தொடு
நிருப குரு பர சுரபதி பரவிய பெருமாளே

மேல்

#606
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும் இல்லம் இது பேணி
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி முல்லை நகை மாதர்
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்று இங்ஙன் நைவது இயல்போ தான்
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி மணவாளா
பட்டம் மன்னு அ வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி மலைநாடா
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே

மேல்

#607
தொல்லை முதல் தான் என்று மெல்லி இரு பேதங்கள் சொல்லு குணம் மூ அந்தம் என ஆகி
துய்ய சதுர்வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து தொய்யும் பொருள் ஆறு அங்கம் என மேவும்
பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள் பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல் உயிருமாய் அந்தம் இல்ல சொருபாநந்த பௌவம் உறவே நின்றது அருள்வாயே
கல் உருக வேயின் கண் அல்லல் படு கோ அம் புகல் வருகவே நின்று குழல் ஊதும்
கையன் மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை கை தொழு மெய்ஞ்ஞானம் சொல் கதிர் வேலா
கொல்லை மிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று கொள்ளை கொளும் மாரன் கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா கந்த கொல்லி மலை மேல் நின்ற பெருமாளே

மேல்

#608
மாக சஞ்சார முகில் தோற்ற குழல் கொடு போக இந்திராதி சிலை தோற்ற நுதல் கொடு
மான வண்டு ஏறு கணை தோற்ற விழி கொடு கண்டு போல
மாலர் கொண்டாடு கனி தோற்ற இதழ் கொடு சோலை சென்று ஊது குயில் தோற்ற இசை கொடு
வார் பொரும் பாரமலை தோற்ற முலை கொடு மன்றுள் ஆடி
சீகரம் பேணு துடி தோற்ற இடை கொடு போக பண்டார பணி தோற்ற அரை கொடு
தேன் உகும் சீர் கதலி தோற்ற தொடை கொடு வந்து காசு
தேடுகின்றாரொடு மெய் தூர்த்தன் என உறவாடுகின்றேன் எனை மல நீக்கி ஒளி தரு
சீவன் ஒன்றான பரமார்த்த தெரிசனை வந்து தாராய்
வேகம் உண்டாகி உமை சாற்றும் அளவினில் மா மகம் கூரும் அது தீர்க்க வடிவுடை
வீரன் என்பான் ஒரு பராக்ரன் என வர அன்று சோமன்
மேனியும் தேய கதிர் தோற்ற எயிறு உக ஆன் உகும் தீ கை அற சேட்ட விதி தலை
வீழ நல் பாரதியும் மூக்கு நழுவிட வந்த மாயன்
ஏக நின்றாகி அமர் தோற்று வதறிட வேக உங்காரமோடு ஆர்க்க அலகைகள்
ஏறி வென்று ஆடுகள நீக்கி முநிவர் வந்து சேய் என்று
ஈச நண்பான புருஷார்த்த தெரிசனை தா எனும் கேள்வி நெறி கீர்த்தி மருவிய
ராச கெம்பீர வள நாட்டு மலை வளர் தம்பிரானே

மேல்

#609
சூது கொலைகாரர் ஆசை பண மாதர் தூவையர்கள் சோகை முகம் நீலர்
சூலை வலி வாதமோடு அளைவர் பாவர் தூமையர்கள் கோளர் தெருவூடே
சாதனைகள் பேசி வாரும் என நாழி தாழி விலை கூறு இது என ஓதி
சாய வெகு மாய தூளி உற ஆக தாடி இடுவோர்கள் உறவாமோ
வேத முநிவோர்கள் பாலகர்கள் மாதர் வேதியர்கள் பூசல் என ஏகி
வீறு அசுரர் பாறி வீழ அலை ஏழு வேலை அளறு ஆக விடும் வேலா
நாதரிடம் மேவு மாது சிவகாமி நாரி அபிராமி அருள் பாலா
நாரண சுவாமி ஈனும் மகளோடு ஞானமலை மேவும் பெருமாளே

மேல்

#610
மனையவள் நகைக்க ஊரில் அனைவரு நகைக்க லோக மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனம் அது சலிப்ப நாயன் உளம் அது சலிப்ப யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை
அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று
அடியனும் நினைத்து நாளும் உடல் உயிர் விடுத்தபோதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான என முரசு ஒலிப்ப வீணை தமருகம் மறை குழாமும் அலைமோத
தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு சமரிடை விடுத்த சோதி முருகோனே
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா
இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகம் இலகிய சசி பெண் மேவு பெருமாளே

மேல்

#611
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவாகமங்கள் அறியாதே
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச
நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடி வேலா
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே

மேல்

#612
கோதி முடித்து கனத்த கொண்டையர் சூது விதத்துக்கு இதத்து மங்கையர்
கூடிய அற்ப சுகத்தை நெஞ்சினில் நினையாதே
கோழை மனத்தை கெடுத்து வன் புல ஞான குணத்தை கொடுத்து நின் செயல்
கூறும் இடத்து இதத்து நின்று அருள்புரிவாயே
நாத நிலைக்குள் கருத்து உகந்து அருள் போதக மற்று எ சகத்தையும் தரு
நான்முகனுக்கு கிளத்து தந்தையின் மருகோனே
நாடும் அகத்து எற்கு இடுக்கண் வந்தது தீர் இடுதற்கு பதத்தையும் தரு
நாயகர் புத்ர குருக்கள் என்று அருள் வடி வேலா
தோதிமி தித்தி திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
தோதிமி தித்தி தனத்த தந்த தோதிமி தித்தி என் இசையோடே
சூழ நடித்து சடத்தில் நின்று உயிரானது துறத்தற்கு இரக்கமும் சுப
சோபனம் உய்க்க கருத்தும் வந்து அருள்புரிவோனே
ஓதி எழுத்துக்கு அடக்கமும் சிவ காரண பத்தர்க்கு இரக்கமும் தகு
ஓம் என எழுத்துக்கு உயிர்ப்பும் என் சுடர் ஒளியோனே
ஓதி இணர்த்தி குகைக்கு இடும் கனகாபரணத்தின் பொருள் பயன் தரு ஊதி கிரிக்குள் கருத்து உகந்து அருள் பெருமாளே

மேல்

#613
கருடன் மிசை வரு கரிய புயல் என கமல மணி என உலகோரை
கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி முதுமொழிகளை நாடி
திருடி ஒரு படி நெருடி அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி
திரியும் அவர் சில புலவர் மொழிவது சிறிதும் உணர் வகை அறியேனே
வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய
மதுரம் எனு நதி பெருகி இரு கரை வழிய வகைவகை குதி பாயும்
குருடி மலை உறை முருக குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும்
குமர குருபர திமிர தினகர குறைவில் இமையவர் பெருமாளே

மேல்

#614
எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று
இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய விழி இணை ஆடி
தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவே பறிகொளும் மானார்
சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே
சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி
தன் காதல்தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும்
சிங்கார அரி மருக பங்கேருகனும் மருள சென்றே உயும் அமரருடை சிறை மீள
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர் தொழும் தென்சேரிகிரியில் வரும் பெருமாளே

மேல்

#615
கொண்டாடி கொஞ்சு மொழி கொடு கண்டாரை சிந்து விழி கொடு கொந்து ஆர சென்ற குழல் கொடு வட மேரு
குன்றோட ஒப்பு என்ற முலை கொடு நின்று ஓலக்கம் செய் நிலை கொடு கொம்பாய் எய்ப்புண்ட இடை கொடு பலரோடும்
பண்டு ஆட சிங்கி இடும் அவர் விண்டு ஆலிக்கின்ற மயில் அன பண்பால் இட்டம் செல் மருள் அது விடுமாறு
பண்டே சொல் தந்த பழ மறை கொண்டே தர்க்கங்கள் அற உமை பங்காளர்க்கு அன்று பகர் பொருள் அருள்வாயே
வண்டு ஆட தென்றல் தடம் மிசை தண்டாது அ புண்டரிக மலர் மங்காமல் சென்று மதுவை செய் வயலூரா
வன் காள கொண்டல் வடிவு ஒரு சங்க்ராம கஞ்சன் விழ உதை மன்றாடிக்கு அன்பு தரு திரு மருகோனே
திண்டாடி சிந்து நிசிசரர் தொண்டு ஆட கண்ட அமர் பொரு செம் சேவல் செம் கை உடைய சண்முக தேவே
சிங்கார செம்பொன் மதிள் அது அலங்கார சந்த்ர கலை தவழ் தென்சேரிகுன்றில் இனிது உறை பெருமாளே

மேல்

#616
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர் அந்தி பகல் அற்ற நினைவு அருள்வாயே
அம் புவி தனக்கு உள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே
தங்கிய தவத்து உணர்வு தந்து அடிமை முத்தி பெற சந்திர வெளிக்கு வழி அருள்வாயே
தண்டிகை கன பவுசு எண் திசை மதிக்க வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே
மண்டலிகர் ரப்பகலும் வந்து சுபரட்சை புரி வந்து அணைய புத்தியினை அருள்வாயே
கொங்கில் உயிர் பெற்று வார் தென்கரையில் அப்பர் அருள் கொண்டு உடல் உற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கு இளைய கந்தன் என வெற்றி பெறு கொங்கணகிரிக்குள் வளர் பெருமாளே

மேல்

#617
பாட்டில் உருகிலை கேட்டும் உருகிலை கூற்று வரு வழி பார்த்தும் உருகிலை
பாட்டை அநுதினம் ஏற்றும் அறிகிலை தினமானம்
பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை நாக்கின் நுனி கொடு ஏத்த அறிகிலை
பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது நல் வழி போக
மாட்டம் எனுகிறை கூட்டை விடுகிலை ஏட்டின் விதி வழி ஓட்டம் அறிகிலை
பார்த்தும் இனி ஒரு வார்த்தை அறைகுவன் இது கேளாய்
வாக்கும் உனது உள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் அடியார்க்கும் எளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை மருவாயோ
ஆட்டி வடவரை வாட்டி அரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி மறலியின்
ஆட்டம் அற சரண் நீட்டி மதன் உடல் திருநீறாய்
ஆக்கி மகம் அதை வீட்டில் ஒருவனை ஆட்டின் முகம் அதை நாட்டி மறை மகளார்க்கும்
வடு உற வாட்டும் உமையவன் அருள் பாலா
சீட்டை எழுதி வையாற்றில் எதிருற ஓட்டி அழல் பசை காட்டி சமணரை
சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா
தீர்த்த எனது அகம் மேட்டை உடன் நினை ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசி மகள் பெருமாளே

மேல்

#618
அரிவையர்கள் தொடரும் இன்பத்து உலகு நெறி மிக மருண்டிட்டு அசடன் என மனது நொந்திட்டு அயராமல்
அநுதினமும் உவகை மிஞ்ச சுக நெறியை விழைவு கொண்டிட்டு அவ நெறியின் விழையும் ஒன்றை தவிர்வேனோ
பரிதி மதி நிறைய நின்ற அஃது என ஒளிரும் உனது துங்க படிவ முகம் அவைகள் கண்டுற்று அக மேவும்
படர்கள் முழுவதும் அகன்று உள் பரிவினொடு துதி புகன்று எல் பத உகளம் மிசை வணங்கற்கு அருள்வாயோ
செரு விலகும் அசுரர் மங்க குல கிரிகள் நடுநடுங்க சிலுசிலு என வலை குலுங்க திடமான
செயம் உதவும் மலர் பொரும் கைத்தலம் இலகும் அயில் கொளும் சத்தியை விடுதல் புரியும் முன்பில் குழகோனே
கருணை பொழி கிருபை முந்த பரிவினொடு கவுரி கொஞ்ச கலகல என வரு கடம்ப திரு மார்பா
கரி முகவர் தமையன் என்று உற்றிடும் இளைய குமர பண்பில் கநக கரி இலகு கந்த பெருமாளே

மேல்

#619
மருவும் மலர் வாசம் உறு குழலினாலும் வரி விழியினாலும் மதியாலும்
மலையின் நிகரான இள முலைகளாலும் மயல்கள் தரு மாதர் வகையாலும்
கறுது பொருளாலும் மனைவி மகவான கடல் அலையில் மூழ்கி அலைவேனோ
கமல பத வாழ்வு தர மயிலின் மீது கருணையுடனே முன் வரவேணும்
அரு மறைகள் ஓது பிரமன் முதல் மாலும் அமரர் முநி ராசர் தொழுவோனே
அகில தலம் ஓது நதி மருவு சோலை அழகு பெறு போக வளநாடா
பொருத வரு சூரர் கிரி உருவ வாரி புனல் சுவற வேலை எறிவோனே
புகல் அரியதான தமிழ் முநிவர் ஓது புகழி மலை மேவு பெருமாளே

மேல்

#620
மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி
வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி
ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ
பாந்தள் முடி மீது தாந்ததிமி தோதி தாஞ்செகண சேசெ என ஓசை
பாங்குபெறு தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே
பூம் தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை
பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே

மேல்

#621
அனங்கன் அம்பு ஒன்று அஞ்சும் தங்கும் கண்களாலே
அடர்ந்து எழும் பொன் குன்றம் கும்பம் கொங்கையாலே
முனிந்து மன்றம் கண்டும் தண்டும் பெண்களாலே
முடங்கும் என்றன் தொண்டும் கண்டு இன்று இன்புறாதோ
தெனந்தெ னந்தெம் தெந்தெம் தெந்தெம் தெந்தெனானா
செறிந்து அடர்ந்து சென்றும் பண்பின் தும்பி பாட
குனித்து இலங்கும் கொம்பும் கொந்தும் துன்று சோலை
கொழும் கொடும் திண் குன்றம் தங்கும் தம்பிரானே

மேல்

#622
எதிர் பொருது கவி கடின கச்சு உகளும் பொருது குத்தி திறந்து மலை
இவைகள் என வதி ம்ருகமத பட்டு நின்று ஒழுகி முத்து செறிந்த வடம்
எனும் நிகளம் அவை அற உதைத்திட்டு அணைந்து உகிரினில் கொத்தும் அங்குசம் நெருங்கு பாகர்
எதிர் பரவ உரம் மிசை துகைத்து கிடந்து உடல் பதைக்க அடிந்து மிக
இரதிபதி மணி மவுலி எற்றி த்ரி அம்பகனும் உட்க திரண்டு இளகி
இளைஞர் உயிர் கவளம் என அட்டித்து அசைந்து எதிர் புடைத்து சினந்து பொரு கொங்கை யானை
பொதுவில் விலையிடு மகளிர் பத்ம கரம் தழுவி ஒக்க துவண்டு அமளி
புக இணைய வரி பரவும் நச்சு கரும் கயல்கள் செக்கச்சிவந்து அமுது
பொதியும் மொழி பதற அளக கற்றையும் குலைய முத்தத்துடன் கருணை தந்து மேல் வீழ்
புதுமை தரு கலவி வலையில் பட்டு அழுந்தி உயிர் தட்டுப்படும் திமிர
புணரி உததியில் மறுகி மட்டற்ற இந்திரிய சட்டை குரம்பை அழி
பொழுதினிலும் அருள் முருக சுத்த கொடுங்கிரியில் நிர்த்த சரண்களை மறந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு என்று தாளம்
முதிர் திமிலை கரடிகை இடக்கை கொடும் துடி உடுக்கை பெரும் பதலை
முழவு பல மொகுமொகு என ஒத்தி கொடும் பிரமகத்திகளும் பரவ
முகடு புகு வெகு கொடிகள் பக்கத்து எழுந்து அலைய மிக்க கவந்த நிரை தங்கி ஆட
முது கழுகு கொடி கருடன் ஒக்க திரண்டு வர உக்ர பெரும் குருதி
முழுகி எழு பயிரவர் நடித்திட்டு அகண்டமும் வெடிக்க துணிந்து அதிர
முடுகி வரு நிசிசரரை முட்டி சிரம் திருகி வெட்டி களம் பொருத தம்பிரானே

மேல்

#623
அழகு எறிந்த சந்த்ர முக வடம் கலந்த அமுத புஞ்ச இன் சொல் மொழியாலே
அடி துவண்ட தண்டை கலில் எனும் சிலம்பொடு அணி சதங்கை கொஞ்சு நடையாலே
சுழி எறிந்து நெஞ்சு சுழல நஞ்சு அணைந்து தொடும் இரண்டு கண்கள் அதனாலே
துணை நெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள் துயரை என்று ஒழிந்து விடுவேனோ
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து இறைஞ்சல்புரி போதே
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற கொண்டல் மருகோனே
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி நின்ற குருநாதா
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த பெருமாளே

மேல்

#624
ககுப நிலை குலைய இகல் மிகு பகடின் வலி உடைய தந்தத்தினை தடிவ தொந்த திரத்தை உள
அகில மறை புகழ் பரமர் ஞெகிழி கலகலகல எனும் அம் பொன் பதத்தர் தநு அம் பொன் பொருப்பு அடர்வ
களப பரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி அஞ்ச புடைத்து எழு வஞ்ச கருத்து மதன் அபிஷேகம்
கடிவ படு கொலை இடுவ கொடிய முக படம் அணிவ இன்ப சுடர் கனக கும்ப தர செருவ
பிருதில் புளகித சுகமும் மிருதுளமும் வளர் இளைஞர் புந்திக்கு இடர் தருவ பந்தித்த கச்சு அடர்வ
கயல் மகர நிகர மிக வியன் மருவு நதியில் முதிர் சங்கு இப்பி முத்து அணிவ பொங்கி கனத்து ஒளிர்வ முலை மாதர்
வகுள மலர் குவளை இதழ் தரு மணமும் மிருகமதம் ஒன்றி கறுத்து முகில் வென்றிட்டு நெய்த்த குழல்
அசைய ருசி அமுர்த க்ருத வசிய மொழி மயில் குயில் எனும் புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய
வரு மறலி அரணமொடு முடுகு சமர் விழி இணைகள் கன்றி சிவக்க மகிழ் நன்றி சமத்து நக நுதி ரேகை
வகைவகை மெயுற வளைகள் கழல இடை துவள இதழ் உண்டு உள் ப்ரமிக்க நசை கொண்டு உற்று அணைத்து அவதி
செறி கலவி வலையில் எனது அறிவுடைய கலை படுதல் உந்தி பிறப்பு அற நினைந்திட்டு இட்டம் உற்று உன் அடி
வயலி நகர் முருக செரு உயல் பனிரு கர குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப அருளாதோ
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன தனனானா
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என தாளம்
தொகுதி வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட மத்தளம் இனம் பட்ட டக்கை பறை
பதலை பல திமிலை முதல அதிர உதிர் பெரிய தலை மண்டை திரள் பருகு சண்டை திரள் கழுகு
துடர் நிபிட கருடன் அடர்தர கரடம் மொகுமொகு என வந்துற்றிட குடர் நிணம் துற்று இசைத்து அதிர முது பேய்கள்
சுனகன் நரி நெறுநெறு என இனிது இனிது தின வினை செய் வெம் குக்குடத்த கொடி துங்கு குகுக்குகு என
வடு அன இடு திசை பரவி நடனமிட அடல் இரவி திங்கள் ப்ரபை கதிர்கள் மங்க ப்ரசித்த குல
துரக கஜ ரத கடக முரண் அரண நிருதர் விறல் மிண்டை குலைத்து அமர் செய்து அண்டர்க்கு உரத்தை அருள் பெருமாளே

மேல்

#625
கடின தட கும்ப நேர் என வளரும் இரு கொங்கை மேல் விழு கலவி தருகின்ற மாதரொடு உறவாடி
கன அளக பந்தியாகிய நிழல்தனில் இருந்து தேன் உமிழ் கனி இதழை மென்று தாடனை செயலாலே
துடி இடை நுடங்க வாள் விழி குழை பொர நிரம்ப மூடிய துகில் நெகிழ வண்டு கோகிலம் மயில் காடை
தொனி எழ விழைந்து கொடு நகம் இசைந்து தோள் மிசை துயில அவச இன்ப மேவுதல் ஒழிவேனோ
இடி முரசு அறைந்து பூசல் செய் அசுரர்கள் முறிந்து தூள் எழஎழ கடல் பயந்து கோ என அதி கோப
எம படரும் என் செய்வோம் என நடுநடு நடுங்க வேல் விடு இரண முக சண்டமாருத மயிலோனே
வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ் தட வயலி நகர் குன்ற மா நகர் உறைவோனே
வகைவகை புகழ்ந்து வாசவன் அரி பிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#626
நேசாசார ஆடம்பர மட்டைகள் பேசாதே ஏசும் கள மட்டைகள்
நீசாளோடேயும் பழகி கவர் பொருளாலே
நீயே நானே என்று ஒரு சத்தியம் வாய் கூசாது ஓதும் கபடத்திகள்
நேராலே தான் நின்று பிலுக்கிகள் எவர் மேலும்
ஆசாபாசா தொந்தரை இட்டவர் மேல் வீழ்வார் பால் சண்டிகள் கட்டழகு
ஆயே மீ தோல் எங்கும் மினுக்கிகள் வெகு மோகம்
ஆகாது ஆவேசம் தருது இப்பொழுது ஓகோ வாவா என்று பகட்டிகள்
ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவு ஆமோ
பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆஆ ஆஆ என்று குடித்து அருள்
பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது
பேழ் வாய் வேதாளம் பகடு ஐ பகு வாய் நீள் மானாளும் சரளத்தோடு
பேய் ஆனாள் போர் வென்று எதிரிட்டவன் மருகோனே
மாசு ஊடாடும் பகையை பகை சூராளோடே வன் செருவை செறு
மா சூரா பார் எங்கும் அருள் பொலி முருகோனே
வான் நாடு ஏழ் நாடும் புகழ் பெற்றிடு தேன் ஆறு சூழ் துங்க மலை பதி
மாயூரா வாழ் குன்றை தழைத்து அருள் பெருமாளே

மேல்

#627
பிறர் புகழ் இன் சொல் பயிலும் இளந்தை பருவ மதன் கை சிலையாலே
பிறவி தரும் சிக்கு அது பெருகும் பொய் பெரு வழி சென்று அ குணம் மேவி
சிறுமை பொருந்தி பெருமை முடங்கி செயலும் அழிந்து அற்பம் அது ஆன
தெரிவையர்தங்கள் கயலை விரும்பி சிலசில பங்கப்படலாமோ
கெறு வித வஞ்ச கபடமொடு எண் திக்கிலும் எதிர் சண்டைக்கு எழு சூரன்
கிளையுடன் மங்க தலை முடி சிந்த கிழி பட துன்றி பொருதோனே
குறுமுநி இன்ப பொருள் பெற அன்று உற்பன மநுவும் சொல் குருநாதா
குலகிரி துங்க கிரி உயர் குன்றக்குடி வளர் கந்த பெருமாளே

மேல்

#628
தவள மதியம் எறிக்கும் தணலாலே சரச மதனன் விடுக்கும் கணையாலே
கவன மிகவும் உரைக்கும் குயிலாலே கருதி மிகவு மயக்கம் படவோ நான்
பவள நிகரும் இதழ் பை குற மானின் பரிய வரையை நிகர்க்கும் தனம் மேவும்
திவளு மணிகள் கிடக்கும் திரு மார்பா திகழு மயிலின் மலைக்கண் பெருமாளே

மேல்

#629
நாம் மேவு குயிலாலும் மா மாரன் அயிலாலு நாள்தோறும் மதி காயும் வெயிலாலும்
நார் மாதர் வசையாலும் வேய் ஊதும் இசையாலும் நாடு ஆசை தரு மோக வலையூடே
ஏமாறி முழு நாளும் மாலாகி விருதாவிலே வாரும் விழி மாதர் துயரூடே
ஏகாமல் அழியாத மேலான பதம் மீதில் ஏகீ உனுடன் மேவ அருள்தாராய்
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி விளையாடும் ஒரு போதில்
தாயாக வரு சோதை காணாது களவாடு தாமோதரன் முராரி மருகோனே
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது மாலாகி விளையாடும் புயல் வீரா
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் மாயூரகிரி மேவும் பெருமாளே

மேல்

#630
மை கண் இக்கன் வாளி போல உள் களத்தை மாறி நாடி மட்டி முற்ற கோதை போத முடி சூடி
மத்தகத்தில் நீடு கோடு வைத்தது ஒத்து இன் மார்பினூடு வட்டம் இட்ட வார் உலாவு முலை மீதே
இக்கு வைக்கும் ஆடை வீழ வெட்கி இயக்கமான பேரை எத்தி முத்தம் ஆடும் வாயில் இசை பேசி
எட்டு துட்ட மாதர் பாயல் இச்சையுற்று என் ஆகம் ஆவி எய்த்து நித்தம் மான ஈனம் உறலாமோ
துர்க்கை பக்க சூலி காளி செக்கை புக்க தாள ஓசை தொக்க திக்க தோத தீத என ஓத
சுற்றி வெற்றியோடு தாள்கள் சுத்த நிர்த்தம் ஆடும் ஆதி சொற்கு நிற்கும் மாறுதாரம் மொழிவோனே
திக்கு மிக்க வானின் ஊடு புக்க விக்கம் மூடு சூரர் திக்க முட்டி ஆடு தீர வடி வேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதினோடு செப்பு வெற்பில் சேய் அதான பெருமாளே

மேல்

#631
வெடித்த வார் குழல் விரித்து வேல் விழி விழித்து மேகலை பதித்து வார் தொடு
மிகுத்த மா முலை அசைத்து நூலின் மருங்கில் ஆடை
மினுக்கி ஓலைகள் பிலுக்கியே வளை துலக்கியே விள நகைத்து கீழ் விழி
மிரட்டி யாரையும் அழைத்து மால் கொடு தந்த வாய் நீர்
குடித்து நாய் என முடக்கும் ஏல் பிணி அடுத்த உபாதிகள் படுத்த தாய் தமர்
குலத்தர் யாவரும் நகைக்கவே உடல் மங்குவேனை
குறித்து நீ அருகு அழைத்து மாதவர் கணத்தின் மேவு என அளித்து வேல் மயில்
கொடுத்து வேதமும் ஒருத்தனாம் என சிந்தை கூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொடோ என திகுத்த தீதிகு திகுர்த்ததா என
உடுக்கை பேரிகை தவில் குழாமும் இரங்கு போரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மா கரி துடிப்ப நீள் கடல் எரித்து சூர் மலை
உடைத்து நீதிகள் பரப்பியே அவர் உம்பராரை
அடைத்த மா சிறை விடுத்த வான் உலகு அளிக்கும் ஆயிரம் திரு கணான் அரசு
அளித்து நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா
அளித்த தாதையும் மிகுத்த மாமனும் அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ்
அகத்ய மா முநி பொருப்பின் மேவிய தம்பிரானே

மேல்

#632
குதலை மொழியினார் நிதி கொள்வார் அணி முலையை விலை செய்வார் தமக்கு மா மயல்
கொடிது கொடிது அதால் வருத்தமாய் உறு துயராலே
மதலை மறுகி வாலிபத்திலே வெகு பதகர் கொடியவாள் இடத்திலே மிக
வறுமை புகல்வதே எனக்குமோ இனி முடியாதே
முதல வரி விலோடு எதிர்த்த சூர் உடல் மடிய அயிலையே விடுத்தவா கரு
முகிலை அனையதா நிறத்த மால் திரு மருகோனே
கதலி கமுகு சூழ் வயற்குளே அளி இசையை முரல மா அறத்தில் மீறிய
கழுகுமலை மகா நகர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#633
முலையை மறைத்து திறப்பர் ஆடையை நெகிழ உடுத்து படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்தி கொடுப்பர் பூ மலர் அணை மீதே
அலை குலைய கொட்டு அணைப்பர் ஆடவர் மன வலியை தட்டு அழிப்பர் மால் பெரிது
அவர் பொருளை பறிப்பர் வேசிகள் உறவாமோ
தலை முடி பத்து தெறித்து ராவணன் உடல் தொளை பட்டு துடிக்கவே ஒரு
தநுவை வளைத்து தொடுத்த வாளியன் மருகோனே
கலை மதி அப்பு தரித்த வேணியர் உதவிய வெற்றி திரு கை வேலவ
கழுகுமலைக்குள் சிறக்க மேவிய பெருமாளே

மேல்

#634
கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் ஏந்து குவடு குழையும்படி காதல்
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவும் இனிய தேங்கு கலவி அமுது உண்டு இயல் மாதர்
வாங்கு பகழி விழியை மோந்து பகலும் இரவும் வாய்ந்த துயிலை மிகவும் தணியாத
வாஞ்சை உடைய அடிமை நீண்ட பிறவி அலையை நீந்தி அமல அடி வந்து அடைவேனோ
ஓங்கல் அனைய பெரிய சோங்கு தகர் அ மகரம் ஓங்கு உததியின் முழுகும் பொரு சூரும்
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில் ஊர்ந்து மயில் அது உலவும் தனி வேலா
வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக வேங்கை வடிவு மருவும் குமரேசா
வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே

மேல்

#635
அல்லில் நேரு மின் அது தானும் அல்லதாகிய உடல் மாயை
கல்லில் நேர் அ வழிதோறும் கையும் நானும் உலையலாமோ
சொல்லி நேர் படு முது சூரர் தொய்ய ஊர் கெட விடும் வேலா
வல்லிமார் இரு புறமாக வள்ளியூர் உறை பெருமாளே

மேல்

#636
திருமகள் உலாவும் இரு புய முராரி திரு மருக நாம பெருமாள் காண்
செக தலமும் வானும் மிகுதி பெறு பாடல் தெரிதரு குமார பெருமாள் காண்
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும் மரகத மயூர பெருமாள் காண்
மணி தரளம் வீசி அணி அருவி சூழ மருவு கதிர்காம பெருமாள் காண்
அரு வரைகள் நீறுபட அசுரர் மாள அமர் பொருத வீர பெருமாள் காண்
அரவு பிறை வாரி விரவு சடை வேணி அமலர் குருநாத பெருமாள் காண்
இருவினை இலாத தருவினை விடாத இமையவர் குல ஈச பெருமாள் காண்
இலகு சிலை வேடர் கொடியின் அதி பார இரு தன விநோத பெருமாளே

மேல்

#637
அலகின்மாறு மாறாத கலதி பூத வேதாளி அடைவு இல் ஞாளி கோமாளி அறம் ஈயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ் மாதர் அருள் இலாத தோள் தோய மருள் ஆகி
பல கலாகரா மேரு மலை கராசலா வீசு பருவ மேகமே தாரு என யாதும்
பரிவுறாத மா பாதர் வரிசை பாடி ஓயாத பரிசில் தேடி மாயாதபடி பாராய்
இலகு வேலை நீள் வாடை எரி கொள் வேலை மா சூரில் எறியும் வேலை மாறாத திறல் வீரா
இமய மாது பாகீரதி நதி பாலகா சாரல் இறைவி கானம் மால் வேடர் சுதை பாகா
கலக வாரி போல் மோதி வட ஐ ஆறு சூழ் சீத கதிர்காமம் மூதூரில் இளையோனே
கனக நாடு வீடு ஆய கடவுள் யானை வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#638
உடுக்க துகில் வேணும் நீள் பசி அவிக்க கன பானம் வேணும் நல் ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை
ஒழிக்க பரிகாரம் வேணும் உள் இருக்க சிறு நாரி வேணும் ஓர் படுக்க தனி வீடு வேணும் இ வகை யாவும்
கிடைத்து க்ருஹவாசியாகி அ மயக்க கடல் ஆடி நீடிய கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம்
க்ருபை சித்தமும் ஞான போதமும் அழைத்து தரவேணும் ஊழ் பவ கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே
குடக்கு சில தூதர் தேடுக வடக்கு சில தூதர் நாடுக குணுக்கு சில தூதர் தேடுக என மேவி
குறிப்பில் குறி காணும் மாருதி இனி தெற்கு ஒரு தூது போவது குறிப்பில் குறி போனபோதிலும் வரலாமோ
அடி குத்திரகாரர் ஆகிய அரக்கர்க்கு இளையாத தீரனும் மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று
அருள் பொன் திரு ஆழி மோதிரம் அளித்து உற்றவர் மேல் மனோகரம் அளித்து கதிர்காமம் மேவிய பெருமாளே

மேல்

#639
எதிர் இலாத பத்திதனை மேவி இனிய தாள் நினைப்பை இருபோதும்
இதய வாரிதிக்குள் உறவாகி எனது உளே சிறக்க அருள்வாயே
கதிரகாம வெற்பில் உறைவோனே கனக மேரு ஒத்த புய வீரா
மதுர வாணி உற்ற கழலோனே வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே

மேல்

#640
கடகட கருவிகள் தப வகிர் அதிர் கதிர் காம தரங்கம் அலை வீரா
கன கத நக குலி புணர் இத குண குக காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட
வட சிகரி தவிடுபட நடமிடும் மாவில் புகும் கந்த வழாது
வழிவழி தமர் என வழிபடுகிலன் என் அவா விக்கினம் பொன்றிடுமோ தான்
அடவி இருடி அபிநவ குமரி அடிமையாய் அப்புனம் சென்று அயர்வோனே
அவசமுடன் அ ததி திரிதரு கவி ஆள புயம் கொண்டு அருள்வோனே
இடம் ஒரு மரகத மயில் மிசை வடிவு உள ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே
இதம் மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே

மேல்

#641
சமர முக வேல் ஒத்த விழி புரள வார் இட்ட தனம் அசைய வீதிக்குள் மயில் போல் உலாவியே
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே
உமது அடி உனாருக்கும் அனுமரண மாயைக்கும் உரியவர் மகா தத்தை எனும் மாய மாதரார்
ஒளிர் அமளி பீடத்தில் அமடு படுவேனுக்கும் உனது அருள் க்ருபா சித்தம் அருள்கூரவேணுமே
இம கிரி குமாரத்தி அநுபவை பராசத்தி எழுத அரிய காயத்ரி உமையாள் குமாரனே
எயினர் மட மானுக்கு மடல் எழுதி மோகித்து இதண் அருகு சேவிக்கும் முருகா விசாகனே
அமரர் சிறை மீள்விக்க அமர் செய்து ப்ரதாபிக்கும் அதி கவித சாமர்த்ய கவி ராஜராஜனே
அழுது உலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த அரிய கதிர்காமத்தில் உரிய அபிராமனே

மேல்

#642
சரத்தே உதித்தார் உரத்தே குதித்தே சமர்த்தாய் எதிர்த்தே வரு சூரை
சரி போனமட்டே விடுத்தாய் அடுத்தாய் தகர்த்தாய் உடல் தான் இரு கூறா
சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய் செகுத்தாய் பல தார் விருதாக
சிறை சேவல் பெற்றாய் வலக்காரம் உற்றாய் திரு தாமரை தாள் அருள்வாயே
புரத்தார் வரத்தார் சரம் சேகரத்தார் பொரத்தான் எதிர்த்தே வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதல் பார்வையிலே பின்
கரி தோல் உரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்து ஊர் மதனாரை
கரி கோலம் இட்டார் கணுக்கு ஆன முத்தே கதிர்காமம் உற்றார் முருகோனே

மேல்

#643
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய
சமய பேதத்தினுக்கு அணுகொணா மெய்ப்பொருள் தரு பராசத்தியின் பரமான
துரிய மேல் அற்புத பரம ஞான தனி சுடர் வியாபித்த நல் பதி நீடு
துகள் இல் சாயுச்சிய கதியை ஈறு அற்ற சொல் சுக சொரூபத்தை உற்று அடைவேனோ
புரிசை சூழ் செய்ப்பதிக்கு உரிய சாமர்த்ய சத்புருஷ வீரத்து விக்ரம சூரன்
புரள வேல் தொட்ட கை குமர மேன்மை திரு புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே
கரிய ஊக திரள் பலவின் மீதில் சுளை கனிகள் பீறி புசித்து அமராடி
கதலி சூதத்தினில் பயிலும் ஈழத்தினில் கதிரகாம கிரி பெருமாளே

மேல்

#644
பாரவித முத்த படீர புளக பொன் பயோதர நெருக்குற்ற இடையாலே
பாகு அளவு தித்திக்க கீத மொழியில் புட்ப பாண விழியில் பொத்திவிடும் மாதர்
கார் அணி குழல் கற்றை மேல் மகரம் ஒப்பித்த காதில் முக வட்டத்தில் அதி மோக
காமுகன் அகப்பட்ட ஆசையை மறப்பித்த கால்களை மறக்கைக்கும் வருமோ தான்
தேரில் ரவி உட்கி புகா முது புரத்தில் தெசாசிரனை மர்த்தித்த அரி மாயன்
சீர் மருக அத்யுக்ர யானை படும் ரத்ந த்ரிகோண சயிலத்து உக்ர கதிர்காம
வீர புன வெற்பில் கலாபி என சிக்கு மேகலை இடை கொத்தில் இரு தாளில்
வேரி மழையில் பச்சை வேயில் அருண கற்றை வேல்களில் அகப்பட்ட பெருமாளே

மேல்

#645
மரு அறா வெற்றி மலர் தொடா வில் கை வலி செயா நிற்கும் மதனாலும்
மதில்கள் தாவுற்ற கலை படா வட்ட மதி சுடா நிற்கும் அதனாலும்
இரு கணால் முத்தம் உதிர யாமத்தின் இரவினால் நித்தம் மெலியாதே
இடருறா மெத்த மயல் கொளா நிற்கும் இவளை வாழ்விக்க வரவேணும்
கரிகள் சேர் வெற்பில் அரிய வேடிச்சி கலவி கூர் சித்ர மணி மார்பா
கனக மாணிக்க வடிவனே மிக்க கதிர்காமத்தில் உறைவோனே
முருகனே பத்தர் அருகனே முத்தி முதல்வனே பச்சை மயில் வீரா
முடுகி மேலிட்ட கொடிய சூர் கெட்டு முறிய வேல் தொட்ட பெருமாளே

மேல்

#646
மாதர் வசமுற்று உழல்வோரும் மாதவம் எணாமல் திரிவோரும்
தீது அகல ஓதி பணியாரும் தீ நரகம் மீதில் திகழ்வாரே
நாத ஒளியே நல் குண சீலா நாரியர் இருவரை புணர் வேலா
சோதி சிவஞான குமரேசா தோம் இல் கதிர்காம பெருமாளே

மேல்

#647
முதிரும் மாரவார நட்பொடு இலகு ஆர் அ ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே
முடிவிலாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கும் நிலவாலே
வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் வினை விடாத தாயருக்கும் அழியாதே
விளையும் மோக போகம் முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வரவேணும்
கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா
கயல் உலாம் விசோனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா
அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே
அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே

மேல்

#648
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதர் என்று மடி பிடியது ஆக நின்று தொடர்போது
மயல் அது பொலாத வம்பன் விரகுடையன் ஆகும் என்று வசைகளுடனே தொடர்ந்து அடைவார்கள்
கருவி அதனால் எறிந்து சதைகள்தனையே அரிந்து கரிய புனலே சொரிந்து விடவே தான்
கழு முனையிலே இரு என்று விடும் எனும் அ வேளை கண்டு கடுகி வரவேணும் எந்தன் முனமே தான்
பர கிரி உலாவு செந்தி மலையின் உடனே இடும்பன் பழனிதனிலே இருந்த குமரேசா
பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகு கோடி நின்ற பதம் அடியர் காண வந்த கதிர்காமா
அரவு பிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை அணிவர் சடையாளர் தந்த முருகோனே
அரகர சிவாய சம்பு குமர குமார நம்பும் அடியர்தம்மை ஆள வந்த பெருமாளே

மேல்

#649
தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொளு மாதர்
சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல் விரித்துமே இதழ்
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால் கொடு வழியே போய்
படுத்த பாயல் அனைத்து மா முலை பிடித்து மார்பொடு அழுத்தி வாய் இதழ்
கடித்து நாணம் அது அழித்த பாவிகள் வலையாலே
பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து வாய்களும் மலம் தின் நாய் என
பசித்து தாகமும் எடுத்திடா உயிர் உழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும் நடத்தியே ஒரு
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் மருகோனே
விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி கரத்து உலா அனல்
விழித்து காமனை எரித்த தாதையர் குருநாதா
அடுத்த ஆயிர விட பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே கவடு
அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா
அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி குறத்தி யானையொடு
அருக்கொணா மலை தருக்கு உலாவிய பெருமாளே

மேல்

#650
விலைக்கு மேனியில் அணி கோவை மேகலை தரித்த ஆடையும் மணி பூணும் ஆகவே
மினுக்கு மாதர்களிட காமம் மூழ்கியே மயல் ஊறி
மிகுத்த காமியன் என பார் உளோர் எதிர் நகைக்கவே உடல் எடுத்தே வியாகுல
வெறுப்பு அதாகியே உழைத்தே விடாய் படு கொடியேனை
கலக்கமாகவெ மல கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே தவிக்காமலே உனை
கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயும் ஒரு வாழ்வே
கதிக்கு நாதன் நி உனை தேடியே புகழ் உரைக்கு நாயேனை அருள் பார்வையாகவே
கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள்தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என முகத்து ஆறு தேசிக
வடிப்ப மாது ஒரு குற பாவையாள் மகிழ் தரு வேளே
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கோணா மலை தலத்து ஆரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவெ எடுத்த வேல் கொடு பொடி தூளதா எறி
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி பெருமாளே

மேல்

#651
தாரணிக்கு அதி பாவியாய் வெகு சூது மெத்திய மூடனாய் மன சாதனை களவாணியாய் உறும் அதி மோக
தாப மிக்கு உள வீணனாய் பொரு வேல் விழிச்சியர் ஆகு மாதர்கள் தாம் உய செயும் ஏது தேடிய நினைவாகி
பூரண சிவஞான காவியம் ஓது தற்ப உணர்வான நேயர்கள் பூசும் மெய் திருநீறு இடா இருவினையேனை
பூசி மெய் பதமான சேவடி காண வைத்து அருள் ஞானம் ஆகிய போதகத்தினையே ஏயும் மாறு அருள்புரிவாயே
வாரணத்தினையே கராவும் முனே வளைத்திடுபோது மேவிய மாயவற்கு இதமாக வீறிய மருகோனே
வாழும் முப்புர வீறதானது நீறு எழ புகையாகவே செய்த மா மதி பிறை வேணியார் அருள் புதல்வோனே
காரண குறியான நீதியர் ஆனவர்க்கு முனாகவே நெறி காவிய சிவ நூலை ஓதிய கதிர் வேலா
கானக குற மாதை மேவிய ஞான சொல் குமரா பராபர காசியில் பிரதாபமாய் உறை பெருமாளே

மேல்

#652
மங்கை கணவனும் வாழ் சிவணா மயல் பங்கப்பட மிசையே பனி போல் மதம்
வந்து உள் பெருகிட விதியானவன் அருள் மேவி
வண்டு தடிகை போல் ஆகியே நாள் பல பந்து பனை பழமோடு இளநீர் குடம்
மண்டி பலபலவாய் வினை கோலும் வழியாக
திங்கள் பது செலவே தலைகீழுற வந்து புவிதனிலே மதலாய் என
சிந்தை குழவி எனா அனை தாதையும் மருள் கூர
செம்பொன் தட முலை பால் குடி நாள் பல பண்பு தவழ் நடை போய் விதமாய் பல
சிங்கி பெரு விழியார் அவமாய் அதில் அழிவேனோ
அம் கைத்து அரி எனவே ஒரு பாலகன் இன்ப கிருபையதாய் ஒரு தூண் மிசை
அம் பல் கொடு அரியாய் இரண்யாசுரன் உடல் பீறி
அண்டர்க்கு அருள் பெருமான் முதிரா அணி சங்கு திகிரிகரோன் அரி நார
அரங்கத்து இரு அணை மேல் துயில் நாரணன் மருகோனே
கங்கை சடை முடியோன் இடம் மேவிய தங்க பவள ஒளி பால் மதி போல் முக
கங்குல் தரி குழலாள் பரமேசுரி அருள் பாலா
கந்து பரி மயில் வாகன மீது இரு கொங்கை குறமகள் ஆசையோடே மகிழ்
கங்கை பதி நதி காசியில் மேவிய பெருமாளே

மேல்

#653
வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி
நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி நானும் நைந்து விடாது அருள்புரிவாயே
மாள அன்று அமண் நீசர்கள் கழுவேற வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா
காளகண்டன் உமாபதி தரு பாலா காசி கங்கையில் மேவிய பெருமாளே

மேல்

#654
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம் சிதறி அலைந்து போவது செயல் ஆசை
மகர நெருங்க வீழ்வது மக மாய மருவி நினைந்திடா அருள்புரிவாயே
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி
ககனம் இசைந்த சூரியர் புக மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே

மேல்

#655
அரு வரை எடுத்த வீரன் நெரிபட விரல்கள் ஊணும் அரனிடம் இருக்கும் ஆயி அருள்வோனே
அலை கடல் அடைத்த ராமன் மிக மன மகிழ்ச்சிகூரும் அணி மயில் நடத்தும் ஆசை மருகோனே
பருதியின் ஒளி கண் வீறும் அறுமுக நிரைத்த தோள் பனிரு கர மிகுத்த பார முருகா நின்
பத மலர் உளத்தில் நாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவும் எனக்கு ஞானம் அருள்வாயே
சுருதிகள் உரைத்த வேதன் உரை மொழி தனக்குள் ஆதி சொலு என உரைத்த ஞான குருநாதா
சுரர் பதி தழைத்து வாழ அமர் சிறை அனைத்து மீள துணிபட அரக்கர் மாள விடும் வேலா
மரு மலர் மணக்கும் வாச நிறை தரு தருக்கள் சூழும் வயல் புடை கிடக்கு நீல மலர் வாவி
வளமுறு தடத்தினோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு பெருமாளே

மேல்

#656
அடல் அரி மகவு விதி வழி ஒழுகும் ஐவரும் மொய் குரம்பையுடன் நாளும்
அலை கடல் உலகில் அலம் வரு கலக ஐவர் தமக்கு உடைந்து தடுமாறி
இடர்படும் அடிமை உளம் உரை உடலொடு எல்லை விட ப்ரபஞ்ச மயல் தீர
எனது அற நினது கழல் பெற மவுன எல்லை குறிப்பது ஒன்று புகல்வாயே
வட மணி முலையும் அழகிய முகமும் வள்ளை என தயங்கும் இரு காதும்
மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா
விடதர் அதி குணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலை சயம்பு குருநாதா
விகசிதம் கமல பரிபுர முளரி வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#657
சிகரிகள் இடிய நட நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்
திரு முக சமுக சத தள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்
அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று
அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ
நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குருநாதா
நிரை திகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம
வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெருவாழ்வே
விகசித கமல பரிமள கமல வெள்ளி கரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#658
குவலயம் மல்கு தவலிகள் முல்லை குளிர் நகை சொல்லு முது பாகு
குழை இள வள்ளை இடை சிறு வல்லி குய முலை கொள்ளை விழை மேவி
கவலை செய் வல்ல தவலரும் உள்ள கலவியில் தெள்ளு கவி மாலை
கடிய மலர் ஐய அணிவன செய்ய கழல் இணை பைய அருள்வாயே
தவ நெறி உள்ளு சிவ முனி துள்ளு தனி உழை புள்ளி உடன் ஆடி
தரு புன வள்ளி மலை மற வள்ளி தரு தினை மெள்ள நுகர்வோனே
அவ நெறி சொல்லும் அவர் அவை கொல்லும் அழகிய வெள்ளி நகர் வாழ்வே
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே

மேல்

#659
பொருவன கள்ள இரு கயல் வள்ளை புரி குழை தள்ளி விளையாடும்
புளகித வல்லி இளகித வல்லி புரி இள முல்லை நகை மீதே
உருகிட உள்ள விரகு உடை உள்ளம் உலகு உயிர் உள்ளபொழுதே நின்று
உமை தரு செல்வன் என மிகு கல்வி உணர்வொடு சொல்ல உணராதோ
மரு அலர் வள்ளிபுரம் உள்ள வள்ளி மலை மற வள்ளி மணவாளா
வளர் புவி எல்லை அளவிடும் தொல்லை மரகத நல்ல மயில் வீரா
அரு வரை விள்ள அயில் விடு மள்ள அணி வயல் வெள்ளி நகர் வாழ்வே
அடையலர் செல்வம் அளறிடை செல்ல அமர் செய வல்ல பெருமாளே

மேல்

#660
கள்ளம் உள்ள வல்ல வல்லி கையில் அள்ளி பொருள் ஈய
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு கல்வி செல்வர் கிளை மாய
அள்ளல் துள்ளி ஐவர் செல்லும் அல்லல் சொல்ல முடியாதே
ஐயர் ஐய மெய்யர் மெய்ய ஐய செய்ய கழல் தாராய்
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு வள்ளி கிள்ளை மொழியாலே
மையல் எய்தும் ஐய செய்யில் வையில் வெள் வளைகள் ஏற
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின் வெள்ள வெள்ளிநகர் வாழ்வே
வெய்ய சைய வில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே

மேல்

#661
தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்
துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு கள்ள விழியாலும்
மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு நல்ல குழலாலும்
மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ
செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்
தெய்வ வள்ளி மையல் கொள்ளு செல்வ பிள்ளை முருகோனே
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே
வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே

மேல்

#662
இல்லை என நாணி உள்ளதில் மறாமல் எள்ளின் அளவேனும் பகிராரை
எவ்வம் என நாடி உய் வகை இலேனை எவ்வகையும் நாமம் கவியாக
சொல்ல அறியேனை எல்லை தெரியாத தொல்லை முதல் ஏது என்று உணரேனை
தொய்யும் உடல் பேணு பொய்யனை விடாது துய்ய கழல் ஆளும் திறம் ஏதோ
வல் அசுரர் மாள நல்ல சுரர் வாழ மைய வரை பாகம்பட மோது
மை உலவு சோலை செய்ய குளிர் சாரல் வள்ளி மலை வாழும் கொடி கோவே
வெல்லு மயில் ஏறு வல்ல குமரேச வெள்ளில் உடன் நீபம் புனைவோனே
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே

மேல்

#663
பை அரவு போலும் நொய்ய இடை மாதர் பைய வரு கோலம்தனை நாடி
பையல் என ஓடி மையல் மிகு மோக பவ்வம் மிசை வீழும் தனி நாயேன்
உய்ய ஒரு காலம் ஐய உபதேசம் உள் உருக நாடும்படி பேசி
உள்ளதும் இலாதும் அல்லாத அவிரோத உல்லச விநோதம் தருவாயே
வையம் முழுது ஆளும் ஐய குமரேச வள்ளி படர் கானம் புடை சூழும்
வள்ளி மலை வாழும் வள்ளி மணவாளா மை உததி ஏழும் கனல் மூள
வெய்ய நிருதேசர் சையமுடன் வீழ வெல்ல அயில் விநோதம் புரிவோனே
வெள்ளி மணி மாடம் மல்கு திரு வீதி வெள்ளிநகர் மேவும் பெருமாளே

மேல்

#664
வதன சரோருக நயன சிலீ முக வள்ளி புனத்தில் நின்று வாராய் பதி காதம் காதரை ஒன்றும் ஊரும்
வயலும் ஒரே இடை என ஒரு காவிடை வல்லபம் அற்று அழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக எம்பிரானே
இதவிய காணிவை ததை என வேடுவன் எய்திடும் எச்சில் தின்று லீலா சலம் ஆடும் தூயவன் மைந்த நாளும்
இளையவ மூதுரை மலை கிழவோன் என வெள்ளம் என கலந்து நூறாயிரம் பேதம் சாதம் ஒழிந்தவா தான்
கதை கன சாப திகிரி வளை வாளொடு கை வசிவித்த நந்த கோபால மகீபன் தேவி மகிழ்ந்து வாழ
கயிறொடு உலூகலம் உருள உலாவிய கள்வன் அற பயந்து ஆகாய கபாலம் பீற நிமிர்ந்து நீள
விதரண மாவலி வெருவ மகா விருத வெள்ள வெளுக்க நின்ற நாராயண மாமன் சேயை முனிந்த கோவே
விளை வயலூடு இடை வளை விளையாடிய வெள்ளி நகர்க்கு அமர்ந்த வேலாயுத மேவும் தேவர்கள் தம்பிரானே

மேல்

#665
நசையொடு தோலும் தசை துறு நீரும் நடுநடுவே என்பு உறு கீலும்
நலமுறு வேய் ஒன்றிட இரு கால் நன்றுற நடை ஆரும் குடிலோடே
விசையுறு காலம் புலன் நெறியே வெம் கனல் உயிர் வேழம் திரியாதே
விழும் அடியார் முன் பழுது அற வேள் கந்தனும் என ஓதும் விறல் தாராய்
இசையுறவே அன்று அசைவு அற ஊதும் எழில் அரி வேழம் எனை ஆள் என்று
இடர் கொடு மூலம் தொடர்பு உடன் ஓதும் இடம் இமையா முன் வரும் மாயன்
திசைமுகனாரும் திசை புவி வானும் திரிதர வாழும் சிவன் மூதூர்
தெரிவையர் தாம் வந்து அரு நடமாடும் திருவலம் மேவும் பெருமாளே

மேல்

#666
அதிகராய் பொருள் ஈவார் நேர்படில் ரசனை காட்டிகள் ஈயார் கூடினும்
அகல ஓட்டிகள் மாயா ரூபிகள் நண்பு போலே
அசடர் ஆக்கிகள் மார் மேலே படு முலைகள் காட்டிகள் கூசாதே விழும்
அழகு காட்டிகள் ஆரோடாகிலும் அன்பு போலே
சதிர் அதாய் திரி ஓயா வேசிகள் கருணை நோக்கம் இலா மா பாவிகள்
தரும் உபேட்சை செய் தோஷா தோஷிகள் நம்பொணாத
சரச வார்த்தையினாலே வாது செய் விரகம் ஆக்கி விடா மூதேவிகள்
தகைமை நீத்து உன தாளே சேர்வதும் எந்த நாளோ
மதுரை நாட்டினிலே வாழ்வாகிய அருகர் வாக்கினிலே சார்வாகிய
வழுதி மேல் திருநீறே பூசி நிமிர்ந்து கூனும்
மருவும் ஆற்று எதிர் வீறு ஏடு ஏறிட அழகி போற்றிய மாறால் ஆகிய
மகிமையால் சமண் வேரோடே கெட வென்ற கோவே
புதிய மா கனி வீழ் தேன் ஊறல்கள் பகல் இராத்திரி ஓயா ஆலைகள்
புரள மேல் செல ஊரூர் பாய அணைந்து போதும்
புகழினால் கடல் சூழ் பார் மீதினில் அளகை போல் பல வாழ்வால் வீறிய
புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே

மேல்

#667
சேல் ஆலம் ஒன்று செம் கண் வேலாலும் வென்று மைந்தர் சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி
தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து அணைந்து தீராத துன்ப இன்பம் உறு மாதர்
கோலாகலங்கள் கண்டு மாலாகி நின்றன் அன்புகூராமல் மங்கி அங்கம் அழியாதே
கோள் கோடி பொன்ற வென்று நாள்தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு இறைஞ்ச அருள்தாராய்
மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில் ஏறி
மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க வேலால் எறிந்து குன்றை மலைவோனே
வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு வேலூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#668
ஒருவரை சிறு மனை சயன மெத்தையினில் வைத்து ஒருவரை தமது அலை கடையினில் சுழல விட்டு
ஒருவரை பரபரப்பொடு தெரு திரியவிட்டு அதனாலே
ஒருவருக்கொருவர் சக்களமையில் சருவவிட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல்புரியவிட்டு
உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செயும் மானார்
தரும் மயல் ப்ரமைதனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை
தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை
சகல துக்கமும் அற சகல சற்குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன்
சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள்தருவாயே
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு
கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி
கொடி இடை பிடி நடை குறமகள் திருவினை புணர்வோனே
கருது சட்சமயிகட்கு அமைவுற கிறியுடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட
கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே
கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்தம் உதிர கயல் குதித்து உலவு நல்
கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே

மேல்

#669
குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி முகம் மீதே
குறு வியர்வு உலாவ அமுதினின் இனிதான குதலையும் ஒரு ஆறு படவே தான்
பலவித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை மீதே
பரிவுதரும் ஆசை விட மனம் ஒவாத பதகனையும் ஆள நினைவாயே
சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழுவேற வருவோனே
கலின் வடிவமான அகலிகை பெணான கமல பத மாயன் மருகோனே
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு பெருமாளே

மேல்

#670
நிகரில் பஞ்சபூதமு நினையு நெஞ்சும் ஆவியு நெகிழ வந்து நேர்படும் அவிரோதம்
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர நிருப அம் குமார வேள் என வேதம்
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள் சமய பஞ்ச பாதகர் அறியாத
தனிமை கண்டதான கிண்கிணிய தண்டை சூழ்வன சரண புண்டரீகம் அது அருள்வாயே
மகர விம்ப சீகரம் முகர வங்க வாரிதி மறுகி வெந்து வாய் விட நெடு வான
வழி திறந்து சேனையும் எதிர் மலைந்த சூரனும் மடிய இந்திராதியர் குடி ஏற
சிகர துங்க மால் வரை தகர வென்றி வேல் விடு சிறுவ சந்த்ரசேகரர் பெருவாழ்வே
திசைதொறும் ப்ரபூபதி திசை முகன் பராவிய திரு விரிஞ்சை மேவிய பெருமாளே

மேல்

#671
பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து அணியும் உரமும் மெய் ப்ரபையும் மரு மலர்
பதமும் விரவி குக்குடமும் மயிலும் உள் பரிவாலே
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து எவரும் மகிழுற தரும நெறியில் மெய்
பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடி படையாதோ
சருவி இனிய நட்பு உறவு சொல்லி முதல் பழகும் அவர் என பதறி அருகினில்
சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்திடும் மானார்
தமது ம்ருகமத களப புளகித சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழுற
தழுவி அவசமுற்று உருகி மருள் என திரிவேனோ
கரிய நிறம் உடை கொடிய அசுரரை கெருவ மதம் ஒழித்து உடல்கள் துணிபட
கழுகு பசி கெட கடுகி அயில் விடுத்திடு தீரா
கமல அயனும் அச்சுதனும் வருணன் அக்கினியும் நமனும் அ கரியில் உறையும் மெய்
கணனும் அமரர் அத்தனையும் நிலைபெற புரிவோனே
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து
இலகு பெற நடிப்பவர் முன் அருளும் உத்தம வேளே
இசையும் அரு மறை பொருள்கள் தினம் உரைத்து அவனிதனில் எழில் கரும முனிவருக்கு
இனிய கர புரத்தில் அறுமுக பெருமாளே

மேல்

#672
மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது மலம் இது என்று போட அறியாது
மயல் கொள் இந்த வாழ்வு அமையும் எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும்
உருகி அன்பினோடு உனை நினைந்து நாளும் உலகம் என்று பேச அறியாத
உருவம் ஒன்று இலாத பருவம் வந்து சேர உபய துங்க பாதம் அருள்வாயே
அரி விரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் அடி பணிந்து பேசி கடையூடே
அருளுக என்றபோது பொருள் இது என்று காண அருளும் மைந்த ஆதி குருநாதா
திரியும் உம்பர் நீடு கிரி பிளந்து சூரர் செரு அடங்க வேலை விடுவோனே
செயல் அமைந்த வேத தொனி முழங்கு வீதி திரு விரிஞ்சை மேவு பெருமாளே

மேல்

#673
கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள்
கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே
கசிவு ஆரும் கீறுகிளால் உறு வசை காணும் காளிம வீணிகள்
களிகூரும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர்
மனம் ஏல் அம் கீல கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள்
மருள் ஆரும் காதலர் மேல் விழு மகளீர் வில்
மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ்கூரும் பாழ் மனமாம் உன
மலர் பேணும் தாள் உனவே அருள் அருளாயோ
தனதானம் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி
ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா
தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு
தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெருவாழ்வே
தினம் ஆம் அன்பா புன மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய
தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா
திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்கச நடேசுரர்
திருவாலங்காடினில் வீறிய பெருமாளே

மேல்

#674
பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்றாம் அன்று ஆர்க்கு இன்று உறுதுணை
பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே
பொங்கா வெம் கூற்றம் பொதி தரு சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய
புன் கூடு ஒன்றாய் கொண்டு உறை தரும் உயிர் கோல
நின்றான் இன்று ஏத்தும்படி நினைவும் தானும் போச்சு என்ற உயர்வு அற
நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழா முன்
நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட
நின் தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே
குன்றால் விண் தாழ்க்கும் குடை கொடு கன்று ஆ முன் காத்தும் குவலயம்
உண்டார் கொண்டாட்டம் பெருகிய மருகோனே
கொந்து ஆர் பைம் தார் திண் குய குற மின் தாள் சிந்தா சிந்தையில் மயல்
கொண்டே சென்று ஆட்கொண்டு அருள் என மொழிவோனே
அன்று ஆலங்காட்டு அண்டரும் உய நின்று ஆடும் கூத்தன் திரு அருள்
அங்கு ஆகும் பாட்டின் பயனினை அருள் வாழ்வே
அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே

மேல்

#675
புவி புனல் காலும் காட்டி சிகியொடு வானும் சேர்த்தி புது மனம் மானும் பூட்டி இடையூடே
பொறி புலன் ஈரைந்து ஆக்கி கருவிகள் நாலும் காட்டி புகல் வழி நாலைந்து ஆக்கி வரு காயம்
பவ வினை நூறும் காட்டி சுவ மதிதானும் சூட்டி பசு பதி பாசம் காட்டி புலம் மாய
படி மிசை போ என்று ஓட்டி அடிமையை நீ வந்து ஏத்தி பரகதிதானும் காட்டி அருள்வாயே
சிவமய ஞானம் கேட்க தவம் முநிவோரும் பார்க்க திரு நடம் ஆடும் கூத்தர் முருகோனே
திரு வளர் மார்பன் போற்ற திசைமுகன் நாளும் போற்ற ஜெகமொடு வானம் காக்க மயில் ஏறி
குவடொடு சூரன் தோற்க எழு கடல் சூதம் தாக்கி குதர் வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா
குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங்காட்டில் குறமகள் பாதம் போற்றும் பெருமாளே

மேல்

#676
வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம்
மகளொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போம் முன்
படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து அடியேனை
பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட்கொண்டு அருள்வாயே
முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே
முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல்கூர்வாய்
இடி என வேகம் காட்டி நெடி தரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி
இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே

மேல்

#677
தவர் வாள் தோமர சூலம் தரியா காதிய சூரும் தணியா சாகரம் ஏழும் கரி ஏழும்
சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு நீலம் தரி கூத்தாடிய மாவும் தினை காவல்
துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும் துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே
துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள்பாலும் தொலையா பாடலை யானும் புகல்வேனோ
பவ மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண நாறும் பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்
படியா பாதகர் பாய் அன்றி உடா பேதைகள் கேசம் பறி கோப்பாளிகள் யாரும் கழுவேற
சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண் திருநீற்றால் அமராடும் சிறியோனே
செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும் திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே

மேல்

#678
கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ஒரு கோடி
காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் காட்டத்தில் நீள் எரியில் உற வானில்
கூர்ப்பித்த சூலன் அதனால் குத்தி ஆவி கொடு போ துக்கமான குறை உடையேனை
கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே
போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போய் திக்கெலாம் மடிய வடி வேலால்
பூ சித்தர் தேவர் மழை போல் தூர்க்கவே பொருது போற்றி செய்வார் சிறையை விடுவோனே
பார் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே
பா கொத்தினால் இயலர் நோக்கைக்கு வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே

மேல்

#679
பாற்று கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கி சுமந்துகொண்டு பதிதோறும்
பார்த்து திரிந்து உழன்று ஆக்கத்தையும் தெரிந்து ஏக்கற்று நின்றுநின்று தளராதே
வேற்று புலன்கள் ஐந்தும் ஓட்டி புகழ்ந்து கொண்டு கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும்
வேட்டு கலந்து இருந்து ஈட்டை கடந்து நின்ற வீட்டில் புகுந்து இருந்து மகிழ்வேனோ
மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து வாய்ப்புற்று அமைந்த சங்கு தடி சாப
மால் பொன் கலம் துலங்க நாட்டு அச்சுதன் பணிந்து வார் கைத்தலங்கள் என்று திரை மோதும்
பால் சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள் துயின்றவன்தன் மருகோனே
பாக்கு கரும்பை கெண்டை தாக்கி தடம் படிந்த பாக்கத்து அமர்ந்திருந்த பெருமாளே

மேல்

#680
ஆலம் போல் எழு நீலமே அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு மாய விழியாலே
ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே
சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே
சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ
பால் அம்பால் மண நாறுகால் அங்கே இறிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா
பாடு அம்பு ஆர் திரிசூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே
வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இருபாலும் உற வீறு
வேத அந்தா அபிராம நாதன் தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே

மேல்

#681
கார் சார் குழலார் விழி ஆர் அயிலார் பால் மொழியார் இடை நூல் எழுவார்
சார் இளநீர் முலை மாதர்கள் மயலாலே
காழ் காதலது ஆம் மனமே மிக வார் காமுகனாய் உறு சாதக
மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே
பார்ப்பாய் அலையோ அடியாரொடு சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா
பார் பாவலர் ஓது சொலால் முது நீர் பாரினில் மீறிய கீரரை
ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே
வார் பேர் அருளே பொழி காரண நேர் பாவ ச காரணமா மத
ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும்
மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே
வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ நன் மா மகிணா திருவேற்காடு
உறை வேத புரீசுரர் தரு சேயே
வேட்டார் மகவான் மகளானவள் ஏட்டு ஆர் திரு மா மணவா பொனின்
நாட்டார் பெருவாழ்வு எனவே வரு பெருமாளே

மேல்

#682
அணி செவ்வியார் திரை சூழ் புவி தன நிவ்வியே கரை ஏறிட
அறிவில்லியாம் அடியேன் இடர் அது தீர
அருள் வல்லையோ நெடுநாள் இனம் மருள் இல்லிலே இடுமோ உனது
அருள் இல்லையோ இனமானவை அறியேனே
குண வில் அதா மக மேரினை அணி செல்வி ஆய் அருணாசல
குரு வல்ல மாதவமே பெறு குண சாத
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி
குண வல்லவா சிவனே சிவ குருநாதா
பணி கொள்ளி மா கண பூதமொடு அமர் கள்ளி கானக நாடக
பர மெல்லியார் பரமேசுரி தரு கோவே
படர் அல்லி மா மலர் பாணமது உடை வில்லி மா மதனார் அனை
பரி செல்வியார் மருகா சுர முருகேசா
மணம் ஒல்லையாகி நகா கன தன வல்லி மோகனமோடு அமர்
மகிழ் தில்லை மா நடம் ஆடினர் அருள் பாலா
மரு மல்லி மா வனம் நீடிய பொழில் மெல்லி கா வனம் மாடு அமை
வட முல்லைவாயிலின் மேவிய பெருமாளே

மேல்

#683
சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொடு
தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே
சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு
சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி
மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின்
மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி
மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர்
மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ
ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி
ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா
ஆயர் வாழ் பதிதோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே
கொடு போத நுகர்ந்தவன் மருகோனே
வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை
வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர்
வாச மா மலரோனொடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி
மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே

மேல்

#684
மின் இடை கலாப தொங்கலொடு அன்ன மயில் நாண விஞ்சிய மெல்லியர் குழாம் இசைந்து ஒரு தெரு மீதே
மெள்ளவும் உலாவி இங்கித சொல் குயில் குலாவி நண்பொடு வில் இயல் புரூர கண் கணை தொடு மோக
கன்னியர்கள் போல் இதம் பெறு மின் அணி கலாரம் கொங்கையர் கண்ணியில் விழாமல் அன்பொடு பத ஞான
கண்ணியில் உள்ளாக சுந்தர பொன் இயல் பதாரமும் கொடு கண்ணுறு வராமல் இன்பமொடு எனை ஆள்வாய்
சென்னியில் உடாடி இளம் பிறை வன்னியும் அராவும் கொன்றையர் செம் மணி குலாவும் எந்தையர் குருநாதா
செம் முக இராவணன் தலை விண்ணுற வில் வாளியும் தொடு தெய்விக பொன் ஆழி வண் கையன் மருகோனே
துன்னி எதிர் சூரர் மங்கிட சண்முகம் அதாகி வன் கிரி துள்ளிட வேலாயுதம்தனை விடுவோனே
சொல்லும் முநிவோர் தவம்புரி முல்லைவடவாயில் வந்து அருள் துல்ய பர ஞான உம்பர்கள் பெருமாளே

மேல்

#685
மரு மல்லி ஆர் குழலின் மட மாதர் மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல்
இரு நல்லவாகும் உனது அடி பேண இன வல்லமான மனது அருளாயோ
கரு நெல்லி மேனியர் அரி மருகோனே கன வள்ளியார் கணவ முருகேசா
திருவல்லிதாயம் அதில் உறைவோனே திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே

மேல்

#686
கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர்
கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணையூடே
விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள்
விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள்தாராய்
அரி பிரமர் தேவர் முனிவர் சிவயோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே
அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா
சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர்
திரு அருளும் ஆதிபுரிதனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே

மேல்

#687
சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா
துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறிடை ஊறு
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை அதின் மீறி
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ
குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே
குமர பிரதாப குக சிவசுப்பிரமாமணிய குணம் முட்டர் அவா அசுரர் குல காலா
திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே

மேல்

#688
அமரும் அமரரினில் அதிகன் அயனும் அரி அவரும் வெருவ வரும் அதிகாளம்
அதனை அதகரண விதன அத பரிபுரணம் அமை அனவர் கரண அகிலேச
நிமிர அருள் சரணம் நிபிடம் அது என உன நிமிர சமீரன் மய நியமாய
நிமிடம் அதனில் உண வல சிவ சுத வர நினது பதவி தர வருவாயே
சமரச அமர சுர இதர பர அசுர சரத விரத அயில் விடுவோனே
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத
எமர நடன வித மயிலின் முதுகில் வரும் இமையமகள் குமர எமது ஈச
இயலின் இயல் மயிலை நகரில் இனிது உறையும் எமது பர குரவ பெருமாளே

மேல்

#689
அயில் ஒத்து எழும் இரு விழியாலே அமுது ஒத்திடும் அரு மொழியாலே
சயிலத்து எழு துணை முலையாலே தடையுற்று அடியனும் மடிவேனோ
கயிலை பதி அரன் முருகோனே கடல கரை திரை அருகே சூழ்
மயிலை பதிதனில் உறைவோனே மகிமைக்கு அடியவர் பெருமாளே

மேல்

#690
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே
திறல் குலாவிய சேவடி வந்தித்து அருள் கூட தினமுமே மிக வாழ்வுறும் இன்பை தருவாயே
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே
மறவர் வாள்நுதல் வேடை கொளும் பொன் புய வீரா மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே

மேல்

#691
இகல வரு திரை பெருகிய சல நிதி நிலவும் உலகினில் இகம் உறு பிறவியில்
இனிமை பெற வரும் இடர் உறும் இருவினை அது தீர
இசையும் உனது இரு திரு பத மலர்தனை மனம் இசைய நினைகிலி இதம் உற உனது அருள்
இவர உருகிலி அயர்கிலி தொழுகிலி உமைபாகர்
மகிழும் மகவு என அறைகிலி நிறைகிலி மடமை குறைகிலி மதி உணர்வு அறிகிலி
வசனம் அற உறு மவுனமொடு உறைகிலி மட மாதர்
மயம் அது அடரிட இடருறும் அடியனும் இனிமை தரும் உனது அடியவருடன் உற
மருவ அருள்தரு கிருபையின் மலிகுவது ஒரு நாளே
சிகர தன கிரி குறமகள் இனிது உற சிலதன் நலமுறு சில பல வசன அமுது
இறைய அறை பயில் அறுமுக நிறை தரும் அருள் நீத
சிரண புரணம் விதரண விசிரவண சரண் உ சரவணபவ குக சயன் ஒளி
திரவ பர அதி சிரம் மறை முடிவுறு பொருள் நீத
அகர உகரதி மகரதி சிகரதி யகர அருள் அதி தெருள் அதி வலவல
அரணம் முரணுறு அசுரர்கள் கெட அயில் விடுவோனே
அழகும் இலகிய புலமையும் மகிமையும் வளமும் உறை திரு மயிலையில் அநுதினம்
அமரும் அரகர சிவ சுத அடியவர் பெருமாளே

மேல்

#692
இணையது இலதாம் இரண்டு கயல்கள் எனவே புரண்டு இரு குழையின் மீது அடர்ந்து அமர் ஆடி
இலகு சிலை வேள் துரந்த கணை அதிலுமே சிறந்த இரு நயனர் வார் இணங்கும் அதி பாரம்
பணை முலையின் மீது அணிந்த தரள மணி ஆர் துலங்கு பருவ ரதி போல வந்த விலைமானார்
பயிலு நடையால் உழன்று அவர்களிடம் மோகம் என்ற படுகுழியிலே மயங்கி விழலாமோ
கணகண என வீர தண்டை சரணம் அதிலே விளங்க கலப மயில் மேல் உகந்த குமரேசா
கறுகி வரு சூரன் அங்கம் இரு பிளவதாக விண்டு கதறி விழ வேல் எறிந்த முருகோனே
மணி மகுட வேணி கொன்றை அறுகு மதி ஆறு அணிந்த மலைய விலின் நாயகன் தன் ஒரு பாக
மலை அரையன் மாது உகந்த சிறுவன் எனவே வளர்ந்து மயிலை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#693
களப மணி ஆரம் உற்ற வசன முலை மீது கொற்ற கலக மத வேள் தொடுத்த கணையாலும்
கனி மொழி மினார்கள் முற்றும் இசை வசைகள் பேச உற்ற கனல் என உலாவு வட்ட மதியாலும்
வளமை அணி நீடு புஷ்ப சயன அணை மீது உருக்கி வனிதை மடல் நாடி நித்த நலியாதே
வரி அளி உலாவு துற்ற இரு புயம் அளாவி வெற்றி மலர் அணையில் நீ அணைக்க வரவேணும்
துளப மணி மாலை மார்ப சக்ரதரன் அரி முராரி சர்ப்ப துயில்தரன் ஆதரித்த மருகோனே
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர் மேவு உக்ர துரகத கலாப பச்சை மயில் வீரா
அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீள அழைப்ப அருள் பரவு பாடல் சொற்ற குமரேசா
அரு வரையை நீறு எழுப்பி நிருதர்தமை வேர் அறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே

மேல்

#694
கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்
கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா
கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே
குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே
படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி
பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா
வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே
மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே

மேல்

#695
திரை வார் கடல் சூழ் புவிதனிலே உலகோரோடு திரிவேன் உனை ஓதுதல் திகழாமே
தின நாளும் முனே துதி மனது ஆர பினே சிவ சுதனே திரி தேவர்கள் தலைவா மால்
வரை மாது உமையாள் தரு மணியே குகனே என அறையா அடியேனும் உன் அடியாராய்
வழிபாடு உறுவாரோடு அருள் ஆதாரமாய் இடு மகா நாள் உளதோ சொல அருள்வாயே
இறை வாரண தேவனும் இமையோரவர் ஏவரும் இழிவாகி முனே ஏய் இயல் இலராகி
இருளோ மனதே உற அசுரேசர்களே மிக இடரே செயவே அவர் இடர் தீர
மற மா அயிலே கொடு உடலே இரு கூறு எழ மத மா மிகு சூரனை மடிவாக
வதையே செயு மா வலி உடையாய் அழகாகிய மயிலாபுரி மேவிய பெருமாளே

மேல்

#696
நிரை தரு மணி அணி ஆர்ந்த பூரித ம்ருகமத களப அகில் சாந்து சேரிய
இள முலை உரம் மிசை தோய்ந்து மா மலர் அணை மீதே
நெகிழ் தர அரை துகில் வீழ்ந்து மா மதி முகம் வெயர்வு எழ விழி பாய்ந்து வார் குழையொடு
பொர இரு கரம் ஏந்து நீள் வளை ஒலி கூர
விரை மலர் செறி குழல் சாய்ந்து நூபுரம் இசை தர இலவ இதழ் மோந்து வாய் அமுது
இயல்பொடு பருகிய வாஞ்சையே தக இயல் நாடும்
வினையனை இருவினை ஈண்டும் ஆழ் கடல் இடர் படு சுழி இடை தாழ்ந்து போம் மதி
இரு கதி பெற அருள் சேர்ந்து வாழ்வதும் ஒரு நாளே
பரை அபிநவை சிவை சாம்பவீ உமை அகிலமும் அருள அருள் ஏய்ந்த கோமளி
பயிரவி திரிபுரை ஆய்ந்த நூல் மறை சத கோடி
பகவதி இரு சுடர் ஏந்து காரணி மலைமகள் கவுரி விதார்ந்த மோகினி
படர் சடையவன் இட நீங்கு உறாதவள் தரு கோவே
குரை கடல் மறுகிட மூண்ட சூரர்கள் அணி கெட நெடு வரை சாய்ந்து தூள் எழ
முடுகிய மயில் மிசை ஊர்ந்து வேல் விடு முருகோனே
குல நறை மலர் அளி சூழ்ந்து உலாவிய மயிலையில் உறை தரு சேந்த சேவக
குக சரவணபவ வாய்ந்த தேவர்கள் பெருமாளே

மேல்

#697
வரும் மயில் ஒத்தவர் ஈவார் மா முகம் மதி என வைத்தவர் தாவா காமிகள்
வரிசையில் முற்றிய வாகு ஆர் ஆம் இயல் மட மாதர்
மயலினில் உற்று அவர் மோகா வாரிதி அதன் இடை புக்கு அவர் ஆளாய் நீள் நிதி
தரு இயல் உலுத்தர்கள் மாடா மா மதி மிக மூழ்கி
தரு பர உத்தம வேளே சீர் உறை அறுமுக நல் தவ லீலா கூர் உடை
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக
சரவண வெற்றி விநோதா மா மணி தரும் அரவை கடி நீதா ஆம் அணி
மயில் உறை வித்த உன் ஆதாரம் அணி பெறுவேனோ
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ
என அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என மிக்கு இயல் வேதாவே தொழு
திரு நடம் இட்டவர் காதே மூடிய குரு போதம்
உரை செயும் உத்தம வீரா நாரணி உமையவள் உத்தர பூர்வாகாரணி
உறு ஜக ரக்ஷணி நீர் ஆவாரணி தரு சேயே
உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே காரண
ஒரு மயிலை பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#698
குசமாகி ஆரு மலை மரை மா நுண் நூலின் இடை குடிலான ஆல் வயிறு குழையூடே
குறி போகு மீன விழி மதி மா முகாரு மலர் குழல் கார் அதான குணம் இலி மாதர்
புச ஆசையால் மனது உனை நாடிடாத படி புலையேன் உலாவி மிகு புணர்வாகி
புகழான பூமி மிசை மடிவாய் இறாத வகை பொலிவான பாத மலர் அருள்வாயே
நிச நாரணாதி திரு மருகா உலாச மிகு நிகழ் போதமான பர முருகோனே
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா நிசாசரர்கள் குல காலா
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி சிவ நாதர் ஆலம் அயில் அமுதேசர்
திகழ் பால மாகம் உற மணி மாளி மாடம் உயர் திருவான்மியூர் மருவு பெருமாளே

மேல்

#699
ஆத இத பார முலை மாதர் இடை நூல் வயிறு அது ஆல் இலை எனா மதன கலை லீலை
யாவும் விளைவான குழியான திரிகோணம் அதில் ஆசை மிகவாய் அடியன் அலையாமல்
நாத சத கோடி மறை ஓலம் இடு நூபுரம் முனான பத மா மலரை நலமாக
நான் அநுதினமுமே நினையவே கிருபை நாடி அருளே அருள வருவாயே
சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில பரமேசர்
சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி வரு மா அசுரர் குல காலா
கோதை குற மாது குண தேவ மட மாது இருபாலும் உற வீறி வரு குமரேசா
கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா அமரர் பெருமாளே

மேல்

#700
தலங்களில் வரும் கன இலம் கொடு மடந்தையர் தழைந்த உதரம் திகழ் தச மாதம்
சமைந்தனர் பிறந்தனர் முயங்கினர் மயங்கினர் தவழ்ந்தனர் நடந்தனர் சில காலம்
துலங்கு நல பெண்களை முயங்கினர் மயங்கினர் தொடும் தொழிலுடன் தம க்ரகபாரம்
சுமந்தனர் அமைந்தனர் குறைந்தனர் இறந்தனர் சுடும் பினை எனும் பவம் ஒழியேனோ
இலங்கையில் இலங்கிய இலங்களுள் இலங்கு அருள் இல் எங்கணும் இலங்கு என முறை ஓதி
இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள் முகுந்தனன் மருகோனே
பெலம் கொடு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா
பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி மருங்கு உறை பெருமாளே

மேல்

  

 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (701 - 1000) 



#701
தோடுறும் குழையாலே கோல் வளை சூடு செம் கைகளாலே யாழ் தரு கீதம் மென் குரலாலே தூ மணி நகையாலே
தூமம் மென் குழலாலே ஊறிய தேன் இலங்கு இதழாலே ஆல விலோசனங்களினாலே சோபித அழகாலே
பாடகம் புனை தாளாலே மிக வீசு தண் பனி நீராலே வளர் பார கொங்கைகளாலே கோலிய விலைமாதர்
பாவகங்களினாலே யான் மயல் மூழ்கி நின்று அயராதே நூபுர பாத பங்கயம் மீதே ஆள்வது கருதாயோ
நாட அரும் சுடர் தானா ஓது சிவாகமங்களின் நானா பேத அநாத தந்த்ர கலா மா போதக வடிவாகி
நால் விதம் தரு வேதா வேதமும் நாடி நின்றது ஒர் மாயா அதீத மனோலயம் தரு நாதா ஆறிரு புய வேளே
வாள் தங்கிய வேலாலே பொரு சூர் தடிந்து அருள் வீரா மா மயில் ஏறு கந்த விநோதா கூறு என அரனார் முன்
வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல் வாசா தேசிக மாடையம் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#702
விலை அறுக்கவும் முலை மறைக்கவும் மணம் துன்றும் செழும் தார்
புனை முகில் குழல்தனை அவிழ்க்கவும் விடம் கஞ்சம் சரம் சேர்
விழி வெருட்டவும் மொழி புரட்டவும் நிணம் துன்றும் சலம் பாய் உதிர நீருடனே
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை எதிர்த்தும் பின் தொடர்ந்தே
இலை சுண பொடி பிளவு எடுத்து இடை திரும்பும் பண்பர் அன்றே
என உரைத்து அவர்தமை வரப்பணி உடன் கொண்டு அன்புடன் போய் சயன பாயிலின் மேல்
கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும் நயம் கொண்டு அங்கு இருந்தே
குணுகியிட்டு உள பொருள் பறித்து அற முனிந்து அங்கு ஒன்று கண்டே
கலகம் இட்டு அவர் அகல அடித்த பின் வரும் பங்கு அங்கு உணங்க ஓர் புதிய பேருடனே
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள் குணம் கண்டு துளங்கா
மனிதனில் சிறு பொழுதும் உற்று உற நினைந்தும் கண்டு உகந்தே
கடி மலர் பதம் அணுகுதற்கு அறிவிலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ
சிலைதனை கொடு மிக அடித்திட மனம் தந்து அந்தணன் தாமரை
மலர் பிரமனை நடு தலை அரிந்தும் கொண்டு இரந்தே
திரிபுரத்து எரி புக நகைத்து அருள் சிவன் பங்கு அங்கு இருந்தாள் அருளும் மா முருகா
செரு இடத்து அலகைகள் தெனத்தென தெனந்தெம் தெந்தெ னந்தா
என இடக்கைகள் மணி கண பறை டிகுண்டிம் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிம் குண்டி குண்டீ என இராவணன் நீள்
மலை என திகழ் முடிகள் பத்தையும் இரண்டு அஞ்சு ஒன்பது ஒன்று ஏய்
பணை புயத்தையும் ஒரு வகைப்பட வெகுண்டு அம்பு ஒன்றே எறிந்தோன்
மதலை மைத்துனன் அசுரரை குடல் திறந்து அங்கம் பிளந்தே மயிலின் மேல் வருவாய்
வயல்களில் கயல் இனம் மிகுத்து எழு வரம்பின்கண் புரண்டே
பெருகு அயல் கொடு சொரியும் நித்திலம் நிறைந்து எங்கும் சிறந்தே
வரிசை பெற்று உயர் தமனிய பதி இடம் கொண்டு இன்புறும் சேர் இளைய நாயகனே

மேல்

#703
ஆதி முதல் நாளில் என்றன் தாய் உடலிலே இருந்து ஆக மலமாகி நின்று புவி மீதில்
ஆசையுடனே பிறந்து நேசமுடனே வளர்ந்து ஆள் அழகனாகி நின்று விளையாடி
பூதலம் எலாம் அலைந்து மாதருடனே கலந்து பூமிதனில் வேணும் என்று பொருள் தேடி
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே
சீதை கொடுபோகும் அந்த ராவணனை மாள வென்ற தீரன் அரி நாரணன்தன் மருகோனே
தேவர் முநிவோர்கள் கொண்டல் மால் அரி பிரமாவும் நின்று தேட அரிதானவன்தன் முருகோனே
கோதை மலை வாழுகின்ற நாதர் இட பாக நின்ற கோமளி அநாதி தந்த குமரேசா
கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#704
சால நெடுநாள் மடந்தை காயம் அதிலே அலைந்து சாம் அளவாக வந்து புவி மீதே
சாதகமும் ஆன பின்பு சீறி அழுதே கிடந்து தாரணியிலே தவழ்ந்து விளையாடி
பாலன் எனவே மொழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பார தனம் மீது அணைந்து பொருள் தேடி
பார் மிசையிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் ஒன்று பாத மலர் சேர அன்பு தருவாயே
ஆலம் அமுதாக உண்ட ஆறு சடை நாதர் திங்கள் ஆடு அரவு பூணர் தந்த முருகோனே
ஆனை மடுவாயில் அன்று மூலம் என ஓலம் என்ற ஆதி முதல் நாரணன் தன் மருகோனே
கோல மலர் வாவி எங்கும் மேவி புனம் வாழ் மடந்தை கோவை அமுதூறல் உண்ட குமரேசா
கூடி வரு சூர் அடங்க மாள வடி வேல் எறிந்த கோடை நகர் வாழ வந்த பெருமாளே

மேல்

#705
ஏறு ஆனாலே நீறாய் மாயா வேளே வாச கணையாலே
ஏயாய் ஏயாய் மாயா வேயால் ஆம் ஏழு ஓசை தொளையாலே
மாறாய் ஊறாய் ஈறாய் மாலாய் வாடா மானை கழியாதே
வாராய் பாராய் சேராய் ஆனால் வாடா நீப தொடை தாராய்
சீறா வீறா ஈரேழ் பார் சூழ் சீரார் தோகை குமரேசா
தேவா சாவா மூவா நாதா தீரா கோடை பதியோனே
வேறாய் மாறாய் ஆறாம் மா சூர் வேர் போய் வீழ பொருதோனே
வேதா போதா வேலா பாலா வீரா வீர பெருமாளே

மேல்

#706
ஞாலம் எங்கும் வளைத்து அரற்று கடலாலே நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே
ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே ஆறிரண்டு புயத்து அணைக்க வருவாயே
கோலம் ஒன்று குறத்தியை தழுவு மார்பா கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா
காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர் கால் விலங்குகளை தறித்த பெருமாளே

மேல்

#707
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் பெரியோரை
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுற என்பது ஒழிந்த குண்டர்கள் தொலையாமல்
வாழ நினைந்து வருந்து குண்டர்கள் நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள்
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் வலையாலே
மாயையில் நின்று வருந்து குண்டர்கள் தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே
ஏழு மரங்களும் வன் குரங்கு எனும் வாலியும் அம்பரமும் பரம்பரை
ராவணனும் சதுரங்க லங்கையும் அடைவே முன்
ஈடு அழியும்படி சந்த்ரனும் சிவ சூரியனும் சுரரும் பதம் பெற
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய மஞ்சு தங்கிய
கோபுரம் எங்கும் விளங்கும் மங்கல வயலூரா
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ்
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே

மேல்

#708
தோள் தப்பாமல் தோய்த பாணி சூழ்து உற்றார் துற்று அழுவாரும்
தூர போக கோர பார சூல பாச சமன் ஆரும்
பாடை கூட தீயில் தேறி பாழ்பட்டே பட்டு அழியாதே
பாசத்தேனை தேசுற்றார் பொன் பாதத்தே வைத்து அருள்வாயே
ஆடல் சூர் கெட்டு ஓட தோயத்து ஆர சீறி பொரும் வேலா
ஆனை சேனை கானில் தேனுக்கு ஆரம் தாரை தரும் வீரா
கூடற்பாடி கோவை பாவை கூட பாடி திரிவோனே
கோல சாலி சோலை சீல கோடை தேவ பெருமாளே

மேல்

#709
வாசித்த நூல் மதங்கள் பேசி கொடாத விந்து வாய்மை ப்ரகாசம் என்று நிலையாக
மாசி கபால மன்றில் நாசிக்குள் ஓடுகின்ற வாயு பிராணன் ஒன்று மடை மாறி
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ
வீசு அ பயோதி துஞ்ச வேத குலாலன் அஞ்ச மேலிட்ட சூர் தடிந்த கதிர் வேலா
வீர ப்ரதாப பஞ்ச பாணத்தினால் மயங்கி வேடிச்சி காலில் அன்று விழுவோனே
கூசி புகா ஒதுங்க மாமன் திகாது அரிந்த கூளம் புராரி தந்த சிறியோனே
கோழி பதாகை கொண்ட கோல குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே

மேல்

#710
அனு தேன் நேர் மொழியாலே மா மயல் உடைத்தார் போலவும் ஓர் நாள் ஆனதில்
அடுத்தே தூதுகள் நூறு ஆறு ஆனதும் விடுவார்கள்
அழைத்தே வீடினிலே தான் ஏகுவர் நகைத்தே மோடிகளாவர் காதலொடு
அடுத்தே மா முலை மீதே மார்புற அணைவார் பின்
குனித்தே பாகு இலை ஈவார் பாதியில் கடிப்பார் வாய் இதழ் வாய் நீரானது
குடிப்பார் தேன் என நானா லீலைகள் புரிவார்கள்
குறித்தே மா மயலாலே நீள் பொருள் பறிப்பார் ஆசுகள் சூழ் மா பாதக
குணத்தர் மாதர்கள் மேல் ஆசா விட அருள்வாயே
வனத்தே வேடுவர் மாதாம் ஓர் மினை எடுத்தே தான் வரவே தான் யாவரும்
வளைத்தே சூழவும் ஓர் வாளால் வெலும் விறல் வீரா
மலர் தேன் ஓடையில் ஓர் மா வானதை பிடித்தே நீள் கர வாதாட ஆழியை
மனத்தால் ஏவிய மா மால் ஆனவர் மருகோனே
சினத்தே சூரர்கள் போர் ஆய் மாளவும் எடுத்து ஓர் வேல் விடு தீரா தார் அணி
திரு தோளா இரு பாதா தாமரை முருகோனே
திரு தேர் சூழ் மதிள் ஏர் ஆர் தூபிகள் அடுக்கார் மாளிகையே நீள் ஏர் உள
திருப்போரூர் உறை தேவா தேவர்கள் பெருமாளே

மேல்

#711
உருக்கு ஆர் வாளி கண்கள் பொருப்பு ஆர் வார் தனங்கள் உகப்பு ஆர் வால சந்த்ர நுதல் நூலாம்
உரு சேர் நீள் மருங்குல் பணை தோள் ஓதி கொண்ட உவப்பா மேல் விழுந்து திரிவோர்கள்
அருக்கா மாதர்தங்கள் வரைக்கே ஓடி இன்ப வலைக்கே பூணு நெஞ்சன் அதி பாவி
அசட்டால் மூடுகின்ற மசக்கால் மாயும் இந்த அவத்தால் ஈனம் இன்றி அருள்வாயே
எருக்கு ஆர் தாளி தும்பை மரு சேர் போது கங்கையினை சூடு ஆதி நம்பர் புதல்வோனே
இருக்காலே நினைந்து துதிப்பார் நாவில் நெஞ்சில் இருப்பார் யானை தங்கும் மணி மார்பா
செருக்காலே மிகுந்த கடல் சூர் மாள வென்ற திறல் சேர் வேல் கை கொண்ட முருகோனே
தினைக்கு ஓர் காவல் கொண்ட குற தேன் மாது பங்க திருப்போரூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#712
சீர் உலாவிய ஓதிமம் ஆன மா நடை மா மயில் சேய சாயல் கலா மதி முகம் ஆனார்
தேன் உலாவிய மா மொழி மேரு நேர் இள மா முலை சேல் உலாவிய கூர் விழி குமிழ் நாசி
தார் உலாவிய நீள் குழல் வேய் அளாவிய தோளியர் சார்பிலே திரிவேனை நின் அருளாலே
சாம வேதியர் வானவர் ஓதி நாள்மலர் தூவிய தாளில் வீழ வினா மிக அருள்வாயே
கார் உலாவிய நீள் புன வேடர் மால் வரை மீது உறை காவல் மாதினொடு ஆவல் செய்து அணைவோனே
காண ஆகம வேத புராண நூல் பல ஓதிய காரணா கருணாகர முருகோனே
போர் உலாவிய சூரனை வாரி சேறு எழ வேல் விடு பூப சேவக மா மயில் மிசையோனே
போதன் மாதவன் மாது உமை பாதி ஆதியுமே தொழு போரி மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#713
திமிரமாம் மனமா மட மடமையேன் இடர் ஆணவம் திமிரமே அரி சூரிய திரி லோக
தினகரா சிவ காரண பனக பூஷண ஆரண சிவ சுதா அரி நாரணன் மருகோனே
குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குண கலா நிதி நாரணி தரு கோவே
குரு குகா குமரேசுர சரவணா சகளேசுர குறவர் மா மகள் ஆசை கொள் மணியே சம்
பமர பார ப்ரபாருண படல தாரக மா சுக பசுர பாடன பாளித பகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக
சம பரா மத சாதல சமயம் ஆறிரு தேவத சமய நாயக மா மயில் முது வீர
சகல லோகமும் மாசு அறு சகல வேதமுமே தொழு சமர மா புரி மேவிய பெருமாளே

மேல்

#714
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர்
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள்
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சத கோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி
அறியஅறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவுள் அறியும் அறிவு ஊற அருள்வாயே
வரைகள் தவிடுபொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும்
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள்
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே

மேல்

#715
தோல் எலும்பு சீ நரம்பு பீளை துன்று கோழை பொங்கு சோரி பிண்டமாய் உருண்டு வடிவான
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து நான் மெலிந்து சோரும் இந்த நோய் அகன்று துயர் ஆற
ஆலம் உண்ட கோன் அகண்ட லோகம் உண்ட மால் விரிஞ்சன் ஆரணங்கள் ஆகமங்கள் புகழ் தாளும்
ஆனனங்கள் மூ இரண்டும் ஆறு இரண்டு தோளும் அம் கை ஆடல் வென்றி வேலும் என்று நினைவேனோ
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே
மாயை ஐந்து வேகம் ஐந்து பூதம் ஐந்து நாதம் ஐந்து வாழ் பெரும் சராசரங்கள் உறைவோனே
வேலை அன்புகூர வந்த ஏக தந்த யானை கண்டு வேடர் மங்கை ஓடி அஞ்ச அணைவோனே
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற மேரு மங்கை ஆள வந்த பெருமாளே

மேல்

#716
நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி நேசம் உற்று அடியேனு நெறி கேடாய்
நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி நீதியில் சிவ வாழ்வை நினையாதே
பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச
பாவி எப்படி வாழ்வேன் நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு பணியாயோ
ஆழியில் துயில்வோனும் மா மலர் பிரமாவும் ஆகம பொருளோரும் அனைவோரும்
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ஆயிரத்து இருநூறு மறையோரும்
வாழும் உத்தரமேரூர் மேவி அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல மான் மகட்கு உளனான பெருமாளே

மேல்

#717
மாதர் கொங்கையில் வித்தார திரு மார்பில் இலங்கு இயல் முத்து ஆரத்தினில்
வாச மென் குழலில் சேலை பொரும் விழி வேலில்
மாமை ஒன்றும் மலர் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில் மெய் தாமத்தினில்
வான் இளம் பிறையை போல் நெற்றியில் மயலாகி
ஆதரம் கொடு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே மெத்தவும்
ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ
ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை கத்தா மத்திபனாய்
உழன்று அலைகிற்பேனுக்கு அருள்புரிவாயே
சாதனம் கொடு தத்தா மெத்தெனவே நடந்து பொய் பித்தா உத்தரம்
ஏது எனும்படி தன் காய் நிற்பவர் சபையூடே
தாழ்வு இல் சுந்தரனை தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல் சார்பு உற்று அருள்
சால நின்று சமர்த்தா வெற்றி கொள் அரன் வாழ்வே
வேதமும் கிரியை சூழ் நித்தமும் வேள்வியும் புவியில் தாபித்து அருள்
வேர் விழும்படி செய்த ஏர் மெய் தமிழ் மறையோர் வாழ்
மேரு மங்கையில் அத்தா வித்தக வேலொடும் படை குத்தா ஒற்றிய
வேடர் மங்கை கொள் சித்தா பத்தர்கள் பெருமாளே

மேல்

#718
குதி பாய்ந்து இரத்தம் வடி தொளை தொக்கு இந்த்ரிய குரம்பை வினை கூர் தூர்
குண பாண்டம் உற்று அகிலம் என கை கொண்டு இளைத்து அயர்ந்து சுழலாதே
உதிதாம் பரத்தை உயிர் கெட பொன் கிண்கிணி சதங்கை வித கீத
உபயாம்புய புணையை இனி பற்றும் கருத்தை என்று தருவாயே
கதை சார்ங்கம் கட்கம் வளை அடல் சக்ரம் தரித்த கொண்டல் மருகோனே
கருணாஞ்சன கமல விழி பொன் பைம் புன கரும்பின் மணவாளா
மதனாந்தகர்க்கு மகவு என பத்மம்தனில் பிறந்த குமரேசா
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#719
சயிலாங்கனைக்கு உருகி இட பக்கம் கொடுத்த கம்பர் வெகு சாரி
சதி தாண்டவ அத்தர் சடை இடத்து கங்கை வைத்த நம்பர் உரை மாள
செயல் மாண்டு சித்தம் அவிழ நித்த த்வம் பெற பகர்ந்த உபதேசம்
சிறியேன் தனக்கும் உரை செயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான்
அயில் வாங்கி எற்றி உததியில் கொக்கன்தனை பிளந்து சுரர் வாழ
அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் திறல் ப்ரசண்ட முழு நீல
மயில் தாண்ட விட்டு குது குல பொன் குன்று இடித்த சங்க்ரம விநோத
மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#720
மனை மாண் சுதர் ஆன சுணங்கரும் மனம் வேம் திணையான தனங்களும்
மடிவேன்தனை ஈண அணங்கு உறு வம்பர் ஆதி
மயமாம் பலவான கணம் குலம் என ப்ராந்தியும் யான் எனது என்று உறுவனவாம்
பிரமாத குணம் குறி இன்ப சார
இன வாம் பரி தான்ய தனம் பதி விட ஏன்று எனை மோன தடம் பர
மிகுதாம் பதி காண கணம் கன உம்பர் ஏசா
இட ஆர்ந்தன சானு நயம் பெறு கடகாம் கர சோண வியம் பர
இடமாம் கன தாள் அருளும் படி என்று தானோ
தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம் பரமான நடம் பயில் எம்பிரானார்
தமதாம் சுத தாபரம் சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர்
தகு தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே
முன வாம் பத மூடிக வந்தனம் முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர்
முகதா ஆம் பின மேவுறு சம்பரம சம் கண ஆறு
முக காம்பிரமோடு அமர் சம்பன மதுராந்தக மா நகரம் திகழ்
முருகா அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே

மேல்

#721
முகிலாம் எனும் வார் குழலார் சிலை புருவார் கயல் வேல் விழியார் சசி
முகவார் தரளம் எனவே நகைபுரி மாதர்
முலை மால் இணை கோபுரமாம் என வடம் ஆடிடவே கொடி நூல் இடை
முது பாளித சேலை குலாவிய மயில் போல்வார்
அகி சேர் அல்குலார் தொடை வாழையின் அழகு ஆர் கழல் ஆர்தர ஏய்தரு
அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி
அனமாம் என யாரையும் மால் கொள விழியால் சுழலா விடு பாவையர்
அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ
ககனார் பதியோர் முறை கோ என இருள்கார் அசுரார் படை தூள்பட
கடல் ஏழ் கிரி நாகமும் நூறிட விடும் வேலா
கமலாலய நாயகி வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய
கருணாகர ஞான பராபரை அருள் பாலா
மகிழ் மாலதி நாவல் பலா கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில
மகிழ் நாடு உறை மால் வளி நாயகி மணவாளா
மதி மா முகவா அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய
வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே

மேல்

#722
கலகல என சில கலைகள் பிதற்றுவது ஒழிவது உனை சிறிது உரையாதே
கரு வழி தத்திய மடு அதனில் புகு கடு நரகுக்கிடை இடை வீழா
உலகுதனில் பல பிறவி தரித்து அற உழல்வது விட்டு இனி அடி நாயேன்
உனது அடிமை திரள் அதனினும் உட்பட உபய மலர் பதம் அருள்வாயே
குலகிரி பொட்டு எழ அலை கடல் வற்றிட நிசிசரனை பொரு மயில் வீரா
குண தர வித்தக குமர புனத்திடை குறமகளை புணர் மணி மார்பா
அலை புனலில் தவழ் வளை நிலவை தரு மணி திருவக்கரை உறைவோனே
அடியவர் இச்சையில் எவையெவை உற்றன அவை தருவித்து அருள் பெருமாளே

மேல்

#723
பச்சிலை இட்டு முகத்தை மினுக்கிகள் குத்திர வித்தை மிகுத்த சமர்த்திகள்
பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட நினைவோர்கள்
பத்தி நிரை தவள தரளத்தினை ஒத்த நகைப்பில் விழிப்பில் மயக்கிகள்
பக்ஷம் மிகுத்திட முக்கனி சர்க்கரை இதழூறல்
எச்சில் அளிப்பவர் கச்சு அணி மெத்தையில் இச்சகம் மெத்த உரைத்து நயத்தொடும்
எத்தி அழைத்து அணைத்து மயக்கிடும் மட மாதர்
இச்சையில் இப்படி நித்தம் மன துயர் பெற்று உலகத்தவர் சிச்சி என திரி
இ தொழில் இ குணம் விட்டிட நல் பதம் அருள்வாயே
நச்சு அரவில் துயில் பச்சை முகில் கருணை கடல் பத்ம மலர் திருவை புணர்
நத்து தரித்த கரத்தர் திருத்துளவ அணி மார்பர்
நட்டநடு கடலில் பெரு வெற்பினை நட்டு அரவ பணி சுற்றி மதித்து உள
நத்தும் அமுதத்தை எழுப்பி அளித்தவர் மருகோனே
கொச்சை மொழிச்சி கறுத்த விழிச்சி சிறுத்த இடைச்சி பெருத்த தனத்தி
குறத்தி தனக்கு மனம் ப்ரியம் உற்றிடு குமரேசா
கொத்து அவிழ் பத்ம மலர் பழனத்தொடு குற்ற மற கடிகை புனல் சுற்றிய
கொட்பு உள நல் திருவக்கரை உற்று உறை பெருமாளே

மேல்

#724
அண்டர் பதி குடியேற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன மகிழ் மீற அருளாலே
அந்தரியொடு உடன் ஆடு சங்கரனும் மகிழ்கூர ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண
மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ் கூற மைந்து மயிலுடன் ஆடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள புந்தி நிறை அறிவாள உயர் தோளா
பொங்கு கடலுடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடி வேலா
தண் தரளம் அணி மார்ப செம்பொன் எழில் செறி ரூப தண் தமிழின் மிகு நேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவைதனில் மேவு பெருமாளே

மேல்

#725
சீதள வாரிஜ பாதா நமோ நம நாரத கீத விநோதா நமோ நம
சேவல் மா மயில் ப்ரீதா நமோ நம மறை தேடும்
சேகரமான ப்ரதாபா நமோ நம ஆகம சார சொரூபா நமோ நம
தேவர்கள் சேனை மகீபா நமோ நம கதி தோய
பாதக நீவு குடாரா நமோ நம மா அசுரேச கடோரா நமோ நம
பாரினிலே ஜய வீரா நமோ நம மலை மாது
பார்வதியாள் தரு பாலா நமோ நம நாவல ஞான மனோலா நமோ நம
பால குமார சுவாமீ நமோ நம அருள்தாராய்
போதக மா முகன் நேரான சோதர நீறு அணி வேணியர் நேயா ப்ரபாகர
பூ மகளார் மருகேசா மகா உததி இகல் சூரா
போதக மா மறை ஞானா தயாகர தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக
பூரண மா மதி போல் ஆறு மா முக முருகேசா
மாதவர் தேவர்களோடே முராரியும் மா மலர் மீது உறை வேதாவுமே புகழ்
மா நிலம் ஏழினும் மேலான நாயக வடி வேலா
வானவர் ஊரினும் வீறாகி வீறு அளகாபுரி வாழ்வினும் மேலாகவே திரு
வாழ் சிறுவா புரி வாழ்வே சுராதிபர் பெருமாளே

மேல்

#726
பிறவியான சடம் இறங்கி வழியிலாத துறை செறிந்து பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி
பெருகு தீய வினையில் நொந்து கதிகள்தோறும் அலை பொருந்தி பிடிபடாத ஜனன நம்பி அழியாதே
நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த நளின பாதம் எனது சிந்தை அகலாதே
நரர் சுராதிபரும் வணங்கும் இனிய சேவைதனை விரும்பி நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ
பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி
பொரு இலாமல் அருள்புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே
சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி
செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே

மேல்

#727
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர்
வீணில் விண்டு உள நாடியர் ஊமைகள் விலை கூறி
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசை மோகிகள்
மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ
மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ
வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக
நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எலா நிலையே தரு
ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான
தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே

மேல்

#728
அடல் வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் மால் எனும் மத வேழத்து
அளவிய கோடு போல் வினை அளவளவான கூர் முலை அதின் முகம் மூடும் ஆடையின் அழகாலும்
துடி இடையாலும் வாலர்கள் துயருற மாயமாய் ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாக
தொழுது அவர் பாதம் ஓதி உன் வழிவழி யான் எனா உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ
அடவியினூடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும் அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேளே நா உனை அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வே
விடை எறும் ஈசர் நேசமும் மிக நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட மேல் அணைபவர் மூதூர்
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே

மேல்

#729
கண் கயல் பிணை மானோடு உறவு உண்டு என கழை தோளானது
நன்கு அமைக்கு இனம் ஆம்ஆம் என முகையான
கஞ்சம் ஒத்து எழு கூர் மா முலை குஞ்சரத்து இரு கோடோடு உற
விஞ்சு மை பொரு கார் கோதை கொடு உயர் காலன்
பெண் தனக்கு உள கோலாகலம் இன்று எடுத்து இளையோர் ஆவிகள்
மன் பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர்
பின்பு ஒழித்திடு மா மாயையில் அன்பு வைத்து அழியாதே உறு
கிஞ்சில் அத்தனை தாள் பேணிட அருள்தாராய்
விண் தனக்கு உறவானோன் உடல் கண் படைத்தவன் வேதாவொடு
விண்டு வித்தகன் வீழ் தாளினர் விடை ஏறி
வெம் தனத்து உமையாள் மேவிய சந்தன புய மாதீசுரர்
வெம் கயத்து உரி ஆர் போர்வையர் மிகு வாழ்வே
தண் புடை பொழில் சூழ் மாதையில் நண்பு வைத்து அருள் தாராதலமும்
கிளைத்திட வான் நீள் திசையொடு தாவி
தண்டு அரக்கர்கள் கோகோ என விண்டிட தட மா மீமிசை
சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே

மேல்

#730
கரு முகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு கனி அமுது ஊறி தேறிய மொழி மாதர்
கலவிகள் நேர் ஒப்பாகிகள் மதனிகள் காம க்ரோதிகள் கன தன பாரக்காரிகள் செயலோடே
பொரு கயல் வாளை தாவிய விழியினர் சூறைக்காரிகள் பொருள் அளவு ஆசை பாடிகள் புவி மீதே
பொதுவிகள் போக பாவிகள் வசம் அழிவேனுக்கு ஓர் அருள்புரிவது தான் எப்போது அது புகல்வாயே
தரு அடு தீர சூரர்கள் அவர் கிளை மாள தூள் எழ சமன் நிலை ஏற பாறொடு கொடி வீழ
தனதன தான தானன என இசை பாடி பேய் பல தசை உண வேல் விட்டு ஏவிய தனி வீரா
அரி திரு மால் சக்ராயுதன் அவன் இளையாள் முத்தார் நகை அழகு உடையாள் மெய் பால் உமை அருள் பாலா
அரவொடு பூளை தார் மதி அறுகொடு வேணி சூடிய அழகர் தென் மாதைக்கே உறை பெருமாளே

மேல்

#731
கால முகில் என நினைவு கொடு உருவிலி காதி அமர் பொரு கணை என வடு வகிர்
காணும் இது என இளைஞர்கள் விதவிடு கயலாலும்
கானம் அமர் குழல் அரிவையர் சிலு கொடு காசின் அளவு ஒருதலை அணும் மனதினர்
காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும்
சால மயல் கொடு புளகித கன தன பாரம் உற அண முருகு அவிழ் மலர் அணை
சாயல்தனில் மிகு கலவியில் அழிவுறும் அடியேனை
சாதி குலம் உறு படியினில் முழுகிய தாழ்வு அது அற இடை தருவன வெளி உயர்
தாள் அது அடைவது தவம் மிக நினைவது தருவாயே
வேலைதனில் விழி துயில்பவன் அரவணை வேயின் இசை அது நிரைதனில் அருள்பவன்
வீர துரகதம் நர பதி வனிதையர் கரம் மீதே
வேறு வடிவு கொடு உறி வெணெய் தயிர் அது வேடை கெட அமுது அருளிய பொழுதினில்
வீசு கயிறுடன் படு சிறியவன் அதி கோப
வாலியுடன் எழு மரம் அற நிசிசரன் வாகு முடி ஒரு பது கரம் இருபது
மாள ஒரு சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே
வாசமுறு மலர் விசிறிய பரிமள மாதை நகர்தனில் உறையும் ஒர் அறுமுக
வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே

மேல்

#732
அச்சாய் இறுக்கு ஆணி காட்டி கடைந்த செப்பு ஆர் முலை கோடு நீட்டி சரங்களை
போல் விழி கூர்மை நோக்கி குழைந்து உறவாடி
அத்தான் எனக்கு ஆசை கூட்டி தயங்க வைத்தாய் என பேசி மூக்கை சொறிந்து
அக்கால் ஒரு காலம் ஏக்கற்று இருந்தீர் இல்லை ஆசை
வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள் ஒப்பு ஆர் உனக்கு ஈடு பார்க்கில் கடம்பன்
மட்டோ என பாரில் மூர்க்கத்தனங்கள் அதனாலே
மை பாகு என கூறி வீட்டில் கொணர்ந்து புல்பாயிலில் காலம் வீற்று கலந்து
வைப்பார் தமக்கு ஆசையால் பித்து அளைந்து திரிவேனோ
எச்சாய் மருள் பாடு மேற்பட்டு இருந்த பிச்சாசருக்கு ஓதி கோட்டைக்கு இலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
எக்காலும் மக்காத சூர் கொத்து அரிந்த சின வேலா
தச்சா மயில் சேவல் ஆக்கி பிளந்த சித்தா குற பாவை தாட்குள் படிந்து
சக்காகி அ பேடையாட்கு புகுந்து மணமாகி
தப்பாமல் இ பூர்வ மேற்கு தரங்கள் தெற்காகும் இ பாரில் கீர்த்திக்கு இசைந்த
தச்சூர் வடக்காகும் மார்க்கத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#733
பாவ நாரிகள் மா மட மாதர் வீணிகள் ஆணவ பாவையார் இளநீர் அன முலையாலும்
பார்வையாம் மிகு கூர் அயிலாலும் மா மணியார் குழை பார கார் அனவார் குழல் அதனாலும்
சாவது ஆர விதாரம் அமுது ஆர்தரா இதழால் இத சாத மூரல் இதா மதி முகமாலும்
சார்வதா அடியேன் இடர் வீற மால் அறிவே மிகு சாரமாய் அதிலே உறல் ஒழிவேனோ
ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பரா அரி ஆதி காண் அரிதாகிய பரமேச
ஆதியார் அருள் மா முருகேச மால் மருகேசுர ஆதி தேவர்கள் இயாவர்கள் பணி பாத
கோ அதா மறையோர் மறை ஓதும் ஓதம் விழா ஒலி கோடி ஆகம மா ஒலி மிக வீறும்
கோவை மா நகர் மேவிய வீர வேல் அயில் ஆயுத கோதை யானையினோடு அமர் பெருமாளே

மேல்

#734
ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் ஆறும்ஆறும் அஞ்சும்அஞ்சும் அறுநாலும்
ஆறும் ஆய சஞ்சலங்கள் வேறு அதா விளங்குகின்ற ஆரணம் ஆகமம் கடந்த கலையான
ஈறு கூற அரும் பெரும் சுவாமியாய் இருந்த நன்றி ஏது வேறு இயம்பல் இன்றி ஒரு தானாய்
யாவுமாய் மனம் கடந்த மோன வீடு அடைந்து ஒருங்கி யான் அவா அடங்க என்று பெறுவேனோ
மாறு கூறி வந்து எதிர்ந்த சூரன் சேனை மங்க வந்த வாரி மேல் வெகுண்ட சண்ட வித தாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#735
தாரகாசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரம் குலுங்க முது மீன அம்
சாகர ஓதை குழம்பி நீடு தீ கொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப மத தாரை
ஆரவார உம்பர் கும்ப வாரண அசலம் பொருந்து மானை ஆளு நின்ற குன்ற மற மானும்
ஆசை கூரு நண்ப என்று மா மயூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ
பாரம் ஆர் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண் கபால மாலை கொன்றை தும்பை சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்து இறைஞ்சு தேவனூர் விளங்க வந்த பெருமாளே

மேல்

#736
காணொணாதது உருவோடு அரு அது பேசொணாதது உரையே தருவது
காணும் நான்மறை முடிவாய் நிறைவது பஞ்ச பூத
காய பாசம்தனிலே உறைவது மாயமாய் உடல் அறியா வகையது
காயமானவர் எதிரே அவர் என வந்து பேசி
பேணொணாதது வெளியே ஒளி அது மாயனார் அயன் அறியா வகை அது
பேத பேதமொடு உலகாய் வளர்வது விந்து நாத
பேருமாய் கலை அறிவாய் துரிய அதீதமானது வினையேன் முடி தவ
பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது ஒன்று நீயே
வீணொணாதது என அமையாத அசுரரை நூறியே உயிர் நமன் நீ கொளு என
வேல் கடாவிய கரனே உமை முலை உண்ட கோவே
வேத நான்முக மறையோனொடும் விளையாடியே குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே
சேண் ஒணாய் இடும் இதண் மேல் அரிவையை மேவியே மயல் கொள லீலைகள் செய்து
சேர நாடிய திருடா அருள்தரு கந்த வேளே
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் உளமே உறை தரு
தேவனூர் வரு குமரா அமரர்கள் தம்பிரானே

மேல்

#737
பரவு வரி கயல் குவிய குயில் கிளி ஒத்து உரை பதற பவள நிறத்து அதரம் விளைத்த அமுதூறல்
பருகி நிற தரளம் அணி களப முலை குவடு அசைய படை மதன கலை அடைவி பொது மாதர்
சொருகு மலர் குழல் சரிய தளர்வுறு சிற்றிடை துவள துகில் அகல க்ருபை விளைவித்து உருகா முன்
சொரி மலர் மட்டு அலர் அணை புக்கு இதம் மதுர கலவிதனில் சுழலும் மன கவலை ஒழித்து அருள்வாயே
கருகு நிறத்த அசுரன் முடி தலை ஒரு பத்து அற முடுகி கணை தொடும் அச்சுதன் மருக குமரேசா
கயிலை மலை கிழவன் இட குமரி விருப்பொடு கருத கவி நிறைய பெறும் வரிசை புலவோனே
திரள் கமுகின் தலை இடறி பல கதலி குலை சிதறி செறியும் வயல் கதிர் அலைய திரை மோதி
திமிதிமி என பறைய பெருகு புனல் கெடில நதி திருவதிகை பதி முருக பெருமாளே

மேல்

#738
விடமும் வேல் அன மலர் அன விழிகளும் இரதமே தரும் அமுது எனும் மொழிகளும்
விரகினால் எழும் இரு தன வகைகளும் இதம் ஆடி
மிகவும் ஆண்மையும் எழில் நலம் உடையவர் வினையும் ஆவியும் உடன் இரு வலையிடை
வெளியிலே பட விசிறிய விஷமிகளுடன் மேவா
இடருறாது உனை நினைபவர் துணை கொள இனிமை போல் எழு பிறவி எனும் உவரியில்
இடை கெடாது இனி இருவினை அழிவினில் அழியாதே
இசையில் நாள்தொறும் இமையவர் முநிவர்கள் ககன பூபதி இடர் கெட அருளிய
இறை நின் ஆறிரு புயம் என உரை செய அருள்வாயே
படரும் மார்பினில் இருபது புயம் அதோடு அரிய மா மணி முடி ஒளிர் ஒரு பது
படியிலே விழ ஒரு கணை தொடுபவர் இடம் ஆராய்
பரவையூடு எரி பகழியை விடுபவர் பரவுவார் வினை கெட அருள் உதவியெ
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை அரகரா என அலகைகள் பலி உண்ண
அலையும் வேலையும் அலறிட எதிர் பொரு மயில் வீரா
அமரர் ஆதியர் இடர் பட அடர் தரு கொடிய தானவர் திரிபுரம் எரி செய்த
அதிகை மா நகர் மருவிய சசி மகள் பெருமாளே

மேல்

#739
சீத மதியம் எறிக்கும் தழலாலே சீறி மதனன் வளைக்கும் சிலையாலே
ஓதம் மருவி அலைக்கும் கடலாலே ஊழி இரவு தொலைக்கும்படியோதான்
மாது புகழை வளர்க்கும் திருவாமூர் வாழும் மயிலில் இருக்கும் குமரேசா
காதல் அடியர் கருத்தின் பெருவாழ்வே காலன் முதுகை விரிக்கும் பெருமாளே

மேல்

#740
அரி அயன் அறியாதவர் எரி புர மூணு அது புக நகை ஏவிய நாதர்
அவிர் சடை மிசை ஓர் வனிதையர் பதி சீறு அழலையும் மழு நேர் பிடி நாதர்
வரைமகள் ஒரு கூறு உடையவர் மதனாகமும் விழ விழி ஏவிய நாதர்
மனம் மகிழ் குமரா என உனது இரு தாள் மலர் அடி தொழுமாறு அருள்வாயே
அரு வரை இரு கூறிட ஒரு மயில் மேல் அவனியை வலமாய் வருவோனே
அமரர்கள் இகல் நீடு அசுரர்கள் சிர மேல் அயில்தனை விசையாய் விடுவோனே
வரிசையொடு ஒரு மா தினை தரு வனமே மருவி ஒர் குற மாது அணை வேடா
மலைகளில் மகிழ்வாய் மருவி நல் வடுகூர் வரு தவ முநிவோர் பெருமாளே

மேல்

#741
ஆர் அ தன பார துகில் மூடி பலர் காண கையில் யாழ் வைத்து இசை கூர குழல் உடை சோர
ஆகம் பனி நீர் புழுகு ஓட குழை ஆட பிரையாசைப்படுவார் பொட்டு அணி சசி நேர் வாள்
கூர கணை வேல் கண் கயல் போல சுழல்வார் சர்க்கரை கோவை கனி வாய் பல் கதிர் ஒளி சேரும்
கோல குயிலார் பட்டு உடை நூல் ஒத்த இடையார் சித்திர கோப செயலார் பித்தர்கள் உறவு ஆமோ
பூரி தன பார சடை வேத குழலாள் பத்தர்கள் பூசைக்கு இயல்வாள் பத்தினி சிவகாமி
பூமி கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளி புணர் போகர்க்கு உபதேசித்து அருள் குருநாதா
சூர குவடு ஆழி தவிடாய் முட்ட சுரார் உக்கிட சோர்வு இல் கதிர் வேல் விட்டு அருள் விறல் வீரா
தோகை செயலாள் பொன் பிரகாச குறமான் முத்தொடு சோதி துறையூர் நத்திய பெருமாளே

மேல்

#742
வெகு மாய விதத்து உருவாகிய திறமே பழகப்படு சாதக
விதம் ஏழ் கடலில் பெரிதாம் அதில் சுழலாகி
வினையான கரு குழியாம் எனும் அடையாளம் உளத்தினில் மேவினும்
விதி யாரும் விலக்கவொணாது எனும் முதியோர் சொல்
தகவாம் அது எனை பிடியா மிடை கயிறால் இறுக்கி மகா கட
சலதாரை வெளிக்கு இடையே செல உருவாகி
சதிகாரர் விடக்கு அதிலே திரள் புழுவாக நெளித்து எரியே பெறு
மெழுகாக உருக்கும் உபாதிகள் தவிர்வேனோ
உக காலம் நெருப்பு அதிலே புகை எழ வேகு முறைப்படு பாவனை
உறவே குகையில் புடமாய் விட வெளியாகி
உலவா நரகுக்கு இரையாம் அவர் பலவோர்கள் தலை கடை போய் எதிர்
உளம் மாழ்கி மிக குழைவாகவும் உறவாடி
தொகலாவது எனக்கு இனிதான் அற வளமாக அருள் பாதம் மா மலர்
துணையே பணிய தருவாய் பரி மயில் வேலா
துதி மாதவர் சித்தர் மகேசுரர் அரி மால் பிரமர்க்கு அருள்கூர் தரு
துறையூர் நகரில் குடியாய் வரு பெருமாளே

மேல்

#743
கோல மறை ஒத்த மாலைதனில் உற்ற கோர மதன் விட்ட கணையாலே
கோது இல தருக்கள் மேவு பொழில் உற்ற கோகில மிகுத்த குரலாலே
ஆலம் என விட்டு வீசு கலை பற்றி ஆர் அழல் இறைக்கும் நினைவாலே
ஆவி தளர்வுற்று வாடும் எனை நித்தம் ஆசை கொடு அணைக்க வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகன் உதித்த நாரணனும் மெச்சு மருகோனே
நாவலர் மதிக்க வேல்தனை எடுத்து நாகம் அற விட்ட மயில் வீரா
சேல் எனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி சீர் அணி தனத்தில் அணைவோனே
சீத வயல் சுற்று நாவல்தனில் உற்ற தேவர் சிறை விட்ட பெருமாளே

மேல்

#744
பலபல தத்துவம் அதனை எரித்து இருள் பரை அரணம் படர் வட அனலுக்கு இரை
பட நடந சுடர் பெரு வெளியில் கொள்ள இடம் மேவி
பவனம் ஒழித்து இரு வழியை அடைத்து ஒரு பருதி வழிப்பட விடல் ககனத்தொடு
பவுரி கொள சிவமயம் என முற்றிய பரமூடே
கலகல என கழல் பரிபுரம் பொன் பத ஒலி மலிய திரு நடனம் இயற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறை கடல் அதில் மூழ்கி
கவுரி மினல் சடைய அரனொடு நித்தமொடு அனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கு இனி நிறம் என் நவிற்று உடல் அருள்வாயே
புலையர் பொடித்தளும் அமணர் உடல்களை நிரையில் கழுக்களில் உற விடு சித்திர
புலவன் என சில விருது படைத்திடும் இளையோனே
புன மலையில் குறமகள் அயலுற்று ஒரு கிழவன் என சுனைதனில் அவள் ஐ புய
புளகிதம் உற்று இபம் வர அணைய புணர் மணி மார்பா
மலை சிலை பற்றிய கடவுளிடத்து உறை கிழவி அற சுக குமரி தகப்பனை
மழு கொடு வெட்டிய நிமலிகை பெற்று அருள் முருகோனே
மகிழ் பெணையில் கரை பொழில் முகில் சுற்றிய திருவெணெய் நல் பதி புகழ் பெற அற்புத
மயிலின் மிசை கொடு திரு நடம் இட்டு உறை பெருமாளே

மேல்

#745
நிணமொடு குருதி நரம்பு மாறிய தசை குடல் மிடையும் எலும்பு தோல் இவை
நிரைநிரை செறியும் உடம்பு நோய்படு முது காயம்
நிலைநிலை உருவ மலங்கள் ஆவது நவ தொளை உடைய குரம்பையாம் இதில்
நிகழ் தரு பொழுதில் முயன்று மாதவம் உய ஓரும்
உணர்விலி செப முதல் ஒன்றுதானிலி நிறையிலி முறையிலி அன்புதானிலி
உயர்விலி எனினும் என் நெஞ்சு தான் நினைவு அழியா முன்
ஒரு திரு மரகத துங்க மா மிசை அறுமுகம் ஒளி விட வந்து நான்மறை
உபநிடம் அதனை விளங்க நீ அருள்புரிவாயே
புணரியில் விரவி எழுந்த ஞாயிறு விலகிய புரிசை இலங்கை வாழ் பதி
பொலம் மணி மகுட சிரங்கள் தாம் ஒரு பதும் மாறி
புவி இடை உருள முனிந்து கூர் கணை உறு சிலை வளைய வலிந்து நாடிய
புயல் அதி விறல் அரி விண்டு மால் திரு மருகோனே
அணி தரு கயிலை நடுங்க ஓர் எழு குல கிரி அடைய இடிந்து தூள் எழ
அலை எறி உததி குழம்ப வேல் விடு முருகோனே
அமலை முன் அரிய தவம் செய் பாடல வள நகர் மருவி அமர்ந்த தேசிக
அறுமுக குறமகள் அன்ப மாதவர் பெருமாளே

மேல்

#746
மதிக்கு நேர் என்னும் வாள் மூகம் வான் மக நதிக்கு மேல் வரு சேல் ஏனும் நேர் விழி
மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி
மதித்த பூதரமாம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள்தோறுமே மிக
வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன்
பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீராவொடே கலை
பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும்
பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை
படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ
கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி
கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா
களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மெலே மேவி மூளைகள்
கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா
குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள்
குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும்
குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள்
குழிக்குள் மேவிய வானோர்களே தொழு தம்பிரானே

மேல்

#747
சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை
தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி
சரண கழல் காட்டியெ என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு
சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்
கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என
கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை
கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பரகதி
பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே
சிதற தரை நால் திசை பூதர நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி
சிதற கடல் ஆர்ப்புறவே அயில் விடுவோனே
சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி
செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள் பாலா
விதுரற்கும் அரா கொடி யானையும் விகட துறவு ஆக்கிய மாதவன்
விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே
வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய
விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே

மேல்

#748
மாத்திரையாகிலும் நா தவறாளுடன் வாழ்க்கையை நீடு என மதியாமல்
மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் மா பரிவே எய்தி அனுபோக
பாத்திரம் ஈது என மூட்டிடும் ஆசைகள்பால் படு ஆடகம் அது தேட
பார் களம் மீதினில் மூர்க்கரையே கவி பாற்கடலான் என உழல்வேனோ
சாத்திரம் ஆறையும் நீத்த மனோலய சாத்தியர் மேவிய பத வேளே
தாத்தரி தாகிட சே எனும் மா நட தாள் பரனார் தரு குமரேசா
வேத்திர சாலம் அது ஏற்றிடும் வேடுவர் மீக்க அமுது ஆம் மயில் மணவாளா
வேத்தமதாம் மறை ஆர்த்திடு சீர் திரு வேட்களம் மேவிய பெருமாளே

மேல்

#749
அறிவிலாதவர் ஈனர் பேச்சு இரண்டு பகரும் நாவினர் லோபர் தீ குணங்கள்
அதிக பாதகர் மாதர் மேல் கலன்கள் புனை ஆதர்
அசடர் பூ மிசை வீணராய் பிறந்து திரியும் மானுடர் பேதைமார்க்கு இரங்கி
அழியும் மாலினர் நீதி நூல் பயன்கள் தெரியாத
நெறியிலாதவர் சூதினால் கவர்ந்து பொருள் செய் பூரியர் மோகமாய் ப்ரபஞ்ச
நிலையில் வீழ் தரு மூடர் பால் சிறந்த தமிழ் கூறி
நினைவு பாழ் பட வாடி நோக்கு இழந்து வறுமையாகிய தீயின் மேல் கிடந்து
நெளியு நீள் புழு ஆயினேற்கு இரங்கி அருள்வாயே
நறிய வார் குழல் வான நாட்டு அரம்பை மகளிர் காதலர் தோள்கள் வேட்டு இணங்கி
நகை கொடு ஏழிசை பாடி மேல் பொலிந்து களிகூர
நடு இலாத குரோதமாய் தடிந்த தகுவர் மாதர் மணாளர் தோள் பிரிந்து
நசை பொறாது அழுது ஆகம் மாய்த்து அழுங்கி இடர் கூர
மறியும் ஆழ் கடல் ஊடு போய் கரந்து கவடு கோடியின் மேலுமாய் பரந்து
வளரும் மா இரு கூறதாய் தடிந்த வடி வேலா
மருவு காள முகீல்கள் கூட்டெழுந்து மதி உலாவிய மாடம் மேல் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில் வீற்றிருந்த பெருமாளே

மேல்

#750
குட தாமரையாம் எனவே இரு தனத்தார் மதி வாள் நுதலார் இருள்
குழல் காடின மா முகில் போல் முதுகு அலைமோத
குல கார் மயிலாம் எனவே கயல் விழி தார் கரம் மேல் கொடு மா முலை
குடத்து யாழ் கிளியாம் எனவே குயில் குரல் ஓசை
படித்தார் மயிலாம் எனவே நடை நெளித்தார் பல காமுகர் வார் கலை
பழிப்பாரவர் ஆசையை மேல்கொடு விலைமாதர்
படி கார் மினலாம் எனவே நகை புரித்தார் பலர் வாய் இதழ் சேர் பொருள்
பறிப்பார் பழிகாரிகள் நாரிகள் உறவாமோ
அடைத்தார் கடல் ஓர் வலி ராவண குலத்தோடு அரி ஓர் சரனார் சினம்
அழித்தார் முகில் ஏய் நிற ராகவர் மருகோனே
அறுத்தார் அயனார் தலையே புரம் எரித்தார் அதிலே புலனார் உயிர்
அளித்தார் உடல் பாதியிலே உமை அருள் பாலா
விடத்தார் அசுரார் பதி வேர் அற அடித்தாய் கதிர் வேல் கொடு சேவகம்
விளைத்தாய் குடி வாழ் அமரோர் சிறை மிடி தீர
விழி தாமரை போல் அழகா குறமகட்கு ஆன வணா என தாய் உறை
விருத்தாசலம் வாழ் மயில்வாகன பெருமாளே

மேல்

#751
திருமொழி உரை பெற அரன் உனதுழி பணி செய முனம் அருளிய குளவோனே
திறல் உயர் மதுரையில் அமணரை உயிர் கழு தெறிபட மறுகிட விடுவோனே
ஒருவு அரும் உனது அருள் பரிவிலர் அவர்களின் உறு படர் உறும் எனை அருள்வாயோ
உலகினில் அனைவர்கள் புகழுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா
கரு வரி உறு பொரு கணை விழி குறமகள் கணின் எதிர் தரு என முனம் ஆனாய்
கரு முகில் பொரு நிற அரி திரு மருமக கருணையில் மொழி தரு முதல்வோனே
முருகு அலர் தரு உறை அமரர்கள் சிறைவிட முரணுறும் அசுரனை முனிவோனே
முடிபவர் வடிவு அறு சுசி கரம் உறை தமிழ் முது கிரி வலம் வரு பெருமாளே

மேல்

#752
பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி
படலைக்கு விழி கெட்ட குருடுற்று மிக நெக்க பழமுற்று நரை கொக்கின் நிறமாகி
விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவுற்று விரல் பற்று தடியோடே
வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே
அசைவு அற்ற நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தில் அடல் வஜ்ரகரன் மற்றும் உள வானோர்
அளவற்ற மலர் விட்டு நிலம் முற்று மறையச்செய் அதுல சமர வெற்றி உடையோனே
வசை அற்று முடிவற்று வளர் பற்றின் அளவற்ற வடிவுற்ற முகில் கிட்ணன் மருகோனே
மதுர செம் மொழி செப்பி அருள்பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே

மேல்

#753
குரை கடல் உலகினில் உயிர் கொடு போந்து கூத்தாடுகின்ற குடில் பேணி
குகை இட மருவிய கரு இழி மாந்தர் கோட்டாலை இன்றி அவிரோதம்
வர இருவினை அற உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கும் அநுபூதி
வடிவினை உனது அழகிய திரு வார்ந்த வாக்கால் மொழிந்து அருளவேணும்
திரள் வரை பக மிகு குருகுல வேந்து தேர்ப்பாகன் மைந்தன் மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து தீ பாய இந்த்ரபுரி வாழ
விரி திரை எரி எழ முதல் உற வாங்கு வேல்கார கந்த புவி ஏழும்
மிடி கெட விளைவன வள வயல் சூழ்ந்த வேப்பூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#754
அஞ்சுவித பூதமும் கரணம் நாலும் அந்தி பகல் யாதும் அறியாத
அந்த நடு ஆதி ஒன்றும் இலதான அந்த ஒரு வீடு பெறுமாறு
மஞ்சு தவிழ் சாரல் அம் சயில வேடர் மங்கைதனை நாடி வனம் மீது
வந்து சரணார விந்தம் அது பாட வண் தமிழ் விநோதம் அருள்வாயே
குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக
கும்ப தன மீது சென்று அணையும் மார்ப குன்று தடுமாற இகல் கோப
வெம் சமர சூரன் நெஞ்சு பக வீர வென்றி வடி வேலை விடுவோனே
விம்ப மதில் சூழ நிம்பபுர வாண விண்டல மகீபர் பெருமாளே

மேல்

#755
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய்
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமர படை மீதே மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர்
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்து ஒளிர் வேலா
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே

மேல்

#756
வாட்டி எனை சூழ்ந்த வினை ஆசைய மு ஆசை அனல் மூட்டி உலை காய்ந்த மழுவாம் என விகாசமொடு
மாட்டி எனை பாய்ந்து கடவோடு அட்டமோடு ஆடிவிடு விஞ்சையாலே
வாய்த்த மலர் சாந்து புழுகான பனிநீர்களோடு காற்று வர தாங்குவன மார்பில் அணி ஆரமொடு
வாய்க்கும் என பூண்டு அழகு அதாக பவிசோடு மகிழ் அன்புகூர
தீட்டு விழி காந்தி மடவார்களுடன் ஆடி வலை பூட்டி விட போந்து பிணியோடு வலி வாதம் என
சேர்ந்துவிட பேர்ந்து வினை மூடி அடியேனும் உனது அன்பு இலாமல்
தேட்டமுற தேர்ந்தும் அமிர்தாம் எனவே ஏகி நமன் ஓட்டி விட காய்ந்து வரி வேதன் அடையாளம் அருள்
சீட்டு வர காண்டு நலி காலன் அணுகா நின் அருள் அன்பு தாராய்
வேட்டுவரை காய்ந்து குற மாதை உறவாடி இருள் நாட்டவரை சேந்த கதிர் வேல் கொடு அமராடி சிறை
மீட்டு அமரர்க்கு ஆண்டவனை வாழ்க நிலையாக வைகும் விஞ்சையோனே
வேற்று உருவில் போந்து மதுராபுரியில் ஆடி வைகை ஆற்றில் மணல் தாங்கும் மழுவாளி என தாதை புரம்
மேட்டை எரித்து ஆண்ட சிவலோகன் விடை ஏறி இடமும் கொள் ஆயி
கோட்டு முலை தாங்கும் இழையான இடை கோடி மதி தோற்றம் என போந்த அழகான சிவகாமி விறல்
கூற்றுவனை காய்ந்த அபிராமி மனது ஆரருள் கந்த வேளே
கூட்டு நதி தேங்கிய வெள்ளாறு தரளாறு திகழ் நாட்டில் உறை சேந்த மயிலா வளி தெய்வானையொடெ
கூற்று விழ தாண்டி எனது ஆகம் அதில் வாழ் குமர தம்பிரானே

மேல்

#757
வாரும் இங்கே வீடு இதோ பணம் பாஷாணம் மால் கடந்தே போம் என் இயலூடே
வாடி பெண்காள் பாயை போடும் என்று ஆசார வாசகம் போல் கூறி அணை மீதே
சேரும் முன் காசு ஆடை வவ்வியும் போதாமை தீமை கொண்டே போம் என அடம் மாதர்
சேர் இடம் போகாமல் ஆசு வந்து ஏறாமல் சீதளம் பாதாரம் அருள்வாயே
நாரணன் சீ ராம கேசவன் கூர் ஆழி நாயகன் பூ ஆயன் மருகோனே
நார தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய் தாளர் அருள் பாலா
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர் ஓட அயில் ஏவீ
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர் பெருமாளே

மேல்

#758
கறுவி மை கண் இட்டு இனிது அழைத்து இயல் கவி சொலி சிரித்து உறவாடி
களவு வித்தை இட்டு உளம் உருக்கி முன் கருதி வைத்த வைப்பு அவை சேர
தறு கணில் பறித்து இரு கழுத்து உற தழுவி நெக்குநெக்கு உயிர் சோர
சயன மெத்தையில் செயல் இழக்கும் இ தருணிகட்கு அகப்படலாமோ
பிறவியை தணித்து அருளும் நிட்கள பிரம சித்சுக கடல் மூழ்கும்
பெரு முனி திரள் பரவு செய்ப்பதி ப்ரபல கொச்சையில் சதுர்வேத
சிறுவ நிற்கு அருள் கவிகை நித்தில சிவிகையை கொடுத்து அருள் ஈசன்
செகதலத்தினில் புகழ் படைத்த மெய் திருவரத்துறை பெருமாளே

மேல்

#759
பூ தார் சூடும் கொத்து அலர் குழலியர் பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடு
போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும்
போல் தாய் நாளும் கை பொருள் உடையவர் மேல் தாள் ஆர் தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயம் கற்ற மை விழியினர் அமுதூறல்
வாய்த்தார் பேதம் செப்பு பொய் விரகியர் நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள் தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் அகில் ஆரம்
மா பூண் ஆரம் கச்சு அணி முலையினர் வேட்பூணு ஆகம் கெட்டு எனை உனது மெய்
வாக்கால் ஞானம் பெற்று இனி வழிபட அருளாயோ
ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை கூத்தாடு ஆநந்த சிவை திரிபுரை
ஆள் பேய பூதம் சுற்றிய பயிரவி புவ நேசை
ஆக்கா யாவும் பற்றியே திரிபுற நோக்கா ஏதும் செற்றவள் திருவிளையாட்டால்
ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பு ஆராயும் சொல் தமிழ் தரு முருகோனே
ஏற்போர் தாம் வந்து இச்சையின் மகிழ்வோடு வாய்ப்பாய் வீசும் பொன் ப்ரபை நெடு மதிள்
யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே

மேல்

#760
கழை முத்து மாலை புயல் முத்து மாலை கரி முத்து மாலை மலை மேவும்
கடி முத்து மாலை வளை முத்து மாலை கடல் முத்து மாலை அரவு ஈனும்
அழல் முத்து மாலை இவை முற்று மார்பில் அடைவு ஒத்து உலாவ அடியேன் முன்
அடர் பச்சை மாவில் அருளில் பெணோடும் அடிமை குழாமொடு அருள்வாயே
மழை ஒத்த சோதி குயில் தத்தை போலும் மழலை சொல் ஆயி எமை ஈனும்
மத மத்தம் நீல கள நித்த நாதர் மகிழ் சத்தி ஈனும் முருகோனே
செழு முத்து மார்பின் அமுத தெய்வானை திரு முத்தி மாதின் மணவாளா
சிறை விட்ட சூரர் தளை வெட்டி ஞான திருமுட்டம் மேவும் பெருமாளே

மேல்

#761
சரம் வெற்றி கயலாம் எனும் வேல் விழி சிலை வட்ட புருவார் குழல் கார் முகில்
தனம் முத்து கிரியாம் எனும் நூல் இடை மடவார்கள்
சனு மெத்த பரிவாகிய மா மயல் இடும் முத்தி திகழ் மால் கொடு பாவையர்
தகுத தக்கிட தோதகு தீதென விளையாடும்
விரக துர்க்குண வேசியர் ஆசையர் பணம் மெத்த பறிகாரிகள் மாறிகள்
வித மெத்த கொடு மேவிகள் பாவிகள் அதி போக
மெலிவுற்று குறி நாறிகள் பீறிகள் கலகத்தை செய் மோடிகள் பீடிகள்
விருதிட்டு குடிகேடிகள் சேடிகள் உறவாமோ
பொரு வெற்றி கழை வார் சிலையான் உடல் எரி பட்டு சருகாய் விழவே நகை
புகுவித்த பிறை வாழ் சடையான் இடம் ஒரு மாது
புகழ் சத்தி சிலுகா வணம் மீது உறை சிவ பத்தி பரமேஸ்வரியாள் திரிபுவனத்தை
பரிவாய் முதல் ஈனும் உமை அருள் பாலா
திரையில் பொன் கிரி ஆடவும் வாசுகி புனைவித்து தலைநாள் அமுது ஆர் சுவை
சிவ பத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர்
திரு உற்று பணி ஆதிவராகர் தம் மகளை பொன் தன ஆசையொடு ஆடிய
திருமுட்ட பதி வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#762
மூல முண்டகம் அனுபூதி மந்திர பராபரம் சுடர்கள் மூணு மண்டல அதார
சந்தி முகம் ஆறும் இந்திர தருவும் தளாமேல்
மூதுர அம்பலவர் பீடம் அந்தமும் இலாத பந்த ஒளி ஆயிரம் கிரண
மூணும் இந்து ஒளிர் சோதி விண் படிக விந்து நாதம்
ஓலம் என்று பல தாள சந்தம் இடு சேவை கண்டு அமுதை வாரி உண்டு உலகு இரேழு
கண்டு விளையாடி இந்து கதிர் அங்கி சூலம்
ஓடும் அந்த கலிகால் ஒடுங்க நடு தூணில் தங்க வரி ஞான வண் கயிறு
மீது அணைந்து சத கோடி சந்திர ஒளி சந்தியாதோ
சூலி அந்தரி கபாலி சங்கரி புராரி அம்பரி குமாரி எண் குண சுவாமி
பங்கி சிவகாமி சுந்தரி உகந்த சேயே
சூர சங்கர குமார இந்திர சகாய அன்பர் உபகாரி சுந்தர குகா
எனும் சுருதி ஓலம் ஒன்ற நடனம் கொள் வேலா
சீல வெண் பொடி இடாத வெம் சமணர் மாள வெம் கழுவில் ஏறும் என்று பொடி
நீறு இடும் கமல பாணி சந்திர முக கந்த வேளே
தேவ ரம்பை அமுது ஈண மங்கை தரு மான் அணைந்த புய தீர சங்கர தியாகர்
வந்து உறை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#763
வண்டு அணியும் கமழ் கூந்தலார் விழி அம்பு இயலும் சிலை போந்த வாள் நுதல்
வண் தரளம் திகழ் ஆய்ந்த வார் நகை குயில் போல
வண் பயிலும் குவடு ஆண்ட மார் முலையின் பொறி அம் குமிழ் ஆம்பல் தோள் கர
வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன்
கண்டவுடன் களிகூர்ந்து பேசிகள் குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள்
கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் சதிகாரர்
கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள்
கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் உழல்வேனோ
அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர் புண்டரிகன் திரு பாங்கர் கோ என
அஞ்சல் எனும்படி போந்து வீரமொடு அசுராரை
அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒட ஆழிகள் எண் கிரியும் பொடி சாம்பர் நூறிட
அந்தகனும் கயிறை ஆங்கு ஐ வீசிட விடும் வேலா
செண்டு அணியும் சடை பாந்தள் நீர் மதி என்பு அணியன் கன சாம்பல் பூசிய
செம் சடலன் சுத சேந்த வேலவ முருகோனே
திங்கள் முகம் தனம் சாந்து மார்பினள் என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு
சிந்தை மகிழ்ந்து மயேந்திரம் மேவிய பெருமாளே

மேல்

#764
அலை கடல் சிலை மதன் அந்தி ஊதையும் அரிவையர் வசையுடன் அங்கி போல் வர
அசைவன விடை மணி அன்றில் கோகிலம் அஞ்சி நானும்
அழல் இடு மெழுகு என வெம்பி வேர்வு எழ அகிலொடு ம்ருகமத நஞ்சு போல் உற
அணி பணி மணி பல வெந்து நீறு எழ அங்கம் வேறாய்
முலை கனல் சொரி வர முன்பு போல் நினைவு அழி வசம் அறஅற நின்று சோர்வுற
முழுது கொள் விரகு அனல் மொண்டு வீசிட மங்கிடாதே
முருகு அவிழ் திரள் புயம் உந்து வேல் அணி முளரியொடு அழகிய தொங்கல் தாரினை
முனிவு அற நினது அருள்தந்து என் மாலை முனிந்திடாதோ
சிலை நுதல் கயல் விழி செம் சொல் வானவி திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ் சடை நெடியவள் செம்பொன் மேனியள் சிங்கம் ஏறி
திரள் படை அலகைகள் பொங்கு கோடுகள் திமிலையொடு அறை பறை நின்று மோதிட
சிவனுடன் நடம் வரு மங்கை மாது உமை தந்த வேளே
மலைதனில் ஒரு முநி தந்த மாதுதன் மலர் அடி வருடியெ நின்று நாள்தொறும்
மயில் பயில் குயில் கிளி வம்பிலே கடி தொண்டினோனே
மழை முகில் தவழ் தரும் அண்டு கோபுர மதிள் வயல் புடையுற விஞ்சு காழியில்
வரும் ஒரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே

மேல்

#765
இரதமான தேன் ஊறல் அதரமான மா மாதர் எதிர் இலாத பூண் ஆரம் முலை மீதே
இனிது போடும் ஏகாசம் உடையினாலும் ஆலால விழியினாலும் மால் ஆகி அநுராக
விரகம் ஆகியே பாயல் இடைவிடாமல் நாள்தோறும் ம்ருகமதாதி சேர் ஓதி நிழல் மூழ்கி
விளையும் மோக மா மாயை கழலுமாறு நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள்தாராய்
அரகரா எனா மூடர் திரு வெண் நீறு இடா மூடர் அடிகள் பூசியா மூடர் கரையேற
அறிவு நூல் கலா மூடர் நெறியிலே நிலா மூடர் அறம் விசாரியா மூடர் நரகு ஏழில்
புரள வீழ்வர் ஈராறு கர விநோத சேய் சோதி புரணம் பூரணாகார முருகோனே
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி வாழ் தேவர் பெருமாளே

மேல்

#766
ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்
ஓதப்படும் நாலுமுகன்தனால் உற்றிடும் கோலம் எழுந்து ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி
கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த கூள சடம் ஈதை உகந்து புவி மீதே
கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று கோல கழலே பெற இன்று அருள்வாயே
சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து சேனை சமணோர் கழுவின்கண் மிசை ஏற
தீர திருநீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று தீமை பிணி தீர உவந்த குருநாதா
கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து காழி பதி மேவி உகந்த பெருமாளே

மேல்

#767
ஒய்யார சிலையாம் என வாசனை மெய் ஆர பணி பூஷண மாலைகள்
உய்யா நல் கலையே கொடு மா மத இதமாகி
ஒவ்வார் இப்படியோர் எனவே இரு கை ஆர் கணை மோதிரம் ஏய் பல
உள்ளார் செப்பிட ஏமுற நாளிலும் உடல் பேணி
செய்வார் இப்படியே பல வாணிபம் இய்யார் இல் பணமே ஒரு காசிடை
செய்யார் சற்பனைகாரர் பிசாசர் உன் அடி பேணா
செய்வாரில் படு நான் ஒரு பாதகன் மெய்யா எப்படி ஓர் கரை சேர்வது
செய்யா அற்புதமே பெற ஓர் பொருள் அருள்வாயே
மை ஆர் அ கிரியே பொடியாய் விட பொய் சூர் பதியே கெட வானவர்
வையாய் பொன் சரணா எனவே தொழ விடும் வேலா
வையாளி பரி வாகன மா கொளு துவ்வு ஆழி கடல் ஏழ் மலை தூளி செய்
மை போல கதிர் ஏய் நிறமாகிய மயில் வாழ்வே
தெய்வானைக்கு அரசே குற மான் மகிழ் செய்யா முத்தமிழ் ஆகரனே புகழ்
தெய்வீக பரமா குருவே என விருது ஊத
திய்யார் அ கழு ஏறிட நீறு இடு கையா அற்புதனே மா புர
செய் காழி பதி வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#768
கள் காம க்ரோதத்தே கண் சீமிழ்த்தோர்கட்கு கவி பாடி
கச்சா பிச்சாக தாவித்து ஆரத்தே அ கொட்களை நீள
கொள்கால் அ கோல கோணத்தே இட்டு ஆசை பட்டிடவே வை
கொள் தானக்கு ஊனுக்கா எய்த்தேன் இ தீது அத்தை களைவாய்
வெட்காமல் பாய் சுற்று ஊமர் சேர் விக்கானத்தை தரி மாறன்
வெப்பு ஆற பாடி காழிக்கே புக்காய் வெற்பில் குற மானை
முள் கானில் கால் வைத்து ஓடிப்போய் முன் சார் செச்சை புய வீரா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#769
கொங்கு உலாவிய குழலினு நிழலினு நஞ்சு அளாவிய விழியினும் இரணிய
குன்று போல் வளர் முலையினு நிலையினும் மட மாதர்
கொம்பு சேர்வன இடையினு நடையினும் அன்புகூர்வன மொழியினும் எழில் குடிகொண்ட
சேய் இதழினு நகையினும் மனது ஆய
சங்கையாளியை அணு இடை பிள அளவு இன் சொல் வாசக மொழிவன இவை இல
சம்ப்ர தாயனை அவலனை ஒளி திகழ் இசை கூரும்
தண்டை நூபுரம் அணுகிய இரு கழல் கண்டு நாள் அவம் மிகை அற விழி அருள்
தந்த பேர் அருள் கனவிலும் நனவிலும் மறவேனே
வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மா முடி பொடிபட வட அனல்
மங்கி நீறு எழ அலகைகள் நடம் இட மயில் ஏறி
வஞ்ச வேல் கொடு முனிபவ அழகிய சண்பை மா நகர் உறையும் ஒர் அறுமுக
வந்த வானவர் மனதினில் இடர் கெட நினைவோனே
பங்க வீரியர் பறி தலை விரகினர் மிஞ்சு பாதகர் அற நெறி பயன் இலர்
பந்தம் மேவிய பகடிகள் கபடிகள் நிலை கேடர்
பண்பு இலாதவர் கொலை செயும் மனதினர் இங்கு எணாயிரர் உயரிய கழு மிசை
பஞ்சபாதகர் முனை கெட அருளிய பெருமாளே

மேல்

#770
சந்தனம் பரிமள புழுகொடு புனை கொங்கை வஞ்சியர் சரியொடு கொடு வளை
தங்கு செம் கையர் அனம் என வரு நடை மட மாதர்
சந்ததம் பொலி அழகு உள வடிவினர் வஞ்சகம் பொதி மனதினர் அணுகினர்
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர அவர் மீதே
சிந்தை வஞ்சக நயமொடு பொருள் கவர் தந்த்ர மந்த்ரிகள் தரணியில் அணைபவர்
செம்பொன் இங்கு இலை எனில் மிகுதியும் முனிவாகி
திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன் என்று சண்டைகள் புரி தரு மயலியர்
சிங்கியும் கொடு மிடிமையும் அகல நின் அருள்கூர்வாய்
மந்தர குடை என நிரை உறு துயர் சிந்த அன்று அடர் மழைதனில் உதவிய
மஞ்சு எனும்படி வடிவுறும் அரி புகழ் மருகோனே
மங்கை அம்பிகை மகிழ் சரவணபவ துங்க வெம் கயமுகன் மகிழ் துணைவ நல்
வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா
தந்த னந்தன தனதன தன என வண்டு விண்டு இசை முரல் தரு மணம் மலர்
தங்கு சண்பக முகில் அளவு உயர் தரு பொழில் மீதே
சங்கு நல் குமிழ் தரளமும் எழில் பெறு துங்க ஒண் பணி மணிகளும் வெயில் விடு
சண்பை அம் பதி மருவிய அமரர்கள் பெருமாளே

மேல்

#771
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி
தலையரு நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்
சலிகையு நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில்
சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும்
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல
விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல
விஜயமும் அன்பின் மொழிந்துமொழிந்து இயல் மறவேனே
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி
கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன்
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை
கணவன் அரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள்
வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரமபுரம்தனிலும் குகன் என்பவர்
மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#772
சிந்துற்று எழு மா மதி அங்கி திரளாலே தென்றல் தரு வாசம் மிகுந்துற்று எழலாலே
அந்தி பொழுதாகிய கங்குல் திரளாலே அன்புற்று எழு பேதை மயங்கி தனி ஆனாள்
நந்து உற்றிடு வாரியை மங்க திகழாயே நஞ்சு ஒத்து ஒளிர் வேலினை உந்தி பொரு வேளே
சந்த கவி நூலினர் தம் சொற்கு இனியோனே சண்பை பதி மேவிய கந்த பெருமாளே

மேல்

#773
செக்கர் வான பிறைக்கு இக்கு மாரற்கு அல தெற்கில் ஊதைக்கு அனல் தணியாத
சித்ர வீணைக்கு அலர் பெற்ற தாயர்க்கு அவ சித்தம் வாடி கன கவி பாடி
கை கபோல கிரி பொன் கொள் ராசி கொடை கற்ப தாரு செக த்ரிய பானு
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய்
சக்ரபாணிக்கும் அ பத்மயோனிக்கும் நித்த ப்ரதாபர்க்கும் எட்ட அரிது ஆய
தத்வ வேதத்தின் உற்பத்தி போதித்த அ தத்வ ரூப கிரி புரை சாடி
கொக்கிலே புக்கு ஒளித்திட்ட சூர் பொட்டு எழ குத்து ராவுத்த பொன் குமரோனே
கொற்றவா உற்பல செச்சை மாலை புய கொச்சை வாழ் முத்தமிழ் பெருமாளே

மேல்

#774
தினமணி சார்ங்கபாணி என மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் ஆரம்
செழு மணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்
இன வளை பூண் கையார் கவரி இட வேய்ந்து மாலை புழுகு அகில் சாந்து பூசி அரசாகி
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ
வனசரர் ஏங்க வான முகடு அற ஓங்கி ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக
மயிலொடு மான்கள் சூழ வள வரி வேங்கையாகி மலை மிசை தோன்று மாய வடிவோனே
கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற வேத
கவி தரு காந்த பால கழுமல பூந்தராய் கவுணியர் வேந்த தேவர் பெருமாளே

மேல்

#775
பூமாது உரமே அணி மால் மறை வாய் நாலு உடையோன் மலி வானவர்
கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு வேதம்
பூராயமதாய் மொழி நூல்களும் ஆராய்வது இலாத அடல் ஆசுரர்
போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி
நீ மாறு அருளாய் என ஈசனை பா மாலைகளால் தொழுதே திருநீறு
ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு
நீரேர் தரு சானவி மா மதி காகோதர மாதுளை கூவிளை
நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே
போமாறு இனி வேறு எது ஓது எனவே ஆர் அருளால் அவர் ஈதரு
போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு
பூலோகமொடு அறு லோகமும் நேர் ஓர் நொடியே வருவோய் சுர
சேனாபதியாயவனே உனை அன்பினோடும்
காமா அறு சோம ம ஆனன தாமா மணமார் தரு நீப சுதாமா
எனவே துதியாது உழல் வஞ்சனேனை
காவாய் அடி நாள் அசுரேசரையே சாடிய கூர் வடி வேலவ
கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே

மேல்

#776
மதன சொல் காரக்காரிகள் பவள கொப்பு ஆட சீறிகள்
மருள பட்டு ஆடைக்காரிகள் அழகாக
மவுன சுட்டு ஆடி சோலிகள் இசலிப்பித்து ஆசைக்காரிகள்
வகை முத்து சார சூடிகள் விலைமாதர்
குதலை சொல் சார பேசிகள் நரக அச்சில் சாடி பீடிகள்
குசலை கொள் சூலை காலிகள் மயல் மேலாய்
கொளுவி கட்டு ஆசை பாசனை பவம் துக்கக்கார சூதனை
குமுத பொன் பாத சேவையில் அருள்வாயே
கதற கல் சூரை கார் கடல் எரிய திக்கு ஊறில் பாழ்பட
ககனம் கட்டாரிக்கா இரை இடும் வேலா
கதிர் சுற்றிட்ட ஆசை பால் கிரி உறை பச்சை பாச கோகில
கவுரி பொன் சேர்வை சேகர முருகோனே
திதலை பொன் பாணி கார் குயில் அழகில் பொன் தோகை பாவையை
தினம் உற்று சார தோள் மிசை அணைவோனே
திலத பொட்டு ஆசை சேர் முக மயில் உற்றிட்டு ஏறி காழியில்
சிவன் மெச்ச காதுக்கு ஓதிய பெருமாளே

மேல்

#777
விடம் என மிகுத்த வடவு அனல் என உயர்த்து ரவி விரி கதிர் என பரவு நிலவாலே
விதனம் மிக உற்று வரு ரதிபதி கடுத்து விடு விரை தரு இதழ் கமல கணையாலே
அடல் அமர் இயற்று திசையினில் மருவி மிக்க அனல் அழலொடு கொதித்து வரு கடை நாளில்
அணுகி நமன் எற்ற மயல் கொளும் அ நிலை சித்தம் உற அவசமோடு அணைத்து அருள வரவேணும்
அடவிதனில் மிக்க பரு வரையர் அளித்த திரு அணைய மயில் முத்த மணி சுர யானை
அழகிய மணி கலச முலைகளில் மயக்கமுறும் அதி விரக சித்ர மணி மயில் வீரா
கட தட களிற்று முகர் இளையவ கிரி குமரி கருணையோடு அளித்த திற முருகோனே
கமல மலர் ஒத்த விழி அரி மருக பத்தர் பணி கழுமல நகர் குமர பெருமாளே

மேல்

#778
அளி சுழல் அளக காடு காட்டவும் விழி கொடு கலவி தீயை மூட்டவும்
அமளியில் முடிய போது போக்கவும் இளைஞோர்கள்
அவர் வசம் ஒழுகி காசு கேட்கவும் அழகிய மயிலில் சாயல் காட்டவும்
அளவிய தெருவில் போய் உலாத்தவும் அதி பார
இள முலை மிசையில் தூசு நீக்கவும் முகமொடு முகம் வைத்து ஆசை ஆக்கவும்
இரு நிதி இலரை தூர நீக்கவும் இனிதாக
எவரையும் அளவி போய் அணாப்பவும் நினைபவர் அளவில் காதல் நீக்கி என்
இடரது தொலைய தாள்கள் காட்டி நின் அருள்தாராய்
நெளி படு களம் உற்று ஆறு போல் சுழல் குருதியில் முழுகி பேய்கள் கூப்பிட
நிணமது பருகி பாறு காக்கைகள் கழுகு ஆட
நிரைநிரை அணியிட்டு ஓரி ஆர்த்திட அதிர் தரு சமரில் சேனை கூட்டிய
நிசிசரர் மடிய சாடு வேல் கொடு பொரும் வீரா
களி மயில்தனில் புக்கு ஏறு தாட்டிக அழகிய கனக தாமம் ஆர்த்து ஒளிர்
கனகிரி புய முத்தாரம் ஏற்று அருள் திரு மார்ப
கரியவனகரின் தேவ பார்ப்பதி சுத குற நல் பாவை தாள் பணி
கருணைய தமிழில் பாடல் கேட்டு அருள் பெருமாளே

மேல்

#779
உரத்து உறை போத தனியான உனை சிறிது ஓத தெரியாது
மரத்து உறை போல் உற்று அடியேனும் மலத்து இருள் மூடி கெடலாமோ
பரத்து உறை சீலத்தவர் வாழ்வே பணித்து அடி வாழ்வுற்று அருள்வோனே
வரத்து உறை நீதர்க்கு ஒரு சேயே வயித்தியநாத பெருமாளே

மேல்

#780
எத்தனை கோடிகோடி விட்டு உடல் ஓடி ஆடி எத்தனை கோடி போனது அளவு ஏதோ
இப்படி மோக போகம் இப்படி ஆகிஆகி இப்படி ஆவது ஏது இனிமேலோ
சித்திடில் சீசிசீசி குத்திரம் மாய மாயை சிக்கினில் ஆயும் மாயும் அடியேனை
சித்தினில் ஆடலோடு முத்தமிழ் வாணர் ஓது சித்திர ஞான பாதம் அருள்வாயே
நித்தமும் ஓதுவார்கள் சித்தமே வீடு அதாக நிர்த்தம் அது ஆடுமாறு முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சு உருவான மூணு நெட்டிலை சூலபாணி அருள் பாலா
பை தலை நீடும் ஆயிர தலை மீது பீறும் பத்திர பாத நீல மயில் வீரா
பச்சு இள பூக பாளை செய் கயல் தாவு வேளூர் பற்றிய மூவர் தேவர் பெருமாளே

மேல்

#781
பாடகம் சிலம்போடு செச்சை மணி கோ என கலந்து ஆடு பொன் சரணர்
பாவை சித்திரம் போல்வர் பட்டு உடையின் இடை நூலார்
பார பொன் தனம் கோபுர சிகரமாம் என படர்ந்த ஏமலிப்பர் இதம்
பாகு நல் கரும்போடு சர்க்கரையின் மொழி மாதர்
ஏடக குலம் சேரு மை குழலொடு ஆடு அளி குலம் பாட நல் தெருவில்
ஏகி புள் குலம் போல பற்பல சொல் இசை பாடி
ஏறி இச்சகம் பேசி எத்தி இதம் வாரும் முன் பணம் தாரும் இட்டம் என
ஏணி வைத்து வந்து ஏற விட்டிடுவர் செயலாமோ
சேடன் உக்க சண்டாள அரக்கர் குலம் மாள அட்ட குன்று ஏழு அலை கடல்கள்
சேர வற்ற நின்று ஆட இல் கரம் ஈரறு தோள் மேல்
சேண் நிலத்தர் பொன் பூவை விட்டு இருடியோர்கள் கட்டியம் பாட எட்டு அரசர்
சேசெ ஒத்த செந்தாமரை கிழவி புகழ் வேலா
நாடு அகம் புனம் காவலுற்ற சுக மோகனத்தி மென் தோளி சித்ர வளி
நாயகி கிதம் பாடி நித்தம் அணி புனைவோனே
ஞான வெற்பு உகந்து ஆடும் அத்தர் தையல் நாயகிக்கு நன் பாகர் அக்கு அணியும்
நாதர் மெச்ச வந்து ஆடு முத்தம் அருள் பெருமாளே

மேல்

#782
மாலினால் எடுத்த கந்தல் சோறினால் வளர்ந்த பொந்தி மாறி ஆடு எடுத்த சிந்தை அநியாய
மாயையால் எடுத்து மங்கினேனை ஐயா எனக்கு இரங்கி வாரும் ஐயா இனி பிறந்து இறவாமல்
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே
மேவி யான் உனை போல் சிந்தையாகவே களித்து கந்த வேளே ஆம் என பரிந்து அருள்வாயே
காலினால் என பரந்த சூரர் மாள வெற்றி கொண்ட கால பாநு சத்தி அம் கை முருகோனே
காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரை புணர்ந்த காளை ஏறு கர்த்தன் எந்தை அருள் பாலா
சேலை நேர் விழி குறம் பெண் ஆசை தோளும் புணர்ந்து சீரை ஓது பத்தர் அன்பில் உறைவோனே
தேவர் மாதவர் சித்தர் தொண்டர் ஏக வேளூருக்கு உகந்த சேவல் கேது சுற்று கந்த பெருமாளே

மேல்

#783
மூலாதாரமோடு ஏற்றி அங்கியை ஆறு ஆதாரமோடு ஓட்டி யந்திர
மூலா வாயுவை ஏற்று நல் சுழி முனையூடே
மூதாதார மருப்பில் அந்தர நாதா கீதம் அது ஆர்த்திடும் பரம்
ஊடே பால் ஒளி ஆத்துமன்தனை விலகாமல்
மால் ஆடு ஊனொடு சேர்த்தி இதம் பெற நானா வேத ம சாத்திரம் சொல்லும்
வாழ் ஞானா புரி ஏற்றி மந்திர தவிசூடே
மாதா நாதனும் வீற்றிருந்திடும் வீடே மூள் ஒளி காட்டி சந்திர
வாகார் தேன் அமுது ஊட்டி என்றனை உடன் ஆள்வாய்
சூலாள் மாது உமை தூர்த்த சம்பவி மாதா ராப்பகல் காத்து அமைந்த அனை
சூடோடி ஈர் வினை வாட்டி மைந்தர் என எமை ஆளும்
தூயாள் மூவரை நாட்டும் எந்தையர் வேளூர் வாழ் வினை தீர்த்த சங்கரர்
தோய் சாரூபர் ஓடு ஏற்றி இருந்தவள் அருள் பாலா
வேலா ஏழ் கடல் வீட்டி வஞ்சக மூடார் சூரரை வாட்டி அந்தகன்
வீடு ஊடு ஏவிய காத்திரம் பரி மயில் வாழ்வே
வேதா நால் தலை சீ கொளும்படி கோலாகாலம் அது ஆட்டு மந்திர
வேலா மால் மகளார்க்கு இரங்கிய பெருமாளே

மேல்

#784
மேக வார் குழல் அது ஆட தன பாரம் மிசை ஆரம் ஆட குழை ஆட விழி ஆட பொறி
மேனி வாசனைகள் வீச அல்குல் மோதி பரிமளம் ஏற
மீன் நுல் ஆடை இடை ஆட மயில் போல நடை ஓலம்ஓலம் என பாத மணி நூபுரமும்
மேல் வில் வீச பணி கீர குயில் போல குரல் முழவு ஓசை
ஆகவே அவைகள் கூடிடுவர் வீதி வருவோரை வாரும் எனவே சரசமோடு உருகி
ஆசை போல மனையே கொடு அணைவார்கள் குவடு அதி பார
ஆணி மா முலையின் மூழ்கி சுக வாரி கொடு வேர்வை பாய அணையூடு அமளி ஆடி இடரான
சூலை பல நோய்கள் கடல் ஆடி உடல் உழல்வேனோ
நாகலோகர் மதிலோகர் பகலோகர் விதி நாடுளோர்கள் அமரோர்கள் கணநாதர் விடைநாதர்
வேதியர்கள் ஆதி சரசோதி திகழ் முநிவோர்கள்
நாதரே நரர் மன் நாரணர் புராண வகை வேத கீத ஒலி பூரை இது பூரை என
நாசமாய் அசுரர் மேவி கிரி தூளி பட விடும் வேலா
தோகை மாது குற மாது அமுத மாதுவின் நல் தோழி மாது வளி நாயகி மினாளை சுக
சோகமோடு இறுகி மார் முலை விடாமல் அணை புணர்வோனே
தோள் இராறு முகம் ஆறு மயில் வேல் அழகு மீது எய்வான வடிவா தொழுது எணா வயனர்
சூழு காவிரியும் வேளூர் முருகா அமரர் பெருமாளே

மேல்

#785
ஏட்டின் விதிப்படியே கொடு மா புர வீட்டில் அடைத்து இசைவே கசை மூணு அதில்
ஏற்றி அடித்திடவே கடல் ஓடம் அது என ஆகி
ஏற்கும் என பொருள் ஆசை பெணாசை கொளா து என திரியா பரியா தவம்
ஏற்றி இருப்பிடமே அறியாமலும் உடல் பேணி
பூட்டு சரப்பளியே மதனாம் என ஆட்டி அசைத்தி இயலே திரி நாளையில்
பூத்த மல குகையோ பொதி சோறோ என கழு காகம்
போற்றி நமக்கு இரையாம் எனவே கொள நாட்டில் ஒடுக்கு எனவே விழு போதினில்
பூட்டு பணி பத மா மயிலா அருள்புரிவாயே
வீட்டில் அடைத்து எரியே இடு பாதகன் நாட்டை விடுத்திடவே பல சூதினில்
வீழ்த்த விதிப்படியே குரு காவலர் வனமே போய்
வேற்றுமை உற்று உருவோடு இயல் நாளது பார்த்து முடித்திடவே ஒரு பாரத
மேல் புனைவித்த மகா வீர மாயவன் மருகோனே
கோட்டை அழித்த அசுரர் பதி கோ என மூட்டி எரித்த பராபர சேகர
கோத்த மணி கதிரே நிகராகிய வடி வேலா
கூற்று மரித்திடவே உதை பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள்
கோட்டு முலைக்கு அதிபா கடவூர் உறை பெருமாளே

மேல்

#786
சூலம் என ஓடு சர்ப்ப வாயுவை விடாது அடக்கி தூய ஒளி காண முத்தி விதமாக
சூழும் இருள் பாவகத்தை வீழ அழல் ஊடு எரித்து சோதி மணி பீடம் இட்ட மடம் மேவி
மேலை வெளி ஆயிரத்து நாலிரு பராபரத்தின் மேவி அருணாசலத்தினுடன் மூழ்கி
வேலு மயில்வாகன ப்ரகாசம் அதிலே தரித்து வீடும் அதுவே சிறக்க அருள்தாராய்
ஓல அசுரர் ஆழி எட்டு வாளகிரி மாய வெற்பும் ஊடுருவ வேல் தொடுத்த மயில் வீரா
ஓது குற மான் வனத்தில் மேவி அவள் கால் பிடித்து உள் ஓம் எனும் உபதேச வித்தொடு அணைவோனே
காலனொடு மேதி மட்க ஊழி புவி மேல் கிடத்து காலன் இடம் மேவு சத்தி அருள் பாலா
காலம் முதல் வாழ் புவிக்கு அதார நகர் கோபுரத்துள் கான மயில் மேல் தரித்த பெருமாளே

மேல்

#787
அருக்கி மெத்தென சிரித்து மை கணிட்டு அழைத்து இதப்பட சில கூறி
அரை பணத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து
உருக்கி மட்டு அற பொருள் பறிப்பவர்க்கு உள கருத்தினில் ப்ரமை கூராது
உரைத்து செய்ப்பதி தலத்தினை துதித்து உனை திருப்புகழ் பகர்வேனோ
தருக்க மற்கட படை பலத்தினில் தட பொருப்பு எடுத்து அணையாக
சமுத்திரத்தினை குறுக்க அடைத்து அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர்
செருக்கு விக்ரம சரத்தை விட்டு உற செயித்த உத்தம திரு மாமன்
திரு தகப்பன் மெச்சு ஒருத்த முத்தமிழ் திரு படிக்கரை பெருமாளே

மேல்

#788
அமுதினை மெத்த சொரிந்து மாவினது இனிய பழத்தை பிழிந்து பால் நறவு
அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய்
அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையில் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு
அருள்பவர் ஒத்து தளர்ந்த காமுகர் மயல் தீர
குமுதம் விளர்க்க தடம் குலாவிய நிலவு எழு முத்தை புனைந்த பாரிய
குலவிய சித்ர ப்ரசண்ட பூரண தன பார
குவடு இளக கட்டி உந்தி மேல் விழும் அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை
குரை கழல் பற்றி புகழ்ந்து வாழ்வுற அருள்வாயே
வமிசம் மிகுத்து ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ர கொடும்பையான புன்
மதி கொடு அழிந்திட்டு இடும்பை ராவணன் மதியாமே
மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்க குரங்கினால் அவன்
வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே
எமது மலத்தை களைந்து பாடு என அருள அதற்கு புகழ்ந்து பாடிய
இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே
எழில் வளை மிக்க தவழ்ந்து உலாவிய பொனி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய
இணை இலி ரத்ன சிகண்டி ஊர் உறை பெருமாளே

மேல்

#789
ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே
ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று ஆயு வேதனையே என்று உலையாதே
சேடன் மா முடி மேவும் பார் உளோர்களுள் நீடும் த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
தேடி நான்மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக நான் இன்று அடைவேனோ
பாடு நான்மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவைபாகனும் நாளும் தவறாதே
பாக நாள்மலர் சூடும் சேகரா மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா
கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு நாவல மேவும் தமிழ் வீரா
கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா மயில் ஏறும் பெருமாளே

மேல்

#790
ஈளை சுரம் குளிர் வாதம் எனும் பல நோய்கள் வளைந்து அற இளையாதே
ஈடுபடும் சிறு கூடு புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே
மூளை எலும்புகள் நாடி நரம்புகள் வேறு படும் தழல் முழுகாதே
மூலம் எனும் சிவயோக பதம்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே
வாளை நெருங்கிய வாவியிலும் கயல் சேல்கள் மறிந்திட வலை பீறா
வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு இள மதி தோயும்
பாளை நறும் கமழ் பூக வனம் தலை சாடி நெடும் கடல் கழி பாயும்
பாகை வளம் பதி மேவி வளம் செறி தோகை விரும்பிய பெருமாளே

மேல்

#791
குவளை பொருது இரு குழையை முடுகிய கோல வேல் விழி மடவார்தம்
கொடிய ம்ருகமத புளக தன கிரி கூடி நாள்தொறு மயல் ஆகி
துவள உருகிய சரச விதம் அது சோர வாரிதி அலையூடே
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ
கவள கர தல கரட விகடக போல பூதர முகமான
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடி வேலா
பவள மரகத கநக வயிரக பாட கோபுர அரி தேரின்
பரியும் இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே

மேல்

#792
அனல் அப்பு அரி புக்க குண த்ரயம் வைத்து அடர் பொய் குருதி குடில் பேணா
அவல கவலை சவலை கலை கற்று அதனில் பொருள் சற்று அறியாதே
குனகி தனகி கனல் ஒத்து உருகி குலவி கலவி கொடியார்தம்
கொடுமை கடுமை குவளை கடையில் குலைபட்டு அலையக்கடவேனோ
தினை வித்தின நல் புனம் உற்ற குற திருவை புணர் பொன் புய வீரா
தெளியத்தெளிய பவள சடில சிவனுக்கு ஒரு சொல் பகர்வோனே
கனக சிகர குல வெற்பு உருவ கறுவி பொரு கை கதிர் வேலா
கழியை கிழிய கயல் தத்தும் இடை கழியில் குமர பெருமாளே

மேல்

#793
இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும் அற்ற
எனக்கு இயலுக்கு இசைக்கு எதிர் எ புலவோர் என்று
எடுத்து முடி தட கை முடித்து இரட்டை உடுத்து இலச்சினை இட்டு
அடைப்பை இட ப்ரபுத்துவம் உற்று இயல் மாதர்
குரக்கு முகத்தினை குழலை பனி பிறை ஒப்பு என புயல் ஒப்பு என
குறுகி கலைக்குள் மறைத்திடு மானின்
குளப்பு அடியில் சளப்பம் இடும் இ பவ கடலை கடக்க இனி
குறித்து இரு பொன் கழல் புணையை தருவாயே
அரக்கர் அடல் கடக்க அமர் களத்து அடைய புடைத்து உலகுக்கு
அலக்கண் அற குல கிரி பொட்டு எழ வாரி
அனைத்தும் வறப்புற சுரர் கற்பக புரியில் புக கமலத்தனை
சிறையிட்டு இடைக்கழியில் பயில்வோனே
கர கரடம் கழிற்று மருப்பு உலக்கையினில் கொழித்த மணி
கழை தரளத்தினை தினையில் குறுவாளை
கணி குறவ குறிச்சியினில் சிலை குறவர்க்கு இலச்சை வர
கயத்தொடு கை பிடித்த மண பெருமாளே

மேல்

#794
பகரு முத்தமிழ் பொருளு மெய் தவ பயனும் எப்படி பல வாழ்வும்
பழைய முத்தியில் பதமு நட்புற பரவு கற்பக தரு வாழ்வும்
புகர் இல் புத்தியுற்று அரசு பெற்று உற பொலியும் அற்புத பெருவாழ்வும்
புலன் அகற்றிட பல விதத்தினை புகழ் பலத்தினை தரவேணும்
தகரில் அற்ற கைத்தலம் விட பிணை சரவணத்தினில் பயில்வோனே
தனி வனத்தினில் புன மறத்தியை தழுவு பொன் புய திரு மார்பா
சிகர வெற்பினை பகிரும் வித்தக திறல் அயில் சுடர் குமரேசா
செழு மலர் பொழில் குரவம் உற்ற பொன் திருவிடைக்கழி பெருமாளே

மேல்

#795
படி புனல் நெருப்பு அடல் பவனம் வெளி பொய் கரு பவம் உறை அவத்த முக்குண நீடு
பயில் பிணிகள் மச்சை சுக்கிலம் உதிரம் அத்தி மெய் பசி படு நிண சட குடில் பேணும்
உடல் அது பொறுத்து அற கடை பெறு பிறப்பினுக்கு உணர்வுடைய சித்தம் அற்று அடி நாயேன்
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து உனது தமர் ஒக்க வைத்து அருள்வாயே
கொடிய ஒரு குக்குட கொடிய வடிவில் புன கொடி படர் புய கிரி கதிர் வேலா
குமர சமர சினக்கும் அரவு அணி அத்தன் மெய் குமர மகிழ் முத்தமிழ் புலவோனே
தட விகட மத்தக தட வரையர் அத்தர் அத்த அடல் அனுச வித்தக துறையோனே
தரு மருவும் எ தலத்தரும் மருவ முத்தியை தரு திருவிடைக்கழி பெருமாளே

மேல்

#796
பழி உறு சட்டகமான குடிலை எடுத்து இழிவான பகரும் வினை செயல் மாதர் தரும் மாய
படு குழி புக்கு இனிது ஏறும் வழி தடவி தெரியாது பழமை பிதற்றிடு லோக முழு மூடர்
உழலும் விருப்புடன் ஓது பல சவலை கலை தேடி ஒரு பயனை தெளியாது விளியா முன்
உன கமல பத நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே
தெழி உவரி சலராசி மொகுமொகு என பெரு மேரு திடுதிடு என பல பூதர் விதமாக
திமிதிமிம் என பொரு சூரன் நெறுநெறு என பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே
அழகு தரித்திடு நீப சரவண உற்பவ வேல அடல் தரு கெற்சித நீல மயில் வீரா
அருணை திருத்தணி நாக மலை பழநி பதி கோடை அதிப இடைக்கழி மேவும் பெருமாளே

மேல்

#797
பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என அமளி அருகு விரல்
பிடித்து போய் அவர் தொடையோடு தொடை பட உறவாடி
பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு நல் உரை கொடு
பிலுக்கியே வெகு சரசமொடு அணைகுவர் கன மாலாய்
முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை
முலைக்குளே துயில் கொள மயல் புரிகுவர் பொருள் தீரின்
முறுக்கியே உதை கொடு வசை உரை தரு மன துரோகிகள் இடு தொழில் வினை அற
முடுக்கியே உனது இரு கழல் மலர் தொழ அருள்தாராய்
நெருக்கியே வரு அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில் முதுகினில் விசை கொடு
நிலத்திலே சமர் பொருது அவர் உயிர் பலி கொளும் வேலா
நெகத்திலே அயன் முடி பறி இறை திரிபுரத்திலே நகைபுரி பரன் அடியவர்
நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே
செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மரு குலாவிய மலர் அணை மிசை புணர்
திரு கை வேல் வடிவு அழகிய குருபர முருகோனே
சிறக்கு மாதவ முனிவரர் மக பதி இருக்குவேதனும் இமையவர் பரவிய
திரு குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே

மேல்

#798
மரு குலாவிய மலர் அணை கொதியாதே வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே
கரு குலாவிய அயலவர் பழியாதே கடப்ப மாலையை இனி வர விடவேணும்
தரு குலாவிய கொடி இடை மணவாளா சமர்த்தனே மணி மரகத மயில் வீரா
திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே

மேல்

#799
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள் முறை மசக்கிகள் திருடிகள் மதவேள் நூல்
மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ்
கலை நெகித்திகள் இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ் சுருள் பிளவு இலை ஒரு பாதி
கலவியில் தரும் வசவிகள் விழி மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்புரிவாயே
அலை நெருப்பு எழ வடவரை பொடிபட சமணர்கள் குலம் அணி கழு பெற நடவிய மயில் வீரா
அரன் அரி பிரமர்கள் முதல் வழிபட பிரியமும் வர அவரவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே
சிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக மன் அருள் திருவினை புணர் அரி திரு மருகோனே
திரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள் வளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே

மேல்

#800
சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடிலும் உலகூடே
சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே
வீழ்ந்து ஈண்டி நல் கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல்
வேம் பாங்கும் அற்று வினையாம் பாங்கும் அற்று விளைவாம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய்
வாழ்ந்து ஆன்ற கற்புடைமை வாய்ந்து ஆய்ந்த நல் தவர்கள் வான் தோன்று மற்றவரும் அடி பேண
மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல் புயமும் வான் தீண்ட உற்ற மயில் மிசை ஏறி
தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று அமர் செய் வடி வேலா
தான்தோன்றியப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ தான் தோன்றி நிற்க வல பெருமாளே

மேல்

#801
எந்தன் சடல அங்கம் பல பங்கம்படு தொந்தங்களை என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே
இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பினை என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி
வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும்
வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும் வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு தஞ்சம்புரி கொஞ்சும் சிறு மணி ஆரம்
சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும்
கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே
கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை கந்தன் குடியில் தங்கிய பெருமாளே

மேல்

#802
இறை அத்தனையோ அதுதானும் இலை இட்டு உணல் ஏய் தரு காலம்
அறையில் பெரிதாம் மல மாயை அலையப்படும் ஆறு இனி ஆமோ
மறை அத்தனை மா சிறை சாலை வழி உய்த்து உயர் வான் உறு தேவர்
சிறையை தவிரா விடும் வேலா திலதை பதி வாழ் பெருமாளே

மேல்

#803
பனகம் படம் இசைந்த முழையில் தரளம் நின்று படர் பொன் பணி புனைந்த முலை மீதே
பரிவு அற்று எரியும் நெஞ்சில் முகிலின் கரிய கொண்டை படு புள் பவனம் முன்றில் இயல் ஆரும்
அனம் ஒத்திடு சிறந்த நடையில் கிளியின் இன் சொலால் அழகில் தனி தளர்ந்தும் அதி மோகம்
அளவி புளக கொங்கை குழைய தழுவி இன்ப அலையில் திரிவன் என்றும் அறிவேனோ
தனன தனன தந்த தனன தனன தந்த தனன தனன தந்த தனதானா
தகிட தகிட தந்த திமித திமித என்று தனி மத்தளம் முழங்க வருவோனே
செநெல் நல் கழனி பொங்கி திமில கமலம் அண்டி செறி நல் கழை திரண்டு வளம் மேவி
திரு நல் சிகரி துங்க வரையை பொருவுகின்ற திலதைப்பதி அமர்ந்த பெருமாளே

மேல்

#804
மகர குழைக்குள் உந்து நயன கடைக்கு இலங்கு வசி அ சரத்து இயைந்த குறியாலே
வட வெற்பு அதை துரந்து களப குடத்தை வென்று மதர்வில் பணைத்து எழுந்த முலை மீதே
உக மெய் பதைத்து நெஞ்சும் விரக கடல் பொதிந்த உலை பட்டு அலர் சரங்கள் நலியாமல்
உலக புகழ் புலம்பு கலி அற்று உணர்ச்சி கொண்டு உன் உரிமை புகழ் பகர்ந்து திரிவேனோ
புகர் கை கரி பொதிந்த முளரி குளத்தில் இழிந்த பொழுதில் கர தொடர்ந்து பிடி நாளில்
பொருமி திகைத்து நின்று வரதற்கு அடைக்கலங்கள் புகுத கணத்து வந்து கையில் ஆரும்
திகிரி படை துரந்த வரதற்கு உடன் பிறந்த சிவை தற்பரைக்கு இசைந்த புதல்வோனே
சிவ பத்தர் முத்தர் உம்பர் தவ சித்தர் சித்தம் ஒன்றும் திலதைப்பதிக்கு கந்த பெருமாளே

மேல்

#805
சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி
தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொளாமல்
சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு
தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும்
வீதி மண்டலம் பூண மகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்று ஆடி இன்ப வகை
வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்குபோதில்
வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட
வீழ்கி வெந்து உகுந்திடும் இந்த இடர் என்று போமோ
ஆதி மண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதுமவாளன்
மண்டலம் சாரவும் சுழி படர்ந்த தோகை
ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முகான
மண்டலம் சேடன் அங்கு அண அயில் கொண்டு உலாவி
சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு
சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா
சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ
சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே

மேல்

#806
காதோடு தோடு இகலி ஆட விழி வாள் சுழல கோலாகலம் ஆர முலை மார் புதைய பூண் அகல
காரோடு கூட அளக பாரம் மலரோடு அலைய அணை மீதே
காலோடு கால் இகலி ஆட பரி நூபுரமொடு ஏகாசமான உடை வீசி இடை நூல் துவள
காவீரமான இதழூறல் தர நேசம் என மிடறு ஓதை
நாதான கீத குயில் போல அல்குல் மால் புரள மார்போடு தோள் கரமொடு ஆடி மிக நாண் அழிய
நானா விநோதம் உற மாதரொடு கூடி மயல் படுவேனை
நான் ஆரு நீ எவன் எனாமல் எனது ஆவி கவர் சீர் பாதமே கவலையாயும் உனவே நிதமும்
நாதா குமார முருகா எனவும் ஓத அருள்புரிவாயே
பாதாள சேடன் உடல் ஆயிரம் பணா மகுடம் மா மேரொடே ஏழு கடல் ஓதம் மலை சூரர் உடல்
பாழாக தூளி விணில் ஏற புவி வாழவிடு சுடர் வேலா
பால் ஆழி மீது அரவின் மேல் திருவொடே அமளி சேர் நீல ரூபன் வலி ராவணன் குழாம் இரிய
பார் ஏவை ஏவிய முராரி ஐவர் தோழன் அரி மருகோனே
மாதா புராரி சுகவாரி பரை நாரி உமை ஆகாச ரூபி அபிராமி வலம் மேவும் சிவன்
மாடு ஏறி ஆடும் ஒரு நாதன் மகிழ் போதம் அருள் குருநாதா
வானோர்கள் ஈசன் மயிலோடு குற மாது மணவாளா குகா குமர மா மயிலின் மீது திரு
மாகாள மா நகரில் மாலொடு அடியார் பரவு பெருமாளே

மேல்

#807
குங்கும கற்பூர நாவி இம சலம் சந்தன கத்தூரி லேப பரிமள
கொங்கைதனை கோலி நீடு முக படம் நகரேகை
கொண்டைதனை கோதி வாரி வகைவகை துங்க முடித்து ஆலகாலம் என அடல்
கொண்ட விட பார்வை காதின் எதிர் பொரு அமுதேயாம்
அங்கு உள நிட்டூர மாய விழி கொடு வஞ்ச மனத்து ஆசை கூறி எவரையும்
அன்புடை மெய் கோல ராக விரகினில் உறவாடி
அன்று அளவுக்கான காசு பொருள் கவர் மங்கையர் பொய் காதல் மோக வலை விழல்
அன்றி உனை பாடி வீடு புகுவதும் ஒருநாளே
சங்கம் தசக்ரீவனோடு சொல வளம் மிண்டு செயப்போன வாயு சுதனொடு
சம்பவ சுக்ரீவன் ஓதி எழுபது வெள்ளமாக
சண்ட கவி சேனையால் முனை கடல் குன்றில் அடைத்து ஏறி மோச நிசாசரர்
தம் கிளை கெட்டு ஓட ஏவு சரபதி மருகோனே
எங்க நினைப்போர்கள் நேச சரவண சிந்துர கர்ப்பூர ஆறுமுக குக
எந்தனுடை சாமிநாத வயலியில் உறை வேலா
இன்புறு பொன் கூட மாட நவ மணி மண்டப வித்தார வீதி புடை வளர்
இஞ்சி குடி பார்வதி ஈசர் அருளிய பெருமாளே

மேல்

#808
பச்சை ஒண் கிரி போல் இரு மா தனம் உற்று இதம் பொறி சேர் குழல் வாள் அயில்
பற்று புண்டரிகாம் என ஏய் கயல் விழி ஞான
பத்தி வெண் தரளம் எனும் வாள் நகை வித்ருமம் சிலை போல் நுதல் ஆர் இதழ்
பத்ம செண்பகமாம் அநுபூதியின் அழகாள் என்று
இச்சை அந்தரி பார்வதி மோகினி தத்தை பொன் கவின் ஆல் இலை போல் வயிறு
இல் பசுங்கிளியான மின் நூல் இடை அபிராமி
எ குலம் குடிலோடு உலகு யாவையும் இல் பதிந்து இரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ
கச்சையும் திரு வாளும் இராறு உடை பொன் புயங்களும் வேலும் இராறு உள
கண் சிவம் கமலா முகம் ஆறு உள முருகோனே
கற்பகம் திரு நாடு உயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசு என
கட்ட வெம் கொடு சூர் கிளை வேர் அற விடும் வேலா
நச்சு வெண் பட மீது அணைவார் முகில் பச்சை வண் புயனார் கருடாசனர்
நல் கரம் தநு கோல் வளை நேமியர் மருகோனே
நல் புனம்தனில் வாழ் வளி நாயகி இச்சை கொண்டு ஒரு வாரண மாதோடு
நத்தி வந்து நள்ளாறு உறை தேவர்கள் பெருமாளே

மேல்

#809
தரு ஊர் இசையார் அமுது ஆர் நிகர் குயிலார் மொழி தோதக மாதர்கள்
தணியா மயல் ஆழியில் ஆழவும் அமிழாதே
தழலே பொழி கோர விலோசனம் எறி பாச மகா முனை சூலம் உள்
சமனார் முகில் மேனி கடாவினில் அணுகாதே
கரு ஊறிய நாளு முநூறு எழு மல தேகமும் ஆவலும் ஆசை கபடம்
ஆகிய பாதக தீது அற மிடி தீர
கனி வீறிய போதம் மெய்ஞானமும் இயலார் சிவ நேசமுமே வர
கழல் சேர் அணி நூபுர தாள் இணை நிழல் தாராய்
புருகூதன் மினாள் ஒருபால் உற சிலை வேடுவர்மான் ஒருபால் உற
புது மா மயில் மீது அணையா வரும் அழகோனே
புழுகு ஆர் பனிர் மூசிய வாசனை உர கால் அணி கோல மென் மாலைய
புரி நூலும் உலாவ துவாசதச புய வீரா
மருவூர் குளிர் வாவிகள் சோலைகள் செழி சாலி குலாவிய கார் வயல்
மக தாபத சீலமுமே புனை வள மூதூர்
மக தேவர் புராரி சதாசிவர் சுதர் ஆகிய தேவ சிகாமணி
வழுவூரில் நிலாவிய வாழ்வு அருள் பெருமாளே

மேல்

#810
தலைநாளில் பதம் ஏத்தி அன்புற உபதேச பொருள் ஊட்டி மந்திர
தவ ஞான கடல் ஆட்டி என்தனை அருளால் உன்
சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ் ஊட்டி முண்டக
தளிர் வேத துறை காட்டி மண்டலம் வலம் மேவும்
கலை சோதி கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாத பரம் ஏற்றி முன் சுழி
கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி
கமலாலைப்பதி சேர்த்து முன் பதி வெளியாக புக ஏற்றி அன்பொடு
கதிர் தோகை பரி மேற்கொளும் செயல் மறவேனே
சிலை வீழ கடல் கூட்டமும் கெட அவுணோரை தலை வாட்டி அம்பர
சிர மாலை புக ஏற்றவும் தொடு கதிர் வேலா
சிவகாமிக்கு ஒரு தூர்த்தர் எந்தையர் வரி நாக தொடையார்க்கு உகந்து ஒரு
சிவஞான பொருள் ஊட்டும் முண்டக அழகோனே
மலை மேவி தினை காக்கும் ஒண் கிளி அமுது ஆக தன வாட்டி இந்துளம்
மலர் மாலை குழல் ஆட்டு அணங்கி தன் மணவாளா
வரி கோழி கொடி மீ கொளும்படி நடமாடி சுரர் போற்று தண் பொழில்
வழுவூர் நல் பதி வீற்றிருந்து அருள் பெருமாளே

மேல்

#811
அன்ன மிசை செம் நளிநம் சென்மி கணக்கு அ நியமத்து
அன்ன மயம் புலால் யாக்கை துஞ்சிடாது என்ற
அ நினைவுற்று அல் நினைவுற்று அன்னியரில் தன் நெறி புக்கு
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம்
என்னு மருள் கின்னம் உடை பல் நவை கற்று இன்னவை விட்டு
இன்னணம் எய்த்து அடா மார்க்கம் இன்புறாது என்று
இன்னது எனக்கு என்னும் மத புன்மை கெடுத்து இன்னல் விடுத்து
இன்னது எனப்படா வாழ்க்கை தந்திடாதோ
கன்னல் மொழி பின் அளகத்து அன்ன நடை பன்ன உடை
கண் அவிர் அ சுறா வீட்டு கெண்டையாளை
கன்னமிட பின்னிரவில் துன்னு புரை கல் முழையில்
கல் நிலையில் புகா வேர்த்து நின்ற வாழ்வே
பொன் அசல பின் அசல சென்னியில் நல் கன்ன புர
பொன்னி நதி கரா நீர் புயங்க நாதா
பொன் மலையில் பொன்னின் நகர் புண்ணியர் பொற்பொன் மவுலி
பொன்னுலகத்து இராசாக்கள் தம்பிரானே

மேல்

#812
இப மாந்தர் சக்ரபதி செறி படை ஆண்டு சக்ர வரிசைகள்
இட வாழ்ந்து திக்குவிசய மண் அரசாகி
இறுமாந்து வட்ட அணை மிசை விரி சார்ந்து வெற்றி மலர் தொடை
எழில் ஆர்ந்த பட்டி வகை பரிமள லேபம்
தபனாங்க ரத்ந அணிகலன் இவை சேர்ந்த விச்சு வடிவு அது
தமர் சூழ்ந்து மிக்க உயிர் நழுவியபோது
தழல் தாம் கொளுத்தி இட ஒரு பிடி சாம்பல் பட்டது அறிகிலர்
தன வாஞ்சை மிக்கு உன் அடி தொழ நினையாரே
உபசாந்த சித்த குரு குல பவ பாண்டவர்க்கு வரதன் மை
உருவோன் ப்ரசித்த நெடியவன் ரிஷிகேசன்
உலகு ஈன்ற பச்சை உமை அணன் வட வேங்கடத்தில் உறைபவன்
உயர் சாரங்கம் சக்ர கரதலன் மருகோனே
த்ரிபுராந்தகற்கு வர சுத ரதி காந்தன் மைத்துன முருக
திறல் பூண்ட சுப்ரமணிய ஷண்முக வேலா
திரை பாய்ந்த பத்ம தட வயலியில் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சியத்தில் அமரர்கள் பெருமாளே

மேல்

#813
வங்கார மார்பில் அணி தாரோடு உயர் கோடு அசைய கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள
வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல
மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள் கொஞ்சு ஆர மோக கிளியாக நகை பேசி உற
வந்தாரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர்
சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல் சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர்
சண்டாளர் சீசி அவர் மாய வலையோடு அடியேன் உழலாமல்
சங்கோதை நாதமொடு கூடி வெகு மாயை இருள் வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது
தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள்புரிவாயே
சிங்கார ரூப மயில்வாகன நமோ நம என கந்தா குமார சிவ தேசிக நமோ நம என
சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம என விருது ஓதை
சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என கங்காள வேணி குருவான நமோ நம என
திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே
இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு பெண் காதலோடு வனம் மேவி வள்ளி நாயகியை
இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா
எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகு செங்காடு மேவி பிரகாச மயில் மேல் அழகொடு
என் காதல் மாலை முடி ஆறுமுகவா அமரர் பெருமாளே

மேல்

#814
சித்திரத்திலும் மிகுத்த பொன் பவளம் ஒத்த மெத்த அழகுற்ற குத்து முலை
சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர்
சித்தம் அத்தனையும் முற்று அளப்ப கடல் மொய்த்த சிற்று மணலுக்கும் எட்டியது
சிக்கு மை குழல்கள் கஸ்தூரி பரிமளங்கள் வீச
பத்திரத்திலும் மிகுத்த கண் கயல்கள் வித்துரு தநு வளைத்த நெற்றி வனை
பற்களை பளிரென சிரித்து மயல் விஞ்சை பேசி
பச்சை ரத்ந மயிலை பொல தெருவில் அத்தி ஒத்த மதம் ஒத்து நிற்பர் வலைப்பட்டு
உழைத்து குழி உற்ற அத்தி என மங்குவேனோ
தத்த னத்தனத னத்த னத்தனன தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடு என சங்கு பேரி
சத்தமுற்று கடல் திக்குல கிரிகள் நெக்குவிட்டு முகிலுக்கு சர்ப்ப முடி
சக்கு முக்கி விட கட்கம் துட்ட அசுரர் அங்கம் மாள
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளி சுரர்க்கு அதிபதி பதத்தை உறுவித்து
அளித்து மதி பெற்ற தத்தை மணம் உண்ட வேலா
வெட்கிட பிரமனை பிடித்து முடியை குலைத்து சிறை வைத்து முத்தர் புகழ்
விற்குடிப்பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே

மேல்

#815
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோலிடை குளுகுளு எனும்படி மூடிய மலம் மாசு
குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு குமிழியினும் கடிதாகியே அழி மாய
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று
அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம்அலம் என்று இனி யானும் நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ
இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம் இடிபட இன்ப மகோததி வறிதாக
இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர எழில் படம் ஒன்றும் ஒராயிரம் முகமான
விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ வெயில் நகை தந்த புராரி மதனகோபர்
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட விஜயபுரம்தனில் மேவிய பெருமாளே

மேல்

#816
கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு
கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில்
வீசாதே பேர் பேசாதே சீர் வேதாதீத கழல் மீதே
வீழாதே போய் நாயேன் வாழ்நாள் வீணே போக தகுமோ தான்
நேசா வானோர் ஈசா வாமா நீபா கான புனை மானை
நேர்வாய் ஆர்வாய் சூர் வாய் சார்வாய் நீள் கார் சூழ் கற்பக சால
தேசாதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே

மேல்

#817
கூர் வாய் நாராய் வாராய் போனார் கூடாரே சற்று அல ஆவி
கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை
ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்
ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ
சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள்கூரும்
தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே
சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார்தம்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#818
பாலோ தேனோ பாகோ வானோர் பாராவாரத்து அமுதேயோ
பாரோர் சீரோ வேள் ஏர் வாழ்வோ பானோ வான் முத்து என நீள
தாலோ தாலேலோ பாடாதே தாய்மார் நேசத்து உனு சாரம்
தாராதே பேர் ஈயாதே பேசாதே ஏச தகுமோ தான்
ஆலோல் கேளா மேலோர் நாள் மால் ஆனாது ஏனல் புனமே போய்
ஆயாள் தாள் மேல் வீழா வாழா ஆளா வேளை புகுவேனோ
சேலோடே சேர் ஆரால் சாலார் சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#819
நீ தான் எத்தனையாலும் நீடூழி க்ருபையாகி
மா தான தனமாக மா ஞான கழல் தாராய்
வேதா மைத்துன வேளே வீரா சற்குண சீலா
ஆதாரத்து ஒளியானே ஆரூரில் பெருமாளே

மேல்

#820
மகரம் அது கெட இரு குமிழ் அடைசி வார் ஆர் சரங்கள் என நீளும்
மதர் விழி வலை கொடு உலகினில் மனிதர் வாழ்நாள் அடங்க வருவார்தம்
பகர் தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்பம் மிசை வாவி
படி மனது உனது பரிபுர சரண பாதார விந்த நினையாதோ
நகமுக சமுக நிருதரும் மடிய நானா விலங்கல் பொடியாக
நதி பதி கதற ஒரு கணை தெரியு நாராயணன்தன் மருகோனே
அகல் நக கனக சிவ தலம் முழுதும் ஆராம பந்தி அவைதோறும்
அரி அளி விததி முறைமுறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே

மேல்

#821
கரமு முளரியின் மலர் முக மதி குழல் கனமது எணும் மொழி கனி கதிர் முலை நகை
கலகம் இடு விழி கடல் என விடம் என மனதூடே
கருதி அன நடை கொடி இடை இயல் மயில் கமழும் அகில் உடன் அளகிய ம்ருகமத
களப புளகித கிரியினும் மயல் கொடு திரிவேனும்
இரவு பகல் அற இகல் அற மலம் அற இயலும் மயல் அற விழியில் இழிவர
இதயம் உருகியெ ஒரு குள பதம் உற மடலூடே
எழுத அரியவள் குறமகள் இரு தன கிரியில் முழுகின இளையவன் எனும் உரை
இனிமை பெறுவதும் இரு பதம் அடைவதும் ஒரு நாளே
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி மணி அசைவுற இசை மிகு
துயரில் செவியினில் அடிபட வினவுமின் அதி தீது
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர சிவசிவ பெறுமது ஒர்
சுரபி அலமர விழி புனல் பெருகிட நடுவாக
பரவி அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு பிளவொடு
படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள் ஆரூர்
படியில் அறுமுக சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண
பரவை முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே

மேல்

#822
பாலோ தேனோ பல உறு சுளை அது தானோ வானோர் அமுதுகொல் கழை ரச
பாகோ ஊனோடு உருகிய மகன் உண அருள் ஞான
பாலோ வேறோ மொழி என அடு கொடு வேலோ கோலோ விழி என முகம் அது
பானோ வான் ஊர் நிலவுகொல் என மகள் மகிழ்வேனை
நாலாம் ரூபா கமல ஷண்முக ஒளி ஏதோ மா தோம் எனது அகம் வளர் ஒளி
நானோ நீயோ படிகமொடு ஒளிர் இடம் அது சோதி
நாடோ வீடோ நடு மொழி என நடு தூண் நேர் தோளோ சுர முக கன சபை
நாதா தாதா என உருகிட அருள்புரிவாயே
மாலாய் வானோர் மலர் மழை பொழி அவதாரா சூரா என முநிவர்கள் புகழ்
மாயா ரூபா அரகர சிவசிவ என ஓதா
வாதாடு ஊரோடு அவுணரொடு அலை கடல் கோகோ கோகோ என மலை வெடிபட
வாளால் வேலால் மடிவு செய்து அருளிய முருகோனே
சூலாள் மாலாள் மலர்மகள் கலைமகள் ஓது ஆர் சீராள் கதிர் மதி குலவிய
தோடு ஆள் கோடு ஆர் இணை முலை குமரி முன் அருள் பாலா
தூயார் ஆயார் இது சிவபத வாழ்வாம் ஈனே வதிவம் எனு உணர்வொடு
சூழ் சீர் ஆரூர் மருவிய இமையவர் பெருமாளே

மேல்

#823
கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் பொய் களவு மதன் நூல் பல படித்து அவா வேட்கை
கன தனமும் மார்பும் உறல் இச்சையால் அயர்த்து கழு நீர் ஆர்
கமழ் நறை சவாது புழு கைத்து உழாய் வார்த்து நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார் செய்
கருமம் அறியாது சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே
தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து நிறை பவுசு வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது
என உருகி ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி
தழுவி அநுராகமும் விளைத்து மா யாக்கைதனையும் அரு நாளையும் அவத்திலே போக்குதலை
அறிவிலேனை நெறி நிற்க நீ தீக்ஷை தரவேணும்
அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி அருணை நகர் கோபுரம் இருப்பனே போற்றி
அடல் மயில் நடாவிய ப்ரயத்தனே போற்றி அவதான
அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி
அருணகிரிநாத எனும் அப்பனே போற்றி அசுரேசர்
பெலம் மடிய வேல் விடு கரத்தனே போற்றி கரதல கபாலி குரு வித்தனே போற்றி
பெரிய குற மாது அணை புயத்தனே போற்றி பெருவாழ்வாம்
பிரமன் அறியா விரத தக்ஷிணாமூர்த்தி பர சமய கோள் அரி தவத்தினால் வாய்த்த
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே

மேல்

#824
ஒரு வழி படாது மாயை இருவினை விடாது நாளும் உழலும் அநுராக மோக அநுபோகம்
உடலும் உயிர் தானுமாய் உணர்வில் ஒருகால் இராத உளமும் நெகிழ்வு ஆகுமாறு அடியேனுக்கு
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப
எம படரை மோது மோன உரையில் உபதேச வாளை எனது பகை தீர நீயும் அருள்வாயே
அரிவை ஒரு பாகமான அருணகிரிநாதர் பூசை அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர் குல காலன் ஆகும் அரிய தவ ராஜராஜன் அவனி புகழ் சோமநாதன் மடம் மேவும்
முருக பொரு சூரர் சேனை முறிய வட மேரு வீழ முகர சல ராசி வேக முனிவோனே
மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே

மேல்

#825
உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என உணர்வு கண்டு பின் திரவிய இகலருள்
ஒருவர் நண்பு அடைந்து உள திரள் கவர்கொடு பொருள் தேடி
உளம் மகிழ்ந்து உவந்து உரிமையில் நினைவுறு சகல இந்த்ரதந்த்ரமும் வல விலைமகள்
உபய கொங்கையும் புளகிதம் எழ மிக உறவாயே
விரக அன்புடன் பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட மலர் அமளியில்
வெகு விதம் புரிந்து அமர் பொரு சமயம் அது உறு நாளே
விளை தனம் கவர்ந்திடு பல மனதியர் அயல் தனங்களும் தமது என நினைபவர்
வெகுளியின்கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே
செரு நினைந்திடும் சின வலி அசுரர்களும் உகம் மடிந்திடும்படி எழு பொழுதிடை
செகம் அடங்கலும் பயம் அற மயில் மிசைதனில் ஏறி
திகுதி குந்திகும் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனம் தெனதென தெனதென
திமிதி மிந்திமிம் திமிதிமி திமி என வரும் பூதம்
கரை இறந்திடும் கடல் என மருவிய உதிரம் மொண்டும் உண்டிட அமர் புரிபவ
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே
கனம் உறும் த்ரியம்பக புரம் மருவிய கவுரி தந்த கந்த அறுமுக என இரு
கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழு வல பெருமாளே

மேல்

#826
கன்னல் ஒத்த மொழி சொல் வேசியர் வன் மனத்தை உருக்கு லீலையர்
கண் வெருட்டி விழித்த பார்வையர் இதமாக
கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை என கை விரிக்கும் வீணியர்
கைகள் பற்றி இழுத்து மார் முலைதனில் வீழ
பின்னி விட்ட சடைக்குளே மலர்தன்னை வைத்து முடிப்பை நீ அவிழ்
என்னும் அற்ப குணத்தர் ஆசையில் உழலாமல்
பெய்யும் முத்தமிழில் தயாபர என்ன முத்தர் துதிக்கவே மகிழ்
பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக அருள்தாராய்
வன்னி ஒத்த படை கலாதிய துன்னும் கை கொள் அரக்கர் மா முடி
மண்ணில் அற்று விழ செய் மாதவன் மருகோனே
மன்னு பை பணி உற்ற நீள் விடம் என்ன விட்ட முடுக்கு சூரனை
மல் உடல் உடற்று முருட்டு மார்பு அற அடைவாக
சென்னி பற்றி அறுத்த கூரிய மின் இழைத்த திறத்த வேலவ
செய்ய பொன் புன வெற்பு மான் அணை மணி மார்பா
செம் மனத்தர் மிகுந்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#827
புலவரை ரக்ஷிக்கும் தாருவே மதுரித குண வெற்பு ஒக்கும் பூவை மார் முலை
பொரு புய திக்கு எட்டும் போய் உலாவிய புகழாளா
பொருவரு நட்பு பண்பான வாய்மையில் உனக்கு ஒப்பு உண்டோ எனா நல
பொருள்கள் நிரைத்து செம்பாகமாகிய கவி பாடி
விலையில் தமிழ் சொற்கு உன் போல் உதாரிகள் எவர் என மெத்த கொண்டாடி வாழ்வு எனும்
வெறி கொள் உலுத்தர்க்கு என் பாடு கூறிடும் மிடி தீர
மிக வருமைப்பட்டு உன் பாத தாமரை சரணம் என பற்றும் பேதையேன் மிசை
விழி அருள் வைத்து குன்றாத வாழ்வையும் அருள்வாயே
இலகிய வெட்சி செந்தாமரை மார் புய சிலை நுதல் மை கண் சிந்தூர வாள் நுதல்
இமயமகட்கு சந்தானமாகிய முருகோனே
இளைய கொடிச்சிக்கும் பாக சாதனன் உதவும் ஒருத்திக்கும் சீல நாயக
எழிலி எழில் பற்றும் காய மாயவன் மருகோனே
அலர் தரு புட்பத்து உண்டாகும் வாசனை திசைதொறும் முப்பத்து எண் காதம் வீசிய
அணி பொழிலுக்கும் சஞ்சாரமாம் அளி இசையாலே
அழகிய சிக்கல் சிங்கார வேலவ சமரிடை மெத்த பொங்கு ஆரமாய் வரும்
அசுரரை வெட்டி சங்காரம் ஆடிய பெருமாளே

மேல்

#828
ஓலமிட்டு இரைத்து எழுந்த வேலை வட்டமிட்ட இந்த ஊர் முகில் தருக்கள் ஒன்றும் அவர் ஆர் என்று
ஊமரை ப்ரசித்தர் என்றும் மூடரை சமர்த்தர் என்றும் ஊனரை ப்ரபுக்கள் என்றும் அறியாமல்
கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்
கோபம் அற்று மற்றும் அந்த மோகம் அற்று உனை பணிந்து கூடுதற்கு முத்தி என்று தருவாயே
வாலை துர்க்கை சத்தி அம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்று எடுத்து உகந்த சிறியோனே
வாரி பொட்டு எழ க்ரவுஞ்சம் வீழ நெட்ட அயில் துரந்த வாகை மல் புய ப்ரசண்ட மயில் வீரா
ஞால வட்டம் முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற நாரணற்கு அருள் சுரந்த மருகோனே
நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனை களைந்த நாகப்பட்டினம் அமர்ந்த பெருமாளே

மேல்

#829
மார்பு உரம் பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள்
மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட
வாள் சரம் கண் இயலும் குழை தள அம்பு அளக பாரம் தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி
வாகை என்ப இதழும் சலசம் என்ப கள சங்கு மோக
சார மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்டு இடையொடு இன்ப ரச
தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர்
தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி
தாகம் உண்டு உழல்கினும் கழலும் கழல் மறந்திடேனே
வீர வெண்டையம் முழங்க வரி சங்கும் முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும்
வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன்
வீறு அடங்க முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே
கொளுந்த பல சிரம்தனை எறிந்து நடனம் கொள் வேலா
நார சிங்க வடிவம் கொடு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி
ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல
ஞான மங்கை அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய
நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே

மேல்

#830
விழு தாது எனவே கருதாது உடலை வினை சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே உலகாயதம் மேல் இடவே மடவார் மயலாலே
அழுது ஆ கெடவே அவமாகிட நாள் அடைவே கழியாது உனை ஓதி
அலர் தாள் அடியேன் உறவாய் மரு ஓர் அழியா வரமே தருவாயே
தொழுதார் வினை வேர் அடியோடு அறவே துகள் தீர் பரமே தரு தேவா
சுரர் பூபதியே கருணாலயனே சுகிர்தா அடியார் பெருவாழ்வே
எழுதா மறை மா முடிவே வடி வேல் இறைவா எனை ஆளுடையோனே
இறைவா எது தா அது தா தனையே இணை நாகையில் வாழ் பெருமாளே

மேல்

#831
உரம் உற்று இரு செப்பு என வட்டமும் ஒத்து இளகி புளகி திடமாயே
உடை சுற்றும் இடை சுமை ஒக்க அடுத்து அமித கெறுவத்துடன் வீறு
தரம் ஒத்து உபய களப தளம் மிக்க வனம் தருண தனம் மீதே
சருவிச்சருவி தழுவித்தழுவி தவம் அற்க விடுத்து உழல்வேனோ
அரி புத்திர சித்தசன் அ கடவுட்கு அருமை திரு மைத்துன வேளே
அடல் குக்குட நல் கொடி கட்டி அனர்த்த அசுர படையை பொருவோனே
பரிவற்று அவருக்கு அருள் வைத்து அருள் வித்தக முத்தமிழை பகர்வோனே
பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடி பதியில் குமர பெருமாளே

மேல்

#832
ஓங்கும் ஐம்புலன் ஓட நினைத்து இன்பு அயர்வேனை
ஓம் பெறும் ப்ரணவ ஆதி உரைத்து எந்தனை ஆள்வாய்
வாங்கி வெம் கணை சூரர் குல கொம்புகள் தாவி
வாங்கி நின்றன ஏவில் உகைக்கும் குமரேசா
மூங்கில் அம்புய வாச மண குஞ்சரி மானும்
மூண்ட பைம் குற மாது மணக்கும் திரு மார்பா
காங்கை அங்கு அறு பாசு இல் மனத்து அன்பர்கள் வாழ்வே
காஞ்சிரம் குடி ஆறு முகத்து எம் பெருமாளே

மேல்

#833
கடல் ஒத்த விடம் ஒத்த கணை ஒத்த பிணை ஒத்த கயல் ஒத்த மலர் ஒத்த விழி மானார்
கன செப்பு நளினத்து முகை வெற்பை நிகர் செப்பு கதிர் முத்து முலை தைக்க அகலாதே
மிடலுற்ற கலவிக்குள் உள நச்சி வளம் அற்று மிடிபட்டு மடிபட்டு மனம் ஆழ்கி
மெலிவுற்ற தமியற்கு உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே
தடை அற்ற கணை விட்டு மணி வஜ்ர முடி பெற்ற தலை பத்து உடைய துட்டன் உயிர் போக
சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே
திடம் உற்ற கனக பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே
செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறை பெற்ற திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே

மேல்

#834
மை குழல் ஒத்தவை நீலோ மாலோ அ கண் இணைக்கு இணை சேலோ வேலோ
மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ
வத்திரம் மெய் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள நீரோ மேரோ
இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர்
தக்க உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது ஏகாதே
சைசை என திரி நாயேன் ஓயாது அலையாதே
தற்பொறி வைத்து அருள் பாராய் தாராய் தற்சமையத்த கலா வேல் நாதா
தத்து மயில் பரி மீதே நீ தான் வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன வேளே தோள் ஆர்
மொய்த்த மண துழாயோன் மாயோன் மருகோனே
முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா தீபா
முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே
இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய் பழநி பதி ஊரா வாரூர்
மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா
எ சுருதிக்குள்ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா தீரா
எட்டிகுடி பதி வேலா மேலோர் பெருமாளே

மேல்

#835
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு சண்பகம் செறிந்து இலங்கு திரள் தோளும்
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன்சல் என்று சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயில் ஏறி
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்தன் என்று சென்று அசைந்து உகந்து வந்து க்ருபையோடே
சிந்தை அம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து செம் பதம் பணிந்து இரு என்று மொழிவாயே
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்து அழிந்து இடும்ப கண்டன் அங்கமும் குலைந்த அரம் கொள் பொடியாக
அம்பு கும்பனும் கலங்க வெம் சினம் புரிந்து நின்று அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம் பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே

மேல்

#836
அயில் ஆர் மை கடு விழியார் மட்டைகள் அயலார் நத்திடு விலைமாதர்
அணை மீதில் துயில் பொழுதே தெட்டிகள் அவர் ஏவல் செய்து தமியேனும்
மயலாகி திரிவது தான் அற்றிட மல மாயை குணம் அது மாற
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத மது மாலை பதம் அருள்வாயே
கயிலாய பதி உடையாருக்கு ஒரு பொருளே கட்டளை இடுவோனே
கடல் ஓடி புகு முது சூர் பொட்டு எழ கதிர் வேல் விட்டிடு திறலோனே
குயில் ஆலித்திடு பொழிலே சுற்றிய குடவாயில் பதி உறைவோனே
குற மாதை புணர் சதுரா வித்தக குறையா மெய்த்தவர் பெருமாளே

மேல்

#837
சுருதியாய் இயலாய் இயல் நீடிய தொகுதியாய் வெகுவாய் வெகு பாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு விரிவுமாய் விளைவாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர் வீசும்
பருதியாய் மதியாய் நிறை தாரகை பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழு
பகல் இராவு இலையாய் நிலையாய் மிகு பரமாகும்
பரம மாயையின் நேர்மையாய் யாவரும் அறியவொணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோ தான்
கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை கருதவொணா வகை ஓர் அரசாய் வரு
கவுணியோர் குல வேதியனாய் உமை கன பார
களப பூண் முலை ஊறிய பால் உணு மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற
குருதி ஆறு எழ வீதி எலாம் மலர் நிறைவதாய் விட நீறு இடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்
குடி புகீர் என மா மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே

மேல்

#838
தொடுத்த நாள் முதல் மருவிய இளைஞனும் இருக்க வேறொரு பெயர் தமது இடம் அது
துவட்சியே பெறில் அவருடன் மருவிடு பொதுமாதர்
துவக்கிலே அடிபட நறு மலர் அயன் விதித்த தோதக வினை உறு தகவு அது
துறக்க நீறு இட அரகர என உளம் அமையாதே
அடுத்த பேர் மனை துணைவியர் தமர் பொருள் பெருத்த வாழ்வு இது சதம் என மகிழுறும்
அசட்டன் ஆதுலன் அவம் அது தவிர நின் அடியாரோடு
அமர்த்தி மா மலர் கொடு வழிபட எனை இருத்தியே பரகதி பெற மயில் மிசை
அரத்த மா மணி அணி கழல் இணை தொழ அருள்தாராய்
எடுத்த வேல் பிழை புகல் அரிது என எதிர் விடுத்து ராவணன் மணி முடி துணி பட
எதிர்த்தும் ஓர் கணை விடல் தெரி கரதலன் மருகோனே
எருக்கு மாலிகை குவளையின் நறு மலர் கடுக்கை மாலிகை பகிரதி சிறு பிறை
எலுப்பு மாலிகை புனை சடிலவன் அருள் புதல்வோனே
வடுத்த மா என நிலைபெறு நிருதனை அடக்க ஏழ் கடல் எழு வரை துகள் எழ
வடித்த வேல் விடு கரதல ம்ருகமத புய வேளே
வனத்தில் வாழ் குறமகள் முலை முழுகிய கடப்ப மாலிகை அணி புய அமரர்கள்
மதித்த சேவக வலிவல நகர் உறை பெருமாளே

மேல்

#839
சூழும் வினை கண் துன்பம் நெடும் பிணி கழி காமம்
சோரம் இதற்கு சிந்தை நினைந்து உறு துணை யாதே
ஏழை என் இ துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
ஏதம் அகற்றி செம் பத சிந்தனை தருவாயே
ஆழி அடைத்து தம் கை இலங்கையை எழு நாளே
ஆண்மை செலுத்தி கொண்ட கரும் புயல் மருகோனே
வேழ முகற்கு தம்பி எனும் திரு முருகோனே
வேதவனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே

மேல்

#840
சேலை உடுத்து நடந்து மாலை அவிழ்த்து முடிந்து சீத வரி குழல் கிண்டி அளி மூச
தேனின் இனிக்க மொழிந்து காமுகரை சிறை கொண்டு தேசம் அனைத்தையும் வென்ற விழி மானார்
மாலை மயக்கில் விழுந்து காம கலைக்குள் உளைந்து மாலில் அகப்பட நொந்து திரிவேனோ
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய்
பாலைவனத்தில் நடந்து நீல அரக்கியை வென்று பார மலைக்குள் அகன்று கணையாலே ஏழ்
பார மர திரள் மங்க வாலி உரத்தை இடந்து பால் வருண தலைவன் சொல் வழியாலே
வேலை அடைத்து வரங்கள் சாடி அரக்கர் இலங்கை வீடணருக்கு அருள் கொண்டல் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேதவனத்தில் அமர்ந்த பெருமாளே

மேல்

#841
நூலினை ஒத்த மருங்குல் தேரினை ஒத்த நிதம்பம் நூபுரம் மொய்த்த பதங்கள் இவையாலும்
நூறு இசை பெற்ற பதம் கொள் மேருவை ஒத்த தனங்கள் நூல் வல் மலர் பொரு துண்டம் அவையாலும்
சேலினை ஒத்திடு கண்களாலும் அழைத்திடு பெண்கள் தேன் இதழ் பற்றும் ஓர் இன்ப வலை மூழ்கி
சீலம் அனைத்தும் ஒழிந்து காம விதத்தில் அழுந்தி தேறு தவத்தை இழந்து திரிவேனோ
வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே
மாவலியை சிறை மண்ட ஓர் அடி ஒட்டி அளந்து வாளி பரப்பி இலங்கை அரசானோன்
மேல் முடி பத்தும் அரிந்து தோள் இரு பத்தும் அரிந்து வீரம் மிகுத்த முகுந்தன் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள் பழநிக்குள் உகந்து வேத வனத்தில் அமர்ந்த பெருமாளே

மேல்

#842
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல்
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல்
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன்
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள்தாராய்
சோலை பரண் மீது நிழலாக தினை காவல்புரி தோகை குற மாதினுடன் உறவாடி
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு மயில் வீரா
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே

மேல்

#843
இரத்தமும் சியும் மூளை எலும்பு உள் தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு
இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி
இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள்
தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா
பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்து உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்
பிடித்திடும் பல நாள் கொடு மந்தி குலுத்து எனும்படி கூனி அடங்கி
பிசக்கு வந்திடும்போது பின் அஞ்சி சடம் ஆமோ
தரித்த னந்தன தானன தந்த திமித்தி மிந்திமி தீதக திந்த
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டு இயல் தாளம்
தனத்த குந்தகு தானன தந்த கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த
சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா
சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து அமரோர்கள் படிந்து
சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே
செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு ஞான ப்ரசங்க
திருப்பெருந்துறை மேவிய கந்த பெருமாளே

மேல்

#844
வரித்த குங்குமம் அணி முலை குரும்பையர் மகிழ்ச்சி கொண்டிட அதி விதமான
வளை கரங்களினொடு வளைத்து இதம் பட உடன் மயக்க வந்ததில் அறிவு அழியாத
கருத்து அழிந்திட இரு கயல் கணும் புரள் தர களிப்புடன் களி தரு மட மாதர்
கரு பெரும் கடல் அது கடக்க உன் திருவடிகளை தரும் திரு உள்ளம் இனி ஆமோ
பொருப்பு அகம் பொடி பட அரக்கர்தம் பதியோடு புகை பரந்த எரி எழ விடும் வேலா
புகழ் பெரும் கடவுளர் களித்திடும்படி புவி பொறுத்த மந்தர கிரி கடலூடே
திரித்த கொண்டலும் ஒரு மறு பெறும் சதுமுக திருட்டி எண் கணன் முதல் அடி பேண
திரு குருந்து அடி அமர் குருத்வ சங்கரரொடு திருப்பெருந்துறை உறை பெருமாளே

மேல்

#845
முகர வண்டு எழும் கரு முகில் அலையவும் முதிய நஞ்சு உமிழ்ந்த அயில் விழி குவியவும்
முகிள சந்திரன் பொரு நுதல் வெயரவும் அமுது ஊறும்
முருகு தங்கு செம் துகிர் இதழ் தெரியவும் மருவு சங்க நின்று ஒலி கொடு பதறவும்
முழுது அன்பு தந்து அமளியில் உதவிய அநுராக
சிகர கும்ப குங்கும புளகித தனம் இரு புயம் புதைந்திட நடு இடைவெளி
தெரியல் இன்றி ஒன்றிட உயிர் உயிருடன் உற மேவி
திமிர கங்குல் இன்பு உதவிடும் அவசர நினைவு நெஞ்சினின்று அற அறவ அவர் முகம் அது
தெரிசனம் செயும் பரிவு அற இனி அருள்புரிவாயே
மகர நின்ற தெள் திரை பொரு கனை கடல் மறுகி அஞ்சி வந்து அடி தொழுதிட ஒரு
வடி கொள் செம் சரம் தொடுபவன் இருபது புய வீரன்
மடிய அங்கு சென்று அவன் ஒரு பது முடி முடிய முன்பு மண்டு அமர் பொருது அமர் நிழல்
மதில் இலங்கையும் பொடிபட அருள் அரி மருகோனே
நிகர் இல் அண்டம் எண் திசைகளும் மகிழுற விரகு கொண்டு நின்று அழகுறு மயில் மிசை
நினைவின் உந்தி அம் புவிதனை வலம் வரும் இளையோனே
நிலவு அரும்பு தண் தரளமும் மிளிர் ஒளிர் பவளமும் பொரும் பழனமும் அழகுற
நிழல் குருந்தமும் செறி துறை வளர்வுறு பெருமாளே

மேல்

#846
மலை கனத்து என மார்பினிலே இரு முலை கனத்து உறவே இடை நூல் என
வளைத்து உகுப்ப மை ஆர் குழல் தோளொடும் அலை மோத
மயில் குலத்தவர் ஆம் என நீள் கலை நெகிழ்த்துவித்து இரு வார் விழி வேல் கொடு
மயக்கி நத்தினர் மேல் மறு பாடும் அ விழி ஏவி
விலைக்கு என தனம் ஆயிரம் ஆயிரம் முலைக்கு அளப்பினும் ஆசை போதாது என
வெறுப்பர் குத்திர காரியர் வேசையர் மயல் மேலாய்
வெடுக்கு எடுத்து மகா பிணி மேலிட முடக்கி வெட்கும் மகா மத வீணனை
மினல் போல் இ பதமோடு உறவே அருள்புரிவாயே
அலைக்கு அடுத்த சுரார் பதி கோ என விட பண சிரம் ஆயிரம் சேடனும்
அதிர்த்திட கதிர் வேல் விடு சேவக மயில் வீரா
அடைக்கலப்பொருள் ஆம் என நாயெனை அழைத்து முத்தி ஆம் அநுபூதியெ
அருள் திருப்புகழ் ஓதுக வேல் மயில் அருள்வோனே
சிலை கை முப்புரம் நீறு எழவே திரு உளத்தில் அற்பம் எனா நினை தேசிகர்
சிறக்க முத்தமிழால் ஒரு பாவகம் அருள் பாலா
திரு கடப்பு அலர் சூடிய வார் குழல் குறத்தி கற்புடனே விளையாடி ஒர்
திருத்துருத்தியில் வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#847
எருவாய் கருவாய் தனிலே உருவாய் இதுவே பயிராய் விளைவாகி
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் இதுவே தொடர்பாய் வெறி போல
ஒரு தாய் இரு தாய் பல கோடிய தாயுடனே அவமாய் அழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா உயிர் கா என ஓத அருள்வாய்
முருகா என ஓர் தரம் ஓதும் அடியார் முடி மேல் இணை தாள் அருள்வோனே
முநிவோர் அமரோர் முறையோ எனவே முது சூர் உரம் மேல் விடும் வேலா
திருமால் பிரமா அறியாதவர் சீர் சிறுவா திருமால் மருகோனே
செழு மா மதில் சேர் அழகார் பொழில் சூழ் திருவீழியில் வாழ் பெருமாளே

மேல்

#848
சொல் பிழை வராமல் உனை கனக்க துதித்து நிற்பது வராத பவ கடத்தில் சுழற்றி
சுக்கில அவதார வழிக்கு இணக்கி களித்து விலைமாதர்
துப்பு இறையதான இதழ் கனிக்கு கருத்தை வைத்து மயலாகி மனத்தை விட்டு கடுத்த
துற்சன ம காதகரை புவிக்குள் தழைத்த நிதி மேவு
கற்பக இராசன் என படைக்கு பெருத்த அர்ச்சுன நராதி என கவிக்குள் பதித்து
கற்று அறி வினாவை எடுத்து அடுத்து படித்து மிகையாக
கத்திடும் மெய் ஆக வலி கலிப்பை தொலைத்து கைப்பொருள் இலாமை என கலக்க படுத்து
கற்பனை விடாமல் அலைத்து இருக்க சலிக்க விடலாமோ
எல் பணி அராவை மிதித்து வெட்டி துவைத்து பற்றிய கராவை இழுத்து உரக்க கிழித்து
எள் கரி படாமல் இதத்த புத்தி கதிக்கு நிலை ஓதி
எத்திய பசாசின் முலை குடத்தை குடித்து முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டு சிரித்த
அயில் கணை இராமர் சுகித்து இருக்க சினத்த திறல் வீரா
வெற்பு என மதாணி நிறுத்து உருக்கி சமைத்து வர்க்க மணியாக வடித்து இருத்தி தகட்டின்
மெய் குலம் அதாக மலைக்க முத்தை பதித்து வெகு கோடி
விண் கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க சிவத்த ரத்தின படாகம் மயில் பரிக்கு தரித்து
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே

மேல்

#849
கருத்து இதப்படு காமா லீலைகள் விதத்தை நத்திய வீணா வீணிகள்
கவட்டு விற்பன மாயாவாதிகள் பலகாலும்
கரைத்து உரைத்திடு மோகா மோகிகள் அளி குல பதி கார் போல் ஓதிகள்
கடைக்கணின் சுழலாயே பாழ்படு வினையேனை
உரைத்த புத்திகள் கேளா நீசனை அவத்தம் மெத்திய ஆசா பாசனை
உளத்தில் மெய்ப்பொருள் ஓரா மூடனை அருளாகி
உயர்ச்சி பெற்றிடு மேலா மூதுரை அளிக்கு நல் பொருள் ஆயே மாதவ
உணர்ச்சி பெற்றிடவே நீ தாள் இணை அருள்வாயே
செருக்கி வெட்டிய தீயோர் ஆம் எனும் மதத்த துட்டர்கள் மா சூரன் ஆதிய
சினத்தர் பட்டிடவே வேலை ஏவிய முருகோனே
சிவத்தை உற்றிடு தூயா தூயவர் கதித்த முத்தமிழ் மாலாய் ஓதிய
செழிப்பை நத்திய சீலா வீறிய மயில் வீரா
வரை தவர்க்கு அரர் சூலா பாணியர் அதி குணத்து அரர் தீரா தீரர்தம்
மனத்து இயல் படு ஞானாதேசிக வடி வேலா
வருக்கையின் கனி சாறாய் மேலிடு தழைத்த செய் தலை ஊடே பாய் தரு
மருத்துவக்குடி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#850
இத சந்தன புழுகும் சில மணமும் தக வீசி அணையும் தன கிரி கொண்டு இணை அழகும் பொறி சோர
இருளும் குழல் மழை என்ப நவரசம் கொளு மோக குயில் போலே
இடையும் கொடி மதனன் தளை இடும் குந்தள பார இலையும் சுழி தொடை ரம்பையும் அமுதம் தடமான
இயல் அம் கடி தடமும் பொழி மத விஞ்சைகள் பேசி தெரு மீதே
பத பங்கயம் அணியும் பரிபுரம் அங்கு ஒலி வீச நடை கொண்டிடு மயில் என்பன கலையும் சுழலாட
பரிசும் பல மொழியும் சில கிளி கொஞ்சுகை போல பரிவாகி
பணம் உண்டு எனது அவலம்படு நினைவு உண்டு இடை சோர இது கண்டு அவர் மயல் கொண்டிட மனமும் செயல் மாற
பகலும் சில இரவும் துயில் சில வஞ்சகர் மாயை துயர் தீராய்
திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி டகுடங்குகு டிகுடிங்குகு படகந்துடி வீணை
செகணஞ்செக எனவும் பறை திசை எங்கினும் மோத கொடு சூரர்
சிரமும் கர உடலம் பரி இரதம் கரி யாளி நிணமும் குடல் தசையும் கடல் என செம் புனல் ஓட
சில செம்புள்கள் கழுகும் சிறு நரியும் கொடி ஆட பொரும் வேலா
மத வெம் கயம் உரி கொண்டவர் மழுவும் கலை பாணி இடம் அன்பொடு வளரும் சிவை புகழ் சுந்தரி ஆதி
வளரும் தழல் ஒளிர் சம்பவி பரை விண்டு இள தோகை தரு சேயே
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குற மாதொடு இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களிகூர
வரு பந்தணை நகர் வந்து உறை விமலன் குருநாத பெருமாளே

மேல்

#851
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச இருள் பிணி துஞ்ச மலம் மாய
எனது இடர் மங்க உனது அருள் பொங்க இசை கொடு துங்க புகழ் கூறி
திரு முக சந்த்ர முருக கடம்ப சிவசுத கந்த குக வேல
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய்
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு மகிழ் அரி விண்டு மருகோனே
வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற வலம்வரு செம்பொன் மயில் வீரா
அருகுறு மங்கையொடு விடை உந்தும் அமலன் உகந்த முருகோனே
அருள் செறி பந்தணையில் இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே

மேல்

#852
எகின் இனம் பழி நாடகமாடிகள் மயில் எனும் செயலார் அகி நேர் அல்குல்
இசை இடும் குரலார் கடனாளிகள் வெகு மோகம்
என விழுந்திடும் வார் முலை மேல் துகில் அலையவும் திரிவார் எவராயினும்
இளகு கண் சுழல் வார் விலை வேசியர் வலைவீசும்
அகித வஞ்சக பாவனையால் மயல் கொடு விழுந்திட ராகமும் நோய் பிணி
அதிகமும் கொடு நாய் அடியேன் இனி உழலாமல்
அமுத மந்திர ஞானொபதேசமும் அருளி அன்புறவே முருகா என
அருள் புகுந்திடவே கழல் ஆர் கழல் அருள்வாயே
ககன விஞ்சையர் கோ எனவே குவடு அவுணர் சிந்திடவே கடல் தீவுகள்
கமற வெம் தழல் வேல் விடு சேவக முருகோனே
கரி நெடும் புலி தோல் உடையார் எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
கடவுள் எந்தையர் பாகம் விடா உமை பாலா
செகமும் அண்டமும் ஓர் உருவாய் நிறை நெடிய அம் புயல் மேனியனார் அரி
திரு உறைந்து உள மார்பகனார் திரு மருகோனே
தினை வனம்தனில் வாழ் வளி நாயகி வளர் தனம் புதை மார்பு அழகா மிகு
தலக பந்தணை மா நகர் மேவிய பெருமாளே

மேல்

#853
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி ஒத்த மொழி மானார்
குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம் வைத்த மடவார்பால்
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில் மெலியாமல்
வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனைசெய் புத்தி தருவாயே
பம்பு நதி உற்ற பங்கு ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில் அருள் சேயே
பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள் உறைவோனே
சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும் இறையோனே
சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த பெருமாளே

மேல்

#854
கெண்டைகள் பொரும் கண் மங்கையர் மலர் கொண்டைகள் குலுங்க நின்று அருகினில்
கெஞ்சு பலுடன் குழைந்து அமளியில் கொடுபோய் வண்
கெந்த பொடியும் புனைந்து உற அணைத்து இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற
மயலின் படும் துயர் அற ப்ரபை வீசும்
தண்டைகள் கலின்கலின் கலின் என கிண்கிணி கிணின்கிணின் கிணின் என
தண் கொலுசுடன் சிலம்பு அசைய உள் பரிவாகி
சந்ததமும் வந்து இரும் பரிமள பங்கய பதங்கள் என் கொடு வினை
சஞ்சலம் மலம் கெடும்படி அருள்புரிவாயே
தொண்டர்கள் சரண்சரண் சரண் என கொம்புகள் குகும்குகும் குகும் என
துந்துமி திமிந்திமிம் திமிம் என குறும் ஓசை
சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன
துங்க மலையும் புரந்து அமரருக்கு இடர் கூரும்
பண்டர்கள் புயங்களும் பொடிபட கண்டவ ப்ரசண்ட குஞ்சரி எழில்
பைம் தரு வனம் புரந்து அகழ் எயில் புடை சூழும்
பந்தி வரு மந்தி செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன
பந்தணையில் வந்திடும் சரவண பெருமாளே

மேல்

#855
தேன் இருந்த இதழார் பளிங்கு நகையார் குளிர்ந்த மொழியார் சரங்கள் விழி
சீர் சிறந்த முகவார் இளம் பிறையது என் புரூவர்
தேன் அமர்ந்த குழலார் களம் கமுகினார் புயம் கழையினார் தனம் குவடு
சேர் சிவந்த வடிவார் துவண்ட இடை புண்டரீகம்
சூனியம் கொள் செயலார் அரம்பை தொடையார் சரண் கமல நேர் இளம் பருவ
தோகை சந்தம் அணிவாருடன் கலவி இன்பமூடே
சோகம் உண்டு விளையாடினும் கமல பாதமும் புயம் ஈராறும் இந்துளம் பல்
தோடு அலங்கல் அணி மார்பமும் பரிவு உளம் கொள்வேனே
ஓ நம அந்த சிவ ரூபி அஞ்சுமுக நீலி கண்டி கலியாணி விந்து ஒளி
ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்த வேளே
ஓலம் ஒன்ற அவுணர் சேனை மங்கையர்கள் சேறுடன் குருதி ஓட எண் திசையும்
ஓது கெந்துருவர் பாட நின்று நடம் கொள் வேலா
ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற
மானொடு உம்பர் தரு மான் அணைந்த அழகு இலங்கும் பார்பா
ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில்
ஈறு இல் பந்தணை நலூர் அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#856
மதி அஞ்ச திரு நிறைந்த மா முகம் மயில் அஞ்ச கிளி இனங்கள் ஆம் என
மதுரம் செப்பிய மடந்தை மேனகை ரதி போல
மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என
வரு துங்க கடல் அணங்கு போல்பவர் தெருவூடே
நிதம் இந்தப்படி இருந்து வாறவர் பொருள் தங்க பணி கலந்து போய் வர
நெறி தந்திட்டவர் வசங்களாம் என உழலாதே
நிதி பொங்க பல தவங்களால் உனை மொழியும் புத்திகள் தெரிந்து நான் உனை
நிகர் சந்த தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்
நதி மிஞ்ச சடை விரிந்த நாயகன் உமை அன்பில் செயும் மிகுந்த பூசனை
நலம் என்று உள் குளிர் சிவன் பராபரன் அருள் பாலா
நவ கங்கைக்கு இணை பகர்ந்த மா மணி நதி பங்கில் குலவு கந்துகாபுரி
நகர் பொங்கி தழைய வந்து வாழ்வுறு முருகோனே
கெதி தங்க தகு கணங்கள் வானவர் அரி கஞ்சத்தவர் முகுந்தர் நாவலர்
கிளை பொங்க க்ருபைபுரிந்து வாழ்க என அருள் நாதா
கெருவம் பற்றி இகல் விளைந்த சூரோடு தளம் அஞ்ச பொருது எழுந்து தீ உகள்
கிரவுஞ்ச கிரி வகிர்ந்த வேல் உள பெருமாளே

மேல்

#857
கொந்து ஆர் மை குழல் இந்து ஆர் சர்க்கரை என்றே செப்பிய மொழி மாதர்
கொங்கு ஆர் முத்து வடம் தான் இட்ட தனம் தான் இ தரை மலை போலே
வந்தே சுற்றி வளைந்தால் அற்ப மனம் தான் இப்படி உழலாமல்
மங்கா நற்பொருள் இந்தா அற்புதம் என்றே இப்படி அருள்வாயே
இந்து ஓட கதிர் கண்டு ஓட கடம் மண்டா நல் தவர் குடி ஓட
எங்கே அ கிரி எங்கே இ கிரி என்றே திக்கென வரு சூரை
பந்தாடி தலை விண்டு ஓட களம் வந்தோரை சில ரண காளி
பங்காக தரு கந்தா மிக்க பனந்தாள் உற்று அருள் பெருமாளே

மேல்

#858
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழிதனில் உருகி அவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினில் அருமை இட மொளுமொளு என உடல் வளர ஆளு மேளமாய் வால ரூபமாய்
அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ஆவியாய ஓர் தேவிமாருமாய்
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி ஆசை ஆளராய் ஊசிவாசியாய்
அவியுறு சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில் மேலை வீடு கேள் கீழை வீடு கேள்
திடுதிடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ஞாளிகள் போல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு வீணியர் சொலே மேலது ஆயிடா
விதிதனை நினையாதே
மினுகுமினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும் வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடுவெடு என மேளமே சொலாய் ஆளி வாயராய்
மிடையுற வரு நாளில்
வறுமைகளும் முடுகி வர உறு பொருளு நழுவ சில வாதம் ஊதுகாமாலை சோகை நோய்
பெரு வயிறு வயிறுவலி படுவன் வர இரு விழிகள் பீளை சாறு இடா ஈளை மேலிடா
வழவழ என உமிழ் அமுது கொழகொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம் நாடி பேதமாய்
மனையவள் மனம் வேறாய்
மறுக மனை உறும் அவர்கள் நணுகுநணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவுதனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடுகாடு வா எனா வீடு போ எனா
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள்
மனிதர்கள் பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனு அறிவு சிறிதும் அற ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறுபறைகள் திமிலையொடு தவில் அறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய்
எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும் ஏசிடார்களோ பாச நாசனே
இருவினை முமலமும் அற இறவியொடு பிறவி அற ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும் வகை பரம சுகம் அதனை அருள் இடைமருதில் ஏகநாயகா லோகநாயகா
இமையவர் பெருமாளே

மேல்

#859
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல் அளாவி எதிர்
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை பொதிந்த நீலம்
இனிமை கரைபுரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என வாசம் வீசும் குழல்
இருளின் முக நிலவு கூர மாண் உடை அகன்று போக
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல் இறுகஇறுகி அநுராக போக மிக
வளரும் இள தன பாரம் மீதினில் முயங்குவேனை
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய தமிழ் ஓசை ஆக ஒளி
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்தந்திடாதோ
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடுபட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போக
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த வாழ்வே
அலகையுடன் நடனம் அது ஆடும் தாதை செவி நிறைய மவுன உரையாடும் நீப எழில்
அடவிதனில் உறையும் வேடர் பேதையை மணந்த கோவே
அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமர குருநாத நீதி உளது
அருளும் இடைமருதில் மேவும் மா முனிவர் தம்பிரானே

மேல்

#860
படியை அளவிடு நெடிய கொண்டலும் சண்டனும் தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன் செம்பொன் மேனி
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும் திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும் துன்று மூல
சடை முடியில் அணியும் நல சங்கரன் கும்பிடும் குமரன் அறுமுகன் மதுரம் தரும் செம் சொலன்
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று உய்ந்து பாடி
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன் பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ
கடுகு பொடி தவிடுபடி மந்திரம் தந்திரம் பயில வரு நிருதர் உடலம் பிளந்து அம்பரம்
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம் கண்டு சேர
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு நின்று அலகை பல திமிலை கொடு தந்தனம்தந்தனம்
கருதி இசை பொசியும் நசை கண்டுகண்டு இன்புறும் துங்க வேலா
அடல் புனையும் இடைமருதில் வந்து இணங்கும் குணம் பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கும்
அடவிதனில் உறை குமரி சந்து இலங்கும் தனம் தங்கு மார்பா
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம் கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
அழகுபெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும் தம்பிரானே

மேல்

#861
புழுகொடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பு லேபனம்
புளகித அபிராம பூஷித கொங்கை யானை
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணி அணி குழை மீது தாவடி
பொருவன கணை போல் விலோசன வந்தியாலே
மெழுகு என உருகா அனார் தமது இதய கலகமொடு மோகன
வெகு வித பரிதாப வாதனை கொண்டு நாயேன்
மிடைபடும் மல மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின்
விதரண சிவஞானபோதகம் வந்து தாராய்
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி
இடர் கெட அசுரேசர் சேனை முறிந்து போக
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் ககராசன் மேலிட
ரண முக கண பூத சேனைகள் நின்று உலாவ
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக
செயசெய முருகா குகா வளர் கந்த வேளே
திரை பொரு கரை மோது காவிரி வரு புனல் வயல் வாவி சூழ்த
திருவிடைமருதூரில் மேவிய தம்பிரானே

மேல்

#862
தநு நுதல் வெயர்வு எழ விழி குழி தர வளை சத்திக்க சில தித்திக்கப்படும் அன்பு பேசி
தழுவிய மகளிர்தம் முகிழ் முலை உரம் மிசை தைக்க சர்க்கரை கைக்கப்பட்டு அன தொண்டை ஊறல்
கனவிலு நுகர் தரு கலவியின் வலையிடை கட்டுப்பட்டு உயிர் தட்டுப்பட்டு அழிகின்றதோ தான்
கதி பெற விதியிலி மதியிலி உனது இரு கச்சு உற்ற சிறு செச்சை பத்மபதம் பெறேனோ
முனை மலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்த சித்ர தனத்துக்கு இச்சித அம்புராசி
முறையிட முது நிசிசரர் திரள் முதுகிட முட்ட பொட்டு எழ வெட்டி குத்தும் அடங்கல் வீரா
அனுபவம் அளி தரு நிகழ் தரும் ஒரு பொருள் அப்பர்க்கு அப்படி ஒப்பித்து அர்ச்சனை கொண்ட நாதா
அகிலமும் அழியினும் நிலைபெறு திரிபுவனத்து பொற்புறு சித்தி சித்தர்கள் தம்பிரானே

மேல்

#863
இந்து கதிர் சேர் அருண பந்தி நடு தூண் ஒளி பட்டு இன்ப ரச பால் அமுத சுவை மேவு
எண் குணம் உற்றோன் நடனம் சந்த்ர ஒளி பீடு அகம் உற்று எந்தை நடித்து ஆடும் அணி சபையூடே
கந்தம் எழுத்தோடு உறு சித்கெந்த மண பூ இதழை கண்டு களித்தே அமுத கடல் மூழ்கி
கந்த மதித்து ஆயிர எட்டு அண்டம் அதை கோல் புவன கண்டம் அதை காண எனக்கு அருள்வாயே
திந்த திமி தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என காள மணி தவில் ஓசை
சிந்தை திகைத்து ஏழு கடல் பொங்க அரி சூர் மகுடம் செண்டு குலைத்து ஆடு மணி கதிர் வேலா
குந்தி அரி தாழ் துளபம் செம் திருவை சேர் களபம் கொண்டல் நிறத்தோன் மகளை தரை மீதே
கும்பிட கை தாளம் எடுத்து அம் பொன் உரு பாவை புகழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே

மேல்

#864
தும்பி முகத்து ஆனை பணை கொம்பு அது என தாவி மயல் தொந்தம் என பாயும் முலை கன மாதர்
தும்பி மலர் சோலை முகில் கங்குல் இருள் காரின் நிற தொங்கல் மயில் சாயல் என குழல் மேவி
செம்பொன் உருக்கான மொழி சங்கின் ஒளி காம நகை செங்கயலை போலும் விழி கணையாலே
சிந்தை தகர்த்து ஆளும் இத சந்த்ர முக பாவையர் தித்திந்திம் என உற்று ஆடும் அவர்க்கு உழல்வேனோ
தம்பி வர சாதி திரு கொம்பு வர கூட வன சந்த மயில் சாய் விலகி சிறை போக
சண்டர் முடி தூள்கள் பட சிந்தி அரக்கோர்கள் விழ தங்க நிறத்தாள் சிறையை தவிர் மாயோன்
கொம்பு குறி காளம் மடு திந்தம் என உற்று ஆடி நிரை கொண்டு வளைத்தே மகிழ் அச்சுதன் ஈண
கொஞ்சு சுக பாவை இணை கொங்கைதனில் தாவி மகிழ் கும்பகோணத்து ஆறுமுக பெருமாளே

மேல்

#865
கெண்டை நேர் ஒத்த விழி மங்கை மோக கலவை கெந்த வாச புழுகு மண நாறும்
கிம்புரி ஈச களப கொங்கை யானை சிறிது கிஞ்சு காண பெருகி அடியேனும்
மண்டி மோச கலவி கொண்டு காமித்து உருகி வண்டன் ஆக புவியில் உழலாமல்
வந்து ஞான பொருளில் ஒன்று போதித்து உனது மஞ்சு தாளை தினமும் அருள்வாயே
அண்டர் வாழ ப்ரபை சண்ட மேரு கிரி இளைந்து வீழ பொருத கதிர் வேலா
அஞ்சு வாயில் பரனை நெஞ்சில் ஊறி தவசில் அன்புளாரை சிறையிட அசுரோரை
கொண்டுபோய் வைத்த கழு நெஞ்சில் ஏற கழுகு கொந்தி ஆட தலையை அரிவோனே
கொண்டல் சூழ் கழனி சங்கு உலாவி பரவு கும்பகோணத்தில் உறை பெருமாளே

மேல்

#866
பஞ்சு சேர் நிர்த்த பத மாதர் பங்கம் ஆர் தொக்கில் படியாமல்
செம் சொல் சேர் சித்ர தமிழால் உன் செம்பொன் ஆர்வத்தை பெறுவேனோ
பஞ்ச பாணத்தன் பொரு தேவர் பங்கில் வாழ் சத்தி குமரேசா
குஞ்சரீ வெற்பு தன நேயா கும்பகோணத்தில் பெருமாளே

மேல்

#867
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று வாச மலர் சிந்து குழல் கோதி
வார் இரு தனங்கள் பூணொடு குலுங்க மால் பெருகி நின்ற மடவாரை
சாலை வழி வந்து போம் அவர்கள் நின்று தாழ் குழல்கள் கண்டு தடுமாறி
தாக மயல் கொண்டு மால் இருள் அழுந்தி சால மிக நொந்து தவியாமல்
காலையில் எழுந்து உன் நாமம் மொழிந்து காதல் உமை மைந்த என ஓதி
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள் காண அருள் என்று பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர் படையின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசா
கோதை இரு பங்கன் மேவ வளர் கும்பகோண நகர் வந்த பெருமாளே

மேல்

#868
கறுத்த குஞ்சியும் வெளிறி எழும் கொத்து உருத்த வெண் பலும் அடைய விழுந்து உள்
கருத்துடன் திகழ் மதியும் மருண்டு சுருள் நோயால்
கலக்கமுண்டு அலம்அலம் உற வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க
கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க கொழு மேனி
அற திரங்கி ஒர் தடி கை நடுங்க பிடித்து இடும்பு உறு மனைவியும் நிந்தித்து
அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப சடமாகி
அழுக்கு அடைந்து இடர்படும் உடல் பங்க பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு
அடுத்து இரும் திருவடிதனை என்று உற்றிடுவேனோ
புற தலம் பொடிபட மிகவும் கட்டு அற பெரும் கடல் வயிறு குழம்ப
புகட்டு அரங்கிய விரக துரங்க திறல் வீரா
பொருப்பு உரம் படர் கிழி பட வென்று அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி
புதை குறும் தசை குருதிகள் பொங்க பொரும் வேலா
சிறுத்த தண்டைய மதலையோர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற
தினை புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி
செருக்கு நெஞ்சு உடை முருக சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப
திரு குடந்தையில் உறை தரு கந்த பெருமாளே

மேல்

#869
செனித்திடும் சலம் சாழலும் ஊழலும் விளைத்திடும் குடல் பீறியும் மீறிய
செருக்கொடும் சதை பீளையும் ஈளையும் உடலூடே
தெளித்திடும் பல சாதியும் வாதியும் இரைத்திடும் குலமே சில கால் படர்
சினத்திடும் பவ நோயெனவே இதை அனைவோரும்
கனைத்திடும் கலி காலம் இதோ என எடுத்திடும் சுடுகாடு புகா என
கவிழ்த்திடும் சடமோ பொடியாய் விடும் உடல் பேணி
கடுக்கனும் சில பூடணம் ஆடைகள் இருக்கிடும் கலையே பல ஆசைகள்
கழித்திடும் சிவயோகமும் ஞானமும் அருள்வாயே
தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரை விராணமொடு அடல் பேரி
சமர்த்தம் ஒன்றிய தானவர் சேனையை வளைத்து வெம் சினம் வேல் விடு சேவக
சமத்து உணர்ந்திடு மாதவர்பால் அருள்புரிவோனே
தினை புனம்தனிலே மயலால் ஒரு மயில் பதம்தனிலே சரண் நான் என
திரு புயம் தரு மோகன மானினை அணைவோனே
சிவ கொழும் சுடரே பரனாகிய தவத்தில் வந்தருள் பால க்ருபாகர
திரு குடந்தையில் வாழ் முருகா சுரர் பெருமாளே

மேல்

#870
கரிய குழல் சரிய முகம் வேர்வு ஆட வாசமுறு களப முலை புளகம் எழ நேரான வேல் விழிகள்
கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட நல கனி வாயின்
கமழ் குமுத அதர இதழ் தேன் ஊறல் பாய மிகு கடல் அமுதம் உதவ இரு தோள் மாலை தாழ வளை
கலகல என மொழி பதற மா மோக காதல் அது கரை காணாது
எரி அணுகு மெழுகு பதமாய் மேவிமேவி இணை இருவர் உடல் ஒருவர் என நாணாது பாயல் மிசை
இள மகளிர் கலவிதனில் மூழ்கி ஆழ்கினும் இமையாதே
இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும் இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே
உரிய தவ நெறியில் நம நாராயணாய என ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன்
உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில்
உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல் உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை
உவண பதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக
வரி அளிகள் இசை முரல வாகான தோகை இள மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ
வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகி இட மதில் சூழும்
மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே

மேல்

#871
பட்டு மணி கச்சு இறுக கட்டி அவிழ்த்து உத்தரிய பத்தியின் முத்து செறி வெற்பு இணையாம் என்
பற்பம் முகை குத்து முலை தத்தையர் கை புக்கு வசப்பட்டு உருகி கெட்ட வினை தொழிலாலே
துட்டன் என கட்டன் என பித்தன் என பிரட்டன் என சுற்றம் அற மற சித்தன் என திரிவேனை
துக்கம் அறுத்து கமல பொன் பதம் வைத்து பதவி சுத்தி அணை பத்தரில் வைத்து அருள்வாயே
சுட்ட பொருள் கட்டியின் மெய் செ கமல பொன் கொடியை துக்கமுற சொர்க்கமுற கொடி யாழார்
சுத்த ரதத்தில் கொடு புக்கு கடுகி தெற்கு அடைசி சுற்று வனத்தில் சிறை வைத்திடு தீரன்
கொட்டம் அற புற்று அரவ செற்றம் அற சத்தம் அற குற்றம் அற சுற்றம் அற பல தோளின்
கொற்றம் அற பத்து முடி கொத்தும் அறுத்திட்ட திறல் கொற்றர் பணி கொட்டை நகர் பெருமாளே

மேல்

#872
மனம் என்னும் பொருள் வான் அறை கால் கனல் புனல் உடன் புவி கூடியது ஓர் உடல்
வடிவு கொண்டு அதிலே பதிமூணு ஏழு வகையாலே
வரு சுகம் துயர் ஆசையிலே உழல் மதியை வென்று பராபர ஞான நல்
வழி பெறும்படி நாய் அடியேனை நின் அருள் சேராய்
செனனி சங்கரி ஆரணி நாரணி விமலி எண் குண பூரணி காரணி
சிவை பரம்பரை ஆகிய பார்வதி அருள் பாலா
சிறை புகும் சுரர் மாதவர் மேல் பெற அசுரர் தம் கிளை ஆனது வேர் அற
சிவன் உகந்து அருள்கூர் தரு வேல் விடு முருகோனே
கனகன் அங்கையினால் அறை தூண் இடை மனித சிங்கம் அதாய் வரை பார் திசை
கடல் கலங்கிடவே பொருதே உகிர் முனையாலே
கதற வென்று உடல் கீண அவன் ஆருயிர் உதிரமும் சிதறாது அமுதாய் உணும்
கமல உந்தியன் ஆகிய மால் திரு மருகோனே
தினகரன் சிலை வேள் அருள் மாதவர் சுரர்கள் இந்திரனார் உரகாதிபர்
திசைமுகன் செழு மா மறையோர் புகழ் அழகோனே
திரு மடந்தையர் நாலிருவோர் நிறை அகமொடு அம் பொனின் ஆலய நீடிய
சிவபுரந்தனில் வாழ் குக நாயக பெருமாளே

மேல்

#873
ஆசார ஈன குதர்க்க துட்டர்கள் மாதா பிதாவை பழித்த துட்டர்கள்
ஆமாவின் ஊனை செறுத்த துட்டர்கள் பர தாரம்
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள் நானா உபாய சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரை குடித்த துட்டர்கள் தமியோர் சொம்
கூசாது சேர பறித்த துட்டர்கள் ஊரார்கள் ஆசை பிதற்று துட்டர்கள்
கோலால வாள் வில் செறுக்கு துட்டர்கள் குரு சேவை
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் ஈயாது தேடி புதைத்த துட்டர்கள்
கோமாள நாயில் கடை பிறப்பினில் உழல்வாரே
வீசா விசால பொருப்பு எடுத்து எறி பேர் ஆரவார சமுத்திரத்தினில்
மீளாமல் ஓடி துரத்தி உட்கும் ஒரு மாவை
வேரோடு வீழ தறித்து அடுக்கிய போராடு சாமர்த்திய திரு கையில்
வேலாயுதா மெய் திருப்புகழ் பெறு வயலூரா
நாசாதி ப்ராரத்த துக்கம் மிக்கவர் மாயா விகார தியக்கம் அறுத்து அருள்
ஞானோபதேச ப்ரசித்த சற்குரு வடிவான
நாதா எனா முன் துதித்திட புவி ஆதாரம் ஆய்கைக்கு முட்ட முற்றருள்
நாகேச நாம தகப்பன் மெச்சிய பெருமாளே

மேல்

#874
தரையினில் வெகு வழி சார்ந்த மூடனை வெறியனை நிறை பொறை வேண்டிடா மத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணனை மிகு கேள்வி
தவ நெறிதனை விடு தாண்டுகாலியை அவமதி அதனில் பொலாங்கு தீமை செய்
சமடனை வலிய அசாங்கம் ஆகிய தமியேனை
விரை செறி குழலியர் வீம்பு நாரியர் மதி முக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழி வலை மகளிரொடு ஆங்கு கூடிய வினையேனை
வெகு மலர் அது கொடு வேண்டியாகிலும் ஒரு மலர் இலை கொடும் ஓர்ந்து யான் உனை
விதம் உறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே
ஒரு பது சிரம் மிசை போந்த ராவணன் இருபது புயமுடன் ஏந்தும் ஏதியும்
ஒரு கணைதனில் அற ஓங்கு மாயவன் மருகோனே
உனது அடியவர் புகழ் ஆய்ந்த நூலின் அமரர்கள் முனிவர்கள் ஈந்த பாலகர்
உயர் கதி பெற அருள் ஓங்கு மா மயில் உறைவோனே
குரை கழல் பணிவொடு கூம்பிடார் பொரு களம் மிசை அறம் அது தீர்ந்த சூரர்கள்
குல முழுது அனைவரும் மாய்ந்து தூள் எழ முனிவோனே
கொடு விடம் அதுதனை வாங்கியே திரு மிடறினில் இரு என ஏந்தும் ஈசுரர்
குரு பர என வரு கூந்தலூர் உறை பெருமாளே

மேல்

#875
கட கரி மருப்பில் கதிர்த்து ப்ரமிக்க மிக உரம் இட நெருக்கி பிடித்து புடைத்து வளர்
கனக குடம் ஒத்து கனத்து பெருத்த மணி அணியாலே
கதிர் திகழு செப்பை கதிக்க பதித்து மகிழ் கமல முகை பட்சத்து இருத்தி பொருத்து முலை
கமழ் விரை கொள் செச்சை கலப்பை பொதித்த அதனை விலகாது
கடுவை அடுவை பற்றி வில் சிக்க வைத்த செயல் என நிறம் இயற்றி குயிற்றி புரட்டி வரு
கயல் விழி வெருட்டி துரத்தி செவி குழையின் மிசை தாவும்
கள மதனனுக்கு சயத்தை படைத்து உலவு கடு மொழி பயிற்று களைத்து கொடிச்சியர்கள்
கணியினில் அகப்பட்டு அழுத்து அ துயர்ப்படுவது ஒழியேனோ
அடலை புனை முக்கண் பரற்கு பொருள் சொல் அரு மறைதனை உணர்த்தி செகத்தை பெருத்த மயில்
அதனை முன் நடத்தி கணத்தில் திரித்து வரும் அழகோனே
அபகடம் உரைத்து அத்தம் மெத்த படைத்து உலகில் எளியரை மருட்டி செகத்தில் பிழைக்க எணும்
அசடர் தம் மனதை கலக்கி துணித்து அடரும் அதி சூரா
விட அரவணைக்குள் துயில் கொள் க்ருபை கடவுள் உலவு மலை செப்பை செவிக்கண் செறித்து மிக
விரைவில் உவணத்தில் சிறக்க ப்ரியத்தில் வரும் ஒரு மாயோன்
விழை மருக கொக்கில் சமுத்ரத்தில் உற்றவனை நெறுநெறென வெட்டி உக்ர சத்தி தனிப்படைய
விடையவர் திரு சத்தி முத்தத்தினில் குலவு பெருமாளே

மேல்

#876
மகர குண்டலம் மீதே மோதுவ அருண பங்கயமோ பூ ஓடையில்
மருவு செங்கழு நீரோ நீ விடு வடி வேலோ
மதன் விடும் கணையோ வாளோ சில கயல்கள் கெண்டைகளோ சேலோ கொலை
மறலி என்பவனோ மானோ மது நுகர் கீதம்
முகர வண்டு இனமோ வான் மேல் எழு நில அருந்து புளோ மா தேவர் உண்
முதிய வெம் கடுவோ தேமா வடு வகிரோ பார்
முடிவு எனும் கடலோ யாதோ என உலவு கண் கொடு நேரே சூறை கொள்
முறை அறிந்த பசாசே போல்பவர் உறவு ஆமோ
நிகர் இல் வஞ்சக மாரீசாதிகள் தசமுகன் படை கோடா கோடிய
நிருதரும் பட ஓர் ஏ ஏவியே அடு போர் செய்
நெடியன் அங்கு அனுமானோடே எழுபது வெள்ளம் கவி சேனா சேவித
நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே
சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்
சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனார்
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு
திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#877
தோடுற்று காதளவு ஓடிய வேலுக்கு தான் நிகராய் எழு சூதத்தில் காமனி ராசத விழியாலே
சோடுற்று தாமரை மா முகை போல கற்பூரம் அளாவிய தோல் முத்து கோடு என வீறிய முலை மானார்
கூட சிக்காயவர் ஊழியமே பற்றி காதலின் ஓடிய கூள சித்தாளனை மூளனை வினையேனை
கோபித்து தாய் என நீ ஒரு போதத்தை பேச அதால் அருள் கோடித்து தான அடியேன் அடி பெறவேணும்
வேடிக்கைக்கார உதாரகுணா பத்ம தாரணி காரண வீர சுத்தா மகுடா சமர் அடு தீரா
வேலை கட்டாணி மகாரத சூரர்க்கு சூரனை வேல் விடு வேழத்தில் சீர் அருள் ஊறிய இளையோனே
ஆடத்தக்கார் உமை பாதியர் வேத பொன் கோவண ஆடையர் ஆலித்து தான் அருள் ஊறிய முருகோனே
ஆட பொன் கோபுரம் மேவிய ஆடிக்கு ஒப்பா மதிள் சூழ் பழையாறை பொன் கோயிலின் மேவிய பெருமாளே

மேல்

#878
திட்டு என பல செப்பை அடிப்பன பொன் குடத்தை உடைப்பன உத்தர
திக்கினில் பெரு வெற்பை விடுப்பன அதின் மேலே
செப்ப அத்தி மருப்பை ஒடிப்பன புற்பதத்தை இமைப்பில் அழிப்பன
செய் தலை கமலத்தை அலைப்பன திறம் ஏய
புள்தனை ககனத்தில் விடுப்பன சித்த முன் பொரவிட்டு முறிப்பன
புட்ப இக்கன் முடி குறி உய்ப்பன இளநீரை
புக்கு உடைப்பன முத்திரை இட்ட தனத்தை விற்பவர் பொய் கலவிக்கு உழல்
புத்தி உற்றமை அற்றிட எப்பொழுது அருள்வாயே
துட்ட நிக்ரக சத்திதர ப்ரபல ப்ரசித்த சமர்த்த தமிழ் த்ரய
துட்கர கவிதை புகலிக்கு அரச எனு நாம
சொற்க நிற்க சொல் லட்சண தட்சண கு தரத்தில் அகத்தியனுக்கு அருள்
சொல் குருத்வம் மகத்துவ சத்வ ஷண்முக நாத
தட்டு அற சமையத்தை வளர்ப்பவள் அத்தன் முன் புகழ் செப்ப அனுக்ரக
சத்துவத்தை அளித்திடு செய்ப்பதி மயில் ஏறி
சட்பத திரள் மொய்த்த மண பொழில் மிக்க ரத்ந மதில் புடை சுற்றிய
சக்கிரப்பளி முக்கணர் பெற்று அருள் பெருமாளே

மேல்

#879
அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும்
அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும்
சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம்
திமிந்தோதி திமித்திமிதி தனந்தான தனத்தனன தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள் வன குரங்கு ஏவி அழல் புகையிட்டு இளம் தாது மலர் திருவை சிறை மீளும்
இளம் காள முகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே
குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா
கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும் இசை குரங்காடுதுறை குமர பெருமாளே

மேல்

#880
குறித்த நெஞ்சு ஆசை விரகிகள் நவிற்று சங்கீத மிடறிகள்
குதித்து அரங்கு ஏறு நடனிகள் எவரோடும்
குறைப்படும் காதல் குனகிகள் அரை பணம் கூறு விலையினர்
கொலை கொடும் பார்வை நயனிகள் நகரேகை
பொறித்த சிங்கார முலையினர் வடுப்படும் கோவை இதழிகள்
பொருள் தினம் தேடு கபடிகள் தவர் சோர
புரித்திடும் பாவ சொருபிகள் உருக்கு சம்போக சரசிகள்
புணர்ச்சி கொண்டாடு மருள் அது தவிர்வேனோ
நெறித்து இருண்டு ஆறு மலர் பத மலர் மணத்த பைம் கோதை வகைவகை
நெகிழ்க்கும் மஞ்சு ஓதி வனசரி மணவாளா
நெருக்கும் இந்த்ராதி அமரர்கள் வள பெரும் சேனை உடையவர்
நினைக்கும் என் போலும் அடியவர் பெருவாழ்வே
செறித்த மந்தாரை மகிழ் புனை மிகுத்த தண் சோலை வகைவகை
தியக்கி அம்பேறு நதி அது பலவாறும்
திரை கரம் கோலி நவ மணி கொழித்திடும் சாரல் வயல் அணி
திரு குரங்காடுதுறை உறை பெருமாளே

மேல்

#881
குடங்கள் நிரைத்து ஏறு தடங்கள் குறித்து ஆர வடங்கள் அசைத்து ஆர செய நீலம்
குதம்பை இடத்து ஏறு வடிந்த குழை காது குளிர்ந்த முக பார்வை வலையாலே
உடம்பும் அற கூனி நடந்து மிக சாறி உலந்து மிக கோலும் அகலாதே
உறங்கி விழிப்பு ஆய பிறந்த பிறப்பேனும் உரம் கொள பொன் பாதம் அருள்வாயே
விடங்கள் கதுப்பு ஏற படங்கண் நடித்து ஆட அவிதம் கொள் முதல் பாயல் உறை மாயன்
வில் அங்கை முறிந்து ஓடி இடங்கள் வளைத்து ஏறு விளங்கும் முகிற்கு ஆன மருகோனே
தடம் கொள் வரை சாரல் நளங்கும் மயில் பேடை தழங்கும் இயல் பாடி அளி சூழ
தயங்கும் வயல் சாரல் குரங்கு குதித்து ஆடும் தலங்கள் இசைப்பான பெருமாளே

மேல்

#882
மானை நேர் விழி ஒத்த மடந்தையர் பாலை நேர் மொழி ஒத்து விளம்பியர்
வாச மா மலர் கட்டும் அரம்பையர் இரு தோளும்
மார்பு மீதினும் முத்து வடம் புரள் காம பூரண பொன் கடகம் பொர
வாரி நீல வளை கை புலம்பிட அநுராகம்
ஆன நேரில் வித திரயங்களும் நாணம் மாற மயக்கி இயம்பவும்
ஆடை சோர நெகிழ்த்து இரங்கவும் உறவாடி
ஆரவார நயத்த குணங்களில் வேளின் நூல்களை கற்ற விளம்பவும்
ஆகும் மோக விபத்தும் ஒழிந்து உனை அடைவேனோ
சானகி துயரத்தில் அரும் சிறை போனபோது தொகுத்த சினங்களில்
தாப சோபம் ஒழிப்ப இலங்கையும் அழிவாக
தாரை மான் ஒரு சுக்கிரபன் பெற வாலி வாகு தலத்தில் விழுந்திட
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே
கான வேடர் சிறு குடில் அம் புனம் மீதில் வாழ் இதணத்தில் உறைந்திடு
காவல் கூரும் குறத்தி புணர்த்திடும் மணி மார்பா
கா உலாவிய பொன் கமுகின் திரள் பாளை வீச மலர் தடமும் செறி
காவளூர்தனில் முத்தமிழும் தெரி பெருமாளே

மேல்

#883
அஞ்சன வேல் விழி மட மாதர் அங்கு அவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உனது அடி சேர விம்பம் அதாய் அருள் அருளாதோ
நஞ்சு அமுதாய் உணும் அரனார்தம் நல் குமரா உமை அருள் பாலா
தஞ்ச எனவாம் அடியவர் வாழ தஞ்சையில் மேவிய பெருமாளே

மேல்

#884
அம்புராசியில் கெண்டை சேல் ஒளித்து அஞ்சவே மணி குழை வீசும்
அம் கணார் இடத்து இன்ப சாகரம் தங்கி மூழ்கும் இச்சையினாலே
எம்பிரான் உனை சிந்தியாது ஒழித்த இந்த்ரசால இ ப்ரமை தீர
இங்கு வா என பண்பினால் அழைத்து எங்குமான மெய்ப்பொருள் தாராய்
கொம்பு போல் இடை தொண்டை போல் இதழ் கொண்டல் போல் குழல் கன மேரு
குன்று போல் முலை பைங்கி ராதையை கொண்ட கோல சற்குண வேலா
சம்பராரியை கொன்ற தீ விழி சம்பு போதக குருநாதா
சண்ட கோபுர செம்பொன் மாளிகை தஞ்சை மா நகர் பெருமாளே

மேல்

#885
கந்த வார் குழல் கோதி மாலையை புனைந்து மஞ்சளால் அழகாக மேனியில் திமிர்ந்து
கண்ட மாலைகள் ஆன ஆணி முத்து அணிந்து தெருவூடே
கண்டபேரை எலாம் அவாவினில் கொணர்ந்து வண் பயோதர பார மேருவை திறந்து
கண்களாகிய கூர வேலை விட்டு எறிந்து விலைகூறி
வந்த பேர்களையே கையால் எடுத்து அணைந்து கொண்டு தேன் இதழ் ஊறு வாயை வைத்து அருந்தி
மந்த மாருதம் வீச பாயலில் புணர்ந்து மயல் பூணும்
மங்கைமார் அநுபோக தீவினை பவங்கள் மங்கி ஏகிடுமாறு ஞான வித்தை தந்து
வண்டு உலாவிய நீப மாலை சற்று இலங்க வருவாயே
இந்த்ரதாருவை ஞாலம் மீதினில் கொணர்ந்த சங்க பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன்
என்று வாழ் மணி மார்பன் வீர விக்ரமன் தன் மருகோனே
எண் திசை முக வேலை ஞாலம் உற்று மண்டு கந்த தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க
வென்று பேரொளி சேர் ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர் வேலா
சந்த்ரசேகரி நாகபூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆலபோஜனத்தி
அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு மணி மார்பா
சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி வாழ் பதிக்கு உயர்ந்த
தஞ்சை மா நகர் ராஜ கோபுரத்து அமர்ந்த பெருமாளே

மேல்

#886
மரு உலாவிடும் ஓதி குலைப்பவர் சமர வேல் எனு நீடு விழிச்சியர்
மனதிலே கபடு ஊரு பரத்தையர் ரதி கேள்வர்
மதனனோடு உறழ் பூசல் இடைச்சியர் இளைஞர் ஆருயிர் வாழும் முலைச்சியர்
மதுர மா மொழி பேசு குணத்தியர் தெரு மீதே
சருவி யாரையும் வா என அழைப்பவர் பொருளிலே வெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை அணுகாதே
சலசம் மேவிய பாத நினைத்து முன் அருணை நாடு அதில் ஓது திருப்புகழ்
தணிய ஓகையில் ஓத எனக்கு அருள்புரிவாயே
அரிய கானகம் மேவும் குறத்திதன் இதணிலே சில நாளு மனத்துடன்
அடவிதோறுமே வாழ் இயல் பத்தினி மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிபட உழவர் சாகரம் ஓடி ஒளித்திட
அமரர் நாடு பொன் மாரி மிகுந்திட நினைவோனே
திருவின் மா மரம் ஆர் பழன பதி அயிலும் சோறவை ஆளும் துறை பதி
திசையில் நான்மறை தேடிய முன் குடி விதி ஆதி
சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி
திருவையாறுடனே ஏழு திருப்பதி பெருமாளே

மேல்

#887
சொரியும் மா முகிலோ இருளோ குழல் சுடர் கொள் வாள் இணையோ பிணையோ விழி
சுரர்தம் ஆர் அமுதோ குயிலோ மொழி இதழ் கோவை
துவர் அதோ இலவோ தெரியா இடை துகள் இலா அனமோ பிடியோ நடை
துணை கொள் மா மலையோ முலை தான் என உரையாடி
பரிவினால் எனை ஆளுக நான் ஒரு பழுது இலான் என வாள் நுதலாரொடு
பகடியே படியா ஒழியா இடர் படு மாய
பரவை மீது அழியா வகை ஞானிகள் பரவு நீள் புகழே அதுவாம் மிகு
பரம வீடு அது சேர்வதும் ஆவதும் ஒரு நாளே
கரிய மேனியன் ஆ நிரை ஆள்பவன் அரி அரா அணை மேல் வளர் மா முகில்
கனகன் மார்பு அது பீறிய ஆளரி கன மாய
கபடன் மா முடி ஆறுடன் நாலும் ஒர் கணையினால் நிலம் மீதுற நூறிய
கருணை மால் கவி கோப க்ருபாகரன் மருகோனே
திரிபுராதிகள் தூள் எழ வானவர் திகழவே முனியா அருள்கூர்பவர்
தெரிவை பாதியார் சாதி இலாதவர் தரு சேயே
சிகர பூதர நீறு செய் வேலவ திமிர மோகரம் வீர திவாகர
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே

மேல்

#888
வீங்கு பச்சை இளநீர் போல் மா முலை சேர்ந்து அணைத்து எதிர் மார்பூடே பொர
வேண்டு சர்க்கரை பால் தேன் நேர் இதழ் உண்டு தோயா
வேண்டு உரை துகில் வேறாய் மோகன வாஞ்சையில் களை கூரா வாள் விழி
மேம்பட குழை மீதே மோதிட வண்டு இராசி
ஓங்கு மை குழல் சாதா ஈறு என வீந்து புட்குரல் கூவா வேள் கலை
ஓர்ந்திட பல க்ரீடா பேத முயங்கும் ஆகா
ஊண் புணர்ச்சியும் மாயா வாதனை தீர்ந்து உனக்கு எளிதாயே மாதவம்
ஊன்றுதற்கு மெய் ஞானாசாரம் வழங்குவாயே
தாங்கு நிற்சரர் சேனா நீதர் உன் ஆங்கு ருத்ர குமாரா கோஷண
தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா
சாங்கிபர் சுகர் சீ நாதீசுரரேந்திரன் மெச்சிய வேலா போதக
சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா
பூங்குளத்திடை தாராவோடு அனம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலை
போன்ற விக்ர சூரா அரீ பகிரண்ட ரூபா
போந்த பத்தர் பொலா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய
பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#889
முகிலை காரை சருவிய குழல் அது சரிய தாம தொடை வகை நெகிழ் தர
முளரி பூவை பனி மதிதனை நிகர் முகம் வேர்வ
முனையில் காதி பொரு கணையினை இள வடுவை பானல் பரிமள நறை இதழ்
முகையை போல சமர் செய்யும் இரு விழி குழை மோத
துகிரை கோவை கனிதனை நிகர் இதழ் பருகி காதல் துயர் அற வள நிறை
துணை பொன் தோளில் குழைவுற மனம் அது களிகூர
சுடர் முத்து ஆர பணி அணி ம்ருகமத நிறை பொன் பாரத்து இளகிய முகிழ் முலை
துவள கூடி துயில்கினும் உனது அடி மறவேனே
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென திமிதித் தீதித் திமிதி என் முரசோடு
குழுமி சீறி சமர் செய்யும் அசுரர்கள் களம் மீதே
குழறி கூளி திரள் எழ வயிரவர் குவிய கூடி கொடு வர அலகைகள்
குணல் இட்டு ஆடி பசி கெட அயில் விடு குமரேசா
செகசெச் சேசெச் செக என முரசு ஒலி திகழ சூழ திரு நடம் இடுபவர்
செறி கண் காள பணி அணி இறையவர் தரு சேயே
சிகர பார கிரி உறை குறமகள் கலச தாம தன கிரி தழுவிய
திரு நெய்த்தானத்து உறைபவ சுரபதி பெருமாளே

மேல்

#890
விகட சங்கட வார்த்தை பேசிகள் அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
விரிவு அடங்கிட மாற்றும் வாறு என வருவார்தம்
விதம் விதங்களை நோக்கி ஆசையில் உபரிதங்களை மூட்டியே தம
இடு மருந்தோடு சோற்றையே இடு விலைமாதர்
சகல மஞ்சனம் ஆட்டியே முலை பட வளைந்து இசை மூட்டியே வரு
சரச இங்கித நேத்தியாகிய சுழலாலே
சதி முழங்கிட வாய் பண் ஆனது மலர உந்தியை வாட்டியே இடை
தளரவும் கணை ஆட்டும் வேசியர் உறவாமே
திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த தாதையர்
திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான
செனம் அடங்கலும் மாற்றியே உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி
திருகி உண்டிட ஆர்த்த கூளிகள் அடர் பூமி
அகடு துஞ்சிட மூட்டு பாரத முடிய அன்பர்கள் ஏத்தவே அரி
அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் மருகோனே
அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு மா மயில்
அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே

மேல்

#891
சதங்கை மணி வீர சிலம்பின் இசை பாட சரங்கள் ஒளி வீச புயம் மீதே
தனங்கள் குவடு ஆட படர்ந்த பொறி மால் பொன் சரம் கண் மறி காதில் குழை ஆட
இதம் கொள் மயில் ஏர் ஒத்து உகந்த நகை பேசுற்று இரம்பை அழகு ஆர் மை குழலாரோடு
இழைந்து அமளியோடு உற்று அழுந்தும் எனை நீ சற்று இரங்கி இரு தாளை தருவாயே
சிதம்பர குமார கடம்பு தொடை ஆட சிறந்த மயில் மேல் உற்றிடுவோனே
சிவந்த கழுகு ஆட பிணங்கள் மலை சாய சினந்த அசுரர் வேரை களைவோனே
பெதும்பை எழு கோல செயம் கொள் சிவகாமி ப்ரசண்ட அபிராமிக்கு ஒரு பாலா
பெரும் புனம் அது ஏகி குற பெணொடு கூடி பெரும்புலியுர் வாழ் பொன் பெருமாளே

மேல்

#892
பஞ்ச புலனும் பழைய ரண்டு வினையும் பிணிகள் பஞ்சு என எரிந்து பொடி அங்கமாகி
பண்டு அற உடன் பழைய தொண்டர்களுடன் பழகி பஞ்சவர் வியன் பதி உடன் குலாவ
குஞ்சர முகன் குணமொடு அந்த வனம் வந்து உலாவ கொஞ்சிய சிலம்பு கழல் விந்து நாதம்
கொஞ்ச மயில் இன்புற மெல் வந்து அருளி என் கவலை கொன்று அருள் நிறைந்த கழல் இன்று தாராய்
எஞ்சி இடையும் சுழல அம்பு விழியும் சுழல இன்ப ரச கொங்கை கரமும் கொளாமல்
எந்த உடை சிந்த பெலம் மிஞ்சிய அமுதம் புரள இந்து நுதலும் புரள கங்குல் மேகம்
அஞ்சும் அளகம் புரள மென் குழைகளும் புரள அம் பொன் உரு நங்கை மணம் உண்ட பாலா
அன்பர் குலவும் திரு நெடுங்கள வளம் பதியில் அண்டர் அயனும் பரவு தம்பிரானே

மேல்

#893
கூரிய கடைக்கணாலும் மேரு நிகர் ஒப்பதான கோடு அதனில் மெத்த வீறு முலையாலும்
கோப அதரத்தினாலும் மேவிடு விதத்துள் ஆல கோல உதரத்தினாலும் மொழியாலும்
சீரிய வளை கையாலும் மேகலை நெகிழ்ச்சியே செய் சீர் உறு நுசுப்பினாலும் விலைமாதர்
சேறுதனில் நித்தம் மூழ்கி நாள் அவம் இறைத்து மாயை சேர் தரும் உளத்தனாகி உழல்வேனோ
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான ராவணன் மிகுத்த தானை பொடியாக
சாடும் உவண பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை புயத்து மாயன் மருகோனே
வாரணம் உரித்து மாதர் மேகலை வளை கை நாணம் மா பலி முதல் கொள் நாதன் முருகோனே
வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு உள குறட்டி மேவு பெருமாளே

மேல்

#894
நீரிழிவு குட்டம் ஈளை வாதமொடு பித்த மூலம் நீள் குளிர் வெதுப்பு வேறும் உள நோய்கள்
வேர் உறு புழுக்கள் கூடு நான்முகன் எடுத்த வீடு நீடிய இரத்த மூளை தசை தோல் சீ
பாரிய நவ துவார நாறும் முமலத்தில் ஆறு பாய் பிணி இயற்று பாவை நரி நாய் பேய்
பாறொடு கழுக்கள் கூகை தாம் இவை புசிப்பதான பாழ் உடல் எடுத்து வீணில் உழல்வேனோ
நாரணி அறத்தின் நாரி ஆறு சமயத்தி பூதநாயகரிடத்து காமி மகமாயி
நாடகநடத்தி கோல நீல வருணத்தி வேதநாயகி உமைச்சி நீலி திரிசூலி
வார் அணி முலைச்சி ஞானபூரணி கலைச்சி நாக வாள் நுதல் அளித்த வீர மயிலோனே
மாட மதில் முத்து மேடை கோபுரம் மணத்த சோலை வாகு உள குறட்டி மேவு பெருமாளே

மேல்

#895
கருகி அறிவு அகல உயிர் விட்டு உக்கி கிளைஞர் கதறி அழ விரவு பறை முட்ட கொட்டி இட
கனக மணி சிவிகையில் அமர்த்தி கட்டையினில் இடை போடா
கர மலர் கொடு அரிசியினை இட்டு சித்ர மிகு கலையை உரி செய்து மறைகள் பற்ற பற்று கனல்
கணகண என எரிய உடல் சுட்டு கக்ஷியவர் வழியே போய்
மருவு புனல் முழுகி மனை புக்கு துக்கம் அறு மனிதர் தமை உறவு நிலை சுட்டு சுட்டி உற
மகிழ்வு செய்து அழுது பட வைத்த துட்டன் மதன் மலராலே
மயல் விளைய அரிவையர்கள் கைப்பட்டு எய்த்து மிக மனம் அழியும் அடிமையை நினைத்து சொர்க்க பதி
வழியை இது வழி என உரைத்து பொன் கழல்கள் தருவாயே
பொருவில் மலை அரையன் அருள் பச்சை சித்ர மயில் புரம் எரிய இரணிய தனு கை பற்றிய இயல்
புதிய முடுகு அரிய தவம் உற்று கச்சியினில் உற மேவும்
புகழ் வனிதை தரு புதல்வ பத்து கொத்து முடி புயம் இருபது அறவும் எய்த சக்ர கை கடவுள்
பொறி அரவின் மிசை துயிலு சுத்த பச்சை முகில் மருகோனே
அரிய மரகத மயிலில் உற்று கத்து கடல் அது சுவற அசுரர் கிளை கெட்டு கட்டை அற
அமரர் பதி இனிய குடி வைத்தற்கு உற்ற மிகு இளையோனே
அருண மணி வெயில் பரவு பத்து திக்கும் மிக அழகு பொதி மதர் மகுட தத்தித்தத்தி வளர்
அணிய கயல் உகளும் வயல் அத்திப்பட்டில் உறை பெருமாளே

மேல்

#896
தொக்கை கழுவி பொன் தகும் உடை சுற்றி கலன் இட்டு கடி தரு சொக்கு புலி அப்பி புகழுறு களியாலே
சுத்தத்தை அகற்றி பெரியவர் சொல் தப்பிய அகத்தை புரி புல சுற்றத்துடன் உற்று புவி இடை அலையாமல்
முக்குற்றம் அகற்றி பல கலை கற்று பிழை அற்று தனை உணர் முத்தர்க்கு அடிமைப்பட்டு இலகிய அறிவாலே
முத்தி தவ சுற்று கதி உறு சத்தை தெரிசித்து கரை அகல் முத்தி புணரிக்குள் புக வரம் அருள்வாயே
திக்கு எட்டும் அடக்கி கடவுளருக்கு பணி கற்பித்து அருள் அறு சித்தத்தோடு அடுத்து படை கொடு பொரு சூரர்
செச்சை புயம் அற்று புக ஒரு சத்தி படை விட்டு சுரர் பதி சித்த துயர் கெட்டு பதி பெற அருள்வோனே
அக்கை புனை கொச்சை குறமகள் அச்சத்தை ஒழித்து கரி வரும் அத்தத்தில் அழைத்து பரிவுடன் அணைவோனே
அப்பை பிறையை கட்டிய சடை அத்தர்க்கு அருமை புத்திர விரி அத்திக்கரை இச்சித்து உறைதரு பெருமாளே

மேல்

#897
விந்து பேதித்த வடிவங்களாய் எ திசையும் மின் சர அசர குலமும் வந்து உலாவி
விண்டு போய் விட்ட உடல் சிந்தை தான் உற்று அறியும் மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே
வந்து நாயில் கடையன் நொந்து ஞான பதவி வந்து தா இக்கணமே என்று கூற
மைந்தர் தாவி புகழ தந்தை தாய் உற்று உருகி வந்து சேயை தழுவல் சிந்தியாதோ
அந்தகாரத்தில் இடி என்ப வாய்விட்டு வரும் அங்கி பார்வை பறையர் மங்கி மாள
அம் கை வேல் விட்டு அருளி இந்திரலோகத்தில் மகிழ் அண்டர் ஏற கிருபை கொண்ட பாலா
எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வை சடையர் எந்தை பாகத்து உறையும் அந்த மாது
எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே

மேல்

#898
ஈ எறும்பு நரி நாய் கணம் கழுகு காகம் உண்ப உடலே சுமந்து இது
ஏல்வது என்று மதமே மொழிந்து மத உம்பல் போலே
ஏதும் என்றனிட கோல் எனும் பரிவு மேவி நம்பி இது போதும் என்க சிலர்
ஏய் தனங்கள் தனி வாகு சிந்தை வசனங்கள் பேசி
சீத தொங்கல் அழகா அணிந்து மணம் வீச மங்கையர்கள் ஆட வெண் கவரி
சீற கொம்பு குழல் ஊத தண்டிகையில் அந்தமாக
சேர் கனம் பெரிய வாழ்வு கொண்டு உழலும் ஆசை வெந்திட உன் ஆசை மிஞ்சி சிவ
சேவை கண்டு உனது பாத தொண்டன் என அன்பு தாராய்
சூது இருந்த விடர் மேய் இருண்ட கிரி சூரர் வெந்து பொடியாகி மங்கி விழ
சூரியன் புரவி தேர் நடந்து நடு பங்கின் ஓட
சோதி அந்த பிரமா புரந்தரனும் ஆதிஅந்த முதல் தேவரும் தொழுது
சூழ மன்றில் நடமாடும் எந்தை முதல் அன்புகூர
வாது கொண்டு அவுணர் மாள செங்கை அயில் ஏவி அண்டர் குடி ஏற விஞ்சையர்கள்
மாதர் சிந்தை களிகூர நின்று நடனம் கொள்வோனே
வாச கும்ப தன மானை வந்து தினை காவல் கொண்ட முருகா எணும் பெரிய
வாலி கொண்ட புரம் மேய அமர்ந்து வளர் தம்பிரானே

மேல்

#899
ஆங்க உடல் வளைந்து நீங்கு பல் நெகிழ்ந்து ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்து உள கடன்கள் வாங்கவும் அறிந்து ஆண்டு பல சென்று கிடையோடே
ஊங்கி இருமல் வந்து வீங்கு குடல் நொந்து ஓய்ந்து உணர்வு அழிந்து உயிர் போ முன்
ஓங்கு மயில் வந்து சேண் பெற இசைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையும் உயர்ந்த தீம் புனம் இருந்த வேந்து இழையின் இன்ப மணவாளா
வேண்டும் அவர் தங்கள் பூண்ட பத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி உடைந்து தேங்க வயல் வந்து மாண்பு நெல் விளைந்த வள நாடா
மாந்தர் தவர் உம்பர் கோன் பரவி நின்ற மாந்துறை அமர்ந்த பெருமாளே

மேல்

#900
அரி மருகோனே நமோ என்று அறுதி இலானே நமோ என்று அறுமுக வேளே நமோ என்று உன பாதம்
அரகர சேயே நமோ என்று இமையவர் வாழ்வே நமோ என்று அருண சொரூபா நமோ என்று உளது ஆசை
பரிபுர பாதா சுரேசன் தரு மகள் நாதா அராவின் பகை மயில் வேலாயுதா ஆடம்பர நாளும்
பகர்தல் இலா தாளை ஏதும் சிலது அறியா ஏழை நான் உன் பதி பசு பாச உபதேசம் பெறவேணும்
கர தல சூலாயுதா முன் சலபதி போல் ஆரவாரம் கடின சுரா பான சாமுண்டியும் ஆட
கரி பரி மேல் ஏறுவானும் செயசெய சேனாபதீ என் களம் மிசை தான் ஏறியே அஞ்சிய சூரன்
குரல் விட நாய் பேய்கள் பூதம் கழுகுகள் கோமாயு காகம் குடல் கொளவே பூசலாடும் பல தோளா
குட திசை வார் ஆழி போலும் படர் நதி காவேரி சூழும் குளிர் வயலூர் ஆர மேவும் பெருமாளே

மேல்

#901
ஆர முலை காட்டி மார நிலை காட்டி ஆடை அணி காட்டி அநுராக
ஆல விழி காட்டி ஓசை மொழி காட்டி ஆதரவு காட்டி எவரோடும்
ஈர நகை காட்டி நேர மிகை காட்டியே வினைகள் காட்டி உறவாடி
ஏதம் மயல் காட்டு மாதர் வலை காட்டி ஈடு அழிதல் காட்டல் அமையாதோ
வீர அபராட்டு சூரர் படை காட்டில் வீழ அனலை ஊட்டி மயில் ஊர்தி
வேலை உறை நீட்டி வேலைதனில் ஓட்டு வேலை விளையாட்டு வயலூரா
சேர மலை நாட்டில் வாரமுடன் வேட்ட சீலி குறவாட்டி மணவாளா
தேசு புகழ் தீட்டி ஆசை வரு கோட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#902
இகல் கடின முகபட விசித்ர துதிக்கை மத மத்த களிற்றை எதிர்
புளக தனம் இளக இனிது எட்டி கழுத்தொடு கைகட்டி பிணித்து இறுகி
இதழ் பொதியின் அமுது முறை மெத்த புசித்து உருகி முத்தத்தை இட்டு நக தந்தமான
இடு குறியும் வரையை உற நெற்றி தலத்து இடையில் எற்றி கலக்கமுற
இடை துவள உடை கழல இட்டத்து அரை பை அது தொட்டு திரித்து மிக
இரணம் இடும் முரணர் விழி ஒக்க கறுத்த விழி செக்கச்சிவக்க வளை செம் கை சோர
அகரு விடு ம்ருகமத மணத்து கனத்த பல கொத்து குழல் குலைய
மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்கு கருத்து அழிய
அமளி பெரிது அமளிபட வக்கிட்டு மெய் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை
அலையின் விழி மணியின் வலை இட்டு பொருள் கவர கட்டு பொறிச்சியர்கள்
மதன கலை விதனம் அறுவித்து திருப்புகழை உற்று துதிக்கும் வகை
அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ
திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட
செகணசெக சகணசக செக்க செகச்செகண சத்தச்ச கச்சகண
திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த திங்குதீதோ
திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி
டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுடது
என திமிர்த தவில் மிருக இடக்கை திரள் சலிகை பக்க கண பறை தவண்டை பேரி
வகைவகையின் மிக அதிர உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய
எழுது துகில் முழுது உலவி பட்டப்பகல் பருதி விட்டு அத்தமித்தது என
வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்கு குனிப்பு விட வென்ற வேலா
வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு
அரி மருக அறுமுகவ முக்கண் கணத்தர் துதி தத்வத்திற சிகர
வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே

மேல்

#903
இலகு முலை விலை அசடிகள் கசடிகள் கலைகள் பல அறி தெருளிகள் மருளிகள்
எயிறு கடிபடும் உதடிகள் பதடிகள் எவரோடும்
இனிய நய மொழி பழகிகள் அழகிகள் மடையர் பொருள் பெற மருவிகள் சருவிகள்
யமனும் மிகை என அழிதரும் முழிதரும் விழி வாளால்
உலகம் இடர் செயு நடலிகள் மடலிகள் சிலுகு சிலரொடு புகலிகள் இகலிகள்
உறவு சொல வல துரகிகள் விரகிகள் பிறை போலே
உகிர் கை குறியிடு கமுகிகள் சமுகிகள் பகடி இட வல கபடிகள் முகடிகள்
உணர்வு கெடும் வகை பருவிகள் உருவிகள் உறவாமோ
அலகை புடைபட வருவன பொருவன கலக கணம் நிரை நகுவன தகுவன
அசுரர் தசை வழி நிமிர்வன திமிர்வன பொடியாடி
அலரி குட திசை அடைவன குடைவன தரும வநிதையும் மகிழ்வன புகழ்வன
அகில புவனமும் அரகரகர என அமர் வேள்வி
திலக நுதல் உமை பணி அது செயமகள் கலையின் நடமிட எரி விரி முடியினர்
திரள் பல் உயிர் உடல் குவடுகள் என நட மயில் ஏறி
சிறிது பொழுதினில் அயில் விடு குருபர அறிவு நெறி உள அறுமுக இறையவ
த்ரிசிர கிரி அயல் வயலியில் இனிது உறை பெருமாளே

மேல்

#904
என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும் கண்களாலே
என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும் என்னால் இருக்கவும் பெண்டிர் வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் தொந்த நோயை
என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்
கல் நார் உரித்த என் மன்னா எனக்கு நல் கர்ணாமிர்த பதம் தந்த கோவே
கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ கண்ணாடியில் தடம் கண்ட வேலா
மன்னான தக்கனை முன்னாள் முடி தலை வல் வாளியில் கொளும் தங்க ரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயல் பதி மன்னா மூவர்க்கு ஒரு தம்பிரானே

மேல்

#905
கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் கனி போல் துகிர் இதழ் எழிலாகும்
கரி போல் கிரி முலை கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும்
உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால் கெறுவித நடையாலும்
ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்படும் ஒழியா துயர் அது தவிரேனோ
குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய் பல அலகைகள் பேய்கள்
கொலை போர் களம் மிசை தினம் ஏற்று அசுரர்கள் குடி ஏற்றிய குக உயர் வாழை
மடல் கீற்றினில் எழு விரை பூ பொழில் செறி வயலூர் பதிதனில் உறைவோனே
மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல் ப்ரியம் உள பெருமாளே

மேல்

#906
கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு
கலக காம நூலை முழுது உணர் இளைஞோர்கள்
கலவிக்கு ஆசை கூர வளர் பரிமள கற்பூர தூமம் கனதன
கலகத்தாலும் வானில் அசையும் மின் இடையாலும்
விமல சோதி ரூப இமகர வதனத்தாலும் நாத முதலிய
விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும்
வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் வடு வகிர்
விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ
சமரில் பூதம் யாளி பரி பிணி கனக தேர்கள் யானை அவுணர்கள்
தகர கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே
சமுக பேய்கள் வாழி என எதிர் புகழ கானில் ஆடு பரிபுர
சரணத்து ஏக வீர அமை மன மகிழ் வீரா
அமர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய் தோயு நாத குறமகள்
அணைய சூழ நீத கரம் மிசை உறு வேலா
அருளில் சீர் பொயாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின்
அழகு கோயில் மீதில் மருவிய பெருமாளே

மேல்

#907
கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ர வாத
கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும்
சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு நண்பு உளோர் செய்
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய்
அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்
அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம்
மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம்
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே

மேல்

#908
குருதி கிருமிகள் சல மல மயிர் தசை மருவும் உருவமும் அலம்அலம் அழகொடு
குலவு பல பணி பரிமளம் அறுசுவை மடை பாயல்
குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம்அலம் மனைவி மகவு அனை அநுசர்கள் முறைமுறை
குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம்அலம் ஒரு நாலு
சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி உலக கலைகளும் அலம்அலம் இலகிய
தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார்பால்
சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும் உறவு அலம்அலம் அருள் அலை கடல் கழி
துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே
விருது முரசுகள் மொகுமொகுமொகு என முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட
விபுதர் அரகர சிவசிவ சரண் என விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடி வேலா
மருது நெறுநெறுநெறு என முறிபட உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்வனசம்
மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி
மலையில் உறைகிற அறுமுக குருபர கயலும் மயிலையும் மகரமும் உகள் செநெல்
வயலி நகரியில் இறையவ அருள்தரு பெருமாளே

மேல்

#909
குயிலோ மொழி அயிலோ விழி கொடியோ இடை பிடியோ நடை குறியீர் தனி செறியீர் இனி என்று பாடி
குனகா அடி பிடியா இதழ் கடியா நகம் வகிரா உடை குலையா அல்குல் அளையா இரு கொங்கை மீதில்
பயிலா மனம் மகிழ் மோகித சுக சாகர மட மாதர்கள் பகையே என நினையாது உற நண்பு கூரும்
பசு பாசமும் அகிலாதிக பரிபூரண புரணாகர பதி நேரு நின் அருளால் மெய் உணர்ந்திடேனோ
வெயில் வீசிய கதர் ஆயிர அருணோதய இருள் நாசன விசை ஏழ் பரி ரவி சேய் எனும் அங்க ராசன்
விசிகாகவம் அயல் பேடி கை படு போது சன்னிதியானவன் விதி தேடிய திருவாளி அரன் குமாரா
அயலூர் உறை மயிலா பல கலை மான் உழை புலி தோல்களை அகில் ஆரம் அது எறி காவிரி வண்டல் மேவும்
அதி மோகர வயலூர் மிசை திரி சேவக முருகேசுர அமராபதி அதில் வாழ்பவர் தம்பிரானே

மேல்

#910
கோவை வாய் இதழுக்கும் தாக போகம் அளிக்கும் கோதை மாதர் முலைக்கும் குறியாலும்
கோல மாலை வளைக்கும் தோளினாலும் மணத்த கோதி வாரி முடிக்கும் குழலாலும்
ஆவி கோடி அவிக்கும் சேலினாலும் மயக்குண்டு ஆசையாய் இனும் நித்தம் தளராதே
ஆசு இலாத மறைக்கும் தேடொணாத ஒருவர்க்கு ஒன்று ஆடல் தாள்கள் எனக்கு இன்று அருள்வாயே
சேவில் ஏறு நிருத்தன் தோகை பாகன் அளிக்கும் த்யாக சீல குணத்தன் திருமாலும்
தேடொணாத பதத்தன் தீது இலாத மனத்தன் தேயுவான நிறத்தன் புதல்வோனே
கா விடாத திருச்செங்கோடு நாடு தனக்கும் காவி சூழ் வயலிக்கும் ப்ரியமானாய்
காதி மோதி எதிர்க்கும் சூர தீரர் ப்ரமிக்கும் காலன் ஆடல் தவிர்க்கும் பெருமாளே

மேல்

#911
தாமரையின் மட்டு வாச மலர் ஒத்த தாள் இணை நினைப்பில் அடியேனை
தாது அவிழ் கடுக்கை நாக மகிழ் கற்ப தாரு என மெத்திய விராலி
மா மலையினில் நிற்ப நீ கருதி உற்று வா என அழைத்து என் மனது ஆசை
மாசினை அறுத்து ஞான அமுது அளித்த வாரம் இனி நித்தம் மறவேனே
காமனை எரித்த தீ நயன நெற்றி காதிய சுவர்க்க நதி வேணி
கானில் உறை புற்றில் ஆடு பணி இட்ட காது உடைய அப்பர் குருநாதா
சோமனொடு அருக்கன் மீன் உலவும் மிக்க சோலை புடை சுற்று வயலூரா
சூடிய தட கை வேல் கொடுவித்து சூர் தலை துணித்த பெருமாளே

மேல்

#912
திரு உரூப நேராக அழகதான மா மாய திமிர மோகமானவர்கள் கலை மூடும்
சிகரியூடு தே மாலை அடவியூடு போய் ஆவி செருகும் மால் அனாசார வினையேனை
கரு விழாது சீர் ஓதி அடிமை பூணலாமாறு கனவில் ஆள் சுவாமி நின் மயில் வாழ்வும்
கருணை வாரி கூர் ஏக முகமும் வீர மாறாத கழலு நீப வேல் வாகு மறவேனே
சருவ தேவ தேவாதி நமசிவாய நாமாதி சயில நாரி பாகாதி புதல்வோனே
சத மகீ வல் போர் மேவு குலிசபாணி மால் யானை சகசமான சாரீ செய் இளையோனே
மருவு லோகம் ஈரேழும் அளவிடவொணாவான வரையில் வீசு தாள் மாயன் மருகோனே
மநு நியாய சோணாடு தலைமையாகவே மேலை வயலி மீது வாழ் தேவர் பெருமாளே

மேல்

#913
நெய்த்த சுரி குழல் அறலோ முகிலோ பத்ம நறு நுதல் சிலையோ பிறையோ
நெட்டை இணை விழி கணையோ பிணையோ இனிது ஊறும்
நெக்க அமுது இதழ் கனியோ துவரோ சுத்த மிடறு அது வளையோ கமுகோ
நிற்கும் இள முலை குடமோ மலையோ அறிவே தேய்ந்து
எய்த்த இடை அது கொடியோ துடியோ மிக்க திரு அரை அரவோ ரதமோ
இ பொன் அடி இணை மலரோ தளிரோ என மாலாய்
இச்சை விரகுடன் மடவாருடனே செப்ப மருள் உடன் அவமே திரிவேன்
ரத்ந பரிபுர இரு கால் ஒருகால் மறவேனே
புத்தர் அமணர்கள் மிகவே கெடவே தெற்கு நரபதி திருநீறு இடவே
புக்க அனல் வயம் மிக ஏடு உயவே உமையாள்தன்
புத்ரன் என இசை பகர் நூல் மறை நூல் கற்ற தவ முனி பிரமாபுரம் வாழ்
பொற்ப கவுணியர் பெருமான் உருவாய் வருவோனே
சத்தம் உடைய ஷண்முகனே குகனே வெற்பில் எறி சுடர் அயிலா மயிலா
சத்தி கணபதி இளையாய் உளையாய் ஒளி கூரும்
சக்ரதர அரி மருகா முருகா உக்ர இறையவர் புதல்வா முதல்வா
தட்பம் உள தட வயலூர் இயலூர் பெருமாளே

மேல்

#914
முலை மறைக்கவும் வாசலில் தலை மறைய நிற்கவும் ஆசை உள்ளோர் என
முகிழ் நகை சிறு தூதினை ஏவும் முகமோடே
முகம் அழுத்தவும் ஆசைகள் கூறவும் நகம் அழுத்தவும் லீலையிலே உற
முறை மசக்கவும் வாசம் உலா மலர் அணை மீதே
கலை நெகிழ்க்கவும் வாலிபர் ஆனவர் உடல் சளப்பட நாள்வழிநாள்வழி
கறை அழிக்கவும் நான் எனவே அணி விலை ஈதே
கடிய சத்தியமாம் எனவே சொலி அவர் கொடு அ பணம் மாறிட வீறொடு
கடுகடுத்திடுவாரொடு கூடியது அமையாதோ
மலையை மத்து என வாசுகியே கடை கயிறு என திருமாலொடு ஒரு பாதியும்
மருவும் மற்றது வாலியும் மேல் இட அலை ஆழி
வலய முட்ட ஒர் ஓசையதாய் ஒலி திமிதி மித்திம் எனா எழவே அலை
மறுகிட கடையா எழ மேல் எழும் அமுதோடே
துலை வரு திரு மா மயில் வாழ்வுள வயலை அற்புதனே வினையானவை
தொடர் அறுத்திடும் ஆரிய கேவலி மணவாளா
துவள் கடி சிலை வேள் பகைவா திரு மறு ஓர் எட்டுடன் ஆயிரம் மேல் ஒரு
துகள் அறுத்து அணி ஆர் அழகா சுரர் பெருமாளே

மேல்

#915
மேகலை நெகிழ்த்து காட்டி வார் குழல் விரித்து காட்டி வேல் விழி புரட்டி காட்டி அழகாக
மேனியை மினுக்கி காட்டி நாடகம் நடித்து காட்டி வீடுகள் அழைத்து காட்டி மத ராசன்
ஆகமம் உரைத்து காட்டி வார் அணி தனத்தை காட்டி யாரொடு நகைத்து காட்டி விரகாலே
ஆதர மனத்தை காட்டி வேசைகள் மயக்கை காட்ட ஆசையை அவர்க்கு காட்டி அழிவேனோ
மோகன விருப்பை காட்டி ஞானமும் எடுத்து காட்டி மூ தமிழ் முனிக்கு கூட்டு குருநாதா
மூ உலகு அளித்து காட்டி சேவலை உயர்த்தி காட்டு மூரி வில் மதற்கு காட்டு வயலூரா
வாகையை முடித்து காட்டி கானவர் சமர்த்தை காட்டி வாழ் மயில் நடத்தி காட்டும் இளையோனே
மா மலை வெதுப்பி காட்டி தானவர் திறத்தை காட்டி வானவர் சிரத்தை காத்த பெருமாளே

மேல்

#916
வாளின் முனையினும் நஞ்சினும் வெம் சம ராஜ நடையினும் அம்பு அதினும் பெரு
வாதை வகை செய் கரும் கணும் எங்கணும் அரிதான
வாரி அமுது பொசிந்து கசிந்த செ வாயு நகை முக வெண் பலு நண்புடன்
வாரும் இரும் எனும் இன் சொலும் மிஞ்சிய பனிநீரும்
தூளி படு நவ குங்குமமும் குளிர் ஆரம் அகில் புழுகும் புனை சம்ப்ரம
சோதி வளர்வன கொங்கையும் அம் கையும் எவரேனும்
தோயும் அளறு என நிதம்பமும் உந்தியும் மாயை குடி கொள் குடம்பையுள் மன் பயில்
சூளையரை எதிர் கண்டு மருண்டிடல் ஒழிவேனோ
காளி திரிபுரை அந்தரி சுந்தரி நீலி கவுரி பயங்கரி சங்கரி
காருணிய சிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி
காதல் மனைவி பரம்பரை அம்பிகை ஆதி மலைமகள் மங்கலி பிங்கலை
கான நடனம் உகந்தவள் செம் திரு அயன் மாது
வேளின் இரதி அருந்ததி இந்திர தேவி முதல்வர் வணங்கும் திரி அம்பகி
மேக வடிவர் பின் வந்தவள் தந்து அருள் இளையோனே
வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள்தரு கந்த நிரந்தர
மேலை வயலை உகந்து உள நின்று அருள் பெருமாளே

மேல்

#917
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமும் அளவிய களபமும்
மட்டித்து இதழ் தொடை முடித்து தெரு தலையில்
உலவி இளைஞர்கள் பொருள் உடன் உயிர் கவர் கலவி விதம் வியன் அரிவையர் மருள் வலை
இட்டு துவக்கி இடர் பட்டு தியக்கி அவர்
விரவு நவ மணி முக படம் எதிர் பொரு புரண புளகித இள முலை உரம் மிசை
தைக்க கழுத்தோடு கை ஒக்க பிணித்து இறுகி அன்புகூர
விபுதர் அமுது என மது என அறுசுவை அபரிமிதம் என இலவ இதழ் முறைமுறை
துய்க்க களித்து நகம் வைத்து பலில் குறியில்
வரையும் முறை செய்து முனிவரும் மன வலி கரையும் அரிசனம் பரிசனம் ப்ரிய உடை
தொட்டு குலைத்து நுதல் பொட்டு படுத்தி மதர்
விழிகள் குழை பொர மதி முகம் வெயர்வு எழ மொழிகள் பதறிட ரதி பதி கலை வழி
கற்றிட்ட புட்குரல் மிடற்றில் பயிற்றி மடு உந்தி மூழ்கி
புகடு வெகு வித கரணமும் மருவிய வகையில் முகில் என இருள் என வனம் என
ஒப்பித்த நெய்த்த பல புட்ப குழல் சரிய
அமுத நிலை மலர் அடி முதல் முடி கடை குமுத பதி கலை குறை கலை நிறை கலை
சித்தத்து அழுத்தி அநுவர்க்கத்து உருக்கி ஒரு
பொழுதும் விடல் அரிது எனும் அநுபவம் அவை முழுதும் ஒழிவு அற மருவிய கலவி
இதத்து ப்ரியப்பட நடித்து துவட்சியினில் நைந்து சோர
புணரும் இது சிறு சுகம் என இகபரம் உணரும் அறிவிலி ப்ரமை தரு திரி மலம்
அற்று கருத்து ஒருமை உற்று புல தலையில்
மறுகு பொறி கழல் நிறுவியெ சிறிது மெய் உணர்வும் உணர்வுற வழு அற ஒரு ஜக
வித்தை குண த்ரயமும் நிர்த்தத்து வைத்து மறை
புகலும் அநுபவ வடிவினை அளவு அறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ
தத்வ ப்ரசித்திதனை முத்தி சிவ கடலை என்று சேர்வேன்
திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட
திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட
டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட
டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட
திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி
திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி
திமிலை கரடிகை பதலை சலரி தவில் தமர முரசுகள் குடமுழவோடு துடி
சத்த கண பறைகள் மெத்த தொனித்து அதிர
அசுரர் குல அரி அமரர்கள் ஜய பதி குசல பசுபதி குரு என விருதுகள்
ஒத்த திரள் பலவும் முற்றி கலிக்க எழு
சிகர கொடு முடி கிடுகிடுகிடு என மகர சல நிதி மொகுமொகுமொகு என
எட்டு திசை களிறு மட்டற்று அற பிளிற நின்ற சேடன்
மகுட சிரதலம் நெறுநெறுநெறு என அகில புவனமும் ஹரஹரஹர என
நக்ஷத்ர முக்கி விழ வக்கிட்ட துட்ட குண
நிருதர் தலை அற வடிவு எனும் மலை சொரி குருதி அருவியின் முழுகிய கழுகுகள்
பக்க பழுத்த உடல் செக்கச்சிவத்துவிட
வயிறு சரி குடல் நரி தின நிணம் அவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள்
பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்தலை பரவி உம்பர் வாழ
மடிய அவணர்கள் குரகத கஜ ரத கடகம் உடைபட வெடிபட எழு கிரி
அற்று பறக்க வெகு திக்கு படிது நவ
நதிகள் குழை தர இப பதி மகிழ்வுற அமர் செய்து அயில் கையில் வெயில் எழ மயில் மிசை
அ குக்குட கொடி செருக்க பெருக்கமுடன்
வயலி நகர் உறை சரவணபவ குக இயலும் இசைகளும் நடனமும் வகைவகை
சத்ய படிக்கு இனிது அகஸ்தியர்க்கு உணர்த்தி அருள் தம்பிரானே

மேல்

#918
கார் அணியும் குழலை குவித்திடு கோகனகம் கொடு மெத்தென பிறர்
காண வருந்தி முடித்திட கடு விரகாலே
காது அளவும் கயலை புரட்டி மன ஆதிகள் வஞ்சம் மிகுத்து இடப்படி
காமுகர் அன்பு குவித்த கைப்பொருள் உறவாகி
பூரண கும்பம் என புடைத்து எழு சீதள குங்குமம் ஒத்த சித்திர
பூஷித கொங்கையில் உற்று முத்து அணி பிறையான
போருவை ஒன்று நெகித்து உருக்கி மெய் யாரையும் நெஞ்சை விலை படுத்திடு
பூவையர் தங்கள் மயக்கை விட்டிட அருள்வாயே
வீர புயம் கிரி உக்ர விக்ரம பூத கணம் பல நிர்த்தம் இட்டிட
வேகமுடன் பறை கொட்டிட கழுகு இனம் ஆட
வீசிய பம்பரம் ஒப்பு என களி வீச நடம் செய் விடை தனி துசர்
வேத பரம்பரை உள் களித்திட வரும் வீரா
சீர் அணியும் திரை தத்தும் முத்து எறி காவிரியின் கரை மொத்து மெத்திய
சீர் புனைகின்ற திருத்தவத்துறை வரும் வாழ்வே
சீறி எதிர்த்த அரக்கரை கெட மோதி அடர்ந்து அருள் பட்சம் முற்றிய
தேவர்கள் தம் சிறை வெட்டி விட்டு அருள் பெருமாளே

மேல்

#919
நிரைத்த நித்தில நீள் மணி மாலைகள் பொறுத்த வெற்பு இனை மார் முலை மேல் அணி
நெறித்த நெய் குழல் வாள் விழி மா மதி முக மானார்
நெளித்த சில் இடை மேல் கலை ஆடையை உடுத்தி அத்தம் உளோர்தமையே மயல்
நிரப்பி நித்தமும் வீதியில் நேருறு நெறியாலே
கரைத்து இத குயில் போல் மொழி மாதர்கள் வலைக்கு உளில் சுழலா வகையே உன
கழல் துதித்திடு வாழ்வு அது தான் மனதுற மேவி
கதித்த பத்தி அமை சால் அடியார் சபை மிகுத்து இழி குண பாதகனேன் உயர்
கதிக்கு அடுத்து உயர்வாகவுமே அருள் உரையாதோ
வரை தநு கரர் மாதவம் மேவினர் அகத்து இடத்தினில் வாழ் சிவனார் திரு
மணி செவிக்குள் மெய்ஞ்ஞானம் அது ஓதிய வடி வேலா
மதித்த முத்தமிழ் ஆய்வினர் மேலவர் உரைத்து உள திருவாசகம் ஆனது
மனத்துள் எத்து அழகார் புகழ் வீசிய மணி மாட
திரை கடல் பொரு காவிரி மா நதி பெருக்கு எடுத்துமே பாய் வள நீர் பொலி
செழித்த நெல் செநெல் வாரிகளே குவைகுவையாக
செருக்கு செய்ப்பதி வாழ் முருகா அறம் வளர்த்த நித்ய கல்யாணி க்ருபாகரி
திருத்தவத்துறை மா நகர் தான் உறை பெருமாளே

மேல்

#920
காலன் வேல் கணை ஈர் வாள் ஆலமும் நேர் கணால் கொலை சூழ் மா பாவிகள்
காம சாத்திர வாய் பாடா ஏணிகள் எவரேனும்
காதல் ஆர்க்கும் வினா வாய் கூறிகள் போக பாத்திரம் மா மூதேவிகள்
காசு கேட்டிடும் மாயா ரூபிகள் அதி மோக
மாலை மூட்டிகள் வானூடே நிமிர் ஆனை போல் பொர நேரே போர் முலை
மார்பு காட்டிகள் நானா பேதகம் என மாயா
மா பராக்கிகளோடே சீரிய போது போக்குதல் ஆமோ நீ இனி
வா எனா பரிவாலே ஆள்வதும் ஒரு நாளே
பால் அறா திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே வாது செய்
பாடல் தோற்ற இரு நாலாயிரம் சமண் மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட நீறு இடா தமிழ்நாடு ஈடேறிட
பாதுகாத்து அருளாலே கூன் நிமிர் இறையோனும்
ஞாலம் ஏத்தியதோர் மா தேவியும் ஆலவாய் பதி வாழ்வுமாறு எணும்
ஞான பாக்கிய பாலா வேல மயில் வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ
நாடு போற்றிய பூவாளூர் உறை பெருமாளே

மேல்

#921
வாசனை மங்கையர் போற்று சிற்றடி பூஷண கிண்கிணி ஆர்ப்பரித்திட
மா மலை ரண்டு என நாட்டு மத்தக முலை யானை
வாடை மயங்கிட நூற்ற சிற்றிழை நூல் இடை நல் கலை தேக்க இக்கு வில்
மாரன் விடும் கணை போல் சிவத்திடு விழியார்கள்
நேசிகள் வம்பிகள் ஆட்டம் இட்டவர் தீயர் விரும்புவர் போல் சுழற்றியே
நீசன் எனும்படி ஆக்கி விட்டு ஒரு பிணியான
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி
நீ அகலந்தனில் வீற்றிருப்பதும் ஒரு நாளே
தேசம் அடங்கலும் ஏத்து மை புயல் ஆய நெடுந்தகை வாழ்த்த வச்சிர
தேகம் இலங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே
தீரன் எனும்படி சாற்று விக்ரம சூரன் நடுங்கிட வாய்ந்த வெற்பு உடல்
தேய நடந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர் வேலா
மூசு அளி பம்பிய நூற்று இதழ் கமலாசனன் வந்து உலகு ஆக்கி வைத்திடு
வேதன் அகந்தையை மாற்றி முக்கணர் அறிவாக
மூதறிவு உந்திய தீக்ஷை செப்பிய ஞானம் விளங்கிய மூர்த்தி அற்புத
மூவர் இலங்கு பராய்த்துறை பதி பெருமாளே

மேல்

#922
புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும் கரும் கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
புது நிலவு அருந்தியும் துஞ்சு நஞ்சும் பொருப்பு எறி வேலும்
பொரு என இகன்று அகன்று அங்குமிங்கும் சுழன்று இடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்து இங்கிதம்
புவி இளைஞர் முன் பயின்று அம் பொனின் கம்பித குழை மோதி
குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்படி அமர்புரிந்து அரும் சங்கடம் சந்ததம்
கொடுமைசெய் துசம் கொடும் சிங்கி தங்கும் கடைக்கண்ணினர்பால்
குலவு பல செம் தனம் தந்துதந்து இன்புறும் த்ரிவித கரணங்களும் கந்த நின் செம் பதம்
குறுகும் வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்று அமைவேனோ
துணர் விரி கடம்ப மென் தொங்கலும் பம்புறும் புழுகும் அசலம் பசும் சந்தனம் குங்குமம்
தொகு களபமும் துதைந்து என்று நன்கு ஒன்றும் பத்திரு தோளும்
தொலைவில் சண்முகங்களும் தந்திர மந்த்ரங்களும் பழநி மலையும் பரங்குன்றமும் செந்திலும்
துதி செயும் மெயன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப்பதி வாழ்வாய்
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும் குறு தும்பையும் கொன்றையும்
கமழ் சடில சம்புவும் கும்பிடும் பண்புடை குருநாதா
கன குடகில் நின்று குன்றம் தரும் சங்கரன் குறு முனி கமண்டலம் கொண்டு முன் கண்டிடும்
கதி செய் நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே

மேல்

#923
மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகி
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே என் நினைவே நல் பொருள் ஆயோய்
கதியே சொல் பர வேளே கரிவூரில் பெருமாளே

மேல்

#924
இளநிர் குவட்டு முலை அமுத தடத்தை கனி இரத குடத்தை எணும் மரபோடே
இரு கைக்கு அடைத்து இடை துவள குழல் சரிய இதழ் சர்க்கரை பழமொடு உறழ உறல்
முளரிப்பு ஒத்த முகம்முகம் வைத்து அருத்தி நலம் முதிர து அற்ப அல்குல் மிசை மூழ்கி
மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்ப அமளி முழுகி சுகிக்கும் வினை அற ஆளாய்
நளின பத கழலும் ஒளிர் செச்சை பொன் புயம் என் நயனத்தில் உற்று நடமிடும் வேலா
நரனுக்கு அமைத்த கொடி இரத சுத களவன் நறை புட்ப நல் துளவன் மருகோனே
களப தனத்தி சுக சரச குறத்தி முகம் கமலம் புயத்து வளி மணவாளா
கடலை குவட்டு அவுணை இரண படுத்தி உயர் கருவை பதிக்குள் உறை பெருமாளே

மேல்

#925
தசையாகிய கற்றையினால் முடிய தலை கால் அளவு ஒப்பனையாயே
தடுமாறுதல் சற்று ஒரு நாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன்
பசு பாசமும் விட்டு அறிவால் அறியப்படு பூரண நிட்களமான
பதி பாவனை உற்று அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே
அசலேசுரர் புத்திரனே குண திக்கு அருணோதய முத்தமிழோனே
அகிலாகம வித்தகனே துகள் அற்றவர் வாழ் வயலி திருநாடா
கசிவார் இதயத்து அமிர்தே மதுப கமலாலயன் மைத்துன வேளே
கருணாகர சற்குருவே குடகில் கருவூர் அழக பெருமாளே

மேல்

#926
நித்த பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு தேயுவு
நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி
நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு
நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை
எத்தி திரியும் இது ஏது பொயாது என உற்று தெளிவு உணராது மெய் ஞானமொடு
இச்சைப்பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை
எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது
இட்டு திருவடியாம் உயர் வாழ்வுற இனிது ஆள்வாய்
தத்த தனதன தானன தானன தித்தி திமிதிமி தீதக தோதக
டத்த குடகுகு தாகுட தீகுட என பேரி
சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு சூரர்கள் தூள்பட
சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே
வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர்
வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா
வெற்பு தட முலையாள் வளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள்கொள
வெற்றி புகழ் கருவூர்தனில் மேவிய பெருமாளே

மேல்

#927
முட்ட மருட்டி இரு குழை தொட்ட கடைக்கண் இயல் என மொட்பை விளைத்து முறை அளித்திடு மாதர்
முத்து இரத்ந மரகதம் வைத்த விசித்ர சித்ர முகபடம் மொச்சிய பச்சை அகில் மண தன பாரம்
கட்டி அணைத்து நக நுதி பட்ட கழுத்தில் இறுகிய கை தலம் எய்த்து வசனம் அற்று உயிர் சோரும்
கட்டம் முயக்கின் அநுபவம் விட்ட விடற்கு நியமித கற்பனை பக்ஷமுடன் அளித்து அருளாதோ
வெட்டிய கட்கம் முனை கொடு அட்ட குணத்து ரணமுக விக்ரம உக்ர வெகு வித படை வீரா
வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிக மகிழ் வித்தக சித்த வயலியில் குமரேசா
கிட்டிய பல் கொடு அசுரர்கள் மட்டு அற உட்க அடலோடு கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா
கெட்டவர் உற்ற துணை என நட்டு அருள் சிட்ட பசுபதி கெர்ப்பபுரத்தில் அறுமுக பெருமாளே

மேல்

#928
சஞ்சல சரித பர நாட்டர்கள் மந்திரி குமரர் படை ஆட்சிகள்
சங்கட மகிபர் தொழு ஆக்கினை முடி சூடி
தண்டிகை களிறு பரி மேல் தனி வெண்குடை நிழலில் உலவா கன
சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய்
குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையில் இசையா திரள்
கொம்புகள் குழல்கள் வெகு வாத்தியம் இயல் கீதம்
கொங்கு அணி மகளிர் பெரு நாட்டிய நன்று என மனது மகிழ பார்த்திபர்
கொண்டு அயன் எழுதும் யம கோட்டியை உணராரே
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறால் பொருள்
பங்கு உடை அவனி பதி தோற்றிட அயலே போய்
பண்டையில் விதியை நினையா பனிரண்டுடை வருஷ முறையா பல
பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே
வஞ்சனை நழுவி நிரை மீட்சியில் முந்து தமுடைய மனை வாழ்க்கையில்
வந்த பின் உரிமை அது கேட்டிட இசையா நாள்
மண் கொள விசையன் விடு தேர் பரி உந்தினன் மருக வயலூர் குக
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே

மேல்

#929
முகில் அளகம் சரியா குழை இகல்வன கண் சிவவா சிவ முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ அநுபோக
முலை புளகம் செய வார்த்தையும் நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமா கர நுதல் சேர
துயர் ஒழுகும் செல பாத்திரம் மெலிய மிகுத்து உதராக்கினி துவள முயங்கி விடாய்த்து அரிவையர் தோளில்
துவயலி நின் தன வியாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு நெஞ்சில் இராப்பகல் மறவேனே
சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி
சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம்தனில் நாட்டிய மயில் ஏறி
அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ
அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே

மேல்

#930
குருவும் அடியவர் அடியவர் அடிமையும் அருண மணி அணி கண பண விதகர
குடில செடிலினு நிகர் என வழிபடு குணசீலர்
குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி விலைமாதர்
மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும்
மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே
வயலி நகரியில் அருள்பெற மயில் மிசை உதவு பரிமள மது கர வெகு வித
வனச மலர் அடி கனவிலு நனவிலு மறவேனே
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட வரைதனில்
உரலினொடு தவழ் விரகு உள இளமையும் மிக மாரி
உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் நிலை கெட
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒரு நூறு
நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே
நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய
நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே

மேல்

#931
வண்டு போல் சாரத்து அருள் தேடி மந்தி போல் கால பிணி சாடி
செண்டு போல் பாசத்துடன் ஆடி சிந்தை மாய்த்தே சித்து அருள்வாயே
தொண்டரால் காணப்பெறுவோனே துங்க வேற்கானத்து உறைவோனே
மிண்டரால் காணக்கிடையானே வெஞ்ச மா கூடல் பெருமாளே

மேல்

#932
இருவினை பிறவிக்கடல் மூழ்கி இடர்கள் பட்டு அலைய புகுதாதே
திரு அருள் கருணை ப்ரபையாலே திரம் என கதியை பெறுவேனோ
அரி அயற்கு அறிதற்கு அரியானே அடியவர்க்கு எளியற்கு அற்புத நேயா
குரு என சிவனுக்கு அருள் போதா கொடுமுடி குமர பெருமாளே

மேல்

#933
காந்தள் கர வளை சேந்துற்றிட மத காண்டத்து அரிவையருடன் ஊசி
காந்தத்து உறவு என வீழ்ந்து அப்படி குறி காண்டற்கு அநுபவ விதம் மேவி
சாந்தை தடவிய கூந்தல் கரு முகில் சாய்ந்திட்டு அயில் விழி குழை மீதே
தாண்டி பொர உடை தீண்டி தன கிரி தாங்கி தழுவுதல் ஒழியேனோ
மாந்தர்க்கு அமரர்கள் வேந்தற்கு அவரவர் வாஞ்சைப்படி அருள் வயலூரா
வான் கிட்டிய பெரு மூங்கில் புனம் மிசை மான் சிற்றடி தொழும் அதி காமி
பாந்தள் சடை முடி ஏந்தி குலவிய பாண்டிக்கொடுமுடி உடையாரும்
பாங்கில் பர குருவாம் கற்பனையொடு பாண் சொல் பரவிய பெருமாளே

மேல்

#934
பரிவுறு நார் அற்று அழல் மதி வீச சிலை பொரு காலுற்று அதனாலே
பனி படு சோலை குயில் அது கூவ குழல் தனி ஓசை தரலாலே
மருவு இயல் மாதுக்கு இரு கயல் சோர தனி மிக வாடி தளராதே
மனமுற வாழ திரு மணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே
கிரிதனில் வேல் விட்டு இரு தொளை ஆக தொடு குமரா முத்தமிழோனே
கிளர் ஒளி நாதர்க்கு ஒரு மகனாகி திரு வளர் சேலத்து அமர்வோனே
பொரு கிரி சூர கிளை அது மாள தனி மயில் ஏறி திரிவோனே
புகர் முக வேழ கணபதியாருக்கு இளைய விநோத பெருமாளே

மேல்

#935
சங்குவார் முடி பொன் கழல் பொங்கு சாமரை கத்திகை தண்டு மா கரி பெற்றவன் வெகு கோடி
சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர் கவி சண்டமாருதம் மற்றுள கவி ராஜ
பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த ப்ரபந்த போதம் உரைத்திடு புலவோன் யான்
பண்டை மூ எழுவர்க்கு எதிர் கண்ட நீயும் என சில பஞ்சபாதகரை புகழ் செயலாமோ
வெம் கை யானை வனத்திடை துங்க மா முதலைக்கு வெருண்டு மூலமே என கருடனில் ஏறி
விண் பராவ அடுக்கிய மண் பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின் வீர கண ப்ரய குமரா பொன்
கொங்கு உலாவு குறக்கொடி கொங்கையே தழுவி செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே

மேல்

#936
கலக சம்ப்ரமத்தாலே விலோசன மலர் சிவந்திட பூண் ஆரம் ஆனவை
கழல வண்டு என சாரீரம் வாய்விட அபிராம
கன தனங்களில் கோமாளம் ஆகியே பல நகம் பட சீரோடு பேதக
கரணமும் செய்து உள் பால் ஊறு தேன் இதழ் அமுதூறல்
செலுவி மென் பணை தோளோடு தோள் பொர நிலை குலைந்து இளைத்து ஏர் ஆகும் ஆருயிர்
செருகும் உந்தியில் போய் வீழும் மாலுடன் அநுராகம்
தெரி குமண்டை இட்டு ஆராத சேர்வையில் உருகி மங்கையர்க்கு ஆளாகி ஏவல் செய்திடினு
நின் கழல் சீர் பாத நான் இனி மறவேனே
உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிட சேர் ஆயம் ஆம் அவருடன்
மடிந்திட கோபாலர் சேரியில் மகவாயும்
உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக மந்திர காபாலியாகிய
உரக கங்கண பூதேசர் பாலக வயலூரா
விலை தரும் கொலை போர் வேடர் கோ என இனையும் அம் குற பாவாய் வியாகுலம்
விடுவிடு என்று கை கூர் வேலை ஏவிய இளையோனே
விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கய பூ ஓடை மேவிய
விஜயமங்கல தேவாதி தேவர்கள் பெருமாளே

மேல்

#937
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற தண் குவளை உந்து குழலாலும்
தண் தரள தங்கம் அங்கம் அணிகின்ற சண்ட வித கும்ப கிரியாலும்
நஞ்ச வினை ஒன்றி தஞ்சம் என வந்து நம்பி விட நங்கையுடன் ஆசை
நண்புறு எனை இன்று நன்று இல் வினை கொன்று நன்று மயில் துன்றி வரவேணும்
கஞ்ச மலர் கொன்றை தும்பை மகிழ் விஞ்சி கந்தி கமழ்கின்ற கழலோனே
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள் கண்டு பொருகின்ற கதிர் வேலா
செம் சொல் புனைகின்ற எங்கள் குற மங்கை திண் குயம் அணைந்த திரு மார்பா
செண்பகம் இலங்கு மின் பொழில் சிறந்த சிங்கையில் அமர்ந்த பெருமாளே

மேல்

#938
சந்திதொறும் நாணம் இன்றி அகம் வாடி உந்தி பொருளாக அலைவேனோ
சங்கை பெற நாளும் அங்கம் உள மாதர்தங்கள் வசமாகி அலையாமல்
சுந்தரமதாக எந்தன் வினை ஏக சிந்தை களிகூர அருள்வாயே
தொங்கு சடை மீது திங்கள் அணி நாதர் மங்கை ரண காளி தலை சாய
தொந்தி திமிதோதி தந்த திமிதாதி என்று நடம் ஆடும் அவர் பாலா
துங்கம் உள வேடர் தங்கள் குல மாதை மங்களம் அதாக அணைவோனே
கந்த முருகேச மிண்டு அசுரர் மாள அந்த முனை வேல் கொடு எறிவோனே
கம்பர் கயிலாசர் மைந்த வடி வேல சிங்கை நகர் மேவு பெருமாளே

மேல்

#939
இரு குழை இடறி காது மோதுவ பரிமள நளினத்தோடு சீறுவ
இணை அறு வினையை தாவி மீளுவ அதி சூர
எம படர் படை கெட்டு ஓட நாடுவ அமுதுடன் விடம் ஒத்து ஆளை ஈருவ
ரதி பதி கலை தப்பாது சூழுவ முநிவோரும்
உருகிட விரகில் பார்வை மேவுவ பொருள் அது திருடற்கு ஆசை கூறுவ
யுக முடிவு இது என பூசல் ஆடுவ வடி வேல் போல்
உயிர் வதை நயன காதல் மாதர்கள் மயல் தரு கமரில் போய் விழா வகை
உனது அடி நிழலில் சேர வாழ்வதும் ஒரு நாளே
முருகு அவிழ் தொடையை சூடி நாடிய மரகத கிரண பீலி மா மயில்
முது ரவி கிரண சோதி போல் வயலியில் வாழ்வே
முரண் முடி இரண சூலி மாலினி சரண் எனும் அவர் பற்றான சாதகி
முடுகிய கடின தாளி வாகினி மது பானம்
பருகினர் பரம போக மோகினி அரகர எனும் வித்தாரி யாமளி
பரி புர சரண காளி கூளிகள் நடமாடும்
பறை அறை சுடலை கோயில் நாயகி இறையொடும் இடம் இட்டு ஆடு காரணி
பயிரவி அருள் பட்டாலியூர் வரு பெருமாளே

மேல்

#940
கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல கற்பூர களபம் அணிவன மணி சேர
கட்டு ஆர வடமும் அடர்வன நிட்டூர கலகம் இடுவன கச்சோடு பொருது நிமிர்வன தன மாதர்
கொத்து ஊரு நறவம் என அதரத்து ஊறல் பருகி அவரொடு கொல் சேரி உலையில் மெழுகு என உருகாமே
கொக்கு ஆக நரைகள் வரு முனம் இ காய இளமை உடன் முயல் குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ
அ தூர புவன தரிசன வித்தார கனக நெடு மதி அச்சான வயலி நகரியில் உறை வேலா
அச்சோ என வச உவகையில் உள் சோர்தல் உடைய பரவையொடு அக்காகி விரக பரிபவம் அறவே பார்
பத்து ஊரர் பரவ விரைவு செல் மெய் தூதர் விரவ அருள்தரு பற்று ஆய பரம பவுருஷ குருநாதா
பச்சோலை குலவு பனை வளர் மை சோலை மயில்கள் நடமிடு பட்டாலி மருவும் அமரர்கள் பெருமாளே

மேல்

#941
சங்கை கத்தோடு சிலுகிடு சங்கி சட்கோல சமயிகள்
சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞான
சண்டைக்குள் கேள்வி அலம்அலம் அண்டற்கு பூசை இடுமவர்
சம்பத்து கேள்வி அலம்அலம் இமவானின்
மங்கைக்கு பாகன் இருடிகள் எங்கட்கு சாமி என அடி
வந்திக்க பேசி அருளிய சிவ நூலின்
மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்து கேள்வி அலம்அலம்
வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே
வெங்கை சுக்ரீபர் படையை இலங்கைக்கு போக விட வல
வென்றி சக்ரேசன் மிக மகிழ் மருகோனே
வெண்பட்டு பூண் நல் வனம் கமுகு எண்பட்டு பாளை விரி பொழில்
விஞ்சிட்டு சூழ வெயில் மறை வயலூரா
கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும் நறு மலர்
கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என வன மாதை
கும்பிட்டு காதல் குனகிய இன்ப சொல் பாடும் இளையவ
கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே

மேல்

#942
அவசியம் உன் வேண்டி பல காலும் அறிவு உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில்
தவ செபமும் தீண்டி கனிவாகி சரணம் அது பூண்டற்கு அருள்வாயே
சவதமொடும் தாண்டி தகர் ஊர்வாய் சடு சமயம் காண்டற்கு அரியோனே
சிவ குமர அன்பு ஈண்டில் பெயரோனே திரு முருகன் பூண்டி பெருமாளே

மேல்

#943
இறவாமல் பிறவாமல் எனை ஆள் சற்குருவாகி
பிறவாகி திரமான பெருவாழ்வை தருவாயே
குற மாதை புணர்வோனே குகனே சொல் குமரேசா
அற நாலை புகல்வோனே அவிநாசி பெருமாளே

மேல்

#944
பந்த பொன் பார பயோதரம் உந்தி சிற்று ஆடு அகை மேகலை
பண்புற்று தாளொடு மேவிய துகிலோடே
பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு மேவியே
பங்குக்கு காசு கொள் வேசியர் பனிநீர் தோய்
கொந்துச்சி பூ அணி கோதையர் சந்த செந்தாமரை வாயினர்
கும்பிட்டு பாணியர் வீணியர் அநுராகம்
கொண்டுற்று பாயலில் மூழ்கினும் மண்டி செச்சே என வானவர்
கொஞ்சுற்று தாழ் பத தாமரை மறவேனே
அந்த தொக்காதியும் ஆதியும் வந்திக்க தானவர் வாழ்வுறும்
அண்டத்துப்பால் உற மா மணி ஒளி வீசி
அங்கத்தை பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ் ஓத உவந்து
கிட்டார் கழு ஏறிட ஒரு கோடி
சந்த செ காள நிசாசரர் வெந்து உக்க தூளி படாம் எழ
சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற
தங்க செங்கோலை அசை சேவக கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில்
தண்டை சிங்கார அயில் வேல் விடு பெருமாளே

மேல்

#945
மன திரைந்து எழும் ஈளையும் மேலிட கறுத்த குஞ்சியுமே நரையாய் இட
மலர் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி
வருத்தமும் தர தாய் மனையாள் மக வெறுத்திட அம் கிளையோருடன் யாவரும்
வசைக்கு உறும் சொலினால் மிகவே தினம் நகையாட
எனை கடந்திடு பாசமுமே கொடு சினத்து வந்து எதிர் சூலமுமே கையில்
எடுத்து எறிந்து அழல் வாய்விடவே பயம் உறவே தான்
இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய
இணை பதம் தரவே மயில் மீதினில் வரவேணும்
கனத்த செந்தமிழால் நினையே தின நினைக்கவும் தருவாய் உனது ஆர் அருள்
கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக
கடல் சலம்தனிலே ஒளி சூரனை உடல் பகுந்து இரு கூறெனவே அது
கதித்து எழுந்து ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா
அனத்தனும் கமலாலயம் மீது உறை திரு கலந்திடும் மால் அடி நேடிய
அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா
அறத்தையும் தருவோர் கன பூசுரர் நினை தினம் தொழுவார் அமராய் புரி
அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே

மேல்

#946
பக்குவ ஆசார லட்சண சாகாதி பட்சணமாம் மோன சிவயோகர்
பத்தியில் ஆறாறு தத்துவ மேல் வீடு பற்று நிராதார நிலையாக
அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக அ படையே ஞான உபதேசம்
அக்கு அற வாய் பேசு சற்குருநாதா உன் அற்புத சீர் பாதம் மறவேனே
உக்கிர ஈறாறு மெய் புயனே நீல உற்பல வீரா ராசி மண நாற
ஒத்த நிலா வீசு நித்தல நீர் வாவி உற்பலம் ராசீவ வயலூரா
பொக்கம் இலா வீர விக்ரம மா மேனி பொன் ப்ரபை ஆகார அவிநாசி
பொய் கலி போம் ஆறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே

மேல்

#947
மதப்பட்ட விசால கபோலமும் முகப்பில் சன ஆடையும் ஓடையும்
மரு கற்புர லேப லலாடமும் மஞ்சை ஆரி
வயிற்றுக்கு இடு சீகர பாணியும் மிதல் செக்கர் விலோசன வேகமும்
மணி சத்த கடோர புரோசமும் ஒன்று கோல
விதப்பட்ட வெள் ஆனையில் ஏறியு நிறை கற்பக நீழலில் ஆறியும்
விஷ துர்க்கம் அன சூளிகை மாலிகை இந்த்ரலோகம்
விளக்க சுரர் தர வாழ் தரு பிரப்புத்வ குமார சொரூபக
வெளிப்பட்டு எனை ஆள் வயலூர் இருந்த வாழ்வே
இதப்பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம்
இயற்ற பதிதோறும் உலாவிய தொண்டர் தாள
இசைக்கு ஒக்க இராசத பாவனை உள பெற்றொடு பாடிட வேடையில்
இளைப்பு உக்கிட வார் மறையோன் என வந்து கானில்
திதப்பட்டு எதிரே பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு
திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் முன்
செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவை அழைப்பித்த புராண க்ருபாகர
திருப்புக்கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே

மேல்

#948
வனப்புற்று எழு கேதம் மேவும் கோகிலம் அழைக்க பொரு மாரன் ஏவ தாம் மலர்
மருத்து பயில் தேரில் ஏறி மா மாதி தொங்கலாக
மறுத்து கடல் பேரி மோதவே இசை பெருக்க படை கூட்டி மேல் எழா அணி
வகுத்து கொண்டு சேமமாக மாலையில் வந்து காதி
கனக்க பறை தாய அளாவ நீள் கன கருப்பு சிலை காமர் ஓவு இல் வாளிகள்
களித்து பொர வாசம் வீசு வார் குழல் மங்கைமார்கள்
கலைக்குள் படும் பேதம் ஆகி மாயும் அது உனக்கு பிரியமோ கிருபாகரா இது
கடக்கப்படு நாமம் ஆன ஞானம் அது என்று சேர்வேன்
புனத்தில் தினை காவலான காரிகை தன பொன் குவடு ஏயும் மோக சாதக
குனித்த பிறை சூடும் வேணி நாயகர் நல் குமாரா
பொறைக்கு புவி போலும் நீதி மாதவர் சிறக்க தொகு பாசி சோலை மாலைகள்
புயத்துற்று அணி பாவ சூரன் ஆருயிர் கொண்ட வேலா
சினத்து கடி வீசி மோதும் மா கடல் அடைத்து பிசிதாசனாதி மா முடி
தெறிக்க கணை ஏவும் வீர மாமனும் உந்தி மீதே
செனித்து சதுர்வேதம் ஓது நாமனும் மதித்து புகழ் சேவகா விழா மலி
திருப்புக்கொளியூரில் மேவும் தேவர்கள் தம்பிரானே

மேல்

#949
தீரா பிணி தீர சீவாத்தும ஞான
ஊர் ஆட்சியதான ஓர் வாக்கு அருள்வாயே
பாரோர்க்கு இறை சேயே பாலா கிரி ராசே
பேரால் பெரியோனே பேரூர் பெருமாளே

மேல்

#950
மை சரோருகம் நச்சு வாள் விழி மானாரோடே நான் யார் நீ யார் எனுமாறு
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே
நிச்சமாகவும் இச்சையானவை நேரே தீரா ஊரே பேரே பிறவே என்
நிட்கராதிகள் கண் முன் புகாது இனி நீயே தாயாய் நாயேன் மாயாது அருள்வாயே
மி சரோருக வச்ரபாணியன் வேதா வாழ்வே நாதாதீதா வயலூரா
வெற்பை ஊடுருவப்படாவரு வேலா சீலா பாலா கால் ஆயுதம் ஆளி
பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா சூரா ஆகா போகாது எனும் வீரா
பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர் பாரூர் ஆ சூழ் பேரூர் ஆள்வார் பெருமாளே

மேல்

#951
கலைஞர் எணும் கற்பு கலி யுக பந்தத்து கடன் அபயம் பட்டு கசடு ஆகும்
கரும சடங்கம் சட்சமயிகள் பங்கிட்டு கலகல எனும் கொட்புற்று உடன் மோதும்
அலகில் பெரும் தர்க்கம் பல கலையின் பற்று அற்று அரவியிடம் தப்பி குறியாத
அறிவை அறிந்து அ பற்று அதனினொடும் சற்று உற்று அருள் வசனம் கிட்டப்பெறுவேனோ
கொலைஞர் எனும் கொச்சை குறவர் இளம் பச்சை கொடி மருவும் செச்சை புய மார்பா
கொடிய நெடும் கொக்கு குறுகு அவுணன் பட்டு குரை கடல் செம்ப சக்கரவாள
சிலை பக எண் திக்கு திகிரிகளும் பத்து திசைகளினும் தத்த செகம் ஏழும்
திருகு சிகண்டி பொன் குதிரை விடும் செட்டி திறல கொடும்பைக்குள் பெருமாளே

மேல்

#952
ஈரமோடு சிரித்து வருத்தவும் நாத கீத நடிப்பில் உருக்கவும்
ஏவராயினும் எத்தி அழைக்கவும் மத ராஜன்
ஏ வின் மோது கண் இட்டு மருட்டவும் வீதி மீது தலை கடை நிற்கவும்
ஏறுமாறு மனத்தினில் நினைக்கவும் விலை கூறி
ஆர பார தனத்தை அசைக்கவும் மாலை ஓதி குலைத்து முடிக்கவும்
ஆடை சோர அவிழ்த்து அரை சுற்றவும் அதி மோக
ஆசை போல் மன இஷ்டம் உரைக்கவும் மேல் விழா வெகு துக்கம் விளைவிக்கவும்
ஆன தோதக வித்தைகள் கற்பவர் உறவாமோ
பார மேரு பருப்பதம் மத்து என நேரிதாக எடுத்து உடன் நட்டு உமைபாகர்
ஆர படம் பணி சுற்றிடு கயிறாக
பாதி வாலி பிடித்திட மற்றொரு பாதி தேவர் பிடித்திட லக்ஷிமி
பாரிசாத முதல் பல சித்திகள் வருமாறு
கீர வாரிதியை கடைவித்து அதிகாரியாய் அமுதத்தை அளித்த
க்ருபாளு ஆகிய பச்சு உரு அச்சுதன் மருகோனே
கேடு இலா அளகை பதியில் பல மாட கூட மலர் பொழில் சுற்றிய
கீரனூர் உறை சத்தி தரித்து அருள்பெருமாளே

மேல்

#953
தரங்க வார் குழல் தநு நுதல் விழி ஆலம் தகைந்த மா முலை துடி இடை மட மாதர்
பரந்த மால் இருள் படு குழி வசமாகி பயந்து காலனுக்கு உயிர் கொடு தவியாமல்
வரம் தராவிடில் பிறர் எவர் தருவாரே மகிழ்ந்து தோகையில் புவி வலம் வருவோனே
குரும்பை மா முலை குறமகள் மணவாளா குளந்தை மா நகர் தளி உறை பெருமாளே

மேல்

#954
இலை சுருள் கொடுத்து அணைத்தலத்து இருத்தி மட்டைகட்கு
இதத்த புட்குரல்கள் விட்டு அநுராகம்
எழுப்பி மை கயல் கணை கழுத்தை முத்தம் இட்டு அணைத்து
எடுத்து இதழ் கடித்து உரத்து இடை தாவி
அலைச்சல் உற்று இலச்சை அற்று அரை பை தொட்டு உழைத்துஉழைத்து
அலக்கண் உற்று உயிர் களைத்திடவே தான்
அற தவித்து இளைத்து உற தனத்தினில் புணர்ச்சிபட்டு
அயர்க்கும் இ பிறப்பு இனி தவிராதோ
கொலை செருக்கு அரக்கரை கலக்கும் மிக்க குக்குட
கொடி திரு கரத்த பொன் பதி பாடும்
குறித்த நல் திருப்புகழ் ப்ரபுத்துவ கவித்துவ
குருத்துவத்து எனை பணித்து அருள்வோனே
தலை சுமை சடை சிவற்கு இலக்கண இலக்கிய
தமிழ் த்ரயத்து அகத்தியற்கு அறிவு ஓதும்
சமர்த்தரில் சமர்த்த பச்சிம திசைக்கு உள உத்தம
தனிச்சயத்தினில் பிளை பெருமாளே

மேல்

#955
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து
ஒலித்திடும் செவி செவிடுற ஒள் கண் குருடாகி
உரத்த வெண் பலும் நழுவி மதம் கெட்டு இரைத்து கிண்கிண் என இருமல் எழுந்திட்டு
உளைப்புடன் தலை கிறுகிறு எனும் பித்தமும் மேல் கொண்டு
இரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து உளம் செயல் வசனம் வரம்பு அற்று
அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து அனைவோரும்
அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு
அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட் டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட் டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு இடக்கை துந்துமி முரசு முழங்க
செரு களந்தனில் நிருதர் தயங்க சில பேய்கள்
தரித்து மண்டையில் உதிரம் அருந்த திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க
தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா
தடம் சிகண்டியில் வயலியில் அன்பை படைத்த நெஞ்சினில் இயல் செறி கொங்கில்
தனிச்சயம்தனில் இனிது உறை கந்த பெருமாளே

மேல்

#956
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என மலை தொளை உருவ சென்ற வேல் என
அழகிய கனக தண்டை சூழ்வன புண்டரீக
அடி என முடியில் கொண்ட கூதளம் என வனசரியை கொண்ட மார்பு என
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ
கலகலகல என கண்டபேரொடு சிலுகிடு சமய பங்க வாதிகள்
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும்
கலைகளும் ஒழிய பஞ்ச பூதமும் ஒழியுற மொழியின் துஞ்சு உறாதன
கரணம் ஒழிய தந்த ஞானம் இருந்தவாறு என்
இலகு கடலை கற்கண்டு தேனொடும் இரதமுறு தினை பிண்டி பாகுடன்
இனிமையில் நுகருற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே
எழுது என மொழிய பண்டு பாரதம் வட கன சிகர செம்பொன் மேருவில்
எழுதிய பவள குன்று தாதையை அன்று சூழ
வலம் வரும் அளவில் சண்டமாருத விசையினும் விசையுற்று எண் திசை முக
மகிதலம் அடைய கண்டு மாசுணம் உண்டு உலாவு
மரகத கலப செம்புள் வாகன மிசை வரு முருக சிம்புளே என
மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு தம்பிரானே

மேல்

#957
ஆனை முகவற்கு நேர் இளைய பத்த ஆறுமுக வித்தக அமரேசா
ஆதி அரனுக்கும் வேத முதல்வற்கும் ஆரணம் உரைத்த குருநாதா
தானவர் குலத்தை வாள் கொடு துணித்த சால் சதுர் மிகுத்த திறல் வீரா
தாள் இணைகள் உற்று மேவிய பதத்தில் வாழ்வொடு சிறக்க அருள்வாயே
வான் எழு புவிக்கும் மால் அயனுக்கும் யாவர் ஒருவர்க்கும் அறியாத
மா மதுரை சொக்கர் மாது உமை களிக்க மா மயில் நடத்தும் முருகோனே
தேன் எழு புனத்தில் மான் விழி குறத்தி சேர மருவுற்ற திரள் தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை வேல் கொடு தணித்த பெருமாளே

மேல்

#958
பரவு நெடும் கதிர் உலகில் விரும்பிய பவனிவரும்படி அதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய இருளை விடிந்தது நிலவாலே
வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது வரிசை தரும் பதம் அது பாடி
வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்று உனி அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசல நெடும் கொடி அமை உமைதன் சுத குறமகள் இங்கித மணவாளா
கருத அரு திண் புய சரவண குங்கும களபம் அணிந்திடு மணி மார்பா
கனக மிகும் பதி மதுரை வளம் பதியதனில் வளர்ந்து அருள் பெருமாளே

மேல்

#959
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை ஒருத்தர் வாய் சுருள் ஒருவர் கை உதவுவர்
பணத்தை நோக்குவர் பிணம் அது தழுவுவர் அளவளப்பதனாலே
படுக்கை வீட்டினுள் அவுஷதம் உதவுவர் அணைப்பர் கார்த்திகை வருது என உறுபொருள்
பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே
அழைப்பர் ஆத்திகள் கருதவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர்
அலட்டினால் பிணை எருது என மயல் எனும் நரகினில் சுழல்வேனோ
அவத்தமாய் சில படுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி உன் அடியவருடன் எனை
அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து கதிதனை தருவாயே
தழைத்த சாத்திர மறைபொருள் அறிவு உள குருக்கள் போல் சிவ நெறிதனை அடைவொடு
தகப்பனார்க்கு ஒரு செவிதனில் உரைசெய்த முருக வித்தக வேளே
சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கதன் உடல் அது துணிசெய்து
சயத்த அயோத்தியில் வருபவன் அரி திரு மருமக பரிவோனே
செழித்த வேல்தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய பிறகு அமரர்கள் பதி
செலுத்தி ஈட்டிய சுர பதி மகள்தனை மணம் அது உற்றிடுவோனே
திறத்தினால் பல சமணரை எதிரெதிர் கழுக்கள் ஏற்றிய புதுமையை இனிதொடு
திருத்தமாய் புகழ் மதுரையில் உறைதரும் அறுமுக பெருமாளே

மேல்

#960
சீத வாசனை மலர் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பில் இள பொன் கிரி பளபள என தொங்கல் ஆரம்
சேரும் ஓவியம் என சடம் மினுக்கி வெகு ஆசை நேசமும் விளைத்து இளைத்து இடை உற்ற வரி
சேலை காலில் விழவிட்டு நடையிட்டு மயிலின் கலாப
சாதியாம் என வெருட்டி நடம் இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி
சாக நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே
தாவி மூழ்கி மதி கெட்டு அலம் உற்றவனை பாவமான பிறவிக்கடல் உழப்பவனை
தார் உலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்த நாளோ
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
வாசியாம் என நடத்து உவகையுற்று அரசன் அன்பு காண
மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ்
மாது வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி வர்க்கம் முறையிட்டு அலற
வேலை ஏவி அவுண குலம் இறக்க நகை கொண்ட சீலா
வேதம் மீண கமலக்கணர் மெய் பச்சை ரகுராமர் ஈண மயில் ஒக்க மதுரை பதியில்
மேவி வாழ் அமரர் முத்தர் சிவ பத்தர் பணி தம்பிரானே

மேல்

#961
புருவ செம் சிலை கொண்டு இரு கணை விழி எறிய கொங்கை இரண்டு எனும் மத கரி
பொர முத்தம் தரும் இங்கித நய விதம் அதனாலே
புகல சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவ செம் துவர் தந்த அதரமும் அருள்
புதுமை தம்பலமும் சில தர வரும் மனதாலே
பருகி தின்றிடல் அம் சுகம் என மனது உருகி குங்கும சந்தன அதி வியர்
படிய சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே
பலருக்கும் கடையன் என்று எனை இகழவும் மயலை தந்து அரு மங்கையர்தமை வெகு
பலமில் கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ
திருவை கொண்டு ஒரு தண்டக வனம் மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல்
சிதற கண்டக வெம் கரனொடு திரிசிரனொடு
திரமில் தங்கிய கும்பகன் ஒரு பது தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு
சிலையில் கொன்று முகுந்தன் நலம் மகிழ் மருகோனே
மருவை துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை
மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில் தங்கிய பங்கய முக
தமிழ் மதுரை சங்கலி மண்டப இமையவர் பெருமாளே

மேல்

#962
முகம் எலாம் நெய் பூசி தயங்கு நுதலின் மீதிலே பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட மாதர்
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி
செகம் எலாம் உலாவி கரந்து திருடனாகியே சற்று உழன்று திமிரனாகி ஓடி பறந்து திரியாமல்
தெளிவு ஞானம் ஓதி கரைந்து சிவ புராண நூலில் பயின்று செறியுமாறு தாளை பரிந்து தர வேணும்
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பொடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடி கலந்த அமல நாதனார் முன் பயந்த முருகோனே
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம்
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே

மேல்

#963
ஏல பனிநீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவாடிடும் ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும்
ஏம கிரி மீதினிலே கரு நீல கயம் ஏறிய நேர் என ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி
சோலை குயில் போல் மொழியாலுமெ தூசுற்றிடு நூல் இடையாலுமெ தோமில் கதலீ நிகர் ஆகிய தொடையாலும்
சோம ப்ரபை வீசிய மா முக சாலத்திலும் மா கடு வேல் விழி சூது அதினும் நான் அவமே தினம் உழல்வேனோ
ஆல பணி மீதினில் மாசறு ஆழிக்கிடையே துயில் மாதவன் ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடு மாயன்
ஆதி திரு நேமியன் வாமனன் நீல புயல் நேர் தரு மேனியன் ஆர துளவார் திரு மார்பினன் மருகோனே
கோல கய மா உரி போர்வையர் ஆல கடு ஆர் கள நாயகர் கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே

மேல்

#964
கலை மேவு ஞான பிரகாச கடல் ஆடி ஆசை கடல் ஏறி
பலம் ஆய வாதில் பிறழாதே பதி ஞான வாழ்வை தருவாயே
மலை மேவு மாய குற மாதின் மனம் மேவு வால குமரேசா
சிலை வேட சேவல் கொடியோனே திருவாணி கூடல் பெருமாளே

மேல்

#965
நீதம் துவம் ஆகி நேம துணையாகி
பூத தயவான போதை தருவாயே
நாதத்து ஒளியோனே ஞான கடலோனே
கோது அற்ற அமுதானே கூடல் பெருமாளே

மேல்

#966
மன நினை சுத்தம் சூதுகாரிகள் அமளி விளைக்கும் கூளி மூலிகள்
மத பல நித்தம் பாரி நாரிகள் அழகாக
வளை குழை முத்தம் பூணும் வீணிகள் விழலிகள் மெச்சுண்டு ஆடிப்பாடிகள்
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள் தனகிகள் இச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் பொருள் ஆசை
கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி
குறிதனில் உய்த்து உன் பாதம் ஏறிட அருள்தாராய்
தனதன தத்தம் தான தானன டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தம் தீத தோதக என பேரி
தவில் முர சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு ஆர சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா
தினை வன நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின் பாவை மான்மகள்
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில் ஓர் பொருள்
செல அருளிய தென் கூடல் மேவிய பெருமாளே

மேல்

#967
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருக கடவுள் முப்பதுமூ வர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகையுற்ற கணி விட்ட அரி பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் பத்தர் மனதுற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்கு என மத்தளம் இடக்கை துடி தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என ஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ சித்தி அருள் சத்தி அருள் பாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர் அல் கனக பத்மபுரி பெருமாளே

மேல்

#968
ஆடல் மதன் அம்பின் மங்கையர் ஆல விழியின் அன்பில் பிறங்கு ஒளி ஆரம் அது அலம்பு கொங்கையில் மயலாகி
ஆதி குருவின் பதங்களை நீதியுடன் அன்புடன் பணியாமல் மனம் நைந்து நொந்து உடல் அழியாதே
வேடர் என நின்ற ஐம்புலன் நாலு கரணங்களின் தொழில் வேறுபட நின்று உணர்ந்து அருள்பெறுமாறு என்
வேடை கெட வந்து சிந்தனை மாயை அற வென்று துன்றிய வேத முடிவின் பரம்பொருள் அருள்வாயே
தாடகை உரம் கடிந்து ஒளிர் மா முனி மகம் சிறந்து ஒரு தாழ்வு அற நடந்து திண் சிலை முறியா ஒண்
ஜாநகி தனம் கலந்த பின் ஊரில் மகுடம் கடந்து ஒரு தாயர் வசனம் சிறந்தவன் மருகோனே
சேடன் முடியும் கலங்கிட வாடை முழுதும் பரந்து எழ தேவர்கள் மகிழ்ந்து பொங்கிட நடமாடும்
சீர் மயில மஞ்சு துஞ்சிய சோலை வளர் செம்பொன் உந்திய ஸ்ரீபுருடமங்கை தங்கிய பெருமாளே

மேல்

#969
கார் குழல் குலைந்து அலைந்து வார் குழை இசைந்து அசைந்து காதல் உறு சிந்தை உந்து மட மானார்
காமுகர் அகம் கலங்க போர் மருவ முந்தி வந்த காழ் கடிய கும்ப தம்ப இரு கோடார்
பேர் மருவு மந்தி தந்தி வாரணம் அனங்கன் அங்கம் பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே
பேர் அறிவு குந்து நொந்து காதலில் அலைந்த சிந்தை பீடை அற வந்து நின்றன் அருள்தாராய்
ஏர் மருவு தண்டை கொண்ட தாள் அசைய வந்த கந்த ஏக மயில் அங்க துங்க வடி வேலா
ஏ மன் உமை மைந்த சந்தி சேவல் அணி கொண்டு அண்டர் ஈடேற இருந்த செந்தில் நகர் வாழ்வே
தேருகள் மிகுந்த சந்தி வீதிகள் அணிந்த கெந்த சீர் அலர் குளுந்து உயர்ந்த பொழிலூடே
சேரவே இலங்கு துங்க வாவிகள் இசைந்து இருந்த ஸ்ரீபுருடமங்கை தங்கு பெருமாளே

மேல்

#970
வேனின் மதன் ஐந்து பாணம் விட நொந்து வீதிதொறு நின்ற மடவார்பால்
வேளை என வந்து தாளினில் விழுந்து வேடை கெட நண்பு பல பேசி
தேனினும் மணந்த வாய் அமுதம் உண்டு சீதள தனங்களினில் மூழ்கி
தேடிய தனங்கள் பாழ்பட முயன்று சேர் கதி அது இன்றி உழல்வேனோ
ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த ஆரண முகுந்தன் மருகோனே
வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணி மார்பா
மா மறை முழங்கு ஸ்ரீபுருடமங்கை மா நகர் அமர்ந்த பெருமாளே

மேல்

#971
கரம் கமலம் மின் அதரம் பவளம் வளை களம் பகழி விழி மொழி பாகு
கரும்பு அமுது முலை குரும்பை குருகு பகரும் பிடியின் நடை எயின் மாதோடு
அரங்க நக கன தனம் குதலை இசை அலங்க நியமுற மயில் மீதே
அமர்ந்து பவ வினை களைந்து வரு கொடிய அந்தகன் அகல வருவாயே
தரங்கம் முதிய மகரம் பொருத திரை சலந்தி நதி குமரன் என வான
தலம் பரவ மறை புலம்ப வரு சிறு சதங்கை அடி தொழுபவர் ஆழி
இரங்கு தொலை திரு அரங்கர் மருக பனிரண்டு புய மலை கிழவோனே
இலங்கு தர தமிழ் விளங்க வரு திரு இலஞ்சி மருவிய பெருமாளே

மேல்

#972
கொந்தள ஓலை குலுங்கிட வாளி சங்குடன் ஆழி கழன்றிட மேக
கொண்டைகள் மாலை சரிந்திட வாச பனிநீர் சேர்
கொங்கைகள் மார்பு குழைந்திட வாளி கண் கயல் மேனி சிவந்திட கோவை
கொஞ்சிய வாய் இரசம் கொடு மோக கடலூடே
சந்திர ஆரம் அழிந்திட நூலில் பங்கு இடை ஆடை துவண்டிட நேசம்
தந்திட மாலு ததும்பியும் மூழ்குற்றிடு போது உன்
சந்திர மேனி முகங்களும் நீல சந்த்ரகி மேல் கொடு அமர்ந்திடு பாத
சந்திர வாகு சதங்கையும் ஓ சற்று அருள்வாயே
சுந்தரர் பாடல் உகந்து இரு தாளை கொண்டு நல் தூது நடந்தவர் ஆக
தொந்தமொடு ஆடி இருந்தவள் ஞான சிவகாமி
தொண்டர்கள் ஆகம் அமர்ந்தவள் நீல சங்கரி மோக சவுந்தரி கோல
சுந்தரி காளி பயந்து அருள் ஆனைக்கு இளையோனே
இந்திர வேதர் பயம் கெட சூரை சிந்திட வேல் கொடு எறிந்து நல் தோகைக்கு
இன்புற மேவி இருந்திடு வேத பொருளோனே
எண் புனம் மேவி இருந்தவள் மோக பெண் திருவாளை மணந்து இயல் ஆர் சொற்கு
இஞ்சி அளாவும் இலஞ்சி விசாக பெருமாளே

மேல்

#973
சுரும்பு அணி கொண்டல் நெடும் குழல் கண்டு துரந்து எறிகின்ற விழி வேலால்
சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு சுருண்டு மயங்கி மடவார் தோள்
விரும்பி வரம்பு கடந்து நடந்து மெலிந்து தளர்ந்து மடியாதே
விளங்கு கடம்பு விழைந்து அணி தண்டை விதம் கொள் சதங்கை அடி தாராய்
பொருந்தல் அமைந்து உசிதம் பெற நின்ற பொன் அம் கிரி ஒன்றை எறிவோனே
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த மணி மார்பா
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த பெருமாளே

மேல்

#974
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை அனங்கன் மலராலும்
வாடை எழுந்து வாடை செறிந்து வாடை எறிந்த அனலாலும்
கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன்
கூடிய கொங்கை நீடிய அன்புகூரவும் இன்று வரவேணும்
காலன் நடுங்க வேல் அது கொண்டு கானில் நடந்த முருகோனே
கான மடந்தை நாணம் ஒழிந்து காதல் இரங்கு குமரேசா
சோலை வளைந்து சாலி வளைந்து சூழும் இலஞ்சி மகிழ்வோனே
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே

மேல்

#975
ஏடு கொத்து ஆர் அலர் வார் குழல் ஆட பட்டு ஆடை நிலாவிய ஏதம் பொன் தோள் மிசை மூடிய கர மாதர்
ஏதத்தை பேசு பணாளிகள் வீசத்துக்கு ஆசை கொடாடிகள் ஏறிட்டு இட்டு ஏணியை வீழ் விடு முழு மாயர்
மாடு ஒக்க கூடிய காமுகர் மூழ்குற்று காயமொடே வரு வாயு புல் சூலை வியாதிகள் இவை மேலாய்
மாசுற்று பாசம் விடா சமனூர் புக்கு பாழ் நரகே விழ மாயத்தை சீவி உன் ஆதரவு அருள்வாயே
தாடுட்டுட் டூடுடு டீடிமி டூடுட்டுட் டூடுடு டாடமி தானத்த தானதனா என வெகு பேரி
தானொத்த பூத பசாசுகள் வாய்விட்டு சூரர்கள் சேனைகள் சாக பொன் தோகையில் ஏறிய சதிரோனே
கூடல் கச்சாலை சிராமலை காவை பொன் காழி வெளூர் திகழ் கோடை கச்சூர் கருவூரிலும் உயர்வான
கோதில் பத்தாரொடு மாதவ சீல சித்தாதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே

மேல்

#976
வேதத்தில் கேள்வி இலாதது போதத்தில் காணவொணாதது வீசத்தில் தூரம் இலாதது கதியாளர்
வீதித்து தேட அரிதானது ஆதித்தர் காயவொணாதது வேகத்து தீயில் வெகாதது சுடர் கானம்
வாதத்துக்கே அவியாதது காதத்தில் பூ இயலானது வாசத்தில் பேரொளி ஆனது மதம் ஊறும்
மாயத்தில் காய மதாசல தீதர்க்கு தூரம் அது ஆகிய வாழ்வை சற்காரம் அதா இனி அருள்வாயே
காதத்தில் காயம் அதாகும் மதீ தித்தி தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் மேவிடு கதி காணார்
காணப்பட்டே கொடு நோய் கொடு வாதைப்பட்டே மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே
கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே வன வேடுவர் கூடத்துக்கே குடியாய் வரும் முருகோனே
கோது இல் பத்தாரொடு மாதவ சீல சித்து ஆதியர் சூழ் தரு கோல குற்றாலம் உலாவிய பெருமாளே

மேல்

#977
முத்து ஓலைதனை கிழித்து அயிலை போர் இகலி சிவத்து முக தாமரையில் செருக்கிடும் விழி மானார்
முற்றாது இளகி பணைத்து அணி கச்சு ஆரம் அறுத்த நித்தில முத்தாரம் அழுத்து உகிர் குறி அதனாலே
வித்தார கவி திறத்தினர் பட்டு ஓலை நிகர்த்து இணைத்து எழு வெற்பான தனத்தினில் நித்தலும் உழல்வேனோ
மெய் தேவர் துதித்திட தரு பொற்பு ஆர் கமல பதத்தினை மெய்ப்பாக வழுத்திட க்ருபைபுரிவாயே
பத்தான முடி தலை குவடுற்று ஆட அரக்கருக்கு இறை பட்டாவி விட செயித்தவன் மருகோனே
பற்பாசன் மிகை சிரத்தை அறுத்து ஆதவனை சினத்து உறு பல் போகவும் உடைத்த தற்பரன் மகிழ்வோனே
கொத்து ஆர் கதலி பழ குலை வித்தார வருக்கையின் சுளை கொத்தோடு உதிர கதித்து எழு கயல் ஆரம்
கொட்டா சுழியில் கொழித்து எறி சிற்றூர்தனில் களித்திடு குற்றாலர் இடத்தில் உற்று அருள் பெருமாளே

மேல்

#978
வாள் பட சேனை பட ஓட்டி ஒட்டாரை இறுமாப்பு உடை தாள் அரசர் பெருவாழ்வும்
மாத்திரை போதில் இடு காட்டினில் போம் என இல்வாழ்க்கை விட்டு ஏறும் அடியவர் போல
கோள் பட பாத மலர் பார்த்து இளைப்பாற வினை கோத்த மெய் கோலமுடன் வெகு ரூப
கோப்பு உடைத்தாகி அலமாப்பினில் பாரி வரும் கூத்தினை பூரை இட அமையாதோ
தாள் பட கோப விஷ பாப்பினில் பாலன் மிசை சாய் தொடுப்பு அரவு நீள் கழல் தாவி
சாற்றும் அ கோர உரு கூற்று உதைத்தார் மவுலி தாழ்க வஜ்ராயுதனும் இமையோரும்
ஆள் பட சாம பரமேட்டியை காவலிடும் ஆய்க்குடி காவல உததி மீதே
ஆர்க்கும் அ தானவரை வேல் கரத்தால் வரையை ஆர்ப்பு எழ சாட வல பெருமாளே

மேல்

#979
கருப்பு சாபன் அனைய இளைஞர்கள் ப்ரமிக்க காதல் உலவு நெடுகிய
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் தன பாரம்
களிற்று கோடு கலசம் மலி நவ மணி செப்பு ஓடை வனச நறு மலர்
கனத்து பாளை முறிய வரு நிகர் இளநீர் போல்
பொருப்பை சாடும் வலியை உடையன அற சற்றான இடையை நலிவன
புது கச்சு ஆர வடமொடு அடர்வன என நாளும்
புகழ்ச்சி பாடல் அடிமை அவரவர் ப்ரயப்பட்டு ஆள உரை செய் இழி தொழில்
பொகட்டு எப்போது சரியை கிரியை செய்து உயிர் வாழ்வேன்
இருட்டு பாரில் மறலி தனது உடல் பதைக்க கால் கொடு உதை செய்து அவன் விழ
எயில் துப்பு ஓவி அமரர் உடல் அவர் தலை மாலை
எலுப்பு கோவை அணியும் அவர் மிக அதிர்த்து காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டு ஆடும் வயிர பயிரவர் நவநீத
திருட்டு பாணி இடப முதுகு இடை சமுக்கு இட்டு ஏறி அதிர வருபவர்
செலுத்து பூதம் அலகை இலகிய படையாளி
செடைக்குள் பூளை மதியம் இதழி வெள் எருக்கு சூடி குமர வயலியல்
திருப்புத்தூரில் மருவி உறைதரு பெருமாளே

மேல்

#980
வேலை தோற்க விழித்து காதினில் ஓலை காட்டி நகைத்து போத ஒரு
வீடு காட்டி உடுத்த போர்வையை நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்து போர் முலை யானை காட்டி மறைத்து தோதக
வீறு காட்டி எதிர்த்து போர் எதிர்வருவார் மேல்
காலம் ஏற்க உழப்பி கூறிய காசு கேட்டு அது கை பற்றா இடை
காதி ஓட்டி வருத்தப்பாடுடன் வருவார் போல்
காதல் போற்று மலர் பொன் பாயலின் மீது அணாப்பும் அசட்டு சூளைகள்
காம நோய் படு சித்த தீ வினை ஒழியேனோ
ஆல கோடு மிடற்று சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால் நடமாடி
தாத்திரி பட்சித்து ஆவென உமிழ் வாளி
ஆடல் கோத்த சிலை கை சேவகன் ஓடை பூத்தள கள் சானவி
ஆறு தேக்கிய கற்றை சேகர சடதாரி
சீலம் மா பதி மத்தம் பாரிட சேனை போற்றிடும் அப்பர்க்கு ஓதிய
சேதனார்த்த பிரசித்திக்கே வரு முருகோனே
சேல் அறா கயல் தத்த சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு ஆதர
தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே

மேல்

#981
ஊன் ஆரும் உள் பிணியும் ஆனா கவித்த உடல் ஊதாரி பட்டு ஒழிய உயிர் போனால்
ஊரார் குவித்து வர ஆவா என குறுகி ஓயா முழக்கம் எழ அழுது ஓய
நானாவித சிவிகை மேலே கிடத்தி அது நாறாது எடுத்து அடவி எரி ஊடே
நாணாமல் வைத்துவிட நீறு ஆம் என் இ பிறவி நாடாது எனக்கு உன் அருள்புரிவாயே
மால் நாகம் தத்தி முடி மீதே நிருத்தம் இடு மாயோனும் மட்டு ஒழுகு மலர் மீதே
வாழ்வாய் இருக்கும் ஒரு வேதாவும் எட்டிசையும் வானோரும் அட்ட குல கிரி யாவும்
ஆனா அரக்கருடன் வானார் பிழைக்க வரும் ஆலாலம் முற்ற அமுது அயில்வோன் முன்
ஆசார பத்தியுடன் ஞானாகமத்தை அருள் ஆடானை நித்தம் உறை பெருமாளே

மேல்

#982
கற்பக ஞான கடவுள் முன் அண்டத்தில் புத சேனைக்கு அதிபதி இன்ப
கள் கழை பாகு அப்பம் அமுது வெண் சர்க்கரை பால் தேன்
கட்டு இளநீர் முக்கனி பயறு அம் பொன் தொப்பையில் ஏறிட்டு அருளிய தந்தி
கட்டு இளையாய் பொன் பதம் அது இறைஞ்சி பரியாய
பொன் சிகியாய் கொத்து உருள் மணி தண்டை பொன் சரி நாத பரி புரம் என்று
பொற்புற ஓதி கசிவொடு சிந்தித்து இனிதே யான்
பொன் புகழ் பாடி சிவபதமும் பெற்று பொருள் ஞான பெரு வெளியும் பெற்று
புகல் ஆகத்து அமுதை உண்டிட்டு இடுவேனோ
தெற்பம் உள ஆக திரள் பரி உம்பல் குப்பைகள் ஆகத்து அசுரர் பிணம் திக்கு
எட்டையும் மூடி குருதிகள் மங்குல் செவை ஆகி
திக்கு கயம் ஆட சிலசில பம்பை தத்தன தான தடுடுடு என்க
செப்பு அறை தாளம் தகுதொகு என்க சில பேரி
உற்பனமாக தடி படு சம்பத்து அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று
உள் செல்வம் மேவி கன மலர் சிந்த தொடு வேலா
உள் பொருள் ஞான குறமகள் உம்பல் சித்திரை நீட பரி மயில் முன் பெற்று
உத்தரகோச தலம் உறை கந்த பெருமாளே

மேல்

#983
வால வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமோடு ஆடி மருளாடி விளையாடி விழல்
வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு பொருள் தேடி
வாசனை புழுகு ஏடு மலரோடு மனமாகி மகிழ் வாசனைகள் ஆதி இடல் ஆகி மயலாகி விலைமாதர்களை
மேவி அவர் ஆசைதனில் சுழல சில நாள் போய்
தோல் திரைகள் ஆகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவி மாறி பசு பாச பதி
சூழ் கதிகள் மாறி சுகம் மாறி தடியோடு திரியுறு நாளில்
சூலை சொறி ஈளை வலி வாதமொடு நீரிழிவு சோகை களமாலை சுரமோடு பிணி தூறிருமல்
சூழலுற மூல கசுமாலம் என நாறி உடல் எழுவேனோ
நாலுமுகன் ஆதி அரி ஓம் என ஆதாரம் உரையாத பிரமாவை விழ மோதி பொருள் ஓதுக என
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளம் இடு இளையோனே
நாறு இதழி வேணி சிவ ரூபக கலியாணி முதல் ஈண மகவானை மகிழ் தோழ வனம் மீது செறி
ஞான குற மாதை தினை காவில் புகழ் மயில் வீரா
ஓலம் இடு தாடகை சுவாகு வளர் ஏழு மரம் வாலியொடு நீலி பகனோடு ஒரு விராதன் எழும்
ஓத கடலோடு விறல் ராவண குழாம் அமரில் பொடியாக
ஓகை தழல் வாளிவிடு மூரி தநு நேமி வளை பாணி திரு மார்பன் அரி கேசன் மருகா எனவெ
ஓத மறை ராமெசுர மேவும் குமரா அமரர் பெருமாளே

மேல்

#984
வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே
மானார் வலை கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே
தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ என கலவி பல கோடி
தீரா மயக்கினோடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
மேல் நாடு பெற்று வளர் சூராதிபற்கு எதிர் ஊடே ஏகி நிற்கும் இரு கழலோனே
மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குற சிறுமி மணவாளா
ஞானாபரற்கு இனிய வேதாகம பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே
நாராயணற்கு மருகா வீறுபெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே

மேல்

#985
அமல கமல உரு சங்கம் தொனித்த மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல்
அளவும் அசலம் அது கண்டு அங்கு ஒருத்தரு உளவு அறியாதது
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு அகில புவன நதி அண்டங்களுக்கு முதல்
அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று முதல் நடுவான
கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி கதவம்
ககன சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம்
கருணையுடன் அறிவு விதம் கொண்டிட கவுரி குமர குமரகுரு என்றுஎன்று உரைப்ப முது
கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே
திமிலை பலமுருடு திந்திம் திமித்திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட
திகுட திகுடதிகு திந்திம் திகுர்த்திகுர்த திகுதீதோ
செகண செகணசெக செஞ்செம் செகக்கண என அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு
திமிர்த குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா
அரியன் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ்
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே

மேல்

#986
விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல்
மிகவும் இராப்பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார
முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி
மொழி குழறா தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலா பொருள் தந்திடாயோ
பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி
பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே
இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா
இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே

மேல்

#987
வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள்
வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே
மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை
மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே
கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள்
கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி
கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள்
கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ
அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம்
அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய்
அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன்
அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன்
உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்புற்று புணர் தோள் க்ருபை கடல்
உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே
உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர்
ஒடுக்கத்துச்செறிவாய் தலத்து உறை பெருமாளே

மேல்

#988
ஆகத்தே தப்பாமல் சேர் இக்கு ஆர்கை தேறல் கணையாலே
ஆலம் பாலை போல கோலத்து ஆய காயம் பிறையாலே
போகத்து ஏசற்றே தன் பாயல் பூவில் தீயில் கருகாதே
போத காதல் போக தாளை பூரித்து ஆர புணராயே
தோகைக்கே உற்று ஏறி தோயம் சூர் கெட்டு ஓட பொரும் வேலா
சோதி காலை போத கூவ தூவல் சேவல் கொடியோனே
பாகு ஒத்த சொல் பாகத்தாளை பாரித்து ஆர் நல் குமரேசா
பாரில் காமத்தூரில் சீல பால தேவ பெருமாளே

மேல்

#989
மின்னார் பயந்த மைந்தர் தன் நாடு இனம் குவிந்து வெவ்வேறு உழன்றுஉழன்று மொழி கூறி
விண் மேல் நமன் கரந்து மண் மேல் உடம்பு ஒருங்கு அ மெல் நாள் அறிந்து உயிர் போ முன்
பொன் ஆர் சதங்கை தண்டை முந்நூல் கடம்பு அணிந்து பொய்யார் மனங்கள் தங்கும் அது போல
பொல்லேன் இறைஞ்சி இரந்த சொல் நீ தெரிந்து அழங்கு புல் நாய் உளும் கவின்று புகுவாயே
பன்னாள் இறைஞ்சும் அன்பர் பொன் நாடு உற அங்கை அந்து பன்னாக அணைந்து சங்கம் உற வாயில்
பன்னூல் முழங்கல் என்று விண்ணோர் மயங்க நின்று பண் ஊதுகின்ற கொண்டல் மருகோனே
முன்னாய் மதன் கரும்பு வில் நேர் தடம் தெரிந்து முன் ஓர் பொருகை என்று முனை ஆட
மொய் வார் நிமிர்ந்த கொங்கை மெய் மாதர் வந்து இறைஞ்சு முள்வாய் விளங்க நின்ற பெருமாளே

மேல்

#990
ஆலையான மொழிக்கும் ஆளை ஊடு கிழிக்கும் ஆலகால விழிக்கும் உறு காதல்
ஆசை மாதர் அழைக்கும் ஓசையான தொனிக்கும் ஆர பார முலைக்கும் அழகான
ஓலை மேவு குழைக்கும் ஓடை யானை நடைக்கும் ஓரை சாயும் இடைக்கும் மயல் மேவி
ஊறு பாவு அ உறுப்பில் ஊறல் தேறும் கரிப்பில் ஊர ஓடு விருப்பில் உழல்வேனோ
வேலையாக வளை கை வேடர் பாவைதனக்கு மீறு காதல் அளிக்கும் முகமாய
மேவு வேடை அளித்து நீடு கோலம் அளித்து மீள வாய்மை தெளித்தும் இதண் மீது
மாலை ஓதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயில் ஊறல் குடித்து மயல் தீர
வாகு தோளில் அணைத்தும் மாகம் ஆர் பொழில் உற்ற வாகை மா நகர் பற்று பெருமாளே

மேல்

#991
திருகு செறிந்த குழலை வகிர்ந்து முடி மலர் கொண்டு ஒர் அழகாக
செய வரு துங்க முகமும் விளங்க முலைகள் குலுங்க வரு மோக
அரிவையர் தங்கள் வலையில் விழுந்து அறிவு மெலிந்து தளராதே
அமரர் மகிழ்ந்து தொழுது வணங்கு உன் அடி இணை அன்பொடு அருள்வாயே
வரையை முனிந்து விழவெ கடிந்து வடி வேல் எறிந்த திறலோனே
மதுரித செம் சொல் குற மட மங்கை நகில் அது பொங்க வரும் வேலா
விரை செறி கொன்றை அறுகு புனைந்த விடையரர் தந்த முருகோனே
விரை மிகு சந்து பொழில்கள் துலங்கு விசுவை விளங்கு பெருமாளே

மேல்

#992
போத நிர் குண போதா நமோ நம நாத நிஷ்கள நாதா நமோ நம பூரண கலை சாரா நமோ நம பஞ்ச பாண
பூபன் மைத்துன பூபா நமோ நம நீப புஷ்பக தாளா நமோ நம போக சொர்க்க பூபா நமோ நம சங்கம் ஏறும்
மா தமிழ் த்ரய சேயே நமோ நம வேதன த்ரய வேளே நமோ நம வாழ் ஜக த்ரய வாழ்வே நமோ நம என்று பாத
வாரிஜத்தில் விழாதே மகோததி ஏழ் பிறப்பினில் மூழ்கா மனோபவ மாயையில் சுழியூடே விடாது கலங்கலாமோ
கீத நிர்த்த வெதாளாடவீ நடநாத புத்திர பாகீரதீ கிருபா சமுத்திர ஜீமூத வாகனர் தந்தி பாகா
கேகய பிரதாபா முலாதிப மாலிகை குமரேசா விசாக க்ருபாலு வித்ரும ஆகாரா ஷடானன புண்டரீகா
வேத வித்தக வேதா விநோத கிராத லக்ஷ்மி கிரீடா மகாசல வீர விக்ரம பாரா அவதான அகண்ட சூர
வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீரா அபிராம விநாயக ப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே

மேல்

#993
ஓது முத்தமிழ் தேரா வ்ராதவனை வேதனைப்படு காமா விகாரனை
ஊனமுற்று உழல் ஆபாச ஈனனை அந்தர்யாமி
யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை
ஊதிய தவம் நாடாத கேடனை அன்றில் ஆதி
பாதக கொலையே சூழ் கபாடனை நீதி சற்றும் இலா கீத நாடனை
பாவியார்க்குள் எலாம் மா துரோகனை மண்ணின் மீதில்
பாடுபட்டு அலை மா கோப லோபனை வீடுபட்டு அழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ
ஆதி சற்குண சீலா நமோ நம ஆடகம் திரிசூலா நமோ நம
ஆதரித்து அருள் பாலா நமோ நம உந்தி ஆமை
ஆனவர்க்கு இனியானே நமோ நம ஞான முத்தமிழ் தேனே நமோ நம
ஆரணற்கு அரியோனே நமோ நம மன்றுள் ஆடும்
தோதி தித்தமி தீதா நமோ நம வேத சித்திர ரூபா நமோ நம
சோபம் அற்றவர் சாமீ நமோ நம தன்ம ராச
தூதனை துகை பாதா நமோ நம நாத சற்குருநாதா நமோ நம
ஜோதியில் ஜக ஜோதீ மஹா தெவர் தம்பிரானே

மேல்

#994
வேத வித்தகா சாமீ நமோ நம வேல் மிகுத்த மா சூரா நமோ நம
வீம சக்ர யூகாளா நமோ நம விந்து நாத
வீர பத்ம சீர் பாதா நமோ நம நீல மிக்க கூதாளா நமோ நம
மேகம் ஒத்த மாயூரா நமோ நம விண்டிடாத
போத மொத்த பேர் போதா நமோ நம பூதம் மற்றுமே ஆனாய் நமோ நம
பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம துங்க மேவும்
பூதரத்து எலாம் வாழ்வாய் நமோ நம ஆறு இரட்டி நீள் தோளா நமோ நம
பூஷணத்து மா மார்பா நமோ நம புண்டரீக
மீது இருக்கு நா மாதோடு சேய் இதழ் மீது இருக்கும் ஏர் ஆர் மா புலோமசை
வீர மிக்க ஏழ் பேர் மாதர் நீடு இனம் நின்று நாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்க மா வீணா கரே மக
மேரு உற்று வாழ் சீரே சிவாதரெ அங்கராகீ
ஆதி சத்தி சாமா தேவி பார்வதி நீலி துத்தி ஆர் நீள் நாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி என்று தாழும்
ஆர்யை பெற்ற சீராளா நமோ நம சூரை அட்டு நீள் பேரா நமோ நம
ஆரணத்தினார் வாழ்வே நமோ நம தம்பிரானே

மேல்

#995
ஆவி காப்பது மேல் பதம் ஆதலால் புருடார்த்தம் இதாம் எனா பரமார்த்தம் அது உணராதே
ஆனை மேல் பரி மேல் சேனை போற்றிட வீட்டொடு அநேக நாட்டொடு காட்டொடு தடுமாறி
பூவைமார்க்கு உருகா புதிதான கூத்தொடு பாட்டொடு பூவின் நாற்றம் அறா தன கிரி தோயும்
போக போக்ய கலாத்தொடு வாழ் பராக்கொடு இராப்பகல் போது போக்கி என் ஆக்கையை விடலாமோ
தேவி பார்ப்பதி சேர் பர பாவனார்க்கு ஒரு சாக்ர அதீத தீக்ஷை பரீக்ஷைகள் அற ஓதும்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷணம் மோக்ஷ தியாக ரா திகழ் கார்த்திகை பெறு வாழ்வே
மேவினார்க்கு அருள் தேக்க துவாதச அக்ஷ ஷடாக்ஷர மேரு வீழ்த்த பராக்ரம வடி வேலா
வீர ராக்கதர் ஆர்ப்பு எழ வேத தாக்ஷிகள் நா கெட வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே

மேல்

#996
ஏகமாய் பலவாய் சிவபோகமாய் தெளிவாய் சிவம் ஈதே எனா குரு வார்த்தையை உணராதே
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானே எனா பரி தேர் கரி ஏறும் மாப்பு இறுமாப்புடன் அரசாகி
தோகைமார்க்கு ஒருகால் தொலையாத வேட்கையினால் கெடு சோர்வினால் கொடிது ஆக்கையை இழவா முன்
சோதி காட்ட வர அச்சுதநார்க்கு அருள் போற்றிய தூரிதா பரமார்த்திகம் அது அருள்வாயே
நாக மேல் துயில்வார்க்கு அயனான பேர்க்கு அரியார்க்கு ஒரு ஞான வார்த்தையினால் குரு பரன் ஆய
நாத நாட்டமுறா பலகாலும் வேட்கையினால் புகல் நாவலோர்க்கு அருளால் பதம் அருள் வாழ்வே
வேக மேல் கொள் அரா புடை தோகை மேல் கொடு வேல் கொடு வீர மா குலையா குல வரை சாய
மேலை நாட்டவர் பூ கொடு வேல போற்றி எனா தொழ வேலை கூப்பிட வீக்கிய பெருமாளே

மேல்

#997
தோடும் மென் குழையூடே போரிடு வாள் நெடும் கயல் போலே ஆருயிர்
சூறை கொண்டிடு வேல் போலே தொடர் விழி மானார்
சூதகம்தனிலே மாலாய் அவர் ஓதும் அன்று அறியாதே ஊழ்வினை
சூழும் வெம் துயராலே தான் உயிர் சுழலாதே
ஆடு வெம் பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல் வீழ் தோகையில்
ஆரும் வண் குமரேசா ஆறு இரு புய வேளே
ஆரு நின்று அருளாலே தாள் தொழு ஆண்மை தந்து அருள் வாழ்வே தாழ்வு அற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற அருள்வாயே
ஓடு வெம் கதிரோடே சோமனும் ஊறி அண்டமும் லோகா லோகமும்
ஊரும் அந்தரம் நானா தேவரும் அடி பேண
ஊழிடு அம்புயன் வேலாவாலயம் ஊடு தங்கிய மாலார் ஆதரவு
ஓத வெண் திரை சூர் மார்பு ஊடுற விடும் வேலா
வேடு கொண்டுள வேடா வேடைய வேழ வெம் புலி போலே வேடர்கள்
மேவு திண் புனம் மீதே மாதோடு மிக மாலாய்
மேகம் மென் குழலாய் நீ கேள் இனி வேறு தஞ்சமும் நீயேயாம் என
வேளை கொண்ட பிரானே வானவர் பெருமாளே

மேல்

#998
நாலிரண்டு இதழாலே கோலிய ஞால் அம் முண்டகம் மேலே தான் இள
ஞாயிறு என்று உறு கோலா கலனும் அதின் மேலே
ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு
நாடி நின்ற ப்ரபாவாகாரனு நடுவாக
மேல் இருந்த கிரீடா பீடமு நூல் அறிந்த மணி மா மாடமும்
மே தகு ப்ரபை கோடா கோடியும் இடமாக
வீசி நின்று உள தூபா தீப விசால மண்டபம் மீதே ஏறிய
வீர பண்டித வீராசாரிய வினை தீராய்
ஆல கந்தரி மோடா மோடி குமாரி பிங்கலை நானா தேசி அமோகி
மங்கலை லோகாலோகி எவ்வுயிர் பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி ஆதி அம்பிகை ஞாதா ஆனவர்
ஆட மன்றினில் ஆடா நாடிய அபிராமி
கால சங்கரி சீலா சீலி த்ரிசூலி மந்த்ர சபாஷா பாஷிணி
காள கண்டி கபாலி மாலினி கலியாணி
காம தந்திர லீலா லோகினி வாம தந்திர நூல் ஆய்வாள் சிவகாம
சுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

மேல்

#999
போதில் இருந்து விடா சதுர் வேதம் மொழிந்தவனால் புள்ளின் ஆகம் உகந்தவனால் தெரி அரிதான
போது உயர் செம் தழலா பெரு வானம் நிறைந்த விடா புகழாளன் அரும் சிவ கீர்த்தியன் நெறி காண
ஆதரவு இன்ப அருள் மா குருநாதன் எனும்படி போற்றிட ஆன பதங்களை நா கருதிடவே என்
ஆசை எண்ணுபடி மேல் கவி பாடும் இதம் பல பார்த்து அடியேனும் அறிந்து உனை ஏத்துவது ஒரு நாளே
காது அடரும்படி போய் பல பூசலிடும் கயலால் கனி வாய் இதழின் சுவையால் பயில் குற மாதின்
கார் அடரும் குழலால் கிரியான தனங்களினால் கலை மேவும் மருங்கு அதனால் செறி குழை ஓலை
சாதனம் என்று உரையா பரிதாபம் எனும்படி வாய் தடுமாறி மனம் தளரா தனி திரிவோனே
சாகரம் அன்று எரியா கொடு சூரர் உகும்படியா திணி வேலை உரம் பெற ஓட்டிய பெருமாளே

மேல்

#1000
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி லோசன அம்புகளால் செயல் தடுமாறி
மேனி தளர்ந்து உருகா பரிதாபமுடன் புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர்தம் களை ஆர் பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில்
நாறு கடம்பு அணியா பரிவோடு புரந்த பராக்ரம நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே
ஆடகம் மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி ஒரு ஆயிரம் வெம் பகுவாய் பணி கயிறாக
ஆழி கடைந்து அமுது ஆக்கி அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் அன்று எயில் தீப்பட அதி பார
வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் எம் பரம் மாற்றிய வாழ்வு என வஞ்சக ராக்ஷதர் குலம் மாள
வாசவன் சிறை மீட்டி அவன் ஊரும் அடங்கலும் மீட்டவன் வான் உலகு குடி ஏற்றிய பெருமாளே

மேல்


 அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் (1001 - 1334) 


#1001
இலகி இரு குழை கிழி கயல் விழியினும் இசையின் இசை தரு மொழியினும் மரு அமர்
இருள் செய் குழலினும் இடையினும் நடையினும் அநுராக
இனிமை தரும் ஒரு இதழினும் நகையினும் இளமை ம்ருகமத தன குவடு அழகினும்
இயலும் மயல் கொடு துணிவது பணிவது தணியாதே
குலவி விரகு எனு அளறிடை முழுகிய கொடிய நடலையன் நடமிட வரு பிணி
குறுகியிட எமன் இறுதியில் உயிரது கொடுபோ நாள்
குனகி அழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முது பிணம் எடும் என ஒரு பறை
குணலை இட அடு சுடலையில் நடவுதல் இனிதோ தான்
மலையில் நிகர் இலது ஒரு மலைதனை உடல் மறுகி அலமர அற உரம் முடுகிய
வலிய பெல மிக உடையவன் உடையவும் அதிகாய
மவுலி ஒரு பதும் இருபதும் கரமுடன் மடிய ஒரு சரம் விடுபவன் மத கரி
மடுவில் முறையிட உதவிய க்ருபை முகில் மதியாதே
அலகை உயிர் முலை அமுது செய்து அருளிய அதுலன் இரு பதம் அதுதனில் எழு புவி
அடைய அளவிட நெடுகிய அரி திரு மருகோனே
அவுணர் உடலம் அது அலமர அலை கடல் அறவும் மறுகிட வட குவடு அன கிரி
அடைய இடி பொடிபட அயில் விட வல பெருமாளே

மேல்

#1002
கடலை பயிறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை கனல் கதலி இன் அமுதொடு
கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாக
கடல் கொள் புவி முதல் துளிர்வொடு வளமுற அமுது துதி கையில் மனம் அது களி பெற
கருணையுடன் அளி திருவருள் மகிழ்வுற நெடிதான
குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும் ஒரு முருகு சண்முக என
குவிய இரு கரம் மலர் விழி புனலொடு பணியாமல்
கொடிய நெடியன அதி வினை துயர் கொடு வறுமை சிறுமையில் அலைவுடன் அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும் உழல் வகை ஒழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு மறலி வெருவுற ரவி மதி பயமுற
நிலமும் நெறுநெறுநெறு என வரும் ஒரு கொடிதான
நிசிரர் கொடுமுடி சடசடசட என பகர கிரி முடி கிடுகிடுகிடு என
நிகரில் அயில் வெயில் எழு பசுமைய நிறம் உளதான
நடனம் இடும் பரி துரகதம் மயில் அது முடுகி கடுமையில் உலகதை வலம் வரும்
நளின பத வர நதி குமுகுமு என முநிவோரும்
நறிய மலர் கொடு ஹரஹரஹர என அமரர் சிறை கெட நறை கமழ் மலர் மிசை
நணியே சரவணம் அதில் வளர் அழகிய பெருமாளே

மேல்

#1003
கமல குமிளித முலை மிசை துகில் இடு விகட கெருவிகள் அசடிகள் கபடிகள்
கலகம் இடு விழி வலை கொடு தழுவிகள் இளைஞோர்கள்
கனலில் இடு மெழுகு என நகை அருளிகள் அநெக விதமொடு தனி என நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள்தமை நாடி
அமுத மொழி கொடு தவ நிலை அருளிய பெரிய குண தரர் உரை செய்த மொழி வகை
அடைவு நடை படி பயிலவும் முயலவும் அறியாத
அசடன் அறிவிலி இழிகுலன் இவன் என இனமும் மனிதருள் அனைவரும் உரைசெய
அடியன் இது பட அரிது இனி ஒரு பொருள் அருள்வாயே
திமித திமிதிமி டமடம டம என சிகர கரதல டமருகம் அடிபட
தெனன தெனதென தென என நடைபட முநிவோர்கள்
சிவமில் உருகியும் அரகர என அதி பரத பரிபுர மலர் அடி தொழ அநுதினமும்
நடம் இடுபவர் இடம் உறைபவள் தரு சேயே
குமர சரவணபவ திறல் உதவிய தரும நிகரொடு புலமையும் அழகிய
குழக குருபரன் என ஒரு மயில் மிசை வருவோனே
குறவர் இடு தினை வனம் மிசை இதணிடை மலையும் அரையொடு பசலை கொள் வளர் முலை
குலவு குறமகள் அழகொடு தழுவிய பெருமாளே

மேல்

#1004
தசையும் உதிரமும் நிணமொடு செருமிய கரும கிருமிகள் ஒழுகிய பழகிய
சடல உடல் கடை சுடலையில் இடு சிறு குடில் பேணும்
சகல கருமிகள் சருவிய சமயிகள் சரியை கிரியைகள் தவம் எனும் அவர் சிலர்
சவலை அறிவினர் நெறியினை விட இனி அடியேனுக்கு
இசைய இது பொருள் என அறிவு உற ஒரு வசனம் உற இருவினை அற மலம் அற
இரவு பகல் அற எனது அற நினது அற அநுபூதி
இனிமை தரும் ஒரு தனிமையை மறைகளின் இறுதி அறுதியில் இட அரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட மொழிவாயே
அசல குல பதி தரும் ஒரு திருமகள் அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறைதரும் இறையவள் அபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை அதல முதல் எழு தலம் இவை முறைமுறை
அடைய அருளிய பழையவள் அருளிய சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர ஒரு மொழி மவுனம் அருளிய மகிமையும் இமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் வடி வேலும்
மயிலும் இயல் அறி புலமையும் உபநிட மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவும் இளமையும் வளமையும் அழகிய பெருமாளே

மேல்

#1005
நெடிய வட குவடு இடியவும் எழு கிரி நெறுநெறு என நெரியவும் முது பணி பதி
நிபிட முடி கிழியவும் நிலம் அதிரவும் விளையாடும்
நிகரில் கலபியும் ரவி உமிழ் துவசமும் நினது கருணையும் உறைதரு பெருமையும்
நிறமும் இளமையும் வளமையும் இரு சரணமும் நீப
முடியும் அபிநவ வனசரர் கொடி இடை தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தன கிரி தழுவிய திரள் தோளும்
மொகுமொகு என மதுகரம் முரல் குரவு அணி முருகன் அறுமுகன் என வருவன பெயர்
முழுதும் இயல் கொடு பழுதற மொழிவதும் ஒரு நாளே
கொடிய படு கொலை நிசிசரர் உரமொடு குமுகும் என விசையுடன் இசை பெற மிகு
குருதி நதி வித சதியொடு குதி கொள விதி ஓட
குமுறு கடல் குடல் கிழிபட அடு மரம் மொளுமொளு என அடியொடு அலறி விழ உயர்
குருகு பெயரிய வரை தொளைபட விடு சுடர் வேலா
இடியும் முனை மலி குலிசமும் இலகிடு கவள தவள விகட தட கன கட
இபமும் இரணிய தரணியும் உடையது ஒர் தனி யானைக்கு
இறைவ குருபர சரவண வெகு முக ககன புனிதையும் வனிதையர் அறுவரும்
எனது மகவு என உமை தரும் இமையவர் பெருமாளே

மேல்

#1006
பகிர நினைவு ஒரு தினை அளவிலும் இலி கருணையிலி உனது அருணையொடு தணியல்
பழனிமலை குருமலை பணிமலை பல மலை பாடி
பரவும் மிடறிலி படிறு கொடு இடறு சொல் பழகி அழகிலி குலமிலி நலமிலி
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன்
திகிரி வரும் ஒரு செலவினில் எழுபது செலவு வரும் என பவுரி கொடு அலமரும்
திருகன் உருகுதல் அழுகுதல் தொழுகுதல் நினையாத
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ஒரு நாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன் மகுடம் ஒரு பதும் இருபது திரள் புய
வரையும் அற ஒரு கணை தெரி புயல் குருநிருப தூதன்
மடுவில் மத கரி முதல் என உதவிய வரதன் இரு திறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறை மொழி இகழ் இரணியன் ஆகம்
உகிரின் நுதி கொடு வகிரும் ஒர் அடல் அரி திகிரிதர மரகதகிரி எரி உமிழ்
உரக சுடிகையில் நட நவில் அரி திரு மருகோனே
உருகும் அடியவர் இருவினை இருள் பொரும் உதய தினகர இமகரன் வலம்வரும்
உலகம் முழுது ஒரு நொடியினில் வலம்வரு பெருமாளே

மேல்

#1007
முருகு செறு குழல் அவிழ் தர முகம் மதி முடிய வெயர்வுர முது திரை அமுது அன
மொழிகள் பதறிட வளை கலகல என அணை போக
முலையின் மிசை இடு வடம் முடி அற இடை முறியும் என இரு பரிபுரம் அலறிட
முகுள அலர் இள நிலவு எழ இலவு இதழ் பருகா நின்று
உருகி உளம் உடல் உடலொடு செருகிட உயிரும் எனது உயிர் என மிக உறவு செய்து
உதவும் மட மகளிர்களொடும் அமளியில் அநுராக
உததி அதனிடை விழுகினும் எழுகினும் உழலுகினும் உனது அடி இணை எனது உயிர்
உதவி என உனை நினைவதும் மொழிவதும் மறவேனே
எருவையொடு கொடி கெருடனும் வெளி சிறிது இடம் இலை என உலவிட அலகையின்
இனமும் நிணம் உண எழு குறள்களும் இயல் இசை பாட
இகலி முது களம் இனம் இசையொடு தனி இரண பயிரவி பதயுகம் மிகு நடமிடவும்
மிக எதிரெதிர் ஒரு தனு இரு காலும்
வரிசை அதனுடன் வளை தர ஒரு பது மகுடம் இருபது புயமுடன் மடி பட
வலியின் ஒரு கணை விடு கர முதல் அரி நெடு மாயன்
மருக குருபர சரவணம் அதில் வரு மகிப சுரபதி பதி பெற அவுணர்கள்
மடிய இயல் கொளும் மயில் மிசை வர வல பெருமாளே

மேல்

#1008
இலகு வேல் எனும் இருவினை விழிகளும் எழுதவொணாது எனும் இரு தன கிரிகளும்
இசையினால் வசை பொசி தரு மொழிகளும் எதிர்வே கொண்டு
எதிர் இலா அதி பலம் உடை இளைஞர் என் இனிய மா வினை இருள் எனும் வலை கொடு
இடைவிடா தெறு நடுவனும் என வளை மடவார்தம்
கலவி மால் கொடு கலைகளும் அறிவொடு கருதவொணாது என முனிவுற மருள் கொடு
கரையிலா விதி எனும் ஒரு கடல் இடை கவிழாதே
கருணை வானவர் தொழுது எழு மயில் உறை குமர கானவர் சிறுமியொடு உருகிய
கமல தாள் இணை கனவிலும் நினைவுற அருள்தாராய்
பல கையோடு ஒரு பது சிரம் அற எறி பகழியான் அரவு அணை மிசை துயில் தரு
பரமன் மால் படி அளவிடும் அரி திரு மருகோனே
பழுது இலா மனம் உடையவர் மலர் கொடு பரவ மால் விடை மிசை உறைபவரொடு
பரம ஞானமும் இது என உரை செய்த பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலை கடல்அதனில் நீள் குடல் நிண மலை பிண மலை
அசுரர் மார்பகம் அளறது பட விடும் அயில் வேலா
அரிய பாவலர் உரை செய அருள்புரி முருக ஆறிரு புய இயல் இசையுடன்
அழகும் ஆண்மையும் இலகிய சரவண பெருமாளே

மேல்

#1009
முருகு உலாவிய குழலினும் நிழலினும் அருவமாகிய இடையினு நடையினு
முளரி போலு நல் விழியினும் மொழியினும் மட மாதர்
முனிவிலா நகை வலையினு நிலையினு இறுக வார் இடு மலை எனும் முலையினு
முடிவிலாதது ஒர் கொடு விடம் அடு வித மயலாகி
நரகிலே விழும் அவலனை அசடனை வழிபடாத ஒர் திருடனை மருடனை
நலம் இலா அக கபடனை விகடனை வினையேனை
நடுவிலாதன படிறு கொள் இடறு சொல் அதனில் மூழ்கிய மறவனை இறவனை
நளினம் ஆர் பதம் அது பெற ஒரு வழி அருள்வாயே
வரி அராவினின் முடி மிசை நடம் இடு பரத மாயவன் எழு புவி அளவிடு
வரதன் மாதவன் இரணியன் உடல் இரு பிளவாக
வகிரும் மால் அரி திகிரியன் அலை எறி தமர வாரிதி முறை இட நிசிசரன்
மகுடம் ஆனவை ஒரு பதும் விழ ஒரு கணை ஏவும்
கரிய மேனியன் மருதொடு பொருதவன் இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள் வேய் இசை கொடு நிரை பரவிடும் அபிராமன்
கருணை நாரணன் நர பதி சுர பதி மருக கானகம் அதனிடை உறைதரு
கரிய வேடுவர் சிறுமியொடு உருகிய பெருமாளே

மேல்

#1010
அரிசனம் பரிச அலங்க்ருத அம்ருத கலசமும் மதன் உயர் அம் பொன் மா முடியதும்
என இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ஒரு கோடி
அடைபடு குட யுகங்களாம் என ம்ருகமத களபம் அணிந்த சீதள
அபி நவ கன தன மங்கைமாருடன் விளையாடி
இரவொடு பகல் ஒழிவின்றி மால் தரு அலை கடல் அளறு படிந்து வாய் அமுது
இனிது என அருள அருந்தி ஆர்வமொடு இதமாகி
இருவரும் மருவி அணைந்து பாழ்படும் அருவினை அறவும் மறந்து உன் நீள் தரும்
இணை மலர் அடிகள் நினைந்து வாழ்வதும் ஒரு நாளே
சுரர் குல பதி விதி விண்டு தோல் உரி உடை புனை இருடிகள் அண்டர் ஆனவர்
துதி செய எதிர் பொர வந்த தானவர் அடி மாள
தொலைவு அறும் அலகை இனங்கள் ஆனவை நடமிட நிண மலை துன்றவே அதில்
துவர் இது புளி இது தொய்ந்தது ஈது இது இது வீணால்
பருகுதல் அரியது உகந்தது ஈது இது உளது என குறளிகள் தின்று மேதகு
பசி கெட ஒரு தனி வென்ற சேவக மயில் வீரா
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு குறமகள் கொழுந படர்ந்து மேல் எழு
பரு வரை உருவ எறிந்த வேல் வல பெருமாளே

மேல்

#1011
உரைதரு பர சமயங்கள் ஓதுவது உரு என அரு என ஒன்று இலாதது ஒர்
ஒளி என வெளி என உம்பராம் என இம்பரா நின்று
உலகுகள் நிலைபெறு தம்பமாம் என உரைசெய அது பொருள் கண்டு மோனமொடு
உணர்வு உற உணர்வொடு இருந்த நாளும் அழிந்திடாதே
பரகதி பெறுவது ஒழிந்திட ஆர்வன பரிசன தெரிசன கந்த ஓசைகள்
பல நல விதம் உள துன்பம் ஆகி மயங்கிடாதே
பரிபுர பதம் உள வஞ்ச மாதர்கள் பலபல விதம் உள துன்ப சாகர
படுகுழி இடைவிழு பஞ்சபாதகன் என்று தீர்வேன்
அரகர சிவ சுத கந்தனே நினது அபயம்அபயம் என நின்று வானவர்
அலறிட ஒழிக இனி அஞ்சிடாது என அஞ்சல் கூறி
அடல் தரு நிருதர் அநந்த வாகினி யமபுரம் அடைய அடர்ந்து போர்புரி
அசுரன் அகலம் இடந்து போக வகிர்ந்த வேகம்
விரி கடல் துகள் எழ வென்ற வேலவ மரகத கலப சிகண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை அந்தம் ஓதும்
விரை தரு மலரில் இருந்த வேதனும் விட அரவு அமளி துயின்ற மாயனும்
விமலை கொள் சடையனும் பராவிய தம்பிரானே

மேல்

#1012
இம கிரி மத்தில் புயங்க வெம் பணி கயிறு அது சுற்றி தரங்க ஒள் கடல்
இமையவர் பற்றி கடைந்த அன்று எழு நஞ்சு போலே
இரு குழை தத்தி புரண்டு வந்த ஒரு குமிழையும் எற்றி கரும்பு எனும் சிலை
ரதி பதி வெற்றி சரங்கள் அஞ்சையும் விஞ்சி நீடு
சமரம் மிகுத்து பரந்த செங்கயல் விழியினில் மெத்த ததும்பி விஞ்சிய
தமனியம் வெற்புக்கு இசைந்த வம்பு அணி கொங்கை மீதே
தனி மனம் வைத்து தளர்ந்து வண்டு அமர் குழலியர் பொய்க்குள் கலங்கல் இன்றியெ
சத தளம் வைத்து சிவந்த நின் கழல் தந்திடாயோ
அமரர் துதிக்க புரந்தரன் தொழ எழுபது வர்க்க குரங்கு கொண்டு எறி
அலையை அடைத்து கடந்து சென்று எதிர் முந்து போரில்
அசுரர் முதல் கொற்றவன் பெரும் திறல் இருபது கொற்ற புயங்கன் சிந்திட
அழகிய கொத்து சிரங்கள் ஒன்பதும் ஒன்றும் மாள
கமல மலர் கை சரம் துரந்தவர் மருமக மட்டு உக்க கொன்றை அம் தொடை
கறை அற ஒப்பற்ற தும்பை அம்புலி கங்கை சூடும்
கடவுளர் பக்கத்து அணங்கு தந்தருள் குமர குற தத்தை பின் திரிந்து அவள்
கடின தனத்தில் கலந்து இலங்கிய தம்பிரானே

மேல்

#1013
முகமும் மினுக்கி பெரும் கரும் குழல் முகிலை அவிழ்த்து செருந்தி சண்பகம்
முடிய நிறைத்து ததும்பி வந்து அடி முன் பினாக
முலையை அசைத்து திருந்த முன் தரி கலையை நெகிழ்த்து புனைந்து வஞ்சக
முறுவல் விளைத்து துணிந்து தம் தெரு முன்றிலூடே
மகளிர் வரப்பில் சிறந்த பந்தியில் மதனனும் நிற்க கொளுந்து வெண் பிறை
வடவை எறிக்க திரண்டு பண்தனை வண்டு பாட
மலய நிலத்து பிறந்த தென்றலும் நிலை குலைய தொட்டு உடம்பு புண் செய
மயலை அளிக்க குழைந்து சிந்தை மயங்கலாமோ
பகலவன் மட்க புகுந்து கந்தர ககன முகட்டை பிளந்து மந்தர
பரு வரை ஒக்க சுழன்று பின்பு பறந்து போக
பணம் அணி பட்ச துரங்கமும் தனி முடுகி நடத்தி கிழிந்து விந்து எழு
பரவை அரற்ற ப்ரபஞ்ச நின்று பயந்து வாட
குகன் என முக்கண் சயம்புவும் ப்ரிய மிக அசுரர்க்கு குரம்பை வந்து அருகுற
அமர் குத்தி பொரும் கொடும் படை வென்ற வேளே
குழை சயை ஒப்பற்று இருந்த சங்கரி கவுரி எடுத்து பரிந்து கொங்கையில்
குண அமுது உய்க்க தெளிந்து கொண்டு அருள் பெருமாளே

மேல்

#1014
படிதனில் உறவு எனும் அனைவர்கள் பரிவொடு பக்கத்தில் பல கத்திட்டு துயர் கொண்டு பாவ
பணை மர விறகு இடை அழல் இடை உடலது பற்ற கொட்டுகள் தட்டி சுட்டு அலை ஒன்றி ஏக
கடி சமன் உயிர்தனை இரு விழி அனல் அது கக்க சிக்கென முட்டி கட்டி உடன்றுபோ முன்
கதி தரு முருகனும் என நினை நினைபவர் கற்பில் புக்கு அறிவு ஒக்க கற்பது தந்திடாயோ
வட கிரி தொளை பட அலை கடல் சுவறிட மற்று திக்கு எனும் எட்டு திக்கிலும் வென்றி வாய
வலியுடன் எதிர் பொரும் அசுரர்கள் பொடிபட மட்டித்திட்டு உயர் கொக்கை குத்தி மலைந்த வீரா
அடர் சடை மிசை மதி அலை ஜலம் அது புனை அத்தர்க்கு பொருள் கற்பித்து புகழ் கொண்ட வாழ்வே
அடிய உக முடியினும் வடிவுடன் எழும் மவுனத்தில் பற்றுறு நித்த சுத்தர்கள் தம்பிரனே

மேல்

#1015
விடம் என அயில் என அடு என நடு என மிளிர்வன சுழல் விழி
வித்தைக்கு பகர் ஒப்பு சற்று இலை என்று பேசும்
விரகு உடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப்பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும்
நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது
கட்டி சிக்கென ஒத்தி கைக்கொடு கொண்டு போயே
நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி
முத்திக்குள் படு நித்ய தத்துவம் வந்திடாதோ
இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம்
அற்று பொன் தலை தத்த கொத்தொடு நஞ்சு வாளி
எரி எழ முடுகிய சிலையினர் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள்
பச்சை பட்சிதனை கைப்பற்றிடும் இந்திரலோகா
வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடிபட
மை கண் பெற்றிடும் உக்ர கண் செவி அஞ்ச சூரன்
மணி முடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டி பொட்டு எழ வெட்டி குத்திய தம்பிரானே

மேல்

#1016
குகையில் நவ நாதரும் சிறந்த முகை வனச சாதனும் தயங்கு
குணமும் அசுரேசரும் தரங்கம் முரல் வேத
குரகத புராரியும் ப்ரசண்ட மரகத முராரியும் செயம் கொள்
குலிச கை வலாரியும் கொடுங்கண் அற நூலும்
அகலிய புராணமும் ப்ரபஞ்ச சகல கலை நூல்களும் பரந்த
அரு மறை அநேகமும் குவிந்தும் அறியாத
அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உணர்ந்து உன்
அருண சரண் அரவிந்தம் என்று அடைவேனோ
பகை கொள் துரியோதனன் பிறந்து படை பொருத பாரதம் தெரிந்து
பரியது ஒரு கோடு கொண்டு சண்ட வரை மீதே
பழுது அற வியாசன் அன்று இயம்ப எழுதிய விநாயகன் சிவந்த
பவள மத யானை பின்பு வந்த முருகோனே
மிகு தமர சாகரம் கலங்க எழு சிகர பூதரம் குலுங்க
விபரித நிசாசரன் தியங்க அமராடி
விபுதர் குல வேழ மங்கை துங்க பரிமள படீர கும்ப விம்ப
ம்ருகமத பயோதரம் புணர்ந்த பெருமாளே

மேல்

#1017
மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப அணை மீதே
மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே அறவும் திரைந்து
வசம் அழியவே புணர்ந்து அணைந்து மகிழ்வாகி
குழைய இதழூறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய் மலர்ந்து கொஞ்ச
குமுத பதி போக பொங்கு கங்கை குதி பாய
குழியில் இழியா விதங்கள் ஓங்கு மதன கலை ஆகமங்கள் விஞ்சி
குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ
எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று சென்று
எழு சிகரம் மா நிலம் குலுங்க விசையூடே
எழு கடலும் மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட துங்க
இயல் மயிலின் மாறுகொண்டு அமர்ந்த வடி வேலா
பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர்மகள் காலினும் பணிந்து
புளிஞர் அறியாமலும் திரிந்து புனம் மீதே
புதிய மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து
புளகித பயோதரம் புணர்ந்த பெருமாளே

மேல்

#1018
கற்பு ஆர் மெய்ப்பாட்டை தவறிய சொல் பாகை காட்டி புழுகொடு
கஸ்தூரி சேற்றை தடவிய இளநீரை
கண் சேலை காட்டி குழல் அழகை தோளை காட்டி தரகொடு
கைக்காசை கேட்டு தெருவினில் மயில் போலே
நிற்பாருக்கு ஆட்பட்டு உயரிய வித்தார பூ கட்டிலின் மிசை
நெட்டூர கூட்டத்து அநவரதமு மாயும்
நெட்டாசை பாட்டை துரிசு அற விட்டு ஏறி போய் பத்தியருடன்
நெக்கு ஓதி போற்றி கழல் இணை பணிவேனோ
வெற்பால் மத்தாக்கி கடல் கடை மைச்சு ஆவி காக்கை கடவுளை
விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும்
வில் போல கோட்டி பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு
வித்தார் தத்வார்த்த குருபர என ஓதும்
பொற்பா பற்றாக்கை புது மலர் பெட்டு ஏய பாற்பட்டு உயரிய
பொன் தோளில் சேர்த்து கருணை செய் என மாலாய்
புள் கானத்து ஓச்சி கிரி மிசை பச்சேனல் காத்து திரிதரு
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே

மேல்

#1019
சிற்று ஆய கூட்ட தெரிவையர் வித்தார சூழ்ச்சி கயல் விழி
சற்று ஏற பார்த்து சில பணிவிடை ஏவி
சில் தாபத்து ஆக்கை பொருள் கொடு பித்து ஏறி கூப்பிட்டவர் பரிசு
எட்டாமல் தூர்த்தத்து அலைபடு சிறு காலை
உற்றார் பெற்றார்க்கு பெரிது ஒரு பற்றாய் பூட்டு கயிறு கொடு
உச்சாயத்து ஆக்கை தொழிலொடு தடுமாறி
உக்காரித்து ஏக்கற்று உயிர் நழுவி காய் அ தீ பட்டு எரி உடல்
உக்கேன் மெய்க்கு ஆட்டை தவிர்வதும் ஒரு நாளே
வற்றா முற்றா பச்சிள முலையில் பால் கை பார்த்து தரும் ஒரு
மை காம கோட்ட குல மயில் தரு பாலா
மத்து ஓசை போக்கில் தயிர் உறி நெய் பாலுக்கு ஆய்ச்சிக்கு இரு பதம்
வைத்து ஆடி காட்டி பருகு அரி மருகோனே
கல் தா வில் காட்டி கரை துறை நற்றாயில் காட்டி புகழ் கலை
கற்றார் சொல் கேட்க தனி வழி வருவோனே
கை சூல கூற்றை கணை மதனை தூள் பட்டு ஆர்ப்ப கனல் பொழி
கர்த்தாவுக்கு ஏற்க பொருள் அருள் பெருமாளே

மேல்

#1020
இருள் குழலை குலைத்து முடித்து எழில் கலையை திருத்தி உடுத்து
இணை கயலை புரட்டி விழித்து அதி பார
இழை களப பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து வளை
திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடி
பொருட்கு மிக துதித்து இளகி புலப்படு சித்ர கரண
புணர்ச்சி விளைத்து உருக்கு பரத்தையர் மோக
புழு தொளையில் திளைத்தது அதனை பொறுத்து அருளி சடக்கென அப்புறத்தில்
அழைத்து இருத்தி அளித்திடுவாயே
உருத்திரரை பழித்து உலகுக்கு உக கடை அப்பு என ககனத்து
உடு தகர படுத்து கிரி தலம் ஏழும்
உடுத்த பொல பொருப்பு வெடித்து ஒலிப்ப மருத்து இளைப்ப நெருப்பு
ஒளிக்க இருப்பிடத்தை விட சுரர் ஓடி
திரை கடல் உட்பட சுழல செகத்ரையம் இப்படி கலைய
சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி
செருக்கு அழிய தெழித்து உதிர திரை கடலில் சுழி தலையில்
திளைத்த அயில் கர குமர பெருமாளே

மேல்

#1021
வினை திரளுக்கு இருப்பு என வித்தக படவில் சல பிலம் இட்டு
இசைக்கும் மிடல் குடிற்கிடை புக்கு இடும் மாய
விளை பகுதி பயப்பு அளவுற்று அமைத்தது என கருத்த அமைவில்
சக பொருள் மெய்க்கு உற பருக கருதாதே
எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எ தலத்து உளர் எ சமர்த்தர் என
புறத்து உரை இட்டு இகழ்ச்சியில் உற்று இளையாது உன்
எழில் கமலத்து இணை கழலை தமிழ் சுவையிட்டு இறப்பு அற எய்த்திட
கருணை திறத்து என வைத்து அருள்வாயே
சினத்தை மிகுத்து அனைத்து உலகத்து இசை கருதி கடல் பரவி
திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன்
சிரத்துடன் மற்புயத்து அகலத்தினில் குருதி கடல் பெருக
சிறப்பு மிக திறத்தொடு உகைத்திடும் வேலா
கனத்த மருப்பு இன கரி நல் கலை திரள் கற்பு உடை கிளி உள்
கருத்து உருக தினைக்குள் இசைத்து இசை பாடி
கனி குதலை சிறு குயிலை கதித்த மற குல பதியில்
களிப்போடு கை பிடித்த மண பெருமாளே

மேல்

#1022
முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலை முலை கொடே வித்தாரம்
முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏக பொரும் மாதர்
முற்று மதி முகமும் வானில் காரும் ஒத்த குழல் விழியும் வேய் நல் தோளும்
முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு இடை மூழ்கி
புத்தி கரவடம் உலாவி சால மெத்த மிக அறிவிலாரை தேறி
பொன் கை புகழ் பெரியராக பாடி புவியூடே
பொய்க்குள் ஒழுகி அயராமல் போது மொய்த்த கமல இரு தாளை பூண
பொற்பும் இயல் புதுமை ஆக பாட புகல்வாயே
பத்து முடியும் அதனோடு அ தோள் இர்பத்தும் மிறைய ஒரு வாளிக்கே செய்
பச்சை முகில் சதுரவேதத்தோடு உற்ற அயனாரும்
பற்ற அரிய நடமாடு அத்தாளில் பத்தி மிக இனிய ஞான பாடல்
பற்றும் மரபு நிலையாக பாடி திரிவோனே
மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட வெற்றி மயில் மிசை கொடு ஏகி சூரர்
மெய்க்குள் உற இலகு வேலை போகைக்கு எறிவோனே
வெற்றி மிகு சிலையினால் மிக்கோர்தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும்
வெற்பும் உறையும் மயில் வேளைக்கார பெருமாளே

மேல்

#1023
விட்ட புழுகு பனிநீர் கத்தூரி மொய்த்த பரிமள படீர சேறு
மிக்க முலையை விலை கூறி காசுக்கு அளவே தான்
மெத்த விரியும் மலர் சேர் கற்பூர மெத்தை மிசை கலவி ஆசைப்பாடு
விற்கு மகளிர் சுருள் ஓலை கோல குழையோடே
முட்டி இலகு குமிழ் தாவி காமன் விட்ட தனை ஓடி சாடி
மொய்க்கும் அளிஅதனை வேலை சேலை கயல் மீனை
முக்கி யமனை அட மீறி சீறும் மை கண் விழி வலையிலே பட்டு ஓடி
முட்ட வினையன் மருள் ஆகி போக கடவேனோ
செட்டி எனும் ஓர் திரு நாமக்கார வெற்றி அயில் தொடு தாபக்கார
திக்கை உலகை வலமாக போகி கண மீளும்
சித்ர குல கலப வாசிக்கார தத்து மகர சல கோபக்கார
செச்சை புனையும் மணவாள கோல திரு மார்பா
துட்ட நிருதர் பதி சூறைக்கார செப்பும் அமரர் பதி காவற்கார
துப்பு முகபட கபோல தான களிறு ஊரும்
சொர்க்க கன தளம் விநோதக்கார முத்தி விதரண உதாரக்கார
சுத்த மறவர் மகள் வேளைக்கார பெருமாளே

மேல்

#1024
ஏடு மலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ அது பழிக்கும் விழியாலே
ஏதையும் அழிக்கும் மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த மருள் ஆகி
நாடு நகர் மிக்க வீடு தனம் மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை பேணா
ஞான உணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில் விழலாமோ
ஆடும் அரவத்தை ஓடி உடல் கொத்தி ஆடும் ஒரு பச்சை மயில் வீரா
ஆரணம் உரைக்கும் மோன அக இடத்தில் ஆரும் உய நிற்கும் முருகோனே
வேடுவர் புனத்தில் நீடும் இதணத்தில் மேவுய குறத்தி மணவாளா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1025
சீத மலம் வெப்பு வாத மிகு பித்தம் ஆன பிணி சுற்றி உடலூடே
சேரும் உயிர் தப்பி ஏகும் வணம் மிக்க தீது விளைவிக்க வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க சாகரம் அதற்குள் அழியா முன்
தாரணிதனக்குள் ஆரணம் உரைத்த தாள் தர நினைத்து வரவேணும்
மாதர் மயலுற்று வாட வடிவுற்று மா மயிலில் நித்தம் வருவோனே
மாலும் அயன் ஒப்பிலாதபடி பற்றி மால் உழலும் மற்ற மறையோர் முன்
வேத மொழி வித்தை ஓதி அறிவித்த நாத விறல் மிக்க இகல் வேலா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1026
தோடு பொரு மை கண் ஆட வடிவுற்றது ஓர் தனம் அசைத்து இளைஞோர்தம்
தோள் வலி மனத்து வாள் வலி உழக்கு தோகையர் மயக்கில் உழலாதே
பாடல் இசை மிக்க ஆடல் கொடு பத்தியோடு நினை பத்தர் பெருவாழ்வே
பாவ வினை அற்று நாம நினை புத்தி பாரில் அருள்கைக்கு வரவேணும்
ஆடல் அழகு ஒக்க ஆடும் மயில் எற்றி ஆண்மையுடன் நிற்கும் முருகோனே
ஆதி அரனுக்கு வேத மொழி முற்றி ஆர்வம் விளைவித்த அறிவோனே
வேடை மயலுற்று வேடர் மகளுக்கு வேளை என நிற்கும் விறல் வீரா
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1027
தோதகம் மிகுத்த பூதம் மருள் பக்க சூலை வலி வெப்பு மத நீர் தோய்
சூழ் பெரு வயிற்று நோய் இருமல் குற்று சோகை பல குட்டம் அவை தீரா
வாதமொடு பித்தம் மூலமுடன் மற்றும் ஆய பிணி சற்றும் அணுகாதே
வாடும் எனை முத்தி நீடிய பதத்தில் வாழ மிக வைத்து அருள்வாயே
காதல் மிக உற்று மா தினை விளைத்த கானக குறத்தி மணவாளா
காசினி அனைத்தும் ஓடி அளவிட்ட கால் நெடிய பச்சை மயில் வீரா
வேத மொழி மெத்த ஓதி வரு பத்தர் வேதனை தவிர்க்கும் முருகோனே
மேல் அசுரர் இட்ட தேவர் சிறை வெட்டி மீள விடுவித்த பெருமாளே

மேல்

#1028
காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழப்பெறுவோரும்
மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே
நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாகலோகம் ஈரேழு பாருக்கு உரியோனே
தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1029
கூறும் மார வேள் ஆரவார கடலாலே கோப மீது மாறாத கான குயிலாலே
மாறு போலும் மாதாவின் வார்மை பகையாலே மாது போத மால் ஆகி வாட தகுமோதான்
ஏறு தோகை மீது ஏறி ஆலித்திடும் வீரா ஏழு லோகம் வாழ்வான சேவல் கொடியோனே
சீறு சூரர் நீறு ஆக மோதி பொரும் வேலா தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1030
பேர் அவா அறா வாய்மை பேசற்கு அறியாமே பேதை மாதராரோடு கூடி பிணி மேவா
ஆரவாரம் மாறாத நூல் கற்று அடி நாயேன் ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே
சூரசூர சூராதிசூரர்க்கு எளிவு ஆயா தோகையா குமாரா கிராத கொடி கேள்வா
தீரதீர தீராதிதீர பெரியோனே தேவதேவ தேவாதிதேவ பெருமாளே

மேல்

#1031
காதில் ஓலை கிழிக்கும் காம பாண விழிக்கும் கான யாழின் மொழிக்கும் பொதுமாதர்
காணொணாத இடைக்கும் பூண் உலாவும் முலைக்கும் காதில் நீடு குழைக்கும் புதிது ஆய
கோது இலாத கருப்பஞ்சாறு போல ருசிக்கும் கோவை வாய் அமுதுக்கும் தணியாமல்
கூருவேன் ஒருவர்க்கும் தேடவொணாதது ஒர் அர்த்தம் கூடுமாறு ஒரு சற்றும் கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும் போத தேசிக சக்ரம் தவறாதே
போக பூமி புரக்கும் த்யாக மோக குற பெண் போத ஆதரம் வைக்கும் புய வீரா
சோதி வேலை எடுத்து அன்று ஓத வேலையில் நிற்கும் சூத தாருவும் வெற்பும் பொரு கோவே
சூரர் சேனை அனைத்தும் தூளியாக நடிக்கும் தோகை வாசி நடத்தும் பெருமாளே

மேல்

#1032
கார் உலாவு குழற்கும் கூரிதான விழிக்கும் காதல் பேணு நுதற்கும் கதிர் போலும்
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்கும் காசு பூணு முலைக்கும் கதி சேரா
நேரிதான இடைக்கும் சீத வார நகைக்கும் நேர் இலாத தொடைக்கும் சதி பாடும்
நீதமான அடிக்கும் மாலுறாதபடிக்கு உன் நேயமோடு துதிக்கும்படி பாராய்
பார மேரு வளைக்கும் பாணியார் சடையில் செம்பாதி சோமன் எருக்கும் புனைவார்தம்
பாலகா என நித்தம் பாடு நாவலர் துக்கம் பாவ நாசம் அறுத்து இன் பதம் ஈவாய்
சோரி வாரியிட சென்று ஏறி ஓடி அழல் கண் சூல காளி நடிக்கும்படி வேலால்
சூரர் சேனைதனை கொன்று ஆரவாரம் மிகுத்து எண் தோகை வாசி நடத்தும் பெருமாளே

மேல்

#1033
தோடு உற்ற காது ஒக்க நீடுற்ற போருற்ற தோய் மை கணால் மிக்க நுதலாலே
தோள் வெற்பினால் வில் கை வேளுக்கு மேன் மக்கள் சேர்க்கைக்கு மால் விற்கும் மடவார்தம்
ஊடற்குள்ளே புக்கு வாடி கலாம் மிக்க ஓசைக்கு நேசித்து உழலாதே
ஊர் பெற்ற தாய் சுற்றமாய் உற்ற தாள் பற்றி ஓதற்கு நீ சற்றும் உணர்வாயே
வேடர்க்கு நீள் சொர்க்கம் வாழ்விக்க ஓர் வெற்பின் மீது உற்ற பேதைக்கு ஓர் மணவாளா
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மால் ஒக்க வேதத்திலே நிற்கும் அயனாரும்
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம் வைத்த சேமத்தின் நாமத்தை மொழிவோனே
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே

மேல்

#1034
தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே
சோர்வு அற்று வாழ்வுற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன்
கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா
கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே
ஆலித்து மூலத்தோடே உட்கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே
சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோத கண் மானுக்கு மணவாளா
தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே

மேல்

#1035
ஊனும் தசை உடல் தான் ஒன்பது வழி ஊரும் கரு வழி ஒரு கோடி
ஓதும் பல கலை கீதம் சகலமும் ஓரும்படி உனது அருள் பாடி
நான் உன் திருவடி பேணும்படி இரு போதும் கருணையில் மறவாது உன்
நாமம் புகழ்பவர் பாதம் தொழ இனி நாடும்படி அருள்புரிவாயே
கானும் திகழ் கதிரோனும் சசியொடு காலங்களும் நடை உடையோனும்
காரும் கடல் வரை நீரும் தரு கயிலாயன் கழல் தொழும் இமையோரும்
வான் இந்திரன் நெடு மாலும் பிரமனும் வாழும்படி விடும் வடி வேலா
மாயம் பல புரி சூரன் பொடிபட வாள் கொண்டு அமர் செய்த பெருமாளே

மேல்

#1036
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் செறி தரு பசு பாச
தேகம்தனை நிலையே ஏய் ஒன்று இருவினை தீரும் திறல் வினை அறியாதே
ஓயும்படி சிறு உயிர் நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது நூறும்
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ
வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா
மீனம் படு கடல் ஏழும் தழல் பட வேதம் கதறிய ஒரு நாலும்
வாயும் குல கிரி பாலும் தளை பட மா கந்தரம் அதில் மறை சூரன்
மார்பும் துணையுறு தோளும் துணிபட வாள் கொண்டு அமர்செய்த பெருமாளே

மேல்

#1037
வாதம் தலைவலி சூலம் பெரு வயிறு ஆகும் பிணி இவை அணுகாதே
மாயம் பொதி தரு காயம்தனின் மிசை வாழும் கரு வழி மருவாதே
ஓதம் பெறு கடல் மோதும் திரை அது போலும் பிறவியில் உழலாதே
ஓதும் பல அடியாரும் கதிபெற யான் உன் கழல் இணை பெறுவேனோ
கீதம் புகழ் இசை நாதம் கனிவொடு வேதம் கிளர் தர மொழிவார்தம்
கேடின் பெரு வலி மாளும்படி அவரோடும் கெழுமுதல் உடையோனே
வேதம் தொழு திருமாலும் பிரமனும் மேவும் பதம் உடை விறல் வீரா
மேல் வந்து எதிர் பொரு சூரன் பொடி பட வேல் கொண்டு அமர் செய்த பெருமாளே

மேல்

#1038
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசல் குடில் பேணா
ஓதா மோதா வாது ஆகாதே லோகாசாரத்து உளம் வேறாய்
நானே நீயாய் நீயே நானாய் நானா வேத பொருளாலும்
நாடா வீடாய் ஈடேறாதே நாயேன் மாயக்கடவேனோ
வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே
மாயா மானே கோனே மான் ஆர் வாழ்வே கோழி கொடியோனே
தேனே தேன் நீள் கான் ஆறாய் வீழ் தேசு ஆர் சாரல் கிரியோனே
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1039
சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள்கூரும்
தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள்கொண்டு
ஏயா பாடா வாழ்வோர்பாலே யான் வீணே கத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார் பாராவாரத்து உரகேச
பாய் மீதே சாய்வார் காணாதே பாதாள ஆழத்து உறு பாத
சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே சீமானே செச்சைய மார்பா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1040
நாராலே தோல் நீராலே ஆம் நானா வாசல் குடிலூடே
ஞாதாவாயே வாழ் கால் ஏகாய் நாய் பேய் சூழ்கைக்கு இடம் ஆம் முன்
தார் ஆர் ஆர் தோள் ஈராறானே சார் வானோர் நல் பெருவாழ்வே
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாடு ஆண்மை திறல் தாராய்
பார் ஏழு ஓர் தாளாலே ஆள்வோர் பாவார் வேதத்து அயனாரும்
பாழூடே வானூடே பாரூடே ஊர் பாதத்தினை நாடா
சீர் ஆர் மாதோடே வாழ்வார் நீள் சே ஊர்வார் பொன் சடை ஈசர்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1041
மாதாவோடே மாமான் ஆனோர் மாதோடே மைத்துனமாரும்
மாறு ஆனார் போல் நீள் தீயூடே மாயா மோக குடில் போடா
போதா நீரூடே போய் மூழ்கா வீழ்கா வேதைக்கு உயிர் போ முன்
போதாகாரா பாராய் சீர் ஆர் போது ஆர் பாதத்து அருள்தாராய்
வேதாவோடே மால் ஆனார் மேல் வானோர் மேனி பயம் மீளவே
தானோர் மேலாகாதே ஓர் வேலால் வேதித்திடும் வீரா
தீது ஆர் தீயார் தீயூடே முள் சேரா சேதித்திடுவோர்தம்
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1042
வாராய் பேதாய் கேளாய் நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை
மாசு ஊடாடாது ஊடே பாராய் மாறா ஞான சுடர் தான் நின்று
ஆராயாதே ஆராய் பேறாம் ஆனா வேத பொருள் காண் என்று
ஆள்வாய் நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார் தாம்
தோரா வானோர் சேனாதாரா சூரா சாரல் புன மாது
தோள் தோய் தோள் ஈராறா மா சூர் தூளாய் வீழ சிறு தாரை
சீராவாலே வாளாலே வேலாலே சேதித்திடும் வீரா
சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே

மேல்

#1043
அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய மோனமே கோயில் என மேவி
அசையவே க்ரியா பீடம் மிசை புகா மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி
சகல வேதனாதீத சகல வாசகாதீத சகல மா க்ரியாதீத சிவ ரூப
சகல சாதகாதீத சகல வாசனாதீத தனுவை நாடி மா பூசை புரிவேனோ
விகட தார சூதான நிகள பாத போதூள விரக ராக போதார் அசுரர் கால
விபுத மாலிகா நீல முகபடாகம் மாயூர விமல வ்யாபகா சீல அக விநோத
ககன கூட பாடீர தவள சோபித ஆளான கவன பூதர ஆரூட சத கோடி
களப காம வீர் வீசு கரம் முக ஆர வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1044
அடைபடாது நாள்தோறும் இடைவிடாது போம் வாயு அடைய மீளில் வீடு ஆகும் என நாடி
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும்
உடலம் வேறு யான் வேறு கரணம் வேறு வேறாக உதறி வாசகாதீத அடியூடே
உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே
வட பராரை மா மேரு கிரி எடா நடா மோது மகர வாரி ஓர் ஏழும் அமுதாக
மகுட வாள் அரா நோவ மதியம் நோவ வாரீச வனிதை மேவும் தோள் ஆயிரமும் நோவ
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி புதல்வ கான வேல் வேடர் கொடி கோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1045
அமல வாயு ஓடாத கமல நாபி மேல் மூல அமுத பானமே மூல அனல் மூள
அசையுறாது பேராத விதமும் மேவி ஓவாது அரி சதான சோபானம் அதனாலே
எமனை மோதி ஆகாச கமனமாம் மனோபாவம் எளிது சால மேலாக உரையாடும்
எனது யானும் வேறாகி எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவனாதீதம் அருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓர் ஏழு விபுத மேகமே போல உலகு ஏழும்
விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல வெகு வித முகாகாய பதம் ஓடி
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறு இல் கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1046
அயிலின் வாளி வேல் வாளி அளவு கூரிதாய் ஈசர் அமுத அளாவு ஆவேச மது போல
அறவு நீளிதாய் மீள அகலிதாய் வார்காதின் அளவும் ஓடி நீடு ஓதி நிழல் ஆறி
துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏற
துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை ஈடேறு நெறி பாராய்
பயிலும் மேக நீகாரம் சயல ராசன் வாழ்வான பவதி யாமளா வாமை அபிராமி
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி
கயிலையாளர் ஓர் பாதி கடவுளாளி லோகாயி கன தனாசலாபார அமுதூறல்
கமழும் ஆரணா கீத கவிதை வாண வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1047
இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக வார் ஆழி அதில் மூழ்கி
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும்
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான
சகளமோ சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான
பரமர் தேசிகா வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத
கரதலா விசாகா சகல கலாதரா போதக முக மூஷிகாரூட மத தாரை
கடவுள் தாதை சூழ்போதில் உலகம் ஏழும் சூழ் போது கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1048
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய ஏமனால் ஏவிவிடு காலன்
கொடிய பாசம் ஓர் சூல படையினோடு கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன்
பருதி சோமன் வான் நாடர் படி உளோர்கள் பால் ஆழி பயம் உறாமல் வேல் ஏவும் இளையோனே
பழுதுறாத பா வாணர் எழுதொணாத தோள் வீர பரிவினோடு தாள் பாட அருள்தாராய்
மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் வேய் ஊதி மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி
வரு முராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே
கருதொணாத ஞானாதி எருதில் ஏறு காபாலி கடிய பேயினோடு ஆடி கருதார் வெம்
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1049
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது துரிய மீது சாராது எவராலும்
தொடரொணாது மா மாயை இடை புகாது ஆனாத சுக மகோததீ ஆகி ஒழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது சலியாது
பரவை சூழில் ஆழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள நிபிட தாரு கா பூமி குடியேற
நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப வேத ஆசாரியனும் மாலும்
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி ககன சாரி பூசாரி வெகு சாரி
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1050
தொட அடாது நேராக வடிவு காண வாராது சுருதி கூறுவாராலும் எதிர் கூற
துறை இலாததோர் ஆசை இறைவனாகி ஓர் ஏக துரியமாகி வேறு ஆகி அறிவாகி
நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி நீ நானும் எனவு நேர்மை நூல் கூறி நிறை மாயம்
நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதி மொழியாதோ
அடல் கெடாத சூர் கோடி மடிய வாகை வேல் ஏவி அமர் செய் வீர ஈராறு புய வேளே
அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா வேதன் அரியும் வாழ வான் ஆளும் அதி ரேகா
கடு விடா களா ரூப நட விநோத தாடாளர் கருதிடார்கள் தீ மூள முதல் நாடும்
கடவுள் ஏறு மீது ஏறி புதல்வ காரணா வேத கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1051
நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் மாட மா மாளிகையில் மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாதராரோடு நியதியாக வாயார வயிறார
இலவில் ஊறு தேன் ஊறல் பருகி ஆர் அவா மீறி இளகி ஏறு பாடீர தன பாரம்
எனது மார்பிலே மூழ்க இறுக மேவி மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே
குல வியோக பாகீரதி மிலை நாதர் மா தேவர் குழைய மாலிகா நாகமொடு தாவி
குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர வேட மாதோடு பிரியாது
கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும்
கட கபோல மால் யானை வனிதை பாக வேல் வீர கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1052
மன கபாட பாடீர தனம் தராதர ரூப மதன ராச ராசீப சர கோப
வருண பாதகாலோக தருண சோபிதாகார மகளிரோடு சீராடி இதம் ஆடி
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான குறையனேனை நாயேனை வினையேனை
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத குருடனேனை நீ ஆள்வது ஒரு நாளே
அநக வாமனாகாரம் முநிவர் ஆகம் மால் தேட அரிய தாதை தான் ஏவ மதுரேசன்
அரிய சாரதா பீடம் அதனில் ஏறி ஈடேற அகில நாலும் ஆராயும் இளையோனே
கனக பாவனாகார பவள கோமளாகார கலப சாமளாகர மயில் ஏறும்
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார கருணை மேருவே தேவர் பெருமாளே

மேல்

#1053
அதல சேடனார் ஆட அகில மேரு மீது ஆட அபின காளி தான் ஆட அவளோடு அன்று
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட அருகு பூத வேதாளம் அவை ஆட
மதுர வாணி தான் ஆட மலரில் வேதனார் ஆட மருவு வான் உளோர் ஆட மதி ஆட
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட மயலும் ஆடி நீ ஆடி வரவேணும்
கதை விடாத தோள் வீமன் எதிர் கொள் வாளியால் நீடு கருதலார்கள் மா சேனை பொடியாக
கதறு காலி போய் மீள விஜயன் ஏறு தேர் மீது கனக வேத கோடு ஊதி அலை மோதும்
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர் பாதம் உவணம் ஊர்தி மா மாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மா ராஜன் உளமும் ஆட வாழ் தேவர் பெருமாளே

மேல்

#1054
குருதி மூளை ஊன் நாறு மலம் அறாத தோல் மூடு குடிசை கோழை மாசு ஊறு குழி நீர் மேல்
குமிழி போல நேராகி அழியும் மாயை ஆதார குறடு பாறு நாய் கூளி பல காகம்
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில் படியின் மூழ்கியே போது தளிர் வீசி
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத பரம ஞான வீடு ஏது புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான இமயமாது மா சூலி தரு பாலா
எழுமை ஈறு காண் நாதார் முநிவரோடு வான் நாடர் இசைகளோடு பாராட மகிழ்வோனே
அரவினோடு மா மேரு மகர வாரி பூலோகம் அதிர நாகம் ஓர் ஏழும் பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீது ஆட அசுரர் மாள வேல் ஏவு பெருமாளே

மேல்

#1055
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீ பசி தணிகை பொருடு இராப்பகல் தடுமாறும்
சகல சமய தார்க்கிகர் கலகம் ஒழிய நாக்கொடு சரண கமலம் ஏத்திய வழிபாடு உற்று
அரிய துரிய மேல் படு கருவி கரணம் நீத்தது ஒர் அறிவின் வடிவமாய் புளகிதமாகி
அவச கவசம் மூச்சு அற அமரும் அமலர் மேல் சில ரதி பதி விடு பூ கணை படுமோ தான்
விரியும் உதய பாஸ்கர கிரணம் மறைய ஆர்ப்பு எழ மிடையும் அலகில் தேர் படையொடு சூழும்
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர் விசையன் ஒருவனால் பட ஒரு தூது
திரியும் ஒரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி சிறுவ தறுகண் வேட்டுவர் கொடி கோவே
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேல் கொடு சிகரி தகர வீக்கிய பெருமாளே

மேல்

#1056
மகளும் மனைவி தாய் குலம் அணையும் அனைவர் வாக்கினில் மறுகி புறமும் ஆர்த்திட உடலூடே
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர் உடனும் இயமன் மாட்டிட அணுகா முன்
உகமும் முடிவுமா செலும் உதயம் மதியின் ஓட்டமும் உளதும் இலதும் ஆச்சு என உறைவோரும்
உருகும் உரிமை காட்டிய முருகன் எனவு நா கொடு உனது கழல்கள் போற்றிட அருள்தாராய்
புகல அரிய போர் சிலை விரகு அ விசயனால் புகழ் உடைய திருதராட்டிர புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர் படை மடிய அரசை மாய்த்து உயர் புவியின் விதனம் மாற்றினர் மருகோனே
மிகவும் மலையும் மா கடல் முழுதும் மடிய வேற்று உரு எனவும் மருவி வேல் கொடு பொரு சூரன்
விரை செய் நெடிய தோள் கன அடல் உருவ வேல் படை விசையம் உறவும் வீக்கிய பெருமாளே

மேல்

#1057
குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும்
கொடிய நோய்க்கு இடம் எனவும் நாட்டிய குடிலிலே ஏற்று உயிர் என்று கூறும்
வடிவு இலா புலம் அதனை நாட்டிடு மறலி ஆள் பொர வந்திடா முன்
மதியும் மூத்து உனது அடிகள் ஏத்திட மறுவு இலா பொருள் தந்திடாதோ
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர் கருதொணா கணி வேங்கை ஆகி
கழை செய் தோள் குற மயிலை வேட்டு உயர் களவினால் புணர் கந்த வேளே
முடுகி மேல் பொரும் அசுரார் ஆர்ப்பு எழ முடிய வேல் கொடு வென்ற வீரா
முடிவு இலா திருவடிவை நோக்கிய முதிய மூர்த்திகள் தம்பிரானே

மேல்

#1058
பொதுவதாய் தனி முதல் அதாய் பகல் இரவு போய் புகல்கின்ற வேத
பொருளதாய் பொருள் முடிவதாய் பெரு வெளியதாய் புதைவு இன்றி ஈறு இல்
கதியதாய் கருது அரியதாய் பருக அமுதமாய் புலன் ஐந்தும் மாய
கரணம் மாய்த்து எனை மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்த ஆறு என்
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ உலகு போற்றிட வெம் கலாப
ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ கோ கிரி நண்ப வானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே
முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் முதிய மூர்த்திகள் தம்பிரானே

மேல்

#1059
கவடு கோத்து எழும் உவரி மா திறல் காய் வேல் பாடேன் ஆடேன் வீடானது கூட
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன கால் மேல் வீழேன் வீழ்வார் கால் மீதினும் வீழேன்
தவிடின் ஆர் பதம் எனினும் ஏற்பவர் தாழாது ஈயேன் வாழாதே சாவது சால
தரமும் மோக்ஷமும் இனி என் யாக்கை சதா ஆமாறே நீ தான் நாதா புரிவாயே
சுவடு பார்த்து அட வரு கரா தலை தூள் ஆமாறே தான் ஆ நாராயணனே நல்
துணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப துழாய் மார்பா கோபாலா காவாய் எனவே கை
குவடு கூப்பிட உவணம் மேல் கன கோடூ ஊதா வானே போது ஆள்வான் மருகோனே
குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1060
பருதியாய் பனி மதியமாய் படர் பாராய் வானாய் நீர் தீ காலாய் உடு சாலம்
பலவுமாய் பல கிழமையாய் பதி நாலு ஆறு ஏழாம் மேல் நாளாய் ஏழு உலகமாகி
சுருதியாய் சுருதிகளின் மேல் சுடராய் வேதாவாய் மாலாய் மேலே சிவம் ஆன
தொலைவு இலா பொருள் இருள் புகா கழல் சூடா நாடா ஈடேறாதே சுழல்வேனோ
திருதராட்டிரன் உதவு நூற்றுவர் சேணாடு ஆள்வான் நாள் ஓர் மூவாறினில் வீழ
திலக பார்த்தனும் உலகு காத்து அருள் சீரு ஆமாறே தேர் ஊர் கோமான் மருகோனே
குருதி வேல் கர நிருத ராக்ஷத கோபா நீபா கூதாளா மா மயில் வீரா
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1061
முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகாவாதாரா என ஞாலம்
முறையிடா படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடூடே கேள் கோகோ என நோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா வாழ்வே என மாய
மறலி ஊர் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள் போ நாம் நீ மீள் என வேணும்
புதல் அறா புன எயினர் கூக்குரல் போகா நாடா பாரா வாரார் அசுர் ஓட
பொருது தாக்கிய வய பராக்ரம பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும்
குதலை வாய் குரு பர சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ சத வேள்வி
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1062
வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர்
மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடி வேலா
பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ
பவள வாய் பனி மொழி எனா கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ
அருகு பார்ப்பதி உருகி நோக்க ஒரு ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ என ஏகி
அவுணர் கூப்பிட உததி தீ பட ஆகா சூரா போகாதே மீள் என ஓடி
குருகு பேர் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி
குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1063
மறலி போல் சில நயன வேல் கொடு மாயா தோயா வேய் ஆர் தோளார் மறை ஓதும்
வகையும் மார்க்கமும் மறமும் மாய்த்திடவாறு ஆராயாதே போம் ஆறா திடம் தீரம்
விறலும் மேல் பொலி அறிவும் ஆக்கமும் வேறாய் நீர் ஏறாதே ஓர் மேடாய் வினையூடே
விழுவினால் களை எழும் அதால் பெரு வீரா பாராய் வீணே மேவாது எனை ஆளாய்
மறலி சாய்த்தவர் இறை பராக்ரம மால் காணாதே மாதோடே வாழ்பவர் சேயே
மறு இலா திருவடிகள் நாள்தொறும் வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே
குறவர் கால் புன அரிவை தோள் கன கோடு ஆர் மார்பா கூர் வேலாலே அசுரேசர்
குலைய மா கடல் அதனில் ஓட்டிய கோவே தேவே வேளே வானோர் பெருமாளே

மேல்

#1064
குருதி ஒழுகி அழுகு அவல குடிலை இனிது புகலாலே
குலவும் இனிய கலவி மகளிர் கொடிய கடிய விழியாலே
கருதும் எனது விரகம் முழுது கலக மறலி அழியா முன்
கனக மயிலின் அழகு பொலிய கருணை மருவி வரவேணும்
பரிதி சுழல மருவு கிரியை பகிர எறிசெய் பணி வேலா
பணில உததி அதனில் அசுரர் பதியை முடுக வரும் வீரா
இரதிபதியை எரிசெய்து அருளும் இறைவர் குமர முருகோனே
இலகு கமல முகமும் அழகு எழுத அரிய பெருமாளே

மேல்

#1065
துயரம் அறு நின் வறுமை தொலையும் மொழியும் அமிர்த சுர பானம்
சுரபி குளிகை எளிது பெறுக துவளும் எமது பசி தீர
தயிரும் அமுதும் அமையும் இடுக சவடி கடக நெளி காறை
தருக தகடொடு உறுக எனும் இ விரகு தவர்வதும் ஒரு நாளே
உயரு நிகரில் சிகரி மிடறும் உடலும் அவுணர் நெடு மார்பும்
உருவ மகர முகர திமிர உததி உதரம் அது பீற
அயரும் அமரர் சரண நிகளம் முறிய எறியும் அயில் வீரா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#1066
பணிகள் பணமும் அணி கொள் துகில்கள் பழைய அடிமையொடு மாதும்
பகரில் ஒருவர் வருக அரிய பயணம் அதனில் உயிர் போக
குணமும் மனமும் உடைய கிளைஞர் குறுகி விறகி உடல் போடா
கொடுமை இடும் முன் அடிமை அடிகள் குளிர மொழிவது அருள்வாயே
இணையில் அருணை பழநி கிழவ இளைய இறைவ முருகோனே
எயினர் வயினின் முயலும் மயிலை இரு கை தொழுது புணர் மார்பா
அணியொடு அமரர் பணிய அசுரர் அடைய மடிய விடும் வேலா
அறிவும் உரமும் அறமும் நிறமும் அழகும் உடைய பெருமாளே

மேல்

#1067
மைந்தர் இனிய தந்தை மனைவி மண்டி அலறி மதி மாய
வஞ்ச விழிகள் விஞ்சும் மறலி வன் கை அதனில் உறு பாசம்
தந்து வளைய புந்தி அறிவு தங்கை குலைய உயிர் போ முன்
தம்பம் உனது செம்பொன் அடிகள் தந்து கருணை புரிவாயே
மந்தி குதி கொள் அம் தண் வரையில் மங்கை மருவும் மணவாளா
மண்டும் அசுரர் தண்டம் உடைய அண்டர் பரவ மலைவோனே
இந்து நுதலும் அந்த முகமும் என்றும் இனிய மடவார்தம்
இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமளே

மேல்

#1068
ஒழுகு ஊன் இரத்தமொடு தோல் உடுத்தி உயர் கால் கரத்தின் உருவாகி
ஒரு தாய் வயிற்றின் இடையே உதித்து உழல் மாயம் மிக்கு வரு காயம்
பழசாய் இரைப்பொடு இளையா விருத்த பரிதாபமுற்று மடியா முன்
பரிவால் உளத்தில் முருகா என சொல் பகர் வாழ்வு எனக்கும் அருள்வாயே
எழு வான் அகத்தில் இருநாலு திக்கில் இமையோர்தமக்கும் அரசாகி
எதிர் ஏறு மத்த மத வாரணத்தில் இனிது ஏறு கொற்றமுடன் வாழும்
செழு மா மணி பொன் நகர் பாழ்படுத்து செழு தீ விளைத்து மதில் கோலி
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#1069
கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து முருகாய் மன கவலையோடே
கலை நூல் பிதற்றி நடுவே கறுத்த தலை போய் வெளுத்து மரியாதே
இரு போதும் மற்றை ஒரு போதும் இட்ட கனல் மூழ்கி மிக்க புனல் மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கும் இயல் போதகத்தை மொழிவாயே
அரும் ஆதபத்த அமராபதிக்கு வழி மூடி விட்டு அதனை மீள
அயிராவதத்து விழி ஆயிரத்தன் உடனே பிடித்து முடியாதே
திருவான கற்ப தரு நாடு அழித்து விபு தேசர் சுற்றம் அவை கோலி
திடமோடு அரக்கர் கொடு போய் அடைத்த சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1070
புரக்க வந்த நம் குற கரும்பை மென் புனத்தில் அன்று சென்று உறவாடி
புடைத்து அலங்க்ருதம் படைத்து எழுந்த திண் புது குரும்பை மென் புயம் மீதே
செருக்க நெஞ்சகம் களிக்க அன்புடன் திளைக்கும் நின் திறம் புகலாது
இந்த்ரிய கடம் சுமந்து அலக்கண் மண்டிடும் தியக்கம் என்று ஒழிந்திடுவேனோ
குரக்கு இனம் கொணர்ந்து அரக்கர் தண்டமும் குவட்டு இலங்கையும் துகளாக
கொதித்த கொண்டலும் த்ரிஅக்ஷரும் கடம் கொதித்து மண்டு வெம் பகை ஓட
துரக்கும் விம்பகம் புரி ப்ரசண்ட சிந்துரத்தனும் பிறந்து இறவாத
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே

மேல்

#1071
பெருக்க நெஞ்சு உவந்து உருக்கும் அன்பிலன் ப்ரபு தனங்கள் பண்பு எணும் நாணும்
பிழைக்க ஒன்றிலன் சிலை கை மிண்டர் குன்று அமைத்த பெண் தனம்தனை ஆர
திரு கை கொண்டு அணைந்திட செல்கின்ற நின் திறத்தை அன்புடன் தெளியாதே
சினத்தில் மண்டி மிண்டு உரைக்கும் வம்பன் என் திருக்கும் என்று ஒழிந்திடுவேனோ
தருக்கி அன்று சென்று அருள் கண் ஒன்று அரன் தரித்த குன்ற நின்று அடியோடும்
தட கை கொண்டு வந்து எடுத்தவன் சிரம் தறிக்க கண்டன் எண் திசையோடும்
சுருக்கம் இன்றி நின்று அருக்கன் இந்திரன் துணை செய்கின்ற நின் பதம் மேவும்
சுகத்தில் அன்பரும் செக த்ரயங்களும் துதிக்கும் உம்பர்தம் பெருமாளே

மேல்

#1072
இருந்த வீடும் கொஞ்சிய சிறுவரும் உரு கேளும்
இசைந்த ஊரும் பெண்டிரும் இளமையும் வளம் மேவும்
விரிந்த நாடும் குன்றமும் நிலை என மகிழாதே
விளங்கு தீபம் கொண்டு உனை வழிபட அருள்வாயே
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்கு உலாவும் குன்று உரை குறமகள் மணவாளா
திருந்த வேதம் தண் தமிழ் தெரி தரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே

மேல்

#1073
கலந்த மாதும் கண் களியுற வரு புதல்வோரும்
கலங்கிடார் என்று இன்பமுறு உலகிடை கலி மேவி
உலந்த காயம் கொண்டு உளம் துயருடன் மேவா
உகந்த பாதம் தந்து உனை உரை செய அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே
மறம் செய்வார்தம் வஞ்சியை மருவிய மணவாளா
சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீச
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே

மேல்

#1074
இசைந்த ஏறும் கரி உரி போர்வையும் எழில் நீறும்
இலங்கு நூலும் புலி அதள் ஆடையும் மழு மானும்
அசைந்த தோடும் சிர மணி மாலையும் முடி மீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங்கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்தபோது என் துயர் கெட மா மயில் வரவேணும்
அமைந்த வேலும் புயம் மிசை மேவிய பெருமாளே

மேல்

#1075
திரிபுர மதனை ஒரு நொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன் வாழ்வே
சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே
பரு வரை அதனை உருவிட எறியும் அறு முகம் உடைய வடி வேலா
பசலையொடு அணையும் இள முலை மகளை மதன் விடு பகழி தொடலாமோ
கரி திரு முகமும் இடம் உடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே
கன தனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணி மார்பா
அரவணை துயிலும் அரி திரு மருக அவனியும் முழுதும் உடையோனே
அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே

மேல்

#1076
புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய வட மேரு
பொரும் இரு கலச முலையினை அரிவை புனை இடு பொதுவின் மட மாதர்
அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் அவச அநுராக
அமளியின் மிசையில் அவர் வசம் உருகி அழியும் நின் அடிமைதனை ஆள்வாய்
குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி அலை மோதும்
குரை செறி உததி வரைதனில் விசுறு குமுகுமுகுமு என உலகோடு
முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே
மொகுமொகுமொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே

மேல்

#1077
முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள் கொண்டு மூவா
முதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய வினையை மொண்டு நாயேன்
வழிவழி அடிமை எனும் அறிவு அகல மனமுறு துயர்கள் வெந்து வாட
மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வொடு புகழும் அன்பு தாராய்
எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும் மார்பா
எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய்
அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே
அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர் தம்பிரானே

மேல்

#1078
கொடியன பிணி கொடு விக்கி கக்கி கூன் போந்து அசடு ஆகும்
குடில் உற வரும் ஒரு மிக்க சித்ர கோண் பூண்டு அமையாதே
பொடிவன பர சமயத்து தப்பி போந்தேன் தலை மேலே
பொருள் அது பெற அடி நட்பு சற்று பூண்டு ஆண்டு அருள்வாயே
துடி பட அலகைகள் கைக்கொட்டிட்டு சூழ்ந்து ஆங்கு உடன் ஆட
தொகுதொகு திகுதிகு தொக்கு திக்கு தோம்தாம் தரி தாளம்
படி தரு பதிவ்ரதை ஒத்த சுத்த பாழ் கான்தனில் ஆடும்
பழயவர் குமர குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே

மேல்

#1079
சுடர் ஒளி கதிரவன் உற்று பற்றி சூழ்ந்து ஓங்கிடு பாரில்
துயர் இருவினை பல சுற்றப்பட்டு சோர்ந்து ஓய்ந்திட நாறும்
கடுகென எடும் எனும் உடல் பற்று அற்று கான் போந்து உறவோரும்
கனலிடை விதி இடு தத்துக்கத்தை காய்ந்து ஆண்டு அருளாயோ
தடம் உடை வயிரவர் தற்கித்து ஒக்க தாம் தோய்ந்து இரு பாலும்
தமருக ஒலி சவுதத்தில் தத்த தாழ்ந்து ஊர்ந்திட நாகம்
படி நெடியவர் கரம் ஒத்த கெத்து பாய்ந்து ஆய்ந்து உயர் கானம்
பயில்பவர் புதல்வ குற தத்தைக்கு பாங்காம் பெருமாளே

மேல்

#1080
குடம் என ஒத்த கொங்கை குயில் மொழி ஒத்த இன் சொல் குறமகள் வைத்த நண்பை நினைவோனே
வடவரை உற்று உறைந்த மக தேவர் பெற்ற கந்த மத சலம் உற்ற தந்தி இளையோனே
இடமுடன் வைத்த சிந்தை இனைவு அற முத்தி தந்து இசை அறிவித்து வந்து எனை ஆள்வாய்
தட வரை வெற்பில் நின்று சரவணம் உற்று எழுந்து சமர் கள வெற்றி கொண்ட பெருமாளே

மேல்

#1081
மடவியர் எச்சில் உண்டு கையில் முதலை களைந்து மறுமைதனில் சுழன்று வடிவான
சடம் மிக வற்றி நொந்து கலவி செய துணிந்து தளருறுதற்கு முந்தி எனை ஆள்வாய்
பட அரவில் சிறந்த இடம் இது என துயின்று பசு முகிலுக்கு உகந்த மருகோனே
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி நம்பும் பெருமாளே

மேல்

#1082
கரு மயல் ஏறி பெருகிய காம கடலினில் மூழ்கி துயராலே
கயல் விழியாரை பொருள் என நாடி கழியும் நாளில் கடை நாளே
எருமையில் ஏறி தருமனும் வாவுற்று இறுகிய பாசக்கயிறாலே
எனை வளையாமல் துணை நினைவேனுக்கு இயல் இசை பாட தரவேணும்
திரு மயில் சேர் பொன் புயன் என வாழ் அ தெரியலன் ஓட பொரும் வீரா
செக தலம் மீதில் பகர் தமிழ் பாடல் செழு மறை சேர் பொன் புய நாதா
பொரு மயில் ஏறி கிரி பொடியாக புவி அது சூழ திரிவோனே
புன மகளாரை கன தன மார்பில் புணரும் விநோத பெருமாளே

மேல்

#1083
குடலிடை தீதுற்று இடை பீறி குலவிய தோல் அத்தியினூடே
குருதியிலே சுக்கிலம் அது கூடி குவலயம் வான் அப்பு ஒரு காலாய்
உடல் எழும் மாய பிறவியில் ஆவித்து உறு பிணி நோய் உற்று உழலாதே
உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளை தரவேணும்
கடலிடை சூர படை பொடியாக கருதலர் ஓட பொரும் வேலா
கதிர் விடு வேலை கதிரினில் மேவி கலை பல தேர் முத்தமிழ் நாடா
சடையினர் நாட படர் மலை ஓடி தனி விளையாடி திரிவோனே
தனி மட மானை பரிவுடன் ஆர தழுவும் விநோத பெருமாளே

மேல்

#1084
கருதியே மெத்த விடம் எலாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார்
கடின போகத்த புளக வாருற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே
உருகி யான் மெத்த அவசமேயுற்ற உரைகளே செப்பி அழியாது உன்
உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே
பருவரால் உற்று மடுவின் மீதுற்ற பகடு வாய் விட்ட மொழியாலே
பரிவினோடுற்ற திகிரி ஏவிட்ட பழைய மாயற்கு மருகோனே
முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவுற்ற க்ருபையோனே
முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே

மேல்

#1085
கொலையிலே மெத்த விரகிலே கற்ற குவளை ஏர் மை கண் விழி மானார்
குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த குழலிலே பற்கள்தனில் ஏமா
முலையிலே அற்ப இடையிலே பத்ம முக நிலா வட்டம் அதின் மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை மொழியிலே சித்தம் விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர் கலகனே மெத்த இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு கடவுளே பச்சை மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி உடையனே விஷ்ணு மருகோனே
ஒருவனே செச்சை மருவு நேர் சித்ர உருவனே மிக்க பெருமாளே

மேல்

#1086
அகில நறும் சேறு ம்ருகமதமும் தோயும் அசலம் இரண்டாலும் இடை போம் என்று
அடியில் விழுந்து ஆடு பரிபுரம் செம் சீர் அது அபயம் இடம் கீதம் அமையாதே
நகம் மிசை சென்று ஆடி வனசரர் சந்தானம் நவை அற நின்று ஏனல் விளைவாள்தன்
லளித அவிர் சிங்கார தனம் உறு சிந்தூர நம சரண் என்று ஓத அருள்வாயே
பகல் இரவு உண்டான இருவரும் வண்டு ஆடும் பரிமளம் பங்கேருகனும் மாலும்
படிக நெடும் பார கடம் தடம் கெம்பீர பணை முகம் செம் பால மணி மாலை
முகபடம் சிந்தூர கரியில் வரும் தேவும் முடிய அரன் தேவி உடன் ஆட
முழுது உலகம் தாவி எழு கடல் மண்டு ஊழி முடிவினும் அஞ்சாத பெருமாளே

மேல்

#1087
கலக மதன் காதும் கன மலர் அம்பாலும் களி மது வண்டு ஊதும் பயிலாலும்
கடல் அலை அங்கு ஆலும் கன இரை ஒன்றாலும் கலை மதியம் காயும் வெயிலாலும்
இலகிய சங்கு ஆளும் இனியவள் அன்பு ஈனும் எனது அரு மின் தான் இன்று இளையாதே
இருள் கெட முன் தான் நின்று இன மணி செம் தார் தங்கு இரு தனமும் தோள் கொண்டு அணைவாயே
உலகை வளைந்து ஓடும் கதிரவன் விண்பால் நின்று உனது அபயம் கா என்று உனை நாட
உரவிய வெம் சூரன் சிரமுடன் வன் தோளும் உருவி உடன் போதும் ஒளி வேலா
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும் அடைவுடன் நின்றாடும் பெரியோர் முன்
அறமும் அறம் தோயும் அறிவும் நிரம்ப ஓது என்று அழகுடன் அன்று ஓதும் பெருமாளே

மேல்

#1088
குருதி சலம் தோலும் குடலுடன் என்பு ஆலும் குலவி எழும் கோலம்தனில் மாய
கொடுமையுடன் கோபம் கடு விரகம் சேரும் குண உயிர் கொண்டு ஏகும்படி காலன்
கருதிடு நெடும் பாசம் கொடு வர நின்று ஆயும் கதற மறந்தேன் என்று அகலா முன்
கமலம் மலர்ந்து ஏறும் குகன் எனவும் போது உன் கருணை மகிழ்ந்து ஓதும் கலை தாராய்
நிருதர் தளம் சூழும் பெரிய நெடும் சூரன் நினைவும் அழிந்து ஓடும்படி வேலால்
நிகரில் அதம் பார் ஒன்று இமையவர் நெஞ்சால் நின் நிலை தொழ நின்றே முன் பொரு வீரா
பருதியுடன் சோமன் படியை இடந்தானும் பரவி விடம் தான் உண்டு எழு பாரும்
பயம் அற நின்று ஆடும் பரமர் உளம் கூரும் பழ மறை அன்று ஓதும் பெருமாளே

மேல்

#1089
இருவினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை எடும்எடும் என வீட்டில் அனைவோரும்
இறுதி இடுகாட்டில் அழுது தலைமாட்டில் எரிய எரிமூட்டி இடுமாறு
கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக மாட்டி அழையா முன்
கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள் காட்டி அருள்வாயே
பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி மணவாளா
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல் நாட்ட குமரேசா
அரு மறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட முருகோனே
அலை கடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1090
உறவின் முறையோர்க்கும் உறு துயரம் வாய்த்து உளம் உருகு தீர்த்து இ உடலூடே
உடலை முடிவாக்கு நெடியது ஒரு காட்டில் உயர் கனலை மூட்டி விட ஆவி
மறலி மறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி வடிவினொடு தாக்கி வளையா முன்
மனமும் உனி வேட்கை மிகவும் உன தாள்கள் மகிழ்வு இயல் கொடு ஏத்த மதி தாராய்
பிறை நுதலி சேல் கண் அமை அரிவை வேட்பு வரையில் மறவோர்க்கு மகவாக
பிறிது உருவில் வாய்த்து நிறை தினைகள் காத்த பிடியின் அடி போற்று மணவாளா
அறுகு பிறை ஆத்தி அலை சலமும் ஆர்த்த அடர் சடையினார்க்கு அறிவு ஈவாய்
அடர வரு போர்க்கை அசுரர் கிளை மாய்த்து அமரர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1091
அளக நிரை குலை அழிய விழி குவிய வளை கலகல என அமுத மொழி பதறி எழ அணி ஆரம்
அழகு ஒழுகு புளக முலை குழைய இடை துவள மிக அமுத நிலை அது பரவ அதி மோகம்
உளம் உருக வரு கலவி தரு மகளிர் கொடுமை எனும் உறு கபடம் அதனில் மதி அழியாதே
உலகு அடைய மயிலின் மிசை நொடி அளவில் வலம்வரும் உன் உபய நறு மலர் அடியை அருள்வாயே
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு மருதினொடு பொருது அருளும் அபிராமன்
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜயமகள் கொழுநன் மருக அமர் முடுகி வரு நிருதேசர்
தளம் முறிய வரை தகர அசுரர் பதி தலை சிதற தகனம் எழ முடுக விடு வடி வேலா
தரள மணி வடம் இலகு குறவர் திரு மகள் கணவ சகல கலை முழுதும் வல பெருமாளே

மேல்

#1092
அனகன் என அதிகன் என அமலன் என அசலன் என அபயன் என அதுலன் என அநுபாயன்
அடல் மதனன் என விசையன் என முருகன் என நெருடி அவர் பெயரும் இடை செருகி இசைபாடி
வனச மணி பணில மழை சுரபி சுரர் தரு நிகர் கை மகிப என தினை அளவு உளவும் ஈயா
மனிதர் கடைதொறும் உழலும் மிடி ஒழிய மொழி ஒழிய மனம் ஒழிய ஒரு பொருளை அருள்வாயே
இனன் நிலவு தலை மலைய அடியின் உகிர் இலைகள் என இரு சதுர திசையில் உரகமும் வீழ
இரணிய சயிலம் ரசித சயில மரகத சயிலம் என விமலை யமுனை என நிழல் வீசி
ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி எழல் பொதிய மிசை படர் கோல
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1093
குடரும் மலசலமும் இடையிடை தடியும் உடை அளவு கொழுவும் உதிரமும் வெளிறு அளறுமாக
கொளகொள என அளவில் புழு நெளுநெளு என விளை குருதி குமுகுமு என இடை வழியில் வர நாறும்
உடலின் மணம் மலி புழுகு தடவி அணிகலம் இலக உலகம் மருள் உற வரும் அரிவையார் அன்பு
ஒழிய வினை ஒழிய மனம் ஒழிய இருள் ஒழிய எனது ஒழிவில் அகல் அறிவை அருள்புரிவாயே
வட கனக சயிலம் முதலிய சயிலம் என நெடிய வடிவும் கொளு நெடிய விறல் மருவாரை
வகிரும் ஒரு திகிரி என மதி முதிய பணிலம் என மகர சல நிதி முழுகி விளையாடி
கடல் உலகை அளவு செய வளரும் முகில் என அகில ககன முகடு உற நிமிரும் முழு நீல
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1094
குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ஒரு கோடி
குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது கொடிய இருவினை எனும் அளறு போக
உதறி விதறிய கரண மரணம் அற விரணம் அற உருகி உரை பருகி அநுதின ஞான
உணர்வு விழி பெற உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள்புரிவாயே
சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என உரக பிலம் ஏழும்
செக தலமு நிகர் சிகரி பலவு நல கெச புயக திசையும் உடன் உருக வரு கடை நாளில்
கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என முடிவில் ககன முகடு அதில் ஓடும்
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1095
வதை பழகு அ மறலி விறல் மதனன் வழிபடுதும் என வயிரம் மரகத மகரம் அளவாக
வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலக விழி வளை இளைஞர் உயிர் கவர வரும் மாய
இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறி ஒழுகி எழு பிறவி நெறி ஒழிய வழி காணா
இடர்கள் படு குருடன் எனை அடிமை கொள மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே
பத உகளம் மலர் தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா முப்பழமும்
இனிது உதவி முனி பகர வட சிகரி மிசை பரிய தனி எயிறு கொண்டு குருநாடர்
கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதி வேக
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1096
விடம் அளவி அரி பரவு விழி குவிய மொழி பதற விதறி வளை கலகல என அநுராகம்
விளைய ம்ருகமத முகுள முலை புளகம் எழ நுதலில் வியர்வு வர அணி சிதற மது மாலை
அடர் அளகம் அவிழ அணி துகில் அகல அமுது பொதி இதழ் பருகி உருகி அரிவையரோடே
அமளி மிசை அமளி பட விரக சலதியில் முழுகி அவசமுறுகினும் அடிகள் மறவேனே
உடலும் முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிரம் உரகர் பிலம் முடிய ஒரு பதம் ஓடி
உருவ முது ககன முகடு இடிய மதி முடி பெயர உயர அகில புவனம் அதிர வீசி
கடக கர தலம் இலக நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமொடு அழகுடன் ஆடும்
கலப கக மயில் கடவி நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே

மேல்

#1097
எழு பிறவி நீர் நிலத்தில் இருவினைகள் வேர் பிடித்து இடர் முளைகளே முளைத்து வளர் மாயை
எனும் உலவையே பணைத்து விரக குழையே குழைத்து இருள் இலைகளே தழைத்து மிக நீளும்
இழவு நனையே பிடித்து மரண பழமே பழுத்து இடியும் உடல் மா மரத்தின் அரு நீழல்
இசையில் விழ ஆதிபத்தி அழியும் முனமே எனக்கு இனியது ஒரு போதகத்தை அருள்வாயே
வழுவு நெறி பேசு தக்கன் இசையும் மக சாலை உற்ற மதி இரவி தேவர் வக்ர படையாளி
மலர் கமல போனி சக்ர வளை மருவு பாணி விக்ரம் மறைய எதிர் வீர உக்ரர் புதல்வோனே
அழகிய கலாப கற்றை விகட மயில் ஏறி எட்டு அசலம் மிசை வாகை இட்டு வரும் வேலா
அடல் அசுரர் சேனை கெட்டு முறிய மிக மோதி வெட்டி அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1098
நடை உடையிலே உருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை
நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி
வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி மதனன் உடை ஆகமத்தின் அடைவாக
மருவி உளமே இருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ
இடையர் மனைதோறு நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே
இறுகிட அசோதை கட்ட அழுதிடு கோபால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா
அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா
அவுணர் குலம் வேரறுத்து அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1099
மடல் அவிழ் சரோரகத்து முகிழ் நகையிலே வளைத்து மத சுக ப்ரதாப சித்ர முலையாலே
மலர் அமளி மீது அணைத்து விளையும் அமுதாதரத்தை மனம் மகிழவே அளித்து மறவாதே
உடல் உயிர் அதாய் இருக்க உனது எனது எனா மறிக்கை ஒரு பொழுது ஒணாது சற்றும் எனவே தான்
உரை செய் மடவார் அளித்த கலவி தரு தோதகத்தை ஒழிய ஒரு போதகத்தை அருள்வாயே
தட மகுட நாக ரத்ந பட நெளிய ஆடு பத்ம சரண யுக மாயனுக்கு மருகோனே
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய் நடத்து மயில் வீரா
அடல் மருவு வேல் கரத்தில் அழகு பெறவே இருத்தும் அறுமுகவ ஞான தத்வ நெறி வாழ்வே
அசுரர் குல வேரை வெட்டி அபயம் என ஓலமிட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே

மேல்

#1100
அங்கதன் கண்டகன் பங்கு இலன் பொங்கு நெஞ்சு அன்பிலன் துன்பவன் புகழ் வாரா
அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து அங்குமிங்கும் திரிந்து இரை தேடும்
சங்கடம் கொண்ட வெம் சண்டி பண்டன் பெரும் சஞ்சலன் கிஞ்சுகம் தரு வாயார்
தம் தொழும்பன் தழும்பன் பணிந்து என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ
கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும்
கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர்
பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த வெம் குண்டர்தம் குல காலா
பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே

மேல்

#1101
தந்தமும் துன்ப வெம் சிந்தை கொண்டு அந்தகன் தண்ட ஒன்ற அன்று ஒடுங்கிடும் ஆவி
தஞ்சம் என்றும் பரிந்து இன் சொல் வஞ்சம் தெரிந்து அன்றும் என்றும் தனம்தனை நாடி
நின்தன் அன்பு என்பது ஒன்று இன்றி நன்று என்று நெஞ்சின்கண் நண்பு ஒன்று இல் மங்கையர் நேசம்
நின்று அளந்தும் சளம் கொண்டிடும் புன்கண் நந்த இன்பம் ஒன்று இன்றி இங்கு உழல்வேனோ
சுந்தரன் பந்தமும் சிந்த வந்து அன்புடன் தொண்டன் என்று அன்று கொண்டிடும் ஆதி
தும்பை செம்பொன் சொரிந்து தரும் கொன்றை துன்பம் கடிந்து என்பொடும் தொலையா நீர்
அந்தம் உந்து இந்துவும் கெந்தம் மிஞ்சும் கொழுந்து அன்றும் இன்றும் புனைந்திடும் வேணி
அன்பர் நெஞ்சு இன்புறும் செம் சொலன் கந்தன் என்று அண்டர் அண்டமும் தொழும் பெருமாளே

மேல்

#1102
உம்பரார் அமுது எனும் தொண்டை வாய் அமுதம் உண்டுஉண்டு மேகலை கழன்று அயலாக
உந்தி வாவியில் விழுந்து இன்பமா முழுகி அன்பு ஒன்று இலாரொடு துவண்டு அணை மீதே
செம்பொன் ஆர் குடம் எனும் கொங்கை ஆபரணமும் சிந்த வாள் விழி சிவந்து அமராட
திங்கள் வேர்வுற அணைந்து இன்ப வாரியில் விழும் சிந்தையேன் எனவிதம் கரை சேர்வேன்
கொம்பு நாலு உடைய வெண் கம்பம் மால் கிரி வரும் கொண்டல் புலோமசையள் சங்க்ரம பார
கும்பம் மால் வரை பொருந்து இந்த்ரபூபதி தரும் கொண்டல் ஆனையை மணம் செயும் வீரா
அம்புராசியும் நெடும் குன்றும் மா மரமும் அன்று அஞ்ச வானவர் உறும் சிறை மீள
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம் இருந்து அம் கை வேலுற விடும் பெருமாளே

மேல்

#1103
வண்டு தான் மிக இடம் கொண்ட கார் அளகம் மென் பந்தி மா மலர் சொரிந்து உடை சோர
வம்பு சேர் கனி பொருந்தி இன்ப வாய் அமுது அருந்த அந்த மா மதன் நலம் விதமாக
விண்டு மேனிகள் துவண்டு அன்றில் போல் உள இரண்டு ஒன்றுமாய் உற அழிந்து அனுபோகம்
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே
பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக செம் பைம்பொன் மா நகரில் இந்திரன் வாழ்வு
பண்பு எலாம் மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து அன்பின் ஓர் அகம் அமர்ந்திடுவோனே
அண்டர் தாம் அதி பயம் கொண்டு வாடிட நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன்
அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு அங்கை வேலுற விடும் பெருமாளே

மேல்

#1104
காதல் மோகம் தரும் கோதைமார் கொங்கை சிங்கார நாகம் செழும் கனி வாய் கண்
காள கூடம் கொடும் கால ரூபம் பொரும் காம பாணம் சுரும்பினம் வாழும்
ஓதி கார் செம் சொல் மென் பாகு தேன் என்று அயர்ந்து ஓம் நமோ கந்தா என்று உரையாதே
ஊசலாடும் புலன் தாரியே சென்று நின்று ஓயும் ஆறு ஒன்றையும் கருதாதோ
தாதகி சண்பகம் பூகம் ஆர் கந்த மந்தாரம் வாசந்தி சந்தன நீடு
சாம வேதண்டம் வெம் கோப கோதண்டம் சந்தானம் மாது எங்கள் பைம் புனம் மேவும்
தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி
தேவி பாகம் பொருந்து ஆதி நாதன் தொழும் தேசிகா உம்பர்தம் பெருமாளே

மேல்

#1105
கோலகாலத்தை விட்டு ஆசு பாட கொடி கோவை பாட கொடி கொடி வாதில்
கோடி கூள கவி சேனை சாட கெடி கூறு காள கவி புலவோன் யான்
சீல கால புயல் பாரிசாதம் தரு த்யாக மேரு பொருப்பு என ஓதும்
சீதரா சித்ர வித்தாரமே செப்பிட கேள் எனா நிற்பதை தவிர்வேனோ
ஆலகால பணி பாயல் நீள படுத்து ஆரவார கடற்கு இடை சாயும்
ஆழி மாலுக்கு நல் சாம வேதற்கும் எட்டாத ரூபத்தினில் சுடர் ஆய
காலகால ப்ரபு சாலும் மாலுற்று உமைக்காக வேளை புக கழுநீரால்
காதும் வேழ சிலை பாரம் மீன கொடி காம வேள் மைத்துன பெருமாளே

மேல்

#1106
ஞாலமோடு ஒப்ப மக்காள் எனா நல் சொலை தீது எனா நல் தவத்து அணைவோர்தம்
நாதமோடு உள் கருத்து ஓடவே தர்க்கமிட்டு ஓயும் நாய் ஒப்பவர்க்கு இளையாதே
நீல மேனி குல தோகை மேல் உற்று நிட்டூர சூர் கெட்டு உக பொரும் வேலா
நேசமாய் நித்த நின் தாளை நீள் அச்சம் அற்று ஓத நீதி பொருள் தரவேணும்
கோல வாரிக்கு இடை கோப அராவில் படுத்தானும் வேத குலத்து அயனாரும்
கூறும் வான புவிக்கு ஊறு தீர குறிப்பு ஓதுறா நிற்ப அ கொடிதான
காலன் மார்பு உற்று உதைத்தானும் ஓர் கற்பு உடை கோதை காம கடற்கு இடை மூழ்க
காவி சேர் கொத்தலார் பாணம் ஏய் வித்தக காம வேள் மைத்துன பெருமாளே

மேல்

#1107
கரவு சேர் மகளிர் குங்கும பயோதர தனங்களின் அறா துயில்வதும் சரி பேசும்
கர சரோருகம் நகம் பட விடாய் தணிவதும் கமல நாபியின் முயங்கிய வாழ்வும்
அரவு போல் இடை படிந்து இரவெலாம் முழுகும் இன்ப நல் மகா உததி நலம் பெறுமாறும்
அதர பான அமுதமும் தவிரவே மவுன பஞ்சர மனோலய சுகம் தருவாயே
பரவும் ஆயிரம் முகம் கொடு திசா முக தலம் படர் பகீரதி விதம் பெற ஆடல்
பயில் பணா வனம் உகந்த குண மாகண கணம் பனி நிலா உமிழும் அம்புலி தாளி
குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம்
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே

மேல்

#1108
வடிவ வேல்தனை வெகுண்டு இளைஞர் ஆவியை வளைந்து அமர்செய் வாள் விழியர் நெஞ்சினில் மாயம்
வளர மால்தனை மிகுந்தவர்கள் போல் அளவி வந்து அணுகும் மா நிதி கவர்ந்திடு மாதர்
துடியை நேர் இடை தனம் துவளவே துயில் பொருந்து அமளி தோய்பவர் வசம் சுழலாதே
தொலைவு இலா இயல் தெரிந்து அவலமானது கடந்து உனது தாள் தொழ மனம் தருவாயே
படி எலாம் முடிய நின்று அருளும் மால் உதவும் பங்கயனும் நான்மறையும் உம்பரும் வாழ
பரவை ஊடு எழு விடம் பருகி நீள் பவுரி கொண்டு அலகையோடு எரி பயின்று எருது ஏறி
கொடிய வாள் அரவு இளம் பிறையினோடு அலை சலம் குவளை சேர் சடையர்தம் திரு மேனி
குழைய ஆதரவுடன் தழுவு நாயகி தரும் குமரனே அமரர்தம் பெருமாளே

மேல்

#1109
கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும் ஓர் கால் அளவாவே
கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி தான் மாய உயர் காலன்
இட்ட ஒரு தூதாளும் முட்ட வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன்
எத்தி உனை நாள்தோறும் முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே
துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் தொக்கில் நெடு மா மார்பு தொளையாக
தொட்ட வடி வேல் வீர நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே
மட்டு மரை நால்வேதன் இட்ட மலர் போல் மேவ மத்த மயில் மீது ஏறி வரு நாளை
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே

மேல்

#1110
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் பத்தியுடன் மேல் மூடி இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு நெடிது ஓர் பாடை பற்றி அணைவோர் கூடி அலை நீரில்
புக்கு முழுகா நீடு துக்கம் அது போய் வேறு பொன் தி இடவே ஆவி பிரியா முன்
பொன் கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே
இக்கன் உகவே நாடு முக்கணர் மகா தேவர் எப்பொருளும் ஆம் ஈசர் பெருவாழ்வே
எட்ட அரிது ஓர் வேலை வற்ற முது சூர் மாள எட்டி எதிரே ஏறும் இகல் வேலா
மக்களொடு வான் நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்தபடி மாறாத பெருமாளே

மேல்

#1111
நீரு நிலம் அண்டாத தாமரை படர்ந்து ஓடி நீளம் அகலம் சோதி வடிவான
நேச மலரும் பூவை மாதின் மணமும் போல நேர் மருவி உண் காதலுடன் மேவி
சூரியனுடன் சோமன் நீழல் இவை அண்டாத சோதி மருவும் பூமி இவையூடே
தோகை மயிலின் பாகனாம் என மகிழ்ந்து ஆட சோதி அயிலும் தாரும் அருள்வாயே
வாரி அகிலம் கூச ஆயிர பணம் சேடன் வாய் விட ஒடு எண் பாலும் உடு போல
வார் மணி உதிர்ந்து ஓடவே கவின் நிறைந்து ஆட மா மயில் விடும் சேவல் கொடியோனே
ஆரியன் அவன் தாதை தேடி இனமும் பாடும் ஆடல் அருணம் சோதி அருள் பாலா
ஆனை முகவன் தேடி ஓடியெ அண அம் காதல் ஆசை மருவும் சோதி பெருமாளே

மேல்

#1112
சுட்டது போல் ஆசை விட்டு உலகாசார துக்கம் இலா ஞான சுகம் மேவி
சொல் கரணாதீத நிற்குணம் உடாடும் சுத்த நிராதார வெளி காண
மொட்டு அலர் வாரீச சக்ர சடாதார முட்டவும் மீது ஏறி மதி மீதாய்
முப்பதும் ஆறுஆறும் முப்பதும் வேறான முத்திரையாம் மோனம் அடைவேனோ
எட்டவொணா வேதனத்தொடு கோகோ என பிரமா ஓட வரை சாய
எற்றிய ஏழு ஆழி வற்றிட மாறு ஆய எத்தனையோ கோடி அசுரேசர்
பட்டு ஒரு சூர் மாள விக்ரம வேல் ஏவு பத்து இரு தோள் வீர தினை காவல்
பத்தினி தோள் தோயும் உத்தம மாறாது பத்தி செய் வான் நாடர் பெருமாளே

மேல்

#1113
மைச்சுனமார் மா மனைச்சியும் மாதாவும் மக்களும் மாறா துயர்கூர
மட்டு இலது ஓர் தீயில் இ குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக மதி மாய
நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு நெட்டு அளவாம் வாதை அணுகா முன்
நெக்கு உருகா ஞானமுற்று உன தாள் ஓதி நித்தலும் வாழுமாறு தருவாயே
நச்சணை மேல் வாழும் அச்சுதன் நால்வேதன் நல் தவர் நாட விடை ஏறி
நல் புதல்வா சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ஞாலம் மிக வாழ
பச்செனு நீள் தோகை மெய் பரி ஊர் பாக பத்தியது ஆறு முக நாளும்
பக்ஷமும் மேலாய ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே

மேல்

#1114
தத்துவத்து செயலொடு ஒட்டில் பட்ட குருகு சத்து விட்டப்படி போல் அடியேனும்
சச்சிலுற்று படியில் விட்டுவிட்டு குளறி சத்துவத்தை பிரியவிடும் வேளை
சுத்த முத்த பதவி பெற்ற நல் பத்தரொடு தொக்கு சற்று கடையன் மிடி தீர
துப்பு முத்து சரண பச்சை வெற்றி புரவி சுற்றி விட்டு கடுகி வரவேணும்
வித்தக அத்தி பவள தொப்பை அப்பற்கு இளைய வெற்றி சத்தி கர அக முருகோனே
வெற்பும் எட்டு திசையும் வட்டமிட்டு சுழல விட்ட பச்சை சரண மயில் வீரா
கத்தர் நெட்டு சடையர் முக்கண் நக்க கடவுள் கச்சி அப்பர்க்கு அருள் குருநாதா
கற்ப தத்தைக்கு உருகி உன் பதத்து குறவர் கற்பினுக்கு உற்று புணர் பெருமாளே

மேல்

#1115
மக்கள் ஒக்கல் தெரிவை பக்க மிக்க துணைவர் மற்றும் உற்ற குரவர் அனைவோரும்
வைத்த செப்பில் பணமும் ரத்நம் முத்தில் பணியும் மட்டும் அற்று பெருகும் அடியாரும்
புக்கு துக்கித்து எரிகள் தத்த வைக்க புகுது பொய்க்கு மெய்க்கு செயலும் உருகாதே
புஷ்பம் இட்டு கருணை நல் பதத்தை பரவு புத்தி மெத்த தருவது ஒரு நாளே
செக்கர் கற்றை சடையில் மிக்க கொக்கின் சிறகு செக்கம் உற்ற சலமும் மதி சூடி
சித்தம் உற்று தெளிய மெத்தமெத்த திகழு சித்த முத்தி சிவமும் அருள்வோனே
கொக்கு உறுப்பு கொடு மை நிற்கும் வட்டத்து அசுரை கொத்தின் ஒக்க கொலை செய் வடி வேலா
கொற்றம் வெற்றி பரிசை ஒட்டி எட்டி சிறிது குத்தி வெட்டி பொருத பெருமாளே

மேல்

#1116
உற்பாதம் பூத காயத்தே ஒத்து ஓடி தத்து இயல் காலை
உள் பூரித்தே சற்றேசற்றே உக்காரித்து அற்புதன் நேரும்
அற்பாய் இல் தாய் நிற்பாரை போல பாவித்து திரிவேனுக்கு
அ பாசத்தால் எட்டா அப்பாலை போதத்தை புரிவாயே
பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காக போய் முட்டி கிரி சாடி
புக்கு ஆழி சூழ் கிட்டாகி சூர் பொட்டாக குத்திய வேலா
முன் பாட பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்க பொருள் ஈவாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1117
எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எயிற்றார்
கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன்
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான்
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1118
செட்டாக தேனை போல சீரை தேடி திட்பம் அதாக
திக்காமல் பாடு உற்றாரில் சீர் உற்றாருக்கு சில பாடல்
பெட்டாக கூறி போதித்தாரை போல் வப்புற்று உழலாதே
பெற்றாரில் சார் உற்றாய் நல் தாள் சற்று ஓத பெற்றிடுவேனோ
எட்டா நெட்டாக தோகைக்கே புக்கு ஒலத்திட்டு இமையோர் வானில்
பாரில் சுழ சூரை தான் எட்டா வெட்டி பொரும் வேலா
முட்டாமல் தாளை சேவிப்பார் முன் பாவத்தை களைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1119
பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன மா
கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி
ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசுற்றே முற்ற தடுமாறும்
ஒட்டார பாவிக்கே மிக்காம் உன் தாள் கிட்ட தகுமோ தான்
கள் தாவி போதுள் உள் தாவி பூக காவில் புக்கு அளி பாடும்
கற்பு ஊர் நல்சார் அ காழி தோய் கத்தா சத்தி தகவோடே
முட்டாக கூரிட்டு ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1120
பத்து ஏழெட்டு ஈரெட்டு ஏழ்ரட்டால் வைத்தே பத்தி பட வேயும்
பை பீறல் கூரை பாச தா சற்காரத்துக்கு இரை தேடி
எ தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி
எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ
சத்தே முற்றாய் அ தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா
சட்சோதி பூதி பாலத்தா அ கோடல் செச்சைய மார்பா
முத்தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1121
பொன் கோவைக்கே பல் கோவைக்கே பொய் போகத்தை பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தாகி போகித்தேகைக்கு பொருள் தேடி
தெற்கு ஓடி காசிக்கு ஓடி கீழ் திக்கு ஓடி பச்சிமமான
திக்கி ஓடி பாணிக்கு ஓடி தீவுக்கு ஓடி கெட்டிடலாமோ
தற்கோலி பாவிப்பார் நல் சீரை சார தற்பரம் ஆனாய்
தப்பா முப்பாலை தேடி தேசத்தார் நிற்க தகையோடே
முன் கான பேதைக்காக போய் முன் பால் வெற்பில் கணி ஆனாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1122
பொன் பூவை சீரை போல போத பேசி பொன் கனி வாயின்
பொய் காமத்தே மெய்க்கு ஆம் அ பூணை பூண் வெற்பில் துகில் சாய
கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கைக்குத்து இடும் மாதர்
கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப்படுவேனோ
சொல் கோலத்தே நல் காலை சேவிப்பார் சித்தத்து உறைவோனே
தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா
முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1123
மெய்க்கு ஊணை தேடி பூமிக்கே வித்தாரத்தில் பலகாலும்
வெட்காமல் சேரி சோரர்க்கே வித்து ஆசை சொல்களை ஓதி
கைக்காணி கோணல் போதத்தாரை போல கற்பு அழியாது உன்
கற்பு ஊடுற்றே நல் தாளை பாடற்கே நல் சொல் தருவாயே
பொய் கோள் நத்து ஆழ் மெய் கோணி போய் முற்பால் வெற்பில் புன மானை
பொன் தோளில் சேர்க்கைக்காக பாத தாள் பற்றி புகல்வோனே
முக்கோண தானத்தாளை பால் வைத்தார் முத்த சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே

மேல்

#1124
அகர முதல் என உரை செய் ஐம்பந்தொரு அக்ஷரமும் அகில கலைகளும் வெகு விதம் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்கும் தனி பொருளை எப்பொருளும் ஆய
அறிவை அறிபவர் அறியும் இன்பம்தனை துரிய முடிவை அடி நடு முடிவில் துங்கம்தனை சிறிய
அணுவை அணுவினின் மலமும் நெஞ்சும் குண த்ரியமும் அற்றது ஒரு காலம்
நிகழும் வடிவினை முடிவில் ஒன்று என்று இருப்பதனை நிறைவு குறைவு ஒழிவு அற நிறைந்து எங்கும் நிற்பதனை
நிகர் பகர அரியதை விசும்பின் புர த்ரயம் எரித்த பெருமானும்
நிருப குருபர குமர என்றென்று பத்தி கொடு பரவ அருளிய மவுன மந்த்ரந்தனை பழைய
நினது வழி அடிமையும் விளங்கும்படிக்கு இனிது உணர்த்தி அருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையும் யாவும்
மொகுமொகு என அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர் அலகை கரணம் இட உலகு எங்கும் ப்ரமிக்க நடம்
முடுகு பயிரவர் பரிவு கொண்டு இன்புற படு களத்தில் ஒரு கோடி
முது கழுகு கொடி கருடன் அங்கம் பொர குருதி நதி பெருக வெகு முக கவந்தங்கள் நிர்த்தமிட
முரசு அதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசு அளித்த பெருமாளே

மேல்

#1125
அரிய வஞ்சகர் அறவே கொடியவர் அவலர் வன்கணர் இனியார்
அவகுணர் அசடர் அன்பிலர் அவமே திரிபவர் அதி மோக
அலையில் மண்டிய வழியே ஒழுகியர் வினை நிரம்பிடு பவமே செறிபவர்
அருள் துறந்தவர் இடம் வாழ் சவலைகள் நரகு ஏற
உரிய சஞ்சல மதியானது பெறு மன இடும்பர்கள் இடம் ஏது என அவர்
உபய அங்கமும் நிலையாகிட ஒரு கவியாலே
உலகம் உண்டவர் மதனார் இமையவர் தரு எனும்படி மொழியா அவர் தர
உளது கொண்டு உயிர் அவமே விடுவது தவிராதோ
கரிய கொந்தள மலையாள் இரு தன அமுது உணும் குரு பரனே திரை படு
கடல் அடும்படி கணை ஏவிய அரி மருகோனே
கருணை கொண்டு ஒரு குற மா மகள் இடை கலவி தங்கிய குமரா மயில் மிசை
கடுகி எண் திசை நொடியே வலம்வரும் இளையோனே
திரிபுரம் கனல் நகையால் எரி செய்து பொது நடம்புரி அரனார் இடம் உறை
சிவை சவுந்தரி உமையாள் அருளிய புதல்வோனே
சிகர வெண் கரி அயிராவத மிசை வரு புரந்தரன் அமராபதி அவர்
சிறை விடும்படி வடி வேல் விட வல பெருமாளே

மேல்

#1126
ஆராத காதலாகி மாதர் தம் ஆபாத சூடம் மீதிலே விழியால் ஆலோலனாய் விகாரமாகி இலஞ்சியாலே
ஆசா பசாசு மூடி மேலிட ஆசார ஈனனாகியே மிக ஆபாசன் ஆகியே ஓடி நாளும் அழிந்திடாதே
ஈராறு தோளும் ஆறு மா முகமோடு ஆரும் நீப வாச மாலையும் ஏறான தோகை நீல வாசியும் அன்பினாலே
ஏனோரும் ஓதுமாறு தீது அற நான் ஆசு பாடி ஆடி நாள்தொறும் ஈடேறுமாறு ஞான போதகம் அன்புறாதோ
வாராகி நீள் கபாலி மாலினி மா மாயி ஆயி தேவி யாமளை வாசா மகோசரா பராபரை இங்கு உள ஆயி
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி
சூராரி மா புராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாசலாதி லோக நாயகி தந்த வாழ்வே
தோளாலும் வாளினாலும் மாறிடு தோலாத வான நாடு சூறை கொள் சூராரியே விசாகனே சுரர் தம்பிரானே

மேல்

#1127
ஆராதனர் ஆடம்பரத்தும் மாறாது சவ ஆலம்பனத்தும் ஆவாகன மா மந்திரத்து மடலாலும்
ஆறார் தெச மா மண்டபத்தும் வேதாகமம் ஓதும் தலத்தும் ஆமாறு எரிதாம் இந்தனத்தும் மருளாதே
நீராளகம் நீர் மஞ்சனத்த நீள் தாரக வேதண்ட மத்த நீ நான் அற வேறு அன்றி நிற்க நியமாக
நீ வா என நீ இங்கு அழைத்து பாரா வரம் ஆனந்த சித்தி நேரே பரமாநந்த முத்தி தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாரா கணம் பூதம் களிக்க வேதாள சமூகம் பிழைக்க அமராடி
வேதா முறையோ என்று அரற்ற ஆகாச கபாலம் பிளக்க மா மர மூல வேர் தறித்து வடவா ஆலும்
வாராகரம் ஏழும் குடித்து மா சூரொடு போர் அம்பு அறுத்து வாணாசனம் மேலும் துணித்த கதிர் வேலா
வான் நாடு அரசாளும்படிக்கு வாவா என வா என்று அழைத்து வானோர் பரிதாபம் தவிர்த்த பெருமாளே

மேல்

#1128
ஆலாலத்தை அழுத்திய வேல் போல் நல் குழையை பொருது ஆகாரை தொடர் கைக்கு எணும் விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் தலையிட்டு அறிவார் போக செயல் விச்சைகள் விலை கூறி
கோலாலம் கணம் இட்டு வராதார் நெக்குருக பொருள் கூறாக பெறில் நிற்கவும் இலது ஆனார்
கூடா நட்பும் உரைத்திடு கேடு ஆக விட்டு அகல் மட்டைகள் கோமாள துயர் உட்பயம் உறலாமோ
பாலாம் அ கடலில் துயில் மாலோர் எட்டு தலை கிரி பால் பார்வைக்கு அளவிட்டும் ஐயுறுபோதில்
பார் மேல் இக்கன் உடல் பொறியாய் வீழ சுடும் வித்தகர் பாலா பத்தர் இடத்து இயல் பயில்வோனே
மேல் ஆயத்தொடு திக்கு அடை மேவார் வெற்பொடு அரக்கரை வேர் மாள பொருதிட்ட ஒளிவிடும் வேலா
மேல் நாடர் சிறை விட்டு அருள் மீளா விக்கிரமத்தொடு வேதாவை சிறை இட்டு அருள் பெருமாளே

மேல்

#1129
ஆனாத ஞான புத்தியை கொடுத்ததும் ஆராயு நூல்களில் கருத்து அளித்ததும்
ஆதேச வாழ்வினில் ப்ரமித்து இளைத்து உயிர் அழியாதே
ஆசா பயோதியை கடக்கவிட்டதும் வாசா மகோசரத்து இருத்துவித்ததும்
ஆபாதனேன் மிக ப்ரசத்தி பெற்று இனிது உலகு ஏழும்
யான் ஆக நாம அற்புத திருப்புகழ் தேன் ஊற ஓதி எ திசை புறத்தினும்
ஏடு ஏவு ராஜதத்தினை பணித்ததும் இடர் ஆழி
ஏறாத மா மலத்ரய குணத்ரய நானா விகார புற்புதம் பிறப்பு அற
ஏது ஏமமாய் எனக்கு அநுக்ரகித்ததும் மறவேனே
மா நாகம் நாண் வலுப்புற துவக்கி ஒர் மா மேரு பூதர தனு பிடித்து ஒரு
மால் ஆய வாளியை தொடுத்து அரக்கரில் ஒரு மூவர்
மாளாது பாதகம் புரத்ரயத்தவர் தூளாகவே நுதல் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக வனம் மேவும்
தே நாயகா என துதித்த உத்தம வான் நாடர் வாழ விக்ரம திரு கழல்
சேராத சூரனை துணித்து அடக்கி அ வரை மோதி
சேறு ஆய சோரி புக்கு அளக்கர் திட்டு எழ மாறா நிசாசர குலத்தை இப்படி
சீராவினால் அறுத்தறுத்து ஒதுக்கிய பெருமாளே

மேல்

#1130
இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே நிறைத்து
இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே
இனிமையுடன் பார்த்து உளே அழைத்து முகபடமும் சேர்த்து வார் அழுத்தும்
இரு வரையும் காட்டி மால் எழுப்பி விலைபேசி
மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே முடித்து
மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக
வரு பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும் அரிவையர்தம் பேச்சிலே முழுக்க
மனம் உருகும் தூர்த்தனாய் இளைத்து விடலாமோ
படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி நூல் இடைச்சி
பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி
படி கொடு அறம் காத்த மா பரைச்சி மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி
பல திசையும் போய் குலா விருப்பி நெடு நீலி
அடு புலியின் தோல் படாம் உடைச்சி சமர முகம் காட்டும் மால் விடைச்சி
அகிலம் உண்டார்க்கு நேர் இளைச்சி பெருவாழ்வே
அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க வாள் எடுத்த
அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே

மேல்

#1131
இடர் மொய்த்து தொடர் இல் பொய் குடில் அக்கிக்கு இடை இட்டு இனிமை சுற்றமும் மற்று புதல்வோரும்
இனம் ஒப்பித்து இசைய சொல் பல கத்திட்டு இழிய பிற்கு இடைய துக்கமும் விட்டுவிட்டு அவர் ஏக
விடம் மெத்த சொரி செ கண் சமன் வெட்ட தனம் உற்றிட்டு உயிர் வித்துத்தனை எற்றி கொடு போ முன்
வினை பற்று அற்று அற நித்தம் புதுமை சொல் கொடு வெட்சி புய வெற்றி புகழ் செப்ப பெறுவேனோ
அடர் செக்கர் சடையில் பொன் பிறை அப்பு புனை அப்பர்க்கு அறிவு ஒக்க பொருள் கற்பித்திடுவோனே
அலகைக்குள் பசி தித்த பலகை கொத்தது பட்டிட்டு அலற குத்துற முட்டி பொரும் வேலா
கடலுக்குள் படு சர்ப்பத்தினில் மெச்ச துயில் பச்சை கிரி கைக்குள் திகிரி கொற்றவன் மாயன்
கமலத்தில் பயில் நெட்டை குயவற்கு எண் திசையர்க்கு கடவுள் சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#1132
இரவினிடை வேள் தொடுத்து உடன்று முறுகு மலர் வாளியை பிணங்கி
இரு குழையும் மோதி அப்பு அடங்கு கடலோடே
எதிர் பொருது மானினை துரந்து சலதி கிழி வேல்தனை பொருந்தி
இனி அமுத ஆலம் உற்ற கண்கள் வலையாலே
முரண் இளைஞர் ஆவியை தொடர்ந்து விசிறி வளை மாதரை கலந்து
மொழி அதர கோவை இக்கு அருந்தி அமுதாகும்
முகிழ் முகுளி தாரம் வெற்பு அணைந்து சுழ மிதுன வாவியில் புகுந்து
முழுகி அழியாமல் நல் பதங்கள் தரவேணும்
திரை உலவு சாகரம் அத்து இலங்கை நகரில் உறை ராவணற்கு இயைந்த
தெச முடியும் ஈரு பத்து ஒழுங்கு திணி தோளும்
சிதைய ஒரு வாளியை துரந்த அரி மருக தீது அற கடந்து
தெளி மருவு காரணத்து அமர்ந்த முருகோனே
அரணம் மதிள் சூழ் புரத்து இருந்து கருதும் ஒரு மூவருக்கு இரங்கி
அருளும் ஒரு நாயகன் பணிந்த குருநாதா
அகல் முடிவை ஆதியை தெளிந்து இரவுபகலாக நெக்கவிழ்ந்த
அடியவர்கள் பாடலுக்கு இசைந்த பெருமாளே

மேல்

#1133
இரவொடும் பகலே மாறாதே அநுதினம் துயர் ஓயாதேயே
எரியும் உந்தியினாலே மாலே பெரிதாகி
இரை கொளும்படி ஊடே பாடே மிகுதி கொண்டு ஒழியாதே வாதே
இடைகளின் சில நாளே போயே வயதாகி
நரைகளும் பெரிதாயே போயே கிழவன் என்றொரு பேரே சார்வே
நடைகளும் பல தாறே மாறே விழலாகி
நயனமும் தெரியாதே போனால் விடிவது என்று அடியேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாது அழிவேனோ
திரு நடம்புரி தாளீ தூளீ மகர குண்டலி மாரீ சூரீ
திரிபுரம் தழல் ஏவீ சார்வீ அபிராமி
சிவன் இடம் தரி நீலீ சூலீ கவுரி பஞ்சவி ஆயீ மாயீ
சிவை பெண் அம்பிகை வாலா சீலா அருள் பாலா
அரவம் கிங்கிணி வீரா தீரா கிரி புரந்து ஒளிர் நாதா பாதா
அழகு இளம் குறமானார் தேன் ஆர் மணவாளா
அரி அரன் பிரமாவோடே மூ வகையர் இந்திர கோமான் நீள் வான்
அமரர் கந்தருவானோர் ஏனோர் பெருமாளே

மேல்

#1134
இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் மால் ஆலகாலமும்
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று
இலகிய கூர் வேல் விலோசன ம்ருகமத பாடீர பூஷித
இள முலை மா மாதரார் வசம் உருகாதே
முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின்
முழுகி விடாய் போம் மனோலயம் வர ஓது
முழு மதி மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர
முகுளித ஞானோபதேசமும் அருள்வேணும்
அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என
அரி கரி நாராயணா என ஒரு பாலன்
அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ என
அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி
ஒரு கணை தூணோடு மோதிட விசை கொடு தோள் போறு வாள் அரி
உகிர் கொடு வாரா நிசாசரன் உடல் பீறும்
உலகு ஒரு தாள் ஆன மாமனும் உமை ஒரு கூறான தாதையும்
உரை தரு தேவாசுராதிபர் பெருமாளே

மேல்

#1135
இரு முலை மலை என ஒப்பிட்டே அவர் இரு விழி அதனில் அகப்பட்டே மனம்
இசை பட வசனம் உரைத்திட்டே பலம் இனிதோடே
இடை அது துவள குலுக்கி கால் அணி பரிபுர ஒலிகள் தொனிக்க பூதர
இள முலை குழைய அணைத்து கேயுர மணியோடே
மரகத பவளம் அழுத்தி பூஷணம் அணி பல சிதறி நெறித்து தான் உக
மரு மலர் புனுகு தரித்து பூ அணை மத ராஜன்
மருவிய கலவி தனக்கு ஒப்பாம் என மகிழ்வொடு ரசிது மிகுத்து கோதையை
மருவியும் உருகி களைத்து பூமியில் உழல்வேனோ
திரிபுரம் எரிய நகைத்து காலனை உதைபட மதனை அழித்து சாகர
திரை வரு கடுவை மிடற்றில் தான் அணி சிவனார்தம்
திரு அருள் முருக பெருத்து பாரினில் சியோதனன் மடிய மிகுத்து பாரத
செயமுறு அரிதன் மனத்துக்கு ஆகிய மருகோனே
நரி கழு அதுகள் களிக்க சோரிகள் ரண களம் முழுதும் மிகுத்து கூளிகள்
நடமிட அசுரர் குலத்து காலனை நிகர் ஆகி
நனி கடல் கதற பொருப்பு தூள் எழ நணுகிய இமையவருக்கு சீருற
நணு கலர் மடிய தொலைத்து பேர் பெறு பெருமாளே

மேல்

#1136
இலகிய வேலோ சேலோ ஒளி விடு வாளோ போதோ எமன் விடு தூதோ மானோ விடம் ஈதோ
என விழி கூறா வாரா அரிவையர் தோள் ஊடாடா இறுதியில் வேறாய் மாறா நினைவாலே
பலபல கோளாய் மாலாய் உழலும் அது ஆனால் வீணே படிறு சொல் ஆகா லோகாயதன் ஆகி
பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே பணிதியில் மூழ்கா மாயா விடுவேனோ
அலை கடல் கோகோ கோகோ என உரை கூறா ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி
மலை மிகு தோளா போதா அழகிய வாலா பாலா மகபதி வாழ்வே சேயே மயில் வீரா
மறை தொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே வளவிய வேளே மேலோர் பெருமாளே

மேல்

#1137
உமை எனும் மயில் பெற்ற மயில்வாகனனே வனிதையர் அறுவர்க்கும் ஒரு பாலகனே
உளம் உருகிய பத்தர் உறவே மறவேன் என ஓதி
உருகுதல் ஒரு சற்றும் அறியேன் வறியேன் இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன்
உணர்விலி பெற முத்தி தருவாய் துகிர் வாய் மட மாதர்
அமை என வளர் சித்ர இரு தோள் தழுவா அமுது என மதுரித்த கனி வாய் அணுகா
அமளியில் அணைவுற்ற அநுராக மகா உததி மூழ்கி
அநவரதமும் உற்ற மணி மா முலை தோய் கலவியின் நலம் அற்ப சுகம் ஆகினும் மா
அனுபவம் இது சற்றும் விடவோ இயலாது இயலாதே
தமனிய குல சக்ர கிரியோ கடலோ விடம் என முடி வைத்த முது பேர் இருளோ
தனு என முனை இட்ட கொலை மூ இலை வேல் கொடு பார்வை
தழல் எழ வரும் உக்ர எம பாதகனோ யுக இறுதியில் மிக்க வடவா அனலமோ
தனி இவன் என மிக்க பிசிதாசன பூபதியாகி
இமையவர் அனைவர்க்கும் அறையோஅறையோ அரி அயன் முழுதுக்கும் அறையோஅறையோ
எழு புவி உலகுக்கும் அறையோஅறையோ பொர வாரும்
என வரும் ஒரு துட்டன் முறையோமுறையோ வட குல கிரி எட்டும் அபிதாஅபிதா
என ஒரு அயில் தொட்ட அரசே இமையோர் பெருமாளே

மேல்

#1138
உரைத்த பற்றுடன் அடிகள் பணித்திட்டு இருத்தி மெத்தென இள நகையும் சற்று
உமிழ்த்த அடைக்கலம் என எதிர் கும்பிட்டு அணை மேல் வீழ்ந்து
உடுத்த பொன் துகில் அகல் அல்குலும் தொட்டு எடுத்து அணைத்து இதழ் பெருகு அமுதம் துய்த்து
உனக்கு எனக்கு என உருகி முயங்கிட்டு உளம் வேறாய்
அருக்கியத்து அனை எனும் அவசம்பட்டு அறுத்து ஒதுக்கிய நக நுதியும் தைத்து
அற பிதற்றிட அமளி கலங்க தடுமாறி
அளைத்து உழைத்து இரு விழிகள் சிவந்திட்டு அயர்த்து இதத்தொடு மொழிபவர் உந்திக்கு
அடுத்து அகப்படு கலவியில் நொந்து எய்த்திடலாமோ
தரை கடல் புகு நிருதர் தயங்க சளப்பட தட முடிகள் பிடுங்கி
தகர்த்து ஒலித்து எழு மலையொடு துண்ட பிறை சூடி
தனுக்கிரி திரிதர எதிரும் கொக்கினை பதைத்து உடல் அலறிட வஞ்ச தருக்கு
அடக்கிய சமர் பொரு துங்க தனி வேலா
பருப்பத ப்ரிய குறுமுனி வந்தித்து இருக்கும் உத்தம நிருதர் கலங்க
படை பெலத்தொடு பழய க்ரவுஞ்ச கிரி சாடி
படர் பறை குருகு உடல் உதிரம் குக்குட கொடிக்கு இடு குமர கொடுங்கல்
பதத்து உறுத்து உகு பசிய சிகண்டி பெருமாளே

மேல்

#1139
உலகத்தினில் மாதரும் மைந்தரும் உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
உயர் துக்கமுமோடு உறவு என்று வரு காலன்
உதிரத்துடனே சலம் என்பொடு உறுதிப்படவே வளரும் குடில்
உதிர கனல் மீது உற என்று எனை ஒழியா முன்
கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா உரை வென்று உயர்
கயவர்க்கு உளனாய் வினை நெஞ்சொடு களிகூரும்
கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து உன தாள் இணை அன்பொடு
கருதி தொழும் வாழ்வது தந்திட நினைவாயே
இலக பதினாலு உலகங்களும் இருளை கடி வான் எழும் அம்புலி
எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி
இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை அ பதியாகிய இன் சொலன்
இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே
மலை பட்டு இரு கூறு எழ வன் கடல் நிலைகெட்டு அபிதா என அம் சகர்
வலி அற்ற அசுரேசரும் மங்கிட வடி வேலால்
மலை வித்தக வானவர் இந்திரர் மலர் கைக்கொடு மாதவரும் தொழ
வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே

மேல்

#1140
உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற பறை திமிலை முழவின் இசை ஆகாசம் மீது உற
உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில்
உனது முக கருணை மலர் ஓராறும் ஆறிரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
உபய பதம் மிசை குலவு சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும்
மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட
மறலி படை யமபுரமும் மீது ஆடவே பொருது விருது பல முறைமுறையிலே ஊதி வாது செய்து
மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இஙன் வந்திடாயோ
பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலமிட
பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே திசையில் நின்ற நாகம்
பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ பெரியது ஒரு வயிறு உடைய மா காளி கூளியொடு
பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா
குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி
கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள்செய்
குமர குருபர அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே

மேல்

#1141
உறவு சிங்கிகள் காமாகாரிகள் முறை மசங்கிகள் ஆசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் நகரேகை
உடைய கொங்கையின் மீதே தூசிகள் பிணம் எனும்படி பேய் நீராகிய
உணவை உண்டு உடை சோர் கோமாளிகள் கடல் ஞாலத்து
அறவு நெஞ்சு பொலா மா பாவிகள் வறுமை தந்திடு பாழ் மூதேவிகள்
அணி நெருங்கிகள் ஆசா பாஷண மட மாதர்
அழகு உயர்ந்த பொய் மாயா ரூபிகள் கலவி இன்பம் எனாவே சோருதல்
அலம்அலம் தடுமாறாது ஓர் கதி அருள்வாயே
பறவை என்கிற கூடார் மூ அரண் முறை இடும் தமர் வானோர் தேர் அரி
பகழி குன்ற விலாலே நீறு எழ ஒரு மூவர்
பத நினைந்து விடாதே தாள் பெற அருள்புரிந்த பிரானார் மா பதி
பரவு கந்த சுவாமீ கானகம் அதில் மேவும்
குறவர் தங்கள் பிரானே மா மரம் நெறுநெறு என்று அடி வேரோடே நிலை
குலைய வென்றி கொள் வேலே ஏவிய புய வீரா
குயில்கள் அன்றில்கள் கூகூகூ என மலர்கள் பொங்கிய தேன் வீழ் கா மிசை
குறவர் சுந்தரியோடே கூடிய பெருமாளே

மேல்

#1142
ஊனோடு வாத உயிர் தரித்து மட்டு அற ஊசாடு பாழ் குடில் எடுத்து அதில் படி
ஓயாத மா மால் உழற்றினில் படு வம்பனேனை
ஊதாரியாய் விடு சமத்தில் நிற்பதும் ஆராத காதலை மனத்தில் வைப்பதும்
ஊரோடு போய் எதிர் பிணக்கில் நிற்பதும் உந்திடாதே
தேன் ஊறும் வாய் மொழி பரத்தையர்க்கு ஒரு நாய் போலவே அவர் வசத்தில் நிற்பதும்
சீர் கேடதாய் விடும் சிறுப்பிளைத்தனம் என்று நீப
சீதாள மா மலர் தொடுத்த பத்தர்கள் சீராடி நாள்மலர் என ப்ரியப்படும்
சீர் பாத போதகம் அநுக்ரகிப்பதும் எந்த நாளோ
மால் நாக பாயலில் படுக்கை இட்டவர் மா மேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய் வரும் இடை குலத்தவர் அன்று வாவிவாய்
நாகம் ஓலிட பிடித்த சக்கிர வாள் ஏவியே கரவினை தறித்தவர்
மா மாயனாய் உலகு அளித்த வித்தகர் தங்கை வாழ்வே
கான் ஆரு மா மலை தினை புலத்தினில் கால் மேல் விழா ஒரு குற சிறுக்கியை
காணாது போய் இயல் புணர்ச்சி இட்ட கந்தவேளே
கார் ஏழு மா மலை இடித்து உரு கெட கார் ஆழி ஏழு அவை கலக்கி விட்டு உயர்
காவான நாடர்கள் பகை சவட்டிய பெருமாளே

மேல்

#1143
எட்டுடன் ஒரு தொளை வாயாயது பசு மண் கலம் இருவினை தோய் மிகு பிணி
இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக
எப்படி உயர் கதி நாம் ஏறுவது என எள் பகிரினும் இது ஓரார் தம தமது
இச்சையின் இடருறு பேராசை கொள் கடல் அதிலே வீழ்
முட்டர்கள் நெறியினில் வீழாது அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும்
முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக
முக்குணம் அது கெட நானா என வரும் முத்திரை அழிதர ஆராவமுது அன
முத்தமிழ் தெரி கனி வாயால் அருளுவது ஒரு நாளே
திட்டென எதிர் வரு மாகாளியினொடு திக்கிட தரிகிட தீதோம் என ஒரு
சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன்
செப்புக என முனம் ஓதாது உணர்வது சிற்சுக பர ஒளி ஈதே என அவர்
தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குருநாதா
மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறிதரு
மல் புய மரகத மா தோகையில் நடம் இடுவோனே
வச்சிர கர தர வானோர் அதிபதி பொற்புறு கரி பரி தேரோடு அழகுற
வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே

மேல்

#1144
எத்தி இரு குழையை மோதி மீனம் அதில் முட்டி இடறி யமதூதர் போல முகில்
எட்டி வயவர் கர வாளை வேல் முனையை எதிர் சீறி
எ திசையினும் ஒரு காம ராஜன் மிக வெற்றி அரசுதனை ஆள வீசி அடல்
எற்றி இளைஞர் உயிர் கோலும் நீல விழி மட மாதர்
வித்தைதனில் உருகி ஆசை ஆகி அவர் கைக்குள் மருவு பொருள் ஆன ஆகும் வரை
மெத்தைதனில் உருகி மோகமாகி விட அதன் மேலே
வெட்கம் இலை நடவும் ஏகும்ஏகும் இனி மற்றவரை அழையும் மாதரே என முன்
விட்ட படிறிகள் தம் நேச ஆசை கெட அருள்வாயே
ஒத்த வரி கமுகு வாளை தாவு புனல் அத்தி நகரம் அரசான வாள் நிருபன்
ஒக்கு நினைவு முன் இலாமல் வாகு பெலம் நிலை கூற
உற்ற தருமன் அடல் வீமன் வேல் விசையன் வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாள் அமரில் அசுரேசன்
பத்து முடிகள் துகளாக வாகு இருபத்தும் ஒரு கணையில் வீழ நேர் அவுணர்
பட்டு மடிய அமர் மோதும் காள முகில் மருகோனே
பச்சை மயிலில் வரும் வீர வேல் முருக துட்ட நிருதர் குல கால வானவர்கள்
பத்தி உடன் அடியில் வீழ வாழ்வு உதவு பெருமாளே

மேல்

#1145
ஒக்க வண்டு எழு கொண்டை குலைந்திட வெற்பு எனும் கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட இந்த்ரகோபம்
ஒத்த தொண்டை துவண்டு அமுதம் தர மெச்சு தும்பி கரும் குயில் மென் புறவு
ஒக்க மென் தொனி வந்து பிறந்திட அன்புகூர
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில் விக்ரமம் செய்து இலங்கு நகம் பட
மெத்த மென் பொருள் அன்பு அளவும் துவள் இன்ப மாதர்
வித்தகம் தரு விந்து தபும் குழி பட்டு அழந்து நலங்கு குரம்பையை
விட்டு அகன்று நின் அம்புயம் மென் பதம் என்று சேர்வேன்
மை கரும் கடல் அன்று எரி மண்டிட மெய் க்ரவுஞ்ச சிலம்பு உடல் வெம்பிட
மற்று நல் பதி குன்றி அழிந்திட உம்பர் நாடன்
வச்சிரம் கை அணிந்து பதம் பெற மெச்சு குஞ்சரி கொங்கை புயம் பெற
மத்த வெம் சின வஞ்சகர்தங்களை நுங்கும் வேலா
குக்குடம் கொடி கொண்ட பரம்பர சக்ர மண்டலம் எண் திசையும் புகழ்
கொட்க கொன்றை அணிந்த சிரம் சரண் அங்கிகாரா
கொத்து அவிழ்ந்த கடம்பு அலர் தங்கிய மிக்க வங்கண கங்கண திண் புய
கொற்றம் அம் குற மங்கை விரும்பிய தம்பிரானே

மேல்

#1146
ஓதுவித்தவர் கூலி கொடாதவர் மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர்
ஊசலில் கனலாய் எரி காளையர் மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள் ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர் பூதலத்தினில் ஓரமனதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏக சித்த தியானம் இலாதவர் மோகம் முற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே
தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச சசசாச
தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி டிடிடீடீ
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு செகுசேகு
சே என பலர் ஆடிட மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே

மேல்

#1147
ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி நிறத்து மதர்த்து நெய்த்த அறல்
ஓதி நிழற்குள் அளி குலத்துடன் ஒன்றி ஞானம்
ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி வடுப்படுத்து அகியூடு
விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே
மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள் அகப்படுத்தி இல்
வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர்
மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருளுற்ற அக்ஷர
வாய்மை எனக்கும் இனித்து அருள்தந்திடாதோ
வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொலும் அ கணத்தினில்
வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே
வீச அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள் முற்பட
வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள
கால் அயில் அ கணை தொட்ட அருள் கன மால் அமைதி கரையில் தரித்து உலகு
ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல் தந்த காமன்
காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ நானில வித்த தினை புனத்து ஒரு
காதல் மிகுத்து மிக ப்ரமித்து அருள் தம்பிரானே

மேல்

#1148
கடை சிவந்து அகன்று உரை புகன்று இரு குழையையும் துரந்து அரி பரந்து ஒளிர்
கரிய கண் துறந்தவர் நிறம் தொளை பட ஓட
கலை நெகிழ்ந்து இரும் குழல் சரிந்திட முலை சுமந்து அசைந்து இடை ஒசித்து உயிர்
கவர இங்கிதம் கெறுவிதம்பெற விளையாடும்
படை மதன் பெரும் கிளை திருந்திய அதர கிஞ்சுகம்தனை உணர்ந்து அணி
பணி நிதம்பம் இன்ப சுகமும் தர முதிர் காம
பரவசம் தணிந்து உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக
பதம் அடைந்து இருந்து அருள் பொருந்துமது ஒரு நாளே
வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு மகிழ்ந்திட
வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப
மகர வெம் கரும் கடல் ஒடுங்கிட நிசிசரன் பெரும் குலம் ஒருங்கு இற
வனசன் நின்று அழும்படி நெருங்கிய ஒரு சூதம்
அடியொடும் பிடுங்கிய தடம் கர வடிவ அம் சுரும்பு உற விரும்பிய
அடவியும் தொழும்பொடு தொழும்படி அனுராக
அவசமும் புனைந்து அற முனைந்து எழு பருவதம் சிறந்த கன தந்தியின்
அமுத மென் குயங்களில் முயங்கிய பெருமாளே

மேல்

#1149
கதறிய கலை கொடு சுட்டா தீர் பொருள் பதறிய சமயிகள் எட்டா பேரொளி
கரு அற இருவினை கெட்டாற்கு காண்வரும் என்ற ஏகம்
கருகிய வினை மனதுள் தாக்காதது சுருதிகள் உருகி ஒர் வட்டாய் தோய்வது
கசடு அற முழுதையும் விட்டால் சேர்வது உணர்ந்திடாதே
வித மதுகரம் மொட்டால் சாடிய ரதி பதி என வரு துட்டாத்மாவுடன்
வினைபுரிபவர் இடும் முற்றா சால் இரு புண்டரீக
ம்ருகமத முகுளித மொட்டால் கார் முகம் நுதல் எழுதிய சிறு பொட்டால் சாயகம்
விரகு உடை விழி வலை பட்டால் தாது நலங்கலாமோ
பத மலர் மிசை கழல் கட்டா பாலக சுருதிகள் அடி தொழ எட்டா தேசிக
பருகு என வன முலை கிட்டா தாரகை தந்து நாளும்
பரிவுற வெகு முக நெட்டு ஆற்றூடு ஒரு படுகையினிடை புழு எட்டா பாசடை
படர்வன பரிமள முள் தாள் தாமரை தங்கி வாழும்
சத தள அமளியை விட்டு ஆற்று ஏறிய சல நிதி குறுகிட பட்டா சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய் தூள் எழ வென்ற கோவே
தழை தரு குழை தரு பட்டாள் சாலவும் அழகிய கலவி தெவிட்டா காதலி
தலை மக நிலம் அடி தட்டா தேவர்கள் தம்பிரானே

மேல்

#1150
கலவியின் நலம் உரையா மடவார் சந்தன தனங்களில் வசமது ஆகி அவரவர்
பாதாதிகேசம் அளவும் பாடும் கவிஞனாய் திரிவேனை காம க்ரோத தூர்த்தனை அபராத
கபடனை வெகு பரிதாபனை நாளும் ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை
ஆசார ஈன சமயம்தோறும் களவு சாத்திரம் ஓதி சாதித்தேனை சாத்திர நெறி போய் ஐம்புலன்
வழி ஒழுகிய மோகனை மூகம்தனில் பிறந்து ஒரு நொடியில் மீள அழிதரும்
ஆதேச வாழ்வை நிலை என்றே அம் புவியின் மேல் பசு பாசத்தே பட்டேனை பூ கழல் இணை சேர
பொறியிலிதனை அதி பாவியை நீடும் குண த்ரயங்களும் வரும் அநேக வினைகளும்
மாயா விகாரம் முழுதும் சாடும் பொருளின் மேல் சிறிது ஆசைப்பாடு அற்றேனை காப்பதும் ஒரு நாளே
குலகிரி தரும் அபிராம மயூரம் ப்ரியப்படும்படி குவளை வாச மலர் கொடு
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை
குரிசிலும் ஒரு சுரர் பூசுரன் ஓம் என்றதற்கு அனந்தரம் இரணியாய நம என
நாராயணாய நம என்று ஓதும் குதலை வாய் சிறியோனுற்காக தூணில் தோற்றிய வச பாணி
பல நக நுதியில் நிசாசரன் ஆகம் கிழித்து அளைத்து அணி துளசியோடு சிறு குடல்
தோள் மாலையாக அணியும் கோவும் பரவி வாழ்த்திடவே கற்று ஆர சோதிப்பான் பணி இறை வாகை
பட முக அடல் அபிராபதம் ஏறும் ப்ரபு பயம் கெட வட பராரை வரை கெட
வேல் ஏவி வாவி மகரம் சீறும் பரவை கூப்பிட மோதி சூர் கெட்டு ஓட தாக்கிய பெருமாளே

மேல்

#1151
கறுத்து நீ விடு கூர் வேலினும் கடை சிவத்து நீடிய வாய் மீன் ஒண் குழை
கடக்க ஓடிய ஆலால் நஞ்சு அன வஞ்ச நீடு
கயல் கணார் கனி வாய் ஊறல் உண்டு அணி கழுத்தும் ஆகமும் ஏகி பவம் கொடு
கலக்க மார்பகம் பாடீர குங்கும கொங்கை மீதே
உறுத்தும் ஆரமும் மோகா வடங்களும் அறுத்து நேரிய கூர் வாள் நகம் பட
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று கழன்று வீழ
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கு இடை செருக்கும் மோகன வார் ஆதரங்களை
ஒழிக்க ஓர் வகை காணேன் உறும் துணை ஒன்று காணேன்
நிறத்த நூபுர பாதாரவிந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர் தனங்களும்
நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட
நெறித்த ஓதியுமாய் யான் மனம் பரதவிக்க மால் தரலாமோ கலந்திட
நினைக்கலாம் என வேல் வேடர் கொம்புடன் நண்பு கூர்வாய்
மறித்த வாரிதி கோகோ எனும்படி வெறுத்த ராவணன் வாழ்நாளை அம்பினில்
வதைத்த மாமனும் மேவார் புரம் கனல் மண்ட மேரு
வளைத்த தாதையும் மாறான குன்றமும் அனைத்து லோகமும் வேதாகமங்களும்
மதித்த சேவக வான் ஆளும் உம்பர்கள் தம்பிரானே

மேல்

#1152
குறிப்பு அரிய குழற்கும் மதி நுதல் புருவ விலுக்கும் இரு குழைக்கும் வடு விழிக்கும் எழு குமிழாலும்
கொடி பவள இதழ்க்கும் மிகு சுடர் தரள நகைக்கும் அமுதினுக்கும் மிக உற தழுவு குறியாலும்
அற பெரிய தனக்கும் அன நடைக்கும் மினின் இடைக்கும் மலர் அடிக்கும் இள நகைக்கும் உளம் அயராதே
அகத்தியனொடு உரைத்த பொருள் அளித்து அருளி அரி பிரமர் அளப்பரிய பத கமலம் அருள்வாயே
கறுத்து அடரும் அரக்கர் அணி கரு குலைய நெருக்கி ஒரு கணத்தில் அவர் நிணத்த குடல் கதிர் வேலால்
கறுத்து அருளி அலக்கணுறு சுரர்க்கு அவர்கள் பதிக்கு உரிமை அளித்து இடரை அறுத்து அருளும் மயில் வீரா
செறுத்து வரு கரி திரள்கள் திடுக்கிட வல் மருப்பை அரி சினத்தினொடு பறித்து அமர் செய் பெரு கானில்
செல கருதி அற கொடிய சிலை குறவர் கொடிதனது சிமிழ் தனமும் உற தழுவு பெருமாளே

மேல்

#1153
குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை நினையாமலே ஏகி மீளாத
கொடிய மனத அநியாய மா பாத காபோதி என ஆசை
கொளுவ அதில் மயலாகி வீறோடு போய நீள மலர் அமளிதனில் ஏறி ஆமாறு போமாறு
குலவி நல மொழி கூறி வார் ஏறு பூணார முலை மூழ்கி
மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி சுழலாடி மேல் ஓதி போய் மீள
மதி வதனம் ஒளி வீச நீராளமாய் மேவி அநுராக
வகைவகையில் அதி மோக வாராழி ஊடான பொருள் அளவு அது அளவாக யாரோடு மால் ஆன
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே
எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு குலையாத மாதாவு நேர் ஓத
இசையும் மொழி தவறாமலே ஏகி மா மாதும் இளையோனும்
இனிமையொடு வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர் போர் மாள
இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர் சீறி
அநுமனொடு கவி கூட வாராக நீர் ஆழி அடை செய்து அணைதனில் ஏறி மா பாவி ஊர் மேவி
அவுணர் கிளை கெட நூறி ஆலாலம் மா கோப நிருதேசன்
அருண மணி திகழ் பார வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது போராளி
அடல் மருக குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே

மேல்

#1154
கொலை விழி சுழலச்சுழல சிலை நுதல் குவியக்குவிய
கொடி இடை துவளத்துவள தன பார
குறி அணி சிதறச்சிதற கரம் வளை கதறக்கதற
குயில் மொழி பதறப்பதற ப்ரிய மோக
கலவியில் ஒருமித்தொருமித்து இலவு இதழ் பருகிப்பருகி
கரமொடு தழுவித்தழுவி சில நாளில்
கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சிச்சி என
கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ
சல நிதி சுவறச்சுவற திசை நிலை பெயரப்பெயர
தட வரை பிதிரப்பிதிர திட மேரு
தமனிய நெடு வெற்பு அதிரஅதிர பணி மணி சிரம் விட்டு அகல
சமன் உடல் கிழியக்கிழிய பொரு சூரன்
பெலம் அது குறையக்குறைய கருவிகள் பறையப்பறைய
பிற நரி தொடரத்தொடர திரள் கூகை
பெடையொடு குழறக்குழற சுர பதி பரவப்பரவ
ப்ரபை அயில் தொடு நல் குமர பெருமாளே

மேல்

#1155
கோழையாய் ஆணவம் மிகுத்த வீரமே புகல்வர் அற்பர் கோது சேர் இழிகுலத்தர் குல மேன்மை
கூறியே நடு இருப்பர் சோறு இடார் தரும புத்ர கோவு நான் என இசைப்பர் மிடியூடே
ஆழுவார் நிதி உடை குபேரனாம் என இசைப்பர் ஆசு சேர் கலியுகத்தின் நெறி ஈதே
ஆயு நூல் அறிவு கெட்ட நானும் வேறு அல அதற்குள் ஆகையால் அவை அடக்க உரை ஈதே
ஏழை வானவர் அழைக்க ஆனை வாசவன் உருத்ர ஈசன் மேல் வெயில் எறிக்க மதி வேணி
ஈசனார் தமது இடுக்கம் மாறியே கயிலை வெற்பில் ஏறியே இனிது இருக்க வருவோனே
வேழம் மீது உறையும் வஜ்ர தேவர் கோ சிறை விடுத்து வேதனாரையும் விடுத்து முடி சூடி
வீர சூர் அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த வீறு சேர் சிலை எடுத்த பெருமாளே

மேல்

#1156
சந்தனம் கலந்த குங்குமம் புனைந்து அணிந்த கொங்கை சந்திரம் ததும்ப அசைந்து தெருவூடே
சங்கு இனம் குலுங்க செம் கை எங்கிலும் பணிந்து உடம்பு சந்து அனம் துவண்டு அசைந்து வருமா போல்
கொந்தளம் குலுங்க வண் சிலம்பு பொங்க இன் சுகங்கள் கொஞ்சி பொன் தொடர்ந்திடும் பொன் மடவார் தோள்
கொங்கை பைங்கரம் புணர்ந்து அழிந்து உணங்கலும் தவிர்ந்து கொஞ்சு நின் சரண்கள் அண்ட அருள்தாராய்
தந்தனந்த செம் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச தண்டை அம் பதம் புலம்ப வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களும் சிவந்து பொங்க சண்பகம் புனம் குறம் பொன் அணை மார்பா
வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும்
மைந்தன் என்று உகந்து விஞ்சு மன் பணிந்த சிந்தை அன்பர் மங்கலின்று உளம் புகுந்த பெருமாளே

மேல்

#1157
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள்
துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி
தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி அநுபோகமானவை
தொலைய இனி ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம்
கருதி உருகி அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி
கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து நீப
கனக மணி வயிர நூபுராரிய கிரண சரண அபிராம கோமள
கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ
மருது நெறுநெறு என மோதி வேரோடு கருதும் அலகை முலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று தாளால்
வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ஆயர்பாடியில்
வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா
விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய கட தடக போல வாரண
விபுதை புளக தன பார பூஷண அம் கிராத
விமலை நகில் அருண வாகு பூதர விபுத கடக கிரி மேரு பூதர
விகட சமர சத கோடி வானவர் தம்பிரானே

மேல்

#1158
சுற்றத்தவர்களும் மக்களும் இதம் உள சொற்கு உற்ற அரிவையும் விட்டது சலம் இது
சுத்த சலம் இனி சற்று இது கிடைபடும் என மாழ்கி
துக்கத்தொடு கொடிது ஒட்டியே அழுது அழல் சுட்ட குடமொடு சுட்டு எரி கனலொடு
தொக்கு தொகுதொகு தொக்கென இடு பறை பிணம் மூட
சற்று ஒப்புளது ஒரு சச்சையும் எழும் உடல் சட்டப்பட உயிர் சற்று உடன் விசியது
தப்பில் தவறு உறும் மத்திப நடை என உரையாடி
சத்திப்பொடு கரம் வைத்து இடர் தலை மிசை தப்பிற்று இது பிழை எப்படி எனும் மொழி
தத்த சடம் விடும் அப்பொழுது இரு சரண் அருள்வாயே
சிற்று இல் கிரி மகள் கொத்து அலர் புரி குழல் சித்ர ப்ரபை புனை பொற்பினள் இள மயில்
செல் கண் சிவ கதி உத்தமி களி தர முது பேய்கள்
திக்கு செககெண தித்தரி திகுதிகு செச்செ செணக்ருத டொட்டரி செணக்ருத
டெட்டெட் டுடுடுடு தத்தரிதரி என நடமாடும்
கொற்ற புலி அதள் சுற்றிய அரன் அருள் குட்டி கரி முகன் இக்கு அவல் அமுது செய்
கொச்சை கணபதி முக்கணன் இளையவ களம் மீதே
குப்புற்றுடன் எழு சச்சரி முழவு இயல் கொட்ட சுரர் பதி மெய்த்திட நிசிசரர்
கொத்து கிளை உடல் பட்டு உக அமர் செய்த பெருமாளே

மேல்

#1159
செம் கனல் புகை ஓமாதிகள் குண்டம் இட்டு எழு சோமாசிகள் தெண்டு என துணை தாள் மேல் விழ அமராடி
சிந்தனை படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடா சில திண் திறல் தவ வாள் வீரரொடு இகலா நின்று
அங்கம் வெட்டிய கூர் வாள் விழி மங்கையர்க்கு அற மாலாய் மனம் அந்தி பட்டு இருள் மூடா வகை அவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்தர சுடர் ஆராய நல் அன்பு வைத்து அருள் ஆம் ஓர் கழல் அருளாதோ
கொங்கு அடுத்த குரா மாலிகை தண் கடுக்கை துழாய் தாதகி கும்பிட தகு பாகீரதி மதி மீது
கொண்ட சித்ர கலா சூடிகை இண்டு எருக்கு அணி காகோதர குண்டல அத்தர் பினாகாயுதருடன் ஏய
சங்கு சக்ர கதா பாணியும் எங்களுக்கு ஒரு வாழ்வே சுரர் தங்களை சிறை மீளா என அசுரேசன்
தஞ்சம் அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்பு உக வீராகர சண்ட விக்ரம வேல் ஏவிய பெருமாளே

மேல்

#1160
சேலை அடர்த்து ஆலம் மிகுத்தே உழையை சீறு விதித்து ஊறு சிவப்பு ஏறு விழி கணையாலே
தேன் இரதத்தே முழுகி பாகு நிகர்த்து ஆர் அமுத தேறல் என கூறும் மொழி செயலாலே
ஆல் இலையை போலும் வயிற்றால் அளகத்தால் அதரத்தாலும் மிதத்தாலும் வளைப்பிடுவோர் மேல்
ஆசையினை தூர விடுத்தே புகழ்வுற்றே ப்ரிய நல் தாள் இணையை சேர எனக்கு அருள்வாயே
காலனை மெய் பாதம் எடுத்தே உதையிட்டே மதனை காய எரித்தே விதியின் தலையூடே
காசினியில் காண இரப்பு ஓர் மதியை சூடி எருத்து ஏறி வகித்து ஊரு திரை கடல் மீதில்
ஆலம் மிடற்று ஆனை உரித்து தோலை உடுத்து ஈமம் அது உற்று ஆடி இடத்தே உமை பெற்று அருள் வாழ்வே
ஆழியினை சூரனை வெற்பு ஏழினை உற்றே அயில் விட்ட ஆதுலருக்கு ஆறுமுக பெருமாளே

மேல்

#1161
சொக்கு பொட்டு எத்தி கைப்பொருளை கெத்தில் பற்றி சிக்கொடு சுற்றுப்பட்டு எற்றி தெட்டிகள் முலை மீதே
சுற்று பொன் பட்டு கச்சினர் முற்று இக்கு தத்தைக்கு ஒப்பு என சொல் பித்து கற்பில் செப்பிய துயராலே
சிக்குப்பட்டு உட்கி பல் கொடு எற்றி கைக்குத்துப்பட்டு இதழ் தித்திப்பிற்கு ஒத்து பித்து உயர் கொடு நாயேன்
திக்கு கெட்டு ஒட்டு சிட்டு என பட்ட அ துற்புத்தி கட்டு அற செப்பத்து உன் பற்றற்கு அற்புதம் அருள்வாயே
தக்குத்த குக்கு குக்குட தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென தக்குத்திக்கு எட்டு பொட்டு எழ விருது ஓதை
தத்தித்தி தித்தி தித்தென தெற்று துட்ட கட்டர் படை சத்தி கொற்றத்தில் குத்திய முருகோனே
துக்கித்திட்ட அத்தி துக்க அக நெக்குப்பட்டு எக்கி துட்டு அறு சுத்த பொன் பத்தர்க்கு பொருள் அருள் வேலா
துற்ற பொன் பச்சை கண் கலப சித்ர பக்ஷி கொற்றவ சொக்கர்க்கு அர்த்தத்தை சுட்டிய பெருமாளே

மேல்

#1162
ஞானாவிபூஷணி கார் அணி காரணி காமாவிமோகினி வாகினி யாமளை
மா மாயி பார்வதி தேவி குணாதரி உமையாள்தன்
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே
தேன் ஆர் மொழீ வளி நாயகி நாயக வான் நாடு உளோர் தொழு மா மயில்வாகன
சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா
சீர் பாதசேகரன் ஆகவும் நாயினன் மோகா விகார விடாய் கெட ஓடவே
சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே
பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே கழு மீதினில் ஏறிட
கூன் ஆன மீனன் ஈடேறிட கூடலில் வருவோனே
பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி தொடு ரகுநாயகன்
பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே
வாழ்நாள் படா வரு சூரர்கள் மாளவே சேண் நாடு உளோர் அவர் வீடு ஈடேறிட
கோன் ஆக வரு நாத குரு பர குமரேசா
வாசா மகோசரமாகிய வாசக தேசாதியோர் அவர் பாதம் அதே தொழ
பாசாவிநாசகனாகவும் மேவிய பெருமோளே

மேல்

#1163
தரணி மிசை அனையினிட உந்தியின் வந்து உகு துளி பயறு கழல் இனிய அண்டமும் கொண்டு அதில்
தசை உதிர நிண நிறைய அங்கமும் தங்க ஒன்பது வாயும்
தரு கரமொடு இனிய பதமும் கொடு அங்கு ஒன்பதும் பெருகி ஒரு பதின் அவனி வந்து கண்டு அன்புடன்
தநயன் என நடை பழகி மங்கைதன் சிங்கியின் வசமாகி
திரிகி உடல் வளைய நடை தண்டு உடன் சென்று பின் கிடை எனவும் மருவி மனை முந்தி வந்து அந்தகன்
சிதற உயிர் பிணம் எனவே மைந்தரும் பந்துவும் அயர்வாகி
செடம் இதனை எடும் எடுமின் என்று கொண்டு அன்புடன் சுடலை மிசை எரியிலிட வெந்து பின் சிந்திடும்
செனனம் இது தவிர இரு தண்டையும் கொண்ட பைம் கழல் தாராய்
செரு எதிரும் அசுரர் கிளை மங்க எங்கெங்கணும் கழுகு கருடன் நயனம் இது கண்டு கொண்டு அம்பரம்
திரிய மிகு அலகையுடன் வெம் கணம் தங்களின் மகிழ்வாகி
சின அசுரர் உடல் அது தின்றுதின்று இன்புடன் டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
திமிலை பறை முழவு துடி பம்பையும் சங்கமும் தவ மோத
சர வரிசை விடு குமர அண்டர்தம் பண்டு உறும் சிறையை விட வரு முருக என்று வந்து இந்திரன்
சதுமுகன் அடி பரவ மண்டு வெம் சம் பொரும் கதிர் வேலா
சகம் முழுதும் அடைய அமுது உண்டிடும் கொண்டலும் தெரிவரிய முடியில் அரவங்களும் திங்களும்
சலம் இதழி அணியும் ஒரு சங்கரன் தந்திடும் பெருமாளே

மேல்

#1164
தனம் சற்று குலுங்க பொன் கலன் பட்டு இலங்க பொன் சதங்கை கல் சிலம்பு ஒத்தி கையில் வீணை
ததும்ப கைக்குழந்தை சொல் பரிந்து அற்புக்கு இதங்க பொன் சரம் சுற்றிட்டு இணங்க கண் சர வேலால்
தினம் பித்திட்டு இணங்கி சொல் கரம் கட்டி புணர்ந்திட்டு தினம் தெட்டி கடன் பற்றி கொளு மாதர்
சிலம்பத்தில் திரிந்து உற்றிட்டு அவம் புக்க குணம் செற்று சிவம் பெற்று தவம் பற்ற கழல் தாராய்
தனந்தத்த தனந்தத்த தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட் டடண்டட்டட் டிமிண்டுட்டுட் இயல் தாளம்
தகுந்தொத்தி திமிந்தித்தி தவண்டை உட்கு அயர்ந்து உக்க தகு அண்டர்த்தர்க்கு உடன் பட்டு உற்ற அசுராரை
சினம் தத்தி கொளுந்த கை சரம் தொட்டு சதம் பொர்ப்பை சிரம் தத்த பிளந்து உட்க கிரி தூளா
செகம் திக்கு சுபம் பெற்று துலங்க போர் களம் புக்கு செயம் பற்றி கொளும் சொக்க பெருமாளே

மேல்

#1165
நகரம் இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி
நதி முடி ய சாரம் ஆகி உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழுதான
அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும்
அதனை அடியேனும் ஓதி இதய கமலாலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே
குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல வேலை மீது தனி ஊரும்
குழவி வடிவாகவே நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாதுதனை நாடி
அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி அரிய மணமே செய்து ஏகு அ வலை தேடி
அறு முக வன்மீகரான பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே

மேல்

#1166
நரையொடு பல் கழன்று தோல் வற்றி நடை அற மெத்த நொந்து கால் எய்த்து
நயனம் இருட்டி நின்று கோலுற்று நடை தோயா
நழுவும் விடக்கை ஒன்று போல் வைத்து நமது என மெத்த வந்த வாழ்வுற்று
நடலை படுத்து இந்த மாயத்தை நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரும் மையை செறிந்த வேல் கட்கும் வினையோடு
மிகு கவின் இட்டு நின்ற மாதர்க்கும் இடை படு சித்தம் ஒன்றுவேன் உன்
விழுமிய பொன் பதங்கள் பாடற்கு வினவாதோ
உரையொடு சொல் தெரிந்த மூவர்க்கும் ஒளி பெற நல் பதங்கள் போதித்தும்
ஒரு புடை பச்சை நங்கையோடு உற்றும் உலகூடே
உறு பலி பிச்சை கொண்டு போயுற்றும் உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் உற நாகம்
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும் அவிர் சடை வைத்த கங்கையோடு ஒக்க
அழகு திருத்தி இந்து மேல் வைத்தும் அரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல் வைத்த அரி அயன் நித்தம் வந்து பூசிக்கும்
அர நிமலர்க்கு நன்று போதித்த பெருமாளே

மேல்

#1167
நிமிர்ந்த முதுகும் குனிந்து சிறந்த முகமும் திரங்கி நிறைந்த வயிறும் சரிந்து தடி ஊணி
நெகிழ்ந்து சடலம் தளர்ந்து விளங்கு விழி அங்கு இருண்டு நினைந்த மதியும் கலங்கி மனையாள் கண்டு
உமிழ்ந்து பலரும் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து உறைந்த உயிரும் கழன்றுவிடு நாள் முன்
உகந்து மனமும் குளிர்ந்து பயன் கொள் தருமம்புரிந்து ஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ
திமிந்தி என வெம் கணங்கள் குணங்கர் பலவும் குழும்பி திரண்ட சதியும் புரிந்து முது சூரன்
சிரம் கை முழுதும் குடைந்து நிணம் கொள் குடலும் தொளைந்து சினம் கழுகொடும் பெரும் குருதி மூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ் கொண்டு மண்ட அடர்ந்த அயில் முன் துரந்து பொரு வேளே
அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே

மேல்

#1168
நிருதரார்க்கு ஒரு காலா ஜேஜெய சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய விறலான
நெடிய வேல் படையானே ஜேஜெய என இராப்பகல் தானே நான் மிக
நினது தாள் தொழுமாறே தான் இனி உடனே தான்
தரையில் ஆழ் திரை ஏழே போல் எழு பிறவி மா கடல் ஊடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி உன் அடியார் வாழ்
சபையின் ஏற்றி இன் ஞானாபோதமும் அருளி ஆட்கொளுமாறே தான் அது
தமியனேற்கு முனே நீ மேவுவது ஒரு நாளே
தருவின் நாட்டு அரசு ஆள்வான் வேணுவின் உருவமாய் பல நாளே தான் உறு
தவசினால் சிவன் நீ போய் வானவர் சிறை தீர
சகல லோக்கியமே தான் ஆள் உறும் அசுர பார்த்திபனோடே சேய் அவர்
தமரை வேல் கொடு நீறாயே பட விழ மோது என்று
அருள ஏற்று அமரோடே போய் அவர் உறையு மா கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தான் உறு சிறையை மீட்டு அரனார் பால் மேவிய
அதி பராக்ரம வீரா வானவர் பெருமாளே

மேல்

#1169
ஆரவாரமாய் இருந்து ஏம தூதர் ஓடி வந்து ஆழி வேலை போல் முழங்கி அடர்வார்கள்
ஆகம் மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ஆலை மீதிலே கரும்பு எனவே தான்
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து வீசுவார்கள் கூகு என்று அழுபோது
வீடுவாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த நாதர் பாலிலே இருந்த மகமாயி
நாடி ஓடிவாற அன்பர் காண வேணதே புகழ்ந்து நாளு நாளுமே புகன்ற வரை மாது
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த நீப மாலையே புனைந்த குமரேசா
நீலனாக ஓடி வந்த சூரை வேறுவேறு கண்ட நீதன் ஆனது ஓர் குழந்தை பெருமாளே

மேல்

#1170
நீரும் என்பு தோலினாலும் ஆவது என் கை கால்களோடு நீளும் அங்கமாகி மாய உயிர் ஊறி
நேசம் ஒன்று தாதை தாயர் ஆசை கொண்டபோதில் மேவி நீதி ஒன்று பாலனாகி அழிவாய் வந்து
ஊரும் இன்ப வாழ்வும் ஆகி ஊனம் ஒன்று இலாது மாதரோடு சிந்தை வேடை கூர உறவாகி
ஊழி இயைந்த காலம் மேதியோனும் வந்து பாசம் வீச ஊன் உடம்பு மாயும் மாயம் ஒழியாதோ
சூரன் அண்ட லோகம் மேன்மை சூறை கொண்டு போய்விடாது தோகையின்கண் மேவி வேலை விடும் வீரா
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சீடி ஆடு தோகைபங்கரோடு சூது மொழிவோனே
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள் பாடல் கண்டு ஏகும் மாலின் மருகோனே
பாதகங்கள் வேறி நூறி நீதியின் சொல் வேத வாய்மை பாடும் அன்பர் வாழ்வதான பெருமாளே

மேல்

#1171
பகல் மட்க செக்கர் ப்ரபைவிடு நவ ரத்ன பத்தி தொடை நக
நுதி பட்டுட்டு உற்று சிதறிட இதழூறல்
பருகி தித்தக்க படு மொழி பதற கை பத்மத்து ஒளி வளை
வதறி சத்திக்க புளகித தன பாரம்
அகலத்தில் தைக்க பரிமள அமளிக்குள் சிக்கி சிறுகு என
இறுக கைப்பற்றி தழுவிய அநுராக
அவசத்தில் சித்தத்து அறிவையும் மிக வைத்து போற்றி தெரிவையர்
வசம் விட்டு அர்ச்சிக்கைக்கு ஒரு பொழுது உணர்வேனோ
இகல் வெற்றி சத்தி கிரணமும் முரண் நிர்த்த பச்சை புரவியும்
இரவி கை குக்ட துவசமும் மற மாதும்
இடை வைத்து சித்ர தமிழ் கொடு கவி மெத்த செப்பி பழுது அற
எழுதி கற்பித்து திரிபவர் பெருவாழ்வே
புகலில் தர்க்கிட்டு ப்ரமையுறு கலக செற்ற சட்சமயிகள்
புகலற்கு பற்றற்கு அரியது ஒர் உபதேச
பொருளை புட்பித்து குருபரன் என முக்கண் செக்கர் சடை மதி
புனை அப்பர்க்கு ஒப்பித்து அருளிய பெருமாளே

மேல்

#1172
பத்தி தரள கொத்து ஒளிர் வரி பட்ட புளக செப்பு இள முலை
பட்டு இட்டு எதிர் கட்டு பரதவர் உயர் தாள
பத்மத்தியர் அற்பு கடுகடு கண் சத்தியர் மெத்த திரவிய
பட்சத்தியர் இக்கு சிலை உருவிலி சேரும்
சித்த தருணர்க்கு கனி அதரம் புத்தமுதை தரும் அவர்
சித்ர கிரண பொட்டு இடு பிறை நுதலார்தம்
தெட்டில் படு கட்ட கனவிய பட்சத்து அருள் அற்று உற்று உனது அடி
சிக்கிட்டு இடை புக்கிட்டு அலைவது தவிராதோ
மத்த பிரமத்த கய முகனை குத்தி மிதித்து கழுகுகள்
மட்டிட்ட இரத்த குருதியில் விளையாட
மற்றை பதினெட்டு கண வகை சத்திக்க நடிக்க பலபல
வர்க்க தலை தத்த பொரு படை உடையோனே
முத்தி பரமத்தை கருதிய சித்தத்தினில் முற்ற தவ முனி
முற்பட்டு உழை பெற்று தரு குறமகள் மேல் மால்
முற்ற திரி வெற்றி குருபர முற்பட்ட முரட்டு புலவனை
முட்டை பெயர் செப்பி கவி பெறு பெருமாளே

மேல்

#1173
பரத வித புண்டரிக பாதத்து ஆட்டிகள் அமுது பொழியும் குமுத கீத பாட்டிகள்
பலர் பொருள் கவர்ந்து இடை கலாம் இட்டு ஓட்டிகள் கொடிது ஆய
பழுது ஒழிய அன்பும் உடையாரை போல் சிறிது அழுதழுது கண் பிசையும் ஆசை கூற்றிகள்
பகழி என வந்து படு பார்வை கூற்றினர் ஒரு காம
விரகம் விளைகின்ற கழு நீரை சேர்த்து அகில் ம்ருகமத மிகுந்த பனி நீரை தேக்கியே
விபுதர் பதி அங்க தலம் மேவி சாற்றிய தமிழ் நூலின்
விததி கமழ் தென்றல் வர வீசி கோட்டிகள் முலைகளில் விழுந்து பரிதாபத்து ஆற்றினில்
விடியளவு நைந்து உருகுவேனை காப்பதும் ஒரு நாளே
உரக பணை பந்தி அபிஷேக தாற்றிய சகல உலகும் தரும் அமோக பார்ப்பதி
உடன் உருவு பங்கு உடைய நாக காப்பனும் உறி தாவும்
ஒரு களவு கண்டு தனி கோபத்து ஆய் குல மகளிர் சிறு தும்பு கொடு மோதி சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவ நீத கூற்றனும் அதி கோப
கர விகட வெம் கட கபோல போர் கிரி கடவிய புரந்தரனும் வேளை போற்றுகை
கருமம் என வந்து தொழ வேத பால் பதி பிறியாத
கடவுளை முனிந்து அமரர் ஊரை காத்து உயர் கரவட க்ரவுஞ்ச கிரி சாய தோற்று எழு
கடல் என உடைந்த அவுணர் ஓட தாக்கிய பெருமாளே

மேல்

#1174
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன்
பரிமள பாணத்து அயர்ந்து பனை மடல் ஊர்தற்கு இசைந்து பரிதவியா மெத்த நொந்து மயல்கூர
அழுதழுது ஆசைப்படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே
எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை என ஒரு ஞான குருந்தர் உளம் மேவும்
இரு உருவாகி துலங்கி ஒரு கன தூணில் பிறந்து இரணியன் மார்பை பிளந்த தனி ஆண்மை
பொழுது இசையா விக்ரமன்தன் மருக புரரிக்கு மைந்த புளக படீர குரும்பையுடன் மேவும்
புயல் கரி வாழ சிலம்பின் வனசர மானுக்கு உகந்து புனம் மிசை ஓடி புகுந்த பெருமாளே

மேல்

#1175
பாணிக்கு உட்படாது சாதகர் காண சற்றொணாது வாதிகள் பாஷிக்க தகாது பாதக பஞ்சபூத
பாசத்தில் படாது வேறு ஒரு உபாயத்தில் புகாது பாவனை பாவிக்க பெறாது வாதனை நெஞ்சமான
ஏணிக்கு எட்டொணாது மீது உயர் சேணுக்கு சமான நூல் வழி ஏறி பற்றொணாது நாடினர் தங்களாலும்
ஏது செப்பொணாதது ஓர் பொருள் சேர துக்கமாம் மகோததி ஏற செச்சை நாறு தாளை வணங்குவேனோ
ஆணிப்பொன் ப்ரதாப மேருவை வேல் இட்டு கடாவி வாசவன் ஆபத்தை கெடா நிசாசரர்தம் ப்ரகாசம்
ஆழி சத்ர சாயை நீழலில் ஆதித்த ப்ரகாச நேர் தர ஆழி சக்ரவாளம் ஆள்தரும் எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலம் மதாணி பொன் கிராதை நூபுர வாச பத்ம பாத சேகர சம்பு வேதா
வாசிக்கப்படாத வாசகம் ஈசர்க்கு சுவாமியாய் முதல் வாசிப்பித்த தேசிகா சுரர் தம்பிரானே

மேல்

#1176
பால் மொழி படித்து காட்டி ஆடையை நெகிழ்த்து காட்டி பாயலில் இருத்தி காட்டி அநுராகம்
பாகு இதழ் கொடுத்து காட்டி நூல்களை விரித்து காட்டி பார்வைகள் புரட்டி காட்டி உறவாகி
மேல் நகம் அழுத்தி காட்டி தோதக விதத்தை காட்டி மேல் விழு நலத்தை காட்டும் மடவார்பால்
மேவிடும் மயக்கை தீர்த்து சீர் பத நினைப்பை கூட்டும் மேன்மையை எனக்கு காட்டி அருள்வாயே
காலனை உதைத்து காட்டி ஆவியை வதைத்து காட்டி காரணம் விளைத்து காட்டி ஒரு காலம்
கானினில் நடித்து காட்டி ஆலமும் மிடற்றில் காட்டி காமனை எரித்து காட்டி தரு பாலா
மாலுற நிறத்தை காட்டி வேடுவர் புனத்தில் காட்டில் வாலிபம் இளைத்து காட்டி அயர்வு ஆகி
மான் மகள் தனத்தை சூட்டி ஏன் என அழைத்து கேட்டு வாழ்வுறு சமத்தை காட்டு பெருமாளே

மேல்

#1177
புகர் இல் சேவல தந்துரம் சங்க்ரம நிருதர் கோப க்ரவுஞ்ச நெடும் கிரி
பொருத சேவக குன்றவர் பெண் கொடி மணவாளா
புனித பூசுரரும் சுரரும் பணி புயச பூதர என்று இரு கண் புனல்
பொழிய மீமிசை அன்பு துளும்பிய மனன் ஆகி
அகில பூத உடம்பும் உடம்பினில் மருவும் ஆருயிரும் கரணங்களும்
அவிழ யானும் இழந்த இடம்தனில் உணர்வாலே
அகில வாதிகளும் சமயங்களும் அடைய ஆம் என அன்று என நின்ற அதை
அறிவிலேன் அறியும்படி இன்று அருள்புரிவாயே
மகர கேதனமும் திகழ் செந்தமிழ் மலய மாருதமும் வெம் பரிமள
சிலீ முகமும் பல மஞ்சரி வெறியாம்
மதுகராரம் வி குஞ்சு அணியும் கர மதுரம் கார் முகமும் பொர வந்து எழு
மதன ராஜனை வெந்து விழும்படி முனி பாலம்
முகிழ் விலோசனர் அம் சிறு திங்களும் முது பகீரதியும் புனையும் சடைமுடியர்
வேடமும் நின்று மணம் கமழ் அபிராமி
முகர நூபுரம் பங்கய சங்கரி கிரி குமாரி த்ரிஅம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித பெருமாளே

மேல்

#1178
புருவத்தை நெறித்து விழி கயல் பயிலிட்டு வெருட்டி மதித்த இரு
புது வட்டை மினுக்கி அளி குலம் இசை பாடும்
புயல் சற்று விரித்து நிரைத்து ஒளி வளையிட்ட கரத்தை அசைத்து அகில்
புனை மெத்தை படுத்த பளிங்கு அறைதனில் ஏறி
சரசத்தை விளைத்து முலை கிரி புளகிக்க அணைத்து நக குறிதனை
வைத்து முகத்தை முகத்துடன் உற மேவி
தணிவித்து இரதத்து அதரத்து உமிழ் அமுதத்தை அளித்து உருக்கிகள்
தரு பித்தை அகற்றி உனை தொழ முயல்வேனோ
பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்று இடுபவர் தேர் கப்பரை
உற்ற கரத்தர் மிக பகிரதி உற்ற சிரத்தர் நிறத்து உயிர்
பரவு அத்தர் பொருப்பில் இருப்பவர் உமை ஆளர்
சுரர் சுத்தர் மனத்து உறை வித்தகர் பணி பத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலை பொடியை பரிசிப்பவர் விடை ஏறும்
துணை ஒத்த பதத்தர் எதிர்த்திடும் மதனை கடி முத்தர் கருத்து அமர்
தொலைவு அற்ற கிருபைக்குள் உதித்து அருள் பெருமாளே

மேல்

#1179
புவிக்குள் பாதம்அதை நினைபவர்க்கும் கால தரிசனை புலக்கண் கூடும் அதுதனை அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழு கண் பாவம் அது கொளல் பிழையாதே
கவி கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல் படும் அடி நாயேன்
கலக்கு உண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை கணக்கு உண்டாதல் திருவுளம் அறியாதோ
சிவத்தின் சாமி மயில் மிசை நடிக்கும் சாமி எமது உளே சிறக்கும் சாமி சொருபம் இது ஒளி காண
செழிக்கும் சாமி பிறவியை ஒழிக்கும் சாமி பவம் அதை தெறிக்கும் சாமி முநிவர்கள் இடம் மேவும்
தவத்தின் சாமி புரி பிழை பொறுக்கும் சாமி குடி நிலை தரிக்கும் சாமி அசுரர்கள் பொடியாக
சதைக்கும் சாமி எமை பணி விதிக்கும் சாமி சரவண தகப்பன் சாமி என வரு பெருமாளே

மேல்

#1180
பூசல் தரும் கயலும் பொருந்திய வாச நறும் குழலும் துலங்கிய
பூரண கும்பம் எனும் தனங்களும் மட மாதர்
போகம் அடங்கலையும் புணர்ந்து அநுராகம் விளைந்து வரும் பிழை
போய் அகலும்படி ஒன்றை அன்புற நினையாதே
ஆசை எனும்படியும் தனங்களும் ஓகை நடந்திடவும் தினங்களும்
ஆருடனும் பகை கொண்டு நின்றுற நடமாடி
ஆடிய பம்பரம் முன் சுழன்று எதிர் ஓடி விழும்படி கண்டது ஒன்று உற
ஆவி அகன்று விடும் பயம் கெட அருள்வாயே
வாசவன் அன்பு விளங்க நின்ற அசுரேசர் குலங்கள் அடங்கலும் கெட
வானவர் நின்று தியங்குகின்றது ஓர் குறை தீர
வாரி அதிர்ந்து பயந்து நின்றிட மேரு அடங்க இடிந்து சென்றிட
வாகை புனைந்து ஒரு வென்றி கொண்டு அருள் இளையோனே
வீசிய தென்றலொடு அந்தியும் பகையாக முயங்க அநங்கனும் பொர
வேடை எனும்படி சிந்தை நொந்திட அடைவாக
வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற
வேளை எனும்படி சென்று இறைஞ்சிய பெருமாளே

மேல்

#1181
பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல்
போது மங்கையர் கோடா கோடிய மனது ஆனார்
பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித
பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக
ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் நானா பேத அநேக
தந்த்ர க்ரியா வேதாகம கலை ஆய
ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன்
ஆயினும் குருநாதா நீ அருள்புரிவாயே
வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி
மாள வன் கிரி கூறாய் நீறு எழு நெடு நேமி
மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோகோ என
மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே
வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய்
கெடும்படி காவாய் ஆவாய் என ஏனல்
மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு
வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே

மேல்

#1182
பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலை வீசி
பொன் கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர
கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண
குன்றம் கதிரை பூ பரம் முன் துன்றும் அமரர் போற்றிய குன்றம் பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே
எங்கும் பகரமாய் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட தனு வேட்டுவர் சரண் ஆர
விந்தம் பணிய வாய்த்து அருள் அம் தண் புவன நோற்பவை மென் குங்கும குயாத்திரி பிரியாதே
எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும் குருவி ஓச்சிய திரு மானை
என்றென்று அவசமாய் தொழுது என்றும் புதிய கூட்டமொடு என்றும் பொழுது போக்கிய பெருமாளே

மேல்

#1183
பொருத கயல் விழி புரட்டி காட்டுவர் புளக தன வடம் அசைத்து காட்டுவர்
புயலின் அளகமும் விரித்து காட்டுவர் பொதுமாதர்
புனித இதழ் மது நகைத்து காட்டுவர் பொலிவின் இடை துகில் குலைத்து காட்டுவர்
புதிய பரிபுரம் நடித்து காட்டுவர் இளைஞோரை
உருக அணைதனில் அணைத்து காட்டுவர் உடைமை அடையவே பறித்து தாழ்க்கவே
உததி அமுது என நிகழ்த்தி கேட்பவர் பொடி மாயம்
உதரம் எரிதர மருந்திட்டு ஆட்டிகள் உயிரின் நிலைகளை விரித்து சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட்டு ஆட்கொள நினையாதோ
மருது பொடிபட உதைத்திட்டு ஆய் செரி மகளிர் உறிகளை உடைத்து போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும்
வளரு நெடு முகில் எதிர்த்து காட்டு என அசடன் இரணியன் உரத்தை பேர்த்தவன்
மழையில் நிரை மலை எடுத்து காத்தவன் மருகோனே
விருது பலபல பிடித்து சூர் கிளை விகட தட முடி பறித்து தோள்களை
விழவும் முறியவும் அடித்து தாக்கிய அயில் வீரா
வெகு தி சலதியை எரித்து தூள்பட வினை செய் அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய
விபுத மலர் அடி விரித்து போற்றினர் பெருமாளே

மேல்

#1184
மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும்
வம்பாரும் தேக்கு உண்டிட வறிது எணும் வாதை
வந்தே பொன் தேட்டம் கொடு மனம் நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ
வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன்
சங்காரம் போர் சங்கையில் உடல் வெம் கானம் போய் தங்கு உயிர் கொள
சந்தேகம் தீர்க்கும் தனுவுடன் அணுகா முன்
சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும்படி என
சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே
கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொள்ளும் நெடு
கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி
கந்தாவம் சேர் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்ப பொன்றிட விழி
கண்டான் வெம் காட்டு அங்கு அனலுற நடமாடி
அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி
அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே
அன்பால் அம் தாள் கும்பிடும் அவர்தம் பாவம் தீர்த்து அம் புவியிடை
அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல பெருமாளே

மேல்

#1185
மதன தனு நிகர் இடைக்கே மனம் உருக வரு பிடி நடைக்கே இரு
வனச பரிபுர மலர்க்கே மதுகரம் வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணி மகரம் அணி அன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல் அமுது ஊறும்
அதரம் மதுர இத மொழிக்கே குழை அளவு அளவிய விழிக்கே தளவு
அனையது ஒரு சிறு நகைக்கே பனி மதி போலும்
அழகு திகழ் தரு நுதற்கே அநவரதம் அவயவம் அனைத்தூடினும்
அவசமுறும் மயல் தவிர்த்து ஆள்வதும் ஒரு நாளே
உததி புதைபட அடைத்து ஆதவன் நிகர் இல் இரதமும் விடுக்கா நகர்
ஒரு நொடியில் வெயில் எழ சாநகி துயர் தீர
உபய ஒரு பது வரை தோள்களு நிசிசரர்கள் பதி தச க்ரீவமும்
உருள ஒரு கணை தெரித்தானும் மவுன ஞான
திதம் இல் அவுணர்தம் இருப்பாகிய புரமும் எரி எழ முதல் பூதர
திலதம் குலகிரி வளைத்தானும் மகிழ வானோர்
திருவ நகர் குடி புக சீகர மகர சலம் முறை இட சூரொடு
சிகர கிரி பொடிபட சாடிய பெருமாளே

மேல்

#1186
மதன் ஏவிய கணையால் இருவினையால் புவி கடல் சாரமும் வடிவாய் உடல் நடமாடுக முடியாதேன்
மன மாயையொடு இரு காழ் வினை அற மூதுடை மலம் வேர் அற மகிழ் ஞானக அநிபூதியின் அருள் மேவி
பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக அடியேன் முனெ பரிபூரண கிருபாகரம் உடன் ஞான
பரி மேல் அழகுடன் ஏறி விணவர் பூ மழை அடி மேல் விட பல கோடி வெண் மதி போலவெ வருவாயே
சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா முழு சசி சூரியர் சுடராம் என ஒரு கோடி
சடை மா முடி முநிவோர் சரண் என வேதியர் மறை ஓதுக சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா
விதி ஆனவன் இளையாள் எனது உளம் மேவிய வளிநாயகி வெகு மாலுற தனம் மேல் அணை முருகோனே
வெளி ஆசையொடு அடை பூவணர் மருகா மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா தமிழ் பெருமாளே

மேல்

#1187
மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்க தனத்தில் அச்சுறும்
மால் இபம் ஒத்து ப்ரபுத்தனத்தில் அடைவாக
மாதர் பெருக்க தருக்கம் அற்றவர் சூழ இருக்க தரிக்க இப்படி
வாழ்கையில் மத்த பரமத்த சித்தி கொள் கடை நாளில்
பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றி புடைத்து உறுப்பு உள
பாவை எடுத்து தழற்கு இரைப்பட விடல் ஆய
பாடு தொலைத்து கழிக்க அக்ருபை தேடும் எனை தன் புரக்கவுற்று இரு
பாதுகையை பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ
ஆடக வெற்பை பெருத்த மத்து என நாக வடத்தை பிணித்து உரத்து
அமரார்கள் பிடித்து திரித்திட புகை அனலாக
ஆழி கொதித்து கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்க களித்த உக்கிர
ஆல விடத்தை தரித்த அற்புதர் குமரேசா
வேடர் சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்து சிரிப்ப நட்பொடு
வேளை என புக்கு நிற்கும் வித்தக இளையோனே
வேகம் மிகுத்து கதிக்கும் விக்ரம சூரர் வெறுத்து துணித்து அடக்குதல்
வீரம் என தத்துவத்து மெச்சிய பெருமாளே

மேல்

#1188
மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன
வான் பூதமும் கரணங்களும் நான் போய் ஒடுங்க அடங்கலும்
மாய்ந்தால் விளங்கும் அது ஒன்றினை அருளாயேல்
வேண்டாமை ஒன்றை அடைந்து உளம் மீண்டு ஆறி நின் சரணங்களில்
வீழ்ந்து ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய்
வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண்சரண் என்பது
வீண் போம் அது ஒன்று அல என்பதை உணராதோ
ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர் தடம்தனில்
ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாயுற்று
ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட ஞான்று ஊது துங்க சலஞ்சலம்
ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில் நேசம்
பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து ஆள வென்று வெறும் தனி
போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே
பூம் பாளை எங்கும் மணம் கமழ் தேம் காவில் நின்றது ஓர் குன்றவர்
பூம் தோகை கொங்கை விரும்பிய பெருமாளே

மேல்

#1189
மாறு பொரு காலன் ஒக்கும் வானில் எழு மா மதிக்கும் வாரி துயிலா அதற்கும் வசையே சொல்
மாய மடவார்தமக்கும் ஆயர் குழல் ஊது இசைக்கும் வாயும் இள வாடையிற்கும் மதனாலே
வேறுபடி பாயலுக்குமே எனது பேதை எய்த்து வேறு படு மேனி சற்றும் அழியாதே
வேடர் குல மாதினிக்கு வேடை கெடவே நடித்து மேவும் இரு பாதம் உற்று வரவேணும்
ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறுமுகனே குறத்தி மணவாளா
ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும் மயில் ஏறி நிற்கும் இளையோனே
சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம் மொய்த்த திரள் தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர் சிறை மீளவிட்ட பெருமாளே

மேல்

#1190
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த வெண் நகையில் வட்டம் ஒத்து அழகு ஆர
விம்மி இளகி கதித்த கொம்மை முலையில் குனித்த வில் நுதலில் இட்ட பொட்டில் விலைமாதர்
கன்னல் மொழியில் சிறக்கும் அன்ன நடையில் கறுத்த கண்ணின் இணையில் சிவந்த கனி வாயில்
கண் அழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த கன்ம வசம் எப்படிக்கு மறவேனே
அன்ன நடையை பழித்த மஞ்ஞை மலையில் குறத்தி அம்மை அடவி புனத்தில் விளையாடும்
அன்னை இறுக பிணித்த பன்னிரு திரு புயத்தில் அன்னிய அரக்கர் அத்தனையும் மாள
பொன்னுலகினை புரக்கும் மன்ன நல் வ்ரதத்தை விட்ட புன்மையர் புர த்ரய அத்தர் பொடியாக
பொன் மலை வளைத்து எரித்த கண் நுதல் இடத்தில் உற்ற புண்ணிய ஒருத்தி பெற்ற பெருமாளே

மேல்

#1191
முத்தம் உலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள் முத்தம் இடா மன உருக்கிகள் இளைஞோர்பால்
முட்ட உலாவி மருட்டிகள் நெட்டு இலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்தியர் அநுராக
தத்தைகள் ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறும் ஆறு அகம் எத்திகள் அளவே நான்
தட்டு அழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவும் முத்தமிழ் தத்துவ ஞானம் எனக்கு அருள்புரிவாயே
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்து அருள் இளையோனே
சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்திடை சிக்கெனவே தழுவி புணர் மணவாளா
செச்சை உலாவு பதத்தினை மெய் தவர் வாழ்வு பெற தரு சித்த விசாக இயல் சுரர் பெருமாளே

மேல்

#1192
முருகு உலாவிய மை பாவு வார் குழல் முளரி வாய் நெகிழ் வித்தார வேல் விழி
முடுகுவோர் குலை வித்தான கோடு எனும் முலையாலே
முறைமை சேர் கெட மைத்து ஆர்வு வார் கடல் முடுகுவோர் என் எய்த்து ஓடி ஆகமும்
மொழியும் வேறிடு பித்து ஏறினார் எனும் முயல்வே கொண்டு
உருகுவார் சில சிற்றா மனோலயம் உயிரும் ஆகமும் ஒத்து ஆசையோடு உளம்
உருகி தீ மெழுகு இட்டானதோ என உரையா நண்பு
உலக அவா ஒழிவித்தார் மனோலய உணர்வு நீடிய பொன் பாத சேவடி
உலவு நீ என்னை வைத்து ஆளவே அருள்தருவாயே
குருகு உலாவிய நல் தாழி சூழ் நகர் குமரனே முனை வெற்பு ஆர் பராபரை
குழக பூசுரர் மெய் காணும் வீரர்தம் வடி வேலா
குறவர் சீர் மகளை தேடி வாடிய குழையும் நீள் கர வைத்து ஓடியே அவர்
குடியிலே மயிலை கோடு சோதிய உரவோனே
மருகு மா மதுரை கூடல் மால் வரை வளைவுள் ஆகிய நக்கீரர் ஓதிய
வளகை சேர் தமிழுக்காக நீடிய கரவோனே
மதியம் மேவிய சுற்றாத வேணியர் மகிழ நீ நொடியற்றான போதினில்
மயிலை நீடு உலகை சூழ ஏவிய பெருமாளே

மேல்

#1193
முலை மேலில் கலிங்கம் ஒன்றிட முதல் வானில் பிறந்த மின் பிறை
நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர
முக நேசித்து இலங்கவும் பல வினை மூசி புரண்ட வண் கடல்
முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா
மலர் போல சிவந்த செம் கணில் மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம்
வழுவாமல் புனைந்து திண் கயம் என நாடி
வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும் மயலாகி பரந்து நின் செயல்
மருவாமல் கலங்கும் வஞ்சகம் ஒழியாதோ
தொலையா நல் தவங்கள் நின்று உனை நிலையாக புகழ்ந்து கொண்டு உள
அடியார் உள் துலங்கி நின்று அருள் துணை வேளே
துடி நேர் ஒத்து இலங்கும் என் கொடி இடை தோகைக்கு இசைந்த ஒண் தொடி
சுரர் வாழ பிறந்த சுந்தரி மணவாளா
மலை மாள பிளந்த செம் கையில் வடி வேலை கொடு அந்த வஞ்சக
வடிவாக கரந்து வந்து அமர் பொரு சூரன்
வலி மாள துரந்த வன் திறல் முருகா மல் பொருந்து திண் புய
வடிவா மற்று அநந்தம் இந்திரர் பெருமாளே

மேல்

#1194
முனை அழிந்தது மேட்டி குலைந்தது வயது சென்றது வாய் பல் உதிர்ந்தது
முதுகு வெம் சிலை காட்டி வளைந்தது ப்ரபையான
முகம் அழிந்தது நோக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது
மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது அறிவே போய்
நினைவு அயர்ந்தது நீட்டல் முடங்கலும் அவசமும் பல ஏக்கமும் முந்தின
நெறி மறந்தது மூப்பும் முதிர்ந்தது பல நோயும்
நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது சல மலங்களின் நாற்றம் எழுந்தது
நிமிஷம் இங்கு இனி ஆச்சுது என் முன்பு இனிது அருள்வாயே
இனைய இந்திரன் ஏற்றமும் அண்டர்கள் தலமும் மங்கிட ஓட்டி இரும் சிறை
இடும் இடும்பு உள ராக்கதர்தங்களில் வெகு கோடி
எதிர் பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர் தசை சிரங்களும் நால் திசை சிந்திட
இடி முழங்கிய வேல் படை ஒன்றனை எறிவோனே
தினை வனம் கிளி காத்த சவுந்தரி அருகு சென்று அடி போற்றி மணம் செய்து
செகம் அறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே
திரிபுரம் பொடி ஆக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ்
தெளிவு கொண்டு அடியார்க்கு விளம்பிய பெருமாளே

மேல்

#1195
மைக்கு கை புக்க கயல் விழி எற்றி கொட்டிட்டு சிலை மதன் வர்க்கத்தை கற்பித்திடு திற மொழியாலே
மட்டிட்டு துட்ட கெருவிதம் இட்டிட்டு சுற்றி பரிமள மச்ச பொன் கட்டில் செறி மலர் அணை மீதே
புக்கு கைக்கு ஒக்க புகும் ஒரு அற்ப சிற்றிற்ப தெரிவையர் பொய்க்கு உற்று சுற்றித்திரிகிற புலையேனை
பொற்பித்து கற்பித்து உனது அடி அர்ச்சிக்க சற்று க்ருபைசெய புத்திக்கு சித்தித்து அருளுவது ஒரு நாளே
திக்குக்கு திக்கு திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தி தித்தி திதி என நடமாடும்
சித்தர்க்கு சுத்த பரம நல் முத்தர்க்கு சித்த க்ருபை உள சித்தர்க்கு பத்தர்க்கு அருளிய குருநாதா
ஒக்க தக்கிட்டு திரி அசுர் முட்ட கொட்டற்று திரிபுரம் ஒக்க கெட்டிட்டு திகுதிகு என வேக
உற்பித்து கற்பித்து அமரரை முற்பட்ட கட்ட சிறைவிடும் ஒள் குக்ட கொற்ற கொடி உள பெருமாளே

மேல்

#1196
மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட
மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும்
மூளும் அளவில் விசை மேல் விழா பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு
மோக வினையில் நெடுநாளின் மூத்தவர் இளையோர்கள்
ஏது கருமம் இவர் சாவு எனா சிலர் கூடி நடவும் இடுகாடு எனா கடிது
ஏழு நரகின் இடை வீழும் என பொறியறு பாவி
ஏழு புவனம் மிகு வான நாட்டவர் சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட
ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே
சூது பொரு தருமன் நாடு தோற்று இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று இயல்
தோகை உடனும் விராட ராச்சியம் உறை நாளில்
சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் ஆளும் உரிமை தருமாறு கேட்டு ஒரு
தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என் மீள
வாது சமர் திருதரானராட்டிர ராஜகுமரர் துரியோதனால் பிறர்
மாள நிருபரொடு சேனை தூள்பட வரி சாப
வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகி நெடு மால் பராக்ரம
மாயன் மருக அமர் நாடர் பார்த்திப பெருமாளே

மேல்

#1197
வடி கட்டிய தேன் என வாயினில் உறு துப்பு அன ஊறலை ஆர்தர
வரைவில் திகழ் ஊடலிலே தரு மடவார்பால்
அடிபட்டு அலை பாவ நிர்மூடனை முகடி தொழில் ஆம் முன் நீ உனது
அடிமை தொழிலாக எ நாளினில் அருள்வாயோ
பொடிபட்டிட ராவணன் மா முடி சிதறி சிலை வாளிகளே கொடு
பொருகைக்கு களம் மேவிய மாயவன் மருகோனே
கொடுமை தொழில் ஆகிய கானவர் மகிமை கொளவே அவர் வாழ் சிறு
குடிலில் குற மானொடு மேவிய பெருமாளே

மேல்

#1198
வட்ட முலை கச்சு அவிழ்த்து வைத்துள முத்து வடத்தை கழுத்தில் இட்டு இரு
மை குவளை கண் குறிப்பு அழுத்திய பொதுமாதர்
மட்டு அமளிக்குள் திருத்தி முத்து அணி மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை
வைத்த பழு பச்சிலை சுருள் கடி இதழ் கோதி
கட்டி அணைத்திட்டு எடுத்து உடுத்திடு பட்டை அவிழ்த்து கருத்து இதத்தோடு
கற்ற கலை சொற்களில் பயிற்று உளம் முயல்போதும்
கைக்குள் இசைத்து பிடித்த கட்கமும் வெட்சி மலர் பொன் பதத்து இரட்சணை
கட்டு மணி சித்திர திறத்தையும் மறவேனே
கொட்டம் மிகுத்திட்ட அரக்கர் பட்டணம் இட்டு நெருப்பு கொளுத்தி அ தலை
கொட்டை பரப்ப செருக்களத்திடை அசுரோரை
குத்தி முறித்து குடிப்ப ரத்தமும் வெட்டி அழித்து கன களிப்பொடு
கொக்கரி இட்டு தெரித்து அடுப்பன ஒரு கோடி
பட்ட பிணத்தை பிடித்து இழுப்பன கச்சரி கொட்டிட்டு அடுக்கு எடுப்பன
பற்கள் விரித்து சிரித்து இருப்பன வெகு பூதம்
பட்சி பறக்க திசைக்குள் மத்தளம் வெற்றி முழக்கி கொடி பிடித்து அயில்
பட்டு அற விட்டு துரத்தி வெட்டிய பெருமாளே

மேல்

#1199
வளை கரம் மாட்டி வேட்டினிடை துயில் வாட்டி ஈட்டி வரி விழி தீட்டி ஏட்டின் மணம் வீசும்
மழை குழல் காட்டி வேட்கை வளர் முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி மூட்டி மயல் ஆக
புளகித வார்த்தை ஏற்றி வரி கலை வாழ்த்தி ஈழ்த்து புணர் முலை சேர்த்து வீக்கி விளையாடும்
பொது மடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலை குணம் ஓட்டி மாற்றி அருள்வாயே
தொளை ஒழுகு ஏற்றம் நோக்கி பல வகை வாச்சி தூர்த்து சுடர் அடி நீத்தல் ஏத்தும் அடியார்கள்
துணை வன்மை நோக்கி நோக்கின் இடை முறை ஆய்ச்சிமார் சொல் சொலி அமுது ஊட்டி ஆட்டு முருகோனே
இள நகை ஓட்டி மூட்டர் குலம் விழ வாட்டி ஏட்டை இமையவர் பாட்டை மீட்ட குருநாதா
இயல் புவி வாழ்த்தி ஏத்த எனது இடர் நோக்கி நோக்கம் இருவினை காட்டி மீட்ட பெருமாளே

மேல்

#1200
வாடையில் மதனை அழைத்துற்று வாள் வளை கலகல என கற்றை வார் குழல் சரிய முடித்திட்டு துகில் ஆரும்
மால் கொள நெகிழ உடுத்திட்டு நூபுரம் இணை அடியை பற்றி வாய் விட நுதல் மிசை பொட்டிட்டு வரும் மாய
நாடக மகளிர் நடிப்புற்ற தோதக வலையில் அகப்பட்டு ஞாலமும் முழுது மிக பித்தன் எனுமாறு
நாணமும் மரபும் ஒழிக்கு அற்று நீதியும் அறிவும் அற கெட்டு நாய் அடிமையும் அடிமைப்பட்டுவிடலாமோ
ஆடிய மயிலினை ஒப்புற்று பீலியும் இலையும் உடுத்திட்டு ஆரினும் அழகு மிக பெற்று யவனாளும்
ஆகிய இதண் மிசை உற்றிட்டு மான் இனம் மருள விழித்திட்டு ஆயுத கவண் ஒரு கை சுற்றி விளையாடும்
வேடுவர் சிறுமி ஒருத்திக்கு யான் வழி அடிமை என செப்பி வீறு உள்ள அடி இணையை பற்றி பலகாலும்
வேதமும் அமரரும் மெய் சக்ரவாளமும் அறிய விலைப்பட்டு மேருவில் மிகவும் எழுத்திட்ட பெருமாளே

மேல்

#1201
விரை சொரியும் ம்ருகமதமும் மலரும் வாய்த்து இலகு விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு
முலை மிசையில் வரு பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம்
விடு தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை
விதறி வளை கலகல என அழகு மேல் பொழிய அலர் மேவும்
இரு சரண பரிபுர சுருதிகள் ஆர்க்க அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து
இடை முழுகி எனது மனது அழையு நாட்களினும் இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும்
எழுத அரிய திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தரவேணும்
அரி பிரமர் அடிவருட உததி கோத்து அலற அடல் வடவை அனல் உமிழ அலகை கூட்டம் இட
அணி நிணமும் மலை பெருக அறையும் வாச்சியமும் அகலாது
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடா கணமும் மறு குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ
அருண ரண முக வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட நாளும்
பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி கொடு திரிய வரை பலவும் வேர் பறிய
பகர்வு அரிய ககனம் முகடு இடிய வேட்டை வரு மயில் வீரா
படரு நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய மறை தரும் மவுன வழியை யார்க்கும் ஒரு
பரம குருபரன் எனவும் அறிவு காட்ட வல பெருமாளே

மேல்

#1202
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம் மிக்க கண்கள் என்றும் இரு தோளை
வேய் ஒக்கும் என்று கொங்கை மேல் வெற்பு அது என்று கொண்டை மேகத்தை வென்றது என்றும் எழில் மாதர்
கோலத்தை வெஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்றுநின்று குறியாதே
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்புகூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்குள்ளும் துயின்று நாடு அத்தி முன்பு வந்த திருமாலும்
நாட தடம் சிலம்பை மாவை பிளந்து அடர்ந்து நாக தலம் குலுங்க விடும் வேலா
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில் மங்கைபங்கர் நடமாடும்
ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#1203
அடியார் மனம் சலிக்க எவராகிலும் பழிக்க அபராதம் வந்து கெட்ட பிணி மூடி
அனைவோரும் வந்து சிச்சி என நால்வரும் சிரிக்க அனலோடு அழன்று செத்து விடுமா போல்
கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த கலியோடு இறந்து சுத்த வெளியாகி
களிகூர என்றனக்கு மயில் ஏறி வந்து முத்தி கதி ஏற அன்பு வைத்து உன் அருள்தாராய்
சடை மீது கங்கை வைத்து விடை ஏறும் எந்தை சுத்த தழல் மேனியன் சிரித்து ஒர் புரம் மூணும்
தவிடாக வந்து எதிர்த்த மதன் ஆகமும் சிதைத்த தழல் பார்வை அன்று அளித்த குருநாதா
மிடி தீர அண்டருக்கு மயில் ஏறி வஞ்சர் கொட்டம் வெளியாக வந்து நிர்த்தம் அருள்வோனே
மின நூல் மருங்கும் பொற்பு முலை மாது இளம் குறத்தி மிகு மாலொடு அன்பு வைத்த பெருமாளே

மேல்

#1204
அடி இல் விடா பிணம் அடைய விடா சிறிது அழியு முன் வீட்டு முன் உயர் பாடை
அழகொடு கூட்டுமின் அழையுமின் வார் பறை அழுகையை மாற்றுமின் நொதியா முன்
எடுமின் யாக்கையை என இடுகாட்டு எரியிடை கொடு போய் தமர் சுடு நாளில்
எயினர் குலோத்தமை உடன் மயில் மேல் கடிதே எனது உயிர் காத்திட வரவேணும்
மடுவிடை போய் பரு முதலையின் வாய்ப்படு மத கரி கூப்பிட வளை ஊதி
மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி போற்றிடு மருகோனே
படர் சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு எழ விடும் வேலால்
பட முனியா பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#1205
அப்படி ஏழும்ஏழும் வகுத்து வழாது போதினின் அக்ரம் வியோம கோளகை மிசை வாழும்
அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறிமாறி அனைத்து உரு ஆய காயம் அது அடைவே கொண்டு
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம்
எத்தனை ஊழி காலம் என தெரியாது வாழி இனி பிறவாது நீ அருள்புரிவாயே
கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீது உறை கற்புடை மாது தோய் தரும் அபிராம
கற்புர தூளி லேபன மல் புய பாக சாதன கற்பக லோல தாரண கிரி சால
விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல வெட்சியு நீப மாலையும் அணிவோனே
மெத்திய ஆழி சேறு எழ வெற்பொடு சூரன் நீறு எழ விக்ரம வேலை ஏவிய பெருமாளே

மேல்

#1206
அயில் விலோசனம் குவிய வாசகம் பதற ஆனனம் குறு வேர்வுற
அளக பாரமும் குலைய மேல் விழுந்து அதர பானம் உண்டு இயல் மாதர்
சயில பார குங்கும பயோதரம் தழுவு மாதர் ஆதரம் தமியேனால்
தவிரொணாது நின் கருணை கூர்தரும் தருண பாதமும் தரவேணும்
கயிலையாளியும் குலிசபாணியும் கமலயோனியும் புயகேசன்
கண பணா முகம் கிழிய மோத வெம் கருட வாகனம்தனில் ஏறும்
புயல் இலேகரும் பரவ வானிலும் புணரி மீதினும் கிரி மீதும்
பொரு நிசாசரன் தனது மார்பினும் புதைய வேல் விடும் பெருமாளே

மேல்

#1207
அருக்கி மெத்த தோள் திருத்தியுற்று மார்பு அசைத்து உவக்கும் மால் இளைஞோரை
அழைத்து மிக்க காசு இழைத்து மெத்தை மீது அணைத்து மெத்த மால் அது கூர
உருக்கி உட்கொள் மாதருக்கு உள் எய்த்து நா உலற்றி உட்கு நாணுடன் மேவி
உழைக்கும் அத்தை நீ ஒழித்து முத்திபால் உற அ குணத்த தாள் அருள்வாயே
சுருக்கமுற்ற மால் தனக்கும் எட்டிடாது ஒருத்தர் மிக்க மா நடமாடும்
சுகத்தில் அத்தர் தாம் மிகுந்த பத்தி கூர் சுரக்க வித்தை தான் அருள்வோனே
பெருக்க வெற்றி கூர் திரு கை கொற்ற வேல் பிடித்து குற்றம் ஆர் ஒரு சூரன்
பெலத்தை முட்டு மார் தொளைத்து நட்டு உளோர் பிழைக்க விட்ட ஓர் பெருமாளே

மேல்

#1208
அரும்பினால் தனி கரும்பினால் தொடுத்து அடர்ந்து மேல் தெறித்து அமராடும்
அநங்கனார்க்கு இளைத்து அயர்ந்து அணாப்பி எத்து அரம்பைமார்க்கு அடைக்கலமாகி
குரும்பை போல் பணைத்து அரும்புறா கொதித்து எழுந்து கூற்று என கொலை சூழும்
குயங்கள் வேட்டு அற தியங்கு தூர்த்தனை குணங்கள் ஆக்கி நல் கழல் சேராய்
பொருந்திடார் புரத்து இலங்கை தீ பட குரங்கினால் படைத்து ஒரு தேரில்
புகுந்து நூற்றுவர்க்கு ஒழிந்து பார்த்தனுக்கு இரங்கி ஆல் புறத்து அலைமேவி
பெரும் குறோட்டை விட்டு உறங்கு காற்று என பிறங்கவே தியக்குறும் மா சூர்
பிறங்கல் ஆர்ப்பு எழ சலங்கள் கூப்பிட பிளந்த வேல் கர பெருமாளே

மேல்

#1209
அலம்அலம் இ புலால் புலை உடல் கட்டனேற்கு அறுமுக நித்தர் போற்றிய நாதா
அறிவிலி இட்டு உணா பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே
பலபல புத்தியாய் கலவியில் எய்த்திடா பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும்
பகடி துடுக்கன் வாய் கறையன் என தரா படியில் மனித்தர் தூற்றிடலாமோ
குல கிரி பொற்றலாய் குரை கடல் வற்றலாய் கொடிய அரக்கர் ஆர்ப்பு எழ வேத
குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா
கலை தலை கெட்ட பாய் சமணரை நட்ட கூர் கழு நிரை முட்ட ஏற்றிய தாள
கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடா கருணையும் ஒப்பிலா பெருமாளே

மேல்

#1210
அளக பாரமும் குலைந்து அரிய பார்வையும் சிவந்து அணுகி ஆகமும் முயங்கி அமுதூறல்
அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து அவசமாகவும் புணர்ந்து மடவாரை
பளகன் ஆவியும் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து பகல் இராவையும் மறந்து திரியாமல்
பரம ஞானமும் தெளிந்து பரிவு நேசமும் கிளர்ந்து பகருமாறு செம் பதங்கள் தரவேணும்
துளப மாயனும் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து தொழுது தேட அரும் ப்ரசண்டன் அருள் பாலா
சுரர்கள் நாயகன் பயந்த திருவை மா மணம் புணர்ந்து சுடரும் மோகனம் மிகுந்த மயில்பாகா
களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து கலவி நாடகம் பொருந்தி மகிழ்வோனே
கடிய பாதகம் தவிர்ந்து கழலை நாள்தொறும் கிளர்ந்து கருதுவார் மனம் புகுந்த பெருமாளே

மேல்

#1211
ஆசார ஈனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் ஆகாத நீசன் அநுசிதன் விபரீதன்
ஆசாவிசாரம் வெகு வித மோகா சரீத பரவசன் ஆகாச நீர் மண் அனல் வளி உரு மாறி
மாசு ஆன நால் எண் வகைதனை நீ நான் எனாத அறிவு உளம் வாயாத பாவி இவன் என நினையாமல்
மாதா பிதாவின் அருள் நலம் மாறா மகாரில் எனை இனி மா ஞான போதம் அருள்செய நினைவாயே
வீசால வேலை சுவறிட மா சூரர் மார்பு தொளைபட வேதாள ராசி பசி கெட அறை கூறி
மேகாரவாரம் என அதிர் போர் யாது தானர் எம புரம் மீது ஏற வேல் கொடு அமர்செயும் இளையோனே
கூசாது வேடன் உமிழ் தரு நீராடி ஊன் உண் எனும் உரை கூறா மன் ஈய அவன் நுகர் தரு சேடம்
கோது ஆம் எனாமல் அமுது செய் வேதாகம ஆதி முதல் தரு கோலோக நாத குறமகள் பெருமாளே

மேல்

#1212
ஆசை கூர் பத்தனேன் மனோ பத்மமான பூ வைத்து நடுவே
அன்பான நூல் இட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி ஒரு ஞான
வாசம் வீசி ப்ரகாசியா நிற்ப மாசு இல் ஓர் புத்தி அளி பாட
மாத்ருகா புஷ்ப மாலை கோலம் ப்ரவாள பாதத்தில் அணிவேனோ
மூசு கானகத்து மீது வாழ் முத்த மூரல் வேடிச்சி தன பார
மூழ்கு நீப ப்ரதாப மார்ப அத்த மூரி வேழத்தின் மயில் வாழ்வே
வீசு மீனம் பயோதி வாய்விட்டு வேக வேதித்து வரு மா சூர்
வீழ மோதி பராரை நாகத்து வீர வேல் தொட்ட பெருமாளே

மேல்

#1213
ஆசை கொளுத்தி வெகுவாக பசப்பி வரும் மாடை பணத்தை எடு என் உறவாடி
ஆர கழுத்து முலை மார்பை குலுக்கி விழி ஆட குலத்து மயில் கிளி போல
பேசி சிரித்து மயிர் கோதி குலைத்து முடி பேதைப்படுத்தி மயல் இடு மாதர்
பீறல் சலத்து வழி நாறப்படுத்தி எனை பீடைப்படுத்தும் மயல் ஒழியாதோ
தேசம் தடைத்து பிரகாசித்து ஒலித்து வரி சேடன் பிடித்து உதறு மயில் வீரா
தேடி துதித்த அடியார் சித்தம் உற்று அருள் சீர் பொன் பதத்த அரி மருகோனே
நேச படத்தி இமையோரை கெடுத்த முழு நீசற்கு அனத்தமுற விடும் வேலா
நேச குறத்தி மயலோடு உற்பவித்த பொனி நீர் பொன் புவிக்குள் மகிழ் பெருமாளே

மேல்

#1214
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர உருக்கிகள் தெரு மீதே
யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆலகால விழிச்சிகள் மலை போலும்
மாசு இலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி ஓதி முடிப்பவர் ஒழியாமல்
வாயில் ஊறல் அளிப்பவர் நாளுநாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது தவிர்வேனோ
ஓசையான திரை கடல் ஏழு ஞாலமும் உற்று அருள் ஈசரோடு உறவு உற்றவள் உமை ஆயி
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி
ஏசு இலாத அமலை கொடி தாய் மனோமணி சற்குணி ஈறு இலாத மலைக்கொடி அருள் பாலா
ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும் ஈசனோடு ப்ரயப்படு பெருமாளே

மேல்

#1215
ஆலம் ஏற்ற விழியினர் சால நீட்டி அழுதழுது ஆகம் மாய்க்க முறைமுறை பறை மோதி
ஆடல் பார்க்க நிலை எழு பாடை கூட்டி விரைய மயானம் ஏற்றி உறவினர் அயலாக
காலமாச்சு வருக என ஓலை காட்டி யமபடர் காவலாக்கி உயிரது கொடுபோ முன்
காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழல் இணை காதலால் கருதும் உணர் தருவாயே
வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண வியாழ கோத்ரம் மருவிய முருகோனே
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட மாற்றி வழிபடும் இளையோனே
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல் பூத்த படுகையில் வருவோனே
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான வார்த்தை அருளிய பெருமாளே

மேல்

#1216
ஆலும் மயில் போல் உற்ற தோகையர்களே மெத்த ஆர வடம் மேலிட்ட முலை மீதே
ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே
வேலும் அழகு ஆர் கொற்ற நீல மயில் மேல் உற்று வீறும் உனது ஆர் பத்மம் முகம் ஆறு
மேவி இரு பாகத்தும் வாழும் அனைமார் தக்க மேதகவும் நான் நித்தம் உரையேனோ
நாலு முக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு நாட அரியார் பெற்ற ஒரு பாலா
நாணம் உடையாள் வெற்றி வேடர் குல மீது ஒக்க நாடு குயில் பார் மிக்க எழில் மாது
வேலை விழி வேடச்சியார் கணவனே மத்த வேழ முகவோனுக்கும் இளையோனே
வீரமுடனே உற்ற சூரன் அணி மார்பத்து வேலை மிகவே விட்ட பெருமாளே

மேல்

#1217
இடை இத்தனை உள தத்தையர் இதழ் துய்த்து அவர் அநுபோகம்
இளகி கரை புரள புளகித கற்புர தன பாரம்
உடன் மன் கடைபடும் துற்குணம் அற நிற்குண உணர்வாலே
ஒரு நிஷ்கள வடிவில் புக ஒரு சற்று அருள்புரிவாயே
திடம் அற்று ஒளிர் நளின ப்ரம சிறை புக்கனன் என ஏகும்
தெதி பட்சண க்ருத பட்சண செக பட்சண என ஓதும்
விட பட்சணர் திரு மைத்துனன் வெருவ சுரர் பகை மேல் வேல்
விடு விக்ரம கிரி எட்டையும் விழ வெட்டிய பெருமாளே

மேல்

#1218
இரு குழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் இடமது உலாவி மீள்வன நுதல் தாவி
இழிவன காம வேதமும் மொழிவன தாரை வேல் என எறிவன காள கூடமும் அமுதாக
கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு கலவியில் மூழ்கி வாடிய தமியேனும்
கதி பெற ஈடு அறாதன பதி பசு பாசம் ஆனவை கசடு அற வேறுவேறு செய்து அருள்வாயே
ஒரு பது பாரம் மோலியும் இருபது வாகு மேருவும் உததியில் வீழ வானரம் உடனே சென்று
ஒரு கணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர் உணர் உபதேச தேசிக வரை ஏனல்
பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி பரிபுர பாத சேகர சுரராஜன்
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே

மேல்

#1219
இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி எனை இனிதா அழைத்து எனது முடி மேலே
இணை தாள் அளித்து உனது மயில் மேல் இருத்தி ஒளிர் இயல் வேல் அளித்து மகிழ் இருவோரும்
ஒருவாக என கயிலை இறையோன் அளித்து அருளும் ஒளிர் வேத கற்பக நல் இளையோனே
ஒளிர் மா மறை தொகுதி சுரர் பார் துதித்து அருள உபதேசிக பதமும் அருள்வாயே
கரு நோய் அறுத்து எனது மிடி தூள் படுத்திவிடு கரி மா முக கடவுள் அடியார்கள்
கருதா வகைக்கு வரம் அருள் ஞான தொப்பை மகிழ் கருணா கடப்ப மலர் அணிவோனே
திருமால் அளித்து அருளும் ஒரு ஞான பத்தினியை திகழ் மார்புற தழுவும் அயில் வேலா
சிலை தூள் எழுப்பி கவடு அவுணோரை வெட்டி சுரர் சிறை மீளவிட்ட புகழ் பெருமாளே

மேல்

#1220
இன மறை விதங்கள் கொஞ்சிய சிறு சதங்கை கிண்கிணி இலகு தண்டை அம் புண்டரீகம்
எனது மன பங்கயம் குவளை குரவம் புனைந்து இரவுபகல் சந்ததம் சிந்தியாதோ
உனது அருளை அன்றி இங்கு ஒரு துணையும் இன்றி நின்று உளையும் ஒரு வஞ்சகன் பஞ்சபூத
உடல் அது சுமந்து அலைந்து உலகுதொறும் வந்துவந்து உழலும் அது துன்பு கண்டு அன்புறாதோ
கன நிவத தந்த சங்க்ரம கவள துங்கம் வெம் கடம் விகட குஞ்சரம் தங்கும் யானை
கடக சயிலம் பெறும்படி அவுணர் துஞ்ச முன் கனக கிரி சம்பெழுந்து அம்பு ராசி
அனல் எழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன் என்று அரனும் உமையும் புகழ்ந்து அன்புகூர
அகில புவனங்களும் சுரரொடு திரண்டு நின்று அரி பிரமர் கும்பிடும் தம்பிரானே

மேல்

#1221
ஊன் ஏறு எலும்பு சீசீ மலங்களோடே நரம்பு கசுமாலம்
ஊழ் நோய் அடைந்து மாசு ஆன மண்டும் ஊனோடு உழன்ற கடை நாயேன்
நான் ஆர் ஒடுங்க நான் ஆர் வணங்க நான் ஆர் மகிழ்ந்து உனை ஓத
நான் ஆர் இரங்க நான் ஆர் உணங்க நான் ஆர் நடந்து விழ நான் ஆர்
தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருள் ஊறி
தாய் போல் பரிந்த தேனோடு உகந்து தானே தழைந்து சிவமாகி
தானே வளர்ந்து தானே இருந்த தார் வேணி எந்தை அருள் பாலா
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் சாரூப தொண்டர் பெருமாளே

மேல்

#1222
எதிர் ஒருவர் இலை உலகில் என அலகு சிலுகு விருதிட்டு க்ரியைக்கே எழுந்து பாரின்
இடை உழல்வ சுழலுவ அன சமய வித சகல கலை எட்டெட்டும் எட்டாத மந்த்ர வாளால்
விதி வழியின் உயிர் கவர வரு கொடிய யம படரை வெட்டி துணித்து ஆண்மை கொண்டு நீபம்
விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ
திதி புதல்வரொடு பொருது குருதி நதி முழுகி ஒளிர் செக்கச்செவத்து ஏறு செம் கை வேலா
சிகரி கிரி தகர விடும் உருவ மரகத கலப சித்ர ககத்து ஏறும் எம்பிரானே
முதிய பதினொரு விடையர் முடுகுவன பரி ககனம் முட்ட செலுத்தி ஆறிரண்டு தேரர்
மொழியும் இரு அசுவினிகள் இரு சது வித வசு எனும் முப்பத்துமுத்தேவர் தம்பிரானே

மேல்

#1223
எழுந்திடும் கப்பு செழும் குரும்பைக்கு ஒத்து இரண்டு கண் பட்டு இட்டு இளையோர் நெஞ்சு
இசைந்திசைந்து எட்டி கசிந்து அசைந்து இட்டு இணங்கு பொன் செப்பு தன மாதர்
அழுங்கல் அங்கத்து குழைந்து மன் பற்றுற்று அணைந்து பின் பற்று அற்று அகல் மாயத்து
அழுங்கு நெஞ்சு உற்று புழங்கு புண்பட்டிட்டு அலைந்தலைந்து எய்த்திட்டு உழல்வேனோ
பழம் பெரும் தித்திப்பு உறும் கரும்பு அப்பத்துடன் பெரும் கைக்குள் பட வாரி
பரந்து எழும் தொப்பைக்கு அருந்தி முன் பத்தர்க்கு இதம் செய்து ஒன்று அத்திக்கு இளையோனே
தழைந்து எழும் தொத்து தடம் கை கொண்டு அப்பி சலம் பிளந்து எற்றி பொரு சூர் அ
தடம் பெரும் கொக்கை தொடர்ந்து இடம் புக்கு தடிந்திடும் சொக்க பெருமாளே

மேல்

#1224
ஏட்டிலே வரை பாட்டிலே சில நீட்டிலே இனிது என்று தேடி
ஈட்டு மா பொருள் பாத்து உணாது இகல் ஏற்றமான குலங்கள் பேசி
காட்டிலே இயல் நாட்டிலே பயில் வீட்டிலே உலகங்கள் ஏச
காக்கை நாய் நரி பேய் குழாம் உண யாக்கை மாய்வது ஒழிந்திடாதோ
கோட்டும் ஆயிர நாட்டன் நாடு உறை கோட்டு வால் இப மங்கை கோவே
கோத்த வேலையில் ஆர்த்த சூர் பொரு வேல் சிகாவள கொங்கில் வேளே
பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர் பூட்கை சேர் குற மங்கைபாகா
பூத்த மா மலர் சாத்தியே கழல் போற்று தேவர்கள் பெருமாளே

மேல்

#1225
கச்சு பூட்டுகை சக்கு ஓடு அகத்தில் கோட்டு கிரி ஆலம்
கக்கி தேக்கு செக்கர் போர் கயல் கண் கூற்றில் மயலாகி
அச்ச கூச்சம் அற்று கேட்டவர்க்கு தூர்த்தன் என நாளும்
அத்த பேற்றில் இச்சிப்பார்க்கு அற பித்தாய் திரியலாமோ
பச்சை கூத்தர் மெச்சி சேத்த பத்ம கூட்டில் உறைவோர் இபத்தில்
சேர் பல் சக்கில் கூட்டர் பத்த கூட்டர் இயல் வானம்
மெச்சி போற்ற வெற்பு தோற்று வெட்க கோத்த கடல் மீதே
மெத்த காய்த்த கொக்கு கோட்டை வெட்டி சாய்த்த பெருமாளே

மேல்

#1226
கடலினும் பெரிய விழி மலையினும் பெரிய முலை கவர் இனும் துவர் அதரம் இரு தோள் பை
கழையினும் குழையும் என மொழி பழங்கிளவி பல களவு கொண்டு ஒருவர் மிசை கவி பாடி
அடல் அசஞ்சலன் அதுலன் அநுபமன் குணதரன் மெய் அருள் பர அங்குரன் அபயன் என ஆசித்து
அலமரும் பிறவி இனி அலம்அலம் பிறவி அற அருண பங்கய சரணம் அருள்வாயே
வட நெடும் குல ரசத கிரியினின்று இரு கலுழி மகிதலம் புக வழியும் அது போல
மத சலம் சலசல என முது சலம் சலதி நதி வழிவிடும்படி பெருகு முது பாகை
உடைய சங்க்ரம கவள தவள சித்துரம் திலகன் உலகும் இந்திரனும் நிலைபெற வேல் கொண்டு
உததி வெந்து அபயமிட மலையொடும் கொலை அவுணருடன் உடன்று அமர் பொருத பெருமாளே

மேல்

#1227
கட்ட கண பறைகள் கொட்ட குலத்து இளைஞர் கட்டி புறத்தில் அணை மீதே
கச்சு கிழித்த துணி சுற்றி கிடத்தி எரி கத்தி கொளுத்தி அனைவோரும்
சுட்டு குளித்து மனை புக்கிட்டு இருப்பர் இது சுத்த பொய் ஒப்பது உயிர் வாழ்வு
துக்க பிறப்பு அகல மிக்க சிவத்தது ஒரு சொர்க்க பதத்தை அருள்வாயே
எட்டு குல சயிலம் முட்ட தொளைத்து அமரர் எய்ப்பு தணித்த கதிர் வேலா
எத்தி குறத்தி இரு முத்த தன கிரியை எல் பொன் புயத்தில் அணிவோனே
வட்ட கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்து பணைத்த மணி மார்பா
வட்ட திரை கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டி துணித்த பெருமாளே

மேல்

#1228
கண்டு போல் மொழி வண்டு சேர் குழல் கண்கள் சேல் மதி முகம் வேய் தோள்
கண்டு பாவனை கொண்டு தோள்களில் ஒண்டு காதலில் இரு கோடு
மண்டி மார்பினில் விண்டதாம் என வந்த கூர் முலை மடவார்தம்
வஞ்ச மால் அதில் நெஞ்சு போய் மடிகின்ற மாயம் அது ஒழியாதோ
கொண்டல் ஆர் குழல் கெண்டை போல் விழி கொண்டு கோகில மொழி கூறும்
கொங்கையாள் குற மங்கை வாழ் தரு குன்றில் மால் கொடு செலும் வேலா
வெண்டி மா மனம் மண்டு சூர் கடல் வெம்ப மேதினிதனில் மீளா
வென்று யாவையும் அன்றி வேளையும் வென்று மேவிய பெருமாளே

மேல்

#1229
கப்பரை கை கொள வைப்பவர் மை பயில் கண் பயிலிட்டு இள வளவோரை
கைக்குள் வசப்பட பல் கறை இட்டு முகத்தை மினுக்கி வரும் உபாய
பப்பர மட்டைகள் பொட்டு இடு நெற்றியர் பற்று என உற்ற ஒர் தமியேனை
பத்ம பதத்தினில் வைத்து அருள் துய்த்து இரை பட்டது எனக்கு இனி அமையாதோ
கு பரவப்படு பட்ச மிகுத்துள முத்தரையர்க்கு ஒரு மகவு ஆகி
குத்திரம் அற்று உரை பற்று உணர்வு அற்ற ஒர் குற்றம் அறுத்திடு முதல்வோனே
விப்ர முனிக்கு உழை பெற்ற கொடிச்சி விசித்ர தன கிரி மிசை தோயும்
விக்ரம மல் புய வெற்பினை இட்டு எழு வெற்பை நெருக்கிய பெருமாளே

மேல்

#1230
கலை கோட்டு வல்லி விலை காட்டு வில் அரிவைமார்க்கு மெய்யில் அவ நூலின்
கலை காட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல கடு காட்டி வெய்ய அதி பார
கொலை கோட்டு கள் இடு அறிவோர்க்கும் உள்ள முகை யாக்கை நையும் உயிர் வாழ
கொடி கோட்டு மல்லி குரவ ஆர் கொள் தொல்லை மறை வாழ்த்து செய்ய கழல் தாராய்
சிலை கோட்டு மள்ளர் தினை காத்த கிள்ளை முலை வேட்ட பிள்ளை முருகோனே
திணி கோட்டு வெள் இபவன் நாட்டிலுள்ள சிறை மீட்ட தில்லம் மயில் வீரா
அலை கோட்டு வெள்ளம் மலைமாக்கள் விள்ள மலை வீழ்த்த வல்ல அயில் மோகா
அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே

மேல்

#1231
களவு கொண்டு கைக்காசின் அளவு அறிந்து கர்ப்பூர களப துங்க வித்தார முலை மீதே
கலவி இன்பம் விற்பார்கள் அவயவங்களை பாடு கவி தெரிந்து கற்பார்கள் சிலர் தாமே
உள நெகிழ்ந்து அசத்தான உரை மறந்து சத்தான உனை உணர்ந்து கத்தூரி மண நாறும்
உபய பங்கய தாளில் அபயம் என்று உனை பாடி உருகி நெஞ்சு சற்று ஓதில் இழிவாமோ
அளவில் வன் கவி சேனை பரவ வந்த சுக்ரீவ அரசுடன் கடல் தூளி எழவே போய்
அடல் இலங்கை சுட்டு ஆடி நிசிசரன் தச க்ரீவம் அற ஓர் அம்பு தொட்டார்தம் மருகோனே
வளரும் மந்தர சோலை மிசை செறிந்த முன் பாலை வனசர் கொம்பினை தேடி ஒரு வேட
வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்து அற கானில் மறவர் குன்றினில் போன பெருமாளே

மேல்

#1232
கள்ள மீன சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற கரிய மனமாகும்
கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய மெய்கள் தோணி பிறவி அலை வேலை
மெள்ள ஏறி குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ முல்லை வேர் உற்பலம் முளரி நீபம்
வில்ல நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதி பணிவது ஒரு நாளே
துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே
தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா
தெள்ளு நாத சுருதி வள்ளல் மோலி புடை கொள் செல்வனே முத்தமிணர் பெருவாழ்வே
தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானை தலைவ தெய்வயானைக்கு இனிய பெருமாளே

மேல்

#1233
கன்னியர் கடு விடம் மன்னிய கயல் அன கண்ணிலும் இரு கன தனம் மீதும்
கன்மைகள் மருவிய மன்மதன் உருவிலி மென்மை கொள் உருவிலும் மயலாகி
இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இ நிலை பெற இஙன் உதியாதே
எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும் வழிபட விடவேணும்
பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய புய வீரா
புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண் மலையொடு பொரு கதிர் வேலா
தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன் இசை உறு தமிழ் தெரிவோனே
தண் அளி தரும் ஒரு பன்னிரு விழி பயில் சண்முகம் அழகிய பெருமாளே

மேல்

#1234
கிஞ்சுகம் என சிவத்த தொண்டையள் மிக கறுத்த கெண்டையள் புன கொடிச்சி அதி பார
கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலை குறத்தி கிங்கரன் என படைத்த பெயர் பேசா
நெஞ்சு உருகி நெக்குநெக்கு நின்று தொழு நிர் குணத்தர் நிந்தனை இல் பத்தர் வெட்சி மலர் தூவும்
நின் பதயுக ப்ரசித்தி என்பன வகுத்து உரைக்க நின் பணி தமிழ் த்ரயத்தை அருள்வாயே
கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பு ஒசித்த கங்கனும் மதி திகைக்க மதம் வீசும்
கந்து எறி களிறு உரித்து வென்று திரு நட்டம் இட்ட கம்பனும் மதிக்க உக்ர வடி வேல் கொண்டு
அஞ்சிய ஜக த்ரயத்தை அஞ்சல் என விக்ரமித்து அன்பர் புகழ பொருப்பொடு அமராடி
அன்று அவுணரை களத்தில் வென்று உததியை கலக்கி அண்டர் சிறை வெட்டி விட்ட பெருமாளே

மேல்

#1235
குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும் குலமும் இறுமாப்பும் மிகுதியான
கொடிய பெரு வாழ்க்கையில் இனிய பொருள் ஈட்டியெ குருடுபடு மோடு என உடல் வீழில்
அடைவு உடை விடா சிறு பழைய துணி போர்த்தியெ அரிட சுடுகாட்டிடை இடு காயம்
அழியும் அளவாட்டில் உன் அமல மலர் மாப்பாத அருண சரண ஆஸ்பதம் அருள்வாயே
அடியினொடு மா தரு மொளமொளமொள ஆச்சு என அலறி விழ வேர் குலமொடு சாய
அவுணர் படை தோற்பு எழ அரு வரைகள் ஆர்ப்பு எழ அயில் அலகு சேப்பு எழ மறை நாலும்
உடைய முனி ஆள் பட முடுகு அவுணர் கீழ்ப்பட உயர் அமரர் மேற்பட வடியாத
உததி கமரா பிள முது குலிச பார்த்திபன் உலகு குடி ஏற்றிய பெருமாளே

மேல்

#1236
குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு அது உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம்
குலைகுலைந்து தெர்ப்பையிடை நினைந்து நிற்ப கொடிய கொண்டல் ஒத்த உருவாகி
மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து மரணம் என்ற துக்கம் அணுகா முன்
மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தரவேணும்
அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி
அரு நடம் செய் அப்பர் அருள் இரங்கைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே
சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமிதன் தனத்தை அணை மார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்துவிட்ட பெருமாளே

மேல்

#1237
கோகனகம் முகிழ்த்த போக புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே
கூட வரவழைக்கும் மாடு குழை அடர்த்த நீடிய குவளை கண் மடமானார்
ஆகமுற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே
ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ
மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே
வாகுவலையம் சித்ர ஆறிரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா
வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே
வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே

மேல்

#1238
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும்
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும்
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும்
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும்
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர் வேலா
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே

மேல்

#1239
சலம் மலம் அசுத்தம் மிக்க தசை குருதி அத்தி மொய்த்த தடி உடல் தனக்குள் உற்று மிகு மாயம்
சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தட கை அத்திதனில் உரு மிகுத்து மக்களொடு தாரம்
கலன் அணி துகில்கள் கற்பினொடு குலம் அனைத்தும் முற்றி கரு வழி அவத்தில் உற்று மகிழ்வாகி
கலை பல பிடித்து நித்தம் அலைபடும் அநர்த்தமுற்ற கடு வினை தனக்குள் நிற்பது ஒழியாதோ
மலைமகள் இடத்து வைத்து மதி புனல் சடைக்குள் வைத்து மழு அனல் கரத்துள் வைத்து மருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரி சிலை இட கை வைத்து மறை தொழ நகைத்த அத்தர் பெருவாழ்வே
பல திசை நடுக்கமுற்று நிலை கெட அடல் கை உற்ற படை அது பொருப்பில் விட்ட முருகோனே
பழுது அறு தவத்தில் உற்று வழி மொழி உரைத்த பத்தர் பலர் உய அருள் கண் வைத்த பெருமாளே

மேல்

#1240
சாங்கரி பாடியிட ஓங்கிய ஞான சுக தாண்டவம் ஆடியவர் வடிவான
சாந்தம் அதீதம் உணர் கூந்த தம சாதி அவர் தாங்களும் ஞானமுற அடியேனும்
தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு தோன்றிய சோதியொடு சிவயோகம்
தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு சோம்பினில் வாழும் வகை அருளாதோ
வாங்கு கை யானை என ஈன் குலை வாழை வளர் வான் பொழில் சூழும் வயல் அயல் ஏறி
மாங்கனி தேன் ஒழுக வேங்கையில் மேல் அரிகள் மாந்திய ஆரணிய மலை மீதில்
பூம் கொடி போலும் இடை ஏங்கிட வார் அம் அணி பூண்பன பாரியன தன பார
பூம் குற மாதினுடன் ஆங்கு உறவாடி இருள் பூம் பொழில் மேவி வளர் பெருமாளே

மேல்

#1241
சிவஞான புண்டரிக மலர் மாதுடன் கலவி சிவ போகம் மன் பருக அறியாமல்
செகம் மீது உழன்று மல வடிவாயிருந்து பொது திகழ் மாதர் பின் செருமி அழிவேனோ
தவம் மாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு தயவாய் மகிழ்ந்து தினம் விளையாட
தமியேன் மலங்கள் இருவினை நோய் இடிந்து அலற ததி நாளும் வந்தது என் முன் வரவேணும்
உவகாரி அன்பர் பணி கலியாணி எந்தை இட முறை நாயகம் கவுரி சிவகாமி
ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை ஒரு நாள் பகிர்ந்த உமை அருள் பாலா
அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர் புகும் அமுதாலயம் பதவி அருள்வோனே
அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே

மேல்

#1242
சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை
சீர் இட்டமாக நின்ற காசை கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே
ஆறெட்டுமாய் விரிந்தும் ஆறெட்டுமாகி நின்று ஆருக்குமே விளம்ப அறியாதே
ஆகத்து உளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உளே துலங்கி அருளாதோ
மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதிரங்கள் பிளவாக
வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட வீறு செம்பொன் வரையோடு
கூறிட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும்
கோல பெண் வாகு கண்டு மாலுற்ற வேளை கூடிக்குலாவும் அண்டர் பெருமாளே

மேல்

#1243
சூதின் உணவு ஆசைதனிலே சுழலும் மீன் அது என தூசு அழகான வடிவு அதனாலே
சூதம் உடல் நேரும் என மாதர் நசை தேடு பொருள் ஆசை தமிலே சுழல வரு காலன்
ஆதி விதியோடு பிறழாத வகை தேடி எனது ஆவிதனையே குறுகி வருபோது
ஆதி முருகா ஆதி முருகா ஆதி முருகா எனவும் ஆதி முருகா நினைவு தருவாயே
ஓது முகில் ஆடு கிரி ஏறுபட வாழ் அசுரர் ஓலமிடவே அயில் கொடு அமராடீ
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன நாடும் அடியார்கள் மனது உறைவோனே
ஞான சுர ஆனை கணவா முருகனே அமரர் நாடு பெற வாழ அருள் பெருமாளே

மேல்

#1244
செழும் தாது பார் மாது அரும்பு ஆதி ரூபோடு சிறந்து யாதிலும் ஆசை ஒழியாத
திறம் பூத வேதாளன் அரும் பாவமே கோடி செயும் காய நோயாளன் நரகு ஏழில்
விழுந்து ஆழவே மூழ்க இடும் காலன் மேவி ஆவி விடும் காலமே நாயேன் வினை பாவம்
விரைந்து ஏகவே வாசி துரந்து ஓடியே ஞான விளம்பு ஓசையே பேசி வரவேணும்
அழும் கோடி தேவார்கள் அமர்ந்து ஆர வான் நீடி அழன்று ஏகி மா சீத நெடு வேலை
அதிர்ந்து ஓடவே காலன் விழுந்து ஓடவே கூர அலங்கார வேல் ஏவும் முருகோனே
கொழும் கானிலே மாதர் செழும் சேலையே கோடு குருந்து ஏறு மால் மாயன் மருகோனே
குறம் பாடுவார் சேரி புகுந்து ஆசை மாதோடு குணம் கூடியே வாழு பெருமாளே

மேல்

#1245
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர் தக்க மனை இனமும் மனை வாழ்வும்
தப்பு நிலைமை அணுகைக்கு வர விரகு உதைக்கும் மயல் நினைவு குறுகா முன்
பத்தி உடன் உருகி நித்தம் உனது அடிகள் பற்றும் அருள் நினைவு தருவாயே
பத்து முடி உருளுவித்த பகழியினர் பச்சை நிற முகிலின் மருகோனே
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும்
அப்பி அமுது செயும் மொய்ப்பன் உதவ அடவிக்குள் குறமகளை அணைவோனே
முத்தி தரு முதல்வர் முக்கண் இறைவரோடு முற்றும் மறைமொழியை மொழிவேனோ
முட்ட அசுரர் கிளை கெட்டு முறிய முதல் வெட்டி அமர் பொருத பெருமாளே

மேல்

#1246
தலை அலய போகமும் சலனம் மிகு மோகமும் தவறு தரு காமமும் கனல் போலும்
தணி அரிய கோபமும் துணிவு அரிய லோபமும் சமய வெகு ரூபமும் பிறிது ஏதும்
அலம்அலம் எனா எழுந்து அவர்கள் அநுபூதி கொண்டு அறியும் ஒரு காரணம்தனை நாடாது
அதி மத புராணமும் சுருதிகளும் ஆகி நின்று அபரிமிதமாய் விளம்புவதோ தான்
கலக இரு பாணமும் திலக ஒரு சாபமும் களபம் ஒழியாத கொங்கையுமாகி
கவரும் அவதாரமும் கொடிய பரிதாபமும் கருதி இது வேளை என்று கிராத
குல திலக மானுடன் கலவி புரிவாய் பொரும் குலிசகர வாசவன் திரு நாடு
குடி புக நிசாசுரன் பொடி பட மகீதரன் குலைய நெடு வேல் விடும் பெருமாளே

மேல்

#1247
தவ நெறி தவறிய குருடுகள் தலை பறி கதறிய பரபாத
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு சருவா நின்று
அவன் இவன் உவன் உடன் அவள் இவள் உவள் அது இது உது எனும் ஆறு அற்று
அரு உரு ஒழிதரு உரு உடையது பதி தமியனும் உணர்வேனோ
குவலயம் முழுவதும் அதிர்பட வட குவடு இடிபட உரகேசன்
கொடு முடி பல நெரிதர நெடு முது குரை கடல் புனல் வறிதாக
துவல் கொடு முறையிடு சுரர் பதி துயரது கெட நிசிசரர் சேனை
துகள் எழ நட நவில் மரகத துரகதம் வர வல பெருமாளே

மேல்

#1248
திதலை உலாத்து பொன் களபம் விடா புது த்ரிவித கடா களிற்று உர கோடு
சிகர மகா ப்ரபை குவடு என வாய்த்து நல் சுரர் குடி ஏற்றிவிட்டு இளநீரை
மதன விடாய் தனத்து இளைஞரை வாட்டு செப்பு இணை முலை மாதவ கொடி போல்வார்
வலையில் இராப்பகல் பொழுதுகள் போக்கும் அற்று எனை உனை வாழ்த்த வைத்து அருள்வாயே
சத தள பார்த்திபற்கு அரி புருஷோத்தமற்கு எரி கனல் ஏற்றவற்கு உணராத ஓர்
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷம் முக்கிய பர மார்த்தம் முன் புகல்வோனே
கதிர் மணி நீர் கடல் சுழி புகு ராக்ஷத கலக பராக்ரம கதிர் வேலா
கருதிய பாட்டில் நிற்றலை தெரி மா க்ஷண கவிஞர் உசாத்துணை பெருமாளே

மேல்

#1249
திரை வஞ்ச இருவினைகள் நரை அங்கம் மலம் அழிய சிவகங்கைதனில் முழுகி விளையாடி
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும்
அரன் மைந்தன் என களிறு முகன் நம்பி என மகிழ அடியென் கண் அளி பரவ மயில் ஏறி
அயில் கொண்டு திரு நடனம் என தந்தை உடன் மருவி அருமந்த பொருளை இனி அருள்வாயே
பரி என்ப நரிகள்தமை நடனம் கொண்டு ஒரு வழுதி பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன்
பழி அஞ்சி எனது அருகில் உறை புண்டரிக வடிவ பவளம் சொல் உமை கொழுநன் அருள் பாலா
இருள் வஞ்ச கிரி அவுணர் உடன் எங்கள் இருவினையும் எரியுண்டு பொடிய அயில் விடுவோனே
எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே

மேல்

#1250
தீ ஊதை தாத்ரி பானீயம் ஏற்ற வான் ஈதியால் திகழும் ஆசை
சேறு ஊறு தோல் பை யானாக நோக்கும் மா மாயை தீர்க்க அறியாத
பேய் பூதம் மூத்த பாறு ஓரி காக்கை பீறா இழா தின் உடல் பேணி
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை போம் ஆறு பேர்த்து உன் அடி தாராய்
வேய் ஊரு சீர் கை வேல் வேடர் காட்டில் ஏய்வாளை வேட்க உரு மாறி
மீளாது வேட்கை மீது ஊர வாய்த்த வேலோடு வேய்த்த இளையோனே
மாயூர ஏற்றின் மீதே புகா பொன் மா மேரு வேர் பறிய மோதி
மாறு ஆன மாக்கள் நீறாக ஓட்டி வான் நாடு காத்த பெருமாளே

மேல்

#1251
துடித்து எதிர் வடித்து எழு குதர்க்க சமயத்தவர் சுழற்கு ஒரு கோடிகோடி எதிர் கூறி
துகைப்பன அகித தலை அறுப்பன அயில் விட்டு உடல் துணிப்பன கணி தலை மிசை பார
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட முறைப்படு மறை திரள் அறியாத
முதல் பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கு ஒரு மொழி பொருள் பழிப்பு அற அருள்வாயே
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன கொழுத்த குருதி கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன குவட்டினை இடிப்பன சில பாடல்
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன பயிற்றி அலகை குலம் விளையாட
பகைத்து எழும் அரக்கரை இமைப்பொழுதினில் பொடிபட பொருது உழக்கிய பெருமாளே

மேல்

#1252
துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம்
சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் சுத்த சொல் பகீரதி திரை நீலம்
புத்தெருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு மத்தை வேணியர்க்கு அருள்கூரும்
புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே
பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம் இட்டு உலாவிய அச்சுரர் மாள
பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி வாய் தரும் பத்ம சிட்டன் ஓட முத்து எறி மீனம்
கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க மா முறிந்து உட்க முத்து வாரணம் சத கோடி
கை களிற்று வாரணம் புக்கு ஒளிக்க வாரணம் கை பிடித்த சேவக பெருமாளே

மேல்

#1253
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை தெரிவதற்கு உள்ளம் உணரா முன்
சினம் மிகுத்த திண்ணர் தனி வளைத்து வெய்ய சிலுகு தைத்து வன்மை சிதையா முன்
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு பரமனுக்கு நல்ல மருகோனே
பழுதில் நின் சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை பகர்வதற்கு நன்மை தருவாயே
இரு கிரிக்கள் உள்ளவரை தடிக்கும் மின்னும் இடியும் மொய்த்தது என்ன எழு சூரை
எழு கடற்குள் உள்ளும் முழுகுவித்து விண்ணுள் இமையவர்க்கு வன்மை தருவோனே
அரிவை பக்கம் உய்ய உருகி வைக்கும் ஐயர் அறிய மிக்க உண்மை அருள்வோனே
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல அடியவர்க்கு நல்ல பெருமாளே

மேல்

#1254
தென்றலும் அன்று இன்று அலை பொங்கு திண் கடல் ஒன்றும் மிக மோத
செம் தழல் ஒன்று வெம் தழல் சிந்து திங்களும் வந்து துணை ஏய
அன்றிலும் அன்றி துன்று சரங்கம் ஐந்தும் என் நெஞ்சம் அழியாதே
அந்தியில் என்றன் வெம் துயர் அஞ்ச அன்பொடு அலங்கல் தரவேணும்
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா
வெண் தரளங்கள் தண்டை சதங்கை மின் கொடு இலங்கு கழலோனே
கொன்றை அணிந்த சங்கரர் அன்று கும்பிட வந்த குமரேசா
குன்றிட அண்டர் அன்று உய என்று குன்றம் எறிந்த பெருமாளே

மேல்

#1255
தோரண கனக வாசலில் முழவு தோல் முரசு அதிர முதிராத
தோகையர் கவரி வீச வயிரியர் தோள் வலி புகழ மத கோப
வாரணம் ரத பதாகினி துரக மாதிர நிறைய அரசாகி
வாழினும் வறுமைகூரினும் நினது வார் கழல் ஒழிய மொழியேனே
பூரண புவன காரண சவரி பூதர புளக தன பார
பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி குடியேற
ஆரண வனச ஈரிறு குடுமி ஆரியன் வெருவ மயில் ஏறும்
ஆரிய பரம ஞானமும் அழகும் ஆண்மையும் உடைய பெருமாளே

மேல்

#1256
நச்சு வாள் விழி கொடு எற்றியே தனத்தை நத்துவார் சுகத்தில் நலமாக
நட்ட மா மனத்தை இட்டமே கொடுத்து நத்து வாழ் கடற்குள் அணை போலே
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து கட்ட ஏழ் பிறப்பு விடவே தான்
கற்ற நூல் உகக்க வெட்கமே செறித்த கட்டனேன் நினைப்பது ஒரு நாளே
இச்சையே செலுத்தி உச்சி தாள் பலிக்கும் இட்டம் மால் அவற்கு மருகோனே
எற்று வாரிதிக்குள் முற்றி நீள் பொருப்பை எக்கி நேர் மடித்த இளையோனே
மெச்சவே புடைத்த முத்தம் ஆர் தனத்தி மிக்க வாள் படைத்த விழியாலே
வெட்டும் மா மறத்தி ஒக்கவே இருக்க வெற்றி வேல் எடுத்த பெருமாளே

மேல்

#1257
நல் குணம் உளார் தமை பொல் மை குழலிலே சிறக்க நல் பரிமளாதி துற்ற மலர் சூடி
நச்சு விழியால் மயக்கி இச்சை பல பேசியுற்று நல் பொருள் அவாம் மனத்தர் வசமாகி
வெற்பு அனைய மா தனத்தை பொற்புற உறா அணைத்து மெத்த மயலாகி நித்தம் மெலியாதே
வெட்சி கமழ் நீப புஷ்ப வெற்றி சிறு பாத பத்மம் மெய் கிருபை நீ அளிப்பது ஒரு நாளே
ரத்தின பணா நிருத்தன் மெய் சுதனு நாடு மிக்க லக்ஷண குமார சுப்ரமணியோனே
நல் திசையும் ஏறி இட்ட பொய் சமணை வேரறுத்து நல் திருநிறே பரப்பி விளையாடும்
சத்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கு ஒர் சத்குரு விநோத சித்ர மயில் வீரா
சக்ரதரன் மார்பு அகத்தில் உக்ரமுடனே தரித்த சத்தி அடையாளம் இட்ட பெருமாளே

மேல்

#1258
நாகாங்க ரோமம் காட்டி வார் ஏந்து நாகம் காட்டி நாம் ஏந்து பாலம் காட்டி அபிராம
நானாங்க ராகம் காட்டி நாகேந்த்ர நீலம் காட்டி நாயேன் ப்ரகாசம் காட்டி மடலூர
மேகாங்க கேசம் காட்டி வாய் ஆம்பல் வாசம் காட்டி மீது ஊர்ந்த போகம் காட்டி உயிர் ஈர்வார்
மேல் வீழ்ந்து தோயும் தூர்த்தன் மோகாந்தகாரம் தீர்க்க வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி ஏடு ஆர்ந்த நீபம் போற்றி முகில் தாவி
ஏறு ஓங்கல் ஏழும் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும்
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாது அன்று ஆர்த்து தேசாங்க சூரன் தோற்க மயில் ஏறி
சேவு ஏந்தி தேசம் பார்க்க வேல் ஏந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகம் காத்த பெருமாளே

மேல்

#1259
பரிமள மலர் அடுத்து அகில் மணம் முழுகி மை பரவிய ம்ருகமத குழல் மானார்
பரு மணி வயிரம் முத்து இலகிய குழையினில் படை பொருவன விழி கயலாலே
எரியுறு மெழுகு என தனி மனம் அடைய நெக்கு இனிமையொடு உருக விட்டு அவமே யான்
இருவினை நலிய மெய் திறலுடன் அறிவு கெட்டு இடர் படுவது கெடுத்து அருள்வாயே
சொரி மத அருவி விட்டு ஒழுகிய புகர் முக தொளைபடு கர மலைக்கு இளையோனே
துடி இடை ஒரு குற குல மயில் புளகித துணை முலை தழுவு பொன் புய வீரா
அரியன பல விதத்தொடு திமிலையும் உடுக்கையும் மொகுமொகு என சத கோடி
அலகையும் உடன் நடித்திட அயில் எடுத்து அமர்செயும் அறுமுக பெருமாளே

மேல்

#1260
பற்ற நெட்டை படைத்து உள் து இருள் தைத்து அயிர்ப்பு அத்தை முட்டி படுத்து அயில் மாதர்
பக்கம் இட்டு பொருள் கொள் குமிட்ட பரம் பற்று கெட்டு பயிர் களை போலும்
கற்ற கட்டு கவி கொட்டம் ஒட்டி களைத்திட்டு கத்தத்தினுற்று அகம் மாயும்
கட்டம் அற்று கழல் பற்றி முத்தி கருத்து ஒக்க நொக்கு கணித்து அருள்வாயே
வற்ற வட்ட கடல் கிட்டி வட்டி துரத்திட்டு மட்டுப்பட பொரு மாயன்
மற்றும் ஒப்பு தரித்து எட்டஎட்ட புறத்துற்ற அத்தர்க்கு அருள் பெருவாழ்வே
செற்றம் முற்ற சினத்திட்டு நெட்டை பொருப்பு எட்டை முட்டி செருசெயும் வேலா
சித்தர் சித்தத்துற பற்றி மெத்த புகழ் செப்பு முத்தி தமிழ் பெருமாளே

மேல்

#1261
பாதகமான யாக்கை வாது செய் பாவி கோத்த பாணமும் வாளும் ஏற்ற இரு பார்வை
பார படீரம் மா பயோதர மாதர் வாய்த்த பாயலின் மீது அணாப்பி இதம் ஆடும்
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு தூய்மையில் நாயினேற்கும் வினை தீர
சூழும் அனாதி நீத்த யானொடு தான் இலா சுகோதய ஞான வார்த்தை அருள்வாயே
சாதன வேத நூல் புராதன பூண நூல் ப்ரஜாபதி ஆண்மை தோற்க வரை சாடி
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேல் ப்ரதாப மகீப போற்றி என நேமி
மாதவன் மாது பூத்த பாகர் அநேக நாட்ட வாசவன் ஓதி மீட்க மறை நீப
மா மலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி வானவர் சேனை காத்த பெருமாளே

மேல்

#1262
பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாக
பாவையர் உந்தியில் மூழ்கி நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயில்
ஆர் அமுது உண்டு அணை மீதில் இருந்து அநுராகம் விளைந்திட விளையாடி
ஆக நகம் பட ஆரம் முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ
நாரதன் அன்று சகாயம் மொழிந்திட நாயகி பைம் புனம் அது தேடி
நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் நாடியே பங்கய பதம் நோவ
மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய்
மா முநிவன் புணர் மான் உதவும் தனி மானை மணம்செய்த பெருமாளே

மேல்

#1263
பிரமனும் விரகொடு பிணிவினை இடர் கொடு பேணி கரம் கொண்டு இரு காலும்
பெற நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து புவியூடே
வர விட வரும் உடல் எரியிடை புகுதரு வாதை தரங்கம் பிறவா முன்
மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர் அன்பும் தருவாயே
அரு வரை தொளைபட அலை கடல் சுவறிட ஆலிப்புடன் சென்ற அசுரேசர்
அனைவரும் மடிவுற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்தனம் கொண்டு எழும் வேலா
இருவினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும் செந்தமிழ் வாயா
இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாளே

மேல்

#1264
பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி
போம் வழி ஏது தெரிந்து ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண
நாடி ஒர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த நாயகர் பாதம் இரண்டும் அடைவேனோ
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி
வாழ் சிவகாம சவுந்த்ரி ஆலம் மெலாம் முக பஞ்ச வாலை புராரி இடம் தகு உமை ஆயி
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ் உலகங்கள் தரு பேதை
வேடம் எலாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற வேணியர் நாயகி தந்த பெருமாளே

மேல்

#1265
பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால் ப்ரியம்கூர வந்து கரு ஊறி
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து பிணம் ஆனார்
அரும் கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள் அலங்கார் நன்று இது என மூழ்கி
அகன்று ஆசையும் போய் விழும் பாழ் உடம்பால் அலந்தேனை அஞ்சல் என வேணும்
இரும் கானகம் போய் இளம் காளை பின் போக எங்கே மடந்தை என ஏகி
எழுந்தே குரங்கால் இலங்காபுரி தீயிடும் காவலன்தன் மருகோனே
பொரும் கார் முகம் பாணி கொண்டே இறைஞ்சார் புறம் சாய அம்பு தொடும் வேலா
புனம் காவல் அம் கோதை பங்கா அபங்கா புகழ்ந்து ஓதும் அண்டர் பெருமாளே

மேல்

#1266
மக்கள் பிறப்புக்குள் ஒக்க பிறப்புற்ற மட்டுற்ற சுற்றத்தர் மனையாளும்
மத்திய தலத்துற்று நித்த பிணக்கிட்டு வைத்து பொருள் பற்றும் மிக நாட
நிக்ரித்து இடு துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டை கயிற்றிட்டு வளையா முன்
நெக்கு குரு பத்தி மிக்கு கழல் செப்ப நில் தத்துவ சொற்கள் அருள்வாயே
திக்கு அப்புறத்துக்குள் நிற்க புகழ் பித்த சித்ர தமிழ் கொற்றம் உடையோனே
சிப்ப குடில் கட்டும் அற்பம் குறத்தி சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா
முக்கண் சடை சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தி துவக்குற்று மொழிவோனே
முட்ட சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டி தொளைத்திட்ட பெருமாளே

மேல்

#1267
மக்கள் தாயர்க்கும் மருகர்க்கும் மாமர்க்கும் மனைவிக்கும் வாழ்நர்க்கும் மிக மனதூடே
மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாய துயரம் வைத்து வாட சமனும் உற மேவி
திக்கு நாடி கரிய மெய் கடாவில் திருகி திக்க ஆவி களவு தெரியா முன்
சித்தம் ஓவி துயிலும் அற்று வாழ சிறிது சித்ர பாத கமலம் அருள்வாயே
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன்
எச்சராதிக்கும் உற நிற்கும் மாயற்கு முதல் எட்டொணா வித்தைதனை இனிது ஈவாய்
பக்க ஆர்வத்துடன் நெக்கு நாடி பரவும் பத்தர் பாடற்கு உருகும் முருகோனே
பக்கம் யானை திருவொடு ஒக்க வாழ குறவர் பச்சை மானுக்கு இனிய பெருமாளே

மேல்

#1268
மதன் இக்கு அது கொடு பதும புது மலர் மலையப்பட விடு வலியாலே
வனம் முற்றின வளை இனம் நித்தில மலை வலையத்து உகள் வளை கடலாலே
விதனப்படும் மதி வதன கொடி அற வெருவி பரிமள அணை மீதே
மெலிய கலை தலை குலைய தகும் இனி விரைய குர அலர் தரவேணும்
புதன் ஐ சதுமுக விதி அச்சுதன் எதிர் புனைவித்தவர் தொழு கழல் வீரா
பொரு கை சரி வரி பெருக செறிவுறு புனம் மெய் குறமகள் மணவாளா
முது நல் சரவணம் அதனில் சத தள முளரி பதிதனில் உறைவோனே
முதுமை கடல் அடல் அசுர படை கெட முடுகி பொர வல பெருமாளே

மேல்

#1269
மதிதனை இலாத பாவி குரு நெறி இலாத கோபி மனநிலை நிலாத பேயன் அவம் மாயை
வகை அது விடாத பேடி தவ நினை இலாத மோடி வரும் வகை இது ஏது காயம் என நாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினை இகல் விடாத கூளன் எனை நீயும்
மிகு பரமதான ஞான நெறிதனை விசாரமாக மிகும் உனது ரூப தானம் அருள்வாயே
எதிர் வரும் உதார சூரன் இரு பிளவதாக வேலை இயலோடு கடாவு தீர குமரேசா
இனிய சொல் மறாத சீலர் கரு விழி வராமல் நாளும் இளமை அது தானும் ஆக நினைவோனே
நதியுடன் அராவு பூணு பரமர் குருநாதனான நடைபெறு கடூரமான மயில் வீரா
நகை முக விநோத ஞான குற மினுடனே குலாவு நவ மணி உலாவு மார்ப பெருமாளே

மேல்

#1270
மலம் தோல் சலம் தேற்று எலும்பால் கலந்து ஈட்டிடும் கூட்டினில் தங்கிடு மாயம்
மயங்கா தியங்கா பயம் கோட்டிடும் காற்றுடன் போக்குற தந்தையும் மாதும்
குலம் தாய்க்கு உடம்பால் பிறந்து ஏற்றிடும் கோத்து அடம் கூப்பிட தம் புவி யாவும்
குலைந்து ஆர்ப்பு எழும் காட்டில் அம் தாள்கள் அன்பால் குணம் காத்து உனை கும்பிட ஆளாய்
தலம் தாள் தொடு அண்டா தளைந்தார்க்கு இளம் கா தடம் தாள் புடைத்த அன்பினர் வாழத்தரும்
கூத்தரும் பார்த்து உகந்து ஏத்திட சாத்திரம் சாற்றி நிற்கும் பெருவாழ்வே
அலைந்த ஆற்று எழும் கோ சலம் தீ கலந்து ஆள் தரம் போச்சு என கன்றிடும் வேலா
அறம் காத்து உறங்கா திறம் பார்த்து இருந்தோர்க்கு அயந்தோர்க்கு அளிக்கும் பெருமாளே

மேல்

#1271
மன நூறு கோடி துன்ப நொடி மீதிலே நினைந்து மதன் ஊடலே முயங்கி அதி ரூப
மட மாதர் ஆசை கொண்டு புவி மீதிலே மயங்கி மதி சீர் எலாம் அழிந்து கொடிதான
வினை மூடியே திரிந்து புவி மீதிலே உழன்று விரகால் மெயே தளர்ந்துவிடு நாளில்
விசையான தோகை துங்க மயில் ஏறி ஓடி வந்து வெளி ஞான வீடு தந்து அருள்வாயே
தினை வேடர் காவல் தங்கு மலை காடு எலாம் உழன்று சிறு பேதை கால் பணிந்த குமரேசா
திரை ஆழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற திருமால் முராரி தங்கை அருள் பாலா
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த முது சூரர் தானை தங்கள் கிளையோடு
முடி கோடி தூள் எழுந்து கழுகோடு பாறு அருந்த முனை வேலினால் எறிந்த பெருமாளே

மேல்

#1272
மாதர் மயல்தனில் கலந்து காம பனி என புகுந்து மாட இயல் என சுழன்று கரு ஊறி
மாறி பல என சுமந்து தேனு குடம் என திரண்டு மாதம் இது என தளர்ந்து வெளி ஆகி
வேத புவிதனில் கழன்று ஏனம் எனஎன தவழ்ந்து வீறு மணிகளை புனைந்து நடை மேலாய்
வேண விதம் என திரிந்து நாறு புழுகு உடல் திமிர்ந்து வேசி வலைதனில் கலந்து மடிவேனோ
ஆதி சரண் என கயம் குலாவ முதலையை கிடங்கில் ஆர உடல்தனை பிளந்த அரி நேமி
ஆமை கயல் என செயம் கொள் கோல குறள் தடம் கை அரியான அரவணை சயந்தன் மருகோனே
சோதி உரு என திரண்டு கோல அருணையில் கலந்த சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா
தோகை மயில் என் சிறந்த ரூபி குறமகட்கு இரங்கி தோள்கள் இறுகிட புணர்ந்த பெருமாளே

மேல்

#1273
முத்து மணி ஆரம் மொய்த்திட்ட இரு கோடும் முற்பட்ட கரி போலும் அ தன மாதர்
முற்று மதி ஆர் முகத்துற்ற வேல் உறப்பட்டு முகில் போல் மனத்து இருள் மூடி
சுத்த மதி போய் வினை துட்டவனாய் மன துக்கம் உறவே மிக சுழலாதே
சொற்கள் பல நாவினில் தொட்டு உன் இரு தாள் தொழ சொல் கமல வாழ்வு சற்று அருள்வாயே
கொத்து முடியான பத்து அற்று விழவே குறிப்புற்ற அதி கோபன் அச்சுதன் மாயன்
கொற்றம் மருகா குற கொச்சை மற மாதினுக்கு இச்சை மொழி கூறு நல் குமரேசா
பத்தியுடனே நினைத்து எத்தும் அடியார் வினை பற்று விடும் மா மறை பொருள் ஆனாய்
பத்தி வர ஞான சொல் கற்றவர்கள் பாடு நல் பக்ஷபத தேவர் மெய் பெருமாளே

மேல்

#1274
முருக மயூர சேவக சரவண ஏனல் பூ தரி முகுள படீர கோமள முலை மீதே
முழுகிய காதல் காமுக பதி பசு பாச தீர் வினை முதிய புராரிக்கு ஓதிய குரு என்று
உருகியும் ஆடிப்பாடியும் இரு கழல் நாடி சூடியும் உணர்வினொடு ஊடி கூடியும் வழிபாடுற்று
உலகினோர் ஆசை பாடு அற நிலை பெறும் ஞானத்தால் இனி உனது அடியாரை சேர்வதும் ஒரு நாளே
மருகன் எனாமல் சூழ் கொலை கருதிய மாம பாதகன் வரவிடு மாய பேய் முலை பருகா மேல்
வரும் மத யானை கோடு அவை திருகி விளாவி காய் கனி மதுகையில் வீழ சாடி அ சதம் மா புள்
பொருது இரு கோர பாரிய மறுது இடை போய் அப்போது ஒரு சகடு உதையா மல் போர்செய்து விளையாடி
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுதபுரம் அதில் மா புத்தேளிர்கள் பெருமாளே

மேல்

#1275
மூலா நிலம் அதின் மேலே மனதுறு மோகாடவி சுடர்தனை நாடி
மோனாநிலைதனை நானா வகையிலும் ஓதா நெறி முறை முதல் கூறும்
லீலாவிதம் உனதாலே கதி பெற நேமா ரகசிய உபதேசம்
நீடூழி தன் நிலை வாடா மணி ஒளி நீதா பலம் அது தருவாயே
நாலா ருசி அமுதாலே திரு மறை நாலாய் அது செபம் மணி மாலை
நாடு ஆய் தவர் இடர் கேடா அரிஅரி நாராயணர் திரு மருகோனே
சூலாதிபர் சிவஞானார் யமன் உதை காலார் தர வரு குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக சோதீ நடமிடும் பெருமாளே

மேல்

#1276
வரி பரந்து இரண்டு நயனமும் சிவந்து வதன மண்டலங்கள் குறு வேர்வாய்
மணி சிலம்பு அலம்ப அளகமும் குலைந்து வசம் அழிந்து இழிந்து மயல்கூர
இரு தனம் குலுங்க இடை துவண்டு அனுங்க இனிய தொண்டை உண்டு மடவார் தோள்
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும் பொன் இலகு நின் பதங்கள் மறவேனே
விரி பரந்து இயங்கும் உததியும் கலங்க விடம் இனும் பிறந்தது என வானோர்
வெருவி நெஞ்சம் அஞ்சி உரனொடும் தயங்கி விரை பதம் பணிந்து முறையோ என்று
உரை மறந்து உணங்க அயில் தொடும் ப்ரசண்ட உயர் தலம் குலுங்க வரு தோகை
ஒரு பெரும் சிகண்டி மயில் அமர்ந்து இலங்கி உலகமும் புரந்த பெருமாளே

மேல்

#1277
வரி விழி பூசலாட இரு குழை ஊசலாட வளர் முலைதானும் ஆட வளை ஆட
மணி வட மாலை ஆட முருகு அவிழ் ஓதி ஆட மதுர அமுதம் ஊறி வீழ அனுராகம்
இருவரும் ஏக போகம் ஒருவர் தம் ஆகம் ஆக இதமொடு கூடி மாயை படுபோதும்
இரு கரம் ஆறும்ஆறும் அறு முகம் நீபம் மார்பும் இரு கழல் தானும் நானும் மறவேனே
திரு நடம் ஆடும் காளி பயிரவி மோடி சூலி திரிபுர நீறு அதாக அனல் மோதும்
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி திரு முலை ஆயி தாயி அருள் பாலா
குரு பர நாதன் ஆகி அரன் ஒரு காதில் ஓது குணநிதி ஆசை நேச முருகோனே
குறமகள் ஆர பார முகிழ் முலை மீது தாது குலவிய மாலை மேவு பெருமாளே

மேல்

#1278
விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய
வெட்டி பிளந்து உளம் பிட்டு பறிந்திடும் செம் கண் வேலும்
விரை அளகம் முகிலும் இள நகையும் ம்ருகமத கன விசித்ர
தனங்களும் தித்தித்த தொண்டையும் புண்டரீக
சுழி மடுவும் இடையும் அழகிய மகளிர் தரு கலவி
சுட்டி திரிந்து இஙன் தட்டுப்படும் கொடும் பங்க வாழ்வும்
தொலைவு இல் பிறவியும் அகல ஒரு மவுன பரம சுக
சுத்த பெரும் பதம் சித்திக்க அன்புடன் சிந்தியாதோ
எழுத அரிய அறு முகமும் அணி நுதலும் வயிரம் இடையிட்டு
சமைந்த செம் சுட்டி கலன்களும் துங்க நீள் பன்னிரு
கருணை விழி மலரும் இலகு பதினிரு குழையும்
ரத்ந குதம்பையும் கரங்களும் செம்பொன் நூலும்
மொழி புகழும் உடை மணியும் அரை வடமும் அடி இணையும்
முத்த சதங்கையும் சித்ர சிகண்டியும் செம் கை வேலும்
முழுதும் அழகிய குமர கிரி குமரியுடன் உருகும்
முக்கண் சிவன் பெறும் சற்புத்ர உம்பர்தம் தம்பிரானே

மேல்

#1279
வீணை இசை கோட்டி ஆலம் இடறு ஊட்டு வீரம் முனை ஈட்டி விழியார்தம்
வேதனையில் நாட்டம் ஆகி இடர்பாட்டில் வீழும் மயல் தீட்டி உழலாதே
ஆணி உள வீட்டை மேவி உளம் மாட்டை ஆவலுடன் ஈட்டி அழியாதே
ஆவி உறை கூட்டில் ஞான மறை ஊட்டி ஆன நிலை காட்டி அருள்வாயே
கேணி உற வேட்ட ஞான நெறி வேட்டர் கேள் சுருதி நாட்டில் உறைவோனே
கீத இசை கூட்டி வேத மொழி சூட்டு கீரர் இயல் கேட்ட க்ருபை வேளே
சேணின் உயர் காட்டில் வாழும் மறவாட்டி சீத இரு கோட்டில் அணைவோனே
சீறு அவுணர் நாட்டில் ஆர அழல் மூட்டி தேவர் சிறை மீட்ட பெருமாளே

மேல்

#1280
வேலை வாளை கொடிய ஆலகாலத்தை மதன் வீசு பாணத்தை நிகர் எனல் ஆகும்
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில் விளையாடி மோகித்து இரியும் வெகு ரூப
கோலகாலத்தை விடல் ஆகி மாற குண விகாரம் ஓட தெளிய அரிதான
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின் வழி கூடலாக பெருமை தருவாயே
வாலி மார்பை துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போட கருதும் மநு ராமன்
வான் உலோகத்தில் அமரேசன் ஓலிக்க வளை ஊதி மோகித்து விழ அருள்கூரும்
நீல மேனிக்கு மருகா உதாரத்து வரு நீசர் வாழ்வை களையும் இளையோனே
நேசமாக குறவர் தோகை மானை புணரும் நீப தோள் ஒப்பு அரிய பெருமாளே

மேல்

#1281
இ தரணி மீதில் பிறவாதே எத்தரொடு கூடி கலவாதே
முத்தமிழை ஒதி தளராதே முத்தி அடியேனுக்கு அருள்வாயே
தத்துவ மெய்ஞ்ஞான குருநாதா சத்த சொருபா புத்த அமுதோனே
நித்திய க்ருதா நல் பெருவாழ்வே நிர்த்த ஜெக ஜோதி பெருமாளே

மேல்

#1282
என் பந்த வினை தொடர் போக்கி விசையமாகி இன்பம்தனை உற்று மகா ப்ரியம் அதுவாகி
அன்பு உந்திய பொன் கிணி பாற்கடல் அமுதான அந்தம்தனில் இச்சைகொள் ஆற்பதம் அருள்வாயே
முன் புந்தி நினைத்து உருவால் சிறு வடிவாகி முன் திந்தி என பரதாத்துடன் நடமாடி
தம் பந்தம் அற தவ நோற்பவர் குறை தீர சம்பந்தன் என தமிழ் தேக்கிய பெருமாளே

மேல்

#1283
கருப்பத்து ஊறி பிறவாதே கனக்க பாடுற்று உழலாதே
திரு பொன் பாதத்து அனுபூதி சிறக்க பாலித்து அருள்வாயே
பரப்பு அற்றாருக்கு உரியோனே பரத்த அப்பாலுக்கு அணியோனே
திரு கை சேவல் கொடியோனே செகத்தில் சோதி பெருமாளே

மேல்

#1284
கருப்பையில் சுக்கிலத்து உலைத்து உற்பவித்து மறுகாதே
கபட்டு அசட்டர்க்கு இதத்த சித்ர தமிழ்க்கள் உரையாதே
விருப்பமுற்று துதித்து எனை பற்று என கருது நீயே
வெளிப்பட பற்றிட படுத்த தருக்கி மகிழ்வோனே
பருப்பதத்தை தொளைத்த சத்தி படை சமர வேளே
பணி குலத்தை கவர் பதத்துக்கு அளித்த மயிலோனே
செரு புறத்து சினத்தை முற்ற பரப்பும் இசையோனே
தினை புனத்து குறத்தியை கைப்பிடித்த பெருமாளே

மேல்

#1285
கொடிய மத வேள் கை கணையாலே குரை கண் நெடு நீல கடலாலே
நெடிய புகழ் சோலை குயிலாலே நிலைமை கெடு மானை தழுவாயே
கடி அரவு பூணர்க்கு இனியோனே கலைகள் தெரி மா மெய் புலவோனே
அடியவர்கள் நேசத்து உறை வேலா அறுமுக விநோத பெருமாளே

மேல்

#1286
கோடு ஆன மேரு மலை தனம் மானார் கோமாளம் ஆன வலைக்கு உழலாதே
நாள்தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திடொணாதோ
ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ஈராறு தோள்கள் படைத்திடுவோனே
மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே மா தானை ஆறுமுக பெருமாளே

மேல்

#1287
சமய பத்தி விருதாதனை நினையாதே சரண பத்ம சிவ அர்ச்சனைதனை நாடி
அமைய சற்குரு சாத்திர மொழி நூலால் அருள் எனக்கு இனிமேல் துணை தருவாயே
உமை முலை தரு பால் கொடு அருள் கூறி உரிய மெய் தவமாக்கி நல் உபதேச
தமிழ்தனை கரை காட்டிய திறலோனே சமணரை கழு ஏற்றிய பெருமாளே

மேல்

#1288
சருவிய சாத்திர திரளான சடு திகழ் ஆஸ்பதத்து அமையாத
அரு மறையால் பெறற்கு அரிதாய அனிதய வார்த்தையை பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்து எழு பார நெடு திரை ஆர்ப்பு எழ பொருதோனே
பொருள் அடியால் பெற கவி பாடும் புலவர் உரு சாத்துணை பெருமாளே

மேல்

#1289
சினத்து சீறிய வழி காண சிரித்து பேசியும் மயல் பூண
கனத்து போர் செயும் முலை தோண கலைக்குள் பாதியும் மறைவாக
மனத்துக்கு ஆறுதல் வருமாறு மலைப்ப பேணியும் மிகவாய
தனத்தை சூறை கொள் மடவார்தம் சதிக்கு போம் வழி தவிர்வேனோ
தெனத்த தாதென எனவே பண் திருத்தத்தோடு அளி இசை பாடும்
புனத்து காவல் கொள் குற மாதின் புணர்ச்சிக்கே ஒரு வழி தேடி
இனத்து காவலர் அறியாமல் இணக்கி தோகையை மகிழ்வோய் என்று
எனக்கு தாளினை அருள்வாய் சூர் இறக்க போர் செய்த பெருமாளே

மேல்

#1290
தீது உற்றே எழு திங்களாலே தீயை தூவிய தென்றலாலே
போது உற்று ஆடும் அனங்கனாலே போத பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே வேட பாவை விரும்பும் மார்பா
ஓத சூதம் எறிந்த வேலா ஊமை தேவர்கள் தம்பிரானே

மேல்

#1291
துள்ளும் மத வேள் கை கணையாலே தொல்லை நெடு நீல கடலாலே
மெள்ள வரு சோலை குயிலாலே மெய் உருகும் மானை தழுவாயே
தெள்ளு தமிழ் பாட தெளிவோனே செய்ய குமரேச திறலோனே
வள்ளல் தொழு ஞான கழலோனே வள்ளி மணவாள பெருமாளே

மேல்

#1292
தேன் இயல் சொற்கு அணி மாதர் சேவைதனை கருதாதே
யான் எனது அற்றிடு போதம் யான் அறிதற்கு அருள்வாயே
வானவருக்கு அரசான வாசவனுக்கு இனியோனே
ஆனை முகற்கு இளையோனே ஆறுமுக பெருமாளே

மேல்

#1293
நாரியர்கள் ஆசையை கருதாதே நான் உன் இரு பாத பத்மமு நாட
ஆர் அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியை தருவாயே
காரணம் அதான உத்தம சீலா கான குற மாதினை புணர்வோனே
சூரர் கிளை தூள் எழ பொரும் வேலா தோகை மயில் வாகன பெருமாளே

மேல்

#1294
நாளும் மிகுத்த கசிவாகி ஞான நிருத்தம் அதை நாடும்
ஏழைதனக்கும் அனுபூதி ராசி தழைக்க அருள்வாயே
பூளை எருக்கு மதி நாக பூணர் அளித்த சிறியோனே
வேளை தனக்கு உசிதமாக வேழம் அழைத்த பெருமாளே

மேல்

#1295
நித்தம் உற்று உனை நினைத்து மிக நாடி நிட்டை பெற்று இயல் கருத்தர் துணையாக
நத்தி உதம தவத்தின் நெறியாலே லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே
வெற்றி விக்ரம அரக்கர் கிளை மாளவிட்ட நத்து கரனுக்கு மருகோனே
குற்றம் அற்றவர் உளத்தில் உறைவோனே குக்குட கொடி தரித்த பெருமாளே

மேல்

#1296
நீலம் கொள் மேகத்தின் மயில் மீதே நீ வந்த வாழ்வை கண்டு அதனாலே
மால் கொண்ட பேதைக்கு உன் மண நாறும் மார் தங்கு தாரை தந்து அருள்வாயே
வேல் கொண்டு வேலை பண்டு எறிவோனே வீரம் கொள் சூரர்க்கும் குல காலா
நால் அந்த வேதத்தின் பொருளோனே நான் என்று மார் தட்டும் பெருமாளே

மேல்

#1297
பட்டுப்படாத மதனாலும் பக்கத்து மாதர் வசையாலும்
சுட்டு சுடாத நிலவாலும் துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான்
தட்டுப்படாத திறல் வீரா தர்க்கித்த சூரர் குல காலா
மட்டுப்படாத மயிலோனே மற்று ஒப்பிலாத பெருமாளே

மேல்

#1298
பரவைக்கு எத்தனைவிசை தூது பகரற்கு உற்றவர் என மாண் உன்
மரபுக்கு உச்சித ப்ரபுவாக வரம் மெத்த தர வருவாயே
கரட கற்பகன் இளையோனே கலை வில் கண் குறமகள் கேள்வா
அரனுக்கு உற்றது புகல்வோனே அயனை குட்டிய பெருமாளே

மேல்

#1299
பிறவி அலை ஆற்றினில் புகுதாதே பிரகிருதி மார்க்கம் உற்று அலையாதே
உறுதி குரு வாக்கிய பொருளாலே உனது பத காட்சியை தருவாயே
அறு சமய சாத்திர பொருளோனே அறிவுள் அறிவார் குண கடலோனே
குறுமுனிவன் ஏத்தும் முத்தமிழோனே குமரகுரு கார்த்திகை பெருமாளே

மேல்

#1300
புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது பொற்புற கூட்டி காட்டி அருள் ஞான
வித்தக பேற்றை தேற்றி அருளாலே மெத்தென கூட்டி காக்க நினைவாயே
தத்தை புக்கு ஓட்டி காட்டில் உறைவாளை சற்கரித்து ஏத்தி கீர்த்தி பெறுவோனே
கைத்தலத்து ஈ குப்பு ஆர்த்து நுழையாத கற்பக தோப்பு காத்த பெருமாளே

மேல்

#1301
பொன்னை விரும்பிய பொதுமாதர் புன்மை விரும்பியே தடுமாறும்
என்னை விரும்பி நீ ஒருகால் நின் எண்ணி விரும்பவும் அருள்வாயே
மின்னை விரும்பிய சடையாளர் மெய்யின் விரும்பிய குருநாதா
அன்னை விரும்பிய குற மானை அண்மி விரும்பிய பெருமாளே

மேல்

#1302
மனை மக்கள் சுற்றம் என்னும் மாயா வலையை கடக்க அறியாதே
வினையில் செருக்கி அடி நாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ
சுனையை கலக்கி விளையாடும் சொருப குறத்தி மணவாளா
தினம் நல் சரித்திரம் உள தேவர் சிறை வெட்டிவிட்ட பெருமாளே

மேல்

#1303
வாரி மீதே எழு திங்களாலே மார வேள் ஏவிய அம்பினாலே
பார் எலாம் ஏசிய பண்பினாலே பாவியேன் ஆவி மயங்கலாமோ
சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா சோதியே தோகை அமர்ந்த கோவே
மூரி மால் யானை மணந்த மார்பா மூவர் தேவாதிகள் தம்பிரானே

மேல்

#1304
வான் அப்பு கு பற்று மருத்து கனல் மேவு மாய தெற்றி பொய் குடில் ஒக்க பிறவாதே
ஞான சித்தி சித்திர நித்தம் தமிழால் உன் நாமத்தை கற்று புகழ்கைக்கு புரிவாயே
கான கொச்சை சொல் குறவிக்கு கடவோனே காதி கொற்ற பொன் குல வெற்பை பொரும் வேலா
தேனை தத்த சுற்றிய செச்சை தொடையோனே தேவ சொர்க்க சக்கிரவர்த்தி பெருமாளே

மேல்

#1305
குருபர சரவணபவ சண்முக குக ஒரு பர வயமியல் எயினர் மகள் சுக
மண்ட தனங்கள் புணர் சண்ட திரண்ட புஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை நெறுநெறுநெறென உலவு
விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே
அடிபடு முரசு தவில்பட
கம் தக்கை துந்துமி தடம் தப்புடன் சலிகை
கரடிகை அறை பறை திமிலை அபிநவ
சங்கு ஒற்றை கொம்பு குழல் வங்க கரும் கடல் கொள்
பிரளயம் இது என அதிர உலகர்கள் அரகர சிவசிவ அபயம்அபயம் எனும்
சத்தம் எங்கும் எழ வெம் சத்தி கொண்டு படை புக வானோர்
வனச மலர் நிகர் செம்பொன் சதங்கையடி அன்பர்க்கு வந்து உதவு பெருமாளே

மேல்

#1306
கும்பகோணமொடு ஆரூர் சிதம்பரம் உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூரம் அம் பெறு சிவகாசி
கொந்து உலாவிய ராமேசுரம் தனி வந்து பூஜை செய் நால் வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரிதனில் வாழ்வே
செம்புகேசுரம் ஆடானை இன்புறு செந்தில் ஏடகம் வாழ் சோலையங்கிரி
தென்றல் மா கிரி நாடாள வந்தவ செகநாதம்
செம் சொல் ஏரகம் மா ஆவினன்குடி குன்றுதோறுடன் மூதூர் விரிஞ்சை நல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் வரு தேவே
கம்பை மா அடி மீது ஏய சுந்தர கம்பு உலாவிய காவேரி சங்கமுகம்
சிராமலை வாழ் தேவ தந்திர வயலூரா
கந்தம் மேவிய போரூர் நடம்புரி தென் சிவாயமும் மேயாய் அகம்படு
கண்டியூர் வரு சாமீ கடம்பு அணி மணி மார்பா
எம்பிரானொடு வாதாடு மங்கையர் உம்பர் வாணி பொன் நீள் மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பு ஆக நின்று உறு துதி ஓதும்
இந்திராணிதன் மாதோடு நன் குற மங்கை மானையும் மாலாய் மணந்து உலகு
எங்கும் மேவிய தேவாலயம்தொறு பெருமாளே

மேல்

#1307
அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய்
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும்
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களிகூரும் வடிவோனே
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே
திரு மலிவான பழமுதிர்சோலை மலை மிசை மேவும் பெருமாளே

மேல்

#1308
இலவ இதழ் கோதி நேதி மத கலை ஆரவாரம் இள நகையாட ஆடி மிக வாதுற்று
எதிர் பொரு கோர பார ம்ருகமத கோலகால இணை முலை மார்பில் ஏற மத ராஜன்
கலவியில் ஓடி நீடு வெகு வித தாக போகம் கரண ப்ரதாப லீலை மட மாதர்
கலவியில் மூழ்கி ஆழும் இழிதொழிலேனும் மீது கருதிய ஞான போதம் அடைவேனோ
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி ஆயி மகமாயி
குமரி வராகி மோக பகவதி ஆதி சோதி குணவதி ஆல ஊணி அபிராமி
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர பழமுதிர்சோலை மேவு பெருமாளே

மேல்

#1309
காரணம் அதாக வந்து புவி மீதே காலன் அணுகாது இசைந்து கதி காண
நாரணனும் வேதன் முன்பு தெரியாத ஞான நடமேபுரிந்து வருவாயே
ஆர் அமுதமான தந்தி மணவாளா ஆறு முகம் ஆறிரண்டு விழியோனே
சூரர் கிளை மாள வென்ற கதிர் வேலா சோலைமலை மேவி நின்ற பெருமாளே

மேல்

#1310
சீலம் உள தாயர் தந்தை மாது மனை ஆன மைந்தர் சேரு பொருள் ஆசை நெஞ்சு தடுமாறி
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதம் ஆம் இது என்று தேடினது போக என்று தெருவூடே
வால வயதான கொங்கை மேரு நுதலான திங்கள் மாதர் மயலோடு சிந்தை மெலியாமல்
வாழு மயில் மீது வந்து தாள் இணைகள் தாழும் என்தன் மாய வினை தீர அன்புபுரிவாயே
சேல வள நாடு அனங்கள் ஆர வயல் சூழும் இஞ்சி சேண் நிலவு தாவ செம்பொன் மணி மேடை
சேரும் அமரேசர் தங்கள் ஊர் இது என வாழ்வு உகந்த தீரம் மிகு சூரை வென்ற திறல் வீரா
ஆல விடம் மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள் ஆடல்புரி ஈசர் தந்தை களிகூர
ஆன மொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதி முதலாக வந்த பெருமாளே

மேல்

#1311
வீர மதன் நூல் விளம்பும் போக மட மாதர் தங்கள் வேல் விழியினால் மயங்கி புவி மீதே
வீசுகையினால் இதங்கள் பேசும் அவர் வாய் இதம் சொல் வேலை செய்து மால் மிகுந்து விரகாகி
பார வசமான அங்கண் நீடு பொருள் போன பின்பு பாதகனுமாகி நின்று பதையாமல்
பாகம் வர சேர அன்பு நீப மலர் சூடு தண்டை பாத மலர் நாடி என்று பணிவேனோ
பூரணம் அதான திங்கள் சூடும் அரனார் இடம் கொள் பூவை அருளால் வளர்ந்த முருகோனே
பூ உலகு எலாம் அடங்க ஓர் அடியினால் அளந்த பூவை வடிவான் உகந்த மருகோனே
சூரர் கிளையே தடிந்து பார முடியே அரிந்து தூள்கள் பட நீறு கண்ட வடி வேலா
சோலைதனிலே பறந்து உலாவு மயில் ஏறி வந்து சோலைமலை மேல் அமர்ந்த பெருமாளே

மேல்

#1312
வாரண முகம் கிழிந்து வீழவும் அரும்பு அலர்ந்து மால் வரை அசைந்து அநங்கன் முடி சாய
வாள கிரி அண்டர் அண்ட கோளம் உற நின்று எழுந்து மாதவம் அறம் துறந்து நிலை பேர
பூரண குடம் கடிந்து சீத களபம் புனைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம்
போக சயனம் தவிந்து உன் நாடக பதம் பணிந்து பூசனை செய் தொண்டர் என்பது ஒரு நாளே
ஆரணம் முழங்குகின்ற ஆயிரம் மடம் தவங்கள் ஆகுதி இடங்கள் பொங்கு நிறை வீதி
ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை ஆரமர வந்து அலம்பு துறை சேர
தோரணம் அலங்கு துங்க கோபுரம் நெருங்குகின்ற சூழ் மணி மண்டபங்கள் ரவி போல
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து உகந்த பெருமாளே

மேல்

#1313
ஆசை நாலு சதுர கமல முற்றின் ஒளி வீசி ஓடி இரு பக்கமொடு உற செல் வளி
ஆவல் கூர மண் முதல் சலசம் பொன் சபையும் இந்து வாகை
ஆர மூணு பதியில் கொள நிறுத்தி வெளி ஆரு சோதி நூறு பத்தினுடன் எட்டு இதழாகி
ஏழும் அளவிட்டு அருண விற்பதியில் விந்து நாத
ஓசை சாலும் ஒரு சத்தம் அதிக படிகமோடு கூடி ஒருமித்து அமுத சித்தியொடும்
ஓது வேத சர சத்தி அடியுற்ற திரு நந்தியூடே
ஊமையேனை ஒளிர்வித்து உனது முத்தி பெற மூல வாசல் வெளி விட்டு உனது உரத்தில் ஒளிர்
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய்
வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ் வாதவூரன் அடிமை கொளு க்ருபை கடவுள்
மாழை ரூபன் முக மத்திகை இதத்து அருண செம் கையாளி
வாகு பாதி உறை சத்தி கவுரி குதலை வாயின் மாது உதிர் பச்சை வடிவி சிவை என்
மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை தந்த வாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரை பறியல்
காவை மூதூர் அருணைகிரி திருத்தணியல் செந்தில் நாகை
காழி வேளுர் பழநிக்கிரி குறுக்கை திருநாவலூர் திருவெணெய் பதியில் மிக்க திகழ்
காதல் சோலை வளர் வெற்பில் உறை முத்தர் புகழ் தம்பிரானே

மேல்

#1314
கருவாகியே தாய் உதரத்தினில் உருவாகவே கால் கை உறுப்பொடு
கனி வாய் விழி நாசி உடன் செவி நரை மாதர்
கையிலே விழ ஏகி அணை துயல் எனவே மிக மீது துயிற்றிய
கரு தாய் முலை ஆர் அமுதத்தினில் இனிதாகி
தரு தாரமும் ஆகிய சுற்றமும் நல வாழ்வு நிலாத பொருள் பதி
சதமாம் இது தான் என உற்று உனை நினையாத
சதுராய் உன தாளிணையை தொழ அறியாத நிர் மூடனை நின் புகழ்தனை
ஓதி மெய் ஞானமுற செய்வது ஒரு நாளே
செருவாய் எதிராம் அசுர திரள் தலை முளைகளோடு நிண தசை
திமிர் தாது உள பூத கணத்தொடு வரு பேய்கள்
திகுதா உணவாய் உதிரத்தினை பலவாய் நரியோடு குடித்திட
சில கூகைகள் தாமும் நடித்திட அடு தீரா
அரு மா மறையோர்கள் துதித்திடு புகர் வாரண மாதுதனை திகழ்
அளி சேர் குழல் மேவு குறத்தியை அணைவோனே
அழகான பொன் மேடை உயர்த்திடு முகில் தாவிய சோலை வியப்புறு
அலையா மலை மேவிய பத்தர்கள் பெருமாளே

மேல்

#1315
சீர் சிறக்கும் மேனி பசேல்பசேல் என நூபுரத்தின் ஓசை கலீர்கலீர் என
சேர விட்ட தாள்கள் சிவேல்சிவேல் என வரு மானார்
சேகரத்தின் வாலை சிலோர்சிலோர்களு நூறு லக்ஷ கோடி மயால்மயால் கொடு
தேடி ஒக்க வாடி ஐயோஐயோ என மட மாதர்
மார்பு அடைத்த கோடு பளீர்பளீர் என ஏமலித்து என் ஆவி பகீர்பகீர் என
மா மசக்கில் ஆசை உளோம்உளோம் என நினைவு ஓடி
வாடை பற்று வேளை அடாஅடா என நீ மயக்கம் ஏது சொலாய்சொலாய் என
வாரம் வைத்த பாதம் இதோஇதோ என அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீவெளீ திகழ் கோடு ஒடித்த நாளில் வரை வரைபவர்
பானு நிற கணேசர் கு ஆகுவாகனர் இளையோனே
பாடல் முக்ய மாது தமிழ்தமிழ் இறை மா முநிக்கு காதில் உணார்உணார் விடு
பாசம் அற்ற வேத குரு குருபர குமரேசா
போர் மிகுத்த சூரன் விடோம்விடோம் என நேர் எதிர்க்க வேலை படீர்படீர் என
போய் அறுத்த போது குபீர்குபீர் என வெகு சோரி
பூமி உக்க வீசு குகாகுகா திகழ் சோலை வெற்பின் மேவு தெய்வா தெய்வானை தோள்
பூணி இச்சை ஆறு புயாபுயா ஆறு உள பெருமாளே

மேல்

#1316
துடி கொள் நோய்களோடு வற்றி தருண மேனி கோழை துற்ற இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு உலக நூல்கள் வாதை அற்று சுகமுளாநுபூதி பெற்று மகிழாமே
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே
உரு இலாத பாழில் வெட்டவெளியில் ஆடு நாத நிர்த்த உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிது உலாவு வாயு பெற்ற மகனும் வாலி சேயும் மிக்க மலைகள் போட ஆழி கட்டி இகலூர் போய்
களம் உறு ஆனை தேர் நுறுக்கி தலைகள் ஆறு நாலு பெற்ற அவனை வாளியால் அடு அத்தன் மருகோனே
முடுகு வீர சூரபத்மர் தலையின் மூளை நீறுபட்டு முடிவதாக ஆடு நிர்த்த மயில் வீரா
முநிவர் தேவர் ஞானமுற்ற புநித சோலை மா மலைக்குள் முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே

மேல்

#1317
பாசத்தால் விலை கட்டிய பொட்டிகள் நேசித்தார் அவர் சித்தம் மருட்டிகள்
பார பூதரம் ஒத்த தனத்திகள் மிகவே தான்
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள் சீவி கோதி முடித்த அளகத்திகள்
பார்வைக்கே மயலை தரு துட்டிகள் ஒழியாத
மாசுற்று ஏறிய பித்தளையில் பணி நீறு இட்டே ஒளி பற்ற விளக்கிகள்
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் அதி மோக
வாய் வித்தாரம் உரைக்கும் அபத்திகள் நேசித்து யாரையும் எத்தி வடிப்பவர்
மாயைக்கே மனம் வைத்து அதனுள் தினம் அலைவேனோ
தேசி கானகம் உற்ற தினை புனம் மேவி காவல் கவண் கல் சுழற்றுவள்
சீத பாத குற பெண் மகிழ்ச்சி கொள் மணவாளா
தேடி பாடிய சொல் புலவர்க்கு இதமாக தூது செல் அத்தர் இல் கற்பக
தேவர்க்கு ஆதி திரு புகலி பதி வருவோனே
ஆசித்தார் மனதில் புகும் உத்தம கூடற்கே வைகையில் கரை கட்டிட
ஆள் ஒப்பாய் உதிர் பிட்டு அமுதுக்கு அடிபடுவோனோடு
ஆரத்தோடு அகில் உற்ற தரு குல மேகத்தோடு ஒருமித்து நெருக்கிய
ஆதி சோலைமலை பதியில் திகழ் பெருமாளே

மேல்

#1318
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள் மாயம் அது ஒழிந்து தெளியேனே
மா மலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து மா பாதம் அணிந்து பணியேனே
ஆதியோடந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெரியேனே
ஆன தனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடும் மயில் என்பது அறியேனே
நாதமோடு விந்துவான உடல் கொண்டு நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாத நிலை கண்டு நாடி அதில் நின்று தொழுகேனே
சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற சோகம் அது தந்து எனை ஆள்வாய்
சூரர் குலம் வென்று வாகையோடு சென்று சோலை மலை நின்ற பெருமாளே

மேல்

#1319
வார் குழையை எட்டி வேளினை மருட்டி மாய நமனுக்கும் உறவாகி
மாதவம் அழித்து லீலைகள் மிகுத்து மா வடுவை ஒத்த விழி மாதர்
சீருடன் அழைத்து வாய் கனிவு வைத்து தேன் இதழ் அளித்து அநுபோக
சேர்வைதனை உற்று மோசம் விளைவித்து சீர்மை கெட வைப்பர் உறவாமோ
வாரினை அறுத்து மேருவை மறித்து மா கனகம் ஒத்த குடமாகி
வார அணை வைத்து மா லளிதமுற்று மாலைகளும் மொய்த்த தனம் மாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே
சூர் கிளை மடித்து வேல் கரம் எடுத்து சோலைமலை உற்ற பெருமாளே

மேல்

#1320
அழகு தவழ் குழல் விரித்து காட்டி விழிகள் கடையினை புரட்டி காட்டி
அணி பொன் அணி குழை புரித்து காட்டி அநுராக
அவச இத மொழி படித்து காட்டி அதரம் அழி துவர் வெளுப்பை காட்டி
அமர் செய் நகர் நுதி அழுத்தை காட்டி அணி ஆரம்
ஒழுகும் இரு தனம் அசைத்து காட்டி எழுத அரி இடை வளைத்து காட்டி
உலவும் உடைதனை நெகிழ்த்தி காட்டி உறவாடி
உருகு கடி தடம் ஒளித்து காட்டி உபய பரிபுர பதத்தை காட்டி
உயிரை விலை கொளும் அவர்க்கு தேட்டம் ஒழிவேனோ
முழுகும் அரு மறை முகத்து பாட்டி கொழுநர் குடுமியை அறுத்து போட்ட
முதல்வ குகை படு திரு பொன் கோட்டு முனி நாடா
முடுகு முதலையை வரித்து கோட்டி அடியர் தொழ மகவு அழைத்து கூட்டி
முறை செய் தமிழினை விரித்து கேட்ட முது நீதர்
பழைய கட தட முகத்து கோட்டு வழுவை உரி அணி மறை சொல் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு பரமேசர்
பணிய அருள் சிவமயத்தை காட்டு குமர குல மலை உயர்த்தி காட்டு
பரிவொடு அணி மயில் நடத்தி காட்டு பெருமாளே

மேல்

#1321
தலை மயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து கலகல என பல் கட்டு அது விட்டு
தளர் நடை பட்டு தத்து அடியிட்டு தடுமாறி
தடி கொடு தத்தி கக்கல் பெருத்திட்டு அசனமும் விக்கி சத்தி எடுத்து
சளியும் மிகுத்து பித்தமும் முற்றி பலகாலும்
தில தயிலத்து இட்டு ஒக்க எரிக்க திரி பலை சுக்கு திப்பிலி இட்டு
தெளிய வடித்து உற்று உய்த்து உடல் செத்திட்டு உயிர் போ முன்
திகழ் புகழ் கற்று சொற்கள் பயிற்றி திருவடியை பற்றி தொழுது உற்று
செனன மறுக்கைக்கு பர முத்திக்கு அருள்தாராய்
கலணை விசித்து பக்கரை இட்டு புரவி செலுத்தி கைக்கொடு வெற்பை
கடுக நடத்தி திட்டென எட்டி பொரு சூரன்
கன படை கெட்டு தட்டற விட்டு திரை கடலுக்குள் புக்கிட எற்றி
களி மயிலை சித்ரத்தில் நடத்தி பொரு கோவே
குலிசன் மகட்கு தப்பியும் மற்ற குறவர் மகட்கு சித்தமும் வைத்து
குளிர் தினை மெத்த தத்து புனத்தில் திரிவேனே
கொடிய பொருப்பை குத்தி முறித்து சமரம் விளைத்து தற்பரம் உற்று
குலகிரியில் புக்குற்று உறை உக்ர பெருமாளே

மேல்

#1322
மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண பரிமளங்கள் வேர்வை அதனோடே
வழி பட இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை நெகிழ்ந்து போக இளநீரின்
முலை இணை ததும்ப நூலின் வகிர் இடை சுழன்று வாட முகம் முகமொடு ஒன்ற பாயல் அதனூடே
முது மயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே
சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா
சிறு நகைபுரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில் எறிந்த ஞான முருகோனே
கொலை மிக பயின்ற வேடர் மகள் வளி மணந்த தோள குண அலர் கடம்ப மாலை அணி மார்பா
கொடி மினல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே

மேல்

#1323
கரு எனும் மாயை உருவினில் மூழ்கி வயதளவாக நிலம் மீதில்
கலை தெரி வாணர் கலை பல நூல்கள் வெகுவிதமாக கவி பாடி
தெருவழி போகி பொருள் எனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி
சிலை நுதல் மாதர் மயலினில் மூழ்கி சிறுவிதமாக திரிவேனோ
அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ அருள்வோனே
அரன் இரு காதில் அருள் பர ஞாந அடைவினை ஓதி அருள் பாலா
வெருவிடு சூரர் குல அடி வேரை விழவிடு சரசுவதி பாலா
மிடல் உடலாளர் அடர் அசுர் மாள விடு மயில் வேல பெருமாளே

மேல்

#1324
தங்கம் மிகுந்த முலை கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள்
தங்க அணிந்து முறுக்கும் வேசியர் மொழியாலே
சஞ்சலம் மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர்
சந்து சுகந்த முடித்து நூல் இடை கிடையாட
கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத
குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயில் என ஓசை
கொண்டவர் இந்த விதத்தின் ஆடர சங்கிலி கொண்டு பிணித்து மா மயில்
கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ
திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர்
சிந்தை நடுங்கி இருக்கவே மயில் மிசை ஏறி
சிங்கமுகன் தலை வெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு
சிம்புள் எனும்படி விட்ட வேல் உள குருநாதா
மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை
மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தரு பாலா
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள்
வந்து தரும்படி நித்தம் ஆடிய பெருமாளே

மேல்

#1325
உரையும் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சு பொல் ஆனது கண்டு அயல்
உழலும் சிந்துறு பால் கடைநின்றது கடைவாயால்
ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது முறி முன் கண்டு கை கால்கள் நிமிர்ந்தது
உடலும் தொந்தியும் ஓடி வடிந்தது பரிகாரி
வர ஒன்றும் பலியாது இனி என்ற பின் உறவும் பெண்டிரும் மோதி விழுந்து அழ
மறல் வந்து இங்கு எனது ஆவிகொளும் தினம் இயல் தோகை
மயிலும் செம் கைகள் ஆறிரு திண் புய வரை துன்றும் கடி மாலையும் இங்கித
வன மின் குஞ்சரிமாருடன் என்றன் முன் வருவாயே
அரி மைந்தன் புகழ் மாருதி என்று உள கவியின் சங்கம் இராகவ புங்கவன்
அறிவும் கண்டு அருள்வாய் என அன்பொடு தர வேறு உன்
அருளும் கண்ட தராபதி வன்புறு விஜயம் கொண்டு எழுபோது புலம்பிய
அகமும் பைம் தொடி சீதை மறைந்திட வழிதோறும்
மருவும் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகம் தண்டை பொன் நூபுர மஞ்சரி
மணியின் பந்து எறி வாய் இது பந்து என முதலான
மலையும் சங்கிலி போல மருங்கு விண் முழுதும் கண்ட நராயணன் அன்புறு
மருகன் தென் புன வாயில் அமர்ந்து அருள் பெருமாளே

மேல்

#1326
ஓர் உருவாகிய தாரக பிரமத்து ஒருவகை தோற்றத்து இரு மரபு எய்தி
ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாது ஆயினை
இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை ஓரா செய்கையின் இருமையின் முன்னாள்
நான்முகன் குடுமி இமைப்பினில் பெயர்த்து மூவரும் போந்து இரு தாள் வேண்ட ஒரு சிறை விடுத்தனை
ஒரு நொடி அதனில் இரு சிறை மயிலின் முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச நீ வலம்செய்தனை
நால்வகை மருப்பின் மும்மதத்து இரு செவி ஒரு கை பொருப்பன் மகளை வேட்டனை
ஒரு வகை வடிவினில் இரு வகைத்து ஆகிய மும்மதன் தனக்கு மூத்தோன் ஆகி
நால் வாய் முகத்தோன் ஐந்து கை கடவுள் அறுகு சூடிக்கு இளையோன் ஆயினை
ஐந்தெழுத்து அதனில் நான்மறை உணர்த்து முக்கண் சுடரினை இருவினை மருந்துக்கு ஒரு குரு ஆயினை
ஒருநாள் உமை இரு முலை பால் அருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புல கிழவன் அறுமுகன் இவன் என எழில் தரும் அழகுடன் கழுமலத்து உதித்தனை
அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறை தோற்றத்து முத்தலை செம் சூட்டு
அன்றில் அம் கிரி இரு பிளவாக ஒரு வேல் விடுத்தனை
காவிரி வட கரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற
ஏரகத்து இறைவன் என இருந்தனையே

மேல்

#1327
சைவ முதல் குருவாயே சமணர்களை தெறுவோனே
பொய்யர் உளத்து அணுகானே புனித அருள்புரிவாயே
கையின் மிசை கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
தெய்வ சற்குருநாதா திரு மதுரை பெருமாளே

மேல்

#1328
ஏறு மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறு முகம் ஆன பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே

மேல்

#1329
அறப்பாவை அத்தற்கு அருள் பாலா அளித்தாது வெட்சி திரு மார்பா
குற பாவை அற்பில் புணர்வோனே குல தேவ வர்க்க பரிபாலா
மறப்பாத கத்துற்று உழல்வேனோ மலர் தாள் வழுத்த க்ருபை ஈவாய்
சிறப்பான முத்திக்கு ஒரு வாழ்வே திருப்பூவணத்தில் பெருமாளே

மேல்

#1330
வானவர் ஆதியோர் சிறை மேவ மா வலியே செய்திடு சூரன்
மார்பு இரு கூறதாய் விட வாரி வாய்விட வேலை விடு தீரா
கானவர் பாவை காதலனான காசணிபார தன மார்பா
காலனை மோது கால கபால காளகளேசர் தரு பாலா
தேன் அமர் நீப மாலை விடாத சேவக ஞான முதல்வோனே
தீய குணாதி பாவி நினாது சேவடி காண அருள்வாயே
போனகசாலை யாதுலர் வாழ வீதிகள்தோறும் நனி மேவு
பூவணமான மா நகர் வாழு நாதகுகேச பெருமாளே

மேல்

#1331
பந்தல் பொன் பார பயோதரம் உந்த சிற்றாடை செய் மேகலை
பண்புற்று தாளொடு வீசிய துகிலோடே
பண்டை சிற்சேறியில் வீதியில் கண்டு இச்சித்தாரொடு மேவிடு
பங்கு கைக்காசு கொள் வேசையர் பனிநீர் தோய்
கொந்து உச்சி பூ அணி தோகையர் கந்த கை தாமரையால் அடி
கும்பிட்டு பாடு இசை வீணையர் அநுராகம்
கொண்டுற்று பாயலின் மூழ்கிய சண்டி சிச்சீ என வாழ் துயர்
குன்ற பொன் பாத க்ருபாநிதி அருள்வாயே
அந்தத்துக்கு ஆதியும் ஆகியும் அந்திக்குள் தானவன் ஆனவன்
அண்டத்த பாலுற மா மணி ஒளி வீசும்
அங்கத்தை பாவை செய்தே உயர் சங்கத்தில் தேர் தமிழ் ஓதிட
அண்டி கிட்டார் கழுவேறினர் ஒரு கோடி
சந்த திக்கு ஆளு நிசாசரர் வெந்து உட்க தூளி படாம் எழ
சண்டை சொல் தார்படவே அயில் விடுவோனே
தங்க சக்ராயுதர் வானவர் வந்திக்க பேரருளே திகழ்
தம்ப பொன் பூவணம் மேவிய பெருமாளே

மேல்

#1332
அனத்தோடு ஒப்பாம் என்னும் நடை மடவியர் அநுராகம்
அதற்கே சிச்சீ இனம் எனது உயிர் கெடல் அழகாமோ
உனை பாடி பேறுறும் ஒரு வரம் இனி உதவாயோ
உவப்பாக தேவர்கள் சிறை விட விடும் அயிலோனே
முனைப்பாடிக்கே திரிதரும் அரி திரு மருகோனே
முகில்கே நத்தா விரி தரு கலப நன் மயிலோனே
தினை காவற்கே உரியவள் மனம் மகிழ் மணவாளா
திரு கானப்பேர் நகர்தனில் இனிது உறை பெருமாளே

மேல்

#1333
கோல காதில் குழையாலே கோதி சேர்மை குழலாலே
ஞாலத்தாரை துயரேசெய் நாரிக்கு ஆசைப்படலாமோ
மேலை தேவர்க்கு அரியோனே வீர சேவல் கொடியோனே
கால பாச துயர் தீராய் கானப்பேரில் பெருமாளே

மேல்

#1334
கன்றிவரு நீல குங்கும படீர கஞ்ச மலர் மேவும் முலை காட்டி
கங்குல் செறி கேச நின்று குலையாமை கண்கள் கடை காட்டி விலை காட்டி
நன்று பொருள் தீது என்று விலைபேசி நம்பிவிடு மாதருடன் ஆட்ட
நஞ்சு புரி தேரை அங்கம் அதுவாக நைந்துவிடும் எற்கு ஒன்று அருள்வாயே
குன்றிமணி போல செம் கண் வரி நாகம் கொண்ட படம் வீசு மணி கூர் வாய்
கொண்ட மயில் ஏறி குன்று இடிய மோதி சென்ற வடி வேலை கொடு போர்செய்
மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ
மந்தி நடமாடும் செந்தில்நகர் மேவும் அந்த அசுர கால பெருமாளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *