திருமுறை 3

திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரம் (திருமுறை 3)
திரு சிவஞான சம்பந்தர் திருவடிகளில் சமர்ப்பணம்
🌻🌻🌻🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🪷🪷🪷💐💐💐❤️🙏🏻👣🙇‍♂️🙇🏻‍♂️🙇‍♂️👣🙏🏻❤️💐💐💐🌹💐❤️🙏🪷🪷🪷🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺🌷🌷🌷🌻🌻🌻
3.மூன்றாம் திருமுறை
(2801 - 4169)
01.கோயில்
02.திருப்பூந்தராய்
03.திருப்புகலி
04.திருவாவடுதுறை
05.திருப்பூந்தராய்
06.திருக்கொள்ளம்பூதூர்
07.திருப்புகலி
08.திருக்கடவூற்வீரட்டம்
09.திருவீழிமிழலை
10.திருஇராமேச்சுரம்
11.திருப்புனவாயில்
12.திருக்கோட்டாறு
13.திருப்பூந்தராய்
14.திருப்பைஞ்ஞீலி
15.திருவெண்காடு
16.திருக்கொள்ளிக்காடு
17.திருவிசயமங்கை
18.திருவைகல்மாடக்கோயில்
19.திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில்
20.திருப்பூவணம்
21.திருக்கருக்குடி
22.பஞ்சாக்கரத் திருப்பதிகம்
23.திருவிற்கோலம்
24.திருக்கழுமலம்
25.திருந்துதேவன்குடி
26.திருக்கானப்பேர்
27.திருச்சக்கரப்பள்ளி
28.திருமழபாடி
29.மேலைத்திருக்காட்டுப்பள்ளி
30.திருஅரதைப்பெரும்பாழி
31.திருமயேந்திரப்பள்ளி
32.திருஏடகம்
33.திருவுசாத்தானம்
34.திருமுதுகுன்றம்
35.திருத்தென்குடித்திட்டை
36.திருக்காளத்தி
37.திருப்பிரமம்
38.திருக்கண்டியூர்வீரட்டம்
39.திருஆலவாய்
40.தனித்திருவிருக்குக்குறள் : பொது
41.திருவிருக்குக்குறள்
42.திருசிற்றேமம்
43.சீகாழி
44.திருக்கழிப்பாலை
45.திருஆரூர்
46.திருக்கருகாவூர்
47.திருஆலவாய்
48.திருமழபாடி
49.நமச்சிவாயத் திருப்பதிகம்
50.திருத்தண்டலைநீணெறி
51.திருஆலவாய்
52.திருஆலவாய்
53.திருஆனைக்கா
54.திருப்பாசுரம்
55.திருவான்மியூர்
56.திருப்பிரமபுரம்
57.திருவொற்றியூர்
58.திருச்சாத்தமங்கை
59.திருக்குடமூக்கு
60.திருவக்கரை
61.திருவெண்டுறை
62.திருப்பனந்தாள்
63.திருச்செங்காட்டங்குடி
64.திருப்பெருவேளூர்
65.திருக்கச்சிநெறிக்காரைக்காடு
66.திருவேட்டக்குடி
67.திருப்பிரமபுரம்
68.திருக்கயிலாயம்
69.திருக்காளத்தி
70.திருமயிலாடுதுறை
71.திருவைகாவூர்
72.திருமாகறல்
73.திருப்பட்டீச்சரம்
74.திருத்தேவூர்
75.திருச்சண்பைநகர்
76.திருவேதனம்
77.திருமாணிகுழி
78.திருவேதிகுடி
79.திருக்கோகரணம்
80.திருவீழிமிழலை
81.திருத்தோணிபுரம்
82.திருஅவளிவணல்லூர்
83.திருநல்லூர்
84.திருப்புறவம்
85.திருவீழிமிழலை
86.திருச்சேறை
87.திருநள்ளாறு
88.திருவிளமர்
89.திருக்கொச்சைவயம்
90.திருத்துருத்தி
91.திருவடகுரங்காடுதுறை
92.திருநெல்வேலி
93.திருஅம்பர்மாகாளம்
94.திருவெங்குரு
95.திருஇன்னம்பர்
96.திருநெல்வெண்ணெய்
97.திருச்சிறுகுடி
98.திருவீழிமிழலை
99.திருமுதுகுன்றம்
100.திருத்தோணிபுரம்
101.திருஇராமேச்சுரம்
102.திருநாரையூர்
103.திருவலம்புரம்
104.திருப்பரிதிநியமம்
105.திருக்கலிக்காமூர்
106.திருவலஞ்சுழி
107.திருநாரையூர்
108.திருஆலவாய்
109.திருக்கயிலாயம்
110.திருப்பிரமபுரம்
111.திருவீழிமிழலை
112.திருப்பல்லவனீச்சரம்
113.திருக்கழுமலம்
114.திருக்கச்சியேகம்பம்
115.திருஆலவாய்
116.திருவீழிமிழலை
117.சீகாழி
118.திருக்கழுமலம்
119.திருவீழிமிழலை
120.திருஆலவாய்
121.திருப்பந்தணைநல்லூர்
122.திருவோமாம்புலியூர்
123.திருக்கோணமலை
124.திருக்குருகாவூர்வெள்ளடை
125.திருநல்லூர்ப்பெருமணம்
126.திருவிடைவாய்,திருவிடைவாசல்
127.திருக்கிளியன்னவூர்
128.திருமறைக்காடு
     திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை 
    
     1. கோயில் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2801
    ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
    நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே
    பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள்
    சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
    
     மேல்
    
    #2802
    கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
    பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
    நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
    இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ
    
     மேல்
    
    #2803
    நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று
    சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார்
    சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
    கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே
    
     மேல்
    
    #2804
    கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு
    அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான்
    கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ
    அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே
    
     மேல்
    
    #2805
    தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர்
    பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா
    தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ
    இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே
    
     மேல்
    
    #2806
    ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை
    பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா
    மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல்
    நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே
    
     மேல்
    
    #2807
    சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும்
    வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள்
    ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை
    வாதியாது அகலும் நலியா மலி தீவினையே
    
     மேல்
    
    #2808
    வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது
    ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே
    தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம்
    மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே
    
     மேல்
    
    #2809
    தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல
    தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள்
    சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம்
    ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே
    
     மேல்
    
    #2810
    வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின்
    மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார்
    கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ
    உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே
    
     மேல்
    
    #2811
    நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன்
    ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள்
    ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை
    கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே
    
     மேல்
    
     2. திருப்பூந்தராய் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2812
    பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து
    அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான்
    வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர்
    புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே
    
     மேல்
    
    #2813
    காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை
    தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள்
    தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி
    பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2814
    பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை
    தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம்
    செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல்
    பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2815
    முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து
    உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை
    வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில்
    புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2816
    பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர்
    பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார்
    கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல்
    புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2817
    வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை
    பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும்
    சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ்
    போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2818
    கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை
    வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய்
    நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி
    போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2819
    காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை
    தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து
    ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி
    பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2820
    கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை
    பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய்
    மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு
    பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2821
    கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல்
    குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால்
    அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன்
    புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே
    
     மேல்
    
    #2822
    தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர்
    பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று
    ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு
    ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே
    
     மேல்
    
     3. திருப்புகலி : நாலடிமேல்வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2823
    இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
    புயல் அன மிடறு உடை புண்ணியனே
    கயல் அன வரி நெடும் கண்ணியொடும்
    அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே
    கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள்
    நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே
    
     மேல்
    
    #2824
    நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
    இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
    மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
    அலைவரு மத கரி உரித்தவனே
    இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
    உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே
    
     மேல்
    
    #2825
    பாடினை அரு மறை வரல்முறையால்
    ஆடினை காண முன் அரு வனத்தில்
    சாடினை காலனை தயங்கு ஒளி சேர்
    நீடு வெண் பிறை முடி நின்மலனே
    நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-
    தனையே இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே
    
     மேல்
    
    #2826
    நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
    அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
    கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல
    முழவொடும் அரு நடம் முயற்றினனே
    முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
    அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
    
     மேல்
    
    #2827
    கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
    உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன்
    பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால்
    அருமையில் அளப்பு அரிது ஆயவனே
    அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி
    பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே
    
     மேல்
    
    #2828
    அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
    புடை பட அரை மிசை புனைந்தவனே
    படை உடை நெடு மதில் பரிசு அழித்த
    விடை உடை கொடி மல்கு வேதியனே
    விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி
    தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே
    
     மேல்
    
    #2829
    அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த
    செடிய வல்வினை பல தீர்ப்பவனே
    துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை
    பொடி அணி மார்புற புல்கினனே
    புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர்
    நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே
    
     மேல்
    
    #2830
    இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை
    பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன்
    குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த
    அர விரி சடைமுடி ஆண்டகையே
    அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை
    இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே
    
     மேல்
    
    #2831
    உருகிட உவகை தந்து உடலினுள்ளால்
    பருகிடும் அமுது அன பண்பினனே
    பொரு கடல்_வண்ணனும் பூஉளானும்
    பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய்
    உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ்
    வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே
    
     மேல்
    
    #2832
    கையினில் உண்பவர் கணிக நோன்பர்
    செய்வன தவம் அலா செது மதியார்
    பொய்யவர் உரைகளை பொருள் எனாத
    மெய்யவர் அடி தொழ விரும்பினனே
    வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
    உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
    
     மேல்
    
    #2833
    புண்ணியர் தொழுது எழு புகலி நகர்
    விண்ணவர் அடி தொழ விளங்கினானை
    நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
    பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார்
    நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம்
    இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே
    
     மேல்
    
     4. திருவாவடுதுறை : நாலடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2834
    இடரினும் தளரினும் எனது உறு நோய்
    தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
    கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை
    மிடறினில் அடக்கிய வேதியனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2835
    வாழினும் சாவினும் வருந்தினும் போய்
    வீழினும் உன கழல் விடுவேனல்லேன்
    தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி
    போழ் இள மதி வைத்த புண்ணியனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2836
    நனவினும் கனவினும் நம்பா உன்னை
    மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
    புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து
    கனல் எரி அனல் புல்கு கையவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2837
    தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும்
    அம் மலரடியலால் அரற்றாது என் நா
    கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால்
    மும்மதில் எரி எழ முனிந்தவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2838
    கையது வீழினும் கழிவுறினும்
    செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
    கொய் அணி நறு மலர் குலாய சென்னி
    மை அணி மிடறு உடை மறையவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2839
    வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும்
    எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா
    ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
    சந்த வெண்பொடி அணி சங்கரனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2840
    வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்
    அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா
    ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
    அப்படி அழல் எழ விழித்தவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2841
    பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும்
    சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன்
    ஏர் உடை மணி முடி இராவணனை
    ஆர் இடர் பட வரை அடர்த்தவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2842
    உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
    ஒண் மலர் அடியலால் உரையாது என் நா
    கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
    அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2843
    பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்
    அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா
    புத்தரும் சமணரும் புறன் உரைக்க
    பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
    இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
    அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே
    
     மேல்
    
    #2844
    அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
    இலை நுனை வேல் படை எம் இறையை
    நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
    விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார்
    வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம்
    நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே
    
     மேல்
    
     5. திருப்பூந்தராய் : ஈரடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2845
    தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
    மிக்க செம்மை விமலன் வியன் கழல்
    சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
    நன்று அது ஆகிய நம்பன்தானே
    
     மேல்
    
    #2846
    புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
    வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ
    ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி
    மூலம் ஆய முதலவன்தானே
    
     மேல்
    
    #2847
    வேந்தராய் உலகு ஆள விருப்புறின்
    பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல்
    நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட
    சாதியா வினை ஆனதானே
    
     மேல்
    
    #2848
    பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
    ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட
    சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
    இந்து வார் சடை எம் இறையே
    
     மேல்
    
    #2849
    பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய்
    மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
    நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய்
    எந்தை ஆய எம் ஈசன்தானே
    
     மேல்
    
    #2850
    பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய்
    நாதன் சேவடி நாளும் நவின்றிட
    நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல்
    பில்கு வார் சடை பிஞ்ஞகனே
    
     மேல்
    
    #2851
    புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
    பற்றி வாழும் பரமனை பாடிட
    பாவம் ஆயின தீர பணித்திடும்
    சே அது ஏறிய செல்வன்தானே
    
     மேல்
    
    #2852
    போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய்
    காதலித்தான் கழல் விரல் ஒன்றினால்
    அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள்
    பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே
    
     மேல்
    
    #2853
    மத்தம் ஆன இருவர் மருவு ஒணா
    அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
    ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை
    மாளும் ஆறு அருள்செய்யும் தானே
    
     மேல்
    
    #2854
    பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து
    இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ
    பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை
    ஏந்தும் மான் மறி எம் இறையே
    
     மேல்
    
    #2855
    புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
    அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்
    பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும் நும்
    பந்தம் ஆர் வினை பாறிடுமே
    
     மேல்
    
     6. திருக்கொள்ளம்பூதூர் : ஈரடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2856
    கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
    நட்டம் ஆடிய நம்பனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2857
    கோட்டக கழனி கொள்ளம்பூதூர்
    நாட்டகத்து உறை நம்பனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2858
    குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
    விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2859
    குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்
    தவள நீறு அணி தலைவனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2860
    கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
    நின்ற புன் சடை நிமலனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2861
    ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர்
    ஆடல் பேணிய அடிகளை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2862
    ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர்
    ஏறு தாங்கிய இறைவனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2863
    குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
    அரக்கனை செற்ற ஆதியை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2864
    பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர்
    இருவர் காண்பு அரியான் கழல் உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2865
    நீர் அக கழனி கொள்ளம்பூதூர்
    தேர் அமண் செற்ற செல்வனை உள்க
    செல்ல உந்துக சிந்தையார் தொழ
    நல்கும் ஆறு அருள் நம்பனே
    
     மேல்
    
    #2866
    கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர்
    நன்று காழியுள் ஞானசம்பந்தன்
    இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய்
    என்றும் வானவரோடு இருப்பாரே
    
     மேல்
    
     7. திருப்புகலி : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2867
    கண்நுதலானும் வெண்நீற்றினானும் கழல் ஆர்க்கவே
    பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும்
    புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர்
    பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே
    
     மேல்
    
    #2868
    சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை
    பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும்
    பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர்
    காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே
    
     மேல்
    
    #2869
    கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும்
    மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும்
    பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர்
    விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே
    
     மேல்
    
    #2870
    அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
    கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை
    பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர்
    மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே
    
     மேல்
    
    #2871
    சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும்
    நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும்
    பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர்
    கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே
    
     மேல்
    
    #2872
    இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ
    செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்
    பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர்
    அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே
    
     மேல்
    
    #2873
    சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல்
    வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை
    போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர்
    பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே
    
     மேல்
    
    #2874
    கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும்
    வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
    பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர்
    அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே
    
     மேல்
    
    #2875
    பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி
    தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும்
    புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர்
    மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே
    
     மேல்
    
    #2876
    பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர்
    தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான்
    புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர்
    வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே
    
     மேல்
    
    #2877
    பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர்
    பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை
    ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர்
    ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே
    
     மேல்
    
     8. திருக்கடவூற்வீரட்டம் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2878
    சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண
    உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும்
    கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள்
    விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2879
    எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும்
    புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே
    கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள்
    விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2880
    நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண்
    பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும்
    காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே
    வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2881
    மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன்
    முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை
    கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள்
    விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2882
    சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர்
    படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும்
    கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள்
    விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2883
    பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
    உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய
    கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள்
    வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2884
    செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும்
    மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும்
    கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள்
    வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2885
    அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச
    முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும்
    கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள்
    வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2886
    வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண்
    புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே
    கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள்
    விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2887
    தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர்
    ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான்
    கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள்
    வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே
    
     மேல்
    
    #2888
    வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை
    அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான்
    சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்
    பந்தன செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே
    
     மேல்
    
     9. திருவீழிமிழலை : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2889
    கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா
    வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்
    வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம்
    ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே
    
     மேல்
    
    #2890
    கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய
    மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்
    நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின்
    பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே
    
     மேல்
    
    #2891
    நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற
    வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார்
    அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய
    மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே
    
     மேல்
    
    #2892
    கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
    விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
    தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம்
    அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே
    
     மேல்
    
    #2893
    பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே
    வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்
    முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள்
    இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே
    
     மேல்
    
    #2894
    வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய்
    விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்
    இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு
    திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே
    
     மேல்
    
    #2895
    சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர்
    வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார்
    காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ
    நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே
    
     மேல்
    
    #2896
    எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர
    விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார்
    படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு
    கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே
    
     மேல்
    
    #2897
    திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட
    மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்
    சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும்
    நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே
    
     மேல்
    
    #2898
    துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா
    வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார்
    சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான்
    மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே
    
     மேல்
    
    #2899
    வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
    ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து
    ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்
    மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே
    
     மேல்
    
     10. திருஇராமேச்சுரம் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2900
    அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை
    முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி
    இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம்
    தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே
    
     மேல்
    
    #2901
    தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன்
    பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற
    ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
    மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே
    
     மேல்
    
    #2902
    மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால்
    கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்
    ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம்
    ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே
    
     மேல்
    
    #2903
    உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான்
    வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய
    விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து
    அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே
    
     மேல்
    
    #2904
    ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும்
    வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர்
    ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம்
    பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே
    
     மேல்
    
    #2905
    அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்
    பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய
    இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம்
    துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே
    
     மேல்
    
    #2906
    சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன
    முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட
    இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம்
    பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே
    
     மேல்
    
    #2907
    பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட
    அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும்
    இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து
    ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே
    
     மேல்
    
    #2908
    சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார்
    வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால்
    ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
    ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே
    
     மேல்
    
    #2909
    பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை
    இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம்
    புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால்
    அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே
    
     மேல்
    
     11. திருப்புனவாயில் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2910
    மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன்
    பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய்
    அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம்
    புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே
    
     மேல்
    
    #2911
    விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய்
    வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்
    கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய்
    புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே
    
     மேல்
    
    #2912
    விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம்
    புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில்
    தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு
    படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே
    
     மேல்
    
    #2913
    சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே
    அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே
    பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில்
    பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே
    
     மேல்
    
    #2914
    கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும்
    புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில்
    ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும்
    மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே
    
     மேல்
    
    #2915
    வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய்
    கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர்
    போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில்
    சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே
    
     மேல்
    
    #2916
    பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை
    திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய்
    பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில்
    இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே
    
     மேல்
    
    #2917
    மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட
    வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய
    இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய
    புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே
    
     மேல்
    
    #2918
    திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல்
    கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம்
    நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய
    பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே
    
     மேல்
    
    #2919
    போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண்
    சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின்
    போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்
    வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே
    
     மேல்
    
    #2920
    பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை
    கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்
    நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால்
    அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே
    
     மேல்
    
     12. திருக்கோட்டாறு : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2921
    வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை
    ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி
    கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
    ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #2922
    ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள்
    பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும்
    கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள்
    ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே
    
     மேல்
    
    #2923
    இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ
    மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும்
    குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
    அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே
    
     மேல்
    
    #2924
    ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும்
    வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும்
    தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
    தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே
    
     மேல்
    
    #2925
    வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
    செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
    கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள்
    நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே
    
     மேல்
    
    #2926
    பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா
    வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும்
    கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
    அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே
    
     மேல்
    
    #2927
    துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும்
    வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும்
    தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள்
    அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே
    
     மேல்
    
    #2928
    இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை
    கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன்
    குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள்
    அரவு அமரும் சடையான் அடியார்க்கு அருள்செய்யுமே
    
     மேல்
    
    #2929
    ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை
    நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல்
    கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள்
    ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே
    
     மேல்
    
    #2930
    கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர்
    தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள்
    கொடுக்ககிலா குழகன் அமரும் திரு கோட்டாற்றுள்
    இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே
    
     மேல்
    
    #2931
    கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள்
    அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை
    கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
    படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
     13. திருப்பூந்தராய் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2932
    மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம்
    துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர்
    புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர்
    அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே
    
     மேல்
    
    #2933
    மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை
    வேது அணி சரத்தினால் வீட்டினாரவர்
    போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
    தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே
    
     மேல்
    
    #2934
    தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக
    பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர்
    பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர்
    கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே
    
     மேல்
    
    #2935
    நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
    மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர்
    பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
    பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே
    
     மேல்
    
    #2936
    வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர்
    ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர்
    புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
    கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே
    
     மேல்
    
    #2937
    துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
    அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர்
    பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
    அம் கயல் அன கணி அரிவை_பங்கரே
    
     மேல்
    
    #2938
    அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தர
    கண்டவர் கடல் விடம் உண்ட கண்டனார்
    புண்டரீக வயல் பூந்தராய் நகர்
    வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே
    
     மேல்
    
    #2939
    மா சின அரக்கனை வரையின் வாட்டிய
    காய் சின எயில்களை கறுத்த கண்டனார்
    பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்
    காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே
    
     மேல்
    
    #2940
    தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி
    வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும்
    பூமகன் அறிகிலா பூந்தராய் நகர்
    கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே
    
     மேல்
    
    #2941
    முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம்
    அ தகும் அழலிடை வீட்டினார் அமண்
    புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர்
    கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே
    
     மேல்
    
    #2942
    புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்
    பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை
    பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர்
    சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே
    
     மேல்
    
     14. திருப்பைஞ்ஞீலி : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2943
    ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால்
    ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம்
    நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும்
    பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே
    
     மேல்
    
    #2944
    மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை
    பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான்
    உருஇலான் பெருமையை உளம் கொளாத அ
    திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே
    
     மேல்
    
    #2945
    அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன்
    பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
    வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர்
    குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே
    
     மேல்
    
    #2946
    கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல்
    பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
    பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர்
    ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே
    
     மேல்
    
    #2947
    விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை
    சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான்
    பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
    கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே
    
     மேல்
    
    #2948
    விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு
    படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான்
    துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா
    சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே
    
     மேல்
    
    #2949
    தூயவன் தூய வெண் நீறு மேனி மேல்
    பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா
    மேயவன் வேய் புரை தோளி பாகமா
    ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ
    
     மேல்
    
    #2950
    தொத்தின தோள் முடி உடையவன் தலை
    பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
    முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா
    பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே
    
     மேல்
    
    #2951
    நீர் உடை போது உறைவானும் மாலுமாய்
    சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர்
    பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய
    தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே
    
     மேல்
    
    #2952
    பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும்
    சாலியாதவர்களை சாதியாதது ஓர்
    கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்
    ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்-மினே
    
     மேல்
    
    #2953
    கண் புனல் விளை வயல் காழி கற்பகம்
    நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன்
    பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
    உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே
    
     மேல்
    
     15. திருவெண்காடு : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2954
    மந்திர மறையவர் வானவரொடும்
    இந்திரன் வழிபட நின்ற எம் இறை
    வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய
    அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே
    
     மேல்
    
    #2955
    படை உடை மழுவினர் பாய் புலி தோலின்
    உடை விரி கோவணம் உகந்த கொள்கையர்
    விடை உடை கொடியர் வெண்காடு மேவிய
    சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே
    
     மேல்
    
    #2956
    பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர்
    தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர்
    மேலவர் பரவு வெண்காடு மேவிய
    ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே
    
     மேல்
    
    #2957
    ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும்
    தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில்
    வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய
    யாழினது இசை உடை இறைவர் அல்லரே
    
     மேல்
    
    #2958
    பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர்
    ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை
    வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
    பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே
    
     மேல்
    
    #2959
    மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
    எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை
    விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய
    அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #2960
    நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன்
    கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல்
    வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
    பயம் தரு மழு உடை பரமர் அல்லரே
    
     மேல்
    
    #2961
    மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி
    தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர்
    விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய
    அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே
    
     மேல்
    
    #2962
    ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய்
    தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார்
    வேதம் அது உடைய வெண்காடு மேவிய
    ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே
    
     மேல்
    
    #2963
    போதியர் பிண்டியர் பொருத்தமில்லிகள்
    நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
    வேதியர் பரவ வெண்காடு மேவிய
    ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #2964
    நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்
    செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல்
    சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர்
    அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே
    
     மேல்
    
     16. திருக்கொள்ளிக்காடு : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2965
    நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று
    இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம்
    உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும்
    குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2966
    ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான்
    சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள்
    மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை
    கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2967
    அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம்
    வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே
    மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல்
    கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2968
    பா வணம் மேவு சொல் மாலையின் பல
    நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர்
    ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும்
    கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2969
    வார் அணி வன முலை மங்கையாளொடும்
    சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர்
    நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில்
    கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2970
    பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும்
    மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும்
    வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை
    குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2971
    இறையுறு வரி வளை இசைகள் பாடிட
    அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர்
    சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை
    குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2972
    எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
    அடர்த்தனர் திரு விரலால் அலறிட
    படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும்
    கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2973
    தேடினார் அயன் முடி மாலும் சேவடி
    நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்
    பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
    கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2974
    நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர்
    ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல
    பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
    கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே
    
     மேல்
    
    #2975
    நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன்
    குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை
    சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி
    கற்றவர் கழல் அடி காண வல்லரே
    
     மேல்
    
     17. திருவிசயமங்கை : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2976
    மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை
    அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம்
    குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள்
    விரவிய பொழில் அணி விசயமங்கையே
    
     மேல்
    
    #2977
    கீதம் முன் இசைதர கிளரும் வீணையர்
    பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர்
    கோதனம் வழிபட குலவு நான்மறை
    வேதியர் தொழுது எழு விசயமங்கையே
    
     மேல்
    
    #2978
    அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா
    தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர்
    தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும்
    மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே
    
     மேல்
    
    #2979
    தொடை மலி இதழியும் துன் எருக்கொடு
    புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர்
    படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள்
    விடை மலி கொடி அணல் விசயமங்கையே
    
     மேல்
    
    #2980
    தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன்
    ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம்
    காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர்
    வேடம் அது உடை அணல் விசயமங்கையே
    
     மேல்
    
    #2981
    மை புரை கண் உமை_பங்கன் வண் தழல்
    ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர்
    அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர்
    மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே
    
     மேல்
    
    #2982
    இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால்
    வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர்
    சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும்
    விரும்பிய சடை அணல் விசயமங்கையே
    
     மேல்
    
    #2983
    உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு
    அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை
    தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன்
    விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே
    
     மேல்
    
    #2984
    மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை
    அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர்
    தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு
    விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே
    
     மேல்
    
    #2985
    கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை
    நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார்
    செம் சடைமுடி உடை தேவன் நன் நகர்
    விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே
    
     மேல்
    
    #2986
    விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை
    நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன்
    பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
    புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே
    
     மேல்
    
     18. திருவைகல்மாடக்கோயில் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2987
    துள மதி உடை மறி தோன்று கையினர்
    இள மதி அணி சடை எந்தையார் இடம்
    உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய
    வள மதி தடவிய மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2988
    மெய் அகம் மிளிரும் வெண்நூலர் வேதியர்
    மைய கண் மலைமகளோடும் வைகு இடம்
    வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை
    செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே
    
     மேல்
    
    #2989
    கணி அணி மலர் கொடு காலை மாலையும்
    பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர்
    தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம்
    மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2990
    கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர
    தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம்
    வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை
    செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே
    
     மேல்
    
    #2991
    விடம் அடை மிடற்றினர் வேத நாவினர்
    மட மொழி மலைமகளோடும் வைகு இடம்
    மட அனம் நடை பயில் வைகல் மா நகர்
    குட திசை நிலவிய மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2992
    நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை
    இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி
    மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில்
    திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே
    
     மேல்
    
    #2993
    எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன்
    திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்
    வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை
    வரு முகில் அணவிய மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2994
    மலை அன இருபது தோளினான் வலி
    தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம்
    மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள்
    வலம்வரு மலை அன மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2995
    மாலவன் மலரவன் நேடி மால் கொள
    மால் எரி ஆகிய வரதர் வைகு இடம்
    மாலை கொடு அணி மறைவாணர் வைகலில்
    மால் அன மணி அணி மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2996
    கடு உடை வாயினர் கஞ்சி வாயினர்
    பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம்
    மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
    வடமலை அனைய நல் மாடக்கோயிலே
    
     மேல்
    
    #2997
    மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை
    சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்
    பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை
    சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே
    
     மேல்
    
     19. திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #2998
    எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில்
    நரி திரி கானிடை நட்டம் ஆடுவர்
    அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
    குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே
    
     மேல்
    
    #2999
    மைய கண் மலைமகள் பாகமாய் இருள்
    கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர்
    ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர்
    செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே
    
     மேல்
    
    #3000
    மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர்
    பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர்
    அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
    இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே
    
     மேல்
    
    #3001
    இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர்
    பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர்
    அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர்
    மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே
    
     மேல்
    
    #3002
    சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர்
    வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர்
    அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
    செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே
    
     மேல்
    
    #3003
    கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர்
    சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர்
    அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில்
    நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே
    
     மேல்
    
    #3004
    இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே
    பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர்
    அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ்
    புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே
    
     மேல்
    
    #3005
    எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன
    கரி அன தட கைகள் அடர்த்த காலினர்
    அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
    புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே
    
     மேல்
    
    #3006
    வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில்
    பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும்
    அறிகில அரியவர் அம்பர் செம்பியர்
    செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே
    
     மேல்
    
    #3007
    வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய
    மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ
    அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
    உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே
    
     மேல்
    
    #3008
    அழகரை அடிகளை அம்பர் மேவிய
    நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை
    உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின்
    தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே
    
     மேல்
    
     20. திருப்பூவணம் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #3009
    மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு
    போது அமர் பொழில் அணி பூவணத்து உறை
    வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த
    நாதனை அடி தொழ நன்மை ஆகுமே
    
     மேல்
    
    #3010
    வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு
    தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை
    ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய
    ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே
    
     மேல்
    
    #3011
    வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர்
    புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை
    அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய
    நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே
    
     மேல்
    
    #3012
    வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி
    பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை
    ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை
    நாசனை அடி தொழ நன்மை ஆகுமே
    
     மேல்
    
    #3013
    குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
    பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை
    அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த
    பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே
    
     மேல்
    
    #3014
    வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய
    பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை
    கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன்
    நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே
    
     மேல்
    
    #3015
    பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன்
    பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை
    மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன்
    அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #3016
    வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி
    விரல்-தனில் அடர்த்தவன் வெள்ளைநீற்றினன்
    பொரு புனல் புடை அணி பூவணம்-தனை
    பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
    #3017
    நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய்
    சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்
    போர் மல்கு மழுவினன் மேய பூவணம்
    ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே
    
     மேல்
    
    #3018
    மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும்
    குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர்
    வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம்
    கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே
    
     மேல்
    
    #3019
    புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை
    அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள்
    நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன்
    பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே
    
     மேல்
    
     21. திருக்கருக்குடி : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #3020
    நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி
    நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்
    கனை கடல் வையகம் தொழு கருக்குடி
    அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே
    
     மேல்
    
    #3021
    வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர்
    மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன்
    காது இயல் குழையினன் கருக்குடி அமர்
    ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே
    
     மேல்
    
    #3022
    மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி
    நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார்
    அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே
    வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ
    
     மேல்
    
    #3023
    ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர்
    கானிடை ஆடலான் பயில் கருக்குடி
    கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும்
    வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே
    
     மேல்
    
    #3024
    சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
    கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி
    பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள்
    ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே
    
     மேல்
    
    #3025
    இன்புடையார் இசை வீணை பூண் அரா
    என்பு உடையார் எழில் மேனி மேல் எரி
    முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு
    அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே
    
     மேல்
    
    #3026
    காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
    கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்
    சீலமும் உடையவர் திரு கருக்குடி
    சாலவும் இனிது அவர் உடைய தன்மையே
    
     மேல்
    
    #3027
    எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை
    முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார்
    கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி
    அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே
    
     மேல்
    
    #3028
    பூமனும் திசைமுகன்தானும் பொற்பு அமர்
    வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி
    ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி
    நா மனனினில் வர நினைதல் நன்மையே
    
     மேல்
    
    #3029
    சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி
    ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு
    ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி
    பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே
    
     மேல்
    
    #3030
    கானலில் விரை மலர் விம்மு காழியான்
    வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி
    ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய
    ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே
    
     மேல்
    
     22. பொது : பண் - காந்தாரபஞ்சமம் - பஞ்சாக்கரத் திருப்பதிகம்
    
    #3031
    துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும்
    வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
    அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3032
    மந்திர நான்மறை ஆகி வானவர்
    சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன
    செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
    அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3033
    ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர்
    ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து
    ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
    ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3034
    நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
    செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ
    கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
    அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3035
    கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து
    அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில்
    தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை
    அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3036
    தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
    வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
    இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
    அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3037
    வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
    பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும்
    மாடு கொடுப்பன மன்னு மா நடம்
    ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3038
    வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
    பண்டை இராவணன் பாடி உய்ந்தன
    தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
    அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3039
    கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா
    சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும்
    பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு
    ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3040
    புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா
    சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
    வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு
    அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே
    
     மேல்
    
    #3041
    நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை
    கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய
    அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து
    உற்றன வல்லவர் உம்பர் ஆவரே
    
     மேல்
    
     23. திருவிற்கோலம் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #3042
    உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர்
    திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான்
    வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
    செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3043
    சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில்
    உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால்
    வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற
    செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3044
    ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும்
    மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான்
    பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும்
    செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3045
    விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை
    உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர
    புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும்
    சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3046
    முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
    கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான்
    அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை
    சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3047
    தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம்
    வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான்
    மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற
    செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3048
    விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம்
    தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற
    எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட
    சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3049
    திரிதரு புரம் எரிசெய்த சேவகன்
    வரி அரவொடு மதி சடையில் வைத்தவன்
    அரியொடு பிரமனது ஆற்றலால் உரு
    தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3050
    சீர்மை இல் சமணொடு சீவர கையர்
    நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு
    பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும்
    சீர்மையினான் இடம் திரு விற்கோலமே
    
     மேல்
    
    #3051
    கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய
    சேடன செழு மதில் திரு விற்கோலத்தை
    நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
    பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே
    
     மேல்
    
     24. திருக்கழுமலம் : பண் - காந்தாரபஞ்சமம்
    
    #3052
    மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும்
    எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை
    கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்
    பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3053
    போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என
    தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன்
    காதை ஆர் குழையினன் கழுமல வள நகர்
    பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3054
    தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம்
    வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி
    கண் துணை நெற்றியான் கழுமல வள நகர்
    பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3055
    அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
    நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
    கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
    பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3056
    அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே
    விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும்
    கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
    பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3057
    மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல
    கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்
    சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும்
    பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3058
    குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே
    நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும்
    கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
    பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3059
    அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட
    நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
    கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர்
    பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3060
    நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர்
    அடியொடு முடி அறியா அழல் உருவினன்
    கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
    பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3061
    தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம்
    ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின்
    காருறு பொழில் வளர் கழுமல வள நகர்
    பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே
    
     மேல்
    
    #3062
    கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர்
    பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை
    அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்
    விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே
    
     மேல்
    
     25. திருந்துதேவன்குடி : பண் - கொல்லி
    
    #3063
    மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
    புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
    திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய
    அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3064
    வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன
    ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன
    தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய
    ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3065
    மானம் ஆக்குவன மாசு நீக்குவன
    வானை உள்க செலும் வழிகள் காட்டுவன
    தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
    ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3066
    செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன
    கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன
    புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
    அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3067
    விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி
    மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி
    தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி
    அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3068
    பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா
    புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும்
    திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
    அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3069
    கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு
    உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர்
    திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி
    அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3070
    உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி
    விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின
    திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி
    அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3071
    துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன
    விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில்
    திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால்
    அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3072
    செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள்
    உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல்
    திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
    அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3073
    சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை
    மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்
    நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன
    பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     26. திருக்கானப்பேர் : பண் - கொல்லி
    
    #3074
    பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ
    விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும்
    கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின்
    அடியலால் அடை சரண் உடையரோ அடியரே
    
     மேல்
    
    #3075
    நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி
    பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான்
    கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர்
    விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே
    
     மேல்
    
    #3076
    வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம்
    காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை
    நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர்
    தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே
    
     மேல்
    
    #3077
    நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
    பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
    கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
    குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே
    
     மேல்
    
    #3078
    ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா
    ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
    கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர்
    வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே
    
     மேல்
    
    #3079
    பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர்
    வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான்
    கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
    உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே
    
     மேல்
    
    #3080
    மான மா மட பிடி வன் கையால் அலகு இட
    கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர்
    ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின்
    ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே
    
     மேல்
    
    #3081
    வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண்
    தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய
    தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்
    நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே
    
     மேல்
    
    #3082
    சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன்
    நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்
    கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர்
    தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே
    
     மேல்
    
    #3083
    உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி
    பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள்
    மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி
    கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே
    
     மேல்
    
    #3084
    காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
    கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்
    நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன
    பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     27. திருச்சக்கரப்பள்ளி : பண் - கொல்லி
    
    #3085
    படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை
    உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர்
    விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல்
    சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3086
    பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை
    சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும்
    நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை
    சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3087
    மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும்
    பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும்
    துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை
    தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3088
    நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார்
    வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை
    மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி
    சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3089
    வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல்
    அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர்
    கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி
    சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3090
    பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை
    வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
    ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல்
    தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3091
    பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம்
    பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி
    நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம்
    தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3092
    முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள்
    எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால்
    அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய
    சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3093
    துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர்
    பணி படு மார்பினர் பனி மதி சடையினர்
    மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும்
    தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3094
    உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள்
    விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல்
    வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும்
    தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே
    
     மேல்
    
    #3095
    தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம்
    கண்நுதலவன் அடி கழுமல வள நகர்
    நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
    பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே
    
     மேல்
    
     28. திருமழபாடி : பண் - கொல்லி
    
    #3096
    காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும்
    சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே
    வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம்
    மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே
    
     மேல்
    
    #3097
    கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய
    பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர்
    துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே
    மறை அணி நாவினான் மா மழபாடியே
    
     மேல்
    
    #3098
    அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும்
    செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர
    பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம்
    மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே
    
     மேல்
    
    #3099
    அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன்
    முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன்
    பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும்
    அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே
    
     மேல்
    
    #3100
    கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன்
    வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா
    செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம்
    மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே
    
     மேல்
    
    #3101
    பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும்
    காலனார் உயிர் செக காலினால் சாடினான்
    சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம்
    மாலினார் வழிபடும் மா மழபாடியே
    
     மேல்
    
    #3102
    விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே
    எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
    கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம்
    அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே
    
     மேல்
    
    #3103
    கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
    சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா
    இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும்
    வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே
    
     மேல்
    
    #3104
    ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய்
    நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம்
    பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில்
    மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே
    
     மேல்
    
    #3105
    உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர்
    நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின்
    பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான்
    மறி பிடித்தான் இடம் மா மழபாடியே
    
     மேல்
    
    #3106
    ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும்
    சீலத்தான் மேவிய திரு மழபாடியை
    ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல்
    கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே
    
     மேல்
    
     29. மேலைத்திருக்காட்டுப்பள்ளி : பண் - கொல்லி
    
    #3107
    வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன்
    ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை
    காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே
    
     மேல்
    
    #3108
    நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி
    கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா
    பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே
    
     மேல்
    
    #3109
    பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர்
    கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி
    அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே
    
     மேல்
    
    #3110
    பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி
    உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை
    கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி
    நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே
    
     மேல்
    
    #3111
    வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி
    கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு
    அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
    
     மேல்
    
    #3112
    வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன்
    ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை
    காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே
    
     மேல்
    
    #3113
    மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய
    கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய
    ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே
    
     மேல்
    
    #3114
    சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர்
    மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான்
    கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி
    தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே
    
     மேல்
    
    #3115
    செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன்
    தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான்
    கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி
    அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே
    
     மேல்
    
    #3116
    போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள்
    வாதினால் உரை அவை மெய் அல வைகலும்
    காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி
    ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே
    
     மேல்
    
    #3117
    பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்
    அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல்
    கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி
    பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே
    
     மேல்
    
     30. திருஅரதைப்பெரும்பாழி : பண் - கொல்லி
    
    #3118
    பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி
    மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை
    நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி
    பித்தர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3119
    கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும்
    பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார்
    இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும்
    பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3120
    கோடல் சால உடையார் கொலை யானையின்
    மூடல் சால உடையார் முளி கானிடை
    ஆடல் சால உடையார் அழகு ஆகிய
    பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3121
    மண்ணர் நீரார் அழலார் மலி காலினார்
    விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள்
    பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும்
    பெண்ணர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3122
    மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு
    கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும்
    நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல்
    பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3123
    புற்று அரவம் புலி தோல் அரை கோவணம்
    தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு
    சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை
    பெற்றர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3124
    துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி
    இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி
    கணையினால் முப்புரம் செற்றவர் கையினில்
    பிணையர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3125
    சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை
    நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல்
    அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும்
    பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3126
    வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும்
    எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர்
    கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய
    பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3127
    நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும்
    ஏண் இலாத மொழிய எழில் ஆயவர்
    சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர்
    பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே
    
     மேல்
    
    #3128
    நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என
    பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை
    சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய்
    ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     31. திருமயேந்திரப்பள்ளி : பண் - கொல்லி
    
    #3129
    திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும்
    கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும்
    வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள்
    அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே
    
     மேல்
    
    #3130
    கொண்டல் சேர் கோபுரம் கோலம் ஆர் மாளிகை
    கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும்
    வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
    செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே
    
     மேல்
    
    #3131
    கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும்
    தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும்
    மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள்
    ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே
    
     மேல்
    
    #3132
    வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு
    சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும்
    மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள்
    எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே
    
     மேல்
    
    #3133
    நித்தில தொகை பல நிரை தரு மலர் என
    சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன்
    மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள்
    கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே
    
     மேல்
    
    #3134
    சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும்
    இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன்
    மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள்
    அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3135
    சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
    நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு
    படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள்
    அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3136
    சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை
    கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன்
    மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
    அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3137
    நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன்
    ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர்
    மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள்
    யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3138
    உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும்
    படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர்
    மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள்
    இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே
    
     மேல்
    
    #3139
    வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள்
    நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல்
    நம் பரம் இது என நாவினால் நவில்பவர்
    உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே
    
     மேல்
    
     32. திருஏடகம் : பண் - கொல்லி
    
    #3140
    வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்
    பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு
    மன்னிய மறையவர் வழிபட அடியவர்
    இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே
    
     மேல்
    
    #3141
    கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி
    வடிவுற அமைதர மருவிய ஏடகத்து
    அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால்
    இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே
    
     மேல்
    
    #3142
    குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை
    வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி
    செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம்
    கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே
    
     மேல்
    
    #3143
    ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும்
    கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம்
    சால மாதவிகளும் சந்தனம் சண்பகம்
    சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே
    
     மேல்
    
    #3144
    வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட
    கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன்
    பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய
    எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே
    
     மேல்
    
    #3145
    பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர்
    வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
    ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும்
    வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே
    
     மேல்
    
    #3146
    தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர்
    பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான்
    மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும்
    இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே
    
     மேல்
    
    #3147
    பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில்
    தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற
    அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும்
    இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே
    
     மேல்
    
    #3148
    குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள்
    பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்
    வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும்
    இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே
    
     மேல்
    
    #3149
    கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர்
    ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை
    நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன
    பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     33. திருவுசாத்தானம் : பண் - கொல்லி
    
    #3150
    நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
    போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ
    கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம்
    சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3151
    கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன்
    பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார்
    முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ்
    தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3152
    தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை
    ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி
    காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல்
    சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3153
    மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான்
    குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ
    நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய்
    செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3154
    பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள்
    தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல
    கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம்
    தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3155
    மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது
    சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர
    அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான்
    திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3156
    ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும்
    காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான்
    பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம்
    சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3157
    கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல்
    ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில்
    வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில்
    தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே
    
     மேல்
    
    #3158
    வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன்
    திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை
    உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார்
    நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே
    
     மேல்
    
     34. திருமுதுகுன்றம் : பண் - கொல்லி
    
    #3159
    வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட
    அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம்
    விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர்
    திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3160
    வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு
    பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன்
    மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம்
    செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3161
    ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை
    கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல்
    நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம்
    தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3162
    உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும்
    விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம்
    உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய்
    திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3163
    கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர்
    இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி
    வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம்
    செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3164
    கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர்
    வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம்
    ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும்
    தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3165
    மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட
    வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே
    அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை
    செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3166
    காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை
    ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற
    வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம்
    சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3167
    ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள்
    பாடினார் பல புகழ் பரமனார் இணையடி
    ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும்
    தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3168
    மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
    பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின்
    வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய
    தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே
    
     மேல்
    
    #3169
    திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை
    நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல்
    எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா
    பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     35. திருத்தென்குடித்திட்டை : பண் - கொல்லி
    
    #3170
    முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும்
    தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம்
    மன்னு மா காவிரி வந்து அடி வருட நல்
    செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3171
    மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை
    நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம்
    பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும்
    சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3172
    கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன்
    உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம்
    பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும்
    திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3173
    உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை
    விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர்
    எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம்
    தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3174
    வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான்
    அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர்
    செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம்
    திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3175
    ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால்
    கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர்
    ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய்
    தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3176
    கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள்
    வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம்
    தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை
    தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3177
    மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து
    ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம்
    காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால்
    சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3178
    நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய்
    காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம்
    ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ
    சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3179
    குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும்
    பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும்
    வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர்
    தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே
    
     மேல்
    
    #3180
    தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை
    கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள்
    ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ்
    பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     36. திருக்காளத்தி : பண் - கொல்லி
    
    #3181
    சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம்
    உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும்
    மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி
    எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே
    
     மேல்
    
    #3182
    ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம்
    சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே
    காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி
    நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே
    
     மேல்
    
    #3183
    கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி
    மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில்
    ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ
    வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே
    
     மேல்
    
    #3184
    கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும்
    அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி
    ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை
    விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே
    
     மேல்
    
    #3185
    வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே
    திரை தரு முகலியின் கரையினில் தே மலர்
    விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன்
    நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே
    
     மேல்
    
    #3186
    முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும்
    எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற
    கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய
    அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே
    
     மேல்
    
    #3187
    மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி
    நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர்
    வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா
    அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3188
    வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை
    பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின்
    ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர
    வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே
    
     மேல்
    
    #3189
    அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி
    வட்ட வார் சடையனை வயல் அணி காழியான்
    சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல்
    இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே
    
     மேல்
    
     37. திருப்பிரமம் : பண் - கொல்லி
    
    #3190
    கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின்
    பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில்
    வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர்
    பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே
    
     மேல்
    
    #3191
    விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை
    உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை
    பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள்
    அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே
    
     மேல்
    
    #3192
    எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும்
    பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும்
    தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே
    மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே
    
     மேல்
    
    #3193
    அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும்
    பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான்
    தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால்
    இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே
    
     மேல்
    
    #3194
    வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய்
    போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான்
    பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்
    தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே
    
     மேல்
    
    #3195
    ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு
    ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான்
    பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன்
    ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே
    
     மேல்
    
    #3196
    செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட
    ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான்
    பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய
    வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே
    
     மேல்
    
    #3197
    கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும்
    சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய்
    அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார்
    பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே
    
     மேல்
    
    #3198
    உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும்
    பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின்
    தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில்
    கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே
    
     மேல்
    
    #3199
    பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே
    மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட
    வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள்
    பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே
    
     மேல்
    
     38. திருக்கண்டியூர்வீரட்டம் : பண் - கொல்லி
    
    #3200
    வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர்
    கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன்
    தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான்
    வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே
    
     மேல்
    
    #3201
    உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர்
    கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான்
    பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி
    வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே
    
     மேல்
    
    #3202
    அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை
    படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான்
    முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர்
    பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே
    
     மேல்
    
    #3203
    பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை
    கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன்
    குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற
    புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே
    
     மேல்
    
    #3204
    விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின்
    கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன்
    முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய்
    பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே
    
     மேல்
    
    #3205
    இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை
    கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன்
    புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம்
    அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே
    
     மேல்
    
    #3206
    திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம்
    கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன்
    இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார்
    வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே
    
     மேல்
    
    #3207
    நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின்
    காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல்
    கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற
    மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே
    
     மேல்
    
    #3208
    பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின்
    கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன்
    ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே
    அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே
    
     மேல்
    
    #3209
    நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன்
    கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன்
    தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது
    அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே
    
     மேல்
    
    #3210
    கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை
    அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை
    திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்
    ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே
    
     மேல்
    
     39. திருஆலவாய் : பண் - கொல்லி
    
    #3211
    மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள்
    பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்
    ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
    ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3212
    ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா
    பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா
    மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர்
    ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3213
    அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா
    ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர்
    சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய்
    சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3214
    சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர்
    கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா
    மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
    அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3215
    கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில்
    பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம்
    காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா
    சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3216
    கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா
    சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா
    அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும்
    சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3217
    பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம்
    மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே
    அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண
    சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3218
    மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ
    போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை
    பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும்
    சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3219
    பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார்
    சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம்
    வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர்
    ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3220
    தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி
    எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம்
    பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா
    அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே
    
     மேல்
    
    #3221
    எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய்
    சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை
    தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய்
    ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே
    
     மேல்
    
     40. பொது : பண் - கொல்லி - தனித்திருவிருக்குக்குறள்
    
    #3222
    கல்லால் நீழல் அல்லா தேவை
    நல்லார் பேணார் அல்லோம் நாமே
    
     மேல்
    
    #3223
    கொன்றை சூடி நின்ற தேவை
    அன்றி ஒன்றும் நன்று இலோமே
    
     மேல்
    
    #3224
    கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
    சொல்லாதாரோடு அல்லோம் நாமே
    
     மேல்
    
    #3225
    கூற்று உதைத்த நீற்றினானை
    போற்றுவார்கள் தோற்றினாரே
    
     மேல்
    
    #3226
    காட்டுள் ஆடும் பாட்டுளானை
    நாட்டுளாரும் தேட்டுளாரே
    
     மேல்
    
    #3227
    தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த
    மிக்க தேவர் பக்கத்தோமே
    
     மேல்
    
    #3228
    பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை
    நண்ணாதாரை எண்ணோம் நாமே
    
     மேல்
    
    #3229
    தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை
    ஆத்தம் ஆக ஏத்தினோமே
    
     மேல்
    
    #3230
    பூவினானும் தாவினானும்
    நாவினாலும் ஓவினாரே
    
     மேல்
    
    #3231
    மொட்டு அமணர் கட்டர் தேரர்
    பிட்டர் சொல்லை விட்டு உளோமே
    
     மேல்
    
    #3232
    அம் தண் காழி பந்தன் சொல்லை
    சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே
    
     மேல்
    
     41. திருக்கச்சியேகம்பம் : பண் - கொல்லி - திருவிருக்குக்குறள்
    
    #3233
    கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து
    ஒருவா என்ன மருவா வினையே
    
     மேல்
    
    #3234
    மதி ஆர் கச்சி நதி ஏகம்பம்
    விதியால் ஏத்த பதி ஆவாரே
    
     மேல்
    
    #3235
    கலி ஆர் கச்சி மலி ஏகம்பம்
    பலியால் போற்ற நலியா வினையே
    
     மேல்
    
    #3236
    வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம்
    பரவா ஏத்த விரவா வினையே
    
     மேல்
    
    #3237
    படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து
    உடையாய் என்ன அடையா வினையே
    
     மேல்
    
    #3238
    நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம்
    குலவா ஏத்த கலவா வினையே
    
     மேல்
    
    #3239
    கரியின் உரியன் திரு ஏகம்பன்
    பெரிய புரம் மூன்று எரிசெய்தானே
    
     மேல்
    
    #3240
    இலங்கை அரசை துலங்க ஊன்றும்
    நலம் கொள் கம்பன் இலங்கு சரணே
    
     மேல்
    
    #3241
    மறையோன் அரியும் அறியா அனலன்
    நெறி ஏகம்பம் குறியால் தொழுமே
    
     மேல்
    
    #3242
    பறியா தேரர் நெறி இல் கச்சி
    செறி கொள் கம்பன் குறுகுவோமே
    
     மேல்
    
    #3243
    கொச்சை வேந்தன் கச்சி கம்பம்
    மெச்சும் சொல்லை நச்சும் புகழே
    
     மேல்
    
     42. திருசிற்றேமம் : பண் - கொல்லிக்கௌவாணம்
    
    #3244
    நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை
    குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
    சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
    இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே
    
     மேல்
    
    #3245
    மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை
    பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன்
    மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான்
    ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே
    
     மேல்
    
    #3246
    நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை
    கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
    படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்
    கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே
    
     மேல்
    
    #3247
    கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல்
    முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன்
    எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான்
    அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே
    
     மேல்
    
    #3248
    வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை
    கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
    தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான்
    மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே
    
     மேல்
    
    #3249
    பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை
    குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான்
    தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான்
    முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே
    
     மேல்
    
    #3250
    கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா
    வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன்
    தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான்
    ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே
    
     மேல்
    
    #3251
    சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை
    போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன்
    தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால்
    ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே
    
     மேல்
    
    #3252
    தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை
    துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான்
    அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும்
    மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே
    
     மேல்
    
    #3253
    வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை
    பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன்
    உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா
    கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே
    
     மேல்
    
    #3254
    கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான்
    நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன்
    செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால்
    வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே
    
     மேல்
    
     43. சீகாழி : பண் - கௌசிகம்
    
    #3255
    சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
    வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார்
    கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள்
    எந்தையார் அடி என் மனத்து உள்ளவே
    
     மேல்
    
    #3256
    மான் இடம் உடையார் வளர் செம் சடை
    தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார்
    கான் இடம் கொளும் தண் வயல் காழியார்
    ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே
    
     மேல்
    
    #3257
    மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர்
    பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார்
    கை கொள் மான் மறியார் கடல் காழியுள்
    ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே
    
     மேல்
    
    #3258
    புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
    கற்றை வார் சடை வைத்தவர் காழியுள்
    பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல்
    உற்றபோது உடன் ஏத்தி உணருமே
    
     மேல்
    
    #3259
    நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை
    மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய
    கலி கடிந்த கையார் கடல் காழியுள்
    அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே
    
     மேல்
    
    #3260
    பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர்
    பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர்
    கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள்
    அண்ணல் ஆய அடிகள் சரிதையே
    
     மேல்
    
    #3261
    பற்றும் மானும் மழுவும் அழகுற
    முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர்
    கற்ற மா நல் மறையவர் காழியுள்
    பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே
    
     மேல்
    
    #3262
    எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற
    அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள்
    கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற
    இடத்து மாதொடு தாமும் இருப்பரே
    
     மேல்
    
    #3263
    காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி
    மாலும் நான்முகன்தானும் வனப்புற
    ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா
    சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே
    
     மேல்
    
    #3264
    உருவம் நீத்தவர்தாமும் உறு துவர்
    தரு வல் ஆடையினாரும் தகவு இலர்
    கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள்
    ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3265
    கானல் வந்து உலவும் கடல் காழியுள்
    ஈனமில்லி இணையடி ஏத்திடும்
    ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ்
    மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே
    
     மேல்
    
     44. திருக்கழிப்பாலை : பண் - கௌசிகம்
    
    #3266
    வெந்த குங்கிலிய புகை விம்மவே
    கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார்
    அந்தமும் அளவும் அறியாதது ஓர்
    சந்தமால் அவர் மேவிய சந்தமே
    
     மேல்
    
    #3267
    வான் இலங்க விளங்கும் இளம் பிறை
    தான் அலங்கல் உகந்த தலைவனார்
    கான் இலங்க வரும் கழிப்பாலையார்
    மான் நலம் மட நோக்கு உடையாளொடே
    
     மேல்
    
    #3268
    கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர்
    பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்
    கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள்
    அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே
    
     மேல்
    
    #3269
    பண் நலம் பட வண்டு அறை கொன்றையின்
    தண் அலங்கல் உகந்த தலைவனார்
    கண் நலம் கவரும் கழிப்பாலையுள்
    அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே
    
     மேல்
    
    #3270
    ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும்
    பாரினார் உடனே பரவப்படும்
    காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம்
    சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே
    
     மேல்
    
    #3271
    துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர்
    கொள்வனார் இடு வெண் தலையில் பலி
    கள்வனார் உறையும் கழிப்பாலையை
    உள்ளுவார் வினை ஆயின ஓயுமே
    
     மேல்
    
    #3272
    மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும்
    எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும்
    பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக்
    கண்ணினார் உறையும் கழிப்பாலையே
    
     மேல்
    
    #3273
    இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள்
    துலங்க ஊன்றிய தூ மழுவாளினார்
    கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை
    வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே
    
     மேல்
    
    #3274
    ஆட்சியால் அலரானொடு மாலுமாய்
    தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
    காட்சியால் அறியான் கழிப்பாலையை
    மாட்சியால் தொழுவார் வினை மாயுமே
    
     மேல்
    
    #3275
    செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
    மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா
    கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம்
    ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே
    
     மேல்
    
    #3276
    அம் தண் காழி அரு மறை ஞானசம்
    பந்தன் பாய் புனல் சூழ் கழிப்பாலையை
    சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
    முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே
    
     மேல்
    
     45. திருஆரூர் : பண் - கௌசிகம்
    
    #3277
    அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான்
    வெந்த வெண்பொடி பூசிய வேதியன்
    சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம்
    எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ
    
     மேல்
    
    #3278
    கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த
    ஒருத்தனே உமையாள் ஒருகூறனே
    திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண
    அருத்த என் எனை அஞ்சல் என்னாததே
    
     மேல்
    
    #3279
    மறையன் மா முனிவன் மருவார் புரம்
    இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
    சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
    இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ
    
     மேல்
    
    #3280
    பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து
    எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான்
    செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான்
    அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ
    
     மேல்
    
    #3281
    குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி
    விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை
    திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
    வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ
    
     மேல்
    
    #3282
    வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா
    ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்
    சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
    ஆர் கணா எனை அஞ்சல் எனாததே
    
     மேல்
    
    #3283
    வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா
    துளை கை யானை துயர் பட போர்த்தவன்
    திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்
    இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ
    
     மேல்
    
    #3284
    இலங்கை_மன்னன் இருபது தோள் இற
    கலங்க கால்விரலால் கடை கண்டவன்
    வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான்
    அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ
    
     மேல்
    
    #3285
    நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா
    படியவன் பனி மா மதி சென்னியான்
    செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
    அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ
    
     மேல்
    
    #3286
    மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள்
    காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல்
    தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
    ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ
    
     மேல்
    
    #3287
    வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
    சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை
    மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்
    பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
     46. திருக்கருகாவூர் : பண் - கௌசிகம்
    
    #3288
    முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே
    மத்த யானை மறுக உரி வாங்கி அ
    கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
    அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3289
    விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு
    அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம்
    கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர்
    அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3290
    பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை
    குழகர் என்று குழையா அழையா வரும்
    கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம்
    அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3291
    பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன்
    செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர்
    கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம்
    அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3292
    மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட
    செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர்
    கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம்
    ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3293
    மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட
    ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர்
    காய் சினத்த விடையார் கருகாவூர் எம்
    ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே
    
     மேல்
    
    #3294
    வெந்த நீறு மெய் பூசிய வேதியன்
    சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன்
    கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம்
    எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே
    
     மேல்
    
    #3295
    பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார்
    மண்ணு கோலம் உடைய மலரானொடும்
    கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம்
    அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3296
    போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல்
    தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின்
    கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம்
    ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
    
     மேல்
    
    #3297
    கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர்
    நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல்
    குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
    சொல வலார் அவர் தொல்வினை தீருமே
    
     மேல்
    
     47. திருஆலவாய் : பண் - கௌசிகம்
    
    #3298
    காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல்
    நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான்
    வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை
    ஓட்டி வாதுசெய திருவுள்ளமே
    
     மேல்
    
    #3299
    மத்த யானையின் ஈர் உரி மூடிய
    அத்தனே அணி ஆலவாயாய் பணி
    பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண்
    சித்தரை அழிக்க திருவுள்ளமே
    
     மேல்
    
    #3300
    மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
    திண்ணக திரு ஆலவாயாய் அருள்
    பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண்
    தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே
    
     மேல்
    
    #3301
    ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை
    வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
    ஆதியே திரு ஆலவாய் அண்ணலே
    நீதி ஆக நினைந்து அருள்செய்திடே
    
     மேல்
    
    #3302
    வையம் ஆர் புகழாய் அடியார் தொழும்
    செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
    கையில் உண்டு உழலும் அமண் கையரை
    பைய வாதுசெய திருவுள்ளமே
    
     மேல்
    
    #3303
    நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய
    தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய்
    வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை
    சீறி வாதுசெய திருவுள்ளமே
    
     மேல்
    
    #3304
    பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும்
    தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய்
    அண்டனே அமண் கையரை வாதினில்
    செண்டு அடித்து உளற திருவுள்ளமே
    
     மேல்
    
    #3305
    அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி
    செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய்
    பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை
    கரக்க வாதுசெய திருவுள்ளமே
    
     மேல்
    
    #3306
    மாலும் நான்முகனும் அறியா நெறி
    ஆலவாய் உறையும் அண்ணலே பணி
    மேலை_வீடு உணரா வெற்று அரையரை
    சால வாதுசெய திருவுள்ளமே
    
     மேல்
    
    #3307
    கழி கரை படு மீன் கவர்வார் அமண்
    அழிப்பரை அழிக்க திருவுள்ளமே
    தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய்
    மழு படை உடை மைந்தனே நல்கிடே
    
     மேல்
    
    #3308
    செந்து எனா முரலும் திரு ஆலவாய்
    மைந்தனே என்று வல் அமண் ஆசு அற
    சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம்
    பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே
    
     மேல்
    
     48. திருமழபாடி : பண் - கௌசிகம்
    
    #3309
    அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை
    கங்கையான் கடவுள் இடம் மேவிய
    மங்கையான் உறையும் மழபாடியை
    தம் கையால் தொழுவார் தகவாளரே
    
     மேல்
    
    #3310
    விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர்
    கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம்
    மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள்
    நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே
    
     மேல்
    
    #3311
    முழவினான் முதுகாடு உறை பேய் கண
    குழுவினான் குலவும் கையில் ஏந்திய
    மழுவினான் உறையும் மழபாடியை
    தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே
    
     மேல்
    
    #3312
    கலையினான் மறையான் கதி ஆகிய
    மலையினான் மருவார் புரம் மூன்று எய்த
    சிலையினான் சேர் திரு மழபாடியை
    தலையினால் வணங்க தவம் ஆகுமே
    
     மேல்
    
    #3313
    நல்வினை பயன் நான்மறையின் பொருள்
    கல்வி ஆய கருத்தன் உருத்திரன்
    செல்வன் மேய திரு மழபாடியை
    புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே
    
     மேல்
    
    #3314
    நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான்
    ஆடினான் எரிகானிடை மா நடம்
    பாடினார் இசை மா மழபாடியை
    நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே
    
     மேல்
    
    #3315
    மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய்
    மன்னினான் உறை மா மழபாடியை
    பன்னினார் இசையால் வழிபாடுசெய்து
    உன்னினார் வினை ஆயின ஓயுமே
    
     மேல்
    
    #3316
    தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை
    தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன்
    மன் இலங்கிய மா மழபாடியை
    உன்னில் அங்க உறு பிணி இல்லையே
    
     மேல்
    
    #3317
    திருவின் நாயகனும் செழும் தாமரை
    மருவினானும் தொழ தழல் மாண்பு அமர்
    உருவினான் உறையும் மழபாடியை
    பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே
    
     மேல்
    
    #3318
    நலியும் நன்று அறியா சமண் சாக்கியர்
    வலிய சொல்லினும் மா மழபாடியுள்
    ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே
    மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே
    
     மேல்
    
    #3319
    மந்தம் உந்து பொழில் மழபாடியுள்
    எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான்
    கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்
    பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே
    
     மேல்
    
     49. பொது : பண் - கௌசிகம் - நமச்சிவாயத் திருப்பதிகம்
    
    #3320
    காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி
    ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
    நாதன் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3321
    நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
    வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது
    செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம்
    நம்பன் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3322
    நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து
    அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
    தக்க வானவரா தகுவிப்பது
    நக்கன் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3323
    இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
    நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால்
    நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
    நயனன் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3324
    கொல்வாரேனும் குணம் பல நன்மைகள்
    இல்லாரேனும் இயம்புவராயிடின்
    எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால்
    நல்லான் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3325
    மந்தரம் அன பாவங்கள் மேவிய
    பந்தனையவர் தாமும் பகர்வரேல்
    சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
    நந்தி நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3326
    நரகம் ஏழ் புக நாடினராயினும்
    உரைசெய் வாயினராயின் உருத்திரர்
    விரவியே புகுவித்திடும் என்பரால்
    வரதன் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3327
    இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல்
    தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும்
    மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை
    நலம் கொள் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3328
    போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன்
    பாதம்தான் முடி நேடிய பண்பராய்
    ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர்
    ஓதும் நாமம் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3329
    கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
    வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
    விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
    நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே
    
     மேல்
    
    #3330
    நந்தி நாமம் நமச்சிவாய எனும்
    சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
    சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
    பந்தபாசம் அறுக்க வல்லார்களே
    
     மேல்
    
     50. திருத்தண்டலைநீணெறி : பண் - கௌசிகம்
    
    #3331
    விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே
    சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம்
    கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம்
    நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3332
    இகழும் காலன் இதயத்தும் என்னுளும்
    திகழும் சேவடியான் திருந்தும் இடம்
    புகழும் பூமகளும் புணர் பூசுரர்
    நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3333
    பரந்த நீல படர் எரி வல் விடம்
    கரந்த கண்டத்தினான் கருதும் இடம்
    சுரந்த மேதி துறை படிந்து ஓடையில்
    நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3334
    தவந்த என்பும் தவள பொடியுமே
    உவந்த மேனியினான் உறையும் இடம்
    சிவந்த பொன்னும் செழும் தரளங்களும்
    நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3335
    இலங்கை_வேந்தன் இருபது தோள் இற
    விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம்
    சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும்
    நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3336
    கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று
    இருவரும் தெரியா ஒருவன் இடம்
    செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண்
    நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3337
    கலவு சீவரத்தார் கையில் உண்பவர்
    குலவமாட்டா குழகன் உறைவிடம்
    சுலவு மா மதிலும் சுதை மாடமும்
    நிலவு தண்டலைநீணெறி காண்-மினே
    
     மேல்
    
    #3338
    நீற்றர் தண்டலைநீணெறி நாதனை
    தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை
    சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார்
    மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே
    
     மேல்
    
     51. திருஆலவாய் : பண் - கௌசிகம்
    
    #3339
    செய்யனே திரு ஆலவாய் மேவிய
    ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை
    பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பையவே சென்று பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3340
    சித்தனே திரு ஆலவாய் மேவிய
    அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
    எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3341
    தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்
    சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை
    எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3342
    சிட்டனே திரு ஆலவாய் மேவிய
    அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள்
    துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3343
    நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
    அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை
    எண் இலா அமணர் கொளுவும் சுடர்
    பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3344
    தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும்
    அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே
    வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
    பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3345
    செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய்
    அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை
    கங்குலார் அமண் கையர் இடும் கனல்
    பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3346
    தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய்
    ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை
    ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
    பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3347
    தாவினான் அயன்தான் அறியா வகை
    மேவினாய் திரு ஆலவாயாய் அருள்
    தூ இலா அமணர் கொளுவும் சுடர்
    பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3348
    எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
    அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை
    குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே
    
     மேல்
    
    #3349
    அப்பன் ஆலவாய் ஆதி அருளினால்
    வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு
    ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும்
    செப்ப வல்லவர் தீது இலா செல்வரே
    
     மேல்
    
     52. திருஆலவாய் - திருவிராகம் : பண் - கௌசிகம்
    
    #3350
    வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல்
    பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே
    காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில்
    கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே
    
     மேல்
    
    #3351
    பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா
    ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா
    கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய்
    எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே
    
     மேல்
    
    #3352
    குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய்
    சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ
    கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை
    முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே
    
     மேல்
    
    #3353
    முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல்
    அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ
    மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
    சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே
    
     மேல்
    
    #3354
    கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய்
    பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே
    நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும்
    சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே
    
     மேல்
    
    #3355
    பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை
    பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ
    கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய்
    நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே
    
     மேல்
    
    #3356
    ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே
    சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய்
    கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால்
    ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே
    
     மேல்
    
    #3357
    கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல்
    துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய்
    மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய்
    நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே
    
     மேல்
    
    #3358
    தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும்
    கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய்
    தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின்
    தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே
    
     மேல்
    
    #3359
    தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும்
    போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார்
    கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய்
    நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே
    
     மேல்
    
    #3360
    போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்
    பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால்
    ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை
    தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே
    
     மேல்
    
     53. திருஆனைக்கா : திருவிராகம் : பண் - கௌசிகம்
    
    #3361
    வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை
    தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர்
    ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே
    
     மேல்
    
    #3362
    சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு
    ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார்
    நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார்
    வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே
    
     மேல்
    
    #3363
    தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான்
    ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான்
    ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை
    வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே
    
     மேல்
    
    #3364
    விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை
    சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான்
    அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ
    எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே
    
     மேல்
    
    #3365
    வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர்
    மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான்
    கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம்
    ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே
    
     மேல்
    
    #3366
    நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும்
    பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான்
    ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
    காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே
    
     மேல்
    
    #3367
    கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள்
    பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான்
    பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை
    ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே
    
     மேல்
    
    #3368
    பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம்
    அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை
    பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர்
    முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே
    
     மேல்
    
    #3369
    ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என
    ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான்
    வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று
    ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே
    
     மேல்
    
    #3370
    கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்
    மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
    தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள்
    ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே
    
     மேல்
    
    #3371
    ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும்
    ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை
    காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை
    வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே
    
     மேல்
    
     54. பொது : பண் - கௌசிகம் - திருப்பாசுரம்
    
    #3372
    வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம்
    வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
    சூழ்க வையகமும் துயர் தீர்கவே
    
     மேல்
    
    #3373
    அரிய காட்சியராய் தமது அங்கை சேர்
    எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும்
    கரியர் காடு உறை வாழ்க்கையராயினும்
    பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே
    
     மேல்
    
    #3374
    வெந்த சாம்பல் விரை என பூசியே
    தந்தையாரொடு தாய் இலர் தம்மையே
    சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்
    எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ
    
     மேல்
    
    #3375
    ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
    கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா
    கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
    தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார்
    
     மேல்
    
    #3376
    ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு
    சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி
    மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின்
    சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே
    
     மேல்
    
    #3377
    ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம்
    பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க
    கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில்
    நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே
    
     மேல்
    
    #3378
    கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல
    படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு
    முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி
    அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே
    
     மேல்
    
    #3379
    வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம்
    ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய
    பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த
    சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே
    
     மேல்
    
    #3380
    பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி
    பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி
    நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு
    போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே
    
     மேல்
    
    #3381
    மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும்
    பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி
    கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த
    ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே
    
     மேல்
    
    #3382
    அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும்
    தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்
    பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்
    பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே
    
     மேல்
    
    #3383
    நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல
    எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்
    பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும்
    வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே
    
     மேல்
    
     55. திருவான்மியூர் : பண் - கௌசிகம்
    
    #3384
    விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே
    உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய்
    திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
    அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3385
    இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய்
    கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய்
    செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும்
    அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3386
    கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே
    மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே
    செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
    ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3387
    பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே
    மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே
    தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில்
    அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3388
    கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல்
    எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ்
    திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும்
    அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3389
    நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன்
    ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும்
    சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும்
    ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3390
    வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும்
    கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய்
    தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும்
    ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3391
    பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும்
    நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே
    செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும்
    அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3392
    குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள்
    கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய்
    திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும்
    அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே
    
     மேல்
    
    #3393
    கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
    நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை
    சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல்
    குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே
    
     மேல்
    
     56. திருப்பிரமபுரம் : பண் - பஞ்சமம்
    
    #3394
    இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற
    கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று
    மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி
    பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3395
    சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள்
    படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல்
    உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும்
    பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3396
    மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி
    காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை
    ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்
    பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3397
    பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட
    பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும்
    ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே
    பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3398
    நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
    அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல
    இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும்
    பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3399
    பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
    செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு
    ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே
    பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3400
    வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி
    கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை
    ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான்
    பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே
    
     மேல்
    
    #3401
    இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி
    அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப
    குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு
    உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே
    
     மேல்
    
    #3402
    ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி
    காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி
    ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய்
    ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே
    
     மேல்
    
    #3403
    துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர்
    அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர்
    கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த
    இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே
    
     மேல்
    
    #3404
    உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும்
    வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து
    அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார்
    விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே
    
     மேல்
    
     57. திருவொற்றியூர் : பண் - பஞ்சமம்
    
    
    #3405
    விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள்
    படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை
    சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு
    உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3406
    பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய்
    சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை
    தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா
    ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3407
    விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி
    அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி
    களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த
    ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3408
    அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார்
    விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை
    பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல்
    உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3409
    விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல
    பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே
    அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது
    உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3410
    கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப
    சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும்
    அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க
    உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3411
    நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே
    கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா
    பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு
    ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3412
    பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல்
    சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க
    தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ்
    ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3413
    திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி
    தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
    பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு
    ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3414
    தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார்
    ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா
    கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும்
    ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே
    
     மேல்
    
    #3415
    ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை
    சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
    பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார்
    விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே
    
     மேல்
    
     58. திருச்சாத்தமங்கை : பண் - பஞ்சமம்
    
    
    #3416
    திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர்
    இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
    பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை
    அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3417
    பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த
    கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே
    கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
    அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3418
    நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி
    மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே
    தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
    ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3419
    மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி
    புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே
    கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம்
    அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3420
    வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன்
    பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே
    சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
    அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3421
    வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி
    சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே
    சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை
    ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3422
    இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி
    உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே
    சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
    அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3423
    பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி
    விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே
    தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
    அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3424
    பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம்
    ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே
    கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா
    ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3425
    கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும்
    மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே
    சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை
    அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே
    
     மேல்
    
    #3426
    மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும்
    நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர்
    அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும்
    முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே
    
     மேல்
    
     59. திருக்குடமூக்கு : பண் - பஞ்சமம்
    
    
    #3427
    அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே
    மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும்
    குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
    இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3428
    ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே
    பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல
    கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா
    ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3429
    மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும்
    பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய்
    குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
    இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3430
    மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
    அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர்
    கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா
    எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3431
    வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை
    பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான்
    கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா
    இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3432
    கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே
    தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும்
    குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
    இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3433
    மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய
    சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
    குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா
    இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3434
    நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை
    படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான்
    கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா
    இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3435
    ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
    நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
    கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா
    ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3436
    மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர்
    நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான்
    கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா
    ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே
    
     மேல்
    
    #3437
    வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்
    நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
    தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
    விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே
    
     மேல்
    
     60. திருவக்கரை : பண் - பஞ்சமம்
    
    
    #3438
    கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான்
    பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான்
    மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில்
    உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே
    
     மேல்
    
    #3439
    பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா
    ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச
    வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில்
    தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே
    
     மேல்
    
    #3440
    சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில்
    இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச
    அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால்
    மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே
    
     மேல்
    
    #3441
    நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும்
    கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான்
    மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல்
    மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே
    
     மேல்
    
    #3442
    ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து
    கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல
    மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன்
    தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே
    
     மேல்
    
    #3443
    கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும்
    நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல
    வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன்
    பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே
    
     மேல்
    
    #3444
    கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள்
    தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான்
    வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன்
    ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே
    
     மேல்
    
    #3445
    இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை
    கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற
    நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த
    வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே
    
     மேல்
    
    #3446
    காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப
    சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான்
    சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த
    வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே
    
     மேல்
    
    #3447
    மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள்
    தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்
    பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும்
    வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே
    
     மேல்
    
    #3448
    தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய்
    வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை
    சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
    பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே
    
     மேல்
    
     61. திருவெண்டுறை : பண் - பஞ்சமம்
    
    #3449
    ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன்
    பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன்
    போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த
    வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3450
    காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான்
    பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்
    மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான்
    வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3451
    படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான்
    கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான்
    உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய
    விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3452
    பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம்
    எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான்
    பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான்
    விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3453
    பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான்
    சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான்
    போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா
    வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3454
    ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான்
    போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான்
    யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின்
    வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3455
    கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி
    பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான்
    சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள்
    வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3456
    கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த
    சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான்
    பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண்
    விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3457
    கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும்
    சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான்
    மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான்
    வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3458
    நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம்
    பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன்
    திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம்
    மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே
    
     மேல்
    
    #3459
    திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை
    தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன்
    எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன
    பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே
    
     மேல்
    
     62. திருப்பனந்தாள் : பண் - பஞ்சமம்
    
    #3460
    கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான்
    பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான்
    விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர்
    தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3461
    விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச
    எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும்
    பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை
    தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3462
    உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள்
    கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான்
    மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன்
    தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3463
    சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும்
    பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும்
    போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
    தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3464
    விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும்
    நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம்
    படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும்
    தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3465
    விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம்
    புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான்
    தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த
    சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3466
    மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான்
    சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான்
    அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த
    தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3467
    செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து
    முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான்
    புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும்
    தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3468
    வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால்
    புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன்
    நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா
    தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3469
    ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும்
    நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர்
    போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய்
    தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே
    
     மேல்
    
    #3470
    தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து
    கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன்
    நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல
    பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே
    
     மேல்
    
     63. திருச்செங்காட்டங்குடி : பண் - பஞ்சமம்
    
    #3471
    பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர
    சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே
    செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய
    வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே
    
     மேல்
    
    #3472
    பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும்
    அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள்
    கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய
    இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே
    
     மேல்
    
    #3473
    குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும்
    இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய்
    சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே
    
     மேல்
    
    #3474
    கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும்
    மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய்
    தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே
    
     மேல்
    
    #3475
    ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும்
    பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய்
    சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே
    
     மேல்
    
    #3476
    குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை
    துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய்
    கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய
    சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே
    
     மேல்
    
    #3477
    கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய்
    ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே
    செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே
    
     மேல்
    
    #3478
    கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும்
    தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே
    சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே
    
     மேல்
    
    #3479
    நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம்
    அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே
    சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய
    பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே
    
     மேல்
    
    #3480
    செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய
    வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட
    அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும்
    சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே
    
     மேல்
    
     64. திருப்பெருவேளூர் : பண் - பஞ்சமம்
    
    #3481
    அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்
    விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார்
    கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த
    பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3482
    கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார்
    மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர்
    பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும்
    பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3483
    குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும்
    கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும்
    வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும்
    பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3484
    இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு
    மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர்
    கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல்
    பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3485
    விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி
    குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி
    அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும்
    பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3486
    விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம்
    உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால்
    எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச
    பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3487
    மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம்
    சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால்
    இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார்
    பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3488
    எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ
    முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர்
    வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம்
    பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3489
    சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி
    காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ்
    நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து
    பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3490
    புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார்
    சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம்
    மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய
    பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
    
     மேல்
    
    #3491
    பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி
    அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர்
    நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான
    சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே
    
     மேல்
    
     65. திருக்கச்சிநெறிக்காரைக்காடு : பண் - பஞ்சமம்
    
    #3492
    வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில்
    போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர்
    கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி
    நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3493
    கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு
    ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர்
    தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய்
    நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3494
    கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு
    ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை
    ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில்
    நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3495
    பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள்
    மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி
    சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும்
    நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3496
    அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர்
    குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி
    ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
    நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3497
    பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச
    நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில்
    வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த
    நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3498
    புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம்
    எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை
    பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும்
    நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3499
    ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய்
    தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார்
    ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும்
    நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3500
    ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர்
    மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை
    பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய்
    நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3501
    குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து
    மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல
    வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம்
    கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே
    
     மேல்
    
    #3502
    கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
    பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி
    தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன்
    பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே
    
     மேல்
    
     66. திருவேட்டக்குடி : பண் - பஞ்சமம்
    
    #3503
    வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம்
    கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள்
    தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம்
    தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3504
    பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும்
    காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல்
    போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர்
    தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3505
    தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால்
    பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி
    ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த
    தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3506
    கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும்
    அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய்
    நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும்
    திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே
    
     மேல்
    
    #3507
    பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல
    செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி
    அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த
    திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3508
    நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி
    கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல்
    ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த
    தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3509
    பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு
    கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல்
    மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார்
    தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3510
    துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய்
    நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும்
    இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள்
    திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3511
    அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும்
    இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான்
    வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள
    திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3512
    இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும்
    புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன
    நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை
    திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே
    
     மேல்
    
    #3513
    தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை
    தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன்
    ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய்
    உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே
    
     மேல்
    
     67. திருப்பிரமபுரம் : வழிமொழித்திருவிராகம் : பண் - சாதாரி
    
    #3514
    சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப்
    புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம்
    வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால்
    பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே
    
     மேல்
    
    #3515
    தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில்
    கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே
    ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன்
    வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே
    
     மேல்
    
    #3516
    பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு
    அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம்
    பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர்
    புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே
    
     மேல்
    
    #3517
    அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி
    துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம்
    வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர்
    வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே
    
     மேல்
    
    #3518
    ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர்
    தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன்
    பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில்
    பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே
    
     மேல்
    
    #3519
    நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று
    இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம்
    அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா
    தராயனை விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே
    
     மேல்
    
    #3520
    அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை
    கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம்
    பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ
    சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே
    
     மேல்
    
    #3521
    அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா
    மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம்
    குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும்
    புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே
    
     மேல்
    
    #3522
    விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால்
    கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம்
    மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ
    சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே
    
     மேல்
    
    #3523
    பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா
    ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம்
    கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு
    ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே
    
     மேல்
    
    #3524
    நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால்
    மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம்
    மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத
    கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே
    
     மேல்
    
    #3525
    ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா
    முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை
    தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
    பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே
    
     மேல்
    
     68. திருக்கயிலாயம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3526
    வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர்
    ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல்
    தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன்
    காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே
    
     மேல்
    
    #3527
    புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன்
    செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான்
    சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
    கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே
    
     மேல்
    
    #3528
    சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய்
    எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய்
    திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே
    கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே
    
     மேல்
    
    #3529
    முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில்
    வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம்
    கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர
    கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே
    
     மேல்
    
    #3530
    குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம்
    மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய்
    தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால்
    கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே
    
     மேல்
    
    #3531
    ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
    கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான்
    தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய
    காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே
    
     மேல்
    
    #3532
    சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே
    நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்
    துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ
    கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே
    
     மேல்
    
    #3533
    மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின்
    பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது
    ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால்
    கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே
    
     மேல்
    
    #3534
    பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன்
    வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான்
    பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால்
    கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே
    
     மேல்
    
    #3535
    அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு
    இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம்
    குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
    கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே
    
     மேல்
    
    #3536
    அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும்
    கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல்
    எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி
    பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே
    
     மேல்
    
     69. திருக்காளத்தி : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3537
    வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம்
    தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
    ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால்
    கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3538
    முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய்
    சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில்
    எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத
    கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3539
    வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ
    கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
    பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்
    கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3540
    வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல்
    தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில்
    வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம்
    காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3541
    மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற
    கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில்
    அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய்
    கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே
    
     மேல்
    
    #3542
    பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு
    ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில்
    வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில்
    கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே
    
     மேல்
    
    #3543
    ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால்
    ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில்
    ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால்
    காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3544
    எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால்
    பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில்
    வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்
    கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3545
    இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர்
    தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில்
    புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள்
    கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3546
    நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும்
    நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில்
    குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி
    கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே
    
     மேல்
    
    #3547
    காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை
    மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்
    நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின்
    பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே
    
     மேல்
    
     70. திருமயிலாடுதுறை : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3548
    ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
    கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம்
    ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர்
    வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3549
    அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம்
    எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம்
    கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால்
    வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3550
    தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய்
    மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம்
    பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ
    வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3551
    ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண்
    பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம்
    காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால்
    மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3552
    பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர்
    பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம்
    காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர
    மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3553
    கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய்
    விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம்
    தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய்
    மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3554
    அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல்
    எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம்
    கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ
    மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3555
    இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால்
    விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல்
    கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா
    மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3556
    ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால்
    அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம்
    கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர்
    வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3557
    மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன்
    இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர்
    தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ
    வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே
    
     மேல்
    
    #3558
    நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்
    கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால்
    மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை
    புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே
    
     மேல்
    
     71. திருவைகாவூர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3559
    கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால்
    ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
    தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி
    வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே
    
     மேல்
    
    #3560
    அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர்
    விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம்
    புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம்
    வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே
    
     மேல்
    
    #3561
    ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார்
    ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம்
    ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர்
    வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே
    
     மேல்
    
    #3562
    இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
    தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்
    முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
    மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே
    
     மேல்
    
    #3563
    வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம்
    ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம்
    மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால்
    மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே
    
     மேல்
    
    #3564
    நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன்
    செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம்
    அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய்
    மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே
    
     மேல்
    
    #3565
    நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால்
    தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம்
    நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர
    வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே
    
     மேல்
    
    #3566
    கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன்
    ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம்
    கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம்
    வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே
    
     மேல்
    
    #3567
    அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள்
    எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
    சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
    வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே
    
     மேல்
    
    #3568
    ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே
    பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம்
    தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன்
    வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே
    
     மேல்
    
    #3569
    முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை
    செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்
    உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என
    பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே
    
     மேல்
    
     72. திருமாகறல் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3570
    விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்
    மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான்
    கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான்
    செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே
    
     மேல்
    
    #3571
    கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர்
    மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான்
    இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள்
    அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே
    
     மேல்
    
    #3572
    காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர்
    மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான்
    தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா
    பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே
    
     மேல்
    
    #3573
    இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே
    மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான்
    கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே
    நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே
    
     மேல்
    
    #3574
    துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய்
    மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான்
    வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும்
    நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே
    
     மேல்
    
    #3575
    மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய்
    இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான்
    மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே
    உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே
    
     மேல்
    
    #3576
    வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர்
    மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர்
    கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர்
    ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே
    
     மேல்
    
    #3577
    தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே
    மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான்
    பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர்
    பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே
    
     மேல்
    
    #3578
    தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண்
    பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான்
    சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான்
    ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே
    
     மேல்
    
    #3579
    காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார்
    மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான்
    நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய்
    ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே
    
     மேல்
    
    #3580
    கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன்
    அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால்
    மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே
    உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே
    
     மேல்
    
     73. திருப்பட்டீச்சரம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3581
    பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால்
    கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள்
    மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார்
    வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே
    
     மேல்
    
    #3582
    நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர்
    கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல்
    காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான்
    பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே
    
     மேல்
    
    #3583
    காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம்
    மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர்
    பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார்
    மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே
    
     மேல்
    
    #3584
    கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான்
    பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்
    மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
    விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே
    
     மேல்
    
    #3585
    மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர்
    பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான்
    வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான்
    உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே
    
     மேல்
    
    #3586
    மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர்
    பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர்
    பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம்
    இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே
    
     மேல்
    
    #3587
    பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார்
    துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர்
    இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
    நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே
    
     மேல்
    
    #3588
    நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும்
    நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான்
    ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய்
    நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே
    
     மேல்
    
    #3589
    தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின்
    ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம்
    பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே
    மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே
    
     மேல்
    
    #3590
    தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும்
    கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர்
    மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
    படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே
    
     மேல்
    
    #3591
    மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள்
    பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை
    அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர்
    செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே
    
     மேல்
    
     74. திருத்தேவூர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3592
    காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல்
    தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்
    நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர்
    சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3593
    கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும்
    வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர்
    வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர்
    தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3594
    பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன்
    எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம்
    விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர்
    செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3595
    மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர்
    ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான்
    வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும்
    தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3596
    கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன்
    ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர்
    வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார்
    தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3597
    ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான்
    சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர்
    வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி
    சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3598
    கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய்
    என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான்
    முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள்
    சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3599
    ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய
    பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம்
    போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம்
    சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3600
    வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல்
    நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான்
    வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார்
    திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே
    
     மேல்
    
    #3601
    பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம்
    மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான்
    மை சில் முகில் வைச்ச பொழில்
    
     மேல்
    
    #3602
    துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர்
    செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல்
    பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய்
    சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே
    
     மேல்
    
     75. திருச்சண்பைநகர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3603
    எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
    வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால்
    அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
    சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே
    
     மேல்
    
    #3604
    அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன்
    பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான்
    பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே
    சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே
    
     மேல்
    
    #3605
    போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்
    யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான்
    வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர்
    தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே
    
     மேல்
    
    #3606
    கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும்
    பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான்
    வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
    சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே
    
     மேல்
    
    #3607
    பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
    அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம்
    இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம்
    தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே
    
     மேல்
    
    #3608
    பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன்
    ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம்
    ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய
    சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே
    
     மேல்
    
    #3609
    விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை
    மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
    உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான்
    சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே
    
     மேல்
    
    #3610
    வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை
    அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன்
    இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
    தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே
    
     மேல்
    
    #3611
    நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம்
    மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன்
    சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
    சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே
    
     மேல்
    
    #3612
    போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய்
    ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ
    ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான்
    சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே
    
     மேல்
    
    #3613
    வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
    சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
    பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய்
    சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே
    
     மேல்
    
     76. திருவேதனம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3614
    கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார்
    இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல்
    மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை
    வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே
    
     மேல்
    
    #3615
    பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை
    கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம்
    வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர்
    வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே
    
     மேல்
    
    #3616
    கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார்
    நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில்
    தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால்
    வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே
    
     மேல்
    
    #3617
    நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே
    ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
    ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர்
    வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே
    
     மேல்
    
    #3618
    கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம்
    எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச
    ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
    மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே
    
     மேல்
    
    #3619
    மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல
    காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர்
    சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய
    வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே
    
     மேல்
    
    #3620
    வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
    அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம்
    கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில
    விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே
    
     மேல்
    
    #3621
    முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால்
    அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர்
    கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை
    விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே
    
     மேல்
    
    #3622
    வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை
    கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர்
    காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
    வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே
    
     மேல்
    
    #3623
    மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி
    வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால்
    சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில்
    பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே
    
     மேல்
    
     77. திருமாணிகுழி : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3624
    பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல்
    வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம்
    கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய்
    மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3625
    சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே
    மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம்
    தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு
    ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3626
    அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை
    கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம்
    வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர்
    உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3627
    நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும்
    சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம்
    கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு
    ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3628
    மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன்
    நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம்
    வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர்
    ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3629
    மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய்
    வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம்
    சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம்
    உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3630
    எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய்
    உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம்
    பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய்
    ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3631
    எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர்
    திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம்
    பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர்
    ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3632
    நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல்
    ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம்
    மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின்
    ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3633
    மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும்
    முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம்
    மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில்
    ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே
    
     மேல்
    
    #3634
    உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல்
    அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்
    சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல்
    முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே
    
     மேல்
    
     78. திருவேதிகுடி : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3635
    நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம்
    ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம்
    தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில்
    வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே
    
     மேல்
    
    #3636
    சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை
    மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ
    துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர்
    வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே
    
     மேல்
    
    #3637
    போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல்
    வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர்
    சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல்
    வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே
    
     மேல்
    
    #3638
    காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
    தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
    பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
    வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே
    
     மேல்
    
    #3639
    சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ
    தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
    கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா
    மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே
    
     மேல்
    
    #3640
    செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து
    ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
    வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
    வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே
    
     மேல்
    
    #3641
    உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி
    துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம்
    கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக
    மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே
    
     மேல்
    
    #3642
    உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள்
    அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
    முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
    விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே
    
     மேல்
    
    #3643
    பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய்
    தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம்
    பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம்
    மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே
    
     மேல்
    
    #3644
    வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி
    தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம்
    அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால்
    வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே
    
     மேல்
    
    #3645
    கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்
    பந்தன் மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே
    சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர்
    அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே
    
     மேல்
    
     79. திருக்கோகரணம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3646
    என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள்
    நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம்
    ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர்
    குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே
    
     மேல்
    
    #3647
    பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர்
    வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம்
    மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய்
    கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே
    
     மேல்
    
    #3648
    முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய்
    மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம்
    துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை
    குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே
    
     மேல்
    
    #3649
    இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல்
    அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம்
    மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு
    கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே
    
     மேல்
    
    #3650
    தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின்
    சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம்
    படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி
    குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே
    
     மேல்
    
    #3651
    நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய
    ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம்
    ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக
    கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே
    
     மேல்
    
    #3652
    கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை
    பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே
    நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக
    கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே
    
     மேல்
    
    #3653
    வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற
    விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம்
    புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல்
    குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே
    
     மேல்
    
    #3654
    வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன்
    இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர்
    எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ
    கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே
    
     மேல்
    
    #3655
    நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து
    ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம்
    பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை
    கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே
    
     மேல்
    
    #3656
    கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே
    ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான்
    நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள்
    பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே
    
     மேல்
    
     80. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3657
    சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய
    தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான்
    பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே
    கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே
    
     மேல்
    
    #3658
    பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல்
    சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர்
    மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய்
    விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே
    
     மேல்
    
    #3659
    மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு
    எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம்
    பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர்
    விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே
    
     மேல்
    
    #3660
    செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு
    அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
    கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே
    வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே
    
     மேல்
    
    #3661
    பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி
    பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம்
    மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால்
    ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே
    
     மேல்
    
    #3662
    மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து
    எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம்
    நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர்
    விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே
    
     மேல்
    
    #3663
    மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய்
    அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய்
    மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்
    வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே
    
     மேல்
    
    #3664
    ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால்
    ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர்
    தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு
    ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே
    
     மேல்
    
    #3665
    ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம்
    ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர்
    வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய்
    வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே
    
     மேல்
    
    #3666
    குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து
    எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம்
    பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர்
    வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே
    
     மேல்
    
    #3667
    மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர்
    வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார்
    சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி
    அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே
    
     மேல்
    
     81. திருத்தோணிபுரம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3668
    சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி
    அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும்
    எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம்
    துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3669
    சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப
    கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து
    அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர்
    சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3670
    வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து
    பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர
    கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர்
    தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3671
    கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை
    ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த
    வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர்
    சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3672
    தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில்
    காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார்
    தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
    தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3673
    பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை
    குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில்
    பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும்
    துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3674
    பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில்
    பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய்
    திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர்
    துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3675
    தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து
    வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர்
    ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை
    துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3676
    நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி
    ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி
    ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை
    தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3677
    மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர்
    கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ
    காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில்
    தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே
    
     மேல்
    
    #3678
    துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய
    மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை
    தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம்
    வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே
    
     மேல்
    
     82. திருஅவளிவணல்லூர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3679
    கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி
    தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி
    கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக
    அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3680
    ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை
    ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி
    தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க
    ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3681
    நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து
    கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம்
    ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும்
    ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3682
    பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி
    பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து
    துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க
    அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3683
    குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு
    கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி
    தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர்
    அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3684
    துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து
    நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்
    மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி
    அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3685
    கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய
    பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும்
    காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி
    ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3686
    ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ
    பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட
    கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை
    அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3687
    பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும்
    வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும்
    செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும்
    அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3688
    கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும்
    வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும்
    பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும்
    அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே
    
     மேல்
    
    #3689
    ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
    போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்
    ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்
    தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே
    
     மேல்
    
     83. திருநல்லூர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3690
    வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி
    பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
    நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம்
    தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே
    
     மேல்
    
    #3691
    பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம்
    மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம்
    சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட
    செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே
    
     மேல்
    
    #3692
    நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால்
    கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல்
    ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம்
    சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே
    
     மேல்
    
    #3693
    கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி
    அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில்
    முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி
    திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே
    
     மேல்
    
    #3694
    பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும்
    முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம்
    இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க
    செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே
    
     மேல்
    
    #3695
    புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம்
    சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே
    கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள
    செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே
    
     மேல்
    
    #3696
    பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை
    தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர்
    கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில்
    செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே
    
     மேல்
    
    #3697
    ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில்
    சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்
    கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி
    சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே
    
     மேல்
    
    #3698
    மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய
    கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும்
    நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும்
    சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே
    
     மேல்
    
    #3699
    கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்
    பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல்
    ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர்
    தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே
    
     மேல்
    
    #3700
    திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல்
    பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன்
    உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய்
    விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே
    
     மேல்
    
     84. திருப்புறவம் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3701
    பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை
    கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர்
    நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி
    புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே
    
     மேல்
    
    #3702
    கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர்
    அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில்
    திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும்
    புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே
    
     மேல்
    
    #3703
    கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு
    பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய்
    தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி
    பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே
    
     மேல்
    
    #3704
    மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை
    மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார்
    சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு
    போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே
    
     மேல்
    
    #3705
    காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில்
    தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
    ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு
    பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே
    
     மேல்
    
    #3706
    சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர்
    பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட
    முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி
    புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே
    
     மேல்
    
    #3707
    வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர்
    பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர்
    எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
    புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே
    
     மேல்
    
    #3708
    வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும்
    நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற
    ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி
    பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே
    
     மேல்
    
    #3709
    தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில்
    ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும்
    வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை
    போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே
    
     மேல்
    
    #3710
    கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர்
    பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர்
    நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி
    பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே
    
     மேல்
    
    #3711
    போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை
    வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்
    ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
    நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே
    
     மேல்
    
     85. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3712
    மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல்
    பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா
    கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை
    விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3713
    எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை
    பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர்
    கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர்
    விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3714
    மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
    வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார்
    தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர்
    வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே
    
     மேல்
    
    #3715
    செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு
    கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா
    மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில்
    வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3716
    பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா
    எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர்
    அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா
    வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3717
    பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர்
    உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
    தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில்
    மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3718
    அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு
    இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்
    கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
    மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே
    
     மேல்
    
    #3719
    பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர
    பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்
    ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர்
    வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே
    
     மேல்
    
    #3720
    நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில்
    நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி
    ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
    வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே
    
     மேல்
    
    #3721
    இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர்
    பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர்
    மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர்
    விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே
    
     மேல்
    
    #3722
    உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
    இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை
    மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ்
    சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே
    
     மேல்
    
     86. திருச்சேறை : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3723
    முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன்
    வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர்
    நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை
    செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3724
    புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர்
    மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்
    இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்
    சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3725
    புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும்
    எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா
    வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும்
    திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3726
    துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா
    இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர்
    பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர்
    செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3727
    அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில்
    மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால்
    வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர்
    செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3728
    மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை
    பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்
    அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி
    சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
    
     மேல்
    
    #3729
    பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம்
    ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய
    வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும்
    சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
    
     மேல்
    
    #3730
    கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை
    நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார்
    மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும்
    சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே
    
     மேல்
    
    #3731
    பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர
    அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார்
    நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர
    சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே
    
     மேல்
    
    #3732
    துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர்
    விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல்
    முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி
    திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே
    
     மேல்
    
    #3733
    கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு
    சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல்
    குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன
    சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே
    
     மேல்
    
     87. திருநள்ளாறு : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3734
    தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள்
    குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின்
    நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே
    மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3735
    போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி
    சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின்
    நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே
    மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3736
    இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம்
    கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின்
    நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே
    இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3737
    மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு
    கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின்
    நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
    மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3738
    பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற
    கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின்
    நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே
    விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3739
    போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி
    சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின்
    தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே
    மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3740
    கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு
    சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின்
    தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே
    ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3741
    மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு
    பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின்
    தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே
    மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3742
    கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு
    பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின்
    நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே
    மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3743
    அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய
    சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின்
    புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே
    மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே
    
     மேல்
    
    #3744
    சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும்
    நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன
    கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய
    சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே
    
     மேல்
    
     88. திருவிளமர் : திருவிராகம்: பண் - சாதாரி
    
    #3745
    மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம்
    ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர்
    அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள்
    வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே
    
     மேல்
    
    #3746
    பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி
    ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர்
    சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர்
    விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே
    
     மேல்
    
    #3747
    அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு
    செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர்
    சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர்
    வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே
    
     மேல்
    
    #3748
    மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர்
    பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள்
    பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில்
    வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே
    
     மேல்
    
    #3749
    பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா
    கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர்
    விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர்
    வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே
    
     மேல்
    
    #3750
    மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர்
    கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர்
    முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார்
    வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே
    
     மேல்
    
    #3751
    நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல்
    செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர்
    பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை
    வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே
    
     மேல்
    
    #3752
    தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை
    பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர்
    திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார்
    விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே
    
     மேல்
    
    #3753
    தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற
    அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார்
    கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம்
    விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே
    
     மேல்
    
    #3754
    ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல
    கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார்
    பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர்
    வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே
    
     மேல்
    
    #3755
    வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை
    சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய
    அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம்
    பந்தன மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே
    
     மேல்
    
     89. திருக்கொச்சைவயம் : பண் - சாதாரி
    
    #3756
    திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி
    குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு
    நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி
    பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே
    
     மேல்
    
    #3757
    ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி
    கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு
    ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும்
    நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே
    
     மேல்
    
    #3758
    பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி
    கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ
    மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும்
    முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே
    
     மேல்
    
    #3759
    கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே
    வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட
    கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய
    எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே
    
     மேல்
    
    #3760
    மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி
    சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால்
    உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த
    இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே
    
     மேல்
    
    #3761
    சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே
    உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர்
    குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி
    நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே
    
     மேல்
    
    #3762
    கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி
    கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை
    அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம்
    உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே
    
     மேல்
    
    #3763
    அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள்
    உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி
    மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே
    பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே
    
     மேல்
    
    #3764
    அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து
    குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன்
    விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த
    கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே
    
     மேல்
    
    #3765
    கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும்
    இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர்
    நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம்
    உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே
    
     மேல்
    
    #3766
    காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை
    ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே
    ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன
    வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே
    
     மேல்
    
     90. திருத்துருத்தியும், திருவேள்விக்குடியும் : பண் - சாதாரி
    
    #3767
    ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல்
    தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள்
    பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ்
    வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3768
    தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர்
    நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார்
    நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3769
    மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல்
    கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம்
    இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3770
    கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த
    சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார்
    அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3771
    வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும்
    களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம்
    துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3772
    பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும்
    நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார்
    மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3773
    புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து
    திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
    வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3774
    நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை
    கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
    பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3775
    கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும்
    குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான்
    வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ்
    விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3776
    அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும்
    நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார்
    கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே
    
     மேல்
    
    #3777
    விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும்
    ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை
    நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன
    பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே
    
     மேல்
    
     91. திருவடகுரங்காடுதுறை : பண் - சாதாரி
    
    #3778
    கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை
    வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும்
    ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே
    
     மேல்
    
    #3779
    மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல
    சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி
    உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே
    
     மேல்
    
    #3780
    முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி
    எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல்
    சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே
    
     மேல்
    
    #3781
    கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி
    எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள
    குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே
    
     மேல்
    
    #3782
    கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர்
    காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி
    ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே
    
     மேல்
    
    #3783
    கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி
    வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி
    ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே
    
     மேல்
    
    #3784
    நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க
    வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
    ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி
    ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே
    
     மேல்
    
    #3785
    பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி
    பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும்
    வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே
    
     மேல்
    
    #3786
    கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா
    பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி
    எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே
    
     மேல்
    
    #3787
    தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை
    போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை
    காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல்
    கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே
    
     மேல்
    
     92. திருநெல்வேலி : பண் - சாதாரி
    
    #3788
    மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம்
    அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே
    பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம்
    செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3789
    என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி
    சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே
    துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து
    தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3790
    பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும்
    நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி
    கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும்
    செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3791
    காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும்
    பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
    ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம்
    தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3792
    ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும்
    கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார்
    ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள்
    தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3793
    வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர்
    பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர்
    வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார்
    செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3794
    அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று
    தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை
    புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை
    திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3795
    முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே
    உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
    கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை
    சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3796
    பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது
    அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
    சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண
    திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3797
    துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும்
    அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம்
    கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல
    திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே
    
     மேல்
    
    #3798
    பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி
    திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை
    பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
    அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே
    
     மேல்
    
     93. திருஅம்பர்மாகாளம் : பண் - சாதாரி
    
    #3799
    படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர்
    பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர்
    கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும்
    அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3800
    கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர்
    செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார்
    வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும்
    ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3801
    பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால்
    கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும்
    இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும்
    அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3802
    நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை
    ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும்
    கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை
    ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3803
    புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை
    திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற
    மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த
    அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3804
    பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த
    குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற
    கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும்
    அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3805
    சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே
    எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார்
    பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி
    அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3806
    பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை
    குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில்
    பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும்
    அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3807
    வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும்
    எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும்
    பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும்
    அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே
    
     மேல்
    
    #3808
    சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல்
    ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர்
    வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம்
    ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே
    
     மேல்
    
    #3809
    செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த
    அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை
    கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன
    நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே
    
     மேல்
    
     94. திருவெங்குரு : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3810
    விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
    சுண்ண வெண்பொடி அணிவீரே
    சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல்
    எண்ண வல்லார் இடர் இலரே
    
     மேல்
    
    #3811
    வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
    ஆதிய அரு மறையீரே
    ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு
    ஓதியர் உணர்வு உடையோரே
    
     மேல்
    
    #3812
    விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய
    இளம் பிறை அணி சடையீரே
    இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி
    உளம் கொள உறு பிணி இலரே
    
     மேல்
    
    #3813
    விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய
    வண்டு அமர் வளர் சடையீரே
    வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ
    தொண்டர்கள் துயர் பிணி இலரே
    
     மேல்
    
    #3814
    மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய
    அக்கினொடு அரவு அசைத்தீரே
    அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடி இணை
    தக்கவர் உறுவது தவமே
    
     மேல்
    
    #3815
    வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
    அந்தம் இல் பெருமையினீரே
    அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு
    சிந்தைசெய்வோர் வினை சிதைவே
    
     மேல்
    
    #3816
    விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
    அழல் மல்கும் அங்கையினீரே
    அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு
    தொழ அல்லல் கெடுவது துணிவே
    
     மேல்
    
    #3817
    வித்தக மறையவர் வெங்குரு மேவிய
    மத்த நல் மலர் புனைவீரே
    மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும்
    சித்தம் அது உடையவர் திருவே
    
     மேல்
    
    #3818
    மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய
    ஆல நல் மணி மிடற்றீரே
    ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும்
    சீலம் அது உடையவர் திருவே
    
     மேல்
    
    #3819
    விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
    அரை மல்கு புலிஅதளீரே
    அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை
    உரை மல்கு புகழவர் உயர்வே
    
     மேல்
    
     95. திருஇன்னம்பர் : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3820
    எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
    வண்டு இசைக்கும் சடையீரே
    வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்
    தொண்டு இசைக்கும் தொழிலாரே
    
     மேல்
    
    #3821
    யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய
    தாழ்தரு சடைமுடியீரே
    தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர்
    ஆழ் துயர் அருவினை இலரே
    
     மேல்
    
    #3822
    இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
    வள மதி வளர் சடையீரே
    வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார்
    உளம் மதி மிக உடையாரே
    
     மேல்
    
    #3823
    இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய
    கடி கமழ் சடைமுடியீரே
    கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும்
    அடியவர் அருவினை இலரே
    
     மேல்
    
    #3824
    இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
    உமை ஒருகூறு உடையீரே
    உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார்
    அமைகிலர் ஆகிலர் அன்பே
    
     மேல்
    
    #3825
    எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய
    தண் அரும் சடைமுடியீரே
    தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர்
    விண்ணவர் அடைவு உடையோரே
    
     மேல்
    
    #3826
    எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
    நிழல் திகழ் மேனியினீரே
    நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர்
    குழறிய கொடுவினை இலரே
    
     மேல்
    
    #3827
    ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய
    தூர்த்தனை தொலைவு செய்தீரே
    தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர்
    கூர்த்த நல் குணம் உடையோரே
    
     மேல்
    
    #3828
    இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய
    அயனும் மால் அறிவு அரியீரே
    அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும்
    இயல் உளார் மறுபிறப்பு இலரே
    
     மேல்
    
    #3829
    ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய
    தேர் அமண் சிதைவு செய்தீரே
    தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர்
    ஆர் துயர் அருவினை இலரே
    
     மேல்
    
    #3830
    ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை
    நாடு அமர் ஞானசம்பந்தன்
    நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ்
    பாட வல்லார் பழி இலரே
    
     மேல்
    
     94. திருநெல்வெண்ணெய் : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3831
    நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும்
    நெல்வெணெய் மேவிய நீரே
    நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும்
    சொல் வணம் இடுவது சொல்லே
    
     மேல்
    
    #3832
    நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய்
    கச்சு இள அரவு அசைத்தீரே
    கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர்
    அச்சமொடு அருவினை இலரே
    
     மேல்
    
    #3833
    நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
    அரை விரி கோவணத்தீரே
    அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு
    உரை விரிப்போர் உயர்ந்தோரே
    
     மேல்
    
    #3834
    நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
    ஊர் மல்கி உறைய வல்லீரே
    ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல்
    பார் மல்கு புகழவர் பண்பே
    
     மேல்
    
    #3835
    நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய
    ஆடு இளம் பாப்பு அசைத்தீரே
    ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு
    பாடு உளம் உடையவர் பண்பே
    
     மேல்
    
    #3836
    நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய
    பெற்றி கொள் பிறைநுதலீரே
    பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல்
    கற்று அறிவோர்கள்-தம் கடனே
    
     மேல்
    
    #3837
    நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய
    கறை அணி மிடறு உடையீரே
    கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர்
    உறைவதும் உம் அடி கீழே
    
     மேல்
    
    #3838
    நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று
    அரக்கனை அசைவு செய்தீரே
    அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து
    இருக்க வல்லார் இடர் இலரே
    
     மேல்
    
    #3839
    நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று
    இருவரை இடர்கள் செய்தீரே
    இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு
    பரவ வல்லார் பழி இலரே
    
     மேல்
    
    #3840
    நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய
    சாக்கிய சமண் கெடுத்தீரே
    சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது
    பாக்கியம் உடையவர் பண்பே
    
     மேல்
    
    #3841
    நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை
    நலம் மல்கு ஞானசம்பந்தன்
    நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ்
    சொல மல்குவார் துயர் இலரே
    
     மேல்
    
     97. திருச்சிறுகுடி : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3842
    திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
    படம் மலி அரவு உடையீரே
    படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர்
    அடைவதும் அமருலகு அதுவே
    
     மேல்
    
    #3843
    சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய
    சுற்றிய சடைமுடியீரே
    சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல்
    உற்றவர் உறு பிணி இலரே
    
     மேல்
    
    #3844
    தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய
    துள்ளிய மான் உடையீரே
    துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல்
    உள்ளுதல்செய நலம் உறுமே
    
     மேல்
    
    #3845
    செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய
    ஒன்னலர் புரம் எரித்தீரே
    ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார்
    சொல் நலம் உடையவர் தொண்டே
    
     மேல்
    
    #3846
    செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
    பெற்றி கொள் பிறை முடியீரே
    பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு
    அற்றவர் அரு வினை இலரே
    
     மேல்
    
    #3847
    செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
    மங்கையை இடம் உடையீரே
    மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார்
    சங்கை அது இலர் நலர் தவமே
    
     மேல்
    
    #3848
    செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய
    வெறி கமழ் சடைமுடியீரே
    வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந்
    நெறி உணர்வோர் உயர்ந்தோரே
    
     மேல்
    
    #3849
    திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய
    தசமுகன் உரம் நெரித்தீரே
    தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர்
    வசை அறுமது வழிபாடே
    
     மேல்
    
    #3850
    செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய
    இருவரை அசைவு செய்தீரே
    இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார்
    அருவினையொடு துயர் இலரே
    
     மேல்
    
    #3851
    செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய
    புத்தரொடு அமண் புறத்தீரே
    புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல்
    பத்தர்கள்-தம்முடை பரிசே
    
     மேல்
    
    #3852
    தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய
    மான் அமர் கரம் உடையீரே
    மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய
    ஞானசம்பந்தன தமிழே
    
     மேல்
    
     98. திருவீழிமிழலை : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3853
    வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை
    ஒண் மதி அணி உடையீரே
    ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர்
    கண் மதி மிகுவது கடனே
    
     மேல்
    
    #3854
    விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம்
    சதி வழி வருவது ஒர் சதிரே
    சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை
    அதி குணர் புகழ்வதும் அழகே
    
     மேல்
    
    #3855
    விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு
    வரை மிசை உறைவதும் வலதே
    வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை
    உரைசெயும் அவை மறை ஒலியே
    
     மேல்
    
    #3856
    விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில்
    இட்டு எழில் பெறுகிறது எரியே
    இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம்
    அட்டது வரை சிலையாலே
    
     மேல்
    
    #3857
    வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல
    பால் நிகர் உரு உடையீரே
    பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை
    தான் மிக உறைவது தவமே
    
     மேல்
    
    #3858
    விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி
    நிரையுற அணிவது நெறியே
    நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது
    அரையுற அணிவன அரவே
    
     மேல்
    
    #3859
    விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு
    அசைவுற அணிவு உடையீரே
    அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர்
    நசையுறும் நாவினர்தாமே
    
     மேல்
    
    #3860
    விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று
    இலங்கை மன் இடர் கெடுத்தீரே
    இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார்
    புலன்களை முனிவது பொருளே
    
     மேல்
    
    #3861
    வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை
    அற்புதன் அயன் அறியானே
    அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
    நல் பதம் அறிவது நயமே
    
     மேல்
    
    #3862
    வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று
    புத்தரொடு அமண் அழித்தீரே
    புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார்
    பத்திசெய் மனம் உடையவரே
    
     மேல்
    
    #3863
    விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை
    சண்பையுள் ஞானசம்பந்தன்
    சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை
    ஒண் பொருள் உணர்வதும் உணர்வே
    
     மேல்
    
     99. திருமுதுகுன்றம் : திருமுக்கால் : பண் - சாதாரி
    
    #3864
    முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
    பரசு அமர் படை உடையீரே
    பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார்
    அரசர்கள் உலகில் ஆவாரே
    
     மேல்
    
    #3865
    மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய
    பை அரவம் அசைத்தீரே
    பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார்
    நைவு இலர் நாள்-தொறும் நலமே
    
     மேல்
    
    #3866
    முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
    மழ விடை அது உடையீரே
    மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார்
    பழியொடு பகை இலர்தாமே
    
     மேல்
    
    #3867
    முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
    உரு அமர் சடைமுடியீரே
    உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார்
    திருவொடு தேசினர்தாமே
    
     மேல்
    
    #3868
    முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய
    பத்து முடி அடர்த்தீரே
    பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார்
    சித்தம் நல்ல அடியாரே
    
     மேல்
    
    #3869
    முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று
    இயன்றவர் அறிவு அரியீரே
    இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார்
    பயன்தலை நிற்பவர்தாமே
    
     மேல்
    
    #3870
    மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய
    கட்டு அமண் தேரை காய்ந்தீரே
    கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார்
    சிட்டர்கள் சீர் பெறுவாரே
    
     மேல்
    
    #3871
    மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை
    நாடிய ஞானசம்பந்தன்
    நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ்
    பாடிய அவர் பழி இலரே
    
     மேல்
    
     100. திருத்தோணிபுரம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3872
    கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி
    அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால்
    பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம்
    சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3873
    கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள்
    பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து
    சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர்
    துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3874
    மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும்
    சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று
    ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும்
    துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3875
    வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என
    உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய
    மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும்
    துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3876
    வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும்
    பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும்
    செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும்
    தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3877
    குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும்
    மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய
    இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம்
    தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே
    
     மேல்
    
    #3878
    தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை
    மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால்
    நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன
    பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே
    
     மேல்
    
     101. திருஇராமேச்சுரம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3879
    திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய்
    நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார்
    எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய
    விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே
    
     மேல்
    
    #3880
    பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட
    தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
    எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய
    மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே
    
     மேல்
    
    #3881
    அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம்
    மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி
    இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார்
    தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே
    
     மேல்
    
    #3882
    மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட
    தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார்
    ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார்
    போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே
    
     மேல்
    
    #3883
    சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக
    கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார்
    ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
    நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே
    
     மேல்
    
    #3884
    கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம்
    இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல
    இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார்
    அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே
    
     மேல்
    
    #3885
    நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி
    ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார்
    ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய
    காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே
    
     மேல்
    
    #3886
    பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக
    மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி
    என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார்
    குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே
    
     மேல்
    
    #3887
    கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய
    மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை
    ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய
    சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே
    
     மேல்
    
    #3888
    பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும்
    பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே
    இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய
    பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே
    
     மேல்
    
    #3889
    தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி
    ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை
    நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
    பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே
    
     மேல்
    
     102. திருநாரையூர் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3890
    காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
    தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய
    பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல்
    பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே
    
     மேல்
    
    #3891
    தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான்
    பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம்
    ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
    ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே
    
     மேல்
    
    #3892
    மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன்
    ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்
    தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில்
    மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே
    
     மேல்
    
    #3893
    துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்
    அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண்
    நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர்
    எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே
    
     மேல்
    
    #3894
    பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள்
    தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர்
    திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய
    வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே
    
     மேல்
    
    #3895
    பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை
    தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை
    சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரை
    யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே
    
     மேல்
    
    #3896
    கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார்
    வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து
    நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர்
    உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே
    
     மேல்
    
    #3897
    நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர்
    தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில
    ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில்
    சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே
    
     மேல்
    
    #3898
    ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர்
    வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல
    தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய
    ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே
    
     மேல்
    
    #3899
    தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள்
    மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே
    தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில்
    பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே
    
     மேல்
    
    #3900
    தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
    ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல்
    பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி
    மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே
    
     மேல்
    
     103. திருவலம்புரம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3901
    கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி
    இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த
    துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும்
    வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3902
    கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை
    தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த
    காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும்
    வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3903
    நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி
    மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ
    மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும்
    வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3904
    ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று
    தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ
    ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும்
    வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3905
    செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல்
    அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி
    பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும்
    வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3906
    உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி
    சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க
    பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும்
    வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3907
    புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க
    விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள்
    அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும்
    வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3908
    தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை
    ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி
    மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும்
    வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3909
    தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும்
    தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த
    பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும்
    வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3910
    காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும்
    பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக
    ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும்
    வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே
    
     மேல்
    
    #3911
    நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன்
    வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை
    சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய்
    செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே
    
     மேல்
    
     100. திருப்பரிதிநியமம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3912
    விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ
    பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து
    கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும்
    பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3913
    அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும்
    நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி
    இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
    பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3914
    வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச
    நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து
    நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
    பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3915
    வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ
    துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து
    அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
    பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3916
    நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி
    தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார்
    ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
    பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3917
    வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ
    திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார்
    சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும்
    பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3918
    பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி
    மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
    இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
    பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3919
    ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த
    மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார்
    காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும்
    பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே
    
     மேல்
    
    #3920
    நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த
    கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார்
    ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும்
    பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே
    
     மேல்
    
    #3921
    கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன
    சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி
    நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும்
    பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே
    
     மேல்
    
    #3922
    பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து
    தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன்
    பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த
    ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே
    
     மேல்
    
     105. திருக்கலிக்காமூர் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3923
    மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும்
    கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
    உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த
    இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே
    
     மேல்
    
    #3924
    மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம்
    கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
    மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும்
    ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே
    
     மேல்
    
    #3925
    தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த
    காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர்
    மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
    ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே
    
     மேல்
    
    #3926
    குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி
    கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர்
    என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி
    நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே
    
     மேல்
    
    #3927
    வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம்
    கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர்
    ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த
    நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே
    
     மேல்
    
    #3928
    துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல்
    கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
    மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த
    நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே
    
     மேல்
    
    #3929
    கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
    காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர்
    ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி
    ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே
    
     மேல்
    
    #3930
    ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு
    கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர்
    தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான்
    ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே
    
     மேல்
    
    #3931
    அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும்
    இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர்
    ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த
    திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே
    
     மேல்
    
    #3932
    மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை
    மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
    காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர்
    ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே
    
     மேல்
    
    #3933
    ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண
    ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற
    காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
    வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே
    
     மேல்
    
     106. திருவலஞ்சுழி : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3934
    பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை
    வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும்
    வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி
    உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே
    
     மேல்
    
    #3935
    கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல்
    தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து
    வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர்
    ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே
    
     மேல்
    
    #3936
    பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து
    மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட
    மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல்
    உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே
    
     மேல்
    
    #3937
    விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர்
    சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப
    நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர்
    அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே
    
     மேல்
    
    #3938
    கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி
    மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும்
    பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
    மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே
    
     மேல்
    
    #3939
    தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம்
    கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர்
    வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர்
    தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே
    
     மேல்
    
    #3940
    கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார்
    சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க
    மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே
    புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே
    
     மேல்
    
    #3941
    வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
    அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய
    நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
    மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே
    
     மேல்
    
    #3942
    ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார்
    கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த
    வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான்
    பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே
    
     மேல்
    
    #3943
    குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து
    தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி
    வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான்
    பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே
    
     மேல்
    
    #3944
    வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல்
    காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை
    ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
    ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே
    
     மேல்
    
     107. திருநாரையூர் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #3945
    கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி
    உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன்
    அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
    நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே
    
     மேல்
    
    #3946
    விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை
    பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
    நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று
    எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே
    
     மேல்
    
    #3947
    தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
    பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி
    நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை
    பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே
    
     மேல்
    
    #3948
    வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி
    பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த
    அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை
    நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே
    
     மேல்
    
    #3949
    வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும்
    ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி
    நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை
    கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே
    
     மேல்
    
    #3950
    கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
    அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக
    நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி
    புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே
    
     மேல்
    
    #3951
    ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி
    ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி
    நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில்
    வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே
    
     மேல்
    
    #3952
    கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள்
    நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார்
    பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும்
    தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே
    
     மேல்
    
    #3953
    பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும்
    ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
    பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும்
    தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே
    
     மேல்
    
    #3954
    வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை
    உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள்
    குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர
    பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே
    
     மேல்
    
    #3955
    பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன்
    சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல்
    பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக
    ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே
    
     மேல்
    
     108. திருஆலவாய் : பண் - பழம்பஞ்சுரம் - நாலடி மேல்வைப்பு
    
    #3956
    வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
    ஆதமில்லி அமணொடு தேரரை
    வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே
    பாதி மாது உடன் ஆய பரமனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3957
    வைதிகத்தின் வழி ஒழுகாத அ
    கைதவம் உடை கார் அமண் தேரரை
    எய்தி வாதுசெய திருவுள்ளமே
    மை திகழ்தரு மா மணி கண்டனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3958
    மறை வழக்கம் இலாத மா பாவிகள்
    பறி தலை கையர் பாய் உடுப்பார்களை
    முறிய வாதுசெய திருவுள்ளமே
    மறி உலாம் கையில் மா மழுவாளனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3959
    அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை
    கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும்
    செறுத்து வாதுசெய திருவுள்ளமே
    முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3960
    அந்தணாளர் புரியும் அரு மறை
    சிந்தை செய்யா அருகர் திறங்களை
    சிந்த வாதுசெய திருவுள்ளமே
    வெந்த நீறு அது அணியும் விகிர்தனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3961
    வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
    மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை
    ஓட்டி வாதுசெய திருவுள்ளமே
    காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3962
    அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம்
    விழல் அது என்னும் அருகர் திறத்திறம்
    கழல வாதுசெய திருவுள்ளமே
    தழல் இலங்கு திரு உரு சைவனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3963
    நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
    காற்று கொள்ளவும் நில்லா அமணரை
    தேற்றி வாதுசெய திருவுள்ளமே
    ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3964
    நீல மேனி அமணர் திறத்து நின்
    சீலம் வாதுசெய திருவுள்ளமே
    மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர்
    கோலம் மேனி அது ஆகிய குன்றமே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3965
    அன்று முப்புரம் செற்ற அழக நின்
    துன்று பொன் கழல் பேணா அருகரை
    தென்ற வாதுசெய திருவுள்ளமே
    கன்று சாக்கியர் காணா தலைவனே
    ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
    ஆலவாயில் உறையும் எம் ஆதியே
    
     மேல்
    
    #3966
    கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு
    வாடல் மேனி அமணரை வாட்டிட
    மாட காழி சம்பந்தன் மதித்த இ
    பாடல் வல்லவர் பாக்கியவாளரே
    
     மேல்
    
     109. திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் :
                பண் - பழம்பஞ்சுரம் - கூடற்சதுக்கம்
    
    #3967
    மண் அது உண்ட அரி மலரோன் காணா
    வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
    கண்ணது ஓங்கிய கயிலையாரும்
    அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3968
    வந்து மால் அயன் அவர் காண்பு அரியார்
    வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும்
    கந்த வார் சடை உடை கயிலையாரும்
    அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3969
    மால் அயன் தேடிய மயேந்திரரும்
    காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
    வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும்
    ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3970
    கருடனை ஏறு அரி அயனார் காணார்
    வெருள் விடை ஏறிய மயேந்திரரும்
    கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும்
    அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3971
    மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார்
    மதி அது சொல்லிய மயேந்திரரும்
    கதிர் முலை புல்கிய கயிலையாரும்
    அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3972
    சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா
    மிக்கவர் கயிலை மயேந்திரரும்
    தக்கனை தலை அரி தழல் உருவர்
    அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3973
    கண்ணனும் நான்முகன் காண்பு அரியார்
    வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்
    கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள்
    அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3974
    கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார்
    தட வரை அரக்கனை தலை நெரித்தார்
    விடம் அது உண்ட எம் மயேந்திரரும்
    அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே
    
     மேல்
    
    #3975
    ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார்
    வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
    காதில் ஒர் குழை உடை கயிலையாரும்
    ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே
    
     மேல்
    
    #3976
    அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல்
    வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
    மறி கடலோன் அயன் தேட தானும்
    அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே
    
     மேல்
    
    #3977
    ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார்
    கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும்
    ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை
    ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே
    
     மேல்
    
     110. திருப்பிரமபுரம் : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி
    
    #3978
    வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து
    அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே
    
     மேல்
    
    #3979
    சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர
    தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே
    
     மேல்
    
    #3980
    அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர்
    பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே
    
     மேல்
    
    #3981
    துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ்
    அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே
    
     மேல்
    
    #3982
    காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல்
    தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே
    
     மேல்
    
    #3983
    ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
    பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே
    
     மேல்
    
    #3984
    சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும்
    சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே
    
     மேல்
    
    #3985
    உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர்
    புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே
    
     மேல்
    
    #3986
    பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன்
    சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே
    
     மேல்
    
    #3987
    ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன்
    காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே
    
     மேல்
    
    #3988
    விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன்
    கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே
    
     மேல்
    
    #3989
    கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ்
    முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே
    
     மேல்
    
     111. திருவீழிமிழலை : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி
    
    #3990
    வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர்
    ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே
    
     மேல்
    
    #3991
    விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி
    உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே
    
     மேல்
    
    #3992
    விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர்
    இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே
    
     மேல்
    
    #3993
    வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும்
    நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே
    
     மேல்
    
    #3994
    போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
    ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே
    
     மேல்
    
    #3995
    தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய
    நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே
    
     மேல்
    
    #3996
    போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர்
    சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே
    
     மேல்
    
    #3997
    இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி
    சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே
    
     மேல்
    
    #3998
    துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி
    சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே
    
     மேல்
    
    #3999
    புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
    சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே
    
     மேல்
    
    #4000
    சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில்
    பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே
    
     மேல்
    
     112. திருப்பல்லவனீச்சரம் : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி
    
    #4001
    பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4002
    பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4003
    பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4004
    பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4005
    பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4006
    பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4007
    பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4008
    பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4009
    படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4010
    பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து
    இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர்
    
     மேல்
    
    #4011
    வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை
    ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே
    
     மேல்
    
     113. திருக்கழுமலம் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #4012
    உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே
    கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே
    அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே
    பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே
    
     மேல்
    
    #4013
    சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே
    அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால்
    மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே
    விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே
    
     மேல்
    
    #4014
    காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே
    பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே
    தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே
    போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே
    
     மேல்
    
    #4015
    மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே
    மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே
    பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே
    வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே
    
     மேல்
    
    #4016
    உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே
    திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே
    படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே
    தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே
    
     மேல்
    
    #4017
    திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே
    இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே
    மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே
    தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே
    
     மேல்
    
    #4018
    ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே
    ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே
    நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே
    சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே
    
     மேல்
    
    #4019
    ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே
    தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே
    வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
    பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே
    
     மேல்
    
    #4020
    நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே
    உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே
    கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே
    மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே
    
     மேல்
    
    #4021
    இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே
    புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே
    இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே
    கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே
    
     மேல்
    
    #4022
    கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே
    மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே
    நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே
    பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே
    
     மேல்
    
    #4023
    பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே
    வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே
    கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே
    மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே
    
     மேல்
    
     114. திருக்கச்சியேகம்பம் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #4024
    பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே
    தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே
    ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே
    காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே
    
     மேல்
    
    #4025
    சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே
    படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே
    புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே
    கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே
    
     மேல்
    
    #4026
    வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே
    அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே
    புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே
    கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே
    
     மேல்
    
    #4027
    முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே
    பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே
    வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே
    கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே
    
     மேல்
    
    #4028
    வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே
    ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே
    கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே
    காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே
    
     மேல்
    
    #4029
    இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே
    அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே
    பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே
    கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே
    
     மேல்
    
    #4030
    முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே
    வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே
    அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே
    கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே
    
     மேல்
    
    #4031
    பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே
    கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே
    உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே
    கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே
    
     மேல்
    
    #4032
    தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே
    பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே
    சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே
    காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே
    
     மேல்
    
    #4033
    ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே
    ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே
    தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே
    கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே
    
     மேல்
    
    #4034
    கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே
    புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே
    அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே
    பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே
    
     மேல்
    
     115. திருஆலவாய் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #4035
    ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே
    பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே
    கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே
    ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே
    
     மேல்
    
    #4036
    பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே
    கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே
    நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே
    வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே
    
     மேல்
    
    #4037
    காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே
    பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே
    நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே
    ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே
    
     மேல்
    
    #4038
    பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே
    துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே
    கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே
    அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே
    
     மேல்
    
    #4039
    சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே
    வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே
    நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால்
    அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே
    
     மேல்
    
    #4040
    நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே
    தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே
    மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே
    அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே
    
     மேல்
    
    #4041
    வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே
    ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே
    வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே
    ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே
    
     மேல்
    
    #4042
    தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே
    வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே
    நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே
    ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ
    
     மேல்
    
    #4043
    பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே
    துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே
    செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே
    அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே
    
     மேல்
    
    #4044
    தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே
    கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே
    நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே
    ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே
    
     மேல்
    
    #4045
    ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே
    ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே
    ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே
    நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே
    
     மேல்
    
     116. திருவீழிமிழலை : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம்
    
    #4046
    துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே
    கன்றின் மான் இட கையதே கல்லின் மான் இடக்கை அதே
    என்றும் ஏறுவது இடவமே என்னிடை பலி இட வமே
    நின்றதும் மிழலையுள்ளுமே நீர் எனை சிறிதும் உள்ளுமே
    
     மேல்
    
    #4047
    ஓதி வாயதும் மறைகளே உரைப்பதும் பல மறைகளே
    பாதி கொண்டதும் மாதையே பணிகின்றேன் மிகும் மாதையே
    காது சேர் கனம் குழையரே காதலார் கனம் குழையரே
    வீதி-வாய் மிகும் வேதியா மிழலை மேவிய வேதியா
    
     மேல்
    
    #4048
    பாடுகின்ற பண் தாரமே பத்தர் அன்ன பண்டாரமே
    சூடுகின்றது மத்தமே தொழுத என்னை உன்மத்தமே
    நீடு செய்வதும் தக்கதே நின் அரை திகழ்ந்தது அக்கு அதே
    நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே
    
     மேல்
    
    #4049
    கட்டுகின்ற கழல் நாகமே காய்ந்ததும் மதனன் ஆகமே
    இட்டம் ஆவது இசை பாடலே இசைந்த நூலின் அமர்பு ஆடலே
    கொட்டுவான் முழவம் வாணனே குலாய சீர் மிழலைவாணனே
    நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே
    
     மேல்
    
    #4050
    ஓவு இலாது இடும் கரணமே உன்னும் என்னுடை கரணமே
    ஏவு சேர்வும் நின் ஆணையே அருளில் நின்ன பொற்று ஆணையே
    பாவியாது உரை மெய் இலே பயின்ற நின் அடி மெய்யிலே
    மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே
    
     மேல்
    
    #4051
    வாய்ந்த மேனி எரி வண்ணமே மகிழ்ந்து பாடுவது வண்ணமே
    காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே
    போந்தது எம்மிடை இரவிலே உம்மிடை கள்வம் இரவிலே
    ஏய்ந்ததும் மிழலை என்பதே விரும்பியே அணிவது என்பு அதே
    
     மேல்
    
    #4052
    அப்பு இயன்ற கண் அயனுமே அமரர்_கோமகனும் அயனுமே
    ஒப்பு இல் இன்று அமரர் தருவதே ஒண் கையால் அமரர் தரு அதே
    மெய் பயின்றவர் இருக்கையே மிழலை ஊர் உமது இருக்கையே
    செப்பு-மின் எருது மேயுமே சேர்வு உமக்கு எருதும் ஏயுமே
    
     மேல்
    
    #4053
    தானவ குலம் விளக்கியே தாரகை செலவு இளக்கியே
    வான் அடர்த்த கயில் ஆயமே வந்து மேவு கயிலாயமே
    தான் எடுத்த வல் அரக்கனே தட முடி திரள் அரக்கனே
    மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே
    
     மேல்
    
    #4054
    காயம் மிக்கது ஒரு பன்றியே கலந்த நின்ன உருபு அன்றியே
    ஏய இ புவி மயங்கவே இருவர்தாம் மனம் அயங்கவே
    தூய மெய் திரள் அகண்டனே தோன்றி நின்ற மணி கண்டனே
    மேய இ துயில் விலக்கு அணா மிழலை மேவிய இலக்கணா
    
     மேல்
    
    #4055
    கஞ்சியை குலவு கையரே கலக்கம் ஆர் அமணர் கையரே
    அஞ்ச வாதில் அருள் செய்ய நீ அணைந்திடும் பரிசு செய்ய நீ
    வஞ்சனே வரவும் வல்லையே மதித்து எனை சிறிதும் வல்லையே
    எஞ்சல் இன்றி வரு இ தகா மிழலை சேரும் விறல் வித்தகா
    
     மேல்
    
    #4056
    மேய செம் சடையின் அப்பனே மிழலை மேவிய என் அப்பனே
    ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே
    காய வர்க்க அசம்பந்தனே காழி ஞானசம்பந்தனே
    வாய் உரைத்த தமிழ் பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே
    
     மேல்
    
     117. சீகாழி : திருமாலைமாற்று : பண் - கௌசிகம்
    
    #4057
    யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
    காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
    யாம் ஆமா நீ ஆம் ஆம் மாயாழீ காமா காண் நாகா
    காணா காமா காழீயா மா மாயா நீ மா மாயா
    
     மேல்
    
    #4058
    யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
    யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா
    யாகா யாழீ காயா காதா யார் ஆர் ஆ தாய் ஆயாய்
    ஆயா தார் ஆர் ஆயா தாக ஆயா காழீயா கா யா
    
     மேல்
    
    #4059
    தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
    மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா
    தாவா மூவா தாசா காழீ நாதா நீ யாமா மா
    மா மா யாநீ தான ஆழீ காசா தா வா மூ வாதா
    
     மேல்
    
    #4060
    நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
    மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
    நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே
    மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ
    
     மேல்
    
    #4061
    யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
    வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா
    யா காலா மேயா காழியா மேதாவீ தாய் ஆவீ
    வீயாதா வீ தாம் மே யாழீ கா யாம் மேல் ஆகு ஆயா
    
     மேல்
    
    #4062
    மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
    யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே
    மேலே போகாமே தேழீ காலாலே கால் ஆனாயே
    ஏல் நால் ஆகி ஆல் ஏலா காழீ தே மேகா போலேமே
    
     மேல்
    
    #4063
    நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
    நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ
    நீயா மானீ ஏயா மாதா ஏழீ கா நீ தானே
    நே தாநீ காழீ வேதா மாயாயே நீ மாய் ஆநீ
    
     மேல்
    
    #4064
    நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
    காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே
    நே அணவர் ஆ விழ யா ஆசை இழியே வேக அதள் ஏரி அளாய உழி கா
    காழிஉளாய் அரு இளவு ஏது அஃகவே ஏழிசை யாழ இராவணனே
    
     மேல்
    
    #4065
    காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
    பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா
    காலே மேலே காண் நீ காழீ காலே மாலே மே பூ
    பூ மேல் ஏய் மாலே காழீ காண் ஈ காலே மேலே கா
    
     மேல்
    
    #4066
    வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
    தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே
    வேரியும் ஏண் நவ காழியொயே ஏனை நீள் நேம் அடு அள் ஓகரதே
    தேரர்களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி கா வணமே உரிவே
    
     மேல்
    
    #4067
    நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
    காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே
    நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி தாய் ஏல் நன் நீயே நன் நீள் ஆய் உழி கா
    காழி உளான் இன் நையே நினையே தாழ் இசையா தமிழாகரனே
    
     மேல்
    
     118. திருக்கழுமலம் : பண் - புறநீர்மை
    
    #4068
    மடல் மலி கொன்றை துன்று வாள் எருக்கும் வன்னியும் மத்தமும் சடை மேல்
    படல் ஒலி திரைகள் மோதிய கங்கை தலைவனார்-தம் இடம் பகரில்
    விடல் ஒலி பரந்த வெண் திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து வெள் அருவி
    கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4069
    மின்னிய அரவும் வெறி மலர் பலவும் விரும்பிய திங்களும் தங்கு
    சென்னி அது உடையான் தேவர்-தம் பெருமான் சே_இழையொடும் உறைவிடம் ஆம்
    பொன் இயல் மணியும் முரி கரி மருப்பும் சந்தமும் உந்து வன் திரைகள்
    கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4070
    சீர் உறு தொண்டர் கொண்டு அடி போற்ற செழு மலர் புனலொடு தூபம்
    தாருறு கொன்றை தம் முடி வைத்த சைவனார் தங்கு இடம் எங்கும்
    ஊர் உறு பதிகள் உலகுடன் பொங்கி ஒலி புனல் கொள உடன் மிதந்த
    காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4071
    மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்ற
    பண்ணினார் எல்லாம் பலபல வேடம் உடையவர் பயில்விடம் எங்கும்
    எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர்
    கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4072
    சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் சுடரவன் கரமும் முன் இயங்கு
    பருதியான் பல்லும் இறுத்து அவர்க்கு அரளும் பரமனார் பயின்று இனிது இருக்கை
    விருதின் நான்மறையும் அங்கம் ஓர் ஆறும் வேள்வியும் வேட்டவர் ஞானம்
    கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4073
    புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார் பனி மலர் கொன்றை
    பற்றி வான் மதியம் சடையிடை வைத்த படிறனார் பயின்று இனிது இருக்கை
    செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடி செயிர்த்து வண் சங்கொடு வங்கம்
    கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4074
    அலை புனல் கங்கை தங்கிய சடையார் அடல் நெடு மதில் ஒரு மூன்றும்
    கொலையிடை செம் தீ வெந்து அற கண்ட குழகனார் கோயிலது என்பர்
    மலையின் மிக்கு உயர்ந்த மரக்கலம் சரக்கு மற்றுமற்று இடையிடை எங்கும்
    கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4075
    ஒருக்க முன் நினையா தக்கன்-தன் வேள்வி உடைதர உழறிய படையார்
    அரக்கனை வரையால் ஆற்றல் அன்று அழித்த அழகனார் அமர்ந்து உறை கோயில்
    பரக்கும் வண் புகழார் பழி அவை பார்த்து பலபல அறங்களே பயிற்றி
    கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4076
    அரு வரை பொறுத்த ஆற்றலினானும் அணி கிளர் தாமரையானும்
    இருவரும் ஏத்த எரி உரு ஆன இறைவனார் உறைவிடம் வினவில்
    ஒருவர் இ உலகில் வாழ்கிலா வண்ணம் ஒலி புனல் வெள்ளம் முன் பரப்ப
    கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4077
    உரிந்து உயர் உருவில் உடை தவிர்ந்தாரும் அ துகில் போர்த்து உழல்வாரும்
    தெரிந்து புன் மொழிகள் செப்பின கேளா செம்மையார் நன்மையால் உறைவு ஆம்
    குருந்து உயர் கோங்கு கொடி விடு முல்லை மல்லிகை சண்பகம் வேங்கை
    கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே
    
     மேல்
    
    #4078
    கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல்
    ஞானசம்பந்தன் நல் தமிழ் மாலை நன்மையால் உரைசெய்து நவில்வார்
    ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி உள்ளமும் ஒருவழி கொண்டு
    வானிடை வாழ்வர் மணி மிசை பிறவார் மற்று இதற்கு ஆணையும் நமதே
    
     மேல்
    
     119. திருவீழிமிழலை : பண் - புறநீர்மை
    
    #4079
    புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு
    கொள்ளி தீ விளக்கு கூளிகள் கூட்டம் காளியை குணம் செய் கூத்து உடையோன்
    அள்ளல் கார் ஆமை அகடு வான் மதியம் ஏய்க்க முள் தாழைகள் ஆனை
    வெள்ளை கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4080
    இசைந்த ஆறு அடியார் இடு துவல் வானோர் இழுகு சந்தனத்து இளம் கமல
    பசும்பொன் வாசிகை மேல் பரப்புவாய் கரப்பாய் பத்தி செய்யாதவர் பக்கல்
    அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து அரிந்து எடுத்த வான் சும்மை
    விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4081
    நிருத்தன் ஆறு அங்கன் நீற்றன் நான்மறையன் நீலம் ஆர் மிடற்றன் நெற்றிக்கண்_
    ஒருத்தன் மற்று எல்லா உயிர்கட்கும் உயிராய் உளன் இலன் கேடிலி உமை_கோன்
    திருத்தமாய் நாளும் ஆடு நீர் பொய்கை சிறியவர் அறிவினின் மிக்க
    விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4082
    தாங்க அரும் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும் கூடினார் அங்கம்
    பாங்கினால் தரித்து பண்டு போல் எல்லாம் பண்ணிய கண் நுதல் பரமர்
    தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை
    வேங்கை பூ மகிழால் வெயில் புகா வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4083
    கூசு மா மயானம் கோயில் வாயில்-கண் குட வயிற்றன சில பூதம்
    பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன்
    வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல்
    வீசு மாம் பொழில் தேன் துவலை சேர் வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4084
    பாதி ஓர் மாதர் மாலும் ஓர்பாகர் பங்கயத்து அயனும் ஓர் பாலர்
    ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர்
    போது சேர் சென்னி புரூரவா பணி செய் பூசுரர் பூமகன் அனைய
    வேதியர் வேதத்து ஒலி அறா வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4085
    தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம் எனக்கு அருள் என்று
    அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன் பிறை அணி சடையன்
    நின்ற நாள் காலை இருந்த நாள் மாலை கிடந்த மண் மேல் வரு கலியை
    வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4086
    கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம் சிரம் நெரிந்து அலற
    அடர்த்தது ஓர் விரலால் அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன் தட மிகு நெடு வாள்
    படித்த நான்மறை கேட்டு இருந்த பைம் கிளிகள் பதங்களை ஓத பாடு இருந்த
    விடை குலம் பயிற்றும் விரி பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4087
    அளவிடலுற்ற அயனொடு மாலும் அண்டம் மண் கிண்டியும் காணா
    முளை எரி ஆய மூர்த்தியை தீர்த்தம் முக்கண் எம் முதல்வனை முத்தை
    தளை அவிழ் கமல தவிசின் மேல் அன்னம் இளம் பெடையொடும் புல்கி
    விளை கதிர் கவரி வீச வீற்றிருக்கும் மிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4088
    கஞ்சி போது உடையார் கையில் கோசார கலதிகள் கட்டுரை விட்டு
    அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி
    இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின்
    மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே
    
     மேல்
    
    #4089
    வேந்தர் வந்து இறைஞ்ச வேதியர் வீழிமிழலையுள் விண் இழி விமானத்து
    ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை எம்பெருமானை
    தோய்ந்த நீர் தோணிபுரத்து உறை மறையோன் தூ மொழி ஞானசம்பந்தன்
    வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே
    
     மேல்
    
     120. திருஆலவாய் : பண் - புறநீர்மை
    
    #4090
    மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை வரி வளை கை மட மானி
    பங்கய செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்-தொறும் பரவ
    பொங்கு அழல் உருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி
    அங்கயற்கண்ணி-தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4091
    வெற்றவே அடியார் அடி மிசை வீழும் விருப்பினன் வெள்ளை நீறு அணியும்
    கொற்றவன்-தனக்கு மந்திரி ஆய குலச்சிறை குலாவி நின்று ஏத்தும்
    ஒற்றை வெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழிந்திட்டு
    அற்றவர்க்கு அற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4092
    செம் துவர் வாயாள் சேல் அன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
    பந்து அணை விரலாள் பாண்டிமாதேவி பணி செய பாரிடை நிலவும்
    சந்தம் ஆர் தரளம் பாம்பு நீர் மத்தம் தண் எருக்கம் மலர் வன்னி
    அந்தி வான் மதி சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதுமே இதுவே
    
     மேல்
    
    #4093
    கணங்களாய் வரினும் தமியராய் வரினும் அடியவர்-தங்களை கண்டால்
    குணம் கொடு பணியும் குலச்சிறை பரவும் கோபுரம் சூழ் மணி கோயில்
    மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை
    அணங்கு வீற்றிருந்த சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4094
    செய்ய தாமரை மேல் அன்னமே அனைய சே இழை திரு நுதல் செல்வி
    பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்-தொறும் பணிந்து இனிது ஏத்த
    வெய்ய வேல் சூலம் பாசம் அங்குசம் மான் விரி கதிர் மழுவுடன் தரித்த
    ஐயனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4095
    நலம் இலர் ஆக நலம் அது உண்டு ஆக நாடவர் நாடு அறிகின்ற
    குலம் இலர் ஆக குலம் அது உண்டு ஆக தவம் பணி குலச்சிறை பரவும்
    கலை மலி கரத்தன் மூ_இலை வேலன் கரி உரி மூடிய கண்டன்
    அலை மலி புனல் சேர் சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4096
    முத்தின் தாழ் வடமும் சந்தன குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க
    பத்தி ஆர்கின்ற பாண்டிமாதேவி பாங்கொடு பணிசெய நின்ற
    சுத்தம் ஆர் பளிங்கின் பெருமலையுடனே சுடர் மரகதம் அடுத்தால் போல்
    அத்தனார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதுமே இதுவே
    
     மேல்
    
    #4097
    நா அணங்கு இயல்பு ஆம் அஞ்சுஎழுத்து ஓதி நல்லராய் நல் இயல்பு ஆகும்
    கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற
    ஏ அணங்கு இயல்பு ஆம் இராவணன் திண் தோள் இருபதும் நெரிதர ஊன்றி
    ஆவணம் கொண்ட சடைமுடி அண்ணல் ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4098
    மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச்சோழன்-தன் மகள் ஆம்
    பண்ணின் நேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினால் பணி செய்து பரவ
    விண்ணுளார் இருவர் கீழொடு மேலும் அளப்ப அரிது ஆம் வகை நின்ற
    அண்ணலார் உமையோடு இன்புறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4099
    தொண்டராய் உள்ளார் திசைதிசை-தோறும் தொழுது தன் குணத்தினை குலாவ
    கண்டு நாள்-தோறும் இன்புறுகின்ற குலச்சிறை கருதி நின்று ஏத்த
    குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா
    அண்ட_நாயகன்தான் அமர்ந்து வீற்றிருந்த ஆலவாய் ஆவதும் இதுவே
    
     மேல்
    
    #4100
    பல் நலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை எனும் இவர் பணியும்
    அ நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி
    கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு
    இன் நலம் பாட வல்லவர் இமையோர் ஏத்த வீற்றிருப்பவர் இனிதே
    
     மேல்
    
     121. திருப்பந்தணைநல்லூர் : பண் - புறநீர்மை
    
    #4101
    இடறினார் கூற்றை பொடிசெய்தார் மதிலை இவை சொல்லி உலகு எழுந்து ஏத்த
    கடறினார் ஆவர் காற்று உளார் ஆவர் காதலித்து உறைதரு கோயில்
    கொடிறனார் யாதும் குறைவு இலார் தாம் போய் கோவணம் கொண்டு கூத்து ஆடும்
    படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4102
    கழி உளார் எனவும் கடல் உளார் எனவும் காட்டு உளார் நாட்டு உளார் எனவும்
    வழி உளார் எனவும் மலை உளார் எனவும் மண் உளார் விண் உளார் எனவும்
    சுழி உளார் எனவும் சுவடு தாம் அறியார் தொண்டர் வாய் வந்தன சொல்லும்
    பழி உளார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4103
    காட்டினார் எனவும் நாட்டினார் எனவும் கடும் தொழில் காலனை காலால்
    வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல்
    சூட்டினார் எனவும் சுவடு தாம் அறியார் சொல் உள சொல்லும் நால் வேத
    பாட்டினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4104
    முருகின் ஆர் பொழில் சூழ் உலகினார் ஏத்த மொய்த்த பல் கணங்களின் துயர் கண்டு
    உருகினார் ஆகி உறுதி போந்து உள்ளம் ஒண்மையால் ஒளி திகழ் மேனி
    கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி
    பருகினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4105
    பொன்னின் ஆர் கொன்றை இரு வடம் கிடந்து பொறி கிளர் பூண நூல் புரள
    மின்னின் ஆர் உருவின் மிளிர்வது ஓர் அரவம் மேவு வெண் நீறு மெய் பூசி
    துன்னினார் நால்வர்க்கு அறம் அமர்ந்து அருளி தொன்மை ஆர் தோற்றமும் கேடும்
    பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4106
    ஒண் பொனார் அனைய அண்ணல் வாழ்க எனவும் உமையவள்_கணவன் வாழ்க எனவும்
    அண்பினார் பிரியார் அல்லும் நன்பகலும் அடியவர் அடி இணை தொழவே
    நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும்
    பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4107
    எற்றினார் ஏதும் இடைகொள்வார் இல்லை இரு நிலம் வான்_உலகு எல்லை
    தெற்றினார்-தங்கள் காரணம் ஆக செரு மலைந்து அடி இணை சேர்வான்
    முற்றினார் வாழும் மு மதில் வேவ மூ இலை சூலமும் மழுவும்
    பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4108
    ஒலி செய்த குழலின் முழவம் அது இயம்ப ஓசையால் ஆடல் அறாத
    கலி செய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன்
    வலி கொள்வர் புலியின் உரி கொள்வர் ஏனை வாழ்வு நன்றானும் ஓர் தலையில்
    பலி கொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4109
    சேற்றின் ஆர் பொய்கை தாமரையானும் செங்கண்மால் இவர் இரு கூறா
    தோற்றினார் தோற்ற தொன்மையை அறியார் துணைமையும் பெருமையும் தம்மில்
    சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம்
    பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே
    
     மேல்
    
    #4110
    கல் இசை பூண கலை ஒலி ஓவா கழுமல முது பதி-தன்னில்
    நல் இசையாளன் புல் இசை கேளா நல் தமிழ் ஞானசம்பந்தன்
    பல் இசை பகு வாய் படு தலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
    சொல் இசை பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே
    
     மேல்
    
     122. திருவோமாம்புலியூர் : பண் - புறநீர்மை
    
    #4111
    பூம் கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள்
    வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில்
    தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதி செறிதரு வண்டு இசை பாடும்
    ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4112
    சம்பரற்கு அருளி சலந்தரன் வீய தழல் உமிழ் சக்கரம் படைத்த
    எம்பெருமானார் இமையவர் ஏத்த இனிதின் அங்கு உறைவிடம் வினவில்
    அம்பரம் ஆகி அழல் உமிழ் புகையின் ஆகுதியால் மழை பொழியும்
    உம்பர்கள் ஏத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4113
    பாங்கு உடை தவத்து பகீரதற்கு அருளி படர் சடை கரந்த நீர் கங்கை
    தாங்குதல் தவிர்த்து தராதலத்து இழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
    ஆங்கு எரி மூன்றும் அமர்ந்து உடன் இருந்த அம் கையால் ஆகுதி வேட்கும்
    ஓங்கிய மறையோர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4114
    புற்று அரவு அணிந்து நீறு மெய் பூசி பூதங்கள் சூழ்தர ஊரூர்
    பெற்றம் ஒன்று ஏறி பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்
    கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினார் அருத்தியால் தெரியும்
    உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4115
    நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால்
    அலைத்த வல் அசுரர் ஆசு அற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்
    சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யா தன்மையார் நன்மையால் மிக்க
    உலப்பு இல் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4116
    மணம் திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியும் ஆறு அங்கம் ஐ வேள்வி
    இணைந்த நால் வேதம் மூன்று எரி இரண்டு பிறப்பு என ஒருமையால் உணரும்
    குணங்களும் அவற்றின் கொள் பொருள் குற்றம் மற்று அவை உற்றதும் எல்லாம்
    உணர்ந்தவர் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4117
    தலை ஒரு பத்தும் தட கை அது இரட்டி தான் உடை அரக்கன் ஒண் கயிலை
    அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
    மலை என ஓங்கும் மாளிகை நிலவும் மா மதில் மாற்றலர் என்றும்
    உலவு பல் புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4118
    கள் அவிழ் மலர் மேல் இருந்தவன் கரியோன் என்று இவர் காண்பு அரிது ஆய
    ஒள் எரி உருவர் உமையவளோடும் உகந்து இனிது உறைவிடம் வினவில்
    பள்ள நீர் வாளை பாய்தரு கழனி பனி மலர் சோலை சூழ் ஆலை
    ஒள்ளிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4119
    தெள்ளியர் அல்லா தேரரொடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
    கள்ளம் ஆர் மனத்து கலதிகட்கு அருளா கடவுளார் உறைவிடம் வினவில்
    நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்த நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
    ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
    
     மேல்
    
    #4120
    விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய் புலத்து இடறி
    ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை
    களி தரு நிவப்பின் காண்தகு செல்வ காழியுள் ஞானசம்பந்தன்
    அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்து இருப்பாரே
    
     மேல்
    
     123. திருக்கோணமலை : பண் - புறநீர்மை
    
    #4121
    நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர் நீறு அணி திரு மேனி
    வரை கெழு மகள் ஓர்பாகமா புணர்ந்த வடிவினர் கொடி அணி விடையர்
    கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப அரும் கன மணி வரன்றி
    குரை கடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4122
    கடிது என வந்த கரி-தனை உரித்து அ உரி மேனி மேல் போர்ப்பர்
    பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய
    கொடிது என கதறும் குரை கடல் சூழ்ந்து கொள்ள முன் நித்திலம் சுமந்து
    குடி-தனை நெருங்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4123
    பனித்த இளம் திங்கள் பைம் தலை நாகம் படர் சடைமுடியிடை வைத்தார்
    கனித்து இளம் துவர் வாய் காரிகை பாகம் ஆக முன் கலந்தவர் மதில் மேல்
    தனித்த பேர் உருவ விழி தழல் நாகம் தாங்கிய மேரு வெம் சிலையா
    குனித்தது ஓர் வில்லார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4124
    பழித்த இளம் கங்கை சடையிடை வைத்து பாங்கு உடை மதனனை பொடியா
    விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனார் கமலம் ஆர் பாதர்
    தெழித்து முன் அரற்றும் செழும் கடல் தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து
    கொழித்து வன் திரைகள் கரையிடை சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4125
    தாயினும் நல்ல தலைவர் என்று அடியார் தம் அடி போற்றி இசைப்பார்கள்
    வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர் காண் பல வேடர்
    நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
    கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4126
    பரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணி-தன் உயிர் மேல் வரும் கூற்றை
    திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார்
    விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின்
    குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4127
    எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால் ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
    தொடுத்தவர் செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர் வேள்வி
    தடுத்தவர் வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
    கொடுத்தவர் விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4128
    அருவராது ஒரு கை வெண் தலை ஏந்தி அகம்-தொறும் பலியுடன் புக்க
    பெருவராய் உறையும் நீர்மையர் சீர்மை பெருங்கடல்_வண்ணனும் பிரமன்
    இருவரும் அறியா வண்ணம் ஒள் எரியாய் உயர்ந்தவர் பெயர்ந்த நல் மாற்கும்
    குருவராய் நின்றார் குரை கழல் வணங்க கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4129
    நின்று உணும் சமணும் இருந்து உணும் தேரும் நெறி அலாதன புறம்கூற
    வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி
    துன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரை பல மோதி
    குன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே
    
     மேல்
    
    #4130
    குற்றம் இலாதார் குரை கடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை
    கற்று உணர் கேள்வி காழியர்_பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன்
    உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்_ஐந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
    சுற்றமும் ஆகி தொல்வினை அடையார் தோன்றுவர் வானிடை பொலிந்தே
    
     மேல்
    
     120. திருக்குருகாவூர்வெள்ளடை : பண் - அந்தாளிக்குறிஞ்சி
    
    #4131
    சுண்ண வெண் நீறு அணி மார்பில் தோல் புனைந்து
    எண்ண அரும் பல் கணம் ஏத்த நின்று ஆடுவர்
    விண் அமர் பைம் பொழில் வெள்ளடை மேவிய
    பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே
    
     மேல்
    
    #4132
    திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
    வரைமகளோடு உடன் ஆடுதிர் மல்கு
    விரை கமழ் தண் பொழில் வெள்ளடை மேவிய
    அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே
    
     மேல்
    
    #4133
    அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன
    நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து
    விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
    சடை அமர் வெண் பிறை சங்கனீரே
    
     மேல்
    
    #4134
    வளம் கிளர் கங்கை மடவரலோடு
    களம் பட ஆடுதிர் காடு அரங்கு ஆக
    விளங்கிய தண் பொழில் வெள்ளடை மேவிய
    இளம் பிறை சேர் சடை எம்பெருமானே
    
     மேல்
    
    #4135
    சுரி குழல் நல்ல துடி_இடையோடு
    பொரி புல்கு காட்டிடை ஆடுதிர் பொங்க
    விரிதரு பைம் பொழில் வெள்ளடை மேவிய
    எரி மழுவாள் படை எந்தை பிரானே
    
     மேல்
    
    #4136
    காவி அம் கண் மடவாளொடும் காட்டிடை
    தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன் மலர்
    மேவிய தண் பொழில் வெள்ளடை மேவிய
    ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே
    
     மேல்
    
     125. திருநல்லூர்ப்பெருமணம் : பண் - அந்தாளிக்குறிஞ்சி
    
    #4137
    கல் ஊர் பெரு மணம் வேண்டா கழுமலம்
    பல் ஊர் பெரு மணம் பாட்டு மெய்யாய்த்தில
    சொல் ஊர் பெரு மணம் சூடலரே தொண்டர்
    நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே
    
     மேல்
    
    #4138
    தரு மணல் ஓதம் சேர் தண் கடல் நித்திலம்
    பரு மணலா கொண்டு பாவை நல்லார்கள்
    வரும் மணம் கூட்டி மணம் செயும் நல்லூர்
    பெருமணத்தான் பெண் ஓர்பாகம் கொண்டானே
    
     மேல்
    
    #4139
    அன்புறு சிந்தையராகி அடியவர்
    நன்புறு நல்லூர்ப்பெருமணம் மேவி நின்று
    இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார்
    துன்புறுவார் அல்லர் தொண்டு செய்தாரே
    
     மேல்
    
    #4140
    வல்லியம் தோல் உடை ஆர்ப்பது போர்ப்பது
    கொல் இயல் வேழத்து உரி விரி கோவணம்
    நல் இயலார் தொழு நல்லூர்ப்பெருமணம்
    புல்கிய வாழ்க்கை எம் புண்ணியனார்க்கே
    
     மேல்
    
    #4141
    ஏறு உகந்தீர் இடுகாட்டு எரி ஆடி வெண்
    நீறு உகந்தீர் நிரை ஆர் விரி தேன் கொன்றை
    நாறு உகந்தீர் திரு நல்லூர்ப்பெருமணம்
    வேறு உகந்தீர் உமை கூறு உகந்தீரே
    
     மேல்
    
    #4142
    சிட்டப்பட்டார்க்கு எளியான் செம் கண் வேட்டுவ
    பட்டம் கட்டும் சென்னியான் பதி ஆவது
    நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து
    இட்டப்பட்டால் ஒத்திரால் எம்பிரானிரே
    
     மேல்
    
    #4143
    மேகத்த கண்டன் எண் தோளன் வெண் நீற்று உமை_
    பாகத்தன் பாய் புலி தோலொடு பந்தித்த
    நாகத்தன் நல்லூர்ப்பெருமணத்தான் நல்ல
    போகத்தன் யோகத்தையே புரிந்தானே
    
     மேல்
    
    #4144
    தக்கு இருந்தீர் அன்று தாளால் அரக்கனை
    உக்கு இருந்து ஒல்க உயர்வரை கீழ் இட்டு
    நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம்
    புக்கு இருந்தீர் எமை போக்கு அருளீரே
    
     மேல்
    
    #4145
    ஏலும் தண் தாமரையானும் இயல்பு உடை
    மாலும் தம் மாண்பு அறிகின்றிலர் மா மறை
    நாலும் தம் பாட்டு என்பர் நல்லூர்ப்பெருமணம்
    போலும் தம் கோயில் புரி சடையார்க்கே
    
     மேல்
    
    #4146
    ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும்
    பேதைமை கேட்டு பிணக்குறுவீர் வம்-மின்
    நாதனை நல்லூர்ப்பெருமணம் மேவிய
    வேதன தாள் தொழ வீடு எளிது ஆமே
    
     மேல்
    
    #4147
    நறும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன்
    பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை
    உறும் பொருளால் சொன்ன ஒண் தமிழ் வல்லார்க்கு
    அறும் பழி பாவம் அவலம் இலரே
    
     மேல்
    
    
     126.திருவிடைவாய்,திருவிடைவாசல் (இப்பதிகம் கல்வெட்டினின்றும் எடுக்கப்பட்டது)
    #4148
    மறி ஆர் கரத்து எந்தை அம் மாது உமையோடும்
    பிறியாத பெம்மான் உறையும் இடம் என்பர்
    பொறி வாய் வரி வண்டு தன் பூம் பெடை புல்கி
    வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே
    
     மேல்
    
    #4149
    ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி
    செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர்
    எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம் போது
    வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே
    
     மேல்
    
    #4150
    கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை
    திரை ஆர் சடை தீ_வண்ணர் சேர்விடம் என்பர்
    குரை ஆர் மணியும் குளிர் சந்தமும் கொண்டு
    விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே
    
     மேல்
    
    #4151
    கூச தழல் போல் விழியா வரு கூற்றை
    பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
    வாச கதிர் சாலி வெண் சாமரையே போல்
    வீச களி அன்னம் மல்கும் விடைவாயே
    
     மேல்
    
    #4152
    திரியும் புரம் மூன்றையும் செம் தழல் உண்ண
    எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர்
    கிரியும் தரு மாளிகை சூளிகை-தன் மேல்
    விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே
    
     மேல்
    
    #4153
    கிள்ளை_மொழியாளை இகழ்ந்தவன் முத்தீ
    தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம்
    வள்ளி மருங்குல் நெருங்கும் முலை செவ்வாய்
    வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே
    
     மேல்
    
    #4154
    பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய்
    நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர்
    கீதத்து ஒலியும் கெழுமும் முழவோடு
    வேதத்து ஒலியும் பயிலும் விடைவாயே
    
     மேல்
    
    #4155
    எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
    பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
    கண் ஆர் விழவின் கடி வீதிகள்-தோறும்
    விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே
    
     மேல்
    
    #4156
    புள் வாய் பிளந்தான் அயன் பூ முடி பாதம்
    ஒள்வான் நிலம் தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
    தெள் வார் புனல் செங்கழுநீர் முகை-தன்னில்
    விள் வாய் நறவு உண்டு வண்டு ஆர் விடைவாயே
    
     மேல்
    
    #4157
    உடை ஏதும் இலார் துவர் ஆடை உடுப்போர்
    கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
    அடையார் புரம் வேவ மூவர்க்கு அருள்செய்த
    விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே
    
     மேல்
    
    #4158
    ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
    மாறு இல் பெரும் செல்வம் மலி விடைவாயை
    நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
    கூறும் தமிழ் வல்லவர் குற்றம் அற்றோரே
    
     மேல்
    
     127. திருக்கிளியன்னவூர் : பண் -- கௌசிகம் 
         (சித்தாந்தம்-மலர் 5 இதழ் 11 (1932) தலைப்பு ஏட்டிலிருந்து எழுதப்பட்டது) 
    
    
    #4159
    தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
    சீர் சிறக்கும் துணைப்பதம் உன்னுவோர்
    பேர் சிறக்கும் பெரு மொழி உய் வகை
    ஏர் சிறக்கும் கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4160
    வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே
    தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே
    புன்மை கன்னியர் பூசல் உற்றாலுமே
    நன்மை உற்ற கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4161
    பன்னி நின்ற பனுவல் அகத்தியன்
    உன்னி நின்று உறுத்தும் சுகத்தவன்
    மன்னி நாகம் முகத்தவர் ஓதலும்
    முன்னில் நின்ற கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4162
    அன்பர் வேண்டுமவை அளி சோதியான்
    வன்பர் நெஞ்சில் மருவல் இல்லா முதல்
    துன்பம் தீர்த்து சுகம் கொடு கண்நுதல்
    இன்பம் தேக்கும் கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4163
    செய்யும் வண்ணம் சிரித்து புரம் மிசை
    பெய்யும் வண்ண பெருந்தகை ஆனது ஓர்
    உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட
    மெய்யும் வண்ண கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4164
    எண் பெறா வினைக்கு ஏது செய் நின் அருள்
    நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி
    மண் பொறா முழு செல்வமும் மல்குமால்
    புண் பொறாத கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4165
    மூவராயினும் முக்கண்ண நின் அருள்
    மேவுறாது விலக்கிடல்-பாலரோ
    தா உறாது உனது ஐந்து_எழுத்து உன்னிட
    தேவர் ஆக்கும் கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4166
    திரம் மிகுத்த சடைமுடியான் வரை
    உரம் மிகுத்த இராவணன் கீண்டலும்
    நிரம் மிகுத்து நெரித்து அவன் ஓதலால்
    வரம் மிகத்த கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4167
    நீதி உற்றிடும் நான்முகன் நாரணன்
    பேதம் உற்று பிரிந்து அழலாய் நிமிர்
    நாதன் உற்றன நல் மலர் பாய் இரு
    கீதம் ஏற்ற கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4168
    மங்கையர்க்கு அரசோடு குலச்சிறை
    பொங்கு அழல் சுரம் போக்கு என பூழியன்
    சங்கை மாற்றி சமணரை தாழ்த்தவும்
    இங்கு உரைத்த கிளியன்னவூரனே
    
     மேல்
    
    #4169
    நிறைய வாழ் கிளியன்னவூர் ஈசனை
    உறையும் ஞானசம்பந்தன் சொல் சீரினை
    அறைய நின்றன பத்தும் வல்லார்க்குமே
    குறை இலாது கொடுமை தவிர்வரே
    
      மேல் 
    
     128.திருமறைக்காடு : பண் -- கொல்லி   
    	
    #4170
    விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
    படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
    கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
    அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.	3.3.1
     மேல்
    	
    #4171
    முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
    மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
    அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
    அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.	3.3.2
     மேல்
    	
    #4172
    கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
    பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
    செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
    அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.	3.3.3
     மேல்
    
    #4173
    இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
    தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
    மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
    கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.	3.3.4
     மேல்
    	
    #4174
    பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
    மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
    கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
    அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.	3.3.5
     மேல்
    
    #4175
    செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
    டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
    அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
    அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.	3.3.6
     மேல்
    
    #4176
    மதிதுன்றும் இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
    கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
    விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
    இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.	3.3.7
     மேல்
    
    #4177
    நீசனாம் அரக்கன் றிண்டோள் நெரிதர விரலால் ஊன்றுந்
    தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
    ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
    ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.	3.3.8
     மேல்
    
    #4178
    மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
    எய்துமா றறிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
    பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
    செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.	3.3.9
     மேல்
    
    #4179
    மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
    கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
    தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
    எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.	3.3.10
     மேல்
    
    #4180
    மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
    கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
    தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
    பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர் தாமே.	3.3.11
     மேல்
    
    ---திருச்சிற்றம்பலம்---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *