திருமூலர்
இயற்றிய
திருமந்திரம் (பாடல்கள் 1 - 3047)
திருமூலர் திருவடிகளில் சமர்ப்பணம் 🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺 |
---|
10-பத்தாம் திருமுறை திருமந்திரம் |
||||
---|---|---|---|---|
0.பாயிரம் 1 - 112 |
1.முதல் தந்திரம் 113 - 336 |
2.இரண்டாம் தந்திரம் 337 - 548 |
3.மூன்றாம் தந்திரம் 549 - 883 |
4.நான்காம் தந்திரம் 884 - 1418 |
5.ஐந்தாம் தந்திரம் 1419 - 1572 |
6.ஆறாம் தந்திரம் 1573 - 1703 |
7.ஏழாம் தந்திரம் 1704 - 2121 |
8.எட்டாம் தந்திரம் 2122 - 2648 |
9.ஒன்பதாம் தந்திரம் 2649 - 3047 |
0 பாயிரம் #1 ஒன்று அவன் தானே இரண்டு அவன் இன் அருள் நின்றனன் மூன்றின் உள் நான்கு உணர்ந்தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர் சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே மேல் #2 போற்றி இசைத்து இன் உயிர் மன்னும் புனிதனை நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம் கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே மேல் #3 ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள் நக்கன் என்று ஏத்திடு நாதனை நாள்-தொறும் பக்க நின்றார் அறியாத பரமனை புக்கு நின்று உன்னி யான் போற்றி செய்வேனே மேல் #4 அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை புகலிடத்து என்றனை போதவிட்டானை பகலிடத்தும் இரவும் பணிந்து ஏத்தி இகலிடத்தே இருள் நீங்கி நின்றேனே மேல் #5 சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும் தவன சடைமுடி தாமரையானே மேல் #6 அவனை ஒழிய அமரரும் இல்லை அவன் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே மேல் #7 முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லா தலைமகன் தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன் பொன்னை ஒப்பு ஆகின்ற போது அகத்தானே மேல் #8 தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன் ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்கு தாயினும் நல்லன் தாழ் சடையோனே மேல் #9 பொன்னால் புரிந்திட்ட பொன் சடை என்ன பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன் தன்னால் தொழப்படுவார் இல்லை தானே மேல் #10 தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் தானே தட வரை தண் கடம் ஆமே மேல் #11 அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில் இயலும் பெரும் தெய்வம் யாதும் ஒன்று இல்லை முயலும் முயலில் முடிவும் மற்று ஆங்கே பெயலும் மழை முகில் பேர் நந்தி தானே மேல் #12 கண்_நுதலான் ஒரு காதலின் நிற்கவும் எண்_இலி தேவர் இறந்தார் என பலர் மண்ணுறுவார்களும் வானுறுவார்களும் அண்ணல் இவன் என்று அறியகிலார்களே மேல் #13 மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள் எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே மேல் #14 கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி கடந்து நின்றான் கடல்_வண்ணன் எம் மாயன் கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன் கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே மேல் #15 ஆதியுமாய் அரனாய் உடல் உள் நின்ற வேதியுமாய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் சோதியுமாய் சுருங்காதது ஓர் தன்மையுள் நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே மேல் #16 கோது குலாவிய கொன்றை குழல் சடை மாது குலாவிய வாள்_நுதல் பாகனை யாது குலாவி அமரரும் தேவரும் கோது குலாவி குணம் பயில்வாரே மேல் #17 காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும் ஆயம் கத்தூரி அது மிகும் அ வழி தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும் ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே மேல் #18 அதிபதி செய்து அளகை வேந்தனை நிதி பதி செய்த நிறை தவம் நோக்கி அது பதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின் இது பதி கொள் என்ற எம் பெருமானே மேல் #19 இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும் முது பதி செய்தவன் மூதறிவாளன் விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி அது பதி ஆக அமருகின்றானே மேல் #20 முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த அடிகள் உறையும் அறன் நெறி நாடில் இடியும் முழக்கமும் ஈசர் உருவம் கடி மலர் குன்ற மலையது தானே மேல் #21 வான பெரும் கொண்டல் மால் அயன் வானவர் ஊன பிறவி ஒழிக்கும் ஒருவனை கான களிறு கதற பிளந்த எம் கோனை புகழு-மின் கூடலும் ஆமே மேல் #22 மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன் நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர் எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன் பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே மேல் #23 வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம் நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை இல் என வேண்டா இறையவர் தம் முதல் அல்லும் பகலும் அருளுகின்றானே மேல் #24 போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன்-தன் அடி தேற்று-மின் என்றும் சிவன் அடிக்கே செல்வம் ஆற்றியது என்று மயலுற்ற சிந்தையை மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே மேல் #25 பிறப்பு_இலி பிஞ்ஞகன் பேரருளாளன் இறப்பு_இலி யாவர்க்கும் இன்பம் அருளும் துறப்பு_இலி-தன்னை தொழு-மின் தொழுதால் மறப்பு_இலி மாயா விருத்தமும் ஆமே மேல் #26 தொடர்ந்து நின்றானை தொழு-மின் தொழுதால் படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும் கடந்து நின்றான் கமலம் மலர் மேலே உடந்து இருந்தான் அடி புண்ணியம் ஆமே மேல் #27 சந்தி என தக்க தாமரை வாள் முகத்து அந்தம்_இல் ஈசன் அருள் நமக்கே என்று நந்தியை நாளும் வணங்கப்படும் அவர் புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே மேல் #28 இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும் பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் உணங்கி நின்றான் அமராபதி நாதன் வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே மேல் #29 காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர் நாண நில்லேன் உன்னை நான் தழுவி கொள கோண நில்லாத குணத்து அடியார் மனத்து ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே மேல் #30 வான் நின்று அழைக்கும் மழை போல் இறைவனும் தான் நின்று அழைக்கும்-கொல் என்று தயங்குவார் ஆன் நின்று அழைக்கும் அது போல் என் நந்தியை நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே மேல் #31 மண் அகத்தான் ஒக்கும் வான் அகத்தான் ஒக்கும் விண் அகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும் பண் அகத்து இன் இசை பாடல் உற்றானுக்கே கண் அகத்தே நின்று காதலித்தேனே மேல் #32 தேவர் பிரான் நம் பிரான் திசை பத்தையும் மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும் தாவும் பிரான் தன்மை தான் அறிவார் இல்லை பாவு பிரான் அருள் பாடலும் ஆமே மேல் #33 பதி பல ஆயது பண்டு இ உலகம் விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார் துதி பல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே மேல் #34 சாந்து கமழும் கவரியின் கந்தம் போல் வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும் போந்தும் இருந்தும் புகழுகின்றேனே மேல் #35 ஆற்றுகில்லா வழி ஆகும் இறைவனை போற்று-மின் போற்றி புகழ்-மின் புகழ்ந்திடில் மேல் திசைக்கும் கிழக்கு திசை எட்டொடு மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே மேல் #36 அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பு_இலி வள்ளலை ஊழி முதல்வனை எ பரிசு ஆயினும் ஏத்து-மின் ஏத்தினால் அ பரிசு ஈசன் அருள் பெறலாமே மேல் #37 நானும் நின்று ஏத்துவன் நாள்-தொறும் நந்தியை தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் வானில் நின்றார் மதி போல் உடல் உள் உவந்து ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே மேல் #38 பிதற்று ஒழியேன் பெரியான் அரியானை பிதற்று ஒழியேன் பிறவா உருவானை பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி-தன்னை பிதற்று ஒழியேன் பெருமை தவன் யானே மேல் #39 வாழ்த்த வல்லார் மனத்து உள்ளுறு சோதியை தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை ஏத்தியும் எம் பெருமான் என்று இறைஞ்சியும் ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே மேல் #40 குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும் நிறைந்து அடை செம்பொனின் நேர் ஒளி ஒக்கும் மறைஞ்சு அடம்செய்யாது வாழ்த்த வல்லார்க்கு புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே மேல் #41 சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானை புனம் செய்த நெஞ்சிடை போற்ற வல்லார்க்கு கனம் செய்த வாள்_நுதல் பாகனும் அங்கே இனம் செய்த மான் போல் இணங்கி நின்றானே மேல் #42 போய் அரன்-தன்னை புகழ்வார் பெறுவது நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும் வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும் தானே மேல் #43 அரன் அடி சொல்லி அரற்றி அழுது பரன் அடி நாடியே பாவிப்ப நாளும் உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே மேல் #44 போற்றி என்பார் அமரர் புனிதன் அடி போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே மேல் #45 விதி வழி அல்லது இ வேலை உலகம் விதி வழி இன்பம் விருத்தமும் இல்லை துதி வழி நித்தலும் சோதி பிரானும் பதி வழி காட்டும் பகலவன் ஆமே மேல் #46 அந்தி_வண்ணா அரனே சிவனே என்று சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ முந்தி வண்ணா முதல்வா பரனே என்று வந்து இ வண்ணன் எம் மனம் புகுந்தானே மேல் #47 மனை உள் இருந்தவர் மாதவர் ஒப்பர் நினைவு உள் இருந்தவர் நேசத்து உள் நிற்பர் பனையுள் இருந்த பருந்து அது போல நினையாதவர்க்கு இல்லை நின் இன்பம் தானே மேல் #48 அடியார் பரவும் அமரர் பிரானை முடியால் வணங்கி முதல்வனை முன்னி படியார் அருளும் பரம்பரன் எந்தை விடியா விளக்கு என்று மேவி நின்றேனே மேல் #49 பரை பசு பாசத்து நாதனை உள்ளி உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்கு திரை பசு பாவ செழும் கடல் நீந்தி கரை பசு பாசம் கடந்து எய்தலாமே மேல் #50 சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று பாடுவன் பன் மலர் தூவி பணிந்து நின்று ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று நாடுவன் யான் இன்று அறிவது தானே மேல் #51 வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓத தகும் அறம் எல்லாம் உள தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே மேல் #52 வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய் வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே மேல் #53 இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும் கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே மேல் #54 திருநெறி ஆவது சித்த சித்து அன்றி பெருநெறி ஆய பிரானை நினைந்து குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும் ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே மேல் #55 ஆறு அங்கமாய் வரு மா மறை ஓதியை கூறு அங்கம் ஆக குணம் பயில்வார் இல்லை வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம் பேறு அங்கம் ஆக பெருக்குகின்றாரே மேல் #56 பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர் ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார் வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர் ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே மேல் #57 அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன் அஞ்சொடு இருபத்துமூன்று உள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்தறுவரும் அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே மேல் #58 அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்ணில் இருபத்தெண் கோடி நூறு ஆயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணி நின்ற அ பொருள் ஏத்துவன் யானே மேல் #59 பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும் கண்டவர் கூறும் கருத்து அறிவார் என்க பண்டிதர்-தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறம் சொன்னவாறே மேல் #60 அண்ணல் அருளால் அருளும் திவ்யாகமம் விண்ணில் அமரர்-தமக்கும் விளங்க அரிது எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம் எண்ணிலும் நீர் மேல் எழுத்தது ஆகுமே மேல் #61 பரனாய் பராபரம் காட்டி உலகில் அரனாய் சிவதன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே மேல் #62 சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே மேல் #63 பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம் உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் மற்று அ வியாமளம் ஆகும்-கால் ஓத்தரந்து உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே மேல் #64 அண்ணல் அருளால் அருளும் சிவாகமம் எண்_இலி கோடி தொகுத்திடும் ஆயினும் அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின் எண்_இலி கோடியும் நீர் மேல் எழுத்தே மேல் #65 மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லி காரிகையார்க்கு கருணைசெய்தானே மேல் #66 அவிழ்கின்ற ஆறும் அது கட்டு மாறும் சிமிட்டலை பட்டு உயிர் போகின்றவாறும் தமிழ் சொல் வட சொல் எனும் இ இரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே மேல் #67 நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மா முனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர் என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே மேல் #68 நந்தி அருளாலே நாதன் ஆம் பேர் பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம் நந்தி அருள் ஆவது என் செயும் நாட்டினில் நந்தி வழிகாட்ட யான் இருந்தேனே மேல் #69 மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என் வழி ஆமே மேல் #70 நால்வரும் நாலு திசைக்கு ஒன்று நாதர்கள் நால்வரும் நானாவித பொருள் கைக்கொண்டு நால்வரும் யான் பெற்றது எல்லாம் பெறுக என நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே மேல் #71 மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன் ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும் செழும் சுடர் மூன்று ஒளி ஆகிய தேவன் கழிந்த பெருமையை காட்டகிலானே மேல் #72 எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும் செழும் தண் நியமங்கள் செய்யு-மின் என்று அண்ணல் கொழும் தண் பவள குளிர் சடையோடே அழுந்திய நால்வர்க்கு அருள்புரிந்தானே மேல் #73 நந்தி இணை அடி நான் தலை மேல் கொண்டு புந்தியின் உள்ளே புக பெய்து போற்றி செய்து அந்தி மதி புனை அரன் அடி நாள்-தொறும் சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே மேல் #74 செப்பும் சிவாகமம் என்னும் அ பேர் பெற்றும் அப்படி நல்கும் அருள் நந்தி தாள் பெற்று தப்பு இலா மன்றில் தனி கூத்து கண்ட பின் ஒப்பு இல் எழு கோடி உகம் இருந்தேனே மேல் #75 இருந்த அ காரணம் கேள் இந்திரனே பொருந்திய செல்வ புவனா பதி ஆம் அருந்தவ செல்வியை சேவித்து அடியேன் பரிந்து உடன் வந்தனன் பத்தியினாலே மேல் #76 சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாது இருந்தேன் நின்ற காலம் இதாசனி யாது இருந்தேன் மனம் நீங்கி உதாசனி யாது உடனே உணர்ந்தோமால் மேல் #77 மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம் நீலாங்க மேனியாள் நேரிழையாளொடு மூலாங்கம் ஆக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே மேல் #78 நேரிழை ஆவாள் நிரதிச ஆனந்த பேர் உடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள் சீர் உடையாள் சிவன் ஆவடு தண் துறை சீர் உடையாள் பதம் சேர்ந்து இருந்தேனே மேல் #79 சேர்ந்து இருந்தேன் சிவமங்கை-தன் பங்கனை சேர்ந்து இருந்தேன் சிவன் ஆவடு தண் துறை சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நீழலில் சேர்ந்து இருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே மேல் #80 இருந்தேன் இ காயத்தே எண்_இலி கோடி இருந்தேன் இரா பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என் நந்தி இணை அடி கீழே மேல் #81 பின்னை நின்று என்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ்செய்யுமாறே மேல் #82 ஞான தலைவி-தன் நந்தி நகர் புக்கு ஊனம் இல் ஒன்பது கோடி உகம்-தனுள் ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து யானும் இருந்தேன் நல் போதியின் கீழே மேல் #83 செல்கின்ற ஆறு அறி சிவன் முனி சித்தசன் வெல்கின்ற ஞானத்து மிக்கு ஓர் முனிவராய் பல்கின்ற தேவர் அசுரர் நரர்-தம்பால் ஒல்கின்ற வான் வழி ஊடு வந்தேனே மேல் #84 சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில் உத்தமமாகவே ஓதிய வேதத்தின் ஒத்த உடலையும் உள் நின்ற உற்பத்தி அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே மேல் #85 யான் பெற்ற இன்பம் பெறுக இ வையகம் வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணருறு மந்திரம் தான் பற்றப்பற்ற தலைப்படும் தானே மேல் #86 பிறப்பு_இலி நாதனை பேர் நந்தி-தன்னை சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி மறப்பு இலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறை பொடும் கூடி நின்று ஓதலும் ஆமே மேல் #87 அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும் தங்கு மிகாமை வைத்தான் தமிழ் சாத்திரம் பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே மேல் #88 அடி முடி காண்பார் அயன் மால் இருவர் படி கண்டிலர் மீண்டும் பார் மிசை கூடி அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே மேல் #89 பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற தற்பரன் கற்பனை ஆகும் சராசரத்து அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில் நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே மேல் #90 ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை மாயத்தை மா மாயை-தன்னில் வரும் பரை ஆயத்தை அ சிவம்-தன்னை அகோசர வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே மேல் #91 விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி அளப்பு_இல் பெருமையன் ஆனந்த நந்தி துளக்க_அறும் ஆனந்த கூத்தன் சொல்போந்து வளப்பின் கயிலை வழியில் வந்தேனே மேல் #92 நந்தி அருளாலே மூலனை நாடி பின் நந்தி அருளாலே சதாசிவம் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான் இருந்தேனே மேல் #93 இருக்கில் இருக்கும் எண்_இலி கோடி அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும் அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே மேல் #94 பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி-தன்னை இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும் முயற்றுவன் ஓங்கு ஒளி வண்ணன் எம்மானை இயல் திகழ் சோதி இறைவனும் ஆமே மேல் #95 ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும் பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின் வேர் அறியாமை விளம்புகின்றேனே மேல் #96 பாட வல்லார் நெறி பாட அறிகிலேன் ஆட வல்லார் நெறி ஆட அறிகிலேன் நாட வல்லார் நெறி நாட அறிகிலேன் தேட வல்லார் நெறி தேடகில்லேனே மேல் #97 மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை பின்னை உலகம் படைத்த பிரமனும் உன்னும் அவனை உணரலும் ஆமே மேல் #98 தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும் ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும் பத்திமையால் இ பயன் அறியாரே மேல் #99 மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் ஞாலம் அறியவே நந்தி அருளது காலை எழுந்து கருத்து அறிந்து ஓதிடின் ஞால தலைவனை நண்ணுவர் அன்றே மேல் #100 வைத்த பரிசே வகைவகை நன்னூலின் முத்தி முடிவிது மூவாயிரத்திலே புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது வைத்த சிறப்பு தரும் இவை தானே மேல் #101 வந்த மடம் ஏழு மன்னும் சன்மார்க்கத்தின் முந்தி உதிக்கின்ற மூலன் மடம் வரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் சுந்தர ஆகம சொல் மொழிந்தானே மேல் #102 கலந்து அருள் காலாங்கர்-தம்பால் அகோரர் நலந்தரு மாளிகை தேவர் நாதாந்தர் புலம் கொள் பரமானம் தர்போக தேவர் நிலம் திகழ் மூவர் நிராமயத்தோரே மேல் #103 அளவு_இல் இளமையும் அந்தமும் ஈறும் அளவு இயல் காலமும் நாலும் உணரில் தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல் அளவு_இல் பெருமை அரி அயற்கு ஆமே மேல் #104 ஆதி பிரானும் அணி மணிவண்ணனும் ஆதி கமலத்து அலர்மிசையானும் சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார் பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே மேல் #105 ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம் பீசம் உலகில் பெரும் தெய்வம் ஆனது ஈசன் அது இது என்பார் நினைப்பு இலார் தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே மேல் #106 சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவை முதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்று ஆகும் அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே மேல் #107 பயன் அறிந்து அ வழி எண்ணும் அளவில் அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம் வயனம் பெறுவீர் அ வானவராலே மேல் #108 ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் பால் ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ மாலுக்கும் ஆதி பிரமற்கும் ஒப்பு நீ ஞாலத்து நம் அடி நல்கிடு என்றானே மேல் #109 வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் தேன் அமர் கொன்றை சிவன் அருள் அல்லது தான் அமர்ந்து ஓரும் தனி தெய்வம் மற்று இல்லை ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே மேல் #110 சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற ஆதி கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் நீதி-கண் ஈசன் நெடுமால் அயன் என்று பேதித்து அவரை பிதற்றுகின்றாரே மேல் #111 பரத்திலே ஒன்றாய் உள்ளாய் புறம் ஆகி வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகி தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகி கரத்தினுள் நின்று கழிவு செய்தானே மேல் #112 தான் ஒரு கூறு சதாசிவன் எம் இறை வான் ஒரு கூறு மருவியும் அங்கு உளான் கோன் ஒரு கூறு உடல் உள் நின்று உயிர்க்கின்ற தான் ஒரு கூறு சலம் அயன் ஆமே மேல் @1 முதல் தந்திரம் #113 விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து உள் நின்று உருக்கி ஓர் ஒப்பு இலா ஆனந்த கண் நின்று காட்டி களிம்பு அறுத்தானே மேல் #114 களிம்பு அறுத்தான் எங்கள் கண்_நுதல் நந்தி களிம்பு அறுத்தான் அருள் கண்விழிப்பித்து களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி பளிங்கில் பவளம் பதித்தான் பதியே மேல் #115 பதி பசு பாசம் என பகர் மூன்றில் பதியினை போல் பசு பாசம் அனாதி பதியினை சென்று அணுகா பசு பாசம் பதி அணுகில் பசு பாசம் நில்லாவே மேல் #116 வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும் கோயிலில் இருந்து குடி கொண்ட கோன் நந்தி தாயினும் மும்மலம் மாற்றி தயா என்னும் தோயம் அதாய் எழும் சூரியன் ஆமே மேல் #117 சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழ் பஞ்சை சுட்டிடா சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல் ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே மேல் #118 மலங்கள் ஐந்தாம் என மாற்றி அருளி தலங்கள் ஐந்தால் நற்சதா சிவம் ஆன புலங்கள் ஐந்தான் அ பொதுவின் உள் நந்தி நலம் களைந்தான் உள் நயந்தான் அறிந்தே மேல் #119 அறி ஐம்புலனுடனே நான்றது ஆகி நெறி அறியாது உற்ற நீர் ஆழம் போல அறிவறிவு உள்ளே அழிந்தது போல குறி அறிவிப்பான் குருபரன் ஆமே மேல் #120 ஆ மேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல் தாமே தனி மன்றில் தன்னந்தனி நித்தம் தீ மேவு பல் கரணங்களுள் உற்றன தாம் ஏழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே மேல் #121 வித்தை கெடுத்து வியாக்கிரத்தே மிக சுத்த துரியம் பிறந்து துடக்கு அற ஒத்து புலன் உயிர் ஒன்றாய் உடம்பொடு செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே மேல் #122 சிவயோகம் ஆவது சித்து அசித்து என்று தவ யோகத்து உள் புக்கு தன் ஒளி தானாய் அவயோகம் சாராது அவன் பதி போக நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே மேல் #123 அளித்தான் உலகு எங்கும் தான் ஆன உண்மை அளித்தான் அமரர் அறியா உலகம் அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள் அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே மேல் #124 வெளியில் வெளி போய் விரவியவாறும் அளியில் அளி போய் அடங்கியவாறும் ஒளியில் ஒளி போய் ஒடுங்கியவாறும் தெளியும் அவரே சிவசித்தர் தாமே மேல் #125 சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர் சத்தமும் சத்த முடிவும் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள் பர முத்தர்-தம் முத்தி முதல் முப்பத்தாறே மேல் #126 முப்பதும் ஆறும் படி முத்தி ஏணியாய் ஒப்பு இலா ஆனந்தத்து உள் ஒளி புக்கு செப்ப_அரிய சிவம் கண்டு தான் தெளிந்து அ பரிசு ஆக அமர்ந்து இருந்தாரே மேல் #127 இருந்தார் சிவம் ஆகி எங்கும் தாம் ஆகி இருந்தார் சிவன் செயல் யாவையும் நோக்கி இருந்தார் முக்காலத்து இயல்பை குறித்து அங்கு இருந்தார் இழவு வந்து எய்திய சோம்பே மேல் #128 சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்து இடம் சோம்பர் கண்டு ஆர சுருதி-கண் தூக்கமே மேல் #129 தூங்கி கண்டார் சிவலோகமும் தம் உள்ளே தூங்கி கண்டார் சிவயோகமும் தம் உள்ளே தூங்கி கண்டார் சிவபோகமும் தம் உள்ளே தூங்கி கண்டார் நிலை சொல்வது எவ்வாறே மேல் #130 எவ்வாறு காண்பான் அறிவு-தனக்கு எல்லை அவ்வாறு அருள்செய்வான் ஆதி அரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமை காண ஆடிடும் செ வானில் செய்ய செழும் சுடர் மாணிக்கம் மேல் #131 மாணிக்கத்து உள்ளே மரகத சோதியாய் மாணிக்கத்து உள்ளே மரகத மாடமாய் ஆணிப்பொன் மன்றினில் ஆடும் திருக்கூத்தை பேணி தொழுது என்ன பேறு பெற்றாரே மேல் #132 பெற்றார் உலகில் பிரியா பெருநெறி பெற்றார் உலகில் பிறவா பெரும் பயன் பெற்றார் அ மன்றில் பிரியா பெரும் பேறு பெற்றார் உலகுடன் பேசா பெருமையே மேல் #133 பெருமை சிறுமை அறிந்து எம்பிரான் போல் அருமை எளிமை அறிந்து அறிவார் ஆர் ஒருமையுள் ஆமை போல் உள் ஐந்து அடக்கி இருமையும் கேட்டு இருந்தார் புரை அற்றே மேல் #134 புரை அற்ற பாலின் உள் நெய் கலந்தால் போல் திரை அற்ற சிந்தை நல் ஆரியன் செப்பும் உரை அற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால் கரை அற்ற சோதி கலந்த சத்து ஆமே மேல் #135 சத்தம் முதல் ஐந்தும் தன்வழி தான் சாரில் சித்துக்கு சித்து அன்றி சேர்விடம் வேறு உண்டோ சுத்த வெளியில் சுடரில் சுடர் சேரும் அத்தம் இது குறித்து ஆண்டு கொள் அப்பிலே மேல் #136 அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பு என பேர் பெற்று உரு செய்த அ உரு அப்பினில் கூடியது ஒன்று ஆகுமாறு போல் செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே மேல் #137 அடங்கும் பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு இடம் கொண்டது இல்லை இது அன்றி வேறு உண்டோ கடம்-தொறும் நின்ற உயிர் கரை காணில் திடம் பெற நின்றான் திருவடி தானே மேல் #138 திருவடியே சிவம் ஆவது தேரில் திருவடியே சிவலோகம் சிந்திக்கில் திருவடியே செல் கதி அது செப்பில் திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே மேல் #139 தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே மேல் #140 தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம் பிரான்-தனை சந்தித்தே மேல் #141 சந்திப்பது நந்தி தன் திருத்தாள் இணை சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி வந்திப்பது நந்தி நாமம் என் வாய்மையால் புந்திக்குள் நிற்பது நந்தி பொன் போதமே மேல் #142 போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை போதம் தனில் வைத்து புண்ணியர் ஆயினார் நாதன் நடத்தால் நயனம் களிகூர வேதம் துதித்திட போய் அடைந்தார் விண்ணே மேல் #143 மண் ஒன்று கண்டீர் இரு வகை பாத்திரம் திண்ணென்று இருந்தது தீவினை சேர்ந்தது விண்-நின்று நீர் வீழின் மீண்டும் மண் ஆனால் போல் எண் இன்றி மாந்தர் இறக்கின்றவாறே மேல் #144 பண்டம் பெய் கூரை பழகி விழுந்த-கால் உண்ட அ பெண்டிரும் மக்களும் பின் செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநடவாதே மேல் #145 ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டு சூரை அம் காட்டு இடை கொண்டு போய் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே மேல் #146 காலும் இரண்டு முகட்டு அலகு ஒன்று உள பாலுள் பரும் கழி முப்பத்திரண்டு உள மேல் உள கூரை பிரியும் பிரிந்தால் முன் போல் உயிர் மீள புக அறியாதே மேல் #147 சீக்கை விளைந்தது செய்வினை மூட்டு இற்ற ஆக்கை பிரிந்த அலகு பழுத்தது மூக்கினில் கைவைத்து மூடிட்டு கொண்டுபோய் காக்கைக்கு பலி காட்டியவாறே மேல் #148 அட பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார் இட பக்கமே இறை நொந்தது என்றார் கிடக்க படுத்தார் கிடந்து ஒழிந்தாரே மேல் #149 மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான் மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்று அத்தா என்ன திரிந்திலன் தானே மேல் #150 வாசந்தி பேசி மணம்புணர்ந்த அ பதி நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவார் பின்னை ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு பாசம் தீ சுட்டு பலி அட்டினார்களே மேல் #151 கைவிட்டு நாடி கருத்து அழிந்து அச்சற நெய் அட்டி சோறு உண்ணும் ஐவரும் போயினார் மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே மேல் #152 பந்தல் பிரிந்தது பண்டாரம் கட்டு அற்ற ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன துன்புறு காலம் துரிசுவர மேன்மேல் அன்புடையார்கள் அழுது அகன்றார்களே மேல் #153 நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைமகன் காட்டு சிவிகை ஒன்று ஏறி கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே மேல் #154 முப்பதும் முப்பதும் முப்பத்துஅறுவரும் செப்ப மதிள் உடை கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிள் உடை கோயில் சிதைந்த பின் ஒப்ப அனைவரும் ஓட்டு எடுத்தார்களே மேல் #155 மது ஊர் குழலியும் மாடும் மனையும் இது ஊர் ஒழிய இதணம் அது ஏறி பொது ஊர் புறம் சுடுகாடு-அது நோக்கி மது ஊர வாங்கியே வைத்து அகன்றார்களே மேல் #156 வைச்சு அகல்வுற்றது கண்டு மனிதர்கள் அச்சு அகலாது என நாடும் அரும்பொருள் பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்று அவர் எச்ச அகலா நின்று இளைக்கின்றவாறே மேல் #157 ஆர்த்து எழும் சுற்றமும் பெண்டிரும் மக்களும் ஊர் துறை-காலே ஒழிவர் ஒழிந்த பின் வேர் தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி நீர் தலை மூழ்குவர் நீதியிலோரே மேல் #158 வளத்திடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும் குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான் குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பர் உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே மேல் #159 ஐந்து தலை பறி ஆறு சடை உள சந்தவை முப்பது சார்வு பதினெட்டு பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து வெந்து கிடந்தது மேல் அறியோமே மேல் #160 அத்தி பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர் அத்தி பழத்தை அறைக்கீரை வித்து உண்ண கத்தி எடுத்தவர் காடு புக்காரே மேல் #161 மேலும் முகடு இல்லை கீழும் வடிம்பு இல்லை காலும் இரண்டு முகட்டு அல கொன்று உண்டு ஓலையான் மேய்ந்தவர் ஊடு வரியாமை வேலையான் மேய்ந்தது ஓர் வெள்ளி தளிகையே மேல் #162 கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை ஆடும் இலையமும் அற்றது அறுதலும் பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டு தேடிய தீயினில் தீய வைத்தார்களே மேல் #163 முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் இட்டது தான் இலை ஏதேனும் ஏழைகாள் பட்டது பார் மணம் பன்னிரண்டு ஆண்டினில் கெட்டது எழுபதில் கேடு அறியீரே மேல் #164 இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டான் முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர் விடிஞ்சு இருளாவது அறியா உலகம் படிஞ்சு கிடந்தது பதைக்கின்றவாறே மேல் #165 மடல் விரி கொன்றையான் மாயன் படைத்த உடலும் உயிரும் உருவம் தொழாமல் இடர் படர்ந்து ஏழா நரகில் கிடப்பர் குடர் பட வெம் தமர் கூப்பிடுமாறே மேல் #166 குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு இடையும் அ காலம் இருந்து நடுவே புடையும் மனிதனார் போகும் அப்போதே அடையும் இடம்வலம் ஆருயிர் ஆமே மேல் #167 காக்கை கவரில் என் கண்டார் பழிக்கில் என் பால் துளி பெய்யில் என் பல்லோர் பழிச்சில் என் தோல் பையுள் நின்று தொழில் அற செய்து ஊட்டும் கூத்தன் புறப்பட்டு போன இ கூட்டையே மேல் #168 அருளும் அரசனும் ஆனையும் தேரும் பொருளும் பிறர் கொள்ள போவதன் முன்னம் தெருளும் உயிரொடும் செல்வனை சேரின் மருளும் பினையவன் மாதவம் அன்றே மேல் #169 இயக்குறு திங்கள் இருள் பிழம்பு ஒக்கும் துயக்குறு செல்வத்தை சொல்லவும் வேண்டா மயக்கு அற நாடு-மின் வானவர் கோனை பெயல் கொண்டல் போல பெரும் செல்வம் ஆமே மேல் #170 தன்னது சாயை தனக்கு உதவாது கண்டு என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள் உன் உயிர் போம் உடல் ஒக்க பிறந்தது கண் அது கண் ஒளி கண்டுகொளீரே மேல் #171 ஈட்டிய தேன் பூ மணம் கண்டு இரதமும் கூட்டி கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும் ஓட்டி துரந்திட்டு அது வலியார் கொள காட்டி கொடுத்தது கைவிட்டவாறே மேல் #172 தேற்ற தெளி-மின் தெளிந்தீர் கலங்கன்-மின் ஆற்று பெருக்கில் கலக்கி மலக்காதே மாற்றி களைவீர் மறுத்து உங்கள் செல்வத்தை கூற்றன் வரும்-கால் குதிக்கலும் ஆமே மேல் #173 மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே கவிழ்கின்ற நீர் மிசை செல்லும் கலம் போல் அவிழ்கின்ற ஆக்கைக்கும் ஓர் வீடுபேறு ஆக சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே மேல் #174 வாழ்வும் மனைவியும் மக்கள் உடன்பிறந் தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண் பொருள் மேவும் அதனை விரவு செய்வார்கட்கு கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே மேல் #175 வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது நாட்டிய தாய் தமர் வந்து வணங்கி பின் காட்டி கொடுத்தவர் கைவிட்டவாறே மேல் #176 உடம்பொடு உயிரிடை விட்டோடும் போது அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும் விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர் சுடும் பரிசு அத்தையும் சூழ்கிலாரே மேல் #177 கிழக்கு எழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே விழ கண்டும் தேறார் விழி இலா மாந்தர் குழ கன்று மூத்து எருதாய் சில நாளில் விழ கண்டும் தேறார் வியன் உலகோரே மேல் #178 ஆண்டு பலவும் கழிந்தன அப்பனை பூண்டு கொண்டாரும் புகுந்து அறிவார் இல்லை நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும் தூண்டு விளக்கின் சுடர் அறியாரே மேல் #179 தேய்ந்து அற்று ஒழிந்த இளமை கடை முறை ஆய்ந்து அற்ற பின்னை அரிய கருமங்கள் பாய்ந்து அற்ற கங்கை படர் சடை நந்தியை ஓர்ந்து உற்று கொள்ளும் உயிர் உள்ள போதே மேல் #180 விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் கரும்பு தகர்த்து கடைக்கொண்ட நீர் போல் அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு கரும்பு ஒத்து காஞ்சிரம் காயும் ஒத்தேனே மேல் #181 பாலன் இளையன் விருத்தன் என நின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்து அண்டம் ஊடு அறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் யானே மேல் #182 காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும் மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும் சாலும் அ ஈசன் சலவியன் ஆகிலும் ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய்தானே மேல் #183 பரு ஊசி ஐந்தும் ஓர் பையினுள் வாழும் பரு ஊசி ஐந்தும் பறக்கும் விருகம் பரு ஊசி ஐந்தும் பனி-தலை பட்டால் பரு ஊசி பையும் பறக்கின்றவாறே மேல் #184 கண்ணதும் காய் கதிரோனும் உலகினை உள் நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார் விண்ணுறுவாரையும் வினையுறுவாரையும் எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே மேல் #185 ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே மேல் #186 எய்திய நாளில் இளமை கழியாமை எய்திய நாளில் இசையினால் ஏத்து-மின் எய்திய நாளில் எறிவது அறியாமல் எய்திய நாளில் இருந்து கண்டேனே மேல் #187 தழைக்கின்ற செந்தளிர் தண் மலர் கொம்பில் இழைக்கின்றது எல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பு இன்றி எம்பெருமான் அடி ஏத்தார் அழைக்கின்ற-போது அறியார் அவர் தாமே மேல் #188 ஐவர்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது ஐவரும் அ செய்யை காத்து வருவார்கள் ஐவர்க்கும் நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அ செய்யை காவல் விட்டாரே மேல் #189 மத்தளி ஒன்று உள தாளம் இரண்டு உள அத்துள்ளே வாழும் அரசரும் அங்கு உளன் அத்துள்ளே வாழும் அரசனும் புறப்பட்டால் மத்தளி மண்ணாய் மயங்கியவாறே மேல் #190 வேங்கடநாதனை வேதாந்தக்கூத்தனை வேங்கடத்து உள்ளே விளையாடு நந்தியை வேங்கடம் என்றே விரகு அறியாதவர் தாங்க வல்லார் உயிர் தாம் அறியாரே மேல் #191 சென்று உணர்வான் திசை பத்தும் திவாகரன் அன்று உணர்வால் அளக்கின்றது அறிகிலர் நின்று உணரார் இ நிலத்தின் மனிதர்கள் பொன்று உணர்வாரில் புணர்க்கின்ற மாயமே மேல் #192 மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை பீறும் அதனை பெரிது உணர்ந்தார் இலை கூறும் கரு மயிர் வெண் மயிர் ஆவது ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எனும் நீரே மேல் #193 துடுப்பு இடு பானைக்கும் ஒன்றே அரிசி அடுப்பு இடு மூன்றிற்கும் அஞ்சு எரிகொள்ளி அடுத்து எரியாமல் கொடு-மின் அரிசி விடுத்தன நாள்களும் மேல் சென்றனவே மேல் #194 இன்புறு வண்டு இங்கு இன மலர் மேல் போய் உண்பது வாச மது போல் உயிர் நிலை இன்புற நாடி நினைக்கிலும் மூன்று ஒளி கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே மேல் #195 ஆம் விதி நாடி அறம் செய்-மின் அ நிலம் போம் விதி நாடி புனிதனை போற்று-மின் நாம் விதி வேண்டும் அது என் சொலின் மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கே மேல் #196 அவ்வியம் பேசி அறம் கெட நில்லன்-மின் வெவ்வியன் ஆகி பிறர் பொருள் வவ்வன்-மின் செவ்வியன் ஆகி சிறந்து உண்ணும்-போது ஒரு தவ்வி கொடு உண்-மின் தலைப்பட்ட-போதே மேல் #197 பற்று ஆய நல் குரு பூசைக்கும் பல் மலர் மற்று ஓர் அணுக்களை கொல்லாமை ஒண் மலர் நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே மேல் #198 கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை வல்லடிக்காரர் வலி கயிற்றால் கட்டி செல்லிடு நில் என்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே மேல் #199 பொல்லா புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்-தன் தூதுவர் செல்லாக பற்றி தீவாய் நரகத்தில் மல்லாக்க தள்ளி மறித்து வைப்பாரே மேல் #200 கொலையே களவுகள் காமம் பொய்கூறல் மலைவான பாதகம் ஆம் அவை நீக்கி தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு இலையாம் இவை ஞானானந்தத்து இருத்தலே மேல் #201 ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே காத்த மனையாளை காமுறும் காளையர் காய்ச்ச பலாவின் கனி உண்ணமாட்டாமல் ஈச்சம் பழத்துக்கு இடருற்றவாறே மேல் #202 திருத்தி வளர்த்தது ஓர் தேமாம் கனியை அருத்தம் என்று எண்ணி அறையில் புதைத்து பொருத்தம் இலாத புளிமாம் கொம்பு ஏறி கருத்து அறியாதவர் கால் அற்றவாறே மேல் #203 பொருள் கொண்ட கண்டனும் போதத்தை ஆளும் இருள் கொண்ட மின்வெளி கொண்டு நின்றோரும் மருள் கொண்டு மாதர் மயலுறுவார்கள் மருள் கொண்ட சிந்தையை மாற்றகில்லாரே மேல் #204 இலை நல ஆயினும் எட்டி பழுத்தால் குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல் விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே மேல் #205 மனை புகுவார்கள் மனைவியை நாடில் சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும் கனவு அது போல கசிந்து எழும் இன்பம் நனவு அது போலவும் நாட ஒண்ணாதே மேல் #206 இயலுறும் வாழ்க்கை இளம் பிடி மாதர் புயலுற புல்லி புணர்ந்தவர் எய்தும் மயலுறும் வானவர் சார இது என்பார் அயலுற பேசி அகன்று ஒழிந்தாரே மேல் #207 வையகத்தே மடவாரொடும் கூடி என் மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது கையகத்தே கரும்பு ஆலையின் சாறு கொள் மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே மேல் #208 கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில் ஆழ நடுவார் அளப்புறுவார்களை தாழ துடக்கி தடுக்க இல்லாவிடில் பூழை நுழைந்தவர் போகின்றவாறே மேல் #209 புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட்டார்களும் அன்பு இலர் ஆனார் கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை நடை இல்லை நாட்டில் இயங்குகின்றார்கட்கே மேல் #210 பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று அ குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர் எ குழி தூர்த்தும் இறைவனை ஏத்து-மின் அ குழி தூரும் அழுக்கு அற்ற போதே மேல் #211 கற்குழி தூர கனகமும் தேடுவர் அ குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அ குழி தூர்க்கும் அறிவை அறிந்த பின் அ குழி தூரும் அழுக்கற்றவாறே மேல் #212 தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றி தொடர்ந்து நின்று அ வழி தூர்க்கலும் ஆமே மேல் #213 அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி அறுத்தனர் ஐவரும் எண்_இலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே மேல் #214 வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும் திசையும் திசை பெறு தேவர் குழாமும் விசையம் பெருகிய வேத முதல் ஆம் அசைவு இலா அந்தணர் ஆகுதி வேட்கிலே மேல் #215 ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போ கதி நாடி புறம் கொடுத்து உண்ணுவர் தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி தாம் அறிவாலே தலைப்பட்டவாறே மேல் #216 அணை துணை அந்தணர் அங்கியுள் அங்கி அணை துணை வைத்து அதன் உள் பொருள் ஆன இணை துணை யாமத்து இயங்கும் பொழுது துணை அணை ஆயது ஓர் தூய் நெறியாமே மேல் #217 போது இரண்டு ஓதி புரிந்து அருள்செய்திட்டு மாது இரண்டாகி மகிழ்ந்து உடனே நிற்கும் தாது இரண்டு ஆகிய தண் அம் பறவைகள் வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே மேல் #218 நெய்-நின்று எரியும் நெடும் சுடரே சென்று மை நின்று எரியும் வகை அறிவார்கட்கு மை நின்று அவிழ்தரும் அ தினமாம் என்றும் செய் நின்ற செல்வம் தீ அது ஆமே மேல் #219 பாழி அகலும் எரியும் திரி போல் இட்டு ஊழி அகலும் உறுவினை நோய் பல வாழி செய்து அங்கி உதிக்க அவை விழும் வீழி செய்து அங்கி வினை சுடும் ஆமே மேல் #220 பெரும் செல்வம் கேடு என்று முன்னே படைத்த வரும் செல்வம் தந்த தலைவனை நாடும் வரும் செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி அரும் செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே மேல் #221 ஒண் சுடரானை உலப்பு_இலி நாதனை ஒண் சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அ தண் சுடர் ஓம தலைவனும் ஆமே மேல் #222 ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம் இறை ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன் வேமத்துள் அங்கி விளைவு வினை கடல் கோமத்துள் அங்கி குரை கடல் தானே மேல் #223 அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரத்து அங்கி இருக்கும் வகை அருள்செய்தவர் எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே மேல் #224 அந்தணர் ஆவோர் அறு தொழில் பூண்டு உளோர் செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய் தம் தவ நல் கருமத்து நின்று ஆங்கு இட்டு சந்தியும் ஓதி சடங்கு அறுப்போர்களே மேல் #225 வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பத போதாந்த மான பிரணவத்துள் புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே மேல் #226 காயத்திரியே கருது சாவித்திரி ஆய்தற்கு உவப்பர் மந்திரம் ஆங்கு உன்னி நேய தேர் ஏறி நினைவுற்று நேயத்தாய் மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே மேல் #227 பெருநெறியான பிரணவம் ஓர்ந்து குரு நெறியால் உரை கூடி நால் வேதத்து இரு நெறி ஆன கிரியை இருந்து சொருபம் அது ஆனோர் துகள் இல் பார்ப்பாரே மேல் #228 சத்தியமும் தவம் தான் அவன் ஆதலும் எய் தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும் ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வுற்று பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே மேல் #229 வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தம் கேட்டும் தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்தம் ஆவது வேட்கை ஒழிந்து இடம் வேதாந்தம் கேட்டவர் வேட்கை விட்டாரே மேல் #230 நூலும் சிகையும் நுவலில் பிரமமோ நூல் அது கார் பாசம் நுண் சிகை கேசம் ஆம் நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானம் ஆம் நூல் உடை அந்தணர் காணும் நுவலிலே மேல் #231 சத்தியம் இன்றி தனி ஞானம் தான் இன்றி ஒத்த விடையம்விட்டு ஓரும் உணர்வு இன்றி பத்தியும் இன்றி பரன் உண்மை இன்றி பித்து ஏறும் மூடர் பிராமணர் தாம் அன்றே மேல் #232 திருநெறி ஆகிய சித்து அசித்து இன்றி குரு நெறியாலே குரு பதம் சேர்ந்து கரும நியம் ஆதி கைவிட்டு காணும் துரிய சமாதி ஆம் தூய் மறையோர்க்கே மேல் #233 மறையோர் அவரே மறைவர் ஆனால் மறையோர்-தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை குறையோர்-தன் மற்று உள்ள கோலாகலம் என்று அறிவோர் மறை தெரிந்த அந்தணர் ஆமே மேல் #234 அம் தண்மை பூண்ட அருமறை அந்தத்து சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும் புவி நந்துதல் இல்லை நரபதி நன்று ஆகும் அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே மேல் #235 வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர் நாதாந்த போதம் நணுகிய போக்கது போதாந்த மாம்பரன்-பால் புக புக்கதால் நாதாந்த முத்தியும் சித்தியும் நண்ணுமே மேல் #236 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நன்றும் இருந்தும் நலம் பல பேசினும் வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர் சென்று வணங்கும் திரு உடையோரே மேல் #237 தானே விடும் பற்று இரண்டும் தரித்திட நானே விடப்படும் ஏதொன்றை நாடாது பூ மேவு நான்முகன் புண்ணிய போகனாய் ஓம் மேவும் ஓர் ஆகுதி அவி உண்ணவே மேல் #238 கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர் கல்லா அரசனில் காலன் மிக நல்லன் கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான் நல்லாரை காலன் நணுக நில்லானே மேல் #239 நாள்-தோறும் மன்னவன் நாட்டில் தவ நெறி நாள்-தோறும் நாடி அவன் நெறி நாடானேல் நாள்-தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால் நாள்-தோறும் செல்வம் நரபதி குன்றுமே மேல் #240 வேட நெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன் வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே வேட நெறி நில்லார்-தம்மை விறல் வேந்தன் வேட நெறி செய்தால் வீடு அது ஆமே மேல் #241 மூடம் கெடாதோர் சிகை நூல் முதல் கொள்ளில் வாடும் புவியும் பெரு வாழ்வு மன்னனும் பீடு ஒன்று இலன் ஆகும் ஆதலால் பேர்த்து உணர்ந்து ஆடம்பர நூல் சிகை அறுத்தால் நன்றே மேல் #242 ஞானம் இலாதார் சடை சிகை நூல் நண்ணி ஞானிகள் போல நடிக்கின்றவர்-தம்மை ஞானிகளாலே நரபதி சோதித்து ஞானம் உண்டாக்குதல் நலம் ஆகும் நாட்டிற்கே மேல் #243 ஆவையும் பாவையும் மற்ற அறவோரையும் தேவர்கள் போற்றும் திரு வேடத்தாரையும் காவலன் காப்பவன் காவாது ஒழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நரகமே மேல் #244 திறம் தரு முத்தியும் செல்வமும் வேண்டின் மறந்தும் அற நெறியே ஆற்றல் வேண்டும் சிறந்த நீர் ஞாலம் செய்தொழில் யாவையும் அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே மேல் #245 வேந்தன் உலகை மிக நன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அ வழியாய் நிற்பர் பேர்ந்து இ உலகை பிறர் கொள்ள தாம் கொள்ள பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே மேல் #246 கால் கொண்டு கட்டி கனல் கொண்டு மேல் ஏற்றி பால் கொண்டு சோமன் முகம் பற்றி உண்ணாதோர் மால் கொண்டு தேறலை உண்ணும் மருளரை மேல் கொண்டு தண்டம் செய் வேந்தன் கடனே மேல் #247 தத்தம் சமய தகுதி நில்லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி எ தண்டமும் செய்யும் அம்மை இல் இம்மைக்கே மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே மேல் #248 அமுது ஊறும் மா மழை நீர் அதனாலே அமுது ஊறும் பல் மரம் பார் மிசை தோற்றும் கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை அமுது ஊறும் காஞ்சிரை ஆங்கு அது ஆமே மேல் #249 வரையிடை நின்று இழி வான் நீர் அருவி உரை இல்லை உள்ளத்து அகத்து நின்று ஊறு நுரை இல்லை மாசு இல்லை நுண்ணிய தெள் நீர் கரை இல்லை எந்தை கழுமணி ஆறே மேல் #250 ஆர்க்கும் இடு-மின் அவர் இவர் என்னன்-மின் பார்த்து இருந்து உண்-மின் பழம்பொருள் போற்றன்-மின் வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்-மின் காக்கை கரைந்து உண்ணும் காலம் அறி-மினே மேல் #251 தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர் தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர் தாம் அறிவார் சில தத்துவர் ஆவர்கள் தாம் அறிவார்க்கு தமர்பரன் ஆமே மேல் #252 யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய் உறை யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே மேல் #253 அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்று நின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே மேல் #254 அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து விழ கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே மேல் #255 தன்னை அறியாது தான் நலன் என்னாது இங்கு இன்மை அறியாது இளையர் என்று ஓராது வன்மையில் வந்திடும் கூற்றம் வரு முன்னம் தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே மேல் #256 துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன் அறிந்தான் அறியும் அளவு அறிவாரே மேல் #257 தான் தவம் செய்வதாம் செய் தவத்து அ வழி மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர்காள் ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் நான் தெய்வம் என்று நமன் வருவானே மேல் #258 திளைக்கும் வினை கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இரு வழி உண்டு கிளைக்கும் தனக்கும் அ கேடு இல் புகழோன் விளைக்கும் தவம் அறம் மேல் துணை ஆமே மேல் #259 பற்று அதுவாய் நின்ற பற்றினை பார் மிசை அற்றம் உரையான் அற நெறிக்கு அல்லது உற்று உங்களால் ஒன்றும் ஈந்த அதுவே துணை மற்று அண்ணல் வைத்த வழி கொள்ளும் ஆறே மேல் #260 எட்டி பழுத்த இரும் கனி வீழ்ந்தன ஒட்டிய நல் அறம் செய்யாதவர் செல்வம் வட்டி கொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டி பதகர் பயன் அறியாரே மேல் #261 ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின கழிந்தன கற்பனை நாளும் குறுகி பிழிந்தன போல தம் பேரிடர் ஆக்கை அழிந்தன கண்டும் அறம் அறியாரே மேல் #262 அறம் அறியார் அண்ணல் பாதம் நினையும் திறம் அறியார் சிவலோக நகர்க்கு புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு மறம் அறிவார் பகை மன்னி நின்றாரே மேல் #263 இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம் செய்யாதவர்-தம்-பாலது ஆகும் உரும் இடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே மேல் #264 பரவப்படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார் கரகத்தால் நீராட்டி காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நல் நெஞ்சினீரே மேல் #265 வழிநடப்பார் இன்றி வானோர் உலகம் கழி நடப்பார் நடந்தார் கரும் பாரும் மழி நடக்கும் வினை மாசு அற ஓட்டிட வழிநடப்பார் வினை ஓங்கி நின்றாரே மேல் #266 கனிந்தவர் ஈசன் கழல் அடி காண்பர் துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர் மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே மேல் #267 இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பு அவர் செய்கையினாலே முடிந்தது இன்பம் அது கண்டும் ஈகிலா பேதைகள் அன்பு இலார் சிந்தை அறம் அறியாரே மேல் #268 கெடுவதும் ஆவதும் கேடு இல் புகழோன் நடுவு அல்ல செய்து இன்ப நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணு-மின் இன்பம் படுவது செய்யில் பசு அது ஆமே மேல் #269 செல்வம் கருதி சிலர் பலர் வாழ்வு எனும் புல்லறிவாளரை போற்றி புலராமல் இல்லம் கருதி இறைவனை ஏத்து-மின் வில்லி இலக்கு எய்த வில் குறி ஆமே மேல் #270 அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்த பின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே மேல் #271 பொன்னை கடந்து இலங்கும் புலித்தோலினன் மின்னி கிடந்து மிளிரும் இளம்பிறை துன்னி கிடந்த சுடு பொடி ஆடிக்கு பின்னி கிடந்தது என் பேரன்பு தானே மேல் #272 என்பே விறகா இறைச்சி அறுத்து இட்டு பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும் அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி என் போல் மணியினை எய்த ஒண்ணாதே மேல் #273 ஆர்வம் உடையவர் காண்பார் அரன்-தன்னை ஈரம் உடையவர் காண்பார் இணை அடி பாரம் உடையவர் காண்பார் பவம்-தன்னை கோர நெறி கொடு கொங்கு புக்காரே மேல் #274 என் அன்பு உருக்கி இறைவனை ஏத்து-மின் முன் அன்பு உருக்கி முதல்வனை நாடு-மின் பின் அன்பு உருக்கி பெருந்தகை நந்தியும் தன் அன்பு எனக்கே தலைநின்றவாறே மேல் #275 தான் ஒரு காலம் சயம்பு என்று ஏத்தினும் வான் ஒரு காலம் வழித்துணையாய் நிற்கும் தேன் ஒரு-பால் திகழ் கொன்றை அணி சிவன் தான் ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே மேல் #276 முன் படைத்து இன்பம் படைத்த முதல் இடை அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார் வன்பு அடைத்து இந்த அகல் இடம் வாழ்வினில் அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே மேல் #277 கருத்துறு செம்பொன் செய் காய் கதிர் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை ஆர் அருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே மேல் #278 நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள் இச்சை உளே வைப்பர் எந்தை பிரான் என்று நச்சியே அண்ணலை நாடுகிலாரே மேல் #279 அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உளான் முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரான் அவன் அன்பின் உள் ஆகி அமரும் அரும்பொருள் அன்பின் உள்ளார்க்கே அணை துணை ஆமே மேல் #280 இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்து அருள்செய்திடும் உத்தம நாதன் கொழுந்து அன்பு செய்து அருள்கூர வல்லார்க்கு மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அதுவாமே மேல் #281 இன்ப பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்ப பிறவி தொழில் பல என்னினும் அன்பில் கலவி செய்து ஆதி பிரான் வைத்த முன்பு இ பிறவி முடிவது தானே மேல் #282 அன்புறு சிந்தையின் மேல் எழும் அ ஒளி இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்புறு கண்ணி ஐந்து ஆடும் துடக்கு அற்று நண்புறு சிந்தையை நாடு-மின் நீரே மேல் #283 புணர்ச்சியுள் ஆயிழை மேல் அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லாருக்கு உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அது இது ஆமே மேல் #284 உற்று நின்றாரொடு அத்தகு சோதியை சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை பத்திமையாலே பணிந்து அடியார் தொழ முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே மேல் #285 கண்டேன் கமழ் தரு கொன்றையினான் அடி கண்டேன் கரி உரியான் தன் கழல் இணை கண்டேன் கமல மலர் உறைவான் அடி கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே மேல் #286 நம்பனை நானாவித பொருள் ஆகும் என்று உம்பரில் வானவர் ஓதும் தலைவனை இன்பனை இன்பத்திடை நின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகிலாரே மேல் #287 முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம் அறிவோம் என்பர் இன்ப பிறப்பும் இறப்பும் இலான் நந்தி அன்பில் அவனை அறியகிலாரே மேல் #288 ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை தேசுற்று அறிந்து செயலற்று இருந்திடில் ஈசன் வந்து எம்மிடை ஈட்டி நின்றானே மேல் #289 விட்டு பிடிப்பது என் மே தகு சோதியை தொட்டு தொடர்வன் தொலையா பெருமையை எட்டும் என் ஆர் உயிராய் நின்ற ஈசனை மட்டு கலப்பது மஞ்சனம் ஆமே மேல் #290 குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடி செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே மேல் #291 கற்றறிவாளர் கருதிய காலத்து கற்றறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு கற்றறிவாளர் கருதி உரைசெய்யும் கல் தறி காட்ட கயல் உள ஆக்குமே மேல் #292 நிற்கின்ற போதே நிலை உடையான் கழல் கற்கின்ற செய்-மின் கழிந்து அறும் பாவங்கள் சொல் குன்றல் இன்றி தொழு-மின் தொழுத பின் மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே மேல் #293 கல்வி உடையார் கழிந்து ஓடி போகின்றார் பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார் எல்லியும் காலையும் ஏத்து-மின் இறைவனை வல்லியுள் வாதித்த காயமும் ஆமே மேல் #294 துணையதுவாய் வரும் தூய நல் சோதி துணையதுவாய் வரும் தூய நல் சொல் ஆம் துணையதுவாய் வரும் தூய நல் கந்தம் துணையதுவாய் வரும் தூய நல் கல்வியே மேல் #295 நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும் கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள் மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே மேல் #296 ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும் தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும் ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்கு வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே மேல் #297 வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன் கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை ஒழி துணையாம் உம்பராய் உலகு ஏழும் வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே மேல் #298 பற்று அது பற்றில் பரமனை பற்று-மின் முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே மேல் #299 கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து உடல் உடையான் பல ஊழி-தொறு ஊழி அடல் விடை ஏறும் அமரர்கள் நாதன் இடம் உடையார் நெஞ்சத்து இல் இருந்தானே மேல் #300 அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும் புறம் கேட்டும் பொன் உரை மேனி எம் ஈசன் திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே மேல் #301 தேவர் பிரான்-தனை திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்த பின் ஓது-மின் கேள்-மின் உணர்-மின் உணர்ந்த பின் ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே மேல் #302 மயன் பணி கேட்பது மா நந்தி வேண்டின் அயன் பணி கேட்பது அரன் பணியாலே சிவன் பணி கேட்பவர் தேவரும் ஆவர் பயன் பணி கேட்பது பற்று அதுவாமே மேல் #303 பெருமான் இவன் என்று பேசி இருக்கும் திருமானிடர் பின்னை தேவரும் ஆவர் வரு மாதவர்க்கு மகிழ்ந்து அருள்செய்யும் அருமாதவத்து எங்கள் ஆதி பிரானே மேல் #304 ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும் பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று வாச மலர் கந்தம் மன்னி நின்றானே மேல் #305 விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற-போது வழுக்கிவிடாவிடில் வானவர் கோனும் இழுக்கு இன்றி எண்_இலி காலம் அது ஆமே மேல் #306 சிறியார் மணல் சோற்றில் தேக்கிடுமா போல் செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில் குறியாதது ஒன்றை குறியாதார் தம்மை அறியாது இருந்தார் அவர் ஆவர் அன்றே மேல் #307 உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் உறுதுணை ஆவது உலகுறு கேள்வி செறி துணை ஆவது சிவன் அடி சிந்தை பெறு துணை கேட்கில் பிறப்பு இல்லை தானே மேல் #308 புகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன் இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம் மகிழ நின்று ஆதியை ஓதி உணரா கழிய நின்றார்க்கு ஒரு கல் பசுவாமே மேல் #309 வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய் பேசி ஒத்து உணர்ந்தான் உரு ஒன்றோடு ஒன்று ஒவ்வாது அச்சு உழன்று ஆணி கலங்கினும் ஆதியை நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே மேல் #310 கல்லாதவரும் கருத்து அறி காட்சியை வல்லார் எனில் அருள் கண்ணான் மதித்து உளோர் கல்லாதார் உண்மை பற்றா நிற்பர் கற்றோரும் கல்லாதார் இன்பம் காணுகிலாரே மேல் #311 வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார் அல்லாதவர்கள் அறிவு பல என்பார் எல்லா இடத்தும் உளன் எங்கள்-தம் இறை கல்லாதவர்கள் கலப்பு அறியாரே மேல் #312 நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லா குரம்பை நிலை என்று உணர்வீர்காள் எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும் கல்லாதார் நெஞ்சத்து காண ஒண்ணாதே மேல் #313 கில்லேன் வினை துயர் ஆக்கும் மயல் ஆனேன் கல்லேன் அரன்நெறி அறியா தகைமையின் வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள் கல்லேன் கழிய நின்று ஆட வல்லேனே மேல் #314 நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி வல்லார் அறத்தும் தத்துவத்துளும் ஆயினோர் கல்லா மனித்தர் கயவர் உலகினில் பொல்லா வினை துயர் போகம் செய்வாரே மேல் #315 விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது மண்ணினின் உள்ளே மதித்துமதித்து நின்று எண்ணி எழுதி இளைத்து விட்டாரே மேல் #316 கணக்கு அறிந்தார்க்கு அன்றி காண ஒண்ணாது கணக்கு அறிந்தார்க்கு அன்றி கைகூடா காட்சி கணக்கு அறிந்து உண்மையை கண்டு அண்ட நிற்கும் கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே மேல் #317 கல்லாத மூடரை காணவும் ஆகாது கல்லாத மூடர் சொல் கேட்க கடன் அன்று கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம் கல்லாத மூடர் கருத்து அறியாரே மேல் #318 கற்றும் சிவஞானம் இல்லா கலதிகள் சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள் மற்றும் பல திசை காணார் மதி இலோர் கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே மேல் #319 ஆதி பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் ஓதி உணர வல்லோம் என்பர் உள் நின்ற சோதி நடத்தும் தொடர் அறியாரே மேல் #320 நடுவுநின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவுநின்றார் வழி யானும் நின்றேனே மேல் #321 நடுவுநின்றான் நல்ல கார் முகில் வண்ணன் நடுவுநின்றான் நல்ல நால்மறை ஓதி நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் நடுவுநின்றார் நல்ல நம்பனும் ஆமே மேல் #322 நடுவுநின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவுநின்றார் சிலர் தேவரும் ஆவர் நடுவுநின்றார் சிலர் நம்பனும் ஆவர் நடுவுநின்றாரொடு யானும் நின்றேனே மேல் #323 தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி மூன்று நின்றார் முதல்வன் திருநாமத்தை நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே மேல் #324 கழுநீர் பசு பெறில் கயம்-தொறும் தேரா கழுநீர் விடாய்த்து தம் காயம் சுருக்கும் முழுநீர் கள் உண்போர் முறைமை அகன்றோர் செழு நீர் சிவன்-தன் சிவானந்த தேறலே மேல் #325 சித்தம் உருக்கி சிவம் ஆம் சமாதியில் ஒத்த சிவானந்தத்து ஓவாத தேறலை சுத்த மது உண்ண சிவானந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ் காலே மேல் #326 காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும் மா மலமும் சமயத்துள் மயலுறும் போ மதி ஆகும் புனிதன் இணை அடி ஓமய ஆனந்த தேறல் உணர்வு உண்டே மேல் #327 வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர் காமத்தோர் காம கள் உண்டே கலங்குவர் ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள் நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே மேல் #328 உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வுறார் தெள் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார் கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே மேல் #329 மயக்கும் சமய மலம் மன்னு மூடர் மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் மயக்குறு மா மாயையை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே மேல் #330 மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும் இயங்கும் மடவார்-தம் இன்பமே எய்தி முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார் இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே மேல் #331 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கு அற ஆனந்த தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறை அடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே மேல் #332 சத்தியை வேண்டி சமயத்தோர் கள் உண்பர் சத்தி அழிந்தது தம்மை மறத்தலால் சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டு சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே மேல் #333 சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம் சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம் சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்க சத்தியம் எண் சித்தி தன்மையும் ஆமே மேல் #334 தத்துவம் நீக்கி மருள் நீக்கி தான் ஆகி பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த சித்தி அது ஆக்கும் சிவானந்த தேறலே மேல் #335 யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்த போத அமுதை பொசித்தவர் எண் சித்தி மோகியர் கள் உண்டு மூடராய் மோகமுற்று ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே மேல் #336 உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து எண்ணீர் குரவன் இணை அடி தாமரை நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம் கண் ஆற்றொடே சென்று கால் வழி காணுமே மேல்@2 இரண்டாம் தந்திரம் #337 நடுவு நில்லாது இ உலகம் சரிந்து கெடுகின்றது எம் பெருமான் என்ன ஈசன் நடு உள அங்கி அகத்திய நீ போய் முடுகிய வையத்து முன்னிர் என்றானே மேல் #338 அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயம்செய் மேல்-பால் அவனொடு மங்கி உதயம்செய் வட-பால் தவ முனி எங்கும் வளம் கொள் இலங்கு ஒளி தானே மேல் #339 கருத்து உறை அந்தகன் தன் போல் அசுரன் வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்ட குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே மேல் #340 கொலையில் பிழைத்த பிரசாபதியை தலையை தடிந்திட்டு தான் அங்கி இட்டு நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணி தலையை அரிந்திட்டு சந்திசெய்தானே மேல் #341 எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும் தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே மேல் #342 எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதிபால் பொங்கும் சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரல் குறித்து ஆழிசெய்தானே மேல் #343 அ பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புரம் ஆவது மும்மல காரியம் அ புரம் எய்தமை ஆர் அறிவாரே மேல் #344 முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள் அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் சத்தி கருதியது ஆம் பல தேவரும் அ தீயின் உள் எழுந்தன்று கொலையே மேல் #345 மூல துவாரத்து மூளும் ஒருவனை மேலை துவாரத்து மேலுற நோக்கி முன் காலுற்று காலனை காய்ந்து அங்கி யோகமாய் ஞால கடவூர் நலமாய் இருந்ததே மேல் #346 இருந்த மனத்தை இசைய இருத்தி பொருந்தி இலிங்க வழியது போக்கி திருந்திய காமன் செயல் அழித்து அம் கண் அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே மேல் #347 அடி சேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி முடி சேர் மலை மகனார் மகள் ஆகி திடமார் தவம்செய்து தேவர் அறிய படியார அர்ச்சித்து பத்திசெய்தாளே மேல் #348 திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை அரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா புரிவுடையாளர்க்கு பொய் அலன் ஈசன் பரிவொடு நின்று பரிசு அறிவானே மேல் #349 ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும் ஊழி வலம்செய்ய ஒண் சுடர் ஆதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அ வழி வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே மேல் #350 தாங்கி இருபது தோளும் தட வரை ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெரு வலி ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்த பின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே மேல் #351 உறுவது அறி தண்டி ஒண் மணல் கூட்டி அறு வகை ஆன் ஐந்தும் ஆட்ட தன் தாதை செறு வகை செய்து சிதைப்ப முனிந்து மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே மேல் #352 ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள் வாடி முகமும் வருத்தத்து தாம் சென்று நாடி இறைவா நம என்று கும்பிட ஈடு இல் புகழோன் எழுக என்றானே மேல் #353 தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறை கெட்டு சிந்தினர் அண்ணல் சினம்செய்த-போதே மேல் #354 சந்தி செய கண்டு எழுகின்ற அரிதானும் எந்தை இவன் அல்ல யாமே உலகினில் பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம்செய்ய அந்தம்_இலானும் அருள் புரிந்தானே மேல் #355 அ பரிசே அயனார் பதி வேள்வியுள் அ பரிசே அங்கி அதிசயம் ஆகிலும் அ பரிசே அது நீர்மையை உள் கலந்து அ பரிசே சிவன் ஆலிகின்றானே மேல் #356 அ பரிசே அயன் மால் முதல் தேவர்கள் அ பரிசே அவர் ஆகிய காரணம் அ பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு அ பரிசு ஆகி அலர்ந்திருந்தானே மேல் #357 அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்ப குலம் தரும் கீழ் அங்கி கோளுற நோக்கி சிவந்த பரம் இது சென்று கதுவ உவந்த பெரு வழி ஓடி வந்தானே மேல் #358 அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே வரு மதி வாலை வன்னி நல் இந்திரன் சிர முக நாசி சிறந்த கை தோள் தான் அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே மேல் #359 செவி மந்திரம் சொல்லும் செய் தவ தேவர் அவி மந்திரத்தின் அடுக்களை கோலி செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும் குவி மந்திரம்-கொல் கொடியது ஆமே மேல் #360 நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புற பல்லார் அமரர் பரிந்து அருள்செய்க என வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன் பொல்லா அசுரர்கள் பொன்றும்படிக்கே மேல் #361 தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே அளித்து ஆங்கு அடைவது எம் ஆதி பிரானை விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீய சுளிந்தாங்கு அருள்செய்த தூய் மொழியானே மேல் #362 கருவரை மூடி கலந்து எழும் வெள்ளத்து இருவரும் கோ என்று இகல இறைவன் ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி அருவரையாய் நின்று அருள்புரிந்தானே மேல் #363 அலை கடல் ஊடறுத்து அண்டத்து வானோர் தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே மேல் #364 தண் கடல் விட்டது அமரரும் தேவரும் எண் கடல் சூழ் எம் பிரான் என்று இறைஞ்சுவர் விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம் கண் கடல் செய்யும் கருத்து அறியாரே மேல் #365 சமைக்க வல்லானை சயம்பு என்று ஏத்தி அமைக்க வல்லார் இ உலகத்து உளாரே திகை தெண் நீரில் கடல் ஒலி ஓசை மிகை கொள அங்கி மிகாமை வைத்தானே மேல் #366 பண்பு அழி செய் வழிபாடு சென்று அப்புறம் கண் பழியாத கமலத்து இருக்கின்ற நண் பழியாளனை நாடி சென்று அச்சிரம் விண் பழியாத விருத்திகொண்டானே மேல் #367 மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் கால் போதம் கையினோடு அந்தர சக்கரம் மேல் போக வெள்ளி மலை அமரர் பதி பார் போகம் ஏழும் படைத்து உடையானே மேல் #368 சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் சக்கரம் தன்னை தரிக்க ஒண்ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்க தக்க நல் சத்தியை தான் கூறு செய்ததே மேல் #369 கூறது ஆக குறித்து நல் சக்கரம் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்கு கூறது செய்து கொடுத்தனன் சத்திக்கு கூறது செய்து தரித்தனன் கோலமே மேல் #370 தக்கன்-தன் வேள்வி தகர்த்த நல் வீரர்-பால் தக்கன்-தன் வேள்வியில் தாமோதரன் தானும் சக்கரம்-தன்னை சசி முடி மேல் விட அக்கி உமிழ்ந்தது வாயு கரத்திலே மேல் #371 எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணி முடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே மேல் #372 பிரமனும் மாலும் பிரானே நான் என்ன பிரமன் மால் தங்கள் தம் பேதைமையாலே பரமன் அனலாய் பரந்து முன் நிற்க அரன் அடி தேடி அரற்றுகின்றாரே மேல் #373 ஆம் ஏழ் உலகுற நின்ற எம் அண்ணலும் தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் வான் ஏழ் உலகுறும் மா மணிகண்டனை யானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே மேல் #374 ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் சேணாய் வான் ஓங்கி திருவுருவாய் அண்ட தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே மேல் #375 நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன் அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேல் செல நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே மேல் #376 சேவடி ஏத்தும் செறிவு உடை வானவர் மூவடி தா என்றானும் முனிவரும் பாவடியாலே பதம் செய் பிரமனும் தாவடி இட்டு தலைப்பெய்துமாறே மேல் #377 தான கமலத்து இருந்த சதுமுகன் தான கரும் கடல் ஊழி தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற தான பெரும் பொருள் தன்மையது ஆமே மேல் #378 ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் கோலிங்கம் ஐஞ்சு அருள் கூடலும் ஆமே மேல் #379 வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர் ஆள் கொடுத்து இன்பம் கொடுத்து கோளாக தாள் கொடுத்தான் அடி சாரகிலாரே மேல் #380 ஊழி வலம்செய்து அங்கு ஓரும் ஒருவற்கு வாழி சதுமுகன் வந்து வெளிப்படும் வீழி தலை நீர் விதித்தது தா என ஊழி கதிரோன் ஒளியை வென்றானே மேல் #381 ஆதியோடு அந்தம் இலாத பராபரம் போதம் அது ஆக புணரும் பராபரை சோதி அதனில் பரம் தோன்ற தோன்றுமாம் தீது இல் பரை அதன்-பால் திகழ் நாதமே மேல் #382 நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில் தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே மேல் #383 இல்லது சத்தி இடம்-தனில் உண்டாகி கல் ஒளி போல கலந்து உள் இருந்திடும் வல்லது ஆக வழி செய்த அ பொருள் சொல்லது சொல்லிடில் தூராதிதூரமே மேல் #384 தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய் ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய் பார சதாசிவம் பார் முதல் ஐந்துக்கும் சார்வத்து சத்தி ஓர் சாத்துமான் ஆமே மேல் #385 மானின்-கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும் கானின்-கண் நீரும் கலந்து கடினமாய் தேனின்-கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய் பூவின்-கண் நின்று பொருந்தும் புவனமே மேல் #386 புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி புவனம் படைப்பார்க்கு புத்திரர் ஐவர் புவனம் படைப்பானும் பூமிசையான் ஆய் புவனம் படைப்பான் அ புண்ணியன் தானே மேல் #387 புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும் தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும் கண் இயல்பாக கலவி முழுதும் ஆய் மண் இயல்பாக மலர்ந்து எழு பூவிலே மேல் #388 நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பிடை காயத்தில் சோதி பிறக்கும் அ காற்றிடை ஓர் உடை நல் உயிர் பாதம் ஒலி சத்தி நீர் இடை மண்ணின் நிலை பிறப்பு ஆமே மேல் #389 உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும் கண்ட சதுமுக காரணன்-தன்னொடும் பண்டு இ உலகம் படைக்கும் பொருளே மேல் #390 ஓங்கு பெரும் கடல் உள்ளுறு வானொடும் பாங்கர் கயிலை பராபரன்-தானும் வீங்கும் கமல மலர் மிசை மேல் அயன் ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே மேல் #391 காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன் நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும் பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன் ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே மேல் #392 பயன் எளிதாம் பரு மா மணி செய்ய நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும் பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே மேல் #393 போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்து ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து மேக்கு மிக நின்ற எட்டு திசையொடும் தாக்கும் கலக்கும் தயாபரன் தானே மேல் #394 நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர் ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடலுற முன் துயர் ஆக்கும் உடற்கும் துணையதா நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே மேல் #395 ஆகின்ற தன்மையில் அக்கு அணி கொன்றையன் வேகின்ற செம்பொனின் மேல் அணி மேனியன் போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன் ஆகின்ற தன்மை செய் ஆண்தகையானே மேல் #396 ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள்-தோறும் பயன் பல ஆன திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே மேல் #397 புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல் புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல் புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள் புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே மேல் #398 ஆணவ சத்தியும் ஆம் அதில் ஐவரும் காரிய காரண ஈசர் கடை முறை பேணிய ஐம் தொழிலால் விந்துவில் பிறந்து ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே மேல் #399 உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா மற்றைய மூன்று மாயோதயம் விந்து பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால் துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே மேல் #400 ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என் போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர் மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம் ஆகாயம் பூமி காண அளித்தலே மேல் #401 அளியார் முக்கோணம் வயிந்தவம்-தன்னில் அளியார் திரிபுரையாம் அவள் தானே அளியார் சதாசிவம் ஆகி அமைவாள் அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே மேல் #402 வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி காரணி காரியம் ஆக கலந்தவள் வாரணி ஆரணி வானவர் மோகினி பூரணி போதாதி போதமும் ஆமே மேல் #403 நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் என்று இவர் ஆக இசைந்து இருந்தானே மேல் #404 ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான் ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான் ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான் ஒருவனுமே உலகோடு உயிர் தானே மேல் #405 செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும் கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும் அந்தார் பிறவி அறுத்து நின்றானே மேல் #406 தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் கூடும் பிறவி குணம் செய்த மா நந்தி ஊடும் அவர் தமது உள்ளத்துளே நின்று நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே மேல் #407 ஓர் ஆயமே உலகு ஏழும் படைப்பதும் ஓர் ஆயமே உலகு ஏழும் அளிப்பதும் ஓர் ஆயமே உலகு ஏழும் துடைப்பதும் ஓர் ஆயமே உலகோடு உயிர் தானே மேல் #408 நாதன் ஒருவனும் நல்ல இருவரும் கோது குலத்தொடும் கூட்டி குழைத்தனர் ஏது பணி என்று இசையும் இருவருக்கு ஆதி இவனே அருளுகின்றானே மேல் #409 அ பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம் மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் பொய் பரிசு எய்தி புகலும் மனிதர்கட்கு இ பரிசே இருள் மூடி நின்றானே மேல் #410 ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள் போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள் ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே மேல் #411 புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகி புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வு ஆகி புகுந்து நின்றான் உடலாய் உயிர் ஆகி புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே மேல் #412 தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே மேல் #413 உடலாய் உயிராய் உலகம் அது ஆகி கடலாய் கார் முகில் நீர் பொழிவானாய் இடையாய் உலப்பு_இலி எங்கும் தான் ஆகி அடையார் பெரு வழி அண்ணல் நின்றானே மேல் #414 தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர் கூடு மரபில் குணஞ்செய்த மா நந்தி ஊடும் அவர்-தமது உள்ளத்துளே நின்று நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே மேல் #415 தான் ஒரு காலம் தனிச்சுடராய் நிற்கும் தான் ஒரு-கால் சண்ட மாருதமாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும் தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே மேல் #416 அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்ப கலவியுமாய் நிற்கும் முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே மேல் #417 உற்று வனைவான் அவனே உலகினை பெற்று வனைவான் அவனே பிறவியை சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை மற்றும் அவனே வனைய வல்லானே மேல் #418 உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி வெள் உயிராகும் வெளியாய் இலங்கு ஒளி உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே மேல் #419 தாங்க_அரும் தன்மையும் தான் அவை பல் உயிர் வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அ வழி தாங்கி நின்றானும் அ தாரணி தானே மேல் #420 அணுகினும் சேயவன் அங்கியில் கூடி நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் பணிகினும் பார் மிசை பல் உயிர் ஆகி தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே மேல் #421 அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது அங்கி செய்து ஈசன் அசுரரை சுட்டது அங்கி அ ஈசற்கு கை அம்பு தானே மேல் #422 இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்தம் நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேனால் உலை தந்த மெல் அரி போலும் உலகம் மலை தந்த மாநிலம் தான் வெந்ததுவே மேல் #423 பதம் செய்யும் பாரும் பனி வரை எட்டும் உதம் செய்யும் ஏழ் கடல் ஓதம் முதலாம் குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம் விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே மேல் #424 கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புற குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே மேல் #425 நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே மேல் #426 நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே மேல் #427 நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால் ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் சுத்த சங்காரம் அதீதத்துள் தோய்வுறல் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே மேல் #428 நித்த சங்காரமும் நீடு இளைப்பாற்றலின் வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் சுத்த சங்காரமும் தோயா பரன் அருள் உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே மேல் #429 பாழே முதலா எழும் பயிர் அ பயிர் பாழாய் அடங்கினும் பண்டை பாழ் பாழ் ஆகா வாழா சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் பாழாம் பயிராய் அடங்கும் அ பாழிலே மேல் #430 தீய வைத்து ஆர்-மின்கள் சேரும் வினை-தனை மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் ஆயம் வைத்தான் உணர்வு ஆர வைத்தானே மேல் #431 உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உரு அறியாதே மேல் #432 இன்ப பிறவி படைத்த இறைவனும் துன்பம் செய் பாச துயருள் அடைத்தனன் என்பில் கொளுவி இசைந்துறு தோல் தசை முன்பில் கொளுவி முடிகுவது ஆமே மேல் #433 இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்து உடன் கூடி இறையவன் செய்த இரும் பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசு அறியாதே மேல் #434 காண்கின்ற கண் ஒளி காதல்செய்து ஈசனை ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டு சேண் படு பொய்கை செயல் அணையாரே மேல் #435 தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம் அருளும் வகை செய்யும் ஆதி பிரானும் சுருளும் சுடருறு தூ வெண் சுடரும் இருளும் அற நின்ற இருட்டு அறையாமே மேல் #436 அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன்று ஒவ்வா பரக்கும் உருவமும் பாரகம் தானாய் கரக்கின்றவை செய்த காண்தகையானே மேல் #437 ஒளித்து வைத்தேன் உள்ளுற உணர்ந்து ஈசனை வெளிப்பட்டு நின்று அருள்செய்திடும் ஈண்டே களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே மேல் #438 நின்றது தானாய் நிறைந்த மகேசுரன் சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன் மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன் என்று இவர் ஆக இசைந்து இருந்தானே மேல் #439 ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன் இரும் கரை மேல் இருந்து இன்புற நாடி வரும் கரை ஓரா வகையினில் கங்கை அரும் கரை பேணில் அழுக்கு அறலாமே மேல் #440 மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே மேல் #441 எட்டு திசையும் எறிகின்ற காற்றொடு வட்ட திரை அனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர் நிலை என்னும் இ காயப்பை கட்டி அவிழ்ப்பான் கண்_நுதல் காணுமே மேல் #442 உச்சியில் ஓங்கி ஒளி திகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கு தச்சும் அவனே சமைக்க வல்லானே மேல் #443 குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணை குசவன் மனத்து உற்றது எல்லாம் வனைவன் குசவனை போல் எங்கள் கோன் நந்தி வேண்டில் அசைவு இல் உலகம் அது இது ஆமே மேல் #444 விடை உடையான் விகிர்தன் மிகு பூத படை உடையான் பரிசே உலகு ஆக்கும் கொடை உடையான் குணம் எண் குணம் ஆகும் சடை உடையான் சிந்தை சார்ந்து நின்றானே மேல் #445 உகந்து நின்றே படைத்தான் உலகு ஏழும் உகந்து நின்றே படைத்தான் பல ஊழி உகந்து நின்றே படைத்தான் ஐந்து பூதம் உகந்து நின்றே உயிர் ஊன் படைத்தானே மேல் #446 படைத்து உடையான் பண்டு உலகங்கள் ஏழும் படைத்து உடையான் பல தேவரை முன்னே படைத்து உடையான் பல சீவரை முன்னே படைத்து உடையான் பரம் ஆகி நின்றானே மேல் #447 ஆதி படைத்தனன் ஐம் பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசு இல் பல் ஊழி ஆதி படைத்தனன் எண்_இலி தேவரை ஆதி படைத்தவை தாங்கி நின்றானே மேல் #448 அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்று ஆகி இவன் தான் என நின்று எளியனும் அல்லன் சிவன் தான் பலபல சீவனும் ஆகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே மேல் #449 உள் நின்ற சோதி உற நின்ற ஓர் உடல் விண் நின்ற அமரர் விரும்பும் விழுப்பொருள் மண் நின்ற வானோர் புகழ் திருமேனியன் கண் நின்ற மா மணி மா போதம் ஆமே மேல் #450 ஆரும் அறியாத அண்ட திருவுரு பார் முதலாக பயிலும் கடத்திலே நீரினில் பால் போல நிற்கின்ற நேர்மையை சோராமல் காணும் சுகம் அறிந்தேனே மேல் #451 ஆக்குகின்றான் முன் பிரிந்த இருபத்தஞ்சு ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆர் உயிர் ஆக்குகின்றான் கர்ப்ப கோளகை உள்ளிருந்து ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே மேல் #452 அறிகின்ற மூலத்தின் மேல் அங்கி அப்பு செறிகின்ற ஞானத்து செந்தாள் கொளுவி பொறைகின்ற இன் உயிர் போந்துற நாடி பறிகின்ற பத்து எனும் பாரம் செய்தானே மேல் #453 இன்புறு காலத்து இருவர் முன்பு ஊறிய துன்புறு பாசத்து உயர் மனை வான் உளன் பண்புறு காலமும் பார் மிசை வாழ்க்கையும் அன்புறு காலத்து அமைத்து ஒழிந்தானே மேல் #454 கருவை ஒழிந்தவர் கண்ட நால் மூவேழ் புருடன் உடலில் பொருந்து மற்று ஓரார் திருவின் கருக்குழி தேடி புகுந்த துருவம் இரண்டு ஆக ஓடி விழுந்ததே மேல் #455 விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தொடு ஏறி பொழிந்த புனல் பூதம் போற்றும் கரணம் ஒழிந்த நுதல் உச்சி உள்ளே ஒளித்ததே மேல் #456 பூவின் மணத்தை பொருந்திய வாயுவும் தாவி உலகில் தரிப்பித்தவாறு போல் மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் கூவி அவிழும் குறிக்கொண்ட-போதே மேல் #457 போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும் மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டுடன் நாலு புரவியும் பாகன் விடான் எனில் பன்றியும் ஆமே மேல் #458 ஏற எதிர்க்கில் இறையவன் தான் ஆகும் மாற எதிர்க்கில் அரியவன் தான் ஆகும் நேர் ஒக்க வைக்கின் நிகர் போதத்தான் ஆகும் பேர் ஒத்த மைந்தனும் பேரரசு ஆளுமே மேல் #459 ஏயம் கலந்த இருவர்-தம் சாயத்து பாயும் கருவும் உருவாம் என பல காயம் கலந்தது காண பதிந்த பின் மாயம் கலந்த மனோலயம் ஆனதே மேல் #460 கர்ப்பத்து கேவலம் மாயாள் கிளைகூட்ட நிற்கும் துரியமும் பேதித்து நினைவு எழ வற்புறு காமியம் எட்டாதல் மாயே அம் சொற்புறு தூய் மறை வாக்கினாம் சொல்லே மேல் #461 என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டி செம்பால் இறைச்சி திருத்த மனைசெய்து இன்பால் உயிர் நிலை செய்த இறை ஓங்கும் நன்பால் ஒருவனை நாடுகின்றேனே மேல் #462 பதம் செய்யும் பால் வண்ணன் மேனி பகலோன் இதம் செய்யும் ஒத்து உடல் எங்கும் புகுந்து குதம் செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான் விதம் செய்யும் ஆறே விதித்து ஒழிந்தானே மேல் #463 ஒழி பல செய்யும் வினையுற்ற நாளே வழி பல நீர் ஆடி வைத்து எழு வாங்கி பழி பல செய்கின்ற பாச கருவை சுழி பல வாங்கி சுடாமல் வைத்தானே மேல் #464 சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும் அக்கிரமத்தே தோன்றும் அ யோனியும் புக்கிடும் எண் விரல் புறப்பட்டு நால் விரல் அக்கரம் எட்டும் எண் சாண் அது ஆகுமே மேல் #465 போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும் கோசத்துள் ஆங்கு கொணர்ந்த கொடை தொழில் ஏகத்துள் ஆங்கே இரண்டு எட்டு மூன்று ஐந்து மோகத்துள் ஆங்கு ஒரு முட்டை செய்தானே மேல் #466 பிண்டத்தில் உள்ளுறு பேதை புலன் ஐந்தும் பிண்டத்தின் ஊடே பிறந்து மரித்தது அண்டத்தின் உள்ளுறு சீவனும் அ வகை அண்டத்து நாதத்து அமர்ந்திடும் தானே மேல் #467 இலை பொறி ஏற்றி எனது உடல் ஈசன் துலை பொறியில் கரு ஐந்துடன் ஆட்டி நிலை பொறி முப்பது நீர்மை கொளுவி உலை பொறி ஒன்பதில் ஒன்று செய்தானே மேல் #468 இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண் துன்ப கலசம் அணைவான் ஒருவனே ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு வெந்தது சூளை விளைந்தது தானே மேல் #469 அறியீர் உடம்பினில் ஆகியவாறும் பிறியீர் அதனில் பெருகும் குணங்கள் செறியீர் அவற்றினுள் சித்திகள் இட்ட தறிய ஈரைந்தினுள் ஆனது பிண்டமே மேல் #470 உடல் வைத்தவாறும் உயிர் வைத்தவாறும் மடை வைத்த ஒன்பது வாய்தலும் வைத்து திடம் வைத்த தாமரை சென்னியுள் அங்கி கடை வைத்த ஈசனை கைகலந்தேனே மேல் #471 கேட்டு நின்றேன் எங்கும் கேடு இல் பெரும் சுடர் மூட்டுகின்றான் முதல் யோனி மயன் அவன் கூட்டுகின்றான் குழம்பின் கருவை உரு நீட்டி நின்று ஆகத்து நேர்பட்டவாறே மேல் #472 பூவுடன் மொட்டு பொருந்த அலர்ந்த பின் காவுடை தீபம் கலந்து பிறந்திடும் நீரிடை நின்ற குமிழி நிழலதாய் பாருடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே மேல் #473 எட்டினுள் ஐந்து ஆகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆய்விடும் ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே மேல் #474 கண்_நுதல் நாமம் கலந்து உடம்பாய் இடை பண் நுதல் செய்து பசு பாசம் நீங்கிட எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை மண் முதலாக வகுத்து வைத்தானே மேல் #475 அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி அருள் இல்லை ஆதலின் அ ஓர் உயிரை தருகின்ற-போது இரு கைத்தாயர்-தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடும் தானே மேல் #476 வகுத்த பிறவியை மாது நல்லாளும் தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும் பகுத்து உணர் ஆகிய பல் உயிர் எல்லாம் வகுத்து உள்ளும் நின்றது ஓர் மாண்பு அதுவாமே மேல் #477 மாண்பு அது ஆக வளர்கின்ற வன்னியும் காண்பது ஆண் பெண் அலி எனும் கற்பனை பூண்பது மாதா பிதா வழி போலவே ஆம் பதி செய்தான் அ சோதி தன் ஆண்மையே மேல் #478 ஆண் மிகில் ஆண் ஆகும் பெண் மிகில் பெண் ஆகும் பூண் இரண்டு ஒத்து பொருந்தில் அலி ஆகும் தாண் மிகும் ஆகில் தரணி முழுது ஆளும் பாணவம் மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே மேல் #479 பாய்ந்த பின் அஞ்சு ஓடில் ஆயுளும் நூறு ஆகும் பாய்ந்த பின் நால் ஓடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயு பகுத்து அறிந்து இ வகை பாய்ந்திடும் யோகிக்கு பாய்ச்சலும் ஆமே மேல் #480 பாய்கின்ற வாயு குறையில் குறள் ஆகும் பாய்கின்ற வாயு விளைக்கின் முடம் ஆகும் பாய்கின்ற வாயு நடுப்படில் கூன் ஆகும் பாய்கின்ற வாயு மாதர்க்கு இல்லை பார்க்கிலே மேல் #481 மாதா உதரம் மலம் மிகில் மந்தன் ஆம் மாதா உதரம் சலம் மிகில் மூங்கை ஆம் மாதா உதரம் இரண்டும் ஒக்கில் கண் இல்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே மேல் #482 குழவியும் ஆண் ஆம் வலத்தது ஆகில் குழவியும் பெண் ஆம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே மேல் #483 கொண்ட நல் வாயு இருவர்க்கும் ஒத்து எழில் கொண்ட குழவியும் கோமளம் ஆயிடும் கொண்ட நல் வாயு இருவர்க்கும் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளையாட்கே மேல் #484 கோல்_வளை உந்தியில் கொண்ட குழவியும் தால் வளை உள்ளே தயங்கிய சோதி ஆம் பால் வளர்ந்து உள்ளே பகலவன் பொன் உரு போல் வளர்ந்து உள்ளே பொருந்து உருவாமே மேல் #485 உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில் பருவம் அது ஆகவே பாரினில் வந்திடும் மருவி வளர்ந்திடும் மாயையினாலே அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே மேல் #486 இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க்கு உரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன் கெட்டேன் இ மாயையின் கீழ்மை எவ்வாறே மேல் #487 இன்புற நாடி இருவரும் சந்தித்து துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின் முன்புற நாடி நிலத்தின் முன் தோன்றிய தொன்புற நாடி நின்று ஓதலும் ஆமே மேல் #488 குயில் குஞ்சு முட்டையை காக்கை கூட்டிட்டால் அயிர்ப்பு இன்றி காக்கை வளர்க்கின்றது போல் இயக்கு இல்லை போக்கு இல்லை ஏன் என்பது இல்லை மயக்கத்தால் காக்கை வளர்கின்றவாறே மேல் #489 முதல் கிழங்காய் முளையாய் அம் முளைப்பின் அதல் புதலாய் பலமாய் நின்று அளிக்கும் அதற்கு அதுவாய் இன்பம் ஆவது போல் அதற்கு அதுவாய் நிற்கும் ஆதி பிரானே மேல் #490 ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தினின் உள்ளே மேல் #491 பரத்தில் கரைந்தது பதிந்த நல் காயம் உரு தரித்து இ உடல் ஓங்கிட வேண்டி திரை கடல் உப்பு திரண்டது போல திரித்து பிறக்கும் திருவருளாலே மேல் #492 சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்து சித்தம் புகுந்து சிவமயம் ஆக்குமே மேல் #493 விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து அஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே மேல் #494 விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர் தம் ஞானர் அட்ட வித்தேசராம் சார்ந்து உளோர் எஞ்ஞானர் ஏழ் கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே மேல் #495 இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் இரண்டாகும் நூற்று எட்டு உருத்திரர் என்பர் முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே மேல் #496 பெத்தத்த சித்தொடு பேண்முத்த சித்தது ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே மேல் #497 சிவம் ஆகி ஐ வகை திண்மலம் செற்றோர் அவம் ஆகார் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார் பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் நவம் ஆன தத்துவம் நாடி கண்டோரே மேல் #498 விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவோர் விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அ சகலத்தர் சகலராம் விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே மேல் #499 விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே மேல் #500 ஆணவம் துற்ற அவித்தாம் நனவு அற்றோர் காணிய விந்துவாம் நாத சகலாதி ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே மேல் #501 திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால் பல முத்தி சித்தி பரபோகமும் தரும் நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும் அற்றே பரபோகமும் குன்றுமே மேல் #502 கண்டிருந்து ஆருயிர் உண்டிடும் காலனை கொண்டிருந்து ஆருயிர் கொள்ளும் குணத்தனை நன்று உணர்ந்தார்க்கு அருள்செய்திடும் நாதனை சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே மேல் #503 கைவிட்டிலேன் கருவாகிய காலத்து மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன் பொய் விட்டு நானே புரிசடையான் அடி நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே மேல் #504 ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளையோனே மேல் #505 கோல வறட்டை குனிந்து குளகு இட்டு பாலை கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து காலம் கழிந்த பயிர் அது ஆகுமே மேல் #506 ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு ஈவ பெரும் பிழை என்று கொளீரே மேல் #507 ஆமாறு அறியான் அதி பஞ்சபாதகன் தோம் மாறும் ஈசற்கும் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான் போதம் கற்கவே மேல் #508 மண் மலையத்தனை மா தனம் ஈயினும் அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சாதார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழாம் நரக குழியிலே மேல் #509 உள்ளத்தின் உள்ளே உள பல தீர்த்தங்கள் மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனம் உடை கல்வி இலோரே மேல் #510 தளி அறிவாளர்க்கு தண்ணிதாய் தோன்றும் குளி அறிவாளர்க்கு கூடவும் ஒண்ணான் வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளி அறிவாளர் தம் சிந்தை உளானே மேல் #511 உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை கள்ளத்தினாரும் கலந்து அறிவார் இல்லை வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை பள்ளத்தில் இட்டது ஓர் பந்தர் உள்ளானே மேல் #512 அறிவார் அமரர்கள் ஆதி பிரானை செறிவான் உறை பதம் சென்று வலம் கொள் மறியார் வளை கை வரு புனல் கங்கை பொறியார் புனல் மூழ்க புண்ணியர் ஆமே மேல் #513 கடலில் கெடுத்து குளத்தினில் காண்டல் உடல் உற்று தேடுவார் தம்மை ஒப்பார் இலர் திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே மேல் #514 கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும் கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும் கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும் கலந்தது நீர் நிலம் காற்று அதுவாமே மேல் #515 தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலை கெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே மேல் #516 கட்டுவித்து ஆர் மதில் கல் ஒன்று வாங்கிடில் வெட்டுவிக்கும் அபிடேகத்து அரசரை முட்டுவிக்கும் முனி வேதியர் ஆயினும் வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே மேல் #517 ஆற்ற_அரு நோய் மிக்கு அவனி மழை இன்றி போற்ற_அரு மன்னரும் போர் வலி குன்றுவர் கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே மேல் #518 முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்கு தீங்கு உள வாரி வளம் குன்றும் கன்னம் களவு மிகுந்திடும் காசினி என் அரு நந்தி எடுத்து உரைத்தானே மேல் #519 பேர் கொண்ட பார்ப்பான் பிரான்-தன்னை அர்ச்சித்தால் போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம் பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே மேல் #520 எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பு அவிழ் வானோர் அசுரன் வலி சொல்ல அம் பவள மேனி அறுமுகன் போய் அவர் தம் பகை கொல் என்ற தற்பரன் தானே மேல் #521 அண்டமொடு எண் திசை தாங்கும் அதோ முகம் கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர் வெண் தலை மாலை விரிசடையோற்கே மேல் #522 செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து பொய்யே உரைத்து புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே மேல் #523 நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்தீ கலந்து உள் சிவன் என நிற்கும் முந்தி கலந்து அங்கு உலகம் வலம்வரும் அந்தி இறைவன் அதோ முகம் ஆமே மேல் #524 அதோமுகம் கீழ் அண்டம் ஆன புராணன் அதோமுகம்-தன்னொடும் எங்கும் முயலும் சதோமுகத்து ஒண் மலர் கண்ணி பிரானும் அதோமுகன் ஊழி தலைவனும் ஆமே மேல் #525 அதோமுகம் மா மலர் ஆயது கேளும் அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து அதோமுகம் ஆகிய அந்தம்_இல் சத்தி அதோமுகம் ஆகி அமர்ந்து இருந்தானே மேல் #526 தெளிவுறு ஞானத்து சிந்தையின் உள்ளே அளிவுறுவார் அமராபதி நாடி எளியன் என்று ஈசனை நீசர் இகழில் கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே மேல் #527 முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்து அமுது ஊறிய ஆதி பிரானை தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே மேல் #528 அ பகையாலே அசுரரும் தேவரும் நல் பகைசெய்து நடுவே முடிந்தனர் எ பகையாகிலும் எய்தார் இறைவனை பொய் பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே மேல் #529 போகமும் மாதர் புலவி அது நினைந்து ஆகமும் உள் கலந்து அங்கு உளன் ஆதலினால் வேதியராயும் விகிர்தன் ஆம் என்கின்ற நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே மேல் #530 பெற்றிருந்தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந்தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந்தார் வழி உற்றிருந்தார் அவர் பெற்றிருந்தார் அன்றி யார் பெறும் பேறே மேல் #531 ஓர் எழுத்து ஒரு பொருள் உணர கூறிய சீர் எழுத்தாளரை சிதைய செப்பினோர் ஊரிடை சுணங்கனாய் பிறந்து அங்கு ஓர் உகம் வாரிடை கிருமியாய் மாய்வர் மண்ணிலே மேல் #532 பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தம் கலங்க சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டு ஒன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே மேல் #533 மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே மேல் #534 ஈசன் அடியார் இதயம் கலங்கிட தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மா மன்னர் பீடமும் நாசம் அது ஆகுமே நம் நந்தி ஆணையே மேல் #535 சன்மார்க்க சற்குரு சந்நிதி பொய் வரின் நன் மார்க்கமும் குன்றி ஞானமும் தங்காது தொன் மார்க்கம் ஆய துறையும் மறந்திட்டு பல் மார்க்கமும் கெட்டு பஞ்சமும் ஆமே மேல் #536 கைப்பட்ட மா மணி தான் இடை கைவிட்டு மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும் கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்க தான் அற கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே மேல் #537 ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர் ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ் நரகு ஆகுமே மேல் #538 ஞானியை நிந்திப்பவனும் நலன் என்றே ஞானியை வந்திப்பவனுமே நல்வினை ஆன கொடுவினை தீர்வார் அவன் வயம் போன பொழுதே புகும் சிவபோகமே மேல் #539 பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு முற்றி கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றி கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் வற்றாது ஒழிவது மாகமை ஆமே மேல் #540 ஓலக்கம் சூழ்ந்த உலப்பு_இலி தேவர்கள் பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் ஞாலத்து இவன் மிக நல்லன் என்றாரே மேல் #541 ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் சேனை வளைந்து திசை-தொறும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்-தம் ஆதியை ஏனை விளைந்து அருள் எட்டலும் ஆமே மேல் #542 வல்வகையாலும் மனையிலும் மன்றிலும் பல்வகையாலும் பயிற்றி பதம் செய்யும் கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு எல்லை இல்லாத இலயம் உண்டாமே மேல் #543 ஓட வல்லார் தமரோடு நடாவுவன் பாட வல்லார் ஒளி பார் மிசை வாழ்குவன் தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும் கூட வல்லார் அடி கூடுவன் யானே மேல் #544 தாம் இடர்ப்பட்டு தளிர் போல் தயங்கினும் மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும் நீ இடர்ப்பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே போம் இடத்து என்னொடும் போது கண்டாயே மேல் #545 அறிவார் அமரர் தலைவனை நாடி செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை நெறிதான் மிக மிக நின்று அருள்செய்யும் பெரியாருடன் கூடல் பேரின்பம் ஆமே மேல் #546 தார் சடையான்-தன் தமராய் உலகினில் போர் புகழான் எந்தை பொன் அடி சேருவார் வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள்செய்யும் கோ அடைந்து அ நெறி கூடலும் ஆமே மேல் #547 உடையான் அடியார் அடியாருடன் போய் படையார் அழல் மேனி பதி சென்று புக்கேன் கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப உடையான் வருக என ஓலம் என்றாரே மேல் #548 அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும் பெருமை வல்லோன் பிறவி சுழி நீந்தும் உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும் இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே மேல்@3 மூன்றாம் தந்திரம் #549 உரைத்தன வற்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரை முறை எண்ணி பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமம் செய்தானே மேல் #550 செய்த இயம நியமம் சமாதி சென்று உய்ய பராசத்தி உத்தர பூருவம் எய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த உரைசெய்வன் இ நிலை தானே மேல் #551 அ நெறி இ நெறி என்னாது அட்டாங்க தன் நெறி சென்று சமாதியிலே நின்-மின் நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே மேல் #552 இயம நியமமே எண்_இலா ஆதனம் நயமுறு பிரணாயாமம் பிரத்தியாகாரம் சய மிகு தாரணை தியானம் சமாதி அயமுறும் அட்டாங்கம் ஆவது ஆமே மேல் #553 எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும் செழும் தண் நியமங்கள் செய்-மின் என்று அண்ணல் கொழும் தண் பவள குளிர் சடையோடே அழுந்திய நால்வருக்கு அருள் புரிந்தானே மேல் #554 கொல்லான் பொய் கூறான் களவு இலான் எண் குணன் நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம் இல்லான் நியமத்து இடையில் நின்றானே மேல் #555 ஆதியை வேதத்தின் அ பொருளானை சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை பாதியுள் மன்னும் பராசத்தியோடு உடன் நீதி உணர்ந்து நியமத்தன் ஆமே மேல் #556 தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்று இவை காமம் களவு கொலை என காண்பவை நேமி ஈரைந்து நியமத்தன் ஆமே மேல் #557 தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவன் தன் விரதமே சித்தாந்த கேள்வி மகம் சிவபூசை ஒண் மதி சொல்லீர் ஐந்து நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே மேல் #558 பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம் அங்கு உளவாம் இரு நாலும் அவற்றினுள் சொங்கு இல்லை ஆக சுவத்திகம் என மிக தங்க இருப்ப தலைவனும் ஆமே மேல் #559 ஓர் அணை அ பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு ஆர வலித்து அதன் மேல் வைத்து அழகுற சீர் திகழ் கைகள் அதனை தன் மேல் வைக்க பார் திகழ் பத்மாசனம் எனல் ஆகுமே மேல் #560 துரிசு இல் வலக்காலை தோன்றவே மேல் வைத்து அரிய முழந்தாளில் அம் கையை நீட்டி உருசியொடும் உடல் செவ்வே இருத்தி பரிசு பெறும் அது பத்திராசனமே மேல் #561 ஒக்க அடியிணை ஊருவில் ஏறிட்டு முக்கி உடலை முழங்கை தனில் ஏற்றி தொக்க அறிந்து துளங்காது இருந்திடல் குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே மேல் #562 பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுற கோது இல் நயனம் கொடி மூக்கிலே உற சீர் திகழ் சிங்காதனம் என செப்புமே மேல் #563 பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டு பத்தொடு நூறு பல ஆசனமே மேல் #564 ஐவர்க்கு நாயகன் அ ஊர் தலைமகன் உய்யக்கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய் பொய்யரை துள்ளி விழுத்திடும் தானே மேல் #565 ஆரியன் அல்லன் குதிரை இரண்டு உள வீசி பிடிக்கும் விரகு அறிவார் இல்லை கூரிய நாதன் குருவின் அருள் பெற்றால் வாரி பிடிக்க வசப்படும் தானே மேல் #566 புள்ளினும் மிக்க புரவியை மேல் கொண்டால் கள் உண்ண வேண்டாம் தானே களி தரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே மேல் #567 பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி பிராணன் இருக்கில் பிறப்பு இறப்பு இல்லை பிராணன் மடைமாறி பேச்சு அறிவித்து பிராணன் அடை பேறு பெற்று உண்டீர் நீரே மேல் #568 ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்துநாலு அதில் ஊறுதல் முப்பத்திரண்டு அதி இரேசகம் மாறுதல் ஒன்றின் கண் வஞ்சகம் ஆமே மேல் #569 வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கு ஒத்து காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளிய குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனும் ஆமே மேல் #570 எங்கே இருக்கினும் பூரி இடத்திலே அங்கே அது செய்ய ஆக்கைக்கு அழிவு இல்லை அங்கே பிடித்தது விட்டு அளவும் செல்ல சங்கே குறிக்க தலைவனும் ஆமே மேல் #571 ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றை பிடிக்கும் கணக்கு அறிவார் இல்லை காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு கூற்றை உதைக்கும் குறி அது ஆமே மேல் #572 மேல் கீழ் நடு பக்கம் மிக்கு உற பூரித்து பால் ஆம் இரேசகத்தால் உள் பாவித்து மால் ஆகி உந்தியுள் கும்பித்து வாங்கவே ஆலாலம் உண்டான் அருள் பெறலாமே மேல் #573 வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத்திரண்டும் இரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இ இரண்டு ஓமத்தால் எட்டெட்டு கும்பிக்க உண்மையே மேல் #574 இட்டது அ வீடு இளகாது இரேசித்து புட்டி பட தச நாடியும் பூரித்து கொட்டி பிராணன் அபானனும் கும்பித்து நட்டம் இருக்க நமன் இல்லை தானே மேல் #575 புறப்பட்டு புக்கு திரிகின்ற வாயுவை நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில் உறுப்பு சிவக்கும் உரோமம் கறுக்கும் புறப்பட்டு போகான் புரிசடையோனே மேல் #576 கூடம் எடுத்து குடி புக்க மங்கையர் ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம் நீடுவர் எண் விரல் கண்டிப்பர் நால் விரல் கூடி கொளில் கோல அஞ்சு எழுத்து ஆமே மேல் #577 பன்னிரண்டு ஆனை பகல் இரவு உள்ளது பன்னிரண்டு ஆனையை பாகன் அறிகிலன் பன்னிரண்டு ஆனையை பாகன் அறிந்த பின் பன்னிரண்டு ஆனைக்கு பகல் இரவு இல்லையே மேல் #578 கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில் கொண்டுகொண்டு உள்ளே குணம் பல காணலாம் பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே மேல் #579 நாபிக்கு கீழே பன்னிரண்டு அங்குலம் தாபிக்கு மந்திரம்-தன்னை அறிகிலர் தாபிக்கும் மந்திரம்-தன்னை அறிந்த பின் கூவிக்கொண்டு ஈசன் குடி இருந்தானே மேல் #580 மூலத்து இரு விரல் மேலுக்கு முன் நின்ற பாலித்த யோனிக்கு இரு விரல் கீழ் நின்ற கோலித்த குண்டலி உள் எழும் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால் விரல் கீழதே மேல் #581 நாசிக்கு அதோ முகம் பன்னிரண்டு அங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மா சித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவு இல்லை ஆமே மேல் #582 சோதி இரேகை சுடர் ஒளி தோன்றிடில் கோது இல் பரானந்தம் என்றே குறி கொண்-மின் நேர் திகழ் கண்டத்தே நிலவு ஒளி எய்தினால் ஓதுவது உன் உடல் உன்மத்தம் ஆமே மேல் #583 மூல துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு மேலை துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு காலத்தை வெல்லும் கருத்து இது தானே மேல் #584 எரு இடும் வாசற்கு இரு விரல் மேலே கரு இடும் வாசற்கு இரு விரல் கீழே உரு இடும் சோதியை உள்க வல்லார்க்கு கரு இடும் சோதி கலந்து நின்றானே மேல் #585 ஒருக்கால் உபாதியை ஒண் சோதி-தன்னை பிரித்து உணர் வந்த உபாதி பிரிவை கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் பிரத்தியாகார பெருமை அது ஆமே மேல் #586 புறப்பட்ட வாயு புகவிடா வண்ணம் திறப்பட்டு நிச்சயம் சேர்ந்து உடன் நின்றால் உறப்பட்டு நின்றது உள்ளமும் ஆங்கே புறப்பட்டு போகான் பெருந்தகையானே மேல் #587 குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு இருள் நீங்கி விகிர்தனை நாடும் சிறப்புறு சிந்தையை சிக்கென்று உணரில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே மேல் #588 கோணா மனத்தை குறிக்கொண்டு கீழ் கட்டி வீணாத்தண்டு ஊடே வெளியுற தான் நோக்கி காணா கண் கேளா செவி என்று இருப்பார்க்கு வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே மேல் #589 மலை ஆர் சிரத்திடை வான் நீர் அருவி நிலையார பாயும் நெடுநாடி ஊடே சிலை ஆர் பொதுவில் திருநடம் ஆடும் தொலையாத ஆனந்த சோதி கண்டேனே மேல் #590 மேலை நிலத்தினாள் வேதக பெண்பிள்ளை மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே மேல் #591 கடை வாசலை கட்டி காலை எழுப்பி இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி மடை வாயில் கொக்கு போல் வந்தித்து இருப்பார்க்கு உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே மேல் #592 கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிர் அது காலின் நெருக்கம் கலந்த உயிர் அது கால் அது கட்டில் கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே மேல் #593 வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு வாய் திறப்பாரே வளி இட்டு பாய்ச்சுவர் வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர் கோய் திறவாவிடில் கோழையும் ஆமே மேல் #594 வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடை போழ்கின்ற வாயு புறம் படா பாய்ச்சுறில் ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல் பாழி பெரியது ஓர் பள்ளி அறையே மேல் #595 நிரம்பிய ஈரைந்தில் ஐந்து இவை போனால் இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய் வரம்பினை கோலி வழி செய்குவார்க்கு குரங்கினை கொட்டை பொதியலும் ஆமே மேல் #596 முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம் முன்னுறு கோடி உறு கதி பேசிடில் என்ன மாயம் இடி கரை நிற்குமே மேல் #597 அரித்த உடலை ஐம்பூதத்தில் வைத்து பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து தெரித்த மனாதி சத்தாதியில் செல்ல தரித்தது தாரணை தற்பரத்தோடே மேல் #598 வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம் பொருவாத புந்தி புலன் போகம் ஏவல் உரு ஆய சத்தி பர தியான முன்னும் குருவார் சிவதியானம் யோகத்தின் கூறே மேல் #599 கண் நாக்கு மூக்கு செவி ஞான கூட்டத்துள் பண்ணாக்கி நின்ற பழம் பொருள் ஒன்று உண்டு அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி புண்ணாக்கி நம்மை பிழைப்பித்தவாறே மேல் #600 ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி-தன்னை கண்ணார பார்த்து கலந்து ஆங்கு இருந்திடில் விண்ணாறு வந்து வெளி கண்டிட ஓடி பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே மேல் #601 ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை ஒருபொழுது உன்னார் சந்திர பூவே மேல் #602 மனத்து விளக்கினை மாண்பட ஏற்றி சினத்து விளக்கினை செல்ல நெருக்கி அனைத்து விளக்கும் திரி ஒக்க தூண்ட மனத்து விளக்கது மாயா விளக்கே மேல் #603 எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் கண் ஆர் அமுதினை கண்டு அறிவார் இல்லை உள் நாடி உள்ளே ஒளி உற நோக்கினால் கண்ணாடி போல கலந்து நின்றானே மேல் #604 நாட்டம் இரண்டும் நடு மூக்கில் வைத்திடில் வாட்டம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை ஓட்டமும் இல்லை உணர்வு இல்லை தான் இல்லை தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆமே மேல் #605 நயனம் இரண்டும் நாசி மேல் வைத்திட்டு உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கி துயர் அற நாடியே தூங்க வல்லார்க்கு பயன் இது காயம் பயம் இல்லை தானே மேல் #606 மணி கடல் யானை வார் குழல் மேகம் அணி வண்டு தும்பி வளை பேரிகை யாழ் தணிந்து எழு நாதங்கள் தாம் இவை பத்தும் பணிந்தவர்க்கு அல்லது பார்க்க ஒண்ணாதே மேல் #607 கடலொடு மேகம் களிறொடும் ஓசை அட எழும் வீணை அண்டர் அண்டத்து சுடர் மன்னு வேணு சுரிசங்கின் ஓசை திடம் அறி யோகிக்கு அல்லால் தெரியாதே மேல் #608 ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும் பாசம் இயங்கும் பரிந்து உயிராய் நிற்கும் ஓசை அதன் மணம் போல விடுவது ஓர் ஓசை ஆம் ஈசன் உணர வல்லார்க்கே மேல் #609 நாத முடிவிலே நல்லாள் இருப்பது நாத முடிவிலே நல் யோகம் இருப்பது நாத முடிவிலே நாட்டம் இருப்பது நாத முடிவிலே நஞ்சு உண்ட கண்டனே மேல் #610 உதிக்கின்ற ஆறினும் உள் அங்கி ஐந்தும் துதிக்கின்ற தேசு உடை தூங்கு இருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்க கதி கொன்றை ஈசன் கழல் சேரலாமே மேல் #611 பள்ளி அறையில் பகலே இருள் இல்லை கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம் ஒள்ளிது அறியிலோர் ஓசனை நீள் இது வெள்ளி அறையில் விடிவு இல்லை தானே மேல் #612 கொண்ட விரதம் குறையாமல் தான் ஒன்றி தண்டுடன் ஓடி தலைப்பட்ட யோகிக்கு மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்த பின் பிண்டமும் ஊழி பிரியாது இருக்குமே மேல் #613 அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு ஒன்று உண்டு அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் அவ்வவர் மண்டலம் மாயம் மற்றோர்க்கே மேல் #614 இளைக்கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றி துளை பெரும் பாசம் துருவிடுமாகில் இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே மேல் #615 முக்குண மூடு அற வாயுவை மூலத்தே சிக்கென மூடி திரித்து பிடித்திட்டு தக்க வலம் இடம் நாழிகை சாதிக்க வைக்கும் உயர் நிலை வானவர் கோனே மேல் #616 நடலித்த நாபிக்கு நால் விரல் மேலே மடலித்த வாணிக்கு இரு விரல் உள்ளே கடலித்து இருந்து கருத வல்லார்கள் சடல தலைவனை தாம் அறிந்தாரே மேல் #617 அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே மேல் #618 சமாது இயம் ஆதியில் தான் செல்லக்கூடும் சமாது இயம் ஆதியில் தான் எட்டு சித்தி சமாது இயம் ஆதியில் தங்கினோர்க்கு அன்றே சமாது இயம் ஆதி தலைப்படும் தானே மேல் #619 விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில் சந்தியில் ஆன சமாதியில் கூடிடும் அந்தம் இலாத அறிவின் அரும்பொருள் சுந்தர சோதியும் தோன்றிடும் தானே மேல் #620 மன் மனம் எங்கு உண்டு வாயுவும் அங்கு உண்டு மன் மனம் எங்கு இல்லை வாயுவும் அங்கு இல்லை மன் மனத்து உள்ளே மகிழ்ந்து இருப்பார்க்கு மன் மனத்து உள்ளே மனோலயம் ஆமே மேல் #621 விண்டு அலர் கூபமும் விஞ்சத்து அடவியும் கண்டு உணர்வாக கருதி இருப்பார்கள் செண்டு வெளியில் செழும் கிரியத்திடை கொண்டு குதிரை குசை செறுத்தாரே மேல் #622 மூல நாடி முகட்டலகு உச்சியுள் நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள் மேலை வாசல் வெளியுற கண்ட பின் காலன் வார்த்தை கனவிலும் இல்லையே மேல் #623 மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு கொண்டிட நிற்கும் குடிகளும் ஆறு எண்மர் கண்டிட நிற்கும் கருத்து நடு ஆக உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே மேல் #624 பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை தேட்டு அற்ற அ நிலம் சேரும்படி வைத்து நாட்டத்தை மீட்டு நயனத்து இருப்பார்க்கு தோட்டத்து மாம்பழம் தூங்கலும் ஆமே மேல் #625 உரு அறியும் பரிசு ஒன்று உண்டு வானோர் கரு வரை பற்றி கடைந்து அமுது உண்டார் அரு வரை ஏறி அமுது உண்ண மாட்டார் திரு வரை ஆம் மனம் தீர்ந்து அற்றவாறே மேல் #626 நம்பனை ஆதியை நால்மறை ஓதியை செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை அன்பினை ஆக்கி அருத்தி ஒடுங்கி போய் கொம்பு ஏறி கும்பிட்டு கூட்டம் இட்டாரே மேல் #627 மூலத்து மேல் அது முச்சதுரத்து கால திசையில் கலக்கின்ற சந்தினில் மேலை பிறையினில் நெற்றி நேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே மேல் #628 கற்பனை அற்று கனல் வழியே சென்று சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளி பொற்பினை நாடி புணர் மதியோடு உற்று தற்பரம் ஆக தகும் தண் சமாதியே மேல் #629 தலைப்பட்டு இருந்திட தத்துவம் கூடும் வலைப்பட்டு இருந்திடும் மாது நல்லாளும் குலைப்பட்டு இருந்திடும் கோபம் அகலும் துலைப்பட்டு இருந்திடும் தூங்க வல்லார்க்கே மேல் #630 சோதி தனிச்சுடராய் நின்ற தேவனும் ஆதியும் உள் நின்ற சீவனும் ஆகுமால் ஆதி பிரமன் பெரும் கடல் வண்ணனும் ஆதி அடிபணிந்து அன்புறுவாரே மேல் #631 சமாதி செய்வார்க்கு தகும் பல யோகம் சமாதிகள் வேண்டாம் இறையுடன் ஏகில் சமாதி தான் இல்லை தான் அவன் ஆகில் சமாதியில் எட்டெட்டு சித்தியும் எய்துமே மேல் #632 போது உகந்து ஏறும் புரிசடையான் அடி யாது உகந்தார் அமராபதிக்கே செல்வர் ஏது உகந்தான் இவன் என்று அருள்செய்திடும் மாது உகந்து ஆடிடும் மால் விடையோனே மேல் #633 பற்றி பதத்து அன்பு வைத்து பரன் புகழ் கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வர தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே மேல் #634 வருந்தி தவம் செய்து வானவர் கோவாய் திருந்து அமராபதி செல்வன் இவன் என தரும் தண் முழவம் குழலும் இயம்ப இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே மேல் #635 செம்பொன் சிவகதி சென்று எய்தும் காலத்து கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள எம் பொன் தலைவன் இவனாம் என சொல்ல இன்ப கலவி இருக்கலும் ஆமே மேல் #636 சேருறு காலம் திசை நின்ற தேவர்கள் ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள கார் உரு கண்டனை மெய் கண்டவாறே மேல் #637 நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும் சொல் வழியாளர் சுருங்கா பெரும் கொடை இல்வழியாளர் இமையவர் எண் திசை பல்வழி எய்தினும் பார் வழி ஆகுமே மேல் #638 தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும் தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே மேல் #639 காரியம் ஆன உபாதியை தான் கடந்து ஆரிய காரணம் ஏழும் தன்-பால் உற ஆரிய காரணம் ஆய தவத்து இடை தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே மேல் #640 பணிந்து எண் திசையும் பரமனை நாடி துணிந்து எண் திசையும் தொழுது எம் பிரானை அணிந்து எண் திசையினும் அட்டமாசித்தி தணிந்து எண் திசை சென்று தாபித்தவாறே மேல் #641 பரிசு அறி வானவர் பண்பன் அடி என துரிசு அற நாடியே தூவெளி கண்டேன் அரியது எனக்கு இல்லை அட்டமாசித்தி பெரியது அருள்செய்து பிறப்பு அறுத்தானே மேல் #642 குரவன் அருளில் குறிவழி மூலன் பரையின் மணம் மிகு சங்கட்டம் பார்த்து தெரிதரு சாம்பவி கேசரி சேர பெரிய சிவகதி பேர் எட்டாம் சித்தியே மேல் #643 காயாதி பூதம் கலை கால மாயையில் ஆயாது அகல அறிவு ஒன்றன் அனாதியே ஓயா பதி அதன் உண்மையை கூடினால் வீயா பரகாயம் மேவலும் ஆமே மேல் #644 இருபதினாயிரத்து எண்ணூறு பேதம் மருவிய கன்மமாம் அந்த யோகம் தரும் இவை காய உழைப்பு ஆகும் தானே அருமிகு நான்காய் அடங்குமா சித்திக்கே மேல் #645 மதி-தனில் ஈராறாய் மன்னும் கலையின் உதயம் அது நால் ஒழிய ஓர் எட்டு பதியும் ஈராறு ஆண்டு பற்று அற பார்க்கில் திதமான ஈராறு சித்திகள் ஆமே மேல் #646 நாடும் பிணி ஆகும் நஞ்சனம் சூழ்ந்த-கால் நீடும் கலை கல்வி நீள் மேதை கூர் ஞானம் பீடு ஒன்றினால் வாயா சித்தி பேதத்தின் நீடும் துரம் கேட்டல் நீள் முடி ஈராறே மேல் #647 ஏழானதில் சண்ட வாயுவின் வேகி ஆம் தாழா நடை பல யோசனை சார்ந்திடும் சூழான ஓர் எட்டில் தோன்றா நரைதிரை தாழான ஒன்பதிற்றான் பர காயமே மேல் #648 ஈரைந்தில் பூரித்து தியான உருத்திரன் ஏர் ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண் சித்தி சீர் ஒன்று மேல் ஏழ் கீழ் ஏழ் புவி சென்று ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே மேல் #649 தானே அணுவும் சகத்து தன் நொய்ம்மையும் மானா கனமும் பரகாயத்தேகமும் தான் ஆவதும் பரகாயம் சேர் தன்மையும் ஆனாத உண்மையும் வியாபியும் ஆம் எட்டே மேல் #650 தாங்கிய தன்மையும் தான் அணு பல் உயிர் வாங்கிய காலத்து மற்று ஓர் குறை இல்லை ஆங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்து மிக்கு ஓங்கி வர முத்தி முந்தியவாறே மேல் #651 முந்திய முந்நூற்றறுபது காலமும் வந்தது நாழிகை வான் முதலாய் இட சிந்தைசெயச்செய மண் முதல் தேர்ந்து அறிந்து உந்தியுள் நின்று உதித்து எழும் ஆறே மேல் #652 சித்தம் திரிந்து சிவமயம் ஆகிய முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர் சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கு அற்றோர் சித்தம் பரத்தில் திரு நடத்தோரே மேல் #653 ஒத்த இ ஒன்பது வாயுவும் ஒத்தன ஒத்த இ ஒன்பதின் மிக்க தனஞ்செயன் ஒத்த இ ஒன்பதில் ஒக்க இருந்திட ஒத்த உடலும் உயிரும் இருந்ததே மேல் #654 இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில் இருக்கும் இருநூற்றிருபத்துமூன்றாய் இருக்கும் உடலில் இருந்திலவாகில் இருக்கும் உடல் அது வீங்கி வெடித்ததே மேல் #655 வீங்கும் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பல அதாய் வீங்கிய வாதமும் கூனும் முடம் அதாய் வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே மேல் #656 கண்ணில் வியாதி உரோகம் தனஞ்செயன் கண்ணில் இ ஆணிகள் காசம் அவன் அல்லன் கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே மேல் #657 நாடியின் ஓசை நயனம் இருதயம் தூடி அளவும் சுடர் விடு சோதியை தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்று அங்கு உணர்ந்து இருந்தாரே மேல் #658 ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் ஒன்பது நாடி உடையது ஓர் இடம் ஒன்பது நாடி ஒடுங்க வல்லார்கட்கு ஒன்பது காட்சி இலை பல ஆமே மேல் #659 ஓங்கிய அங்கி கீழ் ஒண் சுழுமுனை செல்ல வாங்கி இரவி மதி வழி ஓடிட தாங்கி உலகங்கள் ஏழும் தரித்திட ஆங்கு அது சொன்னோம் அருவழியோர்க்கே மேல் #660 தலைப்பட்டவாறு அண்ணல் தையலை நாடி வலைப்பட்ட பாசத்து வன் பிணை மான் போல் துலைப்பட்ட நாடியை தூவழி செய்தால் விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்து அது ஆமே மேல் #661 ஓடிச்சென்று அங்கே ஒரு பொருள் கண்டவர் நாடியின் உள் ஆக நாதம் எழுப்புவர் தேடிச்சென்று அங்கே தேனை முகந்து உண்டு பாடியுள் நின்ற பகைவரை கட்டுமே மேல் #662 கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர் கட்டிட்டு நின்று களம் கனி ஊடுபோய் பொட்டிட்டு நின்று பூரணம் ஆனதே மேல் #663 பூரண சத்தி எழுமூன்று அறை ஆக ஏர் அணி கன்னியர் எழுநூற்றைந்து ஆக்கினார் நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும் காரணம் ஆகி கலந்து விரிந்ததே மேல் #664 விரிந்து குவிந்து விளைந்த இ மங்கை கரந்து உள் எழுந்து கரந்து அங்கு இருக்கில் பரந்து குவிந்தது பார் முதல் பூதம் இரைந்து எழு வாயு இடத்தினில் ஒடுங்கே மேல் #665 இடையொடு பிங்கலை என்னும் இரண்டு மடை படு வாயுவும் மாறியே நிற்கும் தடை அவை ஆறேழும் தண் சுடர் உள்ளே மிடை வளர் மின் கொடி தன்னில் ஒடுங்கே மேல் #666 ஒடுங்கி ஒருங்கி உணர்ந்து அங்கு இருக்கில் மடங்கி அடங்கிடும் வாயு அதனுள் மடங்கி மடங்கிடும் மன் உயிர் உள்ளே நடம் கொண்ட கூத்தனும் நாடுகின்றானே மேல் #667 நாடியின் உள்ளே நாத தொனியுடன் தேடி உடன் சென்று அ திருவினை கைக்கொண்டு பாடி உள் நின்ற பகைவரை கட்டிட்டு மாடி ஒரு கை மணி விளக்கு ஆனதே மேல் #668 அணு ஆதி சித்திகள் ஆனவை கூறில் அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை இணுகாத வேகார் பாகாயம் ஏவல் அணு அத்தனை எங்கும் தான் ஆதல் என்று எட்டே மேல் #669 எட்டு ஆகிய சித்தி ஓர் எட்டி யோகத்தால் கிட்டா பிராணனே செய்தால் கிடைத்திடும் ஒட்டா நடு நாடி மூலத்து அனல் பானு விட்டான் மதி உண்ணவும் வரும் மேல் அதே மேல் #670 சித்திகள் எட்டு அன்றி சேர் எட்டியோகத்தால் புத்திகள் ஆனவை எல்லாம் புலப்படும் சித்திகள் எண் சித்தி தான் ஆம் திரிபுரை சத்தி அருள் தர தான் உள ஆகுமே மேல் #671 எட்டு இவை தன்னோடு எழில் பரம் கைகூட பட்டவர் சித்தர் பரலோகம் சேர்தலால் இட்டம் அது உள்ளே இறுக்கல் பரகாட்சி எட்டும் வரப்பு இடம் தான் நின்று எட்டுமே மேல் #672 மந்தரம் ஏறு மதி பானுவை மாற்றி கந்தாய் குழியில் கசடு அற வல்லார்க்கு தந்து இன்றி நல் காயம் இயலோகம் சார்வாகும் அந்த உலகம் அணிமாதி ஆமே மேல் #673 முடிந்திட்டு வைத்து முயங்கி ஓர் ஆண்டில் அணிந்த அணிமா கைதான் ஆம் இவனும் தணிந்த அ பஞ்சினும் தான் நொய்யது ஆகி மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே மேல் #674 ஆகின்ற அ தனிநாயகி தன்னுடன் போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய் சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின் மாய்கின்றது ஐ ஆண்டின் மாலகு ஆகுமே மேல் #675 மாலகு ஆகிய மாயனை கண்ட பின் தான் ஒளி ஆகி தழைத்து அங்கு இருந்திடும் பால் ஒளி ஆகி பரந்து எங்கும் நின்றது மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே மேல் #676 மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன் தன் பொருள் ஆகிய தத்துவம் கூடிட கைப்பொருள் ஆக கலந்திடும் ஓர் ஆண்டின் மை பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே மேல் #677 ஆகின்ற கால் ஒளி ஆவது கண்ட பின் போகின்ற காலங்கள் போவது இல்லை ஆம் மேல் நின்ற காலம் வெளியுற நின்றன தான் நின்ற காலங்கள் தன்வழி ஆகுமே மேல் #678 தன்வழி ஆக தழைத்திடும் ஞானமும் தன் வழி ஆக தழைத்திடும் வையகம் தன் வழி ஆக தழைத்த பொருள் எல்லாம் தன் வழி தன் அருள் ஆகி நின்றானே மேல் #679 நின்றன தத்துவநாயகி தன்னுடன் கண்டன பூத படை அவை எல்லாம் கொண்டவை ஓர் ஆண்டு கூட இருந்திடில் விண்டதுவே நல்ல பிராத்தி அது ஆகுமே மேல் #680 ஆகின்ற மின் ஒளி ஆவது கண்ட பின் பாகின்ற பூவில் பரப்பவை காணலாம் ஏகின்ற காலம் வெளியுற நின்றது போகின்ற காலங்கள் போவதும் இல்லையே மேல் #681 போவது ஒன்று இல்லை வருவது தான் இல்லை சாவது ஒன்று இல்லை தழைப்பது தான் இல்லை தாமதம் இல்லை தமர் அகத்து இன் ஒளி யாவதும் இல்லை அறிந்துகொள்வார்க்கே மேல் #682 அறிந்த பராசத்தி உள்ளே அமரில் பறிந்தது பூத படை அவை எல்லாம் குவிந்து அவை ஓர் ஆண்டு கூட இருக்கில் விரிந்தது பரகாயம் மேவலும் ஆமே மேல் #683 ஆன விளக்கு ஒளி ஆவது அறிகிலர் மூல விளக்கு ஒளி முன்னே உடையவர் கான விளக்கு ஒளி கண்டு கொள்வார்கட்கு மேலை விளக்கு ஒளி வீடு எளிதா நின்றே மேல் #684 நின்ற சதாசிவ நாயகி தன்னுடன் கண்டன பூத படை அவை எல்லாம் கொண்டவை ஓர் ஆண்டு கூடி இருந்திடில் பண்டை அ ஈசன் தத்துவம் ஆகுமே மேல் #685 ஆகின்ற சந்திரன் தன் ஒளியாய் அவன் ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும் ஆகின்ற சந்திரன் தன் கலை கூடிடில் ஆகின்ற சந்திரன் தான் அவன் ஆமே மேல் #686 தானே படைத்திட வல்லவன் ஆயிடும் தானே அளித்திட வல்லவன் ஆயிடும் தானே சங்கார தலைவனும் ஆயிடும் தானே இவன் எனும் தன்மையன் ஆமே மேல் #687 தன்மை அது ஆக தழைத்த கலையின் உள் பன்மை அது ஆக பரந்த ஐம்பூதத்தை வன்மை அது ஆக மறித்திடில் ஓர் ஆண்டின் மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே மேல் #688 மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின் நல் பொருள் ஆகிய நல்ல வசித்துவம் கைப்பொருள் ஆக கலந்த உயிர்க்கு எல்லாம் தன் பொருள் ஆகிய தன்மையன் ஆகுமே மேல் #689 தன்மை அது ஆக தழைத்த பகலவன் மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின் பொன்மை அது ஆக புலன்களும் போயிட நன்மை அது ஆகிய நல்_கொடி காணுமே மேல் #690 நல் கொடி ஆகிய நாயகி தன்னுடன் அ கொடி ஆகம் அறிந்திடில் ஓர் ஆண்டு பொன் கொடி ஆகிய புவனங்கள் போய்வரும் கல் கொடி ஆகிய காமுகன் ஆமே மேல் #691 காமரு தத்துவம் ஆனது வந்த பின் பூமரு கந்தம் புவனம் அது ஆயிடும் மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் நாம் மருவும் ஒளி நாயகம் ஆனதே மேல் #692 நாயகம் ஆகிய நல் ஒளி கண்ட பின் தாயகம் ஆக தழைத்து அங்கு இருந்திடும் போய் அகம் ஆன புவனங்கள் கண்ட பின் பேய் அகம் ஆகிய பேரொளி காணுமே மேல் #693 பேரொளி ஆகிய பெரிய அ வேட்டையும் பார் ஒளி ஆக பதைப்பு அற கண்டவன் தார் ஒளி ஆக தரணி முழுதும் ஆம் ஓர் ஒளி ஆகிய கால் ஒளி காணுமே மேல் #694 காலோடு உயிரும் கலக்கும் வகை சொல்லில் கால் அது அ கொடி நாயகி தன்னுடன் கால் அது ஐஞ்ஞூற்று ஒரு பத்து மூன்றையும் கால் அது வேண்டி கொண்ட இ ஆறே மேல் #695 ஆறது ஆகும் அமிர்த தலையினுள் ஆறது ஆயிரம் முந்நூற்றொடு ஐஞ்சு உள ஆறது ஆயிரம் ஆகும் அருவழி ஆறது ஆக வளர்ப்பது இரண்டே மேல் #696 இரண்டின் மேலே சதாசிவ நாயகி இரண்டது கால் கொண்டு எழு வகை சொல்லில் இரண்டது ஆயிரம் ஐம்பதோடு ஒன்றாய் திரண்டது காலம் எடுத்ததும் அஞ்சே மேல் #697 அஞ்சுடன் அஞ்சு முகம் உள நாயகி அஞ்சுடன் அஞ்சு அது ஆயுதம் ஆவது அஞ்சு அது அன்றி இரண்டு அது ஆயிரம் அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே மேல் #698 ஒன்று அது ஆகிய தத்துவ நாயகி ஒன்று அது கால் கொண்டு ஊர் வகை சொல்லிடில் ஒன்று அது வென்றி கொள் ஆயிரமாயிரம் ஒன்று அது காலம் எடுத்துளும் முன்னே மேல் #699 முன் எழும் அ கலைநாயகி-தன்னுடன் முன்னுறு வாயு முடி வகை சொல்லிடின் முன்னுறும் ஐம்பத்து ஒன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடி வகை ஆமே மேல் #700 ஆய் வரும் அ தனிநாயகி-தன்னுடன் ஆய் வரும் வாயு அளப்பது சொல்லிடில் ஆய் வரும் ஐஞ்ஞூற்றுமுப்பதோடு ஒன்பது மாய் வரு வாயு வளப்புள் இருந்தே மேல் #701 இருநிதி ஆகிய எந்தை இடத்து இருநிதி வாயு இயங்கு நெறியில் இருநூற்றுமுப்பத்துமூன்றுடன் அஞ்சாய் இருநிதி வாயு இயங்கும் எழுத்தே மேல் #702 எழுகின்ற சோதியுள் நாயகி-தன்-பால் எழுகின்ற வாயு இடம் அது சொல்லில் எழுநூற்றிருபத்தொன்பான் அது நாலாய் எழுந்து உடன் அங்கி இருந்தது இவ்வாறே மேல் #703 ஆறு அது கால் கொண்டு இரதம் விளைத்திடும் ஏழ் அது கால் கொண்டு இரட்டி இறக்கிட எட்டு அது கால் கொண்டிட வகை ஒத்த பின் ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே மேல் #704 சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவில் சந்திரன் தானும் தலைப்படும் தன்மையை சந்தியிலே கண்டு தான் ஆம் சக முகத்து உந்தி சமாதி உடை ஒளியோகியே மேல் #705 அணங்கு அற்றம் ஆதல் அருஞ்சன நீவல் வணங்குற்ற கல்வி மா ஞானம் மிகுத்தல் சுணங்குற்ற வாயர் சித்தி தூரம் கேட்டல் நுணங்கு அற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே மேல் #706 மரணம் சரை விடல் வண் பர காயம் இரணம் சேர் பூமி இறந்தோர்க்கு அளித்தல் அரணன் திருவுறவு ஆதல் மூவேழாம் கரனுறு கேள்வி கணக்கு அறிந்தேனே மேல் #707 ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயன் இல்லை காதலில் அண்ணலை காண இனியவர் நாதன் இருந்த நகர் அறிவாரே மேல் #708 மூல முதல் வேதா மால் அரன் முன் நிற்க கோலிய ஐம்முகன் கூற பரவிந்து சால பரநாதம் விந்து தனிநாதம் பாலித்த சத்தி பரைபரன் பாதமே மேல் #709 ஆதார யோகத்து அதிதேவொடும் சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி ஈரெண் கலை செல்லம் மீது ஒளி ஓதா அசிந்த மீது ஆனந்த யோகமே மேல் #710 மதியமும் ஞாயிறும் வந்து உடன் கூடி துதி செய்பவர் அவர் தொல் வானவர்கள் விதி அது செய்கின்ற மெய்யடியார்க்கு பதி அது காட்டும் பரமன் நின்றானே மேல் #711 கட்ட வல்லார்கள் கரந்து எங்கும் தான் ஆவர் மட்டு அவிழ் தாமரை உள்ளே மணம் செய்து பொட்டு எழ குத்தி பொறி எழ தண்டு இட்டு நட்டு அறிவார்க்கு நமன் இல்லை தானே மேல் #712 காதல் வழிசெய்த கண் நுதல் அண்ணலை காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடில் காதல் வழிசெய்து கங்கை வழிதரும் காதல் வழிசெய்து காக்கலும் ஆமே மேல் #713 காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும் காக்கலும் ஆகும் கலை பதினாறையும் காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும் காக்கலும் ஆகும் கருத்துற நில்லே மேல் #714 நிலைபெற நின்றது நேர்தரு வாயு சிலைபெற நின்றது தீபமும் ஒத்து கலை வழி நின்ற கலப்பை அறியில் அலைவு அற ஆகும் வழி இது ஆமே மேல் #715 புடை ஒன்றி நின்றிடும் பூத பிரானை மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும் சடை ஒன்றி நின்ற அ சங்கரநாதன் விடை ஒன்றில் ஏறியே வீற்றிருந்தானே மேல் #716 இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார் பெருக்கின்ற கால பெருமையை நோக்கி ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்க தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே மேல் #717 சாதகமான அ தன்மையை நோக்கியே மாதவம் ஆன வழிபாடு செய்திடும் போதகம் ஆக புகலுற பாய்ச்சினால் வேதகம் ஆக விளைந்து கிடக்குமே மேல் #718 கிடந்தது தானே கிளர் பயன் மூன்று நடந்தது தானே உள் நாடியுள் நோக்கி படர்ந்தது தானே பங்கயம் ஆக தொடர்ந்தது தானே அ சேதியுள் நின்றே மேல் #719 தானே எழுந்த அ தத்துவநாயகி ஊனே வழிசெய்து எம் உள்ளே இருந்திடும் வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திட தேனே பருகி சிவாலயம் ஆகுமே மேல் #720 திகழும் படியே செறிதரு வாயு அழியும் படியை அறிகிலர் ஆரும் அழியும் படியை அறிந்த பின் நந்தி திகழ்கின்ற வாயுவை சேர்தலும் ஆமே மேல் #721 சோதனை-தன்னில் துரிசு அற காணலாம் நாதனும் நாயகி-தன்னில் பிரியும் நாள் சாதனம் ஆகும் குருவை வழிபட்டு மாதனம் ஆக மதித்து கொள்ளீரே மேல் #722 ஈராறு கால் கொண்டு எழுந்த புரவியை பேராமல் கட்டி பெரிது உண்ண வல்லீரேல் நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும் பேராது காயம் பிரான் நந்தி ஆணையே மேல் #723 ஓசையில் ஏழும் ஒளியின்-கண் ஐந்தும் நாசியின் மூன்றும் நாவில் இரண்டும் தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள் மாசு அறு சோதி வகுத்து வைத்தானே மேல் #724 உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே மேல் #725 உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே மேல் #726 சுழற்றி கொடுக்கவே சுத்தி கழியும் கழற்றி மலத்தை கமலத்தை பூரித்து உழற்றி கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு அழற்றி தவிர்ந்து உடல் அஞ்சனம் ஆமே மேல் #727 அஞ்சனம் போன்று உடல் ஐ அறும் அந்தியில் வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில் செம் சிறு காலையில் செய்திடில் பித்து அறும் நஞ்சு அற சொன்னோம் நரைதிரை நாசமே மேல் #728 மூன்று மடக்கு உடை பாம்பு இரண்டு எட்டு உள ஏன்ற இயந்திரம் பன்னிரண்டு அங்குலம் நான்ற இ முட்டை இரண்டையும் கட்டி இட்டு ஊன்றி இருக்க உடம்பு அழியாதே மேல் #729 நூறும் அறுபதும் ஆறும் வலம் வர நூறும் அறுபதும் ஆறும் இடம் வர நூறும் அறுபதும் ஆறும் எதிர் இட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே மேல் #730 சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தான் மத்தியானத்திலே வாத்தியம் கேட்கலாம் தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும் சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே மேல் #731 திறத்திறம் விந்து திகழும் அகாரம் உற பெறவே நினைந்து ஓதும் சகாரம் மறிப்பது மந்திரம் மன்னிய நாதம் அறப்பெற யோகிக்கு அறநெறி ஆமே மேல் #732 உந்தி சுழியின் உடன் நேர் பிராணனை சிந்தித்து எழுப்பி சிவமந்திரத்தினால் முந்தி முகட்டின் நிறுத்தி அபானனை சிந்தித்து எழுப்ப சிவன் அவன் ஆமே மேல் #733 மாறா மலக்குதம்-தன் மேல் இரு விரல் கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்-மின் ஆறா உடம்பு இடை அண்ணலும் அங்கு உளன் கூறா உபதேசம் கொண்டது காணுமே மேல் #734 நீல நிறன் உடை நேரிழையாளொடும் சாலவும் புல்லி சதம் என்று இருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனும் ஆவர் பராநந்தி ஆணையே மேல் #735 அண்டம் சுருங்கில் அதற்கு ஓர் அழிவு இல்லை பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் உண்டி சுருங்கில் உபாயம் பல உள கண்டம் கறுத்த கபாலியும் ஆமே மேல் #736 பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத்து ஏகிடில் வண்டி இச்சிக்கும் மலர் குழல் மாதரார் கண்டு இச்சிக்கும் நல் காயமும் ஆமே மேல் #737 சுழலும் பெருங்கூற்று தொல்லை முன் சீறி சுழலும் இரத்தத்துள் அங்கியுள் ஈசன் கழல் கொள் திருவடி காண்குறில் ஆங்கே நிழலுளும் தெற்றுளும் நிற்றலும் ஆமே மேல் #738 நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் தான் கண்ட வாயு சரீரம் முழுதொடும் ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக மான் கன்று நின்று வளர்கின்றவாறே மேல் #739 ஆகும் சன வேத சத்தியை அன்புற நீ கொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையை பாகுபடுத்தி பல் கோடி களத்தினால் ஊழ் கொண்ட மந்திரம் தன்னால் ஒடுங்கே மேல் #740 மதிவட்டம் ஆக வரை ஐந்து நாடி இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால் பதிவட்டத்து உள் நின்று பாலிக்குமாறு மது விட்டு போமாறு மாயல் உற்றேனே மேல் #741 உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும் கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும் பற்றிய பத்தும் பலவகை நாழிகை அற்றது அறியாது அழிகின்றவாறே மேல் #742 அழிகின்ற ஆண்டு அவை ஐயைஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்துமூன்று என்பது ஆகும் கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப எழுகின்ற ஈரைம்பத்தெண் அற்று இருந்ததே மேல் #743 திருந்து தினம் அ தினத்தினொடு நின்று இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே மேல் #744 மனை புகுவீரும் மகத்து இடை நாடி என இருபத்தஞ்சும் ஈராறு அதனால் தனை அறிந்து ஏறட்டு தற்குறி ஆறு வினை அறி ஆறு விளங்கிய நாலே மேல் #745 நாலும் கடந்தது நால்வரும் நாலைந்து பாலம் கடந்தது பத்து பதினைந்து கோலம் கடந்த குணத்து ஆண்டு மூவிரண்டு ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே மேல் #746 ஆறும் இருபதுக்கு ஐயைஞ்சு மூன்றுக்கும் தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை கூறு மதி ஒன்றினுக்கு இருபத்தேழு வேறு பதியங்கள் நாள் விதித்தானே மேல் #747 விதித்த இருபத்தெட்டொடு மூன்று அறையாக தொகுத்து அறி முப்பத்துமூன்று தொகு-மின் பகுத்து அறி பத்து எட்டும் பாராதிகள் நால் உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே மேல் #748 முறைமுறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில் இறைஇறை யார்க்கும் இருக்க அரிது மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை பறை அறையாது பணிந்து முடியே மேல் #749 முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு கடிந்தனன் மூள கதுவ வல்லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே மேல் #750 நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும் பின்னிய மார்பு இடை பேராமல் ஒத்திடும் சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும் உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே மேல் #751 ஓவியம் ஆன உணர்வை அறி-மின்கள் பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும் பூவில் இருந்திடும் புண்ணிய தண்டே மேல் #752 தண்டுடன் ஓடி தலைப்பெய்த யோகிக்கு மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும் கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன் பிண்டம் பிரிய பிணங்குகின்றாரே மேல் #753 பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின் வணங்குடனே வந்த வாழ்வு குலைந்து சுணங்கனுக்காக சுழல்கின்றவாறே மேல் #754 சுழல்கின்றவாறு இன் துணை மலர் காணான் தழலிடை புக்கிடும் தன்னுள் இலாமல் கழல் கண்டு போம்வழி காண வல்லார்க்கு குழல்வழி நின்றிடும் கூத்தனும் ஆமே மேல் #755 கூத்தன் குறியில் குணம் பல கண்டவர் சாத்திரம்-தன்னை தலைப்பெய்து நிற்பர்கள் பார்த்திருந்து உள்ளே அனுபோகம் நோக்கிடில் ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே மேல் #756 ஒன்றில் வளர்ச்சி உலப்பு_இலி கேள் இனி நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும் சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில் குன்றிடை பொன் திகழ் கூத்தனும் ஆமே மேல் #757 கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே ஏத்துவர் பத்தினில் எண் திசை தோன்றிட பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில் சாத்திடு நூறு தலைப்பெய்யலாமே மேல் #758 சாத்திடும் நூறு தலைப்பெய்து நின்றவர் காத்து உடல் ஆயிரம் கட்டுற காண்பர்கள் சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர் மூத்துடன் கோடி உகம் அது ஆமே மேல் #759 உகம் கோடி கண்டும் ஒசிவு அற நின்று அகம் கோடி கண்டு உள் அலற காண்பர்கள் சிவம் கோடி விட்டு செறிய இருந்து அங்கு உகம் கோடி கண்டு அங்கு உயருறுவாரே மேல் #760 உயருறுவார் உலகத்தொடும் கூடி பயனுறுவார் பலர் தாம் அறியாமல் செயலுறுவார் சிலர் சிந்தை இலாமல் கயலுறு கண்ணியை காணகிலாரே மேல் #761 காணகிலாதார் கழிந்து ஓடிப்போவர்கள் காணகிலாதார் நயம் பேசிவிடுவார்கள் காணகிலாதார் கழிந்த பொருள் எலாம் காணகிலாமல் கழிகின்றவாறே மேல் #762 கழிகின்ற அ பொருள் காணகிலாதார் கழிகின்ற அ பொருள் காணலும் ஆகும் கழிகின்ற உள்ளே கருத்துற நோக்கில் கழியாத அ பொருள் காணலும் ஆமே மேல் #763 கண்ணன் பிறப்பு_இலி காண் நந்தியாய் உள்ளே எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும் திண்ணென்று இருக்கும் சிவகதியாய் நிற்கும் நண்ணும் பதம் இது நாட வல்லார்கட்கே மேல் #764 நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர் தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது கூட வல்லார்கட்கு கூறலும் ஆமே மேல் #765 கூறும் பொருளில் தகார உகாரங்கள் தேறும் பொருள் இது சிந்தையுள் நின்றிட கூறும் மகாரம் குழல் வழி ஓடிட ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே மேல் #766 அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே மேல் #767 அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும் அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே மேல் #768 வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர் ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திட கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே மேல் #769 காணலும் ஆகும் பிரமன் அரி என்று காணலும் ஆகும் கறைக்கண்டன் ஈசனை காணலும் ஆகும் சதாசிவ சத்தியும் காணலும் ஆகும் கலந்துடன் வைத்ததே மேல் #770 வைத்த கை சென்னியில் நேரிதாய் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே மேல் #771 ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்-கண் ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்வு இது ஆமே மேல் #772 ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில் நாமே உறைகின்ற நன்மை அளித்திடும் பூ மேல் உறைகின்ற போதகம் வந்திடும் தாமே உலகில் தலைவனும் ஆமே மேல் #773 தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல் தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில் தலைவன் இடம்வலம் தன்வழி நூறே மேல் #774 ஏறிய வானில் எண்பது சென்றிடும் தேறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில் ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும் தேறியே நின்று தெளி இ வகையே மேல் #775 இ வகை எட்டும் இடம்பெற ஓடிடில் அ வகை ஐம்பதே என்ன அறியலாம் செ வகை ஒன்பதும் சேரவே நின்றிடின் முவ்வகை ஆம் அது முப்பத்துமூன்றே மேல் #776 மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில் எண் மூன்றும் நாலும் இடவகையாய் நிற்கும் ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடில் பன்மூன்றொடு ஈராறு பார்க்கலும் ஆமே மேல் #777 பார்க்கலும் ஆகும் பகல் முப்பதும் ஆகில் ஆக்கலும் ஆகும் அவ்வாறு இரண்டு உள் இட்டு போக்கலும் ஆகும் புகல் அற ஒன்று எனில் தேக்கலும் ஆகும் திருந்திய பத்தே மேல் #778 ஏ இரு நாளும் இயல்புற ஓடிடில் பாய் இரு நாளும் பகை அற நின்றிடும் தேய்வுற மூன்றும் திகழவே நின்றிடில் ஆய் உரு ஆறு என்று அளக்கலும் ஆமே மேல் #779 அளக்கும் வகை நாலும் அ வழியே ஓடில் விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும் துளக்கும் வகை ஐந்தும் தூய் நெறி ஓடில் களக்கம் அற மூன்றில் காணலும் ஆமே மேல் #780 காணலும் ஆகும் கருதிய பத்து ஓடில் காணலும் ஆகும் கலந்த இரண்டையும் காணலும் ஆகும் கலப்பு அற மூவைந்தேல் காணலும் ஆகும் கருத்துற ஒன்றே மேல் #781 கருதும் இருபதில் காண ஆறு ஆகும் கருதும் ஐயைந்தில் காண்பது மூன்று ஆம் கருதும் இருபதுடன் ஆறு காணில் கருதும் இரண்டு என காட்டலும் ஆமே மேல் #782 காட்டலும் ஆகும் கலந்து இருபத்தேழில் காட்டலும் ஆகும் கலந்து எழும் ஒன்று என காட்டலும் ஆகும் கலந்து இருபத்தெட்டில் காட்டலும் ஆகும் கலந்த ஈரைந்தே மேல் #783 ஈரைந்தும் ஐந்தும் இருமூன்று எட்டுக்கும் பார் அஞ்சி நின்ற பகை பத்து நாளாகும் வாரம் செய்கின்ற வகை ஆறு அஞ்சாம் ஆகில் ஓர் அஞ்சொடு ஒன்று என ஒன்று நாளே மேல் #784 ஒன்றிய நாள்கள் ஒரு முப்பத்தொன்று ஆகில் கன்றிய நாளும் கருத்துற மூன்று ஆகும் சென்று உயிர் நாலெட்டும் சேரவே நின்றிடின் மன்று இயல்பாகும் மனையில் இரண்டே மேல் #785 மனையில் ஒன்று ஆகும் மாதமும் மூன்றும் சுனையில் ஒன்று ஆக தொனித்தனன் நந்தி வினை அற ஓங்கி வெளிசெய்து நின்றால் தனையுற நின்ற தலைவனும் ஆமே மேல் #786 ஆரும் அறியார் அளக்கின்ற வன்னியை ஆரும் அறியார் அளக்கின்ற வாயுவை ஆரும் அறியார் அழிகின்ற அ பொருள் ஆரும் அறியார் அறிவு அறிந்தேனே மேல் #787 அறிவது வாயுவொடு அடைந்து அறிவு ஆய அறிவாவது தான் உலகு உயிர் அத்தின் பிறிவு செய்யா வகை பேணி உள் நாடில் செறிவது நின்று திகழும் அதுவே மேல் #788 அது அருளும் மருள் ஆன உலகம் பொது அருளும் புகழாளர்க்கு நாளும் மது அருளும் மலர் மங்கையர் செல்வி இது அருள்செய்யும் இறையவன் ஆமே மேல் #789 பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி குறிப்பது கூடிய கோல குரம்பை பழப்பதி ஆவது பற்று அறும் பாசம் அழப்படி செய்வார்க்கு அகலும் மதியே மேல் #790 வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதனிடம் ஒள்ளிய மந்தன் இரவி செவ்வாய் வலம் வள்ளிய பொன்னே வளரும் பிறை இடம் தெள்ளிய தேய்பிறை தான் வலம் ஆமே மேல் #791 வெள்ளி வெண் திங்கள் விளங்கும் புதன் மூன்றும் தள்ளி இடத்தே தயங்குமே யாம் ஆகில் ஒள்ளிய காயத்துக்கு ஊனம் இலை என்று வள்ளல் நமக்கு மகிழ்ந்து உரைத்தானே மேல் #792 செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு என்னும் இவ்வாறு அறிகின்ற யோகி இறைவனே ஒவ்வாத வாயு வலத்து புரியவிட்டு அவ்வாறு அறிவார்க்கு அ ஆனந்தம் ஆமே மேல் #793 மாறி வரும் இருபான் மதி வெய்யவன் ஏறி இழியும் இடைபிங்கலை இடை ஊறும் உயிர் நடுவே உயிர் உக்கிரம் தேறி அறி-மின் தெரிந்து தெளிந்தே மேல் #794 உதித்து வலத்து இடம் போகின்ற-போது அதிர்த்து அஞ்சி ஓடுதல் ஆம் அகன்றாரும் உதித்தது வே மிக ஓடிடுமாகில் உதித்த இராசி உணர்ந்து கொள் உற்றே மேல் #795 நடுவு நில்லாமல் இடம்வலம் ஓடி அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி இடுகின்றவாறு சென்றின் பணி சேர முடிகின்ற தீபத்தின் முன் உண்டு என்றானே மேல் #796 ஆயும் பொருளும் அணி மலர் மேல் அது வாயு விதமும் பதினாறு உள வலி போய மனத்தை பொருகின்ற ஆதாரம் ஆயுவும் நாளும் முகூர்த்தமும் ஆமே மேல் #797 வாரத்தில் சூலம் வரும் வழி கூறும்-கால் நேர் ஒத்த திங்கள் சனி கிழக்கே ஆகும் பார் ஒத்த சேய் புதன் உத்தரம் பானு நாள் நேர் ஒத்த வெள்ளி குடக்கு ஆக நிற்குமே மேல் #798 தெக்கணம் ஆகும் வியாழத்து சேர் திசை அக்கணி சூலமும் ஆம் இடம் பின் ஆகில் துக்கமும் இல்லை வலம் முன்னே தோன்றிடின் மிக்கது மேல் வினை மேன்மேல் விளையுமே மேல் #799 கட்ட கழன்று கீழ் நான்று வீழாமல் அட்டத்தை கட்டி அடுப்பை அணைகோலி விட்டத்தை பூட்டி மேல் பையை தாள் கோத்து நட்டம் இருக்க நரன் இல்லை தானே மேல் #800 வண்ணான் ஒலிக்கும் சதுர பலகை மேல் கண்ணாறு மோழை படாமல் கரை கட்டி விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்றவாறே மேல் #801 இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றி துதிக்கையால் உண்பார்க்கு சேரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு இறக்கம் வேண்டாம் இருக்கலும் ஆமே மேல் #802 ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்று ஊறிடும் வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து நீந்து உரைசெய்யில் நிலா மண்டலம் அதாய் பாய்ந்து உரைசெய்தது பாலிக்குமாறே மேல் #803 நாவின் நுனியை நடுவே சிவிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சத கோடி ஊனே மேல் #804 ஊன் ஊறல் பாயும் உயர் வரை உச்சி மேல் வான் ஊறல் பாயும் வகை அறிவார் இல்லை வான் ஊறல் வகை அறிவாளர்க்கு தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே மேல் #805 மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடில் காலனும் இல்லை கதவும் திறந்திடும் ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே மேல் #806 நந்தி முதல் ஆக நாம் மேலே ஏறிட்டு சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும் பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாக சிந்தித்து இருப்பவர் தீவினையாளரே மேல் #807 தீவினை ஆட திகைத்து அங்கு இருந்தவர் நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை பாவினை நாடி பயன் அற கண்டவர் தேவினை ஆடிய தீம் கரும்பு ஆமே மேல் #808 தீம் கரும்பு ஆகவே செய் தொழில் உள்ளவர் ஆம் கரும்பு ஆக அடைய நாவு ஏறிட்டு கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட ஊன் கரும்பு ஆகியே ஊன் நீர் வருமே மேல் #809 ஊன் நீர் வழியாக உள் நாவை ஏறிட்டு தேன் நீர் பருகி சிவாய நம என்று கான் நீர் வரும் வழி கங்கை தருவிக்கும் வான் நீர் வரும் வழி வாய்ந்து அறிவீரே மேல் #810 வாய்ந்து அறிந்து உள்ளே வழிபாடு செய்தவர் காய்ந்து அறிவு ஆக கருணை பொழிந்திடும் பாய்ந்து அறிந்து உள்ளே படி கதவு ஒன்று இட்டு கூய்ந்து அறிந்து உள் உறை கோயிலும் ஆமே மேல் #811 கோயிலின் உள்ளே குடி செய்து வாழ்பவர் தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும் காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும் தீயினும் தீயர் அ தீவினையாளர்க்கே மேல் #812 தீவினையாளர்-தம் சென்னியில் உள்ளவன் பூவினையாளர்-தம் பொன் பதி ஆனவன் பாவினையாளர்-தம் பாகவத்து உள்ளவன் மாவினையாளர்-தம் மதியில் உள்ளானே மேல் #813 மதியின் எழும் கதிர் போல பதினாறாய் பதிமனை நூறு நூற்றிருபத்துநாலாய் கதி மனை உள்ளே கணைகள் பரப்பி எதிர் மலையாமல் இருந்தனன் தானே மேல் #814 இருந்தனள் சத்தியும் அ கலை சூழ இருந்தனள் கன்னியும் அ நடு ஆக இருந்தனள் மான் நேர் முகம் நிலவு ஆர இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே மேல் #815 பொழிந்த இரு வெள்ளி பொன் மண் அடையில் வழிந்து உள் இருந்தது வான் முதல் அங்கு கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு கொழுந்து அது ஆகும் குணம் அது தானே மேல் #816 குணம் அது ஆகிய கோமளவல்லி மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில் தனம் அது ஆகிய தத்துவ ஞானம் இனம் அது ஆக இருந்தனன் தானே மேல் #817 இருந்த பிராணனும் உள்ளே எழுமாம் பரிந்த இ தண்டுடன் அண்டம் பரிய விரிந்த அ பூவுடன் மேல் எழ வைக்கின் மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே மேல் #818 மண்டலத்து உள்ளே மன ஒட்டியாணத்தை கண்டகத்து அங்கே கருதியே கீழ் கட்டி பண்டகத்து உள்ளே பகலே ஒளி ஆக குண்டலகாதனும் கூத்து ஒழிந்தானே மேல் #819 ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும் கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும் வழிகின்ற காலத்து வட்ட கழலை பழிகின்ற காலத்து பை அகற்றீரே மேல் #820 பையினின் உள்ளே படி கதவு ஒன்று இடின் மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் கையின் உள் வாயு கதித்து அங்கு எழுந்திடின் மை அணி கோயில் மணி விளக்கு ஆமே மேல் #821 விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி நலங்கிடும் கண்டத்து நாபியின் உள்ளே வணங்கிடும் மண்டலம் வாய்த்திட கும்பி சுணங்கிட நின்றவை சொல்லலும் ஆமே மேல் #822 சொல்லலும் ஆயிடும் ஆகத்து வாயுவும் சொல்லலும் ஆகும் மண் நீர் கடினமும் சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடில் சொல்லலும் ஆம் தூர தரிசனம் தானே மேல் #823 தூர தரிசனம் சொல்லுவான் காணலாம் கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்திட்டு ஏர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடில் பாரார் உலகம் பகல் முன்னது ஆமே மேல் #824 முன் எழு நாபிக்கு முந்நால் விரல் கீழே பன் எழு வேத பகல் ஒளி உண்டு என்னும் நன் எழு நாதத்து நல் தீபம் வைத்திட தன் எழு கோயில் தலைவனும் ஆமே மேல் #825 பூசுவன எல்லாம் பூசி புலர்த்திய வாச நறும் குழல் மாலையும் சாத்தி காய குழலி கலவியொடும் கலந்து ஊசித்துளையுற தூங்காது போகமே மேல் #826 போகத்தை உன்னவே போகாது வாயுவும் மோகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில் சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும் தாதில் குழைந்து தலைகண்டவாறே மேல் #827 கண்டனும் கண்டியும் காதல் செய் யோகத்து மண்டலம் கொண்டு இருபாலும் வெளிநிற்கும் வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிட தண்டு ஒருகாலும் தளராது அங்கமே மேல் #828 அங்க புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம் அங்கத்தில் விந்து வருகின்ற போகத்து பங்க படாமல் பரிகரித்து தம்மை தங்கி கொடுக்க தலைவனும் ஆமே மேல் #829 தலைவனும் ஆயிடும் தன்வழி ஞானம் தலைவனும் ஆயிடும் தன்வழி போகம் தலைவனும் ஆயிடும் தன்வழி உள்ளே தலைவனும் ஆயிடும் தன்வழி அஞ்சே மேல் #830 அஞ்சு கடிகை மேல் ஆறாம் கடிகையில் துஞ்சுவது ஒன்ற துணைவி துணைவன்-பால் நெஞ்சு நிறைந்தது வாய் கொளாது என்றது பஞ்ச கடிகை பரியங்க யோகமே மேல் #831 பரியங்க யோகத்து பஞ்ச கடிகை அரிய இ வியோகம் அடைந்தவர்க்கு அல்லது சரி வளை முன்கைச்சி சந்தன கொங்கை உருவி தழுவ ஒருவற்கு ஒண்ணாதே மேல் #832 ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில் விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன் பண்ணார் அமுதினை பஞ்ச கடிகையில் எண்ணாம் என எண்ணி இருந்தான் இருந்ததே மேல் #833 ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும் வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கும் ஆனந்தம் வாய்ந்த குழலியோடு அடைந்து மலர்ந்திட சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே மேல் #834 வெள்ளி உருகி பொன் வழி ஓடாமே கள்ள தட்டானார் கரி இட்டு மூடினார் கொள்ளி பறிய குழல் வழியே சென்று வள்ளி உள் நாவில் அடக்கி வைத்தாரே மேல் #835 வைத்த இருவரும் தம்மின் மகிழ்ந்து உடன் சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தகனாய் நிற்கும் வெம் கதிரோனே மேல் #836 வெம் கதிருக்கும் சனிக்கும் இடைநின்ற நங்கையை புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம் தங்களில் பொன் இடை வெள்ளி தாழா முனம் திங்களில் செவ்வாய் புதைந்து இருந்தாரே மேல் #837 திருத்தி புதனை திருத்தல் செய்வார்க்கு கருத்து அழகாலே கலந்து அங்கு இருக்கில் வருத்தமும் இல்லை ஆம் மங்கை பங்கற்கும் துருத்தி உள் வெள்ளியும் சோராது எழுமே மேல் #838 எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்று இட்டால் மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின் விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே மேல் #839 வெளியை அறிந்து வெளியின் நடுவே ஒளியை அறியின் உளி முறி ஆமே தெளிவை அறிந்து செழும் நந்தியாலே வெளியை அறிந்தனன் மேல் அறியேனே மேல் #840 மேல் ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர் எனின் மால் ஆம் திசைமுகன் மா நந்தியாய் அவர் நாலா நிலத்தின் நடு ஆன அ பொருள் மேலா உரைத்தனர் மின் இடையாளுக்கே மேல் #841 மின் இடையாளும் மின்னாளனும் கூட்டத்து பொன் இடை வட்டத்தின் உள்ளே புக பெய்து தன்னொடு தன் ஐ தலைப்பெய்ய வல்லாரேன் மண் இடை பல் ஊழி வாழலும் ஆமே மேல் #842 வாங்கல் இறுதலை வாங்கலில் வாங்கிய வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும் ஓங்கிய தன்னை உதம்பண்ணினாரே மேல் #843 உதம் அறிந்து அங்கே ஒரு சுழி பட்டால் கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும் இதம் அறிந்து என்றும் இருப்பாள் ஒருத்தி பதம் அறிந்து உம்முளே பார் கடிந்தாளே மேல் #844 பார் இல்லை நீர் இல்லை பங்கயம் ஒன்று தார் இல்லை வேர் இல்லை தாமரை பூத்தது ஊர் இல்லை காணும் ஒளி அது ஒன்று உண்டு கீழ் இல்லை மேல் இல்லை கேள்வியில் பூவே மேல் #845 உடலில் கிடந்த உறுதி குடிநீர் கடலில் சிறு கிணற்று ஏற்றம் இட்டால் ஒக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில் நடலை படாது உயிர் நாடலும் ஆமே மேல் #846 தெளி தரும் இந்த சிவநீர் பருகில் ஒளி தரும் ஓர் ஆண்டில் ஊனம் ஒன்று இல்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும் களி தரும் காயம் கனகம் அது ஆமே மேல் #847 நூறு மிளகு நுகரும் சிவத்தின் நீர் மாறும் இதற்கு மருந்து இல்லை மாந்தர்கள் தேறில் இதனை தெளி உச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறு மயிர் ஆமே மேல் #848 கரை அருகே நின்ற கானல் உவரி வரைவரை என்பவர் மதி இலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு நரைதிரை மாறும் நமனும் அங்கு இல்லையே மேல் #849 அளக நல் நுதலாய் ஓர் அதிசயம் களவு காயம் கலந்த இ நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பு இடில் இளகும் மேனி இருளும் கபாலமே மேல் #850 வீர மருந்து என்றும் விண்ணோர் மருந்து என்றும் நாரி மருந்து என்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்து என்று அறிவார் அகல் இடம் சோதி மருந்து இது சொல்ல ஒண்ணாதே மேல் #851 எய்து மதி கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகை பக்கத்துள் எய்தும் கலை போல ஏறி இறங்குமாம் துய்யது சூக்கத்து தூலத்த காயமே மேல் #852 ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள் ஆகின்ற ஈரெட்டொடு ஆறிரண்டு ஈரைந்துள் ஏகின்ற அ கலை எல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே மேல் #853 ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலங்கினார் ஞாலம் அங்கு அவர் கொள பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈரெட்டும் மாறா கதிர்கொள்ளும் மற்று அங்கி கூடவே மேல் #854 பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி ஒத்த நல் அங்கி அது எட்டெட்டு உயர் கலை அ திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே மேல் #855 எட்டெட்டு அனலின் கலை ஆகும் ஈராறுள் சுட்டப்படும் கதிரோனுக்கும் சூழ் கலை கட்டப்படும் ஈரெட்டாம் மதி கலை ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே மேல் #856 எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீ கதிர் சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை என கட்டப்படும் தாரகை கதிர் நால் உள கட்டிட்ட தொண்ணூற்றொடு ஆறும் கலாதியே மேல் #857 எல்லா கலையும் இடை பிங்கலை நடு சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம் செல்லா எழுப்பி சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே மேல் #858 அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்து தங்கிய தாரகை ஆகும் சசி பானு வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி தங்கு நவசக்கரம் ஆகும் தரணிக்கே மேல் #859 தரணி சலம் கனல் கால் தக்க வானம் அரணிய பானு அரும் திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவம் ஆகும் பெருநெறி தானே மேல் #860 தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்து தாரகை மின்னா சசி வளர் பக்கத்து தாரகை பூவில் சகலத்து யோனிகள் தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே மேல் #861 முன் பதினைந்தின் முளைத்து பெருத்திடும் பின் பதினைந்தில் பெருத்து சிறுத்திடும் அ பதினைஞ்சும் அறிவல்லார்கட்கு செப்ப_அரியான் கழல் சேர்தலும் ஆமே மேல் #862 அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்து தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகி பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அற திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே மேல் #863 ஒன்றிய ஈரெண் கலையும் உடனுற நின்றது கண்டு நினைக்கிலர் நீசர்கள் கன்றிய காலன் கருக்குழி வைத்த பின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே மேல் #864 அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி அங்கி சசி கதிர் கூட அ தாரகை தங்கிய அதுவே சகலமும் ஆமே மேல் #865 ஈராறு பெண்கலை எண்ணிரண்டு ஆண்கலை பேராமல் புக்கு பிடித்து கொடுவந்து நேராக தோன்றும் நெருப்புறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே மேல் #866 காணும் பரிதியின் காலை இடத்து இட்டு மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீரேல் ஆணி கலங்காது அ ஆயிரத்து ஆண்டே மேல் #867 பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும் காலைக்கு சங்கு கதிரவன் தானே மேல் #868 கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும் அதிரவன் அண்ட புறம் சென்று அடர்ப்ப எதிரவன் ஈசன் இடம் அது தானே மேல் #869 உந்தி கமலத்து உதித்து எழும் சோதியை அந்திக்கு மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கு மந்திரம் ஆரும் அறிந்த பின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே மேல் #870 ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீரேல் வேதியன் அங்கே வெளிப்படும் தானே மேல் #871 பாம்பு மதியை தினலுறும் பாம்பினை தீங்கு கதிரையும் சோதித்து அனலுறும் பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ நீங்கல் கொடானே நெடுந்தகையானே மேல் #872 அயின்றது வீழ் அளவும் துயில் இன்றி பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று நயம் தரு பூரணை உள்ள நடத்தி வியம் தரு பூரணை மேவும் சசியே மேல் #873 சசி உதிக்கும் அளவும் துயில் இன்றி சசி உதித்தானேல் தனது ஊண் அருந்தி சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல் சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே மேல் #874 ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகை ஆக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழ வல்லார் இ சசி வன்னர் ஆமே மேல் #875 தண் மதி பானு சரி பூமியே சென்று மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு வெண் மதி தோன்றிய நாளில் விளைந்த பின் தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே மேல் #876 வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும் தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும் மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே மேல் #877 ஆம் உயிர் தேய் மதி நாளே எனல் விந்து போம் வழி எங்கணும் போகாது யோகிக்கு காமுற இன்மையில் கட்டுண்ணும் மூலத்தில் ஓம் மதியத்துள் விட்டு உரை உணர்வாலே மேல் #878 வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும் சூருற நான்கும் தொடர்ந்துறவே நிற்கும் ஈறில் இனன் கலை ஈரைந்தொடே மதித்து ஆறுள் கலையுள் அகல் உவா ஆமே மேல் #879 உணர் விந்து சோணி உறவினன் வீசும் புணர் விந்து வீசும் கதிரில் குறையில் உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே மேல் #880 விடாத மனம் பவனத்தொடு மேவி நடாவு சிவசங்கின் நாதம் கொளுவி கடா விடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே மேல் #881 அமுத புனல் வரும் ஆற்றங்கரை மேல் குமிழிக்குள் சுடர் ஐந்தையும் கூட்டி சமைய தண் தோட்டி தரிக்க வல்லார்க்கு நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே மேல் #882 உண்ணீர் அமுதமுறும் ஊறலை திறந்து தெண்ணீர் இணை அடி தாமரைக்கே செல தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம் கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே மேல் #883 மாறு மதியும் மதித்திரு மாறு இன்றி தாறு படாமல் தண்டோடே தலைப்படில் ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும் பாறு படா இன்பம் பார் மிசை பொங்குமே மேல்@4 நான்காம் தந்திரம் #884 போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தை தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே மேல் #885 ஓரெழுத்தாலே உலகு எங்கும் தான் ஆகி ஈரெழுத்தாலே இசைந்து அங்கு இருவராய் மூவெழுத்தாலே முளைக்கின்ற சோதியை மா எழுத்தாலே மயக்கமே உற்றதே மேல் #886 தேவர் உறைகின்ற சிற்றம்பலம் என்றும் தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும் தேவர் உறைகின்ற திரு அம்பலம் என்றும் தேவர் உறைகின்ற தென்பொது ஆமே மேல் #887 ஆமே பொன்னம்பலம் அற்புதம் ஆனந்தம் ஆமே திருக்கூத்து அனவர தாண்டவம் ஆமே பிரளயம் ஆகும் அ தாண்டவம் ஆமே சங்காரத்து அரும் தாண்டவங்களே மேல் #888 தாண்டவம் ஆன தனி எழுத்து ஓரெழுத்து தாண்டவம் ஆனது அனுகிரக தொழில் தாண்டவ கூத்து தனிநின்ற தற்பரம் தாண்டவ கூத்து தமனியம் தானே மேல் #889 தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே பரஞ்சுடர் தத்துவ கூத்துக்கு தானே தனக்கு தராதலம் தானே மேல் #890 தராதல மூலைக்கு தற்பர மா பரன் தராதலம் வெப்பு நமசிவாய ஆம் தராதலம் சொல்லில் தான் வாசிய ஆகும் தராதல யோகம் தயாவாசி ஆமே மேல் #891 ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் ஆமே பரங்கள் அறியா இடம் என்ப ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே மேல் #892 ஆனந்தம் மூன்றும் அறிவு இரண்டு ஒன்று ஆகும் ஆனந்தம் சிவாய அறிவார் பலர் இல்லை ஆனந்தமோடும் அறிய வல்லார்கட்கு ஆனந்த கூத்தாய் அகப்படும் தானே மேல் #893 படுவது இரண்டும் பல கலை வல்லார் படுவது ஓங்காரம் பஞ்சாக்கரங்கள் படுவது சங்கார தாண்டவ பத்தி படுவது கோணம் பரந்திடும்வாறே மேல் #894 வாறே சதாசிவ மாறு இலா ஆகமம் வாறே சிவகதி வண்டு உறை புன்னையும் வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள் வாறே பொது ஆகும் மன்றின் அமலமே மேல் #895 அமலம் பதி பசு பாசங்கள் ஆகமம் அலமம் திரோதாயி ஆகும் ஆனந்தம் ஆம் அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் அலமந்து திருக்கூத்து அங்கு ஆமிடம் தானே மேல் #896 தானே தனக்கு தலைவியுமாய் நிற்கும் தானே தனக்கு தன் மலையாய் நிற்கும் தானே தனக்கு தன் மயமாய் நிற்கும் தானே தனக்கு தலைவனும் ஆமே மேல் #897 தலைவனுமாய் நின்ற தற்பரக்கூத்தனை தலைவனுமாய் நின்ற சற்பாத்திரத்தை தலைவனுமாய் நின்ற தாது அவிழ் ஞான தலைவனுமாய் நின்ற தாள் இணை தானே மேல் #898 இணையார் திருவடி எட்டெழுத்து ஆகும் இணையார் கழல் இணை ஈரஞ்சு அது ஆகும் இணையார் கழல் இணை ஐம்பத்தொன்று ஆகும் இணையார் கழல் இணை ஏழாயிரமே மேல் #899 ஏழாயிரமாய் இருபதாய் முப்பதாய் ஏழாயிரத்தும் எழு கோடி தான் ஆகி ஏழாயிரத்து உயிர் எண்_இலா மந்திரம் ஏழாய் இரண்டாய் இருக்கின்றவாறே மேல் #900 இருக்கின்ற மந்திரம் ஏழாயிரம் ஆம் இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி இருக்கின்ற மந்திரம் இ வண்ணம் தானே மேல் #901 தானே தனக்கு தகுநட்டம் தான் ஆகும் தானே அகார உகாரம் அதாய் நிற்கும் தானே ரீங்கார தத்துவ கூத்துக்கு தானே உலகில் தனிநடம் தானே மேல் #902 நடம் இரண்டு ஒன்றே நளினம் அது ஆகும் நடம் இரண்டு ஒன்றே நமன் செய்யும் கூத்து நடம் இரண்டு ஒன்றே நகை செயா மந்திரம் நடம் சிவலிங்கம் நலம் செம்பு பொன்னே மேல் #903 செம்பு பொன் ஆகும் சிவாய நம என்னில் செம்பு பொன் ஆக திரண்டது சிற்பரம் செம்பு பொன் ஆகும் சிரீயும் கிரீயும் என செம்பு பொன் ஆன திரு அம்பலமே மேல் #904 திரு அம்பலம் ஆக சீர் சக்கரத்தை திரு அம்பலம் ஆக ஈராறு கீறி திரு அம்பலம் ஆக இருபத்தஞ்சு ஆக்கி திரு அம்பலம் ஆக செபிக்கின்றவாறே மேல் #905 வாறே சிவாய நமச்சிவாய நம வாறே செபிக்கில் வரும் பேர் பிறப்பு இல்லை வாறே அருளால் வளர் கூத்து காணலாம் வாறே செபிக்கில் வரும் செம்பு பொன்னே மேல் #906 பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது பொன்னான மந்திரம் பொறி கிஞ்சுகத்து ஆகும் பொன்னான மந்திரம் புகை உண்டு பூரிக்கில் பொன் ஆகும் வல்லோர்க்கு உடம்பு பொன் பாதமே மேல் #907 பொன் பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொன் பாதத்து ஆணையே செம்பு பொன் ஆயிடும் பொன் பாதம் காண திருமேனி ஆயிடும் பொன் பாத நல் நடம் சிந்தனை சொல்லுமே மேல் #908 சொல்லும் ஒரு கூட்டில் புக்கு சுகிக்கலாம் நல்ல மடவார் நயந்துடனே வரும் சொல்லினும் பாச சுடர் பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே மேல் #909 சூக்குமம் எண்ணாயிரம் செபித்தாலும் மேல் சூக்குமம் ஆன வழி இடை காணலாம் சூக்குமம் ஆன வினையை கெடுக்கலாம் சூக்குமம் ஆன சிவனது ஆனந்தமே மேல் #910 ஆனந்தம் ஆனந்தம் ஒன்று என்று அறைந்திட ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓம் என்று ஐந்திடம் ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அது ஆயிடும் ஆனந்தம் ஆனந்தம் அம் ஹரீம் அம் க்ஷம் ஆம் ஆகுமே மேல் #911 மேனி இரண்டும் விலங்காமல் மேல் கொள்ள மேனி இரண்டும் மிகார விகாரியாம் மேனி இரண்டும் ஊ ஆ ஈ ஏ ஓ என்னும் மேனி இரண்டும் ஈ ஓ ஊ ஆ ஏ கூத்து ஆமே மேல் #912 கூத்தே சிவாயநம மசி ஆயிடும் கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவாயநம ஆயிடும் கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் சிவயநம ஆயிடும் கூத்தே ஈ ஊ ஆ ஏ ஓம் நமசிவாய கோள் ஒன்றுமாறே மேல் #913 ஒன்று இரண்டு ஆடவோர் ஒன்று உடன் ஆட ஒன்றினில் மூன்று ஆட ஓர் ஏழும் ஒத்து ஆட ஒன்றினால் ஆட ஓர் ஒன்பதும் உடன் ஆட மன்றினில் ஆடினான் மாணிக்க கூத்தே மேல் #914 இருந்த இ வட்டங்கள் ஈராறு இரேகை இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே மேல் #915 தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும் தான் ஒன்றும் அ நான்கும் தன் பேர் எழுத்து ஆகும் தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும் தான் ஒன்றிலே ஒன்று அ அரன் தானே மேல் #916 அரகர என்ன அரியது ஒன்று இல்லை அரகர என்ன அறிகிலர் மாந்தர் அரகர என்ன அமரரும் ஆவர் அரகர என்ன அறும் பிறப்பு அன்றே மேல் #917 எட்டுநிலை உள எம் கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிட பட்டது மந்திரம் பான்மொழி பாலே மேல் #918 மட்டு அவிழ் தாமரை மாது நல்லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே மேல் #919 ஆலயம் ஆக அமர்ந்த பஞ்சாக்கரம் ஆலயம் ஆக அமர்ந்த இ தூலம் போய் ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம் ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே மேல் #920 இருந்த இ வட்டம் இருமூன்று இரேகை இருந்த அதனுள் இரேகை ஐந்து ஆக இருந்த அறைகள் இருபத்தஞ்சு ஆக இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே மேல் #921 மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை ஒகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி அகாரம் தலையாய் இரு கண் சிகாரமாய் நகார வகார நல் காலது நாடுமே மேல் #922 நாடும் பிரணவ நடு இரு பக்கமும் ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது நாடு நடுவுள் முக நமசிவாய வாடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே மேல் #923 ஆயும் சிவாயநம மசிவாயந ஆயும் நமசிவாய யநமசிவா ஆயுமே வாயநமசி எனும் மந்திரம் ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே மேல் #924 அடைவினில் ஐம்பதும் ஐயைந்து அறையின் அடையும் அறை ஒன்றுக்கு கீழ் எழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும் அடைவின் எழுத்து ஐம்பத்தொன்றும் அமர்ந்ததே மேல் #925 அமர்ந்த அரகர ஆம் புறவட்டம் அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள்வட்டம் அமர்ந்த அசபை ஆம் அதன் உள்வட்டம் அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே மேல் #926 சூல தலையினில் தோற்றிடும் சத்தியும் சூல தலையினில் சூழும் ஓங்காரத்தால் சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து ஆல பதிக்கும் அடைவது ஆமே மேல் #927 அதுவாம் அகார இகார உகாரம் அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம் அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம் பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே மேல் #928 பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின் நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம் ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே மேல் #929 இயலும் இ மந்திரம் எய்தும் வழியின் செயலும் அறிய தெளிவிக்கும் நாதன் புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண் முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே மேல் #930 ஆறெட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும் ஏறிட்டு அதன் மேல் விந்துவும் நாதமும் சீறிட்டு நின்று சிவாயநம என்ன கூறிட்டு மும்மலம் கூப்பிட்டு போமே மேல் #931 அண்ணல் இருப்பது அவள் அக்கரத்துளே பெண்ணின் நல்லாளும் பிரான் அ கரத்துளே எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திட புண்ணியவாளர் பொருள் அறிவார்களே மேல் #932 அவ்விட்டு வைத்து அங்கு அர இட்டு மேல் வைத்து இவ்விட்டு பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்ட பின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே மேல் #933 அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்கு சவ் உண்டு சத்தி சதாசிவன் தானே மேல் #934 அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்செழுத்து ஆகிய அக்கர சக்கரம் அஞ்செழுத்துள்ளே அமர்ந்து இருந்தானே மேல் #935 கூத்தனை காணும் குறி பல பேசிடில் கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார் கூத்தனொடு ஒன்றிய கொள்கையராய் நிற்பர் கூத்தனை காணும் குறி அது ஆமே மேல் #936 அ திசைக்கு உள்நின்ற அனலை எழுப்பியே அ திசைக்கு உள்நின்ற நவ் எழுத்து ஓதினால் அ திசைக்கு உள்நின்ற அந்த மறையனை அ திசைக்கு உள்ளுறவு ஆக்கினன் தானே மேல் #937 தானே அளித்திடும் தையலை நோக்கினால் தானே அளித்திட்டு மேலுற வைத்திடும் தானே அளித்த மகாரத்தை ஓதிட தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே மேல் #938 கல் ஒளியே என நின்ற வடதிசை கல் ஒளியே என நின்றனன் இந்திரன் கல் ஒளியே என நின்ற சிகாரத்தை கல் ஒளியே என காட்டி நின்றானே மேல் #939 தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும் தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும் தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில் தானே எழுந்த மறையவன் ஆமே மேல் #940 மறையவன் ஆக மதித்த பிறவி மறையவன் ஆக மதித்திட காண்பர் மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப்பெற்ற மறையவன் அஞ்செழுத்தாம் அது ஆகுமே மேல் #941 ஆகின்ற பாதமும் அ ந-வாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம் ஆகின்ற சி இரு தோள் வ-வாய் கண்ட பின் ஆகின்ற அ சுடர் அ இயல்பு ஆமே மேல் #942 அ இயல்பு ஆய இருமூன்று எழுத்து ஐந்தையும் செ இயல்பு ஆக சிறந்தனன் நந்தியும் ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில் பவ் இயல்பு ஆக பரந்து நின்றானே மேல் #943 பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம் வரம் தரு மந்திரம் வாய்த்திட வாங்கி துரந்திடு மந்திரம் சூழ் பகை போக உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே மேல் #944 ஓம் என்று எழுப்பி தன் உத்தம நந்தியை நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள் மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே மேல் #945 ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும் பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்தோர் எழுத்துள் நிற்க பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே மேல் #946 பரமாய அஞ்சு எழுத்துள் நடு ஆக பரமாய நவசிம பார்க்கில் மவயநசி பரமாய சியநமவ ஆம் பரத்து ஓதில் பரம் ஆய வாசிமயநமாய் நின்றே மேல் #947 நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும் நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும் நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில் நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே மேல் #948 நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம் மன்றதுவாய் நின்ற மாய நல் நாடனை கன்றது ஆக கறந்தனன் நந்தியும் குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே மேல் #949 கொண்ட இ சக்கரத்துள்ளே குணம் பல கொண்ட இ சக்கரத்துள்ளே குறி ஐந்தும் கொண்ட இ சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும் கொண்ட இ சக்கரத்துள் நின்ற கூத்தே மேல் #950 வெளியில் இரேகை இரேகையில் அ தலை சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம் தெளியும் பிரகாரம் சிவமந்திரமே மேல் #951 அகார உகார சிகார நடுவாய் வகாரமோடு ஆறும் வளியுடன் கூடி சிகாரமுடனே சிவன் சிந்தைசெய்ய ஒகார முதல்வன் உவந்து நின்றானே மேல் #952 அற்ற இடத்தே அகாரம் அது ஆவது உற்ற இடத்தே உறுபொருள் கண்டிட செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள் குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே மேல் #953 அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால் உவ் என்ற முத்தி உருகி கலந்திடும் மவ் என்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை எவ்வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே மேல் #954 நீரில் எழுத்து இ உலகர் அறிவது வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை யார் இ எழுத்தை அறிவார் அவர்கள் ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே மேல் #955 காலை நடுவுற காயத்தில் அக்கரம் மாலை நடுவுற ஐம்பதும் ஆவன மேலை நடுவுற வேதம் விளம்பிய மூலம் நடுவுற முத்தி தானே மேல் #956 நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று பாவிகள் அத்தின் பயன் அறிவார் இல்லை ஓவியராலும் அறிய ஒண்ணாது அது தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே மேல் #957 அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர் அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின் அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே மேல் #958 மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது உந்தியின் உள்ளே உதயம் பண்ணாநிற்கும் சந்தி செய்யாநிற்பர் தாம் அறிகிலர் அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே மேல் #959 சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில் ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே மேல் #960 அருவினில் அம்பரம் அங்கு எழும் நாதம் பெருகு துடி இடை பேணிய விந்து மருவி அகார சிகார நடுவாய் உருவிட ஊறும் உறு மந்திரமே மேல் #961 விந்துவும் நாதமும் மேவி உடன்கூடி சந்திரனோடே தலைப்படுமாயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆமே மேல் #962 ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலார் ஆறெழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள் வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு ஓரெழுத்தாலே உயிர் பெறலாமே மேல் #963 ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும் ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர் சோதி எழுத்தினில் ஐயிருமூன்று உள நாத எழுத்திட்டு நாடி கொள்ளீரே மேல் #964 விந்துவிலும் சுழி நாதம் எழுந்திட பந்த தலைவி பதினாறு கலை அதாம் கந்தர ஆகரம் காலுடம்பு ஆயினாள் அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே மேல் #965 ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்து ஆமே மேல் #966 அஞ்செழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன் அஞ்செழுத்தால் பல யோனி படைத்தனன் அஞ்செழுத்தால் இ அகல் இடம் தாங்கினன் அஞ்செழுத்தாலே அமர்ந்து நின்றானே மேல் #967 வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தை சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்கு சார்ந்த வினை துயர் போக தலைவனும் போந்திடும் என்னும் புரிசடையோனே மேல் #968 உண்ணும் மருந்தும் உலப்பு_இலி காலமும் பண்ணுறு கேள்வியும் பாடலுமாய் நிற்கும் விண்-நின்று அமரர் விரும்பி அடிதொழ எண்-நின்று எழுத்து அஞ்சும் ஆகி நின்றானே மேல் #969 ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் ஐந்தின் வகைசெய பாலனும் ஆமே மேல் #970 வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும் நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன் சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து ஓரெழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே மேல் #971 நாலாம் எழுத்து ஓசை ஞாலம் உருவது நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று நாலாம் எழுத்தே நவில வல்லார்கட்கு நாலாம் எழுத்து அது நல் நெறி தானே மேல் #972 இயைந்தனள் ஏந்திழை என் உளம் மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் பயம்-தனை ஓரும் பதம் அது பற்றும் பெயர்ந்தனன் மற்றும் பிதற்று அறுத்தேனே மேல் #973 ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை ஓமத்திலே உதம்பண்ணும் ஒருத்தி-தன் நாம நமசிவ என்று இருப்பாருக்கு நேம தலைவி நிலவி நின்றாளே மேல் #974 பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின் இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர நட்டம் அது ஆடும் நடுவே நிலயம் கொண்டு அட்ட தேசு அ பொருள் ஆகி நின்றாளே மேல் #975 அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வரும் முப்பதத்தில் சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமா அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே மேல் #976 நகார மகார சிகார நடுவாய் வகாரம் இரண்டும் வளியுடன் கூடி ஒகார முதல்கொண்டு ஒருக்கால் உரைக்க மகார முதல்வன் மனத்து அகத்தானே மேல் #977 அஞ்சு உள ஆனை அடவியுள் வாழ்வன அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன அஞ்சையும் கூடத்து அடக்க வல்லார்கட்கே அஞ்சாதி ஆதி அகம் புகலாமே மேல் #978 ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதி மாற்றி மகராதி நந்தியை மூலத்தே நாடி பரையொடும் சந்திசெய்வார்க்கு சடங்கு இல்லை தானே மேல் #979 மருவும் சிவாயமே மன்னும் உயிரும் அருமந்த யோகமும் ஞானமும் ஆகும் தெருள்வந்த சிவனார் சென்று இவற்றாலே அருள் தங்கி அ சிவம் ஆவது வீடே மேல் #980 அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்த பின் நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே மேல் #981 சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓத சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும் சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள் சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே மேல் #982 சிகார வகார யகாரம் உடனே நகார மகார நடுவுற நாடி ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க மகார முதல்வன் மதித்து நின்றானே மேல் #983 ந-முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள் அ முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை சி-முதல் உள்ளே தெளிய வல்லார்கட்கு தம் முதல் ஆகும் சதாசிவம் தானே மேல் #984 நவமும் சிவமும் உயிர்பரம் ஆகும் தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும் சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அ சிவம் என்பது ஆனாம் எனும் தெளிவுற்றதே மேல் #985 கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள் தேடி அதனை தெளிந்து அறியீரே மேல் #986 எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு என பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே மேல் #987 எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில் வட்டத்திலே அறை நாற்பத்தெட்டும் இட்டு சிட்ட அஞ்செழுத்தும் செபி சீக்கிரமே மேல் #988 தானவர் சட்டர் சதிரர் இருவர்கள் ஆன இ மூவரோடு ஆற்றவர் ஆதிகள் ஏனை பதினைந்தும் விந்துவும் நாதமும் சேனையும் செய் சிவசக்கரத்தானே மேல் #989 பட்டன மாதவம் ஆறும் பராபரம் விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர் எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம் ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே மேல் #990 சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த அவை முதல் ஆறிரண்டு ஒன்றொடு ஒன்று ஆகும் அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்க சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே மேல் #991 வித்தாம் செக மயம் ஆக வரை கீறி நத்தார் கலைகள் பதினாறு நாட்டி பின் உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும் பத்தாம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே மேல் #992 கண்டு எழுந்தேன் கமல மலர் உள் இடை கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்து பண்டு அழியாத பதி வழியே சென்று நண்பு அழியாமே நம எனல் ஆமே மேல் #993 புண்ணிய வானவர் பூமழை தூவி நின்று எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம் நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தை கண் என உன்னி கலந்து நின்றாரே மேல் #994 ஆறெழுத்தாவது ஆறு சமயங்கள் ஆறுக்கு நாலே இருபத்துநாலு என்பர் சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே மேல் #995 எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே கட்டிய ஒன்று எட்டாய் காண நிறை இட்டு சுட்டி இவற்றை பிரணவம் சூழ்ந்திட்டு மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே மேல் #996 ந-முதல் அவ்வொடு நாவினர் ஆகியே அ-முதல் ஆகிய எட்டிடை உற்றிட்டு உ-முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல் உ-முதல் ஆயவன் உற்று நின்றானே மேல் #997 நின்ற அரசு அம் பலகை மேல் நேராக ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம் துன்று எழுகையுள் பூசி சுடரிடை தன்ற வெதுப்பு இட தம்பனம் காணுமே மேல் #998 கரண இரளி பலகை யமன் திசை மரணமிட்டு எட்டின் மகார எழுத்திட்டு வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே மேல் #999 ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில் பாங்கு படவே பலாச பலகையில் காங்கு அரு மேட்டில் கடு பூசி விந்து விட்டு ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே மேல் #1000 உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில் பச்சோலையில் பஞ்சகாயத்தை பாரித்து முச்சதுரத்தின் முதுகாட்டில் வைத்திட வைச்ச பின் மேலோர் மாரணம் வேண்டிலே மேல் #1001 ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்து இட்டு வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு ஏய்ந்தவைத்து எண்பதினாயிரம் வேண்டிலே மேல் #1002 எண்ணா கருடணை ஏட்டின் யகாரம் இட்டு எண்ணா பொன் ஒளி எழு வெள்ளி பூசிடா வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி எண்ணா எழுத்தோடு எண்ணாயிரம் வேண்டிலே மேல் #1003 அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் வம்பு அவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே மேல் #1004 சாங்கம் அது ஆகவே சந்தொடு சந்தனம் தேம் கமழ் குங்குமம் கர்ப்பூரம் கார் அகில் பாங்கு பட பனி நீரால் குழைத்து வைத்து ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன்பொடே மேல் #1005 அன்புடனே நின்று அமுதம் ஏற்றியே பொன் செய் விளக்கும் புகை தீபம் திசை-தொறும் துன்பம் அகற்றி தொழுவோர் நினையும்-கால் இன்புடனே வந்து எய்திடும் முத்தியே மேல் #1006 எய்தி வழிப்படில் எய்தாதன இல்லை எய்தி வழிப்படில் இந்திரன் செல்வம் முன் எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும் எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே மேல் #1007 நண்ணும் பிற தாரம் நீத்தார் அவித்தார் மண்ணிய நைவேத்தியம் அனுசந்தான நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம் என்னும் மன்னும் மனம் பவனத்தொடு வைகுமே மேல் #1008 வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர் வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை அற்றபேர் வேண்டார்கள் கன்மம் மிகு சிவயோகிகள் வேண்டார்கள் கன்மம் மிகுதி ஓர் ஆய்ந்த அன்பே மேல் #1009 அறிவரும் ஞானத்து எவரும் அறியார் பொறிவழி தேடி புலம்புகின்றார்கள் நெறி மனை உள்ளே நிலைபெற நோக்கில் எறி மணி உள்ளே இருக்கலும் ஆமே மேல் #1010 இருளும் வெளியும் போல் இரண்டு ஆம் இதயம் மருள் அறியாமையும் மன்னும் அறிவு மருள் இவை விட்டு அறியாமை மயக்கும் மருளும் சிதைத்தோர் அவர்கள் ஆம் அன்றே மேல் #1011 தான் அவன் ஆக அவனே தான் ஆயிட ஆன இரண்டில் அறிவன் சிவம் ஆக போனவன் அன்பு இது நாலாம் மரபுற தானவன் ஆகும் ஓர் ஆசித்த தேவரே மேல் #1012 ஓங்கார உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத்து ஆயிடும் பாங்கார் நகாரம் பயில் நெற்றி உற்றிடும் வீங்கு ஆகும் விந்துவும் நாதம் மேல் ஆகுமே மேல் #1013 நம அது ஆசனம் ஆன பசுவே சிவம் அது சித்தி சிவமாம் பதியே நம அற ஆதி நாடுவது அன்றாம் சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே மேல் #1014 தெளிவரும் நாளில் சிவ அமுது ஊறும் ஒளிவரு நாளில் ஓர் எட்டில் உகளும் ஒளிவரும் அ பதத்து ஓர் இரண்டு ஆகில் வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே மேல் #1015 நவகுண்டம் ஆனவை நான் உரைசெய்யின் நவகுண்டத்து உள் எழு நல் தீபம் தானும் நவகுண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம் நவகுண்டம் ஆனவை நான் உரைப்பேனே மேல் #1016 உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்து எழு நாற்கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடும் முப்புரம் பார் அங்கியோடே மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே மேல் #1017 மேல் அறிந்து உள்ளே வெளிசெய்த அ பொருள் கால் அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர் பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது நான் அறிந்து உள்ளே நாடி கொண்டேனே மேல் #1018 கொண்ட இ குண்டத்தின் உள் எழு சோதியாய் அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம் பண்டையுள் வேதம் பரந்த பரப்பு எல்லாம் இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே மேல் #1019 எடுத்த அ குண்டத்து இடம் பதினாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்து அனல் உள் எழ கண்டு கொள்வார்க்கே கொதித்து எழும் வல்வினை கூடகிலாவே மேல் #1020 கூட முக்கூடத்தின் உள் எழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ நாடி கொள்வார்கட்கு நல் சுடர் தானே மேல் #1021 நல் சுடர் ஆகும் சிரம் முக வட்டம் ஆம் கைச்சுடர் ஆகும் கருத்துற்ற கைகளில் பை சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும் நல் சுடராய் எழும் நல்லது என்றாளே மேல் #1022 நல்லது என்றாளே நமக்குற்ற நாயகம் சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம் மெல்ல நின்றாளை வினவகில்லாதவர் கல் அதன் தாளையும் கற்றும் வின்னாளே மேல் #1023 வின்னா இளம்பிறை மேவிய குண்டத்து சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர் என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே மேல் #1024 இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்கு சகம் கொண்ட கை இரண்டாறும் தழைப்ப முகம் கொண்ட செஞ்சுடர் முக்கணனார்க்கே மேல் #1025 முக்கணன் தானே முழு சுடர் ஆயவன் அ கணன் தானே அகிலமும் உண்டவன் தி கணன் ஆகி திகை எட்டும் கண்டவன் எ கணன் தானுக்கும் எந்தை பிரானே மேல் #1026 எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய் தந்தை-தன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான் மைந்தன் இவன் என்று மாட்டி கொள்ளீரே மேல் #1027 மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள் ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே மேல் #1028 நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் கல் ஒளியாக கலந்து உள் இருந்திடும் சொல் ஒளியாக தொடர்ந்த உயிர்க்கு எலாம் கல் ஒளி கண்ணுளும் ஆகி நின்றானே மேல் #1029 நின்ற இ குண்டம் நிலை ஆறுகோணமாய் பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறாறும் கொண்ட இ தத்துவம் உள்ளே கலந்து எழ விண்ணுளும் என்ன எடுக்கலும் ஆமே மேல் #1030 எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தை கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாக படித்து எண்ணும் நா எழு கொம்பு ஒரு நாலும் அடுத்து எழு கண்ணானது அந்தம் இலாற்கே மேல் #1031 அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே மேல் #1032 பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு மட்டிட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும் பட்டிட்டு நின்றது பார்ப்பதி-பாலே மேல் #1033 பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு கால் பதி பத்து முகம் பார்த்து கண்களும் பூ பதி பாதம் இரண்டு சுடர் முடி நாற்பது சோத்திரம் நல் இருபத்தஞ்சே மேல் #1034 அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர் கொஞ்சிட்ட வன்னியை கூடுதல் முத்தியே மேல் #1035 முத்தி நல் சோதி முழு சுடர் ஆயவன் கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்று அற நாடி பரந்து ஒளி ஊடு போய் செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே மேல் #1036 சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இ குண்டமும் ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்த ஐம்பூதமும் பார்க்கின்ற வன்னியை காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே மேல் #1037 மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும் உய் கண்டம் செய்த ஒருவனை சேரு-மின் செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய் கண்டம் இல்லா பொருள் கலந்தாரே மேல் #1038 கலந்து இரு பாதம் இரு கரம் ஆகும் மலர்ந்து இரு குண்ட மகாரத்து ஓர் மூக்கு மலர்ந்து எழு செம் முகம் மற்றை கண் நெற்றி உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே மேல் #1039 உத்தமன் சோதி உளன் ஒரு பாலனாய் மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன சத்திமான் ஆக தழைத்த கொடியே மேல் #1040 கொடி ஆறு சென்று குலாவிய குண்டம் அடி இரு கோணமாய் அந்தமும் ஒக்கும் படி ஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதனம் ஆமே மேல் #1041 மாதனம் ஆக வளர்கின்ற வன்னியை சாதனம் ஆக சமைந்த குரு என்று போதனம் ஆக பொருந்த உலகு ஆளும் பாதனம் ஆக பரிந்தது பார்த்தே மேல் #1042 பார்த்திடம் எங்கும் பரந்து எழு சோதியை ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்து உடல் கோடி உகம் கண்டவாறே மேல் #1043 உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகம் கண்ட யோகி உள்நாடி எழுப்பும் பயம் கண்டு கொண்ட இ பாய் கரு ஒப்ப சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே மேல் #1044 சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை போதனை போது ஐஞ்சு பொய் கய வாரணம் நாதனை நாடு நவகோடி தானே மேல் #1045 மா மாயை மாயை வயிந்தவம் வைகரி ஓ மாயை உள் ஒளி ஓர் ஆறு கோடியில் தாம் ஆன மந்திரம் சத்தி-தன் மூர்த்திகள் ஆம் ஆய அலவாம் திரிபுரை ஆங்கே மேல் #1046 திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துர பரிபுரை நாரணி ஆம் பல வன்னத்தி இருள் புரை ஈசி மனோன்மணி என்ன வரு பலவாய் நிற்கும் மா மாது தானே மேல் #1047 தானா அமைந்த அ முப்புரம் தன்னிடை தான் ஆன மூ உரு ஓர் உரு தன்மையள் தான் ஆன பொன் செம்மை வெண் நிறத்தாள் கல்வி தான் ஆன போகமும் முத்தியும் நல்குமே மேல் #1048 நல்கும் திரிபுரை நாத நாதாந்தங்கள் பல்கும் பரவிந்து பார் அண்டம் ஆனவை நல்கும் பரை அபிராமி அகோசரி புல்கும் அருளும் அ போதம் தந்து ஆளுமே மேல் #1049 தாள் அணி நூபுரம் செம்பட்டு தான் உடை வார் அணி கொங்கை மலர் கன்னல் வாளி வில் ஏர் அணி அங்குச பாசம் எழில் முடி கார் அணி மா மணி குண்டலகாதிக்கே மேல் #1050 குண்டலகாதி கொலை வில் புருவத்தாள் கொண்ட அரத்த நிறம் மன்னும் கோலத்தள் கண்டிகை ஆரம் கதிர் முடி மா மதி சண்டிகை நால் திசை தாங்கி நின்றாளே மேல் #1051 நின்ற திரிபுரை நீளும் புராதனி குன்றல் இல் மோகினி மா திரு குஞ்சிகை நன்று அறி கண்டிகை நாற்கால் கரீடணி துன்றிய நல் சுத்த தாமரை சுத்தையே மேல் #1052 சுத்த அம் பார தனத்தி சுகோதயள் வத்துவ மாயாள் உமா சத்தி மா பரை அத்தகை யாவும் அணோரணி தானுமாய் வைத்த அ கோல மதி அவள் ஆகுமே மேல் #1053 அவளை அறியா அமரரும் இல்லை அவள் அன்றி செய்யும் அருந்தவம் இல்லை அவள் அன்றி ஐவரால் ஆவது ஒன்று இல்லை அவள் அன்றி ஊர் புகுமாறு அறியேனே மேல் #1054 அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர் அறிவார் அரு உருவாம் அவள் என்பர் அறிவார் கருமம் அவள் இச்சை என்பர் அறிவார் பரனும் அவளிடத்தானே மேல் #1055 தான் எங்கு உளன் அங்கு உளள் தையல் மாதேவி ஊன் எங்கு உள அங்கு உளன் உயிர் காவலன் வான் எங்கு உள அங்கு உளே வந்து அப்பால் ஆம் கோன் எங்கும் நின்ற குறி பல பாரே மேல் #1056 பராசத்தி மா சத்தி பல வகையாலும் தரா சத்தியாய் நின்ற தன்மை உணராய் உரா சத்தி ஊழிகள்-தோறும் உடனே புரா சத்தி புண்ணியம் ஆகிய போகமே மேல் #1057 போகம் செய் சத்தி புரி குழலாளொடும் பாகம் செய்து ஆங்கே பராசத்தியாய் நிற்கும் ஆகம் செய்து ஆங்கே அடியவர் நாள்-தொறும் பாகம் செய் ஞானம் படர்கின்ற கொம்பே மேல் #1058 கொம்பு அனையாளை குவி முலை மங்கையை வம்பு அவிழ் கோதையை வானவர் நாடியை செம்பவள திருமேனி சிறுமியை நம்பி என் உள்ளே நயந்து வைத்தேனே மேல் #1059 வைத்த பொருளும் மருவு உயிர் பன்மையும் பத்து முகமும் பரையும் பராபரை சித்த கரண செயல்களும் செய்திடும் சத்தியும் வித்தை தலை அவள் ஆமே மேல் #1060 தலைவி தட முலை மேல் நின்ற தையல் தொலைவில் தவம் செயும் தூய் நெறி தோகை கலை பல வென்றிடும் கன்னி என் உள்ளம் நிலை பெற இங்கே நிறைந்து நின்றாளே மேல் #1061 நின்றவள் நேரிழை நீள் கலையோடுற என்றன் அகம் படிந்து ஏழ் உலகும் தொழ மன்றது ஒன்றி மனோன்மணி மங்கலி ஒன்று எனோடு ஒன்றி நின்று ஒத்து அடைந்தாளே மேல் #1062 ஒத்து அடங்கும் கமலத்திடை ஆயிழை அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி மத்து அடைகின்ற மனோன்மணி மங்கலி சித்து அடைக்கும் வழி தேர்ந்து உணரார்களே மேல் #1063 உணர்ந்து உடனே நிற்கும் உள் ஒளி ஆகி மணம் கமழ் பூங்குழலாள் மங்கையும் தானும் புணர்ந்து உடனே நிற்கும் போதரும்-காலை கணிந்து எழுவார்க்கு கதி அளிப்பாளே மேல் #1064 அளி ஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி புளியுறு புன் பழம் போல் உள்ளே நோக்கி தெளியுறு வித்து சிவகதி காட்டி ஒளியுற வைத்து என்னை உய்ய உண்டாளே மேல் #1065 உண்டு இல்லை என்றது உரு செய்து நின்றது வண்டு இல்லை மன்றினுள் மன்னி நிறைந்தது கண்டிலர் காரண காரணி தம்மொடு மண்டலம் மூன்றுற மன்னி நின்றாளே மேல் #1066 நின்றாள் அவன்-தன் உடலும் உயிருமாய் சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி ஒன்றாக என்னுள் புகுந்து உணர்வு ஆகியே நின்றாள் பரஞ்சுடர் ஏடு அங்கையாளே மேல் #1067 ஏடு அங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி வேடம் படிகம் விரும்பும் வெண் தாமரை பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் சூடு-மின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே மேல் #1068 தோத்திரம் செய்து தொழுது துணை அடி வாய்த்திட ஏத்தி வழிபடுமாறு இரும்பு ஆர்த்திடும் அங்குச பாசம் பசும் கரும்பு ஆர்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே மேல் #1069 ஆதி விதம் மிக தண் தந்த மால் தங்கை நீதி மலரின் மேல் நேரிழை நாமத்தை பாதியில் வைத்து பல்-கால் பயில்விரேல் சோதி மிகுத்து முக்காலமும் தோன்றுமே மேல் #1070 மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல் வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை ஆதாரம் ஆகியே ஆய்ந்த பரப்பினள் நாதாதி நாதத்து நல்ல அருளாலே மேல் #1071 அருள் பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர் பொருள் பெற்ற சிந்தை புவனாபதியார் மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை பொருளுற்ற சேவடி போற்றுவன் யானே மேல் #1072 ஆன வராக முகத்தி பதத்தினள் ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு ஏனை உழுபடை ஏந்திய வெண் நகை ஊனம் அற உணர்ந்தார் உளத்து ஓங்குமே மேல் #1073 ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிது இருந்தாளே மேல் #1074 தானே தலைவி என நின்ற தற்பரை தானே உயிர் வித்து தந்த பதினாலும் வானோர் தலமும் மனமும் நல் புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே மேல் #1075 பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்து பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே மேல் #1076 அந்தம் பதினாலும் அதுவே வயிரவி முந்து நடுவும் முடிவும் முதலாக சிந்தை கமலத்து எழுகின்ற மா சத்தி அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே மேல் #1077 ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர் போகின்ற பூதம் பொருந்து புராதரர் சார்கின்ற சார்வுழி சாரார் சதிர்பெற போகும் திரிபுரை புண்ணியத்தோரே மேல் #1078 புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும் எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ் மதி பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு திண்ணிய சிந்தை-தன் தென்னனும் ஆமே மேல் #1079 தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும் பொன்னங்கிரியில் பூதலம் போற்றிடும் பன்னும் பரி பிடி அந்தம் பகவனோடு உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே மேல் #1080 ஓதிய நந்தி உணரும் திருவருள் நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும் போதம் இருபத்தெழு நாள் புணர் மதி சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே மேல் #1081 சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு நாலு அம் கரம் உள நாகபாச அங்குசம் மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே மேல் #1082 மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேயிழை கல் இயல் ஒப்பது காணும் திருமேனி பல் இயல் ஆடையும் பல் மணி தானே மேல் #1083 பல் மணி சந்திர கோடி திருமுடி சொல் மணி குண்டல காதி உழை கண்ணி நல் மணி சூரிய சோம நயனத்தாள் பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே மேல் #1084 பூரித்த பூ இதழ் எட்டினுக்கு உள்ளே ஓர் ஆரியத்தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர் பாரித்த பெண்கள் அறுபத்துநால்வரும் சாரித்து சத்தியை தாங்கள் கண்டாரே மேல் #1085 கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம் எண் திசை யோகி இறைவி பராசத்தி அண்டமொடு எண் திசை தாங்கும் அருட்செல்வி புண்டரிகத்தினுள் பூசனையாளே மேல் #1086 பூசனை கந்தம் புனை மலர் மா கோடி யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும் வாசம் இலாத மணி மந்திர யோகம் தேசம் திகழும் திரிபுரை காணே மேல் #1087 காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன் போல தோற்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவி நல் காரணி காணே மேல் #1088 காரணி மந்திரம் ஓதும் கமலத்து பூரணகும்ப இரேசம் பொருந்திய நாரணி நந்தி நடு அங்கு உரைசெய்த ஆரண வேதநூல் அந்தமும் ஆமே மேல் #1089 அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறி உரைசெய்யும் செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு நந்தி இதனை நவம் உரைத்தானே மேல் #1090 உரைத்த நவசத்தி ஒன்று முடிய நிரைத்த இராசி நெடு முறை எண்ணி பிரை சதம் எட்டும் முன் பேசிய நந்தி நிரைத்து நியதி நியமம் செய்தானே மேல் #1091 தாம குழலி தயைக்கண்ணி உள்நின்ற ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி ஓம பெருஞ்சுடர் உள்ளெழு நுண் புகை மேவித்து அமுதொடு மீண்டது காணே மேல் #1092 காணும் இருதய மந்திரமும் கண்டு பேணு நம என்று பேசும் தலை மேலே வேணு நடுவு மிக நின்ற ஆகுதி பூணு நடு என்ற அந்தம் சிகையே மேல் #1093 சிகை நின்ற அந்த கவசம் கொண்டு ஆதி பகை நின்ற அங்கத்தை பார் என்று மாறி தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம் வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே மேல் #1094 வருத்தம் இரண்டும் சிறுவிரல் மாறி பொருத்தி அணிவிரல் சுட்டி பிடித்து நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே பெருத்தவிரல் இரண்டு உள் புக்கு பேசே மேல் #1095 பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு வாசி பிராணன் உபதேசம் ஆகைக்கு கூசிய விந்து உடன் கொண்டு கூவே மேல் #1096 கூவிய சீவன் பிராணன் முதலாக பாவிய ச-உடன் பண்ணும் யகாரத்தை மேவிய மாயை விரிசங்கு முத்திரை தேவி நடுவுள் திகழ்ந்து நின்றாளே மேல் #1097 நின்ற வயிரவி நீலி நிசாசரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்து சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே மேல் #1098 சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம் நால் திசை முக்கண்ணி நாடும் இருள்வெளி தோற்றும் உயிர் பன்மை சோதி பராபரை ஆற்றலொடாய் நிற்கும் ஆதி முதல்வியே மேல் #1099 ஆதி வயிரவி கன்னி துறை மன்னி ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே மேல் #1100 கோல குழலி குலாய புருவத்தள் நீல குவளை மலர் அன்ன கண்ணினாள் ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி மேலை சிவத்தை வெளிப்படுத்தாளே மேல் #1101 வெளிப்படு வித்து விளை அறிவித்து தெளி படுவித்து என் சிந்தையின் உள்ளே களிப்படு வித்து கதிர்ப்படு சோதி ஒளி படுவித்து என்னை உய்ய கொண்டாளே மேல் #1102 கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள் கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள் விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும் தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே மேல் #1103 தையல் நல்லாளை தவத்தின் தலைவியை மையலை நோக்கும் மனோன்மணி மங்கையை பைய நின்று ஏத்தி பணி-மின் பணிந்த பின் வெய்ய பவம் இனி மேவகிலாவே மேல் #1104 வேய் அன தோளி விரை உறு மெல் மலர் ஏய குழலி இளம்பிறை ஏந்திழை தூய சடை முடி சூலினி சுந்தரி ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே மேல் #1105 இனியது என் மூலை இருக்கும் குமரி தனி ஒரு நாயகி தானே தலைவி தனி படுவித்தனள் சார்வு படுத்து நனி படுவித்து உள்ளம் நாடி நின்றாளே மேல் #1106 நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்து கூடி இருந்த குமரி குலக்கன்னி பாடக சீறடி பைம்பொன் சிலம்பு ஒலி ஊடகம் மேவி உறங்குகின்றாளே மேல் #1107 உறங்கும் அளவின் மனோன்மணி வந்து கறங்கு வளைக்கை கழுத்து ஆர புல்லி பிறங்கு ஒளி தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு உறங்கல் ஐயா என்று உபாயம் செய்தாளே மேல் #1108 உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே மேல் #1109 அம் சொல் மொழியாள் அருந்தவ பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீர் உடை சேயிழை தஞ்சம் என்று எண்ணி தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே மேல் #1110 ஆருயிராயும் அருந்தவ பெண்பிள்ளை கார் இயல் கோதையள் காரணி நாரணி ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும் கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே மேல் #1111 குலாவிய கோல குமரி என் உள்ளம் நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும் உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே கலாவி இருந்த கலை தலையாளே மேல் #1112 கலைத்தலை நெற்றி ஓர் கண் உடை கண்ணுள் முலை தலை மங்கை முயங்கி இருக்கும் சிலை தலை ஆய தெரிவினை நோக்கி அலைத்த பூங்கொம்பினள் அங்கு இருந்தாளே மேல் #1113 இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லி திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி அருந்தவம் எய்தினள் ஆதியின் ஆளே மேல் #1114 ஆதி அனாதி அகாரணி காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே மேல் #1115 இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி நயந்தனள் அங்கே நம சிவ என்னும் அயன் தனை யோரும் பதம் அது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே மேல் #1116 பிதற்றி கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி அருளும் முதல்வி கயல் திகழ் முக்கண்ணும் கம்பலை செவ்வாய் முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே மேல் #1117 உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள் பிள்ளை தடம் உள்ளே பேச பிறந்தது வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயை கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே மேல் #1118 கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி துன்னி அம் ஐவரை பெற்றனள் தூய்மொழி பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள என்னே இ மாயை இருள் அது தானே மேல் #1119 இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல் பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம் தெருள் அது சிந்தையை தெய்வம் என்று எண்ணில் அருள் அது செய்யும் எம் ஆதி பிரானே மேல் #1120 ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே மேல் #1121 ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர் சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள் ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே மேல் #1122 ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும் தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை மேவும் கிழத்தி வினை கடிந்தாளே மேல் #1123 வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவி தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள் எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன் கணவனை காண அனாதியும் ஆமே மேல் #1124 ஆதி அனாதி அகாரணி காரணி வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே மேல் #1125 அளந்தேன் அகல் இடத்து அந்தமும் ஈறும் அளந்தேன் அகல் இடத்து ஆதி பிரானை அளந்தேன் அகல் இடத்து ஆணொடு பெண்ணும் அளந்தேன் அவன் அருள் ஆய்ந்து உணர்ந்தேனே மேல் #1126 உணர்ந்து இலர் ஈசனை ஊழிசெய் சத்தி புணர்ந்தது பூரணம் புண்ணியர்-தங்கள் கணங்களை தன் அருள்செய்கின்ற கன்னி கொணர்ந்த வழிகொண்டு கும்பகம் ஆமே மேல் #1127 கும்ப களிறு ஐந்தும் கோலொடு பாகனும் வம்பில் திகழும் மணி முடி வண்ணனும் இன்ப கலவி இனிது உறை தையலும் அன்பில் கலவியுள்ளாய் ஒழிந்தாரே மேல் #1128 இன்ப கலவியில் இட்டு எழுகின்றது ஓர் அன்பில் புக வல்லனாம் எங்கள் அப்பனும் துன்ப குழம்பில் துயருறும் பாசத்துள் என்பில் பராசத்தி என் அம்மை தானே மேல் #1129 என் அம்மை என் அப்பன் என்னும் செருக்கு அற்று உன் அம்மை ஊழி தலைவனும் அங்கு உளன் மன் அம்மை ஆகி மருவி உரைசெய்யும் பின் அம்மை ஆய் நின்ற பேர் நந்தி தானே மேல் #1130 தார் மேல் உறைகின்ற தண் மலர் நான் முகன் பார் மேல் இருப்பது ஒரு நூறு தான் உள பூ மேல் உறைகின்ற-போது அகம் வந்தனள் நா மேல் உறைகின்ற நாயகி ஆணையே மேல் #1131 ஆணையமாய் வரும் தாதுள் இருந்தவர் மாண் ஐயம் ஆய மனத்தை ஒருக்கி பின் பாழ் நயம் ஆய பரத்தை அறிந்த பின் தாள் நயம் ஆய அனாதனன் தானே மேல் #1132 தானே எழுந்த இ தத்துவநாயகி வான் நேர் எழுந்து மதியை விளக்கினள் தேன் நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன் மானே நடம் உடை மன்று அறியீரே மேல் #1133 அறிவான மாயையும் ஐம்புல கூட்டத்து அறிவான மங்கை அருள் அது சேரில் பிறியா அறிவு அறிவார் உளம் பேணும் நெறியாய சித்தம் நினைந்து இருந்தாளே மேல் #1134 இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை நாடி அரவம் செய்யாமல் அருளுடன் தூங்க பருவம் செய்யாத ஓர் பாலனும் ஆமே மேல் #1135 பாலனும் ஆகும் பராசத்தி தன்னொடு மேல் அணுகா விந்து நாதங்கள் விட்டிட மூலம் அது ஆம் எனும் முத்திக்கு நேர்பட சாலவுமாய் நின்ற தற்பரத்தாளே மேல் #1136 நின்ற பராசத்தி நீள் பரன்-தன்னொடு நின்று அறி ஞானமும் இச்சையுமாய் நிற்கும் நன்று அறியும் கிரியா சத்தி நண்ணவே மன்றன் அவற்றுள் மருவிடும் தானே மேல் #1137 மரு ஒத்த மங்கையும் தானும் உடனே உரு ஒத்து நின்றமை ஒன்றும் உணரார் கரு ஒத்து நின்று கலங்கின-போது திரு ஒத்த சிந்தை வைத்து எந்தை நின்றானே மேல் #1138 சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொடு ஆதி அதாம் வண்ணத்தாளே மேல் #1139 ஆறி இருந்த அமுத பயோதரி மாறி இருந்த வழி அறிவார் இல்லை தேறி இருந்து நல் தீபத்து ஒளியுடன் ஊறி இருந்தனள் உள் உடையார்க்கே மேல் #1140 உடையவன் அங்கி உருத்திர சோதி விடை அவன் ஏறி விளங்கி இருக்கும் கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து அடை அது ஆகிய சாதகர் தாமே மேல் #1141 தாம் மேல் உறைவிடம் மாறு இதழ் ஆனது பார் மேல் இதழ் பதினெட்டு இருநூறு உள பூ மேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள் பார் மேல் உறைகின்ற பைந்தொடியாளே மேல் #1142 பைங்கொடியாளும் பரமன் இருந்திட திண் கொடி ஆக திகழ் தரு சோதியாம் விண் கொடி ஆகி விளங்கி வருதலால் பெண் கொடி ஆக நடந்தது உலகே மேல் #1143 நடந்தது அ மலர் நாலுடன் அஞ்சாய் இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய் படர்ந்தது தன் வழி பங்கயத்து உள்ளே தொடர்ந்தது உள் வழி சோதி அடுத்தே மேல் #1144 அடுக்கும் தாமரை ஆதி இருப்பிடம் எடுக்கும் தாமரை இல் அகத்து உள்ளது மடுக்கும் தாமரை மத்தகத்தே செல முடுக்கும் தாமரை முச்சதுரத்தே மேல் #1145 முச்சதுரத்தே எழுந்த முளை சுடர் எ சதுரத்தும் இடம் பெற ஓடிட கைச்சதுரத்து கடந்து உள் ஒளிபெற எ சதுரத்தும் இருந்தனள் தானே மேல் #1146 இருந்தனள் தன் முகம் ஆறொடு நாலாய் பரந்தன வாயு திசைதிசை-தோறும் குவிந்தன முத்தின் முக ஒளி நோக்கி நடந்தது தேறல் அதோ முகம் அம்பே மேல் #1147 அம்பு அன்ன கண்ணி அரிவை மனோன்மணி கொம்பு அன்ன நுண் இடை கோதை குலாவிய செம்பொன் செய் யாக்கை செறி கமழ் நாள்-தொறும் நம்பனை நோக்கி நவிலுகின்றாளே மேல் #1148 நவிலும் பெரும் தெய்வம் நால்மறை சத்தி துகில் உடை ஆடை நிலம் பொதி பாதம் அகிலமும் அண்டம் முழுதும் செம்மாந்து புகலும் முச்சோதி புனைய நிற்பாளே மேல் #1149 புனைய வல்லாள் புவனத்து இறை எங்கள் வனைய வல்லாள் அண்ட கோடிகள் உள்ளே புனைய வல்லாள் மண்டலத்து ஒளி-தன்னை புனைய வல்லாளையும் போற்றி என்பேனே மேல் #1150 போற்றி என்பேன் புவனாபதி அம்மை என் ஆற்றல் உள் நிற்கும் அருந்தவ பெண்பிள்ளை சீற்றம் கடிந்த திருநுதல் சேயிழை கூற்றம் துரக்கின்ற கோள் பைந்தொடியே மேல் #1151 தொடி ஆர் தட கை சுகோதய சுந்தரி வடிவு ஆர் திரிபுரையாம் மங்கை சங்கை செடி ஆர் வினை கெட சேர்வரை என்று என்று அடியார் வினை கெடுத்து ஆதியும் ஆமே மேல் #1152 மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி பல் இசை பாவை பயன் தரு பைங்கொடி புல் இசை பாவையை போக துரந்திட்டு வல் இசை பாவை மனம் புகுந்தாளே மேல் #1153 தாவித்த அ பொருள் தான் அவன் எம் இறை பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து மேவி பராசத்தி மேலொடு கீழ் தொடர்ந்து ஆவிக்கும் அ பொருள் தான் அது தானே மேல் #1154 அது இது என்பார் அவனை அறியார் கதி வர நின்றது ஓர் காரணம் காணார் மது விரி பூங்குழல் மா மங்கை நங்கை திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே மேல் #1155 நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு தான் இதழ் ஆனவை நாற்பத்துநால் உள பால் இதழ் ஆனவள் பங்கயம் மூலமாய் தான் இதழ் ஆகி தரித்திருந்தாளே மேல் #1156 தரித்திருந்தாள் அவள் தன் ஒளி நோக்கி விரித்திருந்தாள் அவள் வேதப்பொருளை குறித்திருந்தாள் அவள் கூறிய ஐந்து மறித்திருந்தாள் அவள் மாது நல்லாளே மேல் #1157 மாது நல்லாளும் மணாளன் இருந்திட பாதி நல்லாளும் பகவனும் ஆனது சோதி நல்லாளை துணைப்பெய்ய வல்லிரேல் வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே மேல் #1158 வெள்ளடையான் இரு மா மிகு மா மலர் கள் அடையார் அ கமழ் குழலார் மனம் அள் அடையானும் வகை திறமாய் நின்ற பெண் ஒரு பாகம் பிறவி பெண் ஆமே மேல் #1159 பெண் ஒரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது பெண் உடை ஆண் என் பிறப்பு அறிந்து ஈர்க்கின்ற பெண் உடை ஆணிடை பேச்சு அற்றவாறே மேல் #1160 பேச்சு அற்ற நல் பொருள் காணும் பெருந்தகை மாச்சு அற்ற சோதி மனோன்மணி மங்கை ஆம் காச்சு அற்ற சோதி கடவுளுடன் புணர்ந்து ஆச்சு அற்று என் உள் புகுந்து ஆலிக்கும் தானே மேல் #1161 ஆலிக்கும் கன்னி அரிவை மனோன்மணி பாலித்து உலகில் பரந்து பெண் ஆகும் வேலை தலைவியை வேத முதல்வியை ஆலித்து ஒருவன் உகந்து நின்றானே மேல் #1162 உகந்து நின்றான் நம்பி ஒண்ணுதல் கண்ணோடு உகந்து நின்றான் நம்முழை புக நோக்கி உகந்து நின்றான் இ உலகங்கள் எல்லாம் உகந்து நின்றான் அவன் அன்றோ தொகுத்தே மேல் #1163 குத்து முலைச்சி குழைந்த மருங்கினள் துத்தி விரிந்த சுணங்கினள் தூ மொழி புத்தக சீறடி பாவை புணர்வினை தொத்த கருத்து அது சொல்லகிலேனே மேல் #1164 சொல்ல ஒண்ணாத அழல் பொதி மண்டலம் சொல்ல ஒண்ணாது திகைத்து அங்கு இருப்பார்கள் வெல்ல ஒண்ணாத வினை தனிநாயகி மல்ல ஒண்ணாத மனோன்மணி தானே மேல் #1165 தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும் தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழை பொழி தையலுமாய் நிற்கும் தானே வடவரை தண் கடல் கண்ணே மேல் #1166 கண் உடையாளை கலந்து அங்கு இருந்தவர் மண் உடையாரை மனித்தரில் கூட்டு ஒணா பண் உடையார்கள் பதைப்பு அற்று இருந்தவர் விண் உடையார்களை மேலுற கண்டே மேல் #1167 கண்டு எண் திசையும் கலந்து வரும் கன்னி பண்டு எண் திசையும் பராசத்தியாய் நிற்கும் விண்டு எண் திசையும் விரை மலர் கைக்கொண்டு தொண்டு எண் திசையும் தொழ நின்ற கன்னியே மேல் #1168 கன்னி ஒளி என நின்ற இ சந்திரன் மன்னி இருக்கின்ற மாளிகை செந்நிறம் சென்னி இருப்பிடம் சேர் பதினாறுடன் பன்னி இருப்ப பராசத்தி ஆமே மேல் #1169 பராசத்தி என்றென்று பல் வகையாலும் தரா சத்தி ஆன தலை பிரமாணி இராசத்தி யாமள ஆகமத்தாள் ஆகும் குராசத்தி கோலம் பல உணர்ந்தேனே மேல் #1170 உணர்ந்து உலகு ஏழையும் யோகினி சத்தி உணர்ந்து உயிராய் நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்து ஒரு காலத்து போகம் அது ஆதி இணைந்து பரம் என்று இசைந்து இது தானே மேல் #1171 இது அ பெருந்தகை எம்பெருமானும் பொது அ கல்வியும் போகமும் ஆகி மதுவ குழலி மனோன்மணி மங்கை அது அ கல்வியுள் ஆயுழி யோகமே மேல் #1172 யோக நல் சத்தி ஒளிபீடம் தான் ஆகும் யோக நல் சத்தி ஒளிமுகம் தெற்கு ஆகும் யோக நல் சத்தி உதரநடு ஆகும் யோக நல் சத்தி தாள் உத்தரம் தேரே மேல் #1173 தேர்ந்து எழு மேல் ஆம் சிவன் அங்கியோடு உற வார்ந்து எழு மாயையும் மந்தமதாய் நிற்கும் ஓர்ந்து எழு விந்துவும் நாதமும் ஓங்கிட கூர்ந்து எழுகின்றனள் கோல்வளைதானே மேல் #1174 தான் ஆன ஆறு எட்டு அது ஆம் பரைக்கு உள்மிசை தான் ஆன ஆறும் ஈரேழும் சமகலை தான் ஆன விந்து சகமே பரம் எனும் தான் ஆம் பரவாதனை என தக்கதே மேல் #1175 தக்க பராவித்தை தான் இருபானேழில் தக்கு எழு ஓரும் திரம் சொல்ல சொல்லவே மிக்கிடும் எண் சத்தி வெண் நிற முக்கண்ணி தொக்க கதையோடு தொல் முத்திரையாளே மேல் #1176 முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள் தத்துவமாய் அல்லவாய சகலத்தள் வைத்த பராபரனாய பராபரை சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே மேல் #1177 கொங்கு ஈன்ற கொம்பின் குரும்பை குலாம் கன்னி பொங்கிய குங்குமத்து ஒளி பொருந்தினள் அங்குச பாசம் எனும் அகிலம் கனி தங்கும் அவள் மனை தான் அறிவாயே மேல் #1178 வாயும் மனமும் கடந்த மனோன்மணி பேயும் கணமும் பெரிது உடை பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரசனுக்கு தாயும் மகளும் தாரமும் ஆமே மேல் #1179 தாரமும் ஆகுவள் தத்துவமாய் நிற்பள் காரண காரியம் ஆகும் கலப்பினள் பூரண விந்து பொதிந்த புராதனி பார் அளவாம் திசை பத்து உடையாளே மேல் #1180 பத்து முகம் உடையாள் நம் பராசத்தி வைத்தனள் ஆறங்கம் நாலுடன் தான் வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாள் எம் நேரிழை கூறே மேல் #1181 கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறியளாய் உலகு ஏழும் திகழ்ந்தவள் ஆரிய நங்கை அமுத பயோதரி பேருயிராளி பிறிவு அறுத்தாளே மேல் #1182 பிறிவு இன்றி நின்ற பெருந்தகை பேதை குறி ஒன்றி நின்றிடும் கோமள கொம்பு பொறி ஒன்றி நின்று புணர்ச்சி செய்து ஆங்கே அறிவு ஒன்ற நின்றனள் ஆருயிர் உள்ளே மேல் #1183 உள்ளத்தின் உள்ளே உடன் இருந்தவர் ஐவர்-தம் கள்ளத்தை நீக்கி கலந்து உடனே புல்கி கொள்ள தவநெறி கூடிய இன்பத்து வள்ளல் தலைவி மருட்டி புரிந்தே மேல் #1184 புரிந்து அருள்செய்கின்ற போகமா சத்தி இருந்து அருள்செய்கின்ற இன்பம் அறியார் பொருந்தி இருந்த புதல்வி பூ வண்ணத்து இருந்த இலக்கில் இனிது இருந்தாளே மேல் #1185 இருந்தனள் ஏந்திழை என் உளம் மேவி திருந்து புணர்ச்சியில் தேர்ந்து உணர்ந்து உன்னி நிரந்தரம் ஆகிய நிர்_அதிசயமொடு பொருந்த இலக்கில் புணர்ச்சி அதுவே மேல் #1186 அது இது என்னும் அவாவினை நீக்கி துதி அது செய்து சுழியுற நோக்கில் விதி அது தன்னையும் வென்றிடல் ஆகும் மதிமலராள் சொன்ன மண்டலம் மூன்றே மேல் #1187 மூன்று மண்டலம் மோகினி சேர்விடம் ஏன்று உள ஈராறு எழுகலை உச்சியில் தோன்றும் இலக்குற ஆகுதல் மா மாயை ஏன்றனள் ஏழிரண்டு இந்துவொடு ஈறே மேல் #1188 இந்துவின்-நின்று எழு நாதம் இரவி போல் வந்து பின் நாக்கின் மதித்து எழும் கண்டத்தில் உந்திய சோதி இதயத்து எழும் ஒலி இந்துவின் மேலுற்ற ஈறு அது தானே மேல் #1189 ஈறு அது தான் முதல் எண்ணிரண்டு ஆயிரம் மாறுதல் இன்றி மனோவசமாய் எழில் தூறு அது செய்யும் சுகந்த சுழி அது பேறு அது செய்து பிறந்திருந்தாளே மேல் #1190 இருந்தனள் ஏந்திழை ஈறு அது இலாக திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணி பொருந்து புவனங்கள் போற்றி செய்து ஏத்தி வருந்த இருந்தனள் மங்கை நல்லாளே மேல் #1191 மங்கையும் மாரனும் தம்மொடு கூடி நின்று அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர் கொங்கை நல்லாளும் குமாரர்கள் ஐவரும் தங்களின் மேவி சடங்கு செய்தாரே மேல் #1192 சடங்கு அது செய்து தவம்புரிவார்கள் கடம்-தனில் உள்ளே கருதுவராகில் தொடர்ந்து எழு சோதி துளை வழி ஏறி அடங்கிடும் அன்பினது ஆயிழை-பாலே மேல் #1193 பாலித்து இருக்கும் பனிமலர் ஆறினும் ஆலித்து இருக்கும் அவற்றின் அகம் படி சீலத்தை நீக்க திகழ்ந்து எழு மந்திரம் மூலத்து மேல் அது முத்து அது ஆமே மேல் #1194 முத்து வதனத்தி முகம்-தொறும் முக்கண்ணி சத்தி சதிரி சகளி சடாதரி பத்துக்கரத்தி பராபரன் பைந்தொடி வித்தகி என் உள்ளம் மேவி நின்றாளே மேல் #1195 மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ் எரி தாவிய நல் பத தண் மதியம் கதிர் மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார் ஓவினும் மேலிடும் உள் ஒளி ஆமே மேல் #1196 உள் ஒளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள் வெள் ஒளி அங்கியின் மேவி அவரொடும் கள் அவிழ் கோதை கலந்து உடனே நிற்கும் கொள்ள விசுத்தி கொடி அமுதம் ஆமே மேல் #1197 கொடியது இரேகை குரு உள்ளிருப்ப படியது வாருனை பைங்கழல் ஈசன் வடிவு அது ஆனந்தம் வந்து முறையே இடு முதல் ஆறங்கம் ஏந்திழையாளே மேல் #1198 ஏந்திழையாளும் இறைவர்கள் மூவரும் காந்தாரம் ஆறும் கலை முதல் ஈரெட்டும் ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும் சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே மேல் #1199 சத்தி என்பாள் ஒரு சாதக பெண்பிள்ளை முத்திக்கு நாயகி என்பது அறிகிலர் பத்தியை பாழில் உகுத்த அப்பாவிகள் கத்திய நாய் போல் கதறுகின்றாரே மேல் #1200 ஆரே திருவின் திருவடி காண்பார்கள் நேரே நின்று ஓதி நினையவும் வல்லார்க்கு கார் ஏர் குழலி கமல மலர் அன்ன சீர் ஏயும் சேவடி சிந்தைவைத்தாளே மேல் #1201 சிந்தையில்வைத்து சிராதியிலே வைத்து முந்தையில் வைத்து தம் மூலத்திலே வைத்து நிந்தையில் வையா நினைவு-அதிலே வைத்து சந்தையில் வைத்து சமாதி செய்வீரே மேல் #1202 சமாதி செய்வார்கட்கு தான் முதல் ஆகி சிவாதியில் ஆரும் சிலைநுதலாளை நவாதியில் ஆக நயந்து அது ஓதில் உவாதி அவளுக்கு உறைவிலது ஆமே மேல் #1203 உறைபதி-தோறும் முறைமுறை மேவி நறை கமழ் கோதையை நாள்-தொறும் நண்ணி மறையுடனே நிற்கும் மற்று உள்ள நான்கும் இறை தினை போதினில் எய்திடல் ஆமே மேல் #1204 எய்திடல் ஆகும் இருவினையின் பயன் கொய் தளிர் மேனி குமரி குலாம் கன்னி மை தவழ் கண்ணி நல் மாதுரி கையொடு கை தவம் இன்றி கருத்துறும்வாறே மேல் #1205 கருத்துறும் காலம் கருதும் மனமும் திருத்தி இருந்தவை சேரும் நிலத்து ஒருத்தியை உன்னி உணர்ந்திடும் மண் மேல் இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆகுமே மேல் #1206 ஆமை ஒன்று ஏறி அகம்படியான் என ஓம என்று ஓதி எம் உள்ளொளியாய் நிற்கும் தாம நறும் குழல் தையலை கண்ட பின் சோம நறு மலர் சூடி நின்றாளே மேல் #1207 சூடிடும் அங்குச பாச துளை வழி கூடும் இரு வளை கோலக்கை குண்டிகை நாடும் இருபத நல் நெடு ருத்திரம் ஆடிடும் சீர் புனை ஆடகம் ஆமே மேல் #1208 ஆம் அயன் மலரான் ஈசன் சதாசிவன் தாம் அடி சூடி நின்று எய்தினர் தம் பதம் காமனும் சாமன் இரவி கனல் உடன் சோமனும் வந்து அடி சூட நின்றாளே மேல் #1209 சூடும் இளம்பிறை சூலி கபாலினி நீடும் இளம் கொடி நின் மலி நேரிழை நாடி நடு இடை ஞானம் உருவ நின்று ஆடும் அதன் வழி அண்ட முதல்வியே மேல் #1210 அண்டம் முதலாய் அவனி பரியந்தம் கண்டது ஒன்று இல்லை கனம் குழை அல்லது கண்டனும் கண்டியும் ஆகிய காரணம் குண்டிகை கோளிகை கண்ட அதனாலே மேல் #1211 ஆலம் உண்டான் அமுது ஆங்கு அவர் தம் பதம் சால வந்து எய்தும் தவத்து இன்பம் தான் வரும் கோலி வந்து எய்தும் குவிந்த பதவையோடு ஏல வந்து ஈண்டி இருந்தனள் மேலே மேல் #1212 மேலாம் அருந்தவம் மேல் மேலும் வந்து எய்த காலால் வருந்தி கழிவர் கணத்திடை நாலாம் நளின நின்று ஏத்தி நட்டு உச்சி தன் மேலாம் எழுத்தினள் ஆமத்தினாளே மேல் #1213 ஆமத்து இனிது இருந்த அன்ன மயத்தினள் ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினள் நாம நமசிவ என்று இருப்பார்க்கு நேம துணைவி நிலாவி நின்றாளே மேல் #1214 நிலாமயம் ஆகிய நீள் படிகத்தின் சிலாமயம் ஆகும் செழும் தரளத்தின் சுலாமயம் ஆகும் சுரி குழல் கோதை கலாமயம் ஆக கலந்து நின்றாளே மேல் #1215 கலந்து நின்றாள் கன்னி காதலனோடும் கலந்து நின்றாள் உயிர் கற்பனை எல்லாம் கலந்து நின்றாள் கலை ஞானங்கள் எல்லாம் கலந்து நின்றாள் கன்னி காலமும் ஆயே மேல் #1216 காலவி எங்கும் கருத்தும் அருத்தியும் கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம் அது ஆமே மேல் #1217 பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி ஏகம் இருதயம் ஈரைந்து திண் புயம் மோக முகம் ஐந்து முக்கண் முகம்-தொறும் நாகம் உரித்து நடம்செய்யும் நாதர்க்கே மேல் #1218 நாதனும் நாலொன்பதின்மரும் கூடி நின்று ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உள அவை வேதனும் ஈரொன்பதின்மரும் மேவி நின்று ஆதியும் அந்தமும் ஆகி நின்றாளே மேல் #1219 ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள் ஆகி நின்றார்களில் ஆருயிராம் அவள் ஆகி நின்றாளுடன் ஆகிய சக்கரத்து ஆகி நின்றான் அவன் ஆயிழை பாடே மேல் #1220 ஆயிழையாளொடும் ஆதி பரம் இடம் ஆயதொர் அண்டவை ஆறும் இரண்டு உள ஆய மனம்-தொறும் அறுமுகம் அவை தனில் ஏய வார் குழலி இனிது நின்றாளே மேல் #1221 நின்றனள் நேரிழையோடுடன் நேர்பட இன்று என் அகம்படி ஏழும் உயிர்ப்பு எய்தும் துன்றிய ஓர் ஒன்பதின்மரும் சூழலுள் ஒன்று உயர் ஓதி உணர்ந்து நின்றாளே மேல் #1222 உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே மேல் #1223 ஆம் அது அங்கியும் ஆதியும் ஈசனும் மா மது மண்டலம் மாருதம் ஆதியும் ஏமது சீவன் சிகை அங்கு இருண்டிட கோமலர் கோதையும் கோதண்டம் ஆகுமே மேல் #1224 ஆகிய கோதண்டத்து ஆகும் மனோன்மணி ஆகிய ஐம்பது உடனே அடங்கிடும் ஆகும் பராபரையோடு அ பரையவள் ஆகும் அவள் ஐங்கருமத்தள் தானே மேல் #1225 தான் நிகழ் மோகினி சார்வான யோகினி போன மயம் உடையார் அடி போற்றுவர் ஆனவர் ஆவியின் ஆகிய வச்சி வந்து ஆனாம் பரசிவம் மேலது தானே மேல் #1226 தான் அந்தம் மேலே தரும் சிகை தன்னுடன் ஆனந்த மோகினி ஆம் பொன் திருவொடு மோனையில் வைத்து மொழிதரு கூறது ஆனவை ஓம் எனும் அ உயிர் மார்க்கமே மேல் #1227 மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி யார்க்கும் அறிய அரியவள் ஆகும் வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே மேல் #1228 நுண்ணறிவு ஆகும் நுழை புலன் மாந்தர்க்கு பின் அறிவு ஆகும் பிரான் அறி அ தடம் செந்நெறி ஆகும் சிவகதி சேர்வார்க்கு தன் நெறி ஆவது சன்மார்க்கம் ஆமே மேல் #1229 சன்மார்க்கம் ஆக சமைதரு மார்க்கமும் துன்மார்க்கம் ஆனவை எல்லாம் துரந்திடும் நன்மார்க்க தேவரும் நல்நெறி ஆவதும் சன்மார்க்க தேவியும் சத்தி என்பாளே மேல் #1230 சத்தியும் நானும் சயம்புவும் அல்லது முத்தியை யாரும் முதல் அறிவார் இல்லை அத்தி மேல் வித்து இடில் அத்தி பழுத்த-கால் மத்தில் ஏற வழி அதுவாமே மேல் #1231 அது இது என்ற அவமே கழியாதே மது விரி பூங்குழல் மங்கை நல்லாளை பதி மது மேவி பணிய வல்லார்க்கு விதி வழி தன்னையும் வென்றிடல் ஆமே மேல் #1232 வென்றிடல் ஆகும் விதி வழி தன்னையும் வென்றிடல் ஆகும் வினை பெரும் பாசத்தை வென்றிடல் ஆகும் விழை புலன்-தன்னையும் வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே மேல் #1233 ஓர் ஐம்பதின்மருள் ஒன்றியே நின்றது பாரம்பரியத்து வந்த பரம் இது மாரன் குழலாளும் அ பதி தானும் முன் சாரும் பதம் இது சத்தியம் ஆமே மேல் #1234 சத்தியினோடு சயம்புவும் நேர்படில் வித்து அது இன்றியே எல்லாம் விளைந்தன அத்தகை ஆகிய ஐம்பத்தொருவரும் சித்தது மேவி திருந்திடுவாரே மேல் #1235 திருந்து சிவனும் சிலைநுதலாளும் பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த அருந்திட அ இடம் ஆரமுது ஆக இருந்தனள் தான் அங்கு இளம்பிறை என்றே மேல் #1236 என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார் அன்று அது ஆகுவர் தார் குழலாளொடு மன் தரு கங்கை மதியொடு மாதவர் துன்றிய தாரகை சோதி நின்றாளே மேல் #1237 நின்றனள் நேரிழையாளொடு நேர்பட ஒன்றிய உள் ஒளியாலே உணர்ந்தது சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே மேல் #1238 தோன்றிடும் வேண்டுரு ஆகிய தூய் நெறி ஈன்றிடும் ஆங்கு அவள் எய்திய பல் கலை மான் தரு கண்ணியும் மாரனும் வந்து எதிர் சான்று அது ஆகுவர் தாம் அவள் ஆயுமே மேல் #1239 ஆயும் அறிவும் கடந்து அணு வாரணி மாயம் அது ஆகி மதோ மதி ஆயிடும் சேய அரிவை சிவானந்த சுந்தரி நேயம் அதா நெறி ஆகி நின்றாளே மேல் #1240 நெறி அதுவாய் நின்ற நேரிழையாளை பிறிவது செய்யாது பிஞ்ஞகனோடும் குறியது கூடி குறிக்கொண்டு நோக்கும் அறிவொடும் ஆங்கே அடங்கிடல் ஆமே மேல் #1241 ஆம் அயன் மால் அரன் ஈசன் மால் ஆம் கதி ஓம் மயம் ஆகிய ஒன்பதும் ஒன்றிட தேம் மயன் நாளும் தெனாதென என்றிடும் மா மயம் ஆனது வந்து எய்தலாமே மேல் #1242 வந்து அடி போற்றுவர் வானவர் தானவர் இந்து முதலாக எண்திசையோர்களும் கொந்து அணியும் குழலாளொடு கோனையும் வந்தனை செய்யும் வழி நவில்வீரே மேல் #1243 நவிற்று நல் மந்திரம் நல் மலர் தூபம் கவற்றிய கந்தம் கவர்ந்து எரி தீபம் பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை அவி கொண்ட சோதிக்கு ஓர் அர்ச்சனை தானே மேல் #1244 தாங்கி உலகில் தரித்த பராபரன் ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பு_இலி பூங்கிளி தங்கும் புரிகுழலாள் அன்று பாங்குடன் ஏற்ப பராசத்தி போற்றே மேல் #1245 பொன் கொடி மாதர் புனை கழல் ஏத்துவர் அற்கொடி மாது உமை ஆர்வ தலைமகள் நல் கொடி மாதை நயனங்கள் மூன்று உடை வில் கொடி மாதை விரும்பி விளங்கே மேல் #1246 விளங்கு ஒளி ஆய விரிசுடர் மாலை துளங்கு பராசத்தி தூங்கு இருள் நீங்க களம் கொள் மணியுடன் காம வினோதம் உளம் கொள் இலம்பியம் ஒன்று தொடரே மேல் #1247 தொடங்கி உலகினில் சோதி மணாளன் அடங்கி இருப்பது என் அன்பின் பெருமை விடம் கொள் பெரும் சடை மேல் வரு கங்கை ஒடுங்கி உமையொடும் ஓர் உரு ஆமே மேல் #1248 உருவம் பல உயிராய் வல்ல நந்தி தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில் புரிவளைக்கைச்சி எம் பொன் அணி மாதை மருவி இறைவன் மகிழ்வன மாயமே மேல் #1249 மாயம் புணர்க்கும் வளர்சடையான் அடி தாயம் புணர்க்கும் சலநதி அமலனை காயம் புணர்க்கும் கலவியுள் மா சத்தி ஆயம் புணர்க்கும் அ யோனியும் ஆமே மேல் #1250 உணர்ந்து ஒழிந்தேன் அவனாம் எங்கள் ஈசனை புணர்ந்து ஒழிந்தேன் புவனாபதியாரை அணைந்து ஒழிந்தேன் எங்கள் ஆதி-தன் பாதம் பிணைந்து ஒழிந்தேன் தன் அருள்பெற்றவாறே மேல் #1251 பெற்றான் பெருமை பெரிய மனோன்மணி நற்றாள் இறைவனே நற்பயனே என்பர் கற்றான் அறியும் கருத்து அறிவார்கட்கு பொன் தாள் உலகம் புகல் தனியாமே மேல் #1252 தனிநாயகன்-தனோடு என் நெஞ்சம் நாடி இனியார் இருப்பிடம் ஏழ் உலகு என்பர் பனியான் மலர்ந்த பைம் போதுகை ஏந்தி கனியாய் நினைவது என் காரணம் அம்மையே மேல் #1253 அம்மனை அம்மை அரிவை மனோன்மணி செம்மனை செய்து திருமங்கையாய் நிற்கும் இ மனை செய்த இ நில மங்கையும் அம்மனை ஆகி அமர்ந்து நின்றாளே மேல் #1254 அம்மையும் அத்தனும் அன்புற்றது அல்லது அம்மையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அம்மையோடு அத்தனும் யானும் உடன் இருந்து அம்மையொடு அத்தனை யான் புரிந்தேனே மேல் #1255 ஏரொளி உள் எழு தாமரை நால் இதழ் ஏரொளி விந்துவினால் எழு நாதம் ஆம் ஏரொளி அ கலை எங்கும் நிறைந்த பின் ஏரொளி சக்கரம் அ நடு வன்னியே மேல் #1256 வன்னி எழுத்து அவை மா பலம் உள்ளன வன்னி எழுத்து அவை வானுற ஓங்கின வன்னி எழுத்து அவை மா பெரும் சக்கரம் வன்னி எழுத்து இடுவார் அது சொல்லுமே மேல் #1257 சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம் சொல்லிடும் அ பதி அ எழுத்து ஆவன சொல்லிடு நூறொடு நாற்பத்துநால் உரு சொல்லிடும் சக்கரமாய் வரும் மேல் அதே மேல் #1258 மேல் வரும் விந்துவும் அ எழுத்தாய் விடும் மேல் வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன் மேல் வரும் அ பதி அ எழுத்தே வரின் மேல் வரும் சக்கரமாய் வரும் ஞாலமே மேல் #1259 ஞாலம் அதுவாக விரிந்தது சக்கரம் ஞாலம் அதுவாயிடும் விந்துவும் நாதமும் ஞாலம் அதுவாயிடும் அ பதி யோசனை ஞாலம் அதுவாக விரிந்தது எழுத்தே மேல் #1260 விரிந்த எழுத்து அது விந்துவும் நாதமும் விரிந்த எழுத்து அது சக்கரமாக விரிந்த எழுத்து அது மேல் வரும் பூமி விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே மேல் #1261 அப்பு அதுவாக விரிந்தது சக்கரம் அப்பினில் அப்புறம் அ அனல் ஆயிடும் அப்பினில் அப்புறம் மாருதமாய் எழ அப்பினில் அப்புறம் ஆகாசம் ஆமே மேல் #1262 ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில் ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்து அவை ஆகாச அ எழுத்து ஆகி சிவானந்தம் ஆகாச அக்கரம் ஆவது அறி-மினே மேல் #1263 அறிந்திடும் சக்கரம் ஐயைந்து விந்து அறிந்திடும் சக்கரம் நாத முதலா அறிந்திடும் அ எழுத்து அ பதியோர்க்கும் அறிந்திடும் அ பகலோன் நிலையாமே மேல் #1264 அ முதல் ஆறும் அ ஆதி எழுத்து ஆகும் அ முதல் ஆறும் அ அம்மை எழுத்து ஆகும் இ முதல் நாலும் இருந்திடும் வன்னியே இ முதல் ஆகும் எழுத்து அவை எல்லாம் மேல் #1265 எழுத்து அவை நூறொடு நாற்பத்துநாலும் எழுத்து அவை ஆறு அது அ நடு வன்னி எழுத்து அவை அ நடு அ சுடர் ஆகி எழுத்து அவைதான் முதல் அந்தமும் ஆமே மேல் #1266 அந்தமும் ஈறு முதலா நவை அற அந்தமும் அ பதினெட்டுடன் ஆதலால் அந்தமும் அ பதின்மூன்றில் அமர்ந்த பின் அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே மேல் #1267 ஆவினம் ஆனவை முந்நூற்றறுபது ஆவினம் அ பதினைந்து இனமாயுறும் ஆவினம் அ பதினெட்டுடனாயுறும் அவினம் அ கதிரோன் வர வந்தே மேல் #1268 வந்திடும் ஆகாசம் ஆறு அது நாழிகை வந்திடும் அக்கரம் முப்பது இராசியும் வந்திடும் நாள் அது முந்நூற்றறுபதும் வந்திடும் ஆண்டு வகுத்து உரை அவ்வியே மேல் #1269 அவ்வினம் மூன்றும் அ ஆடு அதுவாய் வரும் எவ்வினம் மூன்றும் கிளர் தரு ஏரதாம் சவ்வினம் மூன்றும் தழைத்திடும் தண்டதாம் இ இனம் மூன்றும் இராசிகள் எல்லாம் மேல் #1270 இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்த பின் இராசியுள் சக்கரம் என்று அறி விந்துவாம் இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்த பின் இராசியுள் சக்கரம் நின்றிடுமாறே மேல் #1271 நின்றிடு விந்து என்று உள்ள எழுத்து எல்லாம் நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன் நின்றிடும் அ பதி அ எழுத்தே வரில் நின்றிடும் அப்புறம் தாரகை ஆனதே மேல் #1272 தாரகை ஆக சமைந்தது சக்கரம் தாரகை மேல் ஓர் தழைத்தது பேரொளி தாரகை சந்திரன் நல் பகலோன் வர தாரகை தாரகை தாரகை கண்டதே மேல் #1273 கண்டிடும் சக்கரம் விந்து வளர்வதாம் கண்டிடும் நாதமும் தன் மேல் எழுந்திட கண்டிடும் வன்னி கொழுந்து அன ஒத்த பின் கண்டிடும் அப்புறம் கார் ஒளி ஆனதே மேல் #1274 கார் ஒளி அண்டம் பொதிந்து உலகு எங்கும் பார் ஒளி நீர் ஒளி சார் ஒளி கால் ஒளி வான் ஒளி ஒக்க வளர்ந்து கிடந்த பின் நேர் ஒளி ஒன்றாய் நிறைந்து அங்கு நின்றதே மேல் #1275 நின்றது அண்டமும் நீளும் புவி எலாம் நின்ற இ அண்டம் நிலைபெற கண்டிட நின்ற இ அண்டமும் மூல மலம் ஒக்கும் நின்ற இ அண்டம் பலமது விந்துவே மேல் #1276 விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திடில் விந்துவும் நாதமும் ஒக்க விரை அதாம் விந்தில் குறைந்திடு நாதம் எழுந்திடில் விந்துவை எண்மடி கொண்டது வீசமே மேல் #1277 வீசம் இரண்டு உள நாதத்து எழுவன வீசமும் ஒன்று விரைந்திடும் மேலுற வீசமும் நாதமும் எழுந்து உடன் ஒத்த பின் வீசமும் விந்து விரிந்தது காணுமே மேல் #1278 விரிந்தது விந்துவும் கெட்டது வீசம் விரிந்தது விந்துவும் நாதத்து அளவினில் விரிந்தது உள் கட்டம் எட்டெட்டும் ஆகில் விரிந்தது விந்து விரையது ஆமே மேல் #1279 விரையது விந்து விளைந்தன எல்லாம் விரையது விந்து விளைந்த உயிரும் விரையது விந்து விளைந்த இ ஞாலம் விரையது விந்து விளைந்தவன் தாளே மேல் #1280 விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே மேல் #1281 மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில் தந்திரத்து உள் எழுத்து ஒன்று எரிவட்டம் ஆம் கந்தரத்து உள்ளும் இரேகையில் ஒன்று இல்லை பந்தம் அது ஆகும் பிரணவம் உன்னிடே மேல் #1282 உன்னிட்ட வட்டத்தில் ஒத்து எழு மந்திரம் பின்னிட்ட ரேகை பிழைப்பது தான் இல்லை தன்னிட்டு எழுந்த தகைப்பு அற பின் நிற்க பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே மேல் #1283 பார்க்கலும் ஆகும் பகை அறு சக்கரம் காக்கலும் ஆகும் கருத்தில் தடம் எங்கும் நோக்கலும் ஆகும் நுணுக்கு அற்ற நுண்பொருள் ஆக்கலும் ஆகும் அறிந்து கொள்வார்க்கே மேல் #1284 அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து விரிந்திடும் சக்கரம் மேல் எழுத்து அம்மை பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும் குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே மேல் #1285 கூறிய சக்கரத்து உள் எழு மந்திரம் மாறு இயல்பு ஆக அமைந்து விரிந்திடும் தேறிய அஞ்சுடன் சேர்ந்து எழு மாரணம் ஆறு இயல்பாக மதித்து கொள்வார்க்கே மேல் #1286 மதித்திடும் அம்மையும் மா மாதும் ஆகும் மதித்திடும் அம்மையும் அம் கனல் ஒக்கும் மதித்து அங்கு எழுந்தவை காரணமாகில் கொதித்து அங்கு எழுந்தவை கூடகிலாவே மேல் #1287 கூடிய தம்பனம் மாரணம் வசியம் ஆடு இயல்பாக அமைந்து செறிந்திடும் பாடி உள் ஆக பகைவரும் வந்துறார் தேடி உள் ஆக தெளிந்து கொள்வார்க்கே மேல் #1288 தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே அளிந்த அகாரத்தை அ நடு ஆக்கி குளிர்ந்த வரனை கூடி உள் வைத்து வளிந்து அவை அங்கு எழு நாடிய-காலே மேல் #1289 கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம் ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய் பாலித்து எழுந்து பகை அற நின்ற பின் மாலுற்ற மந்திரம் மாறி கொள்வார்க்கே மேல் #1290 கொண்ட இ மந்திரம் கூத்தன் எழுத்ததாய் பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின் மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் இன்றும் இதயத்து எழுந்து நம எனே மேல் #1291 அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு அறிந்த அ சத்தம் இ மேல் இவை குற்றம் அறிந்தவை ஒன்றுவிட்டு ஒன்று பத்து ஆக அறிந்து வலம் அது ஆக நடவே மேல் #1292 நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனை கண் அது போக்கி தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே மேல் #1293 ஆ மேவ பூண்டு அருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டு அங்கு ஆமே தமருகம் பாசமும் கையது ஆமே சிரத்தொடு வாளது கையே மேல் #1294 கை அவை ஆறும் கருத்துற நோக்கிடும் மெய் அது செம்மை விளங்கு வயிரவன் துய்யர் உளத்தில் துளங்கு மெய்யுற்றதாய் பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே மேல் #1295 பூசனை செய்ய பொருந்தி ஓர் ஆயிரம் பூசனை செய்ய மதுவுடன் ஆடுமால் பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே மேல் #1296 வேண்டியவாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் வேண்டியவாறு வரும் வழி நீ நட வேண்டியவாறு அதுவாகும் கருத்தே மேல் #1297 சாம்பவி மண்டல சக்கரம் சொல்லிடில் ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேலதாம் காண்பதம் தத்துவம் நாலுள் நயனமும் நாம் பதம் கண்ட பின் நாடறிந்தோமே மேல் #1298 நாடு அறி மண்டலம் நல்ல இ குண்டத்து கோடு அற வீதியும் கொடர்ந்து உள் இரண்டழி பாடு அறி பத்துடன் ஆறு நடு வீதி ஏடு அற நாலைந்து இடவகை ஆமே மேல் #1299 நாலைந்து இடவகை உள்ளது ஓர் மண்டலம் நாலு நல் வீதியுள் நல்ல இலிங்கமாய் நாலு நல் கோணமும் நல் நால் இலிங்கமாய் நாலு நல் பூ நடு நண்ணல் அவ்வாறே மேல் #1300 ஆறிருபத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும் வேறு உருவாக விளைந்து கிடந்தது தேறி நிருமல சிவாயநம என்று கூறு-மின் கூறில் குறைகளும் இல்லையே மேல் #1301 குறைவதும் இல்லை குரை கழல் கூடும் அறைவதும் ஆரணம் அ எழுத்து ஆகி திறம் அது ஆக தெளிய வல்லார்க்கு இறவு இல்லை என்று என்று இயம்பினர் காணே மேல் #1302 காணும் பொருளும் கருதிய தெய்வமும் பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும் ஊணும் உணர்வும் உறக்கமும் தான் ஆக காணும் கனகமும் காரிகை ஆமே மேல் #1303 ஆமே எழுத்து அஞ்சு ஆம் வழியே ஆக போமே அது தானும் போம் வழியே போனால் நாமே நினைத்தன செய்யலும் ஆகும் பார் மேல் ஒருவர் பகை இல்லை தானே மேல் #1304 பகை இல்லை என்றும் பணிந்தவர்-தம்பால் நகை இல்லை நாள்நாளும் நன்மைகள் ஆகும் வினை இல்லை என்றும் விருத்தமும் இல்லை தகை இல்லை தானும் சலம் அது ஆமே மேல் #1305 ஆரும் உரைசெய்யலாம் அஞ்சு எழுத்தாலே யாரும் அறியாத ஆனந்த ரூபம் ஆம் பாரும் விசும்பும் பகலும் அதி அதி ஊனும் உயிரும் உணர்வு அது ஆமே மேல் #1306 உணர்ந்து எழு மந்திரம் ஓம் எனும் உள்ளே மணந்து எழுமாம் கதி ஆகியது ஆகும் குணர்ந்து எழு சூதனும் சூதியும் கூடி கணந்து எழும் காணும் அ காமுகை ஆமே மேல் #1307 ககராதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை அகராதி ஓர் ஆறு அரத்தமே போலும் சகராதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை ககராதி மூவித்தை காமிய முத்தியே மேல் #1308 ஓரில் இதுவே உரையும் இ தெய்வத்தை தேரின் பிறிது இல்லை யான் ஒன்று செப்ப கேள் வாரி திரிகோணம் மனம் இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவகாயம் தானே மேல் #1309 ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே ஏகம் பராசத்தியாக சிவகுரு யோகம் பராசத்தி உண்மை எட்டு ஆமே மேல் #1310 எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்து கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே மேல் #1311 ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி ஓதி குருவின் உபதேசம் கொண்டு நீ தங்கும் அங்க நியாசம்-தனை பண்ணி சாதம் கெட செம்பில் சட்கோணம் தான் இடே மேல் #1312 சட்கோணம்-தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு அக்கோணம் மாறின் தலையில் ரீங்காரமிட்டு எக்கோணமும் சூழ எழில்வட்டம் இட்டு பின் மிக்கு ஈரெட்டு அக்கரம் அ முதல் மேல் இடே மேல் #1313 இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டு கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் இட்டு வாமத்து ஆங்கு கிரோங்கு என்று மேவிடே மேல் #1314 மேவிய சக்கரம் மீது வலத்திலே கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டு தாவு இல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவை புவனாபதியை பின் பூசியே மேல் #1315 பூசிக்கும் போது புவனாபதி-தன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணி பேசிய பிராண பிரதிட்டை அது செய்து தேசுற்றிடவே தியானம் அது செய்யே மேல் #1316 செய்ய திருமேனி செம்பட்டு உடை தானும் கையில் படை அங்குச பாசத்தோடு அபய மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே மேல் #1317 தோல் போர்வை நீக்கி துதித்து அடைவில் பூசித்து பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி நால் பால நாரதாய சுவாகா என்று சீர் பாக சேடத்தை மாற்றி பின் சேவியே மேல் #1318 சேவிப்பதன் முன்னே தேவியையும் உத்வாகனத்தால் பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு யாவருக்கும் எட்டா இயந்திரராசனை நீ வைத்து சேமி நினைந்தது தருமே மேல் #1319 நவாக்கரி சக்கரம் நான் உரைசெய்யின் நவாக்கரி ஒன்று நவாக்கரி ஆக நவாக்கரி எண்பத்தொரு வகை ஆக நவாக்கரி அ கிலீ சௌ முதல் ஈறே மேல் #1320 சௌ முதல் ஔவொடு ஹௌவுடனாம் கிரீம் கௌவுளும் ஐயுளும் கலந்து இரீம் சிரீம் என்று ஒவ்வில் எழும் கிலீம் மந்திர பாதமா செவ்வுள் எழுந்து சிவாயநம என்னே மேல் #1321 நவாக்கரியாவது நான் அறி வித்தை நவாக்கரி உள் எழும் நன்மைகள் எல்லாம் நவாக்கரி மந்திரம் நாவுளே ஓத நவாக்கரி சத்தி நலம் தரும் தானே மேல் #1322 நலம்தரு ஞானமும் கல்வியும் எல்லாம் உரம்தரு வல் வினை உம்மை விட்டு ஓடி சிரம்தரு தீவினை செய்வது அகற்றி வரம்தரு சோதியும் வாய்த்திடும் காணே மேல் #1323 கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும் நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே மேல் #1324 நினைத்திடும் அ சிரீம் அ கிலீம் ஈறா நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறும் நினைத்திடு நெல்லொடு புல்லினை உள்ளே நினைத்திடும் அருச்சனை நேர்தருவாளே மேல் #1325 நேர்தரும் அ திருநாயகி ஆனவள் யாதொரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை கார்தரு வண்ணம் கருதின கைவரும் நார்தரு வண்ணம் நடந்திடு நீயே மேல் #1326 நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம் கடந்திடும் காலனும் எண்ணிய நாளும் படர்ந்திடு நாமமும் பாய் கதிர் போல அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே மேல் #1327 அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம் அடைந்திடும் ஆதி அருளும் திருவும் அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும் அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே மேல் #1328 அறிந்திடுவார்கள் அமரர்களாக தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன் பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி முரிந்திடுவானை முயன்றிடு நீரே மேல் #1329 நீர் பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள் பார் அணியும் ஹிரீம் முன் ஸ்ரீம் ஈறாம் தார் அணியும் புகழ் தையல் நல்லாள்-தனை கார் அணியும் பொழில் கண்டு கொள்ளீரே மேல் #1330 கண்டும் கொள்ளும் தனிநாயகி-தன்னையும் மொண்டு கொளும் முக வசியம் அது ஆயிடும் பண்டு கொளும் மரம் ஆய பரஞ்சுடர் நின்று கொளும் நிலை பேறுடையாளே மேல் #1331 பேறுடையாள்-தன் பெருமையை எண்ணிடில் நாடு உடையார்களும் நம்வசம் ஆகுவர் மாறு உடையார்களும் வாழ்வது தான் இலை கூறு உடையாளையும் கூறு-மின் நீரே மேல் #1332 கூறு-மின் எட்டு திசைக்கும் தலைவியை ஆறு-மின் அண்டத்து அமரர்கள் வாழ்வு என மாறு-மின் வையம் வரும் வழி தன்னையும் தேறு-மின் நாயகி சேவடி சேர்ந்தே மேல் #1333 சேவடி சேர செறிய இருந்தவர் நாவடி உள்ளே நவின்று நின்று ஏத்துவர் பூ அடி இட்டு பொலிய இருந்தவர் மா அடி காணும் வகை அறிவாரே மேல் #1334 ஐ முதலாக வளர்ந்து எழு சக்கரம் ஐ முதலாக அமர்ந்து இரீம் ஈறு ஆகும் அ முதலாகி அவர்க்கு உடையாள்-தனை மை முதலாக வழுத்திடு நீயே மேல் #1335 வழுத்திடும் நாவுக்கு அரசி இவள் தன்னை பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை முகத்துளும் முன் எழ கண்டு கொள்ளீரே மேல் #1336 கண்ட இ சக்கரம் நாவில் எழுதிடில் கொண்ட இ மந்திரம் கூத்தன் குறி அதாம் மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய் வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே மேல் #1337 மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும் பல் இயல் ஆக பரந்து எழு நாள் பல நல் இயல்பாலே நடந்திடும் தானே மேல் #1338 நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம் தொடர்ந்திடும் சொல்லொடு சொல் பொருள் தானும் கடந்திடும் கல்விக்கு அரசி இவள் ஆக படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே மேல் #1339 பகை இல்லை கௌ முதல் ஐ அது ஈறா நகை இல்லை சக்கரம் நன்று அறிவார்க்கு மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம் வகை இல்லை ஆக வணங்கிடும் தானே மேல் #1340 வணங்கிடும் தத்துவநாயகி-தன்னை நலங்கிடு நல் உயிர் ஆனவை எல்லாம் கலங்கிடும் காம வெகுளி மயக்கம் துலங்கிடும் சொல்லிய சூழ்வினைதானே மேல் #1341 தானே கழறி தணியவும் வல்லனாய் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய் தானே தனிநடம் கண்டவள் தன்னையும் தானே வணங்கி தலைவனும் ஆமே மேல் #1342 ஆமே அனைத்து உயிர் ஆகிய அம்மையும் தாமே சகலமும் ஈன்ற அ தையலும் ஆமே அவள் அடி போற்றி வணங்கிடில் போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே மேல் #1343 புண்ணியன் ஆகி பொருந்தி உலகு எங்கும் கண்ணியன் ஆகி கலந்து அங்கு இருந்திடும் தண்ணியன் ஆகி தரணி முழுதுக்கும் அண்ணியன் ஆகி அமர்ந்திருந்தானே மேல் #1344 தான் அது கம்இரீம் கௌ அது ஈறாம் நானது சக்கரம் நன்று அறிவார்க்கு எலாம் கானது கன்னி கலந்த பராசத்தி கேள் அது வையம் கிளர் ஒளி ஆனதே மேல் #1345 ஒளிக்கும் பராசத்தி உள்ளே அமரில் களிக்கும் இ சிந்தையில் காரணம் காட்டி தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும் அளிக்கும் இவளை அறிந்துகொள்வார்க்கே மேல் #1346 அறிந்திடும் சக்கரம் அருச்சனையோடே எறிந்திடும் வையத்து இடர் அவை காணின் மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும் பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே மேல் #1347 புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டாம் குகை இல்லை கொல்வது இலாமையினாலே வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம் சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே மேல் #1348 சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர் காய்ந்து எழுமேல் வினை காணகிலாதவர் பாய்ந்து எழும் உள் ஒளி பாரில் பரந்தது மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே மேல் #1349 ஒளி அது ஹௌ முன் கிரீம் அது ஈறாம் களி அது சக்கரம் கண்டு அறிவார்க்கு தெளிவது ஞானமும் சிந்தையும் தேற பணிவது பஞ்சாக்கரம் அது ஆமே மேல் #1350 ஆமே சதாசிவநாயகி ஆனவள் ஆமே அதோ முகத்து உள் அறிவு ஆனவள் ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள் ஆமே அனைத்து உயிர்-தன்னுளும் ஆமே மேல் #1351 தன்னுளும் ஆகி தரணி முழுதும் கொண்டு என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள் மண்ணுளும் நீர் அனல் காலுளும் வானுளும் கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே மேல் #1352 காணலும் ஆகும் கலந்து உயிர் செய்வன காணலும் ஆகும் கருத்து உள் இருந்திடில் காணலும் ஆகும் கலந்து வழி செய காணலும் ஆகும் கருத்துற நில்லே மேல் #1353 நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாக கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும் விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே மேல் #1354 மெய்ப்பொருள் ஔ முதல் ஹௌ அது ஈறா கைப்பொருள் ஆக கலந்து எழு சக்கரம் தற்பொருள் ஆக சமைந்த அமுதேஸ்வரி நல்பொருள் ஆக நடு இருந்தாளே மேல் #1355 தாள் அதன் உள்ளே சமைந்த அமுதேஸ்வரி கால் அது கொண்டு கலந்துற வீசிடின் நாள் அது நாளும் புதுமைகள் கண்ட பின் கேள் அது காயமும் கேடு இல்லை காணுமே மேல் #1356 கேடு இல்லை காணும் கிளர் ஒளி கண்ட பின் நாடு இல்லை காணும் நாள் முதல் அற்ற பின் மாடு இல்லை காணும் வரும்வழி கண்ட பின் காடு இல்லை காணும் கருத்துள் இடத்துக்கே மேல் #1357 உற்ற இடம் எல்லாம் உலப்பு_இல் பாழ் ஆக்கி கற்ற இடம் எல்லாம் கடுவெளி ஆனது மற்ற இடம் இல்லை வழி இல்லை தான் இல்லை சற்று இடம் இல்லை சலிப்பு அற நின்றிடே மேல் #1358 நின்றிடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம் நின்றிடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்கும் நின்றிடும் சத்தி நிலைபெற கண்டிட நின்றிடும் மேலை விளக்கு ஒளி தானே மேல் #1359 விளக்கு ஒளி ஸௌ முதல் ஔ அது ஈறா விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும் விளக்கு ஒளி ஆகிய மின்கொடியாளை விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீயே மேல் #1360 விளங்கிடும் மேல் வரும் மெய்ப்பொருள் சொல்லின் விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும் விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே மேல் #1361 தானே வெளி என எங்கும் நிறைந்தவள் தானே பரம வெளி அது ஆனவள் தானே சகலமும் ஆக்கி அழித்தவள் தானே அனைத்து உள அண்ட சகலமே மேல் #1362 அண்டத்தின் உள்ளே அளப்பரிது ஆனவள் பிண்டத்தின் உள்ளே பெருவெளி கண்டவள் குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும் கண்டத்தில் நின்ற கலப்பு அறியார்களே மேல் #1363 கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம் உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை சிலப்பு அறியார் சில தேவரை நாடி தலைப்பறி ஆக சமைந்தவர் தானே மேல் #1364 தானே எழுந்த அ சக்கரம் சொல்லிடின் மானே மதிவரை பத்து இட்டு வைத்த பின் தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில் தானே கலந்த வரை எண்பத்தொன்றுமே மேல் #1365 ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில் வென்றி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம் கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில் என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே மேல் #1366 ஏய்ந்த மரவுரி-தன்னில் எழுதிய வாய்ந்த இ பெண் எண்பத்தொன்றில் நிரைத்த பின் காய்ந்த அவி நெய்யுள் கலந்து உடன் ஓமமும் ஆய்ந்தலத்து ஆம் உயிராகுதி பண்ணுமே மேல் #1367 பண்ணிய பொன்னை பரப்பு அற நீ பிடி எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும் நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின் துண்ணென நேய நல் சேர்க்கலும் ஆமே மேல் #1368 ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி போகின்ற சாந்து சவாது புழுகு நெய் ஆகின்ற கற்பூரம் ஆ கோசன நீரும் சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே மேல் #1369 வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில் கைச்சிறு கொங்கை கலந்து எழு கன்னியை தச்சிது ஆக சமைந்த இ மந்திரம் அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே மேல் #1370 சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய் எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது பந்தம் ஆம் சூலம் படை பாசம் வில் அம்பு முந்தை கிலீம் எழ முன் இருந்தாளே மேல் #1371 இருந்தனர் சத்திகள் அறுபத்துநால்வர் இருந்தனர் கன்னிகள் எண் வகை எண்மர் இருந்தனர் சூழ எதிர் சக்கரத்தே இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே மேல் #1372 கொண்ட கனகம் குழை முடி ஆடையாய் கண்ட இ முத்தம் கனல் திருமேனியாய் பண்டு அமர் சோதி படர் இதழ் ஆனவள் உண்டு அங்கு ஒருத்தி உணர வல்லார்க்கே மேல் #1373 உணர்ந்து இருந்து உள்ளே ஒருத்தியை நோக்கில் கலந்து இருந்து எங்கும் கருணை பொழியும் மணந்து எழும் ஓசை ஒளி அது காணும் தணந்து எழு சக்கரம் தான் தருவாளே மேல் #1374 தருவழி ஆகிய தத்துவ ஞானம் குருவழி ஆகும் குணங்கள் உள் நின்று கருவழி ஆகும் கணக்கை அறுத்து பெருவழி ஆக்கும் பேரொளி தானே மேல் #1375 பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர் சீர் ஒளி ஆகி திகழ் தரு நாயகி கார் ஒளி ஆகிய கன்னிகை பொன் நிறம் பார் ஒளி ஆகி பரந்து நின்றாளே மேல் #1376 பரந்த கரம் இரு பங்கயம் ஏந்தி குவிந்த கரம் இரு கொய் தளிர் பாணி பரிந்து அருள் கொங்கைகள் முத்து ஆர் பவளம் இருந்த நல் ஆடை மணி பொதிந்து அன்றே மேல் #1377 மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும் தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகி பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே மேல் #1378 பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி கரந்தன கன்னிகள் அப்படி சூழ மலர்ந்து இரு கையின் மலர் அவை ஏந்த சிறந்தவர் ஏத்தும் சிரீம் தனம் ஆமே மேல் #1379 தனம் அது ஆகிய தையலை நோக்கி மனம் அது ஓடி மரிக்கில் ஓர் ஆண்டில் கனம் அவை அற்று கருதிய நெஞ்சம் தினகரன் ஆரிட செய்தி அது ஆமே மேல் #1380 ஆகின்ற மூலத்து எழுந்த முழு மலர் போகின்ற பேரொளியாய மலரதாய் போகின்ற பூரணம் ஆக நிறைந்த பின் சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே மேல் #1381 ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள் ஆகின்ற ஐம்பத்து அறுவகை ஆனவள் ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர்தரு ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே மேல் #1382 சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய் ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும் தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய் ஏந்து கரங்கள் எடுத்து அமர் பாசமே மேல் #1383 பாசம் அது ஆகிய வேரை அறுத்திட்டு நேசம் அது ஆக நினைத்து இரும் உம்முளே நாசம் அது எல்லாம் நடந்திடும் ஐ ஆண்டில் காசினி மேல் அமர் கண்_நுதல் ஆகுமே மேல் #1384 கண் உடை நாயகி தன் அருள் ஆம் வழி பண்ணுறு நாதம் பகை அற நின்றிடில் விண் அமர் சோதி விளங்க ஹிரீங்கார மண் உடைய நாயகி மண்டலம் ஆகுமே மேல் #1385 மண்டலத்து உள்ளே மலர்ந்து எழு தீபத்தை கண்டு அகத்து உள்ளே கருதி இருந்திடும் விண்டு அகத்து உள்ளே விளங்கி வருதலால் தண்டு அகத்து உள்ளவை தாங்கலும் ஆமே மேல் #1386 தாங்கிய நாபி தட மலர் மண்டலத்து ஓங்கி எழும் கலைக்குள் உள் உணர்வு ஆனவள் ஏங்க வரும் பிறப்பு எண்ணி உறுத்திட வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே மேல் #1387 நாவுக்கு நாயகி நல் மணி பூண் ஆரம் பூவுக்கு நாயகி பொன் முடி ஆடை ஆம் பாவுக்கு நாயகி பால் ஒத்த வண்ணத்தள் ஆவுக்கு நாயகி அங்கு அமர்ந்தாளே மேல் #1388 அன்று இரு கையில் அளந்த பொருள் முறை இன்று இரு கையில் எடுத்த வெண் குண்டிகை மன்று அது காணும் வழி அது ஆகவே கண்டு அங்கு இருந்தவர் காரணி காணுமே மேல் #1389 காரணி சத்திகள் ஐம்பத்திரண்டு என காரணி கன்னிகள் ஐம்பத்திருவராய் காரணி சக்கரத்து உள்ளே கரந்து எங்கும் காரணி தன் அருள் ஆகி நின்றாளே மேல் #1390 நின்ற இ சத்தி நிலை பெற நின்றிடில் கண்ட இ வன்னி கலந்திடும் ஓர் ஆண்டில் கொண்ட விரத நீர் குன்றாமல் நின்றிடின் மன்றினில் ஆடும் மணி அது காணுமே மேல் #1391 கண்ட இ சத்தி இருதய பங்கயம் கொண்ட இ தத்துவநாயகி ஆனவள் பண்டை அ வாயு பகையை அறுத்திட இன்று என் மனத்துள் இனிது இருந்தாளே மேல் #1392 இருந்த இ சத்தி இருநாலு கையில் பரந்த இ பூங்கிளி பாசம் மழுவாள் கரந்திடும் கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு உரந்து அங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே மேல் #1393 உகந்தனள் பொன் முடி முத்து ஆரம் ஆக பரந்த பவளமும் பட்டு ஆடை சாத்தி மலர்ந்து எழு கொங்கை மணி கச்சு அணிந்து தழைத்து அங்கு இருந்தவள் தான் பச்சை ஆமே மேல் #1394 பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால் கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய் எச்ச இடைச்சி இனிது இருந்தாளே மேல் #1395 தாளதின் உள்ளே தாங்கிய சோதியை கால் அது ஆக கலந்து கொள் என்று மால் அது ஆக வழிபாடு செய்து நீ பால் அது போல பரந்து எழு விண்ணிலே மேல் #1396 விண் அமர் நாபி இருதயம் ஆங்கு இடை கண் அமர் கூபம் கலந்து வருதலால் பண் அமர்ந்து ஆதித்த மண்டலம் ஆனது தண் அமர் கூபம் தழைத்தது காணுமே மேல் #1397 கூபத்து சத்தி குளிர் முகம் பத்து உள தாபத்து சத்தி தயங்கி வருதலால் ஆபத்து கைகள் அடைந்தன நாலைந்து பாசம் அறுக்க பரந்தன சூலமே மேல் #1398 சூலம் தண்டு ஒள் வாள் சுடர் பறை ஞானமாய் வேல் அம்பு தமருகம் மா கிளி வில் கொண்டு கால் அம் பூ பாசம் மழு கத்தி கைக்கொண்டு கோலம் சேர் சங்கு குவிந்தகை எண் அதே மேல் #1399 எண் அமர் சத்திகள் நாற்பத்துநாலுடன் எண் அமர் சத்திகள் நாற்பத்துநால்வராம் எண்ணிய பூ இதழ் உள்ளே இருந்தவள் எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே மேல் #1400 கடந்தவள் பொன் முடி மாணிக்க தோடு தொடர்ந்து அணி முத்து பவளம் கச்சு ஆக படர்ந்த அல்குல் பட்டு ஆடை பாத சிலம்பு மடந்தை சிறியவள் வந்து நின்றாளே மேல் #1401 நின்ற இ சத்தி நிரந்தரம் ஆகவே கண்டிடும் மேரு அணிமாதி தான் ஆகி பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே மேல் #1402 உண்டு ஓர் அதோ முகம் உத்தமம் ஆனது கண்ட இ சத்தி சதாசிவநாயகி கொண்ட முகம் ஐந்து கூறும் கரங்களும் ஒன்று இரண்டு ஆகவே மூன்று நாலு ஆனதே மேல் #1403 நல் மணி சூலம் கபாலம் கிளியுடன் பல் மணி நாகம் மழுகத்தி பந்து ஆகும் கல் மணி தாமரை கையில் தமருகம் பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே மேல் #1404 பூசனை சத்திகள் எண்ணைவர் சூழவே நேசவள் கன்னிகள் நாற்பத்து நேர் அதாய் காசினி சக்கரத்து உள்ளே கலந்து அவள் மாசு அடையாமல் மகிழ்ந்து இருந்தார்களே மேல் #1405 தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியை பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட வேர் அது ஒன்றி நின்று எண்ணு மனோமயம் கார் அது போல கலந்து எழு மண்ணிலே மேல் #1406 மண்ணில் எழுந்த அகார உகாரங்கள் விண்ணில் எழுந்து சிவாயநம என்று கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று-கொல் கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே மேல் #1407 என்று அங்கு இருந்த அமுத கலையிடை சென்று அங்கு இருந்த அமுத பயோதரி கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண் அடை கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே மேல் #1408 அமுதம் அது ஆக அழகிய மேனி படிகம் அது ஆக பரந்து எழும் உள்ளே குமுதம் அது ஆக குளிர்ந்து எழு முத்து கெமுதம் அது ஆகிய கேடு_இலி தானே மேல் #1409 கேடு_இலி சத்திகள் முப்பத்து அறுவரும் நாடு_இலி கன்னிகள் நாலொன்பதின்மரும் பூ_இலி பூ இதழ் உள்ளே இருந்தவர் நாள்_இலி தன்னை நணுகி நின்றார்களே மேல் #1410 நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும் கண்டது சோதி கருத்துள் இருந்திட கொண்டது ஓர் ஆண்டு கூடி வருகைக்கு விண்ட ஔகாரம் விளங்கின அன்றே மேல் #1411 விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம் வணங்கிடும் மண்டலம் மன் உயிர் ஆக நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்து சுணங்கு இடை நின்று இவை செல்லலும் ஆமே மேல் #1412 ஆமே அதோ முகம் மேலே அமுதமாய் தாமே உகாரம் தழைத்து எழும் சோமனும் கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது பூ மேல் வருகின்ற பொன் கொடி ஆனதே மேல் #1413 பொன் கொடியாளுடை பூசனை செய்திட அ களி ஆகிய ஆங்காரம் போயிடும் மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுளே பிற்கொடி ஆகிய பேதையை காணுமே மேல் #1414 பேதை இவளுக்கு பெண்மை அழகு ஆகும் தாதை இவளுக்கு தாணுவுமாய் நிற்கும் மாதை அவளுக்கு மண்ணும் திலகமாய் கோதையர் சூழ குவிந்திட காணுமே மேல் #1415 குவிந்தனர் சத்திகள் முப்பத்திருவர் நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழ பரந்து இதழ் ஆகிய பங்கயத்து உள்ளே இருந்தனள் காணும் இடம் பல கொண்டே மேல் #1416 கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினை கண்டு அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால் இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே மேல் #1417 இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்று இல்லை இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார் இல் அடைந்தானுக்கு இல்லாதது இல்லானையே மேல் #1418 ஆனை மயக்கும் அறுபத்துநால் தறி ஆனை இருக்கும் அறுபத்துநால் ஒளி ஆனை இருக்கும் அறுபத்துநால் அறை ஆனையும் கோடும் அறுபத்துநாலிலே மேல்@5 ஐந்தாம் தந்திரம் #1419 ஊரும் உலகமும் ஒக்க படைக்கின்ற பேரறிவாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுலகு ஆளி இலங்கு எழும் தாரணி நால் வகை சைவமும் ஆமே மேல் #1420 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர்வுறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய்வுறாமே நின்று நித்தம் பரம் சுத்தம் சைவர்க்கு நேயமே மேல் #1421 கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம் முற்பத ஞான முறைமுறை நண்ணியே சொற்பதம் மேவி துரிசு அற்று மேலான தற்பரம் கண்டுளோர் சைவ சித்தாந்தரே மேல் #1422 வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் பூதாந்தம் போதாந்தம் ஆக புனம் செய்ய நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே மேல் #1423 இணையார் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து இணையார் இணை குழை ஈர் அணை முத்திரை குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது அணைவாம் சரியை கிரியையினார்க்கே மேல் #1424 காது பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து ஓதும் திருமேனி உட்கட்டு இரண்டுடன் சோதனை செய்து துவாதெச மார்க்கராய் ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே மேல் #1425 கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர் கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள் கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமாம் கண்டங்கள் கண்டோர் கடும் சுத்த சைவரே மேல் #1426 ஞானி புவி எழு நல் நூல் அனைத்துடன் மோன திசையும் முழு எண்ணெண் சித்தியும் ஏனை நிலமும் எழுதா மறை ஈறும் கோனொடு தன்னையும் காணும் குணத்தனே மேல் #1427 பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம் நன்மார்க்க சாதனம் மா ஞான சாதனம் துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனம் சன்மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே மேல் #1428 கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின் ஊடுறு ஞான உதய உண்மை முத்தியோன் பாடுறு சுத்த சைவ பத்த நித்தனே மேல் #1429 ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு மோகமில் நாலேழு முப்பேதம் உற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று ஆக முடிந்த அரும் சுத்த சைவமே மேல் #1430 சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும் சத்தும் அசத்தும் தணந்த பராபரை உய்த்த பராபரை உள்ளாம் பராபரை அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே மேல் #1431 சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகி சித்தும் அசித்தும் தெரியா சிவோகமாய் முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார் சித்தியும் அங்கே சிறந்து உள தானே மேல் #1432 தன்னை பரனை சதாசிவன் என்கின்ற மன்னை பதி பசு பாசத்தை மாசு அற்ற முன்னை பழ மல முன் கட்டை வீட்டினை உன்ன தகும் சுத்த சைவர் உபாயமே மேல் #1433 பூரணம் தன்னிலே வைத்து அற்ற அ போதம் ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு நேர் என ஈராறு நீதி நெடும் போகம் காரணமாம் சுத்த சைவர்க்கு காட்சியே மேல் #1434 மாறாத ஞான மதிப்பு அற மாயோகம் தேறாத சிந்தையை தேற்றி சிவம் ஆக்கி பேறு ஆன பாவனை பேணி நெறிநிற்றல் கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே மேல் #1435 வேதாந்தம் கண்டோர் பிரமம் இத்தியாதரர் நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள் வேதாந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டுளோர் சாதாரணம் அன்ன சைவர் உபாயமே மேல் #1436 விண்ணினை சென்று அணுகா வியன் மேகங்கள் கண்ணினை சென்று அணுகா பல காட்சிகள் எண்ணினை சென்று அணுகாமல் எணப்படும் அண்ணலை சென்று அணுகா பசு பாசமே மேல் #1437 ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்று ஆக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தை பாதத்தால் சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே மேல் #1438 வேடம் கடந்து விகிர்தன்-தன்பால் மேவி ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்று பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்பட சாடும் சிவபோதகர் சுத்த சைவரே மேல் #1439 உடலான ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும் மடலான மா மாயை மற்று உள்ள நீவ படலான கேவல பாசம் துடைத்து திடமாய் தனையுறல் சித்தாந்த மார்க்கமே மேல் #1440 சுத்த சிவன் உரை தான் அதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்தி வித்தாம் மூலம் அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றால் சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே மேல் #1441 நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே தான் என்று நான் என்று இரண்டு இலா தற்பதம் தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால் தான் என்று நான் என்றும் சாற்றகில்லேனே மேல் #1442 சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால் ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும் மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும் பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே மேல் #1443 நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான் ஓர்ந்திடும் கந்துரு கேண்-மின்கள் பூதலத்து ஓர்ந்திடும் சுத்த சைவத்து உயிரதே மேல் #1444 உயிர்க்குயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறு ஆவாகனம் புற பூசை செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே மேல் #1445 நாடு நகரமும் நல் திருக்கோயிலும் தேடி திரிந்து சிவபெருமான் என்று பாடு-மின் பாடி பணி-மின் பணிந்த பின் கூடிய நெஞ்சத்து கோயிலாய் கொள்வனே மேல் #1446 பத்தர் சரிதை படுவோர் கிரியையோர் அ தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் சுத்த இயமாதி சாதகர் தூயோகர் சித்தர் சிவஞானம் சென்று எய்துவோர்களே மேல் #1447 சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோரே மேல் #1448 கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை அரிய சிவன் உரு அமரும் அரூபம் தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை உரியன நேயத்து உயர் பூசை ஆமே மேல் #1449 சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருளானது நந்தி பொன் நகர் போந்து மருள் ஆகும் மாந்தர் வணங்கவைத்தானே மேல் #1450 சமையம் பல சுத்தி தன் செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே மேல் #1451 பத்து திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு எத்திக்கு இலர் இல்லை என்பதின் அமலர்க்கு ஒத்து திருவடி நீழல் சரண் என தத்தும் வினை கடல் சாராது காணுமே மேல் #1452 கானுறு கோடி கடி கமழ் சந்தனம் வானுறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே மேல் #1453 கோன கன்று ஆயே குரை கழல் ஏத்து-மின் ஞான கன்று ஆகிய நடுவே உழிதரும் வான கன்று ஆகிய வானவர் கைதொழு மான கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே மேல் #1454 இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம் அது பணிசெய்கின்றவள் ஒரு கூறன் இது பணி மானுடர் செய் பணி ஈசன் பதி பணி செய்வது பத்திமை காணே மேல் #1455 பத்தன் கிரியை சரியை பயில்வுற்று சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில் உய்த்த நெறியுற்று உணர்கின்ற ஞானத்தால் சித்தம் குரு அருளால் சிவம் ஆகுமே மேல் #1456 அன்பின் உருகுவன் நாளும் பணிசெய்வன் செம்பொன் செய் மேனி கமல திருவடி முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள் என்பினுள் சோதி இலங்குகின்றானே மேல் #1457 நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றி தறி இருந்தால் போல் தம்மை இருத்தி சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணரா குறி அறிவாளர்க்கு கூடலும் ஆமே மேல் #1458 ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே மேல் #1459 பூவினில் கந்தம் பொருந்தியவாறு போல் சீவனுக்கு உள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு நாவி அணைந்த நடு தறி ஆமே மேல் #1460 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியை சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே மேல் #1461 எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும் பழித்தலை பாச பிறவியும் நீங்கா அழித்தலை சோமனோடு அங்கி அருக்கன் வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே மேல் #1462 விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும் விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே மேல் #1463 பேணில் பிறவா உலகு அருள்செய்திடும் காணில் தனது கலவியுளே நிற்கும் நாணில் நரக நெறிக்கே வழிசெயும் ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே மேல் #1464 ஒத்த செங்கோலார் உலப்பு_இலி மாதவர் எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்_இலி சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய் அத்தன் இவன் என்றே அன்புறுவார்களே மேல் #1465 யோகிக்கு யோகாதி மூன்று உள கொண்டுற்றோர் ஆக தகு கிரி ஆதி சரியை ஆம் தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள் ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே மேல் #1466 யோக சமயமே யோகம் பல உன்னல் யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம் யோக நிர்வாணமே உற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண் சித்தியுற்றலே மேல் #1467 ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே மேல் #1468 சத்தமும் சத்த மனனும் தகுமனம் உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும் சித்தம் என்று இ மூன்றும் சிந்திக்கும் செய்கையும் சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே மேல் #1469 தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும் அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும் பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே மேல் #1470 இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும் வருக்கம் சராசரம் ஆகும் உலகம் தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே திருக்கிலா ஞானத்தை தேர்ந்து உணர்ந்தோர்க்கே மேல் #1471 அறிவும் அடக்கமும் அன்பும் உடனே பிறியா நகர் மன்னும் பேரருளாளன் குறியும் குணமும் குரை கழல் நீங்கா நெறி அறிவார்க்கு இது நீர்த்தொனியாமே மேல் #1472 ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள் ஏனம் விளைந்து எதிரே காண் வழி-தொறும் கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே மேல் #1473 ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம் மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும் தான் இ குலத்தோர் சரியை கிரியையே மேல் #1474 ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல் ஞானத்தில் யோகமே நாதாந்த நல் ஒளி ஞான கிரியையே நல் முத்தி நாடலே மேல் #1475 நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன் கண்ணிய நேயம் கரை ஞானம் கண்டுளோன் திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே மேல் #1476 ஞான சமயமே நாடும் தனை காண்டல் ஞான விசேடமே நாடு பரோதயம் ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள் ஞான அபிடேகமே நற்குரு பாதமே மேல் #1477 சாற்றும் சன்மார்க்கமாம் தற்சிவ தத்துவம் தோற்றங்கள் ஆன சுருதி சுடர் கண்டு சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய் கூற்றத்தை வென்றார் குறிப்பு அறிந்தார்களே மேல் #1478 சைவ பெருமை தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே மேல் #1479 தெரிசிக்க பூசிக்க சிந்தனை செய்ய பரிசிக்க கீர்த்திக்க பாதுகம் சூட குருபத்தி செய்யும் குவலயத்தோர்க்கு தரு முத்தி சார்பு ஊட்டும் சன்மார்க்கம் தானே மேல் #1480 தெளிவு அறியாதார் சிவனை அறியார் தெளிவு அறியாதார் சீவனும் ஆகார் தெளிவு அறியாதார் சிவம் ஆக மாட்டார் தெளிவு அறியாதவர் தீரார் பிறப்பே மேல் #1481 தான் அவன் ஆகி தான் ஐந்தாம் மலம் செற்று மோனமது ஆம் மொழி பால்முத்தர் ஆவதும் ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும் தான் அவனாயுறல் ஆன சன்மார்க்கமே மேல் #1482 சன்மார்க்கத்தார்க்கு முகத்தொடு பீடமும் சன் மார்க்கத்தார்க்கும் இடத்தொடு தெய்வமும் சன்மார்க்கத்தார்க்கு வருக்கம் தெரிசனம் எ மார்க்கத்தார்க்கும் இயம்புவன் கேண்-மினோ மேல் #1483 சன்மார்க்க சாதனம் தான் ஞான ஞேயமாம் பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய் நிற்கும் துன்மார்க்கம் விட்ட துரிய துரிசு அற்றார் சன்மார்க்கம் தான் அவன் ஆகும் சன்மார்க்கமே மேல் #1484 சன்மார்க்கம் எய்த வரும் அரும் சீடர்க்கு பின்மார்க்கம் மூன்றும் பெற இயல்பாம் என்றால் நன்மார்க்கம் தானே சிவனொடு நாடலே சொன்மார்க்கம் என்ன சுருதி கைக்கொள்ளுமே மேல் #1485 அன்னிய பாசமும் ஆகும் கருமமும் முன்னும் அவத்தையும் மூல பகுதியும் பின்னிய ஞானமும் போதாதி பேதமும் தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத்தோரே மேல் #1486 பசு பாசம் நீக்கி பதியுடன் கூட்டி கசியாத நெஞ்சம் கசிய கசிவித்து ஒசியாத உண்மை சொருபோதயத்துற்று அசைவானது இல்லாமை ஆன சன்மார்க்கமே மேல் #1487 மார்க்கம் சன்மார்க்கிகள் கிட்ட வகுப்பது மார்க்கம் சன்மார்க்கமே அன்றி மற்று ஒன்று இல்லை மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதோர் மார்க்கம் சன்மார்க்கமாம் சித்த யோகமே மேல் #1488 சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது மன்மார்க்கமாம் முத்தி சித்திக்குள் வைப்பதாம் பின்மார்க்கம் ஆனது பேரா பிறந்து இறந்து உன்மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே மேல் #1489 மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார் குருவும் சிவனும் சமயமும் கூடார் வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும் உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே மேல் #1490 யோக சமாதியின் உள்ளே அகல் இடம் யோக சமாதியின் உள்ளே உளர் ஒளி யோக சமாதியின் உள்ளே உள சத்தி யோக சமாதி உகந்தவர் சித்தரே மேல் #1491 யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகுமால் யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர் போகம் புவியில் புருடார்த்த சித்தியது ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே மேல் #1492 ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி போதாலயத்து புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே மேல் #1493 பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை அணங்கி எறிவன் அயிர் மன வாளால் கணம் பதினெட்டும் கருதும் ஒருவன் வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே மேல் #1494 வளம் கனி ஒக்கும் வள நிறத்தார்க்கும் வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும் உளம் கனிந்து உள்ளம் உகந்திருப்பார்க்கு பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே மேல் #1495 மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில் தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில் ஆவது இரண்டும் அகன்று சகமார்க்க தேவியோடு ஒன்றல் சன்மார்க்க தெளிவு அதே மேல் #1496 பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று ஆசு அற்ற சற்புத்திரமார்க்கம் ஆகுமே மேல் #1497 அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும் மறுகா நரை அன்னம் தாமரை நீலம் குறுகா நறு மலர் கொய்வன கண்டும் சிறுகால் அறநெறி சேரகிலாரே மேல் #1498 அரும் கரை ஆவது அ அடி நீழல் பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் ஒருங்கு அரையாய் உலகு ஏழின் ஒத்தானே மேல் #1499 உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன் அடிக்கே முறை செய்-மின் பயந்தும் பிறவிப்பயன் அது ஆகும் பயந்து பரிக்கில் அ பான்மையன் ஆமே மேல் #1500 நின்று தொழுவன் கிடந்து எம்பிரான்-தன்னை என்றும் தொழுவன் எழில் பரஞ்சோதியை துன்று மலர் தூவி தொழு-மின் தொழும்-தோறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே மேல் #1501 திரு மன்னும் சற்புத்திர மார்க்க சரியை உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண்-மின் கரு மன்னும் பாசம் கைகூம்ப தொழுது இரு மன்னும் நாள்-தோறும் இன்புற்று இருந்தே மேல் #1502 எளியன் நல் தீபம் இடல் மலர் கொய்தல் அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் தளி மணி பற்றல் பல் மஞ்சனம் ஆதி அளி தொழில் செய்வது தான் தாசமார்க்கமே மேல் #1503 அது இது ஆதி பரம் என்று அகல்வர் இது வழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை விதிவழியே சென்று வேந்தனை நாடும் அது இது நெஞ்சில் தணிக்கின்றவாறே மேல் #1504 அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறி கழல் வந்திப்பன் வானவர் தேவனை நாள்-தோறும் வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே மேல் #1505 அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடிதொழ கண் அவன் என்று கருதும் அவர்கட்கு பண் அவன் பேரன்பு பற்றி நின்றானே மேல் #1506 வாசித்தும் பூசித்தும் மா மலர் கொய்திட்டும் பாசி குளத்தில் வீழ் கல்லா மனம் பார்க்கின் மாசு அற்ற சோதி மணி மிடற்று அண்ணலை நேசத்து இருந்த நினைவு அறியாரே மேல் #1507 சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் சாலோகம் சாமீபம் தங்கும் சரியையால் மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் பாலோகம் இல்லா பரன் உரு ஆமே மேல் #1508 சமயம் கிரியையில் தன் மனம் கோயில் சமய மனு முறை தானே விசேடம் சமயத்து மூலம் தனை தேறல் மூன்றாம் சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே மேல் #1509 பாசம் பசு ஆனது ஆகும் இ சாலோகம் பாசம் அருள் ஆனது ஆகும் இ சாமீபம் பாசம் சிரம் ஆனது ஆகும் இ சாரூபம் பாசம் கரை பதி சாயுச்சியமே மேல் #1510 தங்கிய சாரூபம் தான் எட்டாம் யோகமாம் தங்கும் சன்மார்க்கம் தனில் அன்றி கைகூடா அங்கத்து உடல் சித்தி சாதனர் ஆகுவர் இங்கு இவர் ஆக இழிவு அற்ற யோகமே மேல் #1511 சயிலலோகத்தினை சார்ந்த பொழுதே சயிலம் அது ஆகும் சராசரம் போல பயிலும் குருவின் பதி புக்க-போதே கயிலை இறைவன் கதிர் வடிவு ஆமே மேல் #1512 சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆவது சைவம்-தனை அறிந்தே சிவம் சாருதல் சைவம் சிவம்-தன்னை சாராமல் நீவுதல் சைவம் சிவானந்தம் சாயுச்சியமே மேல் #1513 சாயுச்சியம் சாக்கிராதீதம் சாருதல் சாயுச்சியம் உபசாந்தத்து தங்குதல் சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா சாயுச்சிய மனத்து ஆனந்த சத்தியே மேல் #1514 இருட்டு அறை மூலை இருந்த கிழவி குருட்டு கிழவனை கூடல் குறித்து குருட்டினை நீங்கி குணம் பல காட்டி மருட்டி அவனை மணம் புரிந்தாளே மேல் #1515 தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில் ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும் தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே மேல் #1516 இருள் நீக்கி எண்_இல் பிறவி கடத்தி அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும் மருள் நீங்கா வானவர் கோனொடும் கூடி பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே மேல் #1517 இருள் சூழ் அறையில் இருந்தது நாடில் பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே மேல் #1518 மருட்டி புணர்ந்து மயக்கமும் நீக்கி வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்து குருட்டினை நீக்கி குணம் பல காட்டி அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே மேல் #1519 கன்னி துறைபடிந்து ஆடிய ஆடவர் கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து இலர் கன்னி துறைபடிந்து ஆடும் கருத்து உண்டேல் பின்னை பிறவி பிறிது இல்லை தானே மேல் #1520 செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன் எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை மை வென்று அகன்ற பகடுரி போர்த்த வெம் கையன் இவன் என்று காதல் செய்வீரே மேல் #1521 எய்திய காலங்கள் எத்தனை ஆயினும் தையலும் தானும் தனிநாயகம் என்பர் வைகலும் தன்னை வணங்கும் அவர்கட்கு கையில் கருமம் செய் காட்டது ஆமே மேல் #1522 கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர் வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல் நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே மேல் #1523 அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில் எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும் உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனை கண்ணுற்று நின்ற கனி அது ஆகுமே மேல் #1524 பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும் மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும் குற பெண் குவி முலை கோமளவல்லி சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே மேல் #1525 தாங்கு-மின் எட்டு திசைக்கும் தலைமகன் பூம் கமழ் கோதை புரிகுழலாளொடும் ஆங்கு அது சேரும் அறிவுடையார்கட்கு தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே மேல் #1526 நணுகினும் ஞான கொழுந்து ஒன்று நல்கும் பணிகிலும் பல் மலர் தூவி பணிவன் அணுகியது ஒன்று அறியாத ஒருவன் அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே மேல் #1527 இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி குரு என வந்து குணம் பல நீக்கி தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால் திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே மேல் #1528 இரவும் பகலும் இலாத இடத்தே குரவம் செய்கின்ற குழலியை உன்னி அரவம்செய்யாமல் அவளுடன் சேர பரிவொன்றில் ஆளும் பராபரை தானே மேல் #1529 மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும் சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணலுள் ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து ஊனை விளக்கி உடன் இருந்தானே மேல் #1530 ஆயத்துள் நின்ற அறு சமயங்களும் காயத்துள் நின்ற கடவுளை காண்கிலா மாய குழியில் விழுவர் மனை மக்கள் பாசத்தில் உற்று பதைக்கின்றவாறே மேல் #1531 உள்ளத்து உளே தான் கரந்து எங்கும் நின்றவன் வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன் பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும் கள்ள தலைவன் கருத்து அறியார்களே மேல் #1532 உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே மேல் #1533 ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் ஆறு சமய பொருளும் அவன் அலன் தேறு-மின் தேறி தெளி-மின் தெளிந்த பின் மாறுதல் இன்றி மனை புகலாமே மேல் #1534 சிவம் அல்லது இல்லை அறையே சிவமாம் தவம் அல்லது இல்லை தலைப்படுவார்க்கு இங்கு அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே மேல் #1535 அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர் ஆக மிகவும் விரும்பி ஏம் உள் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் மண் நின்று ஒழியும் வகை அறியார்களே மேல் #1536 சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் பவகதி பாச பிறவி ஒன்று உண்டு தவகதி-தன்னொடு நேர் ஒன்று தோன்றில் அவகதி மூவரும் அ வகை ஆமே மேல் #1537 நூறு சமயம் உளவா நுவலும்-கால் ஆறு சமயம் அ ஆறு உட்படுவன கூறு சமயங்கள் கொண்ட நெறி நில்லா வீறு பரநெறி இல்லா நெறி அன்றே மேல் #1538 கத்தும் கழுதைகள் போலும் கலதிகள் சுத்த சிவன் எங்கும் தோய்வுற்று நிற்கின்றான் குற்றம் தெளியார் குணம் கொண்டு கோது ஆட்டார் பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே மேல் #1539 மயங்குகின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி இருவினை முழை முகப்பு ஆச்சி இயங்கி பெறுவரேல் ஈறு அது காட்டில் பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே மேல் #1540 சேயன் அணியன் பிணி இலன் பேர் நந்தி தூயன் துளக்கு அற நோக்க வல்லார்கட்கு மாயன் மயக்கிய மானுடராம் அவர் காயம் விளைக்கும் கருத்து அறியார்களே மேல் #1541 வழி இரண்டுக்கும் ஓர் வித்து அது ஆன பழி அது பார் மிசை வாழ்தல் உறுதல் சுழி அறிவாளன்-தன் சொல் வழி முன்நின்று அழிவு அறிவார் நெறி நாட நில்லாரே மேல் #1542 மாதவர் எல்லாம் மாதேவன் பிரான் என்பர் நாதம் அது ஆக அறியப்படும் நந்தி பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில் ஆதியும் அ நெறி ஆகி நின்றானே மேல் #1543 அரன்நெறி அப்பனை ஆதி பிரானை உரன் நெறி ஆகி உளம் புகுந்தானை பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம் பரன் அறியாவிடில் பல் வகை தூரமே மேல் #1544 பரிசு அறவான் அவன் பண்பன் பகலோன் பெரிசு அறி வானவர் பேற்றில் திகழும் துரிசு அற நீ நினை தூய் மணிவண்ணன் அரிது அவன் வைத்த அறநெறி தானே மேல் #1545 ஆன சமயம் அது இது நன்று எனும் மாய மனிதர் மயக்கம் அது ஒழி கானம் கடந்த கடவுளை நாடு-மின் ஊனம் கடந்த உரு அது ஆமே மேல் #1546 அ நெறி நாடி அமரர் முனிவரும் செந்நெறி கண்டார் சிவன் என பெற்றார் பின் முன் நெறி நாடி முதல்வன் அருள் இலார் செல் நெறி செல்லார் திகைக்கின்றவாறே மேல் #1547 உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே மேல் #1548 வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் சுழி நடக்கும் துயரம் அது நீக்கி பழி நடப்பார்க்கு பரவலும் ஆமே மேல் #1549 வழி சென்ற மாதவம் வைகின்ற-போது பழி செல்லும் வல்வினை பற்று அறுத்து ஆங்கே வழி செல்லும் வல்வினையார் திறம் விட்டிட்டு உழி செல்லில் உம்பர் தலைவன் முன் ஆமே மேல் #1550 இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும் கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே மேல் #1551 பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர் நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி உலகில் இருந்து அழுவாரே மேல் #1552 இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும் அருந்தவம் மேற்கொண்டு அங்கு அண்ணலை எண்ணில் வருந்தா வகை செய்து வானவர் கோனும் பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே மேல் #1553 தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர் பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர் கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள் நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே மேல் #1554 அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும் குறி அது கண்டும் கொடுவினையாளர் செறிய நினைக்கிலர் சேவடி தானே மேல் #1555 மன்னும் ஒருவன் மருவும் மனோமயன் என்னின் மனிதர் இகழ்வர் இ ஏழைகள் துன்னி மனமே தொழு-மின் துணை_இலி தன்னையும் அங்கே தலைப்படல் ஆமே மேல் #1556 ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயமுற்று ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார் சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார் நீங்கா சமயத்துள் நின்று ஒழிந்தார்களே மேல் #1557 இமையவர்-தம்மையும் எம்மையும் முன்னம் அமைய வகுத்தவன் ஆதி புராணன் சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட அமைய அங்கு உழல்கின்ற ஆதி பிரானே மேல் #1558 ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள என்றது போல இரு முச்சமயமும் நன்று இது தீது இது என்று உரையாளர்கள் குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே மேல் #1559 சைவ பெருமை தனிநாயகன்-தன்னை உய்ய உயிர்க்கின்ற ஒண் சுடர் நந்தியை மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய் வைய தலைவனை வந்து அடைந்து உய்-மினே மேல் #1560 சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில் பவன் அவன் வைத்த பழ வழி நாடி இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே மேல் #1561 ஆமாறு உரைக்கும் அறு சமயாதிக்கு போமாறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு ஆம்ஆம் வழி ஆக்கும் அ வேறு உயிர்கட்கும் போமாறு அ ஆதார பூங்கொடியாளே மேல் #1562 அரன்நெறி ஆவது அறிந்தேனும் நானும் சிர நெறி தேடி திரிந்த அந்நாளும் உர நெறி உள்ள கடல் கடந்து ஏறும் தர நெறி நின்ற தனிச்சுடர் தானே மேல் #1563 தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி பேர்ந்தவர் உன்னி பெயர்ந்த பெருவழி ஆர்ந்தவர் அண்டத்து புக்க அருள்நெறி போந்து புனைந்து புணர்நெறி ஆமே மேல் #1564 ஈரும் மனத்தை இரண்டு அற வீசு-மின் ஊரும் சகாரத்தை ஓது-மின் ஓதியே வாரும் அரன்நெறி மன்னியே முன்னிய தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே மேல் #1565 மினல் குறியாளனை வேதியர் வேதத்து அனல் குறியாளனை ஆதி பிரான்-தன்னை நினை குறியாளனை ஞான கொழுந்தின் நய குறி காணில் அரன்நெறி ஆமே மேல் #1566 ஆய்ந்து உணரார்களின் ஆன்மா சதுர் பல ஆய்ந்து உணரா வகை நின்ற அரன்நெறி பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கைதொழு தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே மேல் #1567 சைவ பெருமை தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு தெய்வ சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்துய்ய வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே மேல் #1568 இ தவம் அ தவம் என்று இரு பேர் இடும் பித்தரை காணின் நகும் எங்கள் பேர் நந்தி எ தவமாகில் என் எங்கு பிறக்கில் என் ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே மேல் #1569 ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆருயிர் ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும் நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே மேல் #1570 ஆதி பிரான் உலகு ஏழும் அளந்தவன் ஓத கடலும் உயிர்களுமாய் நிற்கும் பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி ஆதி கண் தெய்வமும் அந்தமும் ஆமே மேல் #1571 ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர் ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன்நெறி ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கைதொழ ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே மேல் #1572 அறிய ஒண்ணாத அ உடம்பின் பயனை அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி அறிய ஒண்ணாத அறு வகை கோசத்து அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே மேல்@6 ஆறாம் தந்திரம் #1573 பத்தி பணித்து பரவும் அடி நல்கி சுத்த உரையால் துரிசு அற சோதித்து சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு ஆமே மேல் #1574 பாசத்தை கூட்டியே கட்டி பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியில் கூட்டலால் நாட்டத்தது ஆசற்ற சற்குரு அம்பலம் ஆமே மேல் #1575 சித்திகள் எட்டொடும் திண்சிவம் ஆக்கிய சுத்தியும் எண் சத்தி தூய்மையும் யோகத்து சத்தியும் மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளில் பயிலுமே மேல் #1576 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கு அருள் நல்கலால் எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தலால் சொல்லார்ந்த நல்குரு சுத்த சிவமே மேல் #1577 தேவனும் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றாய் உன கண்டு உரையாலே மூவா பசு பாசம் மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே மேல் #1578 சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து அத்தனை நல்கு அருள் காணா அதி மூடர் பொய் தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர் அத்தன் இவன் என்று அடிபணிவாரே மேல் #1579 உண்மையில் பொய்மை ஒழித்தலும் உண்மை பார் திண்மையும் ஒண்மை சிவம் ஆய அ அரன் வண்மையும் எட்டெட்டு சித்தி மயக்கமும் அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே மேல் #1580 சிவனே சிவஞானி ஆதலால் சுத்த சிவனே என அடி சேர வல்லார்க்கு நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும் பவம் ஆனது இன்றி பரலோகம் ஆமே மேல் #1581 குருவே சிவம் என கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே மேல் #1582 சித்தம் யாவையும் சிந்தித்து இருந்திடும் அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே சித்தம் யாவையும் திண்சிவம் ஆன-கால் அத்தனும் அ இடத்தே அமர்ந்தானே மேல் #1583 தான் நந்தி சீர்மை உள் சந்தித்த சீர் வைத்த கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை வான் நந்தி என்று மகிழும் ஒருவற்கு தான் நந்தி அங்கி தனிச்சுடர் ஆமே மேல் #1584 திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை மருளாது அருளும் மயக்கு அறும் வாய்மை பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன் உருவாய் அருளாவிடில் ஓர ஒண்ணாதே மேல் #1585 பத்தியும் ஞான வைராக்கியமும் பர சித்திக்கு வித்து ஆம் சிவோகமே சேர்தலான் முத்தியின் ஞானம் முளைத்தலால் அ முளை சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே மேல் #1586 இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் மன் எய்த வைத்த மனம் அது தானே மேல் #1587 சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் முத்தி சிவம் ஆன ஞானம் சிவபரத்தே ஏக சிவம் ஆன ஞானம் சிவானந்தம் நல்குமே மேல் #1588 அறிந்து உணர்ந்தேன் இ அகல் இடம் முற்றும் செறிந்து உணர்ந்து ஓதி திருவருள் பெற்றேன் மறந்து ஒழிந்தேன் மதி மாண்டவர் வாழ்க்கை பிறிந்து ஒழிந்தேன் இ பிறவியை நானே மேல் #1589 தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம் கருக்கொண்ட ஈசனை கண்டுகொண்டேனே மேல் #1590 இசைந்து எழும் அன்பில் எழுந்த படியே பசைந்து எழும் ஈசரை பாசத்து உள் ஏக சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க உவந்த குருபதம் உள்ளத்து வந்ததே மேல் #1591 தாள் தந்த போதே தலை தந்த எம் இறை வாள் தந்த ஞான வலியையும் தந்திட்டு வீடு அந்தம் இன்றியே ஆள்க என விட்ட அருள் பாடின் முடி வைத்து பார் வந்து தந்ததே மேல் #1592 தான் அவன் ஆகி சொரூபத்து வந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி தான் அடி முன் சூட்டி தாபித்தது உண்மையே மேல் #1593 உரை அற்று உணர்வு அற்று உயிர்பரம் அற்று திரை அற்ற நீர் போல் சிவம் ஆதல் தீர்த்து கரை அற்ற சத்தாதி நான்கும் கடந்த சொரூபத்து இருத்தினன் சொல் இறந்தோமே மேல் #1594 குரவன் உயிர் முச்சொரூபமும் கைக்கொண்டு அரிய பொருள் முத்திரை ஆக கொண்டு பெரிய பிரான் அடி நந்தி பேச்சு அற்று உருகிட என்னை அங்கு உய்ய கொண்டானே மேல் #1595 பேச்சு அற்ற இன்பத்து பேரானந்தத்திலே மாச்சு அற்ற என்னை சிவம் ஆக்கி ஆள்வித்து காச்சு அற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு வாச்ச புகழ் மாள தாள் தந்து மன்னுமே மேல் #1596 இதயத்தும் நாட்டத்தும் என்தன் சிரத்தும் பதிவித்த பாத பராபரன் நந்தி கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும் விதி வைத்தவாறும் விளம்ப ஒண்ணாதே மேல் #1597 திருவடி வைத்து என் சிரத்து அருள் நோக்கி பெருவடி வைத்து அந்த பேர் நந்தி-தன்னை குரு வடிவில் கண்ட கோனை எம் கோவை கரு வழி ஆற்றிட கண்டுகொண்டேனே மேல் #1598 திருவடி ஞானம் சிவம் ஆக்குவிக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறை மலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே மேல் #1599 மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல்வினை மால் வைத்த சிந்தையை மாயம் அது ஆக்கிடும் பால் வைத்த சென்னி படர் ஒளி வானவன் தாள் வைத்தவாறு தரிப்பித்தவாறே மேல் #1600 கழல் ஆர் கமல திருவடி என்னும் நிழல் சேர பெற்றேன் நெடுமால் அறியா அழல் சேரும் அங்கியுள் ஆதி பிரானும் குழல் சேரும் என் உயிர் கூடும் குலைத்தே மேல் #1601 முடி மன்னராய் மூவுலகம் அது ஆள்வர் அடி மன்னர் இன்பத்து அளவு இல்லை கேட்கின் முடி மன்னராய் நின்ற தேவர்கள் ஈசன் குடி மன்னராய் குற்றம் அற்று நின்றாரே மேல் #1602 வைத்தேன் அடிகள் மனத்தினுள்ளே நான் பொய்த்தே எரியும் புலன் வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றி இட்டு மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே மேல் #1603 அடி சாரலாம் அண்ணல் பாதம் இரண்டும் முடி சார வைத்தனர் முன்னை முனிவர் படி சார்ந்த இன்ப பழவடி வெள்ள குடி சார் நெறி கூடி நிற்பவர் கொள்கையே மேல் #1604 மந்திரம் ஆவதும் மா மருந்து ஆவதும் தந்திரம் ஆவதும் தானங்கள் ஆவதும் சுந்தரம் ஆவதும் தூய்நெறி ஆவதும் எந்தை பிரான்-தன் இணை அடி தானே மேல் #1605 நீங்கா சிவானந்த ஞேயத்தே நின்றிட பாங்கு ஆன பாசம் படரா படரினும் ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே மேல் #1606 ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர் ஆயத்தில் நின்ற அறிவு அறிவாரே மேல் #1607 தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால் நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே மேல் #1608 வைச்சன ஆறாறு மாற்றி எனை வைத்து மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு நிச்சயம் ஆக்கி சிவம் ஆக்கி ஞேயத்தால் அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே மேல் #1609 முன்னை அறிவு அறியாத அ மூடர் போல் பின்னை அறிவு அறியாமையை பேதித்தான் தன்னை அறிய பரன் ஆக்கி தன்சிவத்து என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே மேல் #1610 காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணாய் என வந்து காட்டினன் நந்தியே மேல் #1611 மோனம் கைவந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனம் கைவந்தோர்க்கு சித்தியும் முன் நிற்கும் மோனம் கைவந்து ஊமையாம் மொழி முற்றும் காண் மோனம் கைவந்து ஐங்கருமமும் முன்னுமே மேல் #1612 முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால் வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி உய் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே மேல் #1613 மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற மூல சொரூபன் மொழி ஞாதுருவனே மேல் #1614 இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை மறப்பு இலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு அறப்பதி காட்டும் அமரர் பிரானே மேல் #1615 பிறந்தும் இறந்தும் பல் பேதைமையாலே மறந்து மல இருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர் பருவத்து துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே மேல் #1616 அறவன் பிறப்பு_இலி யாரும் இலாதான் உறைவது காட்டு அகம் உண்பது பிச்சை துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே மேல் #1617 நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முள் பாயும் நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு நெறியின் நெருஞ்சில் முள் பாயகிலாவே மேல் #1618 கேடும் கடமையும் கேட்டு வந்து ஐவரும் நாடி வளைந்தது நான் கடவேன் அலேன் ஆடல் விடை உடை அண்ணல் திருவடி கூடும் தவம் செய்த கொள்கையான் தானே மேல் #1619 உழவன் உழஉழ வானம் வழங்க உழவன் உழவினில் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்றிட்டு உழவன் அதனை உழவு ஒழிந்தானே மேல் #1620 மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூற்றுவன் நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா_இலி கார் துறந்தார்க்கு அவன் கண்_நுதலாய் நிற்கும் பார் துறந்தார்க்கே பதம் செயல் ஆமே மேல் #1621 நாகமும் ஒன்று படம் ஐந்து நால் அது போக முள் புற்றில் பொருந்தி நிறைந்தது ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து ஏக படம் செய்து உடம்பு இடம் ஆமே மேல் #1622 அகன்றார் வழி முதல் ஆதி பிரானும் இவன் தான் என நின்று எளியனும் அல்லன் சிவன் தாள் பலபல சீவனும் ஆகும் நயன்றான் வரும் வழி நாம் அறியோமே மேல் #1623 தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பல் குழலியின் கஞ்சுளி பட்டது வேம்பு ஏறி நோக்கினன் மீகாமன் கூரையில் கூம்பு ஏறி கோயிலில் பூக்கின்றவாறே மேல் #1624 ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவது இல்லை நமனும் அங்கு இல்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும் பயன் இல்லை பற்று விட்டோர்க்கே மேல் #1625 எம் ஆருயிரும் இருநில தோற்றமும் செம் மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவர் அல்லால் இ மாதவத்தின் இயல்பு அறியாரே மேல் #1626 பிறப்பு அறியார் பல பிச்சை செய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பு இலர் ஆகிய மா தவம் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றாரே மேல் #1627 இருந்து வருந்தி எழில் தவம் செய்யும் பெரும் தன்மையாளரை பேதிக்க என்றே இருந்து இந்திரன் எவரே வரினும் திருந்து நும்தம் சிந்தை சிவன் அவன்-பாலே மேல் #1628 கரந்தும் கரந்திலன் கண்ணுக்கும் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அருந்தவர்க்கு அல்லால் அணுகலும் ஆகான் விரைந்து தொழப்படும் வெண்மதியானே மேல் #1629 இன் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை முன் எய்த வைத்த முதல்வனை எம் இறை தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும் மன் எய்த வைத்த மனம் அது தானே மேல் #1630 அமைச்சரும் ஆனை குழாமும் அரசும் பகைத்து எழும் பூசல் உட்பட்டார் நடுவே அமைத்தது ஓர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்து அழியாது இருந்தார் தவத்தாரே மேல் #1631 சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர் மாத்திரை போது மறித்து உள்ளே நோக்கு-மின் பார்த்த அ பார்வை பசுமரத்தாணி போல் ஆர்த்த பிறவி அகல விட்டு ஓடுமே மேல் #1632 தவம் வேண்டு ஞானம் தலைபட வேண்டில் தவம் வேண்டா ஞான சமாதி கைகூடில் தவம் வேண்டா அ சகமார்க்கத்தோர்க்கு தவம் வேண்டா மாற்றம்-தனை அறியாரே மேல் #1633 ஓதலும் வேண்டாம் உயிர்க்குயிர் உள்ளுற்றால் காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் சாதலும் வேண்டாம் சமாதி கைகூடினால் போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே மேல் #1634 கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால் சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால் சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றலால் சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே மேல் #1635 விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய்யுரை செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய்யறம் செய்வார் விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே மேல் #1636 கூடி தவம்செய்து கண்டேன் குரை கழல் தேடி தவம்செய்து கண்டேன் சிவகதி வாடி தவம்செய்வதே தவம் இவை களைந்து ஊடில் பல உலகோர் எத்தவரே மேல் #1637 மனத்து உறை மா கடல் ஏழும் கைநீந்தி தவத்திடையாளர் தம் சார்வத்து வந்தார் பவத்திடையாளர் அவர் பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே மேல் #1638 மனத்திடை நின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டு அற ஈர்த்து புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்திடை ஆறொளி தன் ஒளி ஆமே மேல் #1639 ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம் சத்தான செய்வது தான் தவம் தானே மேல் #1640 இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி மலர் தொட்டு கொண்டேன் வரும் புனல் காணேன் தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் தலை தொட்டு கண்டேன் தவம் கண்டவாறே மேல் #1641 படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும் இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே மேல் #1642 ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய் ஈற்று கரடிக்கு எதிர்ப்பட்டதன் ஒக்கும் நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே மேல் #1643 பழுக்கின்றவாறும் பழம் உண்ணும் ஆறும் குழ கன்று துள்ளிய கோணியை பல்-கால் குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள் இழு காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே மேல் #1644 சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டாவால் சித்தம் சிவானந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம் சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே மேல் #1645 பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம் பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம் பிரான் அருளில் பெருந்தன்மையும் உண்டு பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே மேல் #1646 தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகம் திரிவார் அவிழும் மனமும் எம் ஆதி அறிவும் தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே மேல் #1647 புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில் நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே மேல் #1648 முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து நல் நின்று உலகில் நடுவுயிராய் நிற்கும் பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும் முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே மேல் #1649 சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர் சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர் சிவன் அருளால் வினை சேரகிலாமை சிவன் அருள் கூடின் அ சிவலோகம் ஆமே மேல் #1650 புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள் பெற்ற-போதே மேல் #1651 காய தேர் ஏறி மன பாகன் கை கூட்ட மாய தேர் ஏறி மங்கும் அவை உணர் நேய தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால் ஆய தேர் ஏறி அவன் இவன் ஆமே மேல் #1652 அ-உலகத்தே பிறக்கில் உடலொடும் அ உலகத்தே அருந்தவர் நாடுவர் அ உலகத்தே அரன் அடி கூடுவர் அ உலகத்தே அருள் பெறுவாரே மேல் #1653 கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம் மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம் சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம் எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே மேல் #1654 நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியை தேடுவன் தேடி சிவபெருமான் என்று கூடுவன் கூடி குறை கழற்கே செல்ல வீடும் அளவும் விடுகின்றிலேனே மேல் #1655 ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் காணீர் சிவன் அவன் தாள்களே மேல் #1656 ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் மானம் நலம் கெடும் வையகம் பஞ்சமாம் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே மேல் #1657 இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள நன்செயல் புன்செயலால் அந்த நாட்டிற்கு ஆம் என்ப இறை நாடி நாள்-தோறும் நாட்டினில் மன்பதை செப்பம்செயின் வையம் வாழுமே மேல் #1658 இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த வழிகுலத்தோர் வேடம் பூண்பர் தே ஆக பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் கழிகுலத்தோர்கள் களையப்பட்டோரே மேல் #1659 பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்து பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகாரேல் பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே மேல் #1660 பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே மேல் #1661 தவம் மிக்கவரே தலையான வேடர் அவம் மிக்கவரே அதி கொலை வேடர் அவம் மிக்கவர் வேடத்து ஆகார் அ வேடம் தவம் மிக்கவர்க்கு அன்றி தாங்க ஒண்ணாதே மேல் #1662 பூதி அணிவது சாதனம் ஆதியில் காது அணி தாம்பிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீது இல் சிவயோகி சாதனம் தேரிலே மேல் #1663 யோகிக்கு இடும் அதுவுள் கட்டு கஞ்சுளி தோகைக்கு பாசத்து சுற்றும் சடை அது ஒன்று ஆகத்து நீறு அணி ஆங்கு அ கபாலம் சீகத்த மாத்திரை திண் பிரம்பு ஆகுமே மேல் #1664 காது அணி குண்டலம் கண்டிகை நாதமும் ஊது நல் சங்கும் உயர் கட்டி கப்பரை ஏதம் இல் பாதுகம் யோகாந்தம் ஆதனம் ஏதல் இல் யோகபட்டம் தண்டம் ஈரைந்தே மேல் #1665 நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள் நூல் அது வேதாந்தம் நுண் சிகை ஞானமாம் பால் ஒன்றும் அந்தணர் பார்ப்பார் பரம் உயிர் ஓர் ஒன்று இரண்டினில் ஓங்காரம் ஓதிலே மேல் #1666 கங்காளன் பூசும் கவச திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரேயாமாகில் தங்கா வினைகளும் சாரும் சிவகதி சிங்காரம் ஆன திருவடி சேர்வரே மேல் #1667 அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம் விரவு கனலில் வியன் உரு மாறி நிரவயன் நின்மலன் தாள் பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர் குலம் ஆகுமே மேல் #1668 ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்-பால் ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே மேல் #1669 புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை நல்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி துன்ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர் பின்ஞானத்தோர் ஒன்றும் பேசகில்லாரே மேல் #1670 சிவஞானிகட்கும் சிவயோகிகட்கும் அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் அவமாம் அவர்க்கு அது சாதனம் நான்கும் உவமானம் இல்பொருள் உள்ளுறலாமே மேல் #1671 கத்தி திரிவர் கழுவடி நாய் போல் கொத்தி திரிவர் குரக்களி ஞாளிகள் ஒத்து பொறியும் உடலும் இருக்கவே செத்து திரிவர் சிவஞானியோர்களே மேல் #1672 அடியார் அவரே அடியார் அலாதார் அடியாரும் ஆகார் அ வேடமும் ஆகார் அடியார் சிவஞானம் ஆனது பெற்றோர் அடியார் அலாதார் அடியார்கள் அன்றே மேல் #1673 ஞானிக்கு சுந்தர வேடமும் நல்லவாம் தான் உற்ற வேடமும் தன் சிவயோகமே ஆன அ வேடம் அருள் ஞான சாதனம் ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே மேல் #1674 ஞானத்தினால் பதம் நண்ணும் சிவஞானி தானத்தில் வைத்த தனி ஆலயத்தனாம் மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம் ஏனை தவசி இவன் எனல் ஆகுமே மேல் #1675 தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் ஏனைய அ சிவம் ஆன இயற்கையும் தானுறு சாதக முத்திரை சாத்தலும் ஏனமும் நந்தி பதம் முத்தி பெற்றதே மேல் #1676 அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி பொருளாம் தனது உடல் பொன் பதி நாடி இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர் தெருளாம் அடிமை சிவவேடத்தோரே மேல் #1677 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா உடல் கழன்றால் வேடம் உடனே கழலும் உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார் கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே மேல் #1678 மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று கயலுற்ற கண்ணியர் கை இணக்கு அற்று தயல் அற்றவரோடும் தாமே தாம் ஆகி செயலற்று இருப்பார் சிவவேடத்தாரே மேல் #1679 ஓடும் குதிரை குசை திண்ணம் பற்று-மின் வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே நாடு-மின் நந்தியை நம் பெருமான்-தன்னை தேடும் இன்ப பொருள் சென்று எய்தலாமே மேல் #1680 குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார் குருட்டினை நீக்கா குருவினை கொள்வார் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழி விழுமாறே மேல் #1681 மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி நினைப்பின் அதனினில் நிழலையும் காணார் வினை பயன் போக விளக்கியும் கொள்ளார் புற கடை இச்சித்து போகின்றவாறே மேல் #1682 ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள் வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர் ஊன் நிலை செய்யும் உரு_இலி தானே மேல் #1683 வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து நீ ஒன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் தீ என்று இங்கு உன்னை தெளிவன் தெளிந்த பின் பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே மேல் #1684 பஞ்ச துரோகத்து இ பாதகர் தம்மை அஞ்ச சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்ச செய்து இ புவி வேறே விடாவிடில் பஞ்சத்து உளாய் புவி முற்றும் பாழ் ஆகுமே மேல் #1685 தவத்திடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்று அறியாதவர் எல்லாம் பவத்திடை நின்றது ஓர் பாடு அது ஆமே மேல் #1686 கன்றலும் கருதலும் கருமம் செய்தலும் நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்று இவை இறை-பால் இயற்கை அல்லவே மேல் #1687 விடிவது அறியார் வெளி காண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியது ஓர் உண்மை கட்டு-மின் காண்-மின் விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே மேல் #1688 வைத்த பசு பாச மாற்று நெறி வைகி பெத்தம் அற முத்தன் ஆகி பிறழுற்று தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு பித்தான சீடனுக்கு ஈயப்பெறாதானே மேல் #1689 மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான் துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான் அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே மேல் #1690 தொழில் அறிவாளர் சுருதி கண் ஆக பழுது அறியாத பரமகுருவை வழி அறிவார் நல் வழி அறிவாளர் அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே மேல் #1691 பதைத்து ஒழிந்தேன் பரமா உனை நாடி அதைத்து ஒழிந்தேன் இனி யாரொடும் கூடேன் சிதைத்து அடியேன் வினை சிந்தனை தீர உதைத்து உடையாய் உகந்து ஆண்டருளாயே மேல் #1692 பதைக்கின்ற போதே பரம் என்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல் நின்று நோக்கி சிதைக்கின்ற சிந்தையை செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே மேல் #1693 கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக உள்ள பொருள் உடல் ஆவியுடன் ஈக எள்ளத்தனையும் இடைவிடாதே நின்று தெள்ளி அறிய சிவபதம் தானே மேல் #1694 சோதி விசாகம் தொடர்ந்து இரு தேள் நண்டு ஓதிய நாளே உணர்வது தான் என்று நீதியுள் நீர்மை நினைந்தவர்க்கு அல்லது ஆதியும் ஏதும் அறியகிலானே மேல் #1695 தொழில் ஆரமாம் மணி தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடம் கொண்ட-போதே விழலார் விறலாம் வினை அது போக கழல் ஆர் திருவடி கண்டருளாமே மேல் #1696 சாத்திகனாய் பரதத்துவம் தான் உன்னி ஆத்திக பேத நெறி தோற்றம் ஆகியே ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி சாத்த வல்லான் அவன் சற்சீடன் ஆமே மேல் #1697 சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி சித்தை உறுக்கி சிவனருள் கைகாட்ட பத்தியின் ஞானம் பெற பணிந்தான் அந்த சத்தியில் இச்சை தகுவோன் சற்சீடனே மேல் #1698 அடிவைத்து அருளுதி ஆசான் நின்று உன்னா அடிவைத்த மா முடி மாய பிறவி அடிவைத்த காய அருள் சத்தியாலே அடிபெற்ற ஞானத்தன் ஆசற்றுளோனே மேல் #1699 சீராரும் ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன்-பால் ஆக சாராத சாதக நான்கும் தன்-பால் உற்றோன் ஆராயும் ஞானத்தனாம் அடிவைக்கவே மேல் #1700 உணர்த்தும் அதிபக்குவர்க்கே உணர்த்தி இணக்கில் பராபரத்து எல்லையுள் இட்டு குணக்கொடு தெற்கு உத்தரபச்சிமம் கொண்டு உணர்த்து-மின் நாவுடையாள்-தன்னை உன்னியே மேல் #1701 இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி குறை அது கூறி குணம் கொண்டு போற்ற சிறை உடல் நீ அற காட்டி சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே மேல் #1702 வேட்கை விடு நெறி வேதாந்தம் ஆதலால் வாழ்க்கை புனல் வழி மாற்றி சித்தாந்தத்து வேட்கை விடும் மிக்க வேதாந்தி பாதமே தாழ்க்கும் தலையினோன் சற்சீடன் ஆமே மேல் #1703 சற்குணம் வாய்மை தயா விவேகம் தண்மை சற்குரு பாதமே சாயை போல் நீங்காமே சிற்பர ஞானம் தெளிய தெளிவோர்தல் அற்புதமே தோன்றல் ஆகும் சற்சீடனே மேல்@7 ஏழாம் தந்திரம் #1704 நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலி மேல் நின்ற குறிகள் பதினாறும் மூலம் கண்டு ஆங்கே முடிந்து முதல் இரண்டும் காலம் கண்டான் அடி காணலும் ஆமே மேல் #1705 ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின் மேதாதி நாத அந்த மீதாம் பராசத்தி போதாலயத்து அவிகாரம்-தனில் போத மேதாதி ஆதாரம் மீதான உண்மையே மேல் #1706 மேல் என்றும் கீழ் என்று இரண்டு அற காணும்-கால் தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும் பார் எங்கும் ஆகி பரந்த பராபரம் கார் ஒன்று கற்பகம் ஆகி நின்றானே மேல் #1707 ஆதார சோதனையால் நாடி சுத்திகள் மேதாதி ஈரெண் கலாந்தத்து விண் ஒளி போதாலயத்து புலன் கரணம் புந்தி சாதாரணம் கெடலாம் சகமார்க்கமே மேல் #1708 மேதாதியாலே விடாது ஓம் என தூண்டி ஆதார சோதனை அத்துவ சோதனை தாதாரம் ஆகவே தான் எழ சாதித்தால் ஆதாரம் செய்போகம் ஆவது காயமே மேல் #1709 ஆறு அந்தமும் கூடி ஆகும் உடம்பினில் கூறிய ஆதாரம் மற்றும் குறி கொண்-மின் ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே ஊறிய ஆதாரத்து ஓர் எழுத்து ஆமே மேல் #1710 ஆகும் உடம்பும் அழிக்கின்ற அ உடல் போகும் உடம்பும் பொருந்தியவாறுதான் ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம் ஆகும் உடம்புக்கும் ஆறந்தம் ஆமே மேல் #1711 ஆயும் மலரின் அணி மலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் மேய அறிவாய் விளைந்தது தானே மேல் #1712 இலிங்கம் அது ஆவது யாரும் அறியார் இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம் இலிங்கம் அது ஆவது எண்ணெண் கலையும் இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே மேல் #1713 உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய் உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகம் எடுத்த சதாசிவன் தானே மேல் #1714 போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும் ஆகமும் ஆறாறு தத்துவத்து அப்பால் ஆம் ஏகமும் நல்கி இருக்கும் சதாசிவம் ஆகமது அத்துவா ஆறும் சிவமே மேல் #1715 ஏத்தினர் எண்_இலி தேவர் எம் ஈசனை வாழ்த்தினர் வாச பசும் தென்றல் வள்ளல் என்று ஆர்த்தனர் அண்டம் கடந்த புறம்நின்று காத்தனர் என்னும் கருத்து அறியாரே மேல் #1716 ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன் கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள் தண் சுடராய் எங்கும் தற்பரம் ஆமே மேல் #1717 தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன் மாபரத்து உண்மை வழிபடுவார் இல்லை மாபரத்து உண்மை வழிபடுவாளர்க்கும் பூவகத்து உள்நின்ற பொன் கொடி ஆகுமே மேல் #1718 தூய விமானமும் தூலம் அது ஆகுமால் ஆய சதாசிவம் ஆகும் நல் சூக்குமம் பாய பலிபீடம் பத்திரலிங்கம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே மேல் #1719 முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும் கொத்தும் அ கொம்பு சிலை நீறு கோமளம் அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம் உய்த்ததின் சாதனம் பூமணலிங்கமே மேல் #1720 துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன் கன்றிய செம்பு கனல் இரதம் சலம் வன்திறல் செங்கல் வடிவு உடை வில்வம் பொன் தென்தியங்கு ஒன்றை தெளி சிவலிங்கமே மேல் #1721 மறையவர் அர்ச்சனை வண் படிகந்தான் இறையவர் அர்ச்சனை ஏய பொன் ஆகும் குறைவு இலா வசியர்க்கு கோமளம் ஆகும் துறையுடை சூத்திரர் தொல் வாணலிங்கமே மேல் #1722 அது உணர்ந்தோன் ஒரு தன்மையை நாடி எது உணரா வகை நின்றனன் ஈசன் புது உணர்வான புவனங்கள் எட்டும் இது உணர்ந்து என் உடல் கோயில் கொண்டானே மேல் #1723 அகல் இடமாய் அறியாமல் அடங்கும் உகல் இடமாய் நின்ற ஊன் அதன் உள்ளே பகல் இடம் ஆம் முனம் பாவ வினாசன் புகல் இடமாய் நின்ற புண்ணியன் தானே மேல் #1724 போது புனை கழல் பூமி அது ஆவது மாது புனை முடி வானகம் ஆவது நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் ஆதியுற நின்றது அ பரிசு ஆமே மேல் #1725 தரையுற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம் திரை பொரு நீர் அது மஞ்சன சாலை வரை தவழ் மஞ்சு நீர் வானுடு மாலை கரை அற்ற நந்தி கலையும் திக்கு ஆமே மேல் #1726 மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே மேல் #1727 உலந்திலர் பின்னும் உளர் என நிற்பர் நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்ய புலம்தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம்தரு தேவரை வந்தி செய்யீரே மேல் #1728 கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும் வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் தாயில் கொண்டால் போல் தலைவன் என்னுள் புக வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே மேல் #1729 கோயில் கொண்டான் அடி கொல்லை பெரு மறை வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகிட்டு வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே மேல் #1730 கூடிய பாதம் இரண்டும் படி மிசை பாடிய கை இரண்டு எட்டும் பரந்து எழுந்து தேடு முகம் ஐந்து செம் கணின் மூவைந்து நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே மேல் #1731 வேதா நெடுமால் உருத்திரன் மேல் ஈசன் மீது ஆன ஐம்முகன் விந்துவும் நாதமும் ஆதார சத்தியும் அந்த சிவனொடும் சாதாரணம் ஆம் சதாசிவம் தானே மேல் #1732 ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின் ஆகின்ற சத்தியுள் அ திசை பத்தே மேல் #1733 அ திசைக்குள்ளே அமர்ந்தன ஆறங்கம் அ திசைக்குள்ளே அமர்ந்தன நால்வேதம் அ திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு அ திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே மேல் #1734 சமயத்து எழுந்த அவத்தை ஈரைந்து உள சமயத்து எழுந்த இராசி ஈராறு உள சமயத்து எழுந்த சரீரம் ஆறெட்டு உள சமயத்து எழுந்த சதாசிவம் தானே மேல் #1735 நடுவு கிழக்கு தெற்கு உத்தரம் மேற்கு நடுவு படிகம் நல் குங்கும வன்னம் அடைவு உள அஞ்சனம் செவ்வரத்தம் பால் அடியேற்கு அருளிய முகம் இவை அஞ்சே மேல் #1736 அஞ்சு முகம் உள ஐம்மூன்று கண் உள அஞ்சினோடு அஞ்சு கரதலம் தான் உள அஞ்சுடன் அஞ்சு ஆயுதம் உள நம்பி என் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே மேல் #1737 சத்தி தராதலம் அண்டம் சதாசிவம் சத்தி சிவம் மிக்க தாபரம் சங்கமம் சத்தி உருவம் அருவம் சதாசிவம் சத்தி சிவதத்துவம் முப்பத்தாறே மேல் #1738 தத்துவமாவது அருவம் சராசரம் தத்துவமாவது உருவம் சுகோதயம் தத்துவம் எல்லாம் சகலமுமாய் நிற்கும் தத்துவம் ஆகும் சதாசிவன் தானே மேல் #1739 கூறு-மின் நூறு சதாசிவன் எம் இறை வேறு ஓர் உரைசெய்து மிகை பொருளாய் நிற்கும் ஏறு உரைசெய் தொழில் வானவர் தம்மொடு மாறு செய்வான் என் மனம் புகுந்தானே மேல் #1740 இருள் ஆர்ந்த கண்டமும் ஏந்து மழுவும் சுருள் ஆர்ந்த செஞ்சடை சோதி பிறையும் அருள் ஆர்ந்த சிந்தை எம் ஆதி பிரானை தெருள் ஆர்ந்து என் உள்ளே தெளிந்து இருந்தேனே மேல் #1741 சத்தி தான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில் உத்தரம் வாமம் உரையற்று இருந்திடும் தத்துவம் பூருவம் தற்புருடன் சிரம் அத்தகு கோரம் மகுடத்து ஈசானனே மேல் #1742 நாணு நல் ஈசானம் நடுவுச்சி தான் ஆகும் தாணுவின் தன் முகந்து தற்புருடம் ஆகும் காணும் அகோரம் இருதயம் குய்யமாம் மாணுற வாமம் ஆம் சத்தி நல் பாதமே மேல் #1743 நெஞ்சு சிரம் சிகை நீள் கவசம் கண்ணாம் வஞ்சம் இல் விந்து வளர் நிறம் பச்சையாம் செஞ்சுறு செஞ்சுடர் சேகரி மின்னாகும் செஞ்சுடர் போலும் தெசாயுதம் தானே மேல் #1744 எண்_இல் இதயம் இறை ஞான சத்தியாம் விண்ணில் பரை சிரம் மிக்க சிகையாதி வண்ண கவசம் வனப்பு உடை இச்சையாம் பண்ணும் கிரியை பரநேத்திரத்திலே மேல் #1745 சத்தி நாற்கோணம் சலமுற்று நின்றிடும் சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும் சத்தி நல்வட்டம் சலமுற்று இருந்திடும் சத்தி உருவாம் சதாசிவன் தானே மேல் #1746 மால் நந்தி எத்தனை காலம் அழைக்கினும் தான் நந்தி அஞ்சின் தனிச்சுடராய் நிற்கும் கால் நந்தி உந்தி கடந்து கமலத்தின் மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றானே மேல் #1747 ஒன்றியவாறும் உடலின் உடன் கிடந்து என்றும் எம் ஈசன் நடக்கும் இயல்பு அது தென் தலைக்கு ஏற திருந்தும் சிவனடி நின்று தொழுதேன் என் நெஞ்சத்தின் உள்ளே மேல் #1748 உணர்ந்தேன் உலகினில் ஒண்பொருளானை கொணர்ந்தேன் குவலயம் கோயில் என் நெஞ்சம் புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே மேல் #1749 ஆங்கு அவை மூன்றினும் ஆர் அழல் வீசிட தாங்கிடும் ஈரேழு தான் நடு ஆனதில் ஓங்கிய ஆதியும் அந்தமுமாம் என ஈங்கு இவை தம் உடல் இந்துவும் ஆமே மேல் #1750 தன் மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடும் தன் மேனி-தானும் சதாசிவமாய் நிற்கும் தன் மேனி தற்சிவன் தற்சிவானந்தமாம் தன் மேனி தான் ஆகும் தற்பரம் தானே மேல் #1751 ஆரும் அறியார் அகாரம் அவன் என்று பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி தாரம் இரண்டும் தரணி முழுதுமாய் மாறி எழுந்திடும் ஓசை அது ஆமே மேல் #1752 இலிங்க நல் பீடம் இசையும் ஓங்காரம் இலிங்க நல் கண்ட நிறையும் மகாரம் இலிங்கத்து உள்வட்டம் நிறையும் உகாரம் இலிங்கம் அகாரம் நிறை விந்து நாதமே மேல் #1753 அகாரம் முதலாய் அனைத்துமாய் நிற்கும் உகாரம் முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் அது ஆமே மேல் #1754 ஆதாரம் ஆதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதி பீட நாதமே போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே மேல் #1755 சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம் சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே மேல் #1756 தான் நேர் எழுகின்ற சோதியை காணலாம் வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே மேல் #1757 விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்து அதே பீட நாத இலிங்கமாம் அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே மேல் #1758 சத்தி நல் பீடம் தகு நல்ல ஆன்மா சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் சத்தி நல் ஆன்மா சதாசிவம் தானே மேல் #1759 மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற-போது நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே மேல் #1760 பராபரன் எந்தை பனி மதி சூடி தராபரன் தன் அடியார் மன கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்து உறைந்தானே மேல் #1761 பிரான் நல்ல நாம் எனில் பேதை உலகம் குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் அரா நின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொரா நின்றவர் செய்ய புண்ணியன் தானே மேல் #1762 அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள் என்றும் நின்று ஏத்துவன் எம் பெருமான்-தனை ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே மேல் #1763 உருவும் அருவும் உருவோடு அருவும் மருவு பரசிவன் மன் பல் உயிர்க்கும் குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும் தரு என நல்கும் சதாசிவன் தானே மேல் #1764 நால் ஆன கீழ் அது உருவ நடு நிற்க மேல் ஆன நான்கும் மருவு மிக நாப்பண் நால் ஆன ஒன்று மரு உரு நண்ணலால் பாலாம் இவையாம் பரசிவன் தானே மேல் #1765 தேவர் பிரானை திசைமுகநாதனை நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர் அவ்வழி யாவர் பிரான் அடி அண்ணலும் ஆமே மேல் #1766 வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற காண்தகையானொடும் கன்னி உணரினும் மூண்ட கை மாறினும் ஒன்று அது ஆமே மேல் #1767 ஆதி பரம் தெய்வம் அண்டத்து நல் தெய்வம் சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம் நீதியுள் மா தெய்வம் நின்மலன் எம் இறை பாதியுள் மன்னும் பராசத்தி ஆமே மேல் #1768 சத்திக்கு மேலே பராசத்தி-தன் உள்ளே சுத்த சிவபதம் தோயாத தூ ஒளி அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம் ஒத்தவுமாம் ஈசன் தான் ஆன உண்மையே மேல் #1769 கொழுந்தினை காணில் குவலயம் தோன்றும் எழுந்து இடம் காணில் இருக்கலும் ஆகும் பரந்து இடம் காணில் பார்ப்பதி மேலே திரண்டு எழ கண்டவன் சிந்தை உளானே மேல் #1770 எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும் முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம் சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே மேல் #1771 சத்தி சிவன் விளையாட்டாகும் உயிராகி ஒத்த இரு மாயா கூட்டத்து இடையூட்டி சுத்தம் அது ஆகும் துரியம் பிறவித்து சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே மேல் #1772 சத்தி சிவன்-தன் விளையாட்டு தாரணி சத்தி சிவமுமாம் சிவன் சத்தியும் ஆகும் சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை சத்திதான் என்றும் சமைந்து உரு ஆகுமே மேல் #1773 குரைக்கின்ற வாரி குவலய நீரும் பரக்கின்ற காற்று பயில்கின்ற தீயும் நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் ஆறு அறியேனே மேல் #1774 வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு நிரைத்து வரு கங்கை நீர் மலர் ஏந்தி உரைத்தவன் நாமம் உணர வல்லார்க்கு புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே மேல் #1775 ஒன்று என கண்டே எம் ஈசன் ஒருவனை நன்று என்று அடியிணை நான் அவனை தொழ வென்று ஐம்புலனும் மிக கிடந்து இன்புற அன்று என் அருள்செய்யும் ஆதி பிரானே மேல் #1776 மலர்ந்த அயன் மால் உருத்திரன் மகேசன் பலம் தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சத்தி சிவன் வடிவு ஆகி பலம் தரும் லிங்கம் பராநந்தி ஆமே மேல் #1777 மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடு சென்று ஆவி எழும் அளவு அன்றே உடலுற மேவப்படுவதும் விட்டு நிகழ்வதும் பாவித்து அடக்கில் பரகதி தானே மேல் #1778 உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர் வினை பற்று அற பார்த்து கைவைத்து நொடியின் அடி வைத்து நுண்ணுணர்வு ஆக்கி கடிய பிறப்பு அற காட்டினன் நந்தியே மேல் #1779 உயிரும் சரீரமும் ஒண் பொருள் ஆன வியவார் பரமும் பின் மேவும் பிராணன் செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கே உயலார் குருபரன் உய்ய கொண்டானே மேல் #1780 பச்சி மதிக்கிலே வைத்த ஆசாரியன் நிச்சலும் என்னை நினை என்ற அ பொருள் உச்சிக்கும் கீழ் அது உள் நாக்குக்கு மேல் அது வைச்ச பதம் இது வாய் திறவாதே மேல் #1781 பெட்டடித்து எங்கும் பிதற்றி திரிவேனை ஒட்டடித்து உள்ளமர் மாசு எல்லாம் வாங்கி பின் தட்டு ஒக்க மாறினன் தன்னையும் என்னையும் வட்டம் அது ஒத்து அது வாணிபம் வாய்த்ததே மேல் #1782 தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற விந்து பிணக்கு அறுத்து எல்லாம் கரு கொண்ட ஈசனை கண்டு கொண்டேனே மேல் #1783 கூடும் உடல் பொருள் ஆவி குறிக்கொண்டு நாடி அடி வைத்து அருள் ஞான சத்தியால் பாடல் உடலினில் பற்று அற நீக்கியே கூடிய தான் அவனாம் குளிக்கொண்டே மேல் #1784 கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள கொண்டான் உயிர் பொருள் காய குழாத்தினை கொண்டான் பலம் முற்றும் தந்தவன் கோடலால் கொண்டான் என ஒன்றும் கூறகிலேனே மேல் #1785 குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன் பறிக்கின்ற காயத்தை பற்றிய நேர்மை பிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே மேல் #1786 உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே மேல் #1787 காய பரப்பில் அலைந்து துரியத்து சால விரிந்து குவிந்து சகலத்தில் ஆய அவ்வாறு அடைந்து திரிந்தோர்க்கு தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே மேல் #1788 நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல் ஊன் என ஊன் உயிர் என்ன உடன் நின்று வான் என வானவர் நின்று மனிதர்கள் தேன் என இன்பம் திளைக்கின்றவாறே மேல் #1789 அவனும் அவனும் அவனை அறியார் அவனை அறியில் அறிவானும் இல்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன் இவன் ஆமே மேல் #1790 நான் இது தான் என நின்றவன் நாள்-தோறும் ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன் வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன் நான் இது அம்பர நாதனும் ஆமே மேல் #1791 பெருந்தன்மை தான் என யான் என வேறாய் இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும் பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே மேல் #1792 இரு பதம் ஆவது இரவும் பகலும் உரு அது ஆவது உயிரும் உடலும் அருள் அது ஆவது அறமும் தவமும் பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே மேல் #1793 காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனா தோன்றிடும் வேண்டி கிடந்து விளக்கொளியான் நெஞ்சம் ஈண்டு கிடந்து அங்கு இருள் அறும் ஆமே மேல் #1794 குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்புறு சிந்தையை சிக்கென நாடில் அறிப்புறு காட்சி அமரரும் ஆமே மேல் #1795 தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள் பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் என சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே மேல் #1796 தானே அறியும் வினைகள் அழிந்த பின் நானே அறிகிலன் நந்தி அறியும்-கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் தேனே அனைய நம் தேவர் பிரானே மேல் #1797 நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறியான் பின்னை யார் அறிவாரே மேல் #1798 அருள் எங்கும் ஆன அளவை அறியார் அருளை நுகர அமுதானதும் தேரார் அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார் அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே மேல் #1799 அறிவில் அணுக அறிவது நல்கி பொறி வழி ஆசை புகுத்தி புணர்ந்திட்டு அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே மேல் #1800 அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப்பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே மேல் #1801 அருளால் அமுத பெரும் கடல் ஆட்டி அருளால் அடிபுனைந்து ஆர்வமும் தந்திட்டு அருளான ஆனந்தத்து ஆரமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே மேல் #1802 பாசத்தில் இட்டது அருள் அந்த பாசத்தின் நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்த கூட்டத்தின் நேசத்து தோன்றா நிலை அருள் ஆமே மேல் #1803 பிறவா நெறி தந்த பேரருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதி பராபரன் உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே மேல் #1804 அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கி சிவமாய் அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி ஆமே மேல் #1805 ஆயும் அறிவோடு அறியாத மா மாயை ஆய கரணம் படைக்கும் ஐம்பூதமும் மாய பல இந்திரியம் அவற்றுடன் ஆய அருள் ஐந்தும் ஆம் அருள்செய்கையே மேல் #1806 அருளே சகலமுமாய பவுதிகம் அருளே சராசரமாய அகிலம் இருளே வெளியே எனும் எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே மேல் #1807 சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து தவம் ஆன ஐம்முகன் ஈசன் அரனும் பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா நவம் அவை ஆகி நடிப்பவன் தானே மேல் #1808 அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா அருட்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா தெருள் கண்ணினோர்க்கு எங்கும் சீரொளி ஆமே மேல் #1809 தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் தானே வியாபி தலைவனும் ஆமே மேல் #1810 தலை ஆன நான்கும் தனது அருவாகும் அலையா அருவுரு ஆகும் சதாசிவம் நிலையான கீழ் நான்கு நீடுரு ஆகும் துலையா இவை முற்றுமாய் அல்லது ஒன்றே மேல் #1811 ஒன்று அதுவாலே உலப்பு_இலி தான் ஆகி நின்றது தான் போல் உயிர்க்குயிராய் நிலை துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே மேல் #1812 நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோடு ஆய குடிலையுள் நாதம் அடைந்திட்டு போய கலை பல ஆக புணர்ந்திட்டு வீய தகா விந்து ஆக விளையுமே மேல் #1813 விளையும் பரவிந்து தானே வியாபி விளையும் தனி மாயை மிக்க மா மாயை கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே மேல் #1814 அருளில் தலை நின்று அறிந்து அழுந்தாதார் அருளில் தலை நில்லார் ஐம்பாசம் நீங்கார் அருளில் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே மேல் #1815 வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி ஆராவமுது அளித்து ஆனந்தி பேர் நந்தி பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்றினில் ஆரா அருட்கடல் ஆடுக என்றானே மேல் #1816 ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன் பெருந்தன்மையை கூடியவாறே குறியா குறி தந்து என் ஊடு நின்றான் அவன் தன் அருளுற்றே மேல் #1817 உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும் பற்றிய மாயா படலம் என பண்ணி அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே மேல் #1818 விளக்கினை ஏற்றி வெளியை அறி-மின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே மேல் #1819 ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே மேல் #1820 புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த திறம் ஏது என்று எண்ணி திகைத்து இருந்தேனே மேல் #1821 அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும் பொருள் அது என்ற புகலிடம் ஒன்றும் மருள் அது நீங்க மனம் புகுந்தானை தெருளுறும் பின்னை சிவகதி ஆமே மேல் #1822 கூறு-மின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் பார் அணியும் உடல் வீழ விட்டு ஆருயிர் தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே மேல் #1823 உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ள புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே மேல் #1824 வேட்டு அவி உண்ணும் விரிசடை நந்திக்கு காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும் ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும் பாட்டு அவி காட்டுதும் பால் அவி ஆகுமே மேல் #1825 பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும் மான சதாசிவன்-தன்னை ஆவாகித்து மேல் முகம் ஈசானம் ஆகவே கைக்கொண்டு சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே மேல் #1826 நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால் கனை கழல் ஈசனை காண அரிதாம் கனை கழல் ஈசனை காண்குற வல்லார் புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே மேல் #1827 மஞ்சனம் மாலை நிலாவிய வானவர் நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம் அஞ்சு அமுதாம் உபசாரம் எட்டெட்டொடும் அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே மேல் #1828 புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு நீர் உண்டு அண்ணல் அது கண்டு அருள்புரியாநிற்கும் எண்_இலி பாவிகள் எம் இறை ஈசனை நண்ணி அறியாமல் நழுவுகின்றாரே மேல் #1829 அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசு கேள் ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை சுத்தமதாக விளக்கி தெளிக்கவே முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே மேல் #1830 மறப்புற்று இ வழி மன்னி நின்றாலும் சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி மறப்பு இன்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே மேல் #1831 ஆராதனையும் அமரர் குழாங்களும் தீரா கடலும் நிலத்தும் அதாய் நிற்கும் பேர் ஆயிரமும் பிரான் திருநாமமும் ஆரா வழி எங்கள் ஆதி பிரானே மேல் #1832 ஆன் ஐந்தும் ஆட்டி அமரர் கணம் தொழ தான் அந்தம் இல்லா தலைவன் அருள் அது தேன் உந்து மா மலர் உள்ளே தெளிந்தோர் பார் ஐங்குணமும் படைத்து நின்றானே மேல் #1833 உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி மழை கொண்ட மா முகில் மேல் சென்று வானோர் தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே மேல் #1834 வெள்ள கடல் உள் விரிசடை நந்திக்கு உள்ள கடல் புக்கு வார் சுமை பூ கொண்டு கள்ள கடல் விட்டு கைதொழ மாட்டாதார் அள்ளல் கடலுள் அழுந்துகின்றாரே மேல் #1835 கழிப்படும் தண் கடல் கௌவை உடைத்து வழிப்படுவார் மலர் மொட்டு அறியார்கள் பழிப்படுவார் பலரும் பழி வீழ வெளிப்படுவோர் உச்சி மேவி நின்றானே மேல் #1836 பயன் அறிவு ஒன்று உண்டு பன் மலர் தூவி பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும் நயனங்கள் மூன்று உடையான் அடி சேர வயனங்களால் என்றும் வந்து நின்றானே மேல் #1837 ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன் மூர்த்தியை மூவா முதல் உருவாய் நின்ற தீர்த்தனை யாரும் துதித்து உணராரே மேல் #1838 தேவர்களோடு இசை வந்து மண்ணோடுறும் பூவொடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை மூவரில் பன்மை முதல்வனாய் நின்று அருள் நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே மேல் #1839 உழைக்க வல்லோர் நடு நீர் மலர் ஏந்தி பிழைப்பு இன்றி ஈசன் பெருந்தவம் பேணி இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே மேல் #1840 வென்று விரைந்து விரை பணி என்றனர் நின்று பொருந்த இறை பணி நேர்பட துன்று சல மலர் தூவி தொழுதிடில் கொண்டிடு நித்தலும் கூறிய அன்றே மேல் #1841 சாத்தியும் வைத்தும் சயம்பு என்று ஏத்தியும் ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார் ஆத்தி மலக்கிட்டு அகத்து இழுக்கு அற்ற-கால் மாத்திக்கே செல்லும் வழி அது ஆமே மேல் #1842 ஆவி கமலத்தின் அப்புறத்து இன்புற மேவி திரியும் விரிசடை நந்தியை கூவி கருதி கொடுபோய் சிவத்திடை தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே மேல் #1843 சாண் ஆகத்து உள்ளே அழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்து அறிவார் இல்லை பேணி பெருக்கி பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம் புகுந்தானே மேல் #1844 பெருந்தன்மை நந்தி பிணங்கி இருள் நேமி இரும் தன்மையாலும் என் நெஞ்சு இடம் கொள்ள வரும் தன்மையாளனை வானவர் தேவர் தரும் தன்மையாளனை தாங்கி நின்றாரே மேல் #1845 சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும் அமையும் விசேடமும் ஆனமம் திரசுத்தி சமைய நிர்வாணம் கலாசுத்தி ஆகும் அமைமன்று ஞானம் ஆனார்க்கு அபிடேகமே மேல் #1846 ஊழி-தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால் ஊழி-தோறு ஊழி உணரவும் தான் ஒட்டான் ஆழி அமரும் அரி அயன் என்று உளார் ஊழி முயன்றும் ஓர் உச்சி உளானே மேல் #1847 ஆகின்ற நந்தி அடி தாமரை பற்றி போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே மேல் #1848 கானுறு கோடி கடி கமழ் சந்தனம் வானுறு மா மலர் இட்டு வணங்கினும் ஊனினை நீக்கி உண்பவர்க்கு அல்லது தேன் அமர் பூங்கழல் சேர ஒண்ணாதே மேல் #1849 மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன் ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் சேவடி சேரல் செயல் அறல் தானே மேல் #1850 உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சு-மின் நச்சி நம என்று நாமத்தை விச்சு-மின் விச்சி விரிசுடர் மூன்றினும் நச்சு-மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே மேல் #1851 புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகுமாம் பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகுமாம் எண்_இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகுமால் பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே மேல் #1852 இந்துவும் பானுவும் இலங்கும் தலத்திடை வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம் இந்துவும் பானுவும் இலங்கா தலத்திடை வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே மேல் #1853 இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர் விந்துவும் நாதமும் ஆகி மீதானத்தே சிந்தனை சாக்கிராதீதத்தே சென்றிட்டு நந்தியை பூசிக்க நல் பூசை ஆமே மேல் #1854 மன பவனங்களை மூலத்தால் மாற்றி அனித உடல் பூதம் ஆக்கி அகற்றி புனிதன் அருள்-தனில் புக்கு இருந்து இன்பத்து தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே மேல் #1855 பகலும் இரவும் பயில்கின்ற பூசை இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆக பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான் கொள்வன் தாழ்சடையோனே மேல் #1856 இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்குஅற ஆனந்த தேறல் பருகி இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே மேல் #1857 பட மாட கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாட கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாட கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின் பட மாட கோயில் பகவற்கு அது ஆமே மேல் #1858 தண்டு அறு சிந்தை தபோதனர் தாம் மகிழ்ந்து உண்டது மூன்று புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமும் கொண்டது என்று எண் திசை நந்தி எடுத்து உரைத்தானே மேல் #1859 மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை யாத்தனுக்கு ஈந்த அரும்பொருள் ஆனது மூர்த்திகள் மூவர்க்கு மூவேழ் குரவர்க்கும் தீர்த்தம் அதுவாம் தேர்ந்து கொள்வீரே மேல் #1860 அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் பகரும் ஞானி பகல் ஊண் பலத்துக்கு நிகர் இலை என்பது நிச்சயம் தானே மேல் #1861 ஆறிடும் வேள்வி அருமறை நூல் அவர் கூறிடும் அந்தணர் கோடி பேர் உண்பதில் நீறு இடும் தொண்டர் நினைவின் பயன் இலை பேறு எனில் ஓர் பிடி பேறு அது ஆகுமே மேல் #1862 ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே மேல் #1863 சீர் நந்தி கொண்டு திருமுகமாய் விட்ட பேர் நந்தி என்னும் பிறங்கு சடையனை நான் நொந்துநொந்து வருமளவும் சொல்ல பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே மேல் #1864 அழிதகவு இல்லா அரன் அடியாரை தொழுதகை ஞாலத்து தூங்கு இருள் நீங்கும் பழுதுபடா வண்ணம் பண்பனை நாடி தொழுது எழ வையகத்தோர் இன்பம் ஆமே மேல் #1865 பகவற்கு ஏதாகிலும் பண்பு இலர் ஆகி புகும் அத்தராய் நின்று பூசனை செய்யும் முகமத்தோடு ஒத்து நின்று ஊழி-தோறு ஊழி அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்து ஒழிந்தாரே மேல் #1866 வித்தகம் ஆகிய வேடத்தர் உண்ட ஊண் அத்தன் அயன் மால் அருந்திய வண்ணமாம் சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின் முத்தியாம் என்று நம் மூலன் மொழிந்ததே மேல் #1867 தாழ்வு இலர் பின்னும் முயல்வர் அருந்தவம் ஆழ் வினை ஆழ அவர்க்கே அறம் செய்யும் ஆழ் வினை நீக்கி அருவினை தன்னொடும் போழ் வினை தீர்க்கும் அ பொன் உலகம் ஆமே மேல் #1868 திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும் வகைக்கு உரியான் ஒருவாதி இருக்கில் பகைக்கு உரியார் இல்லை பார் மழை பெய்யும் அக குறை கேடு இல்லை அ உலகுக்கே மேல் #1869 அ உலகத்தே பிறந்த அ உடலொடும் அ உலகத்தே அருந்தவம் நாடுவர் அ உலகத்தே அரன் அடி கூடுவர் அ உலகத்தே அருள்பெறுவாரே மேல் #1870 கொண்ட குறியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும் எண்திசையோரும் வந்து என் கைத்தலத்தினுள் உண்டு எனில் நாம் இனி உய்ந்து ஒழிந்தோமே மேல் #1871 அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும் கொண்ட சராசரம் முற்றும் குணங்களும் பண்டை மறையும் படைப்பு அளிப்பு ஆதியும் கண்ட சிவனும் கண் அன்றி இல்லையே மேல் #1872 பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள் உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒண்ணா கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும் அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே மேல் #1873 இயங்கும் உலகினில் ஈசன் அடியார் மயங்கா வழி செல்வர் வான் உலகு ஆள்வர் புயங்களும் எண் திசை போது பாதாள மயங்கா பகிரண்ட மா முடி தானே மேல் #1874 அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும் அகம் படி கண்டவர் அல்லலில் சேரார் அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம் அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே மேல் #1875 கழிவு முதலும் காதல் துணையும் அழிவும் அதாய் நின்ற ஆதி பிரானை பழியும் புகழும் படுபொருள் முற்றும் ஒழியும் என் ஆவி உழவு கொண்டானே மேல் #1876 என் தாயோ என் அப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம் ஒன்றா உலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில் வண்ணன் நேர் எழுத்தாயே மேல் #1877 துணிந்தார் அகம் படி துன்னி உறையும் பணிந்தார் அகம்படி பால் பட்டு ஒழுகும் அணிந்தார் அகம்படி ஆதி பிரானை கணிந்தார் ஒருவர்க்கு கைவிடல் ஆமே மேல் #1878 தலை மிசை வானவர் தாள் சடை நந்தி மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய புலை மிசை நீங்கிய பொன் உலகு ஆளும் பல மிசை செய்யும் படர்சடையோனே மேல் #1879 அறியா பருவத்து அரன் அடியாரை குறியால் அறிந்து இன்பம் கொண்டது அடிமை குறியார் சடைமுடி கட்டி நடப்பார் மறியார் புனல் மூழ்க மாதவம் ஆமே மேல் #1880 அவன்-பால் அணுகியே அன்பு செய்வார்கள் சிவன்-பால் அணுகுதல் செய்யவும் வல்லன் அவன்-பால் அணுகியே நாடும் அடியார் இவன்-பால் பெருமை இலயம் அதாமே மேல் #1881 முன் இருந்தார் முழுதும் எண்கண தேவர்கள் எண்_இறந்து தன்-பால் வருவர் இருநிலத்து எண் இருநாலு திசை அந்தரம் ஒக்க பன்னிரு காதம் பதம்செய்யும் பாரே மேல் #1882 சிவயோகி ஞானி செறிந்த அ தேசம் அவயோகம் இன்றி அறிவோர் உண்டாகும் நவயோகம் கைகூடும் நல் இயல் காணும் பவயோகம் இன்றி பரலோகம் ஆமே மேல் #1883 மேல் உணர்வான் மிகு ஞாலம் படைத்தவன் மேல் உணர்வான் மிகு ஞாலம் கடந்தவன் மேல் உணர்வார் மிகு ஞாலத்து அமரர்கள் மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே மேல் #1884 எட்டு திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர்கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அ நிலம் விட்டு கிடக்கில் விருப்பு அறியாரே மேல் #1885 அ சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் உச்சி அம் போது ஆக உள் அமர் கோவிற்கு பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே மேல் #1886 விச்சு கலம் உண்டு வேலி செய் ஒன்று உண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம் கெட்டு அ செய் அறுத்து உண்ண மாட்டாதார் இச்சைக்கு பிச்சை இரக்கின்றவாறே மேல் #1887 பிச்சை அது ஏற்றான் பிரமன் தலை-தன்னில் பிச்சை அது ஏற்றான் பிரியா அறம் செய்ய பிச்சை அது ஏற்றான் பிரமன் சிரம் காட்டி பிச்சை அது ஏற்றான் பிரமன் பரம் ஆகவே மேல் #1888 பரந்து உலகு ஏழும் படைத்த பிரானை இரந்து உணி என்பார்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தரம் ஆக நினையும் அடியார் இரந்து உண்டு தன் கழல் எட்ட செய்தானே மேல் #1889 வர இருந்தான் வழி நின்றிடும் ஈசன் தர இருந்தான் தன்னை நல்லவர்க்கு இன்பம் பொர இருந்தான் புகலே புகல் ஆக வர இருந்தால் அறியான் என்பது ஆமே மேல் #1890 அங்கார் பசியும் அவாவும் வெகுளியும் தங்கார் சிவனடியார் சரீரத்திடை பொங்கார் புவனத்தும் புண்ணியலோகத்தும் தங்கார் சிவனை தலைப்படுவாரே மேல் #1891 மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும் கை அக நீண்டார் கடைத்தலைக்கே செல்வர் ஐயம் புகாமல் இருந்த தவசியார் வையகம் எல்லாம் வர இருந்தாரே மேல் #1892 நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பால் ஆன மோன மொழியில் பதிவித்து மேல் ஆன நந்தி திருவடி மீது உய்ய கோலாகலம் கெட்டு கூடு நல் முத்தியே மேல் #1893 துரியங்கள் மூன்றும் சொருகிடன் ஆகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருவிய ஞானம் பிறழ் முத்திரையே மேல் #1894 சாம்பவி நந்தி-தன் அருள் பார்வையாம் ஆம் பவம் இல்லா அருள் பணி முத்திரை ஓம் பயில் ஓங்கிய உண்மைய கேசரி நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே மேல் #1895 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நல் சிவம் ஆதலால் ஏனை சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே மேல் #1896 வாக்கும் மனமும் இரண்டு மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கும் மனமும் மவுனமுமாம் சுத்தரே ஆக்கும் அ சுத்தத்தை யார் அறிவார்களே மேல் #1897 யோகத்தின் முத்திரை ஓர் அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணும்-கால் ஆக தகு வேத கேசரி சாம்பவி யோகத்து கேசரி யோக முத்திரையே மேல் #1898 யோகி எண் சித்தி அருள் ஒலி வாதனை போகி-தன் புத்தி புருடார்த்த நல் நெறி ஆகு நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டு ஒன்றில் எய்த நின்றானே மேல் #1899 துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம் அவா அறு ஈரை வகை அங்கம் ஆறும் தவா அறு வேதாந்த சித்தாந்த தன்மை நவா அகமோடு உன்னல் நல் சுத்த சைவமே மேல் #1900 மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கு முத்திரை கண்ட சமயமே மேல் #1901 தூ நெறி கண்ட சுவடு நடு எழும் பூ நெறி கண்டது பொன் அகமாய் நிற்கும் மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி நீல் நெறி கண்டுள நின்மலன் ஆமே மேல் #1902 வளர் பிறையில் தேவர்-தம் பாலின் மன்னி உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கி தளர்வு இல் பிதிர் பதம் தங்கி சசியுள் உளதுறும் யோகி உடல் விட்டால் தானே மேல் #1903 தான் இவை ஒக்கும் சமாதி கைகூடாது போன வியோகி புகலிடம் போந்து பின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே மேல் #1904 தான் இ வகையே புவியோர் நெறி தங்கி ஆன சிவயோகத்து ஆமாறாம் அ விந்து தான் அதில் அந்த சிவயோகி ஆகு முன் ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே மேல் #1905 சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால் தவலோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடி சிவயோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர் புவலோகம் போற்று நல் புண்ணியத்தோரே மேல் #1906 ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால் தான் அற மோன சமாதியுள் தங்கியே தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வுற்றே மேல் #1907 செத்தார் பெறும் பயன் ஆவது ஏதெனில் செத்து நீர் சேர்வது சித்தினை கூடிடில் செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம் செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே மேல் #1908 உன்ன கருவிட்டு உரவோன் அரன் அருள் பன்ன பரனே அருட்குலம் பாலிப்பன் என்ன புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி தன் இச்சைக்கு ஈசன் உரு செய்யும் தானே மேல் #1909 எங்கும் சிவமாய் அருளாம் இதயத்து தங்கும் சிவஞானிக்கு எங்குமாம் தற்பரம் அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல் இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே மேல் #1910 அந்தம்_இல் ஞானி தன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடு எலாம் வெப்புற தீயினில் நொந்து அது நாய் நரி நுகரின் உண் செரு வந்து நாய் நரிக்கு உணவு ஆகும் வையகமே மேல் #1911 எண்_இலா ஞானி உடல் எரி தாவிடில் அண்ணல் தம் கோயில் அழல் இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணின் மழை விழா வையகம் பஞ்சமாம் எண்_அரு மன்னர் இழப்பார் அரசே மேல் #1912 புண்ணியமாம் அவர் தம்மை புதைப்பது நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவு ஆகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல் மண்டியே மேல் #1913 அந்தம்_இல் ஞானி அருளை அடைந்த-கால் அந்த உடல் தான் குகை செய்து இருத்திடில் சுந்தர மன்னரும் தொல் புவி உள்ளோரும் அந்தம்_இல் இன்ப அருள் பெறுவாரே மேல் #1914 நவ மிகு சாணாலே நல் ஆழம் செய்து குவை மிகு சூழ ஐம் சாண் ஆக கோட்டி தவம் மிகு குகை முக்கோண முச்சாண் ஆக்கி பவம் அறு நல்குகை பத்மாசனமே மேல் #1915 தன் மனை சாலை குளம் கரை ஆற்று இடை நல் மலர் சோலை நகரின் நல் பூமி உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல் இ நிலம் தான் குகைக்கு எய்தும் இடங்களே மேல் #1916 நல் குகை நால் வட்டம் பஞ்சாங்க பாதமாய் நிற்கின்ற பாத நவ பாத நேர்விழ பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்று அணி நிற்பவர் தாம் செய்யும் நேர்மை அது ஆமே மேல் #1917 பஞ்சலோகங்கள் நவமணி பாரித்து விஞ்சப்படுத்ததன் மேல் ஆசனம் இட்டு முஞ்சிப்படுத்து வெண்ணீறு இட்டு அதன் மேலே பொன் செய்த நல் சுண்ணம் பொதியலும் ஆமே மேல் #1918 நள் குகை நால் வட்டம் படுத்ததன் மேல் சார கள் அவிழ் தாமம் களபம் கத்தூரியும் தெள்ளிய சாந்து புழுகு பன்னீர் சேர்த்து ஒள்ளிய தூபம் உவந்து இடுவீரே மேல் #1919 ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய மீதினில் இட்ட ஆசனத்தின் மேல் வைத்து போது அறு சுண்ணமும் நீறும் பொலிவித்து மீதில் இருத்தி விரித்திடுவீரே மேல் #1920 விரித்த பின் நாற்சாரும் மேவுதல் செய்து பொரித்த கறி போனகம் இளநீரும் குருத்தலம் வைத்தோர் குழை முகம் பார்வை தரித்த பின் மேல் வட்டம் சாத்திடுவீரே மேல் #1921 மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும் போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும் பாத உகத்தால் மஞ்சனம் செய்து பார் மீது மூன்றுக்கு மூன்று அணி நிலம் செய்யுமே மேல் #1922 ஆதனம் மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றை தாபித்து மேதகு சந்நிதி மேவு தரம் பூர்வம் காதலில் சோடசம் காண் உபசாரமே மேல் #1923 உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதய குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரமாதிகள் மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே மேல் #1924 செய்திடும் விந்து பேத திறன் ஐயைந்தும் செய்திடும் நாத பேத திறனால் ஆறும் செய்திடும் மற்று அவை ஈரிரண்டில் திறம் செய்திடும் மாறாது சேர் தத்துவங்களே மேல் #1925 வந்திடு பேதம் எலாம் பரவிந்து மேல் தந்திடு மா மாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இ நான்கும் மேவா விளங்குமே மேல் #1926 விளங்கு நிவிர்த்து ஆதி மேவு அகராதி வளம் கொள் உகார மகாரத்து உள் விந்து களங்கம் இல் நாதாந்தம் கண்ணின் உள் நண்ணி உளம் கொள் மன் ஆதியுள் அந்தமும் ஆமே மேல் #1927 அந்தமும் ஆதியும் ஆகி பராபரன் வந்த வியாபி எனலாய அ நெறி கந்தம் அது ஆகிய காரண காரியம் தந்து ஐங்கருமமும் தான் செய்யும் வீயமே மேல் #1928 வீயம் அது ஆகிய விந்துவின் சத்தியால் ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்ப காய ஐம்பூதமும் காரிய மாயையில் ஆயிட விந்து அகம்புறம் ஆகுமே மேல் #1929 புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து நிறம் அது வெண்மை நிகழ் நாதம் செம்மை உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள் திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே மேல் #1930 கொண்ட இ விந்து பரமம் போல் கோது அற நின்ற படம் கடமாய் நிலைநிற்றலில் கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து அண்டம் அனைத்துமாய் மா மாயை ஆகுமே மேல் #1931 அது வித்திலே நின்று அம் கண்ணிக்கு நந்தி இது வித்திலே உள ஆற்றை உணரார் மது வித்திலே மலர் அன்னம் அது ஆகி பொது வித்திலே நின்ற புண்ணியம் தானே மேல் #1932 வித்தினில் அன்றி முளை இல்லை அ முளை வித்தினில் அன்றி வெளிப்படுமாறு இல்லை வித்தும் முளையும் உடன் அன்றி வேறு அல்ல அ தன்மை ஆகும் அரன்நெறி காணுமே மேல் #1933 அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம் பொருந்தும் உடல் மனம் போல் மலம் என்ன திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம் அது ஆகுமே மேல் #1934 இரதம் முதல் ஆன ஏழ் தாது மூன்றின் உரிய தினத்தின் ஒரு புல் பனி போல் அரிய துளி வந்து ஆகும் ஏழ்மூன்றின் மருவிய விந்து வளரும் காயத்திலே மேல் #1935 காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டு காயத்துள் தன் மனம் ஆகும் கலா விந்து நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின் மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே மேல் #1936 அழிகின்ற விந்து அளவை அறியார் கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார் அழிகின்ற காயத்து அழிந்து அயர் உற்றோர் அழிகின்ற தன்மை அறிந்து ஒழியாரே மேல் #1937 பார்க்கின்ற மாதரை பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டி பார்க்கின்ற கண் ஆசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே மேல் #1938 தானே அருளால் சிவயோகம் தங்காது தானே அ காமாதி தங்குவோனும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடம் கெடும் ஊனே அவற்றுள் உயிர் ஓம்பா மாயுமே மேல் #1939 மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில் ஓயா இரு பக்கத்து உள் வளர் பக்கத்துள் ஏயா எண்ணாள் இன்ப மேல் பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதி நாள் ஆறு ஆமே மேல் #1940 ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றி சகமார்க்கம் வேறு அன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம் தோடு ஏறும் இருபத்தொரு நாளிடை தோங்கும் ஆறின் மிகுத்து ஓங்கும் அ காலம் செய்யவே மேல் #1941 செய்யும் அளற்று இருநால் முகூர்த்தமே எய்யும் கலை காலம் இந்து பருதி கால் நையும் இடத்து ஓடினன் காம நூல் நெறி செய்க வலமிடம் தீர்ந்து விடுக்கவே மேல் #1942 விடும் காண் முனைந்து இந்திரியங்களை போல் நடுங்காது இருப்பானும் ஐயைந்தும் நண்ணப் படும் காதல் மாதின்-பால் பற்று அற விட்டு கடுங்கால் கரணம் கருத்துற கொண்டே மேல் #1943 கொண்ட குணனே நலனே நல் கோமளம் பண்டை உருவே பகர் வாய் பவளமே மிண்டு தனமே மிடைய விடும் போதில் கண்ட கரணம் உள் செல்ல கண்டு ஏவிடே மேல் #1944 விட்ட பின் கர்ப்ப உற்பத்தி விதியிலே தொட்டுறும் காலங்கள் தோன்ற கருதிய கட்டிய வாழ்நாள் சாநாள் குணம் கீழ்மை சீர் பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே மேல் #1945 பார்த்திட்டு வைத்து பரப்பு அற்று உரு பெற்று வார் செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே சேர்த்துற்று இரு திங்கள் சேராது அகலினும் மூப்புற்றே பின்னாளில் ஆமெல்லாம் உள்ளவே மேல் #1946 வித்து இடுவோர்க்கு அன்றி மேலோர் விளைவு இல்லை வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கோர் அறிவு இல்லை வித்தினில் வித்தை விது அற உணர்வரேல் மத்தில் இருந்த ஓர் மாங்கனி ஆமே மேல் #1947 கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும் கருத்து உளன் ஈசன் கரு உயிரோடும் கருத்தது வித்தாய் காரண காரியம் கருத்து உறுமாறு இவை கற்பனை தானே மேல் #1948 ஒழியாத விந்து உடன் நிற்க நிற்கும் அழியா பிராணன் அதி பலம் சத்தி ஒழியாத புத்தி தபம் செபம் மோனம் அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே மேல் #1949 வற்ற அனலை கொளுவி மறித்து ஏற்றி உற்ற சுழி அனல் சொருகி சுடருற்று முற்று மதியத்து அமுதை முறைமுறை செற்று உண்பவரே சிவயோகியாரே மேல் #1950 யோகியும் ஞானியும் உத்தம சித்தனும் யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும் மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும் ஆகிய விந்து அழியாத அண்ணலே மேல் #1951 அண்ணல் உடலாகி அ அனல் விந்துவும் மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும் கண்ணும் கனலிடை கட்டி கலந்து எரித்து உண்ணில் அமிர்து ஆகி யோகிக்கு அறிவாமே மேல் #1952 அறியாது அழிகின்ற ஆதலால் நாளும் பொறியால் அழிந்து புலம்புகின்றார்கள் அறிவாய் நனவில் அதீதம் புரிய செறிவாய் இருந்து சேரவே மாயுமே மேல் #1953 மாதரை மாய வரும் கூற்றம் என்று உன்ன காதல் அது ஆகிய காமம் கழிந்திடும் சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும் சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே மேல் #1954 காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் காலம் கடந்து அழிந்தான் விந்து செற்றவன் காலங்களின் விந்து செற்றுற்ற காரிகை காலின்-கண் வந்த கலப்பு அறியாரே மேல் #1955 கலக்கு நாள் முன்னாள் தன்னிடை காதல் நல தக வேண்டில் அ நாரி உதர கலத்தின் மலத்தை தண் சீதத்தை பித்தை விலக்குவன செய்து மேல் அணைவீரே மேல் #1956 மேலாம் நிலத்து எழு விந்துவும் நாதமும் கோலால் நடத்தி குறிவழியே சென்று பாலாம் அமிர்து உண்டு பற்று அற பற்றினால் மால் ஆனது மாள மாளும் அ விந்துவே மேல் #1957 விந்து விளையும் விளைவின் பயன் முற்றும் அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும் நந்திய நாதமும் நாதத்தால் பேதமும் தந்து உணர்வோர்க்கு சயம் ஆகும் விந்துவே மேல் #1958 விந்து என் வீசத்தை மேவிய மூலத்து நந்திய அங்கியினாலே நயம் தெரித்து அந்தம்_இல் பானு அதி கண்டம் மேல் ஏற்றி சந்திரன் சார்புற தண் அமுது ஆமே மேல் #1959 அமுத சசி விந்து ஆம் விந்து மாள அமுத புனல் ஓடி அங்கியின் மாள அமுத சிவ போகம் ஆதலால் சித்தி அமுத பலாவனம் ஆங்குறும் யோகிக்கே மேல் #1960 யோகம் அ விந்து ஒழியா வகை புணர்ந்து ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறா போகம் சிவபோகம் போகி நல் போகமா மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே மேல் #1961 மாதரிடத்தே செலுத்தினும் அ விந்து காதலினால் விடார் யோகம் கலந்தவர் மாதர் உயிர் ஆசை கைக்கொண்டே வாடுவர் காதலர் போன்று அங்ஙன் காதலாம் சாற்றிலே மேல் #1962 சாற்றிய விந்து சயம் ஆகும் சத்தியால் ஏற்றிய மூலத்து அழலை எழ மூட்டி நாற்றிசை ஓடா நடு நாடி நாதத்தோடு ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆமே மேல் #1963 விந்துவும் நாதமும் மேவ கனல் மூல வந்தவன் நன் மயிர்க்கால்-தோறும் மன்னிட சிந்தனை மாற சிவம்அகம் ஆகவே விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே மேல் #1964 வித்து குற்று உண்பான் விலை அறியாதவன் வித்து குற்று உண்ணாமல் வித்து சுட்டு உண்பவன் வித்து குற்று உண்பானில் வேறு அலன் நீற்றவன் வித்து குற்று உண்ணாமல் வித்து வித்தான் நன்றே மேல் #1965 அன்னத்தில் விந்து அடங்கும் படி கண்டு மன்ன பிராணனாம் விந்து மறித்திட்டு மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட வன்ன திரு விந்து மாயும் காயத்திலே மேல் #1966 அன்னம் பிராணன் என்றார்க்கும் இரு விந்து தன்னை அறிந்து உண்டு சாதிக்க வல்லார்க்கு சொன்னமுமாம் உரு தோன்றும் எண் சித்தியாம் அன்னவர் எல்லாம் அழிவு அற நின்றதே மேல் #1967 நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய் ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை சென்று பராசத்தி விந்து சயம் தன்னை ஒன்ற உரைக்க உபதேசம் தானே மேல் #1968 தானே உபதேசம் தான் அல்லாதது ஒன்று இல்லை வானே உயர் விந்து வந்த பதினான்கு மானேர் அடங்க அதன் பின்பு புத்தியும் தானே சிவகதி தன்மையும் ஆமே மேல் #1969 விந்துவும் நாதமும் விளைய விளைந்தது வந்த இ பல் உயிர் மன் உயிர்க்கு எலாம் அந்தமும் ஆதியுமாம் மந்திரங்களும் விந்து அடங்க விளையும் சிவோகமே மேல் #1970 வறுக்கின்றவாறும் மனத்து உலா வெற்றி நிறுக்கின்றவாறும் அ நீள் வரை ஒட்டி பொறிக்கின்றவாறும் அ பொல்லா வினையை அறுக்கின்ற நாள் வரும் அத்தி பழமே மேல் #1971 விந்துவும் நாதமும் மேவி உடன் கூடி சந்திரனோடே தலைப்படும் ஆயிடில் அந்தர வானத்து அமுதம் வந்து ஊறிடும் அங்குதி மந்திரம் ஆகுதி ஆகுமே மேல் #1972 மனத்தொடு சத்து மனம் செவி அன்ன இனத்து எழுவார்கள் இசைந்தன நாடி மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம் கனத்த இரதம் அ காமத்தை நாடிலே மேல் #1973 சத்தமும் சத்த மனமும் மன கருத்து ஒத்து அறிகின்ற இடமும் அறிகிலர் மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு அத்தன் இருப்பிடம் அ இடம் தானே மேல் #1974 உரம் அடி மேதினி உந்தியில் அப்பாம் விரவியதன் முலை மேவிய கீழ் அங்கி கரு முலை மீமிசை கை கீழில் காலாம் விரவிய கந்தரம் மேல் வெளி ஆமே மேல் #1975 செஞ்சுடரோன் முதல் ஆகிய தேவர்கள் மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம் எம் சுடர் ஈசன் இறைவன் இணை அடி அம் சுடர் ஆக வணங்கும் தவமே மேல் #1976 பகலவன் மாலவன் பல் உயிர்க்கு எல்லாம் புகலவனாய் நின்ற புண்ணிய நாதன் இகல் அற ஏழ் உலகும் உற ஓங்கும் பகலவன் பல் உயிர்க்கு ஆதியும் ஆமே மேல் #1977 ஆதித்தன் அன்பினோடு ஆயிரம் நாமமும் சோதியின் உள்ளே சுடர் ஒளியாய் நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்றவாறே மேல் #1978 தானே உலகுக்கு தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்கு தையலுமாய் நிற்கும் தானே உலகுக்கு சம்புவுமாய் நிற்கும் தானே உலகுக்கு தண் சுடர் ஆகுமே மேல் #1979 வலைய முக்கோணம் வட்டம் அறுகோணம் துலை இரு வட்டம் துய்ய விதம் எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டு இதழாம் மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே மேல் #1980 ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில் சோதித்து இலங்கும் நல் சூரியன் நாலாம் கேதமுறும் கேணி சூரியன் எட்டில் சோதி-தன் ஈரெட்டில் சோடசம் தானே மேல் #1981 ஆதித்தனோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றி கழிந்தது சோதிக்குள் நின்று துடி இடை செய்கின்ற வேதப்பொருளை விளங்குகிலீரே மேல் #1982 பாருக்கு கீழே பகலோன் வரும் வழி யாருக்கும் காண ஒண்ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே மேல் #1983 மண்ணை இடந்து அதின் கீழ் ஓடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளி செய்து நின்றிடும் கண்ணை இடந்து களி தந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே மேல் #1984 பாரை இடந்து பகலோன் வரும் வழி யாரும் அறியார் அரும் கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ் என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்து இருந்தாரே மேல் #1985 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்தி கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல் வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே மேல் #1986 ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம் ஆதித்தனோடே அடங்குகின்றாரே மேல் #1987 உருவி புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக்கிடக்கும் துறை அறிவார் இல்லை சொருகிக்கிடக்கும் துறை அறிவாளர்க்கு உருகிக்கிடக்கும் என் உள்ளன்பு தானே மேல் #1988 எறி கதிர் ஞாயிறு மின் பனி சோரும் எறி கதிர் சோமன் எதிர் நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே வியங்கும் என் ஆவி ஒரு கதிர் ஆகில் உவா அது ஆமே மேல் #1989 சந்திரன் சூரியன் தான் வரில் பூசனை முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே மேல் #1990 ஆகும் கலையோடு அருக்கன் அனல் மதி ஆகும் கலையிடை நான்கு எனலாம் என்பார் ஆகும் அருக்கன் அனல் மதியோடு ஒன்ற ஆகும் அ பூரனை ஆம் என்று அறியுமே மேல் #1991 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அ ஒளி ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது பேரண்டத்தூடே பிறங்கு ஒளியாய் நின்றது ஆர் அண்டத்தக்கார் அரியத்தக்காரே மேல் #1992 ஒன்பதின் மேவி உலகம் வலம் வரும் ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை முன்பதின் மேவி முதல்வன் அருள் இலார் இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே மேல் #1993 விந்து அபரம் பரம் இரண்டாய் விரிந்து அந்த அபரம் பரம் நாதம் ஆகியே வந்தன தம்மில் பரம் கலை ஆதி வைத்து உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே மேல் #1994 உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான் தெள்ளும் பரநாதத்தின் செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி ஆதி வாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே மேல் #1995 தேவர் பிரான் திசை பத்தும் உதயம் செய்யும் மூவர் பிரான் என முன்னொரு காலத்து நால்வர் பிரான் நடுவாய் உரையாய் நிற்கும் மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே மேல் #1996 பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை மை இருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு செய் இருள் நீக்கும் திரு உடை நந்தி என்று கை இருள் நீங்க கலந்து எழுந்தானே மேல் #1997 தனிச்சுடர் எற்றி தயங்கு இருள் நீங்க அனித்திடும் மேலை அரும் கனி ஊறல் கனி சுடராய் நின்ற கயிலையில் ஈசன் நனி சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே மேல் #1998 நேர் அறிவாக நிரம்பிய பேரொளி போர் அறியாது புவனங்கள் போய் வரும் தேர் அறியாத திசை ஒளியாய் இடும் ஆர் அறிவார் இது நாயகம் ஆமே மேல் #1999 மண்டலத்து உள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன் கண்டிடத்து உள்ளே கதிர் ஒளியாய் இடும் சென்றிடத்து எட்டு திசை எங்கும் போய்வரும் நின்று இடத்தே நிலை நேர் அறிவார்க்கே மேல் #2000 நாபி கண் நாசி நயன நடுவினும் தூபியோடு ஐந்தும் சுடர்விடும் சோதியை தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும் மூவரும் ஆக உணர்ந்து இருந்தாரே மேல் #2001 அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடு ஞான சிவப்பிரகாசத்தால் ஒன்றும் இரு சுடராம் அருணோதயம் துன்று இருள் நீங்குதல் போல தொலைந்ததே மேல் #2002 கடம்கடம்-தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அ பரிசு ஆமே மேல் #2003 தானே விரிசுடர் மூன்றும் ஒன்றாய் நிற்கும் தானே அயன் மால் என நின்று தாபிக்கும் தானே உடல் உயிர் வேறு அன்றி நின்று உளன் தானே வெளி ஒளி தான் இருட்டு ஆமே மேல் #2004 தெய்வ சுடர் அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல் அனல் மாருதம் வானகம் சைவ பெரும்பதி தாங்கிய பல் உயிர் ஐவர்க்கு இடமிடை ஆறங்கம் ஆமே மேல் #2005 உன்னும் அளவில் உணரும் ஒருவனை பன்னும் மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்னமயம் என்று அறிந்து கொண்டேனே மேல் #2006 அன்னம் இரண்டு உள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைபிரியாது அன்ன தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்ற-கால் பின்ன மட அன்னம் பேறு அணுகாதே மேல் #2007 வைகரி ஆதியும் மாயா மலாதியும் பொய் கரி ஆன புருடாதி பேதமும் மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து செய் கரி ஈசன் அனாதியே செய்ததே மேல் #2008 அணுவில் அணுவினை ஆதி பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே மேல் #2009 படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போல சுடர் கொண்ட அணுவினை தூவழி செய்ய இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி நடர் கொண்ட நல் வழி நாடலும் ஆமே மேல் #2010 அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணு அற நின்ற கலப்பது உணரார் இணை_இலி ஈசன் அவன் எங்கும் ஆகி தணிவு அற நின்றான் சராசரம் தானே மேல் #2011 மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில் கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே மேல் #2012 ஏனோர் பெருமையின் ஆயினும் எ இறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே மேல் #2013 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும் பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னை கண்டு சிவன் உரு கொள்வர் கருத்துளே மேல் #2014 மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து ஆய குரு அருளாலே அதில் தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர் ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே மேல் #2015 கற்ற பசுக்கள் கதறி திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும் மற்றை பசுக்கள் வறள் பசு தானே மேல் #2016 கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே மேல் #2017 சீவன் என சிவன் என்ன வேறு இல்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்த பின் சீவனார் சிவனாயிட்டு இருப்பரே மேல் #2018 குண விளக்கு ஆகிய கூத்தப்பிரானும் மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம் பண விளக்கு ஆகிய பல் தலை நாகம் கண விளக்கு ஆகிய கண்காணி ஆகுமே மேல் #2019 அறிவாய் அறியாமை நீங்கி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவு ஆகி நின்ற அ சீவனும் ஆகுமே மேல் #2020 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின் ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே மேல் #2021 சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார் அவமாம் மலம் ஐந்தும் ஆவது அறியார் தவம் ஆன செய்து தலைப்பறிகின்றார் நவம் ஆன தத்துவம் நாடகிலாரே மேல் #2022 நாள்-தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார் நாள்-தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார் நாள்-தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால் நாள்-தோறும் நாடார்கள் நாள் வினையாளரே மேல் #2023 ஆக மதத்தன ஐந்து களிறு உள ஆக மத தறியோடு அணைகின்றில பாகனும் எய்த்து அவை தாமும் இளைத்த பின் யோகு திருந்துதல் ஒன்று அறியோமே மேல் #2024 கருத்தின் நல் நூல் கற்று கால்கொத்தி பாகன் திருத்தலும் பாய்மா திகைத்தன்றி பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழி நடவாதே மேல் #2025 புலம் ஐந்து புள் ஐந்து புள் சென்று மேயும் நிலம் ஐந்து நீர் ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம் வழி ஒன்பது தானே மேல் #2026 அஞ்சு உள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே மேல் #2027 ஐவர் அமைச்சருள் தொண்ணூற்றறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆள கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தொடே நின்றிடில் ஐவர்க்கு இறையிறுத்து ஆற்றகிலோமே மேல் #2028 சொல்லகில்லேன் சுடர் சோதியை நாள்-தொறும் சொல்லகில்லேன் திருமங்கையும் அங்கு உள வெல்லகில்லேன் புலன் ஐந்துடன் தன்னையும் கொல்ல நின்றோடும் குதிரை ஒத்தேனே மேல் #2029 எண்_இலி இல்லி அடைத்து அ இருட்டறை எண்_இலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்_இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்_இலி இல்லதோடு இன்பமது ஆமே மேல் #2030 விதியின் பெரு வலி வேலை சூழ் வையம் துதியின் பெரு வலி தொல்வான் உலகம் மதியின் பெரு வலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெரு வலி நீர் வலி தானே மேல் #2031 குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம் வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே மேல் #2032 கிடக்கும் உடலில் கிளர் இந்திரியம் அடக்கலுமுறும் அவன் தானே அமரன் விடக்கு இரண்டின் புறம் மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே மேல் #2033 அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கு இலை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே மேல் #2034 முழக்கி எழுவன மும்மத வேழம் அடக்க அறிவு என்னும் கோட்டையை வைத்தேன் பிழைத்தன ஓடி பெரும் கேடு மண்டி கொழுத்தன வேழம் குலைக்கின்றவாறே மேல் #2035 ஐந்தில் ஒடுங்கில் அகல் இடம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அரன் பதம் ஆவது ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே மேல் #2036 பெருக்க பிதற்றில் என் பேய்த்தேர் நினைந்து என் விரித்த பொருட்கு எல்லாம் வித்து ஆவது உள்ளம் பெருக்கில் பெருக்கும் சுருக்கில் சுருக்கும் அருத்தமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2037 இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த கிளைக்கு ஒன்றும் ஈசனை கேடு இல் புகழோன் தளை கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்க துளை கொண்டது அ வழி தூங்கும் படைத்தே மேல் #2038 பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி சார்ந்திடும் ஞான தறியினில் பூட்டு இட்டு ஆய்ந்து கொள் ஆனந்தம் என்னும் அருள்செய்யில் வேய்ந்து கொள் மேலை விதி அது தானே மேல் #2039 நடக்கின்ற நந்தியை நாள்-தோறும் உன்னில் படர்க்கின்ற சிந்தையை பைய ஒடுக்கி குறிக்கொண்ட சிந்தை குறி வழி நோக்கில் வடக்கொடு தெற்கு மனக்கோயில் ஆமே மேல் #2040 சென்றன நாழிகை நாள்கள் சிலபல நின்றது நீள் பொருள் நீர் மேல் எழுத்து ஒத்து வென்று புலன்கள் விரைந்து விடு-மின்கள் குன்று விழ அதில் தாங்கலும் ஆமே மேல் #2041 போற்றி இசைத்து புனிதன் திருமேனியை போற்றி செய் மீட்டே புலன் ஐந்தும் புத்தியால் நால் திசைக்கும் பின்னை யாருக்கும் நாதனை ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே மேல் #2042 தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார் சிரிக்கின்றவாறு சிலபல பேசில் வரி கொண்ட மை சூழ் வரை அது ஆமே மேல் #2043 கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள் எய்தி அவனை இசையினால் ஏத்து-மின் ஐவருடைய அவாவினில் தோன்றிய பொய்வருடைய புலன்களும் ஐந்தே மேல் #2044 உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன் கணு இன்றி வேதாகம நெறி காணான் பணி ஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே மேல் #2045 மந்திர தந்திர மா யோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்து பார்ப்பவர் சிந்தனை செய்யா தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு ஆமே மேல் #2046 ஆமாறு அறியாதோன் மூடன் அதி மூடன் காமாதி நீங்கா கலதி கலதிகட்கு ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவிலோன் கோமான் அலன் அசத்து ஆகும் குரவனே மேல் #2047 கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால் தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும் நற்பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே மேல் #2048 குருடர்க்கு கோல்காட்டி செல்லும் குருடர் முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன் பின் குருடரும் வீழ்வர்கள் முன் பின் அறவே குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே மேல் #2049 தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள் தந்து தன்னை அறிய தர வல்லோன் தாள் தந்து தத்துவாதீதத்து சார் சீவன் தால் தந்து பாசம் தணிக்கும் அவன் சத்தே மேல் #2050 தவிர வைத்தான் வினை தன் அடியார் கோள் தவிர வைத்தான் சிரத்தோடு தன் பாதம் தவிர வைத்தான் நமன் தூதுவர் கூட்டம் தவிர வைத்தான் பிறவி துயர் தானே மேல் #2051 கறுத்த இரும்பே கனகம் அது ஆனால் மறித்து இரும்பு ஆகா வகை அது போல குறித்த அப்போதே குரு அருள் பெற்றால் மறித்து பிறவியில் வந்து அணுகானே மேல் #2052 பாசத்தை நீக்கி பரனோடு தன்னையும் நேசத்து நாடி மலம் அற நீக்குவோர் ஆசு அற்ற சற்குரு ஆவோர் அறிவு அற்று பூசற்கு இரங்குவோர் போத குரு அன்றே மேல் #2053 நேயத்தே நிற்கும் நிமலன் மலம் அற்ற நேயத்தை நல்க வல்லோன் நித்தன் சுத்தனே ஆயத்தவர் தத்துவம் உணர்ந்து தாம் கற்ற நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே மேல் #2054 பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல் குரு பரிசித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே மேல் #2055 தானே என நின்ற சற்குரு சந்நிதி தானே என நின்ற தன்மை வெளிப்படில் தானே தனை பெற வேண்டும் சதுர் பெற ஊனே என நினைந்து ஓர்ந்து கொள் உன்னிலே மேல் #2056 வரும் வழி போம் வழி மாயா வழியை கருவழி கண்டவர் காணா வழியை பெரும் வழியா நந்தி பேசும் வழியை குரு வழியே சென்று கூடலும் ஆமே மேல் #2057 குரு என்பவனே வேதாகமம் கூறும் பரஇன்பன் ஆகி சிவயோகம் பாவித்து ஒரு சிந்தை இன்றி உயர் பாசம் நீக்கி வரு நல் குரவன்-பால் வைக்கலும் ஆமே மேல் #2058 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டி சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்து சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல் அத்தன் அருள் குருவாம் அவன் கூறிலே மேல் #2059 உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால் பற்று அறு நாதன் அடியில் பணிதலால் சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டி தற்பரம் மேவுவோர் சாதகர் ஆமே மேல் #2060 எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம் வல்லார் புலனும் வரும்-கால் உயிர் தோன்றி சொல்லா மலம் ஐந்து அடங்கி இட்டு ஓங்கியே செல்லா சிவகதி சேர்தல் விளையாட்டே மேல் #2061 ஈன பிறவியில் இட்டது மீட்டு ஊட்டி தானத்துள் இட்டு தனை ஊட்டி தாழ்த்தலும் ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று மோனத்துள் வைத்தலும் முத்தன்-தன் செய்கையே மேல் #2062 அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம் சித்தொடு சித்து அற தெளிவித்த சீவனை சுத்தனும் ஆக்கி துடைத்து மலத்தினை சத்துடன் ஐங்கருமத்து இடும் தன்மையே மேல் #2063 ஈசத்துவம் கடந்து இல்லை என்று அப்புறம் பாசத்து உள்ளே என்றும் பாவியும் அண்ணலை நேசத்து உளே நின்ற நின்மலன் எம் இறை தேசத்தை எல்லாம் தெளியவைத்தானே மேல் #2064 மாணிக்க மாலை மலர்ந்து எழு மண்டலம் ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது பேணி கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்கள் ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே மேல் #2065 அசத்தொடு சத்தும் அசத்சத்து நீங்க இசைத்திடு பாச பற்று ஈங்கு அறுமாறே அசைத்து இரு மாயை அணுத்தானும் ஆங்கே இசைத்தானும் ஒன்று அறிவிப்போன் இறையே மேல் #2066 ஏறு நெறியே மலத்தை எரித்தலால் ஈறு இல் உரையால் இருளை அறுத்தலால் மாறு இல் பசு பாசம் வாட்டலால் வீடுக கூறு பரனே குருவாம் இயம்பிலே மேல் #2067 கண்காணி இல் என்று கள்ளம் பல செய்வார் கண்காணி இல்லா இடம் இல்லை காணும்-கால் கண்காணி ஆக கலந்து எங்கும் நின்றானை கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே மேல் #2068 செய்தான் அறியும் செழும் கடல் வட்டத்து பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் மை தாழ்ந்து இலங்கு மிடறு உடையோனே மேல் #2069 பத்தி விற்று உண்டு பகலை கழிவிடு மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்து குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே மேல் #2070 வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானம் இலாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே மேல் #2071 காய குழப்பனை காய நல் நாடனை காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்து அறியாரே மேல் #2072 கண்காணியாகவே கை அகத்தே எழும் கண்காணியாக கருத்துள் இருந்திடும் கண்காணியாக கலந்து வழி செய்யும் கண்காணி ஆகிய காதலன் தானே மேல் #2073 கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை மன்னிய மா தவம் செய்வோர் ஒரு சிறை தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை என் இது ஈசன் இயல்பு அறியாரே மேல் #2074 காணாத கண்ணில் படலமே கண் ஒளி காணாதவர்கட்கும் காணாத அ ஒளி காணாதவர்கட்கும் கண் ஆம் பெரும் கண்ணை காணாது கண்டார் களவு ஒழிந்தாரே மேல் #2075 பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி உய்த்து ஒன்றுமா போல் விழியும் தன் கண் ஒளி அ தன்மை ஆதல் போல் நந்தி அருள் தர சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேனே மேல் #2076 பிரான்மயம் ஆக பெயர்ந்தன எட்டும் பரா மயம் என்று எண்ணி பள்ளி உணரார் சுரா மயம் உன்னிய சூழ்வினையாளர் நிரா மயம் ஆக நினைப்பு ஒழிந்தாரே மேல் #2077 ஒன்று இரண்டு ஆகி நின்று ஒன்றி ஒன்று ஆயினோர்க்கு ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா ஒன்று இரண்டு என்றே உரை தருவோர்க்கு எலாம் ஒன்று இரண்டாய் நிற்கும் ஒன்றோடு ஒன்று ஆனதே மேல் #2078 உயிர் அது நின்றால் உணர்வு எங்கும் நிற்கும் அயர் அறிவு இல்லையால் ஆருடல் வீழும் உயிரும் உடலும் ஒருங்கி கிடக்கும் பயிரும் கிடந்து உள்ள பாங்கு அறியாரே மேல் #2079 உயிர் அது வேறா உணர்வு எங்கும் ஆகும் உயிரை அறியில் உணர்வு அறிவு ஆகும் உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே மேல் #2080 உலகாணி ஒண் சுடர் உத்தம சித்தன் நில ஆணி ஐந்தினுள் நேருற நிற்கும் சில ஆணி ஆகிய தேவர் பிரானை தலைவாணி செய்வது தன்னை அறிவதே மேல் #2081 தான் அந்தமாம் என நின்ற தனிச்சுடர் ஊன் அந்தமாய் உலகாய் நின்ற ஒண் சுடர் தேன் அந்தமாய் நின்ற சிற்றின்பம் நீ ஒழி கோன் அந்தம் இல்லா குணத்து அருள் ஆமே மேல் #2082 உன் முதல் ஆகிய ஊன் உயிர் உண்டு எனும் கல்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை நல் முதல் ஏறிய நாமம் அற நின்றால் தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே மேல் #2083 இந்தியம் அந்த கரணம் இவை உயிர் வந்தன சூக்க உடல் அன்றும் ஆனது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே மேல் #2084 வித்து பொதிவார் விரைவிட்டு நாற்றுவார் அற்ற தம் வாழ்நாள் அறிகிலா பாவிகள் உற்ற வினைத்து உயர் ஒன்றும் அறிகிலார் முற்று ஒளி தீயின் முனிகின்றவாறே மேல் #2085 போது சடக்கென போகின்றது கண்டும் வாதுசெய்து என்னோ மனிதர் பெறுவது நீதி உள்ளே நின்று நின்மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறியகில்லார்களே மேல் #2086 கடன் கொண்டு நெல் குத்து கையரை ஊட்டி உடம்பினை ஓம்பி உயிரா திரிவர் தடம்கொண்ட சாரல் தழல் முருடு ஏறி இடம்கொண்டு உடலார் கிடக்கின்றவாறே மேல் #2087 விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து புரந்த கல் ஆல் நிழல் புண்ணியன் சொன்ன பரம் தன்னை ஓரா பழிமொழியாளர் உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே மேல் #2088 நின்ற புகழும் நிறை தவத்து உண்மையும் என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும் அன்றி உலகம் அது இது தேவென்று குன்று கையாலே குறைப்பட்டவாறே மேல் #2089 இன்பத்துளே பிறந்து இன்பத்துளே வளர்ந்து இன்பத்துளே நினைக்கின்ற இது மறந்து துன்பத்துளே சிலர் சோறொடு கூறை என்று துன்பத்துளே நின்று தூங்குகின்றார்களே மேல் #2090 பெறுதற்கு அரிய பிறவியை பெற்றும் பெறுதற்கு அரிய பிரான் அடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியது ஓர் பேறு இழந்தாரே மேல் #2091 ஆர்வ மனமும் அளவு இல் இளமையும் ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்து தீர வருவது ஓர் காம தொழில் நின்று மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே மேல் #2092 இ பரிசே இளஞாயிறு போல் உரு அ பரிசு அங்கியின் உள் உறை அம்மானை இ பரிசே கமலத்து உறை ஈசனை மெய் பரிசே வினவாது இருந்தோமே மேல் #2093 கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே மேல் #2094 நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடும் சுடர் நஞ்சு எம் பிரான் என்று நாதனை நாள்-தொறும் துஞ்சும் அளவும் தொழு-மின் தொழாவிடில் அஞ்சு அற்று விட்டது ஓர் ஆணையும் ஆமே மேல் #2095 மிருகம் மனிதர் மிக்கோர் பறவை ஒருவர் செய்த அன்புவைத்து உன்னாதது இல்லை பருகுவர் ஓடுவர் பார் பயன் கொள்வர் திரு மரு மாதவம் சேர்ந்து உணர்ந்தாரே மேல் #2096 நீதி இலோர் பெற்ற பொன் போல் இறைவனை சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை ஆதி பயன் என்று அமரர் பிரான் என்று நாதியே வைத்து அது நாடுகின்றேனே மேல் #2097 இரும் தேன் மலர் அளைந்து இன்புற வண்டு பெரும் தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் வரும் தேன் நுகராது வாய் புகு தேனை அரும் தேனை யாரும் அறியகிலாரே மேல் #2098 கருத்து அறியாது கழிந்தன காலம் அருத்தி உள்ளான் அமராபதி நாதன் ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம் வருத்தி நில்லாது வழுக்குகின்றாரே மேல் #2099 குதித்து ஓடி போகின்ற கூற்றமும் சார்வாய் விதித்தன நாட்களும் வீழ்ந்து கழிந்த அதிர்த்து இருந்து என் செய்திர் ஆறுதிர் ஆகில் கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே மேல் #2100 கரை அருகு ஆறா கழனி விளைந்த திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும் வரை அருகு ஊறிய மா தவம் நோக்கின் நரை உருவா செல்லும் நாள் இலவாமே மேல் #2101 வரவு அறிவானை மயங்கி இருள் ஞாலத்து இரவு அறிவானை எழும் சுடர் சோதியை அரவு அறிவார் முன் ஒரு தெய்வம் என்று விரவு அறியாமலே மேல் வைத்தவாறே மேல் #2102 மறந்து ஒழி மண் மிசை மன்னா பிறவி இறந்து ஒழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்து அலமந்து படு துயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே மேல் #2103 செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை வல்ல பரிசால் உரை-மின்கள் வாய்மையை இல்லை எனினும் பெரிது உளன் எம் இறை நல்ல வரன் நெறி நாடு-மின் நீரே மேல் #2104 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினை-மின் நமன் இல்லை நாணாமே சென்றே புகும் கதி இல்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்-மினே மேல் #2105 போற்றிசெய் அம் தண் கயிலை பொருப்பனை நால் திசைக்கும் நடுவாய் நின்ற நம்பனை காற்று இசைக்கும் கமழ் ஆக்கையை கைக்கொண்டு கூற்று உதைத்தான் தன்னை கூறி நின்று உய்-மின்னே மேல் #2106 இ காயம் நீக்கி இனி ஒரு காயத்தில் புக்கு பிறவாமல் போம் வழி நாடு-மின் எக்காலத்து இ உடல் வந்து எமக்கு ஆனது என் அ காலம் உன்ன அருள் பெறலாமே மேல் #2107 போகின்ற ஆறே புகுகின்ற அ பொருள் ஆகின்ற போதும் அரன் அறிவான் உளன் சாகின்ற போதும் தலைவனை நாடு-மின் ஆகின்ற அ பொருள் அக்கரை ஆகுமே மேல் #2108 பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின் இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும் சிறப்பொடு சேரும் சிவகதி பின்னை பிறப்பு ஒன்று இலாமையும் பேர் உலகு ஆமே மேல் #2109 கூடியும் நின்றும் தொழுது எம் இறைவனை பாடி உளே நின்று பாதம் பணி-மின்கள் ஆடி உளே நின்று அறிவு செய்வார்கட்கு நீடிய ஈற்று பசு அது ஆமே மேல் #2110 விடுகின்ற சீவனார் மேல் எழும்-போது நடு நின்று நாடு-மின் நாதன்-தன் பாதம் கெடுகின்ற வல் வினை கேடு இல் புகழோன் இடுகின்றான் உம்மை இமையவரோடே மேல் #2111 ஏறு உடையாய் இறைவா எம் பிரான் என்று நீறு இடுவார் அடியார் நிகழ் தேவர்கள் ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர் என்று வேறு அணிவார்க்கு வினை இல்லை தானே மேல் #2112 இன்புறுவீர் அறிந்தே எம் இறைவனை அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று துன்புறு பாசத்து உழைத்து ஒழிந்தீரே மேல் #2113 மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு மேற்கொள்ளல் ஆம் வண்ணம் வேண்டி நின்றோர்க்கே மேல் #2114 சார்ந்தவர்க்கு இன்பம் கொடுக்கும் தழல் வண்ணன் பேர்ந்து அவர்க்கு இன்னா பிறவி கொடுத்திடும் கூர்ந்து அவர்க்கே குரை கழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரை சென்று உணர்வாரே மேல் #2115 முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய் தலை பால் போல் நிமலனும் அங்கு உளன் அத்தகு சோதி அது விரும்பாரே மேல் #2116 நியமத்தன் ஆகிய நின்மலன் வைத்த உகம் எத்தனை என்று ஒருவரும் தேறார் பவமத்திலே வந்து பாய்கின்றதல்லால் சிவம் அத்தை ஒன்றும் தெளியகில்லாரே மேல் #2117 இங்கு இத்தை வாழ்வும் எனைத்தோர் அகிதமும் துஞ்சு ஒத்த காலத்து தூய் மணி வண்ணனை விஞ்சத்து உறையும் விகிர்தா என நின்னை நஞ்சு அற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே மேல் #2118 பஞ்சமும் ஆம் புவி சற்குரு-பால் முன்னி வஞ்சகர் ஆனவர் வைகில் அவர்-தம்மை அஞ்சுவன் நாதன் அரு நரகத்து இடும் செஞ்ச நிற்போரை தெரிசிக்க சித்தியே மேல் #2119 சிவனை வழிபட்டார் எண்_இலா தேவர் அவனை வழிபட்டு அங்கு ஆமாறு ஒன்று இல்லை அவனை வழிபட்டு அங்கு ஆமாறு காட்டும் குருவை வழிபடில் கூடலும் ஆமே மேல் #2120 நரரும் சுரரும் பசு பாசம் நண்ணி கருமங்களாலே கழிதலில் கண்டு குரு என்பவன் ஞானி கோது இலன் ஆனால் பரம் என்றல் அன்றி பகர் ஒன்றும் இன்றே மேல் #2121 ஆட்கொண்டவர் தனிநாயகன் அன்புற மேற்கொண்டவர் வினை போய் அற நாள்-தொறும் நீர்க்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின் மேல் கொண்டவாறு அலை வீவித்துளானே மேல்@8 எட்டாம் தந்திரம் #2122 காய பை ஒன்று சரக்கு பல உள மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் மாய பை மண்ணா மயங்கியவாறே மேல் #2123 அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால் சத்த பரிச ரூப ரச கந்தம் புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே மேல் #2124 எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே மேல் #2125 இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே மேல் #2126 ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கு அவர் நின்றது யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை யாரே அறிவார் அடி காவல் ஆனதே மேல் #2127 எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள் கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே மேல் #2128 உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம் கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி அடங்கியே அற்றது ஆர் அறிவாரே மேல் #2129 ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும் கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே மேல் #2130 மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே மேல் #2131 காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே மேல் #2132 நாகம் உடலுரி போலும் நல் அண்டசம் ஆக நனாவில் கனா மறந்து அல்லது போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே மேல் #2133 உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரணமா செல பண்டு தொடர பரகாய யோகி போல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே மேல் #2134 தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும் ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே மேல் #2135 ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும் ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும் மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே மேல் #2136 விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனு ஆகும் மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே மேல் #2137 மலம் என்று உடம்பை மதியாத ஊமர் தலம் என்று வேறு தரித்தமை கண்டீர் நலம் என்று இதனையே நாடி இருக்கில் பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே மேல் #2138 நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும் மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே மேல் #2139 பண் ஆகும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே மேல் #2140 அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் கழிகின்ற கால் அ விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே மேல் #2141 இலை ஆம் இடையில் எழுகின்ற காம முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து தலையாய மின் உடல் தாங்கி திரியும் சிலையாய சித்தம் சிவ முன் இடைக்கே மேல் #2142 ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர் பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே மேல் #2143 முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி அ பதி ஆகும் நியதி முதலாக செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே மேல் #2144 இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் பந்த அ சக்கர பால் அது ஆகுமே மேல் #2145 பாரது பொன்மை பசுமை உடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கருப்பை உடையது வானகம் தூமம் மறைந்து நின்றாரே மேல் #2146 பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும் ஏதம் படம் செய்து இருந்த புறநிலை ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே மேல் #2147 இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை படு பர சேனையும் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே மேல் #2148 உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே மேல் #2149 இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே மேல் #2150 ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து அளிக்கும் கலைகளின் நாலறுபத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே மேல் #2151 மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் உன்னின் முடிந்த ஒரு பூத சயமே மேல் #2152 முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை கன்னியை கன்னியே காதலித்தாளே மேல் #2153 கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே மேல் #2154 நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே மேல் #2155 தானம் இழந்து தனி புக்கு இதயத்து மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி ஆன விரிவு அறியா அ வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்தியது ஆமே மேல் #2156 சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து விழும பொருளுடன் மேவி நின்றானே மேல் #2157 தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தை விட்டு ஊமன் நின்றானே மேல் #2158 ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது நாமயம் அற்றது நாம் அறியோமே மேல் #2159 துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன பரிய புரவியும் பாறி பறந்தது துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே மேல் #2160 மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே மேல் #2161 உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே மேல் #2162 அதி மூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி திதம் ஆன கேவலம் இ திறம் சென்று பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே மேல் #2163 ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல் நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே மேல் #2164 மஞ்சொடு மந்தாகினி குடமாம் என விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல் அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே மேல் #2165 படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடியுடை மாநகர் தான் வரும்-போது அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும் துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே மேல் #2166 நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் நேரானவாறு உன்னி நீடு நனவினில் நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே மேல் #2167 சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே மேல் #2168 மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் நேய இராகாதி ஏய்ந்த துரியத்து தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்த சகலத்து உளானே மேல் #2169 மேவிய அந்தகன் விழி கண் குருடனாம் ஆவயின் முன் அடி காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற மூவயின் ஆன்மா முயலும் கருமமே மேல் #2170 மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே மேல் #2171 வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே மேல் #2172 நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன் வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் கூறா வியோமம் பரம் என கொண்டனன் வேறான நாலேழு வேதாந்த தத்துவமே மேல் #2173 ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் காலம் கொண்டான் அடி காணலுமாமே மேல் #2174 நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே மேல் #2175 ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளையோனே மேல் #2176 பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலை துரியமும் தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே மேல் #2177 விளங்கிடும் முந்நூற்றுமுப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அ வழி தத்துவம் நின்றே மேல் #2178 நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம் மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பால் அவை தொண்ணூறோடு ஆறுள் படும் அவை கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே மேல் #2179 ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே மேல் #2180 தத்துவமானது தன்வழி நின்றிடில் வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி தத்துவமாவது அகார எழுத்தே மேல் #2181 அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே மேல் #2182 சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும் ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும் நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே மேல் #2183 ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே மேல் #2184 தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே மேல் #2185 நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும் கூடுவர் கூடி குறிவழியே சென்று தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே மேல் #2186 சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே மேல் #2187 நனவாதி தூலமே சூக்க பகுதி அனதான ஐயைந்தும் விந்துவின் சத்தி தனதாம் விந்து தான்-நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ்வாறே மேல் #2188 நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோட நல் செய்தி ஆனதே மேல் #2189 செறியும் கிரியை சிவதத்துவமாம் பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சராசரம் அண்டத்து அளவே மேல் #2190 ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் போதம் கலை காலம் நியதி மா மாயை நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே மேல் #2191 தேசு திகழ் சிவம் சத்தி சதாசிவம் ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் மாசு அகல் வித்தை நியதி மகா மாயை ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே மேல் #2192 ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம் காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே மேல் #2193 பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் பசுக்கள் தலைவனை பற்றி விடாவே மேல் #2194 உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே மேல் #2195 தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால் மற்று அது உண்டி கன நனவு ஆதலே மேல் #2196 நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலைவந்தே மேல் #2197 ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா ஆறாம் அவை விட ஆகும் நனா கனா வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில் ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே மேல் #2198 மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே மேல் #2199 அதீத துரியத்து அறிவனாம் ஆன்மா அதீத துரியம் அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே மேல் #2200 ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர் பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே மேல் #2201 புரியட்டகமே பொருந்தல் நனவு புரியட்டகம் தன்னின் மூன்று கனவு புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே மேல் #2202 நனவின் நனவு புலன் இல் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே மேல் #2203 கனவின் நனவு போல் காண்டல் நனவாம் கனவினில் கண்டு மறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அணு ஆதி செய்தலில் ஆன துரியமே மேல் #2204 சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை சுழுத்தி துரியமாம் சொல் அறும் பாழே மேல் #2205 துரிய நனவாம் இதம் உணர் போதம் துரிய கனவாம் அகம் உணர் போதம் துரிய சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் என தோன்றிடும் தானே மேல் #2206 அறிவு அறிகின்ற அறிவு நனவாம் அறிவு அறியாமை அடைய கனவாம் அறிவு அறி அ அறியாமை சுழுத்தி அறிவு அறிவாகும் ஆன துரியமே மேல் #2207 தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்த பின் தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே மேல் #2208 ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியாம் மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை ஐயமும் தான் அவன் அ துரியத்தனே மேல் #2209 ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின் ஈது என்று அறியும் இயல்பு உடையோனே மேல் #2210 உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே மேல் #2211 சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு தத்துவ பேதம் சமைத்து கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே மேல் #2212 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே மேல் #2213 மல கலப்பாலே மறைந்தது சத்தி மல கலப்பாலே மறைந்தது ஞானம் மல கலப்பாலே மறைந்தனன் தாணு மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே மேல் #2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே மேல் #2215 கதறு பதினெட்டு கண்களும் போக சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே மேல் #2216 நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட கனவகத்தே உள் கரணங்களோடு முனவகத்தே நின்று உதறி உள் புக்கு நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே மேல் #2217 நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் ஒன்றி உலகின் நியமாதிகளுற்று சென்று துரியாதீதத்தே சில காலம் நின்று பரனாய் நின்மலன் ஆமே மேல் #2218 ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே மேல் #2219 மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே மேல் #2220 போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேது அறியாவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே மேல் #2221 கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே மேல் #2222 ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன தான விளக்கொளியாம் மூல சாதனத்து ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே மேல் #2223 உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய விண் நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்தது என்றானே மேல் #2224 அறியாதவற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான் அறியாது அவத்தை அறிவானை கூட்டி அறியாது அறிவானை யார் அறிவாரே மேல் #2225 துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அ நனவு ஆதி பெரியன கால பரம்பின் துரியம் அரிய அதீதம் அதீதத்தம் ஆமே மேல் #2226 மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம் கேவலம் ஆகும் சகல மா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே மேல் #2227 தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும் பின்னம் உற நின்ற பேத சகலனும் மன்னிய சத்து அசத்து சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே மேல் #2228 தானே தனக்கு பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்கு தலைவனும் ஆமே மேல் #2229 ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று காமியம் மாயேயமும் கலவா நிற்ப தாமுறு பாசம் சகலத்தது ஆமே மேல் #2230 சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே மேல் #2231 தாவிய மாயையில் தங்கும் பிரளயம் மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே மேல் #2232 ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர் ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே மேல் #2233 ஆம் அவரில் சிவனார் அருள் பெற்றுளோர் போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே மேல் #2234 ஓரினும் மூ வகை நால் வகையும் உள தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை சாரியல் ஆயவை தாமே தணப்பவை வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே மேல் #2235 பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே மேல் #2236 அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே மேல் #2237 அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத் தின்-பால் துரியத்து இடையே அறிவுற தன்-பால் தனை அறி தத்துவம் தானே மேல் #2238 ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி ஐய சிவம் சித்தியாம் தோற்றம் அவ்வாறே மேல் #2239 ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத்தே காண எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே மேல் #2240 ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயை பிரளயாகலர் ஆகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே மேல் #2241 ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு பேணிய மாயை பிரளயாகலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்கு காட்டு மலங்களே மேல் #2242 கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால் ஆவயின் கேவலத்து அ சகலத்தையும் மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே மேல் #2243 மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ மாய சகலத்து காமிய மா மாயை ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே மேல் #2244 மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர் மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே மேல் #2245 சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல சத்து அசத்து ஓட தனித்தனி பாசமும் மத்த இருள் சிவனான கதிராலே தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே மேல் #2246 தற்கேவலம் முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே மேல் #2247 அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான் குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன் கிறியன் மலவியாபி கேவலம் தானே மேல் #2248 விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனு சத்தி விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே மேல் #2249 கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே மேல் #2250 கேவலத்தில் கேவலம் அதீதாதீதம் கேவலத்தில் சகலங்கள் வயின் தவம் கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே மேல் #2251 சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே மேல் #2252 சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே மேல் #2253 சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே மேல் #2254 சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம் சாக்கிராதீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே மேல் #2255 பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே மேல் #2256 எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன் அருளே விளையாட்டோடு எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே மேல் #2257 ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர் ஐம்மலத்தாரும் அருவினை பாசத்தார் ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே மேல் #2258 கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து அரிய கனா தூலாம் அ நனவு ஆமே மேல் #2259 ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம் பேணும் கனவும் மா மாயை திரோதாயி காணும் நனவில் மல கலப்பு ஆகுமே மேல் #2260 அரன் முதலாக அறிவோன் அதீதத்தன் அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் அருளும் அறைவர் சகலத்து உற்றாரே மேல் #2261 உருவுற்று போகமே போக்கியம் துற்று மருவுற்று பூதம் அனாதியான் மன்னி வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே மேல் #2262 இருவினை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே மேல் #2263 ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே மேல் #2264 தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் தன்னை முன் கண்டான் துரியம்-தனை கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே மேல் #2265 சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் வாக்கும் மனமும் மருவல் செய்யாவே மேல் #2266 அப்பும் அனலும் அகலத்துளே வரும் அப்பும் அனலும் அகலத்துளே வாரா அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில் அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே மேல் #2267 அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம் உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே மேல் #2268 மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே மேல் #2269 அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே மேல் #2270 சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன் சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே மேல் #2271 ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே மேல் #2272 அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே மேல் #2273 உரிய நனா துரியத்தில் இவன் ஆம் அரிய துரிய நனா ஆதி மூன்றில் பரிய பர துரியத்தில் பரனாம் திரிய வரும் துரியத்தில் சிவமே மேல் #2274 பரமாம் அதீதமே பற்று அற பற்ற பரமாம் அதீதம் பயிலப்பயில பரமாம் அதீதம் பயிலா தபோதனர் பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே மேல் #2275 ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே மேல் #2276 துரிய பரியில் இருந்த அ சீவனை பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே மேல் #2277 நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன் வடிவு ஆமே மேல் #2278 விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் தெரிந்த துரியத்தே தீது அகலாதே மேல் #2279 உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே மேல் #2280 கரு வரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே மேல் #2281 அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு அசைவின்-கண் ஆன கனவும் அணு அசைவில் பராதீதம் சுழுத்தி பணியில் பரதுரியம் பரம் ஆமே மேல் #2282 பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ தெரியும் சிவ துரியத்தனும் ஆமே மேல் #2283 பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவ துரியத்தனும் ஆமே மேல் #2284 சீவன் துரியம் முதலாக சீரான ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுத்து நின்றானே மேல் #2285 பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்பரன் மேலாம் பர நனவு ஆக விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே மேல் #2286 சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி பாலாய் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே மேல் #2287 கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார் குறிப்பது கோலம் அடலது ஆமே மேல் #2288 பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம் இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்றவாறே மேல் #2289 பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் தன்னை மறைத்தது தன் கரணங்களாம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே மேல் #2290 மரத்தை மறைத்தது மா மத யானை மரத்தில் மறைந்தது மா மத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே மேல் #2291 ஆறாறு அகன்று நம விட்டு அறிவாகி வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே மேல் #2292 துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி விரிய பரையின் மிகுநாதம் அந்தம் புரிய பரையின் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே மேல் #2293 ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில் நந்தி பராவத்தை நாட சுடர் முனம் அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே மேல் #2294 ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும் பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்று ஆகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே மேல் #2295 நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாத பிரானே மேல் #2296 சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே மேல் #2297 பெறு பகிரண்டம் பேதித்த அண்டம் எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி செறியும் அண்டாசன தேவர் பிரானே மேல் #2298 ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல் மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே மேல் #2299 அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம் முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே மேல் #2300 புருடனுடனே பொருந்திய சித்தம் அருவமொடு ஆறும் அதீத துரியம் விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் அரிய பதினொன்றுமாம் அ அவத்தையே மேல் #2301 காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல் நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை ஆட்டம் செய்யாத அது விதியே நினை ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே மேல் #2302 கேவலம் தன்னின் கலவ சகலத்தின் மேவும் செலவு விட வரு நீக்கத்து பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே மேல் #2303 வெல்லும் அளவில் விடு-மின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே மேல் #2304 ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே மேல் #2305 கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம் மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு காலனும் இல்லை கருத்து இல்லை தானே மேல் #2306 ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது தான் மா மறை அறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே மேல் #2307 உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின் கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே மேல் #2308 எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர் பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே மேல் #2309 காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து தோய்ந்த கரும துரிசு அகலாதே மேல் #2310 ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில் ஆன வகையை விடும் அடைத்தாய் விட ஆன மலாதீதம் அ பரம் தானே மேல் #2311 சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக சித்த சுகத்தை தீண்டா சமாதி செய் அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே மேல் #2312 வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே மேல் #2313 கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே மேல் #2314 தானே சிவம் ஆன தன்மை தலைப்பட ஆன மலமும் அ பாச பேதமும் மான குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன் மதி போல் படராவே மேல் #2315 நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திரு தக்க மாலும் திசைமுகன்-தானும் உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே மேல் #2316 ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிது ஆமே மேல் #2317 ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித்து எழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாகமங்களும் நாடியின் உள் ஆக நான் கண்டவாறே மேல் #2318 முன்னை அறிவினில் செய்த முது தவம் பின்னை அறிவினை பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றி பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே மேல் #2319 செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும் செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார் செயலற்று இருப்பார் செகத்தொடும் கூடார் செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே மேல் #2320 தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால் ஆன மலம் அறும் அ பசு தன்மை போம் ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே மேல் #2321 தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணி தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே மேல் #2322 தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம் ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே மேல் #2323 அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே மேல் #2324 தான் அவன் ஆகிய ஞான தலைவனை வானவர் ஆதியை மா மணி சோதியை ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை ஊனமிலாள்-தன்னை ஊனிடை கண்டதே மேல் #2325 ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்தம் ஆமே மேல் #2326 ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய் ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில் கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே மேல் #2327 அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும் அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே அறிவிக்க தம் அறிவார் அறிவோரே மேல் #2328 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கூடி சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே மேல் #2329 தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் தானே அறிவான் அறிவு சதசத்து என்று ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க தானே அறிந்து சிவத்துடன் தங்குமே மேல் #2330 தத்துவ ஞானம் தலைப்பட்டவர்கட்கே தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும் தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே மேல் #2331 தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் பின்னது சன்முத்தி சன்மார்க்க பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே மேல் #2332 ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம் தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே மேல் #2333 உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே மேல் #2334 தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே மேல் #2335 இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை சொல்லது சொல்லிடில் தூராதிதூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே மேல் #2336 உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே மேல் #2337 சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர் ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே மேல் #2338 எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறை அருள் தானே மேல் #2339 திருந்தனர் விட்டார் திருவில் நரகம் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம் திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே மேல் #2340 அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருள் ஆமே மேல் #2341 அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே மேல் #2342 ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் பேதித்த அ வினையால் செயல் சேதிப்ப ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப பேதித்து பேதியாவாறு அருட்பேதமே மேல் #2343 பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும் போதம் புணர் போதம் போதமும் நாதமும் நாதமுடன் நாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே மேல் #2344 மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என பாவிய பூதம் கொண்டாட்டி படைப்பாதி பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே மேல் #2345 ஆறாது அகன்று தனையறிந்தான் அவன் ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள் தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே மேல் #2346 தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே மேல் #2347 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே மேல் #2348 தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே மேல் #2349 தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறிய தலைப்படும் தன்னினில் தன்னை சார்கிலனாகில் தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே மேல் #2350 அறியகிலேன் என்று அரற்றாதே நீயும் நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே மேல் #2351 மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே மேல் #2352 ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர் தேம்புகின்றார் சிவம் சிந்தை செய்யாதவர் கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே மேல் #2353 குறி அறியார்கள் குறிகாணமாட்டார் குறி அறியார்கள் தம் கூடல் பெரிது குறி அறியா வகை கூடு-மின் கூடி அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே மேல் #2354 ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம் வானோர் தலைவி மயக்கத்துற நிற்க தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பு அறியாரே மேல் #2355 தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே மேல் #2356 அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழ சிங்காசனத்தே சிவன் இருந்தான் என்று சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென பொங்கார் குழலியும் போற்றி என்றாளே மேல் #2357 அறிவு வடிவு என்று அறியாத என்னை அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே அறிவு வடிவு என்று அறிந்திருந்தேனே மேல் #2358 அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின்றன மறையீறுகள் தாமே மேல் #2359 ஆயும் மலரின் அணி மலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் மேய அறிவாய் விளைந்தது தானே மேல் #2360 மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே மேல் #2361 அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்-மின் அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம் அறிவு அறிவு ஆக அணிமாதி சித்தி அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே மேல் #2362 அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகியவாறே மேல் #2363 அறிவு அறியாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே மேல் #2364 அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே மேல் #2365 மாயனும் ஆகி மலரோன் இறையுமாய் காய நல் நாட்டு கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே மேல் #2366 என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின்றானே மேல் #2367 மாய விளக்கு அது நின்று மறைந்திடும் தூய விளக்கு அது நின்று சுடர் விடும் காய விளக்கு அது நின்று கனன்றிடும் சேய விளக்கினை தேடுகின்றேனே மேல் #2368 தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும் நாடுகின்றேன் நலமே உடையான் அடி பாடுகின்றேன் பரமே துணையாம் என கூடுகின்றேன் குறையா மனத்தாலே மேல் #2369 முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள் மன்னி சிவமாக வாரா பிறப்பே மேல் #2370 வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும் ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும் ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே மேல் #2371 அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர் அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே மேல் #2372 தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் ஆனா துரியத்து அணுவன்-தனை கண்டு தேனார் பராபரம் சேர் சிவயோகமாய் ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே மேல் #2373 நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம் சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து அத்தன் பரன்-பால் அடைதல் சித்தாந்தமே மேல் #2374 மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே மேல் #2375 உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல் உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே மேல் #2376 தேடும் இயம நியமாதி சென்று அகன்று ஊடும் சமாதியில் உற்று படர் சிவன் பாடுற சீவன் பரமாக பற்று அற கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே மேல் #2377 கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் தெள்ளி அதனை தெளிதலும் ஆமே மேல் #2378 தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம் தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே மேல் #2379 ஆகும் அனாதி கலை ஆகம வேதம் ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம் ஆகும் சிவபோதகம் உபதேசமே மேல் #2380 தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை ஆசார நேயம் அறையும் கலாந்தத்து பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை வாசா மகோசர மா நந்தி தானே மேல் #2381 தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே மேல் #2382 ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு கூறிய ஞான குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த உண்மையே மேல் #2383 உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே மேல் #2384 ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின் தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை கூவி அருளிய கோனை கருதுமே மேல் #2385 கருதும் அவர்-தம் கருத்தினுக்கு ஒப்ப அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில் வரு சமய புற மாயை மா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே மேல் #2386 வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே மேல் #2387 வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட நாதாந்த பாசம் விடு நல்ல தொம்பதம் மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே மேல் #2388 அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும் உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி பண்டுறு நின்ற பராசத்தி என்னவே கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே மேல் #2389 கோ உணர்த்தும் சத்தியாலே குறிவைத்து தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே மேல் #2390 ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி அருவனும் ஆகிய ஆதரத்தானே மேல் #2391 அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயா சிவாநந்தி ஆமே மேல் #2392 வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே மேல் #2393 சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும் அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால் நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே மேல் #2394 சித்தாந்த தேசீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே மேல் #2395 சிவனை பரமனுள் சீவனுள் காட்டும் அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே மேல் #2396 தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம் தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம் தத்துவம் ஆம் சிவசாயுச்சியமே மேல் #2397 வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே மேல் #2398 பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம் விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே மேல் #2399 ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம் ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே மேல் #2400 அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே மேல் #2401 அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய் அனாதி அடக்கி தனை கண்டு அரனாய் தனாதி மலம் கெட தத்துவாதீதம் வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே மேல் #2402 உயிரை பரனை உயர் சிவன்-தன்னை அயர்வு அற்று அறி தொந்த தசி அதனால் செயலற்று அறிவாகியும் சென்று அடங்கி அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே மேல் #2403 மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம் சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள் துன்னிய ஆகம நூல் என தோன்றுமே மேல் #2404 முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ பதியான ஈசன் பகர்ந்த இரண்டு முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே மேல் #2405 அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினை கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பு அறும் தானே மேல் #2406 பசு பல கோடி பிரமன் முதலாய் பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனை பற்றி விடாவே மேல் #2407 கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் குட குன்றில் இட்ட விளக்கு அதுவாமே மேல் #2408 பாசம் செய்தானை படர் சடை நந்தியை நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம் வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே மேல் #2409 விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான் கட்டிய கேவலம் காணும் சகலத்தை சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே மேல் #2410 நாடும் பதியுடன் நல் பசு பாசமும் நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே மேல் #2411 ஆய பதிதான் அருள் சிவலிங்கமாம் ஆய பசுவும் அடலேறு என நிற்கும் ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே மேல் #2412 பதி பசு பாசம் பயில்வியா நித்தம் பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும் பதி பசு பாசம் பயில நிலாவே மேல் #2413 பதியும் பசுவொடு பாசமும் மேலை கதியும் பசு பாச நீக்கமும் காட்டி மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே மேல் #2414 அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே மேல் #2415 படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தை தற்பரம் செய்ய படைப்பாதி தூய மலம் அ பரத்திலே மேல் #2416 ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் ஆகிய தூய ஈசானனும் ஆமே மேல் #2417 மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும்படி படைப்போன் அரன் ஆமே மேல் #2418 படைப்பும் அளிப்பும் பயில் இளைப்பாற்றும் துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே மேல் #2419 ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே மேல் #2420 வீட்கும் பதி பசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே மேல் #2421 நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே மேல் #2422 ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே மேல் #2423 பாசம் பயில் உயிர் தானே பர முதல் பாசம் பயில் உயிர் தானே பசு என்ப பாசம் பயில பதி பரம் ஆதலால் பாசம் பயில பதி பசு ஆகுமே மேல் #2424 அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி அத்தத்தினாலே அணைய பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே மேல் #2425 காலும் தலையும் அறியார் கலதிகள் கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம் பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே மேல் #2426 தலை அடி ஆவது அறியார் காயத்தில் தலை அடி உச்சியில் உள்ளது மூலம் தலை அடி ஆன அறிவை அறிந்தோர் தலை அடி ஆகவே தான் இருந்தாரே மேல் #2427 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே மேல் #2428 சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடி கீழ் அது எந்தையும் என்னை அறியகிலான் ஆகில் எந்தையை யானும் அறியகிலேனே மேல் #2429 பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் சொன்னான் கழலிணை சூடி நின்றேனே மேல் #2430 பதியது தோற்றும் பதமது வைம்-மின் மதியது செய்து மலர் பதம் ஓதும் நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே மேல் #2431 தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை பரித்து நின்றான் அ பரிபாகத்தானே மேல் #2432 ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே மேல் #2433 கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான் மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே மேல் #2434 பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு செற்றம் இலா செய்கைக்கு எய்தின செய்யுமே மேல் #2435 மூன்று உள குற்றம் முழுது நலிவன மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே மேல் #2436 காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் தாமம் அதனை தலைப்பட்டவாறே மேல் #2437 தோன்றியது தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே மேல் #2438 போதம்-தனை உன்னி பூதாதி பேதமும் ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே மேல் #2439 தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம் சொல் பதத்தாலும் தொடர ஒண்ணா சிவன் கற்பனை இன்றி கலந்து நின்றானே மேல் #2440 அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் இணை அறு பால் தேன் அமுது என இன்ப துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே மேல் #2441 தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் அம்பத மேலை சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே மேல் #2442 ஐம்பது அறியாதவரும் அவர் சிலர் உம்பனை நாடி உரை முப்பதத்து இடை செம்பரம் ஆகிய வாசி செலுத்திட தம் பர யோகமாய் தானவன் ஆகுமே மேல் #2443 நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் நந்தி நனவாதி மூட்டும் அனாதியே மேல் #2444 பர துரியத்து நனவு படி உண்ட விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் அரிய துரியம் அசி பதம் ஆமே மேல் #2445 தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் மூன்று படி மண்டலத்து முதல்வனை ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம் செய் நலம் தருமாறே மேல் #2446 மன்று நிறைந்தது மா பரம் ஆயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்து எழு தாய் என வந்த பின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே மேல் #2447 ஆறாறு தத்துவத்து அப்புறத்து அ பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே மேல் #2448 பற்று அற பற்றில் பரம்பதி ஆவது பற்று அற பற்றில் பரன் அறிவே பரம் பற்று அற பற்றினில் பற்ற வல்லார்க்கே பற்று அற பற்றில் பரம்பரம் ஆமே மேல் #2449 பரம்பரம் ஆன பதி பாசம் பற்றா பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ பரம்பரம் ஆன பரசிவானந்தம் பரம்பரம் ஆக படைப்பது அறிவே மேல் #2450 நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம் தனை உற்றிட தானே தற்பரம் ஆமே மேல் #2451 தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று தற்பரன் கால பரமும் கலந்து அற்ற நற்பராதீதமும் நாடு அகராதியே மேல் #2452 அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் பதியில் பதியும் பரவுயிர் தானே மேல் #2453 ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி சோதி பரஞ்சுடர் தோன்ற தோன்றாமையின் நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே மேல் #2454 துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் பெரிய பிரானை பிரணவ கூபத்தே துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே மேல் #2455 செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல் அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே மேல் #2456 வைச்ச கலாதி வரு தத்துவம் கெட வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே மேல் #2457 என்னை அறிய இசைவித்த என் நந்தி என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே மேல் #2458 பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன்நெறி ஆயது ஆகி தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே மேல் #2459 சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே மேல் #2460 மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாக கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து சீலம் இலா அணு செய்தி அது ஆமே மேல் #2461 வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில் ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய் ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே மேல் #2462 தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே மேல் #2463 பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியாதீதம் தன்னை கண்டு பரனும் அ காரணோபாதிக்கே மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே மேல் #2464 வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற வெளி ஆய சத்தி அவன் வடிவாமே மேல் #2465 மேருவினோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்கு சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே மேல் #2466 நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதாதி மூன்றினில் பர துரியம் தான் நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம் இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே மேல் #2467 தானா நனவில் துரியம் தன் தொம்பதம் தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில் ஆனா பரபதம் மற்றது அருநனா வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே மேல் #2468 அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி பணியும் பரதுரியம் பயில் நான்கும் தணிவில் பரம் ஆகி சார் மு துரிய கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே மேல் #2469 ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள் நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று பார் அந்தமான பராபரத்து அயிக்கியத்து ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே மேல் #2470 தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே மேல் #2471 அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே மேல் #2472 நனவின் நனவாதி நாலாம் துரியம் தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல வினை அறு சீவன் நனவாதி ஆகத்து அனைய பர துரியம் தற்பதமே மேல் #2473 தொம்பதம் தற்பதம் சொல் மு துரியம் போல் நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே மேல் #2474 சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே மேல் #2475 ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே மேல் #2476 சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்று தவம் ஆன மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவமாகிய நெறி சோகம் என்போர்க்கு சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே மேல் #2477 சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும் பெருமானே மேல் #2478 ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே மேல் #2479 மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை காண்டலும் காய கணக்கு அற்றவாறே மேல் #2480 உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே மேல் #2481 பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு ஆகி குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே மேல் #2482 மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனலாய் நின்றவாறு அது போல தணி முச்சொருபாதி சத்தியாதி சார பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே மேல் #2483 கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப்பாழில் சொல் அறு பேருரைத்து அல் அறு முத்திராந்தத்து அனுபூதியே மேல் #2484 உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அ இடம் தரு வாசலை மேல் திறவீரே மேல் #2485 இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடனுறும் அ உரு வேறு என காணும் திடம் அது போல சிவபர சீவர் உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே மேல் #2486 ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து தெளிய தெளியும் சிவபதம் தானே மேல் #2487 முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே மேல் #2488 தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம் தொற்பதம் மூன்றும் துரியத்து தோற்றவே நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் சொல் பதம் ஆகும் தொந்த தசியே மேல் #2489 தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின் இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே மேல் #2490 தொந்த தசியை அ வாசியில் தோற்றியே அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே மேல் #2491 வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து உய்த்து பிரணவமாம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே மேல் #2492 தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம் உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே மேல் #2493 ஆகிய அச்சோயம் தேவதத்தன்-இடத்து ஆகியவை விட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே மேல் #2494 தாமதம் காமியம் ஆகி தகுகுணம் மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் தாமாம் துரியமும் தொந்த தசியதே மேல் #2495 காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட காரிய காரண வாதனை கண்டு அறும் சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே மேல் #2496 மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன் சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன் ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே மேல் #2497 எதிர் அற நாளும் எருது வந்து ஏறும் பதி எனும் நந்தி பதம் அது கூட கதி என பாழை கடந்த அந்த கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே மேல் #2498 துரியம் அடங்கிய சொல் அறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அரு நிலம் என்பதை யார் அறிவாரே மேல் #2499 ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ தேறா சிவாயநம என தேறிலே மேல் #2500 உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை உள்ளமும் இல்லை உரு இல்லை தானே மேல் #2501 செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும் பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை உற்றிடும் காரிய காரண தோடு அற அற்றிட அ சிவம் ஆகும் அணுவனே மேல் #2502 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுத்த கனா நனா ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே மேல் #2503 அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வரும் முப்பதத்து சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே மேல் #2504 உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று அயிர்ப்பு அறு காரணோபாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே மேல் #2505 காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொல் பதம் பார் அறும் பாழில் பராபரத்தானே மேல் #2506 முத்திக்கு வித்து முதல்வன்-தன் ஞானமே பத்திக்கு வித்து பணிந்துற்று பற்றலே சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல் சத்திக்கு வித்து தனது உபசாந்தமே மேல் #2507 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனை பற்று அற பாரணவும் உபசாந்த பரிசு இதே மேல் #2508 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி மன்னு பரங்காட்சியாவது உடனுற்று தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே மேல் #2509 ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி கூறாத சாக்கிராதீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே மேல் #2510 வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய் ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து தோய்ந்து அறல் மோன சுகானுபவத்தோடே ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே மேல் #2511 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய் திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே மேல் #2512 பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறை மணி வாள் கொண்டவர்-தமை போல கறை மணிகண்டனை காண்குற மாட்டார் நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே மேல் #2513 கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே மேல் #2514 கருதலர் மாள கருவாயில் நின்ற பொருதலை செய்வது புல்லறிவாண்மை மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே மேல் #2515 பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும் இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் கணம் பதினெட்டும் கழல் அடி காண வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே மேல் #2516 என்னிலும் என் உயிராய இறைவனை பொன்னிலும் மா மணியாய புனிதனை மின்னிய எ உயிராய விகிர்தனை உன்னிலும் உன்னும் உறுவகையாலே மேல் #2517 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே மேல் #2518 நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை பண் அறிவாளனை பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே மேல் #2519 விண்ணவராலும் அறிவறியான்-தன்னை கண்ணுற உள்ளே கருதிடில் காலையில் எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே மேல் #2520 ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் பின் தான் அருள்செய்த பேரருளாளவன் கன்றா மனத்தார்-தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத-போது புனை புகழானே மேல் #2521 போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக காற்றின் விளக்கு அது காய மயக்குறும் ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே மேல் #2522 நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண் மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே மேல் #2523 ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே மேல் #2524 மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே மேல் #2525 பதமுத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு இதமுற்ற பாச இருளை துரந்து மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே மேல் #2526 சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன் சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து சத்தர் சதாசிவ தன்மையர் தாமே மேல் #2527 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வட திசை ஈசன் நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே மேல் #2528 ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே மேல் #2529 மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர் எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில் பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே மேல் #2530 ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் வேறே இருக்கும் விழுப்பொருள் தானே மேல் #2531 திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும் வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே மேல் #2532 ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே மேல் #2533 பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன் நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் செல் ஊழி அண்டத்து சென்ற அ ஊழியுள் அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே மேல் #2534 புரியம் உலகினில் பூண்ட எட்டானை திரியும் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வெளியும் பரியும் ஆகாசத்தில் பற்றது தானே மேல் #2535 ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை பூ இன்றி சூடான் புரிசடையோனே மேல் #2536 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திரு உடையோரே மேல் #2537 தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன் நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன் பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன் பொன் புவி சாந்தன் பொருதபிமானியே மேல் #2538 நவமாம் அவத்தை நனவு ஆதி பற்றில் பவமாம் மலம் குணம் பற்று அற்று பற்றா தவமான சத்திய ஞான பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே மேல் #2539 சிவமான சிந்தையில் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறி பறிய நவமான அந்தத்தின் நல் சிவபோதம் தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே மேல் #2540 முன் சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம் தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே மேல் #2541 உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும் இகந்தன வல்வினையோடு அறுத்தானே மேல் #2542 நலம் பல காலம் தொகுத்தன நீளம் குலம் பல வண்ணம் குறிப்பொடும் கூடும் பலம் பல பன்னிரு கால நினையும் நிலம் பலவாறு இன நீர்மையன் தானே மேல் #2543 ஆதி பராபரம் ஆகும் பராபரை சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே மேல் #2544 தேறாத சிந்தை தெளிய தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே மேல் #2545 ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே மேல் #2546 நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி இருக்கும் பெரு மறை அ மறை கூசி இருக்கும் குணம் அது ஆமே மேல் #2547 கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை ஆவது கண்டு அகன்ற பின் புரிவன கன்ம கயத்துள் புகுமே மேல் #2548 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அ பொருள் மாயை மறைய மறைய வல்லார்கட்கு காயமும் இல்லை கருத்து இல்லை தானே மேல் #2549 மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில் ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து தாழ அடைப்பது தன் வலி ஆமே மேல் #2550 காய குழப்பனை காய நல் நாடனை காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்து அறியாரே மேல் #2551 ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே மேல் #2552 ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே மேல் #2553 வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்கு சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே மேல் #2554 தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே மேல் #2555 தூயது வாளா வைத்தது தூ நெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமாசித்தியும் தூயது வாளா தூய் அடி சொல்லே மேல் #2556 பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவர் அன்றி சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின் மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே மேல் #2557 வினையாம் அசத்து விளைவது உணரார் வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவு அறியாரே மேல் #2558 பரகதி உண்டு என இல்லை என்போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடுவார் கடை-தோறும் துரகதி உண்ண தொடங்குவர் தாமே மேல் #2559 கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே மேல் #2560 புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி அறப்பட்ட மற்ற பதி என்று அழைத்தேன் இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே மேல் #2561 திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டி கடலிடை நில்லா கலம் சேருமா போல் அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே மேல் #2562 தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் போம் வழி வேண்டி புறமே உழிதர்வர் காண் வழி காட்ட கண் காணா கலதிகள் தீ நெறி செல்வான் திரிகின்றவாறே மேல் #2563 மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி அவனை குறித்து உடன் காடும் மலையும் கழனி கடம்-தோறும் ஊடும் உருவினை உன்னகிலாரே மேல் #2564 ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறி வழி நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி வேவது செய்து விளங்கிடுவீரே மேல் #2565 மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் தமக்குற பேசின தாரணை கொள்ளார் சிணக்குற பேசின தீவினையாளர் தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே மேல் #2566 விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து தொட்டு விடாதது உபசாந்தத்தே தொகும் விட்டு விடாதது மேவும் சத்தாதியில் சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே மேல் #2567 வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின் கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே மேல் #2568 சீவ துரியத்து தொம்பதம் சீவனார் தாவு பர துரியத்தினில் தற்பதம் மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம் ஓவி விடும் தத்துவ மசி உண்மையே மேல் #2569 ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து வீறான தொந்த தசி தத்துவ மசியே மேல் #2570 ஆகிய அச்சோயம் தேவக தன்னிடத்து ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து ஆருப சாந்தமே தொந்த தசி என்ப ஆகிய சீவன் பரன் சிவனாமே மேல் #2571 துவந்த தசியே தொந்த தசியும் அவை மன்னா வந்து வய தேகம் ஆன தவமுறு தத்துவ மசி வேதாந்த சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே மேல் #2572 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார் உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும் அருநிலம் என்பதை ஆர் அறிவாரே மேல் #2573 தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய மு துரியத்து மேல் நாடவே உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே மேல் #2574 வைத்த துரியம் அதில் சொருபானந்தத்து உய்த்த பிரணவமாம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் வைத்தபடியே அடைந்து நின்றானே மேல் #2575 நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி மனவாசகம் கெட்ட மன்னனை நாடே மேல் #2576 பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில் ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே மேல் #2577 நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே மேல் #2578 உயிர் பரம் ஆக உயர் பர சீவன் அரிய சிவமாக அ சிவ வேத திரியிலும் சீராம் பராபரன் என்ன உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே மேல் #2579 வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே மேல் #2580 அறிவு அறியாமை இருண்டும் அகற்றி செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனை பிறிவு அறியாது பிரான் என்று பேணும் குறி அறியாதவர் கொள் அறியாரே மேல் #2581 அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் அறிவான் அறிந்த அறிவு அறியோமே மேல் #2582 அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் பதியில் பதியும் பரவுயிர் தானே மேல் #2583 அடிதொழ முன் நின்று அமரர்கள் அத்தன் முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே மேல் #2584 நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி என் உளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே மேல் #2585 துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்து அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே மேல் #2586 மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து அவ்வாய அந்த கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே மேல் #2587 அழிகின்ற சாயா புருடனை போல கழிகின்ற நீரில் குமிழியை காணில் எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே மேல் #2588 உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும் சிவசத்தி தாமே பரமாம் உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி கடையும் தலையும் கரக்கும் சிவத்தே மேல் #2589 செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும் குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து தவிர் ஒன்று இலாத சராசரம் தானே மேல் #2590 பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும் திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும் உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும் வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே மேல் #2591 அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே மேல் #2592 இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி பரம்பரம் ஆன பரம் அது விட்டே உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்த என் நந்தி இதயத்து உளானே மேல் #2593 கரி உண் விளவின் கனி போல் உயிரும் உரிய பரமும் முன் ஓதும் சிவமும் அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெருமானே மேல் #2594 அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன் நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே நந்தி இருந்தனன் நாம் அறியோமே மேல் #2595 அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள் குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே மேல் #2596 எல்லாம் அறியும் அறிவு-தனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் எல்லாம் அறிந்த இறை எனலாமே மேல் #2597 தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லா பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே மேல் #2598 தானே உலகில் தலைவன் என தகும் தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும் வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே மேல் #2599 அருள் பெற்ற காரணம் என்-கொல் அமரில் இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே மேல் #2600 மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும் மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே மேல் #2601 மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை கைகலந்தார்க்கே கருத்துறல் ஆமே மேல் #2602 எய்திய காலத்து இருபொழுதும் சிவன் மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் ஐயனும் அ வழி ஆகி நின்றானே மேல் #2603 எய்துவது எய்தாது ஒழிவது இது அருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின் மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே மேல் #2604 கைகலந்தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே மேல் #2605 மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே மேல் #2606 உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின் மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே மேல் #2607 வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில் செம்பொன் சிவகதி சென்று எய்தலாமே மேல் #2608 மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து துயக்கு அறுத்தானை தொடர்-மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான் உயப்போ என மனம் ஒன்றுவித்தானே மேல் #2609 மனம் அது தானே நினைய வல்லார்க்கு இனம் என கூறும் இரும் காயம் ஏவல் தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில் புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே மேல் #2610 முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே மேல் #2611 தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே மேல் #2612 மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும் மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே மேல் #2613 வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின் ஈசன் இருந்த இடம் எளிதாமே மேல் #2614 மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்து உளே நின்று முத்தி தந்தானே மேல் #2615 ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள் ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே மேல் #2616 அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படு வழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே மேல் #2617 உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர் அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவா கடல் ஈசன் தரித்து நின்றானே மேல் #2618 நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே மேல் #2619 உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம் பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே மேல் #2620 அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் பவன் இவன் பல் வகையாம் இ பிறவி புவன் இவன் போவது பொய் கண்ட-போதே மேல் #2621 கொதிக்கின்றவாறும் குளிர்கின்றவாறும் பதிக்கின்றவாறு இந்த பார் அகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே மேல் #2622 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியை சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே மேல் #2623 முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை பத்தர் பரசும் பசுபதி தான் என்றே மேல் #2624 அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவன் அடி கூட அடியான் இவன் என்று அடிமை கொண்டானே மேல் #2625 நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் பாரில் பயனாரை பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி ஆகி நின்றானே மேல் #2626 ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல பத்தர்-தம் பத்தியில் பால் படில் அல்லது முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே மேல் #2627 ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல் நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே மேல் #2628 பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான் முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால் அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால் பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே மேல் #2629 பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே மேல் #2630 உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின் செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே மேல் #2631 வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற தானவர் முப்புரம் செற்ற தலைவனை கானவன் என்றும் கருவரையான் என்றும் ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே மேல் #2632 நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம் மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே மேல் #2633 முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்று தத்துவ சுத்தி தலைப்பட்டு தன் பணி மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை பத்தியில் உற்றோர் பரானந்த போதரே மேல் #2634 வளம் கனி தேடிய வன் தாள் பறவை உளம் கனி தேடி அழிதரும்-போது களம் கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே மேல் #2635 பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேரின்பத்து அம்மான் அடி தந்து அருட்கடல் ஆடினோம் எம்மாயமும் விடுத்து எம்மை கரந்திட்டு சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே மேல் #2636 அறிவு உடையான் அரு மா மறை உள்ளே செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த குறி உடையானொடும் கூடுவன் நானே மேல் #2637 அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகியவாறே மேல் #2638 குறியா குறியினில் கூடாத கூட்டத்து அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும் செறியா செறிவே சிவம் எனலாமே மேல் #2639 காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும் பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை காவலன் எங்கும் கலந்து நின்றானே மேல் #2640 விருப்பொடு கூடி விகிர்தனை நாடி பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே மேல் #2641 நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே மேல் #2642 தன்மை வல்லோனை தத்துவத்துள் நலத்தினை நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின் பன்மையில் உம்மை பரிசு செய்வானே மேல் #2643 தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே மேல் #2644 அ வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும் இ வழி நந்தி இயல்பு அது தானே மேல் #2645 எறிவது ஞானத்து உறைவாள் உருவி அறிவு அதனோடே அ ஆண் தகையானை செறிவது தேவர்க்கு தேவர் பிரானை பறிவது பல் கண பற்று விட்டாரே மேல் #2646 ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே மேல் #2647 அந்த கருவை அருவை வினை செய்தல் பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே மேல் #2648 உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு கரையற்று எழுந்த கலை வேட்டு அறுத்து திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே மேல்@9 ஒன்பதாம் தந்திரம் #2649 பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கி குவியும் குருமடம் கண்டவர் தாம் போய் தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே மேல் #2650 இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் அவனை புறம்பு என்று அரற்றுகின்றாரே மேல் #2651 நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்ட பின் கூடும் சிவனது கொய் மலர் சேவடி தேட அரியன் சிறப்பு_இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே மேல் #2652 இயம்புவன் ஆசனத்தோடு மலையும் இயம்புவன் சித்த குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத்தோடு வனமும் இயம்புவன் ஈராறு இருநிலத்தோர்க்கே மேல் #2653 முகம் பீடமாம் மடம் உன்னிய தேயம் அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி அகம் பரம் ஆதனம் எண்ணெண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே மேல் #2654 அகம் முகமாம் பீடம் ஆதாரம் ஆகும் சக முகமாம் சத்தி ஆதனம் ஆகும் செக முகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே மேல் #2655 மாயை இரண்டும் மறைக்க மறைவுறும் காயம் ஓர் ஐந்தும் கழிய தான் ஆகியே தூய பரஞ்சுடர் தோன்ற சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்தர் ஆமே மேல் #2656 ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூற குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபதம் மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே மேல் #2657 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய பரசிவம் யாவையும் ஆகி விரிவு குவிவு அற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேச ஒண்ணாதே மேல் #2658 ஆயன நந்தி அடிக்கு என் தலை பெற்றேன் வாயன நந்தியை வாழ்த்த என் வாய் பெற்றேன் காயன நந்தியை காண என் கண் பெற்றேன் சேயன நந்திக்கு என் சிந்தை பெற்றேனே மேல் #2659 கருடன் உருவம் கருதும் அளவில் பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல் குருவின் உருவம் குறித்த அப்போதே திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே மேல் #2660 அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர் அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார்களுக்கு அண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும் அண்ணலை காணில் அவன் இவன் ஆகுமே மேல் #2661 தோன்ற அறிதலும் தோன்றல் தோன்றாமையும் ஆன்ற அறிவும் அறி நனவாதிகள் மூன்று அவை நீங்கும் துரியங்கள் மூன்று அற ஊன்றிய நந்தி உயர் மோனத்தானே மேல் #2662 சந்திர பூமிக்குள் தன் புருவத்திடை கந்த மலரில் இரண்டு இதழ் கன்னியும் பந்தம் இலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரம் குரு பற்றே மேல் #2663 மனம் புகுந்தான் உலகு ஏழும் மகிழ நிலம் புகுந்தான் நெடு வான் நிலம் தாங்கி சினம் புகுந்தான் திசை எட்டும் நடுங்க வனம் புகுந்தான் ஊர் வடக்கு என்பதாமே மேல் #2664 தான் ஆன வண்ணமும் கோசமும் சார்தரும் தான் ஆம் பறவை வனம் என தக்கன தான் ஆன சோடச மார்க்கம் தான் நின்றிடில் தான் ஆம் தசாங்கமும் வேறு உள்ள தானே மேல் #2665 மருவி பிரிவு அறியா எங்கள் மா நந்தி உருவ நினைக்க நின்று உள்ளே உருக்கும் கருவில் கரந்து உள்ளம் காண வல்லார்க்கு இங்கு அருவினை கண் சோரும் அழிவார் அகத்தே மேல் #2666 தலைப்படலாம் எங்கள் தத்துவன் தன்னை பல படு பாசம் அறுத்து அறுத்திட்டு நிலைபெற நாடி நினைப்பு அற உள்கில் தலைப்படல் ஆகும் தருமமும் தானே மேல் #2667 நினைக்கின் நினைக்கும் நினைப்பவர்-தம்மை சுனைக்குள் விளை மலர் சோதியினானை தினை பிளந்து அன்ன சிறுமையரேனும் கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே மேல் #2668 தலைப்படும் காலத்து தத்துவன்-தன்னை விலக்குறின் மேலை விதி என்றும் கொள்க அனைத்து உலகாய் நின்ற ஆதி பிரானை நினைப்புறுவார் பத்தி நேடிக்கொள்வாரே மேல் #2669 நகழ்வு ஒழிந்தார் அவர் நாதனை உள்கி நிகழ்வு ஒழிந்தார் எம் பிரானொடும் கூடி திகழ்வு ஒழிந்தார் தங்கள் சிந்தையின் உள்ளே புகழ் வழி காட்டி புகுந்து நின்றானே மேல் #2670 வந்த மரகத மாணிக்க ரேகை போல் சந்திடும் மா மொழி சற்குரு சன்மார்க்கம் இந்த ரேகை இலாடத்தின் மூலத்தே சுந்தர சோதியுள் சோதியும் ஆமே மேல் #2671 உண்ணும் வாயும் உடலும் உயிருமாய் கண்ணும் மா யோக கடவுள் இருப்பது மண்ணு நீர் அனல் காலொடு வானுமாய் விண்ணும் இன்றி வெளி ஆனோர் மேனியே மேல் #2672 பரசு பதி என்று பார் முழுது எல்லாம் பரசிவன் ஆணை நடக்கும் பாதியால் பெரிய பதி செய்து பின் ஆம் அடியார்க்கு உரிய பதியும் பார் ஆக்கி நின்றானே மேல் #2673 அம்பர நாதன் அகல் இட நீள் பொழில் தம்பரம் அல்லது தாம் அறியோம் என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெருமான் அருள் பெற்று இருந்தாரே மேல் #2674 கோ வணங்கும்படி கோவணம் ஆகி பின் நா வணங்கும்படி நந்தி அருள்செய்தான் தே வணங்கோம் இனி சித்தம் தெளிந்தனம் போய் வணங்கும் பொருளாய் இருந்தோமே மேல் #2675 தூல பிரணவம் சொரூப ஆனந்த பேருரை பாலித்த சூக்கும மேலை சொரூப பெண் ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் மேலை பிரணவம் வேதாந்த வீதியே மேல் #2676 ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே மேல் #2677 ஓங்காரத்துள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்துள்ளே உதித்த சராசரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே மேல் #2678 வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி சுருக்கம் இல் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே மேல் #2679 மலையும் மனோபவம் அருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும் நலமும் சன்மார்க்கத்து உபதேசம் தானே மேல் #2680 சோடச மார்க்கமும் சொல்லும் சன்மார்க்கிகட்கு ஆடிய ஈறாறின் அந்தமும் ஈரேழில் கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து ஏறிய ஞான ஞேயாந்தத்து இருக்கவே மேல் #2681 ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன் இருந்தானே மேல் #2682 புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் பகல் ஒளி செய்ததும் அ தாமரையிலே இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே மேல் #2683 விளங்கு ஒளி அங்கி விரி கதிர் சோமன் துளங்கு ஒளி பெற்றன சோதி அருள வளங்கு ஒளி பெற்றதே பேரொளி வேறு களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே மேல் #2684 இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கு ஒளி அங்கியும் அற்றை கண் நெற்றி விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே மேல் #2685 மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் நீர் ஒளி செய்து நெடு விசும்பு ஒன்றிலும் மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே மேல் #2686 மின்னிய தூ ஒளி மேதக்க செ ஒளி பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி துன்னிய ஆறு ஒளி தூய் மொழி நாள்-தொறும் உன்னியவாறு ஒளி ஒத்தது தானே மேல் #2687 விளங்கு ஒளி மின் ஒளி ஆகி கரந்து துளங்கு ஒளி ஈசனை சொல்லும் எப்போதும் உளங்கு ஒளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே மேல் #2688 விளங்கு ஒளி அ ஒளி அ இருள் மன்னும் துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் அளங்கு ஒளி ஆரமுதாக நஞ்சாரும் களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே மேல் #2689 இலங்கியது எ ஒளி அ ஒளி ஈசன் துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கு ஒளி உள்ளே ஒருங்குகின்றானே மேல் #2690 உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் வளங்கு ஒளியாய் நின்ற மா மணி சோதி விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே மேல் #2691 விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேரா களங்கு இருள் நட்டமே கண்_நுதல் ஆட விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே மேல் #2692 போது கரும் குழல் போனவர் தூது இடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி நீதியின் நல் இருள் நீக்கியவாறே மேல் #2693 உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு-கொல் கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்துறில் விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே மேல் #2694 சுடருற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே படருறு காட்சி பகலவன் ஈசன் அடருறு மாயையின் ஆரிருள் வீசில் உடலுறு ஞான துறவியன் ஆமே மேல் #2695 ஒளி பவள திருமேனி வெண்ணீற்றன் அளி பவள செம்பொன் ஆதி பிரானும் களி பவளத்தினன் கார் இருள் நீங்கி ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே மேல் #2696 ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற தேசம் ஒன்று இன்றி தகைத்து இழைக்கின்றார் பாசம் ஒன்று ஆக பழவினை பற்று அற வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே மேல் #2697 தானே இருக்கும் அவற்றில் தலைவனும் தானே இருக்கும் அவன் என நண்ணிடும் வானாய் இருக்கும் இ மா இரு ஞாலத்து பானாய் இருக்க பரவலும் ஆமே மேல் #2698 ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத்து ஆமே மேல் #2699 அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்து மாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்தி-தன் நாமமே மேல் #2700 அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன் சத்தி உள் ஒளி ஈசன் சிகராதி தான் சிவவேதமே கோண நகராதி தான் மூலமந்திரம் நண்ணுமே மேல் #2701 வாயொடு கண்டம் இதயம் மருவு உந்தி ஆய இலிங்கம் அவற்றின் மேலே அவ்வாய் தூயது ஓர் துண்டம் இருமத்தகம் செல்லல் ஆயது ஈறாம் ஐந்தோடு ஆம் எழுத்து அஞ்சுமே மேல் #2702 கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி பொங்கி கரணங்கள் விட்டு உயிர் தான் எழும்-போது மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும்-போதும் அரணம் கைகூட்டுவது அஞ்செழுத்து ஆமே மேல் #2703 ஞாயிறு திங்கள் நவின்று எழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத்து அஞ்சையும் வாயுற ஓதி வழுத்தலும் ஆமே மேல் #2704 தெள்ளமுது ஊற சிவாயநம என்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர் துள்ளிய நீர் போல் சுழல்கின்றவாறே மேல் #2705 குருவழி ஆய குணங்களின் நின்று கருவழி ஆய கணக்கை அறுக்க வரும் வழி மாள மறுக்க வல்லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத்து ஆமே மேல் #2706 வெறிக்க வினை துயர் வந்திடும்-போது செறிக்கின்ற நந்தி திருவெழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரை கழல் கூட்டும் குறிப்பு அறிவான் தவம் கோன் உரு ஆமே மேல் #2707 நெஞ்சு நினைந்து தம் வாயால் பிரான் என்று துஞ்சும் பொழுது உன் துணை தாள் சரண் என்று மஞ்சு தவழும் வடவரை மீது உறை அஞ்சில் இறைவன் அருள் பெறலாமே மேல் #2708 பிரான் வைத்த ஐந்தின் பெருமை உணராது இரா மாற்றம் செய்வார்-கொல் ஏழை மனிதர் பரா முற்றும் கீழொடு பல்வகையாலும் அரா முற்றும் சூழ்ந்த அகல் இடம் தானே மேல் #2709 எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகு மனத்தராய் தெளிய ஓதி சிவாயநம என்னும் குளிகை இட்டு பொன் ஆக்குவன் கூட்டையே மேல் #2710 சிவன் சத்தி சீவன் செறு மல மாயை அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகல சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம் சேர்த்த பாசம் அணுககிலாவே மேல் #2711 சிவனருள் ஆய சிவன் திருநாமம் சிவனருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன் முதலாக சிறந்து நிரோதம் பவம் அது அகன்று பரசிவன் ஆமே மேல் #2712 ஓதிய நம மலம் எல்லாம் ஒழித்திட்டு அ வாதி-தனை விட்டு இறை அருள் சத்தியால் தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே மேல் #2713 நமாதி நனாதி திரோதாயி ஆகி தம் ஆதியதாய் நிற்க தான் அந்தத்துற்று சமாதி துரியம் தமது ஆகம் ஆகவே நமாதி சமாதி சிவம் ஆதல் எண்ணவே மேல் #2714 அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை திரிமலம் நீங்கி சிவாய என்று ஓதும் அருவினை தீர்ப்பதும் அ எழுத்தாமே மேல் #2715 சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்க சிவசிவ ஆய தெளிவின் உள்ளார்கள் சிவசிவ ஆகும் திருவருளாமே மேல் #2716 சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிட தீவினை மாளும் சிவசிவ என்றிட தேவரும் ஆவர் சிவசிவ என்ன சிவகதி தானே மேல் #2717 நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற பவம் அது தீரும் பரிசும் அது அற்றால் அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ மேல் #2718 சிவாயநம என சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமை அது ஆக்கி சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே மேல் #2719 செஞ்சுடர் மண்டலத்து ஊடு சென்று அப்புறம் அஞ்சணவும் முறை ஏறி வழி கொண்டு துஞ்சும் அவன் சொன்ன காலத்து இறைவனை நெஞ்சு என நீங்கா நிலைபெறல் ஆகுமே மேல் #2720 அங்கமும் ஆகம வேதம் அது ஓதினும் எங்கள் பிரான் எழுத்து ஒன்றில் இருப்பது சங்கை கெட்டு அ எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே மேல் #2721 பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே விழித்து அங்கு உறங்கும் வினை அறிவார் இல்லை எழுத்து அறிவோம் என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்து அறியாரே மேல் #2722 எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள்-தன் விளையாட்டு அதே மேல் #2723 சிற்பரம் சோதி சிவானந்த கூத்தனை சொல் பதம் ஆம் அந்த சுந்தர கூத்தனை பொன் பதி கூத்தனை பொன் தில்லை கூத்தனை அற்புத கூத்தனை யார் அறிவாரே மேல் #2724 தான் அந்தம் இல்லா சதானந்த சத்தி மேல் தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக்கூத்து ஆட ஆடரங்கு ஆனதே மேல் #2725 ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்த கூத்து உகந்தானுக்கே மேல் #2726 ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி ஆகும் சமய களியார் பரமும் கருத்துறை அந்த தெளிவு ஆம் சிவானந்த நட்டத்தின் சித்தியே மேல் #2727 ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் ஆன நடம் ஆடி ஐங்கருமத்து ஆக ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே தேன் மொழி பாகன் திருநடம் ஆடுமே மேல் #2728 பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கருமத்து ஆண்ட தற்பரத்து ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே மேல் #2729 வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆட கீதங்கள் ஆட கிளர் அண்டம் ஏழ் ஆட பூதங்கள் ஆட புவனம் முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்த கூத்தே மேல் #2730 பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்ட போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே மேல் #2731 தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்துமூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே மேல் #2732 அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு என்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல் கண்டம் கரியான் கருணை திருவுரு கொண்டு அங்கு உமை காண கூத்து உகந்தானே மேல் #2733 கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடியுள் நாடும் திடமுற்று எழும் தேவதாருவாம் தில்லை வடமுற்ற மா வனம் மன்னவன் தானே மேல் #2734 பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே மேல் #2735 அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும் தாள ஒத்தினில் சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே மேல் #2736 ஆனத்தி ஆடி பின் நவ கூத்து ஆடி கானத்தி ஆடி கருத்தில் தரித்து ஆடி மூன சுழுனையுள் ஆடி முடிவு இல்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே மேல் #2737 சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான் ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான் எட்டும் சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே மேல் #2738 மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் தேகங்கள் ஏழும் சிவ பாற்கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடி கீழ் அடங்குமே மேல் #2739 தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு உச்சியில் அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பு இல் பேரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே மேல் #2740 அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தர் அருளுற்றோர் அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே மேல் #2741 அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் காண் பரானந்தத்தே என்னை இட்டு நடந்தான் செயும் நந்தி நல் ஞான கூத்தன் படம்தான் செய்து உள்ளுள் படிந்திருந்தானே மேல் #2742 உம்பரில் கூத்தனை உத்தம கூத்தனை செம்பொன் திருமன்றுள் சேவக கூத்தனை சம்பந்த கூத்தனை தற்பர கூத்தனை இன்புற நாடி என் அன்பில் வைத்தேனே மேல் #2743 மாணிக்க கூத்தனை வண் தில்லை கூத்தனை பூணுற்ற மன்றுள் புரிசடை கூத்தனை சேணுற்ற சோதி சிவானந்த கூத்தனை ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே மேல் #2744 விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் செம்மை சிறந்த திரு அம்பல கூத்துள் அம் மலர் பொன் பாதத்து அன்பு வைப்பார்கட்கே மேல் #2745 தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்துள் வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த நாட்டம் முறுக்குறும் நாடகம் காணவே மேல் #2746 காளியோடு ஆடி கனகாசலத்து ஆடி கூளியோடு ஆடி குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வானிடை ஆடி நாளுற அம்பலத்தே ஆடும் நாதனே மேல் #2747 மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இ வானின் இலங்கை குறியுறும் சாரும் திலை வன தண் மா மலையத்தூடு ஏறும் சுழுனை இவை சிவபூமியே மேல் #2748 பூதலம் மேரு புறத்து ஆன தெக்கணம் ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனையாம் பாதி மதியோன் பயில் திரு அம்பலம் ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே மேல் #2749 அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆக பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆக தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆக கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே மேல் #2750 குரானந்த ரேகையாய் கூர்ந்த குணமாம் சிரானந்தம் பூரித்து தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே மேல் #2751 ஆதி பரன் ஆட அம் கை கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆட பாதி மதி ஆட பார் அண்டம் மீது ஆட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே மேல் #2752 கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருளாகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பர மோன ஞானாந்தத்தில் உண்மையே மேல் #2753 மேதினி மூவேழ் மிகும் அண்டம் ஓர் ஏழு சாதகம் ஆகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமோடு அந்த நடானந்த நாற்பத பாதியோடு ஆடி பரன் இரு பாதமே மேல் #2754 இடை பிங்கலை இம வானோடு இலங்கை நடு நின்ற மேரு நடுவாம் சுழுனை கடவும் திலை வனம் கைகண்ட மூலம் படர் ஒன்றி என்னும் பரமாம் பரமே மேல் #2755 ஈறு ஆன கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் பேறு ஆன வேதாகமமே பிறத்தலான் மாறாத தென் திசை வையகம் சுத்தமே மேல் #2756 நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி வேதத்தில் ஆடி தழல் அந்தம் மீது ஆடி போதத்தில் ஆடி புவனம் முழுதும் ஆடும் தீது அற்ற தேவாதி தேவர் பிரானே மேல் #2757 தேவரோடு ஆடி திரு அம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத்தோடு ஆடி பாவினுள் ஆடி பராசத்தியில் ஆடி கோவினுள் ஆடிடும் கூத்தப்பிரானே மேல் #2758 ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் கூறு சமய குருபரன் நான் என்றும் தேறினர் தெற்கு திரு அம்பலத்து உள்ளே வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே மேல் #2759 அம்பலம் ஆடரங்கு ஆக அதன் மீதே எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி உம்பரமாம் ஐந்து நாதத்து ரேகையுள் தம் பதமாய் நின்று தான் வந்து அருளுமே மேல் #2760 ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆட தேடி உளே கண்டு தீர்ந்து அற்றவாறே மேல் #2761 இருதயம்-தன்னில் எழுந்த பிராணன் கரசரணாதி கலக்கும் படியே அரதனம் மன்றினில் மாணிக்க கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே மேல் #2762 குரு உரு அன்றி குனிக்கும் உருவம் அருவுரு ஆவதும் அந்த அருவே திரிபுரை ஆகி திகழ் தருவாளும் உரு அருவு ஆகும் உமை அவள் தானே மேல் #2763 திரு வழி ஆவது சிற்றம்பலத்தே குரு வடிவு உள்ளா குனிக்கும் உருவே உருவருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அ வழி தானே மேல் #2764 நீரும் சிரசிடை பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட நாடு-மின் நாதாந்த நம் பெருமான் உகந்து ஆடும் இடம் திரு அம்பலம் தானே மேல் #2765 வளி மேக மின் வில்லு வானக ஓசை தெளிய விசும்பில் திகழ்தருவாறு போல் களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே மேல் #2766 தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயை மா மாயை கடந்து நின்றார் காண நாயகன் நின்று நடம் செய்யுமாறே மேல் #2767 கூத்தன் கலந்திடும் கோல்வளையாளொடும் கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்து கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே மேல் #2768 இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படம் கொடு நின்ற இ பல் உயிர்க்கு எல்லாம் அடங்கலும் தாமாய் நின்று ஆடுகின்றாரே மேல் #2769 சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே மேல் #2770 நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்று பார்க்க ஒளி விடும் மந்திரம் பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேனே மேல் #2771 அண்டங்கள் தத்துவம் ஆகி சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசனம் ஆகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே மேல் #2772 மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை சென்றது தான் ஒரு பத்து இருநூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே மேல் #2773 அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி அண்ட நடம் செயும் ஆலயம் தானே மேல் #2774 ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கைகள் மோகாய முக்கண்கள் மூன்று ஒளி தான் ஆக மாகாய மன்றுள் நடம் செய்கின்றானே மேல் #2775 அம்பலம் ஆவது அகில சராசரம் அம்பலம் ஆவது ஆதி பிரான் அடி அம்பலம் ஆவது அப்பு தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்செழுத்து ஆமே மேல் #2776 கூடிய திண் முழவம் குழல் ஓம் என்று ஆடிய மானுடர் ஆதி பிரான் என்ன நாடி நல் கணம் ஆரம் பல் பூதங்கள் பாடியவாறு ஒரு பாண்டரங்கம் ஆமே மேல் #2777 அண்டத்தில் தேவர்கள் அப்பாலை தேவர்கள் தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் புண்டரிக பத பொன்னம்பல கூத்து கண்டு சேவித்து கதி பெறுவார்களே மேல் #2778 புளி கண்டவர்க்கு புனல் ஊறுமா போல் களிக்கும் திருக்கூத்து கண்டவர்க்கு எல்லாம் அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே மேல் #2779 திண்டாடி வீழ்கை சிவானந்தம் ஆவது உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்து கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே மேல் #2780 அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம் தங்கு பயம் தரு நீலமும் உடன் மங்கை ஓர் பாகமாய் நடம் ஆடுமே மேல் #2781 ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆக கூடிய பாதம் சிலம்பு கைகொள் துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே மேல் #2782 ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட இன்புறும் ஏழினும் ஏழு ஐம்பத்தாறு ஆட அன்பதும் ஆடினான் ஆனந்த கூத்தே மேல் #2783 ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே மேல் #2784 மூன்றினில் அஞ்சாகி முந்நூற்றறுபதாய் மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்த கூத்தே மேல் #2785 தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடி தாள் இணை வாமணி அன்பு உடையார் மனத்துள் எழும் காமணி ஞாலம் கடந்து நின்றானே மேல் #2786 புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்றவாறே மேல் #2787 ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்த பின் ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே மேல் #2788 ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அசி பதத்து ஆடிட துன்புறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்புறு எந்தை நின்று ஆடலுற்றானே மேல் #2789 தத்துவம் ஆட சதாசிவம் தான் ஆட சித்தமும் ஆட சிவசத்தி தான் ஆட வைத்த சராசரம் ஆட மறை ஆட அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தே மேல் #2790 இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உருபர ரூபமாய் திருவருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே மேல் #2791 சிவம் ஆட சத்தியும் ஆட சகத்தில் அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட நவம் ஆன தத்துவ நாதாந்தம் ஆட சிவம் ஆடும் வேதாந்த சித்தாந்தத்து உள்ளே மேல் #2792 நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவானந்தத்து நாத பிரமம் சிவநடம் ஆமே மேல் #2793 சிவமாதி ஐவர் திண்டாட்டமும் தீர தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்து தவமாம் பரன் எங்கும் தானாக ஆடும் தவமாம் சிவானந்தத்தோர் ஞான கூத்தே மேல் #2794 கூடி நின்றான் ஒரு காலத்து தேவர்கள் வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தை தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி ஆட நின்றான் என்னை ஆட்கொண்டவாறே மேல் #2795 நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் நேதத்துவமும் அவற்றொடு நேதியும் பேதப்படா வண்ணம் பின்னி நின்றானே மேல் #2796 ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே மேல் #2797 திருந்து நல் சீ என்று உதறிய கையும் அருந்தவர் வா என்று அணைத்த மலர் கையும் பொருந்தில் அமைப்பில் யவ் என்ற பொன் கையும் திருந்த தீ ஆகும் திரு நிலை மவ்வே மேல் #2798 மருவம் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமல பதமும் உருவில் சிவாயநம என ஓதே மேல் #2799 அரன் துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி-தன்னில் அறையில் சங்காரம் அரனுற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரன் அடி என்றும் அனுக்கிரகம் என்னே மேல் #2800 தீ திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி கூத்தனை கண்ட அ கோமள கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்ல பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே மேல் #2801 நந்தியை எந்தையை ஞான தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அ பர சுந்தர கூத்தனை என் சொல்லும் ஆறே மேல் #2802 சீய குரு நந்தி திரு அம்பலத்திலே ஆயுறு மேனியை யாரும் அறிகிலர் தீயுறு செம்மை வெளுப்பொடும் அ தன்மை ஆயுறு மேனி அணை புகலாமே மேல் #2803 தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தானாம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை ஞானாதி பேதம் நடத்து நடித்து அருள் ஆனால் அரன் அடி நேயத்ததாமே மேல் #2804 உள்ளத்துள் ஓம் என ஈசன் ஒருவனை உள்ளத்துளே அங்கியாய ஒருவனை உள்ளத்துளே நீதியாய ஒருவனை உள்ளத்துளே உடல் ஆகாயம் ஆமே மேல் #2805 பெருநிலமாய் அண்டமாய் அண்டத்து அப்பால் குருநிலமாய் நின்ற கொள்கையான் ஈசன் பெருநிலமாய் நின்று தாங்கிய தாளோன் அருநிலையாய் நின்ற ஆதி பிரானே மேல் #2806 அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியை குலைத்தது தானே மேல் #2807 பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே பயனுறும் ஆதி பரஞ்சுடர் சோதி அயனொடு மால் அறியா வகை நின்றிட்டு உயர் நெறியாய் ஒளி ஒன்று அது ஆமே மேல் #2808 அறிவுக்கு அறிவாம் அகண்ட ஒளியும் பிறியா வலத்தினில் பேரொளி மூன்றும் அறியாது அடங்கிடில் அத்தன் அடிக்குள் பிறியாது இருக்கில் பெருங்காலம் ஆமே மேல் #2809 ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து ஏகாச மாசுணம் இட்டு அங்கு இருந்தவன் ஆகாச வண்ணம் அமர்ந்து நின்று அப்புறம் ஆகாசமாய் அங்கி வண்ணனும் ஆமே மேல் #2810 உயிர்க்கின்றவாறும் உலகமும் ஒக்க உயிர்க்கின்ற உள் ஒளி சேர்கின்ற-போது குயில் கொண்ட பேதை குலாவி உலாவி வெயில் கொண்டு என் உள்ளம் வெளியது ஆமே மேல் #2811 நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து அணுகில் அகன்ற பெரும் பதி நந்தி நணுகிய மின் ஒளி சோதி வெளியை பணியின் அமுதம் பருகலும் ஆமே மேல் #2812 புறத்துள் ஆகாசம் புவனம் உலகம் அகத்துள் ஆகாசம் எம் ஆதி அறிவு சிவத்துள் ஆகாசம் செழும் சுடர் சோதி சகத்துள் ஆகாசம் தானம் சமாதியே மேல் #2813 மன சந்தியில் கண்ட மன் நனவு ஆகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீது ஒழிவு என்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே மேல் #2814 கரி அட்ட கையன் கபாலம் கையேந்தி எரியும் இளம்பிறை சூடும் எம்மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்-கொல் சேயன்-கொல் காண்கின்றிலேனே மேல் #2815 மிக்கார் அமுது உண்ண நஞ்சு உண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன் உரை ஞானத்தை நக்கார் கழல் வழி நாடு-மின் நீரே மேல் #2816 விளக்கை பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக்கு உள்ளே விளக்கினை தூண்டி விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு விளக்கு உடையான் கழல் மேவலும் ஆமே மேல் #2817 தத்துவம் எங்கு உண்டு தத்துவன் அங்கு உண்டு தத்துவம் எங்கு இல்லை தத்துவன் அங்கு இல்லை தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்த பின் தத்துவன் அங்கே தலைப்படும் தானே மேல் #2818 விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும் பசும்பொன் திகழும் படர் சடை மீதே குசும்ப மலர் கந்தம் கூடி நின்றானே மேல் #2819 முத்தின் வயிரத்தின் முந்நீர் பவளத்தின் கொத்தும் பசும்பொன்னின் தூ ஒளி மாணிக்கம் ஒத்து உயர் அண்டத்து உள் அமர் சோதியை எத்தன்மை வேறு என்று கூறு செய்வீரே மேல் #2820 நான் என்றும் தான் என்றும் நாடினேன் நாடலும் நான் என்றும் தான் என்று இரண்டு இல்லை என்பது நான் என்ற ஞான முதல்வனே நல்கினான் நான் என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே மேல் #2821 ஞானத்தின் நல் நெறி நாதாந்த நல் நெறி ஞானத்தின் நல் நெறி நான் என்று அறிவோர்தல் ஞானத்தின் நல் யோக நல் நிலையே நிற்றல் ஞானத்தின் நல் மோனம் நாதாந்த வேதமே மேல் #2822 உய்ய வல்லார்கட்கு உயிர் சிவஞானமே உய்ய வல்லார்கட்கு உயிர் சிவதெய்வமே உய்ய வல்லார்கட்கு ஒடுக்கம் பிரணவம் உய்ய வல்லார் அறிவு உள்ளறிவு ஆமே மேல் #2823 காண வல்லார்க்கு அவன் கண்ணின் மணி ஒக்கும் காண வல்லார்க்கு கடலின் அமுது ஒக்கும் பேண வல்லார்க்கு பிழைப்பு இலன் பேர் நந்தி ஆண வல்லார்க்கே அவன் துணை ஆமே மேல் #2824 ஓம் எனும் ஓரெழுத்துள் நின்ற ஓசை போல் மேல் நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள் சேய் நின்ற செஞ்சுடர் எம் பெருமான் அடி ஆய் நின்ற தேவர் அகம் படி ஆமே மேல் #2825 எ பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே இ பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து தற்பர ஞானானந்தம் தான் அது ஆகுமே மேல் #2826 தொம்பதம் தற்பதம் சொன்ன துரியம் போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலை செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே மேல் #2827 மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மா சோபை அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் மாறது இன்னிய உற்பலம் ஒண் சீர் நிறம்மணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே மேல் #2828 சத்தி சிவன் பரஞானமும் சாற்றும்-கால் உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வரு குரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே மேல் #2829 உரு உற்பலம் நிறம் ஒண் மணம் சோபை தர நிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவ சிவம் என்ற மா முப்பதத்தின் சொருபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே மேல் #2830 நினையும் அளவின் நெகிழ வணங்கி புனையில் அவனை பொதியலும் ஆகும் எனையும் எம் கோன் நந்தி தன் அருள் கூட்டி நினையும் அளவில் நினைப்பித்தனனே மேல் #2831 பாலொடு தேனும் பழத்துள் இரதமும் வாலிய பேரமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடிபட உள் புக சீலம் மயிர்க்கால்-தொறும் தேக்கிடுமே மேல் #2832 அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனி மொழி மாதர் துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே மேல் #2833 மத்திமம் ஆறாறும் மாற்றி மலம் நீக்கி சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்று பெத்தம் அற சிவம் ஆகி பிறழுற்று சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே மேல் #2834 சிவமாய் அவம் ஆன மும்மலம் தீர பவம் ஆன முப்பாழை பற்று அற பற்ற தவம் ஆன சத்திய ஞானானந்தத்தே துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே மேல் #2835 பரம குரவன் பரம் எங்கும் ஆகி திரமுற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்து நின்றானே மேல் #2836 குலைக்கின்ற நீரில் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச நிலத்திடை வானிடை நீண்டு அகன்றானை வரைத்து வலம்செயும் ஆறு அறியேனே மேல் #2837 அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கி நின்றான் தனிநாயகன் எம் இறை பொங்கி நின்றான் புவனாபதி தானே மேல் #2838 சமைய சுவடும் தனையறியாமல் கமை அற்ற காமாதி காரணம் எட்டும் திமிர செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே மேல் #2839 மூவகை தெய்வத்து ஒருவன் முதல் உரு வாய் அது வேறு ஆம் அது போல் அணு பரன் சேய சிவம் மு துரியத்து சீர் பெற ஏயும் நெறி என்று இறைநூல் இயம்புமே மேல் #2840 உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் அரு அன்றியே நின்ற மாய பிரானை குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே மேல் #2841 உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே மேல் #2842 பரஞ்சோதி ஆகும் பதியினை பற்றா பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னை பரஞ்சோதி உண்ணான் படியப்படிய பரஞ்சோதி-தன்னை பறைய கண்டேனே மேல் #2843 சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆமாறு போல மருவிய சத்தியாதி நான்கு மதித்த சொரூப குரவன் சுகோதயம் தானே மேல் #2844 உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரை அற்ற சத்தியாதி காணில் அகார மருவுற்று உகாரம் மகாரமது ஆக உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே மேல் #2845 தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லா பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே மேல் #2846 ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள் போமாறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே மேல் #2847 செற்றில் என் சீவில் என் செஞ்சாந்து அணியில் என் மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் வித்தகன் நந்தி விதிவழி அல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே மேல் #2848 தான் முன்னம் செய்த விதிவழி தான் அல்லால் வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே மேல் #2849 ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக்கொண்டு சுமந்து அறிவார் இல்லை நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியை பேறு இட்டு என் உள்ளம் பிரியகிலாவே மேல் #2850 வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் கான் நின்ற செந்தீ கலந்து உடன் வேகில் என் தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே மேல் #2851 ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என் கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் ஏனை பதியினில் எம் பெருமான் வைத்த ஞானத்து உழவினை நான் உழுவேனே மேல் #2852 கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அறிவார்க்கே மேல் #2853 சிந்தை அது என்ன சிவன் என்ன வேறு இல்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளிய தெளிய வல்லார்கட்கு சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே மேல் #2854 வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்கு-மின் நோக்கப்படும் பொருள் நுண்ணிது போக்கு ஒன்றும் இல்லை வரவு இல்லை கேடு இல்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2855 பரனாய் பராபரன் ஆகி அப்பால் சென்று உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய் தரனாய் தனாது என ஆறு அறி ஒண்ணா அரனாய் உலகில் அருள் புரிந்தானே மேல் #2856 ஓதும் மயிர்க்கால்-தொறும் அமுது ஊறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை வேதம் அது ஓதும் சொரூபி-தன் மேன்மையே மேல் #2857 உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே மேல் #2858 துன்னி நின்றான்-தன்னை உன்னி முன்னா இரு முன்னி அவர் தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே மேல் #2859 மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன்னுற்ற சோதி தலைவன் இணை_இலி பொன்னுற்ற மேனி புரிசடை நந்தியும் என்னுற்று அறிவான் என் விழித்தானே மேல் #2860 சத்திய ஞான தனிப்பொருள் ஆனந்தம் சித்தத்தின் இல்லா சிவானந்த பேரொளி சுத்த பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேரொளியே மேல் #2861 பரன் அல்ல நீடும் பராபரன் அல்ல உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும் அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தானே மேல் #2862 முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரம்-தன்னுள் நின்று மா சத்தியுள் நின்றோர்க்கு தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே மேல் #2863 துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே மேல் #2864 ஓதிய முத்தி அடைவே உயிர் பரம் பேதம் இல் அ சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே ஏதம் இலா நிருவாணம் பிறந்ததே மேல் #2865 பற்று அற்றவர் பற்றி நின்ற பரம்பொருள் கற்று அற்றவர் கற்று கருதிய கண்_நுதல் சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே மேல் #2866 காயம் பலகை கவறு ஐந்து கண் மூன்றாய் ஆயம் பொருவது ஓர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான் இருந்து பொருகின்ற மாய கவற்றின் மறைப்பு அறியேனே மேல் #2867 தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி மாறி கிடக்கும் வகை அறிவார் இல்லை மாறி கிடக்கும் வகை அறிவாளர்க்கு ஊறி கிடந்தது என் உள்ளன்பு தானே மேல் #2868 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறு படுவன நான்கு பனை உள ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அ பனை ஏறலுற்றேன் கடல் ஏழும் கண்டேனே மேல் #2869 வழுதலை வித்திட பாகல் முளைத்தது புழுதியை தோண்டினேன் பூசணி பூத்தது தொழுது கொண்டு ஓடினார் தோட்ட குடிகள் முழுதும் பழுத்தது வாழை கனியே மேல் #2870 ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர் செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை மை அணி கண்டனன் மனம் பெறின் அ நிலம் பொய் ஒன்றும் இன்றி புக எளிது ஆமே மேல் #2871 பள்ள செய் ஒன்று உண்டு பாழ் செய் இரண்டு உள கள்ள செய் அங்கே கலந்து கிடந்தது உள்ள செய் அங்கே உழவு செய்வார்கட்கு வெள்ள செய் ஆகி விளைந்தது தானே மேல் #2872 மூவணை ஏரும் உழுவது முக்காணி தாம் அணி கோலி தறியுற பாய்ந்திடும் நாவணை கோலி நடுவில் செறு உழார் கால் அணை கோலி களர் உழுவாரே மேல் #2873 ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர் பாத்தியில் பாயாது பாழ் பாய்ந்து போயிடில் கூத்தி வளர்த்தது ஓர் கோழிப்புள் ஆமே மேல் #2874 பட்டி பசுக்கள் இருபத்துநால் உள குட்டி பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள குட்டி பசுக்கள் குட பால் சொரியினும் பட்டி பசுவே பனவற்கு வாய்த்ததே மேல் #2875 ஈற்று பசுக்கள் இருபத்துநால் உள ஊற்று பசுக்கள் ஒரு குடம் பால் போதும் காற்று பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து மாற்று பசுக்கள் வரவு அறியோமே மேல் #2876 தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல் மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டு தட்டான் அதனை தகைந்துகொண்டானே மேல் #2877 அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி திரிக்கின்ற ஒட்டம் சிக்கென கட்டி வரிக்கின்ற நல்லான் கறவையை பூட்டில் விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே மேல் #2878 இடா கொண்டு தூவி எரு இட்டு வித்தி கிடா கொண்டு பூட்டி கிளறி முளையை மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே மேல் #2879 விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது விளைந்து கிடந்தது மேலைக்கு காதம் விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு விளைந்து கிடந்தது மேவு முக்காதமே மேல் #2880 களர் உழுவார்கள் கருத்தை அறியோம் களர் உழுவார்கள் கருதலும் இல்லை களர் உழுவார்கள் களரின் முளைத்த வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே மேல் #2881 கூப்பிடு கொள்ளா குறுநரி கொட்டகத்து ஆப்பு இடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டு நாள் பட நின்று நலம் புகுந்து ஆயிழை ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே மேல் #2882 மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ள குலை மேல் இருந்த கொழும் கனி வீழ உலை மேல் இருந்த உறுப்பு என கொல்லன் முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே மேல் #2883 பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்து திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான் பசு ஐந்தும் பாலா சொரியுமே மேல் #2884 ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும் தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும் தாமா குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன மூவா கடா விடின் மூட்டுகின்றாரே மேல் #2885 எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவை பிறவாத வண்டு மணம் உண்டவாறே மேல் #2886 போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும் கூகின்ற நாவலின் கூழை தரும் கனி ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும் வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே மேல் #2887 மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்பு உண்டு பாம்பை துரத்தின் பார் இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்றவாறே மேல் #2888 பத்து பரும் புலி யானை பதினைந்து வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர் அத்தகு மூவர் அறுவர் மருத்துவர் அ தலை ஐவர் அமர்ந்து நின்றாரே மேல் #2889 இரண்டு கடா உண்டு இ ஊரின் உள்ளே இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன் இரண்டு கடாவும் இருத்தி பிடிக்கில் இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே மேல் #2890 ஒத்த மன கொல்லை உள்ளே சமன் கட்டி பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்த கயிறாக மூவர்கள் ஊரினுள் நித்தம் பொருது நிரம்ப நின்றாரே மேல் #2891 கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும் நாகையும் பூழும் நடுவில் உறைவன நாகையை கூகை நணுகல் உறுதலும் கூகையை கண்டு எலி கூப்பிடும் ஆறே மேல் #2892 குலைக்கின்ற நல் நகையாம் கொங்கு உழக்கின் நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான் உலைக்கு புறம் எனில் ஓடும் இருக்கும் புலைக்கு பிறந்தவை போகின்றவாறே மேல் #2893 காடு புக்கு ஆர் இனி காணார் கடு வெளி கூடு புக்கு ஆனது ஐந்து குதிரையும் மூடு புக்கு ஆனது ஆறு உள ஒட்டகம் மூடு புகா விடின் மூவணை ஆமே மேல் #2894 கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும் காறையும் நாணும் வளையலும் கண்டவர் பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல் ஆறை குழியில் அழுந்துகின்றாரே மேல் #2895 துருத்தியுள் அக்கரை தோன்று மலை மேல் விருத்தி கண்காணிக்க போவார் முப்போதும் வருத்தி உள்நின்ற மலையை தவிர்ப்பான் ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே மேல் #2896 பருந்தும் கிளியும் படு பறை கொட்ட திருந்திய மாதர் திருமணப்பட்டார் பெருந்தவ பூதம் பெறலுருவாகும் இருந்திய பேற்றினில் இன்புறுவாரே மேல் #2897 கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் சூடு எறி நெய் உண்டு மை கான்றிடுகின்ற பாடு அறிவார்க்கு பயன் எளிது ஆமே மேல் #2898 இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின் குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும் தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே மேல் #2899 அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வார் மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய் தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே மேல் #2900 கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இரு காதம் காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர் காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே மேல் #2901 கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும் கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார் எட்டி பழத்துக்கு இளைக்கின்றவாறே மேல் #2902 பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ண குடை கொண்ட பாசத்து கோலம் உண்டானும் கடை வண்டு தான் உண்ணும் கண்கலந்திட்ட பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே மேல் #2903 கொல்லையில் மேயும் பசுக்களை செய்வது என் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே மேல் #2904 தட்டத்து நீரிலே தாமரை பூத்தது குட்டத்து நீரில் குவளை எழுந்தது விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார்கட்கு குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே மேல் #2905 ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன நூறு பறவை நுனி கொம்பின் மேலன ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின் மாறுதல் இன்றி மனை புகல் ஆமே மேல் #2906 கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவலுள் வட்டன பூமி மருவி வந்து ஊறிடும் கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள் ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே மேல் #2907 ஏழு வளைகடல் எட்டு குலவரை ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி தாழும் இருநிலம் தன்மை அது கண்டு வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே மேல் #2908 ஆலிங்கனம் செய்து அகம் சுட சூலத்து சால் இங்கு அமைத்து தலைமை தவிர்த்தனர் கோல் இங்கு அமைத்த பின் கூப பறவைகள் மால் இங்கன் வைத்தது முன்பின் வழியே மேல் #2909 கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும் கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர் கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும் இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே மேல் #2910 கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர் முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர் பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன் மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே மேல் #2911 கோரை எழுந்து கிடந்த குளத்தினில் ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது நாரை படுகின்றால் போல் அல்ல நாதனார் பாரை கிடக்க படிகின்றவாறே மேல் #2912 கொல்லை முக்காதமும் காடு அரை காதமும் எல்லை மயங்கி கிடந்த இரு நெறி எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே மேல் #2913 உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து எழு மழை பெய்யாது இருநில செவ்வி தழுவி வினை சென்று தான் பயவாது வழுவாது போவன் வளர்சடையோனே மேல் #2914 பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம் ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ மதுங்கிய வார் களி ஆரமுது ஊற பொதுங்கிய ஐவரை போய் வளைத்தானே மேல் #2915 தோணி ஒன்று ஏறி தொடர்ந்து கடல் புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து ஆலி பழம் போல் அளிக்கின்ற அப்பே மேல் #2916 முக்காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள் செக்கு பழுத்த திரிமலம் காய்த்தன பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர் நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே மேல் #2917 அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி முடியும் நுனியின்-கண் முத்தலை மூங்கில் கொடியும் படையும் கோட்சரன் ஐயைந்து மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே மேல் #2918 பன்றியும் பாம்பும் பசு முசு வானரம் தென்றி கிடந்த சிறுநரி கூட்டத்து குன்றாமை கூடி தராசின் நிறுத்த பின் குன்றி நிறையை குறைகின்றவாறே மேல் #2919 மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினை கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம் பற்று விட்டு அம்மனை பாழ்பட நோக்கினால் கட்டுவிட்டார்க்கு அன்றி காண ஒண்ணாதே மேல் #2920 நீர் இன்றி பாயும் நிலத்தினில் பச்சை ஆம் யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை கூரு மழை பொழியாது பொழி புனல் தேரின் இ நீர்மை திடரில் நில்லாதே மேல் #2921 கூகை குருந்தம் அது ஏறி குணம் பயில் மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும் பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே மேல் #2922 வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன வாழைக்கு சூரை வலிது வலிது என்பர் வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு வாழை இடம் கொண்டு வாழ்கின்றவாறே மேல் #2923 நிலத்தை பிளந்து நெடும் கடல் ஓட்டி புனத்து குறவன் புணர்ந்த கொழு மீன் விலக்கு-மின் யாவர்க்கும் வேண்டில் குறையாது அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே மேல் #2924 தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில் விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடி களிக்கும் குசவர்க்கும் காவிதியார்க்கும் அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே மேல் #2925 குடைவிட்டு போந்தது கோயில் எருமை படை கண்டு மீண்டது பாதி வழியில் உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார் அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே மேல் #2926 போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும் ஆகி படைத்தன ஒன்பது வாய்தலும் நாகமும் எட்டொடு நாலு புரவியும் பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே மேல் #2927 பாசி படர்ந்து கிடந்த குளத்திடை கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் தூசி மறவன் துணை வழி எய்திட பாசம் கிடந்து பதைக்கின்றவாறே மேல் #2928 கும்ப மலை மேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அ பூவுக்குள் வண்டாய் கிடந்து மணம் கொள்வன் ஈசனே மேல் #2929 வீணையும் தண்டும் விரவி இசை முரல் தாணுவும் மேவி தகுதலை பெய்தது வாணிபம் சிக்கென்று அது அடையா முன்னம் காணியும் அங்கே கலக்கின்றவாறே மேல் #2930 கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர் தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே மேல் #2931 போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது மாதர் இருந்தோர் மண்டலம் தானே மேல் #2932 கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே காமுற்று அகத்து இடுவர் கடை-தொறும் ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி யாமுற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே மேல் #2933 தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழுந்த-கால் நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும் மூட்டி கொடுத்த முதல்வனை முன்னிட்டு காட்டிக்கொடுத்தவர் கைவிட்டவாறே மேல் #2934 புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்ப புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லி புலம்பின் அவளொடும் போகம் நுகரும் புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே மேல் #2935 தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும் வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை ஆணி கலங்கில் அது இது ஆமே மேல் #2936 நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை சென்றார்-தம் சித்தம் மோன சமாதியாம் மன்று ஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்று உண்டு சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்றவாறே மேல் #2937 காட்டும் குறியும் கடந்தவர் காரணம் ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன் கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே மேல் #2938 உணர்வு உடையார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வு உடையார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வு உடையார்கள் உணர்ந்த அ காலம் உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே மேல் #2939 மறப்பதுவாய் நின்ற மாய நல் நாடன் பிறப்பினை நீங்கிய பேரருளாளன் சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும் உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே மேல் #2940 துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி அரிய துரியம் அதில் மீது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே உரை இல் அநுபூதிகத்து உள்ளானே மேல் #2941 உருவு_இலி ஊன்_இலி ஊனம் ஒன்று இல்லி திரு_இலி தீது_இலி தேவர்க்கு தேவன் பொரு_இலி பூத படை உடையாளி மரு_இலி வந்து என் மனம் புகுந்தானே மேல் #2942 கண்டு அறிவார் இல்லை காயத்தின் நந்தியை எண்திசையோரும் இறைவன் என்று ஏத்துவர் அண்டம் கடந்த அளவு இலா ஆனந்த தொண்டர் முகந்த துறை அறியோமே மேல் #2943 தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல நிட்களம் அல்ல சகள நிலை அல்ல அற்புதம் ஆகி அநுபோக காமம் போல் கற்பனை இன்றி கலந்து நின்றானே மேல் #2944 முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்கு தாய் தன் மணாளனோடு ஆடிய சுகத்தை சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே மேல் #2945 அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டு செப்பு பராபரம் சேர் பரமும் விட்டு கப்புறு சொற்பதம் ஆள கலந்தமை எப்படி அப்படி என்னும் அவ்வாறே மேல் #2946 கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம் தின்றார்க்கு அறியலாம் அ பழத்தின் சுவை பெண் தான் நிரம்பி மடவியள் ஆனால் கொண்டான் அறிவன் குணம் பல தானே மேல் #2947 நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியை புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே மேல் #2948 விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து பதறு படாதே பழமறை பார்த்து கதறிய பாழை கடந்து அந்த கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே மேல் #2949 வாடா மலர் புனை சேவடி வானவர் கூடார் அறநெறி நாள்-தொறும் இன்புற சேடார் கமல செழும் சுடருள் சென்று நாடார் அமுதுற நாடார் அமுதமே மேல் #2950 அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும் பொதுக்கென காமம் புலப்படுமா போல் சதுக்கென்று வேறே சமைந்தாரை காண மது கொன்றை தாரான் வளம் தரும் அன்றே மேல் #2951 தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன் வானும் அழிந்து மனமும் அழிந்து பின் நானும் அழிந்தமை நான் அறியேனே மேல் #2952 இருளும் வெளியும் இரண்டையும் மாற்றி பொருளில் பொருளாய் பொருந்த உள் ஆகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கல் மனம் உற்று நின்றேனே மேல் #2953 ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம் ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே மேல் #2954 தான் வரைவு அற்ற பின் ஆரை வரைவது தான் அவன் ஆன பின் ஆரை நினைவது காமனை வென்ற கண்ணாரை உகப்பது தூ மொழி வாசகம் சொல்லு-மின் நீரே மேல் #2955 உரை அற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரை அற்றது ஒன்றை கரை காணல் ஆகுமோ திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்கு புரை அற்று இருந்தான் புரிசடையோனே மேல் #2956 மன மாயை மாயை இ மாயை மயக்க மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனை ஆய்ந்து இருப்பது தத்துவம் தானே மேல் #2957 மலம் இல்லை மாசு இல்லை மானாபிமானம் குலம் இல்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலம் இல்லை நந்தி ஞானத்தினாலே பல மன்னி அன்பில் பதித்து வைப்போர்க்கே மேல் #2958 ஒழிந்தேன் பிறவி உறவு என்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும் ஒன்று ஆனேன் அழிந்து ஆங்கு இனி வரு மார்க்கமும் வேண்டேன் செழும் சார்பு உடைய சிவனை கண்டேனே மேல் #2959 ஆலை கரும்பும் அமுதும் அக்காரமும் சோலை தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை பீலி கண்ணன் அன்ன வடிவு செய்வாள் ஒரு கோல பெண்ணாட்கு குறை ஒன்றும் இல்லையே மேல் #2960 ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது இனி சீரார் பிரான் வந்து என் சிந்தை புகுந்தனன் சீராடி அங்கே திரிவது அல்லால் இனி யார் பாடும் சாரா அறிவு அறிந்தேனே மேல் #2961 பிரிந்தேன் பிரமன் பிணித்தது ஓர் பாசம் தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை அரிந்தேன் வினையை அயில் மன வாளால் முரிந்தேன் புரத்தினை முந்துகின்றேனே மேல் #2962 ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வமும் ஒன்று கண்டீர் உலகுக்கு உயிர் ஆவது நன்று கண்டீர் நல் நமச்சிவாய பழம் தின்று கண்டேற்கு இது தித்தித்தவாறே மேல் #2963 சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள் சிந்தையின் மேவி தியக்கு அறுத்தானே மேல் #2964 பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனை கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே மேல் #2965 அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது அன்னையும் அத்தனும் ஆர் அறிவார் என்னை அன்னையும் அத்தனும் யானும் உடன் இருந்து அன்னையும் அத்தனை யான் புரந்தேனே மேல் #2966 கொண்ட சுழியும் குலவரை உச்சியும் அண்டரும் அண்ட தலைவரும் ஆதியும் எண்திசையோரும் வந்து என் கைத்தலத்துளே உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே மேல் #2967 தானே திசையொடு தேவருமாய் நிற்கும் தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும் தானே கடல் மலை ஆதியுமாய் நிற்கும் தானே உலகில் தலைவனும் ஆமே மேல் #2968 நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம் வரும் சிந்தைக்கு தான் எதிர் யாரே மேல் #2969 சித்தம் சிவமாய் மலம் மூன்றும் செற்றவர் சுத்த சிவம் ஆவர் தோயார் மலபந்தம் கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார் சத்தம் பரவிந்து தான் ஆம் என்று எண்ணியே மேல் #2970 நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினை பற்று அறுக்கும் விமலன் இருக்கும் வினை பற்று அறுக்கும் விமலனை தேடி நினைக்கப்பெறில் அவன் நீளியன் ஆமே மேல் #2971 சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த தவ பெருமான் என்று தான் வந்து நின்றான் அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன் பவ பெருமானை பணிந்து நின்றேனே மேல் #2972 பணிந்து நின்றேன் பரமாதி பதியை துணிந்து நின்றேன் இனி மற்று ஒன்றும் வேண்டேன் அணிந்து நின்றேன் உடல் ஆதி பிரானை தணிந்து நின்றேன் சிவன் தன்மை கண்டேனே மேல் #2973 என் நெஞ்சம் ஈசன் இணை அடி தாம் சேர்ந்து முன்னம் செய்து ஏத்த முழுதும் பிறப்பு அறும் தன் நெஞ்சம் இல்லா தலைவன் தலைவிதி பின்னம் செய்து என்னை பிணக்கு அறுத்தானே மேல் #2974 பிணக்கு அறுத்தான் பிணி மூப்பு அறுத்து எண்ணும் கணக்கு அறுத்து ஆண்டனன் காண் நந்தி என்னை பிணக்கு அறுத்து என்னுடன் முன் வந்த துன்பம் வணக்கல் உற்றேன் சிவம் வந்தது தானே மேல் #2975 சிவன் வந்து தேவர் குழாமுடன் கூட பவம் வந்திட நின்ற பாசம் அறுத்திட்டு அவன் எந்தை ஆண்டு அருள் ஆதி பெருமான் அவன் வந்து என் உள்ளே அகப்பட்டவாறே மேல் #2976 கரும்பும் தேனும் கலந்த ஓர் காயத்தில் அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம் விரும்பியே உள்ளம் வெளியுற கண்ட பின் கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே மேல் #2977 உள்ள சரி ஆதி ஒட்டியே மீட்டு என்பால் வள்ளல் அருத்தியே வைத்த வளம் பாடி செய்வன எல்லாம் சிவம் ஆக காண்டலால் கைவளம் இன்றி கரு கடந்தேனே மேல் #2978 மீண்டார் கமலத்துள் அங்கி மிக சென்று தூண்டா விளக்கின் தகளி நெய் சோர்தலும் பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி மாண்டான் ஒருவன் கைவந்தது தானே மேல் #2979 ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் வேறே இருக்கும் விழுப்பொருள் தானே மேல் #2980 அன்புள் உருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என் பொன் மணியை இறைவனை ஈசனை தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே மேல் #2981 மனம் விரிந்து குவிந்தது மா தவம் மனம் விரிந்து குவிந்தது வாயுவும் மனம் விரிந்து குவிந்தது மன் உயிர் மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே மேல் #2982 மாயனை நாடி மன நெடும் தேர் ஏறி போயின நாடு அறியாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனை காய மின் நாட்டிடை கண்டு கொண்டேனே மேல் #2983 மன்னும் மலை போல் மத வாரணத்தின் மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தை பன்னினர் என்றே பாடு அறிவீரே மேல் #2984 முத்தினின் முத்தை முகிழ் இளஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனை காணாது அரற்றுகின்றேன் ஏனையோர் பித்தன் இவன் என்று பேசுகின்றாரே மேல் #2985 புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்து நின்றான் எங்கள் போதறிவாளன் புகுந்து நின்றான் அடியார்-தங்கள் நெஞ்சம் புகுந்து நின்றானையே போற்றுகின்றேனே மேல் #2986 பூதக்கண்ணாடியில் புகுந்திலன் போதுளன் வேத கண்ணாடியில் வேறே வெளிப்படு நீதி கண்ணாடி நினைவார் மனத்து உளன் கீத கண்ணாடியில் கேட்டு நின்றேனே மேல் #2987 நாமம் ஓர் ஆயிரம் ஓது-மின் நாதனை ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள் ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர் காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே மேல் #2988 போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை போற்றுகின்றேன் எம் பிரான் என்று நானே மேல் #2989 நானாவிதம் செய்து நாடு-மின் நந்தியை ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம் வானோர் உலகம் வழிபட மீண்ட பின் தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே மேல் #2990 வந்து நின்றான் அடியார்கட்கு அரும்பொருள் இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும் சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது அந்தர வானத்தின் அப்புறம் ஆமே மேல் #2991 மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள் எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார் உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்து தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே மேல் #2992 மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும் சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே மேல் #2993 அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம் சமைந்து ஒழிந்தேன் தடுமாற்றம் ஒன்று இல்லை புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே மேல் #2994 வள்ளல் தலைவனை வான நல் நாடனை வெள்ள புனல் சடை வேத முதல்வனை கள்ள பெருமக்கள் காண்பர்-கொலோ என்று உள்ளத்தின் உள்ளே ஒளித்திருந்து ஆளுமே மேல் #2995 ஆளும் மலர் பதம் தந்த கடவுளை நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர் கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின் வாளும் மனத்தொடும் வைத்து ஒழிந்தேனே மேல் #2996 விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம் பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம் திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும் வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே மேல் #2997 வானகம் ஊடு அறுத்தான் இ உலகினில் தானகம் இல்லா தனி ஆகும் போதகன் கானக வாழை கனி நுகர்ந்து உள்ளுறும் பானக சோதியை பற்றி நின்றேனே மேல் #2998 விதி அது மேலை அமரர் உறையும் பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு துதி அது தொல்வினை பற்று அறுவிக்கும் பதி அது வவ்விட்டது அந்தமும் ஆமே மேல் #2999 மேலது வானவர் கீழது மாதவர் தான் இடர் மானுடர் கீழது மாதனம் கானது கூவிள மாலை கமழ் சடை ஆனது செய்யும் எம் ஆருயிர் தானே மேல் #3000 சூழும் கரும் கடல் நஞ்சு உண்ட கண்டனை ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு_இலி யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன் வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே மேல் #3001 உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை அலர் கதிர் அங்கி ஒத்து ஆதி பிரானும் நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்ட செலவு ஒத்து அமர் திகை தேவர் பிரானே மேல் #3002 பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன் பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன் பரிசு அறிந்து அங்கு உளன் மா மதி ஞான பரிசு அறிந்து அ நிலம் பாரிக்குமாறே மேல் #3003 அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும் பந்த உலகினில் கீழோர் பெரும்பொருள் தந்த உலகு எங்கும் தானே பராபரன் வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே மேல் #3004 முத்தண்ட ஈரண்டமே முடி ஆயினும் அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே மேல் #3005 ஆதி பிரான் நம் பிரான் அ அகல் இட சோதி பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும் ஆதி பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன் ஆதி பிரான் நடு ஆகி நின்றானே மேல் #3006 அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன் பிண்டம் கடந்த பிறவி சிறுமையன் தொண்டர் நடந்த கனை கழல் காண்-தொறும் தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே மேல் #3007 உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன் பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே மேல் #3008 பராபரன் ஆகி பல் ஊழிகள்-தோறும் பராபரனாய் இ அகல் இடம் தாங்கி தரா பரனாய் நின்ற தன்மை உணரார் நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே மேல் #3009 போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வமாம் காற்றது ஈசன் கலந்து நின்றானே மேல் #3010 திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின் மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு முகை அனைத்தும் எங்கள் ஆதி பிரானே மேல் #3011 அகன்றான் அகல் இடம் ஏழும் ஒன்றாகி இவன்தான் என நின்று எளியனும் அல்லன் சிவன்தான் பலபல சீவனுமாகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே மேல் #3012 கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற தலைவனை நாடு-மின் தத்துவ நாதன் விலை இல்லை விண்ணவரோடும் உரைப்பன் நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே மேல் #3013 படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து நெடியான் குறுமை செய் நேசம் அறுத்து செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்து அன்பு கொண்டானே மேல் #3014 ஈசன் என்று எட்டு திசையும் இயங்கின ஓசையின்-நின்று எழு சத்தம் உலப்பு இலி தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் வாச மலர் போல் மருவி நின்றானே மேல் #3015 இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே மேல் #3016 உள்ளத்து ஒடுங்கும் புறத்துளும் நான் எனும் கள்ள தலைவன் கமழ் சடை நந்தியும் வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள்-தம் அள்ளல் கடலை அறுத்து நின்றானே மேல் #3017 மாறு எதிர் வானவர் தானவர் நாள்-தொறும் கூறுதல் செய்து குரை கழல் நாடுவர் ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும் வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே மேல் #3018 விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன் கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன் எண்_இல் ஆனந்தமும் எங்கள் பிரானே மேல் #3019 உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல் நித்தில சோதியன் நீல கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனை சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே மேல் #3020 நிறம் பல எ வண்ணம் அ வண்ணம் ஈசன் அறம் பல எ வண்ணம் அ வண்ணம் இன்பம் மறம் பல எ வண்ணம் அ வண்ணம் பாவம் புறம் பல காணினும் போற்றகிலாரே மேல் #3021 இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன் பொங்கி நின்றான் புவனாபதி புண்ணியன் கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு எங்கும் நின்றான் மழை போல் இறை தானே மேல் #3022 உணர்வதுவாயுமே உத்தமமாயும் உணர்வது நுண்ணறிவு எம் பெருமானை புணர்வதுவாயும் புல்லியதாயும் உணர்வு உடல் அண்டமும் ஆகி நின்றானே மேல் #3023 தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன் தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன் தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான் தன் வலியாலே தடம் கடல் ஆமே மேல் #3024 ஏனோர் பெருமையனாகிலும் எம் இறை ஊனே சிறுமையுள் உட்கலந்து அங்கு உளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தினின் உள்ளே மேல் #3025 பிண்டாலம் வித்தில் எழுந்த பெரு முளை குண்டாலம் காயத்து குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள் பிண்டத்து உட்பட்டு பிணங்குகின்றார்களே மேல் #3026 ஏயும் சிவபோகம் ஈது அன்றி ஓர் ஒளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனது எய்தும் சாயும் தனது வியாபகம் தானே மேல் #3027 நான் அறிந்த அ பொருள் நாட இடம் இல்லை வான் அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறிந்து எங்கும் தலைப்படல் ஆமே மேல் #3028 கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வு கொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனை கடலின் மலி திரை காணலும் ஆமே மேல் #3029 பெரும் சுடர் மூன்றினும் உள்ளொளி ஆகி தெரிந்து உடலாய் நிற்கும் தேவர் பிரானும் இரும் சுடர் விட்டிட்டு இகல் இடம் எல்லாம் பரிந்து உடன் போகின்ற பல் கோரை ஆமே மேல் #3030 உறுதியின் உள் வந்த உள் வினை பட்டு இறுதியின் வீழ்ந்தார் இரணம் அது ஆகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெரும் சுடர் ஆமே மேல் #3031 பற்றின் உள்ளே பரம் ஆய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்று ஒளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரும் மற்றவனாய் நின்ற மாதவன் தானே மேல் #3032 தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும் ஏவனும் ஆம் விரி நீர் உலகு ஏழையும் ஆவனும் ஆம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்றுகின்றானே மேல் #3033 நோக்கும் கருடன் நொடி ஏழ் உலகையும் காக்கும் அவனி தலைவனும் அங்கு உளன் நீக்கும் வினை என் நிமலன் பிறப்பு_இலி போக்கும் வரவும் புணர வல்லானே மேல் #3034 செழும் சடையன் செம்பொனே ஒக்கும் மேனி ஒழிந்தனவாயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பு இலன் ஈசன் ஒழிந்திலன் ஏழு உலகு ஒத்து நின்றானே மேல் #3035 உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன்-தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர் கந்தம் துன்னி நின்றானே மேல் #3036 புலமையின் நாற்றம் இல் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்து நின்றானே மேல் #3037 விண்ணவனாய் உலகு ஏழுக்கும் மேல் உளன் மண்ணவனாய் வலம் சூழ் கடல் ஏழுக்கும் தண்ணவனாய் அது தன்மையின் நிற்பது ஓர் கண்ணவன் ஆகி கலந்து நின்றானே மேல் #3038 நின்றனன் மாலொடு நான்முகன் தான் ஆகி நின்றனன் தான் நிலம் கீழொடு மேல் என நின்றனன் தானொடு மால் வரை ஏழ் கடல் நின்றனன் தானே வளம் கனி ஆயே மேல் #3039 புவனாபதி மிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர் பெரும் பாகன் அவனே அரும் பல சீவனும் ஆகும் அவனே இறை என மாலுற்றவாறே மேல் #3040 உள் நின்று ஒளிரும் உலவா பிராணனும் விண்-நின்று இயங்கும் விரி கதிர் செல்வனும் மண்-நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் கண்-நின்று இலங்கும் கருத்தவன் தானே மேல் #3041 எண்ணும் எழுத்தும் இனம் செயல் அ வழி பண்ணும் திறனும் படைத்த பரமனை கண்ணில் கவரும் கருத்தில் அது இது உள் நின்று உருக்கி ஓர் ஆயமும் ஆமே மேல் #3042 இருக்கின்ற எண் திசை அண்டம் பாதாளம் உருக்கொடு தன் நடு ஓங்க இ வண்ணம் கருக்கொடு எங்கும் கலந்து இருந்தானே திரு கொன்றை வைத்த செழும் சடையானே மேல் #3043 பலவுடன் சென்ற அ பார் முழுது ஈசன் செலவு அறிவார் இல்லை சேயன் அணியன் அலைவு இலன் சங்கரன் ஆதி எம் ஆதி பல இலதாய் நிற்கும் பான்மை வல்லானே மேல் #3044 அது அறிவு ஆனவன் ஆதி புராணன் எது அறியா வகை நின்றவன் ஈசன் பொது அது ஆன புவனங்கள் எட்டும் இது அறிவான் நந்தி எங்கள் பிரானே மேல் #3045 நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியுமாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம் இறை ஊரும் சகலன் உலப்பு_இலி தானே மேல் #3046 மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ் மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே மேல் #3047 வாழ்கவே வாழ்க என் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலம் அறுத்தான் பதம் வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் வாழ்கவே வாழ்க மலம் இலான் பாதமே மேல் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக