திருஞானசம்பந்தர்
இயற்றிய
தேவாரம் (திருமுறை 2) திரு சிவஞான சம்பந்தர் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌻🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🪷🪷🪷💐💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐💐💐🌹💐❤️🙏🪷🪷🪷🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺🌷🌷🌷🌻🌻🌻 |
---|
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 2. இரண்டாம் திருமுறை 1. திருப்பூந்தராய் : பண் - இந்தளம் #1470 செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் புன்னை வெண் கிழியில் பவளம் புரை பூந்தராய் துன்னி நல் இமையோர் முடி தோய் கழலீர் சொலீர் பின்னு செம் சடையில் பிறை பாம்பு உடன் வைத்ததே மேல் #1471 எற்று திண் திரை ஏறிய சங்கினொடு இப்பிகள் பொன் திகழ் கமல பழனம் புகு பூந்தராய் சுற்றி நல் இமையோர் தொழு பொன் கழலீர் சொலீர் பெற்றம் ஏறுதல் பெற்றிமையோ பெருமானிரே மேல் #1472 சங்கு செம்பவள திரள் முத்து அவை தாம் கொடு பொங்கு தெண் திரை வந்து அலைக்கும் புனல் பூந்தராய் துங்க மால் களிற்றின் உரி போர்த்து உகந்தீர் சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொடு ஒன்றிய மாண்பு அதே மேல் #1473 சேம வல் மதில் பொன் அணி மாளிகை சேண் உயர் பூ மணம் கமழும் பொழில் சூழ்தரு பூந்தராய் சோமனும் அரவும் தொடர் செம் சடையீர் சொலீர் காமன் வெண்பொடி ஆக கடைக்கண் சிவந்ததே மேல் #1474 பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன புள்ளும் நாள்-தொறும் சேர் பொழில் சூழ்தரு பூந்தராய் துள்ளும் மான் மறி ஏந்திய செம் கையினீர் சொலீர் வெள்ள நீர் ஒரு செம் சடை வைத்த வியப்பு அதே மேல் #1475 மாது இலங்கிய மங்கையர் ஆட மருங்கு எலாம் போதில் அம் கமலம் மது வார் புனல் பூந்தராய் சோதி அம் சுடர் மேனி வெண் நீறு அணிவீர் சொலீர் காதில் அம் குழை சங்க வெண் தோடு உடன் வைத்ததே மேல் #1476 வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள் தரு கொள் சோலை தரும் கனி மாந்திய பூந்தராய் துரக்கும் மால் விடை மேல் வருவீர் அடிகேள் சொலீர் அரக்கன் ஆற்றல் அழித்து அருள் ஆக்கிய ஆக்கமே மேல் #1477 வரி கொள் செங்கயல் பாய் புனல் சூழ்ந்த மருங்கு எலாம் புரிசை நீடு உயர் மாடம் நிலாவிய பூந்தராய் சுருதி பாடிய பாண் இயல் தூ மொழியீர் சொலீர் கரிய மால் அயன் நேடி உமை கண்டிலாமையை மேல் #1478 வண்டல் அம் கழனி மடை வாளைகள் பாய் புனல் புண்டரீகம் மலர்ந்து மது தரு பூந்தராய் தொண்டர் வந்து அடி போற்றிசெய் தொல் கழலீர் சொலீர் குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே மேல் #1479 மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல்-வாய் புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய் பகவனாரை பரவு சொல் மாலை பத்தும் வல்லார் அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவரே மேல் 2. திருவலஞ்சுழி : பண் - இந்தளம் #1480 விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி தொண்டு எலாம் பரவும் சுடர் போல் ஒளியீர் சொலீர் பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே மேல் #1481 பாரல் வெண் குருகும் பகு வாயன நாரையும் வாரல் வெண் திரை-வாய் இரை தேரும் வலஞ்சுழி மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் ஊரல் வெண் தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே மேல் #1482 கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரை தாது அளாய் வண்ண நுண் மணல் மேல் அனம் வைகும் வலஞ்சுழி சுண்ண வெண்பொடி கொண்டு மெய் பூச வலீர் சொலீர் விண்ணவர் தொழ வெண் தலையில் பலி கொண்டதே மேல் #1483 கோடு எலாம் நிறைய குவளை மலரும் குழி மாடு எலாம் மலி நீர் மணம் நாறும் வலஞ்சுழி சேடு எலாம் உடையீர் சிறு மான் மறியீர் சொலீர் நாடு எலாம் அறிய தலையில் நறவு ஏற்றதே மேல் #1484 கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு போய் வல்லை நுண் மணல் மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் சில்லை வெண் தலையில் பலி கொண்டு உழல் செல்வமே மேல் #1485 பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பன் மலர் வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி தேசம் நீர் திரு நீர் சிறு மான் மறியீர் சொலீர் ஏச வெண் தலையில் பலி கொள்வது இலாமையே மேல் #1486 கந்த மா மலர் சந்தொடு கார் அகிலும் தழீஇ வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் பந்தம் நீர் கருதாது உலகில் பலி கொள்வதே மேல் #1487 தேன் உற்ற நறு மா மலர் சோலையில் வண்டு இனம் வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர் சொலீர் ஊன் உற்ற தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே மேல் #1488 தீர்த்த நீர் வந்து இழி புனல் பொன்னியில் பன் மலர் வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர் சொலீர் சீர்த்த வெண் தலையில் பலி கொள்வதும் சீர்மையே மேல் #1489 உரம் மனும் சடையீர் விடையீர் உமது இன்னருள் வரம் மனும் பெறலாவதும் எந்தை வலஞ்சுழி பிரமனும் திருமாலும் அளப்ப அரியீர் சொலீர் சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே மேல் #1490 வீடும் ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடின் ஞானம் என் ஆவதும் எந்தை வலஞ்சுழி நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடு ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே மேல் 3. திருத்தெளிச்சேரி : பண் - இந்தளம் #1491 பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன் கழல் தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர் மே வரும் தொழிலாளொடு கேழல் பின் வேடனாம் பாவகம் கொடு நின்றது போலும் நும் பான்மையே மேல் #1492 விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர் வளைக்கும் திண் சிலை மேல் ஐந்து பாணமும் தான் எய்து களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே மேல் #1493 வம்பு அடுத்த மலர் பொழில் சூழ மதி தவழ் செம்பு அடுத்த செழும் புரிசை தெளிச்சேரியீர் கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே மேல் #1494 கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரை பெயும் தேர் உலாம் நெடு வீதி அது ஆர் தெளிச்சேரியீர் கொம்பு அடுத்தது ஒர் கோல விடை மிசை கூர்மையோடு அம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே மேல் #1495 பக்கம் நும்-தமை பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும் செக்கர் மா மதி மாடம் திகழ் தெளிச்சேரியீர் மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே மேல் #1496 தவள வெண் பிறை தோய்தரு தாம் பொழில் சூழ நல் திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர் குவளை போல் கண்ணி துண்ணென வந்து குறுகிய கவள மால் கரி எங்ஙனம் நீர் கையின் காய்ந்ததே மேல் #1497 கோடு அடுத்த பொழிலின் மிசை குயில் கூவிடும் சேடு அடுத்த தொழிலின் மிகு தெளிச்சேரியீர் மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே மேல் #1498 கொத்து இரைத்த மலர் குழலாள் குயில் கோலம் சேர் சித்திர கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர் வித்தக படை வல்ல அரக்கன் விறல் தலை பத்து இரட்டி கரம் நெரித்திட்டது உம் பாதமே மேல் #1499 கால் எடுத்த திரை கை கரைக்கு எறி கானல் சூழ் சேல் அடுத்த வயல் பழன தெளிச்சேரியீர் மால் அடித்தலம் மா மலரான் முடி தேடியே ஓலமிட்டிட எங்ஙனம் ஓர் உரு கொண்டதே மேல் #1500 மந்திரம் தரு மா மறையோர்கள் தவத்தவர் செந்து இலங்கு மொழியவர் சேர் தெளிச்சேரியீர் வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் தம் திறத்தன நீக்குவித்தீர் ஓர் சதிரரே மேல் #1501 திக்கு உலாம் பொழில் சூழ் தெளிச்சேரி எம் செல்வனை மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தட முடி தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே மேல் 4. திருவான்மியூர் : பண் - இந்தளம் #1502 கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன் திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் உரை உலாம் பொருளாய் உலகு ஆளுடையீர் சொலீர் வரை உலாம் மட மாது உடன் ஆகிய மாண்பு அதே மேல் #1503 சந்து உயர்ந்து எழு கார் அகில் தண் புனல் கொண்டு தம் சிந்தைசெய்து அடியார் பரவும் திரு வான்மியூர் சுந்தர கழல் மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர் சொலீர் அந்தியின் ஒளியின் நிறம் ஆகிய வண்ணமே மேல் #1504 கான் அயங்கிய தண் கழி சூழ் கடலின் புறம் தேன் அயங்கிய பைம் பொழில் சூழ் திரு வான்மியூர் தோல் நயங்கு அமர் ஆடையினீர் அடிகேள் சொலீர் ஆனை அங்க உரி போர்த்து அனல் ஆட உகந்ததே மேல் #1505 மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகை செம் சொலாளர்கள்தாம் பயிலும் திரு வான்மியூர் துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர் சொலீர் வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே மேல் #1506 மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில் திண்ணென புரிசை தொழில் ஆர் திரு வான்மியூர் துண்ணென திரியும் சரிதை தொழிலீர் சொலீர் விண்ணினில் பிறை செம் சடை வைத்த வியப்பு அதே மேல் #1507 போது உலாவிய தண் பொழில் சூழ் புரிசை புறம் தீது இல் அந்தணர் ஓத்து ஒழியா திரு வான்மியூர் சூது உலாவிய கொங்கை ஒர்பங்கு உடையீர் சொலீர் மூது எயில் ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே மேல் #1508 வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்-வாய் தெண் திரை கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர் தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல் கழலீர் சொலீர் பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே மேல் #1509 தக்கில் வந்த தசக்கிரிவன் தலை பத்து இற திக்கில் வந்து அலற அடர்த்தீர் திரு வான்மியூர் தொக்க மாதொடும் வீற்றிருந்தீர் அருள் என் சொலீர் பக்கமே பல பாரிடம் பேய்கள் பயின்றதே மேல் #1510 பொருது வார் கடல் எண் திசையும் தரு வாரியால் திருதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர் சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியூர் சொலீர் எருது மேற்கொடு உழன்று உகந்து இல் பலி ஏற்றதே மேல் #1511 மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் செய் தவ தொழிலார் இசை சேர் திரு வான்மியூர் மெய் தவ பொடி பூசிய மேனியினீர் சொலீர் கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே மேல் #1512 மாது ஓர் கூறு உடை நல் தவனை திரு வான்மியூர் ஆதி எம்பெருமான் அருள்செய்ய வினா உரை ஓதி அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல் நீதியால் நினைவார் நெடு வான்_உலகு ஆள்வரே மேல் 5. திருஅனேகதங்காவதம் : பண் - இந்தளம் #1513 நீடல் மேவு நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா முளை சூடல் மேவு மறையின் முறையால் ஒர் சுலாவு அழல் ஆடல் மேவுமவர் மேய அனேகதங்காவதம் பாடல் மேவும் மனத்தார் வினை பற்று அறுப்பார்களே மேல் #1514 சூலம் உண்டு மழு உண்டு அவர் தொல் படை சூழ் கடல் ஆலம் உண்ட பெருமான்-தன் அனேகதங்காவதம் நீலம் உண்ட தடம் கண் உமை பாகம் நிலாயது ஓர் கோலம் உண்டு அளவு இல்லை குலாவிய கொள்கையே மேல் #1515 செம்பின் ஆரும் மதில் மூன்று எரிய சின வாயது ஓர் அம்பினால் எய்து அருள் வில்லி அனேகதங்காவதம் கொம்பின் நேர் இடையாளொடும் கூடி கொல் ஏறு உடை நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே மேல் #1516 தந்தத்திந்தத்தடம் என்ற அருவி திரள் பாய்ந்து போய் சிந்த வெந்த கதிரோனோடு மாசு அறு திங்கள் ஆர் அந்தம் இல்ல அளவு இல்ல அனேகதங்காவதம் எந்தை வெந்த பொடி நீறு அணிவார்க்கு இடம் ஆவதே மேல் #1517 பிறையும் மாசு இல் கதிரோன் அறியாமை பெயர்ந்து போய் உறையும் கோயில் பசும்பொன் அணியார் அசும்பு ஆர் புனல் அறையும் ஓசை பறை போலும் அனேகதங்காவதம் இறை எம் ஈசன் எம்மான் இடம் ஆக உகந்ததே மேல் #1518 தேனை ஏறு நறு மா மலர் கொண்டு அடி சேர்த்துவீர் ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் வானை ஏறும் நெறி சென்று உணருந்தனை வல்லிரேல் ஆன் நெய் ஏறு முடியான் அருள்செய்வதும் வானையே மேல் #1519 வெருவி வேழம் இரிய கதிர் முத்தொடு வெண் பளிங்கு உருவி வீழ வயிரம் கொழியா அகில் உந்தி வெள் அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் மருவி வாழும் பெருமான் கழல் சேர்வது வாய்மையே மேல் #1520 ஈரம் ஏதும் இலன் ஆகி எழுந்த இராவணன் வீரம் ஏதும் இலன் ஆக விளைத்த விலங்கலான் ஆரம் பாம்பு அது அணிவான்-தன் அனேகதங்காவதம் வாரம் ஆகி நினைவார் வினை ஆயின மாயுமே மேல் #1521 கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயமாய் எண்ணும் வண்ணம் அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல் அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே மேல் #1522 மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் ஆ பதம் அறிவீர் உளிராகில் அனேகதங் காபதம் அமர்ந்தான் கழல் சேர்தல் கருமமே மேல் #1523 தொல்லை ஊழி பெயர் தோன்றிய தோணிபுரத்து இறை நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் அல்லல் தீர உரைசெய்த அனேகதங்காவதம் சொல்ல நல்ல அடையும் அடையா சுடு துன்பமே மேல் 6. திருவையாறு : பண் - இந்தளம் #1524 கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் ஓடு கங்கை ஒளி வெண் பிறை சூடும் ஒருவனார் பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண் ஆகவே ஆடும் ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1525 தன்மை யாரும் அறிவார் இலை தாம் பிறர் எள்கவே பின்னும் முன்னும் சில பேய் கணம் சூழ திரிதர்வர் துன்ன ஆடை உடுப்பர் சுடலை பொடி பூசுவர் அன்னம் ஆலும் துறையானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1526 கூறு பெண் உடை கோவணம் உண்பது வெண் தலை மாறில் ஆரும் கொள்வார் இலை மார்பில் அணிகலன் ஏறும் ஏறி திரிவர் இமையோர் தொழுது ஏத்தவே ஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1527 பண்ணின் நல்ல மொழியார் பவள துவர் வாயினார் எண் இல் நல்ல குணத்தார் இணை வேல் வென்ற கண்ணினார் வண்ணம் பாடி வலி பாடி தம் வாய்மொழி பாடவே அண்ணல் கேட்டு உகந்தானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1528 வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார் தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி ஆன் அஞ்சு ஆடு முடியானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1529 எங்கும் ஆகி நின்றானும் இயல்பு அறியப்படா மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும் பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் அங்கம் ஆறும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1530 ஓதி யாரும் அறிவார் இலை ஓதி உலகு எலாம் சோதியாய் நிறைந்தான் சுடர் சோதியுள் சோதியான் வேதி ஆகி விண் ஆகி மண்ணோடு எரி காற்றுமாய் ஆதி ஆகி நின்றானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1531 குரவ நாள் மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய் விரவு நீறு அணிவார் சில தொண்டர் வியப்பவே பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் அரவம் ஆர்த்து உகந்தானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1532 உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன் வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார் கரை செய் காவிரியின் வடபாலது காதலான் அரை செய் மேகலையானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1533 மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான் காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன் கழல் கோலமாய் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர் ஆல நீழல் உளானும் ஐயாறு உடை ஐயானே மேல் #1534 கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையால் மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் அல மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே மேல் #1535 பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை கலி கடிந்த கையான் கடல் காழியர் காவலன் ஒலி கொள் சம்பந்தன் ஒண் தமிழ் பத்தும் வல்லார்கள் போய் மலி கொள் விண்ணிடை மன்னிய சீர் பெறுவார்களே மேல் 7. திருவாஞ்சியம் : பண் - இந்தளம் #1536 வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம் பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் தென்ன என்று வரி வண்டு இசைசெய் திரு வாஞ்சியம் என்னை ஆளுடையான் இடம் ஆக உகந்ததே மேல் #1537 காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் மேலர் வேலை விடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர் மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம் ஞாலம் வந்து பணிய பொலி கோயில் நயந்ததே மேல் #1538 மேவில் ஒன்றர் விரிவுற்ற இரண்டினர் மூன்றுமாய் நாவில் நாலர் உடல் அஞ்சினர் ஆறர் ஏழோசையர் தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார் பாவம் தீர்ப்பர் பழி போக்குவர் தம் அடியார்கட்கே மேல் #1539 சூலம் ஏந்தி வளர் கையினர் மெய் சுவண்டு ஆகவே சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம் ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே மேல் #1540 கை இலங்கு மறி ஏந்துவர் காந்தள் அம் மெல் விரல் தையல் பாகம் உடையார் அடையார் புரம் செற்றவர் செய்ய மேனி கரியம் மிடற்றார் திரு வாஞ்சியத்து ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே மேல் #1541 அரவம் பூண்பர் அணியும் சிலம்பு ஆர்க்க அகம்-தொறும் இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர் நாமமே பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம் மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே மேல் #1542 விண்ணில் ஆன பிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார் பண்ணில் ஆன இசை பாடல் மல்கும் திரு வாஞ்சியத்து அண்ணலார்-தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை அல்லவே மேல் #1543 மாடம் நீடு கொடி மன்னிய தென்_இலங்கைக்கு மன் வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர் வேடவேடர் திரு வாஞ்சியம் மேவிய வேந்தரை பாட நீடு மனத்தார் வினை பற்று அறுப்பார்களே மேல் #1544 செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை கடிய கூற்றமும் கண்டு அகலும் புகல்தான் வரும் நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார் திரு வாஞ்சியத்து அடிகள் பாதம் அடைந்தார் அடியார் அடியார்கட்கே மேல் #1545 பிண்டம் உண்டு திரிவார் பிரியும் துவர் ஆடையார் மிண்டர் மிண்டும் மொழி மெய் அல பொய் இலை எம் இறை வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லவே மேல் #1546 தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு வாஞ்சியத்து என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால் நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ் ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார் உயர் வானமே மேல் 8. திருச்சிக்கல் : பண் - இந்தளம் #1547 வான் உலாவும் மதி வந்து உலவும் மதில் மாளிகை தேன் உலாவும் மலர் சோலை மல்கும் திகழ் சிக்கலுள் வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்_பெருமான் அடி ஞானம் ஆக நினைவார் வினை ஆயின நையுமே மேல் #1548 மடம் கொள் வாளை குதிகொள்ளும் மண மலர் பொய்கை சூழ் திடம் கொள் மா மறையோரவர் மல்கிய சிக்கலுள் விடம் கொள் கண்டத்து வெண்ணெய்_பெருமான் அடி மேவியே அடைந்து வாழும் அடியாரவர் அல்லல் அறுப்பரே மேல் #1549 நீலம் நெய்தல் நிலவி மலரும் சுனை நீடிய சேலும் ஆலும் கழனி வளம் மல்கிய சிக்கலுள் வேல் ஒண் கண்ணியினாளை ஒர்பாகன் வெண்ணெய்_பிரான் பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே மேல் #1550 கந்தம் உந்த கைதை பூத்து கமழ்ந்து சேரும் பொழில் செந்து வண்டு இன்னிசை பாடல் மல்கும் திகழ் சிக்கலுள் வெந்த வெண் நீற்று அண்ணல் வெண்ணெய்_பிரான் விரை ஆர் கழல் சிந்தைசெய்வார் வினை ஆயின தேய்வது திண்ணமே மேல் #1551 மங்குல் தங்கும் மறையோர்கள் மாடத்து அயலே மிகு தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் வெம் கண் வெள் ஏறு உடை வெண்ணெய்_பிரான் அடி மேவவே தங்கும் மேன்மை சரதம் திரு நாளும் தகையுமே மேல் #1552 வண்டு இரைத்தும் மது விம்மிய மா மலர் பொய்கை சூழ் தெண் திரை கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள் விண்டு இரைத்தம் மலரால் திகழ் வெண்ணெய்_பிரான் அடி கண்டு இரைத்தும் மனமே மதியாய் கதி ஆகவே மேல் #1553 முன்னு மாடம் மதில் மூன்று உடனே எரியாய் விழ துன்னு வார் வெம் கணை ஒன்று செலுத்திய சோதியான் செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி உன்னி நீடம் மனமே நினையாய் வினை ஓயவே மேல் #1554 தென்றல் ஆகிய தென்_இலங்கைக்கு இறைவன் மலை பற்றினான் முடி பத்தொடு தோள்கள் நெரியவே செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி உற்று நீ நினையாய் வினை ஆயின ஓயவே மேல் #1555 மாலினோடு அரு மா மறை வல்ல முனிவனும் கோலினார் குறுக சிவன் சேவடி கோலியும் சீலம் தாம் அறியார் திகழ் சிக்கல் வெண்ணெய்_பிரான் பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே மேல் #1556 பட்டை நல் துவர் ஆடையினாரொடும் பாங்கு இலா கட்டு அமண் கழுக்கள் சொல்லினை கருதாது நீர் சிட்டன் சிக்கல் வெண்ணெய்_பெருமான் செழு மா மறை பட்டன் சேவடியே பணி-மின் பிணி போகவே மேல் #1557 கந்தம் ஆர் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் செம் தண் பூம் பொழில் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி சந்தமா சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறு அணியும் பெருமான் அடி மேவரே மேல் 9. திருமழபாடி : பண் - இந்தளம் #1558 களையும் வல்வினை அஞ்சல் நெஞ்சே கருதார் புரம் உளையும் பூசல் செய்தான் உயர் மால் வரை நல் விலா வளைய வெம் சரம் வாங்கி எய்தான் மது தும்பி வண்டு அளையும் கொன்றை அம் தார் மழபாடியுள் அண்ணலே மேல் #1559 காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் ஆச்சிலாத பளிங்கினன் அஞ்சும் முன் ஆடினான் பேச்சினால் உமக்கு ஆவது என் பேதைகாள் பேணு-மின் வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே மேல் #1560 உரம் கெடுப்பவன் உம்பர்கள் ஆயவர்-தங்களை பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை முரண் கெடுப்பவன் முப்புரம் தீ எழ செற்று முன் வரம் கொடுப்பவன் மா மழபாடியுள் வள்ளலே மேல் #1561 பள்ளம் ஆர் சடையின் புடையே அடைய புனல் வெள்ளம் ஆதரித்தான் விடை ஏறிய வேதியன் வள்ளல் மா மழபாடியுள் மேய மருந்தினை உள்ளம் ஆதரி-மின் வினை ஆயின ஓயவே மேல் #1562 தேன் உலாம் மலர் கொண்டு மெய் தேவர்கள் சித்தர்கள் பால் நெய் அஞ்சு உடன் ஆட்ட முன் ஆடிய பால்_வணன் வான_நாடர்கள் கைதொழு மா மழபாடி எம் கோனை நாள்-தொறும் கும்பிடவே குறி கூடுமே மேல் #1563 தெரிந்தவன் புரம் மூன்று உடன் மாட்டிய சேவகன் பரிந்து கைதொழுவாரவர்-தம் மனம் பாவினான் வரிந்த வெம் சிலை ஒன்று உடையான் மழபாடியை புரிந்து கைதொழு-மின் வினை ஆயின போகுமே மேல் #1564 சந்த வார் குழலாள் உமை தன் ஒருகூறு உடை எந்தையான் இமையாத முக்கண்ணினன் எம்பிரான் மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை சிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே மேல் #1565 இரக்கம் ஒன்றும் இலான் இறையான் திரு மா மலை உர கையால் எடுத்தான்-தனது ஒண் முடி பத்து இற விரல் தலை நிறுவி உமையாளொடு மேயவன் வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே மேல் #1566 ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் அண்ணலார் காலன் ஆருயிர் வீட்டிய மா மணி கண்டனார் சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம் மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே மேல் #1567 கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ் பதி பலியும் பாட்டொடு பண் முழவும் பல ஓசையும் மலியும் மா மழபாடியை வாழ்த்தி வணங்குமே மேல் #1568 மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலை கலிசெய் மா மதில் சூழ் கடல் காழி கவணியன் ஒலி செய் பாடல்கள் பத்து இவை வல்லார் உலகத்திலே மேல் 10. திருமங்கலக்குடி : பண் - இந்தளம் #1569 சீரின் ஆர் மணியும் அகில் சந்தும் செறி வரை வாரி நீர் வரு பொன்னி வட மங்கலக்குடி நீரின் மா முனிவன் நெடும் கை கொடு நீர்-தனை பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே மேல் #1570 பணம் கொள் ஆடு அரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே மேல் #1571 கரும் கை யானையின் ஈர் உரி போர்த்திடு கள்வனார் மருங்கு எலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி அரும்பு சேர் மலர் கொன்றையினான் அடி அன்பொடு விரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே மேல் #1572 பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம் மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடி குறைவு இலா நிறைவே குணம் இல் குணமே என்று முறையினால் வணங்குமவர் முன்நெறி காண்பரே மேல் #1573 ஆனின் அம் கிளர் ஐந்தும் அவிர் முடி ஆடி ஓர் மான் நில் அம் கையினான் மணம் ஆர் மங்கலக்குடி ஊன் இல் வெண் தலை கை உடையான் உயர் பாதமே ஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே மேல் #1574 தேனுமாய் அமுது ஆகி நின்றான் தெளி சிந்தையுள் வானுமாய் மதி சூட வல்லான் மங்கலக்குடி கோனை நாள்-தொறும் ஏத்தி குணம் கொடு கூறுவார் ஊனம் ஆனவை போய் அறும் உய்யும் வகை அதே மேல் #1575 வேள் படுத்திடு கண்ணினன் மேரு வில் ஆகவே வாள் அரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே கோளும் நாள் அவை போய் அறும் குற்றம் இல்லார்களே மேல் #1576 பொலியும் மால் வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திட வலியும் வாளொடு நாள் கொடுத்தான் மங்கலக்குடி புலியின் ஆடையினான் அடி ஏத்திடும் புண்ணியர் மலியும் வான்_உலகம் புக வல்லவர் காண்-மினே மேல் #1577 ஞாலம் முன் படைத்தான் நளிர் மா மலர் மேல் அயன் மாலும் காண ஒணா எரியான் மங்கலக்குடி ஏல வார் குழலாள் ஒருபாகம் இடம் கொடு கோலம் ஆகி நின்றான் குணம் கூறும் குணம் அதே மேல் #1578 மெய்யில் மாசினர் மேனி விரி துவர் ஆடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடி செய்ய மேனி செழும் புனல் கங்கை செறி சடை ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே மேல் #1579 மந்த மா பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய எந்தையை எழில் ஆர் பொழில் காழியர்_காவலன் சிந்தைசெய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல் முந்தி ஏத்த வல்லார் இமையோர் முதல் ஆவரே மேல் 11. சீகாழி : பண் - இந்தளம் #1580 நல்லானை நான்மறையோடு இயல் ஆறு அங்கம் வல்லானை வல்லவர்-பால் மலிந்து ஓங்கிய சொல்லானை தொல் மதில் காழியே கோயில் ஆம் இல்லானை ஏத்த நின்றார்க்கு உளது இன்பமே மேல் #1581 நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற பெம்மானை பேயுடன் ஆடல் புரிந்தானை அம்மானை அந்தணர் சேரும் அணி காழி எம்மானை ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே மேல் #1582 அருந்தானை அன்பு செய்து ஏத்தகில்லார்-பால் பொருந்தானை பொய் அடிமை தொழில் செய்வாருள் விருந்தானை வேதியர் ஓதி மிடை காழி இருந்தானை ஏத்து-மின் நும் வினை ஏகவே மேல் #1583 புற்றானை புற்று அரவம் அரையின் மிசை சுற்றானை தொண்டு செய்வாரவர்-தம்மொடும் அற்றானை அந்தணர் காழி அமர் கோயில் பற்றானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே மேல் #1584 நெதியானை நெஞ்சு இடம் கொள்ள நினைவார்-தம் விதியானை விண்ணவர்தாம் வியந்து ஏத்திய கதியானை கார் உலவும் பொழில் காழி ஆம் பதியானை பாடு-மின் நும் வினை பாறவே மேல் #1585 செப்பு ஆன மென்முலையாளை திகழ் மேனி வைப்பானை வார் கழல் ஏத்தி நினைவார்-தம் ஒப்பானை ஓதம் உலாவு கடல் காழி மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே மேல் #1586 துன்பானை துன்பம் அழித்து அருள் ஆக்கிய இன்பானை ஏழிசையின் நிலை பேணுவார் அன்பானை அணி பொழில் காழி நகர் மேய நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே மேல் #1587 குன்றானை குன்று எடுத்தான் புயம் நால்_ஐந்தும் வென்றானை மென்மலரானொடு மால் தேட நின்றானை நேர்_இழையாளொடும் காழியுள் நன்றானை நம்பெருமானை நணுகுமே மேல் #1588 சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் பூ ஆய கொன்றையினானை புனல் காழி கோ ஆய கொள்கையினான் அடி கூறுமே மேல் #1589 கழி ஆர் சீர் ஓதம் மல்கும் கடல் காழியுள் ஒழியாது கோயில்கொண்டானை உகந்து உள்கி தழி ஆர் சொல் ஞானசம்பந்தன் தமிழ் ஆர மொழிவார்கள் மூஉலகும் பெறுவார்களே மேல் 12. திருக்கச்சியேகம்பம் : பண் - இந்தளம் #1590 மறையானை மாசு இலா புன் சடை மல்கு வெண் பிறையானை பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை இறையானை ஏர் கொள் கச்சி திரு ஏகம்பத்து உறைவானை அல்லது உள்காது எனது உள்ளமே மேல் #1591 நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம் உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் கச்சி ஏகம்பம் மேய கறை_கண்டனை நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே மேல் #1592 பார் ஆரும் முழவம் மொந்தை குழல் யாழ் ஒலி சீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர் ஏர் ஆர் பூம் கச்சி ஏகம்பனை எம்மானை சேராதார் இன்பம் ஆயம் நெறி சேராரே மேல் #1593 குன்று ஏய்க்கும் நெடு வெண் மாட கொடி கூடி போய் மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன் கச்சியுள் மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம் சென்று ஏய்க்கும் சிந்தையார் மேல் வினை சேராவே மேல் #1594 சடையானை தலை கை ஏந்தி பலி தருவார்-தம் கடையே போய் மூன்றும் கொண்டான் கலி கச்சியுள் புடையே பொன் மலரும் கம்பை கரை ஏகம்பம் உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே மேல் #1595 மழுவாளோடு எழில் கொள் சூல படை வல்லார்-தம் கெழு வாளோர் இமையார் உச்சி உமையாள் கங்கை வழுவாமே மல்கு சீரால் வளர் ஏகம்பம் தொழுவாரே விழுமியார் மேல் வினை துன்னாவே மேல் #1596 விண் உளார் மறைகள் வேதம் விரித்து ஓதுவார் கண் உளார் கழலின் வெல்வார் கரி காலனை நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து அண்ணலார் ஆடுகின்ற அலங்காரம்மே மேல் #1597 தூயானை தூய ஆயம் மறை ஓதிய வாயானை வாள் அரக்கன் வலி வாட்டிய தீயானை தீது இல் கச்சி திரு ஏகம்பம் மேயானை மேவுவார் என் தலைமேலாரே மேல் #1598 நாகம் பூண் ஏறு அது ஏறல் நறும் கொன்றை தார் பாகம் பெண் பலியும் ஏற்பர் மறை பாடுவர் ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும் மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே மேல் #1599 போதியார் பிண்டியார் என்று இவர் பொய் நூலை வாதியா வம்-மின் அம் மா எனும் கச்சியுள் ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம் நீதியால் தொழு-மின் நும் மேல் வினை நில்லாவே மேல் #1600 அம் தண் பூம் கச்சி ஏகம்பனை அம்மானை கம் தண் பூம் காழி ஊரன் கலி கோவையால் சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம் பந்தன் சொல் பாடி ஆட கெடும் பாவமே மேல் 13. திருக்கோழம்பம் : பண் - இந்தளம் #1601 நீற்றானை நீள் சடை மேல் நிறைவு உள்ளது ஓர் ஆற்றானை அழகு அமர் மென்முலையாளை ஓர் கூற்றானை குளிர் பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்து-மின் நும் இடர் ஏகவே மேல் #1602 மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய கையானை கடி பொழில் கோழம்பம் மேவிய செய்யானை தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடிய மெய்யானை மேவுவார் மேல் வினை மேவாவே மேல் #1603 ஏதனை ஏதம் இலா இமையோர் தொழும் வேதனை வெண் குழை தோடு விளங்கிய காதனை கடி பொழில் கோழம்பம் மேவிய நாதனை ஏத்து-மின் நும் வினை நையவே மேல் #1604 சடையானை தண் மலரான் சிரம் ஏந்திய விடையானை வேதமும் வேள்வியும் ஆய நன்கு உடையானை குளிர் பொழில் சூழ் திரு கோழம்பம் உடையானை உள்கு-மின் உள்ளம் குளிரவே மேல் #1605 காரானை கடி கமழ் கொன்றை அம் போது அணி தாரானை தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கிய சீரானை செறி பொழில் கோழம்பம் மேவிய ஊரானை ஏத்து-மின் நும் இடர் ஒல்கவே மேல் #1606 பண்டு ஆலின் நீழலானை பரஞ்சோதியை விண்டார்கள்-தம் புரம் மூன்று உடனே வேவ கண்டானை கடி கமழ் கோழம்பம் கோயிலா கொண்டானை கூறு-மின் உள்ளம் குளிரவே மேல் #1607 சொல்லானை சுடு கணையால் புரம் மூன்று எய்த வில்லானை வேதமும் வேள்வியும் ஆனானை கொல் ஆனை உரியானை கோழம்பம் மேவிய நல்லானை ஏத்து-மின் நும் இடர் நையவே மேல் #1608 வில் தானை வல் அரக்கர் விறல் வேந்தனை குற்றானை திரு விரலால் கொடும் காலனை செற்றானை சீர் திகழும் திரு கோழம்பம் பற்றானை பற்றுவார் மேல் வினை பற்றாவே மேல் #1609 நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர் படியானை பண்டங்க வேடம் பயின்றானை கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின் கொடியானை கூறு-மின் உள்ளம் குளிரவே மேல் #1610 புத்தரும் தோகை அம் பீலி கொள் பொய்ம்மொழி பித்தரும் பேசுவ பேச்சு அல்ல பீடு உடை கொத்து அலர் தண் பொழில் கோழம்பம் மேவிய அத்தனை ஏத்து-மின் அல்லல் அறுக்கவே மேல் #1611 தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர் நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை விண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவை பண் கொள பாட வல்லார்க்கு இல்லை பாவமே மேல் 14. திருவெண்ணியூர் : பண் - இந்தளம் #1612 சடையானை சந்திரனோடு செம் கண் அரா உடையானை உடை தலையில் பலி கொண்டு ஊரும் விடையானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியை உடையானை அல்லது உள்காது எனது உள்ளமே மேல் #1613 சோதியை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட எம் ஆதியை ஆதியும் அந்தமும் இல்லாத வேதியை வேதியர்தாம் தொழும் வெண்ணியில் நீதியை நினைய வல்லார் வினை நில்லாவே மேல் #1614 கனிதனை கனிந்தவரை கலந்து ஆட்கொள்ளும் முனிதனை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியை நனிதனை நல்லவர்தாம் தொழும் வெண்ணியில் இனிதனை ஏத்துவர் ஏதம் இலாதாரே மேல் #1615 மூத்தானை மூஉலகுக்கு ஒரு மூர்த்தியாய் காத்தானை கனிந்தவரை கலந்து ஆள் ஆக ஆர்த்தானை அழகு அமர் வெண்ணி அம்மான்-தன்னை ஏத்தாதார் என் செய்வார் ஏழை அ பேய்களே மேல் #1616 நீரானை நிறை புனல் சூழ்தரு நீள் கொன்றை தாரானை தையல் ஓர்பாகம் உடையானை சீரானை திகழ்தரு வெண்ணி அமர்ந்து உறை ஊரானை உள்க வல்லார் வினை ஓயுமே மேல் #1617 முத்தினை முழு வயிர திரள் மாணிக்க தொத்தினை துளக்கம் இலாத விளக்கு ஆய வித்தினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் அத்தனை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே மேல் #1618 காய்ந்தானை காமனையும் செறு காலனை பாய்ந்தானை பரிய கைம்மா உரி தோல் மெய்யில் மேய்ந்தானை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் நீந்தானை நினைய வல்லார் வினை நில்லாவே மேல் #1619 மறுத்தானை மா மலையை மதியாது ஓடி செறுத்தானை தேசு அழிய திகழ் தோள் முடி இறுத்தானை எழில் அமர் வெண்ணி எம்மான் என பொறுத்தானை போற்றுவார் ஆற்றல் உடையாரே மேல் #1620 மண்ணினை வானவரோடு மனிதர்க்கும் கண்ணினை கண்ணனும் நான்முகனும் காணா விண்ணினை விண்ணவர்தாம் தொழும் வெண்ணியில் அண்ணலை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே மேல் #1621 குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின் விண்டவர்-தம் புரம் எய்தவன் வெண்ணியில் தொண்டராய் ஏத்த வல்லார் துயர் தோன்றாவே மேல் #1622 மரு ஆரும் மல்கு காழி திகழ் சம்பந்தன் திரு ஆரும் திகழ்தரு வெண்ணி அமர்ந்தானை உரு ஆரும் ஒண் தமிழ் மாலை இவை வல்லார் பொரு ஆக புக்கு இருப்பார் புவலோகத்தே மேல் 15. திருக்காறாயில் : பண் - இந்தளம் #1623 நீரானே நீள் சடை மேல் ஒர் நிரை கொன்றை தாரானே தாமரை மேல் அயன்தான் தொழும் சீரானே சீர் திகழும் திரு காறாயில் ஊரானே என்பவர் ஊனம் இலாதாரே மேல் #1624 மதியானே வரி அரவோடு உடன் மத்தம் சேர் விதியானே விதி உடை வேதியர்தாம் தொழும் நெதியானே நீர் வயல் சூழ் திரு காறாயில் பதியானே என்பவர் பாவம் இலாதாரே மேல் #1625 விண்ணானே விண்ணவர் ஏத்த விரும்பும் சீர் மண்ணானே விண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம் கண்ணானே கடி பொழில் சூழ் திரு காறாயில் எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே மேல் #1626 தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே ஆய நல் அன்பர்க்கு அணியானே சேயானே சீர் திகழும் திரு காறாயில் மேயானே என்பவர் மேல் வினை மேவாவே மேல் #1627 கலையானே கலை மலி செம்பொன் கயிலாய மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே சீர் திகழும் திரு காறாயில் நிலையானே என்பவர் மேல் வினை நில்லாவே மேல் #1628 ஆற்றானே ஆறு அணி செம் சடை ஆடு அரவு ஏற்றானே ஏழ்உலகும் இமையோர்களும் போற்றானே பொழில் திகழும் திரு காறாயில் நீற்றானே என்பவர் மேல் வினை நில்லாவே மேல் #1629 சேர்த்தானே தீவினை தேய்ந்து அற தேவர்கள் ஏத்தானே ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர் காத்தானே கார் வயல் சூழ் திரு காறாயில் ஆர்த்தானே என்பவர் மேல் இடர் அடராவே மேல் #1630 கடுத்தானே காலனை காலால் கயிலாயம் எடுத்தானை ஏதம் ஆகம் முனிவர்க்கு இடர் கெடுத்தானே கேழ் கிளரும் திரு காறாயில் அடுத்தானே என்பவர் மேல் வினை அடராவே மேல் #1631 பிறையானே பேணிய பாடலொடு இன்னிசை மறையானே மாலொடு நான்முகன் காணாத இறையானே எழில் திகழும் திரு காறாயில் உறைவானே என்பவர் மேல் வினை ஓடுமே மேல் #1632 செடி ஆரும் புன் சமண் சீவரத்தார்களும் படி ஆரும் பாவிகள் பேச்சு பயன் இல்லை கடி ஆரும் பூம் பொழில் சூழ் திரு காறாயில் குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை குற்றமே மேல் #1633 ஏய்ந்த சீர் எழில் திகழும் திரு காறாயில் ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்ற பாய்ந்த நீர் காழியுள் ஞானசம்பந்தன் சொல் வாய்ந்த ஆறு ஏத்துவார் வான்_உலகு ஆள்வாரே மேல் 16. திருமணஞ்சேரி : பண் - இந்தளம் #1634 அயில் ஆரும் அம்பதனால் புரம் மூன்று எய்து குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறு ஆகி மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரி பயில்வானை பற்றி நின்றார்க்கு இல்லை பாவமே மேல் #1635 விதியானை விண்ணவர்தாம் தொழுது ஏத்திய நெதியானை நீள் சடை மேல் நிகழ்வித்த வான் மதியானை வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி பதியானை பாட வல்லார் வினை பாறுமே மேல் #1636 எய்ப்பு ஆனார்க்கு இன்புறு தேன் அளித்து ஊறிய இப்பாலாய் எனையும் ஆள உரியானை வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே மேல் #1637 விடையானை மேல் உலகு ஏழும் இ பார் எலாம் உடையானை ஊழி-தோறு ஊழி உளது ஆய படையானை பண் இசை பாடு மணஞ்சேரி அடைவானை அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே மேல் #1638 எறி ஆர் பூம் கொன்றையினோடும் இள மத்தம் வெறி ஆரும் செம் சடை ஆர மிலைந்தானை மறி ஆரும் கை உடையானை மணஞ்சேரி செறிவானை செப்ப வல்லார்க்கு இடர் சேராவே மேல் #1639 மொழியானை முன் ஒரு நான்மறை ஆறு அங்கம் பழியாமை பண் இசை ஆன பகர்வானை வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரி இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும் இன்பமே மேல் #1640 எண்ணானை எண் அமர் சீர் இமையோர்கட்கு கண்ணானை கண் ஒருமூன்றும் உடையானை மண்ணானை மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி பெண்ணானை பேச நின்றார் பெரியோர்களே மேல் #1641 எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள் கெடுத்தானை கேடு இலா செம்மை உடையானை மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி பிடித்து ஆர பேண வல்லார் பெரியோர்களே மேல் #1642 சொல்லானை தோற்றம் கண்டானும் நெடு மாலும் கல்லானை கற்றன சொல்லி தொழுது ஓங்க வல்லார் நல் மா தவர் ஏத்து மணஞ்சேரி எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் ஏத்துமே மேல் #1643 சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர் சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே மேல் #1644 கண் ஆரும் காழியர்_கோன் கருத்து ஆர்வித்த தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி பண் ஆர பாட வல்லார்க்கு இல்லை பாவமே மேல் 17. திருவேணுபுரம் : பண் - இந்தளம் #1645 நிலவும் புனலும் நிறை வாள் அரவும் இலகும் சடையார்க்கு இடம் ஆம் எழிலார் உலவும் வயலுக்கு ஒளி ஆர் முத்தம் விலகும் கடல் ஆர் வேணுபுரமே மேல் #1646 அரவு ஆர் கரவன் அமை ஆர் திரள் தோள் குரவு ஆர் குழலாள் ஒருகூறன் இடம் கரவாத கொடைக்கு அலந்தார் அவர்க்கு விரவு ஆக வல்லார் வேணுபுரமே மேல் #1647 ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் போகம் தரு சீர் வயல் சூழ் பொழில்கள் மேகம் தவழும் வேணுபுரமே மேல் #1648 காசு அ கடலில் விடம் உண்ட கண்டத்து ஈசர்க்கு இடம் ஆவது இன் நறவ வாச கமலத்து அனம் வன் திரைகள் வீச துயிலும் வேணுபுரமே மேல் #1649 அரை ஆர் கலை சேர் அன மென் நடையை உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் நிரை ஆர் கமுகின் நிகழ் பாளை உடை விரை ஆர் பொழில் சூழ் வேணுபுரமே மேல் #1650 ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் தளிரும் சடை மேல் உடையான் இடம் ஆம் நளிரும் புனலின் நல செங்கயல் கண் மிளிரும் வயல் சூழ் வேணுபுரமே மேல் #1651 ஏவும் படை வேந்தன் இராவணனை ஆ என்று அலற அடர்த்தான் இடம் ஆம் தாவும் மறி மானொடு தண் மதியம் மேவும் பொழில் சூழ் வேணுபுரமே மேல் #1652 கண்ணன் கடி மா மலரில் திகழும் அண்ணல் இருவர் அறியா இறை ஊர் வண்ண சுதை மாளிகை மேல் கொடிகள் விண்ணில் திகழும் வேணுபுரமே மேல் #1653 போகம் அறியார் துவர் போர்த்து உழல்வார் ஆகம் அறியா அடியார் இறை ஊர் மூகம் அறிவார் கலை முத்தமிழ் நூல் மீகம் அறிவார் வேணுபுரமே மேல் #1654 கலம் ஆர் கடல் போல் வளம் ஆர்தரு நல் புலம் ஆர்தரு வேணுபுரத்து இறையை நலம் ஆர்தரு ஞானசம்பந்தன் சொன்ன குலம் ஆர் தமிழ் கூறுவர் கூர்மையரே மேல் 18. திருமருகல் : பண் - இந்தளம் - விடந்தீர்த்த பதிகம் #1655 சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடை ஆர் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே மேல் #1656 சிந்தாய் எனுமால் சிவனே எனுமால் முந்தாய் எனுமால் முதல்வா எனுமால் கொந்து ஆர் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள் ஏசறவே மேல் #1657 அறை ஆர் கழலும் அழல் வாய் அரவும் பிறை ஆர் சடையும் உடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வாய் இவளை இறை ஆர் வளை கொண்டு எழில் வவ்வினையே மேல் #1658 ஒலி நீர் சடையில் கரந்தாய் உலகம் பலி நீ திரிவாய் பழி இல் புகழாய் மலி நீர் மருகல் மகிழ்வாய் இவளை மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே மேல் #1659 துணி நீல வண்ணம் முகில் தோன்றி அன்ன மணி நீல கண்டம் உடையாய் மருகல் கணி நீல வண்டு ஆர் குழலாள் இவள்-தம் அணி நீல ஒண் கண் அயர்வு ஆக்கினையே மேல் #1660 பலரும் பரவப்படுவாய் சடை மேல் மலரும் பிறை ஒன்று உடையாய் மருகல் புலரும்தனையும் துயிலாள் புடை போந்து அலரும் படுமோ அடியாள் இவளே மேல் #1661 வழுவாள் பெருமான் கழல் வாழ்க எனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவாள் உடையாய் மருகல் பெருமான் தொழுவாள் இவளை துயர் ஆக்கினையே மேல் #1662 இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப துலங்க விரல் ஊன்றலும் தோன்றலனாய் வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான் அலங்கல் இவளை அலர் ஆக்கினையே மேல் #1663 எரி ஆர் சடையும் அடியும் இருவர் தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே மரியார் பிரியா மருகல் பெருமான் அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே மேல் #1664 அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும் நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் மறி ஏந்து கையாய் மருகல் பெருமான் நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே மேல் #1665 வய ஞானம் வல்லார் மருகல் பெருமான் உயர் ஞானம் உணர்ந்து அடி உள்குதலால் இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார் வியன் ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே மேல் 19. திருநெல்லிக்கா : பண் - இந்தளம் #1666 அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி மறத்தால் மதில் மூன்றுடன் மாண்பு அழித்த திறத்தால் தெரிவு எய்திய தீ வெண் திங்கள் நிறத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1667 பதிதான் இடுகாடு பைம் கொன்றை தொங்கல் மதிதான் அது சூடிய மைந்தனும் தான் விதி தான் வினை தான் விழுப்பம் பயக்கும் நெதி தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1668 நலம்தான் அவன் நான்முகன்-தன் தலையை கலம்தான் அது கொண்ட கபாலியும் தான் புலம் தான் புகழால் எரி விண் புகழும் நிலம் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1669 தலைதான் அது ஏந்திய தம் அடிகள் கலைதான் திரி காடு இடம் நாடு இடம் ஆம் மலைதான் எடுத்தான் மதில் மூன்று உடைய நிலை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1670 தவம் தான் கதி தான் மதி வார் சடை மேல் உவந்தான் சுற_வேந்தன் உரு அழிய சிவந்தான் செயச்செய்து செறுத்து உலகில் நிவந்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1671 வெறி ஆர் மலர் கொன்றை அம் தார் விரும்பி மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான் குறியால் குறி கொண்டவர் போய் குறுகும் நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1672 பிறைதான் சடை சேர்த்திய எந்தை பெம்மான் இறை தான் இறவா கயிலை மலையான் மறை தான் புனல் ஒண் மதி மல்கு சென்னி நிறை தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1673 மறைத்தான் பிணி மாது ஒருபாகம்-தன்னை மிறைத்தான் வரையால் அரக்கன் மிகையை குறைத்தான் சடை மேல் குளிர் கோல் வளையை நிறைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1674 தழல் தாமரையான் வையம் தாயவனும் கழல்தான் முடி காணிய நாண் ஒளிரும் அழல்தான் அடியார்க்கு அருளாய் பயக்கும் நிழல் தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1675 கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே மேல் #1676 புகர் ஏதும் இலாத புத்தேள் உலகின் நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன பகர்வாரவர் பாவம் இலாதவரே மேல் 20. திருஅழுந்தூர் : பண் - இந்தளம் #1677 தொழும் ஆறு வல்லார் துயர் தீர நினைந்து எழும் ஆறு வல்லார் இசை பாட விம்மி அழும் ஆறு வல்லார் அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மா மடம் மன்னினையே மேல் #1678 கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே உடலே உயிரே உணர்வே எழிலே அடல் ஏறு உடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழ மா மடம் மேவினையே மேல் #1679 கழிகாடலனே கனல் ஆடலினாய் பழிபாடு இலனே அவையே பயிலும் அழிபாடு இலராய் அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மா மடம் மன்னினையே மேல் #1680 வானே மலையே என மன் உயிரே தானே தொழுவார் தொழு தாள் மணியே ஆனே சிவனே அழுந்தையவர் எம் மானே என மா மடம் மன்னினையே மேல் #1681 அலை ஆர் புனல் சூழ் அழுந்தை பெருமான் நிலை ஆர் மறியும் நிறை வெண் மழுவும் இலை ஆர் படையும் இவை ஏந்து செல்வ நிலையா அது கொள்க என நீ நினையே மேல் #1682 நறவு ஆர் தலையின் நயவா உலகில் பிறவாதவனே பிணி இல்லவனே அறை ஆர் கழலாய் அழுந்தை மறையோர் மறவாது எழ மா மடம் மன்னினையே மேல் #1683 தடுமாறு வல்லாய் தலைவா மதியம் சுடும் ஆறு வல்லாய் சுடர் ஆர் சடையில் அடும் ஆறு வல்லாய் அழுந்தை மறையோர் நெடு மா நகர் கைதொழ நின்றனையே மேல் #1684 பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும் கரியாய் கரி காடு உயர் வீடு உடையாய் அரியாய் எளியாய் அழுந்தை மறையோர் வெரியார் தொழ மா மடம் மேவினையே மேல் #1685 மணி நீள் முடியால் மலையை அரக்கன் தணியாது எடுத்தான் உடலம் நெரித்த அணி ஆர் விரலாய் அழுந்தை மறையோர் மணி மா மடம் மன்னி இருந்தனையே மேல் #1686 முடி ஆர் சடையாய் முனம்நாள் இருவர் நெடியான் மலரான் நிகழ்வால் இவர்கள் அடி மேல் அறியார் அழுந்தை மறையோர் படியால் தொழ மா மடம் பற்றினையே மேல் #1687 அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர் பெரு ஞானம் உடை பெருமான் அவனை திருஞானசம்பந்தன செந்தமிழ்கள் உரு ஞானம் உண்டு ஆம் உணர்ந்தார்-தமக்கே மேல் 21. திருக்கழிப்பாலை : பண் - இந்தளம் #1688 புனல் ஆடிய புன் சடையாய் அரணம் அனல் ஆக விழித்தவனே அழகு ஆர் கனல் ஆடலினாய் கழிப்பாலை உளாய் உன வார் கழல் கைதொழுது உள்குதுமே மேல் #1689 துணை ஆக ஒர் தூ வள மாதினையும் இணை ஆக உகந்தவனே இறைவா கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய் இணை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே மேல் #1690 நெடியாய் குறியாய் நிமிர் புன் சடையின் முடியாய் சுடு வெண்பொடி முற்று அணிவாய் கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் அடியார்க்கு அடையா அவலம் அவையே மேல் #1691 எளியாய் அரியாய் நிலம் நீரொடு தீ வளி காயம் என வெளி மன்னிய தூ ஒளியாய் உனையே தொழுது உன்னுமவர்க்கு அளியாய் கழிப்பாலை அமர்ந்தவனே மேல் #1692 நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா கடல் நண்ணு கழிப்பதி காவலனே உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே மேல் #1693 பிறை ஆர் சடையாய் பெரியாய் பெரிய மறை ஆர்தரு வாய்மையினாய் உலகில் கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய் இறை ஆர் கழல் ஏத்த இடர் கெடுமே மேல் #1694 முதிரும் சடையின் முடி மேல் விளங்கும் கதிர் வெண் பிறையாய் கழிப்பாலை உளாய் எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்கு அதிரும் வினை ஆயின ஆசு அறுமே மேல் #1695 எரி ஆர் கணையால் எயில் எய்தவனே விரி ஆர்தரு வீழ் சடையாய் இரவில் கரி காடலினாய் கழிப்பாலை உளாய் உரிது ஆகி வணங்குவன் உன் அடியே மேல் #1696 நல நாரணன் நான்முகன் நண்ணலுற கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்கு இலது ஆம் வினைதான் எயில் எய்தவனே மேல் #1697 தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும் துவர் கொண்டன நுண் துகில் ஆடையரும் அவர் கொண்டன விட்டு அடிகள் உறையும் உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே மேல் #1698 கழி ஆர் பதி காவலனை புகலி பழியா மறை ஞானசம்பந்தன சொல் வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார் கெழியார் இமையோரொடு கேடு இலரே மேல் 22. திருக்குடவாயில் : பண் - இந்தளம் #1699 திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான் அடியார் புகல மகிழும் பெருமான் குடவாயில் மன்னி நிகழும் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1700 ஓடும் நதியும் மதியோடு உரகம் சூடும் சடையன் விடை தொல் கொடி மேல் கூடும் குழகன் குடவாயில்-தனில் நீடும் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1701 கலையான் மறையான் கனல் ஏந்து கையான் மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான் கொலை ஆர் சிலையான் குடவாயில்-தனில் நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1702 சுலவும் சடையான் சுடுகாடு இடமா நல மென்முலையாள் நகைசெய்ய நடம் குலவும் குழகன் குடவாயில்-தனில் நிலவும் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1703 என்தன் உளம் மேவி இருந்த பிரான் கன்றன் மணி போல் மிடறன் கயிலை குன்றன் குழகன் குடவாயில்-தனில் நின்ற பெருங்கோயில் நிலாயவனே மேல் #1704 அலை சேர் புனலன் அனலன் அமலன் தலை சேர் பலியன் சதுரன் விதிரும் கொலை சேர் படையன் குடவாயில்-தனில் நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1705 அறை ஆர் கழலன் அழலன் இயலின் பறை யாழ் முழவும் மறை பாட நடம் குறையா அழகன் குடவாயில்-தனில் நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே மேல் #1706 வரை ஆர் திரள் தோள் அரக்கன் மடிய வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான் வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும் வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே மேல் #1707 பொன் ஒப்பவனும் புயல் ஒப்பவனும் தன் ஒப்பு அறியா தழலாய் நிமிர்ந்தான் கொல் நல் படையான் குடவாயில்-தனில் மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே மேல் #1708 வெயிலின் நிலையார் விரி போர்வையினார் பயிலும் உரையே பகர் பாவிகள்-பால் குயிலன் குழகன் குடவாயில்-தனில் உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே மேல் #1709 கடுவாய் மலி நீர் குடவாயில்-தனில் நெடு மா பெருங்கோயில் நிலாயவனை தடம் ஆர் புகலி தமிழ் ஆர் விரகன் வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே மேல் 23. திருவானைக்கா : பண் - இந்தளம் #1710 மழை ஆர் மிடறா மழுவாள் உடையாய் உழை ஆர் கரவா உமையாள்_கணவா விழவு ஆரும் வெண் நாவலின் மேவிய எம் அழகா எனும் ஆய்_இழையாள் அவளே மேல் #1711 கொலை ஆர் கரியின் உரி மூடியனே மலை ஆர் சிலையா வளைவித்தவனே விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் நிலையா அருளாய் எனும் நேர்_இழையே மேல் #1712 காலால் உயிர் காலனை வீடுசெய்தாய் பாலோடு நெய் ஆடிய பால்_வணனே வேல் ஆடு கையாய் எம் வெண் நாவல் உளாய் ஆல் ஆர் நிழலாய் எனும் ஆய்_இழையே மேல் #1713 சுறவ கொடி கொண்டவன் நீறு அதுவாய் உற நெற்றி விழித்த எம் உத்தமனே விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே அறம் மிக்கது எனும் ஆய்_இழையே மேல் #1714 செம் கண் பெயர் கொண்டவன் செம்பியர்_கோன் அம் கண் கருணை பெரிது ஆயவனே வெம் கண் விடையாய் எம் வெண் நாவல் உளாய் அங்கத்து அயர்வு ஆயினள் ஆய்_இழையே மேல் #1715 குன்றே அமர்வாய் கொலை ஆர் புலியின் தன் தோல் உடையாய் சடையாய் பிறையாய் வென்றாய் புரம் மூன்றை வெண் நாவலுளே நின்றாய் அருளாய் எனும் நேர்_இழையே மேல் #1716 மலை அன்று எடுத்த அரக்கன் முடி தோள் தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா விலையால் எனை ஆளும் வெண் நாவல் உளாய் அலசாமல் நல்காய் எனும் ஆய்_இழையே மேல் #1717 திரு ஆர்தரு நாரணன் நான்முகனும் அருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய் விரை ஆரும் வெண் நாவலுள் மேவிய எம் அரவா எனும் ஆய்_இழையாள் அவளே மேல் #1718 புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள் ஒத்த உரை சொல் இவை ஓரகிலார் மெய் தேவர் வணங்கும் வெண் நாவல் உளாய் அத்தா அருளாய் எனும் ஆய்_இழையே மேல் #1719 வெண் நாவல் அமர்ந்து உறை வேதியனை கண் ஆர் கமழ் காழியர்-தம் தலைவன் பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் விண்ணோரவர் ஏத்த விரும்புவரே மேல் 24. திருநாகேச்சரம் : பண் - இந்தளம் #1720 பொன் ஏர்தரு மேனியனே புரியும் மின் நேர் சடையாய் விரை காவிரியின் நன் நீர் வயல் நாகேச்சுர நகரின் மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே மேல் #1721 சிறவார் புரம் மூன்று எரிய சிலையில் உற வார் கணை உய்த்தவனே உயரும் நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள் அறவா என வல்வினை ஆசு அறுமே மேல் #1722 கல் ஆல் நிழல் மேயவனே கரும்பின் வில்லான் எழில் வேவ விழித்தவனே நல்லார் தொழும் நாகேச்சுர நகரில் செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே மேல் #1723 நகு வான் மதியோடு அரவும் புனலும் தகு வார் சடையின் முடியாய் தளவம் நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் பகவா என வல்வினை பற்று அறுமே மேல் #1724 கலைமான் மறியும் கனலும் மழுவும் நிலை ஆகிய கையினனே நிகழும் நலம் ஆகிய நாகேச்சுர நகருள் தலைவா என வல்வினைதான் அறுமே மேல் #1725 குரை ஆர் கழல் ஆட நடம் குலவி வரையான்மகள் காண மகிழ்ந்தவனே நரை ஆர் விடை ஏறும் நாகேச்சுரத்து எம் அரைசே என நீங்கும் அரும் துயரே மேல் #1726 முடை ஆர்தரு வெண் தலை கொண்டு உலகில் கடை ஆர் பலி கொண்டு உழல் காரணனே நடை ஆர்தரு நாகேச்சுர நகருள் சடையா என வல்வினைதான் அறுமே மேல் #1727 ஓயாத அரக்கன் ஒடிந்து அலற நீ ஆர் அருள் செய்து நிகழ்ந்தவனே வாய் ஆர வழுத்துவர் நாகேச்சுர தாயே என வல்வினைதான் அறுமே மேல் #1728 நெடியானொடு நான்முகன் நேடலுற சுடு மால் எரியாய் நிமிர் சோதியனே நடு மா வயல் நாகேச்சுர நகரே இடமா உறைவாய் என இன்புறுமே மேல் #1729 மலம் பாவிய கையொடு மண்டைஅது உண் கலம் பாவியர் கட்டுரை விட்டு உலகில் நலம் பாவிய நாகேச்சுர நகருள் சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே மேல் #1730 கலம் ஆர் கடல் சூழ்தரு காழியர்_கோன் தலம் ஆர்தரு செந்தமிழின் விரகன் நலம் ஆர்தரு நாகேச்சுரத்து அரனை சொலல் மாலைகள் சொல்ல நிலா வினையே மேல் 25. திருப்புகலி : பண் - இந்தளம் #1731 உகலி ஆழ் கடல் ஓங்கு பார் உளீர் அகலியா வினை அல்லல் போய் அறும் இகலியார் புரம் எய்தவன் உறை புகலி மா நகர் போற்றி வாழ்-மினே மேல் #1732 பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர் பால் மதி கண்ணியார் கமழ் கொன்றை சேர் முடி புண்ணியன் உறையும் புகலியை நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே மேல் #1733 வீசும் மின் புரை காதல் மேதகு பாச வல்வினை தீர்த்த பண்பினன் பூசும் நீற்றினன் பூம் புகலியை பேசு-மின் பெரிது இன்பம் ஆகவே மேல் #1734 கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் படி கொள் பாரிடம் பேசும் பான்மையன் பொடி கொள் மேனியன் பூம் புகலியுள் அடிகளை அடைந்து அன்பு செய்யுமே மேல் #1735 பாதத்து ஆர் ஒலி பல் சிலம்பினன் ஓதத்து ஆர் விடம் உண்டவன் படை பூதத்தான் புகலி நகர் தொழ ஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே மேல் #1736 மறையினான் ஒலி மல்கு வீணையன் நிறையின் ஆர் நிமிர் புன் சடையன் எம் பொறையினான் உறையும் புகலியை நிறையினால் தொழ நேசம் ஆகுமே மேல் #1737 கரவிடை மனத்தாரை காண்கிலான் இரவிடை பலி கொள்ளும் எம் இறை பொரு விடை உயர்த்தான் புகலியை பரவிட பயில் பாவம் பாறுமே மேல் #1738 அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன் விருப்பினான் அரக்கன் உரம் செகும் பொருப்பினான் பொழில் ஆர் புகலி ஊர் இருப்பினான் அடி ஏத்தி வாழ்த்துமே மேல் #1739 மாலும் நான்முகன்தானும் வார் கழல் சீலமும் முடி தேட நீண்டு எரி போலும் மேனியன் பூம் புகலியுள் பால் அது ஆடிய பண்பன் அல்லனே மேல் #1740 நின்று துய்ப்பவர் நீசர் தேரர் சொல் ஒன்று அது ஆக வையா உணர்வினுள் நின்றவன் நிகழும் புகலியை சென்று கைதொழ செல்வம் ஆகுமே மேல் #1741 புல்லம் ஏறி தன் பூம் புகலியை நல்ல ஞானசம்பந்தன் நாவினால் சொல்லும் மாலை ஈர்_ஐந்தும் வல்லவர்க்கு இல்லை ஆம் வினை இரு நிலத்துளே மேல் 26. திருநெல்வாயில் : பண் - இந்தளம் #1742 புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய மடையின் ஆர் மணி நீர் நெல்வாயிலார் நடையின் நால் விரல் கோவணம் நயந்த உடையினார் எமது உச்சியாரே மேல் #1743 வாங்கினார் மதில் மேல் கணை வெள்ளம் தாங்கினார் தலை ஆய தன்மையர் நீங்கு நீர நெல்வாயிலார் தொழ ஓங்கினார் எமது உச்சியாரே மேல் #1744 நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ இச்சையால் உறைவார் எம் ஈசனார் கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் இச்சையார் எமது உச்சியாரே மேல் #1745 மறையினார் மழுவாளினார் மல்கு பிறையினார் பிறையோடு இலங்கிய நிறையினார் அம் நெல்வாயிலார் தொழும் இறைவனார் எமது உச்சியாரே மேல் #1746 விருத்தன் ஆகி வெண் நீறு பூசிய கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் நிருத்தனார் அம் நெல்வாயில் மேவிய ஒருத்தனார் எமது உச்சியாரே மேல் #1747 காரின் ஆர் கொன்றை கண்ணியார் மல்கு பேரினார் பிறையோடு இலங்கிய நீரினார் அம் நெல்வாயிலார் தொழும் ஏரினார் எமது உச்சியாரே மேல் #1748 ஆதியார் அந்தம் ஆயினார் வினை கோதியார் மதில் கூட்டு அழித்தவர் நீதியார் அம் நெல்வாயிலார் மறை ஓதியார் எமது உச்சியாரே மேல் #1749 பற்றினான் அரக்கன் கயிலையை ஒற்றினார் ஒரு கால் விரல் உற நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் பெற்றியார் எமது உச்சியாரே மேல் #1750 நாடினார் மணி_வண்ணன் நான்முகன் கூடினார் குறுகாத கொள்கையா நீடினார் அம் நெல்வாயிலார் தலை ஓடினார் எமது உச்சியாரே மேல் #1751 குண்டு அமண் துவர் கூறை மூடர் சொல் பண்டம் ஆக வையாத பண்பினர் விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை உண்ட கண்டர் எம் உச்சியாரே மேல் #1752 நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனை சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை பண் பயன்கொள பாட வல்லவர் விண் பயன்கொளும் வேட்கையாளரே மேல் 27. திருஇந்திரநீலப்பருப்பதம் : பண் - இந்தளம் #1753 குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு மான் மழு ஏந்தும் அம் கையன் நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து உலவினான் அடி உள்க நல்குமே மேல் #1754 குறைவு இல் ஆர் மதி சூடி ஆடல் வண்டு அறையும் மா மலர் கொன்றை சென்னி சேர் இறைவன் இந்திரநீலப்பர்ப்பதத்து உறைவினான்-தனை ஓதி உய்ம்-மினே மேல் #1755 என் பொன் என் மணி என்ன ஏத்துவார் நம்பன் நான்மறை பாடு நாவினான் இன்பன் இந்திரநீலப்பர்ப்பதத்து அன்பன் பாதமே அடைந்து வாழ்-மினே மேல் #1756 நாசம் ஆம் வினை நன்மைதான் வரும் தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் ஈசன் இந்திரநீலப்பர்ப்பதம் கூசி வாழ்த்துதும் குணம் அது ஆகவே மேல் #1757 மருவு மான் மட மாது ஒர்பாகமாய் பரவுவார் வினை தீர்த்த பண்பினான் இரவன் இந்திரநீலப்பர்ப்பதத்து அருவி சூடிடும் அடிகள் வண்ணமே மேல் #1758 வெண் நிலா மதி சூடும் வேணியன் எண்ணிலார் மதில் எய்த வில்லினன் அண்ணல் இந்திரநீலப்பர்ப்பதத்து உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே மேல் #1759 கொடி கொள் ஏற்றினர் கூற்று உதைத்தவர் பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர் அடிகள் இந்திரநீலப்பர்ப்பதம் உடைய வாணர் உகந்த கொள்கையே மேல் #1760 எடுத்த வல் அரக்கன் கரம் புயம் அடர்த்தது ஓர் விரலான் அவனை ஆட் படுத்தன் இந்திரநீலப்பர்ப்பதம் முடித்தலம் உற முயலும் இன்பமே மேல் #1761 பூவினானொடு மாலும் போற்றுறும் தேவன் இந்திரநீலப்பர்ப்பதம் பாவியாது எழுவாரை தம் வினை கோவியா வரும் கொல்லும் கூற்றமே மேல் #1762 கட்டர் குண்டு அமண் தேரர் சீர் இலர் விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம் எள்தனை நினையாதது என்-கொலோ சிட்டு அதுவாய் உறை ஆதி சீர்களே மேல் #1763 கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான் இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து அந்தமில்லியை ஏத்து ஞானசம் பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்-மினே மேல் 28. திருக்கருவூரானிலை : பண் - இந்தளம் #1764 தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு உண்ட ஆருயிர் ஆய தன்மையர் கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை அண்டனார் அருள் ஈயும் அன்பரே மேல் #1765 நீதியார் நினைந்து ஆய நான்மறை ஓதியாரொடும் கூடலார் குழை காதினார் கருவூருள் ஆன்நிலை ஆதியார் அடியார்-தம் அன்பரே மேல் #1766 விண் உலாம் மதி சூடி வேதமே பண் உளார் பரம் ஆய பண்பினர் கண் உளார் கருவூருள் ஆன்நிலை அண்ணலார் அடியார்க்கு நல்லரே மேல் #1767 முடியர் மும்மத யானை ஈர் உரி பொடியர் பூம் கணை வேளை செற்றவர் கடியுளார் கருவூருள் ஆன்நிலை அடிகள் யாவையும் ஆய ஈசரே மேல் #1768 பங்கயம் மலர் பாதர் பாதி ஓர் மங்கையர் மணி நீல கண்டர் வான் கங்கையர் கருவூருள் ஆன்நிலை அம் கை ஆடு அரவத்து எம் அண்ணலே மேல் #1769 தேவர் திங்களும் பாம்பும் சென்னியில் மேவர் மும்மதில் எய்த வில்லியர் காவலார் கருவூருள் ஆன்நிலை மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே மேல் #1770 பண்ணினார் படி ஏற்றர் நீற்றர் மெய் பெண்ணினார் பிறை தாங்கும் நெற்றியர் கண்ணினார் கருவூருள் ஆன்நிலை நண்ணினார் நமை ஆளும் நாதரே மேல் #1771 கடுத்த வாள் அரக்கன் கயிலையை எடுத்தவன் தலை தோளும் தாளினால் அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை கொடுத்தவன் அருள் கூத்தன் அல்லனே மேல் #1772 உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால் தொழுது மா மலரோனும் காண்கிலார் கழுதினான் கருவூருள் ஆன்நிலை முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே மேல் #1773 புத்தர் புன் சமண் ஆதர் பொய் உரை பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய் பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை அத்தர் பாதம் அடைந்து வாழ்-மினே மேல் #1774 கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம் பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை எந்தையை சொன்ன பத்தும் வல்லவர் சிந்தையில் துயர் ஆய தீர்வரே மேல் 29. திருப்புகலி : திருவிராகம் : பண் - இந்தளம் #1775 முன்னிய கலைப்பொருளும் மூஉலகில் வாழ்வும் பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம் துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும் சென்னியர் விருப்புறு திரு புகலி ஆமே மேல் #1776 வண்டு இரை மதி சடை மிலைத்த புனல் சூடி பண்டு எரி கை ஆடு பரமன் பதி அது என்பர் புண்டரிக வாசம் அது வீச மலர் சோலை தெண் திரை கடல் பொலி திரு புகலி ஆமே மேல் #1777 பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி நா அணவும் அந்தணன் விருப்பிடம் அது என்பர் பூ அணவு சோலை இருள் மாலை எதிர் கூர தே வண விழா வளர் திரு புகலி ஆமே மேல் #1778 மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி கைவளையினாளொடு கலந்த பதி என்பர் செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி தெய்வம் அது இணங்கு உறு திரு புகலி ஆமே மேல் #1779 முன்னம் இரு_மூன்று சமயங்கள் அவை ஆகி பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில் புன்னைய மலர் பொழில்கள் அக்கின் ஒளி காட்ட செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே மேல் #1780 வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே மேல் #1781 நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி செல்வ மறையோர் உறை திரு புகலி ஆமே மேல் #1782 பரப்புறு புகழ் பெருமையாளன் வரைதன்னால் அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல் இடம் என்பர் நெருக்குறு கடல் திரைகள் முத்தம் மணி சிந்த செருக்குறு பொழில் பொலி திரு புகலி ஆமே மேல் #1783 கோடலொடு கூன் மதி குலாய சடை-தன் மேல் ஆடு அரவம் வைத்து அருளும் அப்பன் இருவர்க்கும் நேட எரி ஆகி இருபாலும் அடி பேணி தேட உறையும் நகர் திரு புகலி ஆமே மேல் #1784 கற்ற அமணர் உற்று உலவு தேரர் உரைசெய்த குற்றம் மொழி கொள்கை அது இலாத பெருமான் ஊர் பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் செற்றவர் விருப்புறு திரு புகலி ஆமே மேல் #1785 செந்தமிழ் பரப்புறு திரு புகலி-தன் மேல் அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூர வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே மேல் 30. திருப்புறம்பயம் : திருவிராகம் : பண் - இந்தளம் #1786 மறம் பயம் மலிந்தவர் மதில் பரிசு அறுத்தனை நிறம் பசுமை செம்மையொடு இசைந்து உனது நீர்மை திறம் பயன் உறும் பொருள் தெரிந்து உணரும் நால்வர்க்கு அறம் பயன் உரைத்தனை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1787 விரித்தனை திரு சடை அரித்து ஒழுகு வெள்ளம் தரித்தனை அது அன்றியும் மிக பெரிய காலன் எருத்து இற உதைத்தனை இலங்கு_இழை ஒர்பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1788 விரிந்தனை குவிந்தனை விழுங்கு உயிர் உமிழ்ந்தனை திரிந்தனை குருந்து ஒசி பெருந்தகையும் நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம் புகு மயானம் புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1789 வளம் கெழு கடும் புனலொடும் சடை ஒடுங்க துளங்கு அமர் இளம் பிறை சுமந்தது விளங்க உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1790 பெரும் பிணி பிறப்பினொடு இறப்பு இலை ஒர்பாகம் கரும்பொடு படும் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் சுரும்பு உண அரும்பு அவிழ் திருந்தி எழு கொன்றை விரும்பினை புறம்பயம் அமர்ந்த இறையோனே மேல் #1791 அனல் படு தடக்கையவர் எ தொழிலரேனும் நினைப்பு உடை மனத்தவர் வினை பகையும் நீயே தனல் படு சுடர சடை தனி பிறையொடு ஒன்ற புனல் படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1792 மறத்துறை மறுத்தவர் தவத்து அடியர் உள்ளம் அறத்துறை ஒறுத்து உனது அருள் கிழமை பெற்றோர் திறத்து உள திறத்தினை மதித்து அகல நின்றும் புறத்து உள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1793 இலங்கையர் இறைஞ்சு இறை விலங்கலில் முழங்க உலம் கெழு தட கைகள் அடர்த்திடலும் அஞ்சி வலம்கொள எழுந்தவன் நலம் கவின அஞ்சு புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1794 வடம் கெட நுடங்கு உண இடந்த இடை அல்லி கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரல் ஆகார் தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்க புள் தங்கு அருள்செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய் மேல் #1795 விடங்கு ஒருவர் நன்று என விடக்கு ஒருவர் தீது என உடற்கு உடை களைந்தவர் உடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்கு உரை படுத்து உமை ஒர்பாகம் அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே மேல் #1796 கருங்கழி பொரும் திரை கரை குலவு முத்தம் தரும் கழுமலத்து இறை தமிழ் கிழமை ஞானன் சுரும்பு அவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார் பெரும் பிணி மருங்கு அற ஒருங்குவர் பிறப்பே மேல் 31. திருக்கருப்பறியலூர் : திருவிராகம் : பண் - இந்தளம் #1797 சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள் மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற கற்றவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1798 வண்டு அணைசெய் கொன்றை அது வார் சடைகள் மேலே கொண்டு அணைசெய் கோலம் அது கோள் அரவினோடும் விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஒர் அம்பால் கண்டவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1799 வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆக போதினொடு போது மலர் கொண்டு புனைகின்ற நாதன் என நள்ளிருள் முன் ஆடு குழை தாழும் காதவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1800 மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒருபங்கன் உடம்பினை விட கருதி நின்ற மறையோனை தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால் கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1801 ஒருத்தி உமையோடும் ஒருபாகம் அது ஆய நிருத்தன் அவன் நீதி அவன் நித்தன் நெறி ஆய விருத்தன் அவன் வேதம் என அங்கம் அவை ஓதும் கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1802 விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள் மெய் தேன் பண் அமரும் மென்மொழியினாளை அணைவிப்பான் எண்ணி வரு காமன் உடல் வேவ எரி காலும் கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1803 ஆதி அடியை பணிய அப்பொடு மலர் சேர் சோதி ஒளி நல் புகை வளர் குவடு புக்கு தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க காதினன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1804 வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்ச பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு ஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ மேல்நாள் காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1805 பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கை கரந்து ஒர் சடை மேல் மிசை உகந்து அவளை வைத்து நிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல் கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே மேல் #1806 அற்றம் மறையா அமணர் ஆதமிலி புத்தர் சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டு குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் கற்றென இருப்பது கருப்பறியலூரே மேல் #1807 நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன் கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளை பலம் தரு தமிழ் கிளவி பத்தும் இவை கற்று வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிது ஆமே மேல் 32. திருவையாறு : திருவிராகம் : பண் - இந்தளம் #1808 திரு திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர் உரு திகழ் எழில் கயிலை வெற்பில் உறைதற்கே விருப்பு உடைய அற்புதர் இருக்கும் இடம் ஏர் ஆர் மரு திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே மேல் #1809 கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர் இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் எங்கும் சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே மேல் #1810 கட்டு வடம் எட்டும் உறு வட்ட முழவத்தில் கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் வட்ட மதிலுள் திகழும் வண் திரு ஐயாறே மேல் #1811 நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம் சீர் தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னி மண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே மேல் #1812 வென்றி மிகு தாருகனது ஆருயிர் மடங்க கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே மேல் #1813 பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் பூ மாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே மேல் #1814 துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும் அங்கே என்ன சதி என்று உரைசெய் அங்கணன் இடம் சீர் மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே மேல் #1815 இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம் போர் அரக்கன் முடி பத்து அலை புயத்தொடும் அடங்க துரக்க விரலின் சிறிது வைத்தவர் இடம் சீர் வர கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே மேல் #1816 பருத்து உரு அது ஆகி விண் அடைந்தவன் ஒர் பன்றி பெருத்த உரு அதுவாய் உலகு இடந்தவனும் என்றும் கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் கார் வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே மேல் #1817 பாக்கியம் அது ஒன்றும் இல் சமண் பதகர் புத்தர் சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம் நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் மாக்கமுற நீடு பொழில் வண் திரு ஐயாறே மேல் #1818 வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள் ஈசனை எழில் புகலி மன்னவன் மெய்ஞ்ஞான பூசுரன் உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார் நேசம் மலி பத்தரவர் நின்மலன் அடிக்கே மேல் 33. திருநள்ளாறு : திருவிராகம் : பண் - இந்தளம் #1819 ஏடு மலி கொன்றை அரவு இந்து இள வன்னி மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் கோடு மலி ஞாழல் குரவு ஏறு சுரபுன்னை நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே மேல் #1820 விண் இயல் பிறை பிளவு அறை புனல் முடித்த புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவி-தன் மேல் பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே மேல் #1821 விளங்கு இழை மடந்தை மலைமங்கை ஒருபாகத்து உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் வளம் கெழுவு தீபமொடு தூபம் மலர் தூவி நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே மேல் #1822 கொக்கு அரவர் கூன் மதியர் கோபர் திரு மேனி செக்கர் அவர் சேரும் இடம் என்பர் தடம் மூழ்கி புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே மேல் #1823 நெஞ்சம் இது கண்டுகொள் உனக்கு என நினைந்தார் வஞ்சம் அது அறுத்து அருளும் மற்றவனை வானோர் அஞ்ச முதுகு ஆகியவர் கைதொழ எழுந்த நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே மேல் #1824 பாலன் அடி பேண அவன் ஆருயிர் குறைக்கும் காலன் உடன் மாள முன் உதைத்த அரனூர் ஆம் கோல மலர் நீர் குடம் எடுத்து மறையாளர் நாலின் வழி நின்று தொழில் பேணிய நள்ளாறே மேல் #1825 நீதியர் நெடுந்தகையர் நீள் மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பரர் இருக்கை வேதியர்கள் வேள்வி ஒழியாது மறை நாளும் ஓதி அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே மேல் #1826 கடுத்து வல் அரக்கன் முன் நெருக்கி வரை-தன்னை எடுத்தவன் முடி தலைகள் பத்தும் மிகு தோளும் அடர்த்தவர்-தமக்கு இடம் அது என்பர் அளி பாட நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே மேல் #1827 உயர்ந்தவன் உருக்கொடு திரிந்து உலகம் எல்லாம் பயந்தவன் நினைப்ப அரிய பண்பன் இடம் என்பர் வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும் நயம் தரும் அ வேத ஒலி ஆர் திரு நள்ளாறே மேல் #1828 சிந்தை திருகல் சமணர் தேரர் தவம் என்னும் பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர் மந்த முழவம் தரு விழா ஒலியும் வேத சந்தம் விரவி பொழில் முழங்கிய நள்ளாறே மேல் #1829 ஆடல் அரவு ஆர் சடையன் ஆய்_இழை-தனோடும் நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை மாடம் மலி காழி வளர் பந்தனது செம் சொல் பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே மேல் 34. திருப்பழுவூர் : திருவிராகம் : பண் - இந்தளம் #1830 முத்தன் மிகு மூ இலை நல் வேலன் விரி நூலன் அத்தன் எமை ஆள் உடைய அண்ணல் இடம் என்பர் மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே மேல் #1831 கோடலொடு கோங்கு அவை குலாவு முடி-தன் மேல் ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர் மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள் பாடல் ஒலி செய்ய மலிகின்ற பழுவூரே மேல் #1832 வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர் புரி நூலர் இடம் என்பர் வேலியின் விரை கமலம் அன்ன முக மாதர் பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே மேல் #1833 எண்ணும் ஒர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் மண்ணின் மிசை ஆடி மலையாளர் தொழுது ஏத்தி பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே மேல் #1834 சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் வேத மொழி சொல்லி மறையாளர் இறைவன்-தன் பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே மேல் #1835 மேவு அயரும் மும்மதிலும் வெம் தழல் விளைத்து மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே மேல் #1836 மந்தணம் இருந்து புரி மாமடி-தன் வேள்வி சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில் மட்டு ஆர் பைம் தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே மேல் #1837 உர கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து அன்று அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு பரக்குறு புனல் செய் விளையாடு பழுவூரே மேல் #1838 நின்ற நெடு மாலும் ஒரு நான்முகனும் நேட அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர் ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் மன்றினில் இருந்து உடன் மகிழ்ந்த பழுவூரே மேல் #1839 மொட்டை அமண் ஆதர் துகில் மூடு விரி தேரர் முட்டைகள் மொழிந்த முனிவான்-தன் இடம் என்பர் மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம் பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே மேல் #1840 அந்தணர்கள் ஆன மலையாளரவர் ஏத்தும் பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை ஆர சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே மேல் 35. திருத்தென்குரங்காடுதுறை : பண் - இந்தளம் #1841 பரவ கெடும் வல்வினை பாரிடம் சூழ இரவில் புறங்காட்டிடை நின்று எரி ஆடி அரவ சடை அந்தணன் மேய அழகு ஆர் குரவ பொழில் சூழ் குரங்காடுதுறையே மேல் #1842 விண்டார் புரம் மூன்றும் எரித்த விமலன் இண்டு ஆர் புறங்காட்டிடை நின்று எரி ஆடி வண்டு ஆர் கரு மென் குழல் மங்கை ஒர்பாகம் கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே மேல் #1843 நிறைவு இல் புறங்காட்டிடை நேர்_இழையோடும் இறைவு இல் எரியான் மழு ஏந்தி நின்று ஆடி மறையின் ஒலி வானவர் தானவர் ஏத்தும் குறைவு இல்லவன் ஊர் குரங்காடுதுறையே மேல் #1844 விழிக்கும் நுதல் மேல் ஒரு வெண் பிறை சூடி தெழிக்கும் புறங்காட்டிடை சேர்ந்து எரி ஆடி பழிக்கும் பரிசே பலி தேர்ந்தவன் ஊர் பொன் கொழிக்கும் புனல் சூழ் குரங்காடுதுறையே மேல் #1845 நீறு ஆர்தரு மேனியன் நெற்றி ஒர் கண்ணன் ஏறு ஆர் கொடி எம் இறை ஈண்டு எரி ஆடி ஆறு ஆர் சடை அந்தணன் ஆய்_இழையாள் ஓர் கூறான் நகர் போல் குரங்காடுதுறையே மேல் #1846 நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே மேல் #1847 பழகும் வினை தீர்ப்பவன் பார்ப்பதியோடும் முழவம் குழல் மொந்தை முழங்க எரி ஆடும் அழகன் அயில் மூ இலை வேல் வலன் ஏந்தும் குழகன் நகர் போல் குரங்காடுதுறையே மேல் #1848 வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் கரை ஆர்ந்து இழி காவிரி கோல கரை மேல் குரை ஆர் பொழில் சூழ் குரங்காடுதுறையே மேல் #1849 நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணா படி ஆகிய பண்டங்கன் நின்று எரி ஆடி செடி ஆர் தலை ஏந்திய செம் கண் வெள் ஏற்றின் கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே மேல் #1850 துவர் ஆடையர் வேடம் அலா சமண் கையர் கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் நவை ஆர் மணி பொன் அகில் சந்தனம் உந்தி குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே மேல் #1851 நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன் கொல் ஏறு உடையான் குரங்காடுதுறை மேல் சொல் ஆர் தமிழ் மாலை பத்தும் தொழுது ஏத்த வல்லாரவர் வானவரோடு உறைவாரே மேல் 36. திருவிரும்பூளை : பண் - இந்தளம் - வினாவுரை #1852 சீர் ஆர் கழலே தொழுவீர் இது செப்பீர் வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே மேல் #1853 தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் குழல் ஆர் மொழி கோல் வளையோடு உடன் ஆகி எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் கழல்தான் கரி கானிடை ஆடு கருத்தே மேல் #1854 அன்பால் அடி கைதொழுவீர் அறிவீரே மின் போல் மருங்குல் மடவாளொடு மேவி இன்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே மேல் #1855 நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் கச்சி பொலி காமக்கொடியுடன் கூடி இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன் உச்சி தலையில் பலி கொண்டு உழல் ஊணே மேல் #1856 சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர் இது சொல்லீர் நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன் புற்று ஆடு அரவோடு பூண்ட பொருளே மேல் #1857 தோடு ஆர் மலர் தூய் தொழு தொண்டர்கள் சொல்லீர் சேடு ஆர் குழல் சே_இழையோடு உடன் ஆகி ஈடாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே மேல் #1858 ஒருக்கும் மனத்து அன்பர் உள்ளீர் இது சொல்லீர் பரு கை மத வேழம் உரித்து உமையோடும் இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் அரக்கன் உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே மேல் #1859 துயர் ஆயின நீங்கி தொழும் தொண்டர் சொல்லீர் கயல் ஆர் கருங்கண்ணியொடும் உடன் ஆகி இயல்பாய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் முயல்வார் இருவர்க்கு எரி ஆகிய மொய்ம்பே மேல் #1860 துணை நல் மலர் தூய் தொழும் தொண்டர்கள் சொல்லீர் பணை மென் முலை பார்ப்பதியோடு உடன் ஆகி இணை இல் இரும்பூளை இடம்கொண்ட ஈசன் அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே மேல் #1861 எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன் சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன் செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார் பந்தம் அறுத்து ஓங்குவர் பான்மையினாலே மேல் 37. திருமறைக்காடு : பண் - இந்தளம் - கதவு அடைக்கப் பாடிய பதிகம் #1862 சதுரம்மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் கதவம் திருக்காப்பு கொள்ளும் கருத்தாலே மேல் #1863 சங்கம் தரளம் அவை தான் கரைக்கு எற்றும் வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே மேல் #1864 குரவம் குருக்கத்திகள் புன்னைகள் ஞாழல் மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் அரவம் மதியோடு அடைவித்தல் அழகே மேல் #1865 படர் செம்பவளத்தொடு பல் மலர் முத்தம் மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே மேல் #1866 வானோர் மறை மா தவத்தோர் வழிபட்ட தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ என்-கொல் கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே மேல் #1867 பல காலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா உலகு ஏழ் உடையாய் கடை-தோறும் முன் என்-கொல் தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே மேல் #1868 வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன் என்-கொல் கால் ஆர் சிலை காமனை காய்ந்த கருத்தே மேல் #1869 கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரை மேல் வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த அலங்கல் விரல் ஊன்றி அருள்செய்த ஆறே மேல் #1870 கோன் என்று பல் கோடி உருத்திரர் போற்றும் தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன் என்-கொல் வானம் தலம் மண்டியும் கண்டிலா ஆறே மேல் #1871 வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே மேல் #1872 காழி நகரான் கலை ஞானசம்பந்தன் வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த ஏழ் இன்னிசை மாலை ஈர்_ஐந்து இவை வல்லார் வாழி உலகோர் தொழ வான் அடைவாரே மேல் 38. திருச்சாய்க்காடு : பண் - இந்தளம் #1873 நித்தலும் நியமம் செய்து நீர் மலர் தூவி சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில் மத்த யானையின் கோடும் வண் பீலியும் வாரி தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே மேல் #1874 பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும் வெண் தலை கரும் காடு உறை வேதியன் கோயில் கொண்டலை திகழ் பேரி முழங்க குலாவி தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே மேல் #1875 நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு ஆறு சூடும் அமரர்பிரான் உறை கோயில் ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே மேல் #1876 வரங்கள் வண் புகழ் மன்னிய எந்தை மருவார் புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில் இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே மேல் #1877 ஏழைமார் கடை-தோறும் இடு பலிக்கு என்று கூழை வாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் மாழை ஒண் கண் வளை கை நுளைச்சியர் வண் பூம் தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே மேல் #1878 துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில் அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும் சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே மேல் #1879 வேத நாவினர் வெண் பளிங்கின் குழை காதர் ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் மாதர் வண்டு தன் காதல் வண்டு ஆடிய புன்னை தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே மேல் #1880 இருக்கும் நீள் வரை பற்றி அடர்த்து அன்று எடுத்த அரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் மரு குலாவிய மல்லிகை சண்பகம் வண் பூம் தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே மேல் #1881 மாலினோடு அயன் காண்டற்கு அரியவர் வாய்ந்த வேலை ஆர் விடம் உண்டவர் மேவிய கோயில் சேலின் நேர் விழியார் மயில் ஆல செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே மேல் #1882 ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் ஆத்தம் ஆக அறிவு அரிது ஆயவன் கோயில் வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே மேல் #1883 ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம் போய் வான_நாடு இனிது ஆள்வர் இ மாநிலத்தோரே மேல் 39. திருக்ஷேத்திரக்கோவை : பண் - இந்தளம் #1884 ஆரூர் தில்லை அம்பலம் வல்லம் நல்லம் வட கச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல் சூழ் கழிப்பாலை தென் கோடி பீடு ஆர் நீர் ஊர் வயல் நின்றியூர் குன்றியூரும் குருகாவையூர் நாரையூர் நீடு கான பேரூர் நல் நீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடி-தன் பேர் இடமே மேல் #1885 அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும் கண் ஆர் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும் பண் ஆர் மொழி மங்கை ஓர்பங்கு உடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே எண்ணாய் இரவும் பகலும் இடும்பை கடல் நீத்தல் ஆம் காரணமே மேல் #1886 அட்டானம் என்று ஓதிய நால்_இரண்டும் அழகன் உறை கா அனைத்தும் துறைகள் எட்டு ஆம் திருமூர்த்தியின் காடு ஒன்பதும் குளம் மூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும் மட்டு ஆர் குழலாள் மலைமங்கை_பங்கன் மதிக்கும் இடம் ஆகிய பாழி மூன்றும் சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும் பாவங்கள் ஆயின தேய்ந்து அறவே மேல் #1887 அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளை பொடி பூசி ஆறு அணிவான் அமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திரு நனிபள்ளி சீர் மகேந்திரத்து பிறப்பு இல்லவன் பள்ளி வெள்ள சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரம் மால் உறைப்பால் அடி போற்ற கொடுத்த பள்ளி உணராய் மட நெஞ்சமே உன்னி நின்றே மேல் #1888 ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணி ஆர் பெருவேளூர் விளமர் தெங்கூர் சேறை துலை புகலூர் அகலாது இவை காதலித்தான் அவன் சேர் பதியே மேல் #1889 மன வஞ்சர் மற்று ஓட முன் மாதர் ஆரும் மதி கூர் திரு கூடலில் ஆலவாயும் இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பை பதி மாகாளம் வெற்றியூரும் கனம் அம் சின மால் விடையான் விரும்பும் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் தன மென் சொலில் தஞ்சம் என்றே நினை-மின் தவம் ஆம் மலம் ஆயின தான் அறுமே மேல் #1890 மாட்டூர் மட பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சுரம் வாதவூர் வாரணாசி காட்டூர் கடம்பூர் படம்பக்கம் கொட்டும் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும் கோட்டூர் திரு ஆமாத்தூர் கோழம்பமும் கொடுங்கோவலூர் திரு குணவாயில் மேல் #1891 குலாவு திங்கள் சடையான் குளிரும் பரிதி நியமம் போற்று ஊர் அடியார் வழிபாடு ஒழியா தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் காற்று ஊர் வரை அன்று எடுத்தான் முடி தோள் நெரித்தான் உறை கோயில் என்று என்று நீ கருதே மேல் #1892 நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடு திரு நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர் சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர் கல் குன்றம் ஒன்று ஏந்தி மழை தடுத்த கடல்_வண்ணனும் மா மலரோனும் காணா சொற்கு என்றும் தொலைவு இலாதான் உறையும் குடமூக்கு என்று சொல்லி குலாவு-மினே மேல் #1893 குத்தங்குடி வேதிகுடி புனல் சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும் அந்தங்குடி தண் திரு வண்குடியும் அலம்பும் சலம் தன் சடை வைத்து உகந்த நித்தன் நிமலன் உமையோடும் கூட நெடும் காலம் உறைவிடம் என்று சொல்லா புத்தர் புறம்கூறிய புன் சமணர் நெடும் பொய்களை விட்டு நினைந்து உய்ம்-மினே மேல் #1894 அம்மானை அரும் தவம் ஆகி நின்ற அமரர் பெருமான் பதி ஆன உன்னி கொய் மா மலர் சோலை குலாவு கொச்சைக்கு இறைவன் சிவ ஞானசம்பந்தன் சொன்ன இ மாலை ஈர்_ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே மேல் 40. திருப்பிரமபுரம் : பண் - சீகாமரம் #1895 எம்பிரான் எனக்கு அமுதம் ஆவானும் தன் அடைந்தார் தம்பிரான் ஆவானும் தழல் ஏந்து கையானும் கம்ப மா கரி உரித்த காபாலி கறை_கண்டன் வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே மேல் #1896 தாம் என்றும் மனம் தளரா தகுதியராய் உலகத்து காம் என்று சரண் புகுந்தார்-தமை காக்கும் கருணையினான் ஓம் என்று மறை பயில்வார் பிரமபுரத்து உறைகின்ற காமன்-தன் உடல் எரிய கனல் சேர்ந்த கண்ணானே மேல் #1897 நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய் உய்வதனை வேண்டுதியேல் அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை எப்போதும் பன் அம் சீர் வாய் அதுவே பார் கண்ணே பரிந்திடவே மேல் #1898 சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு எத்தனையும் தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீ_வணனை நா நாளும் நன் நியமம் செய்து சீர் நவின்று ஏத்தே மேல் #1899 கண்_நுதலான் வெண்நீற்றான் கமழ் சடையான் விடை_ஏறி பெண் இதம் ஆம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பல உடையான் விண் நுதலா தோன்றிய சீர் பிரமபுரம் தொழ விரும்பி எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே மேல் #1900 எங்கேனும் யாது ஆகி பிறந்திடினும் தன் அடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான் எருது ஏறி கொங்கு ஏயும் மலர் சோலை குளிர் பிரமபுரத்து உறையும் சங்கே ஒத்து ஒளிர் மேனி சங்கரன் தன் தன்மைகளே மேல் #1901 சிலை அதுவே சிலை ஆக திரிபுரம் மூன்று எரிசெய்த இலை நுனை வேல் தடக்கையன் ஏந்து_இழையாள் ஒருகூறன் அலை புனல் சூழ் பிரமபுரத்து அரு மணியை அடி பணிந்தால் நிலை உடைய பெரும் செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே மேல் #1902 எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க தோளொடு தாள் நெரித்து அருளும் சிவமூர்த்தி நீறு அணிந்த மேனியினான் உரித்த வரி தோல் உடையான் உறை பிரமபுரம்-தன்னை தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே மேல் #1903 கரியானும் நான்முகனும் காணாமை கனல் உருவாய் அரியான் ஆம் பரமேட்டி அரவம் சேர் அகலத்தான் தெரியாதான் இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேர உரியார்தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே மேல் #1904 உடை இலார் சீவரத்தார் தன் பெருமை உணர்வு அரியான் முடையில் ஆர் வெண் தலை கை மூர்த்தி ஆம் திரு உருவன் பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும் சடையில் ஆர் வெண் பிறையான் தாள் பணிவார் தக்காரே மேல் #1905 தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை தத்துவனை கன் அடைந்த மதில் பிரமபுரத்து உறையும் காவலனை முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார் பொன் அடைந்தார் போகங்கள் பல அடைந்தார் புண்ணியரே மேல் 41. திருச்சாய்க்காடு : பண் - சீகாமரம் #1906 மண் புகார் வான் புகுவர் மனம் இளையார் பசியாலும் கண் புகார் பிணி அறியார் கற்றாரும் கேட்டாரும் விண் புகார் என வேண்டா வெண் மாட நெடு வீதி தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே மேல் #1907 போய் காடே மறைந்து உறைதல் புரிந்தானும் பூம் புகார் சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் வாய் காடு முது மரமே இடம் ஆக வந்து அடைந்த பேய்க்கு ஆடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே மேல் #1908 நீ நாளும் நன் நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப நா நாளும் நவின்று ஏத்த பெறல் ஆமே நல்வினையே மேல் #1909 கட்டு அலர்ந்த மலர் தூவி கைதொழு-மின் பொன் இயன்ற தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும் தாழ் பொழில்-வாய் மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம் பட்டினத்து சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே மேல் #1910 கோங்கு அன்ன குவி முலையாள் கொழும் பணை தோள் கொடி_இடையை பாங்கு என்ன வைத்து உகந்தான் படர் சடை மேல் பால் மதியம் தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் ஓங்கினார் ஓங்கினார் என உரைக்கும் உலகமே மேல் #1911 சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் தீந்து ஆகம் எரி கொளுவ செற்று உகந்தான் திரு முடி மேல் ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள் தோய்ந்து ஆகம் பாகமா உடையானும் விடையானே மேல் #1912 மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடு வீதி சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான் கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை தொங்கலான் அடியார்க்கு சுவர்க்கங்கள் பொருள் அலவே மேல் #1913 தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும் எரி உண்ண பட அரவத்து எழில் ஆரம் பூண்டான் பண்டு அரக்கனையும் தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே மேல் #1914 வையம் நீர் ஏற்றானும் மலர் உறையும் நான்முகனும் ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை தெய்வமா பேணாதார் தெளிவு உடைமை தேறோமே மேல் #1915 குறங்கு ஆட்டும் நால் விரல் கோவணத்துக்கு உலோவி போய் அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் திறம் காட்டல் கேளாதே தெளிவு உடையீர் சென்று அடை-மின் புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே மேல் #1916 நொய்ம் பைந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்லடியார் அம் பந்தும் வரி கழலும் அரவம் செய் பூம் காழி சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் எம் பந்தம் என கருதி ஏத்துவார்க்கு இடர் கெடுமே மேல் 42. திருஆக்கூர்த்தான்றோன்றிமாடம் : பண் - சீகாமரம் #1917 அக்கு இருந்த ஆரமும் ஆடு அரவும் ஆமையும் தொக்கு இருந்த மார்பினான் தோல் உடையான் வெண்நீற்றான் புக்கு இருந்த தொல் கோயில் பொய் இலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1918 நீர் ஆர வார் சடையான் நீறு உடையான் ஏறு உடையான் கார் ஆர் பூம் கொன்றையினான் காதலித்த தொல் கோயில் கூர் ஆரல் வாய் நிறைய கொண்டு அயலே கோட்டகத்தில் தாரா மல்கு ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1919 வாள் ஆர் கண் செம் துவர் வாய் மா மலையான்-தன் மடந்தை தோள் ஆகம் பாகமா புல்கினான் தொல் கோயில் வேளாளர் என்றவர்கள் வண்மையால் மிக்கு இருக்கும் தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1920 கொங்கு சேர் தண் கொன்றை மாலையினான் கூற்று அடர பொங்கினான் பொங்கு ஒளி சேர் வெண் நீற்றான் பூம் கோயில் அங்கம் ஆறோடும் அரு மறைகள் ஐ வேள்வி தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1921 வீக்கினான் ஆடு அரவம் வீழ்ந்து அழிந்தார் வெண் தலை என்பு ஆக்கினான் பல் கலன்கள் ஆதரித்து பாகம் பெண் ஆக்கினான் தொல் கோயில் ஆம்பல் அம் பூம் பொய்கை புடை தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1922 பண் ஒளி சேர் நான்மறையான் பாடலினோடு ஆடலினான் கண் ஒளி சேர் நெற்றியினான் காதலித்த தொல் கோயில் விண் ஒளி சேர் மா மதியம் தீண்டிய-கால் வெண் மாடம் தண் ஒளி சேர் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1923 வீங்கினார் மும்மதிலும் வில் வரையால் வெந்து அவிய வாங்கினார் வானவர்கள் வந்து இறைஞ்சும் தொல் கோயில் பாங்கின் ஆர் நான்மறையோடு ஆறு அங்கம் பல் கலைகள் தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1924 கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடர கால் ஊன்றி இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல் கோயில் பொன் அடிக்கே நாள்-தோறும் பூவோடு நீர் சுமக்கும் தன் அடியார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1925 நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய தொன்மையான் தோற்றம் கேடு இல்லாதான் தொல் கோயில் இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1926 நா மருவு புன்மை நவிற்ற சமண் தேரர் பூ மருவு கொன்றையினான் புக்கு அமரும் தொல் கோயில் சேல் மருவு பைம் கயத்து செங்கழுநீர் பைம் குவளை தாம் மருவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடமே மேல் #1927 ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி மாடம் அமர்ந்தானை மாடம் சேர் தண் காழி நாடற்கு அரிய சீர் ஞானசம்பந்தன் சொல் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 43. திருப்புள்ளிருக்குவேளூர் : பண் - சீகாமரம் #1928 கள் ஆர்ந்த பூம் கொன்றை மத மத்தம் கதிர் மதியம் உள் ஆர்ந்த சடைமுடி எம்பெருமானார் உறையும் இடம் தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாம் இருவர் புள் ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே மேல் #1929 தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும் ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம் மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே மேல் #1930 வாச நலம் செய்து இமையோர் நாள்-தோறும் மலர் தூவ ஈசன் எம்பெருமானார் இனிது ஆக உறையும் இடம் யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே மேல் #1931 மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடை ஆடை ஏகாயம் இட்டு உகந்த எரி ஆடி உறையும் இடம் ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்-கண் போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே மேல் #1932 கீதத்தை மிக பாடும் அடியார்கள் குடி ஆக பாதத்தை தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் வேதத்தின் மந்திரத்தால் வெண் மணலே சிவம் ஆக போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே மேல் #1933 திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானை புறம்கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே மேல் #1934 அத்தியின் ஈர் உரி மூடி அழகாக அனல் ஏந்தி பித்தரை போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் பத்தியினால் வழிபட்டு பல காலம் தவம் செய்து புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே மேல் #1935 பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடி ஆக மண் இன்றி விண் கொடுக்கும் மணி கண்டன் மருவும் இடம் எண் இன்றி முக்கோடி வாணாள் அது உடையானை புண் ஒன்ற பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே மேல் #1936 வேதித்தார் புரம் மூன்றும் வெம் கணையால் வெந்து அவிய சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும் போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே மேல் #1937 கடுத்து வரும் கங்கை-தனை கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர் எம்பெருமானார் தாம் இனிதாய் உறையும் இடம் விடைத்து வரும் இலங்கை கோன் மலங்க சென்று இராமற்கா புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே மேல் #1938 செடி ஆய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்து ஆவான் பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை கடி ஆர்ந்த பொழில் காழி கவுணியன் சம்பந்தன் சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லை ஆம் மறுபிறப்பே மேல் 44. திருஆமாத்தூர் : பண் - சீகாமரம் #1939 துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை பின் அம் சடை மேல் ஓர் பிள்ளை மதி சூடி அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்-தன் பொன் அம் கழல் பரவா பொக்கமும் பொக்கமே மேல் #1940 கைம்மாவின் தோல் போர்த்த காபாலி வான்_உலகில் மு மா மதில் எய்தான் முக்கணான் பேர் பாடி அம் மா மலர் சோலை ஆமாத்தூர் அம்மான் எம் பெம்மான் என்று ஏத்தாதார் பேயரின் பேயரே மேல் #1941 பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் தேம்பல் இள மதியம் சூடிய சென்னியான் ஆம்பல் அம் பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்-தன் சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே மேல் #1942 கோள் நாக பேர் அல்குல் கோல் வளை கை மாதராள் பூண் ஆகம் பாகமா புல்கி அவளோடும் ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானை காணாத கண் எல்லாம் காணாத கண்களே மேல் #1943 பாடல் நெறி நின்றான் பைம் கொன்றை தண் தாரே சூடல் நெறி நின்றான் சூலம் சேர் கையினான் ஆடல் நெறி நின்றான் ஆமாத்தூர் அம்மான்-தன் வேட நெறி நில்லா வேடமும் வேடமே மேல் #1944 சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால் காவல் மதில் எய்தான் கண் உடை நெற்றியான் யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான் அ தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே மேல் #1945 மாறாத வெம் கூற்றை மாற்றி மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான் ஆறாத தீ ஆடி ஆமாத்தூர் அம்மானை கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே மேல் #1946 தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன் நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானை கேளா செவி எல்லாம் கேளா செவிகளே மேல் #1947 புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் உள்ளுமவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான் எம் வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே மேல் #1948 பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான்-தன் ஆமாத்தூர் நிச்சம் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே மேல் #1949 ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை கோடல் இரும் புறவின் கொச்சை வய தலைவன் நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன்-தன் பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 45. திருக்கைச்சினம் : பண் - சீகாமரம் #1950 தையல் ஓர்கூறு உடையான் தண் மதி சேர் செம் சடையான் மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் நெய் உலாம் மூ இலை வேல் ஏந்தி நிவந்து ஒளி சேர் கை உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1951 விடம் மல்கு கண்டத்தான் வெள்_வளை ஓர்கூறு உடையான் படம் மல்கு பாம்பு அரையான் பற்றாதார் புரம் எரித்தான் நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் கடம் மல்கு மா உரியான் உறை கோயில் கைச்சினமே மேல் #1952 பாடல் ஆர் நான்மறையான் பைம் கொன்றை பாம்பினொடும் சூடலான் வெண் மதியம் துன்று கரந்தையொடும் ஆடலான் அங்கை அனல் ஏந்தி ஆடு அரவ காடலான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1953 பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய கண்ட பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1954 தேய்ந்து மலி வெண் பிறையான் செய்ய திரு மேனியினான் வாய்ந்து இலங்கு வெண் நீற்றான் மாதினை ஓர்கூறு உடையான் சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை காய்ந்த பிரான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1955 மங்கை ஓர்கூறு உடையான் மன்னும் மறை பயின்றான் அங்கை ஓர் வெண் தலையான் ஆடு அரவம் பூண்டு உகந்தான் திங்களொடு பாம்பு அணிந்த சீர் ஆர் திரு முடி மேல் கங்கையினான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1956 வரி அரவே நாண் ஆக மால் வரையே வில் ஆக எரி கணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான் பொரி சுடலை ஈம புறங்காட்டான் போர்த்தது ஓர் கரி உரியான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1957 போது உலவு கொன்றை புனைந்தான் திரு முடி மேல் மாது உமையாள் அஞ்ச மலை எடுத்த வாள் அரக்கன் நீதியினால் ஏத்த நிகழ்வித்து நின்று ஆடும் காதலினான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1958 மண்ணினை முன் சென்று இரந்த மாலும் மலரவனும் எண் அறியா வண்ணம் எரி உருவம் ஆய பிரான் பண்ணிசையால் ஏத்தப்படுவான் தன் நெற்றியின் மேல் கண் உடையான் மேவி உறை கோயில் கைச்சினமே மேல் #1959 தண் வயல் சூழ் காழி தமிழ் ஞானசம்பந்தன் கண்_நுதலான் மேவி உறை கோயில் கைச்சினத்தை பண்ணிசையால் ஏத்தி பயின்ற இவை வல்லார் விண்ணவராய் ஓங்கி வியன்_உலகம் ஆள்வாரே மேல் 46. திருநாலூர்மயானம் : பண் - சீகாமரம் #1960 பால் ஊரும் மலை பாம்பும் பனி மதியும் மத்தமும் மேல் ஊரும் செம் சடையான் வெண் நூல் சேர் மார்பினான் நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து மால் ஊரும் சிந்தையர்-பால் வந்து ஊரா மறுபிறப்பே மேல் #1961 சூடும் பிறை சென்னி சூழ் காடு இடம் ஆக ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக நாடும் சிறப்பு ஓவா நாலூர்மயானத்தை பாடும் சிறப்போர்-பால் பற்றா ஆம் பாவமே மேல் #1962 கல் ஆல் நிழல் மேவி காமுறு சீர் நால்வர்க்கு அன்று எல்லா அறன் உரையும் இன்னருளால் சொல்லினான் நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தை சொல்லாதவர் எல்லாம் செல்லாதார் தொல் நெறிக்கே மேல் #1963 கோலத்து ஆர் கொன்றையான் கொல் புலி தோல் ஆடையான் நீலத்து ஆர் கண்டத்தான் நெற்றி ஓர் கண்ணினான் ஞாலத்தார் சென்று ஏத்தும் நாலூர்மயானத்தில் சூலத்தான் என்பார்-பால் சூழா ஆம் தொல் வினையே மேல் #1964 கறை ஆர் மணி மிடற்றான் காபாலி கட்டங்கன் பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய நறை ஆர் பொழில் புடை சூழ் நாலூர்மயானத்து எம் இறையான் என்று ஏத்துவார்க்கு எய்தும் ஆம் இன்பமே மேல் #1965 கண் ஆர் நுதலான் கனல் ஆடு இடம் ஆக பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே மேல் #1966 கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான் பெண் பாவு பாகத்தான் நாக தோல் ஆகத்தான் நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை எண் பாவு சிந்தையார்க்கு ஏலா இடர்தானே மேல் #1967 பத்துத்தலையோனை பாதத்து ஒரு விரலால் வைத்து மலை அடர்த்து வாளோடு நாள் கொடுத்தான் நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் அத்தன் அடி நினைவார்க்கு அல்லல் அடையாவே மேல் #1968 மாலோடு நான்முகனும் நேட வளர் எரியாய் மேலோடு கீழ் காணா மேன்மையான் வேதங்கள் நாலோடும் ஆறு அங்கம் நாலூர்மயானத்து எம் பாலோடு நெய் ஆடி பாதம் பணிவோமே மேல் #1969 துன்பு ஆய மாசார் துவர் ஆய போர்வையார் புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள் நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே இன்பாய் இருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே மேல் #1970 ஞாலம் புகழ் காழி ஞானசம்பந்தன்தான் நாலுமறை ஓதும் நாலூர்மயானத்தை சீலம் புகழால் சிறந்து ஏத்த வல்லாருக்கு ஏலும் புகழ் வானத்து இன்பாய் இருப்பாரே மேல் 47. திருமயிலாப்பூர் : பண் - சீகாமரம் - பூம்பாவையை எழுப்பிய பதிகம் #1971 மட்டு இட்ட புன்னை அம் கானல் மட மயிலை கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்கு அட்டு இட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1972 மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை கை பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் ஐப்பசி ஓண விழாவும் அரும் தவர்கள் துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1973 வளை கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில் துளக்கு இல் கபாலீச்சுரத்தான் தொல் கார்த்திகை நாள் தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1974 ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரி-தனில் கார் தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1975 மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை கை பூசு நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான் நெய் பூசும் ஒண் புழுக்கல் நேர்_இழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1976 மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி கடல் ஆட்டு கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் அடல் ஆன் ஏறு ஊரும் அடிகள் அடி பரவி நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1977 மலி விழா வீதி மட நல்லார் மா மயிலை கலி விழா கண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான் பலி விழா பாடல்செய் பங்குனி உத்தரநாள் ஒலி விழா காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1978 தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான் கண் ஆர் மயிலை கபாலீச்சுரம் அமர்ந்தான் பண் ஆர் பதினெண் கணங்கள்-தம் அட்டமி நாள் கண் ஆர காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1979 நல் தாமரை மலர் மேல் நான்முகனும் நாரணனும் முற்றாங்கு உணர்கிலா மூர்த்தி திருவடியை கற்றார்கள் ஏத்தும் கபாலீச்சுரம் அமர்ந்தான் பொன் தாப்பு காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1980 உரிஞ்சு ஆய வாழ்க்கை அமண் உடையை போர்க்கும் இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் கரும் சோலை சூழ்ந்த கபாலீச்சுரம் அமர்ந்தான் பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் மேல் #1981 கான் அமர் சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான் தேன் அமர் பூம்பாவை பாட்டு ஆக செந்தமிழான் ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் வான சம்பந்தத்தவரோடும் வாழ்வாரே மேல் 48. திருவெண்காடு : பண் - சீகாமரம் #1982 கண் காட்டும் நுதலானும் கனல் காட்டும் கையானும் பெண் காட்டும் உருவானும் பிறை காட்டும் சடையானும் பண் காட்டும் இசையானும் பயிர் காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே மேல் #1983 பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ளம் நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு மு குள நீர் தோய் வினையாரவர்-தம்மை தோயா ஆம் தீவினையே மேல் #1984 மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண் திசையும் பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையும் ஆம் பேராளன் விண்ணவர்_கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே மேல் #1985 விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவில் மடல் விண்ட முட தாழை மலர் நிழலை குருகு என்று தடம் மண்டு துறை கெண்டை தாமரையின் பூ மறைய கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே மேல் #1986 வேலை மலி தண் கானல் வெண்காட்டான் திருவடி கீழ் மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் மேல் அடர் வெம் காலன் உயிர் விண்ட பினை நமன் தூதர் ஆல மிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே மேல் #1987 தண் மதியும் வெய்ய அரவும் தாங்கினான் சடையினுடன் ஒண் மதிய நுதல் உமை ஓர்கூறு உகந்தான் உறை கோயில் பண் மொழியால் அவன் நாமம் பல ஓத பசும் கிள்ளை வெண் முகில் சேர் கரும் பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே மேல் #1988 சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனை பிளந்தானும் அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்து அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினை துரக்கும் மு குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே மேல் #1989 பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்த உன்மத்தன் உரம் நெரித்து அன்று அருள்செய்தான் உறை கோயில் கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க விண் மொய்த்த பொழில் வரி வண்டு இசை முரலும் வெண்காடே மேல் #1990 கள் ஆர் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள் ஒள் ஆண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான் வெள் ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று உள் ஆடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே மேல் #1991 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்னும் பேதையர்கள் அவர் பிரி-மின் அறிவுடையீர் இது கேண்-மின் வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திரு வெண்காட்டான் என்று ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணரு-மினே மேல் #1992 தண் பொழில் சூழ் சண்பையர்_கோன் தமிழ் ஞானசம்பந்தன் விண் பொலி வெண் பிறை சென்னி விகிர்தன் உறை வெண்காட்டை பண் பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்து இவை வல்லார் மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலிய புகுவாரே மேல் 49. சீகாழி : பண் - சீகாமரம் #1993 பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர் பாடி ஆடிய ஓசை நாள்-தொறும் கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி பெண்ணின் நேர் ஒருபங்கு உடை பெருமானை எம்பெருமான் என்று என்று உன்னும் அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே மேல் #1994 மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலி காழி வண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்-தம் வினை விண்டல் அங்கு எளிது ஆம் அது நல்விதி ஆமே மேல் #1995 நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில் காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி தோடு உலாவிய காது உளாய் சுரி சங்க வெண் குழையாய் என்று என்று உன்னும் வேடம் கொண்டவர்கள் வினை நீங்கலுற்றாரே மேல் #1996 மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலி காழி ஐயனே அரனே என்று ஆதரித்து ஓதி நீதி உளே நினைப்பவர் உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே மேல் #1997 மலி கடும் திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ கலி கடிந்த கையார் மருவும் கலி காழி வலிய காலனை வீட்டி மாணி-தன் இன்னுயிர் அளித்தானை வாழ்த்திட மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே மேல் #1998 மற்றும் இ உலகத்து உளோர்களும் வான் உளோர்களும் வந்து வைகலும் கற்ற சிந்தையராய் கருதும் கலி காழி நெற்றி மேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார் வினை செற்ற மாந்தர் என தெளி-மின்கள் சிந்தையுளே மேல் #1999 தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர்தாம் தொழ பயில் கானலின் விரை சேர விம்மும் கலி காழி ஊனுள் ஆருயிர் வாழ்க்கையாய் உறவு ஆகி நின்ற ஒருவனே என்று என்று ஆன் நலம் கொடுப்பார் அருள் வேந்தர் ஆவாரே மேல் #2000 மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் கத்து வார் கடல் சென்று உலவும் கலி காழி அத்தனே அரனே அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய் உன கழல் பத்தராய் பரவும் பயன் ஈங்கு நல்காயே மேல் #2001 பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் கரு வரால் உகளும் வயல் சூழ் கலி காழி திருவின்_நாயகன் ஆய மாலொடு செய்ய மா மலர் செல்வன் ஆகிய இருவர் காண்பு அரியான் என ஏத்துதல் இன்பமே மேல் #2002 பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர் கண்டு சேரகிலார் அழகு ஆர் கலி காழி தொண்டை வாய் உமையோடும் கூடிய வேடனே சுடலை பொடி அணி அண்டவாணன் என்பார்க்கு அடையா அல்லல்தானே மேல் #2003 பெயர் எனும் இவை பன்னிரண்டினும் உண்டு என பெயர் பெற்ற ஊர் திகழ் கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலி காழி நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை உயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே மேல் 50. திருஆமாத்தூர் : பண் - சீகாமரம் #2004 குன்ற வார் சிலை நாண் அரா அரி வாளி கூர் எரி காற்றின் மும்மதில் வென்ற ஆறு எங்ஙனே விடை ஏறும் வேதியனே தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணை மேல் அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே மேல் #2005 பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம் வெருவ உண்டு உகந்த அருள் என்-கொல் விண்ணவனே கரவு இல் மா மணி பொன் கொழித்து இழி சந்து கார் அகில் தந்து பம்பை நீர் அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே மேல் #2006 நீண்ட வார் சடை தாழ நேர்_இழை பாட நீறு மெய் பூசி மால் அயன் மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் பூண்ட கேழல் மருப்பு அரா விரி கொன்றை வாள் வரி ஆமை பூண் என ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே மேல் #2007 சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என் பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி ஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே மேல் #2008 தொண்டர் வந்து வணங்கி மா மலர் தூவி நின் கழல் ஏத்துவாரவர் உண்டியால் வருந்த இரங்காதது என்னை-கொல் ஆம் வண்டல் ஆர் கழனி கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள் முகம் அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே மேல் #2009 ஓதி ஆரணம் ஆய நுண்பொருள் அன்று நால்வர் முன் கேட்க நன்நெறி நீதி ஆல நீழல் உரைக்கின்ற நீர்மையது என் சோதியே சுடரே சுரும்பு அமர் கொன்றையாய் திரு நின்றியூர் உறை ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே மேல் #2010 மங்கை வாள் நுதல் மான் மனத்திடை வாடி ஊட மணம் கமழ் சடை கங்கையாள் இருந்த கருத்து ஆவது என்னை-கொல் ஆம் பங்கயமது உண்டு வண்டு இசை பாட மா மயில் ஆட விண் முழவு அம் கையல் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே மேல் #2011 நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்திடை வென்று அடர்த்து ஒருபால் மட மாதை விரும்புதல் என் குன்று எடுத்த நிசாசரன் திரள் தோள் இருபதுதான் நெரிதர அன்று அடர்த்து உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே மேல் #2012 செய்ய தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி தேட நீள் முடி வெய்ய ஆர் அழலாய் நிமிர்கின்ற வெற்றிமை என் தையலாளொடு பிச்சைக்கு இச்சை தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு ஐயம் ஏற்று உகந்தாய் ஆமாத்தூர் அம்மானே மேல் #2013 புத்தர் புன் சமண் ஆதர் பொய்ம்மொழி நூல் பிடித்து அலர் தூற்ற நின் அடி பத்தர் பேண நின்ற பரம் ஆய பான்மை அது என் முத்தை வென்ற முறுவலாள் உமை_பங்கன் என்று இமையோர் பரவிடும் அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே மேல் #2014 வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம் ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை கோடல் நாகம் அரும்பு பைம் பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன் பாடல் பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரே மேல் 51. திருக்களர் : பண் - சீகாமரம் #2015 நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில் நீண்ட மா வயல் ஈண்டு மா மதில் தேரின் ஆர் மறுகில் விழா மல்கு திரு களருள் ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செம் சடை மதி ஆர நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2016 தோளின் மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர் வந்து அடி போற்ற மிண்டிய தாளினார் வளரும் தவம் மல்கு திரு களருள் வேளின் நேர் விசயற்கு அருள்புரி வித்தகா விரும்பும் அடியாரை ஆள் உகந்தவனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2017 பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் சேடர் வாழ் பொழில் சூழ் செழு மாட திரு களருள் நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம் ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2018 அம்பின் நேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய திரு களருள் என்பு பூண்டது ஓர் மேனி எம் இறைவா இணையடி போற்றி நின்றவர்க்கு அன்பு செய்தவனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2019 கொங்கு உலாம் மலர் சோலை வண்டு இனம் கெண்டி மா மது உண்டு இசைசெய தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் மங்கை-தன்னொடும் கூடிய மணவாளனே பிணை கொண்டு ஓர் கைத்தலத்து அம் கையில் படையாய் அடைந்தார்க்கு அருளாயே மேல் #2020 கோல மா மயில் ஆல கொண்டல்கள் சேர் பொழில் குலவும் வயலிடை சேல் இளம் கயல் ஆர் புனல் சூழ்ந்த திரு களருள் நீலம் மேவிய கண்டனே நிமிர் புன் சடை பெருமான் என பொலி ஆல நீழல் உளாய் அடைந்தார்க்கு அருளாயே மேல் #2021 தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால் வரையால் அழல் எழ திண் பலம் கெடுத்தாய் திகழ்கின்ற திரு களருள் வம்பு அலர் மலர் தூவி நின் அடி வானவர் தொழ கூத்து உகந்து பே ரம்பலத்து உறைவாய் அடைந்தார்க்கு அருளாயே மேல் #2022 குன்று அடுத்த நல் மாளிகை கொடி மாடம் நீடு உயர் கோபுரங்கள் மேல் சென்று அடுத்து உயர் வான் மதி தோயும் திரு களருள் நின்று அடுத்து உயர் மால் வரை திரள் தோளினால் எடுத்தான்-தன் நீள் முடி அன்று அடர்த்து உகந்தாய் அடைந்தார்க்கு அருளாயே மேல் #2023 பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல் ஆடலொடு ஆர வாழ் பதி தெண் நிலா மதியம் பொழில் சேரும் திரு களருள் உள் நிலாவிய ஒருவனே இருவர்க்கு நின் கழல் காட்சி ஆர் அழல் அண்ணல் ஆய எம்மான் அடைந்தார்க்கு அருளாயே மேல் #2024 பாக்கியம் பல செய்த பக்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய தீக்கு இயல் குணத்தார் சிறந்து ஆரும் திரு களருள் வாக்கினால் மறை ஓதினாய் அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2025 இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் செந்து நேர் மொழியாரவர் சேரும் திரு களருள் அந்தி அன்னது ஓர் மேனியானை அமரர்-தம் பெருமானை ஞானசம் பந்தன் சொல் இவை பத்தும் பாட தவம் ஆமே மேல் 52. திருக்கோட்டாறு : பண் - சீகாமரம் #2026 கரும் தடம் கணின் மாதரார் இசைசெய்ய கார் அதிர்கின்ற பூம் பொழில் குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில் இருந்த எம்பெருமானை உள்கி இணையடி தொழுது ஏத்தும் மாந்தர்கள் வருந்தும் ஆறு அறியார் நெறி சேர்வர் வான் ஊடே மேல் #2027 நின்று மேய்ந்து நினைந்து மா கரி நீரொடும் மலர் வேண்டி வான் மழை குன்றில் நேர்ந்து குத்தி பணிசெய்யும் கோட்டாற்றுள் என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி வான்_அரசு ஆள வல்லவர் பொன்றும் ஆறு அறியார் புகழ் ஆர்ந்த புண்ணியரே மேல் #2028 விரவி நாளும் விழாவிடை பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில் அரவம் நீள்சடையானை உள்கி நின்று ஆதரித்து முன் அன்பு செய்து அடி பரவும் ஆறு வல்லார் பழி பற்று அறுப்பாரே மேல் #2029 அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் ஆடகம் பெறு மாட மாளிகை கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில் நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் தம் பின் நேர்ந்து அறியார் தடுமாற்ற வல்வினையே மேல் #2030 பழைய தம் அடியார் துதிசெய பாருளோர்களும் விண்ணுளோர் தொழ குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில் கழலும் வண் சிலம்பும் ஒலி செய கானிடை கணம் ஏத்த ஆடிய அழகன் என்று எழுவார் அணி ஆவர் வானவர்க்கே மேல் #2031 பஞ்சின் மெல் அடி மாதர் ஆடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும் கொஞ்சி இன்மொழியால் தொழில் மல்கு கோட்டாற்றில் மஞ்சனே மணியே மணி மிடற்று அண்ணலே என உள் நெகிழ்ந்தவர் துஞ்சும் ஆறு அறியார் பிறவார் இ தொல் நிலத்தே மேல் #2032 கலவ மா மயிலாள் ஒர்பங்கனை கண்டு கண் மிசை நீர் நெகிழ்த்து இசை குலவும் ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில் நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா என உன்னுவாரவர் உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே மேல் #2033 வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை கொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில் தொண்டு எலாம் துதிசெய்ய நின்ற தொழிலனே கழலால் அரக்கனை மிண்டு எலாம் தவிர்த்து என் உகந்திட்ட வெற்றிமையே மேல் #2034 கருதி வந்து அடியார் தொழுது எழ கண்ணனோடு அயன் தேட ஆனையின் குருதி மெய் கலப்ப உரி கொண்டு கோட்டாற்றில் விருதினால் மட மாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி வெள் எருது உகந்தவனே இரங்காய் உனது இன்னருளே மேல் #2035 உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர் கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் படையில் ஆர் மழு ஏந்தி ஆடிய பண்பனே இவர் என்-கொலோ நுனை அடைகிலாத வண்ணம் அருளாய் உன் அடியவர்க்கே மேல் #2036 காலனை கழலால் உதைத்து ஒரு காமனை கனல் ஆக சீறி மெய் கோல வார் குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில் மூலனை முடிவு ஒன்று இலாத எம் முத்தனை பயில் பந்தன் சொல்லிய மாலை பத்தும் வல்லார்க்கு எளிது ஆகும் வானகமே மேல் 53. திருப்புறவார்பனங்காட்டூர் : பண் - சீகாமரம் #2037 விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெம் கணையால் எய்தாய் வரி பண் அமர்ந்து ஒலி சேர் புறவார்பனங்காட்டூர் பெண் அமர்ந்து ஒருபாகம் ஆகிய பிஞ்ஞகா பிறை சேர் நுதலிடை கண் அமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே மேல் #2038 நீடல் கோடல் அலர வெண் முல்லை நீர் மலர் நிரை தாது அளம்செய பாடல் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் தோடு இலங்கிய காது அயல் மின் துளங்க வெண் குழை துள்ள நள்ளிருள் ஆடும் சங்கரனே அடைந்தார்க்கு அருளாயே மேல் #2039 வாளையும் கயலும் மிளிர் பொய்கை வார் புனல் கரை அருகு எலாம் வயல் பாளை ஒண் கமுகம் புறவார்பனங்காட்டூர் பூளையும் நறும் கொன்றையும் மத மத்தமும் புனை வாய் கழல் இணை தாளையே பரவும் தவத்தார்க்கு அருளாயே மேல் #2040 மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை பாய்ந்த தண் பழன புறவார்பனங்காட்டூர் ஆய்ந்த நான்மறை பாடி ஆடும் அடிகள் என்று என்று அரற்றி நன் மலர் சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே மேல் #2041 செங்கயலொடு சேல் செரு செய சீறியாழ் முரல் தேன் இனத்தொடு பங்கயம் மலரும் புறவார்பனங்காட்டூர் கங்கையும் மதியும் கமழ் சடை கேண்மையாளொடும் கூடி மான் மறி அம் கை ஆடலனே அடியார்க்கு அருளாயே மேல் #2042 நீரின் ஆர் வரை கோலி மால் கடல் நீடிய பொழில் சூழ்ந்து வைகலும் பாரினார் பிரியா புறவார்பனங்காட்டூர் காரின் ஆர் மலர் கொன்றை தாங்கு கடவுள் என்று கைகூப்பி நாள்-தொறும் சீரினால் வணங்கும் திறத்தார்க்கு அருளாயே மேல் #2043 கை அரிவையர் மெல் விரல் அவை காட்டி அம் மலர் காந்தள் அம் குறி பை அரா விரியும் புறவார்பனங்காட்டூர் மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய் கழல் ஏத்தி நாள்-தொறும் பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே மேல் #2044 தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை பாவில் வண்டு அறையும் புறவார்பனங்காட்டூர் மேவி அ நிலையாய் அரக்கன தோள் அடர்த்து அவன் பாடல் கேட்டு அருள் ஏவிய பெருமான் என்பவர்க்கு அருளாயே மேல் #2045 அம் தண் மாதவி புன்னை நல்ல அசோகமும் அரவிந்தம் மல்லிகை பைம் தண் ஞாழல்கள் சூழ் புறவார்பனங்காட்டூர் எந்து இளம் முகில்_வண்ணன் நான்முகன் என்று இவர்க்கு அரிதாய் நிமிர்ந்தது ஒர் சந்தம் ஆயவனே தவத்தார்க்கு அருளாயே மேல் #2046 நீணம் ஆர் முருகு உண்டு வண்டு இனம் நீல மா மலர் கல்வி நேரிசை பாணி யாழ் முரலும் புறவார்பனங்காட்டூர் நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை ஊண் உரியவனே உகப்பார்க்கு அருளாயே மேல் #2047 மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை பைய தேன் பொழில் சூழ் புறவார்பனங்காட்டூர் ஐயனை புகழ் ஆன காழியுள் ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் செய்யுள் பாட வல்லார் சிவலோகம் சேர்வாரே மேல் 54. திருப்புகலி : பண் - காந்தாரம் #2048 உரு ஆர்ந்த மெல்_இயல் ஓர்பாகம் உடையீர் அடைவோர்க்கு கரு ஆர்ந்த வான்_உலகம் காட்டி கொடுத்தல் கருத்து ஆனீர் பொரு ஆர்ந்த தெண் கடல் ஒண் சங்கம் திளைக்கும் பூம் புகலி திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே மேல் #2049 நீர் ஆர்ந்த செம் சடையீர் நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர் ஊர் ஆர்ந்த சில் பலியீர் உழை மான் உரி தோல் ஆடையீர் போர் ஆர்ந்த தெண் திரை சென்று அணையும் கானல் பூம் புகலி சீர் ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே மேல் #2050 அழி மல்கு பூம் புனலும் அரவும் சடை மேல் அடைவு எய்த மொழி மல்கு மா மறையீர் கறை ஆர் கண்டத்து எண் தோளீர் பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி எழில் மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே மேல் #2051 கயில் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் கடிய கரியின் தோல் மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம் புகலி எயில் ஆர்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே மேல் #2052 நா ஆர்ந்த பாடலீர் ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர் பா ஆர்ந்த பல் பொருளின் பயன்கள் ஆனீர் அயன் பேணும் பூ ஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி தே ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே மேல் #2053 மண் ஆர்ந்த மண முழவம் ததும்ப மலையான்மகள் என்னும் பெண் ஆர்ந்த மெய் மகிழ பேணி எரி கொண்டு ஆடினீர் விண் ஆர்ந்த மதியம் மிடை மாடத்து ஆரும் வியன் புகலி கண் ஆர்ந்த கோயிலே கோயிலாக கலந்தீரே மேல் #2054 களி புல்கு வல் அவுணர் ஊர் மூன்று எரிய கணை தொட்டீர் அளி புல்கு பூ முடியீர் அமரர் ஏத்த அருள்செய்தீர் தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி ஒளி புல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே மேல் #2055 பரந்து ஓங்கு பல் புகழ் சேர் அரக்கர்_கோனை வரை கீழ் இட்டு உரம் தோன்றும் பாடல் கேட்டு உகவை அளித்தீர் உகவாதார் புரம் தோன்று மும்மதிலும் எரிய செற்றீர் பூம் புகலி வரம் தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2056 சலம் தாங்கு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் கலந்து ஓங்கி வந்து இழிந்தும் காணா வண்ணம் கனல் ஆனீர் புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி நலம் தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே மேல் #2057 நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும் கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் பொடி ஆரும் மேனியினீர் புகலி மறையோர் புரிந்து ஏத்த வடிவு ஆரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2058 ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை அ பரிசில் பதி ஆன அணி கொள் ஞானசம்பந்தன் செப்ப அரிய தண் தமிழால் தெரிந்த பாடல் இவை வல்லார் எ பரிசில் இடர் நீங்கி இமையோர்_உலகத்து இருப்பாரே மேல் 55. திருத்தலைச்சங்காடு : பண் - காந்தாரம் #2059 நல சங்க வெண் குழையும் தோடும் பெய்து ஓர் நால் வேதம் சொல சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் குலை செங்காய் பைம் கமுகின் குளிர் கொள் சோலை குயில் ஆலும் தலைச்சங்கை கோயிலே கோயிலாக தாழ்ந்தீரே மேல் #2060 துணி மல்கு கோவணமும் தோலும் காட்டி தொண்டு ஆண்டீர் மணி மல்கு கண்டத்தீர் அண்டர்க்கு எல்லாம் மாண்பு ஆனீர் பிணி மல்கு நூல் மார்பர் பெரியோர் வாழும் தலைச்சங்கை அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே மேல் #2061 சீர் கொண்ட பாடலீர் செம் கண் வெள் ஏற்று ஊர்தியீர் நீர் கொண்டும் பூ கொண்டும் நீங்கா தொண்டர் நின்று ஏத்த தார் கொண்ட நூல்மார்பர் தக்கோர் வாழும் தலைச்சங்கை ஏர் கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே மேல் #2062 வேடம் சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண் திங்கள் ஓடம் சூழ் கங்கையும் உச்சி வைத்தீர் தலைச்சங்கை கூடம் சூழ் மண்டபமும் குலாய வாசல் கொடி தோன்றும் மாடம் சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2063 சூலம் சேர் கையினீர் சுண்ண வெண் நீறு ஆடலீர் நீலம் சேர் கண்டத்தீர் நீண்ட சடை மேல் நீர் ஏற்றீர் ஆலம் சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கை கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே மேல் #2064 நிலம் நீரொடு ஆகாசம் அனல் கால் ஆகி நின்று ஐந்து புல நீர்மை புறம்கண்டார் பொக்கம் செய்யார் போற்று ஓவார் சல நீதர் அல்லாதார் தக்கோர் வாழும் தலைச்சங்கை நல நீர கோயிலே கோயிலாக நயந்தீரே மேல் #2065 அடி புல்கு பைம் கழல்கள் ஆர்ப்ப பேர்ந்து ஓர் அனல் ஏந்தி கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் பொடி புல்கு நூல்மார்பர் புரி_நூலாளர் தலைச்சங்கை கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே மேல் #2066 திரை ஆர்ந்த மா கடல் சூழ் தென்_இலங்கை கோமானை வரை ஆர்ந்த தோள் அடர விரலால் ஊன்றும் மாண்பினீர் அரை ஆர்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை நிரை ஆர்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே மேல் #2067 பாய் ஓங்கு பாம்பு அணை மேலானும் பைம் தாமரையானும் போய் ஓங்கி காண்கிலார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் தீ ஓங்கு மறையாளர் திகழும் செல்வ தலைச்சங்கை சேய் ஓங்கு கோயிலே கோயிலாக சேர்ந்தீரே மேல் #2068 அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர் தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் தலை ஆன நால் வேதம் தரித்தார் வாழும் தலைச்சங்கை நிலை ஆர்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே மேல் #2069 நளிரும் புனல் காழி நல்ல ஞானசம்பந்தன் குளிரும் தலைச்சங்கை ஓங்கு கோயில் மேயானை ஒளிரும் பிறையானை உரைத்த பாடல் இவை வல்லார் மிளிரும் திரை சூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே மேல் 56. திருஇடைமருதூர் : பண் - காந்தாரம் #2070 பொங்கு நூல் மார்பினீர் பூத படையினீர் பூம் கங்கை தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர் எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த இடைமருதில் மங்குல் தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2071 நீர் ஆர்ந்த செம் சடையீர் நெற்றி திரு கண் நிகழ்வித்தீர் போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர் பூதம் பாடலீர் ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர் இடைமருதில் சீர் ஆர்ந்த கோயிலை கோயிலாக சேர்ந்தீரே மேல் #2072 அழல் மல்கும் அங்கையில் ஏந்தி பூதம் அவை பாட சுழல் மல்கும் ஆடலீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் எழில் மல்கும் நான்மறையோர் முறையால் ஏத்த இடைமருதில் பொழில் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே மேல் #2073 பொல்லா படுதலை ஒன்று ஏந்தி புறங்காட்டு ஆடலீர் வில்லால் புரம் மூன்றும் எரித்தீர் விடை ஆர் கொடியினீர் எல்லா கணங்களும் முறையால் ஏத்த இடைமருதில் செல்வாய கோயிலே கோயிலாக சேர்ந்தீரே மேல் #2074 வருந்திய மா தவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டி பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த திருந்திய நான்மறையோர் சீரால் ஏத்த இடைமருதில் பொருந்திய கோயிலே கோயிலாக புக்கீரே மேல் #2075 சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் வலம் மல்கு வெண் மழு ஒன்று ஏந்தி மயானத்து ஆடலீர் இலம் மல்கு நான்மறையோர் இனிதா ஏத்த இடைமருதில் புலம் மல்கு கோயிலே கோயிலாக பொலிந்தீரே மேல் #2076 புனம் மல்கு கொன்றையீர் புலியின் அதளீர் பொலிவு ஆர்ந்த சினம் மல்கு மால் விடையீர் செய்யீர் கரிய கண்டத்தீர் இனம் மல்கு நான்மறையோர் ஏத்தும் சீர் கொள் இடைமருதில் கனம் மல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே மேல் #2077 சிலை உய்த்த வெம் கணையால் புரம் மூன்று எரித்தீர் திறல் அரக்கன் தலை பத்தும் திண் தோளும் நெரித்தீர் தையல் பாகத்தீர் இலை மொய்த்த தண் பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில் நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே மேல் #2078 மறை மல்கு நான்முகனும் மாலும் அறியா வண்ணத்தீர் கறை மல்கு கண்டத்தீர் கபாலம் ஏந்தும் கையினீர் அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை இடைமருதில் நிறை மல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே மேல் #2079 சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும் துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள் இடைமருதில் அன்பு ஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே மேல் #2080 கல்லின் மணி மாட கழுமலத்தார் காவலவன் நல்ல அரு மறையான் நல் தமிழ் ஞானசம்பந்தன் எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே மேல் 54. திருநல்லூர் : பண் - காந்தாரம் #2081 பெண் அமரும் திரு மேனி உடையீர் பிறங்கு சடை தாழ பண் அமரும் நான்மறையே பாடி ஆடல் பயில்கின்றீர் திண் அமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் மண் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2082 அலை மல்கு தண் புனலும் பிறையும் சூடி அங்கையில் கொலை மல்கு வெண் மழுவும் அனலும் ஏந்தும் கொள்கையீர் சிலை மல்கு வெம் கணையால் புரம் மூன்றும் எரித்தீர் திரு நல்லூர் மலை மல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2083 குறை நிரம்பா வெண் மதியம் சூடி குளிர் புன் சடை தாழ பறை நவின்ற பாடலோடு ஆடல் பேணி பயில்கின்றீர் சிறை நவின்ற தண் புனலும் வயலும் சூழ்ந்த திரு நல்லூர் மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2084 கூன் அமரும் வெண் பிறையும் புனலும் சூடும் கொள்கையீர் மான் அமரும் மென்விழியாள் பாகம் ஆகும் மாண்பினீர் தேன் அமரும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் வான் அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2085 நிணம் கவரும் மூ_இலையும் அனலும் ஏந்தி நெறிகுழலாள் அணங்கு அமரும் பாடலோடு ஆடல் மேவும் அழகினீர் திணம் கவரும் ஆடு அரவும் பிறையும் சூடி திரு நல்லூர் மணம் கமழும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2086 கார் மருவு பூம் கொன்றை சூடி கமழ் புன் சடை தாழ வார் மருவு மென்முலையாள் பாகம் ஆகும் மாண்பினீர் தேர் மருவு நெடு வீதி கொடிகள் ஆடும் திரு நல்லூர் ஏர் மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே மேல் #2087 ஊன் தோயும் வெண் மழுவும் அனலும் ஏந்தி உமை காண மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் தேன் தோயும் பைம் பொழிலின் வண்டு பாடும் திரு நல்லூர் வான் தோயும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2088 காது அமரும் வெண் குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு உகந்தீர் தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர் மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2089 போதின் மேல் அயன் திருமால் போற்றி உம்மை காணாது நாதனே இவன் என்று நயந்து ஏத்த மகிழ்ந்து அளித்தீர் தீது இலா அந்தணர்கள் தீ மூன்று ஓம்பும் திரு நல்லூர் மாதராளவளோடும் மன்னு கோயில் மகிழ்ந்தீரே மேல் #2090 பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் ஒன்று அல்லாதார் அறவுரை விட்டு அடியார்கள் போற்று ஓவா நல்லார்கள் அந்தணர்கள் நாளும் ஏத்தும் திரு நல்லூர் மல் ஆர்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே மேல் #2091 கொந்து அணவும் பொழில் புடை சூழ் கொச்சை மேவு குல வேந்தன் செந்தமிழின் சம்பந்தன் சிறை வண் புனல் சூழ் திரு நல்லூர் பந்து அணவும் மெல்விரலாள் பங்கன்-தன்னை பயில் பாடல் சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகம் சேர்ந்து இருப்பாரே மேல் 58. திருக்குடவாயில் : பண் - காந்தாரம் #2092 கலை வாழும் அம் கையீர் கொங்கை ஆரும் கரும் கூந்தல் அலை வாழும் செம் சடையில் அரவும் பிறையும் அமர்வித்தீர் குலை வாழை கமுகம் பொன் பவளம் பழுக்கும் குடவாயில் நிலை வாழும் கோயிலே கோயிலாக நின்றீரே மேல் #2093 அடி ஆர்ந்த பைம் கழலும் சிலம்பும் ஆர்ப்ப அங்கையில் செடி ஆர்ந்த வெண் தலை ஒன்று ஏந்தி உலகம் பலி தேர்வீர் குடி ஆர்ந்த மா மறையோர் குலாவி ஏத்தும் குடவாயில் படி ஆர்ந்த கோயிலே கோயிலாக பயின்றீரே மேல் #2094 கழல் ஆர் பூம் பாதத்தீர் ஓத கடலில் விடம் உண்டு அன்று அழல் ஆரும் கண்டத்தீர் அண்டர் போற்றும் அளவினீர் குழல் ஆர் வண்டு இனங்கள் கீதத்து ஒலிசெய் குடவாயில் நிழல் ஆர்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே மேல் #2095 மறி ஆரும் கைத்தலத்தீர் மங்கை பாகம் ஆக சேர்ந்து எறி ஆரும் மா மழுவும் எரியும் ஏந்தும் கொள்கையீர் குறி ஆர வண்டு இனங்கள் தேன் மிழற்றும் குடவாயில் நெறி ஆரும் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே மேல் #2096 இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில் ஆர் உடை ஆக பிழையாத சூலம் பெய்து ஆடல் பாடல் பேணினீர் குழை ஆரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த குடவாயில் விழவு ஆர்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே மேல் #2097 அரவு ஆர்ந்த திரு மேனி ஆன வெண் நீறு ஆடினீர் இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் குரவு ஆர்ந்த பூம் சோலை வாசம் வீசும் குடவாயில் திரு ஆர்ந்த கோயிலே கோயிலாக திகழ்ந்தீரே மேல் #2098 பாடல் ஆர் வாய்மொழியீர் பைம் கண் வெள் ஏறு ஊர்தியீர் ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் கோடல் ஆர் தும்பி முரன்று இசை மிழற்றும் குடவாயில் நீடல் ஆர் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே மேல் #2099 கொங்கு ஆர்ந்த பைம் கமலத்து அயனும் குறளாய் நிமிர்ந்தானும் அங்காந்து தள்ளாட அழலாய் நிமிர்ந்தீர் இலங்கை கோன் தம் காதல் மா முடியும் தாளும் அடர்த்தீர் குடவாயில் பங்கு ஆர்ந்த கோயிலே கோயிலாக பரிந்தீரே மேல் #2100 தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் ஏசு ஆர்ந்த புன் மொழி நீத்து எழில் கொள் மாட குடவாயில் ஆசாரம் செய் மறையோர் அளவின் குன்றாது அடி போற்ற தேசு ஆர்ந்த கோயிலே கோயிலாக சேர்ந்தீரே மேல் #2101 நளிர் பூம் திரை மல்கு காழி ஞானசம்பந்தன் குளிர் பூம் குடவாயில் கோயில் மேய கோமானை ஒளிர் பூம் தமிழ் மாலை உரைத்த பாடல் இவை வல்லார் தளர்வு ஆன தாம் ஒழிய தகு சீர் வானத்து இருப்பாரே மேல் 59. சீகாழி : பண் - காந்தாரம் #2102 நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம் கலங்கள்-தன்னில் கொண்டு கரை சேர் கலி காழி வலம் கொள் மழு ஒன்று உடையாய் விடையாய் என ஏத்தி அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே மேல் #2103 ஊர் ஆர் உவரி சங்கம் வங்கம் கொடுவந்து கார் ஆர் ஓதம் கரை மேல் உயர்த்தும் கலி காழி நீர் ஆர் சடையாய் நெற்றிக்கண்ணா என்று என்று பேர் ஆயிரமும் பிதற்ற தீரும் பிணிதானே மேல் #2104 வடி கொள் பொழிலில் மழலை வரி வண்டு இசைசெய்ய கடி கொள் போதில் தென்றல் அணையும் கலி காழி முடி கொள் சடையாய் முதல்வா என்று முயன்று ஏத்தி அடி கைதொழுவார்க்கு இல்லை அல்லல் அவலமே மேல் #2105 மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலி காழி பனைக்கை பகட்டு ஈர் உரியாய் பெரியாய் என பேணி நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே மேல் #2106 பருதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலே கருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலி காழி சுருதி மறை நான்கு ஆன செம்மை தருவானை கருதி எழு-மின் வழுவா வண்ணம் துயர் போமே மேல் #2107 மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு கந்தம் மருவ வரி வண்டு இசைசெய் கலி காழி பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்தி சிந்தைசெய்வார் செம்மை நீங்காது இருப்பாரே மேல் #2108 புயல் ஆர் பூமி நாமம் ஓதி புகழ் மல்க கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலி காழி பயில்வான்-தன்னை பத்தி ஆர தொழுது ஏத்த முயல்வார்-தம் மேல் வெம்மை கூற்றம் முடுகாதே மேல் #2109 அரக்கன் முடி தோள் நெரிய அடர்த்தான் அடியார்க்கு கரக்ககில்லாது அருள்செய் பெருமான் கலி காழி பரக்கும் புகழான்-தன்னை ஏத்தி பணிவார் மேல் பெருக்கும் இன்பம் துன்பம் ஆன பிணி போமே மேல் #2110 மாணாய் உலகம் கொண்ட மாலும் மலரோனும் காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலி காழி பூண் ஆர் முலையாள் பங்கத்தானை புகழ்ந்து ஏத்தி கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை குற்றமே மேல் #2111 அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண் ஆதர் கஞ்சி காலை உண்பார்க்கு அரியான் கலி காழி தஞ்சம் ஆய தலைவன் தன்னை நினைவார்கள் துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே மேல் #2112 ஊழி ஆய பாரில் ஓங்கும் உயர் செல்வ காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன் தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவை வல்லார் வாழி நீங்கா வானோர்_உலகில் மகிழ்வாரே மேல் 60. திருப்பாசூர் : பண் - காந்தாரம் #2113 சிந்தை இடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார் வந்து மாலை வைகும் போழ்து என் மனத்து உள்ளார் மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் பைம் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே மேல் #2114 பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மான் என்று ஆரும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும் பாரின் மிசையார் பாடல் ஓவா பாசூரே மேல் #2115 கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார் நெய் ஆடுதல் அஞ்சு உடையார் நிலாவும் ஊர் போலும் பை வாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே மேல் #2116 பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொலிவு எய்த கொங்கு ஆர் கொன்றை சூடி என் உள்ளம் குளிர்வித்தார் தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும் பைம் கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே மேல் #2117 ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும் சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் வாடல் தலையில் பலி தேர் கையார் ஊர் போலும் பாடல் குயில்கள் பயில் பூம் சோலை பாசூரே மேல் #2118 கால் நின்று அதிர கனல் வாய் நாகம் கச்சு ஆக தோல் ஒன்று உடையார் விடையார்-தம்மை தொழுவார்கள் மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் பால் வெண் மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே மேல் #2119 கண்ணின் அயலே கண் ஒன்று உடையார் கழல் உன்னி எண்ணும்தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார் உள் நின்று உருக உவகை தருவார் ஊர் போலும் பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூரே மேல் #2120 தேசு குன்றா தெண் நீர் இலங்கை_கோமானை கூச அடர்த்து கூர் வாள் கொடுப்பார் தம்மையே பேசி பிதற்ற பெருமை தருவார் ஊர் போலும் பாசி தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே மேல் #2121 நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் புகு வாய் அறியார் புறம் நின்று ஓரார் போற்று ஓவார் செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர் போலும் பகு வாய் நாரை ஆரல் வாரும் பாசூரே மேல் #2122 தூய வெயில் நின்று உழல்வார் துவர் தோய் ஆடையார் நாவில் வெய்ய சொல்லி திரிவார் நயம் இல்லார் காவல் வேவ கணை ஒன்று எய்தார் ஊர் போலும் பாவை குரவம் பயில் பூம் சோலை பாசூரே மேல் #2123 ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன் தேனும் வண்டும் இன்னிசை பாடும் திரு பாசூர் கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார் ஊனம் இலராய் உம்பர் வானத்து உறைவாரே மேல் 61. திருவெண்காடு : பண் - காந்தாரம் #2124 உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி தொண்டாய் திரியும் அடியார்-தங்கள் துயரங்கள் அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர் போலும் வெண்தாமரை மேல் கரு வண்டு யாழ்செய் வெண்காடே மேல் #2125 நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி பாதம் பல் நாள் பணியும் அடியார்கள்-தங்கள் மேல் ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர் போலும் வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே மேல் #2126 தண் முத்து அரும்ப தடம் மூன்று உடையான்-தனை உன்னி கண் முத்து அரும்ப கழல் சேவடி கைதொழுவார்கள் உள் முத்து அரும்ப உவகை தருவான் ஊர் போலும் வெண் முத்து அருவி புனல் வந்து அலைக்கும் வெண்காடே மேல் #2127 நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே கரையா வண்ணம் கண்டான் மேவும் ஊர் போலும் விரை ஆர் கமலத்து அன்னம் மருவும் வெண்காடே மேல் #2128 பிள்ளை பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள் தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் வெள்ளை சுரி சங்கு உலவி திரியும் வெண்காடே மேல் #2129 ஒளி கொள் மேனி உடையாய் உம்பராளீ என்று அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார்கட்கு எளியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே மேல் #2130 கோள் வித்து அனைய கூற்றம்-தன்னை குறிப்பினால் மாள்வித்து அவனை மகிழ்ந்து அங்கு ஏத்து மாணிக்காய் ஆள்வித்து அமரர்_உலகம் அளிப்பான் ஊர் போலும் வேள்வி புகையால் வானம் இருள் கூர் வெண்காடே மேல் #2131 வளை ஆர் முன்கை மலையாள் வெருவ வரை ஊன்றி முளை ஆர் மதியம் சூடி என்றும் முப்போதும் இளையாது ஏத்த இருந்தான் எந்தை ஊர் போலும் விளை ஆர் கழனி பழனம் சூழ்ந்த வெண்காடே மேல் #2132 கரியானோடு கமல மலரான் காணாமை எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு உரியான் அமரர்க்கு அரியான் வாழும் ஊர் போலும் விரி ஆர் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே மேல் #2133 பாடும் அடியார் பலரும் கூடி பரிந்து ஏத்த ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவு இன்றி மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே மேல் #2134 விடை ஆர் கொடியான் மேவி உறையும் வெண்காட்டை கடை ஆர் மாடம் கலந்து தோன்றும் காழியான் நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அடையா வினைகள் அமரலோகம் ஆள்வாரே மேல் 62. திருமீயச்சூர் : பண் - காந்தாரம் #2135 காய செவ்வி காமன் காய்ந்து கங்கையை பாய படர் புன் சடையில் பதித்த பரமேட்டி மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே மேல் #2136 பூ ஆர் சடையின் முடி மேல் புனலர் அனல் கொள்வர் நா ஆர் மறையர் பிறையர் நற வெண் தலை ஏந்தி ஏ ஆர் மலையே சிலையா கழி அம்பு எரி வாங்கி மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே மேல் #2137 பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான் மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் அ நேர் இமையோர்_உலகம் எய்தற்கு அரிது அன்றே மேல் #2138 வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து பாகம் உமையோடு ஆக படிதம் பல பாட நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே மேல் #2139 விடை ஆர் கொடியார் சடை மேல் விளங்கும் பிறை வேடம் படை ஆர் பூதம் சூழ பாடல் ஆடலார் பெடை ஆர் வரி வண்டு அணையும் பிணை சேர் கொன்றையார் விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே மேல் #2140 குளிரும் சடை கொள் முடி மேல் கோலம் ஆர் கொன்றை ஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன் கை கோடி நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே மேல் #2141 நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார் கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார் காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர் மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே மேல் #2142 புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர் ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச வலிய திரள் தோள் வன்கண் அரக்கர்_கோன்-தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே மேல் #2143 காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார் போதிலவனும் மாலும் தொழ பொங்கு எரி ஆனார் கோதி வரி வண்டு அறை பூம் பொய்கை புனல் மூழ்கி மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே மேல் #2144 கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டை கொண்டார் சொல்லை குறுகார் உயர்ந்த கொள்கையார் பெண்தான் பாகம் உடையார் பெரிய வரை வில்லா விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே மேல் #2145 வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர் நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் பாடல் ஆய தமிழ் ஈர்_ஐந்தும் மொழிந்து உள்கி ஆடும் அடியார் அகல் வான்_உலகம் அடைவாரே மேல் 63. திருஅரிசிற்கரைப்புத்தூர் : பண் - காந்தாரம் #2146 மின்னும் சடை மேல் இள வெண் திங்கள் விளங்கவே துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு பொன்னும் மணியும் பொரு தென்கரை மேல் புத்தூரே மேல் #2147 மேவா அசுரர் மேவு எயில் வேவ மலை வில்லால் ஏ ஆர் எரி வெம் கணையால் எய்தான் எய்தும் ஊர் நாவால் நாதன் நாமம் ஓதி நாள்-தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே மேல் #2148 பல் ஆர் தலை சேர் மாலை சூடி பாம்பும் பூண்டு எல்லா இடமும் வெண் நீறு அணிந்து ஓர் ஏறு ஏறி கல் ஆர் மங்கை பங்கரேனும் காணும்-கால் பொல்லார் அல்லர் அழகியர் புத்தூர் புனிதரே மேல் #2149 வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச வருகின்ற கரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் அரி ஏர் கழனி பழனம் சூழ்ந்து அங்கு அழகு ஆய பொரி ஏர் புன்கு சொரி பூம் சோலை புத்தூரே மேல் #2150 என்போடு அரவம் ஏனத்து எயிறோடு எழில் ஆமை மின் போல் புரி நூல் விரவி பூண்ட வரை மார்பர் அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் பொன் போது அலர் கோங்கு ஓங்கு சோலை புத்தூரே மேல் #2151 வள்ளி முலை தோய் குமரன் தாதை வான் தோயும் வெள்ளி மலை போல் விடை ஒன்று உடையான் மேவும் ஊர் தெள்ளி வரு நீர் அரிசில் தென்-பால் சிறை வண்டும் புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே மேல் #2152 நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான் சிலந்தி செங்கண்சோழன் ஆக செய்தான் ஊர் அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே மேல் #2153 இ தேர் ஏக இ மலை பேர்ப்பன் என்று ஏந்தும் பத்து ஓர் வாயான் வரை கீழ் அலற பாதம்தான் வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும் ஊரான புத்தூர் காண புகுவார் வினைகள் போகுமே மேல் #2154 முள் ஆர் கமலத்து அயன் மால் முடியோடு அடி தேட ஒள் ஆர் எரியாய் உணர்தற்கு அரியான் ஊர் போலும் கள் ஆர் நெய்தல் கழுநீர் ஆம்பல் கமலங்கள் புள் ஆர் பொய்கை பூ பல தோன்றும் புத்தூரே மேல் #2155 கை ஆர் சோறு கவர் குண்டர்களும் துவருண்ட மெய் ஆர் போர்வை மண்டையர் சொல்லு மெய் அல்ல பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா என்பார்க்கு ஐயுறவு இன்றி அழகு ஆமே மேல் #2156 நறவம் கமழ் பூம் காழி ஞானசம்பந்தன் பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர் மேல் செறி வண் தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள் அறவன் கழல் சேர்ந்து அன்போடு இன்பம் அடைவாரே மேல் 64. திருமுதுகுன்றம் : பண் - காந்தாரம் #2157 தேவா சிறியோம் பிழையை பொறுப்பாய் பெரியோனே ஆவா என்று அங்கு அடியார்-தங்கட்கு அருள்செய்வாய் ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்று ஏத்தி மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே மேல் #2158 எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார் சிந்தை உள்ளே கோயிலாக திகழ்வானை மந்தி ஏறி இனம் ஆம் மலர்கள் பல கொண்டு முந்தி தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே மேல் #2159 நீடும் அலரும் புனலும் கொண்டு நிரந்தரம் தேடும் அடியார் சிந்தை உள்ளே திகழ்வானை பாடும் குயிலின் அயலே கிள்ளை பயின்று ஏத்த மூடும் சோலை முகில் தோய் கோயில் முதுகுன்றே மேல் #2160 தெரிந்த அடியார் சிவனே என்று திசை-தோறும் குருந்த மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி இருந்தும் நின்றும் இரவும் பகலும் ஏத்தும் சீர் முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே மேல் #2161 வைத்த நிதியே மணியே என்று வருந்தி தம் சித்தம் நைந்து சிவனே என்பார் சிந்தையார் கொத்து ஆர் சந்தும் குரவும் வாரி கொணர்ந்து உந்தும் முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே மேல் #2162 வம்பு ஆர் கொன்றை வன்னி மத்த மலர் தூவி நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் மொய்ம்பு ஆர் சோலை வண்டு பாடும் முதுகுன்றே மேல் #2163 வாசம் கமழும் பொழில் சூழ் இலங்கை வாழ் வேந்தை நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் பூசை செய்த அடியார் நின்று புகழ்ந்து ஏத்த மூசி வண்டு பாடும் சோலை முதுகுன்றே மேல் #2164 அல்லி மலர் மேல் அயனும் அரவின்_அணையானும் சொல்லி பரவி தொடர ஒண்ணா சோதி ஊர் கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட முல்லை அயலே முறுவல்செய்யும் முதுகுன்றே மேல் #2165 கருகும் உடலார் கஞ்சி உண்டு கடுவே தின்று உருகு சிந்தை இல்லார்க்கு அயலான் உறை கோயில் திருகல் வேய்கள் சிறிதே வளைய சிறு மந்தி முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே மேல் #2166 அறை ஆர் கடல் சூழ் அம் தண் காழி சம்பந்தன் முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றை குறையா பனுவல் கூடி பாட வல்லார்கள் பிறை ஆர் சடை எம்பெருமான் கழல்கள் பிரியாரே மேல் 65. திருப்பிரமபுரம் : பண் - காந்தாரம் #2167 கறை அணி வேல் இலர் போலும் கபாலம் தரித்திலர் போலும் மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும் பறையும் கரத்து இலர் போலும் பாசம் பிடித்திலர் போலும் பிறையும் சடைக்கு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2168 கூர் அம்பு அது இலர் போலும் கொக்கின் இறகு இலர் போலும் ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலும் தாரும் சடைக்கு இலர் போலும் சண்டிக்கு அருளிலர் போலும் பேரும் பல இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2169 சித்த வடிவு இலர் போலும் தேசம் திரிந்திலர் போலும் கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும் மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும் பித்த வடிவு இலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2170 நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் கச்சு தரித்திலர் போலும் கங்கை தரித்திலர் போலும் மொய்ச்ச வன் பேய் இலர் போலும் முப்புரம் எய்திலர் போலும் பிச்சை இரந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2171 தோடு செவிக்கு இலர் போலும் சூலம் பிடித்திலர் போலும் ஆடு தட கை வலிய ஆனை உரித்திலர் போலும் ஓடு கரத்து இலர் போலும் ஒள் அழல் கை இலர் போலும் பீடு மிகுத்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2172 விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி அழித்திலர் போலும் அண்ணல் அயன் தலை வீழ அன்றும் அறுத்திலர் போலும் வண்ண எலும்பினொடு அக்கு வடங்கள் தரித்திலர் போலும் பெண் இனம் மொய்த்து எழு செல்வ பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2173 பன்றியின் கொம்பு இலர் போலும் பார்த்தற்கு அருள் இலர் போலும் கன்றிய காலனை வீழ கால்கொடு பாய்ந்திலர் போலும் துன்று பிணம் சுடுகாட்டில் ஆடி துதைந்திலர் போலும் பின்றியும் பீடும் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2174 பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும் அரசன் இலங்கையர்_கோனை அன்றும் அடர்த்திலர் போலும் புரை செய் புனத்து இள மானும் புலியின் அதள் இலர் போலும் பிரச மலர் பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2175 அடி முடி மால் அயன் தேட அன்றும் அளப்பிலர் போலும் கடி மலர் ஐ கணை வேளை கனல விழித்திலர் போலும் படி மலர் பாலனுக்காக பாற்கடல் ஈந்திலர் போலும் பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2176 வெற்று அரை சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும் அற்றவர் ஆல் நிழல் நால்வர்க்கு அறங்கள் உரைத்திலர் போலும் உற்றவர் ஒன்று இலர் போலும் ஓடு முடிக்கு இலர் போலும் பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே மேல் #2177 பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகைவகையாலே நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் விண்ணவரொடு இனிதாக வீற்றிருப்பார் அவர்தாமே மேல் 66. திருஆலவாய் : திருநீற்றுப்பதிகம் : பண் - காந்தாரம் #2178 மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செம் துவர் வாய் உமை_பங்கன் திரு ஆலவாயான் திருநீறே மேல் #2179 வேதத்தில் உள்ளது நீறு வெம் துயர் தீர்ப்பது நீறு போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓத தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு சீத புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே மேல் #2180 முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே மேல் #2181 காண இனியது நீறு கவினை தருவது நீறு பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணம் தகைவது நீறு மதியை தருவது நீறு சேணம் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே மேல் #2182 பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு பேச இனியது நீறு பெரும் தவத்தோர்களுக்கு எல்லாம் ஆசை கெடுப்பது நீறு அந்தம் அது ஆவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே மேல் #2183 அருத்தம் அது ஆவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம் அது ஆவது நீறு புண்ணியர் பூசும் வெண் நீறு திரு தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே மேல் #2184 எயில் அது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு துயிலை தடுப்பது நீறு சுத்தம் அது ஆவது நீறு அயிலை பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே மேல் #2185 இராவணன் மேலது நீறு எண்ண தகுவது நீறு பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு அரா அணங்கும் திரு மேனி ஆலவாயான் திருநீறே மேல் #2186 மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு மேல் உறை தேவர்கள்-தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே மேல் #2187 குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு எண் திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே மேல் #2188 ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றை போற்றி புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றி தென்னன் உடல் உற்ற தீ பிணி ஆயின தீர சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே மேல் 67. திருப்பெரும்புலியூர் : பண் - காந்தாரம் #2189 மண்ணும் ஓர் பாகம் உடையார் மாலும் ஓர் பாகம் உடையார் விண்ணும் ஓர் பாகம் உடையார் வேதம் உடைய விமலர் கண்ணும் ஓர் பாகம் உடையார் கங்கை சடையில் கரந்தார் பெண்ணும் ஓர்பாகம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2190 துன்னு கடல் பவளம் சேர் தூயன நீண்ட திண் தோள்கள் மின்னு சுடர் கொடி போலும் மேனியினார் ஒரு கங்கை கன்னிகளின் புனையோடு கலை மதி மாலை கலந்த பின்னு சடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2191 கள்ளம் மதித்த கபாலம் கை-தனிலே மிக ஏந்தி துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலர் எழில் மிகு செல்வர் வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற பிள்ளை மதி பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2192 ஆடல் இலையம் உடையார் அரு மறை தாங்கி ஆறு அங்கம் பாடல் இலையம் உடையார் பன்மை ஒருமை செய்து அஞ்சும் ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி பீடு அல் இலையம் உடையார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2193 தோடு உடையார் குழை காதில் சுடு பொடியார் அனல் ஆட காடு உடையார் எரி வீசும் கை உடையார் கடல் சூழ்ந்த நாடு உடையார் பொருள் இன்பம் நல்லவை நாளும் நயந்த பீடு உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2194 கற்றது உற பணி செய்து காண்டும் என்பாரவர்-தம் கண் முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் வேதபுராணர் மற்று இது அறிதும் என்பார்கள் மனத்திடையார் பணி செய்ய பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2195 மறை உடையார் ஒலி பாடல் மா மலர் சேவடி சேர்வார் குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் கறை உடையார் திகழ் கண்டம் கங்கை சடையில் கரந்தார் பிறை உடையார் சென்னி-தன் மேல் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2196 உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடு எளிது ஆகி துறவியும் கூட்டமும் காட்டி துன்பமும் இன்பமும் தோற்றி மறவி அம் சிந்தனை மாற்றி வாழ வல்லார்-தமக்கு என்றும் பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2197 சீர் உடையார் அடியார்கள் சேடர் ஒப்பார் சடை சேரும் நீர் உடையார் பொடி பூசும் நினைப்பு உடையார் விரி கொன்றை தார் உடையார் விடை ஊர்வார் தலைவர் ஐ_நூற்று_பத்து ஆய பேர் உடையார் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2198 உரிமை உடைய அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு அருமை உடையன காட்டி அருள்செயும் ஆதிமுதல்வர் கருமை உடை நெடு மாலும் கடி மலர் அண்ணலும் காணா பெருமை உடை பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே மேல் #2199 பிறை வளரும் முடி சென்னி பெரும்புலியூர் பெருமானை நறை வளரும் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் மறை வளரும் தமிழ் மாலை வல்லவர் தம் துயர் நீங்கி நிறை வளர் நெஞ்சினர் ஆகி நீடு உலகத்து இருப்பாரே மேல் 68. திருக்கடம்பூர் : பண் - காந்தாரம் #2200 வான் அமர் திங்களும் நீரும் மருவிய வார் சடையானை தேன் அமர் கொன்றையினானை தேவர் தொழப்படுவானை கான் அமரும் பிணை புல்கி கலை பயிலும் கடம்பூரில் தான் அமர் கொள்கையினானை தாள் தொழ வீடு எளிது ஆமே மேல் #2201 அரவினொடு ஆமையும் பூண்டு அம் துகில் வேங்கை அதளும் விரவும் திரு முடி-தன் மேல் வெண் திங்கள் சூடி விரும்பி பரவும் தனி கடம்பூரில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் பாதம் இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே மேல் #2202 இளி படும் இன்சொலினார்கள் இரும் குழல் மேல் இசைந்து ஏற தெளிபடு கொள்கை கலந்த தீ தொழிலார் கடம்பூரில் ஒளி தரு வெண் பிறை சூடி ஒண்_நுதலோடு உடன் ஆகி புலி அதள் ஆடை புனைந்தான் பொன் கழல் போற்றுதும் நாமே மேல் #2203 பறையொடு சங்கம் இயம்ப பல் கொடி சேர் நெடு மாடம் கறை உடை வேல் வரிக்கண்ணார் கலை ஒலி சேர் கடம்பூரில் மறையொடு கூடிய பாடல் மருவி நின்று ஆடல் மகிழும் பிறை உடை வார் சடையானை பேண வல்லார் பெரியோரே மேல் #2204 தீ விரிய கழல் ஆர்ப்ப சேய் எரி கொண்டு இடுகாட்டில் நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் கா விரி கொன்றை கலந்த கண்_நுதலான் கடம்பூரில் பா விரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே மேல் #2205 தண் புனல் நீள் வயல்-தோறும் தாமரை மேல் அனம் வைக கண் புணர் காவில் வண்டு ஏற கள் அவிழும் கடம்பூரில் பெண் புனை கூறு உடையானை பின்னு சடை பெருமானை பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர்தாமே மேல் #2206 பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத கலி கெழு வீதி கலந்த கார் வயல் சூழ் கடம்பூரில் ஒலி திகழ் கங்கை கரந்தான் ஒண்_நுதலாள் உமை_கேள்வன் புலி அதள் ஆடையினான்-தன் புனை கழல் போற்றல் பொருளே மேல் #2207 பூம் படுகில் கயல் பாய புள் இரிய புறங்காட்டில் காம்பு அடு தோளியர் நாளும் கண் கவரும் கடம்பூரில் மேம்படு தேவி ஓர்பாகம் மேவி எம்மான் என வாழ்த்தி தேம் படு மா மலர் தூவி திசை தொழ தீய கெடுமே மேல் #2208 திரு மரு மார்பிலவனும் திகழ்தரு மா மலரோனும் இருவருமாய் அறிவு ஒண்ணா எரி உரு ஆகிய ஈசன் கரு வரை காலில் அடர்த்த கண்_நுதலான் கடம்பூரில் மருவிய பாடல் பயில்வார் வான்_உலகம் பெறுவாரே மேல் #2209 ஆடை தவிர்த்து அறம் காட்டுமவர்களும் அம் துவர் ஆடை சோடைகள் நன்நெறி சொல்லார் சொல்லினும் சொல் அல கண்டீர் வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே மேல் #2210 விடை நவிலும் கொடியானை வெண் கொடி சேர் நெடு மாடம் கடை நவிலும் கடம்பூரில் காதலனை கடல் காழி நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே மேல் 69. திருப்பாண்டிக்கொடுமுடி : பண் - காந்தாரம் #2211 பெண் அமர் மேனியினாரும் பிறை புல்கு செம் சடையாரும் கண் அமர் நெற்றியினாரும் காது அமரும் குழையாரும் எண் அமரும் குணத்தாரும் இமையவர் ஏத்த நின்றாரும் பண் அமர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2212 தனை கணி மா மலர் கொண்டு தாள் தொழுவாரவர்-தங்கள் வினை பகை ஆயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2213 சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும் புடை அமர் பூதத்தினாரும் பொறி கிளர் பாம்பு அசைத்தாரும் விடை அமரும் கொடியாரும் வெண் மழு மூ இலை சூல படை அமர் கொள்கையினாரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2214 நறை வளர் கொன்றையினாரும் ஞாலம் எல்லாம் தொழுது ஏத்த கறை வளர் மா மிடற்றாரும் காடு அரங்கா கனல் ஏந்தி மறை வளர் பாடலினோடு மண் முழவம் குழல் மொந்தை பறை வளர் பாடலினாரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2215 போகமும் இன்பமும் ஆகி போற்றி என்பாரவர்-தங்கள் ஆகம் உறைவிடம் ஆக அமர்ந்தவர் கொன்றையினோடும் நாகமும் திங்களும் சூடி நன் நுதல் மங்கை-தன் மேனி பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2216 கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் பொடிபட முப்புரம் செற்ற பொரு சிலை ஒன்று உடையாரும் வடிவு உடை மங்கை-தன்னோடு மணம் படு கொள்கையினாரும் படி படு கோலத்தினாரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2217 ஊன் அமர் வெண் தலை ஏந்தி உண் பலிக்கு என்று உழல்வாரும் தேன் அமரும் மொழி மாது சேர் திரு மேனியினாரும் கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரி கோல கரை மேல் பால் நல நீறு அணிவாரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2218 புரந்தரன்-தன்னொடு வானோர் போற்றி என்று ஏத்த நின்றாரும் பெரும் திறல் வாள் அரக்கன்னை பேர் இடர் செய்து உகந்தாரும் கரும் திரை மா மிடற்றாரும் கார் அகில் பல் மணி உந்தி பரந்து இழி காவிரி பாங்கர் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2219 திருமகள் காதலினானும் திகழ்தரு மா மலர் மேலை பெருமகனும் அவர் காணா பேர் அழல் ஆகிய பெம்மான் மரு மலி மென் மலர் சந்து வந்து இழி காவிரி மாடே பரு மணி நீர் துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2220 புத்தரும் புந்தி இலாத சமணரும் பொய்ம்மொழி அல்லால் மெய் தவம் பேசிடமாட்டார் வேடம் பலபலவற்றால் சித்தரும் தேவரும் கூடி செழு மலர் நல்லன கொண்டு பத்தியினால் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே மேல் #2221 கலம் மல்கு தண் கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் பலம் மல்கு வெண் தலை ஏந்தி பாண்டிக்கொடுமுடி-தன்னை சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து நலம் மல்கு சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே மேல் 70. திருப்பிரமபுரம் : பண் - காந்தாரம் - திருச்சக்கரமாற்று #2222 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு பெருநீர் தோணி புரம் மன்னு பூந்தராய் பொன் அம் சிரபுரம் புறவம் சண்பை அரன் மன்னு தண் காழி கொச்சைவயம் உள்ளிட்டு அங்கு ஆதி ஆய பரமன் ஊர் பன்னிரண்டாய் நின்ற திரு கழுமலம் நாம் பரவும் ஊரே மேல் #2223 வேணுபுரம் பிரமனூர் புகலி பெரு வெங்குரு வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் பூந்தராய் தூ நீர் சிரபுரம் புறவம் காழி கோணிய கோட்டாற்று கொச்சைவயம் சண்பை கூரும் செல்வம் காணிய வையகத்தார் ஏத்தும் கழுமலம் நாம் கருதும் ஊரே மேல் #2224 புகலி சிரபுரம் வேணுபுரம் சண்பை புறவம் காழி நிகர் இல் பிரமபுரம் கொச்சைவயம் நீர் மேல் நின்ற மூதூர் அகலிய வெங்குருவோடு அம் தண் தராய் அமரர்_பெருமாற்கு இன்பம் பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே மேல் #2225 வெங்குரு தண் புகலி வேணுபுரம் சண்பை வெள்ளம் கொள்ள தொங்கிய தோணிபுரம் புந்தராய் தொகு பிரமபுரம் தொல் காழி தங்கு பொழில் புறவம் கொச்சைவயம் தலை பண்டு ஆண்ட மூதூர் கங்கை சடைமுடி மேல் ஏற்றான் கழுமலம் நாம் கருதும் ஊரே மேல் #2226 தொல் நீரில் தோணிபுரம் புகலி வெங்குரு துயர் தீர் காழி இன் நீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழில் ஆர் சண்பை நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல பொன் நீர புன் சடையான் பூம் தண் கழுமலம் நாம் புகழும் ஊரே மேல் #2227 தண் அம் தராய் புகலி தாமரையானூர் சண்பை தலை முன் ஆண்ட அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி விண் இயல் சீர் வெங்குரு நல் வேணுபுரம் தோணிபுரம் மேலார் ஏத்து கண்_நுதலான் மேவிய நல் கழுமலம் நாம் கைதொழுது கருதும் ஊரே மேல் #2228 சீர் ஆர் சிரபுரமும் கொச்சைவயம் சண்பையொடு புறவம் நல்ல ஆரா தராய் பிரமனூர் புகலி வெங்குருவொடு அம் தண் காழி ஏர் ஆர் கழுமலமும் வேணுபுரம் தோணிபுரம் என்று என்று உள்கி பேரால் நெடியவனும் நான்முகனும் காண்பு அரிய பெருமான் ஊரே மேல் #2229 புறவம் சிரபுரமும் தோணிபுரம் சண்பை மிகு புகலி காழி நறவம் மிகு சோலை கொச்சைவயம் தராய் நான்முகன்-தன் ஊர் விறல் ஆய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேல் அம்பு எய்து திறலால் அரக்கனை செற்றான்-தன் கழுமலம் நாம் சேரும் ஊரே மேல் #2230 சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே மேல் #2231 செழு மலிய பூம் காழி புறவம் சிரபுரம் சீர் புகலி செய்ய கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய விழுமிய சீர் வெங்குருவொடு ஓங்கு தராய் வேணுபுரம் மிகு நல் மாட கழுமலம் என்று இன்ன பெயர் பன்னிரண்டும் கண்_நுதலான் கருதும் ஊரே மேல் #2232 கொச்சைவயம் பிரமனூர் புகலி வெங்குரு புறவம் காழி நிச்சல் விழவு ஓவா நீடு ஆர் சிரபுரம் நீள் சண்பை மூதூர் நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் அச்சங்கள் தீர்த்து அருளும் அம்மான் கழுமலம் நாம் அமரும் ஊரே மேல் #2233 காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும் பாவிய சீர் பன்னிரண்டும் நன் நூலா பத்திமையால் பனுவல் மாலை நாவின் நலம் புகழ் சீர் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன மேவி இசை மொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்புளாரே மேல் 71. திருக்குறும்பலா : பண் - காந்தாரம் #2234 திருந்த மதி சூடி தெண் நீர் சடை கரந்து தேவி பாகம் பொகுந்தி பொருந்தாத வேடத்தால் காடு உறைதல் புரிந்த செல்வர் இருந்த இடம் வினவில் ஏலம் கமழ் சோலை இன வண்டு யாழ்செய் குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே மேல் #2235 நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட கோள் பலவின் தீம் கனியை மா கடுவன் உண்டு உகளும் குறும்பலாவே மேல் #2236 வாடல் தலை மாலை சூடி புலி தோல் வலித்து வீக்கி ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே மேல் #2237 பால் வெண் மதி சூடி பாகத்து ஓர் பெண் கலந்து பாடி ஆடி காலன் உடல் கிழிய காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல் கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே மேல் #2238 தலை வாள் மதியம் கதிர் விரிய தண் புனலை தாங்கி தேவி முலை பாகம் காதலித்த மூர்த்தி இடம் போலும் முது வேய் சூழ்ந்த மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல் குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே மேல் #2239 நீற்று ஏர் துதைந்து இலங்கு வெண் நூலர் தண் மதியர் நெற்றிக்கண்ணர் கூற்று ஏர் சிதைய கடிந்தார் இடம் போலும் குளிர் சூழ் வெற்பில் ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல் கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே மேல் #2240 பொன் தொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடி பின் தொத்த வார் சடை எம்பெம்மான் இடம் போலும் பிலயம் தாங்கி மன்றத்து மண் முழவம் ஓங்கி மணி கொழித்து வயிரம் உந்தி குன்றத்து அருவி அயலே புனல் ததும்பும் குறும்பலாவே மேல் #2241 ஏந்து திணி திண் தோள் இராவணனை மால் வரை கீழ் அடர ஊன்றி சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி கூந்தல் பிடியும் களிறும் உடன் வணங்கும் குறும்பலாவே மேல் #2242 அரவின்_அணையானும் நான்முகனும் காண்பு அரிய அண்ணல் சென்னி விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல் மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே மேல் #2243 மூடிய சீவரத்தர் முன்கூறு உண்டு ஏறுதலும் பின்கூறு உண்டு காடி தொடு சமணை காய்ந்தார் இடம் போலும் கல் சூழ் வெற்பில் நீடு உயர் வேய் குனிய பாய் கடுவன் நீள் கழை மேல் நிருத்தம் செய்ய கூடிய வேடுவர்கள் கூய் விளியா கை மறிக்கும் குறும்பலாவே மேல் #2244 கொம்பு ஆர் பூம் சோலை குறும்பலா மேவிய கொல் ஏற்று அண்ணல் நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன இன்பு ஆய பாடல் இவை பத்தும் வல்லார் விரும்பி கேட்பார் தம்பால தீவினைகள் போய் அகலும் நல்வினைகள் தளரா அன்றே மேல் 72. திருநணா : பண் - காந்தாரம் #2245 பந்து ஆர் விரல் மடவாள் பாகமா நாகம் பூண்டு ஏறு அது ஏறி அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே மேல் #2246 நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில் ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசை சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே மேல் #2247 நன்று ஆங்கு இசை மொழிந்து நன்_நுதலாள் பாகமாய் ஞாலம் ஏத்த மின் தாங்கு செம் சடை எம் விகிர்தர்க்கு இடம் போலும் விரை சூழ் வெற்பில் குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே மேல் #2248 கையில் மழு ஏந்தி காலில் சிலம்பு அணிந்து கரி தோல் கொண்டு மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் மிடைந்து வானோர் ஐய அரனே பெருமான் அருள் என்று என்று ஆதரிக்க செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே மேல் #2249 முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த அ தேன் அளி உண் களியால் இசை முரல ஆல தும்பி தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே மேல் #2250 வில் ஆர் வரை ஆக மா நாகம் நாண் ஆக வேடம் கொண்டு புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம் போலும் புலியும் மானும் அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே மேல் #2251 கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் நானாவிதத்தால் விரதிகள் நன் நாமமே ஏத்தி வாழ்த்த தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே மேல் #2252 மன் நீர் இலங்கையர்-தம்_கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் அல் நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில் செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே மேல் #2253 மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் கை ஆர் பலி ஏற்ற கள்வன் இடம் போலும் கழல்கள் நேடி பொய்யா மறையானும் பூமி அளந்தானும் போற்ற மன்னி செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே மேல் #2254 ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார் அல்லல் பேசி மூடு உருவம் உகந்தார் உரை அகற்றும் மூர்த்தி கோயில் ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே மேல் #2255 கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழி கவுணி சீர் ஆர் நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும் சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர் இ மண்ணின் மேலே மேல் 73. திருப்பிரமபுரம் : பண் - காந்தாரம் #2256 விளங்கிய சீர் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல் களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன இளங்குமரன்-தன்னை பெற்று இமையவர்-தம் பகை எறிவித்த இறைவன் ஊரே மேல் #2257 திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் அயனூர் தெய்வத் தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தகு சண்பை ஒண் பா உரு வளர் வெங்குரு புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்த தேவர் வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே மேல் #2258 வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழ் ஊர் ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன் வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர்_கோன்ஊர் ஆய்ந்த கலை ஆர் புகலி வெங்குரு அது அரன் நாளும் அமரும் ஊரே மேல் #2259 மா மலையாள்_கணவன் மகிழ் வெங்குரு மா புகலி தராய் தோணிபுரம் வான் சேம மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்ஊர் சீர் பூமகனூர் பொலிவு உடைய புறவம் விறல் சிலம்பனூர் காழி சண்பை பா மருவு கலை எட்டு_எட்டு உணர்ந்து அவற்றின் பயின் நுகர்வோர் பரவும் ஊரே மேல் #2260 தரை தேவர் பணி சண்பை தமிழ் காழி வயம் கொச்சை தயங்கு பூ மேல் விரை சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர்-தம்_கோன்ஊர் வென்றி திரை சேரும் புனல் புகலி வெங்குரு செல்வம் பெருகு தோணிபுரம் சீர் உரை சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில் உயர்ந்த ஊரே மேல் #2261 புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம் மிகு சிரபுரம் பூம் காழி சண்பை எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய் தோணிபுரம் சீர் வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நல் கொச்சை வானவர்-தம்_கோன்ஊர் அண்டு அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த அப்பன் ஊரே மேல் #2262 வண்மை வளர் வரத்து அயனூர் வானவர்-தம்_கோன்ஊர் வண் புகலி இஞ்சி வெண் மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன் காழி கொச்சை கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம் பூந்தராய் சீர் பண் மலியும் சிரபுரம் பார் புகழ் புறவம் பால்_வண்ணன் பயிலும் ஊரே மேல் #2263 மோடி புறங்காக்கும் ஊர் புறவம் சீர் சிலம்பனூர் காழி மூதூர் நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமலம் நீடு கூடிய அயனூர் வளர் வெங்குரு புகலி தராய் தோணிபுரம் கூட போர் தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலை சிலையன் ஊரே மேல் #2264 இரக்கம் உடை இறையவன்ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்-தன்ஊர் நிரக்க வரு புனல் புறவம் நின்ற தவத்து அயனூர் சீர் தேவர்_கோன்ஊர் வர கரவா புகலி வெங்குரு மாசு இலா சண்பை காழி கொச்சை அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே மேல் #2265 மேல் ஓதும் கழுமலம் மெய் தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை நூல் ஓதும் அயன்-தன்ஊர் நுண் அறிவார் குரு புகலி தராய் தூ நீர் மேல் சேல் ஓடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செரு செய்து அன்று மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே மேல் #2266 ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர் ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் பூ கமலத்தோன் மகிழ் ஊர் புரந்தரன்ஊர் புகலி வெங்குருவும் என்பர் சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே மேல் #2267 அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர் பொய்கை புக்கரம் சேர் புறவம் சீர் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல் ஊர் மிக்கர் அம் சீர் கழுமலமே கொச்சை வயம் வேணுபுரம் அயனூர் மேல் இ சக்கரம் சீர் தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே மேல் 74. திருப்பிரமபுரம் : பண் - காந்தாரம் - திருக்கோமூத்திரி அந்தாதி #2268 பூமகனூர் புத்தேளுக்கு_இறைவன்ஊர் குறைவு இலா புகலி பூ மேல் மாமகள்ஊர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சி சேமம் மிகு சிரபுரம் சீர் புறவம் நிறை புகழ் சண்பை காழி கொச்சை காமனை முன் காய்ந்த நுதல்_கண்ணவன் ஊர் கழுமலம் நாம் கருதும் ஊரே மேல் #2269 கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய் தோணிபுரம் கனக மாட உரு திகழ் வெங்குரு புகலி ஓங்கு தராய் உலகு ஆரும் கொச்சை காழி திரு திகழும் சிரபுரம் தேவேந்திரன்ஊர் செங்கமலத்து அயனூர் தெய்வ தரு திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே மேல் #2270 ஊர் மதியை கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழி கொச்சை கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய் தோணிபுரம் கற்றோர் ஏத்தும் சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய் புறவம் அயனூர் பூம் கற்ப தார் மருவும் இந்திரனூர் புகலி வெங்குரு கங்கை தரித்தோன் ஊரே மேல் #2271 தரித்த மறையாளர் மிகு வெங்குரு சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர் கோன்ஊர் தெரித்த புகழ் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழு மறைகள் எல்லாம் விரித்த புகழ் புறவம் விரை கமலத்தோன்ஊர் உலகில் விளங்கும் ஊரே மேல் #2272 விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம் ஏய்க்கும் இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம் ஏர் ஆர் வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு களங்கம் மலி களத்தவன் சீர் கழுமலம் காமன் உடலம் காய்ந்தோன் ஊரே மேல் #2273 காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மா தோணிபுரம் சீர் ஏய்ந்த வெங்குரு புகலி இந்திரனூர் இரும் கமலத்து அயனூர் இன்பம் வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள்-தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே மேல் #2274 திகழ் மாடம் மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசு ஆர் மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம் கொச்சை புறவம் விண்ணோர் புகழ் புகலி கழுமலம் சீர் சிரபுரம் வெங்குரு வெம் போர் மகிடன் செற்று நிகழ் நீலி நின்மலன்-தன் அடி இணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே மேல் #2275 நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணு மன்றில் ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம் மோடி சென்று புறங்காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலி தேவர்_கோன்ஊர் வென்றி மலி பிரமபுரம் பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே மேல் #2276 மிக்க கமலத்து அயனூர் விளங்கு புறவம் சண்பை காழி கொச்சை தொக்க பொழில் கழுமலம் தூ தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேர் ஊர் மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் ஒக்க இருபதும் முடிகள் ஒரு பதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே மேல் #2277 எம்மான் சேர் வெங்குரு சீர் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி என்றும் பொய் மாண்பு இலோர் புறவம் கொச்சை புரந்தரன்ஊர் நல் தோணிபுரம் போர் கைம்மாவை உரிசெய்தோன் காழி அயனூர் தராய் சண்பை காரின் மெய் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம் இறைவன் ஊரே மேல் #2278 இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்கு_அதிபன் சேர்ஊர் குறைவு இல் புகழ் புகலி வெங்குரு தோணிபுரம் குணம் ஆர் பூந்தராய் நீர் சிறை மலி நல் சிரபுரம் சீர் காழி வளர் கொச்சை கழுமலம் தேசு இன்றி பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே மேல் #2279 அம்மான் சேர் கழுமலம் மா சிரபுரம் வெங்குரு கொச்சை புறவம் அம் சீர் மெய் மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்_கோன்ஊர் அம் மால் மன் உயர் சண்பை தராய் அயனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சல் தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்தாமே மேல் 75. சீகாழி : பண் - காந்தாரம் #2280 விண் இயங்கும் மதிக்கண்ணியான் விரியும் சடை பெண் நயம் கொள் திரு மேனியான் பெருமான் அனல் கண் நயம் கொள் திரு நெற்றியான் கலி காழியுள் மண் நயம் கொள் மறையாளர் ஏத்து மலர் பாதனே மேல் #2281 வலிய காலன் உயிர் வீட்டினான் மடவாளொடும் பலி விரும்பியது ஒர் கையினான் பரமேட்டியான் கலியை வென்ற மறையாளர்-தம் கலி காழியுள் நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே மேல் #2282 சுற்றல் ஆம் நல் புலி தோல் அசைத்து அயன் வெண் தலை துற்றல் ஆயது ஒரு கொள்கையான் சுடு நீற்றினான் கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலி காழியுள் மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே மேல் #2283 பல் அயங்கு தலை ஏந்தினான் படுகானிடை மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் கல் அயங்கு திரை சூழ நீள் கலி காழியுள் தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்_வண்ணனே மேல் #2284 தூ நயம் கொள் திரு மேனியில் பொடி பூசி போய் நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமா கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலி காழியுள் தேன் நயம் கொள் முடி ஆன் ஐந்து ஆடிய செல்வனே மேல் #2285 சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் கழி இலங்கும் கடல் சூழும் தண் கலி காழியுள் பழி இலங்கும் துயர் ஒன்று இலா பரமேட்டியே மேல் #2286 முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ வடி இலங்கும் கழல் ஆர்க்கவே அனல் ஏந்தியும் கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலி காழியுள் கொடி இலங்கும் இடையாளொடும் குடிகொண்டதே மேல் #2287 வல் அரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள் முடி கல் அரக்க விறல் வாட்டினான் கலி காழியுள் நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே தொல் இருக்கு மறை ஏத்து உகந்து உடன் வாழுமே மேல் #2288 மருவு நான்மறையோனும் மா மணி_வண்ணனும் இருவர் கூடி இசைந்து ஏத்தவே எரியான்-தன் ஊர் வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை கருவை ஆர் வயல் சங்கு சேர் கலி காழியே மேல் #2289 நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர் அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் கன்று மேதி இளம் கானல் வாழ் கலி காழியுள் வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே மேல் #2290 கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலி காழியுள் அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல் வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார் விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல் புகழாளரே மேல் 76. திருஅகத்தியான்பள்ளி : பண் - காந்தாரம் #2291 வாடிய வெண் தலைமாலை சூடி வயங்கு இருள் நீடு உயர் கொள்ளி விளக்கும் ஆக நிவந்து எரி ஆடிய எம்பெருமான் அகத்தியான்பள்ளியை பாடிய சிந்தையினார்கட்கு இல்லை ஆம் பாவமே மேல் #2292 துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண் நீற்றினான் மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர் அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை உன்னம்செய்த மனத்தார்கள்தாம் வினை ஓடுமே மேல் #2293 உடுத்ததுவும் புலி தோல் பலி திரிந்து உண்பதும் கடுத்து வந்த கழல் காலன்-தன்னையும் காலினால் அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகள் ஆகவே மேல் #2294 காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக்கண்ணினால் பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் ஏய்ந்ததுவும் இமவான்மகள் ஒருபாகமே மேல் #2295 போர்த்ததுவும் கரியின் உரி புலி தோல் உடை கூர்த்தது ஓர் வெண் மழு ஏந்தி கோள் அரவம் அரைக்கு ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் பார்த்ததுவும் அரணம் படர் எரி மூழ்கவே மேல் #2296 தெரிந்ததுவும் கணை ஒன்று முப்புரம் சென்று உடன் எரிந்ததுவும் முன் எழில் ஆர் மலர்_உறைவான் தலை அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் புரிந்ததுவும் உமையாள் ஓர்பாகம் புனைதலே மேல் #2297 ஓதி எல்லாம் உலகுக்கு ஒர் ஒண் பொருள் ஆகி மெய் சோதி என்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும் ஆதி எங்கள் பெருமான் அகத்தியான்பள்ளியை நீதியால் தொழுவாரவர் வினை நீங்குமே மேல் #2298 செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம் ஒறுத்ததுவும் ஒளி மா மலர்_உறைவான் சிரம் அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்-தன் தோள்கள் இருபதே மேல் #2299 சிரமும் நல்ல மத மத்தமும் திகழ் கொன்றையும் அரவும் மல்கும் சடையான் அகத்தியான்பள்ளியை பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை பரவ வல்லாரவர்-தங்கள் மேல் வினை பாறுமே மேல் #2300 செம் துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான்பள்ளியை சிந்தி-மின் நும் வினை ஆனவை சிதைந்து ஓடுமே மேல் #2301 ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மா மயில் ஆலும் சோலை புடை சூழ் அகத்தியான்பள்ளியுள் சூலம் நல்ல படையான் அடி தொழுது ஏத்திய மாலை வல்லாரவர்-தங்கள் மேல் வினை மாயுமே மேல் 77. திருஅறையணிநல்லூர் : பண் - காந்தாரம் #2302 பீடினால் பெரியோர்களும் பேதைமை கெட தீது இலா வீடினால் உயர்ந்தார்களும் வீடு இலார் இள வெண் மதி சூடினார் மறை பாடினார் சுடலை நீறு அணிந்தார் அழல் ஆடினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே மேல் #2303 இலையின் ஆர் சூலம் ஏறு உகந்து ஏறியே இமையோர் தொழ நிலையினால் ஒரு கால் உற சிலையினால் மதில் எய்தவன் அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார் அறையணிநல்லூர் தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே மேல் #2304 என்பினார் கனல் சூலத்தார் இலங்கும் மா மதி உச்சியான் பின்பினால் பிறங்கும் சடை பிஞ்ஞகன் பிறப்பிலி என்று முன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்தி-தன் தாள்களுக்கு அன்பினார் அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே மேல் #2305 விரவு நீறு பொன் மார்பினில் விளங்க பூசிய வேதியன் உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் அரவு நீள் சடை கண்ணியார் அண்ணலார் அறையணிநல்லூர் பரவுவார் பழி நீங்கிட பறையும் தாம் செய்த பாவமே மேல் #2306 தீயின் ஆர் திகழ் மேனியாய் தேவர்தாம் தொழும் தேவன் நீ ஆயினாய் கொன்றையாய் அனல் அங்கையாய் அறையணிநல்லூர் மேயினார்-தம் தொல் வினை வீட்டினாய் வெய்ய காலனை பாயினாய் அதிர் கழலினாய் பரமனே அடி பணிவனே மேல் #2307 விரையின் ஆர் கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய அரையினார் அறையணிநல்லூர் அண்ணலார் அழகு ஆயது ஓர் நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே மேல் #2308 வீரம் ஆகிய வேதியர் வேக மா களி யானையின் ஈரம் ஆகிய உரிவை போர்த்து அரிவை மேல் சென்ற எம் இறை ஆரம் ஆகிய பாம்பினார் அண்ணலார் அறையணிநல்லூர் வாரமாய் நினைப்பார்கள்-தம் வல்வினை அவை மாயுமே மேல் #2309 தக்கனார் பெரு வேள்வியை தகர்த்து உகந்தவன் தாழ் சடை முக்கணான் மறை பாடிய முறைமையான் முனிவர் தொழ அக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார் அறையணிநல்லூர் நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே மேல் #2310 வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் செய்வதே அலங்காரம் ஆம் இவைஇவை தேறி இன்புறில் ஐயம் ஏற்று உணும் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர் சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே மேல் #2311 வாக்கியம் சொல்லி யாரொடும் வகை அலா வகை செய்யன்-மின் சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி ஆக்கியம் மழுவாள் படை அண்ணலார் அறையணிநல்லூர் பாக்கியம் குறை உடையீரேல் பறையும் ஆம் செய்த பாவமே மேல் #2312 கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதி பழி இலா மறை ஞானசம்பந்தன் நல்லது ஓர் பண்பின் ஆர் மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்தி-தன் தாள் தொழ கெழுவினாரவர் தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே மேல் 78. திருவிளநகர் : பண் - காந்தாரம் #2313 ஒளிர் இளம் பிறை சென்னி மேல் உடையர் கோவண ஆடையர் குளிர் இளம் மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரி நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே மேல் #2314 அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு உக்கவர் சுடு நீறு அணிந்து ஒளி மல்கு புனல் காவிரி புக்கவர் துயர் கெடுக என பூசு வெண்பொடி மேவிய மிக்கவர் வழிபாடுசெய் விளநகர் அவர் மேயதே மேல் #2315 வாளி சேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய் தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட காளம் மல்கிய கண்டத்தர் கதிர் விரி சுடர் முடியினர் மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே மேல் #2316 கால் விளங்கு எரி கழலினார் கை விளங்கிய வேலினார் நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் மேல் விளங்கு வெண் பிறையினார் மேயது விளநகர் அதே மேல் #2317 மன்னினார் மறை பாடினார் பாய சீர் பழம் காவிரி துன்னு தண் துறை முன்னினார் தூ நெறி பெறுவார் என சென்னி திங்களை பொங்கு அரா கங்கையோடு உடன்சேர்த்தினார் மின்னு பொன் புரி நூலினார் மேயது விளநகர் அதே மேல் #2318 தேவரும் அமரர்களும் திசைகள் மேல் உள தெய்வமும் யாவரும் அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார் மூவரும் இவர் என்னவும் முதல்வரும் இவர் என்னவும் மேவ அரும் பொருள் ஆயினார் மேயது விளநகர் அதே மேல் #2319 சொல் தரும் மறை பாடினார் சுடர்விடும் சடைமுடியினார் கல் தரு வடம் கையினார் காவிரி துறை காட்டினார் மல் தரும் திரள் தோளினார் மாசு இல் வெண்பொடி பூசினார் வில் தரும் மணி மிடறினார் மேயது விளநகர் அதே மேல் #2320 படர்தரும் சடைமுடியினார் பைம் கழல் அடி பரவுவார் அடர்தரும் பிணி கெடுக என அருளுவார் அரவு அரையினார் விடர் தரும் மணி மிடறினார் மின்னு பொன் புரி நூலினார் மிடல் தரும் படைமழுவினார் மேயது விளநகர் அதே மேல் #2321 கை இலங்கிய வேலினார் தோலினார் கரி காலினார் பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார் மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் மெய் இலங்கு வெண் நீற்றினார் மேயது விளநகர் அதே மேல் #2322 உள்ளதன்-தனை காண்பன் கீழ் என்ற மா மணி_வண்ணனும் உள்ளதன்-தனை காண்பன் மேல் என்ற மா மலர்_அண்ணலும் உள்ளதன்-தனை கண்டிலார் ஒளி ஆர்தரும் சடைமுடியின் மேல் உள்ளதன்-தனை கண்டிலா ஒளியார் விளநகர் மேயதே மேல் #2323 மென் சிறை வண்டு யாழ் முரல் விளநகர் துறை மேவிய நன் பிறைநுதல் அண்ணலை சண்பை ஞானசம்பந்தன் சீர் இன்புறும் தமிழால் சொன்ன ஏத்துவார் வினை நீங்கி போய் துன்புறும் துயரம் இலா தூ நெறி பெறுவார்களே மேல் 79. திருவாரூர் : பண் - காந்தாரம் #2324 பவனமாய் சோடையாய் நா எழா பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிவன தாள் சிந்தியா பேதைமார் போல நீ வெள்கினாயே கவனமாய் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள_கண்டன் அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2325 தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2326 நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால் குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது என குலுங்கினாயே வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம் கொடு ஏத்தும் அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே மேல் #2327 நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள் வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2328 பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்ப துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது என தூங்கினாயே மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2329 செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை கடி கொள் பூம் தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2330 ஏறு மால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே மாறு இலா வன முலை மங்கை ஓர்பங்கினர் மதியம் வைத்த ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2331 என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் புன் புலால் நாறு தோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2332 தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்து போக்கு இல் என பற்றினாயே வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2333 நெடிய மால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடி காணா படியனார் பவளம் போல் உருவனார் பனி வளர் மலையாள் பாக வடிவனார் மதி பொதி சடையனார் மணி அணி கண்டத்து எண் தோள் அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே மேல் #2334 பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ்செயும் காழியூரன் நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் எல்லி அம் போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே மேல் 80. திருக்கடவூர்மயானம் : பண் - காந்தாரம் #2335 வரிய மறையார் பிறையார் மலை ஓர் சிலையா வணங்கி எரிய மதில்கள் எய்தார் எறியும் முசலம் உடையார் கரிய மிடறும் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் பெரிய விடை மேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2336 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்று ஏந்தி கங்கை சடையில் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார் செம் கண் வெள் ஏறு ஏறி செல்வம் செய்யா வருவார் அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2337 ஈடு அல் இடபம் இசைய ஏறி மழு ஒன்று ஏந்தி காடு அது இடமா உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார் ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2338 இறை நின்று இலங்கு வளையால் இளையால் ஒருபால் உடையார் மறை நின்று இலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார் பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2339 வெள்ளை எருத்தின் மிசையார் விரி தோடு ஒரு காது இலங்க துள்ளும் இள மான் மறியார் சுடர் பொன் சடைகள் துளங்க கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் பிள்ளை மதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2340 பொன் தாது உதிரும் மணம் கொள் புனை பூம் கொன்றை புனைந்தார் ஒன்றா வெள் ஏறு உயர்த்தது உடையார் அதுவே ஊர்வார் கன்று ஆ இனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார் பின் தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2341 பாசம் ஆன களைவார் பரிவார்க்கு அமுதம் அனையார் ஆசை தீர கொடுப்பார் அலங்கல் விடை மேல் வருவார் காசை மலர் போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் பேச வருவார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2342 செற்ற அரக்கன் அலற திகழ் சேவடி மெல் விரலால் கல் குன்று அடர்த்த பெருமான் கடவூர்மயானம் அமர்ந்தார் மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளி மலை போல் பெற்று ஒன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2343 வரு மா கரியின் உரியார் வளர் புன் சடையார் விடையார் கருமான் உரி தோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார் திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணா பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2344 தூய விடை மேல் வருவார் துன்னார் உடைய மதில்கள் காய வேவ செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார் தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர் அமணர் பேய் பேய் என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே மேல் #2345 மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியல் ஆக பரவும் முறையே பயிலும் பந்தன் செம் சொல் மாலை இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே மேல் 81. திருவேணுபுரம் : பண் - காந்தாரம் #2346 பூதத்தின் படையினீர் பூம் கொன்றை தாரினீர் ஓதத்தின் ஒலியோடும் உம்பர் வானவர் புகுந்து வேதத்தின் இசை பாடி விரை மலர்கள் சொரிந்து ஏத்தும் பாதத்தீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே மேல் #2347 சுடுகாடு மேவினீர் துன்னம் பெய் கோவணம் தோல் உடை ஆடை அது கொண்டீர் உமையாளை ஒருபாகம் அடையாளம் அது கொண்டீர் அம் கையினில் பரசு எனும் படை ஆள்வீர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே மேல் #2348 கங்கை சேர் சடைமுடியீர் காலனை முன் செற்று உகந்தீர் திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர் மங்கை ஓர்கூறு உடையீர் மறையோர்கள் நிறைந்து ஏத்த பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே மேல் #2349 நீர் கொண்ட சடைமுடி மேல் நீள் மதியம் பாம்பினொடும் ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே சீர் கொண்ட மாளிகை மேல் சே_இழையார் வாழ்த்து உரைப்ப கார் கொண்ட வேணுபுரம் பதி ஆக கலந்தீரே மேல் #2350 ஆலை சேர் தண் கழனி அழகு ஆக நறவு உண்டு சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட தூ மொழியார் காலையே புகுந்து இறைஞ்சி கைதொழ மெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதி ஆக கொண்டீரே மேல் #2351 மணி மல்கு மால் வரை மேல் மாதினொடு மகிழ்ந்து இருந்தீர் துணி மல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டு உகந்தீர் பணி மல்கு மறையோர்கள் பரிந்து இறைஞ்ச வேணுபுரத்து அணி மல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே மேல் #2352 நீலம் சேர் மிடற்றினீர் நீண்ட செம் சடையினீர் கோலம் சேர் விடையினீர் கொடும் காலன்-தனை செற்றீர் ஆலம் சேர் கழனி அழகு ஆர் வேணுபுரம் அமரும் கோலம் சேர் கோயிலே கோயிலாக கொண்டீரே மேல் #2353 திரை மண்டி சங்கு ஏறும் கடல் சூழ் தென்_இலங்கையர்_கோன் விரை மண்டு முடி நெரிய விரல் வைத்தீர் வரை-தன்னின் கரை மண்டி பேர் ஓதம் கலந்து எற்றும் கடல் கவின் ஆர் விரை மண்டு வேணுபுரமே அமர்ந்து மிக்கீரே மேல் #2354 தீ ஓம்பு மறைவாணர்க்கு ஆதி ஆம் திசைமுகன் மால் போய் ஓங்கி இழிந்தாரும் போற்ற அரிய திருவடியீர் பாய் ஓங்கு மர கலங்கள் படு திரையால் மொத்துண்டு சேய் ஓங்கு வேணுபுரம் செழும் பதியா திகழ்ந்தீரே மேல் #2355 நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள் புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே நிலை ஆக பேணி நீ சரண் என்றார்-தமை என்றும் விலை ஆக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே மேல் 82. திருத்தேவூர் : பண் - காந்தாரம் #2356 பண் நிலாவிய மொழி உமை_பங்கன் எம்பெருமான் விண்ணில் வானவர்_கோன் விமலன் விடை_ஊர்தி தெண் நிலா மதி தவழ்தரு மாளிகை தேவூர் அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2357 ஓதி மண்தலத்தோர் முழுது உய்ய வெற்பு ஏறு சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூ நீர் தீது இல் பங்கயம் தெரிவையர் முகம் மலர் தேவூர் ஆதி சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2358 மறைகளால் மிக வழிபாடு மாணியை கொல்வான் கறுவு கொண்ட அ காலனை காய்ந்த எம் கடவுள் செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர் அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2359 முத்தன் சில் பலிக்கு ஊர்-தொறும் முறைமுறை திரியும் பித்தன் செம் சடை பிஞ்ஞகன்-தன் அடியார்கள் சித்தன் மாளிகை செழு மதி தவழ் பொழில் தேவூர் அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2360 பாடுவார் இசை பல் பொருள் பயன் உகந்து அன்பால் கூடுவார் துணைக்கொண்ட தம் பற்று அற பற்றி தேடுவார் பொருள் ஆனவர் செறி பொழில் தேவூர் ஆடுவான் அடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2361 பொங்கு பூண் முலை புரி குழல் வரி வளை பொருப்பின் மங்கை பங்கினன் கங்கையை வளர் சடை வைத்தான் திங்கள் சூடிய தீ நிற கடவுள் தென் தேவூர் அங்கணன்-தனை அடைந்தனம் அல்லல் ஒன்றே இலமே மேல் #2362 வன் புயத்த அ தானவர் புரங்களை எரிய தன் புயத்து அற தட வரை வளைத்தவன் தக்க தென் தமிழ் கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர் அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2363 தரு உயர்ந்த வெற்பு எடுத்த அ தசமுகன் நெரிந்து வெருவ ஊன்றிய திரு விரல் நெகிழ்ந்து வாள் பணித்தான் தெருவு-தோறும் நல் தென்றல் வந்து உலவிய தேவூர் அரவு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2364 முந்தி கண்ணனும் நான்முகனும் அவர் காணா எந்தை திண் திறல் இரும் களிறு உரித்த எம்பெருமான் செந்து இனத்து இசை அறு பதம் முரல் திரு தேவூர் அந்தி_வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2365 பாறு புத்தரும் தவம் அணி சமணரும் பல நாள் கூறி வைத்தது ஒர் குறியினை பிழை என கொண்டு தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் ஆறு_சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே மேல் #2366 அல்லல் இன்றி விண் ஆள்வர்கள் காழியர்க்கு அதிபன் நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன் எல்லை இல் புகழ் மல்கிய எழில் வளர் தேவூர் தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே மேல் 83. திருக்கொச்சைவயம் : பண் - பியந்தைக்காந்தாரம் #2367 நீல நல் மா மிடற்றன் இறைவன் சினத்த நெடுமா உரித்த நிகர் இல் சேல் அன கண்ணி வண்ணம் ஒருகூறு உரு கொள் திகழ் தேவன் மேவு பதிதான் வேல் அன கண்ணிமார்கள் விளையாடும் ஓசை விழவு ஓசை வேத ஒலியின் சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே மேல் #2368 விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் சடையிடை வெள்எருக்க மலர் கங்கை திங்கள் தக வைத்த சோதி பதிதான் மடையிடை அன்னம் எங்கும் நிறைய பரந்து கமலத்து வைகும் வயல் சூழ் கொடை உடை வண்கையாளர் மறையோர்கள் என்றும் வளர்கின்ற கொச்சைவயமே மேல் #2369 பட அரவு ஆடு முன்கை உடையான் இடும்பை களைவிக்கும் எங்கள் பரமன் இடம் உடை வெண் தலை கை பலி கொள்ளும் இன்பன் இடம் ஆய ஏர் கொள் பதிதான் நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக குடம் இடு கூடம் ஏறி வளர் பூவை நல்ல மறை ஓது கொச்சைவயமே மேல் #2370 எண்திசைபாலர் எங்கும் இயலி புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி பண்டு ஒளி தீப மாலை இடு தூபமோடு பணிவுற்ற பாதர் பதிதான் மண்டிய வண்டல் மிண்டி வரும் நீர பொன்னி வயல் பாய வாளை குழுமி குண்டு அகழ் பாயும் ஓசை படை நீடு அது என்ன வளர்கின்ற கொச்சைவயமே மேல் #2371 பனி வளர் மா மலைக்கு மருகன் குபேரனொடு தோழமை கொள் பகவன் இனியன அல்லவற்றை இனிது ஆக நல்கும் இறைவன் இடம்கொள் பதிதான் முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவி குனி மதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே மேல் #2372 புலி அதள் கோவணங்கள் உடை ஆடை ஆக உடையான் நினைக்கும் அளவில் நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான் கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர பொலிதரு மண்டபங்கள் உயர் மாடம் நீடு வரை மேவு கொச்சைவயமே மேல் #2373 மழை முகில் போலும் மேனி அடல் வாள் அரக்கன் முடியோடு தோள்கள் நெரிய பிழை கெட மா மலர் பொன் அடி வைத்த பேயொடு உடன் ஆடி மேய பதிதான் இழை வளர் அல்குல் மாதர் இசை பாடி ஆட இடும் ஊசல் அன்ன கமுகின் குழை தரு கண்ணி விண்ணில் வருவார்கள்-தங்கள் அடி தேடு கொச்சைவயமே மேல் #2374 வண்டு அமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுது உண்ட மாலும் இகலி கண்டிட ஒண்ணும் என்று கிளறி பறந்தும் அறியாத சோதி பதிதான் நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே மேல் #2375 கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர் இடு சீவரத்தின் உடையார் மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர செய்யினில் நீலம் மொட்டு விரிய கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே மேல் #2376 இறைவனை ஒப்பு இலாத ஒளி மேனியானை உலகங்கள் ஏழும் உடனே மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ் மாலை பாடுமவர் போய் அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே மேல் 84. திருநனிபள்ளி : பண் - பியந்தைக்காந்தாரம் #2377 காரைகள் கூகை முல்லை கள வாகை ஈகை படர் தொடரி கள்ளி கவினி சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான் தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள நாரைகள் ஆரல் வார வயல் மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2378 சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு வெள்ளம் வளர் திங்கள் கண்ணி அயலே இடையிடை வைத்தது ஒக்கும் மலர் தொத்து மாலை இறைவன் இடம் கொள் பதிதான் மடையிடை வாளை பாய முகிழ் வாய் நெரிந்து மணம் நாறும் நீலம் மலரும் நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2379 பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடு இலாத பெருமான் கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான் வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் நறு மலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2380 குளிர் தரு கங்கை தங்கு சடை மாடு இலங்கு தலைமாலையோடு குலவி ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான் குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல நளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2381 தோடு ஒரு காதன் ஆகி ஒரு காது இலங்கு சுரி சங்கு நின்று புரள காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான் வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் நாடு உடன் ஆடு செம்மை ஒளி வெள்ளம் ஆரும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2382 மேகமொடு ஓடு திங்கள் மலரா அணிந்து மலையான்மடந்தை மணி பொன் ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான் ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி நாகமொடு ஆரம் வாரு புனல் வந்து அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2383 தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடு கொட்டி வீணை முரல வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான் புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2384 வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடு உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான் நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை நலம் மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2385 நிற உரு ஒன்று தோன்றி எரி ஒன்றி நின்றது ஒரு நீர்மை சீர்மை நினையார் அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான் புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி நற விரி போது தாது புது வாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2386 அனம் மிகு செல்கு சோறு கொணர்க என்று கையில் இட உண்டு பட்ட அமணும் மனம் மிகு கஞ்சி மண்டை அதில் உண்டு தொண்டர் குணம் இன்றி நின்ற வடிவும் வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான் நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் மேல் #2387 கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞான_முனிவன் இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பனுவல் நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே மேல் 85. பொது : பண் - பியந்தைக்காந்தாரம் - கோளறுபதிகம் #2388 வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசு அறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு அறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2389 என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க எருது ஏறி ஏழையுடனே பொன் பொதி மத்த மாலை புனல் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடன் ஆய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2390 உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து உமையோடும் வெள்ளை விடை மேல் முருகு அலர் கொன்றை திங்கள் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி திசை தெய்வம் ஆன பலவும் அரு நெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2391 மதி நுதல் மங்கையோடு வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் அதி குணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2392 நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் துஞ்சு இருள் வன்னி கொன்றை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் வெம் சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2393 வாள் வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்-தனோடும் உடனாய் நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆள் அரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2394 செப்பு இள முலை நல் மங்கை ஒருபாகம் ஆக விடை ஏறு செல்வன் அடைவு ஆர் ஒப்பு இள மதியும் அப்பும் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2395 வேள் பட விழிசெய்து அன்று விடை மேல் இருந்து மடவாள்-தனோடும் உடனாய் வாள் மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் உளமே புகுந்ததனால் ஏழ் கடல் சூழ் இலங்கை அரையன்-தனோடும் இடரான வந்து நலியா ஆழ் கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2396 பலபல வேடம் ஆகும் பரன் நாரிபாகன் பசு ஏறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலை கடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2397 கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம் ஆய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே மேல் #2398 தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து மறை ஞான ஞான_முனிவன் தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசு ஆள்வர் ஆணை நமதே மேல் 86. திருநாரையூர் : பண் - பியந்தைக்காந்தாரம் #2399 உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் வரையின் நிலாமை செய்த அவை தீரும் வண்ணம் மிக ஏத்தி நித்தம் நினை-மின் வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2400 ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதி ஆன வேத விகிர்தன் கானிடை ஆடி பூத படையான் இயங்கு விடையான் இலங்கு முடி மேல் தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே மேல் #2401 ஊரிடை நின்று வாழும் உயிர் செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவி பாரிடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ணம் அகலும் போரிடை அன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வானுளோர்கள் புணரும் தேரிடை நின்ற எந்தை பெருமான் இருந்த திரு நாரையூர் கைதொழவே மேல் #2402 தீ உறவு ஆய ஆக்கை அது பற்றி வாழும் வினை செற்ற உற்ற உலகின் தாய் உறு தன்மை ஆய தலைவன்-தன் நாமம் நிலை ஆக நின்று மருவும் பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் தேய்பிறை வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2403 வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும் வான் மிசையவர் ஆதியாய திரு மார்பு இலங்கு விரி நூலர் விண்ணும் நிலனும் இசையவர் ஆசி சொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர் திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2404 உறை வளர் ஊன் நிலாய உயிர் நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில் குறைவு உள ஆகி நின்ற குறை தீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும் மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலே திறை வளர் தேவர் தொண்டின் அருள் பேண நின்ற திரு நாரையூர் கைதொழவே மேல் #2405 தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின் இனம் வளர் ஐவர் செய்யும் வினையங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும் முனம் ஒரு காலம் மூன்றுபுரம் வெந்து மங்க சரம் முன் தெரிந்த அவுணர் சினம் ஒரு கால் அழித்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2406 உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்றம் நனி அஞ்சும் ஆதல் உற நீர் மரு மலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்-மின் அழிபாடு இலாத கடலின் அரு வரை சூழ் இலங்கை அரையன்-தன் வீரம் அழிய தட கை முடிகள் திரு விரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2407 வேறு உயர் வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில் தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவை கரந்து திகழும் சேறு உயர் பூவின் மேய பெருமானும் மற்றை திருமாலும் நேட எரியாய் சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2408 மிடைபடு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் முன்னி உணரும் படை ஒரு கையில் ஏந்தி பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமை உடையினை விட்டுளோரும் உடல் போர்த்துளோரும் உரை மாயும் வண்ணம் அழிய செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே மேல் #2409 எரி ஒரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார் திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழுவான் பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞானபந்தன் உரை மாலை பத்தும் மொழிவார் திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே மேல் 87. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் - பியந்தைக்காந்தாரம் #2410 நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான் நீர் இயல் காலும் ஆகி நிறை வானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன் ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்க உண்டு பண்டு சுடலை நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே மேல் #2411 இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன் மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே மேல் #2412 சூடக முன்கை மங்கை ஒருபாகம் ஆக அருள் காரணங்கள் வருவான் ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ தோடு அகமாய் ஓர் காதும் ஒரு காது இலங்கு குழை தாழ வேழ உரியன் நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே மேல் #2413 சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் ஆய் அகம் என்னுள் வந்த அருள் ஆய செல்வன் இருள் ஆய கண்டன் அவனி தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பு மலையின்-கண் வந்து தொழுவார் நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே மேல் #2414 நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடை ஏறி இல் பலி கொள்வான் நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே மேல் #2415 கணிகை ஒர் சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செம் சடையினான் பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பல ஆகி நின்ற பரமன் அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான் நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே மேல் #2416 ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம் மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடம் கொள் மிடறன் துளிதரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும் நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே மேல் #2417 அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசைய கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் உடலொடு தோள் அனைத்தும் முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள் நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே மேல் #2418 குல மலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற் றில பல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன் சில பல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமை திகழ்ந்த பொழிலின் நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே மேல் #2419 துவருறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர்-தாமும் அல்ல சமணும் கவர் உறு சிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன் தவம் மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும் நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே மேல் #2420 கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணர ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை ஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்தும் நினைவார் வானம் நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே மேல் 88. தென்திருமுல்லைவாயில் : பண் - பியந்தைக்காந்தாரம் #2421 துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் ஒளி மண்டி உம்பர்_உலகம் கடந்த உமை_பங்கன் எங்கள் அரனூர் களி மண்டு சோலை கழனி கலந்த கமலங்கள் தங்கும் மதுவின் தெளி மண்டி உண்டு சிறை வண்டு பாடு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2422 பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன் அயனை படைத்த பரமன் அரவத்தொடு அங்கம் அவை கட்டி எங்கும் அரவிக்க நின்ற அரனூர் உருவத்தின் மிக்க ஒளிர் சங்கொடு இப்பி அவை ஓதம் மோத வெருவி தெருவத்தில் வந்து செழு முத்து அலை கொள் திரு முல்லைவாயில் இதுவே மேல் #2423 வாராத நாடன் வருவார்-தம் வில்லின் உரு மெல்கி நாளும் உருகில் ஆராத இன்பன் அகலாத அன்பன் அருள் மேவி நின்ற அரனூர் பேராத சோதி பிரியாத மார்பின் அலர் மேவு பேதை பிரியாள் தீராத காதல் நெதி நேர நீடு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2424 ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் இரு மூன்றொடு ஏழும் உடனாய் அன்று இன்றொடு என்றும் அறிவானவர்க்கும் அறியாமை நின்ற அரனூர் குன்று ஒன்றொடு ஒன்று குலை ஒன்றொடு ஒன்று கொடி ஒன்றொடு ஒன்று குழுமி சென்று ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு முல்லைவாயில் இதுவே மேல் #2425 கொம்பு அன்ன மின்னின் இடையாள் ஒர்கூறன் விடை நாளும் ஏறு குழகன் நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் அம்பு அன்ன ஒண் கணவர் ஆடு அரங்கின் அணி கோபுரங்கள் அழகு ஆர் செம்பொன்ன செவ்வி தரு மாடம் நீடு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2426 ஊன் ஏறு வேலின் உரு ஏறு கண்ணி ஒளி ஏறு கொண்ட ஒருவன் ஆன் ஏறு அது ஏறி அழகு ஏறும் நீறன் அரவு ஏறு பூணும் அரனூர் மான் ஏறு கொல்லை மயில் ஏறி வந்து குயில் ஏறு சோலை மருவி தேன் ஏறு மாவின் வளம் ஏறி ஆடு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2427 நெஞ்சு ஆர நீடு நினைவாரை மூடு வினை தேய நின்ற நிமலன் அஞ்சு ஆடு சென்னி அரவு ஆடு கையன் அனல் ஆடும் மேனி அரனூர் மஞ்சு ஆரும் மாட மனை-தோறும் ஐயம் உளது என்று வைகி வரினும் செஞ்சாலி நெல்லின் வளர் சோறு அளி கொள் திரு முல்லைவாயில் இதுவே மேல் #2428 வரை வந்து எடுத்த வலி வாள் அரக்கன் முடி பத்தும் இற்று நெரிய உரைவந்த பொன்னின் உருவந்த மேனி உமை_பங்கன் எங்கள் அரனூர் வரை வந்த சந்தொடு அகில் உந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் திரை வந்துவந்து செறி தேறல் ஆடு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2429 மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரி நூலன் வேதமுதல்வன் பால் ஆடு மேனி கரியானும் முன்னியவர் தேட நின்ற பரன் ஊர் கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் சேலோடு வாளை குதி கொள்ள மல்கு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2430 பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே நினைவு அன்ன சிந்தை அடையாத தேரர் அமண் மாய நின்ற அரனூர் வனம் மல்கு கைதை வகுளங்கள் எங்கும் முகுளங்கள் எங்கும் நெரிய சினை மல்கு புன்னை திகழ் வாசம் நாறு திரு முல்லைவாயில் இதுவே மேல் #2431 அணிகொண்ட கோதை அவள் நன்றும் ஏத்த அருள்செய்த எந்தை மருவார் திணி கொண்ட மூன்று புரம் எய்த வில்லி திரு முல்லைவாயில் இதன் மேல் தணி கொண்ட சிந்தையவர் காழி ஞானம் மிகு பந்தன் ஒண் தமிழ்களின் அணி கொண்ட பத்தும் இசை பாடு பத்தர் அகல் வானம் ஆள்வர் மிகவே மேல் 89. திருக்கொச்சைவயம் : பண் - பியந்தைக்காந்தாரம் #2432 அறையும் பூம் புனலோடும் ஆடு அரவ சடை-தன் மேல் பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார் மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வி அறாத குறைவு இல் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2433 சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூத கண்ணத்தர் வெம் கனல் ஏந்தி கங்குல் நின்று ஆடுவர் கேடு இல் எண்ணத்தர் கேள்வி நல் வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும் வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2434 பாலை அன்ன வெண் நீறு பூசுவார் பல் சடை தாழ மாலை ஆடுவர் கீத மா மறை பாடுதல் மகிழ்வர் வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும் கோல மா மணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2435 கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் பொடிகள் பூசிய மார்பின் புனைவர் நல் மங்கை ஒர்பங்கர் கடி கொள் நீடு ஒலி சங்கின் ஒலியொடு கலை ஒலி துதைந்து கொடிகள் ஓங்கிய மாட கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2436 ஆடல் மா மதி உடையார் ஆயின பாரிடம் சூழ வாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடு பலிக்கு உழல்வார் ஆடல் மா மட மஞ்ஞை அணி திகழ் பேடையொடு ஆடி கூடி தண் பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2437 மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர் சடை-தன் மேல் துண்ட வெண் பிறை அணிவர் தொல் வரை வில் அது ஆக விண்ட தானவர் அரணம் வெவ் அழல் எரி கொள விடை மேல் கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2438 அன்று அ ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளி பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கை வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய் குன்றம் அன்ன பொன் மாட கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2439 சீர் கொள் மா மலரானும் செங்கண்மால் என்று இவர் ஏத்த ஏர் கொள் வெவ் அழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும் பார் கொள் விண் அழல் கால் நீர் பண்பினர் பால்மொழியோடும் கூர் கொள் வேல் வலன் ஏந்தி கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2440 குண்டர் வண் துவர் ஆடை போர்த்தது ஒர் கொள்கையினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் கொண்டல் சேர் மணி மாட கொச்சைவயம் அமர்ந்தாரே மேல் #2441 கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய அந்தணன் அடி ஏத்தும் அரு மறை ஞானசம்பந்தன் சந்தம் ஆர்ந்து அழகு ஆய தண் தமிழ் மாலை வல்லோர் போய் முந்தி வானவரோடும் புக வலர் முனை கெட வினையே மேல் 90. திருநெல்வாயிலரத்துறை : பண் - பியந்தைக்காந்தாரம் #2442 எந்தை ஈசன் எம்பெருமான் ஏறு அமர் கடவுள் என்று ஏத்தி சிந்தைசெய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் கந்த மா மலர் உந்தி கடும் புனல் நிவா மல்கு கரை மேல் அம் தண் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2443 ஈர வார் சடை-தன் மேல் இளம் பிறை அணிந்த எம்பெருமான் சீரும் செல்வமும் ஏத்தா சிதடர்கள் தொழ செல்வது அன்றால் வாரி மா மலர் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் ஆரும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2444 பிணி கலந்த புன் சடை மேல் பிறை அணி சிவன் என பேணி பணி கலந்து செய்யாத பாவிகள் தொழ செல்வது அன்றால் மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் அணி கலந்த நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2445 துன்ன ஆடை ஒன்று உடுத்து தூய வெண்நீற்றினர் ஆகி உன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் பொன்னும் மா மணி உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் அன்னம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2446 வெருகு உரிஞ்சு வெம் காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால் முருகு உரிஞ்சு பூம் சோலை மொய் மலர் சுமந்து இழி நிவா வந்து அருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2447 உரவு நீர் சடை கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்தி பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால் குரவ மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் அரவம் ஆரும் நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2448 நீல மா மணி மிடற்று நீறு அணி சிவன் என பேணும் சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால் கோல மா மலர் உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2449 செழும் தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான் கொழும் கனி சுமந்து உந்தி குளிர் புனல் நிவா மல்கு கரை மேல் அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2450 நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால் மணம் கமழ்ந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல் அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2451 சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும் பாக்கியப்படகில்லா பாவிகள் தொழ செல்வது அன்றால் பூ கமழ்ந்து பொன் உந்தி பொரு புனல் நிவா மல்கு கரை மேல் ஆக்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்-தம் அருளே மேல் #2452 கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் அறையும் பூம் புனல் பரந்த அரத்துறை அடிகள்-தம் அருளை முறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர்-தம் வினை போய் பறையும் ஐயுறவு இல்லை பாட்டு இவை பத்தும் வல்லார்க்கே மேல் 91. திருமறைக்காடு : பண் - பியந்தைக்காந்தாரம் #2453 பொங்கு வெண் மணல் கானல் பொரு கடல் திரை தவழ் முத்தம் கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம் திங்கள் சூடினரேனும் திரிபுரம் எரித்தனரேனும் எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ் பழி இலரே மேல் #2454 கூன் இளம் பிறை சூடி கொடு வரி தோல் உடை ஆடை ஆனில் அம் கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதுவும் அரவம் கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப தேன் நலம் கமழ் சோலை திரு மறைக்காடு அமர்ந்தாரே மேல் #2455 நுண்ணிதாய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு பொன் மார்பில் பண்ணி யாழ் என முரலும் பணி மொழி உமை ஒரு பாகன் தண்ணிது ஆய வெள் அருவி சலசல நுரை மணி ததும்ப கண்ணிதானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே மேல் #2456 ஏழை வெண் குருகு அயலே இளம் பெடை தனது என கருதி தாழை வெண் மடல் புல்கும் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம் மாழை அம் கயல் ஒண் கண் மலைமகள்_கணவனது அடியின் நீழலே சரண் ஆக நினைபவர் வினை நலிவு இலரே மேல் #2457 அரவம் வீக்கிய அரையும் அதிர் கழல் தழுவிய அடியும் பரவ நாம் செய்த பாவம் பறைதர அருளுவர் பதிதான் மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டு இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே மேல் #2458 பல் இல் ஓடு கை ஏந்தி பாடியும் ஆடியும் பலி தேர் அல்லல் வாழ்க்கையரேனும் அழகியது அறிவர் எம் அடிகள் புல்லம் ஏறுவர் பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம் ஆம் மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே மேல் #2459 நாகம்தான் கயிறு ஆக நளிர் வரை அதற்கு மத்து ஆக பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழ கடைய வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட ஆகம்-தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே மேல் #2460 தக்கன் வேள்வியை தகர்த்தோன் தனது ஒரு பெருமையை ஓரான் மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் பக்க வாயும் விட்டு அலற பரிந்தவன் பதி மறைக்காடே மேல் #2461 விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவு_அணையானும் பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை பதிதான் கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப வண்டல் அம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே மேல் #2462 பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா கரிய மண்டை கை ஏந்தி கல்லென உழிதரும் கழுக்கள் அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் பெரிய சீர் மறைக்காடே பேணு-மின் மனம் உடையீரே மேல் #2463 மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை கையினால் தொழுது எழுவான் காழியுள் ஞானசம்பந்தன் செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய் பொய் இல் வானவரோடும் புக வலர் கொள வலர் புகழே மேல் 92. திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் : பண் - பியந்தைக்காந்தாரம் #2464 பட்டம் பால் நிற மதியம் படர் சடை சுடர்விடு பாணி நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் புள் தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர் தொண்டர் போற்றி வட்டம் சூழ்ந்து அடி பரவும் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2465 முயல் வளாவிய திங்கள் வாள் முகத்து அரிவையில் தெரிவை இயல் வளாவியது உடைய இன் அமுது எந்தை எம்பெருமான் கயல் வளாவிய கழனி கரு நிற குவளைகள் மலரும் வயல் வளாவிய புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2466 தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் கொண்டுகொண்டு அடி பரவி குறிப்பு அறி முருகன் செய் கோலம் கண்டுகண்டு கண் குளிர களி பரந்து ஒளி மல்கு கள் ஆர் வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2467 பண்ண வண்ணத்தர் ஆகி பாடலொடு ஆடல் அறாத விண்ண வண்ணத்தர் ஆய விரி புகலூரர் ஒர்பாகம் பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு ஆண் இணை பிணைந்த வண்ண வண்ணத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2468 ஈசன் ஏறு அமர் கடவுள் இன் அமுது எந்தை எம்பெருமான் பூசும் மாசு இல் வெண்நீற்றர் பொலிவு உடை பூம் புகலூரில் மூசு வண்டு அறை கொன்றை முருகன் முப்போதும் செய் முடி மேல் வாச மா மலர் உடையார் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2469 தளிர் இளம் கொடி வளர தண் கயம் இரிய வண்டு ஏறி கிளர் இளம் உழை நுழைய கிழிதரு பொழில் புகலூரில் உளர் இளம் சினை மலரும் ஒளிதரு சடைமுடி அதன் மேல் வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2470 தென்சொல் விஞ்சு அமர் வடசொல் திசைமொழி எழில் நரம்பு எடுத்து துஞ்சு நெஞ்சு இருள் நீங்க தொழுது எழு தொல் புகலூரில் அஞ்சனம் பிதிர்ந்து அனைய அலை கடல் கடைய அன்று எழுந்த வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2471 சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் நாமதேயம் அது உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த காமதேவனை வேவ கனல் எரி கொளுவிய கண்ணார் வாமதேவர் தண் புகலூர் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2472 சீர் அணங்கு உற நின்ற செரு உறு திசைமுகனோடு நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2473 கையில் உண்டு உழல்வாரும் கமழ் துவர் ஆடையினால் தம் மெய்யை போர்த்து உழல்வாரும் உரைப்பன மெய் என விரும்பேல் செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர் மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே மேல் #2474 பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில் மங்குல் மா மதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண் தமிழ் பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவர்_உலகே மேல் 93. திருத்தெங்கூர் : பண் - பியந்தைக்காந்தாரம் #2475 புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்ற கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் இரைசெய்து ஆர் அழலூட்டி உழல்பவர் இடு பலிக்கு எழில் சேர் விரை செய் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2476 சித்தம் தன் அடி நினைவார் செடி படு கொடு வினை தீர்க்கும் கொத்தின் தாழ் சடைமுடி மேல் கோள் எயிற்று அரவொடு பிறையன் பத்தர்தாம் பணிந்து ஏத்தும் பரம்பரன் பைம் புனல் பதித்த வித்தன் தாழ் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2477 அடையும் வல்வினை அகல அருள்பவர் அனல் உடை மழுவாள் படையர் பாய் புலித்தோலர் பைம் புன கொன்றையர் படர் புன் சடையில் வெண் பிறை சூடி தார் மணி அணிதரு தறுகண் விடையர் வீங்கு எழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2478 பண்டு நாம் செய்த வினைகள் பறைய ஓர் நெறி அருள் பயப்பார் கொண்டல் வான் மதி சூடி குரை கடல் விடம் அணி கண்டர் வண்டு மா மலர் ஊதி மது உண இதழ் மறிவு எய்தி விண்ட வார் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2479 சுழித்த வார் புனல் கங்கை சூடி ஒர் காலனை காலால் தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை கழித்த வெண் தலை ஏந்தி காமனது உடல் பொடி ஆக விழித்தவர் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2480 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலை வெண்பொடி அணி சுவண்டர் எல்லி சூடி நின்று ஆடும் இறையவர் இமையவர் ஏத்த சில்லை மால் விடை ஏறி திரிபுரம் தீ எழ செற்ற வில்லினார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2481 நெறி கொள் சிந்தையர் ஆகி நினைபவர் வினை கெட நின்றார் முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க பொறி கொள் வாள் அரவு அணிந்த புண்ணியர் வெண்பொடி பூசி வெறி கொள் பூம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2482 எண் இலா விறல் அரக்கன் எழில் திகழ் மால் வரை எடுக்க கண் எலாம் பொடிந்து அலற கால் விரல் ஊன்றிய கருத்தர் தண் உலாம் புனல் கன்னி தயங்கிய சடைமுடி சதுரர் விண் உலாம் பொழில் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2483 தேடித்தான் அயன் மாலும் திரு முடி அடி இணை காணார் பாடத்தான் பல பூத படையினர் சுடலையில் பல-கால் ஆடத்தான் மிக வல்லர் அருச்சுனற்கு அருள்செய கருதும் வேடத்தார் திரு தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2484 சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர இடம் கொள் வல்வினை தீர்க்கும் ஏத்து-மின் இரு மருப்பு ஒரு கை கடம் கொள் மால் களிற்று உரியர் கடல் கடைந்திட கனன்று எழுந்த விடம் கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரே மேல் #2485 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்தாரை கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன் சந்தம் ஆயின பாடல் தண் தமிழ் பத்தும் வல்லார் மேல் பந்தம் ஆயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே மேல் 94. திருவாழ்கொளிபுத்தூர் : பண் - பியந்தைக்காந்தாரம் #2486 சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார் ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் தோகை மா மயில் அனைய துடி_இடை பாகமும் உடையார் வாகை நுண் துளி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2487 எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோ இவர் அறங்கள் கண்ணும் ஆயிரம் உடையார் கையும் ஓர் ஆயிரம் உடையார் பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமை ஓர் ஆயிரம் உடையார் வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2488 நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும் வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் முடியும் ஆயிரம் உடையார் மொய்குழலாளையும் உடையார் வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2489 பஞ்சி நுண் துகில் அன்ன பைம் கழல் சேவடி உடையார் குஞ்சி மேகலை உடையார் கொந்து அணி வேல் வலன் உடையார் அஞ்சும் வென்றவர்க்கு அணியார் ஆனையின் ஈர் உரி உடையார் வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2490 பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார் விரவுவாரையும் உடையார் வெண் தலை பலி கொள்வது உடையார் அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம்பேர் மிக உடையார் வரவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2491 தண்டும் தாளமும் குழலும் தண்ணுமை கருவியும் புறவில் கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல உடையார் கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2492 மான வாழ்க்கை அது உடையார் மலைந்தவர் மதில் பரிசு அழித்தார் தான வாழ்க்கை அது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்த ஞான வாழ்க்கை அது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த வான வாழ்க்கை அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2493 ஏழும் மூன்றும் ஒர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பு அவர் பலபல உடையார் கேழல் வெண் பிறை அன்ன கேழ் மணி மிடறு நின்று இலங்க வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2494 வென்றி மா மலரோனும் விரி கடல் துயின்றவன்தானும் என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பி முன்றில் மா மலர் வாசம் முது முதி தவழ் பொழில் தில்லை மன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2495 மண்டை கொண்டு உழல் தேரர் மாசு உடை மேனி வன் சமணர் குண்டர் பேசிய பேச்சு கொள்ளன்-மின் திகழ் ஒளி நல்ல துண்ட வெண் பிறை சூடி சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும் வண்டு வாழ் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே மேல் #2496 நலம் கொள் பூம் பொழில் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார் நலம் கொள் சிந்தையர் ஆகி நன்நெறி எய்துவர்தாமே மேல் 95. திருஅரசிலி : பண் - பியந்தைக்காந்தாரம் #2497 பாடல் வண்டு அறை கொன்றை பால் மதி பாய் புனல் கங்கை கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி வாடல் வெண் தலைமாலை மருவிட வல்லியம் தோல் மேல் ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2498 ஏறு பேணி அது ஏறி இள மத களிற்றினை எற்றி வேறுசெய்து அதன் உரிவை வெம் புலால் கலக்க மெய் போர்த்த ஊறு தேன் அவன் உம்பர்க்கு ஒருவன் நல் ஒளி கொள் ஒண் சுடர் ஆம் ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2499 கங்கை நீர் சடை மேலே கதம் மிக கதிர் இள வன மென் கொங்கையாள் ஒருபாகம் மருவிய கொல்லை வெள்ஏற்றன் சங்கையாய் திரியாமே தன் அடியார்க்கு அருள்செய்து அங்கையால் அனல் ஏந்தும் அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2500 மிக்க காலனை வீட்டி மெய் கெட காமனை விழித்து புக்க ஊர் இடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண் நீறு அணிந்து ஆமை அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2501 மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி தான் அஞ்சா அரண் மூன்றும் தழல் எழ சரம் அது துரந்து வான் அஞ்சும் பெரு விடத்தை உண்டவன் மா மறை ஓதி ஆன் அஞ்சு ஆடிய சென்னி அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2502 பரிய மாசுணம் கயிறா பருப்பதம் அதற்கு மத்து ஆக பெரிய வேலையை கலங்க பேணிய வானவர் கடைய கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு அரிய ஆரமுது ஆக்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2503 வண்ண மால் வரை-தன்னை மறித்திடலுற்ற வல் அரக்கன் கண்ணும் தோளும் நல் வாயும் நெரிதர கால் விரல் ஊன்றி பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலை கேட்டு அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2504 குறிய மாண் உரு ஆகி குவலயம் அளந்தவன்தானும் வெறி கொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்தவத்தோனும் செறிவு ஒணா வகை எங்கும் தேடியும் திருவடி காண அறிவு ஒணா உருவத்து எம் அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2505 குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து திரளை கையில் உண்பவரும் தேரரும் சொல்லிய தேறேல் பொருளை பொய்யிலி மெய் எம் நாதனை பொன் அடி வணங்கும் அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கு இடம் அரசிலியே மேல் #2506 அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை காழி நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை நாளும் சொல்ல வல்லவர் தம்மை சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த வல்ல வான்_உலகு எய்தி வைகலும் மகிழ்ந்து இருப்பாரே மேல் 96. சீகாழி : பண் - பியந்தைக்காந்தாரம் #2507 பொங்கு வெண் புரி வளரும் பொற்பு உடை மார்பன் எம்பெருமான் செம் கண் ஆடு அரவு ஆட்டும் செல்வன் எம் சிவன் உறை கோயில் பங்கம் இல் பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும் தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே மேல் #2508 தேவர் தானவர் பரந்து திண் வரை மால் கடல் நிறுவி நாவதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திட கண்டு ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே மேல் #2509 கரியின் மா முகம் உடைய கணபதி தாதை பல் பூதம் திரிய இல் பலிக்கு ஏகும் செழும் சுடர் சேர்தரு மூதூர் சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே மேல் #2510 சங்க வெண் குழை செவியன் தண் மதி சூடிய சென்னி அங்கம் பூண் என உடைய அப்பனுக்கு அழகிய ஊர் ஆம் துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்து வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே மேல் #2511 மங்கை கூறு அமர் மெய்யான் மான் மறி ஏந்திய கையான் எங்கள் ஈசன் என்று எழுவார் இடர் வினை கெடுப்பவற்கு ஊர் ஆம் சங்கை இன்றி நன் நியமம் தாம் செய்து தகுதியின் மிக்க கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே மேல் #2512 நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றி தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே மேல் #2513 நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் விடம் அமர்ந்து ஒரு காலம் விரித்து அறம் உரைத்தவற்கு ஊர் ஆம் இடமதா மறை பயில்வார் இரும் தவர் திருந்தி அம் போதி குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே மேல் #2514 கார் கொள் மேனி அ அரக்கன் தன் கடும் திறலினை கருதி ஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரிய சீர் கொள் பாதத்து ஒர் விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில் தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே மேல் #2515 மாலும் மா மலரானும் மருவி நின்று இகலிய மனத்தால் பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர்-தன் பதி ஆகும் சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே மேல் #2516 புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழல் அடி இணை காணும் சித்தம் மற்று அவர்க்கு இலாமை திகழ்ந்த நல் செழும் சுடர்க்கு ஊர் ஆம் சித்தரோடு நல் அமரர் செறிந்த நல் மா மலர் கொண்டு முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே மேல் #2517 ஊழியானவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு மேல் 97. சீகாழி : திருவிராகம் : பண் - நட்டராகம் #2518 நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளி மிகுந்த செம் சடை நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே மேல் #2519 பாவம் மேவும் உள்ளமோடு பத்தி இன்றி நித்தலும் ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம் தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே மேல் #2520 சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்கு ஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம் ஆறும் ஓர் சடையினான் ஆதி யானை செற்றவன் நாறு தேன் மலர் பொழில் நலம் கொள் காழி சேர்-மினே மேல் #2521 நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் உச்சி வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்-மினே மேல் #2522 கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய் உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் கண்கள் மூன்று உடைய எம் கருத்தர் காழி சேர்-மினே மேல் #2523 அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து நீர் எல்லை இல் பிணக்கினில் கிடந்திடாது எழும்-மினோ பல் இல் வெண் தலையினில் பலிக்கு இயங்கு பான்மையான் கொல்லை ஏறு அது ஏறுவான் கோல காழி சேர்-மினே மேல் #2524 பொய் மிகுத்த வாயராய் பொறாமையோடு செல்லும் நீர் ஐ மிகுத்த கண்டராய் அடுத்து இரைப்பதன் முனம் மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன் பை மிகுத்த பாம்பு அரை பரமர் காழி சேர்-மினே மேல் #2525 காலினோடு கைகளும் தளர்ந்து காமநோய்-தனால் ஏல வார் குழலினார் இகழ்ந்து உரைப்பதன் முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலம் மேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்-மினே மேல் #2526 நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசம் இல் புதல்வர்கள் முலை வெறுத்த பேர் தொடங்கியே முனிவதன் முனம் தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்ப அரியவன் சிலை பிடித்து எயில் எய்தான் திருந்து காழி சேர்-மினே மேல் #2527 தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை அக்கினோடு அரவு அசைத்த அந்தி_வண்ணர் காழியை ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே மேல் 98. திருத்துருத்தி : திருவிராகம் : பண் - நட்டராகம் #2528 வரை தலை பசும்பொனோடு அரும் கலங்கள் உந்தி வந்து இரைத்து அலை சுமந்து கொண்டு எறிந்து இலங்கு காவிரி கரை தலை துருத்தி புக்கு இருப்பதே கருத்தினாய் உரைத்தலை பொலிந்த உனக்கு உணர்த்தும் ஆறு வல்லமே மேல் #2529 அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம் தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை கடுத்து அடிப்புறத்தினால் நிறத்து உதைத்த காரணம் எடுத்தெடுத்து உரைக்கும் ஆறு வல்லம் ஆகில் நல்லமே மேல் #2530 கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செம் சடை சங்கு இலங்கு வெண் குழை சரிந்து இலங்கு காதினாய் பொங்கு இலங்கு பூண நூல் உருத்திரா துருத்தி புக்கு எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்வது என்-கொலோ மேல் #2531 கருத்தினால் ஒர் காணி இல் விருத்தி இல்லை தொண்டர்-தம் அருத்தியால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும் ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய் இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே மேல் #2532 துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்து அடி மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் பிறக்கும் ஆறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டு இறக்கும் ஆறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே மேல் #2533 வெயிற்கு எதிர்ந்து இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழில் துயிற்கு எதிர்ந்த புள் இனங்கள் மல்கு தண் துருத்தியாய் மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூ எயிற்கு எதிர்ந்து ஒர் அம்பினால் எரித்த வில்லி அல்லையே மேல் #2534 கணிச்சி அம் படை செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் அணிப்படும் தனி பிறை பனி கதிர்க்கு அவாவும் நல் மணி படும் பை நாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே மேல் #2535 சுட பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் இடர்ப்பட கடந்து இடம் துருத்தி ஆக எண்ணினாய் கடல் படை உடைய அ கடல் இலங்கை மன்னனை அடல் பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே மேல் #2536 களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய் வளம் கிளர் பொன் அம் கழல் வணங்கி வந்து காண்கிலார் துளங்கு இளம் பிறை செனி துருத்தியாய் திருந்து அடி உளம் குளிர்ந்தபோது எலாம் உகந்துஉகந்து உரைப்பனே மேல் #2537 புத்தர் தத்துவம் இலா சமண் உரைத்த பொய்-தனை உத்தமம் என கொளாது உகந்து எழுந்து வண்டு இனம் துத்தம் நின்று பண்செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர்பித்தனை தொழ பிறப்பு அறுத்தல் பெற்றியே மேல் #2538 கற்று முற்றினார் தொழும் கழுமலத்து அரும் தமிழ் சுற்றும் முற்றும் ஆயினான் அவன் பகர்ந்த சொற்களால் பெற்றம் ஒன்று உயர்த்தவன் பெரும் துருத்தி பேணவே குற்றம் முற்றும் இன்மையின் குணங்கள் வந்து கூடுமே மேல் 99. திருக்கோடிகா : பண் - நட்டராகம் #2539 இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையை போக விட்டு போது-மின் மின் தயங்கு சோதியான் வெண் மதி விரி புனல் கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்-மினே மேல் #2540 அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர் நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் கொல்லை வெள்ளைஏற்றினான் கோடிகாவு சேர்-மினே மேல் #2541 துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினை துறந்து நீர் தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் அக்கு அணிந்து அரை மிசை ஆறு அணிந்த சென்னி மேல் கொக்கு இறகு அணிந்தவன் கோடிகாவு சேர்-மினே மேல் #2542 பண்டு செய்த வல்வினை பற்று அற கெடும் வகை உண்டு உமக்கு உரைப்பன் நான் ஒல்லை நீர் எழு-மினோ மண்டு கங்கை செம் சடை வைத்து மாது ஒர்பாகமா கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்-மினே மேல் #2543 முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாது இன்னம் நீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்-மினோ பொன்னை வென்ற கொன்றையான் பூதம் பாட ஆடலான் கொல் நவிலும் வேலினான் கோடிகாவு சேர்-மினே மேல் #2544 ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தல் ஆம் என பாவம் எத்தனையும் நீர் செய்து ஒரு பயன் இலை காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்-மினே மேல் #2545 ஏண் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்து நீர் மாண் அழிந்த மூப்பினால் வருந்தல் முன்னம் வம்-மினோ பூணல் வெள் எலும்பினான் பொன் திகழ் சடைமுடி கோணல் வெண் பிறையினான் கோடிகாவு சேர்-மினே மேல் #2546 மற்று இ வாழ்க்கை மெய் எனும் மனத்தினை தவிர்ந்து நீர் பற்றி வாழ்-மின் சேவடி பணிந்து வந்து எழு-மினோ வெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்தது ஓர் குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்-மினே மேல் #2547 மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் செங்கண்மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலா வெம் கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர் கொங்கு உலாம் வளர் பொழில் கோடிகாவு சேர்-மினே மேல் #2548 தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும் பட்டு உடை விரி துகிலினார்கள் சொல் பயன் இலை விட்ட புன் சடையினான் மேதகும் முழவொடும் கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்-மினே மேல் #2549 கொந்து அணி குளிர் பொழில் கோடிகாவு மேவிய செந்தழல்உருவனை சீர்மிகு திறல் உடை அந்தணர் புகலியுள் ஆய கேள்வி ஞானசம் பந்தன தமிழ் வல்லார் பாவம் ஆன பாறுமே மேல் 100. திருக்கோவலூர் வீரட்டம் : திருவிராகம் : பண் - நட்டராகம் #2550 படை கொள் கூற்றம் வந்து மெய் பாசம் விட்டபோதின்-கண் இடைகொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமே குடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்-தனுள் விடை அது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2551 கரவலாளர்-தம் மனை கடைகள்-தோறும் கால் நிமிர்ந்து இரவல் ஆழி நெஞ்சமே இனியது எய்த வேண்டின் நீ குரவம் ஏறி வண்டு இனம் குழலொடு யாழ்செய் கோவலூர் விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே மேல் #2552 உள்ளத்தீரே போது-மின் உறுதி ஆவது அறிதிரேல் அள்ளல் சேற்றில் கால் இட்டு அங்கு அவலத்துள் அழுந்தாதே கொள்ள பாடு கீதத்தான் குழகன் கோவலூர்-தனுள் வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2553 கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியா முன் பனைகள் உலவு பைம் பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர் வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே மேல் #2554 உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்தபோதின்-கண் துளங்கி நின்று நாள்-தொறும் துயரல் ஆழி நெஞ்சமே வளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2555 கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கு அது அன்றியும் கூடி நின்று பைம் பொழில் குழகன் கோவலூர்-தனுள் வீடு காட்டும் நெறியினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2556 உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்தபோதின்-கண் நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் விரை கொள் சீர் வெண்நீற்றினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2557 ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவை ஊதல் ஆக்கை ஓம்புவீர் உறுதி ஆவது அறிதிரேல் போதில் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனுள் வேதம் ஓது நெறியினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2558 ஆறு பட்ட புன் சடை அழகன் ஆய்_இழைக்கு ஒருகூறு பட்ட மேனியான் குழகன் கோவலூர்-தனுள் நீறு பட்ட கோலத்தான் நீல_கண்டன் இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே மேல் #2559 குறிகொள் ஆழி நெஞ்சமே கூறை துவர் இட்டார்களும் அறிவு இலாத அமணர் சொல் அவத்தம் ஆவது அறிதிரேல் பொறி கொள் வண்டு பண்செயும் பூம் தண் கோவலூர்-தனில் வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானம் சேர்துமே மேல் #2560 கழியொடு உலவு கானல் சூழ் காழி ஞானசம்பந்தன் பழிகள் தீர சொன்ன சொல் பாவநாசம் ஆதலால் அழிவிலீர் கொண்டு ஏத்து-மின் அம் தண் கோவலூர்-தனில் விழி கொள் பூத படையினான் வீரட்டானம் சேர்துமே மேல் 101. திருஆரூர் : திருவிராகம் : பண் - நட்டராகம் #2561 பரு கை யானை மத்தகத்து அரி குலத்து உகிர் புக நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் தரு கொள் சோலை சூழ நீடு மாட மாளிகை கொடி அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2562 விண்ட வெள்எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும் இண்டை கொண்ட செம் சடைமுடி சிவன் இருந்த ஊர் கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2563 கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் வெறித்து மேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி அறுத்து மண்டி ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2564 அஞ்சும் ஒன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில் குஞ்சி ஆர வந்திசெய்ய அஞ்சல் என்னி மன்னும் ஊர் பஞ்சி ஆரும் மெல் அடி பணைத்த கொங்கை நுண் இடை அம் சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2565 சங்கு உலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் அங்கு உலாவி அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2566 கள்ள நெஞ்ச வஞ்சக கருத்தை விட்டு அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் துள்ளி வாளை பாய் வயல் சுரும்பு உலாவு நெய்தல் வாய் அள்ளல் நாரை ஆரல் வாரும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2567 கங்கை பொங்கு செம் சடை கரந்த கண்டர் காமனை மங்க வெம் கணால் விழித்த மங்கை_பங்கன் மன்னும் ஊர் தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2568 வரை தலம் எடுத்தவன் முடி தலம் உரத்தொடும் நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர் நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே மேல் #2569 இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் செருத்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழும் குரா அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2570 பறித்த வெண் தலை கடு படுத்த மேனியார் தவம் வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே மேல் #2571 வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா அல்லி_மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை வல்ல தொண்டர் வானம் ஆள வல்லர் வாய்மை ஆகவே மேல் 102. திருச்சிரபுரம் : பண் - நட்டராகம் #2572 அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் மின்னு செம் சடை வெள்எருக்கம் மலர் வைத்தவர் வேதம்தாம் பன்னும் நன் பொருள் பயந்தவர் பரு மதில் சிரபுரத்தார் சீர் ஆர் பொன்னின் மா மலர் அடி தொழும் அடியவர் வினையொடும் பொருந்தாரே மேல் #2573 கோல மா கரி உரித்தவர் அரவொடும் ஏன கொம்பு இள ஆமை சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை போல தம் அடியார்க்கும் இன்பு அளிப்பவர் பொரு கடல் விடம் உண்ட நீலத்து ஆர் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே மேல் #2574 மான திண் புய வரி சிலை பார்த்தனை தவம் கெட மதித்து அன்று கானத்தே திரி வேடனாய் அமர் செய கண்டு அருள்புரிந்தார் பூம் தேனை தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள் கோனை கும்பிடும் அடியரை கொடுவினை குற்றங்கள் குறுகாவே மேல் #2575 மாணி-தன் உயிர் மதித்து உண வந்த அ காலனை உதைசெய்தார் பேணி உள்கும் மெய் அடியவர் பெரும் துயர் பிணக்கு அறுத்து அருள்செய்வார் வேணி வெண் பிறை உடையவர் வியன் புகழ் சிரபுரத்து அமர்கின்ற ஆணி பொன்னினை அடி தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே மேல் #2576 பாரும் நீரொடு பல் கதிர் இரவியும் பனி மதி ஆகாசம் ஓரும் வாயுவும் ஒண் கனல் வேள்வியில் தலைவனுமாய் நின்றார் சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல் கோட்டாறு வாரும் தண் புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர் வருந்தாரே மேல் #2577 ஊழி அந்தத்தில் ஒலி கடல் ஓட்டந்து இ உலகங்கள் அவை மூட ஆழி எந்தை என்று அமரர்கள் சரண் புக அந்தரத்து உயர்ந்தார்தாம் யாழின் நேர் மொழி ஏழையோடு இனிது உறை இன்பன் எம்பெருமானார் வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே மேல் #2578 பேய்கள் பாட பல் பூதங்கள் துதிசெய பிணம் இடு சுடுகாட்டில் வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் தாய்கள் ஆயினார் பல் உயிர்க்கும் தமை தொழுமவர் தளராரே மேல் #2579 இலங்கு பூண் வரை மார்பு உடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று கலங்க செய்தலும் கண்டு தம் கழல் அடி நெரிய வைத்து அருள்செய்தார் புலங்கள் செங்கழுநீர் மலர் தென்றல் மன்று அதனிடை புகுந்து ஆரும் குலம் கொள் மா மறையவர் சிரபுரம் தொழுது எழ வினை குறுகாவே மேல் #2580 வண்டு சென்று அணை மலர் மிசை நான்முகன் மாயன் என்று இவர் அன்று கண்டு கொள்ள ஓர் ஏனமோடு அன்னமாய் கிளறியும் பறந்தும் தாம் பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி பரமேட்டி கொண்ட செல்வத்து சிரபுரம் தொழுது எழ வினை அவை கூடாவே மேல் #2581 பறித்த புன் தலை குண்டிகை சமணரும் பார் மிசை துவர் தோய்ந்த செறிந்த சீவர தேரரும் தேர்கிலா தேவர்கள் பெருமானார் முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை வெறித்து பாய் வயல் சிரபுரம் தொழ வினை விட்டிடும் மிக தானே மேல் #2582 பரசுபாணியை பத்தர்கள் அத்தனை பை அரவோடு அக்கு நிரை செய் பூண் திரு மார்பு உடை நிமலனை நித்தில பெருந்தொத்தை விரை செய் பூம் பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானை பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனை பணிவாரே மேல் 103. திருஅம்பர்மாகாளம் : பண் - நட்டராகம் #2583 புல்கு பொன் நிறம் புரி சடை நெடு முடி போழ் இள மதி சூடி பில்கு தேன் உடை நறு மலர் கொன்றையும் பிணையல் செய்தவர் மேய மல்கு தண் துறை அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே மேல் #2584 அரவம் ஆட்டுவர் அம் துகில் புலி அதள் அங்கையில் அனல் ஏந்தி இரவும் ஆடுவர் இவை இவர் சரிதைகள் இசைவன பல பூதம் மரவம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் பரவியும் பணிந்து ஏத்த வல்லார் அவர் பயன் தலைப்படுவாரே மேல் #2585 குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும் குரை கழல் அடி சேர கணங்கள் பாடவும் கண்டவர் பரவவும் கருத்து அறிந்தவர் மேய மணம் கொள் பூம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் வணங்கும் உள்ளமொடு அணைய வல்லார்களை வல்வினை அடையாவே மேல் #2586 எங்கும் ஏதும் ஓர் பிணி இலர் கேடு இலர் இழை வளர் நறும் கொன்றை தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர் மேய மங்குல் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை உடையாரே மேல் #2587 நெதியம் என உள போகம் மற்று என் உள நிலம் மிசை நலம் ஆய கதியம் என் உள வானவர் என் உளர் கருதிய பொருள் கூடில் மதியம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே மேல் #2588 கண் உலாவிய கதிர் ஒளி முடி மிசை கனல்விடு சுடர் நாகம் தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய மண் உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர் இ உலகினில் உயர்வாரே மேல் #2589 தூசுதான் அரை தோல் உடை கண்ணி அம் சுடர்விடு நறும் கொன்றை பூசு வெண்பொடி பூசுவது அன்றியும் புகழ் புரிந்தவர் மேய மாசு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் பேசு நீர்மையர் யாவர் இ உலகினில் பெருமையை பெறுவாரே மேல் #2590 பவ்வம் ஆர் கடல் இலங்கையர்_கோன்-தனை பரு வரை கீழ் ஊன்றி எவ்வம் தீர அன்று இமையவர்க்கு அருள்செய்த இறையவன் உறை கோயில் மவ்வம் தோய் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் கவ்வையால் தொழும் அடியவர் மேல் வினை கனலிடை செதிள் அன்றே மேல் #2591 உய்யும் காரணம் உண்டு என்று கருது-மின் ஒளி கிளர் மலரோனும் பை கொள் பாம்பு அணை பள்ளிகொள் அண்ணலும் பரவ நின்றவர் மேய மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் கையினால் தொழுது அவலமும் பிணியும் தம் கவலையும் களைவாரே மேல் #2592 பிண்டிபாலரும் மண்டை கொள் தேரரும் பீலி கொண்டு உழல்வாரும் கண்ட நூலரும் கடும் தொழிலாளரும் கழற நின்றவர் மேய வண்டு உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் பண்டு நாம் செய்த பாவங்கள் பற்று அற பரவுதல் செய்வோமே மேல் #2593 மாறு தன்னொடு மண் மிசை இல்லது வரு புனல் மாகாளத்து ஈறும் ஆதியும் ஆகிய சோதியை ஏறு அமர் பெருமானை நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே மேல் 104. திருக்கடிக்குளம் : பண் - நட்டராகம் #2594 பொடி கொள் மேனி வெண் நூலினர் தோலினர் புலி உரி அதள் ஆடை கொடி கொள் ஏற்றினர் மணி கிணினென வரு குரை கழல் சிலம்பு ஆர்க்க கடி கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தை தம் முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே மேல் #2595 விண்களார் தொழும் விளக்கினை துளக்கு இலா விகிர்தனை விழவு ஆரும் மண்களார் துதித்து அன்பராய் இன்புறும் வள்ளலை மருவி தம் கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை பண்கள் ஆர்தர பாடுவார் கேடு இலர் பழி இலர் புகழ் ஆமே மேல் #2596 பொங்கு நன் கரி உரி அது போர்ப்பது புலி அதள் உடை நாகம் தங்க மங்கையை பாகம் அது உடையவர் தழல் புரை திரு மேனி கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை எங்கும் ஏத்தி நின்று இன்புறும் அடியரை இடும்பை வந்து அடையாவே மேல் #2597 நீர் கொள் நீள் சடைமுடியனை நித்தில தொத்தினை நிகர் இல்லா பார் கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை பசும்பொன்னை விசும்பு ஆரும் கார் கொள் பூம் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகம்-தன்னை சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே மேல் #2598 சுரும்பு சேர் சடைமுடியினன் மதியொடு துன்னிய தழல் நாகம் அரும்பு தாது அவிழ்ந்து அலர்ந்தன மலர் பல கொண்டு அடியவர் போற்ற கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை விரும்பு வேட்கையோடு உள் மகிழ்ந்து உரைப்பவர் விதி உடையவர்தாமே மேல் #2599 மாது இலங்கிய பாகத்தன் மதியமொடு அலை புனல் அழல் நாகம் போது இலங்கிய கொன்றையும் மத்தமும் புரி சடைக்கு அழகு ஆக காது இலங்கிய குழையினன் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தின் பாதம் கைதொழுது ஏத்த வல்லார் வினை பற்று அற கெடுமன்றே மேல் #2600 குலவு கோலத்த கொடி நெடு மாடங்கள் குழாம் பல குளிர் பொய்கை உலவு புள் இனம் அன்னங்கள் ஆலிடும் பூவை சேரும் கூந்தல் கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை சீர் நிலவி நின்றுநின்று ஏத்துவார் மேல் வினை நிற்ககில்லாதானே மேல் #2601 மடுத்த வாள் அரக்கன் அவன் மலை-தன் மேல் மதி இலாமையில் ஓடி எடுத்தலும் முடி தோள் கரம் நெரிந்து இற இறையவன் விரல் ஊன்ற கடுத்து வாயொடு கை எடுத்து அலறிட கடிக்குளம்-தனில் மேவி கொடுத்த பேர் அருள் கூத்தனை ஏத்துவார் குணம் உடையவர்தாமே மேல் #2602 நீரின் ஆர் கடல் துயின்றவன் அயனொடு நிகழ் அடி முடி காணார் பாரின் ஆர் விசும்பு உற பரந்து எழுந்தது ஓர் பவளத்தின் படி ஆகி காரின் ஆர் பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும் கற்பகத்தின்-தன் சீரின் ஆர் கழல் ஏத்த வல்லார்களை தீவினை அடையாவே மேல் #2603 குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா மிண்டர் மிண்டு உரை கேட்டு அவை மெய் என கொள்ளன்-மின் விடம் உண்ட கண்டர் முண்டம் நல் மேனியர் கடிக்குளத்து உறைதரும் எம் ஈசர் தொண்டர்தொண்டரை தொழுது அடி பணி-மின்கள் தூ நெறி எளிது ஆமே மேல் #2604 தனம் மலி புகழ் தயங்கு பூந்தராயவர் மன்னன் நல் சம்பந்தன் மனம் மலி புகழ் வண் தமிழ் மாலைகள் மால் அதுவாய் மகிழ்வோடும் கனம் மலி கடல் ஓதம் வந்து உலவிய கடிக்குளத்து அமர்வானை இனம் மலிந்து இசை பாட வல்லார்கள் போய் இறைவனோடு உறைவாரே மேல் 105. திருக்கீழ்வேளூர் : பண் - நட்டராகம் #2605 மின் உலாவிய சடையினர் விடையினர் மிளிர்தரும் அரவோடும் பன் உலாவிய மறை ஒலி நாவினர் கறை அணி கண்டத்தர் பொன் உலாவிய கொன்றை அம் தாரினர் புகழ் மிகு கீழ்வேளூர் உன் உலாவிய சிந்தையர் மேல் வினை ஓடிட வீடு ஆமே மேல் #2606 நீர் உலாவிய சடையிடை அரவொடு மதி சிரம் நிரை மாலை வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க ஏர் உலாவிய இறைவனது உறைவிடம் எழில் திகழ் கீழ்வேளூர் சீர் உலாவிய சிந்தைசெய்து அணைபவர் பிணியொடு வினை போமே மேல் #2607 வெண் நிலா மிகு விரி சடை அரவொடும் வெள்எருக்கு அலர் மத்தம் பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வுறு கீழ்வேளூர் பெண் நிலாவிய பாகனை பெரும் திரு கோயில் எம்பெருமானை உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில் உள்ளாரே மேல் #2608 சேடு உலாவிய கங்கையை சடையிடை தொங்கவைத்து அழகாக நாடு உலாவிய பலி கொளும் நாதனார் நலம் மிகு கீழ்வேளூர் பீடு உலாவிய பெருமையர் பெரும் திரு கோயிலுள் பிரியாது நீடு உலாவிய நிமலனை பணிபவர் நிலை மிக பெறுவாரே மேல் #2609 துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை மன்று உலாவிய மா தவர் இனிது இயல் மணம் மிகு கீழ்வேளூர் நின்று நீடிய பெரும் திரு கோயிலின் நிமலனை நினைவோடும் சென்று உலாவி நின்று ஏத்த வல்லார் வினை தேய்வது திணம் ஆமே மேல் #2610 கொத்து உலாவிய குழல் திகழ் சடையனை கூத்தனை மகிழ்ந்து உள்கி தொத்து உலாவிய நூல் அணி மார்பினர் தொழுது எழு கீழ்வேளூர் பித்து உலாவிய பத்தர்கள் பேணிய பெரும் திரு கோயில் மன்னும் முத்து உலாவிய வித்தினை ஏத்து-மின் முடுகிய இடர் போமே மேல் #2611 பிறை நிலாவிய சடையிடை பின்னலும் வன்னியும் துன் ஆரும் கறை நிலாவிய கண்டர் எண் தோளினர் காதல்செய் கீழ்வேளூர் மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெரும் திரு கோயில் மன்னும் நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை போமே மேல் #2612 மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் தலை எலாம் நெரிந்து அலறிட ஊன்றினான் உறைதரு கீழ்வேளூர் கலை நிலாவிய நாவினர் காதல்செய் பெரும் திரு கோயிலுள் நிலை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைய வல்வினை போமே மேல் #2613 மஞ்சு உலாவிய கடல் கிடந்தவனொடு மலரவன் காண்பு ஒண்ணா பஞ்சு உலாவிய மெல் அடி பார்ப்பதி பாகனை பரிவோடும் செம் சொலார் பலர் பரவிய தொல் புகழ் மல்கிய கீழ்வேளூர் நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே மேல் #2614 சீறு உலாவிய தலையினர் நிலை இலா அமணர்கள் சீவரத்தார் வீறு இலாத வெம் சொல் பல விரும்பன்-மின் சுரும்பு அமர் கீழ்வேளூர் ஏறு உலாவிய கொடியனை ஏதம் இல் பெரும் திரு கோயில் மன்னு பேறு உலாவிய பெருமையன் திருவடி பேணு-மின் தவம் ஆமே மேல் #2615 குருண்ட வார் குழல் சடை உடை குழகனை அழகு அமர் கீழ்வேளூர் திரண்ட மா மறையவர் தொழும் பெரும் திரு கோயில் எம்பெருமானை இருண்ட மேதியின் இனம் மிகு வயல் மல்கு புகலி மன் சம்பந்தன் தெருண்ட பாடல் வல்லார் அவர் சிவகதி பெறுவது திடம் ஆமே மேல் 106. திருவலஞ்சுழி : பண் - நட்டராகம் #2616 என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இரும் கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினை பயனிடை முழு மணி தரளங்கள் மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழிவாணனை வாயார பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே மேல் #2617 விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை வலஞ்சுழி இடம் ஆக கொண்ட நாதன் மெய் தொழில் புரி தொண்டரோடு இனிது இருந்தமையாலே மேல் #2618 திருந்தலார் புரம் தீ எழ செறுவன இறலின்-கண் அடியாரை பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக இருந்த நாயகன் இமையவர் ஏத்திய இணையடி தலம்தானே மேல் #2619 கறை கொள் கண்டத்தர் காய் கதிர் நிறத்தினர் அற திறம் முனிவர்க்கு அன்று இறைவர் ஆலிடை நீழலில் இருந்து உகந்து இனிது அருள் பெருமானார் மறைகள் ஓதுவர் வரு புனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து அரும் கானத்து அறை கழல் சிலம்பு ஆர்க்க நின்று ஆடிய அற்புதம் அறியோமே மேல் #2620 மண்ணர் நீரர் விண் காற்றினர் ஆற்றல் ஆம் எரி உரு ஒருபாகம் பெண்ணர் ஆண் என தெரிவு அரு வடிவினர் பெரும் கடல் பவளம் போல் வண்ணர் ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம் புக்க எண்ணர் ஆகிலும் எனை பல இயம்புவர் இணையடி தொழுவாரே மேல் #2621 ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர் மட மாதர் இருவர் ஆதரிப்பார் பல பூதமும் பேய்களும் அடையாளம் அருவராதது ஒர் வெண் தலை கை பிடித்து அகம்-தொறும் பலிக்கு என்று வருவரேல் அவர் வலஞ்சுழி அடிகளே வரி வளை கவர்ந்தாரே மேல் #2622 குன்றியூர் குடமூக்கு இடம் வலம்புரம் குலவிய நெய்த்தானம் என்று இ ஊர்கள் இல்லோம் என்றும் இயம்புவர் இமையவர் பணி கேட்பார் அன்றி ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம் வலஞ்சுழி அரனார்-பால் சென்று அ ஊர்-தனில் தலைப்படல் ஆம் என்று சே_இழை தளர்வு ஆமே மேல் #2623 குயிலின் நேர் மொழி கொடையிடை வெருவுற குல வரை பரப்பு ஆய கயிலையை பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள் இருபதும் ஊன்றி மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே மேல் #2624 அழல் அது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவு அணை துயின்றானும் கழலும் சென்னியும் காண்பு அரிதாயவர் மாண்பு அமர் தட கையில் மழலை வீணையர் மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே மேல் #2625 அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் நெறி அலாதன கூறுவர் மற்று அவை தேறன்-மின் மாறா நீர் மறி உலாம் திரை காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானை பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில் அளவு அறுப்பு ஒண்ணாதே மேல் #2626 மாது ஒர்கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயல் காழி நாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை ஆதரித்து இசை கற்று வல்லார் சொல கேட்டு உகந்தவர்-தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே மேல் 107. திருக்கேதீச்சரம் : பண் - நட்டராகம் #2627 விருது குன்ற மா மேரு வில் நாண் அரவா அனல் எரி அம்பா பொருது மூஎயில் செற்றவன் பற்றி நின்று உறை பதி எந்நாளும் கருதுகின்ற ஊர் கனை கடல் கடி கமழ் பொழில் அணி மாதோட்டம் கருத நின்ற கேதீச்சுரம் கைதொழ கடுவினை அடையாவே மேல் #2628 பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் ஈடம் ஆவது இரும் கடல் கரையினில் எழில் திகழ் மாதோட்டம் கேடு இலாத கேதீச்சுரம் கைதொழ கெடும் இடர் வினைதானே மேல் #2629 பெண் ஒர்பாகத்தர் பிறை தவழ் சடையினர் அறை கழல் சிலம்பு ஆர்க்க சுண்ணம் ஆதரித்து ஆடுவர் பாடுவர் அகம்-தொறும் இடு பிச்சைக்கு உண்ணல் ஆவது ஓர் இச்சையின் உழல்பவர் உயர்தரு மாதோட்டத்து அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே மேல் #2630 பொடி கொள் மேனியர் புலி அதள் அரையினர் விரிதரு கரத்து ஏந்தும் வடிகொள் மூ இலை வேலினர் நூலினர் மறி கடல் மாதோட்டத்து அடிகள் ஆதரித்து இருந்த கேதீச்சுரம் பரிந்த சிந்தையர் ஆகி முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே மேல் #2631 நல்லர் ஆற்றவும் ஞானம் நன்கு உடையர் தம் அடைந்தவர்க்கு அருள் ஈய வல்லர் பார் மிசைவான் பிறப்பு இறப்பு இலர் மலி கடல் மாதோட்டத்து எல்லை இல் புகழ் எந்தை கேதீச்சுரம் இராப்பகல் நினைந்து ஏத்தி அல்லல் ஆசு அறுத்து அரன் அடி இணை தொழும் அன்பர் ஆம் அடியாரே மேல் #2632 பேழை வார் சடை பெரும் திருமகள்-தனை பொருந்த வைத்து ஒருபாகம் மாழை அம் கயல்கண்ணி-பால் அருளிய பொருளினர் குடிவாழ்க்கை வாழை அம் பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்ட கேழல் வெண் மருப்பு அணிந்த நீள் மார்பர் கேதீச்சுரம் பிரியாரே மேல் #2633 பண்டு நால்வருக்கு அறம் உரைத்து அருளி பல் உலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார் கடலிடம் கைதொழ காதலித்து உறை கோயில் வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் தொண்டர் நாள்-தொறும் துதிசெய அருள்செய் கேதீச்சுரம் அதுதானே மேல் #2634 தென்_இலங்கையர் குல பதி மலை நலிந்து எடுத்தவன் முடி திண் தோள் தன் நலம் கெட அடர்த்து அவற்கு அருள்செய்த தலைவனார் கடல்-வாய் அ பொன் இலங்கிய முத்து மா மணிகளும் பொருந்திய மாதோட்டத்து உன்னி அன்பொடும் அடியவர் இறைஞ்சு கேதீச்சுரத்து உள்ளாரே மேல் #2635 பூஉளானும் அ பொரு கடல்_வண்ணனும் புவி இடந்து எழுந்து ஓடி மேவி நாடி நின் அடி இணை காண்கிலா வித்தகம் என் ஆகும் மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி தேவி-தன்னொடும் திருந்து கேதீச்சுரத்து இருந்த எம்பெருமானே மேல் #2636 புத்தராய் சில புனை துகில் உடையவர் புறன் உரை சமண் ஆதர் எத்தர் ஆகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன்-மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்து அத்தர் மன்னு பாலாவியின் கரையில் கேதீச்சுரம் அடை-மின்னே மேல் #2637 மாடு எலாம் மண முரசு என கடலினது ஒலி கவர் மாதோட்டத்து ஆடல் ஏறு உடை அண்ணல் கேதீச்சுரத்து அடிகளை அணி காழி நாடுளார்க்கு இறை ஞானசம்பந்தன் சொல் நவின்று எழு பாமாலை பாடல் ஆயின பாடு-மின் பத்தர்காள் பரகதி பெறல் ஆமே மேல் 108. திருவிற்குடிவீரட்டம் : பண் - நட்டராகம் #2638 வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த கடி கொள் கொன்றை அம் சடையினர் கொடியினர் உடை புலி அதள் ஆர்ப்பர் விடை அது ஏறும் எம்மான் அமர்ந்து இனிது உறை விற்குடிவீரட்டம் அடியர் ஆகி நின்று ஏத்த வல்லார்-தமை அருவினை அடையாவே மேல் #2639 களம் கொள் கொன்றையும் கதிர் விரி மதியமும் கடி கமழ் சடைக்கு ஏற்றி உளம் கொள் பத்தர்-பால் அருளிய பெருமையர் பொரு கரி உரி போர்த்து விளங்கு மேனியர் எம்பெருமான் உறை விற்குடிவீரட்டம் வளம் கொள் மா மலரால் நினைந்து ஏத்துவார் வருத்தம் அது அறியாரே மேல் #2640 கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில் எரியர் புன் சடை இடம் பெற காட்டகத்து ஆடிய வேடத்தர் விரியும் மா மலர் பொய்கை சூழ் மது மலி விற்குடிவீரட்டம் பிரிவு இலாதவர் பெரும் தவத்தோர் என பேணுவர் உலகத்தே மேல் #2641 பூதம் சேர்ந்து இசை பாடலர் ஆடலர் பொலிதர நலம் ஆர்ந்த பாதம் சேர் இணை சிலம்பினர் கலம் பெறு கடல் எழு விடம் உண்டார் வேதம் ஓதிய நா உடையான் இடம் விற்குடிவீரட்டம் ஓதும் நெஞ்சினர்க்கு அல்லது உண்டோ பிணி தீவினை கெடும் ஆறே மேல் #2642 கடிய ஏற்றினர் கனல் அன மேனியர் அனல் எழ ஊர் மூன்றும் இடிய மால் வரை கால் வளைத்தான் தனது அடியவர் மேல் உள்ள வெடிய வல்வினை வீட்டுவிப்பான் உறை விற்குடிவீரட்டம் படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே மேல் #2643 பெண் ஒர்கூறினர் பெருமையர் சிறு மறி கையினர் மெய் ஆர்ந்த அண்ணல் அன்புசெய்வார் அவர்க்கு எளிவர் அரியவர் அல்லார்க்கு விண்ணில் ஆர் பொழில் மல்கிய மலர் விரி விற்குடிவீரட்டம் எண் நிலாவிய சிந்தையினார்-தமக்கு இடர்கள் வந்து அடையாவே மேல் #2644 இடம் கொள் மா கடல் இலங்கையர்_கோன்-தனை இகல் அழிதர ஊன்று திடம் கொள் மால் வரையான் உரை ஆர்தரு பொருளினன் இருள் ஆர்ந்த விடம் கொள் மா மிடறு உடையவன் உறை பதி விற்குடிவீரட்டம் தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே மேல் #2645 செங்கண்மாலொடு நான்முகன் தேடியும் திருவடி அறியாமை எங்கும் ஆர் எரி ஆகிய இறைவனை அறை புனல் முடி ஆர்ந்த வெம் கண் மால் வரை கரி உரித்து உகந்தவன் விற்குடிவீரட்டம் தம் கையால் தொழுது ஏத்த வல்லார் அவர் தவம் மல்கு குணத்தாரே மேல் #2646 பிண்டம் உண்டு உழல்வார்களும் பிரி துவர் ஆடையர் அவர் வார்த்தை பண்டும் இன்றும் ஓர் பொருள் என கருதன்-மின் பரிவுறுவீர் கேண்-மின் விண்ட மா மலர் சடையவன் இடம் எனில் விற்குடிவீரட்டம் கண்டுகொண்டு அடி காதல் செய்வார் அவர் கருத்துறும் குணத்தாரே மேல் #2647 விலங்கலே சிலை இடம் என உடையவன் விற்குடிவீரட்டத்து இலங்கு சோதியை எம்பெருமான்-தனை எழில் திகழ் கழல் பேணி நலம் கொள் வார் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை வலம்கொடே இசை மொழியு-மின் மொழிந்த-கால் மற்று அது வரம் ஆமே மேல் 109. திருக்கோட்டூர் : பண் - நட்டராகம் #2648 நீலம் ஆர்தரு கண்டனே நெற்றி ஓர் கண்ணனே ஒற்றை விடை சூலம் ஆர்தரு கையனே துன்று பை பொழில்கள் சூழ்ந்து அழகு ஆய கோல மா மலர் மணம் கமழ் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே மேல் #2649 பங்கயம் மலர் சீறடி பஞ்சு உறு மெல் விரல் அரவு அல்குல் மங்கைமார் பலர் மயில் குயில் கிளி என மிழற்றிய மொழியார் மென் கொங்கையார் குழாம் குணலைசெய் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் சங்கை ஒன்று இலர் ஆகி சங்கரன் திரு அருள் பெறல் எளிது ஆமே மேல் #2650 நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் செம்பொன் ஆர்தரும் எழில் திகழ் முலையவர் செல்வம் மல்கிய நல்ல கொம்பு அனார் தொழுது ஆடிய கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் அம் பொன் ஆர்தரும் உலகினில் அமரரோடு அமர்ந்து இனிது இருப்பாரே மேல் #2651 பலவும் நீள் பொழில் தீம் கனி தேன் பலா மாங்கனி பயில்வு ஆய கலவ மஞ்ஞைகள் நிலவு சொல் கிள்ளைகள் அன்னம் சேர்ந்து அழகு ஆய குலவு நீள் வயல் கயல் உகள் கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் நிலவு செல்வத்தர் ஆகி நீள் நிலத்திடை நீடிய புகழாரே மேல் #2652 உருகுவார் உள்ளத்து ஒண் சுடர் தனக்கு என்றும் அன்பர் ஆம் அடியார்கள் பருகும் ஆரமுது என நின்று பரிவொடு பத்தி செய்து எ திசையும் குருகு வாழ் வயல் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் அருகு சேர்தரு வினைகளும் அகலும் போய் அவன் அருள் பெறல் ஆமே மேல் #2653 துன்று வார் சடை தூ மதி மத்தமும் துன் எருக்கு ஆர் வன்னி பொன்றினார் தலை கலனொடு பரிகலம் புலி உரி உடை ஆடை கொன்றை பொன் என மலர்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவாரை என்றும் ஏத்துவார்க்கு இடர் இலை கேடு இலை ஏதம் வந்து அடையாவே மேல் #2654 மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய கூடு பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் கேடு அது ஒன்று இலர் ஆகி நல் உலகினில் கெழுவுவர் புகழாலே மேல் #2655 ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அ உயர் வரை எடுத்தலும் உமை அஞ்சி சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு அருள்செய்த குளிர் கொள் பூம் பொழில் சூழ்தரு கோட்டூர் நற்கொழுந்தினை தொழுவார்கள் தளிர் கொள் தாமரை பாதங்கள் அருள்பெறும் தவம் உடையவர்தாமே மேல் #2656 பாடி ஆடும் மெய் பத்தர்கட்கு அருள்செயும் முத்தினை பவளத்தை தேடி மால் அயன் காண ஒண்ணாத அ திருவினை தெரிவைமார் கூடி ஆடவர் கைதொழு கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார்கள் நீடு செல்வத்தர் ஆகி இ உலகினில் நிகழ்தரு புகழாரே மேல் #2657 கோணல் வெண் பிறை சடையனை கோட்டூர் நற்கொழுந்தினை செழும் திரளை பூணல்செய்து அடி போற்று-மின் பொய் இலா மெய்யன் நல் அருள் என்றும் காணல் ஒன்று இலா கார் அமண் தேரர் குண்டு ஆக்கர் சொல் கருதாதே பேணல்செய்து அரனை தொழும் அடியவர் பெருமையை பெறுவாரே மேல் #2658 பந்து உலா விரல் பவளமாய் தேன் மொழி பாவையோடு உரு ஆரும் கொந்து உலாம் மலர் விரி பொழில் கோட்டூர் நற்கொழுந்தினை செழும் பவளம் வந்து உலாவிய காழியுள் ஞானசம்பந்தன் வாய்ந்து உரைசெய்த சந்து உலாம் தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே மேல் 110. திருமாந்துறை : பண் - நட்டராகம் #2659 செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும் செருத்தி செண்பகம் ஆனை கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்து அலர் பரந்து உந்தி அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற எம்பிரான் இமையோர் தொழு பைம் கழல் ஏத்துதல் செய்வோமே மேல் #2660 விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான் அ துளவ மால்மகன் ஐங்கணை காமனை சுட விழித்தவன் நெற்றி அளக வாள் நுதல் அரிவை-தன் பங்கனை அன்றி மற்று அறியோமே மேல் #2661 கோடு தேன் சொரி குன்றிடை பூகமும் கூந்தலின் குலை வாரி ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன் வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் கேடு இலா மணியை தொழல் அல்லது கெழுமுதல் அறியோமே மேல் #2662 இலவம் ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இள மருது இலவங்கம் கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன் அலை கொள் வார் புனல் அம்புலி மத்தமும் ஆடு அரவுடன் வைத்த மலையை வானவர்_கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே மேல் #2663 கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவு இடை மலர் உந்தி ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி மலர் சேர்த்தி தாங்குவாரவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே மேல் #2664 பெருகு சந்தனம் கார் அகில் பீலியும் பெரு மரம் நிமிர்ந்து உந்தி பொருது காவிரி வடகரை மாந்துறை புளிதன் எம்பெருமானை பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார் மன்னர் பணிந்து ஏத்த மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே மேல் #2665 நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை அன்று அங்கு அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன் நிரை கழல் பணிவோமே மேல் #2666 மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம் உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு விரலானை சிந்தியா மனத்தாரவர் சேர்வது தீநெறி அதுதானே மேல் #2667 நீல மா மணி நித்தில தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணை நாளும் கோலம் ஏத்தி நின்று ஆடு-மின் பாடு-மின் கூற்றுவன் நலியானே மேல் #2668 நின்று உணும் சமண் தேரரும் நிலை இலர் நெடும் கழை நறவு ஏலம் நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரை வாரி ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை ஒரு காலம் அன்றி உள் அழிந்து எழும் பரிவு அழகிது அது அவர்க்கு இடம் ஆமே மேல் #2669 வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை சிரபுரம் பதி உடையவன் கவுணியன் செழு மறை நிறை நாவன் அர எனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறு மாலை பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே மேல் 111. திருவாய்மூர் : பண் - நட்டராகம் #2670 தளிர் இள வளர் என உமை பாட தாளம் இட ஓர் கழல் வீசி கிளர் இள மணி அரவு அரை ஆர்த்து ஆடும் வேட கிறிமையார் விளர் இளமுலையவர்க்கு அருள் நல்கி வெண் நீறு அணிந்து ஓர் சென்னியின் மேல் வளர் இள மதியமொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2671 வெம் தழல் வடிவினர் பொடி பூசி விரிதரு கோவண உடை மேல் ஓர் பந்தம் செய்து அரவு அசைத்து ஒலி பாடி பலபல கடை-தொறும் பலி தேர்வார் சிந்தனை புகுந்து எனக்கு அருள் நல்கி செம் சுடர்_வண்ணர்-தம் அடி பரவ வந்தனை பல செய இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2672 பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் சுண்ண பொடி நீறு அணி மார்பர் சுடர் பொன் சடை மேல் திகழ்கின்ற வண்ண பிறையோடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2673 எரி கிளர் மதியமொடு எழில் நுதல் மேல் எறி பொறி அரவினொடு ஆறு மூழ்க விரி கிளர் சடையினர் விடை ஏறி வெருவ வந்து இடர் செய்த விகிர்தனார் புரி கிளர் பொடி அணி திரு அகலம் பொன் செய்த வாய்மையர் பொன் மிளிரும் வரி அரவு அரைக்கு அசைத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2674 அஞ்சன மணி வணம் எழில் நிறமா அகம் மிடறு அணி கொள உடல் திமில நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே வஞ்சனை வடிவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2675 அல்லிய மலர் புல்கு விரி குழலார் கழல் இணை அடி நிழல் அவை பரவ எல்லி அம் போது கொண்டு எரி ஏந்தி எழிலொடு தொழில் அவை இசைய வல்லார் சொல்லிய அரு மறை இசை பாடி சூடு இள மதியினர் தோடு பெய்து வல்லியம் தோல் உடுத்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2676 கடிபடு கொன்றை நன் மலர் திகழும் கண்ணியர் விண்ணவர் கன மணி சேர் முடி பில்கும் இறையவர் மறுகில் நல்லார் முறைமுறை பலி பெய முறுவல் செய்வார் பொடி அணி வடிவொடு திரு அகலம் பொன் என மிளிர்வது ஒர் அரவினொடும் வடி நுனை மழுவினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2677 கட்டு இணை புது மலர் கமழ் கொன்றை கண்ணியர் வீணையர் தாமும் அஃதே எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் பட்டு இணை அகல் அல்குல் விரி குழலார் பாவையர் பலி எதிர் கொணர்ந்து பெய்ய வட்டணை ஆடலொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2678 ஏன மருப்பினொடு எழில் ஆமை இசைய பூண்டு ஓர் ஏறு ஏறி கானம் அது இடமா உறைகின்ற கள்வர் கனவில் துயர் செய்து தேன் உண மலர்கள் உந்தி விம்மி திகழ் பொன் சடை மேல் திகழ்கின்ற வான நல் மதியினொடு இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2679 சூடல் வெண் பிறையினர் சுடர் முடியர் சுண்ண வெண் நீற்றினர் சுடர் மழுவர் பாடல் வண்டு இசை முரல் கொன்றை அம் தார் பாம்பொடு நூல் அவை பசைந்து இலங்க கோடல் நன் முகில் விரல் கூப்பி நல்லார் குறை உறு பலி எதிர் கொணர்ந்து பெய்ய வாடல் வெண் தலை பிடித்து இவர் ஆணீர் வாய்மூர் அடிகள் வருவாரே மேல் #2680 திங்களொடு அரு வரை பொழில் சோலை தேன் நலம் கானல் அம் திரு வாய்மூர் அங்கமொடு அரு மறை ஒலி பாடல் அழல் நிற வண்ணர்-தம் அடி பரவி நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை தங்கிய மனத்தினால் தொழுது எழுவார் தமர் நெறி உலகுக்கு ஓர் தவ நெறியே மேல் 112. திருஆடானை : பண் - நட்டராகம் #2681 மாது ஓர்கூறு உகந்து ஏறு அது ஏறிய ஆதியான் உறை ஆடானை போதினால் புனைந்து ஏத்துவார்-தமை வாதியா வினை மாயுமே மேல் #2682 வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று ஆடலான் உறை ஆடானை தோடு உலாம் மலர் தூவி கைதொழ வீடும் நுங்கள் வினைகளே மேல் #2683 மங்கை கூறினன் மான் மறி உடை அம் கையான் உறை ஆடானை தம் கையால் தொழுது ஏத்த வல்லார் மங்கு நோய் பிணி மாயுமே மேல் #2684 சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை அண்ணலான் உறை ஆடானை வண்ண மா மலர் தூவி கைதொழ எண்ணுவார் இடர் ஏகுமே மேல் #2685 கொய் அணி மலர் கொன்றை சூடிய ஐயன் மேவிய ஆடானை கை அணி மலரால் வணங்கிட வெய்ய வல்வினை வீடுமே மேல் #2686 வான் இளம் மதி மல்கு வார் சடை ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை தேன் அணி மலர் சேர்த்த முன் செய்த ஊனம் உள்ள ஒழியுமே மேல் #2687 துலங்கு வெண் மழு ஏந்தி சூழ் சடை அலங்கலான் உறை ஆடானை நலம் கொள் மா மலர் தூவி நாள்-தொறும் வலம்கொள்வார் வினை மாயுமே மேல் #2688 வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை அந்தம் இல்லவன் ஆடானை கந்த மா மலர் தூவி கைதொழும் சிந்தையார் வினை தேயுமே மேல் #2689 மறைவலாரொடு வானவர் தொழுது அறையும் தண் புனல் ஆடானை உறையும் ஈசனை ஏத்த தீவினை பறையும் நல்வினை பற்றுமே மேல் #2690 மாயனும் மலரானும் கைதொழ ஆய அந்தணன் ஆடானை தூய மா மலர் தூவி கைதொழ தீய வல்வினை தீருமே மேல் #2691 வீடினார் மலி வெங்கடத்து நின்று ஆடலான் உறை ஆடானை நாடி ஞானசம்பந்தன் செந்தமிழ் பாட நோய் பிணி பாறுமே மேல் 113. சீகாழி : பண் - செவ்வழி #2692 பொடி இலங்கும் திருமேனியாளர் புலி அதளினர் அடி இலங்கும் கழல் ஆர்க்க ஆடும் அடிகள் இடம் இடி இலங்கும் குரல் ஓதம் மல்க எறி வார் திரை கடி இலங்கும் புனல் முத்து அலைக்கும் கடல் காழியே மேல் #2693 மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான் அரும் தொண்டர்கள் அயல் இலங்க பணி செய்ய நின்ற அடிகள் இடம் புயல் இலங்கும் கொடையாளர் வேதத்து ஒலி பொலியவே கயல் இலங்கும் வயல் கழனி சூழும் கடல் காழியே மேல் #2694 கூர்வு இலங்கும் திருசூலவேலர் குழை காதினர் மார்வு இலங்கும் புரி நூல் உகந்த மணவாளன் ஊர் நேர் விலங்கல் அன திரைகள் மோதம் நெடும் தாரை-வாய் கார் விலங்கல் என கலந்து ஒழுகும் கடல் காழியே மேல் #2695 குற்றம் இல்லார் குறைபாடு செய்வார் பழி தீர்ப்பவர் பெற்றம் நல்ல கொடி முன் உயர்த்த பெருமான் இடம் மற்று நல்லார் மனத்தால் இனியார் மறை கலை எலாம் கற்று நல்லார் பிழை தெரிந்து அளிக்கும் கடல் காழியே மேல் #2696 விருது இலங்கும் சரிதை தொழிலார் விரி சடையினார் எருது இலங்க பொலிந்து ஏறும் எந்தைக்கு இடம் ஆவது பெரிது இலங்கும் மறை கிளைஞர் ஓத பிழை கேட்டலால் கருது கிள்ளை குலம் தெரிந்து தீர்க்கும் கடல் காழியே மேல் #2697 தோடு இலங்கும் குழை காதர் வேதர் சுரும்பு ஆர் மலர் பீடு இலங்கும் சடை பெருமையாளர்க்கு இடம் ஆவது கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே மேல் #2698 மலை இலங்கும் சிலை ஆக வேகம் மதில் மூன்று எரித்து அலை இலங்கும் புனல் கங்கை வைத்த அடிகட்கு இடம் இலை இலங்கும் மலர் கைதை கண்டல் வெறி விரவலால் கலை இலங்கும் கணத்து இனம் பொலியும் கடல் காழியே மேல் #2699 முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும் முரண் இலங்கை கோன் அழுது இரங்க சிரம் உரம் ஒடுங்க அடர்த்து ஆங்கு அவன் தொழுது இரங்க துயர் தீர்த்து உகந்தார்க்கு இடம் ஆவது கழுதும் புள்ளும் மதில் புறம் அது ஆரும் கடல் காழியே மேல் #2700 பூவினானும் விரி போதில் மல்கும் திருமகள்-தனை மேவினானும் வியந்து ஏத்த நீண்டு ஆர் அழலாய் நிறைந்து ஓவி அங்கே அவர்க்கு அருள்புரிந்த ஒருவர்க்கு இடம் காவி அம் கண் மட மங்கையர் சேர் கடல் காழியே மேல் #2701 உடை நவின்றார் உடை விட்டு உழல்வார் இரும் தவத்தார் முடை நவின்ற மொழி ஒழித்து உகந்த முதல்வன் இடம் மடை நவின்ற புனல் கெண்டை பாயும் வயல் மலிதர கடை நவின்ற நெடு மாடம் ஓங்கும் கடல் காழியே மேல் #2702 கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும் கடல் காழியுள் உரகம் ஆரும் சடை அடிகள்-தம்-பால் உணர்ந்து உறுதலால் பெருக மல்கும் புகழ் பேணும் தொண்டர்க்கு இசை ஆர் தமிழ் விரகன் சொன்ன இவை பாடி ஆட கெடும் வினைகளே மேல் 114. திருக்கேதாரம் : பண் - செவ்வழி #2703 தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி சுரும்பு ஆர் மலர் இண்டை கட்டி வழிபாடு செய்யும் இடம் என்பரால் வண்டு பாட மயில் ஆல மான் கன்று துள்ள வரி கெண்டை பாய சுனை நீலம் மொட்டு அலரும் கேதாரமே மேல் #2704 பாதம் விண்ணோர் பலரும் பரவி பணிந்து ஏத்தவே வேதம் நான்கும் பதினெட்டொடு ஆறும் விரித்தார்க்கு இடம் தாது விண்டம் மது உண்டு மிண்டி வரு வண்டு இனம் கீதம் பாடம் மட மந்தி கேட்டு உகளும் கேதாரமே மேல் #2705 முந்தி வந்து புரோதயம் மூழ்கி முனிகள் பலர் எந்தை பெம்மான் என நின்று இறைஞ்சும் இடம் என்பரால் மந்தி பாய சரேல சொரிந்தும் முரிந்து உக்க பூ கெந்தம் நாற கிளரும் சடை எந்தை கேதாரமே மேல் #2706 உள்ளம் மிக்கார் குதிரை முகத்தார் ஒரு காலர்கள் எள்கல் இல்லா இமையோர்கள் சேரும் இடம் என்பரால் பிள்ளை துள்ளி கிளை பயில்வ கேட்டு பிரியாது போய் கிள்ளை ஏனல் கதிர் கொணர்ந்து வாய் பெய்யும் கேதாரமே மேல் #2707 ஊழிஊழி உணர்வார்கள் வேதத்தின் ஒண் பொருள்களால் வாழி எந்தை என வந்து இறைஞ்சும் இடம் என்பரால் மேழி தாங்கி உழுவார்கள் போல விரை தேரிய கேழல் பூழ்தி கிளைக்க மணி சிந்தும் கேதாரமே மேல் #2708 நீறு பூசி நிலத்து உண்டு நீர் மூழ்கி நீள் வரை-தன் மேல் தேறு சிந்தை உடையார்கள் சேரும் இடம் என்பரால் ஏறி மாவின் கனியும் பலாவின் இரும் சுளைகளும் கீறி நாளும் முசு கிளையொடு உண்டு உகளும் கேதாரமே மேல் #2709 மடந்தை பாகத்து அடக்கி மறை ஓதி வானோர் தொழ தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் உடைந்த காற்றுக்கு உயர் வேங்கை பூத்து உதிர கல் அறைகள் மேல் கிடந்த வேங்கை சினமா முகம் செய்யும் கேதாரமே மேல் #2710 அரவ முந்நீர் அணி இலங்கை_கோனை அரு வரை-தனால் வெருவ ஊன்றி விரலால் அடர்த்தார்க்கு இடம் என்பரால் குரவம் கோங்கம் குளிர் பிண்டி ஞாழல் சுரபுன்னை மேல் கிரமம் ஆக வரி வண்டு பண்செய்யும் கேதாரமே மேல் #2711 ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர் தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் வீழ்ந்து செற்றும் நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினை கீழ்ந்து சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே மேல் #2712 கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் இடுக்கண் உய்ப்பார் அவர் எய்த ஒண்ணா இடம் என்பரால் அடுக்க நின்ற அற உரைகள் கேட்டு ஆங்கு அவர் வினைகளை கெடுக்க நின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே மேல் #2713 வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்து சொன்ன அரும் தமிழ்கள் பத்தும் இவை வல்லவர் வேந்தர் ஆகி உலகு ஆண்டு வீடுகதி பெறுவரே மேல் 115. திருப்புகலூர் : பண் - செவ்வழி #2714 வெம் கள் விம்மு குழல் இளையர் ஆட வெறி விரவு நீர் பொங்கு செம் கண் கரும் கயல்கள் பாயும் புகலூர்-தனுள் திங்கள் சூடி திரிபுரம் ஒர் அம்பால் எரியூட்டிய எங்கள் பெம்மான் அடி பரவ நாளும் இடர் கழியுமே மேல் #2715 வாழ்ந்த நாளும் இனி வாழும் நாளும் இவை அறிதிரேல் வீழ்ந்த நாள் எம்பெருமானை ஏத்தா விதியில்லிகாள் போழ்ந்த திங்கள் புரி சடையினான்-தன் புகலூரையே சூழ்ந்த உள்ளம் உடையீர்காள் உங்கள் துயர் தீருமே மேல் #2716 மடையில் நெய்தல் கருங்குவளை செய்ய மலர் தாமரை புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் தொடை கொள் கொன்றை புனைந்தான் ஒர் பாகம் மதிசூடியை அடைய வல்லார் அமர்_உலகம் ஆளப்பெறுவார்களே மேல் #2717 பூவும் நீரும் பலியும் சுமந்து புகலூரையே நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார் செவி துளைகளால் யாவும் கேளார் அவன் பெருமை அல்லால் அடியார்கள்தாம் ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள் என்று உளம் கொள்ளவே மேல் #2718 அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய் பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் முன்னம் மூன்று மதில் எரித்த மூர்த்தி திறம் கருதும்-கால் இன்னர் என்ன பெரிது அரியர் ஏத்த சிறிது எளியரே மேல் #2719 குலவர் ஆக குலம் இலரும் ஆக குணம் புகழும்-கால் உலகில் நல்ல கதி பெறுவரேனும் மலர் ஊறு தேன் புலவம் எல்லாம் வெறி கமழும் அம் தண் புகலூர்-தனுள் நிலவம் மல்கு சடை அடிகள் பாதம் நினைவார்களே மேல் #2720 ஆணும் பெண்ணும் என நிற்பரேனும் அரவு ஆரமா பூணுமேனும் புகலூர்-தனக்கு ஓர் பொருள் ஆயினான் ஊணும் ஊரார் இடு பிச்சை ஏற்று உண்டு உடை கோவணம் பேணுமேனும் பிரான் என்பரால் எம்பெருமானையே மேல் #2721 உய்ய வேண்டில் எழு போத நெஞ்சே உயர் இலங்கை_கோன் கைகள் ஒல்க கருவரை எடுத்தானை ஒர் விரலினால் செய்கை தோன்ற சிதைத்து அருள வல்ல சிவன் மேய பூம் பொய்கை சூழ்ந்த புகலூர் புகழ பொருள் ஆகுமே மேல் #2722 நேமியானும் முகம் நான்கு உடையம் நெறி அண்ணலும் ஆம் இது என்று தகைந்து ஏத்த போய் ஆர் அழல் ஆயினான் சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ பூமி எல்லாம் புகழ் செல்வம் மல்கும் புகலூரையே மேல் #2723 வேர்த்த மெய்யர் உருமத்து உடைவிட்டு உழல்வார்களும் போர்த்த கூறை போதி நீழலாரும் புகலூர்-தனுள் தீர்த்தம் எல்லாம் சடை கரந்த தேவன் திறம் கருதும்-கால் ஓர்த்து மெய் என்று உணராது பாதம் தொழுது உய்ம்-மினே மேல் #2724 புந்தி ஆர்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்-தனுள் வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை அந்தம் இல்லா அனல் ஆடலானை அணி ஞானசம் பந்தன் சொன்ன தமிழ் பாடி ஆட கெடும் பாவமே மேல் 116. திருநாகைக்காரோணம் : பண் - செவ்வழி #2725 கூனல் திங்கள் குறும் கண்ணி கான்ற நெடு வெண் நிலா வேனல் பூத்தம் மராம் கோதையோடும் விராவும் சடை வான_நாடன் அமரர் பெருமாற்கு இடம் ஆவது கானல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2726 விலங்கல் ஒன்று சிலையா மதில் மூன்று உடன் வீட்டினான் இலங்கு கண்டத்து எழில் ஆமை பூண்டாற்கு இடம் ஆவது மலங்கி ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் கலங்கல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2727 வெறி கொள் ஆரும் கடல் கைதை நெய்தல் விரி பூம் பொழில் முறி கொள் ஞாழல் முட புன்னை முல்லை முகை வெண் மலர் நறை கொள் கொன்றைம் நயந்து ஓங்கு நாதற்கு இடம் ஆவது கறை கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2728 வண்டு பாட வளர் கொன்றை மாலை மதியோடு உடன் கொண்ட கோலம் குளிர் கங்கை தங்கும் குருள் குஞ்சியுள் உண்டு போலும் என வைத்து உகந்த ஒருவற்கு இடம் கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2729 வார் கொள் கோல முலை மங்கை நல்லார் மகிழ்ந்து ஏத்தவே நீர் கொள் கோல சடை நெடு வெண் திங்கள் நிகழ்வு எய்தவே போர் கொள் சூல படை புல்கு கையார்க்கு இடம் ஆவது கார் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2730 விடை அது ஏறி விட அரவு அசைத்த விகிர்தர் அவர் படை கொள் பூதம் பல ஆடும் பரம் ஆயவர் உடை கொள் வேங்கை உரி தோல் உடையார்க்கு இடம் ஆவது கடை கொள் செல்வம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2731 பொய்து வாழ்வு ஆர் மனம் பாழ்படுக்கும் மலர் பூசனை செய்து வாழ்வார் சிவன் சேவடிக்கே செலும் சிந்தையார் எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது கைதல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2732 பத்து இரட்டி திரள் தோள் உடையான் முடி பத்து இற அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடம் ஆவது மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் கத்து இரட்டும் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2733 நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால் அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது மல்லல் ஓங்கி வரு வெண் திரை மல்கிய மால் கடல் கல்லல் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2734 உயர்ந்த போதின் உருமத்து உடை விட்டு உழல்வார்களும் பெயர்ந்த மண்டை இடு பிண்டமா உண்டு உழல்வார்களும் நயந்து காணா வகை நின்ற நாதர்க்கு இடம் ஆவது கயம் கொள் ஓதம் கழி சூழ் கடல் நாகைக்காரோணமே மேல் #2735 மல்கு தண் பூம் புனல் வாய்ந்து ஒழுகும் வயல் காழியான் நல்ல கேள்வி தமிழ் ஞானசம்பந்தன் நல்லார்கள் முன் வல்ல ஆறே புனைந்து ஏத்தும் காரோணத்து வண் தமிழ் சொல்லுவார்க்கும் இவை கேட்பவர்க்கும் துயர் இல்லையே மேல் 117. திருஇரும்பைமாகாளம் : பண் - செவ்வழி #2736 மண்டு கங்கை சடையில் கரந்தும் மதி சூடி மான் கொண்ட கையான் புரம் மூன்று எரித்த குழகன் இடம் எண் திசையும் புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே மேல் #2737 வேத வித்தாய் வெள்ளை நீறு பூசி வினை ஆயின கோது வித்தா நீறு எழ கொடி மா மதில் ஆயின ஏத வித்து ஆயின தீர்க்கும் இடம் இரும்பை-தனுள் மா தவத்தோர் மறையோர் தொழ நின்ற மாகாளமே மேல் #2738 வெந்த நீறும் எலும்பும் அணிந்த விடை ஊர்தியான் எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் கந்தம் ஆய பலவின் கனிகள் கமழும் பொழில் மந்தி ஏறி கொணர்ந்து உண்டு உகள்கின்ற மாகாளமே மேல் #2739 நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள் அஞ்ச வேழம் உரித்த பெருமான் அமரும் இடம் எஞ்சல் இல்லா புகழ் போய் விளங்கும் இரும்பை-தனுள் மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே மேல் #2740 பூசும் மாசு இல் பொடியான் விடையான் பொருப்பன்மகள் கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண் மதி ஈசன் எங்கள் இறைவன் இடம் போல் இரும்பை-தனுள் மாசு இலோர் கள் மலர் கொண்டு அணிகின்ற மாகாளமே மேல் #2741 குறைவது ஆய குளிர் திங்கள் சூடி குனித்தான் வினை பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை-தனுள் மறைகள் வல்லார் வணங்கி தொழுகின்ற மாகாளமே மேல் #2742 பொங்கு செம் கண் அரவும் மதியும் புரி புன் சடை தங்கவைத்த பெருமான் என நின்றவர் தாழ்விடம் எங்கும் இச்சை அமர்ந்தான் இடம் போல் இரும்பை-தனுள் மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆய மாகாளமே மேல் #2743 நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் அட்டமூர்த்தி அழல் போல் உருவன் அழகு ஆகவே இட்டம் ஆக இருக்கும் இடம் போல் இரும்பை-தனுள் வட்டம் சூழ்ந்து பணிவார் பிணி தீர்க்கும் மாகாளமே மேல் #2744 அட்ட காலன்-தனை வவ்வினான் அ அரக்கன் முடி எட்டும் மற்றும் இருபத்திரண்டும் இற ஊன்றினான் இட்டம் ஆக இருப்பான் அவன் போல் இரும்பை-தனுள் மட்டு வார்ந்த பொழில் சூழ்ந்து எழில் ஆரும் மாகாளமே மேல் #2745 அரவம் ஆர்த்து அன்று அனல் அங்கை ஏந்தி அடியும் முடி பிரமன் மாலும் அறியாமை நின்ற பெரியோன் இடம் குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும் இரும்பை-தனுள் மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே மேல் #2746 எந்தை பெம்மான் இடம் எழில் கொள் சோலை இரும்பை-தனுள் மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில் அந்தம் இல்லா அனல் ஆடுவானை அணி ஞானசம் பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே மேல் 118. திருத்திலதைப்பதி : பண் - செவ்வழி #2747 பொடிகள் பூசி பல தொண்டர் கூடி புலர் காலையே அடிகள் ஆர தொழுது ஏத்த நின்ற அழகன் இடம் கொடிகள் ஓங்கி குலவும் விழவு ஆர் திலதைப்பதி வடி கொள் சோலை மலர் மணம் கமழும் மதிமுத்தமே மேல் #2748 தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம் தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே மேல் #2749 அடல் உள் ஏறு உய்த்து உகந்தான் அடியார் அமரர் தொழ கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் திடல் அடங்க செழும் கழனி சூழ்ந்த திலதைப்பதி மடலுள் வாழை கனி தேன் பிலிற்றும் மதிமுத்தமே மேல் #2750 கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம் வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் செங்கயல் பாய் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி மங்குல் தோயும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் மதிமுத்தமே மேல் #2751 புரவி ஏழும் மணி பூண்டு இயங்கும் கொடி தேரினான் பரவி நின்று வழிபாடு செய்யும் பரமேட்டி ஊர் விரவி ஞாழல் விரி கோங்கு வேங்கை சுரபுன்னைகள் மரவம் மவ்வல் மலரும் திலதை மதிமுத்தமே மேல் #2752 விண்ணர் வேதம் விரித்து ஓத வல்லார் ஒரு பாகமும் பெண்ணர் எண்ணார் எயில் செற்று உகந்த பெருமான் இடம் தெண் நிலாவின் ஒளி தீண்டு சோலை திலதைப்பதி மண்ணுளார் வந்து அருள் பேணி நின்ற மதிமுத்தமே மேல் #2753 ஆறு சூடி அடையார் புரம் செற்றவர் பொன் தொடி கூறு சேரும் உருவர்க்கு இடம் ஆவது கூறும்-கால் தேறல் ஆரும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திலதைப்பதி மாறு இலா வண் புனல் அரிசில் சூழ்ந்த மதிமுத்தமே மேல் #2754 கடுத்து வந்த கன மேனியினான் கருவரை-தனை எடுத்தவன்-தன் முடி தோள் அடர்த்தார்க்கு இடம் ஆவது புடை கொள் பூகத்து இளம் பாளை புல்கும் மது பாய வாய் மடுத்து மந்தி உகளும் திலதை மதிமுத்தமே மேல் #2755 படம் கொள் நாகத்து_அணையானும் பைம் தாமரையின் மிசை இடம் கொள் நால்வேதனும் ஏத்த நின்ற இறைவன் இடம் திடம் கொள் நாவின் இசை தொண்டர் பாடும் திலதைப்பதி மடங்கல் வந்து வழிபாடு செய்யும் மதிமுத்தமே மேல் #2756 புத்தர் தேரர் பொறி இல் சமணர்களும் வீறு இலா பித்தர் சொன்ன மொழி கேட்கிலாத பெருமான் இடம் பத்தர் சித்தர் பணிவுற்று இறைஞ்சும் திலதைப்பதி மத்த யானை வழிபாடு செய்யும் மதிமுத்தமே மேல் #2757 மந்தம் ஆரும் பொழில் சூழ் திலதை மதிமுத்தர் மேல் கந்தம் ஆரும் கடல் காழி உள்ளான் தமிழ் ஞானசம் பந்தன் மாலை பழி தீர நின்று ஏத்த வல்லார்கள் போய் சிந்தைசெய்வார் சிவன் சேவடி சேர்வது திண்ணமே மேல் 119. திருநாகேச்சரம் : பண் - செவ்வழி #2758 தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின் பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை நழுவு இல் வானோர் தொழ நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே மேல் #2759 பெண் ஒர்பாகம் அடைய சடையில் புனல் பேணிய வண்ணம் ஆன பெருமான் மருவும் இடம் மண்ணுளார் நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் கண்ணினால் காண வல்லாரவர் கண் உடையார்களே மேல் #2760 குறவர் கொல்லை புனம் கொள்ளைகொண்டும் மணி குலவு நீர் பறவை ஆல பரக்கும் பழம் காவிரி தென்கரை நறவம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாகேச்சுரத்து இறைவர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர் இல்லையே மேல் #2761 கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள் வந்து ஆடும் நாகேச்சுரம் தேசம் ஆக்கும் திரு கோயிலா கொண்ட செல்வன் கழல் நேசம் ஆக்கும் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே மேல் #2762 வம்பு நாறும் மலரும் மலை பண்டமும் கொண்டு நீர் பைம்பொன் வாரி கொழிக்கும் பழம் காவிரி தென்கரை நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே மேல் #2763 காள மேக நிற காலனோடு அந்தகன் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன நினைவுறின் நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே மேல் #2764 வேய் உதிர் முத்தொடு மத்த யானை மருப்பும் விராய் பாய் புனல் வந்து அலைக்கும் பழம் காவிரி தென்கரை நாயிறும் திங்களும் கூடி வந்து ஆடும் நாகேச்சுரம் மேயவன்-தன் அடி போற்றி என்பார் வினை வீடுமே மேல் #2765 இலங்கை_வேந்தன் சிரம் பத்து இரட்டி எழில் தோள்களும் மலங்கி வீழம் மலையால் அடர்த்தான் இடம் மல்கிய நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் வலம்கொள் சிந்தை உடையார் இடர் ஆயின மாயுமே மேல் #2766 கரிய மாலும் அயனும் அடியும் முடி காண்பு ஒணா எரி அது ஆகி நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் பிரிவிலாத அடியார்கள் வானில் பிரியார்களே மேல் #2767 தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும் வெள்ளிலங்காட்டிடை நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் மட்டு இருக்கும் மலர் இட்டு அடி வீழ்வது வாய்மையே மேல் #2768 கந்தம் நாறும் புனல் காவிரி தென்கரை கண் நுதல் நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம் பந்தன் நாவில் பனுவல் இவை பத்தும் வல்லார்கள் போய் எந்தை ஈசன் இருக்கும் உலகு எய்த வல்லார்களே மேல் 120. திருமுக்கீச்சரம் : பண் - செவ்வழி #2769 சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் காந்தள் ஆரும் விரல் ஏழையொடு ஆடிய காரணம் ஆய்ந்து கொண்டு ஆங்கு அறியம் நிறைந்தார் அவர் ஆர்-கொலோ வேந்தன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மெய்ம்மையே மேல் #2770 வெண் தலை ஓர் கலனா பலி தேர்ந்து விரி சடை கொண்டல் ஆரும் புனல் சேர்த்து உமையாளொடும் கூட்டமா விண்டவர்-தம் மதில் எய்த பின் வேனில்_வேள் வெந்து எழ கண்டவர் மூக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் கன்மமே மேல் #2771 மருவலார்-தம் மதில் எய்ததுவும் மால்_மதலையை உருவில் ஆர எரியூட்டியதும் உலகு உண்டதால் செரு வில் ஆரும் புலி செங்கயல் ஆணையினான் செய்த பொரு இல் முக்கீச்சுரத்து எம் அடிகள் செயும் பூசலே மேல் #2772 அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே மின்னை அன்ன சடை கங்கையாள் மேவிய காரணம் தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே மேல் #2773 விடம் முன் ஆர் அ அழல் வாயது ஓர் பாம்பு அரை வீக்கியே நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் வட_மன் நீடு புகழ் பூழியன் தென்னவன் கோழி_மன் அடல்_மன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே மேல் #2774 வெந்த நீறு மெய்யில் பூசுவர் ஆடுவர் வீங்கு இருள் வந்து என் ஆர் அ வளை கொள்வதும் இங்கு ஒரு மாயம் ஆம் அம் தண் மா மானதன் நேரியன் செம்பியன் ஆக்கிய எந்தை மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் ஏதமே மேல் #2775 அரையில் ஆரும் கலை இல்லவன் ஆணொடு பெண்ணும் ஆம் உரையில் ஆர் அ அழல் ஆடுவர் ஒன்று அலர் காண்-மினோ விரவலார்-தம் மதில் மூன்று உடன் வெவ் அழல் ஆக்கினான் அரையன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் அச்சமே மேல் #2776 ஈர்க்கும் நீர் செம் சடைக்கு ஏற்றதும் கூற்றை உதைத்ததும் கூர்க்கும் நல் மூ இலை வேல் வலன் ஏந்திய கொள்கையும் ஆர்க்கும் வாயான் அரக்கன் உரத்தை நெரித்து அ அடல் மூர்க்கன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்யாநின்ற மொய்ம்பு அதே மேல் #2777 நீருள் ஆரும் மலர் மேல் உறைவான் நெடு மாலுமாய் சீருள் ஆரும் கழல் தேட மெய் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்கு ஒளிர் தென்னவன் செம்பியன் வில்லவன் சேரும் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் செம்மையே மேல் #2778 வெண் புலால் மார்பு இடு துகிலினர் வெற்று அரை உழல்பவர் உண்பினாலே உரைப்பார் மொழி ஊனம் அது ஆக்கினான் ஒண் புலால் வேல் மிக வல்லவன் ஓங்கு எழில் கிள்ளி சேர் பண்பின் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் பச்சையே மேல் #2779 மல்லை ஆர் மும் முடி மன்னர் மூக்கீச்சுரத்து அடிகளை செல்வர் ஆக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லவராய் வாழ்பவர் காழியுள் ஞானசம்பந்தன சொல்ல வல்லார் அவர் வான்_உலகு ஆளவும் வல்லரே மேல் 121. திருப்பாதிப்புலியூர் : பண் - செவ்வழி #2780 முன்ன நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து நீள் புன்னை நின்று கமழ் பாதிரிப்புலியூர் உளான் தன்னை நின்று வணங்கும்-தனை தவமில்லிகள் பின்னை நின்ற பிணி யாக்கையை பெறுவார்களே மேல் #2781 கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே முள் இலவம் முதுகாட்டு உறையும் முதல்வன் இடம் புள் இனங்கள் பயிலும் பாதிரிப்புலியூர்-தனை உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே மேல் #2782 மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர் மேல் பொருள் இல் நல்லார் பயில் பாதிரிப்புலியூர் உளான் வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின் அருளி ஆகத்திடை வைத்ததுவும் அழகு ஆகவே மேல் #2783 போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் போதினாலே வழிபாடு செய்ய புலியூர்-தனுள் ஆதினாலும் அவலம் இலாத அடிகள் மறை ஓதி நாளும் இடும் பிச்சை ஏற்று உண்டு உணப்பாலதே மேல் #2784 ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான் அழல் ஐந்தலை நாகம் நல்லார் பரவம் நயந்து அங்கு அரை ஆர்த்தவன் போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்-தனுள் பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே மேல் #2785 மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி மணல் கானல்-வாய் புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும் பதியில் வைக்கப்படும் எந்தை-தன் பழம் தொண்டர்கள் குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகு ஆகவே மேல் #2786 கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர் கானல்-வாய் சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ பொங்கு அரவம் உயர் பாதிரிப்புலியூர்-தனுள் அங்கு அரவம் அரையில் அசைத்தானை அடை-மினே மேல் #2787 வீக்கம் எழும் இலங்கைக்கு இறை விலங்கலிடை ஊக்கம் ஒழிந்து அலற விரல் இறை ஊன்றினான் பூ கமழும் புனல் பாதிரிப்புலியூர்-தனை நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே மேல் #2788 அன்னம் தாவும் அணி ஆர் பொழில் மணி ஆர் புன்னை பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர்-தனுள் முன்னம் தாவி அடி மூன்று அளந்தவன் நான்முகன் தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே மேல் #2789 உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்திடை திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் எரிந்து சொன்ன உரை கொள்ளாதே எடுத்து ஏத்து-மின் புரிந்த வெண் நீற்று அண்ணல் பாதிரிப்புலியூரையே மேல் #2790 அம் தண் நல்லார் அகன் காழியுள் ஞானசம் பந்தன் நல்லார் பயில் பாதிரிப்புலியூர்-தனுள் சந்த மாலை தமிழ் பத்து இவை தரித்தார்கள் மேல் வந்து தீய அடையாமையால் வினை மாயுமே மேல் 122. திருப்புகலி : பண் - செவ்வழி #2791 விடை அது ஏறி வெறி அக்கு அரவு ஆர்த்த விமலனார் படை அது ஆக பரசு தரித்தார்க்கு இடம் ஆவது கொடையில் ஓவார் குலமும் உயர்ந்த மறையோர்கள்தாம் புடை கொள் வேள்வி புகை உம்பர் உலாவும் புகலியே மேல் #2792 வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை சோலை மேவும் கிளித்தான் சொல் பயிலும் புகலியே மேல் #2793 வண்டு வாழும் குழல் மங்கை ஓர்கூறு உகந்தார் மதி துண்டம் மேவும் சுடர் தொல் சடையார்க்கு இடம் ஆவது கெண்டை பாய மடுவில் உயர் கேதகை மாதவி புண்டரீக மலர் பொய்கை நிலாவும் புகலியே மேல் #2794 திரியும் மூன்று புரமும் எரித்து திகழ் வானவர்க்கு அரிய பெம்மான் அரவ குழையார்க்கு இடம் ஆவது பெரிய மாடத்து உயரும் கொடியின் மிடைவால் வெயில் புரிவு இலாத தடம் பூம் பொழில் சூழ் தண் புகலியே மேல் #2795 ஏவில் ஆரும் சிலை பார்த்தனுக்கு இன்னருள் செய்தவர் நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது மாவில் ஆரும் கனி வார் கிடங்கில் விழ வாளை போய் பூவில் ஆரும் புனல் பொய்கையில் வைகும் புகலியே மேல் #2796 தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும் ஒக்கவே எம் உரவோன் உறையும் இடம் ஆவது கொக்கு வாழை பலவின் கொழும் தண் கனி கொன்றைகள் புக்க வாசனை புன்னை பொன் திரள் காட்டும் புகலியே மேல் #2797 தொலைவு இலாத அரக்கன் உரத்தை தொலைவித்து அவன் தலையும் தோளும் நெரித்த சதுரர்க்கு இடம் ஆவது கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்கு கரப்பு இலார் பொலியும் அம் தண் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் புகலியே மேல் #2798 கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல் அன்னமாய் காண்டும் என்றார் கழல் பணிய நின்றார்க்கு இடம் ஆவது நீண்ட நாரை இரை ஆரல் வார நிறை செறுவினில் பூண்டு மிக்க வயல் காட்டும் அம் தண் புகலியே மேல் #2799 தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர் இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது மடுப்பு அடுக்கும் சுருதி பொருள் வல்லவர் வானுளோர் அடுத்தடுத்து புகுந்து ஈண்டும் அம் தண் புகலியே மேல் #2800 எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை கைதவம் இல்லா கவுணியன் ஞானசம்பந்தன் சீர் செய்த பத்தும் இவை செப்ப வல்லார் சிவலோகத்தில் எய்தி நல்ல இமையோர்கள் ஏத்த இருப்பார்களே மேல் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக